Archive for the ‘Ramayannam’ Category

ஸ்ரீ ராமாயணத்தில் ஸரணாகதி-

February 11, 2026

சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான். அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி “பார்த்தன் மாமணித் தேர்விடும் பாகனாய்” நன்கமர்ந்து கீதையாம் அமுத மொழியில் அதையே பலவாறாக மொழிந்து அருளினான்.  

“வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்சந்தி” என்பது வேதவாக்யம். இதன் பொருள் “கொல்லத் தகுந்த குற்றமே செய்திருந்தாலும் அடிபணிந் தவனைக் காட்டிக் கொடுப்பதில்லை” என்கிறது மறை. இதை விளக்கவே ஸ்ரீராமகிருஷ்ண அவதாரம் தோன்றிற்று. 

சுவாமி ஸ்ரீதேசிகன் தாம் இயற்றி அருளிய ‘ஸ்ரீஅபயப்ரதான ஸாரம்’ என்ற நூலில், ”ஸ்ரீமத் ராமாயணத்தில் சரணாகதி அஞ்சுரு வாணியாய் கோர்க்கப் பெற்றது” என்கிறார். 

ஸ்ரீமத் ராமாயணமே ஒரு தேர் என்று எடுத்துக்கொண்டால் அதனுடைய சட்டங்களையெல்லாம் சேர்த்து இடையிலே ஒரு கடை ஆணி போடப்பட்டுள்ளது. அக்கடையாணிதான் “சரணாகதி” என்பது. ”சரணாகதி என்கிற ஆணியை ராமாயணத்திலிருந்து எடுத்துவிட்டால் ஸ்ரீமத் ராமாயணமாகிற தேர் – நிலைகுலைந்து விழுந்துவிடும் என்கிறார் அவர். 

ஸ்ரீபாலகாண்டத்தில் தேவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் செய்யும் சரணாகதி. அதே பாலகாண்டத்தில் ஸ்ரீதசரத சக்ரவர்த்தி, ஸ்ரீபரசுராமரிடம் செய்யும் சரணாகதி. 

ஸ்ரீஅயோத்யா காண்டத்தில் ஸ்ரீசீதா பிராட்டியின் முன்பு ஸ்ரீலக்ஷ்மணன், ஸ்ரீராமபிரானிடம் செய்யும் சரணாகதி. அதே அயோத்யா காண்டத்தில் ஸ்ரீவசிஷ்டர் முதலானோர்களை முன்னிட்டுக் கொண்டு சித்ரகூட பர்வதத்தில் ஸ்ரீபரதன், ஸ்ரீராம பிரானிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீஆரண்ய காண்டத்தில் தபோதனர்களான மகரிஷிகள் அனைவரும் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. 

அடுத்து ஸ்ரீகிஷ்கிந்தா காண்டத்தில் வானரத் தலைவனான ஸ்ரீசுக்ரீவன் ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீசுந்தர காண்டத்தில் ஸ்ரீவிபீஷணனின் மகளான திரிஜடை ஸ்ரீசீதாபிராட்டியிடம் செய்த சரணாகதி. 

ஸ்ரீயுத்த காண்டத்தில் ஸ்ரீவிபீஷணன், ஸ்ரீராமபிரானிடம் செய்த சரணாகதி. அதே யுத்த காண்டத்தில் ஸ்ரீராமன், சமுத்ரராஜனிடம் செய்த சரணாகதி. ஸ்ரீஉத்தர காண்டத்தில் தேவர்கள், திருப்பாற்கடலில் ஸ்ரீமந் நாராயணனிடம் செய்த சரணாகதி. 

இப்படி ஸ்ரீமத் ராமாயணத்தில் காண்டம் தோறும் சரணாகதி அழுத்தம், திருத்தமாகப் பேசப்பட்டுள்ளதை நன்கு கவனிக்க வேண்டும். அதனால்தான் ஸ்ரீமத் ராமாயணத்திற்கு ”ஸ்ரீசரணாகதி சாஸ்த்திரம்” என்றே பெயர் அமைந்தது. 

ஒரு பெரும் சபையில் பண்டிதர்கள் பலர் அமர்ந்திருந்தார்கள். அதில் சில பேர் தர்க்கம் படித்தவர்கள். சிலர் வ்யாகரணம் படித்தவர்கள். சில பேர் மீமாம்ஸா சாஸ்த்திரம் படித்தவர்கள். இவர்களுக்கிடையில் ஒருவர் வந்து அமர்ந்தார். இவரைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஆச்சர்யம் ஏற்பட்டது. அவர்கள் இவரிடம், “கஸ்மிந் சாஸ்த்ரே ப்ரவேசோஸ்தி?” – ‘நீங்கள் எந்த சாஸ்த்திரத்தில் வல்லுனர்?’ என்று கேட்டார்கள். 

அதற்கு அவர், “சரணாகதி சாஸ்த்ரே ” – சரணாகதி சாஸ்த்திரத்தில் என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் அத்துணை சாஸ்த்திர வல்லுனர்களும் திகைத்தனர். தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை என்ற சாஸ்திரங்கள் உலகில் புகழ்பெற்றவைகள். ஆனால் ‘நீங்கள் சொல்லும் சரணாகதி சாஸ்த்திரம் என்பதை நாங்கள் கேள்விப் பட்டதே இல்லையே!’ என்றனர். 

அப்போதுதான் இந்தப் புதுவித்வான், “இது தெரியாதா உங்களுக்கு? மற்ற சாஸ்திரங்கள் கற்று பிரயோஜனமில்லையே! ”சரணாகதி சாஸ்த்திரம்” தெரியவில்லை என்றால் மற்றைய சாஸ்த்திரங்கள் இருந்தும் பயனில்லை. எல்லா சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தாலும், ராமாயணம் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை என்பது இதன் மூலம் காட்டப் பட்டது.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
‘சென்மமும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்’

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

அறந்தலை நிறுத்தி வேதமருள்சுரந் தறைந்த நீதித்
திறந் தெரிந்துலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்–பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |தர்ம சம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || (அத்தியாயம் 4 ஸ்லோகம் 8)

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில்லேந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்
-யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.

தேவர்ஷி–பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்–ஸ்ரீமத் பாகவதம் (11.5.41)
எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாத கமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன் படுவதில்லை.”

தன்னுடைய வாக்கைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு துளஸீதாஸர் ராமனின் புகழை கூறுகிறார். “ராமனின் சரிதம் கரை காண முடியாத கடல். இந்தச் சரிதத்தை கேட்பவர்களுக்கு எப்பொழுதும் உற்சாகம்தான். ஆனந்தம்தான். ஏனெனில் ராமனுடைய புகழ் மங்களங்களின் உறைவிடம்”

மரவுரி – முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலாவைப் போன்ற சில மரங்களின் உட்பட்டைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, மரச்சுத்தியால் தட்டி மிருதுவாக்கப்படும். அப்பட்டை தகடு போன்று இருக்கும். அதற்கு நிறம் கொடுக்கப்படும்; அல்லது ஓவியத்தால் அழகுபடுத்தப்படும். அது பார்வைக்கு நெய்த துணி போல இருக்கும். இத்தகைய ஆடைகள் மரவுரிகள் எனப்படுகின்றன.

1. தசரதன் கைகேயிக்கு தந்த வாக்கைக் காப்பாற்ற செய்த உயிர் (ராமன்) தியாகம்.

2. ராமன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற செய்த அரசுரிமை தியாகம்.

3. சீதை ராமனோடு வனவாசம் செல்ல அரச போகங்களை துறந்த தியாகம்.

4. சுமித்திரை ராமனையும், சீதையையும் காக்க லட்சுமணனை அனுப்பிய தியாகம்.

5. ஊர்மிளை தனது கணவனான லட்சுமணனை, சீதா-ராமருக்காக தந்த தியாகம்.

6. பரதன் தனது அரசாட்சியை ராமனின் பாதுகைகளுக்கு வழங்கிய தியாகம்.

அனுமான் தனது தலைவன் (Leader) கூறும் வேலையில் இருந்து நொண்டிச் சாக்குகள் (Lame excuses) கூறித் தப்பிக்க நினைக்காமல் அதனைச் சென்று முடிக்கும் சுறுசுறுப்பைக் கொண்டவர் (Go-Getter). அவர் பொறுப்புகளைத் (Responsibility) தன் தோளில் ஏற்பவர்.

அனுமான் தனக்குக் கொடுத்த பணியை சிறப்புற முடிக்கும் செயலாளர் (Secretary) போன்றவர்.

அனுமான் ராமனை சந்திக்கையில் தன்னை சுக்ரீவனின் மந்திரியாக முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் தன்னை சுக்ரீவனின் தாழ்மையான பணியாளனாகவே (Obedient Servent) காட்டிக் கொள்கிறார்.

அனுமான், ராமன் கோபம் கொண்டு லட்சுமணனை அனுப்பும் முன்பே வரவிருக்கும் சிக்கலை ஊகித்தறிந்து அதற்கான முன்னேற்பாடுகளையும் (Precaustionary Measures) சுக்ரீவனிடம் கூறி வானரப் படைகளை திரட்டும் வேலைகளை செய்து விடுகிறர். அது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான செயல் ஆகும். (Right Action at Right Time)

லக்ஷ்மணன் கோபத்தோடு கிஷ்கிந்தை வருகையில் அவர் கோபத்தைக் குறைக்கும் பணியில் ஒரு மத்தியஸ்தர் (Mediator) ஆக செயல்பட்டவர் அனுமான்.

அங்கதன் தன்னைவிட வயதில் இளையவனாக இருந்தாலும் தனக்கு தலைவனாக இருப்பதனால் அவன் அனுமதி பெற்று அனுமான் செயல்படுகிறார். (Egoless Nature).

அனுமான் சூழலில் உள்ள குறிப்புகளை அறியும் கவனம் (Attentive) கொண்டவர். அதனாலேயே அவர் ஈரத்தில் நனைந்து வரும் பறவைகளின் இறக்கைகளைக் கண்டு நீர்நிலைகள் அருகில் உள்ளன என்று அறிந்து தனது படைகளுக்கு வழிகாட்டுகிறார்.

அனுமான் ஒரு அணியின் தலைவனாக (Team Leader) சுயம்பிரபையின் அனைத்ஹ்டு வினவல்களுக்கும் (Queries) பதில் அளித்து அவர்களை மீட்கிறார். அனுமான் சூழலுக்கு ஏற்றாற்போல விரைவான, சிறந்த முடிவுகளை எடுப்பவர் (On-time decision maker, அங்கதன் சீதையைக் கண்டறிய முடியாமல் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து உயிரை விடலாம் என்று கூறியபோது, உடனடியாக தனது திறமையினால் (Efficiency) தனது படைகளுக்கிடையே பேதம் ஒன்றை உருவாக்கி நல்வழிப்படுத்துகிறார். தன் வலிமை அறியாத அனுமானின் தன்னம்பிக்கையை (Self Confidence) உயர்த்தி அவருக்கு ஊக்கமளிப்பவராக (Motivator) இருப்பவர் ஜாம்பவான். ராமாயணமும், அனுமானும் மற்ற கதாபாத்திரங்களும் என்றைக்கும் மேலாண்மை பாடத்திற்கான முன்னோடிகளாகவே இருந்துள்ளன


யதிதம் மே அனுரூபார்த்தம் மயா சாதி சுமந்த்ரிதம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் கதம் வா கரவாண்யாஹம்-2-2-15-

இது எனது விருப்பம்; நன்கு பிறரை ஆலோசித்து எடுத்த முடிவு -உங்களுடைய அனுமதியையும் கோருகிறேன்; வேறு என்ன செய்ய வேண்டும் என்றும் விளம்புங்கள் .
யத்யப்யேஷா மாமா ப்ரீதிர் ஹிதம் அந்யத் அபி சிந்த்யதாம்
அன்யா மத்யஸ்த்ய சிந்தா ஹி விமர்த்தாப்ய அதிகோதயா–2-2-16-

இது என்னுடைய விருப்பம் என்றாலும் மாற்று வழிகள் இருப்பின் அவைகளையும் சிந்திக்க வேண்டும். நடு நிலையில் நின்று சிந்திப்போரின் வாதங்கள் பலன் தரக் கூடியவை

மித்ரா பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்–6-28-3

நண்பன் என்ற முகத்துடன் வருபவனுக்கு சிறிய குறைகள் இருந்தாலும் அவனை நான் மறுக்க மாட்டேன் . அவனை ஏற்பதை நல்லோர் எல்லோரும் ஏற்பர் –ஒரு புறா கூட தன்னுயிரையும் ஈந்து , அதைக் கொல்லவந்த வேடனுக்கு தன்னுயிரையே தந்த கதை

ஸ்ரூயதே ஹி கபோதேன சத்ரு சரணம் ஆகதஹ
அர்ச்சிதஹ ச யதா ந்யாயம் ஸ்வைஹி ச மாம்ஸைர் நிமந்த்ரிதஹ

ஒரு புறா , அதனுடைய எதிரியான வேடன், அடைக்கலம் நாடி வந்த பொழுது விருந்தோம்பல் விதிகளைப் பின்பற்றி அவனை வரவேற்றத்தை நாம் கேட்டிருக்கிறோம் . அவனுக்குத் தன்னுடைய உடலையே விருந்தாகப் படைத்தது .

ஸ ஹி தம் ப்ரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதஹ
கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புனர் மத் விதோ ஜனஹ

ஓ குரங்கினப் பெருந் தலைவர்களே ! அதே வேடன் புறாவின் மனைவியைக் கொன்ற போதும் அந்த வேடனை விருந்தாளியாக ஏற்றது ஆண் புறா . அப்படி இருக்கையில் என்னைப் போன்ற ஒரு மனிதன் எவ்வளவு செய்ய வேண்டும் ?

ருஷேஹே கண்வஸ்ய புத்ரேன கண்டுனா பரம ருஷிணா
ஸ்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்டாம் ஸத்ய வாதினா

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ,உண்மையின் உறைவிடமாக விளங்கிய ,கண்வ மஹரிஷியின் மகனான கண்டு மகரிஷியின் கவிதைகளை கேளுங்கள் ; அவர் இது பற்றி சொல்லியுள்ளார்

பத்த அஞ்சலி புடம் தீனம் யாசந்தம் சரண ஆகதம்
ந ஹன்யாத் ஆன்ருசம்ஸ்ய அர்த்தம் அபி சத்ரும் பரம் பத

எதிரிகளை அழித்தொழிக்க வல்ல அரசனே ! ஒருவன் கூப்பிய கரங்களுடன் வருகையில் எதிரியானாலும் கூட , அவனைக் கொல்லுவது கொடூரமான செயல் ஆகும். அதே போல பிச்சை கேட்டு வருவோனையும்,அடைக்கலம் கேட்டு வருவோனையும் கொல்லக் கூடாது

அர்த்தோ வா யதி வா த் ருப்தஹ பரேஷாம் சரணம் கதஹ
அரிஹி ப்ராணாம் பரித்யஜ்ய ரக்ஷிதவ்யஹ க்ருத ஆத்மனா

முன்னர் அகந்தையுடனும் அடக்கி யாண்டவானுமாக இருந்த எதிரியானாலும் ஏனையோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வந்தால் நல்ல மனதுடையவன் தன உயிரினைக் கொடுத்தாவது சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும்

ஸ சேத் பயாத் வா மோஹாத் வா காமாத் வா அபி ந ரக்ஷதி
ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத் பாபம் லோக கர்ஹிதம்

பயத்தினாலோ , அறியாமையினாலோ, ஆசையினாலோ அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் பாதுகாக்கா விடில் அது பாபம் . உலகமே அவனை இகழும்-

வினஷ்டக பச்யதம் தஸ்ய ரக்ஷிணஹ சரண ஆகதஹ
ஆதாய சுக்ருதம் தஸ்ய ஸர்வம் கச்சேத் அரக்ஷிதஹ

ஒரு அகதியைக் காக்கும் சக்தி இருந்தும் , அவன் நம் கண் முன்னாலேயே இறக்க நேரிட்டால் இது வரை கிடைத்த நற் பெயர் , நன்மைகள் அனைத்தும் பறந்தோடிப் போய் விடும்

ஏவம் தோஷோ மஹான் அத்ர ப்ரபந்நாம் அரக்ஷணே
அஸ்வர்க்யம் ச அயசஸ்யம் ச பல வீர்ய விநாசனம்

அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளை காப்பாற்றாமல் இருப்பது பெரிய இழுக்கு ; அவர்களுக்கு சொர்க்க போகமும் கிட்டாது ; புகழையும் வீரத்தையும் பலத்தையும் அழித்தும் விடும்

கரிஷ்யாமி யதா அர்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்
தர்மிஷ்டம் ச யசஸ் மயம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பல உதயே

நான் கண்டு மகரிஷி சொன்ன அற்புதமான வார்த்தைகளையே பின்பற்றுவேன் .அதுவே அறநெறி ; புகழ் ஈட்டும் ; சொர்க்கத்துக்கு வழி திறக்கும் ; கை மேல் பலன் தரும்-

ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-6-18-33-

ஒரே ஒரு முறை என்னைச் சரணடைந்தால் போதும்;நான் உன்னவன் என்று சொன்னால் , எல்லா உயிரினங்களிடமிடமிருந்தும் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய உறுதி மொழி . என்னுடைய உறுதியான கொள்கை

ராமாயண காவியத்தினுடைய ஆன்மீக சாரமாக விளங்குவது சரணாகதி தத்துவம் தான். இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டவேண்டும் என்று கருதியே கம்பர் தனது முதல் பாடலிலேயே ‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று குறிப்பிடுகிறார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

ஐயா, உங்களுடைய பெருமையைப் பற்றி ரொம்பவே கேள்விப்பட்டிருக்கேன். ஒருமுறை நீங்கள் நடந்துபோகும்போது வழியில் கிடந்த கல் உங்க பாததூளி பட்டு ஒரு அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அவ்வளவு கடினமான கல்லுக்கே அப்படி நேர்ந்தது என்றால், மரத்தால் செய்த என் படகு எப்படி ஆகும் என்று தெரியவில்லையே. அதுவும் ஒரு அழகியாகி விட்டால், என் பிழைப்பு என்ன ஆவது? அதனால் உங்களது பாதங்களை நான் என் கையால் நன்றாகக் கழுவிய பிறகு தான் படகில் ஏற அனுமதியளிக்க முடியும்” என்று பணிவுடன் கூறுகிறான் படகோட்டி.படகோட்டி தனது தோல்பையிலிருந்து தண்ணீரை எடுத்து ராமரின் பாதங்களின் மீது வார்க்கிறான். அருகில் நிற்கும் அவனது குடும்பத்தாரும் வருகிறார்கள். அளவற்ற அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஸ்ரீராமரின் பாதங்களைத் தொட்டு அலம்பி அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் தலைமீது தெளித்துக் கொள்கிறார்கள்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.
இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன் முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான்.திருவடி சூடிய திருமுடி:

அரண் உடைத்தாக உய்ந்தேன்;ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்தாங்குதல் தருமம் என்றான்.

‘மற்று, இனி உரைப்பது என்னே?வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்;உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என்இன் உயிர்த் துணைவன் ‘என்றான்.

இடைந்தவர்க்கு, “அபயம் யாம்“ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
அறம் என்னாம்? ஆண்மை என்னாம்?

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்–

December 1, 2025

ஸ்ரீ ஸஹஸ்ர நாம ராமாயணம்.--“ஸ்ரீ ராமாவதாரத மென்றால் பட்டர் போர பக்ஷ பதித்திருப்பார்” என்று நம் ஆசார்ய கோஷ்டியில் ஸுப்ரஸித்தமாகையாலே ஸ்ரீராம பக்ஷபாதியான பட்டர் தம்முடைய ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் *ராமோ விராமோ விரத * இத்யாதி திரு நாமங்களுக்கு முன்னே ‘ பரர்த்தி பரம ஸ்பஷ்ட “ என்னுமிடத்தில் ” அத ம்ருத ஸஞ்ஜீவநம் ராம சரிதம் ” என்றருளிச் செய்துள்ளார். (பரர்த்தி } என்கிற திருநாமம் முதலாக ம்ருத ஸஞ்ஜீவினயான ராம கதை சொல்லப்படுகிறது என்றபடி. பரர்த்தி, பரம ஸ்பஷ்ட துஷ்டா புஷ்ட: சுபேக்ஷண ராம விராமக விரத மார்க்க நேய நய அநய?, வீர சக்தி மதாம் ச்ரேஷ்ட: தர்ம: தர்ம விதுத்தம:- வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண என்கிற 32 திரு நாமங்களும் ராம சரித்திரங்களைத் தெரிவிப்பன

ஸ்ரீ ராம அவதார -390-421-திரு நாமங்கள்–32-திரு நாமங்கள்-மாண்டவரையும் உயிர்ப்பிக்கும் ஸ்ரீ இராமன் –

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-

வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ் சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44-

ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45-

391-பரர்த்தி:, 392. பரமேஸ்பஶ்ட:, 393. துஶ்ட:, 394. புஶ்ட:, 395. ஸுபேக்ஷண: ||396-ராம:, 397. விராம:, 398. விரத:, 399. மார்க:, 399. நேய:, 400. நய:, 401. அனய:|402-வீர:, 403. ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:, 404. தர்ம:, 405. தர்மவிதுத்தம: ||406-வைகுண்ட:, 407. புருஶ:, 408. ப்ராண:, 409. ப்ராணத:, 410. ப்ரணவ:, 411. ப்ருது: |412-ஹிரண்யகர்ப்ப:, 413. ஶத்ருக்ன:, 414. வ்யாப்த:, 415. வாயு:, 416. அதோக்ஷஜ: ||417-ருது:, 418. ஸுதர்ஶன:, 419. கால:, 420. பரமேஶ்டீ, 421. பரிக்ரஹ:

பரர்த்தி: — உயர்வற உயர்நலம் கொண்டவர்; சகல கல்யாண குணங்களும் உடையவர்-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
பரம ஸ்பஷ்ட: — மஹா யோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –
துஷ்ட: – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –
புஷ்ட: — குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்
சுபேக்ஷண: — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,-பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,-முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,-அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர் – மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ராம: — நித்திய ஆனந்தமாய், யோகிகள் எல்லையற்று ஈடுபடும் பரம்பொருள்; உத்தமமான தன் குணங்களாலும் திருமேனி அழகாலும்-அனைவரையும்- பக்தர்களின் மனத்தை மகிழ்விப்பவர் – ராமர்- குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்-நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர்-ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர்

விராம: — யாரிடம் ஈடுபடுவதால், யாருடைய சரிதத்தைக் கேட்பதால் நம் உலகக் கவலைகள் முடிவுக்கு வருகிறதோ அந்தப் பரம புருஷர்-தான் செயல் படும் போது வரம் கொடுத்த தேவர்கள் -வரம் பெற்ற இராவணன் -கொடுக்கப் பட்ட சாகா வரம் ஆகிய அனைத்தும் ஓயுந்து போகும்படி செய்தவர்-பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும் தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர்-அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர்-மேன்மை யுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் – பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர்


விரத: — வைராக்கியம், தியாகமே உருவாய் இருப்பவர் -அரசில் பற்று இல்லாதவன்-ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாட பேதம்-
மார்க: — முக்திக்கான உன்னத வழியாக இருப்பவர்–பரத்வாஜர் முதலான முனிவர்களால் தேடப்படுபவன்(விராதோமார்க–ஒரே நாமமான போது -குற்றம் இல்லாத வழியைக் காட்டுபவர்)-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் -தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க திரு முகம் யுடையவர்

நேய: — வேதாந்த ஞானத்தால் முக்திக்கு வழிநடத்துபவர்-அன்பு கொண்ட ரிஷிகள் கட்டளை இடும்படி அடங்கி இருப்பவர்-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்-தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்-
நய: — -ரிஷிகளைக் கர்ப்பத்தைப் போலே பாதுகாப்பவர் –-வழிநடத்துபவரெனினும், பக்தியால் கட்டுண்டு பின் தொடர்பவர்(திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் திருவீதி எழுந்தருளும் போது வேதங்கள் பின்தொடர்வதையும்,-பெருமாள் திவ்யப் பிரபந்தத்தைப் பின் தொடர்ந்து செல்வதையும் நினைவு கொள்ளலாம்)
அநய: — தம்மை வழிநடத்தத் தக்க தலைமை ஒரு போதும் இல்லாதவர்-பகைவர்களால் நடத்தப்பட முடியாதவர் 
வீர: — அசுரர்கள் அஞ்சி நடுங்கும் பெருவீரர்-ராஷசர்களை அச்சத்தில் நடுங்க வைப்பவர் –
சக்திமதாம் ச்ரேஷ்ட: — ஆற்றலும், வீரமும் கொண்டோரில் சிறந்து ஒப்பாரில்லாதவர்-வலிமை மிக்க தேவர்களை விட சிறந்தவர் –
தர்ம: — சநாதன தர்மமாய்த் தாமே இருப்பவர்-தர்மத்தின் உருவானவர் -இவ்வுலக அவ்வுலக பேற்றைக் கொடுத்து ஜீவர்களை தாமே தாங்குபவர் –
தர்ம விதுத்தம: — தர்மம் சூக்ஷ்மமானது ஆகையாலே எது தர்மம் என்பதை அறிவதில் அவரே பிரமாணம் ஆனவர்-தர்மம் அறிந்தவர்கலான ரிஷிகளை விடச் சிறந்தவர் –

வைகுண்ட: — குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-பக்தர்களை விலகாமல் தம்மிடம் சேர்த்துக் கொண்டவர் –தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான்-பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் 
புருஷ: — அந்தர்யாமியாய் நின்று ஜீவர்களின் பாபங்களைப் பொசுக்கித் தூய்மை நல்குபவர்-பாவச் சுமையை எரிப்பவர் -சராசரங்களுக்கு முன் செல்பவர் –முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் -பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்-
ப்ராண: — மோக்ஷத்திற்காக அனைவருக்கும் வாழ்வு நல்குபவர்-அனைவரையும் உய்விக்கும் மூச்சுக் காற்றானவர் –எல்லாவற்றையும் உய்விப்பவர் -ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர்-முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் 
ப்ராணத: — சோர்ந்து போகும் ஜீவர்களுக்குப் புத்துயிரூட்டி முத்திவழியில் தூண்டுபவர் -உயிர் அளிப்பவர்-இராமன் வனம் சென்ற போது மரங்களும் வாடிப் போயின-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர்  -துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –
ப்ரணவ: — வேதங்களிலேயே பரம்பொருளுக்கான மிகச்சிறந்த ஸ்துதியாக இருக்கும் ப்ரணவமாக இருப்பவர்-அனைவரும் தம்மை வணங்கும் படி இருப்பவர் -தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் -நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்
ப்ருது: — எல்லையற்று விரியும் மஹிமையுடையவர்-பெரும் புகழாளர் –மிகவும் விரிந்த புகழை யுடையவர்-பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர்-பிரசித்தமாக இருப்பவர்
ஹிரண்யகர்ப: — திவ்யமான சௌந்தர்யத்துடன் இதய கர்ப்பத்தில் குடிகொண்டிருப்பவர்-அவதாரங்களின் பிற்பட்டவர்களின் உள்ளங்களிலும் பொன் போலே வசிப்பவர் –பொன் புதையல் போன்றவன்–த்யேயம்-த்யான விஷயம் பின்னானார் வணங்கும் சோதி-மனத்துக்கு இனியாய் -சிந்தனைக்கு இனியானாய் இருந்து-உள்ளூவார் உள்ளத்து உளன் கண்டாய்-
சத்ருக்ந: — இதயத்தில் எழுந்தருளியிருந்து காமம், குரோதம், லோபம் முதலிய ஆறு சத்ருக்களையும் அழிப்பவர்-தன்னை த்யாநிப்பவர்களின் தறி கெட்டோடும் புலன்களை பகுத்தறிவை அருளி அடக்குபவர் –
வ்யாப்த: — அத்தனை உயிர்களின் இதயத்திலும் இருந்து தந்தை தம் மக்களைக் காப்பது போல் காப்பவர்-பக்தர்கள் இடம் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் விரயமான அன்பு காட்டுபவர் –
வாயு; — காற்று போல் தாமே அனைவர்பாலும் சென்று வாழ்விப்பவர்-சபரி குஹன் பரத்வாஜர் போன்ற அன்பர்களின் இருப்பிடத்துக்கு தேடிச் செல்லும் காற்று போன்றவர் –
அதோக்ஷஜ: — ஆரா அமுதாய்ப் பெருகும் ஆனந்தர்-யாவரும் அனுபவித்து பயன்படுத்தினாலும் கடல் போன்று பெருமை குறையாதவர் –

ருது: — பருவங்கள் வடிவிலான காலமாக இயற்கையில் இருப்பவர்; பக்தர்களுக்கு உயர்ந்த ஆன்மிக நன்மைகளைத் தரும் பக்குவக் காலமாகவும் இருப்பவர்-பருவ காலங்களுடன் அடையாளம் காணப்படுபவன் -பக்தர்களை வளர்க்கும் கிளர்ந்து வரும் குண வரிசைகளை உடையவர் -அணுகுபவன் – –
ஸுதர்சந: — தம்மைக் காண்பதாலேயே உயர்ந்த நன்மைகள் பெருகும்படி இருப்பவர்-தன்னை வழிபடுபவர்கள் தன்னைக் காண்பதால் மட்டுமே அவர்கள் விரும்பும் நோக்கத்தை அவர்களை அடையச் செய்பவன்-இராமனின் பெருமை அறியாதவரும் அவன் திரு மேனியைக் கண்டவுடன் ஈடுபடும் அழகு உடையவர்
கால: — காலம் என்ற வடிவில் அனைத்தையும் அளந்து அடக்குபவர்-அனைத்து உயிரினங்களையும் பலவீனப்படுத்துபவன்-தன் நற்பண்புகளால் அனைவரையும் தம்மிடம் இழுத்துக் கொள்பவர் 
பரமேஷ்டீ — பரமபதத்தைத் தம் உயர்ந்த ஸ்தானமாகக் கொண்டவர்-தன் மகிமையையும், பலத்தையும் சார்ந்து இதய வெளியில் வசிப்பவன் -இராமாவதாரம் முடிந்த பின்பு திரும்பவும் வைகுந்தத்தில் இருப்பவர் –
பரிக்ரஹ: — தம்மோடு தொடர்பு கொண்ட அனைத்திற்கும் மோக்ஷம் தரும் இயல்பினர்-எங்கும் நிறைந்திருப்பதன் விளைவால்) எங்கும் அறியப்படவல்லவன்-இராமன் இவ்வுலகை விட்டு வைகுந்தம் சொல்லும் போது அயோத்தி மக்களையும் மரங்களையும் எங்கும் ஏற்றுக் கொண்டவர் –

———————————————————–

391-பரர்த்தி-சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது — அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –-(சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர்) –(பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –

பற்பல மங்கல குணங்கள் நிறைந்தவனாக ராமன் இருப்பதால், அவன் ‘பரர்த்தி:’ என்று அழைக்கப்படுகிறான்.‘பர’ என்றால் உயர்ந்த மங்கல குணங்கள் என்று பொருள். ‘ரித்தி:’ என்றால் நிறைந்திருத்தல்.-பர + ரித்தி = பரர்த்தி: என்றால் மிக உயர்ந்த மங்கல குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.-அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 391-வது திருநாமம்.
“பரர்த்தயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நற்குணங்களோடு விளங்கும்படி ஸ்ரீராமன் அருள் புரிவான்.

பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கியமான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குண பெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினா விடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹா ப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குண ஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங் கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பர ஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

அத ம்ருத சஞ்சீவினம் ராம சரிதம் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -3-6-8-
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -திருப்பாவை
நீ பற்று கண்ணன் -நான் விடேன் ராமன் -மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று தேவை இடாதார் –பாவனத்வம் சர்வ லோக த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -9-5-8-

ஆழ்வார் மற்ற அவதாரத்தில் தலை நீட்டுவது ப்ராப்யமாக –
தஞ்சமாக பற்றுவது சக்ரவர்த்தி திருமகனையே -ப்ராப்யமாக -போக்யத்தில் இவனுக்கு இவனே சமம்
மனத்துக்கு இனியான் -போக்யத்வம்
ராமாவதாரம் பக்ஷ பாதி -பட்டர் -தூது போகவில்லையே -இன்னார் தூதன் என்று நின்றான் –
இஷ்வாகு வம்சரை தூது போக விடுவார் இல்லை காண் -சிறியாத்தான் இடம் பட்டர்

பிறர் செழிப்பை தனக்கு வாழ்வாகக் கொள்பவன் ராமன் என்றுமாம் -பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனமாக இருப்பவர்- இத்யாதி -391-பரர்த்தி –
மேலான குண பூர்த்தி உள்ளவன்–விபீஷணனை அங்கீ கரித்த பின்பு க்ருதக்ருத்ய ததா ராம -விஜ்வரஸர்வ ஐஶ்வர்யாத₃பி பரா(அ)ஸ்ய கல்யாண கு₃ண ஸம் ருத்₃தி₄ரிதிபரர்த்₃தி₄꞉ ।(பரனுடைய ருத்தியை அபர ருத்தி ஆக்கும் படி ராமனுக்கு ஐஸ்வர்யம்)பராவஸ்த₂ஸ்யாபி ஹி ராமஸ்ய அவர ஸோமாதி₃ தே₃வ கு₃ணைகதே₃ஶ நித₃ர்ஶநம் க்ரியதே (ஒரு துளி சமமான சந்திரனுக்கு ஒப்பு சொல்லும்படி எளிமை நிறைந்தவன் )। யதா₂விஷ்ணு நாம் சத்ருஸோ வீரயே சோமவத் ப்ரிய தர்சன–பால காண்டம் வீரியத்தில் இராமனுக்கு நிகரான தேவதை யாரும் இல்லை-ஆகவே அவனை விஷ்ணுவுக்கு நிகராக உரைத்தார்-ஏதத் தத் யுக்தம் அவ்யக்தம் அக்ஷரம் ப்ரஹ்ம சம்மிதம் தேவா நாம் ஹ்ருதயம் ஸுவ்ம்ய க்ருஹ்யம் ராம பரந்தப–யுத்த காண்டம்-இப்படியாக உரைத்த இராம தத்வம் என்பது யாராலும் எளிதில் அறிய இயலாதது ஆகும்-அது எந்தவிதமான தோஷமும் இல்லாத ஒன்றாகும்-ப்ரஹ்மத்துக்கு நிகரானதாகும் -தேவர்களின் இருதயத்தில் எப்போதும் இருப்பதாகும் எதிரிகளை வாட்டமுறச் செய்வதாகும்-பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –அயோத்யா காண்டம்-தசரதனனே உனது புத்திரனான இராமனிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பொருந்தி உள்ளன

ப₄க₃வதே இதி ஸ்வ மந்த்ர வர்ணாச்ச

பரமர்த்தி -பாட பேதம்பரா மேலான-ருத்திர்விபூதிர் ‘ருத்தி’ அதாவது செல்வம்

அஸ்யேதி பரர்த்தி: உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேலான செல்வம் உடையவராதலால் பகவான் ‘பரர்த்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. பரார்த்திஹ் – அவர் உச்ச வெளிப்பாடு

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘பரா ரித்திஹ் விபூதிஹ் அஸ்ய இதி பரார்த்திஹ் – அவர் செழுமை அல்லது ஐசுவரியத்தின் உச்ச வெளிப்பாட்டைப் பெற்றுள்ளார்’ என்று விவரிக்கிறார். இங்கு குறிப்பிடப்படும் செழுமை என்பது தனிப்பட்ட பண்புகளையும் பொருள் செல்வத்தையும் குறிக்கிறது.

ரித்தி என்பது செழிப்பு மற்றும் சக்தியின் கலவையை குறிக்கிறது என்று சுவாமி சின்மயாநந்தா குறிப்பிடுகிறார். பகவானின் ரித்தி அல்லது விபூதி பற்றிய முழு விளக்கமும் பகவத் கீதையின் 10 ஆம் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, அங்கு கிருஷ்ணர் மலைகளுக்கு மத்தியில் இமயமலை, ஒளிரும் பொருட்களில் சூரியன், கடல் போன்ற அனைத்து உயிரினங்களின் உச்சியையும் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறார். நீர் மற்றும் விலங்குகளில் சிங்கம். 40வது வசனத்தில், ‘நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீனாம் பரமதப – என் பெருவாழ்வின் வெளிப்பாடுகளுக்கு முடிவே இல்லை, நான் உங்களுக்கு ஒரு சிறிய மாதிரியைக் கொடுத்தேன்’ என்று கூறுகிறார்.

ஸ்ரீ வி.வி.ராமானுஜன், ராம அவதாரத்தில் இருப்பது போல், வேறு எந்த அவதாரத்திலும், மங்களகரமான குணங்களின் பரிபூரணத்தை நாம் காணவில்லை என்றால் அது மிகையாகாது என்று கருத்துரைக்கிறார். அவர் ஒரு கூடுதல் விளக்கம் தருகிறார்: ‘பரேஷாம் ரித்திரேவ ரித்திஹ் யஸ்ய – மற்றவர்களின் நிறைவைத் தன் சொந்தமாகக் கருதுபவர்’. விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்ட பிறகு, பகவான் ராமர் தனது வார்த்தையை நிறைவேற்றியதன் மூலம் மகிழ்ச்சியடைந்தார் – ‘கிருத கிருத்யஹ் ததா ராம’. ‘உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி– குடிமக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ​​தன் குழந்தையின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடையும் தந்தையைப் போல மகிழ்ச்சியாக உணர்கிறார்’ என்றும் அவர் மேற்கோள் காட்டுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் ராமாயணத்தில் இருந்து இந்த குணங்கள் சில விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. வால்மீகி முனிவர் 1.1.8 முதல் 1.1.18 வரை ஸ்லோகங்களில் இந்த குணங்களைப் பற்றிய ஒரு கவிதை விளக்கத்தை அளித்துள்ளார். கடைசி இரண்டு ஸ்லோகங்கள் இங்கே உதாரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன:
சமுத்ரா இவ காம்பீர்யே தைரியேண ஹிமவாநிவ |
விஷ்ணுநா சத்ரிஷோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஷனஹ் ||

காலாக்னி-ஸத்ரிஷா க்ரோதே க்ஷமாயா ப்ரிதிவீ ஸமஹ் |
தனதேன ஸம்ஸ் த்யாகே ஸத்யே தர்ம இவாபரஹ் ||
இராமனுக்குப் பெருங்கடலின் மகத்துவம், ஹிமவானின் வீரம், விஷ்ணுவின் வலிமை, சந்திரனின் இனிய தோற்றம், பிரளய அக்னியின் கோபத்திற்கு ஒப்பான கோபம், பூமித் தாயின் பொறுமை, குபேரனின் தானம், தர்ம தேவதையின் உண்மை ஆகியவை உள்ளன.

பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கிய மான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குணபெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினாவிடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹாப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குணஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங்கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பரஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

———–

392-பரம ஸ்பஷ்ட -தமது மேன்மையை வெளிப்படை யாக்கினவர் –மஹாயோகி என்றும் பரமாத்மா என்றும் மண்டோதரி போன்றோரே தெளிவாக உணர்ந்து போற்றும் தெளிந்த பெருமை உடையவர்-தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –(வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் )–(மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர்) –

சிறந்த அடியார்களுக்கும் மகான்களுக்கும் தனது பெருமையைத் தெளிவாக உள்ளபடி காட்டுவதால், ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்பஷ்ட’ என்றால் தெளிவாக என்று பொருள். ‘பரம’ என்றால் மேன்மை.-தனது மேன்மையை ஸ்பஷ்டமாக தெளிவாக அடியார்களுக்குக் காட்டும் ராமன் ‘பரம ஸ்பஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 392-வது திருநாமம்.“பரமஸ்பஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தெளிவான ஞானத்தோடு திகழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்

பரம ஸ்பஷ்ட: * ந சக்ஷஷா பச்யதி கச்சநைநம் * ந மாம்ஸ சக்ஷ ரபீவிக்ஷதே தம் * என்றேனும் கட்கண்ணால் காணாதவவ்வுரு * இத்யாதிப்படியே ஒருவர் கண்ணுக்கும் காணவொண்ணாதிருந்த வடிவத்தை அனைவரும் கண்டுகளிக்கும்படி மிகவும் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்தவ னென்கை. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (10) ” ோதீயஸோபி ஹி ஜநஸ்ய க்ருதே க்ருதீ த்வம் அத்ராவதீர்ய நநு லோசந்கோசரோபூ ” என்றருளிச் செய்ததை இங்கே அநுஸந்திப்பது . பரம ஸ்பஷ்டா என்பதற்கு- பரமத்வம் ஸ்பஷ்டமாயிருக்கப் பெற்றவர் என்கிற பொருள் பட்டருடைய பாஷ்யத்தில் விளங்குமது. ‘பரத்துவத்தை யொளித்து வந்து அவதரித்திருக்கச் செய்தேயும் அது சிலர்க்கு ஸ்பஷ்டமாக விளங்கா நின்ற தென்பதை ஸ்ரீராமாயணத்தினாலறிகிறோம். பெருமாளுடைய வநவாஸ ப்ரஸங்கத்தில் கிலேசப்படா நின்ற கௌஸல்யாதேவியைத் தேற்றுகின்ற ஸுமித்திரை “ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய தைவதம் தேவதாநாஞ்ச” இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தைத் தான் ஸ்பஷ்டமாகக் கண்டறிந்து பேசுகிறாள். இராவணன்மாண்ட பிறகு ப்ரேத பூமியிலே வந்து புலம்புகின்ற மந்தோதரி *வயக்தமேஷ மஹாயோகீ பரம த்மா ஸநாதந, அநாதி மத்யநிதந தமஸ் பரமோ தாதா சங்கசக்ர கதாதர:.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்யச் சாச்வதோ திருவ: மா நுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ் ஸத்ய பராக்ரம்:*இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தை அதிஸ்பஷ்டமாகக் கண்டு பேசுகிறாள். பம்பாதீரத்தில் முதன்முதலாகப் பெருமாளைக் காணவந்த திருவடி “ஆயதாச் ச ஸூவ்ருத்தாச் ச பாஸவ: பரிகோபமா, ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா.? *‘ என்று கேட்கிறார். இங்கு ஆயதெள ச ஸு வ்ருத்தெள சபா அ தே பரிகோபமௌ‘ என்று த்வி வசனமாக சுலோகம் கூடுமதாயிருக்க பஹு வசனமிட்டுச் சொன்னதுபற்றி கோவிந்தராஜர் எழுதுகிறார்.- ஹநுமதோ பக்தத்வேந் தஸ்ய சதுர்ப்புஜவேஷேண திருச்யோபவத்” என்று (அதாவது) திருவடி பரம பக்தராகையாலே அவர்க்கு நிஜ ரூபத்தைக்காட்டினாரென்றபடி . அன்றியும் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்தில் பெருமாள் தலையணையாக வைத்துக் கொண்ட பா வைவருணிக்கின்ற வான்மீகி முனிவர் “புஜை: பரமநாரி ம் அபிம்ருஷ்ட மநேகதா” என்கிறார். இங்கு பரமநாரிகளாகச் சொன்னது ஸ்ரீதேவீ பூதேவீ நீலாதேவிகளை யென்று வியாக்கியானம். ஆகவே வான்மீகி முனிவரும் பெருமாளுடைய பரத்வ வேஷத்தை ஸ்பஷ்டமாகக் கண்டவரென்று விளங்கும். ஆக இவ்வளவால் பெருமாளுடைய பரம ஸ்ஷ்டத்வம் நிரூபிதமாயிற்று.

பரம ஸ்பஷ்ட
வெளிக் காணும் மேன்மை உடையவன் -பரத்வம் தலை நீட்டிக் காட்டும்

கிஞ்ச பரம ஸ்பஷ்ட꞉,
ஸ்பஷ்ட ப்ரத்யக்ஷ த்₃ருஷ்ட ஸ்வ பாரம்ய꞉ । யதா

வ்யக்தமேஷ மஹா யோகோ பரமாத்மனா சநாதன–யுத்த காண்டம் மண்டோதரி
ராமன் மஹா யோகீ -பரமாத்மா -எப்போதும் உள்ளவன் –

ஆரானும் அல்லேன் அறிந்தேன் அவனை நான் –உமக்கு அறிய கூறுவேன் -கலியன் இந்த ஸ்லோக தமிழ் ஆக்கம்

தருணவ் சூர்ப்பணகை
அப்ரமேயஸ்ய -தாரை

ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய-அயோத்யா காண்டம்
ஸூரியனுக்கும் ப்ரகாஸம் அளிக்கும் ஸூர்யனாக உள்ளவன் இராமன்-சுமத்ரா தேவி கௌசல்யைக்கு சொல்லி சமாதானம் படுத்திகிறாள் –

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்

கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -காகுத்தா

அஹம் வேத்மி ராமம் ஸத்ய பராக்ரமம் -விசுவாமித்திரர்
சமுத்திரம் அணை கட்டி -ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் -சபல சித்த குரங்கு முதலிகள் கொண்டு –
சடாயு மோக்ஷம் இக்கரையில் விபீஷண பட்டாபிஷேகம் -பரத்வம் ஸ்பஷ்டம்

  1. ஓம்பரமஸ்பஶ்டாயநம:

பரா மேலான

மா ஶோபா ‘மா’ அதாவது அழகு

அஸ்யேதி பரம: பகவான் ‘பரம:’

ஸர்வோத்க்ருஶ்டோ வா அனைவரிலும் மேலானவர்

அனன்யாதீனஸித்தித்வாத் எந்தவொரு காரியத்திற்கும் மற்றோரை அண்டாதவர்

ஸம்விதாத்மதயா பேரறிவே உருவாய் இருப்பதாலும்

ஸ்பஶ்ட: பகவான் ‘ஸ்பஶ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்

பரமஸ்பஶ்ட: இவ்விரண்டும் சேர்ந்திருப்பதால் பகவான் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மேலான அழகு படைத்தவர், அனைவரைக் காட்டிலும் மேலானவர், எந்த ஒரு காரியத்திற்கும் வேறெவரையும் அண்டாதவர், பேரறிவே (ஞான) வடிவானவர். எனவே அவர் ‘பரமஸ்பஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. பர்மாஸ்பஷ்டா – அவரது மகத்துவம் முற்றிலும் தெளிவாகத் தெரிகிறது

ஸ்பஷ்டா என்பது வெளிப்படையான அல்லது மிகவும் வெளிப்படையான ஒன்றைக் குறிக்கிறது. பரமா என்றால் உச்சம் என்பதுடன், லட்சுமி தேவியை (“பர மா”) தன்னுடன் வைத்திருப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த இரண்டு அர்த்தங்களையும் தனது பின்வரும் விளக்கத்தில் ‘பரமா ஷோபா அஸ்ய இதி அஸ்ய இதி பரமஹ, ஸர்வோத்க்ரிஷ்டா வா அனன்யாதீன சித்தித்வாத் ஸம்விதாத்மதாயா ஸ்பஷ்ட பரமஸ்பஷ்டஹ் – ஒட்டுமொத்தமாக உயர்ந்தவராக இருப்பதால் பரமனாக இருக்கிறார் அல்லது ஸ்பஷ்ட லக்ஷ்மி தேவியால் அலங்கரிக்கப்பட்டவராக இருக்கிறார். என்பது வெளிப்படையாகத் தெரிகிறது அல்லது அவர் அறிவு ஆளுமைப்படுத்தப்பட்டவர்.

ஸ்பஷ்ட (பிரத்யக்ஷா, த்ரிஷ்டா) பாரம்யஹ் பரம-ஸ்பஷ்டா – அவருடைய மகத்துவம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்ரீ பராசர பட்டர் ராமாயணத்தைக் குறிப்பிடுகிறார் – வ்யக்தமேஷ மஹா-யோகி பரமாத்மா சனாதன – (யுத்த காண்டம் – 114.4). போர்க்களத்தில் இராவணனை வதம் செய்த பிறகு ராமனைப் பார்த்த மண்டோதரியின் வார்த்தைகள் இவை. அதேபோல, தாரா (வாலியின் மனைவி) ராமரைக் கண்டவுடனேயே அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து, மனித உருவில் கடவுளாகப் போற்றுகிறார் – ‘த்வம் அப்ரமேயஶ்ச துராஸதஷ்ச…..மனுஷ்ய தேஹாப்யுதம் விஹாய திவ்யேன தேஹாபிதாயேன யுக்தா’ (ராமாயணம் 4.324).

சுமித்ராவின் வார்த்தைகளில்: “சூர்யஸ்யாபி பவேத் சூர்யா” – அவர் சூரியனை விட பிரகாசமாக பிரகாசிக்கிறார், மேலும் அவர் சூரியனுக்கு பிரகாசத்தை அளிப்பவர். பகவான் ராமரின் மகத்துவத்தைப் பற்றிய மற்ற குறிப்புகள், அவர் “பும்ஸாம் த்ரிஷ்டி சித்தாபஹாரிணம்”, “ரூப சம்ஹானாநாம் லக்ஷ்மிம் தத்ரிஷுர் விஸ்மிதாகாரா”, முதலியன.

நாராயண சூக்தம் அவரை ‘நாராயண பரோ ஜோதிஹ் ஆத்மா நாராயணா பரஹ் – அவர் உச்ச ஒளி மற்றும் உயர்ந்த சுயம்’ என்று பிரகடனம் செய்கிறது.

இந்த வெளிப்படையான மகத்துவமே பரதனை ராஜ்யத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ராமரிடம் பக்தி கொள்ளச் செய்தது என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். ராமரின் வசீகரம், லக்ஷ்மணனை மறுபடி யோசிக்காமல் அவருடன் வரச் செய்தது, மேலும் அவர் 14 ஆண்டுகள் காட்டில் அவருக்கு சேவை செய்தார். ஹனுமான் ராமரைப் பார்த்த உடனேயே அவரிடம் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு சேவை செய்தார். அவருடைய டிராவின் சக்தி அப்படித்தான் இருந்தது.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், ‘ஸ்பஷ்’ – பிணைத்தல் (ஸ்பஷதி – பத்னாதி) என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான விளக்கத்தைத் தருகிறார், மேலும் பரமஸ்பஷ்டத்திற்கு “எல்லாவற்றையும் சிறந்த முறையில் பிணைப்பவர்” என்று பொருள் தருகிறார். சிக்கலான மனித உடல், அதன் உள் சிக்கலான போதிலும் அதன் அழகான தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் உதாரணம், உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஆதரவாக பின்வரும் மேற்கோள்களை வழங்குகிறார்: அஸ்ய ஸ்பஷோ ந நிமிஷாந்தி (ரிக் வேதம் 9.73.4), திவா ஸ்பஷா பிரசாரந்தி (அதர்வ வேதம் 4.16.4), முதலியன.


393-துஷ்ட -தன் மேன்மையை விட தயரதனுக்கு மகனாகப் பிறந்த எளிமையில் திருப்தி கொண்டவர் – சாதுக்களுக்கு வேண்டி அவதாரம் எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைபவர்-உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

தசரதன் மகனா’கத் திருமால் அவதரித்தது தான், எல்லா பக்தர்களும் அவரை அணுகுவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.எனவே தன்னை எப்போதும் ‘தசரதன் மகன்’ என்று சொல்லிக் கொள்வதிலே மகிழ்வாராம் ஸ்ரீராமன்-இப்படித் தசரதன் மகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு மகிழ்வதால் ராமன் ‘துஷ்ட:’ என்று அழைக்கப்படுகிறார்.‘துஷ்ட:’ என்றால் மகிழ்பவர் என்று பொருள். தசரதனின் மகனாகி, அதனால் எல்லோராலும் எளிதில் அணுகப்படக் கூடியவராய் ஆகி,மகிழ்ச்சி பெற்றதால், ராமனுக்கு ‘துஷ்ட:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 393-வது திருநாமம்.“துஷ்டாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஸ்ரீராமன் அருள்புரிவார்.

துக்க ஸம்வேதநாயைவ ராமே சைதந்ய மாஹிதம்”[உத்தரராமசரிதே.] என்று பெருமாள் தாமே சொன்னதாக பவபூதிகவி யெழுதுகிறார். இவற்றால் பெருமாளுடைய திருவுள்ளம் ஸந்தோஷமற்றிருக்கும் போலுமென்று நினைக்க இடமுள்ளது. உண்மை அப்படியில்லை. ஸம்ஸாரிகளின் ஸமுஜ் ஜீவனார்த்தமாக வந்து அவதரிக்கப் பெற்றோமிறே யென்று திருவுள்ள முகந்தே யிருப்பர்.முடி புனைந்து நாட்டையாளப் பாரித்திருக்கையில் சடை புனைந்து மரவுரி யுடுத்துக் காட்டுக்குச் செல்ல நியமனம் பெற்றபோது எவ்வளவோ துக்கமாகத் தானே யிருந்திருக்குமென்று பலர் நினைக்கக் கூடும். அப்போதும் பரம ஸந்தோஷத்தையே யாயிற்று பெருமாள் கொண்டது. ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய? ” என்றவரன்றோ பெருமாள். இவ்விடத்தில் கம்பருடைய வாக்கு மிக வற்புதமானது. ” இப்பொழு தெம்மனோரால் இயம்புதற்கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பின்பு வாசக முரைக்கக் கேட்ட, அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.” என்பது அவருடைய ஆச்சரியமான செய்யுள். வனவாஸக் கட்டளை பெறுவதற்கு முன்னே இராமபிரானுடைய திருமுக மண்டலம் தாமரை போன்றிருந்ததாம்; அக்கட்டளை பெற்றவாறே அத்திருமுகம் அப்போதலர்ந்த செந்தாமரையை வென்றிட்டதாம். கொடிய வனம் போக நேர்ந்ததே யென்று சிறிதும் சோகியாமல்,புண்ணிய புனல்களாடவும் புண்ணிய புருஷர்களைத் தொழவும் வாய்ப்பு கிடைத்தமைக்குப் பரம ஸந்தோஷ மெய்தினானென்கை. உத்ஸவேஷ ச ஸர்வேஷ பிதேவ பரிதுஷயதி * என்று பௌர ஜனங்கள் நேரில் கண்டு சொன்னபடியே தனது நாட்டிலுள்ளவர்களுக்கு நேரும் ஸந்தோஷத்தைத் தன்னுடைய ஸந்தோஷமாகக் கொண்டு மகிழ்பவன். ” அபிஷிச்ய விபீஷணம் விவர ப்ரமுமோத ஒற” என்கிற படியே அன்பர்களை ஸந்தோஷப்படுத்தித் தான் ஸந்தோஷாதிசய மடைபவன்-

———————–

393- துஷ்ட
பிறந்து படைத்த சம்பத் -மகிழ்ச்சி நிறைந்தவர் –பிரமுதோஹா-திவத்திலும் பசு நிரை மேய்த்து உகப்பு போல் இங்கும்

அதி₄ க்ருதாதி₄காராத் பரத்வாத₃பி அதிஶயேந ஸமஸ்த மநுஷ்யாத்₃யதி₄காரயோர்
தா₃ஶரதி₂ த்வ ஜக₃த் பாலந யோர் லாபா₄த் ப்ரீத꞉
துஷ்ட꞉ । யதா₂

பிதராம் ரோசயாமாச சதா தசரதன் ந்ருபம்–பால
தசரதனைத் தனது தந்தையாக ஏற்றதை எண்ணி மகிழ்ந்தான்

குலோசித மதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹு மந்யதே -அயோத்யா
தான் திரு அவதரித்த ஷத்ரிய குலத்துக்கு ஏற்ற ஸங்கல்பம் கொண்டவனாக அந்தக் குலத்தில் அதிக மதிப்புடன் இருந்தான்

ஆத்மாநம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் -யுத்த
நான் என்னை சாதாரண மனிதனாகவும் தசரதனின் புத்ரனாமாகவும் மட்டுமே எண்ணுகிறேன்

கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே மைதிலி தன் மணவாளா சனகன் திரு மருகா தாசரதி
தயரதன் குல முதலாய் –பெருமாள் திரு -8-

தசரதர் பெற்ற மரகத மணித்தடம்–மனுகுல மணீ பால –பட்டர் -ஒன்பது ராமர் சந்நிதி நம்பெருமாளைச் சேர்த்து திருவரங்கத்தில் –

———

  1. ஓம்துஶ்டாயநம:

பரமானந்தைக பேரின்பமே

ரூபத்வாத் உருவானவராய் இருப்பதால்

துஶ்ட: பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பேரின்ப வடிவானவராய் இருப்பதால் பகவான் ‘துஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த திருநாமத்தின் ‘த’காரத்தை  ‘து’ (அதாவது வடமொழியில் உள்ள முதல் ‘த’) என்று உச்சரிக்கவேண்டும். துஶ்ட: என்றால் த்ருப்தியடைதல் என்று பொருள். பகவான் அனந்த வடிவினராய் இருப்பதால் அவர் எப்பொழுதும் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

  1. துஷ்ட – மனநிறைவு கொண்டவன்

‘துஷ்’ என்றால் மனநிறைவுடன் இருப்பது மற்றும் தேவைகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுபடுவது. ஸ்ரீ ஆதிசங்கரர் இந்தப் பெயரை ‘பரமானந்த ஸ்வரூபத் துஷ்டா – அவர் பரம ஆனந்தம் மற்றும் அவர் துஷ்டர்’ என்று விளக்குகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தன்னுடன் இருக்கக்கூடிய ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்காமல், பகவான் தசரத மன்னனுக்கு மனிதனாகப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார், அதனால் அவர் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருந்தார். தேவர்கள் அவருடைய ராம அவதாரத்தில் அவர் முன் தோன்றி, அவரை பகவான் என்று போற்றியபோது, ​​அவர் தன்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகனாகக் கருதுவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர்களிடம் கூறினார் –ஆத்மானம் மாநுஷம் மன்யே ராமம் தசரத் ஆத்மஜம். நாம் முன்பு பார்த்தது போல், அவர் தனது குடிமக்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது ஒரு சாதனை படைத்த குழந்தையின் தந்தையைப் போல மகிழ்ச்சியாக இருந்தார் – பிதேவ பரிதுஷ்யதி – விபீஷணனிடம் சொன்னதை மட்டும் நிறைவேற்றி, லங்காவின் அரசனாக முடிசூட்டுவதன் மூலம் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தவர் – பிரமுமோத ஹா.

ஸ்வாமி சின்மயாஆனந்தா அவர் துஷ்டர் என்று விளக்குகிறார் – சிறிய பிரசாதங்களாலும் மகிழ்ச்சி அடைபவர். அவர் நம்மை பகவத் கீதை அத்தியாயம் 9 வசனம் 26:
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்தியா பிரயச்சதி |
ததாஹம் பக்த்யுபஹৃதம் அஷ்நாமி ப்ரயதாத்மனঃ ||
அன்பான பக்தியுடன் யார் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, தண்ணீரையோ சமர்பிக்கிறார்களோ, அந்தத் தூய உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்.

பகவத் கீதை அத்தியாயம் 2 வசனம் 55, ‘ஆத்மனி ஏவாத்மனா துஷ்டா ஸ்திதா-ப்ரஜ்னஸ் டோடோச்யதே – தன்னில் மட்டுமே திருப்தி அடைகிறாரோ, அவர் உண்மையான ஞானம் பெற்றவர் அல்லது உண்மையான யோகி’ என்று கூறுவதன் மூலம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது.

பிற உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் ஆளாகாததால் பகவான் துஷ்டர் என்று தர்மச் சக்கரம் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். இராமன் அரசனாக முடிசூட்டப்பட்டபோது உடனடி மகிழ்ச்சியை உணரவில்லை, 14 வருடங்கள் காட்டுக்குச் செல்லும்படி கேட்கப்பட்டபோது வருத்தப்படவில்லை.

துஷ்டனாகவோ அல்லது எப்போதும் திருப்தியாகவோ, நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தாலும், யோகியின் மனநிலையுடன் அவற்றுடன் இணைந்திருக்காமல் இருப்பதே பகவானை உணர்ந்து கொள்வதற்கான சரியான வழியை இந்த நாமம் விளக்குகிறது.


394-புஷ்ட -நற்பண்புகளின் நிறைவான இருப்பிடமானவர் –குறைவிலாச் சிறந்த குணங்களே நிறைந்தவர்-இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்-எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

புஷ்ட = கீழே துஷ்டஎன்கிற திருநாமத்தினால் சொன்ன ஸந்துஷ்டதையை நன்கு நிலைநாட்டுகின்றது இந்தத் திருநாமம். தான் அடையும் ஸந்தோஷம் வடிவிலே காணலாம்படி யிருப்பவன். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலே தெரியும்’ என்பராதலால் ஹ்ருதய தமான ஸந்தோஷத்தைத் திருமேனி கோட்சொல்லித்தரக் கடவதாயிருக்கும். வனவாஸக் கட்டளை ப்ராப்தமானது “வநவாஸோமஹோதய ” என்று சொன்னது க்ருத்ரிமமென்று நினைக்கவொண்ணாதபடி திருமேனி புகர்த்துக் காட்டுமென்கை. வனவாஸம் ப்ராப்தமாவது பரம ஸந்தோஷத்திற்கே ஹேதுவென்று சொன்னதைச் சிறிது சோதிக்குமளவில் அது அஹ்ருதயோக்தியே யொழிய ஸஹ்ருதயோக்தி யன்றென்று அறுதியிடலாமா யிருக்கும்.(எங்ஙனேயென்னில்) மேலே ஆரண்யகாண்டத்தில் ஸ்தாவியோகம் நேர்ந்தபோது துக்கபரவசராய்க் கதறுகின்ற பெருமாள் *ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸோ நஷ்டாஸ்தா ஹதோ த்விஜ : ஈத்ருசீயம் மமாலக்ஷ்மீ: நிர்தஹேதபி பாவகம் என்று சொல்லிப் புலம்புகிறார். ‘ஐயோ! ராஜ்யத்தை யிழந்தேனே! காட்டிலே வந்து வளிக்கவும் நேர்ந்ததே!’ என்று சொல்லுவது வநவாஸோ மஹோதய;, என்றதற்கு நேர்முரணல்லவா? வனவாஸக்கட்டளை ஸந்தோஷகரமா யிருந்தால் ‘ராஜ்யாத்ப்ரம்ச:’ என்றும் வநேவாஸ: என்றுஞ் சொல்ல வாயெழும்புமோ? ஈத்ரு இயம் மமஅலக்ஷ்ம் ‘ என்று ராஜ்ய ப்ரம்ச வனவாஸங்களை தெளர்ப்பாக்ய மாகவன்றோசொல்லுகிறார். இவை பொருந்தும்படி எங்ஙனேயென்று விசிகித்ஸை பண்ணுவார்கள்-இதற்கு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர்;*ராஜ்யநாசோபகர்ஷதி* வநவாஸோ மஹோதய:* என்று சொல்லிப் போந்தவற்றை இப்போது அனர்த்தமாகச் சொல்லுகிற தென்னென்னில்,ஆச்ரித ஸம்ச்லேஷத்துக்கும் ரிஷிகளை நோக்குகைக்கு மென்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும் பெரியவுடையாரை யிழக்கையாலும் இவற்றுக்கு அடியானவையும் இப்போது அனர்த்தமாகத் தோற்றின்படி .”என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி. (இதைச் சிறிது விவரிக்கிறேன்) வனத்திற்குப் புறப்படும்போது எதனால் ஸந்தோஷமென்னில்: பிராட்டியோடு ஏகாந்தவாஸம் பண்ணப் பெறுவோம், பரம்பாகவதர்களோடே ஸஹவாஸம் பண்ணப்பெறுவோம் என்றிங்ஙனே பாரித்ததனால் ஸந்தோஷமுண்டாயிற்று. பாரித்தபடியே பேறு கிடைத்து வந்தது. வைதேஹி! ரமஸே கச்சித் சித்ரகூடேமயா ஸ என்று வாய் வெரும்படி பிராட்டியோடே கூடியிருந்து குளிரப்பெற்றது .இஹ வத்ஸ்யாமி ஸெளமித்ரே! ஸார்த்தமேதேந ப ா என்று ஐடாயு மஹாராஜருடைய சிறகின் தீழே யொதுங்கி வர்த்திக்கவும் பெற்றது.இந்த நிலைமையில் “ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார” என்னும்படியாகப் பிராட்டியைப் பிரியவும் ஜடாயுமஹா ராஜரை அறவே யிழக்கவும் நேர்ந்தது. இந்த துக்கம் சொல்லுவித்த வார்த்தையன்றோ” ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ :” என்பது. இதனால்காட்டுக்குப் புறப்படும் போதே ஸந்தோஷமில்லாமல் வருந்தியே புறப்பட்டதாக எண்ணத்தகுமோ? பரம குதூஹலத்தோடு மஹோத்ஸவம் ஸேவிக்கத் திருவேங்கடமலை சென்றவர் அங்கு இடமும் சோறும் தண்ணீரும் பெறாமல் அப்பன் ஸேவையும் பெறாமல் வெய்யிலிலும் மழையிலும் பரிதபித்துக் கிடக்க நேர்ந்ததென்று கொள்வோம்; அப்போது’ஏதுக்கு வீட்டைவிட்டு இங்கே வந்து வருந்துகிறோம்!’ என்று தளர்ந்தால் இதனால் ஊரைவிட்டுப் புறப்படும்போதிருந்த குதூஹலத்தை இல்லைசெய்யவொண்ணுமோ? இலங்கை சென்ற திருவடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டவாறே “அநயாஹீந; ப்ரபு:, தாரயதி ஆத்மநோ தேஹம் ந சோகேந அவஸ்ததி’ என்று சொன்னது பெருமாளை கர்ஹிக்குமாபோலே யிருந்தாலும் (புஷ்ட ) என்னுமிந்தத் திருநாமத்தை வியாக்கியானம் பண்ணுமாபோலவே யிராநின்றது. வாடாமல் வதங்காமல் புஷ்டராகவே யிருக்கிறார் பெருமாள்’ என்று காட்டினபடியாகக் கொள்ளலாம். இல்லையாகில் ஜீவதி’ என்று மூன்றெழுத்தோடே முடிக்கலாமே; ”தாரயதி ஆத்மநோ தேஹம் ‘ என்ற விரிவு தேஹபுஷ்டியை அந்தரங்கமாகக் காட்டவே போலும்

394-புஷ்ட
நிரம்பியவன் –மகா குணங்களால்-விஸ்வம் ஆரம்பித்ததே கல்யாண குணங்களால் பூர்ணம் புஷ்டியாக இருப்பவன்

ஏவம் மஹா கு₃ணை ꞉ பரி பூர்ண꞉
புஷ்ட꞉ ।
* தமேவம் கு₃ண ஸம்பந்நம் இதி ॥ -பால
இப்படியாக கல்யாண குணங்கள் கொண்டவன்

குணங்களுக்கு இருப்பிடம் -நிகரில் புகழாய் இத்யாதி
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மாற்று இனிதோ நீ அருளும் வைகுண்டம்

இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————-

  1. ஓம்புஶ்டாயநம:

ஸர்வத்ர எங்கும், எப்பொழுதும், எதிலும்

ஸம்பூர்ணத்வாத் முழுமையானவராய் இருப்பதால்

புஶ்ட: பகவான் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எங்கும், எப்பொழுதும், எதிலும் முழுமையானவராய் இருப்பதால் அவர் ‘புஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

  1. புஷ்டா – உன்னத குணங்கள் நிறைந்தவன்

ஆதி சங்கரர் சொல்வது போல், ‘சர்வத்ர சம்பூர்ணத்வாத் புஷ்தா – அவர் எல்லா வகையிலும் பரிபூரணமானவர் அல்லது முழுமையானவர், எனவே அவர் புஷ்தா’ என்று அழைக்கப்படுகிறார். உபநிடதங்களால் விவரிக்கப்பட்டுள்ளபடி அவர் பூர்ணா அல்லது சரியானவர். ஒவ்வொரு பகுதியும் கூட சரியானது. ஒவ்வொரு அவதாரமும் அல்லது அவதாரமும் சமமாக சரியானவை. முழுமை என்பது உடல் வடிவம், உடல் வலிமை மற்றும் மன மற்றும் அறிவுசார் பண்புக்கூறுகள் அனைத்திற்கும் நீண்டுள்ளது.

ஸ்ரீ சத்யதேவோ வாசிஷ்டர் இந்த அர்த்தத்தை விரிவுபடுத்துகிறார், ஏனென்றால் அவர் புஷ்டா என்று பரிந்துரைக்கிறார், ஏனென்றால் அவர் தனது படைப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான வழிகளைக் கிடைக்கச் செய்வதன் மூலம் அவற்றை நிறைவேற்றுகிறார் – புஷ்ணாதி இதி புஷ்டா.

—————–

395-சூபேஷண- மங்களத்தை நல்கும் பார்வை உடையவர் — முக்தியில் வேட்கை கொண்டோர்க்கு முக்தியும், உயர்ந்த போகத்தை வேண்டுவோர்க்குப் போகமும்,பிரம்மவாதிகளுக்குச் சந்தேகங்களைப் போக்குவதும், வணங்குவோரின் பாபங்களைப் பொசுக்குவதும்,முக்திக்கு முதற்கட்டமாக ஸம்ஸார பந்தங்களை நீக்குவதும், அநாதிகால கர்மங்களை அகற்றுவதும்,அவித்யையைச் சுவடேயின்றி நீக்குவதும் ஒருங்கே செய்யும் அருட்பார்வை வீசுபவர்-தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள்  -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்-மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும் ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்-தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

சுபேக்ஷண : =பெருமாளுடைய திருக்கண்ணழகிலே யீடுபட்டவர்கள் சக்ரவர்த்தியும் சபரியும் திருவடியுமாவர்கள். ‘என் வேள்வியைக்காக்க உன் பிள்ளையைப் போரவிடாய்’ என்று விச்வாமித்ர முனிவன் வேண்டினபோது *ஊந: ஷோடசவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந: * என்று விடையிறுத்த சக்ரவர்த்தியின் கருத்துகள் பலவுண்டு; அவற்றுள் ஒரு கருத்து இக்கண்ணழகனை விட்டுப் பிரிந்து எங்ஙனம் தரித்திருப்பேனென்கை: சபரி தன்னாசரமத்தேறப் போந்து பெருமாளைக் கண்டவாறே சக்ஷ ஷ தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்த ! * என்று அவருடையகண்ணழகிலே தான் ஈடு பட்டமையைத் தெரிவித்துக்கொண்டாள்.இவற்றுக்கெல்லாம் மேம்பட்டது திருவடியின் வார்த்தை. அதாகிறது] ரா ம: கமலபத்ராக்ஷஸ்ஸர்வஸத்வமநேரஹர *) திருவடியோடு ஸம்பாஷணை செய்யும் பிராட்டி “ யாநிராமஸ்ய சிஹநாநி.. தாநி பூயஸ் ஸமாசக்ஷ்வ ந மாம் சோக : ப்ரத யதி‘ என்றுபெருமாளுடைய அடையாளங்களைச் சொல்லும்படி கேட்டவாறே முந்துறமுன்னம்” ராம: கமல பத்ராக்ஷ: “ என்றான். அக்கண்ணழகு செய்யுமது என்? என்ன;
[ ஸர்வஸத்வமநோஹர: ] பிராணிகளென்று பேர்பெற்றாரெல்லாருடையவும் நெஞ்சைக்
கொள்ளை கொள்ளுமதாயிற்று அவ்வழகு என்கிறார் திருவடி. இங்கே விமர்சிக்கவேணும்; திருவடி பெருமாளுடைய கண்ணழகை ஓருபெரியநகரத்திலே கண்டாரல்.லர் .நிர் நமானதொரு வனத்திலே ஒரு மூலையிலே கண்டுவைத்து ‘ஸர்வஸத்வ
மநோஹர :
, என்று எதுகொண்டு சொல்லிற்றென்று ஆராயவேணும். இங்கு நம்
பிள்ளை யருளிச் செய்வது, “திர்யக் ஜாதீயனாய்ப் பணையோடு பணைதத்தித் திரிகிற
என்னுடைய நெஞ்சையும் அபஹரித்ததே”
என்று. இத்தால் பெருமாளுடைய
கண்ணழகு ஸர்வ ஸத்வமநோஹர மென்னுமிடம் கைமுதிக ந்யாஸித்தமென்கை. இதைக்கணிசித்தே கம்பர், அனுமன் இராமபிரானைக் காணும் போதே “ மஞ்செனத்திரண்ட கோலமேனிய!. மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளிரிரும்பனிக்குத் தேம்பாக், கஞ்சமொத்தலர்ந்த கண்ண!” என்று கூறினதாகப் பாடினர்.

(சுபேக்ஷண 🙂 இதற்கு பாஷ்யமருளிச்செய்யாநின்ற பட்டர் “ஸ்வகர்த்ருகம் ஸ்வகர்மகஞ் சி தர்சநம் அதிசுபம் அஸ்ய” என்பதோர் அர்த்தமு மருளிச்செய்கிறார். இராமனைப் பிறர் காண்பதும் இனிது, இராமன் பிறரைக் காண்பதும் இனிது என்றதாயிற்று. ஈக்ஷண சப்தமானது கண் என்கிற பொருளையும், காண்கையென்கிற பொருளையும் காட்ட வல்லது. கண் என்கிற பொருளைக்கொண்டு கீழே விவரணம் செய்தேன். இப் போது காண்கை யென்கிற பொருள்கொண்டு விவரிக்கிறேன். [*யச் ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி. நிந்திதஸ் ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே ] (ஸ்ரீ ரா. அயோ. 17-14 ) இராமனைக் காணாதவனும் இராமனால் காணப்படாதவனும் உலகில் நிந்திக்கப்பட்டவனாவன்; உலகத்தார் நிந்திப்பது கிடக்கட்டும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளவேண்டியதுமாகும் என்றபடி. இதனால் இராமனைக் காண்பதுபோல இராமனால் காணப்பெறுவதும் புருஷார்த்தமென்று தேறுவதால் சுபேக்ஷண: என்பதற்கு இருவகைப் பொருளையும் பட்டர் திருவுள்ளம் பற்றினது சாலச் சிறக்கும். இந்த சுபேக்ஷண மஹார்த்த ப்ரஸ்தாவத்தில், அசோகவனத்தில் புலம்பாநின்ற பிராட்டி “ தம் பத்மதலபத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்த காமிநம். தந்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம்.” என்று சொன்ன விந்த சுலோகமும் சிந்தைசெய்யத் தக்கது. இதில் பத்மதளபத்ராக்ஷ மென்றுள்ளது. இங்கு பத்ம தளமென்றோ பத்மபத்ரமென்றோ ஒன்று சொன்னால் போதும்; ” பத்ரம் பலாசம் ச்சதனம் தளம் பர்ணம் ச்சத : புமாந்” என்ற அமரகோசத்தின்படி தளம் பத்ரம் என்பன பர்யாயமே யாதலால் தளபத்ராக்ஷ மென்று இரண்டையும் கூட்டிச் சொன்னது புநருக்தமாகாதோவென்று சிலர் சங்கிப்பதுண்டு. சங்கை யுக்தமானதே. இங்குப் பெரியார் கூறும் ஸமாதானம் சுவை மிக்கது. வடமொழியில் அக்ஷமென் கிற சொல்லுக்கு ” அக்ஷமிந்த்ரிய காயயோ:” என்கிற நிகண்டின்படி கண்ணென் றும் வடிவென்றும் இருபொருள்களுள்ளமை ப்ரஸித்தம். இரட்டுறமொழிதலென் னும் தமிழ் மரியாதையினால் பத்மதளபத்ராக்ஷ மென்றவிவ்விடத்தில் அக்ஷபதத்திற்கு இவ்விரண்டு பொருள்களையுங் கொண்டு ‘பத்மதளம்போன்று விசாலமான கண் ணழகுடையவர், பத்மபத்ரம் போன்ற [தாமரையிலை போல் பசுமையுள்ள ] திரு மேனியையுடையவரென்றதாகக் கொள்ளக்கடவது .நம்மாழ்வார் திருவாய்மொழி யில் * செக்கமலத்தலபோலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத்திலை போலுந்திருமேனி * என்றருளிச்செய்தது மேலே விவரித்த பொருளைத் திருவுள்ளம் பற்றியே.

395-ஸூபேஷண-
சோபனமான பார்வை யுடையவர்-ஸூ ப–ஈஷண கண்கள் கடாக்ஷம் உள்ளவர்
முன்பு 346 பத்ம நிபேஷன –348-அரவிந்தாஷ

ஏவம் வித₄ஐஶ்வர்ய ஶீலாதிஶய பிஶுந (கோள் சொல்லிக் கொண்டு இருக்கும் )ஶீதல விஶால உதா₃ர தீ₃ர்க₄ ராஜீவ லோசந ꞉
ஶுபே₄க்ஷண꞉ । யதா

ஸூ ப்ரூஸ் ஆயத தாம்ராக்ஷ சாஷாத் விஷ்ணுரிவ ஸ்வயம் இதி ।
ஸ்வ கர்மகம் ஸ்வ கர்த்ரு கஞ்ச த₃ர்ஶநம்  அதி ஶுப₄மஸ்யேதி வா ஶுபே₄க்ஷண –அயோத்யா

ராமன் அழகான புருவங்கள் -கண்கள் யுடையவன்
இதனாலே விஷ்ணு என்றும் கூறப்படுபவன்
தன்னுடைய தோற்றம் -தான் மற்றவர்களைக் காணும் போது உண்டாகும் மேன்மை ஆகியவற்றின் காரணமாகத்
தனது திரு உள்ளத்துக்கும் அவன் தானே மகிழ்வு ஏற்படுத்துவதால் ஸூப ஈஷண-எனப்படுகிறான்

யஸ் ச ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மா அப்யேநம்
விகர்ஹதே இதி -அயோத்யா –

யார் ஒருவன் இராமனைக் காண்பது இல்லையோ
யார் ஒருவனை இராமன் காண்பது இல்லையோ
அவன் அனைவராலும் ஒதுக்கப் படுகிறான் –

பூப்போலே செங்கண் -செங்கண் சிறு சிறிதே விழியாவோ -ஒரே பாசுரத்தில் -கண்களும் கடாக்ஷமும்
தான் காண்பதும் தன்னைக் காண்பதும்

செக்கமலத் தவர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே -9-7-3-

தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள் -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்

மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்

தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———-

  1. ஓம்ஸுபேக்ஷணாயநம:

ஈக்ஷணம் தர்ஶனம் யஸ்ய பகவானின் ‘ஈக்ஷணை’ அதாவது அருட்பார்வையானது

ஶுபகரம் அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது

முமுக்ஷூணாம் மோக்ஷதம் முக்தியை விழைவோருக்கு முக்தியையும்

போகார்த்தினாம் போகதம் இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது

ஸர்வஸந்தேஹவிச்சேதகாரணம் நம் அனைத்து ஐயங்களையும் தீர்க்கவல்லது

பாபினாம் பாவனம் பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது

ஹ்ருதயக்ரந்திர்விச்சேதகரம் நமது உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் அனைத்து முடிச்சுகளை அவிழ்க்கவல்லது

ஸர்வகர்மணாம் க்ஷபணம் அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது

அவித்யாயாஸ்ச நிவர்த்தகம் நமது அறியாமையை போக்கவல்லது

ஸ ஸுபேக்ஷண: எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் அருட்பார்வை அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்லது, முக்தியை விழைவோருக்கு முக்தியையும், இன்பங்களை விழைவோருக்கு (அவர்கள் எண்ணியதற்கும் மேலான) இன்பங்களையும் அளிக்கவல்லது, நமது ஐயங்கள் அனைத்தையும் தீர்க்கவல்லது, பாவிகளின் பாவங்களைப் போக்கி அவர்களையும் தூய்மையாக்கவல்லது, நம் உள்ளத்தில் தோன்றும் ஐயமென்னும் முடிச்சுக்களை அவிழ்க்கவல்லது, அனைத்து வினைப்பயன்களையும் அழிக்கவல்லது மற்றும் நமது அறியாமையை போக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுபேக்ஷண:’ (நற்பார்வை கொண்டவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

“பித்யதே ஹ்ருதயக்ரந்தி:’ (முண்டக உபநிஶத் 2.2.8)”

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

“(காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால்) இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது”

இத்யாதிஶ்ருதே: || இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————-

  1. ஷுபேக்ஷனா – மங்களகரமான கண்களை உடையவர்

ஷுபா என்றால் மங்களகரமானது மற்றும் ஈக்ஷணம் என்றால் கண் பார்வை அல்லது பார்வை என்று பொருள், எனவே சுபேக்ஷனா என்பது யாருடைய பார்வை மங்களகரமானது, அதாவது பக்தரைப் பார்த்து தனது ஆசிகளைப் பொழிபவர்.

ஸ்ரீஆதிசங்கரர் இதை ஒரு விரிவான வர்ணனை மூலம் விளக்குகிறார்:
ஈக்ஷணம் தரிசனம் யஸ்ய ஶுபம் ஶுபகரம் முமுக்ஷூணாம் மோக்ஷதாம் போகார்த்தினாம் போகதாம் ஸர்வஸந்தேஹவிச்சேத காரணம் பாபிநாம் பாவனாம் ஹ்ருதயக்ரந்தேர் விச்சேதகாரம் ஸர்வக்ஷபங்கர்மணாம் ஸர்வக்ஷபங்கர்மணாம். அவனுடைய வெறும் பார்வையே மிகவும் மங்களகரமானது, அது எல்லா உயிர்களுக்கும் நல்வாழ்வை அளிக்கும்; அது ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு மோக்ஷத்தையும், அவர்களை விரும்புபவர்களுக்கு இன்பத்தையும், பாவங்களைச் சுத்தப்படுத்துகிறது, அனைத்து கர்மாக்களையும் எரிக்கிறது மற்றும் அனைத்து அறியாமையையும் நீக்குகிறது, எனவே அவர் சுபக்ஷணன் என்று அழைக்கப்படுகிறார், மங்களகரமான கண்களைக் கொண்டவர். இது இறைவனைக் காண்பதற்கும் இறைவனால் காணப்படுவதற்கும் பொருந்தும்.

முண்டக உபநிஷத்தின் (2.2.8) மேற்கோளையும் அவர் தருகிறார்:
பித்யதே ஹிருதய-கிரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஷாயா க்ஷீயந்தே
சாஸ்ய கர்மானி தஸ்மின் த்ரிஷ்டே பரவாரே
அவரது பார்வையில் இதயத்தின் முடிச்சுகள் அறுந்து, எல்லா கெட்ட கர்மாக்களும் அகற்றப்படுகின்றன. சுத்தப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் நம்மை அயோத்தியா காண்டம் என்று குறிப்பிடுகிறார்:
யச்ச ராமம் ந பஷ்யேத் து யம் ச ராமோ ந பஷ்யதி |
நிந்திதஹ் ச வசேத் லோகே ஸ்வாத்மா’பி ஏனம் விகர்ஹதே ||(அயோத்தி 17.14)
ராமனைப் பார்க்காதவர் அல்லது ராமர் யாரைக் காணவில்லையோ, அந்த நபர் இந்த உலகில் கண்டிக்கப்படுகிறார், மேலும் அவரது சுயமும் அவரைக் கண்டிக்கிறது..

அனுமன் ராமரை சீதா தேவியிடம் விவரித்தார் “ராமஹ் கமலா பத்ராக்ஷ: ஸர்வ ஸத்த்வ மனோரதஹ் – அங்கு அவர் தனது கண்களின் மகத்துவத்தையும் அவரது கண்களால் பார்க்கப்படுவதையும் விவரிக்கிறார். சீதா, ஸ்ரீ ராமரை இவ்வாறு விவரிக்கிறாள் – தம் பத்ம தல பத்ராக்ஷம் .. தன்யா பஷ்யந்தி மே நாதம் – தாமரை போன்ற அழகான என் நாதரின் கண்களைக் காண்பவர்கள் பாக்கியவான்கள். 

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஈக்ஷனா என்ற சொல்லுக்கு சங்கல்பம் என்று பொருள். இந்த சங்கல்பம் ஒரு நல்ல முடிவு ஆனது, இதன் விளைவாக இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஏற்பட்டது. அவர் சுப ஈக்ஷனா அல்லது ஸம்கல்பத்தை உடையவர் என்பதால், அவர் சுபேக்ஷனா. இந்த விளக்கத்தை ஆதரிக்க ஸ்ரீ சாஸ்திரிகள் பின்வரும் ஸ்ருதிகளை வழங்குகிறார்கள்:

  • ததைக்ஷதா பாஹு ஸ்யாம் ப்ரஜாயேதி (சாந்தோக்ய உபநிஷத் 6.2) – அவர் பலராகவும் உருவாக்கவும் விரும்பினார்;
  • சேயம் தேவதைக்ஷதா ஹந்தஅஹமிம்ஹ திஸ்ரோ தேவதா அனேன ஜீவேன ஆத்மா’நுப்ரவிஸ்ய நமரூபே வ்யாகரவாணி (சாந்தோக்ய உபநிஷத் 6.3) – அந்த பகவான் பார்த்து, ‘உண்மையில், ஜீவா ஆன்மாவுடன் ,  நான் இந்த மூன்று கூறுகளை உருவாக்கி, பெயர்களையும் வடிவங்களையும் விரிவுபடுத்துகிறேன். ஒவ்வொரு தனிமத்தின் மும்மடங்கு தன்மையை நான் வெளிப்படுத்துவேன்.
  • ஆத்மா வா இடமேக ஏவாக்ர அசித் நன்யத் கிஞ்சனா மிஸத் ச இக்சத லோகான் நு ஸ்ரீஜ இதி (ஐதரேய உபநிஷத் 1.1.1) – பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பு அனைத்தும் அவருக்குள் இருந்தன, அனைத்தும் அவருக்குள் இருந்தன, அந்த நேரத்தில் எதுவும் தனித்தனியாக இல்லை. ஜீவாத்மாக்கள் (தனிப்பட்ட ஆன்மாக்கள், ததஸ்தா சக்தி) மற்றும் வெளிப்புற சக்தியான மாயா இன்னும் அவருக்குள் இருந்தது. அதனால் அந்த இறைவன் என் மூலம் அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்த விரும்பினான்;
  • ச இக்ஷாசக்ரே, கஸ்மின்னஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மின்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி (பிரஷ்ண உபநிஷத் 6.3) – புருஷன் பிரதிபலித்தார்: “நான் எந்த வழியால் உடலை விட்டுப் பிரிந்து செல்வேன்? நான் எதன் மூலம் உடலில் தங்குவேன்?”

தர்ம சக்கரம் எழுத்தாளர், பகவான் அவர்கள் மீது விழுவதைப் பார்த்த மாத்திரத்தில் பயனடைந்த பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார். குஹா, ஹனுமான், ஷபரி மற்றும் விபீஷணன் ஆகியோர் ராமரின் தெய்வீக பார்வை மற்றும் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிலரை குறிப்பிடலாம்.

———————–

ராம –யாவரும் மகிழும்படி இருப்பவன்–தான் விளையாடி ஆனந்தம் அடைபவர் என்றுமாம்-ரூப -குண -சேஷ்டிதங்களால் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம்-ம்யமத (அ)ஸ்மிந் ஸதா₃ ஸர்வைர் கு₃ண ரூப வஶீ க்ருதைரிதிராம꞉ (குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர்)। யதாரம்யதே அஸ்மின் சதா சர்வை குண ரூப வசீக்ருதை—-அயோத்யா -53-1-திருக் கல்யாண குணங்கள் — திருமேனியின் எழில் ஆகியவற்றால் பரவசம் அடைந்த அனைவருக்கும் எப்போதும் இராமனால் ஆனந்தம் கிட்டுகிறது –ராமோ ரம்யதாம் ஸ்ரேஷ்ட -அயோத்யா -53-1--மற்றவர்களை மகிழும்படி செய்வதில் சிறந்தவன் இராமன்-குணாபிராமம் ராமம் ச -சபா பர்வம் -58-42- சிறந்த குணங்கள் நிரம்பி உள்ளதால் அனைவரையும் மகிழும்படி செய்யும் இராமன்-ஸ்யாமோ யுவா லோஹிதாஷோ மாதங்கா நாம் இவ ரிஷப-மழை மேகம் போன்று நிறம் கொண்டவனும் -இளம் வயதில் உள்ளவனும்
தாமரை போன்ற அழகான கண்கள் கொண்டவனும்-யானைகளின் நடுவில் உள்ள ஆண் யானை போன்றவனுமான இராமன்–ததா சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்ஜநனை பிது குணைர் விருருசே ராமோ தீப்த ஸூர்ய இவாம் சுபிர் –அயோத்யா -1-33- தனது நாட்டு மக்களால் மிகவும் விரும்பப்படுபவனும்-தசரதனுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனும்
சிறந்த கல்யாண குணங்கள் கொண்டவனும் ஆகிய இராமன் தனது தேஜஸ் மூலம் ஸூர்யன் போன்று ஒளியுடன் நின்றான்-சரத் இந்தீவரத்விஷே அபி ராம சரீராயேதி ஸ்வ மந்த்ர லிங்கா₃ச்ச-இராமனின் திருமேனி சரத் காலத்தில் தோன்றிய நீலோத் பல மலர்கள் போன்று மனத்தைக் கவர்ந்ததாக இருந்தது –மனத்துக்கு இனியான்-தயரதன் பெற்ற மரகத மணித்தடம் –10-1-8-சேண சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்தி காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பி -6-6-9-

ஓம் ராமாய நம:நித்யானந்தலக்ஷணேSஸ்மின் அந்தமில் பேரின்ப வடிவினராய்-யோகினோ யோகிகளை-ரமந்த இதி மனமகிழ செய்பவராதலால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-ரமந்தே யோகிநோ யஸ்மின் நித்யானந்தே சிதாத்மனி |இதி ராமபதேநைதத் பரம் ப்ரஹ்மாபிதீயதே  || (பத்ம புராணம்)-எந்த அந்தமில் பேரின்ப வடிவான, ஞான மயமான இறைவனில் யோகிகள் மனமகிழ்கின்றனரோ, அந்தப் பரம்பொருள் ‘ராம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். ஸ்வேச்சயா  தன்னிச்சைப்படி- ரமணீயம் மிக அழகிய-வபுர்வஹன்வா திருமேனி உடையவராய்-தாசரதி தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்) அவதரித்ததால்-ராம: பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, தன்னிச்சையால் தயரதனின் திருமகனாய் (ஸ்ரீராமனாய்), அழகிய திருமேனி உடையவராய் அவதரித்ததால் பகவான் ‘ராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ்ரீராம நாமம் தாரக மந்திரமென்று அழைக்கப்படும். இந்த திருநாமத்தை உச்சரிப்போருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். காசியில் மரிப்போரின் காதுகளில் (அவர்களின் கடைசி தருணத்தில்) பரமசிவனே ‘ராமநாமத்தை’ உச்சரிக்கிறார். எனவே தான் காசியில் மரிப்போருக்கு மறுபிறப்பென்பதில்லை.

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்ற இரண்டெழுத்தினால் –
கம்ப ராமாயணம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல்லெறும்பாதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
(திருவாய்மொழி 7.5.1)

ராம நாமத்தை உச்சரிப்பது ஸஹஸ்ரநாமத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைத் தரும் என்று பரமசிவன் பார்வதியிடம் கூறுகிறார் ஸ்ரீராம ராம ராமேதி ராமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே – இனிய முகம் கொண்டவர்! ராம நாமத்தை 3 முறை உச்சரித்தால், அது விஷ்ணுவின் 1000 நாமங்களைச் சொன்னதற்குச் சமம்.

தருணௌ ரூப ஸம்பன்னௌ சுகுமாரௌ – புண்டரீக விசாலக்ஷௌ – தாமரை போன்ற கண்களுடன் இனிமையான வடிவம் மற்றும் அழகான தோற்றம்.-‘ராமு-க்ரீதாயாம்’ (விளையாட்டுகளைக் குறிக்கும்) என்ற மூலச் சொல்லைக் குறிப்பிடுகின்றனர் – அவருடைய லீலாக்களால் இன்பம் பெறுபவர்’ அல்லது அவரது கிரீடத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்பவர் ராமர்.ராம நாமம் ‘தாரக மந்திரம்‘ அல்லது சம்சாரப் பெருங்கடலைக் கடந்து முக்தி அல்லது மோட்சத்தை அடைய பக்தர்களுக்கு உதவும் ஒன்று என்று அழைக்கப்படுகிறது. அஷ்டாக்ஷரி மற்றும் பஞ்சாக்ஷரி ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த மந்திரங்களின் கலவையாக ராம நாமம் கருதப்படுகிறது.-“ஓம் ந மோ ந ரா யா ந யா” என்ற அஷ்டக்ஷரி (8 எழுத்துக்கள்) மந்திரத்திலிருந்து ‘ர’ என்ற எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது – என்ற எழுத்து பஞ்சாக்ஷரி (5 எழுத்துக்கள்) மந்திரமான “ந ம சி வா ய” இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. அஷ்டாக்ஷரியில் இருந்து ”ர’‘ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் ‘ஓம் ந மோ ந  யா ந யா‘ (விஷ்ணு வடிவம் இல்லாதது) ஆகிவிடும். இதேபோல், பஞ்சாக்ஷரியில் இருந்து மA’ என்ற எழுத்து புறக்கணிக்கப்பட்டால், மந்திரம் “ந  சி வா ய” (சிவன் வடிவம் இல்லாதது) ஆகிவிடும். எனவே ‘ராம’ நாமம் என்பது உயிர் கொடுக்கும் இரண்டு எழுத்துக்களின் (ஜீவாக்ஷரம்) கலவையாகும், எனவே இது ‘தாரக மந்திரம்‘ என்று கருதப்படுகிறது.

எப்பொழுதும் ஸ்ரீராமனைத் தியானிப்பதன் மூலம் அனுமன் தனது சக்தியைப் பெற்றார். வால்மீகி ராம நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் கொள்ளையனாக இருந்து தன்னை ஒரு துறவியாக மாற்றிக்கொண்டார் (உண்மையில், வால்மீகிக்கு ‘ராம’ என்று உச்சரிக்க முடியவில்லை என்றும், ‘மாரா மரா’ என்று தொடர்ந்து சொல்ல நாரத முனிவரால் அறிவுறுத்தப்பட்டதாகவும், வால்மீகி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஒரு கொள்ளையனாக!

ராம:- ரமதே’ இதி ராம: ரமு- ரீடாயாம் என்று தாதுவாகையாலே விளையாடுபவன் என்று பொருள்படும்.” த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி கர்மஸூத்ரோப பாதிதை ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஐந்துபி ‘ என்று நாரத முனிவர் கூறினபடியே, சிறுவர்கள் பந்துகளைக் கொண்டு விளையாடுமாபோலே எம்பெருமான் பிராணிகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். பந்தானது வெளுப்பு நூல் கருப்புநூல் சிவப்பு நூலாகிய மூன்றுநிற நூல்களாலே கட்டப்பட் டிருப்பது போல பிராணிகளும் ஸத்வரஜஸ்தமஸ்ஸுக்களாகிற மூன்று நிறமுள்ள குணங்களமைந் திருப்பர்கள். பந்தானது விஹாரகாலத்தில் மேலே போவதும் கீழே விழுவதுமா யிருப்பது போல, பிராணிகளும் ” தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யேமர்த்யலோகம் விசந்தி’ என்கிறபடியே மேலே போவதும் கீழே விழுவதுமாயிருப்பர்கள். இங்ஙனே விளையாடும் பரமபுருஷன் இராமனாகத் திருவவ
தரித்து “ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹு ரு தூந்” என்றுவான்மீபேசும்படி பிராட்டி யொருத்தியோடே விளையாடினான். “ ராமஸ் ஸ ஸீதயாஸார்த்தம் ” என்னாதே (ராமஸ்து) என்றது ஸாபிப்ராயம். (து) என்னு மவ்யயம் வ்யாவ்ருத்தியைச் சொல்லும். இதுவரையில் பெருமாள் பித்ரு சுச்ரூஷையிலும் தர்மப்ரவர்த்தனத்திலும் தேவதா ஸாமாராதனத்திலும் புகழ்படைத்திருந்தவர்-இப்போது பிராட்டியோடே சேர்ந்தவாறே வேறுபட்டார். சருங்கார கேளிகளிலே பரம ரஸிகரன்று புகழ்பெற்றபடியைச் சொல்லுகிறது.

அன்றியே, ராம்:- ராமதே என்பதற்கு உள்ளம் குளிரப் பெறுபவரென்பதும்
பொருளாகையாலே அப்பொருளைக் கொண்டு அநுபவிப்பதும் பாங்கு. அன்பர்
களோடு கலக்கப் பெற்றும் அன்பர்களின் காரியத்தைத் தலைக்கட்டியும் உள்ளம்
குளிருபவர் பெருமாள். குஹேந ஸஹிதோராம ராமன் குஹனோடு சேர்ந்தானென்று
இதற்குப் பொருளன்று; குஹேந ஸஹிதஸ் ஸந்ராம குஹனோடு சேர்ந்த பின்பு
ராமனானானென்றே ஆசாரியர்களருளிச் செய்வது. குஹனோடு சேர்ந்து உள்ளங்
குளிர்ந்தா னென்கை. மற்றோரிடமுங் காணலாம்; (க்ருத க்ருத்யஸ் ததா ராம
*அபிஷிச்ய சா லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம். கருதக்ருத்யாஸ் ததா ராம *

விபீஷணாழ் வானுக்கு முடிசூட்டித் தன் காரியம் தலைக்கட்டிற்றாக நினைத்து [ தா
ராம ]
அப்போது தான் ரதியை யடைந்து ராமனாயின னென்கை. பெருமாள்
செய்தருளின ஒவ்வொரு காரியமும் அவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குளிரச்
செய்ய வல்லதே யாயிற்று. குஹஸுக்ரீவ மாருதி வி ஷணதிகள் பக்கலிலே
காட்டின அனுக்ரஹ விசேஷத்தினால் திருவுள்ளம் குளிர்ந்தது போல, தா காதா
கேயவிராத கரதூஷண ராவணதிகள் பக்கலிலே காட்டின நிக்ரஹத்தினாலும்
ஆசரித விரோதிகள் தொலையப் பெற்றோமென்று திருவுள்ளம் குளிர்ந்திருக்கக்
குறையில்லை. ஆக, ரமதே இது ராம ‘ என்கிற வ்யுத்பத்தியினால் ஸ்ரீராமாயணத்தில்
பல ப்ரகரணங்கள் ஸங்க்ருஹீதங்களாகும்.

அன்றியே ராம : ரமயதீதி ராம ‘ என்கிற வ்யுத்பத்தியும் பொருந்தும். தன்னைக் காண்பவர்களையும் தன் சரிதை கேட்பவர்களையும் மகிழ்விப்பவர் பெருமாள்.உலகத்தில் அதிகாரிகள் வெவ்வேறு பட்டிருப்பர்களாதலால் ஒரே குணத்தினால் எல்லாரையும் ஏக ரூபமாக மகிழ்விக்க முடியாது.” ஸத்யேந லோகந் யதி தீநாந்தாநேந ராகவ;. குரூந் சுச்ஷயா வீர தநுஷா யுதி சாத்ரவாந்.’ என்றாப்போலே ஒவ்வொருவர் பக்கலிலே ஒவ்வொரு குணத்தைச் செலுத்தி மகிழ்விப்பது ஸ்ரீ ராமாயண ப்ரஸித்தம். ஸௌசீல்யம் ௌலப்யம் ஸெளந்தர்யம் பொறுமை தயவு வாத்ஸல்யம் வீரம் என்றிவை முதலான பல திருக்குணங்கட்குக் கடலாயிருக்கின்ற பெருமாள் திருநாட்டிலே விலை செல்லகில்லாத திருக்குணங்களை விலை செல்லச் செய்வதற்காகவே இம்மண்ணுலகில் வந்து அவதரித்தபடியினால் அத்திருக்குணங்களிலே அவரவர்களை யீடுபடுத்தி மகிழ்விக்கச் சொல்ல வேணுமோ? குஹப்பெருமாளை ஸௌசீல்யத்தாலே மகிழ்வித்தான் ஸௌசீலய மென்பதும் சீலமென்பதும் பர்யாயம். தன் மேன்மை பாராதே தண்ணியரோடும் கலந்து பரிமாறுகை சீல குணத்தின் காரியம். இக்குணத்தினால் காரியங் கொண்டது தான் ஸ்ரீ ராமாயணத்தில் அதிகம். ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களாலே தண்டாகாரண்ய வாஸிகளான மஹர்ஷிகளை யீடுபடுத்தினது பெரியதன்று. காதும்மூக்குமறுப்புண்டு கதறி யழுதுகொண்டே சுரதூஷணாதிகளிடம் செல்லலுற்ற சூர்ப்பணகை” தருணெள ரூபஸம்பந்நௌ ஸுகுமாரெள… புண்டரீக விசாலாக்ஷெள சீரக்ருஷ்ணாஜிநாம்பரெள, கந்தர்வராஜ ப்ரதிமௌ பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதெள “என்று சொல்லிச் சொல்லிப் புலம்பும்படி செய்ததே சிறப்பு. இங்ஙனே ஓரோ குணங்களைக் கட்டி ஒவ்வொருவரையும் ரமிப்பித்தது பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

——————-

விராம –பிறரை ஓயச் செய்பவன்-வரத்துக்கு ஒய்வு -வரம் கொடுத்த பிரமனுக்கு ஒய்வு – வரம் பெற்ற ராவணனுக்கு ஒய்வு -தேவர்களுக்கு ஒய்வு கொடுத்தவன்-ஓம் விராமாய நம:விராமோ அவஸானம் ‘விராம’ என்றால் முடிவாக தங்கும் இடம் ப்ராணினாம்  அஸ்மின்  இதி  -அனைத்து உயிரினங்களுக்கும் அவரே ஆதலால்-விராம: பகவான் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானே அனைத்து உயிரினங்களும் முடிவில் சென்றடையும் இடமாக இருக்கிறார். எனவே அவர் ‘விராம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அவர் இறுதி ஓய்வெடுக்கும் இடம்ந ஹி தஸ்மாத் மனஹ் கஷ்சித் சக்ஷுஷீ வா நரோத்தமான் | நரஹ் ஷக்நோத்யபாக்ரஷ்டும் அதிக்ராந்தே அபி ராகவே || ( 2.18.13)-ராமரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் மீது தங்கள் எண்ணங்களைச் செலுத்துபவர்கள் முயற்சித்தாலும் இந்த சங்கத்திலிருந்து வெளியேற முடியாது

ராமன் மற்றும் விரமா என்ற இரண்டு நாமங்களை ‘ரமந்தே அஸ்மின் இதி ராம, விரமாந்தி அஸ்மின் இதி விரமா – மக்கள் யாரை மகிழ்விக்கிறார்களோ, அவர் ராமர், மற்றும் யாரிடம் இறுதி சாந்தியைக் காண்கிறார்களோ, அவரே விரமா’ என்பதில் அழகாக விளக்குகிறார். ஆனந்தத்தின் மூலமும் ஆனந்தத்தின் முடிவுதான் – யத்ர ரமணாம் தத்ர ராமநாவாசனம். படைப்பாளி அவனே, படைப்பை முடிப்பவனும் அவனே.-தஸ்மிந் இடம் சம் ச விசைதி ஸர்வம் ச ஓம் ப்ரோதாஶ்ச விபு ப்ரஜாஸு (யஜுர் 32.8)-யோ மராயதி பிராணயதி யஸ்மாத் ப்ராணந்தி புவனாநி விஸ்வா (அதர்வா 13.3.3)-காலேனோதேதி ஸூர்யஹ் காலே நிவிசதே புனஹ் (அதர்வா 19.54.1)-யத்ராஅமிர்தம் ச மிருத்யுஷ்ச புருஷே’தி ஸமாஹிதே (அதர்வா 10.5.17)

விராம 1-ரமய திராம:’ என்கிறாப்போலே ‘விரமயதீதி விராம? என்றாகும்.
வீராமமாவது ஓய்வு: (1) பிறருடைய செளர்யவீர்ய பராக்ரமங்களை ஓயச் செய்பவர்
(2) பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர் என்று இருபொருள் கொள்ளலாம்.
முந்தின பொருளைப்பற்றி விசேஷமாக விவரணம் காட்ட வேண்டியதுண்டோ?
ப்ரஹ்மாஸ்வம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா, இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸுரநாயகோ வா த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்-என்ற திருவடியின் வார்த்தை யொன்றே போதும். பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர்-என்ற இரண்டாவது பொருளுக்குச் சேரச் சிலவிடங்களை யெடுத்துக்கா ட்டுதும். ஆரண்ய காண்டம் ஆறாவது ஸர்க்கத்தில், தண்டாகாரண்யவாளிகளான முனிவர்கள் அரக்கர்களினால் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை இராமபிரானிடம் விஜ்ஞாபித்துச் சரணமடைந்தபோது இராமன் அம்முனிவர்களுக்கு அபயமளித்த வரலாறு வருணிக்கப்பட்டது. பிறகு ஒன்பதாவது ஸர்க்கத்தில் ஸ்தா பிராட்டி இராமபிரானை நோக்கித் தர்க்கித்துப்பேசினாள். (அதாவது) நீர் முனிவேடம் பூண்டு காட்டுக்கு வந்திருக்கிறீர்; புண்ணிய புனல்களாடிச் சுகமாக அயோத்திசென்று சேரவேண்டியது பிராப்தம். அப்படியிருக்க நீர் முனிவர் முன்னிலையில் பரஹிம்ஸை செய்வதாகப் பிரதிஞை செய்தது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. க்ஷத்ரியர்
களுக்கு இது தருமமானாலும் இப்போது நீர் க்ஷத்ரிய தருமத்தைக் காக்கவேண்டிய நிலைமையில் இல்லாதபடியாலும்,”தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவம் மேற்கொண்டு” காட்டுக்கு வந்திருப்பதாலும் ஆயுதங்களைக்கொண்டு செய்யுஞ்செயலை நீர் நெஞ்சாலும் நினைக்கவே தகாது ‘ உமக்குத் தெரியாததொன்றுமில்லை;உமக்கு நான் தருமம் உபதேசிக்க வந்ததாக நினைக்கவேண்டா; திருத்தம்பியாரோடும் ஆலோசித்து யுக்தமானபடி செய்யக்கடவீர்- என்றுரைத்தாள். இதைக் கேட்ட இராமன் (பத்தாவது ஸர்க்கத்தில்) அந்த ஸீதா பிராட்டியின் வாதத்தைஓயச் செய்திருப்பதைக் காணவேணும். அதில் ஸரமான விஷயம் இவ்வளவே.-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே! ஸலக்ஷ்மணாம், ந ஹி பரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:* இத்யாதிகளைச் சொல்லி அவளுடைய வாதத்தை விராமமடையச் செய்தனனென்பது. வாலி ”அரக்கரோரழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?” என்றாப்போலே சில வாதங்களைச் செய்தபோது பெருமாள் அவன் வாயினாலேயே க்ஷமைவேண்டும்படி செய்து அவனை விராமமடையச் செய்ததும்
இங்ஙனே பலவுங் காண்க.

——————

நிஸர்க-ஸ்வா பாவிகமாக இயற்கையாக  –விரத-ஆசை பற்று இல்லாமல்-அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது அம்மா-ராஜ்ய நாசம் இருள் கூட கூட ராம சந்த்ர ஒளி விஞ்சி இருந்ததே-நிஸர்க₃ நைரபேக்ஷ்யேண க்ருபணாத்₃ராஜ்யாதே ₃꞉விரத꞉
பாராளும் படர் செல்வம் பரத தம்பிக்கே யருளி அரும் கானம் அடைந்தவன் -பெருமாள் திரு 8-5-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவிய யெம்மிராமன் எம்பெருமான் -பெருமாள் திரு -9-2-ஓம் விரதாய நம:விகதம் பற்றுதலின்றி (நாட்டமின்றி) இருக்கிறார்-ரதமஸ்ய விஶயசேவாயாமிதி ‘ரதம்’ அதாவது ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்)-விரத: எனவே பகவான் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் ஏனைய உலக இன்பங்களில் (புலனின்பங்களில்) நாட்டமின்றி இருக்கிறார். எனவே அவர் ‘விரத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-இந்த திருநாமத்தை துஶ்ட:, புஶ்ட: ஆகிய திருநாமங்களோடு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். பகவான் தானே பேரின்ப வடிவினராய் இருக்கிறார் (துஶ்ட:) மற்றும் எப்பொழுதும் எதிலும் த்ருப்தியோடு இருக்கிறார். அவருக்கு நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்றுமில்லை. எனவே, அவர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்வதில்லை.-ந ச அஸ்ய மஹதீம் லக்ஷ்மீம் ராஜ்ய நாஷோ’பகர்ஷதி |
லோக-காந்தஸ்ய காண்டத்வம் ஷீதா ரஷ்மேரிவ க்ஷபா ||
” (அயோத்தியா 19.32)அவர் ராஜ்யத்தை இழந்தபோது, ​​​​குளிர்ச்சியான சந்திரனின் அழகை இரவினால் பறிக்க முடியாதது போல, அது அவரது சிறப்பை இழக்கவில்லை-தர்ம ஆபதேசாத் த்யஜாதஹ் ச ராஜ்யம் | மாம் ச அபி ஆரண்யம் நயதஹ பதாதீம் | ந ஆஸீத் வ்யதா யஸ்ய ந பீஹ் ந ஷோகஹ் | கச்சித் ச தைரியம் ஹ்ருதயே கரோதி” || (சுந்தர 36.29)சீதா பிராட்டியின் வார்த்தைகளில்: “ஸ்ரீராமன் தர்மத்தின் கீழ் ராஜ்யத்தைத் துறந்து, நான் கால் நடையாகச் செல்ல வேண்டிய காட்டிற்கு என்னை அழைத்துச் சென்றபோது, ​​ராமனிடம் ஏமாற்றமோ, துக்கமோ, பயமோ இல்லை”.

விரஜோ-மார்கா என்று படிக்க வேண்டும், இதன் பொருள் அவர் குறையற்ற பாதையைக் காண்பிப்பவர்.-தன்னைப் பிரிந்திருந்தாலும் எல்லோரும் தேடும் பாதை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.-விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு —சரணம் அடைந்தவர்களுக்கு மோக்ஷம் அற்ற புருஷார்த்தங்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவன்

விரத = தம்முடைய ஸமீசீன வாதங்களாலே பிறருடைய வாதங்களை விராமமடையச் செய்யுமாற்றல் விராம; என்ற கீழ்த்திருநாமத்தில் அநுபவிக்கப்பட்டது.பிறருடைய ஸமீசீன வாதங்களாலே தாம் விராமமடைவதும் விதண்டாவாத வைதேசிகரான பெருமாள் பக்கலிலே காண்பதுண்டு. தாம் பிடித்ததே பிடிவாத மாக இராமல் “யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம்” என்று கொண்டு தம்முடைய வாதத்திற்கு விச்ராந்திக்கொள்பவர் பெருமாள். அல்லது, காரண விசேஷத்தாலே தாம் நிக்ரஹிக்கப் புகுந்தாலும், உடனே நன்மை கண்டு நிக்ரஹத்தில் நின்றும் விரக்தராகி அநுக்ரஹோந்முகராமவர் என்பதையுங் கொள்ளலாம். இவ்விரண்டையும் அடைவே விவரிக்கிறேன். அயோத்தியா காண்டம் இருபத்தாறாம் ஸர்க்கத்தில் இராமபிரான் தாய் தந்தையர் சொற்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை ஸ்தா பிராட்டியிடங்கூறி அவளை நகரத்திலேயே வாழுமாறு திட்டம் செய்ய, (ஸர். 27) அதற்குபிராட்டி தன்னையும் உடனழைத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்க, (ஸர். 28) அவளுக்கு இராமன் காட்டின் கொடுமைகளைக்கூறி ‘நீ காட்டுக்கு வரவே தகாது;என்று வலிதாகத் தர்க்கித்தான். அதற்குமேல் பிராட்டி (29, 30 ஸர்க்கங்களில்) பிரணயாரோஷம் தலையெடுத்து “ராமா! உன்னிடத்தில் அழகு மட்டுமேயுள்ளது;அதைக்கண்டு அனைவரும் மயங்கிவிடுகிறார்கள்; உனக்கு ஆண்மையென்பது சிறிதுமில்லை; என்னொருத்தியைக் காக்க முடியாமல் என்னை நிறுத்தி நீ காட்டுக்குப் போனாயென்று என் தந்தையார் கேள்விப்பட்டாராகில் ‘ஹா! புருஷவேஷம் பூண்டுவந்த வொரு பெண்பிள்ளைக்கா என் மகளைக் கொடுத்தேன்! ‘ என்று மிகவும் மனம் நொந்து கொள்வர்; என்னைக் கட்டிலே காக்கமாட்டாத கா புருஷனா நீ? என்று இனைய பலவும் சொல்லித் தர்க்கிக்க, இராமன் தன்னுடைய பிடிவாதத்தில் நின்றும் விரதனாகி அவளையும் உடனழைத்துச் செல்ல இசைந்தனன்.

காரண விசேஷத்தாலே நிக்ரஹிக்கப்புகுந்து நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்த படியையும் இரண்டிடங்கொண்டு காட்டுவோம். கிஷ்கிந்தா காண்டத்தில் (ஸர்.30) ஸுக்ரீவ மஹாராஜர் வர்ஷாகாலத்திலே பெருமாள் ஒய்வு கொடுத்ததை வியாஜமாகக் கொண்டு விஷயபோகங்களிலே ஊன்றிக்கிடக்க. காலம்கடந்தும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாராமையைக்கண்ட பெருமாள் சீறிச்சிவந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றினபடியை இளையபெருமாள் முகமாகத் தெரிவிக்கவெண்ணி ” ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ” மா வாலிபதமந்வகா; ”« ஹநிஷ்யாமி ஸபாந்தவம் ” இத்யாதிகளைச் சொல்லி அச்சமுறுத்தினார். ஸுக்ரீவன் குடும்பத்தோடு மாண்டுவிட்டானின்று என்றே நினைக்கும்படியாயிருந்தது. இந்த பிரபலமான நிக்ரஹ ஸங்கல்பம் என்னாயிற்று? “ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவ்யேவம் ஸமஜாயத” என்று பிராட்டி பக்கலிலே திருவடி சொல்லும்படியாகவன்றோ ஆயிற்று” வாநராணாம் நராணாஞ்ச கதமா த் ஸமாகம்:?” என்று பிராட்டி திருவடியைக் கேட்டாள். பணைத்த்தித்திரிகிற குரங்கினங்களுக்கும் புருஷோத்தமர்களுக்கும் சேர்க்கையுண்டானபடி எங்ஙனேயென்று கேட்டாள். அதற்குத் திருவடி சொன்னது, வெறும் ஸமாகமமன்று; ராமனும் ஸுக்ரீவனும் ஏகதத்வமென்னும்படி யாகவன்றோ குழைந்தார்களென்று. ஆக, நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்தபடியாலே விரதனென்றது ஓக்கும். மற்றோரிடம் யுத்தகாண்டத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணமாகும்.”பா ம் புஜக போகாபமுபதாயாரி ஸுதந்: ‘ அஞ்ஜலிம் ப்ராங்
முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே:”
என்னும்படி கடலரசனை வழிவேண்டி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தார் பெருமாள். அவனோ முகங்காட்டிற்றிலன்;*சாபமாநய ஸௌமித்ரே சராம்ச்ச ஆசீவிஷோபமாந், ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : * என்று பலவுஞ்சொல்லி உலகில் ஜலதத்வமே யில்லா தபடி செய்துவிடுகிறேனென்று சீற்றத்தினெல்லையில் நின்றார் பெருமாள்.பிறகு என்னாயிற்று? அக்கடலரசன் சிறிது ஆபிமுக்க்யம் காட்டினவாறே ஸமுத்ரராஜனே! இவ்வம்பு உனக்காகத் தொடுத்ததன்று; உன் பகைவர்மேலேவிடத் தொடுத்ததத்தனை ; உன் பகைவர்களைக் கட்டிக் கொடு’ என்று கூறி அவன் காட்டிக்கொடுத்த திருமகுல்யமென்கிற விடத்திலே அம்பைச் செலுத்தி அநுக்ரஹ சீலராகி நிக்ரஹத்தில் நின்றும் விரதராயினர். (யுத்தகாண்டம் ஸர்க்கம் 22காண்க… . மேலே ராவணனோடு முலமான யுத்தம் நடக்கும்பொழுது அவன்-சால சாபஞ்ச முமோச வீர:* என்னும்படி கமாண்டு நின்றவாறே ” கச்சஅநுஜாநாமி “ என்று சொல்லி விடை கொடுத்துப் போகவிட்டு அப்போது யுத்தத்தில் நின்றும் விரதரானார் பெருமாள்- என்பதும் இங்கு (விரத 🙂 என்னும் திருநாமத்தின் பொருளாகக் கொள்ளத்தகும்.

————————

மார்க்க-தேடப்படுபவன்-த₄ர்மாபதே ₃ஶாத் த் யஜதஶ்ச ராஜ்யம் மாம் சாப்ய ரண்யம் நயத꞉ பதா₃திம், இத்யாதி₃ । ப₄ரத்₃வாஜாதி₃முநிபி₄ர் மார்க₃யத இதிமார்க₃꞉ ।-நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்-பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர்-விரஜோ மார்க₃ இதி பாடே ₂ விரஜா꞉ – அபாம்ஸுலோ நிர்தோ₃ஷஸ் தத்₃த₃ர்ஶிதோ மார்க₃ இதி –யா கதிர் யஜ்ஜ சீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி-(ஜடாயுவுக்கு மோக்ஷம் காட்டிய பெருமாள் ) யஜ்ஜ்ங்கள் இயற்றுவோரின் உயர்ந்த கதி ஐந்து அக்னியை வைத்து வழிபடுவோரின் கதி।-ஆவஹத் பரமாம் கதிம் –ஸூந்தர-17-8- ஜடாயு நீ நான் கூறும் பரம கதிஅடைவாயாக- யதா₂ந ச அஸ்ய மஹதீம் லஷ்மீம் ராஜ்ய நாச அபகர்ஷதி லோக காந்தஸ்ய காந்தத்வாத் சீத ரஸ்மே இவ ஷபா–அயோத்யா -19-32-இராமனின் திருமுகத்தில் லஷ்மீ என்னும் சோபை அதிகமாகவே உள்ளது-ராஜ்யம் கை விட்டுப் போனாலும் அந்த சோபையை நீக்க இயலாது உலகிற்கு ஒளியை அளிக்க வல்லதும் -காண்பவர்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லதும் ஆகிய சந்திரனின் சோபையை இருள் எவ்வாறு நீக்க இயலும்-ச பிதுர் வசனம் ஸ்ரீ மாந் அபிஷேகாத் பரம் பிரியம்-வனவாஸம் செய்வதற்கு அனுமதி அளித்த தயரதன் சொற்கள் பட்டாபிஷேகம் என்பதைக் காட்டிலும் இராமனுக்கு மிகவும் பிரியமாக இருந்தன-தர்ம உபதேசாத் த்யஜதச்ச ராஜ்யம் மாம் சாப்யரண்யம் நயத பித்தாதிம் –ஸூந்தர-36-29– தர்மத்தின் வழியைக் கடைப்பிடிக்க எண்ணியவராக ராஜ்யத்தைத் துறந்து மென்மையான சரீரம் கொண்ட என்னை அடர்ந்த கானகத்தில் நடத்தியபடி வந்தார்-இதனால் எனக்கு வருத்தம் உண்டாகவில்லை

ஓம் மார்காய நமயம் விதித்வா எவரை (எந்த பரம்பொருளை) அறிவதால்-அம்ருதத்வாய  கல்பந்தே பிறவா நிலையை அடைகின்றனரோ-யோகினோ  முமுக்ஷவ: முக்தியை விழையும் யோகிகள்-ஸ ஏவ பந்தா: அவர் (பகவான்) ஒருவரே (முக்தியை) அடையக்கூடிய வழியாவார்-மார்க: எனவே, பகவான் ‘மார்க:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘நான்ய: பந்தா வித்யதேSயனாய’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.15)-எவரை விடுத்து மனிதனுக்கு (முக்தி அடைய) மற்றொரு வழியில்லையோ.

மார்க்க:= மார்க்யதே’ இதி மார்க்க; மார்க்கணமாவது தேடுதல். தேடப்படுகிறவர் என்றபடி. தேடுகிறவர் என்கிற பொருளும் பொருந்தும். தேடப்படுகிறவர் என்னும் பொருளை முன்னம் விவரிப்போம். வேதாந்தங்களிலே “ஸோந்வேஷ்ட ய :” என்றுஓதியுள்ளது. பகவான் தேடத் தகுந்தவன் என்றபடி. இந்தச் சுருதியையடியொற்றியே திருமங்கையாழ்வார் “நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன்” என்றும். ” நான்மறைகள் தேடியென்றுங் காணமாட்டாச் செல்வன்என்று மருளிச்செய்தார். உத்தர ஸ்ரீராமாயணத்திலே ‘சம்பூகவதம் என்றொரு
கெட்டம்.தவம்புரியத் தகாத ஜாதியிலே பிறந்தானொருவன் தண்டகார ணியத்திலே கொடுந்தவம் புரிய,அதனாலே அயோத்தியில் ஒரு அந்தணனுடைய குழந்தை இறந்துபோக, அந்த சூத்ரதபஸ்வியைக்கொன்றாலன்றி இந்த பிராமண சிசு உயிர்பெறாதென்றறிந்த பெருமாள் அவனை வதைக்கத் திருவுள்ளம்பற்றிக் கையுங்கத்தியுமாகத் தண்டகாரணியத்திற்கெழுந்தருளுகிறார். (பெருமாள் திரு மொழியில் செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டு என்றநுஸந்திககப்பட்ட கதை இது.) காடேறச் செல்லாநின்ற பெருமாள் ”சம்புகனென்கிற சூத்திரன் தம் புறானாமே; எங்கே எங்கே?”என்று கேட்டுக்கொண்டே அவனைத் தேடிக்கொண்டு செல்லுகின்றார்; சென்று அவனையணுகினபோது அவன் சொல்லுகிறான்* அந்வேஷ்டவ்யோ யதஸி புவைநர் லோசுநாதச் சாண்ய மாம் அந்விஷ்யந்…” [உத்தரராமசரிதே பவபூதி: என்றான். உலகர்களாலே தேடத்தக்கவனாக வேதங்களில் சொல்லப்படுகிற மஹாப்ரபுவே, நீ என்னைத் தேடிக்கொண்டு வந்தனையே, நான் எவ்வளவு பாக்யசாலி! என்றான்.இங்கு கர்த்தரியர்த்தம் கர்மணியர்த்தம் ஆகிய இரண்டு பொருளும் காணலாம். மாரீச மாயா ருகத்தை வதைத்து மீண்டபின் பாணசாலையில் பிராட்டியைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டு திரிந்தது, தனுகபந்தனுடைய சொல்லின்படி சபரியையும் ஸுக்ரீவனையும் தேடிப்போந்தது என்னுமிவற்றையும் கொள்ளலாம். மார்க்க: என்பதற்கு வழியாயிருப்பவன், வழிகாட்டுபவன் என்கிற பொருள்களுங்கொள்ளலாம். வழியென்றாலும் நெறியென்றாலும் பரியாயம்.நம்மாழ்வார் பெரிய திரு வந்தாதியில் *நெறிகாட்டி நீக்குதியோ? என்கிற பாசுரத்தில் உபாயமென்னும் பொருளில் நெறியென்னுஞ் சொல்லைப் பிரயோகித்திருப்பதனால் மார்க்க; என்னும் வடசொல்லும் உபாயவாசகமாகக் குறையில்லை. முகுந்தமாலையில் “கரசரண ஸரோஜே காந்திமந் நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே,ஹரிஸரஸி விகாஸ்ய…” என்ற சுலோகத்தில் ‘அகாதமார்க்கே என்றவிடத்தில் மார்க்க சப்தம் உபாயார்த்தமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ‘உபாயோபேயத்வே ததி தவ தத்வம் ந து குணௌ” என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் அருளிச்செய்தபடி எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகையாலே உபேய பூதனான தானே உபாயமுமாயிருக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. ராவண வதமான பிறகு பிரமன்வந்து செய்யும் துதியில் “சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: “ என்றதனால் மூதலிக்கப்பட்ட அர்த்தமேயன்றோ இது. இனி, வழிகாட்டுகிறவன் என்னும் பொருளுக்கு ஸமந்வயம் பெரியவுடையார் (ஐடாயு) பக்கலிலே காணலாம். *மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்* என்று சொல்லிச் சடாயுவுக்கு வைகுந்தத்தேற வழிகாட்டினவரன்றோ பெருமாள். * யா கதிர் யஜ்ஞ சீலாநாம் * இத்யாதியாகச் சொன்ன ராம வாக்யத்தில் (கதி 🙂 என்பதற்கு மார்க்க மென்பது தானே பொருள். பகவத் கீதையில் (8-86) *சுக்ல க்ருஷ்ணே கதீ ஸ்யேதே” என்றவிடத்தில் கதிசப்தார்த்தம் மார்க்கமேயன்றே.

————————

நேய-நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்–ஸுஹ்ருதா₃ம் நியோகா₃ர்ஹத்வாத்
நேய꞉ (தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர்)। யதாஆஞ்ஞாய அஹம் தபஸ்வி நாம் –ஆரண்ய – முனிவர்களே உங்கள் துன்பம் பற்றி இனி கூற வேண்டாம் -ஆணை இடுங்கள்-ஆவாசம் து அஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநேந -ஆரண்யம் –
இந்த தண்டகாரண்யத்திலே நான் தங்க வேண்டிய இடத்தை கூறுங்கோள்-அங்கேயே நான் தங்குகிறேன்-ஸூஹ்ருதாம் சர்வ க்ருஸ்ரேஷு யுக்தம் புத்திமதா சதா சமர்த்த நாபி சந்தேஷ்டும் ஸாஸ்வதீம் பூதிமிச்சதா –யுத்த-ஒருவன் மிகச் சிறந்த புத்தி உள்ளவனாகவும் -சிறந்த எண்ணம் கொண்டவனாயும் மற்றவர்களின் துன்பங்களை நீக்க வல்லவனாயும் இருக்கக் கூடும் அப்படிப்பட்டவன் தனது நண்பர்களுக்கு உண்டாக வல்ல துன்பங்களை தனது சாமர்த்தியத்தால் நீக்குவதே சிறந்தது மேலும்  அவர்களின் துன்பங்களை நீக்கி ஐஸ்வர்யம் கிட்டும்படிச் செய்தால் மேலும் சிறப்பானது –யஐஸ்வ அபீப்சிதம் யஜ்ஜம் மயி ஸ்ரேயசி அவஸ்திதே நியுங்ஷ்வச அபி மாம் க்ருத்யே சர்வம் கர்த்தாஸ்மி தே வச–சபா பர்வம் -33-25- கிருஷ்ணன் தர்மர் இடம் நான் உங்களுக்கு நன்மைகளை செய்வேனாகவே உள்ளேன் ஆகவே நீங்கள் உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யுங்கோள்-உங்களுக்கான உதவி தேவைப்படும் போது என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கோள் உங்கள் சொற்களைக் கேட்டு நான் அப்படியே செய்கிறேன்-அயமஸ்மி மஹா பாஹோ வ்ரூஹி யத் தே விவஷிதம் கரிஷ்யாமீஹ தத் சர்வ யத் த்வம் வஷ்யஸி பாரத –உத்யோக பர்வம் — நீண்ட புஜங்கள் கொண்டவனே -பாரத குலத்தில்வந்தவனே –
நீ எதனைச் செய்ய எண்ணுகிறாயோ அதனைச் செய்ய நான் தயாராக உள்ளேன்-உன்னுடைய கட்டளைகளை ஏற்கிறேன் தர்மர் கிருஷ்ணன் இடம்-வாயு ஸூநோ ஸூஹ்ருத்வேந பக்த்யா பரமயா ச ச சத்ரூணாம் அப்ரகம்பிய அபி லகுத்வம் அகமத் கபே –யுத்தகாண்டம்-லஷ்மணன் இராவணனால் அடி பட்டு விழுந்தவுடன் அவனை இராவணன் தூக்கிச் செல்ல முயன்றான் அவனால் இயல வில்லை ஆனால் அனுமனோ லஷ்மணன் மீது கொண்ட அன்பினால் ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று எளிதாக்கத் தூக்கிச் சென்றான் –கூன் உருவில் கொடும் தொழுததை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே சென்றவன் -பெருமாள் திரு -9-1–சிற்றவை பணியால் முடி துறந்தான் -பெரிய திரு மொழி -2-3-1–ஓம் நேயாய நம:மார்கேன ஸம்யக்ஞானேன பேரறிவான ஞானத்தின் வழியாக-ஜீவ: ஜீவாத்மா-பரமாத்மதயா பரமாத்ம தன்மைக்கு-நீயத அழைத்துச் செல்லப்படுகிறான்-நேய: எனவே பகவான் ‘நேய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நேய = நாயகனென்னும் பொருளதான தேதாவென்னுஞ் சொல்லுக்கு எதிரான சொல் (நேய ) என்பது. கட்டளையிடுபவனை நேதா என்போம்; கட்டளை யிடப் பெறுபவனை (நே ) என்போம். ” யஸ்ய விச்வ உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா:”என்று வேதமோதியுள்ளபடியும், * ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி (திருவாசிரியம்) என்று ஆழ்வாரருளிச் செய்தபடியும்* மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவனாகிய தான் ஸகலதேவர்களையும் கட்டளையிட்டுப் பணிகொள்ளத் தக்கவனாயிருந்து வைத்தும் பிறர் தன்னைக் கட்டளையிடும் படியாக வாயிற்று ஸ்ரீராமாவதாரம் செய்தருளிற்று. விச்வாமித்ர முனிவன் தான் ஒரு வேள்வி செய்வதாகத் தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதமன்னவனிடம் வந்து இராமனைத் தருகவென்று இரந்தனன்.அதற்கு மன்னவன் உடன்படவில்லை. அரக்கார்களோடு போர்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான என் சிறுவனை நான் உம்மோடுகூட அனுப்பமாட்டேனென்றனன். அதற்கு முனிவன் மன்னவனை நோக்கி இவனது பெருமையை நீ அறிந்திலை; அறப்பெரியோனான இவனை மிகச் சிறியவனாக நீ நினைத்திருக்கிறா யத்தனை ; வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதம் பேசின பெருமைவாய்ந்த மஹாபுருஷனன்றோ இவன்; இவனை உள்ளபடியே யானறிவேன்; நான் மட்டுமல்ல;இதோ உன்னெதிரில் வீற்றிருக்கின்ற நற்றவமாமுனிவர்களும் நன்கறிவர்கள் என்று இனைய பலவுஞ்சொல்லி ஸ்ரீராமலக்ஷ்மணர்களைக் கொண்டு சென்றான்.தந்தையாரிடம் இங்ஙனே முனிவன் பேசின பேச்சுக்களை யெல்லாம் ஏகாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமபிரான் ‘சேஷபூதனாய்ப் பரதந்திரனாய்ப் பிறக்க வேணுமென்று ஆசைப்பட்டு வந்து பிறந்த நம்மைப் பரமாத்மாவென்று வெளி யிட்டுவிட்டாரே! இது நமது நினைவுக்குத் தகுதியன்றே; மேலும் இந்த விச்வாமித்திரர் இதுவரையில் எத்தனையோ அரியபெரிய வேள்விகளையும் தவங்களையும் இயற்றியிருக்கிறார்; அப்போது ஒருவரையும் துணைவேண்டினவரல்லரிவர்; இப்போது இவர் மிகச் சிறிதாகச்செய்ய நினைத்திருக்கிற ஆறு நாளைய வேள்விக்குத் துணை வேண்டிவந்தது வெறுமனல்ல; நம் தந்தையார் சதுரங்க பலத்தோடு தாம் வந்து அவலீலையாக வேள்வியைக் காத்துத் தருவதாகச் சொல்லவும் அதையும் மறுத்து நம்மையே வேண்டிக் கொணர்ந்த விம்முனிவர்க்கு ஏதோ விசேஷமான தொரு கருத்து இருக்க வேண்டும். நம்மை ஏவிக் காரியங்கொள்ள நினைத்தே (அதாவது நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச் செய்யக் கருதியே) நம்மை வேண்டிக் கொணர்ந்தார் போலும்’ என்று மருமமறிந்துகொண்டு இராமன் அம் முனிவரிடம் கைகூப்பி ஒன்று விண்ணப்பஞ்செய்தான் – இமௌ ஸ்ம முதிசார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்” என்றான். இதன் பொருளாவது. முநிஸார்வபௌமரே! நானும் என் தம்பியான லக்ஷ்மணனும் உம்முடைய கட்டளைப்படி நடந்துகொள்ள வந்தவர்கள் ; எப்போதும் உமது அருகிலேயே யிருந்து நீர் நியமிக்கும் குற்றேவல்களைச் செய்ய நாங்களிருவரும் காத்திருக்கிறோம்; நீர் கூசாமல் எங்களுக்கு எவ்விதமான கட்டளையுமிடலாம்;உமக்கு என்ன பணிவிடை செய்யப் பெறுவோமென்று எதிர்பார்த்திருக்கிறோமென்பதாம். ஆக, ஆஜ்ஞாபகனான தான் ஆஜ்ஞாப்யனாகைக்கு ஆசைப்பட்டது தான் (நேய ) என்பதனால் தெரிவிக்கப்பட்டதாகிறது.

———————–

நய –நடத்துமவன் நயாமி பரமாம் கதிம்தே ச ததா₂(அ)ஸ்மிந் நீயந்த இதி
நய꞉ । தே ஹ்யாஹு(கர்ப்பத்தில் வைத்துக் காப்பது போல்– அந்த ரிஷிகளையும் காப்பவர்)ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்யபூதா தபோதனா –ஆரண்ய-தவத்தை மட்டுமே பெரும் செல்வமாகக் கொண்ட ரிஷிகள் வயிற்றில் உள்ள சிசு போலே ரக்ஷிக்கப்பட வேண்டியவர்கள்-பாண்டவானாம் பவாந் நாதோ பவந்தம் ச ஆஸ்ரிதா வயம் -சபா பர்வம்
பாண்டவர்களாகிய எங்களுக்கு நீயே ரக்ஷகன் -உன்னை அண்டிய எங்களை நீயே காக்க வேண்டும்-சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –நயாமி பரமாம் கதிம் -ஈர்த்து அழைத்துச் செல்பவன்(எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் நயாய நம:நயதீதி அவ்வாறு ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவை தன்னிடம் வந்து சேருமாறு வழிநடத்திச் செல்வதால்-நய: பகவான் ‘நய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-நேதா தலைவராய் இருந்து-மார்கோ வழியாகவும்-நேயோ வந்தடையும் ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும்-நய வழிநடத்திச் செல்லும் தலைவராகவும்-இதி த்ரிரூப: இவ்வாறு மூன்று வடிவத்திலும்-பரிகல்ப்யதே பரம்பொருள் விளக்கப்படுகிறார்.-பரம்பொருளான பகவான் முக்தியை அளிக்கும் வழியாகவும், (அந்த முக்தியை அடையத்தகுந்த) ஞானம் முதிர்ந்த ஜீவாத்மாவாகவும், அந்த ஜீவாத்மாவை வழிநடத்திச் செல்லும் தலைவராகவும், மூன்று வடிவில் இந்த மூன்று திருநாமங்களால் விளக்கப்படுகிறார்.

நய= அந்யாந் ஸர்வாந் ஸ்வயம் நயதீதி நய;. பிறருடைய கட்டளையைத்தான் எதிர்பார்த்து அப்படியே நடத்துகொள்வதாகக் கீழ்த்திருநாமம் காட்டிக்கொடுத்தது. பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் என்று ஓதப்படுகிற பகவானுக்கு அந்த நேயத்வம் [ஆஜ்ஞாப்யத்வம்] ஸ்வேச்சையினாலாயது; நிருபாதிகமாகவுள்ள தன்மையைச் சொல்லுமிடத்து ஸர்வநிர்வாஹகத்வமேயன்றோ அஸாதாரணமாகச் சொல்லுகிறது . இராமபிரான் தன்னைப்பற்றித் தன்வாக்காலே சொல்லிக்கொள்ளும்போது ஆத்மாநம் மாநுஷம் ம யேராமம் தசரதாத்ம ம் இத்யாதியாக எங்ஙனே சொல்லிக்கொண்டாலும், பிறர் சொல்லும்போது அவனுடைய பெருமையைப் பரக்கச் சொல்லியிருக்கவில்லையா? * சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: – ஜகத் ஸர்வம் சரீரம் தே.-இத்யாதி யாவன்றோ-பிரமன் சொல்லிவைத்தது. ஆகவே (நேய ) என்கிற கீழ்த்திருநாமத்திற்கு எதிர்த்தட்டான (நேதா) என்னுந் திருநாமத்தின் அர்த்தமே (நய ) என்பதிலுள்ளதென்று கொள்ளலாம். அன்றிக்கே, நயதீதி நய:-கொண்டு போகிறவன் என்றபடி.இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தான் ஒருவனாக எழுந்தருளவில்லையே; “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி* என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாளருளிச் செய்தபடியே சராசரங்களையுமன்றோ உடன் கொண்டு சென்றது (இதனைச் சிறிது விவரிப்போம்;) முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னை* என்று குலசேகரர் பணித்தபடியே இளையபெருமாளை விட்டுப் பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் கிலேசமடைந்த இராமபிரான் ராஜ்யத்தைவிட்டு எழுந்தருளத்தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து ‘தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்திக்க. ஸ்ரீராமன் அவர்களது பத்திப்பெருங்காதலைக் கண்டு அப்படியே யாகட்டும்’ என்றருளிச்செய்து அனைவரையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பயணப்பட்ட வளவிலே. அந்நகரத்திலிருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து பெருமாளைப் பின் செல்ல,இங்ஙனம் பலரும் புடைசூழ பகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கெழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும் பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே மீட்சியில்லாததான ஸாந்தானிக மென்னும் உலகத்தையளித்தனரென்பது இதிஹாஸம். இங்ஙனே நயனம் பண்ணின படியைக் காட்டும் (நய 🙂 என்கிற திருநாமம். வராஹ சரமச்லோகத்தில் ”அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்று சொன்னவரேயன்றோ.

———————–

அநய –ப்ரதிகூலர் அணுக முடியாதவன்-ஸ ஏவ, அஸுஹ்ருத்₃பி₄ர்ந நயோ (அ)ஸ்யாஸீதி₃தி
அநய꞉ । யதா₂ ராவணேந ꞉விரோதிகளால் நடத்தப்பட முடியாதவர் –யுத்தத்தில் வெல்லப்பட முடியாதவர் என்பது -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர்-ஹிமவான் மந்தரோ மேரு த்ரை லோக்யம் வா சஹாமரை சக்யம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந சங்க்யே பரதானுஜ–யுத்த
இமயமலை மந்த்ர மலை மேரு மலை மூன்று உலகங்கள் போன்ற பலவற்றையும் தனது தோள்களால் தூக்கும் வலிமை பெற்ற ராவணனால் யுத்தத்தில் அடிபட்டுக் கிடந்த பரதனின் தம்பியான லஷ்மணனைத் தூக்க இயலவில்லை-யத்வா -அன்றிக்கே-அய ஸூபாவஹோ விதி -அய -ஸூபத்தைக் கொண்டு வரும் வஸ்து –அவனைத் தவிர வேறு யாராலும் ஸூபம் கொண்டு வர இயலாது -என்பதை –அநய  -சொல்லும்-ஏதே வயம் சேர்வை சம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா –அயோத்யா அவன் நம்முடைய யஜமானனாகவும் ரக்ஷகனாகவும் உள்ளதால் நமது விருப்பங்கள் அனைத்தும் கைகூடும்படி உள்ளன –(தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –)(முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் –தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அநயாய நம:நாஸ்ய நேதா வித்யத (இவ்வாறு அனைவரையும் வழிநடத்தும் பகவானை) தன்னை வழிநடத்தும் தலைவர் வேறவரும் இல்லை-இதி அனய: எனவே பகவான் ‘அனய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் அனைத்து சக்திகளும் அவருக்கு இயற்கையாக, என்றும் உள்ளது. அவருக்கு ஈடானவரோ, மேலானவரோ வேறெவரும் இல்லை.-‘ததேஜாதி தனைஜாதி’, அனேஜதேகம் மனஸோ ஜவீயோ (ஈசாவாஸ்ய உபநிஷத்)ஆரம் காமாயா ஹரயோவதன்விரே ஸ்திராய ஹிந்வன் ஹரயோ ஹரீ துரா (ரிக் வேதம் 10.96)-வசிஷ்ட முனிவர் உட்பட அனைவரும் அவரை ராஜ்யத்தை ஏற்கவும் ஆட்சி செய்யவும் அவரை வற்புறுத்த முயன்றனர், ஆனால் ராமர் தர்மத்தின் பாதையில் இருந்து விலகவில்லை, யாரும் அவரை வழிநடத்தாமல் அதை ஏற்றுக்கொண்டார்.-

அநய:=இதற்கு பாஷ்யத்தில் பட்டர் அருளிச்செய்திருக்கும் ரஸவத்தரமான பொருளை முன்னம் விவரிக்கிறேன். ” அய : சுபாவஹோ விதி:; ஸ: அஸ்மசத் அந்யோ
ஜகதாம் தாஸ்தி இதி அநய:
” என்பது பகவத்குணதர்ப்பண ஸ்ரீஸூக்தி. அமரகோசத்தில் “அயர் சுபாவஹோ விதி:” என்னப்பட்டது. நன்மைபயக்கும் செயலுக்கு அயமென்று பெயர்; இராமனைக் காட்டிலும் நன்மை செய்வார் வேறுயாருமிலர்வன்பது தாற்பரியமாகத் தேறும். ஸ்தோத்ரரத்னத்தில் அநுத்தமம் பாத்ரமிதம்தயாயா : என்றவிடத்தில் ‘அநுத்தமம் என்பதற்குப்போல இங்கு ‘அநய?’ என்பதற்கும் பஞ்சமீ பஹுவ்ரீஹிஸமாஸம் பொருத்த முடையதேயாம். தீங்கிழைப்பவர்களுக்கும் நன்மை புரிவதையே தன்மையாகக் கொண்டவரன்றோ பெருமாள்.-*நஸ்மரத்யபகாராணம் சதம யாத்மவத்தயா, கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி என்றன்றோ அயோத்யாவாஸி ஜனங்கள் ராமகுணகீர்த்தநம் பண்ணிற்று.-மேலெடுத்த சுலோகத்தில் [கதஞ்சிதுபகாரேண] என்றதன் பொருளை ஆழ்ந்து அறியவேணும். பிறர் செய்வது உண்மையில் உபகாரமன்று; அவர்கள் செய்தது அபகாரமாகவேயிருந்தாலும் கதஞ்சித் உபகாரமாக ஆக்கிக்கொள்ளப் படுகின்றதென்கை.-இதனை ஸ்ரீவசனபூஷணத்தில் (4-1) “நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே. .தனக்கேற இடம் பெற்றவளவிலே என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள்விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாப்போலே சிலவற்றையேறிட்டு மடிமாங்காயிட்டு ..” இத்யாதி திவ்ய ஸூக்திகளாலறிக. இப்படியாக ஏறிட்டு அநுக்ரஹித்தது ராமாவதாரத்திலுண்டோவென்னில்; ஓரிடம் காட்டுவோம். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் வாயஸரக்ஷணத்தை யருளிச்செய்யுமிடத்து “தாத் ருசோ வாயஸஸ்ய ப்ரணத இதிதயாலு: ‘ என்றருளிச்செய்தார். இங்கு “ப்ரணதஸ்யவாயஸஸ்ய தயாலு* என்னாதே[ப்ரணத இதி தயாலு ; என்றதன் உட் கருத்தையறிந்து ஸ்தோத்ர பாஷ்யத்தில் பணித்திருப்பது – தயார்த்ரபுத்த்யா ப்ரணதத்வேந பரிக் ருஹ்ய இத்யர்த்த: ‘ என்று. அதாவது, ப்ரணதியை யுத்தேசித்துக்காகம் வந்ததில்லை; எங்குந்திரிந்து செயல் மாண்டு புகலிடமற்று வந்துவிழுந்ததத்தனை. அந்த வீழ்ச்சி யையே ப்ர ணதியாகக்கொண்டு பெருமாள் காத்தருளினர் என்கை. விபீஷண அபயப்ரதாந ப்ரகணத்தில் “ந த்யஜேயம் கதஞ்ச “ என்றது இங்கு சிகரமாக நினைக்கத்தக்கது.

அதவா, அநய : என்பதற்கு ‘ந வித்யதே நய; யஸ்மிந்ஸ:’ என்று கொண்டு நயமில்லாதவர் என்கிற பொருளுங்கொள்ளலாம்.நயமாவது நீதி: இராமனை நீதி யற்றவரென்று சொல்லலாமோ கோபிகள் கண்ணனை நோக்கி “நீரிலே நின் றயர்க்கின்றேம் நீதியல்லாதன செய்தாய்” என்கிறார்கள். அப்படி இராகவனை நோக்கி யாரும் சொன்னதில்லையே; வாலி போல்வார் சொல்வது பரமார்த்தமாகக் கொள்ளத் தகுமோ? என்று சங்கை தோன்றும். அநியாயமான செய்கையைச் செய்பவரென்று பொருளன்று. நீதியாவது நியதி; இராமபிரானுடைய செயல் ஒரு நியதியிலே [வ்யவஸ்தையிலே] அடங்குமதன்று என்று தாற்பரியங் கொள்க. (இதன் விவரணம் கேண்மின்.) பரமபூஜ்யரான பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே அமுதுசெய்தாரென்று கேள்விப்படுமாபோல சபரி கையாலே அமுது செய்தருளினாரென்றுங் கேள்விப்படுகிறோம். விச்வாமித்ரமுனியை நாதராகக் கொண்டாரென்று கேள்விப்படுமாபோலே *ஸுக்ரீவம் நாதமிச்சதியென்றும்-ஸுக்ரீவம் சரணம் கத?* என்றும் கேள்விப்படுகிறோம். இப்படியாக ஒரு நியதி யில்லையாயிற்று ராமகாரியங்களில்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ‘ பகவதி பரத் வாஜே புக்திஸ் ததா சபரீகரே” இத்யாதி பணித்திருப்பதைக் கொண்டு ரஸிக ஹ்ருதயங்கமமாக நிர்வஹிக்கும்படி இது.

——————-

வீர –எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன்-சத்ருக்களால் கொண்டாடப்படும் வீரத்தைக் கொண்டவன்-வீர ஸூர பராக்கிரமம் -ஜெய ஜெய மஹா வீர-(தினகர –குல கமல திவாகரன் )ரக்ஷஸாம் அதிப₄ய சலந ஹேதுத்வாத்₃வீர꞉ ।-அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர் 
“அஜ க₃தி ஷேபணயோ ꞉”
* ஸ்பா₂யிதஞ்சிவஞ்சி, இத்யாதி₃நா ரக்
* அஜேர் வ்யக₄ஞபோ ꞉ இதி வீபா₄வ꞉। யதா₂ப்ரஹ்ம தண்ட ப்ரகாசானாம் வித்யுத் சத்ருச வர்சஸாம் ஸ்மரன் ராகவ பாணானாம் திவ்யதே ராஷசேஸ்வர–யுத்த -60-3-
நான்முகனின் தண்டம் போன்றும் மின்னல் போன்றும் ஒளி உள்ளதுமான ராம பாணங்களை எண்ணிய மாத்திரத்திலேயே அசுரர்களின் அரசனான ராவணன் கலங்கினான்-மாதங்க இவ ஸிம்ஹேன கருடேநேவ பந்நக அபிபுத அபவத் ராஜா ராகவேணா மஹாத்மநா –யுத்த -60-2- ஸிம்ஹத்தைக் கண்ட யானை பயந்து ஓடுவது போன்றும் கருடனைக் கண்ட நாகம் பயந்து ஓடுவது போன்றும் மஹாத்மாவான இராமனைக் கண்ட இராவணன் அச்சம் கொண்டான்-வ்ருஷே வ்ருஷே ச பஸ்யாமி சீர க்ருஷ்ணாஜி தாம்பரம் க்ருஹீத தனுஷும் ராமம் பாஸ ஹஸ்தமிவ அந்தரங்கம் –ஆரண்ய -39-14--இராவணன் இடம் மாரீசன்-இங்கு காணப்படும் ஒவ்வொரு மரத்திலும் நான் மரவுரியும் கிருஷ்ணாஜினம் என்னும் மான் தோலும் அணிந்த இராமனைக் காண்கிறேன்
தனது கைகளில் வில்லுடன் கூடிய இராமனை நான் பாசக்கயிற்றுடன் நிற்கும் எமனாகவே காண்கிறேன் –அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச்சந்த -116-வேந்தர் பகை தடிந்த வீரன் -பெருமாள் திரு -10-3-பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை-வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்(மீண்டும் 664 வரும்)

விக்ரம சாலித்வாத் வீரஹ் – வீரம் மற்றும் வீரத்தால் வீரன்’ என்று விளக்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தனது கட்டளையை நிறைவேற்றத் தயாராக இருக்கும் தனது ஆயுதங்களை களைவதன் மூலம் பக்திமான்களுக்கு துன்பத்தைத் தருபவர்களை அழிக்கிறார். அவர் தனது எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.வீர்ய என்பது எதிரிகளின் உள்ளத்தில் பயங்கரத்தை உண்டாக்கும் குணம்; சௌர்யா என்பது சூரா என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது – எதிரிகளின் அணிகளுக்குள் ஒற்றைக் கையால் ஊடுருவி அழிவை ஏற்படுத்தும் திறன்; பராக்ராமன் என்பது எதிரிகளின் பக்கத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் திறன், அதே நேரத்தில் தன்னை சிறிது கூட காயப்படுத்தாது. –“யஸ்மாத் ஸ்வ மஹிம்னா ஸர்வான் லோகான் ஸர்வான் தேவான் ஸர்வான் ஆத்மநঃ ஸர்வாணி
பூதானி விரமதி விரமாயதி அஜஸ்த்ரம் ஸ்ரீஜதி விஸ்ரிஜதி வாஸயதி,
யதோ வீரகர்மண்ய ஸுদৃக்ஷோ த◌ேগাய யுக்தாயதே- நான் இது”.-அவரை எதிர்க்க முடியாது, வெல்ல முடியாது, அவருடைய திறமைகள் சுயமாகத் தெரியும் மற்றும் எப்போதும் அவரது எதிரிகளை தானாகவே அடக்குகிறது.

வீர = பகவானுடைய திருக்குணங்களில், வீர்யம், செளர்யம், பராக்ரமம் என மூன்று குணங்கள் சேர்த்து அநுஸந்திக்கப்படுவதுண்டு. இம்மூன்று சொற்களுக் கும் பொருளில் வாசியில்லைபோல் தோன்றினாலும் வாசியுண்டு.எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமை (1), அந்தச் சேனை யினுள்ளே ஒருவனாகவே புகுந்து எதிரிகளை அநாயாஸமாகக் கொன்று முடிக்கும் வல்லமை (2), அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் பங்கம் நேராத படி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல் (3), என்றிங்ஙனே மூன்று வகையான ஆற்றல்கள் பெரும் போர் வீரர்களுக்கு இருக்க வேண்டியவை யுண்டு. இம்மூன்றையுஞ் சொல்லும் சொற்களாக வீர்ய செளர்ய பராக்ரம சப்தங்களைக் கொள்ளலாம். இங்கு வீர: என்று வீர்யமொன்று மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றை யிரண்டும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கன அல்லது உள்ள சொல்லிலேயே (அதாவது வீர: என்ற சொல்லிலேயே) அம்மூன்று பொருள்களையும் சேர அநுஸந்தானம் செய்யவுமாம். ஸ்ரீராமாயணத்திலும், மற்றும் இராமபிரானைப்பற்றிப் பேசும்பல நூல்களிலும் இராமனை வீரனென்றும் சூரனென்றும் ”பராக்ரமசாலியென்றும் பாராட்டிக்கூறுவது விசேஷமாகக் காணத்தக்கது. இராமனுக்கு மஹாவீரனென்றே ஒரு திருநாமமுண்டு. “ஐயஜய மஹாவீர!” என்றே ரகுவீரகத்யத்தின் தொடக்கம். வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்பெற்று விளங்குகின்றமை ப்ரஸித்தம். பவபூதிமஹாகவி மஹாவீரசரிதமென்றே பெயரிட்டு நூலியற்றினான். ஆழ்வார்கள் இராமனது செயலைச் சொல்லி வீரனென்றே வாய் வெருவுவர்கள்; “இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க கூன்று சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே! ””மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை நீறு செய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனுர் என்றுமுள்ள (திருச்சந்த விருத்தம் பாசுரங்கள் காண்க. இவை யெல்லாவற்றிலுங்காட்டிலும் எதிரி கையாலே விடுதீட்டென்னுங் கணக்கிலே இராவணனே வியந்துபோற்றும் வீரியம் இராமனுக்குள்ளது. (வால்மீகி. யுத்த. 106-6] “சத்ரோ:ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்நீயஸ்ய விக்ரமை:” என்பது இராவணனுடைய மொழி. இராமனை ப்ரக்க்யாத வீர்யனென்று இராவணன் தன்வாயினால் போர்க்களத்திற் சொல்லுவதானது அந்த வீர்யத்தைத் தான் மிக நன்றாக வநுபவித்தத்னாலன்றோ! ‘விக்ரமை:ரஞ்ஜநீயஸ்ய” என்றும் அடுத்தபடியே சொல்லுகிறான். இங்ஙனே சொல்லும்படியாக இராமன் செய்தவீரச்செயல்கள் பலபல விருப்பினும் ஒன்றெடுத்துக் காட்டுவோ மிங்கு. யுத்த காண்டத்தில் தொண்ணூற்று நான்காம் ஸர்க்கம் காண்க. அங்கு மூலபலம் திரண்டவன்று இராமனுடைய அதிமாநுஷப் போர்வல்லமையைப்பேச வான்மீகி முனிவரும் தடுமாறுகின்றார். “ச்சிந்நம் பித்தம் சரைர் தக்கம் ப்ரபக்நம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம்” என்று, இராமனால் பலவாறு தகர்ப்புண்ட அரக்கரது சேனைகளைக் கண்டார்களொழிய பம்பரமாகச் சுழல்கின்ற இராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர் என்கிறார். மேலே *தே து ராமஸஹஸ்ராணி ரணே பச்யந்தி ராக்ஷஸா * என்று ஆயிரக்கணக்காண ஸ்ரீராமமூர்த்திகளைக் கண்டார்களென்கிறார்.உடனே புந; பச்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்று, அந்தப் போர்க்களத்தில் இராமனொருவனையே கண்டார்களென்கிறார் . இராமனைக் காணவேயில்லை யென்பது, ஆயிரக்கணக்காண ராமர்களைக் கண்டார்களென்பது, ஒரு ராமனையே கண்டார்களென்பது – ஆகவிப்படி ஒன்றோடொன்று சேராத வண்ணம் பேசும்படியாக வன்றோ பெருமாள் மிக விசித்திரமான போர்த்தொழில் நிகழ்த்திற்று.-திருவாய்மொழியில் (8-6-3) ஒருவரிருவரோர் மூவரென நின்று, உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் என்ற பசுரத்திற்குப் பூருவாசாரியர்கள் பொருள் நிர்வஹித் திருக்கிறவிதம் இதர பண்டிதர்களின் புத்திக்குச் சிறிதும் எட்டமாட்டாதது. ஒருவரிருவரோர் மூவரென நின்றதும் உருவு கரந்ததும் எப்போதென்று தெரிந்து கொள்ளமுடியாதபடி ஆழ்வாருடைய பாசுரம் தோன்றியுள்ளது. இதற்குக் கீழ்ப்பாட்டு செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக் கெடவாளிபொழிந்த வொருவனே என்று முடிந்திருக்கிறது. மேற்பாட்டின் முன்னடிகட்குக் கீழ்ப்பாட்டின் பின்னடிகளோடு அந்வயமென்று கண்டு உரை செய்தருளியுள்ளார்கள். இங்குப்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்- ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து-உருக்கெடவாளி பொழிந்தவொருவன் என்று கீழோடே அந்விதமாகக்கடவது.மூலபலம் சாம்படி அருளுகிறவன்று முந்துற ஒருவனாய்த்தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த்தோற்றி, வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூபக்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளிபொழிந்த வொருவனென்று அந்வயம். வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை” என்று. இதனால் இராமனது வீரம் வாசாமகோசர மென்றதாயிற்று.

———————–

ஶக்தி மதாம் ஸ்ரேஷ்ட-பரசுராமரை -வென்றவன் –ஶக்தி மதாம் ஸுராதீ₃நாம் அதிஶயேந ப்ரஶஸ்ய இதி ஶக்தி மதாம் ஶரேரஷ்ட₂꞉ (சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் )। யதா₂(ஆ)ஹ பரஶு பரி கர்மா ராம꞉அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரேஸ்வரம் –பால -76-17-மது என்னும் அரக்கனை அழித்த தேவனாகவே உன்னைக் காண்கிறேன் -பரசுராமனின் புகழ்ச்சி-கதம் தேவ கண ஸ்ரேஷ்ட நாத்மநம் அவபுத்யஸே –யுத்த -120-6-நான்முகன் ராமன் இடம் –உன் பெருமையை நீயே ஏன் தெரிந்து கொள்ள வில்லை-தேவாச் சா தைத்யாச் ச நிசாச ரேந்த்ர கந்தர்வ வித்யாதர நாகயஸா ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்தாதும் ந சக்தா சமரேஷு சர்வே –ஸூந்தர-51-44--அனுமன் இராவணனிடம்-அரக்கர்களின் அரசனே தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் வித்யாதரர்கள் நாகர்கள் யக்ஷர்கள் என்று யாராக இருந்தாலும் மூன்று உலகங்களுக்கும் நாயகனான இராமனை எதிர்த்து நிற்க இயலாது-சர்வான் லோகான் ச ஸம்ஹ்ருத்ய ஸம்ஹ்ருதான் ச சராசரான் புனரேவ ததா ஸ்ரஷ்டும் சக்தோ ராமோ மஹா சரை–ஸூந்தர-51-40- இராமனால் தனது பாணங்கள் மூலமாக அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த இந்த உலகில் உள்ள அனைத்தையும் அழித்து படைக்கவும் இயலும் –மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7-முப்பத்து மூவருக்கு முன் சென்று கப்பம் தீர்ப்பவன் -தேவர்களுக்கும் தேவன் -தேவாதி தேவன் -நாராயண ஸ்ரீ மான்ஓம்ஶக்திமதாம் ஶ்ரேஶ்டாயநம:விக்ரமஶாலித்வாத்  வீரமும், பராக்ரமும் நிறைந்த வராதலால்-வீர: பகவான் ‘ வீர:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஶக்திமதாம் பலம்பொருந்தியோரான-விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோரைக் காட்டிலும்-ஶக்திமத்வாத் மிகுந்த பலமுடையவராதலால்-ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட: பகவான் ‘ஶக்திமதாம் ஶ்ரேஶ்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பலம் பலாவதாம் சாஹம் – பகவத் கீதையில் (அத்தியாயம் 7 வசனம் 11)-நான் வலிமை மிக்கவர்களின் வலிமை’.

சக்திமதாம் ச்ரேஷ்ட = அபரிமித சக்தியுக்தனென்கை. இராமன் மஹாசக்திமானாயிருக்கும் போது இராவணனை ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்கலாமே அங்ஙனங்கொல்லாது வெகு ப்ரயாஸங்கள் பட்டதாகத் தெரிகிறதே. அஃது என்?என்று சிலர் கேட்கக்கூடும்.கேண்மின்; ” பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”<என்று ஆண்டாளும் “சதுரமாமதிள் சூழிலங்கைக் கிறைவன் தலைபத் துதிரவேரட்டி ஓர்வெங்கணையுத்தவன்” என்று திருப்பாணாழ்வாரு மருளிச்செய்தபடியே ராவண ஸம்ஹாரத்தைப் பெருமாள் அவலீலையாகவேதான் செய்தார். அதில் ஐயமொன்று மில்லை. எப்படியாவது ராவணன் உடன்பட்டுவழிபட்டு உஜ்ஜீவிக்கவும் ஜீவிக்கவும் ப்ராப்தமாமோ? ” என்கிற நசை பெருமாளுக்கு இருந்தமையினாலேயே அவனை ஸம்ஹரிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதென்கிற தத்துவம் உணரத்தக்கது.இராவணனைக் காட்டிலும் பன்மடங்கு வலிமைமிக்கவனென்று ப்ரஸித்தி பெற்றிருந்த வாலியை அநாயாஸமாக முடித்தவர் பெருமாள். (ஸுந்தரகாண்டம் ஸர்.51 ச்லோ.11 திருவடி இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்கையில் *த்வயாவிஜ்ஞாதபூர்வச் ச வாலீ வாதரபுங்கவ:, ராமேண ஹதஸ் ஸங்க்யே சரேணைகேந வாநர: * என்று,அப்பா ராவணா! வாலியென்கிற வாநரேச்வரரை ஏற்கெனவே நீ அறிவாயன்றோ;அவர் இராமனால் ஒரே அம்பினால் முடிக்கப்பட்டார்காண்’ என்கிறார். அன்றியும் இராவணனைப் பலவாறு பங்கப்படுத்தியவன் கார்த்தவீரியார்ஜுனன்; அன்னவனைப் பரசுராமன் தனது கோடாலிப்படையினால் ஆயிரங்கைகளையும் வெட்டிக் கொன்றவன். அப்பரசுராமன் இராமபிரானிடம் பட்டபாடு தெரிந்ததே.இத்தகைய ஒப்புயர்வற்றை ஆற்றல்பெற்ற இராகவன் இராவணனைச் சங்கரிக்கச் சிரமப்படவேணுமோ? சிரமப்பட்டதாகக் கதையிலே கண்டால் ஸத்யஸங்கல்பனும் மஹாவீரனுமான இராமன் எதற்காக இப்படிச் சிரமப்பட்டாரென்று ஆராய ேண்டுமன்றோ சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரனிடஞ்சென்று செய்தியறிவித்துப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தையுண்டாக்க. அவன் பதினாலாயிரம் ஸேனாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமனோடு போர்புரியவனுப்ப, இராகவன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட, பிறகு கரந்தானே நேரில் வந்து எதிர்க்க-இராமன் “ அஸஹாயசூர! என்று ரகுவீரகத்யத்தில் விளிக்கும்படியாக லக்ஷ்மணனையும் துணைகொள்ளாமல் ஏகாகியாய் அவனது தலையை யறுத்திட்டதும் ப்ரஸித்தம். ‘சதுர்தச ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமகர்மணம், ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி!” என்று வயிறு பிடித்த மஹரிஷிகளும் வியக்கும்படி அவலீலையாகவன்றோ நீறு செய்தது. அத்தகைய பேராற்றல்பெற்ற பெருவீரனுக்கு இராவணன் ஒரு பதார்த்தமோ? ஒரேயடியில் அவனைத் தொலைக்கமாட்டாமையில்லை; எவ்வகையினா லாவது அவன் அபிமுகனாக வருகிறானோவென்று பார்த்திருந்தாரத்தனை.

———————

தர்ம –தர்மமே வடிவு எடுத்தவன்–தர்ம ஸம் ஸ்தாபநார்த்தம் -விசேஷ தர்மமான தன்னை நிலை நாட்டவே அவதாரம் -ஸாஷாத் தர்மம் இவனே-அப்₄யுத₃ய நி꞉ஶ்ரேய ஸாப்₄யாம் ஸர்வஸ்ய ஸாக்ஷாத்₃ த₄ரணாத் த₄ர்ம꞉ ।செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர்-உணாதி பாதம் –அர்ஸ்தி ஸ்து ஸூஹுஸ் ருத்ருஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ ப்யோ மந் –அர்த்தி -ஸ்து -ஸூ -ஹு ஸ்ரு த்ரு ஷி ஷு பா யா வா பதி யக்ஷி நீ போன்ற தாதுக்களைத் தொடர்ந்து-மந் -என்னும் ப்ரத்யயம் உண்டாகும் என்னும் ஸூத்ரத்துக்கு ஏற்ப த்ரு என்பதன் பின்னே மந் இணைந்து தர்ம என்று ஆனது-இது போன்றே ஸோம –507 திரு நாமங்களை உண்டான-தமேவ ப்ரஹ்ம ப்ரஹ்ம விதாம் வர –லோகாநாம் த்வாம் பரோ தர்ம —நான்முகன் இவனது கீர்த்தி -ப்ரஹ்ம வித்துக்களின் தலைவனே நீயே உயர்ந்த தர்மம் ஆகிறாய் என்றான்-தர்மாத்மா ஸத்ய சந்தச்ச ராமோ தாசாரதிர் யதி பவ்ருஷே ச அப்ரதி த்வந்த்வ சரைநம் ஜஹி ராவணிம்–யுத்த -120-14-
லஷ்மணன் -ஏ பாணமே -தசரதன் புத்திரனான இராமன் தர்மம் மிக்கவனாயும்
ஸத்யமே வடிவு எடுத்தவனாயும் ஈடில்லா பராக்ரமம் கொண்டவனாயும் இருப்பது உண்மை என்றால் நீ சென்று இராவணன் மகன் இந்திரஜித்தை அழிப்பாயாக –யே ச வேத வேதோ விப்ரா -யே ச அத்யாத்ம விதோ ஜனா -தே வதந்தி -மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்ம சனாதனம் –ஆரண்ய -88-25-வேதங்களை அறிந்த அந்தணர்கள் -ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் போன்ற பலரும் கிருஷ்ணனையே எப்போதும் நிலையான தர்மம் என்று கூறுகின்றனர்-புண்யா த்வாரவதீ தத்ர யத்ராஸ்தே மது ஸூதந –வன பர்வம் -88-24-
துவாரகை மிகவும் புண்ணியமானது ஏன் என்றால் அங்கு தான் மது என்ற அசுரனை கிருஷ்ணன் அழித்தான்-சாஷாத் தேவ புராண அசவ் ச ஹி தர்ம சனாதன –ஆரண்ய -88-24-
அவனே மிகவும் பழமையானவன் -அவனே தர்மமும் ஆவான்-சாஷாத் ராமாத் வி நிர்வ்ருத்த தர்மச்சாபி ஸ்ரியா ஸஹ –அயோத்யா -2-29-தர்மம் என்பது செல்வத்துடன் கூடியதாக்க இராமனையே அடைந்தது –கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
கண்ணன் தர்மம் அறியாக் குறும்பன் -நாச் 11-6-தார்மிகன் -செய்வது எல்லாம் தர்ம கார்யம்(எல்லாவற்றையும் தாங்குபவர் -எல்லாத் தர்மங்களாலும் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்)ஓம் தர்மாய நம:ஸர்வ பூதானாம் அனைத்து உயிரினங்களையும்-தாரணாத்  தாங்குவதால்-தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘அணுரேவ தர்ம:’இதி ஶ்ருதே -(அந்த) தர்மமானது மிகவும் நுண்ணியது.-தர்மைர் தர்மத்தாலே-ஆராத்யத இதி வா வழிபடப்படுபவராதலால் (வணங்கப்படுபவராதலால்)தர்ம: பகவான் ‘தர்ம:’ என்ற திரு.நாமத்தால் அழைக்கப்படுகிறார்.-சஹஸ்ரநாமத்தின் பலஸ்ருதியில் நாம் ஆராயும் ‘ஆச்சாரப்ரபவோ தர்மா தர்மஸ்ய பிரபுர் அச்யுதஹ் – பண்பாட்டிலிருந்து தர்மம் பிறந்தது, அச்யுதா தர்மத்தின் இறைவன்-தாரயதி இதி தர்மா – தர்மத்தை ஆதரிக்கும்,  தாரயதே வா யேன ஜகத் இதி தர்மா – இந்த பிரபஞ்சம் யாரால் ஆதரிக்கப் படுகிறதோ அவர் தர்மா ஆவார்.“தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா, தர்ம ஏவ ஹதோ ஹந்தி” – தர்மம் அதைக் காப்பவர்களைக் காக்கிறது, அழிப்பவர்களை அழிக்கிறது 

தர்ம = ஸ்ரீராமபிரானை ஸாக்ஷரத் தர்மமாகச் சொல்லியிருப்பது பலவிடங் களில். இராவணன் இலங்கையிலிருந்து பஞ்சவடிக்கு ஓடிவந்து ஸ்தாபஹாரத் திற்குமாரீசனைத் துணைவேண்டினபோது அவன் ராவணனுக்குப் பலவாறு ஹிதோப் தேசங்கள் செய்கிறான். அதனிடையில் (ஆரண்.37-13) *ராமோ விக்ரஹவாத் தர்ம:* என்றான். ‘கைகால் முளைத்து நடையாடும் தருமம் இராமன்’ என்று ஆஸுர ப்ரக்ருதியான மாரீசன் சொல்லுகிறான். ராவணவதானந்தரம் இலங்கையிலே வந்து துதிக்கின்ற தேவவர்க்கத்தில் பிரமன் *பவாந் நாராயணே தேவ: *என்றபின் *லோகா நாம் த்வம் பரோ தர்ம: * என்றான். கீதையில் “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்ப வாமியுகேயுகே’ என்று தர்மஸ்தாபனத்திற்காகத் தான் அவதரிப்பதாகச் சொன்ன பரமபுருஷன் *ஸர்வதர்மாந்பரித்யஜ்ய* என்று ஸகல தருமங்களையும் விடும்படி சொன்னது கூடாது; விட்டுவிடு என்றதோடு நிற்காமல் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றச் சொல்லுகையாலே ஸாக்ஷாத் தர்மம் தானே யென்கிற தத்துவம் வெளியிடப்பட்டதாகிறதன்றோ. நாம் சிரமப்பட்டு ஸாத்திக்க வேண்டிய தர்மம் ஸாத்ய தர்மமெனப்படுகிறது. அங்ஙனன்றிக்கே எப்போதும் ஸித்தமாயிருக்கிற தர்மம் எம்பெருமான். ஸாத்யதர்மம் அபாய பஹுளமென்றும், ஸித்ததர்மம் நிரபாயமென்றும் அறியத்தக்கது. தசரதசக்ரவர்த்தி ஸ்ரீ ராம பிரானைப் பிள்ளையாகப் பெறப்பெற்றபாக்யசாலியாயிருந்தும் ஒரு தெளர்ப்பாக்ய முடையனாயினன். ஆஸர ப்ரக்ருதியான மாரீசனுக்குத் தெரிந்த தத்துவம் அந்தோ! அவனுக்குத் தெரியாமன்றோ போயிற்று. *ராமோ விக்ரஹவாந் தர்ம.* என்று அவன் சொன்னபடி வடிவெடுத்த ஸித்த தர்மமான இராமனோடு கூடினன்றோ வாழ்வதை விட்டு ஆபாஸ தர்மமான ஸத்ய வசனத்தைப் பற்றி நின்று இழந்தா அம்மன்னவன். முமு ப்படியில் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்றவிடத் தில் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்றவிடத்து மணவாளமாமுனி களின் ஸ்ரீஸூக்திரத்னங்களை அநுபவிப்பது. க்ருஷ்ணாவதாரத்தில் ததி பாண்ட னுடைய கதையை அறியாதாரில்லை: தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி சொல்லி வந்த கண்ணனை மறைத்திட்டுவைத்து ‘உன்மகன் இங்கில்லை’ என்று பொய் ஸபரிகரமாக மோக்ஷம் பெற்றுப் போனான்; தசரதன் ஸத்யவாதியென்று
ஸாக்ஷாத் பேர்படைத்து நரக பாயாயமான ஸ்வர்க்கத்தையே பெற்று நின்றான். ராமனே தர்மமென்று அறியப் பெறாத்தனாலான தன்றோவிது.-பெருமாள் பிராட்டியோடு கூடியிருந்தகாலத்தில் செய்தவுபந்யாஸங்களில் சிறந்தவுபந்யாஸமாக வொன்றைத் திருவடியிடம் சொல்லுகிறாள் பிராட்டி-(ஸ ந்தர 38-41.) *ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம த்வத்த ஏவ மயர ச்ருத * என்று.ஆந்ரு சமஸ்யமாவது இரக்கம்; அதுதான் பரமதர்மமென்று பெருமாள் உபந்யளிப்பது வழக்கமாம். ‘கருணையே வடிவெடுத்தவன் காகுத்தன்‘ என்று ப்ரஸித்தம். தசாவதார ஸ்தோத்ரத்தில் இச்சாமீந விஹாரகச்சபேத்யாதி ச்லோகத்தில் ஒவ்வோரவதாரத்தையும் ஒவ்வொரு விசேஷணமிட்டுச் சொல்லிவருகையில் இராமனைக் கருணாகாகுத்ஸ்த! என்று கூறியிருப்பது குறிக்கொள்ளத்தக்கது. வாலிவதமான பிறகு *ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ மு ர்த்தம் விமநா பபூவ* என்னும்படி நின்ற பெருமாளைக் கருணாகாகுத்தனென்றுதானே சொல்லவேண்டும், 

—————–

தர்ம விதுத்தம –தர்மம் அறிந்தவரில் முதல்வன் –த₄ர்ம வித் ஸூ உ த்தமோ
த₄ர்ம விது₃த்தம꞉,த₄ர்மஜ்ஞாநே வஸிஷ்ட₂ வாமதே₃வ மார்கண்டே ₃- யாதீ₃நாம் ஶிஷ்யோ (அ)ப் யுப ஜீவ்ய꞉ ।தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர் முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும் அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –யதா ஸர்வதா அபிகத சத்தி சமுத்திர இவ ஸிந்துபி–பால -1-56-கடல் -நதிகளால் சூழப்பட்டும் அண்டப்பட்டும் உள்ளது போலே பெரியோர்களால் சூழப்பட்ட ராமன்-ராம சாஹரம்-தர்மஞ்ஞ ஸத்ய ஸந்தம்ச –பால -1-12--தர்மத்தை அறிந்தவன் -ஸத்யம் என்னும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவன்-வேத வித்பி ஸூ பூஜித –ஸூந்தர-35-14-வேதங்களை நன்கு அறிந்தவர்களால் எப்போதும் பூஜிக்கப் படுபவன்-யதாவத் ச அங்க வேத வித் –அயோத்யா –1-20-வேதங்களை அதன் ஆறு அங்கங்களுடன் அறிந்தவன்-த்வம் அப்ரமேயச் ச துராசதச் ச ஜிதேந்த்ரியச் ச உத்தம தார்மிகச் ச அக்ஷய்ய கீர்த்தீச் ச விஸேணச் ச ஷிதி ஷமாவான் ஷத ஷோபமாஷா –கிஷ்கிந்தா –24-31-தாரை இராமனிடம்-நீ எல்லையற்ற மேன்மை யுடையவன்
எதிரிகளால் நெருங்க இயலாதவன்-இந்திரியங்களை வென்றவன்-சிறந்த தர்மம் கொண்ட வீரன்-குறையாத புகழ் யுடையவன்-திறமை யுள்ளவன்-பூமி போன்று பொறுமை கொண்டவன்-இரத்தம் போன்று சிவந்த திருக் கண்கள் கொண்டவன் –ஓம்த ர்ம விதுத்தமாய நம:ஶ்ருதய: ‘ஶ்ருதிகளான’ வேதங்களும்-ஸ்ம்ருதியஸ்ச அந்த வேதங்களின் பொருளை உணர்ந்து மற்றோரால் எழுதப்பட்ட ஸ்ம்ருதிகளும்-யஸ்யாஞாப்ருதா: எவரது ஆணைகளால் (கட்டளைகளால்) உருவானதோ-ஸ ஏவ அந்த பகவான் ஒருவரே-ஸர்வதர்மவிதாம் அனைத்து அறங்களையும் அறிந்தோருக்குள் உத்தம: மிகச் சிறந்தவராக இருக்க முடியும்இதி தர்மவிதுத்தம: எனவே, பகவான் ‘தர்மவிதுத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –)(தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-) ஸ்ருதிஸ்-ஸ்மிருதி மமைவாக்னியே (76.31).‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ 

16. தர்மவிதுத்தம்:. தர்மஜ்ஞர்களில் தலைவன் இராமபிரான் என்றவாறு. தர்
மத்தை நன்கறிந்தவனென்கை. ஆண்டாள் கண்ணபிரானுக்குத் *தருமமறியாக்
குறும்பனென்று பிருதுசாத்தினாள். அதற்குநேர்மாறாக இராமபிரான் தர்மஜ்ஞர்களில் தலைவனாயிருப்பன். பிராட்டி இராவணனுக்கு ஹிதமுபதேசித்தருளுங்காலத்தில்* விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:* என்று பெருமாளை தர்மஜ்ஞரென்று கூறியிருப்பது ப்ரஸித்தம். அவள் திருவுள்ளம்பற்றின தருமம் இன்னதென்பதை அவள்தானேஅடுத்தபடியாகக் கூறுகின்றாள் *சரணாகத வத்ஸல:* என்பதனால், சரணாகதர்களிடத்திலே
அன்பு பூண்டிருப்பதுதான் பெருமாள் கடைப்பிடித்த தருமமென்றும் அதை அவர்
நன்கறிந்தவரென்றும் சொல்லிற்றாயிற்று. நன்கறிந்தவரென்றால் அறிந்திருப்பதுமட்டும் பொருளன்று. அறிவுக்குப் பயன் அனுட்டானமாதலால் அந்த தருமத்தைநன்கு அனுட்டிப்பவர் என்கிறவரையில் பொருளாகத் தேறும். ஸ்ரீராமாயணத்தில்சரணாகதி செய்தவர்கள் யார் யார்? அவரவர்களிடத்திலே பெருமாள் காட்டினவாத்ஸல்யம் எத்தகைத்து? என்று விமர்சிக்கவேண்டும். இதற்குமுன் சரணாகதியாவது என்? என்கிற விமர்சம் மிக முக்கியமானது. ஸாரமாகத் தெரிவிப்போமிங்கு.-சரணாகதியென்றாலும் ப்ரபத்தியென்றாலும் ஒன்றே.நூற்கொள்கையை ஆய்ந்து ஆழ்ந்துபார்க்குமளவில் ” பகவத் ப்ரவருத்திவிரோதி ஸ்வப்ரவருத்திநிவ்ருத்திதான் ரபத்தியாகத் தேறுகிறது” என்கிற பூர்வாசார்ய ஸித்தாந்தமே தஞ்சமாகும். கஜேந்த்ராழ்வான் ப்ரபந்தன், த்ரெளபதி ப்ரபந்மை என்கிறோம். இவர்கள் பக்கலிலே மேலே சொன்ன லணந்தான் ஸமந்விதமாகும். ‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னும்படியாக கஜேந்திராழ்வான் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதாக ஸ்வப்ரவ்ருத்திபரனாயிருக்கு மளவும் அவன் மீது பகவானுடைய கருணை ப்ரஸரிக்கவில்லை. அந்த ப்ரவருத்தி ஓய்ந்தவாறே அரை குலையத்தலைகுலைய ஓடிவரும்படியான பதற்றம் எம்பெருமானுக்கு உண்டாயிற்று த்ரெள
பதியினிடத்திலும் இத்தன்மையே பார்க்கலாம்.” இரு கையும் விட்டேனோ த்ரெளபதியைப் போல” என்னும்படியான நிலைமை அவளுக்கு உண்டான பின்புதான்அவள் ரக்ஷை பெற்றாள். தன்மானத்தைத் தானே காத்துக்கொள்வதாக முயன்றுதன் சேலையைத் தான் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த நிலைமையுண்டே அதுதான்பகவத் ப்ரவருத்தி விரோதியான ஸ்வப்ரவருத்தியாயிருந்தது. அது கழிந்தவுடனேயன்றோபுடவை சுரக்கும்படியான பகவத் க்ருபை தோன்றிற்று. இந்த மருமத்தைஸ்ரீராமாயணத்திலே காட்டுகிறேன் காண்மின்; காகம் சரணாகதி செய்ததாகச்சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியின் தன்மையை விமர்சித்துப் பார்த்தால்,மேலே விவரித்த ரீதிதான் தேறும். *ஸ தம் நிபதிதம் பூமெள * என்றபடி எங்கும்தரிப்பற்று வந்து நிலத்திலேவிழுந்தமை யுண்டே,அதுவே யன்றோ அவனுடைய சரணாகதியாக ஆசாரியர்களால் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. அவனுக்கும் ரக்ஷணம் நேர்ந்தது.காகத்தினுடையதான இந்நிலை ராவணனுக்குமுண்டு; பிரபலமான யுத்தம் நடைபெறுகிற காலத்திலே *யோ வஜ்ரபாதாசநி. சசால் சாபஞ்சமுமோச வீர:* என்னும்படியான நிலைமை ராவணனுக்கு உண்டாயிற்று. அப்போது பெருமாள்• கச்சாநுஜாதாமி-புறப்பட்டுப்போ, விடைதருகிறேன்” என்று சொல்லி விட்டருளின துண்டே, அது தத்கால ரக்ஷணத்தில் சேர்ந்ததேயாகும். ஆத்யந்திகரக்ஷணமே
பண்ணவேணுமென்கிற திருவுள்ளமும் பெருமாளுக்கு இருந்ததுண்டு; அவன் விதி
வசத்தாலே மீண்டும் யுத்தத்திலே மூண்டு பகவத் பரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்
ருத்தி நிஷ்டனாகித் தொலைந்து போனான். அவனுக்கும் ரஷணமே செய்தருளினார்
பெருமாள் என்பது ஸ்ரீ ராமாயணத்தில் அந்தரங்க பரமார்த்தம். அவனுக்கு சரம
ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேனென்று பிடிவாதமாயிருந்த விபீஷணாழ்வானை நிர்ப்
பந்தப் படுத்தி அது செய்யுமாறு கட்டளையிட்ட பெருமாள் ‘அவனுடைய தேஹத்திற்கு நன்மை செய்ய நினைத்த நமது நினைவு நிறைவேறாதொழிந்தாலும் அவனுடைய ஆத்மாவுக்காவது நன்மை செய்யப்பெற்றோமே!’ என்று மகிழ்ந்தபடியை
நினைப்பது.*மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ந: ப்ரயோஜநம், க்ரியதாமஸ்ய
ஸம்ஸ்கார: யதா ஹ்யேஷ ததா மம * என்கிற பெருமாளுடைய சுலோகத்திற்கு நம்பிள்ளையின் ரஸகனமான வியாக்கியானத்தை நமது அபூர்வ ராமாயணத்திலே
நாம் விசதீகரித்திருப்பது காண்க.

————————

வைகுண்ட –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்–ஸர்வேஷாம் ஸம்ஶ்லேஷயித்வை குண்ட₂꞉ ।“குடி₂ க₃தி ப்ரதிகா₄தே ” । ஸ ச அத்ர ஸம்ஶ்லேஷ விகா₄த꞉ ।ஸ ச விக₃தோ யேஷாம் தே விகுண்டா₂:, தேஷாமேவ வைகுண்ட₂꞉ ।-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் —மயா ஸம்ஸ்லேஷிதா பூமி அத்பி வ்யோம ச வாயுநா தேஜஸா சார்த்த வைகுண்டத்வம் ததோ மம –சாந்தி பர்வம் -343-50-பூமியானது நீருடனும் –ஆகாயம் காற்றினுடனும் –வாயு தேஜஸ்ஸுடனும் என்னால் கலக்கப் பட்டன
இதனால் வைகுண்டன் என்னும் பெயர் வந்தது-(பகவான் கூறுகிறார்): நான் நிலத்தை நீரோடும், வான்வெளியை காற்றோடும் (வாயுவோடும்), காற்றை (வாயுவை) நெருப்போடும் கலந்தேன். எனவே, என்னிடத்தில் ‘வைகுண்டத்வம்’ இருக்கிறது.-ராமமேவ அநு பஸ்யந்தீ நாப்ய ஹிம்ஸன் பரஸ்பரம் ததஸ் நிதவ் பரஸ்பர நிர் வ்யபேஷா ஹி தத்ரத்யா யதா ஆஹு பவ்ர்ய பதீன் –அயோத்யா -48-5- இராமன் அயோத்தியில் இருந்த போது ஜனங்கள் ஒருவருக்கு ஒருவன் அன்யோன்யமாக இருந்தனர்-அவன் அயோத்தியை விட்டு அகன்றதும் மக்கள் ஒருவரை ஒருவர் விரும்பாதவர் ஆனார்கள்-ராகவம் வா அநு கச்சத்வம் அஸ்ருதிம் வா அபி கச்சதஇராமன் கானகம் நோக்கி புறப்பட்ட வுடன் அயோத்யையில் இருந்த பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் நீங்களும் இராமனைப் பின் தொடர்ந்து கானகம் செல்லுங்கோள்
அல்லது கைகேயியின் பெயர் கேட்க்காத இடம் செல்லுங்கோள் என்றனர்-வ்யஸ்ருஜன் கபலான் நாகா காவோ வத்ஸான் ந பாயயன்-இராமன் சென்ற பின் யானைப் பாகன்கள் அளித்த உணவை யானைகள் உண்ண வில்லை-பசுக்கள் தங்கள் கன்றுகளுக்கு பால் அளிக்க வில்லை-நஷ்டம் த்ருஷ்வான் நாப்ய நந்தத் விபுலம் வா தநா கமம்
புத்ரம் பிரதமஜம் லப்தவா ஜநநீ நாப்ய நந்ததா-அவர்கள் தங்கள் செல்வங்களை இழந்த போது வருந்த வில்லை-தனக்குப் பிறந்த முதல் குழந்தையைக் கூடப் பார்த்தும் எந்தத் தாயும் மகிழ வில்லை-ஸ்தந் யார்த்திந ஸூதா ஸ்த்ரீனாம் பர்த்தாரோ ப்ராதரஸ் ததா சர்வம் சர்வே பரித்யஜ்ய ராமமேவ அந்வ யுஸ் ததா-குழந்தைகள் தாய் விஷயத்திலும் -கணவன்மார்கள் மனைவி விஷயத்திலும் சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் விஷயத்திலும் அன்பு இல்லாதவர்கள் ஆயினர்-அனைத்தையும் துறந்தவர்களாக இராமனையே எண்ணியபடியே வருந்தியபடியே இருந்தனர் –தேவ தேவனை தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனை -3-6-2-வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமை செய்குந்தா -2-6-1—ஓம் வைகுண்டாய நம:குண்டா கதே: ‘குண்டா’ என்றால் போக்கு-ப்ரதிஹதி: (அவற்றை)  தடை செய்வது விகுண்டா ‘விகுண்டா’ எனப்படும்-விகுண்டாயா: கர்த்தேதி அவ்வாறு தடை செய்பவராதலால்-வைகுண்ட: பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஜகதாரம்பே இந்தப் ப்ரபஞ்சம் உருவான பொழுது (அதன் தொடக்கத்தில்)விஶ்லிஶ்டானி -ஒன்றோடொன்று கலவாது) பிரிந்திருந்த-பூதானி (நீர், நிலம், நெருப்பு, காற்று, வான்வெளி ஆகிய) ஐம்பூதங்களை-பரஸ்பரம் ஒன்றோடொன்று-ஸம்ஸ்லேஶயன் கலக்கும்படி செய்து-தேஶாம் கதிம் அவற்றின் போக்கை-ப்ரதிபத்னாதீதி (பகவான்) தடை செய்தார் (எனவே அவர் ‘வைகுண்ட:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்).பகவான் இந்தப் ப்ரபஞ்சத்தின் தொடக்கத்தில் ஒன்றோடொன்று கலவாதிருந்த ஐம்பூதங்களை அவை ஒன்றோடொன்று கலக்கும் படி செய்து அவற்றின் போக்கைத் தடுத்தார். இவ்வாறு வெவ்வேறு (விவித) போக்குகளை (குண்டா) தடுத்ததால் பகவான் ‘வைகுண்ட:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-விகதா குந்தா தஸ்யா கர்த்தா என்று விளக்குகிறார் – தடையின்றி விடப்பட்டால் தங்கள் சொந்த வழியில் செல்ல முனைபவர்களை ஒழுங்குபடுத்துபவர்- ஐந்தாவது மன்வந்திரத்தில் சுப்ரனுக்கும் விகுந்தனுக்கும் பிறந்ததால் பகவான் வைகுண்டன் என்று அழைக்கப்படுகிறார். பின்னர் அவர் லக்ஷ்மியை மணந்து, அவளது இன்பத்திற்காக ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு இணங்கினார், மேலும் இந்த இடம் வைகுண்டம் என்று அழைக்கப்பட்டது. அவரே இந்த வைகுண்டம். இந்தக் கருத்தை விஷ்ணு புராணம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆதரிக்கிறது.

———–

407-புருஷ –தூய்மை அளிப்பவன்-ச யத் பூர்வ அஸ்மாத் சர்வ ஸ்மாத் பாப்மன ஒஷஸ் தஸ்மாத் புருஷ , இதி பரம பாவநத்வாத்-புருஷ꞉ — அனைத்து விதமான பாபங்களில் இருந்து விடுவிப்பவன் என்பதால் புருஷன் எனப்படுகிறான்-பரம பாவநன் என்பதாலும் புருஷன் எனப்படுகிறான்-முதல்வன் -பண்களை எரிப்பவர் -காப்பாற்றுபவர் -விருப்பங்களை நிரப்புகிறவர் -எல்லாருக்கும் முன் செல்பவர் புருஷோத்தமன் -யாவருக்கும் சேஷி புனிதத் தன்மை யுள்ளவர் –அகஸ்தியர் பாவன சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தனதவாஹம் சஷுஷா ஸுவ்மய பூதா ஸுவ்மயேந மாநந –சபரி வார்த்தை-உனது அழகான திருக் கண்களின் திருக் கடாக்ஷம் அடியாக நான் தூய்மை பெற்றேன் –ச ஹி ராம ஸர்வதா புருஷ இஷ்யதி-இராமனே அனைத்து விதத்தாலும் புருஷன் எனப்படுகிறான்-ராகவம் சோபயந்யேத ஷட் குணா புருஷோத்தமம்-அயோத்யா-புருஷர்களின் உயர்ந்தவனாகிய இராமனை கருணை இரக்கம் ஸாஸ்த்ரம் ஒழுக்கம் தமம் சமம் போன்ற ஆறு குணங்களும் அலங்கரிக்கின்றன-சார்ங்க தந்வா ஹ்ருஷீகேச புருஷ புருஷோத்தம–யுத்த
சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டவன்-இந்திரியங்களை நியமிப்பவன்-புருஷன்
புருஷோத்தமன் –அமலன் விமலன் நிமலன் நின்மலன்-

ஓம் புருஶாய நம:ஸர்வ ஸ்மாத் புரா ஸதனாத் அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால்-ஸர்வ பாபஸ்ய ஸாதனாத்வா அனைத்து பாவங்களையும் போக்குவதாலும்-புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அனைவருக்கும் முதன்மையாக தோன்றியவராதலால் அனைத்து பாவங்களையும் போக்குவதாலும் பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ யத்பூர்வோஸ்மாத் ஸர்வ ஸ்மாத் ஸர்வான்பாப்மன ஒளஷத் தஸ்மாத்mபுருஶ: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.1)-அவர் (பரப்ரஹ்மம்) அனைவருக்கும் முதலானவர் (முதலாகத் தோன்றியவர்). அனைவரின் பாபங்களையும் அழிப்பவர். எனவே, அவர் ‘புருஶ’ என்றறியப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.-புரி ‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள்-ஶயனாத்வா ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்)புருஶ: பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘புரி’ என்றழைக்கப்படும் இந்த உடலுக்குள் ஸயனிப்பதால் (உள்ளுறைந்து இருப்பதால்) பகவான் ‘புருஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஸ வா அயம் புருஶ: ஸர்வாஸு பூர்ஶு புரிஶய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.18)அனைத்து உடல்களுக்குள்ளும் உறைவதால் (பரப்ரஹ்மமான பகவான்) புருஶ: என்று அழைக்கப்படுகிறார்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-புருஷ – தூய்மையாக்குபவன் புரு சநோதி இதி புருஷ – தாராளமாகக் கொடுப்பவர்-புரா அஸ்தி இதி புருஷஹ் – எதற்கும் முன் இருந்தவர்.-பூரயதி இதித் புதுஷா – எங்கும் இருப்பதை நிறைவு செய்து நிறைவு செய்பவர்.-சர்வபாபஸ்ய சாதனாத் – அவர் எல்லா பாவங்களையும் எரிக்கிறார்.-பரிஷயனாத் புருஷ – அவர் எல்லா உயிர்களின் உடலிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.

——————

417-ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின் உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன )யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7
வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ –பெரிய திருமொழி -1-10-9- –(ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர்) –(மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)

ஓம்ருதவேநம:காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற-லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘ருது’ என்ற சொல் பகவான் கால வடிவினன் என்பதைக் குறிக்கிறது. எனவே அவர் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.உஷா தாஹே புரூன் ஸர்வான் ஓஷதி தஹதி இதி வா புருஷஹ் – அனைவரையும் மிஞ்சுபவர்.-பிபார்தி ப்ரணாதி பாலயதி பூரயதி இதி வா புருஷஹ் – ப்ரி பாலன பூரணாயோவிலிருந்து பாதுகாத்து போஷிப்பவன்-பூரா + குஷன் (புரா அக்ரகமனேயிலிருந்து புருஷா) – புரா அக்ரகமனேபுரதி அக்ரகாம்ஐ பவதி இதி வா புருஷஹ் – தலைவர் அல்லது முன்னணியில் இருப்பவர்.-பூர்வா அஸ்மாத் விஷ்வாத் தத் ஆதிகாரணத்வாத் இதி புருஷ – உலகத்தின் மூல காரணமானவன்.-புருணி புவனானி சம்ஹார சமயே ஸ்யதி அந்தம் நயதிதி புருஷா – பிரளய காலத்தில் உலகங்களை அவற்றின் முடிவுக்கு அழைத்துச் செல்பவர்.-

———–

408-பிராண –ஸர்வ ப்ராணநாத்ப்ராண꞉-பிராணனாய் இருப்பவன்-எல்லாவற்றையும் உய்விப்பவர் – –என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5-சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–(முன்பே 57- 321 பார்த்தோம்-)என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொண்ட நாதனைஓம் ப்ராணாய நம:ப்ராணிதி உயிர் வாழ்கிறார்-ஒத்தாய் எப்-பொருளுக்கும் உயிரை (திருவாய் மொழி 2.3.2)- எல்லா உயிர்களிலும் உயிர் சக்தி;க்ஷேத்ரக்ஞ ரூபேண க்ஷேத்ரக்ஞரின் வடிவில் (அனைவருக்குள்ளும்)-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் அனைவருக்குள்ளும் (அனைத்தையும் அறியும் உள்ளுறை ஆத்மாவாக) க்ஷேத்ரக்ஞரின் வடிவில் உயிர்வாழ்கிறார். எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்-ப்ராணாத்மனா ப்ராண வாயுவின் வடிவில்-சேஶ்ட்யன்வா அனைவருக்குள்ளும் (எங்கும்) செல்கிறார்-ப்ராண: எனவே பகவான் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அல்லது, பகவான் ப்ராண வாயுவின் வடிவில் அனைவருக்குள்ளும் செல்கிறார் (அனைவரையும் செயல்பட வைக்கிறார்). எனவே அவர் ‘ப்ராண:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘சேஶ்டாம் கரோதி ஸ்வஶனஸ்வரூபி’ (ஸ்ரீவிஶ்ணு புராணம்)-மூச்சுக் காற்றின் வடிவில் அனைத்தையும் செயல்படுத்துகிறார் (அனைவருக்குள்ளும் செல்கிறார்).ப்ரணீதி க்ஷேத்ரஜ்ஞ ரூபேண இதி ப்ராணஹ் – வெளி உலகத்தைப் பற்றிய விழிப்புணர்வு அல்லது உணர்வின் வடிவில் அவர் உடலை உயிர்ப்பிக்கிறார்.-பிராணாத்மனா சேஷ்டயான் இதி வா பிராணஹ் – உயிர் கொடுக்கும் காற்று அல்லது ஆக்ஸிஜன் வடிவில் உடலுக்கு இயக்கம் கொடுக்கிறார். ‘யத்-வை ப்ரணீதி ச பிராணஹ் – அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார், எனவே அவர் பிராணன்’ (சாண்டோக்ய உபநிஷத் 1.3) என்று குறிப்பிடுகிறார்.

————–

409-பிராணத-உயிர் அளிப்பவன் -–வெகு சிலருக்கு பிராணன் -அனைவருக்கும் பிராணன் அளிப்பவர் –உயிர் அளிப்பான்–ப்ரஸித்₃தா₄ந பி ப்ராணான் த₃தா₃தீதி ப்ராணத₃꞉ । அதோ ஹி தத்₃விரஹே-பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர்-அகால பலிநோ வ்ருஷா -அபி வ்ருஷா பரிம் லாநா ச புஷ்ப அங்குர கோரகா –அயோத்யா-இராமன் கானகம் சென்றதும் அயோத்யையில் மலர்களுடன் கூடி இருந்த அனைத்து மரங்களும் அவனது பிரிவு தாளாமல் வாடின-பரிசுஷ்க பலாசாநி வநாந் யுபவ நாநி ச –அயோத்யா-கானகத்தில் இருந்த அனைத்து மரங்களும் காய்ந்த இலைகளும் இலைகள் இல்லாமலேயும் இருந்தன –உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
(முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –)ஓம் ப்ராணதாய நம:கண்டயதி அழிக்கிறார்-ப்ராணினாம் உயிரினங்களின்-ப்ராணான் உயிரை (அல்லது உயிர்மூச்சை)ப்ரளயாதிஶ்விதி ப்ரளயம் முதலிய அழிவுக்காலங்களில்-ப்ராணத: எனவே பகவான் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-பகவான் ப்ரளயம் முதலான அழிவுக்காலங்களில் உயிரினங்களின் உயிரை அழிக்கிறார். எனவே, அவர் ‘ப்ராணத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ராணான் ததாதி இதி ப்ராணதா – உயிர் கொடுப்பவர்-ப்ராணான் த்யாதி இதி ப்ராணஹ் – மரணத்தின் போது உயிர் வாயுக்களை அகற்றுபவர்-பிராணன் தீபயதி – உயிர் காற்றுகளை சுத்திகரித்து பிரகாசமாக்குபவர்.-கண்டயாதி பிராணினாம் ப்ராணான் ப்ரளயாதிஷு இதி – இறுதிப் பிரளயத்தின் போது உயிரிலிருந்து உயிர்வாழிகளைத் தடுத்து நிறுத்துகிறார்’(சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –)(துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)

——

ப்ரணம –வணக்கத்துக்கு உரியவன்–ப்ரணா மயதீதி ஶ்ரௌத்யா நிருக்த்யா ஸ்வ கு₃ணைஶ் சராசரநாமநாத் ப்ரணம꞉ । யதா ஹ்ருதயாநி அமமந்தே ஜனஸ்ய குணவத்தயா –அயோத்யா–தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர்-இராமன் கானகம் சென்ற போது அயோத்யையில் இருந்த மக்களின் ஹிருத்யங்கள் மத்தினால் கடையப்பட்டது போன்று குழம்பின-ஓம் ப்ரணவாய நம:ப்ரணௌதீதி ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால்-ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ஓம்’ என்ற ப்ரணவத்தை உச்சரிப்பதன் மூலம் வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதீ’-‘ஓம்’ என்று கூறி வணங்கவேண்டும்.இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன-ப்ரணம்யதே வணங்கப்படுவதால்-இதி வா ப்ரணவ: பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அல்லது, (வேதங்களாலும், அனைத்து தேவர்களாலும்) வணங்கப்படுவதால் பகவான் ‘ப்ரணவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ப்ரணமந்தீஹ யம் வேதாஸ்தஸ்மாத்ப்ரணவ உச்யதே’  இதி ஸனத்குமாரவசனான்-அவரை வேதங்கள் கைகூப்பி வணங்குகின்றன. எனவே அவர் ப்ரணவ என்று அழைக்கப்படுகிறார்.-இது ஸனத்குமாரரின் கூற்றாகும்-பிரணவ – பிறரை வணங்கச் செய்பவன்‘ப்ரணௌதி இதி பிரணவஹ் – ஓம்’ (பிரணவ மந்திரம்) என்ற சப்தத்துடன் பிறரை வணங்கச் செய்கிறார். அவர் ‘தஸ்மாத் ஓம் இதி ப்ரணௌதி – எனவே ஓம் மூலம் அவரை வணங்குகிறார்-‘ப்ரணம்யதே இதி வா பிரணவஹ் – அவர் வழிபடத் தகுந்தவர் ஆதலால் அவர் பிரணவா’. அவர் சனத்குமாரனிடமிருந்து ஒரு மேற்கோளைத் தருகிறார், இது ‘ப்ரணமந்தி இஹ வை வேதாஹ் தஸ்மாத் ப்ரணவ உச்யதே – வேதங்களில் அவருக்கு சாஷ்டாங்கங்கள் செய்யப்பட்டுள்ளன’.(தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –)(நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் – மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)

இலை துணை மற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை
       

————–

ப்ருது-பிரசித்தன் பெரும் புகழான் –த்வம் அக்ஷய கீர்த்திஸ் சயஶஸாபி விஸ்தீர்ண இதி
ப்ருது₂꞉ |“ப்ரத₂ ப்ரக்₂யாநே ”,* ப்ரதி₂ம்ரதி₃ப்₄ரஸ்ஜாம் ஸம் ப்ரஸாரணம் ஸலோபஶ்ச, இதி கு ப்ரத்யய꞉ ।–மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ப்ருது ஸ்ரீ பார்த்திவாத்மஜ –பால-தசரதனின் புத்திரனான இராமன் பெரும் புகழ் கொண்டவன்-ராமோ நாம ஜனை ஸ்ருத–பால-அவன் ராமன் என்று அனைவராலும் கொண்டாடப் படுபவன்-தேஷாம் அதியசா லோகே ராம –பால
அவர்களில் ராமன் பெரும் புகழுடன் விளங்கினான்-யசஸச்ச ஏக பாஜநம் -கிஷ்கிந்தா-புகழின் ஒரே இருப்பிடமாக இராமன் இருந்தான் -தாரை வாக்கியம்-நிகரில் புகழாய்(திருவாய் மொழி 6.10.10).   இஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோ நாம ஜனை ஸ்ருத யசஸ் வீ ஜ்ஞாநாசம் பந்ந –(பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –)(பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் ப்ருதவே நம:ப்ரபஞ்சரூபேண இந்த ப்ரபஞ்சத்தின் வடிவில்-விஸ்த்ருதத்வாத் விரிவடைந்து இருப்பதால்-ப்ருது: பகவான் ‘ப்ருது:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ப்ருது என்ற சொல்லிற்கு மிகப்பெரிய, அகலமான என்ற பொருள்கள் உண்டு. இங்கு ப்ரபஞ்சத்தின் வடிவில் பரந்து, விரிந்துள்ளதால் பகவான் ப்ருது-‘பிரத் விஸ்தரே – பரவுவதற்கு, விரிவடைய’. மஹாவிஷ்ணுவின் விஸ்வரூபம் இரண்டு அர்த்தங்களிலும் பிருதுவின் உதாரணம் – அவரது விராட் ஸ்வரூபத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் அல்லது அவரது விராட் ஸ்வரூபத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவியவர்.-கிருஷ்ணராக தனது ஒன்பதாவது அவதாரத்தில், அவர் பிருத்வியின் தந்தையான பிருது மகாராஜாவின் வடிவத்தை எடுக்கிறார். இது ஸ்ரீமத் பாகவதம் 1. 3. 14 – ரிஷிபிர்-யாச்சிதோ பீஜே நவமம் பார்திவம் வபுஹ் – முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் பிருதுவின் வடிவத்தில் தோன்றினார்.-

————–

ஹிரண்ய கர்ப்ப –(கீழ் -71)அவதார அஸம கால வர்திநாம் அபி த்₄யாநாதி₃ந உப காரித்வ மாஹஹிரண்ய க₃ர்ப₄꞉,ஹித ரமணீ- யஸ்ய த்₄யாத்ரு ஹ்ருத₃யஸ்ய ஶுபா₄ஶ்ரயத்வேந
நிகீ₃ர்யத்வாத்₃ ஹிரண்ய நிதி₄ -ஸாம்யாத்₃வா।மந்த்ர வர்ணத்தில் –த்யேயஸ் ஸ விஸ்வாத்மா–அவனே அனைத்து ஆத்மாவாகவும் த்யானிக்கத் தக்கவன்-தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால் உபகாரம் செய்வது கூறப்படுகிறது-ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:ஹிரண்ய கர்ப்ப ஸம்பூதிகாரணம் ஹிரண்ய கர்ப்பர் என்று அழைக்கப்படும் நான்முகக் கடவுளான ப்ரஹ்மாவின் பிறப்பிடமான-ஹிரண்மயமண்டம் பொன்மயமான முட்டையானது-யத்வீர்யஸம்பூதம் எவருடைய சக்தியிலிருந்து தோன்றுகிறதோ-ததஸ்ய கர்ப்ப இதி (அந்த) பகவான் ப்ரஹ்மாவிற்கும் கர்ப்பமாகிறார்-எனவே பகவான் ‘ஹிரண்யகர்ப்ப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அவர் அழகான உறைவிடத்தில் இருப்பவர். பரம பதம்;-நிறைவு அல்லது மகிழ்ச்சியின் பொருளாக இருக்கும் அனைத்தையும் தோற்றுவிப்பவர்.-ஹிரண்ய என்பது தங்கத்தைக் குறிக்கிறது . இங்குள்ள ஒப்புமை என்னவென்றால், தங்கம் தூய்மையானது, கவர்ச்சியானது, பளபளப்பானது மற்றும் மிகவும் விரும்பத்தக்கது என்பது போல, பரம பதம் என்பது சுத்த-சத்வமாகும், எனவே ஹிரண்யத்தைக் குறிக்கிறது. பெரிய அனைத்தையும் உருவாக்குபவர் ஹிரண்ய-கர்ப்பன்-பூமியின் இதயத்தில் தங்கம் மறைந்திருப்பது போல, அவர் தனது பக்தர்களின் இதயங்களில் மறைந்துள்ளார். இந்த அர்த்தத்திலும் அவர் ஹிரண்யகர்ப்பரே. சிருஷ்டியின் அடிப்படையில் வைகுண்டத்தில் தொடங்கி ஹிரண்ய கர்பத்தில் முடிவடையும் நாமங்களின் இணைக்கப்பட்ட கணக்கை ஸ்ரீ சாஸ்திரி தருகிறார். தடைகளை நீக்கும் வைகுண்டமாகிய பகவான், தனது மகத்தான ஆற்றலுடன், பரம புருஷராகிய தனது நிலையிலிருந்து இறங்கி, வைகுண்டமாக இருப்பது போல் உடலில் புருஷ வடிவில் இந்த பிரபஞ்சத்தில் வசிக்க முடிவு செய்தார். பின்னர், பிரகிருதியை இயக்கும் பிராண சக்தியை உயிரினங்களை ஆதரிக்கும் வடிவமாக மாற்றினார், இதனால் பிராணதாவாக மாறினார். இதன் விளைவாக இந்த பிரபஞ்சம் ஏற்பட்டது, ஆகாஷா பூதங்களில் முதன்மையானது (தஸ்மாத்-வா ஏதஸ்மாத் ஆத்மானா ஆகாஷஸ் ஸம்பூதஹ்).முதலில் பிரணவத்தின் பெரும் ஒலி அதாவது ‘ஓம்’ விளைந்தது. இந்த ஆகாஷாவிலிருந்து, பின்னர் காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி போன்ற பிற பூதங்களின் விளைவாக அவர் பிரபஞ்சமாக (ப்ரிதுஹ்) விரிவடைந்தார். இந்த பிருதுஹ் இந்த பிரபஞ்சத்தின் தந்தை. இந்த பிருதுவின் மகள்தான் பிருத்வி. மொத்த (ஸ்தூல) வடிவத்திலிருந்து தொடங்கி, நுட்பமான (சூக்ஷ்மா) வடிவத்தை வழங்குவதன் மூலம், அவர் தனது படைப்புகளுக்கு ஹிரண்ய-கர்ப்பமாக பிராணமயம், மனோமயம் மற்றும் விஞ்ஞானமய கோஷங்களை வழங்கினார். இவ்வாறு, நாம வைகுண்டத்தில் தொடங்கி, நாம ஹிரண்ய-கர்ப்பம் வரை, சிருஷ்டி ரகசியம் படிப்படியாக விரிவடைகிறது.

————-

சத்ருக்ந –சத்ருக்களை முடிப்பவன் –விவேக ஶரைர் ஹந்தி-புலன்களை அடக்குபவன்-விஷ யேஷு விஷேபணாத் தேஷாம் ராவணவச் ச₂த்ரு மிந்த்₃ரிய வர்க₃ம் விவேக ஶரைர் ஹந்தி
ஶமயதீதி ஶத்ருக்₄ந । *அமநுஷ்ய கர்த்ருகே ச இதி டக், * க₃மஹந , இத்யாதி₃நோபதா₄லோப꞉
* ஹோ ஹந்தே ꞉, இதி குத்வம் ।-விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும் அம்பினால் அழிப்பவர்-தச இந்த்ரியனானாம் கோரம் யோ மநோ ரஜனீசரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகிநாம் தத் த்யாநே –ஈஸ்வர சம்ஹிதை-யோகிகளின் மனம் மற்றும் பத்து இந்திரியங்களை இராமன் எவ்விதம் இராவணனின் பத்துத் தலைகளை அழித்தானோ அதே போன்று விவேகம் என்பதன் மூலம் அழிக்கிறான்–காமம் (காமம்), க்ரோதா (கோபம்), மோகம் (மாயை), லோபா (பேராசை), மதம் (பெருமை), மாத்சார்யம் (பொறாமை), மனஸ் (மனம்), புத்தி (புத்தி), சித்தம் (விருப்பம்) மற்றும் அஹம்காரம் (அஹங்காரம்) அழிக்கிறான்)-வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -பெருமாள் திரு -10-2-மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10–பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டான் -பெரிய திரு மொழி -2-3-1-தேவர்களின் எதிரிகளை அழிப்பவர்-விரோதிகளை அழிப்பவர்-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–
7-1-9-

ஓம் ஶத்ருக்னாய நம:த்ரிதஶ (முப்பத்து முக்கோடி) தேவர்களின்-ஶத்ரூன் எதிரிகளான அஸுரர்களை-ஹந்தீதி கொல்வதால்-ஶத்ருக்ன: பகவான் ‘ஶத்ருக்ன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவானுக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் இல்லை-

——–

வ்யாப்த –நிரம்பியவன் –முக்₃த₄ வ்ருத்₃த₄ ப₄த்ரு ப்₄ருத்ய ஶத்ர மித்ராதி₃ஷு வாத்ஸல்ய -அவிஸேஷாத் வ்யாப்த꞉ । (தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல் ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –)யதா-பவ்ரான் ஸ்வ ஜனவத் நித்யம் குசலம் பரப்ருச்சதி புத்ரேஷ் வக்நிஷு தாரேஷு ப்ரேஷ்ய சிஷ்ய கணேஷு ச நிகிலேந ஆநு பூர்வ்யாச் ச பிதா புத்ரா நிவ ஓவ்ரசாந் –அயோத்யா —அயோத்யா நகர மக்கள் தசரதனிடம் உமது புத்திரனான இராமன் தனது உறவினர்களை விசாரிப்பது போன்று எங்கள் அனைவரையும் அன்புடன் விசாரிக்கிறான்
ஒரு தந்தை தனது புத்ரனைக் கவனித்துக் கொள்வது போன்று இராமன் இங்கு வாழ்கின்ற மக்களைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் அக்னி வேள்விகளைப் பற்றியும்
மனைவிமார்கள் வேலையாட்கள் பற்றியும் மாணவர்கள் பற்றியும் விசாரிக்கிறான்-ரிபூணாம் அபி வத்ஸல–யுத்த-சத்ருக்களிடம் கூட இராமன் அன்பு பூண்டவன்–ஓம் வ்யாப்தாய நம:காரணத்வேன (அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம்-ஸர்வ கார்யாணாம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்)வ்யாபனாத் பரவி இருப்பதால்-வ்யாப்த: பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-(அனைத்திற்கும்) காரணமாய் இருப்பதன் மூலம் அனைத்து காரியங்களையும் (அதாவது விளைவுகளையும்) பரவி இருப்பதால் பகவான் ‘வ்யாப்த:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.(பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)அவர் பொருள்களின் உலகிலும், கருத்துகளின் உலகிலும் எங்கும் நிறைந்தவர். நாராயண சூக்தம் சொல்வது போல் ‘அந்தர் பஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் உள்ளேயும் வெளியேயும் வியாபித் திருக்கிறான்’.‘நீச்ச பூஜ்ய அவிஷேஷேன வியாபநாத் வியாப்த உச்யதே –

———————————

வாயு-செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி-பரகத ஸ்வீ காரம்-ஸ்வயமேவ தத்ர தத்ர தான் க₃ச்ச₂தீதிவாயு꞉ ।* க்ருவாபாஜிமி இத்யாதி₃நோண் ।தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –சோபியகச்சத் மஹா தேஜா சபரீம் சத்ரு ஸூதந -பால-எதிரிகளை அழிக்கும் ராமன் சபரியின் இடத்துக்குச் சென்று பெருமை அளித்தான்-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா–பால பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றான்-குஹம் ஆஸாத்ய தர்மாத்மா–பால-குகனை மேன்மைப் படுத்தினான் –ஏழை ஏதலன் -வியாப்யம் – இன்னருள் சுரந்து வாயு-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி சென்று நின்று ஆழி தொட்டான் –(நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் )(உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் வாயவே நம:வாதி கந்தம் கரோதீதி ‘வாதி’ அதாவது மணத்தை உண்டாக்குகிறார்-வாயு: எனவே பகவான் ‘வாயு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.9)– வதி ஸர்வத்ர கதோ பவதி இதி வாயு – விஷ்ணு – இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் பரவியிருக்கிறார். இந்த உலகில் காற்று நுழையாத அல்லது இல்லாத இடமே இல்லை. இந்த நாமம் பகவானின் எங்கும் நிறைந்திருப்பதைக் குறிக்கிறது.-அவர் வெறும் ‘காற்று’ மட்டுமல்ல, ‘காற்று’க்குப் பின்னால் உள்ள உயிர் கொடுக்கும் சக்தி-வாயுரஸ்மை புண்யம் கந்தம் ஆவாஹதி – பகவான் வாயுவிற்கு அந்தர்யாமி-வாயுர்வை கௌதம தத்-சூத்திரம், வாயுநா வை கௌதமசூத்ரேணாயாம் ச லோகா பராஷ்ச லோகஹ் ஸர்வாணி ச பூதானி சந்த்ரிப்தானி பவந்தி (பிருஹதாரண்யகா 3.5.2) – இதன் பொருள் ‘வாயு இந்த உலகத்தை ஒரு மிருகத்தைப் போல ஒன்றாக வைத்திருக்கும் நூல்; இது இல்லாமல் உலகம் உடைந்த சரம் கொண்ட சங்கிலியைப் போல உடைந்து விடும்; பகவானே இந்த சக்தி.-யோ வாயௌ திஷ்டன்-வாயோரந்தரோ யாம் வாயுர்-ந வேத யஸ்ய வாயுஹ் ஷரீரம் யோ வாயும் அந்தரோ யமாயதி, ஏஷ தே ஆத்மாந்தர்யாம்யாமிரிதா (பிருஹதாரண்யகா 3. 7. 7. ) – காற்றில் வசிக்காதவர், காற்றில் யார் வசிக்கிறார் என்பதை அறிவார். காற்று, மற்றும் காற்றை உள்ளே இருந்து கட்டுப்படுத்துபவர், உள் ஆட்சியாளர், உங்கள் சொந்த அழியாத சுயம்.-வாயுர்வாவ ஸம்வர்கோயதா வா அக்னிருத்வாயதி, வாயுமேவாப்யேதி, யதா சூர்யோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதா சந்திரோ’ஸ்தமேதி வாயுமேவாப்யேதி, யதாபா உச்சுஷ்யந்தி வாயுமேவாபியந்தி. சௌக்ரீவாயந்தி3. ) – சூரியன், சந்திரன், நெருப்பு மற்றும் நீர் அனைத்தும் வாயுவில் இணையும் போது மறைந்துவிடும்;-கிம் தத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் |வாதாத்-விஷ்ணோர்-பலம் ஆஹுஹ் (தைத்திரீய 1. 8. 3) – பகவான் விஷ்ணு தனது விபூதி மூலம் வாயுவாக பூமியைத் தாங்குகிறார்.-உணவு, தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் வாழலாம், ஆனால் வாயு இல்லாமல் சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. அதுபோல பகவானின் அருள் இல்லாமல் நாம் வாழ முடியாது. நாம் தேடாமலேயே வாயு நம்மிடம் வருகிறது; பகவானும் அவ்வாறே – அவர் தனது பக்தர்களைத் தேடி அவர்களைப் பின்தொடர்கிறார். வாயு எந்த வகையிலும் மக்களை வேறு படுத்துவதில்லை; அதனால் பகவான் எல்லாருடனும் சமமான மனப்பான்மையுடன் பழகுகிறார்.-இந்த பிரபஞ்சத்தின் இருப்பு மற்றும் உயிர்வாழ்வில் அதன் முக்கிய பங்கை கொண்ட வாயு பகவானுக்கு வாயு என பெயரிட காரணமாகும்.

——————-

அதோஷஜ--குறையாதவன் –யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் ––ஏவம் அம்ருத உத₃தி₄வத் ஸர்வைஸ் ஸதோ₃ப யுஜ்யமாநோ (அ)பி-அதோ ந ஷீயதே ஜாது யஸ்மாத் தஸ்மாத் அதோஷஜ –உத்யோக பர்வம்–எப்பொழுதும் தன்னிலையினின்று நழுவாதவராதலாலும், எவ்வித குறைகளுமற்று இருப்பதாலும் பகவான் ‘–அதோஷஜன் -எனப்படுகிறான்-அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸூ ரோத்தமம் –பால –பரசுராமன் கூற்று–மது என்னும் அரக்கனை அழித்தவனே -தேவர்களின் தலைவனே –
நீ குறையாதவன் என்று அறிவேன்-அக்ஷய்ய கீர்த்திச்ச–கிஷ்கிந்தா –24-31-தாரை வார்த்தை-குறையாத கீர்த்தி கொண்டவனே –யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப -4-3-10-(மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில் விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –ஒரு போதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –)(இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –)ஓம் அதோக்ஷஜாய நமத்யௌரக்ஷம் ஆகாயம் (த்யௌ) அக்ஷம் என்று அழைக்கப்படுகிறது-ப்ருதிவீ சாத: பூமி (ப்ருதிவீ) அத என்று அழைக்கப்படுகிறது-தயோர் யஸ்மாத்  அஜாயத  மத்யே அவற்றிற்கு இடையே தோன்றுவதால்-வைராஜ ரூபேண இதி வா தனது விராட் ரூபத்தில்-அதோக்ஷஜ: பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.அதோப்ருதே உள் முகமாக, உயர்ந்ததை நோக்கி திருப்பும்போது-ப்ரத்யக் ப்ரவாஹிதே நுகர்ச்சியை நோக்கி ஓடுவதை தவிர்த்து அதன் எதிர்திசையில்-அக்ஷகணே இந்திரியங்களை-ஜாயத இதி வா தோன்றுகிறார்-அதோக்ஷஜ: எனவே, பகவான் ‘அதோக்ஷஜ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-அத (அதோப்ருதே) + அக்ஷ (அக்ஷகணே) + ஜ (ஜாயதே) = அதோக்ஷஜஅதோ பூதே ஹ்யக்ஷகனே ப்ரத்யக்-ரூப-ப்ரவாஹிதே | ஜாயதே தஸ்ய வை ஞானம் தேன அதோக்ஷஜ உச்யதே ||அதஹ் – ஜ்ஞாத்ரித்வபாவாத் ஹீனம், அக்ஷஜம் ஞானம் யஸ்ய ச அதோக்ஷஜா – எங்கும் எல்லாவற்றிலும் இருந்தாலும், கண்கள் போன்ற இந்திரியங்களால் அடையாளம் காண முடியாதவர். அவர் எங்கும் நிறைந்தவர்.-பாகவதத்தில் (4.17.6-7) அதோக்ஷஜா பற்றிய குறிப்பு உள்ளது – ‘பக்தாய மே அனுரக்தாய தவ ச அதோக்ஷஜஸ்ய ச வக்தும் அர்ஹஸி யஹ் அதுஹ்யாத் வைன்ய-ரூபேண காம் இமாம்’ – நான் எப்போதும் உனது பக்தனாகவும், இறைவனின் பக்தனாகவும் இருக்கிறேன். அதோக்ஷஜா என்று அறியப்படுகிறது. எனவே, ப்ருது மன்னனின் கதைகள் அனைத்தையும் கூறுங்கள், அவர் வேன மன்னனின் மகனின் வடிவத்தில், பசு வடிவ பூமியில் பால் கறந்தார்.

யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும்
ஏத்திலும் தன்னை எட்ட எட்ட எங்கே எய்தும்?
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகி-திட்டிப்ப
யானும் எம்பெருமானையே ஏத்தினேன் யானுய்வானே

—————–

ருது –அணுகுபவன் –ஸதா₃(அ)ப்ய பூர்வைஸ் ஸர்வ உல்லா ஸகரைர் உத்தர உத்தரைர் கு₃ண பர்யாயைர் ருச்ச₂தீதி ருது꞉ । அரத்தேஸ் து இதி து இதோ ஹி வஸந்த ஶிஶிராதீ₃நாமபி ருதுத்வம் । (எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும் ருதுக்கள் என்று கூறப் படுகின்றன)யதா₂கர்மாபி தப்தா பர்ஜன்யம் ஹ்லாத யந்தமிவ பிரஜா –அயோத்யா -3-29 – ஸூர்யனின் உஷ்ணத்தால் தவிப்பவர்கள் நீர் கொண்ட மேகத்தைக் கண்டால் மகிழ்வது போன்று இராமனை எத்தனை நேரம் பார்த்தாலும் திருப்தி அடைவது இல்லை –வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9–ஓம் ருதவே நம:காலாத்மனா பகவான் காலமே வடிவானவன்-ருதுஶப்தேன ‘ருது’ என்ற லக்ஷ்யத இதி குறிக்கிறது-ருது: எனவே பகவான் ‘ருது’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-‘ர்கதி-பிரபனயோஹ்’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது, அதாவது ‘போவது’. ர்ச்சதி இதி ர்துஹ் – ரிதுஹ் என்ற சொல் பருவங்கள் ஒன்றையொன்று தள்ளி இடையூறு இல்லாமல் புதியதாக வருவதைக் குறிக்கிறது.-வசந்தா, கிரீஷ்மா, வர்ஷா, ஷரத், ஹேமந்தா மற்றும் சிசிர ரிதுஹ். காலச் சுழற்சியில் இந்த ரிட்டஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக தடையின்றி நகர்வதை உள்ளடக்கியது. இந்த நாமம் பகவான் காலத்தின் வடிவில் இருப்பதையும், பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதையும் குறிக்கிறது.-ரிதுர்-ரிதுனா நுத்யமானா வின்னாதா அபிதாவா – ஒரு பருவம் மற்றொன்றை தூண்டிவிட்டு அதன் வருகையை உரத்த குரலில் அறிவிக்கிறது. இந்த நாமம், பகவான் காலத்தின் வடிவத்தில் இருக்கிறார், இது பருவங்களின் சுழற்சியின் பின்னால் இருப்பதைக் குறிக்கிறது -பகவான் ரிதுஹ் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவர் எல்லா வகையான பருவங்களிலும் இருக்கிறார்.-

—————–

418-ஸூ தர்சந –பார்வைக்கு இனியவன் -நல்ல மார்க்கம் காட்டி அருளுபவர் -அழகைக் காட்டி –ஐயப்பாடு அறுத்து ஆதாரம் பெறுக வைப்பவன்கு₃ண ப்ரபா₄வாநபி₄ஜ்ஞாநாமபி த₃ர்ஶந மாத்ர மேவாஸ்ய ஸோப₄நமிதி ஸுத₃ர்ஶந꞉ ।குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –சோமவத் பிரிய தர்சன –பால -1-18--சந்திரன் போன்று அழகான ரூபம் கொண்டவன்-சதைக பிரிய தர்சன –பால -1-16-எப்பொழுதும் மகிழ்ச்சியை அளிக்கும் திரு மேனி கொண்டவன்-சந்திர காந்தா நனம் ராமம் பிரிய தர்சனம் –பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிகாண் பெரும் கோலத்து என் காகுத்த நம்பி -6-6-9-கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணி -ராகவனே –பெருமாள் திரு -8-2-நம்பியை தென் குறுங்குடி நின்ற -அச் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தியை – -என் சொல்லி மறப்பேன் –காதுகனாய் இருந்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-தருணவ் ரூப சம்பன்னவ்-சூர்ப்பணகை

ஓம் ஸுதர்ஶனாய நம:ஶோபனம் மங்களமான-நிர்வாண ஃபலம் முக்தியை அளிக்க வல்லது-தர்ஶனம் ஞானமஸ்யேதி தர்ஶனம் அதாவது பகவானைப் பற்றிய ஞானம்-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவானின் தர்ஶனம், அதாவது அவரைப் பற்றிய ஞானமானது மிகவும் மங்களகரமான முக்தியை அளிக்கவல்லது. எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.ஶுபே மங்களகரமான-தர்ஶனே ஈக்ஷணே ‘தர்ஶனம்’ அதாவது திருக்கண்களை உடையவராதலால்-பத்மபத்ராயதே அஸ்யேதி தாமரை இதழ்களைப் போன்ற-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பகவான் தாமரை இதழ்களை போன்ற  அழகிய, மங்களகரமான திருக்கண்களை உடையவராதலால் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.–சுதர்ஷனா – அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழிவகுக்கிறதுஷோபனம் நிர்வாண பலம் தரிசனம் ஞானம் அஸ்ய இதி சுதர்ஷனஹ் – யாருடைய மங்களகரமான பார்வை அல்லது அறிவு முக்தி அல்லது மோட்சத்திற்கு வழிவகுக்கும்’–சுபே தர்ஷனே ஈக்ஷணே பத்மபத்ராயதே அஸ்ய இதி சுதர்ஷனா – தாமரையின் இதழ்களை ஒத்த அழகிய கண்களை உடையவர்’.–ஸுகேன த்ரிஷ்யதே பக்தைரிதி சுதர்ஷனஹ் – அவர் பக்தர்களுக்கு எளிதில் புலப்படுகிறார், எனவே அவர் சுதர்ஷனா’.தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

ஸுகேன இன்பமே (சுகமே) வடிவானவராய்-ருஶ்யதே காட்சி அளிக்கிறார்  பக்தைரிதி வா  தனது அடியவர்களுக்கு-ஸுதர்ஶன: எனவே, பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் தனது அடியவர்களுக்கு என்றுமே இன்பமே வடிவானவராய் காட்சி அளிக்கிறார். எனவே பகவான் ‘ஸுதர்ஶன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.-அல்லது அவரது அடியவர்களுக்கு பகவானைக் காண்பதை போன்ற இன்பம் வேறொன்றுமில்லை 

தனது ‘நேத்ரா’ (கண்கள்) மூலம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தெளிவாகவும் முழுமையாகவும் பார்க்கவும் அறியவும் பகவானின் திறனைக் குறிக்கிறது என்று கவனிக்கிறார். மேலும், அவர் ஒவ்வொரு வடிவத்திலும் அந்தர்யாமியாக (உள்ளே) இருப்பதால், அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பார்க்கிறார்.-இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் தொடர்புபடுத்தி தற்போதைய நாமத்தை சுதர்சன சக்கரத்திற்கான தெய்வத்தைக் குறிப்பிடுவதாக -காலம் ஆறு பருவங்களின் வடிவில் இடையறாது சுழன்று கொண்டிருப்பது போல் ஆறு முனைகள் கொண்ட சுதர்சன சக்கரம் சக்தி வாய்ந்ததாகவும் இடையூறு இன்றியும் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுதர்சன சக்கரத்திற்கு பகவானே தேவதா.

————

419-கால-தன்னிடம் ஈர்ப்பவன் –ஏவம் பூ₄தைர் கு₃ணைர் ஆத்மநி சராசர ஸங்கலநாத்
கால꞉ ॥இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -1-6-8-என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாகுவேன்-ஓம் காலாய நம:கலயதி இயங்குகிறார் (இயக்குகிறார்)-ஸர்வமிதி வா அனைத்தையும்-கால: எனவே, பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-எப்பொழுதும் இயங்குவதால், அனைத்தையும் இயக்குவதால் பகவான் ‘கால:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.கால: கலயதாமஹம்’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.30)இதி பகவத்வசனாத் |இயங்குனவற்றில் காலம் நான்.-கலயத என்ற சொல்லிற்கு எண்ணுதல் (கணக்கெடுத்தல்) என்றும்  பொருள் உள்ளது. இதுவும், இந்த திருநாமத்திற்கு பொருத்தமானதே. பகவான் காலத்தின் வடிவில் அனைவரின் வாழ்நாளையும் கணக்கிடுகிறார்.-எல்லாவற்றையும் எண்ணுபவர் -ஸ்ருஷ்டியில் உள்ள எல்லாப்பொருள்களின் கணக்குகளையும் அறிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும் காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –காலா – அவர் எல்லா வற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார்-இந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் உள்ளன, அதாவது.-பிரளயம் அல்லது பிரளய காலத்தில்) அனைவரையும் தன் பக்கம் இழுப்பவன்;-அளந்து அனைத்திற்கும் வரம்பு நிர்ணயிப்பவர்;-அவர் தனது எதிரிகள் அனைவருக்கும் மரணம் அல்லது அழிவு;-எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன்.

காலாய நம: நம என்பது ‘கால சம்க்யானே’ என்ற மூலத்திலிருந்து அளக்க அல்லது எண்ணுவதற்காக உருவானது.-காலோஸ்மி லோகக்ஷயக்ரித் ப்ரவ்ருத்தோ – காலத்தின் வடிவில் நான் உலக அழிவைக் கட்டுப்படுத்துகிறேன்’.-‘அநர்த-ப்ரேப்சுதாயா கணயாதாம் மத்யே காலா மிருத்யு அஹம் – துன்பங்கள் அல்லது பேரழிவுகளை ஏற்படுத்தும் விருப்பத்துடன் எண்ணுபவர்களில், நான் மரணத்தின் கடவுள்’.-சர்வேஷ்வரோ விஷ்ணுரேவ காலோ, யதோ ஹி ச கலயதி கணயதி ஸமஸ்த-ப்ராணி-கர்மாணி, ததனுகூல பல-பிரதாய.காலோ ஹினாம பகவான் ஸ்வயம்புஹ் அனாதி மத்ய நிதானஹ் – பகவான் ஆரம்பம், நடு அல்லது முடிவு இல்லாத நேரமே.-ஸ ஸூக்ஷ்மாம் அபி காலம் ந லீயதே இதி காலாஹ் |ஸம்கலயதி காலயதி வா பூதானி இதி காலா (சுஷ்ருத சூத்ரம் 6. 3).

——–

பரமேஷ்டீ-மிக உன்னதமான பரம பதத்தில் உள்ளவன்-அவதாரத்தில் செய்ய வேண்டியவற்றை முடித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளும் பெருமாள்-ஏவம் ராக்ஷஸ ம்ருக₃யயா (ராக்ஷஸர்களை வேட்டையாடி முடித்து )ஜக₃த்₃ரக்ஷணேந (குகன் சபரி விபீஷணாதிகளுக்கு ஸம்ஸ்லேஷ ரஸம் அளித்த பின்பு )சாத்ர விஹ்ருத்ய புந꞉ பரமே ஸ்தா₂நே திஷ்ட₂தீதி பரமேஷ்டீ₂ ।* பரமே கித், இதீ நி ப்ரத்யய꞉,* அம்பா₃ம்ப₃ இத்யாதி₃நா ஷத்வம்*ஹல த₃ந்தாத் இதி ஸப்தம்யா அலுக் । யதாவிவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீரஸ் மஹ அநுக –உத்தர -110-12- விஷ்ணு லோகத்துக்கு -தனது திவ்ய மங்கள விக்ரஹம் மற்றும் சரீர பூதங்களான அனைவருடன் அடைந்தான்-ஏவமேஷ மஹா பாஹு இஷ்வாகு குல வர்த்தன ராவணம் ச கணம் ஹத்வா திவம் ஆக்ரமிதா பிரபு –சபா பர்வம் -55-47-
நீண்ட திருக் கரங்களைக் கொண்டவனும் -இஷ்வாகு குலத்தின் நாயகனுமான இராமன்
இராவணன் கூட்டத்தை முடியுடன் அழித்து விட்டு மேலுலகம் சென்றான் –மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட விற்றிட்டுப் போய் விண் மிசைத் ததாமமே புக மேவிய சோதி -6-4-10-
விண் முழுதும் எதிர் வரத் தன் தாமமேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான் -பெருமாள் திரு -10-10-பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓம் பரமேஶ்டினே நம:பரமே ப்ரக்ருஶ்டே ‘பரம’ அதாவது உயர்ந்ததான-ஸ்வே  மஹிம்னி  தன்னுடைய (இயற்கையான) மகிமையால்-ஹ்ருதயாகாஶே (ஒவ்வொருவரின்) இதய ஆகாயத்துள்-ஸ்தாதும் நிலைபெற்றிருக்கும்-ஶீலமஸ்யேதி தன்மை யுடையவராதலால்-பரமேஶ்டி பகவான் ‘பரமேஶ்டி’ என்ற என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்-அங்கு இருப்பது  அவரது இயல்பான தன்மையுமாகும் (ஶீலம்).-‘பரமேஶ்டி விப்ராஜதே’ – மிகச்சிறந்த தன்மையுடன் வீற்றிருக்கிறார்.-இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி (பகவான் ‘பரமேஶ்டி’ என்று அழைக்கப்படுகிறார்).- உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.-ஸ்ரீ வைகுந்தத்தில் வசிப்பவர்;-இதயத்தின் உச்ச குகையில் வசிப்பவர்.-‘பரமே ப்ரகரிஷ்டே ஸ்வே மஹிம்னி ஹ்ருதயகாஷே ஸ்தாதும் ஷீலம் அஸ்ய இதி பரமேஷ்தீ – அவர் தனது எல்லா மகிமையிலும் இதயத்தின் முதன்மையானவர், எனவே அவர் பரமேஷ்டி என்று அழைக்கப்படுகிறார்’ என்று விளக்குகிறார். வேத மந்திரம் கூறுகிறது ‘பரமேஷ்தீ விப்ரஜதே’ – பரம கடவுள் பிரகாசம் மற்றும் தாமரை வடிவ இதயத்தின் மத்தியில் வசிக்கிறார்.

பத்மகோஷ பிரதீகாஷம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் – தாமரை மலரின் தலைகீழ் மொட்டுக்கு ஒப்பிடக்கூடிய இதயத்தின் ஈதரில் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்;தஸ்ய மத்யே மஹாநாக்னி-ர்விஸ்வர்சி-ர்விஸ்வதோமுகஹ் – இதயத்தில் உள்ள அந்த இடத்தில் அக்கினியின் பெரும் ஜ்வாலை, அழியாத, அனைத்தையும் அறிந்த, நாக்குகள் எல்லா திசைகளிலும் விரிந்து, எல்லா இடங்களிலும் முகங்களைத் திருப்பிக் கொள்கிறது-தஸ்யாஹ் ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்திதா – அந்தச் சுடரின் நடுவில் பரமாத்மா வசிப்பவர்.-நாராயண ஸூக்தம்–​​கடோபநிஷத்தின் “பரமே வ்யோம்னி ப்ரதிஷ்டிதா” – இதயத்தின் உச்சமான குகையில் மையமாக இருப்பவர் மற்றும் அனுபவத்தைப் பெறக்கூடியவர்.

———————

421-பரிக்ரஹ –-சௌசீல்யமே ஸ்ரீ ராமாவதார முக்கிய குணம் –குணவான் இத்தையே –ஆஸ்ரித வாத்சல்யம் கண்ணனுக்கு –அஸ்ய ஸௌஶீல்யம் தத்த்வம் ॥அத்ர தத்ர ச பரிதோ க்₃ரஹோ (அ)ஸ்யேதிபரிக்₃ரஹ꞉,ஸ்வ ஸம்ப₃ந்தி₄ பௌர ஜாநபதே₃ தத் ஸம்ப₃ந்தி₄நாம் தத்₃தே₃வதா தத் ஆராம தரு தூ₃ர்வாதே ₃ரபி பரமபத₃ ப்ராபணாத் -நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர்-யே ஹி பாகவதம் சேஷு அநு ராகின–சராசரங்களையும் கூட்டிச் சென்ற ஸுவ்லப்யம்-தரு தூ₃ர்வாதே-மரங்களையும் வேர்களுடனே-யாவற்றையும் தன்னுடன் சேர்த்து கொள்பவன்-தத்கால மக்களுக்கு பெருமாள் -அனைவருக்கும் ராமானுஜர்புற்பா முதலா புல்லெரும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
-7-5-1-ஓம் பரிக்ரஹாய நம:ஶரணார்த்திபி: தம்மை சரணடைந்த அடியவர்களால்-பரிதோ எல்லாவிடங்களிலும்-க்ருஹ்யதே  அடையப்படுகிறார்-ஸர்வகதத்வாத் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-பகவான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளபடியால் அவரை சரணடைந்த அடியவர்கள் அவரை எல்லாவிடங்களிலும் அடைகின்றனர் (கிரஹிக்கின்றனர்). எனவே, பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-ஞாயதே இதி வா அறியப்படுகிறார்-பத்ரபுஶ்பாதிகம் இலைகளையோ (துளசி), பூக்களையோ-பக்தைரர்பிதம் தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும்-பரிகிருஹ்ணாதீதி முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்-பரிக்ரஹ: எனவே பகவான் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.-தனது அடியவர்கள் பக்தியுடன் ஸமர்ப்பிக்கும் இலை (துளசி), பூக்கள் முதலிய எளிய பொருட்களையும் பகவான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். எனவே அவர் ‘பரிக்ரஹ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரிகிரஹா – அவர் அனைத்தையும் தன்னுள் உள்வாங்குகிறார்-அனைத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்பவர்;-ன்னிடம் அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் பற்றிக்கொள்ளப்பட்டவர்;-தன் பக்தர்களின் எந்தப் பிரசாதத்தையும் மனப்பூர்வமாக அளிக்கும் போது ஏற்றுக்கொள்பவர்;இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த நாமத்திற்கு மூன்று விதமான விளக்கங்களை தருகிறார். முதல் பொருள் ‘சரணார்த்திபிஹ் பரிதோ க்ரிஹ்யதே ஸர்வகதத்வாத் – அவரை அடைக்கலம் தேடுபவர்களால் எல்லாப் பக்கங்களிலும் அவர் பற்றிக் கொள்ளப்படுகிறார்’. அவர் வழங்கிய இரண்டாவது பொருள் ‘பரிதோ ஜ்ஞாயதே – எல்லா அணுகுமுறைகளிலிருந்தும் அவரைத் தேடுவதன் மூலம் அவர் உணரப்படுகிறார்’. மூன்றாவது பொருள் ‘பத்ரபுஷ்பாதிகம் பக்தைஹ் அர்பிதம் பரிக்ரிஹ்ணாதி இதி பரிக்ரஹஹ் – அவர் தனது பக்தர்கள் செய்யும் மலர்கள் மற்றும் இலைகள் போன்ற எந்தவொரு பிரசாதத்தையும் ஏற்றுக்கொள்வதால் அவர் பரிக்ரஹர்’.-பத்ரம் புஷ்பம் ফலம் தோயம் யோ மே ভக்த்யா ப்ரயச்சதிதத் அஹம் பக்தி-உபஹர்தம் அஸ்நாமி ப்ரயதாத்மனஹ் ||–9-25-அன்புடனும் பக்தியுடனும் எனக்கு ஒரு இலை, ஒரு பூ, பழம் ஒரு தண்ணீர் வழங்கினால், அந்தத் தூய்மையான உள்ளம் கொண்ட அந்த பக்தியை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.-சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –-பரிக்ரஹ – பரிதா ஸர்வதா கிரஹணம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனது சக்தியின் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்று விளக்கம் தருகிறார்.-பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ ராமாயணம்

July 29, 2025

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-
22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து –
24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,-மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை-வாழ —-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி உலகினில்–லௌகிகர் இடங்களில்-சார்ங்கம் உதைத்த சர மழை போல்-இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்–சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று –எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சார்ங்கம் உதைத்த –அகம்படியர் –சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இறே-அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும்-விலக்க ஒண்ணாதாய் இருக்கை-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே-சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-வாழ உலகினில் பெய்திடாய் –த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது-அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

————–

பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே–ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –-கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –உறக்கத்தில் தலையானவனும்-உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ -ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே –நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ ––அவனது -துயில்-உன்னது -பெரும் துயில்–அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்-ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே-அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு – நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு-அவன் ஒருத்தியை இறே பிரித்தது-நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-கூற்றத்தின் வாய் வீழ்ந்த-தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே- வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த-பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின -எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் -விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –

இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு-இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை 

—————

சினத்தினால் –உண்ணாது உறங்காது –அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே-பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழியபெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்-இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே –விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –சினத்தினால் மனத்துக்கு இனியான் –அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று-(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப்புரக் காரியமும் செய்வார் பெருமாள் ) தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

தென்னிலங்கை-பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –-ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி கொலைக் காரன் இருக்கிற இடம் இறே-அத் திக்குக்கும் அஸஹ்யமான படி-தென்னிலங்கை கோமானைச் செற்ற-யத்ய தர்மோ ந பலவான்-என்றும் –அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் –திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே-ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –படையைக் கொன்று –புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து ஆயுதங்களை முறித்து –அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –கோபத்தினாலே-யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து-அத ஏவ மனத்துக்கு இனியானை –சக்கரவர்த்தி திருமகனை –மனத்துக் கினியானைப் –வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக-பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே-ஏகதார வ்ரதனாய் இருக்கை –கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று-நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு-இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

———–

பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே-தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –-முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே-கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி– திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே-ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது–அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய-கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.-ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க-ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் –தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில் –

கீர்த்திமை –-எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம்-உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்-தங்கை அழகிலே கண் கலங்கினாள்-தம்பி சீலத்துக்கு இலக்கானான் –-பாடிப் போய் –இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி –வழிக்கு தாரகம் இறே திரு நாமம்-தன் தாள் பாடி -என்னக் கடவது இறே –தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –கீர்த்திமை பாடிப் போய்-கல்யாண குணங்களை-ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி-அதுவே தாரகமாய் போய் –விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தநத்தைப் பாதேயமாகக் கொண்டு வழி கடந்தன ரென்றவாறு

————–

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே-பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை-எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை இவர்களுக்கு குடிப் பிறப்பு –தென்னிலங்கை-அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய் குழவிக் கூடு கொண்டாப் போலே-ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –செற்றாய் –ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை-திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே-மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும் அவர்கள் ஆகையாலே-குடிப் பிறப்பாலே வந்தது –இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்-ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்-சென்று அங்குத்-அங்கே சென்று –நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –கொடிய காட்டிலே பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள் –எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே- உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

————-
உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் –
அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
” என்பது பிராட்டியின் திருவாக்கு.-
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.”
என்றார்.- பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அவிநாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவிநா பாவமேயாம்.

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை–நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது –ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உன் தன்னோடு-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்-(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்-எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் –(பராங்குச நாயகி )

உனக்கே நாம் ஆட்செய்வோம்
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே-நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

———————

வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயினனென்றதாகக் கொள்க.
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்‘-பிராட்டியே தான் மதுரக் கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான் ஸுந்தர பாஹு – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே!” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்-கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் –என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை-அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது-அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

மாதவனை
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்-லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து-அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

மேலே கேசவனென்றதனால் பரசு ராம பங்க கதை ஸூசிதமாகிறது- கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே யாதலால் அது கேசவனை யென்பதனால் ஸூசிதமென்னக் குறையில்லை.-

கேசவனை
விரோதி நிரசன ஸ்வ பாவனை –பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை –
பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே
போக்க வல்லவன் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது--அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற நிலையைச் சொல்லிற்று

மாதவனை கேசவனை
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான்
என்று பட்டர் அருளிச் செய்வர் –

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸூ சனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;
சேயிழையார்
என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்விய இழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால் சொல்லப்பட்ட
தாகிறது
. ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே- பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று- அடுத்தபடியாக ஸீதாபிராட்டி மங்களாசாஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.

இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம் செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களாங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூப ஸம்ஹநம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ருர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்ற பாடமும் பல ஸ்ரீகோஸங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “
ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!
” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப் பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில் கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷிகளையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்து கொள்ளக் குறையில்லை.

தருணவ் மஹாபலெள,புண்டரீக விசாலாக்ஷள சீர க்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை — அதன் பிறகு தாரையின் புகழுரை.-நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-
த்வமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தம தார்மிகச்ச, அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச் ச க்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள்
ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-
வயத்தமேஷ மஹாயோ …. தம : பரமோயாதர சங்க சக்ர கதாதர , ஸ்ரீவத் வக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் ஸாச்வதோ த்ருவ:”இத்யாதி
யாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வாக்கிலும் வந்ததல்ல.-

சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே-ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே-கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –ஸ்வரூப குணங்களாலும்
ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –(நேரிழையீர் அது நேர்மை -ஆஸ்ரயணீய தசை-சேயிழையீர் இது செம்மை -இது அனுபவ தசை )

திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறை கொண்டவர் சக்ரவர்த்தி திருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்று சொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்க வேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றது தான் அங்குப் பறை கொண்டவாறு.

குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”

பெருமாள் திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹித ஸித்தி யாதலால் இதனையே பறை கொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சால விணங்கும்.

இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து –அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி 

அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –-எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-தங்கள் வெறுமையையும்-அவன் பூர்த்தியையும்-பந்தத்தையும் முன்னிட்டுத் தப்புக்கு பொறை கொண்டு-ருசியையும் த்வரையையும் காட்டி-வளைப்பிட்டு-அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –கொண்ட-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-ஆற்றை –கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி  -சேதன லாபம் பகவானுக்கே -பேற்றுக்கு சாதனங்களும் செய்து பெற்று உகப்பானும் அவனே

“அணி புதுவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த விசேஷணமும் ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி உபபாதிப்போம். ஆண்டாளுக்கும வான்மீகி முனிவர்க்கும் அபலபிக்க வொண்ணாத வொரு உத் கர்ஷம் கோதாஸ்தியில்-ः –
வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: | கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7): என்கிற ஸ்லோகத்திற்கு —நிலததில் தென்படும் புற்றானது பூமி தேவியின் காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமாதலால் பூமி என்றே கொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில் நின்றும் தோன்றிய வால்மீகி முனிவர்-ஆண்டாளுடைய காதில் நின்றும் தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்தி ஏற்பட்டு விட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும் தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில் நின்று உண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோக விலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவானால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஸஹஜமே யாதலால்
மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில் நின்றும் தோன்ற
வென்பதில் வியப்பு ஒன்றுமில்லை கிடீர்  -ஸ்ரீராமாயணத்திற்கு ஏற்பட்டிருக்கும் ப்ரஸித்தையைப் பற்றிச் சிறிது வியக்க வேண்டுமே யல்லது உம்முடைய திவ்ய ப்ரந்தங்ளுக்கு ஏற்பட்டிருக்கின்ற போக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
ஸக்தியில்லை என்பது உள்ளுறை –இதனால்,வால்மீமி கோகிலத்தின் சொற்களில்
கிளி மொழிக் கோதையின் சொற்களே விலக்ஷணமாயுள்ளது.

ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன்.
அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,
தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்-உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்!-திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ஸ்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.-அதுபோல உன்னுடைய ஸ்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.-உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?-உன் “ஸ்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது

அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் –தனக்கு-பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேஸ்யமாய் அவர் அபிமானித்த தேசம் என்று ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் திரு அயோத்யையும் போலவும்-நப்பின்னைப் பிராட்டிக்கு கும்ப குலமும் திருவாய்ப்பாடியும் போலவும் அன்றிக்கே-ஆண்டாளுக்கு-பிறவியும் புக்க இடமும் ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இறே உள்ளது –பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே-நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற அலங்காரம் உள்ள தேசம் இறே
(அகாரம் உகாரம் மகாரமும் என்றுமாம்-ரெங்க மன்னாரும் ஆண்டாளும் பெரிய திருவடி-சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்-ஓங்காரமே காட்சி கொடுத்து ஸேவை சாதித்து அருளும் திவ்ய தேசம் )

‘கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்று காட்டினாப் போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவை மிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹல்யா சாப விமோசனம் .4.வில் வளைத்து வைதேஹியை மணம் புணர்ந்தது. 5.பரசு ராம பங்கம்.(ஆக 5) அயோத்யா காண்டத்தில்,1.யுவ ராஜ பட்டாபிஷேக ப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டது. 4. பாதுகா பட்டாபிஷேகம்.5-அத்திரி பகவானாச்ரமத்தில் அநஸூய தேவிக்கும் மீதா ஸீதேவிக்கும் ஸம்வாதம். (ஆக 5)இங்ஙனே காண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை ஐயைந்தாக வகுத்தாள்வது.-
இப் பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக
உரைப்பார்-உபந்யஸிக்க ல்லவர்கள்.

———————————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமாயண ஸாரம் -ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள்

July 23, 2025

ஸ்ரீராமாயண உபன்யாஸத் தொடரை பார்த்தஸாரதி பக்த ஸபை சார்பில்
திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் நிகழ்த்திய போது வெளியிடப் பெறற
விழா மலரில் இந்நூல் இடம் பெற்றது.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவசியம் ” அறிய வேண்டிய அர்த்தங்கள் ” என்று
கூறப்பெறும் அர்த்த பஞ்சகத்தை உள்ளத்தில் கொண்டு ஸ்ரீராமாயணத்தை ஆராயும்
ஓர் ஆய்வு நூலாக மீமாம்ஸா நியாயங்களின் உதவி கொண்டு இந்நூலை ஸ்வாமி
இயற்றியுள்ளார்.
மிக்க இறைநிலை மெய்யாம் உயிர்நிலை தக்கநெறி தடையாகி தொக்கியிலும்
ஊழ்வினை வாழ்வு, ஆகிய ஐந்து செம்பொருட்களும்
தூய தமிழ் நடையில் எழுதப்
பெற்றுள்ளது. தற்காலப் போக்கைக் கருத்தில் கொண்டு ஸ்வாமி கால்நூற்றாண்டிற்கு
முன்னமேயே ஸம்ப்ரதாய மணிப்பிரவாள நடையை விட்டு தமிழ் மரபு நடையை
மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாம்.

திருமகள் கொழுநனான பரமபுருஷன், நம்முடைய நன்மையைத் திருவுள்ளம்
பற்றி, திரு அயோத்தியில் திருவவதரித்து, பதினோராயிரம் ஸம்வத்ஸரம் இவ்வுலகில்
எழுந்தருளியிருந்த சரிதம் நாம் நன்கு அறிந்ததேயாகும். அப்பரமபுருஷன் அங்ஙனம்
இராமபிரானாகத் திருவவதாரம் செய்தருளினபோது, அவனை அறிவிக்கும் வேதமானது,
வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாய்த் திருவவதாரம் செய்ததாம். இக்
கருத்தைக் கொண்டுள்ள,” வேத வேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத : ப்ராசேதஸாதா த் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா| “
-என்னும் முதுமொழியை ஊன்றிக் காணுங்கால், ‘இராமபிரானைப் போன்று, அவ் இராமபிரான் திவ்யசரிதமான இராமாயணமும் நமக்கு அன்புடன் ஆதரிக்கத் தக்க திவ்ய சாஸ்திரம்’ என்பது நன்கு புலனாகும். “விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை இவ்வுலகில் நன்கு பாவச் செய்தவரும், பூர்வாசாரியருள் நடுநாயக மணிபோன்று விளங்குபவருமான எம்பெருமானார், திருமலையில் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து, திருமலைநம்பிகள் ஸந்நிதியில் இராமாயண விசேஷார்த்தங்களை (இராமா யணத்தில் கூறப் பெற்றுள்ள சிறந்த பொருள்களைக்) கேட்டருளினார்” என்பதே இவ் இராமாயணத்திற்குள்ள தனிச்சிறப்பை நன்கு தெரிவிக்கின்றதன்றோ?-“இவ்வாறு மிக்க சிறப்புள்ள இராமாயணத்தின் ஸாரப் பொருள், பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோதி, உபாயம் என ஐந்தாம்” என்பதை இந்த ‘இராமாயணஸாரம்’ என்னும் நூல், மிக விரிவும், மிகச் சுருக்கமும் இன்றி விளக்கிக் காட்டி யிருக்கிறது.

திருமாலான பரம புருஷன், தனக்கே உரித்தான திருநாட்டில் திருமகள் மண்மகள்
முதலிய தேவிமாரோடு வீற்றிருந்து, நித்யராலும் முக்தராலும் தொண்டு பூண்டொழுகப்
பெற்றிருப்பவனாம். இங்ஙனம் இருப்பினும்,அப்பரம புருஷன் அத்திருநாட்டிலுள்ளாரைப்
போன்று, இவ்வுலகிலுள்ளாரும் தன்னை அனுபவித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிப் பெருங்
களிப்புற வேண்டியிருக்க. அங்ஙனமின்றி,மாயா சப்தப் பொருளான மூலப்ரைக்குதியில்
அழுந்திக் கிடந்து, அறிவுற்றவராகயிருப்பினும், அறிவற்ற அசேதனப் பொருளோடு
வாசியற இருத்தலைக் கண்டு இரக்கமுற்றனன்.

இவ்வாறு இரக்கமுற்ற எம்பெருமான், இவ்வுலகத்தாரைக் கரையேற்றத் திருவுள்ளம்
பற்றி,

இங்ஙனம் அருளப் பெற்றிருப்பினும், இச் சேதனர் அக்கலைகள் காட்டிய வழியைப் பின்
பற்றாது அவ்வுறுப்புக்களையும் அவ்வுடல்களையும் கொண்டு, ஆற்றைக்கடக்கக் கொடுத்த
புணையைக் கொண்டு அவ்வாற்றைக் கடவாது கடலிடைப் புகுவாரைப் போல், சுவை,ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்னும் விஷயங்களில்உழல்வராயினர்.
இதைக் கண்ட எம்பெருமான், தன் கட்டளை செல்லாத நாட்டில் தானே சென்று,
தன் வழி வருமாறு செய்யும் அரசன் போன்று, இவ்வுலகினில் எண்ணிறந்த அவதாரங்களைச் செய்தருளினான்.
இவ் வவதாரங்களுள்,இராமாவதாரம் மிகமிகச் சிறந்ததாம்.இவ்விராமபிரான், தன் உபதேச மொழிகளாலும், ஒழுக்கங்களாலும் இவ்வுலகத்தவர்க்கு உணர்த்தின நீதிகள் பல. அந்நீதிகளை, பின்னானார்க்கும் உதவ வேண்டும் என்னும் எண்ணத்தினால் நான்முகனார், நூறுகோடி அளவினதான இராமாவதார சரிதத்தைச் செய்து, நாரதர் முதலான தேவஷிரிகளுக்கு உபதேசம் செய்தருளினார்; அந்த நாரதரையே இராமநாமத்தையே ஜபித்துப் போது போக்குபவனாகிய வால்மீகி முனிவனிடம் அனுப்பி, அவ்விராமபிரானுடைய சரிதத்தை அம்முனிவனுக்கு உபதேசம் செய்வித்து, தாமும் காட்சி அளித்து, இராம சரி
தத்தை இயற்றுமாறு கட்டளையிட்டார்.

இங்ஙனம் அருள் பெற்ற அம்முனிவனும் ஸ்ரீராமாயணத்தைச் செய்தனன்.

ஸ்ரீராமாயணச் சிறப்பு

பிள்ளைலோகாசார்யார், ஸ்ரீராமாயணத்தை-இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனக்கொண்டாடி
அருளிச்செய்திருக்கிறார். ஆனால், நாராயணனாகவே போற்றப்பெற்றவர் வ்யாஸர்; இராம
பிரானிடம் சிறந்த பக்தி பெற்றிருப்பவர் வால்மீகி ; அவரிடம் பிறந்தது பாரதம்;-இவரிடம் பிறந்தது இராமசரிதம்;
பாரதம் என்னும் இதிஹாஸத்தை அங்ஙனம் போற்றி அருளிச் செய்யாது, இராம சரிதத்தை ‘ இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனப்போற்றி அருளிச்செய்ததற்குக் காரணம் யாதோ? எனின்,- (நாராயண:கதா மிமாம்) என்று தொடங்கி,வ்யாஸர், நாராயணனின் பரிபூர்ணாவதாரமாய்க், கொண்டாடப்பெறும் கண்ணபிரானுடைய சரிதத்தை, பாரதத்தில் ஒருவாறு வெளியிட்டிருப்பது உண்மையேயாம். ஆயினும்,
(யதா தர்மாதயச் சார்த்தா: முனிவர் யானுகீர்த்திதா !ந ததா வாஸுதேவஸ்ய மஹிமாஹ்
யனுவர்ணித:
)என்று நாரதர் (பாரதத்தைச் செய்து மன மகிழ்ச்சி சிறிதும் இன்றி இருக்கும்) வ்யாஸரை நோக்கிக் கூறுகின்றவாறு, அப்பாரதத்தில், அறம் பொருள் இன்பங்களும், அவற்றின் ஸாதனங்களும் கூறப் பெற்றிருக்கின்றன போன்று, கண்ணபிரானுடைய பெருமை கூறப்பட்டிலது.மேலும், பூசல் பட்டோலை‘ என்று ப்ரஸித்தி ஏற்படுமாறு, யுத்த சரிதத்தையே பெரும்பாலும் வெளியிட நேர்ந்திருக்கிறது; நான்முகனார் புத்திரரான நாரதர், கண்ணபிரானுடைய சரிதத்தைஉபதேசம் செய்ய, பின்பு வ்யாஸர், ஸ்ரீபாகவதத்தைச் செய்ததாக அங்கு சரித்தரம், பாரதத்தைச் செய்திருந்தும், அகக் களிப்பற்றிருந்த வ்யாஸர்,தம் துன்பம் தீருமாறு ஸ்ரீபாகவதத்தைச் செய்தார் என்பதற்கு அவர் திருவாக்கையே சான்றாகக் காண்க :–அஸ்த் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸுலாம் !வாசம் சௌரி தாலாப கங்கயைவ புனீமஹே||”நாரதருக்குத் தந்தையாரான நான்முகனார் பூஜிக்கப்பெறும் பெருமை வால்மீகி முனிவனுக்கு உண்டு, நான்முகனார்,வால் மீகி முனிவனுடைய ஆசிரமத்திற்கு வந்தார்;அம்முனிவனுடைய இராமபக்தியைக் கண்டு மனமகிழ்ச்சியுற்றார்; அம்முனிவனால், இவ்வுலகம் உய்வு பெற விரும்பினார்; அம்முனிவனைப் பூஜிக்க விரும்பி, தம் முன்னே உள்ளதோர்ஆஸனத்தைக் காட்டி, அதில் அமரச் சொன்னார். வால்மீகியும் அவ்வாறே அதில் அமர்ந்தார்” என்னும் வால்மீகி முனிவன் பெருமையைக் கூறும் சரிதம் இங்கே காணத்தக்கது.-வால்மீகயே மஹர்ஷயே ஸந்திதேசாஸனம் தத: ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாத : ஸோப்யுபாவிச தாஸனே !-என்னும் வால்மீகியின் திருவாக்கும் இங்கே அனுபவிக்கத்தக்கது.-மேற்கூறிய சரித்ரங்களை உற்று நோக்குங்கால் அங்கு, பாரதத்தைச் செய்த வ்யாஸருக்கே மனமகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும்,’இங்கு, இராம சரிதத்தைச் செய்த வால்மீகி முனிவனுக்கு அங்ஙனம் குறை கூறுவதற்கு இல்லை’ என்பதும் தெளிவாம்.-மேலும், வேதத்தினால் அறியப்படும் பரம புருஷன், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்த வாறே, அவ்வேதம், அப்பரமன் கல்யாண
குணங்களையும், ஆச்சரியச் செயல்களையும் கூற வால்மீகி முனிவனிடம்  ராமாயணமாக (இராம சரிதமாக) அவதரித்தது’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள,-வேத வேத்யேபரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமா யணாத்மநா ||| என்னும் ஸ்காந்த வசனத்தை அனுபவிக்குங்கால், இவ்விராம சரிதத்தின் வேதத் தன்மையும் நன்கு புலனாம்.
அன்றியும், ஆழ்வான் திருக்குமாரரான பட்டர், ஸஹஸ்ரநாம் பாஷ்யத்தில்-
ஸ்ரீ மத் ராமாயணவன் மஹாபாரதம் சரணம் ) என்று அருளிச் செய்திருக்கிறார். இவ் வாக்கியத்தில், பாரதப் பெருமையைக் கூறும்போது இராமாயணத்தை எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பது காணத் தக்கதாம்.

இவ்வாறு சிறப்புற்றிருக்கும் இராமாயணத்தில் தேறிய ஸாரப்பொருள் பல உண்டு. எம்
பெருமானார், திருமலையில் எழுந்தருளியிருந்து திருமலை நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டருளினார் என்பதே இதற்குத் தக்க சான்றாம்.
(அடைய வேண்டிய பரமாத்மா, (அடைகிறவனாகிய) ஜீவாத்மா, (பரமனை அடைவதன்)
பலம், (அவனை) அடையவொட்டாது தடைசெய்யும்) விரோதி, (அவனை அடைவதற்கான)
உபாயம், என ஸாரப்பொருள் ஐந்து
“ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந ப்ராப்த்யுபாயம்பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதிச வதந்தி ஸகலா வேதா : ஸேதிஹாஸ புராணகா: II என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது இவ்வசனத்தின் கருத்து – ” இதிஹாஸம்,
புராணம் ஆகிய இவற்றோடு கூடிய வேதங்கள் மேற்கூறிய ஐந்து பொருளையும் கூறுகின்றன என்பதாம்.
மேற்கூறிய ஐம்பொருளையும் வேறு வழியாக நாம் அறியலாகாதோ? இதிஹாஸத்தின் உதவியைக் கொண்டுதான் அறிதல் வேண்டுமோ? அவசியமானால், அவ்விதிஹாஸம் தான் எவ்வாறு இயம்புகின்றதோ ?எனின், விரித்துக் கூறுவோம் :
கண்முதலிய வெளி இந்திரியங்களையும் மனமாகிய உள்ளிந்திரியத்தையும் ப்ரத்யக்ஷம்
என்பர். இதனால், பரமாத்மா முதலிய பொருளை அறிய இயலாது. இந்திரியத்தினால்
அறியப்பெறும் இரண்டு பொருள்களுள், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைமையைக் கொண்டு, ஒன்றைக் காணாத இடத்தும் கண்ட ஒன்றினால் காணாத மற்றொன்றை அறிகைக்கு உறுப்பான யுக்தியை அனுமானம் என்று கூறுவர். புகையைக்கண்டு அப்புகையினால் காணாத நெருப்பை ஊஹித்து அறிகிறோம் அல்லவா? இவ்வனுமானமும், மேற் கூறிய ஐம்பொருளையும் அறிதற்குப் பயன்படாது. ஒருவகைக் குற்றமும் இன்றி இருப்பதும், என்றும் உள்ளதுமான வேதத்தினால் தான் அறியலாம். அவ்வேதமும்,தெளிவாக எடுத்து. உரைக்கும் வண்ணத்தில் அமைந் திலது, ஆதலின், இதிஹாஸத்தின் உதவி அவசியமாம். இவ்வுதவி அவசியம் என்னும் இவ் விஷயத்தை வால்மீகி முனிவன் பின் குறிக்கப்பெறும் சலோகத்தினால் வெளியிட்டு இருக்கின் றனன்.
ஸது மேதாவிநெள திருஷ்டவா வேதேஷ பரிநிஷ்டிதெள: 1-வேதோபப்ரும்கணார்த்தாய தாவக்ராஹயத ون-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :” வால்மீகி முனிவன் நான்முகனார் கட்டளையைப் பின்சென்று, இராமாயணத்தைச் செய்தபின், “இவ்விராம சரிதத்தைப் பாட வல்லவன் எவனோ? யான் அறியேன்; எம்பெருமான்! நீயே அவனை எனக்கு அருள வேண்டும். என்று அப்பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தனன். அக்காலத்தில் ‘முனி வேஷம் பூண்ட குசலவர் அம்முனிவன்- திருவடிகளைப் பணிந்து நின்றனர். அம்முனிவனோ, மிகச் சிறந்த புத்தி பெற்றிருப்பவரும், ருக் வேதம் முதலிய நான்கு வேதங்களையும், மற்ற நூல்களையும் நன்கு ஓதி உணர்ந்தவருமான
அக்குசலவர்களைக் கண்டு களித்து, வேதோபப்ரும்ஹணமாகிய இராம சரிதத்தை அவர்
களுக்கு உபதேசம் செய்தனன்”-வேதோப ப்ரும் ஹணம்’ என்பதற்குக் கருத்து யாதோ? எனின், கூறுவோம்: எங்ஙனம் இருபத்து நாலாயிரம் ச்லோகங்கள் கொண்டுள்ள இராமாயணத்தில் சில பகுதிகளை மட்டும் கற்றுணர்ந்தோர்க்கு அந்த இராமாய
ணத்தின் கருத்து அறுதியிட இயலாதோ,அங்ஙனமே, பல கிளைகள் கொண்டுள்ள வேதத்திலும் சில கிளைகளை மட்டும் ஓதி உணர்ந்தோர்க்கு அந்த வேதத்தின் கருத்து அறுதியிட இயலாது. அறிவிலிகளான நாம் வேதம்முழுவதும் ஓதி உணர இயலாது. ஆதலின், மிக நெடுகின காலத்தில் பரமபுருஷனை வணங்கி வழிபட்டு உள்ளத் தூய்மை பெற்றிருக்கும் மஹான்களுக்கே அந்த வேதமும், அதின் உண்மைக் கருத்தும் நன்கு புலனாகும்.-அன்னாரே,அந்த உண்மைக் கருத்தை உள்ளபடி அறுதியிட்டு, அக்கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூலை இயற்றஇயலும். “அன்னாம்ருள் வால்மீகி முனிவனும் ஒருவன்’: ”அங்ஙனம் வேதக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூல்களுள், இராமாயணமும் ஒன்று”என்னில், இவை புகழுரையாமோ? ஆகாதன்றோ? இவற்றால், “வேதக் கருத்தைத்தெளிவாகத் தெரிவிக்கும் நூல் உபப்ரும்ஹணம்’‘ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?–இங்கு”வேதோபப்ரும் ஹணார்த்தாய- வேதோபப்ருமணரூப ஸ்வக்ரந்த படனாயேத்யர்த்த: உபப்ருஹம்ணம் நாம நாநாசாகானுஸாரண நிர்ணீத வேதார்த்த ரதிபதகோ சுரந்த: என்னும் கோவிந்த ராஜீய வ்யாக்யான வாக்யங்களும்
 (உபப்ரும்ஹணம் ச ச்ருதி பிரதிபந் நார்த்த விசதீகரணம் ) என்னும் எம்பெருமானாருடைய திருவாக்கும் அனுபவிக்கத்தக்கவை.
[பதப் பொருளைச் சொல்வது எதுவோ, அது உபப்ரும்ஹணம் என்று சிலர் கூறுவர்.இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரத்தைக் காணப் பெற்றிலோம். மேற் கூறிய ஆதாரங்களுள் அமைந்துள்ள “நிர்ணீதார்த்த பிரதிப்பாத கோக்ரந்த:” ச்ருதி ப்ரதிபந்நார்த்த விசதீகரணம்”-என்னும் வாக்கியங்களைக் காண்க-இனி, வேதத்தில் கூறப்பட்டுள்ள பரமாத்மா முதலிய ஐம்பொருளையும் இராமாயணத் தில் காண்போம்.

வேதாந்தமும் பரமாத்மாவும்

வேதம்,பரமாத்மாவை எங்ஙனம் கூறுகின் றது? என்னில், சிறிது விவரித்துச் செப்புவோம்:
வ்யாஸர், உபநிஷத்துக்களில் அமைந்துள்ள காரண வாக்கியங்களினால் பரமபுருஷனை
நன்கு உணரலாம் என்கிறார்.-கண் முதலிய வெளியிந்திரியங்களால் காணப்பெறும் இப்பிரபஞ்சத்திற்கு எது காரணமோ, அப்பொருளே ‘பரமாத்மா
“(யதோவா இமானி பூதானி ஜாயந் தே தத்ப்ரஹ்ம) என்னும் வாக்கியத்தைக் காண்க.
சங்கை : ஆனால், உபநிஷத்துக்களில் காரண வாக்கியங்கள் பல உண்டு. அவற்றுள்
ஒரு வாக்கியம் போன்று,மற்றொரு வாக்கியம் காரணப் பொருளைக் குறிக்காமல் முரண்பாடு தோன்றக் கூறியிருத்தலை நாம் காணலாம்.
(ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே -)(ஏகோ ஹவை நாராயண ஆஸீத்) என்னும்
வாக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு பொருள் காரணப் பொருளாகக்கூறப் பெற்
றிராமல் அந்த அந்த வாக்கியத்தில் வெவ்வேறு பொருள் (பிரமனும், சிவனும் நாரா
யணனும்) காரணப் பொருளாக முரண்பாடு தோன்றுமாறு குறிக்கப் பெற்றிருப்பது புலப்படுகின்றதன்றோ! இங்ஙனம் இருக்க,ஒன்றே காரணப் பொருள்; அப்பொருள் நாராயணனே என்பதை நாம் அறுதியிடுவது யாங்ஙனம்? என்னும் ஐயம் இங்கு உண்டாகலாம்.

வேத வாக்கியங்களைக் கொண்டு பரமனை அறியுங்கால், இவ்வாறான க்லேசம் உண்டாவது உண்மையே. இங்ஙனம் க்லேசம் பெற்றிருப்போர்க்கு மனத்தெளிவுக்கு இடம்
இல்லை. “வேதம் தெளிவாக எடுத்து உரைக்கும் வண்ணத்தில் அமைந்திலது’ என்று நாம்
முன்னமே கூறியிருந்தோமே அஃது.இப்போது எண்ணத் தகுந்தது. இக்லேசம் தீருவதற்கு
வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரம் ஒரு வழியினால் உதவி புரிகின்றது. வால்மீகி முனி
வன் இயற்றிய இராமாயணமோ, வேறொருவழியினால் உதவி செய்கின்றது. இவற்றுள்
மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியை முதலில் சுருக்கமாகக்காண்போம் :
மீமாம்ஸா சாஸ்திரமாவது – வேத ஆராய்ச்சி செய்யும் நூலாகும். இவ்வாராய்ச்சி முறையை, மேற்கூறிய உபநிஷத்வாக்கியங்களில் பின்வருமாறு நாம் அறியலாம் :
“ஹிரண்ய கர்ப்ப : என்னும் முதல்வாக்கியம், ‘எல்லாம் அழிந்த காலத்து,பிரமன்
இருந்தான்’ என்னும் கருத்தையும், “நஸத்நசாஸத். என்னும் இரண்டாம் வாக்கியம்,
ஸத்தும் அஸத்தும் அக்காலத்தில் இல்லை; சிவன் இருந்தான்” என்னும் கருத்தையும்
“ஏகோ ஹவை நாராயண என்னும் மூன்றாம் வாக்கியம், ‘அச்சமயத்தில் நாராயணன்
இருந்தான்’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளன. ஆனால்,முதல் இரண்டு வாக்கியங்
களில் பிரமன் இருந்தான்; சிவன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது போல், ‘நாரா
யணன் இல்லை’ என்பது தெரிகிறதா? இங்கு இது முக்கியமாய் நோக்கத்தக்கது.
(ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரஹ்மா நேசான 🙂 என்னும் மூன்றாம் வாக்கியத்தில் “நாராயணன் அக்காலத்தில் இருந்தான்” என்பது எங்ஙனம் தெளிவாகத் தெரிகின்றதோ, அங்ஙனமே “அக்காலத்தில் பிரமனும் இல்லை; சிவனும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறல்லவா?-இதனால் என்ன தேறிற்று என்னில், கூறுவோம்; மேற்கூறிய மூன்று வாக்கியங்களுக்கும் முரண்பாடு சிறிதும் இன்றி, கருத்தைக் கொள்வது சிறந்த முறையாகும். முதல் இரண்டு வாக்கியங்களுக்கும் ‘எல்லாம் அழிந்தகாலத்து, பிரமன் மாததிரம் இருந்தான்; அல்லது சிவன் மாத்திரம் இருந்தான்; வேறு ஒரு பொருளும் இல்லை’ என்னும் கருத்தைக் கொண்டால், ஏகோ ஹவை நாராயண ஆஸீத். என்னும் வாக்கியம் சேருமோ? சேராதன்றோ? ‘ஏகோ ஹவை’ என்னும் வாக் கியம் தெளிவாகக் கூறுகின்றவாறு, “எல்லாம் அழிந்த காலத்தில் நாராயணன் மாத்திரம் இருந்தான் மற்றொன்றும் இல்லை” என்னும் கருத்தைக் கொண்டாலோ,முதல் இரண்டு வாக்கியங்களும் பொருந்தும் என்று கூறவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ? ‘ஏனைய பொருள் அழிந்த காலத்து, பிரமனோ சிவனே இருந்ததாகவும், அப்பிரமனும் சிவனும் அழிந்த காலத்தும் அழிவில்லாத நாராயணனே இருந்ததாகவும், முதல் இரண்டு வாக்கியங்களும், மூன்றாம் வாக்கியமும் முறையே அறிவிக்கின்றன என்று கூறும்போது, முரண்பாடு சிறிதும் இல்லையன்றோ? இவ்வாறு ஆராய்ந்து வேதக் கருத்தை அறுதியிடும் நூலே வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரமாம். இந்த சாஸ்திர உதவியைக கொண்டு வேதக் கருத்தை நாம் நன்கு காணலாம்.-ஆயினும், மேதாவிகளுக்கே இது கூடும்.-இராமாயணம் செய்யும் உதவியை இனிக் காண்போம் :

இராமாயணமும் பரமாத்மாவும்
”சக்ரவர்த்தித் திருமகன் ஸீதாபிராட்டி யைத் திருமணம் புரிந்துகொண்டு அப்பிராட்டியுடனும், சுற்றத்தாருடனும், பரிவாரங்களுடனும் திரு அயோத்திக்கு எழுந்தருளும்போது, வழியில், பரசுராமன் வந்து-குறுக்கிட்டு, தன் வில்லை வாங்கி நாணேற்றுமாறு அச்சக்ரவர்த்தித் திருமகனை வேண்டிக்கொண்டனன்” என்பது வரலாறு. பரசுராமன் கையில் இருந்த அவ்வில்லின் பெருமை பின்வருமாறு:

[ததிதம் வைஷ்ணவம் ராம தனு: பரமபாஸ்வரம்!ஸமானஸாரம் காகுத்ஸ்தரௌத்ரேணதனு ஷாத்விதம்
ததாது தேவதாஸ்ஸர்வா : – ருச்சந்தி ஸ்மபிதாமஹம் சிதிகண்டஸ்ய விஷ்ணோச்சபலாபலநிரீக்ஷயா
அபிப்ராயந்து விஞாய தேவதாநாம் பிதாமஹ விரோதம் னயாமாஸ தயோ: ஸத்யவ
தாம்வர:
விரோதே து மஹத்யுத்தம் அபவத்ரோமஹர் சித்திகண்டஸ்ய விஷ்ணோச்ச பரஸ்பரஜி
கீஷிணோ: !|
ததா து ரும்பிதம் சைவம் தனுர்பீம பராக்ரமம் ஹுங்காரேண மஹாதேவ: ஸ்தம்பிதோதத்ரி லோசன:
தேவை ஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸங்கை: ஸசாரணை: யாசிதெள ரசமம் தத்ர ஜக்மது :தெள ஸுரோத் தமெள 
ஜ்ரும்பிதம் தத் தனுர் த்ருஷ்டவா சைவம் விஷ்ணு பராக்ரமை அதிகம் மேனிரேவிஷ்ணும் தேவா : ஸர்கணாஸ் ததா]
இவற்றின் கருத்து – இந்த வில் விஷ்ணுவினுடையது. முன், எம்பெருமானுடைய வராஹாவதாரச் செயலை பிரமனிடம் கேட்டு,அவ்வெம்பெருமானுடைய மேன்மையை
உணர்ந்திருந்த எல்லாத் தேவர்களும், சிவன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்தபின் சிவனுடையவும் விஷ்ணுவினுடையவும் பலாபலத்தைக் காணக் கருதி, யாருடைய வலிமை மிகச் சிறந்தது’ என்று நான்முகனைக் கேட்க அந் நான்முகன், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் விரோதத்தை விளைவிக்க, அவ்விருவரும் கோரமான யுத்தம் செய்ய, அப்போது விஷ்ணுவினுடைய ஹும் என்னும் ஓசையினால் சிவனுடைய வில்லும், சிவனும் பங்கம் அடைய, ‘இனிப் போர் நிகழ வேண்டாம்’ எனத் தேவர்கள் வேண்டிக் கொளள, அவ்விருவரும் சமனம் அடைய. விஷ்ணுவின் விக்கிரமத்தினால், சிவனும் சிவனது வில்லும் பங்கம் பெற்றதைக் கண்கூடாகக் கண்ட முனிவர்களும தேவர்களும் விஷ்ணுவைச் சிறந்த தெய்வமாக அறுதியிட்டனர்” என்பது

மேலும், திருவடி இராவணன் முன்னிலையில் இராம பிரானுடைய மேன்மையைக் கூறுமிடத்துத் தென்படும் வார்த்தை-(ப்ரஹ்மாஸ்வயம்பூ: சதுரானனோவா ருத்ரஸ்
த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா 1 இந்த்ரோ மஹேந் ர : ஸு ரநாயகோவா த்ராதும் நசக்தாயுதி ராமவத்யம் ! ] இதின் கருத்து- “சிறந்த செல்வம் பெற்றிருப்பவனும், வ்ருத்ரன் என்னும் அஸுரனைக் கொன்றொழித்தவனும், முப்பத்து முக்கோடி தேவதைகளைத் துணையாய்க் கொண்டிருப்ப வனுமான இந்திரனும், இந்த இந்திரனுக்கும் மேலானவனும் ப்ரளய காலத்தில் ப்ரஜைகளை அழச் செய்பவனும் காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனும் த்ரிபுராந்தகனுமான சிவனும், இச்சிவனுக்கும் தந்தையானவனும் ஏனையோரைப் போல் பிறவாதவனும் நான்கு முகங்களை உடையவனுமான பிரமனும், தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்காய் வதம் செய்யத்தகுந்தவனைக் காக்க சக்தியற்ற வராம்” என்பது.
மேற்கூறியவாறு, தேவதைகளை (இரக்ஷகராக விளங்குகின்றவரைக் கழித்துப் பேசும்
வார்த்தையில், “நாராயணனும் சக்தியற்றவன் என்று குறிக்கப் பெற்றிலது –இதனால்,
” இராமபிரான் நாராயணனே” என்னும் உண்மை யார்க்கும் கூறாமலேயே நன்கு
விளங்குகின்ற தன்றோ?-அன்றியும், இராமபிரானால் கொலையுண்டு கிடக்கும் இராவணனைக்கண்டு, நெஞ்சழிந்து, புலம்பிப் பேசும் மண்டோதரி, ஒருவாறு
தெளிந்து, அந்த இராமபிரானுடைய மேன் மையைப் பின்வருமாறு பேசியிருக்கிறாள்:
இராமபிரானே! “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம், இனியறிந்தேன் எம் பெருமானுன்னை” என்று பெரியோர் அருளிச் செய்தது போன்று, இத்தனை போதும் உன்னை அறிந்திலேன்; இப்போது அறிந்தேன் என்றாள் மண்டோதரி.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரான்,-“நீ என்னை அறிந்தவாறு எங்ஙனே?” என்ன,
திருநாட்டில் திருவாழி, திருச்சங்கு, திருத்தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும்,
திருமறுவைத் திருமார்பில் சின்னமாகப் பெற் றும், திருமகளோடு என்றும் வாழ்பவனாகிய
திருமால் நீ என்றாள்.
”திருமாலாகிய நாம் திருநாட்டை விட்டிட்டு இவ்வுலகில் வரக்காரணம் யாதோ?”
என்று சக்ரவர்த்தித் திருமகன் திரும்பவும் வினவினான்.எல்லா உலகங்களிலும் உள்ள
எல்லாஉயிர்களுக்கும் நன்மையைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,மானிட வடிவத்துடன்
திருவவதாரம் செய்து, உலகத்திற்கே கண்டகனாகிய இராவணனைக் கொல்ல வந்தாய்;
கொன்றாய் என்றாள் மண்டோதரி. இக்கருத்துக்களை, பின் குறிக்கப்பெறும் மண்டோதரி
வார்த்தையில் காண்க:
(தமஸ : பரமோதாதா சங்கசக்கர கதாதர-ச்ரீவத்ஸவக்ஷாநித்ய அஜய்யச்சா வ
தோத்ருவ:-மானுஷம் வபுராஸ்தாய விஷ்ணுஸ்ஸத்ய பராக்ரம் 1)
இன்னமும், ‘ தேவரீருடைய திரு நாபிக் கமலத்தில் பிரமனாகிய என்னை உண்டாக்கி,
என்னிடம் படைப்புத்தொழிலும் தேவரீரால் வைக்கப் பெற்றுள்ளது’ என்னும் கருத்தைக்
கொண்டுள்ள,-பத்மே திவ்யேஅர்க்க ஸங்காசே நா யாமுத் பாத்ய மாமபி! ப்ராஜாபத்யம் த்வயா கர்ம மயி ஸவம் நிவேசிதம் ||-என்னும் வார்த்தையைக் காணுங்கால்,
நாராயணன் மேன்மையை நாம் நன்கு அறியலாம் அன்றோ? (இராமபிரான் தன்னுடைச்
சோதிக்கு எழுந்தருளும் போது, பிரமன் வார்த்தையாகக் கால் புருஷனால் கூறப்பெற்
றுள்ளது, இது.)முன்னம், . ஹிரண்யகர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே” “நஸத் நசாஸத் சிவ ஏவ கேவல:”ஏகோஹவை நாராயண ஆஸீத்ந ப்ரஹ்மா)நேசான :” என்னும் வாக்கியங்கள், கருத்
தைத் தெளிவாகத் தெரிவிக்கும் வண்ணத்தில் அமைந்தில; மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஆய்ந்து காணும் மேதாவிகளுக்கே கலக்கம் சிறிதும் இன்றி, ஏனைய பொருள்கள் இன்றி இருச்கும்போது, சிவனோ,பிரமனோ இருந்ததாகவும் எல்லாம் அழிந்த காலத்து, நாராயணனே இருந்ததாகவும் அவ்வாக்கியங்களின் தெளிந்த பொருளைக் காணக்கூடும் என்று கூறியிருந்தோமல்லவா?
இப்போது, இராமாயணம்,(மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியைப் போலன்றி)
யார்க்கும் எளிதில் நன்கு விளங்குமாறு,
(I) விஷ்ணு.சிவன் இவ்விருவருக்கும் போர் நடக்கும்போது, விஷ்ணுவினுடைய மேன்மையை முனிவரும் தேவரும் கண் கூடாகக் கண்டனர்; (2) இந்திரனோ, சிவனோ, பிரமனோ ஒன்று சேர்ந்த இம்மூவரோ, இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்கானாரை இரக்ஷிக்கஇயலாதவர் ; (3) இவ்வுலகத்திற்கு நன்மையையும், இராவணனுக்கு அழிவையும் செய்ய வந்த இர க தெய்வமான நாராயணனேஇராமபிரான்; (4) படைப்பவனாகிய பிரமன்
படைப்புத் தொழிலைப் பரம புருஷனாகிய இராமபிரானுடைய அருளாலேயே பெற்றிருப்பவன் ; என்னும் உண்மைக் கருத்துக்களை முறையே, பரசுராமன்,திருவடி மண்டோதரி (பிரமன்) காலபுருஷன் ஆகிய இவர்கள் வாக்கியங்களினால் நன்கு இயம்புகின்றதைக் கண்டோமல்லவா?
மேற்கூறிய உண்மைக் கருத்துக்களை நாம் மனத்தில் கொண்டு “ஹிரண்யகர்ப்பு: “
“நஸத் நசாஸத்” “ஏகோ வை நாராயாண ஆஸீத் நப்ரஹ்மா நேசான: ‘ என்னும் வாக்
கியங்களைக் கண்டால், மந்த மதிகளுக்கும் கலக்கம் சிறிதும் உண்டாகாதன்றோ?
இவ்வாறு நாராயணன் மேன்மையையும், ஏனையோருடைய தாழ்ச்சியையும், ஆங்கு
ஆங்கு பல வாக்கியங்களினால் மிக மிகத்தெளி வாகத் தெரிவித்திருத்தலை ஒருவாறு சுருக்கமாகக் கண்டோ மல்லவா? இனி ஜீவாத்மாவின் உண்மையை உணருவோம்.

வேதாந்தமும் ஜீவனும்

(பதிம் விச்வஸ்ய) என்பது ஒரு வேதாந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இவ்வுலகை உடையவன் எம்பெருமான்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளது. இதனால், (எங்ஙனம், சக்ரவர்த்தித் திருமகன் இராமன்’ என்றால், இராமனுக்குத் தந்தை சக்ரவர்த்தி’ என்பது தேறுகின்றதோ, அங் ஙனமே) இவ்வுலகு எம்பெருமானுக்கு உடைமைப் பொருள்’ என்பது தேறுகின்றதல்லவா?
இவ்வாறு உடைமைப் பொருளாயிருக்கும் தன்மையை சேஷத்வம்’ என்று கூறுவர் ஆன்றோர்.-உடைமைப் பொருளாயிருக்கும் தன்மை’ என்பதைச் சிறிது விவரித்துக் கூறுவாம்: கட்டிப் பொன் ஒருவனுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலைக்காண்கிறோம். அப் பொன், அவன் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும், அவன் விரும்புகின்றவாறு, தான் அனு பவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றதாயும் இருக்கின்றது.இது போன்று,ஜீவனும் எம்பெருமானுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலை ” பதிம் விச்வஸ்ய” என்னும் வாக்கியத்தில் காண்கிறோம். அந்த ஜீவன், எம்பெருமான் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும்,அவ்வெம்பெருமான் விரும்புகின் றவாறு தான் அனுபவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றவனாயும் இருக்கின்றான். இங்கு, “கட்டிப் பொன்
போலே சேஷத்வம்” என்னும் வாக்கியம் காணத் தக்கது.
அன்போடு கூடிய இந்தச் சேஷத்வ நிலையை தாஸ்யம்‘ என்பர். இந்தத் தாஸ்யம் ஜீவ
னுக்கே உரியதொரு சிறப்பாகும்.

(யஸ்யாஸ்மி நதமந்தரேமி) என்னும் மற்றொரு வேத வாக் கியத்தைக் காண்போம். இவ்வாக்கியத்தின் கருத்து- ‘எவனுக்கு நான் தாஸனாக (அடிமையாக) இருக்கின்றேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்’ என்ப தாம் இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள யஸ்யாஸ்மி‘என்னும் பகுதி, ‘பதிம் விச்வஸ்ய என்னும் வாக்கியத்தின் தேறிய பொருளையே குறிக்கின்றது.
‘நதமந்தரேமி’ என்னும் பகுதியின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவாம். ஒருபொருள் ஒரு க்ஷணம் இருந்தால், அவ்வாறுஓரு க்ஷணம் இருத்தலை ‘ஸத்தை’ என்பர்-இரண்டு க்ஷணம் முதல் அந்த அந்தக்காலத்தில் இருத்தலை ‘ஸ்திதி’ என்று கூறுவர். முயறசியை ”ப்ரவ்ருத்தி’ என்று பகருவர். முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி, என்று சொல்லுவர்.
இம்முறையில், ஒவ்வொரு ஜீவனுடைய ஸத்தை, ஸ்த்திதி, பரவ்ருத்தி, நிவ்ருத்தி ஆகிய
இவை பரமபுருஷனுக்கு வயப்பட்டனவாகவே காணப்படுகின்றமையின், ஜீவன் எம்பெரு
மானுக்குப் பரதந்திரன் எனப்படுகிறான்.-எங்ஙனம்,தட்டான் கைப்பட்டுப் பணி செய்யப்படுகின்ற பொன்னானது, அவன் அதனை உருக்கவும், தட்டவும், நீட்டவும்,
ஆக்கவும், அழிக்கவும் முயலுமளவில், அது நெகிழ்வதும் வளைவதும், நீள்வதும், ஆவதும்
அழிவதுமாகி, தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வசமாயிருக்கையின்றி, அவன் வசப்
பட்டிருக்கின்றதோ, அங்ஙனமே, ஜீவனும், தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வச
மின்றி, எம்பெருமான் விரும்புகின்றவாறு, ஆக்கவும், அழிக்கவும் வசப்பட்டிருக்கின்றான்’
என்பதை நாம் அறிதல் வேண்டும் இங்கு,” பணிப்பொன் போலே பாரதந்திரியம்’
என்னும் வாக்கியம் நோக்கத்தக்கது.
இப்பாரதந்திரிய சப்தக் கருத்தை ஊன்றி நோக்கின்.எம்பெருமான் ஸ்வதநதிரன்’
என்பதும் இங்கு நன்கு விளங்குமன்றோ?
பரமபுருஷனைப் பற்றி உள்ள சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டும் சேர்ந்தே யிருக்கு
மாதலின், அவற்றைத் தனித்தனியே பிரித்து அறிந்து கொள்ளுமாறு, கட்டிப் பொன்,
பணிப்பொன் என்னும் இவ்வுதாரணங்கள் காட்டப் பட்டன.
இவற்றால்,எம்பெருமானுக்குச் சிறப்பை விளைக்கைக்கு உறுப்பாய், அவன் விருப்புக்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதற்குத் தகுதி யுடையதாயிருக்கை, ‘சேஷத்வம்’ என்றும்,
அங்ஙனம் உபயோகப்படுவதாயிருக்கை, ‘பாரதந்திரியம்’ என்றும் இவற்றிற்கு உள்ள
வேற்றுமையை நாம் நன்கு அறியலாம்.
இதுகாறும் கூறியவாற்றால், ”பதிம் விச் வஸ்ய., ‘யஸ்யாஸ்மி நதமந்தரேமி “ என்னும் வாக்கியங்களில் எம்பெருமான் ஸ்வாமி(உடையவன்) ‘ஸ்வதந்திரன்’(தனக்கு வசமான தன் ஸத்தை முதலியவற்றைப் பெற்றிருப்பவன்)’ என்னும் கருத்தும்,ஜீவன்,அவ் எம்பெருமானுக்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன்’ என்னும் கருத்தும், அவ
னுக்கும் (பரமனுக்கும்) இவனுக்கும் ( சேதனனுக்கும்) வேற்றுமை உண்டு’ என்னும் கருத்தும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
இனி,  (தத் த்வம் அஸி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தைக் காண்போம். இவ்வாக்கியம், ஆத்மா ஒரு பொருள்தான் உண்டு; ஜீவனுக்கும் பரமனுக்கும் வேற்றுமை யில்லை என்னும் கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இக்கருத்தையும். “ பதிம் விச்வஸ்ய” “யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்னும் வாக்கியங்களின்,மேற்கூறிய கருத்தையும் சேர்த்து நோக்குங்கால், ‘ஜீவனும் பரமனும் ஒரு பொருளா ? அல்லது வேறு வேறு பொருள்களா? ஒன்று எனின். ‘பதிம் விச்வஸ்ய’ என்னும் சுருதி சேராது. வேறு எனின், “தத் த்வம் அஸி’ என்னும் சுருதி சேராது’ என்னும் இக்கலக்கம்)
உண்டாவது இயல்பன்றோ?
இக்கலக்கத்திற்குப் பரிஹாரம் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின் பறறிக் காணுங்கால், பின்வருமாறு அறியத்தக்கது : தத்த்வம் அஸி” என்னும் சுருதியிலுள்ள-தத்’ என்னும் பதம், அறிவு, ஆற்றல் முதலிய திருக்குணங்களோடு கூடிய காரணப்பொருளான பரமனைக் குறிப்பதாகும். ‘த்வம்’ என்னும் பதம் ‘ஸ்வேதகேது ‘ என்னும் ஜீவனைச் சரீரமாய்க் கொண்டுள்ள பரமனைக் குறிக்கும்.-இவ்விருவரும் ஒருவர்’ என்பது இவ்வாக்கியத்
தின் கருத்து.

தத் என்னும் இப்பதம் பரமனைக் குறிக்கும் என்பது உண்மையே. ஆனாலும், இந்த த்வம்
என்னும் பதம், முன்னிலைப் பொருளான ஜீவனை (ச்வேதகேதுவை)க் குறிக்குமேயன்றி,
பரமன் வரையில் செல்லுமோ? செல்லாதன்றோ ? அங்ஙனமாயின்,இஃது அவனை
(ச்வேதகேதுவை)ச் சரீரமாய்க்கொண்டுள்ள  பரமனைக் கூறும் என்று நீங்கள் கூறுவது
எவ்வாறு?’ என்னும் கேள்வி உண்டாகலாம்.
இக் கேள்வியின் பரிஹாரம் – ஜாதியை உணர்த்தும் சொல், ஜாதியை உணர்த்தும் அளவில் நில்லாமல்,எங்ஙனம் அந்த ஜாதிக்கு இருப்பிடமான வடிவத்தையும் உணர்த்துகின்றதோ, (எங்ஙனம். ‘குடம்’ என்னும் சொல்,குடத்தன்மையை உணர்த்தி அவ்வளவில் நில்லாமல், அக்குடத்தன்மைக்கு இருப்பிடமான குடத்தையும் உணர்த்துகின்றதோ-அங்ஙனமே, சரீரத்தை உணர்த்தும் சொல்லும், சரீரத்தை உணர்த்தும் அளவில் நில்லாமல், அச்சரீரத்தைத் தாங்கும் ஆத்மா வரையில் செல்லும்’ என்பது ஒரு முறையாம். இம்முறையை-அபர்யவஸான வருத்தி’ என்று கூறுவர். ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
 (என்பது யஸ்யாத்மாசரீரம் ) என்னும் சுருதியினால் அறியத்தக்கது.-ஜீவன். கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி,அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகந்து போருகின்றமையின், அவனை ஆத்மா என்றும், அப்பிண்டத்தைசரீரம் என்றும் அறிகின்றோம்.
இது போன்றே, பரமாத்மாவும், அறிவுற்ற சித்தும் அறிவற்ற அசித்துமாகிய இப்பிரபஞ்
சத்தைத் தூண்டி, தாங்கி, இப்பிரபஞ்சம் செய்யும் பணியை ஏற்று உகக்கிறானாதலின்,
அப்பரமன் ஆத்மா; இப்பிரபஞ்சம் சரீரம் என்னத் தட்டில்லையன்றோ?(தாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா) என்னும் வாக்கியம், “தத் த்வம் அஸி என்னும் வாக்கியத்தோடு சேர்ந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இப்பிரபஞ்சம் பரமனை ஆத்மாவாக உடையது ; அது உண்மை;-பரமன் ஆத்மா’ என்னும் கருத்தைக் கொண் டுள்ளது .-இவ்வாறு, முதலில், இப்பிரபஞ்சத்திற்கும் பரமனுக்கும் உள்ள சரீரத் தன்மை,ஆத்மா வின் தன்மை இவற்றைக் கூறி, பின்பு, ‘ஸ்வேதகேது’ என்னும் ஜீவனையும், பரமனையும் முறையே த்வம், ‘தத் ‘ என்னும் பதங்களினால் குறித்து, இவ்விருவருக்கும் உள்ள (சரீரத்தன்மை ஆத்மாவின் தன்மை ஆகிய) தொடர்பினால் உண்டான ஒற்றுமையை அந்த ”தத்த்வம் அளி” என்னும் சுருதி அறிவிக்கின்றதாக நாம்கொள்ளுதல் நன்றாம். இப்போது, “தத் த்வம் அளி ” என்னும்
இந்தச்சுருதியிலும், ”பதிம் விச்வஸ் ” “யஸ் யாஸ்மி ந தமந்தரேமி’ என்னும் சுருதிகளில்
போன்று, ஜீவனைப் பரமனுக்குச் சேஷப் பொருளாயும், பரதந்திரப் பொருளாயும்
கண்டோமல்லவா? கண்டவாறு யாதோ?எனின், ‘ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
என்ற போதே,அந்த ஜீவன், எம்பெருமானுக்கு சேஷப் பொருளும், பரதந்திரப்
பொருளுமாம்’ என்பது தெள்ளிதன் விளங்குகின்றதன்றோ?
இம்முறையில், மீமாம்ஸா சாஸ்திரம், முன்னம் கூறிய கலக்கத்திற்குப் பரிஹாரத்தைத்
தெரிவிக்கின்றது. இது போலன்றி, இராமாயணம் எளிதில் உணருமாறு ஜீவனுடைய
உண்மை நிலையை உணர்த்துகின்றது. இவ்வாறு எளிதில் உணர்த்தும் உண்மை நிலையைக் காண்போம்.

இராமாயணமும் ஜீவாத்மாவும்-
‘சக்ரவர்த்தித் திருமகன், ஸீதாபிராட்டி யுடனும், இலக்குமணனுடனும் வனத்திற்கு எழுந்தருளி, சக்ரவர்த்தியும் துஞ்சி, இராச்சியம் அராஜகமாய்க் கிடந்த காலத்து, பரதனை
முடி சூடிக்கொள்ளவேணும் என்று வஸிஷ்டர்) வேண்டிக்கொள்ள, அப்பரதன் அதற்கு இசையாது இருந்தனன்’ என்பது சரித்திர உணமை அங்ஙனம் இசையாது இருக்கும்போது, பரதன் வளிஷ்டரை நோக்கிக் கூறினவார்த்தை பின் வருமாறு :-
(கதம் தசரதா ஜாதோபவேத் ராஜ்யா பஹாரக: ராஜ்யம் சாணம் ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹ )-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :-
இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளிய பின், அப்பரமபுருஷன் பிரிவு பொறாது, என் தந்தையாரான சக்ரவர்த்தி துஞ்சினார். அச் சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த நான், அவ்வி ராமபிரான் துறந்த இராச்சியத்தை எங்ஙனம் ஏற்றுக்கொள்வேன். அங்ஙனம் ஏற்றுக் கொண்டால், சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த பிள்ளை என்று என்னை உலகம் கூறுமோ? கூறாதன்றோ ?
மேலும், என் உண்மை நிலையை உணருங்காலும் இவ்விராச்சியத்தை யான் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், நான் என்னும் இவ்வாத்மாவும், இந்த இராச்சியமும் அப்பிரானுக்கே உரிய பொருள்களாம்.-அப்பிரானுக்கே உரிய இரண்டு உடைமைப் பொருள்களுள், ஒன்று மற்றொன்றை ஆண்டு பரிபாலனம் செய்வது முறையாமோ? ஆகா தன்றோ?
இவ்வுலகில் தன்னைப் பெற்று வளர்த்த தன் தந்தையாரையும்சிறையிலிட்டு வைத்து, தான்
இராச்சியத்தை முறை தவறிப்பெற்று, பரிபாலனம் செய்வது என்பதொன்று உண்டு. இம்முறையைப் பின்பற்றி, என் பாக்கல் இராச்சி யத்தை வைப்பது தகுமோ ? தகாதன்றோ ?
என் இயல்பை உணர்ந்து, காக்கும் தன்மையைக் கூறுவீர்.இராமபிரானுக்கே உரிய இப்பொருள்களுள், ஒன்று மற்றொன்றைஆண்டு பரிபாலனம் செய்யலாம் என்னில்,
என்னைத்தான் இராச்சியம் இரட்சிக்கட்டுமே?-என, ஒருவனுக்கே உரிய பெட்டி, இரத்தினம் ஆகிய இரு பொருள்களுள், ஒன்று காப்பதாயும், மற்றொன்று காக்கப்படுவதாயும் காணப் பெறுகின்றன அல்லவா? இதுபோன்று பரதனாகிய நீ, காப்பவனாகியும் இராச்சியம் காக்கப் படுவதாயும் ஆனாலோ? என்னில்,-மேற்கூறிய இரு பொருள்களுள், ஒன்றான இரத்தினம், உடையோனாகிய அப்புருஷனால் என்றும் தரிக்கத்தக்கதாம். அவ்வாறான அந்த இரத்தினத்தை,அவன் ஒருகால்பெட்டியில் வைத்து, அப்பெட்டியைக் காப்பதாய்க் கரு துங்கால், அது அங்ஙனம் காணப் பெறுகின்றது. அல்லாத போது, அப்பெட்டி அங்ஙனம்
காணப் பெறுகின்றதோ? இல்லையன்றோ? இராமபிரானுக்கே உரிய (இரத்தினமாகிய இராச்சியம் அப்பிரானாலேயே என்றும் தரிக்கத் தக்கதல்லவா? அந்த இராச்சியமாகிய
இரத்தினத்தைத் தரித்துக் காக்கத் தகுதி எனக்கு உண்டோ? இல்லையன்றோ? நான் அப் பெட்டியாய் இருக்கத் தகுமோ? தகாதன்றோ?-என,
இராச்சியத்திற்கு அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால், அதற்கு உன்னைக் காக்க இடமில்லை. அறிவும் ஆற்றலும் உள்ள உனக்கோ, அந்தஇராச்சியத்தைக் காக்கத் தகுதி உண்டு என்னில், என்அறிவும் ஆற்றலும் எம் பெருமானுக்குப் பணி செய்யப் பாங்காயுள்
ளன வன்றி, அந்த எம்பெருமான் உடைமையை அவனுக்கு இல்லை செய்யத் தகுதியுடையனவோ? அங்ஙனமோ தேவரீர் எண்ணியிருக் கிறது?” என்பது இதின் கருத்து-இதனால், ‘பரதன் உண்மைநிலையே ஜீவனுக்குரிய ஓர் உண்மை உயரிய நிலை என்பது தெள்ளிதின் விளங்குகின்றதல்லவா?

இனி, ஸீதா பிராட்டியார் சரிதத்தில் பார தந்தரிய நிலையைக் காண்போம் : ஸீதா பிராட்டியாருக்கு மூன்று பிரிவுகள் உண்டு. தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காக அசோகவனத்தில் தாம் சிறை இருந்தது. முதல் பிரிவு. இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சக்ரவர்த்தித் திருமகன் அப்பிராட்டியாரை காட்டிலே போகவிடப் பிரிந்தது . மறுபடியும் அப்பிராட்டியார் இராமபிரான் முன்னிலையில் வந்திருக்கும் போது, பிரிந்து, பிறநதகத்தில் (பூமியில்) புகுந்து விட்டது மூன்றாம் பிரிவாம். இப்பிரிவுகளுள், இரண்டாம் பிரிவில் பாரதந்தரிய நிலை நன்கு விளங்குகின்றது. இதைச் சிறிது விவரித்துக் கூறுவாம் :
சக்ரவர்த்தித் திருமகனும் ஸீதாபிராட்டியாரும் திரு அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் காலம். திருவயிறு வாய்த்திருத்தலை (கர்ப்பிணியாயிருக்கையை ) சக்ரவர்த்தித் திருமகன் கண்டனன். அவன் அப்பிராட்டியாரை நோக்கி, அறுபதினாயிரம் ஆண்டு மலடு கிடந்த என் தந்தையாரான சக்ரவர்த்தியைப் போன்று வருந்திப் பெறாது, எளிதாகவே எனக்குப் புத்திரப் பேறு கிட்டிற்றே! அவசியம் அனுபவித்தல்லது நிற்க வொண்ணாத ஆசையோடு கூடி இருக்கும் நீ எத்தை விரும்பு கிறாய்? எல்லாவற்றையும் சொல்லாய், உள்ளோடுகிறவை நிழலெழுகிற முகவொளி உடையவளே!-(அபத்யலாபோ வைதேஹி மமாயம் ஸமு பஸ்தித: I கிமிச்சஸி ஸகாமா த்வம்ப்ரூஹி ஸர்வம் வரானனே) என்று அருளிச் செய் தனன்.
இதைச் செவியேற்ற பிராட்டி இராம பிரானை நோக்கி, அருளிச் செய்த வார்த்தை யாவது -(தபோவனானி புண்யானி த்ரஷ்டும் இச்சாமி ராகவ கங்காதீர நிவிஷ்டானி ருஷீணாம்
புண்ய கர்மணாம் பல மூலாசி நாம் வீர பாத மூலேஷு வர்த்திதும் / ஏஷமே பரம: காம :)-என்பதாம்.
இதின் பொருள் ‘இராகவனே ! கிழங்கு, காய்,கனி இவற்றைப் புஜிப்பவரும், ஸத்துவ குணம்பெற்றிருப்பவருமான மஹான்களுடைய திருவடி நிழலில் ஒரு நாளாகிலும் தங்கி, கங்கைக் கரையில் உள்ள தபோவனங்களைக் காண விரும்புகிறேன். இதுவே. எனக் குள்ள மேலான விருப்பம்’ என்பதாம்.
இவ்வார்த்தையைத் திருச்செவி சாற்றியருளின இராமபிரானும், உலக அபவாதத்தைப்
போக்கிக் கொள்ள வேணும் என்னும் திருவுள்ளம் பெற்றிருப்பவனாகையால், அப்பிராட்டி யாரின் விருப்பத்தை நிறைவேற்றுபவன்போல், அவ்வாறே அனுப்பினன். இதுவே இரணடாம் பிரிவாகும்.
இப்பிரிவுக்குப் பயன்- இராமபிரடான், கட்டிலே வைத்த போதோடு காட்டிலே
விட்ட போதோடு வாசியற அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின் சென்று நடக்க வேண்டும்படியான தன் பாரதந்தரிய நிலையைப் பிரகாசப்படுத்துதலேயாம்.
கட்டிலே வைத்தபோதோடு காட்டிலே விட்ட போதோடு வாசியற, அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின்சென்றுநடக்க வேண்டும்படியான நிலை’ என்பதைச் சிறிது விளக்குவோம்.
ஸீதாபிராட்டி அசோக வனத்தில் சிறை இருக்குங்கால், இராவணனாலும், அரக்கியராலும் பட்ட துன்பம் எல்லையற்றதாம். அப் பிராட்டி முன்னிலையில், இராவணன் முறை தவறிக் கூறிய வார்த்தைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று பின்வருமாறு-‘கிளி போன்றவளே! நான் உன்னைக் கொணர்வதற்கு முன்னமே உன் கணவனாகிய இராமன் மாண்டு போனான்; அவன் இறக்குங்கால்,ஹா ஸீதா ! ஹா லக்ஷ்மணா ! என்று கூறியதை நீ காதாரக் கேட்டிருக்கின்றாய் ; அங்ஙனம் இருக்க, இராமனைக் கூடவேணும் என்று நீ கருதுகின்றனையே!  ஈது என்ன பேதமை? நல்விதி என்னை உன் பக்கல் கூட்டி
யிருக்க, அதை அவமதித்து என்னை வெறுப்பது தகுதியோ ‘ இங்கு,
“வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டாற்குஇருத்தி கொல் கிள்ளை நீ !
நாட்டும் கால்நெடு நல் அறத் தின்பயன்
ஊட்டும்காலத்து இகழ்வது உறும்கொலோ–என்னும் கம்பர் வாக்கைக் காண்க.
மக்களுள் ஒருவனாகிய இராவணன் தாயான பிராட்டி முன்னிலையில், கூறும் வார்த்தை
யாமோ? இது. இங்ஙனமே. அரக்கியரும். தத்தமக்குத் தோன்றியவாறு கடிந்து கூறிய
சரிதம் உலகமறிந்ததேயாம். வில்லம்புக்குத் தப்பலாம்; சொல்லம்புக்குத் தப்ப இயலுமோ? இயலா தன்றோ?
“தீயினாற்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு-என்னும் ஆன்றோர் வாக்கு இங்குக் காணத் தக்கது.
இங்ஙனம் இருப்பினும்,முடிந்து பிழையாது, பிராட்டி அசோக வனத்தில் உயிர் தரித்து
இருந்தமைக்குக் காரணம் யாதோ? எனின்,-காரணம் ஒன்று கூறுவாம்.
நம் தலைமகனான இராமன் நம்மிடம் அளவற்ற அன்பு உள்ளவன்;ஜகதேக வீரன்;
விரோதியான இராவணனைக் கொல்வது திண்ணம். கொன்று, நம்மைத் தேடுங்கால்,
ஸீதை முடிந்து பல மாதங்களாயிற்றே? என்றால், தண்ணீர்ப் பந்தலில் வந்து, உருண்டு
உடைந்து கிடக்கும் தண்ணீர்ச்சாலைக் கண்டு தபிக்கும் விடாயனைப் போன்று, அப்
பரமன் கதி என்னாகும்! அப்பரமனுக்காகவே நாம் உயிர் தரித்திருப்பது நம் நிலைமைக்குப்
பொருந்திய கார்யம் அன்றோ?” என்று இருந்ததே அக்காரணமாம்.இங்கு, இராமபிரான் திருவுள்ளக் கருத்தைப் பின்சென்று இருக்கும் பாரதந்தரியநிலையை நாம் நன்கு உணரலாம் அல்லவா?-இக்கருத்தை நாம் மனத்திருத்தி, இரண்டாம் பிரிவையும், அப்பிரிவில் நடந்தசெயலையும் காணுங்கால்,ஓர் ஐயம் எழக்கூடும் அந்த ஐயம் பின்வருமாறு காணத்தக்கது.-இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காக இராமபிரான் பிராட்டியைக் காட்டிலே போகவிடப்பிரிந்தது’ என்று முன்னமேயே கூறியிருந்தோம். இதைக் காணுங்கால், பிராட்டியிடம் இராமபிரானுக்கு அன்பு எள்ளளவும் இல்லை என்று தெரிகிறதன்றோ? அப்பிராட்டியார், தம் உயிரை விரும்பி இருப்பது இராமபிரானுக்காகவே என்ற கருத்து,-(நஹி மே ஜீவிதேநார்த்த :) என்ற அவர் கூற்றால் நன்கு விளங்குகிறதன்றோ ? அசோகவனத்தில் எழுந்தருளியிருக்குங்கால், இரா
வணனாலும் அரக்கியராலும் சொல்லொணாத்துன்பம் பெற்றிருந்தும் இராமபிரானுக்காக
வேயன்றோ உயிர் தரித்திருந்தது? அவன் அவ்வாறு இருக்க, பிராட்டியார் உயிர் துறக்காது
இருந்ததற்குக் காரணம்யாதோ ?-இவ் ஐயத்திற்குப் பரிகாரமாவது– மிகவும்
துயருற்றிருந்த இலக்குமணன், கங்கைக் கரையேறினதும், பிராட்டி ஸன்னிதியில், இராமன்,
காட்டிலே விட்டதிற்குப் பயனாகத் திருவுள்ளம் பற்றின உலக அபவாத பரிஹாரத்தை விண்ணப்பம் செய்தனன். அதைச் செவிமடுத்த அப்பிராட்டி, மிகவும் துன்புற்றுப் புலம்பிப் பேசும்போது, அருளிச்செய்த வார்த்தைகளுள் ஒன்று.
(நகல்வத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம்ஜாஹ்வீ ஜலே
த்யஜேயம் ராகவம் வம்சேப துர்மாபரிஹாஸ்யதி ||–இதன் கருத்து – இலக்கு மணனே! ‘இராம
பிரானைச் சுட்டியிருக்கும் ரகுஸந்தானமானது, அவ் இராமபிரானுடைய திருவம்சத்தில்
இல்லாமல் அழிய வொண்ணாது’ என்று கங்கா ஜலத்தில் இப்போதே உயிரை விடுகைக்குத்
தகுதியுடையவளாக ஆகிறிலேன்’ என்பதாம்.
இக்கருத்தைக் காணுங்கால், இராமபிரானைப்பற்றி உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லை. அப்பிரான் விரும்பிய ஸந்ததியைப்பற்றி அப்பிராட்டியார் அப்பிரிவில் உயிர் தரித்திருந்ததாய்த் தெரிகிறதன்றோ? இதைக்காண்போருக்கு மேற்கூறிய ஐயத்தின் பரி
ஹாரம் நன்கு புலனாம்.-இங்கு, ”ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்கை தேட்டமாகா நிற்கச் செய்தேயும், அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப்
பின் சென்று, தன் ப்ராணனை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் படியான பாரதந்
திரியத்தையிறே ப்ரகாசிப்பித்தது” என்னும் மணவாளமா முனிகள் திருவாக்கு அனுபவிக்
கத்தக்கது.
இத் திருவாக்கில் அமைந்துள்ள “பெருமாள் நினைவைப் பின்சென்று” என்பதற்கு, ‘குசல
வர்களுடைய திருவவதாரத்தில் இராமபிரான் விருப்புற்றிருப்பவனாம்.ஆதலின,இப்போது
நாம் உயிர் தரித்திருப்பது அப்பிரானுக்கு இஷ்டமாம்’ என்னும் எண்ணத்தை, (அபத்
யலாபோவைதேஹி. என்னும் அப்பிரான் திருவாக்கையும், அதின் மூலமான அவன் திரு
வுள்ளக் கருத்தையும் பின்பற்றி)ப் பெற்றிருந்து’ என்பது கருத்தாம்.
இனி, இங்கு அப்பிராட்டியார் குசலவர்கள் திருவவதாரம் செய்த பின், உயிரோடு இருந்ததிற்குக் காரணம் யாதோ?என்னும் வினா சிலருக்கு உண்டாகலாம். இராமபிரானுக்காகவோ, அப்பிரானுடைய ஸந்ததிக்காகவோ, பிராட்டியார் உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லையன்றோ?இவ்வினாவிற்கு விடை பின்வருமாரு – தலைவன், தலைவிக்கு அடையப்பெறும் நன்மையாயும், அந்நன்மையைப் பெறுதற்கு ஏதுவாயும்,-அத்தலைவியினால் உபசரிக்கத் தக்கவனாயும், போற்றத் தகுந்தவனாயும் இருப்பவனாம்.
அதனால், உயிரையோ, அவ்வுயிரிலும் மேற்பட்டது ஒன்றையோ, விட்டாகிலும் தலைவன்
விருப்பத்தைச் செய்ய வேண்டியவளாம் தலைவி
(பதிர்ஹி தைவம் நாரயா : பதிர்பந்து : பதிர் கதி: 1 ப்ராணை ரபி ப்ரயம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: I”பாலயந்தீ ஹரேர் பாவம் பத்னீ பகவ தோஹ்யஹம் ) என்று பிராட்டியாராலேயே அருளிச் செய்யப் பெற்றுளளது
இங்கு, ‘பிறருக்காக உயிர் தரித்திருக்கவேண்டும்; பரதந்திரருக்கு முடிகை தேட்டமானாலும் முடியப்போகாது’ என்னும் உண்மையை உணருதல் வேண்டும் இவ்வுண்மைக் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்: பெருவ்யாதியினால் பீடிக்கப்பட்ட ஒருவன், அப் பீடை தாங்க மாட்டால், தானே உயிரைத் துறந்து விடுகிறான். அவன் அங்ஙனம் முடிகையே அவனுக்குச் சேர, பிழைக்கை எனப் பெறுகின்றது. இவ்வாறு முடிகையே பிழைக்கையானால் பிழைக்கையும் முடிகையாகலா மன்றோ?
ஸீதாப்பிராட்டியார், குசலவர்கள் திருவ வதாரம்செய்த பிறகு, இராமபிரானுடைய
ஸந்ததுக்காக உயிர் தரித்திருக்கவேண்டுவதில்லை என்பதும். அக்காலத்தில் அவருக்கு
முடிகை தேட்டமாயிருந்தது என்பதும் ஒருவாறு உன்மையேயாம். ஆயினும், அப்பிராட்டியார் தம் இயல்புக்கு ஏற்ப, மேற்கூறிய வாறு பிழைக்கை என்னும் முடிகையைப் பெற்றிருந்தவர் என்றே நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு இருத்தற்கும் காரணம் இராமபிரான் திருவுள்ளக் கருத்தேயாம்.
இங்கு, திருவுள்ளக் கருத்து என்பது யாதோ? எனின், கூறுவோம்: “ஸீதா பிராட்டியார் கற்
புடையவர்” என்பது மாத்திரமன்றி, கற்பினுக்கு அணியாகவே விளங்குபவராம். கண்
டனன் கற்பினுக்கு அணியை’ என்னும் திருவடி திருவாக்கையும் இங்கு நாம் காணுதல்
வேண்டும். அப்பிராட்டியாரை, இக் கொடுவுலகம் தன் இயல்புக்கேற்ப, குற்றம் கூறிற்று.
ஆயினும், நாள் செல்ல, நாள் செல்ல இக் கொடுவுலகத்திற்கே, அப்பிராட்டியாரின்,
குற்றம் சிறிதும் இன்றியிருக்கும் சிறப்பு நன்கு விளங்கக் கூடும். அக்காலத்கில் குழந்தைகளுடன் பிராட்டியாரை அழைத்துக் கொள்வதே தமக்கு நன்றாம். ஆதலின், இப்
பொழுது பிராட்டியார் உயிர் துறத்தல் கூடாது. என்பதே அக்கருத்தாம்.
இதற்குத்தக்க பிரமாணம் யாதோ? எனின்,
மூன்றாம் பிரிவைப் பற்றிக் கூறுமிடத்து, வால்மீகி முனிவன். இராமபிரானுடைய ஸன்
னிதியில் வந்து ஒடுங்கி நிற்கும் ஸீதாப்பிரட்டியாரைக் குறித்து,’இவர் குற்றம் சிறிதும்
இன்றி நல்லொழுக்கம் பெற்றிருப்பவர்;-பாவம் சிறிதும் இல்லாதவர் ; இராமபிரானை
யல்லாமல் மற்றொருவரையும் நெஞ்சாலும் நினைத்திலாது, அப்பிரானையே தெய்வமாகப்
பற்றி இருப்பவர்-‘இயம்சுத்தஸமாசாரா அபாபா பதிதே வதா’ என்று கூறியிருத்தலையும்,
இராமபிரானும், “நானும், குற்றம் சிறிதும் இன்றி இருப்பவர் பிராட்டியார் என்பதை அறிவன் (“அபாபேத் யபி ஜானதா ) முனிவனாகிய நீர் சொன்னதுவே போதும்-ஏ தேவம் மஹாபாக யதா வசஸ் தர்மவித்)ஆனாலும், இந்தத் திரளிலே உலகம் நம்புமாறு, தன் சுத்தியை வெளியிட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அருளிச் செய்திருத்தலையும் காணுங்கால், மேற்கூறிய கருத்து,தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
இங்கு, (பிறருக்காக உயிர் தரித்து இருக்க வேண்டும் பரதந்திர ஜன்மத்தில் பிறந்தோருக்கு நினைத்தபோது முடியப்போமோ ?-அங்ஙனம் நினைத்தபோது முடிந்து விட்டால்,
பாரதந்திரியமாகிற செல்வம் நிலை பெற்றிக் குமோ ?) என்னும் கருத்தைக் கொண்டுள்ள
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண் பிறந்ததே என்னும் ஆழ்வார் திருவாக்கையும் காண்க.
இதுகாறும் கூறிய பரதன், ஸீதா பிராட்டியார் இவ்விருவருடைய சரிதங்களை நாம்
மனத்திருத்தி நோக்குங்கால், இராமபிரானுக்கு இராச்சியமும், பரதனும், ஸீதாப்
பிராட்டியும் போன்று, ‘இந்த ஜீவனும், இவனுடைமையாக எண்ணப் பெற்றிக்குமவையும் அப்பிரானுக்கே (நாராயணனுக்கே) உரிய உண்மை உடைமைப் பொருளும் பரதந் திரப்பொருளுமாம்’ என்பது நன்கு விளங்கு கின்றதல்லவா ? இவ்வாறு ஜீவனுடைய
உண்மை நிலையை இராமாயணத்தில் கண்டோ மல்லவா? இனி, உபேயம் எனப்படும் பயனைப் பற்றி ஆராய்வோம்.

—————-

வேதாந்தமும் உபேயமும்

இவ்வுலகிற்கு மீண்டுவருதல் இன்றி, மோக்ஷ உலகத்தைத் தருவதான வழியில் சென்று,  திருநாட்டிலே எம்பெருமானைச் சேர்ந்து, அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன் அனுபவித்து, அவ்வனுபவத்தினால் உண்டான. ஆனந்தம்தூண்ட அவன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதலே, இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மையாம். இவ்வாறான வாழ்வையே உபேயம்’ என்றும், வீடுபேறு‘ என்றும் கூறுவர், ஆன்றோர். இங்கு, ‘பரமனைப் பஜனம் பண்ணுவோர்,
(மோஷ உலகத்திற்குச் செல்லுவோரை முதலிற்கண்டு. உபசரித்து, வழி நடத்தும்
தெய்வமான) அர்ச்சிஸ்ஸை அடைகின்றனர்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள
(தே ர்ச்சி ஷமபி ஸம்பவந்தி)என்னும் வேதாந்த வாக்கியமும்,-பரமனைப் பஜனம் பண்ணுவோன் அப்பரமனையே அடைகின்றான்’ என்னும் பொருள் பெற்றுள்ள
 (ப்ரஹ்மம் விதாப்நோதி பரம்) என்னும் வேதாந்த வாக்கியமும்,
‘மிகவும் இனிய பொருளான பரம புருஷனை அடைந்து, அனுபவித்து இன்பம் துய்க்கின்றான்’ ‘திருநாட்டில் முக்தன் எம்பெருமா னுடன் அவன் திருக்கலியாண குணங்களை அனுபவிக்கின்றான்’ என்றும் அப்பரமபுருஷனுடைய திருமேனியைக் கண்கூடாகக் காண்கின்றனர் நித்யர்’ என்னும் கருத்துக்களை முறையே காட்டும்
 ” (ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாS நந்தீ பவதி) ” (பரமே வ்யோமன் ஸோ ச்னுதே ஸர்வான் காமான் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா(ஸதா பச்யந்தி ஸூரய :) என்னும் வேதாந்த வாக்கியங்களும் காணத் தக்கன.
ஆனால், ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதல் இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை’ என்பதற்குத் தக்க பிரமாணம் யதோ? என்னும் கேள்வி இங்கு உண்டாவது இயல்பேயாம்.
இக்கேள்விக்கு விடை பின்வருமாறு : ஜீவன் கை, கால் முதலிய உறுப்புக்களோடு
கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி, அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின், அந்த ஜீவன் ஆத்மா ; அப்பிண்டம்சரீரம்’ என்பது எங்ஙனமோ, அங்ஙனமே-பரமன் ஜீவனை ஏவி,தாங்கி, அந்த ஜீவன் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின்,
அப்பரமனும் ஆத்மா; அந்த ஜீவனும் சரீரம், என்பதைபும் நாம் உணரலாமல்வலா?
இங்கு, (யஸ்யாத்மா சரிரம்= எவனுக்கு ஜீவன் சரீரமோ) என்னும் வேதாந்த வாக்கியம் பிரமாணமாய்க் காணத்தக்கது இதனால், தேறிய ஸாரப் பொருள் என்? என்னில், இந்தச் சுருதி. ஜீவன் பரமனுக்குச் சரீரமாம்’ என்று கூறிய போதே. இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை பரமனுக்குத் தொண்டு செய்கையேயாம். என்பதையும் கூறிற்றன்றோ?

ஆனால், ‘இவ்வடிமைத் தொழில் உலகப்போக்கில் துன்பம் தருவதாய் இருத்தலினாலும் ‘ஓருவருக்குத் தொண்டு பூண்டொழுகுவது துன்ப மயமானது’ எனச் சாஸ்த்திரங்களில் சொல்லப்படுவதாலும், மனுமுதலியபெரியோர் தொழில்களில் அடிமைத்தொழில், கடைப்பட்டது; துன்பமயமானது’என இயம்பி இருத்தலாலும், அடிமைத்தொழில் துன்பம் தருவதொன்றாம்’ என்பதுதெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
உண்மை இவ்வாறு இருக்க, ‘துன்பம் கலவாத பேரின்பத்தையே அனுபவித்துக்
கொண்டிருக்கும் மோக்ஷ தசையிலும்,ஜீவனுக்கு இவ்வடிமைத் தொழில் உண்டு எனச்
சொல்லப் பெறுகின்றதே, இது பொருந்துமாறு யங்ஙனம்? என்னும் இவ்வினா இங்கு
எழுகின்றது.-இவ்வினாவிற்குவிடை பின்வருமாறு :-
எங்கும் அடிமைத் தொழில் துன்பம் தருவ தாகவே இருக்கும்’ என்பது இல்லை. ‘காளி
தாஸன், தான் உகந்த விலைமகளுக்குத் தண்ணீர் கொண்டு வ து தருதல் முதலிய தொண்டைமிக்க மகிழ்வுடனும், இன்பத்துடனும் செய்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை. அதைப்போன்றே, பரமனுக்குச் செய்யும்தொண்டும் இன்பமாகவே இருக்கும்.
காளிதாஸன், தான் உகந்த விலை மகளின் அழகு முதலிய குணங்களில் ஈடுபட்டு, அவ் வுவப்பினால், அங்குத் தொண்டு புரிந்ததால், அத்தொண்டு இன்பமாக இருந்தது என்ன லாம்.
இங்கு, எம்பெருமானுக்கு அழகு முதலியகுணங்கள் உண்டோ? ‘அவன் நிர்குணன் (குணங்களற்றவன்) என வேதாந்தங்களில் கூறப்பெறுகின்றனனே, அங்ஙனம் குணமற்ற அப்பெருமானிடத்தில் இந்த ஜீவனுடைய நெஞ்சம் ஈடுபடுமோ? ஈடு படாதன்றோ? மனக்
கவர்ச்சி உண்டாகாத இடத்தில் உவப்புக்கொள்ளாத இடத்தில் அடிமைத் தொழில் இன்பமாய்த் தோன்றுவதுதான் எவ்வாறு? எனச் சிலர் கருதக்கூடும்.
எம்பெருமான் நிர்குணன்’ என்னும் வேதாந்த வாக்கியத்திற்கு, குணம் ஒன்றுமே இல்லாதவன்’ என்பது கருத்தன்று; பின்னை-கருத்து யாதோ? எனின், ‘தீயகுணம் சிறிதும்
இல்லாதவன்’ என்பதே கருத்தாம்.
திருக்கலியாண குணங்களும் இல்லாதவன்’என்று பொருள் கொள்ளில், பேரறிவு,
பேராற்றல் முதலிய எண்ணிறந்த திருக்கலியாண குணங்களைப் பெற்றிருப்பவனாம் எம்
பெருமான் ‘ என்னும் கருத்தைக்கொண்டுள்ள (பராஸ்ய சக்தி:) என்பனபோன்ற பல வேதாந்த வாக்கியங்களோடு முரண்பாடுஉண்டாமன்றோ ?
இங்ஙனம், எம்பெருமான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என
வேதாந்த வாக்கியம் இயம்புகின்றமையினாலும், இந்த ஜீவனும்,எம்பெருமான் திருக்
குணங்களில் ஈடுபட்டு, உவந்து, அடிமைத்தொழில் புரிகின்றமையினாலும், இங்கும்
அடிமைத் தொழில் இன்பமாகவே இருக்கும்என்பதில்,தட்டு ஒன்றுமில்லை.
இதுகாறும் கூறியவற்றால், வேதாந்த வாக்கியங்களைக்கொண்டே, ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்வதே வீடுபேறு’ என்பதை உணர்ந்தோமல்லவா ?
(ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும், அவ்வாக்கியத்தில் மேலெழத்தோன்றும் கருத்தையும் காண்போம்.
“ஒருவன் குற்றத்தினால், முத்துச்சிப்பியில்அதன் தன்மையை அறியாது, வெள்ளியின்
தன்மையை அறிகின்றான்; அவ்வறிவு பிரமம் எனப்படும். அந்தப் பிரமம் இருக்கும்போது,
வெள்ளி உண்மைப் பொருளாய்த் தெரிகின்றது. அதனால் அவன் அதை எடுக்கச்
செல்கின்றான். அங்ஙனம் சென்று, எடுத்து,நோக்குங்கால், ‘ இது வெள்ளியன்று, முத்துச்
சிப்பி’என்று சிப்பியின் தன்மை புலனாகின்றது. அப்போது, அம்முத்துச் சிப்பியைத் தவிர,
வெள்ளியோ, அதன் தோற்றமோ இல்லை; சிப்பி மட்டும் தென்படுகின்றது” இது போன்று, ப்ரஹ்மமானது குற்றத்தினால் பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. “தத் த்வம் அஸி-என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒன்று தான் உண்டு’ என்னும் உண்மையை உணரும்போது, இப்பிரபஞ்சமோ இதன்தோற்றமோ ஒன்றுமே இராது. அந்த ப்ரஹ்மம் மட்டும் இருக்கும். அங்ஙனம் அந்த ப்ராஹ்மம் மட்டும் இருக்கையே வீடு பேறாம். இதுவே மேற் கூறிய வாக்கியத்தின் மேலெழத்தோன்றும் கருத்தாம்.
இக்கருத்தையும், முன்னம் கூறிய அடிமைத்தொழிலே வீடு பேறாம்’ என்னும் கருத்தை
யும் ஒன்று சேர்த்துக் காண்போருக்குக் கலக்கம் உண்டாவது இயல்பேயாம்.-இக்கலக்கத்தை மீமாம்ஸா சாஸ்திர முறையைக் கைக்கொண்டு போக்கிக்கொள்ளுங்கால்,
” ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி” என்னும் வாக்கியம், ‘ஆத்மாவினுடைய உண்மையை
உள்ளபடி உணர்பவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்’ என்னும் கருத்தைக் காட்டுவதன்று; பிறகு எக்கருத்தைக் காட்டுகின்றதோ என்னில், ‘மேற்கூறியவாறு உண்மையை உணருவோன், மோஷ தசையில் பரமனோடு மிகவும் ஒற்றுமை பெற்றிருப்பவனாம்’ என்னும் கருத்தையே காட்டுவதாம் ; என்பதுநன்கு புலனாம்.
இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியில் “ப்ரஹ்ம
மாக ஆகிறான்” என்னும் கருத்து காணப் பெறுகின்றது என்பது ஒருவாறு உண்மையே.
இக்கருத்தையே கொள்ளில் ஜீவனுக்கும் பரமனுக்கும் உள்ள வேற்றுமையைப் பலவாறாகக்
கூறும் பல வேதாந்த வாக்கியங்களோடுமுரண்பாடு உண்டாமன்றோ?
முன்னம் சேதனன் அர்ச்சிராதி வழியில் செல்லுதல், திருநாட்டிலே பரமபுருஷனைச்
சேர்தல்,அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அனுபவித்தல், ஆனந்தம் பெறுதல்,அடிமை செய்தல், அப்பரமனை உவப்பித்தல் என்னும் பல நன்மைகளை அறிவிக்கும் பல வாக்கியங்களைக் கண்டோமல்லவோ?-மிகவும் ஒற்றுமையுள்ள இருபொருள்களைஅவ்வொற்றுமை தோன்ற ஒன்றாகவே கூறுதலும் செய்யுள் வழக்கில் உள்ளதொன்றேயாம். தாமரை மலர் போன்றுள்ள கண்ணை அம்மலராகவே கூறுகின்றாரல்லவா? ‘தாவிவையங் கொண்ட தடந்தாமரை என்று.இம்முறையைப் பின்பற்றி, ‘‘ப்ரஹ்மைவபவதி” என்னும் சுருதியில் மேற்கூறியவாறு பொருத்தமான பொருளைக் காண்பதே நன்றாம்.
ஆனால், தலைவன், தொண்டன் இவ்விருவருள் தலைவனுக்குச் சிறப்பும், தொண்டனுக்குத் தாழ்ச்சியும் தென்படுகின்றன. இது போன்று,உண்மையில் தலைவனான எம்பெருமானுக்குச் சிறப்பும் தொண்டனான ஜீவ னுக்குத் தாழ்ச்சியும் உண்டு என்றே கொள்ளுதல் வேண்டும். அங்ஙனமே பிரமாணங்களும் கூறுகின்றன.-உண்மை இவ்வாறு இருக்க, பரமனுக்கும் ஜீவனுக்கும் மிகவும் ஒற்றுமை உண்டு என்று கூறுவது யாங்ஙனம்? எனச் சிலர் கருதக்கூடும்.
ஓர் அரசனுக்கு அவன் புத்திரனைத் தொண்டன் என்றும், அந்த அரசனோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் அவன் புத்திரன் என்றும் காண்கின்றோம். அது போன்றே
இங்கும் ப்ரஹ்மத்திற்கு ஜீவன்தொண்டன் என்றும், அந்த ப்ரஹ்மத்தோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் என்றும் கொள்ளக் குறையில்லை நான் இராஜ குமாரன்’ என்
னும் கருத்தைப் பெற்றுள்ள ‘(அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்னும் வாக்கியத்தை இங்குக் காண்க. அரசனுடைய புதல்வன் அரசனன்றோ?
இவ்வாறு உபேயத்தைக் குறிக்கும் வேதாந்த வாக்கியங்களின் கருத்தை மிமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி,கலக்கம் சிறிது மறக் கண்டோம். இனி, இராமாயணத்தில் இவ் உபேயத்தைக் காண்போம் :

இராமாயணமும் உபேயமும்

முதலில். எம்பெருமானுடைய அருளுக்கு இலக்கானவனை எம்பெருமானாகவே சுருதி இயம்புகின்றதே, இதை இராமாயணம் எவ்வாறு தெரிவிக்கின்றதோ, அதை அவ்வாறே அனுபவிப்போம்
திருவடி அசோக வனத்தில் ஸீதாபிராட்டி யாரைத் திருவடிதொழுது நிற்கும் போது, அப்பிராட்டியார் தாம், அத்திருவடியை நோக்கி, இவன் இராமதூதனோ? அல்லனோ?
என ஐயமுற்று, உண்மையை உணரவிரும்பி, இஷ்வாகு குலத்திலே திருவவதாரம் செய்தருளின புருஷோத்தமர்களான இராம இலக்ஷ்மணர்களுக்கும். வானரரான ஸுக்ரீவன் முதலானார்க்கும் தோழமை ஏற்பட்டதற்குக் காரணம் யாதோ? ஏற்பட்டது எவ் வாறோ? என்று வினவியிருப்பது நாம் அறிந்த தேயாம்.

அவ்வினாவிற்குத் திருவடி விடை விடுக்குங்கால், கூறிய வார்த்தை,  “(ராம ஸூக்ரீவயோரைக்யம் தேவ் யேவம் ஸமஜாயத) என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்து, பின்வருமாறு:- ‘புருஷோத்தமனாகிய இராமபிரானோ. மிக மிகப் பெரியோனும், ஒப்பற்ற மேன்மை பெற் றிருப்போனுமாம். குரங்காகிய ஸுக்ரீவனோ மிக மிகச் சிறியோனும், ஒப்பற்ற தாழ்ச்சி பெற்றிருப்போனுமாம். அப்பெருமான் இக் குரங்கைத் தோழமை கொள்வதற்குத் தக்க காரணம் இவன்பால் ஒன்றும் அறிகின்றி லேன், அம்மா!ஆயினும், இராமபிரான் ஸுக்ரீவன் ஆகிய இவ்விருவரும் ஒருவர் என்னலாம் படி, அவ்விருவருக்கும் உள்ள தோழமையைத் தான் அறிகின்றேன்.’-இன்னமும் கேட்டருளாய்: இராமபிரானுடைய தர்ம பத்தினியாகிய தேவரீருக்கு இலக்குமணன் தூது வருதல் முறையாகும்.-அல்லது, உயிர்த்தோழனாகிய ஸுக்ரீவன் அங்ஙனம் தூது வருதல் முறை என்னலாம்.
நானோ, ஸுக்ரீவன் தொண்டர்களுள் மிகவும் கடைப்பட்டவன். இவ்வாறு கடைப்பட்டவனாகிய இத்தொண்டன், தூது வருமாறு அவ்விருவருக்கும் தோழமை ஏற்பட்டுள்ளது என்றால், அத்தோழமை எவ்வாறு உள்ளது என்பதற்கு யான் விடை விடுக்கவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ?இங்கு, “ராம ஸுக்ரீவ யோரைக்யம்”’
என்றிருந்தாலும், அவ்விருவரும் ஒருவரே’ என இயம்புவாரும் உண்டோ? இல்லையன்றோ?
அவ்வாறு இயம்பினால், அதை உலகம் ஏற்குமோ?=சுருங்கச் சொல்லின், இராமபிரானும்
ஸுக்ரீவனும் உண்மையில் வேறு வேறு பொருளாகவே இருப்பவராம். ஆயினும், இன்ப
துன்பங்களை ஸமமாகப் பெற்றிருப்பவராம். அஃதாவது- இராமபிரானுடைய இன்ப துன்பங்களை ஸுக்ரீவனும், ஸுக்ரீவனுடைய இன்ப துன்பங்களை இராமபிரானும் பெற்றிருத்தலாம். இவ்வாறு இவ்விருவருக்கும் மிகவும் ஒற்றுமை இருப்பது பற்றி
இருவரும் ஒருவராகவே போற்றப் பெறுகின்றனர். இது போன்று, வீடுபேற்றைப் பெற்
றிருக்குங்கால், பரமனுக்கும் ஜீவனுக்கும் உண்மையில் வேற்றுமை உண்டு, ஆயினும்,
மிகவும் ஒற்றுமையைப் பற்றி, ஜீவன் ப்ரஹ்ம மாக ஆகிறான், எனப்போற்றப் பெறுகிறான்
என்பது, இங்குத் தெளிவு அன்றே?
இராமாயணம் இவ்வாறு ‘ப்ரஹ்மைவ பவதி‘ என்னும் சுருதியின் கருத்தை, கலக்கம் சிறிது
மின்றி, யாருக்கும் எளிதில் விளங்குமாறு இயம்பியிருத்தலைக் கண்டோமல்லவா?
இனி, இலக்குமணனுடைய சரிதத்தில், ‘எம்பெருமானுக்கு அடிமை செய்து உவப்பிப்பதே
இந்த ஜீவனுக்கு சிறந்த நன்மையாம்’ என்பதைக் காண்போம்:
இராமாயணம் இயம்புகின்றவாறு, இலக்குமணனுக்கே உரிய சீரிய சிறப்புக்களை,-”பசியராயிருப்பார் அட்டசோறும் உண்ணவேணும், அடுகிறசோறும் உண்ணவேணும்
என்னுமாபோலே, காட்டுக்குப் போகிறபோது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு அடிமை செய்யவேணும், எல்லா அடிமையும் செய்யவேணும், ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார்; படை வீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ண மாட்டாதே ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக் குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தை
யும். தரித்தடிமை செய்தார்” என்னும் ஸூத்திரத்தில், பிள்ளை லோகாசார்யர் வெகு அழகாக அருளிச் செய்திருக்கிறார். இந்தஸூத்திரத்தின் கருத்து :-
மிக்க பசியுடையோர் தம் பசியின் மிகுதியினால், ஆக்கின சோறும் ஆக்குகின்ற சோறும்
எல்லாம் தாமே உண்ணவேணும் என்றுஎண்ணுவர் . இவர் போன்று, இலக்குமணனும் இராமபிரானுக்கு எல்லா அடிமைகளும் தானே செய்யவேணும் என்று எண்ணுகின்றானாம். இந்த இலக்குமணன், முளைக்கும் போதே மணத்தோடு முளைக்கும் திருத்துழாய் போன்று, திருவவதாரம் செய்யும்போதே இராமபக்தியோடு அவதரித்தவனாம். ஆதலின், இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளும் போது, அவனுடன் செல்வதாக முயன்றனன்.
அம்முயற்சியைக் கண்ட இராமபிரான், ‘இலக்குமணா! நீ இத்திரு அயோத்தியிலேயே இருப்பாய்’ என்றனன். அப்போது, இலக்குமணன்,(நீரைப் பிரியில் உயிர் தரியாத மீன்நிலை
போன்றுள்ள) அந்த இராமபிரானைப் பிரியில் உயிர் தரியாத தன் நிலையை முன்னிட்டு,
“நாணோடு சேர்ந்த வில்லைத் தாங்கியும். உனக்கு முன்னே சென்றும், ஆங்கு ஆங்கு வழி
காட்டியும், காய், கனி முதலியவற்றைத் தேடிக் கொணர்ந்து உதவியும் இவ்வாறான அடிமையை இராமா ! நான் உனக்குச் செய் வேன் ; என்னை அழைத்துச் செல்வாய்’ என
வேண்டிக் கொண்டனனாம்.-அன்றியும், அப்பெருமானை அந்த இலக்குமணனே, தேவரீருக்குத் தொண்டு செய்யப் பெறாதபோது, நான் உயிர் தரியேன். தேவரீரோ எனில், நிறைவாளராகையாலே தொண்டைக் கொள்ளாவிடினும், உயிர்தாங்கத் தக்கவர். ஆயினும், என்னிடம் அடிமைகொண்டால தேவரீருக்கும் பெருமை உண்டு.-ஸீதாப்பிராட்டியார் தேவரீர் ஆகிய இருவரும் மலைச்சாரலில் விளையாடும் போதும்,-திருக்கண்வளருங் காலத்தும், அங்ஙனம் கண் வளருதலின்றி விழித்திருக்குங்காலும் எல்லா அடிமைகளும் செய்யவேணும். என் விருப்பத்துக்காக இன்றி,தம் விருப்பத்துக்கேற்ப ஏவி, என்னிடம் பணியை திருவுள்ளம் பற்ற வேணும்’ என்றும் விரும்பிப் பெற்றனனாம்.
இன்னமும், தானே சமையல் செய்து தானே உண்ணும் ஒருவன், நாளடைவில் தன்
வயிற்றைப் பெருக்கிக் கொள்வான்; மற்றவனோடு உண்ண இசையான். இவன் போன்று,
இலக்குமணனும். தானே வனத்தில் இராம பிரானும் ஸீதாபிராட்டியுமாகிற சேர்த்தியில், எல்லா அடிமைகளையும் செய்து, அடிமைக் கண் அன்பை பெருக்கிக் கொண்டவன் மற்றும் பரதன் முதலானாரோடு தானும் ஓர் அடிமை செய்ய இசைந்திலன். இவ்விசையாமையே எங்கே கண்டோம்? என்னில்,
இராமபிரான் வனவாஸத்தைச் செய்து, மீண்டு திரு அயோத்திக்கு எழுந்தருளி, முடி
சூடியிருக்கும் போது, ஒரு கையால் திருவெண் கொற்றக்குடையை எடுத்துப்பிடித்தும், மற்றொரு கையால் திருவெண்சாமரத்தைப் பணிமாறியும் இவ்வாறு இரண்டு அடிமையை ஒரு காலத்தில் செய்தனனாம்.
(நச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ ஜலான் மத்ஸ்யாவிவோத்ருதெள தனுராதாய ஸகுணம்.அகரதஸ் தே கமிஷ்யாமி பந்தானமனுதர்சயன், ஆஹரிஷ்யாமி தே-நித்யம் மூலாநி ச பலானி ச | பவாம் ஸ்துஸ்ஹ வைதேஹ்யா கிரிஸானுஷ ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமிஜாக்ரத ஸ்வபதச்ச தே 1 கரியதாமிதி மாம் வத ச த்ரம்ச சாமரம் திவ்யம் திருதவான் லக்ஷ்மணஸ் ததா ) என்னும் இவை காணத்தக்கன
இனி, இங்கு மற்றொரு முக்கியப் பொருளையும் நாம் ஆராய்ந்து அறிதல் இன்றியமை
யாததாம். முன்னம் கூறிய பகுதிகளில்,)’ இராமபிரான், ப்ரஹ்ம சப்தப் பொருளான
நாராயணனே’ என்பது நமக்கு விளங்குகின்றது.ஆயினும், ‘அப்பரமன் திருக்கலியாண
குணமும் இல்லாதவனா? அல்லது தீய குணம் சிறிதும் இன்றி, திருக்கலியாண குணம் நிரம்பி இருக்கப் பெற்றவனா? இராமாயணம் இப் பரமனை இயம்புகின்றது எவ்வாறோ? என்னும் இக்கேள்வி இங்கு ஏற்படுவது இயல்பேயாம்.-இதற்கு விடை பின்வருமாறு-
ஒரு நூலின் உண்மைக் கருத்தைஉணரும் போது,அங்ஙனம் உணர்வதற்கு ஏதுவாயுள்ள
வழி சில உண்டு. அவ்வழியைப் பின்பற்றிக் காணுங்கால், உண்மை நன்கு புலனாகும். இம்
முறையில் ஒரு வழியை இங்குக் காண்போம்.
இராமாயணம், முதலிலும், இடையிலும், இறுதியிலும் எப்பொருளை எவ்வாறு இயம்பு
கின்றதோ, அதை அவ்வாறே அறுதியிடுதல் மேற்கூறிய வழியாகும்.
இராமாயணம் முதன் முதலில் இராமபிரானைக் கூறுகின்றது எவ்வாறோ ? எனின்,
திருக்கலியாண குணமும் இல்லா தவன் என்று கூறவில்லை; ‘தீயகுணம் சிறிதும் இன்றி,
திருக்கலியாண குணமே நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என்றேகூறுகின்றது.
நாரதமுனிவனை நோக்கி, வால்மீகி முனிவன் மிக வணக்கத்துடன், இக்காலத்தில் இவ்வுலகில் சீலம் முதலிய எல்லா நற்குணங்களும் பொருந்தியிருப்பவன் யாவன்? என வினாவ,-யாவும் அறிந்த அந்நாரத முனிவன், இஷ்வாகு குலத்தில் திருவவதாரம் செய்தருளின இராமபிரான், எல்லாத் திருக்கலியாண குணகணங்களும் பொருந்தி யிருக்கப் பெற்றவனாம்;-எங்ஙனம் கடல் தன்னிடத்துள்ள சிறந்த-இரத்தினம் முதலிய பொருளைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருக்கின்றதோ,-அங்ஙனமே இராமபிரான் (உலக நன்மையை உண்டுபண்ணுவதான) தன்னிடத்திலுள்ள
சிறந்த திருவுள்ளக் கருத்துக்களைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருப்பவனாம்;
வீரத்தன்மையில் விஷ்ணு போன்றவன்; பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன்
போன்று காண இனியன் ; காலாக்னி போல்சீற்றமுடையவன்; பொறுமையில் பூமியோடு
ஒத்தவன் ; ஸத்தியத்தில் தரும தேவதையே வடிவெடுத்தது போன்றவன் என்று விடை
கூறினன்.
(கோன்வஸ்மின்ஸாம் ரதம்லோகே குணவான் கச்ச வீர்யவான்) என்னும்வால்மீகி முனிவன் வார்த்தையும்-(வம்சா ப்ரபவ: ராமோ நாம ஜனை: ச்ருத: 1 ஸமுத்ர இவ காம்பீர்யே விஷ்ணுநா ஸத்ரு சோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன: காலாக்னிஸத்ருச: க்ரோதே க்ஷமயா ருதிவீ ஸம: 1 ஸத்யே தர்ம இவாபர:) என்னும் நாரத முனிவன் வார்த்தைகளும் காணத்தக்கன.
இவ்வாறு, வேதாந்தக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வந்த (உபப்ரும்ஹண
மாகிய) இராமாயணம் முதன் முதலிலேயே இராமபிரானுடைய திருக்கலியாண குணங்
களை, ஆசார்யன் சீடனுக்குக் கூறும் முறையில் மிகமிகத் தெளிவாக இயம்பியிருத்தலைக் கண்டோம். இனி, இடையிலும் காண்போம்
அயோத்தியா காண்டம் முதலில் கூறப்பெற்றுள்ள வரலாறு பின்வருமாறு – சக்ரவர்த்தி, ஸபையில் வீற்றிருக்கும் அரசர் முதலானாரை நோக்கி, இது மிகப் பெரிதான இராச்சியம். இதை என் முன்னோரான மன்னர் மிகுந்த மனவூக்கத்துடன் பாதுகாத்து வந்தனர். அவரது வம்சத்தில் பிறந்த நானும், மனுநெறியைப் பின்பற்றி எனது அறிவு ஆற்றல்களுக்கு ஏற்றவாறு இது வரையில் பாதுகாத்து வந்தேன். எனது சரீரம் மிகவும் மூப்படைந்து விட்டது. ஆதலின், இந்த அரசுரிமையை இராமபிரானிடம் வைத்து, வருத்தந் தீர்ந்து, இனிது வாழ
விரும்புகின்றேன். இது பொருத்தமான செயல் என்று நீவீர் எண்ணியிருப்பின், நுங்கருத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன் என்று கூறினன்.
இதைச் செவிமடுத்த அவையிலுள்ள அரசர் முதலானோரனைவரும் அளவற்ற ஆனந்தம்
அடைந்தனர்; மிகமிகப் பெரிய கோஷத்தைச் செய்தனர்; அப்பெரிய கோஷத்தினால் எதிரொலியைக் கிளப்பி அங்குள்ள விமானத்தை அசையச்செய்தனர். இவ்வாறு தம் ஆனந்தத்தை அறிவித்து, இப்போதே இராமபிரான் இராச்சியத்தை ஏற்று, முடிசூடி, பட்டத்து
யானையின் மீது திருவெண்கொற்றக்குடை நிழலில் எழுந்தருளும் சிறப்பைக் கண்டு
களிக்கவேணும் என்றனர்.
இவ்வாறான களிப்பைக் கண்ட தசரத மன்னவன், திரும்பவும் அவ்வரசர் முதலானோரைக் குறித்து, ‘நீவீர் பேரிரைச்சல் செய்து கூறுவதை நோக்குங்கால், இது வரையில் கொடுங்கோல் மன்னனான தசரதன் பாதுகாத்து வந்தான் ; இவன் விலகுவது நலம்;
இனி, செங்கோல் மன்னனான இராமபிரான் இராச்சியத்தை ஏற்று பாதுகாக்கப் போகிறான்; நமக்குஇனி நற்காலம்! என்னும் நுங்கருத்து வெளிப்படுகின் றதே ! இவ்வாறு என்னை வெறுத்துக் கூறுதற்குக் காரணம் யாதோ? எனக்குக் குற்றம் ஏதேனும் உண்டோ?’ என்றனன்.
சக்ரவர்த்தியின் இவ்வார்த்தையைக் கேட்ட அரசர் முதலானோர். ஒரு கருத்துடன், மன்னர்பிரானே! தேவரீருக்குக் குற்றம் உண்டு என்று கூறினர். அக்குற்றம் யாதோ ? என்று
அம்மன்னர்பிரான் கேட்க, (பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே)-எண்ணிறந்த திருக்கலியாண குணக் கூட்டங்களுக்குக் கடலான இராமபிரானைப்
புத்திரனாகப் பெற்றிருப்பதே தேவரீருக்கு உள்ள குற்றம். அதனாலேயே தேவரீரை
வெறுக்கின்றோம் என்றனர்.-இவ்வாறு, இராமாயணத்தின் இடையில் இராமபிரான் திருக்குணங்களைச் சுருக்கமாய்க் கண்டோம். இனி, இறுதியில் காண்போம்.
‘இராமபிரான் பதினான்கு வருடம் வனத்தில் வளித்து, அதினின்றும், மீண்டு திரு
அயோத்திக்கு எழுந்தருளி,முடிசூடி,பதினோராயிரம் ஆண்டு இராச்சியத்தைப் பாதுகாத்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை.-அவன் மன்னர்பிரானாயிருந்து அரசு புரியுங்
கால், மக்களின் மனோநிலைமையைக் கண்கூடாகக் கண்ட வால்மீகி முனிவன், (” ஸர்வம் முதிதமேவாஸீத் ஸர்வோ தர்ம பரோபவத்)மக்களனைவரும் மனமகிழ்ச்சியுடனும், அவரவருக்குரிய தருமங்களில் ஊற்றம் பெற்றிருப்பவருமானார் என்று கூறியிருக்கிறான். இங்ஙனம் அனைவரும் இருப்பதற்கு காரணம் யாதோ? எனின், இந்த இராமபிரானுடைய
திருக்கலியாண குணமேயாம். (ராமோ ராஜ்யமுபாஸித்வ) என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது.-இராமன் தன் தேஜஸ்ஸினால் மக்களைஅடக்கி ஒடுக்கி ஆண்டவனல்லன், தன் திருக் கலியாண குணத்திற்கு ஏற்ப, இனிய நல் வார்த்தைகளைக் கூறி, பின் சென்று,வயப்
படுத்தி, ஆண்டவன் என்கிறான்.
இவ்வாறு இராமாயணத்தில், ‘இராம பிரான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்
கப்பெற்றவன்’ என்பதைக் கண்டோம்.-இலக்குமணன் இராமபிரானுடைய அத்திருக்
குணங்களில் மிகவும் ஈடுபட்டு உவப்புடன் எல்லா அடிமைகளும் செய்தவன்’ என்பதையும், (குணைர்தாஸ்யமுபாகத 🙂 என்னும் அந்த இலக்குமணன் வாக்கி யத்திலேயே நாம் நன்கு காணலாம்.
இங்ஙனம் இராமாயணத்தில் உபேயத்தைக் கண்டோம். இனி ஐம்பொருள்களுள் ஒன்றாகிய விரோதியைக் காண்போம்.

————–

வேதாந்தமும் விரோதியும்

எம்பெருமானை ஜீ வன்அடையாதவாறு எது தடையாய் நிற்கின்றதோ, அது, விரோதி’ எனப்படும். வேதாந்தம் அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவற்றை விரோதியாய் இயம்புகின்றது.-இதைச் சிறிது விவரித்துக் கூறுவோம்:
அஜ்ஞானம், ‘கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டமே ஆத்மா’ என
எண்ணும் எண்ணமும், ‘தான் எம்பெருமானுக்கு உரியவனல்லன்; தனக்காகவே இருப்பவன்’ என எண்ணும் எண்ணமுமாகும். இவ் விரு எண்ணங்களுள், முன்னது, தேஹாத்மாபிமானம்’ என்றும் பின்னது, ‘ஸ்வாதந்திரியாபிமானம்’ என்றும் கூறப் பெறும்.

தேஹாத்மாபிமானத்தைச் சிறிது விளக்கிச்சான்றுடன் கூறுவோம்: ‘இரும்புத் துண்டு, நெருப்பு இவ்விரண்டும் வேறு வேறு பொருள் களாயிருப்பினும், நெருப்பிலிட்டுப் பழுக்கக்
காய்ச்சிய அந்த இரும்புத்துண்டு, நெருப்புத்தொடர்பின் மிகுதியினால் நெருப்பாகவே
எங்ஙனம் தோன்றுகின்றதோ, அங்ஙனமே,-ஆத்மா, சரீரம் இவ்விரண்டும் வேறு வேறு பொருள்களாயிருப்பினும், அந்த ஆத்மாவும், சரீரத்தொடர்பின் மிகுதியினால் சரீரமாகவே தோன்றுகின்றான்’ என்பதை நாம் அறிதல் வேண்டும்.
இவ்வாறு, ‘சரீரமே ஆத்மா’ என எண்ணுங்கால், உண்மை உணர்வு சிறிதும் இல்லை. ஆத லின், (உணர்விண்மையே உறக்கமாதலின்-ஜீவனை உறங்குகின்றவனாகவே (அனாதி மாயயா ஸு ப்த:) என்னும் சுருதி இயம்புகின்றது. ( இந்தச் சுருதியில் மாயா சப்தம் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடு கூடிய பிரக்ருதி )என்னும் அசித்தைக் கூறும் வழியால் சரீரம் என்னும் பொருளைக் குறிக்கின்றது.)உண்டி உடைகளை உவந்து அவற்றைப் பெற ஓடித்திரியுங்காலத்தும், ஜீவனுக்கு இவ்வுறக்கம் உண்டு. அதனால் நன்மை சிறிதும் இல்லை. எப்போது, உறக்கம் போய் உண்மையை உணருகின்றனனோ, அப்போது தான் நன்மை உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளதும், அனாதி மாயயா ஸுப்த: என்னும் வாக்கியத்தோடு தொடர்புற்றதுமான  ” (யதா ஜீவ: ப்ரபுத்யதே) என்னும் சுருதியைக் காணுமவர்க்கு தேஹாத்மாபிமானம்’ தடை என்பது நன்கு புலனாகும்.
இங்ஙனம் தேஹாத்மாபிமானத்தைச் சுருக்கமாய்க்கண்டோம். ஸ்வாதந்திரியாபிமானத்
தையும் இனிக்காண்போம் :
‘ஆத்மா, அறிவுடையவன்’ என்ற போதே,’ஸ்வதந்திரன்’ என்று கூறியதாகக் தேறும்.
எங்ஙனம் என்னில்,-இந்த ஜீவன், முதலில் ஒரு பொருளை உள்ளபடி அறிகிறான்; பின்பு, அப்பொருளின் சீர்மையைப்பற்றி அதை விரும்புகிறான் ; அதன் பிறகு அதை அடைய முயல்கிறான் ;-அதற்கேற்பஏதுவைத் தேடுகிறான்; முடிவில் அதை அடைந்து, இன்பம் பெறுகிறான்
இவற்றை, வடமொழியாளர்,(ஜாநாதி இச்சதி, யததே, கரோதி,அனுபவதி) என்பர்
இவற்றை நோக்குங்கால்,அறிவுடை யனான ஜீவன்,தனக்காக ஒன்றை விரும்பி, முயன்று,
செய்து, இன்பம் துய்ப்பவன்’ என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் இருக்கின்றமையின், ‘இவன் ஸ்வதந்திரன்’ எனப்படுகிறான்.
அஷ்டாக்ஷரத்தில் முதல் பதம் பிரணவம்.-அப்பிரணவம் அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துடையது. அம்மூன்றுனுள், ‘ம்’ என்னும் எழுத்து அறிவுடையனான ஜீவனைக் குறிக்கின்றது.-இவ்வாறு, அறிவுடையவன்’ என்பதை அறிவிக்கும் ‘ம்’ என்னும் அக்ஷரத்தாலும்,-நான் இதை அறிகிறேன்’ என்னும் அனுபத்தாலும், ‘ஜீவன் ஸ்வதந்திரன்’ என்பதை நாம் அறியலாகும். இங்ஙனம் தன்னை ஸ்வதந்திரனாக (தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றில் முயன்று, செய்து, பெற்றுப் புஜிப்பவனாக) அறியுங்காலத்து, உண்மை உணர்வும் பெற்றிறான் ; தன் நிலைக்கேற்ற பயனையும் பெறான்.-இதனால்தான், அஷ்டாஷரத்தில், நடுவில் அமைந்துள்ள’நம:’ என்னும் பதமானது, ம்’ என்னும் அக்ஷரத்தினால் தேறிய ஜீவனுடைய ஸ்வாதந்திரிய நிலையை இல்லை செய்து, பாரதந்திரிய நிலையையே இவனுக்குரிய சீரிய தன்மையாக அறிவிக்கின்றது ‘நம:’ என்பதில், “ம: ந என்று எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டி, ‘எனக்கு நான் இல்லை; எம்பெருமானுக்கே உரியவன்’ என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. அஃது இங்குக் காணத்தக்கது.
”தனக்குப் பாரதந்திரிய நிலையை உண்மையாக உணருங்கால், நன்மை உண்டு; அப்பாரதந்திரிய நிலைக்கு எதிரான ஸ்வாதந்திரிய நிலையை உணருங்கால், நன்மை இல்லை” என்பது அஷ்டாஷர மஹா மந்திரத்தில் தேறிய ஸாரம் பொருளாதலின், ஸ்வாதந்திரியாபிமானம்’ தடை என்பது தெளிவு.
இனி, கருமம் தடை என்பதைக் காண்போம்: புண்ணியமும் பாவமும் கருமம் எனப்படும். இக்கருமம் எம்பெருமானை அடைய வொட்டாது தடுக்கின்றது. ஆதலின்,
விரோதி’ எனப்படுசின்றது.-ஆனால், பொய் கூறுதல் முதலிய பாவம் தடை என்னில், அதை நம் மனம் ஏற்கின்றது போன்று, புண்ணியமும் தடை என்னில், அதை நம் மனம் ஏற்குமோ? ஏற்காதன்றே?-உண்மை இங்ஙனம் இருக்க,புண்ணியத்தைத் தடையாக கூறுவது யாங்ஙனம்? எனச் சிலருக்கு இங்கு ஐயம் எழக்கூடும்.-இதற்குப் பரிஹாரம் பின் வருமாறு
‘புபுஷு, முமுஷு என மானிடரை இருவகையில் வகுத்துக்காணுதல் வேண்டும். இம்மை
மறுமைகளில் இன்பத்தை விரும்புகின்றவன் புபுஷு என்றும், பரம புருஷனை அடைய
விரும்புகின்றவன் முமுஷு என்றும் கூறப்படு கின்றனர். புபுஷு நிலைமைக்கேற்ப இம்மை
மறுமைகளில் ஓரொரு நன்மைக்கு எதுவாய் உள்ளது புண்ணியம் எனப்படும்.உதாரணமாக இவ்வுலகில் பசு, பூமி, புத்திரன், முதலிய நன்மைக்கு ஏதுவாயுள்ள புண்ணியங்களையும்,
மறுமையில் ஸு வர்க்கம் முதலிய நன்மைக்கு எதுவாயுள்ள புண்ணியங்களையும் நாம் காணலாம். இப்புண்ணயங்கள், பரமபுருஷனை விரும்புபவனுக்கு (முமுக்ஷவிற்கு) இம்மை
மறுமைப் பயன்களைக் கொடுத்துத் தடையாயிருக்கின்றமையின்,பாவங்களேயாம்?.
(அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்) என்னும் சுருதி வாக்கியமானது, குதிரை தன் ரோமங்களை விடுவது போன்று, புண்ணிய பாவங்களாகிற கருமத்தை விட்டு, பரமனுடைய
உலகத்தை இந்த ஜீவன் அடைவதாகக் கூறுகின்றமையின், கருமம் தடை எனத் தெரிகிற தன்றோ?(புண்ய பாபே விதூய நிரஞ்ஜன: பரமம் ஸாம்ய முபைதி) என்னும் வாக்கியமும் இங்குக் காணத்தக்கது.-இக்கருத்தாலே பொய்யில் புலவரும் *இருள் சேரிரு வினையுஞ் சேரா’ என்று கூறிச் சென்றனர்.-இதுகாறும், கூறியவாற்றால் கருமம் தடை என்பதைக் கண்டோம். இனி, ப்ரக்ருதி ஸம் பந்தம் விரோதி என்பதைக்காண்போம்
ப்ரக்ருதி ஸம்பந்தம்‘ என்னுமிடத்திலுள்ள”ப்ரக்ருதி’ என்னும் சொல், தேவ சரீரம், மானிட சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம் என்னும் நான்கு வகையிலுள்ள அசித்தைக் குறிக்கும்; ஸம்பந்தம் என்னும் சொல்,அந்த அந்தச் சரீரத்திற்கும் ஆத்மாவுக்கும் உள்ள-தொடர்பைக் குறிக்கும். இத்தொடர்பு, எம்பெருமானைப் பெற்று, பூர்ணமாக அனுபவித்து, அடிமை செய்து, அவனை உவப்பிப்பதற்குத் தடையாயிருக்கின்றது.-இப்பொருள்  (தஸ்ய தாவதேவ சிரம் யாவந்ந விமோ யே அத ஸம்பத்ஸ்யே) என்னும் சுருதியினால் நன்கு விளங்கும். இந்தச்
சுருதியின் கருத்து: “ஸத் என்னும் பரமனைப் பஜனம் செய்பவனுக்குச் சரீரத் தொடர்பு
உள்ளவரையில் விளம்பம் உண்டு; சரீரத் தொடர்பு மறுவலிடாதபடி விட்டதும் பரமனை அடைகின்றான்” என்பதாம்.இதனால்,’சரீரம் தடை’ என்பது வெள்ளிடைமலை.
இவ்வாறு, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதைக் கண்டோம்.
மேற்கூறிய அஜ்ஞானம் முதலியவை போன்று,அஜ்ஞான வாஸனை, கரும வாஸனை,
ருசி ஆகிய இவையும் பரமபுருஷனை அடைய வொட்டாது தடையாயுள்ளனவாம்.
பாம்பு முதலியவற்றைக் காணும் போது, உண்டாகும் அச்சம் முதலியவற்றுக்கு காரணமாயுள்ளது ‘அஜ்ஞான வாஸனை’ என்றும்,-துரும்பு முதலியவற்றைக் கிள்ளுதற்குக் காரணமாயுள்ளது ‘கரும வாஸனை’ என்றும், பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்
களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை ‘ருசி’ என்றும் நாம் அறிதல் வேண்டும்.-இங்ஙனம், அஜ்ஞானம், கருமம்,ப்ரக்ருதி ஸம்பந்தம், அஜ்ஞான வாஸனை,கரும வாஸனை,ருசி இவை பரமனை அடைவதற்குத் தடையாய்க் கண்டோம்.

இனி, சிலருடைய கருத்துக்கிணங்க வேறொருவாறு தடையைக் கூறுவதாகக்  தோன்றும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும் காண்போம்(தத் யதா ஹிரண்யநிதிம் நிஹிதம் அக்ஷேத்ர ஜ்ஞா: உபர்யுபரி ஸஞ்சரந்த: ந விந்தேயு: எவ மேவ இமா: ஸர்வா: ப்ரஜா:
அஹரஹர் கச்சந்த்ய: ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா🙂 என்பதே அவ்வேதாந்த வாக்கியமாம்.-இவ்வாக்கியத்தின் கருத்து : ‘ பூமியின் கீழே உள்ள புதைபொருளை அப்பூமியின் இயல்பை உணராதார், தினந்தோறும் அப்பூமியின்
மேலே செல்பவராயிருந்தும், எங்ஙனம் பெறு கிறாரில்லையோ, அங்ஙனமே, மிகமிகச் சிறந்த பயனும், ஆத்மாவுமான பரமனை உணராதார். எல்லாக்காலத்தும் அவனோடு ஒருவாறு தொடர்புற்றிருந்தும், பெறுகிறாரில்லை. இவர் பொய்யான அஜ்ஞானத்தினால் ஆத்மாவினிடத்தில் நின்றும் இழுக்கப் பெற்றும், மறைக்கப் பெற்றும் இருப்பவரன்றோ?’ என்பதாம்.
இங்கே, பின்குறிக்கப்பெறும் பொருள்முக்கியமாய் அறியத்தக்கதாம் -” முத்துச்சிப்பி
வெள்ளியாய்த்தோன்றுதற்குக் காரணம் குற்றம் என்பது உலகானுபவத்தினால் எங்ஙனம் புலனாகின்றதோ, அங்ஙனமே, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணம்
குற்றம் ‘ என்பதும் பிரமாணத்தினால்(வேதாந்த வாக்கியத்தினால்) புலனாகின்றது.
அக்குற்றம் அவித்யை. அஜ்ஞானம் என்பனபோன்றுள்ள சப்தங்களினால் குறிக்கப் பெறுகின்றதாம். அந்த அஜ்ஞானமும், அதனால் உண்டாம் பிரபஞ்சத்தோற்றமும், பிரபஞ்சமும் பொய்ப்பொருளாம்.
“தத்த்வம் அளி’ என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒருவனே உண்மைப் பொருள்
என்னும் உண்மை உணர்வு உண்டாகும் போது, மேற்கூறிய அஜ்ஞானமும்,அதன்
காரியங்களும், அழிந்து விடுகின்றமையின், அந்த அஜ்ஞானமும் அதன் காரியங்களும்
பொய்ப் பொருள்’ என்பது தெளிவாக விளங்குகின்றது? “இதைத்தான் மேற்
கூறிய வேதாந்த வாக்கியத்திலுள்ள அந்ருதசப்தம் இயம்புகின்றது” என்பதே அறியத்
தக்க அம்முக்கியப் பொருளாம்.
‘அஜ்ஞானமும், அதன் காரியமும் உண்மைஉணர்வினால் போக்கத் தக்கவையாயிருத்
தலின், பொய்ப் பொருள்களாம்’ என்பதும்,-‘அந்த அஜ்ஞானமே, ப்ரஹ்மமாக மாத்திரம்
இருக்கும் இருப்புக்குத் தடை’ என்பதும் இங்குத் தேறிய ஸாரப் பொருள்களாம்.
இக்கருத்தையும், மேற்கூறிய (அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவை
தடை என்னும்) கருத்தையும் வேத வாக்கியங்களிலே காணுமவர்க்குக் கலக்கம் ஏற்படுவது இயல்பேயாம். இக்கலக்கத்திற்கு, மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிக்காணுங்கால் உண்டாம் பரிஹாரம் பின்வருமாறு-
”நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் மருத்துவனைக் கிட்டி, தன் நோய் தீருமாறு
மருந்தைப் பெற விரும்புகின்றான். அம்மருத்துவனும், அவன் நோயை உள்ளபடி
உணர்ந்து, அந்நோய்க்குத் தக்க மருந்தைக்கண்டு, உதவுகின்றான். அங்ஙனம் உதவப்
பெற்ற அந்நோயாளியும், அம்மருந்தை உட் கொள்ள,அவன் நோய் தீருகின்றது. இதை
இங்கு எடுத்து நாம் நோக்குதல் வேண்டும்.-நோக்கின் நோயின் உண்மையை உணர்ந்து,
தக்க மருந்தை உதவுகின்றதும், நோயின் பொய்மையை உணர்ந்து அங்ஙனம் மருந்தை
உதவா தொழிகின்றதும் யார்க்கும் நன்கு விளங்குகின்றன அல்லவா? நோயின் பொய்
மையை உணர்ந்தும், மருந்தை உதவுவார் உண்டோ? இல்லையன்றோ? இதுபோன்று, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணமாயுள்ள குற்றம்\(அஜ்ஞானம்) உண்மையாயிருப்பின், அது தீருவதற்கு, ‘தத் த்வம் அளி” என்னும் சாஸ்திரம், ஆத்மா ஒருவனே உண்டு’ என்னும் உண்மையை உணர்த்தி, உதவி செய்ய இடம் உண்டாம். ‘அஜ்ஞானம் உண்மை இல்லை’ என்னில், ‘சாஸ்திரம் உதவி செய்ய இடம் இல்லை’ என்பதைக் கூறுதலும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ?’அஜ்ஞானமும் உண்மைதான்’ என்று கொள்ளில், ‘ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்; மற்றொன்றும் உண்மையில் இல்லை என்னும் கொள்கைக்கு இடமுண்டோ? இல்லை யன்றோ? (‘அஜ்ஞானமும் உண்மை’ என்று கொள்ளுங்கால், அஜ்ஞானமும் ஆத்மாவும் உண்மைப் பொருள்களாய்த் தேறுகின்றன அல்லவா? ‘ஆத்மாவைத் தவிர ஒன்றும் உண்மையில் இன்று’ என்பது பொருந்துவது எவ்வாறு?)
இதனால் என்ன தேறிற்று? என்னில் ‘ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்கு ஏதுவான
அஜ்ஞானத்தை உண்மையாகவோ, பொய் மையாகவோ ஒத்துக் கொள்வதற்கு இல்லை”
என்னும் கலக்கமே தேறிற்று.-இவற்றை நெஞ்சில் கொண்டு நோக்கு
வார்க்கு, ”தத் யதா …..அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதிக்கு மேற்கூறியவாறு கருத்துரைத்தல் பொருத்தமுடைத்தன்று என்றால், வேறு கருத்து யாதோ? எனின், கூறுவோம்.
ஒருவன் செய்யும் கருமம், பயனில் சிறிதும் விருப்பம் இன்றி,எம்பெருமான் முகமலர்த்திக்
குறுப்பாகவே, செய்யப் பெறுமாயின், அக் கருமம் ருதம்‘ என்றும், இவ்வாறின்றி
இம்மை மறுமைகளில் ஓரொரு பயனை விரும்பிச் செய்யப்படுமாயின், அக்கருமமே
‘அந்ருதம்’ என்றும் கூறப்படும். இம்முறையில், மேற்கூறிய சுருதியில் உள்ள அந்ருத
சப்தம், ஓரொரு பயனை விரும்பிச் செய்யும் கருமத்தையே கூறுகின்றமையினாலும், அக்
கருமம், பரமனை அடைவதற்குத் தடையாயிருத்தலாலும், மேற்கூறியவாறு இங்குக்
கலங்க இடம் இல்லை.
“அச்வ இவ ரோமாணி விதூய பாபம்” என்னும் சுருதி, பாவங்களை விட்டுப் பர
மனைப் பெறுகின்றான்” என்னும் கருத்தையும்,
“ஏதம் ப்ரஹ்ம லோகம் நவிந்தந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதி,பாவமுடை
யார் பரமனைப் பெறுகின்றாரில்லை’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளனவாதலின், இங்கு முரண்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லை?-இல்லையன்றோ? இதனால்,’அந்ருத சப்தம்
பொய்ப் பொருளைக் குறிக்கும்’ என்று கூறும் போது ஏற்படும் இடர்களுக்கும் இங்கு இட
மின்று என்பது யாவருக்கும் புலனாகும்.
இவ்வாறு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிப் பொருள்கொள்வார்க்குக் கலங்க
இடமில்லை என்பதைக் கண்டோம். இனி, இராமாயணத்தில் விரோதியைக் காண்போம்:

இராமாயணமும் விரோதியும்

‘இராமாயணம் விரோதியை, ஒருவாறு மெய்ப்பொருளாகவே உணர்த்துகின்றது
என்பதையும் உபபாதித்துக் காட்டுவோம் :-இது மெய்’ ‘இது பொய்’ என்பதை நாம்
அறுதியிடுவது எவ்வாறோ? எனின், யாரும் எளிதில் உணருமாறு ஓர் அனுபவத்தை
முதலில் எடுத்துக் காட்டுவோம்.-ஒருவன், முதலில் முத்துச் சிப்பியை வெள்ளி என அறிந்து, அதை எடுக்கச் சென்று,பின்பு, இது சிப்பி; வெள்ளியன்று’ என்னும் உண்மையை உணர்ந்து, அதை எடுக்காது விட்டிடுகிறான். அங்கு, ‘வெள்ளி பொய்ப்பொருள்’ என்பது தெளிவு.
வேறொருவன், வெள்ளியையே வெள்ளி என உண்மையை உணர்ந்து, அதை எடுக்கச் சென்று, எடுத்து, அதனாலாம் பயனைப் பெறுகிறான். இங்கு, ‘வெள்ளி மெய்ப் பொருள்
எனபதும் யார்க்கும் நன்கு புலனாம்.
இம்முறையைக் கைக்கொண்டு.இராமாயணம் மெய் பொய்களை அறுதியிடுகின்றது’
என்பதை நாம் அறியலாம்; எங்கே? என்னில், திருவடி, இராமபிரானுடைய திருக்குணம்
சிறிதும் நடையாடாத அசோகவனத்தில் போய்ப்புக்கு, தென்றலும், சிறுதுளியும்
போன்றுள்ள இராம நாமத்தைக் கூறுங்கால், அதைத் திருச்செவி ஏற்ற ஸீதாபிராட்டியார்-முதலில் இந்நிலத்தில் இது பரிமாறுவது ஒன்றல்ல; இது சித்தமோஹத்தால் வந்ததோ? வாதகதியோ? உன் மாதஜவிகாரமோ?ம்ருக திருஷ்ணிகையோ?” என்று ஐயமுறுகிறார். பின்பு ‘இவன் (ஹனுமான்) முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்; இது
கேட்டு, நாம் வேற்றுமை பெற்றிருக்கிறோம்;-ஆனபின்பு, இது மெய்யாம்’ என்று திருவுள்ளம் தெளிந்து இன்புறுகிறார் என்பது வரலாறு.-இவ்வரலாற்றைத் தெரிவிக்கும் வார்த்தை:-(கிம்நு ஸ்யாத் சித்தமோஹோயம் பவேத் வாதகதிஸ்த்வியம் | உன்மாதஜோ விகா
ரோவா ஸ்யாத் இயம் மருக ருஷ்ணிகா | அதவா நாய முன்மாத : மோஹோ யுன்
மாத லக்ஷண: ஸம்புத்யே சாஹமாத்மான மிமம்சாபிவனெளகஸம்) என்பதாம்.
(தலைமகனைப் பிரிந்த தலைமகளுக்கு. தன் தலைமகன் நன்மையைக் கேட்பதில் விருப்பம்
உண்டாவது இயல்பேயாம்; அவ்விருப்பினால் அவனைப் பற்றிய எண்ணமும் இடையீடின்றி
ஏற்படும். அவ்வெண்ணத்தின் ஒருநிலையை சித்தமோஹம் என்பர். ஊணும் உறக்கமும்
இன்றி இருக்கும்போது, வாத பித்த சிலேஷ்மங்களாகிய தாதுக்களுக்குக் கலக்கம் உண்
டாகும்.அக்கலக்கத்தினால் உண்டாகும் காற்றின் ஒரு நிலைக்கு வாதகதி’ என்று பெயர்.
அந்நிலையிலுள்ள பிரமத்தை இங்கு வாதகதி என்று கூறுவர். தலைமகனைப் பிரிந்த தலை மகளுக்கு உள்ள ஒருநிலையை உன்மாதம் என்றுபகருவர். அந்த உன்மாதத்தினால் உண்டாகும் பிரமத்தை உன்மாதஜ விகாரம் என்று செப்புவர். மருகதருஷ்ணிகையாவது ஒன்றை மற்றொன்றாக அறிதலாம். கானலைத் தண்ணீராகக் கருதலாம் ]

இங்கு ஸீதாப்பிராட்டியார், முதலில் திருவடி வார்த்தையைப் பொய்யாக பிரமித்து,
தக்க சான்றுகளினால், ‘இது பொய் அன்று ;மெய்தான்’ என்று அறுதியிட்டிருப்பதை உலகம் நன்கு காணக் கூடுமன்றோ? இது போன்று,(பிரஹ்மம் பிரபஞ்சமாகத் தோன்றுதற்கு காரணமாகிய) ‘அஜ்ஞானமும், பிரபஞ்சத் தோற்றமும், பிரபஞ்சமும் ஆகிய இவை
பொய்ப் பொருள்கள் தாம்’ என்று அறிதியிடு தற்குத் தக்க சான்றுகள் உளவாகில், நாம்
இசையத் தட்டு ஒன்றுமிராது. அங்ஙனம் உலகத்திலும் சாஸ்திரத்திலும் சான்றுகள்
காணக் கிடைக்காதவையே யாம்’ என்பது இங்கு முக்கியமாய் அறியத்தக்கதாம்.
இனி, தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்தரியாபிமானமுமாகிய இவை, பரமனைப்
பெற்று அனுபவித்ததற்கு உண்மையான இடையூறாம்’ என்பதை இராமாயணத்தில்
காண்போம். இங்கு முதலில், பின்வருவது கவனிக்கத் தக்கதாம்:
ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருப்பானாயின், அவன் ஸத்து’ என்றும், அவ்
வறிவு பெறாது இருப்பானாயின், அவன் அஸத்து’ என்றும் வேதாந்தம் அறிவிக்கின்றது
(ஸந்தமேனம்; அஸன்னேவஸபவதி) ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருந்தும், அவ்வறிவுக்கு ஏற்ப அன்பையும் ஆதாரத்தையும் பரமன்பால் செய்யாது இருப்பின், அவனை
ஸத்து என்றோ, அஸத்து என்றோ, மேற்கூறிய சுருதி அறிவித்திலது. ஆயினும், அவனும்
அஸத்தே’ என்றுதான் கூறுதல் வேண்டும்.-அவன் அறிந்தும் அன்பைச் செய்யாது இருக்
கின்றமையின் அவனுக்குக் குற்றம் அதிகமாம்-இதுபோன்று, “ஒருவன் ஜீவனாகிய தன்னை
தேஹமாகவோ, ஸ்வதந்திரனாகவோ உணரவில்லை; தன் உண்மை நிலையை ஒருவாறு
உணர்ந்தவனேயாம். ஆனாலும், அவன் தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்திரியாபிமான முமாகிய குற்றம் பெற்றிருப்பவன் எவ்வாறு சரிதம் பெற்றிருப்பனோ, அங்ஙனம்
சரிதம் பெற்றிருப்பானாயின், பரமனை அனுபவித்து வாழப்பெறாது இழந்து விடுகிறான்”
என்பது ஓர் உயரிய உண்மைப் பொருளாம்.
இவ்வுண்மைப் பொருளை இராமாயணம், சக்ரவர்த்தியின் வரலாற்றில் தெளிவாகத்
தெரிவிக்கின்றது.எங்கே?எங்ஙனம்? என்னில்,
அவ்வரலாற்றை முதலில் கூறுவாம்: “சக்ரவர்த்தி, வஸிஷ்டரைக் குல குருவாகக் பெற்
றிருந்தவர் ; அச்வமேதம், புத்திர காமேஷ்டி முதலியவற்றைச் செய்தவர். ஆதலின், ஆத்மாவின் உண்மை நிலையை உணராதவரல்லர். இங்ஙனம் இருப்பினும், இராமபிரானுக்கு முடி சூடுவதாய் நிச்சயித்து, தன் ப்ரிய மஹிஷியான கைகேயியிடம் சென்று தெரிவிக்க. அப்போது, ‘பரதனுக்கு முடி சூடவே ணும்; இராமன் பதினான்கு வருஷம் வனம் செல்லவேணும்’ என அக்கைகேயி வேண்டிக் கொள்ள சக்ரவர்த்தியும் அவ்வேண்டுதலுக்கு இசைய, இராமபிரான் இலக்குமணனோடும், ஸீதாபிராட்டியோடும் காடு சென்றனன்” என்பது வரலாறாகும்.
இவ்வரலாற்றைக் கூறுமிடத்து, இராமாயணம் சக்ரவர்த்தியைப் பல இடங்களில்
கைகேயியிடம் காமம் பெற்றிருப்பவன்’ என்றே நிந்தித்துக் கூறியிருக்கின்றது. ‘
காமீ கமல பத்ராஷீ முவாச வனிதாமிதம்) என்பதையும், இது போன்றுள்ள வசனங்களையும்
இங்குக்காண்க. ஒருவனுக்கு, ஆதமாவினுடைய உண்மை உணர்வு உள்ளபடி இருக்குமேயானால், பெண்ணாசை சிறிதும் இராது.’காமீ. என்று கூறும் போது, பெண்ணாசை உண்டு என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
தேஹாத்மாபிமானமும் ஸ்வாதந்திரியா பிமானமும் பெற்றிருப்பான் போன்றவன் சரிதமே
யன்றோ? அக்காலத்திலேயே பரம புருஷனான இராமபிரானை அனுபவித்து வாழப்பெறாது
முடிய நேரிட்டதன்றோ? ஆனால், ச க்ரவர்த்தி இராமபிரானைப் பிரிந்து முடிய நேரிட்டதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு; கைகேயிக்கு முன்னமேயே சக்ரவர்த்தி இரண்டு வரங்கள் தருவதாய் வாக்களித்திருந்தத்தினாலும், அதைப் பின் சென்று ஸத்தியத்திற்குக் கட்டுப்பட்டு,இராம பிரானாகிய தருமத்தைத் துறந்து விட்ட தனாலும் அப்பரமனை இழக்க நேரிட்டது. ஸத்திபம்’ என்பது தருமமேயானாலும், இராமபிரா னாகிய மிகமிகச் சிறந்த தருமத்தைக் காணுங்கால், அந்த ஸத்தியம் என்னும் தருமத்தை ஒரு பொருளாய்க் கருதாமல் காற்கடை கொள்ள வேண்டியவன் சக்ரவர்த்தி.அங்ஙனம் அந்த ஸத்தியத்தைக் காற்கடை கொள்ளாது பற்றி, துறக்கத் தகாத அப்பரமனைத் துறந்ததே, இராமனை அனுபவிக்கப் பெறாது இழந்ததற்கு காரணம். [ இராமபிரான் மிக மிகச் சிறந்த தருமம் என்பதை வரும் உபாயத்தைப் பற்றிக் கூறும் பகுதியில் நாம் காணலாம்.] இதை, பிள்ளை லோகாசார்யர் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு” என்று அருளிச் செய்திருக்கிறார்.-உண்மை இவ்வாறு இருப்பினும், கைகேயி பால் உள்ள ஆசையும் இராமபிரானை இழந்த தற்கு காரணம் என்னில், குற்றம் ஒன்றும் வாராது, ‘மற்றதில் பற்றுள்ளவனுக்குப் பரமன் கிடைக்க மாட்டான்; பற்றற்றவனுக்கே பரமனைப் பெறலாம்’ என்பதும் சாஸ்திரத்தில் கூறப்பெற்றுள்ள ஓர் உயர்ந்த உண்மை . இவ்வாறு தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியாபிமானன் இவற்றின் தடைத் தன்மையைக் கண்டோம
இனி, இராமாயணத்தில் கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதையும் காண்போம். இராமபிரான் எம்பெருமான்; ஸீதாபிராட்டி எம்பெருமாட்டி” என்பது உண்மை.-இராமபிரானுக்குப் புண்ணியமும் பாவமும் உண்மையில் இல்லை. இதுபோன்று, ஸீதா பிராட்டியாருக்கும் புண்ணியமும் பாவமும் இல்லை’ என்பதும் உண்மையேயாம். ஆனாலும், ஸீதாபிராட்டியார் ., ஜீவன், இங்ஙனம் இருப்பின் பரமனைப் பிரிய நேரிடும்’ என்பதைத் தம் சரிதத்தில் வெளியிட்டிருக்கிறார்.-இதை முதலில் நாம் இங்கு அறிதல் அவசியமாம்.
“‘இராமபிரான் காட்டிற்கு எழுந்தருளும் போது, ஸீதாபிராட்டியாரின் மென்மையை
யும், காட்டின் வன்மையையும் திருவுள்ளம் பற்றி, அயோத்தியிலேயே தாம் வனவாஸம்
செய்து திரும்பிவரும் வரையில் அப்பிராட்டியாரை இருக்க வேண்டிக் கொள்கிறான். அப் பிராட்டியாரும் அப்பெருமான் பிரிவு பொறாது, தம்மை உடன் அழைத்துச் செல்ல வேணும் என விரும்புகிறார். பலகால் விரும்பியும், இசையாது இருந்த இராமபிரானைக் குறித்து, “என் தந்தையார் என்னை ஆண்மை உடையானொருவனுக்குக் கொடாது, பெண்
ணுக்கே கொடுத்து விட்டார்; ஆனால், “நான் பெண்ணோ? ‘ என்று தேவரீர் எண்ணலாம்.
அகவாயில் பெண்மையும், புறவாயில் ஆண்மையும் பெற்றிருப்பவரன்றோ ? நீவீர். அகவாயிலும் உண்மையில் ஆண்மை பெற்றிருப்பீராயின், இங்ஙனம் என்னை விட்டுச் செல்வதாகக் கூறுவீரோ ? கூற மாட்டீரன்றோ?-(ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்றனள்” என்பது சரித்திர உண்மை.-தம் சரிதத்தினால் உலகுக்கு நன்மை புரிய வந்த பிராட்டியார், புருஷோத்தமனான இராமபிரானைக் குறித்து, இவ்வாறு என் தந்தையார் பெண்ணுக்கே பெண்ணைக் கொடுத்தார் என்று இயம்புவது முறையாமோ? ஆகாதன்றோ? இவ்வாறு கூறியது பகவதபசாரமன்றோ? இது முதலில் இங்குக்குறிக்கொள்ளத் தக்கது.
மேலும், இராமாயணத்திலேயே வேறொரு வரலாறும் இங்குக் காணத்தக்கதாம்:
இராமபிரான் ஸீதா பிராட்டியார்பால் உள்ள அன்பின் மிகுதியினாலே, மாரீசன் என்னும் மாயா மிருகத்தின் பின்னே வெகுதூரம் சென்று, அம்மிருகத்தை அம்பினால் அடித்துக்
கொன்றனன். அந்த சமயம் மாரீசன் மிருகரூபத்தைவிட்டு, தன் சரீரத்தை எடுத்து
உயிர் துறந்தனன் ; அங்ஙனம் உயிர் துறக்குங்கால், இராமபிரானுடைய குரல் போன்றுள்ள
தன் குரலாலே ஹா ஸீதே ! ஹா லக்ஷ்மணா என்று கூறினன். அக் கூற்று பிராட்டியார் திருச்செவியில் பட, அப்போதுஇலக்குமணனை, இப்போதே நீ சென்று இராமபிரானை இரட்சித்தல் வேண்டும்’ என்று அவள் வேண்டிக் கொள்ள, (இராமபிரா னுடைய சிறப்பைஉள்ளபடி உணர்ந்த ) இலக்குமணன், மாரீசன் மாயையைக் கூறி, அவ்வாறு செல்ல இசையாது இருந்தனன். அங்ஙனம் இலக்குமணன் இசையாது இருக்க, பிராட்டியார் அவனை நோக்கி, கடுஞ்சொற்களைக்-(“”அநார்ய, அகருணாரம்ப, நருசம்ஸ, குலபாம்.ஸந.)கூறினார் என்பதே அவ்வரலாறாம்.-இலக்குமணன் இயற்கையிலேயே இராம
பிரானிடம் அளவற்ற அன்பு பெற்றிருப்பவனாம். அவ்வாறு பரமபக்தி பெற்றிருக்கும்
அந்த இலக்குமணனை நோக்கி, கூறத் தகாத(லக்ஷ்மணா ! நீ நிச்சயமாய் என்னை உனதாககிக் கொள்ளக் கருதி,இம் மாதிரி கபட வேஷத்துடன் கானகம் வந்திருக்கின்றாய்
என்று கூறி) மேற்கூறிய கடுஞ் சொற்களைக் கூறியது அப்பிராட்டியாருக்குத் தகுமோ?
தகாதன்றோ ? இவ்வாறு கூறியது பாகவதாபசாரமன்றோ?இதுவும் இரண்டாவதாக இங்கு
காணத்தக்கது.
‘இம்மாதிரி பரமனிடமும்,பாகவதோத்தமனான இலக்குமணனிடமும் பிராட்டியார்
நடந்து கொண்டமையின், இவை காரணமாகப் பரமனைப்பிரிந்து, அசோக வனத்தில்
அரக்கிமார் நடுவில் இருந்து துன்புற வேண்டிற்று’ என்பதை இங்கு நாம் அறிதல்
வேண்டும்-இதை ஸீதாபிராட்டியார் அருளிச் செய்த”(மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி நஸம்சய:) என்னும் வார்த்தையில் நன்கு காணலாம். இவ்வார்த்தையில், இராமபிரான் திறத்தில் செய்த அபராதத்தை’கிஞ்சித்’என்னும் சப்தமும், இலக்குமணன் திறத்தில் செய்த அபராதத்தை மஹத்’ என்னும் சப்தமும் கூறுகின்றன என்று நாம் நன்கு அறியலாம். இவ்வாறு, கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதை பிராட்டியார் சரிதத்தில் ஒருவாறு கண்டோம்.
இனி, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதை இராமாயணத்தில் சில இடங்களில் காட்டுவோம்.
(1) இராமபிரான், ஸீதையுடனும் இலக்குமணனுடனும் சரபங்கருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளும் தருணம். அத்தருணம் இந்திரன் சரபங்கரிடம் வந்து அளவளாவிக்
கொண்டிருந்தான். அந்த இந்திரன், இராம பிரானை அப்போது கண்டு, இந்த இராமன்,
வேறொருவராலும் சிறிதும் செய்ய இயலாத மிகப் பெரியதொருகாரியத்தை (இராவண
வதத்தைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,அவதரித்தவன். அதை அவன் நிறைவேற்றிய பிறகு என்னைப் பார்ப்பது நலம் என்று கூறி, சரபங்கரிடம் விடை பெற்று, இரதம் ஏறி, தன் உலகம் சென்றான். இந்திரன் சென்றதும், இராமபிரான் சரபங்கரிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கினன் ; பின்பு இந்திரன் வந்து போனதைப் பற்றி வினவினான்.
அவ்வினாவுக்கு விடையாக சரபங்கர் கூறிய வார்த்தையை பின்வருமாறு காணலாம்:

(மாமேஷவரதோ ராம ப்ரஹம லோகம் நி ஷதி 1 ஜிதமுக்ரேண தபஸா து ப்ராபம் அக்ரு
தாத்மபி: அஹம் ஞாத்வா நரவ்யாக்ர வர்தமானம் அதூரத |
ப்ரஹ்மலோகம் நகச்சாமி த்வாம் அத்ருஷ வா ப்ரியாதிதிம் த்வயாஹம் புருஷவ்யாக்ர தார்மிகேண மஹாத்மநா! ஸமாகம்ய கமிஷ்யாமி த்ரிதிவம் தேவ ஸேவிதம் )
இதின் கருத்து : ”இராமா ! எல்லோருககும் நன்மையை அளிப்பவனாகிய இந்த இந்திரன்,பிரமனுடைய ஆணையினால் அப்பிரமனது உலகத்திற்கு என்னை அழைத்துக்
கொண்டு போக விரும்புகின்றனன். நான் ஸமீபத்தில் எழுந்தருளியிருக்கும் உன்னை
ஞானக் கண்ணால் கண்டவனாதலின், மிகவும் இனியனாகிய உன்னை வெளிக்கண்களாலும் கண்டு, களிப்புற எண்ணி, (திரும்பி வருதல், அழிதல் முதலிய குற்றங்களோடு கூடிய) பிரமனது உலகத்திற்குச் செல்ல விருப்பம் இன்றி இருக்கின்றேன். மிகமிகச் சிறந்த தர்மம் எனப் போற்றப் பெறும் பரமனாகிய உன் குளிர்ந்த நோக்குக்கு இப்போது இலக்காகிப் பின்பு அநந்தன், கருடன் முதலிய நித்யர் சூழ்ந்திருக்கப் பெற்றுள்ள பரமபதத்தில் உன்னை அடைய விரும்புகின்றேன்” என்பதாம்.
சரபங்கள் இவ்வாறு கூறி, இராமபிரானை நோக்கி, ” இராமா ! நீ சிறிது நேரம் என்னை
நோக்கிக் கொண்டிரு” என விரும்பி, அவ் வெம்பெருமானுடைய முன்னிலையிலேயே
எரிந்து கொண்டிருக்கும் ஹோமாக்னியில் ப்ரஹ்மமேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டு
பாம்பு தோலை உரிப்பது போன்று மானிட சரீரத்தை விட்டு, அர்ச்சிராதி வழியினால்
சென்று, பரம பத்தில் பரமனைப் பெற்று வாழ்வுற்றார்’ என்பது, சரபங்கருடைய சரித்திர உண்மை.
(2) இராமபிரானுடைய, ஸீதாபிராட்டி என்னும் உயரிய உடைமைப் பொருளை முறைதவறி விரும்பி, தனக்கு ஆக்கிக் கொள்ள இராவணன் எடுத்துச் செல்லும் ஸமயம் அதனை அறிந்த ஐடாயு தமக்கு இயன்ற அளவும் இராவணனோடு போர் புரிந்தார். இறுதி|யில் அப்பாபியினால் பிராட்டியைப் பற்றியே உயிர் துறக்க நேர்ந்தது. பரமபுருஷன் தேடிக் கொண்டு வரும்போது, ‘ஆயுஷ்மன்’ என்று அப்பரமனுக்கு மங்களம் பாடினார் ; “இராவ
ணன் உன் உயிரையும் (பிராட்டியையும் ), என் உயிரையும் கொண்டுபோய் விட்டான்” என்
னும் உண்மையையும் உணர்த்தினார். அவருக்குப் பரமன் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தைச்
செய்து,  (கச்ச லோகாநநுத்தமான்) என்கிறபடி விஷ்ணுலோகத்தையும் தந்திருளினான் என்பது ஜடாயுவின் சரித்திர ஸாரம்.
(3) “சபரி என்னும் வேட்டுவச்சி, தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளின இராமபிரானுக்கும் இலக்குமணனுக்கும் அதிகமான அன்புடன் பூஜை செய்தாள்; அப்பெருமானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்கானாள்; அவளும், தன் உடம்பை விட்டு உத்தம கதியைப் பெற்றாள் என்பது சபரியின் வரலாறு.-இங்கு (சஷுஷா தவ ஸும்யேனே பூதாஸ்மிரகுநந்தன பாதமூலம் கமிஷ்யாமி ) என்னும் வார்த்தை நோக்கத்தக்கது.-மேற்கூறிய மூவிடங்களிலும், சரபங்கரும், ஐடாயுவும், சபரியும் ஆகிய இம்மூவரும் இராமபிரானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்காகி, உடம்பை விட்டு அப்பரமன் திருவடிகளைச் சார்ந்ததாகவே தெரிகின்றமையின்,பிறப்பறுக்கலுற்றாற்கு உடம்பும் தடை’ என்பது நன்கு புலனாம். தேஹாத்மா பிமானம் முதலியன பொய்ப்பொருளாகவே இருப்பின், அவற்றின் காரியம் நிகழ்வதற்கு இடமில்லை யன்றோ? இவ்வாறு இராமாயணத்தில் விரோதியின் உண்மையைக் கண்டோம். இனி உபாயத்தைப் பற்றி ஆராய்வோம்.

———————————

வேதாந்தமும் உபாயமும்

வேதாந்தம் ஜீவன் பரமனைப் பெறுதற்கு எதை ஸாதனமாக அறிவிக்கின்றதோ, அது
உபாயம் எனப்படும். அவ்வேதாந்தம் கூறிய உபாயத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :
இப்பிரபஞ்சத்தை அந்த அந்தக் காலத்தில் ஆக்கி, அளித்து, அழிக்கின்றவன் எவனோ,
அவனே பரமாத்மா எனப்படுகின்றான். அப் பரமனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும், உள்ளத்துக் கொண்டு அன்புடன் சிந்திக்கும் சிந்தனை ‘பக்தி’ எனப்படும்.
இப்பக்தி, இச்சேதனன் எம்பெருமானைப் பெற்று வாழ்வதற்குச் சிறந்த ஸாதனமாம்,
இங்கு (காரணந்து த்யேய: ) என்னும் சுருதி வாக்கியம் சான்றாய்க்காணத்தக்கது.
இந்தப் பக்தியை ஒருவன் சாஸ்திரம் கூறியவாறு செய்து தலைக்கட்டுதற்குச் சிறந்த அறி
வும், ஆற்றலும் இன்றியமையாதனவாம்.இச்சிறந்த அறிவும், ஆற்றலும் எவனுக்கு இல்லையோ, அவன், எம்பெருமானை இழக்க வேண்டுவதில்லை; எம்பெருமான் திருவடிகளில் சரணாகதியைச் செய்து, அவனைப் பெற்று வாழலாம்
சிலர், மேற்கூறிய பக்தியைச் செய்து தலைக் கட்டுதற்குத் தக்க அறிவு ஆற்றல்களைப் பெற்
றிருந்தும், பக்தியை ஸாதனம’ என்று எண்ணிச் செய்யாது, தன் நிலைக்கு ஏற்ப பக்தி
யைப் பயனாகவே எண்ணிச் செய்து,கொண்டானையல்லாலறியாக் குலமகள் போன்று,எம்பெருமான் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி, இன்புறுகின்றனர். இவரே மிகச்
சீர்மையுற்றவராவர்.
சரணாகதியாவது: ‘எனக்குச் சிறிதும் நன்மையில்லை; குற்றங்களெல்லாம் உண்டு.
வேறு இரஷகரும் எனக்கு இல்லை’ என்று தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார் முன்னாக எம்பெருமான் திருவடிகளையே ஸாதனமாகப் பற்றுதலாம். இச்சரணாகதிக்கு, (சரணமஹம் ப்ரபத்யே) என்னும் சுருதி வாக்கியம் தக்க பிரமாணமாகும்.
இவ்வாறு, பக்தியையும் சரணாகதியையும் ஜீவன் எம்பெருமானைப் பெறுதற்கு ஸாதனமாக அறிவிக்கும் வாக்கியங்களைக் கண்டோம்
சிலர் ‘ப்ரஹ்மமாக மாத்திரம் இருத்தல் மோஷம்‘ என்றும், அதைப் பெறுதற்கு ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள் என்னும் (சுருதி வாக்கியத்தினால் ஏற்படும்) ஞானம் ஸாதனம்” என்றும் எண்ணுகின்ற (ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வாக்கியத்தையும் ஆதாரமாய்க் காட்டுகின்றனர்.-இதைக் கேட்பவர்க்கு மனம் கலங்கும் என்பது உண்மையே. இக்கலக்கத்திற்கு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஒரு பரிஹாரத்தைச் சுருக்கமாய்க் கூறுவோம் :

ஒருவனுடைய முயற்சி சக்தியினால் (ஆற்றலினால்) எது உண்டாகிறதோ, அதைப் ‘புருஷதந்திரம்‘ என்றும், ஒருவன் முயற்சி சிறிதும்இன்றி இருந்தும், எது பிரமாணத்திலேயே
ஏற்படுகின்றதோ, அதைப் ‘பிரமாண தந்திரம்’ என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.
மேற்கூறிய பரமனைச் சிந்திக்கும் சிந்தனையும், பரமன் திருவடிகளை உபாயமாய்ப் பற்றும் பற்றுதலும், ஒருவன் முயற்சி சக்தியைக் கொண்டு செய்யும் போது உண்டாகின்றமையின், புருஷ தந்திரமாம். சிலர் கூறுகின்ற வாறு தத்த்வம் அஸி‘ என்னும் சுருதியினால்,’ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்’ என்னும் ஞானம் உண்டாகும் போது,முயற்சி சக்தி ( பக்தி ப்ரபத்திகளுக்குப் போன்று வேண்டப்படாமையின் அந்த ஞானம் பிரமாண தந்திரமாம். இவற்றை நாம் மனத்திற் கொண்டு, பின்வருமாறு இங்கு ஆராய்தல் அவசியமாகும்:
சுருதி வாக்கியத்தினால் உண்டாகும், ‘ஆத்மா ஒன்றுதான் உண்மைப்பொருள் என்னும் ஞானம் மட்டும் மோஷஸாதனமா யிருப்பின், புருஷ தந்திரமான பக்தியையோ,
சரணாகதியையோ, அந்தச் சுருதி வாக்கியம் சேதனனைக் குறித்துக் கட்டளையிட இடம்
பெறுமோ? பெறாதன்றோ?
மேலும், ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி என்னும் சுருதியில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியின் உண்மைக் கருத்தையும், “தத் த்வம் அஸி ‘ என்னும் சுருதியின் உண்மைக் கருத்தையும், முறையே-“வேதாந்தமும் உபேயமும்” “வேதாந்தமும் ஜீவனும்” 
என்னும் பகுதிகளில் கூறியுள்ளோம்; கண்டு கொள்வது.
ஆனால், “ப்ரஹ்ம வேத ” என்பதின் கருத்து யாதோ? எனச் சிலர் வினாவக் கூடும். இவ் வினாவிற்கு, ” பரமனைப் பற்றிய சிந்தனையும்-ப்ரஹ்ம ஞானமாதலின், அந்தச் சிந்தனை
என்னும் ஞானம் பெற்றிருப்பானையே ‘ப்ரஹ்ம வேத’ என்னும் சுருதி குறிக்கின்றது’ என்பது விடையாய்க் காணத்தக்கது.-இவ்வாறு மிகச் சுருக்கமாய் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிய பரிஹாரத்தைக் கண்டோம். இனி, வேதாந்தத்தின்முடிந்த பொருளைக் காட்டுவோம்:
இங்கு பின்வருமாறு வேதாந்தத்தின் அம்முடிந்தபொருள் காணத் தக்கது : பரமனைப்
பற்றிச் சிந்திக்கும் சிந்தனை பரமனைப் பெறுதற்குக் காரணம் என்பது ஒருவாறு உண்மையேயாம். ஆனாலும், ‘அப்பரமன் திருவடித் தாமரைகளையே சரணமாகக் கொண்டு,
அவற்றைப் பெறுகின்றது என்பது மிக மிகச் சிறந்த முறையாகும்”; இதற்குப் பல சான்று
கள் உண்டு.
(I) அறிவாளிகளுள் மிகச் சிறந்தவர் ஸ்ரீ பீஷ்மர். அவர் சரதல்பத்தில் கிடந்து தருமபுத்திரருக்குப் பல தருமங்களை உபதேசம் செய்தனர். அங்ஙனம் உபதேசம் பெற்ற
தருமபுத்திரர், அந்த அந்த தருமத்தை உபதேசம் செய்யும் போது, அது அது சிறந்த
தருமமாகத் தெரிகின்றமையின், மிக மிகச் சிறந்த தருமத்தை அறிய வேணும் என்று
கருதி, தம் சாதுரியத்துக்கு ஏற்ப அப்பீஷ் மரை நோக்கி, ‘தேவரீர் மிகவும் விரும்பும்
தருமம் எது?’ என்று வினவினார். அங்ஙனம் வினவப்பெற்ற ஸ்ரீபீஷ்மரும், ‘நாராயணனு
டைய திருநாமங்களைச் சொல்லுதலே மிக மிகச் சிறந்த தருமம்’ என விடை கூறியிருக்
கிறார். (இது விஷ்ணு ஸஹஸ்ர நாமாத்தியா யத்தில் காணக்கிடக்கின்றது.)
இதைநாம் மனத்திருத்தி, (மிகமிகச்சிறந்த பிரமாணம் எனப் போற்றப்பெறும்) வேதத்
தில் கூறப்பெற்றுள்ள தருமங்களுள், அவ் வேதம் மிகவும் விரும்பும் தருமம் எது? என்
பதையே ஆராய்ந்து அறிதல் இங்கு இன்றியமையாததாகும்.அங்ஙனம் ஆழ்ந்து ஆய்ந்து
காணுங்கால், ‘சரணாகதி’ என்னும் தருமத்தையே வேதம் மிக விரும்புகின்றது என்பது விளங்கும்.ஆனால், “ஸ்ரீ பீஷ்மர்தாம் விரும்பும் தருமத்தைத் தெரிவிக்கும்போது, (ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோதி கத மோமத:) என்று எவ்வாறு தெளிவாகத் தெரிவித்திருக்கிறாரோ, அவ்வாறு வேதமும் சரணாகதியை, தான் விரும்பும் தருமமாய்த்தெரிவித்திருக்கிறதோ?” எனச் சிலர் ஐயமுறக்கூடும். இவ் ஐயத்திற்கு இடம் சிறிதும் இல்லை. எவ்வாறு எனின், கூறுவோம்: ஸ்ரீ பீஷ்மர் விரும்பிய தருமம் திருநாம ஸங்கீர்த்தனம் என்பதற்கு, அவருக்கு “ஏஷமே” என்னும் சொல்லை ஆதாரமாய்க் கண்டோம் அங்கு.-இங்கு, வேதபுருஷனுடைய ஆசாரத்தையே ஆதாரமாய்ப் பின்வருமாறுகாணலாம் :
இப்பிரபஞ்சத்திற்குக் காரணனான எம்பெருமான் அன்புடன் சிந்திக்கத் தக்கவன்’
என்று பக்தியைச் சுருதி சொல்லிற்று. அக்காரணனான எம்பெருமானை மோக்ஷத்தில்
விருப்பமுடைய நான் சரணம் பற்றுகிறேன்’ என்று சரணாகதியைத் தன் ஆசாரத்தில்
உள்ளதாய் அறிவிக்கின்றது. இங்கு மேற் கூறிய “காரணந்து த்யேய:” “முமுக்ஷர்வை
சரணமஹம் ப்ரபத்யே” என்னும் சுருதி வாக்கியங்கள் நோக்கத் தக்கன. ஸ்ரீபீஷ்மருடைய
சொல்லிலும், வேத புருஷனுடைய ஆசாரம் பிரபலமன்றோ? இவ்வாறு வேதத்தில் சான்றைக் கண்டோம்; இனி, பரம புருஷனுடைய திருவாக் கிலும் தக்க சான்றைக் காண்போம்
(2) பரம புருஷன் அர்ஜூனனைக் குறித்து அருளிச் செய்த திவ்விய சாஸ்திரம்
பகவத்கீதை ‘ என்பது உலகு உணர்ந்ததேயாம். அக்கீதையில் உள்ள பதினெட்டு அத்தி
யாயங்களிலும், கருமயோகம், ஞானயோகம்,பக்தியோகம் என்னும் தருமங்களைப் பரக்க
அப்பரமன் உபதேசம் செய்திருப்பது அதை அனுபவிப்போர் அறிந்ததேயாகும். (நான்
செய்பவன்’ இக்கருமம் என்னுடையதுஎனக்கு இப்பயன் வேண்டும்’ என்னும் எண்
ணங்களை அறவே ஒழித்து பரமன் திருவுள்ளம் உகக்குமாறு தன் வருணத்திற்கும், ஆசிரமத்திற்கும் ஏற்ற தருமங்களைச் செய்தலே கருமயோகமாம். இவ்வாறு நெடுகின காலத்தில் கரும யோகத்தைச் செய்து, அதனால் சித்த சுத்தி பெற்று, அச் சித்தத்தைக் கொண்டு,ஜீவ னாகிய தன்னைச் சிந்திக்கும் சிந்தனையே ஞானயோகமாம்.)
உண்மை இவ்வாறு இருப்பினும்,அப்பரமபுருஷன், அந்தக் கீதையின் முடிவில் அருளிச
(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ) என்னும் வார்த்தையைக் காணுங்கால்
சரணாகதியே அவன் உகந்த தருமம் எனத் தெரிகின்றது. இதைச் சிறிது விரித்துரைப்
போம்.
பிள்ளைலோகாசார்யர், “தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்தானே, ஸர்வ
தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று’ என்கையாலே, ஸாக்ஷாத் தர்மம் தானே என்
கிறது’ என்று அருளிச் செய்திருக்கிறார்.-இதின் கருத்து : தருமத்தை நிலை நாட்டுதற்கெனவே திருவவதாரம் செய்தருளின கண்ணபிரான், .தன்னால் உபதேசம்
செய்யப் பெற்றவையும்’ ‘ஒருவாறு வீடு பேற் றைத் தருகின்றவையுமான கரும ஞான
பக்திகள் எல்லாவற்றையும் விட்டு, என் ஒரு வனையே பற்று’ என்கையாலே,அவனே,
நேரே பயனைக் கொடுக்கக் கூடிய தருமம்’ என்பதும், ‘மேற்கூறிய கரும ஞான பக்தி
களாகிய யாவும் அங்ஙனம் நேரே பயனைக் கொடுக்கும் தருமங்கள் அல்ல’ என்பதும்
நன்கு விளங்குகின் றனவல்லவா ? என்பதாம்.
அன்றியும், ‘ பக்தி சபலன்’ (ஜீவன் செய்யும் பக்தியில் மிகவும் விருப்புற்றிருப்பவன்)
என்று புகழப்பெறும் பரமபுருஷன் அப்பக்தியைப் பல இடங்களில் பலவாறாகப் பரக்கப்
பேசி, இறுதியில், ‘அதையும் விட்டு,என்னைப் பற்று’ என்று அருளிச் செய்திருக்கின்றமையின். அப்பக்தியிலும் தானாகிய தருமமேதான் உவந்ததாம் என்பதும் இங்கு தெளிவு.-இவ்வாறு, ‘எம்பெருமான் உகந்த தருமம் சரணாகதி” என்பதைக் கண்டோம். இனி, வைதிகரும் மிகவும் ஆதரித்து, ஆசரித்த தருமம் சரணாகதி’ என்பதைக் காட்டுவோம்.
(3) வேதத்தைச் சிறந்த பிரமாணமாகக் கொண்டு, அவ்வேதக் கருத்தையும் உள்ளபடி
உணர்ந்து, அவ்வுணர்வைப் பின் சென்று நடப்போர் யாவரோ,அவரே வைதிகர் எனப்
போற்றப் பெறுகின்றனர். அவ்வைதிகருள்,-மயர்வற மதி நலமருளப்பெற்ற நம்மாழ்வாரே சீர்மை யுற்றவராவர். ‘அவர் மிகமிகச் சிறந்த பக்திபெற்றிருந்தும், தமக்குப் பரமன்
பால்உள்ள அப்பக்தியை அவனைப் பெறுதற்குக்காரணமாய்க் கருதாது,அவன் திரு
வடித்தாமரைகளையே காரணமாய்ப் பற்றியிருந்தவர்’ என்பதும் மிகவும் பிரஸித்தமானது. இவர் போன்று, இவர் திருவடித் தாமரைகளைப் பணிந்துய்ந்தவரான நம்
ஆசார்யர்களும் சரணாகதி தர்மத்தையே விரும்பி யிருந்தனர் என்பதும் தெளிவு.
இவ்வாறு, வேதம், வேத்யன், (வேதத் தின் முக்கியப் பொருளான பரமபுருஷன்)
வைதிகர் ஆகிற இம்மூவரும் மிகவும் விரும்பும் தருமம் சரணாகதி என்பதைக் கண்டோம்.
இச்சரணாகதியையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’ என்பதை இனிக் காண்போம்.

இராமாயணம்-சரணாகதி-சாஸ்திரம்

பரமாத்மா.ஜீவாத்மா, உபேயம், விரோதி, என்னும் (ஐம் பொருளில் சார்ந்த, நான்கு பொருள்களையும் இராமாயணம் தெளிவாகத் தெரிவிக்கின்றவாறு இக்கட்டுரையி
லேயே ஒருவாறு கண்டிருக்கிறோம். ஆயினும், சரணாகதி தருமத்தைவெளியிடுவதில் இராமயணம் நோக்குடைத்தாதலானும், ‘இராமாயணம் சரணாகதி சாஸ்திரம்’ எனப் பிரஸித்தி பெற்றிருப்பதால்,சரணாகதி தருமத்தையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’
என்று கூறு வதிலும் தட்டொன்றும்இல்லை. இப்பகுதியில், சரணாகதி தருமத்தின் உண்மைகளை நாம் அறியலாம்.
எம்பெருமான் முன்னிலையில் தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார்.
முன்னாக எம்பெருமானை ஸாதானமாய்ப் பற்றுதல் சரணாகதி’ என முன்பு கூறியிருந்
தோம். இங்கு சேதனன்பால் உள்ள பற்றுதல், பேற்றுக்கு ஸாதனமா? அல்லது, இச்
சேதனனால் பற்றப் பெறும் எம்பெருமானே ஸாதனமா? என்னும் ஐயம் ஏற்படுவது
இயல்பேயாம்.

பிள்ளைலோகாசார்யர் ‘பற்றப் பெறும் எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனம்; பற்றுதல் ஸாதனமன்று’ என்று அருளிச் செய்திருக்கிறார் ; சேதனன் பாலுள்ள பற்றுதலை
அதிகாரி விசேஷணமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
இங்கு, முதலில், இவ்விரு ஆசார்யர்களுடைய கருத்துக்களையும் தக்க சான்றுகளுடன்
முறையே விரித்துக்கூறி, கருத்து வேற்றுமை யின்மையையும் காட்டி, பின்பு, இராமாயணத்தில் சரணாகதி பேசப் பெற்றிருக்கும் விதம் இன்னது என்பதையும் தெரிவிப்போம்.
தேசிகன், சேதனன் பாலுள்ள பற்றுதல் பக்தி ஸ்தானத்தில் எமபெருமானை ஸாதித்துத்
தருவதென்றும்,அத்தானத்திலுள்ள எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனமென்றும் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
பிள்ளைலோ காசார்யர் திருவுள்ளம் பின்வருமாறு காணத் தக்கது:
“தருமம்” என்னும் சொல்,எது விரும்பும்பயனுக்கு முக்கிய காரணமோ, அதைக்
குறிக்குமாம். பரமபுருஷன் அவர் அவர் விரும்பும் பயனுக்கு முக்கிய காரணனாயிருத்
தலின்,சாஸ்திரம் தர்மம்’ என்னும் சொல்லையிட்டு, அவனைக் குறிக்கின்றது.
 (ராமோ விக்ரஹவாந்தர்ம 🙂 ‘ (க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் ) என்னும் வாக்கியங்களை
நாம் இங்குக் காணுதல் நன்றாம். மேலும் இந்த எம்பெருமான் எனப் பெரும் தருமம்
மிகச் சீர்மை யுற்றதாம். எவ்வாறு? என்னில் கூறுவோம்:
ஏனைய தருமங்களுக்கும்,எம்பெருமான் எனப்படும் தருமத்திற்கும் மிகவும் வேற்றுமை
உண்டு. எவ்வாறு? என்னில், ஏனைய தருமம் எதுவாயிருப்பினும், அது வேறொன்றின் உத
வியை விரும்பியன்றி இராது. எம்பெரு மானோ,அவ்வாறு வேறொன்றின் உதவியை
விரும்பான்’ என்பது மாத்திரமன்று; அவ்வாறு உதவியைப் பொறுப்பானும் அல்லன்.-இங்கு எடுத்துக்காட்டாகப் பின் குறிக்கப்பெறுவது நோக்கத்தக்கது. பரமனைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்பது நாம் அறிந்ததேயாம். இப்பக்தி, தான் உண்டாம்போது
சேதனனுடைய முயற்சியை விரும்புகின்றது;-இச்சேதனன், சாஸ்திரம் கூறுகின்றவாறு
முதலில் இன்னது பக்தி’ என்பதை உணர்ந்து-அங்ஙனம் உணர்ந்தவாறு முயன்று, செய்யும்
போதுதானே உண்டாகின்றது ; முயன்று-செய்யாதபோது உண்டாவதில்லையன்றோ ?
மேலும் இப்பக்தி, பயனைக் கொடுக்கும் போது, அங்ஙனம் கொடுக்கத்தக்க அறிவு
ஆற்றல்களைப் பெற்றிராமையின், பேரறிவு பேராற்றல்களைப் பெற்றிருக்கும் எம்பெரு
மானை உதவியாய் விரும்புகின்றது. இதனால், பக்தி, தான் உண்டாம்போது, சேதனனு
டைய முயற்சியை உதவியாய் விரும்புகின்றது என்பதும், பயனைக் கொடுக்குங்கால், எம்பெரு மானை விரும்புகின்றது’ என்பதும் நன்கு புல னாகும்.
அன்றியும், சித்தம் சுத்தமாய் இராத போது, அச்சித்தம் பரமனைச் சிந்திக்கப்பாங் காயிராது.ஆதலின்,எதைச் செய்தால் சித்தம் சுத்தி பெறுமோ, அதைச் செய்தல்
இன்றியமையாததாகும். இச்சித்த சுத்தியை கரும யோகத்தைச் செய்து பெறலாகும்.
இதைக் காணுங்கால்,பக்தியைச் செய்தற்குச் சித்த சுத்தி இன்றியமையாததாம். சித்த
சுத்தி பெறுதற்கு கரும யோகத்தைச் செய்தல் இன்றியமையாததாம். ஆதலின், ‘பக்தி,
சித்தசுத்தி வழியாகக் கருமயோகத்தை உதவியாய் விரும்புகின்றதாம்’ என்பது நன்கு
விளங்குகின்றது? (சித்த சுத்தியாவது – உள்ளத் தூய்மையாம்)-இன்னமும், இவ்வாறு, பக்திக்கு உதவியாயுள்ள பலவற்றைச் சாஸ்திரங்களில் காணலாம் .
உதவி வேண்டா உபாயம்
எம்பெருமான் என்னும் தருமத்திற்கோ,ஓர் உதவியும் கூறுதற்கு இன்று. நித்தியரனாய் (என்றும் உள்ளவனாய்) இருத்தலின், ‘உண்டாதல். என்பதே இல்லை; பேரறிவும்,
பேராற்றலும் பெற்றிருத்தலின், பயனைக் கொடுக்கும்போது, பிறருதவி வேண்டுவதில்லை; இயற்கையிலேயே மிகவும் தூய்மை பெற்றிருத்தலின், அத்தூய்மை பெற ஒன்றைவேண்டிச் செய்தலுக்கும் இடம் இன்று. இயற்கையில் தூய்மை பெற்றிருப்பவன் என்பது மாத்திரமன்று; தன் தொடர்பினால் பிறருக்கும் தூய்மையை உண்டு பண்ணுவானன்றோ?
எம்பெருமான்.-மேலும், வேறொன்றின் உதவியையும் எம்பெருமான் பொறான்’ என்பதற்குப் பின் வரும் சரிதம் எடுத்துக்காட்டாகக் கூறப்பெற்றுள்ளது: இந்திரஜித்தினுடைய பிரமாஸ்தி
ரத்தினால் கட்டுண்ட திருவடியை இராக்கதர்மேலும், சணல் கயிறுகளால் கட்டியபோது,
அப்பிரமாஸ்திரம் நழுவியதாயும், அங்ஙனம் நழுவியிருந்தும், இராவணனுடைய உண்மைகளை உணர விரும்பி, கட்டுண்டவன் போன்று, அத்திருவடி இருக்க, அவனை அவ் இராக்கதர் இராவணன்பால் இழுத்துச்சென்றனராம்”. என்பதே அச் சரிதமாம். இச் சரிதத்தில், ‘வேறொன்றின் (சணல் கயிறின்) தொடர்பைப் பிரமாஸ்திரம் பொறுத்திலது’ என்பது தெளிவு. இதுபோன்று, எப்பெருமானும் மற்றொன்றின் உதவித் தொடர்பைப்
பொறான்’ என்னும் உண்மை இங்கு உணரத் தக்கதாம். இவ்வாறு, எம்பெருமானுக்கும்
ஏனைய தருமங்களுக்கும் உள்ள வேற்றுமையையும், எம்பெருமானுக்குள்ள சீர்மையையும்
கண்டோம். மேற் கூறியவாறு, ‘எம்பெருமான் வேறு ஒன்றின் உதவியைச் சிறிதும் பொறான்’ என்பதற்குத் தக்க சான்று யாதோ? எனின், கூறுவோம்: சரணாகதியைக் கூறும் சான்றுகள் பலஉண்டு. அவையாவன ; (மாமே வயே ப்ரபத்யேத்) (தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத்)
(த்வமேவ உபாய பூதோ மே பவ)) ” ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பனவாம்.-இச் சான்றுகளுக்கு முறையே, “யாவர் சிலர் என்னையே பற்றுகிறார்களோ, ‘அந்த ஆதி புருஷனையே பற்றக் கடவன்’ நீயே எனக்கு உபாயமாக வேண்டும்’ ‘எனக்கு
உபாயம் தருமிடத்தில் உன் திருவடிகளையே உபாயமாக அளித்தாய்’ என்னும் கருத்துக்கள்
காணத்தக்கன.-மேற்கூறிய சான்றுகளில்,உபாயப் பொரு ளைக் குறிக்கும் சொல்லைச் சேர்ந்தே ‘ஏவ-என்னும் சொற்களைக் காண்கின்றோமல்லவா?
இச்சொற்கள் இங்கு, பிரிநிலைப் பொருள் பெற்றுள்ளனவாம்,அஃதாவது: எம்பெருமான், அவனைப் பெறுதற்கு முக்கிய காரணனாம்; வேறொன்றும் முக்கிய காரணமாகவோ,
துணைக் காரணமாகவோ இல்லை’ என்பதாம்.
இக் கருத்தைக் காணுங்கால், சேதனன் பாலுள்ள பற்றுதல் காரணமன்று : பற்றப்
பெறும் எம்பெருமானே காரணன் என்பது தெளிவாக விளங்குகின்ற தன்றோ?

அதுவும் அவனது அருளே

இன்னமும், “இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல் பேற்றுக்குக் கார
ணமன்று”, என்பதை  (தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்) என்னும் சுருதியினாலும் நாம் நன்கு காணலாம். இந்தச்சுருதியின் கருத்து : ‘எம்பெருமான் உபாயம்’ என்னும் அறிவு அவ் எம்பெருமானுடைய அருளாலேயே பெறுவதொன்றாம் என்பது.-இந்தச் சுருதி, முன்னம் கூறிய “முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” என்னும் வாக்கியத்தோடு சேர்ந்திருக்கின்றமையின்,-‘எம்பெருமான் உபாயம் என்னும் அறிவை எந்த எம்பெருமான் தன் இன்னருளால் மலரச் செய்கின்றானோ, அவ்எம்பெருமானையே, வீடு பேற்றில் விருப்பமுடைய நான் (வேதபுருஷன்) உபாயமாகப் பற்றுகிறேன்’ என்னும் கருத்து இங்குக் காணத்தக்கதாம்.-இக்கருத்தை ஆழ்ந்து ஆராய்ந்து காணுங்கால், முதலில்,எம்பெருமான் இன்னருளுக்கு இலக்காகிய பின்பு, அவ் இன்னருளினால் ‘எம் பெருமான் உபாயம்’ என்னும் அறிவு பெற்று, அதன் பிறகு, அவ்எம்பெருமானைப் பற்ற விரும்பி, பிறகு, எம்பெருமானை உபாயமாகப் பற்றுகிறான்’ என்னும் அடைவு நன்கு புலப்படுகின்றதன்றோ?
எம்பெருமானை உபாயமாகப் பற்றுதற்கு அங்ஙனம் உபாயமாகப் பற்றுதல் வேண்டும்
என்னும் விருப்பம் காரணமாம். அவ்விருப்பம் உண்டாதற்கு, எம்பெருமான் உபாயம்
என்னும் அறிவு ஏதுவாம். அவ்வறிவு பெறு வதற்கு அவ் எம்பெருமான் இன்னருள் இன்றி
யமையாததாம் என்று வேறொரு வழியில் அமைந்துள்ள அடைவும் இங்கு அறியத் தக்கதாகும்.-இக் கருத்தையே நம்மாழ்வாரும், “என்னுணர்வினுள்ளே இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே” என்ற தமது திருவாக்கினால் வெளியிட்டிருக்கிறார்.
இது காறும் கூறியவாற்றால். ”இந்தச் சேதனன் எம்பெருமானைப் பற்றிய பின்பு.
இவன் துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் எவ்வாறு ஏற்படுகின்றதோ, அவ்வாறே, இவை
இரண்டிற்கும் முன்பு இச்சேதனன் பாலுள்ள பற்றுதலும். அவ்வெம்பெருமானாலேயே உண்டாகின்றது” என்னும் முடிந்த உண்மைப் பொருளும் இங்கு நன்கு விளங்குகின்றது.
இங்கு, பின் குறிக்கப் பெறும் எடுத்துக் காட்டும் காணத்தக்கது: தந்தையான ஒரு
வன், தன் புத்திரனுக்கு ‘காயத்ரீ’ என்னும் மந்திரத்தைசாஸ்திர முறைப்படி உதவுகிறான்.
அங்ஙனம் உதவப் பெற்ற அப்புத்திரனும், தன் தந்தையார் தன் கையில் கொடுத்த
தனத்தை, அத் தந்தையாருக்கே தன் நன்றி அறிதலுக்கு ஏற்பத் திரும்பவும் கொடுக் கின்றான்.-இதுபோன்று, எம்பெருமான் கொடுக்க அறிவு, விருப்பம் இவற்றைப் பெற்ற இச்சேதனன், அவ்வெம்பெருமான் கொடுத்த ஆற்றலைக் கொண்டே அவனை உபாயமாகப் பற்றுகின்றான். ஆதலின், அப்பற்று தலுக்கு உபாயத் தன்மை கொள்ளுதற்கு இல்லை யன்றோ ?

அதிகாரி விசேஷணம்
இதுவரையில் கூறியவற்றால், ‘எம்பெருமானைப் பற்றும் பற்றுதல் ஸாதனமன்று;எம்
பெருமானே முக்கிய தருமமாம்’ என்பதை உணர்ந்தோம். ஆனால், இப்பற்றுதல் இச்
சேதனனுக்குப் பேற்றைப் பெறும்போது,உதவுகின்றது எவ்வாறு? எனின், அதிகாரி
விசேஷணமாய் உதவி புரிகின்றது. இதனைச் சிறிது விரித்துக் கூறுவோம்.
சாஸ்திரங்களில், உபாயம், அங்கம், பலம் என்று கூறப் பெற்றிருத்தலை நாம் காணலாம்.
எம்பெருமானைப் பெற்று அவனையும், திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன்
அனுபவித்து, அவ்வனுபவத்தாலாகிய ஆனந்தம் உள்ளடங்காது தூண்ட, அதனால் செய்யும்
அடிமைத் தொழிலே மிகமிகச் சிறந்த பயனாம். இப்பயனைப் பெறுதற்கு எம்பெருமானே உபாயமாம். இவ்வுபாயத்தை (எம்பெருமானை)ஒருவன் பற்றும்போது, ஏனைய தருமங்கள்
எல்லாவற்றையும் விட்டே பற்றுதல் இன்றியமையாததாகும். இ தற்கு “(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய ) என்னும் கண்ணபிரானுடைய திருவாக்கே தக்க சான்றாம்.
“உண்பானொருவன், முதலில் நீராடியே பின்பு உண்ணுதல் வேண்டும் ” ‘ (ஸ்நாத்வா புஞ்ஜீத) என்று எவ்வாறு சாஸ்திரம் கூறுகின்றதோ, அவ்வாறே, கண்ணபிரானும், ‘பரம புருஷனாகிய என்னைப் பற்றுங்கால், ஏனைய தருமங்கள் எல்லாவற்றையும்அறவே விட்டு, என்னைப் பற்று’ என்று அருளிச்செய்திருக்கின்றான். இவ்வாறு ஏனைய தருமங்களை விடுதல் என்பது அங்கமாம்(உதவியாம்).-இச்சேதனன் பாலுள்ள பற்றுதலோ, உபாயமும் அன்று ; அங்கமும் அன்று. ஆனாலும், இச்சேதனன் பற்றினால், மேற்கூறிய பயனைப் பெறலாம். பற்றாவிடில் பயனைப் பெற இயலாது.- இவ்வாறு, இச்சேதனன் பாலுள்ள பற்றுதல், உபயம், அங்கம் இவற்றில் வேறுபட்டதாயும், பயன் உண்டாம்போது வேண்டப் பெறுவதாயும் இருக்கின்றமையின்,இஃது அதிகாரி விசேஷணமாம்.
இங்கு, கண்ணன் அருளிச் செய்த(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா ஸர்வ பாபேப்ய ; மோக்ஷயிஷ்யாமி மாசுச :)என்னும் வார்த்தை காணத் தக்கது.
இவ் வார்த்தையில்,”ஸர்வ தர்மான்பரித்யஜ்ய” என்னுமிடத்து, முற்கூறியவாறு ஏனைய தருமங்களை அறவே விடுதல்’ என்னும் அங்கத்தையும்; ‘மாம்” என்னுமிடத்து, எம்பெருமானாகிற உபாயத்தையும்; ‘ஏகம்’ என்னுமிடத்துஇவன் பாலுள்ள பற்றுதல் உபாய
மன்று; ‘எம்பெருமான் வேறொன்றின் உதவியைப் பொறான்’ என்பதையும், ” வ்ரஜ என் னுமிடத்து, இவன் பற்றும் பற்றுதலையும்,”த்வா” என்னுமிடத்து, பற்றுதலைச் செய்த
சேதனாகிற அதிகாரியைக் கூறும் முகத்தாலே ‘பற்றுதலாகிய அதிகாரி விசேஷணத்தையும்,,ஸர்வபாபேப்யோ மோ யிஷ்யாமி’ என்னுமிடத்து, பரமனை அடைய
ஒட்டாது தடையாயிருக்கும் பாவத்தைப் போக்கி அளித்தலையும் கண்ணன் வெளியிட்டிருப்பது தெளிவு.-மேலும்,
தனக்கடிமைபட்டது தானறியானேலும் மனத்தடைய வைப்ப தாம் மாலை- வனத்திடரை ஏரி யாம் வண்ணமியற்று மிது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று” என்னும் பூதத்தார் பாட்டும் இங்கு அனுபவிக்கத் தக்கதாம். இப்பாட்டில் முன் அடிகள் தெரிவிக்கும் கருத்து : ”இச்சேதனன்,எம்பெருமான் உடையவன்;தான் உடைமைப் பொருள்’ என்னும் உண்மை
உணர்வு பெறாதிருந்தும், பெரியோர் செய்யும் முறையைக் கண்டாகிலும், எம்பெருமானைத்
தன் மனத்திலே கொண்டு விரும்பக் கடவன்”என்பதாம்.-இனிப் பின்னடிகளின் பொருளைக் காண்போம். (இச்சேதனனுக்கு முன்னடிகளில் கூறியவாறு) விருப்பம் மாத்திரம் உண்டானாலும், எம்பெருமான் இவன் விரோதியைப் போக்கி, இவனுக்குத் தன்னைத்தானே தந்தருளுவன். எவ்வாறு? என்னில்,-காடெழுந்து மேடாயிருக்கும் நிலத்தை ஏரியாக வெட்டுகின்றோம். இச்செயல் மழை பெய்தற்குக் காரணமன்று.நாம் ஏரி வெட்டு
கின்றோம் என்பது பற்றியே மழை பெய்யுமா?-அல்ல. இதனால், ‘ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்று’ என்பது உலகறிந்ததேயாம். ஆனால் ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்றாகில் அங்ஙனம் வெட்டுதல் பயனற்றதுதானே ! என்று எண்ணலாகாது. பரமனுடைய நினைவினால் மழை பெய்யும்போது,அம்மழை நீரை அவ் வனத்திடர் தாங்கிக்’ கொள்ளுமோ? கொள்ளாதன்றோ ? அத்துடரைத் திருத்தி, ஏரியாக
அமைத்து வைப்போமாயின். மழை பெய்யும் போது,அம்மழை நீரை அந்த ஏரி தாங்கித்
தன்பால் வைத்துக் கொள்ளும் என்பதே பின்னடிகளின் பொருளாம்.-இதனால் ‘ஏரி வெட்டுதல், மழை நீர் பழுதுபடாமைக்காகவே யன்றி, மழையைப் பெய்வித்தற்காக வன்று’ என்பது நன்கு தெரிகிறது.-இங்கு, எம்பெருமானை உபாயமாகப் பற்றாதாரை வனத்திடராகவும்,எம்பெருமானை உபாயமாக பற்றும் பற்றுதலை, ஏரியாம் வண்ணம் இயற்றுதலாகவும், சேதனன் பால்உள்ள எம்பெருமான் இயற்கை இன்ன ருளை,ஏரியில் தங்கின மழை நீராகவும் கொள்ளுதல் பொருத்தமாகும்.
இங்குத்தேறிய முடிந்த பொருள் என்ன?எனில், ” சேதனராகிற நாம் செய்யும் நற் செயல்களெல்லாம், எம்பெருமானுடைய இயற்கை இன்னருளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒருவாறு உறுப்பாம் என்பதொழிய, அப்பரமன் அருளை உண்டாக்குதற்கு உடலாகாது”-என்பதே அம்முடிந்த பொருளாம்.
இதனால், “ஏரி வெட்டுதல் போன்று, சேத னன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல்
உபாயமன்று ; ஏரி வெட்டுதல் எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே எம்பெருமானை உபாயமாகப் பற்றுதலும் இன்றியமையாததாம். என்பதை இங்கு ஸாரப் பொருளாய்க் காணலாம். இக்கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு, பிள்ளைலோகாசார்யார்.
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணம் என்று திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.-இதுகாறும், பிள்ளைலோகாச்சார்யருடைய திருவுள்ளத்தைச் சுருக்கமாய்க் கண்டோம்.

இனி, தேசிகன் திருவுள்ளத்தைக் காண்போம்.
‘எம்பெருமானைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்று முன்னமே கூறியிருந்தோம்.
இப்பக்தியைச் செய்யத் தகுந்த அறிவும் ஆற்றலும் உள்ளவன், இதையே மோக்ஷ ஸாதனமாகச் செய்யக்கடவன். அறிவும் ஆற்றலும் இன்றி இருப்பவனோ, பக்தியைச் செய்யமாட்டாது இருப்பினும், வீடுபேற்றை இழக்கவேண்டியதில்லை; எம்பெருமானை உபாயமாகப் பற்றினால், அந்த எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருவன். அங்ஙனம் வந்து சேர்ந்த எம்பெருமான், (பக்தி ஸ்தலத்தில் பக்தி எங்ஙனம் வீடுபேற்றிற்கு ஸாதனமோ, அங்ஙனமோ மோக்ஷத்திற்கு உபாயம் ஆவான்.-இங்ஙனம், ப்ரபத்தி, எம்பெருமான் வேறொரு உபாயமாகிய பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமேயன்றி, நேராக வீடு பேற்றைப் பெறுதற்கு காரணமன்று; எம்பெருமான தான் அப்பேற்றுக்கு காரணம்.-இவ்வாறு தேசிகன் திருவுள்ளத்தைச் சுருக்கமாய் காணலாம்.
மேற்கூறிய இரு பக்ஷங்களிலும், ப்ரபத்தியை, அதிகாரி விசேஷணமாக ஒருவரும்,
எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமாக மற்றொருவரும் திரு வுள்ளம் பற்றியிருத்தலைக் காண்கின்றோம்-இதை நோக்குங்கால், இவ்விரு ஆசாரியர்களுக்கும் திருவுள்ளத்தில் வேற்றுமை உண்டு’ என்பது தெரிகிறது.-ஆனாலும்.எம்பெருமான் நேரே வீடு பேற்றிற்கு உபாயம் என்பதை  இவ்விரு ஆசார்யர்களும்,  திருவுள்ளக் கருத்து வேற்றுமையின்றி, ஆதரித்திருக்கிறார்கள் என்பது நன்கு இங்கு விளங்குகின்றது.   இந்தத் திருவுள்ளக் கருத்தொற்றுமையே இங்கு முக்கியமாய் அனுபவிக்கத்தக்கது.
இனி, இராமாயணம் சரணாகதி தருமத்தை இயம்புகின்றவாறு சிறிது விரித்துக்
 கூறுவோம்.

இராமாயணமும் சரணாகதியும்

தசரத சக்ரவர்த்தி புத்திரப்பேற்றை விரும்பி, வேள்வி செய்யும் தருணம். அத்தருணத்தில், நான்முகனாரும், ஏனைய தேவதைகளும், மற்றும் மஹரிஷிகளும் அவ்வேள்வியில்,
தம்தம் அவியை (ஹவிஸ்ஸை)ப்பெற விரும்பி, ஒன்று சேர்ந்து வந்திருந்தனர். அங்ஙனம்
வந்திருந்த தேவதைகள் முதலானார் யாவரும், நான்முகனாரை நோக்கி, ஓ பகவானே !
உமது அருள்பெற்று, மிக்க பராக்கிரமம் கொண்ட இராவணன், எங்களனைவரையும்
துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனன். நாங்கள் அவனை அடக்கத் தக்க வன்மையற்றிருக்கின்றோம். ஆதலின் அவனைக் கொல்லுதற்கு ஏற்ற உபாயத்தை நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டனர்.
இவ்வாறு வேண்டுங்காலத்து, சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண், பேரொளி
பெற்றிருப்பவனும், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனும், திரு அரையில் கட்டிய கசசை
யுடையனும், என்றும் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் பரந்திருப்பவனும், இப்பிர
பஞ்சத்திற்கு ஸ்வாமியுமான நாராயணன் வைகுந்தத்தினின்றும் எழுந்தருளினன்.
இங்ஙனம் பரமபுருஷன் எழுந்தருளின வரலாற்றைக் கூறும் வார்த்தை,

(ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யுதி : சங்க சக்ர கதாபாணி : பீதவாஸா ஜகத்பதி 🙂 என்பதாம்.-இவ்வார்த்தையில், சரணாகதி தருமத்தின் உண்மை பலவற்றை நாம் உணரலாகும்.(1 ) தருமம், என்னும் சொல்,எது பயனுக்கு ஸாதனமோ, அதைக் குறிக்கும். எம்பெருமான் அந்தஅந்த நன்மைக்குக் காரணனாயிருக்கின் றமையின், தரும சப்தத்தால் குறிக்கப்பெறுகின்றான். அவன் நித்தியமாயிருப்பவன். ஆதலின், ஏனைய தருமங்களில் ஏதேனும் ஒன்று எங்ஙனம் முயற்சி சக்தியினாலேயே ஏற்படுகின்றதோ, அங்ஙனம் எம்பெருமான் உண்டு பண்ணப்படுமவனல்லன் என்று முன்னமே கூறியிருந்தோம்.
எம்பெருமான் எதிர்நோக்குவது
இதைச் சிலர் காணுங்கால், ‘அவர் அவர்விரும்பிய பயன் அந்த அந்தக் காலத்து, யாதொரு இடையூறுமின்றி, எம்பெருமானாகிய தருமத்தினால் ஏற்படத் தட்டென்? ‘ என்றுகருதக்கூடும். ஆனாலும், இங்ஙனம் கருதஇடம் இல்லை. ஏனெனில்,’எம்பெருமானாகிய தருமம் எல்லாருக்கும் என்றும் உள்ளது’ என்பது ஒருவாறு உண்மையே. ஆனாலும், அந்த எம்பெருமானாகிய தருமம் துன்பம் துடைத்து, இன்பம் அளித்து, இவனை நோக்குங்கால், இவனுடைய வேண்டு தலையும் வேண்டுகின்றது.
(ரக்ஷயா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே) என்னும் பிரமாண வசனம் இங்குக் காணத் தக்கது.
இதனால் “‘இரட்சித்தல் என்னும் தொழிலை இயற்கையாகப் பெற்றிருக்கும் எம்பெருமான், (காக்கப்பெறும்) இச்சேதனனுடைய வேண்டுதலை விரும்பியே இவனை இரட்சிக்கின்றான்” ! என்னும் சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையை நாம் உணரலாகும்.
இவ்வுண்மை, மேற்கூறிய “ஏதஸ்மிந் அந்தரே” என்னும்வார்த்தையில் நன்கு புலனாகின்றது . எவ்வாறு என்னில் ?”எம்பெருமான், ஏனைய தேவதைகளைப் போன்று, தன் அவியைப் பெற்றுப் புசிக்க, வேள்வி நிகழும் நிலத்து எழுந்தருளினான்” என்பது இங்கு உண்மையன்று. அங்ஙனம், அவியைப் பெற்றுப் புசிக்கத் திருவிள்ளமிருப் பின். அவர்களைப் போன்று, அந்நிலத்தில் முன்னமேயே எழுந்தருளியிரானோ? சங்கம், சக்கரம், தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும், திருவரையில் கச்சை கட்டியும் போர் புரிபவன் போன்று எழுந்தருளுதலும் ஏற்படுமோ? பிறகு உண்மை என்ன? எனின், ‘; ஏதஸ் மிந்அந்தரே” என்பதை இங்கு உற்றுநோக்குதல் இன்றியமையாததாகும். இச்சொல்லில் நான்முகனாரை நோக்கி, ‘துன்பம் தீர்ந்து இன்பம் யாம் பெருமாறு நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று தேவதைகள் வேண்டுங்காலத்து, எம்பெருமான் எழுந்தருளினான் என்பது கூறப்பெற்றிருத்தலால், ‘எம்பெருமான் இச்சேதனருடைய வேண்டுதலை விரும்பி இரட்சிக்கின்றான்’ என்பது வெளிப் படை.
”பிரமாஸ்திரம் எங்ஙனம் சணல் கயிற் றின் தொடர்பைப் பொறுக்கின்றதில்லையோ ; அங்ஙனமே, எம்பெருமானும் வேறொன்றின் தொடர்பைப் பொறான்’ என்று முன்னம் கூறியிருந்தீர்கள். இப்போது, ‘இச்சேதனன் வேண்டுதலை எம்பெருமான் எதிர்பார்த்தே இவன் காரியம் செய்கின்றான்’ என்று கூறுகிறீர்கள்.இக்கருத்துக்கள் இரண்டும் பொருந்துமாறு யாங்ஙனம்?” எனச் சிலர் இங்கு வினவக்கூடும்.
ஒருவன், வேறொருவரின் உதவி சிறிதும் இன்றி, சமையலைச் செய்ய வல்லவன்,அவனை
வேறொருவன் தன் வீட்டுச் சடங்கு நிமித்தமாய்ச் சமையல் தொழில் புரியுமாறு வேண்டிக் கொள்கின்றான். அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெற்ற அவனும் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, சமையல் செய்கின்றான்.-இவ்விடத்து, “வேறொருவரின் உதவி சிறி
தும் வேண்டாதவன் இவன் என்று கூறினீர்களே? இவன் சமையல் நிமித்தமாய் வேறொருவன் வேண்டுதலை விரும்பித்தானே,வந்து சமையல் செய்தனன்” என்று முரண்பாடு தோன்ற வினவுவாரும் உண்டோ? இல்லை யன்றோ? இங்குக் கருத்து யாதோ? எனின், சமையல் செய்பவன் சமையலைச்செய்யுங்கால், வேறொருவரின் உதவியைச் சிறிதும் விரும்பி யிருப்பின், அஃது அவன் சிறப்பிற்கு (வேறொருவரின் உதவி சிறிதும்இன்றி சமையலைச் செய்ய வல்லவனாயிருக்கைக்கு ) அழிவை விளைக்கும்.
அஃது இல்லையன்றோ?-இது போன்று,எம்பெருமானாகிய தருமம் இச்சேதனன் காரியம் செய்யும்போது, வேறொன்றின்தொடர்பை வேண்டினால், அத் தருமத்தின் சிறப்பிற்கு அவ்வேண்டுதல் அழிவை விளைக்கத்தான் செய்யும். அங்ஙனம் வேண்டாமையின், முன்னம் கூறிய அச்சிறப் பிற்கு (வேறொன்றின் உதவித்தொடர்பை வேண்டாதவனாயிருக்கைக்கு) யாதொரு குறை கூறுதற்கும் இடம் இல்லையன்றோ
இவ்வாறு, இச்சேதனன் வேண்டுதலை விரும்பி எம்பெருமான் இவன் காரியம் செய்பவன்’ என்னும் உண்மையை உணர்ந்தோம்.-இனி, இவ்வார்த்தையில்,சரணாகதியைப் பற்றிய வேறொரு உண்மையையும் நாம் காணலாகும். அவ்வேறொரு உண்மை யாதோ ?எனின், கூறுதும்.

வேண்டுவது விலக்காமையே

(2) எம்பெருமான் உடையவன்; சித்தும் அசித்தும் உடைமைப் பொருள் என்று முன்னமேயே கூறியிருந்தோம். உடைமைப்பொருள்’ ‘உடையவன்’ என்னும் உண்மைப்பொருள்-இரண்டனுள், உடைமையை நோக்கிக்காக்கும் பொறுப்பு உடையவனுக்கு என்றும் உண்டு. அவ்வுடைமைப் பொருள் அறி வுற்றிருக்கும் ஜீவனாயிருந்தால், அந்த ஜீவனுடைய விலக்காமையைக்கண்டு, உடனே வந்து இரட்சிப்பவன் எம்பெருமான். இவ்வுண்மை
“ஜகத்பதி ” என்னும் சொல்லைஉற்று உணர்ந் தால் நன்கு உணரலாகும். இச்சொல் ‘இப்
பிரபஞ்சத்திற்கு ஸ்வாமி’ என்னும் பொருளைக் காட்டி நிற்கின்றமையின். இப்பிரபஞ்சம்
உடைமைப் பொருள்’ எம்பெருமான் உடையவன்’ என்பது இங்குத் தெளிவன்றோ? இராவணனால் துன்புற்றிருக்கும் தேவதைகள் முதலானாருக்கு உள்ள விலக்காமையைக் கண்டு,உடனே எம்பெருமான் எழுந்தருளினன்’ என்னும் உண்மையை இங்குக்காணலாமல்லவா? மேற்கூறிய உண்மைகளை உணருங்கால், இச்சேதனன், எம்பெருமானாகிய தருமத்தினால் தன் நிலைக்கேற்ற நன்மையை அடையும் போது, ‘சேதனனாகிய இப்பொருள் எம்பெருமான் ஒருவனுக்கே இரட்சிக்கத் தக்கதாம்?-எம்பெருமான் கிட்டிக்காக்கும்போது, அவன் செய்யும் இரட்சணத்தை விலக்காது இருத்தலும் இவனுக்கு இன்றியமையாததாம். என்பன தேறிய பொருள்களாக நன்கு விளங்குகின்றனவல்லவா?

பிராட்டியை முன்னிடுதல்

இனி, இந்த இராமாயணத்திலேயே, ‘இச்சேதனன் எம்பெருமானைச் சரணம் பற்றுங்கால், பெரிய பிராட்டியாரை முன்னிடுதலும் இன்றியமையாததாகும்’ என்னும் ஸாரப்பொருளையும் நாம் காண்போம். இப்பொருளை இராமாயணம் பலவாறாக விரித்துக் கூறியிருக்கின்றது. இதைச் சிறிது விவரிப்போம்.-எம்பெருமானும் பெரிய பிராட்டியாரும்
இச்சேதனனை இரட்சிப்பவராம். எம்பெருமான், இச்சேதனன் துன்பம் தீர்ந்து, இன்பம் பெற்று வாழ்தற்கு முக்கிய காரணனாம். பெரிய பிராட்டியாரோ, இச்சேதனன் எம் பெருமானைச் சரணம் பற்றுங்கால், புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்பவராம்.
புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்கையாவது : இச்சேதனன் எமபெருமானைச் சரணம் பற்றுங்கால், இவன் நெடுகின காலத்தில் அறிந்தும் அறியாமலும் எண்ணிறந்த பாவங்களைச் செய்திருக்கின்றமையினாலும், இவன்,தன் முன்னிலையில் வந்து நிற்குங்கால், பேரறிவாளனாகிய தனக்கு இவனது பாவம் முற்றும் நினைவுக்கு வருவதாலும்,அந்த அந்தப் பாவத்திற்கு ஏற்ப, பயனை அளித்து நல்வழியில் நடத்திப் போருமவனாய்த் தான் இருப்பதாலும்,எம்பெருமான் சீறிச் சிவந்து இச்சேதனனைக் கண்கொண்டு பாரான். அஙஙனம் இருக் குங்கால், இப்பரமனுக்கு, அவனுக்கும் (பரம
னுக்கும் ) இவனுக்கும் (சேதனனுக்கும்) உள்ள தொடர்பை உணர்த்தி, இவன் நிலையை அறி
வித்து,இரக்கத்தையும் இவன் பிழையைப் பொறுக்கும் தன்மையையும் கிளப்பி, இவனைக்
கண்கொண்டு பார்க்கச் செய்து, அப்பரமன் இவனைத் திருவுள்ளமுவந்து அங்கீகரிக்குமாறு
பெரிய பிராட்டியார் உதவி புரிகிறார். இங்ஙனம் உதவிபுரிகையே புருஷகாரமாயிருந்து
உதவி செய்கையாம்.
சரணாகதி தருமத்தைப் பற்றிய இந்த உண்மையை, இராமாயணத்தின் முடிந்த
பொருளாய்ப் பின்வருமாறு பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்:-
அவள் புருஷகரமாக அவனைப்பற்றுவதே பலவ்யாப்தமாவது. இது தான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம். அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்ப்பண்கை அநர்த்தப் பட்டாளிறே. பெருமாளை யொழியப் பிராட்டியைப் பற்றின இராவணனும் அநர்த்தப்பட்டான். இருவரையும் பற்றினாலிறே ஸ்ரீவிபீஷணாழ்வானைப் போலே வாழ லாவது”
இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்:- முதலில்,காகத்தின் வரலாற்றைக் காண்போம். “திருச்சித்திரக் கூடத்தில்,இராமபிரான் ஸீதா பிராட்டியார் மடியில்
திருக்கண் வளருங் காலம். அக்காலத்தில்,இந்திரனுடைய புத்திரனும், கெட்ட எண்ணத்தினால் காகத் தன்மையைப் பெற்றிருப்பவனுமாகிய காகாஸுரன் ஸீதாபிராட்டியாரைக் கிட்டி,- திருமேனியில் புண்ணை உண்டாக்கினான் . அப்பிராட்டியார் துன்பம் பொறாமல், தன் மடியில் கண்வளரும் எம்பெருமானை எழுப்பினார். உணர்ந்தெழுந்து அப்பெருமானும், காகத்தின் பாவச் செயலைக் கண்கூடாகக் கண்டு, பிரமாஸ்திரத்தை அக்காகத்தின் மீது விட்டருளினான். அதுவும், அந்த அஸ்திரத்தினால் துரத்தப்பட்டு. ஓரிடத்தில் ஒன்பது தடவை சென்று இரட்சணத்தை இரந்தும், ஒருவரும் இரங்கவில்லை. அப்போது புகலற்று அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம்
வந்து விழுந்துகிடந்தது. தரையிலே தலையும் பெருமான மடியிலே கால்களுமாய்க் கிடந்தது. அக்காகத்தின் நிலையைக் கண்ட ஸீதா பிராட்டியார் அக்காகத்தை இரட்சிக்குமாறு அப்பரமனை வேண்டிக் கொண்டனர் . அப் பரமனும் அஸ்திரம் பயனற்றதாய் ஆகாமையின், அதனால் அக்காகத்தின் கண்ணை அழித்து, அதற்கு உயிர்ப் பிச்சைக் கொடுத்து, அதனை இரட்சித்தனன்” என்பதே காகத்தின் வரலாறாம்.

(ஸபித்ராச பரித்யக்த: ஸரைச்ச ஸமஹர்ஷிபி த்ரீந்லோகாந்ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம்கத : 1) என்னும் (இராமாயணம்ஸுந்தரகாண்டத்தில் உள்ள) வார்த்தை யிலும்,
சித்திர கூடத்திருப்பச் சிறு காக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலககும் திரிந்தோடி
வித்தகனே ! இராமாவோ ! நின் அபயம்என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்னை அறுத்ததும் ஓரடையாளம்”-என்னும் பெரியாழ்வார் திருவாக்கிலும் காணலாம். இவ்வரலாற்றில் அமைந்துள்ள ஸாரப் பொருளைப் பின் வருமாறு காணலாம் :

ஸீதா பிராட்டியார் திறத்தில் இராவணனும், காகா ஸுரனும் பொறுக்கொணாத்
துன்பத்தை விளைவித்தவர்களாம். ஆனாலும்இராவணனைக்காட்டிலும் காகா ஸுரனுக்குப்
பாவம் அதிகமாம். எங்ஙனம் ? என்னில், இராவணன் அப்பிராட்டியாரை எடுத்துச் சென்று, அசோகவனத்தில் சிறையில் வைத்து, தானும்,ஏகாக்ஷிமுதலான அரக்கிமாரும் பல தடவை சொல்லொணாச் சொற்களைச் சொல்லித் துன்புறுத்தியது ஒருவாறு உண்மையே.
ஆயினும் காகா ஸூரனைப் போன்று,அப்பிரட் டியார் திருமேனியில் புண்னை உண்டாக்க
வில்லை யன்றோ? ஆதலின், காகாஸுரன் பாவம் அதிகமன்றோ?-இக்காகாஸுரன், பிரமாஸ்திரத்தினால் துரத்தப் பெற்று எங்கும் புகலற்று, செய லற்றுப் பரமன் முன்னிலையில் விழுந்து கிடந்தது போன்று, இராவணனும், இராமபிரானுடன் முதலில்போர் புரிந்த போது,அவ் எம்பிரான் பாணங்களால் அடிப்பட்டு, கையில் உள்ள வில்லை விழ விட்டு, இரதத்தில் தனக்குரிய இடத்தையும் விட்டுச் செயலற்றுக் கிடந்ததாய்’ வால்மீகி முனிவன்
வரலாற்றைக் கூறியிருக்கிறான்.-இங்ஙனம் செயலற்றுக் கிடத்தல்’ என்பது,
காகம் இராவணன் இவ்விருவருக்கும் ஒத்தி ருந்தும், இராவணனிலும் காகம் மிக்க பாவம்
பெற்றிருந்தும், இராவணன் இலங்கையுடன் அழிவு பெற்றதற்கும் காகம் (கண்ணழிவு
மாத்திரம் பெற்று) உயிரழிவு பெறாததற்கும் காரணம் யாதோ? எனின் காகத்திற்கு ஸீதா
பிராட்டியார் முன்னிலையும், அதனால், அப் பிராட்டியார் இயற்கை இன்னருளுக்கு இலக்கானதும் உண்டு. ஆதலின், வாழ்வு பெற்றான். இராவணனுக்கோ, அப் பிராட்டியார் முன்னிலையும், அதனாலாம் இயற்கை இன்னருளுக்கு இலக்கா தலும் இல்லை. ஆதலின்
முடிந்தான். இவ்வுண்மை, இராவணன் வரலாற்றோடு காகத்தின் வரலாற்றையும் சேர்த்து உணருங்கால், நன்கு விளங்குகின்றதன்றோ ?-இங்கு,” இவள் ஸந்நிதியாலே காகம்
தலை பெற்றது; அதில்லாமையே இராவணன் முடிந்தான்” என்னும் பிள்ளைலோகாசார்யர்
திருவாக்கும்,இவள் ஸந்நிதியாலே அபரா தத்தைத் தீரக் கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காய் தலையறுப்புண்ணத்தேடின காகம்… தலை பெற்றுப் போய்த்து;-அப்படியிருக்கிற இவள் ஸந்நிதி இல்லாமயையாலே போக்கற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை யொத்திருக்கச் செய்தேயும், காகத்தோபாதி அபராதமுமின்றிக்கே யிருக்க, ராம சரத்துக்கிலக்காய் இராவணன் முடிந்து போனான் என்கை என்னும் மணவாளமாமுனிகள் திரு வாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
இதுகாறும் கூறிய காகாஸுரன் வரலாற்றினால், “மிக்க பாவம் பெற்றிருப்பவனும்,
பிராட்டியாரை முன்னிடும் போது, எம்பெருமா இன்னருளுக்கு இலக்காகி,
நன்மை பெற்று, வாழ்வு பெறலாம்” என்னும் உண்மைக் கருத்து தெள்ளிதின் விளங்கு
கின்றதன்றோ? மேலும், இராவணனும், சூர்ப்பணகையும், விபீஷணனும் ஒரு குடியிலே பிறந்தவர்கள். இராவணன் எம்பெருமானை அறிவிலக்கி, பிராட்டியாரை மாத்திரம் முறைதவறி விரும்பினான். சூர்ப்பணகை பிராட்டியாரைவிட்டு, எம்பெருமானை மட்டும் முறை தவறி விரும்பினாள். பிராட்டியாரை விட்டு என்பது மட்டும் இல்லை; ஏன் பிராட்டியாரை இடையூறாகக் கருதி, விழுங்கவும் முயன்றாள்.-இவ்விருவரும் நன்மையைச் சிறிதும் பெற்றரில்லை. விபீஷணனோ, இராவணன், சூர்ப்பணகை இவ்விருவருடன் பிறந்திருந்தும் இவ் விருவரைப் போன்று, முறை தவறி ஒருவரை விட்டு ஒருவரை மாத்திரம் விரும்பாமல், பிராட்டியார் எம்பெருமான் இருவரையும் முறையுடன் பற்றி, இருவர் சேர்த்திக்கும் முயற்சி மேற் கொண்டதால் இன்றும் வாழ்ந்து போருகின்றானன்றோ? திருவரங்கத்தில் எம்பெருமான் இன்றும் விபீஷணனை நோக்கிக் கிடக்கின்றானன்றோ? இவ்விடத்திலே, தென்திசை இலங்கை நோக்கி” என் னும் தொண்டரடிப்பொடியார் திருவாக்கும், இத் திருவாக்கிற்குப் பொருள் கூறுமிடத்துள்ள ‘‘தென் திசை இலங்கை நோக்கி (முன்புத்தை திக்குகளைக் கடாக்ஷித்தது அவ்வோ தேசங்களின் வெறுமை தீருகைக்காக) இது தம் குறை தீருகைக்காக ; மாதா ப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாபோலே’ என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
மேற்கூறிய இரு திருவாக்குகளிலும், விபீஷணன், இன்றும் எம்பெருமானுடைய இன்னருளுக்கு இலக்காயிருந்து வாழ்ந்து போருகிறான்’ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
இது காறும் கூறியவாற்றால், ‘இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுங்கால், பெரிய
பிராட்டியாரை முன்னிடுதல் இன்றியமையாததாம்’ என்பதை ஒருவாறு கண்டோம்.

இறைவன் திருவுள்ளத்தை பின் சென்று பற்றுதல்

இனி இச்சேதனன் எம்பெருமானை உபாயமாய்ப் பற்றும்போது, இவன் பற்றும்
அப்பற்றுதல் அவ எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்றிருக்கவேண்டும்” என்பதும்
சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையாகும்.-இவ்வுண்மையைப் பரதன் வரலாற்றில் நாம்.
அறியலாகும்.
“கூனியின் கூற்றினால் கலங்கிய கைகேயி,பரதன் முடியையும், இராமபிரான் வன
வாஸத்தையும் சக்ரவர்த்தியிடம் வேண்ட,அச்சக்ரவர்த்தியும் ஸத்தியத்திற்குக் கட்டுப்
பட்டு அளிக்க, இராமபிரானும் வனம் செல்ல,அதனால் சக்ரவர்த்தியும் துஞ்ச, கேகய தேசத்
தினின்றும் அயோத்தி வந்த பரதன் இவ்வரலாறுகளை அறிந்து, சக்ரவர்த்திக்குச் செய்ய
வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து.சித்திரகூடம் சென்று, இராமபிரான் திருவடித்
தாமரைகளை உபாயமாகப்பற்றி,இப்போதே திருவயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக்
கொள்ளுதல் வேண்டும்’ என்று அவ் இராமனை ஆர்த்தியுடன் வேண்டின் இடத்தும், அப்
பிரான் அதற்கு இசையாது இருக்க, அத்தரு ணம் அவன் திருவடி நிலைகளை அருள, அவற்றைப் பெறாப்பேறாகப் பெற்று, திரும்பி நந்திக்ராமம் வந்து, அத்திருவடி நிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அவற்றுக்குப் பரதந்திரனாய் பதினான்கு ஆண்டு பரமபுருஷன் வரவை எதிர்பார்த்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தனன் பரதன்” என்பதே அப்பரதன் வரலாறாம்.
இவ்வரலாற்றைக் காணுங்கால், “இராமபிரான் திருஅயோத்திக்கு எழுந்தருளி முடி
சூடிக்கொள்ளுதல்” பயன் என்பதும், ” அப்பயனுக்கு அவன் திருவடிகளே உபாயம்”
என்பதும் பரதன் எண்ணத்தில் நன்கு விளங்குகின்றன அல்லவா ?
இங்கு வால்மீகி முனிவன்,  (அபிஷஞ்சஸ்வ சாத்) என்றும், (ஏவமுக்த்வா மஹா பாஹு : ஸபாஷ்ப: கைகயீஸுத : Iராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதிவத் புந : II) என்று கூறியிருப்பது காணத்தக்கது.-மேற்கூறிய வார்த்தைகளுள், “அத்யைவ அபிஷஞ்சஸ்வ” என்னும் பகுதியில், “பரதன் விரும்பும் காலத்திலேயே முடி சூடிக்கொள்ளுதல் அப்பரதன் விரும்பிய பயன் ‘ என்பதும்,”ஸபாஷ்ப:” என்பதில், “‘பரதன் ஆர்த்தியுடையவன்’ என்பதும், “ராமஸ்யபாதெள சிரஸா ஜக்ரா ” என்னும் பகுதியில்,”பரதன் இராமபிரானுடைய திருவடிகளை உபாயமாய்ப் பற்றியவன்” என்பதும், “விதிவத் ‘; என்பதில் “அப்பரதன் அங்ஙனம் பற்றும்போது, முறையுடன் பற்றியவன்” என்பதும் நன்கு விளங்குகின்றனவல்லவா ?
இக்கருத்துக்களை மனத் திருத்திக் காணுமவர்க்கு, “பரதன் ஆர்த்தியுடன் முறைப்படிசரணம் பற்றியவன்” என்பது தெளிவு.-(ஆர்த்தியுடன் சரணம் பற்றியவனுக்கு, அப்போதே பயனுண்டாம்’ எனச் சாஸ்திரம் கூறுகின்றது. அவ்வாறு அப்பரதன் பயன் பெற்றனனா? என்னில், பெறவில்லை என்றே வால்மீகி முனிவன் கூறியிருக்கின்றான்.
“(ஸகாமம் அநவாப்யைவ ராம பாதாவுபஸ்ப்ருசன் நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகம
நகாங்யா) என்னும் வால்மீகி முனிவனின் வார்த்தை இங்குக்காணத்தக்கது.
இவ்வார்த்தையில் அமைந்துள்ள “ஸகாமம் அநவாப்யை ” என்னும் பகுதியில், பரதன் இராமபிரானிடம் தான் விரும்பிய பேற்றைப் பெறவில்லை என்பது தெளிவு.
இங்கு, பரதன் முறைப்படி பற்றியிருந்தும், பயனைப் பெறாதற்குக் காரணம் யாதோ? எனின், இதற்கு பரிஹாரமாய் முதலில் சிலர் கூறும் கருத்துக்களை கூறுவோம் :
(1) சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண் எம்பெருமான் எழுந்தருளிய போது,
தேவதைகள் முதலானார், அப்பரம புருஷன் மானிட வடிவத்துடன் திருவவதாரம் செய்து
இராவணனை அழிக்க வேண்டும் என விரும்பி,அவனைச் சரணம் பற்றியிருப்பது சரித்திர
உண்மை. அந்தச் சரணாகதி முதலில் தேவதைகளினால் செய்யப்பெற்றுள்ளது. அத்
தேவதைகள் கோரின பயனை அளிக்கத் திருவுள்ளங்கொண்டு, வனவாஸம் என்னும் வியாஜத்தினால் எழுந்தருளியிருக்கும் தருணத்தில், பரதன் ஆர்த்தியுடன் சரணம் பற்றியிருக்கும் வரலாறும் நாம் அறிந்ததேயாம். இதனால்,’இப்பரதன் செய்தசரணாகதி பின்பு செய்யப் பெற்றுள்ளது’ என்பது தெளிவு. முன்பு செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முதலில் பயனை அருள் செய்து, பின்பு செய்த பரத சரணாகதிக்குப் பின்பு பயனை அருள புரிதல் முறை எனத் திருவுள்ளம் கொண்டு, பரதன் விருப்பத்திற்கு ஏற்ப, அப்போதே இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடிக்கொள்ளவில்லை. இது முதல் பரிஹாரம்.
(2) இராமபிரான் திருவுள்ளம் புண்படுமாறு பரதனுக்குச் சில பாவங்கள் இருக்கக்
கூடும் பயனின்மையைக் கண்கூடாகக் காண்கின்றமையின், அங்ஙனம் சிலபாவங்கள்
இருக்கக்கூடும் என்று ஊஹிக்கலாமல்லவா ? இவ்வாறு கூறுவது இரண்டாம் பரிஹாரம்.
(3) இச்சரணாகதிக்குச் சில அங்கங்கள்(அங்கங்கள் = உதவி செய்யுமவை) உண்டு.பெரியோரை முன்னிடுதல், பெரியபிராட்டியாரை முன்னிடுதல் போல்வன அவ்வங்கங்களாகும். பரதன் பயன் பெறத்தற்குக்காரணம், அவ்வங்கங்களுள், ஏதோ ஓன்றிரண்டு குறைந்திருக்கலாம். இது மூன்றாம் பரிஹாரம்.
( ) இராமபிரான், தந்தை, தாய் இவரைப் பூசித்தல் இன்றியமை யாததாம்’ என்னும் முறையைத் தன் செயலில் நடத்திக்காட்டி நிலைநிறுத்த வந்தவன். ‘தன்தாய்’ என்றும், ‘ வேற்றுத் தாய் ‘ என்றும் வேற்றுமை சிறிது மில்லாதவன். கைகேயி வேற்றுத் தாயாயிருப்பினும், அத்தாய் சொல்லைப்பின்சென்று முடியையும் துறந்த பரமபுருஷனன்றோ? அவன். அப்பெருமான் அவ்வாறு பூசித்தகைகேயியைப் பரதன் பலவகையால் வெறுத்துப்பேசியது அவன் திருவுள்ளத்தை மிகவும் புண்படுத்தியது. ஆதலின், அவன் பரதன் விருப்பத்துக்கேற்ப இரங்கினான் இல்லை
(மாதரம் ரக்ஷ கைகேயீம்) என்னும் இராமபிரான் வார்த்தையும் (பூஜிதா மாமி கா மாதா) என்னும் பரதன் வார்த்தையும் இங்குக் காணத்தக்கன. சித்திர கூடத்தில் திருவடி நிலைகளைக் கொடுத்து அருளுங்கால், இராமபிரான் அருளிச் செய்தது, முதல்
வார்த்துை.பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து மீண்டு நந்தி ராமத்தில் எழுந்தருளியிருக்கும் இராமபிரான் முன்னிலையில் பரதன்சொன்ன வார்த்தை( பூஜிதா மாமி காமாதா” என்பது .) இது நான்காம் பரிஹாரம்.
இவ்வாறு சிலர் கருத்துக்கிணங்க நான்கு பரிஹாரங்களைக் கண்டோம். இப்பரிஹாரங்கள் பொருத்தமுடையன அல்ல என்பதை முறையே காட்டுவோம், இனி
(1) தேவதைகள் சரணாகதியைத் தெரிவிக்கும் இடத்தில் “இராவணன் அழிவை விரும்பிச் சரணம் பற்றியிருக்கிறதாகக் கூறப் பெற்றிருக்கிறதன்றி, காலம் குறிக்கப் பெற்றிலது என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.-அவ்விடத்துள்ள தேவதைகள் வார்த்தை
 (விஷ்ணோ ஸரமே ஜஹி ராவணம்) என்பதாம். பரதன் சரணம் பற்றுங்கால், “அத்யைவ ” (இப்போதே) என்று காலம் குறிக்கப் பெற்றிருக்கின்றது வெளிப்படை. இதனால், என்ன தேறிற்று என்னில் கூறுவோம்.
தேவர்களும், பரதனும் தம் தமக்கு உரிய இராவணன் அழிவு. ‘திரு அயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக் கொள்ளுதல்’ என்னும் பயன்களை ஒரே காலத்தில் பெற விரும்பியிருப்பின்
பயனைப் பற்றிய முரண்பாடு ஏற்படுகின்றமையின்,அம் முரண்பாடு தீருமாறு பரம புருஷனும், முந்திச் செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முந்தியும், பிந்திச் செய்த பரத சரணாகதிக்குப் பிந்தியும் பயனை அளித்தல் நன்றாம்’ என்று திருவுள்ளங்கொண்டு, பரதனுக்கு அக்காலத்திலேயே உதவ இசையவில்லை என்னலாம். தேவர்களும் பரதனும் தம் தமக்குஉரிய பயனை ஒரேகாலத்தில் பெற விரும்பி, பரமனை வேண்டிக் கொண்டதாகக் கூறப்பெற்றிலது.-பரதனாவது, காலத்தைக் குறிக்காது தனக்குரிய பயனைச் சரணம் பற்றி வேண்டிக் கொண்டிருந்தானென்றிருப்பின், பரமன் பரதனுக்கு அக்காலத்திலே அருளாவிடினும், இந்த ஆராய்ச்சிக்கே இடம் ஏற்பட்டிராது.-அப்பரத னே, ‘இப்போதே முடிசூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று காலத்தைக் குறித்தே சரணம் பற்றியிருக்கிறான் அன்றோ? இதனால் பரதன் விருப்பத்திற்கு ஏற்ப அப்போதே, முந்தி முடி சூடி, அப்பரதன்
தாபத்தைந்போக்கி, பிந்தித் தேவதைகள் விரும்பியவாறு, இராவணனை அழிக்க, ஏதோ
ஒன்றை வியாஜமாய்க் கொண்டு, இராம பிரான் வனததிற்கு எழுந்தருளலாமன்றோ ?
ஆதலின், முதல் பரிஹாரம் ஏற்கத் தகுந்த தன்று.(வியாஜம் = போலிக் காரணம்.)
(2) பரதன் திருவவதாரன் உண்மையை உணரின், இராமபிரான் எங் னம் பாவமின்றி
இருப்பவனோ, அங்ஙனமே அப்பரதனும், பாவமின்றி இருத்தலின், அப்பரதனுக்கு இராம
பிரான் திருவுள்ளம் புண்படுமாறு சில பாவங்கள் உண்டு’ கூறுதற்கும் இடம் இன்று.
இதனால், இரண்டாம் பரிஹாரமும் பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவு.
(3) “ராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதி வத்பு :” என்பதில் உள்ள “விதி வத்”
என்னும் சொல்லை நோககின், “எம்பெருமானை உபாயமாய்ப் பற்றுங்கால்,முறை வழுவாது
பற்றியவன் பரதன்” என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? ஆதலின், மூன்றாம்
பரிஹாரத்திற்கும் இடம் இன்று.
(4) நான்காம் பரிஹாரம் இராமாயணத்தில் ஒருவாறு கூறபபெற்றுள்ளது என்பது உண்மையே. ஆயினும் அதைப் பரிஹாரமாய் எடுத்துக் கொள்வதற்கு இல்லை. இதைச்
சிறிது விரித்துக் கூறுவோம்.-‘இராமபிரான் பரமாத்மா, பரதன் ஜீவன்’ என்னும கொளகையை உள்ளத்தில் கொண்டு, பின்வரும உணமை உணரத்தககது.
எம்பெருமான எலலாச்சேதனருக்கும எனறும் தஞ்சமாகிய தந்தையும் தாயுமானவன். இங்ஙனம் தந்தையாயும தாயாயும அவன் இருப்பது கருமத்தினாலன்று. பரமனுக்கும் சேதனனுககும் உளள ஒன்பது வித்த தொடர்பும்என்றும உள்ள தனறோ? இவவாறான
தொடர்பு இலக்குமணனுக்கும் இராமபிரானுக்கும் எஙஙனம் என்றும் உள்ளதோ, அங்ஙனமே பரதனுக்கும் இராமபிரானுக்கும் என்றும் உள்ளதாம். இவவாறான தொடர்பு பரதனுக்கும் கைகேயிக்கும உண்டோ ? இல்லையன்றோ?
இலக்கு மணன், (முடி சூடவைத்த முஹுர்த்தத்திலே, ஜடைசூடி இராமபிரா னைக கானகம்புகச்செயத கைகேயி போன்று, விபரீதச் செயல் உண்மையில் இன்றியிருநதும் )
தசரதனையும ஸுமித்ரா தேவியையும் தஞ்சமாகி தந்தையாயும் தாயாயும் கருதாது,
இராமபிரானையே அங்ஙனம் தந்தையாயும், தாயாயும், மற்றும் எல்லா உறவினராயும் கருதி, அவ் இராமபிரான் பின்னே, அவன் மனம் மகிழுமாறு அடிமை செய்யக் சென்றனனன்றோ? இல்வாறு இலக்குமணன் சென்றதற்குக் காரணம் அவ் இலக்குமணனுக்குள்ள இராம பக்தியன்றோ?-அவ் இலக்குமணன்போன்று, பரதனும்
மிக்க இராமபக்தி பெற்றிருப்பவனன்றோ ? மேற்கூறியவாறு விபரீதச்செயல் உள்ள
கைகேயியினிடம் அப்பரதனுக்கு மனம்பொருந்துமோ ? அவன் தன் தாயை வெறுத்தது சாஸ்திர முறையைக் காணுங்கால்,குற்றமாமோ ?-பரமனிடம் வெறுப்புற்ற தாயை அறவே விட்டிடுவது, சாஸ்திரத்தின் உண்மைக்கருத்து அன்றோ?-இவ்வுண்மைக் கருத்தைக் காணுங்கால்,’நான்காம பரிஹாரமும் பரிஹாரமாகாது’ என்பது தெளிவாம்.
ஆனால், இராமபிரான் “மாதரம் ரக்ஷகைகேயீம் மா ரோஷம் குரு தாம ப்ரதி’
என்று கூறியிருக்கின்றனனே; பரதனும், பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து, திரும்பி
நநதிகராமததில் எழு தருளியிருக்கும் இராம பிரானைக குறிதது, பூஜிதா மாமிகாமாதா “
என்று பகவதபிபராயத்தைப் பின்பற்றி நடந்த தன செயலைக் கூறியிருக்கின்றனனே
என்று சிலர்மறுபடியும மறுததுக கூறலாம்-இப்பரிஹாரத்தை முக்கியமாய் நம்
ஆசார்யர்கள் திருவுளளம் பற்றவில்லை சேதனனுடைய உண்மை நிலையை உணருஙகால்,
கைகேயியை பரதன் வெறுத்தது மேற்கூறியவாறு குற்றமாமோ?
மேலும், இராமாயணத்தில் இப்பகுதியி லேயே இரண்டொரு உண்மைகளையும், கிஷ்கிந்தா காண்டத்தில் ஓர் உண்மையையும் இங்கு எடுத்துக்காட்டுவோம்.
(1) தந்தை ஆசாரியன் இவ்விருவருள், தந்தை சரீரத்தை உண்டுபண்ணி அச்சரீரததை வளர்ப்பவனாம். ஆசாரியனோ,ஞானத்தை உண்டுபண்ணி ஆத்மாவை வளர்ப்பவனாம். இருவரும் உதவியைச் செய்பவரேயாயினும், ஞானத்தை உதவும் ஆசாரியனே மிக்க சிறப்புப் பெற்றவனாம். ” (ஸஹி வித்யாத : தம் ஐநயதி தத் ச்ரேஷ்டம் ஜன்ம கரியாந் ப்ரஹ்மத பிதா ) என்னும் வசனம் காணத்தக்கது,-இங்கு. ஆதலின், ஆசாரியன் ஆணையைப் பின் சென்று நடத்தல் மிகவும் முக்கியமாகும். இவ்வுண்மையை உணர்த்தி, வஸிஷ்டர்,
‘இராமா! உனக்கும் உன் தந்தையாருக்கும் நான் ஆசாரியன் ; ஆதலின், என் சொற்படி
நீ வனவாஸத்தை விட்டிட்டு, இராச்சியத்தை ஏற்று முடி சூடுதல் நன்றாம்” என்று கூறியிருக்கிறார், இராமபிரானை நோக்கி .-மேலும், ஸ்வதந்திரனான பரமனுக்கு
ஆசரித பாதந்திரியமும் உண்டு. அஃது அவனுக்குச்சிறந்த செல்வமாம். ஆச்ரித பாரதந்
திரியமாவது – பரமனாகிய தான், தன்னை அன்புடன் ஆதரித்தோருக்கு, அவர் ஏவிற்றுச்
செய்யும் கையாளாயிருத்தலாம். கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்க்குத் தூதனாயும்
தேரோட்டியாயும் இருந்து இழிதொழில் செய்தனனன்றே ?
வஸிஷ்டர் மேற்கூறிய உண்மையையும்உணர்த்தி, இராமா ! நீ பரமனன்றோ? பரதன்
பக்தி பெற்றிருப்பாரில் சீரியனன்றோ? ஆதலின், அப்பரதன் திறத்தில் பரதந்திரனாய்,
அவன் ஏவிற்றுச் செய்தல் உனககுச் சிறந்தசெல்வமன்றோ? இப்போது, பரதன் வேண்டு
கின்றவாறு, நீ முடியை ஏற்றுக்கொள்ளாதிருப்பின், உனக்குரிய சீரிய செல்வத்தை இழந்தே விடுவாய்’ என்றும் கூறியிருககிறார்.-இவ்வாறு வஸிஷ்டர் இராமபிரானை நோக்கிக் கூறிய உண்மைக் கருத்துக்களைப் பின்வரும் அவ்வஸிஷ்டர் வார்த்தைகளில் நாம்  காணலாம் 🙁ப்ரஞாம் ததாது சாசார்ய: தஸ்மாத் ஸகுரு ருச்யதே II ஸோ S ஹம் தே பிதுராசார்ய: தவ சைவ பரம்தப மம த்வம் வசனம் குர்வந்நாதிவர்த்தேஸ் ஸதாம்கதிம்||
பரதஸ்ய வச : பர்வந்யாசமாநஸ்ய ராகவ ஆத்மாநம் நாதிவர்த்தேஸ் த்வம் ஸத்ய தர்ம
பராக்ரம |1)-இவ்வாறு கூறிய வஸிஷ்டரை நோக்கிஇராமபிரான் அருளிச் செய்த விடையாதோ?எனின், கூறுவோம்.
உலகத்தில், சுவரை வைத்துச் சித்திரம் எழுதுதல்” என்று ஒரு முறை உண்டு. இம்
முறையைத் திருவுள்ளத்தில் கொண்டு, இராமபிரான் பின் வருமாறு விடையை அருளிச்
செய்திருக்கிறான் :-சரீரம் அற்றிருப்பானுக்கு ஞானம் உணடாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவிபுரிதற்கும் இடம் இன்று. சரீரம், பெற்றிருப்பானுக்கே ஞானம் உண்டாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவி புரிதற்கும் இடம் உண்டு. இதனால், சரீரம், சித்திரம் எழுதுதற்குச் சுவர் போன்று,ஞானம் உண்டாதற்கு மிகவும் முக்கியம் எனத்தெரிகின்றதன்றோ?-இவ்வாறு மிகவும் முக்கியமாயுள்ள சரீரத்தை உண்டாக்கி, வளர்ப்பதற்கு, தந்தையாரும், தாயாரும் நோன்புநோற்று,பத்து மாஸம் சுமந்து, பெற்று,பெற்றபினபும், இவனறியாது இருக்கும் சைசவ நிலையில் இவன்
பொருட்டு,படாதனபட்டு இவ்வாறு உதவி புரிகின்றவராதலின், ஆசாரியனிலும் மிக
மேம்பட்டவராவர். ஆசாரியனிலும், தந்தைக்கு ஏற்றமுண்டு; அவ்வாசிரியன் வசனத்திலும், தந்தையார் வசனத்திற்கும் ஏற்றமுண்டு. உண்மை இவ்வாறு இருத்தலின்,
தந்தையார் வசனமே ஆதரிக்கத்தக்கதாம்.-இதுவே, இராமபிரான் விடையாகும்.’ (ஸ ஹிராஜா ஜநயிதா பிதா தசரதோ மம ! ஆஜ்ஞாதம் யந்மயா தஸ்ய ந தந்மித்யா பவிஷ்யதி) என்னும் இராமபிரான்வார்த்தை அனுஸந்திக்கத் தக்கது.
இதைச் சிறிது ஆராய்வோம் : ‘ராமா! ஆச்ரித பாரதந்திரியமாகிய உன் சீரிய செல்வத்தை நீ இழந்துவிடாது பரதன் விருப்பத்தை நிறைவேற்றுவாய் ” என்று வஸிஷ்டர் கூறியதற்கு இராமபிரான் ஒன்றும் விடையறுத்ததாய் இங்குத் தெரியவில்லை.
இராமபிரான் இயம்பியவாறு தாய்தந்தைகளுக்குச் சிறப்பு உண்டு” என்பது ஒருவாறு உண்மையேயாகும். ஆனாலும், “ஆசாரியனிலும் தாய் தந்தைகளுக்கு ஏற்றம்
உண்டு” என்று கொள்ளில், அவர்களிலும் ஆசாரியனுக்குச் சிறப்புக்கூறும் பல சாஸ்திரங்
களோடு முரண்பாடுஉண்டாமன்றே?-மேலும், தாயையும் தந்தையையும் விடச்
சொன்ன சாஸ்திரம் போன்று, ஆசாரியனையும் விடச் சொன்ன சாஸ்திரமும் உண்டோ?)
இல்லையன்றோ? எழுத்தறிவித்தவன் போன்றாரைச் சாஸ்திரம் விடச் சொன்னது உண்மை.
திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசம்செய்தவன் எம்பெருமானிலும் மி க மேம்பட்டவன்”
என்பது சாஸ்திர உண்மைக் கருத்தனறோ?-வஸிஷ்டர், எம்பெருமான் இராமனுக்குத் திரு
அஷ்டாக்ஷரத்தை உபதேசம் செய்த ஆசாரியரன்றோ? இவ்வுலகத்தில், தன் உபதேச மொழிகளினாலும், செயல்களினாலும் அந்த அந்த முறையை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளினவனும்,அங்ஙனமே நிலை நிறுத்தினவனுமான இராமபிரானும், “ஆசாரியன் வசனம் ஆதரிக்கத் தக்கதன்று” ”தந்தையாரின் வசனமே ஆதரிக்கத் தக்கது ‘ என்று அருளிச் செய்வானாயின்,அவ் எம்பெருமானை யார் மறுத்துக்கூற முடியும். ஸ்வதந்திரனை மறுத்துக்கூற இயலுமோ? அவன் திருவுள்ளம் அப்போதே திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடுதற்கு இடம் தரவில்லை என்பதைத் தவிர, வேறு நோக்கு அவன் வார்த்தைக்கு உண்டோ? இல்லையன்றோ?
இக்கருத்து, இப்பகுதியிலேயே உள்ள பரதனின் வேறொரு வரலாற்றைக் காணுங்கால், உறுதிப்படுகின் றமையின், அவ்வரலாற்றையும் எடுத்துரைப்போம் இங்கு :பரதன் தன் வேண்டுகோளுக்கு இராமபிரான் சிறிதும் இரங்கக் காணாமையின்,
“அந்த இராமபிரான் ஆசிரமத்தின் வாசலில், (அவன் திரு அயோத்திக்கு முடிசூட எழுந்தரு
ளும் வரையில்) ஊணின்றி, தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின்மேல் கிடப்போம்” என்று
எண்ணி, ஸுமந்திரனைத் ‘தர்ப்பங்களைக் கொண்டு வா” என்று ஏவினன். இதைக்
கேட்ட ஸுமநதிரன்,பரதன் கூற்று இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராததை
ஒருவாறு உணர்ந்து, அப்பரதன் ஏவினவாறு செய்யாது இருநதனன். அத்தருணம், பர
தனே, தான் எண்ணியவாறு தர்ப்பங்களைப் பரப்பி, அவற்றின்மேல் கிடக்க முயன்றனன்.
இதைக் கண்கூடாகக் கண்ட இராம பிரான், பரதனை நோக்கி அருளிச் செய்த வார்த்தை பின் வருமாறு காணத்தக்கது :
”அப்பா! நான் உடையவன் ; நீ என்உடைமைப் பொருள். இங்ஙனம் உடைமை யாயிருக்கின்ற உன்னை, உடையோனாகிய யான், என் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ள எண்ணினேன். இவ்வாறு விரும்பி உபயோகம் கொள்ளுதல், எனக்குச் செய்யத் தகாத செயலாய் உன் மனத்தில்தோன்றியது போலும் . அங்ஙனம்தோன்றியது மாத்திரம் இன்றி, உடைமைப் பொருளாய் உள்ள நீ, உன் நிலைக்கு உரியதும், உடையோனான என்னைஅடக்கி நல் வழியில் நடக்கச் செய்வதுமாக நீ கருதிய இச்செயலை (இந்த ஆசிரமத் தின் வாசலில் தர்ப்பங்களைப் பரப்பிச் கிடத்தல் என்னும் செயலை ச் செய்து,இதனால், என்பால் உள்ளதும், என் நிலைக்கு ஏலாததாய் நீ எண்ணியிருப்பதுமான செய்யத் தகாத
செயலை (உன்னைஎன் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதல் என்னும் செயலைத் தவிர்க்கப் பார்க்கிறாய் போலும். என்செயல் எனக்கு ஏற்றது’ என்பதை யான் இயம்புதலும் வேண்டுமோ? உன் செயல்உனக்கு ஏற்றதாமோ? “ஏற்றதன்று” என்பதையும் கூறுவேன்.
ப்ராஹ்மணன் ஒருவன் தன் பொருளை”இன்ன தருணம் தரவேண்டும்” என்று தருணத்தைக் குறித்து, கடனாக ஒருவனுக்குக்கொடுக்கின்றான். அங்ஙனம் கடன் வாங்கியவன், கடன்காரனான ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளைக் குறிப்பிட்ட
காலத்துக் கொடுக்காது தவறி இருப்பின், அக்கடன் காரன் வாங்கியவன் வீட்டுவாசலில்,
நீ இப்போது செய்ய விரும்பியது போன்று, தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல் நன்றாம்.
இது ப்ராஹ்மண தருமம். த்திரியனான உனக்குரியதன்று. நீ வேறொரு வருணத்தின்
முறையைப் பின்பற்றியவனாதலின், உனக்குப் பாவம் உண்டாம். அப்பாவம் போமாறு,
“இனி, இவ்வாறான பாவச் செயலை நான் செய்வதில்லை” என்று சபதம் பண்ணி, தண்ணீரைத்தொட்டு, நீ என்னைத்தொடு.ஈதேஅப்பாவச் செயலுக்கு ஏற்ற பரிஹாரச் செயலாம்.(இக்கருத்துக்களைப் பின் குறிக்கப்பெறும் வார்த்தைகளில் காண்க 🙂
(சேஷ்யேபுரஸ்தாத் சாலாயா யாவந்ந ப்ரதியாஸ்யதி) என்பது பரதன் வார்த்தையாம்.
(கிம் மாம் பரத குர்வாணம் தாத ரத்யுப வே யஸ் | ப்ராஹ்மணோஹ்யேக பார்ச்வேந் நராந் ரோத்தும் இஹார் தி 1நதுமூர்த்தாபிஷிக்தா நாம் விதி: ப்ரத்யுப வேச நே I உத்திஷ்ட த்வம் மஹாபாஹோ ! மாம்சஸ்ப்ருச ததோதகம்)(இவ்வாறே பரதனும் பரிஹாரச் செயலைச்
செய்ததாய்ச் சரித்திரம்]-இங்கு உண்மை பின்வருமாறு உணரத் தக்கதாம். இராமபிரான் சக்ரவர்த்தித் திருமகனாக இருக்கின்றமையின், க்ஷத்தி ரியனே ஆவான்.
மேலும், இப்பரம புருஷனுடைய திருவடிநிலைகள் திரு அபிஷேகம் செய்யப் பெற்றிருக்
கின்றமையின், ” இப்பரம புருஷன் மூர்த்தாபிஷிக்த சத்திரியன் ” என்று கூறுதற்குக் தடை
ஒன்றும் இராது அன்றோ?அன்றியும், இந்த இராமபிரான், வானர வெள்ளங்களுடன் கடற்கரை சேர்ந்து, கொந் தளிக்கும் அக்கடலைக் கண்டிருக்கும் காலம். அக்காலத்து, அவ்வாறான கடலைக் கடந்து செல்லத் தக்க உபாயம் யாதோ? என ஆராய்ந்து காணுங்கால், அப்பரம புருஷன்”இக்கடலைக் கடந்து அக்கரை செல்லுதற்கு, கடலரசனை நோக்கி அவன் அருள் புரியுமாறு இக்கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின் மேலே கிடத்தல்,’ அணைகட்டுதல், இக்கடலைத் தண்ணீர் சிறிதும் இன்றி வற்றச் செய்தல், எனப் பல உபாயங்கள் உண்டு. அவற்றுள், கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தலே சிறந்த உபாயமாம்” என்று அருளிச் செய்திருக்கின் றனன்.
(தபஸா ஸேதுபந்தேந ஸாகரோச் சோஷணேந வா ஸர்வதா ஸுஸமர்த்தோஸ்மி ஸாகரஸ்
யாஸ்ய லங்கநே) என்னும் அவ் இராமபிரான் வார்த்தை இங்குக்காணத் தக்கது.
இவ்விடத்து, ‘தபஸா’ என்னும் சொல் நோக்கத் தக்கது. இன்னமும் தர்மாத்மா’ என்று கொண்டாடப் பெறும் விபீஷணனும்,-” இராமபிரான் இவ்வாறு கடலரசனை நோக் கிக்கிடத்தலே நன்றாம்” என்று கூறியிருக்கின்றனன்.-இராமபிரானும், கடலரசனைக் குறித்து, தர்ப்பசயனத்திலே கிடந்தனன் என்பது சரித்திர உண்மை. அபிஷேகமில்லாத பரதனை நோக்கி, ” இது ப்ராஹ்மண தருமம் ; அபிஷே கம் செய்யப்பட்டுள்ள க்ஷத்திரியன் இவ்வாறு செய்தல் தீதாம்” என்று அருளிச் செய்த எம்பெருமான்,மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து கொண்டக்ஷத்திரியனாகிய தான் இவ் வாறு செய்திருத்தல் முறையாமோ? இன்னமும், பரதன், இவ்விராமபிரானுக்குப் பின் பிறந்த தம்பியாதலின், அபிஷேகத்திற்குத் தகுதியற்றவனாம். கேகயதேசத்தினின்றும் திரு அயோத்திக்கு வந்து,
தன் தாயின் வீட்டிலேதன் தந்தையார் சக்ரவர்த்தி உயிர் துறந்ததைக் கேட்டு, பூமியில்
விழுந்து புரண்டு அழும் போது, தன் தாய் கைகேயி ‘ராஐந்” என்று அழைக்க,அவ்வாறு அழைத்ததையே மிகவும் பொறாது இருந்தவனன்றோ?
மேலும், குலகுருவும், தன் குருவான இராம பிரானுக்கும் குருவுமான வஸிஷ்டர் “இவ்
விராச்சியத்தை ஏற்று முடி சூடிக்கொள்’ என்று கூறுங்கால், அவரையும் மிகவும் பூசிக் கத் தக்கவர் என்று பாராது பலவாறாக வெறுத்துப் பேசி, யானும் இராச்சியமும்
இராமபிரானுடைய உடைமைப் பொருளாய் உண்மையில் இருக்க, யான் இவ் இராய்ச்சி
யத்தை ஏற்றுக் கொள்வது எவ்வாறு? என்று பேரோலக்கத்தில் கதறிக் கூறிய மஹான்
அன்றோ?-இன்னும், மேற்கூறியவாறு கூறியது மாத்திரமேயன்றி, ஆர்த்தியே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள அப்பரதன், தாய்மார், மந்திரிமார், வ ஷ்டர், ஜாபாலி முதலிய பெரியோர், யானைகள், குதிரைகள், ஏன் அயோத்தியிலுள்ளார் அனைவரையும் ஒன்று
சேர்த்து, அழைத்துக் கொண்டும், மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி திசை நோக்கித் தொழுது கொண்டும், சித்திரகூடம் சென்றுசேர்ந்து,இராமன் திருவடித் தாமரைகளிலே
வேரற்ற மரம் போன்று விழுந்து கிடந்து,தன் தலையாலே இரந்து, வேண்டிக் கொண்ட
வனன்றோ?-இப்பரதன் உண்மை நிலை இதுவாயிருக்க. இவனுக்குப் பாவந்தான் உண்டோ? இவன் க்ஷத்திரியனானாலும்,மூர்த்தாபிஷிக் க்ஷத்திரியன் என்று கூறுதற்கு இடம் தான் உண்டோ? பாவத்திற்கே இடமில்லாத போது, பரம புருஷன் பரிஹாரத்தைச் செய்யக் கட்டளை யிட்டதுதான் பொருந்துமோ?-ஆனால், பரதன் இராமபிரான் கட்டளையிட்டவாறு பரிஹாரத்தைச் செய்திருக்கின்றனனே? என்று சிலர் வினாவக் கூடும். இராமபிரான் வனம் எழுந்தருளியதற்குத் தன் பாவமே காரணம்” என்று கூறினவனும், உண்மை யில் பாவம் சிறிதுமின்றி இருக்குமவனான பரதன், தன் நிலைக்கு ஏற்ப பரிஹாரத்தைச் செய்தனனேயன்றி, பாவம் இருந்து பரிஹாரம் செய்தான் என்பது உண்மையாமோ
இதுவே மேற்கூறிய வினாவிற்கு விடையாம்.-தன் நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளும்
பரதன் ஸ்வாமியான இராமபிரான் முன், அவ்விராமன் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராத,”தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல்” என்னும் செயலைச் செய்ய முயன்றது தான் முறையாமோ? என்று சிலர்க்கு இங்கு ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்குப் பரிஹாரத்
தைக் கூறுவோம் :-அப்பரதன், எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்று நடக்கும் தன் நிலைக்குச் சேராத செயலை ( தர்ப்பங்களைப் பரப்பி அவற்றில் கிடத்தலைச் செய்ய முயன்றதும் இராமன்பாலுள்ள பக்திப் பெருமையினா லல்லது, வேறு காரணத்தினால் ஏற்பட்ட தாமோ? ஆகாதன்றோ?-நம்மாழ்வார், திருமங்கை மன்னன் போல்வார், எம்பெருமானை அடையப்பெறாத போது, தரித்திருக்க மாட்டாமையின்,
‘அப்பரம புருஷனை முறை தவறியாவது பெறவேணும்’ என்று எண்ணி, மடலெடுத்தல்,தூது விடுதல் முதலிய செயல்களைத் தம் நிலைக்குச் சேராதிருந்தும், செய்யக் கருதிச்
செய்திருக்கிறார்கள். ”இவ்வாறு இவர்கள் கருதிச் செய்தது எங்ஙனம் பக்திப் பெருமை
யினாலேயோ, அங்ஙனமே பரதன் செயலும் பக்திப் பெருமையினாலேயே” என்பதைநாம்
அறியலாகும்.-இதுகாறும் கூறியவாற்றால்,முடிந்த
பொருள் யாதோ? எனின், இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பரதன் செயல் பாங்கா
யில்லை” என்பதே தேறிய முடிந்தபொருளாம்.-ஆனால், மறுபடியும் சிலர், “மாதரம்ரக்ஷ
கைகேயீம்” ”ஆ ஞாதம் யந்மயாதஸ்ய”உத்திஷ்டத்வம்” என்னும் முன்னம் கூறிய
வாக்கியங்களில், இராமபிரான், ‘பரதா!கைகேயியை வெறுப்பது கூடாது’ என்றும்,
‘ஆசாரியனிலும் தந்தையாருக்கு ஏற்றம் உண்டு: ஆதலின் அவர் வசனமே தனக்கு ஆதரிக்கத் தக்கது’ என்றும், ‘பரதா ! நீ பாவம் செய்தவன் ஆதலின், பரிஹாரத்தைச் செய்’
என்றும் வெளிப்படையாக அருளிச் செய்திருக் கின்றமையின்,அங்ஙனம் வெளிப்படையாகக் கூறியவற்றைக் காரணமாய்க் கொள்ளாது, அவற்றைக் கழித்துப் பேசி, இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையையே பரதன் பயன் பெறாததற்குக் காரணமாய்க் கூறுதல் ஏற்கத் தக்கதாமோ? என்று கருதக் கூடும்.
“வெளிப்படைப் பொருளை விட்டிட்டு, உட்கருத்தையே எடுத்துக்கொள்ளுதல் சிறந்த
முறையாம்” என்பதை ஓர் எடுத்துக் காட்டினால் விளக்கிக் காட்டுவோம் :
‘இராமபிரான், ஸுக்ரீவனுடன் தோழமைகொண்டவன்; ஸுக்ரீவன் விருமபியவாறு வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா ராச்சியத்தையும், ருமை என்னும் ஸுக்ரீவன்
மனைவியையும் அந்த ஸுக்ரீவன் பெற்று, முன்புபோல் வாழும்படி உதவி புரிந்தவன்;
அங்ஙனம் உதவி புரியும் போது, ஸுக்ரீவன் நம்புமாறு மழுவேந்திக் கொடுத்துக் காரியம்
செய்தவன்” என்று நம் ஆசாரியர்கள் பரம புருஷனுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து அருளிச் செய்வதுண்டு” அங்ஙனம் வாலியை வதம் செய்யும் போது, அவ்வாலிக்கும் ஸு க்ரீ
வனுக்கும் நடந்த போர் இரண்டு. முதலில் நடந்த போரில், இராமபிரான் வாலியை
அடித்துக் கொல்லாது விட்டிருக்கிறான். அப் போரில், ஸுக்ரீவன் தன்னாலாந்தனையும்
போர் புரிந்தும், இராமபிரான் கூறியபடி அம்பை எய்து வாலியைக் கொல்லாது இருந்தமையின், அடி தாங்கமுடியாமல் முதுகு காட்டி ஓடிவிட்டான் என்பது வரலாறு – (ஈது
இங்கு முதலில் அறியத்தக்கது-இவ்வாறுஓடிவந்த ஸுக்ரீவன், இராமா! நீ ஏன்? கூறியவாறு வாலியை அடிக்கவில்லை என்று வினவினான். இவ்வினாவிற்கு இராமபிரான் விடை யளிக்கும் போது கூறிய வார்த்தை-(ஸுக்ரீவ ச்ரூபதாம் தாத க்ரோதச்ச வ்யபநீயதாம்
காரணம் யேந பாணோயம் நமயா ஸ விஸர்ஜ்ஜித:-அலங்காரேண வேஷேண ப்ரமாணேம்
கதே நச த்வம் ச ஸுக்ரீவ வாலீச ஸத்ருசெள ஸ்த: பரஸ்பரம்||| ஸ்வரேண வர்சஸாசைவ ப்ரேக்ஷித ந விக்ரமேண ச வாக்யைச்ச யக்திம் ச வாநர வாம் நோபலக்ஷயே ததோரஹம் ரூப ஸாத்ருச்யாத் மோஹிதோ வாநரோத்தம நோத்ஸ்ருஜாமி மஹா வேகம் சரம்-என்பதாம்

இவற்றின் வெளிப்படையான பொருள்:
ஸுக்ரீவா ! ஒப்பனையிலும், வடிவ அமைப்பிலும். உயரத்திலும், நடையிலும்,குரலிலும், தேஜஸ்ஸிலும், பார்வையிலும், பராக்ரமத்தி லும்,வாக்கியங்களிலும் நீயும் வாலியும் ஒருவரை ஒருவர் ஒத்திருக்கிறீர்களாகையினால், உங்கள் இருவருள், ‘இன்னவன் வாலி ; இன்னவன் ஸுக்ரீவன்’ என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஸந்தேஹத்தில் நான் பாணத்தை விட்டால், அது ஒருகால் உன்மேல் பட்டு, ஆபத்து நேருமோ என்று அஞ்சி, நான் வாளா இருந்து விட்டேன்” என்பதாம்.
இவ்வெளிப்படைப் பொருளை இங்குக் கொள்ளுதற்குப் பொருத்தம் உண்டா? என்பதுதான் நாம் ஆழ்ந்து கவனிக்கத்தக்க தாம். பேரறிவாளனான இராமபிரான் ஸு க்ரீ வனுக்கும் வாலிக்கும் உள்ள வேற்றுமையை உண்மையில் உணர இயலாதோ? உணர வில்லையோ? அல்பம் அறிவுள்ளவன் கூட ‘அடி படுபவன் ஸுக்ரீவன்; அடிப்பவன் வாலி’ என்பதை எளிதில் அறியக்கூடியதை, என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று இராம பிரான் இயம்புகின்றனனே,இது பொருந் துமோ? இதில், நம் ஆசாரியர்களின் திருவுள்ளக் கருத்தைக் கூறுவோம். இங்கு, முதலில், பின் கூறப்பெறும் உண்மைஉணரத்தக்கதாம்.
பரமபுருஷன், சேதனனை நோக்கி, நீ,என்னி டத்தில் உனக்குள்ள அன்பை என் அன்பர்
பால் என்றும் வைத்திரு; அங்ஙனம் என் அன்பர் பால் அன்பைச் செய்யாது இருப்பின்,
அவர் திறத்தில் அபராதத்தைச் செய்தவனா வாய்; அதனால், உனக்கு மாத்திரம் அழிவு உண்டாம் என்று எண்ணாதே,உன்னோடு தொடர்புற்ற இப்பிரபஞ்சமும் அழிந்துவிடும்’ என்று அருளிச் செய்திருக்கின்றான்- -(யா ப்ரீதி: மயி ஸம்வருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே 1 அவமானகரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் !! )என்னும் பரமபுருஷன் திருவாக்கு அனுபவிக்கத் தக்கது. இங்கு
இதனால், நாம் ஓர் உண்மையை உணர லாம்: ஒரு சேதனன் எம்பெருமானை முறை வழுவாது பற்றியிருப்பினும், தான் கோரின் பயனைப் பெறும்போது, அவன் அடியார் திறத்து அபராதம் சிறிதும் இல்லாது இருத்தல் இன்றியமையாததாகும்.இவ்வாறு அப ராதம் பெற்றிருப்பின், பயனைப் பெற இயலாது. சரணாகதி தருமத்தை நாம் உணரும் போது, ”பரமனடியார் திறத்து அபராதம் சிறிதும் இன்றியிருத்தல், ஒரு முறை என்ப தையும் உணரல் வேண்டும்.-இவ்வுண்மைக் கருத்தை மனத்தில் கொண்டு,ஸு க்ரீவன் வரலாற்றை ஆராய்தல் வேண்டும்! ஸுக்ரீவன் இராமபிரானி டத்து மிக்க அன்புள்ளவன் என்பது மெய்யே. ஆயினும், இலக்குமணனிடம் எங்ஙனம் அன்பு காட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டினா னில்லை : இராமபிரானும் ஸுக்ரீவனும் அக்னி ஸாக்ஷியாய்த் தோழமை கொள்ளுகிறார்கள். அவ்வாறு தோழமை கொண்டபின், ஸுக்ரி வன். இலையும் பூவும் நிரம்பியிருக்கும் ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, பூமியின் மேலே போட்டு, அதின் மேலே இராமபிரானுடன் உட்கார்ந்து கொண்டு,அப்பெருமானிடம் தன் குறை ைப் போக்குமாறு வேண்டிக் கொள்கிறான். இவ்வாறு, ஸுக்ரீவனும் இராம பிரானும் இலையும் பூவும் நிரம்பியிருக்கும் கிளையில் பல ஸமயங்களில் உட்கார்ந்து ஒருவ ருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சரிதம் கூறப் பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு ஸ்மயமாவது, இலக்குமணனை ஸுக்ரீவன் இவ்வாறு ஆஸனம் கொடுத்து உபசரித்ததாய் இராமாயணத்தில் கூறப் பெற்றிலது.-(தத : ஸ ப ணப ளாம் சித்வா சாகாம்
ஸுபுஷ்பிதாம் ஸாலஸ்யாஸ்தீர்ய ஸுக்ரீவ: நிஷஸாத ஸராகவ: II லக்ஷ்மணாயாத ஸம்ஹ்ருஷ்ட:ஹநுமான் பலவகாஷப: சாகாம் சந்தனவர்க்ஷஸ்ய ததெள பரம்
புஷ்பிதாம் II)-என்பனகாணத் தக்கன ) ஸுக்ரீவனுடைய இச்செயலைக் காணுங்கால், இலக்குமணனிடம் அன்பில்லை; அபராதம் உண்டு’ என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ? இச்செயலை இராமபிரான் கண்கூடாகக் கண்டவனாதலின், முதலில் ஸுக்ரீவனும் வாலியும் போர் புரியுங்கால், வாலியை அடிக்க அவன் திருவுள்ளம் இசையாது இருந்தது-பின்பும், ஸுக்ரீவன் தன் செயலை உணர்ந்து, இலக்குமணனிடம் எங்ஙனம் அன்புகாட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டின தாய்க்ாணப் பெற்றிலது . ஆனாலும், தன்னைப் பற்றினாரை அடியாருடைய அபிமானத்திற்குப் பாத்திரமாக்கிக் காரியம் செய்வது என்பது பரமபுருஷனுடைய ஓர் உயரிய முறையாம். இம்முறையைத் திருவுள்ளம் பற்றி, ஸுக்ரீவனுடைய கழுத்தில் இலக்குமணன் திருக்கைகளால் அடையாளமாய்
க புஷ்பி மாலையைப் போடச் செய்யும் முகத்தால், அந்தப் பாகவதோத்தமனுடைய அன்
புக்கு இலக்காக்கி, வாலியை இரண்டாம் போரில் கொன்று, ஸுக்ரீவனுக்கு, அவன்
கோரின பயனை அளித்திருக்கின்றான், இராமபிரான்.-கருதாபி ஞா நசிஹ்நஸ் த்வம் அநயா கஜஸாஹவயா லஷ்மணே ந ஸமுத்பாட்ய யைஷா கண்டே க்ருதா தவ Il
என்னும் வார்த்தை அனுபவிக்கத் தக்கது.

இதுகாறும் கூறிய ஸுக்ரீவன் வரலாற்றில், ஆழ்ந்து, ஆராய்ந்து காணும் போது,
“வெளிப்படையான பொருளில் உண்மை நோக்கு இன்று; உள்ளுரை பொருளிலேயே
உத்தமனுடைய உக்திக்கு நோக்கு உண்டு என்று எங்ஙனம் அறிகின்றோமோ, அங்ஙன மே, பரத சரணாகதிப் பகுதியில் அமைந்துள்ள புருஷோத்தமனுடைய,“மாதரம் ர கை
கேயீம்” ஆஞாதம் யந்மயா தஸ்ய” ” உத் திஷ்ட த்வம்” என்னும் உக்திகளுக்கும்,
”வெளிப்படையான பொருளில் நோக்கு இன்று; உள்ளுறை பொருளிலேயே நோக்கு “
என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.
ஆகவே, பரதன் இராமபிரானை முறை யுடன் பற்றியிருந்தும் அப்பற்றுதல், அந்த
இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையின், பயனற்றதாம் என்பதைக்
கண்டோம். இப்பொருளை தேசிகன் திருவாக் கிலும் அனுபவிப்போம்.-(ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம்ச ப்ரஜாநாம் மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதி ததௌச 1 சிந்தாதீத: ஸம நி ததா பாதுகாகர்யாபிஷேக : துர்விஜ் ஞா நஸ் வஹ்ருதய மஹோ தைவமத்ர ரமாணம்)-என்பதே அத்திருவாக்காம்.
இத்திருவாக்கின் கருத்து : “தசரத சக்ரவர்த்தி, இராமபிரானுக்கு முடி சூட்டி,
இராச்சிய பாரத்தை அப்பரமபுருஷனிடத்தில் வைக்க விரும்பினான். அச்சகரவர்த்தி
கொள்கையை மக்கள் அனைவரும் ஒரு முகமாக விரும்பினார்கள். அச்சக்ரவர்த்தி மஹிஷியான கைகேயி, பரதனுக்கு முடி சூட்டி இராச்சிய பாரத்தை அவனிடம் வைக்க வரம்
கேட்டாள். ஸத்திய வாதியான சக்கரவர்த்தி யும் அங்ஙனம் அளித்தான். ஆனால், சக்ர
வர்த்தி கோரியவாறு இராமபிரானுக்கும்,கைகேயி கோரியவாறு பரதனுக்கும் திரு அபி
ஷேகம் நடைபெறாது . ஒருவரும் ஒரு காலும் எண்ணாதிருக்க, திருவடி நிலைகளுக்குத் திருவபிஷேகம் நன்கு நடந்தது. இதற்குக் காரணம் எம்பெருமானுடைய ஸங்கல்பமேயாம்” என்பதாம்.
இத்திருவாக்கில், இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூட வேண்டும்’ என்னும் பரதன் விருப்பம் சப்தத்தில் தெளிவாய்க்கூறப்பெறாதது ஒருவாறு உண்மையேயானாலும், கூறப் பெற்றிருக்கிறதாகவே கொள்ளுதல் பொருத்தமுடைத்தானதாம். சக்ரவர்த்திக்கும் மக்களுக்கும்) இராமபிரானுடைய திருவபிஷேகம் எங்ஙனம் இஷ்டமோ ; அங்ஙனமே அதுதானே பரதனுக்கும் இஷ்டம் அது தைவமாகிய இராமபிரானுக்குத் திருவுள்ளமில்லாமையால் உண்டாகவில்லை.
இத்திருவாக்கையும், இதின் கருத்தையும்அனுபவிப்போர்க்கு, இராமபிரான் திரு
வுள்ளமில்லை. அதனால், பரதன் கோரியதுநிறைவேறவில்லை’ என்பது நனகு விளங்கு
மன்றோ?
இதுவரையில், கூறிய வற்றால் “எம்பெருமான் சிறந்த தருமம்” என்பதும், “அவ்வெம்
பெருமான் சேதனனுடைய வேண்டுதலையும். இச்சேதனன் தன்னைப் பற்றும்போது.பெரிய
பிராட்டியாரை முன்னிடு தலையும் வேண்டு கின்றனன்” என்பதும், இச்சேதனன் அவ்
எம்பெருமானைப் பற்றும்போது,அப்பற்றுதல் அப்பெருமான் திருவுள்ளத்திற்குப் பாங்கா
யிருக்க வேண்டும்” என்பதும் இராமாயணத்திலேயே ஒருவாறு அறியப் பெற்றுள்ளன
அல்லவா? இனி, இவ்வாறான தருமம் இராமாயணத்தில் நிலை நிறுத்தப் பெற்றிருக்கும் இடத்தைக் காண்போம் :
ஆனால் “தருமம் இருவகைப்படும். இச் சேதனன் முயன்று செய்யும் போது, உண்டா
வது ஒன்று. எப்போதும் உள்ளது மற்றொன்று.எம்பெருமான் என்றும் உள்ளதொரு மிகச்
சிறந்த தருமம்” என்று முன்னமேயே கூறி யிருந்தோம்.

இக்கருத்தை மனத்தில் கொண்டு நோக்குவார்க்கு, “சேதனன் முயன்று செய்யும்
போது, உண்டாகும் தருமம், நாள் செல்லசெல்ல சிறிது அழிவு பெறலாமாதலின்,
அத்தருமத்தை நிலை நிறுத்துதல் என்பதற்குப்பொருள்உண்டு; என்றும் எங்கும் உள்ள எம்
பெருமானாகிய தருமத்தை எம்பெருமான் திருவவதாரம் செய்து, நிலை நிறுத்துவதாவது
என்?” என்னும் ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்கு ஸமாதானத்தை இராமாயணத்தில்
விபீஷண சரணாகதிப் பகுதியில் நன்கு காணலாம். ஆதலின், விபீஷண சரணாகதிப் பகுதி
யில் அமைந்துள்ள வரலாற்றையும், ஸாரப் பொருள்களையும் மிக விரிவின்றி, அனுபவிப்
போம்.
இராமபிரான், கடற்கரையில் வானரவெள்ளங்களுடனும், ஸுக்ரீவன் இலக்கு
மணன் இவர்களுடனும் எழுந்தருளியிருக்கும் தருணம். அத்தருணம், இலங்கையில், இரா
வணன், தனக்கு நன்மையைக் கூறின விபீஷணனைப் பலவாறாக நிந்திக்க, அந்நிந்தனையைப்  பொறாது, அவ்விபீஷணன், கதையைக் கையில் உடையவனாய் நான்கு இராக்கதருடன் ஆகாசத்திலே கிளம்பி, வடகரையை அடைந்து, ஆகாசத்திலேயே தஙகியிருக்க, அதைக் கண்ட எல்லா வானரர்களும், இராவணன் தம்பியாயிருத்தலாலும், இலங்கையின் நின்றும் வந்திருத்தலாலும், இவ்விராக்கதரால், எம்பெருமானுக்கு என்ன தீங்குநேரிடுமோ?’ என்று தம் அன்பு நிலைக்கு ஏற்பஅஞ்சி,அவ்விராக்கதரை அழிக்கக் கருதி, தம் கைகளில் மரங்களையும் மலைச்சிகரங்களையும் வைத்துத் தயாராயிருக்க, அவ்வானரர்களின் அந்நிலையைக் கண்கூடாகக் கண்டிருந்தும், அவர்களின் இராமபக்தியைப் புகழ்ந்து, அவ் வானரர்கள் முன்னாக இராமபிரானைப் பற்றுகையே முறையாம்’ என அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டவாறே, அவ்வானரர்களை வெகு மதிப்புடன் முன்னிட்டு முறை வழுவாது இராமபிரானைப் பற்றியிருக்கின்றான், விபீஷணன்” என்னும் வரலாறு முதலில் இங்கு அறியத்தக்கதாம்.-இவ்வாறு இராமபிரானை விபீஷணன் பற்றுங்கால், அவ்விபீஷணன் கூறிய வார்த்தைகளாவன :

1. ராவணோ நாம் துர்வ்ருத்த : ராக்ஷ ோராக்ஷஸேச்வர : 1 தஸ்யாஹம் அநுஜோ ப்ராதா விபீஷணஇதி சருத : 11
2. தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ச விவசா தீநா ராக்ஷ பிஸ்
ஸூரக்ஷிதா!
3. தமஹம் ஹேதுபி: வாக்யை: விவிதைச்ச ந்யதர்சயம் ஸாது நிர்யாத்யதாம் ஸீதா ராமாயேதி.
4. ஸச ந ப்ரதிஜக்ராஹ உசயமாநம் ஹிதம் ராவண : கால சோதித : 1
வாக்யம் விபரீத இவெளஷதம்பு
5. ஸோஹம் பரு தஸ் தேந தாஸவச் சாவமாநித : த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம்
சரணம் கத: 11
6. ஸர்வாபாலோக சரண்யாய ராகவாய மஹாத்மநநிவேதயத மாம் ப்ரம் விபீஷணம் உபஸ்திதம் 1 )

இவற்றின் கருத்து : (I) (”எம்பெருமானைப் பற்றுவோன், தன் குற்றங்களைக் கூசாது கூறிப்பற்றக் கடவன்’ என்னும் முறையைக் கைக்கொண்ட) விபீஷணன், “இராமபிரானுக்கே உரியவனாய் இருத்தல் இன்றி, எல்லா உலகங்களையும் கதறிக் கூப்பிடுமாறு செய்பவனும், இங்ஙனம் கொடியோன்’ என ப்ரஸித்தி பெற்றிருப்பவனும் கெட்ட நடத்தை உடையவனும்
இராக்கதனும், இராக்கதர் அனைவர்க்கும் ஈச்வரனுமான இராவணனுக்கே உரியவனாயிருந்து, இதுவரையில் தொண்டு செய்து போந்தவன்; அவன் எக் குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தனனோ, அக்குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தவன்; எல்லோரையும் நடுங்கச் செய்பவனாயிருத்தலின் ‘விபீஷணன்’ என்று எங்கும் ப்ரஸித்தி பெற்றிருப்பவன்,-நான்” (சுருங்கச் சொல்லின், இராவணனுக்கு அவனுக்குரிய குற்றங்கள் மாத்திரம் உண்டு; எனக்கு எனக்குரிய குற்றங்களும், அவன் தொடர்பினாலாகிய குற்றங்களும் உண்டு ஆதலின்,என் குற்றம் அதிகம்) என்கிறான்.

(2) மேலும் அவ்விபீஷணன் கூறியதாவது: ”அவ் இராவணன், (திரு அயோத்தியில் இருப்பு சிறை என்னலாம் படி, அனுபவத்திற்கு மிகவும் பாங்கான) ஜனஸ்தானத்தினின்றும், உயிரையும் உடலையும் பிரிப்பது போன்று, ஸீதா பிராட்டியாரையும் இராமபிரானையும் பிரித்து, அவ்இராமபிரானுக்கு உயிரான ஜடாயுவையும் கொன்று, தன் அசோகவனிகையில், அந்த ஸீதா பிராட்டியாரைக் கொணர்ந்து வைத்து, எங்கும் போகவொட்டாது,-அரக்கிமாரைக் காவலாய் வைத்தவன் அங்ஙனம் ஸ்தா பிராட்டியார் திறத்திலும் ஜடாயு பக்கலிலும், அளவிறந்து அபராதத்தைச் செய்தவனாகிய இராவணன் பின் பிறந்தவன், நான்” என்பதாம்.
(3) அன்றியும், அவ்விபீஷணன் செப்பியதாவது : “இர வணா! நீ. இராமபிரானுக்கே உரியவராகிய அந்த ஸ்தா பிராட்டியாரை, அவ் எம்பெருமானிடம் திரும்பவும் கொணர்ந்து போய்ச் சேர்த்துவிடு’ என்றும், ”நான் கூறியவாறு செய்யாவிடின், நீ அழிந்து விடுவாய்” என்றும்,அவனுக்கு அடிக்கடி அறிவித்தேன்'” என்பதாம்.-

(4) இன்னமும் “நோய்வாய்ப் பட்டு, சாகக் கிடக்கிறான் ஒருவன், மருந்தை எங்ஙனம் எடுத்துக் கொள்ள மாட்டானோ,அங்னமே, யமனால் தூண்டப்பட்ட அவ் இராவணன், நான்கூறிய ஹித வசனத்தைச் செவிதாழ்த்தும் கேட்கவில்லை’ என்றும் கூறினான்,-விபீஷணன்.
(5) இன்னும்,விபீஷணன் பகர்ந்ததாவது : “என் ஹித வசனத்தைச் செவி தாழ்த்துக் கேட்கவில்லை ” என்பது மாத்திரமே அன்று. ஹித வசனத்தைக் கூறியதே காரணமாக அவனும். அவனைச் சேர்ந்தாரும் என்னை அவமதித்தனர். ஆதலின், என் மனைவிமாரையும், புத்திரர்களையும், விட்டிட்டுஇராமபிரானைத் தஞ்சமாகப் பற்றினேன், நான்” என்பதாம்.
(6) இவ்வாறு கூறி, பின்னும் அவ்விபீஷணன் வேண்டிக்கொண்டதாவது :
‘வானரர்களே !எம்பெருமான் எந்தச் சேதனனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுகின்றனனோ அந்தச் சேதனனே புண்ணியனாவான்.அவ் எம்பெருமானாகிய இராமபிரான், இவ்விபீஷணனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுவானாயின், இவனுக்கு நன்மை உண்டாம். அந்நன்மைநான் பெற்றேனாக வேண்டும்.-அங்ஙனம் நன்மை பெற்றேனாதற்குச்
செய்ய வேண்டுவது யாதோ? எனின், மிக்க ஆர்த்தியுடன் இலங்கையினின்றும் இங்கு வந்
திருக்கும் இவ்விபீஷணனை இராமபிரானுக்கு அறிவித்தல் வேண்டும். நீங்கள் என் வரவை அறிவிக்குங்கால் ” இராமபிரானுக்கு இவ்விபீஷணன் தொண்டுடனாதல் நன்றாம்” என்னும் எனக்குள்ள இந்த ருசி மாறுவதற்கு முன் வெகு சீக்கிரமாக அறி வித்தல் பயனுற்றதாகும். என்னை அவ்இராமபிரான், திருவுள்ளம் உவந்து ஏற்றுப் பணி கொள்ளுமாறு செய்தல் உங்களுக்குப் பணியாம். அப்பிரான் ஏற்றுப்பணி கொண்டு உவத்தல், அவன் தனக்கு உற்ற தாகும். நீங்கள் இச்சேதனனைப் பரமன் உவந்து ஏற்குமாறு செய்யுமவர்களா யிருக்கின்றமை யின்,அங்ஙனம் செய்யாதபோது, உங்கள் நிலை உங்களைவிட்டு அகன்றொழிந்து விடுமன்றோ? ஆத ன், உங்களுக்கு அழிவுஉண்டாம்.
அப்பெருமான், நீங்கள் என் வரவை அறிவித்த பின்பும், அவன் கூவுதல் வருதல் செய்யாதும், என்னைத்திருவுள்ளம் உவந்து ஏற்று, அடிமை கொள்ளாதும் இருப்பின்,அப்பரமன்
தன் நிலையினின்றும் தவறியவனாவானன்றோ ?
எம்பெருமானிடம் பேரன்பு பெற்றிருக்கும் உங்களையும், அவ் எம்பெருமானையும் உவப்பித்தல், தொண்டனான என் நிலைக்கு ஏற்றதும், இன்றியமையாததுமாம். அங்ஙனம்
உவப்பியாது யான் இருப்பின், அஃது என்நிலைக்கு அழிவை விளைக்குமன்றோ ? உவப்பியாது இருத்தலே அழிவை விளைக்கும் என்னும் போது, உங்களையும், அவ் எம்பெருமானையும் உங்களுக்கும் அவனுக்கும் உரிய அந்த அந்த நிலையில் நின்றும் நழுவச் செய்யும் முகத்தால் அழிப்பேனாயின், என் கதிதான் என்னாகும் ?
ஆதலின், நீங்கள் என் வரவை சீக்கிரம் அறிவிக்கும்போது, உங்களுக்கு நன்மையுண்டு.
அப்பரமன் என்னை ஏற்று அடிமை கொள்ளும் போது, அவனுக்கு நன்மை உண்டு; நான்
உங்கள் ஓலக்கத்தில் ஒருவனாகக் கலந்திருந்து உங்களைப்போல் அடிமை செய்யும்போது.
எனக்கும் நன்மை உண்டு. இவ்வாறு எல்லாரும் நன்மை பெற்றுவாழுமாறு நீங்கள் என்
வரவை அறிவித்தல் நன்றாம் எல்லா உலகங்களையும் காக்கும் பரமனன்றோ? அவ்வெல்ல உலகங்களிலும் யானும் ஒருத்தனன்றோ ? அவ்எம்பெருமான் நீர்மைக்கு ஆகாதாரும் உண்டோ ? இராவணன் தம்பியும் சத்துருவுமான உன்னைஎம்பெருமானிடம் அறிவிக்கையாவது என் ? என்னாதீர்கள். [இவ்வுலகத்திலுள்ளாரனைவரும்.ஒன்றுசேர்ந்து எதிர்த்தாலும் அறப் பெரியோ னாகிய அப்பரமனுக்கு, பொல்லாங்கு சிறிதும் உண்டாதற்கு இடமுண்டோ? சரணம் பற்றினாரைக் காக்கும் குடியில் திருவவதாரம் செய்த மஹாத்மாவன்றோ? அப்பரமன்.அவன் பொருட்டு எல்லோருக்கும் நன்மை உண்டாமாறு அறியுவிங்கோள்” என்பதாம்.-அங்ஙனம் விபீஷணன் அறிவிக்குங்கால் இராமபிரான் பக்கலில் பொங்கும் பரிவு பெற்றிருப்பவனான ஸுக்ரீவன், மேற்கூறிய விபீஷணன் வார்த்தையைக் கேட்டு, மிக்க பரபரப்புடன், அப்பெருமானைக்கிட்டி, ஒரு வார்த்தை
விண்ணப்பம் செய்து கொண்டனன்.
”திரு அயோத்தியை விட்டுப் போந்து அநேக நாளாயிற்றே? ராஜ நீதியை மறந்ததோ? இவ்விடம் இலங்கைக்கு மிகவும் அண்ணியதன்றோ ? இராவணன் அநீதிகள் அறியவில்லையோ? ஒருவன் ‘சரணம்’ என்னும் சொல்லைச் சொல்லும்போது, இவற்றை
மறந்து விடலாமோ?-வத்யதாம் ஏஷ தீவ்ரேணே தண்டேநஸசி வைஸ்ஸஹ | ராவணஸ்ய ருசம்ஸஸ்ய ப்ராதாஹ் யேஷ விபீஷண 1-இவனை கட்டியிட்டு வைத்தல்; மாரீசனைப்
போன்று,வரும் காலத்தில் துன்பம் விளைக்கும்படி தொடுத்த அம்போடே விடுதல் செய்யக்
கடவோமல்லோம். கொன்றே விடுவோம். அங்ஙனம் கொல்லும் போது, முதலிலே தேவரீரை நலிகைக்குக் கூட்டுப்படையாய் வந்த இந் நால்வரையும் தலையறுத்து, இவன்கையிலே கொடுத்துப் பின்பு இவனைக் கொல்லக் கடவோம். இவன் இராவணன் உடன்பிறந்தவனன்றோ ? அவ் இராவணன்,பெற்றதாயையும் தமப்பனையும் சேர இருக்கப்
பொறாதவனன்றோ ? உடலையும் உயிரையும் பிரித்தது போன்று, என்றும் விட்டகலாத
ஸீதாபிராட்டியரையும் எம்பெருமானாகிய தேவரீரையும் கடல் ஒரு புறமும் மலை ஒரு
புறமுமாக்கின பையலுக்கு, இவன் ஓர் அவயவம் என்று சொல்லலாம் படி அண்ணியனன்றோ?” என்பதே அந்த ஸுக்ரீவன் கூறியஅவ்வார்த்தையாம்.

இவ்வார்த்தையைத் திருச் செவியேற்ற இராமபிரான், வானரர்களை நோக்கி, கூறிய
தாவது :வானரர்களே! இவ்விபீஷணன், இராவணன் தம்பியாதலின், இவன் நம்முடன் சேரத்
தகுதியற்றவன்; அங்ஙனம் சேரத் தகுதியற்றமைக்குத் தகுந்ததும், யுக்தியோடு சேர்ந்ததும், எல்லோரும் விரும்பத் தக்கதும் இனியதுமான ஸுக்ரீவன் வார்த்தையை நீங்கள் கேட்டீர்களன்றோ? இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளுமிடத்து, உங்கள் கருத்து யாதோ? கூறுமின்’ என்பதாம்.-இராமபிரானுடையமேற்கூறிய வார்த்தையைக் கேட்ட வானரர்கள் அனைவரும், விபீஷணனை ஏற்றுக் கொள்ளுதல் முறை என்னில், ஸுக்ரீவ மஹாராஜருக்கும் கலக்கம் உண்டாம்; ‘அங்ஙனம் ஏற்றுக் கொள்ளுதல் முறையன்று’ என்னில், இராமபிரானுக்குத்திருவுள்ளம் கலங்கும்; இவ்விருவருக்கும் பரதந்திரமான நாம் ஒன்றும் கூறுதற்கு இல்லை என்று மெளனமாயிருந்தனர்.-அங்ஙனம் மெளனமாயிருக்கும் வானரர்களை நோக்கி, இராமபிரான் அருளிச் செய்த-வார்த்தையாவது 🙁 ஹ்ருதாஹ்யர்த்த க்ருச்ச்ரேஷ யுக்தம் புத்திமதா ஸதா ! ஸமர்த்தேநாபி ஸந்தேஷ்டும் சாச்வதீம் பூதிமிச்சதா ||
என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்துப் பின்வருமாறு :
வானரர்களே! நம்மைச் சரணம் பற்றியிருக்கும் விபீஷணன், தன்னை நாம் ஏற்றுக் கொள்ளாது ஒழியில் பிழையாதாயினாயிருந்தான்; இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளில், உங்கள் மஹாராஜர் பிழையாதாராயிருந்தார். சரணம் பற்றி யவனை ஏற்றுக்கொள்ளுதலும், நம்மிடம் பொங்கும் பரிவுபெற்றிருக்கும் மஹாராஜர் கூறியதைக்
கேட்டு நடத்தலும் நமக்குச் சிறந்த நன்மைகளாகும். சரணம் பற்றி யவனை விட்டிட்டால், இரகு குலத்திலே பிறந்த இராமன் சரணம் பற்றியவனைக் கைவிட்டு விட்டான்’என்பர். மஹாராஜர் கூறியதைச் செய்யாவிடின், ‘தன்னைப் பற்றினாரிடம் பரதந்திரனாயிருக்கும் இராமன் க்ரீவ மஹாராஜர் கூற்றுச் செய்தான் இல்லை’ என்பர்.-இவ்வாறு இரண்டையும் செய்தேயாக வேண்டியிருந்தும், ஒன்றுக் கொன்று முரண்பட்டவைகளாயிருத்தலின், செய்வதா ? அல்லது செய்யமாட்டாது விட்டிடுகின்றதா?என்று தபிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு,’இது செய்யத்தக்கது; இது செய்யத் தகாதது’ என்னும் பகுத்தறிவு பெற்றிருப்பாரும்,
நினைத்ததை நடத்தவல்ல ஆற்றல் பெற்றிருப்பாரும், அழியும் பொருளில் கண்வையாது. அழிவற்ற செல்வத்தைவிரும்புவாரும், நொந்தாரைக் கண்டால் பொறுக்கமாட்டாது, ஐயோ !என்றிருப்பாரும் உத்தமஸ்நேஹிதரும் ஆன நீங்கள், என் தாபம் நீங்குமாறு,ஆராய்ந்து சொல்லுதல் பொருத்தமன்றோ? கூறுமின்.”
மேற்கூறிய வார்த்தையில் அமைந்துள்ள‘சாச்வதீம் பூதிம் இச்சதா” என்னும் பகுதி)
இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கதாம். இப்பகுதியில் விளங்கும் இராமபிரானுடைய திருவுள்ளக் கருத்து வெகு அழகானதாம். அக்கருத்தாவது : ”உங்கள் மஹாராஜர், நம் சரீரத்திற்கு இராவணன் தம்பியான இவ்விபீஷணனால் என்ன தீங்கு நேரிடுமோ? என அஞ்சுகிறார். இச்சரீரம் என்றும் அழியாது இருக்கும் செல்வம் அன்று .சரணம் பற்றியவன்,யவரேனும் ஆகிலுமாம்; அவரை விட்டிடாதுகாக்கும் போது, உண்டாம் புகழுடம்பு ஒருநாளும் அழியமாட்டாதன்றோ? நீங்கள் கூறும் கூற்று, நமக்கு நிலைநின்ற புகழுடம்பு உண்டாமாறு இருத்தல் வேண்டும்” என்பதாம். மேற்கூறிய கருத்துக்களைக் காணுங்கால், ‘என்றும் உள்ள எம்பெருமானாகிய தருமத் திற்கும் ஒருவாறு சலனம் ஏற்படும் இடம்-உண்டு” என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ?
இராமபிரான் விபீஷணனை விட்டிடாது காப்பானாயின், அப்பிரானை விட்டு, தருமத்தின்
தன்மை(பற்றினாருக்கு நன்மையை அளிப்பவனாயிருக்கை) அகன்றொழியாது. ஸுக்ரீவன்
பொங்கும் பரிவினால் மிகக் கலங்கி, “விபீஷணனைக் காக்கல் ஆகாது ; கொன்றே தீரவேண்டும்’ என்று கூறும் கூற்று, தருமமாகிய இராமபிரானையே ஒருவாறு அழிக்கத் தேடு கிறதன்றோ?-இங்கு இராமபிரான், தானாகிய தருமத்தை அழிவுக்கு இடம்கொடாது, நிலைநிறுத்தும் பரிசு யாதோ? எனின், தன்னைப் பற்றி னார்,ஒருகாலும் தன் எண்ணத்தைப் பின்செல்லாது இரார் ; அங்ஙனம் பின் செல்லாது ஒரு ஆச்ரிதன் இருப்பின், அவ்வாச்ரிதனுடைய (தன்னைப் பற்றினவனுடைய) மனக்கலக்கத்தை ஏனைய ஆச்ரிதரால் மாற்றி, அவனைத் தன் வயப்படுத்தி, தன்னைத் தன்னிலையின் நின்றும் நழுவவிடாது, தன்னை நோக்கி அருளுவதே, அவன் தன்னை நிலைநிறுத்தும் பரிசாம். இதுவே, இராமபிரான் திருவவ தாரம் செய்து செய்யும் முக்கியமான தருமஸ்தாபனமாம்.(தருமத்தை நிலை நிறுத்தலாம்.)-இந்த ” ஸுஹ்ருதா ” என்னும்வார்த்தை கூறுகிறவாறு இராமபிரான் வானரர்களை நயமாகக் கேட்க, அவ்வானரர்கள் அனைவரும்தம் கொள்கையை அறிவித்துக் கொள்ளுதல் இயலாதாதலின்,அங்கதன், சரபன்,ஜாம்பவான், மைந்தன் ஹநுமான் இவ் ஐவரும் ஒன்று சேர்ந்து, ஒரு குழாமாயிருந்து, அவ் இராமபிரானுடைய ஸன்னிதியில், அவன் நன்மையையே நினைந்து, வேறிடத்தில் எண்ணத்தை விட்டிட்டு, தன் தனக்குரிய கொள்கையைத் தனித் தனியே விண்ணப்பம் செய்து கொண்டதாய் இங்கு வரலாறு அறியத் தக்கது.-அங்கதன் கூறிய வார்த்தையும்,அதின் கருத்தும் வருமாறு 🙁அர்த்தாநர்த்தெள விந்ச்சித்ய வயவ ஸாயம் பஜேத ஹ குணத : ஸங்க்ரஹம் குர்யாத்
தோஷ தஸ்து விஸர்ஜ்ஜயேத் என்பது அவ்-வார்த்தையாம்.
“இராமபிரான் தன்னைத் தஞ்சமாய்ப் பற்றியிருப்பவனை விட்டிடாதவன். ஸுக்ரீவன் விபீஷணனைக் கொல்ல வேனும் என்று இருப்பவன். இவ்விருவருடைய இவ்விரு
கொள்கைகளுள் ஒன்றை விட்டு ஒன்றைக்கொள்ளும்போது,வீபீஷணனுடைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து காணுதல் அவசியமாகும். அங்ஙனம் ஆராய்ந்து காணும் போது, குற்றமிருப்பின், விபீஷணன் விடத்தக்கவனாம்.-மிக்க குணம் பெற்றவனாயிருப்பின்,விபீஷணன் கொள்ளத்தக்கவனாம்.ஆதலின், விபீஷணனைப் பற்றி ஆராய்தல் மிக முக்கியமானதாம்” என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும்.
இவ்வாறு அங்கதன் கூறிய பின்பு,சரபன் தன் கொள்கையை, “புருஷர்களுள் மிகச்
சிறந்தவ னே ! இவ்விபீஷணனனுடைய, நடத்தை நன்கு நமக்குத் தெரியாதாகை
யால், அதை அறிகைக்கு, முந்துறத்தூதுவிடவேணும்.-க்ஷிப்ரம் அஸ்மிந் நரவ்யாக்ரசார: ப்ரதிவிதீய தாம் ) என்று கூறியிருக்கிறான்.-இங்ஙனம் சரபன் செப்பிய பிறகு,ஜாம்பவான் கூறியதாவது :
” இவ்விபீஷணன் இராவணனிடத்தினின்றும் வந்தவன் என்பது மாத்திரமின்றி வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும், காலத்திலும் வந்தவன். ஆதலின் யோசிக்கத் தக்கவன்(அதேசகாலே ஸம்ப்ராப்த: ஸர்வதா சங்க்ய தாம் அயம்) என்பதாம்.

இப்படி ஜாம்பவான் தன் கொள்கையைக்  கூறிய பிறகு, மைந்தன், ” இவ்விபீஷணனை : 
நம்மோடு சேர்த்துக்கொண்டு, இவன் நன்மை தீமைகளை நன்கறிந்து, அதற்கு ஏற்ப நடந்து
கொள்ளுவது நன்றாம். “(பாவமஸ்யது விஜ்ஞாயதத்வதஸ் த்வம் கரிஷ்யஸி)” என்று கூறினன்.
இந்நால்வரும் இவ்வாறு இயம்பிய பிறகு, திருவடி இந் நால்வருடைய கொள்கைகளையும்
கண்டித்து, தன் கொள்கையை இராமபிரான் ஸன்னிதியில் விண்ணப்பம் செய்து கொண்டி
ருக்கின்றனன். இங்கு இத்திருவடி வார்த்தையும், அவ்வார்த்தையின் கருத்தும் பின் வருமாறு : ஸுக்ரீவனைக் குறித்து, “தலைவ ஒருவரை வெல்லவேண்டும் என்றாவது, ஒருவ
ரிடத்தில் அஸுயையினாாவது, நான் பெரி யன்’ என்னும் எண்ணத்தினாலாவது, ஒரு
பயனை விரும்பி, பக்ஷபாதத்தினாலாவது கூறப் போகிறேனில்லை. இராமபிரானுடைய திருக் குணங்களைக்கண்டு, உண்மையைக் கூறுவேன்” என்றனன், திருவடி.
இவ்வாறு கூறி, அத்திருவடி அங்கதன் கொள்கைக்குக் கூறியிருக்கும் குற்றமாவது:
” இவ்விபீஷணனிடத்தில், குணங்கண்டு ஏற்றுக் கொள்ளுதல்; குற்றங்கண்டு விட்டிடு
தல்’ என்னும் கொள்கை சிறந்ததன்று.ஏனெனில், இவனை நம் காரியத்தில் ஏவினாலல்லது, இவன் நன்மை அறிய இயலாது ; நன்மையை அறியாமல் ஏவ இயலாது. ஆதலின்,
இவனை ஆராய்தல் இயலாததாம்.-(ருதே நியோகாத் ஸாமர்த்யம் அவ போத்தும் ந சக்யதே
ஸஹஸா விநியோகோ ஹி தோஷவாந் ப்ரதிபாதி மா ) என்பதாம்.
பின்பு, சரபன் கொள்கைக்குச் செப்பியிருக்கும் குறையாவது : “இவ்விபீஷணன் எதிரே நிற்கையால், “தூதனை விட்டு, இவன் நன்மை தீமைகளை அறிந்து, அவ்வறிவுக்கு
ஏற்ப நடந்து கொள்ளலாம் ” என்னும் கொள்கையும் சீரியதன்றாம்.-(சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் ஸசிவைஸ்தவ அர்த்தஸ்யா ஸம்பவாத் தத்ர காரணம் நோபபத்யதே )என்பதாம்.
பிறகு, ஜாம்பவான் கொள்கைக்குப் பகர்ந்திருக்கும் புன்மையாவது :
“இவ்விபீஷணன், இராமபிரானிடம் வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும்,காலத்திலும் வந்தவன் ” என்னும் மதமும் பொருத்தமுடைத்தன்று. ஏனெனில், இராவணன் மிக்க தமோகுணம் பெற்றிருப்பவனாம், பிறரைத் துன்புறுத்துகின்றவனாம். ஆதவின், விடத் தக்கவனாம். விபீஷணன் அவனை விடாது இருப்பின், அவன்பாவச்செயலினால்,அவனைப் போன்று, அவனுக்கு உடன்பட்டிருக்கும் இவனும் அழிய நேரிடும்.-இராமபிரானோ, ரஜஸ்ஸும், தமஸ்ஸும் சிறுதுமின்றி, சுத்த ஸத்துவ குணமுடையவனாம். துன்பம் துடைத்து இன்பம் தந்து பிறரை வாழ்விப்பவனாம். ஆதலின், பற்றத்தக்கவனாவன். இவ் இராமபிரானைப் பற்றி இவனருளால், இப்பரமன் திருவடித் தாமரைகளைக் கிட்டி, தொண்டு செய்துவாழ்வுபெறலாம்.
இவ்வாறு இராவணனுக்கும் இராமபிரானுக்கும் உள்ள தீமை நன்மைகளைக் கண்டவனாம் இவ்விபீஷணன். மேலும், இராவணன் கீழ்மையும் இராமபிரான் ஆண்மையும் நன்கு உணர்ந்தவனாம், இவன். ஆகவே உள்ளத் தூய்மையுடன் பரமபுருஷனையே தஞ்சமாய்ப் பற்ற வந்தவன் வரவுக்கு இவ்விடமும் இக் காலமும் தகுந்த இடமும் காலமும் ஆகத் தட்டொன்று மில்லை யன்றோ?-(ஸ ஏஷதேச: காலச்சபவதீ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷகுணாவபி !தெளராத்ம்யம் ராவணே திருஷ்ட்வா விக்ரமம் ச ததா த்வயி
யுக்தம் ஆகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித)-என்பதாம்.
[ஒருவன் கருமயோகத்தைச் செய்கின்றான். அக்கரும யோகமாகிய தருமம், பரிசுத்மான இடத்திலும், காலத்திலும் செய்யப்பெறுமாயின், அதற்கு நன்மையுண்டாம் ;
அதனாலாகிய பயனும் உண்டாகும்.அங்ஙனம் செய்யப் பெறாவிடின், அத்தருமத்திற்கு நன்மையும் பயனும் உண்டாகா.இத்தருமம்போன்று. இடம் காலம் இவற்றினால், எம்பெருமானாகிய தருமத்திற்கு ஏற்படும் நன்மையும் பயனும் கூறுதற்கு சாஸ்திரம் இடம் தரவில்லையன்றோ? இராமபிரானாகிய தருமத்தைத் த ஞ்சமாய்ப் பற்றும் விபீஷணனுக்கு, அங்ஙனம் பற்றுங்கால், ஏதேனும் ஓர் இடமும் ஒரு காலமும் அமையுமாதலின், இன்ன இடம்
இன்ன காலம் என்பது இல்லையன்றோ? இந்த உண்மையைத் திருவடி வாயிலாக வெளியிடுகின்றான், வால்மீகி முனிவன். கருமயோகமாவது – எம்பெருமான் திருவுள்ளம் உகக்குமாறு, தனக்குரிய தருமங்களைச் சாஸ்திரமுறையைப் பின் சென்று செய்கையாம்.)
இவ்வாறு ஜாம்பவான் கொள்கைக்குக் குறை கூறி, மைந்தன் கொள்கைக்கு இழிவைக்
கூறியிருக்கிறான் திருவடி. அவ்விழிவாவது :-”இவ் விபீஷணனை ஒரு காரியத்தில்
தூண்டி, அக்காரியத்தைச் செய்வித்து, அதனால், இவன் கருத்தைத் தெளியலாம்” என்னும் கொள்கையும் சீர்மை உடைத்தன்று.-ஏனெனில், எதிரி தன் காரியத்தில் வல்லவனாயின், தன் எண்ணத்தை வெளியிடாதவாறு, நடந்துகொள்வன் ; ஆதலின், சீக்கிரத்தில் அவன் நினைவு அறிய இயலாது அன்றோ ?-(அசக்யஸ் ஸஹஸா ராஜந்பாவோ வேத்தும் பரஸ்யவை)-என்பதாம்.

இங்ஙனம்,அங்கதன் முதலானார் கொள்கைகளுக்குக் குறைகூறிய தி ருவடி, தன்
கொள்கையையும் நன்கு கூறியிருக்கின்றனன் :
”இந்த விபீஷணன் கூறும்போது, இவன் பால்குற்றங்களைக் குறிக்கும் செயல் ஒன்றும்
காணப் பெற்றிலது : வழியடியுண்டவன்தாய் முகத்திலே விழித்தாற் போன்று, இவன்
முகம் குளிர்ந்தன்றோ? தெரிகிறது; இவன் தீம்பனாகில், இவனுக்கு விரோதத்தைச் செய்ய
முயன்ற இவ்வானர வெள்ளத்தில், அன்பனாய் இவ்வாறு வார்த்தை கூறு தற்கு இடம்
உண்டோ? கூறியிருப்பனோ ? பயம் சிறிதும் இன்றியும் இருப்பனோ ? இவன் குரல் தழு
தழுத்துத் தெரிகின்றதோ? இல்லையன்றோ?-ஒருவனுக்குக் கெட்ட எண்ணம் உண்மையில்
இருப்பின்,அவ்வெண்ணத்தை அவன் மறைக்க முயன்றாலும், அதை, அவன் முகம்
வெளிப்படுத்திவிடுமன்றோ? ஆதலின், இவன் தூய்மை பெற்றிருப்பவனேயாம்.
பிறருக்குச் செய்ய அரிதான இராமபிரானுடைய முயற்சியையும், இராவணனுடைய
கெட்ட சரிதத்தையும் நன்கு கண்டு, தீம்பனான வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா இராச்
சியத்தை ஸுக்ரீவனுக்கு வயமாக்கிக் கொடுத்ததையும் கேட்டு, அவ்வாறே, இராவணனைக்
கொன்று, இலங்கா இராச்சியத்தைத் தனக்கு வயமாக்கிக் கொடுப்பன் என்று திடமாய்
எண்ணி, இவ்விபீஷணன் இங்கு வந்தனன்-என்பது என் எண்ணம். இவன் நிலையை
இவ்வாறுஉண்மையாக உணர்ந்தால் இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாம் . இதுவே, திருவடி கூறிய கூற்றாம்.-இங்கு, திருவடியின் வார்த்தை பின் வருமாறு 🙁உத்யோகம் தவ ஸம்ப்ரேக்ஷ்ய மித்யா வ்ருத்தம்ச ராவணம் | வாலி நம் ச ஹதம் சருத்வா ஸுக்ரீவம்ச
அபிஷேசிதம் || ராஜ்யம் ரார்த்தயமானஸ்து புத்தி பூர்வமிஹாகத : ஏதாவத்து புரஸ்க்ருத்யவித்யதேத் வஸ்ய ஸங்க்ரஹ : ) இங்ஙனம் திருவடி கூறிய வார்த்தையைத்
திருச்செவி சாற்றி, (ஸக்ரீவன் முதலானார்,’சரணம் பற்றிய விபீஷணனை ஏற்றுக் கொள்
ளுதல் கூடாது’ எனக் கூறும்போது ஒருவாறு அழிந்திருந்த ) இராமபிரான் உளனானான் ;
மனக்களிப்பும் பெற்றான் ; தன் கொள்கையையும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றான்.
(அத ராம ப்ரஸந்நாத்மா) என்னும் வால்மீகி முனிவன் வாக்கியமும், ” அத ராம்: = அநந்தரம் பெருமாள் உளரானார்; திருவடி வார்த்தையாலே உளரானார். ப்ரஸந்நாத்மா=தர்மியுண்டான
வாறே தர்மம் உண்டாயிற்று’‘ என்னும் பெரியவாச்சான்பிள்ளை திருவாக்கும் அனுப விக்கத் தக்கவை.

இனி, இராமபிரான் கொள்கையைக்காண்போம்.-இராமபிரான், அங்கதன் முதலானாரை நோக்கி, தன் கொள்கையைக் கூறுதற்கு முன், தன் உத்தமத் தன்மைக்கு ஏற்ப, ‘உங்கள் வார்த்தையை நான் கேட்ட வோபாதி, இவ்விபீஷணனைப்பற்றி,யான் கூறும் வார்த்தையையும் நீங்கள், செவி தாழ்த்துக் கேட்க வேண்டும். என்று இரந்து கொண்டிருக்
கின்றான்.-இவ்வாறு இரந்து, இராமபிரான் கூறிய வார்த்தையாவது (மித்ராபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதம்சந தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம் )என்பதாம்
இராமபிரான். கடற்கரையில் வானரர்கள் திரளிலே அருளிச் செய்த ‘மித்ரபாவேந’
என்னும் இவ்வார்த்தை,கண்ணன் பகவத் கீதையின் இறுதியில் அருளிச் செய்த “ஸர்வ
தர்மாந் “ என்னும் வார்த்தைபோன்று உள்ளதாம்.
கண்ணபிரான், அக்கீதையில், கருமயோகம்,(எம்பெருமான் முக மலர்த்திக்குஉறுப்பாகச் செய்யும் ஜீவனாகிய தனக்குரியதருமம்) ஜ்ஞான யோகம், (உள்ளத் தூய்மை பெற்றிருப்பவன் சிந்திக்கும் ஜீவாத்மாவைப்பற்றிய சிந்தனம்) பக்தி யோகம் (பரமனைப்
பற்றிச்சிந்திக்கும் சிந்தனம்) ஆகிய இவ்வுபாயங்களைப் பரக்கக்கூறி, இறுதியில் இவற்றை
விட்டிட்டு, பரமனாகிய தன்னையே பற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான்.
இராமபிரானும், இங்கு அங்கதன், சரபன் முதலானோர் கூறிய கொள்கைகளைக் கழித்து,
இறுதியில் தனக்கே உரிய சீரிய கொள்கையை முடிந்த பொருளாக அருளிச் செய்திருக்கிறான்.
கண்ணன் செல்வம் இழந்திருக்கும் அர்ஜ்னனைச் செல்வ வானாக்க இறுதியில் ஸர்வ தர்மாந்” என்னும் வார்த்தையை அருளிச் செய்தது போன்று, இராமபிரானும், இலங்
கையை இழந்த விபீஷணனை இலங்கையை உடையவனாக ஆக்க இறுதியில் ‘மித்ரபாவேந என்று அருளிச் செய்திருக்கிறான்.
அங்கு, கண்ணன் ஸேனையின் ந டுவில் அர்ஜ்ஜுனன் சோகம் தீர்வதற்கு அவ்வார்த்
தையை அருளிச் செய்திருக்கிறது போன்று, இங்கும், இராமபிரான் ஸேனையின் நடுவில்
விபீஷணன் சோகம் தீர்வதற்கு இவ்வார்த் தையை அருளிச் செய்திருக்கிறான்.
நம்ஆசாரியர்கள் ‘திருத்தேர்த் தட்டில்வார்த்தை’ ‘கடற்கரை வார்த்தை’ என்னும்,
(கண்ணபிரான் இராமபிரான் இவ்விரு எம்பெருமான்களுடைய) இவ்விரு வார்த்தைகளையும், எல்லாச் சேதனருடைய சேமத்தைவிளைவிக்கும் சீர்மையுடையன வாயிருத்தலினாலும், மேற்கூறியவாறு ஒற்றுமை பெற்றிருக்கின்றமையினாலும், அன்புடன் தாங்களும் ஆதரித்தும், தங்கள் திருவடிகளில் ஸம்பந்தம்
பெற்றிருப்பார்க்கு உபதேசம் செய்தும்போருகிறார்கள்’‘ என்பதையும், “எந்தச் சேதன
னுக்கு ‘இவ்விரு வார்த்தைகளில் நன்கு தொடர்பு ஏற்படுகின்றதோ,அந்தச் சேதனனே. ஸ்ரீ வைஷ்ணவன்’ எனப் புகழப்பெறுகின்றான்” என்பதையும் நாம் இங்கு அறிதல் அவசியமாகும்.
உண்மை இங்ஙனம் ஆனாலும், பெரியவாச்சான்பிள்ளை இராமபிரான் வார்த்தைக்கு
மிக்க ஏற்றத்தைத் திருவுள்ளம் பற்றி அருளிச் செய்திருக்கிறார் :
அங்கு.சரணாகதாத்வஸாயம்’ சொல்லிற்று; இங்கு . ‘சரண்யாத்வாஸாயம்’ சொல்
லுகிறது .அங்கு, ‘சரணாகதனைப் பாபங்களில் நின்றும் விடுவிப்பேன்’ என்கிறது; இங்கு
‘நான் விடேன்’ என்கிறது” என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கு அவசியம் அனு
பவிக்கத் தக்கதாம்.
இத்திருவாக்கின் கருத்தைச் சிறிது விவரித்துக் கூறுவோம் : எம்பெருமானை எவன்
அவனைப் பெறுதற்குக் காரணமாய்ப் பற்றுகின்றனனோ, அவனைச் சரணாகதன் என்பர்
அச்சரணாக தனுக்கு உரிய திடமானஎண்ணத்தை (“எம்பெருமான் இப்பொருளை
ஒருகாலும் விட்டிடான்; காத்தே தீருவன் ‘என்னும் எண்ணத்தை) ‘அத்யவஸாயம்
என்று கூறுவர்.

இந்த எண்ணம், எம்பெருமான் திருவடிகளை உபாயமாய்ப்பற்றி, பேற்றைப்பெறுபவ
னுக்கு இன்றியமையாததாம். இவ்வின்றியமையாமையைப் பின்வருமாறு நாம் அறியலாம்:
ஒருவன், கப்பலை ஏறி, கடலைக் கடந்துதான் விரும்பிய இடத்துக்குச் செல்கிறான்.
அங்ஙனம் கடந்து செல்பவனுக்கு உள்ள(இக்கப்பல் மிக உறுதியானது : இது நம்மை,
கோரின் இடத்திற்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிடும் என்னும் ) எண்ணத்தைக் காண்
கின்றோமல்லவா?-இது போன்று, இந்த ஜீவனும் எம்பெருமானாகிய கப்பலை ஏறி ஸம்ஸாரமாகியபெருங்கடலைக் கடந்து, தான் விரும்பிய பரமபதமாகிய இடத்துக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கின்றமையின், .எம்பெருமானாகியகப்பல் மிகமிக உறுதியானது; இக் கப்பல்நம்மைப் பரமபதத்தில் கொண்டு போய்ச்சேர்த்துவிடும்” என்னும் திடமான எண்ணம்பெற்றிருக்கவேண்டியவனன்றோ?
இங்கு, ”ஒரு சிறாயை விச்வஸித்து,ஆறு மாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும்
ஏற்றிக்கொண்டு, கடலிலே இழியாநின்றான். அவ் வோபாதியாகிலும் வேண்டாவோ பக
வத்விஷயத்தைப் பற்றுவார்களுக்கு‘ என்னும் நம்பிள்ளை திருவாக்கு அனுபவிக்கத்
தக்கது.
இத்திருவாக்கை அனுபவிக்குங்கால்
“எம்பெருமானாகிய கப்பலை ஏறிச் செல்பவ னுக்கு மிகவும் திடமான எண்ணம் வேண்டும்.
அவ் எண்ணம் இந்த ஜீவன் நிலையைக் காணுங்கால், உண்டாவது அரிதாம். ஆனாலும், கருங்கடலைக் கடப்பவன், அங்ஙனம் கடக்கக் கருவியாய் எண்ணியிருக்கும் கப்பலில் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றுள்ள நம்பிக்கையாவது இந்த ஜீவனுக்கு வேண்டுவது அவசியமன்றோ?”‘என்னும் உண்மை நன்கு விளங்குகின்ற தன்றோ?
‘இந்தத் திடமான எண்ணம் பரம புருஷனாகிய என்னைச் சரணம் பற்றியிருப்போனுக்கு
இன்றியமையாததாம்” என்பதை இயம்பியிருக்கிறான்,”ஸர்வ தர்மான்” என்னும்
வார்த்தை வாயிலாகக் கண்ணன்.மேலும், அக்கண்ணபிரான், மேற்கூறிய வார்த்தையிலேயே, இவ்வாறு திடமானஎண்ணம் பெற்றிருக்கும் சேதனனை, என்னை
அடையவொட்டாது தடைசெய்யும் பாவங் களினின்றும் விடுவிப்பேன்’ என்றும் அருளிச்
செய்திருக்கிறான்.
இதுவரையில், சரணாகதாத்யவஸாயம் சொல்லிற்று; சரணாகதனைப் பாவங்களில்
நின்றும் விடுவிப்பேன்‘ என்னும் பகுதியின் கருத்தைக் கண்டோம். இனி, சரண்யாத்ய
வஸாயம்’ என்பதின் கருத்தைக் காண்போம்.
‘சரண்யன்‘ என்பதற்கு, ‘துன்பம் துடைத்து இன்பம் தரும் எம்பெருமான் என்று பொருள். அவ் எம்பெருமானுடைய திடமான எண்ணத்தை (“இந்த ஜீவனை ஒருக்காலும் விட்டிடேன்; காத்தே தீருவேன்” என்னும் எம்பெருமான் எண்ணத்தை) சரண்யாதியவஸாயம்’ என்று கூறுவர்.
இவ் அத்யவஸாயத்தையும் ‘இந்த ஜீவனை எம்பெருமானாகிய நான் விடேன்’ என்று கூறி
யிருத்தலையும், இங்கு இராமபிரான் வார்த்தையில்நாம் நன்கு அறியலாகும்.
ஜீவனுடைய திடமான எண்ணம், எம் பெருமானுடைய திடமான எண்ணம் இவை
இரண்டும், இந்த ஜீவன் பேறு பெறும்போது அவசியமானவை என்றாலும், இவன் எண்ணத்
திலும்,அவன் எண்ணம் மிகமிக முக்கியமானதல்லவா ?
இந்த ஜீ வன், “எம்பெருமான் இப்பொருளை இரட்சியாது விட்டிடான் : இரட்சித்தே தீருவன்” என்னும் திடமான எண்ணம்பெற்றிலனேயானாலும், எம்பெரு மான்,
இந்த ஜீவனை நாம் விட்டிடாது, இரட்சித்தே தீருதல் வேண்டும” என்னும் திடமான எண்ணம் பெற்றிருப்பின், எம்பெருமானுடையஅவ் எண்ணத்தினாலேயே, இவனுக்கு நன்மை
உண்டாவது திண்ணமன்றோ ?

‘இந்த ஜீவன், எம்பெருமான் இப்பொருளை இரட்சித்தே தீருவன்’ என்று திடமாக
எண்ணியிருந்தாலும், எம்பெருமான், ‘இந்தஜீவனை இரட்சித்தே தீரவேண்டும் என்று எண்ணாது இருப்பின், இவன் நன்மை பெற இயலுமோ? இயலாதன்றே? இதுபோன்று
பாவத்தினின்று விடுவிப்பதிலும், எம்பெருமான் இவனை விடாது இருத்தல் மிகவும் முக்கி
யமானதன்றோ ?
இங்கு,”உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தைபிரானே” என்னும்
திருமங்கை மன்னன் திருவாக்கும் அனுபவிக்கத்தக்கதாம் .-உண்மை இவ்வாறு இருத்தலின், கண்ணன் வார்த்தையிலும், இராமபிரான் வார்த்தைக்கு ஏற்றம் உண்டு என்பது தெளிவாம்.
இதுவரையில், “மித்ரபாவேந்” என்னும் இவ்வார்த்தையின் சீர்மையைச் சிறிது கண்டோம். இனி,இவ்வார்த்தையின் கருத்தைச் சுருக்கமாய்க் காண்போம் :
நம்பத் தக்கவன் செயலாலே நம்மை நெருங்கி வந்த இவ்விபீஷணனை ஒரு படியாலும் விடஊஹை கூடச் சிறிதும் நமக்கு இல்லை; இவ்விபீஷணனுக்குக் குற்றம் இருந்தாலும்,இவன் நினைத்த காரியம் பெற்றானா கிறான். இவனை ஏற்றுக் கொள்ளுதல்,பெரியோர்களுக்கு நிந்திக்கத் தக்கதாகாதாம்” என்பது, மேற்கூறிய வார்த்தையின் கருத்தாம்.
இவ்வாறு இராமபிரான் தன் இயல்பை இயம்பியிருந்தும், பொங்கும் பரிவு பெற்றிருந்
துள்ள ஸுக்ரீவன், தெளிவு சிறிதும் இன்றி,-அவ் இராமபிரான் முன்னிலையில் “விபீஷணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் அல்லன்” என்பதைச் சில முறைகளைப் பின் பற்றிக் கூறி
யிருக்கிறான். அக்கூற்றிற்கு இராமபிரான் விடை அளிக்குங்கால். அப்பிரான் திருவாக்கி
லிருந்து அவதரித்ததும், “மித்ரபாவேந என்னும் வார்த்தை போன்று மிகச் சீர்மையுற்றதும், எல்லாச் சேதனருக்கும் நன்மையை உண்டு பண்ணுவதுமான வார்த்தை வருமாறு

(ஸக்ருதேவ ரபந்நாய தவாஸ்மீதிசயாசதே |அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வரதம் மம1
என்பதே அவ்வார்த்தையாம்.-(இவ்வார்த்தையின் கருத்துக் காணும் போது. ஸக்ரீவன் கேள்விகளுக்கு இராமபிரான்விடையளித்திருக்கிறதாய் நாம் காணுதல் நன்றாம்.
ஸுக்ரீவன், இராமபிரானை நே க்கி இராம! நீ புருஷோத்தமன்; உன்னை முறையுடன் உபாயமாய்ப் பற்றியிருப்போனை விட்டிடாது காத்தல் உனக்குரிய தருமமேயாம். சாஸ்திரம், ‘சரணாகதியை ஒருகால் செய்தல் நன்று; பலகால் செய்யலாகாது’ என்று இயம்பியிருக்கின்றது. இவ்விபீஷணனோ, சாஸ்திரம் கூறும் முறையைப் பின்
சரணம் கா: / பவந்தம் சரணம்கத: / பாதயோச்சரணாவேஷநிபபாத ) என்று முக்
கால் சரணம் பற்றியவனன்றோ? ஆதலின், இவன் ஏற்கத் தக்கவனல்லன் எனறு கூறினன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை :
“(ஸக்ருதேவ) இவ்விபீஷணன் முறை வழுவாது ஒருகால் நம்மைப் புற்றியவனே
ஆவான்; எங்ஙனம்? என்னில், இராவணனால் மிகவும் அவமதிக்கப்பட்ட விபீஷணன் நம்மை
நோக்கி, நான்கு இராக்கதருடன்,ஆகாசத் தில் கிளம்பிய போதே, நீங்கள் அவனைச் சத்துருவாய் எண்ணிக் கலங்க, உங்களுக்கு அக்கலக்கம் போக வேண்டும் என்று அவன் எண்ணி,’என்னைச் சத்துருவாய் எண்ணலாகாது நான் இராமனைச் சரணம் பற்ற வந்தனன்”’
என்னும் உண்மையை உங்களுக்கு உணர்த்திய வார்த்தை, “ராகவம் சரணம் கத” என்பது.
உங்கள் வார்த்தையினால், நாமும் கலங்கினோமோ? என்று ஐயம் கொண்டு,நம்மைத்
தெளியப்பண்ணச் சொன்ன வார்த்தை,
பவந்தம் சரணம் கத:” என்பது. உண்மையில் முறை வழுவாது நம்மைச் சரணம் பற்றும் போது உள்ள வார்த்தை“பாதயோச் சரணான்வேஷ நிபபாத ” என்பது. ஆதலின், இவன் ஏற்றுக்கொள்ளத்தக்கவனேயாம். . இதைச்செவி மடுத்த ஸு க்ரீவன், மேலும் வினவியதாவது:-இவ்விபீஷணன் தேவரீரைச் சரணம் பற்றியிருப்பவனல்லன்; ஏன்? எனில் “வதம் செய்யவேண்டும்” என்று எங்கள் கூற்றைக்கேட்டு வெருவி, போகநிற்கிறவனன்றோ?
இவன். ஆதலின்,இவன் ஏற்கத் தக்கவனல்லன்”
இதற்கு இராமபிரான் விடையாவது:‘(ப்ரபந்நாயைவ) நாம் இவ்வாறு இவனை
ஏற்றுக் கொள்ளுதல் முறையோ, முறையன்றோ? எனத் தடுமாறுதல் போன்று இராது.
உறுதியுடன் நம்மைப் பற்றியே இருப்பவன் காண், இவன்”.-இதைச் செவியேற்ற ஸுக்ரீவன், இவ்விபீஷணன்,தேவரீரையே மிகச் சிறந்த நன்மையாய்க் கருதாது, இலங்கையைப் பெற
விரும்பி வந்தவனன்றோ? –த வரீருக்கு த்தொண்டனான திருவடியுமன்றோ? “ராஜ்யம்
ப்ரார்த்தயமாநச்ச” என்று இவ்விபீஷணனுக்குள்ள நிலைமையை (இலங்கையில் விருப்
புற்றிருக்கும் இயல்பை)த் தெளிவாய்க்கூறி,தன் கொள்கையை முன்னம் வெளியிட்டிருக்
கின்றனன். ஆதலின், இவன் ஏற்கத் தகுந்தவனல்லன்’ என்றனன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை : “( தவாஸ்மீதி ச யாசதே.)திருவடி இராவணன் முன்னிலையில், நம் சிறப்புக்களை கூறுங்கால், அவ் இராவணன்
அவற்றைப் பொறாது, அத்திருவடியைக்கொல்ல, தன் தொண்டர்களுக்குக் கட்டளை
இட்டனன். அந்த ஸமயம் அங்கிருந்த வி ஷணன். தூதனைப் கொல்லலாகாது” என்றுதடுத்தனன். அவ்வாறு தடுத்து, தனக்குச் செய்திருக்கும் நன்மையை உணர்ந்த திருவடி இலங்கையின் அரசுரிமையை விபீஷணனுக்கு அளிக்கவேணுமென்று தான் கருதி “ராஜ்யம் ப்ரார்த்தய மானச்ச “ என்று கூறினனேயன்றி விபீஷணன் அரசுரிகைமயை வேண்டினனோ? இல்லையன்றோ?
மேலும் நம் தம்பியான இலக்குமணன், நம்மைஎங்ஙனம் விரும்பி, நம்மைப் பிரியாது
நம்முடன் நின்று, நமக்கு மனமகிழ்ச்சிஉண்டாகுமாறு நம்மையே மிகச்சிறந்த பயனாகப் பற்றியிருக்கின்றனனோ,அங்ஙனமே இவ்விபீஷணனும், நம்மையே மிகச்சிறந்த பயனாக விரும்பி நமக்கே ஆட்செய்ய வந்தவன் காண். (தவ,ச, அஸ்மி இதி யாசதே என்று பதங்களைக் கூட்டி, ‘ச’ என்னும் சொல்லை,ஏகாரப்பொருளில் கொண்டு நோக்கின், ” இராமபிரானாகிய உனக்கே அடிமையாக இருக்கிறேன் என்று விரும்புகின்றவன் பொருட்டு” என்னும்பொருள் இங்குக் கிடைக்கிறதன்றே?)
இதைக் கேட்ட ஸுக்ரீவரின் மேலும்இராமபிரானை நோக்கி, இராமா! விபீஷண னுடைய சரணாகதி. முறை வழுவியது’ என்னும் என் கூற்றுக்கு நீ விடை கூறினாய் நீ அவனுக்கு அளிக்கும் பயன் தான் யாதோ?என்றனன்.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரானும், “தேவர் மனிதர். முதலிய எல்லா ஐந்துக்
களினின்றும், பயத்தைப் போக்கி, நன்மையைச் செய்வேன் எனக்கூறி, ! இவ் வுலகிலுள்ளார் அனைவருக்கும்துன்பம் துடைத்து இன்பம் தருதல்,நமக்கே உள்ளதொரு தருமமன்றோ! ஸுக்ரீவ ! இதை நீதலைக்கட்டித் தருதல் நன்றாம்” என்றும் கூறி
யிருக்கின்றனன். (அபயம் ஸர்வ பூதேப்ய; ததாமி ஏகத்வரதம் மம).இவ்வாறு, தன் திடமான ஸங்கல்பத்தை இராமபிரான் வெளிப்படுத்திய இடத்தும் ஸுக்ரீவனுக்குக் கலக்கம் தீர்ந்திலது.அத்தருணம் தன் மிடுக்கையும் அவன் நெஞ்சில் படுமாறு. கலக்கம் தீர்வதற்குக் கூறியிருக்கிறான் 🙁பிசாசாந்தாநவாந்யஷாந் ருதிவ் யாம்சைவ ராக்ஷஸாந் |
அங்குள்யக்ரேணதாந் ஹந்யாம் இச்சன் ஹரிகணேச்வர| ) என்பது, அம்மிடுக்கைக் கூறிய வார்த்தையாம்.
இதின், கருத்து : ‘ ஸுக்ரீவ!பிசாசங்களையும். அஸுரர்களையும் இயக்கர்களையும்,
இப்பூமியிலுள்ள அரக்கர்களையும் இவர்களனைவரையும் அழியச் செய்யுமிடத்து, தம் பலம்
எல்லாம் வேண்டா ; ஆயுதமும் வேண்டா; நம் கைவிரலும வேண்டா; விரல் நுனியே
போரும் . ஆனால். நம் விரோதிகளுடையதிரள் குறி அழியாது இருப்பானேன்? என்னலாம். அருமையாலனறு, செய்யநாம் நினையாமல் இருத்தலே, அங்ஙனம் அத்திரள அழியாது இருததலுக்குக் காரணமாம். உயிர்நிலையிலே நலிந்த இராவணனை நலிய நினைவில்லாமல் இதுகாறும் இருத்தலுக்குக் காரணம்யாதோ? என்று வினவலாம்.இவவிபீஷணனைப் போனறு உயிரோடு தலைவணங்கினால் அவனும் அவனைச் சேர்ந்தோறும் வாழ்நது போகலாமன்றோ? இதுதான அங்ஙனம் இருத்தலுக்குக்காரணம். வாலியை நாம் அடித்துக் கொன்றபோதுதானே கிஷ்கிந்தையின் அரசுரி மையை நீ பெற்றுவானர வெள்ளங்களுக்குஅரசனானது” என்பதாம்.
இங்கு, பின்வருமாறு உண்மை உணரத் தக்கது: எவன் தன் இச்சையினால் இப் பிர
பஞ்சத்தைஆக்கி, அளிதது அழிக்கின்றனனோ,அவனே மிகமிக மேலான தெய்வம்” என்பது
வேதாந்தங்களின் உண்மைக் கருத்தாகும்.-அங்ஙனம் மிகமிக உயர்ந்த தெய்வம் இராம
பிரான என்பதை இவ்வுலகம் உணர்ந்ததேயாம். அந்த இராமபிரானுக்கு, ” இவ் இரா
வணனையும் இலங்கையையும் அழித்தல்” என்பது உண்மையில் ஒரு பொருளோ?
தேவதைகளுடைய வேண்டுகோளுக்குஇணங்கி தன் மேன்மையை, மற்றவர் அறி
யாது இருக்குமாறு, மானிட சரீரம் போன்றுள்ள தன் சரீரத்தினால் மறைத்துக் கொண்டிருக்குமவனும், இராவண வதமான பிறகும்,-பிரமன், சிவன் முதலானோர். இராமா! நீ நாராயணன்’ என்று உண்மையை உணர்ந்து கூறுங்கால், தன்னை மானிடனாகவே கூறிக்
கொண்டவனும், பரதேவதையும் பரமபுருஷ னுமான இராமபிரான், தானாகிய தருமத்தை
நிலைநிறுத்தும் இவ்விடத்து, மித்ர பாவேந் என்னும் வார்த்தை வாயிலாகத் தன் இயல்
பையும், “ஸர்வ தர்மான் ‘ என்னும் வார்த்தை வாயிலாகத் தன் திடமான எண்ணத்தையும் கூறிய அந்த அந்த அளவில் நில்லாது, தன் இச்சையினாலேயே இப் பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழிக்க வல்லவனுக்குஇலங்கையையும் இவ் இராவணனையும் அழித்தல் அருமையாமோ? என்று தனக்கே உரிய தெய்வத் தன்மையையும் வெளிப்படுத்திக்
கூறி, இம் முகத்தால். ‘ஸகரீவனாகிய ஆசரிதனுக்குத் தான் வயப்பட்டிருத்தல்’ என்னும்
தனக்கே உரிய சீர்மையையும் அழியவொட்டாது காத்து தனககுரிய தருமத் தன்மையை
யும் நிலைநிறுத்தி, விபீஷணனையும் வாழ்வித்தஇச்சரிதம் வெகு ஆச்சர்யமானதல்லவா?
இராமபிரான் இவ்வாறு அருளிச் செய்து மேலும் கூறிய வார்த்தை:(ஆநயை நம் ஹரிச்ரேஷ்டதத்தம் அஸ்யா பயம் மயா விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் )என்பதாம்.
இவ்வார்த்தையின் கருத்தையும் முடிந்தபொருளையும் முறையே இங்குக் காண்போம்:
“ஸுக்ரீவனே! தன் வரவை இராகவனாகிய நம்மிடம் தெரிவிக்குமாறு இவ்விபீஷணன், வேண்டிக் கொண்டவனன்றோ? இவன் நெஞ்சாறல் தீர்ந்து நம்மிடம் சேர்ந்தானாவ
தும்.நாம் ஏற்றுக் கொண்டோமாவதும் நீ சென்று அவனை அழைத்து வந்தாலன்றோ?
ஆதலின், அவனை அழைத்து வருதல் வேண்டும். விட வேண்டிய எல்லாவற்றையும் விட்டிட்டு, நம்மைச் சரணம் புகுந்த இவனுக்குநம்மால் பயமின்மையானது அருளப் பெற்றுள்ளது. (இவ்வாறு கூறியதும் விபீஷணனை அழைக்கச் சென்ற ஸுக்ரீவனைக் குறித்து, திரும்பவும் இராமபிரான் கூறியதாவது) விபீஷணனைத் தானே அழைத்து வரும்படி கூறப் பட்டது என்று மீளாதே, இராவணன் தானே யாகிலும் அழைத்துக் கொண்டு வரவேணும், விபீஷணனைக் கைக் கொண்டோமாகில், தன்பக்கல் புண்ணியம் உடையோனை ஏற்றுக்கொண்டோமாவோம்; இவ் விபீஷணனுடன் வந்த இந்நான்கு இராக்கதரும் பிழைத்துப் போருவர் ; வந்தவன் உண்மையில் இராவண னாயிருந்து, அவ் இராவணனை ஏற்றுக் கொண் டாலோ,அப்போதுதான், இராமபிரானாகிய நமக்கு நிறமுண்டாம்; இலங்கையிலுள்ள இராக்கதர் அனைவரும் வாழ்ந்து போருமாறு நோக்கினோமாவோம். நமக்கு வரும் ஏற்றம்முழுவதும் உயிர்த்தோழனான உன்ன தன்றோ?
என்னும், இதுவே மேற்கூறிய வார்த்தையின்உண்மைக் கருத்தாகும்.
இங்கு, ஸுக்ரீவன் இசைந்ததும், இராமபிரான் தானே நேரே விபீஷணனை அழைத்து
ஏற்றுக்கொள்ளாது, ஸுக்ரீவனையிட்டேஅழைத்து வருமாறு ஏவியிருப்பதற்குக் கருதது
யாதோ? எனின், கூறுவோம் :
இராமபிரானுக்கு ‘ஆச்ரிதபாரதந்திரியம்’ என்னும் செல்வம் உண்டு; அதாவது,
தன்னைப் பற்றியவனுக்கு வயப்பட்டிருத்தலாம்” என்று இக்கட்டுரையில் அடிக்கடி கூறி
வருகிறோம் அல்லவா ? தானே விபீஷணனைஅழைத்து ஏற்றுக்கொள்ளும்போது, அச்செல்
வம் இவன் பால் நிலைபெற்றிருக்குமோ ? அழிந்து விடாதோ? ஆதலின், ஸுக்ரீவனை இட்டே அழைத்து ஏற்றுக் கொண்டனன்.-இது நம் ஆசாரியர்களாலே இங்கு ஸமாதானமாய்க்கூறப் பெற்றுள்ளதொரு உண்மைக் கருத்தாம்.
மேலும், விபீஷணன் இராமபிரானிடம் அளவற்ற அன்பு உடையவன். அவ்விபீஷண
னைக் கொல்லவேண்டும்” என்று ஸுக்ரீவன் கூறியது, அவ்வாறு கூறிய ஸுக்ரீவனுக்குப்
பெரிய பாவமன்றோ ? ” தன்னை விட்டிட்டு, தன் அடியார் திறத்தில் அன்பைச் செய்தல்நன்றாம் என்பதும், “அங்ஙனம் அன்புசெய்யாது இருத்தல், பெரிய பாவம்” என்பதும்,
” அப்பாவம் உள்ளவன் மாத்திரமேயன்றி, அவனோடு தொடர்பு பெற்றிருக்கும் இப்பிர பஞ்சமும் அழிந்துவிடும்” என்பதும் பரமபுரு ஷனாலேயே கூறப்பெற்றுள்ள உயரிய உண்
மைக் கருத்துக்கள் அல்லவா?உண்மை இங்ஙனம் இருக்க, ஸுக்ரீவன்,
விபீஷணனைக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருப்பது மிகமிகப் பெரிய பாவமன்றோ?
இராமபிரான, ஆச்ரிதரிடம் மிக்க அன்பு பெற் றிருப்பவனாதலினாலும், ஸு க்ரீவன் அவ் ஆச்ரிதருள் ஒருவனாதலினாலும், அந்த ஸுக்ரீவன்பாவம் தீர்ந்து நன்மை பெறுமாறு திருவுள்ளம்பற்றி, அந்த ஸுக்ரீவனையே அழைததுவர நியமித்தருளினான்’ என்பதும் இங்கு ஓாஉண்மைக் கருத்தாகும்.
இன்னமும், இங்கு அறியவேண்டுவதோர்உண்மை உண்டு: எம்பெருமானை ஜீவன பற்றும் பற்றுதல், “ஸ்வகத ஸ்வீகாரம்” எனப்படும் எம்பெருமான் ஒரு சேதனனைத்
தனக்குக் காக்கத தககவனாய்க கருதி, அவனே இவனை மேல் விழுந்து ஏற்றுக்கொளளுதல் என்பதை ‘பரகத ஸவீகாரம்” என்று பகருவர். இங்கு,முன்னது 
” (முமுக்ஷர்வை சரணமஹம் ப்ரபத்யே)என்னும் வாக்கியமும்,பின்னதுக்கு,
தேநலப்ய = எந்தச் சேதனனை எம்பெருமான்மேல் விழுந்து விருமபுகின்றனனோ, அவனால்
அப்பெருமான் அடையத் தக்கவனாம்) என்னும் வாக்கியமும் தக்க சான்றுகளாம்.
“ஜீவன் எமபெருமானைப் பற்றுமபோது எங்ஙனம் பிராட்டியாரை முன்னிட்டுப் பற்று
கின்றனனோ,அங்ஙனமே, எம்பெருமானும் ஒரு சேதனனை மேல் விழுந்து ஏற்றுக்கொள்
ளும போதும், பிராட்டியாரையோ, அல்லது, பிராட்டியார்ஸதாநத்தில் உள்ள ஒரு பாகவ
தோததமனையோ, முன்னிட்டே ஏற்றுக் கொள்கின்றான் என்பதும் ஒர் உயரிய
உணமையாகும்இம்முறையை, இந்த இராமயணத்தில் பலஇடங்களில் நாம் காணலாகும். எங்கே?என்னில், கூறுதும்.
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டு, ச்ருங்கி பேர புரத்தில் குகனை ஏற்றுக்கொண்
டிருத்தலை, நாம் காணலாம் 🙁குஹேந ஸஹிதோராம 🙂 என்னும் வாக்கியம் இங்குக் காணத்
தக்கது. இல்வாக்கியத்தில், “குஹன் இராமபிரானோடு சேர்ந்தனன்” என்று கூறப் பெற்றிலது; ‘இராமபிரான் குஹன் இருக்குமிடம்எழுந்தருளி அக்குஹனோடு சேர்ந்தனன்”
என்றே கூறப் பெற்றுள்து. இதனால், எம்பெருமான், சேதனனை அவனிருக்குமிடம்
எழுந்தருளி மேல் விழுந்து ஏற்றுக் கொள்கி றான்‘ என்பது தெளிவு.
இங்ஙனம் ஏற்றுக் கொள்ளும் போது,
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டே ஏற்றுக்கொண்டனன், இராமபிரான்‘ என்பதை
திருமங்கை மன்னன், “மாழை மான் மடநோக்கி” என்னும் வாக்கியத்தினால் அருளிச்
செய்திருக்கிறார்; காணலாம்.
இந்தக் குஹன் சரிதம் போன்றே, இவ்விபீஷணன் சரிதமும் உள்ளது. (விபீஷணே நாசு ஜகாம ஸங்கமம்) என்பது இங்கே வாக்கியம், இவ்வாக்கியத்திலும் இராமபிரான் விபீஷணனோடு சேர்ந்ததாகவே கூறப் பெற்றுள்ளது.
இங்கு ஸீதாபிராட்டியார் ஸ்தாநத்திலுள்ள ஸுக்ரீவனை முன்னிட்டு விபீஷணனை இராம
பிரான் ஏற்றுக் கொண்ட இவ்வுண்மை,
“ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்னும் வார்த் தையில் தெளிவு.
ஆனால் “ஜீவாத்மா எம்பெருமானைப் பற்றும்போது, தான்,குற்றக்கடலாயிருக் கின்றமையின், பிராட்டியாரை முன்னிடுகிறது, அக்குற்றங்களைப் பொறுத்தற்கு என்னலாம்.எம்பெருமான் சேதனனைத் தனக்குத் காக்கத் தக்கவனாகக் கருதி, மேல் விழுந்துஏற்றுக்கொள்ளும் போது பிராட்டியாரையோ, அல்லது அந்த ஸ்தாநத்தில்
உள்ளஒரு பாகவதோத்தமனையோ,முன்னிடுதல், எப்பயனைக் கருதியோ ? இவ் எம்பெரு
மானுக்குக் குற்றம் சிறிதும் இல்லையன்றே?”எனச்சிலர் இங்கு ஐயமுறக்கூடும்.
இதின் பரிஹாரம் :
எம்பெருமானுக்கும் குற்றம் உண்டு; அக்குற்றம் யாதோ? எனில், எம்பெருமானுக்கும்
சேதனனுக்கும் உள்ள தொடர்பு என்றும் உள்ளது ; ஒழிக்க ஒழியாதது. இவ்வாறான
தொடர்பையும், தன்னுடைய நீர்மைக்குணங்களையும் இது வரையில் பாராது, இச்
சேதனன் செய்த குற்றங்களையே கண்டு,இவனை விலக்கி ஸம்ஸாரத்தில் வைத்திருந்
தானாதலின், இப்போது மேல் விழுந்து ஏற்றுக்கொள்பவ னாயிருந்தும், இவ் எம்பெருமானை இச்சேதனன் வெறுத்து விலகக்கூடுமன்றோ ? இவ்வாறு விலகாது இச்சேதனன் தன் வயத்திலே வரவேண்டி எம்பெருமானுக்கும் பிராட்டியாரையோ அவர் ஸ்தாநத்தில் உள்ள வரையோ முன்னிடுதல் இன்றியமையாததாம்.
இங்கு ”இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் என்னுமிடம் அபயப்ர தானத் திலும் காணலாம். இருவர் முன்னிடுகிறதும் தந்தாம் குற்றங்களைச் சமிப்பிக் கைக்காக.
என்னும் பிள்ளைலோகாசார்யர் திருவாக்கு-அனுபவிக்கத் தக்கது.
இவ்வாறு இராமபிரான் விபிஷணனை நேரே ஏற்றுக் கொள்ளாது, ‘ஸு க்ரீவனை அழைத்து வா’ என்று அருளிச் செய்திருப்ப தற்கு, பல உண்மைகளைக் கண்டோம்.
இவ்விடத்து, ஸுக்ரீவன் இராமபிரான்நியமனப்படி அழைத்து வர விபீஷணனும்
வந்து, அவ் இராமனைக்கிட்டி, வணங்கிவாழ்ந்துபோனான் என்பது சரித்திர உண்மை.
இங்கு, எம்பெருமானாகிய தருமம் நிலை நிறுத்தப் பட்டிருத்தலையும் கண்டோமல்லவா?
ஆக, ” திருமகள் கொழுநனான எம்பெருமான், இவ்வுலகில் செய்தருளின திருஅவதாரங்களுள் இராமாவதாரம் மிகச் சிறந்தது”‘என்பதும், அங்ஙனம் அவ் எம்பெருமான்திருவவதாரம் செய்தபோது, அவனைக் கூறும் வேதமும், வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாகத் திரு அவதாரம் செய்திருக் கிறது’ என்பதும், ” அந்த இராமாயணம் மிக்க சிறப்பு பெற்றுள்ளது ” என்பதும், ”வீடு பேற்றை விரும்புகின்றவன் அவசியம் அறிய வேண்டும் பொருள் ஐந்து; அவை பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோ தி, உபாயம் என்பன” என்பதும், “ நாராயணன் பரமாத்மா, ” அப்பரமாத்மாவிற்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன் ஜீவன்’ அப்பரமன் திருவுள்ளம் உ க்குமாறு
அடிமை செய்தலே வீடுபேறு என்னும் உபேயம் அப்பேற்றைஇதுவரையில் இந்த ஜீவன்
அடையப் பெறாது தடை செய்யும் அஜ்ஞானம் முதலியன விரோதி’ ” இவ்விரோ தி
போவதற்குத் தக்க ஸாதனம் பக்திப்ரபத்திகள்’ என்று வேதாந்தம் கூறுகின்றது ” என்பதும், “வேதத்தின் திரு அவதாரமான இராமாயணமும், வேதாந்தம் கூறுகின் றவாறு ஐம்
பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்றது’என்பதும், “ வேதாந்தம் மாத்திரம், தான்மிகச்சிறந்த பிரமாணமாயிருந்தும். இவ்ஐம் பொருளையும் கலக்கம் சிறிதும் இன்றி அறிவிக்க மாட்டாதாதலின், அவ்வேதாந்தம் மீமாம்ஸா சாஸ்திரம், இதிஹாஸமான இரா
மாயணம் இவற்றின் உதவியை விரும்புகின்றது என்பதும் “மீமாம்ஸா சாஸ்திரம்
செய்யும் உதவி சிறந்ததாயிருந்தும், மேதாவி களுக்கே அது பயன்படும்” என்பதும், ” இரா
மாயணம், பெண்ணுக்கும் பேதைக்கும் விளங்குமாறு, நன்கு உதவி புரிகின்றது” என்பதும், இவ் இராமாயணம் மேற்கூறிய ஐம்பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்ற
தாயிருப்பினும், சரணாகதி என்னும் உபா யத்தையே விளக்கிக் கூறுவதில் அது மிக்க
நோக்குடையது என்பதும், “இதனாலேயே சரணாகதி சாஸ்திரம் ‘ என இராமாயணம்
பெயர் பெற்றிருக்கிறது’ என்பதும், ” சரணாகதி தருமத்தைப் பற்றிய பல உண்மைகளை
இராமாயணம் அந்த அந்த இடத்தில் விரிவா கவும்,தெளிவாகவும், அழகாகவும் கூறுகிறது
என்பதும், இக்கட்டுரையின் பலபகுதிகளிலும் அறியக்கிடக்கின்ற ஸாரப் பொருள்கள் என
விளங்குகின்றன அல்லவா? 

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண தர்மம்-ஸ்ரீ அகர இராமாயணம்!-

April 7, 2025

ஸ்ரீ இராமாயண தர்மம்– ராமாயணம். என்ற சொல் “ராமஸ்ய அயனம்’ எனப் பிரிந்து இராம சரிதமெனவும்-ராம : அய்யதே அனேன இதி – ராமாயணம் எனப் பிரிந்து இதனால் இராமன் அடையப்படுகிறான் எனவும் பொருள்படும்.-இன்னும் ‘ரமாய இதம் சரிதம் – ராமம், தஸ்யாயன மிதி,ராமாயணம்’ எனப் பிரித்து, சீதாப் பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.-‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்-“மேன்மையான ஸீதா சரித்திரமாயும், மஹா காவ்யமுமான இராமாயணத்தை” என்பது இதை வலியுறுத்தும்.

தருமம்: உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத : ஸ்மருதி: ஸதாசார : ஸ்வஸ்யச ப்ரிய மாத்மான :
ஏதத் சதுர் விதம் பராஹு : ஸாஷாத் தர்மஸ்ய லக்ஷணம்’-
என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன-அதாவது,ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது
(1) வேதோக்தமாக இருக்க வேண்டும் அல்லது
(2) ஸ்மிருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது
(3) அது ஸத் புருஷர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அல்லது
(4 )அது மனதிற்கு இனிப்பாகவும் ஆனந்த கரமாகவும் இருக்க வேண்டும்.

இந்த நான்கு பிரமாணங்களுக்கு, ஸ்ரீராமாயணம் பொருத்தமா யிருக்கிறதோ வென்னில் –
முதலாவது:- வேதம். “வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன்.“” என்றும் –கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிருதி யாவார்.”(கம்பர்)-என்றபடி,வேதத்தினால் அறியும் படியான பரம் புருஷன்,ஸ்ரீராமனாக அவதரித்த போது,–வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா--அவரை அறிவிக்கிற வேமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.–இதம் பவித்ரம் பாபாக்னம், புண்ணியம் வேதைச் ச சம்மிதம் !இந்த ஸ்ரீ ராம சரிதமானது,பரிசுத்தம் செய்யத் தக்கதும்,பாபங்களை நாசஞ் செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்கு பொருத்தமாகிறது.

இரண்டாவது:- ஸ்ம்ருதி.
தர்ம சாஸ்த்ர ரதா ரூடா வேதகட்கதரா த்விஜா : கரீடார்த்த மபி யத் ப்ரூயு: ஸ தர்ம; பரம ஸ்மருத || (
போதாயனாச்சாரியார்)-வேதத்தை நன்றாய் அப்யசித்தவர்கள் ஸத் புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டவைகளே ஸ்மருதிகளாம்.
“ஸ்ரீ ராமாயணம் (2 வது சர்க்கம்.)
‘மச் சந்தா தேவ தே ப்ரஹ்மந் பிரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷி ஸத்தம
ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி “-

நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக் கடவீர். நீர்செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம், வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டத்தினால்,இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றவது:- ஸதாசாரம்= (ஸத் புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)
பால காண்டம் முதலாவது சருக்கத்தில் 2- முதல் 4-சுலோகங்களினால், வான்மீக முனிவர் நாரத மகரிஷியைநோக்கி சுவாமி! இவ் வுலகத்தில், இக் காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசில்ய குணமும் மற்றும் அநேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத் புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.-அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்ய வேண்டும் என்று வினாவின் பொழுது நாரத மகரிஷி, மிகுந்த களிப்புடன் “ஒய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்–இசுவாகுவம்ஸ் ப்ரபவோ ராமோ நாம ஜநை : ஸ்ருத-‘இக்ஷவாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராம பிரான் என்பவர் தான்”என விடை யளித்திருக்கிறார்.-இதனால் ஸ்ரீராம பிரான் ஸத் புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதா சாரம் என்றும்,ஏற்படுவதால், மூன்றாவது ப்ரமாணமும் பொருத்த மாகிறது.

நான்காவது:- ஆத்ம ஸந்துஷ்டி.
“பாட்யே கேயே ச மதுரம் –
” ஹ்லாதயத் ஸர்வ காத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச
“–இந்த ராமாயணம், மனதிற்கும், இருதயத்திற்கும், மிகக் களிப்பாக இருக்கின்றது என்று 4 வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கின்றது.-இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தி யாகின்றது

“ராமோ விக்ரகவான் தர்ம ஸாது: ஸத்ய பராக்ரம :-ஆரண்ய-37- 13.-ஸ்ரீ ராமன் உருவங்கொண்ட தருமம் போலும்,நற் குண முடையோனும், உண்மையான தோள் வலியுற்ற வனுமாகின்றனன். ” என இராவணனுக்கு,ராம த்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.
யஸ்மின் ந சலதே தர்மோன யோ தர்மம் நாதி வர்த்ததே ஸ ஏஷ ராம;-யுத்த-. 28-19.
எவரிடமிருந்து தருமம் சலிக்க வில்லையோ எவர் தருமத்தை விட்டு விலக வில்லையோ, அவரே இந்த இராம பிரான்.”என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

தர்மாத்மா சாத்ய சந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி
பெளருஷே சா ப்ரதி த்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்
| ”(யுத்த- 91. 69.) ” ஸ்ரீராம பிரான் தர்ம ஸ்வரூபி என்பதும்,சொன்ன சொல் தவறாதவர் என்பதும், இணை யற்ற பராக்கிரம முடையவரென்பதும் உண்மை யாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும்.” என சபத பூர்வமா யுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்
‘ஏக பத்நீ ரததரோ ராஜர்ஷி சரித சுசி:]
ஸ்வதர்மம் க்ரு மேதியம் சிசுப ஸ்வய மாசரந்
“(ஸ்ரீமத் பாகவதம் – 9 -10- 55.)ஸ்ரீ இராம பிரான் ஏக பத்நீ விரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவர் அவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரிக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப் பிரம்ம ரிஷியின் வசனம்

தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” அயோத்தி நகர் -நீங்கு 163
நல்லற நிறுத்த நணுகித், தாமராவணை துறந்து தரை நின்றவரை “‘ ஆரணி – விராத-30.-இராம பிரான் உலகத்தில் தருமத்தை நிலை நிறுத்தவே அவதரித்திருப்பதாக கவிக் கூற்று.

”சூரறுந்தவனுஞ் சுடர் நேமியு மூரறுத்த வொருவ மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்
.”-(ஆரணி-அகத்தி 22)
“வெம்பு கண்டகர் விண் புக வோறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற் கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லு நம் மாணையே
.”(கிட்கிந்தை 4)
உலகத்தில், துஷ்ட நிக்கிரகமும்,தர்ம ஸம் ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்”
பின்னை யேது முதவுந் துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடை நுடங்கிட விரைந்து தொடர்வா
ளன்னையே யனையவன் பினாவோர் கடமை விட்
டென்னையே நுகர்தி யென்றன ளெழந்து விழவாள்.
“( ஆரணி- விராத-39)
இராம, லெட்சுமணர் உலகத்துக்கெல்லாந் தாயைப் போன்ற அன்பினை யுடைய தரும் ஸ்வரூபிகள், என சீதா பிராட்டியின் வசனம்,
ஓயாத மலரயனே முதலாக வுளராகி மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீ யாகின் முதற் றாதை நெறி முறையா லீன்றெடுத்து
தாயாவார் யாவரே தருமத்தின் றனி மூர்த்தி
.”(ஆரணி – விராத 52)
பிரம்ம தேவன் முதலான சகல தேவர்களுக்கும்,உலகத்திலுள்ளஉயிர்களக்கும், இராம பிரான் முதல் தந்தை யெனவும், தரும ஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.
” இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரி வில் வாட் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருத்ரைத் தேடுவார்.
ஒன்று நோக்கலருந் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்று துணர் கொள்கையார்
‘ (ஆரணி- கா.4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை யுடையவர்கள், சிறந்த தரும வழியிலே தாங்கள் நினறு ஆராய்ந்து அத் தருமத்தை உலகமெங்கும் நிலை பெறச் செய்யுங் கருத்துடையவர்கள், என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.
சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற் றாளி லெங்கு மித்தனை யிலக்கணம் யாவர்க்கு மில்லை -செங்கண் விற் கரத்தி ராமனத் திரு நெடுமாலே யிங்குதித்தன னீண்டற நிறுத்துதற் கின்னும் “(கிட்கி- மராமர – 117)
கோதண்ட பாணியான இராமன், தர்ம ஸம் ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீ மஹா விஷ்ணு வென்பதாக சுக்ரீவ மகாராஜனிடம், தெரிவித்த நவ வ்யாகரண பண்டிதரான திருவடியின் வசனம்.
உழைத்த வல் லிருவினைக் கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்த வற் கியல் பல வியம்பி யென் செய்தாய்
பிழைத்தனை பாவியுந் பெண்மையா லென்றான்
“‘(கிட்கி. வாலி வதை. 22)
பல பிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங்களை யெல்லாம்.தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தமனான இராம பிரான்,என்பதாக, தாரையிடம் கூறிய வாலியின் வசனம்.
“அற மன்னானுட னெம்பி யன்பினோ
டுற வுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெற வொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிற வென்னா மிதினின்ப மியாவதோ.
“(கிட்கி. சம்பாதி45)
தர்ம ஸ்வரூபியான இராம பிரான் திறத்தில் ஜடாயு வுயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.-இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரித்த்தினாலே தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குப் போதிய சான்றாகும்,

இராமாவதார காலம்.
” பயம் த்யஜ்த பத்ரம் வோ ஹிதார்ததம் யுதி ராவணம்
ஸ புத்ர பெளத்ரம் ஸமாதயம் ஸமித்ராஜ்ஞாதி பரந்தவம் | “”ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவ ரிஷிணாம் பயாவஹம் தச வருஷ ஸஹஸ்ராணி தச வருஷ சதாநிச
வத்ஸயாமி மாநுஷே லோகே பாலயன் ப்ருத்வீ மிமாம்
.”-பாலகாண்டம்- 15- 28, 29.
“ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்; உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்து கொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன்” என்று தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச் செய்தனர்.
”க்ருதே யுகே வயதீ தேவை முகே திரேதா யுகஸ்யது ஹிதார்த்தம் தேவ மர்த்யானாம் பவிதா ருப விக்ரஹ இஷ் வாஹு ணாம் ச யோ ராஜா பாவ்யோ தசரதோ புவி
தஸ்ய ஸூநுர் மஹா தேஜா ராமோ நாம பவிஷ்யதி
.–உத்-கர் 37 – க்குப்பின் ப்ரக்ஷிப்த சரு-18,19.ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி சொன்னது – ” க்ருத யுகம் கழிந்த பின்னர் த்ரேதா யுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் ஹிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசரதனென ஒரு ராஜன் ஜனிப்பான்; அந்தத் தசரத மஹா ராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒருமாஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் என உரைத்தனர்.
த்ரேதா முகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய :
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரக்ஷயஸி மாம் தத
–3.அத்யாத்ம ராமா . பால-7-255, 263- அழிவற்ற நான் த்ரேதா யுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப் போகிறேன். அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய் ” என்பதாக ஸ்ரீ மஹாவிஷ்ணு தனக்கு வரமருளி யிருப்பதாக பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ்செய்தனர்.
த்ரேதா யுகே தாசரதிர்பூத் நாராயண: ஸ்வயம் | ஆகமிஷ்யதி தே பாஹுச் சித்யேதே யோஜனாயதெள் தேனசாபாத் வினிர் முக்தோ பவிஷ்யஸி யதா புரா!–அத்யாத்ம -ராமா -ஆரண்ய -9-19-ஸ்ரீமந் நாமாயண மூர்த்தி த்ரேதா யுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து, ஸ்ரீ ராமனென்னும் திரு நாமத்துடன் வரப் போகிறார். அவர் திருக் கரத்தால் உன் கரங்கள் சேதிக்கப் படுங்காலம், உன் சாப விமோசன காலமாகும். ” என்பதாக அஷ்டவக்ர முனிவர் தனக்கு உரைத்திருப்பதாய் கபந்தாசுரன்ஸ்ரீ ராம பிரானை நோக்கிக் கூறினன்.

புராஹம் ப்ரஹ்மண ப்ரோக்தா ஹ்யஷ்டா விம்சதி பர்யயே |த்ரேதா யுகே தாசதீராமோ நாராயணோ அவ்யய: -சுந்தர-1-48.”இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதா யுகத்தில் சாஷாத் நாராயணன் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவதரிக்கப் போவதாய் ப்ரஹ்ம தேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார் ‘ என்பதாக இலங்கணி என்பவள் திருவடி யிடம் உரைத்தனள்.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு க்ரஹேஷ. கர்க்கடெ லக்நே வாக் பதா விந்தூ நாஸஹ ப்ரோத்ய மாநெ ஜகன்னாதம் ஸர்வ லோக நமஸ்கிருதம் கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம் விஷ்ணொ சர்த்தம் மஹா பாகம் புத்ர மைஷாவாக வர்த்தகம் —பால -9-10-11–பின்பு பன்னிரண்டாவது மானமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர் வஸு நக்ஷத்திரம் கூடின தினத்தில் ஐந்து க்ரமங்கள் உச்சமாயிருந்த வளவில்,கர்கட லக்நத்தில், குரு சந்திரனோடு கூடியிருந்த வளவில், கௌஸல்யா தேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய், சாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷ லக்ஷ்ணங்களோடு கூடினவராய், விஷ்ணுவினுடைய பேர் பாதி பாகத்தினாலுண்டானவராய், மஹா பாக்யவானாய், பித்ருக்களை நரகத்தில் நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹா ராஜனுடைய மனோல்லாசத்தை வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராம பிரானைப் பெற்றனள்.

ஒரு பகலுலகெலா முதரத்துட் பொதிந்
தரு மறைக் குணர் வரு மவனை யஞ்சனக்
கரு முகிற் கொழுந் தெழில் காட்டுஞ் சோதியைக்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை. “‘
” மேட மா மதி திதி நவமி மீன் கழை நீடுறு மாலை கற்கடக நீதி சேர்
ஓடை மா களிறனானு தயராசி கோள் நாடினே காதசர் நால்வருச்சரே.”-பால-கா. திரு அவதாரப் படலம்-104, 110.

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28- வது சதுர் யுகமான த்ரேதா யுகத்தில் சித்திரை மாஸத்தில் சுக்ல பக்ஷ நவமி திதி, புனர்வசு நஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீமந் நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக் குமாரராக ஸ்ரீராமனென்னும் திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

தச வர்ஷ ஸஹஸ்ராணி கதாநி மஹாத்மனோ-உத்-42-26-பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென்றன.அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸூர ஸுதோபமாம் அபத்ய லாபோ வைதேஹி தவய்யயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி வராரோஹேகாம : கிம் க்ரியதாம் தவ – உத்-42-31, 82 ஒரு நாள் ஸ்ரீராம பிரான் ஜானகியை நோக்கி ஹே.வைதேஹி! நீ கர்ப்பந் தரித்திருப்பது எனக்கு மிகவும் களிப்பைத் தருகிறது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை? நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன் ” எனக் கூறினார். அதற்குப் பிராட்டி, கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோ வனங்களுக்குச் சென்று, அங்கு, மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சிலநாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற ஆசை யிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப் பற்றி சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதி யிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,அவளை யழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத் தருகே விட்டு விடுமாறு,இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.-சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷி குமாரர்களால் கேள்வி யுற்ற வான்மீக முனிவர் உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள ரிஷி பத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருந்துடனே காத்து வருமாறு கட்டளை யிட்டனர்.-யமுனாதீர வாசிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாஸூரனது வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராம பிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயே யிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர். லவணாசுரனுடன் போர் புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள், சத்ருக்னர்,வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

” யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத் தாமேவ ராத்ரிம் ஸ்தாபி ப்ரஸூதா தாரகத்வயம் ”( உத்-6-1.) சத்ருக்ன ஆழ்வார், என்றையத் தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ண சாலையில் படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாப் பிராட்டியார் இரண்டு திருக் குமாரர்களைப் பெற்றனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராம பிரானுடைய பட்டாபிஷேகானந்தரம், பதினாயிரம். வர்ஷங்கள் கழிந்த பினனரே, குச லவர் ஜநநம் என ஏற்படுகிறது.

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான்| சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநா முக்தவான் ரிஷி :
ததா ஸர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்
–பால-4-1-2-
ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டி ருக்கும காலத்தில், வான்மீகமுனிவர் இருபத்தினாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ரகாண்டமும் செய்தருளினார்.
“மானிஷாத என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை, (தமஸா நதிக் கரையில்)ப்ரம தேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர் கதானமான பின்பு
தத: ஸ சிஷ்யோ வால்மீகிர் முநிர் விஸ்மய மாயயௌ தஸ்ய சிஷ்யாஸ் தத: ஸர்வே ஐகு ஸ்லோகமிம்ம் புன: “முஹர் முஹு : ப்ரீயமாணா: ப்ராஹுஸ்ச ப்ருச விஸ்மிதா–பால்-2-39- வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தை யடைந்தார். அந்த ஸ்லோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும் ஆச்சரியத்துடனும்,அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக் களித்தனர்.சிஷ்யா – என்று பஹு வசனமாகக் கண்டிருப்பதற்கு, கோவிந்த ராஜர் வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று வ்யாகயானம் செய்யப்பட்டிருக்கிறது.-இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்ன்ரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சதருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுரா புரியை ஸ்தாபித்த பின்
“ததோ த்வா தசமே வர்ஷே சத்ருகனோ ராம பாலி தாம் அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக –உத்-7- 1 )
பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப் புறப்பட்டனர்-வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிர மமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாதியாதி அதிதி பூஜைகளைப் பெற்று,அன்று ராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

ஸ புத்தவாந் நர ஸ்ரேஷ்டோ கீத மாதுர்ய முத்தமம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே யதா க்ருதம்
தம் த்ரீலய ஸமா யுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம்
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸம தால ஸமந்விதம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே புராக்ருதம்
–உத்தர –71-14-15-16
சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதி மதுரமான ஸங்கீதமொன்று கேட்டது.ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில் இசை யொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு,சு லஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவி யுற்ற வளவில், சத்ருகனாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீ ராம சரித்திரம் மறுபடி தமது கண்ணெதிரில் நடப்பது போல தோன்றியது.வான்மீக முளிவர் தாமுண்டு பண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குச லவருக்கு உபதேசித்தருளின போது, அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது

ஸ்ரீராம பிரான் அச்வமேத யாகஞ் செய்யத் தீர்மானித்து கோமதீ நதீ தீரத்தில் யாக சாலை நிருமித்து வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப் படுத்தவும்,வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ் வேள்விக்கு வர வாழைக்கும்படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
மம மாத்ரூஸ் ததா ஸர்வா: குமாராம் : புராணி ச
காம்சநீம் மம பத்ம்ச தீக்ஷா யாம்ஜ்ஞாம் ஸ்ச கர்மணி
அக்ரதோ பரத: க்ருத்வாகச் சாத்வக்ரே மஹா யசா
: | “உத்தர -91-24-25-
நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும், ஸீதைக்குப் பிரதியாக நிருமித்து வைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ் செய்யும்
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக் கொண்டு, பரதன் முன்னாலே செல்லக் கடவன் ” எனவும்nநியமித்தருளினர்.-இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்தி லிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வர்தமானே ததா பூதே யஜ்ஞேச பரமாத்புதே
ஸ சிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி
:-உத்தர -93-1-இவ்வாறு மகா வைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு வான்மீக முனிவரும் தமது சிஷ்யர்களுடனே எழுந்தருளினர்.”வான்மீக முனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும், பிராம்மணர்கள் இறங்கி யிருக்கு மிடங்களிலும், ராஜ மார்க்கங்களிலும், அச்வமேத யாகம் நடக்குமிடத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதியிலும் பாடிக் கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளை யிட்டனர். அவ் விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

தாம் ஸசுச்ராவ காகுஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் அபூர்வாம் பாட்ய ஜாதிம்ச கேயேன ஸமலம க்ருதாம் ப்ரமாணைர் பகுபி பத்தாம் கந்த்ரீலய ஸமந்விதாம் பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கெளதூகல பரோபவத் .”–உத்தர -94-2- இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக் கொண்டு ஓத்த குரலினராய் சு லக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச் செவி சார்த்தி இஃது அபூர்வமாயும்,அற்புதமாயு மிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”‘அனந்தரம் அந்தக் காவியத்தின் வாலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும் அச் சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்–.ராமோ பஹுன் யஹான்யேவ தத் கீதம் பரமம் சுபம் சுச்ராவ முனிபி ஸார்த்தம் பார்த்தி வை: ஸஹ வானரை: “-உத்தர -95-1- ஸ்ரீராகவன் நாள் தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடை சூழச் சபையினடுவே முனி குமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவி சார்ததிக் களி கூர்ந்தனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யா புரிக்கு ராஜவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,பதினாயிரம் வருஷங்கள் தரும நெறி தவறாது அரசாட்சி செய்து வந்த பின் சீதாப் பிராட்டி கர்ப்பமடைந்து வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,அக் குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது,வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால் ஸ்ரீராம சரிதம் சங்கரஹமாக உபதேசிக்கப்பட்டு பிரம தேவரின் ஆக்ஞா ப்ரகாரம் அம் முனி புங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய ஸ்ரீஇராமாயண மென்னும் ஆதி காவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குச லவர்களுக்கு உபதேசிக்க, அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகா மண்டபத்தில் முனிவர்,அரசர், வானார் முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சனனதியில் தாளலயத்துக் கிணங்க கானம் செய்து அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

—————

குருசிஷ்ய தருமம்.

குரு சிஷ்ய லக்ஷணம்:-
“தப: ஸ்வாத்யா நிரதம் தபஸ்வி வாக் விதாம் வாம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்

தபஸ் வேத வேதாந்தங்கள் இவைகளைப் பூர்ணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும், முனி ஸ்ரேஷ்டருமான நாரத மஹ ரிஷியை, தவத்தோடு கூடிய வான்மீக முனிவர் தெண்டம் ஸமர்ப்பித்து வினாவினார்.”
இது இராமாயணத்தின் முதல் சுலோகம். இதனால் குரு சிஷ்யன் லஷணம் சொல்லப் பட்டதாகிறது.-எவ்விதமெனில்- ஆசார்ய லஷணம்
1- தபோ நிரதம்: தவத்தைப் பூரணமாக அடைந்தவர்,என்றதினால் அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பது ஸுசகம்.
” யத் துஸ்தரம் யத் துராபம் யத் துர்கம் யச் சதுஷ்கரம்
தத் ஸர்வம் தபஸா ஸாத்யம் தபோஹி தூரதிக்ரமம் “

எது கடக்க முடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்ய முடியாததோ அவை எல்லாம் தவத்தால் சாதிக்க முடியும். ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவமீண்டு முயலப்படும்.”
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற் றவினாற்ற தலைப் பட்டவர்க்கு ‘
என்ற ஆகாரங்கள் நோக்கத் தக்கன.

(2) ஸ்வாத்யாய நிரதம்:- வேத வேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால் நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய ஸத்திய வசனம் என்பது ஸூசகம்.

(3) வாக் விதாம் வரம் :உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர்,என்றதினால் சிறந்த போதனா சக்தி வாய்ந்தவரெனவும்,வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாயறிந்தரெனவும் பொருள்படும்.
(4)முனி புங்கவம் :- முனி ஸ்ரேஷ்டர், என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும், பகவ த்யானத்தோடு கூடிய வரென்பதும்,திரி கால வர்த்தமானங்களை அறியக் கூடியவரென்பதும், ஸதா ஜப பரரென்பதும், ஸுசகம்.
(5) நாரதம் -நாரத மஹரிஷியை,என்றதினால் நாரம்-ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும், நாரம்- அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக் கூடியவரென்பதும், த்ரி லோக சஞ்சாரியான படியால்,மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை யறிபவரென்பதும்,பிரம்ம புத்திரரான படியால், உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.

ஆகவே இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும், வேத வேதாந்தங்களையும் வியாகரணம் முதலான ஸகல சாஸ்திரங்களை யுமுணர்ந்தவராகவும், பகவத் பக்தியுடன் அநவரத ஜப பரராகவும்,சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி,ஜ்ஞானத்தைக் கொடுத்துப் பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லவராகவும், ஜிதேந்த்ரியராகவும்,உத்தம குலத்தவ ராகவுமிருக்க வேணுமென்று ஆசார்ய லஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ருகாரஸ் தந் நிவர்தக :
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபிதீயதே

கு , என்பது அஜ்ஞானத்தையும், ரு -என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால் மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற விருளை நீக்கி மெய்ஞ் ஞானமாகிற பிரகாசததைத் தருவதால் குருவெனச் சாற்றப் படுகின்றனர்.
“குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வண்மை
நில மலை நிறை கோல் மலர் நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர் குண மினையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.”
என்ற நன்னூல் இங்கு நோக்கத்தக்கது.

சிஷ்ய லக்ஷணம:-
(1) தபஸ்
:- என்றதினால் பகவத் சொரூபத்தை யறிய ஆவல் கொண்டரென்பதும், பல விரதங்களை யனுஷ்டித்தவரென்பதும், சம தமாதி ஸம்பத்திகளை யடைந்தரென்பதும் ஜீவ காருண்ய முடையவரென்பதும் களங்கமற்ற இருதயமுடையவ ரென்பதும் ஸூசகம்-உற்ற நோய் நோன்ற லுயிர்க்குறு கண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.”

2-பரிபப்ரச் ச :- என்றதினால், விதிவதுபஸந்ந: என்பது பொருள்.-அதாவது,உபதேசம் பெற்றுக் கொள்ள,குருவைத் தேடிப் போய்,தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரம் கேட்க வேண்டு மென்பது.
தத்வித்தி ப்ரணிபாதே பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஞாநம் ஞாநிநஸ் தத்வ தர்ஸிந
”–அந்த ஆத்ம ஜ்ஞானத்தை. குருவைத் தேடிப் போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரமான கேள்வியினாலும், ஸூஸ்ரூஷையினாலும் அறிந்து கொள்ளக் கடவாய். தத்வ மறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.” என்று அர்ஜூனனை நோக்கி யருளிச் செய்தஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிபப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத் போதாபிலாஷி
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர : பிரஸ்ந கால ப்ரதீஷ :
ஸாந்தோ தாந்தோ ந ஸூயுஸ் ஸரண முபகதஸ் ஸாஸ்தா விஸ்வாஸ ஸாலி
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாங் க்ருத விதபி மதம் தத்வதஸ் ஸிஷணீய

நற் புத்தியுடன் ஸாது ஸேவை யுடையவனாகி நன்னடக்கை யுடையவனும்,உண்மை ஞானத்தை அறிவதில் அபிலாஷை யுடையவனும்,பணிவிடைக் காரனும்,மான அவமான மென்பதற்றவனும், ப்ரஸ்ன காலத்தை எதிர் பார்ப்பவனும், சாந்தனும் அஸூயை யில்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஸ்வாஸ முடையவனுமே சிஷ்யனாக அங்கீ கரிக்கத் தகுந்தவன் ” என்பது நோக்கத் தக்கது.
வால்மீகி பகவான் பருகு வம்சத்தி லவதரித்தவர். இவர் (வல்மீகம்- புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால் வால்மீகி என்று பெயர். இவர்க்கு”ப்ராசேதஸர்’ ( அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.

உபதேசக் கிரமம் :- .
(1) வான்மீக முனிவர் நாரத மஹரிஷியை நோக்கி-“கோந்வஸ்மிந் ஸாம் ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந் ”என ஆரம்பித்து,”ஏததிச் சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கெளதூஹலம் ஹி மே-என்றபடி ஒ ஸ்வாமி! இவ்வுலகிலிக் காலத்தில், அனந்த கல்யாண குணங்களும், சவ்ஸீல்யாதி குணங்களுமுடைய உத்தம புருஷன் யார்? என்பதை அடியேன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தேவரீர் அடியேனுக்குக் கிருபை செய்தருள வேண்டும்.” என்று பாலகாண்டம் – 1-2 முதல் ஐந்து ஸ்லோகங்கள் மூலமாக ப்ரஸ்நம் பண்ணினர். அதைக் கேட்டு நாரத மஹரிஷி மிகுந்த சந்தோஷ மடைந்தவராய்(பால – 1 -8 முதல் 96-ஸ்லோகங்க ளடங்கிய ஸ்ரீராம சரிதத்தைப் பூராவாகவும், சம்ஷேபமாகவும் வான்மீக முனிவருக்கு உபதேசித்தருளினார்.-இதனால்- ” தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் “ என்றபடி வேதாந்தார்த்தங்களை ஒரு குருவினிடத்தில் போய்க் கேட்டே அறிய வேண்டு மென்ற தருமமும், ” நா ப்ருஷ்ட: கஸ்யசித் ப்ருயாத் ” என்றபடி ஸிஷ்யன் கேட்காமலிருக்கும் போது குரு உபதேசஞ் செய்யலாகாதென்ற தருமமும் ஸூ சிதம்.

(2) விஸ்வாமித்ர மஹரிஷி யாக ஸம் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீராம லக்ஷமணர்களை அழைத்துக் கொண்டு, சரயூ நதியின் தென் கரையில் சேர்ந்தவுடன மகரிஷி ஸ்ரீராமபிரானை நோக்கி- “ மந்திர க்ரமம் க்ருஹாணத்வம் பலாமதிபலாம் ததா
த்ரிஷு லோகேஷ வா ராம ந பவேத் ஸத்ருஸஸ் தவ
பிதாமஹ ஸு-தே யேதே வித்யே தேஜஸ் ஸமந்விதே
ததாமி தவ காகுத்ஸ்த ஸ்த்ரு ஸஸ் த்வம் ஹி தார்மிக ”’

ஸ்ரீராமா பலை, அதிபலை யென்னும் மந்திரங்களை உபதேசிக்கின்றேன் பெற்றுக் கொள்க.மூன்று லோகங்களிலும் உனக்குச் சரியாக ஒருவனுமாக மாட்டான். மிகுந்த, பிரகாசம் பொருந்திய ப்ரஹ்ம புத்திரிகளான இம் மந்திரங்களை கிரஹிப்பதற்குத் தார்மிகனான நீயே தகுந்தவன். ஆகையால் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் ” என்றுரைத்து உபதேசஞ் செய்தருளினர்.-நோக்கின்னவர் முக நோக்க நோக்குடைக்
கோக்கு மரருமடி குறுக நான்முகன் ஆக்கிய விஞ்ஞைகளிரண்டு மவ்வழி
ஊக்கினனவையவ ருகள்ளத் துள்ளினார்.”
என்ற கம்ப ராமாயணம் நோக்கத் தக்கது.

பின்னும் விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி
“பரிதுஷ்டோஸ்மி பத்ரம் தெ ராஜ புத்ர மஹாயஸ :
ப்ரீத்யா பாமயா யுக்தோ ததாம் யஸ்த்ராணி ஸர்வஸ
தேவாஸூர கணாந்வாபி ஸ கந்தர்வோர காநபி
யைர மித்ராந் ப்ரஸஹ்யாஜௌ வஸீக்ருத்ய ஜயின்யஸி
ஸ்திதஸ்து ப்ராங்முகோ பூத்வா ஸூசிர் முநிவரஸ் ததா
ததெள ராமாய ஸுப்ரீதேர மந்திர க்ரம மனுத்தமம்”–பால -27-2-3-21-
சக்கரவர்த்தி திருக் குமாரரான ஸ்ரீராம உன்னிடத்தில் யான் மிகுதியும் சந்தோஷ முடையவனானேன். உனக்கு மங்களமுண்டாகட்டும். யான் அறிந்ததான எல்லா அஸ்த்திர ஸஸ்த்திர மந்திரங்களையும் உனக்கு உபதேசிக்கின்றேன். அதனால் தேவாஸூர கந்தருவாதி கணங்களை யுத்தத்தில் வஸ்பம் செய்து ஜெயிப்பாய்.” என அருளிச் செய்து முனிவர் கிழக்கு முகமாயிருந்து மிக்கப் பிரீதியுடன் கூடி அஸ்த்திர ஸஸ்த்திரங்களின் மந்திரங்கள் யாவற்றையும் ஸ்ரீராமபிரானுக்கு உபதேசஞ் செய்தருளினர்.-மறுபடியும் விவாமித்திர முனிவர் ஸ்ரீராமரானை நோக்கி”க்ருஸாஸ் வதந யாந் ராம பாஸ்வராந் காம ரூபிண :ப்ரதீச்ச மம பத்ரம் தெ பாத்ர பூதோஸி ராகவ-பால –28-10-

ஸ்ரீராமா க்ருஸாஸ்வ புத்திரர்களும் பிரகாசத்தோடு கூடியவர்களும் காம ரூபிகளுமான உப ஸம்ஹார மந்திரங்களை யெல்லாம் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் பெற்றுக் கொள். உனக்கு சேமமுண்டாகும். இவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நீயே தகுதி யுடையவன் என அருளி செய்து அம் மந்திரங்களையும் உபதேசஞ் செய்தருளினர்.
இதனால் ஆசார்யன் தகுந்த சீடனுக்கே உபதேசம் செய்யவேண்டு மென்பது ஸுசிதம்.
சொல்லொக்குங் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சிற்றங் காதப் புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே.

தாடகையின் பேரில் பிரயோகித்த ராம பாணமானது கல்லைப் போன்ற கடினமான அவள் மார்பில் தைத்துத் தங்கி யிராமல்,ஊடுருவிப் பின்புறஞ் சென்று, கல்வி யறிவடையாத மூடர்களுக்கு ஞானவான்கள் உபதேசித்த தத்துவம் போலப் போயிற்று ‘ அறிவிலாதவற் கறிவன சொல்லுவாரவரால் இறுதி யெய்து வாரென்னு மதின்றுகை கண்டோம்.“என,குபேரன் தனது பரிஜனங்களின் முன்னிலையில் கூறி யிருப்பதாலும்,மூடர்களுக்கு (அபக்குவருக்கு) உபதேசஞ் செய்யலாகா தென்பது ஸூசிதம்.
ஸ்ரீராமபிரான் கேட்காமலிருக்கும் பொழுது விஸ்வாமித்திர முனிவர் தாமாகவே முதலில் மந்திரம் உபதேசித்தது உசிதமோ வெனில் –தன்மக னாசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழி படுவோனே உரை கோளாளற்கு உரைப்பது நூலே “-நன்னூல் –என்றபடி,ஸ்ரீ ராமபிரான், சக்கரவர்த்தி திருமகனாகவும்,வழிபாடு செய்பவனாகவும், சிறந்த மேதாவியாகவும் இருந்ததனால். முனிவர் உபதேசித்தது உசிதமேயாம்.

——————————–

ஊந ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந : -எனது மைந்தன் இராமன் பதினாறு வயதுக்கும் குறைவான பாலனன்றோ -என்ற தசரதர் வாக்கியத்தினாலும்;
ஊந த்வாதச வர்ஷோயம் அக்ருதாஸ்த்ரச்ச ராகவ: -தாடகாவதம் செய்யும் பொழுது இராம பிரானுக்கு வயது பன்னிரண்டு நிரம்பவில்லை யென்று இராவணனிடம் கூறிய மாரீச வசனத்தினாலும் ;
இராவண ஸந்நியாஸியை நோக்கி ஸீதா தேவி –
“உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூணாம் நிவேசநே –
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநி –
தத்ர த்ரயோதச வர்ஷே ராஜா மந்த்ரயத ப்ரபு:
அபிஷேச யிதும் ராமம் ஸமேதோ ராஜ மந்த்ரிபி:

” யான் ஸ்ரீராம பிரானைத் திருமணஞ் செய்து கொண்ட பின்னர், திருவயோத்தியில் பன்னிரண்டாண்டு பதியுடன் கூடிச் சகல போகங்களையும் குறைவின்றி யனுபவித்துக் கொண்டு வாழ்ந்திருந்தேன். பதின்மூன்றாவது வருஷத்தில் என் மாமனார் என் பர்த்தாவுக்கு இராஜ்யாபிஷேகஞ் செய்வதற்கு ஆலோசனை செய்தனர்.
ஸீதாப் பிராட்டியாருக்கு விவாஹமாகும் பொழுது வயது ஆறு எனவும், ஸ்ரீராமபிரானுக்கு வயது பன்னிரண்டு எனவும், ஸித்திக்கின்றது.

அயோநி ஜாம் ஹி மாம் ஜ்ஞாத்வா நாத்ய கச்சத் ஸசிந்தயந் -ஸத்ருசம் சா நுருபம் ச மஹீ பால: பதிம் மம –ஸீதாப் பிராட்டியார் அநஸூயா தேவியை நோக்கி-யான் அயோநிஜை யானதால் எனக்கு ஏற்றவனும் அநுரூபமான கணவனை எனது பிதா தெரிந்து கொள்ள முடிய வில்லை.” என உரைத்தனள்.

வஸிஷ்ட விஸ்வாமித்திரர்களிருவரும் ஜனக மஹா ராஜனை நோக்கி
“ஸத்ருசோ தர்ம ஸம்பம்த: ஸத்ருசோ ரூப ஸம்பதா
ராம லக்ஷமணயோ ராஜந் ரீதா ச ஊர்மிலயா ஸஹ

“ஸ்ரீ ராமபிரானுக்கு ஸீதாப் பிராட்டியும்,இளைய பெருமாளுக்கு ஊர்மிளா தேவியும் குல ரூபாதிகளில் தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.” என்று அருளிச் செய்தனர்.

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம் -ராகவோர்ஹதி வைதேஹிம் தம் சேய மஸி தேக்ஷணா

பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணா மதாபிவா
கார்யம் காருண்ய மார்யேன ந கச்சித் நாபராத்யதி

சூடக வரவுறழ் சூலக் கையினள்
காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்
தாடகை யென்பதச் சழக்கி நாமமே.

சந்த்ர காந்தா நநாம் ராம மதீவ ப்ரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னா னுருவு கண்டாரை யொத்தார்.”

எண்ணரு நலத்தினா ளினைய நின்றுழி கண்ணொடு கண்ணினை கௌவி யொன்றை யொன் றுண்ணுவு நிலை பெறாதுணர்வு மொன்றிட அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்க ளென்ன பயனு மில-
குறள்

ஜனக மஹாராஜர் வசிஷ்ட லிச்வாமித்திரர்களை நோக்கி:-“உத்தரேதிவஸே ப்ரஹ்மந் பல்கு நீப்யாம் மநீஷிண: வைவாஹிகம் ப்ரசம் ஸந்தி பகோ யுத்ர ப்ரஜாபதி :
நாளை நின்று விவாஹத்திற்கு ஸ்லாக்கியமான உத்தர பல்குனி நக்ஷத்திர மாகையால் அன்று விவாஹம் நடத்தப்பட வேண்டும். ” என்றுரைத்தனர்.
பங்குனி யுத்தரமான பகற்போதங்க ணிருக்கினி லாயிர நாமச்
சிங்க மணத் தொழில் செய்த திறத்தால் மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான்.
“என்றபடி ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் பகற் காலத்தில் உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் நடந்திருப்பதால், விவாஹத்திற்கு பகற் பொழுதும் உத்தர பல்குனி நக்ஷத்திரமும் சிறந்ததென்பது ஸூசிதம்.

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தெ பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பதி வ்ருதா மஹா பாகா சாயேவாநுகதா ஸ்தா
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத் ராஜா மந்த்ர பூதம் ஜலம் ததா “

லக்ஷ்மணாகச்ச பத்ரம் தெ ஊர்மீளா முத்யதாம் மயா
பரதீச்ச பாணிம் க்ருஹ்ணீஷ்வ மாபூத் காலஸ்ய பரிய :
தமேவ முக்த்வா ஐநநோ பரதம் சாப்ய பாஷத
க்ரஹாண பாணிம் மாண்டயா: பாணிநா ரகு நந்தன
சத்ரூக்நம் சாபி தர்மாத்மா அப்ரவீஜ் ஜநகேஸ்வர :
ஸ்ருத கீர்த்யா மஹா பாஹோ பாணிம் க்ருஷ்ணீஷ்வ பாணிநா
ஸர்வே பவந்த: சவ்ம்யாச்ச ஸர்வே ஸு சரித வ்ரதா :
பத்நீபி : ஸந்து காகுத்ஸ்தா மாபூத் காலஸ்ய பர்யய:
ஐநகஸ்ய வச: ஸ்ருத்வா பாணீந் பாணி பிரஸ் ப்ருசந்
சத்வாரஸ்தே சதஸ் ருணாம் வஸிஷ்டஸ்ய மதே ஸ்திதா :
அக்நிம் ப்ரதக்ஷிணீ க்ருத்ய வேதிம் ராஜாநமேவச
ருஷிம்ஸ்சைவ மஹாத்மாந : ஸபார்யா ரகு ஸத்தமா:
யதோக்தேந தாசக்ருர் விவாஹம் விதி பூர்வகம்
த்ரீ ரக்நிம் தே பரிக்ரம்ய ஊஹுர் பார்யா மஹோஜஸ :
அதோபகாயாம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகு நந்தநா :

ராஜாப் யநு யயெள பஸ்யந் ஸ ருஷி ஸங்க : ஸ பாந்தவ: ‘

ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் அத்யாத்ம ராமாயணத்திலுள்ளபடி:-
வஸிஷ்டம் கௌசிகம் சைவ சதாநந்த புரோஹித:
யதா க்ரமம் பூஜ யித்வா ராமஸ்யோபுய பார்ஸ்வயோ
ஸ்தாபயித்வா ஸ தத்ராக்நிம் ஜ்வால யித்வா யதாவிதி
ஸீதாமாநீய சோபாட்யாம் நாநா ரத்ந விபூஷிதாம்
ஸ்பார்யோ ஜநக : ப்ராயாத்ராமம் ராஜீவ லோசநம்
பாதெள ப்ரஷால்ய விதிவத் ததபோ மூர்த்ந்யத் தாரயத்
தத: ஸ்தாம் கரே த்ருத்வா ஸாக்ஷத் உதக பூர்வகம்
ராமாய ப்ரததெள ப்ரீத்யா பாணி க்ரஹ விதாநத:
ஸீதா கமல பத்ராக்ஷி ஸ்வர்ண முக்தாதி பூஷிதா
தீயதே மே ஸுதா துப்யம் ப்ரீதோ பவ ரகூத்தம
இதி ப்ரீதேந மநஸா மீதாம் ராம கரே அர்பயந்
ஊர்மிளாம் செளரஸீம் கந் யாம் லக்ஷ்மணாய ததெள முதா
ததைவ ஸ்ருத கீர்திம் ச மாண்டவீம் ப்ராத்ரு கந்யகே
பரதாய ததா வேகாம் சத்ருக்நாயா பராம் ததெவ்

ஸ்ரீராம பிரானுக்கு இரு பக்கத்திலும், வஸிஷ்டர் விஸ்வாமித்திரர், ஸதாநந்தர் இவர்கள் இருந்து கொண்டு அக்நியை ஸ்தாபனஞ் செய்து விதிப்படி பூஜித்து ஜ்வாலை பண்ணி பாணி க்ரஹண முஹுர்த்தக் காரியங்களை ஆரம்பித்தனர். ஜனக மஹாராஜனும் தன் பத்தினியுடன், நவ ரத்னங்களுடன் கூடிய பலவித ஆபரணங்களை யணிந்தவளும் மிகுந்த தேஜஸ்ஸோடு கூடி யவளுமான ஸீதா தேவியை அழைத்துக் கொண்டு வந்து, செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை ஜலத்தால் அலம்பி அந்தத் தீர்த்தத்தை ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஸீதாதேவியின் கையை பிடித்துக் கொண்டு என் புத்திரியாகிய இந்த ஸீதா தேவியை உமக்குக் கொடுக்கிறேன். நீர் ப்ரீ தியுடன் அங்கீகரிக்கக் கடவீர் என்றுறைத்து மிகுந்த பிரீதியுடன்

ஸ்ரீராம பிரானது கையில் கொடுத்து உதக பூர்வமாகக் கன்னிகாதானஞ் செய்தனர். இந்தப் பிரகாரமே தன் குமாரியாகிய ஊர்மிளையை இளைய பெருமாளுக்கும், தன் ப்ராதாவின் புத்திரிகளான மாண்டவி,ஸ்ருத கீர்த்தி என்னும் கன்னிகைகளை பரத சத்ருக்கனர்களுக்கும் பாணி க்ரஹணம் செய்து கொடுத்தனர்.

(விவாஹங்கள் எட்டு விதங்களென ஸ்மிருதிகளில் கூறப் பட்டுள்ளன.
” ப்ரஹ்மோ தைவஸ்த தைவார்ஷ : ப்ராஜபத்யஸ் ததாஸ்ர :
கந்தர்வோ ராஷஸச் சைவ பைராசஸ் ச அஷ்டமோ தம: “
” பிரம நற்றெய்வ மாரிடம் பிரசா பத்திய மாசுரம் பெட்பின்
மருவுகாந்திருவ மிராக்கதம் பசாச மென மணமெட்டுள.”
” இருவருமிணங்கு களவு கந்தருவ மனந்தலிலிணங்கல் பைசாசம்
பெரு வலியதனான் மருவுதலரக்கம் பெரிலக் கெய்தலே யசுரம்
பொருளுகந்தளித்தலாரிடம் பிரசாபத்தியம் பொருள் கொளாதளித்த லருமகந்தனை வேட்பித்தலே தெய்வ மழைத்தெதிர் கொடுத்தலே பிரமம் “

1 ) பிரம்மம். (2)தைவம் (3) ஆர்ஷம். (4)ப்ராஜா பத்யம். (5)ஆரம். (6)காந்தர்வம்,(7)ராக்ஷஸம். (8)பைசாசம். என்ற எட்டு வித விவாஹங்களுள் ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் “ஸஹ தர்மம் சரத இதி ப்ராஜா பத்ய ; ” என்ற ஆச்வலாயனார் வசனப் பிரகாரம் ப்ராஜா பத்தியத்தைச் சேர்ந்ததாக ஏற்படுகின்றது.

யதா யதா ஹி கௌஸல்யா தாஸிவச் ச ஸகீவ ச
பார்யாவத் பகிநீவச் ச மாத்ருவச் சோபதிஷ்டதே-
அயோத்யா -12-69-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யா மடவீம் வித்தி கச்சதா தயதா ஸுகம் -அயோத்யா -40-9-
ஆகாத தன்றா லுனக்கவ்வன மிவ்வயோத்தி
மாகாதலிராமனம் மன்னவன் வையமீந்தும்
போகா வுயிர்த் தாயர் நம்பூங்குழற் சீதை யென்றே
ஏகா யினியிவ் வயினிற்றலு மேதமென்றாள். “
“பின்னும் பகர்வாண் மகனே யிவன் பின்செறம்பி
என்னும் படியன் றடியா ரினி லேவல் செய்தி
மன்னும் நகர்க்கே யிவன் வந்திடின் வாவதன்றேல்
முன்னம் முடி யென்றனள் பான் முலைசோர நின்றாள்.”

————-

அகர இராமாயணம்!

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.

அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?

அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.

அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே!!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்-யுத்த ஸ்கந்தம்- -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

October 6, 2024

1-2-கடல் தாண்டுதல் பற்றி வானரங்கள்-சொல்வதும் ராம லஷ்மணர் முதலிகளை ரக்ஷிப்பதும்
3-5 விபீஷணன் சரணாகதி
6-7-8-சேது பாலம் நிர்மாணம்
9-22- ராம ராவண யுத்த வர்ணனை
23-27- சீதா ராமன் சேர்த்தி
28-32-அயோத்திக்கு திரும்புதல்
33-37-பட்டாபிஷேகம்

————

த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம்
கம்பீரம் விபுலம் கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –
-1-

த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம் -அச்சம் தரும் அலைகள் மோதும்
கம்பீரம் விபுலம் -கடல்
கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச –குட முனிவர் -அகஸ்தியர் கூட்டி வந்து கடலைத் தாண்டலாமே
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ -இந்தக்கடலையும் குடித்தால் கடலை வற்றலாமே
பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே -காலாலே நடந்து போகலாமே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –வானவர்கள் இவ்வாறு சொல்ல வளர்ந்த புன்னகை

வானரங்களும் வேதம் அறிந்ததை நினைத்து புன்னகை
மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிக்கு குறு முனிவர்
தடைகள் நீக்கும் ஸ்லோகம்

——–

நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி வாம் ரக்ஷணே ஜாக ராமே
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந
-2-

நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி -ராஜகுமாரர்கள்
வாம் ரக்ஷணே ஜாக ராமே -நாங்கள் விழித்து இருந்து ரக்ஷிக்கிறோம்
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே -இivarkalஇவர்கள் தூங்க
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத -நீங்கள் இருவரும் -உறங்கா வில்லியும் நீயும் ரக்ஷித்து
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந -இருந்த புன்னகை-கடற்கரை வெளியை நினைத்து த்யானிக்கவே பேறு கிட்டும் அன்றோ

இலங்கையை அழித்த கூர் அம்பன் அல்லால் இலை துணை
நடமாடும் மதிள் சுவர் போல் ரக்ஷிக்கும் பெருமாள்-

———-

ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே ரஷா ப்ரதீஷே ஸ்திதே
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம்
–3-

ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே -உன்னைத் தேடி விபீஷணன் வர
ரஷா ப்ரதீஷே ஸ்திதே -காக்க ப்ரார்த்தனை
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ -அண்ணனை கை விட்டு வந்தவன்
விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே -நம்பலாமா
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே -இவ்வாறு ஸூக்ரீவன் சொன்னதைக் கேட்டு புன்னகை -தேவர்கள் குணம் கொண்டவன் -இந்திரன் தவம் கலைப்பவன் தானே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம் –ஸூர்யன் -அம்சம் ஸூக்ரீவன் -இதனாலே தான் பக்தனை ஏற்றுக் கொள்ளாமல் -இருக்க பரிந்துரை
எவ்வளவு தடை பண்ணினாலும் ரக்ஷிக்காமல் விட மாட்டேன்
உறுதியின் வெளிப்பாடே புன்னகை

——–

ஸாதூ ராவண ஸோதரோ ரகுபதே தஸ்மாத் ஸ பால்யோ ஹி நஸ்
சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர் வித்யா ஜனிம் யாம் ஸூதே
ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் சாதயேத்
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம்
–4-

ஸாதூ
ராவண ஸோதரோ ரகுபதே
தஸ்மாத் ஸ பால்யோ ஹி
நஸ் சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர்-இவ்வாறு திருவடி சொன்னவாறே
வித்யா ஜனிம் யாம் ஸூதே ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் –தப்பான முறையில் கணக்கு போட்டாலும் விடை சரி யானதே
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் -இதனால் வளரத்த புன்னகை -சரணாகதனை ஏற்க வேண்டும் –

———-

த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ்
ஸூக்ரீவ ஸூர ஸூநு சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம்
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ
-5-

த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் -ஒற்றனாக இருக்கலாம் -கைவிடத் தக்கவனே
தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ் -ராவணன் தம்பி வேறே
ஸூக்ரீவ ஸூர ஸூநு -ஸூர்யனின் மகன் ஸுக்ரீவன் –
சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம் -ராக்ஷஸர்களையும்- வைவஸ்த்தன் யமனும் சூரியனின் மகன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
தனது வீட்டுக்கு வர முரண்பட்டு சொன்னானே
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம் -சிலேடையாக திருவடி சொன்னதைக்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ -கேட்டு வளர்ந்த புன்னகை
யாராக இருந்தாலும் ரஷிப்பான் –
ஆனை காத்து ஆனை வென்று —அத்தானைக் காத்து அத்தானைக் கொன்றான் -பக்தி உடன் இருந்தால் யாரானாலும் கைவிடமாட்டான்-

———-

அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் ப்ரூயா மமேதி த்வயா
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம்–
6-

அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் -கடலைக் கடக்க நல்ல வழி யைச் சொல்லு
ப்ரூயா மமேதி த்வயா -விபீஷணனிடம் கேட்க
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ -உன்னாலே அபயம் அளிக்கப்பட்ட -பட்டாபிஷேகம் பண்ணப்பட்டவன்
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா -கடல் அரசன் இடம் சரண் அடையச் சொல்ல
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம் -கேட்டதும் -சிறு பிள்ளை வார்த்தை -என்று நினைத்து புன்னகை
எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் வைத்யம்-கருணைக் கடல் கருங்கடலை நோக்கி சரண் -தர்ப்ப சயனப் பெருமாள்-

————

கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் —
7-

கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்–சமுத்ர ராஜன் மனைவிகள் கங்கை போன்ற நதிகள் மனைவிகள் -உடன் ஸரணாகதி
கங்கை -பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி -இவன் தாசராதி -கொள்ளுப் பாட்டி ராமனுக்கு கங்கை
திருமாங்கல்யம் பார்வையில் படும்படி முன் நிறுத்தி வந்தான்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத -இவ்வாறு சரண் அடைந்த பின்பு உண்மையான சரணாகதன் யார்
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா–கையில் பானம் அமோகமாக இருக்க -எதிரிகள் யார் என்று கேட்டு –
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் –இப்படி லீலை செய்ததால் வளர்ந்த புன்னகை –
தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்கள் ஆகும்-

த்யக்த்வா ஹார மபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம்
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்
–8-

த்யக்த்வா ஹாரமபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ –ஆகாரம் இல்லாமல் கடலை நோக்கி கருணைக் கடல் கிடக்க
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு -சேது பாலம் பூர்த்தியாக முடிந்தால் தான் உண்ணுவேன் என்றும் சபதமும் செய்தான்
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம் -ஆகையால் அணில் சீக்கிரம் கட்ட வேண்டும் என்று த்வரித்து
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -உடம்பு நோவ நனைத்து மணல் ஒட்டும்படி புரள -கைங்கர்யம் நினைத்து வளர்ந்த புன்னகை
மேஸ்த்ரி வேலை -குரங்குகள் சிற்றாள் வேலை

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-

———

ஸர்ப அஸ்தரஸ் லதநம் ஹிரண்மய வபுஸ் தாத்ருஷனாஸா ததா
பூஷா பன்னக கல்பிதா ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம்
-9-

ஸர்ப அஸ்தரஸ் லதநம் -பார்த்ததும் பாம்புகள் அஞ்சி ஓட
ஹிரண்மய வபுஸ் -பொன்மய திருமேனி
தாத்ருஷனாஸாததா =அசாதாரணம் மூக்கு
பூஷா பன்னக கல்பிதா -நாகாபரணங்கள் சூட்டிக் கொண்டு
ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித –ரேகைகsaamavethamசாமவேத கோஷம் -வேதாத்மா விஹஹேஸ்வர
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் –கைகளில் திருவடி ரேகைகள் பதிந்தவையாய் இருக்க i
த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா –பார்த்ததும்
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம் -நீங்கள் யார் என்று கேட்டதும் -புள்ளரையன் என்று ஒவ்வொரு அடையாளமும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தாலும் –கேட்டாயே -உனக்கே சிரிப்பு வந்ததே -அதே புன்னகை
மானுஷ்ய பாவம் -கட்டுண்டது போல் நடிக்க –
மனத்தெளிவு உண்டாக்கும் ஸ்லோகம்

————–

ஹஸ்தான் விம்சதி முத்தரன் பயமபி ப்ராணே ததத் ஸர்வத
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா ஹித்வா ச சஸ்த்ராண் யபி
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்
த்ருப்தம் தேவ கணம் ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம்
–10-

ஹஸ்தான் விம்சதி முத்தரன்-20 கைகளையும் மேல் தூக்கி -ஆயுதங்கள் இழந்தன
பயமபி ப்ராணே ததத் ஸர்வத-எங்கு பார்த்தும் பயந்து -மேல் தேவர்கள் இகழ்வார்களே
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா –பத்து முகங்களும் -மகுட பங்கம் -சவரம் பண்ணினது போல் ஆகவே -அஹங்காரங்கள் அழிந்து
ஹித்வா ச சஸ்த்ராண் யபி –ஆயுதங்கள் எல்லாம் உடை பட்டன
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ -தேரும் உடைய திரும்பி நடந்தே போனான்
த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்-இந்த நிலையைப் பார்த்து
த்ருப்தம் தேவ கணம் -திருப்தி அடைந்தார்கள்
ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம் -இத்தைப் பார்த்து வளர்ந்த புன்னகை

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்-

ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -நஞ்சீயர்-

———–

பவ்லஸ்த்யம் நனு மத்யமம் த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம்
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம்
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ
–11-

பவ்லஸ்த்யம் நனு மத்யமம் -நடுப்பிள்ளையான கும்ப கர்ணனைப் பார்த்தவாறே
த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம் -முதலிகள் பயந்தவாறே
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் -அரக்கன் அல்ல யந்த்ரமே -robo -தான்
த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம் -இப்படி லஷ்மணன் உறுதியுடன் சொல்ல
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச -கீழே கபந்தன் பிடிக்க பயந்த இளவல் பெருமாள் கலங்க வில்லை -பொங்கும் பரிவால் இளவல் கலங்கினான் அங்கு –
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ–லஷ்மணன் வீரத்தை நினைத்து வளர்ந்த புன்னகை -நல்ல மன உறுதி வளரும்

————

விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து
தத் பாணா வத கர்youயோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம்
–12-

விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர -சூர்யன் கும்பகர்ணன் மயங்கிய சுக்ரீவனைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து விந்திய மலையே நடப்பது போல் இருக்க
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து -தனது மகனுக்கு என்ன நேருமோ என்று பதட்டம் அடைய
தத் பாணா வத கர்ண யோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம் -சுக்ரீவன் மயக்கம் தெளிந்து கும்பகர்ணனுடைய காதுகளைக் கொய்து எடுத்தானாம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம் –இதைப் பார்த்ததும் -த்வாபர யுகத்துக்குப் போனது போல் -இதே போல் ஸூர்யன் மகனாக கர்ணன் பிறப்பான் -அவனை அழிக்கும் பொழுது இதே ஸூர்யன் கர்ணன் கர்ணன் என்று கத்துவான் -அதற்கு முன்னோட்டமாக இப்பொழுது -இத்தை நினைத்து புன்னகை-

————

ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம் ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம்மந்தஸ்மிதம் பாது மாம்
–13-

ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம்-தந்தைyentraஏற்ற மகனாக்கி -காது இல்லாதவனாக்கி – விஸ்ர வஸ்கும்பகர்ணனின் தந்தை
ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா -தங்கைக்கு அண்ணனாக்கி -சூர்பனகைக்கு மூக்கு இல்லை -அதே போல் இவன் மூக்கையும் அறுத்து
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ -இவ்வாறு -சொல்லின் செல்வனான -திருவடி சாதுர்யமாகச் சொல்ல
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –லஷ்மணனையும் பார்த்தபடி வளர்ந்த புன்னகை நம்மை ரக்ஷிக்கட்டும்-

———

ராஜா குப்யதி கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் ரிபோ கிங்கரா
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம்
-14-

ராஜா குப்யதி -ராவணன் கோபமாக உள்ளார்
கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது -நம் மேல் தான் கோபமாக உள்ளார்
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம் -நான் சொன்னதை அப்படியே செய்வீர்களா என்று கோபம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் -இறந்த அரக்கர்களை கடலில் போட்டதுக்காக
சஞ்சீவ கரணி சந்தான காரணி போன்ற -மூலிகை வாசனையால் வானரர்கள் உயிர் எழ
கடலில் போட்டதுக்காக அரக்கர்கள் உயிர் பெற வில்லையே
ரிபோ கிங்கரா -எதிரியான ராவணனுடைய கிங்கரர்கள் இவ்வாறு பேச
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -இத்தை வானர முதலிகள் கேட்டு வளர்ந்த புன்னகை-

———-

மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா
வஹ்யந்தீதி முனீஸ்வரா மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்
-15-

மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா வஹ்யந்தீதி முனீஸ்வரா –தேவ மாயை -நாரதர் சீதையை வர்ணிப்பார் -அத்ப்புத சக்தி
மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா -மயனின் பேரன் இந்திரஜித் -அரக்க மாயை
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச -தேவ மாயையான சீதை நலமாக இருக்க அரக்கர் மாயை அழிந்து –
இத்தால் நடக்கப்போகும் தோல்வியையே காட்டுகிறான்
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -நீயே அந்த தேவன்-அத் புத சக்தி வெல்லப் போவதையே இது காட்டும் – -விபீஷணன் சொல்ல வளர்ந்த புன்னகை-

இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத்
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம்-
16-

இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர -இந்த்ராஸ்த்ரம் கொண்டு -இந்ரஜித்தை வென்ற -மேக நாதன் -இயல் பெயர் இந்திரனை வென்றதால் இந்திரஜித் பெயர்
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத் -ராமானுஜ சித்தாந்தத்தில் உண்டே
வைச்வாதிகரணம் -1-2 -இந்த்ரோயம் பெருமாளையே காட்டும் பதம் -ஆளும் -ஆள்கின்ற திருவரங்க செல்வனார் –
அக்னி ஒளி காட்டி முன்னே அழைத்துச் செல்லும் நாராயணனன்
ஆனந்த கண்ணீர் வரவழைப்பதால் இவனே ருத்ரன்
ப்ருஹஸ்பதி -ஆழ்வார் வாக்கை மீட்டுக் கொடுத்த ஆராவமுதன் –
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய -ஜைமினி இவ்வாறு ஸாஷாத்தாக காட்டும் -என்று அருளிச் செய்தார்
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம் –வால்மீகி இந்த அர்த்தை அருளியதால் -ராமன் பெயரைச் சொல்லி இந்திர அஸ்திரம் இத்தை நினைத்து புன்னகை

எல்லாவற்றிலும் இறைவனைக் காணக்கூடிய உயர்ந்த பக்தி நிலையை அருள்வார்-

———

த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் தேவ ரிபோ அன்வேஷணே
கும்பீ ஸூநுப தோத்தரஸ்யமதுபா சத்தே பலம் தாத்ருசம்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம்
-17-

த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் -கண்டேன் ஸீதையை
தேவ ரிபோ அன்வேஷணே -பார்த்ததும் சொன்ன
கும்பீ ஸூநுப தோத்தரஸ்ய -தெற்கில் இருந்து வந்து
மதுபா சத்தே பலம் தாத்ருசம் -மதுவைப்பருகி ஆலிங்கனமும் பெற்று
தெற்கில் உதித்த ஆழ்வார்கள் அருளிச் செயல்களை அறிந்து பகவத் குண அனுபவம் செய்து ஆலிங்கனம் பெறுகிறார்கள்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே -மாயா ஸீதையை கண்டு ஸீதையே இல்லை என்றார் போல்
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம் -மாயாவாதிகள் ஒன்றுமே இல்லையே -குணம் விபூதி இல்லை -இந்திரஜித் தொடர்பால் ஆவது போல் ப்ரக்ருதி மாயையால் -பிதற்றுகிறார்கள் -வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்-இத்தை நினைத்து வளர்ந்த புன்னகை-

——————-

ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன
ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-
-18-

ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே -சிவனும் நானும் ஸாம்யம் -என்று மூல பலத்தை அழிக்க ஸஹ காரி இல்லாமல் செல்லும் பொழுது சொன்னான்
இது எவ்வாறு என்று பார்வதி சிவனிடம் கேட்க
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம் -திரியோதனன்ன மூடனும் முப்புரம் எரித்த வ்ருத்தாந்தம் சொல்கிறான் -அம்பாக ஸாஷாத் நாராயணனே -சிவனுக்கும் ஆத்மாவாக நாராயணன் -தெளிவாக சொன்னான்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் – சரீர சரீரீ பாவத்தால் ஸாம்யம் சொல்லலாமே -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்-
ஸ்மிதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை

——–

ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே தேவா ந ஸக்ருர் தயாம்
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-
19-

ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே -பிராட்டியைத் தேடி விthavirnthதவித்த பொழுது a
தேவா ந ஸக்ருர் தயாம் -எந்த தேவர்களும் நேராக உதவவில்லையே
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா –பெரிய உடையார் -ஆத்மாவாக உதவினாரே -ஆயுஷ்மன் பல்லாண்டு பாடினார் -இந்தன் முஹூர்த்தம் -கடத்திப் போந்தான்
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம் -இப்பொழுது வெல்லப்போகும் சமயத்தில் மாதலியும் தேரையும் கொடுக்கிறான் இந்த்ரன்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -உலகமே ஜெயிப்பவர் பக்கம் இருப்பதே இயற்கை என்று நினைத்து வளர்ந்த புன்னகை-வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். அவமானம் எல்லாம் வெகுமானமாக மாறும்-

———–

யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம்
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம்-
-20-

யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி -20 கண்களாலும் உனது திரு முகத்தைப் பார்த்து
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம் –இந்த அழகிய திருமுகத்தில் நின்றும் சீதையைப் பிரித்தேனே –
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம் -எனது பத்து தலைகளையும் வெட்டி தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்ளட்டும்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம் -இவ்வாறு நினைத்துக் கொண்டே சிசு பாலனாக அடுத்த ஜென்மத்தில் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டு இருந்தானே-

———

மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர்
மந்தே தரம் மங்கல மாத னோது
–21-

மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய-மந்தாகினி யாகிய கங்கையை தலையில் ஏந்திய சிவன் ஸ்துதிக்கப்படும் ராமன்
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து -மண்டோதரி கணவனான ராவணனுடைய தலையை அறுத்துத் தள்ளிய
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர் -மநு குல திலகமான உனது புன்னகை
மந்தே தரம் மங்கல மாத னோது -உயர்ந்த மங்கள பெருக வைக்கட்டும்-

——-

புத்ரோ விஸ்ர வஸோ அபி மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் நஷ்டம் குலம் பஸ்ய தோ
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே–
22-

புத்ரோ விஸ்ர வஸோ அபி -விஸ்வரஸ் பிள்ளை ராவணன்
மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத -நான் இல்லாத பிராட்டி மேல் காமம் கொண்டு அழிந்தான்
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி -சீதா இல்லாத என்னை மட்டும் ஆசைப்பட்டு காது மூக்கு அறுபட்டாள்
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் -தந்தை முனிவராய் இருந்தாலும் தாயார் குணம் சேர்ந்ததால்
நஷ்டம் குலம் பஸ்ய தோ -குலம் அழிய காரணமானார்கள்
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே -அதே குலத்தில் சிரஞ்சீவியாக விபீஷணன் -இருவரையும் சேர்த்து வைத்ததை நினைத்து -மானஸீகமாகப் பிராட்டியைக் கண்டு புன்னகை-

———-

ஸஜ்ஜா கிம் கிமயம் விலம்ப இதி வா ப்ருச்சா ந காசித் க்ருதா
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம்
–23-

ஸஜ்ஜா கிம் -பிராட்டி உடன் வந்து விட்டாளா
கிமயம் விலம்ப இதி -ஏன் தாமதம்
வா ப்ருச்சா ந காசித் க்ருதா -இப் பொழுது எப்படி இருக்கிறாள்
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம் -இப்படி எல்லாம் கேட்க்காமல் -முன்பு அநித்ர இத்யாதி -தூங்காமல் கதறிக் கொண்டு இருந்த இவரா அவர்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா -இவ்வாறு பலவிதமாக திருவடி மனத்தால் சிந்திக்க
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன் ஆகையாலே
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம் -புன்னகையாலேயே பதில் சொல்லி -மாயாவி -திருவடியும் புரிந்து கொண்டார்
அவன் செயல்களை நமது புத்தியால் அறிந்து கொள்ள முடியாதே–மேல் அக்னி பிரவேசம் பண்ணைச் சொல்லப் போகிறான் -மற்றவர்கள் பழிச் சொல் சொல்ல முடியாமல் செய்த செயல் -தனது மேல் பழி வரும்படி யும் -அக்னி தேவதையும் இவளது புனிதத் தன்மையும் காட்டும் படி செயல் அன்றோ –
அக்னிக்குள் இருந்து வந்த ஸீதையையே அபகரித்து இப்பொழுது மீண்டும் அக்னிக்குள் போக வைக்கிறான்
புன்னகைக்குள்ளே பல அர்த்தங்கள் உள்ளன-

————–

ஸ்ருத்வா மத் பருஷம் சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா நாவாரயத் கோ அபி மாம்
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா
லங்கா தாஹ கதேதி மந்த மவதத் தஸ்மை கிமேதத் ஸ்மிதம்-
-24-

ஸ்ருத்வா மத் பருஷம் -கடும் சொல் பேச
சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ -கேட்டு காதைப் பொத்திக் கொண்டு
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா -அக்னி மூட்டச் சொல்ல இவனும் மூட்ட -பாகவத அபசாரத்துக்கு பலன் -இவன் கையாலே மூட்ட லீலை
நாவாரயத் கோ அபி மாம் –வானர முதலிகளும் ஒன்றும் சொல்லாமல் இருக்க
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா -உங்களுக்கு என்னைப் பார்த்து அவ்வளவு பயமா கேட்க
லங்கா தாஹ கதேதி –இலங்கையை எரித்த வரலாறு -ஒரே குரங்கு பதில்
ஸீதை பண்ணிய ஆசீர்வாதத்தால் திருவடிக்கு குளிர -அசோகவனத்தையும் சுட வில்லை
ஸீதையின் கற்பு அத்தையும் சுடுமே
மந்த மவதத் தஸ்மை கிமேதத்–இத்தைக் கேட்டதும் வளர்ந்த புன்னகை

பகலோனுமே விளக்கு போல் ஆவானே இவன் தேஜஸ்ஸால்

————–

விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே
–25-

விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித -விஷ்ணுவே எங்கள் கார்யம் செய்தாயே
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி -தங்கள் கார்யம் ஆனதே நாட்டியம் -ராமனுக்கு நன்றியும் மங்களா சாசனமும் செய்யாமல் இருக்க
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே-சிவன் மட்டும் சக்ரவர்த்தியை வரவழைத்து பெருமாளை மகிழ்விக்க
ராம நாம சங்கீர்த்தன பலனே இது
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே -என்று நினைத்து வளர்ந்த புன்னகை

பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம்
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம்
கைகேயீ மிதிவாதினம் த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்
–26-

பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா –கைகேயி எது சொன்னாலும் செய்த எனது குணமும் உனக்கும் வந்ததா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம் –மானைப் பிடிக்க சொல்ல நீயும் செல்ல -அனைத்தும் நடக்கும் படி ஆனதே
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம் கைகேயீ மிதிவாதினம் -கைகேயியை நெருப்பில் தள்ளி இருக்க வேண்டும்
த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -செய்யக்கூடாது என்று சொல்லும்படி வளர்ந்த புன்னகை
ராமாயணம் வளர அவள் தானே காரணம் -அவளையும் பரதாழ்வானையும் ஏற்றுக் கொள்ள பிரார்த்தித்தான் அன்றோ -புன்னகை இவற்றைக் காட்டும்
அவள் போல் இவனும் இரண்டு வரங்களைக் கேட்டு பிரிந்த உறவுகளைச் சேர்த்து அருளினான் அன்றோ –

———–

ஸர்வே கிம் கபயோ ல சந்தி கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா
தேவைகம் து வினா ஸமே யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச
கிஷ்கிந்தா நகரே ச குத்ர ஸ கதோ த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே
–27-

ஸர்வே கிம் கபயோ ல சந்தி -எல்லா வானரங்களும் மீண்டும் உயிர் பெற்று வந்தார்களா
கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா தேவைகம் து வினா ஸமே -ஒருவர் மட்டும் வர இல்லை -வசந்தன் என்கிற வானரம் இல்லை
யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச கிஷ்கிந்தா நகரே ச -யமபுரத்திலும் சுவர்க்கத்தில் கிஷ்கிந்தையிலும் இல்லை குத்ர ஸ கதோ -எங்கே போனான்
த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே -ரோபோ வயிற்றுக்குள் உள்ளான் -முன்பே கும்பகர்ணனை ரோபோ என்று விபீஷணன் சொல்லி முதலைகளை போர் புரியச் சொன்னான்
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே -கும்பகர்ணனை கடலில் தள்ளி இருந்தார்கள் -அவன் வயிற்றுக்குள் இருந்து மீட்டு வந்தார்களாம்
ஆனந்த புன்னகை-

————

கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய
புச்சம் நாஸ்தி கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ
–28-

கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா -வானர பெண்கள்
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய -உதார மனம் கொண்ட பிராட்டி -உருவம் நன்றாக இல்லையே
புச்சம் நாஸ்தி -வால் கூட இல்லையே
கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா -ஆகவே உருவம் அழகாய் இல்லையே
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

ருமா -ஸூ க்ரீவன் மனைவியும் சீதாப்பிராட்டியும் பேசிக் கொண்டவை

கந்தவ்யம் த்வரயா ருமே –யதி ந கிம் -வஹ்னவ் பதிஷ் யத் யஹோ
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –இத்யேவ ஸீதா ருமா
ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே-
-29-

கந்தவ்யம் த்வரயா ருமே –சீக்கிரம் போக வேண்டும்
யதி ந கிம் -எதனால் த்வரை
வஹ்னவ் பதிஷ் யத் யஹோ -அவன் நெருப்பில் குதித்து விடுவானே
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது -குதித்தாலும் நீ வெளியே வந்தால் போல் வெளியே வருவான்-ராமன் அருளால்
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –ஆனால் இத்தைக் கேள்விப்பட்டால் ராமன் தானே அக்னியில் குதித்து விடுவானே -யார் ரக்ஷிப்பார்
இத்யேவ ஸீதா ருமா ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே -இவ்வாறு பேசிக் கொண்டதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

———–

பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம்
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம்
-30-

பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா –உணவுகளை வானரர்கள் உண்டு கொண்டு இருக்க
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம் -ஸூர்யன் மகனான சுக்ரீவன் சேப்பங்கிழங்கை கையால் பிடிக்க வழுகிப் போக -ஸுக்ரீவனும் குதிக்க
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே -அதைப் பார்த்து -குரங்குகள் குதிக்க –
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம் -அதைப் பார்த்து வளர்ந்த புன்னகை இங்கும் காட்டி அருளுகிறாய்-

——–

ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம்
–31-

ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ -பிராட்டிக்கு பெருமாளுக்கும் பரதாழ்வானுக்கும் நமஸ்காரம் -திருவடி சொல்ல
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி -வாலில் நெருப்பை சந்திரன் போல் குளிர வைத்து அருளினாளே அதற்காக முதலில் பிராட்டிக்கும்
இவ்வாறு தனியாக சந்திக்க வைத்து அருளி பரத பக்தியைக் கண்டு ஆலிங்கனம் பண்ணும்படி வைத்த பெருமாளுக்கும் நமஸ்காரம் l
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்–ராஜ்யத்தை பாதுகா தேவிக்கு ஸமர்ப்பித்து -ஆராதித்து பாதுகையாகவே ஆனான் அன்றோ அவனுக்கும் நமஸ்காரம்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம் -நந்தி க்ராமத்தில் இவ்வாறு திருவடி சொல்ல பிரயாகையில் இருந்தவாறே அத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பக்தனுக்கு மற்றொரு பக்தனை சந்திப்பது ஆனந்தம்-

———–

பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம்
விபதி பதிதான் லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான்
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம்
-32-

பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை -பக்தியுடன் இருந்து விரதமும் இருந்து திருவாராதனம் நன்றாக நடக்கும் படி செய்து அருளினீர்
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம் -திரு உள்ளம் உகந்தான் -இதற்காகவே ராமனுக்கும் சீதைக்கும் அருள் புரிந்தான்
விபதி பதிதான் -பல விரோதிகளை அழிக்க அருள் புரிந்தான்
லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான் -இலங்கை யுத்தம் நாக பாசம் கருடன் மூலம் அருளி –இந்திரஜித் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட சஞ்சீவ கரணி
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம் -இவ்வாறு சீதாப் பிராட்டி பரதனைப் பார்த்து கொண்டாட வளர்ந்த புன்னகை-ஸ்லோகத்தை சொல்வோருக்கு குலதெய்வ பெருமாளின் அனுக்ரஹம் கிட்டும்-

———

கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ்
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம்
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம்
–33-

கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே -எங்களுக்கும் தாய் -வானர முதலிகளின் மனைவிகள் சொல்ல -மனித வடிவம் எடுக்கச் சொல்ல தலையை வாரி விட்டு
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ் -நாரி வடிவம் வால் தலைக்குப் பின்னால் -கிண்டல் பண்ண
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம் -இவ்வாறு பேசிக் கொள்ள -வெட்கத்துடன் தலை குனிய
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை -இந்த ஸ்லோகத்தை சொல்வோருக்கு, குறைகள்கூட நிறைகளாக மாறும்-

————

குப்ஜே த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிமந்விதம்-
-34-

குப்ஜே
த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா -நீ இங்கே இருக்கக் கூடாது -இன்னும் ஒரு கலஹம் பண்ணக் கூடாது
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்-மாட்டேன் -கண்ணாலே பட்டாபிஷேகம் சேவிக்க எனக்கும் ஆசை இருக்கிறது
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம் -நாக்கில் விஷம் -துணியை அடைத்துக் கொள்கிறேன் -பேசாமல் இருக்கிறேன் -அனுமதி தர வேண்டும் -அவளாலே அவளது வாயைக் காக்க முடியாது என்ற எண்ணம் -யா காவாரானாலும் நா காக்க -இத்யாதி
இரண்டு கண் இரண்டு காது இரண்டு மூக்குத் துவாராம்-ஒரே வேலை இவற்றுக்கு –ஒரே வாய் இரண்டு வேலைகள்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிம–இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

நையக்ரோ தகடேன ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத்
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம்
–35-

நையக்ரோ தகடேன -ஆலமரக் குடத்தால்
ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத் -ராஜ ஸூய யாகம் -பண்ணும் பொழுது
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத -அபிஷேகம் நண்பன் பண்ண வேண்டும்
ஆலமரப்பால் முன்பு கொண்டு வந்து ஜடையைத் தரிக்க வைத்தான் முன்பு
மணிமுடி தரிக்க இப்பொழுது-ஆலமரப்பானையால் அபிஷேகம் -பாக்யம்
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம் -கேட்டு வளர்ந்த புன்னகை
இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்-

——–

புச்சம் சேஷ ஸமாந மஸ்ய ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா
ஸோ அயம் மர்கட ஏவ கே கிரிரதோ ஹஸ்தே மஹானைஷ்யத
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ் நம்ரோ அதி ரம்யோ அது னா
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம்
–யுத்த -36-

புச்சம் சேஷ ஸமாந மஸ்ய -ஆதி சேஷன் போல் வாழ்
ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா -திருமேனி வானத்தையே ஆக்ரமித்து
ஸோ அயம் மர்கட ஏவ -அதே திரு முகம்
கே கிரி ரதோ ஹஸ்தே மஹானைஷ்யத -மருந்து மலையையே கையிலே சுமந்து
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ்
நம்ரோ அதி ரம்யோ அதுனா -சிறிய அழகிய வடிவுடன் அவரே இவர் -மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிகப் பெரியது -பெருமாள் பட்டாபிஷேகம் போது சிறிய வடிவுடன் விநயமே வடிவாக எழுந்து அருளி
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம் –அயோத்யை மக்கள் பேச்சைக் கேட்டு புன்னகை
இந்த ஸ்லோகம் கேட்ட நமக்கும் திருவடி போல் கைங்கர்ய ஸாம்ராஜ்யம் கிட்டும்

————

அக்ரே பாதுகயா தயாப் யதிகயா பார்ஸ்வே அபி பூமீ புவா
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ருத்ரயேணா வ்ருதா
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம்
-யுத்த -37-

அக்ரே பாதுகயா -முன்னே ஸ்ரீ பாதுகா தேவி
தயாப் யதிகயா -கருணையில் பெருமாளை மிக்கு இருப்பவள்
பார்ஸ்வே அபி பூமீ புவா -இடப்புறம் ஸீதாப்பிராட்டி
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்–வாயு புத்ரன் -திருவடி ஆதரத்துடன் திருவடித் தாமரைகளைத் தாங்க
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ரு த்ரயேணா வ்ருதா–மூன்று சகோதரர்களும் சத்ர சாமர கைங்கர்யங்கள் செய்ய
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்–அனைவரும் சூழ்ந்து -எட்டு முனிவர்கள் புனித நீர் வர்ஷிக்க
த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம் -அந்தப் புன்னகையுடன் இங்கே எழுந்து அருள

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்–ஸூ ந்தர ஸ்கந்தம்- -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

October 3, 2024

63 ஸ்லோகங்கள் இதில்
முதல் மூன்று -திரும்ப வந்து கண்டேன் ஸீதை -கேட்டு மந்த ஸ்மிதம்
போன வ்ருத்தாந்தம் கேட்டதுக்குப் பதில் -4-7- ஸ்லோகங்கள் -சுருக்கமாக அருளிச் செய்து
8-63 வரை -விரிவாக அருளிச் செய்து -பட்டாபிஷேகம் முடிந்த பின்பு சீதாப் பிராட்டியிடம் பெருமாள் கேட்டு -மகிழ்ந்து மந்த ஸ்மிதம் பூத்தது
இப்படி மூன்று பகுதிகள்
ஒவ்வொரு ஸ்லோகமும் திருவடியின் குணங்களை பறை சாற்றும்

————

ஆயாதா மது பக்ஷயந்தி விபிநே தத் பாலகைர் வாரிதா
தாநே தான் நிதரம் ப்ரஹ்ருத்ய முதிதா ஷீபா ஸ்திதாஸ்தே வநே
தச் ச்ருத்வா “ஹநுமான் விதேஹ தநயாம் த்ருஷ்ட்வா ஆகதஸ் ஸ்யா ” திதி
ஸ்ரீ ஸூக்ரீவ கிரா பவத் வதநதோ மந்தஸ்மிதம் வர்ததே
-1-

ஆயாதா -வந்து விட்டார்கள்
மது பக்ஷயந்தி விபிநே தத் பாலகைர் வாரிதா தாநே தான் நிதரம் ப்ரஹ்ருத்ய முதிதா ஷீபா ஸ்திதாஸ்தே வநே -ததிமுகன் முதலிகள் கூத்தாடிய முதலிகள் பற்றிச் சொன்னதும்
தச் ச்ருத்வா -கேட்ட ஸூக்ரீவன்
“ஹநுமான் விதேஹ தநயாம் த்ருஷ்ட்வா ஆகதஸ் ஸ்யா ” திதி -பிராட்டியைக் கண்டு மீண்டான் என்று
நல்ல செய்தியுடன் ஆரம்பம்
ஸ்ரீ ஸூக்ரீவ கிரா பவத் வதநதோ மந்தஸ்மிதம் வர்ததே -வளர்ந்து கொண்டே இருக்கும் மந்தஸ்மிதம் இதில்

புலன்களை வென்ற திருவடி முதலிகளின் ஆனந்தம் -கட்டுப்படுத்தி ராம லஷ்மணர்களின் முதுகோடு போவதைத் தடுத்த புத்தி ஸாமர்த்யம் இத்தால் வெளிப் படுத்துகிறார்
புத்திர் பலம் –இத்யாதி
நமக்கும் வாழ்வில் நல்ல செய்தி கிட்டும் பலன் -இந்த ஸ்லோகம் சொல்வதால் கிட்டும் –

——–

ஆயாதேஷு ஸமேஷு தேஷு கபிஷு ஸ்ரீமத்ஸூ தைரக்ரத
ஸா நந்தாஸ் ருபிருத் ஸூகை ரதிதராம் ஆப்தம் விலோக்யாநதம்
ஸ்ரீமந் மாருத ஸம் பவம் நிஜமுகே வித்யோத மாந ஸ்ரீயம்
யத்தே ராம முகாம்புஜே ஸமபவத் மந்தஸ்மிதம் தத் புர
-2

ஆயாதேஷு ஸமேஷு தேஷு கபிஷு -வானர முதலிகள் அனைவரும்
ஸ்ரீமத்ஸூ தைரக்ரத-மிக்க தேஜஸுடன்
ஸா நந்தாஸ் ருபிருத் ஸூகை ரதிதராம் -ஆனந்தக் கண்ணீர் சொரிய வந்தார்கள்
ஆப்தம் விலோக்யாநதம்–பெருமாள் திருமுகம் பார்தார்கள்
ஸ்ரீமந் மாருத ஸம் பவம் நிஜமுகே வித்யோத மாந ஸ்ரீயம்–பெருமாளோ திருவடியைப் பார்த்து -தனி தேஜஸ் தெரிந்ததே
திருவடியோ கண்டேன் ஸீதையை முதலில் சொல்லாமல் -தெற்குத் திக்கைப் பார்த்து பிராட்டியை சேவித்தாராம் –அவர் திருவடி ராமரை நோக்கி நீட்டி இருந்ததாம் –
பிராட்டி காணப்பட்டாள் -தொழும் நிலையில் இருக்கிறாள்-என்று காட்டவே –
யத்தே ராம முகாம்புஜே ஸமபவத் மந்தஸ்மிதம் தத் புர-அத்தைக் கண்டவுடன் பெருமாள் புன்னகை இதில் –

திருவடி தனது தேஜஸ்ஸாலும் குறிப்பாலும் உணர்த்தினார்
ஒளி மயமான எதிர்காலம் அமையும் பலன்

————

த்ருஷ்ட்வா கா அபி பதி வ்ரதா குல மணீ ராமோத்தமா ராம தே
மூர்திம் மானஸ பங்கஜே விதததீ ஸ்ரீ ராம ராமேதி ச
நாம ஸ்வாநந பங்கஜே திஸ்ரீ தவ ஸ்ரீ நேத்ர பத்மே ஸதே
த்யுக்த்யா வாயுஸூ தஸ்ய ஜாதமயி தே மந்தஸ்மிதம் த்யோததே
-3-

த்ருஷ்ட்வா -கண்டனன்
கா அபி பதி வ்ரதா -கற்புற்கு அணியை
குல மணீ -இற் பிறப்பு –பொறை -கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்
ராமோத்தமா -உத்தம ஸ்த்ரீ -மங்கையர் திலகம்
காண நோக்கிலேன் அவன் கமலக் கண்ணால் –
ராம தே மூர்திம் மானஸ பங்கஜே -உள்ளத் தாமரையில் உன்னைக் கண்டேன்
விதததீ ஸ்ரீ ராம ராமேதி ச நாம ஸ்வாநந பங்கஜே –ராம ராம திருநாமங்களை வாயால் சொல்லி
திஸ்ரீ தவ ஸ்ரீ நேத்ர பத்மே ஸதே-நீலத்தாமரைக் கண்களால் வடதிசை நோக்கி வரவைப் பார்த்து இருந்தால் -கண்களில் திசை தெரிகிறதே
த்யுக்த்யா வாயுஸூ தஸ்ய ஜாதமயி தே மந்தஸ்மிதம் த்யோததே -கேட்டு மகிழ்ந்து புன்னகை

பேச்சு ஆற்றல் –

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்;

விற் பெருந் தடந் தோள் வீர ! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்புஎன்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்

————-

இதோ யாதுர் மார்கே கிம பவததோ யாது கணத
புரே வா ஸா த்ருஷ்டா கதமிவ கிமா ஹாத மதுரா
இதி த்வத் ப்ருச்சாதோ ஹனுமதி ததா ஆஸீந் முக ருசி
ததஸ் ஸ்வாமின் வக்த்ரே தவ ச மதுரம் மந்தஸ்மிதம்
–4-

இதோ யாதுர் மார்கே -தென் திசை நோக்கி சென்றாயே -சகோதரன் யமன் திசை சுக்ரீவன் -வாயு தென்றல் காற்று –
கிம பவததோ யாது கணத -அரக்கர் மூலம் ஏதாவது ஆபத்து வந்ததா -பக்த வாத்சல்யம்
புரே வா ஸா த்ருஷ்டா கதமிவ -எவ்வாறு கண்டாய்
கிமா ஹாத மதுரா -இனியவள் என்ன சொன்னாள்
இதி த்வத் ப்ருச்சாதோ -இவ்வாறு கேட்க
ஹனுமதி ததா ஆஸீந் முக ருசி -பதில் சொல்லும் முன்பு மெய் சிலிர்த்து கண்ண நீர் தாரை பெறுக -தேஜஸ் மிக்க
ததஸ் ஸ்வாமின் வக்த்ரே தவ ச மதுரம் மந்தஸ்மிதம் -அத்தைப் பார்த்து புன்னகை

பக்தியின் ஏற்றம் அறிகிறோம்-

—-

தனது பெருமையைத் தனது வாயால் சொல்லிக் கொள்ளுபவர் இல்லையே
அங்கதன் பெருமையை இதில் அருளிச் செய்கிறார்

பவத் த்ருஷ்ட்யா ஹ்ருஷ்டோ விபி நபுவ மாலோக்ய நிகிலாம்
ஸூ பார்ஸ்வம் த்வாம் கர்தும் ஐநக ஸூதயா வாலி தநய
ஸூ பார்ஸ்வம் மாம் ஸாதம் கர ஹத கபோலம் ஸம வதீத்
இதி ஸ்ருத்வா வாசம் தவ ஹநுமதோ மந்த ஹஸிதம்
–5-

வாலி தநய -அங்கதன்
பவத் த்ருஷ்ட்யா ஹ்ருஷ்டோ -உமது கடாக்ஷ பலத்தாலே
விபி நபுவ மாலோக்ய நிகிலாம் -எங்கும் சென்று
ஸூ பார்ஸ்வம் த்வாம் கர்தும் ஐநக ஸூதயாஸூ பார்ஸ்வம் மாம் ஸாதம் கர ஹத கபோலம் ஸம வதீத் -ஸூ பார்ஸ்வ அரக்கனை கையாலே வதம் செய்து -ஸூ பார்ஸ்வம் நல்ல பக்கம் -ஸீதாப்பிராட்டி அருகில் இருந்தால் தானே ஸூ பார்ஸ்வம் ஆவான் –
சொல்லின் செல்வனின் சொல் அல்லவா
இதி ஸ்ருத்வா வாசம் தவ ஹநுமதோ மந்த ஹஸிதம் -இத்தைக் கேட்டு புன்னகை
விநய ஆஞ்சநேயர் -தற் பெருமை பேசாமல் –
வீரத்தை பழித்தாலும் அழிப்பேன் அர்ஜுனன் சபதம் செய்ய
தர்ம புத்ரன் பழிக்க
தர்ம புத்ரனை அவமதித்துப் பேசி கொன்றதுக்கு சமம்
பழித்தாலும் கொல்வேன் சபதம் செய்துள்ளேன்
நான் வீரன் விஜயன் -போன்ற பெருமைகளைத் தானே சொல்லி தற் கொலைக்குச் சமம்

நான் அஹந்தை குறைந்து சேஷத்வம் வரும் பலன்

மைநாகோ கிரிராட் பயோ நிதி ஜலாத் உத்பத்ய மாம் ஆதராத்
ஸ்ரீ ராம ப்ரிய தூத வாதபவ ஹே விஸ்ரம்ய கிஞ்சித் வ்ரஜ
இத்யுச் சைரவதத் ப்ரபோ ரகுபதே நாதேதி வாசா கபே
யந் மந்தஸ்மிதம் ஆநேந தவ பபவ் தன்மே விதத்தாம் ஸூகம்-
-6-

மை நாகோ கிரிராட் பயோ நிதி ஜலாத் உத்பத்ய -ரெக்கை கட்டிப் பறந்து வர -கடலுக்கு அடியில் வாயு இவனைச் சேர்த்து பாதுகாக்க -இவன் பார்வதி மகன் –
மாம் ஆதராத் -பெரிய ஆதாரத்துடன்
ஸ்ரீ ராம ப்ரிய தூத
வாதபவ -வாயு குமாரனே
ஹே விஸ்ரம்ய கிஞ்சித் வ்ரஜ -கிஞ்சித் ஒய்வு எடுத்துக் கொண்டு என்று சொல்ல
இத்யுச் சைரவதத் ப்ரபோ ரகுபதே நாதேதி வாசா கபே இவ்வாறு சொன்னவாறே
யந் மந்தஸ்மிதம் ஆநேந தவ பபவ் தன்மே விதத்தாம் ஸூகம் -கேட்டுப் புன்னகை

தனது பெருமையை தானே சொல்ல மாட்டாரே
தனக்காக இல்லாமல் ராம கைங்கர்யமாக இடம் கொடுத்தத்தைச் சொல்லி
அப்பாவின் பெருமையால் பெற்ற பேறு
நமது பெருமைகள் எல்லாம் ஆச்சார்யர் கிருபை அடியாகவே எண்ண வேண்டுமே

தடைகளை நீக்கி ஆனந்தம் அளிக்கும் பலன்

———-

மாதா நாக குலஸ்ய ஸா அத ஸூரஸா நாம்நீ ஸூரை ப்ரேரிதா
த்வா மாஸ் யாந்தரயே நிதாய ஸூ பகம் ஸ்ரீ ராம தூதம் மநாக்
விஸ்ராந்தம் விஸ்ருஜாமி ஹே த்யுபகதே த்யுக்த்யா முதா பாவநே
யந் மந்தஸ்மித மாஸ தே ரகுபதே தந்மே விதத்தாம் முதம்-
-7-

மாதா நாக குலஸ்ய ஸா அத ஸூரஸா நாம்நீ -வாயை பெருக்கி -ப்ரம்மா வரப்படி வாய்க்கு உள்ளே புகுந்து செல்ல வேண்டும்
ஸூரை ப்ரேரிதா -தேவர்கள் அனுப்பிய -புத்தி கூர்மை பரிஷை பண்ண -கொசு போல் சிறிய வடிவம் கொண்டு வாயுக்குள் மட்டும் புகுந்து வயிற்றுக்குள் செல்லாமல் வெளியில் வந்தார்
த்வா மாஸ் யாந்தரயே நிதாய ஸூ பகம் ஸ்ரீ ராம தூதம் மநாக் -கொஞ்சம் நேரம் தாங்கிக் கொள்ள ஆசைப்பட்டாள் -ராம தூதனாக இருப்பதால்
விஸ்ராந்தம் விஸ்ருஜாமி -கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்து கொண்டேன்
ஹே த்யுபகதே த்யுக்த்யா முதா பாவநே யந் மந்தஸ்மித மாஸ தே ரகுபதே தந்மே விதத்தாம் முதம்-பவனம்-வாயுவின் பிள்ளை சொல்ல -புன்னகை -அது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கட்டும்

பணிவைப் பார்த்து புன்னகை
தோஷம் குற்றம் யார் மேலும் சொல்லக் கூடாது -விழுங்கப் பார்த்தாள் சொல்ல வில்லையே
அபாரமான ஆனந்தத்தை அளிக்கும் ஸ்லோகம்

அயம் வக்தா ந ஸ்யான் நிஜர சித கார்யஸ்ய நியதம்
ததஸ் தத் ஸ்வார் சாயாம் விஹித வடுவூர் கேஹ வஸதி
ஸ்ருணோமி ஸ்ரீ வாஸா ஜனக தநயாயா அஹமிமாம்
விதா யாங்கே ஹேதி ஸ்வயம ரஸயோ மந்த ஹஸிதம்-8-

அயம் வக்தா ந ஸ்யா நிஜர சித கார்யஸ்ய நியதம்-பெருமையை திருவடி சொல்ல மாட்டார்
ததஸ் தத் ஸ்வார் சாயாம் விஹித வடுவூர் கேஹ வஸதி -அதுக்காகவே அர்ச்சாவதாரம் வடுவூரில் எடுத்து
ஸ்ருணோமி ஸ்ரீ வாஸா ஜனக தநயாயா அஹமிமாம் -ஸீதாப்பிராட்டி திருவாக்கால்
விதா யாங்கே ஹேதி ஸ்வயம ரஸயோ மந்த ஹஸிதம் -திருமடியில் அமர்ந்து சொல்ல -அத்தை நினைத்துப் பார்க்க மந்தஸ்மிதம் –

திருவடியின் பெருமையை ஸூ ந்த்ர காண்டம் சீதா பிராட்டி திரு வாயால்
தில்லை வளாகம் -விநய திருவடி சேவை
பணிவு கிட்டும் பலம்

—–

ஸ்வாமிந்நேஷ பராக்ரமம் நிஜ மநா த்ருஷ்யம் பரைர் வர்ணிதம்
நைவ ஸ்வீயகிரா வதேத் விநயவான் ஸ்வ உத்கர்ஷ வாதே ஜடஸ்
ஸா அஹம் வஸ்மி ததார்ய புத்ர பகவன் நித் யாத்ம காந்தா கிர
யத்தே ராகவ மந்த மாத ஹஸிதம் தந் மஞ்ஜுலம் பாதுமாம்
–9-

ஸ்வாமிந்நேஷ பராக்ரமம் நிஜ மநா த்ருஷ்யம் பரைர் வர்ணிதம் நைவ ஸ்வீயகிரா வதேத் -யாராலும் அசைக்க முடியாத வீர aதீர பராக்ரமம் உடையவன்
விநயவான் ஸ்வ உத்கர்ஷ வாதே -தனது பெருமையைப் பேச மாட்டானே
ஸா அஹம் வஸ்மி ததார்ய புத்ர பகவன் -நான் சொல்லுகிறேன்-கேளும் என்றதும்
நித் யாத்ம காந்தா கிர -யத்தே ராகவ மந்த மாத ஹஸிதம் தந் மஞ்ஜுலம் பாதுமாம்—கேட்டு ஆனந்தம் பெறவே ஏகாந்தமாக வடுவூருக்கு வர -மந்தஸ்மிதம் சேவிக்க திருவடியும் வர
இந்த மந்த ஸ்மிதம் நம்மைக் காத்து அருளட்டும்

நன்றாக விவரித்துச் சொல்ல சீதாப் பிராட்டியே தயாரான பின்பு மந்தஸ்மிதம் வர சொல்லவும் வேண்டுமோ
வர்ணிக்க முடியாத பெருமை திருவடிக்கு உண்டே
புன்னகையே ரக்ஷை

————-

ததா வாஸம் க்ருத்வா ஸூப க வடுவூர் தேஸ ஸதநே
ஹநூ மத்ய க்ரஸ்தே ஜனக தனயா மஞ்ஜூ வஸஸா
ஹநூ மத் கார்யாணாம் கதிமயி நிஸம்யாதி மஹதாம்
முகே மந்த ஹாஸம் கலயஸி ரகூத் தம்ஸ கிமதம் –
-10-

ததா வாஸம் க்ருத்வா -இதற்காகவே வாஸம்
ஸூப க வடுவூர் தேஸ ஸதநே–ஏகாந்தமாக
ஹநூ மத் யக்ரஸ்தே
ஜனக தனயா மஞ்ஜூ வஸஸா -இனிமையாக பேச -ஜனகன் வேதாந்தி -பரம ஞானி
ஹநூ மத் கார்யாணாம் கதிமயி நிஸம்யாதி மஹதாம் -திருவடியுடைய மஹத்தான செயல்கள் அனைத்தையும் கேட்டு
முகே மந்த ஹாஸம் கலயஸி ரகூத் தம்ஸ கிமதம் –மெல்லிய புன்னகை -திருவடியைப் பார்த்து
இன்றும் வடுவூரில் உத்சவர் சேவை இதே போல்
பெருமை எல்லாம் ராமர் அனுக்ரஹம் என்றே நினைப்பவர்
ராமாயண பாராயணம் எங்கு செய்தாலும் அங்கு திருவடி இருந்து கேட்டு ஆனந்திப்பார் அன்றோ
வீரம் மனவுறுதி வலிமை கிட்டும் பலன் –

————-

கிம் த்ருஷ்டும் கதிதும் பவத் யதிதராம் உத் கண்டிதா வர்ததே
நோ த்ருஷ்டம் ஸ்ருதம் ஆப்ததோ நிஜமநஸ் தர்கேண சாவேஷிதம்
இத் யுக்தி ப்ரதி வாக் விஹார பவயா ஸ்ரீ ஜாநகீ ஸத் கிரா
ஜாதம் தே முக பங்கஜே விஜயதே மந்தஸ்மிதம் மஞ்ஜு லம்
–11-

கிம் த்ருஷ்டும் கதிதும் பவத் யதிதராம் உத் கண்டிதா –கண்ணால் பார்த்ததா -ஆப்தர்கள் சொல்ல காதால் கேட்டததா -ஊகித்ததா
நோ த்ருஷ்டம் ஸ்ருதம் ஆப்ததோ நிஜமநஸ் தர்கேண சாவேஷிதம் -மூன்றையும் கொண்டு சொல்கிறேன்
முன்பு நடந்ததை ஊகித்தும் -கண்டதையும் -பின்பு நடந்தத்தைக் கேட்டும்
இத் யுக்தி ப்ரதி வாக் விஹார பவயா ஸ்ரீ ஜாநகீ ஸத் கிரா -இவ்வாறு பிராட்டி சொன்னவாறே
ஜாதம் தே முக பங்கஜே விஜயதே மந்தஸ்மிதம் மஞ்ஜு லம் –கேட்ட பின்பு புன்னகை
மூன்று வித ப்ரமாணங்களும் -சொல்கிறாளே -என்று புன்னகை

அடியார் பெருமை மஹிமை ப்ரத்யஷிக்கலாமே -பெருமாளை விட மஹத்வம்
வேதாந்த ஞானம் பெருவோம் -பலன்

——–

நாயம் ஜானகி கேவலம் கபிரஹோ த்வத் ஸம்ப தர்தம் திவ
பூமவ் நாம க்ருதாவதார விபவ ஸ்ரீ விஷ்ணு ரேவ ஸ்வயம்
இத்யேவம் ஸரமா ஸகீ மம தாதா ஸா ஆஹேதி ஸீதா கிரா
ராம த்வத் வதநே யதே தத பவத் மந்தஸ்மிதம் பாது மாம்
–12-

நாயம் ஜானகி கேவலம் கபிரஹோ –வெறும் வானரம் இல்லை
த்வத் ஸம்ப தர்தம் திவ -உம்மை அனுக்ரஹித்து அருளவே விண்ணுலகத்தில் இருந்து
பூமவ் நாம க்ருதாவதார விபவ ஸ்ரீ விஷ்ணு ரேவ ஸ்வயம் -பூமியில் நாராயணனே வந்துள்ளார்
ஸரமா சீதாபிராட்டி சாஷாத் மஹா லஷ்மியே என்று அறியாதவள் -நல்ல பெண் மணி என்றே அறிந்தவள்
இத்யேவம் ஸரமா ஸகீ மம தாதா ஸா ஆஹேதி ஸீதா கிரா –இவ்வாறு சீதாபிராட்டி சொல்ல
ராம த்வத் வதநே யதே தத பவத் மந்தஸ்மிதம் பாது மாம் -ப்ரபாவம் அறிந்து மகிழ்ந்து புன்னகை
அதுவே நம்மை ரக்ஷிக்கட்டும்

பக்தனின் ஏற்றம் கேட்டு மகிழ்பவன்
ராமனையே தியானித்து அவரைப் போல் ஸாம்யம் பெற்ற திருவடி -நிரஞ்சன் பரமம் ஸாம்யம் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-

——-

மைநாகேந கிரீஸ் வரேண மஹிதஸ் ஸோ அயம் ஹநுமான் கபி
மத்யே மார்க்கம் அநந்த விக்ரம நிதிர் யாதோ கிரா மைதிலி
ஆகத் யாத்ர தவா நநே முத மதா தித்யாஹ ஸா மே ஸகீ
ஸ்வாமின் நித்யவநீ ஸூதா முக கிரா மந்தஸ்மிதம் பாதி தே
–13-

மைநாகேந கிரீஸ் வரேண மஹிதஸ் ஸோ அயம் ஹநுமான் கபி –கிரீஸ்வரனால் கொண்டாடப்பட்டுள்ளவன்
மத்யே மார்க்கம் அநந்த விக்ரம நிதிர்
யாதோ கிரா மைதிலி –கிர் -வார்த்தை -இவனது வாக்கு கிர் ஈஸ்வரனாகி
ஆகத் யாத்ர தவா நநே முதா –உனக்கு மங்களம் கொடுத்து
தித்யாஹ ஸா மே ஸகீ
ஸ்வாமின் நித்யவநீ ஸூதா முக கிரா மந்தஸ்மிதம் பாதி தே-இவ்வாறு சொன்னதால் புன்னகை

சொல்லின் செல்வன் -அன்றோ – -வாக்மீ ஸ்ரீ மான்
தகுதிக்கு ஏற்ற பாராட்டு கிட்டும்

——–

ஆகச்சன் பதி வேகதஸ் ஸூரஸயா ருத்தோ மஹா வக்த்ரயா
ஹ்ரஸ்வஸ்வன் நிதராம் ப்ரவியஸ் வதநம் தஸ்யா பஹிர் நிர்கத
தேநா தீவ முதா ப்ரஸஸ்ய விஜயீ ஸ்யா இத்யயம் ப்ரேஷித
ஸீதே ஹேதி கிரா விதேஹ நிருபதே புத்ர்யா தவேதம் ஸ்மிதம்
–14-

ஆகச்சன் பதி வேகதஸ் -வேகமாக வர
ஸூரஸயா ருத்தோ -நாகமாதா வழி மறித்து
மஹா வக்த்ரயா -வாயைப் பெருக்கி -பிரமன் வரம்
ஹ்ரஸ்வஸ்வன் நிதராம் ப்ரவியஸ் வதநம் -சிறிய வடிவம் கொண்டு புகுந்து
தஸ்யா பஹிர் நிர்கததேநா தீவ முதா ப்ரஸஸ்ய –சோதிக்க வந்தவள்
விஜயீ ஸ்யா இத்யயம் ப்ரேஷித -வெற்றி உண்டாக ஆசீர்வாதம்
ஸீதே ஹேதி கிரா விதேஹ நிருபதே புத்ர்யா தவேதம் ஸ்மிதம் –இவ்வாறு சொன்னதை சீதாபிராட்டி சொல்ல புன்னகை

புத்திக் கூர்மை அறிந்து புன்னகை
கடலே 100 யோஜனையாயே இருக்க பெரியதாக வாயைக் கூட்டிச் சென்றது இடைச் செருகல் -திருமலை நம்பி காட்டி அருளினார்
உடனே சிறிய வடிவம் எடுத்து உள்ளே சென்று திரும்பினார்
ஸமயோஜித புத்தி கிட்டும் பலன் –

பாராவார பயோ விஹார நிரதா கோராக்ருதிஸ் ஸிம்ஹிகா
ஸர்வாவத்ய தநுஸ் ஸமஸ்த ஜநதா பீதேஸ் ஸதா வர்தநீ
யா ஸா அநேந ஹதா விசித்ரமிதி யச்சம் சந்தி ஸித்தாஸ் ஸமே
தேவீ த்யாஹ ஸகீத் யுதார வஸசா மந்தஸ்மிதம் தே பபவ்–
15-

பாராவார பயோ விஹார நிரதா -கடலில் வசிப்பவன்
கோராக்ருதிஸ் ஸிம் ஹிகா –கோரமானவள் -ராகுவின் அம்மா
ஸர்வாவத்ய தநுஸ் ஸமஸ்த ஜநதா பீதேஸ் ஸதா வர்தநீ -பயம் தருபவள் -சாயாக்ராஹி இவள்
யா ஸா அநேந ஹதா -வதம் செய்தார்
விசித்ரமிதி யச்சம் சந்தி ஸித்தாஸ் ஸமே -சித்தர்கள் மகிழ வாழ்த்த
தேவீ த்யாஹ ஸகீத் யுதார வஸசா மந்தஸ்மிதம் தே பபவ் -கேட்டு புன்னகை

அன்பால் வந்த தடையை அன்பால் வென்றார்
அமரர்கள் அறிவு கூர்மையால் வென்றார்
உண்மையான தடையை வலிமையால் வீரத்தால் வென்றார்
ஸிம்ஹிகா வயிற்றை கிளித்தார்
திரிவிக்ரமன் -வாமனன் நரஸிம்ஹர் போல் இவர் செயல்கள்
வடைமாலை -குடலை மாலையாகப் போட்டதால் proteen ப்ரதிநிதி
ராகு தோஷம் நெருங்காது

——–

லங்கை வாமித விக்ரமா ஹநுமதா ஸா அநேந கோராக்ருதி
தத் சந்தாடந ரோஷிதேந ததபி ஸ்த்ரீ சேதி லக்வாஹதா
பூமவ் ஸம் பதிதா ஜிதா அஸ்மி விசதத் ஸர்வம் ஜயேத்ய ப்ரவீத்
இத்யேவம் ஸரமா அகதீதிதி புவ புத்ர்யா கிரா கிம் ஸ்மிதம்
–16-

லங்கை வாமித விக்ரமா -லங்கிணி
ஹநுமதா ஸா அநேந கோராக்ருதி தத் சந்தாடந ரோஷிதேந -தாக்கி தடுக்க
ததபி ஸ்த்ரீ சேதி லக்வாஹதா -ஓங்கி அடிக்காமல் கையால் தட்ட
பூமவ் ஸம் பதிதா ஜிதா அஸ்மி விசதத் ஸர்வம் ஜயேத் யப்ரவீத் -பூமியில் விழ -வாயு புத்ரனா -கேட்டு -உனக்கு எல்லாமே ஜெயமாகும் வாழ்த்த
இத்யேவம் ஸரமா அகதீதிதி புவ புத்ர்யா கிரா கிம் ஸ்மிதம் –இப்படி சொன்னதை சொல்ல புன்னகை
மோதிரக் கையால் குட்டுப் பட்டாள் –பழ மொழி உருவாக்கியதை நினைத்து நினைத்து புன்னகை
மோதுகின்ற கை
மெலிந்தவர்களை லகுவாக தாக்கும் குணம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் பலம்

————–

ராத்ரா வேஷ ஸமஸ்த மேவ நகரம் ஸம்யக் விசித்யாகத
ப்ராதர் மைதிலி தாவகம் வநமிதம் தத்ரா அபி தம் ராவணம்
த்ருஷ்ட்வா தர்ஜன தத் பரம் ததநு தே வ்ருத்தம் ரகூணாம் ஜகவ்
இத்யேவம் ஸரமா அப்ரவீதிதி கிரா புத்ர்யா புவோ அபூத் ஸ்மிதம்
–17-

ராத்ரா வேஷ ஸமஸ்த மேவ நகரம் –இரவில் தேடி
ஸம்யக் விசித்யாகத -முழுவதும்
ப்ராதர் மைதிலி தாவகம் வநமிதம் -ப்ரஹ்ம முஹூர்த்தம் பிராட்டியைக் கண்டு
தத்ரா அபி தம் ராவணம் த்ருஷ்ட்வா தர்ஜன தத் பரம் —ராவணன் வந்து மிரட்டியதையும் பார்த்து
ததநு தே வ்ருத்தம் ரகூணாம் -உன்னை மகிழ்விக்க ஸ்ரீ ராமாயணம் பாடி
இத்யேவம் ஸரமா அப்ரவீதிதி கிரா புத்ர்யா புவோ அபூத் ஸ்மிதம் –கேட்டு புன்னகை

தன்னைக் கண்டதை தனது திரு வாயால் கேட்டுப் புன்னகை
இரவு முழுதும் தேடி -அஸாத்ய ஸாத்யம் -கார்ய ஸித்தி பலன்

———-

ராஜா அபூத் ரத வாஜி குஞ்ஜர யுகித் யாரப்ய கர்ணாம்ருதம்
ஸ்ரீ மாநேக்ஷ வவர்ஷ மாருத ஸூதோ யுஷ்மச் சரித்ரம் ஸூபம்
இத்தம் ஸ்ரீ ஜனகாத்மஜா ஸமுதிதம் ஸ்ருத்வா வசஸ் தே முகே
யன் மந்தஸ்மிதம் உத்திதம் ஸூ மதுரம் தத் பாது மாம் பாபத
–18-

ராஜா அபூத் ரத வாஜி குஞ்ஜர யுகித் யாரப்ய கர்ணாம்ருதம் -தசரத சக்ரவர்த்தி ஆரம்பம் -காதுக்கு அம்ருதம்
ஸ்ரீ மாநேக்ஷ வவர்ஷ மாருத ஸூதோ யுஷ்மச் சரித்ரம் ஸூபம் -உங்களுடைய சரித்திர மழை பொழிய
இத்தம் ஸ்ரீ ஜனகாத்மஜா ஸமுதிதம் ஸ்ருத்வா வசஸ் தே முகே -இவ்வாறு பிராட்டி அருளிச் செய்ய
யன் மந்தஸ்மிதம் உத்திதம் ஸூ மதுரம் தத் பாது மாம் பாபத –கேட்டு புன்னகை

உயிரையே காத்த குணம்
புத்தி சாதுர்யம்
புன்னகையே ரக்ஷகம்

———-

ஸோ அயம் ஸாகா வலம்பீ தவ கலு சரிதம் பக்திமான் ரஞ்ஜயன் மாம்
ஸங்ஷிப்தம் ஷிப்த தோஷம் ஸ்ருதி யுக ஸூகதம் பாவநம் பாவமாநி
ஸாநந்தம் ப்ராஹ மந்த்ரம் ஸ்ம்ருதமபி ஜனயத் யந்தரா நந்த ப்ருந்தம்
ஸீதா வாசேதி ஜாதோ ஜயதி தவ முகே மந்த ஹாஸோ மநோஜ்ஞ-
-19-

ஸோ அயம் ஸாகா வலம்பீ தவ கலு சரிதம் பக்திமான் ரஞ்ஜயன் மாம்-மரக்கிளையில் அமர்ந்து உமது சரித்திரம் பக்தியுடன் சொல்லி ஆனந்தம் கொடுத்தான்
ஸங்ஷிப்தம் ஷிப்த தோஷம் ஸ்ருதி யுக ஸூகதம் பாவநம் பாவமாநி-சுருக்கமாகவும் தோஷமும் இல்லாமலும் இரண்டு காதுகளுக்கும் அம்ருதமாயும் தூய்மையானதுமான ஸ்ரீ ராமாயணம்
ஸாநந்தம் ப்ராஹ மந்த்ரம்-ஆனந்தமாக பாடி
ஸ்ம்ருதமபி ஜனயத் யந்தரா நந்த ப்ருந்தம்–கேட்ட பொழுது மட்டும் இல்லாமல் நினைக்கும் தோறும் பேர் ஆனந்தம் கொடுக்கும்
ஸீதா வாசேதி ஜாதோ ஜயதி தவ முகே மந்த ஹாஸோ மநோஜ்ஞ-இவ்வாறு சொன்னதைக் கேட்டு புன்னகை

குச லவர்கள் பாட தன் சரிதை கேட்டு ஆனந்தம் -ஸீதாயா சரித்திரம் -ஸீதைப் பிராட்டியே சொல்ல
பக்தியுடன் சுருக்கமாக திருவடி சொன்னத்தை நினைந்து இன்பம் தருவதை –
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம–ஆனந்தம் வாழ்வில் அளிக்கும்-

————

ஸ்ருத்வாப்யேவ மதீவ பக்தி ஸஹிதம் த்ருஷ்ட்வா அபி பத்தாஞ்ஜலிம்
சங்கா மே ஸ தஸாஸ்ய ஏவ கபிதாம் ஏவம் வஹந் நாகத
இத்யா ஸீதத தாம் வ்யபோஹ்ய வசநை முத்ராமிமாம் ஸந்ததவ்
இத்யேவம் ஜநகாத்மஜா வசநதோ மந்தஸ்மிதம் தே பபவ்
–20-

ஸ்ருத்வாப்யேவ மதீவ பக்தி ஸஹிதம் த்ருஷ்ட்வா அபி பத்தாஞ்ஜலிம் –பக்தியுடன் கூடி கைகூப்பி இருந்தாலும்
சங்கா மே ஸ தஸாஸ்ய ஏவ கபிதாம் ஏவம் வஹந் நாகத -ராவணனும் குரங்கு வேஷம் போட வல்லவன் தானே
இத்யா ஸீதத தாம் வ்யபோஹ்ய வசநை –ஏகாந்த விஷயங்களைச் சொல்லி சங்கையைப் போக்கினான்
முத்ராமிமாம் ஸந்ததவ் -கணையாழியையும் கொடுத்து –ஈது அவன் மோதிரமே
இத்யேவம் ஜநகாத்மஜா வசநதோ மந்தஸ்மிதம் தே பபவ் —
இவற்றைக்கேட்டு புன்னகை

புத்தி சாதுர்யமும் பேசசு வன்மையும்
நாடிய பொருள் கைகூடும் பலன் –

அயோத்தி தன்னில் ஓர்,இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்; கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக் குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில் கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்; சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாடநின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,வில் இறுத்தான் மோதிரம் கண்டு அனுமான் அடையாளம் ஒக்கும் என்று உச்சி மேல் வைத்து உகக்க,

——–

முத்ராம் தத்வா த்வதீ யாம் மம கலு வதநே முத்ரிதம் ஹந்த ஹாஸம்
ஸத்யோ ஜாதம் விதேநே நயன யுக கதம் ஸோக பாஷ்யம் ச சித்ரம்
தாத்ருஷ ஆனந்த பாஷ்பம் மம தயித ததேத் யுப்ரவீத் ஜாநகீ யத்
தஸ்மாஜ் ஜாதம் ஸ்மிதம் தே ஜயதி ரகு பதே மந்தமே தன்ம நோஞ்ஞம்
–21-

முத்ராம் தத்வா த்வதீ யாம் மம கலு வதநே முத்ரிதம் ஹந்த ஹாஸம் –கையும் மோதிரமும் முகத்துக்கு புன்னகையும் கொடுத்து–நேரில் பார்த்தாலும் பெறாத பேர் ஆனந்தம் அன்றோ –
இது அன்றோ முன்பு சேர்த்து வைத்தது –
ஸத்யோ ஜாதம் விதேநே நயன யுக கதம் ஸோக பாஷ்யம் ச சித்ரம் -கண்ணீரில் சோக பாஷ்யம் இருக்க
தாத்ருஷ ஆனந்த பாஷ்பம் மம தயித ததேத் யுப்ரவீத் ஜாநகீ யத் -ஒரு நொடியில் ஆனந்த கண்ணீர் வரவழைத்து -சொல்ல
தஸ்மாஜ் ஜாதம் ஸ்மிதம் தே ஜயதி ரகு பதே மந்தமே தன்ம நோஞ்ஞம் -கேட்டு புன்னகை

க்ருஹீத்வா -மோதிரம் -ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகம் செய்தாள்
கண்களில் வைத்து உச்சி மேல் வைத்து -மோதிர விரல் கை தோள் திருமேனி கண்டாள்

பெருமாள் முன்பு சேர்த்து வைத்ததை நினைத்து புன்னகை
முதலில் கணையாழி கொடுக்காமல் -மாயா ஸீதையை உருவாக்க வல்லவன்
ராமாயணம் பாடி -ஏகாந்த அடையாளங்களைச் சொல்லி-ஆர்வம் வளர்த்த பின்பு கணையாழி கொடுத்த சாதுர்ய குணம்
ஆனந்தக்கண்ணீர் பெருகும் பலன்

“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்  பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4. – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே முற்படக் கண்வைக்கமாட்டாதே இருந்தாள்; ‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாறவைக்க அரிதாம்படி இருந்தாள். ஸா – ப்ரேக்ஷமாணா – 2“பஸ்யதேவி – தேவியே! பார்க்க்” என்றுகொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படி இருந்தவள் தானே, கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படியாய் இருந்தாள். பர்த்து: கரவிபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தினபடியை நினைத்தாள். கரவிபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும். பர்த்தாரம் இவ-3இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்; அந் நினைவுதான், தான் இக்கரையில் ஆளாகவும், அவர் அக்கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிற தாகவும் அறிந்திலள்; ஒருபடுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்; ஒரு 1சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள். 2“இவ” என்கிறான் இருடி, 3உலகமாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என்படக் கடவள் என்று. ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள். முதிதாபவத்- உவகையளானாள்.

————–

ப்ருஷ்டஸ் ஸோ அயம் ஹனுமான் கதய ரகுபதேர் அங்க ஸுந்தர்ய லஷ்மீம்
ஸுமித்ரேர் அப்யுதாரேத்ய கதயது திதம் மோதபாஷ்பம் விகீரிய
பூமிம் ஸீதாம் விதன்வன்னபி மம ஜநநீம் தாப ஹீனா மிதீ மாம்
வாணீம் ருத்வா ப்ரியாயாஸ் தவ
முக கமலே மந்த ஹாஸஸ் ஸமிந்தே –22-

ப்ருஷ்டஸ் ஸோ அயம் ஹனுமான் கதய ரகுபதேர் அங்க ஸுந்தர்ய லஷ்மீம்-திருமேனி அழகு ஒளி
ஸுமித்ரேர் அப்யுதாரேத்ய கதயது திதம் -லஷ்மணனின் அடையாளமும் சொல்லச் சொல்லி
மோதபாஷ்பம் விகீரிய -ஆனந்தக் கண்ணீர் பெருக
ராமன் கமல பத்ராஷ -ஒவ்வொன்றையும் உபமானமாகச் சொல்லி
மையோ மரகதமோ -இத்யாதி -சிவந்த கடைக் கண்கள் -மூன்று ரேகைகள் கழுத்திலும் வயிற்றிலும் -நான்கு ரேகைகள் நெற்றியிலும் கட்டை விரலிலும்-ஸிம்ஹ நடை-லஷ்மணனும் இவ்வாறே
பூமிம் ஸீதாம் விதன்வன்னபி மம ஜநநீம் தாப ஹீனா மிதீ மாம் -பூமியைக் குளிர வைத்ததே ஆனந்தக் கண்ணீர்-என்னுடைய அம்மா -பூமா தேவியைக் குளிர வைத்தான்
வாணீம் ருத்வா ப்ரியாயாஸ் தவ முக கமலே மந்த ஹாஸஸ் ஸமிந்தே –கேட்டு திருமுகத் தாமரையில் மலர்ந்த புன்னகை
ஆராவமுத ஆழ்வார் -தனது அழகை தானே அனுபவித்து எட்டிப் பார்த்து முன் அழகைக் பார்க்க -வாழி கேசனே –
பக்தி பாரவஸ்யம்
மனத் தெளிவு ஏற்படும் பலன் –

——-

ராம பத்ம ஸமாந லோசந யுக கண்டத்வ யாதர்வான்
நாஸா நிர்ஜித சம்பகோ அதி மதுரம் பிம்பா தரம் ஸம் வஹன்
ஏதாம் அங்குலி முத்ரிகாம் மம கரே க்ருத்வா அவதத் ஸ்வ க்ஷரம்
வைதேஹீ தி கிரா ப்ரியா முக ஐயா மந்தஸ்மிதம் தே அபவத் –
-23-

ராம பத்ம ஸமாந லோசந யுக -தாமரைக் கண்ணன்
கண்டத்வ யாதர்வான் -கண்ணாடிக் கன்னங்கள்
நாஸா நிர்ஜித சம்பகோ -செண்பகப்பூ மூக்கு
அதி மதுரம் பிம்பா தரம் -கோவைப் பழம் இதழ்கள்
ஸம் வஹன்
ஏதாம் அங்குலி முத்ரிகாம் மம கரே க்ருத்வா அவதத் ஸ்வ க்ஷரம் -நல்ல வார்த்தையும் சொல்லி
வைதேஹீ தி கிரா -விதேஹனான ஜனக குமாரி -தந்தை போல் அழைத்து
ப்ரியா முக ஐயா மந்தஸ்மிதம் தே அபவத் –கேட்டு புன்னகை

அருள் பெற்ற திருவடி -தாமரைக் கண்ணன் -காட்டவே கண்டார் -யாதவ ப்ரகாஸர் -கப்யாஸம் விவரணம்
திருமேனியாகிய தடாகத்தில் பூத்த தாமரைக் கண்கள் அன்றோ –
தந்தை போல் பாசம் காட்டிய திருவடி
ஸூர்ய சிஷ்யர் யாஜ்ஜய வல்க்யர் சிஷ்யர் ஜனகன்-திருவடியும் ஆச்சயர்யர் ஸ்தானம்
தெளிவான சமயோசித புத்தி ஏற்படும் -பலன்-

————-

ஐஷ்யத் யத்ர கதம் ஸ மே ப்ரிய தமோ -மத் ப்ருஷ்டத தே பரே
மத் தஸ்தே மஹிதாஸ் ஸமே அபி யதஹம் தத்ராவர ப்ரேஷித
இத்யேவம் மம சாஸ்ய சாப்ய பவதாம் உக்தீ ப்ரபோ ராம போ
இத் யுக்த்யா ஜநகாத்மஜா முக ஐயா ஜாதம் தவேதம் ஸ்மிதம்
–24-

ஐஷ்யத் யத்ர கதம் ஸ மே ப்ரிய தமோ -ஆசைக் கணவர் எப்படி இங்கு வருவார்
மத் ப்ருஷ்டத –எனது தோளில் ஏறி வரலாமே -ராம நாமம் ராமரை விட ஸ்ரேஷ்டம்
தே பரே -மற்றவர்கள்
மத் தஸ்தே மஹிதாஸ் ஸமே அபி யதஹம் தத்ராவர ப்ரேஷித –கோஷ்டியில் தாழ்ந்தவன் நானே -விநய பாவம் -தூதுவனாக அனுப்ப நானே அதிகாரி –
இத்யேவம் மம சாஸ்ய சாப்ய பவதாம் உக்தீ ப்ரபோ ராம போ –இவன் பெருமையை நான் நன்றாக அறிந்தேன் -இப்படி பேசினானே
இத் யுக்த்யா ஜநகாத்மஜா முக ஐயா ஜாதம் தவேதம் ஸ்மிதம் –கேட்டு புன்னகை மலர்ந்தான்

நைச்ய அநுஸந்தானம் –
கருவியாக இருக்க வேண்டுமே கர்வியாக இருக்கக் கூடாதே
பணிவு பண்பு வளரும்
பெரிய திருமலை நம்பி உடையவராய் தானாகவே வந்து வரவேற்ற ஐதிக்யம்-

த்வாம் நேஷ்யாமி ததந் நிகம் ஜனகஜே ப்ருஷ்டம் ஸமாருஹ்யதாம்
மைவம் ஸர்வ நிஸா சரன் நிஜ சரைஸ் ஹத்வா நயதேஷ மாம்
இத் யுக்தே மம சாரவித் புலகிதோ ஜாதோ ஹனூமா நிதி
ஸ்ரீ ஸீதா வசநேந ஜாதமயி தே மந்தஸ்மிதம் ஸோபதே
–25-

த்வாம் நேஷ்யாமி ததந் நிகம் ஜனகஜே -நானே அழைத்து செல்கிறேன்
ப்ருஷ்டம் ஸமாருஹ்யதாம் -தோளில் ஏறப் பண்ணி
மைவம் ஸர்வ நிஸா சரன் நிஜ சரைஸ் ஹத்வா நயதேஷ மாம் -பெருமாள் -தூயவன் அம்புக்கு மாசு ஆகுமே
தத் ஸத்ருஸ்ய பவேத் -என்று இருக்குமவள் அன்றோ
இத் யுக்தே மம சாரவித் புலகிதோ ஜாதோ ஹனூமா நிதி -இத்தைக் கேட்டதும் திருவடி -புலகாங்கிதம் அடைந்து
ஸ்ரீ ஸீதா வசநேந ஜாதமயி தே மந்தஸ்மிதம் ஸோபதே –கேட்டு புன்னகை-

சரணாகதனுடைய நிஷ்டையை அனுஷ்டித்துக் காட்டினாள்
மஹா விஸ்வாஸம் வேண்டுமே
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
ஒரு மாதம் அவகாசம் பெறவே இவ்வாறு திருவடி சொல்லி –
விரைவாக அபீஷ்ட பலம் பெறுவோம் -பலன்

————

தூத கோபி கபிர் மஹான் ரகுபதே ராகத்ய ஸீதா முதம்
ரக்ஷஸ் சங்கவதம் விதாஸ்யதி ததா வஹ்நிம் ச லங்கா புரே
இத்யேவம் த்ரிஜடா யதாஹ பகவன் ஸ்வப்நம் விலோக் யாத்புதம்
ஜாதம் தச்ச ததேதி தார வசநாத் ஜாதம் நு மந்தஸ்மிதம்
–26-

தூத கோபி கபிர் மஹான் ரகுபதே -ராமதூதன் வருவான்
ராகத்ய ஸீதா முதம் -உமக்கு ஆனந்தம் தருவான்
ரக்ஷஸ் சங்கவதம் விதாஸ்யதி ததா வஹ்நிம் ச லங்கா புரே -ராக்ஷஸர்களை அழிப்பான் -இலங்கைக்கு தீயும் வைப்பான்
இத்யேவம் த்ரிஜடா யதாஹ பகவன் ஸ்வப்நம் விலோக் யாத்புதம் -கனவில் கண்டதை நேராக நடப்பதை கண்டோம்
ஜாதம் தச்ச ததேதி தார வசநாத் ஜாதம் நு மந்தஸ்மிதம் –இத்தைக் கேட்டு புன்னகை
கனவை நனவாக்கி அருளியதால் புன்னகை
ஸஹாய நிரபேஷமாகவே அனைத்தையும் சாதித்து அருளினார் திருவடி
ஆசை கனவுகளை நனவாக்கும் பலன்
ஹனுமத் பஞ்சாசத் -ஒப்பற்றவர்-தன்னைப் போல் இரண்டாவது இல்லாதவர் -மூன்று வேதங்களையும் அறிந்தவர் -நான்முகன் அருள் பெற்றவர் -பஞ்சத்வமாகிய
மரணம் இல்லாதவர் சிரஞ்சீவி -ஞான பலாதி ஷட் குணங்கள் நிறைந்தவர் -ஏழு குதிரைகள் பூட்டிய தேர் கொண்ட ஸூர்யனுக்கு சிஷ்யர் -அஷ்டாங்க யோகங்களில் வல்லவர் -நவ வ்யாக்ர பண்டிதர் -பத்து தலை ராவணனுக்கு ஸிம்ஹ ஸ்வப்னமாக இருப்பவர்

ஸரமா -விபீஷணன் மனைவி சொல்லி ஸீதாப்பிராட்டி அருளிச் செய்தவற்றை கீழே பார்த்தோம்
இதில் த்ரிஜடை விபீஷணன் மகள் ஸ்வப்னம் கண்டு அருளிச் செய்தவற்றை ஸீதாப் பிராட்டி அருளிச் செய்கிறாள்

————-

ஸர்வா உக்ர வசோ விஹாய சரணம் யாசத்வ மேதாம் ஸதீம்
ஸீதா மித் யுதிதேந மாம் பர வஸாம் சக்ரே ததா மத் ஸகீ
மான்யா ஸ்ரீ த்ரிஜடே தி தார வஸசா மந்தஸ்மிதம் யத் ப்ரபோ
ஸஞ்ஜாதம் வதநே ததேத தநகம் ஸர்வாம் ததாது ஸ்ரியம் –
-27-

ஸர்வா உக்ர வசோ விஹாய சரணம் யாசத்வ மேதாம் ஸதீம் -திருவடி யின் வீர தீர பராக்ரமங்களைச் சொல்லி-ராக்ஷஸிகளுக்கு சரணம் அடைய உபதேசிக்கிறாள்
ஸீதா மித் யுதிதேந மாம் பர வஸாம் சக்ரே ததா மத் ஸகீ
மான்யா ஸ்ரீ த்ரிஜடே தி –பிரபாவம் அறிந்து ஒரு நொடியில் இதுவே வாழ்வு என்று நினைக்க -சரணம் சொல்லாமலேயே கடன் பட்டவள் தான் என்று சொன்னதை
தார வஸசா மந்தஸ்மிதம் யத் ப்ரபோ -ஸஞ்ஜாதம் வதநே ததேத தநகம் ஸர்வாம் ததாது ஸ்ரியம் -கேட்டு புன்னகை

ஸரணாகதி ஸாஸ்த்ரம் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
திருவடி பராக்ரமத்தால் அரக்கிகளும் சரணம் அடைவதை நினைக்கும் படி பண்ணும்
செல்வம் தரும் பலன்

————

தேநைவாஹ மஹோ ததோ ஹநுமதஸ் தாஸாம் வதம் காங்க்ஷத
தாஸ் ஸர்வா அபி ரக்ஷிதா க இவா நோ நைவா பராத்தா ஐந
ஸ்வாமின் ஸாஹமபி ப்ரபோ தநு ததா ரீ லஷ்மணஸ் யாந்திகே
நாதே த்யேவம வேத்ய தாரஹ்ருதயம் ஸாகூத மந்தஸ்மிதம்
–28-

தேநைவாஹ மஹோ ததோ ஹநுமதஸ் தாஸாம் வதம் கா–யுத்த காண்டத்தில் இருந்தாலும் சேர்ந்த வ்ருத்தாந்தம் தானே
தாஸ் ஸர்வா அபி ரக்ஷிதா க இவா நோ நைவா பராத்தா ஐந -குற்றம் இல்லாதவர் யார் –
ஸ்வாமின் ஸாஹமபி ப்ரபோ தநு ததா ரீ லஷ்மணஸ் யாந்திகே -லஷ்மணனை சுடு சொல் சொன்னேன் –
நாதே த்யேவம வேத்ய தாரஹ்ருதயம் ஸாகூத மந்தஸ்மிதம் —தான் மன்னித்ததும் திருவடி பிரபாவத்தை த்ரிஜடை சொல்ல -சரணாகதி பண்ணலாமா என்று அரக்கிகளையும் நினைக்க வைத்ததே -கேட்டு புன்னகை

‘பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம்  ப்லவங்கம } கார்யம் கருணமார்யேன  ந  கஸ்சிந்நாபராத்யதி

பெருமாள் பிராட்டி திருவடி அருள் கிட்டும் பலன்-

———

ப்ராஞ்ஜோ அயம் ஹனுமான் மயா ஹ்யபிஹிதம் ஸ்ருத்வா விஹாயாத்மந
ஸத்ய கோப மவாரணீ யமபவத் காமம் ப்ரஸன்னாஸய
ஏவம் யே த்விஷ தந்திகே அபி ஸூஹ்ருதஸ் தே மாநநீயா இதி
ஸ்ரீ ஸீதா வசநேந தே ஸமுதிதம் மந்தஸ்மிதம் பாது மாம்
–29-

ப்ராஞ்ஜோ அயம் ஹனுமான் -பண்டிதன்
மயா ஹ்யபிஹிதம் ஸ்ருத்வா விஹாயாத்மந
ஸத்ய கோப மவாரணீ யமபவத் காமம் ப்ரஸன்னாஸய–கோபம் எளிதில் விட முடியாதே -அரக்கிகள் மீது உள்ள கோபம் விட்டார் -ப்ரஸன்னமாக மாறினார்
ஏவம் யே த்விஷ தந்திகே அபி ஸூஹ்ருதஸ் தே மாநநீயா இதி -எதிரிகளின் மீது கோபம் விட்ட மஹானைக் கொண்டாட வேண்டும்
ஸ்ரீ ஸீதா வசநேந தே ஸமுதிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –கேட்டு புன்னகை
திருவடியை கௌரவிக்க புன்னகை -நம்மை ரக்ஷிக்கட்டும்

——–

அல்பீ யாநஸி வோடு மிச்சஸி ச மாம் தத்தே கபித்வம் ஸ்புடம்
மா மா பஸ்ய ததத்ய ராம தயிதே மத்கம் மஹத்த்வம் புர
இத் யுக்த்வா கிரி ஸந்நிபோ அயமபவத் ஸ்ரீ மான் ஹநுமானிதி
ஸ்ரீ ஸீதா வசநேந மந்தமிஹ தே ஜாதம் ஸ்மிதம் ஸோபதே
–30-

அல்பீ யாநஸி வோடு மிச்சஸி ச மாம் தத்தே கபித்வம் ஸ்புடம் -சிறிய வடிவுடன் என்னைத் தூக்கி போகப் போகிறாயா
மா மா பஸ்ய ததத்ய ராம தயிதே மத்கம் மஹத்த்வம் புர-இவ்வாறு சொன்னதும் விஸ்வரூபம் காட்டினான்
இத் யுக்த்வா கிரி ஸந்நிபோ அயமபவத் ஸ்ரீ மான் ஹநுமானிதி -மலை போல் உயர்ந்து காட்டினான்
ஸ்ரீ ஸீதா வசநேந மந்தமிஹ தே ஜாதம் ஸ்மிதம் ஸோபதே -கேட்டதும் புன்னகை -பக்தனின் பெருமையை நினைத்து புன்னகை -பெரிய விஷயங்களையும் சாதிக்க அருள் புரிவார் –

———–

மந்தோ ஹாஸஸ் தவ ச ஹநுமான் த்வவ் ஸமாவேவ ஸத்யம்
மந்தோ அமந்தோ பவதி தநுதோ மாநநீயோ ஹனுமான்
ஏவம் வாசா ஜனக தனயா ஜாதயா ஜாயமாந
மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே மாம மந்தம் விதத்தாம்
–31-

மந்தோ ஹாஸஸ் தவ ச ஹநுமான் த்வவ் ஸமாவேவ ஸத்யம் -தேவரீருடைய புன்னகையும் -திருவடியும் சமம் -இது ஸத்யம்
மந்தோ அமந்தோ பவதி தநுதோ -சிறியதாக இருக்க வேண்டிய இடத்தில் சிறியனாகவும் பெரியவனாக இருக்க வேண்டிய இடங்களில் அமந்தமாகவும்
மாநநீயோ ஹனுமான் -இரண்டுமே போற்றப் படுபவையே
ஏவம் வாசா ஜனக தனயா ஜாதயா ஜாயமாந
மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே மாம மந்தம் விதத்தாம் –இவ்வாறு சொல்லக் கேட்டு வளர்ந்து வரும் புன்னகை -ஞானம் கொடுக்கட்டும் -மந்த புத்தியை அகற்றட்டும்

————–

மந்தோ ஹாஸ மநுகுல பதேர் அஞ்ஜநாயா குமார
யேந ஸ்ரீ மான் பவதி ஹநுமான் தர்சநீயோ ஜநாநாம்
தத்தே லீலா பவந ஸவிதே தேந ஸம் ஸ்ப்ருஷ்ட காத்ர
பூயோ யோ அயம் ஜனக தனயா ஆனந்த ஸந்தோஹ தாயீ
–32-

மந்தோ ஹாஸ மநுகுல பதேர் அஞ்ஜநாயா குமார
யேந ஸ்ரீ மான் பவதி ஹநுமான் தர்சநீயோ ஜநாநாம் -மக்களை கவருவதில் ஸாம்யம்
தத்தே லீலா பவந ஸவிதே தேந ஸம் ஸ்ப்ருஷ்ட காத்ர -வாயுவுடன் தொடர்பு இருவரும்-வாயு புத்ரன் -மூச்சுக் காற்று புன்னகையைத் தடவிக் கொடுக்கும்
பூயோ யோ அயம் ஜனக தனயா ஆனந்த ஸந்தோஹ தாயீ- இருவருமே பிராட்டிக்கு ஆனந்தம்

———

இத்தம் ராமோ வஹதி வதநே வாத ஜாதம் வரேண்யம்
ராமோ ராமோ விபுரிதி முகே வாத ஜாதஸ் ச ராமம்
அந்யோன்யம் தாவி திக்ருதமதீ ப்ரீதி மந்தவ் மஹாந்தவ்
அந்தஸ் ஸக்தா வநுபமதமவ் சம்பதம் ஸன்னி ஸேதாம்
–33-

இத்தம் ராமோ வஹதி வதநே வாத ஜாதம் வரேண்யம் -இப்படி ராமன் புன்னகையால் திருவடியை சுமக்கிறார் -உதவிக்கு கைம்மாறாக
ராமோ ராமோ விபுரிதி முகே வாத ஜாதஸ் ச ராமம் -திருவடியும் தனது வாயால் ராம ராம நாமம் சொல்லி ராமரையே வாயில் வைத்துள்ளார்
அந்யோன்யம் தாவி திக்ருதமதீ ப்ரீதி மந்தவ் மஹாந்தவ்
அந்தஸ் ஸக்தா வநுபமதமவ் சம்பதம் ஸன்னி ஸேதாம் –இவ்வாறு அந்யோன்யம் ஒப்பற்ற இருவரும் -நம்மை ரக்ஷிக்கட்டும் -அபீஷ்ட பலன்கள் அருளட்டும்-

———-

மந்தோ ஹாஸோ மநு குல பதே மாருதஸ் யாத்ம ஜாத
மாநா தீதஸ்வர ஸலலித மாந நீயோ மஹத்பி
மந்தம் குர்வன் ஸபதி ரஜநீ சாரிணம் நீல யோகாத்
மஹ்யம் பத்ரம் திசது ஸததம் மங்களா நாம் நிதாநம்
–34-

மந்தோ ஹாஸோ மநு குல பதே மாருதஸ் யாத்ம ஜாத -மேலும் பல ஒற்றுமைகள்
மாநா தீதஸ்வர ஸலலித -இனிமை அழகு மிக்கவை -ஸூந்தரர் திருவடி
மாந நீயோ மஹத்பி -மஹான்களால் கொண்டாடப்படுபவர்
மந்தம் குர்வன் ஸபதி ரஜநீ சாரிணம் -அரசர்களை அழிப்பார்கள் -புன்னகை மயக்கி நல்லவர்கள் ஆக்கும்
நீல யோகாத் –நீலனுடன் சம்பந்தம் -அக்னி புத்ரன் -நீல நிறம்
மஹ்யம் பத்ரம் திசது ஸததம் மங்களா நாம் நிதாநம் –நமக்கு மங்களங்கள் அருளட்டும்

————–

மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே கோ அபி ஸூக்ல படோ அயம்
ஸோணோ பாந்தைர் ஜயதி மதுர ஸேவிதோ அயம் ப்ரஸூதே
ஸ்லாக்யம் திஷு ப்ரஸ்ருத மபித ஸோபநம் பாஸ மாநம்
சித்ரம் வஸ்த்ரம் யஸ இதி மஹத் ஸம் பதம் தச்ச ஸூதே
–35-

மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே
கோ அபி ஸூக்ல படோ அயம்-வெளுத்த பட்டாடை போல் புன்னகை
ஸோணோ பா–sirappukkalaசிகப்புக்கரை திரு அ தரம் சிவந்து
மதுர -மென்மையானவை இனிமை
ஸேவிதோ அயம் ப்ரஸூதேஸ்லாக்யம் திஷு -புகழ் கொடுப்பவை
ப்ரஸ்ருத மபித ஸோபநம் -அழகாக உள்ளவை
பாஸ மாநம்-ஒளி வீசும்
சித்ரம் வஸ்த்ரம் யஸ இதி மஹத் ஸம் பதம் தச்ச ஸூதே-திருவடி ஆச்சார்யர் ஸ்தானம்
வெள்ளைப் பட்டு சிகப்புக்கரை போட்டது சமர்ப்பிக்க வேண்டுமே
மந்தஹாஸமே இது என்கிறார்

—————

ஸூ மித்ரா புத்ர கிம் ஸூஹ்ருத திதராம் ப்ராதரி ரத
விதத்தே ரூஸ் ரூஷாம் மம ச யததே மார்கண விதவ்
இதி ஸ்வாமின் ப்ருஷ்ட பவந தநயோ அபூதிதி கிரா
ப்ரியா யாஸ்தே மந்தஸ்மித மவது ஜாதம் ரகுபதே
–36-

ஸூ மித்ரா புத்ர கிம் ஸூஹ்ருத திதராம் ப்ராதரி ரத -இளைய பெருமாள் -நல்ல எண்ணம் -பாசம் கொண்டவன்
விதத்தே ரூஸ் ரூஷாம்- மம ச யததே மார்கண விதவ் -கைங்கர்யம் நிதனன் -என்னைத் தேடுவதில் கைங்கர்யம் செய்கிறானா
இதி ஸ்வாமின் ப்ருஷ்ட பவந தநயோ அபூதிதி கிரா ப்ரியா யாஸ்தே மந்தஸ்மித மவது ஜாதம் ரகுபதே –என்று கேட்டதும் புன்னகை

அது நம்மை ரக்ஷிக்கட்டும்
லஷ்மணன் மீது நல்ல எண்ணம் கொண்டவள் என்று அறிந்து புன்னகை
கீழ் பண்ணிய பாகவத அபசாரம்
ஸூஹ்ருத் -பெருமாள் இடம் மிகுந்த அன்பு பக்தி கொண்டவன் –
சுடு சொல் சொன்னதை பொருள் படுத்தாமல் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தவன்
பாகவத அபசாரம் மிக்க குரூரம் காட்டவே இவ்வாறு அபிநயம் செய்தாள்

———–

ஸ்பந்தோ யஸ்ய ப்ரதிஸதி முதம் மைதிலீ மாந சாந்தே
ஸம் மோஹம் தம் சரஸ மதுரோ மேதுரோ பாவ வர்கை
குந்தோ தந்தம் பரிபவ பதம் யோ விதத்தே நிதாந்தம்
மந்தோ ஹாஸோ ஜயதி ஸூதராம் மைதலீ வல்லபஸ்ய
–37-

ஸ்பந்தோ யஸ்ய ப்ரதிஸதி முதம் மைதிலீ மாந சாந்தே –உதடுகளின் அசைவு ஸீதா பிராட்டியின் உள்ளத்துக்கு ஆனந்தம் கொடுக்க -பதில் புன்னகை செய்ய
ஸம் மோஹம் தம் -மயக்கமும் தந்து
சரஸ மதுரோ -இனியது சுவை மிக்க புன்னகை
மேதுரோ பாவ வர்கை –பொருள் பொதிந்த புன்னகை
குந்தோ தந்தம் பரிபவ பதம் யோ விதத்தே நிதாந்தம் –முல் லைப் வெளுத்து மலர்ந்தாலும் நாணும் படியாக அழகான புன்னகை
மந்தோ ஹாஸோ ஜயதி ஸூதராம் மைதலீ வல்லபஸ்ய –அப்படிப்பட்ட புன்னகை-கீழ் சொன்னதால் மலர்ந்த புன்னகைக்கு தனி ஸ்லோகம் வேண்டிற்றே
உண்டான மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்கும் படி பெருமாள் அனுக்ரஹம் இருக்குமே-

——-

ஸாகே தாத் கிம் மம ஸ பரதோ தேவரஸ் சத்த்வ மூர்தி
ஸேநாம் பீநாம் கஜ ஹய முகை ப்ரேஷ் யிஷ் யத்தே நந்தாம்
ஏவம் ப்ருஷ்ட பவந தநயோ அபூன் மயேத் யத்ர வாசா
ப்ரேயஸ் யாஸ்தே ஸமுதித மிதம் பாது மந்தஸ்மிதம் மாம்-
-38-

ஸாகே தாத் கிம் மம ஸ பரதோ தேவரஸ் சத்த்வ மூர்தி -அயோத்யையில் பரதன் -மிக்க பலசாலி
ஸேநாம் பீநாம் கஜ ஹய முகை -படைகள் மிக்கு
ப்ரேஷ் யிஷ் யத்தே நந்தாம் -உன்னை மீட்டுப் போக வந்தாரே -என்னை மீட்டுப் போக வருவாரா
ஏவம் ப்ருஷ்ட பவந தநயோ அபூன் மயேத் யத்ர வாசா
ப்ரேயஸ் யாஸ்தே ஸமுதித மிதம் பாது மந்தஸ்மிதம் மாம் என்று விசாரித்த செய்து கேட்டு கேட்டு புன்னகை பரத நம்பி பற்றிக் கேட்ட ஆனந்தம்-அவப்பெயர்கள் அனைத்தும் நீங்கும் பலன்-

———-

நந்திக்ராமே ரதிமுபகத ப்ராத்ரு சத்ருக்ந ஹ்ருதய
ஸூத்தஸ் ஸூத்தம் த்விஜ குல மலம் பாலயன் நந்த ரங்கம்
கைகேய் யந்தஸ் ஸ்ம்ருதி முபகதோ ஹாநு தாபம் விதன்வந்
மந்தோ ஹாஸோ ஜயதி பரதோ மைதிலீ வல்லபஸ்ய
–39-

நந்தி க்ராமே ரதிமுபகத -இருவரும் நந்திக்ராமத்தில் உள்ளார்கள் -நந்தி ஆனந்த அடியார் உள்ள இடம் பார்த்து புன்னகை
ப்ராத்ரு சத்ருக்ந ஹ்ருதய -பரதனும் புன்னகையும் சத்ருனனுக்கு இனியவர்
ஸூத்தஸ் ஸூத்தம் -இருவரும் மஹா தூய்மை
த்விஜ குல மலம் பாலயன் நந்த ரங்கம் -இருவரும் வேத குலம் ரக்ஷகர் -பல்லுக்கும் த்விஜம் -திருவாயில் உள்ள பற்களைக் காக்கும் புன்னகை
கைகேய் யந்தஸ் ஸ்ம்ருதி முபகதோ ஹாநு தாபம் விதன்வந் -இருவரும் நினைக்க கைகேயி மனம் உறுத்துமே -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது போல் போக இவள் மனம் உறுத்திற்றே -அநு தாபம் உண்டு பண்ணுவதில் ஒற்றுமை –
இவ்வாறு ஐந்து ஒற்றுமைகள்
மந்தோ ஹாஸோ ஜயதி பரதோ மைதிலீ வல்லபஸ்ய -உங்கள் புன்னகையே பரதாழ்வான்
வாழ் நாளில் இன்பம் எப்போதும் கைகூடும் பலன்-

——

மயா தத்தம் சூடா மணிம் அயம் அபிஞ்ஞா நம கரோத்
ஸ்வ வஸ்த்ராந்தே பத்தம் பரமத ச கர்ணே விநிஹிதம்
இதி ஸ்ரீ ஸீதாயா சர ஸமதி சித்ரம் ச வசநம்
ஸ்வ கர்ணே தே கர்து ஜயதி மதுரம் மந்த ஹஸிதம்
–40-

மயா தத்தம் சூடா மணிம்
அயம் அபிஞ்ஞா நம கரோத்-அடையாளமாக தருவதை அறிந்து கொண்டு
ஸ்வ வஸ்த்ராந்தே பத்தம் பரமத ச கர்ணே விநிஹிதம் -வஸ்த்ரத்தில் அத்தையும் அருளிச் செய்த அடையாளங்களையும் காதிலும் கொண்டான்
காகாசூரன் சரித்திரமும் -திலகம் அழிய செங்கல் பொடியால் அணிவித்த சரித்திரம் இரண்டையும் –
இதி ஸ்ரீ ஸீதாயா சர ஸமதி சித்ரம் ச வசநம் -ஸ்வ கர்ணே தே கர்து ஜயதி மதுரம் மந்த ஹஸிதம் –கேட்டவாறே பிறந்த புன்னகை
திருவடியின் ஸாமர்த்யம்
புத்தி கூர்மையும் சாதுர்யமும் நமக்கும் கிட்டும்

———-

நேத்ரே சூடா மணிம் அபி ததா கர்ணயோ காகவார்தாம்
மவ்லவ் க்ருத்வ அஞ்சலிம் அபி நத பிரஸ்தித பாவமாநி
பங்க்த்வா வ்ருஷான் வநமபி ததா சைத்ய சவ்தம் ஜகர் ஜே
த்யேவம் ஸீதா வசந ஜனிதோ ராஜதே ராம ஹாஸ–
41-

நேத்ரே சூடா மணி-கீழே வஸ்த்ரத்தில் —இங்கு கண்ணில் சீதாபிராட்டி பிரஸாதம் கண்ணில் நின்றதே –
ததா கர்ணயோ காகவார்தாம் -அதே போல் காகாசுரன் சரித்திரம் காதில் நிலை நின்றதே
மவ்லவ் க்ருத்வ அஞ்சலிம் அபி -தலைக்கு மேல் அஞ்சலி முத்ரை -ஜலம் போல் உருக வைக்கும்
நத பிரஸ்தித பாவமாநி -வணங்கிக் கொண்டு நின்றான்
இடைப்பட்ட காலத்தில்
பங்க்த்வா வ்ருஷான் வநமபி ததா சைத்ய சவ்தம் ஜகர் ஜே-மரங்களை பிடுங்கி -அசோக வனம் மண்டபம் அனைத்தையும் அழித்து
த்யேவம் ஸீதா வசந ஜனிதோ ராஜதே ராம ஹாஸ -அப்போது பிறந்த புன்னகை
வேகமும் பணிவும் அறிகிறோம் -நமக்கும் இவை கிட்டும்-

———–

சந்த்ரஸ்தே வதனம் த்ருதம் ஹி யதிதம் ஸ்ரீ நீல கண்டேந யத்
தாம்ரம் தத் ஸததம் விபாத்ய தரதஸ் தஸ்யோ தயஸ் ஸர்வதா
தஸ்மிந் காஸந சந்திரிகா விஜயதே மந்தஸ்மிதாக்யா ஸதீ
யா மே ஸம் ஸ்ருதி தாமஸீமபி பராம் ஸூத்தாம் விதத்தே நவாம்
–42-

சந்த்ரஸ்தே வதனம்
த்ருதம் ஹி யதிதம் ஸ்ரீ நீல கண்டேந யத் –நீல கண்டன் தாங்குகிறார் -பிறை சூடி -நீலக்கழுத்து தாங்குகிறது
தாம்ரம் தத் ஸததம் விபாத்ய- சந்த்ர -க்ரஹணத்தில் சிவந்து இருக்கும் -உதடுகள் சிவந்து இருக்கும்
தரதஸ் தஸ்யோ தயஸ் ஸர்வ–ஒரு நாளைக்கு ஒரு முறை உதயம் -புன்னகை கூடிக்கொண்டே இருக்கும் நித்ய சந்த்ரோயதயம்
தஸ்மிந் காஸந சந்திரிகா விஜயதே மந்தஸ்மிதாக்யா ஸதீ -ஒளியால் பெருமை புன்னகையால் பெருமை
யா மே ஸம் ஸ்ருதி தாமஸீமபி பராம் ஸூத்தாம் விதத்தே நவாம் –நில ஒளி இருளைப் போக்கும்-புன்னகை அறியாமையைப் போக்கும்

பணிவைக் கேட்டு பூத்த புன்னகையை ஒப்பிட்டு இங்கு

————

ஸ்வாமிந் வாதம் ஷிதோ கதம் ஹி பகவன் ஸ்ரீர் தஷிணஸ் யோதிதா
த்வன் மந்தஸ்மித ஸந்த்ரிகா ச ஸூபகா தத் ரோதிதா ஷோபதே
அஸ்மின் ஸ்ரீ வடுவூர் வநே ஸூப வநே க்ரீடா பராயாஸ் த்வயா
கோ அப்யா நந்த பயோ நிதிர் மநஸி மே ஸம் வர்ததே ஸாம்ப்ரதம்
–43-

ஸ்வாமிந் வாதம் ஷிதோ கதம் ஹி பகவன் ஸ்ரீர் தஷிணஸ் யோதிதா –தென்றல் -தெற்கு திசை காற்று -மாலைத் தென்றல் -மல்லிகைப் பூ பூக்கும் -ஸந்த்ரோதயமும் ஆகும்
காற்றின் மகன் தென் திசை யில் இருmeenduமீண்டு ராமனை நோக்கி வர
த்வன் மந்தஸ்மித ஸந்த்ரிகா ச ஸூபகா -அழகு -மல்லிகைப்பூ -நிலவு ஒளி -புன்னகை வடிவில் –
தத் ரோதிதா ஷோபதே -ஒளி மிக்கு -பற்கள் தெரிய
அஸ்மின் ஸ்ரீ வடுவூர் வநே ஸூப வநே க்ரீடா பராயாஸ் த்வயா -இங்கும் ஆனந்தமாக விளையாட வர இங்கும் தென்றல் மல்லிகைப்பூ
கோ அப்யா நந்த பயோ நிதிர் மநஸி மே ஸம் வர்ததே ஸாம்ப்ரதம் -ஆனந்தக் கடல் பொங்குகிறது -நம் உள்ளத்திலும் ஆனந்தம் பொங்கட்டும்

———-

ஸீதே தே கபிநா ஹதா ஹி பஹவோ ராத்ரிஞ்சரா துர் ஐயா
ஹந்தாஷோ அபிஹதஸ் ததேக்ஷ தபஸா ஸத்யம் த்வயா நிர்மித
இத்யா கத்ய ம மாந்திகே ஸமவதன் ரக்ஷஸ் த்ரியஸ் தாஸ் ஸமா
இத்யா கர்ண்ய விதேஹஜா கிரம பூத் மந்தஸ்மிதம் ராம தே
–44-

ஸீதே தே கபிநா
ஹதா ஹி பஹவோ ராத்ரிஞ்சரா துர் ஐயா -அரக்கர்களை எல்லாம் ஒரே ஆளாக வென்று
ஹந்தாஷோ அபிஹதஸ் ததேக்ஷ தபஸா ஸத்யம் த்வயா நிர்மித -அக்ஷ குமாரனையும் ஐயோ கொல்லப்பட்டான் –
உன்னுடைய கற்பு என்னும் தபஸ்ஸால் உருவான குரங்கே இது
இத்யா கத்ய ம மாந்திகே ஸமவதன் ரக்ஷஸ் த்ரியஸ் தாஸ் ஸமா -இவ்வாறு சொல்லக்கேட்டு
இத்யா கர்ண்ய விதேஹஜா கிரம பூத் மந்தஸ்மிதம் ராம தே –புன்னகையை இங்கே காட்டி அருள்கிறாய்
பராக்ரமம் நினைத்து புன்னகை
பிராட்டி அனுக்ரஹம் விஜய லஷ்மீ வீரலஷ்மீ கடாக்ஷ பலனால் நமக்கும் உடல் வலிமையையும் ஆரோக்யமும் கிட்டும்

———

நீதஸ்த் விந்த்ரஜிதா தஸாஸ்ய ஸமிதம் பத்த்வா ததீயே அனல
வாலே ஹா நிஹிதஷ் ச ராக்ஷஸ கணைஸ் தேநாபி ரஷோ க்ருஹே
சித்ரம் ஜானகி ஜாநகீதி வசஸா காவ்யந்தி ரக்ஷஸ் த்ரிய
இத்தம் தாரகிரா முகே தவ பபவ் மந்தஸ்மிதம் ராகவ
–45-

நீதஸ்த் விந்த்ரஜிதா தஸாஸ்ய ஸமிதம் பத்த்வா -ப்ரஹ்மாஸ்த்ரம் கொண்டு ராவணனிடம் இடம் கூட்டிச் செல்ல
ததீயே அனல -வர பலம் விட சர பல பெரியது -சொல்ல கெடுக்காமல் நெருப்பு வைக்க
வாலே ஹா நிஹிதஷ் ச ராக்ஷஸ கணைஸ் தேநாபி ரஷோ க்ருஹே -அதே நெருப்பால் வீடுகளுக்கு மாற்றி வைக்க
சித்ரம் ஜானகி ஜாநகீதி வசஸா காவ்யந்தி ரக்ஷஸ் த்ரிய –ஆச்சர்யம் சொல்ல
இத்தம் தாரகிரா முகே தவ பபவ் மந்தஸ்மிதம் ராகவ -கேட்டு வளர்ந்த புன்னகை
பராக்ரமம் நினைத்து புன்னகை
அணுகும் வழியாலே பலன் அளிப்பார் திருவடி
பக்தர்களை எல்லா ஆபத்தில் இருந்து ரக்ஷித்து அருள்வார்

———

மேல் இரண்டு ஸ்லோகங்கள் திருவடியே நேராக அருளிச் செய்தவை

ஸீதாம் பாதும் நிஷி சர புரே தத் வ்ருத்தாம்ஷ் ச தக்தும்
கல்யாணோ வோ மம பித்ரு ஸக க்லுப்த ஸித்தி கிலாஸீத்
இத்யந்தஷ் ஸ்ரீ பவன தனய ஸ்ரீ கிரா மந்த ஹாஸ
ஸ்ரீ மன் ஜாதோ மநு குல மணே மாநஸம் மே திநோதி
-46-

ஸீதாம் பாதும் -பிராட்டியைக் காக்கவும்
நிஷி சர புரே தத் வ்ருத்தாம்ஷ் ச தக்தும் -எதிரிகளை அழிக்கவும்
கல்யாணோ வோ மம பித்ரு ஸக -தந்தையின் நண்பன் அக்னியின் செயலே இது
சோகத் தீயை இலங்கையில் சேர்க்க தூதுவன் செயல் -என்னுடைய பராக்ரமம் இல்லை இது
க்லுப்த ஸித்தி கிலாஸீத்
இத்யந்தஷ் ஸ்ரீ பவன தனய ஸ்ரீ கிரா மந்த ஹாஸ இவ்வாறு சொன்னவாறே புன்னகை
ஸ்ரீ மன் ஜாதோ மநு குல மணே மாநஸம் மே திநோதி -இதுவே என்னுள்ளத்துக்கு ஆனந்தம்
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்– ஸ்லோகம் இதன் அடியாகவே வந்தது-விநயம் எண்ணி புன்னகை -நமக்கும் பணிவு வளரும்-

—-

தக்தா ஸா மிதிலா புரா கலு ததா தக்தம் ந மே கிஞ்சந
த்யாஹ ஸ்ரீ ஜனகைஸ் ததைவ பகவான் ஸ்ரீ யாஜ்ஞ வல்க்யோ அவதத்
ஏவம் த்வய் யபி ஸாதரேஷு பவிதேத் யேவம் ஹநூமத் கிரா
ஜாதம் தே ரகுநாத மந்த ஹஸிதம் மஞ்ஜூ ப்ரபம் பாஸதே
–47-

தக்தா ஸா மிதிலா புரா கலு ததா தக்தம் ந மே கிஞ்சந த்யாஹ ஸ்ரீ ஜனகைஸ் –இலங்கை எரிய அசோகவனத்தில் ஸீதை இருக்கும் இடம் குளிர்ந்தே இருந்ததே -இதுக்கு உதாரணம் காட்டுகிறார் மேல்
ததைவ பகவான் ஸ்ரீ யாஜ்ஞ வல்க்யோ அவதத் –
ஏவம் த்வய் யபி ஸாதரேஷு பவிதேத் யேவம் ஹநூமத் கிரா -பகவானிடம் ஈடுபட்டுள்ளவர் எரிய மாட்டார்கள்
ஜாதம் தே ரகுநாத மந்த ஹஸிதம் மஞ்ஜூ ப்ரபம் பாஸதே —
இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை –
இந்த நிகழ்ச்சியை ஸீதாப்பிராட்டி தானே அருளிச் செய்ய மாட்டாளே
திருவடி அதனால் அருளிச் செய்கிறார்
கற்பின் பெருமை ராம ஸ்மரணத்தின் பெருமை
சம நிலையில் இருந்து நழுவாமல் இருக்கும் மனப்பக்குவம் ஏற்படும் –

——–

ப்ரஸாதாநாம் புவி நிபததாம் அக்னிநா கோர லீலே
நாராம் ஆந்தே ஜடிதி பததாம் வ்ருக்ஷ ஷாகா கணாநாம்
ஆராத் கஸ்தத் விஜகுலகதா யா அவிரா ஸீத வஸ்தா
ஸா மே அத்யாபி ஸ்ம்ருதிம் உபகதா சேதஸ் சவ்தி கம்பம்
–48-

ப்ரஸாதாநாம் புவி நிபததாம் அக்னிநா கோர லீலே -கோரமாக -வீடுகள் விழ
நாராம் ஆந்தே ஜடிதி பததாம் வ்ருக்ஷ ஷாகா கணாநாம் -மரங்களும் விழ
ஆராத் கஸ்தத் விஜகுலகதா யா அவிரா ஸீத வஸ்தா –வானத்தில் பறக்கும் பறவைகள் மேலே பறக்க
ஸா மே அத்யாபி ஸ்ம்ருதிம் உபகதா சேதஸ் சவ்தி கம்பம் –இன்றும் நினைத்தாலும் நடுக்கம் ஏற்படுகிறதே

ஸர்வத் ரைவம் ஸகல பயதே ஸம் ப்ரம ஜாக ரூகே
சித்ரம் மத்கம் பதமபி மநாக் அக்னி நா நாபி பூதம்
இத்தம் தேவ்யா பயபிஷுநயா சித்ரவத்யா கிரா தே
ஜாதம் மந்தஸ்மிதம் அவது மாம் ஆநநே ராம பத்ர
–49-

ஸர்வத் ரைவம் -எங்கும் எல்லாரும்
ஸகல பயதே -அஞ்சி இருக்க
ஸம் ப்ரம ஜாக ரூகே -இப்படிப்பட்ட நிலையில்
சித்ரம் மத்கம் பதமபி மநாக் அக்னி நா நாபி பூதம் -இருந்தாலும் வியப்பாக நான் இருக்கும் இடம் மட்டும் குளிர்ந்து இருக்க
இத்தம் தேவ்யா பயபிஷுநயா சித்ரவத்யா கிரா தே -இவ்வாறு பயம் கலந்த நகைச்சுவையுடன் அருளிச் செய்ய
ஜாதம் மந்தஸ்மிதம் அவது மாம் ஆநநே ராம பத்ர –கேட்டு வளர்ந்த புன்னகை -ரக்ஷிக்கட்டும்
எனது ப்ரபாவம் அல்ல -சொல்லிக் கொள்ள வேண்டுமே-

———

ஸோ அயம் மாருத நந்தநோ தஷமுகே ஸிம்ஹாஸ நஸ்தே புர
வாலே நைவ க்ருதா ஸநஸ் ததுபரி ப்ராப்த ஸ்திதிஸ் சம்பவ்
இத்யேவம் ஸரமா ஸகீ சமவதத் ஸேதி ஸ்வ ஜாயா கிரா
யன் மந்தஸ்மிதம் ஆநேந ரகுபதே தத்தே தராம் த்யோததே
–50-

ஸோ அயம் மாருத நந்தநோ-திருவடி வாயு தேவனின் புத்ரன் என்று அறிந்தவள் ஸரமா
தஷமுகே ஸிம்ஹாஸ நஸ்தே புர -ராவணன் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இருக்க
வாலே நைவ க்ருதா–வாலைக் கொண்டே ஸிம்ஹாஸனம் உருவாக்கி
ததுபரி ப்ராப்த ஸ்திதிஸ் சம்பவ் -அதற்கு மேல் அமர்ந்து -திருவடியின் திருவடி ராவணன் தலை மேல் இருக்கும் படி அமர்ந்தார்
இத்யேவம் ஸரமா ஸகீ சமவதத் ஸேதி ஸ்வ ஜாயா கிரா -இவ்வாறு ஸரமா சொன்னதை பிராட்டி சொல்ல
யன் மந்தஸ்மிதம் ஆநேந ரகுபதே தத்தே தராம் த்யோததே –கேட்டு வளர்ந்த புன்னகை

ராம தூதன் -ராமனின் பெருமைக்குத் தக்க படி இருக்க வேண்டும் என்றும் சொந்த முயற்சியால் உயர வேண்டும் என்றும் காட்டும் ஸ்லோகம்-உயர் பதவிகள் நம்மைத் தேடி வரும்

———–

ராஞ்ஜோ ந புரத கிமேவமிதி தைஸ் சந்தர்ஜிதோ வாலதிம்
விஸ்தீர் யாத தஷாந நாஸ நமசவ் தம் சாஸகர்ஷ அத்புதம்
இத்யேவம் ஸரமா ஹஸந்த்யதித ராமாஹே தி ஸீதா கிரா
ஸஞ்ஜாதம் தவ ராம மந்த ஹஸிதம் ரஷத் வவஞ்ஜா விஷாத்
–51-

ராஞ்ஜோ ந புரத -முன் ராவணன் இருக்க
கிமேவமிதி தைஸ் சந்தர்ஜிதோ வாலதிம் -இவ்வாறு அவமதிப்பதா என்று அரக்கர்கள் கத்த
விஸ்தீர் யாத தஷாந நாஸ நமசவ் -ஸிம்ஹாஸனம் நோக்கி வாலானது வளர்ந்து போக
தம் சாஸகர்ஷ அத்புதம் -சுற்றிக்கொண்டு இழுக்க -ராவணன் விழ-வாலை வைத்தே ஆட்டம் காட்டிய வ்ருத்தாந்தத்தை
இத்யேவம் ஸரமா ஹஸந்த்யதித ராமாஹே தி ஸீதா கிரா -இவ்வாறு ஸரமா சொன்னதை பிராட்டி சொல்ல
ஸஞ்ஜாதம் தவ ராம மந்த ஹஸிதம் ரஷத் வவஞ்ஜா விஷாத் -வளர்ந்த புன்னகை நம்மை பிறர் அவமானப்படுத்தாமல் ரக்ஷிக்கட்டும்-

———–

மா மைவம் ரஜநீ சராதிப மிமம் குர்யா ஸ்திதாஸ்தே வயம்
வாசைவம் கில மந்த்ரிணாம் அத ச தான் ஆக்ருஷட வான் வாலதஸ்
இத்யேவம் ஸரமா அத்புதை கவிவஷா பிராஹே தி ஸீதா கிரா
யன் மந்தஸ்மித மாநநே தவ பபவ் ராமாஸ்து தன்மே ஷ்ரியை
–52-

மா மைவம் இப்படி பண்ணாதே
ரஜநீ சராதிப மிமம் குர்யா ஸ்திதாஸ்தே வயம்
வாசைவம் கில மந்த்ரிணாம்
அத ச தான் ஆக்ருஷட வான் வாலதஸ் -அரக்கர்களையும் சேர்த்து வாலால் கட்டி
இத்யேவம் ஸரமா அத்புதை கவிவஷா பிராஹே தி ஸீதா கிரா -இவ்வாறு நடந்தவற்றை ஸரமா சொல்லக்கேட்டு ஸீதா பிராட்டி சொல்ல
யன் மந்தஸ்மித மாநநே தவ பபவ் ராமாஸ்து தன்மே ஷ்ரியை -வளர்ந்த புன்னகை நமக்கு கைங்கர்ய செல்வங்களை அளிக்கட்டும்-ராமனின் பெருமையை உணர்த்தவே திருவடி செய்த செயல்கள்-

————-

தான் ஸர்வா நபி ராக்ஷஸான் அபி ஸபாஸ் தம்பான் சமாம்ஷ் சேதரான்
பவ்லஸ்த்யம் ச பபந்த ஹந்த நிபிடம் வாலேந வாதாத் மஜ
இத்யேவம் ஸரமா மமாஹ விவஷா ஸாஸ்ரா ஸஹாஸா ஸகீ
ஸே தி ஸ்ரீதயிதா கிரா விஜயதே மந்தஸ்மிதம் தே முகே
–53-

தான் ஸர்வா நபி ராக்ஷஸான் அபி ஸபாஸ் தம்பான் சமாம்ஷ் சேதரான் –தூண்களுடன் அரக்கர்களைக் கட்டி
பவ்லஸ்த்யம் ச பபந்த ஹந்த -ராவணனையும் கட்ட -ஆஹா -வியப்பு –
நிபிடம் வாலேந வாதாத் மஜ –
இத்யேவம் ஸரமா மமாஹ விவஷா ஸாஸ்ரா ஸஹாஸா ஸகீ -கண்ண நீருடனும் புன்னகையுடனும் ஸரமா சொல்ல –
ஸே தி ஸ்ரீதயிதா கிரா விஜயதே மந்தஸ்மிதம் தே முகே -கேட்டவாறே வளர்ந்த புன்னகை-

———-

ஏதத் தத்ர புநஷ் ச கிஞ்சந மஹாஷ் சர்யம் யதா ஸீத்ததா
வாலே வேஷ்ட்டிது மம்பராணி நிகிலான் யாசன் ந சாலம் புந
ஆநீயாத பபந்துரர் தமத நைவா ஸீத்தஷாப் யேகிகா
வாகேவம் ஸரமா பவே தி தயிதா வாசா கரோஷி ஸ்மிதம்
–54-

ஏதத் தத்ர புநஷ் ச கிஞ்சந மஹாஷ் சர்யம் யதா ஸீத்ததா-இன்னும் பெரிய ஆச்சார்யம்
வாலே வேஷ்ட்டிது மம்பராணி நிகிலான் -வாலைச் சுற்ற அம்பரங்கள் போதவில்லையே
யாசன் ந சாலம் புநஆநீயாத பபந்துரர் தமத நைவா ஸீத்தஷாப் யேகிகா-நூல் கயிறு அனைத்தையும் கொண்டு வந்தார்கள் -பாதி கூட மூடப் போதவில்லை
வாகேவம் ஸரமா பவே தி தயிதா வாசா கரோஷி ஸ்மிதம்-இவ்வாறு சொன்னதை பிராட்டி சொல்ல வளர்ந்த புன்னகை –
திருவடியின் பெருமைக்கு எல்லை யில்லையே-தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வெற்றியை தரும் ஸ்லோகம்

———-

ஷ்வ கிம் குர்யுரமீ திகம்பர தஷை வாஸீ தஹோ ரக்ஷஸாம்
லஞ்ஞாம் லாந நிஜா நநா ந பஹிரத்ரைதே சரேயுர்திவா
தஸ்மா தேவ நிஷா சரா இதி ஸகீ வாஸா அத வாஸா ச தே
ஜாநாக்யா வதநே யதாஸ ஹஸிதம் மந்தம்
ததே தத் ஸ்புடம் –55-

ஷ்வ கிம் குர்யுரமீ திகம்பர தஷை வாஸீ தஹோ ரக்ஷஸாம் -நாளைக்கு அணிய ஆடைகளே இல்லையே -என்ன செய்வார்கள் l
லஞ்ஞாம் லாந நிஜா நநா ந பஹிரத்ரைதே சரேயுர்திவா –வெட்கப்பட்டு பகலில் வராமல்
தஸ்மா தேவ நிஷா சரா இதி ஸகீ வாஸா அத வாஸா ச தே-இரவில் நடமாடுபவர்கள் என்றே ஸ்வரூப நிரூபகம் வர திருவடியே காரணம்
இருள் துஷ்ட ஆத்மாக்களின் காலம்
ஜாநாக்யா வதநே யதாஸ ஹஸிதம் மந்தம் ததே தத் ஸ்புடம் –இவ்வாறு சொன்னதை பிராட்டி சொல்ல வளர்ந்த புன்னகை ஸ்பஷ்டமாக வடுவூரில் காட்டி அருளுகிறாய்
திருவடி போன்ற பாகவத அபசாரப் பலன் ஆடையைக் கூட இழக்க வைக்குமே -பயம் நீங்கும் ஸ்லோகம்

———

ஏதச்சாபி ந யத்ர நாம ந நிஷா ஸம் ராஜதே அஸ்மின் புரே
வாலாக்நேர் ஜ்வல நேந ஹந்த ஸததம் த்ருஷ்யம் திவைவா பவத்
இத்யேவம் ஸரமா கிரா மம மதிர் மக்நா முதாம் சாகரே
ஸீதாயா இதி தே முகே கில கிரா மந்தஸ்மிதம் வர்ததே
–56-

ஏதச்சாபி -இதையும் கேள்
ந யத்ர நாம ந நிஷா ஸம் ராஜதே அஸ்மின் புரே -இரவே இல்லாமல் பகலாகவே ஆக்கும் படி எரியுமே
வாலாக்நேர் ஜ்வல நேந ஹந்த ஸததம் -இலங்கைக்கு நெருப்பை மாற்றி
த்ருஷ்யம் திவைவா பவத் -ஸூர்ய ஒளியை விஞ்சும் படி ஆனதே –
இத்யேவம் ஸரமா கிரா மம மதிர் மக்நா முதாம் சாகரே -இவ்வாறு சொன்னதைக் கேட்டு உள்ளம் ஆனந்தக் கடலில் மூழ்கிற்றே
ஸீதாயா இதி தே முகே கில கிரா மந்தஸ்மிதம் வர்ததே –இவ்வாறு சொல்லக் கேட்டு வளரும் புன்னகை
இலங்கை அரக்கர் பூமியாய் இருப்பதை மாற்றி அருளினார் –
இருளுக்கே ஒளி தருபவர் திருவடி -நந்தா விளக்கு -நல்ல ஞானம் வளரும்

————–

ஸீதா த்வம் ப்ருத்வீ பவா ககந வத் ஸூஷ்மம் ச மத்யம் பரம்
தேஹே நைவ ஸமேந கந்த வஹதாம் தத்ஸே ரஸாநாம் நிதி
ஏவம் வால ஹுதா நேந விநதா ஸா அஸீதி மத்கா ஸகீ
ப்ரோ வாசேதி விதேஹ ஜாகந கிரா மந்தஸ்மிதம் பாது மாம்
–57-

ஸீதா த்வம் ப்ருத்வீ பவா -பூமா பிராட்டி தேவரீர்
ககந வத் ஸூஷ்மம் ச மத்யம் பரம் -இடுப்பு ஸூஷ்மம் –
தேஹே நைவ ஸமேந கந்த வஹதாம் –திருமேனி காற்றுள்ள நல்ல வாசனை
தத்ஸே ரஸாநாம் –சுவை குணத்தில் -நீர் போல்
இவ்வாறு பஞ்ச பூதங்களில் நாலும் –
ஏவம் வால ஹுதா நேந விநதா ஸா அஸீதி மத்கா ஸகீ -இதனாலேயே அக்னி கொண்டு வணங்க திருவடி கைங்கர்யம் பாக்யம் அளித்தார்
ப்ரோ வாசே தி விதேஹ ஜாகந கிரா மந்தஸ்மிதம் பாது மாம் –இவ்வாறு சொல்லக் கேட்டு சொன்னதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பஞ்ச பூதங்களால் வரும் ஆபத்தை போக்கி அருளும் திருவடி

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

வாயுதேவன் பெற்ற மகன்,  நிலமகளை காண, ஆகாயத்தின் வழியாக, நீரை தாண்டி, இலங்கைக்கு வந்து தீ வைத்தான்  என்று நயமாக ஐந்து பூதங்களையும் ஒரே சொல்லின் மூலம் “அஞ்சிலே ஒன்று ” என்ற ஒரு வாக்கியம் கொண்டு விளக்குகிறார் கம்பர்.

————-

ஹாஸ்யம் ஸீதே ஸ்ருணு பரமிதம் ராக்ஷஸா பாலகன் ஸ்வான்
சேஷ்டா சக்தான் நிஜ வஜக தான் கர்து மேதம் வதந்தி
அப்ரூ தைவம் மம கில ஸகீ ஸேதி ஸீதா கிரா தே
வக்த்ரே மந்தஸ்மித மிதம பூத் ராம ராமாபி ராமம்
–58-

ஹாஸ்யம் ஸீதே -ஹாஸ்ய ரஸம்
ஸ்ருணு பரமிதம் ராக்ஷஸா பாலகன் ஸ்வான் -அரக்கர்களின் பிள்ளைகள்
சேஷ்டா சக்தான் நிஜ வஜக தான் கர்து மேதம் வதந்தி -அடக்கி வைக்க திருவடியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்பார்களாம் -பூச்சாண்டி இடம் கொடுப்பது போல்
அப்ரூ தைவம் மம கில ஸகீ ஸேதி ஸீதா கிரா தே -இவ்வாறு சொல்லக்கேட்டுச் சொல்ல
வக்த்ரே மந்தஸ்மித மிதம பூத் ராம ராமாபி ராமம் -அழகுக்கு எல்லாம் சிறந்த அழகான புன்னகை அன்றோ
சோதனைகளையும் சாதனைகளாக்கும் திருவடி -அஸாத்ய ஸாத்யமாக்கும் -கருணைக் கடல்

———

வாலா நலோ வா பதி பக்தி யுக்த
பாலா நலோ வா தஹதி ஸ்ம லங்காம்
காலா நலோ அயம் ஹி பலாஷி நாத
கோலா ஹலோ வேதி நிஷா சராணாம்
–59-

வாலா நலோ வா -வாலில் இருந்து வந்ததா
பதி பக்தி யுக்த பாலா நலோ வா -கற்புக்கரசி இடம் இருந்து வந்த நெருப்பா
தஹதி ஸ்ம லங்காம் -முழுவதுமான லங்கையையும் அழித்ததே
காலா நலோ அயம் ஹி பலாஷி நாத -பிரளய கால நெருப்பா
கோலா ஹலோ வேதி நிஷா சராணாம் -அரக்கர்கள் கத்துவது

——–

வர்ணா வலிர் வாசி சமுத்கதேயம்
கர்ணா வலிம் ப்ரைதி தஷாந நஸ்ய
ஸம் வர்ண யந்தீதி ஸகீ தி ஸீதா
சவ் வர்ண தஸ் கிம் ஹஸஸீதி மந்தம்
–60-

வர்ணா வலிர் வாசி சமுத்கதேயம் –வார்த்தை அடுக்கு மொழியாக பேசி
கர்ணா வலிம் ப்ரைதி தஷாந நஸ்ய -ராவணனுடைய காதுகளின் வரிசைகளுக்குள் நுழைய -20 காதுகளையும் கொண்டதுக்கு பலன்
ஸம் வர்ண யந்தீதி ஸகீ தி ஸீதா -கலங்கிப் போனதை சொல்லக் கேட்டு
சவ் வர்ண தஸ் கிம் ஹஸஸீதி மந்தம் -இனிய வார்த்தைகளால் வளர்ந்த புன்னகை

காதுக்குள் விரலை விட்டு ஆட்டிய பராக்ரமம்
வாழ்வில் வரும் சங்கடங்கள் சோகங்கள் அனைத்தும் நீங்கும்

——————-

ஸதா கதிதநூபவ மம முதா கதேர் உத்தமம்
நிதாநம பவத் ததா தவ பாதாப்ஜ ஸக்தா க்ஷய
விதாரித நிஷா சரோ நய விதாமாஸா வக்ரணீ
ததாஹ நகரீம் ச தாம் இஹ ஸதா க்ஷதா க்ஷம்வித
–61-

ஸதா கதி தநூபவ -வாயு -ஸதா கதி-மைந்தன்
பாதாப்ஜ ஸக்தா க்ஷய -திருவடியில் பக்தன்
விதாரித நிஷா சரோ நய விதாமாஸா வக்ரணீ -ஞானவானில் முதல்வன்
ததாஹ நகரீம் ச தாம் -நகரை அழித்தவன்
இஹ ஸதா க்ஷதா க்ஷம்வித –ஸரமா த்ரிஜடை போல்வார் புகழ்வார்கள்
மம முதா கதேர் உத்தமம் நிதாநம பவத் ததா தவ -எனக்கு ஆனந்தம் அருளினவன்

இதி ப்ரியாயா ப்ரதி பாந் விதாயா
அதி ப்ரியாபிஸ் ஸ்ருதி மாஞ்ஜூ லாபி
ரதிம் ப்ரபந்நஸ்ய சதி ஸ்வ வக்த்ரே
ஸ்மிதம் ததேத் ப்ரதிபாதி கீர்பிஸ்
–62-

இதி ப்ரியாயா ப்ரதி பாந் விதாயா -ஞானத்துடன் உனது பிரியமான பிராட்டி
அதி ப்ரியாபிஸ் ஸ்ருதி மாஞ்ஜூ லாபி-அதிகம் பிடித்த செவிக்கு இனிய வார்த்தைகள் சொல்ல
ரதிம் ப்ரபந்நஸ்ய சதி ஸ்வ வக்த்ரே -அகத்தின் ஆனந்தம் திருமுகத்தில் வர
ஸ்மிதம் ததேத் ப்ரதிபாதி கீர்பிஸ் -வளர்ந்த புன்னகை

பிராட்டிக்கு மகிழ்ச்சி கொடுத்த திருவடி
நம்பியவர்க்கு மகிழ்ச்சி தரும் ஆச்சார்யர் திருவடி
இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற வைக்கும் ஸ்லோகங்கள்

———

அபாங்கதஸ் சாதரம் ஆஞ்சநேயம்
ஸம் பஷ்யதோ வல்கு வசஸ் ப்ரியாயா
தத் ஸ்ருணு வதஸ் ஸோதர சந்நு தஸ்ய
மந்தஸ்மிதம் பாதி ரகூத்த மஸ்ய
–63-

அபாங்கதஸ் சாதரம் ஆஞ்சநேயம் ஸம் பஷ்யதோ -அழகிய பார்வையாலே -கடாக்ஷித்து நீராட்டி
வல்கு வசஸ் ப்ரியாயா தத் ஸ்ருணு வதஸ் -பிராட்டி இனிய வார்த்தைகளால் சொல்ல காதால் கேட்டு
ஸோதர சந்நு தஸ்ய –லஷ்மணனும் கூட இருக்க -வடுவூர் சன்னிவேசம்
மந்தஸ்மிதம் பாதி ரகூத்த மஸ்ய -புன்னகை ஒளி வீச –
ஸூந்தர காண்டம் கேட்டு புன்னகை
நமக்கும் ஸூந்த்தர காண்டம் பாராயணம் பண்ணிய பலன் கிட்டும்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமன் -எத்தனை ராமனடி -ஸ்ரீ அயோத்யா ராமன் வந்தார் ஐயா-

June 22, 2024

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்…
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்…
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்…
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்!
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்!
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்…
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்!
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன்… எத்தனை ராமனடி?

வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!

ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!!

ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!

ராமன்… எத்தனை ராமனடி!

————-

1-ரகு ராமன் -தான பிரபு

2-கோசல ராமன்

3-தசரத ராமன்

4-ஸூர்ய ராமன் -ராம திவாகரன் -உள் இருக்கும் அறியாமை போக்கும் -ஸீதா தேவியே ஒளி-அநந்யா ராகவே அஹம் பாஸ்கர -ஸூர்ய வம்சம்

5-சந்த்ர ராமன் -ராமசந்திரன் -16 கலைகள் -16 கல்யாண குணங்கள்

6-பால ராமன் -வஸிஷ்டர் இடம் கற்றவர்

7-ரஷக ராமன் -யாக ரக்ஷணம்-கண்ணை இமை காப்பது போல் -இருவரும் ரக்ஷணம்-

8-பாவந ராமன் -அகல்யை -பூதராக்கிய -காகுத்தன் கழல் துகள் -பட்டு -பதித பாவந ஸீதா ராமன்

9-ஸீதா ராமன்-மாலை போல் அனாயாசன வில்லை எடுத்து –
வில் தானே முறிந்து திருவடி ஸ்பர்சம்

10-கோதண்ட ராமன்

——

11-அயோத்யா ராமன் -பூமா தேவி திருக்கல்யாணம்-ராமனைப் பெற்ற குற்றம் இச்சா மோஹ-இத்யாதி

12-ஸத்ய ராமன்-அரசன் -ரசம் இல்லா மன்னன் இயம்பினன் -நின் பணி மறுப்பனோ -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதே

13-வன வாஸ ராமன்–ஜடா முடி தரித்து -ஆலம் பால் -ஆலமரத்தில் இருந்து குகன் கொடுக்க – -குகன் ஸஹ்யம் -திருச்சேறையில் ஸேவிக்கிறோம்

14- பாதுகா ராமன்-யோக க்ஷேமம் இரண்டையும் அளிக்க-இதுவே ரக்ஷை பாதுகாப்பூ பாதுகாப் பூ

—–

15- வேத ராமன் -தண்ட காரண்ய ரிஷிகளைக் காத்து அருளி

16-மாதுர்ய ராமன் -பாத்ம புராணம் -ரிஷிகள் மயங்கி -ஆலிங்கனம் அனுக்ரஹம் பிரார்த்திக்க -கிருஷ்ணன் கோபிகள் –

17-வல் வில் ராமன் -கர தூஷண நிரசனம் அஸஹாய சூரன்-தோலாத தனி வீரன்

18- முகுந்த ராமன் -ஜடாயு மோக்ஷம்-ஆயுஷ்மன் -பத்ரம் தே -விந்தம் முஹூர்த்தம் -அப்படியே திரும்பி வருவாள்-கச்ச லோகம் அநுத்தம

19-ஸூலப ராமன் -ஸபரி தேடி வந்து -தந்த கனி உகந்து -மோக்ஷம் செல்வதை ஸாக்ஷி -ராமன் மனதுக்கு இனியான் -அர்த்தம் தேடி வருவான் -நம்மூருக்கும் வருபவன்

———-

20 தர்ம ராமன்-வாலி வதம் –

21-காருண்ய ராமன் -சுக்ரீவன் மழைக் காலம் -தாரை -லஷ்மணன் -நன்றி கெட்டவன் சடலத்தை பருந்தும் தீண்டாதே –

—————–

22-ஆத்மா ராமன் -தத்வம் உணர்த்தி -இந்திரியங்கள் -தச -ஸம்ஸாரம் பிறவி பெரும்கடல் அசோக வனம் சரீரம் -முக் குணங்கள் விபீஷணன் ராவணன் கும்பகர்ணன்-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –

23-ஸூந்தர ராமன் -கண்டேன் ஸீதையை -ஆலிங்கனம் செய்து அருளி -தன்னையே தந்த கற்பகம் –ஸூந்தரன் -அஞ்சனா தேவி சாத்திய திருநாமம் -பந்தர் ஹிந்தியில் குரங்குக்கு

—————-

24- தர்ப்ப சயன ராமன் -கரும் கடல் நோக்கி கருணைக் கடல் பள்ளி கொண்ட திருக் கோலம்

25-சேது ராமன் -நளன் விஸ்வ கர்மா தேவ சிற்பியின் திருமகன் -நள சேது -என்றே திரு நாமம் -திருவடி துகள் களைத் திரட்டி -நம் கடல் போன்ற பாபங்களை போக்கி

26-வீர ராமன் -வீர ராகவப் பெருமாள் –

27-கோல வில்லி ராமன் –திரு வெள்ளியங்குடி –கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன்-விஜய ராமன் ஜய ராமன் -விஜய ராகவப்பெருமாள் திரு புட் குழி

28-பட்டாபி ராமன் -ராமனுக்கு இடப்புறம் இதில் -உத்சவர் கல்யாண ராமன் வலது பக்கம் சீதை கும்பகோணம் இரண்டு திருக் கோலமும் சேவிக்கிறோம்

—————-

29- ராஜா ராமன்-அசித்வத் பாரதந்தர்யம் காட்டவே மூன்றாம் பிரிவு-தபோ வனம் ரிஷிகள் மதியம் வேத மந்த்ரம் கேட்டே கர்ப்பவதியாக இருக்க -ராமன் திரு உள்ளபடி இருக்கவே தானே சொல்லி –லவகுசர் ஸ்ரீ ராமாயணம் பாட கேட்க ஆசை கொண்டார் –

30-ஸீதா ராமன்-அனுப்பி வைத்தது ராஜா ராமன் -அழுது கொண்டு இருந்தவன் ஸீதா ராமன் –ஸ்வர்ண விக்ரஹம் வைத்து அஸ்வமேத யாகம்

31- ஸந்தான ராமன் -தனது சரிதை கேட்டான்

32-வைகுண்ட ராமன் -பத்ராசல ராமனுக்கு இந்தத் திரு நாமம் –

———————

ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?-கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.

சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.

மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.

முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.

முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.

அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.

முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.

முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.

ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.

இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.

அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கோயில் கட்டுமானப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முதலில் ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டது. ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது

ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ராம் பத் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், ராமர், அனுமரின் உருவப் படங்கள், சிலைகள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்தார், அவருடைய தாத்தா பிரபாகர்ஜி சோம்புரா, அவரது மகன் ஆஷிஷ் சோம்புராவுடன் இணைந்து சோம்நாத் கோயிலை வடிவமைத்துள்ளார். 79 வயதான கட்டிடக் கலைஞர் 1992 இல் நியமிக்கப்பட்டார். வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நாகரா பாணியில் ராமர் கோயில் கட்டப்படுவதாக சோம்புரா குறிப்பிட்டார். கிழக்கில் உள்ள நுழைவாயில் கோபுர பாணியில் கட்டப்படும், இது தெற்கின் கோயில்களைக் குறிக்கும். கோவிலின் சுவர்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைப்படைப்புகளைக் காண்பிக்கும். வடிவம்: மந்திரின் கருவறை எண்கோண வடிவில் இருக்கும், அதே சமயம் கட்டமைப்பு சுற்றளவு வட்டமாக இருக்கும். தளங்கள்: இந்த மந்திரில் 161 அடி உயரம் கொண்ட ஐந்து குவிமாடங்களும் ஒரு கோபுரமும் இருக்கும். 3-தளங்களைக் கொண்ட கோயிலில் ஒரு மையம் – கர்ப் க்ரிஹா – சூரியக் கதிர்கள் ராம் லல்லாவின் சிலை மீது விழும் வகையில் கட்டப்பட்டிருக்கும். இறைவன். கருவறையைப் போலவே, கிரஹ மண்டபமும் முழுமையாக மூடப்பட்டிருக்கும், அதே சமயம் கீர்த்தனையும் இருக்கும் மண்டபம், நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பிரார்த்தனை மண்டபங்கள் திறந்த பகுதிகளாக இருக்கும். சிலை: சிசு ராமர் சிலை 5 அடி உயரம் மற்றும் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. கோவில் மணி: ராமர் கோவிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணி, இந்தியாவில் மணி உற்பத்திக்கு நன்கு அறியப்பட்ட இடமான எட்டாவிலிருந்து கொண்டு வரப்படுகிறது. 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாய்.

அயோத்தி ராமர் கோவில்: காலவரிசை

1528-1529: முகலாயப் பேரரசர் பாபர் பாபர் மசூதியைக் கட்டினார் 1850கள்: நிலத்தில் வகுப்புவாத வன்முறையின் ஆரம்பம் 1949: மசூதிக்குள் ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது, வகுப்புவாத பதற்றத்தை தீவிரப்படுத்துகிறது 1950: பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்ய அனுமதி கோரி சிலையை வழிபட அனுமதி : UP 1961 சிலையை அகற்றக்கோரி மத்திய வக்ஃப் வாரியம் 1986: இந்து வழிபாட்டாளர்களுக்கான இடத்தை மாவட்ட நீதிமன்றம் திறந்தது 1992: பாபர் மசூதி டிசம்பர் 6, 2010ல் இடிக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்று வழிப் பிரிவினை விதித்தது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா இடையே சர்ச்சைக்குரிய பகுதி 2011: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்சி தடை 2016: சுப்ரமணியன் சுவாமி எஸ்சியில் மனு தாக்கல் செய்தார், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோருகிறார் 2019: அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதை எஸ்சி ஏற்றுக்கொண்டு, முழு உரிமையையும் ஒப்படைக்கிறது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு மற்றும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்று இடமாக வழங்க அரசுக்கு உத்தரவு 2020: பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

———

ழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்களை, ‘திவ்ய க்ஷேத்ரம்’ என்பர். இவை மொத்தம் 108. இவற்றுள் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூலகில் தரிசிக்க இயலாதன. ஏனைய 106 திவ்ய ஸ்தலங்களில் அயோத்தி முக்கியமானது. பலரும் அயோத்தியில் இருக்கும் ராம ஜன்ம பூமிதான் ஆழ்வார்களால் பாடப்பட்டது என நினைப்பர். ஆனால், உண்மையில் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது அம்மாஜி மந்திர். ‘மதறாஸ் மந்திர்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. அயோத்தியில் வசிப்பவர்கள் பலருக்குமே இந்த ஆலயத்தைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. அயோத்திக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் காணவேண்டிய திருத்தலம் இது.

அம்மாஜி மந்திர், நிர்மோச்சன் செள ரஸ்தா அருகில், கொத்வாலி அயோத்தியா காவல் நிலையத்துக்கு எதிர்ப்புற சாலையில் அமைந்துள்ளது. அச்சு அசலாகத் தமிழ்நாட்டு வைணவ ஆலயம் போலவே இது தோற்றம் தருகிறது. மூலவர் ஸ்ரீராமர், தாயார் சீதா தேவி. புஷ்கல விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில்
ஸ்ரீ ராமபிரானின் ஒருபுறம் சீதாபிராட்டியும், இன்னொரு புறம் லட்சுமணரும் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு பரமபத புஷ்கரிணி மற்றும் சரயு நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் என்பவரால் நிறுவப்பட்டது இந்தக் கோயில். இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். வேத இதிகாசங்களில் விற்பன்னராகவும் இருந்தவர். இவர்,
‘ஸ்ரீ சரஸ்வதி பண்டார்’ என்ற ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி, தனது சொத்துக்கள் முழுவதையும் அதற்கே தந்துவிட்டார். அதில் கிடைக்கும் வருவாயிலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அம்மாஜி மந்திர் இருக்கும் இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருந்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கான தனி சன்னிதிகளும் இந்தக் கோயிலில் உண்டு. ஸ்ரீ சடகோபர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

கோயில் அமைந்ததற்கான சுவாரசிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அவர்களின் மனைவி சிங்காரம்மா என்பவரது கனவில் ஸ்ரீராமர் மற்றும் சீதாபிராட்டியாரின் உத்ஸவ விக்ரஹங்கள் தோன்றினவாம். அவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி தலத்தில் அமைந்த ஒரு பாழடைந்த கோயிலில் புதைந்திருப்பதாகக் கனவில் அறியப்பட்டது. அந்தத் தம்பதியினர் உடனே சென்று அங்கே பார்க்க, கனவில் கண்டபடியே கோயிலும் மூர்த்திகளின் திருவுருவங்களும் தென்பட்டிருக்கின்றன.

உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ராமநாதபுரம் மன்னரின் அனுமதியோடு அந்த விக்ரஹங்களை எடுத்து வந்து ஆராதிக்க அயோத்தியில் கோயில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் திருப்பணிகள் முடிவதற்கு முன்னரே பார்த்தசாரதி அய்யங்கார் இறந்து விட, அவரது மனைவியே கோயில் பணிகளை நிறைவு செய்து, நித்ய ஆராதனை சேவைகளையும் உத்ஸவங்களையும் நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது முனைப்பான திருப்பணியால் ஆலயம் உருவானதால், ‘அம்மாஜி மந்திர்’ என்ற பெயரிலேயே இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, இந்த ஆலயத்தை, ‘சேது ராம மந்திர்’ என்று தெரிவிப்பதையும் கவனிக்கலாம்.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கெனவே அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், வேத பாராயண விற்பன்னர்கள் ஆகியோர் திருவல்லிக்கேணியில் இருந்து அயோத்தி செல்கிறார்கள். ஆலயத்தில் தங்கும் வசதிகளும் உண்டு.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்–கல்லைப் பெண்ணாக்கிய சரித்திரம்  -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை —

October 9, 2023

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மாண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

வீர ஆசனத்தில் ஸ்ரீ பெருமாள் -ஸ்ரீ வாயு குமாரர் ஸ்ரீ ராமாயணம் சாதித்து அருள –
ஸ்ரீ பெருமாள் வியாக்யானம் சாதித்து அருளி -இதுவே நம் பூர்வர்கள் ஸ்ரீ குரு பரம்பரை மூலம் பெற்ற நிதி

ஸ்ரீ தப ஸ்வாத்யாய நிரதாம் தபஸ்வி வாக் விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வாலமீகி முனி புங்கவம் — 1-1-1

கோன் வஸ்மின் ஸம்ப்ரதம் லோகே குணவான் கா ச வீர்யவான் தர்மஞ்சந ச க்ருதஞ்ஞந ச ஸத்ய வாக்யோ த்ரிட வ்ரத–1-1-2–

சாரித்ரேண ச கோ யுக்த சர்வ பூதேஷு கோ ஹிதா -வித்வான் கா சமர்த்த ச கா ச ஏக பிரிய தர்சன -1-1-3–

ஆத்மவான் கா ஜித க்ரோத த்ருதிமான் கா அநஸூயகா -கஸ்ய பிப்யதி தேவா ச ஜாத ரோசயா சம்யுகே-1-1-4–

1-குணவான் -சம்யக் போஜனம் -உடனே உண்பன் என்றானே
இன்று போய் நாளை போருக்கு வா -சரணாகதி இன்றே பண்ணலாம் –

2-வீர்யவான் -மீண்டும் வந்தாலும் வெல்வேன் -ரஞ்சனீயஸ்ய விக்ரம் அன்றோ

3-தர்மஞ்ஞன் -அறிந்து அனுஷ்ட்டித்து -கீழ் சொன்னவை இதுக்கு -சரணாகத வத்சன் -விரதம் கொண்டவன் அன்றோ

4-க்ருதஜ்ஜயன் -செய் நன்றி மறவாமை

5-சத்ய வாக்யன் -13-த்ரேதா யுகம் கண்ட சூர்ப்பணகை-37-வயசு ராமன் காட்டிய ஆர்ஜவம் -சத்யான் லோகான் ஜயதி-

6-திருட விரதன் –புறா கதை -குரங்கு புலி மனுஷ்யன் கதை –
அனைத்து குணங்களும் சரணாகதன் ரக்ஷணம்

7-ஸாரித்ரன்-நல்ல அனுஷ்டானம் -ஒரே வில் ஒரு சொல் ஒரே இல்

8-சர்வ பூதேஷு ஸூஹ் ருதம் –காகுத்தன் பாத தூளி – ரஜா
கழல் துகள் கதுவ -பாதுகையாலும் தீண்டாதவன் -அன்னை என்று பொன்னடி வணங்கினான் அகலிகையைப் பார்த்து –
கௌதமர் சாபம் -12- மாதங்கள் கருவில் சுமந்தாள் இவளோ கருத்தில் சுமந்தாள் பல யுகமாகங்களில்
மை வண்ணம் –நான்கு வண்ணங்கள் –
இவ்வண்ணம் மை வண்ணம் -கம்பர் எட்டு வண்ணங்கள் -கால் வண்ணம் கண்டேன்

9-வித்வான் -ஆய கலைகள் -64-

10-சமர்த்தன் -கல்லைப் பெண்ணாக்கி புல்லை அம்பாக்கி -வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

11-சதா சர்வ பிரிய தரிசன-ராமா -ரம யிதி-மனத்துக்கு இனியான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –
லஷ்மணன் லஷ்மீ சம்பன்னன் -நற் செல்வன்

12–ஆத்மவான்–துணிச்சல் மிக்கு –காரா தூஷணாதிகள் அசகாய ஸூரன்

13-ஜித க்ரோதன் -கோபத்தை தன் வசம் -கோப வசம் ஆனான் திருவடியைத் தாக்கிய பின்பு

14-த்யுதி மான் –தேஜோ மாயம் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்தா அபகாரம் –
தோள் கண்டார் தோளே கண்டார்-தாள் கண்டார் தாளே கண்டார் –தடக்கை கண்டாரும் அஃதே –
யாவருக்கும் கண்ணன் -என்று -கண்ணில் இருக்கும் ராமனே கண்ணன்

15-அநஸூயா -பொறாமை படைத்தவன் -வியாச நேஷு மனுஷ்யானாம்

16-ஜாத ரோஷ -யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் அஞ்சும் படி
வைத்ய வீர ராகவன் -ராகவன் வீரம் -ராவணன் கொடுத்த பெயர் -சாது மிரண்டால் காடு கொள்ளாதே

ஸ்ரீ ராம சந்த்ரன் -பூர்ண சந்த்ரன்

———————

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி ஒருத்தி பரிபவப் பட்டமையை பாட திரு உள்ளம் கொண்டவர்கள் அல்லர்

ஸ்ரீ பெருமாள் காலால் தீண்டவில்லை –அடித் துகள் கதுவாமுன்னம்.
திருவடி துகள்கள் பட்டே அகலிகை விமோசனம்
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.

அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

அ + ஹல்யா = மாசு அற்றவள்!

கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!

* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!

வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை

————-

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் (10) முதல் அடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே !

குட்டிப் பெண் கதை செல்ல ஆரம்பித்தாள். கௌதம முனிவரின் மனைவி அகல்யை. அகல்யா என்றால் அழகியவள் என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போலப் பேரழகியாக இருந்தாள். முனிவரும் அகல்யையும் கங்கைக் கரையில் சந்தோஷமாக ஆசிரமத்தில் வசித்து வந்தார்கள்.
இந்திரனுக்கு அகல்யையின் அழகில் மயங்கினான். கெட்டது பற்றி யோசித்தால் கெட்ட எண்ணம் தான் வரும். அவனுக்கும் வந்தது. முனிவரை ஆசிரமத்தை விட்டு அனுப்பிவிட்டு, உள்ளே போகத் திட்டம் போட்டான். யோசித்தான். ஆசிரம வாசலில் காலைப் பொழுது விடுவதற்குள் கோழிபோலக் கூவினான். உள்ளே உறங்கிக்கொண்டு இருந்த முனிவர் விடிந்துவிட்டது என்று எழுந்து நீராடச் சென்றார். இது தான் தக்க சமயம் என்று இந்திரன் முனிவர் வேஷத்தில் உள்ளே புகுந்தான். திருட்டுத்தனமாக வந்த இந்திரன் அகல்யையை பார்த்து ‘அழகியே! எனக்கு உன்மீது மிகுந்த ஆசை” என்றான். வந்திருப்பது இந்திரன் என்று தெரிந்தாலும் இந்திரனே என்னை அழகி என்று சொல்லிவிட்டான் என்ற கர்வத்தால் மனநிலை மாறி அவனிடம் அன்பு செலுத்தினாள் அகல்யை.

நீராடிவிட்டு முனிவர் திரும்பி வந்த விட்டார். தன் மனைவி தன்னை மாதிரி ஒருவனிடம் ஆசை வைத்துள்ளார் என்று கோபப்பட்டு “இனி நீ என் மனைவி இல்லை யார் கண்ணிலும் படாமல் சாம்பலாகப் போவாயாக” என்று சபித்துவிட்டார். அகல்யை ஆசிரமத்தின் கல்மீது சாம்பலாகக் கிடந்தாள். அகல்யைக்கு அப்போது தான் தான் செய்த தவறு புரிந்தது. மன்னிக்க வேண்டும் என்று முறையிட்டாள். முனிவர் நாராயணன் ராமராக அவதாரம் செய்வார் அப்போது விஸ்வாமித்திரர் ராமரை அழைத்துக்கொண்டு இங்கே வருவார். ராமர் கால் உன்மீது பட்டவுடன் நீ தூய்மை பெற்று என்னுடன் மீண்டும் வாழ்வாயாக என்றார். அகல்யை ஆயிரம் ஆண்டுகள் தூசியாக அந்த ஆசிரமத்தில் யார் கண்ணிலும் படாமல் கிடந்தாள்.

ராமர் அவதாரம் செய்தார். விஸ்வாமித்திரர் தமது யாகத்தைக் காக்க ராம, லக்ஷ்மணர்களை அழைத்து வரும்போது கௌதம முனிவரின் ஆசிரமம் வந்தது. ஆசிரமத்துக்குள் சென்ற போது ராமரின் திருவடி பட்டதால் அகல்யை சாபம் தொலைந்து தூயவளானாள். மீண்டும் அழகிய பெண்ணாக மாறினாள். கௌதமரும் அகல்யையைத் திரும்பத் தன் மனைவியாக ஏற்றார்.
கௌதம முனிவரும் அகல்யையும் பெருமகிழ்ச்சியுடன் ராமரை வணங்கிப் பூஜித்தார்கள் என்று கதையை நிறுத்தினாள் பெண் பிள்ளை.

ராமானுஜர் ஆழ்ந்த யோசனையிலிருந்தார்.“சாமி எந்த ஆழ்வார் பற்றி யோசிக்கிறீர்கள்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் அவளின் புத்திக் கூர்மையை வியந்து ”பெரியாழ்வார் பற்றித் தான் பெண்ணே!” என்றார்.
“சொல்லுங்க சாமி” என்று அந்தப் பெண் ஆவலாகக் கேட்கத் தயாரானாள்.
ராமானுஜர் “பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே என்கிறார் ஆழ்வார். பெருமாளின் பாத தூளிக்கு அவ்வளவு ஏற்றம்” என்றார்.
”அருமை! சாமி, எங்க ஊர் மதுரகவி ஆழ்வார் அவருடைய குருவான நம்மாழ்வாரை தன் தலையால் தாங்கினார். அவரோ பெருமாளின் திருவடியைத் தாங்கிச் சடாரியாகக் கோயிலில் இருக்கிறார்!” என்றாள்
ராமானுஜர் கண்கலங்கினார்.
“ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா ?” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
“இல்லை பெண்ணே! என் மானசீக ஆசாரியன் ஆளவந்தார் நினைவு வந்தது” என்றார்
“நாங்கள் தெரிந்துகொள்ளலாமா ?” என்று சிஷ்யர் ஒருவர் கேட்க அதற்கு ராமானுஜர் ”உன் திருவடி எப்போது தலையால் தாங்குவேன் என்று நம் ஆசாரியன் ஆளவந்தார் தன் ஸ்லோகத்தில் சொல்லியுள்ளார். இந்த பெண் சொன்னதைக் கேட்டபோது நினைவுக்கு வந்தது” உடையவர் மேலும் “பெண்ணே பெருமாள் பாதம் பட்டால் நல்லவையே நடக்கும். ராமாவதாரம் மட்டும் இல்லை, கிருஷ்ணாவதாரத்திலும் இது போலச் சம்பவம் ஒன்று இருக்கு” என்றார்.

கூடியிருந்த சிஷ்யர்களும், பெண் பிள்ளையும் என்ன என்று யோசிக்க ராமானுஜர் தொடர்ந்தார் “உத்திரையின் மகன் பரிட்சித் கருவிலேயே இறந்து இருந்தான். கிருஷ்ணர் தன் பாதத்தால் உயிர்ப்பித்தான் அல்லவா ?” என்றார்
”ஆகா ! ” என்று எல்லோரும் வியந்தார்கள் “நீங்களே சொல்லுங்கள் சாமி காடு நடந்த சேவ்வடி, கல்லைப் பெண்ணாக்கிய திருவடி. அகல்யை மாதிரி ராமருடைய திருவடி என் மீது பட நான் பாக்கியம் செய்யாதவள், அதனால் ஊரை விட்டுப் போகிறேன்”
“பிள்ளாய் ! பிஞ்சாய் இருந்தாலும், உன் பேச்சுப் பழம்போல இனிக்கிறது, வா ஊருக்குள் போகலாம்!”

“பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே!” என்று சொன்னபோது
ஆண்டாள் கதைக்கு எல்லோரும் தயாரானார்கள்.

வாமன அவதாரத்தில் உலகளந்த பாதங்கள் ராமஅவதாரத்தில் கானகத்தில் மெய்ந்நோக நடந்தனவே என இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவைப் பாடலில் உருகி உருகிப் பாடுகிறார். ‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து சோஅரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே  திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!`

அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-

தேவானு குலவா, தேவி கௌசலை பாலா
தசரத ராமனே எழுந்திரும்.

ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை
அன்புடன் காத்தவனே எழுந்திரும்.

கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே
கல்யாண ராகவா எழுந்திரும்.

வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை
விவாஹம் செய்தோனே எழிந்திரும்.

அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து
அயோத்தி வந்த துரையே எழுந்திரும்.

தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன்
தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும்.

சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு
சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும்.

பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
பாதுகை அளித்தோனே எழுந்திரும்.

மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை
மூக்கை அறுத்தவரே எழுந்திரும்.

ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு
அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும்.

சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த
கோதண்ட ராமரே எழுந்திரும்.

வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட
காருண்ய ராகவா எழுந்திரும்.

அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல்
துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும்.

வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன்
வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும்.

தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும்.

திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை
அயோத்தி வந்தவரே எழுந்திரும்.

உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட
மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும்.

உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி
அருளவேணும் எழுந்திரும்.

சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே
ஜனகரின் மருகரே எழுந்திரும்.

ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண
அருள வேண்டும் எழுந்திரும்.

கல்லைப் பெண்ணாக்கும் கழலினைப் போற்றுவோம்!

முல்லை நிலத்தில் பாதம் பதித்தாய் போற்றி!

எல்லையில்லா வனப்புடை எந்தாய் அணைக்கும் பாதம்!

சொல்லை மாலையாக்கி அளித்த கோதைக்கு வேதம்!”

—————–———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

September 3, 2023

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்)

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ ।
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥

ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।
பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம்

 பாலகாண்டம்

ஜய ஜய மஹாவீர !
மஹாதீர தௌரேய !

தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய !

தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ !

தினகர – குல – கமல – திவாகர !

திவிஷததிபதி – ரண – ஸஹசரண – சதுர – தசரத -சரமருண – விமோசன !

கோஸல – ஸுதா – குமார – பாவ – கஞ்சுகித – காரணாகார !

கௌமார -கேளி – கோபாயித – கௌசிகாத்வர !

ரணாத்வர துர்ய பவ்ய திவ்யாஸ்த்ர ப்ருந்த வந்தித !

ப்ரணத ஜன விமத விமதன துர்லளித தோர்லளித !

தனுதர விஶிக விதாடன விகடித விஶராரு ஶராரு தாடகா தாடகேய !

ஜட-கிரண ஶகல-தர ஜடில நட பதி மகுடதட நடனபடு விபுத-
ஸரிததி பஹுள மது களந லலித பத நளின-ரஜ உப-ம்ருʼதித
நிஜவ்ருஜின ஜஹதுபல தனுருசிர பரம-முனிவர யுவதி நுத !

குஶிகஸுத கதித விதித நவ விவித கத !

மைதில நகர ஸுலோசனா லோசன சகோர சந்த்ர !

கண்ட-பரஶு கோதண்ட ப்ரகாண்ட கண்டன ஶௌண்ட புஜ-தண்ட !

சண்டகர கிரண மண்டல போதித புண்டரீக வந ருசி லுண்டாக லோசந !

மோசித ஜனக ஹ்ருʼதய ஶங்காதங்க !

பரிஹ்ருʼத நிகில நரபதி வரண ஜனக துஹித்ரு குசதட விஹரண ஸமுசித கரதல !

ஶதகோடி ஶதகுண கடின பரஶு தர முனிவர கர த்ருʼத
துரவநமதம நிஜ தநுராகர்ஷண ப்ரகாஶித பாரமேஷ்ட்ய !

க்ரது-ஹர ஶிகரி கந்துக விஹ்ருத்யுந்முக ஜகத-ருந்துத ஜிதஹரி-
தந்தி தந்த தந்துர தஶவதந தமந குஶல தஶ-ஶத-புஜ முக
ந்ருபதி-குல ருதிர ஜர பரித ப்ருʼதுதர தடாக தர்பித பித்ருʼக
ப்ருகு பதி ஸுகதி விஹதிகர நத பருடிஷு பரிக !

அயோத்யா காண்டம்

அந்ருத பய முஷித ஹ்ருʼதய பித்ருʼ வசன பாலன ப்ரதிஜ்ஞா-
வஜ்ஞாத யௌவராஜ்ய !

நிஷாத ராஜ ஸௌஹ்ருʼத ஸூசித ஸௌஶீல்ய ஸாகர !

பரத்வாஜ ஶாஸன பரிக்ருʼஹீத விசித்ர சித்ரகூட கிரி கடக தட ரம்யாவஸத !

அநன்ய ஶாஸனீய !

ப்ரணத பரத மகுடதட ஸுகடித பாதுகாக்ர்யாபிஷேக
நிர்வர்த்தித ஸர்வ லோக யோக க்ஷேம !

பிஶித ருசி விஹித துரித வல-மதன தனய பலிபுகனு-கதி ஸரபஸ
ஶயன த்ருʼண ஶகல பரிபதன பய சரித ஸகல ஸுரமுனி-வர
பஹுமத மஹாஸ்த்ர ஸாமர்த்ய !

த்ருஹிண ஹர வல-மதன துராரகக்ஷ ஶர லக்ஷ !

தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !

விராத ஹரிண ஶார்தூல !

விலுலித பஹுபல மக கலம ரஜநிசர ம்ருʼக ம்ருʼகயாரம்ப
ஸம்ப்ருʼத சீரப்ருʼதனுரோத !

த்ரிஶிர: ஶிரஸ்த்ரிதய திமிர நிராஸ வாஸர-கர !

தூஷண ஜலநிதி ஶோஷண தோஷித ருஷிகண கோஷித விஜய
கோஷண !

கரதர கர தரு கண்டன சண்ட பவன !

த்விஸப்த ரக்ஷ: ஸஹஸ்ர நளவன விலோலன மஹாகலப !

அஸஹாய ஶூர !
அநபாய ஸாஹஸ !

மஹித மஹா-ம்ருʼத தர்ஶன முதித மைதிலீ த்ருʼட-தர பரிரம்பண
விபவ விரோபித விகட வீரவ்ரண !

மாரீச மாயா ம்ருக சர்ம பரிகர்மித நிர்பர தர்பாஸ்தரண !

விக்ரம யஶோ லாப விக்ரீத ஜீவித க்ருத்ர-ராஜ தேஹ திதக்ஷா
லக்ஷித-பக்தஜன தாக்ஷிண்ய !

கல்பித விபுத பாவ கபந்தாபிநந்தித !

அவந்த்ய மஹிம முனிஜன பஜன முஷித ஹ்ருʼதய கலுஷ ஶபரீ
மோக்ஷ ஸாக்ஷிபூத !

கிஷ்கிந்தா காண்டம்

ப்ரபஞ்ஜன தனய பாவுக பாஷித ரஞ்ஜித ஹ்ருʼதய !
தரணி-ஸுத ஶரணாகதி பரதந்த்ரீக்ருʼத ஸ்வாதந்த்ர்ய !

த்ருட கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர
விக்ஷேப தக்ஷ தக்ஷிணேதர பாதாங்குஷ்ட தர சலன
விஶ்வஸ்த ஸுஹ்ருʼதாஶய !

அதிப்ருʼதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபதுதய விவ்ருʼத
சித்ரபுங்க வைசித்ர்ய !

விபுல புஜ ஶைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக ஜநக
சதுருததி விஹரண சதுர கபிகுலபதி ஹ்ருʼதய விஶால
ஶிலாதல தாரண தாருண ஶிலீமுக !

ஸுந்தர காண்டம்

அபார பாராவார பரிகா பரிவ்ருʼத பரபுர பரிஸ்ருʼத தவ தஹன
ஜவன-பவன-பவ கபிவர பரிஷ்வங்க பாவித ஸர்வஸ்வ தான !

யுத்த காண்டம்

அஹித ஸஹோதர ரக்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித ஸசிவ
விஸ்ரலம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ருʼம்பித ஸர்வேஶ்வர பாவ !

ஸக்ருʼத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !

வீர !
ஸத்யவ்ரத !

ப்ரதிஶயன பூமிகா பூஷித பயோதி புளிந !

ப்ரளய ஶிகி பருஷ விஶிக ஶிகா ஶோஷிதாகூபார வாரி பூர !

ப்ரபல ரிபு கலஹ குதுக சடுல கபிகுல கரதல துலித ஹ்ருʼத
கிரி நிகர ஸாதித ஸேது-பத ஸீமா ஸீமந்தித ஸமுத்ர !

த்ருத-கதி தரு-ம்ருʼக வரூதினீ நிருத்த லங்காவரோத வேபது
லாஸ்ய லீலோபதேஶ தேஶிக தனுர்ஜ்யாகோஷ !

ககன-சர கனக-கிரி கரிம-தர நிகம-மய நிஜ-கருட கருதநில லவ
களித விஷ-வதன ஶர கதன !

அக்ருʼத சர வநசர ரண-கரண வைலக்ஷ்ய கூணிதாக்ஷ பஹுவித
ரக்ஷோ பலாத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன படிம ஸாடோப கோபாவலேப !

கடுரட-தடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்க்கத
விஶங்கட விஶிக விதாடன விகடித மகுட விஹ்வல விஶ்ரவஸ்தனய
விஶ்ரம ஸமய விஶ்ராணன விக்யாத விக்ரம !

கும்பகர்ண குல கிரி விதளன தம்போளி பூத நி:ஶங்க கங்கபத்ர !

அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிபதத்
அபரிமித கபிபல ஜலதி லஹரி கலகல-ரவ குபித மகவஜி
தபிஹனன-க்ருʼதனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ-யுத்த !

அப்ரதித்வந்த்வ பௌருஷ !

த்ர யம்பக ஸமதிக கோராஸ்த்ராடம்பர !

ஸாரதி ஹ்ருʼத ரத ஸத்ரப ஶாத்ரவ ஸத்யாபித ப்ரதாப !

ஶித ஶர க்ருʼத லவந தஶமுக முக தஶக நிபதன புனருதய தர
களித ஜனித தர தரள ஹரி-ஹய நயன நளின-வன ருசி-கசித கதல
நிபதித ஸுர-தரு குஸும விததி ஸுரபித ரத பத !

அகில ஜகததிக புஜ பல வர பல தஶ-லபந லபந தஶக லவந
ஜனித கதன பரவஶ ரஜனி-சர யுவதி விலபன வசன ஸமவிஷய
நிகம ஶிகர நிகர முகர முக முனி-வர பரிபணித!

அபிகத ஶதமக ஹுதவஹ பித்ருʼபதி நிர்ருʼதி வருண பவன தனத
கிரிஶர முக ஸுரபதி நுதி முதித !

அமித மதி விதி விதித கதித நிஜ விபவ ஜலதி ப்ருʼஷத லவ !

விகத பய விபுத விபோதித வீர ஶயன ஶாயித வானர ப்ருʼதனௌக !

ஸ்வ ஸமய விகடித ஸுகடித ஸஹ்ருʼதய ஸஹதர்ம சாரிணீக !

விபீஷண வஶம்வதீ-க்ருʼத லங்கைஶ்வர்ய !

நிஷ்பன்ன க்ருʼத்ய !

க புஷ்பித ரிபு பக்ஷ !

புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ-க்ருʼத ககனார்ணவ !

ப்ரதிஜ்ஞார்ணவ தரண க்ருʼத க்ஷண பரத மனோரத ஸம்ஹித
ஸிம்ஹாஸனாதிரூட !

ஸ்வாமின்!
ராகவ ஸிம்ஹ!

உத்தர காண்டம்

ஹாடக கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரிலுடித நிகில
ந்ருʼபதி கிரீட கோடி விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !

திவ்ய பௌமாயோத்யாதிதைவத !

பித்ருʼ வத குபித பரஶு-தர முனி விஹித ந்ருʼப ஹனன கதன
பூர்வ கால ப்ரபவ ஶத குண ப்ரதிஷ்டாபித தார்மிக ராஜ வம்ஶ !

ஶுச சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா ஶத !

ஶாஸித மது-ஸுத ஶத்ருக்ன ஸேவித !

குஶ லவ பரிக்ருʼஹீத குல காதா விஶேஷ !

விதி வஶ பரிணமதமர பணிதி கவிவர ரசித நிஜ சரித நிபந்தன
நிஶமன நிர்வ்ருʼத !

ஸர்வ ஜன ஸம்மானித !

புனருபஸ்தாபித விமான வர விஶ்ராணன ப்ரீணித வைஶ்ரவண
விஶ்ராவித யஶ: ப்ரபஞ்ச !

பஞ்சதாபன்ன முனிகுமார ஸஞ்ஜீவநாம்ருʼத !

த்ரேதாயுக ப்ரவர்தித கார்தயுக வ்ருʼத்தாந்த !

அவிகல பஹுஸுவர்ண ஹய-மக ஸஹஸ்ர நிர்வஹண
நிர்வர்த்தித நிஜ வர்ணாஶ்ரம தர்ம !

ஸர்வ கர்ம ஸமாராத்ய !
ஸனாதன தர்ம !

ஸாகேத ஜனபத ஜனி தனிக ஜங்கம ததிதர ஜந்து ஜாத திவ்ய கதி
தான தர்ஶித நித்ய நிஸ்ஸீம வைபவ !

பவத-பநாதா-பித பக்தஜன பத்ராராம !

ஶ்ரீ ராமபத்ர !
நமஸ்தே புனஸ்தே நம: !

சதுர்முகேஶ்வரமுகை: புத்ர பௌத்ராதி ஶாலினே ।
நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருʼஹமேதினே ॥

கவிகதக ஸிம்ஹகதிதம் கடோத ஸுகுமார கும்ப கம்பீரம் ।
பவ பய பேஷஜமேதத் படத மஹாவீர வைபவம் ஸுதிய: ॥

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஶாய வேதாந்த குரவே நம: ॥

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –