Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் -ஸ்ரீ ராமசந்திர அஷ்டகம்-ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்-ஸ்ரீ க³ங்கா³ஷ்டகம்-

February 1, 2026

ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் ।

பஜ⁴ே விஶேஷஸுந்த³ரம் ஸமஸ்தபாபக²ண்ட³னம் ।
ஸ்வப⁴க்தசித்தரஞ்ஜனம் ஸதை³வ ராமமத்³வயம் ॥ 1 ॥

ஜடாகலாபஶோபி⁴தம் ஸமஸ்தபாபனாஶகம் ।
ஸ்வப⁴க்தபீ⁴திப⁴ஞ்ஜனம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 2 ॥

நிஜஸ்வரூபபோ³த⁴கம் க்ருபாகரம் ப⁴வாபஹம் ।
ஸமம் ஶிவம் நிரஞ்ஜனம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 3 ॥

ஸதா³ ப்ரபஞ்சகல்பிதம் ஹ்யனாமரூபவாஸ்தவம் ।
நிராக்ருதிம் நிராமயம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 4 ॥

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம் ।
சிதே³கரூபஸந்ததம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 5 ॥

ப⁴வாப்³தி⁴போதரூபகம் ஹ்யஶேஷதே³ஹகல்பிதம் ।
கு³ணாகரம் க்ருபாகரம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 6 ॥

மஹாஸுவாக்யபோ³த⁴கைர்விராஜமானவாக்பதை³: ।
பரம் ச ப்³ரஹ்ம வ்யாபகம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 7 ॥

ஶிவப்ரத³ம் ஸுக²ப்ரத³ம் ப⁴வச்சி²த³ம் ப்⁴ரமாபஹம் ।
விராஜமானதை³ஶிகம் பஜ⁴ே ஹ ராமமத்³வயம் ॥ 8 ॥

ராமாஷ்டகம் பட²தி ய: ஸுக²த³ம் ஸுபுண்யம்
வ்யாஸேன பா⁴ஷிதமித³ம் ஶ்ருணுதே மனுஷ்ய: ।
வித்³யாம் ஶ்ரியம் விபுலஸௌக்²யமனந்தகீர்திம்
ஸம்ப்ராப்ய தே³ஹவிலயே லப⁴தே ச மோக்ஷம் ॥ 9 ॥

இதி ஶ்ரீவ்யாஸ ப்ரோக்த ஶ்ரீராமாஷ்டகம் ।

———–

ஸ்ரீ ராமசந்திர அஷ்டகம்-

ஸுக்ரீவ மித்ரம் ப்ரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக காத்ரம்
காருண்ய பாத்ரம் சதாபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி. ॥1॥

ஸம்ஸாரஸாரம் நிகமப்ரசாரம்
தர்மாவதாரம் ஹ்ருதபூமிபாரம் ।
ஸதா³விகாரம் ஸுகஸிந்துஸாரம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥2॥

லக்ஷ்மீ விலாஸம் ஜகதோ நிவாஸம்
லங்கா விஸாகம் புவன ப்ரகாசம்
பூதேவ வாஸம் சரதிந்து ஹாஸம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥3॥

மந்தார மாலம் வசனே ரஸாலம்
குணைர் விசாலம் ஹத ஸப்த தாலம்
க்ரவ்யாத காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥4॥

வேதாந்தகாநம் ஸகலை: ஸமாநம்
ஹ்ருதாரிமாநம் த்ரிதஶப்ரதாநம் ।
கஜேந்த்ரயாநம் விகதாவஸாநம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥5॥

ச்யாமாபி ராமம் நய நாபி ராமம்
குணபி ராமம் வச நாபி ராமம்
விஸ்வ ப்ரணாமம் க்ருத பக்த காமம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி. ॥6॥

லீலா சரீரம் ரணரங்க தீரம்
விஶ்வைகஸாரம் ரகுவம்ஸ ஹாரம்
கம்பீர நாதம் ஜித ஸர்வ வாதம்
ஸ்ரீ ராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥7॥

கலேதி பீதம் ஸ்வஜநே விநீதம்
ஸாமோ பகீதம் மநஸா ப்ரதீதம்
ராகேண கீதம் வசநாததீதம்
ஶ்ரீராமசந்த்ரம் ஸததம் நமாமி ॥8॥

ஶ்ரீராமசந்த்ரஸ்ய வராஷ்டகம்
த்வாம் மயேரிதம் தேவி மநோஹரம் யே ।
படந்தி ஶ்ருண்வந்தி க்ருணந்தி பக்த்யா தே
ஸ்வீயகாமாந் ப்ரலபந்தி நித்யம் ॥9॥

ப்ரஹ்மாதி வேத ஸேவ்யாய
ப்ரஹ்மண்யாய மஹாத்மநே
ஜானகீ ப்ராண நாதாய
ரகுநாதாய மங்களம். ॥10॥

இதி ஸ்ரீ ராமசந்தர அஷ்டகம் ஸமாப்தம் ॥

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே
. –சிவவாக்கியர்
அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும்.

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே


செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! 

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதி எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது “மெய்பொருளே” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் “நமசிவய” எனும் ஐந்தெழுத்தாகவும் அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து ஓம் எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து ஓம் நமசிவய எனும் அச்சரத்தை உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!

வெளியில் காசிமாநகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும் இணைந்து சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!

எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது. அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும். உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன், இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன். அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி, அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!!!!

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!

இப்பூவுலகில் பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!! இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா? அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன உடம்பையும், உயிரையும் உணர்ந்து யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள். அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!! இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே

ஒன்பது வாசல் கொண்ட உடம்பு ஒரு நாள் அழியும் என்பதுவே உண்மை என்றுணர்ந்து எந்நேரமும் இராம நாமம் செபித்து அவன் பாதம் பற்றியிருங்கள். இராம நாமம் மரணபயம் போக்கும். வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் இறக்கும் தருவாயில் நோய் வந்து அவர்கள் வாக்கில் இப்புண்ணிய நாமத்தை சொல்ல மாட்டாது இறப்பார்கள். இது அன்பர்கள் வாக்கில் எப்போதும் அமைந்திருக்கும். அவர்கள் இராமநாமம் என்பது என்ன என்பதைப் புரிந்து ஆராய்ந்து அறிந்து தியானம் தவம் செய்வார்கள்.

ராம ராம
ரா + ம
“ரா” நெடில் இருமாத்திரை அளவு ஒலிக்கும், இதனை உச்சரிக்கும்போது காற்றில் உள்ள பிராணன் பிரிக்கப்படும் அவ்வாறு பிரிக்கப்பட்ட பிராணன் “ம” ( ம்+அ உச்சரிக்கும்போது சுவாசம் உள்ளே சென்றுவரும்) இந்த எழுத்து நம் ஆக்ஞ்சையில் இருந்து ஒலிக்கிறது இது ஆக்ஞ்சையின் வழியாக பிராணனை உள்வாங்கும் நம் உயிர் ஆற்றல் பெருகும்

———————————————————

ஶ்ரீ ராமானுஜ அஷ்டகம்–

ராமானுஜாய முனயே நம உக்தி மாத்ரம்
காமாதுரோபி குமதி: கலயன்னபீ⁴க்ஷம் ।
யாமாமனந்தி யமினாம் ப⁴க³வஜ்ஜனானாம்
தாமேவ விந்த³தி க³திம் தமஸ: பரஸ்தாத் ॥ 1 ॥

புத்தி கெட்டவனாய்-காமத்தினால் பீடிக்கப் பட்டவனாய் -இருப்பினும் ராமானுஜாய நம -என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லுமவன் – பகவானைச் சேர்ந்தவர்களான யோகியர் பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் உள்ள எந்த மோஷத்தையேபெறுவதாக ஒதுகின்றனரோ அந்த மோஷத்தை  அடைகிறான் 

ஸோமாவசூட³ஸுரஶேக²ர து³ஷ்கரேண
காமாதி கோ³பி தபஸா க்ஷபயன்னகா⁴னி ।
ராமானுஜாய முனயே நம இத்யனுக்த்வா
கோவா மஹீஸ ஹசரே குருதேனுராக³ம் ॥ 2 ॥

ராமானுஜாய நம இத்ய ஸக்ருத்³ க்³ருணீதே
யோ மான மாத்ஸர மத³ஸ்மர தூ³ஷிதோபி ।
ப்ரேமாதுர: ப்ரியதமாம பஹாய பத்³மாம்
பூ⁴மா பு⁴ஜங்க³ ஶயனஸ்த மனுப்ரயாதி ॥ 3 ॥

வாமாலகானயனவாகு³ரிகா க்³ருஹீதம்
க்ஷேமாய கிஞ்சித³பி கர்துமனீ ஹமானம் ।
ராமானுஜோ யதிபதிர் யதி³ நேக்ஷதே மாம்
மா மாமகோயமிதி முஞ்சதி மாத⁴வோபி ॥ 4 ॥

ராமானுஜேதி யதி³தம் விதி³தம் ஜக³த்யாம்
நாமீபி ந ஶ்ருதி ஸமீபமுபைதி யேஷாம் ।
மா மா மதீ³ய இதி ஸத்³பி⁴ரு பேக்ஷி தாஸ்தே
காமானுவித்³த⁴ மனஸோ நிபதந்த்யதோ⁴த:⁴ ॥ 5 ॥

நாமானுகீர்த்ய நரகார்தி ஹரம் யதீ³யம்
வ்யோமாதி⁴ ரோஹதி பத³ம் ஸகலோபி லோக: ।
ராமானுஜோ யதிபதிர் யதி³ நாவிராஸீத்
கோ மாத்³ருஶ: ப்ரப⁴விதா ப⁴வ முத்தரீதும் ॥ 6 ॥

ஸீமா மஹீத்⁴ர பரிதி⁴ம் ப்ருதி²வீம வாப்தும்
வைமானி கேஶ்வர புரீமதி⁴ வாஸிதும் வா ।
வ்யோமாதி⁴ரோடு⁴மபி ந ஸ்ப்ருஹயந்தி நித்யம்
ராமானுஜாங்க்⁴ரி யுகள³ம் ஶரணம் ப்ரபன்னா: ॥ 7 ॥

மா மா து⁴னோதி மனஸோபி ந கோ³சரம் யத்
பூ⁴மா ஸகே²ன புருஷேண ஸஹானுபூ⁴ய ।
ப்ரேமானுவித்³த⁴ ஹ்ருத³ய ப்ரிய ப⁴க்த லப்⁴யே
ராமானுஜாங்க்⁴ரி கமலே ரமதாம் மனோ மே ॥ 8 ॥

ஶ்லோகாஷ்ட கமித³ம் புண்யம் யோ ப⁴க்த்யா ப்ரத் யஹம் படே²த் ।
ஆகார த்ரய ஸம்பன்ன: ஶோகாப்³தி⁴ம் தரதி த்³ருதம் ॥

——————

ஸ்ரீ க³ங்கா³ஷ்டகம்

ப⁴க³வதி தவ தீரே நீரமாத்ராஶனோஹம்
விக³தவிஷயத்ருஷ்ண: க்ருஷ்ணமாராத⁴யாமி ।
ஸகல கலுஷப⁴ங்கே³ ஸ்வர்க³ஸோபானஸங்கே³
தரலதரதரங்கே³ தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ ॥ 1 ॥

ப⁴க³வதி ப⁴வலீலா மௌளிமாலே தவாம்ப:⁴
கணமணுபரிமாணம் ப்ராணினோ யே ஸ்ப்ருஶந்தி ।
அமரனக³ரனாரீ சாமர க்³ராஹிணீனாம்
விக³த கலிகலங்காதங்கமங்கே லுட²ந்தி ॥ 2 ॥

ப்³ரஹ்மாண்ட³ம் க²ண்ட³யந்தீ ஹரஶிரஸி ஜடாவல்லிமுல்லாஸயந்தீ
ஸ்வர்லோகாதா³பதந்தீ கனககி³ரிகு³ஹாக³ண்ட³ஶைலாத் ஸ்க²லந்தீ ।
க்ஷோணீப்ருஷ்டே² லுட²ந்தீ து³ரிதசயசமூர்னிர்ப⁴ரம் ப⁴ர்த்ஸயந்தீ
பாதோ²தி⁴ம் பூரயந்தீ ஸுரனக³ரஸரித்பாவனீ ந: புனாது ॥ 3 ॥

மஜ்ஜன்மாதங்க³ கும்ப⁴ச்யுத மத³மதி³ராமோத³மத்தாலிஜாலம்
ஸ்னானை: ஸித்³தா⁴ங்க³னானாம் குசயுக³ விலஸத்குங்குமாஸங்க³பிங்க³ம் ।
ஸாயம் ப்ராதர்முனீனாம் குஶகுஸுமசயைஶ்சி²ன்னதீரஸ்த²னீரம்
பாயான்னோ கா³ங்க³மம்ப:⁴ கரிகலப⁴ கராக்ராந்த ரங்க³ஸ்தரங்க³ம் ॥ 4 ॥

ஆதா³வாதி³ பிதாமஹஸ்ய நியம வ்யாபார பாத்ரே ஜலம்
பஶ்சாத்பன்னக³ஶாயினோ ப⁴க³வத: பாதோ³த³கம் பாவனம் ।
பூ⁴ய: ஶம்பு⁴ஜடாவிபூ⁴ஷண மணிர்ஜஹ்னோர்மஹர்ஷேரியம்
கன்யா கல்மஷனாஶினீ ப⁴க³வதீ பா⁴கீ³ரதீ² த்³ருஶ்யதே ॥ 5 ॥

ஶைலேந்த்³ராத³வதாரிணீ நிஜஜலே மஜ்ஜஜ்ஜனோத்தாரிணீ
பாராவாரவிஹாரிணீ ப⁴வப⁴யஶ்ரேணீ ஸமுத்ஸாரிணீ ।
ஶேஷாங்கை³ரனுகாரிணீ ஹரஶிரோவல்லீதள³ாகாரிணீ
காஶீப்ராந்தவிஹாரிணீ விஜயதே க³ங்கா³ மனோஹாரிணீ ॥ 6 ॥

குதோ வீசிர்வீசிஸ்தவ யதி³ க³தா லோசனபத²ம்
த்வமாபீதா பீதாம்ப³ரபுரவாஸம் விதரஸி ।
த்வது³த்ஸங்கே³ க³ங்கே³ பததி யதி³ காயஸ்தனுப்⁴ருதாம்
ததா³ மாத: ஶாந்தக்ரதவபத³லாபோ⁴ப்யதிலகு⁴: ॥ 7 ॥

க³ங்கே³ த்ரைலோக்யஸாரே ஸகலஸுரவதூ⁴தௌ⁴தவிஸ்தீர்ணதோயே
பூர்ணப்³ரஹ்மஸ்வரூபே ஹரிசரணரஜோஹாரிணி ஸ்வர்க³மார்கே³ ।
ப்ராயஶ்சிதம் யதி³ ஸ்யாத்தவ ஜலகணிகா ப்³ரஹ்மஹத்யாதி³ பாபே
கஸ்த்வாம் ஸ்தோதும் ஸமர்த:² த்ரிஜக³த³க⁴ஹரே தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ ॥ 8 ॥

மாதர்ஜாஹ்னவீ ஶம்பு⁴ஸங்க³மிலிதே மௌளௌ நிதா⁴யாஞ்ஜலிம்
த்வத்தீரே வபுஷோவஸானஸமயே நாராயணாங்க்⁴ரித்³வயம் ।
ஸானந்த³ம் ஸ்மரதோ ப⁴விஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே
பூ⁴யாத்³ப⁴க்திரவிச்யுதா ஹரிஹராத்³வைதாத்மிகா ஶாஶ்வதீ ॥ 9 ॥

க³ங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ய: படே²த்ப்ரயதோ நர: ।
ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி ॥ 1௦ ॥

——————–——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் -ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ வார்த்தா மாலையில் வார்த்தை -441-

December 17, 2025

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ ஸூக்திகள்-

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே-“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே-உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’
என்றருளிச் செய்து,
இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.-இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.

அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,-இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||

எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது) என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.-இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்-வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே–நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;-பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே-அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.-அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.-நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,-கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம் உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் – ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் – பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –மண் பிடி எடுத்து காட்டுகிறார் – பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

——————–

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலைநம்பி

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்யதேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?“-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்று என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் –ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் – –

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது-அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள் )
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை வெளிமானால் வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தாவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம்-ஸ்ரீ எம்பெருமானார் பின்புள்ளார்-

November 2, 2025

இராமானுஜரது திரிதண்டம்‌, பவித்ரம்‌ என்று சொல்லப்படும் பிரதம சீடர்களான முதலியாண்டான்‌, கூரத்தாழ்வான்‌ என்ற இருவரில்‌ முதலில்‌ காண இருப்பது கூரத்தாழ்வான்‌ வைபவம்‌.ஜீவ காருண்யம்‌, ஆச்சார்ய பக்தி, பகவத் பக்தி, வைராக்யம்‌, பாண்‌டித்யம்‌, ஸத்கர்மானுஷ்டானம்‌ (நல்ல காரியங்களையே செய்தல்‌) முதலிய எண்ணிறந்த நற் குணங்களுக்கும்‌ பிறப்பிடமென்ன அமைந்த கூரத்தாழ்வானது திவ்ய சரிதத்தை, தினந்தோறும்‌ அனுசந்‌திப்பது ஸ்ரீவைஷ்ணவர்களது கடமையாகும்‌.
கச்சிமாநகருக்கு வடமேற்கிலுள்ள கூரம்‌ என்னும்‌ நகரில்‌ முன்னோர்‌ அனுசந்தித்தபடி கலியுகம்‌ 4180-ம்‌ ஆண்டில்‌ செளம்ய வருஷத்தில்‌ தைமாதம்‌ அஸ்த நட்சத்திரத்தில்‌ வடமான்‌ குலத்தில்‌ இம் மகான்‌ அவதரித்தார்‌. இவரது இயற்பெயர்‌ திருமறுமார்பன்‌ என்பது. இவரது தகப்பனார்‌ அனந்தர்‌. தாயார்‌ பெருந்தேவி நாயகி தேவியார்‌ – ஆண்டாள்‌. பகவத்‌ விஷயத்திலே மிக்க ஊக்கமுடையவரான போதிலும்‌ எம்பெருமானாருக்குத்‌ தாம்‌ சிஷ்யராகையால்‌, அவருக்கு நேர்‌ ஸ்தானத்தில்‌ குருவாக இருந்து உபதேசிக்க விரும்‌பாமல்‌ ஏனைய முதலிகளுக்கு (சீடர்களுக்கு) உபதேசிக்க, அவர்‌கள்‌ அதைக்கேட்டு அப்படியே எம்பெருமானார்‌ முன்‌ விண்ணப்‌பம்‌ செய்வதாக ஒரு நியதி ஏற்பட்டு, முதலிகளுக்கு ‘உயர்வற உயர்நலம்‌’ உடையவன்‌ என்ற திருவாய்மொழிப் பாசுரம்‌ தொடங்கினவாறே மதியெலாமுள்‌ கலங்கி மயங்கித்‌ தரையில்‌ விழுந்தார்‌.
பர சமயவாதிகள்‌ பிரஹ்மத்திற்குக்‌ குணமென்பதே கிடையாது. நிர்குணமென்கிறார்களே, ஆழ்வார்‌ முதலடியிலேயே உயர்வற உயர்நலமுடையவன்‌ என்கிறபடி என்னே! என்று சொல்லிக்‌ கொண்டே மோஹித்தவாறு மூர்ச்சித்து விழ முதலிகள்‌ ஓடிச்சென்று இராமானுசரிடம்‌ விவரத்தைக்கூற, அவரும்‌ ஒடிவந்து ‘எத்திறம்‌ உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே, என்று ஆறு மாதம்‌ மோகித்துக்‌ கிடந்த நம்மாழ்வாரைக்‌ காணப்‌ பெறாத குறைதீர, இன்று கண்ணாரக்‌ காணப் பெற்றோமே என ௨ள்ளமெலாமுருகிக்‌ குரல்‌ தழுத்து ஆழ்வான்‌, ஆழ்வான்‌ எனக்கூவித்‌ தட்டி எழுப்பி உணர்த்தத்‌, தொடங்கும்போதே உயர்வற உயர்நலமுடையவனென்‌பதே என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்‌. உருக்கத்திலே நம்‌ ஆழ்வாரைப் போன்றே இருந்தமையால்‌ எம்பெருமானார்‌ ‘ஆழ்‌வான்‌’ என்று ஏக வசனமாகத்‌ தட்டி எழுப்பினார்‌. அது முதல்‌ இவருக்கு ஆழ்வான்‌ என்று திருநாமம்‌ வழங்கலாயிற்று. கூரத்தில்‌ பிறந்தமையால்‌ கூரத் தாழ்வான்‌ என்று அழைக்கப்பட்டார்‌.ஆழ்வானின்‌ வைபவத்தைக் காட்டிலும்‌ அவரது தேவியார்‌ ஆண்டாளின்‌ வைபவம்‌ அளவற்றிருக்கும்‌. சாஸ்திரங்களில்‌ தமக்கு ஏதாவது சந்தேகம்‌ தோன்றினால்‌ தேவியாரைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்வது வழக்கம்‌ என்று பெரியோர்‌ கூறுவர்‌. கூரம் மா நகரில்‌ பெருஞ்செல்வராக வாழ்ந்த இவர்‌ தம்‌ செல்வத்தினால்‌ பல ஏழைகளையும்‌, சாதுக்களையும்‌ மற்றும்‌ பலரையும்‌ பலவகையால்‌ போஷித்துக் கொண்டு மகா தர்மவானாய்‌ இருந்து வந்தார்‌. நாள் தோறும்‌ பெருமாள் கோயில்‌ (காஞ்சி) திருக்கதவுகள்‌ இரவில்‌ மூடப்‌பட்ட பின்பே இவரது மாளிகைக்‌ கதவுகள்‌ இரவில்‌ மூடப்படும்‌.ஒரு நாள்‌ திருவிழாவை முன்னிட்டு கோயில்‌ கதவு மூடுவதற்குத்‌ தாமதமாயிற்று. ஆனால்‌ ஆழ்வார்‌ பணியாட்கள்‌ குறித்த நேரத்தில்‌ அவர்‌ வீட்டுக் கதவை மூடி விட்டனர்‌. அந்த மணியோசையைக்‌ கேட்ட பேரருளாளன்‌ தனக்கு ஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்யும்‌ திருக்கச்சி நம்பியிடம்‌ நமது இரவுத்‌ திருவாராதனம்‌ முடியு முன்பே கதவுகள்‌ சாத்தப்படுகின்றனவே என்று கேட்க, அவர்‌ கூரத்தாழ்வானது வீட்டுக் கதவுகள்‌ மூடப்பட்டன என்று சொன்னாராம்‌.அதைக் கேட்ட தேவர்பிரான்‌ ஆழ்வான்‌ செல்வமோ நம்மை இவ்வாறு மயக்கிற்று என்றாராம்‌. இந்த உரையாடலைப்‌ பின்னர்‌ கேட்டறிந்த கூரத்தாழ்வான்‌ தமது அந்திம காலத்துக்கு வேண்டிய சிறிதளவு செல்வத்தை மாத்திரம்‌ வைத்துக் கொண்டு பாக்கியை யெல்லாம்‌ ஏழை எளியவர்களுக்கு தானம்‌ செய்து விட்டு இனித்‌ தான்‌ ஒர்‌ நல்லாசிரியரை அடைந்து உய்வு பெற விரும்பி, விசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகரான உடையவர்‌ இராமானுஜ முனிவரைச்‌ சரணடைந்து, பஞ்ச சம்ஸ்காரங்களைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்று அவரது திருவடிகளை விட்டு நீங்காமல்‌, சாமான்ய சாஸ்திரங்களையும்‌, அத்யாத்ம சாஸ்திர சம்பிரதாயங்களையும்‌ ஓதியும்‌, ஒதுவித்துக் கொண்டும்‌ வாழ்ந்து வருவாராயினார்‌-இவ்வாறு இருக்கும்‌ காலத்தில்‌ திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, இராமானுசரைத்‌ திருவரங்கம்‌ அழைத்துச் சென்ற பொழுது,அவரை விட்டகல முடியாத கூரத்தாழ்வானும்‌, அவருடையே பிரதான சீடராய்‌, சகல சாஸ்திர நிபுணர்‌ என்று எல்லோராலும்‌ போற்றப்படுபவராய்‌, அவரோடேயே வாழ்ந்து வந்தாராதலால்‌,அவர்‌ முன்னர்‌ தம்‌ ஊரிலே தம்‌ அந்திம காலத்துக்காகச்‌ சேமித்து வைத்த சிறு பொருளையும்‌, அவசியமற்றது என்று கருதியதால்‌,இராமானுசரது அனுமதி பெற்றுக்‌ கூரம் நகருக்கு வந்து அப்பொருளைப்‌ பரம பாகவதர்களுக்கு தானம்‌ செய்து விட்டுத்‌ தமது தேவியாரான ஆண்டாளையும்‌ கூட்டிக் கொண்டு, திருவரங்கத்துக்கு நம்‌பெருமாள்‌ சந்நிதிக்கு வரும்‌ வழியில்‌, மதுராந்தகம்‌ சமீபத்தில்‌ காட்டு வழியில்‌ தேவியார்‌ பயமாக இருக்கிறதே என்று கூற,மடியில்‌ கனம்‌ இருந்தாலல்லவா வழியில்‌ பயம்‌ வரும்‌. நீ ஏதேனும்‌ விலை மதிப்புள்ள பொருள்‌ வைத்திருக்கிறாயா? என்று கேட்க ஆண்டாளும்‌, தாங்கள்‌ வழக்கமாக உணவு கொள்ளும்‌ பொன் வட்‌டிலை மட்டும்‌ கொணர்ந்தேன்‌ என்று கூறவே, ஆழ்வானும்‌ அப் பொன்‌ வட்டிலை வாங்கத்‌ தூர எறிந்து விட்டு, மதுராந்தகத்து ஏரி காத்த பெருமாளைத் தொழுது ‘த்வயம்‌’ விளைந்த இடம்‌ என்று அந்த மகிழ மரத்தைச்‌ சேவித்துப்பின்‌ மறுநாள்‌ தொடங்கி பயண கதியாய்‌, வழியிலுள்ள திருப்பதிகளைச்‌ சேவித்துக் கொண்டு திருவரங்‌கம்‌ சென்று முன் போலவே உடையவர்‌ பாதத்தில்‌ அத்தாணிச்‌ சேவகராய்‌ வாழ்ந்து வந்தார்‌. பொன் வட்டில் தனை எறிந்த புகழினைப்‌ பெற்றார்‌.

ஒரு நாள்‌ கோயில் கொத்தி(ஊழியர்கள்‌)லுள்ள வர்களுக்குத்‌ தலைவராயிருந்த திருவரங்கத்தமுதனார்‌ உடையவரை அணுக),மகா பாபியான என்னைத்‌ திருத்திப்‌ பணி கொள்ளத் தக்க ஒரு சாத்விகரை நியமித்தருள வேண்டும்‌ என்று வேண்டிக் கொள்ள உடையவரும்‌ ஆழ்வானை அக் காரியத்திற்கு நியமித்தார்‌. இவருடைய தாழ்வுகளைப்‌ பாராமல்‌ இவரை அனுகூலராக்க, நம்‌ பக்கலிலே கொண்டு வந்து சேரும்‌ என்று கட்டளையிட, ஆழ்வானும்‌ அவரை ஆறுமாத காலம்‌ உபதேசம்‌ பண்ணி பரிபக்குவராக்கி உடையவரிடம்‌ அழைத்து வர, உடையவரும்‌ அவ்வமுதனாரை, ஆழ்வான்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிப்பித்தார்‌. இந்நன்றியை மொழியைக்‌ கடக்‌கும்‌ பெரும்புகழான்‌ வஞ்சமுக்குறும்பாங் குழியைக்‌ கடக்கும்‌ நம்‌ கூரத்தாழ்வான்‌ சரண்‌ கூடிய பின்‌ என்று குறிப்பிடுகிறார்‌. தாம்‌ அருளிய இராமானுச நூற்றந்தாதியில்‌. அமுதனார்‌ ஆழ்வானது சீடனாகி வாழ்ந்து வருகிற காலத்‌திலே, அமுதனாரது தாயார்‌, ஆச்சாரியன்‌ திருவடி யடையவே(இறந்துவிடவே) பத்து நாளும்‌ கடந்த பின்‌ ஏகாஹத்துக்கு (ஈமச்சடங்கின்போது ஆத்மா நற்கதி பெற வேண்டிச்‌ செய்ய வேண்டியஒரு சடங்கு] ஒருவரை அனுப்புமாறு வேண்ட, உடையவரும்‌ ஆழ்வானை நீர்‌ போய்‌ வாரும்‌ என்ன, ஆழ்வானும்‌ சிறிதும்‌ தயங்காமல்‌ சென்றார்‌. அமுதனாரும்‌ ஆச்சாரியார்‌ இங்கனே எழுந்தருளுவதே என்று மிகவும்‌ தாழ்ந்து, ஏஹாக்கரத்திலே அமுதுசெய்யப் பண்ணுவித்து, அபரிமிதமான பொருள்களைச்‌ சமர்ப்பிக்க,ஆழ்வானும்‌ அவற்றை யெல்லாம்‌ அங்கீகரித்து பின்‌ அவற்றைத்‌ தெருவிலே பொன்‌ மழையாக இறைத்து விட்டு காவேரியிலே நீராடி திருமண்‌ காப்பிட்டு உடையவர்‌ முன் வந்து சேவித்து நிற்கவே, உடையவரும்‌ அங்கு இடைத்தது என்ன என்று கேட்‌கவே, ஆழ்வானும்‌ அவை அனர்த்தமாகையாலே அப்பொழுதே கழிந்து போயின என்று நடந்தவற்றைக்‌ கூறினார்‌. இவ்வாறு பணத்தாசையே யில்லாத ஒருவர்‌ இருக்கிறாரே என்று உடையவரும்‌ மிகவும்‌ ஆனந்தமடைந்தார்‌. அவர்‌ அமுதனார்‌ வீட்டிற்கு ஆழ்வானை அனுப்பியதற்குக்‌ காரணம்‌ நம்‌ பெருமாள்‌ கோயில்‌ திறவுகோல்‌ அமுதனாரது கை வசம்‌ இருந்ததனால்‌ அதை உடையவர்‌ ஒரு உபாயமாகக்‌ கைப்பற்ற எண்ணி, ஆழ்வானிடம்‌ நீர்‌ போய்‌ ஏகாஹத்தில்‌ புசித்து முடிவில்‌ சந்நதித் திறவு கோலைப்‌ பெற்றாலன்றி சர்வம்‌ சம்பூர்ணம்‌ என்று சொல்ல வேண்டாம்‌ என்று நியமித்தனுப்ப ஆழ்வானும்‌ அப்படியே செய்து திறவு கோலை அமுதனாரிடமிருந்து பெற்று வந்து உடையவரிடம்‌ சமர்ப்பித்தார்‌.

எம்பெருமானார்‌ கோஷ்டியில்‌ உபய வேதாந்த கிரந்த காலட்‌சேபம்‌ நடக்கையில்‌, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களும்‌ சேஷத்வமும்‌ நிருபகமாகச்‌ சொல்லப்பட்டது. இவற்றுள்‌ அந்தரங்க நிரூபகம்‌ எது என்ற சர்ச்சை எழ, எம்பெருமானார்‌ இதை ஆச்சார்யார்‌ மூலமாக வெளியிடக்கருதி ஆழ்வானை திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ சென்று அறிந்து வாரும்‌ என்று அனுப்பி விட நம்பியும்‌ ஆறுமாத காலமாக ஆழ்வான்‌ காத்திருந்தும்‌ பதிலனுப்பாததால்‌, தான்‌ உடையவர்‌ பக்கம்‌ போகப் போவதாக ஆழ்வான்‌ சொல்லவே நம்பி அவரை அழைத்து மயர்வற மதிநல மருளப் பெற்ற நம்மாழ்வார்‌.-அடியேனுள்ளான்‌ என்றருளிச்‌ செய்தபடி கண்டாயே’ என்று மொழிந்தருள, ஆழ்வானும்‌ ‘தந்யோஸ்மி என்றெழுந்தருளினார்‌.-இதன்‌ கருத்து யாதெனில்‌ அடியேனுள்ளான்‌ என்ற பாசுரம்‌ திருவாய்மொழி (9-8-2)ம்பாட்டு. ஆத்மாவிலுள்ளான்‌ என்று சொல்‌லாமல்‌, என்னுள்ளான்‌ என்றும்‌ சொல்லாமல்‌, அடியேனுள்ளான்‌ என்று அடிமையை விட்டு ஆத்மாவை நிரூபித்தமை தோற்ற அருளிச் செய்ததாலே, ஆத்மாவுக்கு ஞானானந்தங்களைக் காட்டிலும்‌ சேஷத்வமே மகத்தான நிரூபக மென்றதாயிற்று. அதாவது ஞானத்தை விட சரணாகதியே பிரபத்தியே, சிறந்ததாயிற்று என்பதாகும்‌.
ஆழ்வான்‌ எந்நாளும்‌. மாதுகரம்‌ (உஞ்ச விருத்தி) பண்ணின பொருளை வைத்தே தேக யாத்திரை (வாழ்வது) நடத்துவது வழக்கம்‌. ஒருநாள்‌ விடாமல்‌ மழை பெய்ததால்‌ வெளியே செல்ல முடியாமல்‌ நாண் மலர்‌, கொண்டு உன் பாதம்‌ நண்ணா நாள்‌ எனக்குப்‌ பட்டினி நாளே என்றபடியே அருளிச்செயல்‌ அனுசந்தானமே தாரகமாகக்‌ கொண்டு வேறு உணவின்றியே கண் வளர்ந்திட, அன்றிரவு பெரிய பெருமாள்‌ அமுது செய்கிற பொழுது திருச்சின்ன ஒலி கேட்ட ஆழ்வானது தேவி ஆண்டாள்‌, உமது பக்தர்‌ பட்டினியா யிருக்க நீர்‌ குலவிக் குலவி அமுது செய்கிறீரே என்று மனத்தளவில்‌ நினைத்ததை உணர்ந்த எம்பெருமான்‌ தனக்குக்‌ கைங்கர்யம்‌ செய்‌கிற உத்தம நம்பிக்கு அர்ச்சகர்‌ மூலம்‌ தாம்‌ அமுது செய்த அக்கார அடிசிலை ஆழ்வானுக்குக்‌ கொடுக்குமாறு கட்டளையிட கோயில்‌ மரியாதைகளுடன்‌ அவர்கள்‌ கொண்டு வருவதைக் கண்ட ஆழ்வான்‌ பதறி எழுந்து எதிர் கொண்டு தனக்கும்‌ தேவிக்குமாக இரு திரளைகளை எடுத்துக் கொண்டு மிகுதியை அனுப்பி விட்டார்‌. தசரதனது பத்தினியர்‌ புத்திர காமேஷ்டி யாகத்தில்‌ பெற்ற பாயசத்தை உண்டதால்‌ ராம லட்சுமணாதிகள்‌ பிறந்ததைப் போல, இப்பொழுது இவர்க்கும்‌ திரு பராசர பட்டர்‌ திரு வேத வியாச பட்டர்‌ (ஸ்ரீராமப்‌பிள்ளை] என்ற இரு திருக் குமாரர்கள்‌ .பிறக்க ஏதுவாயின.-சோழ ராஜ சபையில்‌ நேர்ந்த கஷ்டங்களுக்குப் பிறகு திருவரங்‌கம்‌ திரும்பிய ஆழ்வான்‌, அரங்கனைச்‌ சேவிக்கக்‌ கோயிலுக்குச்‌ சென்ற பொழுது சோழனது காவலர்கள்‌ இராமானுஜரது சம்பந்தம்‌ உள்ளவர்கள்‌ கோயிலுக்குள்‌ நுழையக் கூடாது என்று தடுத்து விட ஆழ்வான்‌ எல்லோருக்கும்‌ உண்டாகும்‌ ஆத்ம குணம்‌ ஆச்சார்ய சம்பந்தத்துக்கு ஏதுவாக இருந்தது. என்னுடைய ஆத்ம குணம்‌ ஆச்சார்ய சம்பந்தத்தை அறுத்துக் கொள்ள ஏதுவாகி விட்டதே என்று வருந்தி அன்றே கோயில்‌ வாசத்தை விட்டொழித்து திருமாலிருஞ்‌ சோலைக்கு தேவியோடு பயண கதியாய்ப்‌ புறப்பட்டு வழியிலே தங்கள்‌ மனக் கவலையை மறக்குமாறு பகவானது ஸ்வரூப, ரூப குண விபூதிகளை நினைந்து நெஞ்சு கனிந்து ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌, அதிமானுஷ ஸ்தவம்‌ என்ற இரு ஸ்தோத்ரங்களை அருளிச்‌ செய்தார்‌. நூறு ஸ்லோகங்களைக்‌ கொண்ட ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்‌.-இவர்‌ அருளிய பஞ்ச ஸ்தவங்களில்‌ முதலானது. இதனை அடுத்த அதிமானுஜ ஸ்தவத்தில்‌, நரசிம்மரது அவதாரங்களைச்‌ சுருக்கமாகவும்‌ இராம கிருஷ்ணாவதாரங்களைப்‌ பெருக்கமாகவும்‌ பேசி அனுபவித்தார்‌. இது வரை உலகில்‌ வெளிவந்த சம்ஸ்கிருத வாங்மயங்களில்‌ இவற்றுக்கு ஈடில்லை என்னும்படி சொல்‌ நோக்கு,பொருள்‌ நோக்கு, தொடை நோக்கு, நடை நோக்கு அமைந்துள்‌ளது என்று வித்வத்‌ ரஸிக விவேகிகள்‌ (சகல கலா: வல்லுநர்கள்‌!ஒரு முகமாக விளம்பி யுள்ளனர்‌.-இவ்வாறு அழகர்‌ கோயிலை அடைந்து, அடி வாரம்‌ தன்னில்‌ அழகர்‌ வடிவழகைப் பற்றி, முடியும்‌ அடியும்‌ படிகலனும்‌ முற்றும்‌ அனுபவித்து அவ்வெம்பெருமான்‌ விஷயமாக 148 ஸ்லோகங்கள்‌ கொண்ட ‘சுந்தரபாஹு ஸ்தவம்‌’ அருளிச் செய்து திருவரங்க மாநகர்‌ சோழன்‌ கொடுமையிலிருந்து விடுபட்டு எம்பெருமானார்‌ திரும்பி வந்து அவர்‌ திருவடி நிழலில்‌ தாம்‌ வாழ வேண்டும்‌ என்று பிரார்த்தித்துக் கொண்டு 18 வருட காலம்‌ அங்கு வாழ்ந்து வந்தார்‌.சோழ மன்னன்‌ மாண்டானென்று கேள்விப்பட்டு ஆழ்வான்‌ அழகர்‌ கோவிலை விட்டு மீண்டும்‌ திருவரங்கம்‌ வந்தார்‌. சோழன்‌ உபத்திரவத்திற்குப்‌ பயந்து திருநாராயண புரத்திலிருந்த எம்பெருமானாரும்‌ சோழன்‌ மடிந்ததை அறிந்து, அங்கிருந்து புறப்பட்டு,கோயிலுக்கு எழுந்தருளி, ஆழ்வானைப் பார்க்க அவர்‌ திருமாளிகைக்கு வர, ஆழ்வானும்‌, உடையவரை எதிர் கொண்டு அவர்‌ காலடியில்‌ விழுந்து கிடக்க, இருவரும்‌ வார்த்தை ஒன்றும்‌ பேச இயலாமல்‌ இருந்த பின்‌ உடையவர்‌ ஆழ்வானிடம்‌ இந்த வைணவ தர்சனத்திற்குக்‌ கண்‌ போன்றவரான உமக்குக்‌ கண்‌ போனதே என்று வருந்திப்‌ பின்‌ அவரையும்‌ அழைத்துக் கொண்டு மடத்திற்குச்‌ சென்றார்‌. ஆழ்வான்‌ தாம்‌ அருளிய மூன்று ஸ்தவங்களையும்‌ படிக்கக்‌ கேட்டு மகிழ்ந்தவராய்‌ அவரைப் பார்த்து நாம்‌ காஞ்சிக்குச்‌ சென்று பேரருளாளரிடம்‌ உமக்குக்‌ கண் பார்வை தருமாறு வேண்டி வருவோம்‌ என்று கூறி காஞ்சியில்‌ வரதராஜ ஸ்தவத்தைப்‌ பேரருளாளர்‌ திரு முன்பு விண்ணப்பஞ்‌ செய்து முடிக்கிற போது உடையவர்‌,கவனியாதிருக்கும் பொழுது, ஆழ்வான்‌ உடையவர்‌ திரு உள்ளப்‌படி தனக்குக்‌ கண்‌ வேண்டிக் கொள்ளாமல்‌ நான்‌ பெறும்‌ பேறு நாலூரானும்‌ பெற வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டார்‌. ௮ச்‌ சோழ ராஜனை அடுத்திருந்த நாலூரானுடைய முயற்சியே பெரியநம்பி திருநாடு அலங்கரிப்பதபற்கும்‌ (இறப்பதற்கும்‌] ஆழ்வான்‌ கண்‌ இழப்பதற்கும்‌ காரணமாகும்‌. அத்தகைய படுபாவியான நாலூரானுக்குக்‌ கொடிய நரகம்‌ நிச்சயம்‌ கிடைக்குமாதலால்‌,வைணவ குலத்தில்‌ பிறந்த ஒருவன்‌ படுகுழியில்‌ விழலாகாது என்று இரக்கமுற்று, நம்மாலல்லது அவன்‌ உய்வு பெற வழியில்லை என்று அறுதி யிட்டு, பரம துரோகியான அவனுக்கும்‌ நற் கதி வேண்டினார்‌. இச் சிறந்த குணம்‌ ஆழ்வான்‌ ஒருவனுக்கே அசாதாரணமாக அமைந்துள்ளது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்‌.-ஆழ்வான்‌ பிரார்த்தித்ததை பேரருளாளன்‌ அங்கீ கரித்ததைக் கேட்ட எம்பெருமானார்‌ பதறி பேரருளாளரான நீர்‌ என்‌ நினைவைத்‌ தலைக்கட்ட வில்லையே என்றும்‌, ஆழ்வானை நோக்கு, ‘நீர்‌ ஸ்வதந்திரராய்‌ என்‌ நினைவைத்‌ தலைக் கட்டாதே உபயோகமற்ற ஒன்றை வேண்டிக் கொண்டீரே என்றும்‌ வெறுத்துரைத்து இனி என்‌ செய்வது என்று மனக்குறைபட்டு நிற்க, அதனை உணர்ந்த பேரருளாளன்‌, ‘இராமானுஜா’ ஆழ்வான்‌. நம்மையும்‌ உம்மையும்‌ காணு மிடத்து உட் கண்ணால்‌ காணக் கடவன்‌’ என்று வரமருளினார்‌.அவ்வாறு இருப்பதைச்‌ சோதித்துத்‌ தேர்ந்து தெளிந்த உடையவர்‌ திரு உள்ள முகந்தவராய்‌ ஆழ்வானுடன்‌ மீண்டும்‌ கோயிலுக்கே எழுந்தருளினார்‌. ஒருநாள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ சிலர்‌ ஆழ்வானிடம்‌ மகா பாபியான நாலூரானுக்கு நற்கதி வேண்டிக் கொண்டதற்குக்‌ காரணம்‌ வினவ, அப்படிப்பட்ட பாவிகளுக்கன்றோ இரங்க வேண்டுவது, மீனுக்குத்‌ தண்ணீர்‌ வார்த்துப் பலனென்ன என்றார்‌. இதைக்‌ கேட்டவர்கள்‌ எம்பெருமானாரிடத்தில்‌ கூடக் காணக் கிடைக்காத நற் குணங்கள்‌ ஆழ்வானிடத்தில்‌ அழகாக அமைந்திருப்பதைக்‌ கண்டார்கள்‌.ஆழ்வானுடைய சிஷ்யர்கள்‌ பலரில்‌ பிள்ளைப் பிள்ளையாழ்‌வான்‌ என்பவர்‌ நற்குல நற் செல்வத்தால்‌ மேன்மை பெற்ற செருக்கினால்‌, பாகவதர்களிடம்‌ வினயமின்றிக்கே அபசாரப் பட்டுக்‌ கொண்‌டே யிருந்தார்‌. இவரைத்‌ திருத்திப்‌ பணிக் கொள்ளத்‌ தீர்மானித்த ஆழ்வான்‌, ஒரு புண்ணிய தினத்திலே நீராடின பின்பு, அவரிடம்‌ பிள்ளைப் பிள்ளாய்‌ எல்லாரும்‌ புண்ணிய காலமென்று தானம்‌ வழங்குவார்கள்‌. நீர்‌ நமக்கு ஒரு தானம்‌ வழங்க மாட்டீரோ என்று கேட்க, நான்‌ எதைத் தானம்‌ பண்ணுவது? எல்லாமே சாமியினுடையதே யன்றோ என்று கூறினார்‌. அதற்குப் பதிலாக அவ்வளவு போதாது. மனமொழி, மெய்களால்‌ பாகவத அபசாரப் படாமல்‌ இருக்க வேண்டும்‌ என்று கேட்டு அப்படியே அவரும்‌ வாக்குறுதி செய்தார்‌. பின்பு ஒரு நாள்‌ அவர்‌ மானசீகமாக, ஒரு பாகவதரிடத்தில்‌ அபசாரப் பட நேர்ந்தது. ஆனால்‌ மிகவும்‌ வருந்தியவர்‌ மள,மொழி, மெய்களால்‌, அபசாரப் படாதபடி இப் பொல்லா அழுக்குடம்புடனே இருப்பது அரிதாய்‌ இருக்கிறது என்று வருந்தவே இத்தனை நற்குணம்‌ இவருக்கு உண்டாயிற்றே என்று ஆழ்வானும்‌ மகிழ்ந்து பிள்ளைப் பிள்ளாய்‌, நெஞ்சினால்‌ நினைத்தற்கு அனுதாப முண்டாகிய படியால்‌ எம்பெருமான்‌ பொறுத்தருள்வான்‌. ராஜ தண்‌டம்‌ நேருமென்ற அச்சத்தினால்‌ சரீர மூலமாக ஒருவரையும்‌ நலியமாட்டீர்‌. ஆன பின்னர்‌ மானஸீகமாகப்‌ பட்ட அபசாரத்தை உமக்குக்‌ கழித்துத்‌ தந்தோம்‌. இனி வாக்கை மாத்திரம்‌ நன்றாகக்‌ குறிக் கொண்டு நல்ல முறையில்‌ வாழக் கடவீர்‌’ என்று கூறினார்‌.

எம்பெருமானின்‌ அருளினாலே, ஆழ்வானுக்கு இரண்டு புத்திரர்கள்‌ பிறந்தமையை முன்னரே கண்டோம்‌.-அக் குழந்தைகளைக்‌ காண வேண்டி உடையவர்‌ ஆழ்வான்‌ திரு மாளிகைக்குச்‌ சென்று தம்‌ சிஷ்யரான எம்பாரை நோக்கிக்‌ குழந்தைகளை எடுத்துக்‌ கொண்டு வருமாறு சொன்னார்‌. அவரும்‌ பிரபந்ந குலக் கொழுந்‌தான அக் குழந்தைகளை எடுத்து வரும் பொழுது காப்பாக ‘த்வயம்‌”* மந்திரத்தை அனுசந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக்‌ காட்டினார்‌. அவரும்‌ மிக மகிழ்ந்து,இக் குழந்தைகளிடம்‌ ‘த்வயம்‌’ பரிமளிக்கின்றதே, காரணம்‌ என்ன’ என்று கேட்க, எம்பாரும்‌ குழந்தைகளுக்குக்‌ காப்பாகத்‌ ‘த்வயானுசந்தானம்‌” செய்து கொண்டு வந்தேன்‌’ என்று சொன்னார்‌. அவ்‌வாறு எம்பார்‌ காப்பிட்டதற்கு உகந்து எம்பாரிடம்‌ அக் குழந்தைகளை உய்யும்‌ வகையை நாடிச் சென்று முற்பட்டீராதலில்‌ நீரே இவர்கட்கு ஆச்சாரியராகக்‌ கடவீர்‌ என்று நியமித்தார்‌. அதன் படியே அத் திருக் குமாரர்களுக்கு எம்பாரே ஆச்சார்ய கிருத்யங்கள்‌ செய்தருளினாரென்றும்‌, இது பற்றியே எம்பெருமானார்‌, எம்பார்‌, பட்டர்‌,நஞ்சீயர்‌, நம்பிள்ளை என்றபடி ஆச்சார்ய பரம்பரை வருகிற தென்பது பிரசித்தமாயிருக்கும்‌.-இவ்வாறிருக்க ஆழ்வானுக்கும்‌ ஆச்சார்ய பரம்பரையில்‌ அனுப் பிரவேசம்‌ (இடம்‌) உண்டானதே, அது எங்கனம்‌ என்று கேட்டால்‌, ஆழ்வான்‌ தம்‌ திருக் குமாரர்கட்குத்‌ திருவாய்மொழிக்‌குப்‌ பொருள்‌ கற்பித்து வரும் பொழுது ‘எண்பெருக்கந்நலத்‌ தொண்‌பொருள்‌ ஈறில, வண் புகழ்‌ நாரணன்‌ திண் கழல்‌ சேரே‘ என்ற பாசுரம்‌ வந்தது. அந்த அளவிலே இது திருமந்திர வார்த்தையை விவரிக்கிறதாகையாலே இம் மந்திரத்தின்‌ அர்த்தத்தை ஆச்சாரியரி னிடத்திலேயே கேட்டறிய வேண்டியதாகையால்‌, தான்‌ அவர்களுக்குச்‌ சொல்லாது நிறுத்தி, இதனை உங்கள்‌ ஆச்சாரியரிடம்‌ சென்று கேட்டுக் கொள்ளுங்கள்‌ என்று சொல்ல, அதனை விரைவில்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌ என்ற ஆவலினால்‌ அவர்கள்‌ உடனே எழுந்து ஆச்சாரியரான எம்பாரிடத்திற்குப்‌ போகப்‌ புறப்‌ பட்டார்கள்‌.ஆனால்‌ ஆழ்வான்‌ அவர்களைத்‌ தடுத்து நிறுத்தி ‘மின்னின்‌ நிலையில்‌ மன்னுயிராக்கைகள்‌’ என்றபடி யாக்கை நிலையாமையைத்‌ திரு உள்ளத்தில்‌ கொண்டு அவர்களை அழைத்து இருந்து கேளுங்கள்‌ என்று கூறித்‌ திருமந்திரத்தைச்‌ சொல்லி, இப் பாட்டின்‌ பொருளையும்‌ விவரித்து, இப் பாசுரத்தைத்‌ திருமந்திரத்தின்‌ அர்த்தமாக நினைத்திருங்கள்‌ என்று பணித்தருளினமையால்‌ தம்‌ இரு குமாரர்களுக்கு ஆழ்வானும்‌ ஒரு ஆச்சாரியராக அமைந்தருளினார்‌.

ஆகவே தான்‌ பட்டர்‌ ஸஹஸ்ரநாம பாஷ்யமருளிச்‌ செய்த பொழுது ஆசார்ய வந்தனம்‌ செய்கிற முதல்‌ ஸ்லோகத்தில்‌ ‘வந்தே கோவிந்த தாதெள என்று எம்பாரையும்‌ திருத் தகப்பனாரையும்‌ தொழுகின்‌றேன்‌ என்றருளிச் செய்து உபய ஸம்பந்தம்‌ தமக்கு உண்டான வழியைக்‌ காட்டுகிறார்‌.-பட்டர்‌ சிறுவராக இருந்த காலத்தில்‌ ஒருநாள்‌ தம்‌ தகப்பனாரான ஆழ்வானிடத்தில்‌ திருவாய்மொழி அனுசந்திக்கும் பொழுது
உறுமோ பாவியேனுக்கே’ (8.10.3) என்ற பாசுரத்தில்‌ ‘சிறு மா மனிசராய்‌ என்னை ஆண்டாரிங்கே திரியவே! என்றதைக்‌ கேட்டு, சிறுமை பெருமை இரண்டும்‌ ஒரு சேர எவ்வாறு ஒரு பொருளுக்குப்‌ பொருந்தும்‌ என்று பட்டர்‌ வினா எழுப்ப ஆழ்வான்‌ வடிவு சிறுத்து மகிமை பெருத்தவர்களும்‌ மனிதரென்று பார்க்கும்‌ பொழுது சிறுமை தோன்றினாலும்‌, பகவத்‌ பக்தி, ஞானம்‌,அனுஷ்டானம்‌ முதலிய நற் குணங்களை நோக்கும்‌ அளவில்‌ நித்ய முக்தர்களுக்கு நேர் மேன்மை பெற்று விளங்குகிறவர்கள்‌. அத்தகைய மகா புருஷர்களையே ஆழ்வார்‌ சிறுமாமனிசர்‌ என்று குறிப்பிடுகிறார்‌ என்று விளக்க, பட்டர்‌ அது தகும்‌ என்று இசைவு கொண்டார்‌.
ஆழ்வானுடைய குடும்ப காரியங்கள்‌ அனைத்தையும்‌ எதிராசரே நிர்வஹித்து (நடத்தி) வந்தார்‌. ஆழ்வானது குமாரர்கள்‌ இருவருக்கும்‌ சகல வித்யைகளையும்‌ புகட்டுவித்த பின்‌ அவர்கள்‌ விவாகத்‌துக்குரிய பருவத்தை அடைந்த அளவில்‌ ஆண்டாள்‌ ஆழ்வானைப்‌ பார்த்து, இவர்களுக்கு விவாகம்‌ செய்விக்க வேண்டாமோ என்று வினவ, ஆழ்வானும்‌ உடையவரிடம்‌ சென்று இப் புத்திரர்களுக்கு விவாகம்‌ செய்விக்க வேண்டும்‌ என்று சொல்கிறார்களே என்று விண்ணப்பம்‌ செய்ய, அவரும்‌ பெரிய நம்பி உறவினருக்குப்‌ பெண்‌ கொடுக்கும்படி வேண்ட முதலில்‌ மறுத்தவர்கள்‌ பின்னர்‌ பெருமாள்‌ தாமே கனவில்‌ தோன்றி கன்னிகைகளைக்‌ கல்யாணம்‌ செய்து கொடுக்கும்படி கட்டளை யிட அவர்களும்‌ இசைந்து, ஆழ்வான்‌ குமாரர்களுக்கு தங்கள்‌ குமாரத்திகளை கன்னிகா தானம்‌ செய்து கொடுத்துச்‌ சிறப்பாக விவாகமும்‌ நடந்தேறியது. இதனால்‌ ஆழ்வானுடைய குடும்ப கார்ய மனைத்தும்‌ எம்பெருமானார்‌ தலையில்‌ கடந்தது என்பது விளங்கும்‌.

நம்‌ ஆச்சாரியார்கள்‌ எல்லோரும்‌ சகல சாஸ்திரங்களிலும்‌ வல்லவராக இருந்த போதிலும்‌, ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களையே கொணடு, சகல சாஸ்த்ரார்த்தங்களையும்‌ அருளிச் செயல்களிலேயே நயிப்பித்து அனுபவிப்பார்கள்‌. இந்த அனுபவம்‌ ஆழ்வானுக்கு அதிகமாகவே இருக்கும்‌. திவ்யப்‌ பிரபந்தங்கவில்‌ பல பாசுரங்களில்‌ ஆழ்வானுடைய நிர்வாகம்‌ அருமையாகக்‌ கொண்டாடப்படும்‌. உதாரணமாக,திருவாய் மொழியில்‌ ஆழ்வார்‌ நாயகி பாவனையிலே பேசுகின்ற பாசுரங்களில்‌ மாசறுசோதி (5:83) என்ற
பாசுரத்தை உபந்யசிக்கும் போது தலையால்‌ வணங்கவுமாங்‌கொலோ தையலார்‌ முன்பே (5:3:7] என்ற ஈற்றடியின்‌ பொருளை விவரிக்குமளவில்‌ ஆமருவி நிரை மேய்த்தான்‌ நம்பியார்‌ என்ற பெரியவர்‌ எழுந்து தலைவி, தலைவனைத்‌ தலையில்‌ வணங்குவதுண்டோ என்று கேட்க, ஆழ்வான்‌ ஸீதாப் பிராட்டி, சிறிய திருவடியிடத்தில்‌ சந்தேகம்‌ சொல்லி அனுப்பும் பொழுது எனக்காக அவரைத்‌ தலையால்‌ வணங்கு என்று சொன்னது கண்டீரே என்று கூறியதைக்‌ கேட்டு அப்பெரியவர்‌ மகிழ்ச்சியடைந்தார்‌. இதைப்போன்ற பல விஷயங்களைப்‌ பிரபந்த வியாக்யானங்களில்‌ காணலாம்‌.
திருமாலிருஞ்சோலை யாத்திரையில்‌ அருளிய மூன்று ஸ்தவங்‌களும்‌ பின்பு எம்பெருமானார்‌ நியமனத்தால்‌ அருளிய வரதராஜஸ்தவமும்‌ பின்னர்‌ அருளிய ஸ்ரீஸ்தவமும்‌ ஆக மொத்தம்‌ ஐந்து ஸ்தவங்களாகும்‌. இவை தவிர வேறு வேறு சில ஸ்தோத்ரங்களும்‌ அருளிச் செய்தார்‌ என்பதை பட்டர் தம்‌ தகப்பனார்‌ அருளிச் செய்ததாகச்‌ சொல்லும்‌ ஸ்தோத்திரங்களிலிருந்தும்‌ தெரிகிறோம்‌. இவை தவிர பட்டரும்‌ ஆழ்வானும்‌ தாங்கள்‌ அருளிச் செய்த நித்ய கிரந்தங்களில்‌ என்று இருக்கக்‌ காண்கையில்‌ ஆழ்வான்‌ நித்யக் கிரந்தம்‌ ஒன்றும்‌ அருளியிருப்பதாக விளங்குகிறது. இவ்விடத்திலேயே ஆழ்வானுடைய சரமஸ்லோக வியாக்யானத்தையும்‌ நாம்‌ குறிப்‌பிட வேண்டும்‌. ஆனால்‌ சரம ஸ்லோக வியாக்யானம்‌ நமக்குக்‌ கிடைக்கவில்லை.ஆழ்வான்‌ திருநாட்டுக்கு ஏக வரம் பெற்றதைக்‌ கேட்டு வருந்‌திய உடையவர்‌ முன்னர்‌ தான்‌ தம்‌ ஆச்சாரியார்‌ திருக் கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ பட்ட அபசாரத்தால்‌ நமக்கு நரகமே கிட்டும்‌ என்று வருந்தினேன்‌. ஆனால்‌ இப்பொழுது ஆழ்வானோடு சம்பந்தமுடையார்‌ அனைவருக்கும்‌ மேல் வீடு கிட்டும்‌ என்று நம்‌ பெருமாள்‌ நியமித்தபடியால்‌, நமக்கு ஆழ்வானோடு சம்பந்தமுண்டாதலால்‌ ஒரு குறைவுமில்லை என்று களிப்புற்றுத்‌ தம்‌ காஷாயத்தை ஆகாயத்திலே வீசி யெறிந்து மகழ்ச்சிக்குப்‌ போக்கு விட்டதாகவும்‌ சொல்வர்‌.-ஆனாலும்‌ தனக்குயிரான ஆழ்வானைப்‌ பிரிந்து எங்கனம்‌ உயிர் தரிப்பது என்று திருஉள்ளம்‌ நொந்து ‘இப்படிச்‌ செய்தீரே,எங்களையும்‌ அரங்கனையும்‌ மறந்து மேல்நாடு போகத்‌ தீர்மானித்தது ஏன்‌ என்று கேட்க ஆழ்வானும்‌ உடையவருக்கு முன்னே போய்‌ உடையவரை எதிர் கொண்டழைக்கவே என்று கூற இப்படியும்‌ ஒரு ஆச்சார்ய பக்தி உண்டோ என்று வியந்து ‘உம்முடைய பேற்றுக்கு நாம்‌ விலக்காகலாமோ? சுகமாக நித்யவிபூதி யேற எழுந்தருளுவீர்‌: என்று சொல்லிச்‌ செவியிலே த்வயத்தை அருளிச் செய்தார்‌. பின்னர்‌ ஆழ்வானது திருமுதுகைத் தடவி அஞ்சலித்து விடை கொடுத்தருளினார்‌.உடையவரின்‌ நிரூபணம்‌ பெற்ற ஆழ்வான்‌ உடையவரின்‌ திருவடித்‌ தாமரைகளைக்‌ கண்களிலும்‌ மார்பிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்ரீ பாத தீர்த்தம்‌ கொண்டு ‘இனி மடமேறி எழுந்தருள வேண்டும்‌”என விண்ணப்பம்‌ செய்ய, வடவாற்றங்கரை வழியாக உடையவர்‌ பின்னே செல்ல, இனி நில்லும்‌ எனத்‌ தண்டம்‌ சமர்ப்பித்து மீண்டும்‌ ஆழ்வான்‌ திருமாளிகைக்கு அருகிலிட்ட திருக்காவணத்தின்‌ நடுவே எழுந்தருளி யிருந்து தம்‌ தேவியார்‌ ஆண்டாளைப் பார்த்து என்ன நினைத்திருக்கிறாய்‌ என்று கேட்க, தேவரீர்‌ திரு உள்ளத்தைப்‌
பின்‌ செல்வதன்றி வேறு நினைவுண்டோ என்று கூறி விட ஆழ்வானும்‌, பட்டரையும்‌ ஸ்ரீராம பிள்ளையையும்‌ அருகிலழைத்து பெருமாளும்‌ நாச்சிமாரும்‌ எழுந்தருளி யிருக்க உங்களுக்கு ஒரு குறையுமில்லை. நம்‌ பெருமாள்‌ பெற்று வளர்த்தார்‌ என்று இறுமாந்திராதே, எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌ என்றிருங்கள்‌.ஆண்டாளுக்குக்‌ குறைவு வராமல்‌ நடந்து கொள்ளுங்கள்‌. பாகவத அபசாரப்‌்படாமல்‌ அவர்களை ஆதரித்துப்‌ போங்கள்‌ என்று உபதேசித்து அவர்கள்‌ கண்ணீரைத்‌ துடைத்து நீங்கள்‌ பிராக்ருத சம்பந்‌தத்தை நினைத்து வருந்தினீர்களானால்‌ உடையவர்‌ திருவடி சம்பந்‌தத்தைத் தூஷித்தவர்‌ ஆவீர்கள்‌. ஆத்ம ஸம்பந்தத்தை நினைத்து வருந்துவீர்களானால்‌ நம்முடைய ஒழிக்க ஒழியாத உறவை அறிந்திலீர்கள்‌ ஆவீர்கள்‌ என்று அவர்களைத்‌ தேற்றிப் பின்‌ கோயிலுக்கு நேரே, பிள்ளைப் பிள்ளை யாழ்வான்‌ மடியிலே திருமுடியையும்‌,ஆண்டாள்‌ மடியிலே திருவடிகளையும்‌ வைத்துக் கொண்டு, ஆளவந்தார்‌ திருவடிகளைச்‌ சிந்தை செய்து கொண்டு அன்றே திருநாட்‌டுக்கு எழுந்தருளினார்‌. பின்னர்‌ எம்பெருமானார்‌ எழுந்தருளித்‌ திருக் குமாரர்களைக் கொண்டு சரம கைங்கர்யங்களைப்‌ பெருக்க நடத்தி யருளினார்‌. மொழியைக் கடக்கும்‌ பெரும் புகழாகிற திருமேனியோடும்‌ அர்ச்சாவதாரத் திருமேனியோடும்‌ இவ் விபூதி எங்கும்‌ நிறைந்து விளங்குகிறாராகையால்‌ நாமும்‌ கண்கள்‌ துஞ்சாதே கண்ணாரக் கண்டு களிக்கும்‌ பாக்யம்‌ பெற்றோம்‌.

சீராருந்‌ திருப்பதிகள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
தென்னாங்கர்‌ சீரருளைச்‌ சேருமவன்‌ வாழியே.
பாராரும்‌ எதிராசர்‌ பதம்‌ பணிந்தோன்‌ வாழியே.
பாடியத்தின்‌ உட்பொருளைப்‌ பகருமவன்‌ வாழியே.
நாராயணன்‌ சமயம்‌ நாட்டினான்‌ வாழியே.
நாலூரான்‌ தனக்கு முக்தி நல்கினான்‌ வாழியே.
ஏராருந்‌ தையிலத்துத்‌ திங்குவந்தான்‌ வாழியே.
எழில்‌ கூரத்தாழ்வான்‌ தன்‌ இணையடிகள்‌ வாழியே
.

திருவரங்கத்தமுதனார்‌ -அவதாரஸ்தலம்‌ திருவரங்கம்‌. தகப்பனார்‌ அணியரங்‌கத் தமுதனார்‌. இவரது இதர நாமங்கள்‌ மூங்கில் குடி யமுதனார்‌. இவரது நட்சத்திரம்‌ பங்குனி ஹஸ்தம்‌. இவர்‌ 138 வருஷம்‌ வாழ்ந்திருந்‌தார்‌ என்பன இவரது வாழ்க்கைக்‌ குறிப்புகள்‌. ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரனை அடைவதற்கு அடி நிலையாகச்‌ சொல்லப்படுவது ஆச்சார்ய சம்பந்தம்‌. அத்தகைய ஆச்சார்ய சம்பந்தம்‌ பெற்று உய்ந்து போனவர்‌ திருவரங்கத் தமுதனார்‌. இவர்‌ பல கலைகளும்‌ பயின்று கோயிலில்‌ புரோஹிதராய்‌ செல்வாக்குடன்‌ பெரிய கோயில்‌ நம்பி என்னும்‌ பெயருடன்‌ திகழ்ந்து வந்தார்‌. பெரிய கோயிலில்‌ உடையவர்‌ பெரிய பெருமாளால்‌ உபய விபூதிகளும்‌ இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்படி வழங்கப்பட்டமையால்‌ கோயில்‌ காரியங்‌களை உடையவர்‌ ஆராய்ந்து வரலானார்‌. அக் காலத்தில்‌ பெரிய கோயில்‌ நம்பி ரஜோ குணம்‌ மிக்கவராய்‌ உடையவருக்குக்‌ கீழ்ப்படியாமல்‌ கோயில்‌ நிர்வாஹத்திற்கு இடையூறுகள்‌ பல செய்து வந்தார்‌. அதனால்‌ உடையவர்‌ மனம்‌ உடைந்து பெரிய கோயில்‌ நம்பியைக்‌ கோயிலின்றும்‌ வெளியேற்றத்‌ திருஉள்‌ளம்‌ கொண்டிருந்தார்‌. ஒரு நாள்‌ பெருமாள்‌ புறப்பாட்டிற்காகக்‌ காத்திருக்கும் பொழுது, உடையவர்‌ கனவிலே பெருமாள்‌ முதிய வேதியனாகத்‌ தோன்றி, பெரிய கோயில்‌ நம்பி வெகு நாட்களாக நம்மையே நம்பி இருக்கிறார்‌. பிறகு தேவரீர்‌ திரு உள்ளம்‌ என்று கூறி மறைந்தார்‌. உடையவர்‌ தான்‌ கண்ட கனவினைக்‌ கூரத்தாழ்வானிடம்‌ சொல்லி நம்‌ திறத்துப்‌ பகைமை பாராட்டும்‌ பெரிய கோயில்‌ நம்பியை வெளியேற்றலாகாது. இங்கேயே வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்பது பெருமாள்‌ திரு உள்ளம்‌ போலும்‌.-நம்மால்‌ அவனோடு நிர்வாகம்‌ நடத்த இயலாது. ஆகையால்‌ நாம்‌ பெருமாள்‌ கோவிலுக்கே போய்‌ விடுவோம்‌ என்று கூறினார்‌.-அதைக் கேட்டு ஆழ்வான்‌ இவ் விதம்‌ அருளிச்செய்த பெருமாளுக்‌குப்‌, பெரிய கோயில்‌ நம்பியைத்‌ திருத்திப் பணி கொள்ள வேண்‌டும்‌ என்பது தான்‌ திருஉள்ளமாக இருக்க வேண்டும்‌ என்று கூறினார்‌. உடையவர்‌ அவ்வாறாயின்‌ நீரே அவரைத் திருத்தும்‌ என்று கூறினார்‌. ஆச்சாரியன்‌ கட்டளையைத்‌ தலைமேற் கொண்டு, ஆழ்‌வானும்‌ புலமை வாய்ந்த பெரிய கோயில்‌ பெரிய நம்பியை மெல்ல மெல்லச்‌ சீர்திருத்தினார்‌. திருத்தப்பட்ட நம்பியை ஆழ்‌வான்‌ உடையவர்‌ திருவடிகளிலே பொருத்தமுறச்‌ சேரவிட்டார்‌.-நம்பியை உடையவர்‌ அகமகிழ்ந்து முகமலர்ந்து ஏற்றுக்‌ கொண்டார்‌.-பெரிய கோயில் நம்பி ஆத்ம ஹித சிந்தனையில்‌ தம்மிலும்‌
மேம் பட்டவராய்‌ விளங்கனமையால்‌, ஆழ்வான்‌ திருவடிகளையே அவர்‌ குருவாகப்‌ பற்றும்படி செய்தருளினார்‌ உடையவர்‌. அரங்கனுக்குச்‌ சேஷப்பட்டு அவன்‌ செய்ய தானிணைகள்‌ பேர்வின்றிஇருந்தாலும்‌, தொண்டு பட்டவர்‌ பால்‌ சார்வின்றி நின்றதாகத்‌ தம்மைப் பற்றி (இராமானுஜ நூற்றந்தாதி (80)) இவர்‌ கூறிக் கொள்வதால்‌ இவர்‌ அரங்கனுக்குச்‌ சேஷப்பட்டவராய்‌ பணிவிடை புரிந்துகொண்டிருந்தாலும்‌, எம்பெருமானார்‌ அடியார்கள்‌ விஷயத்தில்‌ அனுகூலராய்‌ இல்லாமலிருந்தமை புலனாகிறது.
அன்பார்ந்த இன்பம்‌ ததும்பும்படி யமைந்த பெரிய கோயில்‌ நம்பியின்‌ சொல்லின்‌ இனிமையை நுகர்ந்த உடையவர்‌ இவருக்கு-அமுதன்‌’ என்று திருநாமம்‌ சூட்டினார்‌. அதிலிருந்து இவருக்குத்‌ திருவரங்கத்தமுதனார்‌ என்ற பெயர்‌ வழங்கலாயிற்று. நம்மாசாரியர்‌கள்‌, இவரிடத்திலுள்ள நம்‌ மதிப்புத்‌ தோன்ற ‘பிள்ளை அமுதனார்‌! என்று இவரைக்‌ குறிப்பிடுவார்கள்‌. ஈட்டிலும்‌ பெரிய ஜீயர்‌ மணவாள மாமுனி இராமானுஜ நூற்றந்தாதிக்கு இயற்றிய உரையிலும்‌, ஸ்ரீவசன பூஷணத்திற்கு அவரருளிய வியாக்யானத்திலும்‌(சூத்திரம்‌ 416) பிள்ளை யமுதானாரென்று தான்‌ வழங்கப்பட்டுள்‌ளது.-சில நாட்களுக்குப் பின்னர்‌ அமுதனார்‌ தாயாருக்குச்‌ சரம கைங்‌கர்யம்‌ செய்ய நேர்ந்தது. ஏகாதிஹ்த்திற்கு ஆள்‌ வேண்டி உடையவரிடம்‌ விண்ணப்பித்துக்‌ கொண்டார்‌. பூரியரோடுள்ள சுற்றம்‌ புலத்‌திக் கொண்டவராதலால்‌, மற்றெவருமே துணிந்து ஏற்காத இப் பணியை உடையவர்‌ கட்டளைப்படி ஆழ்வான்‌ துணிந்து ஏற்றுக்‌ கொண்டார்‌. ஆழ்வான்‌ அமுது செய்து திருப்தி கூறும்‌ காலத்தில்‌ அமுதனாருடைய கோயில்‌ புரோகிதத்தையும்‌, புராண படநதையும்‌தானம்‌ செய்யச் சொல்லி அவற்றைப் பெற்று உடையவரிடம்‌ ஒப்படைத்தார்‌. உடையவர்‌ நியமனத்தினால்‌ கோயிற் புரோகிதமும்‌,புராண படநமும்‌ ஆழ்வானாலே நிர்வஹிக்கப்பட்டு வந்தன.
உடையவர்‌ கோயிற் பணியை ஆழ்வானுக்குத்‌ தானமாக வழங்‌கி விட்டபடியால்‌, கோயிலிலே ஒட்டற்றிருந்தார்‌ அமுதனார்‌. இந்நிலையினை நோக்கிய, உடையவர்‌ வித்வானான அமுதனார்‌ இப்படி ஓய்ந்திருக்கலாகாது என்று எண்ணி, பிள்ளை திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌ திருமாளிகைக்கு எழுந்தருளி, இயற்பா, ஸ்ரீகோசத்தை தானமாகக்‌ கேட்டு வாங்கி இன்று முதல்‌ ஸந்நிதியில்‌ இயற்பாவை நீங்கள்‌ சேவிக்க வேண்டாம்‌ என்று கூறி, அதனை அமுதனாரிடம்‌ கொடுத்து, ஒர்‌உரு இயற்பாவினைச்‌ சாதித்து, இயற்பா ஆயிரமும்‌ ஸந்நிதியில்‌ சேவிக்கும்‌ அந் நாட்களிலே அரையருக்கு நடப்பவைகளான மரியாதைகளனைத்தையும்‌ நடத்தும்படி ஏற்பாடு செய்தார்‌. நாச்சியார்‌ ஸந்நிதி முதலிய இடங்களிலும்‌, அமுதனார்‌ இயற்பாவை தொடங்க,ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தொடர்ந்து அனுசந்திக்கும்படி நியமித்தருவினார்‌. திவ்யப் பிரபந்தங்களிலே இயற்பா நீங்கலாக மற்ற இசைப் பாக்கள்‌ அனைத்தும்‌ அரையராலேயே அனுசந்திக்கப் படுகின்றன. இவ்வாறு உடையவர்‌ திட்டம்‌ செய்த சில நாட்களுக்குப் பிறகு
அமுதனார்‌ எம்பெருமானார்‌ விஷயமாக, காயத்ரியை உரு எண்‌ணும்‌ கணக்கில்‌ நூற்றெட்டுக்‌ கட்டளைக் கலித்துறையில்‌ அமைந்த அந்தாதி நூலை அருளிச் செய்து பெருமாளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌. பெருமான்‌ ஒரு ஸப்தாபரணத் திருநாளிலே, உடையவரை நம்முடன்‌ கூட, வர வேண்டாம்‌ என்று நியமித்து திரு வீதி யிலே சகல வாத்யங்களையும்‌ நிறுத்தி, ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ இதை அனுசந்திக்கக் கேட்டு போர உகந்தருளினார்‌. அதுமுதல்‌ பெருமாள்‌ நியமனத்தாலே பெரிய ஸந்நிதியில்‌ இயற்பா அனுசந்தித்தவுடனே நூற்றந்தாதியைப்‌ பெருமாள்‌ வரிசையுடன்‌ கேட்டருள்கிறார்‌. நாச்சியார்‌ சன்னிதியிலும்‌ அப்படியே பெருமாள்‌ திருஉள்ளத்தை அனுசரித்து எம்பெருமானார்‌ முதலாயிரத்திலே கண்ணி நுண் சிறுத்தாம்பினைப்போல இயற்பாவின்‌
இறுதியில்‌ இராமானுஜ நூற்றந்தாதியையும்‌ சேர்த்து ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌, இந்த நூற்றந்தாதியை பிரபந்ந காயத்ரியாக நாடோறும்‌ அனுசந்திக்க வேண்டுமென்று கட்டளையிட்டருளினார்‌.-இந்த இராமானுஜ நூற்றந்தாதி ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிய வேண்டிய விஷயங்கள்‌ அனைத்தையும்‌ விரிவாகவிளக்கிக் காட்டுகிறது. ஆச்சார்ய அபிமான நிஷ்டன்‌ பகவானை அறவே விட்டவனாக மாட்டான்‌. ஆசார்ய வழிபாட்டிலேயே, எம்பெருமானும்‌ வழிபட்டவனாகி விடுகிறான்‌ என்னும்‌ உண்மையைப்‌ பிரபந்தத்தைக் கொண்டு அறுதியிட்டு எம்பெருமானாரையே வழிபடுவார்களாயினர்‌ முன்னோர்கள்‌. இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌: (106) என்னும்‌ பாசுரம்‌ இவ்வுண்மையை உணர்த்தும்‌.நம்மாழ்வாருக்கு மதுரகவிகள்போல எம்பெருமானாருக்கு அமுத னார்‌ அமைந்துள்ளார்‌. இருவரும்‌ ஆச்சார்யன்‌ திறத்துத்‌ தங்கள்‌ நிலையை விளக்கியும்‌ பிறருக்கு உபதேசித்தும்‌ உய்வுறுத்தும்‌ பொருள்களை உலகற்கு வெளியிட்டு உதவுகின்றனர்‌. ஆயினும்‌ மதுரகவிகளைப்‌ போலச்‌ சுருங்கக்‌ கூறாது, அமுதனார்‌ பரக்கக் கூறிப்‌ பரமோபகாரம்‌ புரிவதை நன்குணர்ந்து நாம்‌ நன்றி பாராட்டக்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.-இங்கனம்‌ அறிவில்‌ முதிர்ந்தோர்களால்‌, முக்கிய பிரமாணமாக ஏற்கப்பட்ட இப்பிரபந்தத்தை வைணவர்களனைவரும்‌ பிரபந்நகாயத்ரியாக நாடோறும்‌ அனுசந்திக்க வேண்டுமென்று உடையவர்‌ இட்ட கட்டளைக்கு ஏற்பவும்‌ அவரது மறு அவதாரமான மணவாள மாமுனிகள்‌ உபதேசித்ததற் கேற்பவும்‌ இந்த இராமானுஜ நூற்றந்‌தாதியை ஒதி ௨ய்வுறுவோமாக.

நயந்தரு பேரின்பமெல்லாம்‌ பழுதென்று நண்ணிதைபால்‌
சுயந்தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணைமேல்‌ உயர்ந்த குணத்தத்‌ திருவரங்கத்தமுது ங்கும்‌ அன்பால்‌ இயம்பும்‌ கலித்துறை யந்தாதி ஓத இசை நெஞ்சமே.

எந்தாதை கூரேசர்‌ இணையடியோன்‌ வாழியே.
எழில்‌ மூங்கிற்குடிவிளங்க இங்கு வந்தோன்‌ வாழியே.
நந்தாமல்‌ எதிராசர்‌ நலம்‌ புகழ்வோன்‌ வாழியே.
நன்மதுர கவிநிலையை நண்ணினோன்‌ வாழியே.
பைந்தாம அரங்கன்‌ பதம்‌ பற்றினான்‌ வாழியே.
பங்குனியில்‌ அத்தநாள்‌ பாருதித்தான்‌ வாழியே.
அந்தாதி நூற்றெட்டும்‌ அருளினான்‌ வாழியே. அணியரங்கத்தமுதனார்‌ அடியிணைகள்‌ வாழியே.

உடையவர்‌ மேல்நாட்டிலே சைவர்கள்‌ மிகுந்திருந்த கோவையூரிலே ஒரு புஷ்கரணியிலே நீரெடுக்கும்‌ துறையிலே முதலியாண்‌டானைத்‌ திருவடி விளக்கி வரச்செய்தார்‌. அந்த ஸ்ரீபாத தீர்த்தப்‌ பிரபாவத்தாலே அவ்வூரார்‌ அனைவரும்‌ எம்பெருமானை ஆஸ்ரயித்தனர்‌. அவ்வூருக்கு ஸ்ரீ சாளக்கிராமம்‌ என்று திருநாமம்‌ வழங்கினார்‌. அங்கிருந்துதான்‌ வடுகநம்பிக்கு தர்ஸநார்த்தங்களை அருளிச்‌செய்தார்‌. வடுநம்பியின்‌ தகப்பனார்‌ பெயர்‌ ஸாலக்ராம ஐயன்‌. பிறந்த நட்சத்திரம்‌ ஸர்வ ஜீத்‌ வருஷம்‌ மாசிப் புனர்பூசம்‌. திருநாமங்‌கள்‌ ஸாலக்ராம ஐயன்‌. வடுக நம்பி பஞ்சமோபாய சம்பந்தர்‌ முதலியன. இவர்‌ 895 வருடம்‌ வாழ்ந்திருந்தார்‌. இவர்‌ பரமஏகாந்தியாய்‌ ஆச்சார்ய அபிமான நிஷ்டராகையாலே இவருக்கு
இருப்பிடம்‌ எம்பெருமானார்‌ சந்நிதியே. வடுகநம்பி எம்பெருமானார்‌ திருவடிகளே உபாயோபேயம்‌ என்று விஸ்வசித்து அவர்‌ திருவடிநிலைகளையே திருவாராதனம்‌
பண்ணிப்‌ போகுவார்‌.-இவ்வாறிருக்கையில்‌ ஒரு நாள்‌ உடையவர்‌
திருவாராதனத்தையும்‌, தன்னுடைய திருவாராதனத்தையும்‌ (வணங்கும்‌ கடவுள்‌) சேர எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு வர உடையவர்‌ கண்டு, ‘வடுகா இது என்‌ செய்தாய்‌ என்ன?” இவரும்‌ உங்கள்‌ தேவரில்‌ எங்கள்‌ தேவருக்கு வந்த குறையென்‌’ என்றார்‌.-வடுகநம்பி உடையவருடன்‌ பெருமாளைச்‌ சேவிக்கப் போனாலும்‌, உடையவர்‌ விக்கிரகத்தையே சேவித்துக் கொண்டு போவார்‌. ஒரு நாள்‌ எம்பெருமானார்‌ பெரிய பெருமாள்‌ திருக்கண்ணழகைப் பாராய்‌ என்ன இவரும்‌ உடையவர்‌ திருக்கண்ணழகையும்‌ பெரிய பெருமாள்‌ கண்ணழகையும்‌ பார்த்து என்னமுதினைக்‌ கண்ட கண்கள்‌, மற்றொன்றினைக்‌ காணாவே என்ன உடையவரும்‌ இதொன்றிருந்தபடி என்‌, என உகந்து பூரண கடாட்சம்‌ செய்தருளினார்‌.-வடுகநம்பி எம்பெருமானார்‌ அமுது செய்தருளி பிரஸாதம்‌ ஸாதித்தால்‌, இரண்டு கைகளாலும்‌ ஏற்றுக்கொண்டு ஸ்வீகாரம்‌ பண்ணித்‌ தம் திருமுடிமிலே கைகளைத்‌ தடவிக்கொள்‌வார்‌. இதைக் கண்டு உடையவர்‌ மிகவும்‌ கோபித்து வடுகா கையைக்‌ கழுவிக்கொள்‌ என்ன கழுவிக் கொண்டு மற்ற நாள்‌ நம்பெருமாள்‌ பிரஸாதத்தை உடையவர்‌ தாமும்‌ ஸ்வீகரித்து இவருக்கும்‌ பிரஸாதிக்க வாங்கி ஸ்வீகரித்து கைகழுவிக் கொண்டார்‌உடையவர்‌ இதைப் பார்த்து என்‌ செய்தாய்‌ என்ன வடுக நம்பி நேற்று அருளிச்செய்தபடி செய்தேன்‌ என்றார்‌. இதைக்கேட்ட உடையவர்‌ வடுகா உமக்குத்‌ தோற்றோம்‌ என்றார்‌. மற்றொரு நாள்‌ வடுகநம்பி உடையவருக்குப்‌ பால்‌ காய்ச்சும்‌ பொழுது, பெருமாள்‌ பெரிய திருநாளில்‌ உடுத்து முடித்துப்‌ பூண்டு புறப்பட்டுவர உடையவரும்‌ நம்பியைத்‌ தம்மோடு பெருமாளை சேவிக்க வருமாறு அழைத்தார்‌. வடுகநம்பியும்‌ உம்முடைய பெருமாளைச்‌ சேவிக்க வந்தால்‌ என்‌ பெருமாளது பாலமுது பொங்கப்‌போகும்‌, வரக்கூடாது என்று கூறினார்‌. வடுக நம்பியகத்தே, பூர்வ சம்பந்திகளாயிருப்பவர்கள்‌ வந்து தங்கிப்போக, அகத்தையெல்‌லாம்‌ சுத்தி பண்ணி, உபயோகித்த பாத்திர பண்டங்களையும்‌ தூர எறிந்துவிட்டுப்‌ பிராயச்சித்தமாக ஸ்ரீ வைஷ்ணவனான முதலியாண்‌டான்‌ புழக்கடையில்‌ கழித்துக்‌ இடந்த பாத்திரங்களைக்‌ கொண்டு போய்‌ ஒரு பக்தனுடைய எச்சில்‌ நமக்குப்‌ பிரசாதம்‌ என்று உபயோகித்தார்‌. இவர்‌ உடையவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தமல்லால்‌ மற்றொருவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தம்‌ கொள்ளார்‌. உடையவர்‌ ஸ்ரீ பாத தீர்த்தத்தை
சாளக்கிராமத்திலே தாம்‌ சேர்த்த தனமாகச்‌ சேமித்து உடையவர்‌ திருவடிகளையே தஞ்சமாகக்‌ கொண்டு தமது சரம தசையிலும்‌ தமக்கு அந்தரங்கரான பந்துக்களுக்கும்‌, தஞ்சமாகக்‌ காட்டிக் கொடுத்து சீர்த்ததனமிது வருந்தியும்‌ பேணிக் கொண்டு போங்கள்‌ என்றுஅடைக்கலங்காட்டிக்‌ கொடுத்தருளினார்‌.

உன்னையொழிய ஒரு தெய்வம்‌ மற்றறியா
மன்னுபுகழ்சேர்‌ வடுகநம்பி தன்நிலையை
என்‌ தனக்கு நீ தந்து எதிராஜா எந்நாளும்‌ உன்தனக்கே ஆட்கொள்‌ உகந்து
: (ஆர்‌.பி.ர 11)

வடுகநம்பி தாம்‌ எழுதிய ஸ்ரீ யதிராஜ வைபவம்‌ என்ற நூலின்‌ இறுதியில்‌; தனது அந்தரங்க சிஷ்யர்களில்‌ ஒவ்வொருவரையும்‌ ஒவ்வொரு கைங்கர்யத்தில்‌ நியமித்த எதிராஜர்‌ மிகவும்‌ தகுதியற்ற என்னையும்‌ தமக்குப் பால்‌ காய்ச்சும்‌ கைங்கர்யத்தில்‌ நியமித்தருளினார்‌. அத்துடன்‌ தம்‌ அடியார்க்கு அடியார்க்கு, அடியார்க்கு அடியனாகவும்‌, தமக்கு நல்லது செய்பவனாகவும்‌ கொண்டு என்‌னையும்‌ ரட்சிக்கிறவரான அவர்‌ பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறார்‌. இறுதியில்‌ பல ஸ்ருதியில்‌ எதிராஜரின்‌ வைபவத்தை விளக்குவதாய்‌, கலியின்‌ குற்றங்களைப்‌ போக்குவதான இந்நூலை எவர்கள்‌ படிக்கிறார்களோ அவர்கள்‌ உபய விபூதி நாயகராவார்கள்‌ என்பது உறுதி என்று நூலின்‌ பயனையும்‌ கூறி முடிக்கிறார்‌.

முதலியாண்டான்‌ திரு அவதார ஸ்தலம்‌, தொண்டை மண்டலத்தில்‌ ஸ்ரீபுருஷமங்‌கலம்‌. திரு நக்ஷத்திரம்‌ ப்ரபவ வருஷ சித்தரை மாதம்‌ 85-ம்தேதி கிருஷ்ண பக்ஷ தஸமி வியாழக் கிழமை, புனர் பூசம்‌, தகப்பனார்‌. ஆனந்த தீஷிதர்‌, தாயார்‌, நாச்சியாரம்மன்‌; குலம்‌- வடமான்‌ வாதூல கோத்ரம்‌. திருநாமங்கள்‌:-தாஸரதி, ராமானுஜன்‌ பொன்‌னடி, ஸ்ரீவைஷ்ணவதாசர்‌, திருமறுமார்பன்‌ முதலியன. குமாரர்‌ -கந்தாடை யாண்டான்‌. ஆசாரியார்‌ – எம்பெருமானார்‌. திருவாராதனம்‌ – அழகிய சிங்கர்‌.-இருப்பிடம்‌. கோயில்‌ பிரபந்தங்கள்‌-அருளிச் செய்தவர்‌ திருத்தகப்பனார்‌. இவர்‌ எம்பெருமானாருக்குத்‌ திருமருமகனாராய்‌, திருவடிகளுமாய்த்‌ த்ரிதண்டமுமாயிருப்பார்‌.-இவர்‌ அருளிய பிரபந்தம்‌ ரஹஸ்யத்ரயம்‌. இவர்‌ கந்தாடை திருவம்‌ ஸத்துக்கெல்லாம்‌ கூடஸ்தர்‌. இவர்‌ 150 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌.-இராமானுஜர்‌ (இளையாழ்வார்‌ சுவாமிகள்‌) சந்யாச தர்மத்தை மேற்கொண்ட பின்னர்‌ வாதூல குலத்து வந்த முதலியாண்டானும்‌, கூரத்தாழ்வானும்‌ அவரை ஆஸ்ரயித்து அவரது சீடர்களானார்கள்‌, முதலியாண்டானைத்‌ தன்னுடைய தண்டமாகவும்‌ கூரத்தாழ்வானைத்‌ தன்னுடைய பலித்ரமாகவும்‌ கருதி ஏற்றுக் கொண்டார்‌ இராமானுஜர்‌. அவர்‌ பதினெட்டு முறை திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாளிகைக்கு அலைந்த பின்னர்‌ அவர்‌ மனமிரங்கித்‌ திருமந்தரத்தை உபதேசிக்கத்‌ தீர்மானித்து நீர்‌ மட்டும்‌ தனியாக வாரும்‌ என்று சொல்லி யனுப்ப உடையவர்‌ முதலியாண்டானையும்‌, ஆழ்‌வானையும்‌ உடன்‌ அழைத்துச் சென்று, ஆண்டானை இவர்‌ என்‌ திரிதண்டம்‌ என்றும்‌ ஆழ்வானை இவர்‌ என்‌ பவித்ரம்‌ என்றும்‌ கூறி அவர்களுக்கும்‌ அப்பேறு கிடைக்குமாறு செய்தமை நமக்குத்‌ தெரிந்ததே. பின்னர்‌ சரமஸ்லோக அர்த்தத்தையும்‌ உபதேசிக்க எண்ணி நீர்‌ ஒருவர்‌ மாத்திரம்‌ வாரும்‌ என்று கூறிட ஆழ்வானுக்கு நான்‌ இதை வெளியிடாதிருக்க முடியாதே என்று கூறவே, நம்பியும்‌ அவரது அத்யாவஸியத்தை (தகுதியை)ப்பரீஷித்தறிந்து உபதேசியும்‌ என்றார்‌. ஆகவே ஆழ்வானின்‌ தகுதியைச்‌ சோதித்து அவரது மாஸோபவாஸம்‌ கடந்த பின்‌ அவ்வர்த்தத்தை உபதேசித்தார்‌. பிறகு முதலியாண்டானும்‌ வந்து தொழுது பிரார்த்திக்க நீர்‌ நம்பி பக்கல்‌ அனுமதி பெற்று வாரும்‌ என்றிட ஆண்டானும்‌ திருக்கோட்டியூர்‌ சென்று ஆறுமாத காலம்‌ அவருக்கு அடிமை செய்து காத்திருந்தும்‌, பெறாமையால்‌ வருந்தி, ஒருநாள்‌ நம்பியை உபதேசம்‌ செய்யுமாறு கனக்கப்‌ பிராத்திக்கைமில்‌, முக்குறும்பும்‌ போனால்‌ எம்பெருமானார்‌ தாமே பிரஸாதிப்பார்‌-போய்க் கேளும்‌ என்று விடை கொடுத்து அனுப்பிவிட ஆண்டானும்‌ மிக ஆவலோட எம்பெருமானாரிடம்‌ யாசித்த பின்னர்‌ மிகவும்‌ மகிழ்வோடு ஆண்டானுக்கு அதை உபதேசித்தருளினார்‌.-எம்பெருமானார்‌ வடநாட்டு யாத்திரை சென்ற பொழுது அவரது யாத்ரா சகாவாக உடன்‌ சென்றவர்‌ முதலியாண்டான்‌. அவர்கள்‌ யாத்திரையின் போது வஹ்நி புஷ்கரிணியாகிற கிராமத்திற்குச்‌ சென்று தங்கிவிட்டு, அருகிலுள்ள மிதிலாபுரி சாளக்கிராமத்துக்குச்‌ சென்ற பொழுது அவ்வூர்‌ ஜனங்கள்‌ அனைவரும்‌ பிரச்சந்த விரோதிகளாகையாலே (வேறு மதத்தவர்கள்‌ உடையவரை ஆதரிக்கவில்லை. உடையவர்‌ முதலியாண்டானிடம்‌, நீர்‌ போய்‌ அவ்வூரார்‌ நீர் முகக்கும்‌ துறையிலே உம்முடைய ஸ்ரீபாதத்தை நீட்டிக்‌ கொண்‌டிரும்‌ என்று சொல்ல, அவரும்‌ அப்படியே செய்ய, அவரது ஸ்ரீபாத தீர்த்த விசேஷத்தால்‌ மக்கள்‌ மனம்‌ தெளிந்து உடையவரிடம்‌ வந்து ஆஸ்ரயித்தனர்‌. இவரது பெருமையை விளக்கும்‌ மற்றொரு சம்பவம்‌ வடுகநம்பியின்‌ செயலாகும்‌. அதை நாம்‌ வடுக நம்பி வைபவத்திலேயே கண்டோம்‌.
எதிராஜருடைய பாதுகைகள்‌ எவருடைய பெயராலே (முதலியாண்டான்‌ என்று) வழங்கப்படுகின்றனவோ, தாஸரதி என்னும்‌ திருநாமமுடைய அந்த முதலியாண்டானின்‌ திருவடிகளை யான்‌ தலையிலே தரிக்கிறேன்‌ என்கிறார்‌ குரு பரம்பராப்‌ பிராமணத்திரட்டு என்ற நூலின்‌ ஆசிரியர்‌.ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையில்‌ கூரத்தாழ்வானை யடுத்து வருபவர்‌ முதலியாண்டானாகும்‌.

அத்தகிரி யருளாள ரடிபணிந்தான்‌ வாழியே.
அருட்‌ பச்சை வாரணத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே.
சித்திரையிற்‌ புனர்பூசம்‌ சிறக்க வந்தான்‌ வாழியே. சீபாடிய மீடுமுதல்‌ சீர்‌ பெறுவோன்‌ வாழியே.
உத்தமமாம்‌ வரதூலம்‌ உயர வந்தான்‌ வாழியே.
ஊர்‌ திருந்தச்‌ சீர்பாத மூன்றினான்‌ வாழியே.
முத்திரையும்‌ செங்கோலும்‌ முடிபெறுவோன்‌ வாழியே.
முதலியாண்டான்‌ பொற்பதங்கள்‌ ஊழிதோறும்‌ வாழியே.

எம்பெருமானாரது சகோதரியின்‌ புதல்வரான ஸ்ரீவத்ஸ கோத்‌தரத்தில்‌ வந்த வரத விஷ்ணு என்னும்‌ பெயர்‌ கொண்ட நடதாராழ்‌வான்‌, எம்பெருமானாரது எழுபத்து நான்கு ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸ னாதிபதிகளில்‌ ஒருவர்‌. அணுவான ஆத்ம ஸ்வரூபம்‌ முக்தி தசையில்‌ விபுவாகி விடுகிறது என்ற இவரது வாதத்தை அதிவாதம்‌ என்று வேதாந்த தேசிகர்‌ கூறியுள்ளார்‌. எம்பெருமானார்‌ சிஷ்யர்களி டையிலேயே சில கருத்து வேற்றுமைகள்‌ உண்டென்பதும்‌ அதை எம்பெருமானாரே தடை செய்யாமல்‌ விட்டிருந்தார்‌ எனவும்‌தேசிகர்‌ அருளியுள்ளார்‌.

திருவெள்ளறையில்‌ ஸ்ரீ விஷ்ணு சித்தர்‌ என்ற பெயருடன்‌ சித்தரை ரோஹினியில்‌ அவதரித்தவர்‌ இவர்‌. கூரத்தாழ்வான்‌ கண்ணை இழந்த பின்பு அவருக்குப் பதிலாக, ஸ்ரீபாஷ்யத்தின்‌ எஞ்சிய பகுதியை எம்பெருமானார்‌ எழுதி முடிக்க உறு துணையா யிருந்தவர்‌. இவர்‌ ஆழ்வாரைப் போலவும் கூரத்தாழ்வானைப் போலவும் அறிவாளியாயிருந்ததால்‌ உடையவர்‌ ‘எங்கள்‌ ஆழ்வானோ’ என்று அபிமானித்தார்‌ என்பது கர்ண பரம்பரைச் செய்தி.

“இன்னவாறு திருப்பதிகள்‌ எங்கும்‌ வாழ்வித்து எதிராஜன்‌
தன்னதாக்கித்‌ தரிசனமும்‌ தரணியெங்கும்‌ விளங்குவித்து
முன்னமுரைத்த பாடியத்தின்‌ முற்றமூன்றத்‌ தொருகூறு
தன்னைச்‌, சென்றாண்டாயிரந்தாங்‌ கெழுபத் தேழில் -சாற்றினான்
-என்று ராமானுஜர்‌ மேல்‌ நாட்டிலிருந்து திரும்ப வந்து ஏழெட்டு வருடங்கள்‌ கழிந்த பின்பே ஸ்ரீ பாஷ்யத்தில்‌ மூன்றிலொரு பகுதியைப் பூர்த்தி செய்தார்‌ என்று குறித்திருப்பது கர்ண பரம்பரைச் செய்தியை வலியுறுத்துகிறது-74-ஸிம்ஹஸனாதிபதிகளில்‌ இவரும்‌ ஒருவர்‌. இவர்‌ மணிப் பிரவாள நடையில்‌ எழுதிய ஸர்வார்த்த சதுஷ்டயம்‌ வார்த்தாமாலையில்‌ உள்ளது. நடதூராழ்வானது பேரரான வாத்ஸ்ய வரதாசார்யார்‌ என்னும்‌ நடதூரம்மாள்‌ இவருடைய சிஷ்யர்களில்‌ முதன்மை யானவர்‌.நடதூராழ்வான்‌, நடதூரம்மாளுக்குத்‌ தக்கபடி காலட்சேபம்‌
சொல்லுவது தம்மால்‌ இயலாது என்பதை உணர்ந்து, திருவெள்ளறைக்கு எங்களாழ்வானிடம்‌ பாடம்‌ கேட்க அனுப்பினார்‌. ஆனால்‌ எங்களாழ்வான்‌, ‘நான்‌ என்னும்‌ அகங்காரம்‌ செத்த பின்‌ வா, என்றும்‌ எனக்கு சரம கைங்கர்யம்‌ (அந்திம காலச்சடங்கு) செய்ய உன்‌ தாய்‌ தந்தையர்‌ அனுமதி தர வேண்டும்‌ என்றும்‌ பலமுறை திருப்பி அனுப்பிய பின்‌ தாய்‌ தந்தையர்‌ அனுமதி பெற்று எங்களாழ்‌வானிடம்‌ நீண்ட நாட்கள்‌ திருவெள்ளறையிலேயே தங்கி இருந்து ஸ்ரீ பாஷ்யார்த்தங்கள்‌ அனைத்தையும்‌ கற்றார்‌. இவ்வாறு அம்மாளுக்கு ஆச்சார்யரானபடியாலே அம்மாளாசார்யார்‌ என்றழைக்கப்‌பட்டார்‌. எங்களாழ்வான்‌. இன்றும்‌ அப்பட்டத்தால்‌ அந்தவம்சத்தினர்‌ அழைக்கப்படுகின்றனர்‌.
எங்களாழ்வான்‌ எம்பெருமானாரை விட மிகவும்‌ இளையவராக இருக்க வேண்டும்‌. இவர்‌ நூறு வயதுவரை வாழ்ந்திருந்தார்‌.
கி.பி. 12-ம்‌ நூற்றாண்டின்‌ பெரும்பகுதி வாழ்ந்தவராதலால்‌ நம்‌பிள்ளை காலம்‌ வரை இவர்‌ வாழ்ந்திருந்ததாகக்‌ கூறப்படுகிறது.-சகல சாஸ்திரங்களும்‌ வல்லவர்‌ எங்களாழ்வான்‌ என்று நம்பிள்ளை அருளியதாகக் கூறுவர்‌. எங்களாழ்வானது கடைசிக் காலத்தில்‌ அவரது பூட்டனான வரதாசாரியார்‌ என்பவரை ஸ்வீகார புத்திரராக்கி நடாதூரம்மாள்‌ சகல அர்த்தங்களையும்‌ கற்பித்து வந்தார்‌.

எம்பெருமானாரது சிஷ்யர்களில்‌ ஒராண் வழிக் குரு பரம்பரையில்‌ இடம்‌ பெறுபவர்‌ எம்பார்‌ ஒருவரே. எம்பெருமானாருக்குப்‌ பின்‌ திருவரங்கத்தில்‌ தர்சன நிர்வாகராயிருந்து தமது சிஷ்யரான பட்டரிடம்‌ அதை ஒப்பித்தவர்‌ எம்பாரே யாவார்‌. எம்பெருமானார்‌
அவதரித்து எட்டு வருடங்களுக்குப் பின்‌ குரோதன வருஷத்தில்‌ கி.பி. 1026-ல்‌ ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த வட்ட மணிக்குடியில்‌ உடையவரது சிறிய தாயாரான பெரிய பிராட்டி ஸ்ரீதேவிக்கும்‌ அவரது கணவர்‌ கமலநயன பட்டருக்கும்‌ குமாரராக கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமத்துடன்‌ அவதரித்தவர்‌ எம்பார்‌. இவர்‌ அருளிய பிரபந்தம்‌ விஜ்ஞானஸ்துதி என்பது-நல்லொழுக்கமுடையவராய்‌, எம்பெருமானாரது சகமாணவராய்‌ இருந்த கோவிந்த பட்டரும்‌ யாதவப்‌ பிரகாசனுடைய கெட்ட எண்ணத்தை நடுக்காட்டில்‌ ராமானுஜருக்கு அறிவித்து அவரை நிறுத்தித்‌ தாம் மட்டும்‌ யாதவரோடு யாத்திரை செல்லும்‌ கோஷ்டியோடு தொடர்ந்து சென்றார்‌ என்ற விபரம்‌ முன்னரே கூறப்பட்டது.
யாதவாது மந்திர சக்திக்குக்‌ கட்டுப்பட்ட கோவிந்தரும்‌ கங்கையில்‌ நீராடும்பொழுது தமது உள்ளங்கையில்‌ சிவலிங்கத்தைப்‌ பெற்றவராய்‌ தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச்‌ சென்று அந்த லிங்கத்தைப்‌ பிரதிஷ்டை செய்து காளஹஸ்தி சென்று அங்குள்ள
சிவாலயக்‌ கைங்கர்யங்களில்‌ ஈடுபட்டவராய்‌ வசித்து வந்தார்‌ என்பதையும்‌ முன்னரே கண்டோம்‌.-இராமானுசருடைய பிரார்த்தனைக்கு இரங்கி அவருடைய மாதுலரான பெரிய திருமலை நம்பி காளஹஸ்திக்குச்‌ சென்று இவரை மறுபடியும்‌ வைஷ்ணவராகத்‌ திருத்தினார்‌. இவ்வாறு திருந்திய ஸ்ரீ கோவிந்தப் பெருமாள்‌ திருமலைநம்பி திருமாளிகையில்‌ சகல கைங்கர்யங்களும்‌ செய்து வந்தார்‌.-ஒருநாள்‌ நம்பிக்குப்‌ படுக்கை விரித்து அதில்‌ முதலில்‌ தாம்‌படுத்துறங்குவதைக் கண்ட எம்பெருமானார்‌ அவரது அடாத
செயலை நம்பிக்குத்‌ தெரிவிக்க அவர்‌ கூப்பிட்டு விசாரித்த பொழுது, கோவிந்தர்‌ ஆசார்யரது அபசாரத்திற்காகத்‌ தனக்கு நரகமே கிடைததாலும்‌ தேவரீர்‌ திருமேனியில்‌ ஒன்றும்‌ ஊறுதல்‌, உறுத்தல்‌ செய்யக் கூடாது என்று எண்ணினேன்‌ என்றார்‌. அவரது ஆச்சார்ய பக்தியைக் கண்டு எல்லோரும்‌ வியந்தனர்‌. மற்றொரு நாள்‌ உடையவர்‌ நம்பியின்‌ நந்தவனத்தில்‌ உலவி வந்த சமயம்‌ ஓரிடத்திலே கோவிந்தப் பெருமாள்‌ ஒரு பாம்பின்‌ வாயிலே கையிட்டு, அதன்‌ நாக்கில்‌ இருக்கும்‌ முள்ளை எடுத்து விட்டு நீராடி ஏனைய கைங்கர்‌யத்தைச்‌ செய்தார்‌. இராமானுசரும்‌ அவரது பூத தயை கண்டு
வியந்து மகிழ்ந்தார்‌. எம்பெருமானார்‌ முதல்முறை திருமலைக்குச்‌ சென்ற போது கோவிந்தரைத்‌ தானமாகப்‌ பெற்றுத்‌ தம்‌ சிஷ்யராக அழைத்துச்‌ சென்றார்‌. அவ்வாறு அவர்கள்‌ திரும்பி வரும் வழியில்‌ கடிகாசல மேறி மிக்கார்‌ வேத விமலர்‌ விரும்பும்‌ ௮க்காரக்கனியையும்‌ சேவித்துக் களித்து மீண்டும்‌ திருக்கச்சி நம்பி, ஸந்நிதியில்‌
எழுந்தருளியிருந்தார்‌. கோவிந்தரை அழைத்துக் கொண்டு திருவரங்கம்‌ செல்லும்‌ போது வழியில்‌ கோவிந்தரது முகம்‌ வாடி வெளுத்திருப்பதை கண்டு திருமலை நம்பியைப்‌ பிரிந்து வந்ததின்‌ விளைவு ஈதென்று அனுமானித்து, திரும்பவும்‌ அவரைப் போய்ச்‌ சேவித்து வாரும்‌ என்று கோவிந்தரைத்‌ துணையோடு திருமலை நம்பியிடமே அனுப்பி வைத்தார்‌. ஆனால்‌ திருமலை நம்பி அவரை வர விடாமல்‌ விற்ற பசுவுக்குப்‌ புல்லிடுவாருண்டோ, பித்தனைப் போகச்‌ சொல்‌லுங்கள்‌ என்று சொல்லித்‌ தாம்‌ முகம்‌ கொடாமல்‌ வெறுத்து அனுப்பி விட்டார்‌. ஆகவே நம்பியைக் காணும்‌ ஆசையைத்‌ துறந்து சிறிதும்‌ தாமதிக்காமல்‌ எம்பெருமானாரிடம்‌ திரும்பி, அவர்‌ காலடியே தஞ்சமென்று விழுந்து கிடக்க, நடந்ததை யெல்லாம்‌ கேட்டறிந்த உடையவர்‌, நம்பி நம்‌ நினைவறிந்து நடந்து கொண்‌டாரே என்று வியந்து உகந்தார்‌. கோவிந்தரை எடுத்தணைத்துக் குளிர நோக்கி உடன்‌ அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம்‌ சென்றடைந்து பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ சேவித்து மகிழ்ந்தார்‌ உடையவர்‌.திருவரங்கத்தில்‌ உடையவரையே தமக்கு மாதா, பிதா, ஆசார்யன்‌ தெய்வம்‌ எல்லாமாகக்‌ கொண்டு அவர்‌ திருமேனி யழகிலும்‌ ஆத்மகுணங்களிலும்‌ ஈடுபட்டு அவருக்கு ஆட்செய்வதையே பணியாகக்‌ கொண்டு வாழ்ந்து வரலானார்‌ கோவிந்தர்‌. கோவிந்தருடைய ஞானம்‌ ஆசார்ய பக்தி வைராக்யம்‌ (பற்‌றின்மை) முதலான பண்புகள்‌ நாளுக்கு நாள்‌ வளர்ந்து வரவே கண்டவர்‌ யாவரும்‌ அவரை நேருக்கு நேராகவே கொண்டாடிப்‌ பேசினார்கள்‌. அவரும்‌ இவை யாவும்‌ ஒக்கும்‌ ஒக்கும்‌ என்று தம்மைத் தாமே மெச்சிக் கொண்டார்‌. இதைக் கண்ட உடையவர்‌ “பலரும்‌ உம்மைப்‌ பாராட்டினால்‌’ நீர்‌ நைச்சிய வார்த்தை (தகுதியின்மை) தாழ்மை தெரிவிப்பது) சொல்லாமல்‌, உம்மை நீரே போற்றிக் கொள்ளுதல்‌ தகுமோ என்று கேட்க அவர்‌ ‘ஐயோ அவர்கள்‌ அடியேனைக்‌ கொண்டாடுவதென்றால்‌ காளஹஸ்தியில்‌ சிவ வேடத்தில்‌ இருந்த பொழுது கொண்டாடினால் தான்‌ என்னைக்‌கொண்டாடியதாகும்‌. ௮டியேனைத்‌ திருத்திப்‌ பணிக் கொள்ள தேவரீர்‌ பண்ணிய கிருஷி பலனை (சுபமான எண்ணம்‌, அதற்கேற்றசெயல்‌ இவற்றின்‌ பயன்‌) கொண்டாடுபவை யன்றோ? இதை அடியேனும்‌ சேர்ந்து நன்றிப் பெருக்கோடு கொண்டாடுவதன்றோ முறை என்றார்‌. இதைக் கேட்ட உடையவர்‌ மகிழ்ந்து உமது உயர்ந்த ஆத்ம குணங்கள்‌ நமக்கும்‌ படியும்படி உமது நெஞ்சினால்‌நம்மை அணைத்துக் கொள்வீர்‌ என்று கூறித்‌ தம்பியை வாரி யெடுத்து அணைத்துக் கொண்டு அதனால்‌ தாம்‌ தூய்மை பெற்றதாகக்‌ கருதினார்‌ இராமானுஜர்‌-ஒருநாள்‌ திருவரங்கத்து வீதி ஒன்றில்‌ ஒரு (தேவதாசி) அடியாள்‌ வீட்டு வாசலில்‌ கோவிந்தர்‌ தம்‌ வேலைகளைப்‌ புறக்கணித்து விட்டு நெடுநேரம்‌ நின்று உள்ளிருந்து வந்த இனிமையான குரலில்‌
அமைந்த இராமானுசரது தாலாட்டைக் கேட்டு மெய்மறந்திருந்தார்‌.-இவரைத்‌ தப்பாகப்‌ புரிந்து கொண்டவர்கள்‌ இந்நிகழ்ச்சியை உடையவருக்குத்‌ தெரியப்படுத்தினர்‌. கோவிந்தரை அழைத்துவிசாரித்து உண்மையைத்‌ தெரிந்துகொண்டவர்கள்‌ அவரது யதிராஜ பக்தியைக்‌ கண்டு வியந்து கொண்டாடினர்‌. இந்த நிலை நாளுக்கு
நாள்‌ முதிர்ந்து வந்தது. இராமானுஜர்‌ குணானுபவமும்‌, அவர்‌ திருமேனி யழகில்‌ ஈடுபாடும்‌ கோவிந்தருக்கு உண்ணும்‌ சோறு, பருகும்‌ நீர்‌, தின்னும்‌ வெற்றிலை எல்லாம்‌ என்ற நிலை நாளுக்குநாள்‌ முதிர்ந்தது.
எம்பெருமானார்‌ வடிவழகில்‌ ஈடுபட்ட எம்பார்‌ எழுதியபாசுரம்‌
பற்பமெனத்‌ திகழ்‌ பைங்கழலுன்றன்‌ பல்லவமே விரலும்‌
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்‌
முப்புரி நூலோடு முன்கையிலேந்திய முக்கோல்‌ தன்னழகும்‌
முன்னவர்‌ தந்திடு மொழிகள்‌ நிறைந்திடு முறுவல்‌நிலாவழகும்‌
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக்க ண்ணழகும்‌,
காரி சுதன்‌ கழல்‌ சூடிய முடியும்‌ கனக நற்சிகை முடியும்‌,
எப்பொழுதும்‌ எதிராசன்‌ வடிவழகென்னிதயத் துளதால்‌
இல்லையெனக்கெதிரில்லையெனக்கெதர்‌ இல்லையெனக்‌கெதிரே.
–என்பதாகும்‌.
கோவிந்தர்‌ இராமானுசன்‌ மிக்க சீலமல்லால்‌ உள்ளாது என்‌ நெஞ்சு என்றபடியே வாழ்ந்து வருகையில்‌ அவரது தாயார்‌ கோவிந்தா, நம்‌ குடும்பம்‌ விளங்க மாட்டுப் பெண்‌ வாழ ஒரு குழந்தை வேண்டாமோ என்று கேட்க, அவரும்‌ தான்‌ தனியாய்‌ இருக்கும் போது அவகாசம்‌ பார்த்து அவளை அனுப்பி வையும்‌ என்றார்‌. தாயார்‌ பல நாள்‌ காத்திருந்தும்‌ அப்படியொரு அவகாசம்‌ காணாமையாலே உடையவரிடம்‌ முறையிட்டாள்‌. உடையவர்‌ தம்பியை அழைத்து ‘கோவிந்தரே நம்‌ ஆணை. நல்ல வேளையில்‌ மனையாளுடன்‌ கிருஹஸ்த தர்மம்‌ நடத்துவீராக என்றார்‌. கோவிந்‌தரும்‌ தம்‌ மனையாளை அழைத்து ஓரிரவு பூராவும்‌ அவளுக்கு அந்தர்யாமியான பகவானைக்‌ காட்டித்‌ தந்து பகவத்‌ குணானுபவத்‌தைப்‌ பண்ணி வைக்க வேறு எதற்கும்‌ வாய்ப்பில்லாமல்‌ போயிற்று. இவ்விருப்பை மருமகள்‌ சொல்லி யறிந்த தாயார்‌ மகனிடம்‌ தம்‌ விருப்பம்‌ நிறைவேறாமைக்கு வருத்தப்பட அவரும்‌
அந்தர்யாமி ஒளிவிட்டு விளங்க அழிச்சாட்டம்‌ கூடவில்லையே என்று கூறி விட்டதால்‌ மீண்டும்‌ உடையவரிடமே முறையிட்டாள்‌. அவரும்‌ தம்பியை அழைத்து விசாரிக்க இவரும்‌ அந்தர்யாமி
பிரகாசிக்கும்போது இதற்கு இருட்டேது? தனிமை யேது? அடியேன்‌ செய்யக்கடவது என்‌ என்றார்‌.ஆச்சாரியரும்‌ இவரது பற்றற்ற நிலை கண்டு மகிழ்ந்து உமக்கு
விஷயாந்திர விரக்தி இந்த அளவுக்கு உள்ளதாகில்‌ உத்தமாஸ்ரமம்‌ தானே (துறவுநிலை) கைக்கொள்ளும்‌ என்று நியமித்து, அவருக்குத்‌ திரிதண்டம்‌ காஷாயங்களை யணிவித்து, தம்மைப் போன்றே முக்‌கோற் பகவராக்கி யருளினார்‌. அப்புதிய துறவிவிக்கு எம்பெருமானார்‌ என்று தமது பெயரையே தாஸ்ய நாமமாகச்‌ சூட்டினார்‌.
பெயரைப்‌ பெற்றவரோ இத்திருநாமம்‌ அடியேனால்‌ சுமக்க முடியாது. சுவாமிக்கு நிழலும்‌ அடி தாறுமாய்‌ உள்ளவனுக்கு பொருந்தும்படி பெயரருள வேண்டும்‌ என்று வேண்‌ட சுவாமியும்‌ அப்பெயரைச்‌ சுருக்கி ‘எம்பார்‌’ என்று பெயரைச் சூட்டினார்‌. பின்னர்‌ எம்பார்‌ கூரத்தாழ்வான்‌ குமாரரான பராசர பட்டருக்கு ஆசாரியராகி பட்டரால்‌ அருளுப்பட்ட பின் வரும்‌ தனியனைப்‌ பெற்றார்‌.
“ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வாக பாயிநீ
த்தாயத்ததஸ்வ ரூபாஸகஜீயாத் மத்விச்ர மஸ்தவி’

எம்பெருமானார்‌ என்ற பெயரைச்‌ சுருக்கிப்‌ பெற்ற திருநாமத்தை எம்பார்‌ எமக்கு இளைப்பாறுமிடம்‌’ என்று பொருள்‌ கொண்டு“மத்‌ விச்ரமஸ்‌ தவீ” என்று தனியனிட்டது பட்டரின்‌ மாமேதைக்கு எடுத்துக் காட்டாகும்‌. அந்தர்யாமி பிரகாசித்துக்‌ கொண்டிருக்கையில்‌ அழிச்சாட்டம்‌ கூடுமா என்று எம்பார்‌ கூறியது முழுதும்‌ உண்மை யென்று உடையவர்‌ மற்றவர்களுக்குக்‌ காட்ட விரும்பிச்‌ செய்த செயல்‌ குருபரம்பரைச்‌ செய்திகளில்‌ கூறப்பட்டுள்ளது. கோவிந்தர்‌ முன்னிரவக்கமித்த ஓர்‌ இருட்டறையில்‌ ஒரு ஊசியை எறிந்துவிட்டு அங்குள்ள ஊசியைக்‌ கொண்டு வாருங்கள்‌ என்று சிஷ்யர்களுக்குக்‌ கட்டளை இட அவர்களால்‌ ஒளிமிக்க விளக்குடன்‌ சென்று தேடியும்‌ ஊசி இடைக்க வில்லையாம்‌. பின்னர்‌ கோவிந்தரை அழைத்து அவ்வறையில்‌ தரையில்‌ ஏதாவது பொருள்‌ இருந்தால்‌ எடுத்து வாரும்‌ என்று அனுப்ப அவர்‌ கையில்‌ விளக்கேதுமில்லாமலேயே சென்று அங்கு ஊசியிருக்கக்‌ கண்டு எடுத்து வந்து ‘இதுவே அங்கு தரையில்‌இருந்தது என்று கொடுத்தாராம்‌.-அந்தர்யாமியான எம்பெருமான்‌ ஒளி விட்டுப்‌ பிரகாசித்ததால்‌ அவ் வூசியை அவரால்‌ எளிதில்‌ கண்டு பிடிக்க முடிந்தது.-ஆச்சாரியார்‌ தமக்குத்‌ துணையாக சைவத்தனின்றும்‌ மீட்டுக்‌கொண்டு வரப்பட்ட இவரைக்‌ கொண்டாரென்றும்‌ ஸ்வாமிக்கு அணுக்கராய்‌ பல குற்றேவல்களை இவர்‌ புரிந்திருந்தார்‌ என்றும்‌ ஊஹிக்கிறோம்‌.-எம்பெருமானாருக்கும்‌ இவருக்கும்‌ நெருங்கிய தொடர்பு இருந்தது. எதிராஜர்‌ அமுது செய்ததும்‌ நூறு அடி நடப்பதுஎன்ற பழக்கத்தைக்‌ கொண்டவர்‌. இப்படி உலாவுகையில்‌ ஸ்வாமி ஆழ்வார்களின்‌ பாசுரங்களை மனதில்‌ அனுசந்திப்பது வழக்கம்‌.-ஒருநாள்‌ வழக்கமாகச்‌ செல்லும்‌ தூரம்‌ செல்லாமல்‌ சடக்கெனத்‌ திரும்பக் கண்ட எம்பார்‌ திருமாலிருஞ் சோலையாகாதே திரு ௨ள்‌ளத்தில்‌ ஓடுவது என்றாராம்‌. மடித்தேன்‌ மனை வாழ்க்கையினில்‌ நிற்பதோர்‌ மாயையை என்று சொல்லி மடித்தேன்‌ என்று திரும்ப
இந்தப் பாசுரம்‌ சுவாமி மனதில்‌ ஓடுகின்றது என்று கண்டு கொண்ட செய்தி அதிசயமாக இருக்கிறது.-சரணாகதி கத்யம்‌ எம்பெருமானாருக்கும்‌ எம்பெருமானுக்கும்‌ நடந்த உரையாடலாக அமைந்துள்ளது. எக்காலமும்‌ தேவரீருக்கடிமை செய்திருப்பவனாக வேண்டும்‌ என்று எம்பெருமானார்‌ வேண்டிட; என்றும்‌ எனக்காட் செய்பவராக இருப்பீராக. ‘த்வயத்‌தை அர்த்தத்துடன்‌ அனுசந்தித்துக் கொண்டு இத் திருவரங்கத்தே இனிதிரும்‌ என்று பெருமாள்‌ ஸ்வாமியை நியமித் தருளியதாகத்‌ தெரிகிறது. இப்படிப்‌ பெரிய பெருமாள்‌ அருளிச் செய்தார்‌ என்‌பதை நாங்கள்‌ நம்புவது எப்படி என்று எம்பார் கேட்க, எனக்குப்‌ பெரிய பெருமாள்‌ தனது சவ்லப்யாதி குணங்களை கையில்‌ நெல்லிக்கனியாகக்‌ காட்டித்தந்து அவர்‌ சொல்லிக்கச்‌ சொன்ன வார்த்தையாகையாலே அவர்‌ அருளிச் செய்த வார்த்தை என்று எடுத்துக் கொள்ளத்‌ தடையில்லை என்று எம்பெருமானார்‌ அருளினார்‌. எம்பாருக்கு
உடையவர்‌ திருவாக்கில்‌ நம்பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை. நம்‌ போல்வார்‌ நெஞ்சில்‌ தோன்றும்‌ ஐயப்பாட்டை ஸ்வாமி திருவாக்கைக்‌ கொண்டே போக்க வேண்டுமென்றேஎம்பார்‌ இக் கேள்வியைக்‌ கேட்டிருக்க வேண்டும்‌. சாமான்யமாக ஒரு சிஷ்யன் தன்‌ ஆச்சாரியரைக்‌ கேட்கக்‌ கூடாத கேள்வியை எம்பார்‌ இங்கு கேட்டிருக்கிறார்‌. எந்த அர்த்தத்‌தையும்‌ ஆச்சார்யர்‌ மூலமாய்‌ வெளியிட்ட பெரியோர்கள்‌ பாங்கறிந்து பின்பற்றத்தக்கது. எம்பார்‌ திருவாக்கான பாசுரம்‌ ஒன்று
எங்கள்‌ கதியே இராமானுசமுனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்‌ மங்கையர்‌ கோனீந்த மறையாயிரமனைத்தும்‌ தங்கு மனம்‌ நீ எனக்குத் தா-என்ற பாசுரத்தைப் போலவே எம்பாரின்‌ பிரிய சிஷ்யர்‌ பட்டர்‌ திருவாய்மொழி தங்கு மனத்தை எம்பெருமானாரிடத்தில்‌ வேண்‌டிப்‌ பாசுரம்‌ சாதித்துள்ளது, ஏய்ந்த பெருங்கீர்த்தி…..
என்பது இவர்கள்‌ கருத்தில்‌ ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ஆச்சாரியரான உடையவர்‌ அருளினால் தான்‌ மனதில்‌ தரிக்க முடியும்‌ என்பது தெரிூறது.-முன்பொருகால்‌ ஆழ்வார்‌ திருநகரியில்‌ ஒரு சலவைத்தொழிலாளி தன்‌ குழந்தைகளைத்‌ தனித் தனியே சடகோபா, காரிமாறா ,குருகூர் நம்பி என்று நம்மாழ்வாரின்‌ இனிய பெயர்களை யிட்டு,
அழைத்ததைக் கேட்ட உடையவர்‌ தமக்கு இந்தப் பாக்கியம்‌ கிடைக்‌வில்லையே என்று நினைத்து வருந்தியதாகச்‌ சொல்வதுண்டு.-அது போலவே “இராமானுஜ பதச்‌ சாயா’ என்று ராமானுஜரின்‌ நிழலும்‌ அடி தாறுமான எம்பார்‌ ராமானுஜர்‌ என்றழைத்து அந்த
நாமத்தின்‌ அமுதச்‌ சுவையைப்‌ பருக தனக்கு ஒரு சிறுவன்‌ இல்லையே என்று ஏங்கினாராம்‌. இவ் விஷயத்தைக்‌ கேள்விப்‌பட்ட இராமானுஜர்‌ எம்பாரை அழைத்து, அழகான திருவாழி, திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால்‌ அலங்கரிக்கப்பட்ட தம்முடைய உப பாத்திரத்தை (பஞ்ச பாத்திரம்‌) அவருக்குத்‌ தந்தருளி இத்தை நமது பெயரால்‌ அழைப்பீராக! என்று நியமிக்க எம்பார்‌
அப்பாத்திரத்தை நிதி எனப்பெற்று அதை இராமானுஜன்‌ என்று அழைத்து வரலானார்‌. அது முதலாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் தாம்‌ கையாளும்‌ உபபாத்திரத்தை ராமானுஜன்‌ என்றே அழைத்து வருகின்றனர்‌.-நம்‌ பெருமாள்‌ நம்‌ மணவாளமாமுனிகளுக்கிட்ட தனியனில்‌
ஸ்வாமியை ‘தீபக்யாதி குணார்ணவம்‌’ என்று போற்றுகிறார்‌.-ராமானுஜர்‌ உட்பட பூர்வாசாரியார்கள்‌ அனைவரும்‌ மெய்யறிவு, பகவான்‌ மற்றும்‌ ஆச்சாரியார்களிடம்‌ அளவு கடந்த பிரேமை,விஷய வைராக்யம்‌ முதலான குணங்களைக்‌ கடல் போன்று பெற்‌றுள்ளவர்கள்‌. எம்பெருமானார்‌ எம்பாருக்கு அறிய வேண்டிய அர்த்தங்களை யெல்லாம்‌ தாமே புகட்டினார்‌. கூரத்தாழ்வானுக்கும்‌,
முதலியாண்டானுக்கும்‌ எம்பெருமானார்‌ அவர்கள்‌ தகுதியைச்‌ சோதித் தறிந்த பின்னரே உபதேசம்‌ பண்ணினார்‌. ஆகவே அவர்கள்‌ அதைப் பெற அரும்பாடு பட வேண்டியதாயிற்று . ஆனால்‌ எந்தவிதமான சிரமமும்‌ வைக்காமல்‌, எவ்விதச்‌ சோதனைகளுக்கும்‌ உள்‌ளாக்காமல்‌ தாமே எம்பாருக்கு உபதேசித்தார்‌-மேலும்‌ ஆண்டான்‌ ஆழ்வானுக்கில்லாத ஒரு தனிப் பெருமையும்‌ எம்பாருக்கு உண்டு. ஓராண் வழி ஆச்சார்ய பரம்பரையிலன்‌வயம்‌
லஷ்மி நாத ஸமாரம்பாம்‌ நாத யாமுந மத்யமாம்‌
அஸ்மதாசார்ய பர்யந்‌தாம்‌ வந்தே குரு பரம்பராம்‌-என்று ஆழ்வான்‌ அருளிய பிரசித்தமான தனியன்‌, திருமகள்‌
கேள்வனான, பெரிய பெருமாள்‌, பெரிய பிராட்டி, சேனை முதலியார்‌, நம்மாழ்வார்‌, நாத முனிகள்‌, உய்யக் கொண்டார்‌, மணக்கால்‌நம்பி, ஆளவந்தார்‌ பெரிய நம்பி எம்பெருமானார்‌ எம்பார்‌ என்று ஆழ்வான்‌ அனுசந்திக்கும்‌ ஆசார்ய பரம்பரையில்‌ இடம்‌ பெறுகிறார்‌ எம்பார்‌.-அருளிச்செயல்‌ வியாக்யானங்களில்‌ பலப் பல இடங்களில்‌
பட்டர்‌ நிர்வாஹம்‌ என்று மிகவும்‌ சுவையான பொருள்கள்‌ காட்டப்பட்டுள்ளன. இவற்றுக்குத்‌ தோற்றுவாய்‌ பட்டரின்‌ ஆச்சாரியராக எம்பெருமானாரால்‌ நியமிக்கப்பட்ட எம்பாரும்‌, திருத்‌தகப்‌பனாரான கூரத்தாழ்வானுமே யாகும்‌. ‘எம்பார்‌ நிர்வாஹம்‌’ என்று திவ்யப் பிரபந்த வியாக்யானங்களில்‌ காணப்படுபவை
பொருட் சுவை மிக்குள்ளவை. உதாரணமாக ‘நாச்சியார்‌ திருமொழி
(4.11) ஊடல்‌, கூடல்‌, உணர்தல்‌ புணர்தலை, நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர்‌ என்ற இடத்தில்‌ ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது கிருஷ்‌ணனை இன்னவள்‌ பட்டினி கொண்டாள்‌ என்ற புகழ்‌ காணும் என்கிறார்‌ எம்பார்‌. ஆயர்‌ மகளீர்‌ கண்ணனிடம்‌ ஊடுவது அடிக்கடி நிகழும்‌ நிகழ்ச்சியாகும்‌. வாசுதேவன்‌ வரவு பார்த்துக்‌ காத்திருப்பவர்‌ பல பெண்கள்‌. ஒருத்தி, ஒரே வேளையில்‌ சினம்‌ தீர்ந்து கண்ணனை அழைப்பாள்‌. ஒருத்தி கோபம்‌ நான்கு நாட்கள்‌ வரை நீடிக்கும்‌. இவனும்‌ அது வரை பொறுத்துக்‌ கடப்பது அந்த ஆய்ச்சியின்‌ ரூபம்‌, குணம்‌, இவற்றால்‌ கவரப்பட்டதால் தான்‌. இப்படிக்‌
கண்ணனைக்‌ காக்க வைப்பது அவர்கள்‌ நிறை புகழ்‌ என்பார்‌ எம்பார்‌.

பூவளரும்‌ திருமகளார்‌ பொலிவுற்றேசன்‌ வாழியே.
பொய்கை முதல்‌ பதின்மர்‌ கலைப் பொருளுரைப்போன்‌வாழியே.
மாவளரும்‌ பூதூரன்‌ மலர்ப் பதத்தான்‌ வாழியே.
மகரத்திற்‌ புனர் பூசம்‌ வந்‌துதித்தான்‌ வாழியே.
தேவு மெப்பொருளும்‌ படைக்கத்‌ திருந்தினான்‌ வாழியே.
திருமலை நம்பிக் கடிமை செய்யுமவன்‌ வாழியே.
பாவையர்கள்‌ கலவி யிருள்‌ பகலென்றான்‌ வாழியே.
பட்டர் தொழும்‌ எம்பார்‌ பொற்பதமிரண்டும்‌ வாழியே.

தம்முடைய தரிசனத்தில்‌ எம்பெருமானாருடைய பதவியை வஹித்தவராய்‌ அவரினும்‌ விஞ்சிய ஞான, வைராக்கியத்தை உடையவரான பட்டர்‌ என்னும்‌ ஆச்சாரியாரது வைபவத்தைக்‌ காண விழைகின்றோம்‌. இவர்‌ கூரத்தாழ்வான்‌ திருக் குமாரர்‌ என்றும்‌ ஸ்ரீ
ரங்கநாதனுடைய திருக்குமாரர்‌ என்றும்‌ வழங்கப்படுவார்‌. இவரது பிறப்பு வரலாற்றை நாம்‌ கூரத்தாழ்வான்‌ வைபவத்திலேயே விரிவாகக்‌ கண்டுள்ளோமாதலால்‌ இங்கு குறிக்கப் படவில்லை. கூரத்‌தாழ்வான்‌ திருக்குமாரர்கள்‌ இருவரின்‌ திருநாமங்கள்‌ முறையே ஸ்ரீபராசரபட்டர்‌, ஸ்ரீ ராமப்பிள்ளை என்ற வேத வியாச பட்டர்‌ என்பதாகும்‌. பெயர்‌ பராசரபட்டர்‌ என்ற போதிலும்‌ பட்டர்‌ என்றே சுருக்கமாக இவ்வாச்சாரியார்‌ வழங்கப்படுவார்‌. பட்டர்‌ என்ற சொல்‌ வேத விற்பன்னர்களையும்‌ ஸ்தோத்திரம்‌ சொல்பவர்களையும்‌ குறிக்கும்‌ பொதுச்சொல்‌. விளையும்‌ பயிர்‌ முளையிலே தெரியும்‌, என்றபடி பட்டர்‌ என்ற பெயருக்குப்‌ பொருத்தமாக இவரும்‌ சர்வஞ்ஞராய்‌ விளங்கிப் புகழ்‌ பெற்று எம்பெருமானாருடைய சத்ய சங்கல்பத்தை நிலை நாட்டினார்‌. இவர்‌ 105 திருநட்சத்திரம்‌ வாழ்ந்திருந்தார்‌.-இவர்‌ பிறந்த உடனேயே இவரை எம்பெருமானார்‌ பார்க்குமுன்னரே இவருக்கு ‘த்வயம்‌’ என்னும்‌ மந்திரம்‌ காப்பாக எம்பாரால்‌ அனுசந்திக்கப்பட்டது என்பதும்‌ எம்பெருமானார்‌ நியமனப்‌படி எம்பாரே இவருக்கு ஆச்சாரியராக விளங்கினார்‌ என்பதும்‌ முன்னரே கண்டோம்‌. ஆகவே பட்டருக்கு ஆச்சாரிய கிருத்யங்கள்‌ எம்பாரே செய்தருளினார்‌. இருந்தும்‌ ஆழ்வானும்‌ பட்டருக்கு ஒரு
ஆச்சாரியராயினார்‌ என்பதும்‌ முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது.பட்டரை இளங்குழந்தைப்‌ பருவத்திலேயே ஸ்ரீரங்கநாதன்‌ தனது புத்திரனாக அங்கீ கரித்துத்‌ தன்னுடைய சந்நிதியிலேயே திருமணத் தூணினருகே தொட்டிலில்‌ விடுவித்து, ஸ்ரீரங்கநாச்சியாரும்‌ தானுமாகச்‌ சீராட்டி வளர்க்க, அங்கனம்‌ வளர்கின்ற ௮க்‌குழந்தை தவழ்ந்து சென்று, பெருமாள்‌ அமுது செய்வதற்கு வைத்துள்ள அடிசிலைக்‌ கைகளால்‌ அள்ளி அளைந்து துழாவ,பெருமாள்‌ அது கண்டு உகந்தருளி, அந்த இன்னடி சிலை பிரியமாக அங்கீகரிப்பாராம்‌. இப்படி ஸ்ரீ ரங்கநாதன்‌ இவரைப்‌ புத்திர ஸ்வீகாரம்‌ செய்தருளியபடியால்‌, பட்டர்‌ ஸ்ரீ ரெங்கநாத புத்திரர்‌ என்றழைக்கப்பட்டார்‌. -‘வானிட்ட கீர்த்தி வளர்‌ கூரத்தாழ்வான்‌ மகிழ வந்த தேனிட்‌டதா நம்‌ பெருமாள்‌ குமாரர்‌ பட்டர்‌’ என்று இவரது சிஷ்யரான பிள்ளைப் பெருமாள்‌ ஐயங்கார்‌ தமது திருவரங்கக்‌ கலம்பகக்‌ காப்புச்‌ செய்யுட்களில்‌ ஒன்றில்‌ கூறியுள்ளார்‌. பட்டர்‌ தாமும்‌ (ஸ்ரீ ரங்கவாஜ ஸ்தவத்தில்‌ 17-ம்‌ ஸ்லோகத்தில்‌ ‘ஸ்ரீரங்கராஜ கமலாபத லாலி தத்வம்‌ என்ற பதத்தினால்‌ இதனைக் குறிப்பிட்டுள்ளார்‌. இப்‌ பேராசிரியர்‌ சகல சாஸ்திரங்களிலும்‌ அபாரமான பாண்டித்யம்‌ பெற்றவர்‌ என்பதை இவர்‌ அருளிய விஷ்ணு ஸகஸ்ரநாம பாஷ்யம்‌ ஒன்று கொண்டே உணரலாம்‌. இவர்‌ கவித் திறமையில்‌ ஒத்தாரும்‌ மிக்காரும்‌, இல்லாதவர்‌ என்பதை இவரது ஸ்ரீரங்கராஜஸ்தவம்‌ ஸ்ரீகுணரத்ந கோசாதிகளால்‌ உணரலாம்‌.-அருளிச் செயல்களில்‌ அற்புதமான விசேஷார்த்தங்களை அருளிச்‌ செய்வர்‌ என்று பெரியவாச்சான்‌ பிள்ளை முதலானோர்‌ அடிக்கடி கூறுவதுண்டு. உதாரணமாக ஒன்றை மட்டும்‌ காணலாம்‌.
திருநெடுந்தாண்டகத்தில்‌ ‘அறுகாலச்‌ சிறுவண்டே’ தொழுதேனுன்னை‘ என்ற பாசுரத்தில்‌ வண்டுக்கு ஆறு கால்கள்‌ உள்ளமையை எதற்காகச்‌ சொல்லலாயிற்று என்பதை விளக்கப் புகுந்து இரண்டு காலாகவும்‌, நாலு காலாகவும்‌ இன்றி விரைந்து செல்லுகைக்கு உறுப்பாக ஆறு கால்கள்‌ இருக்கப்பெற்ற பாக்யம்‌ என்னே என்று வியந்து கூறுவதாகச்‌ சிலர்‌ பொருள்‌ கூறுவார்கள்‌. இந்தக் கூற்று அவ்வளவு பொருத்தமானதாகத்‌ தெரியவில்லை. வண்டு பறந்து செல்வதற்குச்‌ சாதனம்‌ சிறகே யன்றிக்‌ கால்களில்லை. ஆகவே ஆறுகாலே என்ற அடைமொழிக்கு அவ்வாறு கருத்துரைத்தல்‌ பொருத்தமில்லை என்று பட்டர்‌ அருளிச் செய்வது. தொழுதேனுன்னை என்று தொடர்ந்து கூறுவதால்‌ என்‌ தலையில்‌ வைப்பதற்கு ஆறு கால்கள்‌ உள்ளனவே என்று வியந்து சொல் கறைபடியாகும்‌. தூது சென்று திரும்பி வந்தால்‌ வண்டின்‌ கால்களைத்‌ தலையில்‌ வைத்துக் கொண்டு கூத்தாடிக்‌ குதூகலித்திருப்பதனால்‌ அதற்குப்‌ பொருத்தமாக இவ்வாறு கருத்துரைப்பதாகும்‌.–வழக்கமாக வண்டாகச்‌ சொல்வது ஆச்சாரியர்களையே. ஆச்சாரியனும்‌, அவருடைய தேவியாரும்‌ அவர்களுடைய திருக்குமாரரும்‌ ஆக மூவருக்கும்‌ சேர்த்து ஆறு திருவடிகளாதலால்‌ அக்கருத்துத்‌ தோன்றவே ‘அறுகாலச்‌ சிறுவண்டே’ என்றது என்பது பட்டர்‌ வியாக்யானம்‌. கொங்கார்‌ பூந்துழாய்முடி என்குடக்‌ கூத்தற்கென்‌ தூதாய்‌ நும்கால்கள்‌ என்‌ தலைமேல்‌, எழுமிநோநுமரோடே ‘ என்று திருவாய்மொழிப்‌ பாசுரத்துக்கு மிகவும்‌ பொருத்தமாக இருக்கிறது இவ் விளக்கம்‌.-பட்டருடைய அதி ஞான பக்தி வைராக்யங்களை விளக்கும்‌ வேறொரு நிகழ்ச்சியும்‌ சொல்லப்படுவதுண்டு. அவர்‌ ஐந்து வயதுப் பாலகனாய்‌ தெருவில்‌ விளையாடிக்‌ கொண்டிருக்கையில்‌ ஒருவன்‌ ‘ஸர்வஜ்யபட்டன்‌ வந்தான்‌ என்று எக்காள மூதிக் கொண்டு வர, உடையவர்‌ ஆழ்வான்‌ ஆண்டான்‌ போன்றவர்கள்‌ இருக்க இவன்‌ யார்‌ தன்னைச்‌ சர்வஜ்யபட்டன்‌ என்று சொல்வது என்று மனதில்‌ எண்ணி இருகைகளிலும்‌ மண்ணை அள்ளிக் கொண்டு அவனைப்‌ பார்த்து நீ ஸர்வஜ்யனன்றோ? இது எத்தனை சொல்‌? என்று கேட்க அவன்‌ ஒன்றும்‌ சொல்ல மாட்டாது வெட்டித் தலைகுனிய இது ஒருகைப்புழுதி மண்‌ என்று கூடத்தெரியாத நீ என்ன ஸர்வஜ்யன்‌ என்று அவமானப்படுத்தி அனுப்பினார்‌ என்பது கர்ண பரம்பரைச்‌ செய்தி. திரிபுவன வீர தேவராயன்‌ என்ற அரசன்‌ பட்டர்‌ வைபவத்‌தைக்‌ கண்டும்‌, கேட்டும்‌, அவரிடத்து மதுப்புக் கொண்டு அவரைச்‌ சன்மானிக்க எண்ணியவனாய்‌ பட்டரே, அரண்மனைக்கு வந்து போம்‌ என்றழைக்க பட்டர்‌ அதற்குச்‌ சிறிதும்‌ இணங்காமல்‌ ‘நம்‌ பெருமாள்‌ அஞ்சல்‌ என்ற கை மறித்தாலும்‌ அவர்‌ வாசலொழிய வேறு போக்கிடமுண்டோ எமக்கு என்று சொல்லி மறுத்துவிட்‌டார்‌. தன்னைத்‌ தஞ்சடைந்தவர்களுக்கு ஆவன வெல்லாஞ் செய்து,அவர்களைப்‌ பாதுகாத்தலையே விரதமாகக்‌ கொண்டு அவர்களுக்கு அபயமளிப்பவனான பரம புருஷனுக்கு அடிமைப்பட்ட நாம்‌ சில சிற்றரசரின்‌ வாசலிலே கிடந்து துவளக் கூடவோ மல்‌லோம்‌ என்ற அவரது திண்ணிய தீர்மானத்தையே காட்டுகிறது-இந்தச் செயல்‌.

தென்னரங்கர்‌ மைந்தனெனச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
திருநெடுந்தாண்டகப்‌ பொருனைச்‌ செப்புமவன்‌ வாழியே.
அன்னவயல்‌ பூதூரானடி பணிந்தோன்‌ வாழியே.
அனவரதம்‌ எம்பாருக்காட்‌ செய்வோன்‌ வாழியே.
மன்னுதிருக்கூரனார்‌ வளமுரைப்போன்‌ வாழியே.
வைகாசியனுடத்தில்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
பன்னுகலை நால்‌ வேதப்பயன்‌ தெரிவோன்‌ வாழியே.
பராசரனாம்‌ சீர்பட்டர்‌ பாருலகில்‌ வாழியே.

நஞ்சீயர் ஆதியில்‌ அத்வைதியாக இருந்தவர்‌. மாதவாச்சாரியார்‌ என்பது இவரது பூர்வீகத்திருநாமம்‌. வேதாந்தி என்பது இவரது சிறப்புத்‌ திருநாமம்‌. ஆறு சமயங்களுக்கு ஆறு ஆசனமிட்டு நிகரற்ற வித்வானாக மேல்நாட்டில்‌ எழுந்தருளியிருந்தார்‌. பல பிற மத வித்வான்‌௧ளைத்‌ திருத்துப்‌ பணி கொண்ட உடையவர்‌ இவரையும்‌ திருத்திப்‌ பணி கொள்ள விரும்பினார்‌. ஆனால்‌ அவரது வாழ் நாளில்‌ அது முடியாமற் போகவே தனது அந்திம காலத்தில்‌ தனது தர்சன வாரிசான பட்டரிடம்‌ மேல் நாட்டிலுள்ள வேதாந்தியைத்‌ திருத்திப்‌ பணி கொள்வீர்‌ என்று நியமித்தார்‌. பட்டரும்‌ அதனை நிறைவேற்றுவதற்குச்‌ சமயம்‌ பார்த்துக்‌ காத்திருந்தார்‌.இந் நிலையில்‌ மேல்‌ நாட்டிலிருந்து வந்த ஒரு அந்தண யாத்ரிகர்‌ பட்டரிடம்‌ மேல் நாட்டிலும்‌ உம்மைப் போலவே சகல கலைஞானங்களும்‌ அறிந்த வேதாந்தி ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று கூறினார்‌. பின்னர்‌ அவர்‌ திரும்பித்‌ தன்‌ ஊருக்குச்‌ சென்ற பொழுது வேதாந்தியிடம்‌, ‘ஸ்ரீரங்கத்தில்‌ பட்டர்‌ என்றொரு வித்வான்‌ இருக்‌கிறார்‌. அவரது பக்தியும்‌ ஞானமும்‌ சொல்லிலடங்கா. அவரது சிஷ்யர்களின்‌ பெருமை அளவிட முடியாது என்று கூறினார்‌. வேதாந்தி, ‘அவர்‌ நமக்கு ஒத்த வித்வான்‌ தானோ? என்று கேட்க, அவர்‌ உம்மிலும்‌ மேம்பட்டவர்‌ என்று யாத்ரிகர்‌ சொல்லவே, நம்மில்‌ மிக்கார்‌ யாருமில்லையென்றிருந்தோம்‌.-பட்டர்‌ நம்மிலும்‌ மிக்கார்‌ என்று சொல்கிறாரே என்று கவலையோடு இருந்தார்‌. இந்தச் சம்பவத்தை அந்த யாத்ரிகர்‌ திரும்ப ஸ்ரீரங்கம்‌ வந்தபொழுது பட்டரிடம்‌ தெரிவிக்கப்‌ பட்டர்‌ அவரிடம்‌ நமக்குத்‌ திருநெடுந்‌ தாண்டக சாஸ்திரம்‌ தெரியும்‌ என்று சொன்னீரா என்று கேட்க, அந்தணரும்‌ அப்படியே சொல்கிறேன்‌ என்று வேதாந்தியிடம்‌ சென்று பட்டருக்குத்‌ திருநெடுந்தாண்டக சாஸ்திரம்‌ அசாதாரணம்‌ என்று கூற அந்த சாஸ்திரம்‌ இன்னதென்றறியாத வேதாந்தி அது என்னவோ என்று வியந்து கொண்டிருந்தார்‌. இவ்வாறு சிலநாள்‌ சென்றபின்‌ உடையவர்‌ நியமனத்தை நிறைவேற்ற வேண்டி வேதாந்தியைத்‌ திருத்திப்‌ பணிகொள்ள நம்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே நியமனம்‌ பெற்றுப்‌ கோலாகலமாகப்‌ பரிவாரங்களோடு புறப்பட்டு, மேல்நாட்டில்‌ எழுந்தருளிச்‌ சிறுபுத்‌தூர்‌ என்ற இடத்திற்கு அருகில்‌ செல்கையில்‌ அங்கு திருமலையிலிருந்து உடையவர்‌ சிஷ்யர்‌ அனந்தாழ்வான்‌ வந்து பட்டரைச்‌ சேவித்து, அவர்‌ காடும்‌, மலையும்‌ கடந்து வந்த காரணம்‌ கேட்க,பட்டரும்‌ வேதாந்தியைத்‌ திருத்துவதற்காகத்‌ தன்னை உடையவரும்‌ நம்‌ பெருமாளும்‌ நியமித்திருப்பதாகவும்‌ அதை நிறைவேற்றத்‌ தான்‌ வந்திருப்பதையும்‌ கூறினார்‌. அதைக்கேட்ட அனந்தாழ்வான்‌ மிகவும்‌ மகிழ்ந்து பட்டரையும்‌ அவரது பரிவாரங்களையும்‌ திரு நாராயண புரத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மங்களாசாசனம்‌ செய்வித்த பின்‌ வேதாந்தி இருக்கும்‌ ஊருக்கும்‌ அழைத்துச்‌ சென்‌றார்‌.சிஷ்ய கோஷ்டிகளுடனும்‌, பரிவார சேனைகளுடனும்‌ இவர்‌ எழுந்தருளுவதைக் கண்ட அங்குள்ள அந்தணர்கள்‌ பட்டரிடம்‌ நீர்‌ இப்படி வந்தால்‌ வேதாந்தியைக்‌ காண இயலாது. அவரது சிஷ்யர்‌கள்‌ உம்மை வாசலிலேயே நிறுத்தி அனுப்பி விடுவார்கள்‌. ஆனால்‌ வேதாந்தி மிகப்பெரிய செல்வராதலால்‌ தினம்‌ பிராமண போஜனம்‌ செய்விக்கிறார்‌. அங்கு புசிக்க வருகிறவர்களுடன்‌ கலந்து தேவரீரும்‌ சென்றால்‌ அவரைக் காணலாம்‌ என்று வழி சொன்னார்கள்‌.-அதன்படியே பட்டரும்‌ போஜன சாலைக்குள்‌ சென்று பந்தியில்‌ சென்று சேராமல்‌ வேதாந்திகள்‌ பக்கத்திலேயே நிற்க, அவரும்‌ அவர்‌ வந்த காரணத்தை வினவ பட்டரும்‌ ‘நான்‌ அன்ன பிட்சைக்கு வரவில்லை. உம்முடனே தர்க்க பிட்சை கேட்டு வந்துள்ளேன்‌: என்றார்‌.-இதைக்கேட்ட வேதாந்தி திடுக்கிட்டு ‘நீர்தாம்‌ பட்டரோ:என்று வினவ இவரும்‌ ‘ஆம்‌’ என்ன, இவருடைய வித்யானுபவம்‌ காண்போமென்று தீர்மானித்து இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ சளைக்காமல்‌ ஒன்பது நாள்‌ தர்க்கித்தனர்‌. பத்தாம்‌ நாள்‌ பட்டர்‌ அத்வைதத்தைக்‌ கண்டித்து, விசிஷ்டாத்வைதத்தை ஸ்தாபித்துத்‌ திருநெடுந்தாண்டக பாசுரத்தின்‌ விழுமிய பொருளையும்‌ அற்புதமாக விளக்கியருள, வேதாந்திகள்‌ மிகவும்‌ மூழ்ந்து கூப்பிய கரங்களுடன்‌ நின்று உம்மை மனிதராகவே எண்ணி யிருந்தேன்‌.-உமக்கும்‌ நம்பெருமாளுக்கும்‌ வாசி (வேறுபாடு)யில்லை. ‘உறங்‌கும்‌ பெருமாள்‌ அவர்‌. உலவும்‌ பெருமாள்‌ நீர்‌: என்று பலவாறு துதித்து அடியேனை அங்கீ கரித்தருள வேண்டும்‌ என்று விண்ணப்‌பம்‌ செய்ய, பட்டரும்‌ தம்‌ காரியம்‌ பலித்ததென்று மகிழ்ந்து,வேதாந்திகளுக்கு பஞ்ச ஸமஸ்காரம்‌ பிரசாதித்து, மகாபாகவதோத்தமராக்கி, எம்பெருமானார்‌ தர்சனத்தை நிர்வஹித்துப்‌ போரீர்‌ என்று நியமித்து விரைந்து திருவரங்கம்‌ திரும்பி அன்று மாலையே நம்‌பெருமாள்‌ திருமுன்பு வணங்கி நிற்க, பெருமாளும்‌ ‘பட்டரே நீர்‌ போன காரியம்‌ என்ன ஆயிற்று! என்று வினவ, பட்டரும்‌, வேதாந்திகள்‌ தேவரீருடைய திருவடிகட்கு அடியவராயினார்‌ என்று கூறி நடந்தவற்றையெல்லாம்‌ கூறவே ‘எங்கனே’ என்று கேட்க திருநெடுந்தாண்டகத்தைத்‌ திருவோலக்கத்திலே பட்டர்‌ உபதேஸித்‌தார்‌. அன்று தொட்ஙகி இன்று வரை நம்‌ பெருமாள்‌ ஸன்னிதியில்‌ திரு அத்யயன உத்ஸவத் தொடக்கத்திற்கு முன்னால்‌, திருநெடுந்‌ தாண்டகத்‌ திருநாள்‌ என்று மிகச் சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. பின்னர்‌ பட்டர்‌ இக் கைங்கர்யத்தை அரையருக்கு அளித்‌தாராம்‌.-இது இங்கனமிருக்க வேதாந்திகள்‌ தன்‌ தேசத்திலே திருமாலடியார்களைப்‌ பூசித்து வரும்‌ நாளில்‌ சம்சாரத்தில்‌ விரக்தி ஏற்பட்டு,பட்டர்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து (சரணடைந்து) சந்யாச தர்மம்‌ பூண்டு அவரது தாசனாக வாசம்‌ செய்ய விரும்பி, கோயிலுக்கு எழுந்தருளும்‌ வழியில்‌ சிறுபுத்தூாரிலே அனந்தாழ்வானைக்கண்டு,
அவர்‌ ஆட்சேபித்ததையும்‌ புறக்கணித்து கோயிலுக்கு எழுந்தருளியதைக்‌ கண்ட பட்டர்‌ மிகவும்‌ உகந்தருளி, நம்‌ ஜீயர்‌ வந்தார்‌ என்று சொல்லித் தம்‌ திருவடிகளில்‌ விழுந்து கிடக்கும்‌ வேதாந்தகளை எடுத்தணைத்து அவருக்கு சகல அர்த்தங்களையும்‌ ஓதுவித்துப்‌ பிரஸாதித்தருள, ஜீயரும்‌ பட்டரை யன்றித்‌ தேவு மற்றறியேன்‌ என்றிருந்தார்‌. பட்டர்‌ நம்முடைய ஜீயர்‌ என்று சொல்லி அணைத்‌துக் கொண்டதால்‌ அன்று முதல்‌ வேதாந்திகளுக்கு நஞ்சீயர்‌ என்ற பெயர்‌ வழங்கலாயிற்று.

நம்பெருமாள்‌, நம்மாழ்வார்‌, நஞ்சீயர்‌, நம்பிள்ளை
என்பர்‌ அவரவர்‌ தம்‌ ஏற்றத்தால்‌ அன்புடையோர்‌
சாற்று திரு நாமங்கள்‌ தானென்று நன்னெஞ்சே
ஏற்று அதனைச்‌ சொல்லி நீ இன்று
(உ.தே.மா. 66)

நஞ்சீயருடைய ஆச்சாரிய பக்தி மிகவும்‌ போற்றுதற்குரியது.-ஒரு கைசிக ஏகாதசி யன்று பட்டர்‌ திருவீதி அலங்கரிக்கப்‌ புறப்பட்‌டவாறே நஞ்சீயரும்‌ ஸ்ரீபாதம்‌ தாங்கப்புக, அங்குள்ளோர்‌ திரிதண்ட தாரியான (சந்யாசி) உமக்கு இது தகாது என்று ஆட்சேபிக்க எனக்கு உறுதுணையாகி என்னை ரட்சிக்க வேணும்‌ என்ற பொருளுடைய ‘ஸகாமா கோபாய” என்ற மந்திரம்‌ சொல்லி அளிக்கப்பட்ட இந்த முக்கோல்‌ எனக்கு விரோதியாமாகில்‌ எனக்கு அது வேண்டாம்‌ என்று தூர வீசப் போக, எல்லோரும்‌ அவரது பக்தி விசேஷத்தைக் கண்டு வியந்தனர்‌. பட்டர்‌ ஒரு நாள்‌ பகலெல்லாம்‌
வழிநடந்த களைப்பால்‌ ஒருமரத்தடியில்‌ நஞ்சீயர்‌ மடியில்‌ தலையை வைத்துக்‌ கண்வளர்ந்தருள இரவு முழுவதும்‌ அசையாமல்‌ இருந்தார்‌ என்பதும்‌ இவரது ஆச்சார்ய பிரேமத்தின்‌ சிறப்பினை நன்கு விளக்குகிறது.-நஞ்சீயர்‌ வெகுநாள் வரை அருளிச் செயல்களின்‌ வாசனையையும்‌ அறியாதவரா யிருந்தும்‌ பட்டரால்‌ தடுத்தாட் கொள்ளப்பட்ட பின்னர்‌ அவரது அருள்‌ நோக்கால்‌ திவ்யப் பிரபந்தங்களை ஒதித் தரித்து, அவற்றின்‌ விசேஷார்த்தங்களை நிர்வஹிப்பதில்‌ நல்ல விரகராய்‌ இருந்தார்‌ என்பது அதிசயிக்கத் தக்கதாகும்‌. அவட்கு மூத்தோனை வெந்நரகம்‌ சேராவகையே சிலை குனித்‌தான்‌’ என்ற பதத்திற்கு நஞ்சீயர்‌ சாதாரணப் பொருள்‌ கூற ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்‌ இந்தப் பதத்திற்கு பட்டர்‌ வெகு அழகாகப்‌ பொருள்‌ கூறுவர்‌ என்று சொல்லி அவர்‌ கூறும்‌ பொருளைக் கூறவே, அதைக்‌ கேட்ட ஜியர்‌, இவ்வாறு பொருள்‌ கூற வல்ல பட்டரை சேவிக்க வேண்டும்‌ என்ற காதல்‌ வளர்ந்ததாலேயே அவர்‌ ஸ்ரீரங்கத்திற்கு வந்து பட்டரைக் கண்டு அவர்‌ திருவடியில்‌ சரணடைந்தார்‌ என்று கூறுவர்‌.
இவரது திருஅவதார ஸ்தலம்‌ மேல்நாட்டில்‌ திருநாராயணபுரம்‌. திரு நக்ஷத்திரம்‌ விஜய வருஷம்‌ பங்குனி மாதம்‌ உத்தரம்‌. குலம்‌, வடமான்‌. திருநாமங்கள்‌ வேதாந்தி, நிகமாந்த யோகி ,ஸ்ரீமாதவர்‌, நஞ்சீயர்‌. இருப்பிடம்‌ கோயில்‌, ஆசார்யர்‌ பெரிய பட்‌
டர்‌. திருவாராதனம்‌ கிருஷ்ண விக்ரகம்‌ சிஷ்யர்‌ நம்பிள்ளை. இவர்‌ செய்தருளின கிரந்தங்கள்‌. திருவாய்மொழிக்கு வியாக்யானம்‌ 9000படி. திருப்பாவைக்கு வியாக்யானம்‌ ஈராயிரப்படி திருப்பல்‌லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு திருவந்தாதிகளுக்கு உரை,
ரஹஸ்ய த்ரய விவரமான நூற்றெட்டு, ஸரணாகதி கத்ய வியாக்யானம்‌, திருவாய்மொழி நூறுரு வியாக்யானம்‌ செய்கையாலே நஞ்சீயர்‌, ஸதாபிஷேகம்‌ பண்ணினார்‌ என்பது பிரசித்தம்‌. இவர் தொண்ணூற்றஞ்சு திருநட்சத்திரம்‌ வாழ்ந்திருந்தார்‌ என்பன இவரைப்‌ பற்றிய முக்ய குறிப்புகள்‌.

தெண்டிரை சூழ்‌ திருவரங்கம்‌ செழிக்க வந்தான்‌ வாழியே.
சீமாதவனென்னும்‌ செல்வனார்‌ வாழியே.
பண்டை மறைத் தமிழ்ப்‌ பொருளைப்‌ பகர வந்தோன்‌ வாழியே.
பங்குனியில்‌ உத்தரதாள்‌ பா ன்‌ வாழியே.
ஒண்டொடியான்‌ கலவி தன்னை ஒழித்திட்டான்‌ வாழியே.
ஒண்பதினாயிரப்‌ பொருளை ஓதுமவன்‌ வாழியே.
எண்டிசையும்‌ சீர் பட்டரிணை யடியோன்‌ வாழியே

நம்பிள்ளைக்குத்‌ திருவவதார ஸ்தலம்‌ சோழ மண்டலத்தில்‌ நம்‌பூர்‌. திருவவதார நக்ஷத்திரம்‌ பிரபவ வருஷம்‌ கார்த்திகை மாதம்‌ கிருத்திகை.-குலம்‌ – வடமான்‌ குடி-நம்பூர்‌. இவரது திருநாமங்கள்‌ வரதராஜன்‌,திருக்கலிகன்றிதாஸர்‌, கலிவைரிதாஸர்‌, நம்பிள்ளை, லோகாசார்‌யார்‌, ஜகதாசார்யார்‌, உலகாரியர்‌ முதலியன. தேவியர்கள்‌ -ஸ்ரீரங்கநாச்சியாரும்‌, ஆண்டாளுமாகும்‌. இருப்பிடம்‌. கோயில்‌ திருவாராதனம்‌ – வயலாலி மணவாளர்‌. ஆசார்யர்‌ – நம்‌ ஜீயர்‌குமாரர்‌ – ராமானுஜாசார்யார்‌.

நஞ்சீயர்‌ சிஷ்யர்களில்‌ முதன்மையானவர்‌ நம்பிள்ளை. அவரது இயற்பெயர்‌ நம்பூர்‌ வரதராஜாசாரியார்‌ என்பது. அவருக்கு நம்பிள்ளை என்ற பெயர்‌ வரக்காரணம்‌ வருமாறு:நஞ்சீயர்‌, பட்டர்‌ நியமனப்படி (உத்தரவின்‌) திருவாய்மொழியின்‌ அர்த்தங்களை உபந்யாசம்‌ செய்வதையே பொழுது போக்காகக்‌ கொண்டு வாழ்ந்து வந்தார்‌. திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ அவரது உபந்யாசத்தைக்‌ கேட்க வருபவர்களில்‌ நம்பூர்‌ வரதராஜாசார்யரும்‌ ஒருவர்‌. இவர்‌ நீறு பூத்த நெருப்புப் போல இருந்த படியால்‌ இவருடைய பக்தி ஞான வைராக்யம்‌ போன்ற பெருமைகளை யாரும்‌ அறியாதிருந்தனர்‌. இப்படி யிருக்கையில்‌ பட்டர்‌, நஞ்சீயரிடம்‌ திருவாய்மொழிக்‌குத்‌ திருக்குருகைப்பிரான்‌ பிள்ளானது(எம்பெருமானார்‌ ஞானபுத்‌திரன்‌) ஆறாயிரப்படி வியாக்யானத்தை விட விரிவாக ஒரு வியாக்‌யானமிடும்படி கட்டளையிட்டபடியால்‌, அதைச் செவ்வையாகப்‌ பட்டோலை எடுக்கவல்லார்‌ யாரென்று விசாரிக்க; அவரது அந்தரங்கர்கள்‌ நம்பூர்‌ வரதராஜாச்சாரியார்‌ என்றொருவர்‌ ஸ்வாமியின்‌ காலட்க்ஷேப கோஷ்டிக்குத் தவறாது வருகிறார்‌. அவர்‌ நல்ல விரகர்‌,எழுத்திலும்‌ வல்லவர்‌. அவரைக் கொண்டு இப் பணியை நிறைவேற்றிக் கொள்ளலாம்‌ என்றனர்‌. ஆகவே அவரை அழைத்துஆரார்ந்து பார்க்கையில்‌ அவரது திறமை தெரிய வந்தது. அதனால்‌ மகிழ்ந்த ஜீயர்‌ அவரிடம்‌ கருணை காட்டி தம்முடைய ஒன்பதினாயிரப்படியை வரியடைவே அவருக்கு விளக்கிக் காட்டி அதை எழுதித்‌
தரும்படி ஸ்ரீகோசத்தை அவரிடம்‌ கொடுத்தார்‌. அதைப் பெற்றுக் கொண்டு தம்‌ ஊருக்குப்‌ போகையில்‌ வழியில்‌ காவேரியில்‌ நீந்திச்‌ செல்கையில்‌ அந்த ஸ்ரீகோசம்‌ நெகிழ்ந்து விழுந்து வெள்ளத்தில்‌ போய் விடவே மிகவும்‌ வருந்தியவர்‌, அந்த வியாகயானத்தைச்‌ ஜீயர்‌ சொல்லக்‌ கேட்டிருந்தபடியால்‌ அவரது கிருபையால்‌, அவரது திருவடிகளைச்‌ சிந்தித்துக் கொண்டே தம்‌ நினைவிலிருந்தே பட்டோலை எடுத்து அந்த ஸ்ரீகோசத்தை ஆசாரியரிடம்‌ சமர்ப்பித்தார்‌. நான்‌ கொடுத்த ஏடு எங்கே? என்று நஞ்சியர்‌ கேட்கவே நடந்தவற்றை விவரிக்க வேண்டியதாயிற்று. பின்னர்‌ நஞ்சியர்‌ ஸ்ரீகோசத்தை விரித்துப்‌ பார்க்கையில்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸ்ரீ ஸூக்திகள்‌ விடாமலும்‌, தம்மிடம்‌ அவர்‌ கேட்டிருந்த அர்த்த விசேஷங்கள்‌ ஈடும்‌ பொருத்தமாக அமைந்தும்‌ விரிவுமில்லாமல்‌ இருந்த அழகுக்கு மிகவும்‌ உகந்து ‘வாரீர்‌ நம்முடைய பிள்ளையே” என்று எடுத்தணைத்துக்‌ கொண்டார்‌. அது முதல்‌ நம்பிள்ளை என்றே இவர்‌ அழைக்கப்பட்டார்‌. திருக்கலிகன்றிதாசர்‌ என்பதும்‌ இவருக்கு நஞ்சீயர்‌ சாத்தின திருநாமமாகும்‌. திவ்யப்‌ பிரபந்தங்களுக்கும்‌ இதிகாச புராணாதிகளுக்கும்‌ ஆழ்ந்த இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை அருளிச்‌ செய்வதில்‌ இவருக்கு ஒத்தாரும்‌ மிக்காரும்‌ இல்லை என்று பெரிய வாச்சான்‌ பிள்ளை போன்ற பிரபல வைஷ்ணவ சீலர்களும்‌ கூறியுள்ளனர்‌.-லோகாச்சார்யார்‌ என்ற திருநாமமும்‌ இவருக்குண்டு. இவர்‌ கோயிலில்‌ வாழ்ந்த காலத்தில்‌ சகல ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ இவருடைய சீடர்களாகி ஸகல அர்த்தங்களையும்‌ கேட்டு வந்தனர்‌. நம்‌பெருமாள்‌ கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ என்னும்படி ஸம்பத்துடன்‌ வாழ்ந்து வந்தார்‌.அப்பொழுது முதலியாண்டான்‌ பேரனான கந்தாடை தோழப்பர் தாம்‌ வித்வானாயிருந்தும்‌ தம்மிடம்‌ யாரும்‌ பாடங்கேட்க வரவில்லையே என்ற பொறாமையில்‌ இழிந்த வார்த்தைகளால்‌ பரிபவித்து விட்டுத்‌ தன்‌ வீட்டிற்குச்‌ சென்றார்‌. வீட்டில்‌ அவருடைய மனைவியார்‌ இப்படியும்‌ ஆச்சாரியாரை நிந்திப்பீரோ? உமக்கு உய்வும்‌ உண்டோ என்று பலவுஞ்‌சொல்லி அவரது தவறை உணர்த்த தோழப்பரும்‌ நம்பிள்ளையிடம்‌
மன்னிப்புப்‌ பெறவேண்டுமென்று காத்திருந்தார்‌.-அதற்குள்‌ நம்பிள்ளை தாமே தோழப்பர்‌ வீட்டிற்குச் சென்று தேவரீருடைய திருஉள்ளம்‌ வருந்தும்படி நடந்துகொண்ட அடியேனுக்கு தேவரீருடைய மன்னிப்பைத் தவிர வேறு கதியில்லை என்று அவர்‌ திருவடிகளில்‌ விழுந்து வேண்டவே, தோழப்பர்‌ அந்த சீல குணத்திற்கு வியந்து ஸ்வாமி இதுநாள்‌ வரை நான்‌ தங்களைச்‌ சில பேர்களுக்கே ஆச்சாரியார்‌ என்றிருந்தேன்‌. இப்போது லோகத்‌துக்கெல்லாம்‌ தேவரீர்‌ ஆச்சாரியார்‌ என்று அறிந்து கொண்டேன்‌ என்றார்‌.-அது முதல்‌ லோகாசார்யார்‌ என்ற திருநாமமும்‌ வழங்கி வந்தது.

துன்னு புகழ்‌ கந்தாடை தோழப்பர்‌ தம்முகப்பால்‌
என்ன உலகாரியனோ என்றுரைக்க – பின்னை
உலகாரியனென்னும்‌ பேர்‌ நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல்‌ நின்றது என்றும்‌ மேல்‌
(உ.தே.மா. 51)

பின்பழகராம்‌ பெருமாள் ஜீயர்‌. பெருந் திவத்தில்‌
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்‌ – நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள்‌ செய்‌ அந் நிலையை நன்னெஞ்சே
ஈனமற எப்பொழுதும்‌ ஓர்‌
(உ.தே.மா.66) -நம்‌ பிள்ளைக்குப்‌ பல சிஷ்யர்கள்‌ இருந்த போதிலும்‌, பின்‌பழகிய பெருமாள்‌ ஜீயர்‌ பக்தி ஒப்பற்றது.

இப்பேராசிரியரிடம்‌ சகல அர்த்தங்களையும்‌ கேட்டுத் தரித்த வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ உலகுக்குச்‌ செய்திருக்கும்‌ உபகாரம்‌ நிகரற்றது. பட்டர்‌ ஸந்ததியில்‌ தோன்றிய மகா வித்வான்‌ நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டரும்‌, தோழப்பரைப் போலவே பொறாமை கொண்டிருந்தார்‌. அவர்‌ ஒரு நாள்‌ ராஜ சபைக்குச்‌ சென்றிருந்த பொழுது, அந்த ராஜா ‘ஸ்ரீராமன்‌ தன்னுடைய பரத்வத்தை மறைத்துக்‌ கொண்டு மனிதனாக அவதரித்திருக்கையில்‌ ஜடாயுவுக்கு முக்தியளித்தது எவ்வாறு பொருந்தும்‌ என்று கேட்க விடையளிக்க முடியாமல்‌ ஆலோசிக்க வேண்டியதாயிற்று. அந்நேரத்தில்‌ ௮ங்கு வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரிடம்‌ இந்தக்‌ கேள்விக்கு நம்பிள்ளை எப்படிப்‌ பதிலளிப்பார்‌ என்று கேட்டார்‌. ஏனெனில்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ நம்பிள்ளையிடம்‌ அந்த விஷயங்களை ஏற்கெனவே கேட்டறிந்தவர்‌. அவர்‌ ‘ஸத்யேக லோகாந்‌ ஜயதி’ என்ற ஸ்லோகத்தைக்‌ கொண்டு பதிலளிப்பார்‌ என்று சொல்ல, அதை மனதில்‌ நன்றாக வாங்கிக் கொண்டு ராஜாவுக்கு விடை யளித்தார்‌. அரசனும்‌ மிகவும்‌ மகிழ்ந்து விசேஷமாகப்‌ பரிசுகள்‌ வழங்கினான்‌. அவற்றை நம்‌பிள்ளை திருவடிகளில்‌ அர்ப்பணித்து தேவரீருடைய சிந்திப்போன ஸ்ரீ ஸூக்த்திகளில்‌ ஒரு சொல்லுக்குப்‌ பெற்ற பரிசு இது. இதைத்‌ தாங்கள்‌ அங்கீ கரித்து என்னை வாழ்விக்க வேண்டுமென்று பணிவுடன்‌ வேண்டினார்‌. நம்‌ பிள்ளையும்‌ அவரையும்‌ தம்‌ கோஷ்டியில்‌ சேர்த்துக் கொண்டு உய்வித்தார்‌. நடுவில்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்‌ளையின்‌ விஷயார்த்தங்களை விளக்கி ஒரு லட்சம்‌ கிரந்தம்‌ எழுதியிருந்தார்‌. ஆனால்‌ அதை நம்பிள்ளை பிரசாரத்திற்கு அனுமதிக்கவில்லை. நம்‌ பிள்ளையின்‌ அர்த்த விசேஷங்கள்‌ திவ்யப்பிரபந்த வியாக்யானங்களிலும்‌ வார்த்தாமாலை முதலியவற்றிலும்‌ பாக்யசாலிகளால்‌ உய்த்து உணரப்படுகின்றன.

இந்திரன்‌ வார்த்தையு நான்முகன்‌ வார்த்தையு மீசனுடன்‌
கந்தன்‌ சொல்‌ வார்த்தையுங் கற்பவ ராரிந்தக்‌ காசினிக்கே
நந்தினமுத்தெறி நம்பூர்‌ வரதர்‌ தம்‌ மாளிகையிற்‌
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திரை கொள்ளுவரோ
-என்று -நம்பிள்ளை வைபவத்தை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அனுசந்தித்தனர்‌.

வாழி பதின்மருடன்‌ ஆண்டாள்‌ மதுரகவி
வாழிய நாதன்முதலா மாமறையோர்‌ – வாழி
யொருக்‌ கோலரை நெருக்கி வேட்டு மெதிராசன்‌
திருத்தாள்‌ வணங்கினார்‌ சீர்‌.

தேமருவும்‌ செங்கமலத் திருத்தாள்கள்‌ வாழியே.
திருவரையில்‌ பட்டாடை சேர் மருங்கும்‌ வாழியே.
தாம மணி வடமார்பும்‌ புரிநூலும்‌ வாழியே.
தாமரைக்கை இணையழகும்‌ தடம்புயமும்‌ வாழியே.
பாமருவுந்‌ தமிழ் வேதம்‌ பயில் பவளம்‌ வாழியே.
பாடியத்தின்‌ பொருள் தன்னைப்‌ பகர் நாவும்‌ வாழியே.
நாமநுதல்‌ மதிமுகமும்‌ திருமுடியும்‌ வாழியே.
நம்பிள்ளை வடிவழகும்‌ நாடோறும்‌ வாழியே.
மாதகவா வெவ்வுயிர்க்கும்‌ வாழ்வளித்தான்‌ வாழியே.
மதிஅரங்க ரோலக்கம்‌ வளர்த்திட்டான்‌ வாழியே.
நாதமுனி யாளவந்தார்‌ நலம் புகழ்வோன்‌ வாழியே.

நம்பிள்ளை திருவடிகள்‌ நாடோறும்‌ வாழியே.
காதலுடன்‌ நஞ்சீயர்‌ கழல்‌ தொழுவான்‌ வாழியே.
கார்த்திகை கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே.
போதமுடன்‌ ஆழுவார்‌ சொற் பொருளுரைப்போன்‌ வாழியே.
பூதூரன்‌ பாடியத்தைப்‌ புகழுமவன்‌ வாழியே.

பெரியாழ்வாரைப் போல ஆனியில்‌ சோதியில்‌ அவதரித்தவர்‌ இவர்‌. ஸ்ரீவசன பூஷணம்‌, முழுக்ஷப்படி முதலிய அஷ்டதச ரகஸ்யங்களை அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியருக்கும்‌ ஆச்‌சார்ய ஹிருதயம்‌ அருளிச் செய்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருக்கும்‌ திருத்தந்தையார்‌ இவர்‌, இவருடைய இயற்பெயர்‌ ஸ்ரீ கிருஷ்ண மஹாகுரு என்பது. இந்தத்‌ இருநாமமே பெரியவாச்‌ சான்‌ பிள்ளை என்ற மற்றொரு ஆச்சாரியருக்கும்‌ இருந்ததால்‌, நம்பிள்ளை சிஷ்யர்களான இவர்களுக்குள்‌ வாசி (வித்யாசம்‌) தெரிவதற்காக இவர்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை என அழைக்கப்‌ பட்டார்‌. திருவரங்கம்‌ பெரிய கோயிலில்‌ வடக்குத்‌ திருவீதியில்‌ வாழ்ந்து வந்ததே இப் பெயர்‌ வந்ததற்குக்‌ காரணம்‌. இவருடைய ஞானப்பெருமைகள்‌ மிகப்பல. பகவத்‌ விஷயமென வழங்கப்படுகிற (திருவாய்மொழி வியாக்யானமான) ஈடு 36,000 படியை இவரே பட்டோலை கொண்டவர்‌.

தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை,
வள்ளல்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை
இந்த நாடறிய மாறன்‌ மறைப்பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம்‌

நம்‌ பிள்ளை அருளிய ஈடு சொல் நயமும்‌ பொருளாழமும்‌ உடையது. ஈட்டின்‌ (பங்க்தி ஸந்நிவேசம்‌) விளக்கம்‌ வேறு எந்தக் கிரந்தத்தலும்‌ கண்டறியாததும்‌ காண முடியாததுமான அத்வீதிய விலக்ஷண சந்தர்ப்பம்‌. தமிழ்‌ வித்வான்‌௧ஞம்‌ ஸமஸ்க்ருத வித்‌வான்களும்‌ தனித்தனியே உள்‌ குழையத் தக்க உயர்ந்த ரசனாவிசேஷம்‌. ககனம்‌, ககநாகாரம்‌, ஸாகரஸ்‌ ஸாக ரோபம்‌” என்கிறாப்‌ போல ஈட்டுக்கு ௨வமை ஈடே. பெரிய புலவர்கள்‌ பத்தெட்டு வரிகளில்‌ எழுத வேண்டியவற்றை ஒரு வரியில்‌ கம்பீரமாக அடக்கி எழுதும்‌ திறன்‌ இவ்வாசிரியர்க்கே அமைந்தது.-மணவாள மாமுனிகள்‌ இவ்வாகிரியரை வள்ளல்‌ என்று
குறிப்பிடுகிறார்‌. திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ அருளிய ஆறாயிரப்படி வியாக்யானம்‌ நஞ்சியர்‌ அருளிய ஒன்பதினாயிரப்படி வியாக்யானம்‌ இருந்த போதிலும்‌ ரசிகர்களுக்குப்‌ பரிபூரணத் திருப்‌தியை விளைவிக்கப்‌ போதாதவை. நம்பிள்ளை தம்‌ நல்லருளால்‌ ஏவி விட பெரியவாச்சான்‌ பிள்ளை யருளிய 24,000 படி வியாக்யானம்‌ சிறிது விரிவாக இருக்கும் -, ஸ்ரீ ராமாயணம்‌ போன்ற இதிகாஸ புராணங்களிலிருந்து மேற்கோளாக ஸ்லோகங்‌கள்‌ எடுத்துக்‌ கையாளப்பட்டிருப்பதாலும்‌ இது சிறப்படைந்துள்‌ளது. திருவிருத்தத்துற்கும்‌ ஈடு வியாக்யானம்‌ அருளி யுள்ளார்‌. தவிர அஷ்டாக்ஷர தீபிகை என்ற கிரந்தமும்‌ இவ்வாசிரியரது படைப்பு என்று தெரிய வருகிறது. இவையெல்லாவற்றிற்கும்‌ மேலாக உலகுக்கெல்லாம்‌ உயிரான பிள்ளை லோகாச்‌சாரியாரையும்‌, அவர்‌ தம்பி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரையும்‌ பெற்றுக் கொடுத்தருளியதேயாகும்‌.

ஆனிதனில்‌ சோதிநாள்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆழ்வார்கள்‌ கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே,
தாணுகந்தநம்பிள்ளை தாள்‌ தொழுவோன்‌ வாழியே.
சடகோபன்‌ தமிழ்க்கீடு சாற்றினான்‌ வாழியே.
நானிலத்தில்‌ பாடியத்தை நடத்தினான்‌ வாழியே.
நல்ல உலகாரியனை நமக்களித்தான்‌ வாழியே.
ஈனமற எமையாளும்‌ இறைவனார்‌ வாழியே.
எங்கள்‌ வடவீதிப்பிள்ளை இணையடிகள்‌ வாழியே.

பிள்ளை லோகாச்சாரியாரும்‌ அவர்‌ தம்பி அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ நைஷ்டிகப் பிரமச்சாரிகள்‌. ஐப்பசியில்‌ திருவோணத்தவதரித்த பரம காருணிகரான இவர்‌ கிருபா மாத்ரப் பிரஸந்‌நாச்சாரியார்‌. அனுவர்த்தப்‌ பிரஸன்னாச்‌ சாரியர்களைப்‌ போலன்றி
சிஷ்யப்‌ பிரார்த்தனையைச்‌ சிறிதும்‌ எதிர் பார்க்காமல்‌ பயனன்றாகிலும்‌, பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்தப்‌ பணி கொள்பவர்கள்‌. நமது ஆச்சார்ய கோஷ்டியில்‌ எம்பெருமானாரே முதல்‌ கிருபா மாத்ரப்‌ பிரசன்னாசாரியார்‌ ஆவர்‌. அவர்‌ பிரஹ்ம ஸூத்திரத்‌திற்கு (பாஷ்யம்‌) அர்த்தத்தை விளக்கும்‌ நூல்கள்‌ எழுதியபோதிலும்‌ ரகஸ்யார்த்த விவரணமாக ஒரு சிறு நூலும்‌ எழுதவில்லை.பின்னால்‌ இன்னுமொரு திருக் கோலம்‌ பூண்டு (மணவாள மாமனிகளாக) செய்யலாம்‌ என்று விட்டு விட்டார்‌ போலும்‌. அக்குறையைத்‌ தீர்க்கவே பிள்ளை லோகாச்சாரியார்‌ தோன்றி ஸ்ரீ வைஷ்ணவ மண்டலிக்கு பேருபகாரம்‌ செய்துள்ளார்‌. இவர்‌ தகப்பனார்‌ இவருக்‌குத்‌ தமது ஆச்சாரியரான நம்‌ பிள்ளையின்‌ பெயரான உலோகாச்சாரியார்‌ என்றே திருநாமம்‌ சாத்தினார்‌. வாசி தெரிவதற்காக பிள்ளைலோகாச்சாரியார்‌ என்று வழங்குதல்‌ நிகழ்ந்தது என்பதை உபதேச
ரத்ன மாலையில்‌.
பின்னை வடக்குத் திரு வீதிப்பிள்ளை – அன்பால்‌ அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ்‌. மைந்தர்க்குச்‌ சாற்றுகையால்‌ வந்து பரந்தது எங்கும்‌
இந்தத்‌ திருநாமம்‌ இங்கு
(உ.தே.மா. 52) -என்கிறார்‌.

இவர்‌ அருளிச் செய்த நூல்கள்‌ அஷ்டாதச ரகஸ்யம்‌. அவற்றுள்‌ ஸ்ரீவசன பூஷணம்‌, தத்வத்ரயம்‌, முமுக்ஷப்படி என்ற மூன்றும்‌ ஸூத்திர வடிவில்‌ அமைந்தவை. ஸ்ரீவசன பூஷணத்தின்‌ பெருமையை, மணவாள மாமுனிகள்‌ உபதேச ரத்னமாலையில்‌ ஏழு பாசுரங்களில்‌ கொண்டாடியுள்ளார்‌. ஆசார்ய பரம்பரப்‌ பிராப்தமான அர்த்தங்களில்‌ முன்னோர்கள்‌ ரகசியமாக உபதேசித்துப்‌ போந்தமையால்‌, அந்த அர்த்த விசேஷங்களை பின்புள்ளோர்‌ இழக்க ஒண்ணாதபடி தன்னுடைய கிருபையோடு பெருமாளும்‌ ஸ்வப்பனத்தில்‌ நியமித்தபடியால்‌ ஸ்ரீவசன பூஷணமாகிய பிரபந்‌தத்தை அருளிச் செய்தவர்‌. முன்பே பேரருளாளப்‌ பெருமாள்‌ கிருபையால்‌ மணப் பாக்கத்தில்‌ இருப்பாரொரு நம்பியாருக்கு விசேஷக்‌ கிருபை பண்ணி தஞ்சமாயிருப்பதான சில விசேஷ அர்த்தங்‌களை விளக்கி, அவரைத்‌ திருவரங்கத்தில்‌ போய்க்‌ காத்திரும்‌, அங்கு நாம்‌ உமக்கு விசேஷ அர்த்தங்களைச்‌ சொல்லுவோம்‌ என்று அருளினார்‌.-ஆகவே அவரும்‌ திருவரங்கத்தில்‌ ஏகாந்தமாக ஒரு கோயிலிலே காத்திருந்தார்‌, பிள்ளை லோகாச்சாரியாரும்‌ அந்த இடத்‌திற்கு வந்து ரகஸ்யார்த்தங்களை அருளிச் செய்து கொண்டிருந்தார்‌.-கோயிலிலிருந்த நம்பியும்‌ வெளியே வந்து அவர்‌ பாதங்களில்‌ தண்டனிட, அவரும்‌ மிகவும்‌ மகிழ்ந்து முன்னரே காஞ்சியில்‌ வாக்களித்தபடி அவரையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டு பெருமாள்‌ கட்டளைப்படி பிரபந்தமிட்டருளினார்‌ என்பது பிரசித்தம்‌ என்‌பவை மணவாள மாமுனிகள்‌ வியாக்யானம்‌.திவ்யப்‌ பிரபந்தங்களுக்கோ ஸ்தோத்ரங்களுக்கோ உரையிடாமல்‌ (அஷ்டதச ரகஸ்யங்கள்‌) பதினெட்டு ரகஸ்யங்களை அருளிய இவர்‌ இந்த நூல்களில்‌ விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக்‌ கொள்கைகளையும்‌ திவ்யப்‌ பிரபந்த வியாக்யாதாக்கள்‌ அருளிய ரஹஸ்ய கிரந்தங்களையும்‌ விரிவாக விளக்கி யுள்ளார்‌. வாழ் நாள்‌ முழுவதும்‌ திருமணமும்‌ செய்து கொள்ளாமல்‌, வைஷ்ணவ தர்சனத்துக்காகவே வாழ்ந்து முகமதியர்‌ படையெடுப்பின்போது அரங்‌கனைக்‌ காப்பாற்றுவதற்காக உயிரையும்‌ அர்ப்பணித்த மஹானுபாவர்‌ இவர்‌,அன்ன புகழுடும்பை அண்ணல்‌ உலகாசிரியன்‌ இன்னருளால்‌ செய்த கலையாவையிலும்‌ – உன்னில்‌ திகழ் வசன பூடணத்தின்‌ சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய்‌ இப்போது (உ.தே.மா. 53)இவரது அஷ்ட தச ரகஸ்யங்களில்‌ பல இவரது தம்பியாலும்‌,நாயனாராச்சான்பிள்ளை (சமகாலத்தவர்‌)யாலும்‌ அடுத்து வந்த மணவாள மாமுனிகளாலும்‌ தமது நூற்களில்‌ மேற்கோள்களாகக்‌ காட்டப்பட்டுள்ள. ஆகவே அஷ்டதச ரகஸ்ய நூல்களில்‌, பல அவற்றின்‌ ஆசிரியர்‌ காலத்திலேயே மிகப்புகழ்‌ பெற்று விட்டன எனத் தெரிகிறது. இந்நூல்களில்‌ முமுஷுப்படியே காலத்தால்‌ முற்‌பட்டது.-சிறப்பால்‌ முற்பட்டதுமாகும்‌ எனத் தெரிகிறது. பிள்ளை லோகாச்சாரியார்‌ தாமே தமது ரகஸ்யங்கவில்‌ முற்பட்டவை சிலவற்றைப்‌ பிற்பட்ட ரகஸ்யங்களில்‌ குறிப்பிட்டுள்ளதாகச்‌ சொல்கிறார்‌. மணவாள மாமுனிகள்‌ உபதேச ரத்னமாலையில்‌ அன்ன புகழ்‌ முடும்பை அண்ணல்‌ உலகாசிரியன்‌ இன்னருளால்‌ செய்த கலை யாவையிலும்‌, திகழ்‌ வசன பூடணத்தின்‌ சீர்மை ஒன்றுக்கில்லை இவ்வார்த்தை மெய்‌ இப்போது என்று தொடங்கி உ.தே.மா.(59-59) முடிய 7 பாசுரங்களால்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌ அருளிய ரகஸ்யக் கிரந்தங்கள்‌ அனைத்திலும்‌ தலைசிறந்தது ஸ்ரீவசன பூஷணமே என்று நிரூபிக்கிறார்‌.-ஆக பதினெட்டு ரகஸ்யங்கவில்‌ உரையிடுவதன்‌ மூலமும்‌ மேற்கோள்‌ காட்டுவதின்‌ மூலமும்‌ மற்ற ஆசார்யர்களால்‌ கையாளப்பட்டிருப்பவை முறையே 1) முமுஷுப்படி 2) தத்வத்திரயம்‌,3] ஸ்ரீ வசன பூஷணம்‌, 4) ஸார ஸங்கரஹம்‌, 5) நவரத்ன மாலை,6) யாத்ருச்சிகப்படி, 7) பரந்தபடி, 8) ஸ்ரீயப்பதிப்படி, 9) தத்வ சேகரம்‌, 10) அர்ச்சசாதி ஆகியவை பிள்ளை லோகாச்சாரியராலேயே குறிப்பிடப்பட்டவை. பிரபந்ந பரித்ராணம்‌, தத்‌வ சேகரம்‌, அர்ச்சராதி பிள்ளைலோகம்‌ ஜீயர்‌ உரையிட்டது. அர்த்த பஞ்சகம்‌ அழகிய மணவாள நாயனாரால்‌ எடுத்தாளப்பட்டது. முன்னோர்களால்‌ கையாளப்பட்ட இந்த ரகஸ்யங்களுடன்‌, ஸம்ஸார ஸாம்ராஜ்யம்‌,நவவித ஸம்பந்தம்‌, தனித் த்வயம்‌, தனிப் பிரவணம்‌ என்னும்‌ நான்கையும்‌ சேர்த்து நெடுங்காலமாகப் பிள்ளை லோகாச்சாரியார்‌ அருளிய அஷ்டதச ரகஸ்யம்‌ என்று சொல்லப்பட்டு வருகிறது.-இவை தவிர இவர்‌ தனிச்சுலோகமும்‌ கத்ய வியாக்யானமும்‌ அருளியிருப்பதாக மாமுனிகள்‌ மேற்கோள்‌ காட்டுகிறார்‌. ஆனால்‌ அவை இப்போது கிடைக்கவில்லை.

அத்தகிரியருளாள ரனுமதியோன்‌ வாழியே.
ஐப்பசியில்‌ திருவோணத்தவதரித்தான்‌ வாழியே.
முக்திநெறி மறைத்தமிழால்‌ மொழிந்தருள்வோன்‌ வாழியே.
மூதரிய மணவாளன்‌ முன்புதித்தான்‌ வாழியே.
நித்தியம்‌ நம்பிள்ளை பதம்‌ நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே.
நீள்வசன பூடணத்தால்‌ நியமித்தான்‌ வாழியே.
உத்தமமாம்‌ முடும்பை நகருதித்த வள்ளல்‌ வாழியே.
உலகாரியன்‌ பதங்கள்‌ ஊழிதோறும்‌ வாழியே.

நம்‌பிள்ளை சீடர்களில்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை, நடுவில்‌ திருவீதிப்பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ண என்னும்‌ வடக்‌குத்‌ திருவீதிப்பிள்ளை, பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌, ஈயுண்ணி மாதவப் பெருமாள்‌ முதலியோர்‌ முக்கியமானவர்கள்‌. இவர்களில்‌ பின்பழகிய பெருமாள்‌ ஜீயர்‌, ஊணும்‌ உறக்கமுமின்றியே பிள்ளை திருவடிகளிலே வழுவிலா அடிமை செய்து கொண்டு வாழ்ந்திருந்‌தார்‌. இங்கனம்‌ மிருக்கையில்‌ பிள்ளையிடம்‌ இவ்வாத்மாவுக்கு, ஸ்வரூப, உபாய, புருஷார்த்தங்கள்‌ எவையென்று அருளிச் செய்ய வேண்டுமென்று விண்ணப்பிக்க, பிள்ளை இச்சை ஸ்வரூபம்‌, இரக்கமே உபாயம்‌, இனிமை உபயம்‌ என்று அருளிச் செய்ய, அதை மறுத்து ஜீயர்‌, தேவரீர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, அடிமையாய்‌ இருக்கையே ஸ்வரூபம்‌, அவர்‌களது அபிமானமே உபாயம்‌ அவர்களது முக மலர்ச்சியே உபேயம்‌ என்று நினைத்திருப்பேன்‌ என்றார்‌. பின்பழகிய பெருமாள் ஜீயர்‌ திருநட்சத்திரம்‌ ஐப்பசி சதயம்‌. அவர்‌ அருளிய கிரந்தம்‌ குரு பரம்பராப்‌ பிரபாவம்‌ என்பது.

அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ இரண்டாவது குமாரர்‌. இவர்‌ பிறந்த நட்சத்திரம்‌ மார்கழி அவிட்டம்‌. இவரது ஆச்சாரியார்‌ இவரது தமையனார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌. இவர்‌ அருளிய கிரந்தம்‌, ஆசார்ய ஹிருதயம்‌, திருப்பாவை வியாக்யானம்‌, திருவந்‌தாதி; கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்‌, அருளிச் செயல்‌ ரகஸ்யம்‌ முதலியன. இவர்‌ சிஷ்யர்‌ கூர குலோத்தம தாஸர்‌.

பெரிய வாச்சான்பிள்ளை கிபி. 1167ல்‌ பிறந்தார்‌ அவதார ஸ்தலம்‌, சோழ நாட்டுச்‌
சங்கநல்லூர்‌, நட்சத்திரம்‌ ஸர்வஜித்‌ ஆவணி மாத கிருஷ்ணாஷ்டமி ரோஹிணி. குலம்‌ பூர்வசிகை. இவர்‌ தகப்பனார்‌ யாமுனா தேசிகர்‌. தாயார்‌ நாச்சியாரம்மன்‌. இவரது இதர திரு நாமங்கள்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை, அபயப் ப்ரத ராஜர்‌, ஸ்ரீமத்‌ கிருஷ்ணர்‌ முதலியன.
திருவாராதனம்‌: கிருஷ்ண விக்கிரஹம்‌. இருப்பிடம்‌: பெரியகோயில்‌. இவர்‌ செய்தருளின கிரந்தங்கள்‌ திருவாய்மொழி 24,000 படி.-மற்ற பிரபந்தங்களுக்கும்‌ அவர்‌ ஒருவரே வியாக்யானம்‌ செய்தவர்‌.-ஆகவே ஸ்ரீரங்கநாதனால்‌ அபயப் ப்ரதராஜா என்று அழைக்கப்பட்‌டார்‌. ஸகல பிரமாணதாத்பர்யம்‌, உபகார ரத்னம்‌ கத்ய த்ரய வியாக்‌யானம்‌, அபயப் பிரதான வியாக்யானம்‌, சரம ரஹஸ்யம்‌, அனுசந்தான ரஹஸ்யம்‌, நியமனப்படி, மாணிக்கமாலை, நவரத்ன மாலை, ஆளவந்தார்‌ ஸ்தோத்ர ரத்னம்‌, முதலியன. இவர்‌ 95 வருடம்‌ வாழ்ந்திருந்தார்‌. இவரது சிஷ்யர்கள்‌ பரகால தாஸர்‌, பின்‌ பழகிய
பெருமாள்‌ ஜீயர்‌, ஸ்ரீ ரங்காச்சாரியார்‌ முதலியோர்‌.

ஸ்ரீ ராமாயாண விசேஷார்த்தங்களை தனிச்சுலோக வியாக்யானமாகவும்‌ அருளி ஸ்ரீராமாயணப்பெருக்கர்‌ என்று புகழ்‌ பெற்றவர்‌.-கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார்‌, கலிகன்றிதாஸரான நம்பிள்‌ளையாகவும்‌ கிருஷ்ண பரமாத்மாவுக்குச்‌ சமானமாக (கிருஷ்ணஸுரி) எனும்‌ பெரியவாச்சான் பிள்ளையாகவும்‌ அவதரித்தனர்‌
என்பர்‌ பெரியோர்‌. நம்‌ பிள்ளைக்குப் பின்னர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ தர்ஸனம்‌ நிர்வகித்தவர்‌ இவரே. இவரது தீர்த்தம்‌ இறந்த காலம்‌ (கி பி.1262) எனக் கொள்ளலாம்‌.
நஞ்சீயர்‌ செய்த வியாக்கியைகள்‌ நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்குமில்லையே – தம்‌ சீரால்‌
வைய குருவின்‌ தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும்‌ சில.
(உ.தே.மா. 47).
பெரியவாச்சான்‌ பிள்ளை பின்புள்ள வைக்கும்‌
தெரிய வியாக்கியைகள்‌ செய்வரால்‌ – அரிய
அருளிச்‌ செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச்‌ செயலாய்த்‌ தெரிந்து
(உ.தே.மா. 46)-என்று மாமுனிகள்‌ அருளிச் செய்தபடி இவராலேயே பின்புள்ளோர் அனைவரும்‌ அருளிச் செயலின்‌ பொருளை யறிந்து ஆசார்ய பதம்‌ நிர்வஹித்தார்கள்‌.

தன்மை சிங்கம்‌ ரோகினிநாள்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே.
தாரணியில்‌ சங்கநல்லூர்‌ தானுடையோன்‌ வாழியே.
பூன்மை தவிர்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே.
பூதூர்‌ எதிராசர்தாள்‌ புகழுமவன்‌ வாழியே.
மன்புகழ்சேர்‌ சடகோபர்‌ வளமுரைப்போன்‌ வாழியே.
மறைநாலின்‌ பொருள்தன்னைப்‌ பகுத்துரைத்தோன்‌ வாழியே.
அன்புடன்‌ உலகாரியர்‌ தம்‌ அடியிணையோன்‌ வாழியே.
அபயப்ரதராசர்‌ தாள்‌ அனவரதம்‌ வாழியே.

வாதிகேஸரி அழகிய மணவாளப்‌ பெருமான்‌ ஜீயர்‌-அவதாரஸ்தலம்‌ தென்‌ தேசத்தில்‌ பிரமதேசம்‌ மன்னார்‌ கோவில்‌. இவரது திருநட்சத்திரம்‌ ஆனிமாதத்து ஸ்வாதியாகும்‌.-பஞ்ச ஸமஸ்காரங்களும்‌, நித்யானுசந்தானங்களும்‌ அருளிய ஆச்சாரியார்‌ பெரியவாச்சான் பிள்ளை. திருவாய்மொழி முதலிய பிரபந்தங்களும்‌ ஈடு முதலான வியாக்யானங்களும்‌ ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும்‌ தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும்‌ அருளியவர்‌ நாயனாராச்‌சான்‌ பிள்ளை. திருவாராதனம்‌. அழகிய சிங்கர்‌. இருப்பிடம்‌-கோயில்‌. சிஷ்யர்‌ திருமாலை யாண்டான்‌. பின்‌ சென்ற வில்லி ஜீயர்‌-
அருளிச்‌ செயல்கள்‌. திருவிருத்தத்துக்கு உரை (பாவனத்வ பிரபோதகை)-திருவாய்மொழிக்கு உரை 18,000 படி. இருபத்தி நாலாயிரப்‌ பிரமாணத் திரட்டு, கீதா சாரம்‌, சதுஸ்லோகி , தமிழ்க்கவி-முதலியன இவரது திருநாமங்கள்‌; வரதராஜர்‌ சுந்தர ஜாமாத்ரு முனி முதலியன.

நாயனாராச்சான்‌ பிள்ளை-பெரியவாச்சான்‌ பள்ளியின்‌ தத்து புத்திரர்‌. இவரது அவதாரஸ்தலம்‌ சங்க நல்லூர்‌.-செய்தருளிய கிரந்தங்கள்‌ ஜ்ஞாநார்ணவம்‌,
தத்வத்ரய விவரணம்‌ சரமோபாய நிர்ணயம்‌, முக்த போகாவளி-முதலியன
.

ஓராண் வழி ஆசார்யர்‌ வரிசையில்‌ பிள்ளை லோகாசாரியரை யடுத்து வருபவர்‌ கூர குலோத்தம தாசர்‌. இவரது திருவவதார ஸ்தலம்‌-கோயில்‌. இருப்பிடம்‌ கோயில்‌. குலம்‌ பூர்வசிகை. திருநக்ஷ்த்திரம்‌-ஐப்பசி மாதம்‌ திருவாதிரை. பஞ்ச ஸம்ஸ்காரங்களும்‌ நித்யானுசந்‌தானங்களும்‌ சாதித் தருளியவர்‌ ஆசார்யார்‌ வடக்குத்‌ திருவீதிப்‌
பிள்ளை. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும்‌ ஈடு முதலான
வியாக்யானங்களும்‌ ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களும்‌ சாதித்தருளியவர்‌
ஆசார்யார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌, தத்வத்ரயாதி ரஹஸ்யங்களும்‌, ஸகல ரஹஸ்யார்த்தங்களும்‌ அருளியவர்‌ அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாராசார்யர்‌. திருவாராதனம்‌ ஸ்ரீரங்கராஜர்‌,
சிஷ்யர்கள்‌, திருவாய்மொழிப்பிள்ளை, மணவாள மாமுனிகள்‌ (பெரிய ஜீயர்‌) முதலானவர்கள்‌.

சந்ததமுமாழ்வார்கள்‌ தமிழ்‌ வளர்த்தோன்‌ வாழியே.
தாரணியிற்‌ சிறுநல்லூர்‌ தானுடையோன்‌ வாழியே.
எந்தை உலகாரியனை யிறைஞ்சுமவன்‌ வாழியே.
இலகு துலா ஆதிரையிலிங்குதித்தான்‌ வாழியே.
இந்த வுலகத்தோர்க்கிதமுரைத்தோன்‌ வாழியே.
எழில்‌ வசனபூடணத்துக்கினிமை செய்தான்‌ வாழியே.
குந்திநகர்‌ சிந்தை கொண்ட செல்வனார்‌ வாழியே.
கூரகுலேத்தமதாசர்‌ குரைகழல்கள்‌ வாழியே.

திருவாய்மொழிப்பிள்ளை அவதாரஸ்தலம்‌ பாண்டிய நாட்டிலுள்ள குந்திகை .
இவரது நட்சத்திரம்‌ விபவ வருஷம்‌ வைகாசி விசாகம்‌. இவரது திருநாமங்கள்‌ திருமலை யாழ்வார்‌, திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீசைலேசர்‌ முதலியன. பஞ்ச ஸம்ஸ்காரங்களும்‌ பிரபந்தங்களும்‌ அருளியர்‌ இவரது ஆச்சாரியார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌. ஈடு முதலான பகவத் விஷயங்களை அருளியவர்‌, நாலூராச்சான்‌ பிள்ளை, கூரகுலோத்தமதாஸர்‌, விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோர்‌. இவர்‌ அருளிய வியாக்யானம்‌ பெரியாழ்வார்‌ திருமொழி.
இருப்பிடம்‌ திருநகரி. இவர்‌ செய்த கைங்கர்யம்‌ ஆழ்வார்‌ திருநகரி கோயில்‌ ஜீரணோத்தாரணம்‌ (புதுப்பிக்கப்படுதல்‌) இவர்‌ சிஷ்யர்‌கள்‌, பெரிய ஜீயர்‌ (மணவாளமாமுனி) எம்பெருமானார்‌ ஜீயர்‌, சடகோப ஜீயர்‌ முதலானோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்‌தார்‌..

வையக மெண்சடகோபன்‌ மறைவளர்த்தோன்‌ வாழியே.
வைகாசி விசாகத்தில்‌ வந்துதித்தான்‌ வாழியே.
ஐயணருண்‌ மாரிகலை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே.
அழகாரு மெதிராசரடி பணிவோன்‌ வாழியே.
துய்யவுலகாரியன்‌ தன்‌ துணைப்பதத்தோன்‌ வாழியே.
தொல்குருகா புரியதனைத்‌ துலக்கினான்‌ வாழியே.
தெய்வநகர்‌ குந்திதன்னில்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள்‌ வாழியே.

மணவாள மாமுனிகள்‌ (பெரிய ஜீயர்‌)அவதாரஸ்தலம்‌ பாண்டிநாட்டில்‌ உள்ள கடாரம்‌ என்ற ஊர்‌. இவரது திருநட்சத்திரம்‌ ஐப்பசியில்‌ திருமூலம்‌. இவரது திருஅவதாரத்தை எம்பெருமானாரது இரண்டாவது அவதாரம்‌ என்பர்‌. இவரது திருத்தகப்பனார்‌ பிள்ளை லோகாச்சாரியாரது சிஷ்யரான திகழக்கிடந்தான்‌. திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணன்‌. தாயார்‌ ஸ்ரீ ரங்கநாச்சியார்‌. திருத்தம்‌பியார்‌ திருமலையாழ்‌வார்‌. இருப்பிடம்‌ கோயில்‌. திருவாய்மொழி முதலான பிரபந்தங்களும்‌ ஈடு முதலான வியாக்யானங்களும்‌ அருளியவர்‌ திருவாய்மொழிப்பிள்ளை. ஸ்ரீ பாஷ்யாதி. கிரந்தங்களை அருளியவர்‌ கிடாம்பி திருமலை ஐயங்கார்‌, கூரகுலோத்தமதாஸர்‌ முதலியோர்‌. இவரது திருவாராதனப்‌ பெருமாள்‌ ஸ்ரீ ரங்கராஜர்‌. இவரது திரு நாமங்கள்‌-பெரிய ஜீயர்‌, மணவாள மாமுனி, இராமானுசன்‌ பொன்னடி,யதீந்திர பிரவணர்‌, வரயோகி, வரவரமுனி போன்று பதினொரு நாமங்கள்‌. இவர்‌ அருளிய கிரந்தங்கள்‌ முறையே தத்வத்ரயம்‌,ரகஸ்யத்திரயம்‌, ஸ்ரீவசன பூஷணம்‌, ஆசார்ய ஹிருதயம்‌ ஞானசாரம்‌, பிரமேயசாரம்‌, பெரியாழ்வார்‌ திருமொழி, திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகிய எட்டுப்‌ பிரபந்தங்களுக்கு வியாக்யானமும்‌, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, (ஆறாயிரம்‌) தத்வத் திரயம்‌ பிரமாணத்‌ திரட்டு, ஸ்ரீவசன பூஷண பிரமாணத் திரட்டு, ஆர்த்தி பிரபந்தம் – யதிராஜவிம்ஸதி, உபதேசரத்னமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி திருவாராதன கிரமம்‌ முதலான பிரபந்தங்கள்‌ முதலியன.எம்பெருமானாருடைய புனரவதாரமான பெரிய ஜீயர்‌,பூப் பிரதட்சணம்‌ பண்ணி அனேக ஸ்தலங்களில்‌ உள்ள கோயில்களுக்கு ஜீரணோத்தாரணம்‌ பண்ணி யருளினார்‌. திருநகரியில்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்குத்‌ தன்னுடைய நிஜஸ்வரூபமான ஸேஷாவதாரத்தைக்‌ காட்டினார்‌. பரமத நிரஸன சுப மத ஸ்தாபனம்‌ பண்ணினார்‌. (பிற மதங்களைக்‌ கண்டித்து வைஷ்ணவக்‌ கொள்கைகளைப்‌ பரப்பினார்‌) ஸர்ப்பாதி ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு மோக்ஷம்‌ சாதித்‌தருளினார்‌. வடமதுரையில்‌ ஜீரணோத்தாரணம்‌ பண்ணினார்‌. நம்‌
பெருமாளுக்கு ஒரு வருஷமாக திருவாய்மொழி ஈடு விண்ணப்பஞ்‌ செய்கையாலே பெரிய ஜீயர்‌ என்று நம்‌ பெருமாள்‌ திருநாமம்‌ சாத்தியருளினார்‌.ஆகவே இவர்‌ எல்லோருக்கும்‌ உத்தேஸ்யர்‌ (தலைமையானவர்‌) இவர்‌ திரு மேனி ஸ்வேதவர்ணம்‌, (வெள்ளை) ஆகையால்‌ வெள்ளை ஜியர்‌ என்ற திருநாமமுண்டு. இவரது திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்‌ வானமாமலை ஜீயர்‌, பத்தங்கி பரவஸ்நு, பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, பிரதிவாதி பயங்கர மண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை,அப்பிள்ளான்‌. இவரெல்லாரும்‌ அஷ்ட திக்கஜங்கள்‌, சேனை முதலியாண்டான்‌ நாயனார்‌, நாலூர்‌ சிற்றாத்தான்‌, கந்தாடை போரேற்று நாயன்‌ போன்றவர்கள்‌ நவரத்னங்கள்‌. திருப்பாணாழ்‌வார்‌ தாஸர்‌, வடுகநம்பி ஜீயர்‌, நாயனார்‌ தொடக்கமானவர்கள்‌-சிஷ்யர்கள்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌ உடையவருக்கு முதலியாண்டானைப்போல இவருக்கு மெய்க்காப்பாளர்‌. எறும்பியப்பா வடுகநம்பியைப் போல தேவுமற்றறியாத அத்யந்த அபிமானி. பிரதிவாதி பயங்கர மண்ணா கூரத்தாழ்வானைப்போல உசாத்‌ துணையா யிருப்பார்‌. அப்பிள்ளார்‌ மடத்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ நடத்திக் கொண்டு போவார்‌. வானமாலை ஜீயர்‌, ஆஸ்ரயித்த நாளிலிருந்து பிரியாது ஆட்செய்திருப்பார்‌. பட்டர்‌ ஜீயர்‌ எம்பாரைப்‌ போல திருவடியாக இருப்பார்‌. ஜீயர் நாயனார்‌ திருக்குருகைப்பிரான்‌ பிள்ளானைப் போல ஞானகுமாரராய்‌ இருப்பர்‌. இவர்கள்‌ எல்லோருக்கும்‌ ஸ்வரூபோபாய புருஷார்த்தங்கள்‌ சாதித்துக்‌ கொண்டு பெரிய ஜீயர்‌ நம்பெருமாள்‌ கோயிலில்‌ 72 ஆண்டுகள்‌ வாழ்ந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. என்ற விபரங்கள்‌ கோயில்‌ கந்தாடை நாயன்‌ அருளிய பெரிய திருமுடி அடைவிலிருந்து தெரிந்து கொள்கிறோம்‌. மணவாள மாமுனிகளைப்‌ போலவே ராமானுஜ தர்சனத்தின்‌ சரணாகதி தத்துவத்தை எங்கும்‌ பரவச்‌ செய்தவர்‌ அகோபில மட ஸ்தாபகரான ஸ்ரீ சடகோப யதீந்தர ஜீயர்‌

இனி மணவாள மாமுனிகள்‌ சீடர்களான, வானமாமலைஜீயர்‌, பட்டர்‌ பிரான்ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌ எறும்‌பயப்பா, அப்பிள்ளை, ராமானுஜரென்னும்‌ அப்பிள்ளான்‌ கோயில்‌ கந்தாடையண்ணன்‌, கந்தாடை போரேற்றுநாயனார்‌, ஸ்ரீசைல நரசிம்மாச்சாரியார்‌, மணவாள மாமுனி தாமே விரும்பி மறுபடி அவதரித்தாரோ எனும்‌ படியான அவரது பேரர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌, ஸ்ரீநிவாசாச்சாரியார்‌ என்ற கோயில்‌ கந்தாடை யப்பன்‌,ஆத்தான்‌, ராமானுஜம்‌ பிள்ளை, அழகிய மணவாள சீயர்‌, கந்‌தாடை அண்ணனின்‌ பிள்ளையான கந்தாடை நாயன்‌ போன்று பலர்‌ உள்ளனர்‌ என்ற விவரங்கள்‌ கோயில்‌ கந்தாடை அண்ணன்‌ அருளிய பெரிய திருமுடி அடைவு பிரபந்தத்திலிருந்து தெரிந்து
கொள்கிறோம்‌.

இப்புவியில்‌ அரங்கேசர்க்கீடளித்தான்‌ வாழியே.
எழில்‌ திருவாய்‌ மொழிப்பிள்ளை இணையடியோன்‌ வாழியே.
ஐப்பசியில்‌ திருமூலத்தவதரித்தான்‌ வாழியே.
அரவரசப்‌ பெருஞ்சோதி அனந்தனென்றும்‌ வாழியே.
எப்புவியும்‌ ஸ்ரீசைல மேத்தவந்தான்‌ வாழியே.
ஒராரு மெதிராசரென வுதித்தான்‌ வாழியே.
முப்புரிநூல்‌ மணிவடமும்‌ முக்கோல்‌ தரித்தான்‌ வாழியே.
மூதரிய மணவாள மாமனிகள்‌ வாழியே.

செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுவான்‌
சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுநாள்‌
மந்தமதிப்‌வி மானிடர்‌ தங்களை வானிலுயர்ந்திடுநாள்‌
மாசறு ஞானியர்‌ சேரெதிராசர்தம்வாழ்வு முளைத்திடுநாள்‌
கந்தமலர்ப்‌ பொழில்சூழ்‌ குருகாதிபன்‌ கலைகள்‌ விளங்கிடுநாள்‌
காரமர்‌ -மேனியரங்கநகர்க்கிறைகண்கள்‌ களித்திடுதாள்‌
அந்தமில்சீர்‌ மணவாள முனிப்பரனவதாரம்‌ செய்திடுநாள்‌
அழகுதிகழ்ந்திடுமைப்பசியில்‌ திருமூலமதெனுநாளே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் வைபவம்-ஸ்ரீ எம்பெருமானார் வரையிலும்-

November 1, 2025
வீர நாராயணபுரத்திலே (தற்பொழுது காட்டு மன்னார்கோவில்‌) சுவாமி
மன்னனார்‌ திருவடிகளிலே சகலவித கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டு வாழ்ந்து வருகிற ஈஸ்வர பட்டாழ்வாரும்‌ அவரது குமாரர்‌ ஸ்ரீ ரங்கநாதமுனிகளும்‌ அவர்‌ குமாரர்‌ ஈஸ்வர முனிகளும்‌, மன்னனனாரிடம்‌ அருளாசி பெற்று, வடக்கே பத்ரிஹாஸ்ரமத்திலி௫ந்து பெருமாள்‌ அவதரித்து விளையாடியருளின வடமதுரை, திருவாய்ப்பாடி, பிருந்தாவனம்‌, யமுனாதீரம்‌, கோவர்த்தனகரி, அயோத்தி, சாளக்கிராமம்‌ முதலான வடதிசையில்‌ உள்ள திவ்ய தேசங்களை யெல்லாம்‌ சேவிக்க எண்ணிக்‌ குடும்பத்தோடு புறப்‌பட்டுப்‌ போய்ச்‌ சேவித்து வருகையில்‌, யமுனா தீரத்திலுள்ள ஸ்ரீகோவர்த்தனபுரம்‌ என்ற நகரின்‌ அழகிலே ஈடுபட்டு அங்கு நித்தய வாசம்‌ பண்ண வேண்டும்‌ என்று தீர்மானித்து வாழ்ந்து வரும்‌ காலத்தில்‌ சுவாமி மன்னனார்‌ நாதமுனிகள்‌ கனவில்‌ தோன்றி நம்முடைய வீரநாராயணபுரத்திற்கே வாரும்‌ என்று கூறியதால்‌,அங்கிருந்து புறப்பட்டு வாரணாசி, புருஷோத்தமம்‌ (பூரி ஜகந்தாத்‌) சிருங்கேரி, அகோபிலமடம்‌ வழியேத்‌ திருவேங்கடம்‌ வந்து,அங்கேயும்‌ நித்ய வாசம்‌ பண்ண மன்னனார்‌ இசையாததால்‌, அங்கிருந்தும்‌ புறப்பட்டுக்‌ காஞ்சி திருக்கோவலூர்‌, திருவரங்கம்‌, திருக்குடந்தைப்‌ பெருமான்களையும்‌ சேவித்து மீண்டும்‌ வீரநாராயணபுரத்‌துக்கே வந்து, மன்னாருக்குத்‌ திருநந்தவனம்‌ அமைத்தும்‌ புஷ்ப கைங்கர்யமும்‌ ஏனைய கைங்கர்யங்களும்‌ செய்து கொண்டு
வாழ்ந்து வருவாராயினர்‌.
இவ்வாறிருக்கையில்‌ ஒரு நாள்‌ சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ மன்னனாரைச்‌ சேவித்து அவர்‌ திருமுன்பு ஆரா அமுதே" என்றுதொடங்கும்‌ திருவாய்மொழிப்‌ பாடலை அனுசந்திக்க அதைக்‌கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள்‌ அவர்களிடம்‌ உங்களுக்கு இப்பிரபந்‌தம்‌ முற்றும்‌ தெரியுமா என்று கேட்டபொழுது அவர்களும்‌ எங்களுக்கு இப்பத்துப்பாட்டு மட்டுமே தெரியும்‌ என்று சொல்லிவிடவே, நாதமுனிகள்‌ சடகோபன்‌ அவதரித்துள்ள திருக்குருகூர்‌ திருநகரிக்குச்சென்று அங்கு எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற
பிரான்‌, சடகோபன்‌, முதலானோரைச்‌ சேவித்து நின்றார்‌. அங்‌குள்ள மதுரகவியாழ்வாரது சிஷ்யரான பராங்குஸதாஸரைச்‌ சேவித்து அவரிடம்‌ இவ்விடம்‌ திருவாய்மொழி ஒதினவர்கள்‌ உண்டா என்று கேட்க, அவரும்‌ திருவாய்‌ மொழியும்‌ ஏனையப்‌பிரபந்தங்களும்‌, வெகு காலத்துக்கு முன்பே அனுசந்திப்பார்‌ இல்‌லாமல்‌ மறைந்து போயின. என்னுடைய ஆச்சாரியார்‌ அடியேனுக்கு அருளிய 'கண்ணினுண்சிறுதாம்பு' பதிகம்‌ மட்டுமே உள்ளது என்றார்‌. அதை அவரிடம்‌ கற்று, திருப்புளியாழ்வாரடியில்‌, ஆழ்‌வார்‌ திருமுன்பு பன்னீராயிரம்‌ உரு 'கண்ணினுண் சிறுத்தாம்பு" பாசுரத்தை நியமத்தோடு அனுசந்தித்தார்‌.
நம்மாழ்வார் அவருக்கு ஞானக் கண்‌ அருளித்‌ திவ்யப் பிரபந்தங்களையும்‌,, ரஹஸ்யத்திரயத்‌தையும்‌, தர்ஸன தாத்பர்யங்களையும்‌, அஷ்டாங்க யோக ரகஸ்யத்‌தையும்‌ அருளிச்செய்தார்‌. 'மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌ நிற்கப்பாடி என்‌ நெஞ்சுள்‌ நிறுத்தினான்‌! என்கிறபடி இவர்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌, நம்மாழ்வாரையும்‌ அனுபவித்து வரும்பொழுது, மன்னனார்‌ மீண்டும்‌ அவர்‌ கனவில்‌ தோன்றித் தான்‌
பிரபந்தத்தைக்‌ கேட்க விரும்புவதாகவும்‌, அதனால்‌ மீண்டும்‌ வீரநாராயண புரத்துக்கே வாரும்‌ என்று கூறிவிடவே, அவரும்‌ ஆழ்‌வார்‌, ஆதிப்பிரான்‌ அனுமதி பெற்று, வீரநாராயணபுரம்‌ வந்து மன்னனார்‌ திருமுன்பு ஓதினார்‌. அதன்‌ அழகிலும்‌ சுவையிலும்‌ ஈடுபட்டு மன்னனார்‌ இத்தகைய உயர்ந்த செல்வம்‌ மீண்டும்‌ மறைந்துவிடக்கூடாது. நீர்‌ இவற்றை இயலும்‌ இசையுமாக்கும்‌ என்று அர்ச்சகர்‌ மூலமாகக்‌ கட்டளையிட்டு நியமித்தார்‌. நாதமுனிகளும்‌ தன்‌ மருமக்களான கீழையகத்தாழ்வான்‌ (கிருஷ்ணமாச்சார்‌யார்‌] மேலையகத்தாழ்வான்‌ (வரதாச்சார்யார்‌] இவர்களை அழைத்து, அவர்களின்‌ மூலமாக இன்கவிபாடும்‌ பரமகவிகளாக, திவ்யகானத்திலேயமைத்து, இயலும்‌ இசையுமாக பாடுவித்தருள அது உலகத்தில்‌ மீண்டும்‌ சிறப்புற்று எல்லோராலும்‌ பாடப்பட்டுப்‌
பரவி வந்தது.கோயில்களில்‌ உற்சவ காலங்களில்‌ இசையுடன்‌ அபிநயித்துப்‌ பாடவைத்தனர்‌. இவ்வாறு ஆரம்பித்த அரையர்சேவை இன்றும்‌ ஸ்ரீரங்கம்‌, ஆழ்வார்‌ திருநகரிபோன்ற முக்கிய வைணவ ஸ்தலங்களில்‌ மட்டும்‌ நடைபெறுகிறது. வேதவியாசர்‌ அருளிய சூத்திரத்தின்‌ விரிவாக்கமாக அமைந்தது நாதமுனிகள்‌ அருளிய யோக ரஹஸ்யங்‌கள்‌ என்பர்‌. தியான யோகமே இறைவனையும்‌ ஜீவனையும்‌ இணைக்கின்ற பாலமாகும்‌. இந்த உணர்வு எல்லோராலும்‌ பெற முடியாது. மனதில்‌ தானாகவே உருவாக வேண்டும்‌. இந்த உள்‌ளொளியே உலகுக்கு நித்தியப்‌ பிரகாசாதிபரன்‌ எனச்‌ சுயம் பிரகாசியாக உள்ளது.-இவருடைய முக்கிய சிஷ்யர்கள்‌ உய்யக்கொண்டாரும்‌ (புண்‌டரீகாக்ஷர்‌) குருகைக்‌ காவலப்பனுமாவார்கள்‌. அவர்கள்‌ மூலமாகத் திவ்யப்பிரபந்தத்தையும்‌ யோக ரகஸ்யத்தையும்‌ பிரசாரம்‌ செய்‌வித்து, இனிப்பிறக்க இருக்கும்‌ தன்னுடைய பேரனான யமுனைத்‌துறைவருக்கு இவற்றை அளிக்கும்படி நியமித்து விட்டு குருகைக்‌ காவலப்பன்‌ கோயிலிலேயே பரம பதித்தருளினார்‌. இவர்‌ சுமார்‌ 102 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌. இவர்‌ கி.பி, 822ல்‌ ஆனி மாதம்‌ ஏழாம்‌தேதி பிறந்தார்‌. இவர்‌ பிறந்த இடம்‌ சோழ நாட்டில்‌ வீரநாராயணபுரம்‌, பிறந்த குலம்‌ சொட்டைக்குலம்‌. இவருக்குத்‌ தகப்பனார்‌ இட்ட பெயர்‌ ரெங்கனாதன்‌ என்பது. இவர்‌ யோகாப்யாசம்‌ கைவந்தவராகையாலே இவரை ரெங்கநாதமுனிகள்‌ என்றனர்‌.
அப்பெயரைச்‌ சுருக்கி நாதமுனிகள்‌ என்றும்‌ அழைத்தனர்‌. ஆளவந்தார்‌ என்ற யமுனைத்துறைவர்‌ அருளிய ஸ்தோத்திர ரத்னத்தின்‌ கடைசி ஸ்லோகத்தில்‌ 'என்னுடைய நடத்தையை நினைக்காமல்‌, உன்னுடைய திருவடித்தாமரைகளில்‌ இயற்கையாக
இருக்கும்‌ மேலான அன்பிற்கு எல்லை நிலமாயிருப்பவரும்‌,ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவரும்‌, எனக்குப் பாட்டனாருமாகிய நாதமுனிகள்‌ கடாக்ஷித்து எனக்கு அருள்‌ புரிய வேண்டும்‌" என்கிறார்‌. நாதமுனிகள்‌ வீட்டில்‌ இல்லாதபோது வில்லேந்திய இருவீரரும்‌, ஒரு பெண்ணும்‌ ஒரு குரங்கும்‌ அவரைத் தேடி வந்துவிட்டுப்‌ போனதாக வீட்டிலுள்ளவர்கள்‌ சொன்னதாகவும்‌, அவ்வாறு வந்தவர்‌ ஸீதா ராமலட்சுமண அனுமானாகத்தான்‌ இருக்க வேண்டும்‌ என எண்ணி அவர்களைத்‌ தொடர்ந்து அவர்கள்‌ போன இடமான கங்கைகொண்ட சோழபுரம்‌ சென்று அங்கேயே தேகப்பிராப்தி அடைந்தார்‌ என்பதும்‌ கர்ண பரம்பரைச்செய்தி. நாதமுனி அதிக நாட்கள்‌ வாழ்ந்தால் கூட அவர்‌ வாழ்நாளிலேயே ஒரே மகனை இழக்கும்‌ அவல நிலை ஏற்பட்டதாகச்‌ சொல்லப்படுகிறது. அவரது மகன்‌ ஈஸ்வர முனியின்‌ மகனான யமுனாச்சாரியார்‌ இளவயதிலேயே மிகக்‌ கீர்த்தி வாய்ந்தவராக இருந்தார்‌.

ஆரப்பொருள்‌ தென்குருகைப்பிரான்‌, அமுதத் திருவாய்‌ ஈரத்தமிழின்‌ இசையுணர்ந்தோர்கட்டு, இனியவர்தம்‌
சீரைப்‌ பயின்றுய்யும்‌ சீலங்கொள்‌ நாதமுனியை நெஞ்சால்‌
வாரிப் பருகும்‌ இராமானுசன்‌ என்தன்‌ மாநிதியே
(இரநூந்‌. 20)
தெருளுற்ற ஆழ்வார்கள்‌ சீர்மை அறிவாரார்‌?
அருளிச் செயலை அறிவாரார்‌? — அருள்‌ பெற்ற
நாதமுனி முதலான நம்‌ தேசிகரை யல்லால்‌
பேதை மனமே! உண்டோ பேசு
.(உபதே. 36)

நாதமுனிகள்‌ அருளிய நம்மாழ்வார்‌, பெரியாழ்வார்‌ திருவாய்மொழி, மதுரகவியாழ்வார்‌ இவர்களைப் பற்றி யருளிய தனியன்களில்‌ மதுரகவி பற்றிய தமிழ்த் தனியன்‌ வருமாறு.
வேறொன்றும்‌ நானறியேன்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த
மாறன்‌ சடகோபன்‌ வண்குருகூர்‌ ஏறு – எங்கள்‌
வாழ்வாமென்றேத்தும்‌ மதுரகவியார்‌ எம்மை
ஆழ்வார்‌ அவரே அரண்‌
–என்பதாகும்‌. இவர்‌ யோகத்தில்‌ இருக்கும் பொழுதே குருகைக்‌
காவலப்பன்‌ கோயிலில்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனார்‌ திருவடிகளில்‌ சேர்ந்தார்‌ என்று கூறப்படுகிறது.

ஆனிதனில்‌ அனுடத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆளவந்தார்க்குபதேசம்‌ அருளி வைத்தான்‌ வாழியே.
பானு தெற்கில்‌ கண்டவன்‌ சொல்‌ பலவுரைத்தான்‌ வாழியே
பராங்குசனார்‌ சொற்பிரபந்தம்‌ பரிந்து கற்றான்‌ வாழியே
கானமுறத் தாளத்தில்‌ கண்டுறைத்தான்‌ வாழியே
கருணையினால்‌ உபதேசக்கதியளித்தான்‌ வாழியே
நானிலத்தில்‌ குருவரையை நாட்டினான்‌ வாழியே
நலந்திகழும்‌ நாதமுனி நற்பதங்கள்‌ வாழியே

நாதமுனிகளின்‌ பிரதான சீடரான உய்யக் கொண்டார்‌, என்ற புண்டரீகாக்ஷர்‌, நாதமுனிகள்‌ அவதரித்து 63 வருடங்களுக்குப் பின்‌னர்‌ கி.பி. 886-ல்‌ சித்திரை மாதம்‌ கார்த்திகை நட்சத்திரத்தில்‌ திருவெள்ளறை என்னும்‌ திருத்தலத்தில்‌ ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குலத்தில்‌ பிறந்தவர்‌, ஆச்சார்ய பரம்பரையில்‌ நாதமுனிகளாகிய மலையிலிருந்து விழுகிற அருவியாக அமைந்தவர்‌ உய்யக்கொண்‌டார்‌. ஆதி காலத்தில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ காடாக இருந்த காலத்திலே ஸ்ரீராமபிரானுக்கு முன்னோனாகிய சிபிச்சக்கவர்த்தியால்‌, மத்தியப் பிரதேசத்திலிருந்து 2700 ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குடும்பங்கள்‌ திருவெள்ளறையில்‌ எழுந்தருளியிருக்கும்‌ புண்டரீகாக்ஷப்‌ பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதற்காகக்‌ கொண்டு வரப்பட்டனர்‌. இவ்வாறு ஆதி காலத்திலேயே ஏற்பட்ட புனிதத்தல மாகையால்‌ இதை இன்றும்‌ மக்கள்‌ ஆதித் திருவெள்ளறை என்று அழைக்கின்றனர்‌. ஆதிகாலத்திலேயே சோழ தேசத்திற்கு வந்தவர்களாதலால்‌ சோழியர்கள்‌ என்றழைக்கப்பட்டனர்‌. இத்தகைய ஸ்ரீ
வைஷ்ணவப் பிரமாண குலத்தில்‌ பிறந்தவர்‌ உய்யக் கொண்டார்‌. ஞான ஜன்மமே தேக ஜன்மத்தை விடச்‌ சிறந்ததாகக்‌ கருதப்பட்டு வந்த காலமாதலால்‌ உய்யக்கொண்டாரது ஆச்சார்ய, சிஷ்யர்களைப்‌ பற்றிக்‌ குறிக்கப்பட்டது போல, அவரது பெற்றோர்களைப்‌ பற்றியும்‌ மக்களைப்‌ பற்றியும்‌ விவரங்கள்‌ குறிக்கப்படவில்லை. சிறந்த வைணவ பக்தர்களுக்குக்‌ குமாரராக அவதரித்தவர்‌ என்றும்‌ பெற்‌றோர்களால்‌ முறைப்படி புண்டரீகாக்ஷன்‌ என்று திருநாமம்‌ சூட்டப்‌பட்டு உரிய காலங்களில்‌ அன்னப் பிரசானம்‌ செளனம்‌, உபநயனம்‌ முதலான சடங்குகளெல்லாம்‌ செய்யப்பட்டு தக்க ஆச்சாரியனை எதிர்நோக்கிக்‌ காத்திருந்தவர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
இந்நிலையில்‌ அவரை நாதமுனிகளிடத்தில்‌ சீடராய்‌ இருந்து பாடங்கேட்குமாறு அனுப்பிவைத்தனர்‌. அந்நாளிலிருந்து நாதமுனிகளையல்லாது அறியாதவராய்‌, குருகுலவாசம்‌ செய்து வந்தார்‌.-நாதமுனிகள்‌ சிஷ்யர்களில்‌ முக்கியமானவர்கள்‌ உய்யக்கொண்டாரும்‌, குருகைக்‌ காவலப்பனுமேயாவார்கள்‌. இதில்‌ குருகைக்‌ காவலப்பன்‌, நாதமுனிகள்‌ அருகில்‌, எப்போதும்‌ யோகத்தில்‌ எழந்தருளியிருக்கும்‌ இடத்திற்கு அருகிலேயே யோகத்திலே எழுந்‌தருளியிருந்தார்‌. நாதமுனிகளிடம்‌ இரு நிதிகள்‌ இருந்தன. பகவத்‌ பிராப்தக்கு (முக்திக்கு) உறுப்பான பக்தி யோகம்‌ ஒன்று. பகவத்‌
குண ஸ்வரூப விபூதிகளைத்‌ தெளியப் பேசும்‌ நாலாயிரம்‌ பாசுரங்களடங்கய திவ்யப்பிரபந்தம்‌ மற்றொன்று. முதல்‌ நிதியினிலால்‌ சேதனன்‌ ஒருவன்தான்‌ முக்தி யடைய முடியும்‌. இரண்டாவது நிதியினாலே உலகத்தையே உய்விக்க முடியும்‌. இவற்றுள்‌ எது வேண்டும்‌ என்று குருகைக்‌ காவல் அப்பனை வினவினார்‌ நாதமுனிகள்‌.-நான்‌ பக்தி யோகத்தைப் பெற்று உய்ந்து போகிறேன்‌ என்றார்‌ அவர்‌. அதன்‌ படியே உபதேசம்‌ பெற்று உஜ்ஜீவனமடைந்தார்‌. நாதமுனிகள்‌ புண்டரீகாஷரையும்‌ வினவ, அவர்‌ ‘பிணங் கெடக்க மணம்‌ புணருவாருண்டோ? உலகமே ஆத்ம நாசமடைந்து, பிணக்காடாயிருக்கும் பொழுது அடியேன்‌ ஒருவன்‌ பெருமானோடு ஆத்ம விவாஹம்‌ செய்து கொண்டு மோட்சமடைவது சரியாகுமோ, அடியேன்‌ எப்படியானாலும்‌ பரவாயில்லை. உலகம்‌ உய்யும்‌ வகையாகத்‌ திவ்யப் பிரபந்தங்களை உபதேஸிப்பீர்‌’ என்றார்‌.

இதைக் கேட்ட நாதமுனிகள்‌ அவரை வாரி அணைத்துப்‌ “புண்‌டரீகாக்ஷ்ரே! நீரே உலகையும்‌, உலகை உடையவனான நாராயணனையும்‌, அவனைச்‌ சொல்லும்‌ அருளிச் செயல்களையும்‌ அதைப்‌ பெற்ற என்னையும்‌ உய்யக் கொண்டவர்‌. உம்மாலே தான்‌ நான்‌அரும்பாடு பட்டுப் பெற்ற அத்தமிழ்‌ மறைகள்‌ உலகெங்கும்‌ பரவி அனைவரையும்‌ உய்விக்கப்‌ போகின்றன. இன்று முதல்‌ நீர்‌ ‘உய்யக் கொண்டார்‌’ என்ற திருநாமத்தாலேயே விளங்கக்‌ கடவீர்‌’
என்று அருளிச்‌ செய்து திவ்யப் பிரபந்தங்களை உய்யக்கொண்டாருக்கு உபதேசித்தருளினார்‌, உய்யக்கொண்டாரது இத்தகைய சுயநலம்‌ பேணாத பரந்த மனப்பான்மையினால்‌ இன்று நாம்‌ அருளிச்‌ செயல்களாலேயே உய்ந்து போகிறோம்‌. இதனாலேயே இவர்‌ ஸ்ரீ வைஷ்ணவ சமூகம்‌ முழவதற்கும்‌ பிரேமாச்சாரியராய்‌, நாதமுனிகளுக்கு பின்‌ அனுசந்திக்கப்படுகிறார்‌.
நாதமுனிகள்‌ யோக திசையில்‌ நம்மாழ்வாரிடம்‌ திருவாய்‌மொழி உபதேசம்‌ பெறும் பொழுது ‘பொலிக பொலிக: என்னும்‌ திருவாய்மொழி வந்தவுடன்‌ கலியும்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌:என்று நான்‌ சொன்னதை மெய்யாக்க ஒரு மஹான்‌ அவதரிக்கப் போகிறார்‌ என்றார்‌ ஆழ்வார்‌. அவரைச் சேவிக்க வேண்டும்‌ என்று நாதமுனி வேண்ட, ஆழ்வாரும்‌ அப்படியே இராமானுஜரின்‌ உருவைச்‌ சேவை சாதிக்க தேவரீரைக்‌ காட்டிலும்‌ அழகிய இந்தத்‌ திருமேனியை அடியேன்‌ எப்பொழுதும்‌ சேவித்து வழிபட வேண்‌டும்‌ என்று நாதமுனி பிரார்த்திக்க ஆழ்வாரும்‌ சிற்பிகளை கனவு மூலமாக நியமித்து எம்பெருமானாருடைய விக்ரகத்தைச்‌ செய்‌வித்து நாதமுனிகளிடம்‌ கொடுத்தருளி, இவரை நம்முடைய -அடியாக நினைத்திரும்‌ என்று அருளினார்‌ என்று நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற வைஷ்ணவ சீலர்‌ அருளிச் செய்வார்‌.
தம்முடைய அந்திம காலத்திலே நாதமுனிகள்‌, உய்யக்கொண்டாரிடம்‌ ‘ஒருவருக்கும்‌ வெளியிடாதே கொள்ளும்‌ என்று அந்தப்‌ பவித்திரமான விக்ரகத்தைக்‌ கொடுத்து ‘இதை என்‌ பேரனுக்கு. நான்‌ விரும்பின விஷயம்‌’ என்று கொடும்‌ என்று கூறி ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌ என்று சடகோபன்‌ பொன்னடியான அவ்விக்ரகத்தைத்‌ தியானம்‌ பண்ணிக் கொண்டு இறைவனடி சேர்ந்தார்‌.
உய்யக்கொண்டாரது கடைசிக்காலம்‌ வரை நாதமுனிகளது பேரன்‌ அவதரிக்காததால்‌, அவ் விக்ரகத்தைத்‌ தம்முடைய பிரதான சீடரான மணக்கால்‌ நம்பியிடம்‌ கொடுத்து நாதமுனிகளது பேரன்‌ யமுனைத்‌ துறைவரிடம்‌ அதை அளிக்கும்படி கட்டளையிட்டார்‌ என்றும்‌ அவரும்‌ அவ்வண்ணமே அளித்தார்‌ என்றும்‌ கூறுவர்‌.
உய்யக்கொண்டார்‌ சீடர்கள்‌ ஐந்துபேரில்‌ பிரதானமான மணற்‌கால்‌ நம்பியின்‌ இயற்பெயர்‌ ‘ஸ்ரீராமன்‌’ என்பது. இவர்‌ உய்யக்‌கொண்டார்‌ திருவடிகளில்‌ 13 வருடகாலம்‌ சகல கைங்கர்யங்களும்‌ செய்து கொண்டிருந்தார்‌. ஒரு சமயம்‌ உய்யக் கொண்டாரது மனைவி இறந்துவிடவே திருமாளிகை (வீடு) காரியமெல்லாமும்‌ தானே செய்துவந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ உய்யக் கொண்டாரது சிறுமிகள்‌ இருவரையும்‌ நீராட்டி அழைத்து வரும் பொழுது வழியில்‌ வாய்க்கால்‌ சேறாயிருப்பதைக்‌ கண்டு அவர்கள்‌ திகைத்துநிற்க, தாம்‌ படியாய்க்கிடந்து, அவர்களைத்‌ தன்‌ முதுகிலே கால்‌ வைத்து நடக்குமாறு செய்து கூட்டிப் போக, உய்யக் கொண்டார்‌,தம்‌ புத்திரிகள்‌ கால்‌ சுவடுகள்‌ (மணற்கால்‌] அவர்‌ முதுகில்‌ பொலிய நின்றதைப் பார்த்து அவரை மணற்கால்‌ நம்பி என்றும்‌ அவர்‌ பிறந்த ஊருக்கு மணற்கால்‌ என்றும்‌ திருநாமம்‌ சாத்தினார்‌.இத்தகைய ஆச்சார்ய நிஷ்டையினால்‌ உய்யக் கொண்டாரது போற்‌றுதலுக்கும்‌ பாத்திரரானார்‌ மணற்கால்‌ நம்பி. உய்யக்கொண்டாரது அந்திம காலத்தில்‌ இந்த வைணவ தர்ஸனத்தை நடத்துபவர்‌ யார்‌ என்று கேட்க மற்ற முதலிகளையும்‌ (ஸ்ரீவைஷ்ணவர்கள்‌) கூட்டிக் கொண்டு நீரே நடத்துவீர்‌: பின்னர்‌ நாதமுனிகளுக்குப்‌ பேரன்‌ பிறந்த பின்னர்‌ அவருக்கு யமுனைத் துறைவர்‌என்ற பெயரை வழங்கி இந்த எம்பெருமானார்‌ விக்ரகத்தையும்‌ கொடுத்து தகுந்த ஆச்சாரியரைத்‌ தேடிக்கண்டுபிடித்து அவரிடம்‌ தர்ஸன நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டியது அவரது கடமை என்று நாதமுனிகள்‌ நியமித்ததாகச்‌ சொல்லி அவருக்கு எல்லா அர்த்தங்களையும்‌ உபதேசியும்‌ என்று கூறி நாதமுனிகள்‌ திருவடிகளை நினைத்தவாறே திருநாட்டுக்கு ஏகினார்‌. உய்யக் கொண்டார்‌ கிரந்தம்‌ எதுவும்‌ எழுதினதாகத்‌ தெரியவில்லை. இவரது வேறு பெயர்கள்‌ புண்டரீகாக்ஷர்‌, பத்மாக்ஷர்‌, அரவிந்தாக்ஷர்‌ என்பர்‌.
இவரது ஆச்சாரியார்‌ நாதமுனிகள்‌ என்று கண்டோம்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகின்றது. இவர்‌ அருளிய திருப்பாவைத் தனியன்கள்‌.

அன்ன வயல்‌ புதுவை ஆண்டாள்‌ அரங்கற்குப்‌
பன்னு திருப்பாவை பல் பதியம்‌ – இன்னிசையால்‌
பாடிக் கொடுத்தாள்‌ நற் பா மாலை பூ மாலை
சூடிக்‌ கொடுத்தாளைச்‌ சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவாய்‌
பாடி யருள வல்ல பல் வளையாய்‌ – நாடிநீ
வேங்கடவெற் கென்னை விதி யென்ற இம் மாற்றம்‌
நாம்‌ கடவா வண்ணமே நல்கு:

நாதமுனிகள்‌ உய்யக் கொண்டாரிடம்‌, குளப்படியில்‌ நீரைத் தேக்கினால்‌ வற்றிப் போகும்‌. வீராணத்து ஏரியில்‌ தேக்கினால்‌ நாட்டுக்கு உபகாரமாகலாம்‌. ஆகவே இந்தப்‌ பிரமேய ரத்னத்தை ஆளவந்தாருக்கு உபதேசியும்‌ என்று சொன்னதாகச்‌ சொல்லுவர்‌.

வால வெய்யோன்‌ தனை வென்ற வடிவழகன்‌ வாழியே
மால் மணக்கால்‌ நம்பி தொழும்‌ மலர்ப் பதத்தான்‌ வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்பான்‌ வாழியே
சித்திரையில்‌ கார்த்திகை நாள்‌ சிறக்க வந்தான்‌ வாழியே
நாலிரண்டும்‌ ஐயைந்தும்‌ நமக்குரைத்தான்‌ வாழியே
நாலெட்டின்‌ உட்பொருளை நடத்தினான்‌ வாழியே
மாலரங்க மணவாளர்‌ வளமுரைப்பான்‌ வாழியே
வையமுய்யக்‌ கொண்டவார்‌ தாள்‌ வையத்தில்‌ வாழியே
நாலிரண்டு
– திருவெட்டெழுத்துதிருமந்திரம்‌
ஐயைந்து இருபத்தைந்து எழுத்துக்களுள்ள த்வையம்‌ மந்திரம்‌
நாலெட்டு – முப்பத்திரண்டு எழுத்துக்களுள்ள சரம ஸ்லோகம்‌-ரகஸ்ய த்ரயம்‌ சொன்னபடி.

நாதமுனிகளுக்கு மேலையகத்தாழ்வான்‌ (வரதாச்சார்யார்‌,கீழையகத்தாழ்வான்‌ (கிருஷ்ணமாச்சார்யார்‌] என்ற மருமக்கள்‌ இருவர்‌ உண்டு. இவர்களைப் பற்றி வேங்கட சேஷாச்சாரியார்‌ என்பவர்‌ வரதாச்சார்யார்‌ என்பவர்‌ ஸ்ரீதர யோகாபதி என்றும்‌, கிருஷ்ணமாச்சார்யார்‌ ஸ்ரீதர யோகக்கல்பகத்தரு என்னும்‌ பெயருடைய
யோக சாஸ்திரங்களைச்‌ செய்தனர்‌ என்பார்‌. வரதாச்சார்யார்‌ குமார ரான நிர்மல தாஸர்‌ ஸ்ரீமத்நாதமுனிகள்‌ அருளிச் செய்த யோகசாராப்ரத்துக்கு விருத்தி (விளக்கம்‌) அருளிச்செய்தார்‌. இவர்‌ குமாரரான ஞான வராஹாச்சாரியார்‌ நாதமுனிகளுடைய யோக சாஸ்திரத்‌துக்கும்‌ பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கும்‌, ஐக கண்டயம்‌ செய்தார்‌.
குருகைக் காவலப்பன்‌ என்னும்‌ இவர்‌ குமாரரான குருகேசர்‌ ஸ்ரீஆளவந்தாருக்கு யோக சாஸ்திரத்தை உபதேசிக்க விரும்பி நான்‌ நித்ய விபூதிக்கு எழுந்தருளும்போது (மரணமடையும்‌) வருமாறு நியமித்திருக்க அக் காலத்தை ஆளவந்தார்‌. மறந்து வராமலிருந்து விட்டபடியால்‌ ஸ்ரீ குருகைக்காவலப்பன்‌ வரை வந்த யோகானுஷ்‌டானம்‌ நின்று விட்டது.
குருகைக்‌ காவலப்பன்‌ நாதமுனிகளின்‌ மருமகனின்‌ பூட்டன்‌ -அக் காலத்தில்‌ தமக்குத்‌ தெரிந்த ஞான சாஸ்திரங்களைப்‌ பிறருக்குச்‌ சொல்வதில்‌ எவ்வளவு கண்டிப்பாக இருந்தார்கள்‌ என்பதை அறிகிறோம்‌. இராமானுஜர்‌ காலத்தில்‌ எவ்வாறு இந்த நிலை மாற்றமடைந்தது என்பதைக் காண இருக்கிறோம்‌. நாதமுனிகள்‌ தன்னுடைய மருமக்களான கீழையகத்தாழ்வாரையும்‌, மேலையகத்தாழ்‌வாரையும்‌ அழைத்து ஆழ்வார்‌ பாசுரங்களை இயலும்‌ இசையுமாகப்‌ பாடுவித்தருளிய வைபவத்தை ஸ்ரீவேதாந்த தேசிகர்‌ குருபரம்‌பரா ஸாரத்தின்‌ இறுதிப்பகுதியில்‌
காளம்‌ வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்‌
தாளம்‌ வழங்கித்‌ தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்‌
மூளூம்‌ தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளூம்‌ தொழுதெழுவோம்‌ நமக்கார்‌ நிகர்‌ நானிலத்தே.-
என்று அவர்கள்‌ இருவரையும்‌ காளம்‌ வலம்புரி போல வைத்து இனிய தேவ கானத்தை அமைத்துக்‌ கொடுத்த நாதமுனி என்று புகழ்கிறார்‌.

குருகைக்‌ காவலப்பன்‌ நாதமுனிகளின்‌ சிஷ்யரென்றும்‌ அவரிடமிருந்து யோக
ரகஸ்யத்தைக்‌ கேட்டுப் பெற்றார்‌ என்றும்‌ முன்னரே கண்டோம்‌.ஆளவந்தாருக்குக்‌ குருகைக்‌ காவலப்பன்‌ கூறியதாகச்‌ சொல்லும்‌ ஒரு செய்தி உண்டு. அப்பன்‌ ஸ்ரீபாதத்தில்‌ ஒரு ரகஸ்ய விசேஷம்‌உண்டு என்று மணற்கால்‌ நம்பி கூற அதைக்கேட்க வேண்டும்‌ என்று ஆளவந்தாரும்‌, குருகைக்‌ காவலப்பன்‌ ஒரு குட்டிச்சுவரருகே யோகத்திலே இருக்கும்‌ இடத்திற்கு வந்தார்‌. ஆளவந்தார்‌ அவரதுசமாதி நிலையைக்‌ கலைக்க விரும்பாது மறைந்து நிற்க, அப்பனும்‌ யோகத்திலிருந்து கலைந்து கண்விழித்துப் பார்த்து இங்கு சொட்‌டைக்‌ குலத்திலிருந்து வந்தவர்‌ யாரேனும்‌ உண்டா என்று .கேட்க ஆளவந்தார்‌ நாங்கள்‌ மறைந்திருந்தது தேவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டாராம்‌. அதற்குக்‌ குருகைக்‌ காவலப்பனும்‌ நானும்‌ பெருமாளும்‌ தனித்திருக்கும் பொழுது பெரிய பிராட்டியார்‌ வந்‌தால்‌ கூடக்‌ கவனிக்காத எம்பெருமான்‌, என்‌ கழுத்தை அமுக்கி நாலு தரம்‌ எட்டிப் பார்த்தார்‌. அப்படி அவர்‌ பார்த்தால்‌ சொட்டைக்‌குடியில்‌ யாரேனும்‌ வந்திருக்க வேண்டும்‌ என்று நினைத்தேன்‌ என்றாராம்‌.-ஜகத்திற்கும்‌ ஈஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பு எத்தகையது என்று ஒருவர்‌ அப்பனைக்‌ கேட்டபொழுது இந்த சரீரத்திற்கும்‌, இதற்கு ஈஸ்வரனாயுள்ள ஜீவாத்மாவிற்கும்‌ உள்ள தொடர்பாகிற சரீராத்மாத்‌ தன்மையே; உலகிற்கும்‌ ஸர்வேஸ்வரனுக்கும்‌ உள்ள தொடர்பாகும்‌ என்று கூறினாராம்‌. அதே மனிதன்‌ அப்பனைப்‌ பார்த்து எப்பொழுதும்‌ எம்பெருமானை நினைத்துக்‌ கொண்டிருக்‌கும்‌ நீர்‌ அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்‌ என்று வேண்ட, அதற்கு அவர்‌, நான்‌ உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்லுகிறேன்‌. நீ அவனை மறக்க எனக்கு வழி சொல்கிறாயா என்றாரம்‌. இதன்‌ பொருள்‌, எந்தப்பொருளுமே எம்பெருமானுக்குச்‌ சரீரியாய்‌ இருப்பதால்‌ சரீரமாய்‌ விசேஷமான அவனுடைய நினைவே வரவேண்டியிருக்கும்‌. ஆகவே உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களும்‌ பகவானது சரீரத்தின்‌ பகுதிகளே, பார்க்குமிடமெங்கும்‌ நீக்கமற நிறைந்திருப்பவன்‌ அவன்‌ என்பது கருத்து. ஆளவந்தாரால்‌ இவரிடமிருந்து யோகானுஷ்டா னத்தைப் பெற முடியாமல்‌ போன சம்பவத்தை முன்னரே பார்த்தோம் –

குருகைக்‌ காவலப்பன்‌ பிறந்த இடம்‌ பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூர்‌. பிறந்த நட்சத்திரம்‌ தை மாதத்தில்‌ விசாகம்‌. அவர்‌ இருந்த இடம்‌ நாதமுனிகளது திருப்பள்ளி. அது அன்று முதலாக சோழ தேசத்திலே காவிரிக் கரையிலே குருகைக்‌ காவலப்பன்‌ கோயில்‌ என்றழைக்கப்படுகிறது. அவருடைய ஆச்சார்யார்‌ நாதமுனிகள்‌. அவருடைய திருவாராதனப்‌ பெருமாள்‌ சக்கரவர்த்தித்‌ திருமகனார்‌. இவரது இளமைப்பெயர்‌ புண்டரீகாக்ஷர்‌. இவர்‌ 157ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகிறது. இவர்‌ அருளிய மூன்றாம்‌ திருவந்தாதித் தனியன்‌
சீராரும்‌ மாடத்‌ திருக்கோவலூரதனுள்‌
காரார்‌ கருமுகிலைக்‌ காணப்புக்கு – ஓராத
திருக்கண்டேன்‌ என்றுரைத்த சீரான்‌ கழலே
உரைக்கண்டாய்‌ நெஞ்சே உகந்து
:-என்பதாகும்‌.

மகரமதில்‌ விசாகம்‌ நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே
மாறன் தாள்‌ நாதமுனி மலரடியோன்‌ வாழியே
நிகரில்‌ நன்‌ ஞான யோகம்‌ நீண்டு செய்வோன்‌ வாழியே
நிர்ணயமா ஐந்து பொருள்‌ நிலையறிவான்‌ வாழியே
அகமறுக்குமிராமர்‌ பதம்‌ ஆசையுள்ளோன்‌ வாழியே
ஆழ்வார்கள்‌ மறையதனை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
செகதலத்தில்‌ குருகூரில்‌ செனித்த வள்ளல்‌ வாழியே
செய்குருகைக்‌ காவலப்பன்‌ திருவடிகள்‌ வாழியே

திருக்கண்ணமங்கையாண்டான்‌ நாதமுனிகளின்‌ முக்கிய சிஷ்யர்கவில்‌ ஒருவர் – இவர்‌ திருக்‌கண்ணமங்கை என்ற ஊரில்‌ பிறந்தவர்‌. இவரைப் பற்றிய பல செய்திகள்‌ பல கிரந்தங்களில்‌ உள்ளன. நாதமுனிகள்‌ இவருக்குத்‌ திருவாய்‌ மொழி உபதேசிக்கும்பொழுது ‘பொலிக பொலிக’ என்ற பாசுரம்‌ வந்தபொழுது நம்மாழ்வார்‌ அளித்துள்ள இராமானுஜரது
விக்ரகத்தின்‌ விருத்தாந்தங்களை யெல்லாம்‌ கூறக்கேட்டு, அத்தகைய பேற்றைப் பெற்ற தங்களுடைய சீடனான எனக்கு ஒரு குறைவும்‌ இல்லை என்று கூறினார்‌ என்பர்‌.-ஒரு நாள்‌ அவர்‌ ஒரு மகிழ மரத்தடியில்‌ உள்ள சருகுகளைப்‌ பெருக்கிச்‌ சுத்தம்‌ செய்து கொண்டிருந்த பொழுது ஒரு நாஸ்திகர்‌ அவரிடம்‌ உமக்கும்‌ எனக்கும்‌ என்ன வித்யாசம்‌ என்று கேட்க,
அவர்‌ பெருக்க இடமும்‌ பெருக்காத இடமும்‌ போல என்றாராம்‌.
“உபாயத்தை நிலையிட்டவர்கள்‌, பிராட்டி, திரெளபதி, திருக்‌கண்ணமங்கை ஆண்டான்‌ என்பவர்கள்‌’ என்று பெரியவாச்சான்‌பிள்ளை மாணிக்கமாலை என்ற நூலில்‌ அருளிச் செய்துள்ளார் . அவன்‌ தன்‌ சுயவியாபாரத்தை விட்டான்‌ என்ற பதத்திற்கு உரை கூறும்பொழுது, ஒரு சேவகனது நாயை ஒரு சேவகன்‌ அடிக்க, அதைப்‌ பொறாமல்‌ அடித்தவனை எதிர்த்துப்‌ பொருது, அவனையும்‌ கொன்று தானும்‌ குத்திக் கொள்வதாக இருக்கிறதைப்‌ பார்த்து, ஒரு சாதாரண மனிதன்‌ ஒரு தாய்க்காகத்‌ தன்‌ உயிரையும்‌ இழக்க இருக்கப்‌ பரம சேதனான இறைவன்‌ அவனடியாரை எவ்வளவு நிச்சயமாகப்‌ பரிபாலிப்பான்‌ என்று கருதித்‌ தன்‌ சுய வியாபாரத்தை விட்டுத்‌ திருக்கண்ணமங்கையில்‌ பக்தராகி, திருவாசலில்‌ அடைக்கலம்‌ புகுந்தார்‌. எறும்பியப்பா என்ற பக்தர்‌ திருக்கண்ண மங்கையாண்டானைப்‌ போலப்‌ பற்றற்றிருந்தால்‌ அவனுக்கு உலக அபவாதமும்‌ வராது. சாஸ்திர விரோதமும்‌ வராது, லோக அபராதமும்‌ வராது, பகவத நிக்ரகமும்‌ வராது என்றார்‌. இவர்‌ அருளிய நாச்சியார்‌ திருமொழித்தனியன்‌,
அல்லிநாட்டாமரைமேல்‌ ஆரணங்கின்‌ இன்துணைவி
மல்லி நாடாண்ட மடமயில்‌ – மெல்லியலாள்‌
ஆயர்குல வேந்தன்‌ ஆகத்தாள்‌ தென்புதுவை வேயர்‌ பயந்த விளக்கு’ –
என்பதாகும் –

உய்யக்கொண்டாரது சிறந்த சீடரான மணற்கால்‌ நம்பி என்ற ஸ்ரீ ராமமிஸ்ரர்‌, உய்யக்கொண்டார்‌ அவதரித்து 33 வருடங்களுக்குப்‌ பின்னர்‌ கி.பி. 929-ல்‌ லால்குடி அருகே இப்பொழுது மணற்கால்‌ என்று கூறப்படும்‌ கிராமத்தில்‌ அந்தணர்‌ குலத்தில்‌ மாசி மாதம்‌ மக நட்சத்திரத்தில்‌ பிறந்தார்‌. இவருக்கு எதனால்‌ மணற்கால்‌ நம்பி என்ற பெயர்‌ வந்தது என்பதை முன்னரே கண்டோம்‌. இவர்‌ தம்‌ ஆச்சார்யரான உய்யக்கொண்டார்‌ நியமனப்படி நாதமுனிகள்‌ பேரரான ஆளவந்தாரைத்‌ திருத்திப்‌ பணிகொண்டு அவருக்குத்‌ திவ்யப்‌ பிரபந்தங்களையும்‌ ரகஸ்ய த்ரயத்தையும்‌ நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற பவித்ரமான ராமானுஜ விக்ரகத்தையும்‌ கொடுத்தருளினார்‌.-அவரது அவதார ஸ்தலத்தில்‌ உள்ள அவரது திருவிக்ரகம்‌ திரிதண்‌டத்துடன்‌ காணப்படுவதால்‌ அவர்‌ கடைசிக் காலத்தில்‌ சந்யசித்திருக்க வேண்டும்‌ என்று தெரிகிறது. இவரும்‌ கிரந்தம்‌ எதுவும்‌ எழுதினதாகத்‌ தெரியவில்லை.
இவரது சீடர்கள்‌ ஆளவந்தார்‌ என்ற யமுனாச்சாரியார்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌, தெய்வத்துக்‌ கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலைதாஸர்‌, வங்கிபுரத்தாச்சி முதலியோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்ததாகச்‌ சொல்லப்படுகிறது. இவரையும்‌ எம்பெருமானார்‌ சீடர்‌ வடுக நம்பியையும்‌ ஆச்சார்ய கைங்கர்யத்திற்கு உதாரணமாகச்‌ சொல்வர்‌. இவர்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
ஆரம்‌ கெடப்‌ பரனன்பர்‌ கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடு குடற் பாம்‌பிற் கை யிட்டவன்‌, மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல்‌ கொல்லி காவலன்‌ வில்லவர் கோன்‌
சேரன்‌ குலசேகரன்‌ முடி வேந்தர்‌ சிகா மணியே”

தேசமுய்யக்‌ கொண்டவர்‌ தாழ் சென்னி வைப்போன்‌ வாழியே.
தென்னரங்கர்‌ சீரருளைச்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே.
தாசரதி திரு நாமம்‌ தழைக்க வந்தோன்‌ வாழியே.
தமிழ் நாத முனி யுகப்பைத் தாபித்தோன்‌ வாழியே.
நேசமடன்‌ ஆரியனை நியமித்தோன்‌ வாழியே.
நீனிலத்தில்‌ பதின்மர்‌ கலை நிறுத்தினோன்‌ வாழியே.
மாசிமகந் தனில்‌ விளங்க வந்துதித்தான்‌ வாழியே.
மால்‌ மணற்கால்‌ நம்பி பதம்‌ வையகத்தில்‌ வாழியே.

மணற்கால்‌ நம்பி அவதரித்து 47 வருடங்களுக்குப்‌ பிறகு கி.பி. 976-வது வருஷம்‌ ஆடி மாதம்‌ பெளர்ணமி திதியில்‌ உத்தராட நட்சத்திரத்தில்‌ நாதமுனிகளின்‌ குமாரரான ஈஸ்வர முனிகளுக்கும்‌ அவருடைய தர்ம பத்தினியான ஸ்ரீரங்க நாயகிக்கும்‌, நாதமுனிகள்‌ அவதரித்த காட்டுமன்னார்‌ கோவிலிலேயே அவதரித்தார்‌. நாதமுனிகள்‌ நியமித்தபடியே அவருக்கு யமுனைத்துறைவன்‌ என்ற நாமம்‌ சூட்டப்பட்டது. ஈஸ்வர முனிகளால்‌ உரிய காலத்தில்‌ அன்னப்பிரசானம்‌ உபநயனம்‌ போன்ற சடங்குகளெல்லாம்‌ செய்‌யப்பட்டன. அவருக்கு வேதத்தை அப்யஸித்தபொழுது ஏகசிந்தைஉடையவராய்‌ மகா மேதாவிலாசத்தை உடையவராய்‌ இருந்தார்‌. உரிய காலத்தில்‌ இவருக்கு விவாகமும்‌ செய்விக்கப்பட்டது.மகா பாஷ்ய பட்டர்‌ என்பவரிடம்‌ இவர்‌ சாஸ்திரங்களைக்‌ கற்று வந்தார்‌. அக்காலத்தில்‌ ராஜப் புரோகிதரான ஆக்கி யாழ்வான்‌ என்பவன்‌ தன்‌ வித்யா கர்வத்தாலே எல்லா வித்வான்களிடமும்‌ கப்பம்‌ வாங்கி வந்தான்‌. அவன்‌ ஒரு நாள்‌ கப்பம்‌ கேட்டு மஹாபாஷ்ய பட்டருக்கு ஓலை அனுப்ப, பட்டர்‌ கப்பம்‌ செலுத்த வழியில்லாமல்‌ தகைத்து நிற்பதைப் பார்த்து யமுனைத் துறைவர்‌ அவ்வோலையைக்‌ கிழித்தெறிந்து விட்டார்‌. அதைக்‌ கேட்ட ஆக்கி யாழ்வான்‌ அவ்வோலையைக்‌ கிழித்தவன்‌ வெறும்‌ கவியோ அல்லது சாஸ்திரம்‌ தந்திரம்‌ எல்லாம்‌ அறிந்த பண்டிதனோ என்றுகேட்டனுப்பினான்‌. அதற்கு அவர்‌ ‘நாம்‌ வெறும்‌ பண்டிதன்‌ மாத்திரமல்லோம்‌ மீமாம்ஸ சாஸ்திரக்கடலை மாத்திரம்‌ கரை கண்டவர்களல்லோம்‌. எதிர்வாதம்‌ புரிபவர்களாகிய யானைகளின்‌ மத்தகத்தைப்‌ பிளக்கும்‌ வல்லமை யுடையோம்‌’ என்று பதில்‌ அனுப்பினார்‌. உடனே அரசன்‌ யமுனைத் துறைவரை ராஜசபைக்கு வரச் சொல்லி ஒலை அனுப்பினார்‌. அவர்‌ ராஜ ஓலையையும்‌ கிழித்துப் போட அவர்‌ ஒரு மகான்‌ என்பதை உணர்ந்து பல்லக்குபரிவாரங்களை அனுப்பினார்‌ அரசர்‌.யமுனைத் துறைவரும்‌ அப்பல்லக்கில்‌ ராஜசபைக்கு வந்து தனக்குப்‌ பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை இரண்டிலும்‌ விசேஷமான பயிற்சி உண்டு. என்னைப் போன்ற மற்றொருவன்‌ தேடினாலும்‌ கிடைக்க மாட்டான்‌ என்ற பொருளுடைய ஸ்லோகத்தை எழுதி யனுப்பினார்‌. அதற்குப் பின்னர்‌ இவருக்கும்‌ ஆக்கி யாழ்வானுக்கும்‌ வித்வான்‌௧ள்‌ முன்னிலையில்‌ சம்வாதம்‌ (தர்க்கம்‌) நடந்‌தது. இந்த வாதத்தில்‌ ராஜாவும்‌, மகிஷியும்‌ பின்வருமாறு சபதம்‌ செய்து கொண்டனர்‌. யமுனைத்துறைவர்‌ தோற்றாராகில்‌ நான்‌ மகிஷி பதவியைத்‌ துறந்து உமக்கு வேலைக்காரியாவேன்‌ என்றாள்‌ ராஜமகஷி. ஆக்கியாழ்வான்‌ தோற்றானாகில்‌ நான்‌ யமுனைத்துறைவருக்குப்‌ பாதி ராஜ்யம்‌ தருவேன்‌ என்றார்‌ ராஜா. பின்னர்‌ வாதம்‌ ஆரம்பித்தது.இளம்‌ பிள்ளையான இவரை சாஸ்திர விவாதமில்லாமல்‌ லெளகிக விஷயங்களிலேயே தோற்கடித்து விடலாமென்றெண்ணிய ஆக்கி யாழ்வான்‌ லெளசீகங்களில்‌ நீர்‌ இல்லையென்பது நான்‌ உண்டு என்பேன்‌, நீர்‌ உண்டு என்பதை நான்‌ இல்லையென்பேன்‌.வென்றவன்‌ தோற்றவன்‌ தலையில்‌ அடிக்க வேண்டியது என்று கூறினான்‌. அதற்கிசைந்த யமுனைத் துறைவர்‌, 1) உன்‌ தாய்‌ மலடியல்ல, 3) அரசன்‌ தார்மீகன்‌, 3) ராஜ பத்தினி பதி விரதை என்ற மூன்று வாக்கியங்களைச்‌ சொல்லி அவனை மறுக்கச்‌ சொன்னார்‌. அவற்றை மறுக்க இயலாமல்‌ மெளனியாய்‌ இருந்தான்‌. பின்பு சாஸ்திர விவகாரமும்‌ நடந்தது. அதிலும்‌ அவன்‌ தோல்வியுற்றான்‌.பின்னர்‌ நீர்‌ சொன்ன மூன்று லெளகிக வாக்கியங்களை உம்மால்‌ மறுக்க முடியுமா என்று அரசனும்‌ அரசியும்‌ கேட்டனர்‌. முடியும்‌ என்று சொல்லி யமுனைத்துறைவர்‌ பின்வருமாறு மறுத்துக்காட்டினார்‌.-ஒர் மரமும்‌ தோப்பல்ல. ஒரு பிள்ளையும்‌ பிள்ளையில்லை-என்ற ௨லக வழக்கின்படி நிலையற்றதான இவ்வுலகில்‌ ஒரு பிள்ளையைப் பெற்றதாய்‌, இப் பிள்ளை நமக்குத்‌ தக்க வேணுமே என்று கலங்கிக் கொண்டே இருப்பாளாதலால்‌, அவள்‌ பிள்ளை பெற்றும்‌ மலடியே யாவாள்‌. இம் முறையில்‌ ஒரு பிள்ளை பெற்ற ஆக்கியாழ்வானுடைய தாய்‌ மலடியே யாவாளாதலால்‌ முதல்‌ வாக்‌கியம்‌ மறுக்கப்பட்டது. அடுத்துக்‌ குடிகள்‌ செய்யும்‌ பாபம்‌ அரசனைச்‌ சேருமாகையால்‌, பரம தார்மீகமான இவ்வரசனும்‌ குடிகள்‌ செய்யும்‌ பாவத்தில்‌ பங்கு பெறுகிறானாதலால்‌, இரண்டாவது வாக்கியமும்‌ மறுக்கப்பட்டது. இறுதியாகச்‌ சோமன்‌ முதல்‌ நாள்‌ உன்னை மணம்‌ புணர்ந்தான்‌. கந்தர்வன்‌ அடுத்த நாள்‌ உன்னை மணம்‌ புரிந்தான்‌. மூன்றாவது நாள்‌ அக்கினி உனக்குப்‌ பதியாகிறான்‌. நான்காவது நாளிலே தான்‌ கைப்பிடித்த கணவன்‌ உனக்குக்‌ கணவனாகினான்‌ என்ற வேத வாக்யெத்தின்படி எல்லாப்‌ பெண்களுக்கும்‌ முதல்‌ மூன்று நாட்களில்‌ தேவதைகளோடு தொடர்பு உண்டாகையால்‌ பதிவிரதை தத்துவத்துக்குக்‌ குறையுண்டு. ௮க்‌ குறை பரம வைதிகமான முறையில்‌ அரசனைக்‌ கைப்பிடித்த அரசிக்கும்‌ உண்டாகையால்‌ மூன்றாவது வாக்கியமும்‌ மறுக்கப்பட்‌டது.இவ்வாறு லெளகீக, சாஸ்திர வாதங்களில்‌ ஆக்கியாழ்வானை வென்ற போதிலும்‌ முதலில்‌ பண்ணின சபதத்தின்படி அவன்‌ தலையில்‌ அடிக்க மறுத்து விட்டார்‌. அவருடைய பண்பையும்‌, புலமையையும்‌, உலக அனுபவத்தையும்‌ கண்டு வியப்புற்ற அனைவரும்‌ அவரைப்‌ பெருமைப்படுத்தி கெளரவித்தனர்‌. ராஜமாதேவி “என்னை ஆளவந்தீரே’ என்று தன்‌ பிள்ளையைப்‌ போல்‌ எடுத்தணைத்துக் கொண்டு அரசனுடன்‌ அரண்மனைக்குள்‌ புகுந்தாள்‌.-அரசன்‌ தான்‌ ஒப்புக் கொண்டபடியே இவருக்குப்‌ பாதிராஜ்யம்‌ கொடுத்தான்‌. இவரை எல்லோரும்‌ ஆளவந்தார்‌ என்றே அழைக்கலாயினர்‌. இவரும்‌ தம்‌ பத்தினியோடு கூடி அரசாட்சி செய்து கொண்டு அரச போகத்தில்‌ ஆழ்ந்திருந்தார்‌. உய்யக்கொண்டார்‌ நியமனத்தாலே யமுனைத்துறைவரைத்‌ தர்ஸன கைங்கர்யத்திலே ஈடுபட வைக்க ஆசைகொண்ட மணற்கால்‌ நம்பியால்‌ கட்டுங்காவலுமாய்‌ இருந்த அரண்மனைக்குள்‌ சென்று ஆளவந்தாரைக்‌ காண இயலவில்லை. தூதுவளைக்கீரையே ஆளவந்தார்‌ விரும்பி உண்‌ணும்‌ கறியமுது என்றறிந்து மடப்பள்ளிக்கு ஆறுமாத காலம்‌ கீரையை அளித்து வந்தார்‌. அப்போதும்‌ இவரைப் பற்றி ஆளவந்தார்‌ விசாரிக்காமல்‌ இருக்கவே நாலு நாள்‌ தூதுவளை கொடுப்பதைத்‌ தவிர்த்து இருந்தார்‌. ஆளவந்தார்‌ அமுது செய்யும் பொழுது தூதுவளை இல்லாமல்‌ இருப்பதேன்‌ என்று வினவிய பொழுது ஆறு மாத காலமாக ஒரு வயோதிக அந்தணர்‌ அளித்து வந்தார்‌. நாலு நாளாக வரவில்லை என்றனர்‌. மறுநாள்‌ மணற்கால்‌ நம்பியும்‌ இன்னமும்‌ முயற்சி செய்து பார்க்கலாமென்றெண்ணி தூதுவளை கொண்டுவந்து மடைப்பள்ளியில்‌ கொடுத்தார்‌. அவர்களும்‌ நம்‌பியை ஆளவந்தாரிடம்‌ : அழைத்துச் சென்றனர்‌. ஆளவந்தாரும்‌ அவரை நல்லமுறையில்‌ வரவேற்று ‘நீர்‌ தூதுவளை கொண்டு வந்து கொடுக்கக்‌ காரணம்‌ யாது என்று வினவ, இவரும்‌ உம்முடைய பாட்டனார்‌ தேடி வைத்த நிதி ஒன்று என்னிடம்‌ இருக்கிறது. அதை உம்மிடம்‌ அளிப்பதற்கு நான்‌ இங்கு வந்து போகத்‌ தடை செய்யாமல்‌ இருக்கும்படி உத்தரவிட வேண்டும்‌ என்று கூறினார்‌.

அன்றுமுதல்‌ அவ்வாறே செய்யுமாறு அரண்மனை ஏவலாளர்‌களுக்குக்‌ கட்டளையிட்டிருந்தார்‌ ஆளவந்தார்‌. நம்பியும்‌ தினமும்‌அரண்மனைக்குச்‌ சென்று கீதையின்‌ செம்மைப்பொருளை உபதே சிக்க அதில்‌ ஆவல்மிகுந்த ஆளவந்தார்‌ எம்பெருமானை அடைய உபாயமேது என்று நம்பியைக்‌ கேட்டார்‌. நம்பியும்‌ அவருக்கு சரம
ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை) உபதேசித்து அவனை
அடைய அவனே உபாயம்‌ என்ற உறுதியை அவருக்கு உண்டாக்கினார்‌. ஆழ்வார்கள்‌ அருளிச்செயல்களையும்‌ அவற்றின்‌ அரும்பொருள்களையும்‌ உபதேசித்தார்‌. பின்னர்‌ திருவரங்கத்திற்கு அவரை அழைத்துச்சென்று பெரிய பெருமாளைத்‌ திருவடி தொழச்செய்து உங்களுடைய பாட்டனார்‌ தேடிவைத்த பெருநிதி இதுவேயாகும்‌
என்று காட்டிக்கொடுக்க, பெரியபெருமானிடம்‌ ஈடுபட்ட ஆளவந்‌தார்‌, ராஜ்ய பாரத்தைத்‌ துறந்து துறவு பூண்டு ஸ்ரீரங்கத்தில்‌ தர்ஸன நிர்வாகம்‌ செய்து வந்தார்‌. அக்காலத்திலே, பெரியதம்பி திருக்‌கோட்டியர்‌ நம்பி, பெரிய திருமலைநம்பி, திருமாலையாண்டான்‌
முதலான வைணவ பிராமணோத்தமர்களும்‌, திருக்கச்சி நம்பி, மாறனேரிநம்‌பி முதலான பாகவதோத்தமர்களும்‌ அவரை ஆஸ்ர யித்திருந்தார்கள்‌. (அடைக்கலமடைந்திருந்தார்கள்‌].

பின்னர்‌ மணற்கால்‌ நம்பி, ஆளவந்தாரிடம்‌ நாதமுனிகள்‌ குருகைக்‌ காவலப்பனிடம்‌ யோக ரகசியத்தைத்‌ தெரிந்து கொள்ளச்‌ சொன்னதையும்‌, அது நிறைவேறாமற்போனதையும்‌ நாம்‌ குருகைக்‌ காவலப்பன்‌ வைபவத்திலேயே தெரிந்து கொண்டோம்‌. ஆளவந்‌தார்‌ கோயில்‌ நிர்வாகத்தின்போது நம்‌ பெருமாள்‌ திரு அத்யயன உத்சவத்தில்‌, திருவரங்கப்‌ பெருமாள்‌ அரையர்‌, ஆளவந்தார்‌ திருமுகத்தைப்பார்த்து ‘நடமினோ நமர்களுள்ளீர்‌, நாமுமக்கறியச்‌ சொன்‌னோம்‌” என்று பல காலம்‌ பாடியருள, ஆளவந்தாரும்‌, பெரியபெருமாள்‌, நியமனம்‌ பெற்று திருவனந்தபுரம்‌ சென்று சேவித்துத்‌ திரும்பாமுன்‌, இவருடைய பிரிவினால்‌, மடத்துக்குக்‌ காவலாயிருந்த தெய்வவாரியாண்டான்‌, வாடி வலிய அவரை ஆளவந்தாரிடம்‌ கூட்டிச் செல்லும்பொழுது பாதிவழியில்‌ ஆளவந்தார்‌ திரும்பி வரவும்‌, அவரைக்கண்டபின்‌ உடல்‌ முன்போல்‌ தேறி அவருக்கு ஆச்சார்ய கைங்கர்யம்‌ செய்து வருவாரானார்‌.-இந்நிலையில்‌ தனக்குப்பின்‌ இந்தத்‌ தர்ஸனத்திற்கு அதிகாரி யார்‌ என்று மிகுந்த கவலையோடு இருந்தபொழுது காஞ்சியிலிருந்து வந்த இரு வைணவர்கள்‌ ஆளவந்தாரிடம்‌, யாதவப்பிரகாசன்‌ என்ற ஏகதண்டி சந்நியாசியிடம்‌ ஸ்ரீ பெரும்புதூர்‌ இளையாழ்வார்‌ என்ற ஒருவர்‌ வேதாந்தம்‌ கற்று வருகிறாரென்றும்‌, அவர்‌ வேதப்‌ பொருளுக்கு விளக்கம்‌ சொல்வது மிகவும்‌ நன்றாக இருக்கிறது என்றும்‌ சொன்னார்கள்‌. ஒரு நாள்‌ இளையாழ்வார்‌ யாதவப்பிரகாசருக்கு எண்ணை தேய்த்துக்‌ கொண்டிருக்கும்பொழுது யாதவப்பிரகாசர்‌ ‘கப்யாசம்‌’ என்ற பதத்திற்கு குரங்கின்‌ ஆசனவாய்‌ என்று தப்பர்த்தம்‌ சொன்னதைக்கேட்ட இளையாழ்வார்‌ மனக்கிலேசப்‌பட்டு கண்ணீர்‌ விட அது அவன்‌ தொடையில்‌ விழ அவன்‌
கிலேசத்திற்குக்‌ காரணம்‌ கேட்க, இவரும்‌ சூரியனைக்‌ கண்டு மலர்ந்த கமலம்‌ போல பரமபுருஷன்‌ கண்கள்‌ என்று சொல்ல வேண்டியிருக்க தாங்கள்‌ தப்பர்த்தம்‌ சொல்லியதைக்கேட்டு வருந்‌தினேன்‌ என்று சொன்ன சம்பவத்தைச்‌ சொன்னார்கள்‌-

இந்த விருத்தாந்தங்களை யெல்லாம்‌ கேட்ட ஆளவந்தார்‌ இளையாழ்வாரது மேதா விலாசத்தையும்‌, ஞானவைராக்யங்களையும்‌ கேட்ட மாத்திரத்திலேயே மிகவும்‌ மகிழ்ந்தவராய்‌, அவரைக்‌ காண வேண்டும்‌ என்ற ஆவலுடன்‌ பெரிய பெருமாள்‌ அனுமதி
பெற்று காஞ்சி சென்று, அங்கு திருக்கச்சி நம்பிகள்‌ மிகவும்‌ பக்தியோடு இவரை வரவேற்க இவரும்‌ மிக உகந்து பேரருளாள௫க்கு அவர்‌ ஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்து வருகிறதை சிலாகித்து அவரையும்‌ உடன்கொண்டு அங்கு கோயில்‌ அருகிலுள்ள புற்றின்‌ சமீபத்தில்‌ உள்ள திருவனந்தாழ்வானையும்‌, கரிய மாணிக்கத்தாழ்‌வாரையும்‌ சேவித்து வரும்பொழுது யாதவப்பிரகாசருடைய கூட்‌டம்‌ வரக்கண்டு, இதில்‌ யார்‌ இளையபெருமாள்‌ என்று கேட்க
நம்பியும்‌ சிவந்து நெடுக வலியவராய்‌, ஆஜானுபாகுவாய்‌ நடுவில்‌ வருகிறவர்‌ என்று காட்டக்கண்டு மிகவும்‌ மகிழ்ந்து ‘ஆம்‌ முதல்‌வன்‌ இவன்‌’ என்று மனதில்‌ தெளிந்து, பின்னர்‌ பேரருளாளரிடம்‌ அடியேனுக்கு இளையாழ்வாராகிய மகானைத்‌ தர்ஸனத்நிற்குத்‌
தந்தருள வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அப்போது அவருக்கு ஒரு நல்வார்த்தை சொல்ல வாய்ப்பில்லாததால்‌ மீண்டும்‌ திருவரங்கம்‌ கோயிலுக்கே எழுந்தருவினார்‌. இவரது அபிலாஷை நிறைவேறி இளையாழ்வார்‌ கோயில்‌ நிர்வாஹத்தைக்‌ கைக்‌கொண்ட வரலாற்றை பார்க்கும் முன்பே ஆச்சார்யர் திருவடி சேர்ந்தார் என்பதை இளையாழ்வார்‌ வைபவத்தில்‌ காண இருக்கிறோம்‌.

ஆளவந்தார்‌ தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடனேயே கோயில்‌ தர்ஸனத்தை இளையாழ்வாரிடம்‌ கொடுக்க எண்ணி,
பெரியநம்பி ஸ்வாமிகளைக்‌ காஞ்சிக்கு அனுப்பி அவரைத்‌ திருவரங்கத்துக்கு அழைத்து வரப்பணித்தார்‌. ஆனால்‌ அவர்‌ வருமுன்பே ஆளவந்தார்‌ பரமபதித்து விட்டதால்‌, அவரை உயிரோடு நேரில்‌ காணாத விரக்தியினால்‌, ஏமாற்றமடைந்து காஞ்சிக்கே திரும்பச்‌ சென்று விடுகிறார்‌ இளையாழ்வார்‌. ஆளவந்தாரது திஸ்ருமேனியை இளையாழ்வார்‌ கண்டு சேவிக்கும் பொழுது கைவிரல்கள்‌ மூன்று மடங்கி இருப்பதைப் பார்த்து, முன்னர்‌ இவரது விரல்கள்‌ இவ்வாறு தான்‌ இருந்தனவா என்று விசாரித்து இல்லை என்று தெரிந்தவுடனே, அவரது மனதில்‌ ஏதேனும்‌ நிறைவேறாத ஆசைகள்‌ இருந்தனவா என்று கேட்க, அங்குள்ளவர்கள்‌ ஆளவந்தார்க்கு மூன்று விருப்பங்கள்‌ உண்டு. அவை, பிரஹ்ம ஸூத்திரத்துக்கு மஹா பாஷ்யம்‌ எழுதுதல்‌, விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்குப்‌ பாஷ்யம்‌
எழுதுதல்‌, திருவாய்மொழிக்கும்‌ பாஷ்யம்‌ எழுதுதல்‌
என்பன என்றார்கள்‌. அவர்‌ விருப்பத்தைத்‌ தாம்‌ நிறைவேற்றி வைப்பதாக உறுதிபூண்டு சபதம்‌ செய்யவே, ஆளவந்தாரது மடங்கிய விரல்கள்‌ மூன்றும்‌ நிமிர்ந்தன என்பர்‌.

ஆளவதந்தாரது அந்திமகாலத்தில்‌ அருகிருந்த அவரது சீடர்கள்‌ எங்களுக்கு இனியார்‌ தஞ்சம்‌ என்று கேட்க, உங்களுக்கு நாம்‌ ஒருவரை உண்டாக்கி யன்றோ பேறு பெறப் போகிறோம்‌. உங்களுடைய இழவைத் தீர்த்து நாம்‌ மாத்திரமன்றோ இழவோடு போகிறோம்‌ என்றாராம்‌. இவருக்கு ஆச்சாரியார்‌ ஸ்ரீமத்‌ நாத முனிகளும்‌ புருஷாகாரர்‌ (போதித்தவர்‌) மணற்கால நம்பியுமாகும்‌. இவர்‌ 125ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌ என்பர்‌.
ஓம்‌ நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தில்‌ முதற்பதமான பிரணவம்‌ ‘ஒம்‌’ ஸ்வரூப ஞானத்தை விளக்கு கையாலே பகவத்‌ சம்பந்தத்தையும்‌ ‘நம” பதம்‌ பிரபத்தி வித்யா நிஷ்டை (சரணாகதி தத்துவம்‌)யையும்‌, மூன்றாவதான ‘நாராயணாய: என்ற பதம்‌
பகவத்‌ பாகவத கைங்கர்யமாகிற நல்லொழுக்கத்தையும்‌ ஜீவனுக்கு
விளைவிக்கிறது என்பது ஆளவந்தார்‌ கருத்து. திருக்கோஷ்டியூர்‌
நம்பி ஆளவந்தாரிடம்‌ இறைவனை அடைய உபாயம்‌ என்ன என்று கேட்க இறைவனுக்கும்‌ ஜீவனுக்கும்‌ உள்ள உறவு (பர்த்தா, பார்யா) கணவன்‌ மனைவி உறவைப் போன்றது. அறியாமையாகிற அழுக்கு மண்டிக் கிடக்கும்‌ ஜீவன்‌ இவ்வழுக்கை அகற்ற அகற்ற, எம்பெருமான்‌ திருஉள்ளம்‌, கணவன்‌ மனைவியிடம்‌ உள்ள குண நலனள்களும்‌
அழகும்‌ வெளிப்பட வெளிப்பட அவளை நேசிப்பதைப் போல பக்தனிடம்‌ மிகவும்‌ ஈடுபடும்‌ ஆகவே இவனுக்கு வேறு ஒரு உபாயமும்‌ தேவையில்லை என்று கூறினார்‌ என்பர்‌.
ஏழைக்குப்‌ புதையல்‌ கிடைத்ததைப்போல நமக்கெல்லாம்‌’த்வய மந்திரம்‌’ என்பார்‌ ஆளவந்தார்‌. தம்‌ சீடர்களில்‌ ஒருவரான அம்மங்கி என்ற வாலிபனைப் பார்த்து உன்னுடைய வாலிப வயதைக்‌ கவனிக்காமல்‌ உனக்கு பகவத்‌ விஷயத்தைச்‌ சொல்லிவிட்‌டேன்‌. உடம்புக்கு இரையிட்டு ஆத்ம நாசத்தை விளைவிக்காமல்‌,உயிருக்கு இரையிட்டு ஆத்ம ஜீவிதத்தை விளைவிப்பாயாக என்றாராம்‌. இறைவனை அணுகும்போது வேறு எந்தப்பலனையும்‌ விரும்பாது இறைவனையே விரும்பித்தொழ வேண்டும்‌. எம்பெருமானாரின்‌ திருவடிகளை உபாயமாக உடையவனாக இருக்கிறேன்‌.-அந்த எம்பெருமானார்‌ யமுனைத்துறைவர்‌ குலவிளக்காய்‌ இருக்கிறார்‌. அந்த யமுனைத்துறைவர்‌ நாதமுனிகள்‌ வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகள்‌ நம்மாழ்வார்‌ வழிவந்தவர்‌. அந்த நம்மாழ்வார்‌ பெரியபிராட்டியின்‌ திருவருள்‌ பெற்றவர்‌. வரதராஜரே இவ்விதம்‌ தேவருக்கு வழி வழித்‌ தொண்டன்‌. தேவரீர்‌ திருவருளுக்கு உரியவனாகிறேன்‌ என்பது கூரத்தாழ்வான்‌ அருளிய ‘ஸ்ரீவரதராஜஸ்தவம்‌’ ஸ்லோகத்தின்‌ தமிழாக்கச் சுருக்கம்‌.

நிதியைப்‌ பொழியும்‌ முகிலென்று நீசர்‌ தம்வாசல்பற்றித்‌
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன. இனித்தூய்நெறிசேர்‌
எதிகட்கிறைவன்‌ யமுனைத்‌ துறைவன்‌ இணையடியாம்‌
கதிபெற்றுடைய இராமானுசனென்னைக்‌ காத்தனனே

ஆளவந்தார்‌ எழுதிய பிரபந்தங்கள்‌ – ஆகமப்பிராமாண்யமும்‌,புருஷ நிர்ணயமும்‌, ஆத்மஸித்தி ஈஸ்வர ஸித்தி, ஸம்வித்ஸித்தி என்ற ஸித்தித்திரயமும்‌, ஸ்ரீ கீதார்த்த சங்ரஹமும்‌, ஸ்தோத்ர ரத்னமும்‌, சதுஸ்லோகியும்‌ ஆக எட்டும் -. அவரது
குமாரர்கள்‌ திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌, தெய்வத்துக்கரசுநம்பி, பிள்ளை அரசு நம்பி, சொட்டை நம்பி என்று பெரிய திருமுடியடைவு குறிப்பிடுகிறது. இவர்‌ திருநாட்டுக்‌ கெழுந்தருளிய (இறந்த) இடம்‌ பெரிய கோயில்‌, திருப்பள்ளிப்படுத்தப்பட்ட
(அடக்கம்‌ செய்யப்பட்ட) இடம்‌ திருப்பராய்த்துறையாகும்‌.
பரப்பிரஹ்மமே மாயையால்‌ மறைக்கப்பட்டு அறிவு குறைந்த ஜீவனாகவும்‌, சம்ஸாரத்தில்‌ ஈடுபட்டதாகவும்‌ ஆகிறது-அந்தப் பரப்பிரஹ்மமே தேவர்‌ மனிதர்‌ முதலான உண்மையான சரீரங்களாகிற உபாதிகளோடு சம்பந்தப்பட்டு சம்சாரி ஜீவனாகிறது. அந்தப்‌ பரப்பிரஹ்மமே உலகோடு இயல்பாகவே பேதாபேதமுடையதாகையாலும்‌, உலகமாகப்‌ பரிணமிக்கையாலும்‌ தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமாகிறது. -இவ்விதம்‌ கூறும்‌ சங்கரருடைய மாயா வாதமும்‌ பாஸ்கரருடைய ஸத்யோபாதிமதமும்‌, யாதவப் பிரகாசருடைய பேதா பேதமதமுமாகிற மூன்று மதங்களும்‌ ஸ்ருதிக்‌கும்‌ யுக்தக்கும்‌ பொருந்தாதவையாகும்‌. ஆயினும்‌ மோகத்தை விளைவிக்கும்‌ இம் மூன்று மதங்களாகிய இருள்‌ எவரால்‌ தமது
நூல்களின்‌ மூலம்‌ நீக்கப்பட்டதோ, அந்த யமுனைத் துறைவரான ஆளவந்தார்‌ வெற்றியுடன்‌ விளங்குகிறார்‌. ஆளவந்தாராகிய அமுதக் கடலில்‌ மூழ்கி, அறிந்த அளவு நான்‌ பக்தி யோகமாகிற ரத்‌னத்தை எடுத்துக் காண்பிக்கிறேன்‌ என்கிறார்‌. ஸ்ரீ வைகுண்ட கத்ய
மங்கள ஸ்லோகத்தில்‌ கூரத்தாழ்வான்‌.
என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
யானடைவேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிறை வணங்கி
இன்னருளால்‌ பெரும்புதூர்‌ வந்த வள்ளல்‌
பெரியநம்பி, ஆளவந்தார்‌ மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
நாதமுனி சடகோபன்‌ சேனைநாதன்‌
இன்னமுதத்‌ திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே.
நீளவந்தின்று விதி வகையால்‌ நினை ஒன்றிய நாம்‌
மீள வந்தின்னும்‌ வினையுடம்‌ ஒன்றி விழுந்துழலாது ஆள வந்தாரென்று வந்து அருள் தந்து விளங்கிய சீர்‌
ஆளவந்தா ரடியோம படியோமினி அல்வடிக்கே–என்று அருளிச் செய்கிறார்‌ ஸ்ரீ தேசிகர்‌ அதிகார சங்கிரஹம்‌ என்ற நூலில்‌.
“மாதாபிதா யுவதயஸ்தநயாவிபூதிஸ்‌
ஸர்வம்‌ யதேவ நியமேந மநந்வயாநாம்‌
அத்யஸ்யந: குலபதேர்‌ வகுளாபிராமம்‌
ஸ்ரீமத்‌ ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா ॥ ஆளவந்தார்‌ அருளிச்செய்த நம்மாழ்வார்‌ தனியன்‌.
மச்சணியும்‌ மதிள் அரங்கம்‌ வாழ்வித்தான்‌ வாழியே
மறை நான்கும்‌ ஓருருவில்‌ மகிழ்ந்து கற்றான்‌ வாழியே
பச்சை யிட்ட இராமர்‌ பதம்‌ பகருமவன்‌ வாழியே
பாடியத்தோன்‌ ஈடேறப்‌ பார்வை செய்தோன்‌ வாழியே
கச்சி நகர்‌ மாயனிருகழல்‌ பணிந்தோன்‌ வாழியே
கடக வுத்த ராடத்துக்‌ காலுதித்தோன்‌ வாழியே
அச்சமற மன மகிழ்ச்சி யணைத்‌ திட்டான்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணைகள்‌ அனவரதம்‌ வாழியே

ஆளவந்தார்‌ பிறந்து 11 வருடங்களுக்குப் பின்னர்‌ (கி பி.997-98-ல்‌] மார்கழிக் கேட்டையில்‌ பிராமண குலத்தில்‌ பரத்வாஜ கோத்திரத்தில்‌ பராங்குச தாஸர்‌ என்ற திருநாமத்தில்‌ அவதரித்தவர்‌ பெரியநம்பி ஸ்வாமிகள்‌. ஆளவந்தாருடைய சிஷ்யர்களில்‌ பெருமை பெற்றவர்‌ இவர் தான்‌. எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தவர்‌. ஆளவந்தார்‌ காலத்திற்குப் பின்‌ ஆளவந்தாரது மற்ற சிஷ்யர்கள்‌ கேட்டுக்கொண்டதன்‌ பேரில்‌ இவரே இராமானுஜரை திருவரங்கர்‌ சேவைக்கு அழைத்து வரக்‌ காஞ்சிக்குச்‌ சென்றவர்‌.
காஞ்சியில்‌ தேவப் பெருமானின்‌ நியமனம்‌ பெற்று, இராமானுசரும்‌ இவரிடம்‌ சரண் புக எண்ணி திருவரங்கத்துக்குப்‌ புறப்பட இருவரும்‌ வழியில்‌ மதுராந்தகம்‌ ஏரி காத்த பெருமாள்‌ கோவிலில்‌ சந்திக்க நேர்ந்தது. அங்கு இராமானுசருக்கு ஸமாஸ்ரயணம்‌ நடை பெற்றது.-எம்பெருமானார்‌ வெள்ளை உடுத்தி மேல்‌ நாட்டுக்குச்‌ சென்ற பொழுது, கூரத்தாழ்வானோடு சோழ ராஜனது சபைக்குச் சென்று நம்‌ தர்ஸனத்திற்காகத்‌ தம் தர்ஸனத்தையும்‌ (கண்களையும்‌) உயிரையும்‌ இழந்தவர்‌ தியாக மூர்த்தியான இந்தப்‌ பெருமகனார்‌. இவர் தம்‌ குமாரரான புண்டரீகாக்ஷ்ரையும்‌ பெண்ணான அத்துழாயையும்‌ எம்பெருமானாருடைய திருவடிகளிலேயே சரணமடையச்‌ செய்தவர்‌. ஆளவந்தாரது சிஷ்யரான தாழ்ந்த குலத்தில்‌ பிறந்த மாரனேரி நம்பிக்கு ஈமச்சடங்குகள்‌ செய்து பெருமை பெற்றவர்‌. இவரைப்‌ பற்றிய விரிவான செய்திகளை இராமானுசருடைய வைபவத்தில்‌ காண உள்ளோம்‌.-ஆளவந்தாரது சீடர்கள்‌ எல்லோரும்‌ கூடியிருந்து பெரிய நம்பியிடம்‌, இனி இந்தத்‌ தர்ஸனத்தை நடத்துபவர்‌ யார்‌? என்று கேட்க இவரும்‌ முன்னர்‌ இராமானுஜர்‌, தான்‌ ஆளவந்தாரது மூன்று ஆசைகளையும்‌ நிறைவேற்றுவதாகச்‌ சொன்னவுடனேயே அவரது விரல்கள்‌ நிமிர்ந்தனவே, அந்தக்‌ குறியீடே ஆளவந்தார்‌ தமக்குப்‌ பின்‌ அந்தப் பணியை இராமானுஜர் தான்‌ செய்ய வேண்டும்‌ என்று விரும்பினார்‌ என்பதைத்‌ தெரிவிக்கவில்லையா என்று சொல்ல, எல்லோரும்‌ இராமானுசரையே தம்‌ ஆச்சாரியராக முடிவு செய்து அவரைக்‌ காஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்து வருமாறு பெரிய நம்பியையே அனுப்பினார்கள்‌. அவரும்‌ அப்போதே குடும்ப சகிதமாகப்‌ புறப்பட்டு நம்‌ பெருமாள்‌ அனுமதி பெற்று, காஞ்சிக்குச்‌ செல்லும்‌ வழியில்‌, மதுராந்தகத்தில்‌ ஏரி காத்த பெருமாள்‌ கோயிலிலே, இராமானுஜரும்‌ ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌ அங்கு வர இருவரும்‌ சந்தித்து மிகப் பிரீதியுடன்‌ தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர்‌. இளையாழ்வாரும்‌ பெரிய நம்பியைத்‌ தனக்கு அப்‌போதே ஹிதோபதேசம்‌ செய்து ரட்சிக்க வேண்டும்‌ என்று விண்‌ணப்பிக்க, பெரிய நம்பியும்‌ இவருடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து திருவிலச்சனை பிரசாதித்து (சங்கு சக்கர முத்திரைகளைக்‌ கையில்‌ பொரித்து) தன்‌ வலது புறத்தில்‌ அடக்கத்தோடும்‌ அஞ்சலியோடும்‌ கூடிய சீடனை இருத்தி ஞானத்தைத்‌ தரவல்ல தனது வலது கரத்தைச்‌ சீடனின்‌ சிரசில்‌ வைத்து தனது இடது கையைச்‌ சீடனின்‌ மார்பில்‌ வைத்து, அருளுடன்‌ சீடனை ஆச்சார்யன்‌ காப்பாற்றக் கடவன்‌, தன்‌ ஆச்சார்யனை இருதயத்தில்‌ தியானித்து குரு பரம்பரையை ஜபித்து, இவ் வகையாக எம்பெருமானைச்‌ சரண மடைந்து, ரிஷி, சந்தஸ்‌ தேவதைகளுடன்‌ கூடிய மூமலந்திரத்தைத்‌ தானே சீடனுக்குக்‌ கருணையால்‌ உபதேசிக்கக்‌ கடவன்‌ என்று சொல்லுகிறாப்போல, ஆளவந்தார்‌ திருவடிகளை மனதில்‌ தியானம்‌ பண்ணிக் கொண்டு த்வயத்தை (மந்திர ரத்னத்தை) இராமானுஜருக்கு அவரது வலது காதில்‌ ஓதினார்‌.-இராமபிரான்‌ தன்‌ பாதுகைகளைப்‌ பரதாழ்வானிடம்‌ கொடுத்‌துக்‌ காட்டுக்குப்‌ போனாற்போல, ஆளவந்தாரது ஏவலாளன்‌ நான்‌.உமக்கு நேரே ஆச்சார்யார்‌, யமுனைத்‌ துறைவரான ஆளவந்தாரே என்று கூறினார்‌. ஆதலால் தான்‌ இராமானுஜ நூற்றந்தாதியில்‌-பிள்ளை அமுதனார்‌ ‘எதிகட்கு இறைவன்‌ யமுனைத் துறைவன்‌ இணையடியாம்‌ கதிபெற்றுடைய இராமானுஜன்‌ ‘என்றருளிச்‌ செய்‌தார்‌. இராமானுஜரும்‌ ‘பிரமாணம்‌ எது? பிரமேயம்‌ எது? பிரமாதாக்‌கள்‌ யார்‌? என்று பெரிய நம்பியைக்‌ கேட்க, அவரும்‌ மாதவன்‌ பேர்‌ சொல்வதே ஓத்தின்‌ சுருக்கு என்றபடியே ‘பிரமாணம்‌ த்வயமே’. பிரமேயமும்‌ அத்தகிரி மேலிருக்கும்‌ பெருமாளே, பிரமாதா நீர் தாம்‌. இந்தப் பிரமாணத்தாலே பிரமேயத்தை அனுபவிக்க வாரும்‌ என்று கூறினார்‌. இருவரும்‌ காஞ்சியில்‌ பெருமாள்‌ கோவிலுக்குச்‌ சென்றார்கள்‌. அங்கு திருக்கச்சி நம்பியும்‌ பெரிய நம்‌பியைச்‌ சரணடைய அவரையும்‌ ஆசீர்வதித்து ஏற்றுக் கொண்டார்‌. இராமானுஜர்‌ பெரிய நம்பிகளைக்‌ குடும்பத்துடன்‌ தன்‌ இல்‌லத்துக்கு அழைத்துச் சென்று தம்‌ தேவியையும்‌ பெரிய நம்பி திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கச்‌ செய்தார்‌. பெரிய நம்பி இளையாழ்வாருக்கு திருவாய்மொழி நீங்கலாக அருளிச் செயல்‌ மூவாயிரத்தையும்‌, தர்ஸனார்த்‌தங்களையும்‌ போதித்துக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது அவ்விருவருடைய தேவிகளுக்குள்ளும்‌ மனஸ்தாபம்‌ வர, பெரியநம்பி, இளையாழ்வாரிடம்‌ சொல்லாமலே மனைவியுடன்‌ ஸ்ரீரங்கத்திற்குத்‌ திரும்பிவிட்டார்‌.-பெரிய நம்பி திருமகளாரான அத்துழாய்‌ புக்ககத்தில்‌ வாழுங்‌காலத்தில்‌, ஒருநாள்‌ நீராடி வரத் துணைக்கு வருமாறு மாமியாரை வேண்ட அவளும்‌ உன்‌ சீதன வெள்ளாட்டியை அழைத்துக்‌ கொண்டு போ என்று சொல்லி விடவே, அத்துழாய்‌ பெரிய நம்பியிடம்‌ விவரம்‌ கூற அவர்‌ ‘எனக்குத்‌ தெரியாது. உங்கள்‌ ஜீயரிடம்‌ (இராமானுஜர்‌) சொல்‌ என்று கூறிவிட, அவளும்‌ அங்கே போய்‌ விண்ணப்பம்‌ செய்ய, ஜீயரும்‌ அருகிருந்த முதலியாண்‌டானை “இந்தாரும்‌ உமக்குச்‌ சீதன வெள்ளாட்டி என்று சொல்லி“போம்‌” என்ன ஆண்டானும்‌ கூடப்‌ போய்‌ நீராடப் பண்ணுவித்து அவளுடைய புக்கத்தில்‌ வேலை செய்யத்‌ தொடங்க, புக்ககத்தார்‌ அவரிடம்‌ ஆண்டான்‌ இது என்‌’ என்று கேட்க அவரும்‌ என்னை வரவிட்ட ஜீயரைக்‌ கேளுங்கள்‌. ஆச்சார்யார்‌ சொன்னதைச்‌ செய்ய வேணுமே’ என்று சொல்லிவிடவே அவர்களும்‌ பெரிய நம்பியிடம்‌ போய்‌, ‘முதலியாண்டானை அனுப்பி எங்களை இப்படித்‌ தண்டிக்க வேண்டுமா: என்று கேட்க அவரும்‌ ‘நான்‌ அறிந்தேனா? ஜீயரைக்‌ கேளுங்கள்‌ என்று சொல்லி விடவே அவர்களும்‌ அங்கே சென்று விண்ணப்பிக்க இராமானுசரும்‌, அத்துழாய்க்குச்‌ சீதன வேலைக்காரியாகத்‌ தந்தோம்‌ அவர்‌ அங்கிருப்பது பிடிக்கவில்லையாகில்‌ இங்கிருந்து அடிமை செய்கிறார்‌ என்று மீண்டும்‌ அவரை அழைப்பித்துக்‌ கொண்டார்‌.பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு அந்திமக் கிரியைகள்‌ செய்ததைக்‌ கேட்ட இராமானுஜர்‌ அவரிடம்‌ ‘இவ்வாறு செய்யலாமா:என்று கேட்க அவரும்‌ இக்ஷ்வாகு வம்சத்து இராமபிரான்‌ சடாயுக்கு ஈமக்கிரியைகள்‌ செய்ய வில்லையா? அவரைவிட நான்‌ உயர்ந்தவனா? ஜடாயுவை விட இவர்‌ தாழ்ந்தவரா? தருமபுத்திரன்‌ விதுரனுக்குச்‌ செய்ய வில்லையா?தருமரைக்‌ காட்டிலும்‌ நான்‌ உயர்ந்தவனா? விதுரனைக் காட்டிலும்‌ இவர்‌ சிறியவரா? இத்தகைய மகான்கள்‌ விஷயத்திலாவது இதைச்‌ செய்யாவிடில்‌ நம்மாழ்‌வார்‌ அருளிச்செய்த ‘பயலுஞ்சுடரொளி’ (திருவாய்‌ 3:7) நெடுமாற்‌கடிமை (இருவா 8:10) என்னும்‌ திருவாய்மொழிகள்‌ கடலோசை போல பொருளற்றதாகி விட்டதா என்று சொல்ல இராமானுஜரும்‌ கேட்டு உகந்து இசைந்தார்‌. பெரியநம்பி செய்த இக்காரியத்தைக்‌ கண்டு ஸ்ரீரங்கத்தில்‌அந்தணர்‌ பெரும்பாலோர்‌ அவரைத்‌ தள்ளி வைத்தனர்‌ என்றும்‌, நம்பெருமாள்‌ சித்திரைத்‌ தேரில்‌ எழுந்தருளும்போது, பெரிய நம்பி திருமாளிகையிலிருந்து தேர்‌ நகராமல்‌ நிற்கவே அவருக்கு அருளப்‌ பாடிட்டுத்‌ தீர்த்தப் பிரசாதம்‌ சாதித்து அவர்‌ பெருமையை அனைவருக்கும்‌ உணர்த்திய பின்னரே தேர் மேலே புறப்பட்டது என்பதும்‌ வரலாற்றுச்செய்தி.-சோழ மன்னனால்‌ கண்கள்‌ பிடுங்கப்பட்டு சோழபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம்‌ திரும்பி வரும்‌ வழியில்‌ பெரிய நம்பிக்கு அந்திம காலம்‌ நெருங்க வரும் பொழுது உயிர்‌ பிரியுமுன்‌ ஸ்ரீரங்கம்‌ சென்று விட வேண்டும்‌. வேகமாகச்‌ செல்ல வாகனம்‌ இருந்தால்‌ நன்றாக இருக்கும்‌ என்று அவர்‌ குமாரி அத்துழாய்‌ தெரிவித்தபோது இங்கேயே உயிர்‌ பிரிந்தாலும்‌ எம்பெருமான்‌ அருளாலே பரமபதம்‌ நிச்சயம்‌. ஸ்ரீரங்கத்துக்குப் போய்‌ பிராணனை விட்டால்‌, மற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ இதை முன் மாதிரியாகக்‌ கொண்டு ஸ்ரீரங்கத்‌திதில்‌ மரணமடைந்தால் தான்‌ மோட்சம்‌ என்று முடிவு கட்டி மற்ற இடங்களில்‌ உயிர் விடப்‌ பயப்படுவார்கள்‌ என்று சொல்லி வழியிலேயே பரமபதமடைந்தார்‌ என்று அறிகிறோம்‌.-பதி விரதைக்கு மங்கள ஸூத்திரம்‌ போல நமக்குத்‌ ‘த்வயம்‌:என்பார்‌ பெரியநம்பி. ஒரு தரம்‌ பிள்ளை உறங்கா வில்லி தாஸர்‌ என்ற வைணவர்‌ இராமானுஜரிடம்‌, விபீஷணாழ்வார்‌, இராமபிரானிடம்‌ சரணம்‌ புக வந்தபோது, வானர சேனைகள்‌ அவரைத்‌ தடியாலும்‌ கல்லாலும்‌ அடித்தனர்‌ என்பதை எண்ணிப் பயப்படுகிறேன்‌ என்ற போது இராமானுஜர்‌ கமுகுண்ணில்‌ வாழை உண்ணும்‌.எமக்குப்‌ பெரிய நம்பியுண்டு. உமக்கு நானுண்டு. கமுகுக்குத்‌ தண்ணீர்‌ பாய்ச்சும் பொழுது வாழையும்‌ அந்நீரை உண்டு வளருவதைப்‌ போல, பெரிய நம்பி சம்பந்தத்தைப் பார்த்து பெருமாள்‌ என்னை ரக்ஷிப்பார்‌. என்‌ சம்பந்தத்தைப் பார்த்து உம்மையும்‌ ரட்சிப்‌பார்‌ என்று கூறித்‌ தேற்றினாராம்‌.-ஒரு நாள்‌ இராமானுஜரும்‌ முதலிகளும்‌ எழுந்தருள பெரிய நம்பி தண்டனிட இராமானுஜர்‌ அஞ்சலி பண்ணிப் போக முதலிகள்‌ இது ஏன்‌ என்று வினவ, இராமபிரான்‌ கட்டளை யிட்டதற்கு இணங்கி பரதன்‌ அரச பாரத்தை ஏற்றுக் கொண்டதைப் போல
பெரிய நம்பி தண்டனிட்டதை ஏற்றுக் கொள்வதே நமக்கு ஸ்வரூபம்‌ என்றாராம்‌.

ஒரு நாள்‌ பெரிய நம்பி திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாலையாண்டான்‌ மூவருங்‌ கூடி யிருந்து தங்கள்‌ ஆச்சாரியாரான ஆளவந்தார்‌ வைபவத்தை எண்ணி அனுபவித்துக்‌ கொண்டிருந்தபொழுது திருவரங்கச் செல்வர்‌ (பலி சாதிக்கும்‌ பெருமாள்‌) புறப்பட இவர்களது பகவத்‌ பாகவத ஆச்சார்ய அனுபவத்துக்குத்‌ தடை பிறந்து எழுந்திருந்து தண்டனிட வேண்டுமாகையால்‌ கூட்டம்‌ கலக்கியார்‌ வந்தார்‌. இனிமேல்‌ பலி பெருமான்‌ எழுந்தருளாத கோயிலிலேயே இருக்கக் கடவோம்‌ என்று நீர்மானித்ததாகவும்‌, இவ்வாறு மகாத்‌மாக்களுக்குத்‌ தொல்லையா யிருப்பதைப்‌ பார்த்த திருவரங்கச்‌ செல்‌வர்‌, தம்மைப்‌ பலி சாதிக்க எழுந்தருளப்‌ பண்ண வேண்டாம்‌ என்று நியமித்து விட்டதாகவும்‌ அந்த நியமனம்‌ இன்றளவும்‌ நடப்பதாகவும்‌ கூறுவர்‌. வித்தாகுங் காய்‌ பிஞ்சிலேயே தெரியும்‌ என்றார்‌ பெரியநம்பி, உலகம்‌ வாழ வந்தவர்‌ எம்பெருமானார்‌ என்பதை அவருடைய சிறுவயதிலேயே நாங்கள்‌ கண்டு கொண்டு விட்‌ டோம்‌ என்ற கருத்தில்‌.-ஏற்றங்கள்‌ பிராமணரல்லாத ஸ்ரீ வைஷ்ணவர்களிடமும்‌ இருக்‌கிறது என்பதை மனதில்‌ கொண்டே ஸ்ரீராமபிரான்‌ ரிஷிகளைக்‌ காட்டிலும்‌ குகப் பெருமானிடமும்‌, வானர முதலிகளிடமும்‌, விபீஷணாழ்வாரிடமும்‌ ஈடுபட்டார்‌. நம்‌ பெருமாள்‌ லோக சாரங்க முனியைக் காட்டிலும்‌ திருப்பாணாழ்வாரிடமும்‌ திருமலையப்‌பன்‌, முடி மன்னனாகிய தொண்டைமான்‌ சக்கரவர்த்தியைக்‌ காட்டிலும்‌, குயவரான குறும்பறுத்த நம்பியிடமும்‌ ஈடுபட்டார்‌. பெரியநம்பி பிராமண, ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய விரோதத்தைப்‌ பொருட்படுத்தாமல்‌ மாறனோர்‌ நம்பிக்கு அந்திம ஸம்ஸ்காரங்கள்‌ செய்தருளினார்‌. ஆகவே இதை உணர்ந்தவர்கள்‌ சாத்தாத முதலிகளின்‌ (பிராமணரல்லாதவர்‌) பெருமையை அறிவர்களாதலால்‌ அவர்களிடம்‌ அபசாரம்‌ ஏற்படாது. எம்பெருமான்‌ திருவடிகள்‌ எளிதில்‌ கிட்டும்‌ என்று இராமானுஜர்‌ முதலியாண்டானுக்கு ௮ருளிச் செய்தார்‌-ஆளவந்தாருடைய கட்டளையாலே ஸ்ரீ பாஷ்யகாரரான இராமானுஜரை அங்கீ கரித்த பூர்ணரான பெரிய நம்பி, அவரைத்‌ தமக்கு நண்பர்களான திருக்கோட்டியூர்‌ நம்பியிடம்‌, அர்த்த சிக்ஷை பண்ணவும்‌, திருமாலை யாண்டானிடம்‌ திருவாய்மொழி கேட்கவும்‌, திருவரங்கப் பெருமான்‌ அரையரிடம்‌ நல்‌ வார்த்தை கேட்கவும்‌ நியமித்‌தார்‌. பெரிய நம்பி சோழ மன்னனால்‌ ஹிம்சிக்கப்பட்டு கண்ணையும்‌ இழந்து வரும்‌ வழியில்‌, இறுதிக் காலம்‌ நெருங்கவே ஆழ்வான்‌ மடியிலே கண் வளர, கோயிலும்‌ பாஷ்யகாரரும்‌ இருக்க, இங்கே மரணம்‌ ஏற்படவா என்று ஆழ்வான்‌ சோகிக்க, பெரிய நம்பி ஒரு பாகவதர்‌ மடியை விடக்‌ கோயில்‌ சிறப்பான தல்ல என்று கூறி உயிர்‌ நீத்தார்‌. பாஷ்யகாரருக்கு ‘த்வயத்தை’ அருளிச்‌ செய்தவர்‌ பெரியநம்பி, அதன்‌ அர்த்தத்தை அருளிச்‌ செய்தவர்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி, ஞான பூர்ணரான ஆளவந்தார்‌ சீடர்‌ பெரிய நம்பி அருளிய திருப்பாணாழ்வார்‌ தனியனில்‌ இரு காவிரிகளுக்கு நடுவில்‌ பள்ளி கொண்ட பெருமாளைத்‌ திருவடி முதல்‌ திருமுடி வரை அனுபவித்து பேரானந்தம்‌ கொண்ட நெஞ்சினராய்த்‌ தம்‌ கண்கள்‌ மற்றொன்றைக்‌ காணா என்று எவர்‌ அறுதியிட்டாரோ, அந்த முனி வாஹனரை அனுசந்திக்கிறேன்‌ என்றார்‌. பெரிய நம்பிக்குத்‌ திரு அவதாரஸ்தலம்‌ கோயில்‌ (ஸ்ரீரங்கம்‌) இவரது இதர திருநாமங்கள்‌ பராங்குசதாஸர்‌, மஹாபூர்ணர்‌ பூரணாசார்யார்‌ என்பன. இவரது குமாரர்‌-பெயர்‌ புண்டரீகாக்ஷர்‌ திருவாராதனப் பெருமாள்‌ அழகிய சிங்கன்‌-இவரது ஆச்சாரியார்‌ ஆளவந்தார்‌. இவரது சிஷ்யர்கள்‌ திருக்கச்சி நம்பி, எம்பெருமானார்‌, மலைகுனிய நின்றார்‌, சடகோப தாஸர்‌,அணி அரங்கத்தமுதனார்‌ (திருவரங்கத்தமுதனாரின்‌ தந்‌தை ) திருவாய்க்குலமுடையார்‌ பட்டர்‌ முதலானோர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌. இவர்‌ இறந்த இடம்‌, சோழ தேசத்தில்‌ பசுபதி கோயில்‌.

அம்புவியில்‌ பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன்‌ வாழியே
ஆளவந்தார்‌ தாளிணையை அடைந்துய்ந்தோன்‌ வாழியே.
உம்பர் தொழும்‌ அரங்கேசர்க்குகப் புடையோன்‌ வாழியே.
ஓங்கு தனுக் கேட்டை தனில்‌ உதித்த பிரான்‌ வாழியே.
வம்பவிழ்தார்‌ வரதருரை வாழ்வளித்தான்‌ வாழியே.
மாறனோர்‌ நம்பிக்கு வாழ்வளித்தான்‌ வாழியே.
எம்பெருமானார்‌ முனிவர்க்‌ கிதமுரைத்தான்‌ வாழியே.
எழில்‌ பெரிய நம்பி சரண்‌ இனிதூழி வாழியே.

ஆளவந்தார்‌ அவதரித்துப்‌ 11 வருடங்கள்‌ கழிந்த பின்‌ கிபி-987-ல்‌ பெரியாழ்வாருக்குப்‌ பரம ஆப்தரான செல்வ நம்பியின்‌ சந்ததியில்‌ பிராமண குலத்திலே திருக்குருகைப்பிரான்‌ என்னும்‌ திருநாமமுடையவராய்ப்‌ பிறந்தார்‌ திருக்கோஷ்டியூர்‌ நம்பி. நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார்‌, மணற்கால்‌ நம்பி மூலம்‌ கிடைத்த அந்தப் பவித்ரமான இராமானுஜ விக்ரகத்தை ஆளவந்தார்‌ தம்முடைய அந்திம காலத்தில்‌ இவரிடம்‌ கொடுத்து அது வந்த
வழியையும்‌ கூறி ரகஸ்யார்த்தங்கள்‌ அனைத்தையும்‌ இராமானுஜருக்கு உபதேசிக்கும்படியும்‌, நம்‌ தர்ஸனத்தை அவர்‌ நாமத்தாலே விளங்க வைக்கும்படியும்‌ நியமித்துச்‌ சென்றார்‌. அதன்படியே நம்பியும்‌, அனுவருத்தி பிர்சந்நாச்சாரியார்‌ (ஒராண் வழி ஆச்சார்‌யர்‌] பரம்பரை தன்னுடன்‌ முடிவு பெற்று எம்பெருமானார்‌ தொடங்கி (கிருபாமாத்ர பிரசந்நாச்சார்யார்‌) ஆசையுள்ளோர்‌ அனைவரும்‌ கற்கும்‌ உரிமைகளுடைய பரம்பரை வளர வேண்டும்‌ என்னும்‌, திருவுள்ளத்தாலே ஸ்ரீ ராமானுஜரை பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு நடக்கச் செய்து வேறு யாருக்கும்‌ உபதேசிக்கக் கூடாது என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவருக்குத்‌ திருமந்‌திரத்தை உபதேசிதார்‌. இராமானுஜர்‌ தம்‌ எல்லையற்ற கருணையினால்‌ ஆச்சார்யார்‌ கட்டளையையும்‌ மீறித்‌ தமக்கு நரகம்‌ வந்தாலும்‌ வரட்டும்‌. பலர்‌ உய்ந்து போனால்‌ போதும்‌ என்னும்‌ திருஉள்ளத்துடன்‌ பலருக்கும்‌ திருமந்திரத்தை உபதேசித்தார்‌. இதைக் கேள்விப்‌பட்ட நம்பி ‘எம்பெருமானாரே’ என்று இராமானுஜரை அணைத்‌துக் கொண்டு, அவர்‌ பெயராலேயே எம்பெருமானார்‌ தர்சனம்‌ என்றே அந்தத் தர்சனம்‌ விளங்கட்டும்‌ என்று அனுக்கிரகித்து அவருக்குத்‌ தாமே சரம ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை] உபதேசித்து அதைத் தக்க அதிகாரிகளுக்கு உபதேசிக்கும்படி கட்டளையிட்டார்‌-திருமாலை யாண்டானை எம்பெருமானாருக்குத்‌ திருவாய்‌மொழி காலட்சேபம்‌ சொல்லும்படி நியமித்தவரும்‌ இவரே-ஆளவந்தாரிடம்‌ கேட்காத அர்த்தங்களை விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியாக (தானே புதிதாக உண்டாக்கி) எம்பெருமானார்‌ கூறியதாலே கோபமடைந்த திருமாலையாண்டான்‌ காலட்சேபத்தை நிறுத்திய பொழுது எம்பெருமானாருடைய பெருமையைத்‌ திருமாலை யாண்‌டானுக்கு எடுத்துரைத்து மறுபடியும்‌ காலட்சேபம்‌ தொடங்குமாறு செய்தவரும்‌ இவரே. இராமானுஜர்‌ உஞ்ச விருத்தி செய்து வரும்‌பொழுது ஸ்ரீரங்கத்தில்‌ உள்ள ஒருவர்‌ விஷங்கலந்த அன்னத்தை இட்டபடியால்‌, இராமானுஜர்‌ உபவாசமிருக்கிறார்‌ என்று கேள்விப்‌பட்டுத்‌ திருக்கோஷ்டியிலிருந்து பதறி ஓடிவந்து, எம்பெருமானார்‌ சிஷ்யர்களில்‌ கிடாம்பி யாச்சானுக்கே, எம்பெருமானாரது திருமேனியில்‌ பரிவு உள்ளதைச்‌ சோதித்து தெரிந்து கொண்டு அவரை உடையவருக்கு மடப்பள்ளிக்‌ கைங்கர்யம்‌ செய்யுமாறு நியமித்தவரும்‌ இவரே. இவற்றிலிருந்து இவர்‌ ஒரு பெரிய தீர்க்கதரிசி என்பதும்‌ எம்பெருமானாரிடம்‌ பொங்கும்‌ பரிவை உடையவர்‌ என்பதும்‌ தமக்குக்‌ கெட்ட பெயர்‌ ஏற்படும்‌ என்றாலும்‌ எம்பெருமானாருக்குச்‌ சிறப்பு விளைவிப்பதில்‌ ஊன்றி நின்றவர்‌ என்பதுவும்‌, ஆளவந்தார்‌ சிஷ்யர்களில்‌ தலைமை பெற்றவர்‌ என்பதும்‌ விளங்குகிறது.இவர்‌ குமாரத்தி தேவகிப்பிராட்டி ஒரு ஞானாதிகை (ஞானம்‌ வாய்க்கப் பெற்றவர்‌). எம்பெருமானாருடைய சிஷ்யை! உந்து மத களிற்றன்‌ பாட்டை (திருப்பாவை 18) எம்பெருமானார்‌ பாடிக்‌கொண்டு உஞ்ச விருத்திக்கு வந்த பொழுது திருக்கோட்டியூர்‌ நம்பி வாசலிலே செந்தாமரைக்‌ கையால்‌ சீரார்‌ வளை யொலிப்ப வந்து திறவாய்‌ மகிழ்ந்து என்று பாடிய அளவிலே, தேவகிப் பிராட்டியார்‌ கதவைத் திறக்க அவளை நப்பின்னையாகவே எண்ணித் திருவடியில்‌ விழுந்தார்‌, எம்பெருமானார்‌ என்ற விபரம்‌ பல நூல்களில்‌ காண்கிறோம்‌.திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாளிகை வாசலிலே திருப்பாவை அனுசந்தானத்துடனே தண்டன்‌ சமர்ப்பித்து சீரார்‌ வளை யொலிப்ப வந்து திறவாய்‌ மகிழ்ந்து என்ற விருத்தாந்தம்‌ ராமானுஜார்ய திவ்ய சரிதையில்‌ பின் வருமாறு உள்ளது.மாதுகரத்துத்‌ கெழுந்தருளிவரும்‌ போதன்றிப்‌ போம் போதும்‌ ஓதும்‌ கோதை திருப்பாவை உரையோடுலாவித் திரிபவரும்‌ வேதம்‌ வல்ல திருக்கோட்டி நம்பி மனையில்‌ மெய் ஞானப்‌போதமுடையார்‌ ஆங்கொரு நாள் புக்கார்‌ உந்து மகளிற்றில்‌.(மாதுகரம்‌-பிக்ஷ, மெய்ஞ்ஞான போதம்‌ மெய்ஞான அறிவு).பந்தார்‌ விரலி உன்‌ மைத்துனன்‌ பேர் பாடச்‌ செந்தாமரைக் கையால்‌ சீரார்‌ வளை யொலிப்ப வந்தாரணங்கே திறவென்ன வாசலின் முன்‌ எந் தாதை நின்றார்‌, அவ்வெல்லையினில்‌ நம்பி தரும்‌ அன்னமென்‌ நடையாள்‌ தேவகி யென்னும்‌ அரும் பெயருடைய ஆரணங்கு தன்னொரு கரத்தால்‌ கந்துகமொன்று தாங்கியோர்‌ தாமரைக்‌ கையால்‌ இன்னிசை எதிகட்கிறைவனார் திறவென்‌றிசைத்தசொல்‌ இறுமுனம்‌ திறந்தாள்‌ மின்னுமா மணி சேர்ந்திலங்கிய கபாடம்‌ விண்டுவின்‌ தொண்டர்‌ மெல்லியவாள்‌ கண்டனர்‌. பின்னைப்‌ பிராட்டி மற்றிவளும்‌ கள்வனேன்‌ பொருட்டினாலலர்ந்த புண்டரீகச்சீர்‌ திருவடி வருந்தப்‌ போந்திவை திறந்தனளென்னப்‌ பண்தரும்‌ பனுவல்‌ மறந்தனர்‌, மண்ணில்‌ பதைப்புற வொடுங்கினர்‌, விழுந்தார்‌ ஒண்டொடி கண்டு வெகுளியோடேகி உற்றதைப்‌ பெற்றவர்க்‌ குரைப்பாள்‌ என்றிவை மகளார்‌ இயம்பிட நம்பி இன்பமுற்றிருந்து இளையாழ்வீர்‌! ஒன்று சீர்‌ உந்து மதகளிறென்ன ஓதிய பாடலோ சந்தை இன்று நம்‌ வாசல்‌ தலையுறுமளவில்‌ என்றனர்‌. ‘ஆம்‌’ என எழுந்து சென்று மா மாதுகரம்‌ பரிமாறத்‌ தேசிகக்‌ குன்றையும்‌ வணங்கி-என்று வடிவழகிய நம்பி தாஸராலும்‌-இவ் விருத்தாந்தம்‌ வர்ணிக்கப்‌பட்டுள்ளது.

இராமானுஜர்‌ திருக் கோட்டியூர்‌ சென்று அங்குள்ளவர்களிடம்‌ நம்பி திருமாளிகை எங்கே என்று கேட்க அவர்களும்‌ அதோ தெரிகிற கூரை என்று கூறக் கேட்டு அவ் விடத்திருந்தே நம்பி திருமாளிகை யளவும்‌ தண்டனிட்டுக் கொண்டே எழுந்தருளியதால்‌, அவ்வூரிலுள்ள, குற்றமின்றிக்‌ குருக்களுக்கு அனுகூலராய்‌ வாழும்‌ நல்லவர்கள்‌ நம்பியின்‌ பெருமையை அறிந்து அவரை வழிபடலா யினர்‌.
ஒரு நாள்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி கோயில்‌ தர்ஸனம்‌ செய்து திரும்பும்பொழுது எம்பெருமானார்‌ அவரை அணுகித்‌ தனக்குத்‌ தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளுமாறு வேண்ட அவரும்‌ தான்‌ ஆச்சார்யார்‌ ஆளவந்தார்‌ நீராடும் பொழுது அவரது திரு முகுது இருக்கும்‌ அழகைக் கண்டு அதுவே தஞ்சம்‌ என்றிருப்பேன்‌. நீரும்‌ மறவாமல்‌ இதை நினைத்திரும்‌ என்றாராம்‌ கூரத்தாழ்வான்‌ ஒரு மாத காலம்‌ உபவாசமிருந்து இராமானுஜரிடமிருந்து சரம ஸ்லோகத்தின்‌ பொருளை அறிந்து கொண்டவராதலால்‌, முதலியாண்‌டான்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பி பக்கம்‌ ஆறுமாதம்‌ தொண்டு செய்து அவரிடம்‌ ஸ்வரூப சிட்சை பெற்றபின்னர்‌ இராமானுஜரிடம்‌ சரம ஸ்லோகார்த்தத்தைப்‌ பெற்றார்‌.
திருக்கோஷ்டியூர்‌ நம்பி இராமானுஜருக்கு அருளிச்செய்த உபதேச மொழிகள்‌ வருமாறு. ஒரு பக்தனது நித்தியக் கடமைகள்‌ முறையே, ஆஸ்ரயண விரோதி, அதாவது நான்‌, எனது என்னும்‌ அகங்கார மமகாரங்களும்‌ உடலின்‌ மேல்‌ உள்ள ஆசையும்‌ நீக்குதல்‌, அடுத்தது புருஷாகாரமான பிராட்டியையும்‌, ஆச்சார்யர்களையும்‌ அவமதிக்காது இருப்பது, அடுத்து பகவத்‌ பிராப்தி (அருள்‌)கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயமும்‌ ஒரு ஜீவனை எம்பெருமானை அணுகாதபடி தடுத்து விடுகின்றது என்ற கருத்து, அடுத்து ஸ்ரவண விரோதி என்பது தன்னை மறந்து மற்ற தெய்வங்களைப்‌பற்றிய கதைகளைக்‌ கேட்பது எம்பெருமானைப் பற்றிய பெருமைகளைக்‌ கேட்பதைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து, அடுத்து அனுபவ விரோதி என்பது சந்தனம்‌, புஷ்பம்‌ முதலான போகப் பொருள்‌களை உபயோகிப்பதால்‌ உலக இச்சைகளில்‌ பற்றுகளை விளைவிப்பதன்‌ மூலம்‌ பகவதனுபவத்தைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து.-அடுத்து ஸ்வரூப விரோதி என்பது எம்பெருமான்‌ இட்ட வழக்காக பரதந்திரனாக இல்லாமல்‌ தன்னை ஸ்வதந்தந்திரனாக நினைத்து அவன்‌ ஆணையை மீறுவது. அடுத்து பரத்வ விரோது என்பது பிரமன்‌, உருத்திரன்‌ முதலான தேவதைகள்‌ தன்னை விட விஞ்சியவர்களாக இருப்பதால்‌ அவர்களை வணங்கினால்‌ எம்பெருமானுடைய பரத்வத்தை அறிய முடியாதபடி தடுத்து விடும்‌ என்ற கருத்து=அடுத்து ப்ராப்தி விரோதி என்பது எம்பெருமானை இனியவனாக
நினையாது தனக்கு உடல்‌ சம்பந்தமான காரியங்களைச்‌ செய்து தரும்‌ பாவனனாக நினைப்பவரோடு சேருவது பகவத் பிராப்தியைத்‌ தடுத்து விடும்‌ என்ற கருத்து என்பதாகும்‌.-பொன்னைப் புடம்‌ போடப்‌ போட ஒளி விஞ்சுவதைப் போல ஜீவாத்மா ஸ்வரூபம்‌ பொன்‌ போல குற்றமற்றது. தேக சம்பந்தத்‌தால்‌ ஏற்பட்ட அழுக்குகள்‌ நீங்கி முக்தி நிலையில்‌ அனன்ய சேஷத்வம்‌, அனன்ய சரணத்வம்‌, அனன்ய போக்யத்வம்‌, ஸம்ஸ்‌லேஷத்தில்‌ (கூடினால்‌) தரிப்பது, பிரிந்தால்‌ தரியாமை, எம்பெருமானிட்ட வழக்கா யிருக்கை என்னும்‌ ஆறு வகையாலே ஜீவனுக்கு நற் கதி உண்டாகும்‌ என்ற கருத்து. எம்பெருமான்‌ உபேயமாகும்‌ போது பிராட்டிமார்‌ நித்ய முக்தர்கள்‌ முதலானவர்களோடு சேர்ந்தே உபேயமாகிறான்‌.
திருக்கோஷ்டியூர்‌ நம்பி தனது அந்திம காலத்தில்‌ தன்‌ குமாரத்தி தேவகிப் பிராட்டியிடம்‌ என்‌ பிரயாணத்தில்‌ (மரணத்தில்‌) நீ நினைத்திருப்பது என்‌ என்று கேட்க, ‘அய்யரே, எங்கள்‌ ஆச்சார்யரான எம்பெருமானாரோடு உண்டான சம்பந்தத்தினால்‌ தேவரீருக்கு நற்கது உண்டாகப்‌ போகிறது என்று நினைத்தேன்‌’ என்றாளாம்‌. அவரும்‌ தன்‌ மகளிடம்‌ ஆளவந்தாரிடம்‌ பெற்ற இராமானுஜர்‌ விக்ரகத்தைக்‌ கொடுத்து வளர்த்ததனால்‌ ஆய பயன்‌ பெற்றேன்‌ என்று கூறி எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌ என்று கூறி திருநாடு ஏகினார்‌.
திருக்கோட்டியூர்‌ நம்பியின்‌ வேறு திருநாமங்கள்‌:- கோஷ்டிபூரணர்‌, கோஷ்டி புரீசர்‌, என்பன. இவரது குமாரரான தெற்காழ்வானும்‌, இராமானுஜரது சீடரே. இவரது இருப்பிடம்‌ திருக்கோஷ்டியூர்‌. இவர்‌ 105 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌.

மன்னியசீர்‌ ஆளவந்தார்‌ மலர்ப்பதத்தோன்‌ வாழியே.
வைகாசிரோஹினிநாள்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
இன்னிளவஞ்சிக்கினிதுரைத்தான்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்பேர்‌ இயம்புமவன்‌ வாழியே.
தென்னணியாம்‌ காசிபகோத்திரத்துதித்தான்‌ வாழியே.
திருக்குருகைப்பிரான்‌ எனும்‌ பேர்‌ திகழ வந்தான்‌ வாழியே.
முன்னாரும்‌ பெரும்‌ புதூர்‌ முனிக்குரைத்தான்‌ வாழியே.
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில்‌ வாழியே.
காசிபன்‌ தன்‌ கோத்திரத்தைக்‌ கருதி வந்தோன்‌ வாழியே
கலையனைத்தால்‌ முன்னவர்க்குக்‌ கதியளித்தான்‌ வாழியே.
மாசற மெய்ப்பொருள்‌ எதிக்கு வழங்குவோன்‌ வாழியே.
வையகமுன்‌ தர்சனத்தால்‌ வாழுமென்றான்‌ வாழியே.
ஏசறவே யுகந்தெதியை எடுத்தணைத்தான்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்‌ பெயர்‌ இயம்புமவன்‌ வாழியே.
தேசுபுகழ்‌ செல்வன்‌ மொழி தேர்ந்துரைப்பான்‌ வாழியே.
திருக்கோட்டியூர்‌ நம்பி சகதலத்தில்‌ வாழியே.
ஈரேழு மூன்றொன்றில்‌ இதமுரைத்தான்‌ வாழியே.
ஏற்றமா ஆளவந்தாரிணையடியோன்‌ வாழியே.
ஈரெழுவருக்கும்‌ பதம்‌ ஈயுமவன்‌ வாழியே.
எம்பெருமானாரெனும்‌ பேரியம்புமவன்‌ வாழியே.
நாலேழில்‌ நாலாநாள்‌ நாடி வந்தான்‌ வாழியே.
நன்மதுர கவி நிலையை நண்ணினான்‌ வாழியே.
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான்‌ வாழியே.
நங்கள்‌ திருக்கோட்டி நம்பி நற் பதங்கள்‌ வாழியே.
அல்லும்‌ பகலும்‌ ஆளவந்தார்‌ அடி நினைவான்‌ வாழியே.
அனவரதம்‌ தெற்காழ்வார்க்‌ காட் செய்வோன்‌ வாழியே.
வெல் பொருள்வெளியிட எதியை வெறுத்துரைத்தான்‌ வாழியே.
மேதினியோர்‌ உய்வெரென்று மெச்சினான்‌ வாழியே.
உள்மந்திர மெதிராசர்க் கொளித்துரைத்தான்‌ வாழியே.
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான்‌ வாழியே.
செல்வநம்பி குலம் தழைக்கச்‌ செகத்‌ துதித்தான்‌ வாழியே.
திருக்கோட்டியூர்‌ நம்பி செகதலத்தில்‌ வாழியே.

திருக்கோட்டியூர்‌ நம்பி பிறந்த மறு வருடம்‌ அழகர் கோவிலான திருமாலிருஞ்சோலையில்‌ ஸ்ரீ வைஷ்ணவப்‌ பிராமண குலத்‌தில்‌ பிறந்தவருக்கு ஞான பூரணர்‌ என்று பெயர்‌ சூட்டினர்‌ பெற்றறோர்கள்‌. இவருடைய முன்னோர்களில்‌ ஒருவரான கண்ணுக்கினியான ஸ்வாமி என்பவர்‌, ஒரு முறை சில மலையாள மாந்திரீகர்கள்‌ கண்ணில்‌ மையிட்டுக்கொண்டு வந்து அதன்‌ மகிமையால்‌ அழகரது தேஜசை அபகரித்துக் கொள்ள முயன்றதைக் கண்ட இந்த ஸ்வாமி,அவர்கள்‌ உண்ணும்‌ பிரசாதத்தில்‌ மிளகை அதிகம்‌ சேர்த்திட அதனால்‌ அந்த மாய மை கண்ணிலிருந்து கரைந்திட அவர்கள்‌ குற்றம்‌ வெளிப்பட்டுத்‌ தண்டிக்கப்பட்டார்களாம்‌. அதனால்‌ அந்தக்‌ கண்ணுக்கினியான்‌ ஸ்வாமிக்குத்‌ திருமாலை யாண்டான்‌ என்ற பட்டப்பெயரும்‌ ஏற்பட்டு அந்தக்கோயில்‌ புரோகிதராகவும்‌ நியமிக்கப்பட்டு, பரம்பரையாக இன்றளவும்‌ அப் பெருமைகள்‌ அவருடைய சந்ததியாரால்‌ அனுபவிக்கப்பட்டு வருகின்றன.திருக்கோட்டியூர்‌ நம்பி கட்டளைப்படி இராமானுஜருக்கு திருவாய்‌ மொழி உபதேசித்து வரும்‌ காலத்தில்‌, ஆளவந்தார்‌ அருளிய அர்த்தங்களுக்கு மாறாக, இராமானுஜர்‌ சில இடங்களில்‌ அர்த்தஞ்சொல்லிய காரணத்தால்‌ மனம்‌ வெதும்பிப்‌ பாடம்‌ சொல்‌வதை நிறுத்தி விட்டார்‌. பின்னர்‌ திருக்கோட்டியூர்‌ நம்பியினால்‌ ஆளவந்தாருக்குத்‌ தோன்றாத அர்த்தம்‌ இராமானுஜருக்குத்‌ தோன்‌றாது. ஸ்ரீ கிருஷ்ணன்‌ சாந்தீப முனியிடம்‌ பாடம்‌ கேட்டதைப்‌ போல இராமானுஜர்‌ உம்மிடம்‌ சந்தை கேட்கிறார்‌. ஆகவே நீர்‌ தொடர்ந்து சொல்லும்‌ என்று கட்டளையிட அவரும்‌ தொடர்ந்து நடத்தி நிறைவு செய்தார்‌. இவர்‌, தம்‌ குமாரரான சுந்தரத் தோளுடையானை எம்பெருமானாரது சீடராக்கினார்‌. திருமாலையாண்டான்‌ வம்சத்தில்‌ வந்த யமுனாச்சாரியார்‌ என்பவர்‌ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயருக்கு சிஷ்யராயிருந்தவர்‌.இவர்‌ அருளிய பல கிரந்தங்களில்‌ பிரமேய ரத்தினம்‌ தத்வ பூஷணம்‌ என்ற இரண்டும்‌ இப்போதும்‌ கிடைக்கின்றன. திருமாலை யாண்டான்‌ வம்சத்தவர்கள்‌ இன்றும்‌ அழகருக்குப்‌ புரோகிதராயிருந்து பல விசேஷ கெளரவங்களைப் பெற்று வருகின்றனர்‌. சித்திரா பெளர்ணமி யன்று மதுரைக்கு அழகர்‌ எழுந்தருளும்‌ மகோத்ஸவத்‌தில்‌ அழகர்‌ வரு முன்னரே திருமாலை யாண்டான்‌ வம்சத்தினர்‌ பல்லக்கில்‌ எழுந்தருளுவதைக் கண்ட பொது ஜனங்கள்‌ ஆண்டான்‌ பல்லக்கு முன்னே, அழகர்‌ பல்லக்குப் பின்னே என்று கூறுவார்கள்‌.திருமாலை யாண்டான்‌ உடையவருக்கு திருவாய்மொழிச்சந்தை சொல்லும் பொழுது நீர்‌ ஆளவந்தாரைக்‌ கண்ணாலும்‌ காணாதிருக்க, இப்படி அருளிச் செய்யார்‌ என்று சொல்லக் காரணம்‌ என்ன என்று வினவ, நான்‌ ஆளவந்தாருக்கு ஏகலைவனன்றோ என்று பதில்‌ சொல்லவே திருமாலை யாண்டானும்‌ திருக்கோட்டியூர்‌ நம்பி சொல்லியதை ஒத்திருந்தது. நாம்‌ ஆளவந்தாரிடம்‌ கேளாத அர்த்தமெல்லாமல்‌ இவரிடம்‌ கேட்டோம்‌ என்று அவரை வணங்கினாராம்‌.வங்கிபுரத்து நம்பி திருமாலை யாண்டானது சிஷ்யனாக, பாஷ்‌யகாரரடம்‌ ஞானோபதேசம்‌ பெற்றார்‌.-நாலூராண்டான்‌ என்பவர்‌ ஆளவந்தாரிடம்‌ ஆஸ்ரமித்துத்‌ திருமாலை யாண்டானிடம்‌ ஞான ஜீவனம்‌ பண்ணினார்‌.-பெரியாண்டான்‌ என்பது திருமலை யாண்‌டான்‌ புதல்வன்‌ சுந்தரத் தோளுடையான்‌. பெரியாண்டான்‌ திருத்‌தோரணம்‌ தொடங்கி அழகர்‌ திருவடிகளிலேயே பதினெட்டு வருடங்கள்‌ இரவும்‌ பகலும்‌ தண்டனிட்டுக்‌ கிடப்பார்‌. ஆண்டான்‌ இடக்கிறாரோ பசுக் கடக்கிறதோ, வழி பார்த்துப்‌ போங்கள்‌ என்று சொல்லுமாறு பகவதனுபவம்‌ சலியாமல்‌ பண்ணுவார்‌. கிணற்றில்‌ விழுந்தவனை இரண்டு. பேருமாக எடுத்தாற்போல, பர்ஷ்யகாரரும்‌, எம்பாரும்‌ என்னைக்‌ கடாக்ஷித்தார்கள்‌ என்று பெரியாண்டான்‌ கூறுவார்‌.அழகர்‌ திருவோலக்கத்தில்‌ பிள்ளை யழகப்‌ பெருமான்‌ என்பவர்‌ பெரியாண்டானைப் பார்த்து ‘பரமபதம்‌ எப்படி இருக்கும்‌:என்று கேட்க ‘இப்படியே தான்‌ இருக்கும்‌. ஆனால்‌ இங்கிருந்தால்‌ முதுகு கடுக்கும்‌ அங்கு பேனால்‌ அது செய்யாது’ என்றாராம்‌.ஒரு பாக்கு மரத்தைப்‌ பயிரிட்டு 16 ஆண்டுகள்‌ பாடுபட்டாலும்‌ பெறும்‌ பலன்‌ வெகு சொற்பமே. மிகத் தாழ்வானவருக்குச்‌ சம்ஸாரத்தைப்‌ போக்கி மிகச்‌ சிறந்ததான பரமபதத்தைத்‌ தருவதற்கு த்வயத்தை அருளிச் செய்த ஆச்சாரியரது திருவடிகளில்‌ எப்போதுமே நன்றி யில்லாத ஸம்ஸாரிகளுக்கு எத்தைச் சொல்லி என்ன பயன்‌ விளையப் போகிறது என்று திருமாலை யாண்டான்‌ வெறுத்‌துக் கூறினார்‌. எதிராஜர்‌ திருமாலை யாண்டானிடம்‌ திருவாய்மொழி பெரிய திருமொழி முதலாயிரம்‌ இயற்பா அனைத்தும்‌ சந்தைகளையும் கேட்டவர்‌.

அம்புவியில்‌ ஆளவந்தாரடியிணையோன்‌ வாழியே.
ஆரியனாம்‌ அவர்‌ பதத்தை அன்பு செய்தோன்‌ வாழியே.
வெம்பிவரும்‌ வாதியரை வேர் களைந்தோன்‌ வாழியே.
மேதினியில்‌ நாலூர் விளக்க வந்தான்‌ வாழியே.
எம்பெருமானெதிகாசர்க்‌ கீடுரைத்தான்‌ வாழியே.
ஏற்றமுள்ள மாசி மகமிலங்க வந்தோன்‌ வாழியே.
வம்பவிழும்‌ சோலை மலை வாழ வந்தோன்‌ வாழியே.
மாலாதராரியன்‌ தாள்‌ மாநிலத்தில்‌ வாழியே.
வீசு புகழ்ச்‌ சங்காழி விளங்கு புயம்‌ வாழியே.
விண்ணுயர்ந்த மலை யழகர்‌ விரும்புமவன்‌ வாழியே.
மாசி மகம்‌ இப் புவியில்‌ வந்துதித்தோன்‌ வாழியே.
மறைப் பொருளை உடையவர்க்கு வகுத்துரைத்தோன்‌ வாழியே.
காசிப நற் குலத்துதித்த கருணை நிதி வாழியே.
கையாழி சங்கதனால்‌ கதி தருவோன்‌ வாழியே.
தேசு புகழ்‌ ஆளவந்தார்‌ திருவடியோன்‌ வாழியே.
திருமாலை யாண்டான்‌ தாள்‌ செகதலத்தில்‌ வாழியே.

பெரிய திருமலை நம்பி இராமானுஜருக்கு மாதுலராகும்‌ (தாய்‌ மாமன்‌). இவரது
மூத்த சகோதரி பூதேவி என்னும்‌ காந்திமதிக்கும்‌ ஸ்ரீபெரும்புதூர்‌ கேசவ சோமயாஜாலுவுக்கும்‌ பிறந்த மகனே எம்பெருமானாரான இராமானுஜர்‌. இவரது இளைய சகோதரியான ஸ்ரீ தேவியை மதுரமங்கலம்‌ கமல நயன பட்டருக்கு மணம்‌ செய்து கொடுத்தார்‌.அவர்களது குமாரர்கள்‌ எம்பார்‌ என்னும்‌ கோவிந்தரும்‌ அவரது தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளும்‌ ஆவார்கள்‌. இவர்‌ எம்பெரு மானாருக்கு ஒரு வருடகாலம்‌ கீழத்திருப்பதியில்‌ வால்மீகியின்‌ இராமாயணத்தை காலட்சேபம்‌ செய்தார்‌. திருவேங்கடமுடையான்‌ இவரைத்‌ திருத் தகப்பனாராக அபிமானித்தார்‌ என்பர்‌. சைவராக மாற்றப்பட்டுக்‌ காளஹஸ்தியில்‌ உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக இருந்த மருமகன்‌ கோவிந்தரை மறுபடி ஸ்ரீ வைஷ்ணவராகத்‌ திருத்தியவர்‌ இவர்‌. தம்முடைய குமாரர்களான பிள்ளை திருமலை நம்பியையும்‌, பிள்ளானையும்‌, இரு குமாரத்திகளையும்‌ உத்தாரகரான எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ அபிமானம்‌ வைக்கச்‌ செய்‌தார்‌. உடையவரது வாழ்க்கையோடு பின்னிப்‌ பிணைந்ததே இவரது வாழ்க்கையாகும்‌.-எம்பெருமானார்‌ தம்‌ சீடர்களுடன்‌ திருப்பதிக்கு யாத்திரை சென்ற பொழுது ஆழ்வார்கள்‌, தரிசிக்காத இடத்திற்குத் தானும்‌ போக விரும்பாமல்‌ அடிவாரத்திலே எழுந்தருளியிருக்கிற ஆழ்வாராதிகளைச்‌ சேவித்துக் கொண்டு திருப்பதியில்‌ விட்டலதேவனையும்‌ மற்றும்‌ முப்பது வைஷ்ணவர்களையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டு வாழ்ந்து வரும்‌ நாளில்‌ திருமலையிலிருந்து அனந்தாழ்‌வான்‌ முதலிய வைணவர்கள்‌ இதைக் கேள்விப்பட்டு கீழே இறங்கி வந்து எம்பெருமானாரை திரு மலைக்கு எழுந்தருளுமாறு வேண்ட,
அவரும்‌ ஆழ்வார்கள்‌ செல்லாத இடத்திற்கு தாமும்‌ செல்ல விரும்பவில்லை என்று கூற உடனே உடனிருந்த ஏனைய வைணவர்களும்‌ நாங்களும்‌ ‘ஏறோம்‌’ என்று கூறவே உடையவரும்‌ ஏற ஒருப்பட்டுத்‌ திருமலையில்‌ திருப்பரியட்டப்‌ பாறை யளவிலே ஏறியிருக்கும்பொழுது அவரை எதிர்கொண்டு, திருவேங்கடமுடையானது தீர்த்தப்‌ பிரசாதங்களுடன்‌ திருமலை நம்பியே அழைக்க வந்தார்‌. அவரிடம்‌ வேறு யாரேனும்‌ சிறியவர்களை அனுப்பக் கூடாதா, தாங்களே வர வேண்டுமா என்று உடையவர்‌ கேட்கத்‌ திருமலை நம்பி, என்னை விடச்‌ சிறியவர்கள்‌ யாரையும்‌ காணவில்லை. ஆகவே நானே வந்தேன்‌ என்றார்‌. உடையவர்‌ அம்மலை யழகில்‌ மனமகிழ்ந்து இது பூலோகவைகுந்த மாயிருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு திருமஞ்சனம்‌ கண்‌டருளி, இவ்விடம்‌ விண்ணோர்‌ வெற்பாகையாலே, அமரர்‌ முனிக்‌கணங்கள்‌ போன்ற நித்ய ஸூரிகள்‌ வாழுமிடம்‌. நாம்‌ இப்போதே இங்கிருந்து இறங்க வேண்டும்‌ என்று கூற பெரிய திருமலைநம்பி திவ்ய தேசங்களில்‌ மூன்று நாளாவது இருக்க வேண்டும்‌ என்று கூறினார்‌. ஆகவே உடையவரும்‌ மூன்று நாட்களும்‌ அமுது செய்யாமல்‌ பகவானை அனுபவித்து, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்து மூழ்ந்தார்‌. பின்னர்‌ கீழிறங்கி கீழத்திருப்பதியில்‌ மாதுலரான பெரிய திருமலை நம்பியின்‌ திருமாளிகையில்‌ உணவருந்தி அவரிடம்‌ வால்மீகி இராமாயணம்‌ பிரவசனம்‌ கேட்டவாறு ஒரு வருடகாலம்‌ தங்கி இருந்தார்‌.
பெரிய திருமலை நம்பியின்‌ ௮வதார ஸ்தலம்‌: திருமலை(திருப்பதி) அவரது திரு நட்சத்திரம்‌, சித்திரை மாதத்து ஸ்வாதி ஆகும்‌. ஆனால்‌ இவரது வாழித் திருநாமத்தில்‌ வைகாசி ஸ்வாதி என்று வருவதால்‌ நிச்சயிக்கக்கூடவில்லை. இவரது இதர திருநாமங்கள்‌ ஸ்ரீ சைல பூர்ணர்‌, பெரிய திருமலைநம்பி. இவரது குமாரர்‌கள்‌ பிள்ளை திருமலைநம்பி, அப்புள்ளான்‌ ஆவர்‌, குமாரத்திகள்‌இருவருண்டு.-திருவாராதனப்பெருமாள்‌: மலை குனிய நின்ற பெருமாள்‌.இவர்‌ அருளிய அமலன்‌ ஆதிப்பிரான்‌ தனியன்‌
காட்டவே கண்ட பாத கமலம்‌ நல்லாடை உந்தி
தேட்டரு முதர பந்தம்‌ திருமார்பு கண்டம்‌ செவ்வாய்‌
வாட்டமில்‌ கண்கள்‌ மேனி முனியேறித்‌ தனி புகுந்து
பாட்டினால்‌ கண்டு வாழும்‌ பாணர் தாள்‌ பரவினோமே’

வைகாசி சோதி நாள்‌ வந்துதித்தான்‌ வாழியே.
வண் திருவேங்கட முடையான்‌ வரபுத்ரன்‌ வாழியே.
அய்யன்‌ ஸ்ரீ ஆளவந்தார்‌ அடி தொழுவோன்‌ வாழியே,
அனவரதம்‌ மலை குனியோர்க்கு அடிமை செய்வோன்‌ வாழியே.
மெய்யன்‌ இராமானுசாரியான்‌ விரும்புமவன்‌ வாழியே.
மிக்க திருமலையார்க்கெல்லாம்‌ மேலாவான்‌ வாழியே.
செய்ய தமிழ் வேதத்தின்‌ சிறப்பறிந்தான்‌ வாழியே.
திருமலை நம்பிகள்‌ உபய திருவடிகள்‌ வாழியே.

திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ எம்பெருமானார்‌ அவதரித்த அதே வருஷத்தில்‌ (கி.பி. 7017) வைகாசி கேட்டையில்‌ யமுனாச்சாரியாருக்கும்‌ ஸ்ரீரங்கநாயககிக்கும்‌ முதல்‌ குமாரராய்‌ அவதரித்தவர்‌. இவரைத்‌ தம்‌ ஆச்சாரியரான மணக்கால்‌ நம்பியிடம்‌ சிஷ்யராக இருந்து வருமாறு பணித்தார்‌ ஆளவந்தார்‌. நம்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்கநாதன்‌ நியமனத்தாலே காஞ்சியில்‌ தேவப் பெருமாளைத்‌ தமது இசையாலே மயக்கி வரம்‌ பெற்று எதிராஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர்‌ இவர்‌. ஸ்ரீரங்கநாதனுக்கு அரையராய்‌ இருந்த இவர்‌, எம்பெருமானாருக்கு அருளிச்‌ செயல்‌ சந்தையும்‌ சரமோபாயமும்‌ நல் வார்த்தைகளும்‌ உபதேசித்தவர்‌. இவருக்குச்‌ சந்ததி யல்லாமையால்‌ தம்‌ தம்‌பிகளான தெய்வத்‌துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியவர்‌களை எம்பெருமானாருக்கு சிஷ்யர்களாக்கினார்‌.-ஆகவே எம்பெருமானாருடைய ஆச்சாரியர்களான பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர்‌ நம்பி திருமாலை யாண்டான்‌ பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமான்‌ அரையர்‌ ஆகிய ஐவரும்‌,எம்பெருமானாரே எல்லோருக்கும்‌ உத்தாரக ஆச்சாரியார்‌ என்பது தோற்றத்‌ தங்களுடைய தம்பிகளையும்‌ குமாரர்களையும்‌, குமாரத்திகளையும்‌ எம்பெருமானாரிடமே அடைக்கலமாகக்‌ கொடுத்தனர்‌.-எம்பெருமானார்‌ திருவரங்கப் பெருமாள்‌ அரையருக்கு மனது உகக்‌கும்படியாக ஆறுமாத காலம்‌ பாலமுதம்‌ பக்குவமாகக்‌ காய்ச்சிக்‌ கொடுத்தும்‌ திருவத்யயன காலத்தில்‌ மஞ்சள்‌ காப்பரைத்து நீராடப்‌ பண்ணுவித்தும்‌ அவரை மகிழ்வித்ததனால்‌ அவரும்‌ ‘வாரீர்‌ எம்பெருமானாரே, உமக்கு சரம புருஷார்த்தம்‌ சொல்கிறோம்‌ என்று தொடங்கி தேவுமற்றறியாத மதுரகவிகளைப் போல நீரும்‌ குருவே மேலான பிரஹ்மம்‌. குருவே மேலான தவம்‌, குருவே மேலான காமம்‌. குருவே மேலான பிராப்யம்‌, குருவே மேலான கல்வி குருவே மேலான பிராபகம்‌. அப் பரம் பொருளையே உபதேஸிப்பதால்‌ குரு அதைக் காட்டிலும்‌ உயர்ந்தவர்‌. தீ மனம்‌ கெடுத்தும்‌,மருவித் தொழும்‌ மனம்‌ தந்தும்‌, அறியாதன அறிவித்த ஆச்சார்யனே -உபாயோபாயம்‌ என்ற விசுவாசத்துடன்‌ ‘பீதகவாடைப்‌ பெருமானார்‌ பிரம குருவாகி வந்து என்று சொல்வது போல உறங்கும்‌ பெருமாளே உலவும்‌ பெருமாளாக வந்தாரென்றிரும்‌’ என்று-பஞ்சோபாய நிஷ்டையான் பரம பர்வார்த்த விசேஷத்தைப்‌ பிரசாதித்தருளினார்‌.திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ காஞ்சிபுரத்தில்‌ வரதராஜப்‌ பெருமாளைச்‌ சேவித்து மிகுந்த பக்தியோடு ‘என்‌ நெஞ்சமே நான்‌:என்று தொடங்கி தொழுதெழு தொண்டர்கள்‌ தமக்கு பிணி யொழித்து அமரர்‌ பெரு விசும்பருளும்‌ பேரருளாளன்‌ என்று பாலேய்‌ தமிழில்‌ பண்ணார்‌ பாடல்‌ இன்னிசையில்‌ பாடிட பெருமாள்‌ மிக மகிழ்ந்து அவருக்கு முத்துத்‌ தாழ் வடம்‌ போன்ற வெகு மதிகளை வழங்க முற்பட அரையர்‌ தமக்கு இவையெல்லாம்‌ தேவை யில்லை. இராமானுசரை அடியேனுக்குத்‌ தந்தருளு வேண்டும்‌ என்று விண்ணப்பஞ்செய்ய பெருமாளும்‌ முன்னர்‌ எதுவும்‌ தருவோம்‌ என்று வாக்குக் கொடுத்ததை மறுக்க இயலாமல்‌ இராமானுசரை அனுப்ப இசைந்தார்‌. இராமானுசரும்‌ பேரருளாளரைச்‌ சேவித்து விடை கொண்டு, கூரத்தாழ்வாரையும்‌ முதலியாண்டானையும்‌ மடத்துக்குச்‌ சென்று தனது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனை எடுத்துவரச்‌ சொல்லித்‌ திருக்கச்சி நம்பியிடமும்‌,மற்றங்குள்ளோரிடமும்‌ விடைபெற்றுக் கொண்டு பெரிய கோயிலுக்கு எழுந்தருளினார்‌. இவ்வாறாக இராமானுசரைக்‌ கோயிலுக்‌குக்‌ கொண்டு வந்தவர்‌ இவ் வரையரே. இவர்‌ 175 ஆண்டுகள்‌ வாழ்ந்திருந்தார்‌. இவரது இதர நாமங்கள்‌ ரங்கார்யர்‌, குடிசொட்டை என்பன.-இவரது இசைப் புலமையும்‌ பகவத்‌ அனுபூதியும்‌ சேர்ந்து திரு அத்யயன உத்சவத்தில்‌ இவர்‌ இசைத்து நாட்டியமாடி நடித்துக் காட்‌டிய பெருமாள்‌ விபவாதாரத்தில்‌ (இராம கிருஷ்ண அவதாரங்கள்‌)செய்தருளின. அபதாநங்களைக்‌ கண்டு பெருமாள்‌ மிகவும்‌ மகிழ்ந்து இவருக்குக்‌ ‘கோயிலுடைய பெருமாளரையர்‌ என்ற திருநாமத்தைச்‌ சாத்தினார்‌. உத்ஸவங்களிலெல்லாம்‌ பெருமாள்‌ தோளுக்கினியான்‌ வாகனத்தில்‌ உலா வரும் போது நம்‌ நடையழகுக்கு யீடாகப்‌ பாடிடும்‌ என்று அருளிட இவரும்‌ இசையில்‌ ஏத்திக்‌ கொண்டு வரக்‌ கோயிலுக்கு எழுந்தருளுவார்‌. அதிலிருந்து அடுக்‌குச்‌ சாத்திக்கொண்டு அந்தந்தத்‌ திருக் கோலத்துடனே உத்சவ காலங்‌களில்‌ பெருமாளுடன்‌ எழுந்தருளுகிற வைபவம்‌ நடந்து வருகிறது.அரையர்‌ அருளிய திருமாலை, திருப் பள்ளி யெழுச்சித் தமிழ்த்தனியன்கள்‌.

மற்றொன்றும்‌ வேண்டா மனமே – மதினரங்கர்‌
கற்றினம்‌ மேய்த்த கழலிணைக்கீழ்‌ – உற்ற திருமாலை பாடும்‌ சீர்த்‌ தொண்டரடிப்‌ பொடியெம்‌
பெருமானை எப்பொழுதும்‌ பேசு(திருமாலை)
மண்டங்குடியென்பர்‌ மாமறையோர்‌ மன்னிய சீர்‌
தொண்டரடிப்பொடி தொன் நகரம்‌ – வண்டு
திணர்த்த வயல்‌தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
உணர்த்தும்‌ பிரான்‌ உதித்த ஊர்‌”(திருப்பள்ளி)

நாதமுனி குலந்திகழ நன்குதித்தோன்‌ வாழியே,
நற்றமிழின்‌ மறைக்கிசையை நவின்றுரைப்போன்‌ வாழியே.
காதலரங்கேசரிரு கழல்‌ பணிவோன்‌ வாழியே.
கானவர நாவிசையால்‌ களிப்பிப்போன்‌ வாழியே.
ஏதமில்‌ வண் கச்சியனை ஏத்திசைப்போன்‌ வாழியே.
எதிபதியைப்‌ பரிசாக ஏற்று வந்தோன்‌ வாழியே.
தீதில்‌ யமுனைத் துறைவன்‌ சேவடியோன்‌ வாழியே.
திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ திருவடிகள்‌ வாழியே.

திருக்கச்சி நம்பி சென்னைக்கு அருகிலுள்ள பூவிருந்தவல்லி என்ற ஊரில்‌
வைசியர்‌ குலத்தில்‌ வீர ராகவருக்கும்‌ கமலைக்கும்‌ நான்காவது குமாரராய்‌ அவதரித்தார்‌. சிலர்‌ இவரை நான்காம்‌ வர்ணத்தில்‌-(சூத்திரர்‌) பிறந்தவராகவும்‌ கூறுவர்‌. அக்காலத்திலேயே க்ஷத்திரிய வைஸ்யர்கள்‌ வேதாத்யயனம்‌ முதலியவற்றை விட்டு விட்டதால்‌ நாலாவது வர்ணமாகக்‌ கூறியிருக்கலாம்‌. இவரது இயற்பெயர்‌ கஜேந்திர தாஸர்‌ என்பது. இவர்‌ பார்க்கவரான திருமழிசை யாழ்வாருடைய அருளாலே பிறந்தவராதலால்‌ இவருக்குப்‌ பார்க்கவப் பிரியர்‌ என்றும்‌ பெயரிட்டனர்‌. இவர்‌ ஆளவந்தாரது சிஷ்யர்களில்‌ ஒருவர்‌. ௮வர்‌ அளித்த திருநாமம்‌ பேரருளாள தாஸர்‌ என்பது.-கச்சியில்‌ வாழ்ந்தமையால்‌, திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சி பூர்ணர்‌ என்றழைக்கப்பட்டார்‌. இவர்‌ காஞ்சி வரதராஜப்‌ பெருமாளுக்குத்‌ திருவால வட்டக் கைங்கர்யம்‌ செய்து கொண்டிருந்தார்‌-அப்பெருமான்‌ ஒருவருக்கும்‌ தெரியாமல்‌ இவருடன்‌ பேசிக்‌ கொண்டிருந்தார்‌ என்பது பிரசித்தம்‌. அந்திம காலத்தில்‌ மோட்சம்‌ விரும்பிய நம்பிக்கு, ‘நீர்‌ வீசினீர்‌’ நான் பேசினேன்‌ இரண்டும்‌ சரியாயிற்று. ஒரு பரம பாகவதரின்‌ அபிமானத்தைப்‌ பெற்றாலே உமக்கு மோட்சம்‌ என்று பெருமான்‌ கூறி விட்டார்‌. அதற்குப் பின்‌ மாறுவேஷத்தில்‌ திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடம்‌ மாடு மேய்க்கும்‌ கைங்கர்யம்‌ செய்து ‘நம்‌ பையல்‌’ என்று அவரால்‌ அபிமானிக்கப்‌ பெற்று அவ்வபிமானமே காரணமாக மோட்சம்‌ பெற்றார்‌ என்று கூறப்படுகிறது.-இராமானுஜர்‌ இவரிடம்‌ சீடராக வேண்டுமென்று ஆசைப்பட்‌டார்‌. நம்பி மறுத்து விட்டார்‌. இவர்‌ உண்ட கலத்திலே உண்ண வேண்டும்‌ என்று ஆசைப்பட்டார்‌ இராமானுஜர்‌. அதை இராமானுஜரது மனைவி நிறைவேறாமல்‌ செய்து விட்டாள்‌. தேவராஜப்‌ பெருமாளிடமிருந்து ஆறு வாக்கியங்கள்‌ பெற்றுக் கொடுத்து தர்ஸநார்த்தங்களை உறுதிப் படுத்திய மகானுபாவர்‌ இவரே. தேவராஜப்‌ பெருமானைப்‌ பற்றிய எட்டு ஸ்லோகங்கள்‌ கொண்ட தேவராஜாஷ்‌டகம்‌ என்னும்‌ ஸ்துதி நூல்‌ இவர்‌ அருளிச் செய்தது. இராமானுஜர்‌ கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர்‌ பேரருளாளரிடம்‌ கேட்டு இராமானுஜருக்குச்‌ சொன்ன ஆறு விஷயத்திற்கும்‌ பேரருளாளர்‌ கூறிய பதில்‌ வருமாறு.
1) பரத்வம்‌ நாமே, 2) பேதமே தர்ஸனம்‌, 3) உபாயமும்‌ பிரபத்தியே, 4) அந்திம ஸ்மிருதியும்‌ வேண்டா, 5) ஸரீராவசானத்‌தாலே மோட்சம்‌, 6) பெரிய நம்பி திருவடிகளை ஆஸ்ரயிப்பதுவே
என்று கூறியவற்றை நம்பி இராமானுஜரிடம்‌ கூறி இதுவோ நீர்‌ நினைத்திருந்தது என்று கேட்க இராமானுஜரும்‌ ஆம்‌ என்ன. இருவர்‌ நினைவும்‌ ஒத்திருந்தபடியை எண்ணி மகிழ்ந்தார்‌. மேலே சொன்ன வாக்கியங்களின்‌ பொருள்‌ ஸ்ரீமானான நானே பரத்வம்‌. உலகிற்கும்‌ எனக்கும்‌ பேதம்‌ உண்டு என்பதே. என்‌ மதம்‌,
என்னைச்‌ சரணடைவதே என்னைப்‌ பெறுவதற்குக்‌ கண்ணழிவற்ற
உபாயம்‌, அப்படிச்‌ சரணடைந்தவர்களுக்கு அந்திம காலத்தில்‌ என்‌ நினைவு தேவையில்லை. இப்பிறப்பின்‌ இறுதியிலேயே அவர்களுக்கு மோட்சம்‌ உறுதி. பெரியநம்பியே இராமானுஜரால்‌ ஆஸ்ரயிக்கத்தக்கவர்‌ என்பது, இந்த ஆறு வார்த்தைகளையும்‌ இராமானுஜருக்குக்‌ கூறி ‘ராமானுஜமாந்யர்‌’ (இராமானுசரால்‌ கெளரவிக்கப்பட்‌டவர்‌) என்னும்‌ பெயரைப்‌ பெற்றார்‌. இவரிடம்‌ சரண்‌ புகுந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்குப்‌ பிரபத்தியை அருளிச் செய்தார்‌. அது பொறுக்காத அவனது உறவினர்கள்‌ அவனைப்‌ பிரித்துக்‌ கொண்டு போய்‌ பிராயச்சித்தம்‌ பண்ண முயற்சிக்க, அவன்‌ அவர்களிடமிருந்து தப்பி வந்து நம்பியிடம்‌ சரண் புக, நீர்‌ போகா விட்டால்‌ அவர்கள்‌ என்னைப்‌ பொல்லாங்கு கூறுவார்களே என்று நம்பி கூற,அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம்‌ பொறுக்காமல்‌ பிராணத் தியாகம்‌ செய்தார்‌ என்பர்‌.
திருக்கச்சி நம்பி அருளிய திருச்சந்த விருத்தத்‌ தனியன்கள்‌
திருச்சந்தம்‌ பொழில்‌ தழுவு தாரணியின்‌ துயர் தீர
திருச்சந்த விருத்தம்‌ செய் திருமழிசைப்‌ பரன் வருமூர்‌
கருச்சந்தும்‌ காரமுகிலும்‌ கமழ் கோங்கு மண நாறும்‌
திருச்சந்தத்துடன்‌ மருவு திருமழிசை வளம்பதியே.
உலகு மழிசையும்‌ உள்ளுணர்ந்து தம்மில்‌
புலவர்‌ புகழ்க் கோலால்‌ தூக்க – உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும்‌ மா நீர்‌ மழிசையே
வைத்தெடுத்த பக்கம்‌ வலிது.

மருவாருந்‌ திருமல்லி வாழ வந்தோன்‌ வாழியே.
மாசி மிருசீரிடத்தில்‌ வந்துதிததோன்‌ வாழியே.
அருளாளருடன்‌ மொழி சொல்‌ அதிசயத்தோன்‌ வாழியே.
ஆறுமொழி பூதூரர்க்‌ களித்த பிரான்‌ வாழியே.
திருவாலவட்டம்‌ செய்து சேவிப்போன்‌ வாழியே.
தேவராசாட்டகத்தைச்‌ செப்புமவன்‌ வாழியே.
தெருளாரு மாளவந்தார்‌ திருவடியோன்‌ வாழியே.திருக்கச்சி நம்பியிரு திருவடிகள்‌ வாழியே

மாறனேரி நம்பி ஆளவந்தார்‌ சிஷ்யர்களிலே ஒருவர்‌. பஞ்சம குலத்தில்‌ பாண்டிய நாட்டில்‌ புராந்தகம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ ஆடிமாதம்‌ ஆயில்ய நட்சத்திரத்தில்‌ பிறந்தவர்‌. ஆளவந்தாருக்கு ஏற்பட்ட ராஜபிளனயை அவரிடம்‌ பிரார்த்தித்து ஆசார்யப்‌ பிரசாதமாகப்‌ பெற்றுக் கொண்டவர்‌ இவர்‌ என்று கூறுவர்‌. இவர்‌ தம்‌ கடைசிக் காலத்தில்‌ ஆளவந்தார்‌ உகந்ததான இந்த தேகத்தை அவைஷ்ணவர்களான என்‌ உறவினரிடத்தில்‌ ஒப்படைக்காமல்‌ நல்லடக்கம்‌ செய்ய வேண்டும்‌ என்று பெரிய நம்பிகளிடம்‌ பிரார்த்‌தித்தார்‌. அதன் படியே, இவர்‌ பரமபதித்த பின்‌ பெரிய நம்பி தாமே அவரது அந்திமக்‌ கிரியைகளைச்‌
செய்தார்‌. பஞ்சமரான அவருக்குப்‌ பிராமணரான நீர்‌ ஈமச்சடங்குகள்‌ செய்தல்‌ தகுமோ என்று கேட்ட இராமானுஜருக்கு அவர்‌ அளித்த பதில்‌ பெரியநம்பி வைபவத்திலேயே கூறப்பட்டுள்ளது.

ஆனிதனில்‌ ஆயில்யம்‌ அவதரித்தான்‌ வாழியே.
ஆளவந்தார்‌ திருவடிகள்‌ ஆஸ்ரயித்தான்‌ வாழியே.
மாநிலம்‌ எதிராசர் மனம்‌ வாழ்வித்தான்‌ வாழியே.
மதிளரங்க நகரமதில்‌ வாழ்ந்தருள்‌வோன்‌ வாழியே.
தேனமருந்‌ தென்மொழியின்‌ சிறப்பறிந்தோன்‌ வாழியே.
திகழ் ஞான பத்திகளால்‌ சேர்ந்திருப்போன்‌ வாழியே.
வானவரில்‌ ஒருவரிங்கு மகிழ்ந்து வந்தோன்‌ வாழியே.
மாறனேரி நம்பி யிணை மலரடிகள்‌ வாழியே.

தெய்வ வாரி யாண்டான்‌–வகுளாபரண ஸோமயாஜியார்‌ என்ற ஸ்ரீ வைஷ்ணவர்‌ தெய்வ வாரி யாண்டானை எம்பெருமான்‌ இங்கு வந்து அவதரிக்கக் காரணம்‌ என்ன என்று கேட்க, பாகவதாபசாரம்‌ பொறுக்காமையால்‌ என்றாராம்‌. ஆளவந்தாரது பிரிவை சிறிது காலம்‌ கூடப் பொறுக்க முடியாதவர்‌ இவர்‌. ஒருதரம்‌ மடத்துக்காரியத்தை இவர்‌ பொறுப்‌பில்‌ விட்டுவிட்டு, ஆளவந்தார்‌ திருவனந்தபுரம்‌ சென்று விட மிகவும்‌ மெலிந்து விடவே உடனிருந்தோர்‌ இவரைத்‌ திருவனந்தபுரத்திற்குக்‌ கொண்டு போகத்‌ தீர்மானத்த போது, அந்த எண்ணத்திலேயே உடல் நலம்‌ தேறி வந்தது. பின்னர்‌ ஆளவந்தாரை நேரில்‌ பார்த்தவுடன்‌ திருமேனி வாட்டம்‌ தீர்ந்தது. ஆளவந்தார்‌ இவரை திருவனந்தபுரம்‌ போய்‌ ஸ்வாமி தரிசனம்‌ செய்து வரச் சொன்ன போது, என்னுடைய திருவனந்தபுரம்‌ இதோ என்‌ எதிரிலேயே இருக்கிறது என்று ஆளவந்தாரைக் காட்டி, திருவனந்தபுரம்‌ போக இசைய வில்லையாம்‌. வனமாமலை யாண்டான்‌ என்னும்‌ ஆளவந்‌தார்‌ சிஷ்யர்‌ பகவத்‌ பக்தர்கள்‌ பெருமாளுக்கும்‌ பிராட்டிக்கும்‌ கெளஸ்துப மாலை போன்று இனிமை யானவர்கள்‌. அவர்களிடம்‌ அபசாரப்படுவது கெளஸ்துப மாலையில்‌ கரிக்கோடு கிழிப்பதை ஒத்தது என்றாராம்‌.

ஆளவந்தார்‌, சிஷ்யர் அம்மங்கி யிடம்‌ உடையவர்‌ திருக்கண்ணபுரத்திலிருந்து போய் வர விண்ணப்‌பித்த போது அம்மங்கி அவரிடம்‌ அக்கினி ஜ்வாலையில்‌ அகப்படாதே கிடீர்‌. அரு நஞ்சு தின்னாதே கிடீர்‌. அஸி மிதியாதே இடர்‌. அபலைகளோடு செறியாதே கிடீர்‌. ஆஸ்திகரோடு சேர்ந்து போருங்‌ கிடீர்‌ என்றாராம்‌. அதன்‌ விரிவாக்கம்‌, அக்னி ஜுவாலையில்‌ அகப்படாதே கிடீர்‌ என்பது பெளத்தர்கள்‌, ஜைனர்கள்‌, அத்வைதிகள்‌, சைவர்கள்‌ முதலானோர்‌ வேதத்துக்குப்‌ புறம்பானவர்கள்‌.-இவர்களோடு வாதிடும் பொழுது பாம்பு, ௮க்னி போன்றவற்றோடுபழகுவது போல நெருங்காமல்‌ இருக்க வேண்டும்‌ என்பது,-அடுத்து அருநஞ்சு தின்னாதே கிடீர்‌ என்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய நாம ரூபங்களைத்‌ தரித்துக் கொண்டு வைஷ்ணவத்தைக்‌ கெடுப்பவர்களோடு கலந்தால்‌ ஆத்ம நாசத்தை விளைவித்து விடுவார்கள்‌. இலுமிச்சம்பழமும்‌ கற்பூரமும்‌ கலந்து உண்டால்‌ உயிரை முடிப்பதைப் போல இவர்களது உறவு ஆத்ம நாசத்தையே உண்டு பண்ணச்‌ செய்யும்‌ என்பது. அடுத்து அஸீசி மிதியாதே கிடீர்‌ என்பது சரீரத்தை வளர்ப்பதிலேயே கவனம்‌ செலுத்தும்‌ சம்சாரிகள்‌, கல்‌, கட்டை போன்றவர்கள்‌. அவர்களை விட்டு விலகச் செல்ல வேண்டும்‌ என்பது. அடுத்து அபலைகளோடு செறியாதே கிடீர்‌ என்பது அனுகூலர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்த போதிலும்‌, கொள்ளத் தக்கவை எவை, தள்ளத் தக்கவை எவை என்ற பாகுபாடு தெரியாத தெளியாத அறிவைப்‌ பெற்றவர்களது உறவை விட வேண்டும்‌ என்பது. அடுத்து ஆஸ்திகரோடு செறிந்து போகுங்‌கள்‌ என்பது பகவத்‌ பாகவத விஷயங்களை அனுபவிக்கத் தக்க பூர்ணாதிகாரிகள்‌. அவர்களது உறவு அனுபவிக்கத்தக்கது. ஆகையால்‌ அவர்ளோடு நெருங்கிப் பழக வேண்டும்‌ என்பதாகும்‌.-வைத்த கையிலும்‌ வாங்கிக் கொடுத்த கை தஞ்சம்‌ என்றார்‌ ௮ம்‌மங்கி. அஞ்சேல்‌ என்று அபய கரம்‌ வைத்துக்‌ காட்டிய பெருமாஞடைய கையைக் காட்டிலும்‌, அவரிடம்‌ உபய விபூதிச்‌ செல்வத்தை வாங்கின கையாகிற எம்பெருமானாருடைய கையே தஞ்சம்‌ என்ற கருத்து விளங்குகிறது.

ஆளவந்தாரின்‌ சிஷ்யர்களாகவும்‌ எம்‌பெருமானாரின்‌ ஆச்சாரியாராகவும்‌ விளங்கியவர்‌ பெரியநம்பி தொடங்கி, திருக்கோட்டியூர்‌ நம்பி, திருமாலையாண்டான்‌ பெரிய
திருமலை நம்பி திருவரங்கப்‌ பெருமாளரையார்‌, திருக்கச்சி நம்பி,
மாறனேரி நம்பி முதலிய எழுவர்களில்‌, முன்னர்‌ கூறிய ஐவரே உடையவரது ஆச்சாரியார்களாகவும்‌ விளங்கினார்கள்‌. இவர்‌ பெரியநம்பி திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த போதே ஸ்வரூப சித்தி உண்டாகியிருக்க, இவர்‌ ஏன்‌ பலர்‌ திருவடிகளிலும்‌ விழுந்து உபதேசம்‌ கேட்க வேண்டும்‌-ஆளவந்தார் தம்‌ திருவருள்‌ செல்வத்தை அவர் தம்‌ சிஷ்யர்கள்‌ பலர்‌ மூலமாகத்‌ தனது ஆத்ம புத்திரரான இராமானுசரிடம்‌ ஒப்படைக்கச்‌ சொன்னது; ஒரு அரசன்‌ தன்‌ அரசச் செல்வத்தை பல அமைச்சர்களிடத்தே பகிர்ந்து கொடுத்துப்‌
பின்‌ அரச குமாரர்‌ அவற்றை நிர்ஹிக்கும்‌ பொறுப்புக்கு வந்தவுடன்‌ அந்த ஐஸ்வர்யத்தை அரச குமாரனிடம்‌ ஒப்படைக்கச்‌ சொன்னதாப்‌ போலாகும்‌; ஆளவந்தாரும்‌ இவர்களிடத்தில்‌ ஒவ்வொரு அர்த்த விசேஷத்தை உபதேஸித்து வைத்து எம்பெருமானார்‌ ஆளவந்‌தாரிடம்‌ நேரில்‌ உபதேசம்‌ பெற முடியாத இழவைத்‌ தீர்த்தார்‌ என்று கொள்ள வேண்டும்‌. இவ்வாசார்யர்களுக்கு முன்னரே, ஆளவந்தார்‌ -முதன்முதலாக இராமானுசரைக்‌ கண்டவுடனேயே ‘ஆம் முதல்வன்‌ இவன்‌’ என்று கடாட்சித்து (கிருபை செய்து) நாம்‌ உங்களுக்குச்‌ சொல்லும்‌ பரம ரகஸ்யத்தை இளையாழ்வாருக்குச்‌ சொல்லுங்கள்‌என்று நியமித்த படியால்‌ சிஷ்யனாக வேணும்‌ ஆச்சார்யனாகவேணும்‌ ௮வரது இலட்சண சம்பந்தம்‌ வேண்டும்‌ என்று தாமாகவே இராமானுசரோடு தொடர்பை பெற்றுக் கொண்டார்கள்‌. ஆகவே முன்புள்ள ஆச்சாரியர்கள்‌ இவருக்கு ஆச்சாரியர்களாகத்‌ திகழ்ந்து
பெருமை பெற்றார்கள்‌. பின்புள்ளவர்கள்‌ இவரது சீடராகத்‌ தோன்றி பெருமை பெற்றார்கள்‌. ஒரு மாலையின்‌ நடுவிலே பதிக்கப் பெற்ற மாணிக்கப் பதக்கம்‌ போலே இருந்து அந்த மாலையை அழகு படுத்துமாப் போலே, இராமானுச முனியாய்‌ விளங்கி பரப்பிரஹ்மம்‌ ஸ்ரீமந் நாராயணனே என்று அறுதி யிட்டுத்‌ தர்ஸனப்‌ பிரவர்த்தனம்‌ பண்ணிக் கொண்டு வந்தார்‌ இராமானுஜர்‌.-மஹோப நிஷத்தில்‌ ஆரம்பத்தில்‌ நாராயணன்‌ ஒருவன்‌ முதலில்‌ இருந்தான்‌. பிரளய காலத்தில்‌ லீலா விபூதிகள்‌ அழிந்து கிடந்த போது இவன்‌ ஒருவனாயிருந்து இன்புறவில்லை. ௮சத்‌தாய்க்‌ கிடந்த பக்த சேதனரைக் கண்டு அவர்கள்‌ உய்யும்‌ வழியாக உலகைப் படைத்து இச் சேதனர்களுக்கு சரீர இந்திரியங்களைக்‌ கொடுத்து, அஞ்ஞான இருளைப் போக்கும்‌ சாஸ்திரத்தைக்‌ கொடுத்‌தும்‌ அவர்கள்‌ இருந்தமையாலே, தானே பலவிதமான அவதாரங்‌களை எடுத்தும்‌, ஆழ்வார்களையும்‌ ஆச்சாரியர்களையும்‌ அவதரிக்‌கச்‌ செய்யத்‌ திருஉள்ளங் கொண்டான்‌ ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்‌.-உயிர்களாகிய பயிர்களைச்‌ செழிப்பிக்க வேண்டித்‌ தண்ணீர்ப்‌ பிரவாகத்தைப்‌ பருகும்‌ காளமேகமாக ஆழ்வாராதிகளையும்‌ அந்நீரைத்‌ தாங்கும்‌ மலையாக நாதமுனிகளையும்‌, அம்மலையில்‌ இருந்து விழும்‌ அருவிகளாக உய்யக் கொண்டார்‌, மணக்கால்‌ நம்பிகளையும்‌, அவ்வருவி நீர்‌ பெருகும்‌ ஆறாக ஆளவந்தாரையும்‌ அவ்வாற்றிலிருந்து வெட்டப்பட்ட கால் வாய்களாக, பெரிய நம்பி, முதலான ஆச்சாரியர்களையும்‌ அவதரிக்கச்‌ செய்தான்‌. எம்பெருமானான ஸர்வேஸ்வரன்‌, பெரிய நம்பி தொடங்கிய வாய்க்கால்களின்‌ மூலம்‌, அந்நீர்‌ தேங்கும்‌ பெரிய ஏரியாக விளங்கினார்‌ இராமானுஜர்‌. ௮வ்வேரியிலிருந்து உயிர்களாகிய பயிர்களுக்கு நீரைப் பாய்ச்‌சும்‌ மதகுகளாக எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளையும்‌ அவதரிப்பித்தார்‌ என்பது எம்பெருமானாரது பாதுகையான எம்பார்‌ கருத்து. இதுவரை எம்பெருமானார்‌ வரை வந்துள்ள வைணவ தரீசனத்தைச்‌ சுருக்கமாகக்‌ கண்டோம்‌. இனி எம்பெருமானார்‌ தொடக்கமாகக்‌ காண உள்ளோம்‌.

ஆளவந்தாரது பிரதம சீடர்களில்‌, ஒருவரான பெரிய திருமலை நம்பியிடம்‌, ஆளவந்தார்‌ தனக்குப் பின்‌ இந்த வைஷ்ணவ தர்சனத்‌தைத்‌ திறம்பட நடத்தக்கூடிய ஆச்சாரியரைக்‌ கண்டு பிடித்து அவரிடம்‌ தர்ஸன்‌ நிர்வாகத்தை ஒப்புவிக்க வேண்டும்‌ என்று கட்டளை
யிட்டிருந்நதையே குறிக்கோளாகக்‌ கொண்டு திருமலையில்‌ வாழ்ந்து வருவாரானார்‌. தம்முடைய இரு சகோதரிகளுக்கும்‌ தகுந்த வரன்களைத் தேடி மூத்தவளான பூதேவியை, ஸ்ரீ பெரும்பூதூரில்‌ வாழ்ந்து வரும்‌ ஸ்ரீ வைஷ்ணவரான கேசவ சோமயாஜி என்பவருக்கு மணமுடித்துக்‌ கொடுத்தார்‌. அவர்களுக்குப்‌ பிறந்த பிள்‌ளையே இராமானுஜராகும்‌. உலகிற்கே மங்களமளிக்கும்‌ பிங்கள வருஷத்தில்‌ வியாழக் கிழமை யன்று சிம்ம லக்கனத்தில்‌, மறைமுடிகளின்‌ முடிவை நிலநாட்டுவதற்காகவும்‌, வேதத்திற்குப்‌ புறம்பான செய்திகளைச் சொல்லும்‌ மதங்கள்‌ அழிவதற்காகவும்‌ ஒளி மிகுந்த ஒரு மகா புருஷராய்‌ அவதரித்தார்‌ ஸ்ரீ இராமானுஜர்‌. செய்தி அறிந்த திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூருக்கு விரைந்து வந்து அற்புதமான மருமகனை ஆசீர்வதித்து குழந்தையின்‌ ரட்சையின்‌ பொருட்டு பஞ்சாயுதங்கள்‌ கொண்ட ஐம்படைத் தாலியை அணிவித்து இளையாழ்வார்‌ என்ற திருநாமமும்‌ சூட்டினார்‌.-இளையாழ்வாரும்‌ உரிய காலத்தில்‌ அன்னப் பிரசானம்‌ உபநயனம்‌ முதலான கிரியைகள்‌ எல்லாம்‌ செய்யப் பெற்று வேதத்தையும்‌ கற்றுத் தேர்ந்து, சகல கலைகளும்‌ கற்றுணர்ந்த பண்டிதராக விளங்கினார்‌. உரிய காலத்தில்‌ தஞ்சமாம்பாள்‌ என்ற பெண்ணையும்‌ திருமணம்‌ செய்து கொண்டு, காஞ்சியில்‌ வரதராஜப்‌ பெருமாளுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்து வருகிற நாளில்‌, திருப்புட்குழி என்ற இடத்தில்‌ யாதவப் பிரகாசன்‌ என்ற ஒரு அத்வைதிப் பிராமணர்‌ வேதாந்தம்‌ போதிக்கிறார்‌ என்று கேள்விப்பட்டு, அவரிடம்‌ மாணாக்கனாக இருந்து வேதாப்யாசம்‌ செய்து வரும்பொழுது, ஒரு நாள்‌ யாதவர்‌,ஸர்வம்‌ கல்விதம்‌ பிரஹ்ம (இவ்வுலகனைத்தும்‌ பிரம்மமே) எனும்‌ வேதவாக்கியத்திற்கு அவப் பொருளை உரைத்ததைக்‌ கேட்ட இளையாழ்வார்‌, உண்மைப்‌ பொருளைக் கூறி வேதார்த்த சாரத்தை அவருக்கு அறிவுறுத்தினார்‌.-இச் சம்பவத்தைத்‌ திருவரங்கத்தில்‌ ஆளவந்தார்‌ கேள்விப்‌ பட்டு, இராமானுஜரைக்‌ காண வேண்டித் தன்‌ சிஷ்யர்களோடு காஞ்சிக்கு வந்து பேரருளாளரையும்‌ பெருந் தேவித்‌ தாயாரையும்‌ வணங்கிப்‌ பின்‌ கோயிலில்‌ சிஷ்யர்களால்‌ சூழப்பட்ட யாதவரையும்‌, அவர்களிடையே ஒளிவீசும்‌ முகமுடைய இளையாழ்வாரையும்‌ கண்டார்‌. இந்த யாதவர்‌ இராமானுஜருக்குச்‌ சிஷ்யராகவே இருக்கத் தக்கவர்‌ என்று எண்ணினார்‌ ஆளவந்தார்‌. ஸ்ரீ வைஷ்ணவர்‌கள்‌ பல்கிப்‌ பெருகுவதற்கு இளையாழ்வாரைக்‌ காத்தருள்வீர்‌ என்று பெருமாளை வேண்டிக் கொண்டு, அவரிடம்‌ இப்பொழுது
பேசினால்‌ அவரது வேதபாடம்‌ தடைப்படும்‌. இவரே வைஷ்ணவ தர்சனத்தை விளங்க வைக்கும்‌. ஆம்‌ முதல்வன்‌ என்று தீர்மானித்து, அவரிடம்‌ பேசாமலேயே ஸ்ரீரங்கத்திற்குத்‌ திரும்பிவிட்டார்‌. இளையாழ்வாரும்‌ யாதவரிடம்‌ பாடம்‌ படித்து வரும்‌ நிலையில்‌ அந்‌ நாட்டு அரசனுடைய புத்திரி பிசாசத்தால்‌ பீடிக்கப்பட்டு, எவர்‌ செய்யும்‌ மந்திரத்திற்கும்‌ கட்டுப்படாதிருக்கவே, அரசன்‌ யாதவருடைய மந்திரத்திற்குக்‌ கட்டுப்படும்‌ என்று நினைத்து யாதவரை அரண்னைக்கு வரவழைத்தான்‌. தன்‌ அந்தரங்க சிஷ்யர்களோடு சென்ற யாதவரைக்‌ கண்டு சிரித்து அவரை அவமானப்படுத்திய பிரம்மராட்சசன்‌ இளையாழ்‌வாரைச்‌ சரணடைந்து அரசனது புதல்வியையும்‌ தன்‌ பாபத்தையும்‌
ஒருங்கே விட்டது. அதி அற்புதமான இந்த நிகழ்ச்சியைக்‌ கண்ட அரசன்‌ இளையாழ்வாரைச்‌ சிலாகித்துப்‌ பரிசளித்தான்‌. அவரும்‌ அதைக்‌ குருயாதவரிடம்‌ அடக்கத்தோடு சமர்ப்பித்தார்‌.-இந்நிகழ்ச்சியால்‌ இளையாழ்வாரிடம்‌ பொறாமை கொண்ட யாதவர்‌ அவரது கருத்தைப்‌ பரீட்சிக்கும்‌ நோக்கோடு வேதாந்த பாடங்களைப்‌ போதித்து வந்தார்‌. பின்னர்‌ ஒருநாள்‌ இளையாழ்வார்‌ யாதவருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ‘கப்யாசம்‌ புண்டரீகம்‌’ என்று பரமாத்மாவின்‌ திருக் கண்களை வர்ணிக்கும்‌ ஸ்லோகத்துக்கும்‌ அவப் பொருள்‌ கூறுவதைக் கேட்டு இளையாழ்‌வார்‌ துன்பக் கண்ணீர்‌ உருக்க அது யாதவரின்‌ தொடையைச்‌ சுட்டது. யாதவர்‌ சோகத்துக்குக்‌ காரணம்‌ கேட்க, ஆழமான நீரில்‌ முளைத்த தாமரை போன்ற கண்களை உடையவன்‌ என்று பொருள்‌ இருக்க குரங்கின்‌ ஆசனவாய்‌ என்று தாழ்ந்த திருஷ்டாந்தம்‌ சொன்னதாலே வருந்திக் கண்ணீர்‌ வடித்தேன்‌ என்று சொல்லவே, ஆத்திரமடைந்த யாதவர்‌ இனி இங்கே படிக்க வர வேண்டாம்‌ என்றார்‌. இராமானுஜரும்‌ குருவிடம்‌ மன்னிப்புக்‌ கோரினார்‌.

இதனாலெல்லாம்‌ கோபமடைந்த யாதவர்‌ இளையாழ்வாரை,ஒழித்துக் கட்ட வேண்டும்‌ என்று தீர்மானித்தவராய்‌, இளையாழ்வாரையும்‌ கூட்டிக் கொண்டு கங்கா ஸ்நானத்தின்‌ பொருட்டுக்‌ காசியாத்திரை செய்யும்‌ வியாஜ்யத்தோடு அவரைக்‌ கொலை செய்யப்‌ புறப்பட்டார்‌. நல்லொழுக்கமுடையவரான இளையாழ்வாரோடு கூடப் படித்த நண்பரும்‌, அவருடைய சிறிய தாயாரின்‌ பிள்ளையுமான கோவிந்த பட்டர்‌, யாதவரது கெட்ட எண்ணத்தை நடுக்காட்‌டில்‌ அந்தரங்கமாக இளையாழ்வாருக்கு அறிவித்து, அவரை நிறுத்தித் தான்‌ மட்டும்‌ காசி யாத்தரை செல்லும்‌ யாதவரோடு தொடர்ந்து சென்றார்‌-நடு இரவிலே நடுக்காட்டிலே அகப்பட்ட இளையாழ்வார்‌ மிக வருந்திய நெஞ்சினராய்‌, பெருந்தேவியோடு விளங்கும்‌ பேரருளாளரைச்‌ சரண்‌ புகுந்தார்‌. கடவுட்‌ தம்பதியரிருவரும்‌ வேட வுருவோடு வந்து அவருக்கு ஆறுதல்‌ சொல்லி, காஞ்சியை எளிதில்‌ அடையலாம்‌ என்று முன்னே வழிகாட்டிச் சென்று, இளையாழ்வாரிடம்‌ வேண்டிப்பெற்ற சாலைக்கிணற்று நீரைத்‌ தம்‌ தேவியோடு கூடப்பருகி மறைந்தனர்‌. விடியற்காலை வேளையில்‌ அத்திகிரியின்‌ புண்யகோடி விமானம்‌ அருகில்‌ தெரிவதைக் கண்டு நீர்‌ பருகியவர்கள்‌ பேரருளாளனும்‌ பெருந்தேவித்தாயாருமே என அறுதியிட்ட இளயாழ்வார்‌ பேரானந்தமும்‌, பேராச்சரியமும்‌ அடைந்தார்‌. அன்றிலிருந்து அவ் வரதன்‌ விரும்பிப் பருகிய சாலைக்‌ கிணற்று நீரைத்‌ தினந்தோறும்‌ தாமே சுமந்து சென்று அபிஷேகத்‌துக்கு அளித்து மகழ்ந்தார்‌. யாதவரின்‌ மந்திர சக்திக்கு வசப்பட்ட கோவிந்தரும்‌ கங்கையில்‌ நீராடும் பொழுது தமது உள்ளங்கையில்‌ சிவ லிங்கத்தைப்‌ பெற்றவராய்‌, தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச்‌ சென்று அந்த லிங்கத்தை அங்குள்ள கோயிலில்‌ பிரதிஷ்டை செய்து, காளஹஸ்‌திக்குச்‌ சென்று அங்குள்ள சிவாலய கார்யங்களை மேற் பார்வை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி கோயில்‌ பூசை செய்து கொண்டு வாழ்ந்து வருவாராயினார்‌.காஞ்சி திரும்பிய யாதவரும்‌ அங்கு இளையாழ்வாரைக்‌ கண்டு வியந்து விருத்தாந்தங்களைக்‌ கேட்டு அவரை அழைத்து மயக்கத்‌ திரும்பவும்‌ தம்‌ சிஷ்யர்களோடு சேர்த்துப் பாடம்‌ சொல்லி வந்தார்‌. திரும்பவும்‌ யாதவர்‌ உபநிஷத்‌ வாக்கியத்திற்கு அவப் பொருள்‌ சொல்லவே, அந்த வாக்கியம்‌ சகல கல்யாண குணங்களும்‌ பொருந்திய பிரஹ்மத்தையே சொல்கிறது என்று சரியான பொருளைச்‌ சொல்லி அவருக்கு அறிவுறுத்தி யாதவரிடம்‌ படிப்பதை அடியோடு கைவிட்டார்‌ இளையாழ்வார்‌.யாதவரிடமிருந்து விடுபட்டு இளையாழ்வர்‌, வரதரது சேவையிலேயே இருக்கிறார்‌ என்று கேள்விப்பட்ட ஆளவந்தார்‌, அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு தமது சிஷ்யரான பெரிய நம்‌பியை அனுப்பினார்‌. காஞ்சிக்குச்‌ சென்று பெரிய நம்பியும்‌ ஆளவந்தார்‌ அருளிய ‘ஸ்தோத்திர ரத்னத்தை’ அனுசந்தித்து, இளையாழ்வாரை உகப்பித்து, அவரால்‌ அபிமானிக்கப்பட்டுத்‌ தாமும்‌ உகந்தார்‌. பெரிய நம்பியோடு கூடிய இளையாழ்வாரும்‌ ஆளவந்தாரை சேவிப்பதற்கு ஸ்ரீரங்கம்‌ நோக்கிச்‌ செல்லும்பொழுது வட திருக்காவிரியில்‌ மிகுதியான வைணவர்‌ திருக்கூட்டத்தைக்‌ கண்‌டார்‌. ஆளவந்தார்‌ திருக்குமாரரான திருவரங்கப்பெருமாளரையர்‌ முதலான அந்த வைணவர்கள்‌ ஆளவந்தார்‌ பரமபதமடைந்ததை விண்ணப்பிக்கக்‌ கேட்ட இளையாழ்வார்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தினார்‌. ஒருவாறு ஆறுதலடைந்தவராய்‌ அவரது திருமேனியைத்‌ தரிசிக்கும் பொழுது அவரது இடது கையில்‌ மூன்று விரல்கள்‌ மடங்கி யிருப்பதைக்‌ கண்டார்‌.திருவிரல்கள்‌ மடங்கியிருப்பதற்குக்‌ காரணமான ஆளவந்தாருடைய மூன்று மனக் குறைகளைப்‌ பற்றிக் கேள்விப்பட்ட இளையாழ்வார்‌ அவருடைய மனக் குறையைத்‌ தீர்ப்பதற்காக 1) வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்திற்கு பாஷ்யமெழுதி விவரிப்பேன்‌. 2) அவருடைய தகப்பனாரான பராசர மகரிஷி பெயரையும்‌, நம்மாழ்வார்‌ பெயரையும்‌ இருவருக்கு இடுவதன்‌ மூலம்‌ அவர்களுக்கு நன்றி செலுத்துவேன்‌ என்று சபதம்‌ செய்து அவரது திருவடிகளை வணங்கினார்‌. ௮க் கணத்தலேயே ஆளவந்தாரது மூன்று விரல்களும்‌ முன் போல்‌ நிமிர்ந்தன. அதைக் கண்ட அனைவரும்‌ இவரே வைதீக சிந்தாந்தத்தை நிலை நிறுத்துபவர்களுக்குத்‌ தலைவராவார்‌ என்பது உறுதி என்று நிச்சயித்தார்கள்‌.ஆளவந்தாரை உயிரோடு சேவிக்காத மனக் குறையாலே, அரங்‌க நகரப்பனை சேவிக்காமலேயே காஞ்சிக்குத்‌ திரும்பின இளையாழ்வார்‌ முன்போல்‌ கோயில்‌ கைங்கர்யங்களைச்‌ செய்து கொண்டு வந்தார்‌, ஒரு சமயம்‌ தான்‌ இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திததார்‌. காஞ்சியில்‌ வாழ்பவராய்‌ பரம வைஷ்ணவராய்‌ வரதனுக்கு அந்தரங்கராய்‌ அவருக்குத்‌ திருஆலவட்டக்‌ கைங்கர்யம்‌ செய்து வரும்‌ திருக்கச்சி நம்பிடம்‌ மிகவும்‌ பணிவுடன்‌ ‘நம்பியே நான்‌ நெஞ்சில்‌ கொண்டுள்ள அர்த்தங்களைத்‌ (கருத்துக்களை) தேவப் பெருமாளிடமிருந்து அறிந்து அவை பெருமாள்‌ உகந்தவை தாமா என்பதை எனக்குச்‌ சொல்லுவீர்‌ என்று பிரார்த்தித்தார்‌. அவை என்ன என்பதையும்‌ அதன்‌ தத்வார்த்தத்தையும்‌,திருக்கச்சிநம்பி வைபவத்திலேயே கண்டோம்‌.-இளையாழ்வாரும்‌ பெரிய நம்பியை ஆச்சாரியராகக்‌ கொள்வதற்காக, ஸ்ரீரங்கத்துற்குச்‌ செல்கின்றவர்‌. வழியில்‌ மதுராந்தகத்தில்‌ ஸீதையோடு கூடிய ஏரிகாத்த ராமனைச்‌ சேவித்திருக்கையிலே, ஆளவந்தாரின்‌ மற்ற சிஷ்யர்களால்‌ இளையாழ்வாரை ஆட்கொள்ளும்‌படி நியமிக்கப்பட்டு, மதுராந்ததத்தை அடைந்திருந்த பெரிய நம்பியையும்‌ அங்கேயே தெய்வச்‌ செயலால்‌ சந்தித்து அவருடைய இணையடி வணங்கி, தங்களுக்கு ஏற்பட்ட நியமனத்தை விசாரித்து அறிந்த பின்‌, அந்த மதுராந்தகம்‌ கோயில்‌ மகிழ மரத்தடியிலேயே பெரிய நம்பியை இளையாழ்வார்‌ ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்‌. சங்கசக்கர லாஞ்சனம் ஊர்த்வ புண்டர தாரணம்‌ (12 திரு நாமங்கள்‌ அணிதல்‌)தாஸ்ய நாமம்‌. யாக ஸம்ஸ்காரம்‌, மந்திர ரத்னமாகிய த்வயம்‌ திரு அஷ்டாட்சரம்‌ என்னும்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களைப்‌ பெரிய நம்பி இளையாழ்வாருக்குச்‌ செய்தருளினார்‌. இராமானுச முனி என்று அவருக்குத்‌ தாஸ்ய நாமம்‌ வழங்கப்பட்டது. பின்னர்‌ அவ்விடத்திலிருந்து இராமானுஜரும்‌ ஆசார்ய பெரிய நம்பியும்‌ காஞ்சியை அடைந்து வரத ராஜரை வணங்கிய பின்‌ இராமானுஜருடைய இருப்பிடத்தை அடைந்தனர்‌. மிக வுகந்த பெரியநம்பி பிரபந்தத்தில்‌ (திராவிட வேத சாரம்‌) முதல்‌ இரண்டாயிரமும்‌, வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்தின்‌ பொருளையும்‌ ராமானுஜருக்கு உபதேசித்தார்‌. மனைவியோடு வந்துள்ள அவரை இராமானுசரும்‌ அவருக்கு வேண்டிய கைங்கர்யங்களைச்‌ செய்து ஆராதித்து வந்தார்‌. பின்னர்‌ ஒரு நாள்‌ இராமானுஜர்‌ இல்லாத நேரத்தில்‌ அவரது தேவிக்கும்‌ பெரிய நம்பி தேவிக்கும்‌ மன கிலேசம்‌ உண்டாகவே, இராமானுசர்‌ திரும்பி வரு முன்‌ மனைவியை அழைத்துக்‌ கொண்டு ஸ்ரீரங்கம்‌ சென்று விட்டார்‌ பெரியநம்பி. விபரமறிந்த இராமானுஜர்‌ மனைவியைக்‌ கோபித்துத்‌ தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு துறவறம்‌ மேற் கொண்டார்‌.-பேரருளாளப்‌ பெருமான்‌ சன்னிதியில்‌ தேவப் பெருமாள்‌ அவருக்கு எதிராஜர்‌ என்ற தாஸ்ய நாமத்தை அளித்து அவரது துறவறத்தை ஏற்றுக் கொண்டார்‌. அதற்‌குப்பின்‌ எதிகட்கிறைவனான இராமானுஜர்‌ திரி தண்டத்தை உடையவராய்‌ சிகை, யஞ்ஞோபவீதம்‌, காஷாயம்‌ ஆகியவற்றோடுகூடியவராய்‌, மந்திர ரத்னமான த்வயத்தை அனுசந்திப்பவராய்‌ வர்ணாஸ்ரம தர்மப்படி நடப்பவராக வாழ்ந்து வருவாராயினார்‌,

அக்காஞ்சியிலேயே கூரத்தாழ்வானும்‌ ராமானுஜருடைய மருமக்களான வாத்ஸ்ய குலத்‌ தலைவரான நடதூராழ்வானும்‌ வாதூல குலத்‌ தலைவரான முதலியாண்டானும்‌ இராமானுஐரை ஆஸ்ரயித்‌தனர்‌. ராமானுஜரான எதிராஜர்‌ அவர்களுக்குப்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்‌கள்‌ செய்வித்தார்‌. ஆளவந்தாரது அருள் நோக்கால்‌ சுத்தி யடைந்த யாதவப்‌ பிரகாசரும்‌, எதிராஜர்‌ சிஷ்யராகி கோவிந்த ஜீயர்‌ என்ற தாஸ்ய நாமம்‌ பெற்று, எதிராஜர்‌ பணித்த வண்ணம்‌ சந்யாசிகளின்‌ தர்மத்தை விளக்கும்‌ ‘யதி தர்ம சமுச்சயம்‌* என்ற நூலை இயற்றினார்‌. அதில்‌ 1) ஸந்யாச விதி, 2) ஸந்யாசம்‌ செய்து கொள்ள வேண்டிய காலம்‌, 3) ஸந்யாசியின்‌ சரீரத்திலுள்ள சிகை முதலிய அடையாளங்களும்‌ சரீரத்திற்கு வெளியிலுள்ள தண்டம்‌ முதலிய அடையாளங்களும்‌, 4) ஸந்யாச ஸ்வீகார க்ரமம்‌, 5) ஸந்யாசி முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டிய யோகாப்யாசம்‌ முதலியவை,6) ஸந்யாசி இரவும்‌ பகலும்‌ செய்ய வேண்டிய கிரியைகள்‌,7) ஸந்யாசிக்குரிய சமம்‌, தமம்‌ முதலான ஒழுக்கம்‌, 8) யதிகளுக்குரிய சாதுர் மாஸ்ய விரதம்‌ முதலியவை, 9) ஸந்யாசி ஒரிடத்தில்‌ இருக்கைக்கும்‌ ஸஞ்சரிக்கைக்கும்‌ உரிய தேச காலங்கள்‌, 10) ஸந்‌யாசிக்கு ௮க்ருத்ய கரணமும்‌, க்ருத்யா கரணமும்‌ நேரிட்டால்‌ செய்ய வேண்டிய பிராயச்‌ சித்தங்கள்‌, 11) ஸந்யாசி சரீர விவேகத்‌திற்குப்பின்‌ செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்கள்‌ என்ற பதினோரு பாவங்களும்‌ விளக்கப்பட்டுள்ளன.-கோபிகள்‌ காமத்தினாலும்‌, கம்ஸன்‌ அச்சத்தினாலும்‌, சிசுபாலன்‌ துவேஷத்தினாலும்‌ வருஷிணி குலத்திலுள்ளவர்கள்‌ ஸம்பந்‌தத்தினாலும்‌ பாண்டவர்கள்‌ ஸ்நேகத்தினாலும்‌ நாங்கள்‌ பக்தயினாலும்‌ புனிதமடைந்தோம்‌ என்றபடி இராமானுஜருக்குப்‌ பண்ண எண்ணிய துவேஷமே. இறுதியில்‌ அவருக்கு உஜ்ஜிவிதமான நல் வழியைக் காட்டியது. ஒரு சமயம்‌ ஆளவந்தாரது முதல்‌ குமாரரான திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ காஞ்சிக்கு சென்று வரதனை வணங்கி அவரிடமிருந்து ராமானுஜரை வரமாகப்‌ பெற்று அழைத்‌துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குப்‌ புறப்பட்டார்‌. அவர்களுடன்‌ கூரத்‌தாழ்வான்‌ முதலியாண்டான்‌ போன்ற அந்தரங்க சிஷ்யர்களும்‌, உடன்‌ வந்தனர்‌, மதுராந்தகப் பெருமாளை வணங்கிய பின்‌ ஸ்ரீரங்கம்‌ வரும்பொழுது பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனது ஆக்ஞை (கட்‌டளை)ப்படியே அவரை எதிர் கொண்டழைக்க பெரிய நம்பி முதலான கோஷ்டிகள்‌ வந்து கோயில்‌ மரியாதைகளைச்‌ செலுத்தி அபிமானம்‌ செய்யப்பட்டவராய்‌ பெரிய பெருமாளையும்‌ பெரிய பிராட்டியாரையும்‌, பரிவாரத் தேவதைகளையும்‌ வணங்கி ஸ்ரீரங்க ஸ்ரீகார்ய நிர்வாஹத்திற்குத்‌ தலைவரானார்‌.

பெரிய பெருமாளும்‌ இராமானுஜரைத்‌ தம்‌ தாமரைக்‌ கண்களால்‌ குவிர நோக்கி ஜோதி வாய் திறந்து ‘பொங்கோதஞ்‌ சூழ்ந்த புவனியும்‌ விண்ணுலகும்‌” என்ற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும்‌ எமது கோயில்‌ நிர்வாஹத்தையும்‌ உமக்கும்‌ உம்முடையார்க்கும்‌ தந்தோம்‌. நம்‌ வீட்டின்‌ கார்யத்தை யெல்லாம்‌ ஆராய்ந்து நடத்தும்‌ என்று திருவாய் மலர்ந்து அருளி உடையவரென்ற தாஸ்ய நாமத்தையும்‌ வழங்கித்‌ திரு விக்ரமன்‌ வீதியில்‌ வடக்கு மாடத் திருவீதியில்‌ கீழ்க்கண்டத்தில்‌ முதல்‌ மனையான சேரன்‌ மடத்திலே உடையவரை வாழப் பண்ணிலனார்‌. அங்கு வாழ ஆரம்பித்த காலத்திலிருந்து சுமார்‌ அறுபத்தைந்து ஆண்டுகளாக திருவரங்கன்‌ செல்வம்‌ முற்றும்‌ திருத்தி வைத்த வரலாற்றைக்‌ காண்போம் ஆழ்வானை தர்ஸன நிர்வாஹத்துக்குத்‌ தமக்கு உதவியாக நியமித்து முதலியாண்டானை உள் துறைக்‌ கைங்கர்யத்திலே நியமித்தார்‌. தாம்‌ திருக்கொட்டார வாசலுக்குத்‌ தென் புறத்தில்‌ உமிக்‌கட்டில்‌ குறட்டிலே யிருந்து திருவிடையாட்டப்‌ பிரபாவமும்‌, மேல்‌ முகம்‌ கீழ்முகங்களான திருத்தோப்புகளில்‌ விசேஷங்களும்‌ திருக்‌கொட்டாரத்தில்‌ மரியாதைகளும்‌ அறிவறியாக விசாரித்து, படித்தனம்‌ முதலானதுகளும்‌ திட்டம்‌ பண்ணி நாள் தோறும்‌ கணக்குகளைப்‌ பெருமாளிடம்‌ பெருமாள்‌ பெரிய அவசரம்‌ செய்தருளிய பின்பு, ஏகாந்தமாக ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்து ஸ்ரீ கார்யம்‌ விசாரித்து ஒழுங்கு படுத்தினார்‌. இவரது கண்டிப்பை விரும்பாத விஷமிகள்‌ உபாதைகளை உண்டாக்கியதையும்‌ பொருட்படுத்தாமல்‌, அகளங்க நாட்டாழ்வான்‌ சமர்த்தராகையாலே திருவிடையாட்‌டம்‌ விசாரிக்கன்ற பணியை அளித்து ஆலிநாடன்‌ திருவீதியில்‌ பெரிய திருமண்டபத்தின்‌ குறட்டின்‌ மேலே மண்டபங்‌ கட்டுவித்‌தார்‌.-ஒருநாள்‌ ஆண்டான்‌ ததீயாநத்தோடு நாவல்பழம்‌ அழுது செய்ததினால்‌, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ முகம்‌ வாடியிருப்பதைக்‌ கண்டு ஆண்டானைக்‌ கோபித்து, கருடவாகன பண்டிதரைக்‌ கொண்டு பெருமாளுக்குச்‌ சிகிச்சை அளித்துத்‌ தன்வந்திரியைப்‌ பிரதிஷ்டை செய்து அந்தக் கோயில்‌ கார்யத்தைக்‌ கவனிக்க கருட வாஹன பண்டிதருக்குக்‌ கட்டளையிட்டு தினமும்‌ இரவில்‌ திருக்‌காப்புச்‌ சேர்க்கறதிற்கு முன்பாக குடிநீர்‌ பாலமுது செய்தருளும்படி திட்டம்‌ பண்ணித்‌ திருவரங்கத் திருப்பதி வைகாநஸமாயிருக்கலாகாது என்று முன் போல பாஞ்சராத்திரமாக மாற்றி ஏகாயநருக்கு ஐந்து பேருக்கு தீக்ஷை சாதித்து பாகவத நம்பியார்‌ என்ற பெயரும்‌ வளங்கி, தோதவத்தித்‌ தூய மறையோரான (வெள்ளை வஸ்திரம்‌ தரிப்பவர்‌) கொடுவாளெடுப்பார்‌ கையிலே பூட்டும்‌ திறவு கோலும்‌, தளையிடுவார்‌ முத்திரையான கருடமுத்திரையும்‌ சாதித்து ஆரியபட்டான்‌ காவலும்‌, பல்லவன்‌ விருப்பரையன்‌ கணக்குமாக நடந்து வர ஏற்பாடு செய்தார்‌.ஸ்தலத்தார்‌ அனுமானித்த படியே வேளாளனான விழுப்பரையனுக்கு கோயில்‌ கணக்கனுக்குள்ள சடகோப தாஸன்‌ என்ற தாஸ்ய நாமத்தை வழங்கி, ஸ்தல சம்பிரதி என்ற பெயரையும்‌ நாட்டி, அவரவர்களுக்குக்‌ கைங்கர்யங்களும்‌ நிர்ணயம்‌ பண்ணி முன்னர்‌ கொடுவனர்‌, கொடவர்‌, கொடு வாளைடுப்பார்‌, பாடுவார்‌, தளையிடுவார்‌ என்று ஐந்து கொத்திலே பரிஜனங்கள்‌ அடங்கி நடந்து வந்ததைப்‌ பத்துக் கொத்தாகப்‌ பெருக்கி நடத்த வழி வகுத்தார்‌.-அவை யாவன முதல்‌ கொத்தாக திருப்பதியார்‌ என்பவர்‌ முன்னால்‌ கோயில்‌ சம்பந்தமற்றுத்‌ தன்னுடைய திருவடிகளை ஆஸ்ரயித்த திவ்ய தேசத்து வாசிகளாவார்‌. திருப்பாற்கடல்‌ தாஸர்‌, திருக்குருகைப் பிரான்‌ போன்றவர்களுக்குக்‌ கைங்கர்யம்‌ நிர்ணயித்தார்‌.-இரண்டாம்‌ கொத்தாக கொடவரில்‌ திருத்தாழ்வரை தாஸர்‌ வம்சரான அஞ்சு திருநாமத்துக்கு, திருக்குருகூர்‌ தாஸர்‌, நாலு கவிப்‌ பெருமாள்‌ தாஸர்‌, ஸடகோபதாஸர்‌. திருக்கலிகன்றி தாஸர்‌, ராமானுஜ தாஸர்‌ என்ற திருநாமம்‌ சாதித்து அவர்களுக்குக்‌ கோயில்‌ கைங்கர்யங்களையும்‌ நிர்ணயம்‌ பண்ணி திருப்பணி கொள்வார்‌ என்று குறிப்பிட்டார்‌. மூன்றாம்‌ கொத்தாக பாகவத நம்பிமாரை பிரதிஷ்டிப்பித்து அவர்களுக்குக்‌ கைங்கர்ய மரியாதை செய்வித்‌தார்‌, நான்காவதாக கொடுவாளெடுப்பாரில்‌, பெரியபெருமாள்‌ திருவரங்கமாளிகையார்‌ போன்றோருக்கு ஆஸ்ரயணாதிகளைப்‌ பண்ணுவித்து உள்ளூரார்‌ என்று பெயரிட்டார்‌.அடுத்துப்‌ பாடுவாரான நாதமுனி அரையர்களுக்கும்‌ ஆஸ்ரயணாதிகளைச்‌ சாதித்து கைங்கர்யங்களையும்‌ நிர்ணயித்து விண்ணப்‌பஞ்‌ செய்வார்‌ என்று குறிப்பிட்டார்‌. ஆறாவதாக திருவரங்க வள்ளலார்‌ தூயமணி வேழம்‌ என்ற தம்முடைய சிஷ்யர்களுக்கு திருமஞ்சனம்‌ முதலான கைங்கர்யங்களை உண்டு பண்ணி திருக்கரகக்‌ கையார்‌ என்று பெயரிட்டார்‌. தளையிடுவாரான சேனைநாதப்‌ பிரஹ்மராயர்‌ முதலானோருக்கு ஆஸ்ரயணாதிகளை சாதித்து அவர்‌களுக்குப்‌ பூர்வம்‌ அந்தந்த பிரபுக்கள்‌ பேர்‌ கொடுத்துக்‌ களை விளங்கும்படி பண்ணி அவர்களை ஸ்தாநத்தார்‌ என்று குறிப்பிட்‌டார்‌. அடுத்து ஸ்ரீ பாஷ்யம்‌ முதல்‌ சகல வேதாந்தங்களையும்‌ தினமும்‌ ஸந்நிதியில்‌ திருவாராதனை காலங்களில்‌ விண்ணப்பம்‌ செய்யும்படி தன்னுடைய சிஷ்யர்களான கருட வாகன பண்டிதர்‌,பெரியநம்பி, ஆழ்வான்‌, கோவிந்தப் பெருமாள்‌ திருவரங்கத்தமுதனார்‌, பிள்ளான்‌, போன்றவர்களை நியமித்து அவர்களைப்‌ பட்‌டான்‌ கொத்து என்று பெயரிட்டார்‌. ஆரியபட்டாளையும்‌ ஒரு கொத்தாக்கி அவர்கள்‌ கைங்கர்யத்தையும்‌ திட்டம்‌ பண்ணினார்‌.-புண்டரீக தாஸர்‌ கைங்கர்யத்தையும்‌ ஒரு கொத்தாக்க தாஸன்‌ கொத்து என்றழைத்தார்‌. இவ்வாறு பத்துக் கொத்துக்கும்‌ கைங்கர்யம்‌ நிர்ணயம்‌ பண்ணி தேசாந்திரிகளான ஏகாங்கிகள்‌ நான்கு பேருக்கும்‌ சில கைங்கர்யங்‌களை நியமித்துத்‌ தங்கப்பிரம்பு 4, வெள்ளிப்பிரம்பு 2, தலைவளைசல்‌ பிரம்பு 8 ஆக எட்டுப் பிரம்புக்கும்‌ திருநாமதாரிகளை நியமித்‌துத்‌ தேசாந்திரிகளான சாத்தாத முதலிகளுக்கும்‌ கைங்கர்யங்களை நியமித்து திருவரங்கச் செல்வம்‌ சிந்தாமே மங்காமே பொங்கும்படி ஆராய்ந்து கொண்டுவந்தார்‌. திருநகரியிலிருந்து திரு அத்யயன உத்ஸவத்துக்கு ஆழ்வார்‌ வரமுடியாமற்போகவே, தாமே கோயிலில்‌ மங்கை மன்னனைத் தவிர ஏனைய ஆழ்வார்களையும்‌ நாதமுனியையும்‌ பிரதிஷ்டை செய்து பெருமாள்‌ அருளப்பாடு, அரையருக்கு அருளப்பாடு முதலியன சாதிக்கும்படி பண்ணினார்‌.இவ்வாறு கோயில்‌ கைங்கர்ய பரரையும்‌ அவரவர்க்குரிய பொருத்தமான கைங்கர்யங்களையும்‌ திட்டம்‌ செய்தருளி ஆழ்வார்‌களையும்‌ பிரதிஷ்டை செய்து அவர்களுக்கு திருநட்சத்திர உபாஸனங்களையும்‌ ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமப்‌ பிரகாரம்‌ நடக்கத்‌ திட்டம்‌ பண்ணி பெருமாளுக்குத்‌ திருவாராதனம்‌ நித்யோத்ஸவ பக்ஷோத்‌ஸவ, மாஸோத்ஸவ, வருஷோத்ஸவ, மகோத்ஸவங்களையும்‌ விஸ்தாரமாக நடத்தி யருளினார்‌. திருவீதியில்‌ சிறியதாக ஒரு கோசாலை கட்டுவித்து அஞ்சு கிராமத்தை அழித்து வனமாக்கி ஆநிரை காத்த பெருமானைப்‌ பிரதிஷ்டை செய்து பிருந்தாவனத்‌தைப்போல பசுக்கள்‌ இருக்குமாறு பண்ணினார்‌.-இவ்வாறு அரங்கனால்‌ அளிக்கப்பட்ட உபய விபூதி சாம்ராஜ்‌யத்தை பெரிய நம்பியின்‌ அருள்‌ நோக்கால்‌ (கடாட்சம்‌) கிடைத்ததாக எண்ணி, அவரது திருவடிகளை வணங்கி அவருக்கு வசப்பட்‌டவராய்‌ விளங்கினார்‌ உடையவர்‌. பின்னர்‌ பெரியநம்பி சொற்படி திருக்கோட்டியூர்‌ நம்பியின்‌ திருவடிகளை வணங்கி, திருமந்திரார்த்‌தத்தையும்‌, சரம ஸ்லோகார்த்தத்தையும்‌, அவரிடமிருந்து உபதேசம்‌ பெற்று, அவர்‌ ஒருவருக்கும்‌ சொல்லாதே கொள்ளும்‌ என்று

சொன்ன ஆணையையும்‌ மீறி, திருக்கோஷ்டியூரிலேயே பலருக்கும்‌
திருமந்ரத்தை உபதேசித்தார்‌ இராமானுஜர்‌. திருக்கோஷ்டியூர்‌ நம்பியும்‌ ராமானுஜரது திருஉள்ளத்தில்‌ பொங்கும்‌ கருணையை அப்‌போதே அறிந்து எதிகட்கிறைவரை ‘எம்பெருமானாரே’ என்று அழைத்துக்‌ கொண்டாடி மிக வுகந்தவராய்‌ இந்தத்‌ தர்ஸனம்‌ இன்று முதல்‌ உமது பெயராலேயே “எம்பெருமானார்‌ தர்ஸனம்‌ என்ற பெயர்‌ பெற்று விளங்கும்‌ என்று கூறினார்‌.-ஆகவே தான்‌ வைணவம்‌ அது முதல்‌ இராமானுஜர்‌ தர்சனம்‌ அல்லது எப்மெருமானார்‌ தர்ஸனம்‌ என்ற பெயரில்‌ விளங்குகிறது.-மறுபடியும்‌ பெரியநம்பி நியமனப்படி திருவரங்கப்‌ பெருமாளரையரை அணுகி வணங்கி அவரிடமிருந்து நம்மாழ்வார்‌ திருவாய்மொழியையும்‌ அதன்‌ சாரார்த்தத்தையும்‌ மற்ற ஆழ்வார்களின்‌ பிரபந்தங்களையும்‌, ஆளவந்தார்‌ அருளிய ஸ்தோத்ர ரத்னம்‌, சதுஸ்லோகி என்ற இரு ஸ்தோத்ரங்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ பெற்றார்‌. மறுபடியும்‌ பெரியநம்பி ஏவியபடி திருமாலை யாண்டானை அணுகி அவரிடமிருந்து திருவாய்மொழி, திருமங்‌கையாழ்வாரது பெரிய திருமொழி, மற்றும்‌ முதலாயிரம்‌, இயற்பா ஆகிய அனைத்துப்‌ பொருளையும்‌, கற்றார்‌. இப்படிக்‌ கற்று வரும் பொழுது சிற்சில இடங்களில்‌ இப்படியும்‌ அர்த்தமாகலாம்‌ என்று எதிராஜர்‌ அவரிடம்‌ கூறினார்‌. அதைக் கேட்டு திருக்கோஷ்டியூர்‌ நம்பியிடமும்‌ பெரிய நம்பியிடமும்‌ ஆளவந்தார்‌ அருளாத அர்த்தங்களை இவர்‌ இப்படி விசுவாமித்ர சிருஷ்டியாகச்‌ சொல்கிறாரே என்று குறைபட இவர்‌ சொன்னவையும்‌ ஆளவந்தார்‌ வேறு உருக்களில்‌ அருளிச்‌ செய்யப்பட்டவையே யாகும்‌. ஆளவந்தார்‌ திருஉள்ளம்‌ உகக்காதது இவர்‌ நெஞ்சில்‌ தோன்றாது” என்று அவர்களால்‌ கொண்டாடப்படவே பட்டார்‌ எதிராஜர்‌.இவ் வண்ணமாக ரகஸ்யார்த்தங்களோடு கூடிய உபய வேதாந்‌தங்களையும்‌, ஆசார்யர்களிடமிருந்து கற்று கூரத்தாழ்வான்‌, நடதூராழ்வான்‌, முதலியாண்டான்‌ முதலிய சிஷ்யர்களோடு மிகவுகந்து திருவரங்கத்தில்‌ வாழ்ந்தார்‌ எதிராஜர்‌. அதற்குப்பின்‌ ஆத்ரேய குலத்துதித்த பிராணதார்த்திஹரர்‌ என்னும்‌ கிடம்பியாச்சான்‌, எதிராஜரிடம்‌ சீடனாக வந்து சரணடைந்தார்‌. தனது அத்தைக்கும்‌ இராமானுஜரின்‌ மாமாவான பெரிய திருமலை நம்பிக்கும்‌ பிள்ளையான பிள்ளானை இராமானுஜருக்கு அறிமுகப்படுத்தி, அவருடைய நல்லொழுக்கத்தையும்‌ எதிராஜ பக்தியையும்‌, அவருக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதில்‌ உள்ள விருப்பத்தையும்‌ விண்ணப்பித்து இந்த யதிராஜரையே திருவேங்கடமுடையானாக நினைத்து அடைவாயாக என்று திருமலை நம்பி அவனுக்குச்‌ சொன்ன வார்த்தையையும்‌ ஆச்சான்‌ இராமானுஜருக்குக்‌ கூறினார்‌. இளம்‌ வயதினரான அப் பிள்ளானைக்‌ கருணையோடு நோக்கி, அப்போதே கிடாம்பி ஆச்சானுக்கு எல்லா மந்திரங்களையும்‌ அவற்றின்‌ பொருளையும்‌ உபதேசித்து அவரையும்‌ தம்‌ சீடராகக்‌ கொண்டருளினார்‌.-அப்போது ஒரு சமயம்‌ அவரிடம்‌ விரோதம்‌ கொண்ட ஒருசிலர்‌, அவர்‌ மாதுகரத்துக்கு (உஞ்ச விருத்தி ) வரும் பொழுது விஷங்கலந்த பிட்சையை இடுவதை உணர்ந்த எதிராஜர்‌ மூன்றுதினங்கள்‌ உணவே கொள்ளாமல்‌ உபவாசமிருந்தார்‌. விஷயத்தைக்‌ கேள்விப்பட்ட பெரிய நம்பியும்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பியும்‌ பதறியபடியே திருவரங்கம்‌ வந்தார்கள்‌. அவர்களை எதிர் கொண்டழைக்க வந்த எதிராஜர்‌, நடுப் பகலில்‌ காவேரி மணலில்‌ அவர்களைக்‌ கீழே விழுந்து வணங்கா நிற்க, அவரது திருமேனியின்‌ பரிவாலே கிடாம்பி யாச்சான்‌ பதறிக் கோபிக்க, உம்முடைய திருமேனியில்‌ பரிவுடைய இந்த கிடாம்பியாச்சானால்‌ தயாரிக்கப்பட்ட பிட்சையையே நீர்‌ தினந்தோறும்‌ கொள்வீர்‌ என்று நம்பிகளிருவரும்‌, யதிராஜருக்கு நியமித்தனர்‌. அதுமுதல்‌ அவரும்‌ அப்படியே செய்து வந்தார்‌.-தனது சிறிய தாயாரின்‌ பிள்ளையான கோவிந்த பட்டரின்‌ கருத்தைத்‌ திருத்தித்‌ திரும்பவும்‌ வைணவத்திற்குக்‌ கொண்டு வருவதற்காக பெரிய திருமலை நம்பியிடம்‌ எதிராஜரால்‌ அனுப்‌பப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அங்கு சென்று திரும்பி வந்து கோவிந்‌த பட்டர்‌ உள்ளங்கை கொணர்ந்த நாயனாராயிருந்த நிலை போய்‌,சிவலிங்க சம்பந்தம்‌ கழியப் பெற்று பெரிய திருமலைநம்பியின்‌ திருவடித் தாமரையில்‌ வண்டு போலாயினார்‌ என்னும்‌ நற்செய்‌தியை எதிராஜருக்குத்‌ தெரிவித்தனர்‌. அதற்குப்பின்‌ எதிராஜர்‌ வேதார்த்த ஸங்க்ரஹத்தையும்‌, பிரஹ்ம ஸூத்ர வியாக்யானங்களான வேதாந்த சாரங்களையும்‌ கீதோபாஷ்யத்தையும்‌ அருளி, கூரத்தாழ்‌வான்‌, முதலியாண்டான்‌ முதலான சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்‌.ஆதி யந்தமற்ற வேத வாக்கியங்களுக்கு முரண்படாத பொருளை விளக்குவதன்‌ மூலம்‌, வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உண்மைப் பொருளை விளக்கும்‌ ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச்‌ செய்து ஆளவந்தாரின்‌ மனோ ரதமான தனது பொறுப்புகளில்‌ முதலாவதை நிறைவேற்றினார்‌.

அதற்குப்பின்‌ ஒரு பங்குனி உத்‌திரத் திருநாளில்‌ ஸ்ரீரங்க நாயகியும்‌ ஸ்ரீரங்கநாதனும்‌ சேர்த்தியிலே பேரானந்தத்தோடு திருமஞ்சனம்‌ கண்டருளிய பின்னர்‌, அவர்களைச்‌ சரணமடைந்து அதை விளக்கும்‌ கத்ய த்ரயத்தையும்‌ அருளிச்‌ செய்தார்‌ எதிராஜர்‌, ஸ்ரீ பாஷ்ய கீதோபாஷ்ய சார தீப வேதார்த்த ஸங்க்ரஹங்களால்‌ தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிந்தவனாய்‌, மூன்று கத்யங்களாலும்‌ ஸ்ரீமன்‌ நாராயணனைச்‌ சரணமடைந்தவனாய்‌, அந்த ஸ்ரீயப்பதிக்கே கைங்கர்யம்‌ செய்யும்‌ அதிகாரிக்கு அந்த லக்ஷிமி பதியை அடையும்‌ வரையில்‌ செய்ய வேண்டிய நித்ய கைங்‌கர்யங்களை நித்ய கிரந்தம்‌ என்னும்‌ நூலின்‌ மூலம்‌ தெரிவித்தார்‌.
அதற்குப் பின்‌ யதிராஜர்‌ பல சிஷ்யர்களோடு கூடியவராய்‌, காஞ்சி மார்க்கமாகப்‌ பக்தியோடு பேரருளாளனைச்‌ சேவித்துப் பின்‌ திருவேங்கட மலைக்குச்‌ சென்றார்‌. அங்கு பெரிய திருமலை நம்பி என்றெ ஆச்சாரியரால்‌ எதிர் கொண்டழைக்கப்பட்டு அவரை வணங்கி அவரிடமிருந்து தீர்த்தப் பிரசாதம்‌ பெற்று அவருடைய அருள் நோக்கினால்‌ அலர் மேல்‌ மங்கை யுறை மார்பனை சரணடைந்து, அத் திருமலையிலேயே ஒரு வருட காலம்‌ வாழ்ந்து அத் திருமலை நம்பியிடமிருந்து பலவிதமான அரும்‌ பொருள்கள்‌ நிறைந்த வால்மீகி வழங்கிய ஸ்ரீராமாயணத்தை உபதேசம்‌ பெற்‌றார்‌. ௮வர்‌ தம்முடைய குமாரர்களான பிள்ளானையும்‌ பிள்ளை திருமலை நம்பியையும்‌ எம்பெருமானாரது சீடர்களாக்கினார்‌-அவர்கள்‌ இருவரும்‌ எதிராஜரிடமிருந்து எல்லா அர்த்தங்களையும்‌ உபதேசமாகப்‌ பெற்றனர்‌. திருமலை நம்பியின்‌ பிள்ளையான பிள்‌ளானை திருமலைநம்பி எதிராஜருக்கு அபிமான புத்திரராகத்‌ தத்துக்‌ கொடுத்தார்‌.-யதிராஜரும்‌ நம்பியால்‌ அளிக்கப் பெற்ற அப்பிள்ளானையும்‌,தானே யாசித்துப் பெற்ற சிறிய தாயாரின்‌ பிள்ளையான கோவிந்த பட்டரையும்‌ அழைத்துக் கொண்டு காஞ்சி மார்க்கமாகவே ஸ்ரீரங்‌கத்தை அடைந்தார்‌. அந்த கோவிந்த பட்டர்‌ இல் வாழ்க்கையில்‌ ஈடுபாடின்றி விஷய வைராக்கியம்‌ உள்ளவராய்‌ இருப்பதைக்‌கண்டு அவருக்கு ஸந்யாச தர்மத்தையும்‌ அவர்‌ வேண்டிக் கொண்டபடி தனது பெயரைச்‌ சுருக்கி எம்பார்‌ என்ற தாஸ்ய நாமத்தையும்‌ வழங்கினார்‌ எம்பெருமானார்‌. ஸ்ரீரங்கநாதரின்‌ அருட் பிரசாதத்‌தாலே கூரத்தாழ்வானுக்குப்‌ பிள்ளையாகப்‌ பிறந்தார்‌. பிஞ்சாய்ப்‌ பழுத்தவரான பட்டர்‌, அந்தப் பிள்ளைக்கு பராசர மகரிஷி பெயரைச்‌ சூட்டி, அவரால்‌ இயற்றப்பட்ட விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும்‌ அரங்கேற்றி ஆளவந்தாரது இரண்டாவது மநோ ரதத்தை நிறைவேற்றினார்‌ எதிராஜர்‌. ‌ ஒரு பாசுரத்தின்‌ பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இராமானுஜரைக்கண்டு, பிள்ளான்‌ அவர்‌ ஆராய்ந்து கொண்டிருக்‌கும்‌ பொருள்‌ இது வன்றோ என்று உரைத்தார்‌. தாம்‌ முடிவு கட்டிய பொருளும்‌ பிள்ளான்‌ கூறிய பொருளும்‌ ஒத்திருப்பதைக்‌ கண்ட
எதிராஜரும்‌ மிக்க ஆச்சர்யமடைந்தவராய்‌, நாதமுனிகளின்‌ ஞானவம்சத்தில்‌ பிறந்த பெருமையினால்‌ இவர்‌ இந்தப் பொருளை அறிந்தார்‌ என எண்ணி ‘என்‌ ஞான புத்திரரே’ என்று அணைத்துக்‌ கொண்டார்‌. எதிராஜரான இராமானுஜருக்கு ஞான புத்திரர்‌ என்றும்‌
அவரது பாதுகை என்றும்‌ புகழ்‌ பெற்றவரான பிள்ளான்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வியாக்யானம்‌ அருளிச்‌ செய்தார்‌. பிள்ளான்‌ என்ற பெயருடைய அவருக்கு நம்மாழ்வாரின்‌ திருநாமமான திருக்குருகைப்பிரான்‌ என்னும்‌ பெயரை இட்டு அவர்‌ அருளிய ஆறாயிரப்படி வியாக்யானத்தையும்‌ அரங்கேற்றி
ஆளவந்தாரது மநோ ரதத்தை நிறைவேற்றினர்‌. அநந்தரம்‌ எம்பார்‌ திருத் தம்பியார்‌ சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர்‌ அவதரித்தருள அதைக் கேட்டு வுகந்து அக்குமாரருக்கு ‘பராங்குச நம்பி’ என்று நம்மாழ்வார்‌ திருநாமத்தைச்‌ சூட்டி ஆளவந்தாரது
மூன்றாவது மநோ ரதத்தையும்‌ நிறைவேற்றினார்‌ இராமானுஜர்‌.
அதற்குப் பின்னர்‌ எதிராஜருக்கும்‌, யக்ஞமூர்த்தி என்ற அத்வைதிக்கும்‌ விவாதம்‌ நடந்தது. இவ் விவாதத்தில்‌ தோற்றவர்கள்‌ வென்‌றவர்கள்‌ மதத்தைப்‌ பின்பற்ற வேண்டும்‌ என்பது உடன்பாடு.-ஸ்ரீரங்கத்தில்‌ பதினெட்டு நாள்‌ விவாதப் போர்‌ நடந்தது. மனம்‌ சோர்ந்த எதிராஜரது கனவில்‌ அவரது ஆராதன மூர்த்தியான வரதராஜர்‌ தோன்றி அபயமனித்தார்‌. அவரது அருள்‌ பெற்ற எதிராஜர்‌ பதினெட்டாவது நாள்‌ மாயாவதி மதத் தலைவரான யக்ஞமூர்த்‌தியை வாதத்தில்‌ வென்று, அருளாளப் பெருமாள்‌ அருளால்‌ வென்‌றமையால்‌, அவருக்கு அப் பெருமானின்‌ திருநாமத்தையும்‌ தமது பெயரையும்‌ சேர்த்து அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ என்னும்‌ தாஸ்ய நாமத்தை யிட்டார்‌. எதிராஜர்‌ சிஷ்யராகி அவரும்‌ ஞான சாரம்‌’ ‘பிரமேய சாரம்‌’ என்ற இரு பிரபந்தங்களை யிட்டருவினார்‌. அவற்றில்‌ ஸச் சிஷ்யனுக்கு (நல்ல சிஷ்யன்‌) ஸதாசார்யனே பரதேவதை. அவன்‌ திருவடிகளில்‌ கைங்கர்யமே பரம ப்‌ராப்யம்‌. (பெருந்தனம்‌) அவன் தான்‌ பகவதவதார விசேஷம்‌ என்ற கருத்துக்களை அருளிச்‌ செய்தார்‌.

அதற்குப்‌.பின்னர்‌ எதிராஜர்‌ திக் விஜயம்‌ செய்ய எண்ணி, பல சிஷ்யர்களோடு புறப்பட்டு ஆங்காங்கு சென்று பிற மதத்தினர்‌-அனைவரையும்‌ வென்று காஷ்மீர தேசத்திலுள்ள ஸரஸ்வதி பீடத்தை அடைந்தார்‌. அங்கு அவருடைய பிரஹ்ம ஸூத்திரப் பாஷ்‌யத்தை சிரசா வகித்த ஸரஸ்வதி தேவி, இதுவே ஸ்ரீபாஷ்யம்‌-மிகச் சிறந்த பாஷ்யத்தைச்‌ செய்த நீர்‌ இனி ஸ்ரீ பாஷ்யகாரர்‌ என்றே புகழ்‌ பெறுவீர்‌ என்று கூறி அந்த ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கோசத்தையும்‌ தனது ஆராதன மூர்த்தியான ஹயக்கிரீவரையும்‌ அவரிடம்‌ ஒப்படைத்தாள்‌. அவற்றையும்‌ ஏற்றுக் கொண்டு தனது திருவாராதனப்‌ பெருமாளான வரதராஜனோடு தினந்தோறும்‌ ஆராதித்துக்‌ கொண்டு, திருவேங்கடமலைக்கு மீண்டும்‌ எழுந்தருளினார்‌.
பக்தனான தொண்டைமான்‌ சக்கரவர்த்தியின்‌ வசம்‌ சங்கு சக்கரங்களைக்‌ கொடுத்திருப்பதைப்‌ பற்றாகக் கொண்டு ஸ்ரீநிவாசன்‌ சிவனே யொழிய விஷ்ணு அல்ல என்று சைவர்கள்‌ வாதம்‌ புரிய முற்பட, அவர்‌ விஷ்ணுவே என்பதை நிலைநாட்டினார்‌ எதிராஜர்‌-ஆனால்‌ சைவர்கள்‌ பிடிவாதம்‌ பிடித்தமையால்‌ அனைவரும்‌ கூடிச் சேர்ந்து நிச்சயித்து சங்கு சக்கரங்களையும்‌, சூலத்தையும்‌ கர்ப்பக் கிரகத்தில்‌ வைத்துக்‌ கதவைச் சாத்தி எல்லோரும்‌ ஒன்றாக இருந்து காவல்‌ காத்து, காலையில்‌ ஒன்றாகவே வந்து கதவைத் திறந்து உள்ளே புகுந்து திருவேங்கடமுடையானைக்‌ கண்டனர்‌. சூலத்தை விடுத்துச்‌ சங்கு சக்கரங்களைத்‌ தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனைக் கண்ட சைவர்கள்‌ உடனே ஓடிவிட்டார்கள்‌. யதிராஜரும்‌ திருமலை நம்பியும்‌ மிக உகந்தனர்‌. திருமலை நம்பியால்‌ பரிபூரணமாகக்‌ கடாட்சிக்கப்பட்ட எதிராஜர்‌, எல்லா சிஷ்யர்களோடும்‌ ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி, வேதாந்த சித்தாந்தத்தை நிலைநாட்‌டுவதில்‌ வல்லவரானார்‌. பிற மதத்தவர்கள்‌ அதனால்‌ பொறாமை கொண்டனர்‌.பிற மதத்தவர்களால்‌ துர்ப்போதனை செய்யப்பட்ட சோழராஜன்‌ சிவனைக் காட்டிலும்‌ மோலனவன்‌ இல்லை என்று ஏட்டில்‌ எழுதிக்‌ கையெழுத்திடுமாறு நல்லவர்கள்‌ அனைவரையும்‌ துன்‌புறுத்தி வந்தான்‌. அவன்‌ இதற்காக எதிராஜரை அழைத்து வரத்‌ தன்‌ சேவகர்களை அனுப்பினான்‌. சிஷ்யர்கள்‌ மூலம்‌ இச் செய்தி ஸ்ரீரங்கத்தை எட்டியது. இதைச்‌ செவியுற்ற கூரத்தாழ்வான்‌ காஷாயத்தையும்‌ திரிதண்டத்தையும்‌ தரித்தவராய்‌ பெரிய நம்பியோடு கூட ராஜசபைக்குச்‌ சென்றார்‌. நடதூராழ்வான்‌ முதலானோரோடு கூடியவராய்‌ யதிராஜரும்‌ வெள்ளை வஸ்திரம்‌ சாத்திக் கொண்டு -மேற்குத்‌ திக்கை நோக்கிப்‌ புறப்பட்டார்‌. அரங்க நகரப்பனே வழித்‌ துணையாகக்‌ கூடச்‌ சென்றான்‌. ஒரு மலையடியிலே இவரது சிஷ்யரான திருமலை நல்லானின்‌ சிஷ்யர்களான வேடமுதலிகள்‌, மிகவும்‌ தளர்ந்து வந்த எம்பெருமானார்‌ கோஷ்டியை வரவேற்று உபசரித்து குளிர் போக்கி உண்ண தேனும்‌ தினைமாவும்‌ அளித்தனர்‌. பின்னர்‌ பக்கத்திலுள்ள ஒரு ஊரில்‌ உள்ள அந்தணர்‌ இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கட்டளைவாரி என்ற அந்தணனகத்திலே ‘அமுது செய்‌யப்‌ பண்ணுவியுங்கள்‌’ என்று கூறிவிட்டுச்‌ சென்றனர்‌. அவனது பார்யை முன்னரே எதிராஜர்‌ சிஷ்யையாதலால்‌, முதலில்‌ எதிராஜரை அடையாளம் காண மாட்டாது திகைத்தவள்‌ பின்னர்‌, தன்‌ ஆத்மாவை உய்வித்த எதிராஜர்‌ என்று கண்டு, தன்‌ கணவனை எம்பெருமானாரது சிஷ்யனாக்கி, தன்‌ வீட்டில்‌ அவர்கள்‌ சில நாள்‌ தங்கிப் போகுமாறு உபசரித்து, பின்னர்‌ அவருக்கு வேண்டிய காஷாயம்‌ திரி தண்டம்‌ முதலியவற்றையும்‌ சமர்ப்பித்தாள்‌. சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்ட முறையில்‌ மறுபடியும்‌ ஏற்றுக் கொண்டு எம்பெருமானார்‌, எம்பெருமான்களுக்குத்‌ திருவாராதனம்‌ செய்து வந்தார்‌. இவ்வாறு வழிநடந்து மேல்நாட்டை (மைசூரை) அடைந்‌தார்‌ எதிராஜர்‌.அந்த தேசத்து அரசன்‌ விட்டல தேவராயனும்‌, அவனது மகளுக்குப்‌ பிடித்திருந்த பிசாசை ஓட்டிய எதிராஜரது திறமையான பக்தியில்‌ ஈடுபட்டுத்‌ தானும்‌ வைணவனாக மாறி விஷ்ணு வர்த்தனன்‌ என்ற நாமமேற்று அவரது சீடரானான்‌. எதிராஜரை அவனுக்கு அறிமுகம்‌ செய்த தொண்டனூர்‌ நம்பி போன்ற சில அந்தணர்‌ தலைவர்களும்‌ எதிராஜரது சீடர்களானார்கள்‌. அவ் வரசனை வசப்படுத்தி யிருந்த ஜைனர்களும்‌ எதிராசரால்‌ வாதில்‌ தோற்கடிக்கப்பட்டு
அரசனால்‌ தண்டிக்கப்பட்டனர்‌. தொண்டனூர்‌ நம்பிக்கு ‘நம்பி தம்‌பிரான்‌’ என்ற திருநாமம்‌ வழங்கப்பட்டது. எம்பெருமானாரது மஹாப் பிரபாவம்‌ எல்லோருக்கும்‌ தெரியலாயிற்று.
இவ்வாறு எம்பெருமானார்‌ சிங்கர்‌ கோவிலில்‌ இருக்கும் பொழுது அவர்கள்‌ கனவில்‌ தோன்றிய திருநாராயணன்‌, யாதவாத்ரியில்‌ பூமிக்கு அடியில்‌ இன்ன அடையாளமுள்ள இடத்தில்‌ நான்‌ புதைந்து இருக்கிறேன்‌. என்னை அங்கு பிரதிஷ்டை செய்வாய்‌.-ஊர்த்வ புண்டரத்திற்கு (திருநாமம்‌) வேண்டிய வெள்ளை மண்‌ணையும்‌ எடுத்துக் கொள்வாய்‌ என்று அவரிடம்‌ கூறி அருளினான்‌.
அப்போது எதிராஜரும்‌ மிகவும்‌ உகந்தவராய்‌ கல்யாண ஸரஸ்ஸில்‌ -நீராடிப்‌ பரிசுத்தி பெற்றவராய்‌, அவ்வடையாளங்களைக்‌ கொண்டு திருநாரணனோடு கூடிய விமானத்தைக்‌ கண்டுபிடித்து, அக்கோயிலிலே மூலமூர்த்தியான திருநாரணனைப்‌ பிரதிஷ்டை செய்தார்‌.-வெள்ளை மண்ணையும்‌ சிஷ்யர்களைக்‌ கொண்டு எடுத்துத்‌ தரித்‌துக் கொண்டு திருநாராயணனின்‌ உத்ஸவ மூர்த்தியான ராமப்பிரியரைத்‌ தேடிக் கொண்டு டில்லிக்குச்‌ சென்றார்‌. அங்கு டில்லி அரசனான சுல்தானின்‌ பெண்ணின்‌ அந்தப் புரத்தில்‌ இருந்த அப்பெருமாளை ‘என்‌ செல்லப்‌ பிள்ளாய்‌ வருக” என்று கூவினார்‌. ஓடி வந்து மடியில்‌ ஏறிய ராமப் பிரியரை அழைத்துக்‌ கொண்டு வந்து திருநாராயணபுரத்தில்‌ உற்சவ மூர்த்தியாகச்‌ சேர்த்து, அந்தச் செல்வப் பிள்ளையான திருநாரணனுக்கு உற்சவம்‌ முதலானவற்றைச்‌ செய்து இன்புற்‌றார்‌. அப்பெருமானைத் தேடி வந்த சுல்தானின்‌ பெண்‌ அங்கேயே ஒன்றுபட்டு மறைந்தாள்‌. அவளையும்‌ ஆண்டாளைப் போல துலுக்‌க நாச்சியார்‌ என்று வணங்குகின்றனர்‌.பெரிய நம்பியும்‌ கூரத்தாழ்வானும்‌, தர்சனத்திற்காக (வைணவத்திற்காக) தர்சனத்தை (கண்களை) இழந்ததைக்‌ கேள்விப்பட்டு மிக வருந்திய எதிராஜர்‌ பெரிய நம்பி பரமபதமடைந்த போதிலும்‌, கூரத்தாழ்வான்‌ க்ஷேமமாயிருப்பதையும்‌, சோழ அரசன்‌ விரைவிலேயே துர் மரணம்‌ அடைந்ததையும்‌ கேள்விப்பட்டு ஸ்ரீரங்கச்‌ செல்வத்திற்கு உபத்திரவம்‌ நீங்கியதை எண்ணி ஆனந்தமடைந்தார்‌.-அதற்குப் பின்னர்‌ கல்யாண தீர்த்தம்‌ சிறப்படைந்தது. அந் நகரமும்‌ திருநாராயணபுரமாயிற்று. அங்குள்ள ஸ்ரீயப்பதியும்‌ ஸம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) ஆனார்‌. யதிராஜரின்‌ ஜயஸ்தானமாயிற்று அவ்‌வூர்‌. மேலும்‌ எதிராஜர்‌ தமது திருவடிகளைச்‌ சரண் புகுந்த ஜனங்களின்‌ நன்மைக்காக தமது அர்ச்சா மூர்த்தியை (மூலவரை) அவர்களுக்கு அளித்தார்‌. அதனால்‌ கிரேதா யுகத்தில்‌ நாராயணாத்ரி என்றும்‌ திரேதா யுகத்தில்‌ வேதாத்ரி என்றும்‌ துவாபர யுகத்தில்‌ யாதவாத்ரி என்றும்‌ அழைக்கப்பட்டு வந்த :யாதவாத்ரி, இராமானுஜர்‌ பெயரால்‌ யதுகிரி என்றும்‌ பெயர்‌ பெற்றது.-செல்வப் பிள்ளையையும்‌ யதுகிரி நாச்சியாரோடு கூடிய திருநாராயணனையும்‌ வணங்கி, அங்குள்ள சிஷ்யர்களை (திருநாராயணனை) முறையாகப்‌ பூஜிக்கும்படி நியமித்து விட்டு சில அந்தரங்க சிஷ்யர்களோடு திரும்‌பிய எதிராஜர்‌ ஸ்ரீரங்கத்திற்குச்‌ சென்று ஸ்ரீரங்கநாதனை ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார்‌. குலோத்‌துங்க சோழன்‌ மனந்திருந்தி உடையவரிடம்‌ மன்னிப்புக் கேட்டு திருவரங்கச்‌ செல்வத்தைத்‌ திருப்‌பிக் கொடுக்க வாங்கி முதலியாண்‌டானுக்குத் தான ஸாஸனம்‌ பண்ணுவித்து அந்த விருத்தாந்தத்தை (சம்பவத்தை) ஆர்யபட்டாள்‌ வாசலிலே சிலாசாசனம்‌ செய்தார்‌.இவ்வாறு ஆண்டானைக்‌ கொண்டு, ஸ்ரீகார்யம்‌ நடத்தி வருகையில்‌ பெரிய நம்பி குமாரருக்கு ஆளவந்தார்‌ மடத்தையும்‌, ஆழ்வானுக்‌கும்‌ ஆண்டானுக்கும்‌ மனைகளையும்‌ ஸ்ரீ சேநாபதி பட்டையமும்‌ ஸாதித்தருளினார்‌. இவ்வாறு எம்பெருமானார்‌ முதலிகளுடன்‌ வாழ்ந்தருளி நூறு சாதுர்மாஸ்யா நந்தரம்‌ (நூறு ஆண்டுகாலம்‌] கழித்து ஸதாபிஷேகமும்‌ கண்டருளி எதிராஜன்‌ என்னும்‌ பேர்‌ பெறறு தம்‌ சிஷ்யரான ராமானுஜதாசன்‌ மூலம்‌ தன்னுடைய விக்ரகத்தைப்‌ பண்ணுவித்து தன்‌ சத்தியை அதில்‌ ஆதானம்‌ பண்ணிக்‌ கந்தாடை ஆண்டானைக்‌ கொண்டு ஸ்ரீபெரும்புதாரில்‌ பிரதிஷ்டை செய்தார்‌.அவதாரங்களெல்லாம்‌ ஒத்திருக்க ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு முக்யத்வம்‌ உண்டானாற்போல, திவ்ய தேசங்களெல்லாம்‌ ஒத்திருக்க கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயில்‌, திருநாராயண புரத்திற்கு முக்கியத்வம்‌ உண்டாவதைப் போல, ஆச்சார்யர்கள்‌ எல்லோரைக் காட்டிலும்‌ எம்பெருமானாருக்கு முக்கியத்வம்‌ ஏற்‌பட்டது. பின்னர்‌ அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீரங்கத்திற்குத்‌
திரும்பிச் சென்று ஸ்ரீரங்கநாதரை ஆனந்தக் கண்ணீர்‌ ததும்ப வணங்கினார்‌. பின்னர்‌ அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்‌; ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களுக்கான திருஅத்யயன உத்ஸவம்‌ ஆழ்வார்‌ திருநகரியிலிருந்து நம்மாழ்வார்‌ எழுந்தருள இயலாமையால்‌ தடைப்‌பட்டு விட்டது என்று அவரிடம்‌ கூறினார்கள்‌. அந்த ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார்‌ விக்கிரகம்‌ ஒன்றைப்‌ பிரதிஷ்டை செய்வித்து, அவரைக் கொண்டு அரங்கநகரப்பனுக்கு இருபது நாள்‌ அத்யயன உத்ஸவத்தைச்‌ செய்வித்து பிற்காலத்தில்‌ மற்ற ஆழ்வார்களின்‌ பிரபந்தங்களையும்‌, தன்‌ விஷயமான இராமானுஜ நூற்றந்தாதியையும்‌ சேர்த்துத்‌ திருவரங்கன்‌ செவி சாத்துப்படி செய்தார்‌. மற்றைய ஆழ்வார்களுக்கும்‌ ஆண்டாளுக்கும்‌ விக்கரகப்‌ பிரதிஷ்டையும்‌ செய்து வைத்தார்‌. அதைப் போலவே மிகச்சிறந்த திவ்ய தேசங்களிலும்‌ ஆழ்வார்‌களுடையவும்‌ ஆண்டாளுடையவும்‌ விக்கரகங்களைப்‌ பிரதிஷ்டை செய்து அத்யயன உத்ஸவமும்‌ நடக்கும்படி செய்தார்‌. எம்பெருமாளுக்கு ஏற்பட்டதான பாஞ்சராத்திர ஆகம விதி திருவாராதனம்‌,ஆளவந்தார்‌ காலத்திற்குப் பின்‌ வைகானஸ ரீதியாக மாறி நடந்ததை மாற்றி உடையவர்‌ முன்‌ போலவே பாஞ்சராத்திர விதிப்படி நடக்கும்படி பண்ணுவித்தார்‌. உடையவர்‌ திருவரங்கப் பெருமாளரையரிடத்திலே திருவாய்‌ மொழியை பண்‌ இசை தாளத்துடன்‌ ஓதி அப்படியே பாடவல்ல பல விண்ணப்பஞ்‌ செய்வாரை(அரையர்களை) ஏற்படுத்தி , அவர்களுக்குத்‌ தனி அலங்காரமும்‌ மான்யங்களும்‌ வழங்கினார்‌. பிள்ளை உறங்கா வல்லி தாஸரைப்‌ பெரிய பெருமாளது அடியாராக்கி, பெருமாளுக்குத்‌ திருமேனிக்‌ காவலராய்‌ நியமித்தார்‌. அவருடைய மருமக்களான வண்டரும்‌,சுண்டரும்‌ மடத்திற்குத்‌ ததியாராதனத்துக்கு அழுதுபடி முதலானவை நடத்திக் கொண்டு வந்தார்கள்‌.-உடையவர்‌, திருவரங்கப்பெருமாள்‌ அரையர்‌ சந்நிதியில்‌ ஆளவந்தாரது ஸ்தோத்ரத்திற்கு ஆசார்யன்‌ உபாயம்‌ என்னும்‌ அர்த்தத்‌தைப்‌ பெற்று லட்சுமண முனி என்ற நாமத்தையும்‌ பெற்றார்‌. உடையவர்‌ கொங்குப் பிராட்டி என்ற பெண்மணிக்கு இருமுறை த்வயத்தை உபதேசித்துத்‌ தன்‌ திருவடி நிலைகளை அருளிச் செய்தார்‌.-உடையவர்‌ திருவேங்கட யாத்திரைக்கு எழுந்தருளும்‌ வழியில்‌ திருவெள்ளறை , திருக் கோவலூர்‌ ஆகிய கோவில்களைச்‌ சேவித்து அங்கிருந்து புறப்பட்டு அஷ்ட ஸஹஸ்ரநாமம்‌ (எண்ணாயிரம்‌) குடியைச் சேர்ந்த யக்ஷேசர்‌ (எச்சான்‌) என்பவர்‌ ரஜோ குணம்‌ மிகுந்‌தவராய்‌ இருக்கையாலே அவர்‌ வீட்டில்‌ அமுதுண்ண மறுத்து,சாத்வீகையான பருத்திக்‌ கொல்லை யம்மாள்‌ வீட்டில்‌ எழுந்தருளி,அமுது செய்தார்‌. பின்னர்‌ எச்சானையும்‌ அவன்‌ தவறை உணர்ந்து திருந்தும்படி செய்தார்‌.-உடையவர்‌ தம்‌ தர்சனத்தை நிலை நாட்ட திக்விஜயங்கள்‌ செய்தார்‌. திருமாலிருஞ்சோலை அழகரை மங்களாசாசனம்‌ செய்து, தென் மதுரையில்‌ கூடலழகரையும்‌, ஸ்ரீவில்லிபுத்தூரில்‌ பெரியாழ்‌வாரையும்‌, வடபெருங்கோயிலுடையானையும்‌, ரங்கமன்னாரையும்‌ ஆண்டாளையும்‌ மங்களாஸாஸனம்‌ செய்தார்‌. ஆண்டாள்‌ பாரித்தபடியே நூறுதடா நிறைய அக்கார அடிசிலும்‌, நூறுதடா நிறைய வெண்ணையும்‌ சமர்ப்பித்து ஆண்டாளின்‌ அருள் நோக்கையும்‌ அவளால்‌ கோவிலண்ணர்‌ என்று சிறப்பாகச்‌ சொல்லப்படும்‌ சன்மானத்தையும்‌ பெற்றார்‌.பின்னர்‌ திருப்புளிங்குடி முதலான திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, திருக்குருகூரில்‌ நம்மாழ்வாரையும்‌, பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாஸாஸனம்‌ செய்தார்‌. ‘மதுரகவிகள்‌’ என்று திருநாமமாயிருந்த ஆழ்வார்‌ திருவடி நிலைகளுக்கு ‘இராமானுசன்‌’என்று திருநாமம்‌ ஆக வேண்டும்‌ என்று உடையவர்‌ பிரார்த்தித்‌ததை ஆழ்வார்‌ அங்கீகரித்தார்‌, உடையவர்‌ திருக்கோளூரில்‌ வைத்த மாநிதிப்‌ பெருமாளைச்‌ சேவிக்கச்‌ சென்றபொழுது அங்குள்ள ஒரு சிறு பெண்ணோடு ஸம்வாதம்‌ செய்து அவளது பிரபந்த அறிவினை மெச்சி அக்குடும்பத்தை ரட்சித்தார்‌. பின்னர்‌ நவ திருப்பதி பெருமாள்களை யெல்லாம்‌ வணங்கி, வானமாமலை, திருக்குறுங்குடி எம்பெருமான்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்தார்‌. திருக்குறுங்குடி நம்பிக்கு ஆசார்சயராக இருந்து த்வயத்தை உபதேசித்து ‘வைஷ்‌ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமத்தையும்‌ சாத்தி யருளினார்‌. திருவண்‌பரிசாரம்‌, திருவட்டடாரம்‌, திருவனந்தபுரம்‌ போன்ற குட்ட நாட்‌டுத்‌ திருப்பதிகளையும்‌ மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌ மங்களாசாசனம்‌ செய்தார்‌. சோழராஜாவால்‌ இடிக்கப்பட்ட தில்லைச்சித்திரகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்த ராஜப்‌பெருமாளின்‌ உத்சவ மூர்த்தியை வேங்கடமலை அடிவாரத்தில்‌ பிரதிஷ்டை செய்து முறைப்படி ஆராதனைக்கு ஏற்பாடு செய்தார்‌.நம்மாழ்வார்‌ முதலான ஏனைய ஆழ்வார்களையும்‌, பிரதிஷ்டை செய்த பின்‌ வெற்றி வீரராய்‌ சிஷ்ய கோடிகளோடு திருவரங்கத்திற்‌குத்‌ திரும்பச்‌ சென்று பின்‌ மற்ற மதங்களைப்‌ பற்றியிருந்த ஜனங்களைத்‌ தன்‌ அடியார்களாக்கி சிஷ்யர்களுக்கு முறைப்படி ஓவ்வொரு கைங்கர்யத்தையும்‌ பிரித்துக் கொடுத்து கவலை நீங்கப்‌ பெற்றவராய்‌ இன்புற்றிருந்தார்‌ எதிராஜர்‌.உடையவர்‌ தெற்கிலுள்ள திவ்ய தேசத்துப்‌ பெருமான்களை எல்லாம்‌ சேவித்து மங்களாசாசனம்‌ செய்த பின்‌ வடநாட்டிலுள்ள பத்ரிஹாஸ்ரமத்தில்‌ நர நாராயணனையும்‌, சாளக்ராமத்தில்‌ மலை யையும்‌, மற்றும்‌ அயோத்தி, மிதிலை, காசி, ஜகன்னாதம்‌ முதலிய இடங்களில்‌ பெருமாள்களையும்‌, சேவித்து மங்களாசாசனம்‌ செய்‌தார்‌. வாரங்கல்‌ என்ற பட்டிணத்தில்‌ ‘பாஞ்சாலராயன்‌’ என்ற பெருமாளை பிரதிஷ்டை செய்தார்‌. ஸ்ரீகாகுளத்தில்‌ ஸ்ரீவல்லபன்‌ என்னும்‌ எம்பெருமானுக்கு தெலுங்குராயன்‌ என்று திருநாமம்‌ சாத்தினார்‌. இவ்வாறு உடையவர்‌ வடநாடு தென்னாடு முதலிய எல்லா இடங்களுக்கும்‌ சென்று வைணவத்திற்குச்‌ சேவை செய்த பாங்கினை எல்லாம்‌ ஸ்ரீபிள்ளை லோகம்‌ ஜீயர்‌ அருளிய ‘ஸ்ரீ ராமானுஜார்ய திவ்ய சரிதை’ என்ற மணிப்பிரவான நடையில்‌ எழுதப்பட்ட நூலில்‌ காண்கிறோம்‌.எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான்‌ த்ரிதண்டம் முதலிஆண்டான்‌ பவித்ரம் -பாதுகைகள்‌, எம்பார்‌ பாதச்சாயை (திருவடி நிழல்‌)அருளாளப்பெருமாள்‌ எம்பெருமானார்‌ ஆத்ம ஸமர்‌. பிள்ளை உறங்கா வில்லி தாசர்‌ (பாஹிசமர்‌) தோழர்‌. பெரிய நம்பி தொடக்கமான ஐந்து ஆசார்யர்கள்‌ ஐந்து தலைகள்‌. திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ புத்திரஸமர்‌ ஆவார்கள்‌. ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களைக்‌ கொண்டு பாஷ்யகாரர்‌ ஸ்ரீ ஸுத்ர பாஷ்யத்தை அருளிச்‌செய்து அதைக்‌ கிடாம்பி ஆச்சான்‌ கிடாம்பிப்‌ பெருமாள்‌ முதலானோர்‌ மூலமாக சாரதா பீடத்துக்கு அனுப்பினார்‌. ஸரஸ்வதி தேவி அதைத்‌ தலையில்‌ தரித்து ஸ்ரீ பாஷ்யகாரர்‌ என்று எம்பெருமானாருக்‌குத்‌ திருநாமம்‌ சாத்தினாள்‌ என்பதை முன்பே கண்டோம்‌. உடையவர்‌ ஒர்‌ ஊமைக்கு தம்முடைய திருமேனியை ரக்ஷகமாகக்‌ காட்டியருள அதைக்கண்ட கூரத்தாழ்வான் தான்‌ ஊமையாய்‌ பிறக்கவில்‌லையே என்று தம்மை வெறுத்தார்‌. முதலியாண்டான்‌ தன்‌ குமாரனுக்கு இராமானுஜன்‌ என்று திருநாமம்‌ சாத்தினார்‌. கந்தாடையாண்‌டான்‌ என்று பிரசித்தி பெற்ற அவரை ஆட்கொண்ட வில்லி ஜீயரது சீடனாக்கினார்‌. ஏனைய சீடர்களும்‌ தம்‌ குமாரர்களுக்கு உடையவரது திருநாமம்‌ இட்டனர்‌. அவ்வாறு செய்த ஒரு வைணவ வண்ணானுடைய பிள்ளைக்கும்‌ இராமானுசர்‌ அருள்‌ புரிந்தார்‌. . இவ்வாறு உபய கைங்கர்ய நிர்வாஹகராய்‌ செங்கோல்‌ செலுத்தி உபயவிபூதியிலும்‌ தம்முடைய சிறு முறி செலுத்தி, 74 ஆச்சார்யார்களும்‌ எழுநூறு ஜீயர்களும்‌ பன்னீராமிர ஏகாங்கிகளும்‌ அனேக வைணவர்களும்‌ சேவிக்க திருவரங்கத் திருப்பதியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌,எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ சரணமடைந்த முதலிகளான எழுபத்து நாலு ஆச்சார்யர்களாவது, ஆளவந்தார்‌ குமாரர்களில்‌ சொட்டை நம்பி தொடங்கி பெரிய நம்பி குமாரர்‌, திருக்கோஷ்டியூர்‌ நம்பி குமாரர்‌, திருமாலையாண்டான்‌, பெரிய திருமலைநம்பி முதலிய ராமானுசரது ஆச்சார்ய குமாரர்களும்‌, கூரத் தாழ்வான்‌ முதலியாண்டான்‌ முதலான அவரது சிஷ்யர்களின்‌ குமாரர்களுமாக எழுபத்து நாலு சிம்மாசனாதிபதிகளையும்‌ நியமித்தார்‌. அவர்களில்‌ முக்கியமானவராக நால்வரை ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனாதிபதிகளாகவும்‌ அந்நால்வரிலும்‌ தன்‌ ஞான புத்திரனான பிள்ளானை உபய வேதாந்த பாஷ்ய சிம்மாசனாதிபதியாகவும்‌, ராமானுஜாச்சாரியார்‌ நியமித்தருளினார்‌. அந்த 74 சிம்மாசனாதிபதிகளுடன்‌ எழுநூறு ஸந்யாசிகளுடனும்‌, பன்னீராயிரம்‌ பரம ஏகாந்திகளுடனும்‌, முன்‌னூறு கொற்றியம்மையார்களுடனும்‌, எண்ணிறந்த ராஜாக்களாலும்‌, மற்றும்‌ பல சாத்தன. சாத்தாத முதலிகளாலும்‌ பிள்ளையுறங்கா வில்லிதாசர்‌ முதலான திருநாம தாரிகளாலும்‌ பொன்னாச்சியார்‌ போன்ற திருநாம தாரி ஸ்‌த்ரீகளாலும்‌, ஆசர்யமான சிஷ்ய ஸம்விருத்தி பெற்றவராய்‌ விளங்கினார்‌.

பெரியவர்களான கூரத்தாழ்வான்‌ முதலியாண்டான்‌, தம்பியான எம்பார்‌, ஞான புத்ரரான பிள்ளான்‌ அனைவரையும்‌ தம்‌ அருள் நோக்கால்‌ ஆசிர்வதித்து மூழ்ந்தார்‌. சிஷ்யர்களால்‌
பிரார்த்தக்கப்பட்டவராய்‌ (உத்ஸவ மூர்த்திகளான] தம்‌ அர்ச்சா விக்கிரங்களை முறையே ஸ்ரீங்கத்திலும்‌, ஸ்ரீ பெரும்புதூரிலும்‌ திரு நாராயணபுரத்திலும்‌ பிரதிஷ்டை செய்து சீடர்களின்‌ விருப்பத்‌தைப்‌ பூர்த்தி செய்தார்‌-இப்பொழுதும்‌ எனக்கு இடமின்றி விரட்டியதால்‌, நான்‌ எனக்குச்‌ சமயம்‌ வாய்க்கும் பொழுது, உமது மதத்தையும்‌ கலக்குவேன்‌ என்று ஆணையிடுகிறேன்‌ என்று கலி புருஷன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்டு, ஆதிபுருஷனான ஸ்ரீயப்பதியைச்‌ சரணடைந்து எனது தர்சனம்‌ (மதம்‌) தடையற்றதாய்‌ வாழக் கடவது என்று அருள் புரியுமாறு பிரார்த்தித்தார்‌ எதிராஜர்‌. தனது அந்திம தசையில்‌ தன்‌ குலதெய்வமான தேவப் பெருமாளையும்‌ ஸரஸ்வதி அளித்த ஹயக்‌ரீவனையும்‌ தன்‌ ஞான புத்திரரான பிள்ளானுக்கு அளித்தார்‌ மூவுலகிலும்‌ சிறப்புறப்‌ புகழடைந்தவரான எதிராஜர்‌.இப்படியிருக்கிற உடையவர்‌ திருவடிகளில்‌ நித்ய கைங்கர்யம்‌ பண்ணும்‌ முதலிகள்‌:- கூரத்தாழ்வானும்‌ முதலியாண்டானும்‌,நடதூராழ்வானும்‌, பட்டர் வர்க்கமும்‌ ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத்துணையாக இருப்பவர்கள்‌. அருளாளப்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌ திருவாராதனம்‌ செய்தருளுவார்‌. கிடாம்பிப்‌ பெருமாளும்‌ கிடாம்பியாச்சானும்‌ திருமடைப்பள்ளிக்குக்‌ கடவராயிருப்பர்‌. வடுகநம்பி எண்ணைக் காப்புச்‌ சாத்துவார்‌. கோமடத்துச்‌ சிறியாழ்வான்‌ கலசப்‌பாளையும்‌ ஸ்ரீபாதாட்சையும்‌ எடுப்பார்‌. அவரது சீடரான பிள்ளை உறங்கா வல்லிதாசர்‌ கருவூலம்‌ (பணப்பற்றுகள்‌] நோக்குவார்‌. அம்மங்கி பாலமுதம்‌ காய்ச்சுவார்‌. உக்கலாழ்வான்‌ பிரசாதம்‌ எடுப்பார்‌.-உக்கலம்மாள்‌ தரு ஆலவட்டம்‌ பரிமாறுவார்‌. மாருதிப்‌ பெரியாண்டான்‌ திருக்கைச்‌ செம்பு பிடிப்பார்‌. மாருதிச்சிறியாண்‌டான்‌ மடத்திற்கு அமுதுபடி கறியமுது, நெய்யமுது முதலானவை நடத்திப் போகுவார்‌. தூயமுனிவேழம்‌ திருமஞ்சனமெடுப்பார்‌. திருவரங்க மாளிகையார்‌ ஸ்ரீ பண்டாரம்‌ நோக்குவார்‌. பிள்ளை உறங்காவல்லிதாசர்‌ சீடர்களான வண்டரும்‌ சுண்டரும்‌ கைக்கு ஆயிரம்‌ பொன்னுக்கு ராஜ சேவகம்‌ பண்ணி மடத்துக்கு திருக்கை வழக்காக்‌கி யருள்வார்கள்‌. இராமானுச வேளைக்காரர்‌ திருமேனிக்காவலாய்‌ இருப்பார்கள்‌. அகளங்க நாட்டாழ்வான்‌ பிரதிபக்ஷ நிரஸனம்‌ பண்ணுவார்‌.-இவ்வாறு நூற்றிருபது பிராயங்கள்‌ வரை வாழ்ந்திருந்து திருவரங்கர்‌ செல்வம்‌ முற்றும்‌ திருத்த வைத்த இராமானுஜர்‌,வாழ்க்கையில்‌ ௮ருசி பிறந்து, எம்பெருமானிடம்‌ என்னைக்‌ காலக்‌ கழிவு செய்யாமல்‌ உன்‌ பொன்னடி சேர்த்து, ஒல்லை வேறே போகவிடாது, எஞ்ஞான்றும்‌ விடாதொழிய வேணும்‌ என்று பிரார்த்திக்க அரங்கனும்‌ இற்றைக்கேழாம்‌ நாள்‌ அப்படியே செய்கிறோம்‌ என்று திருவாய்‌ மலர்ந்தருளினார்‌. பின்பு எதிராஜர்‌ மடத்திலுள்ள அனைத்துக்‌ கொத்திலுண்டானவர்களையும்‌ சித்த மகிழ்ச்சியுடன்‌ அனுப்பி யருளி, சிஷ்ய வர்க்கங்களுக்கு அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ மூன்று நாளாக உபதேசித்து, இவ் வர்த்தங்களை யெல்லாம்‌ நீங்களும்‌ விஸ்வசித்து உங்களைப்‌ பற்றினார்க்கும்‌ பரம்பரை பரம்பரையாய்‌ உபதேசியுங்கள்‌ என்று அருளினார்‌.பின்னர்‌ தாம்‌ இற்றைக்கு நாலாம்‌ நாள்‌ பெரிய பெருமாள்‌ திருவடிகள்‌ ஏறப் போகிறோம்‌ என்பதை எல்லோர்‌ மனமும்‌ கலங்குமாறு கூறவே அவர்கள்‌ நாங்களும்‌ கூட வருவோம்‌ என்று கூற,உடையவர்‌ அப்படிச் செய்தால்‌ அவர்களுக்குத்‌ தம்மோடு சம்பந்தம்‌ இராது என்று சொல்லித்‌ தேற்றித்‌ தரிக்கப் பண்ணினார்‌.பின்னர்‌ அந்தத்‌ தர்சனத்தைத்‌ தனக்குப் பின்னர்‌ ஏற்று நடத்துமாறு பெரிய பட்டருக்கு (பராசரபட்டர்‌) கட்டளை இட்டருளி,திருக்குருகைப்பிரான்‌ பிள்ளான்‌ முதலான முதலிகளை பட்டருக்கு இஷ்டமாயிருங்கள்‌ என்று ஆக்ஞாபித்து கோயில்‌ அனைத்துக்கொத்‌தையும்‌ (ஊழியர்களையும்‌) அழைப்பித்து (அபராத ஷாமணம்‌)மன்னிப்பு வேண்டினார்‌. அவர்கள்‌ எவ்வாறு நாங்கள்‌ தரித்திருப்‌போம்‌ என்று துக்கிக்க அணியரங்கரனிருக்க உங்களுக்கு ஒரு தாழ்வில்லை என்று கூறி எல்லோரும்‌ பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள்‌ என்று கூறிப்‌ பட்டரைப் பார்த்து பெரிய பெருமாள்‌ திருவாராதனத்தையும்‌ பெருக்க நடத்திக் கொண்டு நம்‌முடைய தர்சனத்தையும்‌ நன்றாய்‌ நடத்திக் கொண்டு வாரும்‌ என்று
கூறியருளினார்‌. பின்னரும்‌ அவர்களைப் பார்த்து ஒருவன்‌ பிரபந்நனானால்‌ அவனது ஆத்ம யாத்ரை ஈஸ்வராதீனமாகையாலே அதற்கு வருந்தக் கூடாது. வருந்தினால்‌ ஆத்ம சமர்ப்பணம்‌ பொய்யாகிவிடும்‌. அவனது தேக யாத்திரை கர்மாதீனமாகையாலே அதுக்கும்‌ வருந்தக்கூடாது. வருந்தினால்‌ நாஸ்திகன்‌ என்றாகிவிடும்‌. ஆகவே உபய யாத்திரையிலும்‌ இவனுக்கு அந்வயமில்லை என்று அருளிச்‌ செய்து பின்‌ முதவிகளை நோக்க நீங்கள்‌ அனுசந்திக்க வேண்டியது மூன்று விஷயங்களுண்டு என்று கூறினார்‌. அவை யாவன அனுகூலர்‌, பிரதிகூலர்‌, அனுபயர்‌ என்பதாகும்‌. அவை என்ன என்பதையும்‌ விளக்கி தெளிவுபடுத்தினார்‌.பின்னர்‌ பட்டரிடம்‌ மேல்நாட்டிலுள்ள வேதாந்ததி யென்ற வித்‌வானை வாதில்‌ வென்று நம்‌ தர்னத்திற்குக்‌ கொண்டுவர வேண்டும்‌ என்று ஆணையிட்டு பின்பு திருக் கண்களைச்‌ செம்பளித்தருளி;பரவசமான பொலிவுடன்‌ எம்பார்‌ திருமடியில்‌ திருமுடியும்‌, வடுகநம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண்‌ வளர்ந்தருளினார்‌. ஆயிரஞ்சுடர்வாய்‌ அரவணையோடே நம்பி மூத்த பிரானைப்‌ போல எம்பெருமானாரான இவரும்‌ கூடி யருளினார்‌.

பின்பும்‌ அன்பருடன்‌ களித்த சீர் பெரும்புதூர்‌ எதிராசன்‌
இன்பமுடன்‌ இசைந்தொரு நூற்றிருபதாண்‌ டிங்கிருந்ததன்பின்‌
அன்பன்‌ ஆழ்வான்‌ ஆண்டான்‌ நற்குமாரர்க்கு அடியாமுடி
புனைந்து மன்பதையை வாழ்வித்தாங்கமருமென வாழ்வித்தருளி
ஆராமஞ்‌ சூழ்‌ அரங்கர் தமை, மலர் மா மகளை மடி யிறைஞ்சித்‌
தாரீர்‌ சரணந்தனை யென்னத்‌ தந்‌தோமெனலும்‌ எதிராசர்‌
பாரோர்‌ பரவும்‌ பாகவதர்‌ பிரிவால்‌ பிரிவில்‌ படர் கூரச்‌
சீரோர்‌ திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனராம்‌

பின்னர்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌ (உடையவரதுஞான புத்ரர்‌) உடையவருக்கு அந்திமக் கிரியைகள்‌ நடத்தினார்‌.-அவர்‌ திருமேனியை ஆழ்வார்‌ திருமேனியைப் போல கோயிலுக்‌குள்ளேயே பள்ளிப் படுத்தி வைத்தார்கள்‌.

இன்னமுத மூட்டுகேன்‌ இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம்‌ பாடவல்ல சீர்ப்பெருமாள்‌ – பொன்னஞ்‌
சிலைசேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌, எங்கள்‌
குலசேகரனென்றே கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
வாழிபரகாலன்‌ வாழிகலிகன்றி
வாழிகுறையலூர்‌ வாழ்வேந்தன்‌ – வாழியரோ
மாயோனை வாள்வலியால்‌ மந்திரங்‌ கொள்‌, மங்கையர்கோன்‌
தூயோன்‌ சுடர்மான வேல்‌
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருமொழித் தனியன்‌
முந்துற்றநெஞ்சே முயற்றித்‌ தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ – பொருதல்‌ குருகூரன்‌ மாறன்‌ பேர்கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருவந்தாதி தனியன்‌

சீரார்‌ திருவெழு கூற்றிருக்கை யென்னும்‌ செந்தமிழால்‌
ஆராவமுதன்‌ குடந்தைப் பிரான்‌ றனடியிணைக்கீழ்‌
ஏரார்‌ மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம்‌ துணை நமக்கே.
-திருவெழு கூற்றிருக்கை தனியன்

அழுக்கென்றிவையறிந்தேன்‌ அம்பொன்‌ அரங்கா
ஒழித்தருள்வாய்‌ உள்ளில்‌ வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’
-விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது

சீராரும்‌ எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி.
திருவரையிற்‌ சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும்‌ செய்ய வடிவு எப்பொழுதும்‌ வாழி.
இலங்கிய முந் நூல்‌ வாழி இணைத் தோள்கள்‌ வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல்‌ வாழி துணை மலர்க்‌ கண்கள்‌ வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில்‌ வாழி.
இனி திருப்போடெழில்‌ ஞான முத்திரை வாழியவே.

அறு சமயச்‌ செடி யதனை யடி யறுத்தான்‌ வாழியவே.
அடர்ந்து வரும்‌ குதிட்டிகளை யறத் துறந்தான்‌ வாழியவே.
செறு கலியச்‌ சிநிதுமறத் தீரத்து விட்டான்‌ வாழியவே.
தென்னரங்கர்‌ செல்வ முற்றும்‌ திருத்தி வைத்தான்‌ வாழியவே.
மறையதனில்‌ பொருளனைத்தும்‌ வாய் மொழிந்தான்‌ வாழியவே.
மாறனுரை செய்த தமிழ்‌ மறை வளர்த்தோன்‌ வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர்‌ அவதரித்தான்‌ வாழியவே.அழகாரும்‌ எதிராசர்‌ அடியிணைகள்‌ வாழியவே.

அத்தகிரி யருளாளரடி பணிந்தோன்‌ வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன்‌ வாழியவே.
பக்தியுடன்‌ பாடியத்தைப்‌ பகர்ந்திட்டோன்‌ வாழியவே.
பதின்மர்‌ கலையுட்‌. பொருளைப்‌ பரிந்து கற்றோன்‌ வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன்‌ வாழியவே.
தொல்‌ பெரிய நம்பி சரண்‌ தோன்றினான்‌ வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியவே.
சீர் பெரும்புதூர்‌ முனிவன்‌ திருவடிகள்‌ வாழியவே.

எண்டிசை யெண்‌இளையாழ்வார்‌ எதிராசன்‌ வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான்‌ குரைத்தான்‌ வாழியவே.
பண்டை மறையைத்‌ தெரிந்த பாடியத்தான்‌ வாழியவே.
பரகால னடிஇணையைப்‌ பரவுமவன்‌ வாழியவே.
தண்டமிழ்நூல்‌ நம்மாழ்வார்‌ சரணானான்‌ வாழியவே.
தாரணியும்‌ விண்ணுலகும்‌ தானுடையோன்‌ வாழியவே.
தெண்டிரைசூழ்‌ பூதூரெம்பெருமானார்‌ வாழியவே.
சித்திரையிற்‌ செய்ய திருவாதிரையோன்‌ வாழியவே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீ ராமானுஜ ஸப்த பிரயோகங்கள்-

October 24, 2025

ஸ்ரீ அயோத்யா காண்டம்
ஹா ராம ராமானுஜ ஹா ஹா வைதேஹி தபஸ்விநி
ந மாம் ஜாநீத துக்கேந ம்ரியமாணம் அநாதவத் –2-59-27-

ஸ து ராமாநுஜ சாபி சத்ருக்ந ஸஹித ததா
ப்ரதஸ்தே பரத யத்ர கௌசல்யாயா நிவேஸநம் –2-75-8-

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்
ததஸ்து ராமாநுஜ ராம வாநர ப்ரக்ருஹ்ய ஸாஸ்த்ராணி உதித உக்ர தேஜஸ
புரீம் ஸூரேஸாத்மஜ வீர்ய பாலிதாம் வதாய சத்ரோ புநராகதா இஹ -3-13-30-

அவஷ்டப்ய அதிஷ்டந்தம் ததர்ஸ தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்து சைவ ததா அநுஜம் –3-19-25-

ஸ காமிநம் தீநம் அதீன சத்த்வ சோகாபி பன்னம் ஸாமுதீர்ண கோபம்
நரேந்திர ஸூநு நரேந்திர புத்ரம் ராமாநுஜ பூர்வஜம் இதி உவாஸ –3-31-1-

யதா உக்த காரி வசனம் உத்தரம் சைவ ஸ உத்தரம்
ப்ருஹஸ்பதி ஸமோ புத்த்யா மத்த்வா ராமாநுஜ ததா –3-31-12-

ஏஷ ராமாநுஜ ப்ராப்த த்வத் ஸகாஸம் அரிந்தம
ப்ராதுர் வ்யஸன சந்தப்த த்வாரி திஷ்டதி லஷ்மண –3-31-33-

ந ராம ராமாநுஜ ஸாஸநம் த்வயா கபீந்த்ர யுக்தம் மனஸாபி அபோஹிதம்
மநோ ஹி தே ஜ்ஞாஸ்யதி மாநுஷம் பலம் ஸ ராகவஸ்ய அஸ்ய ஸூரேந்த்ர வர்சஸ–3-32-22-

ஸ்ரீ ஸூந்தர காண்டம்
நூநம் ஸ காலோ ம்ருக ரூபா தாரே மா மல்பபாக்யம் லுலுபே ததா நீம்
யத்ர ஆர்ய புத்ரம் விஸ ஸர்ஜ மூடா ராமாநுஜம் லஷ்மண பூர்வஜம் –4-28-10-

அறிவிலியான நான் எந்த சமயத்தில் சக்ரவர்த்தித் திருமகனுடைய தம்பியானவரான இளைய பெருமாளையும், இளைய பெருமாளுடைய தமயனாராய், எனது கணவரான பெருமாளையும் விரட்டி விட்டேனோ, அப்போதே ஸுப்ரஸித்தனான யமன் மானாக உருக் கொண்டு அற்பமான புண்ணியத்தை யுடைய என்னை வஞ்சித்து விட்டான்.]

உபஸ்திதா ஸா ம்ருது ஸர்வ காத்ரீ ஸாகாம் க்ருஹீத்வாத நகஸ்ய தஸ்ய
தஸ்யாஸ்து ராமம் ப்ரவி சிந்த யந்த்யா ராமாநுஜம் ஸ்வம் ச குலம் ஸூபாங்க்யா –4-28-19-

பரிஸ்ரமாத் ப்ரஸுப்தா ச ராகவாங்கே அப்யஹம் சிரம்
பர்பாயேண ப்ரஸுப்தஸ் ச மமாங்கே ப,ரதாக்ரஜ: ]ரா-ஸு 38-21]
[ராகவனுடைய திருத்தொடையில், நான் களைப்பினால் வெகுநேரம் தூங்கினேன். பரதனுடைய தமையனாரான அவரும் என் தொடையில் தூங்கினார். ]

ஸ்ரீ யுத்த காண்டம்
ஸ பாண வர்ஷம் து வவர்ஷ தீவ்ரம் ராமானுஜ கார்முக ஸம் ப்ரயுக்தம்
ஷுரார்த சந்த்ரோத்தம கர்ணி பல்லை ஸராம்ஸ் ச சிச்சேத ந சுஷுபே ச –5-59-101-

தத் த்ருஷ்ட்வேந் த்ரஜிதா கர்ம க்ருதம் ராமாநுஜ ததா
அசிந்தயித்வா ப்ரஹசன்நைதத் கிம் சிதிதி ப்ருவந் –5-88-52-

ஸ்ரீ உத்தர காண்டம்
இதோ கச்சதா பஸ்யத்வம் வத்யமானம் மாஹாத்நா
ராமாநுஜேந வீரேண லவணம் ராக்ஷஸ உத்தமம் –6-61-29-

ததோ ராமாநுஜ க்ருத்த காலஸ் யாஸ்த்ரம் ஸூதாருணம்
ஸம் வர்தம் நாம பரதோ கந்தர் வேஷ்வப்ய யோஜயத் –6-91-6-

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன்.-

July 14, 2025

ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்தஇதத்தாய் இராமாநுசன். * திருவாய்மொழித் தனியன்களில் ஒன்றான* வான் திகழுஞ்சோலைப்பாசுரத்தின் பிற்பகுதி இது. இது பட்டரருளிச்செய்தவெண்பா. ‘திருவாய்மொழியைப் பெற்ற தாய்நம்மாழ்வார் ; வளர்த்த தாய்எம்பெருமானார்” என்கிறது இதில். மணவாள மாமுனிகளருளிச் செய்தஉடையவரது வாழிதிருநாமத்திலும் * மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன்வழியே * என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. திவ்யப்ரபந்தங்களைஎம்பெருமானார் வளர்த்தவிதம் யாது? என்று பலர் கேட்பதுண்டு. விளங்கச்சொல்லுகிறேன் கேண்மின். *சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள்நான்கும் எல்லையில்லாவறநெறி யாவுந் தெரிந்தவன் * என்று இராமானுசநூற்றந்தாதியில் (44) போற்றப் பெற்ற எம்பெருமானார்க்குத் தமிழறிவில்சங்கிப்பார் ஆருமில்லை. திவ்யப்ரபந்தங்களிலுள்ள அர்த்த விசேஷங்களைஸ்ரீபாஷ்யத்திலும் கீதாபாஷ்யத்திலும் கத்யத்ரயத்திலும் ஆச்சரியமாகப் பதியவைத்தருளியிருப்பதை அடியேன் த்ரமிடோபநிஷத் ப்ரபா வஸர்வஸ்வ நூலில்விரியவுரைத்திருப்பது தவிர உபந்யாஸங்கள் தோறும் விளக்கி வருவதைஉலகமுணரும். முக்கியமாக நிரூபிக்க வேண்டிய விஷயங்களைப் புறச்சான்றுகொண்டும் அகச்சான்று கொண்டும் மூதலிப்பது முறை. இவ்விஷயத்தில்ஏய்ந்தபெருங்கீர்த்தி யிராமானுச முனிதன், வாய்ந்த மலர்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெருஞ், சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,பேரா தவுள்ளம் பெற என்பது முதலான தனியன்களும், மாறனடிபணிந்துய்ந்தவிராமானுசன் என்பது முதலான இராமானுச நூற்றந்தாதிப் பாசுரங்ககள் பலபலவும் புறச்சான்றுகளாம். அவற்றைவிட அகச்சான்றுகளையேஅடியேன் அதிகமாகக் காட்டுபவன். எம்பெருமானாருடைய திவ்யஸூக்திகளில் அருளிச் செயல் விசேஷார்த்தங்களே அதிகமாக கமழ்கின்றனவென்பதைச் சில பாக்கியசாலிகளே அறிந்து அநுபவிக்கவல்லவர்கள். ஆளவந்தார் ஸ்ரீஸூக்திகளில் இது பரிமிதம். உடையவர் ஸ்ரீஸூக்திகளில் கொள்ளை கொள்ளையானவை. நிதிபோல் புதைந்து கிடப்பவை. திருவராதனத்தில் அருளிச் செயல் ஸேவித்துச் சாத்துமுறை செய்யவேணுமென்பதை ஸ்வாமி தமது நித்ய க்ரந்தத்தின் முடிவில் ‘ச்ருதிஸுகை: ஸ்தோத்ரை: அபிஷ்டூயஎன்பதனால் காட்டியருளினர். *செவிக்கினிய செஞ்சொற்களாலே * என்றபடி.இவ்வண்ணமாகவே நுட்பமாகக் காட்டியருள்வது எம்பெருமானாரியல்பு.சிகரமானவொரு விஷயத்தை இங்குப் பொறித்திடுகின்றேன். ஸ்ரீ பாஷ்யத்தில் கடைசியாக முடிக்கும் ஸ்ரீஸூக்தி என்ன வென்று பார்ப்போம்.ய ஏவமாஹ என்றாரம்பித்து ‘வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ. மஹாத்மாஸுதுர்ல : * இதி. என்பது ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவான ஸ்ரீஸூக்தி ஸூத்ரம் என்னவென்றால் * அநாவ்ருத்திச் சப்தாத் * என்பது. ‘முக்தாத்மாதிருநாட்டிலிருந்து திரும்பி வருவதில்லை, சாஸ்த்ரம் அங்ஙனே சொல்லியிருக்கையாலே” என்பது ஸூத்ரத்தின் பொருள்; சாஸ்த்ரம் இன்னதென்பதைக் காட்டவேண்டும்; அது காட்டியாயிற்று. *ஸ கல்வேவம் வர்த்தயந் இத்யாதியான உபநிஷத் வாக்யமும் * மாமுபேத்ய து கெளந்தேய! புநர்ந்ம ந வித்யதே * என்கிற கீதா வசனமும் காட்டியாயிற்று. ஸூத்ர வியாக்கியானம் செவ்வனே முடிவு பெற்றதாயிற்று. பின்னை ப்ரியோ ஹி ஜ்ஞாநிந்:என்று தொடங்கி ஸ மஹாத்மா ஸு துர்லப:என்னுமளவாக விஸ்தரம் செய்திருப்பது எதற்காக ? என்று விமர்சிக்க வேண்டுவது மிக அவசியமாகும்.விஜ்ஞாபிக்கிறேன், குறிக்கொண்மின். ஸூத்ரகாரர் கூறியபடி [சப்தாத் என்றுசொன்னபடி] சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்சியில்லை யென்று நிரூபித்தாயிற்று.அதன் மேலும் பூர்வபம் தோன்றும்; ஈச்வரனோ கேட்பாரற்ற சுதந்திரன்;நிரங்குச ஸ்வதந்த்ரனெனப்படுகிறான். *நாஸௌ புருஷகாரேண × சாபிஅந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித்கதாசந என்று பேசுபவன். அவன் சாஸ்த்ரத்தையும் மீறி முக்தாத்மாவைநோக்கி மீண்டொழிந்து போ ‘ என்று சொல்லித் தள்ளிவிட்டால் தடுப்பாருண்டா? யாரே தடுக்கவல்லார்? என்று சோத்யம் விளைந்தே தீரும். இந்த சோத்யம் சங்கராசார்யாதிகளான இதர பாஷ்யகாரர்களுக்குத் தோன்றவில்லை. நமது பாஷ்யகாரருக்குத் தோன்றிற்று. அருளிச்செயற் கடலில் அமுதமானவொரு பொருளை யெடுத்து வெளியிடுவதற்காகத் தோன்றிற்று அதைப் பூர்வபமாக வைத்துக் காட்டாமல் ஸமாதானத்தை மட்டும் மிகவழகாகக்காட்டியருளினர்- க ந ச பரம புருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் கதாசித் ஆவர்த்தயிஷ்யதி” என்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியாலே,இதன் பொருளாவது – எம்பெருமான் தன்னுடைய பரமப்ரீ திக்கு இலக்கான ஞானியை ஒருநாளும் திருப்பியனுப்பமாட்டானென்பதாம். இவ்விஷயத்திற்கு ப்ரமாணமாக ய ஏவமா ? என்று தொடங்கி * ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:* என்கிற கீதா ச்லோகத்தை [பகவத் வசனத்தை] எடுத்துக் காட்டினார். அவ்வளவே போதுமானது. அதற்கு மேலும் வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்ல : * என்னுமளவும் எதற்காக எடுத்துக் காட்டினாரென்று ஆராய வேண்டும். கேண்மின்; கீழேகாட்டிய ஸ்ரீ பாஷ்ய பங்க்தியில் ‘அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் நகதாசித்ஆவர்த்தயிஷ்யதி” என்றிவ்வளவே ஸாதித்திருக்கவில்லை. இடையில் லப்த்வா என்றொரு விலையுயர்ந்த பதத்தை ப்ரயோகித்தருளியுளளார். அந்தப் பதம் இல்லாமலே வாக்கியம் ஆந்வயிக்காமற் போகாது. எளிதாக அந்வயிக்கும்.அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் ந கதாசித் ஆவர்த்தயிஷ்யதி’ என்றால் இதில்அநவயம் ஒன்றுமில்லையே. இடையில் லப்த்வா என்றொரு பதத்தை இட்டருளினது த்ராவிட வேதாந்த ஸாரார்த்த பரமார்த்தத்தை விளக்குவதற்கேயாம்.சேதநலாபம் ஈச்வரனுக்கே யொழிய ஈச்வரலாபம் சேதனனுக்கன்று’ என்கிற ஸத்ஸம்ப்ரதாயார்த்த நிதியன்றே இங்கு வாரியளிக்கப்பட்டது. ஆழ்வார் யானொட்டி யென்னுள் இருத்துவமென்றிலன், தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்றென்னுயிருள் கலந்து, இயல்வானொட்டுமோ இனியென்னை நெகிழ்க்கவே. (திருவாய்மொழி 1-7-7) என்றருளிய பாசுரத்தை அக்ஷரச: அடியொற்றியன்றோ ஸ்ரீபாஷ்யஸூக்தி அவதரித்துள்ளது. ஜ்ஞாநியான வொருவனைப் பெறுவதற்கு எம்பெருமான் எவ்வளவோபாடுபட்டவனாயிருந்து, அப்படிப்பட்ட ஞானியைப் பெற்றபின்பும் போய்விடுஎன்று தள்ளுவனோ? என்கிற பொருள் தோன்றவே லப்த்வா என்கிற பதத்தைச் சேர்த்தருளினர்; எம்பெருமான் ஞானியான சேதனனைத் தேடுகிறான், தேடிப் பெற்றால் களிக்கிறான், பெறாவிட்டால் வருந்துகிறான் என்பதைக் காட்டவே,[லப்த்வா என்ற தமது ஸூக்திக்கு ப்ரமாணமாகவே ஸ மஹாத்மாஸு துர்லப :என்னுமளவும் உதாகரித்தது. இத்தகைய பல நூறு அருளிச்செயலர்த்த விசேஷங்களை அமைத்தருளினதுபற்றி மொய்ம்பால் வளர்த்தஇதத்தாய் இராமானுசன் * என்று பணித்தது . முக்கியமாக ஒரு வார்த்தை;“ ஸர்வதேச தசாகாலேஷ அவ்யாஹத பராக்ரமா, ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்.‘ என்கிற சலோக ரத்னத்தை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபாதிகளில் ஸேவிக்கின்றிலோம். பகவத் விஷய ரஹஸ்யாதி காலக்ஷேபங்களிலும் ஸேவிக்கின்றிலோம். அருளிச்செயல் கோஷ்டிகளில் மட்டுமே ஸேவித்து வருகிறோம். இதனாலும் * மொய்ம்பால் வளர்த்த இதத்தாயான இராமாநுசருடைய பெருமையை யுணரலாம்.

இப்படிப் பெரிய பெருமாள் விஷயமாகவே ப்ரதிபாதித்த திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்
நெடும் காலம் நோற்றுப் பெற்ற முந்தின மாதா ஆழ்வார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் —4-5-10–என்றார் இறே

வருந்திப் பெற்ற பிள்ளையை வளர்த்து எடுக்கும் மாதாவைப் போலே திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் –
வர்த்திப்பித்த மாதா -எம்பெருமானார் ஆயிற்று
ஞானக் கலையான -1-9-8- திரு வாய் மொழிக்கு ஜென்ம பூமி ஆழ்வார் -தத் வர்த்தகர் எம்பெருமானார் –
இப்படி யாயிற்று ஞான சந்தானம் வளர்த்தியோடே நடந்து செல்வது –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து –பெரிய –8-9-7-என்னுமா போலே

மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் ஆவது –
ஈன்ற தாய் பெற்றுப் பொகட்டுப் போனால் வளர்க்கும் தாய் தன் மிடுக்காலே காத்து நோக்குமா போலே ஆயிற்று –
இவரும் அத்தைக் காத்து வளர்த்த படியும் –
தேவகி பெற்ற யுருவு கரிய ஒளி மணி வண்ணனை –பெரிய –1-3-17–
வளர்க்கும் தாயான யசோதை தன் மிடுக்காலே எடுத்து –
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன் –பெரியாழ்வார் –2-9-6-என்றும்
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தே நின்று –2-9-8-
போதர் கண்டாய் –2-9-6-
தாய் சொல் கொள்வது தன்மம் கண்டாய் –2-9-8-என்று
குற்றம் சொல்லுமவர்களையும் தன் சொல்லாலே வாய்ப் புடை புடைத்து தன் வசமாக்கி
தீய புஞ்சிக் கஞ்சன் –2-2-5-என்று கருத்தைக் குலைத்து
காப்பாரும் இல்லை -2-3-1—என்று இரந்து
அசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை –1-3-12-என்னும்படி
நிறம் பெற வளர்த்து ப்ரமேய சாரத்தை வர்த்திப்பால் போலே
பிரமாண ஸாரத்தை வர்த்திப்பித்த பிரகாரமும் –

அது எங்கனே என்னில் —
இங்கும் ஆழ்வார் அவதரித்து
அவா அற்று வீடு பெற்று எழுந்து அருளின –10-10-11- பின்பு
பாஹ்ய குத்ருஷ்டிகளால்
பாஷா கானமான திருவாய் மொழி அபி பூதமாய் வருகிற படியைக் கண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகளாலே அத்தை நிரோதித்து-அத்தை இதுக்குக் காவலான வேலியாகக் கற்பித்துத்
திருவாய் மொழியைத் தன் கை வசம் ஆக்கி
திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கொண்டு இதன் அர்த்தத்தை வெளியிடுவித்து வர்த்திப்பித்துக் கொண்டு போந்தார் இறே –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்னும்படியான அடியார் ஆகையால் –
ஆண்டவன் இட்ட பயிரை வர்த்திப்பிக்க வேணும் இறே அடியானுக்கு —

————-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே
– -44 –

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
-1 –

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்பதை
மணவாள மா முனிகள்-பராங்குச பாத பக்தம் –என்று வட மொழியில் மொழி பெயர்த்தார்
பக்தம் -உணவு

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற
–ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது –

இவர் தான் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவராய்
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை
–இராமா -46- என்றும்
தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னைத் தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த ராமானுஜன்
-இராமா –29-என்றும்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாக யுடையராய் –இராமா –64-
திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் இருக்குமவராய் –இரா –60-
உறு பெரும் செல்வமும் மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் என்று அறிதர நிற்குமவர் ஆகையாலும் –இராமா -19-
அவர் திருவடிகள் ராமானுஜர் ஆகையால் –
இவரை அர்த்திக்கிறது –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்

June 16, 2025

ஸ்ரீ ராமாநுஜ ஶப்தார்த்தம்

ராம —  ராமனுக்கு; அநுஜ — பிற்பாடு உண்டான–இந்தப் பதம் ப்ரதமாசார்யனான எம்பெருமான் தொடக்கமாக ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளார் வரையிலாக ப்ரஸித்தி பெற்று விளங்கும் குருபரம்பரையிலுள்ள எல்லா ஆசார்யர்களையும் குறிக்கும்-யோகிகள் எல்லோரும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் செய்யப்படும் த்யானத்தினால்பரம ப்ரீதியை அடைகிறார்களோ, அப்படிப் பட்ட ப்ரீதி விஷயமான பரப்ரஹ்மம் ‘ராம’ என்னும் பதத்தினால் சொல்லப் படுகின்றது. இந்தப் பரமாத்மா திருவனந்தாழ்வானான திருப்பள்ளி மெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேண்டுமென்று ஸஹ்ருதயனாய் இருந்தபோதிலும் அந்த எண்ணம் கைகூடாமல் உலகத்தவர் உண்டியே உடையே உகந்து ஓடித் திரிந்து நின்றமையினால் அவன் ஏகாகியைப் பொலவே ஸந்தோஷமில்லாதவனாய் இருக்கும்படியாயிற்று. அந்த நிலைமையை மாற்றி “திருத்திப் பணிகொள்வான்” என்றபடி ஜனங்களைத் திருத்தி, ப்ரபத்தியாகிற உபாயத்தின் ப்ரபாவத்தை உலகெங்கும் பரப்பினான்.

ராம: என்பது ஆத்மாராமனான எம்பெருமானைக் குறிக்கிறது. அதாவது தன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபகுண விக்ரஹாதிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதினால் பரம ப்ரீதனாய் இருப்பவன் பரமாத்மா. அப்படிப்பட்ட பரமாத்மாவை இல்லையென்றும், நிரவயவன் என்றும், நிர்குணன் என்றும் கூறும் பிறமத வாதங்களைக் கண்டித்து பரமாத்மா ஸகல கல்யாண குணங்களை உடையவன் என்று ஶததூஷணீ முதலான ஶ்ரீஸூக்திகளில் ஸ்தாபித்து அவனுடைய தயூக்குப் பாத்திரமானார் ஸ்வாமி.

லக்ஷ்மியின் ஸம்பந்தம் பெற்றவர் எம்பெருமான். அதனாலேயே அவனுக்கு ஏற்றம். பரப்ரஹ்மம் யார் என்று நிர்ணயம் செய்ய ஆரம்பித்தவர்கள் லக்ஷ்மியைத் திருமார்பில் தரித்திருப்பவன் என்று அறுதியிட்டார்கள்

ராமா என்பது பூமிப்பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை ஸ்ரீபூமிஸ்துதியிலும், ஸ்ரீரஹஸ்யஶிகாமணியிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி

ராமா என்பது நீளாப்பிராட்டியையும் குறிப்பிடுகிறது. இவளுடைய ப்ரபாவத்தை திருமகள், மண்மகள் நீளை முதலா எல்லாத் தேவியரும் தன்னுடனே திகழ்ந்து நிற்க (ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யம்) என்றும்,நிஶாமயது மாம் நீளா யத்போகபடலௌர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்யபக்ததோஷேஷ்வதர்ஶனம்
   -(தயா ஶதகம் 8)

 பெரியபிராட்டியாருடைய ஸ்வபாவம் அவதார தசைகளில்  (பாபாநாம் வா ஶுபாநாம் வா) (ஸ்ரீமத் ராமாயணம்) என்று பேசப் பட்டுள்ளது.-க்ஷமையே உருவம் கொண்ட ஸ்ரீபூமிப் பிராட்டியின் பெருமை-வந்தே வ்ருஷகிரிஶஸ்ய மஹிஷீம் விஶ்வதாரிணீம்|
தத்க்ருபாப்ரதிகாதாநாம் க்ஷமயா வாரணம் யயா||
-தயா ஶதகம் 7-நீளாப்பிராட்டியோ தன்னுடைய பாமாலைகளினாலும் பூமாலைகளினாலும் பகவானை மயக்கி தனக்கு அடிமையாக்கிக் கொண்டு பக்தர்களின் தோஷத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறாள். இதையே ஸ்ரீஸஹஸ்ரநாமத்தில்  அவிஜ்ஞாதா என்று சொல்லப் பட்டுள்ளது. மேலும் ஸ்ரீகோதாஸ்துதி முதலியவைகளில் இவளுடைய பெருமைகளையும் இவளுடைய ஸம்பந்தத்தால் இவளுடைய திருத்தகப்பனார் மஹத்தரர் என்ற பட்டம் பெற்றார் என்று அநுபவிக்கப் படுகிறது.

 ராம என்பது பரமபதத்திலிருக்கும் எம்பெருமானைக் குறித்தும் அநுஜ என்பது லோகரக்ஷணார்த்தமாக செய்தருளிய விபவாவதாரங்களைப் பொதுவில் குறிக்கிறதாகப்படுகிறது.

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீபரதாழ்வானைக் குறிக்கிறது.-பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் | யதுபஜ்ஞமஶேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதிதோ ராகவபாதுகா  ப்ரபாவ:||(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)-பகவத் கைங்கர்யமே நமக்கு பரம ப்ராப்யம் என்றும், பகவானுடைய ஸ்ரீபாதுகைகளின் பெருமைகளை உலகுக்குக் காட்டினபடியாலும் பாதுகா ஆராதனத்தை அநுஷ்டித்துக் காட்டினபடியாலும் ராமாநுஜ என்பது பரதாழ்வானைக் குறிப்பதாக ஆகிறது.

 ராமாநுஜ  என்பது இளைய பெருமாளைக் குறிக்கிறது. ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யத்தையும் பகவானுக்குச் செய்வதே நமது கடமை. இப்படிப்பட்ட ஶேஷத்வ நிலைமை இல்லாதபோது ஸ்வரூபம் முடிந்ததாகப் பாவிக்க வேண்டும்

ராமாநுஜ  என்னும் பதம் சத்ருக்னாழ்வானைக் குறிக்கிறது. இவர் அநுஷ்டித்துக் காட்டிய பாகவத தாஸ்யமே நமக்கு ப்ரதானம் என்று கொண்டு அதையே ஸாரஶாஸ்திரத்தில் மத்திமமான பதினாறாவது புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில் நிரூபித்தருளியபடி.

ராமாநுஜ  என்கிற பதம் கீதாசார்யனைக் குறிக்கிறது.தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல் மாதுற்ற மாயன் மருவ இக்கீதையின் வண்பொருளைக் கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான் காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே-என்று ஸ்ரீகீதை பக்தி யோகம் செய்பவர்களுக்கும் ஶரணாகதி நிஷ்டர்களுக்கும் ப்ரயோஜநமாகும் என்று நிரூபித்தருளி கீதையினுடைய ஸாரமான ஸமுதாயார்த்தமாகும்

ராமாநுஜ என்ற பதம் பரதத்வ வாமனனாய் அவதரித்து த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்த உத்தமமான அவதாரத்தைக் குறிக்கிறது.

ராமௌ என்ற பதம் பெருமாளையும் பிராட்டியையும் குறிக்கிறது. அநுஜ என்ற பதம் விஷ்வக்ஸேநரைக் குறிப்பிடுகிறது. இவர் அந்த திவ்ய தம்பதிகளின் நியமனத்தின்பேரில் அவதாரம் செய்து, விஶிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவர்.இவருக்கு ஸேனைநாதன், ஸேனை முதலியார் என்ற திருநாமங்கள் உண்டு. இவருடைய ப்ரபாவத்தை ஸ்வாமி, குருபரம்பரை அநுஸந்தானப் பாசுரத்தில் பெரிய பிராட்டிக்கு அடுத்தபடியாக ஸேனைநாதன் என்று அருளிச் செய்துள்ளபடி.-வந்தே வைகுண்டஸேநாந்யம் தேவம் ஸூத்ரவதீ ஸகம் |
யத்வேத்ரஶிரவரஸ்யபந்தே விஸ்வமேதத்வய வஸ்திதம் ||
  ( யதிராஜஸப்ததி)

தநுஜமதநே விஷ்வக்ஸேநோ ஹரேஸ்ததநந்யதீ:
அசேஷவிக்ரசமநமநீகேச்வரமாச்ரயே|
ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத்த இவோத்திதம் || 
( தயாஶதகம்)

ராமாநுஜ என்கிற பதம் திவ்யதம்பதிகளுக்குப் பிறகு மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைக் குறிக்கிறது.-அந்த பகவான் கலியுகத்தில் ஶரணாகதி தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு தன்னுடைய அம்ஶமாக தன்னுடைய ஸங்கல்ப விஶேஷத்தாலே பத்து ஆழ்வார்களை அவதாரம் செய்வித்து த்ராவிட வேதத்தை (திவ்யப்ரபந்தம்) வெளிப்படுத்தி மற்றுமோர் அபிநவ தஶாவதாரத்தை நிகழ்த்திக் காட்டினான். ஆழ்வார்கள் வாயிலாக வந்த அவை நித்யமானது என்பதை ஸ்வாமி தேஶிகன் ஸம்ஸ்க்ருத வேதத்தில் புரியாத அர்த்தங்களை திராவிட வேதமான திவ்யப்ரபந்தத்தை ஓதி தெளியாத மறைநிலங்களை தெளிகின்றோமே என்று அருளிச் செய்துள்ளபடி.-எத்தனை வேதங்கள் எம்பெருமானைப் பின்தொடர்ந்து வந்தாலும் ‘தேடியோடும் செல்வன்’ என்றபடியும் “மெய் நின்று கேட்டருள்வாய்” என்றபடியும் எம்பெருமான் பின்தொடர்ந்து செவிசாய்ப்பதால் ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளின் உயர்வைக் காட்டுகிறது.

ராமாநுஜ என்ற பதம் முதலாழ்வார் மூவரைக் குறிப்பிடுகின்றது. பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளால் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) அநுபவித்தவர்கள். ஆகையால் இவர்களை இன்கவி பாடும் பரம கவிகளால் (திருவாய்மொழி) என்றும் செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி) என்றும் கொண்டாடப் படுகிறார்கள்.-பாட்டுக்குரிய பழையவர் (அதிகாரஸங்க்ரஹம்) என்ற பாசுரத்தில் தமிழ்ப்பல்லாண்டு இசையுடன் பாடும் ஸூரிகளின் அவதாரம் என்றும், “நாட்டுக்கு இருள்செக, நான்மறையந்தி நடைவிளங்க, வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் மெய்விளக்கு” என்னும்படியான தீபத்தை ஏற்றி பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தார்கள்.

ராமாநுஜ என்கிற பதம் திருமழிசை ஆழ்வாரையும் குறிக்கிறது. இவர் சக்கரத்தாழ்வானுடைய அவதாரம் என்பதை “மழிசை வந்த சோதி” (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்) என்று காண்பித்துள்ளார்.

ராமாநுஜ என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவருக்கு ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் அந்வயம் உண்டு.த்³ரமிடோ³பநிஷத் த்³ரஷ்டுரஸ்ய யாதா²த்ம்யமத்³பு⁴தம்|ஸம்யக் ஶ்ருதவதாம் நாத்ர ஶங்கநீய உபப்லவ:||
தே³வகு³ஹ்யோஷு சாந்யேஷு ஹேதுர்தே³வி நிரர்த² இத்யாதி³
ந்யாயத்³ருஷ்டயா ச தோஷ்டவ்யமிஹ ஸூரிபி
⁴:(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)அத² பராஶரப்ரப³ந்தா⁴த³பி வேதா³ந்தரஹஸ்ய வைஶத்³யாதிஶயஹேதுபூ⁴தை: ஸத்³ய: பரமாத்மசித்த ரஞ்ஜகதமை: ஸர்வோபஜீவ்யை: உபப்³ருஹ்மணை: மது⁴ரகவிப்ரப்⁴ருதி ஸம்ப்ரதா³யபரம்பரயா நாத²முநேரபி உபகர்தாரம் கால விப்ரகர்ஷேபி பரமபுருஷஸங்கல்பாத்  கதா³சித்  ப்ராது³ர்பூ⁴ய ஸாக்ஷாத³பி ஸர்வோபநிஷத் ஸாரோபதே³ஷ்டா²ரம் பராங்குஶமுநிம்(ஸ்ரீ ஸ்தோத்ர பாஷ்யம்)த்³ரமிடோ³பநிஷந்நிவேஶஶூந்யாநபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யாத் |
த்⁴ருவமாவிஶதிஸ்ம பாது³காத்மா ஶட²கோப: ஸ்வயமேவ மாநநீய:||
 (ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்)பா⁴ஷா கீ³தி: ப்ரஶஸ்தா ப⁴க³வதி வசநாத் ராஜவச்வோபசாராத்”  (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)நித்யம் ஜாதா ஶட²ரிபுதநோ: நிஷ்பதந்தி முகா²த்தே| ப்ராசீநாநாம்ஶ்ருதிபரிஷதா³ம் பாது³கேபூர்வக³ண்யா(ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்) தாம்ரவர்ணீதடக³தஶட²ஜித் த்³ருஷ்ட ஸர்வீய ஶாகா² (ஸ்ரீத்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளி) ஆம்நாயாநாம் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்³ருஷ்டவந்தம்    (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)அகி²லத்³ராமிட³ப்³ரஹ்மத³ர்ஶீ
 (ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி)வகுளத⁴ரதநுஸ்த்வம்ஸம்ஹிதாம் யாமபஶ்ய: (ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்)வகுளத⁴ரமார்ஷித்³ருஷ்டே த்³ரமிட³ நிக³மே  (ஸ்ரீஸச்சரித்ர ரக்ஷை)ஶ்ராவ்யவேதா³த்  (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஶட²ஜிது³பசிஷத்³து³க்³த⁴ஸிந்து⁴ம்   (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)வேதா³நாக³ஸ்த்ய பா⁴ஷா ப³புஷ உத³த⁴ரச்ச்²ரேயஸே தே³ஹிநாம் ய:  (தாத்பர்யரத்னாவளி)ஶட²மத²நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ⁴மீ வகுளத⁴ரமஹர்ஷித்³ருஷ்ட விஶ்வஜநீநோபநிஷத் (ஸ்ரீதாத்பர்யரத்னாவளி)ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒருவரே என்று நிரூபித்தருளியுள்ளார்

ராமாநுஜ என்கிற பதம் ஸ்ரீமதுரகவிகளைக் குறிக்கிறது.

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீகுலஶேகரப் பெருமாளைக் குறிக்கிறது.

ராமாநுஜ பதம் பெரியாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய பிரபாவத்தை கல்பஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் என்றும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்), இந்தரூப விசேஷத்தையுடைய பரம புருஷனே ஸர்வ வேத ப்ரதிபாத்யமான பரதத்வம் என்னுமிடத்தை ஸர்வ வேத ஸாரபூத ப்ரணவ ப்ரதிபாத்யதையாலே (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) , மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழு வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் (பெரியாழ்வார் திருமொழி) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தார்.

ராமாநுஜ என்ற பதம் நீளாப்பிராட்டியின் அபராவதாரமான ஸ்ரீ ஆண்டாளைக் குறிக்கிறது. இவளுடைய ப்ரபாவத்தை “ஸ்ரீகோதா ஸ்துதி”யில் நிரூபித்து அருளியுள்ளார்–ஆசார்ய நிஷ்டை-வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே(நாச்சியார் திருமொழி)

ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்)

ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.-தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.

ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது.

ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது.

ராமாநுஜ பதம் ஸ்ரீமந்நாதமுனிகளைக் குறிக்கிறது. இவர் பெருமையை நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்-ஸ்ரீதத்வமுக்தா கலாபம்)-தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே. (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம்|
யஸ்ய நைகாமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம்||
 (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீ உய்யக்கொண்டாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபாவத்தைக் குறிப்பிடும்போது நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் (ஸ்ரீகுருபரம்பரா ஸாரம்)-மஸ்யாம்யரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம்| சுத்தசத்வமயம் சௌரேரவதாரமிவாபரம் || (ஸ்ரீயதிராஜ ஸப்ததி)-பகவானுடைய அவதாரங்களான மூன்று ராமர்களுடன் ஸமமாக பாவித்து நான்காவது ராமனாய் அருளிச் செய்துள்ளார்.-ரக்ஷிதத்வம் து ராமார்யை: த்ர்ய்யந்தார்த ஹி ஸூசிதம்-ஸ்ரீதத்வடீகை

ராமாநுஜ என்ற பதம் பெரிய முதலியார் எனப்படும் ஸ்ரீஆளவந்தாரைக் குறிக்கிறது.ஆளவந்தார் தாம் நாதமுனிகளை முன்னிட்டு ஸ்தோத்ரம் பண்ணித்தும், ஶரணம் புக்கதுவும், தம்முடைய ஆசார்யருக்கு இது ப்ரியதமம் என்றும், தமக்கு ஆசார்யவத்தை முதலான ஸகல ஸம்பத்துக்களும் நாதமுனி வம்சத்தில் பிறவியென்று தோற்றுகைக்காகவும், ஆசார்ய விஷயத்தில் போலே பரமாசார்ய விஷயத்திலும் க்ருதஜ்ஞதாதிகள் வேணுமென்கைக்காகவும் என்றறியப் படும் 

ராமாநுஜ என்கிற பதம் பெரிய நம்பிகளைக் குறிக்கிறது. “ஆளவந்தாருடைய நியோகத்தாலே ஸ்ரீபாஷ்யகாரரை அங்கீகரித்த பூர்ணரான பெரிய நம்பி இவரைத் தமக்கு ஸப்ரஹ்மசாரிகளான திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே அர்த்த ஶிக்ஷை பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும், நியோகத்தலும் ஶிஷ்யபூதரை பஹுகமாகத் திருத்தவேண்டும் என்கிற அபிஸந்தியாலே உபபந்நம் (ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தி)

ராமாநுஜ என்கிற பதம் தர்ஶந ஸ்தாபகரான எம்பெருமானாரைக் குறிக்கிறது-ஸ்ரீபாஷ்யகார பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புத: (ஸ்ரீதேஶிக மங்களம்)-ஒரு மலையில் நின்றும் ஒரு மலையிலே தாவும் ஸிம்ம ஶரீரத்தில் ஜந்துக்களைப்போல பாஷ்யகாரர் ஸம்ஸார லங்கநம் பண்ண அவரோடுண்டான குடல் துவக்கத்தாலே நாம் உத்தீர்ணராவுதோம்’ (ரஹஸ்யத்ரயஸாரம்) என்ற முதலியாண்டான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை அறியாமல் எம்பெருமானார் அனுஷ்டித்த ஶரணாகதியே போதும், வேறொரு உபாயம் வேண்டாம் என்ற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானமாக ஆழ்வான் அந்திம தஶையிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவர் அப்போது ஆழ்வான் செவியிலே த்வயத்தை அருளிச் செய்ய, இப்பேறு நமக்கு வருகை அரிது, நாம் என்ன செய்யக்கடவோம், என்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்கள் அபிப்பிராயத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ப்ரக்ருதி அறியீர்களோ, இவ்வவஸ்தையில் இவருக்கு இது கர்ப்பூரத்தையும் கண்ட சர்க்கரையையும் இட்ட மாத்திரமன்றோ, நாம் உபாயத்திற்குப் பரிகரமாகச் செய்தோமல்லோம் என்றருளிச்செய்ய, முதலிகள் தெளிந்து நிர்ப்பரரானார்கள்” என்று ஆழ்வான் பாசுரத்திற்கு தாத்பர்யத்தை வெளியிட்டருளினார். எம்பெருமானார் அனுஷ்டித்துக் காட்டிய உபாயம் எல்லாம் மோக்ஷத்திற்கு ஸாதகமாகாது என்று சிலர் கூற அதற்கு பெரியோர்களின் வார்த்தைகளே நமக்கு ப்ரமாணம் அனுஷ்டித்த சிற்சில பாகங்கள் ப்ரமாணமாகும் ईश्वराणां वचस्सत्यं
 ஈஶ்வராணாம் வசஸ்ஸத்யம் (ஸ்ரீமத் பாகவதம்) என்றபடி அவர்களுடைய வர்ணாஶ்ரம பேதமில்லாமல் (விரோதமில்லாமல்) உள்ள அம்ஶங்களே ப்ரமாணமாகும். அநுஷ்டானமும் ஶாஸ்த்ர விரோதமாக இருக்கவில்லை என்பதை திருவுள்ளம் கொண்டு கர்மாநுஷ்டானத்தில் மிகவும் விழிப்புடன் இருந்தார் என்பதை ‘பாஷ்யகாரர் அந்திம தசையிலும் வருந்தி எழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்’ ‘எம்பெருமானுள்ளிட்ட பரமாசார்யர்களுடைய அந்திம திவஸாவதியான அநுஷ்டானங்களை (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்) 
  என்று அருளிச் செய்துள்ளார். மேலும் ஸ்ரீபரமபத ஸோபானத்தில் எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே என்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில்  இதி யதிராஜமஹாநஸபரிமள பரிவாஹ வாஸிதாம் என்றும் அருளிச் செய்துள்ளார்.

ராமாநுஜ என்கிற பதம் திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் குறிக்கிறது. இவர் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஜ்ஞாநபுத்ரர் என்று வடுக நம்பியால் கொண்டாடப்பட்டவர். இவர் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற வ்யாக்யானம் செய்தருளியுள்ளார்

ராமாநுஜ என்ற பதம் ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்கிற திருநாமமுடைய எங்களாழ்வானைக் குறிக்கிறது. இவர் வேதார்த்த ஸங்க்ரஹத்திற்கு வ்யாக்யாநமிட்டுள்ளார்-உக்தம் ச ஸ்ரீவிஷ்ணுசித்தை: ச்யேந கபோதீய கபோதோபாக்யாந காகவிபீஷண க்ஷத்ரபந்துமுசுகுந்த கஜேந்த்ரத்ரௌபதீ தக்ஷக சதமகாதிஷு மோக்ஷார்ததயா க்ஷணகாலநிர்வர்த்ய ப்ரபதநார்த தர்சநாத் அபதிராணாம் தத்ர முக்யத்வம் இதி (ஸ்ரீநிக்ஷேபரக்ஷை),

ராமாநுஜ என்கிற பதம் நடாதூர் அம்மாளைக் குறிக்கிறது.-ஸ்ரீமத்பயாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம் (அதிகரண ஸாராவளி)-வ்யாதாநீத்  வேங்கடேசோ வரதகுரும் க்ருபா லம்பிதோத்தாம் பூமா (ஸ்ரீ தத்வமுக்தாகலாபம்
)ப்ரணம்ய வரதாசார்ய (ஸ்ரீதத்வடீகை)

ராமாநுஜ என்கிற பதம் வஸிஷ்டரையும், ஸாந்திபிநி ரிஷியையும் குறிக்கிறது.-பத்யு: ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாதகோடீரயோ: ஸம்பந்தேந ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ்ததாந்யாந் குரூந்  (ந்யாயபரிஶுத்தி) என்றும், மேலும் பெரிய நம்பிகளையும், ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளாரையும் குறிக்கிறது.  இவருடைய பெருமையை அப்புள்ளார் அருளிச் செய்த விரகு, கிடாம்பி அப்புள்ளார் அருளிச்செய்தார், கிடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாய்ப் போலே பழக்குவிக்க, அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்),ஶ்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி தத(ஸ்ரீதத்வமுக்தாகலாபம்)ஸ்ரீமத்பயாம்ராமாநுஜாப்யா(அதிகரணசாராவளி)அஶ்ரௌஷம்  சேஷகலபாதஹமபி வீதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத (அதிகரணஸாராவளி)நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயிநே (வாழித்திருநாமம்)வந்தே ஆத்ரேய ராமாநுஜ குருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம் (அப்புள்ளார் தனியன்)ததூக்தா ….. மம குருபி: வாதிஹம்ஸாம்புவாஹை: (அதிகரண ஸாராவளி)

ராமாநுஜ என்கிற பதம் எம்பெருமானாருக்கு திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த வேதாந்தோயநர் என்ற கிடாம்பி ஆச்சானைக் குறிக்கிறது. இவர் வழியில் வந்தவர் எல்லோருக்கும் பயன்பெறுமாறு முப்பத்து நான்கு ரஹஸ்யங்களாக அருளிச் செய்துள்ளார் என்றபடி “ஆச்சான் பக்கலிலே கேட்டு” (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்” (ஸ்ரீபரமபதஸோபாநம்)இதி யதிராஜமஹாநஸ பரிமளபரிவாஹ வாஸிதாம் பிபத (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம் (ஸ்ரீஶரணாகதி தீபிகை)யோ மஹாநஸிகோ மஹாந் யதிபதே நீதச்ச தத்பௌத்ரஜாந் ஆசார்யாந் (ஸ்ரீந்யாஸதிலகம்)

ராமாநுஜ என்கிற பதம் திருமலையாண்டானைக் குறிக்கிறது. திருமலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்  (ரஹஸ்யத்ரயஸாரம்)

மேலும் ஆசார்ய பரம்பரையில் எம்பெருமானாருக்கு ரஹஸ்யார்த்தங்கள் உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பிகளும் ராமாயணார்த்த விசேஷங்களை உபதேசித்த பெரியதிருமலை நம்பிகளும் இவர்களுடைய ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யஸாரம், ஸ்ரீஸம்ப்ரதாய பரிஶுத்தி முதலியவற்றில் நிரூபித்திருப்பதால் அவர்களுடைய தயைக்குப் பாத்ரமானார் ஸ்வாமி என்றபடி.

                                                                            

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் கவசம்-ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

January 27, 2025
  1. ஸ்ரீபெரும்புதூர் ஆளும் அரசே திருவடி அழகே தெள்ளிய துறவே
    மாபெரும் தருவாம் வைணவம் அதனை மண்ணில் வளர்த்த ராமானுஜனே
    2.உபய விபூதி செல்வமனைத்தும் உத்தமன் அரங்கன் அள்ளி வழங்க அபயம் அளிக்க அடியவர் மீது அருள் விழி காட்டும் ராமானுஜனே
    3.ஆம் இவன் முதல்வன் என்றொரு வார்த்தை ஆளவந்தாரின் திருவாய் மலர தாம் முதல்வன் என வைணவம் காத்து தரணியை ஆளும் ராமானுஜனே
    4.தன் குருவாகிய பெரிய நம்பியின் அன்பினை ஏற்ற சீடனும் நீயே தன் குருவும் தன் குருவாய் கண்ட தன்னிகரில்லா ராமானுஜனே
    5.திருக்கோட்டியூரின் நம்பியின் வாயால் திருமந்திரத்தின் பொருளை அறிந்து பெரு உலகத்தின் செவியில் உரைத்து பெருமை கண்ட ராமானுஜனே
    6.ஆண்டாண் அரையர் திருமலை நம்பி ஆசிரியர் குழு யாவும் உகந்து வேண்டிய ஞானம் யாவும் அளித்து வேண்டிய குருவே ராமானுஜனே
  1. அஞ்சலி செய்து அருகில் அழைத்து அன்புடன் எங்கள் துயர்கள் அழித்து அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும் அழகே யதியே வருக வருக!
  2. பரமபதத்தில் மாலவனுடனே பாக்கியம் கொண்டு நித்தமும் வாழ்வார் அமரர் அனைவரின் தலைவனும் ஆகிய அற்புத ராமானுஜனே வருக
    3.நரகம் அழுந்தா நற்கதி அருளும் நானிலமெங்கும் நன்மைகள் புரியும் உரமென அமையும் உயரிய அடிகள் உடையவன் நீயே வருக! வருக
    4.சடகோபனுக்கு முன்னே எழுந்த சத்திய உருவே ராமாநுஜனே கடலாம் பிறவியைக் கடந்து செல்ல கருணை காட்டிட வருக !வருக!
  3. தாமரை மலரால் தாங்கிய மார்பை தாங்கிய ஹரியை பாடிய முனியின் மாமலர் விந்தம் மாண்புடன் பணிந்த வடிவே ராமானுஜனே வருக
  4. காவிரி அழகன் நம்பெருமாளை கண்களில் வைத்து நெஞ்சில் நிறுத்தி பாவிரி கலியன் திருவடிபணியும் பரமா ராமானுஜனே வருக.

1.திசைகளில் ஒளிரும் கமலச்செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும் இசைவுடன் அதிலே இணைந்து அமைந்த இனிமை கூட்டிடும் இடது கழலும்

  1. இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற் கழலும் திடமெனஅழகை எல்லாம் சேர்த்த திவ்வியமான கணுக்கால் எழிலும்
  2. அதிசய ஒளி முகம் சுருளாய் இறங்கும் அழகைப் போலிரும் முழந்தாள்களும் புதிரென அமையும் திருத்தொடைகளும் பொன்னரை நாணைப் பூண்ட அழகும்
  3. அந்தி நிறத்தில் அமையும் ஆடையும் அஞ்சலி செய்யும் தடைக்கைகளும் உந்தி மலரும் உயரிய கரமும் உடன் இணைந்திடும் கணுக்கைகளும்
  4. தங்க வளையலை தாங்கிய அழகும் தானாய் மடிந்த முழங்கைகளும் அங்கம் விரிந்து நீண்டு அமைந்த அழகிய புஜங்கள் ஆடும் அழகும்
  5. பள பளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும் வளமாய் பிரிந்த முந்நூல் அழகும் வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்
  1. வலம்புரி சங்கின் சுழி போல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும் உலகை மயக்கும் மந்திர முகமும் உரையை வழங்கும் திருப்பவளமும்
  2. மந்தஹாசமும் ஸ்படிக மயத்தில் மண்டலம் போன்றிரும் கபோலங்களும் செங்கணகத்தில் செழித்து வளர்ந்து செவிமெல் அமைந்த கர்ணபாசமும்
  3. கொடி மூக்கழகும் கோலத் தாமரை குடி கொண்டாலும் இரு நயனங்களும் வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்
  4. சந்திர கிரணம் ஒன்று கலந்து சரியும் அழகாய் தாமரை நாமமும் இந்திரை மலராள் திருவடி போலே இலங்கி வரும் ஸ்ரீ சூர்ணமும்
  5. உயர்ந்து வளர்ந்த திருமுடி அழகும் உறைந்து தழைந்த திருக்கேசமும் நயந்து சுற்றிய நல்ல குழலினை நன்றாய் சுற்றிய சிகாபந்தமும்
  6. பின் எடுத்ததோர் பிடரியின் அழகும் பிரிந்து கூடிய முக்கோல் அழகும் கண்ணுடன் பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்
  7. காணக் காண திகட்டிடாது கவினாய்த் தோன்றும் ராமாநுஜனே தேனாம் உன் அடி சரணம் அடைந்தோம் தினமும் எம்மை காத்தருள் என்றே
  1. பெரியோய் உந்தன் திருவடி நிலைகள் பெரிய மனதுடன் எங்களை காக்க ஹரியின் அணையாய் அமையும் வடிவே அடியார் கால்களை அன்புடன் காக்க
  2. பாஷ்யகாரரே உங்கள் பரிவு பாதநிலைகளை பதமாய் காக்க பரமபதத்தை அருளும் முனியே பணியும் இடையை பரிந்து காக்க
  3. வயிற்றுப் பகுதியை ராமானுஜனே வண்ணத் திருவருள் வலிந்து காக்க அயர்வே அறியா இளையாழ்வாரே அன்புடன் மார்பு பகுதியை காக்க
  4. எம்பெருமானார் என்றும் துறவே எங்கள் முதுகுப் பகுதியை காக்க உம்பர்கள் போற்றும் உபய வேதமே உன்னை காணும் கண்களை காக்க
  5. பூதப் புரியிலே வாழும் அரசே புகழை கேட்கும் செவிகளைக் காக்க யாதுமாகிய எதிராஜா நீ எங்கள் நாசியை என்றும் காக்க
  1. உன்னை காணும் வதனம் தன்னை உயர்வே யதீந்த்ர முனியே காக்க உன்னைப் பேசும் வாயை நாவை உணர்வே லக்ஷ்மண முனியே காக்க
  2. பொன்னடி வணங்கும் சென்னிப்பகுதியை பூமன்னு மார்பன்அடியே காக்க உன்னிரு கண்ணின் கடைவிழியாலே உள்ளப்பிணிகள் வராது காக்க
  3. அரவின் வடிவே விஷங்கள்எதுவும் அடியார் பக்கம் வராது காக்க வரமாய் அருளும் உனது கரங்கள் வாழ்வில் பிணிகள் வராது காக்க
  4. மஞ்சனம் ஆடும் மறைமாமுனியே மண்டிய தோஷம் அகற்றிக் காக்க தஞ்சமளிக்கும் ராமானுஜனே சாபம் விலக்கி சதிருடன் காக்க
  5. முப்புரி அணிந்த முக்கோல் முனியே முப்பொழுதும் எனை முனைந்து காக்க அப்பனுக்கு சங்காழி அளித்தாய் அல்லல் ஏதும் வராது காக்க
  6. காக்க கனிவுடன் காக்க காக்க காக்க காரேய் கருணை முனியே காக்க காக்க பூதூர் கோனே காக்க காக்க கமலப் பதத்தால் – கமல பதத்தால்
  7. வேண்டிய எம்மை ஆண்டருள் செய்வாய் வேதச் செறிவாய் யோகம் புரிவாய் நீண்ட கரத்தால் நாளும் அருள்வாய் நின் திருவடியால் ஞானம் தருவாய்
  8. ராமானுஜனே என்னாரமுதே ராமானுஜனே என் உறுதுணையே ராமானுஜனே என் மாநிதியே ராமானுஜனே என் பெருந்தகையே
  9. சரணம் சரணம் ராமானுஜனே சரணம் சரணம் உனது மலர்த்தாள்சரணம் சரணம் ஸ்ரீ எதிராஜா சரணம் ஸ்ரீபெரும்பூதூர் முனியே

———————

ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.

தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்

மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.

ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே

வாஸரேஸ்வர:

என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித:

என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.

ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:

என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.

ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:

யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்

ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.

யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.

இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:

சூர்ய மங்கள ஸ்லோகம் !

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !

சூரிய பகவான் !

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் அஷ்டோத்திர சத நாமாவளி–

April 1, 2024

ஸ்ரீ ராமானுஜர் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ராமாநுஜாய நம:

ஓம் புஷ்கராக்ஷõய நம:

ஓம் யதீந்த்ராய நம:

ஓம் கருணாகராய நம:

ஓம் காந்திமத்யாத்மஜாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:

ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:

ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வஞாய நம:

ஓம் ஸர்வஞாய நம:

ஓம் ஸஜ்ஜனப்ரியாய நம:–10-

ஓம் நாராயணக்ருபா பாத்ராய நம:

ஓம் ஸ்ரீ பூதபுரநாயகாய நம:

ஓம் அநகாய நம:

ஓம் பக்தமந்தாராய நம:

ஓம் கேசவாநந்தவர்த்தநாய நம:

ஓம் காஞ்சீபூர்ணப்ரியஸகாய நம:

ஓம் ப்ரணதார்த்தி வினாசகாய நம:

ஓம் புண்ய ஸங்கீர்த்தநாய நம:

ஓம் புண்யாய நம:

ஓம் ப்ரம்மராக்ஷஸ மோசகாய நம:–20

ஓம் யாதவ அபாதித அபார்த்த வ்ருக்ஷச்சேத குடாரகாய நம:

ஓம் அமோகாய நம:

ஓம் லக்ஷ்மண முநயே நம:

ஓம் சாரதா சோகநாசனாய நம:

ஓம் நிரந்தரஜநாஞானநிர்மோசன விசக்ஷணாய நம:

ஓம் வேதாந்தத்வய ஸாரக்ஞாய நம:

ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம:

ஓம் பரேங்கிதஞாய நம:

ஓம் நீதிஞாய நம:

ஓம் யாமுனாங்குலி மோசகாய நம:–30-

ஓம் தேவராஜ க்ருபாலப்த ஷட்வாக்யார்த்த மஹோததயே நம:

ஓம் பூர்ணார்யலப்த ஸந்மன்த்ராய நம:

ஓம் சௌரி பாதாப்ஜஷட்பதாய நம:

ஓம் த்ரிதண்டதாரிணே நம:

ஓம் ப்ரம்மஞாய நம:

ஓம் ப்ரம்மத்யானபராயணாய நம:

ஓம் ஸ்ரீரங்கேச கைங்கர்ய ரதாய நம:

ஓம் வீபூதித்வயதாயகாய நம:

ஓம் கோஷ்டீ பூர்ணக்ருபாலப்த மந்த்ர ராஜப்ரகாசகாய நம:

ஓம் வாரங்காநுகம்பாத்தத் ராவிடாம்நாய பாரகாய நம:–40-

ஓம் மாலா தரார்யஸுக்ஞாதத் ராவிடாம் நாயத்தவதியே நம:

ஓம் சதுஸ் ஸப்ததி சிஷ்யேட்யாய நம:

ஓம் பஞ்சாசார்ய பதாச்ரயாய நம:

ஓம் ப்ரபீதவிஷதீர்த்தாம்பு ப்ரக டீக்ருத வைபவாய நம:

ஓம் ப்ரணதார்த்தி ஹராசார்ய தத்தபிøக்ஷக போஜநாய நம:

ஓம் பவித்ரீக்ருத கூரேசாய நம:

ஓம் பாகினேய த்ரிகண்டகாய நம:

ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகாய நம:

ஓம் ஸ்ரீரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீக்ருத வைபவாய நம:

ஓம் தேவராஜார்ச்சனரதாய நம:–50-

ஓம் மூகமுத்தி ப்ரதாயகாய நம:

ஓம் யக்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாத்ரே நம:

ஓம் மந்நாதாய நம:

ஓம் தரணீதராய நம:

ஓம் வரதாசார்யஸத்பக்தாய நம:

ஓம் யக்ஞேசார்த்தி விநாசகாய நம:

ஓம் அநந்தாபீஷ்டபலதாய நம:

ஓம் விடலேசப்ரபூஜிதாய நம:

ஓம் ஸ்ரீசைலபூர்ணகருணாலப்த ராமாய ணார்த்தகாய நம:

ஓம் ப்ரபத்தி தர்மைகரதாய நம:–60-

ஓம் கோவிந்தார்யப்ரியானுஜாய நம:

ஓம் வ்யாஸ ஸூத் ரார்த்தத்வஞாய நம:

ஓம் போதாயனமதா நுகாய நம:

ஓம் ஸ்ரீ பாஷ்யாதி மஹாக்ரந்தகாரகாய நம:

ஓம் கலிநாசகாய நம:

ஓம் அத்வைத மதவிச்சேத்ரே நம:

ஓம் விசிஷ்டாத்வைத பாலகாய நம:

ஓம் குரங்க நிகரீபூர்ண மந்த்ர ரத்னோபதேச காய நம:

ஓம் வினாசிதாகில மதாய நம:

ஓம் சேஷீக்ருதரமாபதயே நம:–70-

ஓம் புத்ரீக்ருத சடாராதயே நம:

ஓம் சடஜித்ருணமோசகாய பாஷாதத்த ஹயக்ரீவாய நம:

ஓம் பாஷ்யகாராய நம:

ஓம் மஹாயசஸே நம:

ஓம் பவித்ரீக்ருத பூபாகாய நம:

ஓம் கூர்மநாத ப்ரகாச காய நம:

ஓம் ஸ்ரீவேங்கடாசலாதீச சங்கசக்ரப்ரதாயகாய நம:

ஓம் ஸ்ரீ வேங்கடேச ச்வசுராய நம:

ஓம் ஸ்ரீரமாஸக தேசிகாய நம:

ஓம் கருபாமாத்ர ப்ரஸன்னார்யாய நம:–80-

ஓம் கோபிகமோக்ஷதாயகாய நம:

ஓம் ஸமீசிநார்ய ஸச்சிஷ்ய ஸத்க்ருதாய நம:

ஓம் வைஷ்ணவப்ரியாய நம:

ஓம் க்ரிமிகண்டந்ருபத்வம்ஸிநே நம:

ஓம் ஸர்வமன்த்ர மஹோத்தயே நம:

ஓம் அங்கீக்ருதாந்த்ர பூர்ணார்யாய நம:

ஓம் ஸாலக்ராம ப்ரதிஷ்டிதாய நம:

ஓம் ஸ்ரீபக்த க்ராம பூர்ணேசாய நம:

ஓம் விஷ்ணுவர்த்தன ரக்ஷகாய நம:

ஓம் பௌததத்வாந்த ஸஹஸ்ராம் சவே நம:–90-

ஓம் சேஷரூபப்ரதர்சகாய நம:

ஓம் நகரீக்ருத வேதாத்ரயே நம:

ஓம் டில்லீச்வர ஸமர்ச்சி தாய நம:

ஓம் ஸாது லோக சிகாமணயே நம:

ஓம் ஸம்பத்புத்ர விமோசகாய நம:

ஓம் ஸம்பத் குமார ஜனகாய நம:

ஓம் ஸாதுலோக சிகாமணயே நம:

ஓம் ஸுப்ரதிஷ்டித கோவிந்தராஜாய நம:

ஓம் பூர்ண மனோரதாய நம:

ஓம் கோதாக்ரஜாய நம:-100-

ஓம் திச்விஜேத்ரே நம:

ஓம் கோதாபீஷ்டப்பூரகாய நம:

ஓம் சர்வஸம்சயவிச்சேத்ரே நம:

ஓம் விஷ்ணுலோகப்ரதாய நம:

ஓம் அவ்யாஹதமஹத் வர்த்மனே நம:

ஓம் யதிராஜாய நம:

ஓம் ஜகத்குரவே நம:

ஓம் ஸ்ரீமதேராமாநுஜாய நம:–108-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

March 8, 2024

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணுஸ் ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும்
–1-

யதிகளின் தலைவரே சரியான வழி மூலம் உமக்கு அளிக்கப்படும் என்னுடைய விண்ணப்பத்தை நீவிர் கேட்ப்பாராக

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம்
-2-

எண்ணற்ற காலங்கள் பாபங்களையே செய்து அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது
யதிராஜரே இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்த படி செய்து கொண்டே இருக்கிறேன்
இவ்விதம் இருக்கும் எனது புலன்களை உலக விஷயங்களில் இருந்து மீட்டு அருளப் பிரார்த்திக்கிறேன்

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவ அத்ர ஹித காரின் யதீந்த்ரந
–3-

யதிராஜரே நான் உம்மிடம் புத்ரன் வீடு செல்வம் முதலானவற்றைக் கேட்க்க கூடும்
ஆனால் அவற்றை விலக்கி நீவிர் எனக்கு வைராக்கியத்தை அளித்து அருள வேண்டும்
காரணம் தேவரீர் எனக்கு நன்மையையே மட்டுமே அளிக்க திரு உள்ளம் கொண்டுள்ளீர்

யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய
–4-

யதிராஜரே முக்தி அடையும் வரையில் இந்த உடலுடன் இங்கு வாழும் நான் ஒரு போதும் பகவானையே அடியார்களையோ அவமதிக்காமல் இருக்கவும் தேவரீரே அருள வேண்டும்

ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷேப அஸ்து ந சத்பி ஸஹ வாசம் உபேயுஷாம் –
-5-

லஷ்மண முனியே இந்த உடல் பிரியும் காலம் வரை அடியேன் உமது பிரபந்தங்களையே ஆராய்ந்த படி-அவற்றிலேயே கால க்ஷேபம் செய்யும் படி அருள வேண்டும்

பராங்குச முனீந்த்ராதி பரமாச்சார்ய ஸூக்தயா
ஸ்வாதந்தாம் மம ஜிஹ்வா ஸ்வத ஏவ யதீஸ்வர–
6

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது 

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த தனியன்

இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–
7-

யதிராஜரின் திருவடிகளின் மேல் வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களா அவர்கள் எம்பெருமானாருடைய திருவடிகளிலே மேலும் அதீத பக்தி யுடையவர்கள் ஆவார்கள்

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்

———–

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்ட த்ரயோஜ் ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-