Archive for the ‘நம்பிள்ளை’ Category

ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் தாத்பர்ய சார அமுதம் —

October 31, 2024

2-1-வாயும் திரையுகளும்-பிரவேசம் –

முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில்,
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:-இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
-யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன்  பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-

இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு  ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும்,
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-

இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.

—————

2-2-திண்ணன் வீடு -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.

‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.

இது வரை ப்ராசங்கிக சங்கதி -இனி சாஷாத் சங்கதி –
ஈஸ்வரன் சாத்ம்ய போக ப்ரதனாகையாலே-முதலில் தன்னுடைய ஈச்வரத்வத்தை அனுபவிப்பித்து
மேலே -2-3-ஊனில் வாழ் உயிரிலே தன்னை அனுபவிப்பிக்கிறான்
வைலக்ஷண்யத்துக்கு அடி குணங்கள் என்ற இடத்து -தாந்தைஸ் சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்சநைந பிதுர் குணைர்
விருருசே ராமோ தீப்தஸ் ஸூர்ய இவாம்ஸூபி -என்றது சம்வாதமாகக் கண்டு கொள்வது
இத்யாதிகளால் பெருமாள் குணங்களைச் சொல்லிக் கொடு போந்து-
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே
விஷ்ணுஸ் சனாதன -இத்யாதியாலே ஈஸ்வரத்வம் சொல்லிற்றே

இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

‘ஆயின், முதல்  திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்யம் ஆகிறது?

ப்ரஸம்ஸாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனே அபி வா பயே ச விஸ்மயே சைவ பவ்ன புந்ய மலங்க்ருதி -என்றபடி
பகவத் பரத்வ ப்ரதிஞ்ஜை யாகையாலே புநர் யுக்தி தோஷம் இல்லை
அனுபாவ்யத்தினுடைய ரஸ்யதையாலே
-அனுபவ ஜெனித ப்ரீதியாலே – பின்னையும் பின்னையும் சொல்லப் பண்ணும் இறே
இவர் ஆராத காதலை யுடையவர் ஆகையால் -2-1-11–கை வாங்கி இருக்குமவர் அல்லர்
ஆக உபதேஷ்ட்ரு ஸ்வபாவத்தாலும் உபதேஸ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபாவ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் –
அனுபாவயித்ரு ஸ்வபாவத்தாலும் புநர் யுக்தி தோஷாவாயன்று -என்கிறார்
நித்ய அபூர்வமான விஷயம் -பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -வர்த்தமான அர்த்தம்

ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே —
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய -என்றும் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-என்றும் உண்டே
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை

இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து -ஸங்க்ரஹேன -அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல்,
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத்சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———

2-3-ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –

வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.

ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய ஸூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக் கட்டுகிறார்.

வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –

‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய ஸூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய நித்திய ஸூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி,
பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.–ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.-‘அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று. -அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

———

2-4-ஆடியாடி -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

தாயாராகிறவள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று ஸ்வாபதேசம்
ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும் -என்று திருத்தாயார்
பாசுரமாகச் சொன்ன இடங்கள் எல்லாம் உபாய அத்யவசாய தசையிலே நின்று
சொன்னவைகள் என்றே நாயனாரும் நிர்வஹித்தது
இவரும் கடல் ஞாலத்திலே இப்படி அருளிச் செய்தாராகையாலும் அதுவும் ஒரு நிர்வாஹம் கிடக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற படி என்று இங்கனே இப்படி
அருளிச் செய்கையாலே இந்த ஸ்வாபதேசமும் யோஜனாந்தர அபிப்ராயம் – )

முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –
ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்

ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி –
(அரக்கன் இலங்கை செற்றீருக்கே -3-பாசுரம்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -2-பாசுரம்
ஆதி ஸப்தத்தால் -நரஸிம்ஹ ஷீராப்தி நாதாதி அவதாரங்கள் )
ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
(கிளர் வாழ்வை வேவ-10-பாசுரம் )
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்

(எல்லா அளவிலும் என்றது
ஆடியாடி -வாடி வாடும் -1-
உம்மைக்காணும் ஆசையில் நைகின்றாள் –2-
எரி யணை யரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -3 –
உள்ளம் மலங்க வெவ்வுர்க்கும் கலங்கிக் கை தொழும் -4-
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –5–
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -10-
போன்ற தஸா விசேஷங்களுக்கு பரிஹாரம் நுமது இட்டம் என் கொல் -9-என்பதைப்பற்ற )

(நீர் செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற
இரக்கம் எழீர் –3-
உம்மைக்காணும் ஆசை –2-
தண்ணம் துழாய் கொடீர் –5-
உம்மைக்காண -2- என்பதை பற்ற )

காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்

நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே

நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது

பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –

(உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும்
தண்ணம் துழாய் கொடீர்
சுவர் வட்டவாய் நுதி நேமியீர்
அந்தாமத்து அன்பு செய்து
இவர் பாகவத விஸ்லேஷத்தில் உட்ப்புக நின்றவர் ஆகையாலே
அது இவருக்குப் பகவத் விஸ்லேஷ பர்யந்தமாய் அவன் தன்னையே அடிபிடித்துக் கூப்பிடுகிறார் என்றபடி )

கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———

2-5-அந்தாமத்து அன்பு -பிரவேசம் –

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ‘கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது;
முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் போன்றது ஒன்றாம்,
கீழ் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸனம் -துக்கம்;
அது எல்லாம் ஆறும்படியாக,
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் ‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’
என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே,
பெரிய த்வரையோடே – மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் -அக்ரமமாக -முறைபிறழத் தரித்துக் கொண்டு,
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு,
யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி,
க்ராஹம் சக்ரேனை மாதவ ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே,
பிரஜையின் – குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று,
பெரிய பிராட்டியாரும் தானுமாக, இரண்டுக்கும் நலிவு வாராமல் திரு ஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின
திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து
அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே,

இவ்வாழ்வாரும் ’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட-ஆர்த்த நாதம் – துக்க ஒலியானது செவிப்பட,
‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று,
பிற்பட்டதனால் உண்டாகும் -லஜ்ஜா பயங்களினால் -நாணத்தாலும் பயத்தாலும்-விஹ்வலனாய் கலங்கினவனாய்,
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும்
வந்து ஸம்ஸ்லேஷித்து – கலந்து- அத்தாலே ஹ்ருஷ்டானாய் -மகிழ்ந்தவனாய்,
தான் -க்ருதக்ருத்யனாய் -செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய்
இருக்கிற இருப்பை அனுபவித்து, -அவ்வனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகரஷத்தாலே –
அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———-

2-6-வைகுந்தா-பிரவேசம் –

ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)

உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –

——————

ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்-

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————-

2-7-கேசவன் தமர் -பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே-மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே-ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-

குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்-வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————–

2-8-அணைவது அரவணை மேல் -பிரவேசம் –

சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு –சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை –ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது –ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –

சங்க்ரஹ சங்கதி அருளிச் செய்து அத்தை விஸ்தரிக்கிறார் மேல் –
இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில்-1- அத்வேஷத்தைப் பிறப்பித்து –2–ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து–3- ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
4-இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி–5- இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்-இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு –நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்-
பரத்வம் முதல் பத்தில் அருளி -இரண்டாம் -பத்தில் காரணத்வம் -த்யாநித்தால் மோஷம் கிட்டும் –முக்த பிராப்த போகம் -அருளிச் செய்கிறார் –

இதில்
உபகார பரம்பரைகள் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மாற்றி –அத்வேஷம்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஆபி முக்கியம் -மயர்வற மதி நலம் அருளினன்
தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்
அடிமைக் கண் அன்பு செய்வித்து -ருசியை விளைத்து –
நின் அலால் இலேன் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -கேசவன் தமர் –சம்பந்தி அளவும் -வளர்ந்ததே
ஷீணே புண்யே மர்த்ய லோகம் – -ந புன ஆவர்த்தந்தே -இருள் அகற்றும் -வைகுந்த லோகம் ஏற்றி வைத்து ஏணி வாங்கி –புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே –
மாம் உபேத்ய -புனர் ஜன்ம -துக்க ஆலயம் -அசாஸ்வதம் சம்சாரம் -கர்மத்தால் திரும்ப திரும்ப பிறப்பானே –
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் -சாஸ்திரம் -எழுதா மறை ஏழு முறை சொல்லி –

இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி- திருவடி திரு வநந்த ஆழ்வானை- பரிகரமாக யுடைத்தாய் -பெருமானை-
விஷயமாகக் கொண்ட –முக்த பிராப்ய போகம் -அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது  -யானை இடர் கடிந்த -பெரிய திருவடி அங்கே –
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்-
புணைவன் -தெப்பம் -அவனை உபாயமாகக் கொண்டு அடையப் பார்ப்பார்க்கு –நாயாமாத்மா -தேர்ந்து எடுத்து அருளுவான் –
நலம் அந்தமில்லதோர் நாடு புகப் பெறுவீர் -துயரில்லா வீடு-
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே – நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூககைதாநமாய்-மங்களமாய் -உத்தமமாய்- அபரிச்சின்னமாய் –
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
மால்யமான் -மாதா மகன் -காலச்ய வசப்பட்டு ஏற்க வில்லை -மாரீசன் –பலியோ நமுசியோ ராமர் முடிப்பார் -வீரன் சூரன் -மஹா தேஜஸ்வி –
விபீஷணன் -துஸ் ஸ்வப்னம் -கருடன் பாம்பை பிடித்தால் போலே -சீதையை ஒப்படைக்கா விடில் கோரம் –குருஷ்வ மம வசனம் -குல பாம்சினி
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று-
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே –நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –

மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –

இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

———

2-9-எம்மா வீடு பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

——————————

2-10-கிளரொளி பிரவேசம்

கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )

தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம் –கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம் –பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –

முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம் –வ்யூஹ –அஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )

கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –

முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்

—————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)

பூர்வ அனுபூத -முன்னால் அனுபவித்த
முரவைரி குண அபி வ்ருத்த -பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற
பாஹ்ய சங்கம ருசி  (-1-10-) –தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ  பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே–2-2-

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸ அம்புஜ லோசநஸ்ய
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய ஸூக அம்ருதாப்திம்
தத் தேஸிக ப்ரதம ஸூரி கணை கதா ஸ்யாத்
ஸங்கோ மமேத்ய கதயன் ஸ முனிஸ் த்ருதீயே —2-3-

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸம் -தன்னுள்ளே
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய -முழுசி தழுவி -தன்னுள்ளே
ஸூக அம்ருதாப்திம் -கடல் படா அம்ருதம் -கலவி என்னும் அம்ருதக் கடலில் பிறந்த அனுபவம் –

தத் ப்ரார்த்திதா நதி கமேந ஸமுத்தி தார்த்தி
அக்ரே ஹரே பர முகேந யதா விதேயம்
ஆர்த்தேர் நிவேதநம் அபா கரணம் அர்த்த நஞ்ச
மூர்ச்சாம் ததா முனிரகாந் மஹதீம் சதுர்த்தே —2-4-

பர முகேந -மாற்றார் வாயால் -திருத்தாயார் பாசுரமாக
யதா விதேயம் –மடப்பம் மிக்க தலைமகள்
மஹதீம் மூர்ச்சாம்-பெரிய மயக்கம்
அபா கரணம் அர்த்த நஞ்ச -என் கொல் நுமது திரு உள்ளம் -பிரார்த்தனை –

ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-2-5-

சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி

நீசம் து மாம் அதி கதோ யமதி ஸ்வ ஸூ க்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸுவ விரஹாக மனே அதி சங்காம்
ஷஷ்டே நிரஸ்ய த்ருட சங்க கிரா ஸடாரி
ஆத்மான் வயிஷ் வபி தத் ஆதாரதோ அப்ய நந்தத் –16-2-6-

நீசம் து மாம் -தாழ்ந்தவன்
த்ருட சங்க கிரா –வாக்காலே சிக்கென பிடித்தேன்

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-2-7-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

ஆத்மான் வயிஷ்வபி ஹரே பிரியதாம வேஷ்ய
ஸர்வாத்மானஸ் ஸ்வ ஜனயந் முனிர் அஷ்டமேன
மோஷ பிரதத்வம் உபதிஸ்ய ததாபி முக்யா
லாபாத் ஸூவ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –-18–2-8-

மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-2-9-

ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-2-19-

————–————————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-

நித்ராதிச் சேதகத்வாத்- மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்
அரதி ஜநநதோ-கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–ஒருகாலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்
அஜஸ்ர சங்ஷோப கத்வாத் -நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-திவாராத்ரி விபாகமற
எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
விலய விதரணாத்-தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்
கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத் –நாண் மதியே! நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–கார்ஸ்யதைந் யாதிகளைப் பண்ணுகையாலும்
சிந்தா ஷோபாத்–தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்
வி சம்ஜ்ஜீகரணத்–மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்
உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்

நித்ராதி சேதகத்வாத்-வெவ்வேற துன்பம் -தூங்க விடாமல் –
அ ரதி ஜனனதக-சைதில்யம்
அஜச்ர -சர்வ காலத்தில் –சங்ஷோபகத்வம் -கலக்கும் தன்மை
அந்வேஷ்டும்-தேடி போக- பிரேரகத்வாத் -காரார் திருமேனி காணும் அளவும
விலய விதரநாத் –
கார்ய கார்ஷியா தைன்யாதி கிருத்வாத் -கிரிசமாகும் தன்மை -மதி கலை-
சித்த -ஆஷே பாதயாத் -போது போக்க ஒண்ணாத படி
விசம்கீ காரண -அறிய முடியாத படி
உப சம்ஷோஷனம் ஆர்ணவ  ஜந்மாப்யாம் — உலர்த்த -மெல்லாவி
த்ருஷ்ட்வா ஸ்வாத சௌரெ – ஷண விரஹ தசா –துச்சஹத்வம்–ஜகாதா- அருளிச் செய்தார்

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —2-2-

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –

1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்

3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –

4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்

5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்

6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்

7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்

8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்

9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை

வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –

——

சித்ரா ஸ்வாத அநு பூதிம் ப்ரிய முப க்ருதிபிர் தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் பஜத அம்ருத ரஸம் பக்த சித்த ஏக போக்யம்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் ஸபதி பஹு பல ஸ்நேஹம் ஆஸ்வாத்ய ஸீலம்
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் நிர விஸத நகாஸ் லேஷ நிர்வேஸ மீஸம் -2-3-

சித்ரா ஸ்வாத அநு பூதிம் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே
மது ரங்களான மது ஷீராதி பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான அனுபவத்தை யுடையனுமாய்
விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்

ப்ரிய முப க்ருதிபிர் –பெற்ற அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
மாதாவும் பிதாவும் ஆச்சார்யனும் பண்ணும் உபகாரங்களை எல்லாம் தானே பண்ணி -அத்தாலே ஆஸ்ரிதருக்கு பிரியனுமாய்
மகா உபாகரகம்-

தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து –
அறிவு நடையாடாத காலத்திலே தாஸ்ய ரஸத்தை உண்டாக்கினவனுமாய்

ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் -எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனதாவி தந்து ஒழிந்தேன்
ஆத்மாவை சமர்ப்பிக்கும் படிக்கு ஈடாக ஆத்மாவினுள்ளே கலந்து இருந்த மஹா உபகாரத்தை உடையனுமாய்

பஜத அம்ருத ரஸம் -என் கடற்படா அமுதே!
ஆஸ்ரிதற்கு அமிர்தம் போலே போக்யனுமாய்

பக்த சித்த ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானே என்று இருக்குமவர்கள் மனஸ்ஸை விட்டுப் பிரிய மாட்டாது இருக்குமவனாய்

ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!
சஷுஸ் ஸ்ரோத்யாதி ஸர்வ இந்த்ரிய ப்ரீணந யோக்யதை யுடையனுமாய்

ஸபதி பஹு பல ஸ்நேஹம் -குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு இத்யாதிகளில் படியே சிரகால ஸாத்ய தபோ த்யான ஸமாதி பலமான
பக்தி யோகத்தைத் தனக்கு அபிமதர் இடத்திலே ஜடதி
சடக்கென -அருளி

ஆஸ்வாத்ய ஸீலம் -பவித்திரன் சீர்ச்  செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அத்யந்தம் போக்யத்வேன அநு பாவ்யங்களான கல்யாண குணங்களை யுடையனுமாய்
ஆழ்ந்து அனுபவிக்க-

ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் -மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே-சேர்ந்து உள்ளவன்-
ஸ்வ யஸஸ்ஸூக்களான நித்ய ஸூரிகளோடே ஸஹிதனாய் இருக்கிற எம்பெருமானை

நிர விஸதநக அஸ்லேஷ நிர்வேஸ மீஸம்
மதுரங்களான ஸர்வ பதார்த்தங்களின் உடைய ரஸத்தை யுடைத்தான போக்யதை யுடையனாக
ஊனில் வாழ் உயிரே!-தசகத்திலே ஆழ்வார் அனுபவித்தார் என்கிறார்

—————

ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம்
ஷபித விபது ஷா வல்லபம்
ஷிப்த லங்கம்
ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும்
ஸ்ரமஹர துளஸீ மாலிநம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம்
ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்
தீப்த ஹேதிம்
சத் பிரேஷா ரஷிதாரம்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத-2-4-

1-ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம் –நாடி நாடி நரசிங்கா என்று -பக்தனான ப்ரஹ்லாதன் நிமித்தமாக ஸ்ரீ ந்ருஸிம்ஹணாக ஆவிர்பவித்தும்
2-ஷபித விபது ஷா வல்லபம் -விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -அநிருத்தருக்கு விரோதியான பாணாசூரனுடைய கரங்களைக் கழித்தும்
3-ஷிப்த லங்கம் -அரக்கன் இலங்கை செற்றீர் -எதிரியான ராவணனுடைய இலங்கையை அழித்தும்
4-ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும் -வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் -விஷ விரோதியான வைனயதேயனை த்வஜமாகப் படைத்தும் –
5-ஸ்ரமஹர துளஸீ மாலிநம்-வண்டு திவளும் தண்ணம் துழாய்-மதுஸ்யந்தி யாகையாலே ஸ்ரமஹரமாய் இருக்கும் திருத்துழாய் மாலையைத் தரித்தும்
6-தைர்ய ஹேதும்—என தக வுயிர்க்கு அமுதே–விரஹ வியசனத்தாலே ஆத்ம வஸ்து அழியாதே அம்ருதமாய் இருந்து தரிப்பித்தும் –
7-த்ராணே தத்தா வதாநம்—வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்—ரக்ஷணத்திலே அவஹிதனாயத் திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்ததும் –
8-ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்—விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்–மிடுக்கனான கஞ்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தைத் தீர்த்து ஆஸ்வாஸம் பண்ணியும்
9-தீப்த ஹேதிம் —சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-தேஜிஷ்டமான திருவாழியைத் திருக்கையிலே தரித்தும்
10-சத் பிரேஷா ரஷிதாரம்–மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–ஆஸ்ரிதருடைய ப்ரேக்ஷையைப் போக்காதே ரஷித்தும்

வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
இப்படி பிரசித்த வைபவனான எம்பெருமானை ஆஸ்ரிதருடைய வியசனம் எல்லாம் நிரஸித்து அருளுபவனாக
ஆடி யாடி தசகத்திலே ஆழ்வார் அனுசந்தித்தார் -என்கிறார்

———

ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி  த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம்  துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த –2-5-

1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்

2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –

3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –

4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்

5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்

6-ந ஏக பூஷாதி  த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்

7-பிரத்யாத ப்ரீதி லீலம்  –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்

8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –

9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –

10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை

விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –

—————

ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் ஆஸ்ரித நியத த்ருஸே ந ஏக போக பிரதாநாத்
தியாக அநர்ஹ பிரகாசாத் ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் பாப பங்காத்
துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே விரஹ பய க்ருதே துர் விபேத ஆத்ம யோகாத் 
நித்ய அநேக உபகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் –2-6-

1-ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் —வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே–
தன்னுடைய நிரதிசய போக்யதையை க்யாபனம் பண்ணுகையாலும் –

2–ஆஸ்ரித நியத த்ருஸே–எங்கும்
பக்க நோக்கு அறியான் -ஆஸ்ரித ஜனத்தை விட்டு அந்யத்ர கண் வைக்க மாட்டாமையாலும்

3-ந ஏக போக பிரதாநாத் –நா மருவி நன்கேத்தி இத்யாதி —
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணி -மனஸ்ஸிலே சிந்தித்து -நிர்மமராய் வணங்கி –
ஹ்ருஷ்டராய் கூத்தாடும் படி -அநேக வித அனுபவத்தைக் கொடுக்கையாலும்

4-தியாக அநர்ஹ பிரகாசாத் —-உன்னை எங்கனம் விடுகேன்–தன்னை விடுகைக்கு ஸம்பாவனை இல்லாதபடி பிரகாசிக்கையாலும்

5-ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் —உனது
அந்தமில் அடிமை அடைந்தேன்–ஆத்மாந்த தாஸ்யத்தை நிலை நிறுத்துகையாலும்

6-பாப பங்காத்—-என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்–விரோதிகளான பாபங்களை ஸ வாசனமாகப் போக்குகையாலும்

7-துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே –முடியாதது என் எனக்கேல் இனி- -சம்பந்த சம்பந்திகளும் உத்தீர்ணராம் படி துஸ் சாதனமான காரியத்தை சாதிக்கையாலும் –

8-விரஹ பய க்ருதே —-உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்–விட்டுப் பிரியப் போகிறான் -என்கிற அதி சங்கையை விளைக்கையாலும்

9-துர் விபேத ஆத்ம யோகாத்  —உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா—ஆத்மாவோடு ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இருக்கையாலும்

10-நித்ய அநேக உபகாராத் —போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்-கால த்ரயத்தாலும்
மாதா பிதாக்கள் பண்ணும் உபகாரங்களையும் தான் தனக்குப் பண்ணும் உபகாரங்க ளையும் பண்ணுகையாலும்

ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் —எம்பெருமானை -வைகுந்தா மணி வண்ணனே -சதகத்திலே –
ஆஸ்ரிதர் நம்மை விடில் செய்வது என் -என்ற அதி சங்கையை யுடையனாக ஆழ்வார் அத்யவசித்து அருளினார் -என்கிறார் –

——

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———

பிராப்த்யாகார உபபத்யா ஜனி பரிஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே 
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ் ரஷணார்த்த அவதாராத் 
ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித விஹரணாத் -வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் 
பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –2-8–

1-பிராப்த்யாகார உபபத்யா —அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்—
திரு அனந்தாழ்வான் மேலே பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து இருகையாலும்

2-ஜனி பரிஹரணாத் —நீந்தும் துயர்ப் பிறவி–இத்யாதி -கடக்க அரிதான துக்கத்தை உண்டாக்கும்
ஜென்மம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்துகையாலும் –

3-விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு
அந்தராத்மாவாய் நின்று ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரதிகளைப் பண்ணுகையாலும்

4-நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ்-நலமந்த மில்லதோர் நாடு-நிரவதிக ஆனந்தத்தை உடைத்தான
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கையாலும்

5-ரஷணார்த்த அவதாராத் –மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-லோக ரக்ஷண அர்த்தமாக
ஹயக்ரீவ கூர்ம மத்ஸ்ய ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்

6-ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே
சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த-அர்ஜுனன் தன் திருவடிகளில் இட்ட திருமலையை
சிவனுடைய சிரஸ்ஸிலே கண்டு -இவனே சர்வாதிகன் என்று தெளிந்து -அறுதி இடும்படியான ப்ரபாவத்தை யுடைத்தாகையாலும்

7–விஹரணாத் –கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்-
திருப்பாற் கடலிலே கிடந்தும் -பரமபதத்தில் இருந்தும் -திருமலையில் நின்றும் –
அதவா
பிரதி ஸிஸ்யே மஹோ ததே -என்றும்
உடஜே ராமம் ஆஸீ நம் என்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் –என்றும் சொல்லுகிறபடியே
கடல் கரையிலே சாய்ந்தும் -பர்ண சாலையிலே இருந்தும் -வாலி வத அநந்தரம் நின்றும்
அதவா
மணல் குன்றிலே ஸ்ரீ கோபிமார் மடியிலே சாய்ந்தும்
வத்ஸ மத்யத்திலே கோப குமாரர்களோடே இருந்தும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணி நின்றும்
த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தும்
வராஹனாய உத்தரித்தும் –
பூமா தேவி மால் செய்யும் மால்-
இப்படி பஹு வித விஹரணங்களைப் பண்ணுகையாலும்

8-வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் -எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே-ஒரு குறைவின்றிக்கே எட்டு திக்கிலும் வியாபித்து நிற்கையாலும்

9-பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் –
ஆஸ்ரிதர் நினைத்த இடத்திலே அப்பொழுதே ஆவிர்பவித்துக் காணப்படுமவனாகையாலும்

10-அகில பல க்ருதேர் -சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற-மோக்ஷ ஸ்வர்க்காதி ஸகல புருஷார்த்தங்களுக்கும் காரணமாகையாலும்

முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –எம்பெருமான் ஒருவனே மோக்ஷ ஸூக பிரதன்-என்று —
அணைவது அரவணை மேல்–தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —

—————

ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-

1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —

2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –

3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –

4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —

5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்

6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –

7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –

8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —

9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –

10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை

11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——–

தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-

1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –

2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –

3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –

4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –

5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –

6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –

7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்

8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –

9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்

10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை

ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –

———

இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-

த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –

1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்

2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்

3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்

4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்

5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்

6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்

7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்

8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்

9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –

10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்

எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –

———————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 11-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து ————11-

வாயும் -திரு மால் –
அடியார் அனுபவிக்கலாம்படி
அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய
ஸ்ரீ யபதி யானவன் –

ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்
தம்முடைய துக்கத்தை ஆராய
அறியாத வற்றை

செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை
த்ருடமாக
கடாஷித்து அருளுவார்-

—————————————————————

அவதாரிகை –

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே-
1-அனன்யார்யக சேஷத்வம் -2–அநந்ய சரணத்வம் -3–அநந்ய போக்யத்வம் -4–ததேக நிர்வாகத்வ
5–சம்ச்லேஷத்தில் தரிக்கை -6–விச்லேஷத்தில் தரியாமை -கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே –
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு-மயக்கம் உற்று –
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்–

வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –

ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் -ஆச்சார்ய ஹிருதயம் -132

செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை  
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————

வியாக்யானம்-

திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் -2-1-10-
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -2-1-11–என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை-அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –

திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –

நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியை யாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம் படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-

நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகை யாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம்படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்–பேதைக் குழவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா– கமலா பத்ராஷஸ் –சர்வ சத்வ மநோஹரா-என்றும்–படி எடுத்து உரைக்கும் படி யன்றே அவன் படி -மூவாறு மாசம் மோகித்து –
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று –முலை மேல் சோர்கின்றாளே -கல் எடுத்தது பெரியது இல்லை சொல் என்று –
லாவண்யம் சௌந்தர்யம் -இரண்டையும் சுருங்கச் சொல்லி –
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –

வண்ணம் அறிந்து -அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –

அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு–————-13-

———————————————————-
அவதாரிகை –

இதில் எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ச்லேஷிக்க-ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் அன்றோ –
தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை –திண்ணன் வீடு -தலைக் கட்டின
அநந்தரம்
கீழ்
தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி
தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து
தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே
துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே
போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற
ஊனில் வாழ் அர்த்தத்தை
ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

வியாக்யானம்–

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல்
சங்கோசம் அற சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது
ச ஹிருதயமாக சம்ச்லேஷித்த சாரஸ்யம் ஆனது

அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரச்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
அனுகூல சஹவாசம் அபேஷிதமாய்

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே
அனுபவத்துக்கு தேசிகராய்
வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின
ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்
அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —————-14-

————————————————————————

அவதாரிகை –

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே
மிகவும் தளர்ந்து
தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான
நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை
பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை
கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய
விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே
அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே
ந்ருத்யந்தி கேசித் -என்னும் படியாக –
அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு
வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய்
ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே
வாடி வாடும் -என்று மிகவும் வாடி –

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று
நிரவதிக சிநேக உக்தரான
மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூக்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை எம்பெருமானுக்கு நிரூபித்து
தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை
தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்
தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –

மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஆழ்வார் –

ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றர்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –
அற்ற பற்றார் -மதுரகவி போல்வார் –

அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே –என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே –என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்
இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய்
இருக்கும் ஆயிற்று –

——————

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை–———–15-

—————————————————————-
அவதாரிகை –

இதில் ஆடியாடியில் -விடாய் தீர
அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து
வாட்டமில் புகழ் வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து
சம்ச்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே
அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை
மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை
அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

————————————————————————————–

வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத்தேசத்திலும்
அத்தேசிகர் இடத்திலும் உண்டான அதி ச்நேஹத்தாலே –

அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு –
அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் –
அவர்களோடு கூட சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –

வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான்
பரமபதத்தின் நின்றும்
பரமா பதமாபன்னரான–பெரிய ஆபத்தில் இருந்த -இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ச்லேஷித்த ஔதார்யத்தாலே –

சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து
அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து
சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –

சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
வானோர் தனித் தலைவன்
அந்தாமத்து அன்பு செய்யும் படியான
ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே
அன்பை அடியிலே இட்டு வை-

————

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—————-16-

பித்தின் அடியாக -கர்மத்தால் அல்ல-ஆஸ்ரிதர் வியாஹோமம் அடியாக –
2-5- வந்து கலந்த –வைகுந்தன் –என்பதால் அந்தாமத்து அன்பில் –
செய்கின்ற நைச்ச்யம் -சிந்தித்து -1-5- பழைய நினைவு வர –
பகவான் நைகின்ற தன்மைதனை ஆழ்வார் கண்டு
உன்னை விடேன் -என்று ஆழ்வார் உரைக்க
சத்ய சங்கல்பர் சத்ய வாக்யர் இவர் என்று விஸ்வசித்து
இழந்த வன்மையை மீட்டுக் கொண்டான் –
மேலும் மீளும் -பின்னும் தீருவார் -இப்படி பண்ணி அருளி -பிறந்து படைத்த ஐஸ்வர்யம் அல்லவோ இது –

—————————————————————————————

அவதாரிகை –

இதில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று
அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று
ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்
அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே
வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று
அதி சங்கை பண்ணி
அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் –
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி
அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை
வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பாஷ்யத்தை ஒருகால் -திருவாய்மொழியை சதா காலம் அனுபவிக்க -திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மா முனிகளுக்கு ஆஜ்ஞ்ஞை செய்து அருளினாரே

————————————————————————————

வியாக்யானம்–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
நித்ய விபூதி உக்தன்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த பின்பு –

வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று
சம்பன்னரான ஆழ்வார் –

செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற
நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று
ஈஸ்வரன் விசாரித்து –
பாலாழி கண் வளரும் பண்பை கேட்டே யும் கால் ஆளும் -ஆழ்வாருக்கு -இங்கே -நைகின்ற தன்மையைக் கண்டு பெருமாள் –

நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –

உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விச்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற
உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்
ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –
வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி
துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி
ஸ்தர்யத்தைப் பிராபித்தான் –பிரசக்த கேசவன் ஆனவன் -மரகத மலை –
விஜ்ஜுர ப்ரமோதாக –அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட பிராப்தி -வன்மை அடைந்தார் -இங்கே -விடேன் சொன்னதுமே

—————

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு–—————18-

மாறன் மலர் அடியே–வீசு புகழ்– எம்மா வீடு –
மாசில் உபதேசம் செய்-கியாதி லாப பூஜைக்காக இல்லாத

——————————————————-
அவதாரிகை –
இதில்
மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை
தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி
சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற
அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-

———————————————————————-

வியாக்யானம்–

அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே-
ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்
அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற
அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி
கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது
ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –

தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக
தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்
ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு –
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று –
ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் –என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற
குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –

அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆனபோது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே
உபாயாந்தர நிரபேஷமாக
திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்

அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது
இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் –என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற
கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
பெருமாள் பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –

உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை
நித்ய சூரிகளோடு கூட்ட
மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு
இணக்குப் பார்வை போல்-(மிருகத்தை மிருகம் வைத்து கண்ணி வைத்து பிடிப்பாரை போலே இணங்கி தாழ நின்று )-சஜாதீயராய் இணங்கி –

ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு
உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –

மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும்
பரிசுத்த ஞானரான ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஆழ்வார் உடைய-புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –

வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய
சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஆழ்வாருக்கு –செம்மா பாதம் -இறே எம்மா வீடு-பொசிந்து காட்டும் இங்கே
இவருக்கு மாறன் மலர் அடியே யாயிற்று
விபூதிஸ் சர்வம்- ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-

—————

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –————–19-

—————————————————————————————–

அவதாரிகை –

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8-
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————

வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –

வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது –எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –
தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –

நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி –தனியேன் வாழ் முதலே -2-3-5–என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –

மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6–என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –

கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

——————

இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய் கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –

வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –

தளர்வு –
மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

அறவே –
அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து -சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –

இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் -கிளர் ஒளி இளமை -என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது -கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
ஸ்ரீ திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
ஸ்ரீ திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்-ஸ்வ அனுபவ கர்ப்ப பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –

அந்தர்கத குணா உபாசனத்தை மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாய பரமாக ஸ்ரீ நாயனார் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது-ஆகையால் ஸ்ரீ திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே

நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே –

முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –—————————————————————

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூர்ணிகை –220–

இரண்டாம் பத்தால்
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண –
அவனாலே தத்வ ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று
ஆசைப் பட்டுப் பெறாமையாலே –
( அந்தமில் பேர் இன்பத்துக்கு அடியாரோடு இருந்தமையை இவருக்கு ப்ராப்யம் ) அவசன்னராக (2-4-)
இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி –
அவன் வந்து சம்ஸ்லேஷித்து -(2-5 -அந்தாமத்து அன்பு )–அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையவனாய் –
(உடையவராய் என்று ஆழ்வாரைச் சொல்ல வில்லை –உடையவனாய் -என்று இவர் சிக்கெனப் பிடித்தேன் -என்று
சொல்ல அதனால் அவனும் ப்ரீதனாய் )
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு –
அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட –(அணைவது அரவணை மேல் -2-8-)
அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் –

ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு –
தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக-
த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் –
முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை –
நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —

(உபாசனத்தை -அங்க யுக்தம் ஆக்குகிறார்
கீழே அவனுடைய சேவைக்கு பக்திக்கு -எளிமையும் இனிமையும் உண்டு –பஜனத்தில் சேர்க்கிறார் -என்றார் –
இங்கு குண உபாசனம் -பக்தி சேவை -பர்யாயம் -சேவை -கைங்கர்யம் -பக்தியை கைங்கர்யம் நமக்கு –
கண்ணன் சொல்லும் கர்மயோகம் போல இல்லாமல் –ஷேத்ரவாச சங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தனாதி
ரசமான -காலைப்பிடிக்க பாலைக் கொடுப்பது போலே அருளிச் செய்கிறார்
குண அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காக கொள்ளுகை-பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்வது போலவே இங்கும் -)

(முகம் காட்டாமல் இருக்க -சிதிலமாகி – –காற்றும் கழியும் கட்டி அழுது -2-1-பெருமாள் பரத்வத்தை காட்ட –
கொஞ்சம் ஸைதில்யம் நீங்கி- ப்ராசங்கிகமாக-அடுத்த பத்து -2-2-விபவ அவதாரத்தில் பரத்வம் -திண்ணன் வீடு –
எல்லாம் தன்னுள்ளே கலந்து தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்து-ஸந்தோஷம்-
அடியார்கள் உடன் கூட ஆசைப் பிறந்து கிடைக்காமல் வியசனம் மிக்கு ஆடி ஆடி –துடிக்க –
அடுத்து -தன் பக்தர் உடன் ஆழ்வார் உடன் சேர –அந்தாமத்து அன்பு-2-5-இது தான் மா முனிகள் கலந்தான் என்கிறார் –
2-3-கலந்தாலும் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தான்– இந்த சம்ச்லேஷத்தாலும் ஆழ்வாருக்கு திருப்தி பிறக்க வில்லையே
மேலே ஆனந்தம் -ஆழ்வாருக்கு -2-6-உன்னைப் பிடித்தேன் சிக்கனவே -பின்பு கேசவன் தமர்–2 7–
இவன் தானே மோக்ஷ பிரதன் உபதேசம் –அணைவது அரவணை மேல் -2-8–
அவன் கொடுக்க வர புருஷார்த்த நிர்தேசம்-எம்மா வீட்டு –ப்ராப்ய நிஷ்கர்ஷம்–2-9-கைங்கர்யம் தெற்குத் திருமலையில் -2-10-
பராங்குச பயோதி-கடல் அன்றோ -வியாக்யானம் மூலம் கடல் கரையில் இருந்து அனுபவிக்கத் தான் முடியும் )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற
சித் அசித் த்ரய திரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க
உள்ளம் தேறித் தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான
ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
2-உலராமல் ஆவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன
வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில்
எம்மா வீட்டை உபய (சேஷ சேஷி இருவருக்கும் ) அனுகுணம் ஆக்கினவர்
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை
ஸ்தாபிக்கிற சகல பல ப்ரதத்வ காரணத்வ
சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை
திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன
பிரத்யஷங்களும் காட்டிப்
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ
சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற
அந்தர் கத குண உபாசனத்தை
6-மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக்
கீழ்மை வலம் சூதும் செய்து
இளமை கெடாமல் செய்யும்
ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி
பிரதஷிணகதி சிந்தநாத் அங்க
உக்தம் ஆக்குகிறார்
இரண்டாம் பத்தில்-
( 2-10-பாசுரங்களில் விவரித்தவை )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்
அதாவது
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,
மூவாத் தனி முதலாய் -2-8-5–என்றும் ,
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்றும்–
லீலா விபூதியில்
சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் —
ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —

நித்ய விபூதியில் -அப்ராக்ருதம் -கார்யத்வம் இல்லாமல் ஸூஷ்மம் நாம ரூபம் இல்லாமல் இருக்காதே -அங்கு
சர்வ காரணம் அவன் -லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் –
இச்சா விசிஷ்ட ரூப (சங்கல்ப-இங்கு -அங்கு இச்சையால் ) வேஷத்தால் நிமித்தமாயும் –
அப்ராக்ருத அசித் ஜீவ விசிஷ்ட வேஷத்தால் உபாதானம் -லீலா விபூதியில் இங்கும் ஜீவன் அப்ராக்ருதம் தானே –
உபாதானம் -மாறுவது -ச ஏகதா பவதி-இத்யாதி -இமான் லோகான் காமான் நீ காம ரூப்யான் ஸஞ்சரன்-அங்கும் உண்டு –
அதுவே ஸ்ருஷ்ட்டி அங்கு -கைங்கர்யத்துக்கு அனுரூபமான திரு மேனி
விநியோக உபயோகி ஞானாதி வேஷத்தாலே சஹகாரி அங்கு –

இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும்
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும்
திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்

(நித்ய இச்சையால் அது நித்ய விபூதி -அவர்கள் நித்யர்கள் –
நியதி பூர்வ க்ஷண வ்ருத்தித்வமே காரணம்–அது இங்கு -மாறக்கூடிய அசித் –
எது சத்வே-முதல் வினாடியில் இது இருந்ததால் அது இருக்கும் – சங்கல்பம் காரணம் –
அங்கு -இவை நித்தியமாக இருக்கட்டும் என்பதால் அவை நித்யம் -இதுவே நியாயம் –
சங்கல்பம் மாற்ற மாட்டான் -ஸ்வதந்த்ரன்
அப்ரக்ருத அசித் ஜீவ சரீரம் அங்கும் உண்டே அவனுக்கு -ப்ரதிஜ்ஜைக்கு ஹானி வராது
ப்ரஹ்மத்தை விட வேறு இல்லையே -2-3-5-ப்ரஹ்ம ஸூத்ரம்-
ப்ரஹ்ம கார்யத்வேன-ஆகாசம் -ப்ரஹ்மாத்மகம் –
நித்ய விபூதியில் -நித்ய சித்த -ப்ரஹ்ம சரீரத்வேன-கார்ய காரண அபாவம் –
சரீரமாக இருப்பதால் ப்ரஹ்மாத்மகம் அங்கு சுருதி பிரகாசர் -விளக்கம் –
இத்தை மா முனிகள் திரு உள்ளத்தில் கொண்டு -இப்படி பிரித்து அருளுகிறார் இரண்டையும் –
காலத்துக்கு குணத்ரயம் இல்லை -அபிமானி தேவதைக்கு குணத்ரய வஸ்யம் இருப்பதால் -கலியுகம் படுத்துகிறது என்பர் –
த்ரிவித சேதன த்ரிவித அசேதன-இதனாலே -)
(ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-ஓன்று விடாமல்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்– மூவா -கலங்காமல் – -காரணந்து த்யேயா
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
காரணத்வம் நியந்த்ருத்வம் வியாபகத்வம் காருணிக்கத்வம்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் 2-10-11–மீண்டும் மேம்படும் -படைக்கிறான் –
கீழே மூவா வருத்தப்படாமல் இருப்பதை சொல்லி -)

அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி
அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை
விசத தமமாக அறிவிக்க —
அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி
நெஞ்ளில் தெளிவை உடையவராய்-(மனோ பூர்வ வாக் உத்தர க்ரமம் இல்லையே அவன் மூலம் பெற்றதால் )

தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
தூ மனத்தனனாய் –2-7-8-
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று
மோஷ ஏக ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் –
அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு (தத்வ வேதன மறப்பற்று ) பலம் மோஷம் ஆகையாலே –
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று
பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் –
சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் –
நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று
அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி
அப்போதே கிடையாமல்
வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி

2-உலராமல் ஆவி சேர்ந்து
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே
பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து —
கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி –

சிக்கெனப் புகுந்து-
சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று
அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி
தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து

சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினர்-2-6-7- -என்று
இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –
எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -2-7-1–என்று
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் –
நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர்
தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
(இளிம்பு-பகவத் கிருபை பெறாமல் / சதிர்-கிருபையை உபாஸனாதிகளால் பெற்று / மா சதிர் -நிர்ஹேதுகமாக பெற்று )

உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
இப்படி தம்முடைய ( சம்பந்தி ) பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே
தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2-
கெடலில் வீடு-2-9-11-
எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் –
(மூன்று வீட்டு சப்த அர்த்தங்கள் இத்தால் -துயர் இல்லா வீடு -ஸ்வார்த்ததா-அநர்த்தம் இல்லா வீடு – கெடலில் வீடு–எம்மா வீடு – )
அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே –
அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –
கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் —
சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4–என்று
உபய ( சேஷ சேஷி இருவருக்கும் ) ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-

3-ஆச்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற
ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான

சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் -2-2-1-–என்று சகல பல பரதத்வம் –
தேவும் எல்லா பொருளும் 2-2-8-—கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் –
(வர்த்தித்து -வளர்த்து என்ற அர்த்தம் )
ஆக்கினான் தெய்வ வுலகுகள்-2-2-9- -என்று சர்வ காரணத்வம் –
ஆழி அம் பள்ளியாரே -2-2-6–என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் –
(பாற் கடலில் -ஆதி சேஷன் மேல் படுத்த -என்று கூட்டி லக்ஷணை-என்றவாறு -அஸ்வாரஸ்யம் )
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து -2-2-3-– என்று ஸ்ரீயபதித்வம் –
கண்ணன் கண் –2-2-1- கோபால கோள் அரி ஏறு-2-2-2- -என்று அவதார சௌலப்யம் –
(ஸுவ்லப்யமும் பரத்வத்தை விளக்க வந்தது தானே
ஐந்தும் இரண்டு திருவாய் மொழியிலும் –என்றும்
இரண்டு மட்டும் திண்ணன் -மீதி மூன்றும் அணைவது -என்று இரண்டு நிர்வாகங்கள் )

ஆதி -சப்தத்தாலே
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -2-2-5–என்று புண்டரீகாஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -2-2-7–என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —பிரகாசிப்பித்தது
(இவை இரண்டும் பரத்வத்தை விளக்கும்)

அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –
இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –
வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்-
(மோக்ஷத்துக்கு காரணம் –ஈட்டில் -மோக்ஷம் தொடக்கமான-என்று கொண்டு அஸ்வாரஸ்யம் –
கீழே திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -)

ஆதி -சப்தத்தாலே
பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –
மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம்
ஆகியவற்றை -அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –

அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய அசேஷ புருஷார்த்த
பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த –
தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் – திண்ணன் வீட்டிலும் –

அணைவது அரவணை மேலிலும் -என்றும் –
பூம் பாவை யாகம் புணர்வது- என்றும் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்
அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —

ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று
முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —

இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..
முற்பட்ட யோஜனையில் –
ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் –
வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி –
மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் –
சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும்
சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு

4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி
கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே –
அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும்
எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான
பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் –
அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –

தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே –
ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து –
அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு – என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய –
அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —
பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம்
ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர க்ருத நிச்சி தார்த்த – என்கிறபடி
தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு –
சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே
பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே –
தானே பிரத்யஷித்து -சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –
பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று
பிரத்யஷைத்தையும் காட்டி-
(மிலேச்சனும் பக்தன் ஆனால் சூத்ரம் -வசன அனுஷ்டானங்கள் முன்பு -பார்த்தோம் இங்கு வசன ப்ரத்யக்ஷங்கள் )

5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குண உபாசனத்தை
(சம்சார துக்கம் மோக்ஷ ஆனந்தம் சாதன ரசம்-என்று பிரித்து )
புலன் ஐந்து -2-8-4-என்கிற பாட்டில் –
ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு
த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் –
பிராப்யத்தில் பிராவண்யமும் –
சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி- என்று
பரிச்சின வஸ்துக் க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்தது என்கையாலே –
அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –

நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் –2-8-4-என்று
நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்

பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -2-8-4-என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ( சீரில் படிமின் குண உபாசனம் )
ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே –
சாதனத்தினுடைய ரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் –
(அலமந்து அசுரரை வீயச் செற்றவன் )அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே –
பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –
தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி
குண உபாசனத்தை

(அந்தர் கத குண உபாசனம் -அங்கி இவை அங்கங்கள்
தஹர வித்யை -உபாசனம் ப்ரஹ்ம புர-தஸ்மிந் யத் அந்த அன்வேஷ்டவ்யம் -தேடத்தக்கது -விசாரிக்கத்தக்கது –
ப்ரஹ்மத்துக்குள் காமம் -கல்யாண குணங்கள் இருக்கும் -தேடி உபாசிப்பாய்
என்ன குணங்கள் -அபஹத பாப்மாதி அஷ்ட குணங்கள் –
இந்திரன் மாம் ஏவ உபாஸ்வ–மாம் என்னை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை -உபேந்த்ரன் -உலகமாய் தோட்ட அவதாரம் –
கண்ணன் – மாம் சரணம் -இவனுக்குள்ளே என்று கொள்ளாமல் -அவனையே –
தஹர ஆகாசம் ஹ்ருதயத்துக்குள்ளே -நிறைந்த சோதி வெள்ளம் ஆகாசம் -அதற்குள் உள்ளதைத் தேடச் சொல்லி -சாந்தோக்யம் –
ஆழ்வார் அங்கங்கள் உடன் கூடிய உபாசனத்தை விதிப்பாரா -உபாயாந்தரங்கள் அன்றோ –
அஷ்டாங்க யோகம் -பக்தி –ஹிதம் ஷட்விதா சரணாகதி -பிரபத்தி நியாஸ பஞ்ச அங்கங்கள் கூடிய -ஹித தரம் –
சரணாகதி -அங்கங்கள் இல்லாமல் ஹித தமமாய் இருக்குமே –
தன்னடையே ஏற்கும் சம்பாவித ஸ்வ பாவம் -உத்தர க்ருத்யம் -அங்கங்கள் ஆகாதே –
அவகாத ஸ்வேதம் போலே ஆகுமே -பின் அங்கங்கள் என்று எதற்க்காக சொல்ல வேண்டும் –
நமக்கு சங்கை -போகும் இடம் உயர்ந்தது -பாபங்கள் பிரபலம் -செய்வது வெறும் சரணாகதி -உபாய பல்குத்வம்-
மூன்றாலும் விசுவாசம் குறையுமே
அந்தர் கத குண உபாசனம் சின்னதும் ஆசையுடன் கேட்க வருவோம் –கல்யாண குண அனுசந்தானம் -சொல்வது நம் சம்ப்ரதாயம்
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
அங்கங்கள் எதற்கு -உபாசனத்துக்கு அங்கங்கள் இருப்பது போலே இதுக்கும் இவை உண்டே
அங்கங்கள் என்ற புத்தியோ அனுஷ்டானமோ இல்லை ஆழ்வாருக்கு -இங்கும் உண்டு -சம்பாவித ஸ்வ பாபம் –
குண உபாசனை பலன் குண அனுசந்தானத்துக்கும் உண்டு -அங்கங்களாக இல்லை சம்பாவிதம் என்றவாறு – )

6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி –
வல்வினை மூழ்கி
நரகழுந்தி
கீழ்மை செய்து
வலம் கழித்து
சூது என்று களவும் சூதும் செய்து
கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று
உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி –
அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு
தண்மையை செய்து– பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய்
பால்யத்தை பாழ் போக்காதே –
(க்ருத்யம் அக்ருத்ய விபாகம் பண்ணி-மதியாது -என்ற பாசுரத்தை மதித்து –
பெருக்காது -என்றதை பெருக்கி —
மூழ்காது -மூழ்கி / அழுந்தாதே -அழுந்தி இத்யாதி
கைங்கர்யம் பண்ணும் நாம் கிளர் ஒளி -கைங்கர்யம் கொள்ளும் அவன் ஒளி வளர் ஒளி மாயோன் –
திவ்ய தேசம் வளர் இளம் பொழில் சூழ் -ஆகவே நாம் தளர்விலராகிச் சார்வது சதிர்
இங்கு அக்ருத்யங்களைச் சொல்லி மேலே க்ருத்யங்களை விவரிக்கிறார் –
செய்யாதன செய்யோம் -செய்யும் கிரிசைகள் -திருப்பாவை போலே )

செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்
அதாவது
பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும்
சொல்லுகிறபடியே
பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே –2-1-
போது அவிழ் மலையே புகுவது பொருளே-2-10–என்கிற ஷேத்திர வாசம் –
பதியது ஏத்தி 2-10-2-என்கிற சங்கீர்த்தனம்
தொழக் கருதுவதே -2-10-9-என்கிற அஞ்சலி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே-2-10-8- -என்கிற பிரதஷணம்
நெறிபட அதுவே நினைவது நலமே -2-10-6–என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–
(உபநிஷத் விதிக்கும் அங்கங்களை சம்பாவித ஸ்வ பாவங்களாக -தானே ஏற்படுவதைக் காட்டி அருளுகிறார் -என்றவாறு -)

(ஆக இரண்டாம் பத்தால்
காரணத்வத்தை வெளியிட்டு –
அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும்
ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும்
அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும்
அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும்
உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும் தெரிவித்தபடி – )

———————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ரஹஸ்யங்கள் –ஆத்ம விவாஹம்-முமுஷு க்ருத்யம்-ஸாமக்ரீ பரம்பராநாதம்-அவஸ்தா த்ரயம்–

July 27, 2024

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகம்ருத ஸார பூரிதம் புவந த்ரயம்நஞ்சீயருடைய தனியன்:

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்திரம்

அவதார ஸ்தலம்: திருநாராயண புரம்

ஆசார்யன்: பராசர பட்டர்

ஶிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

அருளிச் செய்தவை: திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம்,  திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப் பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை.

இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திரு நாமத்தை இவருக்குச்  சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திரு நாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீ மாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவி தன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப் பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணை யடியோன் வாழியே
எழில் பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியேநஞ்சீயருடைய வாழி திருநாமம்:

————-

ஆத்ம விவாஹம்

ஸ்ரீ யபதி யாகிற
காள மேகத்தில் இருந்து ஸுஹார்த்தம் என்கிற தொரு பாட்டம் மழை பொழிந்து
கிருபையாகிற நிலத்திலே
ஜீவனாகிற ஒவ்ஷதி முளைத்து(
இது சரீர ஜென்மம்)

ஆசார்யனாகிற பிதா
விரஹம் என்கிற ஸங்கமத்தாலே
ஞானமாகிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து
ஜீவாத்மா என்கிற பெண் பிள்ளை பிறக்க
(இது ஞான ஜென்மம்-அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்)

(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —
யாதிருச்சா ஸூஹ்ருதம்
விஷ்ணோ கடாக்ஷம்
அத்வேஷம்
ஆபி முக்யம்
சாத்விக சம்பாஷணம்
ஆச்சார்ய பிராப்தி )

(கிருபை -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுத்வம்)

(வித்யைத் தாயாகப் பெற்று ,
பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே
திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை
மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல்
விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு
முப்பிரியான
ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு
இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து
ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று
குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு
நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு
நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக்
கவரி செய்ய
நிறை குடம் விளக்கம் ஏந்தி
இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து
வாய் மடுத்து பெரும் களிச்சியாக
வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து
ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு
மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -121-)

ருசி யாகிற ஜீவனத்தை யிட்டு வளர்த்துக் கொண்டு போந்து
விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே
பரம சேஷிகளாகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
எம்பெருமானாகிற வரன் கையில்
ஸ்வரூப ஞானம் என்கிற தாரை வார்த்துக் கொடுக்க

அவனும் சேஷத்வமாகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி(எட்டு இழையாய் மூன்று சரடாய் -திருமந்திரம்)
சேஷ வ்ருத்தி யாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
ரூப (
ராமானுஜ தாஸ்ய)நாமங்களாகிற ஆபரணங்களையும் பூட்டிக்
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிறதொரு ஆஸனத்திலே கொண்டிருந்து

வ்யாபக ஞானம் என்கிற ஸமிதைகளை இட்டு
ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற ப்ரதாந ஹுதியைப் பண்ணி
ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொரியைச் சிதறி
ஸம்பந்த ஞானம் என்கிற பூர்ணாஹுதியாலே பிராப்தி பிரதிபந்தங்களை நிஸ் ஸேஷமாக்கி

நிர்ப் பரத்வ அநுஸந்தானம் பண்ணுவிக்கிற பூர்வாச்சார்களாகிற பந்துக்கள் முன்னிலையாக
மாதா பிதாக்கள் (
ஞானமும் ஆச்சார்யரும் )சேர இருந்து காட்டிக் கொடுக்க

ஆழ்வார்கள் ஈரச் சொல்லாகிற மூப்போடே சேர விட்டு(பொழுது போக்கு அருளிச் செயல்களே அன்றோ)
வாத்சல்யாதி குண யுக்தனானவன் தான் பர்த்தாவான ஆகாரம் குலையாதபடி அணைத்துக் கொண்டு போந்து
தானும் தன் ப்ரதான மஹிஷிகளும் கூட அந்தப்புரக் கட்டிலிலே கொண்டு போய்

அந்தமில் பேரின்பத்து அடியாராகிற பந்துக்களோடே கொண்டு சேர்த்து
ஹர்ஷ ப்ரகர்ஷத்தோடே அங்கீ கரித்து
ப்ரீதி வெள்ளமாகிற படுக்கையிலே கொண்டு போய்
விஷய வைலக்ஷண்யங்களாலே போக யோக்யங்களோடே ஸகல வித கைங்கர்யங்களாகிற அனுபவத்திலே மூட்டி

ஆனந்தமாகிற பெருக் காற்றூடே ஆழங்கால் பட்டு
நமஸ் என்பது
போற்றி என்பது
ஜிதம் என்பது
பல்லாண்டு என்பதாகா நிற்கும்

விவாஹம் -இரண்டு வியக்திகள் -ஸஹ தர்ம ஸாரிணீ –ஐக்யம் இல்லை
தர்ம ப்ரஜாப்யாம் விரீஹீ மம–தர்மத்துக்கவும் நல்ல பிரஜைகளை பெறவும் உனது கையைப் பிடிக்கிறேன்

பக்தி -ப்ராப்ய ருசி -கைங்கர்யத்துக்குப் பூர்வ பாவி -சாதனமாக இல்லை-

மிலேச்சனும் பக்தனானால் ஆகலாம்–துர்லபம் -அபி சேத் துசாச்சார-

பக்தன் வர்ணம் -பிறந்தவுடன் கிட்டும் -ஆஸ்ரமம் -கைங்கர்ய நிஷ்டை -வர்ணாஸ்ரம தர்மம்
சம்சாரத்தில் விவாஹம்
அங்கு புகுந்து போக அனுபவம்

—————

முமுஷு க்ருத்யம்(ஞானமும் அனுஷ்டானமும் க்ருத்யங்கள்)

நான்கு நிலைகள் —
முதல் படிக்கட்டு -58–யத்னம் முயலுவது முதல் நிலை
வ்யதிரேக
ஏகேந்த்ர
வசீகரா சமஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம்
வசீகரம் அனைத்தையும் அடக்குவது

அஞ்ஞர்
ஞானி
ஞான விசேஷஞ்ஞர்
ஸர்வஞ்ஞன்–இவ்வாறு நான்கு வகை ஆழ்வார் உபதேசம்-

அஞ்ஞான சமயத்திலும்
ஞான சமயத்திலும்
ஞானம் பக்குவமான சமயத்திலும்
ஞான பலமான ப்ராப்தி சமயத்திலும்

1-மாதா பிதாக்களோடு
2-ரூப நாமங்களோடு
3-போஜநாதிகளோடு
4-ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு
5-விதி நிஷேதங்களோடு
6-தேச வாஸங்களோடு
7-பந்து வர்க்கத்தோடு
8-ஐஸ்வர்யாதிகளோடு
9-ப்ரார்த்தனைகளோடு
வாசியற பேதித்து இருக்கும்

முதல் அடியான அஞ்ஞான ஸமயத்தில்
விவேகம் சஞ்சரியாமையாலே -சரீரமேவ மாதா பிதரவ் ஜனயத -என்று கேவலம் (
மட்டுமே -ஞான ஜென்மத்தை அறியாமல்)சரீரத்தைப் பெற்றவர்களையே மாதா பிதாக்களாக அபிமானித்து
அவர்களிட்ட பேரும்
அவர்கள் நியமித்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும்
அவர்களை அனுவர்த்தித்து
அத்தாலே வந்தேறியான (
ஸ்வா பாவிகம் அன்றே)ரூப நாமங்களும்
அவர்கள் விரும்பின பந்து வர்க்கமும்
அவர்கள் வம்ஸ அபிமானமும் ஐஸ்வர்யமும்
அவர்கள் கற்பித்த ஸம்ஸார வர்த்தகமாய் இருப்பன சில பிரார்த்தனைகளுமாய்
ஸம்ஸாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாதிக தரித்ரனாய் அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும்

ஞானம் பிறந்த சமயத்தில்
அஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரமே அன்று
ப்ரக்ருதே பரனாய்
பஞ்ச விம்சகனாய்
ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய்(
அஜடமாய்-தர்ம பூத ஞானமும்- தர்மி ஞானமும் உண்டே ஜீவாத்மாவுக்கு-தானே பிரகாசிக்கும் -தனக்கு பிரகாசிக்கும்)
ஏக ரூபனாய்
ஞான ஆனந்த ஸ்வரூபனாய்
அச்சேத்யனாய்
அதாஹ்யனாய்
அக்லேத்யனாய்
அசோஸ்யனாய்

(நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

இவ் வாத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை –
நெருப்பு எரித்து அழிப்பது இல்லை –
நீர் கரைத்து அழிப்பது இல்லை –
காற்று உலர்த்தி அழிப்பது இல்லை-
வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே – -இங்கு சோகம் இல்லாதவனாய்)


ஜனன மரணாதிகள் இன்றிக்கே இருப்பவனாய்
நித்யனாய் இருப்பானொரு ஆத்மா உண்டு
வேத ஸாஸ்த்ரங்களும் உண்டு
புண்ய பாபங்களும் உண்டு
வர்ணாஸ்ரமங்களும் உண்டு
கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தால் ப்ரமித்த இத்தனை என்று உணர்ந்து நெகிழ்ந்து

ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயதி -(போதாயன தர்ம ஸாஸ்த்ரம்)-என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை மாதாவாகவும்
தத் ப்ரதாநம் பண்ணினவனை பிதாவாகவும் அபிமானித்து
அந்த ஸாஸ்த்ரம் விதித்தபடியே போஜனாதிகளும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும்
வேத ஸாஸ்த்ரம் சொன்னவர்களையே பந்துக்களாகவும்(
இவர்களே ஆத்ம பந்துக்கள்) அந்த ஸாஸ்த்ர அபிமானத்தாலே வந்தேறின ரூப நாமங்களும்-ஸாஸ்த்ர அப்யாஸம் பண்ணுவதான தேஸம் தேஸமாயும்
ஸாஸ்த்ரத்தையே ஐஸ்வர்யமாகவும் (
அந்தணர் மாடு)பிரார்த்தனைகளாகவும் அபிமானிகளாகவும்
ஆத்ம அபிமானிகளில் (
ஆத்ம அபிமானிகளாய் -சேஷன் பரதந்த்ரன் புரியாமல்)என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாதிக தரித்ரனாய் அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும்-

ஞானம் பக்குவமான ஸமயத்தில்
ஸகல வேத ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்தர்யம் விநாஸகம் என்றும்
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும்
பரவா-நஸ்மி -(
உனக்கு உரியவனாக இருக்கிறேன்)என்றும்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மநஸ் பரமாத்மநஸ் நான்யதா லக்ஷணம் தேஷாமே –என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸதா ஸ்மர –என்றும்
இத்யாதி ப்ரமாணங்களாலும்
ஆலோக்ய ஸர்வ சாஸ்த்ராணி -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்

(அறிந்து அறிந்து தேறி தேறி)கீழ் நின்ற நிலைகள் அடைய நெகிழ்ந்து
தத்வ த்ரய ஞான விஷயத்தையும்
தத்வ த்வய விஷய வைராக்யத்தையும்(
அளவில்லா சிற்றின்பமும் -கைவல்யமும் ஒழித்து)
தத்வ ஏக விஷய பக்தியையும் யுடையனாய்

(மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷)
தத்வ ஹிதங்களை அறியும் போது கைப் பறி பறித்துக் கிடந்தானை கண்டு ஏறி அறியுமது அல்லாமையாலே
லோகத்தில் அர்த்த காம உபஹதன் அன்றியிலே
வேத ஸாஸ்த்ர நிதான ஞானனாய் -லோக பரிக்ரஹமும் யுடையனாய் இருந்துள்ள ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்தில் சென்று கண்ணும் கண்ணீருமாய்
கீழ் தேஹாத்ம அபிமானியுமுமாய்
கேவல அபிமானியுமாய்
தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய

ஆச்சார்யன்
தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து இரண்டு பங்குக்கு ஒரு கை யோலை போலே
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்துக்கும் ஆத்ம பாரதந்தர்யத்துக்கும் வாசகமாய்
அகாரோ விஷ்ணுர் இத் யுக்தோ -மகாரோ ஜீவ வாசக -தாயோஸ் து நித்ய ஸம்பந்த -உகாரேண ப்ரகீர்த்தித -என்று
இவ் வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்துக்கு(
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -நிர்ஹேதுக நிரவதிக கிருபா வர்ஷம்)
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பது (
எட்டு அக்ஷரங்கள் மூன்று பதங்கள்-லோகத்தில் இரண்டும் பதினாறுமாய் இருக்குமே)ஒரு மங்கள ஸூத்ரம் உண்டு என்று திரு மந்த்ரத்தை ஆச்சார்யன் தன்னிரக்கத்தாலே அருளிச் செய்து
ஸ்வரூபத்தில் உணர்த்தியோடும்
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியோடும்
ஈஸ்வரனையே பேணிக் கொண்டு அர்த்தி என்று அருளிச் செய்து அருளினால்

தான் நின்ற நிலைகளை அடைய உணர்ந்து நெகிழ்ந்து
பெற்றார் பெற்று ஒழிந்தார் என்றும்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ -என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்ற இவை பேணேன்-நான் என்றும்
தாயே தந்தை என்று தொடங்கி -நோயே பட்டு ஒழிந்தேன் -என்னும் அளவும் சொல்லுகிறபடியே

(பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை-முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே)

(பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ–மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோமாய -மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ அம்மா காட்டும் நெறி?-பெரிய திருவந்தாதி -5)

(பெற்றாரும் சுற்றமும்* என்று இவை பேணேன்நான்*மற்றுஆரும் பற்றுஇலேன்* ஆதலால் நின்அடைந்தேன்*உற்றான்என்று உள்ளத்து வைத்து* அருள் செய்கண்டாய்,*கற்றார்சேர்* கண்ணபுரத்து உறை அம்மானே!)

(நைமிசாரண்யத்தில் முதல் சரணாகதி திருவேங்கடத்தில் இரண்டாவது சரணாகதி –தாயே தாரமே நோயே ஏவகாரங்கள் மிக்கு அருளிச் செய்கிறார்)

அல் வழக்கு ஒன்றும் இல்லா தேஹாத்ம பிரமம் முதல் அல் வழக்கு -அஷ்ட ஸ்லோஹீ அனைத்தையும் விளக்கும்

தேஹா ஸக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் ஸாது வித்யாத்ருதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ யதிஸ்யாத் ப்ரதமம் இதர சேஷத்வதீஸ்சேத் த்விதீயம் |
ஆத்ம த்ராணோந் முகச்சேத் நம இதி ச பதம் பாந்தவாபாஸ லோல:
சப்தம் நாராயணாக்யம் விஷய சபல தீஸ்சேத் சதுர்த்தீம் ப்ரபன்ன: ||
-அஷ்ட ஸ்லோஹீ-4-

பிரபத்தி என்னும் சரணாகதி உபாயத்தை ஏற்றுக்கொண்டவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் சந்தேஹங்களுக்கு இந்த ஸ்லோகத்தில் விளக்கம் கூறப்படுகிறது. உடலைவிட வேறு ஜீவன் இல்லை என்கிற ஸந்தேஹம் எழும்போது மூன்றாம் பதமான மகாரத்தைக் கூர்ந்து கவனித்துத் தெளிவு பெறுக. மகாரப் பொருள் ஞாநம், அறிவில்லாத தூக்கம், மரணம் முதலிய நிலைகளிலும் உடல் இருப்பதால் அறிவுக்கு ஆதாரமாக இவ்வுடலைக் கூறுவதற்கில்லை என்று அறியலாம். அறிவாதாரமாக ஆத்மாவை அறிந்தபின் அவன் சுதந்திரனா என்கிற சந்தேஹத்தை ப்ரதம பதமான அகாரத்தின் பொருளாகவே தெளிய வேண்டும். ஆத்மா நாராயணனுக்கு உரியவன் என்று தெரிந்ததும் இரண்டாவது பதமான உகாரம் நாராயணனுக்கே உரியவன் மற்றவர்களுக்கு உரியவனல்லன் என்பதைத் தெரிவிக்கிறது. ​தன் ரக்ஷணத்தில் முயற்சி உண்டாகும்போது ​’நம:’பதத்தின் பொருள் உணரத்தக்கது. எனக்குரியனல்லன் என்பது அதன் பொருள். ஆபாஸ பந்துக்களான தேஹ ஸம்பந்தமுள்ளவர்களிடத்தில் நசை உண்டாகும் போது நாராயண என்னும் பதப் பொருள் நோக்கத் தக்கது. அதனால் அவனோடு உண்டான நித்ய ஸம்பந்தம் அறியலாம். சப்தாதி விஷயங்களில் பற்றுண்டாம் போது சதுர்த்தியின் பொருள் உணரத் தக்கது. அவனிடத்தில் கைங்கர்யமே சேதனனுக்கு ஸ்வரூபம் என்பது புலப்படும். இவ் விதம் உலக வாழ்க்கையில் ஏற்படும் அல்ப ஆசைகளைக் கழித்துக் கொள்ள வேண்டியது.

தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

மேல் ஏழாவதாக உற்றதும் உனது அடியார்க்கு அடிமை-
ஏழு நாழிகையுடன் -தொண்டமான் சக்கரவர்த்திக்கு -ஏழு அல் வழக்குகள்
அடுத்து ஸ்வார்த்த கைங்கர்யம் இல்லாமல் அவனுக்கே என்று இருந்து -படியாய்க் கிடந்தது பவள வாய் காண்பது எட்டாவது –

—–

திருமந்திரத்தை மாதாவாகவும்
ஆச்சார்யனைப் பிதாவாகவும் -அபிமானித்து
ஆச்சார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜ நாதிகளும் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் விதி நிஷேதங்களும்
ஆச்சார்யன் விரும்பி வர்த்திக்கும் தேஸம் நித்ய தேஸ வாஸமாகவும்
ஆச்சார்யன் திரு உள்ளத்தாலே ஸஹ வாஸ யோக்யராய் கற்பித்த பரம ஸத்வ நிஷ்டரான-ஸ்ரீ வைஷ்ணவர்களையே தனக்குப் பந்துக்களாகவும்
அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமானித்து இருக்கும் ஆச்சார்ய கைங்கர்யமே தனக்கு ஐஸ்வர்யமாகவும்
அந்தக் கைங்கர்யத்தின் மேலுண்டான ப்ரார்த்தனையையே தனக்கு தேஹ யாத்ரையாகவும் நினைத்து

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் –நின்னிலங்கு பாதம் இன்றி மற்றோர் பற்றிலேன் -(குலங்களாய ஈரிரண்டில்* ஒன்றிலும் பிறந்திலேன்,* நலங்களாய நற்கலைகள்* நாலிலும் நவின்றிலேன்,* புலன்கள் ஐந்தும் வென்றிலேன்* பொறியிலேன் புனித,* நின்-இலங்கு பாதம் அன்றி* மற்றுஒர் பற்றுஇலேன் எம் ஈசனே!)என்றும்
கற்றிலேன் கலைகள் –நற்றுணையாகப் பற்றினேன் அடியேன் -(
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* -பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*-செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*  நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.)என்றும்
போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் -ஏதிலேன் அரங்கர்க்கு (
போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலேஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே)என்றும்
நாட்டோரோடு இயல் ஒழிந்து -என்றும்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது -என்றும் சொல்லுகிறபடியே
தன் வேறுபாடு தோற்ற இந் நிலத்தில் பொருந்தாமையும்
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் ஆகிய
பேகணிப்பு அடியிலே தோன்றும்படி
நிர் மமனாய்
மோக்ஷ ப்ரதானனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஞான ப்ரதானனான ஆச்சார்யன் நிழலிலே ஒதுங்கி
அவன் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்தவிடம் அறியாமல் இருக்கும்

(கொக்கு போலே -கோழி போலே -உப்பு போலே உம்மைப் போலே
ஸ்வார்த்ததை இல்லாமல் இருக்க வேண்டுமே)

——————

ஞானப் பலமான பகவத் ப்ராப்தி ஸமயத்தில்
தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து
ஆச்சார்யன் கட்டின ஸ்வரூப அநு பந்தியான மங்கள ஸூத்ரத்தில் அர்த்த அநு ஸந்தானத்துடனே வர்த்தியா நிற்கச் செய்தேயும்

பகவத் ஸ்வரூப திரோதாந கரமாய் -விபரீத ஞான ஜனகமுமான சரீர ஸம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு

ஆற்றிலே குளித்து
அக்கரை ஏறி
புக்ககத்தில் உள்ளோர் அலங்கரிக்கப் போய்
வகுத்த தேசத்திலே முகம் பழகின திரளிலே சென்று புக்கு இருந்து

(இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி இவ் வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய் அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த வைகுந்தம் புக்கு மணி மா மண்டபத்துச் சென்று நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும் நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!–24-)

தனக்கு என்ன ஒரு மாதா பிதாக்களாதல் -ரூப நாமங்களாதல் -போஜநாதிகள் ஆதல் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாதல் –
விதி நிஷேதங்களாதல் -பந்துக்களாதல் -ஐஸ்வர்யமாதல் -ப்ரார்தனைகளாதல் இன்றிக்கே

அஹம் அன்னம் அஹம் அன்னம் –என்னுதல்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஏற்றி நிற்றல்
ஸதா பஸ்யந்தி என்று வைத்த கண் வைக்காதே பார்த்து இருத்தல்
சாயா வாசஸ்த்வம் அநு கச்சேத் –என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை

இவ் வர்த்தம் ஒரு ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு நாடோறும் ஆராய வேண்டுவது ஓன்று
எங்கனே என்னில்

ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே கையைப் பிடித்தல் பூர்வ அவஸ்தைகளில் நிலைகளை அடைய நெகிழ்ந்து பார்த்தாவினுடைய அபிமானத்தில் ஒதுங்குகிறாப் போலேயும்

அநுப நீதனானவன் ஒரு மந்த்ர ஸம்பந்தத்தாலே ஸதா யஜ்ஜோபவீதத்தைத் தரித்தால் பூர்வ அவஸ்தைகளில் நிலையை அடைய நெகிழ்ந்து த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும்

யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தைகளில் நிலையை யடைய நெகிழ்ந்து அவப்ருத ஸ்நானத்து அளவும் யஜமான வேஷத்துக்குத் தக்க அநுஷ்டானம் ஆகிறாப் போலேயும்

ஸந்யாஸி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வ்ருத்தியோடு வர்த்திக்கிறாப் போலேயும்

இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் கீழ் நின்ற நிலைகளை யடைய நெகிழ்ந்து -பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்த்திப்பது எப்போதோ என்று
தன் நெஞ்சை இறுக்கித் தன் வேறுபாடு தோற்ற வர்த்திக்கையே முமுஷுவுக்கு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்

முமுஷு க்ருத்யம் ஸம்பூர்ணம்

—————–

ஸாமக்ரீ பரம்பரா நாதம்

(ஸாமக்ரீ -காரணம்
பரம்பரா-தொடர்ச்சி
நாதம்-ஒலி)

காரண கார்ய பாவங்கள் தொடர்ந்து -ஆரோஹணம் -அவரோஹணம் -இரண்டையும் அருளிச் செய்கிறார் இதில்

பொய் நின்ற ஞானம் -ஞானம் பொய்யல்லவே -அசித் தத்வம் பற்றிய ஞானம் -ஸகல பரிமாணங்கள் -ஷட் பாவ சதத பரிணாமம் -நிலை நில்லாமை -இல்லாமை அல்லவே -இதுவே அவித்யா இங்கு
பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும்

ஜீவாத்மா தன்மையை மாற்றி -பரதந்த்ரன் என்பதை ஸ்வ தந்த்ரன் என்று நினைப்பது அந்யதா ஞானம்
தேஹமே ஆத்மா என்று நினைப்பது விபரீத ஞானம்

அநாதி அவித்யா அடியாக அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் உண்டாம்
அவ் வன்யதா ஞானங்கள் யுண்டாக அப்ராப்த விஷயங்களிலே ராக த்வேஷம் யுண்டாகும்
அந்த ராக த்வேஷம் அடியாக ஸத் அஸத் ப்ராப்தி யுண்டாகும்
ஸத் அஸத் ப்ராப்தி அடியாக புண்ய பாப ரூப கர்மங்கள் யுண்டாம்
அக் கர்மங்கள் அடியாக சதுர்வித தேஹ ஸம்பந்தங்கள் யுண்டாம்
தேஹ ஸம்பந்தங்கள் அடியாக தேஹ அநு பந்தியான ஸூக துக்கங்களை ஆர்ஜிப்பது அனுபவிப்பதாகா நிற்கும்

(ஆத்மாவுக்கு கர்மங்களை ஆர்ஜிப்பதும் அவற்றின் பலன்களான ஸூக துக்கங்களை அனுபவிக்கவும் தேஹம் வேண்டுமே—–பிரயாணம் செய்யவும் ஆத்மாவுக்கு சரீரம் வேண்டுமே–முக்தனுக்கும் ஸூஷ்ம ஸரீரம் பெற்று பிரயாணம்)

(ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி –போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து –நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை-பிறவிகளின் நடுவிலே -ஸம்ஸார சுழற்சிகளின் நடுவில் -என்றும் அந்த ஒரு பிறவியின் நடுவிலே என்றுமாம்
உஜ்ஜீவனத்துக்காக வந்ததால் -பிறவியின் இறுதியில் சொல்லாமல் -அவன் வந்ததால் பிறவி முடியும்)

நன்மை என்று பேரிடலாவது தீமையைக் கொண்டு -நாமும் அறியாமல்-சாஸ்திரமும் அறியாமல் -தானே கற்பித்து(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —யாதிருச்சா ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம்-அத்வேஷம்-ஆபி முக்யம்-சாத்விக சம்பாஷணம்-ஆச்சார்ய பிராப்தி-ஆச்சர்ய சம்பந்தம் அடியாகவே விஷ்ணோர் கடாக்ஷம் பெற்றதை உணர்கிறோம்-ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் -த்யான யோக லப்த ஞாநம் -பஹு கிலேசம் – )

இந்த ஸூகம் செல்லா நிற்கவே -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -என்கிறபடியே
யாதிருச்சிக ஸூஹ்ருத நிமித்த பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸதாசார்ய ஸமாஸ்ரயணம் யுண்டாகும்
அந்த ஸதா சார்ய ஸமாஸ்ரயணத்தாலே ஸ்ரவண ஞானம் பிறக்கும்
அந்த ஸ்ரவண ஞானத்தாலே -(
அது பரிணமித்து )யதா ஞானம் பிறக்கும்-அது பரிணமித்து ஸம்யக் ஞானம் பிறக்கும்-
அந்த ஸம்யக் ஞானத்தாலே அந்யதா ஞாந விபரீத ஞானங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே ராக த்வேஷங்கள் நிவ்ருத்தமாம்
அத்தாலே துஷ் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தமாம்
அத்தாலே பந்த கர்மம் நிவ்ருத்தமாம்
அத்தாலே சரீர விமோசநம் பிறக்கும்
அத்தாலே துக்க நிவ்ருத்தி பிறக்கும்
பின்பு ஈஸ்வரன் நயாமி க்ரமத்தாலே ஆனந்தயாதி என்னும்படி யாக்குவிக்கும்
ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்

(தூ மணி மாடம் ஆனந்த ப்ரஹ்மணோ வித்வான்–ஸ்வ கத ஸ்வீ காரம்
நோற்றுச் ஸ்வர்க்கம் ப்ரஹ்மமே ஆனந்தமூட்டும் பர கத ஸ்வீகாரம்)

(அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது
மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும்
உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன்
உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –சூரணை-5-

ஏதம் நிமித்தம் முன்னமே முதல் முன்னமே யான
அசித் அயன அநாதி சம்பந்தங்கள்-சூர்ணிகை -10-

அநாதி அசித் சம்பந்தம் அடியாக அவித்யையாய்
அதன் அடியாக புண்ய பாப ரூப கர்மமாய்
அது அடியாக அஜ்ஞான ஹேதுவான ஜென்மமாய்
அது அடியாக ரஜோ தமஸ் அவிருத்தயாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞான அபாவமாய்
அது அடியாக அஜ்ஞாநாத் சம்சார என்கிற படியே சம்சார துக்கம் வரும்-

அநாதி அயன சம்பந்தம் அடியாக
பகவத் சௌஹார்த்தம் உண்டாய்
அது அடியாக கிருபை உண்டாய்
அது அடியாக விசேஷ கடாஷம் உண்டாய்
அது அடியாக சத்வ விருத்தி உண்டாய்
அது அடியாக அர்த்த பஞ்சக ஞானம் உண்டாய்
அது அடியாக ஞானான் மோஷம் -என்கிறபடியே
மோஷ ஸுகம் உண்டாம் என்று ஆய்த்து-)

ஸம்ஸாரத்தில் இருக்கும் நாள் திருமந்த்ரத்திலே அநுஸந்தானமே யாத்ரையாய் இருக்கும்-அர்த்த அனுசந்தானம் பண்ணும் ப்ரகாரம்
பகவத் ஏக ரஷ்யன்
ஈஸ்வர சேஷ பூதன்
அநந்யார்ஹ சேஷன்
ததீய பரதந்த்ரன்
ஸம்பந்த யுக்தன்
கைங்கர்ய ஸ்வபாவன் -என்று இத்தாலே சொல்லிற்று ஆயிற்று

ரக்ஷகத்வ ப்ரதி சம்பந்தி பூர்வகமான ரஷ்யத்வமும்
சேஷித்வ ப்ரதி சம்பந்தி பூர்வகமான சேஷத்வமும்
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அநந்யார்ஹ சேஷத்வமும்
அசேதன நிவ்ருத்தி பூர்வகமான சேதன வை லஷ்யமும்
ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமான அத்யந்த பாரதந்த்ரயத்தினுடைய மேல் எல்லையும்
ஸோ பாதிக பந்து நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தமும்
அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த வை லக்ஷண்யமும் இறே ஸகல ஸாஸ்த்ரங்களிலும் ப்ரவ்ருத்தமாயிற்று

சொல்லினால் சொல்லப்படாத -என்றும்
யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்றும்
அரும் பொருளாதல் என்றும் –சொல்லுகிற பிரமாணங்களால்
காண வரிய தனக்கு அன்று
அந்நிய பரரான ஸம்ஸாரிகளைக் குறித்து அன்று
அநந்ய பரரான நித்ய முக்தரைக் குறித்தன்று

முமுஷுவுக்கு

(சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-)

(அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-)
அசித்திலும்
அசித் ப்ராயரான ஸம்ஸாரிகளிலும்
நித்ய முக்தரிலும்
எம்பெருமானிலும் –வ்யாவ்ருத்தமாயும்
இந்நிலத்தில் பொருந்தாமையும்
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் யுடையனாய்
ஆக்கை விழும் பொழுது எண்ணே -என்பது
பணி கண்டாய் சாமாறே -என்பது
அடைய அருளாய் என்பது
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –என்பதாய்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி வேறுபட்டு இருந்துள்ள முமுஷுவுக்கே பிரமாண அபேக்ஷை உள்ளது

(இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

படைநின்ற* பைந்தாமரையோடு* அணிநீலம்-
மடைநின்று அலரும்* வயல்ஆலி மணாளா,*
இடையன் எறிந்த மரமே* ஒத்துஇராமே,*
அடைய அருளாய்* எனக்கு உன்தன் அருளே.

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

அங்கு போய் பெறும் பேறு இதனிலும் தண்ணியதோ -திருக் குருகைப் பிள்ளான் நஞ்ஜீயருக்கு சாதித்த ஸ்ரீ ஸூக்தி)

ஸகல ஸாஸ்த்ரங்களுக்கும் தாத்பர்யம்
ஈஸ்வர ஸ்வாதந்தர்யத்தையும்
ஆத்ம பாரதந்தர்யத்தையும்
இசைவிக்கையாய் இறே இருப்பது

ஸாமக்ரீ பரம்பரா நாதம் ஸம் பூர்ணம்

————–

அவஸ்தா த்ரயம்

கீழ் முமுஷு கிருத்யத்தில் இவ் வுலகில் உள்ள மூன்றையும் -அதாவது
அஞ்ஞான நிலை
ஞாந உதய நிலை
ஞான பரிபக்குவம் முடிந்த நிலை
இவற்றையே விளக்கி அருளுகிறார் இதில்

(ப்ரஞ்ஞா த்ரயங்கள்
திருத் தாயார் -சம்பந்த உணர்த்தி
தோழி -உபாயத்தில் துணிவு
தலை மகள் பேற்றில் த்வரை)

அநாதி மாயயா ஸூப்த யதா ஜீவ ப்ரவ்ருத்தே -என்கிற அநாதி அவித்யையாலே
ஞான அநுதயமாய்
அத்தாலே அந்யதா ஞான விபரீத ஞானமாய்
அத்தாலே அஹங்கார மமகாரங்களாய்
அத்தாலே ராக த்வேஷங்களாய்
அத்தாலே புண்ய பாப ரூப கர்மங்களாய்
அத்தாலே சதுர் வித ஸரீரமாய்

அத்தாலே -பெரும் துயர் இடும்பையில் பிறந்து -1-1-1-)-என்றும்
சதிரம் என்று தம்மைத் தாமே ஸம்மதித்து-9-1-5-
உளனாக எண்ணி-3-9-5
தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டி-8-
கண்டவா தொண்டரைப் பாடி-1-1-
விலைக்கு ஆட்பட்டு
வள்ளல் புகழ்ந்து
காசுக்கும் கறையுடைக் கூரைக்கும் அங்கோர் கற்றைக்கும் ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இட்டு
விசாதி ஏற்றுண்டு
தலைக்காட் பலி திரிந்து
ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நின்று
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து-1-6-3
பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டி-1-1-8-
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்று-1-6-6-
வென்றியே வேண்டி வீழ் பொருட்க்கு இரங்கி வேற் கணார் கலவியே கருதி-1-1-4-
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து -1-6-2–அவர் தரும் கலவியே கருதி ஓடி-1-1-1-
பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாயமுது யுண்டவாறும் வாழ்ந்தவாறும் ஓக்க உரைத்து இருமி
-1-3-

அந்திம சமயத்திலும்
அன்னை யத்தன் என் புத்திரர் பூமி வாஸவார் குழலாள் என்று மயங்கி
–4-5-

அதுக்கும் மேலே
நமன் தமர் பாஸம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ் வல்லல் -3-2-10-என்கிற உத் க்ராந்தி தசையிலே வேதந அநுபவம் பண்ணி

அதுக்கும் மேல்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி –1-6-7-என்று வழியில் படும் வேதந அனுபவம் பண்ணி

அதுக்கும் மேலே
நமன் தமர் செய்யும் வேதனை —என்கிற நரக வேதனை அனுபவம் பண்ணி

அதுக்கும் மேலே
வயிற்றுக் குழியில் உழைக்கும் -6-2–என்கிற வேதனை அநுபவம் பண்ணி

அதுக்கும் மேலே
மக்கள் தோற்றக் குழி -11-8-1–என்னும் வயிற்றில் நின்றும் புறப்படுகிற போதையில் வேதனை அநுபவம் பண்ணி

இப்படி ஒரு ஜென்மத்திலே உத் க்ராந்தி மார்க்கம் -நரக யோநி -கர்ப்ப ஸங்கடம் -என்று சொல்லுகிற
நாலு ஐந்து நரகத்தை அனுபவித்துப் போரக் கடவனான சேதனன் துஷ் கர்மத்தில் மூளக்
கர்மம் ஜென்மத்திலே மூட்ட
அந்தாதியாக
தேவனாவது மநுஷ்யனாவது திர்யக் யாவது ஸ்தாவரமாவதாய்
யாதானும் ஒரு ஆக்கையிலே புக்கு -அங்கு ஆப்புண்டு -ஆப்பவிழுந்து –மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -95-என்கிறபடியே
ஸரீரங்கள் தோறும் அதி ப்ராவண்யம் பண்ணக் கடவனாய்

அலை வாயில்-அலை வாயில் அலை மாறுமாப் போலே
அம்மை வயிற்றோடும்
எமன் கழுவோடும் போவது வருவதாய்
இயக்கறாத பல் பிறப்பு -120-என்கிறபடியே
ஒழுக்கறாமல் பட்டது மறந்தான் என்று விடு தூதாய் அநாதி காலம் தேஹாத்ம அபிமானம் தலை மண்டையிட்டு பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் -என்கிறபடியே ஒன்றும் மறவாமல் பிறந்து போருகிற நாட்டாரோபாதி பிறந்த ஜன்மத்தை
அன்று நான் பிறந்திலேன்-என்கிறார்

(இது வரை அஞ்ஞான தசை -ஞான ஜென்மம் கிடைக்காத தசை)

(நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

இனிப் பிறக்கை யாவது
ஸதாசார்ய உபதேஸ முகத்தாலே
வாகாதி கரணங்கள் அன்று ஆத்மா -இந்திரியங்கள் அன்று ஆத்மா-மனஸ் அன்று ஆத்மா-ப்ராணன் அன்று ஆத்மா-அவித்யம் அன்று ஆத்மா
அக்னி இந்த்ராதி சேஷம் அன்று –பிரம்மா ருத்ராதி தேவதாந்தர சேஷம் அன்று ஆத்மா-ஏகாயன எம்பெருமானுக்கு சேஷம் அன்று ஆத்மா-மிதுன சேஷத்து அளவு அன்று ஆத்மா-
ததீய சேஷத்வ பர்யந்தமாகப் பிறக்கப் பிறந்த இஜ் ஜன்மத்தை-நான் பிறந்த பின் மறந்திலேன் -என்றார்

இந்த ஞானத்தை அவன் மயர்வற மதி நலம் அருளிப் போன பின்பு
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி–அடிமை கொண்டாய்–5-7-3- -என்றும்
இன்று என்னைப் பொருளாக்கி –10-8–என்றும்
அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –10-10-11-(
அறிந்தே பிறந்தார் -உயர்ந்தே பிறந்தார்)என்றும்

பெருமாள்
உடல் பிறவி வேண்டேன் உயிர் பிறவி வேண்டுவேன் -என்றும்

திருமங்கை யாழ்வார்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –என்றும் இறே
இவர்கள் தங்களை நினைத்து இருப்பது

ஆழ்வார்கள் வசனங்களாக இவற்றையே ப்ரமாணமாகக் கொண்டு முமுஷுக்களும் இந்த ஞானம் பிறப்பதற்கு முன்பு ஒரு ஜந்மமும் -பின்பு ஒரு ஜென்மமுமாக அநு சந்திப்பார்கள்-

முன்பு சரீர உத்பாதகன் பிதாவாயும் -சுமந்து பெற்றவள் மாதாவாயும் -அவர்கள் பெற்றவர்கள் ப்ராதாக்களாயும் -இவர்களுடன் அந்வயமுடையவர்கள் பந்துக்களாயும்-
பிறந்த தேஸம் ஜன்ம தேஸமாயும்-
குலம் பிறந்த வர்ணமாயும்-
க்ஷேத்ரம் பூமியாயும்-
தானாகிறான் -மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமாய் -துருப்புக் கூடான சரீரமாயும்
மாதா பிதாக்கள் சொன்னதுவே நாம மாத்ரமாயும் -அன்ன பாநாதிகளே தாரகமாயும் -ஸ்நேஹ த்ரவ்யங்கள் போஷக மாயும்-
அதற்குப் பரிகாரம் அர்த்த பவ்ருஷங்களாயும் -வாத பித்தாதிகள் (
ஆதி -கபம்)வ்யாதி களாயும் -அதுக்குப் பரிஹாரம் வைத்யன் சொன்னது மருந்தாயும்-
த்ருஷ்ட ஐஸ்வர்யம் பேறாயும் -அது இல்லாமை மிடியாயும்-ப்ரக்ருதி ப்ராக்ருத லாபம் சுகமாயும் -அலாபம் துக்கமாயும்-
வர்ணாந்தர ஸ்பர்ஸம் தீட்ட மாயும் –ஜல ஸ்பர்ஸம் சுத்தமாயும் -புத்ர பசு அன்னாதிகள் ப்ராப்யமாயும்-
பர ஹிம்ஸை பர த்ரவ்ய அபஹாரம் -பர அநு வர்த்தனங்கள் ப்ராபகமாயும்-
மிண்டரும் தொழும்பரும் தூர்த்தரும் ஸஹ காரிகளாயும்-
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்கை தொழிலாயும்-3–
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை -1-6-என்கிற பொழுது போக்காயும்-
சரீர வியோகம் முடிவாயும் இருக்கும்

பின்பு ப்ரஹ்மதஸ் பிதா என்று-சொல்லுகிற ஆசார்யன் பிதாவாகவும்-
திருமந்திரம் மாதாவாகவும்-
ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் யுடையவர்கள் ப்ராதாக்களாயும்-
திரு மந்திரத்தோடும் ஆச்சார்யனோடும் அந்வயம் யுடையவர்கள் பந்துக்களாயும்-
திரு மந்திர அர்த்தம் பெற்ற இடம் ஜன்ம தேஸமாயும்-
குலம் தாஸ்யமான தொண்டக் குலமாயும்-
க்ஷேத்ரம் உகந்து அருளின திவ்ய தேசங்க ளாயும்-
தானாகிறான் -24 தத்வம் கழிந்த ஆத்மாவாகவும்-
நாமம் தாஸ்ய நாமமாகவும்-
பகவத் ஸம்பந்த ஞானம் தாரகமாயும்–
ஆச்சார்ய அநு வர்த்தநம் போஷகமாயும்-
அடியார்கள் இன்ப மிகு பெரும் குழுவு போக்யமாயும்-
வியாதி தாய் தாரகங்க ளாயும்-
அதுக்குப் பரிஹாரம் செடியார் வினைகள் தீர் மருந்தான உபாய பூதன் அருளிச் செய்த சரம ஸ்லோக அர்த்தமாயும்-
ஆபத்து அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வாதந்தர்ய -தேஹாத்ம அபிமானமாயும்-
அதுக்குப் பரிஹாரம் திருமந்த்ரார்த்த ஞானமாயும்-
ஐஸ்வர்யம் வ்யவசாயமாயும்-
அது இல்லாமை மிடியாயும்-
பகவத பாகவத ஸம்ஸ்லேஷம் ஸூகமாயும்-
அது இல்லாமை துக்கமாயும்-
அஹங்கார ஸ்பர்சம் தீட்டமாயும்-
ஞான ஸ்பர்சம் ஸூத்தமாயும்-
ப்ராப்யம் அடிமையாயும்-
ப்ராபகம் அருளாயும்-
உஸாத் துணை பேராளன் பேரோதும் பெரியோருமாயும் உயர்ந்தோருமாயும்-
தொல்லை மால் தன் நாமம் ஏத்துகை தொழிலாயும்-
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது என்கிற பொழுது போக்காயும்-
ஞான வியோகம் முடிவாயும் இருக்கும்

இந்தப் பிரதிபத்தி இறே பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் –
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -என்றும்
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் -என்றும்
அருளிச் செய்து அருளிற்று

நாட்டாருக்குப் பெயர் ஸம்ஸாரிகள்
நாகரிகருக்குப் பெயர் ஸ்ரீ வைஷ்ணவர்கள்

இதில் ஸம்ஸாரிகள் அஞ்ஞருமாய் -அஸக்தருமாய் -அபூர்ணருமாய் -அயோக்யருமாய் -துர்மானிகளுமாய் -துர் வ்ருத்தருமாய் -தோஷ துஷ்டருமாய்-
எம்பெருமானையும் தங்களையும் மறந்து -மறந்தோம் என்கிற பரிபாவ நிவர்த்தருமாய்-
பூமி பாரங்களுமாய்-
பரிக்ரஹ நியதி இல்லாமல் உண்டியே உடையே உகந்து ஓடுகையாலே ஸம்ஸாரிகள் என்று பெயர் ஆயிற்று

இனி ஸ்ரீ வைஷ்ணத்வமாவது
விசேஷ ஞானம் -அதாவது வாசி அறிகை-
குருக்களுக்கும் ஸத் குருக்களுக்கும் வாசி அறிகையும்-
மந்த்ராந்தரத்துக்கும் மந்த்ர ரத்னத்துக்கும் உள்ள வாசி அறிகையும்-
தேவதாந்தரங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசி அறிகையும்-
உபாஸகனுக்கும் ப்ரபன்னனுக்கும் உள்ள வாசி அறிகையும்-
ஸம்ஸாரிகளுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உள்ள வாசி அறிகையும்-
பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசி அறிகையும்-
புருஷார்த்தத்துக்கும் அபுருஷார்த்தத்துக்கும் உள்ள வாசி அறிகையும்

இதில் குருக்கள் ஆகிறார் -ஸம்ஸார ஸம்பந்தகருமாய் -அஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும்
ஸத் குருக்கள் ஸம்ஸார நிவர்த்தகருமாய் -ஞானப் ப்ரதருமாய் இருப்பார்கள் என்று அறிகை

தேவதாந்தரங்கள் -அஞ்ஞருமாய் -அஸக்தருமாய் -அப்ராப்தருமாய் இருப்பார்கள் என்றும்
ஈஸ்வரன் ஸர்வஞ்ஞனுமாய் -ஸர்வ ஸக்தனுமாய் -ப்ராப்தனுமாய் இருக்கும் என்று அறிகை

தேஹம் ஜடமாய்- துக்க ரூபமாய் இருக்கும் என்றும்
ஆத்மா அஜடமுமாய் -ஆனந்த ரூபமாயும் இருக்கும் என்று அறிகை

ஆத்மா வ்யாப்தமுமாய் -சேஷமாய் இருக்கும் என்றும்
ஈஸ்வரன் வ்யாபகனாய் -சேஷியாய் இருக்கும் என்று அறிகை

உபாஸகனுக்கு ஆனுகூலஸ்ய ஸங்கல்பமும் -பிரதிகூல்ய
வர்ஜனமும் வேண்டும்
ப்ரபன்னனுக்கு அஹம் அஸ்ய அபராதனாம் ஆலய அகிஞ்சன -என்று இருக்கும் என்று அறிகை

ஸம்ஸாரிகள் அநாசார ப்ரவர்த்தகருமாய் -துர்மான ப்ரவர்த்தகருமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார ப்ரவர்த்தகருமாய்-துர்மான நிவர்த்தகருமாய் இருப்பார்கள் என்றும் அறிகை

பரத்வம் துர்லபமுமாய் -ஸ்வ தந்திரமாயும் இருக்கும் என்றும்
அர்ச்சாவதாரம் ஸூலபமுமாய்- பரதந்த்ர ப்ரகாசகமுமாய் இருக்கும் என்றும் அறிகை

(மேல் ஞானம் பக்குவமான மூன்றாம் அவஸ்தை-உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகள்-என்று இருக்கை-மனமுடையீர் என்ற படி ஸ்ரத்தையே அமையும்)

இந்த ஞானம் நிலை நின்றதாவது -அநுஷ்டான சேஷமானால் -அனுஷ்டானமாவது வர்ணாஸ்ரம தர்மம் (மட்டுமே) அன்று -அதாவது வந்தேறியான தோல் புரையிலது அன்று –ஸ்வரூப அநுரூபமான வ்ருத்தம்

அவையாவன
ஸ்வரூப அநு கூலமான ரக்ஷகத்வம்
ஸ்வரூப அநு கூலமான சேஷத்வம்
ஸ்வரூப அநு கூலமான ஸேவை
ஸ்வரூப அநு கூலமான ஸஹ வாஸம்
ஸ்வரூப அநு கூலமான கால க்ஷேபம்
ஸ்வரூப அநு கூலமான இருப்பு
ஸ்வரூப அநு கூலமான பரிக்ரஹம்
ஸ்வரூப அநு கூலமான போஜனம்
ஸ்வரூப அநு கூலமான அத்யவசாயம்
ஸ்வரூப அநு கூலமான அபேக்ஷை

இவற்றில்
ஸ்வரூப அநு கூலமான ரக்ஷகத்வம் ஆவது
தேச ரக்ஷகன் என்றும்
தேஹ ரக்ஷகன் என்றும்
பதார்த்த ரக்ஷகன் என்றும்
பவ்ருக்ஷ ரக்ஷகன் என்றும் –சொல்லுகிற ரக்ஷகத்வங்களைத் தவிர்த்து
தேச நிவர்த்தகன் என்றும்
தேஹ நிவர்த்தகன் என்றும்
விஷய நிவர்த்தகன் என்றும் பற்றுகை

அதாவது
கொடு உலகம் என்று அஞ்சினவாறே(4-9-7)
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்(5-2-11)
பொல்லா வாக்கை 3-2-என்று அஞ்சினவாறே செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்று அடைந்தேன் என்று அஞ்சினவாறே 7-7-7அடியாரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்1-7-2
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கியவாறே -1-6-3 –நமன் தமர் என் தமரை வினவப் பெறுவாரலர் என்னும்-10-6-5-
அடியார் படு துயராயின எல்லாம் நிலந்தரம் செய்யும் -1-1-9-என்னக் கடவது–இறே

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

ஸ்வரூப அநு கூலமான சேக்ஷத்வம் ஆவது
இதர சேஷத்வம் என்றும்
கிருஹ சேஷத்வம் என்றும்
பித்ரு சேஷத்வம் என்றும்
தேவதாந்த்ர சேஷத்வம் என்றும் –சொல்லுகிற ஆபாஸ சேஷத்வங்களைத் தவிர்த்து
ஸர்வேஸ்வரனே
தாரகன் என்றும்
வ்யாபகன் என்றும்
ஸரீரீ என்றும் பற்றுகை

அதாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்-10-10-3-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -7-2-1–என்றும்-என்னுடை வாழ் நாள் -என்றும்
அடியார்க்கு அகலலாமே என்றும் இருக்கை

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

ஸ்வரூப அநு கூலமான ஸேவை யாவது
சேதனாந்தர ஸேவையையும்
தேவதாந்தர ஸேவையையும்
பகவத் ஸேவையைத் த்ருஷ்ட-துஷ்டப் ப்ரயோஜனத்துக்காக ஸேவிக்கையும் -அத்ருஷ்டத்துக்கு ஹேது என்கிற ஸேவைகளையும் தவிர்த்து
ஸ்வரூப ப்ரயுக்தம் என்று சேவிக்கை

(ஈஸ்வரன் முக விலாசத்துக்காக ஸேவைகொடுத்துக் கொள்ளாதேகொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்க வேண்டுமே)

அதாவது
ஸேவியேன் உன்னை அல்லால் என்றும்
உன்னைச் சேவித்தேன் என்றும்
சீதனையே தொழுவார் -(திருவிருத்தம் -79)என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் -(பெரியாழ்வார்-5-1-2)என்றும் இருக்கை

ஸ்வரூப அநு கூலமான ஸஹ வாஸம் ஆவது
விஷயாந்தரத்துக்காகச் சேருதல்
த்ரவ்யாந்தரத்தக்காகச் சேருதல்
கால ஷேபத்துக்காகச் சேருதல் தவிர்ந்து
ஸம்ஸாரத்தில் அருசி பிறக்கைக்கும்
பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கும்
ஸ்வரூபத்தில் தெளிவு பிறக்கைக்கும்
ஆசார ப்ரவர்த்தகரோடு சேருகை

அதாவது
பேராளன் பேரோதும் பெரியாரை ஒருகாலும் பிரிகிலேன்- என்றும்
உயர்வேன் உயர்ந்தவரோடு அல்லால் -(முதல் திருவந்தாதி-64)என்றும் இருக்கை –

ஸ்வரூப அநு கூலமான கால க்ஷேபம் ஆவது
சூது சதுரங்கம் பொருதும் -பாட்டுக் கூத்துக் கேட்டு வாயிட ஆட் பார்த்துச் செல்லுகையும் -பகவத் குண அனுபவத்தை பிறரில் வ்யாவிருத்தமாக சொல்லுகிற போது போக்கைத் தவிர்ந்து
தெறிந்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் -நான்முகன்-63-என்கிறபடியே போது போக்குகை அதாவது
ஸ்வரூபம் என்றும்
தாரகம் என்றும்
போஷகம் என்றும்
போக்யம் என்றும்
மறக்க மாட்டாமையாலும் சொல்லுகை

அதாவது
தாள்கள் தலையிலே வணங்கி –நாட் கடலைக் கழிமின் -1-6-7–என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -8-3-என்றும்
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன் நெஞ்சே ஓவாத ஊணாக உண் -(பெரிய திருவந்தாதி-78)-என்றும்
ஏது செய்தால் மறக்கேன் மனமே -(9-3-திருப்புல்லாணி)என்றும்
பொழுது போக்குகை –

ஸ்வரூப அநு கூலமான இருப்பு ஆவது
த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும்
இவ் வருகு யுண்டான பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும்
ஸஜாதீய விஸ்லேஷம் பொறாமைக்கு என்றும்
க்ஷேத்ர வாஸம் யோக்யதைக்கு உறுப்பு (மோக்ஷம் பெற என்ற எண்ணம் இல்லாமல்)என்றும்
இருக்கிற விருப்பைத் தவிர்ந்து
தேசத்திலே ப்ரேமம் விளைவிக்கைக்கு உறுப்பு என்றும்
தேசிகரை நித்ய ஸேவை பண்ணலாம் என்றும்
தேச வர்த்திகளான ஸாத்விகர்களைக் கலந்து பரிமாறுகைக்கு என்றும்
விபரீதங்கள் புகுராத இடம் என்றும் இருக்கை

அதாவது
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி 1-1-6-என்றும்
அதனுட் கண்ணா -(9-6-திருக் காட்க்கரை)என்றும்
கற்றார் சேர் கண்ணபுரம்( 8-10-5)-என்றும்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே (பெரியாழ்வார் திருக்கோட்டியூர்)-என்றும்
இருக்கை

ஸ்வரூப அநு கூலமான பரிக்ரஹம் ஆவது
அநுகூலரை நெருக்கியும்
பிரதிகூலர் பக்கல் ஸா பேஷனாய் ஸ்வீ கரிக்கையும்
ஸ்வரூப ப்ரயுக்தமானவற்றை பதார்த்தங்ளுக்கு உறுப்பாக்கி ஸ்வீ கரிக்கையும்
அமுதுபடி சாத்துப்படிக்கு ஆகாரமானவற்றை பரிக்ரஹிக்கையும் தவிர்ந்து
கிருஷி பண்ணுதல்
முஷ்டி புகுதல்
சிஷ்யன் பிரியத்தால் தருமதாதல்-ஸாத்விகர் திரு உள்ளப் ப்ரஸாதத்தாலே தருமதாதல்
பரிக்ரஹிக்கை

அதாவது
மெய் வருத்திக் கை செய்தும்மினே -(3-9-6)-என்றும்
பிச்சை புக்காகிலும் -(பெரியாழ்வார் -4-6-3)என்றும்
ஸரீரம் அர்த்தம் பிராணன் ச ஸத் குருப்யோ நிவேதிய-என்றும்
வருவிருந்தை அளித்து இருப்பார் -(பெரியாழ்வார் -4-8-2-)என்றும்
சொல்லுகிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீ கரிக்கை-

ஸ்வரூப அநு கூலமான போஜநம் ஆவது
க்யாதியைப் பற்றாதல்
லாபத்தைப் பற்றாதல்
பூஜையைப் பற்றாதல் என்னது நான் இடுகிறேன் என்கிற போஜநத்தைத் தவிர்ந்து
நெய்யமர் இன்னடிசில்-(6-8-) என்றும்
நல்லதோர் சோறு என்றும்
உண்ணும் சோறு (6-7-1)என்றும் சொல்லுகிறவற்றைப் புஜிக்கை-

ஸ்வரூப அநு கூலமான அத்யவஸாயம் ஆவது
தனக்கு உண்டான ரஷ்யத்வ ஸ்வீ காரங்கள் இன்றியிலே ஒழிந்தாலும் ஸ்வரூப விரோத்யாதி நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தத்தைத் தரும் என்கிற மஹா அத்யவசாயம்

அதாவது
யானே நீ என்னுடைமையும் நீயே -2-9-9
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -5-8-8-என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் –5-8-3-என்றும்
நின்னருளே புரிந்திருந்தேன் -(5-4-1)என்றும்
இறைவா நீ தாராய் பறை என்றும்
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை –

ஸ்வரூப அநு கூலமான அபேக்ஷை யாவது
புத்ர பசு அன்னாதி புருஷார்த்தங்களையும்
ஸ்வர்க்காத் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களையும்
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் என்னது என்கிற புருஷார்த்தம் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் –இராப்பகல் இன்றியே (9-3-7)என்றும்
அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவது என்று கொலோ (8-3-10)-என்றும்
மலர்த் தாமாரை பாதங்களைக் காண்பது எஞ்ஞான்று கொலோ (5-9)-என்றும்
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் (3-3-1)-என்றும் அபேக்ஷித்து

இந்த அனுஷ்டானம் நிலை நின்றதாவது
ஷாம ஷோப வியாதி மிடிகளில் தொலையாத அத்யவசாயம் உண்டானால் யாயிற்று –

இந்த அத்யவசாயம் தான்
தத்வ த்ரய ஞான அத்யவசாயம் என்றும்
தத்வ த்வய விஷய ஞான அத்யவசாயம் என்றும்
தத்வ ஏக விஷய ஞான அத்யவசாயம் என்றும்
த்ரிவிதமாய் இருக்கும்

தத்வ த்ரய ஞான அத்யவசாய விஷயம் யாவது
அசித்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாட்டையும்
ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் வேறுபாட்டையும் ஸம்பந்தத்தையும் அறிகை

அசித்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாட்டை அறிகை யாவது
அசித்து ஜடமாகையாலும் -ஆத்மா அஜடமாகையாலும்
அசித்து துக்க ரூபமாகையாலும் -ஆத்மா ஸூக ரூபமாகையாலும்
அசித்து அசுத்த மாகையாலும் -ஆத்மா சுத்தனாகையாலும்
அசித்து பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமாகையாலும் -ஆத்மா பகவத் ப்ராப்திக்கு பிரதி சம்பந்தி யாகையாலும்
வேறுபாடு யுண்டு என்று அறிகை –

ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள ஸம்பந்தம் அறிகை யாவது
ஆத்மா ரஷ்யனாகையாலும் -ஈஸ்வரன் ரக்ஷகனாகையாலும்
ஆத்மா சேஷனாகையாலும்- ஈஸ்வரன் சேஷியாகையாலும்
ஆத்மா ஸ்வம் மாகையாலும் -ஈஸ்வரன் ஸ்வாமி யாகையாலும்
ஆத்மா கார்யமாகையாலும் -ஈஸ்வரன் காரணமாகையாலும்
ஆத்மா வ்யாப்யமாகையாலும் –ஈஸ்வரன் வ்யாபகமாகையாலும்
ஆத்மா விசேஷண மாகையாலும் ஈஸ்வரன் விசேஷ்யமாகையாலும்
ஆத்மா சரீரமாகையாலும் -ஈஸ்வரன் சரீரீ யாகையாலும்
ஆத்மா சரணாகதனாகையாலும் -ஈஸ்வரன் சரண்யனாகையாலும்
ஆத்மா ஸேவகனாகையாலும் –ஈஸ்வரன் சேவ்யனாகையாலும்
ஆத்மா கைங்கர்ய நிஷ்டனாகையாலும் ஈஸ்வரன் கைங்கர்ய பிரதிசம்பந்தியாகையாலும்
இப்படி இவனுடைய ஸம்பந்தமே ஸம்பந்தம் என்று அறிகை-

இந்தத் த்ரய ஞான அத்யவசாயம் அறிந்தானாவது எப்போது என்றால்
உடம்புடன் பொருந்தாமை பிறந்த வன்று -அசித்தை அறிந்தானாம்
தான் பரதந்த்ரனான வன்று -சித்தை அறிந்தானாம்
ஈஸ்வரனை ஒழியச் செல்லாமை பிறந்த வன்று -ஈஸ்வரனை அறிந்தானாம்

இத்தை ஆழ்வார்களும்
மேம்பொருள் போக விட்டு என்று –யுடம்புடன் பொருந்தாமையையும்
எம் தம்மை விற்கவும் பெறு வார்கள் என்று -ததீய பாரதந்த்யத்தையும்
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -(7-2-1)என்று -எம்பெருமானை விட்டுச் செல்லாமை பிறந்த படியையும்
அருளிச் செய்தார்கள் –

இனி தத்வ த்வய ஞான அத்யவசாயமாவது
தனக்கு தானும் பிறரும் தஞ்சம் அன்று என்று இருக்கை

அதாவது
தானாகிறான்
ரஷ்யனாகையாலும்
சேஷனாகையாலும்
அநந்ய பரதந்த்ரனாகையாலும்
அஞ்ஞனாகையாலும்
அசக்தனாகையாலும்
அபூர்ணன் ஆகையாலும்
அப்ராப்தன் ஆகையாலும்
அயோக்கியன் ஆகையாலும்
தஞ்சம் அன்று

பிறராகிறார்
சேதனாந்தர தேவதாந்த்ரங்கள்
இவர்கள் தானும்
தேஹாத்ம அபிமானிகளுமாய்
துர்மான வர்த்தகருமாய்
துர் விருத்தருமாய்
தோஷ துஷ்டருமாய்
எம்பெருமானுக்கு பரதந்த்ரருமாய்
அஞ்ஞருமாய்
அசக்தருமாய்
அபூர்ணருமாய்
அப்ராப்தருமாய்
அயோக்யருமாய்
தம் தாமுக்கு ஒரு ஆபத்து வந்தால் ஈஸ்வரனை சரண் புக்கு போக்கிக் கொள்ள வேண்டுகையாலும்
தஞ்சம் அன்று

ஆகையாலே
அவ் வருள் அல்லன அருளுமல்ல -(9-9-6)நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது -(முதல் திருவந்தாதி)என்றும்
நின்னருளே புரிந்திருந்தேன் -என்றும் இருக்கை

தத்வ ஏக சக்த அத்யவசாய ஞானாகையாவது
தேஹ போகமும்
ஸ்த்ரீ புத்ராதி போகமும்
இந்த்ரியாதி போகமும்
கைவல்ய போகமும் தனக்கு என்னப் பண்ணும் பகவத் அனுபவமும் கட்டடங்க விட்டு
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-(10-10-6)
முற்றக் கரந்து ஒளித்தாய்(10-10-8)
பத்திமைக்கு அன்புடை யேன் ஆவதே பணியாய் (திருக்குறும் தாண்டகம்-10)என்று இருக்கை

இப்படி அத்யவசாயம் வுடைய அதிகாரிக்கு
க்ருதஜ்ஜையும்
செய்ய வேண்டுவதுக்கு அபேக்ஷையும்
ஸதா அனுசந்தேயம்

நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதுவே
யஸ்ய வாக் அம்ருத சார பூரிதம் புவன த்ரயம்

———————–

வார்த்தா மாலை வார்த்தை -421-
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
தேச ரஷகன் என்றும்-
தேக ரஷகன் என்றும் –
பதார்த்த ரஷகன் என்றும் –
பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –

தேச நிவர்தகன் என்றும் –
தேக நிவர்தகன் என்றும் –
விஷய நிவர்தகன் என்றும் –
பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –

அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்

பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்

ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-

நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
இதர சேஷம் என்றும் –
க்ருஹ சேஷம் என்றும் –
பித்ரு சேஷம் என்றும் –
தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து

சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
வியாபகன் என்றும் –
சரீரி என்றும் –
சேஷி என்றும் பற்றுகை -அதாவது –

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
சேதனாந்தர சேவையையும் –
தேவதாந்தர சேவையையும் –
பகவத் சேவையையும் –
த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை -அதாவது

4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -என்றும் –
உன்னை சேவித்து -புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து

5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை –

6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –
தஞ்சை மா மணிக்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை

7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –

க்ருஷி பண்ணுதல் -அதாவது
மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-
முஷ்டி புகுதல் -அதாவது -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-
சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் -அதாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது –
வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2 பரிகிரஹிக்கை -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை

8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
க்யாதியைப் பற்றவாதல் –
பூஜையைப் பற்றவாதல் –
என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –

நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
நல்லதோர் சோறு -திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

0-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
இவ்வருகு உண்டான ரசாக ஸ்வீகாரங்கள் அன்றியே ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான
புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
புத்ர பச்வன்னாதி பதார்த்தத்தையும்
ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
கைவல்ய புருஷார்த்தத்தையும் –
பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
அடியார்கள் குழாம் -களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களின் மஹிமை —

April 29, 2023

ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்
1- ஸ்ரீ -பெரியபிராட்டியார்
2- அம்ருதோத்பவ -அம்ருதவல்லித் தாயார் சோளிங்கர்
3-கமலா -கமலாவல்லித் தாயார் உறையூர்
4-சந்த்ர ஷோபநா -பரிமள வல்லித் தாயார் இந்தளூர்
5-விஷ்ணு பத்நீ –வஞ்சுள வல்லித் தாயார் -திருநறையூர்
6-வைஷ்ணவீ -யதுகிரி நாச்சியார்
7-வரரோஹா -ஸ்ரீ வரமங்கத் தாயார்
8-ஹரிவல்லபா -கோதா நாச்சியார்
9-சார்ங்கிணீ -கோமள வல்லித் தாயார்
10-தேவ தேவிகா –பெரும் தேவித் தாயார்-காஞ்சிபுரம்
11-ஸ்ரீ மஹா லஷ்மி -பத்மாவதித் தாயார்
12-லோக ஸூ ந்தரீ –ஸுந்தரவல்லித் தாயார் -திரு நாகை

————–

ஸ்ரீ பன்னிரு திருநாமப் பாடல்கள்

 ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13

 ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

———–

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களைச் சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்திக் கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களைப் பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன் –
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம் இத்யாதி –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –
பிரானே உன்னைத் தொழுகிறேன் என்று -இரந்தாலும் –
என் சொல்லைக் கை கொண்டு -நீ வருகிறாய் இல்லை என்றவாறே –

நீ அழைக்க நான் வந்த இடத்தில் குணம் கொள்ளாமல் –
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

அதுவோ –
சுரி குழலாரோடு நீ போய்  கோத்து குரவை பிணைந்து இங்கே வந்தால் -குணம் கொண்டாடுவனோ நம்பீ –
ஆளற்ற இடத்தில் நீ போய் -சுருண்ட குழலை உடையராய் இருக்கும் பெண்களோடு கை கோத்து –
குரவை பிணைந்து ஆடி இங்கே வந்தால் பொடியாதே குணவான் என்று உன்னைக் கொள்வனோ நம்பீ
என்று இவள் சொன்னவாறே-

நிருத்தரனாய் நிறக –

அவ்வளவிலே கையில் திரியை எடுத்து -இத்தை இடும்படி வாராய் -என்ன –

அவன் -இது இட ஒட்டேன் -என்ன

பிரானே திரி இட ஓட்டில் பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் –
எனக்கு எல்லாப் படியாலும் உபகாரன் ஆனவனே –
திரி இத்தனையும் இட ஒட்டுதியாகில் -நீ சிறிது சிறிது என்று பொகடப் பொகட நீ விரும்பும்படி
பெரியனவான அப்பங்களை தருவேன் என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –

வேய் இத்யாதி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலேயாய் –
பெருத்து இருந்துள்ள தோளை உடையரான பெண்கள் விரும்பும்படியாய் –
இருண்டு நீண்ட திருக் குழலை உடையனான

விஷ்ணுவே -நீ இங்கே வாராய் என்று –
அவன் வைலக்ஷண்யத்தை சொல்லி –
புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

—————————————————-

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – 2-3 6- –

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண் இத்யாதி –
மண் தின்றாய் -என்று அடித்தவாறே –
ஆ -என்ன –
ஆகாசப் பரப்பு அடங்கலும்
கேட்க்கும்படி அழுத உன்னுடைய வாயில் –
மண் உண்ட சுவடு உண்டாகில் பார்ப்போம் -என்று
விரும்பி அத்தை நான்  பார்த்த அளவில் –

முன்பு போலே வாய் வழியே பூமி எல்லாம் உள்ளே இருக்கிறபடியை கண்டு –
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே -என்று
என் மனசிலே பயப்பட்டு –
இவன் நம்முடைய பிள்ளை அல்லன் –
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன் – என்றவாறே –

அஹம் வோ பாந்தவ ஜாத-என்னும் அவனாகையாலே –
இவள் அந்யனாக்கி வார்த்தை சொன்னது சகியாமையாலே அத்தை மறப்பித்து –
தன் பிள்ளை -என்று
இவள் அணைத்துக் கொள்ளும்படி வந்து கிட்டி நிற்க –

அவ்வளவிலே இவள் –
காதுக்கு கடிப்பு இடுவதாக உத்யோகிக்க –
என்னுடைய காது புண் -எனக்கு அது வேண்டா -என்று அவன் சொல்ல –

புண் ஏதும் இத்யாதி –
புண் ஒன்றும் இல்லை -உன்னுடைய காது தண்டு புரளும் –
சற்றுப் போது பொறுத்து இரு நம்பீ என்ன –

அவன் பொறுத்த படியால் ப்ரீதையாய்
கண்ணா –
எனக்கு சுலபன் ஆனவனே

என் கார் முகிலே –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே
எனக்கு உன்னை உபகரித்தவனே

கடல் வண்ணா –
எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே

காவலனே –
எனக்கு ரஷகன் ஆனவனே –
என்று ஸ்தோத்ரம் பண்ணி
முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

———————————————-

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி –
இப்படி ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண சொன்னவாறே –
முலை உண்பானாக தொடங்கின அளவிலே –
கடிப்பை எடுத்து காதிலே இட –
அத்தாலே சீறி –
முலை ஏதும் வேண்டேன்  என்று ஓடி –
நீ தருகிற முலையும்-மற்றும் உண்டான அபூபாதிகளும் -வேண்டேன் என்று –
எனக்கு பிடி படாது கை கழிய ஓடி –
நான் பின் தொடர்ந்த அளவில் எனக்கு தரிப்பாக –

நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு –
உன் காதில் இட்ட கடிப்புகளை க்ரோதம் தோற்ற பிடுங்கி –
என் முன்னே எறிந்து பொகட்டு-

அவ்வளவிலே இந்திரன் பசிக் கோபத்தாலே வர்ஷிப்பிக்க –
அதில் ரஷ்ய வர்க்கம் நோவு படாதபடி -மலையை எடுத்து -முன்பு ரஷகம் என்று சொன்ன
கோவர்த்தன கிரி தன்னையே குடையாக எடுத்து –

மகிழ்ந்து –
மலையை சுமந்து கொடு நிற்கிற அளவில் -சற்றும் இளைப்பு இன்றிக்கே –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்  பண்ணப் பெற்றோம் -என்று உகந்து –

கன் மாரி காத்து –
அந்த கல் வர்ஷத்தில் ஒரு பசு மேலே  ஆதல் -ஒரு இடையன் மேலே ஆதல் –
ஒரு துளி விழாதபடி ரஷித்து-

பசு நிரை மேய்ததாய் –
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க-( திருவாய் -7-4-) -என்கிறபடியே –
மலை பசு மேய்க்கிற இடம் தன்னில்
சென்று ஏங்கும் ஒக்க கவிகையாலே -பசுக்களை இடையர் மேய்க்கும்படி பண்ணினவனே-

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

திரிவிக்ரமா –
இந்திரன் இழந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்கைக்காக -எல்லை நடப்பாரைப் போலே
திருவடிகளால் -சர்வ லோகத்தையும் அளந்தவனே –

திரு ஆயர்பாடிப் பிரானே –
திரு ஆய்ப்பாடியில் உள்ள ஜனங்களுக்கு சர்வ பிரகாரத்தாலும்
உபகாரன் ஆனவனே –
(குடை பிடித்த ஒன்றை கீழே சொல்லி –
இங்கு மற்ற ஸர்வ பிரகார ரக்ஷணம் )

இப்படி எல்லாருக்கும் உபகாரன் ஆன-நீ –
என்னுடைய அபேஷிதமும் செய்ய வேணும்  காண் என்று –
முன்பு பறித்து எறிந்த கடிப்புகளை இடுவதாக உத்யோகிக்க –
அவன் அதுக்கு இசையாது ஒழிய –

தலை நிலா இத்யாதி –
தலை செவ்வே நில்லாத இளம் பருவத்திலே உன்னுடைய காதுகளைப்
பெருக்காதே -விட்டு இட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ –
உன்னை வெறுக்கிறது என் என்று தன் செய்தி தாழ்வை சொல்லி நோவு படுகிறாள் –

——————————————–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

செல்லுகேன் -என்ற பாடம் ஆன போது –
உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே
கடக்கப் போய் விடுகிறேன் -என்று பொருளாகக் கடவது

என் குற்றம் இத்யாதி –
நீ உன் குற்றம் சொல்லி வெறுக்கிறது -நான் உன் சொல்லிற்று செய்திலன் என்று –
என் குற்றத்தை நினைத்தன்றோ -என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் -என்ன –
உன் குற்றம் இல்லையோ -என்ன –

உன்னை நான் என் செய்தேன் -என்ன –

என்னை நான் மண் உண்டேனாக –
மண் உண்ணாத என்னை
நான் மண் உண்டேனாக நினைத்து –

அன்புற்று நோக்கி –
ஸ்நேஹிதிகளைப் போலே -என்னுடைய வாயிலும் கையிலும் மண் சுவடு உண்டோ என்று பார்த்து –

அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையோ –
சுவடு கண்டாரைப் போலே என்னை பிடித்தும் –
அவ்வளவும் அன்றிக்கே –
அடித்தும் –
பாரிகோள் இவன் மண் தின்னும்படி -என்று எல்லோர்க்கும்
காட்டிற்று இலையோ -என்ன

கஸ்மா ன்ம்ருத மதாந் தாத்மன் பவான் பஷிதவான் ரஹ
வதந்தி தாவ காஹ்யேத குமாராஸ்தே அக்ரஜோப்யயம் நாஹம் பஷித வா நம்ப
ஸர்வேம் இத்யாபி ஸம் ஸிந யதி ஸத்ய கிரஸ் தர்ஹி சமஷம் பஸ்யமே முகம் -என்றது அனுசந்தேயம்

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ
வலிய புற்றிலே  பாதக பீதியாலே கிடக்கும் பாம்புக்கு -பகையான கருடனை த்வஜமாக உடையவனை –
கொடும் கோளால் நிலம் கொண்ட வாமனான முதலியானவனே-

இத்தால்
திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு –
பெரிய திருவடியை த்வஜமாக கொண்டு இருப்பான் ஒருவன் என்கையாலே –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று சேராதாய் உள்ளவற்றை சேர்த்து நடத்த வல்லனுமாய்-
(வெல்லும் வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ இவன் )
க்ரூரமாக செய்தவற்றை ந்யாயமாக்கவும் வல்லவன் அன்றோ -என்கை

உன் காதுகள் தூரும்-
இப்படி நீ ஓன்று சொல்ல –
நான் ஓன்று சொல்லிப் போது போக்கி இருந்தால்
உன்னுடைய காதுகள் தூரும் காண் –

துன்புற்றவன எல்லாம் தீர்ப்பாய் பிரானே –
ஆஸ்ரிதரனாவர்கள் துக்கப்படும் அவை எல்லாம்
போக்கும் உபகாரகன்  ஆனவனே -என்ன –

நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா –
இனி முன் போல் பிடிக்குதல் அடிக்குதல்  செய்யேன் -என்று மெய்யாக ஒரு வார்த்தை சொல்லு –
நான் திரி இடுகைக்கு இசையும்படி என்ன –

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –
திரியை இட்டு விட்டவாறே பின்னை மெய்யே சொல்லக் கடவேன் -என்கிறாள் –

————————————————–

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதை மேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் இத்யாதி –
திரி இட்டு சொல்லுகேன்  மெய் -என்றவாறே –

உன் வார்த்தை விஸ்வசிக்க போகாது –
சொன்னார் சொன்ன வார்த்தை கேட்டு -என்னை சிஷிப்பாள் ஒருத்தி
அன்றோ -என்ன –

நான் அப்படி செய்தது உண்டோ -என்ன –

மெய்யென்று சொல்லுவார் சொல்லை  கருதி –
இவன் வெண்ணெய் களவு கண்டான் -என்று சொல்லுவார் சொல்லும் வார்த்தையை மெய்யென்று புத்தி பண்ணி –
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று -வெண்ணெயை களவிலே ஜீவித்தாய் என்று-தொடுப்பு -களவு

கையை பிடித்து இத்யாதி –
என் கையை பிடித்துக் கொண்டு -பாரமான கரை உரலோடே-எல்லாரும்
காணும் படி என்னை கட்டிற்று இலையோ என்று சொல்லி மந்த ஸ்மிதம் செய்து இருக்க –
கரை உரலாவது -விளிம்பு சுற்றணையான  உரல்

செய்தன இத்யாதி-
இப்படி நான் செய்த குற்றங்களை சொல்லி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு
என் பக்கல் வாராதே போது போக்கி -நீ அங்கே இருக்கில்

ஸ்ரீதரனே-உன் காது தூரும் காண் –
அவர்களுக்கு ஆகவாகிலும் வா என்ன –

அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

கையில் திரியை இத்யாதி –
நீ விரும்ப தக்க அழகை உடையார் -உன் பக்கல் ப்ராவண்யத்தால் –
உன்னை விட்டு போக மாட்டாமல் சந்நிஹிதைகளாய் நிற்கிற இப் பெண்கள் ஆனவர்கள்-
கூழைக் காது சுணைக் காது – என்றால் போலே சொல்லி சிரியாதபடி
உன் காது பெருக்கும்படி என் கையில் திரியை இடு கிடாய் என்கிறாள்

——————————————————-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 -10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகையார் இத்யாதி –
கையிலே திரியை இடு கிடாய் -என்றவாறே –

சிரிக்கிற காரிகையார்க்கும் -திரி இட வந்து நிற்கும் உனக்கும் -ஏதேனும் சேதம் உண்டோ –
என்னுடைய காதுகள்;வீங்கி எரியுமாகில் -என்று அவன் சொல்லி -கைக்கு எட்டாதபடி நிற்க –

தாரியாதாகில் இத்யாதி –
இளம் பருவத்திலே காதை பெருக்கலாய் இருக்க –
திரி முதலானவற்றை இடுகிறது பொறாதாகில்-
உன் தலையிலே நோக்காடு உண்டாம் என்று -அப்போது செய்யாமல்
விட்டு வைத்த என்னுடைய குற்றமே அன்றோ -என்ன –
தன்னை வெறுத்து -பின்னையும் விடாதே

(லோகத்தில் இளம் பிள்ளைகளுக்கு
காது குத்தினால் சிலருக்கு நோம்
சிலருக்கு குத்தா விடில் நோம் -அரும்பதம் )

சேரி இத்யாதி –
இவ்வூரில் உன் திறத்தின் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காணா
நின்றாய் இறே என்றவாறே –
அவன் அனுமதி தோற்ற நிற்க –

ஏர் விடை இத்யாதி –
வம்பு அவிழ் கானத்து மால் விடை -என்கிறபடியே -காட்டுக்குள்ளே உன்னை நலிவதாக எதிர்ந்து வந்த –
அரிஷ்ட நேமியாகிற ரிஷபத்தை நிரசித்து –
கன்றுகள் மேய்கிற இடத்தில் – இளம் கன்றான வடிவை கொண்டு வந்து -ஓர் அசுரன் நிற்க -அந்த கன்றை எடுத்து
விளவாய் நின்ற அசுரன் மேலே எறிந்து -இரண்டு தலையும் -முடித்து –
அவற்றின் கையிலே அகப்படாதே –
உன்னை நோக்கித் தந்தவனாய்-உன்னைக் கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன் வசமாக்கிக்
கொள்ளுகையாலே ஹிருஷீகேசன் என்னும் திரு நாமத்தை உடையவனாய் –
எனக்கு திருஷ்டி பூதனானவனே என்று உகந்து சொல்லுகிறாள் –
(கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் அவனே
இவருக்கு எல்லா அவஸ்தையிலும் கண்ணாவான் அவனே காணும் )

—————————————

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் அவன் ஆகையாலே –
கண்ணைக் குளிரக் கலந்து –
உன்னுடைய கண்ணை அவர்களுடைய கண்களோடு குளிரக் கலந்து –
இத்தால் -கண் கலவியை சொன்னபடி –

எங்கும் நோக்கி –
அவர்கள் வடிவை சமுதாயேன பார்த்து

கடி கமழ் பூம் குழலார்கள் –
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்ருதமாய் இருந்துள்ள குழலை உடையவர்களுடைய –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பிரானே –
நெஞ்சுக்கு உள்ளே சர்வ காலமும் இருந்து -ரசிக்கும் பெரியோனே –

அன்றிக்கே –
கண்ணை -என்கிற இடத்தில் –
ஐகாரத்தை அவ்யயமாக்கி –
கடி கமழ் பூம் குழலானவர்கள் தங்கள் கண் குளிரும்படியாக
உன்னுடைய அவயவ சோபையை கலக்கக் கொண்டு
எங்கும் ஒக்க பார்த்து –
உன்னுடைய கலவியின் பிரகாரங்களை எண்ண-
அவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் -அதுக்குள்ளே என்றும் ஒக்க இருந்து –
அவர்களுக்கு நிரதிசய போக்கினாய் நிற்கும் பெருமையை உடையவனே -என்னவுமாம் –

எங்கள் அமுதே –
எங்களுடைய நிரதிசய போக்யனுமாய் -சத்தா தாரகனுமாய் இருக்கிறவனே –
உனக்கு அபிமதைகளான அவர்களுக்கும் –
பரிவரான  எங்களுக்கும் உகப்பாம்படி –
உன் காது பெருக்குகைக்கு வா -என்ன-

நான் வருகிறேன் -நீ எனக்கு என்னம் தருவாய் என்ன –

உண்ணக்  கனிகள் தருவன் –
நீ விரும்பி அமுது செய்யும் படி உனக்கு பழங்கள் தருவேன் -என்ன

ஆனாலும் கடிப்பு இடப் புகுந்தால் காது நோவுமே என்ன –

கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் –
சற்றும் நோவு வாராதபடி உன் காதுகளுக்கு கடிப்பு
இடுவேன் என்றவாறே

உடன் பட்டமை தோற்றா நிற்க –

பண்ணை இத்யாதி –
கண் வளர்ந்து அருளுகிற தனி இடத்திலே -காவல் வைத்த
சகடம் அசூர விசிஷ்டமாய் உன்னை நலிய வர -அத்தை கோப்பு குலைய உதைத்துப்
பொகட்டு ஜகத்துக்கு வேர்ப் பற்றான உன்னை நோக்கித் தந்தவன் அல்லையோ –

இங்கனே வாராய்
என்று புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

———————————————————–

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா இத்யாதி –
பத்ம நாபா இங்கே வாராய் என்றவாறே –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து –
என்னை வா என்று சொல்லி அழைத்து –
நான் வரக் கொள்ள –
என் கையை உறைக்கப் பிடித்துக் கொண்டு –

வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் –
பலாத்காரேன என் காதில் – கடிப்பை நோம்படி திரிகி இடுவுதியாகில்
உனக்கு இங்கு சேதம் ஆவது உண்டோ –
என் காதுகள் நோம் காண்-வர மாட்டேன் என்ன –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ –
இவன் வருகைக்காக -நீ உகக்கும் நாவற் பழம் கொண்டு வைத்தேன் –
இவற்றை பாராய் நம்பீ -என்று காட்ட –
அத்தைக் கண்டவாறே -வருவாரைப் போலே நிற்க –

முன் இத்யாதி –
முன்பு தன் வடிவை மறைத்து -தாய் வடிவு கொண்டு -வஞ்சகையாய் வந்த பேய்ச்சியை
சாம் படியாக முலைப் பாலை உண்டு –
நலிவதாக மேலிட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து பொகட்டு –
அவ் விரோதிகள் கையில் அகப்படாமல் -உன்னை நோக்கித் தந்தவனாய் –

அந்த சக்திமானாய் இருக்கச் செய்தே –
அசக்தரைப் போலே என் கையிலே பிடி உண்டு –
நான் கட்டின கயற்றின் தழும்பு உன் வயற்றிலே கிடைக்கையாலே தாமோதரன் என்று பேராம்படி
என் கையாலே கட்டுண்டு நின்ற நீர்மையை உடையவன் அன்றோ –

இங்கே வாராய் என்று
உகந்து அழைக்கிறாள் –

——————————————

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச் சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்-அந்தரங்க கிங்கராவார் –

வார் இத்யாதி –
ஸ்வபாவமே ஒழுகு நீண்ட காது வேண்டும் அளவும்  தாழப் பெருக்கி –
மட்டிலே அமைத்து -மகரக் குழை சாத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு-

சீரால் இத்யாதி –
சீர்மை குன்றாதபடி யசோதை பிராட்டி –
ஸ்ரீ யபதியானவனைக் குறித்து சொன்ன சொலவுகளானவை

சிந்தையுள் நின்று திகழ –
தம்முடைய திரு உள்ளத்தின் உள்ளே சர்வ காலமும் நின்று விளங்க –

பார் இத்யாதி –
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமம் இத்யாதி –
வைஷ்ணவ சிஹ்னமான திரு த்வாதச நாமங்களோடே அருளிச் செய்ததாய் –
அத ஏவ
அனுபவிதாக்களுக்கு ஒரு காலும் திருப்தி பிறவாதே –
மேன் மேலும் அபேஷிக்கும்படி-நிரதிசய போக்யமாய் இருக்கிற –
அந்தாதியான இவை பன்னிரண்டு பாட்டையும் –
சாபிப்ராயமாக வல்லவர்கள்

அச்சுதனுக்கு அடியாரே –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாத ஸ்வபாவன் ஆனவனுக்கு
அநவரத கிஞ்சித்கார பரராகப் பெறுவர்-

————————————————–

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் -(வைகுந்த மணி வண்ணா -அதி சங்கை போக்கி -இதில் -எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அதி சங்கா நிவர்த்தகம் அங்கு-இங்கு -ஆழ்வார் சம்பந்திகள் அளவும் –
உன்னை நான் பிடித்தேன் சிக்கனவே -உன்னை எங்கனம் – விடுவேனோ -முடிவில் இதுவே லஷ்யம் அங்கு –உபக்ரமம் அப்பியாசம் உப சம்ஹாரம் –
இங்கு -முதல் – எமர் கேசவன் தமர் ஆனார்கள் –மேவும் தன்மையன் -ஆக்கினான் -பகவத் வ்யாமோஹ பரம் இங்கு)

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே (போகங்கள் இங்கும் ஸ்வர்க்கத்திலும் -திவ்ய லோகம் அடைவாய் -தர்மத்தில் உன் உள்ளம் நிற்கும் -சந்ததிகளுக்கு தீர்க்க ஆயுள் -ஸ்வர்க்கம் கிட்டும் -ஸூர்யன் இருக்கும் வரை இவை இவை நடக்கும் -என்று ப்ரஹ்மாதிகள் போலே அன்றோ ப்ரீதியால் கண்ணன் மாலா காரருக்கு அருளினான்  )
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-(ஸ்வர்க்கமும் அடைந்து இந்திரன் போலே அனுபவித்து -சாயுஜ்யம் அடைவாய் -இவன் தம்பிக்கு இவன் போவதற்கு முன் நீயும் அடைவாய் )
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீகார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாராயணனாலே – நிரதிசய வாத்சல்யத்தால் –எமர் எல்லாம் கேசவன் தமர் -அவன் தமர் இவர் எமரானால் தான் –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -வாழ்வு என் என்று கொண்டாடுகிறார்
ஏழு ஏழு -நம் அளவும் வர மீண்டும் மீண்டும் இத்தையே அனுசந்தானம் செய்ய வேண்டுமே-

கேசவன் தமர்
1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-(1-ஸ்வரூபம் -ப்ரஹ்மாதிகளுக்கும் -நியாந்தா/ 2-ரூபம் -ஸுரி பெருமாள் -பிரசஸ்த கேச பாசம் உள்ளவன் / 3-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே /4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா –நான்கையும் சொல்லும் கேசவ திரு நாமம் )
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
1-விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
2-மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
3-தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன் மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா-(உபாயமாக நாராயணனை பற்றி )
நாராயணனாலே என்ற இடம் –மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு -(நாராயணனாலே -முதல் வேற்றுமை ஆக்கி ஆகிய – வாத்சல்யம் -மா சதிர் – கிருபை -ஆகிய பேறு)

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

நாச்சியாரும்
நாராயணன் மூர்த்தி கேசவன்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை -மாதவனான பின்பு கேசவனானான்
கேசவன் நம்பியைக் கால் பிடிப்பான்
கள்ள மாதவா கேசவா

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

கீழ் யுக்தமான –நாராயண -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே
வேதமயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் –நாராயணனையே குறிக்கும் –
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை-த்ரிவித காரணமும் இவனே –
காரணம் -கிரியா ஹேது -தண்டம் சக்கரம் – கிரியை -சுழலுதல் –கருமம் -குடம் –அந்தர்யாமி -நிர்வாககன்-என்றபடி –
சீரணங்கு அமரர்-குணத்தால் உயர்ந்த திவ்யர் —ஸ்ரீ லஷ்மி -சீரணங்கு என்றுமாம் –
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று-தேவர் முனிவர் மனுஷ்யர் -யாவரும் தொழுது ஏத்தும் படி
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே-எனக்கு பிரகாசித்த -ஸமஸ்த விபூதி நாதன் இவற்றை காட்டி பிரகாசிப்பித்து அருளிய உபகாரம் –
அமலன் ஆதி பிரான் -தானே அமலன் ஆதி என்று காட்டி அருளிய உபகாரகன் போலே
என்னை அநந்யார்ஹன் ஆக்கி அருளிய சேஷி -ஸ்ரீ யபதி-என்றவாறு –
கேசவன் நாராயணன் மாதவன் -ஸ்ரீ யபதி –மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு –
வங்க கடல் கடைந்த –மாதவனை கேசவனை –நாராயணனே முதல் பாசுரம் -கேசவன் மூர்த்தி சொல்லி-அவனே -திருமாலே -கோதோ உபநிஷத்

நாரணன் –இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன் விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் க்ரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்-(காரணம் -மண் / கார்யம் -குடம் / கிரியை -தண்ணீர் கொண்டு வரும் பலன் -போலவே-பஞ்ச பூதங்கள் /அண்டாதிகள் /ஆத்மாக்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பலனுக்காக- -)
காரணம்-செயல்பாடு -பலன் -என்றுமாம் (விசிஷ்ட ப்ரஹ்மம் -மூன்றுக்கும் -நிமித்த உபாதான சஹகாரி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டா ப்ரஹ்மம் -மண் மாறும் -/ சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த -குயவன் / ஸ்தூல விசிஷ்ட சித் அசித் ப்ரஹ்மம் பலன் -ஞான சக்தாதி கல்யாண குண- விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி-அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம் –சதேவ சோம்ய- -ஏக மேவ அத்விதீயம் /)
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வபாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கி ஏத்தும் படி நின்று-(அங்குலி விச்சேதம் -ஏகலைவன் போலே -அக்ஷரம் எழுதுவது-உதிரத்தில் பதித்து -குழந்தைக்கு பெயர் -தாஸ்யம் சதுஷ்ட்யம் என்பர் )
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் –ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படியாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்-

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே –மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் –ஜாமாதா-தயிதஸ்தவேதி -பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம –என்றார் இ றே பட்டர் -(என் திருமகள் –சேர் மார்வன் –என்றபடி -அந்தப்புர வாசிகள் –ஸ்ரீ வைஷ்ணவ வார்த்தை அன்றோ –நாராயணன் -கேசவன்- உபாசகர்களும் சொல்வார்களே)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு –அஹ்ருதய யுக்தி
என்னை –வாசி அறியாத என்னை
இனி -உக்திக்கு அனந்தரம்
இப்பால் பட்டது-மேல் உள்ள காலங்கள் எல்லாம்
யா தவங்களும் சேர்கொடேன்-அவித்யாதிகள் சேரக் கூடாது என்று சங்கல்பித்து
என்று என்னுள் புகுந்திருந்து-என் நெஞ்சுக்குள் புகுந்து -அநன்ய பேரனாக இருந்து
தீதவம் கெடுக்கும் -தீது புத்தி பூர்வகமாக -தெரியாமல் இரண்டையும் கெடுத்து
அமுதம் செந்தாமரை கட்குன்றம்-ஸ்திரமான அழகான வடிவு
கோதவமிலன் -குற்றம் இல்லாத
கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே-கருப்புக்கட்டி –கோதும் அவமும் -இல்லாத –அபூத உவமை -ஜாலம் சேர்த்தால் தானே சக்கரை உண்டாகும் -ஜல வாசனை வருமே -வஸ்து அந்தர சம்சாரக்கம் -பாக தோஷம் –உண்டாகும் –ஈஸ்வரனுக்கு கோது அவன் -உபகார ஹேது ஸகத்வத்வமும் -அபேஷா நிரபேஷமாக செய்யும் –அவம்-ஸூ பிரயோஜன அர்த்தத்வமும் -சொத்தை ஸ்வாமி பெறுவது போலே /என் அமுதம் கறுப்புக் கட்டி கண்ணனே -தானே –

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
என்னை-அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இறே
மேல் அத்யல்ப காலமாய்த் தோன்றா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர் கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இறே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்-
2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்-
4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
இருந்து-ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி- என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இறே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போக்ய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்யம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இறே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

ஸூ சம்பந்த குல சம்பந்தி பர்யந்தமாக செய்ய வல்ல சாமர்த்யன்
கோ விந்தன் -கோ ஸம்ருத்தி
குடக்கூத்தன் -தனம் விஞ்சி ப்ராஹ்மணர் -யாகாதிகள் போலே ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
கோவலன்-ஐஸ்வர்யம் சேஷ்டிதம் அனுகூலமான ஜென்மம்
என்று என்றே குனித்து–தனி தனி கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் -ஒன்றுக்கும் ஒரு சஹஸ்ர நாமம் -சொல்லி –
பரத்வ -ஸ்ரீ யபதி ஸுலப்யம் -சொல்லி கூத்தாடி
தேவும் தன்னையும் -பரத்வத்தையும் தானான நீர்மையையும்
பாடியாடத் திருத்தி-நித்யர்களில் ஒரு கோவையாக்கி
என்னைக் கொண்டு என்-பாவம் தன்னையும் பாறக் கைத்து -பிரதிபந்தகங்களை ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் -தன்னை பிராபிக்கும் தன்மை
வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்ததை செய்யும் வல்லவன் -சர்வ வ்யாபி -ஒருவரை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இறே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இறே -(வாக்மி ஸ்ரீ மான் -பூமி -பசுக்கள் -பெருமாள் வராஹ கிருஷ்ணன் மூவருக்கும் கோவிந்தன் சப்தார்த்தம் உண்டே )
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று –
குடக்கூத்தாவது –அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இறே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இறே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் –பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்-
இங்கு ஐஸ்வர்யமும் சௌலப்யமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொல்லவுமாம்
அன்றிக்கே என்று- என்றே- என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் –குனிக்கையாவது – உத்தியோகத்து அளவாய்
இங்கு-பாடியாட -சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி-
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வபாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

ச பரிகரமாக அங்கீ கரித்ததால் வந்த உஜ்வலம்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விஷ்ணு -உடைய -முதல் திரு நாமம் –பாட்டுகளில் மரியாதை குலைய கூடாதே -உகரம் குற்றியலாக கொள்வது
இலங்கு -விளங்கும் -என்றவாறு
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு-விகசிதம் -விளங்கா நிற்கும் -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி-அம் சாரியை -மதி சீர் சங்கு -/ மலையே திரு உடம்பு -தாமரையே பாதம் -சாமானாதி கரண்யம்-/ உபமானமே உபமேயம் -பொருந்திய படியால் –
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் –தம்மை அணைத்த கை –குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே –விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது (பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும் திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே -ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன் புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனுக்கு –(மது சூதனன் தனக்கு என்றும் –மது சூதனனான விஷ்ணுவுக்கு என்று இரண்டு அன்வயம் )
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன் பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன் கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

கிருபா பாரவஸ்யம் -உஜ்வல்யம் -உபகாரம் -விட்டு வல்லன் -இவற்றுக்கு ஹேது -கிருபை தானே
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
மது கைடபர் –ஹய சிரஸ் / கண்ணன் -/ உபாயாந்தர ப்ராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமல்
நம் பிரதிபந்தகங்களை போக்கி என்றபடி -/அஹங்காராதிகள்–/ காரியமே அற்று –
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ர பாடல்களால் சூழ்ந்து -கல்ப கல்ப காலம் -பாடுவது -கல்ப கல்ப காலமும் நாம் ஒரு கால் பாட -அவன் அனுக்ரஹம் பண்ண
அவன் குணக் கூட்டங்களை சூழ்ந்து -ஸ்வயம் பிரயோஜனமாக -நின்று பாடி ஆட -பிறப்புக்கள் தோறும் -கல்ப கல்பம் -பல் நெடும் காலமாக -திருத்த முயலுவான் -அபிமுகனாக ஈடாக
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –
அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
கிருபை தடுக்க ஒண்ணாத்தாதே -அதுவே விதி -/ஏலு கிற பொருந்துகிற –எனக்கு தகுதியான -தாழ்ந்த நீசனுக்கு தக்கபடி என்றபடி –கிருபை -என்னை சூழ்ந்து -திரிவிக்ரமனையும் சூழ்ந்து -என்றபடியே -என் அளவுக்கு தன்னை தாழ்த்துக் கொண்டு கிருபை செய்து அருளினான் என்றபடி-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது (வேதங்களை மீட்ட மதுசூதனன் -கொழுப்பு -ரஜஸ் தமஸ்- கோடரி போலே உலகத்துக்கு -இருவர் -தானவர்களில் கொடியவர் -ஹயக்ரீவர் முகத்தில் வந்து –மது சூதனை )
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இறே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
1-ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
2-ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததாமி தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –
எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -குள்ளர்களை திரிவிக்ரமன் என்று சொல்லும் படியான குறள் மாணாய் போலே-
சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு-(எனக்கே -இரண்டு தடவை /ஸ்வாமி -எனக்கே அசாதாரணமான / உபகாரம் -பண்ண ஒரு தடவை / கிருபையால் அருள்கள் செய்ய எனக்கே / எனக்கு என்ன கிருபையும் உபகாரமும் என்றபடி -)
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

——

அவதாரிகை –

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

பிரயோஜனம் முதலில் சொல்லி -உபாயமான வாமனன் பின்பு சொல்லுமே –
திருவிக்ரமன் திருக்கண்களை -எப்படி சேவித்தார் ஆழ்வார் –
ஸூவ அனுபவ யோக்யமான சர்வ உத்தரமான மனசைத் தந்து அருளினான் –என்கிறார் –
திரிவிக்ரமன் -அனன்யார்ஹன் ஆக்கினான் உலகத்தை
செந்தாமரைக் கண் -ஆழ்வாரை வெல்ல இந்த உபகரணம் -ஜிதந்தே புண்டரீகாஷ-தாமரை கண்ணனை விண்ணோர் பரவும்
எம்மான் -அடிமை ஆக்கிக் கொண்டவன்
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்-உருவம் -நிறம் –பொலிந்த-ஸ்படிகம் போலே
-திருப் பற்கள் -ஸ்மிதம் -மந்த -திரு முத்து நிறத்தை
என்று என்று-தனித் தனியே —உள்ளி-சேஷ்டிதம் கண் அழகு முறுவலையும் நெஞ்சாலே அனுபவித்து
பரவிப் பணிந்து -உள்ளடங்காமையாலே அக்ரமாக பரவி -பணிந்து -ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே -பல காலம் -கல்பங்கள் -பிராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில்
மருவித் தொழும் மனமே தந்தாய்-அனன்ய பிரயோஜனமான அடிமை ஆக்கி அருளிய -சக்தன் –

திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியன் –
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்-
காலும் கண்ணும் -சம்பந்தம் -திருமழிசை ஆழ்வார் -கட்டை விரலிலே கண் -பக்தி சாரர்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
முத்துப் பல் வரிசை –
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி- அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாததாய் இருக்கும் இறே-(விஷயாந்தரங்கள் விஷயத்தில் அகவாய் -உள்ளே உள்ள ஜலம் இத்யாதி நினைவில் வர ஸ்மிதம் விடுவோமே என்றவாறு  )
அக வாய் —இதர உள் விஷயம் என்றும் பகவத் ஸ்மிதம் என்றும் –சாடு -இது -பகவத் ஸ்மிதம்-மாறாதே அனுசந்திக்கலாம் இறே
அழகு ஆறு திரு அபிஷேகத்தில் இருந்து விழ –ஸ்மிதம் -அழகு சேர -ஹார அழகு பிராட்டி அழகு சேர
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட –
-இடை சிறுத்துததால் சுழல் -திரு நாபி சரஸ் -ஆனதே –
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –

———————————————————————————————

அவதாரிகை –

எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் -குள்ளன் மட்டும் இல்லையே —ஸூகம் நயதி -திரு மேனி காந்தியால் சேவித்தவர்கள் மகிழ்வார்
பொல்லாங்கை நீக்கி -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத -இதற்கு பிரத்யுபகாரம் உண்டோ
என் மரகத வண்ணன்-வடிவு அழகு –தாமரைக் கண்ணினன்-போக்தாவை குளிர நோக்கும்
காமனைப் பயந்தாய் -உத்பாதகன் ஆனவன் –சாஷாத் மன்மத மன்மதன்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் -பிரயோஜ நாந்தரங்களில் போகாமல்
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் -விஷயாந்தரங்களில் போகும் தீமையை கெடுத்து அருளி
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே-பூரணன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீ யபதி என்ன செய்வேன் –

வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் -இனிய அனுபவங்களைக் கொடுப்பவன் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்-
அப்பாஞ்ச ஜன்யமே -முன்னிலையாக இருந்து படர்க்கையாக அங்கும் –
இவை இரண்டுக்கும் அடி அபிநிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு —தூர் -துக்கம் -அது நீங்கும் படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

—————————————————————————————–

அவதாரிகை –

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

விஸ்லேஷ துக்கும் தீரும் படி என் நெஞ்சுக்குள் புகுந்து நான் ஹ்ருஷ்டராம் படி அனுபவிப்பித்தான் -தூ மனத்தில் தோற்றும் -பக்திக்கு விஷயமாம் படி –
அழுக்கு நீக்கி -நல்ல நெஞ்சு -அதற்கு விஷயம் -மூன்று பாசுரங்கள்
சிரீ இதரன்-ஸ்ரீ பீடன் – செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து -எங்கும் நாடி நாடி கண்கள் நீர் மல்கிகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
வெவ்வுயிர்த்து உயிர்த்து –மரீ இய தீ வினை -ஆடியாடியில் உள்ள விசனம்
மாள இன்பம் வளர-2-4 தீ வினை /2-5 கலந்த இன்பம் -அந்தாமத்து அன்பு வளர – வைகல் வைகல் இரீஇ
உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே-விதேயமான நெஞ்சில் -இருத்தி –பைந்தாமரைக் கண்ணன் எங்கும் பக்க நோக்கு அறியாமல்
பக்தி பாரவச்யத்தால் வந்த ஆழ்வார் துடிப்பை -விகாரம் –தீ வினை-பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி -பூர்வகமாக —இன்பம்  வளர – -அனுபவ ஆனந்தம்-வளரும் படி செய்து அருளினான் –

சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும்
ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

———————————————————————————-

அவதாரிகை –

நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

சர்வ பிரகார உபகாரன் -விடாமையில் உண்டான அபேஷையை வெளியிடுகிறார்
இருடீகேசன் -தச இந்த்ரிய ஆனனன்-மானச இந்த்ரியத்தை நியமித்து
எம்பிரான் -உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -எனக்கு செய்தது இதுவும் என்கிறார் -முருடான ராவணனை
லோக கண்டகன் கொடூரமான-ராஷச குலத்துக்கு பலமான ராவணன்
எம்மான் -என்னை அனுபவிப்பித்த ஸ்வாமி
அமரர் பெம்மான் என்று என்று -பலபடியாக அனுசந்தித்து
தெருடியாகில் நெஞ்சே வணங்கு -அறிவுடையை -தெளிவு -ஆகில் -வணங்கும் படி
திண்ணம் அறி அறிந்து -புத்தி பண்ணி -உறுதியாக -சிக்கென
மருடி யேலும் விடேல் கண்டாய் -அயோக்யா அனுசந்தானம் கலக்கம் வந்தாலும் -இதுவே மருள் –
நம்பி பற்ப நாபனையே–குண பூர்ணனான -காரண பூதன் -இம் மஹா உபகாரகனை -விட்டு விடாதே

இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப்படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம்படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன் –நாடாத மலர் நாடி –வைக்கவே வைக்கின்றது-
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் –நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
விபரீத ஆகாரதையை போக்கின படி -மனசுக்கு ஞானம் உண்டோ -வெளி புறப்பட வழி- மனஸ் சஹகாரத்தா
ஞான இந்த்ரியங்கள் வேலை என்பதால் –
யோகிநாம் -தச இந்த்ரியங்கள் -கோரம் மநோ ராஜநீசரண் -ராஷசர் போலே –விவேக சரம் -ராம பானம் போலே -யோக மார்க்கம் –
தேகாத்ம விவேகம் -அந்ய சேஷத்வ -விவேகம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யா விவேகம் -ஆகிய சரம் என்றவாறு
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
வார்த்தை பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -தெரு முலையில் அறு கலம் –
கொடுத்தது முக்கலம் -ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி கிடைத்தது ஒரு கலம் -சபை வார்த்தை –
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

——————————————————————————————–

அவதாரிகை –

பற்பநாபன்-அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து –தாமோதரனே-அத்யந்த ஸூலபனாய்
எந்தை-என்னை அடிமை கொண்டவன் –எற்பரன்-என்னை யல்லது அறியானானான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

சர்வ பிரகாரன் ஆனான் என்கிறார் -போக்கிடம் இல்லை என்று நெஞ்சு இங்கேயே இருக்கப் பண்ணினானே
பற்பநாபன்-ஜகத் உத்பத்தி ஹேதுவான திரு நாபி கமலம் உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் -உத்பன்ன ஜகத்தை ரஷிக்க பெரும் சக்தன்
எற்பரன் -இந்த மேன்மை யுடனே சிலபனாக என் பரமாகவே உள்ளான் -நானே இலக்காக உள்ளானே
என்னை யாக்கிக் கொண்டு -என்னை அங்கீ கரித்து
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -ஏவகாரம் -அசாதாராண -சம்பந்த சம்பந்திகள் நமக்கும் உண்டே
என்னமுதம் -பரம போக்கியம்
கார் முகில் போலும்-தரம் பார்க்காமல் உபகரிக்கும்
வேங்கட நல் வெற்பன் -யோக்ய ஸ்தலமான -வெண்நீல மேகங்கள் விரித்தால் போல் –
விசும்போர் பிரான் -ஆஸ்ரித பவ்யத்தை உடையவன்
எந்தை எனது ஸ்வாமி
தாமோதரனே-ஆஸ்ரிதர் கட்டும் படி
எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ச்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு

பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இறே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –என்னையாக்கிக் கொண்டு
1-அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இறே அதுக்கு
எனக்கே –
2-ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
தன்னைத் தந்த –
3-சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
என்னமுதம் –
4-தான் போக்யமாய் இருக்குமது இல்லை இறே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
ஒரே சரம் ஒரே சொல் -சக்ருத்-துர் நாபிபாஷதே
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-
சஹ்யம் பற்றின ஔதார்யம் இறே -பிரவாஹம் நீர் வீழ்ச்சி என்றவாறே –
சஹ்யாத்ரி -காவேரி -போலே -ஔதார்யத்துக்கு சங்கோசம் இல்லை –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே –
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச்செயலாலே அடிமை கொண்டவன் -பிரதம விபூஷணம் -உதர பந்தனம் –
விசும்போர் பிரானாய்–எந்தையே –என் அமுதம் ஆனவன் -என் பரன் -என்று அந்வயம்-
உபாயத்வம் –ஆக்கிக் கொண்டு -/அமுதம் -உபேயத்வம் /பரத்வம் /சௌலப்யம் /சௌர்யம் வீர்யம் பராக்கிரமம்
அனைத்தும் சொல்லி –தன்னை ஒழிய போகாதவன் –
தாயார் -குழந்தை பிதற்றலை கேட்டு சயனித்து -நாபியில் –நாஹம் -அறிய வில்லையே சொல்லி பிதற்றி -ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யே -தேசிகன்

——————————————————————————–

அவதாரிகை –

எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல்-நிர்ஹேதுக அனுக்ரஹம்- செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு அறியப் போகாது என்கிறார்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அதிசயித ஞானாதிகருக்கும் தன்னளவில் செய்த உபகாரம் அறியார்
தாமோதரனைத் -ஆமோ தரமறிய-இப்படி என்றால் நாராயணனை அறிய முடியுமோ-ஆஸ்ரித பரதந்த்ரன்
தனி முதல்வனை -நிமித்த -உபாதான காரணம் -சமஸ்த ஜகத் ஏக காரணத்வன்
ஞாலம் உண்டவனை -பிரளயத்தில்
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -தங்களை தவிர வேறு யாராலும் முடியாதே -ஆகாது –
என்றே தொழுமவர்கள்-
தாமோதரன் உருவாகிய –சிவற்கும் திசை முகற்கும்-சரீரம் தானே -இவர்கள் இப்படி சொல்லி தொழுகிறார்கள் –
பிரகாரதயா சேஷம் -பிரியாமல் சார்ந்து
கடுகிலே கடலை மடுத்தால் போலே -என்னிடம்
ஆமோ தரமறிய -இவர்களா தெரிந்து கொள்வார்கள் -இவர்கள் அந்த பரத்வன் தாமோதரன் என்பார் -என்னிடம் கலந்தது அறியாதார்களே
தாமோதரனாக வந்து என்னளவு வந்தது அறியாதவர்கள் -என்றவாறு
எம்மானை என்னாழி வணனையே -சமுத்திர வர்ணன் -கடுகிலே கடலை மடுத்தால் போலே –(குண ஆர்ணவம் -என்னுள் வைத்த உபகாரகம்- தாமோதரத்வம் பரத்வம் என்னலாம் படி அன்றோ )-இந்த சௌலப்யம் யாரே அறிவார் –
விசேஷ உபகாரம் அறிவது அரிது -யசோதை கையால் கட்டுப்பட்டதை அறிந்தாலும்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் –
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்  
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

பகவத் பிராப்தியே பலம்
வண்ண மா மணிச் சோதியை -நிறம் -பெரு விலையனான -நீல மணி -தேஜஸ் -ஜோதி மணி உருவம் -விக்ரகம் என்றுமாம்
அமரர் தலைமகனை -நித்ய ஸூ ரிகளும் அழகை பரிச்சேதிக்க ஒண்ணாத படி
கண்ணனை –ஆஸ்ரிதரை -தானே அனுபவிப்பிக்கும் -சௌலப்யம்
நெடுமாலைத் -வ்யாமோஹம்
தென் குருகூர்ச் சடகோபன்  -அழகிய –நிர்வாஹகர்
பண்ணிய -செய்த -பகர்ந்த -பண்ணில் அமைத்து அருளிச் செய்த
தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -சர்வாதிகாரம் -திராவிட சந்தர்பம் கூட்டு –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு -பண்ணிலே வர்த்திக்கும் திரு த்வாதச திரு நாமம்
அண்ணல் தாள் அணைவிக்குமே-கேசவன் தமராக்கும் -சர்வேஸ்வரன் திருவடிகளை பிராபிக்கும் –

வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ்சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது –அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன் அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூர்ச் சடகோபன்  பண்ணிய –தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
சடாரி -ஸ்ரீ ஸூ க்தி -அகில ஹேய -ஞான அனுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -கர்மா வாசனா ருசி போக்கி
-சகல ஹேய நிரசன பூர்வகம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ
பகவத் பிரசாத லப்த பரி பூர்ண ஞான வைபவம் அகில சேதன உஜ்ஜீவன ஆசை கொண்ட ஆழ்வார் –
பிரத்யஷ சமாநாகார பரிவாஹ-வேதத்துக்கு இதுவும் அடியாய் இருக்கும் -சாஷி – உயர்ந்த பிரமாணம் ஆகுமே –வக்த்ரு விசேஷம்
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 17-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————————————————————————————

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

———–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |
ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.
சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் சூலாயுதமும் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
அக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென்கிழக்கில், தாமரையைப் போன்றவனும், பூச்சியை ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வடமேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
இடியை ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வடகிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியன்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ர மச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

——————–

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.

——————————————-

ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே –ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில்
அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் –
அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை –
நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் –

———————————

பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்
மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —சிறப்புத் தனியன் –

மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —பிரகாசம் பொருந்திய திரு யஞ்ஜோபவீதம் அமைந்த திரு தூப்பூல் திருவேங்கடமுடையான் ஆகிய நம் தேசிகர்
பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று -பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் பெருமை பொருந்திய ஸ்ரீ ஹஸ்திகிரி நாதனான
பேர் அருளாளனுடைய திருவடி வடிவம் கொண்டன என்று நினைத்து
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத் -அந்த புறங்களின் தேவதையாகிய எம்பெருமானுடைய
சிறந்த நிறம் திரு நாமம் திவ்ய ஆயுதம் வசிக்கும் திசை ஆகிய அனைத்தையும் நாம் அறியும் படி
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்-தெற்கே வழங்கும் அழகிய தமிழினால் ஆகிய பாட்டுக்களுக்குள் சிறப்புப் பொருந்திய
கட்டளை கலித் துறை என்னும் பாவினத்தால் அருளிச் செய்து நாம் அனுசந்திக்கத் தந்து அருளினார் –

——————————-

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர்
சீர் கொண்ட தூப்பூல் திருவெண்காடாரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —சிறப்புத் தனியன் –

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி –மேகத்தை ஒத்த திருமேனியையுடைய பேர் அருளானுடைய
திருவடித் தாமரையை மனத்தில் உறுதியாகத் தியானித்து
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர் –அழகிய புகழையுடைய ஸ்ரீ பாஷ்யகாரருடைய இரண்டு திருவடித் தாமரைகளை சேர்ந்த
சீர் கொண்ட தூப்பூல் திருவேங்கடாரியன் சீர் மொழியை-பெருமை பெற்ற ஸ்ரீ தூப்பூல் திருவேங்கடமுடையானுடைய சிறந்த ஸ்ரீ ஸூக்தீயை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —மனத்தில் கொண்டு யார் ஸ்துதித்தாலும்
அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அந்த ஸ்ரீ ஸூக்திகளே பெறுவிக்கும் –

—————————————————–

கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –1- ஸ்ரீ கேசவன் -பொன் நிறம் -நான்கு திருச் சக்ராயுதங்கள்- கிழக்கு -புண்டர ஸ்தானம் நெற்றி –

மறையதனால் ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –வேதாந்தார்த்த நிச்சயத்தால் பேர் அருளானனே பரன் என்று தேறி
அவனிடம் அன்பு மிகுதியாகப் பெற்ற ப்ரஹ்மாவினுடைய யாக வேதியிலே திரு அவதரித்த அதிசய சேஷ்டிதங்களை யுடைய பேர் அருளாளன்
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் -கேசவன் என்னும் திரு நாமத்தை யுடையனாய் கிழக்குத் திசையிலும் பாகவதர்கள் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும்–பிரகாசமுள்ள திருச் சக்ராயுதங்கள் நான்குடன் சிவந்த மாற்று உயர்ந்த பொன்னினால் அமைந்த
மலை போல் நிலை பெற்று சிறப்பு மிகுந்து என்னைக் கெட்டுப் போகாமல் ரஷித்து அருளுகிறார் –

————————————–

நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–2-ஸ்ரீ நாராயணன் -நீல நிறம் -நான்கு திவ்ய சங்காயுதங்கள் -மேற்கு -புண்ட்ர ஸ்தானம் வயிறு –

நாரணனாய் நல் வலம் பூரி நாளும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–நாராயணன் –ஸ்ரீ ஹஸ்த கிரியிலே குளிர்ந்த மேகம் போலே நிற்கின்ற அதிசய சேஷ்டிதங்களையுடைய பேர் அருளாளன்
நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும் -நாராயணனாய் இருந்து சிறந்த வலம் புரிச் சங்கங்கள் நான்கையும் மகிழ்ந்து திரு க் கையில் ஏந்தியும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும் -நிலத்தில் சஞ்சரிக்கும் அழகிய மேகம் என்னும்படியாகவும் வயிற்றிலும் மேற்குத் திசையிலும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும் -வேதமாகிய சாஸ்திரத்தைப் பிரவர்த்திப்பித்து கிருபையால்
அடியேனை ரஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்கிறான் –

————————————————————-

மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே –3-ஸ்ரீ மாதவன் –இந்த்ர நீல நிறம் -நான்கு திவ்ய கதைகள் –ஊர்த்வ திசை -புண்ட்ர ஸ்தானம் -மார்பு —

தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே -பாண்டவர்களுக்குத் தூதனாயும் அனைவருக்கும் ஸ்வாமியாயும் உள்ள அநாதியான
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள தேஜஸ்ஸாகிய பேர் அருளாளன்
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும் -மாதவன் என்கிற திரு நாமத்தையும் -வலிய திவ்ய கதை நான்கையும் -இந்த்ர நீல ரத்னத்தின் நிறத்தையும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப் -சாஸ்திரங்களில் கூறும் முறைப்படி தரித்து -மார்பிலும் மேல் நோக்கும் திசையிலும் இருந்து
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும் -அடியேன் இடம் அன்பினால் என் மனசில் தாமரை மலரில் விளங்கும் பிராட்டியுடன் பிரவேசித்து ரஷித்து அருள்கிறான் –

——————————————-

கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே -4-ஸ்ரீ கோவிந்தன் –சந்த்ரநிறம் -நான்கு திவ்ய வில்கள்௦புன்ற ஸ்தானம் உட் கழுத்து –

பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே –கமலத்தில் அவதரித்த ப்ரஹ்மா சேவித்து அனுபவிக்கும் படி
ஸ்ரீ ஹஸ்த மஹா கிரியின் மேல் நிலை பெற்று நின்றவனுமான புண்ய ஸ்வரூபனான பேர் அருளாளன்
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை -கோவிந்தனாகவும் நிறத்தில் எப்பொழுதும் குளிர்ந்த சந்த்ரனாகவும் இருந்து துஷ்டர்களை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று -போக்குகின்ற நான்கு திவ்ய விற்களுடன் தெற்குத் திசையிலும் கழுத்தின் உட் புறத்திலும் நிலை பெற்று நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்–பொருந்திய சிறந்த கருணையால் பாபங்களை போக்கி அடியேனை அடிமையும் கொண்டு அருள்கிறான் –

———————————————————-

விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -5-
ஸ்ரீ விஷ்ணு -தாமரைத் தாதுவின் பொன்நிறம்–நான்கு திவ்ய கலப்பைகள் -வடக்கு திசை -புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் வலப் புறம் –

கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியின்
மேலே எழுந்து அருளி யுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேர் அருளாளன்
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று –விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும்நீங்காது தங்கி
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த் -தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும் –கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான் –

——————————————————————-

மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே -6-
ஸ்ரீ மது ஸூ தனன் -தாமரை நிறம் –நான்கு திவ்ய உலக்கைகள் –தென் கிழக்கு –புண்ட்ர ஸ்தானம் –வலது புஜம் —

மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –தேன் நிறைந்த இளம் சோலை சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்திகிரியில்
எழுந்து அருளியுள்ள வர்ஷா கால மேகம் போன்ற பேர் அருளாளன்
மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில் -மது ஸூ தனனாக இருந்து எனது வலது புஜமும் தேன் கிழக்கும் ஆகிய இந்த ஸ்தானங்களில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய் -ஸ்திரமாய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பிராட்டி நித்ய வாசம் செய்கின்ற தாமரையின் நிறம் யுடையவனாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால் -திவ்ய உலக்கைகள் நான்கினால் என்னுடைய அநாதியான பெரிய கர்மங்களை ஒழித்து அருள்கிறான் –

————————————————

திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவனே -7-
ஸ்ரீ திரிவிக்ரமன் –அக்னி நிறம் -நான்கு திவ்ய வாள் –தென் மேற்கு திசை -புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் வலப்புறம் –

மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் இறை –ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது பொருந்தி வேண்டிய வரத்தைக் கொடுத்து அருள்கின்ற சக்கரவர்தியாகிய பேர் அருளாளன்
திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்-உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி -ஸ்ரீ திரிவிக்ரமனாய் இருந்து ஜ்வலிக்கின்ற அக்னி போன்ற நிறம் உடையவனாய் –
திருக் கைகளிலே பிரகாசம் பொருந்திய திரு வாள்கள் நான்கையும் உருவித் தாங்கி
வலக் கழுத்தும் -செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் -கழுத்தின் வலப் புறத்திலும் போரில் வலிமையைக் காட்டுகின்ற
ராக்ஷஸர்களுடைய திசையாகிய நைருதி-தென் மேற்கு திக்கிலும் சிறந்து நின்று ரஷித்து அருள்கிறான் –

—————————————

வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே -8-
ஸ்ரீ வாமனன் –நான்கு திவ்ய வஜ்ரம் –வட மேற்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –

நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –சரஸ்வதி உடன் பொருந்திய ப்ரஹ்மாவின் யாக வேதியில் திரு அவதரித்த நம் சர்வேஸ்வரனான பேர் அருளாளன்
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும் –வாமனனாய் என் இட வயிற்றையும் வாயுவின் திசையான வட மேற்கையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச் –ஸ்தானமாகக் கொண்டு உதித்த ஸூர்யன் யுடைய நிறமுடையவனாய்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும் –அடியார்களை சம்சார சமுத்திரத்தில் இருந்து கரை சேர்த்து க்ஷேமத்தைக் கொடுக்கும்
ஓடமாக இருந்து சிவந்த திவ்ய வஜ்ராயுதம் நான்கினோடு பிரகாசித்து அருள்கிறான் –

———————————-

சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே-9-
ஸ்ரீ தரன் –வெண் தாமரை நிறம் –நான்கு திவ்ய பட்டாக் கத்தி -வட கிழக்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -இடது புஜம் –

ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே—எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுதமாய் உள்ளவனும்
ஸ்ரீ ஹஸ்தி மஹா கிரியின் மேல் நிலை பெற்றவனும் அடியவர்களைக் காய் விடாதவனுமான பேர் அருளாளன்
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் –சிறப்பு நிறைந்த ஸ்ரீ தரனாய் சிவனுடைய திசையாகிய வட கிழக்கையும் இடது புஜத்தையும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப் -அழகு பொருந்திய ஸ்தானமாகக் கொண்டு பிரகாசிக்கின்ற வெண்மையான தாமரையின் நிறமுடையவனாய்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும் -பருத்த பட்டயம் என்னும் ஒருவகையான திவ்ய வாள்கள் நான்கினாலும் என் பயத்தைப் போக்கி அருள்கிறான் –

———————————————

என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -10-
ஸ்ரீ ஹ்ருஷீ கேசன் –மின்னல் நிறம் -நான்கு திவ்ய சம்மட்டி –கீழ்ப் பாகம் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் இடப் புறம் —

பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் -பொன்னையும் அகில் கட்டையையும் கொண்டு
அலை மோதுகின்ற ஜலத்தை யுடைய வேகவதி நதியின் வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -புண்ய ராஜன் மகிழ்ந்து வணங்குகின்ற தேனம் பாக்கத்தில் உள்ள
வைதிகப் பெரியோர்களின் ஒரே தெய்வமாகிய பேர் அருளாளன்
பெருமாள் கோயிலுக்கு மிகச் சமீபத்தில் தேனம் பாக்கம் என்னும் ஸ்ரீ கிராமம் –இத்தை ஸ்ரீ காஞ்சீ புரத்து ஒரு வீதியாகவும் கொள்ளலாம் –
அங்கு ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரங்களில் கரைகண்ட பரம பாகவதர்கள் எழுந்து அருளி இருந்து பேர் அருளாளனை குல தெய்வமாகக் கொண்டு
வழுவாது திரு வாராதானம் செய்து வந்தனர்
அவர்களுடைய ஆத்மகுணங்களைக் கண்ட ஆஸ்திக சிகாமணியான பாண்டிய ராஜன் ஒருவன் அவர்களுக்கு ஸம்மானம் அளித்து
அவர்களை வணங்கி வந்தான் என்னும் வரலாறு கர்ண பரம்பரையாக அறியக் கிடக்கின்றது –
மேலும் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டில் அடங்கியதாகச் சில காலம் இருந்ததாகவும் அப்பொழுது பாண்டிய ராஜன் பேர் அருளாளன் யுடைய அருளாலே
பெருமை பெற்று வாழ்ந்து வந்தது பற்றியும் அவ்வரசன் பேர் அருளாளனைத் தொழுது வந்ததாகவும் சிலா சாசனம் உளது என்றும் சிலர் பணிப்பர்
என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் -ஹிருஷீகேசன் என்னும் என் ஸ்வாமியாய் இருந்து கீழ்ப் பாகமும் கழுத்தின் இடப் புறமும்
ஆகிய இந்த இடங்களில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் -நன்கு நிலை பெற்ற மின்னைப் போன்ற நிறமுடையவனாய் இருந்து
நான்கு திவ்ய சம்மட்டிகளை திவ்ய ஆயுதமாகக் கொண்டு ரஷித்து அருள்கிறான் –

————————————————

எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே -11-
ஸ்ரீ பத்ம நாபன் –ஸூர்யன் நிறம் –திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் -ஸ்தானம் -மனாஸ் -புண்ட்ர ஸ்தானம் -பின்புறம்

செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே –சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீ ஹதிகிரியில் உள்ள மஹா வீரனான பேர் அருளாளன்
எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று -எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் -உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் -அழகிய சிவந்த திருக்கைகளில்
திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான் –

——————————

தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே-12-
ஸ்ரீ தாமோதரன் –உதிக்கின்ற ஸூர்யன் நிறம் -நான்கு திவ்ய பாசங்கள் -சரீரத்தின் உட் புறமும் வெளிப் புறமும் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் பின் புறம்

மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே–பெரிய அஞ்ஞானத்தைப் போக்குகின்ற திரு மதிள்கள் சூழ்ந்த
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள மரகத ரத்னம் போன்ற பேர் அருளாளன்
தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு -என் தாமோதரனாகி நான்கு திவ்ய பாசங்களை திருக் கைகளிலே ஏந்திக் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும் -இந்தப் பெருமை மற்றவருக்கு உண்டோ என்னும் படி சரீரத்தின் உள்ளேயும் வெளியிலும் கழுத்தின் பின் புறத்தும் நின்று
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும் -தான் ஓர் உதிக்கின்ற ஸூர்யன் என்னும்படி நிறமுடையவனாய் இருந்து
எனது மனத்துள் இருக்கும் அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருள்கிறான் –

————————————–

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -13-

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் -சாரம் இல்லாமல் ஆடம்பரத்தோடு கத்திக் கொண்டே திரிகின்ற
பயன் அற்ற வித்யைகளை வாதத்தில் ஜெயிக்க கூடிய உறுதியை யுடைய மனசில்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு –பக்திக்குத் தக்க சாதனமான கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும் ஊன்றி அனுசந்தித்து பரிச்சயம் செய்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும் -மோக்ஷம் அளிக்க காரணமாகும் என்னும்படி அருளிச் செய்த இந்த பன்னிரண்டு பாசுரங்களும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -எங்கள் பேர் அருளாளரை ஆஸ்ரயித்த பாகவதர்களுக்கே பரம போக்யமாய் இன்பம் கொடுப்பனவாகும் –

—————-

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….கிரேசி மோகன்
—————————————————————————————————————

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….

கேசவன்
——————

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்  கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும் பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
ஹரிஹரி கோகுலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

நாராயணன்
————————–
“சரிய பிதாம்பரம் நழுவ கதாயுதம் பிளிறும் கஜேந்திரன் குரல் கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம் எறிய சுதர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள் தபோவனம் பறையும் கதாம்ருத காரணனே
முரளி மனோகர கமல பதாம் புய அனந்த”நாராயண” பூரணனே”….(2)
ஹரிஹரி கோகுல பாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மாதவன்
——————

“அவையென இவையென அளவிடல் தவறென கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் கரணம் செய் காக்கும் ”மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

கோவிந்தன்
————————

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும் நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில் வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

விஷ்ணு
—————-

“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும் தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும் சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

திரிவிக்ரமன்
—————————-

“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம் உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்”திரி விக்ரம” வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம் பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

வாமனன்
——————

“சிறைவசு தேவகி கருவச மாகிட இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன் தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும் குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

சீதரன்
————

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள் திருமகள் பூணிடும் ”சீதரனே”
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும் சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும் விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ரிஷிகேசன்
——————–
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள் அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும் ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதுமநாபன்
————————
“கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை தசமுக பூஷனை இம்சைதரும்
இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன் துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
குறைசிசு பாலனை மதுகைட பாணனை வதம்புரி மாலனை நம்பிடுவாய்
பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

தாமோதரன்
————————-

“கரமொடு களவாய் பிடிபட உனதாய் உரலிட இழு”தா மோதரனே”
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர் மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மதுசூதனன்
———————

“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை முலையுறி மா”மது சூதனனே”
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…

———————-

திருவாய்மொழி நாராயணனுக்கே

பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.

வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.  ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண  நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.

முதலில் நாராயணன்

திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.

முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார்.   ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும்.  ‘வண்புகழ் நாரணன்’  (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.

இடையில் நாராயணன்

திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம்  ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும்   குறிக்கும்.

கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும்,  திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் நாராயணன்

‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.

மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.

——————

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களுக்கும்‌ இப் பன்‌னிரண்டு திரு நாமங்களும் ௮நுஸந்திக்கப்படுகின்‌றன,
புருஷோத்தமனுடைய அம்ஸ சாரத்தைப்‌ பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும்‌ இப் பன்னிரு நாமங்களே கூட்டப்‌ பெற்றிருக்கின்‌றன.
எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ உள்ளனவென்பது
ஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகின்றது.
இவ்வைந்து அவஸ்தைகளும்‌ இப் பன்னிரு நாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ படுகின்‌ றன.
மாலரி கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே “
கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌தன்‌ ” என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌
ஸ்ரீவைகுண்ட நாதனாய் எழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்தையைக்‌ குறிக்கின்‌றன வென்‌பது விளங்குகிறது,

“விஷ்ணு” எனும்‌ அடுத்த திரு நாமம்‌ அநிருத்த நாரரயணனாகிய வியூஹத்தைக் குறிப்பதன்‌ மூலம்‌
மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகிறது.
மது ஸூதன்ன்‌’ என்பதும்‌ அந்த வியூஹ மூர்த்தியின்‌ சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது.
“திரிவிக்ரமன்‌. வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ திரு நாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ சொல்லுகின்‌றன.
ஸ்ரீதரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ் விபவ அவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே
அவதரிக்‌ கிறானென்று காட்டுகிறது.
“ஹ்ருஷீகேசன்‌’ என்னும்‌ திரு நாமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ இருப்பை உரைக்கிறது.
‘ஸ்ரீதரன்‌” , எல்லாத்‌ திரு நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்ய ஷேத்ரங்களில்‌ எழுந்து யிருக்கும்‌
ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சா மூர்த்திகளையும்‌ உணர்த்துகின்‌ றன.
“பத்மாபன்‌’ என்று இவ் வவதாரங்‌களுக்கெல்லாம்‌ மூல அவதாரமான க்ஷீராப்தி நாதனைப்‌ பேசுகிறது. ,
ஆக, இப்படி ஐந்து அவஸ்தைகளும்‌ இந் நாமங்களில்‌ அநுபவிக்கப்படுகின்‌றன.

————

இனி இத் திருநாமங்களின்‌ அர்த்‌ தங்களைச்‌ சிந்திப்போம்‌.
(கேசவன்‌ )
ககாரத்தினால்‌ சொல்லப்‌ படும்‌ பிரமனையும்‌,
“ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனையும்‌ உண்டாக்கினவன்‌,
“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈஸ்வர அஹம் ஸர்வ தே,ஹிநாம்‌ | .
ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூதெள தஸ்மாத்‌ கேஸவ நாமவார்‌ ||”
[‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப் பெயர்‌;
தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌;
ப்ரஹ்ம ருத்ரர்களாகிய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌றும்‌ பிறந்‌தோம்‌;
ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌.
என்‌று ஹரிவம்சத்தில்‌ பேச நின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.
-‘நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। நாராயணாத்‌, ருத்ரோ ஜாயதே|”
நாராயணனிடமிருந்து பிரமன்‌ பிறக்கிறான்‌:
நாராயணனிடமிருந்து ருத்திரன்‌ உண்டாகிறான்‌.
என்பது முதலான வேதவாக்கியங்களையும்‌.
மற்ற ப்ரமாணங்களையும்‌,
“தெய்வ நான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (–முதலிய ஆழ்வார்‌ அருளிச்செயல்களையும்‌
இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது.
(கேசவன்‌ )
பிரமனையும்‌ சிவனையும்‌ தன் வசத்தில்‌ வைத்திருப்‌பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
‘நாராயணாத்‌ ப்ரஜா யந்தே।| நாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।’்‌
பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து உண்டாகிறார்கள்‌:
நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌:
நாராயணனிடமே லயமடைரார்கள்‌. என்று சொல்லிற்று

சுடர்மிகு சுருதியும்‌,
“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”’ _என்‌றும்‌,
“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப் பாதங்கள்‌ சூடி
கற்றைத்‌ துழாய்‌ முடிக் கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌
ஒற்றைப் பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
“விண்ணோர் தலைவா கேசவா” என்று நம்மாழ்வார்‌ இத் திரு நாமத்துக்குப்‌ பொருள்ள உரைத்தார்‌,
“கேசவா புருடோத்தமா” என்றார்‌ பெரியாழ்‌வாரும்‌.
உத்க்ருஷ்ட புருஷர்களான ப்ரஹ்ம ருத்ரர்களைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி.
(கேசவன்‌ )
சோதி மயமான ஸூர்யன்‌ முதலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச ஸப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன,
அவைகளைத்‌ தன்‌ வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: |
ஸர்வஜ்ஞா: கேஸவம்‌ தஸ்மாந்‌ மம ஹார்த்‌,விஜஸத்தமா:।’”
உலகில்‌ பிரகாசிக்கும்‌ என்‌னுடைய கிரணங்கள்‌ கேசமெனப்‌படுகின்‌ றன.
ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மண ஸ்ரேஷ்‌டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌று சொல்லுகிறார்கள்‌.
என்று மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்டது .
கோவிந்த நாம வியாக்கி யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான ” தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸந்திப்பது.

“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ‘ என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை உணர்த்தினர்‌.
(கேசவன்‌ )
“கேயாாத்‌, வோ அந்யதரஸ்யாம்‌” பூ மநிந்த; ப,வந்தி மதுபளத,ய: ‘ என்கிற வியாகரண விதிகளின் படி
கேயாப்தத்தின்மேல்‌ வ:’ என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து “ப்ரஸஸ்த கேஸ வான்‌’
( புகழ்ப் பெற்ற கேசங்களை உடையவன் ) என்னும்‌ பொருளைத் தருகிறது.
அதாவது: “ய ஏஷ அந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்ய ஸ்ம்ருர்‌ ஹிரண்ய கேஸ ;”
ஸூர்யனுக்கு நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ விளங்குகிறானோ,
அவன்‌ ஸூவர்ணம்‌ போன்று அழகான மீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌.
என்று வேதத்தாலும்‌ புகழப் பெற்ற மயிர் முடிகளை உடைய வன்‌ என்று பொருள்‌.
“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்‌
உள்கொண்ட நீல நன்னூல்‌ தழைகொல்‌? அன்று
மாயன்குழல்‌ விள்கின்‌ற பூ்ம் தண் துழாய்‌ விரைகால்
வந்தென்னுயிரைக்‌ கொள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறா நிற்றீரே.” என்றும்‌.
“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ‘ என்றும்‌,
“சுருண்‌ டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ –
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ”’ என்றும்‌,
“குழலழகர்‌” என்றும்‌ ஆழ்வார்கள்‌ இக் கேச லெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌.
(கேசவன்‌ )
இத்தால்‌ சிக்குத்தலையரான இதர தெய்வங்களிற்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி சொல்லப்படுகிறது.”
“பிங்கள ஜடோ தே,வ:’ என்றும்‌,
“ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று செந்தீ ” என்றும்‌ சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ரர்கள்‌ மயிர் போலே யன்‌ றிக்கே,
* நீல குஞ்சத மூர்த்‌ த,ஜம்‌ *,
* குழலிருண்டு சுருண்டு ‘ என்கிறபடியே
கண்டவர்‌கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ஸ்யாமளமா யிருக்கை”என்‌று
மை வண்ண நறுங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ கலி த்‌வம்ஸநாசார்யர்‌ அருளிச் செய்தது
இங்கு அநுஸந்திக்கத்‌ தக்கது.

“நரகே பஸ்யமாநஸ்து யமேந பரிபாவஷித: |
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேஸவ: க்லேஸ நாஸந : ||”
நரகத்தில்‌ வேதனையை அனுபவிக்கும்‌ ஒரு மனிதன்‌
“அடே! உன்னால்‌ கிலேசங்களை யெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ அர்ச்சிக்கப்படவில்லை?” என்‌று
யமனால்‌ கேட்கப் பட்டான்‌. –என்று புராணம்‌ சொல்லிற்று.
கேஸவ: க்லேஸமநாமரந: ‘ என்றதின்‌ தாத்பர்யத்தை.
“தாப த்ரயாதுரரோடு விரஹதாபதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படி
காண்‌ திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி;
*கேமரவ: க்லேஸ நாஸநா சமா:”? என்னக் கடவதிறே ;.
த்ருஷ்டி மாத்ர ப்ரியமாயிருக்கை யன்‌றிக்கே நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படி காண்‌
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்து இருக்கும்படி ” என்று
பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை மை வண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ அருளிச் செய்தார்‌.

(கேசவன்‌ )
கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ கொன்‌ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌ த்வயைவ துஷ்டாத்மா ஹத; கேஸவ ஐநார்த்தந ; |
தஸ்மாத்‌ கேஸவ நாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ கமிஷ்யஸி।”’
ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்ல வேணுமென்னும்‌ ) கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி
உன்னாலேயே கொல்லப்‌ பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌தால்‌ கீர்த்தி பெறுவாய்‌.
என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது.
கேஸவம்‌ கேஸி ஹந்தாரம்‌” என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட து. –
கேஸவ: கேஸி ஹந்தா ”’ என்று இப் பொருள்‌ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்டது
“கண்ணன்‌ கேசவன்‌” என்றும்‌, `
” நாராயணன்‌ மூர்த்தி கேசவன்‌” என்றும்‌
ஆழ்வார்களாலும்‌ இவ் வர்த்தம்‌ அறு ஸந்திக்கப்பட்டது.
இப்படிப்‌ பொருள் கொள்ளும் போது எம்பெருமானுடைய விரோதி , நிரஸன ஸீலத்வம்‌ தோற்றுகிறது.

கண்ணன்‌ கேசவன்‌ நம்பி’ :
கேசவ நம்பீ உன்னைக்‌ காது குத்த”
“கேசவ நம்பியைக்‌ கால் பிடிப்பாள்‌ என்னுமிப்‌ பேறு எனக்கு அருள் கண்டாய்‌” என்று
இத் திருநாமத்தின்‌ குண பூர்த்தியை அனுஸந்தித்தார்கள்‌.
“கேஸவ ; க்லேஸ நாஸநா -மஹா லோகே த்‌வை ரூப்யேண ஸ்திதெள ஸ்தித: |
மதுராக்‌,யே மஹாஷேத்ரே வாராணஸ்யாமபி த்‌விஜ ॥”’
விப்ரரே! கிலேசங்களைப் போக்கடிக்கும்‌ குழலழகையுடைய பெருமான்‌.
மதுரை என்னும்‌ மஹா ஷேத்திரத்திலும்‌
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌
பூமியில்‌ கோயில் கொண்‌ டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக் காட்டி.
பட்டர்‌ இத் திருநாமத்தை அர்ச்சாவதார பரமாக வியாக்கியானம்‌ செய்தருளினார்‌.
இப்படிப்‌ பர விபவ அர்ச்சாவதாரங்‌களைக் குறிக்கக்‌ கூடியதே யாகிலும்‌
கேசவன்‌ நாரணன்‌ சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?’ என்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்கையால்‌.
இத் திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை யைக் குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது.

——————

கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ பிரம ருத்திரர்‌ களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து.
இப்படிப்‌ பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ.
‘நாராயணன்‌’ என்று வேதாந்த ஸித்தமான அஸாதாரணமான திருநாமத்தைப்‌ படிக்கிறது.

இத் திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப் போந்‌ தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌.
இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத் திரு நாமம்‌ பொருந்தா தென்பதைக்‌ காட்டுகிறது.
இத் திருநாமத்தின்‌ அர்த்தங்‌களோ ஆயிரம்‌ நாவுடடைத்த ஆதிசேஷனாலும்‌ அளவிட்டுச்‌ சொல்லமுடியாதவை.
நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும்‌ அறியலாம்‌;
நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது.
பரம காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞ ஸார்வ பெனமர்களுமான நம்‌ ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌
இத் திருநாமத்தின்‌ பொருளைப்‌ பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌.
அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ துணையாகக் கொண்டு நாமும்‌ இத் திரு நாமத்தின்‌ பொருட்‌ பெருமையை
இயன்‌ற வரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌.

“ ரிங்‌-க்ஷயே ”’ என்று தாதுவாகையாலே. ‘ர’ என்னும்‌ எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. ந’ என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. *“நராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே “- நர என்‌னும்‌ பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ குறிக்கிறது. ‘நாரா:’ என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட நித்ய வஸ்‌துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்ய வஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ எவை என்‌பதைப்‌ பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, யாத்ம குணங்களும்‌, குண ப்ரகாஸ்கமான திவ்யமங்கள விக்ரஹங்களும்‌. விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான சங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌, அச் சேர்‌த்தியிலே அடிமை செய்கிற அநந்‌த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரி ஸங்க,மும்‌, அவர்களோபாதி போய்‌ அடிமை செய்கிற ( அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ பரிகரமான சத்ர சாமராதி,பரிச்‌ச- அவ்வடிமைக்கு வர்த்த,கமாய்‌ பஞ்சோபனிஷந் மயமான  குண த்ரயாத்மிகையான மூலப்‌ரக்ருதியும்‌, புருஷ சமஷ்டியும்‌, அஹோ ராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும்‌. தத் கார்யமான அண்டங்‌களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதுர் வித பூதங்களும் .

பஞ்சோபனிஷஹ மயமாகையாலே பரமபதமும்‌ மஹாத்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹுத்மகையாயிருக்கும்‌ அஹோராத்‌ ராதி,விபாகங்கள்‌ காலமும்‌ ஸமூஹாத்மகமாயிருக்கும்‌” என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ பரகக அருளிச்செய்தார்‌.

அடுத்தபடியாகவுள்ள அயந சப்தம்‌ பல பொருள்களை உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ‘ என்பதும்‌ ஒன்று.  அயநம்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:” [நித்ய பதரர்த்த ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. அவன்‌ நாராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ ‘. என்று சொல்லப்பட்டதாகிறது.

“சேதநாசேதநம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே |
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயணஸ்து ஸ: ॥”
விஷ்ணுவைக் காட்டிலும் வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா சேதனங்களும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌றன.
அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளதோ அப்பரமாத்மா நாராயணன் எனப்படுகிறான்‌.–என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இந்த பஹுவ்ரீஹி ஸமாஸப்‌ பொருளில்‌ அந்தர் வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌
தச்புருஷ ஸமாஸப்‌ பொருளில்‌ பஹிர் வ்யாப்தியு
உணர்த்‌தப் படுகின்றன என்று ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌.

“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா |
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: |” [
இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்பனவுமான எல்லா வஸ்துக்‌ களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து நிற்கிறான்‌–என்று பண்டை மறையிலும்‌,
“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ‘ என்று தமிழ்‌ வேதத்திலும்‌
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட.து.
இப்பொருளில்‌ எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது.
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:”
நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌கிறானோ
அவன்‌ நாராயணன்‌ – என்ற தத்புருஜ ஸமாஸத்தின்‌ படியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இத்தால்‌ எல்லா வஸ்துக்‌ களையும்‌ நாராயணன்‌ தரிக்கிறான்‌ என்று சொல்லப்படுகிறது, ^”
நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: ” [63-62]
நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ நித்யவஸ்‌துஸமுஹங்‌ களுக்கு இருப்பிடமாயிருப்பதால்‌ நரராபணனெனப்படு கிறான்‌-
என்று இவ்வர்த்தம்‌ பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உரைக்கப்பட்ட து.

நார சப்சத்துக்கு மற்றொரு வகையாகவும்‌ பொருளுரைப்பதுண்டு.
நார:’ என்று ஸ்வரூபத்திலும்‌ ஸ்வபாவத்திலும்‌ சிறிதும்‌ விகாரம் அற்றவனான பரமபுருஷன்‌ சொல்லப்படுகிறான்‌.
*நராத்‌ ஜாதாநி ‘ என்கிறப்டியே புருஷோத்தமனிடமிருந்‌து உண்டானவை நாரங்க ளெனப்படுகின்‌றன.
அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும்‌, அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும்‌
நாராயணனெனப்படுகிறான்‌ என்று
முன் போலவே இருவகையாகவும்‌ பொருள்‌. ““நராஜ்ஜாதாநி தத்த்வாதி நாராணீதி ததோ விது, |
தாந்யேவ சாயநம்‌ தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: |!”
நரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென்‌ று அறிகின்றார்கள்‌.
அவைகளையே இருப்பிடமா யுடையவனாயிருப்பதால்‌ அவன் நாராயணனெனப்படுகிறான்‌–
என்று இவ்வர்த்தம்‌ ஹரி வம்சத்திலும்‌ சொல்லப்பட்டது,
இவ்வர்‌த்தத்தை “யாவையும்‌ யாவரும்‌ தானாம்‌ அமைவுடை நாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளி செய்தார்‌.

° நார பதத்தில்‌ சொல்லப்பட்ட அநந்தமான வஸ்த்துக்களில்‌ சிலவற்றைச்‌ சிற்சில விடங்களில் எடுத்து ஆழ்வார்கள்‌ நாராயண சப்தத்துக்கு வியாக்யானம்‌ செய்து அருளி இருக்‌கிறார்கள்‌.
நார சப்த்த்‌துக்கு அநந்த கல்யாண குணங்களையும்‌ பொருளாகக் கொண்டு
“: ஈறில வண்‌ புகழ்‌ நாரணன்‌ ” என்‌றும்‌
` வாழ் புகழ்‌ நாரணன்‌” என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
நல முடை நாரணன்‌ என்று பெரியாழ்வாரும்‌,
நலந்திகழ்‌ நாரணன்‌” என்று குலசேகராழ்வாரும்‌ செய்தருளினார்கள்‌.

நார சப்தத்‌.துக்கு திவ்ய மங்கள விக்ரஹத்‌தையும்‌ அதன்‌ குணங்களையும்‌ பொருளாகக்‌ கொண்டு.
“ காராயின காளநன்‌ மேனியினன்‌ நாராயணன்‌ ” என்று . நம்மாழ்வாரும்‌.
“‘ கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்மதியம்போல்‌ முகத்தான்‌ நாராயணனே ” என்றும்‌,
` நாற்றத்துழாய்‌ முடி நாராயணன்‌” என்றும்‌ ஆண்டாளும்‌ அருளிச் செய்தனர்‌.

திவ்யா பரணங்களை நார சப்தத்‌தக்குப்‌ பொருளாகக் கொண்டு
“உடையார்ந்த வாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌
புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌
பல்கலன்‌ நடையாவுடைத்‌ திருநாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌.
“லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌” என்று ஆச்சான் பிள்ளையால்‌ அருளிச் செய்யப்பட்
பிராட்டிமார்‌ களை நார சப்தத்‌துக்குப்‌ பொருளாகக்கொண்டு “
செல்வ நாரணன்‌ என்‌று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
விண்ணோர்‌ நாயகன்‌ நாராயணன்‌ ” என்று வேதம்‌ தமிழ் செய்த மாறன்‌
நார சப்தத்துக்கு நித்ய முக்தர்களைப்‌ பொருளாக அருளிச்‌ செய்தார்‌.

நாரசப்தத்துக்குச்‌ சேதனர்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு “`
எண் பெருக்கந்நலத் தொண் பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌ ” என்றும்‌,
“’ எம்பிரான்‌ எம்மான்‌ நாராயணன்‌ ” என்றும்‌ சடகோபனும்‌, =
`” நம்மை யுடையவன்‌ நாராயணன்‌ ” என்றும்‌.
“’ என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும்‌ ஆண்டாளும்‌
நாராயணன்‌ என்னை யாளி ” என்று திருமழிசைப் பிரானும்‌ அருளிச்செய்தனர்‌.

நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும்‌ பொருளாகக்கொண்டு
“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ “என்று நம்மா ழ்வாரும்‌.
” நாயகன்‌ நாரணன்‌” என்று பெரியாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌. .

( நாராயணன்‌ )
நரனாகிற பெருமானால்‌ படைக்கப்பட்ட ஜலத்தை நார சப்தத்திற்குப்‌ பொருளாகக்‌ கொண்டு
அதை இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌,
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: |
தா யத,ஸ்யாயந௩ம்‌ பூர்வம்‌ தேந நாராயண: ஸ்ம்ருத: |”
நரனாகிற ஸர்வேஸ்வரனால்‌ படைக்கப்பட்ட ஜலம்‌ “நாரம்‌ ‘ எனப்படுகிறது.
அது ஆதி காலத்தில்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கையால்‌ இவன் நாராயணனெனப்படுகிறான்‌. ] என்று
மநுஸ்ம்ருதியிலும்‌, விஷ்ணுபுராணத்திலம்‌ உரைக்கப்‌ பட்டது.
இவ்வர்த்தம்‌ “” நடுக்கடலுள்‌ துயின்‌ற நரராயணனே!”’ என்று ஆழ்வராரலும்‌.
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந; ‘”
இவனே பாற்கடலில்‌ பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்‌
என்று புராணத்திலும்‌ பேசப்பட்டது.

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த:ஸ்தி,தோஹம்‌ =, யேரு ஸ்யாந்மே நாம நாராயணேதி”’ [நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுள் நான்‌ வசித்தபடியால்‌ எனக்கு நாராயண னென்னும்‌ நாமம்‌ ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹ புராணத்‌ தில்‌ பகவானாலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது.

(நாரா யணன்‌) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு. ப்ரளய காலத்தில்‌ அவைகளுக்குச்‌ சேருமிடமாயுள்ளவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. = “” ஞாலமுற்றுமுண்டாலிலைத்‌ துயில்‌ நாராயணனுக்கு ” என்று பெரியாழ்வாரும்‌, ** ஞாலமுற்றும்‌ உண்டுமிழ்ந்த நாராயணனே! ” என்றும்‌. “ஞாலமுண்டாய்‌! ஞானமூர்த்தி! நாராயணா!” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ இவ்‌ வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள்‌. இத்தால்‌ ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும்‌ சொல்லப்பட்ட தாயிற்று.

(நாராயணன்‌) * நர’ சப்தத்தினால்‌ அழிவற்ற ஸ்வரூபத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம்‌ ஆத்ம ஸமூஹுத்தைச்‌ சொல்லுகிறது. அயநசப்தம்‌ : இண்‌ க,தெள ‘ : அய-க,தெள ‘ என்னும்‌ தாதுக்கள்‌ ஒன்‌ றிலிருந்து உண்டானதாகையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும்‌, போய்ச் சேரும்‌ வழியான உபாயத்தையும்‌ குறிக்கும்‌

ஆக “நாராயணன்‌ ‘. என்று சேதன வர்க்கத்‌திற்கு
மோக்ஷப்ராப்யமாகவும்‌,
மோக்ஷ  உபாயமாகவும்‌ இருப்பவன்‌ என்று பொருள்‌படு கிறது.
இவ்வர்த்தம்‌ “நாரஸ் த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகீர்த்தித:
க,திராலம்ப;ம்‌ தஸ்ய தேக நாராயண: ஸ்ம்ருத: || ”
நாரமென்‌று சேதனருடைய ஸமூஹம்‌ சொல்லப்‌ படுகிறது.
அச்சேதன சமூகத்துக்கு உபாயமும் உபேயமுமாயும் இருப்பதால்‌ நாராயணனென் று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌.
“நரரோ நராணாம்‌ ஸங்கா தஸ்‌ தஸ்யாஹமயநம்‌ க,தி:।
தேநாஸ்மி முநிபிர்‌ நித்யம்‌ நாராயண இத்ரித: || ”
நரர்களின்‌ கூட்டம்‌ நாரமெனப்படுகிறது.
அதற்கு நான்‌ ப்ராப்யமாகவும்‌. ப்ராபகமாகவும்‌ இருக்கிறேனாகையால்‌ முனிவர்களால்‌
எப்போதும்‌ நான்‌ நாராயணன்‌ என்று சொல்லப்படுகிறேன்‌.] என்றும்‌ ।
“ ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! |
தேஷாமயநபூ,தத்வாந்‌ நாராயண இஹோச்யதே |
தஸ்மாந் நாராயணம்‌ பந்தும்‌ மாதரம்‌ பிதரம்‌ குரும்‌ |
நிவாஸம்‌ சரணம்‌ சாஹார்‌ வேத,வேதராந்த பாரகத : |
நார சப்தத்தனால்‌ ஜீவ ஸமூஹம்‌ பெரியோர்களால்‌ சொல்லப்‌ படுகிறது.
அவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால்‌ நாராயணன்‌ என இங்கு சொல்லப்படுகிறான்‌ .
ஆகையால்‌ நாராயணனை
பந்து வாகவும்‌.
தாயாகவும்‌.
தந்தை யாகவும்‌.
ஆச்சார்யனாகவும்
இருப்பிடமாகவும்
வேத வேதார்தங்களைக்‌ கரை கண்டவர்கள்‌ சொல்லு கிறார்கள்‌–
என்றும்‌ சாஸ்திரங்களில்‌ இவ்வர்த்தம்‌ வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது.

“ நாராயணனே நமக்கே பறை தருவான்‌ ” என்‌று ஆண்டாளும்‌,
‘வீடாக்கும்‌ மெய்ப்‌ பொருள் தான்‌……நாராயணன்‌ ” என்றும்‌,
நாராயணன்‌ என்னை யாளி நரகத்தில்‌ சேராமல்‌ காக்கும்‌ திருமால்‌ தன்‌ ”’ என்‌றும்‌ திருமழிசைப்‌ பிரானும்‌
இவ் வர்‌த்தத்தை நாராயண சப்தத்தக்குப்‌ பொருளாக அநுஸந்தித்தார்கள்‌.
“நாரணம்‌ கதிர்‌ நாராயண:”’
நாராயணனே மோக்ஷத்தில்‌ அடையப்‌ படுமவனும்‌, அடைவதற்கு வழியுமாவான்‌.
என்று வேதமும்‌ இவ்வர்ததத்தை உத்கோஷித்தது. (நாராயணன்‌)
° நர: என்று அழிவற்றவனான எம்பெருமானையும்‌ குறிக்கும்‌ என்று முன்னரே சொல்லப்பட்ட து.
“ ஜந்ஹார்‌ நாராயணோ நர: ” என்று அவனுடைய நாமமாக வும்‌ படிக்கப்பட்ட து.
`” நரஸ்யே இமே- நாரா: ” (சேர்ந்தவர்கள்‌ நாரங்கள்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படி
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌ [ஞானி எனக்கும்‌ ஆத்மாவாயிருப்பவனென்று என்‌ ஸித்தாந்தம்‌]
என்று எம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச்‌ சொல்லுகிறது.
“நாரா அயநம்‌ யஸ்ய ஸ; ” என்று தன்னடியார்களையே தனக்குப்‌ பரம ப்ராப்யமாகக்‌ கொண்‌டு இருக்குமவன்‌ என்‌று பொருள்‌ படுகிறது. –
‘ நச்சுவார்‌ முன்‌ நிற்கும்‌ நாராயணன்‌ “என்றும்‌.
நண்ணித் தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌;
* அற்புதன்‌ நாராயணன்‌ …நிற்பது மேவி இருப்பதென்‌ நெஞ்சகம்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்‌.
“நானுன்னை யன்‌றியிலேன்‌ கண்டாய்‌ நாரணனே! ” என்று:
மோக்ஷ உபாயத்வம்‌.
ஸர்வ வ்யாபகத்வம்‌,
ஸர்வ தரரகத்வம்‌ முதலிய குணங்களை
நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்தருளிய திருமழிசையாழ்வார்‌.
நீ என்னை யன்றி இலை’” என்று பக்தரைத் தாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌,

“நண்ணித்‌ தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா” என்னுமிடத்துக்கு வியாக்கயானம்‌ செய்தருளிய
பரம ரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை
“* இவருடைய நாராயண சப்தார்த்‌ தம்‌ இப்படிப் போலே காணும்‌ இருப்பது ” என்று அருளிச்‌ செய்தார்‌
( நாராயணன்‌ )
நரர்கள்‌ என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச்‌ சொல்லுகிறது.
நாரம்‌ என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச்‌ சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு எழுந்தருளியிருக்கையாலே *
நாராயணன்‌ ‘ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ ” என்றும்‌,
“ தென்திரை சூழ் திருப்பேர்க்‌ கிடந்த திரு நாரணா!” என்றும்‌ பெரியாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌.

“ நர ஸம்பந்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: |
நயத்யலெவிஜ்ஞா௩ம்‌ நாமாயத்யகிலம்‌ தம: ॥
ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்‌ |
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா சேதநாத்மகா: ||
நபிதவ்யதயா நாரா தரார்யபோஷ்யதயா ததர |
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ்‌ ததா ॥
அயதே நிதிலாக்‌ நாராந்‌ வ்யாப்நோதி க்ரியயா ததா |
நாராம்சாப்யாயநம்‌ தஸ்ய தைஸ்தத்‌,பாவநிரூபணாத்‌ ॥
நாராணாமயநம்‌ வாஸஸ்‌ தே ச தஸ்யாயநம்‌ ஸதா |
பரமா ச க,திஸ்தேஷாம்‌ நாராணாமாத்மநாம்‌ ஸதா |
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ச ।
அதோ நாராயணோ நாம ஹேதுபிர்‌ தர்மமித: பர: ॥ ”’
நரனுடன்‌ ஸம்பந்தம் பெற்றவைகள்‌ நாரங்கள்‌.
புருஷோத்‌ தமனே நரன் எனப்படுகிறான்‌.
தன்னைப் பற்றிய எல்லா அறிவையும்‌ அடைவிக்கிறான் ஆகையா லும்‌,
எல்லா இருளையும்‌ போக்கடிக்கறானாகையா லும்‌.
எங்கும்‌ விகாரமற்றவனாயிருப்ப தாலும்‌,
ஸர்வேஸ்வரனான அப்பரமபுருஷன்‌ நரனெனட்படுகிறான்‌.
நரனாகிய அப்பெருமானுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்றிருக்கும்‌ எல்லாச்‌ சேதநாசேதநங்களும்‌,அவனால்‌
ஆளப்படுகையா லும்‌,
தரிக்கப்படுகையாலும்‌.
போஷிக்கப்படுகையா லும்‌,
நியமிக்‌ கப்படுகையா லும்‌,
ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்‌.
வியாபிக்கப்‌ படுவதாலும்‌.
தாங்கப்படுகையா லும்‌
நாரங்களாகின்‌ றன.
எல்லா நாரங்களையும்‌ (ஸ்வரூபத்தால்‌) அடைவதாலும்‌,
முற்கூறிய செய்கைகளால்‌ வியாபிப்பதாலும்‌.
அவைகளை யிட்டே அவனை நிரூபிக்க வேண்டியிருக்கையாலும்‌
நாரங்கள்‌ அப்புருஷோத்தமனுக்கு அயநமாகின்‌ றன.
இவன்‌ நாரங்‌ களுக்கு இருப்பிடமாயிருக்கிறான்‌:
அவைகளும்‌ எப்போதும்‌ இவனுக்கு இருப்பிடமாயுள்ளன.
நார ஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவும்‌, இவன்‌ விளங்குகிறான்‌.

ஜலமும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்‌ படுகிறது.
அதுவும்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கிறது,
ஆகையால்‌, இக் காரணங்களால்‌ நாராயணன்‌ என்னும்‌ திருநாமம்‌ மேலானதென்று காட்டப்படட்டது.
என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில்‌, ( 52-50,…65 )
நரன்‌, நாரம்‌, நாராயணன்‌ என்னும்‌ பதங்கள்‌ வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திக்கத்தக்கது.
“நாராயணன்‌ ‘ என்று ஸர்வேஸ்வரன்‌ உபய விபூ,தி நிர்வாகஹனாய்‌ ஸ்ரீவைகுண்ட்த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லிற்று.

———————-

அப்படியிருக்குமவன்‌ ப்ரஹ்மசாரி நாராயணனல்ல, ஸ்ரீமந் நாராயணனே என்னுமத்தைச்‌ சொல்லுகிறது
மாதவன்‌ ‘ என்னும்‌ திருநாமம்‌.
சிவ புராணத்திலும்‌. “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம்‌ |
ஆஸ்தே விஷ்ணுர் சந்த்யாத்மா ப,க்தைர்‌ பாக,வதை: ஸஹ”
வைகுண்டமென்னும்‌ மேலான உலகத்தில்‌, உலகிற்கெல்‌லாம்‌ ஸ்வாமியும்‌, எண்ண முடியாத
ஸ்வரூபத்தை யுடையவனுமான பகவான்‌ விஷ்ணு, ஸ்ரீதேவியுடன்‌ கூடியவன்‌,
குண நிஷ்டர்களான பக்தர்களுடனும்‌, கைங்கர்ய நிஷ்டர்‌களான பாகவதர்‌களுடனும்‌ எழுந்தருளியிருக்கிறான்‌–என்று சொல்லப்பட்ட தன்றோ.
(மாதவன்‌)
(மா’ என்னும்‌ பதம்‌ ஸ்ரீதேவியைச்‌ சொல்லுகிறது.
தவ:’என்னும் சொல்‌ “நாதன்‌” என்னும்‌ “பொருளை யுடையது.
“மாயா: தவ: மாதவ: ‘ என்கிறபடியே. மாதவன்‌ என்னும்‌ திருநாமம்‌ லக்ஷ்மீ நாதன்‌’ என்னும்‌ அர்த்தத்தை உடையது.
“மானேய்‌ நோக்கி ம்டவாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா! ”என்‌று
நம்மாழ்வார்‌ இப் பொருளை மாதவ சப்தரர்த்தமாக அருளிச் செய்தார்‌.
இத் திருநாமம்‌ பகவான்‌ பரம பதத்தில்‌ பெரிய பிராட்டியாருடன்‌ எழுந்தருளி யிருப்பதைக்‌ குறிக்கிறது என்பர் .
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும்‌, –
மா மாயன்‌ மாதவன்‌ வைகுந்தன்‌ ” என்றும்‌,
மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரே ” என்றும்‌ ஆண்டாளும்‌, :
கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்றும்‌,
“ வடிவுடை மாதவன்‌ வைகுந்தம்‌ ” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌.
பெரிய பிராட்டியார்‌ எல்லா தசைகளிலும்‌ எம்பெருமானை விட்டுப் பிரியாமலிருப்பவராகையாலே.
எம்‌ பெருமானையும்‌ இப் பிராட்டியை யிட்டு நிரூபிக்க வேண்டு மென்று இத் திருநாமம்‌ உணர்த்துகிறது.

“ ஹ்ரீஸ்ச தே’ லக்ஷ்மீஸ் ச பத்ந் யெள ” என்று வேதமும்‌ பரம புருஷனைப்‌ பிராட்டியை யிட்டு நிரூபித்தது.
“ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்‌,வமேநம்‌ நாரணம்‌ மாரண்யம்‌ புருஷர்ஷபா : |”
பருஷ ஸ்ரேஷ்டர்களே! எல்லா வுலகுக்கும்‌ லக்ஷ்மீநாதனே தாயாகவும்‌. தந்தையாகவும்‌ விளங்குகிறான்‌; (
ஆகையால்‌) இந்த மாதவனை சரணமடையுங்கள்‌.] என்று
புருஷகார பூதகையான பிராட்டிபுடன்‌ கூடிய நாராயணனே நமக்கு உபாயமாகவும்‌, ஸ்வாமியாகவும்‌ ஆகிறான்‌ என்று பாரதத்தில்‌ பேசப் பட்டது.

“ கடிவார்‌ தீய வினைகள்‌ கொடியாருமள வைக்கண்‌
கொடியா அடுபுள்‌ உயர்த்த வடிவார்‌ மாதவனாரே ” என்று
ஆழ்வாரும்‌ மாதவனே உபாயமாகிறானென்‌று உணர்த்தினார்‌.
“ மாதவன்‌ பூதங்கள்‌ ” என்றும்‌.
`” மாதவனோடு வைகுந்தம்‌ புக்கருப்பாரே ” என்றும்‌
மாதவனே ஸர்வ ஸேஷியாகவும்‌. மோக்ஷ ப்ராப்யனாகவும்‌ ஆகிறானென்று அருளிச்செய்தார்‌கள்‌.
ஸர்வேஸ்வரன்‌ ஜகத் காரணமாம் போ தும்‌. பிராட்டிக்கு ப்ரேரகத்வ ருபமான அந்வயம்‌ உண்டென்பதை
ஆளவந்தார்‌, ஆழ்வான்‌. பட்டர்‌ முதலானோர்‌ தம்‌ ஸ்தோத்ரங்களில்‌ அருளிச்‌ செய்தனர்‌.
பெரியவாச்சான்பிள்ளையும்‌, அவருடைய திருக்‌ குமாரரான நாயனாராச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தது:
ச்லோஹ வியாக்கியானங்களிலும்‌ இவ்விஷயம்‌ விவரிக்கப்‌ பட்ட து
எம்பெருமான்‌ சேதனர்களுடைய ஹ்ருதய கமலத்தில்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்‌பது
“ஸர்வ பூ,தஹ்ருத,ப்ஜஸ்த; “என்று ப்ராஹ்ம புராணத்திலும்‌,
“மார்வ மென்பதோர்‌ கோயிலமைத்து மாதவனென்‌னும்‌ தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்‌
பேசப்‌ பட்ட ச, வ்யூஹ விபவார்ச்சாவதாரங்களிலும்‌ இவளுடன்‌ கூடியவனாகவே எம்பெருமான்‌
விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாண ஸித்தம்‌.

(மாதவன்‌) ” என்று
புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாதனமான பர வித்யை சொல்லப் படுவதாகவும்‌
அந்த வித்யைக்கு ப்ரவர்த்தகனாகையால்‌ இவன்‌ மாதவ னெனப்‌ படுகரொனென்‌ றும்‌ கொள்ளலாம்‌.
“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந |
தஸ்மாந் மாதவ நாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்‌,தி,த: | “` ‘
என்று ஹரியை ப்ரதிபாதிக்கும்‌ வித்யை சொல்லப்‌ படுகிறது.
அதற்கு ஸ்வாமியாயிருப்பதால்‌ நீர்‌ மாதவ னென்று சொல்லப்படுகதிறீர்‌.
* தவன்‌ ‘ என்றும்‌ ஸ்வாமியென்‌ னும்‌ பொருளையுடையது. -என்று இவ் வர்த்தம்‌ ஹரி வம்ஸத்தில்‌ ஆதரிக்கப் பட்டது.

“மளநாத்‌ த்‌யாகாச் ச யோகாச்ச வித்‌,தி, பாரத மாதவம்‌ ”’
பரதகுலத்‌துதித்தவனே! மெளநத்தினாலும்‌. தியானத்தி னலும்‌. யோகத்தினாலும்‌ மாதவனென்று அறிவாயாக. |
என்று வியாஸர்‌ சொல்லியபடியும்‌ மாதவநாமத்திற்குப்‌ பொருள்‌, கொள்ளலாம்‌.
“மது,வித்வா 5வபே த்‌,யத்வாத்‌,வா”
மது வித்யையினால்‌ அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான்‌ -என்றும்‌ சங்கரர்‌ பொருளுரைத்தார்‌. “
மது,குலே ஜாதத்வாந்‌ மாத,வ: ”
மது குலத்தில்‌ பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான்‌ ] என்றும்‌ பொருள்கொண்டனர்‌.
“மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:”
என்று லக்ஷ்மியும்‌. “தீ; ‘ என்று ஸரஸ்வதியும்‌ சொல்லப்‌ படுகின்‌றனர்‌.
அவர்களை ரக்ஷிக்கிறானாகையால்‌ மாதவனா கிறான்‌-என்றும்‌ சங்கரர்‌ பொருள்‌ கொண்டார்‌.
இப்படிப்‌ பல பொருள்களை உடையதாயிருந்த போதிலும்‌, எல்லா ஆழ்வார்களாலும்‌ .ஆதரிக்கப்பட்டதான
லக்ஷ்மீநாதன்‌ என்‌னும்‌ பொருளே இவ்விடத்திற்குப்‌ பொருளாகக் கடவது.

—————-

இப்படி
அச்யுதனாகவும்‌,
கோவிந்தனாகவும்‌,
கேசவனாகவும்‌,
நாராயணனென்‌னும்‌ அஸாதாரணமான திருநாமத்தை உடையவனாகவும்‌,
பிராட்டியுடன்‌ கூடியவனாகவும்‌
எழுந்‌தருளியிருக்கிறவன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்று இது வரையில்‌ கூறப்பட்டது.

—————

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனாக இவன்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்‌னுமிடத்துக்கு
ப்ரமாண மென்ன? என்ற ப்ரஸ்னம்‌ பிறக்க,
வேத வாக்கியங்களே இவ் விஷயத்தில்‌ ப்ரமாணம்‌ என்று சொல்லுறது
கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமம்‌,
கோ சப்,தத்தினால்‌ வேத வாக்கியங்‌களைச்‌ சொல்லுகிறதாகையால்‌
வேதத்தால்‌ ப்ரதிபாதிக்கப்‌ படுமவன்‌ என்று கோவிந்த நாமத்திற்குப்‌ டொருள் ஏற்படுகிறது.
இவன்‌ அடியவர்களை நழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம்‌
* மமாங்வதம்‌ மபிவமச்யுதம்‌ நாரா யணம்‌ ” என்னும்‌ நாராயணா நுவாகம்‌.
த்ரிவித,பரிச்சேத , மற்றவனாகவும்‌, அளவற்ற ரூப குண விபங்களையுடையவனாகவுமுள்ள
அநந்தன்‌ என்பதற்கு
ˆ” ஸத்யம்‌ ஜ்ஞாநம் அநந்‌தம்‌ ப்‌,ரஹ்ம”
“யதே,கமவ்யக்தமநந்தரூபம்‌” –
அநந்தமவ்யயம்‌ கவிம்‌ ஸமுத்‌,ரேந்தம்‌”
முதலான தைத்திர்ய உப நிஷத்‌ வாக்யங்களும்‌.
‘*அநந்தணங்சாத்மா விஸ்வ ரூபோ ஹ்யகர்த்தா” என்னும்‌
வேதாமவதர வாக்கியமும்‌ ப்ரமாணமாகின்‌றன.
இப் பரம புருஷனே பல அவதாரங்களெடுதக்து. தாழ்ந்தோ ருடன்‌ ஒரு நீராகக்‌ கலந்து பரிமாறும்‌ கோவிந்தனாகிறான்‌ என்பதற்கு ப்ரமாணம்‌ —
அஜாயமாநோ பஹுதா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌’”
பிறப்பில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.
புத்திமான்‌களில்‌ சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின்‌ ரஹஸ்யத்தை அறிதிறார்கள்‌.
“யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத்‌ | ஸ உ ஸ்ரேயோாந்‌ பவதி ஜாயமாந ! தம்‌ தீ,ராஸ: கவய உந்நயந்தி |”
யெளவனத்தை உடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌. (நித்ய ஸூரிகளால்‌) கூறப்‌ பட்டவனாகவும்‌ அப்பரமபுருஷன்‌ தோன்‌றினான்‌.
அவன்‌ பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான்‌. அவனை ஞானிகளான கவிகள்‌ அறிகிறார்கள்‌.

“பிதா புத்ரேண பித்ருமாக்‌ யோநியோநெள ஈந வேத,விந்மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌ ‘
ஸர்வலோக பிதாவான புருஷோத்தமன்‌, ஒவ்வொரு அவதாரத்திலும்‌ தன்னால்‌ பிறப்பிக்கப்பட்ட
ஒருவனைப்‌ பிதாவாகக் கொண்டு பிறக்கிறான்‌.
வேதத்தை அறியாதவன்‌ அவனுடைய பெருமையை அறியமாட்டான்‌-முதலியவை.
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்மும்‌ உத்பாதகனாய்‌, புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன்‌ இவனே என்பதை
“நாராயணாத்‌ ப்ரஹ்மா ஜாயதே | நாராயணாத்‌ ருத்‌;ரோ ஜாயதே?
நாராயணன் இடமிருந்து பிரமன்‌ பிறக்‌கிறான்‌. நாராயணனிடமிருந்து உருத்திரன்‌ உண்டாகிறான்‌.
‘ஹிரண்யகேஸ ரு:”
ஸுவர்ணம்‌’ போன்‌று அழகிய திருக் குழல்‌ கற்றைகளை உடையவன்‌] முகலிய வேதா வாக்கியங்கள்‌ உத் கோஷித்தன.
இவன்‌ நாராயண முகேந எழுந்தருளியிருக்கும்‌ இருப்பும்‌, =
`” விஸ்வம்‌ நாராயணம்‌ ” என்று தொடங்கி
“ நரராயண பரம் ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர:।
யச்ச கிஞ்சிஜ் ஜக,த்‌ யஸ்மிந்‌ த்‌ருஸ்ய்தே ஸ்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிஸ் ச தத்‌ சர்வம்‌ வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ ”
என்று நாராயண அனுவாகத்திலும்‌,
“ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌ ” முதலிய வாக்கியங்களால்‌ மஹோபநிஷத்திலும்‌.
“ சாக்ஷாங்ச த்ரஷ்ட. வ்யஞ்ச நாராயண:।ஸ்ரோத்ரஞ்ச ஸ்மரோதவ்யஞ்ச நாராயண:” என்று தொடங்கி, —
ஸ்ருங்ச ப்ரதி,மமஸ் ச ஸர்வம்‌ ஈாராயண:”‘ என்று ஸுபாலோபனிஷத்திலும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்த- ராத்மா…….. ஏகோ நாராயண: ” என்று அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும்‌.
மற்றுமுள்ள நாராயண உபனிஷத்‌ முதலியவைகளிலும்‌ கோஷிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடவே எழுந்தருளியிருக்கிறான்‌ என்பது, ^°
ஹ்ரீஸ் ச தே லக்ஷ்மீஸ் ச பத்ந்யெள ”
உனக்கு ஸ்ரீ பூமிதேவிகள்‌ பத்னிகள்‌.
“’ அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்ந்யா ”
இப் பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும்‌, விஷ்ணு வுக்குப்‌ பத்தினியாகவும்‌ இருக்கிறாள்‌.
“ஸ்ரத்‌,த,யா தேவோ தேவத்வம் அஸ் நுதே’”
ஸ்ரீ என்னும் சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியினா லேயே ஈஸ்வரன்‌ ஈஸ்வரத் தன்மையை அடைகிறான்‌.
“ஆநீதவாதம்‌ ஸ்வத,யா ததே,கம்‌?’
ஒன்றுமில்‌லாத ப்ரளய காலத்தில்‌ ஸ்வதா சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியுடன்‌ கூடிய பகவான்‌ ஒருவனே இருந்தான்
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில்‌ கோஷிக்கப்டட்டது.

அச்யுதா என்றும் .“அநந்தன்‌’ என்றும் புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது.
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக.
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ ஒரு நீராகக் கலந்து
பரிமாறுமவன்‌’ என்னும்‌ பொருளை யுடைய கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது.
“அச்சுதா! அமரரேறே!’ என்று அச்யுக அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌.
“ஆயர்தம்‌ கொழுந்கதே!” என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ )
“ காவ: விந்த,தி ” [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே,
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை
அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:।
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||.”
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌.
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌.
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌–
என்று ஹரி வம்‌சத்தில்‌ கோவர்த்தன தாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ.
கோ விந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ ” என்றும்‌
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி.
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌.
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே தனக்கு ப்ராண பாரமாகக்‌ கொண்டிருந்தாள்‌.
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ”-என்றும்‌,
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌” என்‌ றும்‌,
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா” என்றும்‌.
சொல்லும்படி யன்‌றோ
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌.
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ ” என்று
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது.
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

““கோவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ |
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥’*
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌ று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று. அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே.
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ பாரதமாம்‌.
(கோவிந்தன்‌ )
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
‘மஹா வராஹோ கோவிந்த,: “என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது .
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ |
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ‘
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ தேடி யடைந்கதேனாகையால்‌.
தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது.
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து.
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே’
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!” —என்‌றும்‌,
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“’கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ |
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌
கோ சப்தமான து :’கெள:’ என்று சொல்லப்படுகிறது.
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.
என்கிற நிர்வசன த்தின்‌ படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌.
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ” என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அறுஸந்தித்தார்‌.
(கோவிந்தன்‌ )
கோசப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌
பொருள்கொள்ளலாம்‌.
அச்சம்‌… ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ ” என்று
அச்சுதன்‌. அந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -‘
வேத கதனே ”’ என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
(கோவிந்தன்‌ )
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌.
(கோவிந்தன்‌)
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ள லாம்‌.
நம்மாழ்வாரும்‌ “பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே ” என்று
இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌.
“நாராயண பரோ ஜ்யோதி:” என்றும்‌.
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய ” என்றும்‌.
ˆ” ஆதித்ய வர்ணம்‌ ” என்றும்‌,
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ ॥”
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை;
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை.
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன.
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா |
யதி, ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥”
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. அவ்வொளி
அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ.

அந்த கோவிந்தநாமதீதால்‌ ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம்‌ பேசப்படுகிறது. ஆகையால்‌ புநருக்தியில்லை,

—————

ஆக, கேசவன்‌ முதலான நான்கு திருநாமங்களால்‌ பரத்வம்‌ பேசப்பட்டது.
இனி விஷ்ணு என்னும்‌ திரு நாமத்தினால்‌ நான்காவது வியூஹமான அநிருத்த மூர்த்தி சொல்லப்படுகிறார்‌.
இவ் விடத்தில்‌ “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹ!ரார்த்தஹமாகவும்‌.
ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும்‌,
உபாஸக அனுக்ரஹ மர்த்தமாகவும்‌.
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்‌த ருபேண நிற்கும்‌ நிலை.
பரத்வத்தில்‌ ஜ்ஞாநாதிகளாறும்‌ பூர்ணமாயிருக்கும்‌.
வ்யூஹத்தில்‌-முற்று இரட்டை குணங்கள் ப்ரகடமாயிருக்கும்‌,
அதில்‌ ஸங்கர்ஷணர்‌ ஜ்ஞாந பலங்கள்‌ இரண்டோடும்‌ கூடி
ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து,
அத்தை ப்ரக்ருதியில்‌ நின்றும்‌ பிரிக்கும் அவஸ்தையையும் பஜித்து,
ஸரஸ்த்ர ப்ரவர்த்தன பண்ணக் கடவராயிருப்பர்‌.
பிரத்யும்நர்‌ ஐஸ்வர்ய வீர்யங்களோடும் கூடி
மநஸ் தத்வத்தை அதிஷ்டி,த்து.
தர்ம உபதேசத்தையும்‌.
மநுஷ்யாதி தொடக்கமான வர்க்க, ஸ்ருஷ்டியையும்‌ பண்ணக் கடவராயிருப்பர்‌.
அநிருத்தர்‌; சக்தி தேஜஸ்ஸுக்கள்‌ இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்‌,
தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும்‌
கால ஸ்ருஷ்டிக்கும்‌, கடவராயிருப்பர்‌. ” என்று
பிள்ளைலோகா சார்யர்‌ தத்வ த்ரய த்தில்‌ அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்‌ அநு ஸந்திக்கத்தக்கவை,
விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்படுகிறவர்‌ அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்‌:
“த்ரிபாதூர்த்‌,வ உதைதத்‌ புருஷ: பாதேர ஸ்யேஹாப,வாத்‌ புந;!
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸா முகா அபி, |”
பரமபதத்திலுள்ள பரமபுருஷன்‌ மூன்‌று உருவங்களை உடையவராய் ஸங்கல்பித்தார்‌.
பரமபத நாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர்‌ மறுபடியும்‌ இங்கு அவதரித்தார்‌.
அதன் பிறகு ஸர்வ விதமான சேதனர்களையும்‌ ரஷிப்பதற்காக இவ் வுலகையெல்லாம்‌ (
அவதாரம்‌ செய்தவன்‌ மூலம்‌) வியாபித்தார்‌.] என்று புருஷ ஸூக்தத்தில்‌ அநிருத்தரைக் குறித்து விஷ்ணுசப்தார்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டது.
மேலும்‌, அநிருத்தரே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு . இடையில்‌ பத்ம நாபராகிய விஷ்ணுவாக அவதரித்தார்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகையாலும்‌.
கார்ய வாசி சப்தம்‌ காரணமாகச் சொல்லுமாகையாலும்‌, “பத்மநாபர்‌’ என்று ப்ரதமாவதாரமான விஷஸ்ணுவைத்‌ தனியே இங்கு எடுக்கையாலும்‌
இங்கு விஷ்ணுசப்தம்‌ அநிருத்த நாராயணனைச்‌ சொல்லக்கடவது.
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிருத்தரை எடுத்த துக்குக்‌ கருத்தென்னெனில்‌:
“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ்‌ ததைவ ச |
ஷட்த்ரிம்மமத்ஸங்க்‌,யாஸங்க்‌,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |!
ஷட்த்ரிம்ப்த்‌,பே,த,பி,ந்காஸ்தே பத்‌மநாபாதி,கா: ஸுரா: |
ஸமுத்பந்நா தீ,பாத்‌, 8,பா இவேங்வரா: |”
விஷ்வக்ஸேநரே! பத்மநாபன்‌ முதலிய முக்கியமான விபவா வதாரங்கள்‌ முப்பத்தாறாகும்‌.
இப்படி பத்மநாபன்‌ முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும்‌. விளக்கிலிருந்து உண்டான
விளக்குகள்போல்‌ அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித்‌ தார்கள்‌. என்று விஷ்வக்ஸேந ஸம்‌ ஹிதையில்‌ சொல்லிய படியே,
பின்‌ சொல்லப் போகும்‌ பத்மநாபன்‌ , திரிவிக்கிரமன்‌ , வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி
அநிருத்தரேயாகையால்‌ அவரை இங்கு எடுக்கிறது. நிற்க;
விஷ்ணு பதத்தின்‌ பொருளை இனி விவரிட்மோம்‌.
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ” என்று அவதாரத்தினால்‌ வியாபித்திருப்பதை ,
விஷ்ணு சப்தார்த்தமாகப்‌ புருஷ ஸூக்தத்‌தில்‌ பேசப்பட்டது,
“வ்யாப்ய ஸர்வாநிமாக்‌ லோகாந்‌ ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ:
ததமச விஷ்ணுநாமாஸி விமோர்‌ தளாதோ: ப்ரவேமுநாத்‌ |!”
கேசவனாகிற தேவரீர்‌ இந்த எல்லா உலகங்களையும்‌ எங்கும்‌ வியாபித்து நிற்கிறீர்‌;
ஆகையால்‌ விஷ்ணுவென்னும்‌ திரு நாமத்தை யுடையவராய்‌ விளங்குகிறீர்‌ ‘
விம’ என்னும்‌ தாது ப்ரவேசித்தல்‌ என்னும்‌ பொருளை யுடைத்தாயிருப்பதால்‌. என்று
ஸ்ரீவராஹபுராணத்தில்‌ சொல்லப்பட்டபடியே எங்‌கும்‌ தன்‌ ஸ்வரூபத்தால்‌ வியாபித்து நிற்பவன்‌ விஷ்ணு வென்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌, விஷ்டமித,ம்‌ விஸ்வம்‌ தஸ்ய முக்த்யா மஹாத்மர: |
தஸ்மாத்‌ ஸ ப்ரோச்யதே விஷ்ணுர்‌ விமேர்‌ த,௱தோ: ப்ரவேமாநாத்‌ ||”
மஹாத்மாவான அப் பரம புருஷனுடைய சக்தியினால்‌ இவ்‌ வுலகமெல்லாம்‌ வியாபிக்கப்பட்டிருப்பதால்‌
அவன்‌ விஷ்ணு வெனப்படுகீறான்‌;
விம ‘ என்னும்‌ தாது வியாபித்தலைச்‌ சொல்லுவதால்‌–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்‌, ஆதித்ய புராணத்திலும்‌ சொல்லியபடியே
சக்தியினால்‌ எல்லா வஸ்துக்களையும்‌ வியாபித்திருப்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா |
ஸம்ஸாரவேமுநாத்‌ பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥
பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியானது ஆகாயம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்கிறது.
இப்படி இவ்‌ வுலகம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்பதால்‌ நான்‌ விஷ்ணு வென்று சொல்லப்படுகிறேன்‌.–என்று மஹாபாரதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வ வ்யாபினியான விக்‌ரஹ காந்தியை உடையவன்‌ என்றும்‌ விண்ணுசப்தத்துக்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

* யதள ஸர்வக,தோ விஷ்ணு: ”
விஷ்ணு வானவர்‌ எப்படி ஸர்வ வியாபியாயிருக்கிறோரோ….] என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்‌ சொல்லியபடியே
விக்ரஹத்தாலே எங்கும்‌ வியாபித்து நிற்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ் வர்‌த்தங்களெல்லாம்‌
” ‘ விஷ்ணுர்‌ விக்ரமணாத்‌ தேவ: “‘ என்று பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உணர்த்தப்‌பட்டது.

இப்படி இவன்‌ எல்லாவற்றையும்‌ வியாபித்து விளங்குவதால்‌ எல்லாம்‌ இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென்‌பதை
“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணுர்‌ வநாநி விஷ்ணுர்‌ கி,ரயோ தி,மமமச |
ஈத்‌,ய: ஸமுத்‌,ராமங்ச ஸ ஏவ ஸர்வம்‌ யத,ஸ்தி யந்காஸ்தி விப்ரவர்ய ॥”’
விப்ரஸ்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும்‌ விஸ்ணுவே;
புவனங்களும்‌ விஷ்ணுவே;
வனங்களும்‌ விஷ்ணுவே:
மலைகளும்‌. திக்குகளும்‌, நதிகளும்‌. ஸழுத்ரங்களும்‌, “ இருக்கிறது என்று
எப்போதும்‌ சொல்லப்படும்‌ ஜீவ தத்வமும்‌.
இல்லை என்னும்‌ வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும்‌ ஆகிய எல்லாம்‌
அந்த பகவான்‌ விஷ்ணுவே. என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்‌ உத்கோஷித்தது.
“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்‌,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம்‌ பஜாமறஹே ”
விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும்‌ நாங்கள்‌. உன்னுடையது போன்‌ற தேஜஸ்ஸையும்‌
தெளிவான ஞானத்தையும்‌ அடைகிறோம்‌. என்று ருக்வேதத்திலும்
தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பத, என்றும்‌.
`” விஷ்ணோர்‌ யத்‌’பரமம்‌ பத,ம்‌” என்றும்‌,
“ மம ம்நோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்‌,
பரமே மத்‌,வஉத்ஸ.:”’
வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ருத தரைகள்‌ பொழிகின்‌றன.– என்றும்‌,
மற்றும்‌ பல பலவேத வாக்கியங்களிலும் இத் திரு நாமம்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டது .
“தஸ்மாத்‌, விராட் ,ஜாயத”
அந்த அநிருத்‌த நாராயணனிட யிருந்து பிரமன்‌ உண்டானான்‌. ] என்றும்
ஐகந் நாதோ ப்‌,ரஹ்மாணமஸ்ருஜத்‌ புக: ।”’
நான்காவது மூர்த்தியான பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌–என்றும்
ஸம்ஹிதையிலும்‌ சொல்லப்பட்டடடியே
பிரமனைப்‌ பிறப்பித்தவரான அநிருத்த மூர்த்தி விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்பட்டார்‌,

————-

அடுத்த படியாக, அப் பிரமனைப்‌ பிறப்பிக்குமளவே யன்று.
அவனுக்குத்‌ துன்பம்‌ வந்த போது அதைப் போக்‌ கடிப்பவனும்‌ இவனே என்று உணர்த்துகிறது
மதுஸூதன்‌” என்னும்‌ திருநாமம்‌.

கேசவன்‌ என்று தொடங்கி கோவிந்தன் என்பது வரை பரத்வம்‌ பேசப்பட்டது.
விஷ்ணுவென்று வியூஹம்‌ உணர்த்தப்பட்டது.
மதுஸூதனன்‌ என்னும்‌ இத் திருநாமம்‌ தொடங்கி விபவாவதாரம்‌ விவரிக்கப்படுகிறது. .

*’ யோ வித,த,தி பூர்வம்‌ யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ”
எவனொருவன்‌ பிரமனை முதலில்‌ பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்‌கிறானோ என்று
வேதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வேஸ்வரன்‌ வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தருளினான்‌.
நான்கு சிசு ரூபமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும்‌, மது.கைடபன்‌ என்னும்‌ இரு அஸூரர்கள்‌
பிரமனிட மிருந்து பறித்துக் கொண்டு போய்‌, ரஸா தலத்தில்‌ ஒளித்து வைத்தனர்‌.
வேதங்களை இழந்த அப் பிரமனும்‌, “ கண்ணிழந்‌ தேன்‌. தனமிழந்தேன்‌ ‘ என்‌று கேசவனை நோக்கிக்‌ கதறினான்‌.
இக் கூக்குரலைக் கேட்ட கருணா வள்ளலான அப்பெருமானும்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து
மது கைடபர்களை ஸம்ஹரித்துப்‌ பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்‌
இப்படி ப்ரதம ஜனான (முதலில்‌ பிறந்தவனான ) பிரமனுக்குச்‌ செய்த உபகாரமாகையாலே
இது அவதாரங்களுள்‌ முதலில்‌ அநு ஸந்திக்கப்படுகிறது.
( மதுஸூதனன்‌ )
மதுவென்னும்‌ அஸாரனைக்‌ கொன்‌ றவன்‌.
“கர்ணமிங்ரோத்‌,ப,வம்‌ சாபி , மஹாஸுரம்‌ |
ப்‌ரஹ்மணோபசிதிம்‌ குர்வங்‌ ஜக, புருஷோத்தம: |
தஸ்ய தாத இத்யாஹு: |”
பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும்‌ பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப்‌ புருஷோத்தமன்‌ கொன்றான்‌.
குழந்தாய்‌! அவனைக்‌ கொன்றதாலேயே., தேவர்கள்‌. அஸூரர்கள்‌, மனிதர்கள்‌. ரிஷிகள்‌ ஆகிய யாவரும்‌ ஐநார்‌தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்‌.] என்று மஹாபாரதத்தில்‌ இந்த நாமத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது .
“த,த்‌ருமாதேரவிந்த,ஸ்தழம்‌ ப்‌,ரஹ்மாணமமிதப்ரப,ம்‌ |
ஸ்ருஐஜந்தம்‌ ப்ரத,மம்‌ வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள |
ததோ விக்‌,ரஹிணஸ்தாம்ஸ்‌ த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள |
வேதஞ்ஜக்‌,ருஹதூ ராஜம்‌ ப்‌,ரஹ்மண: பங்யதஸ்‌ ததா ॥
அத, தெள தளநவங்ரேஷ்டெள க்‌,ருஹீத்வா தாந்‌ ஸ௩ராதநார்‌ |
ரஸாம்‌ விவிமதுஸ்‌ தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள ||
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்‌,ரஹ்மா கங்மலமாவியத்‌ |
ததோ வச௩மீமா௩ம்‌ ப்ராஹ வேதைர்‌ விநாக்ருத: ॥
ப்‌,ரஹ்மா:-வேத;ா மே பரமம்‌ சக்ஷார்‌ வேதா மே பரமம்‌ தம்‌।
வேதா மே பரமம்‌ வேத; மே ப்‌,ரஹ்ம சோத்தமம்‌ |
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்‌,யாம்‌ ப,லாதி,த: |
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள்‌ விவர்ஜிதா: ||
வேதே, ஹ்ருதே5ஹம்‌ கம்‌ குர்யாம்‌ லோகாந்‌ வை ஸ்ரஷ்டுமுத்‌,யத: |
அஹோ பத மஹத்‌, து, க்சும்‌ வேத;ாமமாஜம்‌ மம |
ப்ராப்தம்‌ துநோதி ஹ்ருதயம்‌ தீவ்ரரேர காமயஸ்த்வயம்‌ |
கோ ஹி மோகார்ணவே மக்‌,நம்‌ மாமிஹாத்‌,ய ஸமுத்‌.த,ரேத்‌।
இத்யேவம்‌ ப,௱ாவுமாணஸ்ய ப்‌,ரஹ்மணோ ந்ருபஸத்தம |
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்‌;,பூ,தா புத்‌,திர்‌ புத்திமதாம்‌ வர॥
ததோ ஐகெள பரம்‌ ஜப்யம்‌ ப்ராஞ்ஜலி: ப்ரக்‌,ரஹம்‌ ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ்‌ தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்‌,ராஹ வேதளநகலொந்‌ ரஸாதலக,தாந்‌ ஹரி: ॥
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர்‌ தத: ஸ்வாம்‌ ப்ரக்ருதிம்‌ யயெள ॥
ததஸ்தயோர்‌ வதே,நா மரு வேதாபஹரணேந ச |
போ காபநயநம்‌ சக்ரே ப்‌, ஹ்மண: புருஷோத்தம: || ””
மது கைடடன்‌ என்னும்‌ அஸுரர்கள்‌ அளவற்ற ஒளியை யுடையவனும்‌. தாமரைமலரில்‌ வீற்றிருப்பவனும்‌,
அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும்‌ முதன்முதலில்‌ ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப்‌ பார்த்தனர்‌
சரீரத்துடன்‌ கூடிய அவ் வேதங்களைக் கண்ட அந்த அஸூரர்கள்‌ பிரமன்‌ கண்டு கொண்டிருக்கும் போதே அவைகளை எடுத்துக்‌ கொண்டனர்‌.
பிறகு அவ் வஸூர ஸ்ரேஷ்டர்கள்‌ பழமை யான அவ்வேதங்களை எடுத்துக் கொண்டு.
நீர் நிறைந்த கடலினுள்ளிருக்கும்‌ ரஸாதலத்தினுள்‌ விரைவில்‌ நுழைந்‌தனர்‌.
இப்படி வேதங்கள்‌ கவரப்பட்டபின்‌ பிரமனைத்‌ துக்கம்‌ பீடித்தது.
அதன் பின்‌ வேதங்களை இழந்த நான்முகன்‌ ஈஸ்வரனைக்‌ குறித்துப்‌ பின்வருமாறு உரைத்தனன்‌ -—
“வேதங்களே எனக்கு மேலான கண்‌; வேதங்களே எனக்கு மேலான தனம்‌. வேதங்களே எனக்கு மேலான ஓளி.
எனக்குப்‌ பெருமையைக்‌ கொடுப்பவைகளில்‌ வேதங்களே சிறந்தவை.
அஸூரர்களுடைய பலத்தினால்‌ என்னுடைய வேதங்களெல்லாம்‌ இங்கிருந்து பறிக்கப்பட்டன.
வேத மற்றவையான இவ்வுலகங்கள்‌ இருள்‌ சூழ்ந்தவையாயின.
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான்‌ வேதமில்லாமல்‌ என்ன செய்வேன்‌ ?
வேதங்கள்‌ நசித்ததினால்‌ எனக்குப்‌ பெருந்துன்பம்‌ ` வந்தடைந்துவிட்டது..
தீவிர சோகமான இந்த வியாதி : என்‌ மனத்தைத்‌ துன்புறுத்துகிறது.
இத்‌ துன்‌பக்கடலில்‌ முழுகும்‌ என்னை யார்தான்‌ | கரையேற்ற முடியும்‌ ?”
என்று இம்மாதிரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது
‘ ஹரியை ஸ்தோத்ரம்‌ செய்யவேண்டுமென்‌ னும்‌ புத்தி அவருக்கு உண்டாயிற்று.
அதன் பிறகு ப நின்று, மிகச்‌ சிறந்த இந்த ஸ்தோத்ரத்தைப்‌ பாடினார்‌………
இதற்கிடையில்‌ பகவான்‌ ஹரி குதிரை போன்ற முகத்தையுடைய ஹயக்ரீவராய்‌ அவதரித்து, .
ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும்‌ எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம்‌ கொடுத்தருளினார்‌.
அதன்பின்‌ பிரமன்‌ தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌.
இப்படி அந்த அஸூரர்களைக்‌ கொன்றும்‌. வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும்‌
ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப்‌ புருஷோத்தமன்‌ போக்கடித்தான்‌.] என்று
மஹாபாரதத்‌ தில்‌ இந்த விருத்தாந்தம்‌ விவரிக்கப்பட்ட து.

“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரூப்யதரர்ப்பம்‌ |
ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || ”
மது `கைடபர்களுடைய கொழுப்பைக்‌ குலைத்தது போல்‌, வாழைத் தண்டு, கதையின்‌ வெளிப்புறமான கரப,ப்ரதேசம்‌;
யானைத்‌ துதிக்கை ஆகிய இவைகளின்‌ அழகுச் செருக்கையும்‌ அடக்கி, –
அந்த கர்வத்தினால்‌ பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை
உபமான மாகச்‌ சொல்லுவோம்‌] என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும்‌. ‘
“யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள ”
மது கைட்பர்களாகிய துஷ்டப் புழுக்களைப்‌ பிசைந்து கொன்றவை களான இத் திருத்துடைகள்‌] என்று
ஆழ்வான்‌ ஸூந்தர பாஹுஸ்தவத்திலும்‌ அருளிச்செய்தபடியே
மது கைடபர்‌ கள்‌ பகவானால்‌ தொடையினால்‌ இறுக்கிக்‌ கொல்லப்பட்டனர்‌ என்பது பிரஸித்தம்‌.

” காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌
ஏய்ந்த பணக்குதிர்மேல்‌ வெவ்வுயிர்ப்ப-—
வாய்ந்த மதுகைடபரும்‌ வயிறுருகி மாண்டார்‌
அதுகேடவர்க்திறுதியாங்கு ” [மூன்‌ திருவ 68] என்று
எம்பெருமானுடைய . திவ்ய வாஸத்தாலேயே மதுகைடபர்கள்‌ மாண்டனர்‌ என்று
பேயாழ்வார்‌ அருளிச்செய்தார்‌,

அன்‌ றிக்கே.
எம்பெருமான்‌. ஆயாஸம்‌ சிறிதுமின்‌ றி அவர்‌களை முடித்தபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
இந்த மது கைடபர்கள்‌ பிரமனுடைய கர்மாநுபவத்தின்‌ பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்‌.
ரஜஸ்‌ தமோ குணங்களே வடிவெடுத்தவர்கள்‌ இவர்களென்‌ று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட து.
பிறக்கும்‌ போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக்‌ குறித்துத்‌ தாங்கள்‌ சொல்லுகிறார்களோ
அவர்களாலேயே சாவு நேர வேண்டுமென்ற வரத்தைப்‌ பெற்றனர்‌.
வேதங்‌ களுடன்‌ கூடிய ப்ரஹ்மாவைக் கண்டு வேதங்களைக்‌ கவர்ந்து ரஸாதலத்தில்‌ ஜநித்தனர்‌. .
பிரமனால்‌ ஸ்தோத்ரம்‌: செய்யப்‌ பட்ட பகவான்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து ஓர்‌ இனிய இசையைப்‌ பாட. அவ்வொலியைக் கேட்ட அவ்வஸுரர்கள்‌
வேதத்தை வைத்து விட்டு ஒலி வரும்‌ வழியில்‌ சென்றனர்‌.
பகவான்‌ மற்றொரு வழியாகச் சென்‌று வேதங்களை மீட்டுப்‌ பிரமனிடம்‌ கொடுத்தருளினான்‌.
வேதங்களைக்‌ காணாத அவ்‌ வஸுரர்கள்‌ பாற்கடலில்‌ பையத் துயின்ற பரமனைக் கண்டு
அவனுடன்‌ நெடுங்காலம்‌ போர் செய்தனர்‌.
பல பல காலம்‌ போர் செய்தும்‌ சோர்வடையாத திருமாலைக் கண்டு மனமுவந்து.
“ நீ வேண்டும்‌ வரத்தைக்‌ கேள்‌” என்றார்கள்‌ அவ்‌ வஸுரர்கள்‌.
* உங்களை நான்‌ கொல்லவேணும்‌ ” என்னும்‌ வரத்தை மாயாவியான அம்மாதவன்‌ தன்னால் படைக்கப்‌ பட்‌.டவர்களான அவர்களிடம்‌ வேண்டினான்‌.
அவர்களும்‌ ௮தற்கு இசைந்தவளவில்‌, “ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக்‌ கொள்ளுங்கள்‌” என்‌ று பரம புருஷன்‌ உரைத்தான்‌,
* ஒருவரும்‌ சாகாத இடத்தில்‌ நாங்கள்‌ சாக வேண்டும்‌” என்று அவர்கள்‌ வரம்‌ வேண்டினார்கள்‌.
புருஷோத்தமனும்‌ திருத்‌ தொடைகளால்‌ அவர்களை இறுக்கிக்கொன்றான்‌ என்று
இம்‌ மாதிரியாக சாஸ்‌த்ரங்கள்‌ இவ்விருத்தாந்தை விவரிக்கின்‌ றன.
*மது,ஸூத,னன்‌’ என்னுமித் திருநாமத்தில்‌ மதுவைச்‌ சொன்‌ னது ,கைடபனுக்கும்‌ உபலக்ஷணம்‌.
* கைடபாரி ‘ என்றும்‌ எம்பெருமானுக்கு ஒரு திருநாமம்‌ வழங்கி வருகிறது.

இனி, மதுஸூதனன்‌ என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும்‌ சில பொருள்களை விவரிப்போம்‌.
(மதுஸுதனன்‌)
மது,” என்று “ பிப்பலம்‌ ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப்‌ பொருள்களான அசேதன தத்வத்தையும்‌.
ஆநந்த,ஸ்வரூபியும்‌, பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல்‌ இனியவனுமான சேதன தத்வத்தையும்‌ சொல்லுகிறது.
‘ஸூதனன்‌” என்னும்‌ பதம்‌ தன்‌ வசத்திற்கு அழைத்துச்‌ செல்பவன்‌ என்னும்‌ பொருளை உடையது.
ஆக, ஸர்வ தத்வங்களையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ ஸர்வ தத்வநயநாச்சைவ மதுஹா மதுஸூதந: ”
எல்லாத்‌ தத்துவங்களையும்‌ அழைத்துச்‌ செல்வதாலும்‌ பகவான்‌ மதுஸூதனனாகிறான்‌.
என்று சாஸ்திரம்‌ இப்பொருளை ஆதரித்தது,
* மது, ஸூத,னன்‌ ‘ என்பது ஸகல தத்வங்களாகிற குதிரைகளைத்‌ தூண்டுபவன்‌ என்றும்‌ பொருள்படும்‌. “
மதுரிந்த்‌,ரியநாமா ஸ ததோ மதுநிஷூதந: ”’ [
மது,’ என்று இனியவைகளான இந்திரியங்கள்‌ சொல்லப்‌ படுகின்‌ றன.
அவைகளை அடக்குமவனாகையாலே இப் பெரு மான்‌ மதுஸூதனனாகிறான்‌.என்றும்‌
மதுஸூதந சப்தார்த்‌ தம்‌ விவரிக்கப்பட்ட து.

ஆக, இப்பொருள்களால்‌ விரோதி நிரஸன ஸீலன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ கொடு யேனிடர்‌ முற்றவும்‌ மாய்த்தவம்மான்‌ மதுஸூதவம்மான்‌”என்று இவ்வர்‌ததத்தை ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌.
இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குணத்துக்குத் தோற்று
“ மது ஸூதனென்னம்மான்‌ தானும்‌ யானுமெல்லாம்‌ தன்னுள்ளே கலந்தொழிந்தோம்‌
தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ அமுதுமொத்தே ‘* என்றும்‌,
வள்ளலே ! மதுஸூதனா ! “” என்றும்‌.
“ மதுஸூதனை யன்றி மற்றிலேன்‌ ” என்றும்‌. °
வைத்த மா நிதியாம்‌ மதுஸூதனையே அலற்றி” என்றும்‌, நம்மாழ்வார்‌ தம்மை எழுதிக் கொடுத்தார்‌

————
மதுஸூதனன்‌ என்று. பிரமனுக்குச்‌ செய்த உபகாரத்‌தைப்‌ பேசிற்று,

அடுத்தபடியாக, திரிவிக்கிரமன்‌ என்று
இவ் வுலகுக்கெல்லாம்‌ அபேஷா நிரபேக்ஷமாகத்‌ தன்னைக்‌ கொடுத்தபடியைப்‌ பேசுகிறது.
மஹாபலி என்பானோர்‌ அஸுரன்‌ தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனை யுள்‌ளிட்ட மூவுலகையும்‌ ஜயித்துத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்‌டான்‌.
இந்திரன்‌ முதலிய தேவர்கள்‌ எம்பெருமானிடம்‌ சென்று முறையிட. அப்பெருமானும்‌
காஸ்யபருக்கும்‌ அதிதிக்‌கும்‌ புத்திரனான வாமனனாய்ப்‌ பிறந்து மஹாபலி யாகம்‌ செய்கையில்‌
அவனிடம்‌ மூவடி மண்ணை யாசித்துப் பெற்று, திரிவிக்ரமனாக வளர்ந்து,
ஈரடியால்‌ உலகங்களையெல்லாம்‌ அளந்து, மூன்றாவதடியை மாவலியின்‌ தலையில்‌ வைத்து,
பாதாள லோகத்தில்‌ அவனுக்கும்‌ பெருமையை உண்டாக்கி வைத்தான்‌ என்னும்‌ விருத்தாந்தம்‌
ஸர்வ லோக ப்ரஸித்தமானது.
இப்படி, ப்ரயோஜநாந்தர பரனான இந்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற-ஸர்வரையும்‌ ரக்ஷித்‌த அவதாரமாகையாலும்‌, ,
உறங்குகிற ப்ரஜையைத்‌ தடவிக் கொண்டு கிடக்கும்‌ தாயைப்போலே,
உலகங்களையெல்லா।ம்‌ தன்‌ திருவடிகளாலே அபேக்ஷா நிரபேஷமாகத்‌ தடவிக் கொடுத்த பெருமையை உடையதாகையா லும்‌.
பரத்வமும்‌, ஸெளலப்‌யமும்‌ ஒருங்கே ஒளிவிடுகின்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்‌,
அடியார்க்காகத்‌ தன்னை அழிய மாறியும்‌ அளிக்கும்‌ அருங்‌ குணத்தை அறிவிப்பதாகையாலும்‌.
வேதங்களோடு. இதிஹாஸ புராணங்களோடு. ஆழ்வார்களோடு வாசி யற எல்லாரும்‌ இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள்‌. .
“ இதம்‌ விஷ்ணுர்‌ விசக்ரமே ”
“ த்ரீணி பத; விசக்ரமே ” –
“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம்‌ கத்ராய விஷ்ணு: ” .
மூவடி மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம்‌ அளந்தான் விஷ்ணு]:
“த்ரிர்‌ தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”’ “
ம்‌ நோ விஷ்ணுருருக்ரம:
பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ்ணு வானவன் நமக்கு மங்களத்தைத் தருவானாக,
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே ”
விஷ்ணுவினால்‌ அளக்கப்‌ பட்ட பூ தேவீயே] என்று பல பல விடங்களில்‌ பண்டை மறை வாய்‌ வெருவிற்று.
“கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்றோர்‌
எண்தானுமின்‌றியே வந்தியலுமாறு
உண்டான்‌ உலகேழும்‌ ஓர்‌ மூவடி கொண்டானைக்‌
கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்‌.
“அடியை மூன்‌றை யிரந்தவாறும்‌ அங்கே நின்றாழ்கடலும்‌
மண்ணும் விண்ணும்‌ முடிய ஈரடியால்‌ முடித்துக் கொண்ட முக்கியமும்‌
நொடியுமாறவை கேட்குந்தோறுமென்‌ நெஞ்சம்‌ நின்றனக்கே கரைந்துகும்‌
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல்‌ கூடுவதே ?”” என்றும்‌.
“பாயோரடி வைத்த தன்‌ கீழ்ப்‌ பரவை நிலமெல்லாம்‌
தாயோரடியால்‌ எல்லா வுலகும்‌ தடவந்த மாயோன்‌
உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனை நாளும்‌ .
தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ ?” என்றும்‌,
“ உலகமெல்லாம்‌ தாவிய வம்மானை எங்கினித்‌ தலைப் பெய்‌வனே ? ” என்றும்‌,
`” தாவி வையம்‌ கொண்ட எந்தாய்‌! ” என்றும்‌,
“பாமரு மூவுலகுமளந்த பற்ப பாதாவோ !’”’ என்றும்‌
நம்மாழ்வார்‌ பிராட.டிமார்‌ தொட்டாலும்‌ சிவக்கும்‌ திருவடி களைக் கொண்டு காடுமோடெல்லாமளந்த
இந் நீர்மையிலே உருகா நிற்பர்‌,
என்னிது மாயம் — வண்ணமே கொண்டளவாய்‌ என்ற மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்‌,
^” ஒருப்படுத்‌ திடுமின்‌ இவளை உலகளந்தானிடைக்கே ”’ என்‌றும்‌, பெரியாழ்‌வாரும்‌,
“ ஓங்கி உலகளந்த உத்தமன்‌ ” என்றும்‌.
“ தேச முன்னளந்தவன்‌ திரிவிக்கரமன்‌ திருக்கைகளால்‌ என்னைத்‌ தீண்டும்‌ வண்ணம்‌ ” என்றும்‌
பொல்லாக்‌ குறளுருவாய்ப்‌ பொற்கையில்‌ நீரேற்று
எல்லாவுலகும்‌ அளந்‌து கொண்ட எம்‌ பெருமான்‌ ‘* என்றும்‌, “
மாணியுருவாயுலகளந்த மாயனைக்‌ காணில்‌ தலைமறியும்‌ ‘” என்றும்‌ ஆழ்வார்‌ திருமகளாரும்‌
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்‌.
“ஏக: ப்ராஸீஸரத்‌ பாதமேக: ப்ராச்க்ஷளந்முத |
அபரோப்யதரந்மூர்த்‌ கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம்‌ ॥ ””
ஒருவன்‌ திருவடியை நீட்டினான்‌;
(பிரமனாகிய) மற்றொரு வன்‌ மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்‌.
(சிவனாகிய) வேறு ஓருவனும்‌ களிப்புடன்‌ அந்நீரைத்‌ தலையிலே தரித்தான்‌.
இவர்களில்‌ எவன்‌ பெரியவன்‌ என்பதை நினைத்‌துப் பாருங்‌கள்‌- என்கிறபடியே
பரம் பொருள்‌ யாரென்பதை நிலை நாட்டித் தருவதன்றோ இவ்வவதாரம்‌.
( திரிவிக்ரமன்‌ )
த்ரயோ விக்ரமாஸ்‌ த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”’
[மூவுலகங்களையும்‌ அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன்‌ | என்றும்‌. –
த்ரயோ லோகா: க்ராந்தா யே ?’
மூன்று உலகங்களும்‌ எவனால்‌ கடக்கப்பட்டனவோ ௮வன்‌ ] என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. –
த்ரீணி பத; விசக்ரமே ‘* என்றது வேதம்‌.
“ த்ரிரித்யேவம்‌ த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்த்ரித, ஸர்வாந்‌ த்ரிக்ரமோ$ஸி ஜநார்த்தந।”
(*மூவுலகங்களும்‌ முனிவர்களால்‌ சொல்லப்‌ படுகின்‌ றன. ஓ ஜநார்த்தனனே! அவையெல்லாவற்றையும்‌ மூன்‌ றடிகளால்‌ தாவியபடியால்‌ நீ திரிவிக்கரமன் ஆனாய் ]
என்று ஹரி வம்‌ஸத்தில்‌ சொல்லப்பட்ட து.
“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம்‌ பூர்‌ நரேங்வர।
அந்தரிக்ஷம்‌ த்‌,விதீயேக த்‌,யெளஸ்‌ த்ருத்யேந ஸத்தம |
”’இவ்வுலகம்‌ ஒரு அடி வைப்பினால்‌ அளக்கப்பட்டது.
இரண்‌ டாவது அடிவைப்பினால்‌ அந்தரிஷமும்‌
மூன்றாவதடியால்‌ தேவலோகங்களும்‌ அளக்கப்பட்டன.] என்று
நாரஸிம்ஹ புராணத்திலும்‌ சொல்லப்பட்ட து.
முதலடியினால்‌ ழுலகங்க ளெல்லாவற்றையும்‌.
இரண்டாவதடியினால்‌ மேலுலகங்க ளெல்லாவற்றையும்‌,
மூன்றாவதடியினால்‌ மஹாபலியின்‌ ஸிரஸ்ஸையும்‌ அளந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
“த்ரிரித்யேவம்‌ த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந்‌ த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”’
த்ரி’ என்னும்‌ பதத்தினால்‌ மூன்‌று வேதங்களும்‌ முனிவர்‌ களால்‌ சொல்லப்படுகின்‌றன.
அவை யெல்லாவற்றையும்‌ வியாபித்திருப்பதால்‌ திரிவிக்கரமனெனப்படுகிறாய்‌. | என்று
சொல்லப்பட்டபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

வேதங்களால்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டதாகையாலும்‌,
பரத்வத்தையும்‌. ஸெளலப்யத்தையும்‌ ஒருங்கே காட்டுவ தாகையாலும்‌.
எல்லார்‌ தலையிலும்‌ ஓக்கத்‌ திருவடியை வைத்த பெருங்குணத்தைப்‌ பேசுவதாகையாலும்‌
திரிவிக்ரமாவதாரம்‌ முதலில்‌ அதுபவிக்கப்பட்டது.

————-

அடுத்த படியாக இத் திரிவிக்ரம மூர்த்திக்கும்‌ காரண பூதமான வாமன மூர்த்தியின்‌ பெருமை பேசப்படுகிறது,
“த்ரஷ்ட்ரூக்‌ ஸ்வகாந்த்யா வாமாநி ஸுகரி நயதி’
காண்ப வர்களைத்‌ தன்‌ ஓளியால்‌ ஸுகமுள்ளவர்களாகச்‌ செய்கிறான்‌ என்று வாமன சப்தத்துக்குப்‌ பொருள்‌. “
ஸர்வாணி வாமாநி நயதி “ˆ [எல்லாரையும்‌ ஸுகமுடையவர்களாகச்‌ செய்கிறான்‌.] என்‌ று
சாந்தோக்ய உபனிஷத்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்தது,
“ கொள்ள மாளா இன்பவெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ வள்ளலேயோ!
வையங்கெண்ட வாமனாவோ!” என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ வாமன சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
“ வாமஸ்‌ ஸுந்தர மூர்த்யோ:” என்கிற படியே
மிகுந்த வடிவழகையுடையவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ்விரண்டு பொருள்களாலும்‌ அவன்‌ அலௌகிக ஆகர்ஜஹகமான வடிவழகையுடையவன்‌ என்ற தாயிற்று.
கடலைக்‌ குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரம மூர்‌த்தியின்‌ ஸெளந்தர்யமெல்லாம்‌
இச் சிறிய உருவில்‌ வெள்ளமிடுமாகையாலே இப்பெருமானின்‌ அழகு பேச வொண்ணாததாயிருக்கும்‌.
அவாங்மநஸ கோசரமான இவ்வழகிலே வேதமும்‌. புராணங்களும்‌. ஆழ்வார்‌களும்‌ ஆழங்காற்படுவர்கள்‌.
“ ஸர்வாணி வாமாமி நயதி ”’ என்றது வேதம்‌,
ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத்‌ ருக்‌ ”
திவ்யமான சரீரத்தையுடையவன்‌ வாமனன்‌.என்று புராணம்‌ பேசிற்று.
“மரயக் கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கை கால்‌
தூய செய்ய மலர்களா சோதிச்செவ்வாய்‌ முகிழதா
சாயல்‌ சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்‌
வாசத்தடம்போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே?’ என்றும்‌,
“ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்‌கம்‌” என்றும்‌,
°” வாமனன்‌ என்‌ மரதக வண்ணன்‌ தாமரைக்‌ கண்ணினன்‌ காமனைப் பயந்தாய்‌ !” என்றும்‌
“ மாண் குறள்‌ கோல வடிவு காட்டி ” என்றும்‌.
“ குரை கழல்கள்‌ நீட்டி மண்கொண்ட கோல வாமனா” என்றும்‌ நம்மாழ்வாரும்‌,
“சத்திரமேந்தித்‌ தனியொரு மாணியாய்‌ உத்தரவேதியில்‌ நின்ற ஒருவனை
கத்திரியர் காணக்‌ காணி முற்றும்‌ கொண்ட பத்திராகாரன்‌ ”’ என்றும்‌,
“காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காணவினிய கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌
“ கொண்ட கோலக்‌ குறளுரு ” என்று: ஆண்டாளும்‌
வேதம்‌ புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்‌.’
(வாமனன்‌ )
இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன்‌றியில்‌ குணங்களாலும்‌ பிறரை ஆநந்திப்பிப்பவன்‌ என்றும்‌ பொருள்‌. கொள்ளலாம்‌.
“மிக்க பெரும்புகழ்‌ மாவலி வேள்வியில்‌ தக்கதிதன்றென்று தானம்‌ விலக்கிய சுக்கிரன்‌ கண்ணைத்‌ துரும்பால்‌ செறிய சக்கரக்கையனே!” _என்றும்‌,
“ மதியினால்‌ குறுள்மாணாய்‌ உலரகு அளந்த கள்வற்கு” என்றும்‌,
“வாட்டமில்‌ புகழ்‌ வாமனனை” என்‌றும்‌,
** வன்மாவைய மளந்க எம்‌ வாமனா!” என்றும்‌,
“ஞாலங்கொள்வான்‌ குறளாகிய்‌ வஞ்சனே!” என்றும்‌.
“கொள்வன்‌ நான்‌ மாவலி மூவடி தா என்ற கள்வனே!” ‘என்றும்‌
அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும்‌ தன்னை அழியமாறி அளிக்கும்‌ அருங்குணத்தில்‌ ஆழ்வார்கள்‌ ஆழங்காற்ப்ட்டார்கள்‌
(வாமனன்‌)
“ வடிவழகைச்சொல்லுகிறதென்‌ னுதல்‌;
நன்மை களைத்‌ தருமவனென்னுதல்‌ ” என்று நம்பிள்ளை ஈட்டில்‌ (2-27-6) அருளிச்செய்தபடியே,
வாம சப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்‌:
வஸ்துக்களைச் சொல்லி வாமனன்‌ ‘ என்று அவைகளைத்‌ தருமவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

“மருவித்‌ தொழும்‌ ‘மனமே தந்தாய் வல்லை காண என் வாமனனே என்று இவ் வர் த்தத்தை அருளிச்செய்தார்‌.
(வாமனன்‌)
ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும்‌.
மஹாபலிக்குப்‌ பாதாளத்திலே நிலையான ஸாம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்தும்‌,
உலகிலுள்ள: எல்லாச் சேதனர்‌கள்‌ தலையிலும்‌ தன்‌ திருவடிகளை வைத்தும்‌, –
இப்படி எல்லாருக்கும்‌ ஸுகத்தைத்‌ தந்தவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
* வாமனன்‌ ‘ என்னும்‌ திருநாமத்துக்குச்‌ சிறிய உருவை உடையவன்‌ என்றும்‌ பொருளுண்டு என்பது பிரஸித்தம்‌.
இதையே எல்லா ஆழ்வார்களும்‌ குறளுரு என்று அருளிச்செய்தனர்‌.
(வாமனன்‌) .
‘ மத்யே வாமந மாஸீநம்‌ விங்வே தே,வா உபாஸதே ‘
ஸர்வ சேதனர்களின்‌ ஹ்ருதயத்திலும்‌ வீற்றிருக்கும்‌ வாமனனை ( எல்லா தேவர்‌ களும்‌ உபாஸிக்கிறார்கள்‌.]
என்று வேதத்தில்‌ சொல்லிய படியே ஹ்ருதய கமலத்தில்‌ அங்குஷ்ட மாத்ரனாயெழுந்தருளி யிருக்கும்‌
பெருமான்‌ வாமன சப்தத்தால்‌ சொல்லப்படுவ தாகவும்‌ கொள்ளலாம்‌.
“வாமனன்‌ நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை என்‌ நெஞ்சகம்‌ என்று உணர்த்தினார்‌.

—————-

ஆக: இப்படி வாமனாவதாரத்தைச்‌ சொன்னபின்‌ இப்படி ப்ரஹ்மசாரியாய்‌ அவதரித்த அவதாரத்திலும்‌
பிராட்டியை விட்டுப்‌ பிரியாமல்‌ மார்பிலே தரித்திருப்பவன்‌ என்று உரைக்கிறது
* ஸ்ரீ தரன் . என்னும்‌ திருநாமம்‌.
“ வாமனனே மாதவா ˆ” என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார்‌.
“க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம்‌ வதூ,ம்‌ வக்ஷ:ஸ்த,லாலயாம்‌”
திருமார்பிலே கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால்‌ மறைத்‌துக்‌ கொண்டு வந்தான்‌
என்கிற படியே. மஹாபலியின்‌ யாக சாலைக்கு எழுந்தருளிய போதும்‌. திருமார்பிலிருந்த பிராட்டியை
மான்‌ தோலினால்‌ மறைத்துக்கொண்டு வந்தான்‌ வாமனன்‌ என்று ப்ரஸித்தமிறே.
“ஏவம்‌ ஜகத்ஸ்வாம்‌ தேவதே,வோ ஜரார்தந: |
அவதாரம்‌ கரோத்யேஷா தத்ர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! .
ராக,வத்வே ப,வத்‌ ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி |
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.அநபாயிநீ ॥
தேவத்வே தே,வதே,ஹயம்‌ மறுஷ்யத்வே ச மாநுஷீ |
விஷ்ணோர்‌ தே,ஹா நுரூபாம்‌ வை கரோத்யேஷாத் மநஸ்த நும்‌।।”
தேவ தேவனாயே பகவான்‌ அவதாரம்‌ செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும்‌ அவனுக்குத்‌ துணையாகத்‌ தோன்று கிறாள்‌.
எம்பெருமான்‌ ராகவனாய்‌ அவதரித்த போது இவள்‌ ஸீதை யானாள்‌.
அவன்‌ கிருஷ்ணனாய்ப்‌. பிறந்தபோது இவள்‌ ருக்மிணியானாள்‌.
மற்ற அவதாரங்களிலும்‌ இவள்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவளாயிருக்கிறாள்‌.
அவன்‌ தேவனாகும் போது தேவ தேஹத்தைக்‌ கொண்டவளாயும்‌
மனிதனாகப் பிறக்கும்‌ போது மனித வுருவம்‌ கொண்டவளாயும்‌,
இப்படி விஷ்ணு வினுடைய தேஹத்திற்குப்‌ பொருந்தியதாகத்‌ தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைச்‌ செய்து கொள்ளுகிறா பிராட்டி.என்று
விஷ்ணு புராணத்தில்‌ உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது.
“தாம்‌ ரத்நமிவ அர்ச்சிஷம்‌ புஷ்பமிவ ஸூரபிம்‌ இந்துரிவ சந்த்‌ ரிகாம்‌ அம்ருதமிவ ஸ்வாதுதாம்‌
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதர :।
“ஹி ஹாது மியம்‌ மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”’ ரத்னம்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,பூ மணத்தை தரிப்பது போலவும்‌ சந்திரன்‌ தன்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,
அம்ருதம்‌ இனிமையை தரிப்பது போலவும்‌, அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்பந்தத்தினால்‌
தரிக்கிறனாகையால்‌ ஸ்ரீதரனாகிறான்‌.
“மனத்தை ஜயித்தவர்களைக்‌ கீர்த்தி வீட்டுப்‌ பிரிய வொண்ணாமல்‌ விளங்குவது போல்‌
இப் பிராட்டியும்‌ ` இப் பெருமானை விட்டுப்‌ பிரியவல்லளல்லள்‌ ” என்று சொல்லப்பட்ட து.
என்‌ று ஆசார்யாக்‌ரேஸரரான பராசர பட்டர்‌. வியாக்க்யானம்‌ செய்தருளினார்‌.
(ஸ்ரீதரன்‌)
‘ ஸ்ரீ்‌ என்று பெரிய பிராட்டியார்‌ சொல்லப்படுகிறார்‌.
அவரைத் தரிப்பவனாகையால்‌ புருஷோத்தமனும்‌ ஸ்ரீதரன்‌ எனப்படுகிறான்‌.
பகவானுக்கு நாராயண நாமம்‌ அஸாதாரணமாய்‌ விளங்குவது போல்‌
பிராட்டிக்கும்‌ ‘ ஸ்ரீ: ‘ என்னும்‌ இத்திரு நாமம்‌ அஸாதராரணமாயிருக்கிறது.
“ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம்‌ த்வாம்‌ வயம்‌ ‘”
பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:’ என்பது திருநாமம்‌. உம்‌ டெருமையை ஈாங்கள்‌ எப்படிச்‌ சொல்லுவோம்‌]
என்றாரன்றோே ஆள வந்தார்‌.

நாராயண நாமத்தைப்போல்‌ இத் திருநாமமும்‌ பல பொருள்‌களை உடையது.
அவைகளை இனி விவரிப்போம்‌.
” மிங்‌-ஸேவாயாம்‌ ” என்கிற தாதுவிலிருந்து இந்த ஸ்ரீப்தம்‌ உண்டான்தாகக்கொண்டால்‌.
* (அகில சேதனர்‌ களாலும்‌ ) ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌ ”’ என்றும்‌ “
(எம்பெருமானை) ஆஸ்ரயித்திருக்கிறாள்‌ ” என்‌றும்‌ இரு பொருள்கள்‌ ஏற்படும்‌.
°” ய்ரூ-விஸ்தாரே ” என்னும்‌ தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம்‌ தோன்‌ றியதாகக்‌ கொண்டால்‌,
“(அடியார்களுடைய குணங்‌களை) விருத்‌தி யடையச் செய்கிறாள்‌ ” என்றும்‌,
“(தன்‌ குணங்களாலும்‌ விக்‌,ரஹங்களா லும்‌ உலகை யெல்லாம்‌)வியாபித்திருக்‌ கிறாள்‌” என்றும்‌ பொருள்படும்‌;
“’ங்ரு-ஹிம்ஸாயாம்‌” என்கிற தாதவிலே ஸ்ரீ சப்தம்‌ நிஷ்பந்கமாகிறதென்‌ றுகொண்டால்‌, ”
” (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்‌) போக்கடிப்ப வள்‌ ” என்று ஸ்ரீசப்தத்துக்குப்‌ பொருளாகும்‌
“ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம்‌ உண்டாகிற தென்‌ று கொண்டால்‌
^ (அடியார்களுடைய முறையீடுகளைக்‌) கேட்டவள்‌ ^ என்றும்‌,
^” அவைகளை எம்பெருமானைக்‌ கேட்பிப்பவள்‌ ” என்றும்‌ பொருள்படும்‌.
இப்‌ பொருள்களெல்லாம்‌
“” மருணாதி நிகிலாந்‌ தேஷாம்‌ ங்ரூணாதி = குணைர்‌ ஜகத்‌ |
ஸ்ரீயதே சாகிலேர்‌ நித்யம்‌ ஸ்ரயதே ச பரம்‌ ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம்‌ ங்ருணதீமபி ||”
சேதனர்களுடடய எல்லாப்‌ பாவங்களையும்‌ போக்கடிக்கிறாள்‌ ;
உலகம்‌ முழுவதையும்‌ குணங்களால்‌ வியா பிக்கிறாள்‌;
எல்லாச்‌ சேதனர்களாலும்‌ எப்போதும்‌ ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌
பரம ப்ராப்யமான பரம புருஷனை ஸர்வ காலமும்‌ ஆஸ்ர யித்திருக்றொள்‌;
(௭ம்பெருமானை) ஆஸ்ரயித்திருப்பவளா கவும்‌, (மற்றவர்களால்‌) ஆஸ்ரயிக்கப்படுபவளாகவும்‌.
(சேதனர்‌ களின்‌ குறைகளைக்‌) கேட்பவளாகவும்‌,- எம்பெருமானை அக்குறைகளைக்‌ கேட்பிப்பவளாகவும்‌
இவளை அறிகிறார்கள்‌ – என்று பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ பேசப்பட்டன,
“ அதில சேதனர்க்கும்‌ ஆஸ்ரயணீயையாய்‌. தான்‌ அவனை ஆஸ்ரயித்து லப்‌,த.ஸ்வரூடையாய்‌,
ஆஸ்ரித குணங்களை விஸ்தரிப்பித்து, ஆஸ்ரித யோக்திகளை வளர்த்து ,
இவர்களை அங்கீகரிக்கைக் கனுகுணமான வாகாரங்களை அவனுக்கு காட்டி அருளுதல்
முதலான ஆகாரங்கள்‌
புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேஷிதங்களாகையாலே, .
இந்த நிருக்திகளெல்லா த்தையும்‌. ஸ்ரீயப்தத்துக்கு அர்‌ த்தமாகஆசார்யர்கள்‌ அனு சந்திப்பார்கள் ” என்று
(அழகியமணவாளப்பெருமாள்‌) நாயனாராச்சான்‌ பிள்ளை சதுஸ் லோக வியாக்கியானத்திலே அருளிச் செய்தார்‌.
இவருடைய திருத் தமப்பனாரான பெரியவாச்சான்‌ பிள்ளை பிராட்டி இச் சேதனனுடைய குறைகளைக்‌ கேட்கும்‌ ப்ரகாரத்‌ தையும்‌,
எம்பெருமானைக்‌ கேட்பிக்கும்‌ ப்ரகாரத்தையும்‌, பரந்த ரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீஸூக்திகள்‌ பின்வருமாறு: —
“ ஸ்ருணாதி’ என்‌ று கேட்குமென்கையாலே சேநரோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
*ஸ்ராவயதி ‘ என்‌ று கேட்பீயாநிற்கும்‌ என்‌கையாலே ஈஸ்வர னோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
அதாவது:- “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜனனியான தேவரீர்‌ திருவடிகளொழுியப்‌ புகலில்லை;
இனி நான்‌ ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய்‌ ரக்ஷித்தல்‌, அவனுக்கு , ஸ்வாதந்தர்ய பாத்ரமாய்‌
நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநந்ய க,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்‌’ என்று இவன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்கையும்‌;
அதுக்கு மேலே வெந்நீருக்குக்‌ குளிர் நீர்போலே, நிரங்குச ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்‌” என்‌கிறபடியே
அநபி,ப,வநீயனான ஈஸ்வரனைச்‌ தன்னுடைய போக்யதா தியயத்தாலே பதமாக்கி:
நாயன்தே! இச் சேதனனை அங்கீகரித்தருளீர்‌ ‘ என்னும்‌; :
ஆவதென்‌? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா ‘ என்‌று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான ஸாஸ்த்ர மர்யாதையை அதிலங்கி,த்து
நம்‌ நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம்‌ பண்ணிப் போந்தவனல்‌ லனோ ?
இவனை யங்கீகரிக்கையாவதென்‌ ? ‘ எள்னும்‌ ஈஸ்வரன்‌ *
அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்‌கி ரக்ஷித்கருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; ‘
பொறையை நோக்குகைக்காக ஸாஸ்‌த்ர மர்யாதையைக்‌ குட நீர்வழியவோ?” என்னும்‌ ஈஸ்வரன்‌; ”
சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வபாவிகமான க்ஷமா தத்வத்தைக்‌ குடநீர்‌ வழியவோ?’ என்னும்‌ பிராட்டி; :
ஷமையை நோக்கில்‌, சாஸ்த்ர மர்யாதை குலையும்‌;
சாஸ்த்ர மர்யாகையை, நோக்கினால்‌ க்ஷமா தத்வம்‌ குலையும்‌;
இரண்டும்‌ குலையாதொழிய வேண்டும்‌; செய்யவடுப்பதென்‌?’ என்னும்‌ ஈஸ்வரன்‌; “
கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால்‌ அத்தனையே; அவை இரண்டும்‌ குலையாதபடி வழி சொல்லுகிறேன்‌ :
அப்படியே செய்தருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; :
இரண்டும்‌ குலையாமல்‌ இச் சேதனனை நோக்க வழியுண்டாமாகில்‌ நமக்குப்‌ பொல்‌ லாதோ?
சொல்லிக் காண்‌! ‘ என்னும்‌ ஈஸ்வரன்‌; :
ஆனால்‌. சாஸ்தர மர்யாதையை விமுகர்‌ விஷயமாக்குவது:
உம்முடைய ஷமையை அபிமுகன் விஷயமாக்குவது;
இரண்டும்‌ ஜீவித்த தாயறும்‌ ` என்னும்‌ விஷயவிபாக;ம்‌ பண்ணிக் கொடுக்கும்‌ பிராட்டி;
அத்தைக்‌ கேட்டு : அழகிய விபாக;ம்‌!’ என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும்‌ ஈஸ்வரன்‌;
ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈஸ்வரன்‌ அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக்‌ கேட்பித்தருளுகையும்‌.
” இப்படிப்‌ பிராட்டியால்‌ புருஷ காரம்‌ செய்யப்பெற்ற சேதனனையே ‘ ஸர்வேஸ்வரன்‌ அங்கிகரிக்கிறான்‌ என்பதை
“என்னைத்‌ தீ மனம்‌ கெடுத்தாய்‌ உனக்கென்‌ செய்கேன்‌? என்‌ சிரீதரனே!” ` என்று ஆழ்வாரும்‌ அருளிச் செய்தார்-

“மாதவன்‌ ‘ என்று
எம்பெருமான்‌ வைகுண்டத்தில்‌ பிராட்டியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்‌லிற்று.
‘ஸ்ரீ தரன்‌’ என்று
அவதாரம்‌ செய்யும் போதும்‌ அவளைத் தரித்திருககிறான் என்கிறது.
ஆகையால்‌ புநருக்‌தி தோஷம் இல்லை..

த்வயத்தில் போல் உபாயத்வ உபேயாத்வ இரண்டு ஆகாரங்களும் உண்டு என்று காட்டவே இந்த இரண்டு திரு நாமங்களும்

“—————

இப்படிப்‌ பராவஸ்தையையும்‌,
வியூஹ விபவாவதாரங்‌ களையும்‌ அநுபவித்த பிறகு,
* ஹ்ருஷீ கேஸன்‌ ‘ என்று
ஸர்வேஸ்வரன்‌ மனுஷ்யர்களுடைய ஹ்ருதயத்தில்‌ அந்தர்‌ யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமித்துக் கொண்டு
வீற்றிருக்கும்‌ இருப்பு அநுபவிக்கப்படுகிறது.

ஸ்ரீதரன்‌ என்ற திருநாமத்திற்குப்பின்‌ படிக்கையாலே
இந்த அந்தர்‌யாம்யவஸ்தையிலும்‌ எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே
எழுந்‌தருளி யிருக்கிறான் என்பது தோற்றுகிறது.

“ஹ்ருஷீ காணீந்த்‌ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீமோ யதோ பூவாந்‌ |
ஹ்ருஷீகேமுஸ்‌ ததோ விஷ்ணு: க்‌யாதோ தேவேஷு கேஸவ: ॥’
ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச்‌ சொல்‌லுகிறார்கள்‌;
அவ்விந்திரியங்களை நியமிப்பவராயிருப்பதால்‌. விஷ்ணு கேசவன்‌ என்னும்‌ திருநாமங்களையுடைய நீர்‌
தேவர்களுள்‌ * ஹ்ருஷீகேசன்‌ எனப்படுகுகிறீர்‌.
என்று ஹரிவம்‌சத்தில்‌ ஹ்ருஷீகேச சப்தார்‌த்தம்‌ சொல்லப்பட்ட து.
( ஹ்ருஷீ கேசன்‌ )
ஹ்ருஷீகேச சப்தத்தினால்‌ பத்து இந்திரியங்களாகிய தலைகளைக்‌ கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்‌: சொல்லப்படுகிறது,
அந்த ராவணனை தன்னைப் பற்றின அறிவாகிய அம்பை ஏவிக்‌ கொல்லுமவனாகையாலே
இப்பெருமான்‌ ஹ்ருஷீகேசனெனப்படுகிறான்‌.
“தஸ ,இந்த்‌,ரியாஙகம்‌ கேரம்‌ யோ மநோரஜநீசரம்‌ |
விவேகமாரஜாலேந மமம்‌ நயதி யோகிநாம்‌ | ”’
யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாகிற பயங்கர ராஷஸனை.
தன்னைப் பற்றிய அறிவாகிய அம்புக் கூட்டங்களால்‌ அடக்குகிறான்‌- என்று சொல்லப்பட்ட தன்றோ.
“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கை யரக்கர் குலம்‌ முருடுதீர்த்த பிரான்‌ எம்மான்‌” _என்‌று
நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. “
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்‌ டக்குலத்தை எடுத்துக்‌ களைந்த இருடீகேசன் தனக்கு ‘
என்று பெரியாழ்வாரும்‌ இதைப்‌ பாசுரமிட்டருளினார்‌.
*இருடீகேசன்‌ என்னும்‌ இத் திரு நாமத்தினாலும்‌ விரோதி நிரஸந ஸீலத்வம்‌ சொல்லப்படுகிறது.
“ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா”என்‌ று பெரியாழ்வார்‌ இக்குணத்தைப்‌ பேசினார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
தன்னைக்‌ கண்டவர்களுடைய இர்திரியங்‌களை வசப்படுத்துமவன்‌.
ரூப ஒவ்தார்ய குணை: பும்ஸாம்‌ த்‌,ருஷ்டி சித்த அபஹாரிணம்‌ “”
தன்னுடைய ரூபம்‌, வண்மை, குணங்கள்‌ முதலியவற்றால்‌ ஆண் பிள்ளைகளுடைய கண்ணையும்‌. மனத்தையும்‌
அபஹரிக்குமவன்‌- என்று சொல்லப்‌ பட்டதன்றோ. ‘
முடியானே ” என்னும்‌ திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ :-:
நெடியானே! என்று கிடக்கும்‌ என்‌ நெஞ்சமே” என்றும்‌, ‘*
வஞ்சனே! என்னுமெப்போதுமென்‌ வாசகமே ‘” என்‌ றும்‌. “
தாயவனே! என்று தடவும்‌ என்‌ கைகளே ” என்றும்‌.
“உன்னை மெய் கொள்ளக்‌ காண விரும்புமென்‌ கண்களே ” என்றும்‌. :
‘பண் கொண்ட புள்ளின்‌ சிறகொலி பாவித்துத்‌
திண் கொள்ள ஒர்க்கும்‌ கடந்தென்‌ செவிகளே ” என்றும்‌
தம்முடைய இர்திரியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ எல்லா இந்திரியங்களின்‌ அ.நுபவத்தையும்‌ ஆசைப்பட்டு
எம்பெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ.
” நாக்கு நின்னை யல்லாலறியாது ” ,
“கண்டு நானுன்னை உகக்க ”
“ வேறொருவரோடென்‌ மனம்‌ பற்றாது ^”
“என்னப்பா என்னிருடீகேசா ” என்று
தம்முடைய இந்திரி யங்களெல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ ஈடுபட்டபடியைப்‌ பெரியாழ்வாரும்‌ பேசியருளினார்‌.
தன்னுடைய அவயவ சோபை யாலும்‌. ஆபரண சோபையா லும்‌ பிறருடைய இந்திரியங்களை வசப்படுத்துகிறான்‌ -என்று பெரியாழ்வாரும்‌
“மின்னுக் கொடியும்‌ ஓர் வெண் திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌
பின்னல்‌ துலங்குமரசிலையும்‌ பீதகச்சிற்றுடையொடும்‌
மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்போலக்‌ கழுத்தினில்‌ காறையொடும்‌
தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்நடை’ நடவானோ ”” என்று அருளிச்செய்தார்‌,
“இருடீகேசன்‌ வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல்‌
செய்ய வாயும்‌ முலையும்‌ அழகழிந்தேன்‌ யான்‌” என்று ஆண்டாளும்‌
தன்னுடைய இர்திரியங்‌களெல்லாம்‌ இருடீ கேசனிட்ட வழக்காயிருக்கின்‌றன என்று அருளிச்செய்தாள்‌.
இப்படி எம்பெருமான்‌ ஹ்ருதய கமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்‌துடன்‌ அந்தர்யாமியாய்‌
எழுந்கருளியிருக்‌ கிறான்‌ என்னுமிடத்தை
“ வெள்ளைச்‌ சுரிசங்கொடாழியேந்தித்‌ தாமரைக்கண்ணனென்‌ நெஞ்சினூடே
புள்ளைக்கடாகின்‌ற வாற்றைக்‌ காணீர்‌ என் சொல்லிச் சொல்லுகேன்‌ அன்னைமீர்காள்‌? “என்றும்
“கல்லும்‌ கனை கடலும்‌ வைகுந்த வானாடும்‌
புல்லென்றொழிந்தன கொல்‌ ஏ பாவம்‌!-—வெல்ல
நெடியான்‌ நிறம்‌. கரியான்‌ உள் புகுந்து நீங்கான்‌
அடியேனதுள்ளத்தகம்‌ ?’ _— என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
“நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்‌(து) இருப்பதுவும் விண்‌ கிடப்பதும்‌
நற்பெரும்‌ திரைக்கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌
அற்புதன்‌ அநந்த சயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌
இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுள்ளே ”’ என்று திருமழிசைப்பிரானும்‌,
“வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ இடவசைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே” என்றும்‌,
“அநந்தன் பாலும்‌ கருடன் பாலும்‌ ஐது நொய்தாக வைத்தென்‌ மனந்தன்னுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்‌ எம்பிரான்‌!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌.
வேதமும்‌ “நீல தோயத மத்‌ யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா” முதலான விடங்களில்‌ இவ்விஷயத்தைச்‌ சொல்லிற்று.
“ லாபஸ்தேஷாம்‌ ஜயஸ்தேஷாம்‌ குதஸ்தேஷாம்‌ பராபவ: |
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ””
எவர்சளுடைய ஹ்ருதயத்தில்‌ காயாம் பூ வண்ணனான பெருமான்‌ நன்கு பொருந்தி யிருக்கிறானோ,
அவர்களுக்கே லாபமும்‌ ஜயமும்‌ உண்டாம்‌;
அவர்களை அவமானம்‌ அணுகாதே என்று ருஷி களும்‌ இவ்விஷயத்தைச்‌ சொன்னார்கள்‌
“நஞ்சீயர்‌ கோயிலுக்கு எழுந்தருளா நிற்க வழியிலே பிள்ளானைக் கண்டு.
‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும்‌ உண்டோ?’ என்று. பிள்ளானைக்‌ கேட்க.
பாஷ்யகாரர்‌ தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்திய।யிருக்கும்‌;
ஆகிலும்‌, எம்பார்‌ ஒருநாள்‌. உபாஸக அநுக்ரஹ ஸஹார்த்தமாக ஆஸ்ரிதருடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்‌? என்று அருளிச்செய்யக்கேட்டேன்‌? என்று பணித்தான்‌ ‘
என்று ஈட்டில்‌ எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும்‌. இவ்விடத்தில்‌. அனுஸந்திக்கத் தக்கது.
பிள்ளைலோகாசார்யரும்‌ “அந்தர்யாமித்வமாவது: அந்த:ப்ரவிஸ்ய நியந்‌தா வாயிருக்கை.
ஸ்வர்க்காதி ப்ரவேசாதி, ஸர்வாவஸ்தைகளிலும்‌, ஸகல சேதநர்க்கும்‌ துணையாய்‌. அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே
ஸூ பாஸ்ரயமான திருமேனியோடே ‘கூடிக்கொண்டு அவர்‌ களுக்கு த்‌யேயனாகைக்காகவும்‌,
அவர்களை ரக்ஷிக்கைக்காகவும்‌ -அந்தர் பூதனாய் கொண்டு ஹ்ருதய கமலத்‌திலே எழுந்தருளி யிருக்கும்‌ இருப்பு.” என்று
தத்வ த்ரயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
` ஹ்ருஷ்‌ ” என்னும்‌ தாது அனந்தத்‌தைக் குறிக்கும்‌.
௧” என்னும்‌ பதம்‌ ‘ஸுகம்‌’ என்னும்‌ பொருளையுடையது.
கம்‌ ப்ரஹ்ம ‘ என்ற வேதவாக்யம்‌ காண்க,
ஸம்‌ என்னும்‌ பதம்‌ ஐஸ்வர்யத்தை உடையவன்‌ என்று பொருள்படுகிறது.
ஆக, ஹ்ருஷீகேசன்‌ ‘ என்னும்‌ திருநாமத்தால்‌, ஹர்ஷத்தையும்‌, ஸெளக்யத்தையும்‌, ஐச்வர்‌ யத்தையும்‌
உடையவன்‌ என்று சொல்லப்பட்டதரகிறது,
“ ஹர்ஷாத்‌ ஸெளக்‌,யாத்‌ ஸுகைஹ்வர்யாத்‌ ஹ்ருஷீகேமத்வமங்நுதே ‘
ஹர்ஷத்தையும்‌. ஸெளக்யத்தையும்‌, ஸுகமான ஐஸ்வர்யத்‌ தையும்‌ உடைத்தாயிருக்கையால்‌
ஹ்ருஷீகேசனாயிருக்கும்‌ தன்மையை அடைகிறாய்‌.
என்று இவ்வர்த்தம்‌ புராணங்‌களில்‌ பேசப்பட்டது.
“ஸூர்யாசந்த்‌,ரமஸோ: மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:।
பேளதயந்‌ ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்‌॥
பேதநாத்‌ ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம்‌ பவேத்‌ ।
அக்‌நீஷோமக்ருதைரேவம்‌ கர்மபி,: பாண்டு,நந்தந ॥
ஹ்ருஷ்கேஸ மோ ஹமீமமா நேர வரதே, லோகபாவந: ||
கேசங்கள்‌ எனப்படும்‌ ஸூர்ய சந்திர கிரணங்களால்‌ நான்‌ உலகிலுள்ளவர்களை யெல்வாம்‌ எழுப்பிக் கொண்டும்‌
தூங்கச்‌ செய்து கொண்டும்‌ வீளங்குகிறேன்‌. இப்படி எழுப்புவதி னாலும்‌, தூங்கச்செய்வதா லும்‌
உலகிற்கு ஹர்ஷம்‌ உண்டாகும்‌. பாண்டவ !
ஸூர்ய சந்திரர்களைக் கொண்டு செய்யப்படும்‌ -இக்கருமங்களால்‌, ஈஸ்வரனும்‌. வரமளிப்பவனும்‌,
லோக பாவனனுமான நான்‌ ஹ்ருஷீ கேசன்‌ எனப்படுகிறேன்‌. என்று மோக்ஷதர்மத்தில்‌
ஹ்ருஷீகேச சப்தத்தின்‌ மற்றொரு பொருள்‌ விவரிக்கப்பட்டது.
* ஸூர்யரங்மிர்‌ ஹரிகேஸ : புரஸ்தாத்‌ ”
ஸுூர்ய கிரணமானது பகவான்‌ ஹரியீன்‌ கேச மெனப்படுகிற. து] என்று வேதமும்‌ இவ்வர்த்தத்தை உணர்த்திற்று.
” கேஸ ‘ சப்தத்தினால்‌ எம்பெருமானுடைய திருக்குழல்கற்‌றை சொல்லப்படுவதாகக்கொண்டு.
கண்டவர்களுக்கு ஹர்ஷத்‌ தைக்கொடுக்கும்‌ மயிர்முடியை உடையவன்‌ என்றும்‌ ஹ்ருஷீ கேச சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
கேசவன்‌ என்னும்‌ திருநாமத்திற்கும்‌, இப்படி ஒரு பொருள்‌ உரைக்கப்‌ பட்டது.
அங்கு அநுஸந்‌ திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும்‌ படிப்பது.
இப்படிப்‌ பலபொருள்களை உடையதேயானாலும்‌. *அந்தர்யாயியாய்‌ இந்திரியங்களை நியமித்திக் கொண்டு எழுந்‌தருளியிருக்குமவன்‌ ‘ என்னும்‌ பொருளே இங்கு முக்ய மாகக் கடவது.

————–

இம் மாதிரியாக விபவ மூர்த்திகளையும்‌.
அந்தர்யாம் யவதாரத்தையும்‌ அதுபவித்த பிறகு.
இம்மூர்‌த்திகளுக்கெல்லாம்‌ மூலாவதாரமாய்‌ விளங்குபவனும்‌,
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்தி நாதனை அனு ஸந்திக்கிறது
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமம்‌.
இங்கு சில விஷயங்களை அறியவேண்டும்‌.
அநிருத்த நாராயணனே பிரமனைப்‌ பிறப்பித்தவனென்றும்‌.
எல்லா அவதாரங்‌களுக்கும்‌ மூலமூர்த்தி யென்றும்‌ சொல்லும்‌ ப்ரமாணங்கள்‌ முன்பே காட்டப்பட்டன.
பத்ம நாபன்‌ என்‌ னும்‌ பெயரிலிருந்து ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்‌ படிக்கப்படும்‌
இவ் விஷ்ணு மூர்த்தியே பிரமனைப்‌ படைத்தவரென்று தோற்றுகிறது.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷரார்ணவ நிகேதந 😐
நாக பர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌॥’
என்‌று திருப் பாற் கடலில்‌ துயிலும்‌ பெருமானே கிருஷ்ணன்‌ முதலிய அவதார மூர்த்திகளுக்கு
மூல பூதர்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.
இவை எப்படிப்‌ பொருந்தும்‌ எனில்‌:
அநிருத்தனிடமிருந்து ஷீராப்தி நாதன்‌ தோன்‌றுகிறான்‌ என்றும்‌
அவரிடமிருந்து மற்ற அவதாரங்கள்‌ எற்படுகின்‌றன என்றும்‌ கொண்டால்‌
அவதார மூர்த்திகளுக்கு அநிருத்தரையும்‌.
திருப்பாற்கடல்‌ நாதனையும்‌ மூல மூர்த்‌தியாகச்‌ சொல்லலாம்‌.
“ பத்ம நாபாதிகா: ஸர்வே….அநிருத்‌,தாத்‌ ஸமுத்பந்நா பாத்‌, இவேஸ்வரா:” என்று
முன்‌ எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும்‌ இது பொருந்தும்‌.
மஹா ப்ரளயத்தில்‌ .அநிருத்தரும்‌.
நைமித்திக ப்ரளயத்தில்‌ க்ஷீராப்தி நாதனும்‌ பிரமனைப்‌ பிறப்பிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.
அன்‌றிக்கே
தர்ம்யைக்யத்தாலே இருவரையும்‌ ப்ரஹ்மோத்பா தகர்களாகக்‌ கூறுவதாகவும்‌ கூறலாம்‌,
புருஷ ஸூக்தத்திலும்‌, *பாதேள5ஸ்ய” என்று அநிருத்தரை எடுத்து. :
இஹாபவாத்புக:” [இங்கு மறுபடியும்‌ அவதரித்தார்‌] என்று அவருடைய அவதார பூ,தரான ஷீராப்‌தி நாதனைச்‌ சொல்லுவதாகவும்‌,
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌’ என்று அவருடைய அவதார வ்யாப்தியைச்‌ சொல்லுவதாகவும்‌,
* தஸ்மாத்‌ விராட,ஜாயத’ என்று
அந்த ஷீராப்தி நாதனிடமிருந்தே பிரமன்‌ பிறந்தான்‌ என்று சொல்லுவதாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ பத்மநாபே அமரப்‌ரபு,:’ என்று
வ்யூஹத்தில்‌ நான்காவதான அநிருத்தரைக் குறித்தும்‌,
பத்மநாப; ப்ரஜாபதி: ‘ என்று முதல்‌ அவதாரமான விஷ்ணுவைக் குறித்தும்‌
பத்மநாப சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ பட்டிருப்பதையும்‌,
பத்மநாப: ப்ரஜாபதி: ‘ , என்‌ற விடத்தில் பாஷ்யத்தில்‌
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயம்‌ சைதத்‌ த்‌ஸஏஷ்டவ்யம்‌ ”
இந்த ப்ரஹ்ம ஸ்ருஷ்டி நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும்‌ |
என்‌று பட்டர்‌ அருளிச் செய்ததையும்‌ இங்கு அதுஸந்திப்பது.

இனி இப்பத்மநாப சப்தார்த்தை விவரிப்டோம்‌.
(பத்மநாபன்‌) =
“” ஸர்வ ஜகத் காரணம்‌ யஸ்ய ஸ:””
எல்லா ஜகத்துக்கும்‌ காரணமான “பத்மத்தை . நாபியில்‌ உடையவன்‌ எவனோ அவன்‌.
என்று சங்கர பாஷ்யத்தில்‌. பொருளுரைக்கப்பட்டது . ”
பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ!” என்று ஆழ்வாரும்‌. –
* ஊழிமுதல்வன்‌…….. பாழியந்தோளுடைய பற்பநாபன்‌ ” என்று ஆண்டாளும்‌
பத்மநாப சப்தத்திற்கு அர்த்தம்‌ பண்ணினார்கள்‌.
“ தாதோத்‌ தார: ஸம்விமரதி பஞ்சவர்‌ஷமாதாநி து ”
(பத்ம ஸம்பவனான ) பிரமன்‌ (தாமரைக் கொடியில்‌ ) மேல்‌ நோக்கியவனாய்‌ ஐநூறு வருஷங்கள்‌ நுழைந்கான்‌.-என்றும்‌
“ தர்த்துர்‌ நாப்‌,யாம்‌ புஷ்கரம்‌ ப்ராதுர்பவதி”
ஸர்வ லோகத்தை தரிப்பவனான நாராயணனுடைய நாபியில்‌ தாமரை உண்டாயிற்று.] என்றும்‌,
^ அஜஸ்ய நாபாவத்‌,யேகமர்ப்பிதம்‌ ”
பிறப்பிலி யான பெருமானின்‌ நாபியில்‌ ஒரு ( தாமரை ) தோற்றுவிக்கப்பட்டது.] என்‌றும்‌,
‘யந் நாபி பத்மநாப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர்‌ விஸ்வஸ்ருட்‌, விஸ்வரூப:”
உலகை உருவ மாகச்‌ கொண்டவனும்‌, உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன்‌
எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்‌நினானோ ….] என்றும்
மஹா உப நிஷத்திலும்‌, “ ப்ரஹ்ம வை ப்‌,ரஹ்மாணம்‌ புஷ்கரே$ஸ்ருஜத்‌”
ப்ரஹ்மம்‌ பிரமனைத்‌ தாமரையில்‌ தோற்று வித்தது என்றும்
அதர்வண வேதத்திலும்‌, “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸம்ப,வத்‌””
அந்தப்‌ பிரமன்‌ ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில்‌ தோன்‌ நினான்‌– என்றும்‌
பல வாக்கியங்களால்‌ வேதத்திலும்‌
“யத்‌ தத்‌ பத்மமபூத்‌ பூர்வம்‌ தத்ர ப்‌ரஹ்மா வ்யஜாயத |
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: இத்யவதரர்யதாம்‌ |
ஸரிவாத்‌ ஸ்கந்தஸ்‌ ஸ்ம்பபபூவ ஏதத்‌ ஸ்ருஷ்டி சதுஷ்டயம்‌ (|
(பகவானுடைய’ உந்தியிலிருந்‌து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோே அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌,
பிரமனிட மிருந்தே-சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது.
சிவனிட மிருந்து ஸ்கந்தன்‌ உண்டானான்‌.
இது (முதலில்‌ ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்‌
“கதாசித்‌ தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்‌,யாம்‌ காமாத,ஜாயத |
திவ்யமஷ்டதனம்‌ பூரி பங்கஜம்‌ பார்த்தி,வம்‌ மஹத்‌ ॥
யஸ்ய ஹேமம திவ்யா கர்ணிகா மேருருச்யதே |”
அப் பெருமான்‌ ஒரு ஸமயம்‌ யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்‌
அவனுடைய திருநாபியில்‌, எட்டு தளத்தையுடையதும்‌, ப்ருதிவி ஸம்பந்த முள்ளதும்‌, மிகப்டெரியதும்‌ அழகியதுமான தாமரை உண்டாயிற்று.
அதனுடைய ஸுவர்ண மயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்‌படுகிற து. என்று
பாத்ம புராணத்திலும்‌ சொல்லட்பட்ட து.
“’நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்‌ கொருகால்‌ தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும்‌.
நாட்டைப் படையென்றயன்‌ முதலாத்‌ தந்த நளிர்‌ மாமலருந்தி
வீட்டைப்‌ பண்ணி விளையாடும்‌ விமலன்‌ தன்னைக் கண்டீரே ” என்று ஆண்டாளும்‌
தாமரை மேல்‌ அயனவனைப்‌ படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும்‌,
“போது தங்கு நான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌
மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று
வேதநூல்‌ ஓதுகின்‌றதுண்மை அல்லதில்லை
மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும்‌.
** அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும்‌.
‘ அங்கமலத்தயன்‌ ” என்றும்‌. “்‌
ஒருவனை உந்திபூமேல்‌ ஓங்குவித்து” என்றும்‌, திருமங்கைமன்னனும்‌.
“செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌” என்‌ றும்‌,
“நான்முகற்குப்‌ பூமேல்‌ பகரமறை பயந்த பண்பன்‌ ` என்றும்‌ பொய்கைப்பிரானும்‌. —
இரும் தண்‌ கமலத்‌ திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌” என்று பூதத்‌ தாழ்வாரும்‌.
“அலரெடுத்த உந்தியான்‌”என்‌ று பேயாழ்வாரும்‌,
“’ ஒரு தானாகித்‌ தெய்வ நான்முகக்‌ கொழுமுளை ஈன்று
முக்‌ கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம்‌ விளைத்த
உந்தி மாயக்கடவுள்‌ மாமுதலடியே”’ என்று நம்மாழ்வாரும்‌
எம்‌ பெருமான்‌ ஸர்வ ஜகத் காரணமான பத்மத்தை நாபியிலே கொண்டு விளங்குவதை அநுபவித்தார்கள்‌.

“’அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:”
எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம்‌ உண்டாயிற்று] என்றார்‌ ஆளவந்தாரும்‌.
“த்ரயோ தேவாஸ்‌ துல்யாஸ்‌ த்ரிதயமிதமத்‌,வைதமதி,கம்‌ த்ரிகாத,ஸ்மாத்‌ தத்த்வம்‌ பரமிதி விதர்க்காந்‌ விகடயர்‌ |
நாபீ பத்‌,மோ ப்‌ரூபங்கீ,பரவதி,தி ஸித்‌,த,ாந்தயதி ந: |”
மும்மூர்த்திகளும்‌ ஸமர்‌’ மூவரும்‌ ஒன்றே “மூன்றைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது பரதத்வம்‌ ‘ என்னும்‌
விதண்டா வாதங்களைப்‌ போக்கடிப்பதாய்‌,
பிரம ருத்திரர்களுக்கு முதற்கிழங்கரயிருப்பதுமான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து
அவனையொழிந்த மற்றவையெல்லாம்‌ அவனுடைய புருவ நெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித்‌ தருகின்‌ றது.
என்று பட்டர்‌ அருளிச்‌ செய்தபடியே பரத்வ நிர்த்தாரணம்‌ செய்துதரும்‌ திருநாமமன்றோ இது.
(பத்மநாபன்‌)
” பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:””
தாமரை போன்‌ற உந்தியை உடையவன்‌ | என்‌ றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“ ஹ்ருத்பத்மஸ்ய நாபெள மத்‌,யே ப்ரகாமாமாஈத்வாத்‌ வா பத்மநாப;””’
ஹ்ருதய கமலத்தின்‌ ஈடுவில்‌ பிரகாசிப்பதால்‌ பத்மநாபனாகிறான்‌.. என்றும்‌ சங்கரர்‌ பொருள் கெண்டார்‌.
இப்படி ஸகலாவதார மூல மூர்த்தியான பத்மநாபாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது.

————–

அடுத்தபடியாக அப்‌ பெருமானுடைய முக்யாவதாரமாகிய க்ருஷணாவதாரம்‌ தாமோதர நாமம்‌ அநுபவிக்கப்படுகிறது.
“பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ அவதாரத்திலும்‌ பரத்வம்‌ பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது.
தாமோதரன்‌’ என்று ஓரிடைச்சிக்குக்‌ கட்டவும்‌ அடிக்கவுமாம்படி நின்ற ஸெளலப்‌, யத்தின்‌ எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது.
* தாம” என்று விந்‌-16 கயிற்றுக்குப்‌ பெயராகையால்‌ கயிற்றை வயிற்றிலுடையவன்‌ என்று
தாமோதர நாமத்திற்குப்‌ பொருளாகிறது.
“ தயோர்‌ மத்‌,யக,தம்‌ பத்த,ம்‌ த௱ம்நா கடம்‌ தயோத;ரே |
ததங்ச தமோத,ரதாம்‌ ஸ யயெள தாமப,ந்த நாத்‌ |!”
அந்த யசோதையால்‌ வயிற்றில்‌ கயிற்றினாலே கட்டப்‌ பட்டவனாய்‌ அம்மரங்களினிடையில்‌ சென்றான்‌.
கயிற்றால்‌ கட்டப்பட்டதால்‌ தாமோதரனாயிருக்கும்‌ தன்மையை அடைந்தான்‌ என்று சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,
“தாம்கா சைவோத;ரே பத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌,நாதுலூகலே”
கயிற்றால்‌ வயிற்றில்‌ கட்டி உரலில்‌ பிடித்துக்‌ கட்டினாள்‌-என்று விஷ்ணு புராணத்திலும்‌ இத்திருநாமம்‌ விவரிக்கப்‌ பட்டது.
ஸர்வ ஸ்மாத் பரன்‌ ஓரிடைச்சியின்‌ கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு
“‘எத்திறம்‌! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே” என்று நம்மாழ்வார்‌ ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்
“கண்ணிநுண்‌ சிறுத்தாம்பி னால்‌ கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‌’” என்று மதுரகவிகளும்‌.
“கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌ காணேடீ ” என்று திருமங்கையாழ்வாரும்‌
இந்நீர்மையிலே ஈடுபட்டனர்‌.
“தாமாநி பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தமோத,ரோ ; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித:
தாம சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம்‌ ( பிரளயகாலத்தில்‌ )
அவனுடைய வயிற்றினுள்‌ விளங்குகிறபடியால்‌ ஸ்ரீதரன்‌ தாமோதரனாகிறான்‌.
என்று புராணத்தில்‌ சொல்லியபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“‘ தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்‌தினார்‌.
“தமாதி, ஸாதநேந உதாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா இதி தமோதர ;,:’
தமம்‌ முதலிய ஸாதனங்‌களால்‌ உதாரமாய்‌ ( உயர்ந்ததாய்‌ ) விளங்கும்‌ புத்தி தமோதரா ‘ எனப்படும்‌.
அந்த புத்தியால்‌ அறியப்படு மவன்‌ தாமோதரன்‌ . என்றும்‌ சங்கரர்‌ பொருள் உரைத்தார்‌.
“தாமாத்‌, தமோதரம்‌ விது;
தாமோதரனை தாமத்தினால்‌ அறிகிறார்கள்‌ என்ற பகவத் வசனம்‌ இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம்‌.
“ தேலாநாம்‌ ஸூகமும் ஸித்வாத்‌ த;மாத்‌, தமோதரம்‌ விது; “` தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும்‌.
கயிற்றினால்‌ கட்டப்பட்டகாலும்‌ தாமோதரனென்று அறிகிறார்கள்‌.
என்ற ப்ரமாண த்தின்‌ படியும்‌ பொருள்‌ சொள்ளலாம்‌.

ஆக. இப்பன்னிரு நாமங்களின்‌ பொருளும்‌ விவரிக்கப்‌ பட்டதாயிற்று.
வாஸுதேவன்‌ முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும்‌
மூன்று மூன்று மூர்த்திகளாகத்‌ தோன்‌றிய கேசவாதி மூர்த்யந்தரங்களுள்ளதாகவும்‌,
இவர்‌கள்‌ நெற்றி முகலிய அவயவங்களில்‌ நின்‌று கொண்டு சரிரத்தை ரக்ஷிக்கறார்களென்றும்‌.
தியானிப்பவர்களுடைய தாபங்களைப்‌ போக்கடிக்கிறார்களென்றும்‌
பாஞ்சராத்ர சாஸ்த்ரத்‌தில்‌ ப்ரதிபாதிக்கப்பட்டது.
இக் கேசவாதி நாமங்‌ கள்‌ அவர்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

———————————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

————

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

————-

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————

மாதவ (1)
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1

மாதவம் (1)
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

மாதவர் (1)
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மாதவன் (20)
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/3,4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/1,2
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மாதவன்-தன் (3)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2

மாதவன்-பால் (1)
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1

மாதவனாரே (1)
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4

மாதவனே (9)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/2,3
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/1,2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
வாயான் மாதவனே – நாலாயி:3940/4

மாதவனை (9)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – நாலாயி:2387/3
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/3,4
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1

மாதவனோடு (1)
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4

மாதவா (8)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/1,2
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/2,3
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/2,3
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1

————

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

கோவியர் (1)
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3

கோவினார் (1)
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2

கோவினை (5)
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

கோவே (22)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

கோவை (14)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

——–

விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2

விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2

விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4

விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4

———–

மதுசூத (2)
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2

மதுசூதற்கு (1)
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3

மதுசூதன் (8)
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3

மதுசூதன்-தன்னை (1)
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2

மதுசூதனன் (5)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4

மதுசூதனன்-தன்னை (1)
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3

மதுசூதனனே (2)
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4

மதுசூதனனை (2)
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1

மதுசூதனா (2)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மதுசூதனே (2)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மதுசூதனை (2)
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மதுசூதனையே (1)
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மதுசூதா (5)
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1

————–

திரிவிக்கிரமன் (5)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1

திரிவிக்கிரமனையே (1)
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

திரிவிக்கிரமா (1)
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3

———-

வாமன் (3)
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/2,3
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1

வாமன (2)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1

வாமனன் (13)
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/2,3
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/1,2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4

வாமனனாய் (2)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4

வாமனனார் (1)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/1,2
வாமனனே (4)
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1

வாமனனை (2)
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1

வாமனா (4)
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/1,2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1

வாமனாவோ (1)
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2

—————

சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
சிதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4

சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
மாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3

சீரான் (2)
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/3,4

சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4

————–

இருடீகேசன் (6)
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1

இருடீகேசன்-தனக்கு (1)
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3

இருடீகேசனுக்கு (1)
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4

இருடீகேசனே (1)
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

இருடீகேசா (3)
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4

————-

நாபனுக்கு (1)
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4

நாபி (1)
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3

நாபியான் (1)
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
பற்பநாபன் (4)
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1

பற்பநாபனையே (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

பற்பநாபனோடும் (1)
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2

பற்பநாபா (3)
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1

பற்பபாதன் (1)
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4

பற்பபாதா (1)
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

———

தாம்பால் (4)
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/2,3
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1

தாம்பினால் (2)
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/2,3

தாம்பு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2

தாம்புகளால் (1)
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/3,4

தாம்பே (1)
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு – நாலாயி:2103/4
தாமோதரற்கு (1)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

தாமோதரன் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/3,4
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1

தாமோதரன்-தன் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4

தாமோதரனாய் (1)
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2

தாமோதரனார் (1)
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/1,2

தாமோதரனே (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4

தாமோதரனை (3)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/4,5
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை – நாலாயி:3086/1

தாமோதரா (8)
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2

———–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–பெரிய திருவந்தாதி-65-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பேயாழ்வாரும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-அன்யாப தேச–திருத்தாயார் பாசுரம் —

April 7, 2023

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

—————————————————

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

——————————————————

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

—————————————————————

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

—————————————————————

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன் துழாய்‌
கற்பென்று சூடும்‌ கருங் குழல் மேல்‌ – மற்பொன்ற
நீண்ட தோள்‌ மால் கிடந்த நீள் கடல்‌ நீராடுவான்‌
பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) வியன் துழாய்‌ – வியக்கத்தக்க துளசி;

மற்பொன்ற – மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான;
மால்‌ – திருமால்‌;
நீள் கடல்‌ -திருப்பாற்கடல்‌.

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌.
என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌.
தனது கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக் கொள்கிறாள்‌.
மல்லர்கள்‌ அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால்‌ பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌.
இப் பாசரத்தில்‌
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்‌,
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌,

‘என்‌ மகள்‌’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌,
கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, முஷ்டிகன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌.
பூண்ட நாள்‌ எல்லாம்‌: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள்‌ தோறும்‌’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌:
அவனுடைய திரு நாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திருக் கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌
என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌.
இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ எனப்படும்‌).
இப்படி அனுபவிக்கும்‌ இடத்தில்‌ தாய்ப் பாசுரம்‌, தோழிப் பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌.
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீ பாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை.

ஸ்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள்‌ அருளி செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌.
ஆயினும்‌ இப் பாசுரம்‌ ஒன்று தாய் வார்த்தையாகச்‌ செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது.
“என்னுடைய மகளானவள்‌” என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக் கொள்ள வேண்டும்‌.
இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌,
“என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌
இவ் வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌.
எங்ஙனே எனில்‌:
”பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌;
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச்‌ சூடுங்கள்‌;
நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌” என்பதாக.
இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌:
‘*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌…
திருமலையைப்‌ பாடுங்கோள்‌… திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌…
விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌” என்று.
திருவேங்கடத்தின்‌ புகழைப் பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌,
நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு …

——————————–

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ – கற்கின்ற
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40),

வீடு – மோட்சம்‌;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி;
கேள்வனார்‌ – கணவர்‌, இங்கே திருமால்‌.

மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌;
இதன்‌ பலனாகவே மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌…
“*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌
திருவடிகளாகிய வலையில்‌ அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும்‌ அறியாமல்‌ ‘திருவேங்கடமலை’ என்று என்‌ வாயில்‌ வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌
கணக்கு செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து.
நின்று நினைக்கின்றேன்‌: நாம்‌ புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌,
எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை.
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌,
ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.

எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, –
நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி.
வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக்‌ காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌.
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று,
அதனால்‌ அதை எனக்கு வீடாக்கினான்‌.
அதே மோட்சத் தானம்‌.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோ ரூப முக்கரணங்களின்‌
வியாபாரங்கள்‌ (செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் உகந்த ஸ்ரீ அருளிச் செயல் பாசுரங்கள் —

September 2, 2022

அலங்காராசனத்தில் செவிக்கு இன்பம் தரும் இனிய ஸ்தோத்ரங்களால் எம்பெருமானை
இன்புறச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் சொல்லும்

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி யாடி விழாச் செய்து திருந்து நான்மறையூர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–ஸ்ரீ பெரியாழ்வார் -4-4-7-
திருந்து நான்மறை என்றது ஸ்ரீ நம்மாழ்வாருடைய நாலு வேத சாரமான நான்கு திவ்ய பிரபந்தகளை –

அமரர்கள் தம் தலைவனை அந்தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியைப் பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை –ஸ்ரீ குலசேகர பெருமாள் -1-4-

செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ஸ்ரீ பெரிய திருமொழி -2-8-2–
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்க்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை -2-10-4-
செம்மொழி வாய் நாள் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலை -6-6-10-
செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் திசை முகனை யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின்
புகையார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே -7-8-7-
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர் -7-9-3-
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் –ஆறங்கம் வல்லவர் தோளும் தேவ தேவ பிரான் கோட்டியூரானே-9-10-9-

————-

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

——-

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –நாச்சியார் திரு மொழி–2-9-

உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ -நம்மோடு அணைகை பொல்லாததோ -எத்தனையேனும் யோகிகளும்
நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது -உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –
எங்களுக்கும் அழகிது -ஆனாலும் இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் – அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும் வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று
நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ச்லேஷத்தில் உண்டான இசைவை மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –

———–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

———-

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-

நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இறே அவன் –

நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே
அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ –
இங்கனே செய்யத் தகாது -என்று போர வெறுத்தவாறே

கூட நின்றவர்களும் –
இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி –
மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து –
த்வயத்திலே வளர்ந்து –
த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம் -என்று பிரசாதித்தான்

திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்

கிருஹஸ்தாஸ்ரமம் விட்டு சன்யாஸ்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து
ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும் என்றபடி –

———

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

ஏறு திருவுடையான் –
நாள் செல்ல நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை உடையவன்
நிரபேஷனாகையாலே இவன் இடுகிற த்ரவ்யத்தில் தாரதம்யம் பாரானாய்த்து

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங மாத்ரமாய்ப் போகாமே –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீ கரிக்க வல்லனேயோ-
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் சாயம் சமயத்திலே நின்று நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் என்று
நின்றால் போலே இவைற்றை ஸ்வீகரிக்க வல்லனேயோ

ஏறு திருவுடையான் –
ஆரூட ஸ்ரீ –
இத்தையே ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்தார்

வங்கி புரத்து நம்பி ஸ்ரீ பாதத்திலே யாய்த்து சிறியாத்தான் ஆஸ்ரயித்தது-
போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே
ராஜ கேசரியிலே ஆச்சான் நடந்து இருந்தானாய் காண வேணும் என்று அங்கே சென்று கண்டு இருக்கும் அளவிலே
நம்பி எனக்கு இங்கனே பணிக்கக் கேட்டேன்
பாஹ்ய சமயங்களில் உள்ளாரும் ஒரு வஸ்துவைக் கொண்டு
அது தனக்கு ஜ்ஞானாதிக்யத்தையும் உண்டாக்கி கொள்ளா நின்றார்கள்
அவர்களில் காட்டிலும் வைதிக சமயமான நமக்கு ஏற்றம் –
ஸ்ரீ யபதி ஆஸ்ரயணீயன் என்று பற்றுகிற இது காண்-என்று பணித்தானாம் –

நம்பியின் தந்தையும் குமாரரும் ஆச்சி எனப் பெயர் பெற்றவர் -பெரிய திருமுடி அடைவு

ஆகையால் இறே நாம் இரண்டு இடத்திலும்
அவள் முன்னாக த்வயத்தை அனுசந்திக்கிறது
ஜகத் காரண்த்வாதிகளைக் கொள்ளப் புக்கால் ஒரூருக்கு ஒருத்தன் ஸ்ரஷ்டாவாக இருக்கும் –
காரணம் து த்யேய-
ஸ்ரீ யப்பதித்வம் தான் ஆஸ்ரயாந்தரத்தில் கிடப்பது ஓன்று அன்றே –
திருவில்லா தேவரை தேறல் மின் தேவு —

————-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று

———

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

1-இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்
பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —
கைவல்ய கோஷ்டியில் –
மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-
பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

2-கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார் அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே
என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே
சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

3-அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே –
அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம் என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே-
அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –

———–

கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே –
மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் –
அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்
இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து –
கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

—————–

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு
தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது

திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –

மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்

————

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலைத்தலைச் சரம் துரந்து-இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து
நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து
வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-

இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-

——————

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–ஸ்ரீ திரு மாலை-11

நஞ்சீயர் இப்பாட்டைக் கேட்டவன்று
தம்மிலே அனுசந்திதுப் போகா நிற்க
ஒரு சேவகனும் ஸ்திரீயும் விவாதம் பண்ணின அளவிலே
அவனுக்கு இவள் சொன்ன வார்த்தையை கேட்டு
வித்தரான வார்த்தையை அனுசந்திக்கிறது
அதாகிறது
பிணங்கின அளவிலே உன்னால் என் செய்யலாம்
ஏழைக்கும் பேதைக்கும் அன்றோ -சாமந்தனார் -ராஜா -பத்திரம் காட்டிற்று என்றால் –
பட்டரை ஆஸ்ரயித்த சோழ சிகாமணி பல்லவ ராயர்க்கு
ராம லஷ்மண குப்தாஸா – என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்து
கடல்கரையில் வெளியை நினைத்து இருக்கும் என்றத்தை அனுசந்திப்பது

அத்தைக் கூடக் கேட்ட
நஞ்சீயரும்-
பிள்ளை விழுப்பரையரும்-
நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசருமாக
இதுக்குச் சேர்ந்து இருந்தது என்று
இலை துணை மற்று என்நெஞ்சே – என்கிற பாட்டை அனுசந்தித்தார்கள்
ஆக
அநந்ய கதிகளான நமக்குத் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன் -என்கை

———

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–-ஸ்ரீ பெரிய திருமொழி–3-6-9-

திரு மெய்ய மலையாளா !
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –

நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்
கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ

அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்

புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-

ஆக
இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

—————————————

அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
தான் புறப்படுதல் -வைகாசி கருட சேவை -தானே ஆஸ்ரிதற்கு அருள
அழகு செண்டேற புறப்படுதல்- ஆனி கருடன் -பெரியாழ்வார் சாத்து முறை
ஆடி கருடன் கஜேந்திர யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல்
ஓன்று கேட்டால் மூன்று கருட சேவையும்
ஆழ்வார் போகம் ஓன்று கேட்டால் -இஹ போகம் ஸ்வர்க்காதி போகம் பரம போகம்
ஓன்று கேட்டால் நாலாயிரம் ஆழ்வார் நாத முனிகளுக்கும் ஆழ்வார் அருளினார்
பிள்ளை லோகாச்சார்யார் சாத்து முறை –பொய்கையாழ்வார் ஐப்பசி திரு ஓணம் –
நாள் பாசுரம் அன்னல் முடும்பை பாசுரம் சாதிப்பார்கள் –
திரு ஓணம் தோறும் புறப்பாடு
திருக்காஞ்சியில் தேவப்பெருமாள் திருக்கோயிலில் பிள்ளை லோகாச்சார்யார் தனியான சந்நிதி அதனால் இல்லை
ஈடு பெற காரணமும் இவனே -திருவடி ஊன்றிய தேவப் பெருமாள் –
ஈ உண்ணி பத்ம நாபர் -சடாரி சாதித்து -மஹா உதாரர்

கார்த்திகை தீபம் முந்திய பரணி தீபம் கச்சி வாய்ந்தான் மண்டபத்தில் மாலை 8 மணிக்கு திரு மஞ்சனம்
திருக்கச்சி நம்பி நினைவாக -அன்று தான்
திரு நாடு எழுந்து அருளிய தினம்

பெருமாள் வந்து செய்தி சொல்லிய பின்பு தாயார் எழுந்து அருளி
சேர்த்தி புறப்பாடு
திரும்பியும் தாயார் ஆஸ்தானம் சேரும் வரை காத்து இருந்து பின்பே கண்ணாடி அறைக்கு எழுந்து அருளுவார்
ஸ்ரீ வல்லபன் அன்றோ –

—————-

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

———–

உய் வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண் கழல்கள்மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

வையம்மன்னி வீற்றிருந்து மண்ணுர்டே விண்ணுமாள்வர்-“பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நெடுங்காலமிருந்து இங்கே யிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கேபோனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான்தமர்’ என்கை யன்றிக்கே இங்கே யிருக்கச் செய்தே தாங்களிட்ட வழக்காகப் பெறுவர்.” என்பது நம்பிள்ளையீடு.

நஞ்சீயர் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்தபின்பு நெடுங்காலம் பட்டர்பாடே அர்த்த விசேஷங்கள் கேட்டு இன்புறவேணுமென்று இருந்தார்-

இருக்கையில் பட்டர் திருநாட்டுக்கெழுந்தருள நேர்ந்துவிட்டது;

இந்த வருத்தத்தினால் நஞ்சீயர் “வையம்மன்னி வீற்றிருந்து” என்ற இவ்விடத்தை அருளிச்செய்யும்போது உருத்தோறும் வெகுநிர்வேதப்படுவராம்.

பட்டர் இருபத்தெட்டு (அல்லது 32) பிராயத்திலே திருநாட்டுக்கெழுந்தருளினாரென்று சிலர்கூறுவதுண்டு.  இதற்குப் போதுமான பிராமணம் கிடைத்திலது; ஆராய்ந்து பார்க்குமளவில்; பட்டர் ஐம்பது ஐம்பத்தைந்து பிராயம் எழுந்தருளியிருந்தார் என்று சொல்வதற்குச் சான்றுகள் உள்ளன.  நூற்றிருபது திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்த எம்பெருமானாரை நோக்குமிடத்து பட்டர் எழுந்தருளியிருந்தது மிகவும் ஸ்வல்பகாலம் என்று சொல்லலாம்படியுள்ளது.

———————

துவளில் மா மணி -6-5- ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினை யுடையவராய்,
“வேத வாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை
மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும் போதும்.

“பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச் செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது

மேலே அநுபவித்த அநுபவம் தான் மானச அநுபவ மாத்திரமாய்,
புறத்திலேயும் அநுபவிக்க வேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்

‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,
‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?

“கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே.
யாரே இருவர் கன புரம் பேச அந்த சொல்லைக் கேட்டே கை தொழும் -முக்கோட்டை அவருக்கு அது இவருக்கு இது –
இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்தி பண்ணி யன்றோ மீட்பது!
இவள் படி கை மேலே காணா நிற்கச் செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?

————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.

இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————-

வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான் தாளிணை யென் தலை மேலே.–10-6-5-

பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ;

அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம் பற்றித் திருமாலை திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை வரவிட்டருளினவளவிலே

“நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப் பார்த்துச் சிரித்தாராம்.

———–

ஸ்ரீ பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப் பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி–76-

ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –

——————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார்  பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு  உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

———-

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

————

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

இன்னுயிர்ச் சேவல் -9-5–இதன் விவரணம்

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)

————-

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –-திரு விருத்தம் –82-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –
ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –

இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –
பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –
ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –

வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே –
கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-
எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –

அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –
அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –

நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – திரு-விருத்தம்-95 – திருமாலிருஞ்சோலை -10-8-–

யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –
பற்றுவது ஏதேனும் ஒன்றாக அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு-
சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-
இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –

த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே
இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
மாதாவினைப் பிதுவை –
சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –
இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –

திருமாலை –
ஸ்ரீ யபதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –

வணங்குவனே –
இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –
தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

———–

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட
நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை
நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் –
அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள்
குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-

ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே-பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ-
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான்-
உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள்
தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே
உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே
இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே
வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே

பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

———-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி 76-

எம்பார்-விடியும் பொழுது தொடங்கி ஓவாதே அநுஸந்திக்கும் பாசுரம் –

————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -91-100–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 31, 2022

அவதாரிகை

இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்
அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை
அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன

ஆஸ்ரித வ்யாமுக்தனாய்

ஆபத் சகனாய்

ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –

இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –

வார் கடா அருவி -8–4-

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலை  யல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை
கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு
அமுத செய்த க்ருத்ரிமனானவனை

இத்தால்
இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப்

பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல்
பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –

(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்
மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்
அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற
பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய

பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்

இத்தால்
தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை

அடியேன் நெஞ்சம் பேணலதே –
இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு
வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது

அறத்தொடு நிலை

தொடு உண்ட கள்வன் -என்கையாலே
புணர்ச்சி தோற்றிற்று

வையம் இத்யாதியாலே –
நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )

மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இங்கே கிடந்தது -காலம் நெடிதாகா நின்றது குறுகா நின்றது என்று
ஆழங்கால் பட்டுக்கிடவாதே நாங்கள் கண்டீரே
புறம்புள்ள விஷயங்களாலே தரித்துக் காலம் நெடுகுதல் குறுகுதல் செய்யாதே ஸூகித்து இருக்கிறோம்
அப்படியே நீரும் பகவத் விஷயத்தில் நின்றும் மாறி நெஞ்சைப் புறம்பே வைக்கைக்குப் பார்த்தாலோ என்ன
அப்படிச் செய்யலாயிற்றே அதுக்கு ஈடாய் இருபத்தொரு நெஞ்சைப் பெற்றோமாகில்
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஓன்று அறியாது என்கிறார்
என் நெஞ்சு தன்னைப் புறம்பே வைக்கலாயிற்று இறே அவன் நவநீத ஸுர்யம் பண்ணானாகில்

வியாக்யானம்

சுருந்குறி வெண்ணெய்
கள்ளக் கயிறு உருவி வைத்த உறி யாயிற்று

வெண்ணெய் தொடு வுண்ட
வைத்த குறி அழியாமே வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த

கள்வனை
களவு தன்னை யாயிற்று களவு கண்டது ஆகிறது –

———————————————————————

அவதாரிகை

இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன்
நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ
தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க

வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க

உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே

சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று
அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்

இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பதவுரை

பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள் தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)

வியாக்யானம்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று
உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய
சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே
பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே
பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து

நின்னை
நிரதிசய போக்ய பூதனான உன்னை

விண்ணோர்
விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்

தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது
தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து
அத்தாலே
உத்தரம் தீர மா ஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்

(வடக்குக்கரை அடைந்து -கிழக்குக்கரை இல்லாமல் -லங்கைக்கு வடக்கு தானே –
கால் பூமியிலே படாமல் இருந்தான் விபீஷணன் அங்கு
பொருந்தாமல் இருந்தான் -)

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக
நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –

போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து

வைகல் மாலையும் காலையுமே –
அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றார் கீழே
அளவுடைய அதிகாரி புருஷர்களாக தேவர்களுக்கு இதுவும் இன்றி ஒழிவதே என்கிறார்
என் தான்
அவர்களுக்கு வந்த குறை என் என்னில்
நாம் எல்லாவற்றையும் அழிய மாறிப் பெறக் கடவத்தையும் அழிவுக்கு இட்டு

வேறே சில ப்ரயோஜனங்களைக் கொள்ளா நின்றார்கள் இறே -என்கிறார் –

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்
விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று

வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்
இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய்
ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்

நீணகர்
பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்

நீள் எரி
பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை
சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே

வைகலும்
எப்போதும்

தொழுவர்
இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே

நீள் நகருக்கு விசேஷணம்

பேணல் இத்யாதி
உன் விபூதியைப் பேணவும்
உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற
முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி
இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி

நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே
உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே
ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை

வைகல் மாலையும் காலையுமே –
சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –

———————————————

அவதாரிகை

இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்

அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து
பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று

அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

பதவுரை

காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு-

(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.

வியாக்யானம்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி
ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க
லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்

அன்ன கண்டும்
அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்

காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான
ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி
அவன் உபதேசத்தில் அவகாஹித்து

கண் போது செய்து
பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து

மாலை நல் நாவில் கொள்ளார்
ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்

நினையார் அவன் மைப்படியே –
அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்
இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தேவர்கள் தான் ஓர் அபிமான விசேஷத்தாலே இருக்கிறார்கள்
அல்லாதாரோ தான் பகவத் போஜனம் பண்ணுகிறார்களோ
அவர் இவர் என்று விசேஷிக்கிறது என்
எல்லார்க்கும் புறம்பே யன்றோ போது போக்கு என்கிறார்

வியாக்யானம் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது
அந்த ராத்திரி ஆதித்யனை மேலிடுவதாய் இருக்கிற இத்தைக் கண்டு வைத்து

நந்தத்த யுதித ஆதித்யே -அயோத்யா -105-24
விடிந்தவாறே அபிமத விஷயங்களை புஜிக்கும் படி உபகரணங்களைத் தேடுகைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்

நந்தத்த யஸ்தமிதே ரவவ்
அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதபடி அவ்விஷயங்களை புஜிக்கும்படியான காலம் வந்தது என்று களிப்பார்கள்

ஆத்மந இத்யாதி
பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்
சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்
சாவக்கடவராய் இருக்கிறவர்கள்
காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன்
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே
மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறே

அன்ன கண்டும்
அப்படியைக் கண்டு வைத்தும்
பகவத் விஷயம் ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் அல்லாமையாலே தான் அறியாது ஒழிகிறார்கள்
இத்தினுடைய அவஸ்தையை ப்ரத்யஷியா நிற்கச் செய்தேயும் நெஞ்சில் படாது ஒழிவதே

காலை
ஸத்வ உத்தரமான காலத்திலே

நன் ஞானத்
ஞானம் ஆகிறது பகவத் விஷயத்தைப் பற்றி யல்லது நில்லாது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -( முதல் திரு -67 ) என்னக் கடவது இறே
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-87 )
வித்யா அன்யா சில்ப நை புணம் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-41 )
புறம்பே ஒன்றைக் கற்றத் தோடு
துன்னம் பெய்யக் -கந்தை தைக்க -கற்றத்தோடு வாசி இல்லை இறே

துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில்
பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய்
நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24-

என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்–

————————-

அவதாரிகை

மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர்
நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக
விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–

பதவுரை

மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மை யுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்து மீண்டு) ஊர் வந்து சேர்ந்த
(கண் தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?

வியாக்யானம்

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்

வைதிகரே
நீல தோயத -தைத்ரியம் என்றும்
யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும்
திரு வடிவையும் திருக்கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே

மெய்ப்படியால்
கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே
மெய்யாகக் கண்டபடியாலே

உன் திருவடிச் சூடும் தகைமையினார்
பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை
சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்

எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க

கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்

அப்படி யானும் சொன்னேன்
அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்

அடியேன்
சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்

மற்று யாது என்பனே —
அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
துர்மானத்தாலே இழப்பாரும்
அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பார்கள் என்றீர்
உமக்கு குறையில்லையே என்ன
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாய்
முன்னடி தோற்றாதபடி மயர்வற மதிநலம் அருளினாயே
பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளிற்று
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
வள வேழ் உலகில் படியே அயோக்யதா அனுசந்தானத்தாலே -1-5- ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்

அடியேன் மற்று யாது என்பனே
உனக்கே அடிமைப்பட்ட நான்
என்முன் சொல்லிச் சொல்லும் நான்
நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –

————-

அவதாரிகை

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்
கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன

அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-

பதவுரை

உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம் –
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான

கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய்
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.

வியாக்யானம்

யாதானும்
முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை
ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை

ஓர் ஆக்கையில்
பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை

ஆக்கை என்று
சரீரத்தைச் சொல்லுகையாலே
பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை

புக்கு
சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது

அங்கு ஆப்புண்டும்
அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி
போக ஆயதநத்வாதிகளாலே ஸக்தனாயும்

ஆப்பு அவிழ்ந்தும்
இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –

மூதாவியில் தடுமாறும்
இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்
ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று
ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று
ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்

உயிர்
ஜீவனானது
முன்னமே –
இப்பிரக்ருதி ஸம்பந்தம் -அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்

அதனால்
இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான
இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை

நல் வீடு செய்யும்
நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான

மாதாவினைப் பிதுவை
பிரிய பரனுமாய்
ஹித பரனுமாய் உள்ளவனை

வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்

திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை
வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே
பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189-
மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்
அதாவது
ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்
சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி

வணங்குவனே –
ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்

கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –

(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பக்தி பாரவஸ்யத்தாலே யாதல்
அயோக்யதா அநு சந்தானத்தாலே யாதல்
ஏதேனும் ஒருபடி கண்ணழிவு சொல்லிக் கை வாங்காமே
தன் பக்கலிலே ப்ராவண்ய அதிசயத்தை யுடையேனுமாய்
இதர விஷயங்களில் அருசி யுடையனுமாம் படி பண்ணின
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார்

இவ்விடத்தில் உருத்தோறும் குறியாக ஜீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அங்கே ராமானுஜ தாசர் என்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன
நம்பெருமாளைப் பிரிந்த சோகத்தால் செவி சீ பாய்ந்து இருக்கையாலே நான் ஒன்றுக்கும் ஷமன் அல்லேன்
ஜீயர் நீர் சொல்லும் என்று அருளிச் செய்ய

ஜீயர் அருளிச் செய்து கொடு போகா நிற்க
வளவன் பல்லவதரையர் என்று திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை யுடையார் ஒருவரும் அதை அனுசந்தித்திக் கொண்டு போந்தாராய்
அவர் இப்பாட்டு அளவிலே வந்தவாறே கண்ணும் கண்ண நீருமாய் புள கீக்ருத காத்ரருமாய் இருக்கிற இத்தைக் கண்டு
இப்பாட்டில் வார்த்தை சொல்லுவது இனி
ப்ரசங்க மாத்திரத்திலே வித்தரானீர் இது என் என்ன

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே
எம்பெருமான் திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார்
அத்தை இப்போது ஸ்மரித்தேன்-என்ன

அவர் இதுக்கு ஏதேனும் வார்த்தை அருளிச் செய்தது உண்டோ என்ன

எனக்கு அவை போகாது -இப்பாசுரத்தை நினைத்து இருப்பன் -என்றாராம்
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று இப்பாட்டை ஐந்தாறு நாழிகைப் போது கொண்டாடினாராம் –

வியாக்யானம்

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
ஏதேனும் ஒரு சரீரத்தே பிரவேசித்து
அறவும் தண்ணிய ஸூகர ஜென்மத்தில் ஜனித்தாலும்
மமாயம் தேஹ -என்று கொண்டு
அதிலே அபிமானித்து
அங்கே உண்டானவற்றோடே சில ஸம்பந்த விசேஷங்களும் உண்டாய்
அவற்றை விட மாட்டாதேயுமாய்ப் போறா நிற்குமாயிற்று

ஆக்கை என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது

புக்கு
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வத உள்ளது அன்று -கர்ம நிபந்தனம் என்கை

அங்கு ஆப்புண்டும்
கர்ம வாஸனையாலே ருசி வாசனையாய்
அதிலே பத்தனாய் இருக்கும்
இது தண்ணிது என்று அறியா நிற்கச் செய்தேயும்
இத்தை விடில் செய்வது என் -என்று துணுக்குத்

——————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

முமுஷுக்களான சிலர்
சம்சரண நிவர்த்தகன் படியையும்
எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன
தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று

நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –

வியாக்யானம்

ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு

அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –
ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்

அதுக்கும் மேலே
மூதாவியில் உயிர்
அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால்
இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால்
அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்

முன்னமே
யாவதாத்ம உபக்ரமாயே

அதனால்
ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்

யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்
நியமபூர்வ ப்ரவ்ருத்தியை
விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்

நல் வீடு
நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான

மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை

வணங்குவனே –
பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்

தத் அநந்தரமே
பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று
முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை
தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்
தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும்
அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –

————————————

அவதாரிகை

இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க
நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே
இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று
இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே
நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை
உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

பதவுரை

வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-

வியாக்யானம்

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது
தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி

மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி
பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே

அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி

அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி

பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய
ஸ்வரூப பேதத்தையும்
அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது

நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்
ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே
இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார்
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே
இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –

அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே
கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக

நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே

இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –

வியாக்யானம்

நாம் இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன
வணங்கும் இத்யாதி
ரஜஸ் தமஸ்ஸூக்களை உடையவர்களாய் இறே புருஷர்கள் இருப்பது
அவ்வவ குண அனுகுணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே ராஜஸராயும்

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்
தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்
உன் போல்வாரையும்
உன் ஸமர் அல்லாரையும் இல்லாத

நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு
அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்
எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –

———

அவதாரிகை

நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர்
இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக
அத்தைக் கண்டவர்
அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு

அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –

(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-

பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-

பதவுரை

எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள்கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம் -தேவர்கள் கூட்டம்–

தொழுவதும் வணங்குவதையும்–

சூழ்வதும் (பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்

உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)

வியாக்யானம்

எழுவதும்
உத்பன்னமான பிரகாரத்தையும்
மீண்டே படுவதும்
உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்

இங்கு பட்டு என்று
முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது

கண்டு கண்டு எள்கல் அல்லால்
இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும்
பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய

இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது
நித்ய அஞ்சலி பந்தத்தையும்
கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற

தொல்லை மாலைக்
இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை

மால் என்று
பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்

கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ

பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –

——————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக
தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க
அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம் –

எழுவதும்
ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்

மீண்டே
உதய கார்யம் கழிந்தவாறே

படுவதும்
அஸ்தமிப்பதும்

படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்

கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே
இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற
ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்

இமையோர்க்கு விசேஷணம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பது

தொல்லை மாலை
அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்
ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால்
ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு
ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி

கண்ணார
யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்

திவ்ய விக்ரஹங்களில்
தொழுவதும் -அடிமை செய்வதும்
நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே -ஸ்ரீ கீதை -11-40-

சூழ்வதும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12-
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு

கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு

உண்டோ கண்கள் துஞ்சுதலே –
கண்கள் துஞ்சுதல் உண்டோ
அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-

————–

அவதாரிகை

இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான

போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –

பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-

பதவுரை

துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.

செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்

அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்

தொடர நின்ற
தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க
அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்
சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்
அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும்
தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய்
த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்

இவ் விடத்தில் மூர்த்தி என்று
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ஸ்வாமித்வம் ஆகவுமாம்

(தன் சார்வு இல்லாத மூர்த்தி
தனி மூர்த்தி
பெரு மூர்த்தி)

தன் சால்வு -என்றபாடமாய்
தன்மை இல்லாத என்றுமாம்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது
நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது

அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்
இவ் வபதானத்திலும்
இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –

(அவனது சீற்றமும் அருள் தானே
எந்த குணமும் எந்த சேஷதீதமும் அவன் இடம் இருப்பது ஸ்ரேஷ்டம்)

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்
இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம்
நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர்
ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன
அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம்
இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது
அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே
ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய்
தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69-
இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும்
ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு
இவர்கள் இதுக்கு ஆள் அல்லர்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே

அல்லாதவரும்
ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே
கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது

எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய்
அனாதையாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

துஞ்சா முனிவரும்
இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்

அல்லாதவரும்
அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்

மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்

தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையைக்

கடிவான்
நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்

இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி
அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்

தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம்
மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ

நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ
இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது
மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட
அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ

வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான்
பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ
ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –

——————-

அவதாரிகை

போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்
ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன
பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே

ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-

பதவுரை

ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) -பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் -வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.

வியாக்யானம்

ஈனச் சொல்லாயினுமாக
நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக
அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு

ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை
இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –

எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்
எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்

நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து
அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்

இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்
அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய

செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்

(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)

அல்லாதவர்க்கும்
அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்

மற்று எல்லா யவர்க்கும்
இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்

ஞானப் பிரானை யல்லால் இல்லை
ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே
உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை

நான் கண்ட நல்லதுவே –
நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்துக் கிடப்புதீர் என்று அறிகிறிலோம் -உம்மை விஸ்வஸிக்கப் போகிறது இல்லை
அத்ய ராஜ குலஸ் யாஸ்ய த்வததீனம் ஹி ஜீவிதம் புத்ர வ்யாதிர் நதே கச்சித் சரீரம் பரி பாததே -அயோத்யா -87-9-
ரஸவாதம் கீழ் போனால் போலே பரதாழ்வான் மோஹித்துக் கிடக்கத் திருத்தாய்மார் சொல்லுகிறார்கள் –
படைவீடாக உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்க இருக்கிறது
சக்கரவர்த்தியும் துஞ்சினான்
பெருமாள் காடேறப் போனார்
நீ இருந்தாய் என்று அன்றோ நாங்கள் இருப்பது
உன் முகத்தில் பையாப்புக் கண்டால் மீளுவர் என்னும் நசையாலே யன்றோ ஜீவித்துக் கிடக்கிறது
நீ இல்லை என்று அறிந்தால் இத் திக்கு என்று நோக்குவதோ
புத்ரேத்யாதி அபி வ்ருஷா -அயோத்யா -59-4-என்கிறபடியே படை வீட்டில் சுத்தாவரங்களும் கூட நோவு ஒன்றாய் இருக்கச் செய்தே
பிள்ளாய் உனக்கு நோவு என் என்று கேட்க வேண்டும்படி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி
இப்படி ஸத் ப்ரக்ருதிகளாய் இருக்கையாலே இன்ன போது மொஹிப்பார் என்று தெரிகிறது இல்லை
ஸுலப்ய குணத்தை உபதேசிக்கப் புக்கு எத்திறம் என்று மோஹித்துக் கிடக்குமவர் இறே இவர்
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்கப் புக்கால் பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
(அத்தை இத்தை பரத்வத்தை ஸுலப்யத்தை ) ப்ரசங்கித்து சிதிலராய்க் கிடப்பர்
அத்தைக்கு கூரத்தாழ்வான் கண்டு -மஹா பாஷ்யம் கற்று சதுரஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே
பகவத் குண ப்ரசங்கத்திலே சிதிலராம்படி பிறந்த உம்முடைய ஜென்மம் ஒரு ஜென்மமே -என்று கொண்டாடினான்
ஆழ்வான் வீராணத்தில் ஒரு பெண் பிள்ளையை குடங்காலிட்டு
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி -3-7-1- என்று சந்தையிட்டு மேலடி தோற்றாமல் மோஹித்தாராம்
இப்படிப்பட்டவர் இறே தன்னை வன்னெஞ்சராகச் சொல்லுகிறார்-
ஸ்வாமிகள் திருமழிசை தாஸரும் நஞ்சீயருமாகத் திருவாய் மொழி ஓதா நிற்க

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவனே
அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும்
அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை
அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை
இது என் ஸித்தாந்தம் என்கிறார் –

—————————–

அவதாரிகை

இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி(கேட்டு அருளாய் )
தத் விஷயத்திலும்
ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும்
தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு
இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம்
தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-

பதவுரை

நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான  ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான  கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)

வியாக்யானம்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு
ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்

அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்-

திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற
பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்

இத்தால் -ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்
வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும்
ஜென்ம தேச பூர்த்தியையும்

வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே
பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்று

விண்ணப்பம் செய்த
என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே
பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று –

சொல்லார் தொடையில்
என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே
இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று -கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடி

இந்நூறும்
என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய்
பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –

வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்

அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற
கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான
புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய்
அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் எழுந்தார்கள்

பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்

பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்
இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்
உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன
அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம்
நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்

வியாக்யானம்

நல்லார் நவில்
லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை
ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்
ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்

தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி
இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது
நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப்போகாது
இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்

திருமால் இத்யாதி
அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்

ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்

விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று

சொல்லார் தொடையல்
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா
பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில்
ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்

இந்நூறும்
பாரதம் போலே பரந்து இருத்தல்
ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை

வல்லார் அழுந்தார்
பலத்தை முற்படச் சொல்லுகிறார்

அது எங்கே என்னில்
பிறப்பாம்
ஜென்மம் ஆகிற

பொல்லா
ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -81-90–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

May 2, 2022

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ்வஸிப்பிக்க வேணும் என்று பரிவரானவர்கள்
தங்கள் பிரிவின் கனத்தாலே முகாந்தரங்களாலே இவர் ஆர்த்தியை
சமிப்பிக்க வேணும் என்று உத்யோகித்து
இவர் பிரகிருதி அறிந்தவர் இவ்வார்த்தி சமிக்கும் ப்ரகாரங்களிலே இழியாதே
ப்ரகாராந்தரங்களிலே இழிந்து என்ன கார்யம் செய்கிறார் என்று
தம்மிலே வெறுத்து உரைத்த பாசுரத்தை

தலைவி தளர்த்தி கண்டு தாயார் முதலானார் வெறி யாடலுற
தலைவி நினைவு அறிந்த பாங்கி வெறி விலக்க லுற்ற
அவர்கள் கேட்கும்படி தன்னில் உரைத்த பாசுரத்தாலே (முன்னிலை படர்க்கை )
அருளிச் செய்கிறார் –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81

பாசுரம் -81–உறுகின்ற கன்மங்கள் மேலன-
துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –
வீடுமின் முற்றவும் -1-2-

பதவுரை

ஓர்ப்பு இலர் ஆண்–(இவளுக்கு நேர்ந்துள்ள நோயின் தன்மையையும் அதன் காரணத்தையும்
அத்தனைத் தீர்க்கும் உபாயத்தையும்) ஆராய்ந்து தெளிதலில்லாதவர்களாய்
கூறுகின்ற–(இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள்-(வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன–மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர்–இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல்–உடம்பு வருந்திப் பெற்றாரில்லையோ?
குழல்வாய்–(இவளது) கூந்தலிலே
துழாய்–(எம்பெருமானது) திருத்துழாயை
கூறுகின்றிலர்–சூட்டுகின்றாரில்லை;
தொல்லை வேங்கடம்–பழமையான திருவேங்கட மலையிலே
ஆட்டவும்–இவளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும்
சூழ்கின்றிலர்–ஆலோசிக்கின்றாரில்லை;
இவள் ஆகம்–இவளது உடம்பு
மெல் ஆவி எரி கொள்ள–மென்மையான உயிரை விரஹத் தீக் கவர்ந்து கொள்ளும்படி
இறுகின்றது–முடிகறிவளவாகா நின்றது.

வியாக்யானம்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
இவள் நோயின் தன்மை ஆராயாதே உற்று நடத்துகிற வெறியாட்டு
முதலான கருமங்கள் மேன் மேலுண்டாகா நின்றன

இவளைப் பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெறுகிற அளவிலே தாயாருடம்பு நொந்து பெற்றவராகக் கூடும்
வருந்திப் பெற்றார்கள் ஆகில் இவள் பிழைக்கும் வழியிலே முயலுவர் இறே
பிழைக்கும் வழி இல்லை இறே

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
திருத் துழாயைக் குழல் இடத்திலே நிரம்பச் சூட்டு கிறிலர்

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
பழையதான பெரிய திருமலையிலே கொண்டு போகைக்கும்
விரகு பண்ணு கிறிலர்

ஆட்டுதல் –
அங்கே நடையாடப் பண்ணுதல்

சூழ்தல் –
விரகு செய்தல்
அன்றியே –
திரளுதல் ஆகவுமாம்

இறுகின்ற தாலிவாளகம்
இறுகின்றதால் இவள் ஆகம்
விரஹத்தாலே மெலிந்த இவளுடைய சரீரம் முடிகிற அளவாகா நின்றது –

மெல்லாவி எரி கொள்ளவே –
மிருதுவான பிராணனை விரஹ அக்னி க்ரஸித்து சரீரமும் முடியா நின்றது –

மெய் நொந்து பெறார் கோல்
என்று அந்வயம்

இத்தால்
பிரிவின் கனத்தாலே நிரூபியாமல் பிரகாராந்தரத்தாலே இவள் ஆர்த்தியைப்
பரிஹரிக்கத் தேடா நின்றார்கள்
பகவத் ப்ரஸாதமும்
தேச வாஸமுமே பரிஹாரமாய் இருக்க
அது செய்யாமையாலே சத்தையும் குலையும்படி சைதில்யமே விஞ்சா நின்றது –
இவர் அருமை அறிந்து வருந்திக் கிட்டினவர்கள் அல்லரோ இவர்கள் என்று
ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரமாய் இருக்கிறது

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
இருள் போய் முடுகி
இவளும் மோஹித்துக் கிடக்க
இவள் அவஸாதத்தைக் காணா நிற்கச் செய்தேயும்
பந்து வர்க்கத்தில் உள்ளார்
க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் என்று ஆறி இருக்க
அத்தைக் கண்டு
இவளுடைய அவஸாதம் இருந்தபடி இது
ஸ்லாக்யதை இருந்தபடி இது
இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு இவளை
நேர் கொடு நேரே பெற்றவர்கள் அன்றோ என்று
இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம் –

உறுகின்ற-இத்யாதி
இவர்கள் நிரூபிக்கட் கடவதொரு கார்யம் இல்லையோ
என்கிறாள்

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய்
மேல் வரக் கடவதானவை வர்த்தமானம் போலே இருக்க
வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஒரக் கடவர்கள் அன்றிக்கே

இவளைப் பெறுகின்ற தாயர்
இவளை பெற்ற தாயார்களுக்கு எப்போதும் ஓக்க வயிறு எரிந்த படியேயாய்
இருக்க வேண்டாவோ
ஒரு லாப அலாபங்கள் வேணுமோ
இவள் தானாகவே அமையாதோ

மெய்ந்நொந்து பெறார் கொல்
இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது
வளர்த்துக் கொண்டது அத்தனையோ

என் தான்
இப்படிச் சொல்லுகைக்கு இவர்கள் செய்யாதது என் என்ன

துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர்
மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்னும் அளவு போயிற்று
கடக்க நின்று வீசும் அளவு போராதே
அது தன்னையே கொடு வந்து குழலிலே நிரம்பத் துற்க வேண்டும்படி யாயிற்று தசை முறுகின படி

தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர் இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே –
இக்குடிக்குப் பழையதாகச் செய்து போரும் பரிகாரத்தையும் செய்கிறிளர்கள்

வேங்கட மாட்டவும்
கல்லும் காடுமாய் இருக்கிறதடைய ஒரு தடாகம் போலே யாயிற்று
இவளுக்குத் தோற்றுகிறது

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி -மோக்ஷ தர்மம் –4-50-

————

அவதாரிகை

இப்படி அனுபவ அலாபத்தாலே சிதிலரானவர்
தம்மை பிரதம அங்கீ காரம் பண்ணின ஈஸ்வர கடாக்ஷம் தான்
நமக்குத் பரிதாப ஹேதுவான ப்ரகாரத்தை நாயகனான ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண்களைக் கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே
அவை தானே பரிதபிப்பிக்கிற பிரகாரத்தை
நாயகி தோழியர்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82-

பாசுரம் -82–எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-
துறையடைவு–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —
உருகுமால் நெஞ்சு -9–6-

பதவுரை

எரிகொள்–வெப்பத்தைக் கொண்ட
செம் ஞாயிறு இரண்டு–சிவந்த இரண்டு ஸூர்ய மண்டலம்
உடனே–ஒருங்கே
உதயமலையாய்–உதய பர்வதத்திலே
விரிகின்ற–தோன்றி விளங்குகிற
வண்ணத்த–தன்மை போன்ற தன்மையை யுடைய
எம்பெருமானது கண்கள்–எம்பெருமானது திருக்கண்கள்,
அவற்றுள்–அந்த ஸூர்ய வடிவங்களிலே
எரிகொள்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுகிற
செம் தீ–சிவந்த நெருப்பிலே
மீண்டு வீழ்–(வேறு புகலிடமில்லாமையால்) மீண்டும் வந்து விழுந்து இறக்கிற
அசுரரை போல–(பகைவரான கொடிய மாந்தேஹரென்னும்) அஸுரர்களுக்குப் போல
எம் போலியர்க்கும் (அநுகூலரான மெல்லிய) எம்போன்றவர்களுக்கும்-
விரிவ–தாபஞ்செய்வனவாய்ப் பரவுகின்றன;
முன்னம் தோன்றா நின்றன -உருவ வெளிப்பாடு
வையம் முற்றும் விளரியது–(எம்பெருமான்) உலகம் முழுவதையும் விருப்பத்தோடு செழிக்கச் செய்யும் விதம்
இதுவோ–இதுதானோ?
சொல்லீர்–சொல்லுங்கள்.

எம்போலியர்க்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய் விரிகின்ற வண்ணத்த
சிவப்பாலும்
ஒவ்ஷ்ண் யத்தாலும் அக்னி ஸ்வபாவத்தைக் கொள்ளுவதாய்
உதய தசையில் ராகத்தை யுடைத்தான ஆதித்யனுடைய இரண்டு வடிவு
ஏக காலத்திலே ஸஹ சரிதமாய்
உதயகிரி இடத்திலே பரம்புகிறது என்னலாம் படியான ரூபத்தை யுடையன ஆயின

எம்பெருமான் கண்கள்
அடியிலே என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஸ்வாமியினுடைய திருக்கண்கள்

மீண்டவற்றுள் எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே
அந்த ஆதித்ய ரூபங்களுக்குள்ளே காயத்ரீ பூதமான அர்க்ய ஸக்தியாலே
ஜ்வலித்துக் கொண்டு தோற்றின சிவந்த அக்னியில் ஆதித்யனுக்கு பாதகராய் வந்து
நாங்களே மீண்டு விழும்படியான மந்தே ஹாதிகளான ஆஸூர ப்ரக்ருதிகளைப் போலே
(மந்தேஹர் ராக்ஷசர் -அசூரத் தன்மை உள்ளவர் )

எம்போலியர்க்கும் விரிவ
ஆனுகூல்யம் யுடையவராய்
அபலைகளான நம் போல்வாருக்கும்
தாஹகங்களாய்க் கொண்டு பரம்பா நின்றன

சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி –7-1-9-என்கிறபடியே
இந்தக் கண்ணோ லோகத்தை எல்லாம் வெளிச் செறிப்பித்து ரஷித்தது
இப்படி பாதகங்களான இவற்றுக்கு அந்த ரக்ஷகத்வம் உண்டான படி என் -சொல்லீர் என்று
தன் ஆற்றாமையைத் தோழிக்கு உரைத்தாள் யாயிற்று –

இத்தால்

ஜிதம் தே புண்டரீகாக்ஷ -என்கிறபடியே
பிரதமத்திலே சேஷித்வத்தைப் பிறப்பித்த ஸ்வாமி கடாஷமானது
அனுபவத்தைக் கொடாமையாலே
பிரதிகூல விஷயத்தில் பரிதாப ஹேதுவாமோபாதி
அனுகூலரான நமக்கும் ஆர்த்தி ஜனகமாகா நின்றன
இது லோகத்துக்கு ரக்ஷகமான படி எங்கனே என்று
ஸூஹ்ருத்துக்களுக்கு (பாகவத உத்தமர்களுக்கு ) நொந்து உரைத்தார் ஆயிற்று

விளரி என்று
வெளுப்பாய்
வெளிச் செறிப்பிக்கிற முகத்தாலே
ரக்ஷணத்தைச் சொல்லிற்று ஆயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
ஆதித்ய உதய விரோதி மந்தேஹர் மேல் பிரயோகித்த படியால்
அத்தால் உத்பூத சக்திக ஆதித்யனால் உத்பூத ப்ரஜ்வவநாத்ய குணாக்னியில் விழுந்து
நசிக்கிற அசூரரைப் போலே என்னைப் பார்ப்பது
என்னைப் போன்ற வரீலுமாய்

இதுவோ வையமுற்றும் விளரியதே –விரிவ சொல்லீர்
இந்தத் த்ருஷ்ட்டி பூமி எங்கும் பரவா நின்றது
இதுக்கு என்ன உபாயம் சொல்லீர் என்று தன் தோழிமார்களைக் கேட்க்கிறாள்

மீண்டவற்றுன் என்றது
கச்ச அநு ஜாநாமி ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த–யுத்த -59-144-என்று
பெருமாள் அருளிச் செய்தும்
மூல பலத்தோடு வந்த ராவணாதி விஷயம் ஆகவுமாம் –

————–

அவதாரிகை

இப்படி இவருடைய சைத்திலயத்தைக் கண்ட பரிவர்
ஆஸந்நமான பாதக சந்நிதி இருந்தபடியால் இவர் தரித்து இருக்க அரிதாய் இருந்தது
என்று வெறுத்து உரைத்த பாசுரத்தை
நாயகன் பிரிவாற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
இனி இவளுக்கு இருக்கை அரிது என்று இரங்கி உரைத்த
தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே – – -83 –

பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-
துறையடைவு-அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
உண்ணிலாய ஐவரால் -7–1-

பதவுரை

விளரி–விளரியென்னும் இசையையுடைய-உச்ச ஸ்வர கண்ட த்வநி
குரல்–குரலையுடைய
அன்றில்–அன்றிற்பறவை
மெல் பெடை–மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான
மூன்றில் பெண்ணை முளரி குரம்பை–முன் வாசலிலுள்ள பனைமரத்திலுள்ளதும் முட்களையரிந்து செய்யப்பட்டதுமான கூடு
மெல் ஆவியும்–(இவளது) மெலிவடைந்த உயிரும்
நையும்–(உடம்பின் ) இளைப்பும்
எல்லாம்–என்னும் இவையாவும்
இது இது ஆக–இப்படி எங்கும் எதிரில் அருகில் இருக்க,
(இவ் வன்றிலைக் காணுதலாலும் இதன் குரலைக் கேட்டலாலும் ஆற்றாமைத் துயரம் மிக்கு)
முகில்வண்ணன் பேர் கிளரி கிளரி பிதற்றும்–காள மேக நிறத்தனான தம் தலைவனது திருநாமங்களை
(வலியின்மையால் வருந்தி யெடுத்தெடுத்துக் கூறி வாய் பிதற்றும் படியான
தளரின் கொலோ–முழுவதும் தளர்ந்தொழிந்தாலோ
இ தையலுக்கு–இம்மகளுக்கு
உய்யல் ஆவது–(அவன் வந்து சேர) உஜ்ஜீவந முண்டாவது?
அறியேன்–அறிகிறேனில்லை.

முன்றில் பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்
முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு

வியாக்யானம்

விளரிக் குரலன்றில்
விளரியாகிற ஸ்வரத்தை யுடைத்தாய் இருக்கிற குரலை யுடைய அன்றிலானது

குரல்
துத்தம்
கைக்கிளை
உழை
இனி
விளரி
தாரம் -என்று
ஷட்ஜ
ருஷப
காந்தார
மத்யம
பஞ்சம
தைவத
நிஷாதங்கள்
ஆகிற ஸப்த ஸ்வரத்துக்கும் பேராகையாலே
ஆறாம் ஸ்வரமான தைவதத்தை விளரி என்கிறது

விளரி என்று
ஒரு பண் என்றும் சொல்வர்

மென் பெடை மேகின்ற
புணர்ச்சியிலே துவண்டு மெல்லிதான பேடையோடே மேவிப் போருகிற

முன்றிற் பெண்ணை
முற்றத்திலே பனையிலே

முளரிக் குரம்பை யிதுயிதுவாக
முள்ளை அரிந்து செய்யப்பட்ட இந்தக் கூடு இவ் வன்றிலுக்கு இருப்பிடமாக-

முளரிக் குரம்பை என்று
தாமரையாலே செய்த கூடு என்னிலுமாம்

முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும்
இதினுடைய ஆர்த்தி ஸ்வரத்தாலே ஸ்மரித்து
ஸ்யாமளமாய்
ஸ்ரம ஹரமாய் இருக்கிற காள மேகம் போலே இருக்கிற வர்ணத்தை யுடைய
ஸர்வேஸ்வரனுடைய ஒவ்தார்ய ஸூசகமான திரு நாமங்களை
பல ஹானியாலே வருந்தி
எடுத்து எடுத்து
அக்ரமாகச் சொல்லும்படியான

மெல்லாவியும்
மெலிந்து
சென்று அற்ற பிராணனும்

நைவும்
அதுக்கு அடியான சரீர ஸைதில்யமும்

எல்லாம் தளரிற் கொலோ
ஓன்று ஒழியாமல் முடிந்தாலோ

அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே
இந்தப் பெண் பிள்ளைக்கு உஜ்ஜீவிக்கலாவது அறிகிறிலேன்

அறிகிறிலேன் -என்கையாலே
முடியவுமாம்
அவனைப் பெற்று ஆஸ்வஸிக்கவுமாம் என்று கருத்து

இத்தால்
தாம் இருக்கிற தேசத்திலே ஆசன்னமாக போக ப்ரஸக்தரானாரைக் கண்டு
தம்முடைய போக அலாபத்தாலே அது ஸ்மாரகமாக
ஆர்த்தி விஞ்சி பிரலாபிக்கிற பிரகாரத்தைக் கண்டவர்கள்
இவருக்கு போக சித்தி இல்லாத அளவிலே இவர் முடிந்து பிழைக்கும் அத்தனையோ
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அசிவதாரிகை

உரு வெளிப்பட்டாலே நோவு படா நிர்க்கச் செய்தே
அதுக்கும் மேலே வாசலிலே ஒரு பனையாய்
அப்பனையிலே தங்கிற்று ஓர் அன்றிலாய்
அது தான் வாய் அலகைக் பேடையோடே கோத்துக் கொண்டு இருக்கிறவித்தை
நெகிழ்த்தவாறே கூப்பிடக் கடவதாய்
அதனுடைய த்வனியிலே மோஹித்துக் கிடக்க
அத்தைக் கண்டு
இத்தினுடைய த்வனி இருக்கிற படி இது
இவளுடைய ஆற்றாமை இருக்கிற படி இது
இவளுடைய மார்த்வம் இருக்கிற படி இது
இவளுடைய ஸைதில்யம் இருக்கிற படி இது
இது எல்லாம் இருந்த படியாலே இவள் அபிமானதாம் கை புகுந்து ப்ரீதையாய் இருக்கக்
காண மாட்டோம் ஆகாதே என்று இங்கனே
திருத்தாயார் வார்த்தையாய் இருக்கிறது

பட்டர் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க
நஞ்சீயர் ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்குப் போலியாக அருளிச் செய்யலாம்
இடம் உண்டோ என்று கேட்க
இளைய பெருமாள் பிராட்டியைக் கொண்டு போய் விட்டுப் போந்த அநந்தரம்
அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட வால்மீகி பகவானுக்கு இத்திருத்தாயார் படி யுண்டு
என்று அருளிச் செய்தார் –

வியாக்யானம் –

விளரிக் குரலன்றில்
விளரி என்று
உச்சமான த்வனிக்குப் பேர்
உயர்ந்த த்வனியை யுடைத்தாம் படி காரியப்பாடு அறக் கூப்பிடுகிற அன்றிலினுடைய

மென்பெடை
கலக்கும் போது பூத் தொடுமா போலே தொட வேண்டும்படி யாயிற்று மார்தவம்
இம்மார்த்வத்திலே விரஹமும் ஆனால் பாடாற்றப் போகாது இறே

மேகின்ற
மேவா நிற்கிற
நித்ய ஸம்ஸ்லேஷமாய்ச் செல்லா நிற்கும் இறே
அந பாயினிக்கு ஸ்மாரகமாய் இருந்தபடி

முன்றிற் பெண்ணை
முற்றில் என்று முற்றத்துக்குப் பெயர்
வாசலுக்கும் பேர்

முற்றில் பனை நடலாமோ என்று இவ்விடத்தை நிர்வஹியா நிற்க
வங்கி புரத்து நம்பியைச் சிலர் கேட்க
அதுவோ -இவள் கார்யம் தளிரும் முறியுமாய்ச் செல்லுகிறது என்று பணித்தார்

மூன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற அன்றிலின்
கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ -பெரிய திருமொழி –11-2-1-

அவரை வரப் பண்ணுவார் ஆரோ -என்றபடி –
அல்லது பிரிப்பன பிரித்துக் கூட்டுவது கூட்டித் திரிகின்றாள் அன்றே இவள்

முளரிக் குரம்பை
இத்தினுடைய ஸுகுமார்யத்துக்கு ஈடாகத் தாமரை இதழ்களையும் பூக்களையும் கொண்டு
வந்து கூடாகப் பண்ணி வைக்கும் இறே
அந்நிலத்தில் உள்ளவையாய் இருக்கும் இறே

அன்றிக்கே
முளரி என்று முள்ளாய்
முள்ளாலே செய்த கூடு என்னவுமாம்
முளரி என்று நெருப்புக்கு துடைப்பத்துக்கும் பேராகையாலே
இன்னெருப்பான கூடு இதுவாக
திருத்தாயார் பாசுரமாகையாலே சேரும் இறே

முளரிக் குரம்பை என்று

யிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது இத் தையலுக்கே

—————–

அவதாரிகை

இப்படி பரிவரும் வெறுக்கும் படி ஆர்த்தரான இவர்
போக்ய பூதனான ஸர்வேஸ்வரனைக் காண ஆசைப்பட்டுத்
தம்மிலே அவனை நோக்கி ப்ரலாபித்த ப்ரகாரத்தை
நாயகியானவள் நாயகனான ஸர்வேஸ்வரனைப் புறம்பே திரளிடை யாகிலும்
காண ஆசைப்பட்டுப் புலம்பின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-

பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-
துறையடைவு-தலைவி தலைவனைக் காண விரைதல்–
மையார் கருங்கண்ணி -9–4-

பதவுரை

மைய வண்ணா–மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே–நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல
நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள்–அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும்–கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள்–சிறந்தவர்களான நல்ல புருஷர்கள்
குழிய விழவினும்–திரண்ட திருவிழாக்களிலாயினும்-உத்ஸவங்களிலும்
அங்கு அங்கு எல்லாம்–இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும்–கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன்–நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.

காண்பானவாவுவன் நான்-காண்பான் அவாவுவன் நான்

வியாக்யானம்

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
விலக்ஷணை களான நாரீ ஸமூஹங்களானவை திரண்ட திரட்சி யுள்ளும்

குழாங்கள் குழிய குழு-என்கையாலே
அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்

அங்கங்கெல்லாம்
அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
போக்யத்வ
ரக்ஷகத்வங்களுக்கு
ஸூசகமாய்
கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய்
ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும்
அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும்
கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

வந்து காண்கைக்குக் கால்நடை தாராத நான்

(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இவருக்கு
காரார் காணும் அளவு போய் -ஆடல்மா குதிரையில் கானால் விடேன் என்றவர் திருமங்கை ஆழ்வார்)

மைய வண்ணா
ஆசை யற்று இருக்க ஒட்டாத வடிவழகை யுடையவன்

மணியே
துர்லபன் என்று மீள ஒண்ணாத படி முடிந்து ஆளவானவனே

முத்தமே
நீர்மை இல்லை என்று தவிர வேண்டாதபடி முழு நீர்மை யுடைய ஸூத்த ஸ்வ பாவனே

என் தன் மாணிக்கமே
பிரகாஸ குண அதிசயத்தாலே என்னை உன் அநு ராகத்திலே
அகப்படுத்திக் கொண்டவனே -என்று
அவன் ஸ்வ பாவங்களைச் சொல்லிப் புலம்பினாள் ஆயிற்று

இந்தக் கிளவி
மள்ளர் குளீஇய விழவினானும் மகளிர் தலீஇய நுணங்கை யானும் யாண்டும்
காணேன் மாண் தக்கோனை -என்று அகத் தமிழிலும் சொல்லப் பட்டது-(குறுந்தொகை பாடல் )

இத்தால்
நமக்கு போக்ய பூதனான கிருஷ்ணனை
கோபீ ஜன மத்யத்திலும்
வித்வ ஜ்ஜன மயத்தை யுடைத்தான யாகாதி மஹா உத்ஸவத்திலும்
அசாதாரண சிஹ்னங்களோடே அனுபவிக்க ஆசைப்பட்டமை சொன்னார் ஆயிற்று

அன்றிக்கே
பாரதந்தர்ய காஷ்டா நிஷ்டரான பிரபத்தி நிஷ்டர் ஸமூஹத்திலும்
கர்ம கலாபாதி ப்ரவ்ருத்தி சீலரான கைங்கர்ய நிஷ்டர் ஸமூஹத்திலும் காண ஆசைப்பட்டார் ஆகவுமாம்

(கர்மமும் கைங்கர்யத்தில் புகும்)

அன்றியே
இரண்டும் ப்ராப்ய தசையிலேயாய்
வைகுண்டே து பர லோகே –பக்தைர் பாகவதை ஸஹ -லிங்க புராணம் என்றும்
அமரரும் முனிவரும் -திருவாய் -10-9-9-என்றும்
சொல்லுகிறபடியே
குண பரதந்த்ரரும் கைங்கர்ய வ்ருத்தி சீலருமான ஸூரி சங்கங்களைச்
சொல்லிற்று ஆகவுமாம்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

மோஹத்துக்கு அநந்தரம் அரதியாய்
ஓர் இடத்திலே தரியாதே பகவத் அலாபத்தாலே அங்கேயிங்கே தடுமாறிக்
கூப்பிட்டுக் கொண்டு திரிகிற படியைச் சொல்லுகிறது

க்வசித் உத் பிரமதே வேகாத் க்வசித் விப்ரமதே பலாத் க்வசின்மாந்த இவாபாதி
காந்தான் வேஷண தத் பர -ஆரண்ய –50-36-

வியாக்யானம்
தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
தையல் நல்லோர்கள் உண்டு ஸ்த்ரீ ரத்னங்கள்

குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
திரளாகத் திரண்ட திரள்களிலும்
பெண்கள் திரளைக் கண்டவாறே
திருக்குரவை என்று இருப்பார் ஆயிற்று இவர்

ஐய நல்லார்கள்
அறிவோர் அரும் தவத்தோர் ஐயர் என்று பண்டித வாசகங்கள்
ஐய நல்லோர்கள் உண்டு -பண்டிதராய் நல்லவராய் இருக்குமவர்கள்
அவர்களுடைய

குழிய விழவினும்
தீர்க ஸத்ரங்கள்
மற்றை யவற்றுக்காகத் திரள இருக்கிற படி இறே
அவற்றிலும் ஸ்ரீ தாண்ட காரண்யத்தில் ரிஷிகள் திரள் போலே இருக்கிற வற்றிலும்

ஸமாஜேஜூ மஹத் ஸூ ச -அயோத்யா –57-13 என்னுமா போலே

அங்கங்கெல்லாம்
அவற்றோடு போலியான இடங்கள் எல்லாவற்றிலும்

கைய பொன்னாழி வெண் சங்கோடும்காண்பானவாவுவன் நான்
திருவாழி இன்றிக்கே மனிச்சேயான அவதாரத்தோடு
அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசியற
திவ்ய ஆயுதங்களோடே காண ஆசைப்பட்டு ஆயிற்று இவர் இருப்பது

ஆஸூர ப்ரக்ருதிகளுக்கு அன்றோ மறைப்பது
எனக்குக் காண தட்டென் என்று இருப்பார் ஆயிற்று

ஜா நாதும் அவதாரம் தே காம் சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13
ஸத் ப்ரக்ருதியானவன்
தேனைவ ரூபேண சதுர் புஜேந -ஸ்ரீ கீதை -11-45- என்றான் இறே

அவாவுவன் நான்
ஆசைக்காக கண் உண்டோ
காண வேணும் என்று ஆசைப்படும் இத்தனை போக்கிக் காண அரிது என்று அறிய மாட்டேன்
காண அரிதாகில் காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டார் யாரோ என்ன

மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே
விஷய தோஷம் இறே இதுக்கடி என்கிறார்
நற் சரக்கை இழந்தார் ஆறி இருப்பார்களோ

மைய வண்ணா
கண்டார் கண்ணிலே அஞ்சனம் எழுதினால் போலே குளிர்ந்து இருக்கிற படி

மணியே
அப்படியே இருக்கச் செய்தே முடிந்து ஆளலாய் இருக்கிறது

முத்தமே
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி யாய் இருக்கை

என் தன் மாணிக்கமே
பெரு விலையனாய் இருக்கை –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் தன் கணவனைக் காணாமல் பொறுக்க மாட்டாத நாயகியாய்
கோப ஸ்த்ரீ சங்க ஸேவ்யனான கண்ணனாயும் –
அத்வர்ய் வாதிகளோடு மஹா சாவாத்யரோத் சாயாதிக்ருதனான சக்ரவர்த்தி திருமகனாயும்
திவ்ய அப்சரஸ் சங்க திவ்ய ஸூரி சங்க பரிசரண விஷய பரமபத நிலயனாயும்
மற்றும் அங்கங்காக தத் தத் சங்க சேவ்யனாயும்
காண அவாவைப் பெற்று
அவனில் தன் ப்ரீத்யபி வ்யஞ்ஜகமான திரு நாமங்களை உரக்கச் சொல்லி
விமுக்த லஜ்ஜையாய்க் கூப்பிடுகிறார் இதில்

வியாக்யானம் –

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
நல் ஸ்த்ரீகள் கூட்டமாய்க் கூடின கூட்டத்திலும்

ஐய நல்லார்கள் குழிய விழவினும்
ஸத் புருஷர்களாய்க் கூடிச் செய்யும் உத்ஸவங்களிலும்

அங்கங்கெல்லாம்
இப்படியாக அங்கங்காக உள்ள சங்கங்களில் எல்லாம்

கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
திருக்கைத் தலங்களுக்கு அழகு பெறுத்தும் அழகுள்ள திருவாழி ஆழ்வானோடும்
திருச்சங்கு ஆழ்வானோடும் காண வேணும் என்று மிக்க அவனைப் பெற்ற நான்

மைய வண்ணா
கரு வளர் மேனியாய்க் கண்ணுக்கு இட்டுக் கொள்ளவான மை போன்றவனே

மணியே
ஸ்வாதீன நீல ரத்னம் போன்றவனே

முத்தமே
கருணை யாகிற தெளி நீரால் அதிசயித்து எங்களை வெள்ளுயிராக்க வல்லவனே

என் தன் மாணிக்கமே
எனக்கு ஸர்வதோமுக நிரதிசய அதிசய நாயகனே
என்று ஸ்வயமேவ புலம்புகிறார் —

—————-

அவதாரிகை

இப்படி ப்ரலாபித்தவர் தமக்கு அனுபவ யோக்யமான காலம் வந்திருக்க
அனுபவம் ஸித்தியாத ஆர்த்தி அதிசயத்தாலே
ஆர்த்தி தீருகைக்கு ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஆத்ம நிக்ஷேபத்தைப் பண்ணிக்
கூப்பிட்ட பிரகாரத்தை
மாலை கண்டு வருந்தின தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –
துறையடைவு-மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –
எம்மா வீடு -2-9-

பதவுரை

உலகு அளந்த–உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே–மாணிக்கம் போலச் சிறந்தவனே
என் மரகதமே–மரகதப் பச்சைப் போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா–தன்னை யொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணி பொன்னே–மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்த–மாணிக்கத்தால் கருத்தரங்கு வீசியெறியப்பட்டால்
அம் மாணிக்கம் அக்குரங்கின் கையிலே அகப்பட்டு அழிதல் போன்று
துணிபொன் அன்ன சுடர் இருளொடு முட்டபடும்–மாற்றுயர்ந்த பொன் போன்ற ஒளியையுடைய
ஸூர்ய மண்டலம் இருளோடு சென்று கிட்டித் தான் மறையப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
அடியேன் அடி ஆவி அடக்கலமே-இயல்பில் உனக்கு அடியவளான எனது சொந்தமான உயிர்
உனக்கே அடைக்கலப் பொருளாக ஒப்பிக்கப்பட்டது.

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம்
அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே
அன்றியே
மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்

குரங்குதலாவது வளைதலாய்
உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி

உலகு அளந்த மாணிக்கமே
உன்னதான லோகத்தைப் பிறர் கொள்ளாதபடி எல்லை நடந்து
அநந்யார்ஹம் ஆக்கி
உடைமை பெற்றவாறே உஜ்ஜ்வல ஸ்வ பாவனானவனே

என் மரகதமே
அக் காலத்தில் வடிவில் பசுமையைக் காட்டி என்னை உனக்கு ஆக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணமான ஸ்வரூப ஓவ்ஜ்ஜ்வல்யத்தை யுடையவனே –

அடியேன் அடி யாவி
சேஷத்வமே நிரூபகமான என்னுடைய சேஷ பூதமான பிராணனானது

யடைக்கலமே
உன் பக்கலிலே நிஷிப்தம் அன்றோ
ஆதலால் ரக்ஷணீயம் என்றதாயிற்று

இத்தால்
மோஹ அந்தகாரத்தின் கையிலே அத் யுஜ்ஜ்வலமாய் உன்னதமான விவேகமானது

(குரங்கு கையில் மாணிக்கம் -இருளின் கையில் சூர்யன்)

விழுந்து அகப்படும் படியான அவஸ்தையில் உன் பக்கலிலே நிஷிப்தமான இவ் வாத்மாவுக்கு
நீ யன்றோ ரக்ஷகன் என்று தம்மிலே நொந்து உரைத்தார் ஆயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு பிராட்டி வார்த்தை யாதல்
அன்றிக்கே
அவள் தசையை அனுசந்தித்த திருத்தாயார் வார்த்தை யாதல் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து
குரங்கானது மாணிக்கம் கொண்டு எறியுமா போலே
பெரு விலையனான மாணிக்கத்தை குரங்கானது அதின் சீர்மையை அறியாதே
எடுக்க ஒண்ணாத இடத்தே மங்கிப் போம்படி எறியுமாப் போலே

அன்றிக்கே
குரங்கு என்று
விலங்குதலாய்
அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள ஒண்ணாத இடத்திலே எறியுமா போலே என்னுதல்
அப்போது
எறிவாரை அழைத்துக் கொள்ளுதல்

இருளோடு முட்டி ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை
இருளோடே வந்து சந்தித்து
மாற்று அற்ற பொன் போலே ஸ்லாக்யமான ஆதித்யனை மறைத்துக் கொடு மாலை வந்து தோற்றிற்று –
என் பக்ஷத்தில் உள்ளாரையும் அழியச் செய்து கொண்டாயிற்று இது வந்து தோற்றிற்று
எனக்கு ஆஸ்வாஸ கரனான ஆதித்யனை முடித்துக் கொண்டாயிற்று வந்து தோற்றுகிறது
குரங்கின் கையிலே புக்க மாணிக்கம் நசித்தால் போலே யாயிற்று –
ராத்திரிக்கு அவயவமான இருளின் கையில் புக்க ஆதித்யன் மாய்ந்த படி

இனி உருமாயுமாகாதே என்று கை வாங்கி இருக்க ஒண்ணாதபடி யாயிற்று அவன் படி

உலகு அளந்த மாணிக்கமே

ரக்ஷகராக விட்ட இந்த்ராதிகள் தங்களால் முடியாமை கை வாங்கின வன்று
தான் வந்து கைக்கொண்டு தாமஸ ப்ரக்ருதிகளைத் தள்ளி நெருக்குமவன் இறே
காடும் மலையான இந்த பூமியை அளந்தது
ஒரு மாணிக்கத்தை இட்டுக் காணும்

மாணிக்கமே
பெறு விலையன் என்கை
தன்னைப் பாராதே அழிய மாறின படி

என் மரகதமே
உடம்பிலே அணைத்தால்
ஸ்ரம ஹரமாய் இருக்கை

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
முதலிலே ஸ்லாக்யமாய்
உபமான ராஹித்யத்துக்கு மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே

அடியேன்
போக்யதையிலே தோற்று அடியேன் என்கிறார்

அடி யாவி
தலைமகள் வார்த்தை யானபோது
உனக்கு சேஷமான என்னுடைய ஆத்ம வஸ்துவானது என்கை
ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணும் போதும்
வஸ்து நிர்தேசம் பண்ணும் போதும்
சேஷத்வத்தை இட்டு அல்லது நிரூபிக்க ஒண்ணாத படியாய் இருக்கை

திருத்தாயார் வார்த்தையான போது
அடியேன் அடி
நாய்க்குட்டி என்னுமா போலே

யடைக்கலமே-
இருளுக்கு அஞ்சின படியால் சொல்லுகிறாள்
அல்லது ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகையும் மிகையாம்படி இறே
இவனுக்கு அத்யந்தம் சேஷமாய் இருக்கும் படி

பிரமித்தபோது இறே ஸமர்ப்பிக்கலாவது
ஸமர்ப்பித்த அனந்தர க்ஷணம்
என்னதை அவனுக்கு கொடுத்தேன் என்று நினைக்க ஒண்ணாத படி
தன்னோடு தனக்குத் தொற்று அற்றபடி இறே இருப்பது

அதவா கிம் து ஸமர்ப்பயாமி தே -ஸ்தோத்ர ரத்னம் -53-

உற்று எண்ணில் அதுவும் மற்று அங்கு அவன் தன்னது –திருவாய் -7-9-10-என்னக் கடவது இறே

ஆழ்வான் திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அநந்தரத்திலே
பிள்ளாய் எனது உள்ளத்து என்ன வேண்டும் அவஸ்தையிலே
அடியேன் உள்ளான் -திருவாய் -8-8-2- என்று
ஆழ்வார் அருளிச் செய்தபடி கண்டாயே என்று பணித்தான் –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கையில் அகப்பட்ட மாணிக்கத்தைக் குரங்கானது எறியுமா போலே
உதய காலத்தில் இருளாக்கிரகுரங்கால் எறியப்பட்ட மாணிக்கம் போன்ற ஆதித்யன்
அவ்விருளோடே முட்டும்படி ஆணிப்பொன் போல் சுடர் விடு மாலை என்னை நலியா நின்றது
உனக்கே அடிச்சியான ஆத்மாவாய் அடிமைப்பட்ட அடைக்கலமாக என்னை என்று
அவன் தத் தத்ப் பலங்களை வெளியிடும் திரு நாமங்களால்
அநு நயிக்கும் தலை மகளாய் ஆர்த்தி அதிசயத்தால் புலம்புகிறார் இதில் –

வியாக்யானம்

மாணிக்கம் கொண்டு
மாணிக்கத்தைக் கைக்கொண்டு

குரங்கு எறிவு ஒத்து
குரங்கு எறிந்தால் போலே

இருளோடு முட்டி
முன்னுற்ற ஆதித்யன் இப்போது இருளோடு முட்டிப் பாயுமவனாய் இரா நின்றான்

ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படு மாலை யிலே
இந்த மாலையாலே நான் இங்கனே பாதைப்படுவது உசிதமோ என்று அபிப்ராயம்

மேல் அநவ்சித்ய பிரகடனம் பண்ணுகிறார்
தன் ஸ்வரூப ப்ரகடனத்தால்

உலகு அளந்த மாணிக்கமே
அந்நிய பரரான அசுத்தரையும் திருவடியால் ஆக்ரமித்து உஜ்வலனாய் விளங்குமவனே

என் மரகதமே
நீ என் பரிரம்பண விஷயனான போது என் அதீனனாய்
மரகத மாணிக்கம் போன்று என்னை உனக்காக்கிக் கொண்டவனே

மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே
பூசலாம் பொன்னொளி பெற்ற நிஸ் ஸமாப்யதிக திவ்ய விக்ரஹனே

அடி யாவி
உனக்கு அடிச்சியோம் தொழுத்தையோமாய்

அடியேன்
யாவதாத்ம உபக்ரமமாய் அடிமைப்பட்ட ஆத்மாவே நான்

அதுக்கும் மேலே
உன் யடைக்கலமே
த்வத் ஏக ரக்ஷயை யானவளே நான்
இப்போது உன்னைப்பிரிந்து இந்த மாலையால் நலிவு பாடவோ –

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தராய்ப் புலம்பினவர்
ஆபத் சகன் அல்லாமையும்
ஆபந் நிவ்ருத்தி பரிகரம் இல்லாமையும்
ஆஸ்ரித பவ்யன் இல்லாமையும்
உதவாது ஒழிகிறானோ
இப்படி இருக்க முகம் காட்டாத போதே நாம் எத்தைச் சொல்லி பிரலாபிப்பது என்று
நிராசரான பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-

பாசுரம் -86-அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் –
துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –
வள வேழ்வுலகு -1-5-

பதவுரை

அடை–இலையாகிய
கலந்து–இடத்திலே
ஓங்கு–உயர்ந்துதோன்றின
கமலத்து–(திருமாலின் நாபித்) தாமரை மலரிலே
அலர்–வெளிப்பட்டுத் தோன்றின
அயன்–ப்ரஹ்மாவினுடைய
சென்னி என்னும்–தலையாகிய
முடை கலந்து–முடை நாற்றமுடைய பிக்ஷாபாத்திரத்திலே
ஊண்–உணவு இரத்தலை
முன்–முன் ஒரு காலத்தில்
அரனுக்கு–சிவனுக்கு
நீக்கியை–போக்கியருளினவனும்
ஆழி சங்கம்படைக்கலம் ஏந்திய–ஸுதர்சந பாஞ்சஜந்யங்களை ஆயுதங்களாகத் திருக் கைகளிற் கொண்டுள்ளவனும்
வெண்ணெய்க்கு–வெண்ணெய்க்காக
அன்று–களவுங்கையுமாக அகப்பட்ட அந் நாளில்
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வல் தாம்புகளால்–வலிய கயிறுகளால்
புடைக்க-அடிக்க
அலந்தானை–வருந்தினாற்போலத் தோற்றினவனும்
எம்மானே–எமது தலைவனுமான திருமாலைக் குறித்து
என் சொல்லி புலம்புவனே–நான் என்னவென்று சொல்லிப் புலம்புவனே?

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
பசுத்த இலையாகிற இடத்திலே உயர்ந்த கமலத்திலே விகசிதனாய்த் தோன்றின
ப்ரஹ்மாவினுடைய தலை என்று சொல்லப்பட்ட முடை நாற்றத்தை யுடைய பாத்திரத்தில் ஊணை
சாப உபஹதனான காலத்தில் ஸம்ஹார கர்த்தாவான ருத்ரனுக்குப் போக்கினவனை

(பிஷாண்டர் கோயில் ஹர சாபம் போக்கிய கரம்பனூர் அருகில்)

இலையில் ஓங்கின கமலம் -என்கையாலே
பசுத்த திரு மேனியைக் காட்டுகிறது

அரனுக்கு நீக்கிவை -என்கையாலே
ஸ்வ சாப ஸம்ஹாரம் பண்ண மாட்டாதவன் கிடீர் லோக ஸம்ஹாரம் பண்ண இருக்கிறான் என்றபடி

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -பெரிய திருவந்தாதி -87-என்றும்
அடங்காரை எரி அழலம் புக வூதி–திருவாய் -4-8-8-என்றும்
விரோதி நிரசன பரிகரத்தைக் கை விடாதவனை

படைக்கலம் -ஆயுதம்

(படை-என்று ஆயுதம் என்றும் அவையே கலம்-காலன் -ஆபரணம் என்றுமாம்)

நீக்கி ஏந்தி என்று சொல்லாய்
இரண்டாம் வேற்றுமையாய் இருக்கிறது

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று
பெற்ற தாயான இடைச்சியானவள் திருமேனியின் மார்த்தவம் பாராதே
சிக்கெனத் தாம்புகள் கைக்கு எட்டியது எல்லாம் எடுத்துத்
தன் கோப அநு ரூபமாகப் புடைக்க
அதுக்கு பிரதிகிரியை காணாதே
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் -பெருமாள் திருமொழி -7-8- என்னும்படி அலமருகிறவனை

எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –
இந்த அபதானத்தாலே எத்திறம் அபவ்யனானவன் பவ்யனாக வேணும் என்னவோ
அபரிகரனானவன் ஸ பரிகாரனாக வேணும் என்னவோ
எத்தைச் சொல்லிக் கூப்பிடுவது என்கிறார் ஆயிற்று

இது நாயகி புலம்பலுக்கும் ஒக்கும் –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எத்தனையேனும் இருள் வந்து மேலிட்டு பாதகமானாலும் அத்தலையில் ஒரு குறை சொல்ல
ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும் படி –

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு
சர்வேஸ்வரன் பக்கலிலே போலே யாயிற்று ப்ரஹ்மா இருப்பது
நிஷேபம் போலே என்றவிடம் குறை வராதபடி யுணர்ந்து நோக்குகின்ற
படியைப் பற்றச் சொன்னது அத்தனை

கமலத்தல ரயன்
அவ்வளவு அன்றிக்கே
ஸர்வேஸ்வரன் பக்கலிலே பிறந்த ஜென்மத்தாலே வந்த ப்ராப்தியை யுடையவன்

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
லோக குருவுமாய்
பிதாவுமானவன்
தலையை அறுத்துப் பாதகியாய் நின்றான் ஒருவன்
தலை யறுப்புண்டு கிலேசியா நின்றான் ஒருவன்
இவருடைய கிலேசத்தையும் போக்கினவன்

அயன் சென்னி என்னும் முடைக்கலம்
ப்ரஹ்ம சிரஸ் என்ற ஒரு நாமத்தை யுடைத்தான முடைக்கலம் ஆயிற்று

பார் ஏறி யுண்ட தலைவாய் -இரண்டாம் திரு -63-என்னும்படி
கழுகும் பருந்தும் தொடர்ந்து திரியும்படிக்கு ஈடாக வாயிற்று ஸஞ்சரிப்பது

முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

அடைக்கலத் தோங்கு கமலத்தலரயன்
கதுப்பும் கருமையும் பசுமையும் அகலமுள்ள இலை உள்ளதும்
ஓங்கினதுமான செங்கமலத்தில் உத்பவித்தவன்
அவனுடைய

சென்னி என்னும் முடைக்கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை
அவனுடைய சிரஸ் கபாலமான அதி ஹேய நாற்றமுள்ள
பிஷா பாத்திரத்தில் பிஷிக்கும் ருத்ரனுக்கு
ஸர்வரும் பார்க்க அவர் முன்னாகவே அந்த ப்ரஹ்மஹத்தியைப் போக்கினவனை

ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை
திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு முதலான திவ்ய ஆயுதங்களை
திவ்ய ஆபரணமாகப் பூ ஏந்தினால் போல் தரித்தவனை

வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக் கலந்தானை
வெண்ணெய்க்காகக் களவு கையோடே அகப்பட்ட அன்று பெற்ற தாயே
பலவத்தான கண்ணி நுண் சிறுத் தாம்புகளால் கட்ட
உரவிடை யாப்புண்டு அவன் படைக்கப்புடைக்க முக கமல விகசநத்தோடே
ஒளி விகஸநத்தை யுள்ளவனை

எம்மானை
இவைகளை எல்லாம் எனக்கு காட்டி என்னை
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை

என் சொல்லிப் புலம்புவனே –
எத்தைச் சொல்லிப் புலம்ப வல்லேன் நான் என்கிறார் –

———

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்த ஸ்வரத்தைக் கேட்ட
ஸூஹ்ருத்துக்கள் இவருடைய ஆர்த்தியின் மேலே லௌகிக வியாபாரங்கள்
ஸ்மாரகமாய்க் கொண்டு இவரை நலிகிற படியைக் கண்டு
இப்படி லோக உபக்ரோசம் பிறக்கும் படி ஸ்மாரகங்கள் நலிவதே என்ற
ஈஸ்வரனை நோக்கி யுட் கொண்டு
வெறுத்து உரைத்த பாசுரத்தை
அன்றிலுக்கும் ஆழிக்கும் ஆற்றாத் தலைவி தளர்த்தியைக் கண்டு
தோழி கிளர்ந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலம்பும் கனகுரல் போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

பதவுரை

திருமால்–பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும்–(விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல்–கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும்–பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும்–அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற
கன குரல்–கம்பீரமான தொனையையுடைய
சூழ் திரை ஆழியும்–சூழ்ந்த அலைகளையுடைய கடலுமாகிய
ஆங்கு அவை–அவ்வவ்விடத்திலுள்ள அந்தந்த பாதக வஸ்துக்களானவை.
நின் வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றம் ஆக–உனது வலிமையை யுடைய கருடப் பறவையினது நன்மையை
(இவள்) எடுத்துப் பாடுகிற இதுவே குற்றமாகிக் கொண்டு
வையம் சிலம்பும்படி–உலகத்தார் முறையிடும்படி-குற்றம் சொல்லி கோஷிக்கும் படி –
இத் திருவினை–திருமகள் போன்ற இப் பெண்ணை
செய்வதே–துன்ப்படுத்துவதே! (இது தகுதியோ?)

போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
தன்னில் தான் புகுந்து வாய் அலகைக் கொடுத்து
அது உறக்கத்திலே நெகிழ்ந்தவாறே
விஸ்லேஷ ஆர்த்தி பிறந்து புலம்பும்படியான பிளந்த வாயையும்
கனத்த குரலையும் யுடைய அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்கு உள்ளே புகுரப் பாய்ந்து அலைகிற கம்பீர த்வநியை யுடைத்தாய்
ஆலிங்கநம் பண்ணுவாரைப் போலே சூழ்ந்த திரைக்கையை யுடைத்தான ஸமுத்ரமும்

ஆங்கவை
அந்த அவைகள்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உன்னுடைய பிரபலமான பெரிய திருவடியினுடைய ஆஸ்ரித ஸம் ரக்ஷணத்தில்
உதவியாகிற நலத்தைப் பாடின இதுவே குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் கூப்பிடும்படி யாக இவ்வன்றிலும் ஆழியும் செய்யக் கடவதோ

திருமால்
திருமாலே என்று தன்னிலே முன்னிலையாகச் சொல்லுகிறாள்
நீயும் ஒருத்திக்கு நல்லையாய் அன்றோ இருக்கிறாய்
அவள் என் நினைக்கும் என்று கருத்து

இத் திருவினையே
அத் திருவுக்கு நிழல் என்றாகிலும்
இவளைப் பார்க்க வேண்டாவோ என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று —

இத்தால்

சிறியாரோடு பெரியாரோடு (அன்றிலும் கடலும் )வாசியற போக அர்த்தமான
பரஸ்பர ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாலே சோக ஹர்ஷங்கள் யுண்டாய்க் கொண்டு
நடக்கிற படியைக் கண்டு
தமக்கு ஈஸ்வரனோடு போகம் சித்திக்கைக்கு ஈடான பரிகரம் (பெரிய திருவடி )அவனுக்கு உண்டாய் இருக்க
நமக்கு இழக்க வேண்டுவது இல்லை இறே என்கிற
ஸந்தோஷமே குற்றமாக
இந்த ஸ்மாரகங்கள் இவரை நலியும் படியாவதே என்று ஸூஹ்ருத பூதர்
ஈஸ்வரனைக் குறித்துத் தம்மிலே வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அனுகூல பதார்த்தங்களும் பிரதிகூலமாய் இவள் நோவு பட அத்தாலே
இவளையும் உம்மையும் நாட்டார் பழி சொல்லும்படியான செயல்களை
நீர் பண்ணுவதே என்று திருத்தாயார் சொல்லுகிறாள் –

வியாக்யானம் —

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் செறிந்த த்வனியை யுடைத்தாய்
பிரிந்து தனி இருப்பாரே இரு துண்டமாக விடுகிற வாயையுடைய அன்றில்களும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழியிலே வரப் பாயா நிற்பதாய்
ஊமைக் கூறான த்வனியை யுடைத்தாய் பரந்த திரைகளை யுடைய கடலும்

ஆங்கவை
பிரிந்து இருப்பார்க்கு மேடும் பாதகங்களும்
சேக்கழுத்தில் மணி ஓசை என்ன
தென்றல் என்ன
சந்த்ர உதயம் என்ன
இப்படிப்பட்ட பாதகங்களைச் சொல்லிற்று ஆதல்
கீழ்ச் சொன்னவை தன்னையே சொல்லி ற்று ஆதல்
இவை பாதகம் ஆகா நின்றன

என்ன குற்றம் செய்தாள் என்று
இவை பாதகம் ஆகிறது

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கு அசாதாரணமாய்
பலத்தை யுடைத்தாய்
கருடோ வாருணம் ச்சத்ரம் ததைவ மணி பர்வதம் ஸா பர்யாஞ்ச ஹ்ருஷீ கேசம்
லீலையைவ வஹந்யயவ் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-30-1 )என்கிறபடியே
தாரண சாமர்த்தியத்தை யுடையனான பெரிய திருவடியின் நலம் உண்டு
த்வத் அங்கரி ஸம் மர்த்த கிணாங்க ஸோபிநா -ஸ்தோத்ர ரத்னம் –41- என்கிறபடியே
அவன் அடிமை செய்து தழும்பு சுமந்தால் போலே ஸம்ஸ்லேஷ சிஹ்னங்களைத்
தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு அவனைப் பாடின
இது குற்றமாக

வையம் சிலம்பும்படி செய்வதே
சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே இருந்ததே குடியாகக்
கை எடுத்துப் பழி சொல்லும்படி பண்ணுவதே

திருமால்
நீர் ப்ரணயிகள் இல்லீராய்த் தான் இப்படிச் செய்கிறீரோ

இத்திருவினையே
உம்மை ஆசைப்பட்ட அளவில் குறைந்தாளோ அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்ட இவள்
ராவணாதிகள் பெருமாளை பழி சொல்ல ராக்ஷஸிகள் தன்னை நெருக்க
இருந்தவளைப் போலே இருக்க வல்லளோ இவள்
அன்றில்
கடலோசை
தொடக்கமானவை நலிய அத்தால் நோவு படா நின்றாள் என்று
நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு இருப்பதே
உம்முடைய மஹிஷி நோவு படப் பார்த்து இருக்கை உமக்கு குறை அன்றோ என்றபடி –

ஸ்வாபதேசம்

இத்தால்
அத்தலையாலே வரக்கண்டு ஆறி இருக்குமது அன்றிக்கே இவள் க்ரம பிராப்தி பற்றாமை பதறி மேல் விழ
நீர் தாழ்த்தீராய் இருக்கும் இது உமக்கு குறை அன்றோ என்று
இவர் தசையை அனுசந்தித்தவர்கள் பாசுரமாய் இருக்கிறது

ந மே பக்த பிரணஸ்யதி -ஸ்ரீ கீதை -9-31-
மறந்தீரோ என்கிறாள்

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி உன் பிரிவு பொறாமல் உன்னைப் புலம்பும் இத்திருவினை
அன்றிலும் ஆழியும் பாதிப்பதும்
உன்னைப் பாடுமது குற்றமாக வையம் எல்லாம் இவளைப் பழி சொல்லுமத்தும்
செய்வதே திருமால் என்று சொல்லும்
தாயாராய் அருளிச் செய்கிறார் இதில் —

வியாக்யானம்

புலம்பும் கனகுரல் போழ் வாயவன்றிலும்
உன்னைப்பிரிந்து தனி இருப்பாரே இரு பிளவாக்கும் சஞ்சுவையும்
அத்தால் சிலம்புவதும் கணைப்பதும் உள்ள அன்றிலும்

பூம் கழி பாய்ந்து அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும்
அழகிய கழிக்குள் புகுரப் பாய்ந்து அதில் உள்ள பதார்த்தங்களை அலப்பும் போது
கனைத்துக் கொண்டும்
பெரும் குரல் செய்து கொண்டும் ஒன்றுக்கு ஓன்று ஆஸ்லேஷித்துக் கொண்டு
வருகிற திரைகளை யுள்ள கடலும்

ஆங்கவை
ஏவம் பூதமாயுள்ள
புலம்புறு மணி
தென்றல்
முல்லை
மல்லிகை –(திருவாய் –9-9-1–9-9-2)முதலானவையும்

நின் வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக
உனக்கே சேஷமும்
பலவத்தரமுமான
பசி ராஜனுக்குள்ள நன்மையைப் பாடின இதுவே ஒரு தப்பாக்கி

வையம் சிலம்பும்படி செய்வதே
லோகம் எல்லாம் இவளை பழி சொல்லும்படி செய்வைத்து உனக்குத் தகுமோ

திருமால்
நீர் தெருவில் மால் செய்யுமதுக்கும்
இவளை பிரிந்து இங்கனே பாதிப்பத்துக்கும் என்ன சேர்த்தி யுண்டு

இத்திருவினையே
அத்திருவுக்கு இவள் அன்றோ ஸ்தந பாஹ் வாதிகளாய் விளங்கினவள்
உம்முடைய ரசிகதைக்கு இது கொத்தை காண் என்கிறாள் –

—————

இப்படி ஸூ ஹ்ருத்துக்களும் நொந்து உரைக்கும் படி ஈடுபட்டவர்
பகவத் ப்ராவண்யம் உடையாரைப் பாபம் ஸ்பர்சியாது இருக்க
அனுபவ அலாப ஹேதுவான பாபம் நமக்கு எங்கனே வந்தது என்று
விஷண்ணரான (துன்புற்ற )பாசுரத்தை
நாயகி வெறுத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-

பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –
துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
புகழும் நல் ஒருவன் -3-4-

பதவுரை

மேரு–மஹாமேருமலையானது
திருமால் உரு ஒக்கும்–திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும்
அ மேருவில் செம் சடரோன்–அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன்.
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும்–அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்;
அன்ன கண்டும்–(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும்.
திருமால் உருவோடு அவன் சின்னமே–அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும்
(நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால்–ஒப்பற்ற செல்வமாக வேட்கை-போற்றத்தக்க வ்யாமோஹம் -பக்தி –
தலைக் கொண்ட நங்கட்கு–ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை–(பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும்–எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
மஹா மேருவானது ஸ்ரீ யபதியினுடைய திருமேனியோடே ஒக்கும்

பிராட்டி திருமேனியின் ஒளி விரவுகையாலே
ருக்மாபம் ஸ்வப்னம் தீ கம்யம் -(மனு 12-12 ) திருமேனியோடே ஒக்கும் என்றபடி

அம் மேருவில் செஞ்சுடரோன்
அம் மஹா மேருவிலே சிவந்த சுடரை யுடைய ஆதித்யனானவன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
ஸ்ரீ மானுடைய வலது திருக்கையிலே உறைகிற திருவாழியோடே ஒக்கும்

மேருவானது ஸர்வ வர்ஷங்களுக்கும் உத்தரமாகையாலே
ஆதித்யன் வலத்ததாகக் குறையில்லை

அன்ன கண்டும்

அவன் தன்னைக் காண்கை அன்றிக்கே
ஒப்புக் கண்டும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ மானுடைய வடிவோடே
அசாதாரண சிஹ்னத்தையே ப்ரேம பாரவஸ்யத்தாலே
அக்ரமமாகச் சொல்லும்படியான

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு
அத்விதீயமாய்
சம்பத்தாய் இருக்கிற பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு

எங்கே வரும் தீ வினையே –
விஸ்லேஷ ஹேதுவான துஷ் கர்மமானது எங்கனே வருவதாயிற்று

ஏவம் ஹவா வத தபதி கிமஹம் ஸாது நா கரவம் கிமஹம் பாப மகரவமிதி -( தைத்ரியம் -ஆனந்த -2-9 ) என்று
அக்ருத்ய கரணாதிகள் இவனைத் தபிப்பியாது என்று அன்றோ சொல்லுகிறது

ஷீண பாபரானவர்களுக்கு பக்தி பிறக்கும் என்னச் செய்தே
பக்தியின் மேல் எல்லையிலே நிற்கிற நமக்கு
பிரிகைக்கு அடியான பாபம் வர விரகு யுண்டோ என்றதாயிற்று

கிளவியிலும்
நாயகன் ஈஸ்வரனாகையாலே
நல்லோமான நாம் பிரிந்து இருக்கைக்கு அடியான
தீ வினை எங்கே வந்தது என்று உரைத்தாள் யாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே
இத்தைப் பழி சொல்லும்படியாகப் பெற்ற நமக்கு குறை யுண்டோ என்கிறார்
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
ஸர்வதா ஸத்ருசமாய் இருபத்தொரு வஸ்து இல்லாத படி இருக்கிற ஸர்வேஸ்வரன்
திரு மேனிக்குச் சேர்ந்து இருபதொரு உபமானத்தைக் கண்டால்
உபமான ரஹிதமான வஸ்துவுக்குக் கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனே
ஒரு உபமானம் உண்டாகப் பெற்றோம் என்று இது
ஆஸ்வாஸ ஹேது யன்றியே –
அவ்வுபமேயம் தன்னையே பெற வேணும் என்ற விடாய் பிறந்த நமக்கு
இனி ஒரு குறை யுண்டோ என்றது ஆதல்

அன்றிக்கே
அவனுடைய ஜெகதாகாரதையை அநு சந்தித்தால் அவ்வளவில் பர்யவசியாதே
அவனுடைய அசாதாரண விக்ரஹத்தைக் காண வேணும் என்னும் அபேக்ஷை
பிறக்கும் படியான எனக்கு ஒரு குறை யுண்டோ என்னுதல்

வியாக்யானம்

திருமாலுரு வொக்கும் மேரு
ஸ்ரீ யபதியினுடைய வடிவோடு ஒத்து இரா நின்றது மேருவானது
வளர்த்தியாலும்
புகாராலும்

அம்மேருவில் செஞ்சுடரோன்
அம் மேருவில் ஸஞ்சரியா நிற்கிற ஆதித்யன்

திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும்
வடிவார் சோதி வளைத்து உறையும் சுடர் ஆழியும் -( திருப்பல்லாண்டு -2-)என்றபடியே
அவர் திருக்கையில் திருவாழியைப் போலே இருக்கும்

அன்ன கண்டும்
இப்படி அவனுக்குப் போலியானவற்றைக் கண்டு வைத்தும்

திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது
ஸ்ரீ யபதியுடைய அந்த மேரு ஒக்கும் திருமேனியையும்
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் –(திருவாய் -6-4-9 ) என்கிறபடியே
அவ்வாசாதாரண சிஹ்னத்தையும் காணவென்று ஆசைப்பட்டுப் பிதற்றா

ஓர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே –

————–

அவதாரிகை

இப்படி பக்தி விரோதி பாபம் கழிந்தாலும்
பிராப்தி பிரதிபந்தகம் கிடக்கையாலே அது கழிந்தால் அன்றோ பெறலாவது என்ன
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
நிரதிசய போக்ய பூதனாய்
ஸ்ரீ யபதியாய்
ஸூலபனான இவனை
என்று கிட்டி அனுபவிக்கக் கடவோம் என்கிறார்

இது நாயகி இரங்கி உரைத்ததாகவுமாம்

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை –
துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் —
அங்கும் இங்கும் -8-3-

பதவுரை

தீ வினைக்கு அரு நஞ்சை–(அடியார்களுடைய பாவத்துக்கு ப்ரபலமான விஷம் போனறிருப்பவனும்.
நல் வினைக்கு இன் அமுதத்தினை–(அவர்களுக்கு கைங்கரியமாகிய நல்ல தொழிலுக்கு இனிய அமிருதம் போல் இனிப்பாகவுள்ளவனும்-பிரபத்தி செய்வித்து -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் என்றுமாம்
பூவின் மேவிய தேவி மணாளனே–தாமரை மலரைத் தனக்கு இடமாகக் கொண்டு பொருந்திய திருமகளுக்கு கண்வனும்.
புன்மை என் காது ஆவினை மேயக்கும்வல் ஆயனை–சிறுமை கருதி இகழாமல் பசுக்களை மேய்க்கும் வலிமையையுடைய இடையனானவனும்
அன்று–முன்பொரு காலத்திலே
உலகு–உலகங்களை
இர் அடியால்–இரண்டு அடியாலே
தாவின ஏற்றை–அளந்து கொண்ட மேன்மையுடையவனுமான
எம்மானை–எம்பெருமானை
எஞ்ஞான்று தலைப்பெய்வன்–எப்பொழுதும் சேர்வேன்?

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்
துக்கத்தை விளைப்பதான
துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை

ஆறு நஞ்சினை -என்றால்-எழுத்து மேறும் -பாடமும் அல்ல

அரு நஞ்சினை -நல் வினைக்கின்ன முதத்தினை-என்னவுமாம்

நல் வினைக்கின்ன முதத்தினை
ஆஸ்ரயண ரூபமான நல் தொழிலுக்கு
நிரதிசய ரஸமான நித்ய போக்யமானவனை

பூவினை மேவிய தேவி மணாளனை
அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே
நித்ய வாஸத்தை யுடையளாய்
நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

(இதம் இத்தம்-ஸ்வரூபத்துக்கும் ஸ்வாதந்தர்யத்துக்கும் நீயே நிரூபனம் பட்டர்)

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே
சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய்
அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை

அன்றுலகீரடியால் தாவின வேற்றை
இப்படி இனியனானாலும்
தன்னுடைமை பிறர் கொள்ளும் அளவில்
தன் கால் கீழே இட்டுக் கொள்ளும் மேனாணிப்பை யுடையவனை

எம்மானை
கீழ்ச் சொன்ன ஸ்வபாவங்களைக் காட்டி
என்னை அடிமையாக்கிக் கொண்ட ஸ்வாமி யானவனை

எஞ்ஜான்று தலைப் பெய்வனே –
இப் பிரகாரங்களாலே கிட்டக் குறை யில்லை
அது எக்காலம் என்றதாயிற்று –

———————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸம்ஸாரிகளில் காட்டில் வ்யவ்ருத்தராகப் பெற்றோம்
இனி அவனைப் பெற்று அனுபவிக்கிறவர்களோடே ஸஜாதீயராகப் பெறுவது என்றோ -என்கிறார்

வியாக்யானம்

தீ வினைக்கரு நஞ்சை
பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமான துஷ் கர்மங்களுக்கு
ஆற்ற ஒண்ணாத நஞ்சாய் யுள்ளவனை

நல் வினைக்கு
பலாபி சந்தி ரஹிதமான
இன்ன முதத்தினை

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவரை ஆஸ் வஸிப்பிப்பதாக
நம் பக்கலிலே நீர் ஆபி முக்யம் பண்ணி நம்மை ஆஸ்ரயிக்கைக்கு ஹேதுவான
விலக்ஷண சரீரத்தைப் பெற்றீர்
நம் பக்கலிலே நிரதிசய ப்ராவண்யம் உண்டாயிற்று
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்று
பக்தி யுடையார்க்கு பிராப்தி கைப்பட்டது அன்றோ என்று
ஈஸ்வரன் தன் திரு உள்ளக் கருத்தைப் ப்ரகாசிப்பிக்க

இதுக்கு முன்பு நின்ற நிலையை நிரூபித்தால் விளம்பம் பொறுக்கிறது இல்லை என்கிறார்

இதுவும் தலை மகள் ஆற்றாது உரைத்தலாகவுமாம்

தலைப் பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப் பெய்த வாக்கைக்கு நோற்ற விம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-

பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –
துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –
குரவை ஆய்ச்சியர் -6–4–

பதவுரை

அசுரர் குழாம்–அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த–அழிவைப் பண்ணின
நேமி–சக்கராயுதத்தை யுடைய
எந்தாய்–எம்பெருமானே!
யான்–நான்
தலைப்பெய்து–(யான் உன்னைச்) சேர்ந்து
நிலைப்பு எய்த–நிலைப் பெற்றிருக்கும்படியாக
ஆக்கைக்கு–இவ்வுடம்பைப் பெறுதற்கு
நோற்ற–தவஞ்செய்த
இ மாயமும்–இந்த ஆச்சர்யத்தையும்
உன் திரு அடி–உனது திருவடித் தாமரை மலர்களை
சூடும்–(எனது) தலைமேற் கொள்ளும்படியான
தகைமையினால்–அடிமைக்குணமாகிய தகுதியினால்
மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்–இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலை
நின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்
காண்தோறு–நோக்கும் போதெல்லாம்
தொல்லை ஊழி சுருங்கலது–பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

வியாக்யானம்

தலைப் பெய்தி (பெய்து) யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
பகவத் அனுபவ ப்ரஸங்கம் அற்று இருக்கிற நான் உன் திருவடிகளை
கோலமாம் என் சென்னிக்கு -(திருவாய் –4-3-6-)என்று
சிரஸா வஹிக்கும் படியான சேஷத்வமாகிற ஸ்வபாவத்தாலே கிட்டி
திருவடிகளே பிராப்தி ஸாதனம் என்று நிலை பெறுகைக்கு உறுப்பான இந்த சரீரத்தைப் பெறுகைக்கு
உன்னுடைய கிருபை யாகிற புண்யத்தை நோற்று வைத்த இந்த ஆச்சர்யத்தையும்

(ஸூ ஹ்ருத தேவர் யார் -முதலிகள் ஐதிகம்
தனக்கும் தெரியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் -எனது அடியாருக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்
ஸாஸ்த்ர வேத்யனான புறப்பாடு கண்டு அருளும் அவனே அறிவான்)

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும்
கிருபா லாபம் ஆகிற ஆச்சர்யம் ஒருபடிப்பட நிலை நின்று
நடத்தித் தாராதே நிற்கிற படியையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர ஸமூஹங்களுக்கு முடிவைப் பண்ணின
திருவாழியை யுடைய
என் ஸ்வாமி யானவனே

தொல்லை யூழி சுருங்கலதே –
விரோதி நிவ்ருத்திக்குக் காலம் பார்க்க வேண்டாமையாலும்
பரிகரம் தேட வேண்டாமையாலும்
பிராப்தி விளம்பிக்கைக்கு ஹேது இல்லாமையால்
முன்பு பழையதாக அகன்று போந்த காலத்தோடு
ஸஜாதீயமான ஆகாமி காலமானது கல்ப ஆகாரமாய்க் கொண்டு
வளர்ந்து வரையிட்டுக் காட்டுகிறது இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எஞ்ஞான்று தலைப் பெய்வன் -என்று இறே கீழ் நின்றது
என்றாகில் என்
பகவத் விஷயத்தில் ஸ்பர்சம் பலத்தோடு சம்பந்திப்பித்து விடும் என்று
விஸ்வஸித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன
அப்படி செய்யலாயிற்று இறே ஸம்ஸாரிகளைப் போலே நிரபேஷனானேனாகில் –
எனக்கு உன்னை ஒழியக் கால ஷேபம் பண்ண அரிதாகா நின்றது என்கிறார்

இப் பாட்டில் சொல்லுகிறது என் என்னில்
உன் திருவடிகளை ஸமாஸ்ரயிக்கைக்கு ஈடாய் இருபத்தொரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விடம் பொறாமைக்கு மூன்று ஹேது யுண்டு –
இதில் அத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம் —

இதில் இங்கனே அந்வயம்
உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த
யான்
தலைப்பெய்த
வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
தொல்லை யூழி சுருங்கலதே –என்று

உம்மை விட்டு இங்குப் பொறாமைக்கு அடியேனுடைய நிஜ ஸ்வபாவம் ஒரு ஹேது

இப்போதாக வந்தேறின ஆக்கைக்கு தேவரீர் ஸங்கல்பித்த ஆச்சர்யமும் ஹேதுவாம்

பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் -சத்யத்ரயம் என்று
தொடங்கி அருளிச் செய்தபடி
ஸ்வ விஷய போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியானது
ஸ்வ
பர
ஸ்வரூப யாதாம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஹேதுவாம்

உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
தகைமை என்று ஸ்வ பாவம்
இடை விடாதே த்வதீய புக்தோஜ்ஜித -ஸ்தோத்ர ரத்னம் -42-இத்யாதி யுக்த விதனாய்
உன் திருவடிகளில் கீழ் இருப்பதை நிலை நின்ற யான் இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால் நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும்
எனக்கு இப்போது வந்தேறினதான இத்தேஹத்துக்காக தேவரீர் நோன்பு நோற்றதே -ஸங்கல்பித்ததே -என்றபடி

இந்த ஆச்சார்யம் இன்னம் எத்தனை அநர்த்தத்துக்கு ஹேதுவோ என்று
ஏங்கப் பண்ணுமது அன்றி இங்கனே இங்கு இருப்பைப் பொறுத்து இருக்க ஒட்டுமோ என்றபடி

மாயம் செவ்வே நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு
மயாத்யஷேண ப்ரக்ருதி –ஸ்ரீ கீதை -9-10-என்று
உன்னால் புகழப்பட்ட மாய ப்ரக்ருதி யானது
ஸ்வரூப யாதாத்ம்ய அநு குண ஞான ப்ரவ்ருத்திகளை நிலை நிற்க ஒட்டாத
நியத ஸ்வ பாவம் யுடையது என்பதும்

இத்தேஹத்தில் அகப்பட்ட எனக்கும்
ராஜ்யாத் பிரம்ஸோ வநே வாஸே –ஆரண்ய -67-24-என்னும்படி
பிரிந்து பட்ட உனக்குப் போலே அதி பயாவஹம் ஆகையாலே இங்கனே
இங்கு இருப்பைப் பொறுத்து இருக்கப் போமோ என்றபடி

இம்மூன்றையும்

காண் தோறு
பார்க்கும் தோறும்

அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய்
அஸூர வர்க்கத்தை உரு அழிக்கும் திருவாழியை ஏந்தின அழகாலே
என்னை ஆண்டு கொண்டவனே

தொல்லை யூழி சுருங்கலதே
உன்னையே அனுபவித்தும்
உனக்கே அடிமை செய்தும்
கழிந்த யாவதாத்ம உபக்ரமமாய் இந்நாள் வரைக்குள்ள காலம் எல்லாம் நாம் அங்கனே இருந்தோமோ
அங்கனே இருந்தது அத்யல்ப காலங்கள் என்றே போனதாகா நின்றதே
ஆகையாலே
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்று
இங்கு இருப்பைப் பொறாமையால் ஜலாதுத் த்ருத மத்ஸ்யம் போன்று இரா நின்றேன் என்கிறார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -71-80–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 30, 2022

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவர் தம்முடைய ப்ராவண்ய அதிசயத்தாலே
பல வை லக்ஷண்யத்தின் பெருமையை அனுசந்தித்து
வார்த்தை சொன்னபடியைக் கேட்ட பரிவுடையார்
இவர் ப்ராப்ய ப்ராவண்யத்தாலே சொன்ன பாசுரம் என்று அறியாதே

சாதநந்தர நிஷ்டரைப் போலே உபாஸ்ய வேஷத்தைப் போற்றி விடுகிறாராக நினைத்துப்
பரிவாலே நியமித்த பாசுரத்தைத்
தம்முடைய ஸூஹ்ருத்துக்களுக்கு ஆவிஷ் கரித்து
இவர்கள் நெஞ்சு அறியாமல் ஆரோபித்துச் சொல்லுகிறார்கள் என்று அருளிச் செய்து
அந்த ஸூஹ்ருத்துக்களை விட்டுப் பரிவரைத் தெளிவிக்கும் பாசுரத்தை

தலைவன் அடியான தலைவி தன் ஆர்த்தியை ஊரார் முதலான குறியாலே அறிந்து
அன்னை முனிந்த பாசுரத்தைத் தோழிமார்க்கு யுரைத்து
அவர்களால் தெளிவித்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71-

பாசுரம் -71-ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் –
செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –
எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

ஊழிகள் ஆய்–காலங்களுக்கு நிர்வாஹகனாய் (மஹாகல்பகாலத்தின் முடிவிலே)
உலகு ஏழும் உண்டான்–உலக முழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம்–என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) கூறினோமில்லை.
களா பழம் கண்டு–களாப் பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு–‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று
(குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு–அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை–(எனது) தாய்
இவளோ நாழ் என்னும்–‘இப்பெண்பிள்ளையோ (என் சொற்கேளாது தன் நினைவின்படி)
சுதந்தரமாய் நடக்குஞ் செருக்குடையவள்’ என்று (கடுஞ் சொற்) கூறுவன்;
ஞானம் உண்டான் வண்ணம் சொல் விற்று என்னும்–உலகமுண்ட அத்தலைவனது நிறத்தைச் சொன்னவாறு
இது என்று குற்றங் கூறுவன்;
தோழிகளோ–தோழிகளே!
எம்மை அம்மனை சூழ்கின்ற–எம்மை எமது தாய் மாறுபட நினைத்து ஏறிட்டுச் சொல்லுஞ் சொற்களுக்கு
உரையீர்–நீங்கள் (சமாதானஞ்) சொல்லுங்கள்

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
மஹா கல்பமான காலங்களுக்கு நிர்வாஹகானாய்
(பூத பவ்ய பவத் பிரபு -காலங்களில் உள்ள வஸ்துக்களுக்கு பிரபு அங்கும் )
கால அவசாநத்திலே ஸப்த லோக உப லஷிதமான ஸமஸ்த ஜகத்தையும்
பசியர் உண்டால் போலே அமுது செய்ததுவே பற்றாசாக
திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் என்று சொல்லிற்றிலோம்

பழம் கண்டு ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாப் பழத்தைக் கண்டு அதின் நிறம் ஆழியின் நிறம் என்று சொன்னேனுக்கு

அக்தே கொண்டு
அந்தச் சொல்லிலே பொருள் கொண்டு

அன்னை
எனக்கு பிரியம் செய்து போந்த தாயானவள்

நாழி வளோ வென்னும்
இவள் தன்னிலே நடத்தும் ஸ்வ தந்தரையாய் இரா நின்றாள் என்னும்

நாழ்-என்று
மேனாணிப்பு
நறு வட்டாணித்தனம் என்றும் சொல்லுவார்

ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
காளாம் பழ வண்ணத்துக்குக் கடலை ஒப்புச் சொன்ன போதே
எல்லாவற்றையும் தனக்குள்ளே அடங்கின ஈஸ்வரன் நிறத்தைச் சொல்லிற்று
என்னா நின்றாள்

தோழிகளோ உரையீர்
என் நினைவு அறிந்து பரிமாறிப் போந்த நீங்கள்
நான் சொன்ன வார்த்தையின் உட்பாடு சொல்ல வேணும்

தோழிகள் -என்ற
பன்மையாலே பலரும் சொல்லித் தெரிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே –
உள் ஓன்று வைத்துச் சொல்ல அறியாத எம்மைப் பெற்ற தாயானவள்
சூழ்ந்து ஏறிட்டுச் சொல்லுகிறவற்றை உரையீர் என்று
இதற்கு மறுமாற்றம் சொல்லுகிறீலீர் -என்றுமாம்

இத்தால்

களாம் பழ வண்ணம் ஆழி போலும் -என்கையாலே
பல வேஷம் அபரிச்சின்னம் என்று
ஸூசிப்பித்ததாயிற்று

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் -என்கையாலே
உபாஸ்யமான காரண வேஷம் சொல்லிற்றிலோம் என்றபடி

நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்-என்கையாலே
பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தமான ஸ்வா தந்தர்யத்தை
ஏறிட்டமை சொன்னபடி
(குகன் குகை பரிகரங்கள் சங்கித்தால் போல் )

தோழிகளோ உரையீர் -என்கையாலே
ஸ்வரூப விரோதி சங்கை பிறந்தால்
நெஞ்சு அறிவாரை இட்டுத் தெளிவிக்க வேணும் என்றபடி

எம்மை யம்மனை சூழ் கின்றவே-என்கையாலே
பரிவுடையாரானார் ஸ்வரூபத்துக்கு எங்கே விரோதம் வருகிறதோ என்று
ஏறிட்டு சங்கிப்பர் என்றதாயிற்று —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
களவிலே புணர்ந்து பிரிந்த தலைமகன்
இவள் ஆற்றாமையைப் பரிஹரிக்கைக்காக இவள் வர்த்திக்கிற தேசத்தில்
தன் நிறத்தோடு போலியான பழங்களைச் -பலங்களைச் –
சிலர் விற்பார்களாகப் பண்ண
இவளும் அத்தைக் கண்டு தரிக்க
அத்தைத் தாயார் அறிந்து நிஷேதித்துச் செய்கிற மிகையைத்
தலைமகள் தோழிமார்க்குச் சொல்லுகிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
இப்படி சொன்னேன் ஆகில் குற்றமாம் இறே
கால உபலஷித ஸகல பதார்த்தங்களும் நிர்வாஹகனாய்
இவற்றை பிரளயம் வர எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகன் என்றிலேன்
குண நிஷேதத்தைப் பண்ணப் புக்கவர்கள் ஸத்ய ஞானாதி பதங்களுக்கு
வ்யாவர்த்ய பதத்தாலே பேதம் சொல்லுமா போலே
இவளும் குண ஸத் பாவத்தை சாதிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே குணங்களை சொல்லித் தரிக்கிறாள்
இவளுக்குச் சொல்லுகைக்கு பிராப்தி யுண்டு
அவளுக்கு இதிலே ஒரு கருத்து உண்டு என்று நிஷேதிக்கைக்கு பிராப்தி யுண்டு
உபகரித்த விஷயத்தில் உபகாரம் கொண்டவர்களும் பேசாது இருக்க ஒண்ணாது இறே
சேதனரானார் பேசாது இரார்கள் இறே
இவளுக்கு இது விபாகத்திலே பொல்லாதாம் என்று ஆயிற்று அவள் நிஷேதிக்கிறது
குணாதிக விஷயத்தில் ப்ராவண்யம் கிலேச அவஹமாய்த் தலைக்கட்டும் என்று இருக்கும் இறே

பழம் கண்டு
புரோ வர்த்தியான பதார்த்தங்களை
கடமாகில் கடம் என்றும்
படமாகில் படம் என்றும் சொல்லக் கடவது இறே
பிள்ளாய் கண்டது சொல்லுகையும் குற்றம் ஆவதே

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
களாம் பழ வண்ணமானது –

அக்தே கொண்டு அன்னை

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம்
ஸர்வ கல்ப நிர்வாஹகனாய்
லோகங்கள் ஏழையும் ஸ்வ முகம் கொண்டு தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான்
என்று சொல்லேன் அல்லேன்

பழம் கண்டு
களாம் பழத்தைக் கண்டு

ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு
இக் களாம் பழத்தின் வண்ணம் கருங்கடல் போன்றது என்ற அளவே சொன்ன எனக்கு

அக்தே கொண்டு அன்னை
அவ்வளவே கொண்டு எனக்குத் தாயானவள்

நாழி வளோ வென்னும்
நாழ்-என்று நிறம் உடைமை
அத்தாலே ஏற்றத்தைச் சொல்லுகிறது
இவள் எங்களில் ஏற்றம் பெற்றவளோ என்னா நின்றாள்
நான் என்ன குற்றம் செய்தேனாய் இவள் என்னைப் பொடியுமது

இவ்வளவு அன்றிக்கே
ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
இந்தப் பெண் இந்நிலத்தோடு கூடியவற்றை எல்லாம் உண்டவனுடைய
வர்ணத்தைச் சொல்லிற்று என்னா நின்றாள்
நான் அங்கனே சொன்னேனோ

தோழிகளோ உரையீர்
ஓ தோழிகாள் -என் அன்னைக்கு உன் மகள் அங்கனே சொல்லவில்லை
என்று சொல்லா நின்றாளே

அவளை நீ தூற்றாதே கொள் —
என்னுங்கோள்-

எம்மை யம்மனை சூழ் கின்றவே
என்னை மனைப்பாம்பு போலே நான் போன போன இடம் எங்கும் தான்
சூழ்ந்து கொண்டாடியும்
தூற்றியும்
என்னைக் கொல்லா நின்றாள்

ஓ தோழி காள்
என்று இலம் என்றேர்க்கு
என்கிற பஹு வசனம்
இங்கனே தரிப்பாரைக் கூட்டிக் கொண்டுமாம் –

———-

அவதாரிகை

இப்படி பிறரும் அதி சங்கை பண்ணும் படி பலத்தில் த்வரையை யுடைய இவருக்கு
அனுபவ ஸித்தி இல்லாமையாலே பிறந்த மோஹமும்
பல வை லக்ஷண்ய விஷயமான ஞானமும் நடந்து
அலாப நிபந்தநமான கிலேசத்தை விளைக்க ஆர்த்தரான பிரகாரத்தை
இருளுக்கு ஆற்றாத ஈடுபாட்டின் மேலே
இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்த
தலைவி வார்த்தையால் அருளிச் செய்கிறார்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-

பாசுரம் -72-சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
சீலமில்லாச் சிறியன் -4-7

பதவுரை

சூழ்கின்ற–(இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல்–ராத்ரியினுடைய
சுருங்கா இருளின்–சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை–கறுத்த செறிவை
போழ்கின்ற–பிளக்கிற
அம்பிள்ளை திங்களும்–அழகிய இளஞ் சந்திரனும்
போழ்க–(என்னையும்) பிளக்கட்டும்;
துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து–(நாயகனது) திருத்துழாய் மலரைப் பெறுதற்காகவே யீடுபடுகிற மனத்தையுடைய
ஒரு தமியாடடி யேன்–ஒரு துணையும் இல்லாமல் மிக்க தனிமையை யுடையேனான என்னுடைய
மாமைக்கு–(இயல்பான) மேனி நிறத்துக்கு
இன்று வாழ் கின்ற ஆறு–(இப்பொழுது வாழ்க்கை நேரும்படி
வாலியது வந்து தோன்றிற்று–சுத்தமான இளம் பிறை வந்து தோன்றியது
இதுவோ–இப்படியோ?

வியாக்யானம்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
சூழ்ந்து நிற்கிற ராத்ரியின் நீண்ட இருளினுடைய கறுத்த செறிவைப் பிளவா நிற்கிற
அழகிய பாலசந்த்ரனும் என்னைக் கீளுக

திணும்பு -என்று செறிவு

பிள்ளையும் என்று
இருளை போக்குகையாலே உபகாரகமான இதுவும்
ப்ரகாசத்தாலே நலிகிறமை சொல்லுகிறது

துழாய் மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –

மாமைக்கின்று வாழ்கின்றவாறு
ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்

இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே
முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று
இதுவும் போழ்க

வாலிமையாவது
சீர்மையாய்
கனத்தைச் சொல்லுகிறது

அன்றியே
பிறையின் வெளுப்பு ஆகவுமாம்

இத்தால்
போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே
ராத்திரி வந்து இருளாய் நலிய
இத்தாலே வந்த நலிவைப் போக்கித் தந்து நம்மை ரக்ஷிப்பாரோ என்று இருக்கிற அளவிலே
சந்திரன் வந்து தோற்றினான்

இவ்விடத்தில் அமுதனார் ஒரு கதை சொல்லுவார்
ஒரு ஸாது ப்ராஹ்மணன் காட்டிலே தனியே வழி போனானாய் அங்கே ஒரு பசு தொடர்ந்து வந்ததாய்
ஒரு மரத்திலே ஏறி இருந்து
இத்தாலே வந்த நலிவைப் போக்கி நம்மை ரக்ஷிப்பாரோ என்கிற சமயத்திலே
ஒரு புலி வந்து தோற்றி பசுவையும் கொன்று அதனுடைய ரத்தத்தையும் பானம் பண்ணி
இவன் முன்னே வந்து தண்டையை முறிக்கு இட்டு இருந்ததாய்
அந்தபசுவே யாகில் ஒருபடி பிராண ரக்ஷணம் பண்ணிப் போகலாயிற்று
இனி இத்தை நம் சத்தையை நோக்குகை என்றதொரு பொருள் இல்லையாகாதே என்றான்
அது போலே இறே இங்கும் –

வியாக்யானம்
சூழ்கின்ற
பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஓக்க தானே வந்து சூழ்ந்தது
ஓர் இடத்திலே இதுவாய்
மற்ற ஒரு இடத்திலே ஒதுங்க நிழல் உன்படாம்படி இருக்கை அன்றிக்கே

கங்குல் சுருங்காவிருளின்
ராத்ரியினுடைய சுருங்காது இருள்
இன்னதனைப் போது இருள் செறிந்து வரக்கடவது
இன்னதனைப் போது சுருங்கி வரக்கடவது
என்ற ஒரு மரியாதை உண்டு இறே
அது இன்றிக்கே இரா நின்றது

கருந்திணிம்பை
கறுத்த நிறத்தை யுடைய
திணிம்பை என்று ஒரு சொல்லாய்
ஆத்தாள் திண்மையைச் சொல்லுகிறது
இருளினுடைய புற இதழைக் கழித்து
அகவாயில் திண்மையான வயிரத்தைச் சேரப் பிடித்தால் போலே இருக்கிறது

போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க
அவ்விருளைப் போழ்ந்து கொண்டு -பேதித்துக் கொண்டு -தோற்றுகிற சந்திரனும்
தனக்குப் புறம்பு பாத்யம் இல்லாத படியாலே
நம்மையே பாதித்திடுக

போழ்கின்ற
ஸஹஜ ஸாத்ரவத்தாலே அவன் ஸந்நிதியாலே இது போழ்கின்றது ஓன்று அன்றியிலே
கை தொட்டு அழிக்கிறாப் போலே யாயிற்று
இருளினுடைய திண்மையும்
சந்திரனுடைய பருவம் நிரம்பாமையும்

திங்களம் பிள்ளையும்
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
முந்துற அநுகூலரைப் போலே தோற்றிப்

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன்
தனிமைப் பட்டேனான என்னுடைய

மாமைக்கின்று வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று
உடலுக்கு இன்றாக இப்பிறையால் பிளக்கப்படும் இதுவோ வாழ்கின்றபிரகாரம்
என் உடலுக்கு உலகள நிறத்தையும் கெடுத்து
அத்தையே பிளந்து விடவும் தோன்றிற்று

வாலியதே
இந்தப் பிறையானது இதுக்கே வந்ததாய்
நிராதாரமாகத் தொங்குமதாய்
தன் மிக்க வெளுப்போடும் சீர்மையோடும் ஆவிர்பவித்தது
இதுக்கு எங்கே ஒதுங்குவேன் என்கிறாள் –

————

அவதாரிகை

இப்படி விஷய வைலக்ஷண்ய ஞானம் மிகவும் நடக்க
அனுபவ யோக்ய காலத்தில் போக ஸித்தி இல்லாமையாலே
பிறந்த தளர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
நொந்து உரைத்த பாசுரத்தை

(இருள் -அனுபவம் பெறாமல் நலிய அதுக்கும் மேல் ஸ்வரூப
ஞானம் -நிலவு போல் -அறிவு பெற்றாலும் -பக்தி முத்த -அனுபவம் பெறாமல் –
இப்படி வைலக்ஷண்யம் அறிந்தாலும் -இழந்து தவிக்கிறோம் -என்று
மேலும் துன்பம் பட்டத்தைக் கீழே பார்த்தோம் )

நிலவு விஞ்சும்படியான மாலைக்கு ஆற்றாத் தலைவி தளர்த்தி கண்டு
இரங்கின பாங்கி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-

பாசுரம் -73 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் –
துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –
வேய் மரு தோள் இணை -10 -3 –

பதவுரை

விண்–ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு–மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால்-பாலை
உலகு ஆர சுரக்கும்–உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற
வெண் திங்கள் என்னும் வெளுத்த சந்திரனாகிய
சுரவி–பசுவினது
சுர–சுரம்பு
முதிர்–மிகப்பெற்ற
மாலை–மாலைப்பொழுதிலே
தமியாட்டி தளர்ந்தது–(நாயகன் வாராமையாலே) தனிமையையுடைய இவள் தளர்ச்சியை யடைந்த தன்மை
பரிதிவட்டம் போலும்–இத் திங்களொளியை விழுங்க வல்ல ஸூர்யமண்டலம் போலும் ஒளியையுடைய
அடல் அழி–வலிய சக்கராயுதமுடைய
பிரான்–அத்தலைவன்
ஏழ்பொழில்–ஏழுவகைப்பட்ட லோகங்களையும்
அளிக்கும் சால்பின் தமைகை கொல் ஆம்–ரக்ஷிக்கிற அமைவின் பெருமையா?

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
மிகவும் வெளுத்த நிலவை லோகம் நிறைய சுரவா நிற்பதாய்
வெள்ளைத் திங்கள் என்று சொல்லப்படுவதான
விண்ணில் பால் பசுவினுடைய சுரப்பு முதிரா நிற்கிற மாலையிலே

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான்
இத் திங்கள் ஒளியை விழுங்குவதான ஆதித்ய மண்டலம் போலே ஒளியை உடைத்தாய்
ஆஸ்ரித விரோதி நிரசன ஸீலமாய்
யுத்த காலத்தில் பரிகரமாக திருவாழியை யுடையனாய்த்
தன்னைப் பற்றினார்க்கு உபகாரகனானவன்

பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
லோகம் ஏழையும் ரக்ஷிக்கிற அமைவு யுடைமையின் பெருமையாகக் கூடும் இறே

தமியாட்டி தளர்ந்ததுவே
தாம் வாராமையாலே தனிமையை உடையளான இவள் தளர்ந்தது
என்று நொந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
அனுபவ யோக்ய காலத்திலே அநுபாவ்ய விஷய வைலக்ஷண்யம் அடியாக
ஞான பிரகாசம் அதிசயித்து நடக்க
அனுபவ ப்ரதாநம் பண்ணாமையாலே
ஸ்வாபாவிகமான ரக்ஷகத்வமும் அகிஞ்சித் கரமாம் படி இருந்ததீ என்று
ஸூஹ்ருத்துக்கள் சங்கித்து உரைத்தாராயிற்று

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நிலாவும் போய் முறுக நின்று பாதகமாய்
அத்தாலே இவளும் நோவுபட்டு மோஹித்துக் கிடைக்க இத்தைக் கண்ட திருத்தாயார்
தர்ம ஹாநி கிடீர் -என்று கூப்பிடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

ரக்ஷகத்வ ஸ்வபாவமாமதோ
இதோ வெண் திங்களாகிற ஸூரபி பால் வெண் நிலாவாகிற முதிர்ந்த பாலை
எங்கும் சுரக்கப் பண்ணுகையாலும்
இந்த முதிர்ந்த மாலையாலும் தனியாட்டி தளர்ந்ததுவே
தம் பொழில் ஏழையும் ரக்ஷகத்வ ஸ்வ பாவமாய் என்னை நலியா நின்றான் என்று
தளருகிற தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி சுர முதிர்மாலை
வெண் திங்கள் என்னும் விண் சுரபி
உலகார வாழ் வெண்ணிலவு என்ற முதிர்ந்த பால் சுரக்கும் முதிர் மாலை
என்று அந்வயம்
முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது
லோகங்கள் எல்லாம் நிறையும்படி
வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று
முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று

பரிதி வட்டம் போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்
பரிதி வட்டம் -ஆதித்ய மண்டலம்
தேஜஸ்ஸில் அத்தைப் போன்றதாய்
யுத்தத்தில் அசூரரைத் தொடருமதான திருவாழியால் அவர்களை நிரசித்தும்
கையும் திருவாழியுமான அழகை நமக்கு காட்டியும்
உபகரிக்கிறவனுடைய விஹாரணா ராமமான ஸப்த லோகங்களுக்கும்
ரக்ஷகனானவனுடைய சால்பு ரக்ஷண சாமர்த்தியம்
அதின் தகைமை -அதனுடைய விஜ்ரும்பணம்

கொலோ
ஆமதோ

தமியாட்டி தளர்ந்ததுவே
தம்மால் தனிப்பட்டவள் அத்யாவசந்நை யாமதுவே
ஜகாத் ரக்ஷண விஜ்ரும்பணம் ஆமதோ –

———-

அவதாரிகை
இப்படித் தளர்ந்தவரை ஆஸ்வஸிப்பித்தாக ஈஸ்வரன் தன் கிருபையாலே
சேஷித்வ
போக்யத்வங்களினுடைய
மிகுதியைப் பிரகாசிப்பிக்க

ஆஸ்வஸ்தரான ப்ரகாரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாயோடே
சீலித்த (ஸஹ வாஸம் பண்ணிய )தென்றல் உலாவுகிற படியைக் கண்டு
ஆஸ்வஸ்த்தையாய்
நாயகி தோழிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –திரைப்பாயல் பாட பேதம்

பாயில் -ஷீராப்தி யாகிற படுக்கையிலே —
மறிதர -கீழ் மேலாக-
பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-
துறையடைவு–தலைவி மகிழ்வுடன் சொல்லும் பாசுரம் என்றும்
தென்றல் வருகிறதே -அவன் வரவில்லை -என்று வருந்த
தோழி திரு மேனி ஸ்பர்சம் முகந்து வருவதால்
அருகில் வந்து கொண்டு இருக்கிறார் -அறியலாம் –
தோழி அவன் வருகைக்கு அறிகுறி என்பதாகவும் கொள்ளலாம்
செய்ய தாமரை -3 -6 –

பதவுரை

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை–(கொந்தளித்து விழுவதெழுவதாயக்) கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற அலைக் கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில்
பாயல்–(ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும்–அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும்–(அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும்–பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான்–கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி
பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது
முடிசூடு துழாய்–திருமுடியிற் சூடியுள்ள திருத்துழாயை
அளைந்து உன்–அளாவியுண்ட
பசு சிறு தென்றல்–புதிய இளமையான தென்றற் காற்றானது
அந்தோ வந்து உலாகின்றது–மகிழ்ச்சியுண்டாம்படி (என்மேல்) வந்து வீசுகிறது.

வியாக்யானம்

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
பகவத் ஸ்பர்ச ஸூகத்தாலே கொந்தளித்து விழுவது எழுவதாய்
பரஸ்பர ஹானியாலே முறிந்தும் வருகிற திரைக் கிளப்பத்தை யுடைத்தான
ஷீரார்ணவத்தில் படுக்கையிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
ஸ்ரீ மத்தாய்
அதிசய ஸூசகமான திருக்கண்கள் உறங்கியும்

அழகிய
நெடும் கண் என்றுமாம்

அறிவுற்றும்
அவ்வுறக்கம் தமஸ் கார்யம் அல்லாமையாலே
அத்தோடே ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணியும்

வையம் விழுங்கியும்
ரக்ஷணீயமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தவாறே
திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
ஆஸ்ரித ரானவர்களை -அந்தர் வர்க்கமான இந்த்ராதிகள் பசிக் கோபத்தாலே
வர்ஷாதிகளாலே நலியும் அளவிலே
பெரிய மலையை உயர மறித்துக் குடையாக்குகைக்காக இடந்து எடுத்த மஹா உபகாரகனுடைய

முடி சூடு துழாய்
இந்திரன் கோவிந்த அபிஷேகம் பண்ணின திரு முடியிலே
சாத்தின திருத்துழாயை

அளைந்து உண் சிறு பசுந்தென்றல்
தழுவி
முழுசி
அனுபவித்த மந்தமான புதிய தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே
ஐயோ வந்து உலவா நின்றது என்று
தன்னுடைய சந்தோஷத்தைத் தோழிக்கு உரைத்தாளாயிற்று

அன்னோ -என்ற பாடமாய்
உலவா நின்றதீ என்றுமாம்

இவ் விடத்தில் தென்றல் உலாவுதலை உகந்து உரைத்தது
தலைவனான ஈஸ்வரன் ஆசன்னனானான் என்கிற அபிப்ராயத்தாலே

இத்தால்
தன்னோட்டை ஸம்ஸ்லேஷ ஸூகத்தாலே பெரும் கடல் கிளர்ந்தால் போலே
தான் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தின் நீர்மையை யுடையரானவர்கள் அனுபவிக்கும் படி
தன்னை ஸர்வ ஸ்வ தானம் பண்ணி ஜகத்துக்கு ஸர்வ பிரகார ரக்ஷகனாய்
ஆபத் சகனாய்
விரோதி நிவர்த்தன சீலனான
கிருஷ்ணனுடைய நிரவதிக
சேஷித்வ
போக்யத்வங்களானவை
அவனுடைய தாக்ஷிண்ய அதிசயத்தாலே பிரகாசியா நின்றது என்று
ஆஸ்வஸ் தராய் ஸூஹ்ருத்துக்களுக்கு அருளிச் செய்தார் ஆயிற்று

(சிறு பசும் தென்றல் தழுவி முழுசி -தாக்ஷிண்ய அதிசயம் )

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஒரு தென்றல் வந்து உலாவிற்று ஆயிற்று
அத்தென்றல் வந்தது -அவனை வரக்கண்டிலோம் என்று தலைமகள் தளர்ந்தாள்
அத்தைக்கண்ட தோழியானவள்
வெறும் தென்றல் என்று இருந்தாயோ
மாளிகைச் சாந்து நாறி இரா நின்றாள் ராஜபுத்ரன் வர அணித்து என்று இருக்க வேண்டாவோ
இது அவன் நல் வரவுக்கு ஸூசகம் காண்
நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வஸிப்பிக்கிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும்
தளர்ந்து பெரும் திரையாக எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும்
காற்றாலே முறிந்தும் வருகிற திரைகளை யுடைத்தானா படுக்கையிலே
இவன் ஸர்வேஸ்வரன் என்று ஐஸ்வர்யத்தைக் கோள் சொல்லிக் கொடுப்பதாய்
பரப்புக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற கண்களைக் கொண்டு உறங்கியும்
ஜகத் ரக்ஷண சிந்தையைப் பண்ணிக் கொண்டு கண் வளர்ந்ததும்

அறிவுற்றும்
பிரளயம் வந்து நலியப் புக்கவாறே
இவற்றினுடைய ரக்ஷண அர்த்தமாக நாம் வந்து கிடக்கச் செய்தே
இவற்றை நோவு பட விட்டு இருக்கையாவது என் என்று உணர்ந்து அருளியும்

வையம் விழுங்கியும்
பிரளய ஆபத்திலே நோவு படாதபடி பூமியை எடுத்து திருவயிற்றிலே வைத்து நோக்கியும்

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே ஒரூராக நோவு படப்புக்கால்
வந்து நோக்கும் படியைச் சொல்லுகிறது
கோவர்த்தனம் ஆகிற மஹா கிரியை நின்ற நிலையிலே கிளம்பும்படி
கீழது மேலதாம் படி பேர்த்து எடுத்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே
தாளிணை மேல் அணி தண்ணம் துழாய் -திருவாய் -4-2-1- என்று
அவன் இருந்தாலும்
கிருஷ்ணாதி சிரஸா ஸ்வயம் -என்று அவன் இருக்கும்படியாலே
இவள் அத்தைச் சொல்லுகிறாள்
அவன் திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயைப் புக்கு உழறி
அதிலே வாஸனை பண்ணி நடுவு ஒன்றிலே தங்காதே
கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலவுகிறது
இனி உனக்கு சோகிக்கைக்கு அவகாசம் உண்டோ

அவன் முடி சூடு துழாய் என்ன அமைந்து இருக்க
கீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்குக் கருத்து என் என்னில்
அவன் ஆஸ்ரித அர்த்தமாக வியாபாரித்த இடம் எங்கும் புக்கு
ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை

இத்தால்
அவன் ஆஸ்ரித அர்த்தமாகாது திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பொடியையும்
பிரளய ஆபத்திலே ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து நோக்கின இம் மஹா உபகாரத்தையும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணின பொடியையும்
ஆக இக்குணங்களைச் சொல்லி பார்ஸ்வஸ்த்தர் ஆஸ் வஸி ப்பிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக குண ஞானத்தாலே ஜீவித்த படியைச் சொல்லுகிறது

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி இவருடைய ஜகத் ரக்ஷணமும் ஜகத் ஆஹ்லாதனமும்
ஸ்வா தந்தர்ய அசஹை களானவர்களுடைய வதனே யாமதோ என்று
மோஹங்கதையான தன்மைகளை ஆஸ்வஸிப்பிக்க
இவளின் பரம பிரணயியான சர்வ ரக்ஷகன் திரு அபிஷேகத்தில் சாத்தின
திருத்துளாய்ப் பரிமள மயமான தென்றலை இவன் மேலே ப்ரஸவிப்பித்தான்
அத்தால் ஆஸ்வஸ் தையான நாயகி பாவம் பெற்றாராய்
அவள் தன் தோழிக்கு உரைத்த பாசுரத்தால் தாம் அதுக்கு ஆச்சர்யப்படுகிறார்

வியாக்யானம்
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில்
ஒன்றுக்கு ஓன்று கொந்தளித்து விழுந்தும்
புரளுமதாய் முறுகளைப் பெற்றும் மேல் வருகிற திரைப்பாயனுள்ள ஆழ் கடலிலே

திரு நெடுங்கண் வளர்ந்தும்
திருவும் தாமும் தீர்க்க லோசனாத்மக யோக நித்திரை செய்தும்

அறிவுற்றும்
மத்யே வந்தவர்களைக் கடாக்ஷிக்கக் கண் விழித்தும்

வையம் விழுங்கியும்
மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்
மஹத்தான கோவர்த்தனத்தை விஜ்ரும்பணத்தால் விஜ்ரும்பித்து
மேற்புறம் உட் படும்படி நிலத்தோடு ஒட்டு விடுவித்தவனுடைய

முடி சூடு துழாய் அளைந்து உண்
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயில் விளையாடி
தத்கத கந்த மகரந்த ஆஸ்வாதீ யானதாய்

சிறு பசுந்தென்றல்
சிறுகச் சிறுக வருகிற குளிர்ந்த தென்றலானது

அந்தோ வந்து உலாகின்றதே –
இப்போதாக ஸஞ்சரியா நின்றபடி என்று
ஆஸ்வஸிக்கிறார் –

———–

இவருடைய ஆஸ்வாஸ அதிசயம் கண்ட அன்புடையார்
இவர் திவ்யராய் இருக்கிறாரோ
இந்த விபூதியிலே இவ்வதிசயத்தைப் பெற்றவரோ என்று
விஸ்மிதராய்ச் சொன்ன பாசுரத்தை
தலைவன் பாங்கியுடன் தலைவியை எதிர்ப்பட்டு வியந்து உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –

பாசுரம் -75-உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –
துறையடைவு-தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் –
சன்மம் பல பல -3 -10 –

பதவுரை

உலாகின்ற–(காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை–கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு–ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ–எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற–(அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற-இந்திரியங்களுக்கு விஷயமாக
வெம்சிலை–(புருவமாகிய) கொடிய வில்லையுடைய
வாள் முகத்தீர்–ஒளியுள்ள முகமுடையவர்களே!
குனி சங்கு இடறி–வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து
புலாகின்ற–மீன் நாற்றம் வீசப்பெற்ற
வேலை–அலைகிளர்ச்சியையுடைய
புணரி–கடலை
அம்பள்ளி–அழகிய படுக்கை யிடமாகவுடைய
அம்மான்-ஸர்வேஸ்வரனது
அடியார் நிலா கின்ற–பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற
வைகுந்தமோ–ஸ்ரீவைகுண்ட லோகோமோ
வையமோ–இந்த நிலவுலகமோ
நும் நிலை இடம்–உங்களது இருப்பிடம்?

வியாக்யானம்
உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
குழை யளவும் சென்று மீளுகையாலே உலாவா நிற்பதாய்
கெண்டையான ஒளியையுடைய அம்புகளானவை
என்னுடைய ப்ராணனைத் தோற் புரையிலே போகாதே
உள்ளுருவும் படியாக வளைந்து வியாபரிக்கிற புருவமாகிற
கொடிய சிலையையுடைய ஒளி விஞ்சின முகத்தை யுடையவர்களே

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான்
குனி சங்கைக் கீழ்ப்படுத்தி மேலே போய்த் தன் வெறி நாற்றத்தை யுடைத்தான
திரைக் கிளப்பத்தை யுடைய கடலை அழகிய படுக்கையாக யுடைய
ஸ்வாமி யானவனுடைய

வேலை -என்று
கரை யாகவுமாம்
(அலை யுடைய கடல் என்றும் கரையை யுடைய கடல் என்றும் )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ
சேஷத்வ பாரதந்தர்யங்களை வடிவாக யுடையவர்கள்
நித்ய வாஸம் பண்ணுகிற அழிவற்ற தேசமோ

வையமோ
அவனுடைய லீலா விபூதியோ

வையம் என்று
விபூதிக்கு உப லக்ஷணம்

நும் நிலை இடமே
உங்களுடைய வாஸஸ்தானமானது

வைலக்ஷண்யத்தைப் பார்த்தால் நித்ய விபூதி என்னலாய் இரா நின்றது
இங்கே காண்கையாலே இந்த விபூதி என்னலாய் இரா நின்றது என்கை –

இத்தால்
உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற
வெஞ்சிலை வாள் முகத்தீர் -என்கையாலே
நித்ய விகாஸ ப்ரவ்ருத்தி ஸீலமாய் (சென்று சென்று பரம் பரமாய் -அறிந்து அறிந்து தேறித் தேறி )
சீதள ஸ்வபாவமாய்
பிரகாசத்தையும்
கூர்மையையும் உடைத்தாய் இருக்கும்
ஞானம் என்றபடி

எம்மா வீடு -திருவாய் 2-9-இத்யாதியாலே
இந்த ஞானத்தை அன்புடையார் நெஞ்சிலே அவகாடமாம்படி ப்ரதிபாதிக்கும் அளவில்
ப்ரூ விஷேபாதியான முக விகாஸத்தை ஸூ சிப்பிக்கிறது

(வீடு வேண்டாம்-மா வீடு-கைவல்யம் வேண்டாம்-எம்மா வீடும் வேண்டாம் –
ப்ரூவம் அழுத்தி திருத்தமாக சொல்வாரே
நின் செம் பாத பற்ப்பு ஒல்லை தலை மேல் சேர்க்கவே வேண்டும் -அடியேன் வேண்டுவது இதே
திருவடித் தாமரை தரித்து கைங்கர்யம்
என் நெஞ்சுள் நிறுத்தினான் -ஆழமாக காட்டி அருளினார் அன்றோ )

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் -என்கையாலே
சேஷத்வ நிரூபித ஸ்வபாவரான ஸூத்த ஸ்வபாவரைக் கீழ்ப்படுத்தி
தன்னுடைய தவ்ராத்ம்யமமே (துராத்மாவின் ஸ்வபாவமே ) கந்திக்கும்படியான
மேல் எழுச்சியை யுடைய ஸம்ஸார சாகரத்தை
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்தத்தாலே கைவிடாமல் நினைக்கிற ஸ்வாமியான என்று
லீலா விபூதி யோகம் சொன்னபடி

(நாரங்களுக்கு அயனம் -கைவிடாமல் இங்கே வந்து கண் வளருபவன் அன்றோ
அம்மான் -ஸ்வாமி )

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – என்கையாலே
ஸ்வரூப பிரகாசம் யுடையாருக்கு உத்தேச்யம் நித்ய விபூதி என்றும்
இந்த விபூதியிலே யானாலும்
நேமிப்பிரான் தமர் போந்தார் -திருவாய் -5-2-6- என்று
அங்குள்ளார் இங்கே வந்தார் என்று சொல்ல வேண்டும்படியாய் இருக்கும் என்றதாயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒருவகை யாதல்
இயற்கையிலே ஐயமாதல்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை
உலாகின்ற கெண்டை போலே யாயிற்றுக் கண்களின் மௌக்த்யம் இருக்கிற படி

யொளியம்பு
இவன் பார்த்த போதே பாராதே —

எம்மாவியை யூடுருவக்

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
ப்ரஹ்ம வித் அக்ர கண்யர்கள் இவருடைய ப்ரபாவத்தைத் தங்கள் பார்வையால்
முகந்து கொண்டு ஸந்துஷ்டார்களாய்
ஸேவித்துப் பரிமண்ட விதராய் நிற்க
அவர்களைக் கடாக்ஷித்து இன்னபடியாக அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக் குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர்
எம்மாவியை -எனக்கு ஆவியான அகண்ட ப்ரஹ்மத்தை
ஊடுருவ -வியாபகாவதி வியாபாரிக்க வல்ல
ஒள்ளிய அம்பாயும்
ஒள்ளிய கெண்டையாயுமுள்ள கண்களைக் கொண்டே அவர்களைத் திரஸ்கரிக்க வுமானது கொண்டு
ஒளி பெற்ற முகங்களை யுடையவர்களே

கிஞ்ச

குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
வேலையில் -கரையிலே
குனிந்து இருக்கும் சங்குகளை
புணரி -ஆஸ்வேஷிப்பித்தும் இடறியும் உலாவும் அவைகளால்
அழகிய பாற்கடலில் பள்ளிகொள்ளும் அஸ்மத் ஸ்வாமிக்கு அடிமைப் பட்டவர்காள்

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
உங்களுடைய ஞான வைஸத்யத்தை அப்பார்வையுள்ள முகத்தால் கண்டோம்
உங்கள் இருப்பிடமே கேட்க்கிறோம்
ஸ்வரூபவ யாதாத்ம்ய ஞானம் நிலையாகி நிற்கும்படியான அவ்வைகுந்தமேயோ
இவ்வையம் தானேயோ
சொல்லுங்கோள் விருப்புற்றுக் கேட்க்கிறேன் என்றபடி –

——————————–

அவதாரிகை

இப்படியான பின்புடையாரும் ஆச்சர்யப்படும்படியான ஞான வைலக்ஷண்யத்தை யுடையவர்
இதுக்கு அநுரூபமான பகவத் அனுபவம் ஸித்தியாமையாலே
தமக்கு உண்டான ப்ரகாஸமும் ( ஞானம் மதி சந்திரன் ) ப்ரதிகூலமான பிரகாரத்தை
தலைவனான ஸர்வேஸ்வரனுடைய திருத்துழாய் மாலையிலே நசை பண்ணி
சிதிலமான நெஞ்சைக் குறித்து சந்திரனுடைய விகாஸத்துக்கு ஆற்றாளாய்த்
தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 –வடம் போதில் -பாட பேதம்

பாசுரம் -76 – இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் –
துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —
ஓராயிரமாய் -9 -3-

பதவுரை

இடம்போய் விரிந்து–எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து
இ உலகு அளந்தான்–இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய
எழில் ஆர்–அழகு நிறைந்த
தண்–குளிர்ந்த
துழாய்போது வடம்–திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு
இனையும்-வருந்துகிற
மட நெஞ்சமே–பேதைமையுடைய மனமே!
வியல் தாமரையின் தடபோது–சிறந்த பெரிய தாமரைமலர்
ஒடுங்க–குவிய
மேல் ஆம்பல்–புல்லிய ஆம்பலை
அலர்விக்கும்–அலரச் செய்கிற
வெள் திங்கள்–வெள்ளிய சந்திரன்
நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது–நமது வெளுத்த வளைகளைக் கழலச்
செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது
வியப்பே–ஓர் ஆச்சரியமோ?

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் யுள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி
இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய வெற்றி அழகாலே புனையப்பட்ட
செவ்வித் திருத்துழாயினுடைய தொடையு ண்ட பூந்தாரிலே
சிதிலமாய்
பற்றிற்று விடமாட்டாமல் ஈடுபடா நிற்கிற நெஞ்சமே

வடம் -என்று தொடை

நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே –
வியன் தாமரையின் தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்கள்
நாங்கள் வெண் வளைக்கே விடம் போலே விரிதல் இது வியப்பே
என்று அந்வயம்

பெரிய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தாமரையினுடைய இடமுடைத்தான பூவானது
மொட்டிக்கும்படி அல்பமான ஆம்பலை அலர்விக்கும் வெளுத்த சந்த்ரனானவன்
நம்முடைய வெளுத்த வளைக்கு விஷம் போலே பரம்புகிற இது ஆச்சர்யமோ என்று
நெஞ்சைக் குறித்து இரங்கி உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஸர்வ ஸூலபனாய்
ஸூ சீலனான
ஸர்வேஸ்வரனுடைய
சேஷித்வ போக்யத்வாதி குண உன்மேஷத்திலே ஈடுபட்ட திரு உள்ளத்தைக் குறித்து
நிரதிசயமான போக்ய விகாஸத்தை ஸங்கோசிப்பித்து
அர்வா சீத விகாஸம் பண்ணிப் போருகிற இந்தப் ப்ரகாஸ விகாஸமானது
நம்முடைய கையில் ஸூத்த ஸ்வ பாவமான மினுக்கத்தையும் குலைப்பதாக ப்ரசரிக்கிற
இது ஆச்சர்யமோ
என்று வெறுத்து உரைத்தாள் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை சந்த்ர உதயத்திலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து
இச்சந்திரனுக்கு இங்கனே எளிய செயல் செய்கை ஸ்வபாவம் காண்
இதுக்கு சோகியாதே கொள் -என்று ஆஸ்வஸி ப்பிக்கிறாள்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து
பள்ளமுள்ள இடம் எங்கும் போய் வெள்ளம் பரக்குமா போலே
அவகாசமுள்ள இடம் எங்கும் பரந்து

இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்

இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய
எழிலார் தண் துழாய் யுண்டு
இதுக்கு எல்லாமாக முதலியாய் இட்டமாவை அவன் திருமேனியிலே ஸ்பர்சத்தாலே
அழகியதாய்க் குளிர்ந்து இருந்துள்ள திருத்துழாய்

வடம் போதினையும் மட நெஞ்சமே
வடமாகிற பூவை இச்சித்துப் பெறாமல் சிதிலமாய் இருக்கிற திருத்துழாய் மாலையில்
செவ்வியைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே தளரா நிற்பதாய்
அதில் அருமை சொன்னால் கொள்ளாதே பற்றிற்று விடாதே கிடக்கிற நெஞ்சே

நங்கள் இத்யாதி
நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ

வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
தம் தாமுக்கு பிராப்தி யுள்ள இடங்களிலே நலிகை முறைமை இறே
தானும் வெண் திங்களாய்
இதுவும் வெள் வளையாகையினாலே
நிறத்தில் ஸாம்யம் கொண்டு நலியலாம் இறே

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும்
வாசி அறியாதார் என் செய்யார்
விஸ்மய நீயமாய் இருந்துள்ள தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கும்படியாகவும்
ஷூத்ரமாய்ப் புல்லிதான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணும்படியான

வெண் திங்களே –
வெள் வளைக்கே விடம் போல் வருமிது வியப்பே

ஸ்வாபதேசம்
இத்தால்
திரு வுலகு அளந்து அருளின போது சாத்தின அச்செவ்வி மாலை
இப்போது பெற வேணும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே
அநுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமான படியைச் சொல்லுகிறது

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படியுள்ள ப்ரஹ்ம வித்துக்களில் இவருடைய பரிவால் வந்த ஸ்மரணம்
பிரிவாற்றாத் தலைமகள் ஆக்க
அப்போதே இவள் வளை கழலப் பண்ணும் வெண் திங்கள் உதிக்க
அத்தைக் கண்ட இவருடைய நெஞ்சு ஐயோ என்று சோகிக்க
அப்போதில் நையும் நீ வெண் திங்கள் நம் வளை கழலப் பண்ணுமத்துக்கு
ஆச்சர்யப்படவும் சோகிக்கவும் வேண்டா

அவன் அல்ப விகாசகனும் அதிக சங்கோசகனும் காண் என்று
விஷம் பரந்தால் போல் வியாபிக்கும் நிலவுக்குத் தளர்ந்தவளாய்த் தன் நெஞ்சுக்கு
அருளிச் செய்கிறாள் இதில்

வியாக்யானம்

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய் வடம் போதினையும் மட நெஞ்சமே
அவகாசம் உள்ள இடம் எல்லாம் சென்று பரம்பி இந்த லோகத்தை அளந்து கொண்ட
அவனுடைய விபூதி த்வய ஆதி ராஜ்ய அர்ஹமான செவ்வித் திருத்துழாய்த் திருமாலைக்கு
அழகு பெறுத்தும் குஸூ மங்களில் பாடிய ஆசைப்பட்டு
அது கிடையாமையாலே நைந்து இருக்கிற எனக்கு பவ்யமான நெஞ்சமே
அவன் துஸ் ஸ்வ பாவத்தைக் கேளாய்

வியன் தாமரையின் தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே –
இந்த வெளுத்த சந்த்ரனான இவன்
விஸ்மய நீயமும் விசாலமுமான தடாகங்களில் யுள்ள கமலங்கள் எல்லாம் முகிளிதமாம் படி
அதி ம்ருதுவும் அதி அல்பமுமான ஆம்பல்களை விகசிப்பிக்குமவன் அன்றோ

ஏவம் பூதன்
நங்கள் வெள் வளைக்கே விடம் போல் விரிதல் இது வியப்பே
நம்முடைய வளைகள் கழலுமதுக்குத் தன் நிலவால் விஷம் போலே
விஸ்த்ருதனாமது இது நமக்கு ஓர் விஸ்மயமோ

ஆளும் பரமன் -திருவாய் -3-7-2-என்றும்
அளிக்கும் பரமன் -திருவாய் -3-7-6-என்றும்
பேர் பெற்ற நம் இறைவன் நமக்குத் தன் எழிலார் தண் துழாய் வடத்தைத் தந்தால்
நாம் நையோமே
அப்போது நம் வளை கழலப் பண்ண வல்லவன் அல்லனே என்கிறாள் —

————————-

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தமக்கு அனுபவ யோக்ய காலம் சந்நிஹிதமாய்க் கொண்டு
போக்ய விஷயத்தை ஸ்மரிப்பித்து பாதகமான பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – -77-

பாசுரம் -77–திங்கள் அம் பிள்ளை புலம்ப –
துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-

பதவுரை

திங்கள்–பிறைச் சந்திரனாகிய
அம்பிள்ளை–அழகிய தனது இளம்பிள்ளை
புலம்ப–(தந்தையை இழந்து) தனிப்பட
செங்கோல் தன் அரசுபட்ட–சிவந்த ஒளியை எங்குந்தடையறச் செய்துதலாகிய
செங்கோள்மையை யுடைய தனது தலைவனான ஸூர்யன் இறந்தொழிதற்கிடமான
செம் களம்–செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி–அடைந்து
நின்று–(நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
எள்கு–வருந்துகிற
புல்மாலை–சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை–தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை
வெம் களம் செய்த–கொடிய போர்க்களமாகச் செய்த
நம் விண்ணோர் பிரானார்–நமது தேவாதி தேவனான தலைவனது
துழாய்–திருத்துழாயை
துணை ஆ–தனக்குத் துணையாகக் கவர்ந்து கொள்வதற்கு
நங்களை மாமை கொள்வான்–நமது மாமை நிறத்தைக் கவர்ந்துகொள்வதற்கு
வந்து தோன்றி நலிகின்றது–எதிரில் வந்து தோன்றி வருந்துகின்றது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்பிற்று என்னும் படியாக
சிவந்த கிரணங்கள் நடப்பாகிற செங்கோலை யுடைய தன்னரசான ஆதித்யன் பட்ட ரக்தத்தாலே
சிவந்த களம் என்னலாம்படியான செக்கர் வானத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிறது
என்னலாம் படி புல்லிதாய் உறாவித் தோற்றின மாலையானது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார்
இப்படி இழந்து கிலேசிக்க வேண்டாதபடி தெற்குத் திக்கு இடத்திலேயான லங்கையிலே
சத்ருக்களை ச புத்ர பவ்த்ர பாந்தவமாம் படி கொன்று கொடிய களத்தைப் பண்ணின வெற்றியாலே
ப்ரஹ்ம ருத்ராதிகளான தேவர்களுக்குக் குடி இருப்புக் கொடுத்த மஹா உபகாரத்தாலே
பெண் பிறந்த நமக்கு விஸ்வஸித்துப் பற்றலாம் படியானவருடைய

துழாய் துணையா
வெற்றி மாலையான திருத்துழாய் நமக்கு ஸ்மரிப்பிக்கிற முகத்தாலே
நலிகைக்குத் துணையாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
நம்முடைய மாமை நிறத்தை அபஹரித்துக் கொள்ளுவதாக வந்து தோன்றி தன்
தைன்ய பிரகாரத்தாலே நலியா நின்றது என்று ஆற்றாது உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
தமக்கு உண்டான ஞான ப்ரகாஸமும் (திங்கள் அம் பிள்ளை )ப்ரலாப பர்யவசாயியாம் படி
அநுராக உத்தரமான மஹா விவேகமும் (ஸூர்யன் )குலைந்து
அநுபாவ்ய விஷயமான ராகம் விஞ்சும்படியான அவஸ்தா விசேஷமானது
அநந்யார்ஹர் ஆனவருக்கு அதிசயித விரோதிகளை அழித்துக் கொடுக்கும்
சர்வாதிகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக போக்யதா ஸஹ சரிதமாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூப விபர் யாசத்தைப் பிறப்பித்து ஈடுபடுத்தா நின்றது என்று
தம்முடைய ஆர்த்தியை அருளிச் செய்தார் ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஸந்த்யையிலே நோவு படுகிறாள் ஒரு தலை மகள்
வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம்

திங்களம் பிள்ளை
சந்த்ரனாகிற அழகிய பிள்ளை
மஹதா தபஸா -ஆரண்ய -66-13- என்கிறபடியே
வருந்திப் பெற்ற பிள்ளை இறே

புலம்பத்
வாய் விட்டுக் கூப்பிட மாட்டாதே
விம்மல் பொருமலாய் இருக்கும் கடலோசை ஆதல்
அக்காலத்திலே பக்ஷிகளுடைய ஆரவாரமாதல் இறே

தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
தன்னுடைய ஆஜ்ஞா ப்ரதானனான ராஜாவானவன் பட்ட யுத்த பூமியைப் பற்றி நின்று
ஈடுபடுகிற புல்லிய மாலை
ருதிர வெள்ளத்தாலே சிவந்த பூமியைப் போலே இருக்கும் இறே அப்போதை ஆகாசம்
ராவணன் பட்ட களத்திலே மந்தோதரி கூப்பிட்டால் போலவும்
வாலி பட்ட களத்திலே தாரை அங்கதப் பெருமாளைக் கொண்டு நின்று கூப்பிட்டால் போலவும் ஆயிற்று
ஆதித்யனை இழந்த அந்த ஸந்த்யையும் அப்பிரதேசத்தைப் பற்றி நின்று ஈடுபடுகிற படி

பகல் கண்டேன் -இரண்டாம் திரு -31-என்கிற
வஸ்துவை இழந்து இறே இவள் நோவு படுகிறது

தென் பாலிலங்கை வெங்களம் செய்த
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச தேசமான தெற்குத் திக்கில்
அறிவுடையார் நடையாடாத லங்கையை வெவ்விய களமாம் படி
ஸ்மசாந கல்பமாம்படி பண்ணின

நம் விண்ணோர் பிரானார்
ராவண வத அநந்தரம்
பவான் நாராயணோ தேவ -யுத்த -120-13-என்று
ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி நின்ற

துழாய் துணையா
அவர் தோளில் மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்ட
இதுவே பரிகாரமாகக் கொண்டு

நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –
தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே இது
நம் இழவுக்குக் கூப்பிடுகிறதாய் இருக்கிறது

நங்களை மாமை கொள்வான்
நிறம் கொள்வாருக்கு நிறம் தான் வேண்டாவோ
தன் இழவும் கூப்பிடும் கிடக்கச் செய்தே
பண்டே குறைபட்டு நொந்து இருக்கிற நம்மை நலிகைக்குப் பாரிகிற படியாய் இருந்ததீ –

ஸ்வா பதேசம்
கீழ்
திரு அளந்து அருளினை பொது இட்ட மாலையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக்
கிடையாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று
இதில்
ராவண வத அநந்தரம் இட்ட வெற்றி மாயையைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டுக் கிடையாமை
நோவு படுகிறபடியைச் சொல்லுகிறது

—————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை
இதுக்கு மேல் மாலை வந்து தோன்றி நலிய
அம்மாலைக்கு ஆற்றாத் தலைமகளாய் நலிவு படுகிறாள் இதில்

வியாக்யானம்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட செங்களம் பற்றி நின்று எள்கு புன்மாலை
மாலைக்கு அரசு ஆதித்யன் சாயம் ஸந்த்யையிலே திங்களாகிற இளம் பிள்ளை
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தால் கோஷிக்கவே
தனக்கு அரசாய்ச் சிவந்த கிரண தண்டங்களை ப்ரவர்த்திப்பித்த
ஆதித்யன் ஹதன் -என்னும்படி அஸ்தமித்த இடமான
செங்களம் -ரக்தமயமான களம் -யுத்த பூமி
அதிலே தான் நின்று எள்கு -துக்கத்தால் ஈடுபடுகிறது கண்டு

புன்மாலை
புன்னிய -ஏழைத்தனம் பெற்று
மாலை -ஸந்த்யையானது
வந்து தோன்றி நலிகின்றது
என்று அந்வயம்

அது தனக்குத் துணை கூட்டிக் கொண்டு நலிகிற பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

தென் பாலிலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்
தெற்கில் உள்ள லங்கா த்வார அங்க கணத்தை வெவ்விய போர்க்களமாக்கி
தன் விரோதிகளை நிரசித்த நம் ஸ்வாமியாய்
இந்த்ராதிகளான விண்ணோர்க்குக் குடி இருப்பைத் தந்து உபகரித்தவனுடைய
துழாய் மாலையை அவனால் வரப் பெற ஆசைப்பட்டாள் என்பதே
தனக்குத் துணையாகக் கொண்டு நல் நிறத்தை அபஹரிப்பதாய் வந்து நமக்கு
எதிர்ப்பட்டு நம்மை நலியா நின்றது

வந்து தோன்றி நலிகின்றதே
புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி
பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர்
திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று ஆயிற்று
தன் தைன்ய பிரகாச நத்தாலே நலிகிறது என்பாரும் உண்டு –

———————

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவ்வாழ்வாருடைய –
விரோதி நிரசன ஸ்வபாவங்கள் உண்டாகச் செய்தே
நம்முடைய பிரதிபந்தகங்கள் போய் அவனுடைய போக்யதையை அனுபவிக்கப் பெறாமல்
(இவ்வாழ்வாருடைய )திரு உள்ளம் தளும்பி
அத்தாலே கிலேசித்த பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் சக்தனாய் இருக்கக் கிட்டப் பெறாமையாலே
நெஞ்சு அழிந்து இரங்கின நாயகி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

நலியும் நரகனை வீட்டிற்றும் வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-

பாசுரம் –78-நலியும் நரகனை வீட்டிற்றும் –
துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –
இன்பம் பயக்க-7-10-

பதவுரை

(எமது நாயகனார்)
நலியும் நரகனை வீட்டிற்றும்–(உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண் தோள் துணிந்த வலியும்–பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும்–(அப்போரில் வெளிக் காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல–(எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரை போல் பொலியும் உருவின் பிரானார்–அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தை யுடைய அத்தலைவரது
புனை பூதுழாய் மலர்க்கே–சாத்திய அழகிய திருத்துழாய்ப் பூமாலையைப் பெறுவதற்காகவே
மெலியும்–ஆசைப்பட்டு வருந்துகிற
மட நெஞ்சினார்–(எமது) பேதை நெஞ்சு
தந்து போயின–(தான் எம்மை விட்டுப் போம் பொழுது எமக்குக்) கொடுத்து விட்டுப் போனவை
வேதனை–இத் துன்பங்கள்.

வியாக்யானம்

நலியும் நரகனை வீட்டிற்றும்
மேலிட்டு நலிந்து வருகிற நரகா ஸூரனை ஸத்யபாமைப் பிராட்டி வார்த்தைக்காக
விழப் பண்ணினதும்

வாணனை திண் தோள் துணித்த வலியும்
உஷையையும் அநிருத்தரையும் கொண்டு போய் இருக்கைக்காக பாணனுடைய
யுத்த ஆகாங்ஷியான திண்ணிய ஆயிரம் தோளையும் அறுத்து விழவிட்ட
ஆயுத பலமும்

பெருமையும்
அந்த பாண யுத்தத்தில் ஈஸ்வர அபிமானியான ருத்ரனை முதுகு புறம் கொண்ட
சர்வேஸ்வரத்வமும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
வேதங்கள் அகப்பட எல்லை காண மாட்டாத இக்குணங்கள்
அல்ப ஞானனான நான் சொல்லும்படியான நீர்மையை யுடையது அல்ல

மைவரை போல் பொலியும் உருவில் பிரானார்
அஞ்சன கிரி போலே வளர்ந்த வடிவை யுடையராய் இருக்கிற உபகாரகர் ஆனவர்

புனை பூம் துழாய் மலர்க்கே
வெற்றிக்கும்
அழகுக்கும்
சூட்டின அழகிய திருத் துழாய்த் தாருக்காக

மெலியும் மட நெஞ்சினார்
ஈடுபட்டு பற்றிற்று விட மாட்டாத நெஞ்சினாரானவர்

தந்து போயின வேதனையே –
அத் தார் நசையாலே நம்மை விட்டுப் போகிற போது
நமக்குத் தந்து போனவை கிலேசங்களாய் இருந்தன விறே
என்று
அழிந்து உரைத்தாள் யாயிற்று

இத்தால்
ஈஸ்வரனுடைய விரோதி நிரசன சக்தி
அபரிச்சிந்னையாய் இருக்கச் செய்தேயும்
அநுபவ ஸித்தி பிறவாத அளவிலே
அதிசயித போக்யதை ஆர்த்தியைப் பிறப்பிக்கும்
என்றதாயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தைப் பெற வேணும் என்று ஆசைப்பட்டு
நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது

வியாக்யானம் –

நலியும் நரகனை
ஸர்வேஸ்வரன் பரிக்ரஹிகைக்கு யோக்யர்களாய் இருக்கிறவர்களைக் கொண்டு வந்து சிறை செய்தான் இறே

நலியும்
அந் நலிவு தம்மதாய் இருந்தபடி

வீட்டிற்றும்
வீழ்த்ததுவும் -முடித்ததுவும்

வாணனை திண் தோள் துணித்த வலியும் பெருமையும்
உஷையையும் அநிருத்த ஆழ்வானையும் சேர ஒட்டாதே சிறை செய்த

வாணனை திண் தோள்
தேவதாந்த்ர சமாஸ்ரயணத்தைப் பண்ணி
பகவத் சமாஸ்ரயணத்தைப் பண்ணினாரைப் போலே திண்ணிய தோளை யுடையனாக நினைத்து இருந்தான்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன்
நபி பேதிரு தச்சந -தைத்ரியம் -ஆனந்த -2-7-
ஏஷ ஹ்யேவ ஆனந்த யாதி இறே

அத்தால் வந்த தைர்யத்தாலே தான் புத்தி பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே

துணித்த வலியும் பெருமையும்
அவன் திண்ணிய தோளைத் துணித்த வலியும் பெருமையும் என்னுதல்
வலியின் பெருமை என்னுதல்

மிடுக்கும் மேன்மையும்
அன்றிக்கே
வழியினுடைய பெருமையும்

யான் சொல்லும் நீர்த்தல்ல
நாம் இப்போது இருந்து சொல்லும் அளவோ

நீர்த்தல்ல

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

திவ்ய ஆயுதாதிகளை நமக்கு அனுபாவ்யமாக்கி உபகரிக்குமவரால்
தம் அழகுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அநு குணமாகச் சாத்திக் கொள்ளப்பட்ட
அழகிய திருத்துழாய் மாலையில் உள்ள குஸூ மங்களுக்கே ஆசைப்பட்டு
கிலேசிக்கும் எனக்கு பவ்யமான பெருமையுள்ள மனஸ்ஸாகிறவர் தாம் என்னை விட்டு
அவன் இடத்தில் போம் போது தந்து போன வேதனை இது என்று அறியுங்கோள்
என்கிறாளாய் அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி ஆர்த்தி அதிசயத்தாலே ஈடுபட்டவர்
இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்
இறே என்று தம்முடைய இழவை அருளிச் செய்கிறார்

இது நாயகி வார்த்தை யாகவுமாம்

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79

பாசுரம் –79-வேதனை வெண் பூரி நூலனை –
துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –
மொய்ம்மாம் பூம் பொழில் –3 –5-

பதவுரை

வேதனை–வேதம் வல்லவனும்
வெள் புரி நூலனை–சுத்தமான யஜ்ஜோபவீத முடையவனும்
விண்ணோர் பரவ நின்ற சாதனை–மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்
ஞானலம் விழுங்கும் அநாதனை–(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி
(அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்
ஞாலம் தத்தும் பாதனை–உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்
பால் கடல் பாம்பு அணைமேல்–திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்
பள்ளி கொண்டு அருளும்–யோக நித்திரை கொண்டருளுகிற
சீதனையே–குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே
தொழுவார்–இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்
விண் உளாரிலும் சீரியர்–பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

வியாக்யானம்

வேதனை
வேதங்களால் சொல்லப் படுமவனை

வெண் புரி நூலனை
வைதிக புருஷன் என்கைக்கு அடையாளமான
ஸூத்த யஜ்ஜோபவீதத்தை யுடையவனை

விண்ணோர் பரவ நின்ற நாதனை
வேத ப்ரதிபாத்யர்களான அல்லாத தேவதைகள்
தம் தாமுடைய பத ஸித்திக்காக ஸ்தோத்ரங்களைப் பண்ண
அவர்களுக்கு அபிமத பல ப்ரதாநம் பண்ணி
அவர்களுக்கு ஸ்வாமியாய் நின்றவனை

ஞாலம் விழுங்கும் அநாதனை
அத் தேவதைகளோடு
அவர்களுக்கு இருப்பிடமான ஜகத்தோடு
வாசியற பிரளயம் கொள்ளாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
தன்னை நோக்குகைக்கு ஒருவர் வேண்டாதவனை

ஞாலந்தத்தும் பாதனைப்
அந்த ஜகத்துக்குத் தானே சேஷி என்னும் இடம் தோற்றத்
தன் கீழே ஆக்கிக் கொள்ளும் திருவடிகளை யுடையவனை

பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
ஜகத்துக்குப் பின்னையும் இடையூறு வந்தால்
ரக்ஷிக்க வேணும் என்று திருப்பாற்கடலிலே
பிரிய ஒண்ணாத போகத்தை யுடைய திரு அனந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
ரக்ஷண சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளும் சீதள ஸ்வ பாவம் உள்ளவனை

சீதனையே
அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்

விண்ணுளாரிலும் சீரியரே –
நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்

இவ்விடத்தில் சீதன் என்றது
தாப ஆர்த்தோ ஜல சாயிநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று
அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

————-

அவதாரிகை

இப்படி அனுபவ அபி நிவேசம் பிறந்தவர்
அதுக்கு ஈடாக அனுபவிக்கப் பெறாமையாலே தம்முடைய விவேக பிரகாசம் குலைந்து
மோஹ அந்தகாரம் மேல் இடுகிறபடியை
பிரிவாற்றாது பொழுதொடு புலம்பின தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

பாசுரம் –80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –
துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
முடிச் சோதியாய் -3–1-

பதவுரை

சீர் அரசு ஆண்டு–சிறப்பாக ராஜ்ய பரிபாலனம் பண்ணி
தன் செங்கோல் சில நான் செலீ இ–தனது நீதி தவறாத ஆஜ்ஞையைச்சில காலம் (உலகத்திற்) செலுத்தி
கழிந்த–பின்பு இறந்தொழிந்த
பார் அரசு–ஸார்வபௌமனான ஒரு சக்ரவர்த்தியை
ஒத்து–போன்று
ஞாயிறு–ஸூர்யன்
மறைந்து–அஸ்தமித்தான்;
பார் அளந்த–உலகத்தை அளந்து கொண்ட
பேர் அரசே–சிறந்த தலைவனே!
எம் விசும்பு அரசே–பரமபதத்துக்கு நாயகனான எம்பெருமானே!
எம்மை நீத்து வஞ்சித்த–எம்மைத் தனியே பிரித்து வஞ்சனை செய்த
ஓர் அரசே–ஒப்பற்ற நாதனே!
அருளாய்–(இங்ஙனம் நீங்கியிராதபடி எமக்கு, வந்து) அருள்புரிவாய்; (அங்ஙனம் அருள் புரியாமையினால்)
இருள் ஆய் வந்து கூறுகின்றது–இருள் மிக்கதாய் வளர்ந்து கொண்டு வந்து சூழ்ந்து (எம்மை) வருந்துகிறது

வியாக்யானம்
சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த பார் அரசு ஒத்து மறைந்தது ஞாயிறு
அழகிய ராஜ்யத்தைப் பண்ணி
தன்னுடைய அபங்குரையான ஆஜ்ஜையைச் சில காலம் நடத்திக் கழிந்து போன பூமியில்
ராஜாக்களோடு ஒத்தது என்னலாம் படி
ஆதித்யனானவன் பகல் எல்லாம் ப்ரதா போத்தரனாய் நடத்தி அஸ்தமித்தான்

பாரளந்த பேரரசே
ரக்ஷணீயமான பூமிக்கு அந்நிய அபிமானத்தைக் கழித்து
உன் திருவடிகளின் கீழே ஆக்கிக் கொண்ட பெரிய ஸ்வாமி யானவனே

எம் விசும்பரசே
அந்நிய அபிமான ப்ரஸங்கம் இல்லாத நித்ய விபூதிக்கு ஸ்வாமி யானால் போலே
எங்களையும் அநந்யார்ஹ மாக ஆண்டு கொண்டவனே

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே
இப்படி அநந்யார்ஹதை ஒத்து இருக்க
அவர்களைப் போலே அனுபவம் பெறாதபடி எங்களை நீக்கி
வஞ்சித்து வைத்தமைக்கு அத்விதீய நாயகன் ஆனவனே

அருளாய்
இப்படி நீங்கி இராதபடி கிருபை பண்ணி அருள வேணும்

இருளாய் வந்து உறுகின்றதே –
தனித்து இருக்கில் இருளின் கையிலே அகப்படும் அத்தனை
ஆகையால் அருள வேணும் என்றதாயிற்று

இத்தால்
ஆதித்ய ப்ரகாஸம் என்னலாம்படி ஸர்வ லோகத்தையும் வெளிச் சிறப்பிக்கிற
தம்முடைய விவேகம் அனுபவ அலாபத்தாலே குலைந்து
மோஹ அந்தகாரமும் மேலிடுகையாலே
ஸமஸ்த விபூதி ரக்ஷகனாய் நம்மைக் காரியப்பட்டாலே
பிரித்து வைத்து இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய கிருபையை
இவ் வஸ்தைக்கு ரக்ஷகம் என்று அறுதியிட்டு
இரங்க வேணும் என்று அபேக்ஷித்தார் ஆயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
ஆதித்யனும் போய் அஸ்தமித்து
இருளும் வந்து
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி சார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்

சீரரசாண்டு
குணமாக ஆண்டு
தர்ம புத்ரன் ராஜ்ஜியம் பண்ணா விடில் நாங்கள் ராஜ்யத்திலே இரோம் என்று
அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடே புறப்பட்டுப் போனார்கள் இறே
அப்படியே சீரியதாக ராஜ்யத்தை நடத்தில்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
அது தான் அல்ப காலத்தோடே

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இவ்விபூதியில் தம் இருப்பைத் தாம் அசஹமாநராய்
வைத்தவனையே நிவர்த்திப்பாய் என்ற அபிப்ராயத்தால்
இருளுக்கு அஞ்சின நாயகியாய்
அருளாய் என்று பிரார்திக்கிறார் இதில்

வியாக்யானம்

சீரரசாண்டு
இந்த லோகமான பூமி எல்லாவற்றையும்
ராஜ்ய ஆஜ்ஞக ராஜாவாய் அனுபவித்தவனாய்

தன் செங்கோல் சில நாள் செலீஇக்
தன் ஆஜ்ஜையைச் சில நாள் நடத்தி

கழிந்த பார் அரசு ஒத்து
கழிந்து போன பூபரோடு ஒத்தவளாய்

மறைந்தது ஞாயிறு
மறைந்தான் ஆதித்யன்

பாரளந்த பேரரசே
இந்தப்பூமியை எல்லாம் ஓர் அடியால் அளந்து கொண்ட மஹா பிரபுவானவனே

எம் விசும்பரசே
எங்களதான தெளி விசும்புக்கு அரசானவனே
அங்காகவே இருப்பதான எங்கள் பதின்மரையும் சில நாள் அங்கு இராதபடி விலக்கி
எங்களை வஞ்சிப்பதற்கு அத்விதீய பிரபு ஆனவனே

அருளாய்
அங்காக நான் வந்து இருப்பதாக அருளிச் செய்யாய்

இங்கு உமக்கு என்ன பாதகம் என்ன
இருளாய் வந்து உறுகின்றதே –
அஞ்ஞான அந்தகாரமே எவரிலும் வந்து திணுங்கி எல்லாரையும் பாதியா நின்றது

ஆர் தான் இந்த ப்ரபந்ந அதிகாரிகள்
இவர்களுக்கு அனுபவ காரகமான இந்த பிரபந்தங்களை இங்கனே வைத்து
தேவரீர் ப்ரவர்த்திப்பத்துக்கு என்ன பலம்
ஆகையால் என்னை அங்கு வாங்கு என்றபடி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -61-70–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 21, 2022

அவதாரிகை

இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன்
ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்
வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று
அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை

வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து
அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்–பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும்
(தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும்–உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை–ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன்–(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய
நம்மிறையே–நமது தலைவன்
ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று–இடையர் குலத்தை யுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்து வளர்ந்த எளிமையை
வாசகம் செய்வது–எடுத்துப் புகழ்ந்து கூறுவது
நம் பரமே–நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

வியாக்யானம்

வாசகம் செய்வது நம் பரமே
அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க
அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ

தொல்லை வானவர் தம் நாயகன்
நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று
பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லிற்று

மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது

நாயகர் எல்லாம் தொழுமவன்
ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற
ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும்
குழற் குத்தும் சோராத படி

இரண்டே யடியால் தாயவன்
அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்

இப்படி
1-ஸூரி போக்யனுமாய்
2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்
3-நிருபாதிக பந்துவுமானவன்
4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக

ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று
இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு
ஆவிர் பவித்தது

நம்மிறையே
நமக்கு ஸ்வாமி யானவன்

நம் இறை வந்து தோன்றிற்று
வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்

இத்தால்
பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை
ஸூஹ்ருத்துக்கள்
ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி
ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று
இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார்
அநு பாஷித்த இத்தைக் கொண்டு
பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்
இவர் தம்மைத் தாம் உணர்ந்தால்
பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே
அங்கு புக்கு
எத்திறம் -என்கிறார்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

என் தான்
பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன

தொல்லை வானவர்
நித்ய ஸூரிகள் உண்டு
யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்

தம் நாயகன்
அவர்களுக்கு நிர்வாஹகனானவன்

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்

வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு
வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு
வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே
ய தோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது

தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )

அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை
தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள்
அது தன்னிலும் இழியப் போகாமையாலே
அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்

ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-

அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.

எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-

அபுத்தய: மம அநுத்தமம்-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,
அவ்யயம் பரம் பாவம்-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,
அஜாநந்த:-அறிந்து கொள்ளாமல்,
அவ்யக்தம் மாம்-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,
வ்யக்திம் ஆபந்நம்-கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக),
மந்யந்தே-கருதுகின்றனர்.

என்றும் சொல்லும் அத்தனை

இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே

தொல்லை வானவர் தம் நாயகன்
நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்

நாயகர் எல்லாம் தொழுமவன்
இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள்
சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்
பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே
பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை
பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று
இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி

இரண்டே யடியால் தாயவன்
மூன்று அடியை இரந்து
இரண்டு அடிக்காக்கி
ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக
இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது

ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன்
காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன்
இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே

ஆய்க்குலமாய்
ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்
பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று
அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே
அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க
ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்

ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-என்றபடியே
தன்னைப் பற்றினாரும்
பழையாரும்
பிறவாதாருமாம் படி இருக்கிறவன்
வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப்போமோ

வந்து தோன்றிற்று நம்மிறையே
ஆவிறர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே

இரண்டே அடியால் தாயவனான நம்மிறை
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியாகத் தன் தாய்க்குச் சொன்ன தோழிமார்களை
ஒன்றும் அறியாச் சிறுமியனாய் நம்மிறை வெறும் பரனேயோ
வெறும் ஸூலபனேயோ
அதுகள் தான் அவனுக்கு எவ்வளவு என்று கேட்டவனான தனக்கு
நம்மிறையோடீ
அவர் வாக் கோசரத்துபய ஸ்வ பார்
அதுகள் எங்களால் தான் அளவிட்டுப் பேசத் தகுமோ – என்று
அவர்களாய்த் தாம் அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்
வாசகம் செய்வது நம் பரமே
வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ
அவன் பர ஸானத்தைக் கேளாய்

தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்
யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம்
நித்ய நிர்வாஹக சேஷி யானவன்
சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்

இப்படிப்
பரனே
ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்

ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன்
பூ லோக
உபரித லோகங்களில்
ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி
க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியாள் அளந்து கொண்டவன்

இப்படியான நம்மிறையே

அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று –
இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்

இவனுடைய
1- பரத்வ
2-ஸுசீல்ய
3-ஸுலப்யங்கள்
வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ

———————

அவதாரிகை

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது
தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே
(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே
ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் )
ஆர்த்தரான இவருக்கு
ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை
கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்டா தோழி
புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

பதவுரை

இரக்கினும்–எவ்வளவு வேண்டிக் கொண்டாலும்
ஓர் பெண்பால் எனவும் ஈங்கு இறை இரங்காது–இவள் ஒரு பெண் மகளென்று கருதியும்
இவளிடத்திற் சிறிதும் இரக்கம் கொள்ளாமல்
கருங் கடல்–கரியகடலானது
அறையோ என நின்று அதிரும்–(இவளெதிரில்) அறை கூவுகிறதோ வென்று சொல்லும்
நிலை நின்று (ஒரே விதமாக) கோஷஞ் செய்கின்றது;
ஓ–இஃது ஒரு கொடுமையே
அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது
பள்ளி கொண்ட–சயனித்தருளா நின்ற
முகில் வண்ணனே–காளமேகம் போன்ற வடிவுடையவனே!
ஈங்கு–இவ்விடத்தில்
இவள்தன்–இவருளுடைய
நிறையோ–நிறைக் குணமோவென்னில்,
இனி–இனிமேல்
உன் திருஅருளால்–உனது கிருபையினாலல்லது (வேறொன்றாலும்)
அன்றி–பாதுகாத்து வைக்க முடியாது;காப்பு அரிது–
முறையோ–(இவளை நீ இங்ஙனம் உபேஷித்தல்) முறைமையோ?

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே
நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும்
அவள் ஒரு பெண் அன்றோ
இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது
ஓ ஒரு கொடுமையே

இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்

அறையோ என நின்றதிரும்
இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி
நிலை நின்று கோஷியா நிற்கும்

கருங்கடல்
இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில்
கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது

ஈங்கிவள் தன் நிறையோ
இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது

வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
பிரபல விரோதி யுண்டாய்
ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு
ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி
ரஷிக்கை சக்யம் அன்று

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ

முறையோ என்று
க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி

1-ஸ்ரம ஹரமாய்
2-தர்ச நீயமாய்
3-உதாரமான வடிவை யுடைய நீ
இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று
தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு
விளித்து யுரைத்தாள் யாயிற்று

இது செவிலி இரங்கல் யாகவுமாம் –
(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )

இத்தால்
அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால்
இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம்
ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத்
தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து
அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே
கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார்
அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள்
என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும்
சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய
தசையைக் காட்டாச் செய்தேயும்
புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும்
ஏக தேசமும் இரங்குகிறது இல்லை
பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே

அறையோ என நின்றதிரும்
இங்கனே வெளியில் புறப்படாயோ என்று
அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –

கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை

வியாக்யானம்
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என
நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே
அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்
இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது
இவ்வவஸ்தையில் இவள் நிறை
அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே
இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு
உன்னருளால் அன்றி இல்லையே
அத்தால் அவ்வவஸ்தை யானானாள்

முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

——————-

அவதாரிகை

இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு
ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே
ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின
ஸூஹ்ருத்துக்களைக் குறித்து

அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி
ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து
சமாதானம் பண்ணின பாசுரத்தை

தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு
இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

பதவுரை

வண்ணம் சிவந்துள–திருநிறம் சிவந்துள்ளவையும்
வான் நாடு அமரும் குளிர் விழிய–பரமபதம் ஆனந்த மடையும் படியான குளிர்ந்த பார்வையை யுடைவையும்
தண் மெல் கமலம் தடம் போல் பொலிந்தன–குளிர்ந்த மென்மையான தாமரைத் தடாகம் போல விளங்குகின்றவையுமாகிய
இவையோ தம்–இத்திருக்கண்களோ
கண்ணன்–கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால்–திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும்–திருமுக மண்டலத்திலே
காதல் செய்தேற்கு–வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய
எண்ணம்–மனத்திலே
புகுந்து–பிரவேசித்து
இ காலம்–இப்பொழுதும்
அடியேனோடு இருக்கின்ற–(விட்டு நீங்காமல்) என்னோடு இருக்கின்றன.

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம்
இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்

அது சீற்றத்தாலோ என்னில்

வானாடமரும் குளிர் விழிய
நித்ய விபூதியிலே இருந்து
நித்ய அனுபவம் பண்ணி
நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன

இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும்
குளிர்த்தி மாறாது இருக்கை –

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால்
மிகுத்துத் தோன்றா நின்றன –

தாமிவையோ
இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே
உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன

(ஸ்ம்ருதி -நினைவு மட்டும்
அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது
அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது )

கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்
(சுவையன் திருவின் மணாளன் )

திருமால்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே
சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே
ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு

எண்ணம் புகுந்து
தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே
என் நெஞ்சிலே புகுந்து

அடியேனோடு
தனக்கே சேஷமான என்னோடே கூட
(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )

இக்காலம் இருக்கின்றதே
க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன

ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று
தோழிக்கு
இயற் பட மொழிந்ததாயிற்று

இத்தால்
வண்ணம் சிவந்துள என்கையாலே
ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த
ராகம் ஸூசிதமாயிற்று

வானாடு இத்யாதியாலே
அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும்
இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று

(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது
என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

முறையோ என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே
இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்
பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது

ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே
அத்தலையில் ஆற்றாமை
ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும்
வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை

வானாடமரும் குளிர் விழிய
ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது
வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்

அமருகையாவது
இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை
தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை

தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன
குளிர்ந்து
மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற
அலர்ந்தால் போலே யாயிற்று
திருக்கண்கள் இருப்பது

தாமிவையோ
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோம்
அவை தான் இருக்கும் படி இதுவோ

கண்ணன் திருமால்
திருமால் கண்ணன்
ஸ்ரீ யபதி யாகையாலே
ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்

திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
அழகிய திரு முகத்தோடு வந்து
குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு

எண்ணம் புகுந்து
மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே
எண்ணம் புகுந்து என்றாய்
என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு

அடியேனோடு
ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்
அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது
ஜீவா ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது
அது ஜீவா ஸ்வரூப பரமோ என்னில்
ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் -என்றும் யுண்டு
ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே

இக்காலம்
இப்பேற்றுக்கு வரவாறு முன்நாள் அறிந்திலேன் கிடீர்

இருக்கின்றதே
நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும்
பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது
ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது
ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே
ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே
வந்து குளிர நோக்கினான்
அந்நோக்குக்கு இலக்கான தலைமகள்
ஹ்ருஷ்டையாய்
தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய்
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

வண்ணம் சிவந்துள
என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று

அதுக்கும் மேலே

வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
இவை திருக்கண் மலர்கள்
வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய்
ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள
கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய்
அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது


இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி

கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே
என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8-
ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில்
அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது

அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே
தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது
அநு பாவ்யமாய் இருக்கிறது
ப்ரத்யக்ஷமாய்த் தானே
இங்கும் ஓ என்பது அன்விதம்

—————

அவதாரிகை

இப்படி அனுபாவியனான ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் உம்முடைய திரு உள்ளத்திலே
அபரோக்ஷ சித்தமாம் படி அனுபவித்து
இதுக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுவதும் செய்யா நின்றீர்
இனி வேண்டுவது என் என்ன

விலக்ஷணமான புருஷர்கள் ச க்ரமமாக ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
பூர்ண அனுபவம் பண்ணப் பெறாமையாலே
தரித்து இருக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லப் பெற்றேன்
இத்தனை யன்றோ என்கிறார் –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

பதவுரை

நிலத் தேவர் –பூமி தேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால்–வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை–முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்–உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது)
திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும்–நாமும்
அவா ஒருக்கா–(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்
வினையொடும் எம்மொடும் நொந்து–(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும்
(அப் பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக் கொண்டு
கனி இன்மையின் கருக்காய் கடிப்பவர்கள் போல–பழம் கிடைக்காமையாற் பிஞ்சைத் தின்பவர் போல
திருநாமம் சொல் கற்றனம்–(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது)
திருநாமங்களாகிய சொற்களைச் சொல்லுதல் செய்கிறோம்.

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர்
வேதங்கள் எல்லாம் தனக்குள்ளே யாகும்படியான மூல மந்திரமான மொழியாலே
(ஓம் என்னும் படி உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் இருக்குமே )
ஆஸ்ரயண பிரகாரத்தில் ஒன்றும் வழுவாதபடி அந்த மந்த்ரார்த்த ப்ரகாசமாய்க் கொண்டு
ஸகல லோகங்களையும் தனக்குள்ளே யாக்கின திருவடிகளை
பூமிக்கு தேவர்களான ப்ராஹ்மண உத்தமர் ஆஸ்ரயித்து அனுபவியா நிற்பர்கள்

யாமுமவா
யாமும் அவா
அந்த அதிகாரம் இல்லாத நாமும் அப்படியோ
அல்ல என்றபடி

ஆனால் உம்முடைய அளவு என் என்னில்
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து
அனுபவ விரோதியான பாபத்தை ஒருங்க விடாமையையும்
பிரதிபந்தகம் யுண்டானால் ஆறி இருக்க ஒண்ணாதபடி சபலமான ஸ்வரூபத்தையும்
பார்த்து ஈடுபட்டு (துன்பப்பட்டு )-

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
பழம் கிடையாமையாலே பசுங்காயைத் தின்பாரைப் போலே

திருநாமம் சொல் கற்றனமே
பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி

இப்பாட்டு
கலந்து பிரிந்த நாயகி
கலவி கிட்டாமையாலே நாயகனான ஈஸ்வரனுடைய குண நாமங்களைத் தான்
தரித்து இருக்கைக்காக உரைத்தேன் என்று
பாங்கியிடம் உரைத்தலாகவுமாம்

சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே –திரு நெடும் -13-

திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -திரு நெடும் -14-

என்றதாய்க் கொண்டு
திரு நாமத்தால் நாயகி தரித்த இடங்களும் உண்டு இறே

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவரைத் திருக்கண்களால் கடாக்ஷித்தான் என்று இறே கீழ் நின்றது
அல்லாதார் மேல் வையாதே நம் மேலே இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணுகைக்கு
நிபந்தம் என் என்று ஆராய்ந்தார்
அஹ்ருதயமாகத் திரு நாமத்தைச் சொன்னேன்
அத்தாலே அன்றோ என்கிறார் –

வியாக்யானம்

இருக்கார் மொழியால்
இருக்கில் ஆர்ந்த மொழியாலே
பிரதிபத்தாக்களுடைய புத்தி விசேஷங்களாலே அரை வயிறாகவும் பதராகவும்
பார்க்கலாய் இருக்கும் இடங்கள் உண்டாய் இருக்குமாயிற்று வேதங்களிலே
அவன் விபூதியைப் பரக்கச் சொல்லா நின்றால் –
அதில் ஏகதேச பூதரானவர்கள் பக்கலிலே பரத்வ பிரதிபத்தியைப் பண்ணியும்
ப்ரஸம்ஸா பரம் என்றும் சொல்லா நிற்பர்கள் இறே

அவன் ஸ்வரூப ரூபா குண விபூதிகளைப் பேசுகிற இடத்தில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பிரமிப்பாரும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற
அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை யாயிற்று
இதில் ஆர்ந்த மொழியாகச் சொல்லுகிறது

ஸர்வே வேதா யத்ரைகம் பவந்தி -(யஜுஸ் ஆர ப்ரச்னம் -3)இத்யாதியால்
எல்லா வாக்யங்களுக்கும் அவனே வாஸ்யனாகை இறே யுக்தம்
உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான ஸப்தங்கள்
இவ்வநுவாகத்திலே நின்று அவன் பக்கலிலே ப்ரயோகிக்கையாலே
எல்லாம் அவனையே சொல்லிற்று ஆக வேணும் இறே

நெறி இழுக்காமை
பகவத் ஸமாராதநம் ஆகிற வைதிக மர்யாதையைத் தப்பாமே

உலகளந்த திருத் தாளிணை
இவை அறியவுமாம்
அறியாது ஒழியவுமாம்
என்னுடைமையை நான் விடேன் -என்று ஸ்வீ கரிக்கும் ஸ்வ பாவனாய் யுள்ளவனை
இவை அறியாதே இருக்கச் செய்தேயும்
தானே எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் இறே

நிலத் தேவர் வணங்குவர்
ஸம்ஸாரத்திலே வர்த்தியா நிற்கச் செய்தேயும்
விண்ணுளாரிலும் சீரியர் –திரு விருத்தம் –79- என்னும்படியே
பூ ஸூரர் ஆனவர்கள் உலகு அளந்த திருத்தாளிணை நெறி இழுக்காமை வணங்குவர்

யாமும்
அவர்களுடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும்

அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே

———————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வியாக்யானம்

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து

கனியின்மையின் கருக்காய் கடிப்பவர் போல்
கனிந்த பழம் இல்லாத போது
காய்ப்பழத்தைப் புஜிப்பாரைப்
உபாயத்தில் ஸூ விசத ஞானமும் அனுஷ்டான சக்தியும் உண்மைக்கு கனி நிதர்சனமும்
மந்த ஞான சக்திகளுக்குக் கருக்காயும்

திருநாமம் சொல் கற்றனமே
அவன் அறியப் பரி பூர்ண உபாய கர்ப்பமாய் அவன் திரு நாமத்தை உட் கொண்ட சொல்
நமோ நாராயணாய என்பது
அத்தை உச்சரித்தேன்
அத்தால் கடாக்ஷத்தைப் பெற்றேன் என்றதாயிற்று –

—————

அவதாரிகை

இப்படி இவ்வாழ்வாருக்கு பகவத் விஷயத்திலே
எண்ணம் புகுந்து –திரு விருத்தம் -63-என்கிறபடியே
மானஸ அனுபவம் நடக்கிற படியும்
கருக்காய் கடிப்பவர் போல் –திரு விருத்தம் -64-என்று
பூர்ண அனுபவம் பெறாமையால் யுண்டான அதிருப்தி நடக்கிற படியையும் கண்டு

(உற்றும் -எண்ணம் புகுந்தது படி -மானஸ அனுபவம்
உறாததும் -கனி இருக்க காய் -உண்ட பூர்ண பாஹ்ய அனுபவம் கிடைக்காமல் )

இந்த உபய ஆகார விசிஷ்டமான இவருடைய ஞானத்திலே (கண்ணிலே )
அன்பர் அகப்பட்டு உரைத்த பாசுரத்தை

தலைவி நோக்கின் வாசி கண்டு
தலைவன் குறித்து ( விரித்து )யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

பதவுரை

கன்று பிணை–இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின்–பரந்த கண்களின்
குலம்–சாதியை
வென்று–ஜயித்து
ஒரே கருமம் உற்று–ஒரு காரியத்திலே பொருந்தி
பயின்று–அக்காரியத்திலே பழகி
செவியோடு உசாவி–(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,
உற்றும் உறாதும் மிளிர்ந்த–(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற
கண் ஆய்–கண்களாய் (இவை)
உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்–எல்லா வுலகங்களையும் மிச்சமில்லாதபடி
(பிரளய காலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)
எம்மை உணர்கின்ற–எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இளைய மான் பேடைகளுடைய மலர்ந்த கண்ணின் ஜாதியை வென்று

ஒரோ கரும முற்றுப் பயின்று
தன்னில் தான் பலகாலும் கிட்டுகையாலே
பர்யாயம் தோறும் ஒரு கார்யத்தைக் கிட்டி அறுதியிடுகிறது என்னலாய்

செவியொடு உசாவி
மாண்டு கர்ணத்து அளவும் செல்லுகையாலே அறுதியிட்ட காரியத்தை
ஸ்ரவண இந்த்ரியத்தோடே விசாரியா நின்றது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகம் அடைய பிரளய ஆபத்தில் ஈடுபடாமல் திரு வயிற்றிலே வைத்து நோக்கியும்
நெருக்குப் படாமல் வெளிநாடு காட்டியும் ரஷித்த
ஈஸ்வரனுடைய திருவடிகளிலே

உற்றமுறாதும்
உற்றும் உறாதும்
கிட்டினார் கண் போலேயும்
கிட்டாதார் கண் போலேயும்

அதாவது
உகப்பும்
செல்லாமையும்
தோற்றி இருக்கை

நாயகனைக் கண்ட உகப்பும்
இவனை ஒழியச் செல்லாமையும்
தோற்றும்படி
பார்வையிலே அறியலாய் இருக்கை

மிளிர்ந்த கண்ணாய்
உகப்பும் செல்லாமையும் மிளிர்தலிலே காணலாம் படி
கண் என்று பேராய்

எம்மை உண்கின்றவே
நம்மைத் தனக்குள்ளே யாம் படி க்ரஹியா (க்ரஸியா) நின்றன என்று தன்னை இவள்
கண்களுக்கு ஆக்கிக் கொண்டமை சொன்னான் ஆயிற்று

இத்தால்

கற்றுப் பிணை -இத்யாதியாலே
இவ்வாழ்வாருடைய ஞானம்
ஸம்ஸாரம் ஆகிற காட்டிலே திரிகிற முக்தமான ம்ருக பிராயருடைய
ஸப்தாதி விஷயங்களிலே விகஸிதமான ஞான ஜாதியை
வென்று இருக்கும் என்றபடி

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கையாலே
ஞாதவ்யமான பகவத் ஸ்வரூபாதிகளிலும்
ஸ்வரூப விரோதிகளிலும்
புருஷார்த்த விரோதிகளிலும்
சாதனா விரோதிகளிலும்
வ்யவசிதமாய்க் கொண்டு சீலித்த படி

செவியொடு உசாவி -என்கையாலே
இவ் வர்த்த நிஷ் கர்ஷங்கள் இதுக்கு
நிர்ணாயக ப்ரமாணமான ஸ்ருதியோடே
சம்வதித்து இருக்கும் என்றபடி
(ஸ்ருதி சொல்வதை ஸ்ராவ்ய காது இடம் தானே கேட்க வேண்டும் )

உலகம் இத்யாதியாலே
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே மானஸ அனுபவத்தால் வந்த உறுதலையும்
பாஹ்ய அனுபவத்தால் வந்த உறாமையையும் சொல்லுகிறது

மிளிர்ந்த கண்ணாய் -என்கையாலே
ஸர்வ அவஸ்தைகளிலும் ஞானத்தினுடைய விகாஸம் சொல்லிற்று

எம்மை யுண்கின்றனவே -என்கையாலே
இந்த பிரகாரத்தாலே இவருடைய ஞானம் ஆஸ்ரிதரை
வஸீ கரித்த படி சொல்லிற்று ஆயிற்று

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் நோக்கிலே ஈடுபட்ட தலைமகன்
ஆக்கங்கள் தனக்கு பாதகம் ஆகிறபடியைப்
பாங்கனுக்குச் சொல்லுகிறான்

வியாக்யானம் –

கற்றுப் பிணை
கன்றான மான்
முக்தமான மானினுடைய

மலர் கண்ணின்
மலர் போலே இருக்கிற கண் என்னுதல்
விகஸிதமான கண் என்னுதல்

குலம் வென்று
அஜ்ஜாதியாக வென்றதாயிற்று

ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி
ஒரோ கார்யத்திலே யுற்று
அதிலே நெருங்கி
அத்தைச் செவியோடே உசாவி
ஸர்வ விஷயமாய் ஓர் இடத்திலும் பற்று இன்றியிலே இராதே
ஒன்றிலே துணிந்து
அதிலே நெருங்கி
அத்தை தேசிகாரோடே போதயந்த பரஸ்பரம் –ஸ்ரீ கீதை –10-9-பண்ணுவாரைப் போலே
இவனையே ச விசேஷமாகக் கடாக்ஷிப்பது
இவன் பார்த்தவாறே
கண்ணை மாற வைப்பதான போது இருந்தபடி

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
ஸர்வ ரக்ஷகரானவர் திருவடிகளிலே இருந்து
அவர் எல்லைக்குள்ளே இருந்தாயிற்று இவை பாதகம் ஆகிறது

உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணாய்
மாறுபாடு யுருவும்படி இவனை நோக்குவது
அந்நோக்கிலே பரவசனாய்
இவன் பார்த்தவாறே அந்நோக்கை மாற வைப்பதாய்
மிளிரா நின்றுள்ள கண்ணாய்

எம்மை உண்கின்றவே
கண் என்கிற வியபதேசத்தாலே ஒரு பாதக பதார்த்தம் என்னை நலியா நின்றது

இத்தால்
ஆழ்வார் படியைக் கண்டவர்களுக்கு இருக்கிற படி இறே இது
கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று -என்கிற இத்தால்
கார்ய புத்தி இல்லாத முக்யத்தை நினைக்கிறது

ஒரோ கரும முற்றுப் பயின்று -என்கிற இத்தால்
ப்ரபத்தியைச் சொன்னபடி இறே இது
பின்னை ஞான கார்யம் அன்றோ
கீழ்ச் சொன்ன மௌக்த்யம் இதுக்குச் சேர்ந்த படி எங்கனே என்னில்
அதில் கர்தவ்யதா புத்தி இன்றிக்கே இருக்கையை நினைக்கிறது
இது தன்னைச் செய்யா நிற்கச் செய்தே சாதனத்தில் அந்வயியாதே
ஸ்வரூபத்திலே அந்தர்பவித்து இருக்கும் இறே

செவியொடு உசாவி உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே
சொன்னபடியே யுடையராய் இருக்கிற இருப்புத் தான் கண்டாரை ஈடுபடுத்தும் படியைச் சொல்லுகிறது

———

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

வண்ணம் சிவத்தில்
அவள் நோக்கில் அவனுக்கு அகப்பட்ட தலைமகன்
அவன் நோக்கின் வாசியை
செங்கண் சிறுச் சிறிதே -திருப்பாவை -22-
என் மேல் செய்த படியைக் கண்டு நாயகன் கருத்து அறிந்த
தாயாருக்கும் தோழிமார்க்கும் உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் இதில்

வியாக்யானம்

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று
இள மான் பேடைகளுடைய மலர்க்கண்களை எல்லாம் ஜயித்தாய்

ஒரோ கரும முற்றுப் பயின்று
பரஸ்பர ஸ்ப்ர்த்தை யுள்ளதாய்
தன்னில் தான் பர்யாயத சலிக்குமதாய்
ஓர் காரியத்தை எண்ணி அறுதியிடுகிறது என்னவாய்

செவியொடு உசாவி
அறுதியிட்டு கார்யத்தைச் செவியோடே உற்றுப் பேசுகிறது என்னலாய்

உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
லோகங்களை பிரளயம் வர திருவயிற்றிலே வைத்து ரஷித்தும்
அது போக வெளிப்படுத்தி ரஷித்தும்
உபகரித்த அவன் திருவடிகளுக்கு அடிமை செய்ய

உற்றமுறாதும்
கிட்டின அவளாயும்
கிட்டாத அவளாயும்

மிளிர்ந்த கண்ணாய்
கடாஷமுள்ள திருக்கண் மலர்களாய்

எம்மை
என்பது -ஸ்வீ யரைக் கூட்டிக் கொண்டு

உண்கின்றவே
எம்மை அனுபவிப்பதாய் ப்ரதிமையைப் பண்ணுமவையாய்
இரா நின்றதுகன் –

—————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஞான வைலக்ஷண்யத்தைக் கண்ட அன்பர்
நம்முடைய அளவிலேயே இவருடைய ஞானம் விஷயீ கரித்தது
விலக்ஷண ஞானரான பரம யோகிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய் யன்றோ இருப்பது என்று
தங்கள் ஸூஹ்ருத்துக்களுக்குச் சொன்ன பாசுரத்தை

தலை மகளை இயற்கையில் கலந்து பிரிந்த தலைவன்
தன்னுறாவுதல் கண்டு வினாவின பாங்கனைக் குறித்து
உற்றது யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

பதவுரை

எரி–அக்நியும்
நீர்–ஜலமும்
வளி–வாயுவும்
வான்–ஆகாசமும்
மண்–பூமியும்
ஆகிய–என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமான
எம்பெருமான் தனது எம்பெருமானுடைய
காவிகள்–செங்கழுநீர்ப் பூக்காளனவை
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–தூங்காமலும்
உணர்வு உறும்–(எப்பொழுதும் த்யாக ரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான்–ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய
கண் ஆய்–கண்களென்று பேராய்
அரு வினையேன் உயிர் ஆயின–தீர முடியாத தீவினைகளையுடைய எனக்கு உயிர் நிலையான
எத்தனை யோகியர்க்கும்–மிக்க யோக நிலையை யுடைய முனிவர்க ளெல்லோர்க்கும்
எண் ஆய்–(அந்த யோகத்தை விட்டு எப்பொழுதும்) நினைக்கத் தக்கவையாய்
மிளிரும்–பிறழ்ந்து தோன்றுகிற
இயல்வின் ஆம்–தன்மையை யுடையவையாம்.

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அத்யசனமும்
அதி நித்தரையும்
யோக விரோதியாம் என்று துறந்து
யுக்தாஹார விஹாரராய்
யுக்த ஸ்வப்ந அவ போதராய்க் கொண்டு
நிரந்தர த்யான தத் பரரான
ஸநகாதி பரம யோகிகளுக்கும் ஹ்ருதயமாய்க் -(எண்ணாய் )கொண்டு
நிரந்தர அனுபாவ்யமாய்
மிளிர்ந்து தோற்றும் ஸ்வ பாவத்தை யுடையனவாகா நிற்கும்
(ஆழ்வாரது கண்கள் )

எரி நீர் வளி வான் மண்ணாகிய வெம்பெருமான்
பிராணிகளுக்கு சீதோஷ்ண பரிஹார ரூபமாயும் (எரியும் நீரும் )
ஆஸ் வாஸ கரமாயும் (காற்று)
அவகாஸ ப்ரதமாயும்
தாரகமாயும் யுள்ள பஞ்ச பூதங்களுக்கும் அந்தராத்மாவாய்
அக் கணக்கிலே நமக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய்
அசாதாரணமாய்
அழிவற்ற தேசம் போலே
நித்ய அநுபாவ்யை யானவளுடைய கண் என்ற பேராய்

அருவினையேன் உயிராயின
நிரந்தர அனுபவம் பண்ணப் பெறாமல் பிரிகைக்கு
அடி முடி காண ஒண்ணாத (அநாதியான -அந்தமும் இல்லாத ) பாபத்தை யுடையேனான
எனக்கு முடிய ஒண்ணாத படி பிராணனாய்ப் புக்கு நில்லா நிற்பன வாயின

காவிகளே
ராக உத்தரதையாலே செங்கழுநீர்த் தடாகம் போலே இருக்கையாலே
காவி என்னாலானவை

கண்ணாய் அருவினையேனு யிராயின காவிகள் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
என்று அந்வயம்

இத்தால்
ஆஸ்ரிதரான அன்பருக்கு தாரகமாய்
ராகோத்தரமான ஆழ்வாருடைய ஞானமானது
அசநாத்ய தீதராய் அசங்குசித ஸ்வ பாவராய் நிரந்தர அனுபவ தத் பரரான
நித்ய யோகத்தை யுடைய ஸூரிகளுக்கும் நித்ய அனுபாவ்யமாய்க் கொண்டு
விளங்கித் தோற்றும் ஸ்வ பாவத்தை யுடைத்தாகா நிற்கும் என்றதாயிற்று –

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தலைமகள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது கீழ் போலே

வியாக்யானம்

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
பிராகிருத போகங்களால் தரியாதாராய்
ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற புத்தியே யன்றியே
உபாதேயமான ஆத்மவஸ்து உத்தேச்யம் என்னும் புத்தியை யுடையராய்
அவ்வாத்ம வஸ்து தான் ஸ்வ தந்திரம் என்று இருக்கை அன்றிக்கே
ஆத்ம யாதாத்ம்ய ஞான பூர்வகமாக ஈஸ்வர ஞானத்தை யுடையராய்
இது அவனுக்கு பிரகாரம் என்று இருக்கும் படி பரம யோகம் கை வந்து இருக்குமவர்களுக்கும்

எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்
அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானார்கள் ஆகில்
தங்களுக்கு ஸூபாஸ்ரயமான பரதத்வம் தன்னையும்
காற்கடைக் கொண்டு
இத்தையே அது அது என்னும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாக யுடையனவாய் யுள்ளன

எரி நீர் வளி வான் மண்ணாகிய
காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம் உப லக்ஷணம்
அக்னி நீர் காற்று ஆகாசம் பூமி இவை யடையத் தனக்கு விபூதியாக யுடையவன்

வெம்பெருமான்
அவனுடைய விபூதி யோகம் தனக்குப் பேறாய் இருக்கிற படி

தனது வைகுந்த மன்னாள்
மானாவிச்சோலை போலே ஆவது அழிவதாம் இவ்விபூதி போல் அன்றிக்கே
ஒரு நாளும் அழியாததாய்
அவனுக்கு அஸாதரணமாய்
அந்தரங்கமான நித்ய விபூதியோடே ஒத்து இருந்தவள்
அவனோடே அழியாத விபூதியோடே ஒத்து இருந்துள்ளவள்

கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே
அப்படிப்பட்டவன் பக்கலிலே வந்தவாறே
பிரதான அவயவமாய்
என் பக்கலிலே வந்தவாறே அச்சேத்யமாய் அதாஹ்யமாய் அழியாததாய் இருந்துள்ள ஆத்ம வஸ்துவாய்
பாதகமாம் இடத்தில் ஸ்வ தந்திரமாய் நின்று பாதகமாகா நின்றன

ஆறு வினையேன்
ரக்ஷகமானவை தானே பாதகமாம் படி பாபத்தைப் பண்ணினேன் –

—————

அவதாரிகை

இப்படி அனுபாவ்யமான ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்தை
போக்தாக்கள் உகந்து யுரைத்த பாசுரத்தை
தலைமகள் கண்ணழகு கண்டு தலைமகன் வியந்து யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல –
தலைவன் தன் வலி யழிவு உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

பதவுரை

அசுரை–அசுரர்களை
செற்ற–அழித்த
மா விய புள் வல்ல–பெரிய ஆச்சர்ய கரமான கருடப் பறவையை ஏறி நடத்துகிற
மாதவன்–திருமகள் கணவனும்
துணை மலர்–ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்
காவியும்–செங்கழுநீர்ப் பூவையும்
நீலமும்–கருநெய்தற் பூவையும்
வேலும்–வேற்படையையும்
பலபல–(மற்றம் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய) மிகப்பல பொருள்களையும்
கோவிந்தன்–பசுக்களைக் காப்பவனுமான பெருமானுடைய
வேங்கடம்–திருவேங்கடமாமலையிலே பொருந்தி வாழ்கிற
தூவி அம்பேடை அன்னாள்–சிறகழகையுடைய அன்னப் பேடை போன்றவளது
கண்கள் ஆய்–கண்களாகிய
வென்று–தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து
பாரிப்பு–என்னை வருத்துவதற்கு அடி கோலிய பரப்பு
ஆவியின் அல்ல–(எனது) உயிரின் தன்மைக்கு
அளவு அல்ல–ஏற்ற அளவல்ல.

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
நைல்யத்தாலே நெய்தலையும்
கூர்மையாலும் ஒளியாலும் வேலையும்
குளிர்த்தியாலும் மிளிர்த்தியாலும் கயலையும்

மற்றும்
கண்ணுக்கு ஒப்பான
வாள்
அம்பு
வடி
மான் விழி
முதலான பலவற்றையும் வென்று

அன்றியே
கீழ்ச் சொன்னவற்றைத் தனித்தனியே
பலவற்றையும் வென்று என்னவுமாம்

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
நம்முடைய பிராணனின் ஸ்வரூபத்துக்குத் தக்கதல்ல
இவற்றினுடைய கோலுதலின் பரப்பு

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன்
விரோதி நிரசன ஸமர்த்தனாய்
பெரிய ஆச்சர்யத்தை யுடையவனான பெரிய திருவடியை நடத்த வல்லவனாய்

பொரு சிறைப் புள்ளுவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் –திருவாய் -1-9-3- என்கிற படியே
இந்த கருட வாஹனத்வத்துக்குத் தகுதியான ஸ்ரீயபதித் வத்தை யுடையவன்

கோவிந்தன்
வெறும் பரத்வத்தால் வந்த மேன்மையோ
பசுக்களின் பின்ன போகலாம்பாடி பவ்யனானவன்

வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
இந்த பரத்வ ஸுலப்யங்கள் இரண்டும் ப்ரகாசிப்பதான திருமலையில்
பொருந்தி வர்த்திக்கிற
அழகிய சிறகுகளை யுடைய அன்னப் பேடை போலே இருக்கிற இவளுடைய

(ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா வேங்கடேசாயா ரமயா ராமமாணாயா ஸ்வாமி புஷ்காரணீ தடே
ஸ்லோகத்தில் -இவை அனைத்துமே உண்டே )

கண்களாய துணை மலரே
கண் என்று பேராய் இருக்கிற
தன்னில் தான் சேர்ந்த இரண்டு கண்களானவை

இவற்றுக்கு -என்று
அத்யாஹரித்து
ஆவியின் தன்மை அளவுள்ள பாரிப்பு -என்று
அவயம்

இத்தால்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு -என்கையாலே
ஆழ்வாருடைய ஞானமானது
ராக ஹேதுவான ரஜஸ்ஸையும்
கார்ஷ்ண்ய ரூபமான தமஸ்ஸையும்
லகுவாய் ப்ரகாசகமான சத்வத்தையும் கடந்து
(மிஸ்ர ஸத்வம் தாண்டி ஸூத்த ஸத்வம் வேண்டுமே
முக்குணம் தாண்டி நித்ய ஸத்வம் வேண்டுமே )

இப்படி குண த்ரய உத்தீர்ணம் ஆகையால்
ஜட ப்ரக்ருதியான பதார்த்தங்களில் சேர்த்தி அற்ற படி
பஹு பிரகாரமான வ்யாவ்ருத்தியை யுடைத்தாய்க் கொண்டு
நம்முடைய ஸ்வரூபத்தின் அளவன்று இதினுடைய பாரிப்பு என்றபடி

தூவியம் பேடை யன்னாள் -என்கையாலே
இவருடைய ஸூத்த ஸ்வபாவத்தையும்
(வேல் வெளுப்பு மிஸ்ர ஸத்வம் )
ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய அந்வயமும்
பாரதந்தர்யமும் (பேடை)
ஸூசிதமாயிற்று

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை -என்று
அலர் மேல் மங்கையைச் சொல்லி
அவளோடே இவருடைய ரூபத்துக்கு ஒப்புச் சொல்லிற்று ஆகவுமாம்
(கடி மா மலர்ப்பாவையுடன் ஷாம்ய ஷட்கம் உண்டே )

கண்களாய துணை மலரே -என்றவிடம்
இவருக்கும் துணையாய்
ஆஸ்ரிதற்கும் துணையான
விகாஸத்தை உடைத்து என்று தோற்றுகிறது

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்பாட்டாலும் கண்ணழகு தன்னையே சொல்லுகிறான்
தலைமகன்

வியாக்யானம் –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால்
விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே –ஸ்ரீ பாலா -1-18-என்கிறபடியே
ஒரோ ஆகாரங்களாலே ஒப்பாகப் பலவற்றையும் பிடித்தால்
எல்லாம் கூட ஒப்பாகவற்றோ
மாட்டாது என்னும்படி இறே இவை தான் இருப்பது

விஷ்ணுநா சத்ருஸோ வீர்யே
பரத்வமும் வீர்ய குணம் ஒன்றுக்கும் ஒப்பாம் அத்தனை

இப்படி சீலாதி குணங்கள் கண்டு அனுபவிக்கப் போகாதே இறே அங்கு

சிவப்பாலே செங்கழுநீரை வென்று
கருமையாலே நெய்தலை வென்று
ஓராளும் ஓர் நோக்குமாய் இருக்கும்படி இருக்கையாலே வேலை வென்று
மவ்க்யத்தாலே கயலை வென்று
மற்றும் ஒப்பாகச் சொல்லும் அவற்றை அடையப் புக்கவிடம் புக்கு வென்று

ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
தன்னடையே அழியுமவற்றை வெல்லுகை வெற்றிக்கு உடலோ என்று
அழியாத ஆத்ம வஸ்துவையும் அழிப்பதாகக் கோலா நின்றன

ஆவியின் தன்மை அளவுள்ள
இவ்வாத்ம வாஸ்துவின் அளவன்றியே
இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்வன போலே இரா நின்றன
இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மயக்க வல்ல போலே காணும்

அசுரைச் செற்றமாவியம்புள் வல்ல மாதவன்
அசுரர் வர்க்கத்தை யடைய அழியச் செய்து
மஹானாய்
அவன் தன்னோ பாதியும் பெரியனாய்
விஸ்மய நியாமான வியாபாரங்களை யுடையனாய்
இருந்துள்ள பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்லவன்

மாதவன்
கருட வாஹனனான ஏற்றத்துக்கு மேலே
ஸ்ரீ லஷ்மீ பதியான ஏற்றத்தை யுடையவன்

கோவிந்தன்
அவளோட்டைக் கண் கலவியாலே ஆஸ்ரித ஸூலபனானவன்

வேங்கடம் சேர்
அந்த ஸுலப்யமும் மேன்மை என்னும்படி
திருமலையிலே வந்து ஸூலபனானவன்

தூவியம் பேடை யன்னாள்
கோவிந்தனதான வேங்கடத்தைச் சேருமதாய்
புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாததான
தூவியம் பேடை யுண்டு
அழகிய சிறகை யுடைய அன்னப்பேடை
அத்தோடு ஒத்து உள்ளவள்

அன்றிக்கே
தூவியம் பேடை -என்று
பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய்
அவளோடே ஒத்து உள்ளவள் என்றுமாம்

கருட வாஹனன்
ஸ்ரீ லஷ்மீ பதி
என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில்
ஸுலப்யத்தைச் சொல்ல நினைத்து
அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தைச் சொல்லி
பின்பு அந்த ஸுலப்யத்தின் எல்லையில் வந்து ஆறுகை

கண்களாய துணை மலரே
கண் என்கிற வியபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன இரண்டு பூக்களாயிற்று

கண்களாய துணை மலரின் பாரிப்பு
காவியும் என்று தொடங்கி
ஆவியின் அளவுள்ள பாரிப்பு
என்று அந்வயம்

இத்தால்
திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே வித்தராய் இருக்கிற
ஆழ்வார் படி போக்த்தாக்கள் அளவல்ல என்று
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுகிற பாசுரத்தை
பார்ஸ்வஸ்த்தர் பாசுரத்தாலே அனுபவிக்கிறார் தாம்

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இப்படி பகவானுடைய உக்த வித கடாக்ஷத்தாலே
தாம் இங்குள்ள இருப்பில் உயரப் பெற்றமையை அருளிச் செய்து
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –திருவாய் -9-2-1- என்று
அருளிச் செய்த படியே
இவ்வாழ்வார் அவ்விருவராலும் ஒரு நினைவால் நீயதராய்
இந்த திவ்ய பிரபந்த கரணத்தில்
அதிக்ருதரானது கொண்டு அவன் கடாக்ஷத்தைக் கடாஷித்தவராய்
இங்கான வெந்நிலத்தில் உள்ள பங்கயத்தாள் பாரிப்பு என்னாத்ம ஸ்வரூபம் மட்டுல்ல என்று
அவளுடைய இப்போதான் விசேஷ கடாக்ஷத்தில் தாமான தன்மையில் ஈடுபடுகிறார் இதில்

வியாக்யானம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
சிவப்பாலே செங்கழு நீரையும்
கறுப்பாலே நெய்தலையும்
தன் படியை ஸ்வ வசமாக்கிக் கொள்ளுமத்தால் வேலையும்
ஒளியோடு கூடின ஆகார ஸுந்தரியத்தாலே கயலையும்
மற்றும் கண்ணுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட அம்பு மான் விழி என்று
பல பல வானவைகளையும் வென்ற கண் படைத்தவள்

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள்
அதி விஸ் மய நீய விரோதி நிரசனமுள்ள ககேந்த்ரனை நடத்த வல்ல
ஸ்ரீ லஷ்மீ வல்லபன் கிடீர்
கோவிந்தனாய் வந்து அவதரித்தவனும்
திருவேங்கடம் சேர்ந்தவனும்
அவனுடையதாய் அமைந்த ஸர்வ ஸரீரியாய்
தத் கத தத் ப்ரயுக்த தோஷ அஸ்பர் ஸித்வம் உள்ளது கொண்டு
அவனுக்கு அழகியளான பேடை யானப்பட்டவளுடைய

கண்களாய துணை மலரே
ஒன்றுக்கு ஒன்றே ஸுந்தர்ய சாத்ருஸ்யம் கொண்டதான திருக்கண் மலர்களே

என் ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு
என்னாத்மாவுக்கு யுள்ள ஸ்வ பாவ ஸித்த ஞான சக்த்யாதிகளின் மாட்டு இல்லாத
பலவிதரண உத்ஸாஹம் உள்ளது

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் –ஸ்ரீ குணரத்ன கோசம் -68- என்று அருளிச் செய்த
ஸுந்தர்யத்தின் மாட்டு அல்லவாய் இரா நின்றது என்னில்
கடாக்ஷத்தால் அறியப்பட்ட ஸுந்தர்யம் என்றபடி –

————–

அவதாரிகை

இப்படி நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான தம்முடைய ஞானத்தால்
பகவத் பாகவத விஷயங்களை நிறைந்த அனுபவம் பண்ணப் ப்ராப்தமாய் இருக்க
யோக்ய காலங்களில் அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த ஸைதில்யத்தை
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றினை பாசுரத்தை
காலம் கண்டு இரங்கின தலைவியைக் காலம் இளையது என்று ஆற்றினை
தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

பதவுரை

பொரு கடல் சூழ்–அலை மோதுகிற கடலால் சூழப்பட்ட
நிலம்–பூலோகத்தை
தாவிய–அளந்தருளின
எம்பெருமான் தனது–எம்பெருமானுடைய
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்தை
அன்னாய்–ஒத்து விளங்குகிறவளே!
கலந்தார் வரவு எதிர் கொண்டு–(உன்னோடு) கலந்து பிரிந்து சென்றவருடைய வருகையை முந்தி எதிர்பார்த்து
வல் கொன்றைகள்–வலிய கொன்றை மரங்கள்
கார்த்தனவே–கருவடைந்து அரும்பின; (அதுவே தவிர)
மாலையும்–மாலைகளையும்
மாலை பொன் வாசிகையும்–பொன்னாலாகிய சுருள்மாலை வட்டத்தையும்
புலம் தோய் தழை பந்தர்–மநோஹரமான தழைகளார் சிறு பந்தலிலே
தண்டு–கொம்புகளிலே
உற–நெருங்க
நாற்றி–தொங்க விட்டுக் கொண்டு
மலர்ந்தே ஒழிந்தில–முற்றும் மலர்ந்து விட்டனவில்லை

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாகவும்
மாலையாலே சமைந்த பொன்னின் வாசிகையாயும் இருக்கிற பூக்களை
கண் வைத்தால் வாங்க ஒண்ணாத படி செறிந்த தழைப் பந்தலிலே
கொம்புகள் சிக்கனைத் தூக்கி
மலர்ந்தே வியானவில்லை

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்
அலைகள் தன்னில் தான் பொருகிற கடலாலே
சூழப்பட்ட பூமியை அளந்து கொண்ட நம்முடைய
ஸ்வாமியானவனுடைய

பொருகடல்
செறிந்த கடல் என்னவுமாம்

தனது வைகுந்த மன்னாய்
அவனுக்கு அசாதாரணமான பரமபதம் போலே
அந்நிய அபிமான பிரசங்கம் யுண்டாய்க் கழிக்க வேண்டாதபடியான
ஸ்வ பாவத்தை யுடையவளே

(உலகு அளந்த பொன்னடி -சாத்ய பூமி அது
பற்றுவது இங்கே -திருவிக்ரமனது திருவடி பற்றி
அங்கு சென்று அந்த ஸ்ரீ வைகுண்டம் போல் இனியவளே
நித்யம் நிரதிசய போக்யம் -கீழ்
அந்நிய அபிமான பிரசங்கம் இல்லாத ஆழ்வார் –
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிரே என்று இகழல்பவர் அன்றோ )

கலந்தார் வர வெதிர் கொண்டு
தம்மோடு முன்பு ஸம்ஸ்லேஷித்த அன்புடையாருடைய வரவை முற்கோலி

வன் கொன்றைகள்
நாம் மலர்ந்தால் இவள் ஈடுபடும் என்னும் இரக்கம் இல்லாத
வன்மையை யுடைய கொன்றைகள்

கார்த்தனவே –
கருவடைந்து அரும்பின இத்தனை
மலர்ந்தன வில்லை என்றதாயிற்று

வன் கொன்றை என்று
அரும்பின சிக்கனவைச் சொல்லி
மலர விளையது என்றதாகவுமாம்
(வன் -செறிந்து அடர்ந்து என்றபடி இதில் )

இத்தால்
விஸ்லேஷித்த நண்பரான பாகவதருடைய ஆகமநத்தை
ஸாம்ஸாரிக போக தர்சனத்தாலே
(கொன்றைப்பூக்கள் பூக்க ஆரம்பிப்பது ) வந்த ஆர்த்தி சமிக்கைக்கு
உஸாத் துணையாக ஆசைப்பட்டவர்
விளம்ப அஷமதையாலே சிதிலராக
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரமாய் இருக்கிறது

இதில்
வன் கொன்றை -என்கையாலே
ஸ்த்தாவர பிராயராய்
அஞ்ஞரான சரீரிகளுடைய
தேவதாந்த்ர அபிமானத்தை சிக்கனவை ஸூசிப்பிக்கிறது
(கொன்றைப்பூ சிவனது )

புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே
இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி

மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் )
வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே )
யுண்டான போக்ய வஸ்துக்களை
ஸூசித்தப்படி

தண்டுற நாற்றி -என்கையாலே
(கிளையில் பொருந்தி )
இவ்விஷயங்களினுடைய அநு பந்தம் ஆஸ்ரய பர்யந்தமாய் இருக்கும் என்றபடி
(கிளையும் தள்ளுபடி -விஷயாந்தரம் போல் விஷயாந்தர பரரும் த்யாஜ்யம் )

மலர்ந்தே ஒழிந்தில -என்கையாலே
கிலேச கரமான வைஷயிக போக விகாஸம் உம்முடைய ஸந்நிதியில்
அதிசயித்தது இல்லை என்றபடி
அப்போது இறே உஸாத் துணை வேண்டுவது

பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு -என்று
உஸாத் துணையான நண்பருடைய ஆகமநம் மேல் அபேக்ஷிதம் என்றபடி

கார்த்தனவே -என்கையாலே
ஆகாமியான விகாஸத்துக்கு ஸூசகம் யுண்டு இத்தனை என்றதாயிற்று

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

ஸ்வாபதேசம்
இத்தால்
அவனுடைய குண ஞானத்தாலும்
இக்கலையை அவகாஹித்த படியாலும்
போக யோக்கியமான காலத்தில் வாராது ஒழியான் என்று
பார்ஸ்வஸ்த்தர் ஆஸ்வஸிப்பிக்கிற படியைச் சொல்லுகிறது

——

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகள்
கொன்றை பூக்கிற காலத்திலே வருகிறேன் என்று போனானாய்
அக்காலமும் வந்து
அவையும் பூக்கவும்
அவன் வரக் காணாமையாலே
தலை மகள் தளர
அத்தைக் கண்ட தோழி
அவை இப்போது பூக்க உத்யோகிக்கிற அத்தனை –
காலம் தாமும் இளையது என்று ஆற்றினை தோழி பாசுரத்தாலே
தம்மில் தாமே ஸமாஹிதராகிறார்
இதில்

வியாக்யானம்

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி
கொன்றைகளானவை மாலையாயும்
மாலைகளால் கட்டப்பட்ட பொன் வாசிகையாயும் யுள்ள பூக்களை
வைத்த கண் வாங்காதபடி அழகுள்ள பசும் தழைப் பந்தலில் யுள்ள கொம்புகளிலே
தூக்கின அளவே காண்

மலர்ந்தே ஒழிந்தில
மலர உபக்ரமித்தனை
இன்னும் மலர்ந்தது இல்லை
அவன் வரும் அளவில் அல்லது மலராது காண்
மலரும் காலத்தில் அவன் வருவது நிச்சிதம்

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் கலந்தார்
வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே
அலைகள் தன்னில் தாம் பொருகிற கடலாலே சூழப்பட்ட பூமியை அளந்து கொண்டு
நம் ஸ்வாமியால் நம் விபூதகி எல்லாம் ஒரு தட்டு
இவள் ஒரு தட்டு என்று அபிமானிக்கப் பட்டவளே
உன்னோடு கலந்தவருடைய வரவுக்கு எதிர்கொண்டு அவரைக் கண்டு அல்லது அலரலாகாது
என்கிற புத்தி சக்தி பலமுள்ள கொன்றைகள்
கார்த்திக் கொண்டே நின்றன காண்

கலந்து பிரிந்தவர்கள் ஆராரோ
அவர்களை எல்லாம் எதிர்கொண்டு என்றுமாம்

—————–

அவதாரிகை

இப்படி ஆஸ்வாஸ கறாரான பாகவதருடைய ஆகமநமும் இன்றியே
அனுபவ யோக்ய காலத்தில் பகவத் அனுபவமும் ஸித்தியாமையாலே
சிதிலரான இவரை ஸூஹ்ருத்துக்கள் ஆனவர்கள்
இவ்வவஸ்தையில் பகவத் அங்கீ காரத்துக்குக் குறையில்லை என்று
ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாத் தலை மகளை ஆற்றி யுரைத்த
தோழி வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

பதவுரை

கார்–கருத்த
இருள்–இருளாகிய
ஏறு–எருதானது
செகில்–சிவந்த
சுடர்–ஸூர்யனாகிய
ஏற்றிற்கு–எருதுக்கு எதிரில்
உளைந்து–இளைத்து
வெல்வான்–(மீள) வெல்லும் பொருட்டு
போர் ஏற்று–போர் செய்வதை ஏற்றிக் கொண்டு
எதிர்த்தது–வந்து எதிரிட்டது.
நீர் ஏற்று–(மாவலி கையால் தாரை வார்த்துத் தத்தஞ்செய்த) நீரை (க் கையில்) ஏற்று
புவனி எல்லாம்–எல்லா வுலகங்களையும்
அளந்த–அளந்து கொண்ட
நெடிய–நீண்ட வடிவமுடைய
பிரான்–தலைவன்
புன்தலை மாலை–அற்புதமான தன்மையையுடைய மாலைப் பொழுதிலே
அருளாவிடுமே–(உனக்கு) அருள் செய்யாதொழிவனோ? (ஒழியான்.)
வார் ஏற்றும் இன முலையாம்–கச்சை மேலேறுவிக்கும்படி வளர்ந்த இளமை மாறாத தனங்களை யுடையவனே!
உன் வளை திறம்–உனது கைவளையின் நிமித்தமாக
வருந்தேன்–வருத்தப்படாதே.

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து
கறுத்த ஏறு போலே மேல் எழுச்சியை யுடைத்தான இருளானது
சிவந்த ஏற்றினை ஒத்த ஆதித்யன் சுடருக்கு முன்பு இடைந்து

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
வெல்லுகைக்காக யுத்தத்தை ஏன்று கொண்டு எதிர
புல்லிய தலைப்பாட்டை யுடைத்தான மாலையிலே

இதுக்கு வன்மையாவது
பிரிந்தாரை நலிகை

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் பிறர் மேலிடாதபடி இரந்து
தன் கைப்படுத்தி எல்லை நடந்து காற் கீழே யிட்டுக் கொண்ட
சர்வாதிகனான மஹா உபகாரகன்
பூமியோ பாதி அநந்யார்ஹை யான உனக்கு அருளாது ஒழியுமோ

வாரேற்றி இள முலையாய்
வாரை ஏற்றுவிக்கும் படி வளருகின்ற இளமையே வடிவான
முலையை யுடையவளே

ஏற்றுகை -முடிகை
(
வருந்தேல் உன்வளைத் திறமே
உன் முகப்படம் கிழிந்து இருக்க வளை கழலுகிறதே என்று
கிலேசிக்க வேண்டுவது இல்லை
அவன் அருளும் என்றதாயிற்று –

இத்தால்

காரேற் றிருள் -என்று
(மயர்வற மதிநலம் அருளுவதுக்கு முன்பு )
பூர்வகமான அஞ்ஞானத்தை ஸூசிப்பித்து

செகிலேற்றின சுடருக்கு உளைந்து -என்று
அது ராகோத்தரமான விவேகம் ஆகிற பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே
கழிந்தமை சொல்லி

வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை புவனி எல்லாம் நீரேற்று
அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-என்று
யோக்ய காலத்தில் அனுபவ அலாபத்தாலே இருந்த விவேகமும் அழியும்படி
மோஹ அந்தகாரம் மேலிடும் அவஸ்தையை ஸூசிப்பித்ததாயிற்று

வாரேற்றி இள முலையாய் –என்கையாலே
இவளுடைய பக்தி அபி விருத்திக்குத் திரோதாயகர் இல்லை என்றபடி

வருந்தேல் உன் வளைத் திறமே -என்று
இப்படி பக்தி ப்ரபாவத்தை யுடைய உம்முடைய கையில்
பாரதந்தர்ய ஸூசகமான மினுக்கம் கழலுகிறது என்று கிலேஸிக்க வேண்டா

சம்பந்தம் உள்ளாரைத் தானே இரந்து வந்து
அநந்யார்ஹர் ஆக்கிக் கொள்ளும்
சர்வாதிக ஸ்வாமி யானவன் அருளாது ஒழியுமோ என்று
ஆஸ்வஸிப்பித்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அதுக்கு மேலே ஸந்த்யையும் வந்து நலிய
போக யோக்கியமான காலமாய் இருக்க அவன் வந்து தோற்றாமையாலே
தலைமகள் நோவு பட
இத்தைக் கண்ட தோழியானவள்
ஸந்த்யை அல்ல -இரண்டு வ்ருஷபங்கள் தன்னிலே பொருகிறன காண் என்று
இங்கனே சொல்லி ஆஸ்வஸிப்பிக்கிறாள்

வியாக்யானம்

காரேற் றிருள்
இருளான கார் ஏறானது
கறுத்த வ்ருஷபமானது

செகிலேற்றின சுடருக்கு உளைந்து
ஆதித்யன் ஆகிற சிவந்த வ்ருஷபத்துக்குத் தோற்றுப் போய் சுரமடைந்தது

வெல்வான் போரேற்று எதிர்ந்தது
நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடைக்கும் இத்தனையோ
நாமும் ஒரு கால் மேலிட வேணும் என்று பார்த்து
போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது

புன் தலைமாலை
புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது
ஜசுகைசான இருள் கொழுந்துகளை உடைத்தான ஸந்த்யையானது

நக நிர் லுஞ்ச நீயா தமோ வல்லய
(இந்த ஸ்லோகத்தின் அக்ஷரங்கள் சரியாகாது தெரியவில்லை என்று
பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்யானத்தில் குறிப்பு உள்ளது )
ஸந்த்யையினுடைய உபக்ரமம் அத்தனை
ஸந்த்யை தான் அல்லது காண் இது

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம்

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான் போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை
இருளாகிற கறுத்த ருஷபமானது முன்
செகிலேறு சிவந்த வ்ருஷபமான ஆதித்யனுடைய கிரணங்களால் பஃனமாய் ஓடிப்போனது
இப்போது அந்த சிவந்த வ்ருஷபத்தை ஜெயிக்கவே பொரும் விருஷபமாய் எதிர்த்தது

மேகத்தின் செக்கரைத் தான் ஏறிட்டுக் கொண்டு
பொன்னிறம் போன்ற மாலைகள் அசைய அசைய

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே
பூமி முதலான ஸர்வ லோகத்தையும் தன் பொற் கையில் நீர் ஏற்றவனாய்
தன் திருவடிகளால் அளைந்து கொண்டு
ஸர்வத்திலும் நெடு மாளாய் உபகரித்தவன் தான் கடுக வாராமல் அருளிச் செய்த மாத்ரமாய் விடுமோ
கண் எச்சில் வாராதபடியும் வெளிறு மேல் இடாதபடியும்
கச்சை காட்டும் படி இள முலைகள் அழகியளானவளே
உன் வளைகள் கழலுமதாய் மநோ விசாரப்பட்டு ஆயாசப்படாதே கொள்ளாய்

உன்வளைத் திறமே
வளை விஷயத்தில் உன்னோடு வரும் காலம் குறித்தவன் அக்காலம் வரவே
வாராமல் தப்பான் காண் என்கிறாள் –

——————–

அவதாரிகை
இப்படி பார்ஸ்வஸ்தர் ஆஸ்வஸிப்பித்த இடத்திலும்
விளம்ப அஷ மத்வத்தாலே கால தைர்க்யம் பொறாமையாலே
வந்த ஆர்த்தியை
இரவின் நெடுமைக்கு இரங்கின
தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் –
தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

பதவுரை

வளை வாய் திரு சக்கரத்து–வட்டமான நுனியையுடைய அழகிய சக்கராயுதத்தையுடைய
எங்கள் வானவனார்–எமக்குத் தலைவரும் பரமபதத்திலிருப்பவருமான பெருமானுடைய
முடிமேல்–திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய்–கட்டு வாய்ந்த
நறு–பரிமளமுள்ள
கண்ணி–மாலை வடிவமான
தண் அம்–குளிர்ந்து அழகிய
துழாய்க்கு–திருக்குழாய்க்கு (ஆசைப்பட்டு)
உண்ணம் பயலை விளைவான்–(எமது) மாயை நிறம் மாறிப் பாலை நிறம் விஞ்சம்.
மிக வந்து–அடாவந்து
நான் திங்கள் ஆண்டு வழி நிற்க–நாளாயும் மாதமாயும் வருடமாயும் கற்பமாயும் தோன்றினது தவிர
எம்மை உளைவான் புகுந்து–எம்மை முற்று மழிக்க நெருங்கி
இது ஓர் கங்குல்–இந்த ஒரு ராத்ரிதானே
ஆயிரம் ஊழிகளே-ஆயிரம் கற்பமாகா நின்றது.

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வளைந்த வாயை யுடைத்தான திருவாழியை யுடையனாய்
எங்கள் பக்கலிலே பரமபதத்திலே பண்ணின அபிமானத்தை பண்ணும்
ஸர்வேஸ்வரனுடைய திரு முடியில் சாத்தின

தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
கட்டு வாய்ந்து பரிமளத்தை யுடைத்தான
மாலா ரூபமான குளிர்ந்த திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
ஸ்வ பாவிகமான நிறம் ஒழிந்து
வெளுப்பு நிறம் விஞ்சி வருகைக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு ராத்ரி மிக்கு நாளாயும்
மாஸமாயும்
ஆண்டாயும்
ஊழியாயும்
வந்து ஒழிய

எம்மைஉளைவான் புகுந்து
எம்மை ஈடுபடுத்துகைக்காகக் கிட்டி

இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இந்த ஒரு ராத்ரியானது
ஆயிரம் கல்பம் ஆகா நின்றன

ஆயிரம் என்றது
அநந்தம் என்றதாகவுமாம் –

இத்தால்
வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு

ஈஸ்வரத்வ சிஹ்னமான பரிகரத்தையும்
விபூதியையும்
பூஷணத்தையும்
ஒப்பனையையும் யுடைய
ஸர்வேஸ்வரனுடைய போக்யதையை

வண்ணம் பயலை
அனுபவிக்கப் பெறாமையாலே
ஸ்வரூப விபர்யாசம் பிறக்கும் படி நம்மை கிலேசிப்பதாகக்

விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

காலமானது
அவச்சேதகங்களால் பரிச்சின்னமாகை யன்றியே பிரகாச பிரஸங்கம் இல்லாதபடி
அபரிச்சின்னம் ஆகா நின்றது என்று தளர்ந்து அருளிச் செய்தார் ஆயிற்று

————

ஸ்ரீ நம்பிள்ளை –ஈடு –

அவதாரிகை –

ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின திருத்துழாய் மாலையைப் பெற வேணும்
என்னும் அபேக்ஷையால் உண்டான
த்வரையாலே காலம் செலுத்த உள்ள அருமை சொல்லுகிறது

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து
வளைந்த வாயை யுடைய திருச்சக்கரம் என்னுதல்
அன்றிக்கே
வளையையும்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
வாயையும் யுடைய -திருச்சக்கரத்தையும் என்னுதல்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர -யுத்த –114-15-என்னக் கடவது இறே

எங்கள் வானவனார் முடிமேல்
த்ரிபாத் விபூதியை யுடையராய்
திவ்ய ஆயுதங்களும்
சாத்தின மாலைகளுமான
அழகேயாய் இருக்கிறவர்
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய திரு அபிஷேகத்தில் யுண்டான

தளைவாய்
தொடை வாய்ப்புள்ள
அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே

நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு
செவ்வியை யுடைய மாலைத் திருத்துழாய்க்கு

வண்ணம் பயலை விளைவான்
அம்மாலையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிறமானது பயலை விளையும்படியாக
விவரணமாம் படியாக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
முந்துற வந்ததொரு ராத்ரி ஒரு நாளாய்ப் பெருகிற்று
அது போய் ஓர் ஆண்டாய்ப் பெருகிற்று
அது போய் ஒரு கல்பமாய்ப் பெருகிற்று

அது நிற்க
அத்தைக் கடக்க நிறுத்தி
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்
அவை போலே இன்றிக்கே இது வேறு ஒன்றாய் இரா நின்றது

எம்மைஉளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
இவை யடைய நமக்கு அனுகூலம் என்னும்படி என்னை நலிகைக்காக வந்து புகுந்தது
அநேகம் ஊழிகளாய் இரா நின்றன

மிக வந்து
ஒன்றுக்கு ஓன்று மிகும் படி வந்து என்னுதல்
அநேக ராத்ரிகள் எல்லாம் வந்தது இறே
இது ஒரு ராத்ரி இருந்தபடி என்

ஸ்வா பதேசம்
இத்தால்
பதி ஸம்மாநிதா ஸீதா –அயோத்யா -16-21-
அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே பெற வேணும்
என ஆசைப்பட்டுப் பெறாமையாலே காலம் செல்ல அரிதான படியைச் சொல்லுகிறது

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

இதுக்கு மேல் வந்த நெடுகைக்கு இரங்கின
தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் ஸ்வயம் விளம்ப அஷமராய்
இப்பாசுரத்தில்

வியாக்யானம்

வளைவாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல் தளைவாய் நறுங்கண்ணித்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான்
வளையவும் பர பேத நத்துக்கான தீக்ஷணமாகிய வாயுள்ள திருவாழியை யுடையவராய்
எங்கள் பக்கல் வானில் பண்ணும் ப்ரீதியைப் பண்ணுமவருடைய
திரு அபிஷேகத்தில் சாத்தின திருத்துழாயாதான
மரு கானத்தில் எங்கும் வாய்ந்த நறு நாற்றமுள்ள திருமாலையான திருத்துழாய்க்கு ஆசைப்பட்டு
என்னில் பசுமையான வர்ணத்தை உண்டாக்கி விளைப்பதுக்காக

மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க
ஒரு நாழிகையே வந்து
நாளாயும்
திங்களாயும்
ஆண்டையும்
ஊழியாயும்
மிகவும் வளர்ந்து நிற்குமே

எம்மை உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே
ஒரு ராத்ரியானது பதினாயிரம் ஊழி களாய்க் கொண்டு
நம்மை வளைத்துக் கொண்டு கொள்ளப் புக்கது
எங்கனே நான் தரிக்கும் படி –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .