Archive for January, 2025

ஸ்ரீ நடாதூர் அம்மாள்-ஶ்ரீவத்ஸ குல திலகை꞉ஶ்ரீமத்₃வரதா ₃சார்ய மஹா கு₃ருபி₄꞉ அநுக்₃ருஹீத꞉பிரபந்த பாரிஜாதம் –

January 31, 2025

ஊர்த்₄வவ் ஹஸ்தவ் யதீயவ் பிரதிபட த₃லநே பி₃ப்₄ரத ꞉ ஶங்க₂ சக்ரே
ஸேவ்ய அங்க்₄ரீ ஸ்கீயாவபி த த த தரோ தக்ஷிணோ யஸ்ய பாணி ꞉ ।
தாவந் மாத்ரம் ப₄வாப்₃தி₄ம் க₃மயதி ப₄ஜதா மூருகோ ₃ வாமபாணி :
ஶ்ரீவத் ஸாங்கஶ்ச லக்ஷ்மீர் யது₃ரஸி லஸதோ வேங்கடேசஸஸ் ஜீயாத் ॥

சக்ரம் ஶாஸ்தி ஸூகர்ம யோக₃கலநம், ஜ்ஞாநம் ச ஶங்க₂ஸ் ததா ₂
பாணிஶ் சாரு கடி ப்ரஸஞ்ஜி ததல꞉ஶ்ரோ ப₄க்தி யோக₃ம் ததா ₂ ।
ஶ்ரீமத் பாத₃ஸரோஜ தர்ஶ ககரோ யோக₃ம் ப்ரபத்திம் பரம்
யஸ்யாந் வர்த ₂சதுர் பு₄ஜஸ் ஸ ப₄க₃வான் ஜேஜே து லக்ஷ்மீ ஸக₂
꞉ ||

ஶ்ரீ வேங்கடாத்₃ரி நிலய꞉ கமலாகாமுக꞉ புமான் ।
அபா₄ங்கு₃ர விபூ₄திர் ꞉ ந தரங்க₃யது மங்க₃லம்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி
–நடாதூரம்மாளின் தனியன்:

ஸம்ஸார தாபத்ரயத்தினால் எரிக்கப்பட்டு தவிக்கும் என்னை ஸ்ரீ பாஷ்யார்த்த அம்ருதத்தை அருளி பிழைக்கச் செய்தவரும் -ஸ்ரீ வத்ஸ குலத்துக்கே அலங்காரமாகவும் -வரதாச்சார்யர் என்னும் பிரசித்தி பெற்ற இவற்றை வணங்குகிறேன்

சித்திரை நக்ஷத்ரம் –நடுவில் -நடுப்பதம் விளக்கம் வல்ல -ததீய சேஷத்வம் -ஸ்ரீ வத்ஸ குலம் அவதாரம் -தாசாரதி போல்-நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு-திருக் குமாரர் -தேவராஜன் -திருக் குமாரர்-நடாதூர் அம்மாள்

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.
ஆசார்யன்: எங்களாழ்வான்.
சிஷ்யர்கள்: ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.
அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் , கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

1165-1275

கிடாம்பி அப்பிள்ளார் மருமகன் -தேசிகர்

விஷ்ணு சித்தர் -அம்மாள் ஆச்சார்யன் -எங்கள் ஆழ்வான் எம்பெருமானார் சாதித்த திருநாமம் -மிக்க மூன்றில் ஒரு பங்கு ஸ்ரீ பாஷ்யம் இவரைக்கொண்டே நிகமனம் -விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் சாதித்தவர்–ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே  இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.-சித்திரை – ரோஹிணி-எங்கள் ஆழ்வான் திருநட்சத்திரம்
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:–
நடாதூர் அம்மாள் இவருக்கு சாத்தி அருளிய தனியன் –

ஸ்ருத்யந்த த்வயம் -உபய வேதாந்தம் -நடாதூர் ஆழ்வான் -வரத விஷ்ணு -நல்லான் அவர்களின் திருக் குமாரர்
இவர் திருக்குமாரர் -தேவராஜன் -இவருக்கு திருக்குமாரர் -நடாதூர் அம்மாள் –

எம்பெருமானார் 1017-1137
பிள்ளான் 1067 அவதாரமே
1097-எங்கள் ஆழ்வான் அவதாரம்
1113 நஞ்சீயர் -ஆயர் தேவு -எங்கள் ஆழ்வான் கேட்டதாக ஐதீகம்
நடதூர் அம்மாள் (கி.பி. 1165 – 1275)

இவருக்கு தேவப்பெருமாள் பிள்ளை -நான்முகன் -பேரன் -பெரும் தேவித் தாயார் -மாட்டுப்பெண்-

பிள்ளான் -குருகேஸ்வரர் -திருமலை நம்பியின் திருக்குமாரர் -எம்பெருமானார் அபிமானம் புத்திரர் –

கடாம்பு -கடத்தில் நீர் வைத்து பாகவத கைங்கர்யம் செய்த குலம் -மருவி கிடாம்பி -மடப்பிள்ளை மணம் கமழும் வம்சம்

பக்தி பிரபத்தி செய்ய அதிகாரம் இல்லாவிடில் ராமானுஜ சொன்னாலே போதும் -இவர் சாதித்து அருளினவர்

ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்ய கோடி விமானம் -பேர் அருளாளன் -வரதராஜன் -ஆச்சார்யராக பிறப்பித்து வளர்த்துக் கொடுத்த அருள் -சம்ப்ரதாயம் பரிபாலனம் -ஓம் நமோ நாராயணாய என்ற 3 பதத்தின் சாராம்சமாய் முறையே அநந்யார்ஹ சேஷத்வம், அனன்யார்ஹ சரணத்துவம், அனன்யார்ஹ போக்யத்துவம் என்ற மூன்று பண்புகளை கொண்ட தாயார். இந்த ஆச்சார்யர்கள் எல்லாம் அவள் கொடுத்து அருளியவள் –
என் தன் அளவல்ல யான் கொண்ட அன்பு –பக்தி வளர்த்து-பரிவாஹ ரூபமான ஸ்லோகங்கள் –

பிரபந்ந என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இதற்கு முழுமையான ‘சரணடைதல்’, ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள்

சமஸ்கிருதத்தில் பாரிஜாதா என்பது ‘வம்சாவளி’, ‘பிறந்தவர்’ அல்லது ‘முழு வளர்ச்சியடைந்தது’ போன்ற அர்த்தங்களை வழங்கலாம். ஆசிரியரே பின்னர் உரையில் இதை இவ்வாறு வரையறுக்கிறார்:

பிரபத்தி பற்றிய அசேஷ விஷயங்களையும் முழுமையாக சேகரித்து வைத்துக் அருளிய கிரந்தம் என்றவாறு-

400 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம்
சரணாகதி -சரணம் -ஆகதி -உபாயத்தை வரவைப்பது

அஹம் மத் ரக்ஷண பரோ மஹா ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதிரேவ இதி ஆத்மாநம் நிஷிபேத் புத்திர்
-1- -ந்யாஸ தஸகம்

—————-

ஸ்ரீயப்பதியாய் பரம காருணிகனாய் ஸகல கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ மன் நாராயணன் -தர்மங்களுக்குக் குறைவும் அதர்மங்களுக்கு விருத்தியும் உண்டாயிருக்கும் ப்ரதிஸமயங்களிலும் மத்ஸ்ய கூர்மாதி ரூபங்களாக அநேக அவதாரங்களை எடுத்து-துஷ்ட நிக்ரஹ -இஷ்ட பரிபாலாநாதிகளைச் செய்து தர்மங்களைக் நிலை நிறுத்தியது போலவே த்வாபர யுகத்திலும் கண்ணனாக அவதரித்து கம்சாதி துஷ்டர்களை நிரசித்தும் பாண்டவர்கள் போல்வாரை ரக்ஷித்தும் தர்மங்களைக் நிலைநாட்ட அர்ஜுனனை வ்யாஜமாக்கி கீதா சாஸ்திரத்தை வெளியிட்டு அருளி
அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால்

அதில் சாரதமமான சரம ஸ்லோகத்தினால் அல்ப ஞானம் உள்ள அஸ்மாதிகளும் உஜ்ஜீவனம் அடையும் பொருட்டு பிரபத்தி சாஸ்திரத்தை வெளியிட்டு அருளினான்
இது ஸர்வாதிகாரம்
ஒருக்கால் -ஸக்ருத் -பல பிரதம் -க்ஷண கால சாத்யம் -ஆகவே உயர்ந்த தவம் -கொண்டாடத்தக்கது
இருந்தாலும் மூடர்கள் அஞ்ஞானிகள் இழந்து சம்சாரத்திலேயே மக்நராகிறார்கள்
பின்பு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ரூபேண தானே அவதரித்து உபகரித்து அருளினான்

முதல் நான்கு ஸ்லோகங்கள் -நிர்விக்னமாக பிரபந்தம் அமைய ஆச்சார்ய பகவத் வந்தந ரூப மங்களா ஸாஸனம்-முதல் ஸ்லோகத்தால் தேஜஸ்விகளான ஆச்சார்யர்களை நம் மானஸ பத்மம் விகசிக்க திருவடிகளைப் பற்றுகிறார்

——————

1-பிரமாண பத்ததி (அவதரணிகா )

ஆச்சார்ய ஆரியமா பாதேப்யோ நமஸ்யா ததே
யதாஸங்க வஸாத் பும்ஸாம் மந பத்மம் ப்ரபுத்யதே
-1-

ஆச்சார்யர் திருவடிகளே அநேக ஸூர்ய துல்யம்
தேஜோ நிதி -பாவனத்வம் -பரப்ரகாஸத்வம் -வேதமயம் -பகவத் அதிஷ்டிதம் –

இத்தால் தமது குரு பரம்பரை
எங்கள் ஆழ்வான்
திருக்குருகைப் பிரான் பிள்ளான்
எம்பெருமானார்
பெரிய நம்பி
ஆளவந்தார்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
விஷ்வக்சேனர்
பெரிய பிராட்டிமார்
பெரிய பெருமாள் –
இவர்கள் திருவடித் தாமரைகளைப் பற்றுகிறார்

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –மிதுனமே உத்தேச்யம்

——————

அபங்குர கலா தான ஸ்தூல லஷ்யாத் வமீயுஷே
துங்காய மஹதே தஸ்மை துரங்காய முகே நம
-2—-ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரைப் பற்றுகிறார்

கீழே சஹஸ்ர ஸூர்ய துல்யம் -இங்கு பூர்ண சந்திர துல்யம் -உபாசகர்களுக்கு அழியாத நித்ய ப்ரஹ்ம வித்யையை அளிப்பவர் –

———–

லஷ்மீ சஷு அநு த்யாநாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே
நமோஸ்து மீந வபுஷே வேதவேதி விபன்முஷே —
3-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வந்தனம்

மத்ஸ்ய ஹம்ஸ ஹயக்ரீவ திரு வவதாரங்கள் -வேத உபதேசம்
ஏக சேஷித்வம் -ஸ்ரீயபதி –

மையார் கருங்கண்ணி –செய்யாள் -இடைவிடாமல் பார்த்துத் தியானித்து சாரூப்பியம் பெற்ற திருமேனி

மிகவும் அழகுள்ள -அஸி தீக்ஷணை -காருண்ய ஏக ப்ரத-திருக்கண்கள் போல் மத்ஸ்ய மூர்த்தி திவ்ய மங்கள விக்ரஹம் –கடாக்ஷத்தாலே போஷித்து அருளுபவர் -பிரமனுடைய ஆபத்தைப் போக்கி அருளியதற்கு மங்களா ஸாஸனம்

———–

ரஜோ ரஜஸ் பிரசமனம் –ப்ரபந்ந பாரிஜாதாக்ய ப்ரபந்தய யதாமஹே –4-

தொண்டர் அடிப் பொடிகளே ரஜஸ் குணங்களை ஒழித்து விபரீத அஞ்ஞானங்களைப் போக்கி அருளும் என்கிறார்-இதற்காகவே இந்தப் பிரபந்தம்

ப்ரபத்யே சதா பத யோகோ

ப்ரபன்னர்களுக்கு வேண்டிய அர்த்தங்களைத் தெளிவாக வழங்குவதால் இந்தத் திரு நாம

——————

பிரபத்தே மானஸ ஸுபாஹ்யம் ஸ்வரூபம் அதிகார் யபி |
ப்ரபந்நானாம் குரவ் வ்ருத்தி ஸ்ரீம்ஸே ஸூரிஷு சத்சு ச–5

விஹிதேஷு வ்யவஸ்தாநம் வர்ஜநீயம் பலம் ததா |
ஏதே தசார்த்தே கத்யந்தே த்ரயந்தாத்ய அர்த்த ஸங்க்ரஹாத் ||
–6-

இதில் வேதாந்த சாரமாக பத்து விஷயங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன –
1-திடமான வேத பிரமாணம் உள்ள பிரபத்தி -பிரமாண பத்ததி -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் உள்ள பிரமாணங்கள்
2-ப்ரபத்தியின் ஸ்வரூபம் –ஆர்த்த -திருப்த ப்ரபத்திகள் -அங்கங்கள்
3-அதிகாரி ஸ்வரூபம்
4-ப்ரபந்ந அதிகாரியின் ஆச்சார்யருக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
5- ப்ரபந்ந அதிகாரியின் ஸ்ரீயப்பதிக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்கள் -திருவாராதனம் –
6-ப்ரபந்ந அதிகாரியின் நித்ய முக்தர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
7-ப்ரபந்ந அதிகாரியின் பாகவதர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-என்னைப் போலாவாது நினைக்க வேண்டும் என்று அன்றோ அவன் வார்த்தை
8-ஸாஸ்த்ர விஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
9-ஸாஸ்த்ர நிஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
10-பல ஸ்வரூபம்

—————-

ஸ்ருத்தார்த்த மனனஸ் தேம்நே மம நேதரதா ஸ்ரம |
ஸோதவ்யம் அத்ர ஸ்கலிதம் ஸத்பிர் விஷய கௌரவாத்
||–7-

க்யாதி லாப பூஜார்த்தமாகச் செய்யப்பட வில்லை
தாம் பெற்ற உயர்ந்த ஆச்சார்ய உபதேசங்களின் சாரமே இப்பிரபந்தம்
குற்றம் குறைகளை பெரியோர் க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறார் இதில்

——————

ப்ரபத்தி தைத்திரீ யாணம் வேத தாவத் விதீயதே ।
ந்யாஸ அப்₄யாஸ ப்ரயோகோ ஹி வஸூரண்யே -தி மந்த்ரத
꞉ ॥ 8 ॥

தைத்ரிய உபநிஷத்தில் இந்தப் பிரபத்தி ந்யாஸம் என்ற பெயரையே யுடைத்ததாக வஸூ ரண்ய -என்று தொடங்கி ஓதப்படும் மந்திரத்தால் பிரயோகிக்கத் தக்கதாக விதிக்கப் படுகிறது –

தஸ்மாத் நியாஸம் ஏஷம் தபஸம் அதிரிக்தம் ஆஹுஹ்” – நியாஸம்
மற்ற வகை தவங்களை விட மேலானது – தைத்திரீய உபநிஷத்
ந்யாஸம் -ஒப்படைத்தல் -வைத்தல் -சரணமடைத்தல் -ஆத்மாவை பரமாத்வாவிடம் சமர்ப்பித்தல்அப்பியாசம் -திரும்ப திரும்ப சொல்வதல்

————

தத்ரோ பாஸ்யம் யதா ₂ ப்₃ரஹ்ம ஸர்வ காரண முச்யதே ।
ப்ரபத் தவ்யம் ததை வேதி விபு விஸ்வஶ்ருக்– இத்யபி
॥ 9 ॥

——————–

ஸூர்யாதிநாம் யதா பூர்வம் தேஜஸ்꞉ கல்பயிதா (அ) ஸி வசி ச ।வஸூவத்
ரமணீயோ (அ)ஸீத்யேவம் ப்₃ரஹ்ம கு₃ணை ஸ்துதிம்
॥ 10 ॥

இந்த இரண்டு ஸ்லோகங்களுக்குத் தாத்பர்யம் -அவ்வுபநிஷத்தில் ஸர்வ காரணமான பர ப்ரஹ்மம் உபாஸிக்கத் தக்கதாகச் சொல்லப்படுகிறது –
அப்படியே அப்ரஹமம் விபு என்றும் நீர் ப்ரபஞ்சங்களைப் படைக்கிறவர் என்றும் -ஸூர்யன் முதலிய தேஜஸ் பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்கும் போதும் உன்போலவே தேஜஸ் கொடுப்பவர் நீர் என்றும் -பொன் போல் அழகிய திருமேனியைக் யுடையவர் நீர் என்றும் -ஸ்துதிக்கப்பட்டதாய் அதுவே சரணம் அடையத்தக்கது என்றும் சொல்லப்படுகிறது –

———-

ஜீவாத்மாநம் ஹவிஸ் ꞉ க்ருத்வா தச் ச₂ரீரம் மஹீயஸி ।
“ப்₃ரஹ்மாக்₃நவ் ஜுஹுயாத்” ஓமித்யநேந ஆம்நாய ரூபிணம்
॥11॥

இஜ் ஜீவனை ஒரு ஹவிஸ்ஸாகப் பாவித்து இஜ் ஜீவர்களை சரீரமாக யுடைய பர ப்ரஹ்மமாகிற அக்னியில் வேத ரூபமான ஓம் என்னும் ப்ரணவத்தால் ஹோமம் செய்ய வேண்டும் –

த்வய ரூபிணம் –பாடபேதம்-இந்த ஸ்லோகம் இந்தப் பாட பேதத்துடன் பிரமாணமாக முமுஷுப்படி வியாக்யானத்திலும் உள்ளது

—————

இதி ப்ரபத்தே ராம்நாத ꞉ ப்ரயோக₃꞉ ப்ரணவாத்மநா ।
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித
꞉ || 12 ||

இப்படி பிரணவ ரூப மந்திரத்தால் பிரபத்தி பிரயோகிக்கத் தக்கதாக வேதத்தில் ஓதப்படுகின்றது -இப்படி பிரபத்தி செய்தவருடைய பிரபத்தியை ஓர் யாகமாகவும் அவர் சரீரத்தை அதற்கு சாதனமாகவும் அவ் வேதத்தில் காட்டப்பட்டு இருக்கின்றது –

மஹா நாராயண உபநிஷத்தில் உள்ள மந்த்ரம்
தஸ்யைவம் விது₃ஷோ யஜ்ஞ ஶரீரே தத்ர கல்பித -இப்படி ந்யாஸம் – பிரபத்தியை அறிந்தவன் -யஜமானனும் இவன் சரீரத்துடன் கூடியவன் -நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் -நெஞ்சு ஹோம குண்டம் -சாந்தி அடைவதே தக்ஷிணை -மனதே ப்ரமன்

உத்தேச் யத்வம் ஜநநி பஜதோ உஜ்ஜிதோபாதி கந்தம்
ப்ரத்யக் ரூபே ஹவிஷி யுவயோ ஏக சேஷித்வ யோகாத்
பத்மே பத்யுஸ் தவ ச நிகமை: நித்யமந் விஷ்யமாணோ
நாவச்சேதம் பஜதி மஹிமா நர்த்தயந் மாநஸம் ந:–6-

அன்னையே அரியும் நீயும் மருவியே யுரிமை கொள்ளும்
தன்மை சாலாவி யென்னும் அவி தரும் வேள்வி தன்னில்
பின்னையும் மறைகளோரும் மகிமையின் மிகைமை தேறும்
நன்மையே கொள்ளுமுள்ளக் களி நடம் புரிவர் நாமே. — (6)

[ஜநநி! அன்னையே! ;
பத்மே! – இலக்குமியே!;
ப்ரத்யக் ரூப – ஜீவாத்மாவாகிற;
ஹவிஷி – ஹோமம் செய்யப் பெறும் த்ரவ்யத்தில், ஆத்ம ஸமர்ப்பண யக்ஞத்தில்;
உஜ்ஜிதோபாதிகந்தம் – மற்றொரு வஸ்துவை இடையிடாமல் , நேராகவே;
உத்தேச் யத்வம் – ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ளுகிறபடியை;
பஜதோ – அடையா நின்ற;
யுவயோ – தேவரீர்கள் இருவருடைய;
ஏக சேஷித்வ யோகாத் – ஒரே சேஷியாயிருக்குந் தன்மை கொண்டு;
பத்யு: — தேவரீருடைய பர்த்தாவினுடையவும், பகவானுடையவும்;
தவச: — தேவரீருடையவும்;
நித்யம் – எப்பொழுதும்;
நிகமை –வேதங்களால்;
அந்விஷ்யமாண — தேடும்படிக்குள்ள;
மஹிமா – பெருமையானது;
ந: அடியோங்களுடைய;
மாநஸம் – மநத்தை;
நர்த்தயந் – ஆச்சர்யத்தால் ஆடச் செய்து கொண்டு;
அவச்சேதம் – இவ்வளவு என்று அளவிடப்படும் தன்மையை, பிரிவை, எல்லையை;
ந பஜதி – அடைகிறதில்லை.

தாயே! லக்ஷ்மியே! தேவரீரும் பகவானும் ஜீவாத்மாவாகிற ஹவிஸ்ஸைக் குறித்து ஒரே சேஷியாதலால் காரண சேஷமேயில்லாமல் நேராக உத்தேச்யம் ஆகிறீர்கள்.
வேதாந்தங்களும் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றதும், எங்கள் மனத்தைக் கொந்தளிக்கச் செய்கின்றதுமான தேவரீருடைய பெருமைக்கு எல்லையே இல்லை.]

————

ப்ரபத்திம் தபஸாம் ஏஷாம் ந்யாசாக்யா மாஹுருதமா꞉ ।
ஆம்நாதம் கட₂ வல்லீஷு ப்ரபத்தேர் வசகம் த்₃வயம்
॥ 13-

அவ்வுபநிஷத்தில் ஸத்ய வாக்கை முதலாகத் தொடங்கிச் சொல்லப்பட்டு இருக்கும் பதினோரு தவங்களிலும் இது மேலான உயர்ந்த தவமாக ஓதப் பட்டு இருக்கிறது -கடவல்லி என்னும் உபநிஷத்தில் த்வயம் என்னும் மஹா மந்த்ரம் இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்வதாகவும் ஓதப்படுகின்றது –

சேஷத்வ பலம் சரணாகதி -பரதந்த்ர்ய பலம் கைங்கர்யம்

————-

ப்ரமாணம் ஸூப₄க₃ம் ப்ராஹ ஶ்வேதாஶ்வர ஸம்ஹிதா ।
ப்ராஹ ச உப நிஷந் ந்யாஸே யதா ₂(அ)நுஷ்டா₂ந த₃ர்ஶிநீ ||
14-

இப்பிரபத்திக்கு ஸ்வேதர உபநிஷத்தை சிறந்த ப்ரமாணமாகச் சொல்லுகிறார்கள் -இப்பிரபத்தியின் அனுஷ்டான க்ர மத்தைக் காட்டும் இவ்வுபநிஷத் கீழ் சொல்லியபடி ஓதுகிறது

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்

—————-

ப்₃ரஹ்மாணம் விததா₄த் யக்₃ரே ” “யஸ் தஸ்மை தி₃ஶதி ” ஶ்ருதி ꞉ ।
ஆத்ம ஜ்ஞாந ப்ரஸா தார்தம் முமுக்ஷு꞉ஶரணம் வ்ரஜேத் ॥ 15 ॥

யாதொரு பகவான் ஆதி காலத்தில் பிரமனைப் படைத்து அவருக்கு வேதங்களைக் கொடுக்கிறாரோ அந்தப்
பகவானை ப்ரஹ்ம ஞானம் பெறுவதற்காக சரணம் அடைய வேண்டும் –

———————-

அபி வத்₄யம் ப்ரபந்நம் ந ப்ரயச்ச₂ந்தி ” ஏவ மாதி₃கா꞉ ।
ப₃ஹவ ꞉ஶ்ருதயோ மாநம், ஶ்ரீ ஶாஸ்த்ரே ப₄க₃வாநபி || 16 |

—————–

ஶ்ரீமந் நாராயணாய ” இதி ப்₃ரஹ்மணே த்₃வய முக்தவான் ।
லக்ஷ்மீ தந்த்நர கமலயா ஶக்ராயைவ ப்ரபஞ்சிதம் ॥
17 ॥

கீழ் இரண்டு ஸ்லோகங்களின் தாத்பர்யம் –
சரணம் அடைந்தவன் ஒருவன் மரண தண்டனை கொடுக்கத் தக்கவனாக இருந்த போதிலும் அவனைக் கைவிடக்கூடாது என்றும் இவை முதலாக அநேக ஸ்ருதிகள் இப்பிரபத்திக்கு பிரமாணங்களாக இருக்கின்றன –
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்திலும் பகவான் இந்தப் பிரபத்தி மந்திரமான ஸ்ரீமன் நாராயண என்றும் தொடங்கிய த்வயம் என்னும் மந்த்ரத்தை ப்ரம தேவனுக்கு உபதேசிக்கிறார்
லஷ்மி தந்த்ரத்திலும் பெரிய பிராட்டியார் தேவேந்திரனுக்கு இவ்வாறு வெளியிட்டு அருளி உள்ளார் –

கிருஷ்ண யஜுர் வதம் 6-5-6-பிரமாணம் -ருத்ரன் ஆதித்யன் -ஜ்யோதிர் தேவதா மன்னித்து விட்ட விருத்தாந்தம்
நத்யஜேயம் கதஞ்சன போல் இங்கும்

————

ததா₂ஸநத் குமாரஸ்ய ஸம்ஹிதா வக்தி ஸாத₃ரம் |
ப்ரபத்திம் ஸர்வ ப₂லதா₃ம் ஸர்வ உபாய அநபேக்ஷணீம் ॥
18 ॥

அப்படியே ஸநத்குமார ஸம்ஹிதையும் இப்பிரபத்தி ஸர்வ பலன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் மற்ற ஸாதனங்களில் எதையும் இப்பிரபத்தி துணையாக வேண்டுவது இல்லை என்றும் சொல்கின்றது –

அடுத்த 5 ஸ்லோகங்கள் லஷ்மீ தந்திரத்தில் பிராட்டி அருளிச் செய்தவை
உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் அவனை பொறுக்கும்
இது மற்ற ஒன்றையும் பொறுக்காது

—————

ப்ரபத்தே ꞉ க்வசித் ₃அப்யேவம் பரா பேக்ஷா ந வித்₃யதே ।
ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா₃ ॥
19 ॥

இப்பிரபத்திக்கு ஒருக்காலும் வேறொரு துணை வேண்டியது இல்லை -எவர் எவர்கள் எந்த எந்த சமயங்களில் எந்த எந்த பலன்களைக் கோறு கின்றனரோ அவர் அவர்களுக்கு அந்த அந்தப் பயன்களைக் கொடுக்கும்

——–

ஸக்ருத் உ₃ச்சாரிதா ஹ்யேவ தஸ்ய ஸம்ஸார நாஸிநீ ।
ராக்ஷஸா நாம விஸ்த்ரம்பா₄த் ஆஞ்ஜநேயஸ்ய ப₃ந்த₄நே
॥ 20 ॥

————-

யதா ₂ விக₃லிதா ஸத்₃ய: அமோகா₄(அ)ப்யஸ்த்ர ப₃ந்த₄நா ।
ததா ₂ பும்ஸாம விஶ்வாஸாத் ப்ரபத்தி ꞉ ப்ரச்யுதா ப
₄வேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி ஒருக்கால் அனுஷ்டித்த அளவிலே அவர்களின் பாபங்களைப் போக்கி விடும் -ஆஞ்சநேயரை ராக்ஷஸ குமாரன் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டின போது அங்குள்ள ராக்ஷஸர்கள் அவ்வஸ்திரத்தை நம்பாமல் கயிறுகளினால் கட்ட அப்ரஹ்மாஸ்திரம் நழுவினது போல் இப்பிரபத்தியை அனுஷ்டிக்குமவர்களும் இதை நம்பார்களாகில் இப்பிரபத்தி நிஷ்பலமாய் விடும் –ஆகையால் இதை நம்புவர்களுக்கே இது மோக்ஷத்தைக் கொடுக்கும் –

———

தஸ்மாத்₃ விஸ்ரம்ப₄ யுக்தாநாம் முக்திம் தா₃ஸ்யதி ஸா (அ)சிராத் ।
ஸாதநாந்தர யுக்தாநாம் ப்ரபத்தி ꞉ஸ்வயமேவ வா ॥
22 ॥

இப்பிரபத்தி மோக்ஷத்தை விரும்புபவர்களுக்கு உபாயாந்தரமான பக்தி யோகத்துடன் சேர்ந்தும் தனித்தும் அனுஷ்டிப்பதனால் மோக்ஷத்தைக் கொடுக்கும் –
அதாவது பிரணவம் வேறொரு மந்திரத்துடன் சேர்ந்தும் தனித்தும் செய்கிறவர்களுக்கு அதன் பலத்தைக் கொடுப்பது போலாகும் -கீதையில் அங்க பிரபத்தி -பக்திக்கு அங்கம்
ரஹஸ்ய த்ரயத்தில் -தனித்தே உபாயம்-

————-

ஸாதயேத் முக்தி காமாநாம் விமுக்திம் ப்ரணவோ யதா ₂ ।
யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் வ்யக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே
॥ 23 ॥

————-

இதர உபாயதவ் ₃ஷ்கர்யாத் அதி ₄காராத் இஹாந்த ꞉|
உபாயமிஹ வக்ஷ்யாமி ப்ரபத்திம் ஸார்வ லௌகிகம் ॥ 24

கர்மயோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை அனுஷ்டிப்பவருக்கு சக்தி இல்லாமையாலும் அதிகாரம் இல்லாமையாலும்
சர்வருக்கும் ஸூலபமுமாய் அனுஷ்ட்டிக்கத் தக்க மோக்ஷ உபாயமாகவும் ப்ரபத்தியைச் சொல்லுகிறோம் என்று பகவத் ஸாஸ்திரத்தில் பகவான் விஷ்வக்சேனருக்கு எவ்வாறு உபதேசித்தாரோ அவற்றைச் சொல்லுகிறோம் –

———–

கால தோஷாந் மநுஷ்யாணாம் மநஶ் சாஞ்சல்ய யோக₃த் ꞉ ।
விஷயேந்த்₃ரிய ஸம் யோகா₃த் நிஷித்₃த ₄கரணாத ₃பி ॥ 25

————

விஹிதா (அ)கரணாந் நாபி ஜேதும் ஶக்யா க₃ணாதி ₄ப ! |
இந்த்₃ரியாண் இந்த்₃ரியார்தே ₂ப்₄ய꞉ ந்ருணாம் கால ஸ்வ பாவத₄ ꞉ || 26

இக்காலத்தில் கலி தோஷத்தினாலும் -மனஸ் ஓர் இடத்தில் நிலை பெறாமையாலும் -விஷய அனுபவம் செய்வதாலும் –சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்யாமையாலும் -கால ஸ்வபாவத்தினாலும் மனிதர்களுக்கு விஷயங்களும் இந்திரியங்களும் ஜெயிக்க முடியாதவையாயே இருக்கின்றன –

———–

தஸ்மாத் து கர்ம யோகே ₃(அ)ஸ்மின் ந அதிகாரோ ஹி வித்₃யதே ।
விஹிதேஷு ச ஸர்வேஷு தத் அபா₄வாந் மஹா முநே ! ॥ 27 ॥

ஆகையால் சிலர்கள் இந்திரியங்களை ஜெயிக்க அசக்தர்களாய் இருப்பதாலும் -சிலர்கள் வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க ஸாஸ்திரங்களில் அதிகாரம் இல்லாதவர்களாக இருப்பதாலும் -எல்லோரும் கர்ம யோகத்தில் அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்

—————

ஜ்ஞாந யோகே₃ஷ்வ பி₄ரதி ꞉ கஸ்யசித்₃ வித்₃யதே ந ச |
தத் அ₃பா₄வாந் மயி ப்ரீதி ꞉ ந ச ப₄க்திஶ்ச ஜாயதே ॥ 28 ॥

அப்படியே ஞான யோகத்திலும் எவர்களுக்கும் ஆசை உண்டாகிறது இல்லை -ஞானம் இல்லாமையால் என்னிடத்தில் -ஸ்நேஹமாவது -பக்தியாவது -உண்டாகிறது இல்லை -ஆகையால் பக்தி யோகத்திலாவது ஞானம் யோகத்திலாவது எவருக்கும் அதிகாரம் இல்லை –

லஷ்மணன் பெருமாள் இடம் பக்தன்
சக்ரவர்த்தி பெருமாள் இடம் ஸ்நேஹம்

————-

தஸ்மாந் ந கர்ம யோகே ₃(அ)ஸ்மின் நாதி ₄காரோ ந ஸாந்யதா ₂
। தஸ்மாந் மத் பாத ₃யுக₃லம் ஐகாந்த் யாச் ச₂ரணம் வ்ரஜேத்
॥29॥

—————

ஆத்மநோ து₃ர்த₃ஶா பத்திம் விம்ருஶ்ய ச கு₃ணாந்மம ।
மத் ₃ஏக உபாய ஸம் ஸித்தி : மாம் ப்ரபந்நோ விமுச்யதே ॥ 30 ॥

ஆகையால் தனக்கு இவ்வாறு நேர்ந்திருக்கும் துர்த்தசைகளையும் இவ்வாறு அகதிகளாய் இருக்கும் அவர்களை ரக்ஷிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் என்னுடைய தயை முதலிய ஸத் குணங்களையும் நன்றாக யோஜித்து என் திருவடிகளையே ஒரே நிச்சயம் யுடையவனாய் சரணம் அடைய வேண்டும் –என்னை ஒருவனையே சரணம் அடைந்தவர் இந்த ஸம்ஸாரக் கிலேசங்களில் நின்றும் விடுவிக்கப் படுவார்கள்

புகல் ஒன்றுமே இல்லாத துர்த்தசை
ஆறு எனக்கு பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்

——————

ஆநு கூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸோ கோ₃ப்த்ருத்வ வரணம் ததா ₂ ॥ 31 ॥

—————-

ஆத்ம நிஷேப கார்பண்யே ஷட்₃ விதா ₄ஶரணாக₃தி ꞉ ।
அந்யா ச ப்ரபத்த்யா மாம் ஆகிஞ்சந்ய ஏக பூர்வகம்
॥ 32॥

பகவானுக்கு அனுகூலனாய் வர்த்திப்பதும் -பகவானுக்கு பிரதிகூலமான செயல்களை விடுவதும் -பகவான் நம்மைக் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்று நம்புவதும் -அவனையே தன்னை ரக்ஷகனாக கோறுவதும் -தன் ஆத்மாவை அவனிடம் சமர்ப்பணம் செய்தும் -தான் போக்கற்ற நிலையில் இருப்பதை நினைத்து இருப்பதுமாகிய -இவ்வாறும் சரணாகதி என்று சொல்லப்படும் –
இங்கு சொல்லப்பட்ட ஆனுகூல்ய சங்கல்பம் முதலிய ஐந்து அங்கங்களோடு கூடிய ஆத்ம நிஷேபமே ப்ரபத்தியாக கீழே சொல்லப்படுவது இவ்வங்கங்கள் பிரதானங்கள் என்று தோற்றுகைக்காக –

———–

மாம் மாதவ இதி ஜ்ஞாத்வா மாம் க₃ச்சே₂ச் ச₂ரணம் நர꞉ ।
ஏவம் மாம் ஶரணம் க₃ச்ச₂ன் க்ருத க்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 33 ॥

பிரபத்தி செய்யும் ஒருவர் என்னை ஸ்ரீ யப்பத்தி என்றும் அறிந்து நாம் வேறொரு கதி இல்லாமல் இருக்கிறோம் என்றும் எண்ணத்தை முன்னிட்டு மேல் சொல்லிய ப்ரபத்தியினால் என்னை சரணம் அடைய வேண்டும் என்று பகவான் அருளிச் செய்தார் –

23 ஸ்லோகம் தொடங்கி இது வரை விஷ்வக் சேனருக்கு பகவான் பஞ்ச ராத்ர சாஸ்திரத்தில் உபதேசம்

—————

ராமாயணே ச ப₄க₃வான் பா₄ரதே ச யது₃க்தவான் ।
“ஸக்ரு தேவ ப்ரபந்நாய தபா₃ஸ்மீதி ச யாசதே ॥
அப₄யம் ஸர்வ பூ₄தேப்₄யோ ததாம் ஏதத் விரதம் மம
॥34-

இவ்வாறு என்னை சரணம் அடைந்தவர் க்ருதக்ருத்யராய் விடுவர் -இதை ஸ்ரீ ராமாயணத்திலும் ஸ்ரீ மஹா பாரதத்திலும் பகவானே அருளிச் செய்துள்ளார் –

என்னிடத்தில் ஒருக்கால் பிரபத்தி செய்தவருக்கு ஸர்வ பூதங்களில் இருந்தும் பயம் இல்லாமையைக் கொடுக்கிறேன் -இப்படி ப்ரபன்னர்களுக்கு அபய ப்ரதானம் அளிப்பது என்னுடைய விக்ரஹம்

———-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஶரணம் வ்ரஜ ।
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ” ॥ 35 ॥

மோக்ஷ சாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மயோகம் முதலிய ப்ரவ்ருத்தி தர்மங்களையும் -பலசாதனங்களாக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் ஸர்வ கர்மங்களையும் விட்டு என்னையே ஒருவனையே ரக்ஷகனாக சரணம் அடைய வேண்டும் -மோக்ஷ சாதனமாக அனுஷ்ட்டிக்க வேண்டிய துராசையை விடுவதே வேண்டும் -பிரபதிக்கு சஹகாரியாக நினைத்து மற்ற கர்மங்களையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்-இப்படிச் செய்த ப்ரபன்னனுக்கு அனைத்தும் பாபங்களையும் பிரதிபந்தகங்களையும் நானே போக்கி அருளுகிறேன் -இவற்றைப் பற்றித் துக்கம் பட வேண்டாமே

———-

வரதா₃நாத் வசிஷ்ட₂ஸ்ய தேவதா பாரமார்த்₂ய வித் ।
பராஶர꞉ ப்ரணி ஜகௌ₃ புராணே வைஷ்ணவே ததா ₂ || 36 |
|

வசிஷ்ட மஹரிஷியின் அருளாலே -வரபலத்தினால் -பரதத்வம் பற்றி அனைத்தையுமே உள்ளபடி அறிந்த பராசர முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பிரபத்தியின் மஹாத்ம்யத்தை அருளிச் செய்துள்ளார்

வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் சுகர் -பரம்பரை

————

தாவ தார்த்திஸ் ததா ₃ வாஞ்சா₂ தாவந் மோஹ꞉ ததா ₃(அ)ஸூக₂ம் ।
யாவந்ந யாதி சரணம் த்வாம் அசேஷாக₄நாஸநம் ॥ 37 ॥

யாவன் ஒருவன் ஸர்வ பாபங்களையும் நாசம் செய்து அருளும் உம்மை சரணம் அடையவில்லையோ அப்பொழுது அவனுக்குப் பீடைகளும் வீணாசையும் கொடு மோஹமும் கஷ்டமும் உண்டாகும் என்கிறார் பராசரர் –

ஆர்த்தி -வாஞ்சை -மோஹம் -ஸூகம் -நான்கும் இருக்கும்
அதுவரை துடிப்பு -இழந்த ஐஸ்வர்யம் கிடைக்க -சரணாகதி பண்ணினதும் போகும்
வாஞ்சை -விருப்பம் -புதிய சொத்து -அர்த்தார்த்தி -கீதை -இவன் இரண்டாம் அதிகாரி
மோஹம் -ஜிஜ்ஜாசூ -கைவல்யார்த்தி -மயக்கம்
சுகம் -ஐஸ்வர்ய கைவல்ய அனுபவம் சுகம் -தன்மையும் போகும் அன்றோ

——–

கமல நயந வாஸூ தேவ விஷ்ணோ தரணிதர அச்யுத ஶங்க₂சக்ரபாணே ।
ப₄வ ஶரணமி தீரயந்தி யே வை த்யஜ ப₄ட தூ₃ர தரேண ॥ 38 ॥

தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவரே -வாஸூ தேவரே –விஷ்ணுவே-பூமியைத் தரிப்பவரே -ஆஸ்ரிதரை நழுவ விடாத அச்யுதனே –திருக்கைகளில் திரு வாழி திருச் சங்குகளை யுடையவரே -உம்மையே ரக்ஷகராக கைவிட எவர் சரணம் அடைகிறார்களோ -அவர்களை பாபங்கள் தீண்டாமல் செய்து அருளி யமபடர்களை அவர்களை வெகு தூரத்திலே இருந்து விட்டுவிட வேண்டும் என்றும் ஆணையும் செய்து அருளுகிறாயே

அஜாமிளா உபாக்யானம் -ஸ்ரீ மத் பாகவதம் -நாராயணா கூப்பிட்டதும் -யமபடர் -தூரம் போன வ்ருத்தாந்தம் -என் பேரைச் சொன்னாய்-அடையாளம் -சங்கேதம் -பரிஹாஸம் -எதற்காக சொன்னாலும் அசேஷ குற்றங்கள் இல்லாமல் போக்கும் அன்றோ -பரிகார மது ஸூதன ப்ரபந்நான் -செவிக்கு இறைஞ்சி சாதுவராய் போம் என்றான் -நமன் தமரால் ஆராயப்படார் அன்றோ

———-

மநுரப்யாஹ ப₄க₃வான் கூ₃ட₄ம் ஸந்யாஸ வைபவம் ।
அர்சா நாராயணஸ்யேதி ப்₃ருவன் வர்ணாஶ்ரம க்ரியா꞉
॥ 39 ॥

அர்சா நாராயணஸ்-என்று பகவானுடைய ஆராதனத்தைச் சொல்லத் தொடங்கிய மனுவும் இப்பிரபத்தியின் வைபவத்தை சமத்காரமாக அருளிச் செய்துள்ளார்

ஸந்யாஸம் -சரணாகதி -பிரபத்தி -பர்யாயம்

—————

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்த வைஷ ஹ்ருதி ₃ஸ்தித₂ ꞉ ।
தேந சேத விவாத ₃ஸ்தேமா க₃ங்கா₃ம் மா குரூன் க₃ம꞉ ॥ 40 ॥

ஸர்வ பிராணிகளுக்கும் அந்தர்யாமியாகவும் -ஸூர்ய மண்டலத்தில் மத்யவர்த்தியாயும் சர்வாதிகாராயும் இருக்கும் பகவான் உன்னுடைய ஹ்ருதயத்தில் வஸிக்கிறார் -அவருடன் உனக்கு-வழக்கு இல்லாமல் -அத்வேஷம் மாத்திரமே -விலக்காமை ஒன்றே -இருந்தால் -நீ நற்கதிகளைப் பெறுவதற்கு கங்கா தீர்த்த யாத்ரைக்கோ குருஷேத்ர திவ்ய தேச யாத்ரைக்கோ போக வேண்டாமே என்று உபதேசிக்கிறார் –

கங்கை கங்கை வாசகத்தால் கடுவினை களையலாமே
யம -நியமிப்பவர்உள்ளும் புறமும் நியமிப்பவர் -ஸூர்ய மண்டத்தில் இருப்பவர் அவரே அரசன் -ஒத்துண்டாலும் ஒத்துக் கொள்ளா விட்டாலும் கங்கா ஸ்நானம் வேண்டாம்கங்கை நீர் குடைந்தாடும் வேட்க்கை என்னாவதே -திருமாலை -இதன் தமிழ் ஆக்கம்நமன் வேறு கொண்டு தம்முள் வைத்திடாமையால் -விலக்காமல் -என்னுடையவன் என்று கொண்டால் யமபடர் தீண்டார்கள் அன்றோ

———–

த₃க்ஷிணா ஶாபதே ரத்ர ந முக்₂யாஹ்ரு ₃யஸ்தி ₂ திஸ் ꞉ ।
அந்த ꞉ ப்ர விஷ்ட꞉ஶாஸ்தா யோ ஜநாநாம் யமயத்யபி ॥
41 ॥

யம –தெற்கு திக்கு அதிபதி நமனை இங்கு சொல்ல வில்லை
வியாபித்து உள்ளும் புகுந்து நியமிக்கும் ப்ரஹ்மத்தை சொன்னவாறு -எங்கும் உளன் கண்ணன்

————-

ஆத்மாந மந்தரஸ் தஸ்ய ம்ருத்யுர் ம்ருத்யோ ꞉ஹ்ருதி ₃ஸ்தி₂த ꞉ ।
தேந ஸர்வாதி ₄ராஜேந விவஸ்வத்₃பி₃ம்ப₃ வர்தி நா ॥ 4
2 ॥

ஸர்வ பிராணிகளின் உள்ளே புகுந்து நியமிப்பவன் –ஆத்மாவைப் அறிய ஒண்ணாதவன் -மிருத்யுவுக்கும் மிருத்யுவானவன் -அவனுடன் வழக்கு இல்லாமல் இருப்பதாவது அவனிடம் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவதே

———–

அவி வாத₃ஸ்து தஸ்யைவ பாத ₃யோராத்மநோ(அ)ர்பணம்।
யோந்யதா ₂ஸந்த மாத்மாநம் அந்யதா ₂ ப்ரதி பத்₃யதே ।
கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா ॥43||

ஆத்மா ஸ்வ தந்த்ரன் என்றும் நினைத்து செயல்படுபவன் -பிறர் நன் பொருளை அபஹரிப்பவன் -ஸர்வ பாபங்களையும் செய்தவன் ஆகிறான்

———-

தஸ்மாத் ஸர்வ நியந்தாரம் ஸர்வேஷாம் ச ஹ்ருதி ₃ஸ்தி₂ தடம் ।
ப₄க₃வந்தம் ப்ரபந்நா யே தீர்தா₂தி ₃: தை : விஶுத்₃ த₄யதி ॥ 44 ॥

ஆகையால் ஸர்வ நியாமகனாய் ஸர்வ அந்தர்யாமியாக இருக்கும் பகவானை எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் புண்ய தீர்த்தங்களையும் மிக்க பாவநமாக ஆக்கி விடுகிறார்கள்

பாத தூளி பெறுவதால் பாவனம் பெறுகிறோம் அன்றோ

————-

அர்தோ ₂(அ)யம் ப₃ஹுஶ꞉ ப்ரோக்தோ சவ்நகாத்₃யைர் மஹர் ஷிபி₄꞉ ।
“தாவத்₃க₃ச்சே₂த் து தீர்தா₂ நி ஸரிதஶ்ச சராம்ஸி ச ।
யாவந்நா பூ₄ச்ச பூ₄பால ! விஷ்ணு ப₄க்தி பரம் மந
꞉ ॥ 45 ॥

————-

ப₄வத்₃ விதா₄ பா₄க₃வதா ꞉ தீர்த ₂பூ₄தா ꞉ஸ்வயம் ப்ரபோ ₄ ! |
தீர்தி ₂குர் வந்தி தீர்தா ₂ நி ஸ்வாந்த ꞉ஸ்தேந க₃தா ₃ப்₄ருதா ॥ 46 ||

கதாதரன் -கயாவில் உள்ள பெருமாள் -இவரிடம் சரணாகதி அடைந்தவர்கள் தீர்த்த நதிகளையும் பாவனமாக்கும்-துலா மாச – -கங்கையில் புனிதமாகிய காவேரியில் வந்து-புனிதத்தன்மை பெருகும் தீர்த்த நதிகள் –

———-

ப்ரமாணமியதே ₃ வாலம் ப்ரபத்தே ꞉ வ்யாஸ சவ்நகவ் ।
பரோக்த வந்தவ் யதா ₂ஶ்ரீமத்₃ விஷ்ணு த₄ர்மே ச பா₄ரதே ॥ 47 ॥

இவ்வர்த்தம் சவுனாக மஹரிஷிகளாலும் சொல்லப்படுகின்றது -இதுவரையில் உமது மனம் விஷ்ணு பக்தியைப் பெற வில்லையோ அதுவரை புண்ய தீர்த்தங்களில் நீராட வேண்டும் -பக்திமான் களாகில் வேண்டாம் என்றும் கருத்து –

பாகவதர்கள் புண்ய தீர்த்தங்களாகிறார்கள்-அவர்கள் திரு உள்ளத்தில் தியானித்து இருக்கும் பகவானாலேயே தீர்த்தங்களையே பாவனமாக்கி அருள்கிறார்கள் –

மேலும் விஷ்ணு தர்மத்திலும் மஹா பாரதத்திலும் பல பிரமாணங்கள் உள்ளன

————–

வ்ருதை ₂ வப₄ வதோ யாதா பூ₄யஸீ ஜந்ம ஸந்ததி ꞉ ।
தஸ்யாமந்ய தமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ॥ 48 ॥

உனக்கு வீணாக அநேக ஜென்மங்கள் கழிந்தன -அவற்றுள் இதுவும் ஒரு ஜென்மமாகி விடும் என்றும் அறிந்து நீ பகவானை சரணம் அடையக் கடவாய்-

———–

அத ₂ பாதக பீ₄தஸ் த்வம் ஸர்வ பா₄வேந பா₄ரத |
விமுக்தாந்ய ஸமாரம் போ ₄ நாராயண பரோ ப₄ வ ॥ 49 ॥

தர்ம ராஜனே நீர் பாதகங்களில் நின்றும் பயந்தீராகில் எல்லாமே பிரயத்தனங்களையும் விட்டு ஸ்ரீ மன் நாராயணனையே பராயணமாகப் பற்றிப் போர வேண்டும் –

——

ப்ரத₂ம- ப்ரமாண பத்₃ததி ஸம்பூர்ணம்

————–

அத -த்வதீய -ஸ்வரூப பத்ததி

பு₃த்₃திர் ₄அத்₄யவஸா யாத்மா யாச்நா பர்யவஸாயிநீ ।
ப்ராப்யேச்சோ ₂ரநுபாயஸ்ய ப்ரபத்தே ரூபமுச்யதே ॥ 1 ॥

ஒரு பேற்றைப் பெறுவதற்கு வேறொரு கதி இல்லாமல் இருக்கும் ஒருவர் தம் இஷ்ட தேவதையை உத்தேசித்து திருட அத்யவசாயத்துடன் அப்பேற்றைப் பெறுவதற்கு அவர் செய்யும் பிரார்த்தனா ரூபமான தியானமே ப்ரபத்தியின் ஸ்வரூபம் –

பிரபத்தி -சரணாகதி இரண்டும் ஸ்த்ரீ லிங்கம்–யாசகம் -பிச்சை -இங்கு ஸ்த்ரீ லிங்கம் யாச்-ஞா -பிரபத்தி பிச்சை போல் தானே -நீதான் கொடுக்க வேண்டும் இவரே உபாயமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் -இதுவே பிரபத்திபிரபத்தி -சாமான்ய சப்தம் -சரணாகதி -விசேஷ சப்தம் -பிரபத்தி முத்தி சரணாகதி ஆகும் -பால் பால்கோவா ஆவது போல்பகவத் விஷய த்யானம் -அன்புடன் கூடிய ஞானம் பக்தி யாவது போல்

———————

அநந்ய ஸாத்யே ₄ஸ்வ அபீ₄ஷ்டே மஹா விஶ்வாஸ பூர்வகம் ।
தத் ஏக உபாய தாயாச் நா ப்ரபத்தி ꞉ஶரணாகதி ꞉
” ॥ 2 ॥

வேறொரு உபாயங்களால் பெறுவதற்கு அஸக்யமாய் இருப்பது ஒரு -தான் கோறிய பயனைப் பெறுவதற்கு மஹா விவாசத்தை முன்னிட்டு பகவான் ஒருவனையே உபாயமாகக் கோலி பிரார்த்திப்பது பிரபத்தி யாகும் -அதுவே சரணாகதி எனப்படுகிறது –

இங்கும் யாச்நா -யாசகம் –

விஸ்வ சேந சம்ஹிதை பிரமாணம் இது

————-

ஶரணாக₃தி ஶப்₃தேந ₃ப்ரபத்திஸ் து விஸேஷிதா ।
ப்ரபத்திம் ஸம் ஶ்ரயேத்₃ப₄க்த்யா ஶரணாக₃தி லக்ஷணம் ॥ 3 ॥

இங்கு பிரபத்தி சரணாகதியால் விசேஷிக்கப்பட்டு இருப்பதால் ப்ரபத்தியை சரணாகதியுடன் கூடிய பக்தியுடன் அனுஷ்ட்டிக்க வேண்டும் -தான் கோறிய பலனைக் கொடுக்கும் சுமையை பகவானிடம் சுமத்தும் பர சமர்ப்பணமே சரணாகதி யாகம் –

————-

இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா விஷ்வக்ஸேநாயா ஸாத₃ரம்।
ஆர்த்த ப்ரபத்திரித்யுக்தா ஸைஷா பஞ்சாங்க₃ ஸம்யுதா ॥ 4

இந்தப்பிரபத்தியை பகவான் விஷ்வக்சேனருக்கு ஆதரத்துடன் உபதேசித்து அருளி உள்ளார் -ஐந்து அங்கங்களோடு கூடிய இப்பிரபத்தி ஆர்த்த பிரபத்தி ஆகும்

———–

அஹம் அஸ்ம்யபராதாநாம் ஆலயோ (அ)கிஞ்சநோ (அ)க₃தி ꞉ ।
த்வமேவ உபாய பூ₄தோ மே பவதி ₄ ப்ரார்த₂நாமதி ꞉ ॥ 5 ॥

நான் அபராதங்களுக்கு எல்லாமே இருப்பிடம் -சக்தி இல்லாதவன் -அகதியாகவும் இருக்கிறேன் -ஆகையால் எனக்கு நீரே உபாயமாக வேண்டும் என்றும் பகவானைப் பிரார்த்திப்பதே சரணாகதி என்று சொல்லப்படும் -இச்சரணாகதி பகவான் இடத்தில் மட்டுமே செய்யத்தக்கது –

அஹிர் புத்த்ய சம்ஹிதை

உபாயமாக ஆனவனாக இரு என்று பிரார்த்திக்க வேண்டும் -அவர் எப்பொழுதும் உபாயம் உயயம் -தத்தம் ஸ்வரூபமே இது -நாம் இசைவதே வேண்டுவது -ப்ராப்யமாக இயற்க்கை -நமது மாட்டாமையால் பாயமாக்குகிறோம் கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம்
சேஷ புதன் -சேஷத்வம் இசைந்து -கைங்கர்யம் செய்ய வேண்டுமே

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

——–

ஶரணா₃தி ரித்யுக்தா ஸா தேவே (அ)ஸ்மின் ப்ரயுஜ்யதாம் ।
ஆத்மநோ து₃ர்த₃ஶாபத்திம் விம்ருஶ்ய ச ஹரேர் கு₃ணான்॥ 6 ॥

பிரபத்தி செய்ய வேண்டும் ஒருவன் தான் அகதியாய் இருப்பதால் உண்டான துர்தசையையும் -அகதிகளை ரக்ஷிப்பதற்குப் போந்தவைகளான பகவானுடைய கல்யாண குணங்களையும் நன்றாக யோசித்து பகவான் ஒருவனையே உபாயமாக அறிந்து அவனையே சரணம் அடைகிறவன் சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுகிறான் –

மநோ பாவம் வேறே -புத்தி உறுதி வேறே-

———-

தத் ஏக உபாய ஸம் ஸித்தி ꞉ தம் ப்ரபந்நோ விமுச்யதே ।
வாக்யேஷ் வேதேஷு பஞ்சாங்கா₃ ப்ரபத்திர் லக்ஷ்யதே யதா ₂ ॥ 7 ॥

—————

நிஷேபா பரபர்யாயோ ந்யாஸ ꞉ பஞ்சாங்க₃ லக்ஷண : ।
ஸந்யாயஸஸ் த்யாக₃ இத் யுக்தா ꞉ஶரணா க₃தி ரித்யபி ॥ 8 ॥

மேல் சொல்லிய வாக்யங்களினால் ஐந்து அங்கங்களோடு கூடிய பிரபத்தி காட்டப்படுகின்றது -இப்பிரபத்தியே நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் பஞ்சாங்க லக்ஷணம் என்றும் சன்யாசம் என்றும் த்யாஜ்யம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்படுகின்றது –

ப்ராப்யத்தில் இச்சை முதலில் வேண்டும்
உபாயம் தேடி-மற்றவற்றை எல்லாம் சவாசனமாக விட்டு – அவனே உபாயம் என்ற மஹா விசுவாசமும் வேண்டுமே-அவனையும் பிரார்த்திக்கவும் வேண்டுமே

நிஷேபம் -ந்யாஸம் -ஸந்யாஸம் -தியாகம் -சரணாகதி -பிரபத்தி பர்யாயம்
நிஷேபம்-சமர்ப்பித்தல் -ந்யாஸம்-வைத்தல்-ஸந்யாஸம்-நன்கு விட்டு விடுத்த, தியாகம்-தொலைத்தல் -சரணம் ஆகதி

பிரபத்தி -உபாய வர்ணம் -ப்ரபன்னனுக்கு விசேஷணம் இது -தாண்ட ஆசை உள்ளதால் ஓடம் ஏறுவது போல் அதிகாரி விசேஷணம் இது -ஸ்ரீ யபதியே உபாயம் என்று -வரித்து -பற்றும் பற்றும் உபாயம் அல்லவே –

————

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பாத் ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநாத் ।
அங்கா₃நாம் லக்ஷ்யதே ரூபம் லக்ஷ்மீ தந்த்ர ப்ரகாரத ꞉ ॥ 9 ॥

லஷ்மி தந்திரத்தில் ஆனுகூல்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் இவ்விரண்டு அங்கங்களினாலேயே மற்றைய மூன்று அங்கங்களின் ரூபமும் ஒரு விதமாக கட்டப்படுகின்றன -இவற்றுள் அங்கிக்குச் சொல்லப்பட்ட பலனும் இவ்வங்களுக்கும் பயன் என்று பிரிவாக இவைகளின் ரூபங்களும் காட்டப்படுகின்றன –

————–

தேஷாம் அங்க₃ப₂லத்வம் ச தத்₃ரூபம் ச விபா₄க₃ஶ꞉ ।
ஆநுகூல்யமி த₃ம் ப்ரோக்தம் ஸர்வ பூ₄த அநுகூலதா ॥ 10 ॥

பகவான் சொல்வதை அருளிச் செய்கிறார் -நான் ஸர்வ பூதங்களின் உடையவும் உட் புகுந்து இருக்கிறேன் என்ற நிச்சயித்தினால் ஸர்வ பூதங்களிடமும் அனுகூல்யமாக இருப்பதே ஆனுகூல்ய சங்கல்பம் எனப்படுகிறது –

அங்கி யான பிரதானத்துக்கு பலமே அங்கங்களும் பலம் – அங்கங்களுக்குத் தனிப்பலன் இல்லை –

———–

அந்த꞉ஸ்தி ₂தோ (அ)ஹம் ஸர்வேஷாம் பா₄வாநாமிதி நிஶ்சயாத் ।
ஏதேந வியாப்தி விஜ்ஞாநாத் ப்ரபத்தவ் யஸ்ய ஸர்வஶ꞉ ॥ 11 ॥

———–

ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப꞉ ப்ராதி கூல்யஸ்ய வர்ஜநம் ।
ஹிம்ஸாத்₃யபாய விரதி ꞉ உக்தா ஸர்வேஷு ஜந்துஷு ॥ 12

மேல் சொன்னபடி பகவான் ஸர்வ வ்யாபி என்றும் அறிந்து இருப்பதால் அவருக்கு நான் அனுகூலமாக வர்த்திக்க வேண்டி இருப்பதால் ஸர்வ ஜந்துக்களிடமும் ஹிம்ஸை முதலிய அபாயங்களைச் செய்வதில் நின்றும் ஒழிவது பிரதிகூல்ய வ்ரஜனம் என்ற சொல்லப்படும்

உளன் சுடர் மிகு சுருதியுள் கரந்து எங்கும் பரந்துளன்-ஆத்ம தர்சனம் —சம தர்சனம் -யோக உச்யதே -பண்டிதன் சம தரிசனமாக இருக்க வேண்டுமே -தேஹ வியுக்த ஆத்ம ஸ்வரூபம் பார்த்தாலும் -அவனே உள்ளே இருந்து நியமிக்கிறான் என்ற புத்தி வந்தாலே இதுவும் வருமே –

——–

அங்க₃ ஸாமக்₃ர்ய ஸம்பத்தே ꞉ அஶக்தேஶ்சாபி கர்மணாம் ।
அதி ₄காரஸ்ய சா(அ) ஸித்₃தே ₄꞉தே₃ஶ கால கு₃ண க்ஷயாத் ॥ 1
3 ॥

—————–

உபாயா நைவ ஸித்₃த்₄யந்தி ஹ்யபாப ஹுலாஸ் ததா ₂ ।
இதி யா க₃ர்வஹா நிஸ்து தை₃ந்யம் கார்பண்ய முச்யதே
॥ 14 ॥

பக்தி யோகம் முதலிய உபாயங்களை அனுஷ்டிப்பதற்கு அவைகளின் அங்க பூர்த்தி இல்லாமையாலும் -அவற்றை அனுஷ்ட்டிக்க சிலருக்கு அதிகாரம் இல்லாமையாலும் -தேச காலங்களின் குணங்கள் குறைவு படுவதாலும் பக்தி யோகம் முதலிய மோக்ஷ உபாயங்களை தலைக்கட்டாதுகள் என்றும் அவைகளுக்கு அபாயங்கள் மேலிட்டு இருக்கின்றன என்றும் கர்வம் அழிந்து மனம் இரங்குவது கார்ப்பண்யம் என்று சொல்லப்படும் –

கிருபணன் சாதனம் இல்லாதவன்-அசக்தன் -அதிகாரம் இல்லாதவன் -தேச காலம் சாதகம் இல்லாதவன்

————–

உபாயாந்தர தவ்ஷ்கர்யாத் தந் நிவ்ருத்திர் ஹி ஸூசிதா ।
அகிஞ்சநாதி ₄காரத்வம் ப்ரபத்தேரபி ஸூசிதம் ॥ 15 ॥

பக்தி முதலிய உபாயாந்தரங்களில் சக்தி இல்லாமையைச் சொல்லுகையாலே ப்ரபன்னர்களுக்கு உபாயாந்தரங்களில் நின்றும் ஓழிகையும் போக்கற்று நிற்கிறவர்கள் ப்ரபத்திக்கு அதிகாரிகள் என்பதும் காட்டப்படுகின்றது –

————

ஶக்தேஸ் ஸூப ஸத₃த்வாச்ச க்ருபா யோகா₃ச்ச ஶாஶ்வதாத் ।
ஈஸே ஶிதவ்ய ஸம்ப₃ந்தா₄த் அநித₃ம் ப்ரத₂மாத₃பி ॥16॥

ஸ்ரீ லஷ்மி தந்த்ர வசனம் மேற்கோள் காட்டுகிறார்

————-

ரக்ஷிஷ்யத் யநுகூலாந்ந ꞉ இதி யா ஸூத்₃ருடா₄ மதி ꞉ ।
ஸ விஶ்வாஸோ ப₄வேச்ச₂க்ர ஸர்வ து₃ஷ் க்ருத நாஸந ꞉ ॥ 17 ॥

பகவான் ப்ரபன்னர்களை ரக்ஷிப்பதற்கு சக்தனாய் இருப்பதாலும் -எல்லாருக்கும் கிட்டும்படி ஸூலபனாய் இருப்பதாலும் -எப்பொழுதும் அருள் பொருந்தியனாய் இருப்பதாலும் -பகவானுக்கும் இவ்வாத்மாவுக்கும் உண்டான அநாதி கால சேஷி சேஷ பாவ சம்பந்தத்தாலும் அனுகூலராய் இருக்கும் நன்மை பகவான் ரஷித்தே தீருவான் என்கிற உறுதியான நம்பிக்கையே மஹா விஸ்வாஸம் எனப்படுகிறது -அது ஸர்வ பாபங்களையும் போக்கி அருளும் என்று ஸ்ரீ லஷ்மீ தேவி தேவேந்திரனுக்கு உபதேசம் செய்து அருளுகிறார்

கோலத்திரு மா மகளோடு கூடி சாலப்பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -காக்கும் இயல்பினன் கண்ணபிரான்

——–

ஸ்வ ரக்ஷ அயோக்₃யதாம் ஜ்ஞாத்வா ப்ரபத்தவ்யஸ்ய யுக்தித꞉ ।
ரக்ஷிஷ்ய தீதி விஶ்வாஸாத் அபீ₄ஷ்ட உபாய கல்பநம் ॥ 18 ॥

தன்னால் சரணம் அடையத்தக்கவரான பகவான் தன்னை ரக்ஷிக்கத் திறமை யுடையவர் என்றும் அறிந்து தன்னை அவன் ரஷித்தே தீருவான் என்ற நம்பிக்கையுடன் கூடியவனாய் தான் கோறிய பயனுக்கு அவனை உபாயமாகக் கோல வேண்டும் –

————–

கருணா வாநபி வ்யக்தம் ஶக்த ஸ்வாம்யபி தே ₃ஹிநாம் ।
அப்ரார்தி ₂ தோ ந கோ₃பாயேத் இதி தத் ப்ரார்த₂நா மதி ꞉ ॥ 19 ॥

பகவான் தயை யுள்ளவராக இருந்தும் -ரக்ஷிப்பதற்கு சக்தராய் இருந்தும் -இப் பிராணிகளுக்கு ஸ்வாமியாய் இருந்தும் -நாம் பிரார்த்தனை செய்யாமல் அவர் நன்மை ரக்ஷிக்கக் கடவரலாராகையால் இங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் –

——

கோ₃பாயிதாப₄வேத்யேவம் கோ₃ப்த்ருத்வ வரணம் ஸ்ம்ருதம் ।
யாச்நா பர்யவஸாயித்வம் ப்ரபத்தேரத ₂ உச்யதே ॥ 20 ॥

ஆகையால் ரக்ஷகராக வேண்டும் என்று பகவானைப் பிரார்த்திப்பது கோப்த்ருத்வ வர்ணம் என்று சொல்லப்படுமாகையாலே தான் இப்பிரபத்தி ஒரு பிரார்த்தனையில் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது –

யாசிப்பதில் முடிய வேண்டுமே

———-

ப்ரபத்தேஸ்து ப்ரபத்தவ்ய ப்ரஸாத ₃த்₃வாரதா ததா ₂ ।
தேந ஸம் ரக்ஷ்ய மாணஸ்ய ப₂லே ஸ்வாம்ய வியுக்ததா ॥ 2
1 ॥

பலமும் அவனதே-பேற்றுக்கு உகப்பானும் அவனே-ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன்-ப்ராப்தாவும் பிராப்திக்கு உகப்பானும் ப்ராபகனும் அவனே –பற்றுவதும் சாதனம் அல்ல பலம் அனுபவத்துக்கு யோக்யதையே இவனுக்கு -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -எனது ஆவி யார் யான் யார் தந்த கொண்டாக்கினாயே-அசித்வத் பாரதந்தர்யம் வேண்டுமே-

———–

கேஶவார்பண பர்யந்தா ஹ்யாத்ம நிஷேப உச்யதே ।
உபாயே ச ப₂லே சைவ ஸ்வ ப்ரயத்தந நிவர்த்தநம் ॥ 22 ॥

இப்பிரபத்தி பகவானுக்கு அனுக்ரஹத்தை உண்டாக்குவது ஒழிய மோக்ஷத்துக்கு நேராக சாதனம் அன்று ஆகையாலும் இவ்வாறு ப்ரஸன்னரான பாவானால் ரக்ஷிக்கப்படும் சேதனருக்குக் கிடைக்கும் மோக்ஷ ரூபமான பயனில் இவனுடையவன் அல்லாமையாலும் மோக்ஷ சாதனமாகுகையும் மோக்ஷ ரூப பலன்கள் உடையவனாகைக்கும் பகவானிடத்தில் சுமத்துவது ஆத்ம நிஷேபம் என்று சொல்லப்படும் –

———-

ஸ்வாம்யாயத்த மிதி வ்யக்தம் நிஷேபஸ் யாங்கி₃ தா ததா ₂ ।
ஆர்த ப்ரபத்தா வித்யேஷாம் அங்கா₃நாம் சந்நிதி ₄꞉ ததா ₂ ॥ 23 ॥

உபாயத்தை அனுஷ்டிப்பதிலும் அதன் பயனை பெறுவதிலும் தனது ப்ரயத்னத்தைக் கழித்துக் கொள்வதும் பகவானுடைய அதீனம் என்பது வெளிப்படுகின்றது -ஆகையால் ஆத்ம நிஷேபம் என்பதும் அவனது அருளாலே தான் நடக்கும் என்பதும் வெளிப்படுகின்றது –

—————

த்₃ருப்த ப்ரபத்தவ் ஏதாநி ப₄விஷ்யந்த் யுத்தரோத்தரம் ।
ஆர்த த்₃ருப்த விபா₄க₃ஸ்து ஶ்ரீமத்₃ ராமாயணோதி₃ ꞉ || 24 ||

ஆர்த்த ப்ரபத்தியில் மேல் சொல்லிய ஐந்து அங்கங்களும் சேர அனுஷ்ட்டிக்கத் தக்கவைகள் -திருப்த ப்ரபத்தியில் இவ்வங்கங்கள் பின்பும் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

தேஹ அவசான முக்தி நாம் அறிந்தது
லௌகிக சுக போகங்களை அனுபவிக்க ஆசை கொண்டு ஒவ்வொன்றும் வர வர அடுத்த அங்கம் வரும்

———-

” ஆர்தோ வா யதி வா த்₃ருப்த ꞉ பரேஷாம் ஶரணாக₃ த꞉ ।
அரி꞉ ப்ராணான் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய꞉ க்ருதாத்மநா ” ॥ 25

மேல் சொல்லியபடி ஆர்த்த ப்ரபன்னர் என்றும் திருப்த ப்ரபன்னர் என்றும் பிரிவினை ஸ்ரீ மத் ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது -அது எங்கனே என்னில் பிறர்களில் எவனாவது ஒருவன் ஆர்த்தனாகவாவது திருப்தனாகவாவது சரணம் அடைவானாகில் ஸாஸ்த்ர நிச்சயமுடைய ஒருவர் அப்படி தன்னைச் சரணம் அடைந்தவன் சத்ருவாக இருந்த போதிலும் தம்முடைய ப்ராணன்களையாவது கொடுத்து அவனை ரக்ஷிக்க வேண்டும் என்று ஸ்ரீ ராமன் அருளிச் செய்துள்ளார் –

பரேஷாம் –சொல்லி மீண்டும் அரி ரஜஸ் குணம் தொடர்ந்து இருந்தாலும் –
கொன்றேன் பல்லுயிரை குறிக்கோள் இன்றி அன்றே வந்தடைந்தேன் போல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும் -ரக்ஷணம் உயர்ந்தது -பெறாப்பேறு போன்றது –

————

யஸ்ய தே₃ஹாந்தர க்ருதே ஸோகோ த்₃ருப்தஸ் ஸ உச்யதே ।
யஶ்ச ப்ராரப்₃ ததே ₃ஹே (அ)பி ஸோசத்யார்தஸ் ஸ உச்யதே ॥ 26 ॥

எவர் ஒருவர் தமக்கு மறுபடியும் ஜென்மம் உண்டாவதில்லை சோகம் உடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் திருப்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார் -எவர் ஒருவர் தனக்கு இப்பொழுது உண்டாய் இருக்கும் தேஹத்திலேயே சோகமுடையவராய் பிரபத்தி செய்கிறாரோ அவர் ஆர்த்த ப்ரபன்னர் என்று சொல்லப்படுகிறார்

————

ஆர்த த்₃ருப்த விபா₄கேந₃ே ப்ரபத்திரிய முச்யதே ।
ஸாதநம் ₄ ப₄க₃வத் ப்ராப்தவ் ஸ ஏவேதி ஸ்தி₂ரா த்₃ருடா₄ || 27 ॥

மேல் சொன்னபடி பிரபன்னர்களின் பிரிவால் இப்பிரபத்தியும் ஆர்த்த பிரபத்தி என்றும் திருப்த பிரபத்தி என்றும் பிரிவுள்ளதாய் சொல்லப்படுகிறது -ஆகிலும் பகவானைப் பெறுவதில் அவரே சாதனம் என்று உறுதியான கருத்து இருக்க வேண்டும்

————-

ஸாத்₄ய ப₄க்தி : ஸ்ம்ருதா சைவ ப்ரபத்தரிதி கீ₃யதே ।
இமம் சார்த ₂மபி₄ப்ரேத்ய வாசோ பா₄க₃வதே யதா ₂ ॥ 28 ॥

இப்பிரபத்தியே -ஸாத்ய பத்தி என்றும் பிரபத்தி என்றும் சொல்லப்படுகிறது -இப்பிரபத்தியை பக்தி பாவமாக சொல்லும் உக்தியிலும் கீழ் சொல்லியபடி இரண்டு த்ருஷ்டாந்தங்கள் காட்டப்படுகின்றன –

பக்தி சாதனமாகக் கொள்ளாமல் பலமாகக் கொள்ள வேண்டும் -சாதன பக்தி உபாயாந்தர கோஷ்ட்டி -ஸ்வரூபத்துக்குச் சேராதே
ஸ்வயம் பிரயோஜனமாக ஸாத்ய பக்தி -இதுவே பலம் -அனுபவமே பிரயோஜனம் -ஆகவே பிரபத்தி போலவே இதுவும்

——————

“ப்ரபந்நஶ் சாதகோ யத்₃ வத் ப்ரபத் தவ்ய꞉ கபோதவத் ।
ரக்ஷ்ய ரக்ஷக யோரே தத் லக்ஷணம் லக்ஷ்ய மேதயோ ꞉” ॥ 29 ॥

ப்ரபன்னர் சாதக பக்ஷி போலவும் -பிரபத்தி செய்யத் தக்கவர் மாடப்புறா போன்றவும் இருக்கிறார்கள் -இவ்விரண்டு பக்ஷிகளுடைய நடவடிக்கைகளே ரக்ஷிக்கத்தக்க வரான ப்ரபன்னருக்கும் ரக்ஷகரான பிரபத்தி செய்யத்தக்கவருக்கும் லக்ஷணங்களாகக் காணத் தக்கவைகள் –
சாதக பக்ஷி தண்ணீர் குடிக்க மேகத்தையே எதிர்பார்ப்பது போல பிரபன்னர் மோக்ஷம் பெற பகவானையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்று கருத்து -காட்டில் வேட்டையாடிய ஒரு வேடன் காற்று மழைகளால் அலைந்து அங்கு இருக்கும் ஓர் மரத்தை இருந்த பிராணியை உத்தேசித்து சரணம் அடைய அதில் இருந்த மாடப்புறா அவ்வேடனைக் கண்டு அக்குளிரை யாத்தி தன் சரீரத்தின் மாமிசத்தை இட்டு அவன் பசியையும் தீர்த்த வ்ருத்தாந்தம் –சரணம் அடையப்பட்டவர் சரணம் அடைந்தவரின் வ்யஸனத்தை தீர்க்க வேண்டும் என்று கருத்து –

ப்ரபந்ந ஜன சாதகாம்புஜம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கபோத வியாக்யானம் சரணாகத க்ருத்யம் சொல்லுமே
பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது.
அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும் பேசத் தொடங்கின. வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று.
உடனே, ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் ‘இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது?’ எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.

————-

ப்ரபத்திரபி ஸாமாந்ய ஶாஸ்த்ரே (அ)ந்யத்ர ப்ரபஞ்சிதா ।
யத்₃யேந காம காமேந ந ஸாத்₄யம் ஸாதநாந்தரை ꞉ || 30 ॥

————–

முமுக்ஷுணா ந ஸாங்க்₂யேந யோகே₃ ந ந ச ப₄க்தி ꞉ ।
ப்ராப்யதே பரமம் தா₄ம யதோ நாவர்த்ததே புந ꞉ ॥ 31 ॥

——

தேந தேநாப்யதே தத் தந் ந்யாஸே நைவ மஹாமுநே ! ।
பரமாத்மா ச தேநைவ ஸாத்₄யதே புருஷோத்தம꞉ ॥
32 ॥

எந்த எந்த பயன்களை விரும்பும் எவர் எவர்களால் அப்பயன்களுக்கு சாதனங்களாக ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் பெறக்கூடாதவைகளாக இருக்கின்றனவோ அவைகளும் சாங்க்ய யோகத்தைச் செய்ய சக்தி இல்லாமையால் அதனால் பெறக் கூடாததான கைவல்யமும் பக்தி யோகத்தை அனுஷ்ட்டிக்க சக்தி இல்லாமையால் அதனால் பெறக்கூடாதவைகளான புனராவ்ருத்தி இல்லாத மோக்ஷமும் பரமாத்மாவும் அவைகளைப் பெற சாதனங்களாக அனுஷ்ட்டிக்கப்படும் இப்பிரபத்தியினாலேயே சாதிக்கப்படுகின்றன என்று சாமான்ய சாஸ்திரங்களிலும் இப்பிரபத்தியின் மஹிமை விவரிக்கப்படுகின்றது –

————-

ஸாத நாந்தர து₃ஸ் ஸாத₄ம் ப்ராப்யம் யல் லோக வேதயோ ꞉ ।
ஸூகேந₂ ப்ராப்யதே யேந ஸா ப்ரபத்திரிதி ஸ்தி₂தி ꞉ ॥ 33 ॥

லோகங்களிலாவது சாஸ்த்ரங்களிலாவது சொல்லப்பட்டு இருக்கும் வேறு ஓர் உபாயங்களினால் பெறுவதற்கு அஸாத்யமாய் இருக்கும் -பயன்கள் யாவுமே இப்பிரபத்தியினால் சுகமாக ஸாதிக்கப்படும் என்பதே ஸித்தாந்தம்

————

த்விதீய -ஸ்வரூப பத்₃த₄தி ஸம் பூர்ணம்-

———

த்ருதீய -அதிகாரி பத்ததி

அநந்ய உபாய ஶக்தஸ்ய ப்ராப்யேச்சோ₂ரதி ₄காரிதா ।
ப்ரபத்தவ் ஸர்வ வர்ணஸ்ய ஸாத்த் விகத்வாதி ₃யோக₃த ꞉ ॥ 2 ॥

வேறொர் உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களாய் ஓர் பேற்றைப் பெற விரும்புபவர்கள் அது விஷயத்தில் இப்பிரபத்தியை அனுஷ்ட்டிக்க அதிகாரிகள் ஆகிறார்கள் -அவ்வதிகாரம் ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் கூடும் -ஆனால் அவர்கள் சாத்விக குணம் முதலிய ஸத் குணங்களை மாத்ரம் உடையவர்களாக இருக்க வேண்டும் –

விஷய நியமமே உள்ளது-தேச கால அதிகாரி நியமங்கள் இல்லையே
இச்சை வேண்டும் -சாத்விகராக இருக்க வேண்டும் -சோகமுடையவன் அதிகாரி சோக நிவ்ருத்தியே பலம்
பசிக்கிறவன் உண்டு பசி தீருவது போல்-சோகமுடையவன் பிரபத்தி செய்து சோக நிவ்ருத்தி அடைகிறான்
ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமும் வேண்டும்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் வேண்டும் –

————-

ஸா ஹி ஸர்வத்ர ஸர் வேஷாம் ஸர்வ காம ப₂ல ப்ரதா ₃।
இதி ஸர்வ ப₂ல ப்ராப்தவ் ஸர் வேஷாம் விஹிதா யத ꞉ ॥ 2 ॥

இப் பிரபத்தி ஸர்வ வர்ணத்தார்களுக்கும் ஸர்வ பயன்களையும் கொடுக்கும் என்று விதிக்கப்பட்டு இருப்பதால் சர்வாதிகாரம் ஆயிற்று –

——————

ப்ரபத்தேர் வாசகோ மந்த்ர꞉ கட₂ வல்யாதி ஷு ₃ஸ்ம்ருத ꞉ ।
அயம் புராணே பாத்₃மே ச பராஶர வஸிஷ்ட₂யோ ꞉ ॥ 3 ॥

———

ஸம் வாதே ₃ ப்ரண வைகார்த ₂꞉ பஞ்சவிம்ஶதி வர்ணக꞉ ।
ருஷ்யாதி ₃ஸஹித ꞉ஸாங்க₃꞉ பூ₄யோ பூ₄ய꞉ ப்ரபஞ்ச்யதே
॥ 4 ॥

இப்பிரபத்தியின் ஸ்வரூபத்தைச் சொல்லும் த்வயம் என்னும் மந்த்ரம் கடவல்லி-என்னும் உபநிஷத்தில் ஓதப்படுகின்றது -பாத்ம புராணத்தில் பராசர வஸிஷ்ட முனிவர்களின் ஸம்வாதத்தில் இம்மந்திரம் பிரணவத்தோடு சமான அர்த்தத்தை யுடையத்தாயும் 25 அக்ஷரங்களுடன் கூடியதாகவும் சொல்லப்படுகிறது -ரிஷி சந்தஸ் முதலிய அங்கங்களோடு கூடியதாகவும் சொல்லப்படுகிறது –

—————-

தத்ர ஸர்வாதி ₄காரத்வம் ஸக்ருத் உ₃ச்சார்யதா ததா ₂ ।
விதீயதே ததா ₂(அ)ந்யத்ர ஶாஸ்த்ரே ப₄க₃ வதா (அ)பி ச ॥ 5 ॥

அந்தப் புராணத்தில் இம்மந்திரம் சர்வாதிகாரம் என்றும் ஒருக்கால் உச்சாரண மாத்திரத்தில் ஸர்வ பல ப்ரதத்வம் எனதும் விதிக்கப் படுகின்றது -அப்படியே பகவத் சாஸ்திரத்திலும் விதிக்கப் படுகின்றது –

—————–

த்ரை வர்ணி கேதரஸ்யாபி த்₃ வயே தஸ்மாத் ₃ தி₄க்ரியா ।
த₄ர்மி க்₃ராஹ கமாநேந யத் ஸித்₃ த₄ம் லோக வே ₃தயோ ꞉ ॥ 6 ॥

ஆகையால் இத்த்வத்தில் த்ரை வர்ணிகர்களாய் ஒழிந்தவர்களுக்கும் ஜபம் செய்ய அதிகாரம் உண்டு என்கிறது -மேலும் லோகத்திலும் வேதத்திலும் சாமான்ய விதியில் விசேஷத்தை அறிவிக்கும் பிரமாணங்களினால் கிடைத்திருக்கும் விசேஷ விசேஷங்களையும் சொல்லுகிறோம்

பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமும் -இல்லை-சூரணை -23-
ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

விஷய நியமமே உள்ளது –சூரணை -24-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –சூரணை-29-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –சூரணை -30-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –சூரணை -32-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–சூரணை-33-

விஷய நியமம் ஆவது-
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -34-

ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே –சூரணை -35-

————-

யதா ₂ஹி’ரத ₂காராதே ₃꞉ அக்₃ந்யாதா ₄நாதி ₃வைதிகே ।
ஆஜ்யா வேக்ஷணாதவ் ₃ து மந்த்ரே பத்ந்யா꞉ ப்ரமாணதா ꞉ ॥ 7 ॥

தச்சர் முதலிய சிலருக்கு வைதிகமான அக்னி யாதானம் முதலிய வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் -யஜமான பத்னிக்கு ஆஜ்யா வேஷண வைதிக மந்த்ரத்தை உச்சரிக்கும் அதிகாரமும் உண்டானது போல் வைதிகமான த்வயம் என்னும் மஹா மந்த்ரத்தை உச்சரிக்க த்ரை வர்ணிகர் ஒழிந்தவர்களுக்கும் ப்ரமாணத்தால் அதிகாரம் உண்டு என்கிறது –

——————-

யத்₃வா (ஆ)தி₄ தக்ரமாபாயாத் ஸ்வராதே₃ர்வா விலோபத ꞉ ।
த்₃வயஸ்ய ஸர்வாதி ₄க்ருதி ꞉ஸர்வேஷாம் தாந்த்ரிகம் து வா ॥ 8 ॥

இல்லாவிடில் வேதத்தில் ஓதப்படும் இம்மந்திரத்தின் கிரமத்தை குறைவு படுத்துவதனாலாவது இதன் ஸ்வரங்களை விட்டு விடுவதினாலாவது இம்மந்த்ரம் வைதிகம் ஆகாமல் த்ரை வர்ணிகர் ஒழிந்த மற்றவர்களாலும் உச்சரிக்கும் படியான தாந்த்ரிகமாகத் தக்கது அல்லது ஸர்வ வர்ணத்தவர்களுக்கும் தாந்த்ரிகமாகவே இருக்கத் தக்கது –

—————-

அஜ்ஞ ஸர்வஜ்ஞ-ப₄க்தாநாம் ப்ரபத்தாவதி ₄காரிதா ।
உபாயாந்தர விஜ்ஞாநா ஶக்தே ரஜ்ஞஸ்ய யுஜ்யதே
॥ 9 ॥

கர்ம யோகம் முதலிய உபாயங்களைச் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கும் ஞானம் யோகம் பக்தி யோகம் இவற்றில் சக்தி உள்ளவர்களாய் இருப்பவர்களுக்கும் இப்பிரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது -அவற்றில் அசக்தர்களுக்கு இதர உபாயங்களை அறிய சக்தி இல்லாமையால் ப்ரபத்தியில் அதிகாரம் உண்டாகின்றது –

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –சூரணை -41-
அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் —சூரணை -42-
அஞ்ஞானத்தாலே பிரபன்னர் அஸ்மதாதிகள்-
ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –சூரணை -43-
இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற -சூரணை -44-
இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –சூரணை -45-
என்னான் செய்கேன் -என்கிற இடத்தில் இம் மூன்றும் உண்டு –சூரணை -46-

——————-

ஸத்₃ருஸோபாய வை து₄ர்யம் ஸாக்ஷாத்₃ ப₄க₃வதோ வித₃ன்।
ஸர்வஜ்ஞ꞉ ஶரணம் யாதி யோக₃மார்க₃பராங்முக₂꞉ ॥ 10 ॥

ஞான யோகமும் ஸித்த உபாயமான பகவானைப் போல் மோக்ஷத்துக்கு நேரான உபாயமாகாமையாலும் சுலப உபாயமாகவும் கர்ம ஞான யோகங்களை விட்டு அவ்வதிகாரியும் பகவானைச் சரணம் அடைகிறார்

——————–

ஸர்வ காலம் ப்ரேம வஶாத் ப₄ஜன் ப₄க்தோ (அ)ப்ய நந்யதீ ₄꞉ ।
உபாயம் வா (அ)ப்யுபேயம் வா க்ஷமோ (அ)ந்யம் நா வலம்பி₃தும் ॥ 11 ॥

பக்தி யோகம் செய்கிறவர் வேறொரு இடத்தில் புத்தியைச் செலுத்தாமல் மிகவும் பக்தியுடன் ஸர்வகாலமும் பகவானை உபாஸனம் செய்பவராக இருந்தும் கால விளம்பம் முதலிய தோஷங்களோடு கூடியதால் வேறொரு உபாயங்களையாவது பலன்களையாவது பெற விரும்புகிறவராய் பகவானை சரணம் அடைகின்றனர்

—————

ஜிதந்தா மந்த்ர விவ்ருதவ் சவ்நகேந யதீ ₃ரிதிம் ।
அஜ்ஞ ஸர்வஜ்ஞ ப₄க்தாநாம் க₃திர் க₃ம்யோ ப₄வேத்₃ ₄தரி꞉ ॥ 12 ॥

சவுனாக முனிவரும் ஜிதந்தா என்னும் மந்த்ர விவரண கிரந்தத்தில் கர்மயோகாதிகளில் சக்தர்களுக்கும் அசக்தர்களுக்கும் பகவான் உபாயமாகவும் உபேயமாகவும் ஆகிவிடுகிறார் என்று அருளிச் செய்கிறார் –

————–

இத₃ம் ஶரணம் அஜ்ஞாநம் இத ₃மேவ விஜாநதாம் ।
இ த₃ம் திதீர் ஷதாம் பாரம் இத ₃மாநந்த்யமிச்ச₂ தாம் ॥ 13 ॥

ஜிதந்தையில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -கர்மயோகத்தை அறியாதவர்களுக்கும் அதை அறிந்தோர்களுக்கும் –ஸம்ஸாரத்தை கடக்க மட்டுமே விரும்பும் கைவல்யார்த்திகளுக்கும் என்றும் அழிவில்லாத பரம புருஷார்த்தமான பகவத் ப்ராப்திக்கும் இப்பிரபத்தியே உபாயமாகும் –

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –சூரணை -49-
இம் மூன்றும் -என்றது மூன்று அதிகாரிகளையும் சொன்னவாறு –
யுக்த அர்த்தத்துக்கு பிராமண உபாதானம் பண்ணுகிறார்
அஞ்ஞான ஹேதுகத்தவ ப்ரபத்தியையும் – ஞானாதிக்க -ஹேதுக பிரபத்தி –
பக்திர் பூம்யா -பக்தி பாரவஸ்யத்துக்கு -பக்தியின் எல்லை நிலம் ஹேதுக்கவாக
அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம் அவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி –

————

இதி லக்ஷ்ம்யா ச தந்த்ரே (அ)பி ப்ரபத்தா வநு வர்ணிதம் ।
ஆஸ்திக்யாதி ₃குணோ பேதம் ஶாஸ்த்ரம் வக்த்யதி ₄காரிணம் ॥ 14 ॥

பெரிய பிராட்டியாரால் லஷ்மீதந்த்ரத்தில் ஆஸ்திக்யாதி லக்ஷணங்களோடு கூடியவர் இப்பிரபத்திக்கு அதிகாரியாக ஸாஸ்த்ரம் சொல்லுவதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது –

————–

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வான் ஶாஸ்த்ரே விஷ் வக் ஸேநாய ஶ்ருண் வதே ।
ய ஏவம் ஶரணம் க₃ச்சே₂த் க்ருதக்ருத்யோ ப₄விஷ்யதி ॥ 15॥

யாவன் ஒருவன் இவ்வாறு என்னை சரணம் அடைகிறானோ அவன் செய்ய வேண்டிய க்ருத்யங்கள் யாவையும் செய்தவனாவான் என்று பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளுகிறார் –

————

ஏதத்₃ரஹஸ்யம் வேதா ₃நாம் புராணாநாம் ச ஸம்மதம் ।
கு₃ஹ்யாத்₃கு₃ஹ்ய தமம் ப்ரோக்தம் நிக₃மாந்தேஷு கீர்திதம் ॥ 16 ॥

இப்பிரபத்தி வேதங்களின் ரஹஸ்யார்த்தகம் புராணங்களிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது -வேதாந்த ஸாஸ்திரங்களிலும் இப்பிரபத்தி ரஹஸ்யங்களிலும் ரஹஸ்யங்களாக ஓதப்பட்டு கொண்டாடப்படுகிறது –

———

நாதீ ₃க்ஷிதாய வக் தவ்யம் நா ப₄க்தாய கதா ₃சந ।
ந சா ஶுஶ்ரூஷவே வாச்யம் நாஸ்திகாய கதா ₃சந ।
கு₃ருப₄க்திர் ந யஸ்யாஸ்தி பீ₃ஜபிண்ட₃பதா₃தி ₃ஷு ॥ 17 ॥

இப்பிரபத்தி வித்யையை சக்ர அங்கநாதி நியமம் இல்லாதவருக்கும் -நாஸ்திகனுக்கும் -எவனுக்கு குருவிடத்திலாவது அவரது சந்நிதி வசனம் முதலியவற்றில் பக்தி இல்லையே அவர்களுக்கு உபதேஸிக்கக் கூடாது –

—————

நோப தே ₃ஶஸ்து யஸ்யாஸ்தி ந வக்தவ்யம் ஹிதார்தி ₂நா ।
இத்யுக்த வான் ஜக₃ந் நாதோ ₂ த்₃விரதா ந ந மாம் ப்ரதி ।
மயா(அ)பி தவ ப₄க்தஸ்ய கதி ₂ தம் யச்ச்₂ருதம் புரா ॥ 18 ॥

எவருக்கு இப்பிரபத்தி மந்த்ரம் உபதேசம் இல்லையோ அவருக்கும் சொல்லத்தக்க தல்ல என்றும் ஸ்ரீ ஜெகந் நாதனான பகவான் எங்களுக்கு உபதேஸித்தார்-நான் கேட்டபடி பக்தரான உமக்கும் இவ்வர்த்தகத்தை உபதேஸித்தேன் என்றும் விஷ்வக்ஸேனர் கஜானனுக்கு உபதேஸித்தார் –

————

த்ருதீயா -அதிகாரி பத்ததி ஸம் பூர்ணம்

———–

சதுர்தீ –குரு உபாஸந பத்ததி

ஸம்ஸாரோத்₃ விக்₃ந மநஸா தாபத்ரிதய பீ₄ருணா ।
விரக்தே நேஹ சா(அ)முத்ர ப₂லே க₃ம்யோ கு₃ருர் மஹான் ॥ 1 ॥

ஸம்ஸாரத்தில் நின்றும் பயந்த மனசை உடையவராய் -தாபத்ரயத்தால் பயந்தவராயும் -இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் பயன்களை வைராக்யம் யுடையவராயும் இருப்பவரால் மஹாத்மாவாய் இருக்கும் குரு ஒருவரை அடையத்தக்கவர்

ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குழைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய உய்ய விரகில்லையே-முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் உபதேஸங்கள்-மந்த்ர உபதேஸம் பண்ண ஆச்சார்யர் வேண்டுமே-ஒழிக்க ஒழியாத ஒன்பது வித ஸம்பந்த ஞானம் கொடுப்பவர் ஆச்சார்யர் தானே- அதிகாரி ஸ்வரூபத்துக்கு பின் ஆச்சார்ய -பகவத் பரிசார -பகவத் பத்ததிகள் -மேல்அவ்வானவருக்கு மவ்வானவர் அடிமை உபதேஸம் -நானும் உனக்கு பழ வடிமை -உணராமல் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க -நடுவே வந்து உய்யக்கொண்ட நாதனே ஆச்சார்யர்-ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே உடைய குருவை அடைந்தக்கால்- -தானே வைகுந்தம் தரும் -சேர்ப்பார்களைப் பஷிகளாக்கி -கடகர்

————

பரீக்ஷ்ய லோகான் கர்மசிதான் விப்ரோ நிர் விண்ண மாநஸா ꞉ ।
க்ருதேந மோஷோ நாஸ்தீதி தஜ் ஜ்ஞாநார்த₂ம் கு₃ரும் வ்ரஜேத்
॥ 2 ॥

ப்ராஹ்மணராக இருக்கும் ஒருவர் ஸ்வர்க்க லோகம் முதலிய போக ஸ்தானங்களை புண்ய கர்மங்களால் அடையப்படுபவை என்றும் அறிந்து மனம் இறக்கமுடையவராய் கர்மத்தினால் மோக்ஷம் கிடைப்பதில்லை என்றும் அறிந்து தெளிந்து அந்தப் மோக்ஷ ஞானத்தைப் பெறுவதற்கு ஓர் ஆச்சார்யரைக் கிட்ட வேண்டும் –

ஞானிகள் -தத்வ தர்சனிகள் -தத் வித்தி –பிரணி பாதேனா பரி பிரஸ்தேன -ஸேவையா –பீதக வாடைப்பிரானார் பரம குருவாக வந்து மயர்வற மதிநலம் ஆழ்வார்களுக்கு அருள -அவர்கள் ஆச்சார்யர்கள் மூலம் நமக்கு அருளுகிறார்கள் –

————

ஶ்ரோத்ரியம் ப்₃ரஹ்ம நிஷ்ணாதம் ப்ரீணயேத்₃ வஸ்துபி₄꞉ ப்ரியை ꞉ ।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய ஶிஷ்யாய ப்ரணதாய ச ॥ 3॥

——–

த₃த்₃யாத் அஷ்டாக்ஷரம் ஸத்யம் ப்₃ரஹ்ம நாராயணம் பரம் ।
தாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் ப்ரவதே ₃ தி₃த்யர ₂ம் ஶ்ருதி ராஹ ஹி
|| 4 ||

ஸ்ரோத்ரியராயும் ப்ரஹ்ம ஞானம் யுடையவராய் இருக்கும் ஆச்சார்யர் ஒருவருக்கு அவர் கோறிய வஸ்துக்களைக் கொடுத்து அவரை சிஷ்யன் தன்னிடத்தில் ப்ரீதி யுள்ளவராய்ச் செய்ய வேண்டும் -அவ்வாச்சார்யரும் அவ்வாறு தமக்கு ப்ரீதியை யுண்டாக்கியவனாயும் -வணக்கம் யுடையவனாயும் -சாந்தமான மனமுடையவனுமாக இருக்கும் சிஷ்யனுக்கு என்றும் அழிவில்லாத ஸத்ய ப்ரஹ்ம ரூபியான ஸ்ரீ மந் நாராயணனை அறியத்தக்க ப்ரஹ்ம வித்யயை உபதேசிக்க வேண்டும் என்றும் இவ்வர்த்தத்தை வேதம் சொல்கிறது –

ஆத்ம குணங்கள் கை புகுந்தால் ஆச்சார்யன் கை புகுரும் -மந்த்ரம் கை புகுந்தால் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து கை புகுரும்-இதனால் வைகுந்தமும் கை புகுரும்

———–

குரோஶ் ஶிஷ்யஸ்ய வித்₃யாயா லக்ஷணம் காலமேவ ச ।
ஸாமாந்யதோ விசேஷாச்ச ப₄க₃வான் ஶாஸ்த்ர உக்தவான் ॥ 5 ॥

குருவினுடையவும் சிஷ்யனுடையவும் ப்ரஹ்ம வித்யையினுடையவும் லக்ஷணத்தையும் அவைகளுக்குத் தக்க காலத்தையும் சாமான்யமாகவும் சேஷித்தும் பகவஸ் ஸாஸ்த்ரத்தில் பகவான் அருளிச் செய்துள்ளார் –

—————–

த்ரிஷு வர்கேஷு ஸம்பூ₄தோ மாமேவ ஶரணம் க₃த ꞉ ।
நித்ய நைமித்திக பரோ மதீ ₃யா(ஆ)ராத₄நே ரத ꞉ || 6
|

பகவஸ் ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -ப்ராமண ஷத்ரிய வைஸ்யராகிய மூன்று வர்ணங்களில் பிறந்தவராயும் -என்னையே சரணம் அடைந்தவராயும் -தம்முடையவர்களிடமும் பிறர்களிடமும் சமமான மனஸை யுடையவராயும் -நித்ய நைமித்திக கர்மங்களை மட்டுமே அனுஷ்டிப்பவராயும் -என்னுடைய ஆராதனத்தில் ஆசை யுடையவராயும் இருக்கும் ஒருவர் ஆச்சார்யர் எனச் சொல்லப்படுவார் –

—————-

ஆத்மீய பரகீயேஷு ஸமோ தே ₃ஶிக உச்யதே ।
ஆஸ்திகோ த₄ர்மஶஸீலஶ்ச ஸீலவான் வைஷ்ணவ
꞉ ஶுசி꞉ ॥ 7 ॥

————-

க₃ம்பீ₄ரஶ் சதுரோ தீ₄ர꞉ ஶிஷ்ய இத்யபி₄ தீ₄யதே ।
நாநுகூல்யம் ந ந க்ஷத்ரம் ந தீர்தா ₂ தி ₃நிஷேவணம் ॥ 8 ॥

ஆஸ்திகராயும் எப்போதும் தர்மங்களைச் செய்பவராயும் நன்னடத்தை யுள்ளவராயும் வைஷ்ணவராயும் பரிசுத்தராயும் கம்பீர ஸ்வபாவமுடையவராயும் -வல்லமை யுள்ளவராயும் –ஸாஸ்த்ரங்களில் நிலை யுள்ளவராயும் -இருக்கும் ஒருவர் சிஷ்யராகச் சொல்லப்படுவார்

இத் த்வயத்தினால் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தியாவது தேசம் காலம் முதலியவற்றின் நன்மைகளாவது- புண்ய தீர்த்தம் முதலியவைகளை அடைவதை யாவது -அடிக்கடி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்கையாவது -ஸர்வ காலமும் ஜெபம் செய்ய வேண்டும் என்கையாவது – அபேக்ஷிக்கிறது இல்லை -எவ்விடத்தாலாவது -எப்படிக்காவது -ஒருக்கால் அனுஷ்டித்த மாத்திரத்திலேயே ஸ பலமாகும் என்றும் கருத்து –

————–

ந புநஶ் சரணம் நித்யம் ஜபம் வா (அ)பேக்ஷதே ஹ்யயம் ।
நமஸ் க்ருத்ய கு₃ரூன் தீ₃ர்க₄ப்ரணாமைஸ் த்ரிபி₄ராத்₃ருத꞉ ॥ 9 ॥

மூன்று முதலாக உள்ள அநேக அஷ்டாங்க ப்ரணாமங்களினால் ஆச்சார்யரைத் தண்டம் சமர்ப்பித்து -நிதியைப் பெறும் தரித்ரனைப் போல் மிகவும் ஆசை யுடையவனாய் சிஷ்யன் இந்த மந்த்ர ராஜத்தைப் பெற வேண்டும் –

————–

க்₃ருஹ்ணீயான் மந்த்ர ராஜாநாம் நிதி ₄காங்க்ஷீவ நிர்த₄ந ꞉ ।
பரம்பராமுபதி ₃ஸேத் கு₃ரூணாம் ப்ரத₂மம் கு₃ரு꞉ ॥ 10 ॥

ஆச்சார்ய பரம்பரையை முன்பு உபதேசித்து -பின்பு த்வயத்தை உபதேசிக்க வேண்டும்-பின்பு மனஸ்ஸால் த்யானிக்கத் தக்கதான இத் த்வயத்தின் அர்த்தமான ப்ரபத்தியை உபதேசிக்க வேண்டும் –

———————-

வாசயித்வா த்₃வயம் ஸாங்க₃ம் ப்ரபதிம் மாநஸீம் தி₃ஸேத் ।
அநுகாங்க்ஷன் ஸதா ₃ ஶிஷ்யம் கு₃ருரௌரஸ புத்ரவத் ॥ 11 ॥

ஆச்சார்யரும் தன் வயிற்றில் பிறந்த பிள்ளை யினதிடத்தில் போல் சிஷ்யனிடத்தில் மிகவும் அநுக்ரஹமுடையவராய் -அம்மந்திர அர்த்தங்களைத் தெளிய அறிந்து மனஸ் சமாதானமுடையவராய் அச்சீஷ்யனுக்கு கபடமின்றி உபதேசிக்க வேண்டும் –

———————-

“வித்₃வான் ஸமாஹிதோ பூ₄த்வா க்₃ராஹயேது₃பதி₄ம் விநா ।
ததவ் பநிஷதீ₃ம் வித்₃யாம் விஶ்வாஸ ஜ்ஞாந வர்தி ₄நீம் ॥ 12 ॥

—————

அந்யாமாத்₄யாத்மிகீம் வித்₃யாம் ஶிஷ்யா வஸ்தா ₂நுரூப்யத ꞉।
தஸ்மை ப்ரஶாந்த சித்தாய க்ருபயா நிஸ்ப்ருஹோ வதே ₃த் ॥ 13 ॥

அப்படியே பக்தி ஞானங்களை அபிவிருத்தி செய்யத்தக்க த்ரவிட உபநிஷத் முதலிய வித்யைகளையும் இன்னும் வேதாந்த ஸாஸ்த்ரங்களையும் சிஷ்யனுடைய யோக்யதைக்குத் தக்கபடி அதனால் தனக்கும் ஒரு பிரயோஜனம் உண்டாக வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவனாய் சாந்த சித்தனான அச் சிஷ்யனுக்கு மிகவும் தயையுடன் குரு உபதேசிக்க வேண்டும் –

ஞானம் வந்து விசுவாசம் பிறந்து அதனால் மேலும் ஞானம் வளர்ந்து அதனால் மேலும் விசுவாசம் இப்படி சங்கிலித்தொடராக வளரும் -நித்ய அனுசந்தானம் நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் இதற்காகவே-

ஞான முத்ரை புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் -சாத்மிக்க -சாத்மிக்க உபதேசம்-

—————

த₃த்த்வா து த₃க்ஷிணாம் தஸ்மை யதா ₂ஶக்தி யதா ₂ விதி₄ ।
தமர்சயேத்₃யதா ₂காலம் ஹிதம் சாஸ்ய ஸமாசரேத் ॥ 14

சிஷ்யனும் அவ்வாச்சார்யருக்குத் தன் சக்திக்குத் தக்கபடிக்கும் ஸாஸ்த்ர விதிப்படிக்கும் ஸம்பாவனை ஸமர்ப்பித்து தகுந்த காலங்களில் அவரை ஆராதிக்க வேண்டும் -அவருக்கு ஹிதமான க்ருத்யங்களையும் செய்ய வேண்டும் –

——————

கு₃ரோர் வைப₄வ மாக்₂யாதி ஜயாக்₂யா (அ)பி ச ஸம்ஹிதா |
கு₃ருரேவ பரம் ப்₃ரஹ்ம கு₃ருரேவ பரம் த₄நம் ॥ 15 ॥

ஆகையால் அவ்வாச்சார்யருக்கு சிஷ்யன் ஒருக்காலும் த்ரோஹம் செய்யக்கூடாது –

——————

கு₃ருரேவ பரா வித்₃யா கு₃ருரேவ பராயணம் ।
கு₃ருரேவ பர꞉ காமோ கு₃ருரேவ பரா க₃தி ꞉ ॥ 16 ॥

குரு ரேவ பராகதி -என்றபடி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஸ்ரீ ஆள வந்தாரும்
ஸ்ரீ ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஸ்ரீ ஆசார்யருக்கு நான் ஸூஸ்ருஷை பண்ணினேனோ-
அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-

————-

யஸ்மாத் தது₃பதே ₃ஷ்டா(அ)சவ் தஸ்மாத்₃கு₃ருதரோ கு₃ரு꞉ ।
அர்ச நீயஶ்ச வந்த ₃யஶ்ச கீர்த நீயஶ்ச ஸர்வதா ₃ ॥ 17 ॥

எண் திசையும் அறிய இயம்புவேன்-

————

த்₄யாயேஜ் ஜபேந் நமேத்₃ப₄க்த்யா ப₄ஜேத₃ப்₄யர்சயேந் முதா ₃ ।
உபாயோ பேயபா₄ வேந தமேவ ஶரணம் வ்ரஜேத் ॥ 18 ॥

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—————–66-

——————-

இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வ ஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ।
ஏவம் த்₃ வயோபதே ₃ஷ்டாரம் பா₄வயேத் பு₃த்₃தி₄மான்
தி₄யா ॥ 19 ॥

இரும்பு போல் வலிய நெஞ்சம் பண்பட உபதேசம் -உள்ளம் உகந்து -உபகார ஸ்ம்ருதி வேண்டும் அன்றோ

—————–

ஶரீரம் வஸூ விஜ்ஞாநம் வாஸ ꞉ கர்ம கு₃ணாந ஸூன் ।
கு₃ர் வர்த ₂ம் தா₄ரயேத்₃ யஸ்து ஸ ஶிஷ்யோ
நேதரஸ் ஸ்ம்ருத ꞉ ॥ 20 ॥

சத்ருச ப்ரத்யுபகலாம் செய்ய இரண்டு ப்ரஹ்மமும் நான்கு விபூதிகளும் வேண்டுமே
முயல்கிறேன் அவன் மொய் கழலுக்கு என்று சொல்லிப்போம் அத்தனை

————–

நாராயணோ (அ)பி விக்ருதிம் யாதி கு₃ரோ ꞉ ப்ரச்யுதஸ்ய து₃ர்பு₃த்₃தே ₄꞉ ।
கமலம் ஜலாத ₃பேதம் ஶாேஷயதி ரவிர் ந தோஷயதி ॥21॥

தண்ணீரில் உள்ள தாமரையே உலர்த்தும் -இல்லாவிடில் உலர்த்தி விடுமே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

——————

யோ விஷ்ணோ ꞉ ப்ரதி மாகாரே லோஹ பா₄ வம் கரோதி ச ।
யோ கு₃ரௌ மாநுஷம் பா₄வம் உபௌ₄ நரக பாதி நவ் ॥ 22 ॥

அர்ச்சாவதார லோக பாவம் -குருவை மானுஷ்ய பாவம் -நரக ஹேதுவாகுமே

—————-

ஸாமாந்யதோ விஸேஷாச்ச யஸ்மாத்₃ த₄ர்மான் ஸநாதநான் ।
ஆசிநோதி ஸ ஆசார்ய꞉ தஸ்மை த்₃ருஹ்யேத் ந கிஞ்சந ॥2
3॥

——————

கு₃’ ஶப்₃ த₃ஸ்த்வந்த₄காராக்₂யோ ‘ ‘ரு’ ஶப்₃ த₃ஸ்தந் நிரோத₄க꞉ ।
அந்த₄கார நிரோதி₄த்வாத் கு₃ருரித்யபி₄ தீ₄யதே ॥24 ॥

குரு என்னும் பதத்தில் கு என்னும் பதம் இருளையும் ரு என்னும் பதம் போக்குவதையும் சொல்லுகின்றது-அஞ்ஞானத்தைப் போக்குவதால் ஆச்சார்யர் குரு என்றும் சொல்லப்படுகிறார் –

————

மநுரப்யாஹ ப₄க₃வான் “வந்த்₃யோ பா₃லோ (அ)பி மந்த்ரத₃꞉ ।
ஜ்யைஷ்டயம் வேதா₃ந்த விஜ்ஞாநாத் விப்ராணாமிதி சோதித₃ ம் ॥25॥

பிராமணர்களுக்கு வேதாந்த ஞானத்தினால் பெரிய தனம் விதிக்கப்பட்டு இருப்பதால் பிராமணர் ஒருவரே சிறுவராக இருந்த போதிலும் மந்த்ரத்தை உபதேசித்தாராகில் அவர் வந்தனம் செய்யத்தக்கவர் என்று மனுவும் தர்ம ஸாஸ்த்ரத்தில் அருளிச் செய்துள்ளார் –

—————–

அத்₄யா பயாமாஸ பித்ரூன் ஶிஶுராங்கீ₃ரஸ ꞉ கவி ꞉ ।
புத்ரகா இதி ஹோவாச ஜ்ஞாநேந பரி க்₃ருஹ்ய தான் ॥ 26

அங்கீரஸ் என்னும் ரிஷியின் புத்திரரான சுக்ராச்சார்யாரும் தன் தகப்பன்மார்களுக்கு வேதங்களை ஓதி வைத்தார் -தம்முடைய ஞானத்தைக் கொண்டு அவர்களை புத்ரர்களாகப் பாவித்து வாரீர் பிள்ளைகளே என்று அழைத்தார் –

————–

தே தமர்த₂மப்ருச்ச₂ந்த தே ₃ வாநாக ₃ தமந்யவ ꞉ ।
தே ₃ வாஶ் சைதான் ஸமத்யோசு꞉ ந்யாய்யம் வஶ்ஶிஶு ருக்தவான் ॥ 27 ॥

சுக்கிரனுடைய பிதாக்களான இவ்விரண்டு ரிஷிகளும் கோபமுடையவர்களாய் புத்ரன் சொல்லியவற்றைப் பற்றி தேவர்களிடம் கேட்டார்கள் -அத்தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்து வாரீர் ரிஷிகளே உங்களுடைய புத்திரன் நியாயமான வார்த்தைகளைத் தான் சொல்லி இருக்கிறான் என்றார்கள்

கணபுரம் கை தொழும் பிள்ளையை-
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்

—————

பா₃லோ (அ)பி விப்ரோ வ்ருத்₃ த₄꞉ஸ்யாத் பிதா ப₄வதி மந்த்ரத₃꞉|
அஜ்ஞம்ஹி பா₃ல மித்யாஹ பிதேத்யேவ ச மந்த்ர த₃ம் ॥ 28 ॥

ப்ராஹ்மணன் பாலனாக இருந்த போதிலும் ஞானத்தினால் பெரியவரால் மந்த்ர உபதேசம் செய்தவரானால் அவர் பெரியவராகிறார் -பெரியவராக இருந்தும் ஞானம் இல்லாதவரக இருப்பாராகில் அவரை பாலர் என்றும் சிறுவராய் இருந்தபோதிலும் மந்த்ர உபதேசம் செய்தவரை பிதா என்றும் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் –

—————–

ந ஹாயநைர் ந பலிதை ꞉ ந ச வித்தைர்ந ப₃ந்து₄பி₄꞉ ।
ருஷ்யஶ் சக்ரிரே த₄ர்மான் யோ (அ)நூசாந ஸ நோ மஹான் ॥ 29 ॥

ரிஷிகள் வயது சென்றதனாலாவது -தலை நரைத்தானாலாவது -விசேஷித்த தனங்களினாலாவது -பந்துக்களினாலாவது -தர்மங்களைச் செய்தார்கள் இல்லை -ஸாஸ்திரங்களை அறிந்ததனால் மட்டுமே தர்மங்களைச் செய்தார்களாதல் -எவர் குருவினிடத்தில் இருந்து சாஸ்திரங்களை ஓதியவரோ அவரே நமக்குக் குருவாகத் தக்கவர்

————-

விப்ராணாம் ஜ்ஞாநதோ ஜ்யைஷ்ட்யம் க்ஷத்ரியாணாம் து வீர்யத ꞉ ।
வைஶ்யாநாம் த₄நதோ ஜ்யைஷ்ட்யம் ஶூத்₃ராணாமேவ ஜந்மத ꞉ ॥ 30 ॥

ஆகையால் ப்ராஹ்மணர்களுக்கு ஞானத்தினாலும் ஷத்ரியர்களுக்கு பலத்தாலும் வைஸ்யர்களுக்கு தனத்தாலும் ஸூத்ரர்களுக்கு வயதானாலும் மேன்மை சொல்ல வேண்டும் –

——————

கு₃ரோஶ்ச கு₃ரவஸ் ஸர்வே பூஜநீயா விஶேஷத ꞉ ।
கு₃ருதா₃ரஸூததவ் ₃ து கு₃ருவத்₃வ்ருத்தி மாசரேத் ॥ 31 ॥

ஆச்சார்யர்களின் ஆச்சார்யர்களும் விசேஷித்து பூஜிக்கத் தக்கவர்கள் -ஆச்சார்ய பத்னியிடத்திலும் புத்திரர்கள் இடத்திலும் ஆச்சார்யர் இடத்தில் போலவே வர்த்திக்க வேண்டும் –

—————-

த₄ர்ம வ்யதிக்ரமஸ் ஸ்யாச்சேத் கு₃ருர்போ₃த்₄யோ ரஹஸ்யபி ।
பதநீயம் கு₃ரோ ꞉ கர்ம யத்₃யஶக்யம போஹிதும் ॥ 32 ॥

———————

போத₃ ₄நாத்₃தை ₃ வப₄ஜநா ஸத் ஸங்க₃பரிவேஷணாத்
।ஸத்₃கு₃ரூநுபஸேவேத ஹித்வா தத ₃நுவர்தநம் ॥ 33 ॥

ஆச்சார்யரும் ஸாஸ்த்ர யுக்த தர்மங்களைக் கடந்து நடப்பாராகில் அவருக்கு ரஹஸ்யத்தில் போதிக்க வேண்டும் -அப்படிக்கு போதித்தும் அவருக்கு நல்ல ஞானம் உண்டாகும்படியாய் பகவானிடத்தில் பிரார்த்தனைகள் செய்தும் சத்துக்களைக் கொண்டு உபதேசம் செய்வித்தும் அவர் இடத்தில் உள்ள துர்நடத்தை போகாமல் இருந்தால் அவர் சேவையை விட்டு வேறு சத்ருக்களை சேவிக்க வேண்டும் – அப்பொழுது முன் ஆச்சார்யருக்கும் ஹிதத்தைக் கோறுவாராகில் ஸர்வ பாதங்களில் நின்றும் நீங்குவர் –

———-

தஸ்யாபி ஹிதாமாகாங்க்ஷன் முச்யதே நாத்ர ஸம்ஶய꞉ ।
யதி ₃ ஶிஷ்ய꞉ பதேந் மார்கா₃த் தம் ப்ரயத்நேந வாரயேத் || 34 ॥

சிஷ்யனும் ஸாஸ்த்ர யுக்த சன்மார்க்கங்களைக் கடந்து நடப்பானாகில் ஆச்சார்யர் அவனைக் கெட்ட மார்க்கத்தில் செல்லாமல் இருக்கு படியாகத் தடுக்க வேண்டும் – பகவானுடைய திருவடிகளில் அவனுக்கு ஹிதத்தைப் பிரார்த்திக்க வேண்டும் –

————–

ஶ்ரிய꞉ பத்யு꞉ பதா₃ம் போ ₄ஜே கு₃ருர்யாசேத தத்₃ தி₄ தம் ।
ப்ரஸாத ₃யேத்₃ப₄க₃வதா ஆத்மநா (அ)பித முத்₃ த₄ரேத்
॥ 35 ॥

——————–

தேந ஸம்பா₄ஷணாதீ ₃நி வர்ஜயேத ₃நிவர்தநே ।
̈ந நிஶ்வாஸமபி ₄வ்யக்தம் விஸ்ருஜேத்₃கு₃ரு ஸந்நிதவ் ₄ ॥ 36 ॥

அவனுக்கு ஞானத்தை உண்டாக்கும்படியாக பாகவதர்களைப் பிரார்த்திக்க வேண்டும் -தன்னால் கூடிய வரை அவனை படு குழியில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் -அப்படிச் செய்தும் அவன் துர்நடத்தையில் இருந்து திரும்பானாகில் அவனுடன் சம்பாஷணை முதலியவை செய்யாமல் விட்டு விட வேண்டும் –

—————–

கு₃ரோர் யத்ர பரீ வாதோ ₃ நிந்தா ₃ வா (அ)பி ப்ரவர்ததே ।
கர்ணவ் தத்ர பிதா ₄ தவ்யௌ க₃ந்தவ்யம் வா ததோ (அ)ந்யத ꞉ ॥ 37 ॥

ஆச்சார்யருடைய சமீபத்தில் தமக்கு உண்டாயிருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தக் கூடாது-ஆச்சார்யருக்கு எவ்விடத்தில் அபவாதமோ நிந்தையோ சொல்லப்படுகிறதோ அவ்விடத்தில் காதுகளையாவது மூடிக்கொள்ள வேண்டும் -அவ்விடத்தை விட்டு அப்புறம் போகவும் வேண்டும் –

——————-

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ₃ந மம ஸர்வமபீ₄ப்ஸிதம் ।
ப்ராப்நுயாமிதி விஶ்வாஸோ யஸ் யாஸ்தே
ஸ ஸூகீ₂ ப₄வேத் ॥ 38 ॥

ஆச்சார்யருடைய அனுக்ரஹத்தினால் யான் ஸர்வ இஷ்டங்களையும் பெறுவேன் என்ற நம்பிக்கை எவருக்கு வருகிறதோ அவர் சுகத்தை அடைவர் –

—————

யேநைவ கு₃ருணா யஸ்ய ந்யாஸ வித்₃யா ப்ரதீ ₃யதே ।
தஸ்ய வைகுண்ட₂து₃க்₃தா₄ப்₃தி ₄த்₃வாரகா꞉ஸர்வ ஏவ ஸ ꞉ ॥
39 ॥

எந்த ஆச்சார்யரால் எவருக்கு பிரபத்தி வித்யை உபதேசிக்கப் படுகிறதோ அவருக்கு இவ்வாச்சார்யாரே ஸ்ரீ வைகுண்டம் திருப்பாற் கடல் திருத்துவாரகை முதலிய அனைத்து திவ்ய தேசங்களுமாகும்

பாட்டுக்கேட்க்கும் இடம் –எல்லாம் வகுத்த இடமே

——————

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் கு₃ருரஷ்டாக்ஷர ப்ரத ₃꞉ ।
இத்யேவம் யே ந மந்யந்தா த்யக்த வ்யாஸ்தே மநீஷிபி₄꞉ || 40 ॥

நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களான அனைத்து நன்மைகளும் திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசித்த ஆச்சார்யர் தான் என்றும் எவர்கள் எண்ண வில்லையோ அவர்கள் சத்துக்கள் விடத்தக்கவர் –

———–

ஏகாக்ஷர ப்ரதா ₃ தாரமாசார்யம் யோ (அ) மந்யதே ।
ஶ்யாந யோநி ஶதம் ப்ராப்ய சண்டா₃லேஷ்வபி₄ஜாயதே ॥ 41 ॥

பிரணவத்தை யாவது ஓர் அக்ஷரத்தை யாவது உபதேசிக்கும் ஆச்சார்யர் ஒருவரை எவர் அவமானப்படுத்துகிறாரோ அவர் துர்ஜன்ம-நாய்கள் -போல் பிறந்து பிறக்கும் சண்டாளர் களில் பிறந்து உழல்வார் –

—————–

மஹா வராஹோ ப₄க₃ வாநாஹ ஜந்மாப்₃ தி₄தாரணே ।
நாவம் ந்ருதநும் ஆத்மாநம் அநுகூலா(அ)நிலம் கு₃ரும் ॥ 42 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பகவானும் சம்சாரமாகிற கடலைக் கடைக்கு விஷயத்தில் மனுஷ்ய ரூபமான தன் சரீரத்தை ஓடமாகவும் ஆச்சார்யானை இவ்வோடத்தை கரை சேர்க்கும் காற்றாகவும் இவ்வாத்மாவை ஓடக்காரனாகவும் சொல்லி இவ்வாச்சார்யனால் இவ்வாத்மா சம்சாரக்கடலை தாண்ட வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார் –

—————-

கர்ணதா ₄ரமதோ தே ₃ஹீ கு₃ருணா ஸம்ஸ்க்ருதிம் தரேத் ।
ந்ருதே ₃ஹமாத்₃யம் ப்ரதி லப்₄ய து₃ர்லப₄ம் ப்லவம் ஸூகல்யம் கு₃ரு கர்ணதா ₄ரம் ।
மயா(அ)நுகூலேந நப₄ஸ்வதேரிதம் புமான் ப₄வாப்₃தி₄ம் ந தரேத்ஸ ஹாத்மஹா ||

முன் ஸ்லோக அர்த்தத்தையே ஈண்டும் வேறு விதமாக அருளிச் செய்து இப்பத்ததியை நிகமிக்கிறார் -சம்சாரக்கடலைக் கடத்தும் ஓர் ஓடம் போன்றதாயும் ஆச்சார்யரை ஓடக்காரனை உடையவராகவும் கிடைப்பதற்கு அரியதான இந்த மனுஷ்ய தேகத்தை காற்று ஆனால் போல் என்னாலே ஏவப்படுகின்றன -இத்தேகத்தைப் பெற்றும் எவர் ஒருவர் சம்சாரக் கடலைத் தாண்ட வில்லையோ அவர் ஆத்ம த்ரோஹி யாவார் என்றும் பகவான் அருளிச் செய்கிறார் –

சிஷ்யன் என்பது-சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா ஸூஸ் ரூஷையும் ஆர்த்தியும்
ஆதரமும் அநசூயையும் உடையவனை –சூரணை -321-
மந்த்ரமும் -தேவதையும்- பலமும் – பல அநு பந்திகளும் -பல சாதனமும் – ஐஹிக போகமும் -எல்லாம் ஆசார்யனே என்று நினைக்க கடவன் –சூரணை -322-
மாதா பிதா யுவதய -என்கிற ஸ்லோகத்திலே இவ் அர்த்தத்தை பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –சூரணை -323-
இதுக்கடி உபகார ஸம்ருதி-சூரணை -324-
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஞதை – முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஞதை –சூரணை -325-
சிஷ்யனும் ஆசார்யனும் அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்தக் கடவர்கள் –சூரணை -326-
சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் – ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் – ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –சூரணை -327-
சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –-ஆசார்யன் உஜ்ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –சூரணை -328-
ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய – ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை ––சூரணை -329-
நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே – இருவருக்கும் உபாதேயம் –சூரணை -330-
சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்-த்யாஜ்யம்-சூரணை -331-
நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –சூரணை -332-
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –சூரணை -334-
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –சூரணை -335–
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-
ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –சூரணை -337-
ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –சூரணை -338-
கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை -339-
கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-

4-சதுர்தீ –குரு உபாஸந பத்ததி –ஸம் பூர்ணம்

  1. அத₂ ப₄க₃வத் பரிசர்யா பத்₃த₄தி꞉ பஞ்சமீ

ஏவம் கு₃ரு ப்ரஸாதே₃ந தேஷித்வ ஜ்ஞாந பூர்வகம் ।
தே₃வோந்தர வந்நித்யம் ஸப்₃தா₃தீ₃நபி குத்ஸயன் ॥
1॥

விஷ்ணு ப்ராப்தி ப₂லாகாங்க்ஷீ விஷ்ணூபாயோ ஹி வைஷ்ணவ꞉ ।
ஏகாந்தீ து விநிஶ் வித்ய தே₃வதா விஷயாந்தரை
꞉ ॥2॥

கீழ் பத்ததியில் சொல்லிய படி ஆச்சார்ய அனுக்ரஹத்தினாலே தனக்குக் கிடைத்திருக்கும் சேஷத்வ ஞானத்தை முன்னிட்டு பகவானை ஒழிந்த வேறு தெய்வங்களைப் போலே ஸப்தாதி விஷயங்களையும் பிழை உள்ளவைகளாக அறிந்து பகவானைப் பெறும் விஷயத்தில் பக்தி யோகத்தையும் உபாயமாக யுடைய ப்ரபன்னர் வைஷ்ணவர் என்று சொல்லப்படுவார்

———

ப₄க்த் யுபாயம் ஸமம் க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ண ஏக ஸாத₄ந꞉ ।
தே₃வோந்தர ஸப்₃தா₃தி₃ப₄க்தி க்ருஷ்ணாக்₂ய ஹேதுஷு
॥3॥

பக்தி யோகம் என்றும் மோக்ஷ உபாயத்தை தேவதாந்தர விஷயாந்தர ங்களோடு சமமாக நினைத்து பகவானைப் பெரும் விஷயத்தில் பகவான் ஒருவனையே உபாயமாக யுடைய ப்ரபன்னர் ஏகாந்தி எனப்படுவர் –

————

ஸாம்ய க்ருத் பரமை காந்தீ ஹரௌ ஸ்வாமீதி பு₃த்₃தி₄மான் ।
கிங்குர்வாண꞉ ஸதா ₃காலம் ப₄க₃வத் பாத₃பத்₃மயோ ꞉ ॥4॥

தேவதாந்தரங்கள் ஸப்தாதி விஷயம் பக்தி பிரபத்தி என்னும் மோக்ஷ உபாயங்கள் இவைகளை சமமாக நினைத்து பகவானிடத்தில் ஸ்வாமி என்னும் புத்தியையுடைய ப்ரபன்னர் பரமை காந்தி -உயர்ந்ததான ஒரே நிச்சயம் உடையவர் -எனப்படுவர்
இங்கு ப்ரபத்தியையும் தேவதாந்தரங்களோடு சமமாக நினைப்பதாவது அவைகளைப் போல் இப்பிரபத்தி யையும் விட வேண்டும் என்னும் அர்த்தகமாகும் -மேற்கொண்ட ஸ்வரூபத்தில் சொல்லியபடி ப்ரபத்தியை அனுஷ்டித்த ப்ரபந்நரைப் பற்றி இங்கு இவ்வர்த்தம் விதிக்கப் படுவதால் இப்பிரபன்னர் இதை விடுவதாவது -இப்பிரபத்தியில் உபாய புத்தியை விடவேண்டும் என்பதாவது -அல்லது பக்தியோகத்தைப் போல் இப்பிரபத்தியும் ஆவர்த்தி செய்யதகும் என்று நினைத்தால் அதை விட வேண்டும் என்பதாவது கருதத் தகும் –

தமக்கு உண்டாயிருக்கும் சேஷத்வத்தை அறிந்து ஸர்வ காலமும் பகவானுடைய திருவடித் தாமரைகளில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு காலத்தை சார்த்தமாகப் போக்க வேண்டும்

————

ஸேஷத்வ மாத்மநோ ஜாநன் ஸார்த₂யன் காலமாக்ஷிபேத் ।
விஜ்ஞாய மூல மந்த்ரார்த₂ம் த்₃வயைகார்த₂தயா கு₃ரோ
꞉ ॥5॥

இம்மூல மந்த்ரார்த்தத்தை த்வயார்த்தத்தோடு ஸமான அர்த்தமாக ஆச்சார்யரால் அறிந்து பகவான் ஒருவனையே சரணமாக யுடையவராய் அம்மூல மந்த்ரத்தால் பகவானை ஆராதிக்க வேண்டும் –

———–

ததே₃க ஸரணோ பூ₄த்வா ஹரிம் தேந ஸமர்சயேத் ।
த்ரை கால்ய மர்சநம் குர்யாத் மூல மந்த்ரேண ஸக்தித꞉
॥6॥

ஸர்வ வேதா₃ந்த ஸாரார்த₂꞉ ஸம் ஸாரார்ணவ தாரண꞉ ।
மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ கு₃ஹ்யாநாம் கு₃ஹ்யமுத்தமம் ॥7

மூன்று காலங்களிலும் பகவானுக்கு மூல மந்திரத்தால் ஆராதனம் செய்ய வேண்டும்-இம்மூல மந்த்ரம் ஸர்வ வேதங்களினுடையவும் சாரமான அர்த்தத்தை யுடையது -ஸம்ஸாரமாகிய கடலைத் தாண்டி வைக்கத்தக்கது -மந்திரங்களில் உயர்ந்த மந்த்ரமும் ரஹஸ்யங்களுள் பரமமான ரஹஸ்யமாகவும் பரிசுத்தமான வஸ்துக்களுக்கும் பரிசுத்தியை உண்டாக்கத் தக்கது -இது அநாதியான மஹா மந்த்ரம்

நான் கண்டு கொண்டேன் நாராயணாயா என்னும் நாமம் -மந்த்ரம் அல்ல -ஸர்வாதிகாரம் இது

————-

பவித்ராணாம் பவித்ரம் ச மூல மந்த்ர꞉ ஸநாதந꞉ ।
முமுக்ஷூணாம் ஸதா ₃ ஜப்யம் பு₄க்தி முக்தி ப₂ல ப்ரத₃ம் ॥8॥

வைஷ்ணவாநாம் ஸதா ₃ ஜப்யம் ப₄க்தி ஜ்ஞாநவிவர்த₄நம் ।
மந்த்ராணாமாஶ்ரயம் தி₃வ்யம் ஸர்வ பாப ப்ரணாஸநம் ॥9॥

இம்மந்திரம் போக மோஷங்களைக் கொடுக்கத் தக்கதாக இருப்பதால் மோஷத்தை விரும்புபவர்களுக்கு சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது -பக்தி ஞானங்களை விருத்தி செய்யத்தக்கதாய் இருப்பதால் வைஷ்ணவர்களுக்கும் சர்வகாலமும் ஜபம் செய்யத்தக்கது-

————

ஸமாஹித மநா பூ₄த்வா ஜபம் குர்யாத₃ தந்த்₃ரித꞉ |
இத்த₂ம் க₃ஜாந நாதீ₃நாம் ஶ்ரீமத் ஸேநேஸ ஸாஸநாத் ॥10॥

இத்திவ்ய மந்த்ரம் ஸர்வ மந்திரங்களுக்கும் ஆஸ்ரீ யமாக இருக்கின்றது – ஸர்வ பாபங்களையும் நாசம் செய்வதாய் இருக்கின்றது -இம்மந்தத்தை சாவதான மனத்தை யுடையவராகவும் சோம்பல் இல்லாதவராகவும் ஜபம் செய்ய வேண்டும்

படு துயர் ஆயின எல்லாம் நிரந்தரம் செய்யும்

———–

[அநேந வைஷ்ணவ꞉ குர்யாத் ஹரேரர்சாதி₃கம் ஸதா ₃ ।
த்₃வயேந வார்சநம் குர்யாத் கு₃ருவந்த₃ந பூர்வகம் ॥11

மேற் சொல்லியபடி ஸ்ரீ விஷ்வக் சேனர் தன் பரிவாரங்களான கஜநநாதிகளுக்கு நியமித்து இருப்பதால் வைஷ்ணவர்கள் இம்மூல மந்ரத்தால் பகவானுக்குத் திருவாராதானாதிகள் செய்ய வேண்டும் -அல்லது த்வயத்தினாலாவது ஆராதனம் செய்ய வேண்டும் -அப்படிக்கு ஆராதனம் செய்யும் போது குரு வந்தனத்தை முன்னிட்டு வந்தனம் செய்த பின்பு ஆராதனம் செய்ய வேண்டும் –

குரு பரம்பரா பூர்வகமாக இல்லாத த்வயமும் மற்ற மந்த்ரங்களோடு ஒக்கும்

————-

க்ருத லக்ஷண ஏவாயம் அர்சயேத்₃ வைஷ்ணவோ ஹரிம் ।
] வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ணைஸ்து க்ருத லக்ஷணை ꞉ ॥12॥

அர்சநீயஶ்ச ஸேவ்யஶ்ச பூஜநீயஶ்ச மாத₄வ꞉ ।
லக்ஷணம் த்₃விவித₄ம் ப்ரோக்தம் பா₃ஹ்யமாப்₄ யந்தரம் ததா ₂ ॥ 13॥

கீழ்ச் சொன்ன வைஷ்ணவ சின்னங்களோடு கூடியவராய் வைஷ்ணவர் பகவானை ஆராதிக்க வேண்டும் -வியாஸ முனிவரும் வைஷ்ணவ சின்னங்களோடு கூடிய நான்கு வர்ணத்தார்களாலும் பகவான் அர்ச்சனை செய்யத்தக்கவர் என்றும் சேவிக்கத் தக்கவர் என்றும் ஆராதனம் செய்யத்தக்கவர் என்றும் சொல்லுகிறார் –

—————-

ஸங்க₂சக்ராதி₃கம் பா₃ஹ்யம் அந்யத்₃ராகா₃த்₃யத பேததா ।
ததா ₂ச ஸர்வோபநிஷத் ஸித்₃த₄ம் சக்ராதி₃ தா₄ரணம் ॥14॥

பாஹ்யம் -வெளிப்பட்டவை -என்றும் ஆப்யந்தரம் -உள்ளிட்டவை என்றும் சின்னங்கள் இருவகைப்படும் -அவற்றுள் சங்கு சக்ராதி தாரணம் பாஹ்ய லக்ஷணங்களாகும் -வைராக்யம் சமதமாதி ஆத்ம குணங்கள் ஆப்யந்தர லக்ஷணங்களாகும் –

————–

அத₂ர்தவ உபநிஷத்₃ வ்யக்தம் வித₃தா₄தி விபஶ்சிதாம் ।
த₃க்ஷிணே து பு₄ஜே விப்ரோ பி₃ப்₄ருயாத்₃வை ஸுத₃ர்ஸநம் ॥15॥

அப்படியே ஸர்வ உபநிஷத்துக்களிலும் சித்தித்து இருக்கும் சங்கு சக்ராதி தாரணத்தை அதர்வ உபநிஷத்து ஞானிகளான வைஷ்ணவர்களுக்கு விதிக்கின்றது –

—————-

ஸவ்யே து ஸங்க₂ம் பி₃ப்₄ருயாத் இதி ப்₃ரஹ்ம விதோ₃ விது₃꞉ ।
தத்ர ஶ்ருதி த்வஸந்தே₃ ஹே கி₂ல மந்த்ரோ (அ)பி தத்ஸம꞉ ॥16॥

வலது தோளில் திருவாழியையும் இடது தோளில் திருச்சங்கையும் ப்ராஹ்மணர் தரிக்க வேண்டும் என்று ப்ரஹ்ம ஞானிகள் சொல்லுகிறார்கள் –

————–

மஹத் பரிக்₃ரஹாந் நாஸ்தி ஸந்தே₃ஹஸ் தத்ர சேத்₃ப்₄ரம꞉ ।
பாத்₃மம் புராணமாக்₃நேயம் க்ராேஸத் யுத்₃பா₃ஹு ரப்யுத ॥17॥

இப்படிக்கு சக்ராங்கனத்தை விதிக்கும் பிரமாணங்கள் வைதிகங்கள் அல்ல என்று ஸந்தேஹம் உண்டாகுமாகில் -இவ்வாறு ப்ரஸித்த வேதங்களில் காணாமல் இப்பொழுது அனுஷ்டானங்களில் உபயோகித்தது வரும் -கில மந்திரங்களும் இவ்வாறு சந்தேகிக்கத் தக்கவைகளாகும் -ஆகையால் மேற் சொல்லியவைகளை பெரியோர்கள் வைதிகங்களாக பரிக்ரஹித்து வருவதால் ஸந்தேஹிக்க வேண்டியதில்லை -இப்படிக்கு பெரியோர்கள் பரிக்ரஹிக்க இல்லை என்று பிரமம் உண்டாகில் பாத்மம் ஆக்னேயம் இவ்விரண்டு புராணங்களும் சக்ராங்கநாதிகளை வைதிகங்கள் என்றும் பெரியோர்கள் இவைகளை பரிக்ரஹித்து இருக்கிறார்கள் என்றும் கையெடுத்துக் கூவுவதால் இப்பிரமம் நீங்கி விடலாம் –

————–

பஞ்சாயுதா₄ நிதா₄ர்யாணி ப₄க்தி ஶ்ரத்₃தோ₄ப ப்₃ரும்ஹித ꞉ ।
லலாடே மூர்த்₄நி ஹ்ருத்₃வாஹ்வோ : ஏகத்ரைகம் ப்ருத₂க் ப்ருத₂க் ॥18॥

பாத்ம புராணத்தில் அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -நெற்றியிலும் சிரஸ்ஸிலும் மார்பிலும் தோள்களிலும் கதை முதலிய பஞ்ச ஆயுதங்களையும் பக்தி ஸ்ரத்தையுடன் கூடியவர்களாய் தரிக்க வேண்டும் –

த்வைத மதஸ்தர் இப்பொழுதும் பஞ்சாயுத தாரணம் கொண்டுள்ளார்கள்

———

லலாடே து க₃தா ₃ தா₄ர்யா மூர்த்₄நி சாபம் ததா ₂ பரம் ।
நந்த₃கம் சைவ ஹ்ருந் மத்₄யே ஸங்க₂ சக்ரே பு₄ஜ த்₃வயே ॥19॥

நெற்றியில் கதாயுதத்தையும் சிரஸ்ஸிலே சார்ங்கம் என்னும் வில்லையும் மார்பில் நந்தகம் என்னும் கத்தியையும் இரண்டு தோள்களிலும் திரு வாழி திருச் சங்குகளையும் தரிக்க வேண்டும்

—————-

லோஹை ரநல ஸந்தப்தை ꞉தத் தந் மந்த்ராதி₄ வாஸிதை ꞉ ।
அங்கயேத், வ்ருத்₃த₄ மநுரப்யே₃ததா ஹா (ஆ)த₃ராத்₃யதா
₂ ॥20॥

லோஹங்களினால் செய்யப்பட்டு இருக்கும் பஞ்சாயுதங்களை அக்னியில் தப்தம் செய்து அவற்றுக்கு உள்ள மந்த்ரங்களை ஜபித்து மேல் கண்ட இடங்களிலே லாஞ்சனை செய்து கொள்ள வேண்டும் -இவ்வாறே விருத்த மனுவும் சொல்லி இருக்கிறார் –

—————

ஊர்த்₄வ புண்ட்₃ரம் ததா ₂ சக்ரம் நித்யம் தா₄ரயதே நர꞉ ।
ஸூபா₄நி தஸ்ய வர்த₄ந்தே த்வஸூப₄ந்து ப்ரணஶ்யதி ॥21॥

விருத்த மனு அருளிச் செய்தவற்றை எடுத்துக் காட்டுகிறார் -எவர் ஒருவர் ஊர்த்த புண்ட்ரம் திரு வாழி திருச்சங்கு இவைகளை நித்யம் தரிக்கிறாரோ அவருக்கு சுபங்கள் வளரும் -அசுபங்கள் நாசமடையும் –

———————–

கால உக்தோ ப₄க₃வதா ஸாஸ்த்ரே சக்ராதி₃தா₄ரணே ।
உத்தம꞉ ஷாேட ₃ஸாத₃ர்வாக் ஆபஞ்சா ஸஸ்து மத்₄யம꞉ ॥22॥

பதினாறு வயதிற்கு உட்பட்ட காலம் உத்தமம் என்றும் -அதற்கு மேல் ஐம்பது வரையில் மத்யம காலம் என்றும் பகவானால் ஸாஸ்த்ரத்தில் சக்ராதி தாரணத்திற்கு காலம் சொல்லப்பட்டு இருக்கின்றது –

———————

அத꞉ பரம் வை ஹ்யத₄ம இதி கால வ்யவஸ்தி₂தி꞉ ।
விநா து வார்ஷிகான் மாஸான் ஸர்வே மாஸாஶ் ஸூபா₄வஹா ꞉ ॥23॥

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட காலம் சக்ராங்கனம் செய்து கொள்வதற்கு அதமகாலம் என்றும் ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது -மேலும் வர்ஷா காலங்கள் ஒழிய மற்ற காலங்கள் சக்ராங்கனத்திற்கு நன்மை யுண்டாக்கத் தக்கவைகள்

———

ஸ்தா₂நம் ப்ரமாணம் த்₃ரவ்யம் ச பாஞ்சராத்ரே விஸேஷத꞉ ।
விஹிதம் தத் ப்ரகாரேண தா₄ரயே தூ₃ர்த்₄வ புண்ட்₃ரகம் ॥24॥

ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பதற்கு ஸ்தானமும்-அதற்குப் பிரமாணமும் – அதற்குத் த்ரவ்யமும் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரத்தில் விசேஷமாக விதிக்கப்பட்டு இருக்கின்றது -அதன் படி ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

————

ப்ரஸஸ்தே பர்வதாக்₃ராதவ் ₃ ஜாதயாஶ் வேத ம்ருத்ஸ்நயா ।
ஊர்த்₄வ புண்ட்₃ரம் தத ꞉ கார்யம் வைஷ்ணவவஸ்து விஸேஷத꞉ ॥25॥

ஸாஸ்திரங்களில் கொண்டாடப்பட்டு இருக்கும் பர்வதங்களில் மேல்பாகம் முதலிய இடங்களில் உண்டாய் இருக்கும் ஸ்வேத ம்ருத்திகையினால் ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் -வைஷ்ணவர்கள் விசேஷித்து ஸ்வேத ம்ருத்திகையினாலேயே ஊர்த்வ புண்ட்ரம் தரிக்க வேண்டும் –

—————–

விமலாந் யூர்த்₄வ புண்ட்₃ராணி ஸாந்தராளாநி யோ நர꞉ ।
கரோதி விமலம் தேந மந்தி₃ரம் மே கரோதி ஸ꞉ ॥26॥

ஊர்த்வ புண்டரங்களை நடுவில் வந்துள்ளவைகளாகவும் அழுக்கு இல்லாத திருமண்களினால் எவர்கள் இடுகிறார்களோ அவர்கள் அதனால் எனக்கோர் கோயில் கட்டுகிறார்கள் -என்று பகவான் அருளிச் செய்கிறார் –

———–

ராகா₃த்₃ய பேதம் ஹ்ருத₃யம் வாக₃து₃ஷ்டா (அ)ந்ருதாதி₃நா ।
ஹிம்ஸாதி₃ரஹித꞉ காய꞉ கேஸவ ஆராத₄நம் த்ரயம் ॥27॥

ஆசை முதலிய துர்குணங்களோடு கூடாத மனமும் -பொய் முதலிய தோஷங்கள் இல்லாத வாக்கும் -கொலை முதலிய பாதகங்களை செய்யாத காயமும் பகவானை ஆராதிப்பதற்குத் தகுந்த ஸாதனங்களாகும்-

நாவகாரியம் இல்லாத -நாவுக்கு அவகார்யம் கூடாதே

———-

அஹிம்ஸா ப்ரத₂மம் புஷ்பம் புஷ்ப மிந்த்₃ரிய நிக்₃ரே꞉ ।
ஸர்வபூ₄த த₃யா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஸேஷத꞉ ॥28॥

ஜ்ஞாநம் புஷ்பம் தப꞉ புஷ்பம் த்₄யாநம் புஷ்பம் து ஸப்தமம் ।
ஸத்யமஷ்ட வித₄ம் புஷ்பம் விஷ்ணோ ꞉ ப்ரீதி கரம் ப₄வேத் ॥29॥

கொலை செய்யாமல் இருப்பது -ஐம் புலன்களையும் அடக்குவது -ஸர்வ பிராணிகளிடமும் தயையோடே கூடி இருப்பது -அபகாரம் செய்தவர்களிடங்களிலும் பொறுமையோடு கூடி இருப்பது -தத்வ ஞானம் உள்ளவனாக இருப்பது -விருத காலங்களில் காய சோஷணம் செய்வது -பகவானைத் த்யானம் செய்வது -எப்பொழுதும் ஸத்ய வாக்காய் இருப்பது -ஆகிய இந்த எட்டு குணங்களும் பகவானை ஆராதிக்கும் விஷயத்தில் எட்டு புஷ்ப்பங்களாகச் சொல்லப்பட்டு இருக்கின்றனவாகையால் இக்குணங்கள் பகவான் திரு உள்ளத்தை மிகவும் உகக்கச் செய்கின்றனவாம் –

————-

ஏவமாப்₄யந்தரைர் பா₃ஹ்யை ꞉ சிஹ்நை : பூ₄ஷித விக்₃ரஹ꞉ ।
(ஸ்நாதஸ் தீர்தே₂ஷு விதி₄வத் க்ருத தே₃வாதி₃தர்பண꞉ ॥30॥

அஷ்டோத்தர ஸதம் ஜப்த்வா மூலமந்த்ரம தந்த்₃ரித꞉ ।
ஸாம் ஸ்பர்ஶிகம் த்₃ரவ்ய ஜாதம் ததை ₂வா(ஆ)ப்₄யவ ஹாரிகம் ॥31॥

அப்யௌப சாரிகம் க்ருத்வா யாக₃பூ₄மேரளங்க்ருதிம் ।
யதீந்த்₃தரோதி₃தநித் யோக்தக்ர மேணைவ யஜேத்₃த₄ரிம் ॥32॥

இவ்வாறு மானஸீகங்களாயும் காயிகங்களாயும் பாகவத சிஹ்னங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும் தேஹத்தை யுடையவராய் -புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து -தேவரிஷி தர்ப்பணம் முதலான ஸந்த்யாவந்தனாதிகளை அனுஷ்ட்டித்து -சோம்பல் இல்லாதவராய் -மூல மந்த்ரத்தை நூற்று எட்டு ஆவர்த்தி ஜபம் செய்து -பகவான் திருமேனிக்கு சுகத்தை உண்டாக்கத்தக்க சந்தன குஸூ மாதி வஸ்துக்களையும் அமுது செய்யத்தக்க பல பக்ஷ்யாதி ஹவிஸ்ஸுக்களையும் வைத்துக் கொண்டு திருவாராதனம் செய்யும் இடத்தில் கோலமிடுவது முதலியவைகளினால் அலங்காரம் செய்து ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து இருக்கும் நித்ய கிரந்தத்தில் சொல்லியபடி பகவானை ஆராதிக்க வேண்டும் –

—————

ப்ரத₃க்ஷிண நமஸ்காரை ꞉ ஸ்தோத்ரை ரேகாந்தி ஸம்மதை ꞉ ।
யதா ₂ ப்₄ருத்யோ மஹா ராஜம் ப்ரீணயேத் ப்ரேம விஹ்வல꞉ ॥33॥

சேவகனாக இருக்கும் ஒருவன் தன் பிரபுவை எவ்வாறு அன்புடன் மனம் உகக்கச் செய்வானோ அவ்வாறு ஆத்ம ஸ்வாமியான பகவானை ப்ரபன்னன் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகளாலும் பரமை காந்தி ஸம் மதங்களான ஸ்தோத்ரங்களினாலும் திரு உள்ளம் உகக்கச் செய்ய வேண்டும் –

————

ததா ₂(ஆ)த்ம ஸ்வாமிநம் தே₃வம் ப்ரீணயேத் உபதி₄ம் விநா ।
மஹா வராஹோ ப₄க₃வான் அக₃ஸ்த்யாய யது₃க்தவான் ॥34॥

மஹா வராஹம் செய்த பெருமான் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்து இருக்கும் கீழ்ச் சொல்லிய பக்தி அங்கங்கள் யாவையும் அந்தவந்த காலங்களில் தவராமல் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

———-

ப₄க்த் யங்க₃ஜாதம் தத் குர்யாத் யதா ₂காலம் ஸமாஹித꞉ ।
மத்₃ப₄க்த ஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமாேத₃நம் ।
ஸ்வயமப்₄யர்சநம் சைவ மத₃ர்தே₂ த₃க்₃ப₄வர்ஜநம் ॥
35॥

மத் கதா ₂ஶ்ரவணே ப₄க்தி꞉ ஸ்வர நேத்ராங்க₃விக்ரியா |
மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோப ஜீவதி ॥36॥

ப₄க்திரஷ்ட விதா ₄ ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்ச்₂ரே (அ)பி வர்ததே ।
ஸ விப்ரேந்த்₃ரோ முநி꞉ ஶ்ரீமான் ஸ யதி꞉ ஸ ச பண்டி₃த꞉ ॥37॥

மூன்றரை ஸ்லோகங்களினால் மேற் சொல்லிய பக்தி அங்கங்களை அருளிச் செய்கிறார்
என் பக்தி ஜனங்களில் அன்பு -அவர்கள் செய்யும் ஆராதனத்தை சந்தோஷிப்பது -தாமும் ஆராதிப்பது -என்னுடைய கைங்கர்யங்களில் டம்பத்தை விடுவது -என் கதைகளைக் கேட்பதில் பக்தி -என் கதைகளில் சொல்லப்படும் சுக துக்கங்களைக் கேட்க்கும் பொழுது கண்ணீர் விடுதல் -குரல் தழ தழுப்பது -அங்கங்கள் பூரிப்பது -எப்பொழுதும் என்னையே நினைத்து இருப்பது -இப்படிச் செய்யப்படும் பக்தியினால் என்னிடத்தில் ஐஹிக ப்ரயோஜனங்களை விரும்பாமல் இருப்பது
ஆகிய இவ்வெட்டு வித பக்திகள் இவரிடத்தில் உண்டாகின்றனவோ அவர் மிலேச்ச ஜாதியில் பிறந்திருந்த போதிலும்
வாரீர் மஹா முனிவரே
அவர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டராயும் யாதியாகவும் பண்டிதராகவும் இருக்கிறார்
ஆகையால் அவருக்குத் தானம் கொடுக்கத் தகும் -அவரிடத்தில் தானம் வாங்கத் தகும் – அவர் என்னைப் போலவே பூஜிக்கத் தக்கவராவார் –

கொடுமின் கொள்மின் -ஞானம் கொடுத்து பெறலாம்

—————–

தஸ்மை தே₃யம் ததோ க்₃ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ₂ ஹ்யஹம் ।
ஏவமர்சாவதாரம் து யஜேத் சவ்நக வாக்யத꞉ ॥38॥

ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ꞉ ப்ரஸந்நவத₃நேக்ஷணாம் ।
க்ருத்வா(ஆ)த்மந꞉ ப்ரியகரீம் ஸுவர்ண ரஜதாதி
பி₄꞉ ॥39॥

சவுனாக மஹா முனிவர் அருளிச் செய்தபடியே பகவானுடைய அர்ச்சாவதாரத்தை கீழ்ச் சொல்லிய படியே ஆராதிக்க வேண்டும் -அதாவது மிகவும் அருள் பொருந்திய திருக்கண்களோடும் அழகுள்ள திருமுக மண்டலத்தோடும் கூடியதாகவும் -அதை ஸேவிக்கும் தமக்கு மிகவும் பக்தியை யுண்டாக்கத் தக்கதாகவும் பகவானுடைய பிரதிமையை பொன் வெள்ளி முதலிய லோஹங்களினால் செய்வித்து-அதில் பகவானை ஆவாஹனம் செய்து -அவரை மனஸ்ஸால் தியானித்து -அவருடன் தன்னை ஐக்யம் அடைந்ததாகவும் தியானிக்க வேண்டும் –

—————

(தஸ்யாம் ப்₃ரஹ்ம ஸமாரோப்ய மநஸா தந் மயோ ப₄வேத் ।
தாமர்சயேத் தாம் ப்ரணமேத் தாம் ப₄ஜேதாம் விசிந்தயேத் ॥40॥
விஸத்யபாஸ்த தோ₃ஷஸ்து தாமேவ ப்₃ரஹ்ம ரூபிணீம் ।)

அர்ச்சா ரூபியான அந்த பகவானை ஆராதிக்க வேண்டும் -அவரிடத்தில் வணங்க வேண்டும் -அவரை சேவிக்க வேண்டும் -அவரைத் தியானிக்க வேண்டும் -இப்படி அனுஷ்டிப்பதால் ஸகல தோஷங்களும் அற்ற இந்த பக்தன் பர ப்ரஹ்ம ஸ்வரூபரான அந்த பகவானை அடைகிறார் –

—————–

யத் கிசித₃பி குர்வாணோ விஷ்ணோர் ஆராயதநே வஸேத் ॥
விஷ்ண்வாலயே வஸேந் நித்யம் குர்யாத் தத் கர்ம ப₄க்தித꞉ ॥41॥

எதையாவது ஓர் கைங்கர்யத்தைச் செய்து கொண்டு ப்ரபன்னர் பகவானுடைய திவ்ய தேசங்களில் வஸிக்க வேண்டும் -எப்பொழுதும் திவ்ய தேசங்களில் வஸித்துக் கொண்டு தம்முடைய சக்திக்குத் தக்கபடிக்கு பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டும் –

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
ஊரிலேன் காணி இல்லேன்

—————-

யத்₃ப₃லம் மந்தி₃ரம் விஷ்ணோ : யத₃லங்காரகம் ப்ரியம் ।
போ₄கோ₃ப யுக்தம் வா கிஞ்சித் குர்யாந் நோபாய பு₃த்₃தி₄த꞉ ॥42॥

ப்ரபன்னர்கள் பகவானுக்கு ஸ்திரமாகக் கோயில் கட்டுவதும் -அவன் திரு உள்ளம் உகக்கும் படியாகத் திரு ஆபரணம் செய்வது -அவன் அமுது செய்யத்தக்க ப்ரஸாதம் முதலிய உபகாரங்களை ஸமர்ப்பிப்பது -இவை முதலிய கைங்கர்யங்களை தான் கோறிய பலன்களுக்கு சாதனங்களாக வேண்டும் என்று பிரார்த்தனையோடு செய்வது தகாது-கைங்கர்ய புத்தியுடனேயே செய்ய வேண்டும் என்று கருத்து –

————

யந் முஹுர்தம் க்ஷணம் வா(அ)பி வாஸுதே₃வோ ந சிந்த்யதே ।
ஸாஹாநி꞉ தந் மஹச் சி₂த்₃ரம் ஸா ப்₄ராந்தி꞉ ஸா ச விக்ரியா ॥43॥

ப்ரபன்னர்கள் பகவானைத் த்யானிக்காமல் ஒரு முஹூர்த்த காலத்தை யாவது அல்லது க்ஷண காலத்தை யாவது வீணாக்கப் போக்குவார்களாகில் அது தான் தங்களுக்கு ஓர் கெடுதி என்றும் அபாயம் என்றும் மதி மயக்கம் என்றும் தீங்கு என்றும் நினைக்க வேண்டும் –

—————-

ஏகஸ்மிந் நப்யதி க்ராந்தே முஹூர்தே த்₄யாந வர்ஜிதே ।
த₃ஸ்யுபி₄ர்முஷிதேநேவ யுக்த மாக்ரந்தி₃தும் ப்₄ருஸம் ॥44॥

ப்ரபன்னர்களுக்கு ஒரு முஹூர்த்த காலமாவது பகவத் த்யானம் இன்றியில் கழியுமாகில் அவர்களால் திருடர்களுக்குப் பறி கொடுத்தவர்கள் போலே மிகவும் குரல் பாய்ச்சி அழத் தகும்

————–

ஆலோட்₃ய ஸர்வ ஸாஸ்த்ராணி விசார்ய ச புந꞉ புந꞉ ।
இ₃தமேகம் ஸுநிஷ்பந்நம் த்₄யேயோ நாராயண: ஸதா ₃ ॥45

ஸர்வ ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து அடிக்கடி விசாரித்த்துப் பார்த்ததில் இது ஓன்று தான் நன்றாகத் தேறியது -அதாவது எப்பொழுதும் பகவானைத் த்யானித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே –

—-

பஞ்சமீ -பகவத் பரிசர்யா பத்ததி -ஸம் பூர்ணம்

————-

ஷஷ்டீ -பகவத் பரிஜன உபாஸந பத்ததி

அத₂ லக்ஷ்மீம் ஸமப்₄யர்ச்ய பூ₄மி நீலாதி₃பி₄ஸ்ஸஹ ।
ஸூத்ரவத்யாதி₃பி₄ஶ் சைவ ப்ரபந்நேந விஸேஷத ꞉ ॥1॥

ப்ரபன்னராக இருக்கும் ஒருவர் பூ தேவி நீளா தேவி முதலிய திவ்ய மஹிஷிகளுடனும் ஸூத்ரவதி முதலிய பரிவார மஹிஷிகளுடனும் பகவானுக்குப் பெரிய பிராட்டியாரான ஸ்ரீ மஹா லஷ்மியை ஆராதிக்க வேண்டும் –

—————

கு₃ரூணாம் விஶ்ரமஸ்தா₂நம் ஈஸாநாம் ஜக₃தோ(அ)ஸ்ய ச ।
மஹிஷீம் தே₃வதே₃வஸ்ய தி₃வ்யாம் நித்யாநபாயிநீம் ॥2॥

நமது குரு பரம்பரை முடிவதற்கு ஓர் இடமாயும் இவ்வுலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஈஸ்வரியாகவும் தேவதேவனான பகவானுடன் என்றும் பிரியாத திவ்ய மஹிஷியான ஸ்ரீ மஹா லஷ்மியும் ப்ரபன்னருக்கு அவஸ்யம் ஆராதிக்கத் தக்கவள் –

————

யதா ₂(ஆ)ஹ ப₄க₃வாஞ்ச்சா₂ஸ்த்ரே விஷ்வக் ஸேநாய ஶ்ருண்வதே ।
லக்ஷ்ம்யாம் மயி ச யுஷ்மாஸு ப₄க்தோ யோ பு₄வி து₃ர்லப₄꞉ ॥3॥

இவ்வாறு பகவானும் விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து அருளி உள்ளார் -அத்தை அருளிச் செய்கிறார் –
வாரீர் விஷ்வக் சேனரே -என்னிடத்திலும் மஹா லஷ்மியிடத்திலும் உங்கள் இடங்களிலும் பக்தரான ப்ரபன்னர் அரிதாக இருக்கிறார் –

—————–

அநந்தரம் ஹரேஸ்ஸர்வை ꞉ உபசாரைஸ் ஸமாஹித꞉ ।
தத்₃வத்ஸமர்சயேத்₃தே₃வீம் தே₃வ தே₃வஸ்ய வல்லபா₄ம் ॥4॥

பகவானை ஆராதித்த பின்பு தேவ தேவனான பகவானுக்கு இனிய வல்லபை யாகிய பெரிய பிராட்டியாரை ஸர்வ உபசாரங்களினால் ஜாக்கிரதையுடன் பகவானைப் போலவே ஆராதிக்க வேண்டும் –

அதிகமனம் -நோக்கிச் செல்லுதல் -அடுத்து உபகரணங்களைச் சேகரித்து ஆராதனம்-

—————-

அஸ்யா வைப₄வமாக்₂யாதி தத்த்வரத்நே யதா ₂ ஹரி꞉ ।
பரவ்யூஹாதி₃கான் பஞ்ச ப்ரகாராநாத்மநோ வித₃ன் ॥5॥

தத்வ ரத்னம் என்னும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில் பர வ்யூஹாதி ரூபங்களான தம்முடைய அவதார பேதங்களைச் சொல்லும் பகவான் இம்மஹா லஷ்மியின் வைபவத்தை அவ்விடத்தில் எவ்வாறு அருளிச் செய்கிறாரோ அதை அருளிச் செய்கிறோம் –

————–

ததா ₂ லக்ஷ்ம்யா꞉ ஸ்வரூபம் ச வக்ஷ்யே ஶ்ருணு ஸமாஹித꞉ ।
கு₃ணதஶ்ச ஸ்வரூபேண வ்யாப்திஸ் ஸாதாரணீ மதா ॥6॥

வாரீர் விஷ்வக் சேனரே -அப்படியே இம்மஹா லஷ்மியின் ஸ்வரூபத்தையும் சொல்லுகிறோம் -ஸாவதானமாய் இதைக் கேட்க வேண்டும் -அதாவது -குணத்தினாலும் -நியாமிகை -நியமிக்கிறவள் –
ஸ்வரூபத்தினாலும் -ஈஸ்வரி-ஆளுகிறவள்
ஸர்வ லோகங்களையும் வியாபித்து இருப்பது எங்கள் இருவருக்கும் பொதுவான தர்மமாகும் -இங்கு சொல்லிய ஸ்வரூபமாவது தீபத்தின் ஜ்வாலை போலே தேஜோ ரூபமாய் இருக்கும் ஓர் ஞான ஆஸ்ரயம் -அதன் குணமாவது தீபத்தின் ஒளி போலே ப்ரகாஸ ரூபமாய் இருக்கும் ஓர் ஞானம் -வியாபித்து இருப்பதாவது இவைகள் எங்கும் பரவி இருப்பதாகும் –

ஸ்ரீ எங்கள் ஆழ்வானுடைய ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு சி விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் ஒட்டியே இங்கு இவ்வாறு அருளிச் செய்கிறார்-

ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-அணுவாக இருந்தாலும் பிராட்டிக்கு இவ்வாறு வியாப்தி உண்டே -அநபாயினியாக இருப்பதால் -ஸ்வரூப நிரூபக தர்மம் -பகவான் விபுத்வேன சர்வ கத னான விஷ்ணு -யுடைய ஸ்வ பாவம் போல் -நீக்கமற நிறைந்து இருப்பது போல் இவளும் நீக்கமற நிறைந்து உள்ளாள் -தனக்கு உள்ள சக்தியால் விசேஷ அபிமானம் வைத்து அணுவாக இருந்தாலும் சர்வ கதத்வம் இவளுக்கும் ஆக்கி வைத்துள்ளான் –

———–

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥7॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

விளக்கு -வெளிச்சம் எங்கும் பரவி குண வியாப்தி -சர்வத்வ வர்த்தமானத்தவம்
ஏகத்வ வர்த்தமானத்தவம் -விளக்கு
ப்ரஹ்மம் -ப்ரஹ்ம ஞானம் -இதே போல் -ப்ரஹ்மத்துக்கு ஸ்வரூப வியாப்தியும் உண்டு -இதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியாதே –
நித்ய அநபாயினி என்பதால் அவளுக்கும் இவ்வாறே
ஆபாச விருத்திக்கு ஸுவ்பரி த்ருஷ்டாந்தம்

————–

மயா வ்யாப்தா ததா ₂ ஸா(அ)பி ததா ₂ வ்யாப்தோ(அ)ஹமீஶ்வர꞉ ।
மம தஸ்யாஶ்ச ஸே நேஸ ! வைலக்ஷண்யமித₃ம் ஶ்ருணு ॥8॥

வாரீர் விஷ்வக் சேனரே -என்னால் இம்மஹா லஷ்மியும் இம்மஹா லஷ்மியினால் யானும் ஒருவருக்கு ஓருவர் மேற் சொல்லிய ஸ்வரூபாதிகளினால் சூழப்பட்டு இருக்கிறோம் -ஆனால் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் பேதம் என் என்னில் அதைச் சொல்லுகிறோம் கேள்மின் -என்கிறார் –

———–

மச் சே₂ஷபூ₄தா ஸர்வேஷாமீஶ்வரீ வல்லபா₄ மம ।
தஸ்யாஶ்ச ஜக₃தஶ் சாஹமீஶ்வரோ வேத₃விஶ்ருத꞉ ॥ 9 ॥

ஸர்வர்களுக்கும் ஈஸ்வரியாகவும் எனக்கு மிகவும் இஷ்டையாகவும் இருக்கும் இம் மஹா லஷ்மி எனக்கு சேஷபூதையாய் இருக்கிறாள் -இம்மஹா லஷ்மிக்கும் இவ்வுலகங்களுக்கும் நான் ஈஸ்வரனாக வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறேன் –

————-

அஸ்யா மம ச ஸேஷம் ஹி விபூ₄தி ருப₄யாத்மிகா ।
இதி ஶ்ருதி ஶிரஸ் ஸித்₃த₄ம் மச் சா₂ஸ்த்ரேஷ்வபி மாநத₃ ॥10॥

யதா ₂ பூ₄மிஶ்ச நீலா ச தேஷபூ₄தே மதே மம ।
ததா ₂(ஆ)த்மநாஞ்ச ஸர்வேஷாம் ஜ்ஞாநதோ வ்யாப்திரிஷ்யதே ॥11॥

வாரீர் விஷ்வக் சேனரே -நித்ய விபூதி என்றும் லீலா விபூதி என்றும் விபூதிகள் இருவகைப்பட்டு இருக்கும் -இந்த உபய விபூதிகளும் எனக்கும் இம்மஹா லஷ்மிக்கும் சேஷ பூதங்கள் -யங்கள் இருவருக்கும் ஏற்றத்தைச் செய்வதற்காகவே இருப்பவர்கள் -இவ்வர்த்தம் வேதாந்த சாஸ்த்ரங்களிலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்த்ரத்திலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -அப்படியே பூமி தேவி நீளா தேவிமார் இருவரும் எங்களுக்கு சேஷ பூதை களாக இருக்கிறார்கள் –

முக்த ஜீவர்களுக்கு எல்லாம் குணபூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு -ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது -இப்படியே பூமி தேவி நீளா தேவி இவர்களுக்கும் குண பூத ஞானத்தினால் மட்டும் வியாப்தி உண்டு ஒழிய ஸ்வரூபத்தினால் வியாப்தி கிடையாது-

விபூத்தவம் இல்லாத ஸ்வரூப வியாப்தி பெரிய பிராட்டியாருக்கு மட்டுமே -விசேஷ அபிமானத்தால் இவ்வாறு உண்டாக்கி வைத்துள்ளான் -நம்மாழ்வாருக்கு சூழ் விசும்பில் பரமபத அனுபவம் காட்டி அருளிச் செய்து வைத்தது போல் –

———————-

ஸ்வரூபதஸ்து ந தயோ ꞉ வ்யாப்திர் வேதா₃ந்த பாரக₃ ! ।
அஸ்மின் ஸாஸ்த்ரே யதா ₂(அ)ந்யத்ர ததா ₂ லக்ஷ்மீரபி ஸ்வயம் ॥12॥

ஸ்வஸ்ய நாத₂ஸ்ய ஸம்ப₃ந்த₄ம் வ்யாப்திமைஶ்வர்ய மேவ ச ।
அப்ருத₂க்₃பூ₄த ஸேஷித்வாத் ப்₃ரஹ்மாத்₃வைதம் தது₃ச்யதே ॥13॥

இந்தப் பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மி தனக்கும் தன் கணவனான பகவானுக்கும் இச் சேதன அசேதனங்களில் அடங்கவும் உண்டாயிருக்கும் சேஷ சேஷித்வ ரூப ஸம்பந்தத்தையம் -வியாப்தியையும் –ஆளுகையும்-எவ்வாறு சொல்லி இருக்கிறாளோ அவ்வாறே ஸ்ரீ ஸ்துதி ஸ்ம்ருதி சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டு இருக்கின்றது -ஆகையால் ப்ரஹ்மத்தின் சக்தி ரூபமான இம்மஹா லஷ்மி ப்ரஹ்மத்தைக் காட்டி லும் வேறுபடாமல் இருப்பதால் பஹ்மம் ஒன்றே என்று சொல்லப்படுகிறது –

—————

தஸ்ய யா பரமா ப₄க்தி: ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ₃தி₄தே꞉ ।
ஸர்வாவஸ்தா ₂க₃தா தே₃வீ ஸ்வாத்மபூ₄தா (அ)நபாயிநீ॥
அஹந்தா ப்₃ரஹ்மணஸ் தஸ்ய ஸாஹமஸ்மி ஸநாதநீ ॥14॥

மேற் சொல்லியபடி இம்மஹா லஷ்மிக்கு பகவான் வேறுபாடு இல்லாமையை அருளிச் செய்கிறார் -சந்திரனுக்கு நிலவு போன்றதான அப்பரமாத்மாவின் சக்தி எதுவோ அது தான் அப்பரமாத்மாவுடன் ஸர்வ அவஸ்தையிலும் பிரிவில்லாமலும் அப்பரமாத்மாவின் ஸ்வரூபையுமாக இம்மஹா லஷ்மி சொல்லப்படுகிறாள்

பகவத் ஸாஸ்த்ரத்தில் தன் ஸ்வரூபாதிகளைப் பற்றி இம்மஹா லஷ்மி அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

இம்மஹா லஷ்மி தான் பரமாத்மாவின் தன்மையாக இருக்கிறாள் என்றும் -இப்பரமாத்மா ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பதால் அப்பிராணிகளைச் சொல்லும் தேவாதி பதங்கள் அப்பரமாத்மாவையும் சொல்லுகின்றது -அவ்வாறே அப்பரமாத்மாவின் தன்மையான தன்னையும் அப்பதங்கள் சொல்லும் விதத்தை இதனால் அருளிச் செய்கிறாள்

நான் அப்ப்ரஹ்மத்தின் தன்மையாக இருக்கிறேன் -அப்ப்ரஹ்மம் ஸர்வ பிராணிகளுக்கும் அந்தராத்மாவாக இருப்பதால் அந்த சர்வ பிராணிகளால் நான் என்று சொல்லத்தக்கவராக இருக்கிறார் -அது எப்படி என்னில் -ஆத்மஞானம் இல்லாத ஒருவன் தன் தேஹத்தைக் காட்டி நான் என்றால் அத்தேஹத்திற்க்கு ஆதாரமாக இருக்கும் ஆத்மாவும் அப்பதத்தில் பொருள் படுவது போலே -அவ்வாத்மாவுக்கும் ஆதாரமாக இருக்கும் இப்பரமாத்மாவும் பொருள் படுகிறார் என்பதாகும் –
இப்படிக்கு இப்பிராணிகள் இடத்தில் அடங்கி இருக்கும் அசித்து சித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் வேறுபட்டு இருக்கச் செய்தேயும் இவற்றுள் அசித்தான தேஹ வாசகமான தேவன் மனிதன் என்ற பதங்களைக் கொன்டு இம்மூன்று தத்துவங்களையும் பேதம் இன்றி வ்யவஹரிக்கக் காரணம் என் என்னில்
இம்மூன்று தத்வங்களும் பிரிவின்றி ஒன்றாய்ச் சேர்ந்து வேறுபாடு தோன்றாமல் சரீரமாகவும் தேஹமாகவும் இருக்கை -இதைத்தான் விசிஷ்ட வைதிகர்கள் பிரதிதந்தரம் என்பார்கள் – பிரதிதந்தரமாவது இதர சித்தாந்திகளுக்கு இசையாததாய் தமது வேதாந்த ஸித்தாந்த மாத்திரத்தில் இசைவதாய் இருக்கும் ஓர் அர்த்தம் -அதாவது ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரனுக்கும் இங்கு சொல்லிய சரீர ஆத்ம பாவம் இதைக்கொண்டு தான் -இம்மூன்று தத்துவங்களில் பிரதானனாயும் மற்றவர்களுக்கு தாரகனாயும் இருக்கும் இப்பரமாத்மாவைக் கொண்டு விஷ்ணுர் ஏவ ஜகத் ஸர்வம் என்றும் ப்ரஹ்ம ஏவ சகலம் ஜகத் என்றும் சில ஸாஸ்த்ரங்களிலே ப்ரஹ்மத்தையே ஸகல ப்ரபஞ்சங்களாயும் சொல்லுகிறது

ஆகையால் இப்பிராணிகள் நான் என்று வியவஹரித்தால் அதில் பரமாத்மா பொருள் படுவதால் இம்மஹா லஷ்மி யான் அதில் தோற்றும் தன்மையாக இருக்கிறேன் என்கிறாள் –

————–

ஆத்மாஸ்மி ஸர்வபூ₄தாநாம் அஹம்பூ₄தோ ஹரி꞉ ஸ்ம்ருத꞉ ॥15॥
(அஹந்தா ஸர்வ பூ₄தாநாம் ஸாஹமஸ்மி ஸநாதநீ ।)
யேந பா₄வேந ப₄வதி வாஸுதே₃வ꞉ ஸநாதந꞉ ॥16 |

பகவான் எல்லா இடங்களிலும் வஸிப்பதால் வாஸூ தேவன் என்று சொல்லப்படுகிறார் -இப்படிக்கு பகவான் எல்லா இடங்களிலும் வஸிக்கிறார் என்பதை தேச காலங்களில் குறைவு படுத்துவதற்கு யாதொரு பிரமாணமும் இல்லாமையால் அவர் ஸர்வ தேச ஸர்வ காலங்களில் உள்ளவர் என்றும் -ஆகையால் அவர் ஓர் வஸ்து என்றும் ப்ரஹ்மம் என்றும் ஏற்படுகின்றது -ஆகையால் அவர் இச்சேதனருக்கு அழியாத பேறாக இருக்கிறார் –

——–

(ப₄வத்₃பா₄வாத்மகம் ப்₃ரஹ்ம ததஸ்தச்சா₂ஶ்வதம் பத₃ம் ।)
ப₄வாந் நாராயணோ தே₃வோ பா₄வோ லக்ஷ்மீரஹம் பரா ॥17 ॥

முன் ஸ்லோகத்தில் சாமான்யமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தைச் சொல்லி இந்த ஸ்லோஹத்தினால் அந்த ஸ்வரூபம் உள்ள லஷ்மி நாராயணனே பரப்ரஹ்மம் என்று சொல்லுகிறாள் –
மேற் சொல்லிய சத்தையோடு கூடியவர் -சத்தை –உண்மை -இருக்கை -ஸர்வ உத்தமனான நாராயணன் -ஸ்ரீ மஹா லஷ்மி என்றும் திருநாமத்தை யுடைய நான் மேற் சொல்லிய சத்தையாக இருக்கிறேன் –
ஆகையால் ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய ஸ்ரீ மன் நாராயணனே என்றும் ஆதியும் அந்தமும் இல்லாத பரப்ரஹ்மம் –

ஸர்வத்ர வஸதி வாஸூ தேவன்
பவது -இருப்பது -பாவ -இருக்கும் தன்மை -சத்தை -அவளுடன் இருப்பதாலேயே இருக்கும் தன்மை –

————

லக்ஷ்மீ நாராயணாக்₂யம் தத் ததோ ப்₃ரஹ்ம ஸநாதநம் ।
அஹந்தயா ஸமாயுக்தோ ஹ்யஹமர்த₂꞉ ப்ரஸித்₃த்₄யதி ॥18॥

வேதாந்தம் முதலிய ஸாஸ்திரங்களில் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லப்படுகின்றது -நீர் மேற் சொல்லிய ஸ்லோகத்தின் படி ஸ்ரீ லஷ்மீ நாராயணன் ப்ரஹ்மமாகில் ப்ரஹ்மம் இரண்டு என்று ஏற்படுகிறதே -அது கூடுமோ என்னில்
இம்மஹா லஷ்மி தமக்கும் பரமாத்மாவுக்கு பேதம் இல்லாமையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக்கூடும் என்கிறாள் -இந்த ஸ்லோகத்தினால்
நான் என்பதற்குப் பொருள் தன்மையோடு கூடியதாகவே கிடைக்கின்றது -இத்தன்மையும் நான் என்ற பொருளில் கிடைக்கிறது -இவ்விரண்டும் ஒன்றோடு ஓன்று பிரிவின்றி சேர்ந்தே இருப்பதால்
இவ்வர்த்தங்களாக இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி பரமாத்மா ஆகிய இருவருக்கும் பேதமில்லை
ஆகையால் ப்ரஹ்மம் ஏகம் என்று சொல்லக் குறை இல்லை

மேற் சொல்லியபடி ஸ்ரீ மஹா லஷ்மியின் வைபவத்தைப் பற்றி இதர சாஸ்திரங்களிலும் சொல்லியவற்றை அருளிச் செய்கிறார் –

—————

அஹமர்த₂ ஸமுத்யா ச ஸா(அ)ஹந்தா பரிகீர்திதா ।
அந்யோந்யஸ்யா(அ)விநாபா₄வாத் அந்யோந்யேந ஸமந்வயாத் ॥19॥

தாதா ₃த்ம்யம் வித்₃தி₄ ஸம்ப₃ந்த₄ம் மம நாத₂ஸ்ய சோப₄யோ ꞉ ।
பராஸரஸ்து ப₄க₃வான் ஹைநாம் ப்₃ரஹ்ம ரூபிணீம் ॥20॥

பராசர முனிவரும் இம்மஹா லஷ்மியை பரப்ரஹ்ம ஸ்வரூபியாக ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் ஸர்வ ஜகத்துக்கும் மாதவாய் இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி நித்ய ஸ்வரூபையாகவும் பரமாத்மாவான பகவான் இடமிருந்து என்றும் பிரிவில்லாமலும் இருக்கிறாள் -பரமாத்மா ஸர்வ வ்யாபியாக இருப்பது போல் இம்மஹா லஷ்மியம் ஸர்வ வியாபியாக இருக்கிறாள் –

தாதார்த்தம் -அவனுக்காகவே இவள் -இவளுக்காகவே அவன் –

——————

நித்யைவைஷா ஜக₃ந்மாதா விஷ்ணோ ꞉ ஶ்ரீரநபாயிநீ ।
யதா ₂ ஸர்வக₃தோ விஷ்ணு꞉ ததை ₂வயம் த்₃விஜோத்தம ! ॥21॥

தே₃வ திர்யங் மநுஷ்யேஷு புந்நாமா ப₄க₃வான் ஹரி꞉ ।
ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீ மைத்ரேய ! நாநயோர் வித்₃யதே பரம்
॥22 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே
தேவர் பசு மிருகம் பஹ்யாதிகளான திர்யக்குகள் மனிதர்கள் இவர்களில் ஸ்த்ரீ ரூபிகளாய் இருக்கும் அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மி -புருஷ ரூபிகளாக இருக்கும் அனைவரும் பகவானது ஸ்ரீ மன் நாராயணன் என்றால் ஸ்த்ரீகள் லஷ்மி தேவியின் விபூதிகள் -புருஷர்கள் பகவானுடைய விபூதிகள் –
முன் ஸ்லோகத்தினால் இருவருமே ஸர்வ வ்யாபிகளாய்ச் சொல்லப்பட்டது -இங்கு இவ்வாறு பிரித்துச் சொல்வது எதனால் என்றால் இருவர்களும் சமானமாய் அந்தராத்மாவாய் -அந்தர்யாமிகளாய் -இருக்கச் செய்தேயும் ஸ்திரீகளை நியமிப்பதில் லஷ்மிக்கும் புருஷர்களை நியமிப்பதில் பகவானுக்கும் முயற்சி அதிகம் என்று கருத்து –

—————–

அபராதை₄க ஸக்தாநாம் அநர்ஹாணாம் சிரம் ந்ருணாம் ।
ப₄ர்துராஶ்ரயணே பூர்வம் ஸ்வயம் புருஷகாரதாம்
॥23 ॥

வால்லப்₄யே நாநுதிஷ்ட₂ந்தீம் வாத்ஸல்யாத்₃ யுப ப்₃ருஹிம்ணீம் ।
உபாயஸமயே ப₄ர்து꞉ ஜ்ஞாந ஸக்த்யாதி₃வர்தி₄நீம் ॥24॥

(முக்தாநாம் போ₄க₃வ்ருத்₃த்₄யர்த₂ம் ஸௌந்த₃ர்யாதி₃விவர்தி₄நீம் ।)
ஆகார த்ரய ஸம்பந்நாம் அரவிந்த₃ நிவாஸிநீம் ॥25 ॥

இம்மஹா லஷ்மி உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவள் என்பதை இதனால் அருளிச் செய்கிறார் –
எப்பொழுதும் அபராதங்களையே செய்வதில் மனமுடையவர்களான இச்சேதனர்கள் தன் பர்த்தாவான பகவானை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் பகவானுக்கு தாம் இஷ்டையாய் -வல்லபையாய் -இருப்பதால் அவனுக்கு இச்சேதனர்கள் இடத்தில் மிகவும் கிருபையை வளரச் செய்பவளாயும் -புருஷகாரம் செய்பவளாயும் –
இச்சேதனர்கள் உபாயத்தை அனுஷ்ட்டிக்கும் சமயத்தில் தம்முடைய கணவனுக்கு இச்சேதனர்களைக் காப்பதற்கு போந்தவைகளான ஞான சக்தியாதிகளை விருத்தி செய்பவளாயும்
முக்தர்களாகும் இச்சேதனர்களுக்கு பரிபூர்ண ஆனந்த அனுபவம் உண்டாகும்படி தனது வல்லபனான பகவானுக்கு தன்னுடைய சம்பந்தத்தினால் ஓர் அளவற்ற வடிவழகை யுண்டாக்கிறவளாய் இருப்பதால்
உபாயத்வ உபேயத்வ புருஷகாரத்வ ரூபங்களான மூன்று ஆகாரங்களோடு கூடியவளாகவும்
ஸர்வ லோக ஈஸ்வரியாகவும்
தம்மை அடைந்தவர்களுக்கு ஸர்வ ஐஸ்வர்யங்களையும் அளிப்பவரான -பகவானுக்கு மிகவும் இஷ்டதமையுமான தாமரை மேல் வீற்று இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மியை ஸேவிக்கிறேன் –

———–

அஸேஷ ஜக₃தீ₃ஶித்ரீம் வந்தே₃ வரத₃வல்லபா₄ம் |
ததா ₂ பூ₄மிம் ச நீலாம் ச தே₃வஶ்சாந்யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥26 ॥

நித்ய ஸூரிப்ரோ₄நாம்ஶ்ச தத் தந் மந்த்ரை ꞉ ஸமர்சயேத் ।
யத்₃த₄ஸ்வேத்ரவஸக₃ம் ஜக₃ச்சித₃சிதா₃த்மகம் ॥27 ॥

அப்படியே பூ தேவியையும் நீளா தேவியையும் மற்றுமுள்ள அவனுடைய அநேக திவ்ய மஹிஷிகளையும் மற்றும் விஷ்வக் சேனர் முதலிய பிரதானர்களான நித்ய ஸூரிகளையும் அவர்களுக்குச் சொல்லிய மந்திரங்களினால் ஆராதிக்க வேண்டும் –

வேத்ரம் -திருப்பிரம்பின் கீழ் வளர்ந்த வஸ்து ப்ரஹ்மம்

—————-

விஷ்ணே ரமாத்யம் ஸேநேஸம் பரிவாரைஸ் ஸமர்சயேத் ।
யே நித்ய ஸூரயோ (அ)நந்த க₃ருடா₃த்₃யா꞉ ஸஹஸ்ரஸ ꞉ ॥28 ॥

சேதன அசேதன ரூபங்களான இவ்வுலகம் அனைத்தும் விஷ்வக் சேனர் திருக்கையில் பிடித்து இருக்கும் செங்கோலின் வசமாக இருப்பதால் விஷ்வக் சேனரை அவரது பரிவாரங்களோடு ஆராதிக்க வேண்டும் –

————-

பரிவாரை ꞉ ஸஹைதாம்ஶ்ச சக்ராதீ₃ந்யாயுதா ₄நி ச ।
தே₃வ்யஶ்ச ஸூத்ரவத் யாத்₃யா꞉ யா லக்ஷ்ம்யா꞉ பரிசாரிகா꞉ ॥29॥

பின்னும் அநந்த கருடாதிகளாயுள்ள அநேகம் நித்ய ஸூரிகள் எவர்களோ அவர்களையும் அவர்களின் பரிவாரங்களையும்
ஸ்ரீ ஸூதர்சனம் முதலிய திவ்ய ஆயுதங்களையும் ஸ்ரீ மஹா லஷ்மியின் பரிசாரிகளாய் இருக்கும் விஷ்வக் சேனர் முதலிய நித்ய ஸூரிகளுக்கு பத்னிமார்களான ஸூத்ரவதி முதலிய நித்ய ஸூரிகளையும் அவர்களின் பரிவாரங்களையும் அவர்களின் அந்தஸ்தின் கிரமப்படி ஆராதிக்க வேண்டும் –

————

தாஶ்ச தத் பரிவாரம் ச பூஜயேத் தத ₃நுக்ரமாத் ।
ப₄ஜந்தே யே ததா ₂ விஷ்ணோ : ஆக₃தா மந்தி₃ரே ஸுரா꞉ ॥30॥

நித்ய ஸூரிகளின் கோஷ்ட்டியில் சேராதவர்களாய் -பகவத் ஸேவார்த்திகளாய் -பகவானுடைய ஆலயத்தில் வந்திருக்கும் தேவர்கள் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கத்தக்கவர்கள் அன்று

———–

விநா விதா₄நம் நித்யேஷு நோபாஸ்யா: தே முமுக்ஷுபி₄꞉ ।
ப்₃ரஹ்ம ருத்₃ரார்ஜுந வ்யாஸ ஸஹஸ்ர கர பா₄ர்க₃வா꞉ ॥31॥

ககுத்ஸா(அ)த்ரேய கபில பு₃த்₃தா₄த்₃யா யே ஸஹஸ்ரஸ ꞉ ।
ஸக்த்யா வேஸாவதாராஸ்தே விஷ்ணோஸ் தத் கால விக்₃ரஹா ꞉ ॥32॥

முமுஷு உபாஸ்யத்வம் -முக்கியமான குணம் –போற்றும் புனிதன் -ராமானுஜன் -உபாசனம் அல்ல

பிரம்மதேவன் ருத்ரன் அர்ஜுனன் வ்யாஸ முனிவர் பரசுராமன் காகுஸ்த மஹா ராஜன் தத்தாத்ரேயர் கபில மகரிஷி புத்தர் இவர்கள் முதலாக பகவானுடைய அவதாரங்களாகச் சொல்லப்படும் அநேகர் சிலகாலம் இவர்கள் இடத்தில் பகவானுடைய சக்தி அனுபிரவேசம் இருந்ததால் சக்தி ஆவேச அவதாரங்கள் என்பர் -பகவானுடைய சக்தி இருந்தவரையில் பகவானுக்கு சரீரங்களாயும் அச்சக்தி நீங்கிய பின்னர் அக்னி முதலிய தேவர்களைப் போல் இவர்களும் சாமான்யவர்களாக இருப்பதால் முமுஷுக்களான ப்ரபன்னர்களால் ஆராதிக்கப்படத் தக்கவர்கள் அல்லர்

———-

அநுபாஸ்யா முமுக்ஷூணாம் யதே₂ந்த்₃ராக்₃ந்யாதி₃தே₃வதா ꞉ ।
யதா ₂ ப₄க₃வதை வோக்தம் விஷ்வக்ஸேநாய ஶ்ருண்வதே ॥33॥

முமுஷுக்களுக்கு ஆராதிக்கத் தகாதவர்களான தேவர்கள் தம்மிடத்தில் ஸாஸ்த்ரார்த்தங்களைக் கேட்க்கும் -விஷ்வக் சேனருக்கு பகவான் எவ்வாறு உபதேசித்தாரோ -அதைச் சொல்லுகிறோம் –

——–

அநுகாலம் முமுக்ஷூணா மநுபாஸ்யா விஸேஷத꞉ ।
அநர்ச்யாநபி வக்ஷ்யாமி ப்ராது₃ர் பா₄வான் யதா ₂க்ரமம் ॥
34॥

சதுர்முக₂ஸ்து ப₄க₃வான் ஸ்ருஷ்டி கார்யே நியோஜித꞉ ।
ஸங்கராக்₂யோ மஹான் ருத்₃ர꞉ ஸம்ஹாரே விநியோஜித꞉ ॥35॥

மாேஹநார்தே₂ ததா ₂ பு₃த்₃த₄꞉ வ்யாஸஶ் சைவ மஹாந்ருஷி꞉ ।
வேதா ₃நாம் வ்யஸநே தத்ர தே₃வேந விநியோஜித꞉ ॥36॥

அர்ஜுநோ த₄ந்விநாம் ஶ்ரேஷ்தடோ ₂ ஜாமத₃க்₃ந்யோ மஹாந்ருஷி꞉ ।
வஸூநாம் பாவகஶ்சா(அ)பி வித்தேஸஶ்ச ததை ₂வ ச ॥37॥

(யத்₃யத்₃விபூ₄திமத் ஸத்த்வம் ஶ்ரீமதூ₃ர்ஜிதமேவ வா ।
தத்ததே₃வாவக₃ச்ச₂ த்வம் மம தேஜோம்(அ)ஸ ஸம்ப₄வம் ॥38 ॥)

யத்₃யத்₃விபூ₄திமத் ஸர்வம் ஶ்ரியா ஜுஷ்டம் விஸேஷத꞉ ।
ராக₃த்₃வேஷ விஹீநம் து ஸ்வதோ ப₃லவது₃ல்ப₃ணம் ॥39॥

தத்த₃ம்ஸம் விஜாநீயாத் மம கார்யார்த₂மாத₃ராத் ।
ஏவமாத்₃யாஸ்து ஸேநேஸ ! ப்ராது₃ர்பா₄வை ரதி₄ஷ்டி₂தா ꞉ ॥40 ॥

ஜீவாத்மாநஸ் ஸர்வ ஏதே நோபாஸ் யாஸ்தே முமுக்ஷுபி₄꞉ ।
ஆவிஷ்ட மாத்ராஸ்தே ஸர்வே கார்யார்த₂ம் அமிதத்₃யுதே ॥41

முமுஷுக்களுக்கு பூஜிக்கத் தகாதவர்களான என்னுடைய ஆவேச அவதாரங்களைச் சொல்லுகிறேன் –
சதுர்முகனான பிரமன் உலகங்களை ஸ்ருஷ்டிக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
சங்கரன் என்னும் ருத்ரன் ஸம்ஹாரம் செய்ய என்னால் நியமிக்கப்பட்டவன்
புத்தன் பாபங்களைச் செய்த பிராணிகளுக்கு மோஹத்தை உண்டாக்க என்னால் நியமிக்கப்பட்டவன்
வ்யாஸ முனிவர் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் நான்கு வேதங்களுக்கும் ருக்கு யஜுர் சாமம் அதர்வணம் என்ற பிரிவுகளைச் செய்வதற்காக என்னால் நியமிக்கப்பட்டவன்
இவர்களும் பின்னர் வில்லாளிகளில் சிறந்தவனான அர்ஜுனனும் மஹரிஷியான பரசுராமனும் அஷ்ட வசுக்களில் ஒருவனான பாகவன் என்னும் வாசுவும் குபேரன் என்னும் திக் பாலனும்
பின்னும் இவர்களைப் போல் பிரபுத்வமான ஐஸ்வர்யத்துடனும் சம்பத்து கொண்டவர்களாயும் -ராக துவேஷாதி துர்குணங்கள் இல்லாதவராயும் -பல பராக்ரமுள்ளவர்களாயும் இருக்கும் பிராணிகள் எவர்களோ அவர்கள் அனைவருமே ஓரோர் காரியத்துக்காக என்னுடைய ஓர் அம்சத்துடன் கூடியவர்களாக அறியவேண்டும் –
இப்படிக்கு என்னுடைய அம்சத்தால் அடையப்பட்டு இருக்கும் இவர்கள் ஜீவர்களாக இருப்பதால் இவர்கள் வைஷ்ணவர்களால் பூஜிக்கத் தக்கவர்கள் அல்லர் –

——–

அநர்ச்யா: ஸர்வ ஏவைதே விருத்₃த₄த்வாந் மஹாமுநே ।
அஹங்க்ருதி யுதாஶ் சைதே ஜீவமிஶ்ரா ஹ்யதி₄ஷ்டி₂தா꞉ ॥42 ॥

ஒரு கார்ய நிமித்தமாக என்னாலே அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இஜ்ஜீவர்கள் கர்மபரவசப்பட்டு இருப்பவர்களாதலால் கர்ம பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பும் ப்ரபன்னர்களுக்கு உபாஸிக்கத் தக்கவர்கள் அல்லர் -பகவானால் அனுபிரவேசிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் ஸ்வ தந்திரம் என்னும் அஹங்காரத்துடன் கூடியவர்கள் –

———-

ப்ராது₃ர் பா₄வாஸ்து முக்₂யா யே மத₃ம் ஸத்வாத்₃ விஸேஷத꞉ ।
அஜஹத் ஸ்வ ஸ்வபா₄வா ஹி தி₃வ்யா꞉ ப்ராக்ருத விக்₃ரஹா ꞉ ॥43॥

தீ₃பாத்₃தீ₃ப இவோத்பந்நா ஜக₃தோ ரக்ஷணாய தே ।
அர்ச்யா ஏவ ஹி ஸேநேஸ ஸம் ஸ்ருத் யுத்தரணாய வை
॥44॥

விசேஷித்து என்னுடைய அம்சமாகவே இருப்பதினால் முக்கியமானவைகளாக இருக்கும் ராம கிருஷ்ண முதலிய அவதாரங்களோ என்னில் அவைகள் கர்மபந்தமில்லாத -அபஹத பாப்மா முதலிய ஸத் குணங்களோடு கூடியவைகளாயும் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹங்களோடு கூடியவைகளாயும் -தீபத்தில் இருந்து உண்டாகும் தீபங்கள் போல் இவ்வுலகோரை ரக்ஷிப்பதற்காகவே அவதரித்தவைகள் ஆகையால் இவ்வவதாரங்கள் சம்சாரத்தைக் கடப்பதற்கு ப்ரபன்னர்களால் ஆராதிக்கத் தக்கவைகளாகும்-

——————–

யதாஹ₂ப₄க₃வான் வ்யாஸ꞉ புராணே ச பராஸர꞉ ।
ப்₃ரஹ்மாணம் ஶிதிகண்ட₂ம் ச யாஶ்சாந்யா தே₃வதாஸ்து தா ꞉ ॥45 ॥

ப்ரதிபு₃த்₃தா ₄ ந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் ப₂லம் ।
அந்யே து புருஷ வ்யாக்₄ர ! சேதஸா யே வ்யபாஶ்ரயா꞉ ॥46॥
அஸூத்₃தா₄ஸ்தே ஸமஸ்தாஸ்து தே₃வாத்₃யா꞉ கர்மயோநய꞉ ॥

வ்யாஸ முனிவரும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பராசர முனிவரும் எவ்வாறு அருளிச் செய்துள்ளார்களோ அவற்றை அருளிச் செய்கிறோம்
பிரமதேவன் சிவன் முதலிய பகவானை ஒழிந்த தேவர்கள் இவர்களோ அவர்கள் தங்களை அடைந்த வர்களுக்கு மோக்ஷம் ஒழிந்த ஸ்வல்ப பலன்களை கொடுப்பவர்களாகையால் முமுஷுக்கள் அவர்களை அடைவதில்லை

பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் –

வாரீர் புருஷ ஸ்ரேஷ்டரான மைத்ரேய முனிவரே -மொஸார்த்திகளினால் தியானிக்கத் தகாதவர்களான பகவானை ஒழிந்த மற்ற தேவர்கள் துஷ்க்ருத ஸூஹ்ருத ரூப கர்மங்களினால் வசப்பட்டு அசுத்தராக இருப்பவர்கள் -ஆகையால் அவர்கள் பிரபன்னர்களால் ஆராதிக்கத் தகுந்தவர்கள் அல்லர் –

—–

ஷஷ்டீ₂–ப₄க₃வத் பரிஜந உபாஸநா பத்₃த₄தி–ஸம் பூர்ணம்

————

அத₂ -ஸப்தமீ-பா₄க₃வத் உபாஸநா பத்₃த₄தி꞉

வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவத ஸஹ -முனிவர்களும் யோகிகளும் -குண நிஷ்டர்கள் -கைங்கர்ய நிஷ்டர்கள்-ஆச்சார்யர் -மந்த்ர ப்ரதன் -அடுத்து -பகவத் -இப்பொழுது பாகவத -ஸத்துக்கள் உபாஸனம் –-ஆச்சார்யர் வைபவம் காட்டிக்கொடுத்தவர் யாதலால் பாகவதர் ஸ்ரேஷ்டர் -கண்ணி நுண் சிறுத்தாம்பு பிரவேசம் –மற்றவரைச் சிரித்து இருப்பார் மதுரகவி ஆழ்வார் ஒருவரே -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்க்கு அடிமை -திருவாய் மொழிகளின் ப்ரமேயம் -பாகவதர்களே உபாயம் -உபேயம் -சேஷீ –

அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —விபவம்–காசை இழந்தவனை விட -அர்ச்சை -பொன்னை இழந்தவனை விட -பாகவத சமாஹம் -வைரம் இழந்தது போல் மிக்க வருத்தம்-கேசவ பக்தியை விடவே -கேசவ பக்த பக்தி ஸ்ரேஷ்டம் – வேதகப்பொன் போல் இவர்களோட்டை ஸம்பந்தம்

ஶ்ருதார்த₂ஸம்ஸ யோச்சி₂த்யை போ₃த₄நாய பரஸ்பரம் ।
ஸாத ₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ॥1॥

வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் அர்த்தங்களிலாவது -ஆச்சார்யர்களிடம் கேட்க்கப்பட்ட அர்த்தங்களிலாவது உண்டாகும் ஸம்சயங்களைப் போக்கிக் கொள்வதற்காகவும் -ஒருவருக்கு ஒருவர் ஞானத்தை யுண்டாக்கிக் கொள்வதற்காகவும் -தங்களுக்கு உண்டாயிருக்கும் விஷய அனுபவங்களாகிய நோய்க்கு ஓர் மருந்தாக இருக்கும் சாதுக்களான ஞானிகள் ப்ரபன்னர்களினால் அடையத் தக்கவர்கள்

——————

(யதா₂ஹ ப₄க₃வான் வ்யாஸோ விஷய த்யாக₃ பே₄ஷஜம் ।
ஸங்க₃꞉ ஸர்வாத்மநா த்யாஜ்ய꞉ ஸ சேத் த்யக்தும் ந ஸக்யதே ॥2 ॥

பகவானாக வ்யாஸ முனிவர் விஷய அனுபவங்களை விடுவதற்கு ஓர் உபாயம் சொல்லி இருக்கிறார் -அதைச் சொல்லுகிறோம் -ப்ரபன்னர்கள் ஸர்வ பிரகாரத்தாலும் இவ் விஷய அனுபவங்களை விடவேண்டும் -விடுவதற்கு அஸக்யமாக இருக்குமாகில் அப்பொழுது ஸாதுக்களான ஞானிகளை ஆஸ்ரயிக்க வேண்டும் -அவர்கள் இவ்விஷய அனுபவங்களைப் போக்கும் மருந்தாக இருக்கிறார்கள் –

——————

(ஸாத₄வஸ்த்வபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தஸ் ஸங்க₃ஸ்ய பே₄ஷஜம் ।)
விசிகித்ஸா யதா ₃ து ஸ்யாதா₃த்மந꞉ கர்ம வ்ருத்தயோ ꞉ ॥3 ॥

தத்ர ஸம்மர்ஶிநோ யுக்தா யே விப்ரா꞉ ஸத்பதே₂ ஸ்தி₂தா ꞉ ।
தேஷாம் ஸமீபம் விநயாத் உபேத்யார்த₂ம் து ஶிக்ஷயேத் ॥4॥

ப்ரபன்னராய் இருக்கும் ஒருவருக்கு தாம் அனுஷ்ட்டிக்கும் கர்மங்களிலும் தம்முடைய நடத்தைகளிலும் ஸந்தேஹம் யுண்டாகில் அது விஷயத்தில் ஸாஸ்த்ர விசாரம் யுடையவராயும் -சன்மார்க்கத்தில் நிஷ்டை யுடையவராயும் -ஞானிகளுமான ப்ராஹ்மணர்களின் சமீபத்தில் சென்று அவ்வர்த்தத்தை சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும் –

——————-

யதா ₂ தே தத்ர வர்தேரன் ததா ₂ வர்ததே ஸாத்த்விக꞉ ।
அபி₄க₃ந்தவ்யா꞉ ஸந்தோ யத்₃யபி குர்வந்தி நைகமுபதே₃ஸம் ।
யாஸ்தேஷாம் ஸ்வைரகதா ₂꞉ தா ஏவ ப₄வந்தி ஸாஸ்த்ராணி ॥5॥

ஞானிகளான சாதுக்களை ஆஸ்ரயித்து இருக்கும் பிரபன்னர் அவர்கள் எந்த நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்கிறார்களோ அதே நன்னடத்தையுடன் கூடியவர்களாக இருக்க வேண்டும் -அந்த ஞானிகள் தன்னை ஆஸ்ரயித்து இருக்குமவர்களுக்கு அநேகமாய் ஸத் உபதேசங்களைச் செய்யவே செய்வார்கள் -அப்படிக்கு நேரா விடினும் அவர்கள் தன்னிச்சையாய் சொல்லிக்கொண்டு இருக்கும் கதைகளும் கூட ஸாஸ்த்ரார்த்தமாகவே இருக்கும் –

கலை இலங்கு மொழியாளர் -திண்ணைப் பேச்சும் ஸ்ருதார்த்தங்களே -சொல்லும் அடு ஸ்ருதியாம்

————–

சவ்நகஸ்து யதா ₂ ப்ராஹ ஸாதூ₄நாம் த₃ர்ஸநே ததா ₂ ।
ஸுதூ₃ரமபி க₃ந்தவ்யம் யத்ர பா₄க₃வதா ꞉ ஸ்தி₂தா ꞉ ॥6॥

ப்ரயத்நே நாபி த்₃ரஷ்டவ்யா꞉ தத்ர ஸந்நிஹிதோ ஹரி꞉ ।
( இமமே வார்த₂மாஹ ஸ்ம நாரத ₃ஶ்சவ்நகாய வை ।
பாபாவஸாநமிச்ச₂த்₃பி₄꞉ நித்யம் விஷ்ணு பராயணை ꞉॥
ஸுதூ₃ரமபி க₃த்வா ச த்₃ரஷ்டவ்யா லோக பாவநா꞉ ।)
ஸாதூ₄நாம் த₃ர்ஸநம் புண்யம் தீர்த₂பூ₄தா ஹி ஸாத₄வ꞉ ॥7॥

சவ்னக முனிவர் சாதுக்களின் தர்சனத்தைப் பற்றி எவ்வாறு சொல்லி இருக்கிறாரோ அதைச் சொல்லுகிறோம் -சத்துக்களான ஞானிகள் இருக்கும் இடம் வெகு தூரமாக இருந்த போதிலும் அவ்விடத்திற்கு பிரபன்னர்கள் அவஸ்யம் போக வேண்டும் -அவ்விடத்தில் இருக்கும் தத்வ ஞானியை ப்ரயத்தனமாவது செய்து பார்க்க வேண்டும் -அந்த சாதுவினிடத்தில் பகவான் வஸிக்கிறார் –

ரகு குணன் ஸாது ஸ்ருதி தேடிச் சென்றானே -தர்ம ஸந்தேஹம் தீர்க்க –

சாதுக்களின் தர்சனம் மிகவும் புண்ணியங்களை யுண்டாக்கத் தக்கது -அவர்கள் ஒரு புண்ய தீர்த்தங்களாக இருக்கிறார்கள் -அனால் புண்ய தீர்த்தங்கள் காலம் கழிந்த பின்பே பலன்களைக் கொடுக்கும் -சாதுக்களின் ஸஹ வாஸமோ அப்படிக்கு இல்லாமல் உடனே பயன்களை அளிக்க வல்லதாகும் –

———–

காலேந ப₂லதே தீர்த₂ம் ஸத்₃ய꞉ ஸாது₄ஸமாக₃ம꞉ ।
ஸூகோ (அ)பி ப₄க₃வாநாஹ ஸதாம் து கு₃ண கீர்தநம் ॥8॥

ஸூக மஹ ரிஷியும் சாதுக்களின் குணங்களைக் கொண்டாடுவது நெடும் காலமாய்த் தான் செய்திருக்கும் புண்ணியங்களின் பலனாகச் சொல்லி இருக்கிறார் -அதையும் சொல்லுகிறோம்

—————–

சிரகாலார்ஜி தஸ்யை தத் ஶ்ருதஸ்யவ ப₂லம் யதா ₂ ।
ஶ்ருதஸ்ய பும்ஸாம் ஸுசிரஶ் ரமஸ்ய நந்வஞ்ஜஸா ஸூரிபி₄ரீரிதோ(அ)ர்த₂꞉ ।
தஸ்மாத்₃கு₃ணாநுஸ்மரணம் முகுந்த₃பாதா₃ரவிந்த₃ம் ஹ்ரு₃தயேஷு யேஷாம் ॥9॥

நெடும் காலமாய் வருத்தமடைந்து சம்பாதிக்கப்பட்டு இருக்கும் ஸாஸ்த்ர ஞானத்திற்கும் மோக்ஷ ரூபமான பலன் சீக்கிரம் கிடைப்பதில்லை -ஆகையால் அதைப் பெறுவதற்கு எப்பொழுதும் பகவானுடைய திருவடிகளை தம்முடைய ஹ்ருதயத்தில் தியானித்து இருக்கும் சத்துக்களின் குணங்களைக் கொண்டாட வேண்டும் –

———–

ஸத்₃பி₄ர் க்₃ருஹா க₃தா ꞉ ஸந்த꞉ பூஜநீயா விஸேஷத꞉ ।
ப்ரியவாக்யை ꞉ ததா ₂ர்க்₄யாத்₃யை ꞉ போ₄கை ₃ரிஷ்டைர்யதோ₂சிதை ꞉ ॥10॥

சத்துக்களாக இருக்கும் பிரபன்னர்களினால் தம்முடைய க்ரஹத்துக்கு அதிதிகளாய் வந்திருக்கும் சத்துக்களான ஸ்ரீ வைஷ்னவர்கள் குசல ப்ரஸ்னம் செய்வது முதலிய பிரியமான ஸல்லாபங்களினாலும் -அர்க்க்ய பாத்ய ஆசமநீயம் முதலிய உபசாரங்களினாலும் அவர்களுக்குத் தகுந்தவைகளாயும் இஷ்டங்களாயும் இருக்கும் உபஹாரங்களை சமர்ப்பிப்பதினாலும் பூஜிக்கத் தக்கவர்கள் –

————-

நாகாம்ஸ்யே தா₄வயேத்பாதவ் ₃ இதி ஸ்ம்ருத்யா(அ)ந்ய பா₄ஜநே ।
ம்ருண்மயாத₃வ் க்ஷாலயீத யதா₂ஹ ப₄க₃வான் ஸூக꞉ ॥11॥

வெண்கலப் பாத்திரத்தில் கால்களை அலம்பக்கூடாது என்று ஸ்ருதிகளில் சொல்லி இருப்பதால் பாகவதர்கள் திருவடிகளை மண் பாத்திரம் முதலியவை கொண்டு அலம்ப வேண்டும் -இவ் விஷயத்தில் சுக முனிவர் எவ்வாறு சொல்லி இருக்கின்றாரோ அதைச் சொல்லுகிறோம்

————

வ்யாளாலயத்₃ருமா ஹ்யேதே ஹ்யரிக்தாகி₂லஸம்பத₃꞉ ।
யே க்₃ருஹாஸ்தீர்த பாதீ₃யபாத ₃தீர்த₂ விவர்ஜிதா꞉ ॥ 12 ॥

எந்த கிரஹங்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்துக் கொள்ளத் தக்கின பாகவதர்களின் திருவடி தீர்த்தங்களைப் பெறாதவைகளோ அவைகள் குறைவற்ற பெரும் செல்வங்கள் உள்ளவைகளாக இருந்தும் சர்ப்பங்களுக்கு இருப்பிடமான சந்தன மரங்கள் போன்றவைகளாம் -அவைகள் சத்துக்களினால் கிட்டத் தக்கவைகள் அன்று –

—————–

ஸர்வேஷாமேவ பாபாநாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி₄꞉ ।
வர்ணிதம் ப₄க₃வத்₃ ப₄க்ததாபாதோ₃த₃க நிஷேவணம் ) ॥13॥

பகவத் பக்தர்களின் திருவடி தீர்த்தங்களைப் பானம் செய்வது சகல பாபங்களுக்கும் பிராயச் சித்தம் என்று பண்டிதர்களினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது

—————-

தத் தீர்த₂ம் ஶிரஸா தா₄ர்யம் ததா ₂ங்கை ₃ஶ்ச க்ஷுராதி₃பி₄꞉ ।
பேய மந்தர்யதா ₂ ஸோமே தத்ர நாசமந க்ரியா ॥14॥

அந்த ஸ்ரீ பாத தீர்த்தம் சிரஸ்ஸிலும் அங்கங்களிலும் கண்களிலும் தரிக்கத் தக்கது -அப்படியே பானம் செய்து உள்ளுக்கும் உபயோகிக்கத் தக்கது -இந்த தீர்த்தத்தைப் பானம் செய்தால் ஸோம பானத்தைப் போலவே ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

பகவானுடைய திருவடி தீர்த்தத்தை யாவது பாகவதர்களின் பாத தீர்த்தத்தை யாவது பானம் செய்தால் சோம பானத்தில் ஆசமனம் செய்ய வேண்டியது இல்லாமல் போனது போல் இதிலும் ஆசமனம் செய்ய வேண்டியதில்லை –

—————

பீதே பாதோ₃த₃கே விஷ்ணோ ꞉ வைஷ்ணவாநாம் ததை ₂வ ச ।
தத்ர நாசமநம் கார்யம் யதா ₂ ஸோமே த்₃விஜோத்தம ॥15॥

நாரத₃ஸ்யாதிதே₂꞉ பாதவ் ₃ ஸர்வாஸாம் மந்தி₃ரே ஸ்வயம் ।
க்ருஷ்ண꞉ ப்ரக்ஷால்ய பாணிப்₄யாம் பபௌ பாதோ₃கம் முநே ꞉ ॥ 16 ।

ஸ்ரீ கண்ணனும் தம்முடைய பதினாறாயிரம் பட்ட மஹிஷிகளின் க்ருஹங்களிலும் -அநேகம் திவ்ய ரூபங்களை எடுத்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் காலத்தில் -அவ் விடங்களில் அதிதியாக வந்த முனிவருடைய திருவடிகளை தம்முடைய கைகளினால் தாமே அலம்பி அந்த ஸ்ரீ பாத தீர்த்தத்தை கண்ணன் அமுது செய்தார் –

————-

போ₄கே₃ரிஷ்டைஶ்ச ஸாஸ்த்ரீயை ꞉ தோஷயேத்₃வைஷ்ணவான் க்₃ருஹே
த்ரிவித₄த்யாக₃பூர்வம் து ஸேஷத்வ ஜ்ஞாந வ்ருத்₃த₄யே ॥17॥

தம்முடைய க்ரஹத்தில் வந்திருக்கும் வைஷ்ணவர்களை தமக்கு சேஷத்வ ஞானம் வளருவதற்கு அவர் ப்ராப்யர் என்றும் ப்ராபகர் என்றும் சேஷீ என்றும் மூன்றுவித ஞானங்களையும் முன்னிட்டு ஸாஸ்திரங்களில் சொல்லப் பட்டவைகளாயும் -அவர்களுக்கு இஷ்டங்களாயும் இருக்கும் போக வஸ்துக்களினால் ஸந்தோஷிப்பிக்க வேண்டும் –

——————-

பு₄க்தவத்ஸு ததா ₂ தேஷு ஸேஷம் பு₄ஞ்ஜீத ஸாத்த்விக꞉ ।
யது₃ச் சி₂ஷ்டாஶி நஸ் ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி₃ஷை ꞉ ॥18॥

அந்த பாகவதர்கள் அமுது செய்த பின்பு அந்த சேஷத்தை ஸாத்விகரான ப்ரபன்னர் புசிக்க வேண்டும் -அந்த சேஷத்தை புசிக்கும் சத்துக்கள் ஸர்வ பாவங்களில் நின்றும் நீங்குவார்கள்

—————

(தே த்வத₄ம் பு₄ஞ்ஜதே பாபா꞉ யே பசந்த்யாத்ம காரணாத் ।
தைஶ்ச ஸம்பா₄ஷணாதீ₃நி ப₄க₃வான் ஸாஸ்த்ர உக்தவான் ।
(த்ரிஷு வர்ணேஷு ஸஞ்ஜாதோ மாமேவ ஸரணம் க₃த꞉ ।)
நித்ய நைமித்திக பரோ ………………………………….
வேத₃ஸாஸ்த்ர ரதா ₂ரூடா ₄꞉ ஜ்ஞாந க₂ட்₃ க₃த₄ராத்₃விஜா꞉ ।
க்ரீடா ₃ர்த₂மபி யத்₃ப்₃ரூயு꞉ ஸ த₄ர்ம꞉ பரமோ மத꞉ ॥19॥

அந்த பாகவதர்களுடன் ஸம்பாஷணை செய்வது முதலியவை ஸாஸ்த்ரார்த்தங்களாக இருக்கின்றன என்று பகவத் சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கிறார் -அதாவது வேத சாஸ்த்ரங்களாகிய ரதத்தின் மேல் ஏறி ஞானமாகிய கத்தியை கையில் ஏந்திய ப்ராஹ்மணர்கள் விளையாட்டாகச் சொல்லும் வார்த்தைகளும் ஸாஸ்த்ரீயங்களான தர்மங்களைச் சொல்லுகின்றன என்பதாகும் –

—————

வாஸு தே₃வம் ப்ரபந்நாநாம் யாந்யேவ சரிதாந் யபி ।
தாந்யேவ த₄ர்ம ஸாஸ்த்ராணீத் யேவம் வேத₃விதோ₃ விது₃꞉ ॥20॥

பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னர்களின் அனுஷ்டானங்கள் எவையோ அவைகள் அனைத்தும் தர்ம சாஸ்த்ரார்த்தங்கள் என்று வேதம் அறிந்தோர் சொல்லுகிறார்கள் -தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையே அவர்களும் அனுஷ்டிக்கிறார்கள் என்று கருத்து –

———-

வீக்ஷணாதே₃வ ஸித்₃த₄யந்தி வைஷ்ணவாநாம் ஹி மாநவா꞉ ।
ததா ₂ ந தீர்தை ₂ஶ்ஸூத்₄யந்தி சவ்நகஸ்து யதோ
க்தவான் ॥21॥

ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கடாக்ஷத்தினால் மனிதர்கள் எவ்வளவு பரிசுத்தர் ஆகிறார்களோ அவ்வளவு புண்ய தீர்த்தங்களினாலும் அடைவது இல்லை -இவ்வாறு சவுனக முனிவரும் சொல்லி உள்ளார் –

———–

ந ஸூத்₄யதி யதா ₂ ஜந்து꞉ தீர்த₂வாரிஸ தைரபி ।
லீலயைவ யதா ₂ பூ₄ப வைஷ்ணவாநாம் ஹி வீக்ஷணை ꞉ ॥22॥

சவ்னக முனிவர் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார் -வாரீர் பரீக்ஷித் மஹா ராஜரே –ஸ்ரீ வைஷ்ணவர்கள் கடாக்ஷங்களினால் இப்பிராணிகள் எவ்வாறு சுத்தி அடைகிறார்களோ அவ்வாறு அநேக புண்ய தீர்த்தங்களினாலும் அடைவதில்லை –

———-

(வரம் ஹுதவ ஹஜ்வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்தி₂தி꞉ ।
ந சவ்ரி சிந்தா விமுக₂ ஜந ஸம்வாஸ
வைஸஸம் ) ॥23॥

பகவத் த்யானத்தில் விமுகர்களாக இருக்கும் ஜனங்களுடன் ஸஹவாஸம் செய்வதால் உண்டாகும் தீங்கை விட சுற்றிலும் அக்னி ஜ்வாலைகளினால் சூழப்பட்டு இருக்கும் கூண்டின் நடுவில் இருப்பது மேலானது –

——-

யே து பா₄க₃வதா நங்கை ₃꞉ ஸ்ப்ருஸந்த் யுபவிஸந்தி ச ।
பஶ்யந்த்யபி ச ஶ்ருண்வந்தி தா ₃ஸஸ் தேஷாம் மஹா முநே ॥24॥

வாரீர் மஹா முனிவரே -எவர்கள் பாகவதர்களை தங்கள் சரீரத்தினால் ஸ்பர்சிக்கிறார்களோ -அல்லது அவர்களை எழுந்த அருளி இருக்கச் செய்கிறார்களோ -அல்லது அவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்க்கிறார்களோ -அவர்களுக்கு நான் தாஸனாக இருக்கிறேன் –

————-

ஸத்₃பி₄ரேவ ஸஹா ஸீத ஸத்₃பி₄꞉ குர்வீத ஸங்க₃மம் ।
ஸத்₃பி₄ர் விவாத₃ம் மைத்ரீம் ச நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥25॥

சத்துக்களுடன் கூட இருக்க வேண்டும் -சத்துக்களுடன் கூட ஸஹவாஸம் செய்ய வேண்டும் -வழக்காடினாலும் ஸ்நேஹம் செய்தாலும் சத்துக்களுடனேயே செய்ய வேண்டும் அல்லது அசத்துக்களுடன் ஒரு காரியமும் செய்யத்தக்கது அன்று –

———–

யதா ₂ பதித்வா ஸந்மத்₄யே யயாதி꞉ புநராப்தவான் ।
ஸ்வபத₂ம் தத் ததா ₂ ஸத்ஸு பதிதோ ந விமுஹ்யதி ॥26॥

யயாதி மஹாராஜன் -ஸ்வர்க்க லோகத்தில் பதம் இழந்தவனாய் -அங்கிருந்து விழும் போது -அஷ்டகர் என்னும் சில சத்துக்களின் நடுவே விழுந்து அதனால் மறுபடியும் தன் பதத்தை அடைந்தது போலே சத்துக்களை சேர்ந்தவர் மோஹத்தை அடைவதில்லை –

———

ஸப்தமீ–பா₄க₃வது₃பாஸந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம்

———–

அத₂ விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ அஷ்டமீ

வைகுண்டேது பரே லோகே –பக்த பாகவத -முனிவர்களும் யோகிகளும்-குண அனுபவ ர்களும் -கைங்கர்ய பரர்களும் -இவ்வாறு பாகவதர்கள் இரண்டு கோஷ்ட்டிகள்
ஆச்சார்யர்கள் அனைவரும் பாகவதர்கள்-பேராளன் பேர் ஓதும் பெரியோர்கள் -ஆனால் எல்லா பாகவதர்களும் ஆச்சார்யர்களாக மாட்டார்கள் -மந்த்ர உபதேஸம் செய்து அருளினவர்கள்
ஆச்சார்யர் -பெருமாள் -பரிஜனங்கள் -பாகவதர்கள் -இவ்வாறு நான்கு பத்ததிகள் -இதில் –

விஹிதேஷு வ்யவஸ்தா ₂நம் ப்ரபந்நாநாம் ப்ரபஞ்ச்யதே ।
ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி₃விஹிதம் அநுஷ்டே ₂யம் து நைத்யகம் ॥1॥

ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா இத்யாஹ லக்ஷ்மீபதிர் யத꞉ ।
ப்ரபந்நஸ்து விஸேஷேண ஸாஸ்த்ரேஷு விஹிதாந் யபி ॥2 ॥

ஸ்ருதி ஸ்ம்ருதி அனைத்தும் என்னுடைய ஆணையாக இருக்கின்றன -எவனாவது இவற்றை எனது கட்டளைகளை மீறி நடப்பார்களோ அவன் எனக்கே த்ரோஹம் செய்தவனாகிறான் -அவன் எனது பக்தனாக இருந்தாலும் வைஷ்ணவன் ஆவதில்லை –

ப்ரபன்னர்கள் விசேஷித்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் மாலை கட்டுதல் முதலிய அனுஞ்ஞா கைங்கர்யங்களையும் விடாமல் செய்ய வேண்டும் –

———–

குர்யாத் ஸ்ரக்₃ப₃ந்த₄நாதீ₃நி கர்மாணி ஶ்ரீபதேஸ் ஸதா ₃ ।
யதா ₂ லக்ஷ்ம்யா ஸ்வ தந்த்ரே (அ)பி ஸக்ரா யோக்தா து ப்ருச்ச₂தே ॥3॥

ந்யாஸ வித்யா நிஷ்டரான ப்ரபன்னருக்கு சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டு இருக்கும் கர்மங்களில் வியவஸ்தை ஸ்ரீ மஹா லஷ்மியால் தேவேந்திரனுக்கு அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

ந்யாஸ வித்₃யைக நிஷ்ட₂ஸ்ய விஹிதேஷு வ்யவஸ்தி₂தி꞉ ।
உபாயாபாய ஸந்யாஸீ மத்₄யமாம் வ்ருத்திமாஶ்ரித꞉ ॥4 ॥

ரக்ஷிஷ்யதீதி நிஶ்சித்ய விக்ஷிப்ய ஸ்வ ஸ்வ கோ₃சர꞉ ।
பு₃த்₄யேத தே₃வ தே₃வம் தம் கோ₃ப்தாரம் புருஷோத்தமம் ॥5॥

பகவானிடத்தில் பர ஸமர்ப்பணம் பண்ணிய ப்ரபன்னர் கீழ்ச் சொல்லும் லக்ஷணங்கள் உள்ளவைகளான -உபாய அபாய ரூபங்களான உபாயாந்தரங்களை விட்டு நித்ய நைமித்திக கர்மங்களை விடாமல் அனுஷ்ட்டித்து தேவாதி தேவனான புருஷோத்தமனையே நமக்கு ரக்ஷகனாக அறிந்து இருக்க வேண்டும் –

————-

உபாயாபாய யோர்மத்₄யே கீத்₃ருஶீ ஸ்தி₂திரம்பி₃கே ।
உபாயாபாய தாமேவ க்ரியா꞉ ஸர்வா வளம்ப₃தே ॥6॥

மேற் சொல்லிய உபாய அபாய இரண்டு வித கர்மங்களுக்கு மத்யஸ்தனாக ப்ரபன்னர் இருக்க வேண்டும் என்றால் எவ்விதமாகும் -அனைத்து கர்மங்களுமே உபாய அபாய ரூபங்களாகவே தானே இருக்கும் –

———

ஸ்வீகாரே வ்யதிரேகே வா நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரயோ ꞉ ।
த்₃ருஶ்யதே கர்மணோ (அ)வ்யக்தம் உபாயாபாய ரூபதா ॥7॥

நிஷேத சாஸ்திரங்களையும் விதி சாஸ்திரங்களையும் அனுஷ்ட்டித்தாலும் அல்லது விட்டாலும் அதில் உண்டாகும் கர்மங்கள் உபாய அபாய ரூபங்களாக இருக்கும்

——————

த்ரிவிதா₄ம் பஶ்ய தே₃வேஸ கர்மணோ க₃ஹநாம் க₃திம் |
நிஷேத₄விதி₄ஸாஸ்த்ரேப்₄ய꞉ தாம் விதா₄ம் ச நிபோ₃த₄ மே ॥8॥

நிஷேத விதி சாஸ்த்ரங்களினால் உண்டான இக்கர்மங்களின் வர்க்கங்கள் மூன்று விதங்களாக இருக்கின்றன -அவைகள் மிகவும் ஸூஷ்மமானவைகள் -அவற்றைச் சொல்கிறோம் -நீர் அறிய வேண்டும் –

—————-

அநர்த₂ஸாத₄நம் கிஞ்சித் கிஞ்சிச் சாப்யார்த ₂ஸாத₄நம் ।
அநர்த ₂பரிஹாராய கிஞ்சித் கர்மோபதி₃ஶ்யதே ॥9 ॥

இக் கர்மங்களில் சில அநர்த்த சாதனங்கள்-ஸூராபாநாதிகள் – சில அர்த்த சாதனங்கள் -ஜ்யோதிஷ்ட ஹோமாதிகள் -சில அநர்த்த பரிஹாரங்கள்-சாந்த்ராயுத ரூபாதி கர்மங்கள் – இவ்வாறு மூன்று வகைப்பட்டவை –

————

த்ரை ராஶ்யம் கர்மணா மேவம் விஜ்ஜேயம் ஸாஸ்த்ர சக்ஷுஷா ।
அபாயோபாய ஸஞ்ஜ்ஞவ் து பூர்வ ராஶீ பரி த்யஜேத் ॥10॥

சாஸ்திரங்களை அறிந்தவரால் இவ்வாறு மூன்று வர்க்கங்களாக கர்மங்களைச் சொல்லி -ப்ரபன்னர் முதலில் சொல்லிய அபாய உபாய கர்மங்களை விட்டுவிட வேண்டும் –

————–

த்ருதீயோ த்₃விவிதோ₄ ராஶி꞉ அநர்த₂பரிஹாரக꞉ ।
ப்ராயஶ்சித்தாத்மக꞉ கஶ்சித் உத்பந்நா நர்த ₂நாஸந꞉ ॥11॥

மேற் சொல்லிய கர்மங்களின் மூன்று ராசிகளில் மூன்றாவது ராசியான அநர்த்த பரிஹார ரூபங்களான கர்மங்கள் இரண்டு வகைப்படும் -அவற்றுள் தாம் செய்த பாவங்களினால் உண்டாகும் அநர்த்தங்களைப் போக்கும் பிராயச்சித்த ரூபங்களான சந்தராயணாதி கர்மங்கள் முதல் வகுப்பு -இவற்றையும் ப்ரபன்னர்கள் கீழ் சொன்ன உபாய அபாய ராசிகளை விட வேண்டியது போல் விடத் தக்கவையே யாகும்-பிராயச்சித்த கர்மங்களை செய்ய சக்தி உள்ளவராக இருந்தாலும் -அவற்றால் வரும் கால விளம்பம் ஸஹியாத ஆர்த்த ப்ரபன்னர்கள் விஷயத்திலும் ஆக வேண்டும் -என்று இந்த பத்ததியில் 23 ஸ்லோகத்த்தில் சொல்லுகிறோம் –

————-

தமம் ஸம் நைவ குர்வீத் மநீஷீ பூர்வ ராஶிவத் ।
க்ரியமாணம் ந கஸ்மைசித் யத₃ர்தா₂ய ப்ரகல்பதே ॥12॥

அக்ரியாவத₃நர்தா ₂ய தத்து கர்ம ஸமாசரேத் ।
ஏஷா ஸா வைதி₃கீ நிஷ்டா ₂ ஹ்யுபாயாபாய மத்₄யமா ॥13॥

எந்த கர்மங்களை அனுஷ்ட்டித்தால் யாதொரு பயன்களும் கிடைப்பதில்லையோ ஆனால் அனுஷ்ட்டிக்கா விடில் ப்ரத்யவாதங்களை யுண்டாக்கத் தக்க வைகளாக இருக்கின்றனவோ அவ்விதமான -நித்ய நைமித்திக கர்மங்களை மாத்திரம் ப்ரபன்னர் அவஸ்யம் அனுஷ்ட்டிக்க வேண்டும் –

————————–

அஸ்யாம் ஸ்தி₂தோ ஜக₃ந் நாத₂ம் ப்ரபத்₃யேத ஜநார்த₃நம் ।
ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ஹிம்ஸாஸ்தேயாதி₃கம் ச யத் ॥
14॥

இது தான் மத்தியஸ்தமான வைதிக நிஷ்டை -இதில் இருப்பை யுடையவராய் ஜகத்பதியான பகவானை அடைய வேண்டு -இவற்றை ஸ்பஷ்டமாக மேல் ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் –

—————–

அநர்த₂ஸாத₄கம் கர்ம காம்யம் த்வர்த₂ஸ்ய ஸாத₄கம் ।
சைத்யாதி₃கம் ததா ₂ கர்ம ஸாங்க்₂ய யோகா₃தி₃கம் ததா ₂ ।15॥

ப்ராயஶ் சித்தம் ததா ₂ த்₃வேதா ₄ க்ருத பாப ப்ரணாஸநம் ।
சாந்த்₃ராயணாதி₃கம் த்வேகம் அந்யத் ஸந்த்₄யார்சநாதி₃கம் ॥ 16 ।

ஸ்ரீ மஹாலஷ்மியால் லஷ்மி தந்திரத்தில் தேவேந்திரனுக்கு அருளிச் செய்த ப்ரமேயங்களை அருளிச் செய்கிறார் -கொலை முதலிய அநர்த்த கர்மங்கள் -ஐஹிக ஆமுஷ்மிக பலன்களைக் கொடுக்கும் காம்ய கர்மங்கள் -சாந்தராயணாதி பிராயச்சித்த ரூப கர்மங்களும் விடத்தக்கவையே –

ஸ்நாத்வா புஞ்சீதா -குளித்தே உண்ண வேண்டும்
பாபங்களைச் செய்திருந்தாயாகில் சாந்த்ராயணம் பண்ண வேண்டும்
முமுஷுப்படியில் உண்டே –

————

அத்ர ஹிம்ஸாத்₃யபாயம் ச காம்யம் சௌத்யாதி₃கம் ததா ₂ ।
உபாயம் கர்ம ஸாங்க்₂யாதி₃ ப்ராயஶ்சித்தாதி₃கம் ததா ₂ ॥17 ॥

சாந்த்₃ராயணாதி₃கம் கர்ம ந குர்யாச்ச கதா₃சந ।
பா₄வ்யநர்த₂ஸ்ய யத் கர்ம பரிஹாரேண கீர்திதம் ॥18 ॥

ஸந்த்₄யார்சா பஞ்ச யஜ்ஞாதி₃ தந் முமுக்ஷுபி₄ராத்₃ருதம் ।
நைமித்திகம் சாக்₃ரயணம் ஸீமந்தோந் நயநாதி₃கம் ॥19॥

ஆனால் எந்தக் கர்மங்களை அனுஷ்டியா விடில் கெடுதி சம்பாதிக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படும் ஸந்த்யாவந்தனாதிகள் -பஞ்ச மஹா யாஜ்ஞம் -ஆக்ரயண ஸ்தாலீபாகம் சீமந்த உன்னயநாதி களான நைமித்திக கர்மங்களும் ப்ரபன்னர்களான முமுஷுக்களுக்கு அவஸ்யம் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாகும் –

————-

அக்₃ந்யாதா ₄நாதி₃கம் கார்யம் அதி₄காரே ஸதி த்₃விஜை ꞉ ।
நிஷித்₃த₄காம்யோ பாயாக்₂ய கர்மாண்யாநி நாசரேத் ॥20 ॥

அக்ன்யா தானம் முதலிய சிலஸ்ரளத கர்மங்களும் அவற்றை அனுஷ்ட்டிக்கும் அதிகாரமும் இருக்குமாகில் ப்ராஹ்மணர்கள் இடத்தில் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம் -கீழ்ச் சொல்லிய நிஷித்த காம்ய கர்மங்களை அனுஷ்ட்டிக்கக் கூடாது –

———–

ப்ராயஶ்சித்தம் ப்ரபந்நஸ்ய விஸேஷேண யது₃ச்யதே ।
லக்ஷ்மீ தந்த்ரே கமலயா நிமித்தே து ததா ₃சரேத் ॥21 ॥

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் பண்ணிக கொள்ளும் படியான ஏதாவது நிமித்தம் உண்டாகில் லஷ்மி தந்திரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மியால் ப்ரபன்னர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் ப்ராயச்சித்தத்தை அனுஷ்ட்டிக்க வேண்டும்

————-

ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் அஸக்தவ் ஸரணாக₃தி꞉ ।
ப்ராயஶ்சித்த மித₃ம் ஹ்யேதத் நிர்ணீதம் து மநீஷிபி₄꞉ ॥ 22 ॥

ப்ரபன்னர்கள் உபாய அபாய ரூபமான நிஷித்த கர்மங்களைச் செய்வாராகில் ப்ரபந்ந நிஷ்டையில் குறைந்தவர்களாகி விடுவார்கள்

————————

அநந்ய ஸாத்₄யே ஸ்வாபீ₄ஷ்டே இதி ந்யாஸஸ்ய லக்ஷணாத் ।
ஸக்தவ் ப்ரதிபதோ₃க்தம் ஸ்யாத் ப்ராயஶ்சித்தம் ஹி ஸித்₃த்₄யதி ॥23॥

அந்யதா ₂(அ)திப்ரஸங்க₃ஸ் ஸ்யாத் அவைஷ்ணவ க்₃ருஹாஸநே ।
ஸரணாக₃த ஹந்துஸ் ஸ்யாத் ப்ரபத்த்யைவ பரிக்₃ரஹ꞉ ॥24॥

அப்பிராய்ச சித்தமாவது மீண்டும் சரணாகதி செய்வதே -உபாய புத்தியாகச் செய்தவற்றுக்குப் ப்ராயச்சித்தமும் இதுவே -அவற்றை 30-33 ஸ்லோகங்களில் அருளிச் செய்துள்ளார் -ப்ரபன்னர்களில் சக்தி யுள்ளவர்கள் சாந்த்ராயணாதி ப்ராயச்சித்தங்களும் அசக்தர்களும் ஆர்த்த ப்ரபன்னர்களும் புனர் பிரபத்தியையே பிராயச்சித்தமாகவும் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்பதே ஆச்சார்யர்களது திரு உள்ளம் –

————-

(ப்ராயஶ் சித்திரியம் ஸாத்ர ய꞉ புநஶ் ஸரணம் வ்ரஜேத்) ஸக்ருதே₃வ ஹி
ஸாஸ்த்ரார்த₂꞉ க்ருதோ(அ)யம் தாரயேந் நரம் ।
உபாயாபாய ஸம் யோகே ₃ நிஷ்ட ₂யா ஹீயதே(அ)நயா ॥ 25 ।

ப்ரபன்னர்களுக்கு பிராயச்சித்தம் வேண்டும்படியாய் நேர்ந்தால் தேவ தேவனான பகவானுக்கு திவ்ய மஹிஷியான என்னைச் சரணம் அடைய வேண்டும் –

———-

அபாய ஸம்ப்லவே ஸத்₃ய꞉ ப்ராயஶ் சித்தம் ஸமாசரேத் ।
ப்ராயஶ் சித்திரியம் ஸா(அ)த்ர யத் புநஶ் ஸரணம் வ்ரஜேத் ॥26॥

ப்ரபன்னர்களுக்கு புத்தி பூர்வகமாவது அபுத்தி பூர்வகமாவது உண்டாகும் பாபங்கள் அனைத்துமே இச் சரணாகதியால் போய் விடும்

———-

உபாயாநாமுபாயத்வ ஸ்வீகாரேப் யேத தே₃வ ஹி ।
ப்ராயஶ் சித்த ப்ரஸங்கே ₃ து ஸர்வபாப ஸமுத்₃ப₄வே ॥27॥

யாவன் ஒருவன் அக்ருத்யங்கள் என்று தெரிந்து இருந்தும் அவற்றைச் செய்கிறானோ அவனுக்கு இந்த சரணாகதியும் ப்ராயச்சித்தமாகாது -புத்தி பூர்வகமாக துஷ்க்ருத்யங்கள் செய்யத்தகாது என்று கருத்து –

—————–

மாமேகாம் தே₃வ தே₃வஸ்ய மஹிஷீம் ஸரணம் வ்ரஜேத் ।
தஸ்மாத் ப்ரமாதா ₃த் ப₄க்த்யா வா யத் ப்ரபந்நஸ்ய து₃ஷ்க்ருதம் ॥28 ॥

தத் ஸர்வம் ஸமயத்யாஸூ ஸரணாக₃தி ரேவ ஸா ।
ஜ்ஞாத்வா(அ)ப்யபாயே பாதித்வம் ய꞉ கரோதி விமூட ₄தீ₄꞉ ।
போ₄க₃ ஏவ ஹி தத்ர ஸ்யாத் நிஷ்க்ருதிர்நா(அ)நயா(அ)பி ஹி ॥29॥

நாம் பிரபன்னராய் விட்டதால் எந்த துஷ்க்ருத்யங்களையும் நாம் செய்ய அடுக்கும் என்னும் கர்வத்தினால் ஒருவன் அதிக துஷ்க்ருத்யங்களைச் செய்யக் கூடாது -அப்படி அறிந்து இருந்தும் அபராதங்களைச் செய்வானாகில் அவன் அதோகதியை அடைந்து விடுவான் -இவன் விஷயத்தில் பகவான் அந்தப்பிராயச்சித்த ப்ரபத்தியையும் செய்ய ஒட்டாமல் இவனுக்குத் தீங்கை வளர்த்து விடுவான் என்று கருத்து –

கர்ம பலன்களையும் கிருபா பலன்களையும் அனுபவித்தே தீர வேண்டும் –

———-

ப்ரபந்ந இதி க₃ர்வேண ந குர்யாத் புரு து₃ஷ்க்ருதம் ।
ஜ்ஞாத்வாப் யபாய கர்மாணி குர்வன் மூட ₄꞉ பதத்யத₄꞉ ॥30॥

ஞானிகளான ப்ரபன்னர் கள் ஒருக்காலும் அக்ருத்யங்களைச் செய்யார் -தெரியாமையிலாவது அஜாக்ரதையிலாவது அக்ருத்யங்களைச் செய்தாராகில் அவைகளை தம்முடைய ப்ரஹ்ம ஞானமாகிய நெருப்பிலே எரித்து விடுவார்கள் –

———-

ஜ்ஞாநிநோ ந ச குர்வந்தி யத்₃யஜ்ஞாநாத் ப்ரமாத₃த꞉ ।
தச்ச ஜ்ஞாநாக்₃நிநா ஸர்வம் த₃ஹந்தி விமலாஸயா꞉ ॥31॥

(அத்ராஹ ப₄க₃வான் க்ருஷ்ண꞉ அர்ஜுநஸ்ய து ஶ்ருண்வத꞉ ।
யதை ₂தா₄ம்ஸி ஸமித்₃தோ₄(அ)க்₃நி꞉ ப₄ஸ்ம ஸாத் குரு தே(அ)ர்ஜுந ॥32

ஜ்ஞாநாக்₃நிஸ் ஸர்வ கர்மாணி ப₄ஸ்ம ஸாத் குருதே ததா ₂ ॥33॥

இது விஷயத்தில் பகவானாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதா சாஸ்திரத்தில் -தீக்களினால் பரவி எரியும் அக்னி எவ்வாறு விரகுகளை பஸ்மமாய் எரித்து விடுகின்றதோ அவ்வாறே ப்ரஹ்ம ஞானமாகிற அக்னி மேற் சொல்லிய கர்மங்கள் அனைத்தையும் பஸ்மமாக எரித்து விடும் என்று அருளிச் செய்கிறான்

———

ப₄க₃வ ஜ்ஜ்ஞாந விஸ்ரம்ப₄ விஸூத்₃த₄ மநஸாம் ஸதாம் ।
ஸாஸ்த்ரோக்தம் ப₄க₃வஜ் ஜ்ஞாநம் ப்ராயஶ் சித்தம் க்ருதைநஸாம் ॥34 ॥)

பகவத் ஞானம் ஸர்வ பாபங்களையும் போக்கி விடும் என்னும் நம்பிக்கையினால் விசுத்த மனசை யுடைய ஸத்துக்களுக்கு வேதாந்த ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டு இருக்கும் உபாஸன ரூபமான பகவத் ஞானமானது அவர்களால் செய்யப்பட்டு இருக்கும் பாபங்களுக்குப் ப்ராயச்சித்தமாய் இருக்கின்றது –

———-

யஸ்ய யாவாம்ஶ்ச விஶ்வாஸ꞉ தஸ்ய ஸித்₃தி₄ஶ்ச தாவதீ ।
நைதாவா நிதி விஶ்வாஸ: ப்ரபா₄வ꞉ பரிமீயதே
॥35

பகவத் ஞானத்தில் எவ்வளவு நம்பிக்கை உண்டாகிறதோ அவ்வளவு ஸித்தியும் கிடைக்கும் -இந் நம்பிக்கையின் பிரபாவம் இவ்வளவு என்று அளவிட முடியாது -ஆகையால் உபாஸகர்களுக்கு பகவத் தியானமே ஸர்வ பாபங்களும் ப்ராயச்சித்தமாய் விடுகிறது என்று கருத்து –

————-

வேதோ₃தி₃தம் ஸதா ₃சாரம் (ஆத்₃ரியேத ஸதா ₃ ஸுதீ₄꞉ ।
அஸ்மின் தந்த்ரே யதோ₂க்தம் து வைதி₃காசாரளங்க₄நே ॥36॥

ஸாஸ்த்ர ஞானம் உள்ளவராய் இருக்கும் இப்பிரபன்னர் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் ஸத் ஆச்சாரங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் வேதாந்த யுக்த கர்மங்களைக் கடந்தால் என்ன வென்று அருளிச் செய்யப்பட்டுள்ளது அவற்றை அருளிச் செய்கிறோம் –

——–

அவிப்லவாய த₄ர்மாணாம் பாலநாய குலஸ்ய ச ।
ஸங்க்₃ரஹாய ச லோகாநாம் மர்யாதா ₃ஸ்தா₂பநாய ச ॥37॥

ப்ரியாய மம விஷ்ணோஶ் ச தே₃வ தே₃வஸ்ய ஸார்ங்கி₃ண꞉ ।
மநீஷீ வைதி₃காசாரம் ) மநஸா(அ)பி ந லங்க₄யேத் ॥38 ॥

வேத யுக்த தர்மங்கள் அழியாமல் இருப்பதற்கும் ப்ராஹ்மண்யாதி நான்கு வர்ணங்களையும் காப்பாற்றுவதற்காகவும்-லோகத்தார்கள் அங்கீ கரிப்பதற்கும் -தேவதேவனான பகவானுக்கும் அவர் பெரிய பிராட்டியாரான எனக்கும் இஷ்டத்தை உண்டாக்குவதற்கும் ஞானியாக இருக்கும் பிரபன்னர் வேத யுக்த தர்மங்களை மனதாலும் கடக்கக் கூடாது –

———-

யதா ₂ஹி வல்லபோ ₄ ராஜ்ஜோ நதீ₃ம் ராஜ்ஞா ப்ரவர்திதாம் ।
( லோகோ பயோகி₃நீம் ரம்யாம் ப₃ஹு ஸஸ்ய விவர்தி₄நீம் ॥39 ॥)

லங்க₄யன் ஸூல மாரோஹேத₃நபேஷோ (அ)பி தாம் ப்ரதி ।
ஏவம் விளங்க₄யன் மர்த்யோ மர்யாதா₃ம் வேத₃நிர்மிதாம் ॥40॥

ராஜனுக்கு மிகவும் இஷ்டனாக இருக்கும் ஒருவன் -அந்த ராஜாவால் லோக உபயோகத்துக்காகக் கட்டித் திருப்பப் பட்டதாயும் -அதன் தண்ணீர் பாய்வதனால் பயிர்களை விருத்தி செய்யத் தக்கதாய் இருக்கும் ஓர் நதியின் அணையை அழிப்பானாகில் -அவ்வணையால் உபயோகம் அற்றவனாக இருந்தும் அவன் சூலத்தின் மேல் ஏற்றி அவனால் தண்டிக்கத் தக்கவனாவது போலேவே வேத யுக்தமானஹத்தை மீறி நடக்கும் ப்ரபன்னனும் எனது ஆஜ்ஜையைக் கடந்தானாகில் அவன் எனக்கு இஷ்டனாக இருந்த போதிலும் -இஷ்டனாக இல்லாமல் போவதும் அதுக்கும் மேலே தண்டிக்கத் தக்கவனாவான் என்று கருத்து –

————

ப்ரியோ (அ)பி ந ப்ரியோ மே (அ)ஸௌ மதா₃ஜ்ஞாவ்யதி வர்தநாத் ।
உபாயத்வமஹம் தத்ர வர்ஜயேந் மநஸா ஸுதீ₄꞉ ॥41॥

ஸ்வ வர்ணாஶ்ரம யுக்தம் து தே₃ஸ காலாநுரூபத꞉ ।
விஸேஷ விஹிதம் யச்ச தத் குர்யாச்ச்₂ரீபதே꞉ ப்ரியம் ॥
42 ॥

ஞானியாக இருக்கும் பிரபன்னர் தான் அனுஷ்ட்டிக்கும் நித்ய நைமித்திக்க கர்மங்களில் இவைகள் மோக்ஷ உபாயங்கள் என்னும் புத்தியை விடவேண்டும்
ஆகையால் தம்முடைய வர்ணாஸ்ரம தர்மங்களோடே கூடியவராகவே வைஷ்ணவர்களுக்கு என்று விசேஷித்து ஸாஸ்திரங்களில் விதித்து இருக்கும் பகவத் கைங்கர்யங்களான கர்மங்களையும் அப்பிரபன்னர் செய்ய வேண்டும் –

அஷ்டமீ–விஹித வ்யவஸ்தா₂ந பத்₃த₄தி꞉ ஸம் பூர்ணம் –

————————

அத₂ வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-

வர்ஜநீயம் ப்ரபந்நாநாம் வர்ண்யதே லோக தவேத₃யோ ꞉ ।
ஸ்வாவஸ்தா ₂தே₃ஶகாலாநாம் விருத்₃த₄ம் வர்ஜயேத் ஸதா₃ ॥ 1 ॥

லௌகிக வைதிக கர்மங்களில் ப்ரபன்னர்களுக்கு விடத்தக்கவை சொல்லப்படுகின்றன -அதாவது தாம் இருக்கும் அவஸ்த்தைக்கும் தேசத்துக்கும் காலத்துக்கும் விருத்தமான கர்மங்களை ப்ரபன்னர்கள் எப்போதும் விடவேண்டும் –

—————

வர்ணாஶ்ரம விருத்₃த₄ம் யத் மந்வாத்₃யுக்தம் விஸேஷத꞉ ।
ஸ்வாதி₄கார விருத்₃த₄ம் ச ஶாஸ்த்ரோக்தம் ந ஸமாசரேத் ॥ 2 ॥

மநு தர்ம ஸாஸ்த்ரம் முதலியவைகளில் தன்னுடைய வர்ணாஸ்ரம தர்மங்களுக்குத் தகாதவைகளாகச் சொல்லப்பட்டு இருக்கும் கர்மங்களையும் -ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருந்தும் தன்னுடைய ப்ரபந்ந அதிகாரத்துக்குத் தகாதவைகளாய் இருக்கும் கீழ்ச் சொல்லும் கர்மங்களையும் ப்ரபந்நர்கள் செய்யக்கூடாது –

————-

ஸாமாந்ய ஶாஸ்த்ராநுஜ்ஞாதம் விருத்₃த₄ம் யத்₃விஸேஷத꞉ ।
சதுஷ்பத₃வநஸ்பத்யோ ꞉ மங்க₃ளாதே₃꞉ ப்ரத₃க்ஷிணம் ॥ 3 ॥

ப்ரதோ₃ஷே ஶங்கரார்சாதி₃ பாபஹாநிகரம் ந்ருணாம் ।
ந குர்யாத் பரமை காந்தீ காம்யம் லோத்₃வய ப்ரத₃ம் ॥ 4 ॥

நற் சந்தி பெரிதான வ்ருக்ஷம் மங்கள வாத்யம் முதலியவைகளான இவைகளைப் ப்ரதக்ஷிணம் செய்வது -சந்தி வேளையில் சிவா பூஜை செய்வது இவை முதலியவை மனிதர்களின் பாபங்களைப் போக்குகின்றனவாக ஸாமான்ய ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன-இவைகளையும் இஹத்திலும் புறத்திலும் நன்மை யுண்டாக்குவதாக சில ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் காம்ய கர்மங்களையும் -இன்னும் வைஷ்ணவர்களுக்கு விருத்தங்களாக இருக்கும் விபூதி தரணம் முதலிய அடையாளங்களையும் பிரபன்னர்கள் செய்யக்கூடாது –

—————–

ஸாமாந்ய ஶாஸ்த்ரவிஹிதம் விருத்₃த₄ம் சாங்கநாதி₃கம் ।
க₃திந்ருத்தாதி₃கம் யத்து விஸேஷாக₃மசோதி₃தம் ॥ 5 ॥

தத் ஸர்வம் வைஷ்ணவ꞉ குர்யாத் யதோ₂க்தவ் யம ஶௌநகௌ ।
“ஹரி கீர்திம் விநை வாந்யத் ப்₃ராஹ்மணேந நரோத்தம ।
பா₄ஷாகா₃நம் ந கா₃தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் ॥ 6 ॥

பகவத் குணங்களை கானம் செய்வது -பகவானுக்கு எதிரில் நர்த்தனம் செய்வது இவை முதலாவதாக பகவத் ஸாஸ்திரங்களில் பாகவதர்களுக்கு விசேஷித்து விதிக்கப்பட்டு இருக்கும் கைங்கர்யங்கள் எவைகளோ அவைகளை வைஷ்ணவர்கள் -ப்ரபன்னர்கள் -அவஸ்யம் செய்ய வேண்டும் -யமதர்மராஜன் சவுனாக முனிவர் இவ்விருவர்களும் இவ்வாறு அருளிச் செய்துள்ளார்கள் –

——————-

விஷ்ணோ : கா₃நம் ச கே₃யம் ச நடநம் ச விஸேஷத꞉ ।
ப்₃ரஹ்மன் ! ப்₃ராஹ்மண ஜாதீநாம் கர்தவ்யம் நித்ய கர்மவத் ॥ 7 ॥

வாரீர் நர ஸ்ரேஷ்டரே -பகவத் குணங்களை கானம் செய்வது ஒழிய ப்ராஹ்மணானால் இதர பாஷையில் கானம் செய்யத் தகாதாகையால் நீர் அதைச் செய்தால் பாபங்களைச் செய்தீராவீர்

வாரீர் -ப்ராஹ்மணரே -ப்ராஹ்மண ஜாதியில் பிறந்தவர்களினால் பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய கானங்களும் கீர்த்தனைகளையும் நர்த்தனங்களையும் தங்கள் நித்ய கர்மங்களைப் போலவே அவஸ்யம் செய்யத்தக்கவைகள் ஆகின்றன –

————–

ந்ருத்யதாம் ஶ்ரீபதே ரக்₃ரே கர ஸம்ஸ்போ₂ட நாதி₃பி₄꞉ ।
உட்₃டீ₃யந்தே ஶரீரஸ்தா ₂꞉ மஹா பாதக பக்ஷிண꞉ ॥ 8 ॥

பகவானுடைய எதிரில் நர்த்தனம் செய்கிற பாகவதர்களின் சரீரங்களில் இருக்கும் மஹா பாதகங்களாகிற பஷிகளானவை அவர்கள் போடும் கைத்தாளம் முதலியவைகளால் வெளியில் கிளம்பி விடுகின்றன –
மரத்தின் மேல் இருக்கும் பக்ஷிகள் கைகளைத் தட்டி ஓசைப் படுத்துவதினாலும் கிளைகளை அசைப்பதினாலும் உயர்க் கிளம்பி விடும் போலே பாகவதர்கள் பகவான் எதிரில் தாளம் போடுவதாலும் நர்த்தனம் செய்வதாலும் அவர்களின் மஹா பாதகங்களும் கழிகின்றன -என்று கருத்து –

————

ஏவம் விஸேஷ ஶாஸ்த்ரோக்தம் விஷ்ணு சக்ராங்கநாதி₃கம் ।
விஸேஷ ஶாஸ்த்ர ப்ராப₃ல்யாத் வைஷ்ணவஸ்து ந வர்ஜயேத் ॥ 9 ॥

இவ்வாறு விசேஷ ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் விஷ்ணு சக்ராங்கனம் முதலியவைகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் ஸாமான்ய ஸாஸ்த்ரங்களைக் காட்டிலும் பலமுள்ளதாகையாலே வைஷ்ணவர்கள் விடத்தகாது -வைஷ்ணவர்கள் அவஸ்யம் சக்ராங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று கருத்து –

————-

லோகே (அ)நுஷ்டா₂ந ஸங்கோசாத் லாக₄வாத் ப₂ ல கௌ₃ரவாத் ।
விமுக்தி ஸாத₄நத்வம் ஹி ப்ரபத்தேரவ ஜாநதே ॥ 10 ॥

அந்யதா₂ யோஜநாச்சாபி ப்ரமாணாநாம் குதர்கத꞉ ।
தேந து₃ஷ் க்ருதிநோ மூடா₄꞉ நராணாமத₄மா꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 11 ॥

உலகத்தில் ப்ரபத்தியை அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவுற்றவராக இருப்பதாலும் -இப்பிரபத்தி லகுவான உபாயமாக இருப்பதாலும் -இதற்குக் கிடைக்கும் மோக்ஷம் மிகப்பெரிய பலனாக இருப்பதாலும் -இப்பிரபத்தி ப்ரமாணங்களான ஸாஸ்த்ரங்களுக்கு தர்க்கங்களினால் சிலர் வேறுவிதமாக அர்த்தம் செய்வதாலும் இப்பிரபத்தி மோக்ஷ உபாயம் என்பதை சிலர் அநாதரித்து வருகிறார்கள் –

————-

மாயயா(அ)பஹ்ருதஜ்ஞாம்நா꞉ ஆஸுரீம் யோநிமாஶ்ரிதா ꞉ ।
யாந்ந பஶ்யேஜ் ஜாயமாநான் பாபிநோ மது₄ஸூத₃ந꞉ || 12 |

இப்பிரபத்தி மோக்ஷ சாதனம் என்பதை அபலாபம் செய்யும் மேற் சொல்லியவர்கள் மிக்க பாபங்களைச் செய்த மூடர்கள் -மனிதர்களில் அதமர்கள் -பகவத் மாயையினால் ஞானம் இழந்தவர்கள் -அசுரர் ஸ்வ பாவத்தை அடைந்தவர்கள் –

————-

ப்₃ரஹ்மா ருத்₃ரோ (அ)த₂வா பஶ்யேத் ரஜஸா தமஸா வ்ருதான் ।
தைராளாபம் ந குர்வீத நாஸத்₃பி₄꞉ கிஞ்சிதா ₃சரேத் ॥ 13 ॥

பாபிகளாய் இருக்கும் எவர்களை பகவான் ஜனன காலத்தில் கடாக்ஷிக்க வில்லையோ அல்லது பிரம தேவனால் ருத்ரனால் அவர்களைப் பார்க்கப்பட்டதால் ரஜோ குணத்தோடும் தமோ குணத்தோடும் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடன் ப்ரபன்னர்களால் ஸல்லாபம் செய்யத்தக்கத்து அன்று -அந்த அசத்துக்களுடன் யாதொரு காரியமும் செய்யத்தக்கதன்று –

———

கௌதஸ்குதாநாம் ஶாஸ்த்ராணி தாம ஸாந்யவத₃ன் மநு꞉ |
வாங் மாத்ரேணாபி ஸம் ஸர்க₃ தைஸ் ஸாகம் து நிஷேத₄தி ॥ 14 ॥

கௌதஸ் குதர்களின் ஸாஸ்த்ரங்களை தாமஸ ஸாஸ்த்ரங்களாக மநு அருளிச் செய்துள்ளார் -ஆகையால் அவர்களுடன் ஸல்லாபம் செய்வதைக் கூட அம்மனு ஸாஸ்த்ரத்தில் நிஷேதித்து இருக்கிறார் –

————————-

யா வேத₃பா₃ஹ்யா ஸ்ம்ருதயோ யாஶ்ச காஶ்ச குத்₃ருஷ்டய꞉ |
ஸர்வாஸ்தா நிஷ்பலா ꞉ ப்ரேத்ய தமோ நிஷ்டா₂ஹி தா꞉ ஸ்ம்ருதா ꞉” ॥15॥

வேத விருத்தங்களாக இருக்கும் ஸ்ம்ருதிகள் எவைகளோ -ஸார்வாக மதம் முதலிய குத்ஸிக மதங்கள் எவைகளோ அவைகள் அனைத்தும் பர லோகத்தில் நிஷ்பலன்களாய் விடுகின்றன -அவைகள் தமோ குணத்தில் இருப்புள்ளவைகள் –

————–

பாஷண்டி₃நோ விகர்மஸ்தா₂ன் பி₃டா₃ லவ்ரதி காம்ஞ்ச₂டா₂ன் ।
ஹைதுகான் ப₃கவ்ருத்தீம்ஶ்ச வாங் மாத்ரேணாபி நார்சயேத் || 16 ||

வேத விருத்தங்களான சின்னங்களைத் தரிப்பவர்களாயும் -ஸாஸ்த்ர விருத்த கர்மங்களைச் செய்பவர்களாயும் வேதங்களை நம்பாதவர்களாயும் கபிடால விருத்திகளாயும் -வேதங்களின் பேரில் ஹேது வாதம் செய்பவர்களாயும் -பக விருத்திகளாயும் இருக்கும் அதிதிகளாய் வந்திருக்குமவர்களை பிரபன்னர்கள் வாக்கினால் கூட பூஜிக்கத்தக்கவர்கள் அன்று
பிடா விருத்திகளுக்கு லக்ஷணம்
தர்மத்வஜீ ஸதா லுப்தச் சாத்மிகோ லோக டம்பக
பைடால விருத்திக ஒக்ஜேயோகி மஸ்ரஸ ஸர்வாபி சந்தக
தான் தார்மிகன் என்று பேர் பெறுவதற்காக பலர் கூடுமிடத்தில் தர்மங்களைச் செய்து தன்னையே ஸ்துதி செய்து கொள்கிறவனாயும் -பிறர் பொருள்களில் ஆசை யுள்ளவனாயும் -கபடம் உள்ளவனாயும் -நம்பியவர்களை மோசம் செய்பவனாயும் -பிறர்களுக்குத் துன்பம் உண்டாக்குபவனாயும் -நல்லோர்களிடத்தில் பொறாமையால் தோஷங்கள் சொல்பவனாயும் இருக்குமவன் பிடால வ்ருத்தி யாவான் -பூனையின் நடவடிக்கை உள்ளவன்
பக விருத்தியின் லக்ஷணம் -கொக்கின் நடவடிக்கை உள்ளவன்
அதோ த்ருஷ்டிர்கை க்ருதிகஸ் ஸ்வார்த்த சாதன தத்பர கடோ மித்யா விநீத ச பக விருத்தி தரோ த்விஜ
எப்பொழுதும் கீழ் பார்வை யுள்ளவனாயும் கெடு நினைவு உள்ளவனாயும் பிறருக்கு கெடுதி செய்து தன் கார்யங்களை சாதித்துக் கொள்பவனாயும் துர் நடத்தை உள்ளவனாயும் கபட விநயம் உள்ளவனாயும் இருக்குமவன் பக விருத்தி உள்ளவன் என்று சொல்லப்படுகிறான் –

—————

ப்ரபத்தே꞉ ப்ரதிப₃ந்த₄ஸ்து ஜாயதே யைர்ஹி கர்மபி₄꞉ ।
ப்ரபந்நோ ந நிஷேவேத தாத்₃ருஶாநி ந கிஞ்சந ॥ 17 ॥

தே₃வதாந்த்ர ஸம் ப₄க்திம் நித்ய கர்மவிதி₄ம் விநா ।
உபாயாந்தர நிஷ்டா₂ம் ச த்₃ரோஹம் பா₄க₃வதேஷ்வபி ॥ 18 ॥

விஶ்வாஸ மாந்த்₃யம் விஷயேஷ்வதி ப்ராவண்ய மேவ ச ।
ஶ்ரீஶ்ரீஶயோ ꞉ பரிஜநே நிந்த₃நாதீ₃நி ஸர்வஶ꞉ ॥ 19 ॥

தே₃ஹாவத்₄ யநு வ்ருத்தாநி நாநுதாப யுதாநி ச ।
ப்ராயஶ்சித்த விஹீநாநி பாதகாநி மஹாந்தி ச ॥ 20 ॥

ப₃ந்த₄காநி ப்ரபந்நஸ்து ந குர்யாத்தாத்₃ருஶாந்யபி ।
தேஷ்வந்வயே ஸதி ஸதா மநுதாபோ ப₄வேத்₃யதி₃ ॥ 21 ॥

ப்ராயஶ்சித்தம் தத ꞉ குர்யாத்₃ரஹஸ்யம் ச ப்ரகாஶகம் ।
(ப்ரபந்நஸ்யாநு தப்தஸ்ய ரஹஸ்யே த்வதி₄காரிதா || 22 ||

நித்ய நைமித்திக கர்மங்களைத் தவிர மற்ற இடங்களில் தேவதாந்தர ஸம்பந்தம் பெறுவதும் -உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பதும் -பாகவதருக்கு த்ரோஹம் செய்வதும் -பகவத் பாகவதர்கள் இடத்தில் விச்வாஸம் குறைவு படுவதும் -ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களில் ப்ராவண்யம் கொண்டு இருப்பதும் -பெருமாள் பிராட்டிமார்கள் பரிஜனங்கள் இவர்களை நிந்தை செய்வதும் -ஆகிய இவைகள் தேஹம் இருக்குமளவுக்கு இவனிடத்தில் உள்ளவைகளாய்- இவைகளினால் பரிதாபாத்திகளையும் உண்டாக்காதாவைகளாயும் -நின்று இருக்கும் இவ்வபதாரங்களையும் பிராயச்சித்தம் இன்றிக்கே இருக்கும் மஹா பாதகாதிகள் எவையோ அவ்விதமான ஸம்ஸாரத்தில் கிடக்கச் செய்யும் பாதகங்களையும் ப்ரபன்னர் ஒருக்காலும் செய்யத்தகாதவைகள் –

——————

ப்ராயஶ்சித்தே யதே₂ந்த்₃ராய ப்ருச்ச₂தே கமலா ஆஹ ச ।
) ரஹஸ்யம் து ப்ரபந்நஸ்ய த₃ர்ஶிேம் பூர்வ பத்₃த₄தவ் ॥ 23 ॥

ஸத்துக்களான ப்ரபன்னர்களுக்கு மேற்கண்ட பாதகங்கள் நேர்ந்து அதனால் அனுதாபம் பிறக்குமாகில் பின்பு அவர்கள் ரஹஸ்யமாகவும் ப்ரகாசகமாயும் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் –

—————

ஏத த₃ர்த₂மபி₄ப்ரேத்ய பராஶர வஸோ யதா ₂ ॥ 24 ॥
” க்ருதே பாபே (அ)நுதாபோ வை யஸ்ய பும்ஸ꞉ ப்ரஜாயதே ।
ப்ராயஶ்சித்தம் து தஸ்யைகம் ஹரி ஸம் ஸ்மரணம் பரம் ॥
(பாபே கு₃ரூணி கு₃ரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத்₃வித₃꞉
ப்ராயஶ்சித்தாநி மைத்ரேய ஜகு₃꞉ ஸ்வாயம்பு₄வாத₃ய꞉ ॥ 26 ॥

துஷ் க்ருதங்களைச் செய்து அதனால் அனுதாபத்தோடு கூடிய ப்ரபன்னருக்கு ரஹஸ்ய ப்ராயச்சித்தத்தில் அதிகாரம் உண்டாகிறது -இவ்வாறு தன்னிடத்தில் உபதேசம் கேட்க்கும் தேவேந்திரனுக்கு ஸ்ரீ மஹா லஷ்மி உபதேசித்து அருளி உள்ளாள்
இவ்வாறே பிராயச்சித்த பிரபத்தியைப் பற்றி பராசர முனிவர் அருளிச் செய்தவற்றை மேலும் அருளிச் செய்கிறோம் –

——————-

ப்ராயஶ் சிதாந்ய ஸேஷாணி தப꞉ கர்மாத்மகாநி வை ।
யாநி தேஷாமஸேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் ॥ 27 ॥

எவர் ஒருவர் பாபம் செய்ததால் அனுதாபம் உண்டாகின்றது அவருக்கு பகவந் நாம ஸ்மரணமே பிராயச்சித்தம் ஆகின்றது –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே

——————-

ப்ரமாதா₃த் க்ரியதே கர்ம ப்ரச்ய வேதாத்₄வரேஷு யத் ।
ஸ்மரணாதே₃வ தத்₃விஷ்ணோ ꞉ ஸம் பூர்ணம் ஸ்யாதி₃தி ஶ்ருதி꞉ ॥ 28 ॥

வாரீர் மைத்ரேய முனிவரே ஸ்வயம்பவ மநு முதலிய ரிஷிகளானவர்கள் அதிக பாபங்களுக்கு அதிக ப்ராயச்சித்தமும் அல்ப பாபங்களுக்கு அல்ப ப்ராயச்சித்தமும் சொல்லி இருக்கிறார்கள் –

பிரஸ்ய -நழுவுதல் -த்ரவ்ய லோபம் கிரியா லோபம் மந்த்ர லோபம் -போன்ற அசேஷ லோபங்களையும் போக்க வல்லது

———–

ப₄க₃வத்₃ த்₄யாந யுக்தஸ்ய தத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ।
(நாஸ்திகஸ்ய து மூர்க₂ஸ்ய யுக்தம் த்₃வாத₃ஶ வார்ஷிகம் ) ॥ 29 ॥

தபோ ரூபங்களாயும் கர்ம ரூபங்களாயும் ப்ராயச்சித்தங்கள் எவையோ அவைகள் எல்லாவற்றுக்கும் பகவந் நாம ஸ்மரணமே உயர்ந்த பிராயச்சித்தமாக இருக்கின்றது –

————–

(நாஸ்திகஸ்ய து கர்தவ்யம் யதோ₂க்தம் த₃ஶ வார்ஷிகம்) ।
ஏவம் விஷய பே₄தே₃ ந கு₃ருலத்₄வோர் ந ஸங்கர꞉ ॥ 30 ॥

யாகங்களில் அஜாக்ரதையால் பிழைகளாவது -செய்ய வேண்டியவற்றை தவரி விட்டாவது அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்கள் பகவந் நாமங்களை ஸ்மரித்த மாத்திரத்தாலேயே பரிபூர்ணமாய் விடுவதாய் வேதத்தில் சொல்லப்படுகின்றது –

———-

ஷேத்ரஜ்ஞஸ் யேஶ்வரஜ்ஞாநாத் விஶுத்₃தி₄꞉ பரமா மதா ।
இத்யேவம் யாஜ்ஞவல்க்யேந ப்₃ருவதா (ஆ)த்மேஶ யோரபி ॥ 31 ॥

ஸேஷ ஸேஷித்வ விஜ்ஞாநாத் ஶுத்₃தி₄ர் ஜீவஸ்ய வர்ணிதா ।
“அதி பாப ப்ரவ்ருத்தோ(அ)பி த்₄யாயந் நிமிஷ மச்யுதம் ॥ 32 ॥

ப்ரபன்னர் அனுஷ்ட்டிக்கும் யாகாதி கர்மங்கள் அவர்களுக்கு பகவத் த்யானம் நிலைத்த உடனே முடிவாய் விடுகின்றன -பகவான் இடத்தில் நிஷ்டை இல்லாதவர்களால் பன்னிரண்டு வருஷங்களால் முடியத்தக்க யாகாதி கர்மங்கள் அனுஷ்ட்டிக்கத் தக்கவைகளாம்

மேற் சொல்லியபடி பகவத் பக்தர்கள் அல்லாதவர்கள் பல ஆண்டுகள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பகவத் பக்தர்கள் ஸ்வல்ப பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதே போதும் என்றும் ப்ராயச்சித்தங்களை விதிக்கும் ஸாஸ்த்ரங்களுக்கு வ்யவஸ்தை ஏற்படுவதால் ஒன்றுக்கு ஒண்டு விரோதம் இல்லை –

இவ்வாத்மாக்கள் பரமாத்மாவை அறிவதால் இவர்களுக்கு பரமமான பரிசுத்தி யுண்டாவதாய் யாஜ்ய வல்க்யர் என்னும் மகரிஷி சொல்வதால் -இஜ்ஜீவர்கள் தமக்கும் ஈஸ்வரனுக்கும் யுண்டாய் இருக்கும் சேஷ சேஷித்வ ஞானத்தை அறிவதாலேயே இவர்களுக்குப் பரிசுத்தி சொல்லப்பட்டதாகிறது –

———-

பூ₄யஸ் தபஸ்வீ ப₄வதி பங்க்தி பாவந பாவந꞉ ।
அபவித்ர꞉ பவித்தரோ வா ஸர்வா வஸ்தா₂ம் க₃தோ(அ)பி வா ।
ய꞉ ஸ்மரேத் புண்ட₃ரீகாக்ஷம் ஸ பா₃ஹ்யாப்₄ யந்தரஶ் ஶுசி꞉ ॥ 33 ॥

ஒருவர் அதிக பாபங்களைச் செய்தவராய் இருந்தாலும் ஒரு நிமிஷ காலமாவது பகவானைத் த்யானிப்பவராகில் அவர் மறுபடியும் தபஸ்வியாகவும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தம் செய்பவர்களாயும் ஆகிவிடுகிறார்கள் –

———–

இத்யாதி₃ ஶௌநகாத்₃ யுக்தே꞉ ப₄க₃வத்₃ ஜ்ஞாநிநாம் ந்ருணாம் ।
க்ருதே பாபே (அ)நுதப்தாநாம் தாத்₃த்₄யாநாவதி₄கா꞉ க்ரியா꞉ ॥ 34 ॥

அபரிசுத்தராக இருந்தாலும் பரிசுத்தராக இருந்தாலும் அல்லது அவர் எந்த துரவவஸ்தையை அடைந்து இருந்த போதிலும் எவர் ஒருவர் பகவானைத் தியானிக்கிறாரோ அவர் உள்ளத்திலும் புறத்திலும் பரிசுத்தர் என்று செல்லப்படுகிறார் –

இது முதலாக யுள்ள ஸுநகர் முதலிய மஹரிஷியின் வசநங்களினால் பகவத் பக்தர்களுக்கு பாபம் நேர்ந்து அதனால் அவர்கள் அனுதாபம் உள்ளவர்களாக இருப்பார்களாகில் அவர்கள் செய்யும் பகவத் த்யானத்து அளவிலேயே அந்த பாபங்கள் தீர்ந்து விடும் –

—————

தே₃வோந்தர ஸம் ஸக்தை ꞉ ஸங்க₃ம் த்யக்த்வைவ வைஷ்ணவ꞉ ।
உபாயாந்தர ஸக்தைஶ்ச ப்ரபந்நைஸ் ஸஹ ஸம் வஸேத் ॥ 35 ॥

பின்னர் வேறு தேவதைகளை அடைந்தவர்களாயும் வேறு உபாயங்களை அடைந்தவர்களாயும் இருக்குமவர்களுடன் ஸஹ வாசத்தை விட்டு ப்ரபன்னர்களுடன் வஸிக்க வேண்டும் –

————–

ந மூர்க₂மாஶ்ரயேத் ஸாது₄꞉ ந மூர்கா₂ய கு₃ருர்வதே₃த் ।
ய ஆஶ்ரயேத₃வித்₃வாம்ஸம் தாம ஸஸ்து தமோ விஸேத் ॥ 36 ॥

ஸாதுவாக இருக்கும் ஒருவர் மூர்க்கனாக இருக்கும் குருவை ஆஸ்ரயிப்பது தகாது -மூர்க்கனான சிஷ்யனுக்கு உபதேசிப்பது தகாது -யாவன் ஒருவன் மூடரான ஆசார்யனை ஆஸ்ரயிக்கிறானோ அவன் தமஸ்ஸில் இருந்து காட அந்தகாரத்தை அடைந்தவனாகிறான் –

————–

மூர்க₂த₃த்தம் து யஜ்ஜ்ஞாநம் உப்தம் பீ₃ஜமிவோஷரே ।
அந்யோந்யஸ்மை கு₃ருச்சா₂த்ரௌ ந த்₃ருஹ்யேதாம் கதா₃சந ॥ 37 ॥

மூர்க்கனிடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஞானம் களர் பூமியில் விரைத்த விதையோடு ஒத்தது -ஆச்சார்யனும் சிஷ்யனும் ஒருவருக்கு ஒருவர் த்ரோஹம் செய்யத்தகாது -இவர்களில் எவர் த்ரோஹம் செய்கிறாரோ அவர் மோக்ஷ மார்க்கத்தை இழந்து விடுவார் –

ஓம் சஹ நாவவது சஹ நவ் புனக்து சஹ வீர்யம் கரவா-அவஹை தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா விட்விச்ஸ்-ஆவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு, ஊக்கத்துடன் பணிபுரிய சக்தியைக் கொடு, எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, மனிதர்களாகிய எங்கள் மனதிலுள்ள பேதங்களை நீக்கி எங்களுக்கு என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.

————

யோ த்₃ருஹ்யத் யநயோஸ் ஸோ(அ)யம் ப்₄ரஶ்யதே முக்தி மார்க₃த꞉ ।
அநாதி₃ஷ்டே ந கு₃ருணா மந்த்ரேண ந ஹரிம் ஶ்ரயேத் ॥ 38 ॥

கு₃ரும் ந க₃ர்ஹயேச் சி₂ஷ்யா꞉ தா₄ர்மிகம் த்வர்த₂லோப₄த꞉ ।
அநிவேத்₃ய கு₃ரோ ꞉ கிம்ஶ்சித் நோப பு₄ஞ்ஜீத பு₃த்₃தி₄மான் ॥ 39 ॥

ஆச்சார்யரால் உபதேசிக்கப்படாமல் இருக்கும் மந்திரத்தால் பகவானை ஆராதிக்கத் தகாது -தர்ம நிஷ்டராக இருக்கும் ஆசார்யரை சிஷ்யன் தனத்தின் ஆசையால் பழிக்கக் கூடாது -விசேஷ வஸ்துக்கள் தனக்கு ஏதாவது கிடைத்தால் அதில் சிலதை ஆச்சார்யருக்கு சமர்ப்பிக்காமல் சிஷ்யன் தனக்கு அதை உபயோகித்துக் கொள்ளக் கூடாது -தன் ஆச்சார்யருக்கு த்வேஷிகளாய் இருப்பவர்களை சிஷ்யன் விட்டுவிட வேண்டும் –

—————-

கு₃ருவித்₃வேஷிண: ஸர்வான் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
விஷ்ண்வாலய ந குர்யாத்து நிஷ்டீ₂வநமலாதி₃கம் ॥॥ 40 ॥

பாதவ் ₃ ந ஷாலயேத் தத்ர நாந்தரா தே₃வபீட₂தயோ ꞉ ।
க₃ச்சே₂த் ப்ரபந்நோ நா(அ)த்₃வாராத் ஸம் விஸேத்₃த₄ரிமந்தி₃ரம் ॥ 41 ॥

பகவானுடைய ஆலயத்தில் காறி உமிழ்தல் -மல மூத்ராதி விஸர்ஜனம் செய்தல் -கால்களைக் கழுவுதல் -இவை முதலிய கெட்ட கார்யங்களை ப்ரபன்னர்கள் செய்யவே கூடாது -பகவான் எழுந்து அருளி இருக்கும் இடத்துக்கும் பலி பீடத்துக்கும் நடுவில் குறுக்கே போகக் கூடாது -பகவத் ஆலயத்தில் வாசல் அல்லா வழியாகப் புகுந்து போகக் கூடாது –

——————

(க்ருஷ்ணகம்ப₃ ல ஸம்வீதோ ந விஸேஜ் ஜாது வைஷ்ணவ꞉ ।
விநா தீ₃பாதி₃கம் கர்ம தந்மாலா ப₃ந்த₄நாதி₃கம்) || 42 ॥

வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் கறுப்புக் கம்பளியினால் போர்வை யுள்ளவராய் பகவத் ஆலயத்தில் பிரவேசிக்கக் கூடாது -திரு விளக்கு முதலியவைகளினால் வெளிச்சம் இல்லாத இடத்தில் பகவானுக்கு மாலை கட்டுதல் முதலான கைங்கர்யங்களைச் செய்யக் கூடாது –

—————–

அந்யத் கார்யம் ந குர்வீத வைஷ்ணவோ விஷ்ணு மந்தி₃ரே ।
நாந்யம் தே₃வம் நமஸ் குர்யாத் நாந்யம் தே₃வம் நிரீஷயேத் ॥
43 ॥

வைஷ்ணவர் பகவத் ஆலயத்தில் பகவத் கைங்கர்யம் ஒழிய வேறொரு காரியங்களையும் செய்யக் கூடாது -அங்கு இருக்கும் வேறொரு தேவாலயத்தில் புகுரக் கூடாது -வேறே ஒரு தெய்வத்தைத் தொழவும் பார்க்கவும் கூடாது –

புலை யறமாகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான்
தலை அறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர
ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –
இஷ்ட சித்தி -என்பது
சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –
ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது
இத்தனை போது விளம்பித்தது என் என்ன
ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று
அருளிச் செய்து
புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளி
ஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்-

————–

நாந்யம் ப்ராஸாத₃மாரோஹேத் நாந்ய மாயதநம் வ்ரஜேத் ।
உத்₃தே₃ஶ தஸ்து த்₃வாத்ரிம்ஶத₃பசாரா ஹரே ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 44 ॥

ஸ்ரீ வராஹ புராணத்தின் 32 பகவத் அபசாரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன -வைஷ்ணவர்கள் இவற்றில் எதையுமே செய்யக் கூடாது

———–

புராணே க₂லு வாராஹே வர்ஜயேத்₃வைஷ்ண வஸ்து தான் ।
க₃ந்த₄ம் புப்பம் ததா ₂ வாஸ꞉ பூ₄ஷணாநி பஶூன் க்₃ருஹான் ॥ 45 ॥

ததா ₂ போ₄ஜ்யாநி சாந்யாநி நாத்மார்தே₂ வைஷ்ணவோ ஹரேத் ।
கர்தவ்யா ஸேஷதா பு₃த்₃தி₄꞉ நாத்மநஸ்த நயாதி₃ஷு ॥ 46 ॥

சந்தனத்தை யாவது புஷ்ப்பங்களையாவது வஸ்திர பூஷணங்களை யாவது பின்னும் பசு க்ரஹம் முதலிய பாக்யங்களையாவது அப்படியே அமுது செய்யத்தக்க பதார்த்தங்களையாவது ப்ரபன்னர் தன ப்ரயோஜனத்துக்காக ஸம்பாதிப்பது தகாது -பகவத் ப்ரயோஜனத்திற்காக மட்டுமே ஸம்பாதிக்க வேண்டும் என்று கருத்து –

—————

விஷ்ணோர் விபூ₄தி பூ₄தேஷு மமதாம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥ 47 ॥
ஏகாந்தீ வ்யபதே₃ஷ்டவ்யோ நைவ க்₃ராம குலாதி₃பி₄꞉ ।
விஷ்ணுநா வ்யபதே₃ஷ்டவ்ய꞉ தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி ॥ 48 ॥

ப்ரபன்னர் தமது பிள்ளைகள் முதலியவர்களை தமக்கு நியாமகர்கள் என்னும் எண்ணத்தையும் -அவர்கள் நம்முடையவர்கள் என்னும் எண்ணத்தையும் விட வேண்டும் -அவர்களும் தம்மைப்போலவே பகவானுக்கு நியாமகர்கள் என்றும் பகவானுடைய சொத்துக்கள் என்றும் நினைக்க வேண்டும் –

ஏகாந்தியாக இருக்கும் ப்ரபன்னர் கிராமம் குலம் முதலிய அடையாளங்களை இட்டு வியவஹரிக்கத் தக்கவர் அல்லர் -அவர் பகவானுடைய திரு நாமத்தாலேயே வியவஹரிக்கத் தக்கவர்-அவனுக்கு எல்லா அடையாளங்களும் பகவானாகவே இருக்கிறார்

மாம் மதீயஸ்ய சேதன அசேதன -உனது சொத்து -ஈஸ்வர ப்ரக்ருதிகளுக்கு நாம் கரைய வேண்டாமே-

————–

நத்₃யாஸ் தஸ்யைவ நாமாநி ப்ரவிஷ்டாயா யதா₂ர்ணவம் ।
ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ்ததா ₂ ॥ 49 ॥

கடலில் பிரவேசித்து இருக்கும் நதியின் ப்ரவாஹத்திற்கு அக்கடலின் பெயர் ஒழிய அந் நதியின் பெயர் இல்லாமல் போவது போலவே ஸர்வ பிரகாரத்தாலும் பகவானைச் சரணம் அடைந்த ப்ரபன்னருக்கு அந்தப் பாகவான் திரு நாமம் ஒழிய வேறு ஒரு பெயர் இல்லையாம்

——–

சா₂யா விளங்க₄ நாதீ₃நி ந குர்யாச்ச ஸதாம் ஸதா ₃ ।
ஸத்₃பி₄ஶ்ச ஸஹ வர்தேத விவாத₃ம் தேஷு வர்ஜயேத் ॥ 50 ॥

சத்துக்களின் நிழலைத் தாண்டுவது முதலிய குறைவான செயல்களைப் ப்ரபன்னர் செய்யத் தகாது -எப்பொழுதும் ஸத்துக்களுடனே ஸஹ வாஸம் செய்ய வேண்டும் -அவர்களுடன் வழக்காடுவதைத் தவிர்க்க வேண்டும் –

—————

ப்ரபந்நாநநு ஶாஸ்தீத்த₂ம் விஷ்வக் ஸேநேஶ ஸம்ஹிதா ।
நா வைஷ்ணவ க்₃ரந்த₂ரதி꞉ நா ஸச் சா₂ஸ்த்ர ரதோ ப₄வேத் ॥ 51

ஸ்ரீ விஷ்வக் சேன ஸம்ஹிதை ப்ரபன்னர்களைக் கீழ்ச் சொல்லியபடி கட்டளை இடுகின்றது -அதாவது ப்ரபன்னர் பகவானைப் பற்றியதல்லாத ஸாஸ்த்ரங்களில் ஆசை வைப்பது தகாது -அப்படியே அசத்துக்களினால் செய்யப்பட -அசத்துக்களைப் பற்றியதாக இருக்கும் கிரந்தங்களிலும் ஆசையுள்ளவராகவும் இருப்பதும் தகாது –

—————-

நாந்ருதம் ஶபத₂ம் குர்யாத் ந ச ப்ருச்சே ₂ச்சு பா₄ஶுபே ₄ ।
விஷ நிர்ஹரணம் சாபி பிஶாசாதி₃விமோசநம் ॥ 52 ॥

ஸமஸ்தவ்யாதி₄ஹரணம் ஸூத்₃ர மந்த்ரைர் ந ஸாத₄யேத் ।
ந தா₄ரயேஜ் ஜடாபா₄ரம் ப₄ஸ்ம சைவ ந தா₄ரயேத்
॥ 53 ॥

ப்ரபன்னர் பொய்யாக சபதம் கூறுவது கூடாது -ஜ்யோதிஷம் அறிந்தவர்களிடத்தில் தனக்கு நேரிடும் நன்மை தீமைகளைக் கேட்கக் கூடாது – விஷங்களை போக்குதல் -பிசாசம் முதலிய க்ரஹ விமோசனம் செய்தல் -ஸமஸ்த வியாதிகளுக்கும் சிகிச்சை செய்தல் -இவைகளை சூத்ர மந்திரங்களால் ஸாதிக்கக் கூடாது –

————-

பா₃ஹ்ய லிங்கா₃நி ஸர்வாணி ஸந்த்யஜேத்₃ யாவதா ₃யுஷம் ।
யத்ர யத்ர ஹி நீதிஸ்யாத் வைஷ்ணவீ ஶிஷ்டஸம்மிதா ।
தத்ர தத்ராவ ஸேந்நித்யம் நாந்யத்ரேதி மதிர் மம ॥ 54 ॥

சிரஸ்ஸில் சடை முடிதல் -பஸ்மம் தரித்தல்-பின்னும் வைதிக மந்திரங்களுக்கு வெளிப்பட்டவைகளான மதங்களில் இருப்போர் செய்து கொள்ளும் அடையாளங்கள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் ப்ரபன்னர் விடவேண்டும் – –

—————-

ந லோக வ்ருத்திம் வர்தேத வ்ருத்தி ஹேதோ꞉ கத₂ஞ்சந ।
ஸத்ஸம்மதா து யா வ்ருத்தி꞉ தே₃ஶகாலா நுரூபிணீ ॥ 55 ॥

எந்த எந்த இடங்களில் சிஷ்ட சம்மதங்களான வைஷ்ணவ தர்மங்கள் நடக்கின்றனவோ அந்த இடங்களிலேயே ப்ரபன்னர் வஸிக்க வேண்டும் -மற்ற இடங்களில் வஸிக்கக் கூடாது என்றும் எனக்குத் தோற்றுகிறது –

————-

தாமாஸ்தி₂தோ ந லோபே₄ந ஹீநாம் வ்ருத்திம் ஸமாஶ்ரயேத் ।
வ்யாஸஸ்து ப₄க₃வாநாஹ வர்ஜநீயம் ஸதாமிஹ ॥ 56 ॥

தன் ஜீவன நிமித்தமாக சாமான்யர்களான லோகத்தார்கள் செய்யும் ஜீவன உபாயத்தை ப்ரபன்னர் செய்யக்கூடாது -அப்போதைய தேச காலங்களுக்குத் தக்கவைகளாயும் சத்துக்களினால் ஒப்புக் கொள்ளப் பட்டவைகளாயும் இருக்கும் ஜீவன உபாயங்கள் எவைகளோ அவைகளை பிரபன்னர் அடைந்து இருக்க வேண்டும் -அர்த்த ஆசையினால் ஹீந விருத்தியை இவர்கள் செய்யத் தகாது-

ஸத்துக்களுக்கு விடத் தக்கவைகளை பகவானான வ்யாஸ முனிவர் சொல்லி இருக்கிறார் –

————————-

ந ஶப்₃த₃ஶாஸ்த்ராபி₄ரதஸ்ய மோஷோ ந சாபி ரம்யாவஸத₄ப்ரியஸ்ய ।
ந போ₄ஜநாச்சா₂த₃ந தத்பரஸ்ய ந த லோக வ்ருத்த க்₃ரஹணே ரதஸ்ய ॥ 57 ॥

ஶிஶ்நாே₃தரே தய(அ)பி₄ரதா ꞉ ஸதை₃வ ஸ்தேயாந்ருதா வாக்பருஷாஶ்ச நித்யம் ।
வ்யபேத த ₄ர்மா இதி தாந் விதி₃த்வா ………………………… ஸம்பரிவர்ஜயந்தி ॥ 58 ॥

வ்யாஸ முனிவர் அருளிச் செய்ததை அருளிச் செய்துள்ளார் -ஸப்த ஸாஸ்த்ரத்திலேயே ஊற்றம் யுடையோனுக்காகவாவது -அஸனாச் ஸாதனங்களைப் பெறுவதிலேயே நினைவு யுடையோனுக்காகவாவது-உலகத்தாரின் ஸித்தங்களை வசப்படுத்திக் கொள்வதிலேயே யத்தனம் யுடையோனுக்காகவாவது-மோக்ஷம் கிடைப்பதில்லை -ஒரே நிச்சயம் யுடையோராயும் உறுதியான உறுதியான நன்னடத்தை யுள்ளவராயும் -ஐம் புலன்களில் ஆசையைக் கழித்தவராயும் -ஒருவருக்கும் துன்பம் யுண்டாக்காதவராயும் -ப்ரஹ்ம ஞானத்தில் மனமுடையவராயும் இருக்கும் ஞானிக்கே மோக்ஷம் நிச்சயமாகக் கிடைக்கத் தக்கதாகும் –

———–

ஏகாந்த ஶீலஸ்ய த்₃ருட₄வ்ரதஸ்ய பஞ்சேந்த்₃ரிய ப்ரீதி நிவர்தகஸ்ய ।
அத்₄யாத்மவித்₃யா ரதமாநஸஸ்ய மோஷோ த்₄ருவோ நித்ய மஹிம்ஸ கஸ்ய| 59

———-

நாபி₄நந்தே₃த மரணம் நாபி₄நந்தே₃த ஜீவிதாம் |
காலமேவ ப்ரதீஷேத நிர்வேஶம் ப்₄ருதகோ யதா₂ ॥ 60 ॥

ப்ரபன்னர் தமக்கு சீக்கிரத்தில் மரணம் யுண்டாகும் என்றாவது நெடுநாள் ஜீவித்து இருப்போம் என்றாவது ஸந்தோஷிப்பது கூடாது -கூலி வேலைக்காரன் தனக்குக் கூலி கிடைக்கும் காலத்தை எதிர்பார்த்து இருப்பது போல் அவைகளின் காலத்தையே எதிர்பார்த்து இருக்க வேண்டும் –

—-

ப்ராயேண அக்ருதக்ருத்யாஸ்து ம்ருத்யோருத்₃வேஜிநா ஜநா꞉ ।
க்ருதக்ருத்யா꞉ ப்ரதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரிய மிவாதிதி₂ம் ॥ 61 ॥

உலகத்தில் உள்ளவர்கள் தமோ வஸ்யராய் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்யாமையாலேயே அநேகமாய் மரணத்தின் நின்றும் பயப்படுகிறார்கள் -அப்படிக்கு அல்லாமல் தாம் செய்ய வேண்டிய மோக்ஷ உபாயத்தை செய்தவர்கள் தம்முடைய க்ருஹத்திற்கு வரும் அதிதிகளை எதிர்பார்ப்பது போல் மிருத்யுவையும் எதிர்பார்த்து இருப்பார்கள் –

————-

தத்பாத₃ப₄க்தி ஜ்ஞாநாப்₄யாம் ப₂லமந்யத் கதா₃சந ।
ந யாசேத் புருஷோ விஷ்ணும் யாசநாந் நஶ்யதி த்₄ருவம் ॥ 62 ॥

ப்ரபன்னர்கள் பகவானிடத்தில் அவன் திருவடிகளில் பக்தி ஞானம் இவைகள் ஒழிய வேறு ஒன்றையும் கேட்பது தகாது -அப்படிக் கேட்ப்பாராகில் ஞானம் அழிந்து விடுவார் -இது நிச்சயம் –

————–

ப்ரமாதா₃த்₃பு₃த்₃தி₄தோ வா(அ)பி யதா₃க₃꞉ க்ரியதே ஸதாம் ।
அநுதப் தஸ்து தாநேவ ஷாம யேந் நாந்யதா ₂ ஶம꞉ || 63 ||

அபுத்தி பூர்வகமாவது புத்தி பூர்வகமாவது ப்ரபன்னர்கள் ஸத்துக்களிடம் அபசாரப் படுவார்களாகில் உடனே அனுதாபம் உள்ளவராய் அவர்கள் இடத்திலேயே அபதாரத்துக்கு ஷாமணம் செய்து கொள்ள வேண்டும் -வேறு விதமாக அவ் வபதாரம் கழியாது

———-

ப₄க₃வத் யபசாரே(அ)பி நைஷா ஶாந்திர நுத்தமா ।
ஸ்த்ரீணாம் ஸ்த்ரீஸங்கி₃நாம் சைவ ஸம்ஸர்க₃ம் வர்ஜயேத் ஸுதீ₄꞉ ॥64॥

பகவானிடத்தில் அபசாரம் நேர்ந்தாலும் இப்படி க்ஷமை கொள்ளுவதே உத்தமம் -நல்ல ஞானமுடியவர் ஸ்த்ரீகள் இடத்திலும் ஸ்த்ரீகளுடன் சமசர்க்கம் செய்பர்களிடமும் ஸஹ வாஸத்தை விட வேண்டும் –

———–

தஸ்மாத் ஸர்வாத்மநா வித்₃வான் விஷயாந் விஷவத் த்யஜேத் ।
அவித்₃ய꞉ ப்ராக்ருத꞉ ப்ரோக்தோ வைத்₃யோ வைஷ்ணவ உச்யதே
॥ 65 ॥

ஆகையால் ஞானியாக இருக்கும் பிரபன்னர் ஸ்த்ரீ முதலிய விஷயாந்தரங்களை விஷத்தைப் போலே விடவேண்டும் -இவ்விஷயாந்தர அனுபவத்தினால் அஞ்ஞானம் மேலிடுகிறது -அஞ்ஞானி பிராகிருத மண்டலத்திலேயே அழுந்தி விடுவான் -ஞானியாகவே இருக்குமவர் பகவானைச் சேர்ந்து விட்டவராகவே சொல்லப்படுவார் –

———-

அவித்₃யேந ந கேநாபி வைத்₃ய꞉ கிஞ்சித் ஸமாசரேத் ।
இதி ஹ்யுக்தம் ப₄க₃வதா ஶாஸ்த்ரே மந்வாதி₃பி₄ஸ்ததா ₂ ॥ 66 ॥

ஞானியாக இருக்குமவர் அஞ்ஞானியுடன் யாதொரு காரியமும் செய்யத் தகாது -இவ்வாறு பகவத் ஸாஸ்த்ரத்தில் பகவானும் மன்வாதி சாஸ்திரங்களில் மநு முதலியவர்களாலும் அருளிச் செய்யப்படுகின்றது –

————

தஸ்மாத் ப்ராக்ருத ஸம் ஸர்க₃ம் வர்ஜயேத்₃வைஷ்ணவோத்தம꞉ ।
ஏகஶய்யாஸநம் பங்க்தி பா₄ண்ட₃ம் பக்வாந்நமிஶ்ரணம் ॥ 67 ॥

யாஜநாத்₄யாபநே யாநம் ததை ₂வ ஸஹ போ₄ஜநம் ।
நவதா ₄ ஸங்கர꞉ ப்ரோக்தோ ந கர்தவ்யோ (அ)த₄மைஸ்ஸஹ
|| 68 ॥

ஆகையால் ப்ரக்ருதி போகங்களில் ஆசை யுள்ளவர்களுடன் ஸஹ வாஸத்தை பாகவத உத்தமரான ப்ரபன்னர் விட வேண்டும் – அந்த பிராகிருத போகிகளுடன் ஒரே படுக்கையில் படுப்பது -ஒரே ஆசனத்தில் இருப்பது -ஒரே பங்க்தியிலே சேருவது -அவர்கள் உபயோகப்படுத்திய பாத்திரங்களை சுத்தி செய்யாமல் உபயோகப்படுத்திக் கொள்வது -அவர்கள் அன்னத்தை தங்களுடைய அன்னத்தோடு கலந்து கொள்வது- அவர்களுக்கு ப்ரோஹிதர்களாய் வைதிக கர்மங்களைச் செய்விப்பது -அவர்களுக்கு வேத அத்யயனம் செய்விப்பது -அவர்களுடன் பந்துத்வம் செய்வது -அவர்களுடன் கூட புசிப்பது -ஆகிய இவ்வொன்பது விதங்களில் கலப்பு உண்டாகிறது -இவ்விதங்களில் அவர்களுடன் கலந்து இருப்பதை ப்ரபன்னர்கள் தவிர வேண்டும்-

—————

ஸல்லா பஸ் பர்ஶந ஸ்வாபவிதா ₄நா(அ)ஸநஶாயநாத் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் பாபம் ஸங்க்ரமதே ந்ருணாம் ॥ 69 ॥

ஸம்வத்ஸரேண பததி பதிதேந ஸமாசரன் ।
யாஜநாத்₄யாபநாத்₃யாநாத் ஸஹ ஶய்யாஸநாஶநாத் ॥ 70 ॥

ப்₃ருஹஸ்பதி மநுப்₄யாம் து ஸங்கரஸ்ய து வர்ணநம் ।
வைவித்₄யம் யாஜநாதீ₃நாம் ஸத்₃ய꞉ பாதித்ய ஹேதுநா ॥ 71 ॥

மேற் சொல்லியபடி தர்ம சாஸ்திரங்களில் சொல்லியவற்றையும் அருளிச் செய்கிறார் -பாபங்களைச் செய்த்தவர்களிடம் சம்பாஷணை செய்வது -ஸ்பர்சிப்பது -தூங்குவது -உட்க்காருவது-படுப்பது -ப்ரோஹிதம் செய்வது -வேத அத்யயனம் செய்விப்பது -பந்துத்வம் செய்வது -இவைகளினால் பாபம் செய்யாதவர்களுக்கும் அப் பாவிகளின் பாவங்கள் வந்து சேர்கின்றன –

புரோஹிதம் செய்வது வேத அத்யயனம் செய்வது -எப்பொழுதும் கூடத் திரிவது -கூடப் படுப்பது – உட்க்காருவது -புசிப்பது -இவைகளினால் பதிதனோடு ஒரு வருஷ காலம் ஸஹவாஸம் செய்தவன் அவனைப் போலவே தானும் பதிதனாகி விடுகிறான் –

ப்ருஹஸ்பதி மநு இவர்களினால் மேற் சொல்லியபடி கலந்திருக்கை பலவிதமாகச் சொல்லப்படுகின்றது -அப்பதிதர்களுக்கு புரோஹித தொழில்கள் முதலிய வைதிக கர்மங்களைச் செய்வித்தால் அவன் உடனேயே பதிதனாய் விடுவான் என்றும் சொல்லப்பட்டு உள்ளது –

—————

ந்யாஸ வித்₃யைக நிஷ்டா₂நாம் வைஷ்ணவாநாம் மஹாத்மநாம் ।
ப்ராக்ருதாபி₄ஷ்டுதிர்நிந்தா ₃ நிந்தா ₃ஸ்துதிரிதி ஸ்ம்ருதா ॥ 72 ॥

ந்யாஸ வித்யை என்னும் ப்ரபத்தியில் நிஷ்டையுடைய ப்ரபன்னர்கள் இப்பிரக்ருதி போகங்களை யுடையோர்களை ஸ்துதிப்பது அப் ப்ரபன்னர்களுக்கு பழிப்பு என்றும் அவைகளைப் பழிப்பது இவர்களுக்குப் புகழ் என்றும் சொல்லப்பட்டு இருக்கின்றது –

——–

அத்₃ய ப்ரப்₄ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் ।
அர்த₂காம பரா யூயம் நாராயணா பரா வயம் ॥ 73 ॥

நாஸ்தி ஸங்க₃தி ரஸ்மாகம் யுஷ்மாகம் ச பரஸ்பரம் ।
வயம் து கிங்கரா விஷ்ணோ ꞉ யூய மிந்த்₃ரிய கிங்கரா꞉ ॥ 74 ॥

மேற் சொல்லியபடி ப்ரபன்னர்கள் ப்ராக்ருதர்களைப் பற்றி அருளிச் செய்ததை அருளிச் செய்கிறார் –
வாரீர் உலகத்தார்களே -இது முதல் நீங்கள் நீங்களே -நாங்கள் நாங்களே -எங்கனே ஏன் என்றால் -நீங்கள் அர்த்த காமங்களில் ஆசையை வைத்தவர்கள் -நாங்கள் ஸ்ரீ மந் நாராயணனையே அடைக்கலம் புகுந்தவர்கள் -ஆகையால் எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு துவக்கும் இல்லை -நாங்கள் பகவானுக்கே தாஸர்களாக இருக்கிறோம் -நீங்களோ ஜம்புவான் களுக்கு தாஸர்களாக இருக்கிறீர்கள் –

——–

9-வர்ஜநீய பத்₃த₄தி꞉ நவமீ-ஸம் பூர்ணம்

—————-

அத₂ ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ

ஏவம் ப்ரபந்நா விஷ்ணோஸ்து பாத₃வ் தத் ப்ராண ஸஞ்ஜ்ஞிதான் ।
அநுவ்ரஜதி தாந் விஷ்ணு꞉ அத்யர்த₂ப்ரேம விஹ்வல
꞉ || 1 ||

இவ்வாறு பகவானுடைய திருவடிகளைச் சரணம் புகுந்தவர்களாயும் பகவானால் தன்னுடைய பிராணனாகச் சொல்லப்பட்டு இருக்கும் இப்ரபன்னர்களை பகவான் மிகுந்த திருவருளோடு கூடியவராய் பின் செல்கிறார் –

————–

ஸ்வயம் ப₄க₃வதா சோக்தம் “ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ” ।
ப₃ஹு ஜந்ம ஸஹஸ்ராந்தே தி₃ஷ்ட்யா யஸ்து ப்ரபத்₃யதே
॥ 2 ॥

“வாஸுதே₃வஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄꞉” ।
உக்தா ஶஸ்த்ரே ப₄க₃வதா ப்ரபந்நே க்ருதக்ருத்யதா ॥ 3 ॥

ஞானியாக இருக்குமவர் என் ஆத்மாவாகவே எண்ணப்படுகிறார் என்னும் இவ்வர்த்தம் பகவானால் சொல்லப்படுகின்றது -எவர் ஒருவர் அநேக ஜென்மங்கள் கடைசியில் தமக்கு உண்டாய் இருக்கும் ஸூஹ்ருத விசேஷத்தால் எனக்கு ஸர்வ பயனும் பகவானே என்று என்னிடத்தில் பிரபத்தி செய்கிறார் -அந்த மஹாத்மா உலகத்தில் அரும் பொருளாகக் கிடைக்கத் தக்கவர்-

பகவான் இடத்தில் உயர்ந்த பக்தி உள்ளவராய் இருப்பதும் பகவான் சர்வோத்தமர் என்று அறிந்து இருப்பதுமே ப்ரபன்னர்களுக்கு க்ருதக்ருதையாக ஸாஸ்த்ரத்தில் பகவானால் சொல்லப்பட்டுள்ளது –

மம பிராண பாண்டவ -ஞாநீத் ஆத்மைவ மே மதம் -அறிவார் உயிரானாய்-அறிவார்களுக்கு உயிர் போல் -சாமான்ய அர்த்தம் -அறிவார்களா உயிராகக் கொண்டவன் –என்னது உன்னாவி உன்னது என்னாவி –ஸ மஹாத்மா துர்லபம் -விரஹம் ஸஹியாத மார்த்வம் களத்தில் கூடு பூரிக்கும் –

—————-

தஸ்மிம்ஶ் சாநுத்தமா ப்ரீதி꞉ ஸ்வஸ்யாஸேஷ விஶிஷ்டதா ।
விஷ்ணூபாயோ யோ (அ)ந்யப₂ல ꞉ ஸோ (அ)த₄ம꞉ பரிகீர்தித꞉ ॥ 4 ॥

அந்யோ பாயோ விஷ்ணுப₂ ல ꞉ மத்₄யம꞉ பரிகீர்திதா ꞉ ।
மாத₄வாங்க்₄ரி த்₃வயோ பாயோ மாதா₄வாங்க்₄ரி ப்ரயோஜந꞉ ॥ 5 ॥

பகவானை உபாயமாகக் கொண்டு பகவானை ஒழிந்த வேறு பலன்களை விரும்பும் ப்ரபன்னர் அதமர் என்றும் வேறே உபாயங்களைக் கொண்டு பகவானை அடைய விரும்புபவர்கள் மத்யமர் என்றும் சொல்லப்படுவார்கள் –

அங்கு விஷ்ணு பத பிரயோகம் -இங்கு மாதவ பத பிரயோகம் -த்வயம் போலவே -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——–

ஸ உத்தமாதி₄காரீ ஸ்யாத் க்ருதக்ருத்யோ (அ)த்₃ய ஜந்மநி ।
யா꞉ க்ரியா꞉ ஸம் ப்ரயுக்தா ꞉ ஸ்யு꞉ ஏகாந்தக₃த பு₃த்₃தி₄பி₄꞉ ॥ 6 ॥

பகவானுடைய திருவடிகளையே உபாயமாகக் கொண்டு அத் திருவடிகளையே பயனாக விரும்புபவர்கள் ப்ரபன்னர்களில் உத்தமராவார் – அவர் இஜ் ஜென்மத்திலேயே க்ருதக்ருத்யராய் செய்ய வேண்டிய அனைத்தையுமே செய்தவராகிறார்கள்

ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || -புருஷோத்தமன் –

——————

தாஸ் ஸர்வா ஶிரஸா தே₃வ꞉ ப்ரதி க்₃ருஹ்ணாதி வை ஸ்வயம் ।
“ப₄க்தை ரண்வப்யுபாநீதம் ப்ரேம்ணா பூ₄ர்யேவ மே ப₄வேத் ॥ 7 ॥

பகவான் ஒருவர் இடத்திலேயே பரம நிச்சயமுடைய ப்ரபன்னர்களினால் எந்த ஆராதனங்கள் செய்யப் படுகின்றனவோ அவைகளை பகவான் தனது சிரஸ்ஸால் வஹிக்கிறார்
இவ்வாறு பகவான் பரிக்கிரஹிக்கிறார் என்பதற்கு பகவத் ஸ்ரீ ஸூக்திகளையே பிரமாணமாக அருளிச் செய்கிறார் –

குறும்பறுத்த நம்பி விருத்தாந்தம் அறிவோம்-பூரி ஜெகந்நாதப் பெருமாளுக்கு சமர்ப்பித்த புஷ்ப்பம் கனத்ததே -விதுரஸ்ய மஹா மதி –

—————

பூ₄ர்யப்ய ப₄க்தோபஹ்ருதம் ந மே தோஷாய கல்பதே” ।
ப₄க்த ஶப்₃த₃ஸ்து முக்₂யோக்யதா ப்ரபந்நே பர்யவஸ்யதி ॥ 8 ॥

எனது பக்தர்களினால் அன்புடன் எனக்கு ஸமர்ப்பிக்கப் பட்டு இருக்கும் உபஹாரம் கிஞ்சித்த்தாக இருந்தபோதிலும் அது அதிகமானதாகவே யாகி விடும் -என்னிடம் பக்தி இல்லாதவர்களால் ஸமர்ப்பிக்கப்படும் உபஹாரம் அதிகமாக இருந்த போதிலும் அது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குவதில்லை –

மேற் சொல்லிய பக்த ஸப்தம் ப்ரபன்னர்கள் இடத்திலேயே முக்கியமாக முடிகிறது -இவ்வாறு விஷ்வக் சேனர் ஸம்ஹிதையில் அருளிச் செய்யப்பட்டுள்ளது –

மத் பக்தம் நயாமி பரமம் பதம் -விசேஷித்து ப்ரபன்னர் என்றே பொருள் –

———–

ஆத்மீய ஸம் ஹிதாயாம் து யதா₂ ஸேநேஶ உக்தவான் ।
“ஸேவா து ப்ரோச்யதே ஸத்₃பி₄꞉ ப₄க்தி ஶப்₃தே₃ந பூ₄யஸீ ॥ 9 ॥

ஒருவரிடத்தில் அதிகமாகச் செய்யப்படும் ஸேவை ஸத்துக்களினால் பக்தி என்று சொல்லப்படுகிறது -தனது ஸ்வாமியிடத்தில் தான் மிகவும் தாழ்ந்தவனாக இருப்பது ஸேவை எனப்படுகிறது –

எதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யுமீடே

—————-

ஸேவா சாத்யந்த நீசத்வா பதிர்ஹி ஸ்வாமிநம் ப்ரதி ।
தஸ்மாத் பரஸ்ய தா₃ஸ்யை கரஸதா ப₄க்தி ருச்யதே ॥ 10 ॥

ஆகையால் பகவானிடத்தில் தாஸனாக இருப்பதையே தனக்கு போகமாகக் கொண்டிருப்பது பக்தி என்று சொல்லப்படுகிறது –

———-

ஆகிஞ்சிந்யைக ஶரணா꞉ கேசித்₃பா₄க்₃யாதி₄கா꞉ புந꞉ ।
லக்ஷ்மீ புருஷகாரேண வ்ருத வந்தோ நரோத்தமா꞉ ॥ 11 ॥

மாமேகம் ஶரணம் ப்ராப்ய மாமேகம் ப்ராப்நுவந்தி தே ।
ஏவம் மாம் ப்ராப்ய ஶரணம் வீதஸோக ப₄யக்லமா꞉ ॥ 12 ॥

வேறொரு கதி இல்லாமல் இருப்பதையே உபாயமாகவுடைய பாக்யவான்கள் நரோத்தமர்கள் ஸ்ரீ மஹா லஷ்மியை புருஷகாரமாகக் கோலி ஸ்ரீ மஹா லஷ்மியுடன் கூடிய என்னைச் சரணம் அடைய விரும்புபவர்களாய் இவ்வாறு என்னைச் சரணடைந்து என்னையே பெறுகிறார்கள் –

———–

நிராளம்போ ₃ நிராஶஶ்ச நிர்மமோ நிரஹங்க்ருதி꞉ ।
மாமேவ ஶரணம் ப்ராப்ய தரேத் ஸம்ஸார ஸாக₃ரம் ॥ 13 ॥

என்னுடைய கைங்கர்யங்களையே செய்கிறவர்களாயும் -என்னையே பரமனாக நம்பியவராயும் -அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பய சோக வருத்தங்கள் தீர்ந்தவராயும் வேறொரு உபாயங்களை யுடையாதவராயும் -வேறொரு பயன்களை விரும்பாதவராயும் -அஹங்கார மமகாரங்கள் இல்லாதவராயும் என்னையே அடைந்தவர்கள் ஸம்ஸாரக் கடலைக் கடக்கிறார்கள் –

பற்றிலார் பற்ற நின்றானே -அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் அரங்கம் -கைவளையும் மேகலையும் காணேன் -கண்டேன் கன வளையும் நான்கு தோளும்

—————

ஸத் கர்மநிரதா ꞉ ஶுத்₃தா ₄꞉ ஸாங்க்₂ய யோக₃வித₃ஸ்ததா ₂ ।
நார்ஹந்தி ஶரணஸ் த₂ஸ்ய கலாம் கோடிதமீமபி ॥ 14 ॥

கர்ம யோகத்தை அனுஷ்ட்டித்து அதனால் பரி சுத்தமாக இருப்பவர்களும் ஞான யோகத்தை அனுஷ்டித்தவர்களும் இச்சரணா கதியை அனுஷ்டித்த ப்ரபன்னர்களின் மஹிமையில் கோடியில் ஒரு அம்சத்தைக் கூடப் பெறத் தக்கவர்கள் ஆகார்கள் –

————-

உபாயாதி₄க்ருதஸ்யாபி ப₄வேது₃த்தர பூர்வ யோ ꞉ ।
அஶ்லேஷஶ்ச விநாஶஶ்ச புண்ய பாப மயாக₄யோ꞉ || 15 |

உபாயத்தை அனுஷ்டித்தவரான ப்ரபன்னருடைய உத்தராகங்களும் -பிரபத்தி செய்த பின் அபுத்தி பூர்வகமாகச் செய்த பாபங்களும் -பூர்வாகங்களும் நசித்து விடுகின்றன -பிரபத்தி செய்த பின்னர் புத்தி பூர்வ ஆகங்களோ என்னில் மேற் சொல்லப்பட்டு இருக்கும் ப்ராயச் சித்தங்களினால் தீர்ந்து விடுகின்றன –

புகுதறுவான் நின்றனவும் -உத்தர -அஸ்லேஷம் -தாமரை இலைத்தண்ணீர் போல் ஒட்டாமல் போகும்
போய பிழையும் -பூர்வ -விநாஸம் -தீயில் இட்ட பஞ்சு போல் ஆகும்

———

ப்ராரப்₃த₄தே₃ஹ போ₄க்₃யம் து விநா த்₃ருப்தஸ்ய நஶ்யதி ।
பூர்வாக₄முத்தராக₄ம் து மதி பூர்வம் மஹத்தரம் || 16 ||

ஆதே₃ஹ பதநாத்₃வ்ருத்தம் அநுதாப விவர்ஜிதம் ।
யத்தத்₃விநைவா(அ)ஶ்லேஷஸ் ஸ்யாத் அந்யஸ் யாக₄ஸ்ய யுக்தித꞉ ॥17॥

திருப்த ப்ரபன்னர் ஒழிந்த மற்றப் ப்ரபன்னர்களின் பூர்வாகங்களில் -பிராரப்த கர்மங்கள் ஒழிய மற்றைய கர்மங்கள் நசித்து விடுகின்றன -உத்தராகங்களில் புத்தி பூர்வமாய் செய்யப் பட்டவைகளாயும் -தேஹம் இருக்கும் அளவும் ஒழியாதவைகளாயும் -அனுதாபாதிகள் பிறவாதவைகளாய் இருக்கும் கர்மங்கள் ஒழிய மற்ற அபுத்தி பூர்வாகங்கள் கழிந்து விடுகின்றன என்று யுக்தியால் ஏற்படுகின்றது-

————-

அயமர்தோ₂ ப₄க₃வதா ஸ விஸேஷ முதீ₃ரித꞉ ।
“உபாய ப₄க்தி꞉ ப்ராரப்₃த₄ வ்யதிரிக்தாக₄ நாஶிநீ ॥ 18 ॥

ஸாத்₄ய ப₄க்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்₃த₄ஸ்யாபி பூ₄யஸீ” ।
உபாய ப₄க்தி ரித்யுக்தோ ப₄க்தியோகோ ₃ஹி ஸாங்க₃க꞉ ॥ 19 ॥

இவ்வர்த்தம் பகவானால் விவரித்துச் சொல்லப்பட்டு இருக்கின்றன –
உபாய பக்தி பிராரப்த கர்மங்களை ஒழிந்த மற்ற கர்மங்களைப் போக்கி விடும் -ஆகையால் உபாய பக்தியைக் காட்டிலும் ஸாத்ய பக்தி ஸ்ரேஷ்டம் –

பகவான் அருளிச் செய்தவற்றை இரண்டரை ஸ்லோகங்களினால் அருளிச் செய்கிறார் -சாங்கமாக இருக்கும் பக்தி யோகம் உபாய பக்தி யோகம் என்று சொல்லப் படுகின்றது -அது அநேக ஜென்மங்களுக்குக் காரணமாக இருக்கும் பிராரப்த கர்மங்களைப் போக்க மாட்டாது

———–

ப₃ஹு தே₃ஹ நிமித்தம் ஹி ப்ராரப்₃தா₄க₄ம் ந நாஶயேத் ।
ஸாத்₄ய ப₄க்திரிதி ப்ரோக்தா ப்ரபத்திர் மோக்ஷ ரூபிணீ ॥ 20 ॥

மோக்ஷ ரூபமாக இருக்கும் இப்பிரபத்தி ஸாத்ய பக்தி என்று சொல்லப் படுகிறது -பக்தி யோகத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமாக இருக்கும் இப்பிரபத்தி ஆர்த்த ப்ரபன்னர்களின் விஷயத்தில் பிராரப்த கர்மங்களையும் போக்கி விடும் –

————-

ஆர்தாநாம் பூ₄யஸீ ஸா(அ)பி ப்ராரப்₃த₄மபி நாஶதயத் ।
ப்ராரப்₃த₄தே₃ஹபோ₄க்₃யம் து த்₃ருப்தஸ்யாக₄ம் ந நாஶயேத் ॥ 21 ॥

இப்பிரபத்தி திருப்த ப்ரபன்னர்களின் பிராரப்த கர்மங்களுக்குப் பயனாகக் கிடைத்து இருக்கும் தேஹத்தினால் அனுபவிக்கத் தக்கவைகளான அக்கர்மங்களைப் போக்க மாட்டாது –
ஆர்த்த ப்ரபன்னர் திருப்த ப்ரபன்னர் இவர்களின் லக்ஷணங்கள் ஸ்வரூப பத்ததியில் -27-38 ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளன –

————-

ஏதது₃க்தம் ப₄வத் யத்ர ப₄க்தி யோகா₃த்₃ விமுச்யதே ।
ப்ராரப்₃த₄ கர்ம நிர்மோகே ப₃ஹு ஜந்மோபபோ₄க₃த꞉ ॥ 22 ॥

மேற் சொல்லிய அர்த்தங்களுக்கு இக்கிரந்த கர்த்தா கீழ் சொல்லும் ஸ்லோகங்களினால் தமது ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
அநேக ஜன்மங்களின் அனுபவத்தால் பிராரப்த கர்மங்கள் கழிந்தால் பக்தி யோகத்தால் பக்தர்கள் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார்கள் –

————–

கர்மணஶ் ஸோக ஹேதோஸ் த்வாம் மாேக்ஷ யிஷ்யாமி மா ஶுச꞉ ।
ஏவம் ப₄க₃வதோக்தத்வாத் ஏதத்₃தே₃ஹே (அ)பி ஸோசநாத் ॥ 23 ॥

ஆர்தஸ்ய ஸத்₃யோ முக்தி꞉ ஸ்யாத் ப்ரபத்திர் பூ₄யஸீ யத꞉ ।
த்₃ருப்த꞉ ப்ராரப்₃த ₄தே₃ஹாத்து ந ஸோசதி யத꞉ ஸ்வயம் ॥ 24 ॥

உன் வ்யஸனத்திற்குக் காரணமாக இருக்கும் ஸர்வ கர்மங்களின் நின்றும் உன்னை விடுக்கின்றேன் என்று சரம ஸ்லோகத்தில் பகவான் அருளிச் செய்திருப்பதால் -இவ்வார்த்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்திலும் சோகமுடையவராக இருப்பதாலும் -இவர் அனுஷ்ட்டிக்கும் பிரபத்தி திருப்த ப்ரபத்தியைக் காட்டிலும் அதிக ஆர்த்தியோடு கூடியதால் ஸ்ரேஷ்டமாக இருப்பதாலும் இவ்வார்த்த ப்ரபன்னருக்கு இப்பிரபத்தியை அனுஷ்டித்த உடனே மோக்ஷம் கிடைக்கும் –

————-

தே₃ஹாந்தே முச்யதே ஸைஷா மாேக்ஷ கால வ்யவஸ்தி₂தி꞉ ।
ஸோ (அ)யம் ஶ்ரிய꞉ பத்யுரந்தர் ஹ்ருத₃யாம் போ₄ஜவாஸிந꞉ || 25 ||

திருப்த ப்ரபன்னர் இப்பொழுது தமக்குக் கிடைத்திருக்கும் தேஹத்தில் சோகம் இல்லாதவராக இருப்பதால் இவர் தேஹ அவசானத்தில் ஸம்ஸார பந்தத்தின் நின்றும் விடுவிக்கப் படுகிறார் -இது தான் திருப்த ப்ரபன்னருக்கும் ஆர்த்த ப்ரபன்னருக்கும் கிடைக்கும் மோக்ஷத்திற்கு வியவஸ்தையாக இருக்கின்றது –

————

ப்ரஸாதே₃நைவ ஸுஸுக₂ம் நாடீ₃ம் பி₄த்வா ஶதாதி₄காம் ।
ஸத்₃யஸ்த யோர்த்₄வ முத்க்ரம்ய க₃த்வா தான் ஆதி வாஹிகான் ॥ 26 ॥

அர்சிராதீ₃ன் ஸ தைர்நீத꞉ ப்ரீதியுக்தை ꞉ பதே₃பதே₃ ।
அமாநவ கர ஸ்பர்ஶாத் ஸூக்ஷ்ம தே₃ஹம் விஸ்ருஜ்ய ச ॥ 27 ॥

விரஜாம் மநஸா தீர்த்வா ப்₃ரஹ்ம க₃ந்தா₄தி₃ளாஞ்சி₂த꞉ | ஸாலோக்யமத₂
ஸாரூப்யம் ஸாமீப்யம் ச க்ரமாத்₃வ்ரஜேத் ॥ 28 ॥

ஸாயுஜ்யம் சாதி₄க₃ச்சே₂த ப்₃ரஹ்மணா ஸஹ ஸர்வஶ꞉ ।
அநு ஸஞ்சரந் நிமான் லோகான் காமாந் நீ காம ரூப்யபி ॥ 29 ॥

இப்பிரபன்னர் தமக்கு நேரும் நிர்ணய காலத்தில் தமது ஹ்ருதயத்தில் மத்யத்தில் வஸிக்கும் பகவானுடைய திருவருளால் நூற்று ஓராவது நாடியான ஸூஷும்நா நாடியைப் பிளந்து அதனால் வெளிப்புறப்பட்டு அக்னி முதலிய ஆதி வாஹிகர்களை அடைந்து மிகவும் அன்புடன் கூடிய அவர்களினால் அடிக்கடி மரியாதை செய்து அழைத்துக் கொண்டு போகப்பட்டவராய் -அமானவர் என்னும் நித்ய ஸூரியின் கர ஸ்பர்சத்தால் தமக்கு அப்பொழுது உண்டாயிருக்கும் ஸூஷ்ம தேஹத்தை கழித்து விட்டு -பிராகிருத மண்டலத்துக்கு எல்லையாய் இருக்கும் விரஜை என்னும் ஓர் நதியை தம்முடைய ஸங்கல்பத்தினால் தாண்டி பர ப்ரஹ்மத்தின் திருமேனியில் உள்ளவைகளான திவ்ய கந்தங்களை அணிந்தவராய் வரிசையாக
முதலில் ஸா லோக்யத்தையும்
பின்பு ஸா ரூப்யத்தையும்
பின்பு ஸா மீப்யத்தையும் அடைந்து
இறுதியில் ஸா யுஜ்யத்தையும்
அடைகிறார் –
இவ்வாறு அப் ப்ரஹ்மத்துடன் ஸர்வ விதத்தாலும் அவன் குணங்களைச் சேர்ந்து அனுபவித்து கைங்கர்யங்களைச் செய்து அவனைப்போலவே ப்ரீதி அடைகிறார்

ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே –ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை-அவனுடன் சேர்ந்தே அனுபவிக்கிறோம்

———

ஸாம கா₃யன் கிங்குருதே ஸூரிபி₄ஸ் ஸஹ ஸர்வதா ₃ ।
யத்₃வா(அ)ர்சிராதி₃மார்கே₃ண விளம்ப₃ மஸஹந்நிவ ॥ 30 ॥

இவ்வாறு பர ப்ரஹ்மத்துடன் ஸா யுஜ்யத்தை அடைந்த முக்தர் தாம் ப்ரஹ்ம ஆனந்த அனுபவம் யுள்ளவராய் தாம் நினைத்தபடி ஓர் ரூபத்தை எடுத்துக் கொண்டு நித்ய ஸூரிகளோடு இவ்வுலகம் எல்லாம் திரிந்து கொண்டும் ஸாம கானத்தால் பகவானுக்கு ஸர்வ காலமும் கைங்கர்யங்கள் செய்து கொண்டும் இருப்பர் –

அப்படிக்கு இல்லாமலும் பகவான் ப்ரபன்னருக்கு அர்ச்சிராதி மார்க்கத்தால் உண்டாகும் கால விளம்பத்தை ஸஹியாதவராய் அந்த மார்க்கம் அன்றியிலே அவரைத் தம் இஷ்டப்படி மோக்ஷத்தில் சேர்ப்பிக்கிறார் என்றும் வேதங்களில் சொல்லப்படுகின்றது –

————-

ப்ரபந்நம் ஹரதி க்ஷிப்ரம் யதே₂ஷ்டமிதி ச ஶ்ருதம் ।
மஹா வராஹோ ப₄க₃வா நேதத் ஸம்வாத₃கம் வச꞉ ॥ 31 ॥

மஹா வராஹ அவதாரம் செய்த பிரான் பூமிப் பிராட்டி கேட்டிருக்கும் சமயத்தில் மேற் சொல்லிய சங்கதியுடன் ஓத்ததான திரு வாக்கை அருளிச் செய்துள்ளார் –

————

யதா₃ஹ தே₃வ்யாம் ஶ்ருண் வந்த்யாம் பூ₄ம்யாம் ப்ரவத₃தாம் வர꞉ ।
ஸ்தி₂தே மநஸி ஸுஸ்வஸ்தே₂ ஶரீரே ஸதி யோ நர꞉ ।
தா₄து ஸாம்யே ஸ்தி₂தே ஸ்மர்தா விஶ்வ ரூபம் ச மாமஜம்
॥ 32 ॥

ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்ட₂பாஷாண ஸந்நிப₄ம் ।
அஹம் ஸ்மராமி மத்₃ப₄க்தம் நயாமி பரமாம் க₃திம் ॥ 33 ॥

மஹா வராஹப் பெருமான் அருளிச் செய்தவற்றை அருளிச் செய்கிறார்
நோய் முதலிய தேஹ பீடைகள் இல்லாமல் ஸம தாதுவான தேஹத்துடனும் -தெளிந்த மனத்துடனும் – கூடியிருக்கும் சமயத்தில் யார் ஒருவர் விஸ்வ ரூபனாயும் பிறப்பிலியாயும் இருக்கும் என்னை ஸ்மரிக்கிறாரோ -பின்பு மரணம் அடையும் ஸமயத்தில் கட்டையைப் போலும் கல்லைப் போலும் நினைப்பில்லாமல் இருக்குமவரை நான் ஸ்மரிக்கிறேன் -அவரை உத்தம கதியிலும் சேர்ப்பிக்கிறேன்

————-

யதா ₃கதா₃சித் வாதாதி₃ தா₄து ஸாம்யாத் அரோக₃த꞉ ।
மநஸ்தி₂ திஸ் ஸம்ப₄வதி ய꞉ கஶ்சித்து ததா ₃ நர꞉ || 34 ॥

ஸ்மரேத் ஸ்வாமித்வ ஸௌஶீல்ய வாத்ஸல்யாதி₃ மஹாேத₃தி₄ம் ।
அவதீர்ணம் வராஹம் மாம் ஶ்ரியா தீ₃ப்த கு₃ணைர் யுதம் ॥ 35 ॥

நாராயணம் விஶ்வரூபம் அஜம் இச்சா₂த்த விக்₃ரஹம் ।
ஶ்ரீமந் நாராயண ஸ்வாமின் ! அநந்ய ஶரணஸ்தவ ॥ 36 ॥

சரணவ் ஶரணம் யாத꞉ இதி மாம் யஸ் ஸ்மரேத் ஸக்ருத் ।
ததஸ்த மித ரோபாய வ்யவதா ₄ந விவர்ஜிதம் ॥ 37 ॥

தத ₃வஸ்த₂ம் ம்ருதி ப்ராப்தவ் காஷ்ட₂ பாஷாண ஸந்நிப₄ம் ।
காஷ்ட₂ வத்து ஸ்வதோ தே₃ஹே மநஶ் ஸேஷ்டா விவர்ஜிதம் ॥ 38 ॥

பரப்ரபோ₃தா₄ஸஜ்ஞம் து விளுப்தஹ்ருத₃யம் தத ꞉ ।
ஆத்மவத் ஸ்வய மந்யைஶ்ச ஹித ஸ்மரண வர்ஜிதம் ॥ 39 ॥

எப்பொழுதாவது ஒருக்கால் தேஹத்தில் ரோகம் முதலிய உபாதிகள் இல்லாமல் இருக்கும் போது வாத பித்தாதி தாதுக்கள் சமமாக இருக்கும் ஸமயத்தில் மனம் தெளிந்து ஸ்திரமாக இருக்கச் செய்தே யாவன் ஒருவன் ஸ்வாமியாகவும் ஸுசீல்யம் வாத்சல்யம் இவை முதலிய கல்யாண குணங்களுக்கு கடலாகவும் வராஹ ரூபியாக அவதாரம் செய்கிறான் என்றும் -ஸ்ரீ மஹா லஷ்மியினால் விளங்குபவராயும் பின்னும் அநேக மங்கள குணங்களோடு கூடியவராயும் -இப்பிரபஞ்சத்தையே ரூபமாக யுடையவராயும் -பிறப்பில்லாமல் இருக்கச் செய்தேயும் எனது இச்சையால் அநேக திவ்ய தேஹங்களோடே கூடியவராயும் இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான என்னை
வாரீர் ஸ்ரீ மன் நாராயணனே -ஸ்வாமியே -யான் வேறு ஒரு கதியில்லாதவனாக உமது திருவடிகளை சரணம் அடைந்தேன் என்று நினைக்கிறாரோ -பின்பு வேறொரு உபாயத்தினால் இன்றியிலே அப்பிரன்ன நிஷ்டையிலேயே இருப்பேன் என்றும் நினைக்கும் அவர் மரண அவஸ்தையில் காஷ்ட பாஷாணங்களோடே சமானராக இருக்கும் -கட்டை போல் மனதில் உணர்வு இல்லாதவராயும் உடலில் அசைவு இல்லாதாராகவும் -பிறர் தெரிவிக்கிலும் அறிவு இன்றியிலே மனம் இழந்தவராயும் -அப் பொழுது தம்முடைய நன்மையைத் தாம் அறியாது இருக்குமா போல் அங்கிருக்கும் சுற்றத்தார்களான பிறருக்கும் தம்முடைய நன்மை தோன்றாமல் இருக்கும் படியான துர் அவஸ்தையுடன் கூடியவராயும் இருக்கும் ஸமயத்தில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களுக்கு சித்தியை யுண்டாக்குவதற்காக விழித்து இருக்கும் நான் என் பக்தர்களை ரக்ஷிப்பதில் மனம் யுடையோன் ஆகையால் அவர்களை நான் ஸ்மரிக்கிறேன்

——————–

ஆஶ்ரிதேஷு ப்ரஸுப்தேஷு புருஷோ யோ வ்யவஸ்தி₂த꞉ ।
காமம் காமம் நிர்மமாண꞉ தேஷாம் ஜாக₃ர்தி ஸித்₃த₄யே ॥ 40 ॥

ஸோஹமாஶ்ரித தந்த்ராத்மா ஸ்மராமி ச ததா ₃ ஸ்வயம் ।
இமம் மத்₃போ₄க₃யோக்₃யம் து க்ருபா பூர ப்ரகாஶநாத் ॥ 41 ॥

நயாமி பரமம் ஸ்தா₂நம் அர்சிராதி₃க₃திம் விநா ।
க₃ருட₃ஸ்கந்த₄மாரோப்ய யதே₂ஷ்ட மநிவாரித꞉ ॥ 42 ॥

நான் அனுபவிக்கும் திவ்ய போகங்களை அனுபவிப்பதற்குத் தக்கவராய் இருக்கும் இவரை இவரிடத்தில் எனக்கு உண்டாய் இருக்கும் கிருபையை வெளிப்படுத்துவதால் அர்ச்சிராதி மார்க்கத்தால் போவதால் உண்டான கால விளம்பமும் இன்றிக்கே என் இஷ்டப்படி கருடாழ்வான் தோளில் மேல் ஏற்றி யாதொரு தடையும் இன்றிக்கே உத்தம கதியான என் பதத்தைச் சேர்ப்பிக்கிறேன்

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

———-

ஏதத் ப்ரபா₄வயுக்தஸ்ய ப்ரபந்நஸ்ய து பார்ஶ்வத꞉|
அபயாந்தி த்₃ருதம் பீ₄தா ꞉ பாஶிநோ யம கிங்கரா꞉ || 43 ||
அயம் ந கஸ்யசித்₃ப்₄ருத்ய꞉ பராஶர ஶுகௌ யதா₂ ॥ 44 ॥

இவ்விதப் ப்ரபாவத்தோடே கூடிய ப்ரபன்னர்களின் பக்கங்களிருந்து பாஸ ஆயுதங்களோடு கூடிய யம கிங்கர்கள் பயந்தவர்களாக ஓடிப் போகிறார்கள்

இப்பிரபன்னர் பகவானை ஒழிந்த வேறு ஒருவருக்கும் கீழ்ப் பணிந்தவர் அன்று
இவ்வாறே பராசர முனிவரும் சக முனிவரும் அருளிச் செய்துள்ளார்கள்

———-

ஸ்ரீ விஷ்ணுபுராணே –
ஸ்வ புருஷமபி₄வீக்ஷ்ய பாஶ ஹஸ்தம் வத₃தி யம꞉ கிலம் தஸ்ய கர்ணமூலே ।
பரி ஹர மது₄ஸூத₃ந ப்ரபந்நான் ப்ரபு₄ரஹ மந்ய ந்ருணாம் ந வைஷ்ணவாநாம்
॥ 45 ॥

யமதர்ம ராஜன் பாஸ ஆயுதத்தைக் கையில் பிடித்திருக்கும் தன்னுடைய கிங்கரர்களைப் பார்த்து அவன் செவியில் ரஹஸ்யமாகச் சொல்லுகிறான்
வாரீர் கிங்கரரே -பகவான் இடத்தில் பிரபத்தி செய்திருக்கும் பாகவதர்களைப் பரிஹரித்து விடுங்கள் -நான் வைஷ்னவர்கள் ஒழிந்த மற்றப் பிராணிகளுக்குப் பிரபுவே ஒழிய வைஷ்ணவர்களுக்கு பிரபு அன்று –

ஸத்யம் ப்₃ரவீமி மநுஜா꞉ ஸ்வய மூர்த்₄வ பா₃ஹு꞉ யோ மாம் முகுந்த₃ நரஸிம்ஹ ஜநார்த ₃நேதி ।
ஜீவோ ஜபத்யநுதி₃நம் மரணே ப்ய்ருணீவ பாஷாண காஷ்ட₂ஸத்₃ருஶாய த₃தா₃மி மாேக்ஷம் ॥

——

ஶ்ரீபா₄க₃வதே –
தே₃வர்ஷி பூ₄தாத்ம ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜன் ।
ஸர்வாத்மநா ய꞉ ஶரணம் ஶரண்யம் நாராயணம் லோக கு₃ரும் ப்ரபந்ந
꞉ ॥46॥

ஸர்வ லோகங்களையும் ரக்ஷிக்கத் தக்கவராயும் ஸர்வ லோகங்களுக்கும் பிதாவாகவும் இருக்கும் ஸ்ரீ மந் நாராயணனை எவர் ஸர்வ பிரகாரங்களாலும் சரணம் அடைந்திருக்கிறாரோ அந்தப் பிரபன்னர் தவர்கள் ரிஷிகள் பூதாத்மாக்கள் பித்ருக்கள் இவர்களுக்கு கிங்கரரும் அன்று -கடனாளியும் அன்று

——

உப ஸம்ஹார꞉ –
த்ரை யந்த ஸ்ம்ருதி முக்₂ய ஸந்முநிவச꞉ ஶ்ரீபாஞ்சராத்ராசல ஷோதை ₃꞉
ஸங்க₄டித꞉ ப்ரபந்நசரித꞉ க்ஷீராப்₃தி₄ஸேதுர் மஹான் ।
யே வாஞ்ச₂ந்த்ய முநா பதா ₂(ஆ)ப்துமசிராத் பாரம் ப₄வாம் போ₄நிதே₄꞉
தே பூர்வோத்தர பாப கர்ம நிசயை ꞉ முக்தா விமுக்தா ꞉ ஸ்ம்ருதா ꞉ ॥ 47 ॥

ப்ரபன்னர்களின் சரித்ரங்களாகிற பாற் கடலில் வேதாந்த ஸாஸ்திரம் ஸ்ம்ருதி முதலிய ரிஷிகளின் வசனங்கள் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரம் இவைகளாகிற மலைகளின் பொடிகளினால் -இக்கிரந்தத்த்தில் சொல்லப்பட்ட ப்ரபந்ந நிஷ்டையாகிற பெரிய அணை கட்டப்பட்டு இருக்கிறது -இவ்வணையால் எவர் ஸம்ஸாரக் கடலின் கரையை சீக்கிரத்தில் அடைய விரும்புகிறார்களோ அவர்கள் மேல் சொல்லப்பட்டு இருக்கும் பூர்வாகங்கள் -உத்தராகங்கள் இவற்றின் நின்றும் நீங்கியவராய் முக்தர்களாகி விடுவார்கள் என்று ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது –

——-

கார்பண்யாசிதப₃த்₃த₄ மூலப₂ லகா விஶ்வாஸ கீலாசிதா
யாச்நா ப₃ந்த ₄நரஜ்ஜுக்ருஷ்டி வஶகா₃ நிஷேப ஸங்ஷேபணி꞉ ।
ஸம்ஸாரார்ணவ தாரிணீ தநுப்₄ருதாம் ந்யாஸாத்மநவ் ꞉ தாமிமாம்
அர்ச்சி₂த்₃ராமத₂ பாரயிஷ்ணுமப₄யா꞉ ஸத்₃யோ (அ)தி₄ரூடா₄ ஜநா꞉ || 48 ||

பிரபத்தியை ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிக்கும் ஓடமாக நிரூபிக்கிறார் -அதாவது கார்ப்பண்யத்தோடு கூடிய -(கார்ப்பண்யம் -வேறொரு கதி இல்லாமையால் உண்டாகும் மன இரக்கத்தால் )-புத்தியாகிய அடிப்பலகைகளோடு கூடியதாகவும் -மஹா விசுவாசமாகிற ஆணிகளினால் பிணையப்பட்டதாகவும் -பிரார்த்தனை யாகிற அதில் கட்டிய கயிற்றின் வசமாய்ப் போகத் தக்கதாயும் -பர ஸமர்ப்பணமாகிற ஓர் துடுப்போடே கூடி யதாயும் இருக்கிற ந்யாஸ வித்யை என்ற பெயர் பெற்று இருக்கும் இப்பிரபத்தியாகிற ஒடமானது இப்பிராணிகளின் ஸம்ஸாரக் கடலைத் தாண்டி வைக்கத் தக்கதாக விளங்குகிறது -ஸந்தேஹம் இல்லாமல் கரை சேர்க்கத் தக்கதாயும் இருக்கிறது -இவ்வோடத்தை பயமில்லாதவர்களாய் ஸத்துக்கள் ஏறினார்கள் –

——-

அஸேஷா பேக்ஷிதம் யத்ர பரிதோ ஜாயதே ஸதாம் ।
ப்ரபந்ந பாரிஜாதாக்₂ய꞉ ப்ரப₃ந்த₄꞉ கதி₂தோ பு₄வி ॥

உலகில் ப்ரபன்னர்கள் அபேக்ஷிக்கும் ஸகல அர்த்தங்களையும் தெரிவிக்கின்ற ப்ரபந்ந பாரிஜாதம் என்னும் இக் க்ரந்தம் வரதகுரு என்னும் ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டது –

————–

இதி ஶ்ரீவாத்ஸ்ய வரதா₃சார்ய மஹா கு₃ருபி₄ரநுக்₃ருஹீதே
ப்ரபந்ந பாரிஜாதே ப₂லோத₃ய பத்₃த₄தி꞉ த₃ஶமீ ஶ்ரீமத்₃வரத₃மஹா
கு₃ரு தி₃வ்ய சரண நலிநே ஏவ ஶரணம்

—————————————————-

சுத்த குண விட்டு சித்தன் சுடர் அடியோன் வாழியே
ஸ்ருதப் பிரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே
தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே
புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே
புகழ்ப் பாடியப் பொருளை புதர்க்களிப்போன் வாழியே
சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே
சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

திங்கள் போன்ற திருமுகம் வாழியே
திருமங்கை காப்புத் திகழ் நெற்றி வாழியே
தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே
தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே
தனக்கு கோசம் விளங்கு கை வாழியே
தாங்கு சின் முத்ரை விரல் வாழியே
பொங்கு வத்ஸ குல வரதாரியன்
பொன் மலர்ப்பாதம் வாழியே வாழியே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் கவசம்-ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

January 27, 2025
  1. ஸ்ரீபெரும்புதூர் ஆளும் அரசே திருவடி அழகே தெள்ளிய துறவே
    மாபெரும் தருவாம் வைணவம் அதனை மண்ணில் வளர்த்த ராமானுஜனே
    2.உபய விபூதி செல்வமனைத்தும் உத்தமன் அரங்கன் அள்ளி வழங்க அபயம் அளிக்க அடியவர் மீது அருள் விழி காட்டும் ராமானுஜனே
    3.ஆம் இவன் முதல்வன் என்றொரு வார்த்தை ஆளவந்தாரின் திருவாய் மலர தாம் முதல்வன் என வைணவம் காத்து தரணியை ஆளும் ராமானுஜனே
    4.தன் குருவாகிய பெரிய நம்பியின் அன்பினை ஏற்ற சீடனும் நீயே தன் குருவும் தன் குருவாய் கண்ட தன்னிகரில்லா ராமானுஜனே
    5.திருக்கோட்டியூரின் நம்பியின் வாயால் திருமந்திரத்தின் பொருளை அறிந்து பெரு உலகத்தின் செவியில் உரைத்து பெருமை கண்ட ராமானுஜனே
    6.ஆண்டாண் அரையர் திருமலை நம்பி ஆசிரியர் குழு யாவும் உகந்து வேண்டிய ஞானம் யாவும் அளித்து வேண்டிய குருவே ராமானுஜனே
  1. அஞ்சலி செய்து அருகில் அழைத்து அன்புடன் எங்கள் துயர்கள் அழித்து அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும் அழகே யதியே வருக வருக!
  2. பரமபதத்தில் மாலவனுடனே பாக்கியம் கொண்டு நித்தமும் வாழ்வார் அமரர் அனைவரின் தலைவனும் ஆகிய அற்புத ராமானுஜனே வருக
    3.நரகம் அழுந்தா நற்கதி அருளும் நானிலமெங்கும் நன்மைகள் புரியும் உரமென அமையும் உயரிய அடிகள் உடையவன் நீயே வருக! வருக
    4.சடகோபனுக்கு முன்னே எழுந்த சத்திய உருவே ராமாநுஜனே கடலாம் பிறவியைக் கடந்து செல்ல கருணை காட்டிட வருக !வருக!
  3. தாமரை மலரால் தாங்கிய மார்பை தாங்கிய ஹரியை பாடிய முனியின் மாமலர் விந்தம் மாண்புடன் பணிந்த வடிவே ராமானுஜனே வருக
  4. காவிரி அழகன் நம்பெருமாளை கண்களில் வைத்து நெஞ்சில் நிறுத்தி பாவிரி கலியன் திருவடிபணியும் பரமா ராமானுஜனே வருக.

1.திசைகளில் ஒளிரும் கமலச்செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும் இசைவுடன் அதிலே இணைந்து அமைந்த இனிமை கூட்டிடும் இடது கழலும்

  1. இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற் கழலும் திடமெனஅழகை எல்லாம் சேர்த்த திவ்வியமான கணுக்கால் எழிலும்
  2. அதிசய ஒளி முகம் சுருளாய் இறங்கும் அழகைப் போலிரும் முழந்தாள்களும் புதிரென அமையும் திருத்தொடைகளும் பொன்னரை நாணைப் பூண்ட அழகும்
  3. அந்தி நிறத்தில் அமையும் ஆடையும் அஞ்சலி செய்யும் தடைக்கைகளும் உந்தி மலரும் உயரிய கரமும் உடன் இணைந்திடும் கணுக்கைகளும்
  4. தங்க வளையலை தாங்கிய அழகும் தானாய் மடிந்த முழங்கைகளும் அங்கம் விரிந்து நீண்டு அமைந்த அழகிய புஜங்கள் ஆடும் அழகும்
  5. பள பளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும் வளமாய் பிரிந்த முந்நூல் அழகும் வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்
  1. வலம்புரி சங்கின் சுழி போல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும் உலகை மயக்கும் மந்திர முகமும் உரையை வழங்கும் திருப்பவளமும்
  2. மந்தஹாசமும் ஸ்படிக மயத்தில் மண்டலம் போன்றிரும் கபோலங்களும் செங்கணகத்தில் செழித்து வளர்ந்து செவிமெல் அமைந்த கர்ணபாசமும்
  3. கொடி மூக்கழகும் கோலத் தாமரை குடி கொண்டாலும் இரு நயனங்களும் வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்
  4. சந்திர கிரணம் ஒன்று கலந்து சரியும் அழகாய் தாமரை நாமமும் இந்திரை மலராள் திருவடி போலே இலங்கி வரும் ஸ்ரீ சூர்ணமும்
  5. உயர்ந்து வளர்ந்த திருமுடி அழகும் உறைந்து தழைந்த திருக்கேசமும் நயந்து சுற்றிய நல்ல குழலினை நன்றாய் சுற்றிய சிகாபந்தமும்
  6. பின் எடுத்ததோர் பிடரியின் அழகும் பிரிந்து கூடிய முக்கோல் அழகும் கண்ணுடன் பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்
  7. காணக் காண திகட்டிடாது கவினாய்த் தோன்றும் ராமாநுஜனே தேனாம் உன் அடி சரணம் அடைந்தோம் தினமும் எம்மை காத்தருள் என்றே
  1. பெரியோய் உந்தன் திருவடி நிலைகள் பெரிய மனதுடன் எங்களை காக்க ஹரியின் அணையாய் அமையும் வடிவே அடியார் கால்களை அன்புடன் காக்க
  2. பாஷ்யகாரரே உங்கள் பரிவு பாதநிலைகளை பதமாய் காக்க பரமபதத்தை அருளும் முனியே பணியும் இடையை பரிந்து காக்க
  3. வயிற்றுப் பகுதியை ராமானுஜனே வண்ணத் திருவருள் வலிந்து காக்க அயர்வே அறியா இளையாழ்வாரே அன்புடன் மார்பு பகுதியை காக்க
  4. எம்பெருமானார் என்றும் துறவே எங்கள் முதுகுப் பகுதியை காக்க உம்பர்கள் போற்றும் உபய வேதமே உன்னை காணும் கண்களை காக்க
  5. பூதப் புரியிலே வாழும் அரசே புகழை கேட்கும் செவிகளைக் காக்க யாதுமாகிய எதிராஜா நீ எங்கள் நாசியை என்றும் காக்க
  1. உன்னை காணும் வதனம் தன்னை உயர்வே யதீந்த்ர முனியே காக்க உன்னைப் பேசும் வாயை நாவை உணர்வே லக்ஷ்மண முனியே காக்க
  2. பொன்னடி வணங்கும் சென்னிப்பகுதியை பூமன்னு மார்பன்அடியே காக்க உன்னிரு கண்ணின் கடைவிழியாலே உள்ளப்பிணிகள் வராது காக்க
  3. அரவின் வடிவே விஷங்கள்எதுவும் அடியார் பக்கம் வராது காக்க வரமாய் அருளும் உனது கரங்கள் வாழ்வில் பிணிகள் வராது காக்க
  4. மஞ்சனம் ஆடும் மறைமாமுனியே மண்டிய தோஷம் அகற்றிக் காக்க தஞ்சமளிக்கும் ராமானுஜனே சாபம் விலக்கி சதிருடன் காக்க
  5. முப்புரி அணிந்த முக்கோல் முனியே முப்பொழுதும் எனை முனைந்து காக்க அப்பனுக்கு சங்காழி அளித்தாய் அல்லல் ஏதும் வராது காக்க
  6. காக்க கனிவுடன் காக்க காக்க காக்க காரேய் கருணை முனியே காக்க காக்க பூதூர் கோனே காக்க காக்க கமலப் பதத்தால் – கமல பதத்தால்
  7. வேண்டிய எம்மை ஆண்டருள் செய்வாய் வேதச் செறிவாய் யோகம் புரிவாய் நீண்ட கரத்தால் நாளும் அருள்வாய் நின் திருவடியால் ஞானம் தருவாய்
  8. ராமானுஜனே என்னாரமுதே ராமானுஜனே என் உறுதுணையே ராமானுஜனே என் மாநிதியே ராமானுஜனே என் பெருந்தகையே
  9. சரணம் சரணம் ராமானுஜனே சரணம் சரணம் உனது மலர்த்தாள்சரணம் சரணம் ஸ்ரீ எதிராஜா சரணம் ஸ்ரீபெரும்பூதூர் முனியே

———————

ஸ்ரீ ஸூர்ய பகவான் கவசம்

சூரியனைப் போற்றி மகிழத்தக்க பல ஸ்தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த ஸ்ரீசூர்ய கவச ஸ்தோத்திரம். இதனைப் பாராயணம் செய்தால், எல்லா நோய்களும் நீங்கும்; நீண்ட ஆயுள் கிட்டும்; உடலில் ஆரோக்கியம் சீர்படும்; புத்தி சிறக்கும். யாக்ஞவல்க்ய மஹரிஷியால் இயற்றப்பட்டது இந்த ஸ்தோத்திரம்.

ஸ்ருணுஷ்வ முனிஸார்தூல ஸுர்யஸ்ய கவசம் ஸுபம்

ஸரீராரோக்யதம் திவ்யம் ஸர்வ ஸௌபாக்ய தாயகம்

ஓ முனிச்ரேஷ்டா! சரீரத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுக்கக்கூடியதும்,

சிறந்ததும், ஸர்வ பாக்கியங் களைக் கொடுக்கக்கூடியதும்

மங்களகரமுமான சூரிய கவசத்தைக் கேளும்.

தேதீப்யமானமுகுடம் ஸ்புரம்மகரகுண்டலம்

த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்ரோத்ர மேததுதீர்யேத்

மிகவும் பிரகாசிக்கின்ற கிரீடத்தையுடையவரும்,

ஒளிவீசும் மகர குண்டலங்களை அணிந்தவரும்,

ஆயிரக்கணக்கான கிரணத்தையுடையவருமான

சூரியபகவானை தியானம் செய்து இத்துதியை ஜபிக்க வேண்டும்.

ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேமிதத்யுதி:

நேத்ரே தினமணி: பாது ஸ்ரவணே

வாஸரேஸ்வர:

என் தலையை பாஸ்கரன் ரட்சிக்க வேண்டும். என் நெற்றியை அளவற்ற ஒளிபொருந்தியவன்

காக்கவேண்டும். கண்களை தினமணியானவன் ரட்சிக்க வேண்டும். காதுகளை உலகுக்கே

ஈஸ்வரனான சூரியன் ரட்சிக்க வேண்டும்.

க்ராணம் கர்மக்ருணி: பாது வதனம் வேதவா ஹன:

ஜிஹ்வாம் மே மானத: பாது கண்டம் மே

ஸுரவந்தித:

என் மூக்கை வெப்பமுள்ள கிரணமுள்ளவன் ரட்சிக்க வேண்டும். என் முகத்தை வேதங்களையே குதிரைகளாகத் தன் தேரில் பூட்டிக்கொண்ட

ஆதவன் காக்க வேண்டும். என் தொண்டையைத் தேவர்களால் பூஜிக்கப்பட்டவன் ரட்சிக்க வேண்டும்.

ஸ்கந்தௌ: ப்ரபாகர: பாது வக்ஷ: பாதுஜனப்ரிய:

பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர:

என் தோள்களை ஒளி மிகுந்தவன் செய்கிறவன் காக்க வேண்டும்.

மார்பை ஜனங்களுக்குப் பிரியன் ரட்சிக்க வேண்டும். கால்களை பன்னிரண்டு

உருவமுள்ளவன் (பன்னிரு ஆதித்யர்கள்) ரட்சிக்க வேண்டும்.

அவயங்களையும் எல்லாவற்றையும் ஈஸ்வரன் ரட்சிக்க வேண்டும்.

ஸுர்யரக்ஷாத்மகம் ஸ்தோத்ரம் லிகித்வா பூர்ஜபத்ரகே

ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வ ஸித்தய:

யாரொருவர் சூர்ய ரட்சா ரூபமான இந்த ஸ்தோத்திரத்தை பூர்ஜபத்திரத்தில் (மரத்தின் பட்டை) எழுதித் தன் கையில் தரித்துக் கொள்கிறானோ

அவனுக்கு எல்லா ஸித்திகளும் வசமாகயிருக்கும்

ஸுஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக்யோதீதே ஸ்வஸ்த்தமானஸ:

ஸ ரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி.

யார் நன்கு ஸ்நானம் செய்து இத்துதியை ஜபம் செய்கிறாரோ, யார் ஏகாக்ர சித்தத்துடன் இத்துதியை அத்யயனம் செய்கிறாரோ அவர் ரோகமற்றவராயும், நீண்ட ஆயுளை உடையவராயும் சுகத்தையும், பலத்தையும் அடைகிறார்.

இந்த ஸ்தோத்திரத்தைத் தவிர கீழ்க்காணும்

சூரிய மங்கள ஸ்லோகத்தையும் சூர்ய காயத்ரி

மந்திரங்களையும் உடன் ஜபித்து வரலாம்:

சூர்ய மங்கள ஸ்லோகம் !

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ

குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்வரங்முக:

சத்ருர் பார்க்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ

மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி, காச்யப கோத்ரம், நவகிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் எனக்கு எல்லா மங்களத்தை அருளட்டும் !

சூரிய பகவான் !

காசினி இருளை நிக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தைநல்கும்

வாசியேழுடைய தேர்மெல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

சூர்யன் த்யான ஸ்லோகம் !

ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்

தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியன் காயத்ரி !

அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்ய: ப்ரயோதயாத்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி, வினைகள் களைவாய் போற்றி

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

January 26, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

——-

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

——–

1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி₂ அதி₄கரணம்
சாண்டில்யர் காட்டும் ப்ரஹ்ம வித்யை

முதல் பாதத்திற்கும் மேல் பாதங்க்ளுக்கும் ஸங்கதி
ப்ரஹ்ம ஸூத்ரங்களின் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயத்தில், உபநிஷத்தில் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் அனைத்துமே பரமாத்மாவிடம் தான் பொருந்துகின்றன என்று காட்டுகிறார் வ்யாஸர். அதில் முதல் பாதத்தில் உள்ள 11 அதிகரணங்களால் ஜகத்காரணமான ப்ரஹ்மம் அனைத்து சேதந மற்றும் அசேதநப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டது என்று நிரூபித்தார் வ்யாஸர். இனி இரண்டாவது பாதத்தைத் தொடங்கலாம்.

முதல் அத்யாயத்தில் முதல் பாதத்துக்கும், மேல் உள்ள மூன்று பாதங்களுக்கும் பல விதமான ஸங்கதிகள் உள்ளன.

  1. ’ஜந்மாத்₃யஸ்ய யத:’ என்ற ஸூத்ரத்தில் ஜகத்துக்குக் காரணமாக இருத்தல் என்பது ப்ரஹ்மத்தின் இலக்கணம் என்று சொல்லப்பட்டது. இனி, அந்த ப்ரஹ்மம் பரமாத்மாவே என்று நிரூபிக்க இரண்டு விஷயங்களை நிரூபிக்க வேண்டும்.
    (i) அயோக₃ வ்வவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது – இதுவே முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப் பட்டது.
    (ii) அந்ய யோக₃ வ்யவச்சே₂த₃ம் –ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது –
    இதுதான் மேலுள்ள மூன்று பாதங்களால் செய்யப் படுகிறது.

34 அதிகரணங்கள் -முதல் அத்தியாயத்தில் உள்ளன –
பிரதம -பாதம் -அயோக விவச்சேதம் -அர்ஜுனன் வில்லாளியே-ப்ரஹ்மத்திடம் ஜகத்காரணம் உள்ளது
த்ரிபாதி -அந்ய யோக வியவச்சேதம்மூன்று பாதங்களும் சேர்ந்து -அர்ஜுனன் தான் வில்லாளி –ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம்-வேறு யாரிடமும் இல்லை -பொருந்தாது என்று நிரூபணம்

  1. முதல் அத்யாயத்தில் ஒவ்வொரு அதிகரணத்திலும், உபநிஷத்தில் ஓரிடத்தில் இருக்கும் ஏதோ ஒரு அடையாளத்தைக் கொண்டு தான் பூர்வ பக்ஷீ கேள்விகளை எழுப்புகிறார் – ப்ரதானம் அல்லது ஜீவன் அல்லது ஆகாசம் அல்லது ஸூர்யன் ஜகத் காரணமாக இருக்கட்டுமே என்று. இவ் விடத்தில், பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் –
    (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள்
    (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள்
    (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள்
    (iv) நான்காம் பாதத்தில் மிகவும் தெளிவான அடையாளங்கள் என்று.

(அத்யந்த அஸ்பஷ்ட தரம் லிங்கம் -ராமன் விஷ்ணுவின் அவதாரம்
அஸ்பஷ்டம் லிங்கம் -ராமன் தசரதனின் மகன்
ஸ்பஷ்டம் லிங்கம் -தசரதனின் மகனான mஅயோத்யைக்கு அரசன் -பரதனும் கொஞ்ச காலம்
அத்யந்த ஸ்பஷ்ட தரம் லிங்கம் -சீதைக்கு மணாளன்)

  1. முதல் பாதத்தில் ஜகத் காரணமான ப்ரஹ்மம் சேதன-அசேதன பொருள்களைக் காட்டிலும் வே றுபட்டது என்று நிரூபிக்கப்பட்டது.
    இரண்டாம் பாதத்தில், சேதன-அசேதனங்களை சரீரமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்று கூறும் வாக்கியங்களை ஆராய்கிறார் வ்யாஸர்.
    மூன்றாம் பாதத்தில், சேதன-அசேதனங்களைத் தாங்கக் கூடியது ப்ரஹ்மம் என்று கூறும் வாக்கியங்களை ஆராய்கிறார் வ்யாஸர்.
    நான்காம் பாதத்தில், ஸாங்க்ய மதம் சொல்லுவது போல் இருக்கும் வாக்கியங்களை ஆராய்கிறார்.

சேதன அசேதன-விஸ்வம்-விலக்ஷணம்-முதல் பாதம்
விஸ்வம் வபு -சரீரமாக இருக்கும் வாக்கியங்கள் -இரண்டாம் பாதம்
விஸ்வ -ஆதாரம் -தாங்குபவன் -மூன்றாம் பாதம்
சாங்க்ய -ப்ரக்ருதியே போன்ற வாக்கியங்கள் -நான்காம் பாதம்

இப்படி பல விதமான சங்கதிகள் உண்டு –

ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– 1.1.11 இந்த்ர ப்ராண அதிகரணத்தில், ஒரு வேதப்பகுதியே பரமாத்மாவைப் பற்றிப் பேசுகிறபடியால் தொடக்கத்தில் இருக்கும் ஜீவனைப் பற்றிப் பேசும் ஒரு வாக்கியத்துக்கு வேறு பொருள் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த அடிப்படையில் தான் 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் பூர்வ பக்ஷீ கூறுகிறார் – இங்கு வேதப் பகுதியே ஜீவனைப் பற்றிப் பேசுகிற படியால், ஜீவன் தான் ஜகத் காரணம் என்று கொள்ள வேண்டும் என்று.

விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தில் 3ஆம் அத்யாயத்தின் 14ஆம் பகுதி – “சாண்டில்ய வித்யை ”
ஸர்வம் க₂ல்வித₃ம் ப்₃ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத –
இந்த உலகனைத்தும் ப்ரஹ்மத்திடமிருந்து உண்டாகி-ப்ரஹ்மத்திடம் லயம் அடைந்து ப்ரஹ்மத்தால் காக்கப் படுகிறபடியால் ப்ரஹ்ம மயமானது என்று புரிந்து கொண்டு, சாந்தி (விருப்பம் வெறுப்பு கோபம் முதலானவை விலகுதல்)உடையவனாய் உபாஸநம் செய்யக் கடவன்.

மநோமய: ப்ராண ஶரீரோ பா⁴ரூப: ஸத்ய ஸங்கல்ப
ஆகாஶாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காம: ஸர்வ க³ந்த:⁴ ஸர்வ ரஸ:
ஸர்வ மித³ம் அப்⁴யத்த அவாககீ அநாத³ர:
॥ 3.14.2॥
த்யானிக்கப்பட வேண்டிய ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்கிறது

12 குணங்களைச் சொல்கிறது-மேல் ஸூத்ர விளக்கத்தில் பார்ப்போம்

ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ருʼத³யே அணீயாந் வ்ரீஹேர்வா யவாத்³வா
ஸர்ஷபாத்³வா ஶ்யாமா காத்³வா ஶ்யாமாக தண்டு³லாத்³வா
ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ருʼத³யே ஜ்யாயாத் ப்ருʼதி²வ்யா ஜ்யாயாந் அந்தரிக்ஷாஜ் ஜ்யாயாந் தி³வோ ஜ்யாயாந் ஏப்⁴யோ லோகேப்⁴ய:
॥ 3.14.3॥

அரிசியை விட -கோதுமையை விட கடுகை விட சோளப் பொறியை விட சிறியதாக இருந்தும் பிருத்வி மண்டலம் விடவும் அந்தரிக்ஷ லோகம் விட பெரியவர்
அவ்வளவு பெரியவர் நம்மை -கொள்ள இவ்வளவு சிறியதாக — கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்கும் என்று -நாள் பார்த்து இருக்கும் –
இந்த ப்ரஹ்மம் நுண்ணியவராய் என் ஹ்ருதயத்திற்குள் இருக்கிறார்.
ஹ்ருதயத்திலிருக்கும் இந்த ப்ரஹ்மம் பூமி, ஆகாசம் முதலானவற்ணறக் காட்டிலும் பெரியது.

ஏதம் இத꞉ ப்ரேத்ய அபி₄ஸம்ப₄விதோ அஸ்மி – அந்த ப்ரஹ்மத்தை நான் ஸம்ஸாரத்திலிருந்து முக்தி அடைந்த பிறகு நான் அடைந்து அநுபவிக்கப் போகிறேன்-

.இதி யஸ்ய ஸ்யாத் அத்₃தா ₄ ந விசிகித் ஸாஸ்தி – இவ்வாறு எவன் ஸந்தேஹத்துக்கு இடமளிக்காமல் உறுதியோடு உபாஸனம் செய்கிறானோ , அவனுக்குப் பயன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை

இதி ஹ ஸ்மாஹ சாண்டில்ய சாண்டில்ய ꞉ – இவ்வாறு சாண்டில்யர் உபதேசித்தார்.

ஸந்தேஹம் – இங்கு உபாஸிக்கப் பட வேண்டிய பொருளாச் சொல்லப்படும் ப்ரஹ்மம் ஜீவனா?

ஜீவனே இங்கு சொல்லப்படும் ப்ரஹ்மம் என்று பூர்வ பக்ஷம்
பூர்வபக்ஷம் –
இங்கு உபாஸிக்கப் பட வேண்டிய ஜகத் காரணமாகச் சொல்லப்படும் ப்ரஹ்மம்-ஜீவாத்மாவே –
காரணங்கள்-

1-ஸர்வம் க₂லு இத₃ம் ப்₃ரஹ்ம” அதாவது “இந்த உலகனைத்தும் ப்ரஹ்மம் அன்றோ ” என்று முதலில் சொல்லப் படுகிறது. ’இந்த உலகம்’ என்று சேதன அசேதநப் பொருள்கள் அனைத்தும் சொல்லப் படுகின்றன. இவை அனைத்தாகவும் ப்ரஹ்மமே இருக்கிறது என்று கூறப் படுகிறது. இது பொருந்த வேண்டும் என்றால் ப்ரஹ்மம் என்பது ஜீவாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.
ஜீவாத்மா தான் அநாதி காலமாக அஜ்ஞாநத்தால் மூடப்பட்டு, பாபம் மற்றும் புண்யம் என்ற
கர்மங்களைச் சேர்த்து, அதன் விளைவாக உலகிலுள்ள பொருள்களாக ஆகிறார். பரமாத்மாவோ எவ் விதமான குற்றமும் அற்றவர் என்று சொல்லப்படுகிறபடியால், அவர் இந்த உலகமாக ஆகுவது பொருந்தாது

2-“ஜீவாத்மாவைக் குறிக்கவும் ’ப்ரஹ்மம்’ என்ற சொல் பயன்படுத்தப் படுவதைக் காணலாம். -கண்ணனே கீதையில் “நிர்தோ₃ஷம் ஹி ஸமம் ப்₃ரஹ்ம” அதாவது ’தூய்மையான நிலையிலிருக்கும் ஜீவாத்மாவாகிய ப்ரஹ்மம்” என்கிறார்-

இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந–
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா
—৷৷5.19৷৷
ப்ரக்ருதி சம்பந்த ரூப தோஷம் அற்றதாய் அதனாலேயே சமமாய் இருப்பதான ஆத்ம வஸ்துவே அன்றோ ப்ரஹ்மம் எனப்படுகிறது

3-மேலும், “தஜ்ஜலாந்” அதாவது “இவ்வுலகம் ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்டு, ப்ரஹ்மத்தில் அழிந்து, ப்ரஹ்மத்தால் ரக்ஷிக்கப் படுகிறது” என்று கூறப் படுகிறது. இதுவும் ஜீவனுக்குப்
பொருந்தும். உலகிலுள்ள எந்த ஒரு பொருளும் ஜீவாத்மாவின் பாபம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையில் தான் படைக்கப்படுகிறது. எனவே ஜீவனுடைய கர்மத்தால் இவ் வுலகம் படைக்கப்பட்டு , காக்கப்பட்டு , அழிக்கப் படுகிறபடியால் ஜீவனே இதற்கெல்லாம் காரணம் என்று கூறலாம்.

தஜ்ஜ–தல்ல -த அனு –உலகம் அனைத்துமே ப்ரஹ்மமே -இத்தை உணர்வது சாந்தி அடையலாம்-அத்வைதியே பூர்வ பஷீ

ஸர்வம் க₂ல்வித₃ம் ப்₃ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத

தானே உலகு எல்லாம் -தானே படைத்து இடந்து -தானே உண்டு உமிழ்ந்து- தானே ஆள்வானே

உபக்ரம நியாயம் -கீழே போல் இங்கும் கொண்டு பூர்வ பஷியின் வாத்யம்8 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம் ஸ்தாபனம்

————

1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி₂ அதி₄கரணம்
அனைத்துக்குள்ளும் இருந்தாலும் குற்றமற்றவரே

1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம் – சாந்தோக்ய உபநிஷத்தின் சாண்டில்ய வித்யையில் ’இந்த உலகம் முழுவதுமே ப்ரஹ்ம மயமானது’ என்று கூறப்பட்டது. அந்த ப்ரஹ்மம் ஜீவாத்மா தான் என்று பூர்வபக்ஷீ வாதிட்டார். இனி இந்த அதிகரணத்தில் 8 ஸூத்ரங்களால் இவ் வாதத்துக்கு வேத வ்யாஸர் பதிலுரைப்பதைப் பார்க்கலாம்.

(1) ஸர்வத்ர ப்ரஸித்₃த உ₄பதே ₃ஸாத் –
முன் பாதத்திலிருந்து ’அந்ய:’ என்ற சொல்லை இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸர்வத்ர – அனைத்திலும், அதாவது ’ஸர்வம் இத₃ம்’ என்று உபநிஷத்தில் கூறப்பட்ட உலகப் பொருள்கள் அனைத்திலும்
அந்ய: – உள்ளே உறைபவர் ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவரான பரமாத்மாவே
ப்ரஸித்₃த உ₄பதே ₃ஸா த் – ’க₂லு’ அதாவது ’அன்றோ ’ என்று ப்ரஸித்தமான கருத்து போல் சொல்லப்பட்டபடியால்-

தஜ்ஜலாநிதி ஸர்வம் இத₃ம் ப்₃ரஹ்ம க₂லு’, அதாவது ’ப்ரஹ்மத்திடமிருந்து தோன்றி, அத்தால் காக்கப்பட்டு, அதில் லயமடைகிற படியால் இந்த உலகப் பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மம் அன்றோ ’ என்று உபநிஷத் கூறுகிறது, இதில்’க₂லு’ (அன்றோ) என்கிற சொல் இருக்கிறபடியால், இது புதிதாக ஒரு விஷயத்தைச் சொல்ல வில்லை , முன்னமே அறியப்பட்ட ஒரு விஷயத்தை நினைவு படுத்துகிறது. இதற்கு அநுவாதம் என்று பெயர். அதனால், மற்ற உபநிஷத் வாக்கியங்களில் உலகத்துக்குக் காரணமாக யார் சொல்லப் பட்டுள்ளாரோ அவர் தான் இங்கும் ப்ரஹ்மம் என்று அழைக்கப்பட முடியும்.மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மா தான் ஜகத் கரணமாகச் சொல்லப்பட்டுள்ளார் என்று கீழ் பல அதிகரணங்களில் வ்யாஸர் நிரூபித்து விட்டார். எனவே இங்கும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே .

(ஜென்மாத்யா அதிகரணம் கீழே பார்த்தோம்
ச காரணம் -கரண அதிப அதிப -இந்திரியங்கள் அதிபதியான ஆத்மாவுக்கும் அதிபதி
அகில காராணாயா நிஷ்காரணம் அத்புத காரணம் பரமாத்மா ஒருவனே)

(புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—–3-4-1—)

பரமாத்மாவே உலகனைத்துமாகவும் இருக்கிறார் என்று கூறினால் அப் பொருள்களில் இருக்கும் குற்றங்கள் அவருக்கு வந்து விடோதோ ? வராது. நம் உடலில் நோய் முதலான குற்றம் இருந்தால், அது நாம் என்ற ஆத்மாவில் இருப்பதில்லையே . அதே போல் உலகப் பொருள்களில் குற்றம் இருந்தாலும் அது அந்தர்யாமியான பரமாத்மாவிடம் வராது.

மேலும், பூர்வபக்ஷியின் வாதத்தில் குறை உள்ளது. ’இந்த உலகமனைத்தும்’ என்பதில் அசேதனம் மற்றும் சேதனம் என்று எல்லாம் அடக்கம். அவை அனைத்தும் ப்ரஹ்மமே என்பதற்கு ஜீவாத்மாவே என்று பொருள் கொள்ள இயலாது –அசேதனப் பொருள்களை உடலாகக் கொண்டு ஜீவாத்மா இருக்கிறார் என்று சொன்னாலும், ஜீவாத்மாக்கள்
ஒருவருக்கொருவர் சரீரமாக இல்லாதபடியால் ஜீவாத்மாவே உலகனைத்தும் என்று சொல்வது பொருந்தாது.

பரமாத்மாவுக்குப் பொருந்தும்; ஜீவனுக்குப் பொருந்தாது
(2) விவக்ஷித கு₃ண உபபத்தே : ச
– “சொல்லப்படுகிற குணங்கள் பொருந்துகிற படியாலும் (இது பரமோத்மாவே )”.-இங்கு ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டு, எந்த குணங்களோடு கூடியவராக த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது. அக் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியவை .

மநோ மய: – தூய்மையான மனதால் மட்டுமே அறியப் படுபவர்,வெளிப் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்
ப்ராண சரீர: – அனைவரையும் வாழ வைக்கும் ப்ராணன் என்ற மூச்சுக் காற்றையும் தனக்கு சரீரமாக உடையவர்
பா ₄ரூப: – ஸூர்யன் சந்திரன் நக்ஷத்ரங்கள் என்று அனைத்தையும் தோற்கடிக்கும் நிகரற்ற ஒளி பொருந்தியவர்
ஸத்ய ஸங்கல்ப: – நினைத்தது எல்லாம் உண்மையாகும் (நிறை வேற்றும்) சக்தி உடையவர்
ஆகாஸாத்மா – ஆகாசம் போல் தூய்மை யானவர் –முழுமையாகப் ப்ரகாசிப்பவர்
ஸர்வ காமோ – உலகில் உண்டாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் படைத்தவர்
ஸர்வ காம: – இன்பம் அநுபவிப்பதற்குத் தேவையான தூய்மையான பொருள்களையும் கருவிகளையும் உடையவர்
ஸர்வ க₃ந் த₄: ஸர்வ ரஸ: – எல்லா நறு மணங்களையும் நற் சுவைகளையும் தன் திருமேனியில் கொண்டவர்
ஸர்வம் இ த₃ம் அப்₄யாத்த : – தனக்கு இப் பண்புகள் தேவைப் படா விட்டாலும் பக்தர்களுக்காக ஏற்றுக் கொண்டவர்
அவாகீ – யாரிடமும் பேசாதவர்
அநாத ₃ர: – நிறை வேறாத ஆசைகளில்லாதபடியால் யாரையும் ஆதரிக்கத் தேவை யில்லாதவர்

இவ்வாறு 12 குணங்கள்

கீழ் இரண்டு ஸூத்ரங்களால் பரமோத்மாவே இங்கு சொல்லப்பட்ட ப்ரஹ்மம் என்று நிரூபித்தார். இனி, இக் கருத்தை மேலும் வலுப்படுத்துவற்காக இதையே எதிர்மறையில் சொல்கிறார் அடுத்த இரண்டு ஸூத்ரங்களில் –

(3) அநுப பத்தே : து நா சாரீர: – “பொருந்தாத படியால் ஜீவாத்மா அல்ல” – இங்கு சொல்லப்பட்ட உயர்ந்த குணங்கள் எல்லாம் அளவற்ற துக்கத்தில் மூழ்கியிருக்கும் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. முக்தி அடைந்த ஜீவாத்மாவும் கூட, ஒரு காலத்தில் துக்கத்தை அநுபவித்தவர் தான் என்றபடியால், அவருக்கும் பொருந்தாது.
எனவே , இந்த வாக்கியம் சாரீரன் (சரீரம் உடையவர்) என்றழைக்கப்படும் ஜீவாத்மாவைச் சொல்லவில்லை

நிலை வேறுபாடு மட்டுமல்ல; பொருள் வேறுபாடும் உண்டே
(4) கர்ம கர்த்ரு வ்யபதே ₃சாத் ச
– “கர்மமாகவும் கர்த்தா வாகவும் சொல்லப்படுகிற படியாலும் (ஜீவனல்ல)”-இங்கு மற்ற ஓரு வாக்கியம் கூறுகிறது – “ஏதம் இத : ப்ரேத்ய அபி₄ஸம்ப₄விதா அஸ்மி” அதாவது “இந்த ப்ரஹ்மத்தை நான் இந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அடையப் போகிறேன்”. ப்ரஹ்மத்தை உபாஸனம் செய்யும் உபாஸகன்-இவ்வாறு த்யானிக்க வேண்டும் என்று உபநிஷத் கூறுகிறது.

எந்த ஒரு செயலுக்கும் ’கர்த்தா ’ (செய்பவர் – Subject) என்பதும் ’கர்ம’ (செய்யப்படு பொருள் -Object) என்பதும் வெவ்வேறு பொருள்கள் இருக்கும். அதைப் போல் இங்கு, ’அடைதல்’ என்ற செயலைச் செய்பவராக (கர்த்தாவாக) ’நான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள ஜீவாத்மா சொல்லப்படுகிறார். அதே செயலில் செயப்படு பொருளாக (கர்மமாக) ப்ரஹ்மம்
சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், அடையப்படும் பொருளான ப்ரஹ்மமும், அதை அடைபவரான ஜீவாத்மாவும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். எனவே இங்கு சொல்லப்படும் ப்ரஹ்மம் ஜீவாத்மா அல்ல.

பரமாத்மாவை அடையப்படுபவனாகவும் ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்-சாந்தோக்யம் -3-14-4-ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –
இங்கு இருந்து சென்று நான் இப் ப்ரஹ்மத்தை அடைகிறேன் – ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி–என்று ப்ரஹ்மம் ப்ராப்யமாகவும் முக்தன் ப்ராப்தா அடைபவன் என்றும் சொல்வதால் அடைபவனான ஜீவனும் அடையப்படும் ப்ரஹ்மமும் ஒன்றாக முடியாது –

இவ்விடத்தில் பூர்வ பக்ஷியின் கேள்வி – ஏன் அடைபவரும் அடையப்படும் பொருளும் வெவ்வேறு என்று கொள்ளவேண்டும்? ஒரே பொருளின் இரண்டு நிலைகளாக இருக்கலாமே ? ’நான்’ என்பது ஸம்ஸாரத்தில் அகப்பட்டிருக்கும் ஜிவாத்மாவைக் குறிக்கிறது. அவர் தான் கர்த்தா. ’ப்ரஹ்மம்’ என்பது அதே ஜீவாத்மா முக்தி அடைந்த
பிறகு எய்தும் தூய்மையான நிலையைக் குறிக்கிறது. அதுதான் கர்மம். எனவே ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்று தான் என்று கொண்டாலும் தவறில்லையே ? இதற்கு வ்யாஸர் பதிலளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் –

(5) சப்₃ த₃ விசேஷாத் – “வேறு வேற்றுமை உறுபைக் கொண்ட சொல்லால்”
நிலை வேறுபாட்டைக் கொண்டு ஜீவன் என்றும் ப்ரஹ்மம் என்றும் ஒரே பொருளைச் சொல்ல்லாமே என்று பூர்வ பக்ஷீ சொன்னதை ஏற்க இயலாது. ஏன் என்றால் ஒரே நிலையில் கூட ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்று காட்டுகிறது உபநிஷத்.
உபாஸநம் செய்யும் ஒரு ஜீவாத்மா “ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ரு ₃தயே ” அதாவது “இந்த ப்ரஹ்மம் தான் என்னுடைய ஹ்ருதயத்திற்குள் இருக்கிறது” என்று த்யானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ’ஏஷ:’ (இந்த) என்று முதல் வேற்றுமை உறுபுடன் ப்ரஹ்மம் சொல்லப்பட்டு, ’மே ’ (என்னுடைய) என்று ஆறாம் வேற்றுமை உறுபுடன் ஜீவாத்மா சொல்லப் பட்டுள்ளபடியால், அவர்கள் இருவரும் வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். இது ஒரே நிலையிலேயே ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று தெளிவாகக் காட்டுகிறது

(சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –-நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க=இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –)

நுண்ணிய ஆத்மா ஜீவாத்மா தானே ?
(6) ஸ்ம்ருத : ச – “ஸ்ம்ருதி (பகவத் கீதை ) சொல்லுகிற படியாலும்”
“ஏஷ மே ஆத்மா அந்தர் ஹ்ரு ₃தயே ”
என்று ஜீவாத்மாவின் அந்தர்யாமியாகச் சொல்லப்படும் ப்ரஹ்மம் யாராக இருக்கும் என்று ஆராய்ந்தால், அதை பகவத் கீதை என்ற ஸ்ம்ருதி நூல் தெளிவாகக் காட்டுகிறது –
ஸர்வஸ்ய ச அஹம் ஹ்ருதி₃ ஸந்நிவிஷ்ட:” (15.15) – எல்லாருடைய ஹ்ருதயத்திலும் பரமாத்மாவான நான் இருக்கிறேன்
“ஈச்வர: ஸர்வபூ₄தாநாம் ஹ்ருத்₃தே ₃சே அர்ஜுந திஷ்ட₂தி” (18.61) – எல்லா ஜீவராசிகளின் ஹ்ருதயங்களிலும் ஈஸ்வரனான பரமாத்மா இருந்து அவற்றை இயக்குகிறார்.

(7) அர்ப₄ கௌகஸ்த்வாத் தத்₃வ்யபதே ₃சாத் ச ந , இதி சேத் , ந நிசாய்யத்வாத் ஏவம், வ்யோமவச்ச” விரிவாகப் பார்ப்போம்.
இந்த ஸூத்ரத்தின் முதல் பகுதியால் பூர்வ பக்ஷியின் கேள்வி சொல்லப்படுகிறது.
அர்ப₄கௌகஸ்த்வாத் – ’ஹ்ருதயத்திற்குள் இருக்கிறார்’ என்று சிறிய இடத்தில் இருப்பவராகச் சொல்லப்பட்டபடியால்
தத்₃வ்யபதே ₃சாத் ச – ’அணீயாந் வ்ரீஹார்வா’ என்று நெல்லை விடச் சிறியவர் என்று சொல்லப்பட்டபடியாலும்– இங்கு சொல்லப்பட்ட ப்ரஹ்மம் பரமாத்மாவாக இருக்க இயலாத (பரமாத்மா அளவிறந்தவரான படியால்)
இதற்கு மேல் வேத வ்யாஸரின் பதில் உள்ளது –
இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு
ஏவம் நிசாய்யத்வாத் – “இவ்வாறு காணப்பட வேண்டிய படியால்” – இங்கு ப்ரஹ்மமே இயற்கையாக நுண்ணியது என்று சொல்லப்படவில்லை . அளவு கடந்தவரான ப்ரஹ்மம் (பரமாத்மா) உபாஸகனின் நன்மைக்காக, சிறிய இடமான ஹ்ருதயத்துக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு இருக்கிறார் என்று த்யானிக்க வேண்டும் என்று தான் கூறுகிறது. இது எப்படித் தெரிகிறது என்றால் –
வ்யோமவச்ச – “வ்யோமம் (ஆகாசம்) போலவும் (சொல்லப்படுகிறபடியால்)” – ப்ரஹ்மம் நுண்ணியது என்று சொன்ன பிறகு ’ஜ்யாயாந் ப்ருதி₂வ்யா ஜ்யாயாந் அந்தரிக்ஷாத்’ என்று இந்த ப்ரஹ்மம் பூமி, ஆகாசம் மற்றும் எல்லா உலகங்களையும் காட்டிலும் பெரியது என்றும் சொல்லப்பட்டுள்ளபடியால், ப்ரஹ்மம் சிறிய இடத்தில் இருக்கிறது என்றதோ சிறியது என்றதோ பரமாத்மாவின் கருணையை நாம் புரிந்து கொள்வதற்கே . அதைக்கொண்டு இங்கு சொல்லப்படும் ப்ரஹ்மம் நுண்ணியவரான ஜீவாத்மா தான் என்று சொல்ல இயலாது.

(வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -புகுந்த பின் வணங்கினேன்- எனது சிந்தனைக்கு இனியாய் -என்று உணர்ந்தேன்)

உடலுக்குள் இருந்தால் துன்பமும் இருக்குமோ ?
இந்த அதிகரணத்தின் கடைசி ஸூத்ரத்தில் மிகவும் முக்கியமான விஷயம் ஆராயப் படுகிறது.
(8) ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி சேத் ந வைசேஷ்யாத்” – இதில் பூர்வ பக்ஷியின் கேள்வியும் வ்யாஸரின் பதிலும் உள்ளன.
ஸம்போ₄க₃ப்ராப்தி: – இது பூர்வ பக்ஷியின் கேள்வி. ஸம்போகம் என்றால் உலகத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவம். ப்ராப்தி என்றால் அடைவது. பூர்வ பக்ஷீ கேட்கிறார் – ஒரு ஜீவாத்மா உடலுக்குள் இருக்கிறபடியால் உலகத்தில் ஸுகம் மற்றும் துக்கங்களை அநுபவிக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். அதே போல் பரமாத்மாவும் இந்த உடலுக்குள் இருக்கிறார் என்றால், அவரும் ஸம்ஸாரத்தில் ஏற்படும் ஸுகம் மற்றும் துக்கத்தின் அநுபவத்தாய் அடைய நேரிடுமே ?
இதி ந சேத் – “இவ்வோறு கூறினால் அது தவறு” – வ்யாஸர் இதற்கு பதில் கூறுகிறார்.
வைசேஷ்யாத் – “(காரணத்தில் இருக்கும்) சிறப்பால்” – அதாவது – “ஒரு ஜீவாத்மா உடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் பரமாத்மா இவ்வுடலில் இருப்பதற்கான காரணத்துக்கும் சிறப்பு (வேறுபாடு) இருக்கிறபடியால்”.
உடலுக்குள் இருப்பது மட்டுமே ஸுகம் மற்றும் துக்கத்துக்குக் காரணம் ஆகாது. எந்த காரணத்தால் ஒருவர் அந்த உடலுக்குள் இருக்கிறார் என்று ஆராய வேண்டும்.
ஜீவாத்மோ ஓர் உடலை அடாய்வதற்குக் காரணம், தான் முன் ஜன்மங்களில் செய்த பாபம் மற்றும் புண்ணியம் என்னும் கர்மம் தான். அதனால் அந்த உடல் அவருக்கு ஸுகம் மற்றும் துக்கத்தைத் தருகிறது.
பரமாத்மாவோ தன்னுணடய கருணையால் இந்த உடலுக்குள் இருக்கிறாரே தவிற, கர்மத்தால் அல்ல. எனவே அவருக்கு எந்த ஒரு ஸுகமோ துக்கமோ இதனால் ஏற்படாது.
இதை உபநிஷத்தே அழகான ஒரு உவமையைக் கொண்டு சொல்கிறது –
த்₃வோ ஸுபர்ணோ ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிசஸ்வ ஜாத |
தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய: அபி₄சாகசீதி||

இந்த உடல் என்ற ஒரு மரத்தில் ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் இரண்டு பறைவகள் உள்ளன. அந்த மரத்தில் பழங்கள் உள்ளன. அவைதான் கர்மத்தின் காரணமாக ஏற்படும் ஸுக துக்கங்கள். ஜீவாத்மா அந்த பழத்தை உண்கிறது. பரமாத்மா என்ற மற்ற ஓரு பறவை அதை உண்ணாமல் ஒளியோடு திகழ்கிறது.

இவ்வாறு 8 ஸூத்ரங்களால் எல்லாக் கேள்விகளுக்கும் விடை அளித்து, ப்ரஹ்மம் பரமாத்மாவே என்று நிரூபிக்கப்பட்டது

————

1.2.2 அத்த்ரதி₄கரணம்
உண்பது உணவையா? உலகையா?

அத்த்ரதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி –
1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் பரமாத்மா உடலுக்குள் இருந்தாலும் அவர் போ₄க்தா அதாவது உலகத்து இன்ப துன்பங்கணை அநுபவிப்பவர் அல்ல என்று சொல்லப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு பூர்வபக்ஷம் எழுகிறது – உபநிஷத்தில் ஓர் இடத்தில் உலக இன்ப துன்பங்கணை அநுபவிப்பவராக ஒருவர்
சொல்லப்படுகிறார்; அவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் – என்று, அதை ஆராய்வது தான் 1.2.2 அத்த்ரதிகரணம். பின்புலம் –

அத்ரு -அத்தா வின் மூலம் -உண்பவன் -என்னும் அர்த்தம்-

அத்த்ரதிகரணத்தின் கதைப்பகுதி

கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தில் முதல் மற்றும் இரண்டாவது வல்லிகள் – நாசிகேத வித்₃யாஉசந் ஹ வை வாஜச்ரவஸ: ஸர்வ வேத₃ஸம் த₃தௌ₃| தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ-வாஜச்ரவஸர் என்ற தந்தை ஒரு யாகம் செய்து, அதன் இறுதியில் ரித்விக்களுக்கு தக்ஷிணை வழங்கி வந்தார். உயர்ந்த பொருள்களை வழங்காமல், உபயோகமில்லாத பசு மாடு முதலானவற்றை அவர் தானம் செய்வதைக் கண்டு, இந்தக் குறையால் இவரது யாகம் பயனளிக்காமல் போய் விடுமோ என்று அஞ்சின அவரது மகனான நசிகேதஸ், அவரிடம் பல முறை சென்று “என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்?” என்ற நச்சரித்தான். தன்னை வழங்கியாவது யாகம் முழுமை அடைந்து தன் தந்தைக்கு ஆசைப்பட்ட பயன் கிட்டவேண்டும் என்கிற நல்ல எண்ணத்திலே . தந்தை கோவமடைந்து “ம்ருத்யுவுக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லி விட்டார், ஆனால் உடனே தான் செய்ததை நினைத்து வருந்தினார். நசிகேதஸ் மனம் தளராமல் உடனடியாக ம்ருத்யுவின் லோகத்தைச் சென்றடைந்தார்.

ஆசா ப்ரதீஷே ஸங்க₃தம் ஸூந்ருதாம் ச இஷ்டாபூர்தே புத்ரபசூம்ஸ்ச ஸர்வாந் |
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்ய அல்பமே த₄ஸ: யஸ்ய அநச்நன் வஸதி ப்₃ராஹ்மணோ க்₃ருஹே ||

ம்ருத்யு தேவதை தன் உலகத்தில் இல்லாதபடியால் நசிகேதஸ் மூன்று இரவுகள் அவருக்காக வாயிலில் காத்திருந்தான்.-ம்ருத்யு தேவதை வந்தவுடன் பதரிப் போனார் – எந்த ஒரு மனிதனின் வீட்டில் விருந்தாளி உணவளிக்கப்படாமல் காக்க வைக்கப்படுகிறானோ , அவனுடைய ஆசைப்பட்ட பொருள்கள், அடைந்திருக்கும் பொருள்கள், வைதிகச் செயல்கள், குழந்தைகள், பசுக்கள், இவை அனைத்துமே அழிந்து விடுகின்றன என்று ஸாஸ்த்ரம் கூறுகிறபடியால். எனவே அதற்குப் பரிஹாரமாக எந்த மூன்று வரங்களையும் கேட்கலாம் என்று ம்ருத்யு தேவன் நசிகேதஸ்ஸிடம் கூறினார்.

ஶாந்த ஸங்கல்ப꞉ ஸுமநா யதா₂ ஸ்யாத் வீதமந்யுர் கௌ₃தமோ மா(அ)பி₄ ம்ருத்யோ
முதல் வரம் – என்னை ம்ருத்யுவுக்குக் கொடுத்ததால் வருத்தத்தில் இருக்கும் என் தந்தை ஸாந்தி அடைய வேண்டும்

ஸ்வர்க₃க லோகா அம்ருதத்வம் ப₄ஜந்த ஸ த்வ மக்₃நிம் ஸ்வர்க்₃யமத்₄யேஷி ம்ருத்யோ
இரண்டாம் வரம் – மரண பயமில்லாத உலகத்தை அடைய தேவைப்படும் கர்மங்ளைப் பற்றி உபதேசிக்கவும்

இங்கு ஸ்வர்க்கம் -மரணமடையா தன்மை என்பதால் ஸ்ரீ வைகுண்டம் -மோக்ஷம்

யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யே அஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே । ஏதத்₃வித்₃யாம் அநுஶிஷ்ட: த்வயா அஹம்-மரணமடைந்த பிறகு ஒருவன் இருக்கிறானா இல்லையா என்று பலவிதமான வாதங்கள் சொல்லப்படுகின்றன. இதன் உண்மையை நீ உபதேசிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

ஶதாயுஷ꞉ புத்ர பௌத்ராந் வ்ருணீஷ்வ ப₃ஹூந் பஶூன் ஹஸ்தி ஹிரண்யமஶ்வான் | பூ₄மேர் மஹதா₃ யதநம் வ்ருணீஷ்வ
மூன்றாம் வரம் -மிக உயர்ந்த விஷயத்தைப் பற்றியதான படியால், அதை அறிய நசிகேதஸ்ஸுக்குத் தகுதி இருக்கிறதா என்று பார்ப்பதற்காக ம்ருத்யு தேவதை கூறினார் – ஆயுஸ்ஸு, குழந்தைகள், பசுக்கள், யானைகள், குதிரைகள், பெரிய ராஜ்யம் என்றும் எதை வேண்டுமானாலும் நீ கேட்கலாமே ? – என்று

ஸ்வோபா வா மர்த்யஸ்ய யதந்த கைதத் ஸர்வேந்த்₃ரியாணாம் ஜரயந்தி தேஜ꞉ | ந வித்தேந தர்பணீயோ மநுஷ்யோ –
அதற்கு நசிகேதஸ் பதிலுரைத்தான் – ம்ருத்யு தேவனே ! நீ சொல்லும் இவை யெல்லாம் அழியக் கூடிய பொருள்கள், நாளை இருக்குமா என்று கூடத் தெரியாது. மேலும் இவற்றை அநுபவித்தால் இந்த்ரியங்கள் மேலும் வலுவிழந்து போகுமே தவிற சிறப்பாக இருக்கமாட்டா. ஒரு மனிதன் செல்வத்தைக் கொண்டு ஒரு நாளும் த்ருப்தி அடைய இயலாது என்பது என் எண்ணம். என்வே எனக்கு இவையெல்லாம் தேவை யில்லை . நான் கேட்ட கேள்விக்கு பதில் தான் வேண்டும்.

உண்பவர் ஜீவனே என்னும் பூர்வபக்ஷம்

நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந் யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட₂
நசிகேதஸ்ஸின் வைராக்யத்தைப் பார்த்து மகிழ்ந்த ம்ருத்யு தேவன் கூறினான் – உண்மை தான் நசிகேதஸ்! நீ கேட்ட கேள்வியோ வெறும் ஆராய்ச்சியால் அல்லது யுக்திகளால் அறியப்படவேண்டிய விஷயமல்ல; ஒரு ஆசார்யனிடம் உபதேசம் பெற்றுத் தான் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உன்னிடம் எனக்கு மிகுந்த ப்ரீதி உண்டாகிறது. எனவே நீ
கேட்டதை உபதேசிக்கிறேன் – என்று.
விஷய வாக்யம் – இப்படிக் கூறிவிட்டு ம்ருத்யு தேவதை செய்த உபதேசத்தில் ஒரு வாக்கியம் தான் ஆராயப்படுகிறது-யஸ்ய ப்₃ரஹ்ம ச ஷத்ரம் ச உபே ₄ ப₄வத ஓத₃ந꞉ | ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் க இத்தா₂ வேத₃ யத்ர ஸ꞉ ||-எவருக்கு ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் இருவருமே உணவாக ஆகின்றனரோ , ம்ருத்யு என்கிற மரணம் யாருக்கு ஒரு பொருட்டல்லவோ , அவர் இருக்கும் நிலையை (அவரது பெருமையை ) யார் தான் அறிய முடியும்?

உபநிஷத் வாக்கியத்தில் அத்தா பத பிரயோகம் இல்லை என்றாலும் உணவைச் சொல்வதால் பிரதி சம்பந்தி உண்பவன் உண்டே-

ஸந்தேஹம் – இங்கு ’ஓத₃நம்’ அதாவது அரிசிச்சோறு (உணவு) பேசப்படுகிறபடியால், இந்த வாக்கியம் உணவு உண்பவர் (அத்தா) பற்றிப் பேசுகிறது என்று தெளிவாகத் தெரிகிறது. உணவு உண்பவர் ஜீவாத்மாவா ? பரமாத்மாவா ?

பூர்வ பஷம் – ஜீவாத்மாதான் இந்த வாக்கியத்தால் சொல்லப்படுகிறார்.
இங்கு மனிதர்களே உணவாகச் சொல்லப்படுகிறபடியால், இது வாயால் உணவு உண்பதைப் பற்றிப் பேச வில்லை .-எனவே உண்பது என்பது இன்ப துன்பங்களை அநுபவிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்.-உலகத்தில் இன்ப துன்பங்களின் அநுபவம் பாப புண்யங்களை உடைய ஜீவாத்மாவுக்குத் தான் உண்டு, பரமாத்மாவுக்குக் கிடையாது என்று கடந்த அதிகரணத்தின் இறுதியான ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது.

ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் உணவு என்பதற்குப் பொருள் –ஆண்-பெண் வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் அநுபவித்துக் கொள்கிறார்கள் என்று. இதுவும் ஜீவாத்மாவுக்குத் தான் பொருந்தும்.ஜீவாத்மா நித்யமானபடியால் அவருக்கு ம்ருத்யு ஒரு பொருட்டல்ல. எனவே ம்ருத்யு ஜீவனுக்கு ’உபஸேசநம்’ அதாவது அடி பணிந்தது இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது-

உண்பது உணவை யல்ல; உலகை !
ஸித்தாந்தம்
– இவ்வாறு எழுந்த பூர்வ பக்ஷத்தை நான்கு ஸூத்ரங்களால் கண்டனம் செய்கிறார் வ்யாஸர்.
(1) அத்தா சராசர க்₃ரஹணாத்
முன் பாதத்தில் இருந்த ’அந்ய:’ (வேறுபட்டவர்) என்ற சொல்லை இந்த ஸூத்ரத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்தா – இங்கு உண்பவராகச் சொல்லப்படுபவர்
அந்ய: – ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவரான பரமாத்மாவே
சராசர க்₃ரஹணாத் – சரா சரங்கள் அனைத்தையும் உணவாக எடுத்திருக்கிற படியால் (கூறி யிருக்கிற படியால்)
கேள்வி – இங்கு ப்ராஹ்மணர்களும் க்ஷத்ரியர்களும் மட்டும் தானே உணவாகச் சொல்லப்பட்டுள்ளார்கள்? சரா சரங்கள் அனைத்தும் எங்கு உணவாகச் சொல்லப்பட்டுள்ளன?
பதில் – மேலே ’ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம்’ அதாவது ’ம்ருத்யு யாருக்கு உபஸேசநமோ ’ என்று கூறப்படுகிறது.
உபஸேசனம் என்றால் (ஸ்வயம் அத்₃யமாநம் ஸத் அந்ய அத₃ந ஹேது: ), அதாவது
மற்றவற்றை உண்ண உதவி செய்து, தானும் உண்ணப் படும் பொருள் உபஸேசநம் எனப்படுகிறது. இங்கு ம்ருத்யு தேவதையை உபஸேசநமாகக் கொண்டு உணவை உண்பது சொல்லப்படுகிறபடியால், இது ஒரு ஜீவன் மற்ற மனிதர்களின் மூலம் இன்ப துன்பங்கணை அநுபவிப்பதைப் பற்றிப் பேசவில்லை ; முழு முதற் கடவுளான பரமாத்மா, ப்ரளயம் ஏற்படும் போது இந்த உலகத்தை யெல்லாம் ஸம்ஹாரம் செய்வதைப் பற்றிப் பேசுகிறது. எனவே
ப்ராஹ்மணர்கள் க்ஷத்ரியர்கள் என்று சொன்னது ஒரு எடுத்துக் காட்டுக்காக மட்டுமே , உண்மையில் உலகிலுள்ள சரா சரங்கள் அனைத்தும் தான் இங்கு உணவாவச் சொல்லப்பட்டுள்ளன.
“காரேழ் கடலேழ் மலை யேழ் உலகுண்டும் ஆரா வயிற்றான்” என்று நம்மாழ்வார் சொல்வது போல், உலகமனைத்தையும் உண்பவர் பரமாத்மாவே , ஜீவாத்மா அல்ல. “க இத்தா₂ வேத₃ யத்ர ஸ” அதாவது ’அந்த பரமாத்மாவின் பெருமையை யார் அறிய முடியும்?’ என்று தான் உபநிஷத் கூறுகிறது.
இந்த உபநிஷத்தில் மேல் பகுதியில் “மனதை அடக்கி புலன்களை ஆள்பவன் தான் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான்” என்று விஷ்ணுவான பரமாத்மாவைப் பற்றிச் சொல்லப் படுகிறபடியால் இது பொருத்தமானதே .

சரம் அசையும் பொருள்கள் -அசரம் -அசையாத பொருள்கள்-

—————

1.2.2 அத்த்ரதி₄கரணம்
பருகுபவரும் பருக வைப்பவரும்

பரமாத்மாவை அறிவது அரிதா? எளிதா?
கட உபநிஷத்தில் மனிதர்கணை உண்பவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான் என்று பூர்வ பக்ஷம் எழுந்தது. அதற்கு பதிலுரைத்தார் வ்யாஸர் 1.2.2 அத்த்ரதிகரணத்தில் முதல் ஸூத்ரத்தால். இங்கு ம்ருத்யு தைவமே உபஸேசனமாகச் சொல்லப் படுகிறபடியால், உண்பது என்பது சராசரங்கள் அனைத்தையும் ஸம்ஹரிப்பதே என்று தெரிகிறது. எனவே
’அத்தா’ அதாவது உண்பவராக இங்கு சொல்லப்பட்டவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார்.
(2) ப்ரகரணாத் ச – “ப்ரகரணம் (context) என்பதன் அடிப்படையிலும்” (இங்கு உண்பவர் பரமாத்மாவே )
நசிகேதஸ் கேட்ட மூன்றாவது கேள்விக்கு பதிலளிக்கும் ம்ருத்யு தேவதை தொடர்ந்து பல வாக்கியங்களால் பரமாத்மாவைப் பற்றி தான் சொல்லிக் கொண்டு வந்துள்ளார். எனவே இந்தப் ப்ரகரணமே பரமாத்மாவைப் பற்றியது தானே –
(மஹாந்தம் விபு₄ம் ஆத்மாநம் மத்த்வா தீ₄ர: ந சோசதி)
மிக உயர்ந்த, எங்கும் நீக்கமற நிறைந்த ஆத்மாவான பரமாத்மாவை எவன் அறிகிறானோ அவனுக்கு ஸோகம் இல்லை –

நாயமாத்மா ப்ரவசநேந லப்₄ய: ந மேத₄யா ந ப₃ஹுநா ஸ்ருதேந |
யமேவ ஏஷ வ்ருணுதே தேந லப்₄ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் ||

இந்தப் பரமாத்மாவை பேசுவதாலோ , த்யானத்தாலோ , கேட்பதாலோ மட்டும் அடைந்துவிட இயலாது. யாரை அந்தப் பரமாத்மா தேர்ந்தெடுத்துத் தன்னைக் காட்டுகிறாரோ , அவர் தான் பரமாத்மாவை எளிமையாக அறிய முடியும்.

(காட்டவே கண்ட பாத கமலம் –
வெறிதே அருள் செய்வார் தாம் உகந்தாருக்கே)

(என் பெருமான் தன்மையை யார் அறிவிப்பார் –
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே)

ந அவிரத: துஶ்சரிதாத் ந அசாந்த: ந அஸமாஹித: | ந அசாந்த மாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேந ஏநம் ஆப்நுயயாத் ||
தீய செயல்களைக் கை விடாதவனோ , விருப்பு வெறுப்புகளைக் கடக்காதவனோ , உலகப் பொருள்களைப் பற்றின எண்ணங்களைக் கட்டுப் படுத்தாதவனோ , மனதை அடக்காதவவனோ பரமாத்மாவை அறிய இயலாது,-இப்படி வரிசையாக பரமாத்மாவின் பெருமையையும், அவரை அறிவது அரியது என்றும் தான் ம்ருத்யு தேவதை சொல்லி வந்துள்ளார். இந்த வாக்கியத்திலும் “க இத்தா₂ வேத₃ யத்ர ஸ:” அதாவது ’அவரது பெருமை முழுவதையும் யார் தான் அறிய முடியும்? என்றுள்ளது. எனவே இந்தத் தொடர்ச்சி அதாவது ப்ரகரணம் இருக்கிற படியால், ’யஸ்ய ப்₃ரஹ்ம க்ஷத்ரம் ’ என்ற மந்த்ரமும் பரமாத்மாவைத் தான் சொல்ல வேண்டும், ஜீவாத்மாவை அல்ல.

இதயத்தில் ஜீவனோடு இருப்பது மனதா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷீ கேள்வி எழுப்புகிறார்
– இது பரமாத்மாவைப் பற்றிய ப்ரகரணம் என்பது தவறு. இதற்கு முன் பரமாத்மா பேசப்பட்டிருந்தாலும், அந்தத் தொடர்ச்சி (ப்ரகரணம்) முடிந்து போய் விட்டது, ஏனென்றால் ’யஸ்ய ப்₃ரஹ்ம ’ என்ற விஷய வாக்கியத்துக்கு அடுத்த மந்த்ரத்தில் ஜிவனைப் பற்றி மட்டும்தான் சொல்லப்படுகிறது. அந்த அடுத்த மந்த்ரம் –
ருதம் பிப₃ந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே கு₃ஹாம் ப்ரவிஷ்டவ் பரமே பரார்த்₄யே |
சா₂யா தபௌ ப்₃ரஹ்ம விதோ ₃ வத₃ந்தி பஞ்சாக்₃நயோ யே ச த்ரிணாசிகேதா: ||

நிழலும் ஒளியும் போன்ற இருவர் புண்யத்தால் அடையப்படும் இந்த பூமியில் இதயத்துக்குள் நுழைந்து இருக்கிறார்கள். அவர்கள் பாப புண்யங்களின் விளைவாக ஏற்படும் ஸுக துக்கங்களைப் பருகிறார்கள் (அநுபவிக்கிறார்கள்).
கர்மத்தால் ஏற்படும் ஸுக துக்கங்களின் அநுபவம் இங்கு சொல்லப் படுகிறது. இது ஜீவனுக்குப் பொருந்தும், பரமாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே இங்கு இரண்டாவதாகச் சொல்லப்படுவது எது? மனது என்கிறர் பூர்வ பக்ஷீ.
மனது அசேநமான படியால் ஸுக துக்கங்கணை அநுபவிக்க இயலாது என்றாலும், ஜீவாத்மா அவற்றை அநுபவிக்க உதவுகிறபடியால் ஏதோ ஒரு விதத்தில் ஸுக துக்கங்களோடு தொடர்பு உள்ளது. எனவே இங்கு பரமாத்மாவைப் பற்றின பேச்சு இல்லை . ஆகையால், முன் மந்த்ரத்திலும் ஜீவாத்மா சொல்லப்படுவதில் தவறில்லை . இதற்கு வ்யாஸரின் பதில் –

(3) கு₃ஹாம் ப்ரவிஷ்டவ் ஆத்மாநௌ ஹி தத்₃ த₃ர்சநாத்
“இதயத்துக்குள் நுழைந்திருப்பவர்கள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் அன்றோ , அது காணப்படுகிறபடியால்”
ம்ருத்யு தேவதையின் உபதேசத்தில் முன்னமே இதயத்துக்குள் நுழைந்திருப்பவர்கள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தான் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும், ஜீவனோடு ஒற்றுமை உடைய பரமாத்மாவை இரண்டாவதாகக் கொள்வதே பொருத்தமானது. முற்றிலும் வேறுபட்ட, அசேநப் பொருளான மனதைக் கொள்வது தகுந்ததல்ல.

ப்ரயோஜக கர்த்தா -செயல்படுத்த நியமிப்பவர் பரமாத்மா தானே

இதயத்திலிருக்கும் இரண்டு ஆத்மாக்கள்

தம் து₃ர்த₃ர்சம் கூ₃ட₄ம் அநுப்ர விஷ்டம் கு₃ஹா ஹிதம் க₃ஹ்வரேஷ்ட₂ம் புராணம் |
அத்₄யாத்ம யோகா₃தி₄க₃மேந தே ₃வம் மத்த்வா தீ₄ர: ஹர்ஷ ஸோகௌ ஜஹாதி ||

கண்களால் காணப்பட முடியாதவராய், ஜீவாத்மாவின் கர்மங்களால் மறைக்கப்பட்டவராய், எல்லா ஜீவ ராசிகளுக்கும் உள்ளே இருப்பவராய், இதயதமென்னும் குஹைக்குள்ளே இருப்பவராய், மிக நுண்ணியவரான ஜீவாத்மாவுக்குள்ளும் நுழைந்திருப்பவராய், தொடக்கமில்லாதவரான பரமாத்மாவை எவனொருவன் ஜீவாத்மாவை உணர்ந்து கொண்டு த்யானிக்கிறானோ , அவன் இவ் வுலக இன்ப துன்பங்கணை ஒழித்து விடுகிறான்.

யா ப்ராணேந ஸம்ப₄வதி அதி₃தி: தே₃வதாமயீ | கு₃ஹாம் ப்ரவிச்ய திஷ்ட₂ந்தீ ஸா பூ₄தேபி₄: வ்யஜாயத ||
ப்ராணன் என்னும் மூச்சுக் காற்றோடு கூடியவராய், தன் கர்மங்களின் பயனான ஸுக துக்கங்களை அநுபவிப்பவராய்,-இந்த்ரியங்களின் மூலம் போகங்களை அநுபவிப்பவராய், இதயத்திற்குள் இருப்பவரான ஜீவாத்மா, ஐம் பூதங்களால் ஆக்கப்பட்ட பல விதமான உடல்களை எடுத்துக் கொள்கிறார்.-இவ்வாறு முன்னமே ம்ருத்யு தேவதை சொல்லி யிருக்கிறார், பரமாத்மாவும் ஜீவாத்மாவும் தான் இதயத்திற்குள் இருப்பவர்கள் என்று. எனவே , ’ருதம் பிப₃ந்தௌ’ என்ற மந்த்ரத்திலும் அவர்கள் தான் சொல்லப்பட வேண்டும்.
ஜீவன் குறைந்த ஜ்ஞாநமுடைய படியால் ’நிழல்’ என்றும், பரமாத்மா எல்லை யற்ற ஜ்ஞாநமுடையபடியால் வெளிச்சமென்றும் சொல்லப்படுகிறார்கள்.
ஜீவாத்மா நேரடியாக ஸுக துக்கங்களை அநுபவிக்கிறார். பரமாத்மா, அதற்குக் காரணமாக இருக்கிறார், ஜீவனையே இயக்குகிறார். அதனால் தான் உபநிஷத் இருவருமே ஸுக துக்கங்கணை அநுபவிக்கிறார்கள் என்கிறது. வீரர்கள் சண்டை யிட்டாலும் ’ராஜா யுத்தம் செய்தார்’ என்பது போல் இதுவும் பொருந்தும்.

நசிகேதஸ்ஸின் ஆழமான கேள்வி
(4)விசேஷணாத் ச – “சிறப்பிக்கப் படுகிற படியாலும்”
தன் உபதேசம் முழுவதிலும் ம்ருத்யு தேவதை ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் பற்றித் தான் பல விதங்களில் அடை மொழிகளை இட்டு விளக்கி வருகிறார். ஜீவாத்மா உபாஸநம் செய்பவர், பரமாத்மா உபாஸிக்கப்படுபவர்; ஜீவாத்மா அடைபவர், பரமாத்மா அடையப் படுபவர்; இதுவே சிறப்பிப்பது என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணத்தாலும் ’ருதம் பிப₃ந்தௌ’ என்ற மந்த்ரத்தில் சொல்லப் படுபவர்கள் ஜீவனும் பரனும் தான் என்று தெளிவாகிறது. அதனால் ப்ரகரணத்தில் முறிவு இல்லாத படியால், ’யஸ்ய ப்₃ரஹ்ம ச க்ஷத்ரம் ச ’ என்ற மந்த்ரத்திலும் பரமாத்மா சொல்லப்படுவதில் எந்தக் குறையும் இல்லை .

கேள்வி – இங்கு நசிகேதஸ்ஸின் மூன்றாவது கேள்வி “மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறது?” என்றுதானே ? எனவே ம்ருத்யுவின் உபதேசம் ஜீவனைப் பற்றித் தானே இருக்க வேண்டும்?
பதில் – நசிகேதஸ்ஸின் கேள்வி மிகவும் ஆழமானது. மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறது என்று அவன் கேட்கவில்லை , ஏனென்றால் அவன் உடல் வேறு ஆத்மா வேறு, ஆத்மா அழியாதது என்று நன்கு அறிவான். அவனுடைய பேச்சும் நடவடிக்கையும் இதைக் காட்டுகின்றன. எனவே அவன் கேள்வியின் உண்மையான பொருள் – “ஒரு ஜீவாத்மா பாபம்
மற்றும் புண்யங்களைக் கழித்து, இறுதியான உடலையும் நீத்து முக்தி அடைந்த பின் எப்படி இருக்கிறார்? என்ன ஆகிறார்” என்று முக்தியைப் பற்றியது தான்.

அதற்கு பதிலளிக்கும் ம்ருத்யு தேவதையும் ஜிவாத்மாவின் தன்மைகள், பரமாத்மானவன் தன்மைகள் மற்றும் பெருமைகள், பரமாத்மாவை அடைவதே மோக்ஷம் என்னும் தத்துவம், பரமாத்மாவை அடைவதற்கு வழி அவர் அநுக்₃ரஹத்தைப் பெற்று பக்தி யோகம் செய்வதே என்பது போன்ற பலவற்றை உபதேசிக்கிறார்.
இவ்வாறு, கட உபநிஷத்தின் இந்தப் பகுதியிலும் பேசப் படுபவர் பரமாத்மா தான் என்பது உறுதியாகிறது. அவரே உலகங்களை எல்லாம் அழிப்பவர், அடையப்பட வேண்டியவர், அதற்கான அருளையும் செய்பவர்.

———-

1.2.3 அந்தராதி₄கரணம்
உபகோஸலனின் ஜ்ஞாநப் பசி

அந்தராதிகரணத்தின் பின்புலம்
1.2.3 அந்தராதிகரணம் –
அந்தர + அதிகரணம். இந்த அதிகரணத்தின் முதல் ஸூத்ரம் அந்தர: என்ற சொல்லோடு துவங்குகிறபடியால் இவ்வதிகரணம் இப் பெயரைப் பெற்றது. கீழ் 1.1.7 அந்தரதிகரணம் (அந்த: + அதிகரணம்) வேறு.

ஸங்கதி – கீழ் 1.2.2 அத்த்ரதிகரணத்தில் பரமாத்மா இதயத்துக்குள் இருக்கிறார் என்று சொல்லும் போது ’தம் துர்த₃ர்ஸம்’ அதாவது பரமாத்மா காண்பதற்கு அரியவர் எனப்பட்டது. எனவே பூர்வ பக்ஷீ கேட்கிறார் – உபநிஷத்தில் வேறொரு இடத்தில் காண்பதற்கு எளியவராகச் சொல்லப்பட்டுள்ள ஒரு ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று.

விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் 4ஆம் ப்ரபாடகத்தின் 10-15 கண்டங்கள் – உபகோஸல வித்யை-உபகோஸலோ ஹ வை காமலாயந꞉ ஸத்யகாமே ஜாபா₃லே ப்₃ரஹ்ம சார்ய முவாஸ தஸ்ய ஹ த்₃வாத₃ஶ வார்ஷாண் யக்₃நீந் பரிசசார-
உபகோஸலன் என்ற ப்ரஹ்ம சாரீ ஸத்ய காமர் என்ற ஆசார்யரின் குரு குலத்தில் இருந்து 12 ஆண்டுகள் வேதங்களைக் கற்றான். அவருக்கும், அவர் வணங்கி வந்த மூன்று அக்நிகளுக்கும் பல விதமான கைங்கர்யங்களைச் செய்து வந்தான். மற்ற மாணவர்களை அனுப்பிய ஆசார்யன் இவனை மட்டும் இல்லத்திற்கு அனுப்ப வில்லை .

தம் ஜாயோவாச – ப்ரப்₃ரூஹி அஸ்மை இதி | தஸ்மை ஹாப்ரோச்யைவ ப்ரவாஸாஞ் சக்ரே
ஆசார்யரிடம் அவரது மனைவி கூட இந்தச் சிறுவனுக்கு உபதேசிக்கும்படி சொல்லிப் பார்த்தாள். ஆனால் ஆசார்யர் எதுவும் சொல்லாமல் புறப்பட்டு வெளியூர் சென்று விட்டார்.

தம் ஆசார்யஜாய உவாச – கிம் நு நாஶ்நாஸீதி | ஸ ஹோவாச – ப₃ஹவ இமே (அ)ஸ்மிந் புருஷே காமா நாநாத்யயா வ்யாதீ₄பி₄꞉ ப்ரதிபூர்ணோ (அ)ஸ்மி நாஶிஷ்யாமீதி
ஆசார்யரின் மனைவி உபகோஸலனை சாப்பிட அழைத்த போது அவன் கூறினான் – கர்ப வாஸம், பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் முதலானவற்றைத் தரும் பல விதமான உலகப் பொருள்களின் ஆசைகள் என்னைப் பயப்படுத்துகின்றன. இப்படி பல விதமான பல வ்யாதிகளால் நான் பீடிக்கப் பட்டிருக்கிற படியால் எனக்கு உணவு வேண்டாம்

அத₂ ஹாக்₃நய꞉ ஸமூதி₃ரே ஹந்த அஸ்மை ப்ரப்₃ரவாமேதி | தஸ்மை ஹோசு꞉
ஆசார்யன் வெளியூர் சென்றிருந்த போது, மிகுந்த துக்கத்தில் இருந்தாலும் உபகோஸலன் ஆசார்யனின் மூன்று அக்நிகளுக்கும்(கா₃ர்ய பத்யம், அந்வாஹார்ய பசநம், ஆஹவநீயம்) பணி விடை செய்து வணங்கிக் கொண்டு வந்தான். இவனது துன்பத்தையும் பக்தியையும் பார்த்து மூன்று அக்நிகளும் கருணைப் பட்டு இவன் ஆசைப் பட்டதை உபதேசித்தார்கள்.ஆசார்யஸ்து தே க₃திம் வக்தா-அக்நிகள் மூன்றும் உபகோஸலனுக்கு அனைத்தையும் உபதேசிக்க வில்லை . ஓரளவு சொல்லி விட்டு,-’க₃தி’ அதாவது’பாதையை ’ உன் ஆசார்யன் கூறுவார் என்று சொல்லி நிறுத்தி விட்டார்கள்.

ஆஜகா₃ம ஹாஸ்யாசார்ய: | ப்₃ரஹ்ம வித₃ இவ ஸோம்ய தே முக₂ம் பா₄தி | கோ நு த்வாநுஶஶாஸேதி | அஹம் து தே தத்₃வக்ஷ்யாமி | வெளியே சென்றிருந்த ஆசார்யன் திரும்ப வந்தார். உபகோஸலனைக் கண்டதும் வியந்து கேட்டார் – “பிள்ளாய்! ப்ரஹ்மத்தை அறிந்தவன் போல் உன் முகம் தோன்றுகிறதே ! யார் உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசித்தார்கள்?”. நடந்ததை யெல்லாம் உபகோஸலன் கூறினான். ஆசார்யனும் மனமுவந்து, மேலே தான் சில உபதேசங்களைக் கூறினார்.ய ஏஷோ (அ)க்ஷிணி புருஷோ த்₃ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாச | ஏதத₃ம்ருதம் ஏத்த₃ப₄யம் ஏதத்₃ப்₃ரஹ்ம இதி
எவரொருவர் கண்ணுக்குள் காணப்படுகிறாரோ அவர் தான் ஆத்மா. அவர் அம்ருதமானவர், பயமற்றவர், அவரே ப்ரஹ்மம் இந்த வாக்கியம் தான் இந்த அதிகரணத்தின் விஷய வாக்யம்.

ஸந்தேஹம் – இந்த அதிகரணத்தில் இரண்டு முறை ஸந்தேஹம் அல்ல, நான்கு முறை ஐயம்.1-இங்கு கண்ணுக்குள் இருப்பவராகச் சொல்லப்படுபவர் கண்ணுக்கெதிரில் இருக்கும் பொருளின் ப்ரதிபலிப்பா? 2-அல்லது அந்த உடலை எடுத்துக் கொண்டு இருக்கும் ஜீவாத்மாவா?3-அல்லது ஸூர்ய பகவான் என்கிற தேவதையா?4-அல்லது பரமாத்மாவா?

மூன்று பூர்வ பக்ஷங்கள்
பூர்வ பக்ஷம் – கண்ணில் இருப்பவர் பரமாத்மாவைத் தவிர்ந்த வேறொருவர் என்பதே பூர்வ பக்ஷம். இதற்கு யுக்திகள் –1. ’ய ஏஷ அக்ஷிணி’ அதாவது ’எவரொருவர் கண்ணில் காணப் படுகிறாரோ ’ என்று ப்ரஸித்தமான (முன்னமே அறியப்பட்ட) விஷயம் போல் சொல்லப் படுகிறபடியால், மற்ற ப்ரமாணங்களைக் கொண்டு கண்ணில் இருப்பவராக அறியப் படுபவர் யாரோ அவர் தான் இங்கும் சொல்லப் பட்டிருக்க வேண்டும். அந்தப் ப்ரமாணங்கள்
மூன்று –

1-ப்ரத்யக்ஷம். நம் புலன்களால் பார்த்தால் கண்ணில் தெரிபவர் முன் இருப்பவரின் ப்ரதிபலிப்பு தான். எனவே அவர்தான் இங்கு சொல்லப்படுகிறார் என்பது முதல் பூர்வ பக்ஷம்.

  1. அநுமாநம். ஒரு கண்ணைப் பார்த்தால் அவ் வுடலில் ஜிவாத்மா இருக்கிறாரா இல்லையா என்று அநுமானம் செய்யலாம். எனவே அநுமானம் என்ற ப்ரமாணத்தால் கண்ணில் காணப்படுபவர் (கண்ணைப் பார்த்து அறியப்படுபவர் ஜீவாத்மா தான். எனவே அவரே இங்கு சொல்லப்படுகிறார் என்பது இரண்டாவது பூர்வ பக்ஷம்.
  1. சாஸ்த்ரம். வேதத்தில் பார்த்தால் ஸூர்யன் என்ற தேவதை தான் தனது கிரணங்கள் மூலமாக வந்து நம் கண்ணில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டுள்து – (ரச்மிபி₄: ஏஷ: அஸ்மின் ப்ரதிஷ்டி₂த:. )எனவே இங்கு கண்ணில் இருப்பவராகச் சொல்லப் படுபவர் ஸூர்ய பகவானே என்பது மூன்றாம் பூர்வ பக்ஷம்-கண் தேஜஸ் -ஸூர்யன் தேவதை .
    பரமாத்மா கண்ணுக்குள்ளே இருக்கிறார் என்று எந்தப் ப்ரமாணத்தாலும் அறியப்படவில்லை . எனவே இந்த வாக்கியம் அவரைப் பற்றிச் சொல்ல இயலாது.
  1. ’த்₃ருஸ்யதே ’ அதாவது ’பார்க்கப்படுகிறார்’ என்றும் சொல்லப் பட்டிருக்கிற படியால், கண்ணுக்குள் இருப்பவர் பார்க்கப்பட முடிந்தவராய் இருக்க வேண்டும். பரமாத்மாவோ பார்க்கப்பட முடியாதவர் என்று முன் அதிகரணத்திலேயே சொல்லப் பட்டு விட்டது. எனவே இங்கு சொல்லப்படுபவர் பரமாத்மா அல்ல. -முன் இருப்பவரின் ப்ரதிபலிப்போ ஜீவாத்மாவோ , ஸுர்ய பகவானோ தான்.

வேத வ்யாஸரின் பதில்-ஸித்தாந்தம் –-இந்த பூர்வ பக்ஷங்களுக்கெல்லாம் வ்யாஸர் ஆறு ஸூத்ரங்களால் பதிலளிக்கிறார்.
1-அந்தர: உபபத்தே :
– இங்கும் ’அந்ய:’ என்ற சொல்லைக் கீழ் பாதத்திலிருந்து சேர்க்க வேண்டும்.
அந்தர: – கண்ணுக்குள்ளே இருப்பவராகச் சொல்லப்படுபவர்
அந்ய: – சொல்லப்பட்ட மூவரைக் காட்டிலும் வேறு பட்டவரான பரமாத்மா தான்
உபபத்தே : – பொருந்துகிறபடியால் (இங்கு சொல்லப்பட்டுள்ளன குணங்கள் பரமாத்மாவிடம் பொருந்துகிறபடியால்)

இங்கு கண்ணுக்குள் இருப்பவருக்குச் சில குணங்கள் மேலே சொல்லப்பட்டுள்ளன –
ஏஷ ஆத்மா – “இவரே ஆத்மா அதாவது இயக்குபவர்”. அனைத்தையும் இயக்கும் ஈஸ்வரன் பரமாத்மா தானே -ஸமஸ்த சேதன அசேதன அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஆத்மா – -ஸர்வேஸ்வரன் -இவன் ஓருவனே

ஏதத் அம்ருதம் – “இவரே அம்ருதம் போல் அநுபவிப்பதற்கு மிக இனிமையாைனவர்”. வேதம் – “ரஸோ வை ஸ:”.-ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி என்கிற–அவனே ரஸம்-அவனை அடைந்து -ஆனந்திக்கிறான்
நம்மாழ்வார் –”எத்தனையும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக் கப்பொழுது என் ஆராவமுதமே ”

ஏதத் அப₄யம் – இவரே எவ்வித பயமும் துக்கமும் அற்றவர்
ஏதத் ப்₃ரஹ்ம – இவரே அனைத்தைக் காட்டிலும் மிகப் பெரியவர்

ஏதம் ஸம்யத்₃வாம இத்யாசக்ஷத ஏதம் ஹிஸர்வாணி வாமாநி அபி₄ஸம்யந்தி – இவர் ’ஸம்ய்த்₃வாம’ என்று அழைக்கப் படுகிறார். ’வாம’ என்ற விரும்பத் தகுந்த குணங்கள் எல்லாம் இவரிடத்தில் ’ஸம்யந்தி’ சேர்ந்துள்ளன.

ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி – இவரே ’வாமநீ:’. ’வாம’ என்ற நன்மைகளை – மங்களங்களை தன்னுடைய பக்தர்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஏஷ உ ஏவ பா₄மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா₄தி – இவரே ’பா₄மநீ: -எல்லா உலகங்களிலும் ப்ரகாசிப்பவர்

ஜ்யோதிர் அதிகரணம் பார்த்தோம் -நிரதிசய தீப்தி -ஆயிரத்தில் ஒரு பகுதி ஆதித்யன் –

இங்கு இக்குணங்கள் பரமாத்மாவிடம் பொருந்துகின்றன என்றும் இந்த அதிகரணத்தில் கடைசி ஸூத்திரத்தில் மற்றவர் இடம் இக் குணங்கள் பொருந்தாதவை என்று வேத வ்யாஸர் அருளிச் செய்கிறார்

(2)ஸ்தாநாதி வ்யபதே₃சாத் ச – “ஸ்தா₂நம் முதலானவை சொல்லப்படுகிற படியாலும்”
ஸ்தா₂நம்’ = இருத்தல். ’ஸ்தா₂நாதி₃’ என்றால் ஸ்தா₂னம் முதலானவை -கண்ணில் இருத்தல், இயக்குதல், தாங்குதல் போன்றவை

இவை எல்லாம் பரமாத்மாவுக்குத் தான் ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளன – (யஸ் : சக்ஷுசி திஷ்ட₂ன்).“கண்ணில் காணப் படுகிறார்” என்று சொன்னதும் பரமாத்மாவுக்குப் பொருந்தும் – யோகிகளால் காணப் படுகிறபடியால்

———-

1.2.3 அந்தராதி₄கரணம்-கமலக் கண்ணன் என் கண்ணிலுள்ளான்-முன்னும் பின்னும் சொல்லப்படுபவர் ஒருவரே-– கண்ணில் காணப் படுபவராகச் சொல்லப்பட்டவர் பரமாத்மா தான் என்பதை நிரூபிக்க வேத வ்யாஸர் முதல் இரண்டு ஸூத்ரங்களால் இரண்டு யுக்திகளைக் கூறினார். இனி தொடர்ந்து பார்ப்போம் –

3-ஸூத்ரம் -46-ஸூக விசிஷ்ட அதிபாநாத் ஏவ ச –1-2-15-ஸூகத்தை உடையவர் சொல்லப் படுகிறபடியால்--ச -லும் –ஏவ -மட்டும் -வேறே ஒன்றை எதிர்பார்க்காமல் இதுவே சாதித்திக் கொடுக்கும் என்று காட்டியவாறு-

தஸ்மை ஹோசு꞉ – ப்ராணோ ப்₃ரஹ்ம கம் ப்₃ரஹ்ம க₂ம் ப்₃ரஹ்மேதி ॥-அக்நிகள் கூறினார்கள் – ப்ராணனே ப்ரஹ்மம், ஸுகமே ப்ரஹ்மம், ஆகாயமே ப்ரஹ்மம்

ஸ ஹோவாச விஜாநாம் யஹம் யத் ப்ராணோ ப்₃ரஹ்ம கம் ச து க₂ம் ச ந விஜாநாமீதி-உபகோஸலன் கூறினான் – ப்ராணனே ப்ரஹ்மம் என்றது புரிந்தது, ப்ரஹ்மமே உலகப் பொருள்கள் அனைத்தையும் வாழ வைக்கிற படியால். ஆனால் ஸுகமே ப்ரஹ்மம் ஆகாயமே ப்ரஹ்மம் என்று சொன்னதன் கறுத்து யாது?

தே ஹோசு: – யத்₃வாவ கம் ததே₃வ க₂ம் யதே₃வ க₂ம் ததே₃வ கம்–அக்நிகள் கூறினார்கள் – எது ஸுகமுடையதோ அதுவே ஆகாயம், எது ஆகாயமோ அதுவே ஸுகமுடையது-இதன் பொருள் – ஆகாயம் எனப்படுபவர் ப்ரஹ்மமே , அவரும் ஆகாயம் போல் அளவற்றவரானபடியால். ஸுகமுடைய ப்ரஹ்மமே அளவற்று இருக்கிறார், அதாவது, எல்லை யற்ற ஸுகத்தை உடையவராக இருக்கிறார் என்று பொருள். இந்த ப்ரஹ்மத்தைப் பற்றி மேலும் உபதேசிக்கத் தான் ஸத்யகாமர் துவங்குகிறார். எனவே கண்ணுக்குள்
இருப்பவராகச் சொல்லப்பட்டவரும் அந்த ப்ரஹ்மமாகிற பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.’மட்டும்’ என்ற சொல் இந்த ஸூத்ரத்தில் அதிகமாக உள்ளது. இதன் பொருள் – முன் இரு ஸூத்ரங்களின் யுக்திகளும் எதிர்மறையை எதிர்பார்த்து தான் பரமாத்மாவை ஸாதிக்க முடியும், ஆனால் இந்த யுக்தி தானாகவே ஸாதிக்கும் என்று-

மேலும் –அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
சாந்தோக்யம் -4-11-2-அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள் ப்ரகரணம் மாற்றி இருப்பதால் தொடர்ச்சி போய் விட்டது -பூர்வ பக்ஷம் -இதுக்கு வேத வியாஸர் பதிலும் மேல்

அந்த அக்₃நி வித்₃யையானது ப்₃ரஹ்ம வித்₃யையின் அங்கம் என்றும் சொல்ல இயலாது, தனியாக அதற்குப் பயன் சொல்லப் பட்டுள்ள படியால். அங்கமாக இருந்தால் தனியாக ஒரு பயனைத் தர இயலாது.

வேத வ்யாஸரின் பதில் – அக்நிகளாலும் ஸத்ய காமராலும் உபதேசிக்கப்பட்ட பொருள் ஒன்றே தான்-1-அக்நியின் உபதேசத்தில் ’கம் ப்₃ரஹ்ம’ என்றும், ஸத்ய காமரின் உபதேசத்தில் ’ஏதத் ப்₃ரஹ்ம’ என்றும் இரண்டு இடங்களிலும் ப்ரஹ்மம் என்ற சொல் தெளிவாகச் சொல்லப்பட்ட படியால் இரண்டும் ஒன்றே என்று தெரிகிறது.-2-ப்ரஹ்மத்தைப் பற்றின அக்நிகளின் உபதேசத்தின் இறுதியில் ’-பாதையை ஆசார்யன் கூறுவார்’ என்று உள்ளபடியால், ஆசார்யன் அந்தப் பாதையை உபதேசிக்கும் வரை ப்ரஹ்மத்தைப் பற்றின உபதேசம் (ப்ரகரணம்) முடிய வில்லை .3-ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உடைய உபகோஸலனிடம் அக்நி வித்யையும் உபதேசிக்கப் பட்டுள்ளபடியால்,
அக்நி வித்யை ப்ரஹ்ம வித்யையின் அங்கமாகத் தான் இருக்க வேண்டும். ஒரு செயலின் அங்கத்தை வருணித்தால் அச் செயலின் ப்ரகரணம் (context) முடிவடையாது. எனவே இங்கும் ப்ரஹ்மத்தின் ப்ரகரணம் தொடர்கிறது.-4-தனியாகப் பலம் உள்ள படியால் அங்கமல்ல என்பது தவறு, இப் பலன்கள் ப்ரஹ்ம வித்யைக்கு முரண் படாதவை

பூர்வ பக்ஷியின் கேள்வி – திரும்பி வந்த ஸத்ய காமர் பாதையை மட்டும் தானே உபதேசிக்க வேண்டும்? ஏன் ப்ரஹ்மத்தின் குணங்களையும், அதை உபாஸநம் செய்ய வேண்டிய இடத்தையும் கூறுகிறார்?

வேத வ்யாஸரின் பதில் – பாதை என்றது மீதம் சொல்ல வேண்டிய அனைத்தையும் குறிக்கிறது. ஒரு ஆசார்யனிடம் பெறப்பட்ட வித்யை தான் நிலைக்குமென்பதால் அக்நிகள் ஆசார்யனிடமே மீதத்தைக் கேட்கச் சொன்னார்கள்.

சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு

இந்தப் பாதை பரமாத்மாவையே அடைவிக்கும்
அக்நிகளின் உபதேசத்தில் ’ப்ராணோ ப்₃ரஹ்ம கம் ப்₃ரஹ்ம க₂ம் ப்₃ரஹ்ம’ என்று சொல்லப்பட்டவர் பரமாத்மாதான் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள்? என்று பூர்வ பக்ஷீ ஆஷேபிக்கிறார். அதற்கு வேத வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரம் –

(4) அத ஏச ச ஸ ப்ரஹ்ம “ஆகையாலேயே அது கூட ப்ரஹ்மமே ”
ஆகையாலேயே என்றால், முன் ஸூத்ரத்தில் சொன்ன “ஸுகமுடையவர் சொல்லப் படுகிறபடியால்” என்ற காரணத்தாலேயே என்று பொருள்.இங்கு ஸுகத்தையும் ஆகாசத்தையும் ப்ரஹ்மமாக நினைத்துக் கொள் என்று சொல்ல வில்லை –ஸுகமுடைய பொருளே அளவற்ற பொருள் என்று சொல்லப் பட்டுள்ளது. எல்லை யற்ற ஸுகமுடைமை பரமாத்மாவுக்கே பொருந்தும்.

(5) ஸ்ருதோபநிஷத்க க₃தி அபி₄தா₄நாத் ச
“உபநிஷத்தைக் கற்றவனின் பாதை சொல்லப்படுகிற படியாலும்”
உபநிஷத்துக்களைக் கேட்டு, ஆராய்ந்து, பர ப்ரஹ்மமான பரமாத்மாவை உணர்ந்து, எவன் உபாஸிக்கிறானோ , அவன் முக்தி அடையும் போது பின்பற்றக் கூடிய அர்ச்சிராதி மார்க்கம் என்ற பாதை தான் இங்கு கண்ணுக்குள் இருப்பவரை அறிந்தவனுக்கும் சொல்லப்படுகிறது. எனவே , கண்ணுக்குள் காணப் படுபவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

சாந்தோக்யம் -4-15-5–தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–-சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–-அர்ச்சிராதி கதி என்று உபதேசிக்கப்பட்டு நிகமிக்கப்பட்டது–

(6) அநவஸ்தி₂தே : அஸம்ப₄வாத் ச ந இதர:“இல்லாத படியாலும் பொருந்தாத படியாலும் மற்றவர்கள் அல்ல”
அநவஸ்தி₂தே : = இல்லாத படியால் – ’கண்ணில் இருத்தல்’ என்ற பண்பு பரமாத்மாவுக்கு உண்டு என்றது இரண்டாம் ஸூத்ரம். அப் பண்பு மற்றவர்களுக்கு இல்லை. முன்னால் இருக்கும் பொருள் உள்ளவரை தான் ப்ரதிபலிப்பு கண்ணில் இருக்கும்; ஜீவாத்மா இதயத்தில் தான் இருப்பார், கண்ணில் அல்ல; ஸூர்ய பகவான் ஸூர்யனுக்குள் தான் இருப்பார்.அஸம்ப₄வாத் ச – பொருந்தாத படியாலும் – இங்கு சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று முதல் ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது.-அக் குணங்கள் மற்றவர்களுக்குப் பொருந்தாது.-ந இதர: – ஆகையால், பூர்வ பக்ஷி சொன்ன மற்ற மூவரும் இங்கு சொல்லப்படவில்லை-பரமாத்மா தான் கண்ணுக்குள்
இருப்பவராக இங்கு உபதேசிக்கப்பட்டுள்ளார் என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது

கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே – இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –ப்ருஹத் ஆரண்யகா -7-5-10- ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான் அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது – ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்

——————–

1.2.4 அந்தர்யாம்யதி₄கரணம்
எங்கும் உளன் கண்ணன்

முந்தைய மூன்று அதிகரணங்களிலும்-உபாஸகனின் சரீரம் -ஹ்ருதயம் -முதலியவற்றில் குறிப்பிட்ட அளவு இடமுள்ள பரமாத்மாவே உபாஸ்யன் என்று சொல்லி
மேல் மூன்று அதிகரணங்களிலும் விஸ்தாரமான பிரதேசத்தோடு கூடிய பரமாத்மா உபாஸ்யன் என்று கூறுவது என்று பேடிகா

கீழே1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –என்று கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவற்றால் அஷி புருஷன் பரமாத்மா என்று சாதித்து இந்த அதிகரணத்தில் அந்த ஸ்திதி நியமனாதிகளை ஸ்தாபிக்கிறார் என்று சங்கதி –

அந்தர்யாம்யதிகரணத்தின் பின்புலம்
1.2.4 அந்தர்யாம்யதி₄கரணம் – ஸங்கதி
– கீழ், ’ஸ்தா₂நாதி₃வ்யபதே₃சாத் ச’ என்ற ஸூத்ரத்தில், பரமாத்மா தான் கண்ணுக்குள் இருக்கிறார் என்று ’ய: சக்ஷுஷி திஷ்ட₂ன்’ என்ற வாக்கியத்தில் சொல்லப்படுபவதாக வைத்துக் கொண்டு,-அதனால் ஸத்ய காமரால் உபதேசிக்கப்பட்டவர் பரமாத்மா தான் என்று நிரூபிக்கப்பட்டது.
தற்போது, அந்த வாக்யத்தின் பொருளே ஆஷேபிக்கப்படுகிறது – “ய: சக்ஷுஷி திஷ்ட₂ன்” என்ற வாக்கியம் ஜீவாத்மாவையையே சொல்கிறது என்று-

விஷய வாக்யம்–அந்தர்யாமி ப்ராஹ்மணம் – சுக்ல யஜுர் வேதம், ப்ருஹதாரண்யக உபநிஷத், அத்யாயம் 3 ப்ராஹ்மணம் 7-அத₂ ஹைநம் உத்₃தா₃லக: ஆருணி꞉ பப்ரச்ச₂ யாஜ்ஞவல்க்யேதி – மத்₃ரேஷ்வவஸாம பதஞ்சலஸ்ய காப்யஸ்ய க்₃ருஹேஷு யஜ்ஞமதீ₄யாநா: தஸ்யா: ஆஸீத் பா₄ர்யா க₃ந்த₄ர்வ க்₃ருஹீதா-யாஜ்ஞ வல்க்யரைப் பார்த்து உத்தாலகர் கூறினார் – நாங்கள் மத்ர தேசத்தில் காப்யரின் வீட்டில் வேதங்களைக் கற்று வந்த போது, காப்யரின் மனைவியை ஒரு கந்தர்வன் ஆவேசித்தான்.

அவன் காப்யரிடம் கேட்டான் –வேத்த₂ நு த்வம் காப்ய தத் ஸூத்ரம் யேநாயம் ச லோக꞉ பரஶ்ச லோக꞉ ஸர்வாணி ச பூ₄தாநி ஸந்த்₃ருப்₃தா₄நி ப₄வந்தீதி-காப்யரே ! எந்த ஸூத்ரம் (நூல்) எல்லா உலகங்களையும் ஜீவராசிகளையும் கோர்த்துத் தாங்குகிறதோ அதை அறிவீரா?

(ப்ரஹ்மமே உள்ளேயே இருந்து இயங்கி -ஆகாசம் உள்ளே இருக்கும் இயக்காது -ராஜா வெளியில் இருந்து இயக்கலாம் உள்ளே இருக்க முடியாதே -ஆகவே அந்தர் யாமி இவன் ஒருவனே -இவனே அனைத்தையுமே தாங்கும் -தரிக்கும் – ஸூத்ரம்)

யோ வை வித்₃யாத் தம் அந்தர்யாமிணம், ஸ ப்₃ரஹ்ம வித் ஸ லோகவித் ஸ பூ₄த வித் ஸ ஆத்ம வித் ஸ ஸர்வ விதி₃தி-எவனொருவன் அந்த அந்தர்யாமியை அறிகிறானோ , அவன் ப்ரஹ்மத்தை அறிந்தவன், உலகங்களை அறிந்தவன், ஜீவராசிகளை அறிந்தவன், ஆத்மாக்களை அறிந்தவன், அவன் அனைத்தையும் அறிந்தவன் ஆவான்.

உத்தாலகர் வினவினார் – யாஜ்ஞவல்க்யரே ! இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில் காப்யருக்குத் தெரிய வில்லை -அந்த விடைகளை நீர் அறிவீரா? – என்று. அதற்கு யாஜ்ஞ வல்க்யர் பதிலளிக்கத் துவங்கினார்.

ஸ ஹோவாச – வாயுநா வை கௌ₃தம ஸூத்ரேணாயம் ச லோக꞉ பரஶ்ச லோக꞉ ஸர்வாணி ச பூ₄தாநி ஸந்த்₃ருப்₃தா₄நி-யாஜ்ஞ வல்க்யர் கூறினார் – ’வாயு தான் அந்த நூல் -வாயுவால் தான் அனைத்தும் கோர்த்துத் தாங்கப் படுகின்றன’ என்று உத்தாலகர் ஏற்றுக் கொண்டார். அடுத்து அந்தர்யாமியைப் பற்றி யாஜ்ஞவல்க்யர் கூறினார் –

ய꞉ ப்ருதி₂வ்யாம் திஷ்ட₂ந், ப்ருதி₂வ்யா அந்தர:, யம் ப்ருதி₂வீ ந வேத₃, யஸ்ய ப்ருதி₂வீ ஶரீரம், ய꞉ ப்ருதி₂வீம் அந்தர: யமயதி, ஏஷ தே ஆத்மா அந்தர்யாமீ அம்ருத꞉-எவரொருவர் ப்ருதிவியில் இருக்கிறாரோ , ப்ருதிவிக்கு உள்ளே இருக்கிறாரோ , யாரை ப்ருதிவீ அறியவில்லையோ , யாருக்கு ப்ருதிவீ சரீரமோ , யார் ப்ருதிவியை உள்ளே புகுந்து இயக்குகிறாரோ , அவர் மரணமற்றவர், அவரே உன் ஆத்மா-

இதே போல் நீர், நெருப்பு, வானம், வாயு, ஸூர்யன், சந்த்ரன், திசைகள், நக்ஷத்ரங்கள், ஆகாயம், தமஸ், தேஜஸ் என்ற பொருள்களைப் பற்றி அதி₄தை ₃வ (தெய்வத்தைப் பற்றின) வாக்யங்களையும், ஜீவ ராசிகள், ப்ராணன், பேச்சு, கண், காது, மனது, தோல் என்ற பொருள்களைப் பற்றி அதி₄பூ₄த (பூதங்களைப் பற்றின) வாக்யங்களையும் கூறினார்.

ய꞉ விஜ்ஞாநே திஷ்ட₂ந், விஜ்ஞாநாத் அந்தர:, யம் விஜ்ஞாநம் ந வேத₃, யஸ்ய விஜ்ஞாநம் ஶரீரம், ய꞉ விஜ்ஞாநம் அந்தர: யமயதி-எவரொருவர் விஜ்ஞாநத்தில் இருக்கிறாரோ , விஜ்ஞாநத்துக்கு உள்ளே இருக்கிறாரோ , யாரை விஜ்ஞாநம் அறிய வில்லையோ , யாருக்கு விஜ்ஞாநம் சரீரமோ , யார் விஜ்ஞாநத்துக்கு உள்ளே புகுந்து இயக்குறாரோ …
மாத்₄யந்தி₃ன சாஹையில் இதே வரிசையில் உள்ள வாக்கியங்களில் ’விஜ்ஞாநம்’ என்று சொல்லுக்கு பதிலாக ’ஆத்மா’ என்ற சொல் உள்ளது. எனவே இந்த அந்தர்யாமியானவர் ஆத்மாவுக்கும் அந்தர்யாமியாக உள்ளார் என்று தெரிகிறது.

கான்வ சாகையைப் பார்த்துக் வருகிறோம் -இதே போல் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் மாத்யந்தின சாகையிலும் உண்டே-இங்கு விஞ்ஞானம் -பத பிரயோகம் அங்கு ஆத்மா -பத பிரயோகம் -எனவே இந்த அந்தர்யாமியானவர் ஆத்மாவுக்கும் அந்தர்யாமியாக உள்ளார் என்று தெரிகிறது.

’பார்ப்பவர்’ ஜீவனே என்ற பூர்வ பக்ஷம்
ஸந்தேஹம்
– இங்கு எல்லப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – இங்கு அந்தர்யாமியாகச் சொல்லப் படுபவர் ஜீவாத்மாவே–இதற்கான காரணங்கள் பின்வருமாறு

1-மேலே ஒரு வாக்யத்தில் (அத்₃ருஷ்டோத்₃ரஷ்டா அஸ்ருத: ஸ்ரோதா) என்றுள்ளது. த்₃ரஷ்டா என்றால் “கண்ணால் பார்ப்பவர் -அறிபவர்” என்று பொருள். ஸ்ரோதா என்றால் “காதால் அறிபவர்” எனப் பொருள். -எனவே எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாகச் சொல்லப்படுபவர் புலன்களால் உலகப் பொருள்களை அறிகிறார் என்று உபநிஷத் சொல்கிறபடியால், அவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில், பரமாத்மா புலன்களின் தேவையில்லாமலேயே பொருள்களை அறிபவர்.

2-கேள்வித்₃ரஷ்டா, ஸ்ரோதா என்ற சொற்களின் பொருளில் புலன்களைச் சேர்க்காமல், வடிவங்களை-நிறங்களை அறிபவர் த்₃ரஷ்டா, ஒலியை அறிபவர் ஸ்ரோதா என்று பொருள் கொள்ளலாமே ?-அப்படிக் கொண்டால் அது பரமாத்மாவுக்கும் பொருந்துமாதலால் பரமாத்மாவே அந்தர்யாமீ என்று சொல்லலாமே ?பதில் – அடுத்த வாக்யத்தில் (நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்டா) என்றுள்ளது. அதன் பொருள்– “இவரைத் தவிற வேறு யாரும் த்₃ரஷ்டா கிடையாது” என்று. நீங்கள் சொன்னபடி ’வடிவத்தை அறிபவர் த்₃ரஷ்டா’ என்று பொருள் கொண்டால், அது பரமாத்மாவைப் போல் ஜீவாத்மாவுக்கும் பொருந்துமான படியால், இவரைத் தவிற வேறு த்₃ரஷ்டா கிடையாது என்று கூற இயலாது. நாங்கள் சொன்ன பொருள்படி, புலன்களால் அறிபவர் ஜீவாத்மா மட்டுமே ஆன படியால் இவரைத் தவிற ’த்₃ரஷ்டா’ இல்லை என்று சொன்னது பொருந்தும்

3-கடைசி வாக்யத்தில் “ஆத்மாவில் இருக்கிறார்” என்றால் தன் மஹிமையில் – தன் காலில் தானே நிற்கிறார், வேறு யாரும் இவரைத் தாங்க வில்லை என்று பொருள். “ஆத்மாவுக்குள்ளே இருக்கிறார்” என்றால் வேறு யாராலும் வ்யாபிக்கப்படாதவர் என்றும் “ஆத்மாவை இயக்குகிறார்” என்று தன்னை இயக்க வேறு பொருள் இல்லை என்று வேறு மாதிரிப் பொருள் கொள்ளலாம்.
எனவே அந்தர்யாமியாகச் சொல்லப்படவர் ஜீவாத்மா தான் என்று கொள்வதில் எந்தக் குறையும் இல்லை –

பார்க்கப்படாத பார்ப்பவர்’ பரமாத்மாவே
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வ பக்ஷத்தை நிராகரித்து, உண்மையான அந்தர்யாமியைச் சொல்கிறார் வேத வ்யாஸர் –

1–அந்தர்யாமீ அதி₄தை₃வ அதி₄லோகாதி₃ஷு தத்₃த₄ர்ம வ்யபதே₃சாத் அதி₄தை₃வ அதி₄லோகாதி₃ஷு – அதி₂தை₃வம் (தெய்வத்தைப் பற்றினது) அதி₄பூ₄தம்(பூதங்களைப் பற்றினது)அதி₄லோகம் (லோகங்களைப் பற்றினது) அத்₄யாத்மம் என்ற சொற்களைக் கொண்ட வாக்யங்களில் எல்லாம் அந்தர்யாமீ – அந்தர்யாமியாகச் சொல்லப்படுபவர்
அந்ய: – ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவரான பரமாத்மாவே (இச் சொல் முன் பாதத்திலிருந்து சேர்க்கப் பட்டுள்ளது)
தத்₃த₄ர்ம வ்யபதே ₃சாத் – பரமாத்மாவின் தன்மைகளைச் சொல்கிறபடியால்

1-உத்தாலகர் ’அந்த அந்தர்யாமியை அறிவாயா’ என்று கேட்டார். எனவே , இந்த வாக்யங்களில் உலகுக்கெல்லாம் அந்தர்யாமியாக ஒருவரே சொல்லப்படுகிறார். எனவே எண்ணிரந்த ஜீவாத்மாக்களை அந்தர்யாமீ என்று பூர்வ பக்ஷீ சொல்வது பொருந்தாது. எனவே , உலகங்களை எல்லாம் இயக்கும் ஒருவர் பரமாத்மா மட்டுமே ஆவார்.

2-’அம்ருத:’ (மரணமற்றவர்) என்றுசொல்லப் படுகிறார். உண்மையில் இயற்கையாகவே மரணமற்றவர் பரமாத்மாவே

(தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2–அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –என்றும்
தைத்ரியம் -2-6–தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6- நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண சஷுஸ் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் – ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் – அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம் ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில்-யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மாஅபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே)

3-ஸுபா₃லோபநிஷத்திலும் இதே போல் உலகப் பொருட்களுக்கெல்லாம் அந்தர்யாமியைப் பற்றி உபதேசித்து, பின்னால் (ஏஷ ஸர்வ பூ₄தாந்தராத்மா அபஹதபாப்மா தி₃வ்ய: தேவ ஏகோ நாராயண : ) அதாவது’இவர் தான் எல்லா பூதங்களுக்கும் அந்தராத்மா, அவர் பாபங்களுக்கு அப்பாற்பட்டவர், அவர் நிகரற்றவர், நாராயணனே அவர்’ என்று தெளிவாகச் சொல்லப்nபட்டுள்ளது. ப்ரஹ்லாதனும்’சாஸ்தா விஷ்ணு: அஸேஷஸ்ய’ அதாவது பரமாத்மா விஷ்ணுவே அனைவரையும் இயக்குபவர் என்கிறார்.

4-’த்₃ரஷ்டா’ என்றால் ’வடிவங்களை அறிபவர். அது பரமாத்மாவுக்குப் பொருந்தும். அது ஜீவனுக்கும் பொருந்தும் என்றாலும், ’அத்₃ருஷ்ட: த்₃ரஷ்டா’ அதாவது
’பார்க்கப்பட முடியாதவர் ஆனால் தான் பார்ப்பவர்’ என்று உள்ளபடியால், இது பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும். ’நாந்ய: அத: அஸ்தி த்₃ரஷ்டா’ என்றால் ’இப்படி, தான் பார்க்கப்படாமல் ஆனால் தான் அனைத்தையும் பார்ப்பவர் வேறு ஒருவர் இல்லை ’ என்று பொருள்.

மிகுநர் இலன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஸங்கல்ப லேசத்தாலேயே ஸர்வஞ்ஞன்

பரமாத்மாவோடு ஒப்பிட்டால் ஜீவனும் அசேதனம் போல் தான்
அந்தர்யாமிக்குச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்றார் முதல் ஸூத்ரத்தில். இந்த குணங்கள் மற்றப் பொருள்களுக்குப் பொருந்தாது என்று அடுத்த ஸூத்ரத்தில் காட்டுகிறார் –

2-ந ச ஸ்மார்தம் அதத்₃த₄ர்ம அபி₄லாபாத் சாரீர: ச
ந ச ஸ்மார்தம்
– கபிலாசார்யரின் ஸாங்க்ய ஸ்ம்ருதியில் சொல்லப்பட்ட மூல ப்ரக்ருதியும் (அந்தர்யாமி) அல்ல
சாரீர: ச – சரீரத்தை உடைய ஜீவாத்மாவும் (அந்தர்யாமி அல்ல)
அதத்₃த₄ர்ம அபி₄லாபாத் –அவர்களுக்குப் பொருந்தாத தர்மங்களைச் சொல்வதால்

இயற்கையாகவே அனைத்தையும் அறியும் திறமை , அனைத்தையும் இயக்கும் சக்தி, ஆத்மாவாய் இருப்பது, இயற்கையாகவே மரணமற்றதாய் இருப்பது போன்ற குணங்கள் இவை இரண்டுக்கும் பொருந்தாது.-இங்கு மூல ப்ரக்ருதி அந்தர்யாமியாக இருக்கலாம் என்ற வேள்வியே எழுப்பப் படாத போது, அதைப் பற்றிச் சொல்வதுஎதற்கென்றால் – எப்படி அசேதனமான மூல ப்ரக்ருதி அந்தர்யாமியாக முடியாதோ அதே போல் ஜீவாத்மாவும் அனைத்துக்கும் அந்தர்யாமியாக இருக்க முடியாது என்று பூர்வ பக்ஷம் எவ்வளவு அபத்தமானது என்று காட்டுவதற்காகவே –

3உப₄யேபி ஹி பே ₄தே ₃ந ஏநம் அதீ₄யதே
உப₄யே பி ஹி
– காண்வ சாகையைக் கற்பவர்கள் மற்றும் மாத்யந்தின சாகையை ஓதுபவர்கள் என்ற இருவருமே
ஏநம் – சரீரத்தோடு கூடிய ஜீவாத்மாவை
பே ₄தே ₃ந அதீ₄யதே –(அசேதனங்களைப் போல்) அந்தர்யாமியைக் காட்டிலும் வேறு பட்டாதாகவே படிக்கிறார்கள்

காண்வ சாகையில் ’ ய: விஜ்ஞாநம் அந்தரோ யமயதி’ என்றும், மாத்யந்தின சாகையில் ’
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி’
என்றும் சொல்லப் படுகிறபடியால், விஜ்ஞாநம் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்பட்ட ஜீவாத்மா இயக்கப் படுபவர் என்றும், அந்தர்யாமீ தான் இயக்குபவர் என்றும் தெரிகிறது. எனவே இவர்கள் வெவ்வேறாகச் சொல்லப்பட்டுள்ளனர்.

எனவே , பரமாத்மாவான நாராயணனே உலகப் பொருள்களை எல்லாம் இயக்கும் அந்தர்யாமி என்பது திண்ணம்

என் நெஞ்சத்துள் இருந்து இரும் தமிழ் நூல் அருளி –
ஆமவை ஆயவை ஆய் நின்ற அவரே

(நியாயங்கள் உக்திகளின் சேர்க்கையே ப்ரஹ்ம ஸூத்ரம் -ப்ரஹ்ம மீமாம்ஸா -ஆராய்ச்சி நூல் -முதல் பாகம் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் -இரண்டாம் பாதத்தில் சற்றே தெளிவற்ற தன்மைகளைச் சொல்லும் உபநிஷத் வாக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சி )

(ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -கடக்கிலி -உன்னைக் காணுமாறு காணுமாறு அருளாய்-அவனே வரித்து காட்டவே காணலாம் – ஒவ்வொரு குணங்களையும் ஒவ்வொரு அதிகரணம் காட்டும்-)

——-

1.2.5 அத்₃ருச்யத்வாதி₃கு₃ணாகாதி₄கரணம்
எல்லையில் ஜ்ஞாநத்தன் பரமாத்மாவே –

அத்₃ருச்யத்வாதி₃கு₃ணாகாதி₄கரண-பின்புலம்
1.2.5 அத்₃ருச்யத்வாதி₃கு₃ணாகாதி₄கரணம்-ஸங்கதி
– ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உலகத்தின் அந்தர்யாமியைப் பற்றிச் சொல்லும் போது, “அத்₃ருஷ்ட:” (பார்க்கப்பட முடியாதவர்) என்றுள்ளது. இத்தன்மை அசேதநமான மூல ப்ரக்ருதிக்கும் பொருந்தும் என்றாலும், கூடவே “அனைத்தையும் பார்ப்பவர், அனைத்தையும் இயக்குபவர்“ என்று
அறிவுடைய ஒரு பொருளின் பண்புகளும் சொல்லப் பட்டபடியால், அந்த பார்க்கப்பட முடியாத பொருள் பரமாத்மா தான் என்று முடிவு செய்தோம். ஆனால் வேறு ஒரு உபநிஷத்திலும் பார்க்கப்பட முடியாத ஒரு பொருள் சொல்லப் பட்டுள்ளது, அப் பொருளுக்கு அறிவுடைய பொருளின் பண்புகள் எதுவும் சொல்லப் பட வில்லை – எனவே இந்தப் பார்க்கப்பட முடியாத பொருள் ப்ரக்ருதி என்று கொள்ளலாம் என்றும் பூர்வ பக்ஷம் எழுகிறது.

முண்டக உபநிஷத்தில் -3 அத்தியாயங்கள் இரண்டு கண்டங்கள் ஒவ்வொன்றிலும் உண்டு -இதில் உபநிஷத்தில் -1 -2/2-1-விஷய வாக்கியம்-

விஷய வாக்யம் – முண்டகோபநிஷத்தில் உள்ள அக்ஷர பர வித்யை என்ற பகுதி
அத₂ பரா யயா தத் க்ஷரம் தி₄க₃ம்யதே | யத் தத் அத்₃ரேஶ்யம் அக்₃ராஹ்யம் அகோ₃த்ரம் அவர்ணம் அசக்ஷுஸ் ꞉ஶ்ரோத்ரம் த்
அபாணி பாத₃ம் । நித்யம் விபு₄ம் ஸர்வ க₃தம் ஸுஸூக்ஷ்மம் தத் வ்யயம் யத்₃பூ₄த யோநிம் பரிபஶ்யந்தி தீ₄ரா꞉ |
அடுத்ததாக உயர்ந்த வித்யை ; அதனால் அக்ஷரம் அறியப் படுகிறது. அந்த அக்ஷரமானது பார்கப்பட முடியாதது, கையாளப்பட முடியாதது, குணமற்றது, வர்ணமற்றது, கண் காது அற்றது, கை கால் அற்றது, நித்யமானது, எங்கும் வ்யாபித்தது, அனைத்துக்குள்ளும் புகுந்தது, மிகவும் நுண்ணியது,அழிவற்றது, உலகப் பொருள்களுக்கெல்லாம் காரணமானது. அதை சிறந்த ஜ்ஞாநிகள் காண்கிறார்கள்

(சற்று தள்ளி உள்ள வாக்யம்) அஷராத் பரத: பர: – உயர்ந்ததான அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்-ஸந்தேஹம் – இங்கு அக்ஷரம் என்று சொல்லப் படுவது ப்ரக்ருதி மற்றும் அதைக் காட்டிலும் உயர்ந்தவராகச் சொல்லப்படும் ’பரன்’ என்பவர் ஜீவாத்மாவா? அல்லது ’அக்ஷரம்’’பரன்’ எனப்படும் இரண்டுமே பரமாத்மா தானா?

பூர்வ பக்ஷியின் வாதம்
பூர்வ பக்ஷம் – அக்ஷரம் என்பது மூல ப்ரக்ருதி, பரன் என்பது ஜீவாத்மா தான் என்கிறார் பூர்வ பக்ஷீ. இதற்கான காரணம் –

அக்ஷரம் என்ற பொருள் ’அத்₃ரேஸ்யம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சொல்லை ஆராய்ந்தால் இதன் உண்மையான பொருள் புரியும். த்₃ருஸ்யம் என்றால் குடம், மலை , வஸ்த்ரம் போன்ற பார்க்கப் பட முடிந்த பொருள். அத்₃ரோஸ்யம் என்றால் அதைக் காட்டிலும் வேறு பட்டதான, பார்க்கப் பட முடியாத பொருள். பார்க்கப் பட முடியாத பல பொருள்கள்
உலகில் இருந்தாலும், இச் சொல் ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளைத் தான் சொல்கிறது. ஏனென்று பார்ப்போம்.

அவித்₃வான் என்ற சொல் உள்ளது. வித்₃வான் என்றால் அறிஞர். அவித்₃வான் என்றால் அறிஞரல்லாதவர், -அறிஞரைக் காட்டிலும் வேறுபட்டவர். உண்மையில் இந்தச் சொல்லுக்கு கல், மண், கழுதை , புலி, படிக்காத மனிதர் என்று எல்லாமே பொருளாக முடியும். ஆனால் நமக்கு இச் சொல்லைக் கேட்டதும், படிக்காத மனிதர் தான் மனதுக்குத் தோன்றுகிறார். ஏனென்றால் வித்₃வான் என்ற சொல் மனிதனைக் குறிக்கிற படியால், அதற்கு நெருக்கமான ஏதோ ஒரு பொருள் தான் அவித்₃வான் என்ற சொல்லாலும் குறிக்கப் பட வேண்டும் என்று ஒரு எழுதப் படாத நீதிஅபா₃லன் என்ற சொல் உள்ளது. பாலன் என்றால் சிறுவன். அபாலன் என்றால் சிறுவனல்லாதவன். மறு படியும் இது மனிதர்களைத் தவிற மற்றப் பொருள்களையும் கூடக் குறிக்கைாம். ஆனால் நம் மனதில் வயதான மனிதன் தான் தோன்றுகிறார். மனிதன் என்ற பொதுப் பண்பை மாற்றாமல், சிறுவனல்ல என்றால் வயோதிகன் என்று தான் தோன்றும்.

அதே போல், த்₃ருஸ்யம் என்றால் பார்க்கப் பட முடிந்த பொருள், அதாவது மலை , மரம், முதலானவை – இவை யெல்லாம் அசேதனப் பொருள்கள். பார்க்கப் பட முடிந்த சேதநப் பொருளே உலகில் கிடையாது. எனவே , அத்₃ரோஸ்யம் என்ற சொல்லைக் கேட்டதும், பார்க்கப் பட முடியாத அசேதனப் பொருள் தான் மனதில் தோன்றும். ஐம்பூதங்களும் உண்டாவதற்கு முன்னால், கண்ணுக்குத் தெரியாத ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும். அதுவே மூலப்ரக்ருதி-எனவே , அத்₃ரோஸ்யம் என்ற சொல் ப்ரதானம் என்றழைக்கப்படும் மூல ப்ரக்ருதியைத் தான் குறிக்க வேண்டும்-உயர்ந்ததான அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று சொல்லப்பட்டவரும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

பார்க்கப்பட முடியாத அக்ஷரம் பரமாத்மாவே -ஸித்தாந்தம் – அக்ஷரமும், பரன் எனப்படுபவரும் பரமாத்மாவே என்று நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்

(1) அத்₃ருஸ்யத்வாதி₃ கு₃ணக: த₄ர்மோக்தே :
அத்₃ருஸ்யத்வாதி₃ கு₃ணக:
-அத்ருஸ்யத்வம் (பார்க்கப்பட முடியாமை ) முதலான குணங்களை உடையது (அதாவது அக்ஷரம்)
அந்ய: – பரமாத்மாவே
த₄ர்மோக்தே : – அவருடைய தர்மங்கள் சொல்லப் படுகிற படியால்.

அக்ஷரம் என்ற பொருள் ஸர்வஜ்ஞன் (அனைத்தையும் அறியக் கூடியது) என்று சொல்லப் பட்டுள்ளது. இந்தப் பண்பு பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்துமாகையால் அவரே அக்ஷரம் ஆவார்.-முன் காட்டப்பட்ட விஷய வாக்யத்தில் அக்ஷரம் என்ற பொருள் தான் ’
பூ₄தயோநி’ அதாவது உலகத்துக்கெல்லாம் காரணம் என்று முதலில் சொல்லப் பட்டது.
அடுத்து, (யதா₂ ஊர்ணநாபி₄: ஸ்ருஜதே க்₃ருஹ்ணதே … ததா₂-அக்ஷராத் ஸம்ப₄வதி இஹ விஸ்வம்) அதாவது ’எப்படி ஒரு சிலந்திப் பூச்சி தன் உடலிலிருந்தே ஒரு பொருளை
உமிழ்ந்து அதைக் கொண்டு தானே வலையைப் பின்னுமோ , அதே போல் இந்த அக்ஷரம் என்ற பொருள் தானே உலகத்தைப் படைக்கிறது’ என்று கூறப் பட்டுள்ளது. இத்தால், அக்ஷரம் என்ற பொருள் தான் உலகத்துக்கு உபாதாந காரணமும் நிமித்த காரணமும் என்று தெரிகிறது. இதெல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக் கூடியது.-அதற்கு மேல்,
(ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித்… தஸ்மாத் ஏதத் ப்₃ரஹ்ம நாம ரூபம் அந்நம் ஜாயதே )-அதாவது“அந்த அக்ஷரமானது ஸர்வஜ்ஞம் அதாவது உலகத்தில் அனைத்தையும்
அறியக் கூடியது. பொதுவாக மட்டுமல்லாமல், சிறப்பாக தனித் தனியாக அனைத்துப் பொருள்களையும் அறியக் கூடியது – அதனிடமிருந்து தான் இந்த உலகம் உண்டாயிற்று” என்று கூறப்பட்டுள்ளது.-இப்படி ஜகத் காரணமாகவும் ஸர்வஜ்ஞராகவும் சொல்லப்பட்ட அக்ஷரம் பரமாத்மவாக மட்டும் தான் இருக்க முடியும்.

(யோ வேத்தி யுக’பத் ஸர்வம் ப்ரத்யக்ஷேண ஸதா ஸ்வத: இத்யாதீ நாம் ஸ்ருதீநாம்-ஸர்வஞ்ஞன்)

பரன் எனப்படுபவரும் பரமாத்மாவே
கேள்வி
– அக்ஷரம் என்பது பரமாத்மா என்று கொண்டால், ’அக்ஷராத் பரத: பர:’ (அக்ஷரத்தைக் காட்டிலும் உயந்தவர் ஒருவர் உள்ளார்) என்ற உபதேசம் என்ன ஆகும்? பரமாத்மாவை விட உயர்ந்தவராக ஒருவர் இருக்க முடியுமா?பதில் – இரண்டாவது முறை உள்ள அக்ஷரம் என்ற சொல் பரமாத்மாவைச் சொல்ல வில்லை . அது அசேநமான
மூல ப்ரக்ருதியைத் தான் சொல்கிறது. எனவே , அக்ஷரம் என்ற ப்ரக்ருதியைக் காட்டிலும் உயர்ந்தவரான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் பரமாத்மா என்று தான் இந்த வாக்கியம் சொல்கிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் – ’பரன்’ என்பவருக்குச் சொல்லப்பட்ட குணங்களைப் பார்த்தால், அவர் தான் பரமாத்மா என்று தெரிகிறது.

தி₃வ்யோ ஹ்யமூர்த꞉ புருஷ꞉ ஸபா₃ஹ்யாப்₄யந்தரோ ஹ்யஜ꞉।அப்ராணோ ஹ்யமநா ꞉ ஶுப்₄ரோ ஹ்யக்ஷராத்பரத꞉ பர꞉||
“திவ்யமானவராய், உருவமற்றவராய், புருஷன் எனப்படுபவராய்,அனைத்தையும் உள்ளும் புறமும் வ்யாபித்தவராய், பிறப்பற்றவராய், ப்ராணன் அற்றவராய், மனது அற்றவராய், தூய்மை யானவராய் இருப்பவர் தான், அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்த பரன் எனப்படுபவர்”

முன்னால் அக்ஷரம் என்ற பரமாத்மாவுக்குச் சொல்லப் பட்ட ’அபாணிபாத₃ம்’ (கை கால் அற்றவர்) என்ற பண்பு தான் தற்போது ’அமூர்த:’ (வடிவமற்றவர்) என்றும், ’விபு₄ம் ஸர்வக₃தம்’ (எங்கும் இருப்பவர்) என்ற பண்பு தான் தற்போது ’பா₃ஹ்யாப்₄யந்தர:’ (உள்ளும் புறமும் வ்யாபித்தவர்) என்றும் நினைவூட்டப் படுகிறது. முன்னால் ’அக்ஷரம் புருஷம்
வேத₃’
(அக்ஷரம் என்ற புருஷனை அறியும்படி) என்று உபயோகிக்கப் பட்ட புருஷன் என்ற சொல் மறுபடியும் தற்போது ’அமூர்த: புருஷ:’ என்று உபயோகிக்கப் படுகிறது.-எனவே , பண்புகள் எல்லாம் ஒன்றாய் இருக்கிற படியால், அக்ஷரம் எனப்பட்ட பரமாத்மா தான் இங்கு பரன் எனப்படுபவர்-ஆகவே , ’அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்தவர்’ என்றவிடத்தில் உள்ள அக்ஷரம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்க இயலாது. எனவே , பொருத்தத்தின் அடிப்படையில், அது ப்ரக்ருதியைத் தான் சொல்கிறது.

வ்யாஸர் கூறும் மற்ற யுக்திகள்
2-விசேஷண பே₄த₃வ்யபதே₃சாப்₄யாம் ந இதரௌ
ந இதரௌ
– மற்ற இருவரும் அல்ல = (அக்ஷரம் எனப்படுவது ப்ரக்ருதி யல்ல, பரன் எனப்படுபவர் ஜீவாத்மா அல்ல )
விசேஷண பே₄த₃வ்யபதே ₃சாப்₄யாம் – வேறு படுத்துகிற படியாலும், வேறு பாட்டைச் சொல்கிறபடியாலும்

வேறுபடுத்துதல் – இந்தப் பகுதியில் அக்ஷரம் என்ற பொருள் எப்படி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது என்று பார்த்தால் அது ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபடுத்தப் பட்டிருப்பது தெரியும்.-ப்₃ரஹ்மா ப்₃ரஹ்ம வித்₃யாம் ஸர்வ வித்₃யாப்ரதிஷ்டா₂ம் அத₂ர்வாய ஜ்யேஷ்ட₂புத்ராய ப்ராஹ-ப்ரஹ்மாவானவர், தன் மூத்த மகனான அத₂ர்வாவுக்கு ப்ரஹ்ம வித்யையை உபதேசித்தார். அந்த ப்ரஹ்ம வித்யை எல்லா வித்யைகளுக்கும் ஆதாரம் ஆகும், ஏனென்றால் உலகில் அறிய வேண்டிய பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மத்தில் அடக்கம்.-அதர்வா அதை அங்கிரஸ்ஸுக்கும், அங்கிரஸ் ஸத்ய வாஹருக்கும், ஸத்ய வாஹர் வேறொரு அங்கிரஸ்ஸுக்கும் கூறினர்

ஶௌநக: அங்கி₃ரஸம் பப்ரச்ச₂ – கஸ்மிந்நு ப₄க₃வோ விஜ்ஞாதே ஸர்வமித₃ம் விஜ்ஞாதம் ப₄வதீதி-ஶௌநகர் என்ற முனிவர் அங்கிரஸ்ஸிடம் கேட்டார் – எந்த ஒன்றை அறிந்தால் உலகத்தில் எல்லாம் அறிந்ததாகும்?-த்₃வே வித்₃யே வேதி₃தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்₃ரஹ்ம விதோ ₃ வத₃ந்தி பரா சைவாபரா ச-எப் பொருளைப் பற்றி இரு வித்யைகளைப் (அறிவுகள்) பெற வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனரோ , அதுவே-தத்ராபரா ருக்₃வேதோ ₃ யஜுர்வேத ₃꞉ ஸாமவேதோ ₃(அ)த₂ர்வவேத₃꞉ ஶிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச₂ந்தோ ₃ ஜ்யோதிஷமிதி । அதில் கீழ் நிலை அறிவு – வேதங்கள், அதன் அங்கங்கள் முதலானவற்றால் ஏற்படும் கேள்வி ஜ்ஞாநம்-அத₂ பரா யயா தத₃க்ஷரம் அதி₄க₃ம்யதே
அடுத்து எந்த வித்யையால் (த்யான வடிவமான ஜ்ஞாநம்) அக்ஷரத்தைப் பார்க்க முடியுமோ , அது மேல் நிலை வித்யை-

ஆகவே , முதலிலிருந்து ப்ரஹ்மத்துக்குள் அனைத்தும் அடங்கிய படியால் ப்ரஹ்ம வித்யைக்குள் அனைத்து வித்யையும் அடக்கம் என்று சொல்லி, அந்த ப்ரஹ்மத்தை அறிந்த அங்கிரஸ்ஸிடம் ஶௌநகர் -எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று கேட்டார் என்று சொல்லி, அதற்கு பதில் அளிக்கும் அங்கிரஸ் ’அக்ஷரம்’ என்ற பொருளை அறிவதற்கான இரண்டு வித்யைகளை உபதேசிக்கிற படியால், இந்த அக்ஷரம் தான் ப்ரஹ்மம் எனப்படும் பரமாத்மா.

வேறு பாட்டைச் சொல்லுதல் – நேரடியாகவே உபநிஷத்தில் ’அக்ஷராத் பரத: பர:’ (அக்ஷரத்தைக் காட்டிலும் உயர்ந்ததைக் காட்டிலும் உயர்ந்தது) என்று ப்ரக்ருதி மற்றும் ஜீவனைக் காட்டிலும் ’பரன்’ என்பவரின் வேறுபாடு சொல்லப் பட்டுள்ளது.-இந்தக் காரணங்களாலும் அக்ஷரம் எனப் படுவதும் பரன் எனப்படுபவரும் பரமாத்மாவே-

3-ரூப உபந்யாஸாத் ச – ரூபத்தின் (வடிவத்தின்) உபந்யஸாத்தாலும் கூட
’பரன்’ எனப்பட்ட பொருளை விளக்கும் அங்கிரஸ், அதற்குத் தனித் தன்மையான ஒரு வடிவத்தைக் கூறுகிறார் –
அக்₃நிர் மூர்தா₄ சக்ஷு ஷீ சந்த்₃ர ஸூர்யௌ தி₃ஶ꞉ ஶ்ரோத்ரே வாக்₃விவ்ருதாஶ்ச வேதா₃꞉ ।
வாயு꞉ ப்ராணோ ஹ்ருத₃யம் விஶ்வ மஸ்ய பத்₃ப்₄யாம் ப்ருதி₂வீ ஹ்யேஷ ஸர்வ பூ₄தாந்தராத்மா ||

இந்தப் பரன் என்பவருக்கு ஸ்வர்க லோகமே தலை , சந்த்ரனும் ஸூர்யனும் கண்கள், திசைகளே காதுகள், வேதங்களே பேச்சு, வாயுவே ப்ராணன், உலகங்களே ஹ்ருதயம், பூலோகமே கால்கள். இவரே அனைத்துக்கும் அந்தராத்மா-இப்படிப்பட்ட விச்வ ரூபத்தை உடையவராகச் சொல்லப்பட்ட பரன் என்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
ஆக இவ்வாறு, பார்க்கப் பட முடியாத ஸர்வஜ்ஞமான அக்ஷரமும், விச்வ ரூபமுடைய பரனும் பரமாத்மாவே –

———————————-

1.2.6 வைஸ்வாநராதி₄கரணம்
விஸ்வ ரூபம் உடையவர் யார்?

வைஸ்வாநராதிகரணத்தின் பின்புலம்
1.2.6-வைஸ்வாநராதி₄கரணம்
– முதல் அத்யாயத்தின் இரண்டாவது பாதத்திலுள்ள கடைசி அதிகரணம் இது.

ஸங்கதி – கீழ் அதிகரணத்தில், ’அக்ஷராத் பரத: பர:’ என்று மூல ப்ரக்ருதியை விட உயர்ந்த ஜீவாத்மாவை விட உயர்ந்தவரே’பரன்’ என்பவர் -பரமாத்மா தான் என்று நிரூபிக்க வ்யாஸர் “ரூப உபந்யாஸாத் ச” என்ற மூன்றாவது ஸூத்ரத்தில் சொன்ன காரணம் – விண்ணுலகத்தைத் தலையாகவும், சந்த்ர ஸூர்யர்களைக் கண்களாகவும், திசைகளைக் காதுகளாகவும், பூமியைக் கால்களாகவும் உடையவர் அதாவது உலகத்தையே தனக்கு வடிவமாகக் கொண்டவர் (விஸ்வ ரூபம்) என்று சொல்லப் பட்டுள்ள படியால் இந்தப் பரன் என்பவர் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று. அதற்கு மேல் கேள்வி எழுகிறது – வேறு உபநிஷத்துக்களில் பரமாத்மாவைத் தவிர்ந்த வேறு சிலருக்குக் கூட இப்படிப் பட்ட விஸ்வரூபம் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளதே ? இது எப்படி பரமாத்மாவுக்கே உரிய வடிவம் என்று கூறலாம்? என்று.-அதற்கு பதிலுரைக்கிறார் வேத வ்யாஸர் இந்த 1.2.6 வைஸ்வாநர அதிகரணத்தில்

விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தில் 3ஆவது அத்யாயத்தில் 11-24 கண்டங்கள் – வைஸ்வாநர வித்யா-ஔபமந்யவ ꞉ ஸத்யயஜ்ஞ꞉ இந்த்₃ரத்₃யும்ந: ஜந꞉ பு₃டி₃ல : | ஏதே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா꞉ ஸமேத்ய மீமாம்ஸாம்-சக்ரு꞉ – கோ ந: ஆத்மா கிம் ப்₃ரஹ்மேதி-ஔபமந்யவர், ஸத்யயஜ்ஞர், இந்த்ரத்யும்நர், ஜனர், புடிலர் என்ற ஐந்து ரிஷிகளும் வேதங்களைக் கற்றுணர்ந்தவர்கள்—இவர்கள் ஓரிடத்தில் கூடி, ஆராயத் தொடங்கினார்கள் – நமக்கெல்லாம் ஆத்மா யார்? எது ப்ரஹ்மம்? என்று.

உத்₃தா₃லகோ வை ப₄க₃வந்த: அயம் ஆருணி꞉ ஸம்ப்ரதி இமம் ஆத்மாநம் வைஶ்வாநரம் அத்₄யேதி | தம் ஹந்த அப்₄யாக₃ச்சா₂ம இதி | தம் ஹாப்₄யாஜக்₃மு꞉-நமக்குச் சரியான புரிதல் இல்லை ; உத்தாலகர் என்பவர் தான் வைஸ்வாநரன் என்றழைக்கப்படும் அந்த ஆத்மாவைத் தற்போது உபாஸிக்கிறார்; எனவே அவரிடம் கேட்டு அறியலாம் என்று முடிவு செய்து உத்தாலகரிடம் சென்றார்கள்.

ப்ரஹ்மத்தை அறிவதற்கான தேடல்
அஶ்வபதிம் கைகே யம் ஹாப்₄யாஜக்₃மு꞉ | தேப்₄யோ ஹ ப்ராப்தேப்₄ய꞉ ப்ருத₂க₃ர்ஹாணி காரயாஞ்சகார | யக்ஷ்யமாணோ வை ப₄க₃வந்த: அஹமஸ்மி | யாவதே₃வைகஸ்மா ருத்விஜே த₄நம் தா₃ஸ்யாமி தாவத் ப₄க₃வத்₃ப்₄யோ தா₃ஸ்யாமி | வஸந்து ப₄க₃வந்த இதி-
உத்தாலகர் கூறினார் – “நானும் இந்த வைஸ்வாநர ஆத்மாவை முழுமையாக அறிய வில்லை ; கேகேய தேசத்து அரசனான அஸ்வபதி என்பவனே அதை முழுவதுமாக அறிந்தவன்; அவனிடம் செல்லலாம்” என்று. அனைவரும் சேர்ந்து அஸ்வபதியிடம் சென்றார்கள். அரசன் அவர்களுக்கான பணிவிடைகளைச் செய்து விட்டு,
“நான் தற்போது யாகம் செய்து கொண்டிருக்கிறேன். இச் சமயம் நீங்கள் வந்தது மிகச் சிறந்தது. ஒவ்வொரு ருத்விக்குக்கும் கொடுக்கும் தனத்தை உங்களுக்கும் அளிக்கிறேன், நீங்கள் இங்கு தங்க வேண்டும்” என்று கூறினான்-

தே ஹோசுர: – யேந ஹைவ அர்தே₂ந புருஷ: சரேத் தம் ஹைவ வதே₃த் | ஆத்மாநமேவ இமம் வைஸ்வா நரம் ஸம்ப்ரதி அத்₄யேஷி | தமேவ நோ ப்₃ரூஹீதி-அவர்கள் பதிலுரைத்தார்கள் – “அரசே ! யார் எதை ஆசைப் படுகிறார்களோ அதைத் தான் அவருக்குக் கொடுத்து த்ருப்திப் படுத்த இயலும். நாங்கள் இந்தச் செல்வத்தை ஆசைப் பட்டு வரவில்லை – வைஸ்வாநரன் என்ற ஆத்மாவை நீ உபாஸிக்கிறாயே , அதையே எங்களுக்கு உபஸிப்பாய்” என்று.

அஸ்வ பதியும் ஒப்புக் கொண்டான்-இவர்கள் குறிப்பாக வைஸ்வாநர ஆத்மாவைப் பற்றிக் கேட்பதால், முன்னமே இவர்கள் சிறிதளவு அதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்த அரசன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து, அவர்கள் அறிந்தது என்ன என்று கேட்டான். அவர்களும் கூறினார்கள்

ஆறு ரிஷிகளில் ஒவ்வொருவரும் வந்து, தாங்கள் உலகத்தின் ஒரு பகுதியையே வைஸ்வாநர ஆத்மாவாக உபாஸநம் செய்வதைச் சொன்னார்கள். அரசன் பதிலுக்கு அவர்கள் உபாஸிக்கும் பகுதிக்கு ஒரு பெயர் அளித்து, அது எல்லாம் வைஸ்வானர ஆத்மாவின் ஒவ்வொரு பகுதியே ஆகும், முழுமையான வைஸ்வாநர ஆத்மாவை அவர்கள் உணர வில்லை என்று கூறினான்.

ரிஷியின் பெயர் –ஔபமந்யவர்
உபாஸித்தது –த்₃யுலோகம்
அதன் பெயர் -ஸுதேஜா: – சிறந்த தேஜஸ்ஸை உடையது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி–மூர்தா₄ (தலை )

ரிஷியின் பெயர் –ஸத்யயஜ்ஞர்
உபாஸித்தது –ஆதித்யன்
அதன் பெயர் -விஸ்வ ரூப: – உலகங்களை எல்லாம் ப்ரகாசப் படுத்துவது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி–சக்ஷுஸ் (கண்)

ரிஷியின் பெயர் –இந்த்₃ரத்₃யும்நர்
உபாஸித்தது –வாயு
அதன் பெயர் -ப்ருத₂க்₃வர்த்மா – பல விதமான கதிகளை உடையது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி– ப்ராண : (ப்ராணன்)

ரிஷியின் பெயர் — ஜனர்
உபாஸித்தது –ஆகாசம்
அதன் பெயர் -ப₃ஹுல: – மிகப் பெரிதானது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி–ஸந்தேஹ: (இடை )

ரிஷியின் பெயர் — பு₃டி₃லர்
உபாஸித்தது –ஜலம்
அதன் பெயர் -ரை : – செல்வம் போகல்-வேகமுடையது
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி-ப₃ஸ்தி: (ஜலம் கழிக்கும் புலன்)

ரிஷியின் பெயர் — உத்₃தா₃லகர்
உபாஸித்தது –பூமி
அதன் பெயர் -ப்ரதிஷ்டா₂ –பொருள்கள் எல்லாம் நிலை பெரும் இடம்
வைஸ்வாநர ஆத்மாவின் பகுதி- பாதௌ₃ (கால்கள்)

ய: து ஏதம் ஏவம் ப்ராதே₃ஶ மாத்ரம் அபி₄விமாநம் ஆத்மாநம் வைஶ்வாநரம் உபாஸ்தே ஸ ஸர்வேஷு லோகேஷு ஸர்வேஷு பூ₄தேஷு ஸர்வேஷ் வாத்மஸ் வந்நமத்தி- இப்படி உலகத்தின் ஒவ்வொரு பகுதியைத் தன் அவயவமாய் உடையவராய், மொத்தத்தில் அளவுக்கே அப்பாற்பட்டவரான வைஸ்வாநர ஆத்மாவை எவன் உபாஸிக்கிறானோ , அவன் எல்லா உலகங்களிலும் எல்லா ஜீவ ராசிகளிலும் எல்லா ஆத்மாக்களிலும் உள்ள அந்நத்தை (உணவை ) உண்கிறான்.

இந்த அதிகரணத்தின் தனித் தன்மை –ஸந்தேஹம் – இந்த அதிகரணம் சற்றே விசித்ரமானது. மற்ற அதிகரணங்களில் எல்லாம் ’இந்த விஷய வாக்யத்தில்
சொல்லப்படுபவர் இவரா? அவரா? மூல ப்ரக்ருதியா பரமாத்மாவா? ஜீவாத்மாவா பரமாத்மாவா?’ என்று தான் கேள்வி இருக்கும். ஆனால் இந்த அதிகரணத்தில் ஸந்தேஹம் வித்தியாசமானது.

இங்கு வைஸ்வாநர ஆத்மா என்று சொல்லப்பட்டார்- யாரென்று முடிவு செய்ய இயலாதா? இயலுமா?” என்று தான் இங்கு ஸந்தேஹம். ஏனென்றால், பூர்வ பக்ஷீ இவ் விடத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் வைஸ்வாநரன் என்று கூற வில்லை , வைஸ்வாநரன் யாரென்றே முடிவு செய்ய இயலாது என்று தான் கூறுகிறார்! ஏன் என்று பூர்வ பக்ஷத்தைப்
பார்க்கும் போது நமக்குப் புரியும். வ்யாஸர் அதைத் தவறென்று நிரூபித்து, பரமாத்மா தான் வைஸ்வாநரன் என்கிறார்

பூர்வ பக்ஷம் – “வைஸ்வாநரன்” என்பது ஒரு பொதுச் சொல்; பல பொருள்களைக் குறிப்பதற்குப் பயன் படுத்தப் படுகிறது.-எனவே , இங்கு எந்தப் பொருளைக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யவே இயலாது. அதன் பொருள்கள் –

1-ஜாட₂ர அக்₃நி (வயிற்றில் இருக்கும் நெருப்பு) -(அயம் அக்₃நி: வைஸ்வாநர:
யேந இத₃ம் அந்நம் பஸ்யதே யதி₃த₃ம் அத்₃யதே
) – இந்த வைஸ்வாநரன் என்ற நெருப்பு உண்ணப் பட்ட உணவைச் சமைத்து ஜரிக்க வைக்கிறது.

2-நெருப்பு – (விஸ்வஸ்மை அக்₃நிம் பு₄வநாய தே₃வா: வைஸ்வாநரம் கேதும் அஹ்நாம் அக்ருண்வன்) – உலகத்துக்காக தேவர்கள் வைஸ்வாநரம் என்ற அக்நியால் ஆன ஸூர்யனை பகலுக்குத் தலைவனாக ஆக்கினார்கள்.

3-அக்₃நி ப₄க₃வான் -(வைஸ்வாநரஸ்ய ஸுமதௌ ஸ்யாம, ராஜா ஹிகம்
பு₄வநாநாம் அபி₄ஶ்ரீ:
) – வைஸ்வாநரன் என்ற அக்₃நி ப₄க₃வானின் நல்லெண்ணத்தில் (அருளில்) நாம் இருப்போம், -அவர் அன்றோ செல்வத்தை யெல்லாம் உடையவர், உலகத்தின் அரசன்.-ஆரோக்யம் பாஸ்கரர் -அக்னி பகவான் -செல்வத்துக்கு அரசன்

4-பரமாத்மா – (ததாத்மநி ஏவ ஹ்ருத₃ய்யே அக்₃நௌ ப்ராஸ்யத்) – தன் இதயத்தில்
இருக்கும் அந்தர்யாமியான வைஸ்வாநரன் என்ற ஆத்மாவிடம் ஸமர்ப்பித்தான்

சாதாரண ஸப்தம் -பொதுச் சொல்– வைதிக பிரமாணம் கொண்டு பொதுச் சொல் இது என்பதே பூர்வ பக்ஷம்-இது ஒரு விசேஷ ஸப்தமே -குறிப்பிட்ட ஒரு சொல்லே -பரமாத்மாவுக்கே பொருந்தும் என்பதே ஸித்தாந்தம் என்று ஒன்பது ஸூத்ரங்களால் வேத வியாஸர் நிரூபிக்கிறார் –

1.2.6 -வைஸ்வாநராதி₄கரணம்- ஜாடராக்நி என்ற வாதத்தை முறித்தல்-பரமாத்மாவே வைஸ்வாநரன் ஸித்தாந்தம் –
சாந்தோக்ய உபநிஷத்தின் 5ஆம் அத்யாயத்திலுள்ள வைஸ்வாநர வித்யையில் சொல்லப்பட்டவர் யார் என்று முடிவு செய்ய இயலாது என்று பூர்வ பக்ஷீ உரைத்தார். அதைத் தவறு என்று நிரூபித்து, பரமாத்மா தான் வைஸ்வாநரன் என்று நிரூபிக்கிறார் வ்யாஸர் இந்த அதிகரணத்தின் 9 ஸூத்ரங்களால்.

1-வைஸ்வாநர ्ஸாதா₄ரண சப்₃த₃ விசேஷாத் – அந்ய: என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும்.
வைஸ்வாநர: – வைஸ்வாநரன் என்று சொல்லப் படுபவர்
அந்ய: – பரமாத்மாவே
ஸாதா₄ரண சப்₃த₃ விசேஷாத் – பொதுவான சொல்லைச் சிறப்பிக்கிற படியால்
வைஸ்வாநரன் என்ற சொல் ஒரு பொதுவான சொல் (ஸாதா₄ரண சப்₃த₃ம்) ஏனெனில் அதற்குப் பல பொருள்கள் உள்ளன என்று பூர்வ பக்ஷி சொன்னது சரியே . ஆனால், இவ் விடத்தில் அஸ்வபதி அச் சொல்லை மட்டும் பயன்படுத்த வில்லை -அதற்கு மேல் பல பண்புகளைச் சொல்லி அச் சொல் சிறப்பிக்கப் படுகிறது-தா₃சரதி₂ (தசரதனின் மகன்) என்ற சொல் இராமன் முதலான நால்வருக்கும் பொதுவானது. ஆனால், “கருப்பான, சார்ங்கம் ஏந்திய, இராவணனை அழித்த தா₃சரதி₂” என்று கூறினால் அது இராமனையே குறிக்கும். அதே போல் இங்கு பரமாத்மாவுக்கே பொருந்தும் பண்புகள் சொல்லப் பட்டுள்ள படியால், இங்கும் வைஸ்வாநரன் என்று பரமாத்மாவே –

1-முமுக்ஷுக்களான ரிஷிகளால் ஆராயப்படுதல்
2- (கோ ந: ஆத்மா) என்று அனைவருக்கும் ஆத்மாவாய் இருத்தல்
3- (கிம் ப்₃ரஹ்ம) என்று ப்ரஹ்மமாய் இருத்தல்
4-ப்ரஹ்மம் என்று சொல்லுக்கு பதிலாக வைஸ்வாநரன் என்று சொல்லப்படுதல்
5-(தத்₃யதா₂ இஷீக தூலம் அக்₃நௌ ப்ரோதம் ப்ரதூ₃யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ₃யந்தே ) + (ஸ ஸர்வேஷு ஆத்மஸு அந்நம் அத்தி) அதாவது“வைஸ்வாநரனை அறிந்தவனின் பாபங்கள் எல்லாம் தீயிலிட்ட தூசி போலே அழியும்; அவன் எல்லாப் பொருள்களுக்கும் இருக்கும் பரமாத்மாவை அநுபவிக்கிறான்” என்று சொல்லப்பட்ட சிறந்த பயன் -பரமாத்மாவுக்கே உரிய இந்த ஐந்து பண்புகளால் வைஸ்வாநரன் என்ற சொல்
சிறப்பிக்கப் படுகிறது. எனவே அந்த வைஸ்வாநரன் பரமாத்மா தான் என்று முடிவெடுக்க இயலும்.-எனவே , இங்கும் வைஸ்வாரனுக்கு உலகங்கள் எல்லாம் உடலாகச் சொல்லப் பட்டுள்ளதைப் பார்த்து – இந்த வைஸ்வானரன் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று-நாம் ஊஹிக்கலாம்-

(அன்னம்அனுபவிக்கும் இனிமையான பரமாத்மாவைக் காட்டும் இங்கு)

2-ஸ்மர்யமாணம் அநுமானம் ஸ்யாத் இதி
இதி
-இவ்வாறு
ஸ்மர்யமாணம் -ஸ்மரிக்கப் படுவது(நினைவு கூரப்படுவது) அநுமானம் ஸ்யாத்-அடையாளமாகக் கடவது
அநுமானம் என்ற சொல்லுக்குப் பொதுவாக ஊஹம் செய்வது (inference) என்று பொருள். இவ் விடத்தில், அந்த -ஊஹம் செய்யக் காரணமாக இருக்கும் அடையாளத்தை இது காட்டுகிறது.

இந்த வைஸ்வாநரனுக்கு விண்ணுலகவம முகம், ஸூர்யனே கண், ஆகாசமே இடை , பூமியே கால்கள் என்று உலகங்கள் எல்லாம் உடலாய் இருக்கின்றன என்று கூறப் பட்டுள்ளது. இவ்வாறு நினைக்கப் படுகிற இந்த வடிவமே இந்த வைஸ்வாநரன் பரமாத்மா தான் என்று அறிய ஒரு சிறந்த அடையாளம் ஆகும்,

பொதுவாக உலகில் ஓரிடத்தில் புகை என்ற அடையாளம் (லிங்கம்) இருப்பதைக் கொண்டு அங்கு நெருப்பு இருக்க வேண்டும் என்று ஊஹிக்கிறோம்-புகை நெருப்பை விட்டு இருக்காது என்று அறிந்த படியால்–அதே போல், அந்தர்யாம் யதிகரணத்தில் “ரூப உபந்யாஸாத் ச” என்ற ஸூத்ரத்தில் சொன்ன படி,
அக்₃நிர் மூர்தா₄ சக்ஷுஷீ சந்த்₃ர ஸூர்யௌ தி₃ஶஸ் ஶ்ரோத்ரே வாக்₃விவ்ருதாஶ்ச வேதா₃꞉ ।
வாயு꞉ ப்ராணோ ஹ்ருத₃யம் விஶ்வ மஸ்ய த்₃ப்₄யாம் ப்ருதி₂வீ ஹ்யேஷ ஸர்வ பூ₄தாந்தராத்மா ||-
“இந்தப் பரன் என்பவருக்கு ஸ்வர்கலோகமே தலை , சந்த்ரனும் ஸூர்யனும் கண்கள், திசைகளே காதுகள், வேதங்களே பேச்சு, வாயுவே ப்ராணன், உலகங்களே ஹ்ருதயம், பூ லோகமே கால்கள். இவரே அனைத்துக்கும் அந்தராத்மா” முதலான வேத வாக்கியங்களில், உலகங்களை எல்லாம் உடலாகக் கொண்டவர் பரமாத்மா தான் என்று முன்னமே நிரூபிக்கப் பட்டுள்ள படியால்-எனவே , இங்கும் வைஸ்வாரனுக்கு உலகங்கள் எல்லாம் உடலாகச் சொல்லப் பட்டுள்ளதைப் பார்தத்து – இந்த வைஸ்வானரன் பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று-நாம் ஊஹிக்கலாம் –

ஜாடராக்நியே வைஸ்வாநரன் என்ற பூர்வ பக்ஷம்
3-சப்₃தா₃தி₃ப்₄ய: அந்த:ப்ரதிஷ்டா₂நாத் ச ந, இதி சேத் ந, ததா₂ த்₃ருஷ்டி உபதே₃சாத், அஸம்ப ₄வாத், புருஷமபி ச ஏநம் அதீ₄யதே
சப்₃தா₃தி₃ப்₄ய: அந்த:ப்ரதிஷ்டா₂நாத் ச ந
– ஜாடராக்நியே வைஸ்வாநரன் என்று இப் பகுதியால் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார்.
ந – வைஸ்வானரன் பரமாத்மா தான் என்று நீங்கள் சொன்னது தவறு, அது ஜாடராக்நி தான், ஏனெனில்–
சப்₃தா₃தி₃ப்₄ய: – சப்தம் முதலான காரணங்களால் (இத்தால் 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன)-1-சப்தம் – (ஸ ஏஷ: அக்₃நி: வைஸ்வாநர: ) என்று வைஸ்வானரன் என்ற சொல்லோடு சேர்த்து அக்₃நி என்ற சொல் உபயோகிக்கப் பட்டுள்ளபடியால், ஒரு நெருப்புத் தான் வைஸ்வானரன் என்று தெரிகிறது.-2-த்ரேதாக்₃நி கல்பநம் – (ஹ்ருத₃யம் கா₃ர்ஹ பத்ய:, மநஸ் : அந்வாஹார்ய பசந:, ஆஸ்யம் ஆஹவநீய: ) என்று இந்த வைஸ்வானரனின் முகமும் மனமும் வாயும் மூன்று நெருப்புகளாகச் சொல்லப் படுகிற படியால், வைஸ்வானரன் நெருப்பு வடிவமான ஜாடராக்நி தான்-3-ப்ராண ஆஹுதி ஆதா₄ரத்வம் – உணவு உண்ணும் போது ’ப்ராணாய ஸ்வாஹா’ முதலாக உண்ண வேண்டும். அது இந்த வைஸ்வானரனுக்குக் கொடுக்கும் ஆஹுதி ஆகும் என்று சொல்லப் பட்டுள்ளது. உண்ணப் படும் உணவு சென்றடைவது ஜாடராக்னியைத் தான். எனவே அது தான் இங்கு வைஸ்வானரன் என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும்.-4-அந்த:ப்ரதிஷ்டா₂நாத் ச (இது நான்காவது காரணம்) – (வைஸ்வானரம் புருஷ வித₄ம் புருஷே அந்த:ப்ரதிஷ்டி₂தம்) அதாவது“இந்த வைஸ்வானரன் மனிதனின் உடலுக்குள் இருக்கிறான்” என்று சொல்லப் பட்டுள்ள படியால், இந்த வைஸ்வானரன் ஜாடராக்னி தான். பரமாத்மா எங்கும் வ்யாபித்தவரான படியால் அவர் உடலுக்குள் இருக்கிறார் என்று கூறுவது பொருந்தாது-எனவே இக் காரணங்களால் பரமாத்மாவை வைஸ்வானரன் என்று கூறியது தவறு என்கிறர் பூர்வ பக்ஷீ.

வேத வ்யாஸரின பதில்-
இதி சேத் ந
– (இது தொடங்கி வ்யாஸரின் பதில்) இவ்வாறு நீ கூறினால் அது தவறு
ததா₂ த்₃ருஷ்டி உபதே₃சாத் –
ததா₂
அவ்வாறு –
த்₃ருஷ்டி உபாஸநத்தின்
உபதே₃சாத் –உபதேசத்தால்
இங்கு ஜாடராக்னிக்குப் பொருந்தும் பண்புகள் சொல்லப் பட்டுள்ளது-உண்மை தான். அது எதற்காகவெனில்,-அப்படிப்பட்ட அக்னிக்கு அந்தர் யாமியாய் பரமாத்மா வைஸ்வானரன் இருப்பதாக த்யானிக்க வேண்டும் என்று கூறுவதற்காக. “அக்₃நி: வைஸ்வாநர:” என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து படிக்கப் பட்டுள்ளன. அதில் அக்₃நி என்ற சொல்லின் நேரடியான பொருள் நெருப்பு. ஆனால் அது இங்கு பொருந்தாது. எனவே ,-“அக்னிக்கு அந்தர்யாமீ” அல்லது “அக்னியை உடலாகக் கொண்டவர்” என்று தான் இங்கு பொருள் கொள்ள வேண்டும்.அஸம்ப ₄வாத் – இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று எப்படித் தெரியும்? அதைத் தான் இந்தப் பகுதி காட்டுகிறது. அஸம்பவம் என்றால் இருக்க முடியாத – நடக்க முடியாத ஒன்று. இங்கு அக்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்று பொருள் கொண்டால், அந்த நெருப்பு உலகங்களை எல்லாம் தனக்கு உடலாகக் கொண்டதாக இருக்கவே முடியாது. ஆகையால் பொருந்தாமை ஏற்படும். எனவே , மூ வுலகங்களையும் சரீரமாகக் கொண்ட வைஸ்வானரனை ’அக்னி’ என்று கூறினால், –அக்னிக்கு அந்தர்யாமீ” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

புருஷமபி ச ஏநம் அதீ₄யதே – இப்படிப் பொருள் கொள்வதற்கு மற்றும் ஓரு காரணமும் உள்ளது. இதே உபதிசத்தில்(ஸ ஏஷ: அக்₃நி: வைஸ்வாநர: யத் புருஷ: ) அதாவது’இந்த வைஸ்வாநரன் என்கிற புருஷன்” என்று சொல்லப் பட்டுள்லது. புருஷன் என்ற சொல் பொதுவாக அறிவுடைய ஆத்மாவைத் தான் குறிக்கும்,-அறிவற்ற அசேதனமான அக்னியை அல்ல. விசேஷமாக, வேதத்தில் புருஷன் என்ற சொல் பரமாத்மாவைக் குறிப்பதற்கே
பயன் படுத்தப் படுகிறது
. இது கொண்டும் நாம் வைஸ்வானரன் பரமாத்மா தான் என்று அறியலாம்-எனவே , இங்கு ஜாடராக்னி சொல்லப்பட வில்லை – ஜாடராக்னியை உடலாகக் கொண்ட பரமாத்மாவைப் பற்றின த்யானம் தான் சொல்லப்படுகிறது.

1.2.6-வைஸ்வாநராதி₄கரணம்-மற்ற ரிஷிகளின் பங்களிப்புகள்–ஜைமிநியின் நுட்பமான கருத்து-1.2.6 -வைஸ்வாநராதி₄கரணம் ஸித்தாந்தம் – முதல் இரண்டு ஸூத்ரங்களால் வைஸ்வானரன் பரமாத்மாவே என்றார். மூன்றாம் ஸூத்ரத்தில் ஜாடராக்னி வைஸ்வானரன் அல்ல என்றார். இனி மற்ற பூர்வ பக்ஷங்களை எதிர்க்கிறார்.
4-அத ஏவ ந தே ₃வதா பூ₄தம் ச
ந தே ₃வதா – அக்னி பகவான் என்ற தேவதை வைஸ்வானரன் அல்ல
பூ₄தம் ச (ந) – பஞ்ச பூதங்களுக்குள் ஒன்றான நெருப்பும் (அல்ல)
அத ஏவ – அந்தக் காரணங்களாலேயே-

கீழ் ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட காரணங்களைக் கொண்டே இந்த வைஸ்வானரன் என்பவர் அக்னி பகவானோ நெருப்போ அல்ல என்று அறியலாம். அவையாவன – (1) ’நமக்கெல்லாம் ஆத்மா’ என்று அந்தர் யாமியாகச் சொல்லப்படுதல் (2) ’புருஷன்’ என்ற சொல்லால் குறிக்கப்படுதல்(3)வைஸ்வானரனை அறிந்து உபாஸித்தால் எல்லாப்
பாபங்களும் விலகி பரமாத்மாவை அநுபவிக்கலாம் என்று சொல்லப்பட்ட பயன். இவை பரமாத்மாவுக்கே பொருந்தும்-

5-ஸாக்ஷாத் அபி அவிரோத₄ம் ஜைமிநி:
ஸாக்ஷாத்
-நேரடியாகவும்
அபி -கூட
அவிரோத₄ம் -முரண்பாடு இல்லை என்பதை
ஜைமிநி: ஆசார்யர் ஜைமிநி கூறுகிறார்-

கீழே மூன்றாவது ஸூத்ரத்தில் ’அக்₃நி: வைஸ்வாநர:’ என்ற இடத்தில், அக்நி என்ற சொல் பொதுவாக நெருப்பைக் குறித்தாலும் இவ் விடத்தில் அது பொருந்தாத படியால் ஜாடராக்நி என்ற நெருப்பு அந்தர்யாமியான பரமாத்மாவைச் சொல்கிறது என்று சுற்றி வளைத்துக் கூறினார் வேத வ்யாஸர்.
ஜைமிநி கூறுகிறார்நேரடியாகவே அக்நி என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது என்று கொண்டாலும் எந்த முரண்பாடும் இல்லை -அக்நி என்ற சொல்லுக்கு ’அக்₃ரம் நயதி’ அதாவது ’முன்னே அழைத்துச் செல்பவர்’ என்று பொருள். இது பரமாத்மாவுக்கு நன்றாகவே
பொருந்துமான படியால், அக்நி எனப்படுபவர் பரமாத்மாவே –வைஸ்வாநரன் என்றால் ’விஸ்வான் நரான் நயதி’ அதாவது உலக மக்கள் அனைவரையும் வழி நடத்துபவர் என்று பொருள்.-அது போல் அக்₃நி என்ற சொல்லும் நேரடியாகவே பரமாத்மாவைக் குறிக்கிறது என்கிறார் ஜைமிநி.

சில வினா விடைகள்
6-அபி₄வ்யக்தே : இதி ஆஸ்மரத்₂ய:
– “புத்தி ஸௌகர்யத்துக்காக என்கிறார் ஆஸ்மரத்யர்”
பூர்வ பக்ஷியின் கேள்வி – அளவுக்கு அப்பாற் பட்டவரான பரமாத்மா ஏன் இங்கு விண்ணுலகம், ஸூர்யன், ஆகாசம், பூமி முதலான அளவுபட்ட பொருள்களோடு தொடர்பு படுத்திச் சொல்லப் பட்டுள்ளார்?
ஆஸ்மரத்யரின் பதில் அபி₄வ்யக்தி என்றால் பு₃த்₃தி₄ ஸௌகர்யம் அதாவது புரிந்து கொள்வதில் எளிமை – அதற்காகத் தான் உபநிஷத் இப்படி உபதேசிக்கிறது. அளவு கடந்த ஒரு பொருளை அறிவது கடினமானது. அளவு கொண்ட பொருள்களோடு தொடர்பு படுத்தினால் தான் எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதே காரணம்.

7-அநு ஸ்ம்ருதத: பா₃த₃ரி: – “த்யானத்துக்காக என்கிறார் பா₃த₃ரி”
பூர்வ பக்ஷியின் கேள்வி
– சரி, அளவு படுத்திச் சொல்வதாவது இருக்கட்டும். ஆனால் பரமாத்மாவுக்கு தலை , கண், இடை , கால் என்று மனித வடிவம் போன்ற ஒரு வடிவம் எதற்காகச் சொல்லப் பட்டுள்ளது?
பா₃த₃ரியின் பதில் – ஸ்ம்ருதி என்றால் நினைவு. அநு ஸ்ம்ருதி என்றால் தொடர்ச்சியான நினைவு, அதாவது த்யானம். -அந்த த்யானத்துக்காகத் தான் இப்படி மனிதன் போன்ற உருவம் பரமாத்மாவுக்குச் சொல்லப் பட்டுள்ளது.(யஸ்து ஏதம் ஏவம் உபாஸ்தே ) அதாவது “எவன் ஓருவன் இந்த வைஸ்வானரனை -இப்படி-அதாவது மனிதன் போன்ற வடிவமுடையவனாக உபாஸிக்கிறானோ … அவன் முக்தி அடைகிறான்”-எனப்பட்டுள்ளது.

8-ஸம்பத்தே : இதி ஜைமிநி: ததா₂ ஹி த₃ர்சயதி
பூர்வ பக்ஷியின் கேள்வி – “ (உர: வேதி₃: லோமாநி ப₃ர்ஹி: )
அதாவது“இந்த உபாஸகனின் மார்பு தான் வேதி, உரோமங்களே தர்பங்கள்” என்று சொல்லப் பட்டுள்ளதே ? வேதி என்றால் அக்னியை வைக்கும் இடம்.-எங்கோ மிகப் பெரியவராக இருக்கும் பரமாத்மா தான் வைஸ்வானரன் என்றால் அவர் இருக்கும் இடமாக மார்பு எப்படி ஆகும்? எனவே இங்கு வைஸ்வானரன் என்று சொல்லப்படுவது ஜாடராக்னியாகத் தான் இருக்க வேண்டும்.
ஜைமிநியின் பதில் – ஸம்பத்தே : இதி ஜைமிநி: – “ஸம்பத்திக்காக அதாவது ஆக்குவதற்காக என்கிறார் ஜைமிநி”-எதை எதுவாக ஆக்குவதற்காக இது சொல்லப்படுகிறது? ப்ராண ஆஹுதியை அக்₃நி ஹோத்ரமாக ஆக்குவதற்காக.

நாம் உணவு உண்கிறோமே , அப்போது ’ப்ராணாய ஸ்வாஹா’ முதலான மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டு, நம்வயிற்றில் ஜாடராக்நி வடிவத்திலிருக்கும் பரமாத்மாவுக்கு நாம் கொடுக்கும் ஆஹுதி இந்த உணவே என்று நினைக்க வேண்டும். அதனால் தான் இதற்குப் ப்ராண ஆஹுதி என்று பெயர். இப்படி உண்பது கூட பரமாத்மாவுக்காக-அக்நிஹோத்ரம் என்று ஒரு மிகச் சிறந்த ஹோமம் உள்ளது. தினமும் காலையும் மாலையும் செய்யப்பட வேண்டியது -இங்கு சொல்லப் படுவது – இந்தப் ப்ராண ஆஹுதியையே அக்நி ஹோத்ர ஹோமமாக பாவிக்க வேண்டும் என்று-

ஒருவரை நம் தந்தையாக பாவிக்க வேண்டும் என்றால், அவருக்கும் நம் தந்தைக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும்–அது போல் ப்ராண ஆஹுதிக்கும் அக்நி ஹோத்ரத்துக்கும் ஒற்றுமை உள்ளது என்பதைக் காட்டத் தான் ’-உர: வேதி₃: லோமாநி ப₃ர்ஹி:’ என்று மார்பே அக்னி இருக்கும் வேதியாகக் கற்பனை செய்யப்படுகிறது. ததா₂ ஹி த₃ர்சயதி – “அவ்வாறு அன்றோ காட்டுகிறது”. உபநிஷத்தில், ப்ராண ஆஹுதியை அக்நி ஹோத்ரமாக
அறியாதவன் உண்பதே வீண் என்றும் அறிந்தவன் அனைவரையும் த்ருப்தி செய்கிறான்
என்றும் கூறப் பட்டுள்ளது-

9-ஆமநந்தி ச ஏநம் அஸ்மிந் –
ஏநம்
-இந்த வைஸ்வானரனை–அஸ்மிந் -இந்த உபாஸகனின் உடலில் ஆமநந்தி ச -ஓதவும் செய்கிறார்கள்”
பூர்வ பக்ஷியின் கேள்வி – உபாஸகனின் தலை , கண் முதலானவற்றை விண்ணுலகம், ஸூர்யன் முதலானவையாக த்யானிக்க வேண்டும் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? பரமாத்மாவின் தலை முதலானவற்றைப் பற்றி அல்லவே ?
வ்யாஸரின் பதில் – இரண்டுமே சொல்லப் பட்டுள்ளது. முதலில், வைஸ்வானரன் என்ற பரமாத்மாவினுடைய உடலில் ஒவ்வொரு பகுதியாக விண்ணுலகம் முதலானவை உள்ளன என்று கூறி விட்டு, இப்படிப்பட்ட வைஸ்வானரனை உபாஸனம் செய்பவனின் தலை , கண், உடல் முதலானவையும் விண்ணுலகம், ஸூர்யன், ஆகாசம் முதலானவை என்று கூறப் பட்டுள்ளது. இதன் கறுத்து – “பரமாத்மாவின் தலையான விண்ணுலகம் தான் எனக்கும் தலை ” என்று உபாஸகன் கற்பனை செய்து கொண்டு, அதன் மூலம் பரமாத்மா தனக்கு எவ்வளவு நெருக்கமாக வுள்ளார் என்று உணர வேண்டும்.

ஆக இப்படி 9 ஸூத்ரங்களால் வைஸ்வாநரன் எனப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வேத வ்யாஸர்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு-ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –அவதாரிகை —

January 26, 2025

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஸர்வ ஸ்வாமியான ஸர்வேஸ்வரன் –
பஞ்ச சக்திமயே திவ்யே ஸூத்த ஸத்வே ஸூக ஆகாரே -என்றும்
த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர -நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே ஸததம் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
பஞ்ச உபநிஷன் மயமாய் -ஸூத்த ஸத்வாத்மகமாய் -நிரதிசய ஆனந்த மயமான -த்ரிபாத் விபூதியிலே
நித்ய நிர்மல ஞானதி குணகராய் -ஸ்வச் சந்த அநு வ்ருத்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதரான நித்ய ஸூரிகளாலே அநவ்ரத பரிச்சர்யமாண சரண நளின யுகளராய் -நித்ய முக்தரையும் ஸ்வ அனுபவத்தாலே ஆனந்திப்பித்துக் கொண்டு தானம் நிரதிசய ஆனந்த யுக்தனாய்ப் போரா நிற்க-

லீலா விபூதியில் உள்ளார் அவர்களோபாதி தன்னை அனுபவிக்க ப்ராப்தி யுண்டாய் இருக்க-அத்தை இழந்து இருக்கிறபடியைக் கண்டு வியாகுல அந்தக்கரணனாய் -இவர்களை உஜ்ஜீவிப்பிக்கையில் யுண்டான நசையாலே அசித் அவிஸேஷிதராய் -அத ஏவ போக மோக்ஷ சூன்யராய்க் கிடக்கிற தசையிலே
கரண களேபரைர் கடயிதும் தயமான மநா –என்கிறபடியே
தயை குடிகொண்ட திரு உள்ளத்தை யுடையனாய்
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயண உபகரணமாக
விசித்ரா தேஹ ஸம்பத்தி -இத்யாதிப்படியே
கரண களேபரங்களைக் கொடுத்து
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் யுண்டாக்கி
ஞான கார்யமான த்யாஜ்ய உபாதேய விவேக பரிகரமாக
மாநம் பிரதீப மிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
வேதங்களை ப்ரமாணமாகப் ப்ரவர்த்திப்பித்து

அநந்தரம் மன்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதனருடைய விஸிஷ்ட விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டு அருள
அந்த ஸாஸ்த்ர அப்யாஸம் அநேக யோக்யதா ஸா பேஷமாய் -சிரகால ஸாத்யமாய் இருக்கையாலே துஷ்கரமாம் இருக்கும்படியைத் திரு உள்ளம் பற்றி-தாத்ருஸ யோக்யதா நிரபேஷத்வாதிகளாலே ஸூ கரமாய் -சேதன நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திரு அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யையை ஸ்வயமேவ ப்ரகாசிப்பித்த அளவிலும் கார்யகர மாகாமையாலே
ஓலைப் புறத்தே செல்லாத ராஜ்யத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
நாமே சென்று ஸம்ஸாரிகளைத் திருத்தக் கடவோம் -என்று ராம கிருஷ்ணாதி அவதார முகத்தாலே இவர்கள் இருக்கிற இடத்திலே தானே வந்து திருத்தப் பார்த்த இடத்திலும் ஒருவரும் திருந்தக் காணாமையாலே
விஜாதீயரான நம்மால் ஒருபடியாலும் திருத்த ஒண்ணாதபடியாய் இருந்தது
இனி இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப் போலே
சஜாதீயரைக் கொண்டு கார்யம் கொள்ளவேண்டும் என்றும் அறுதியிட்டுத் தன்னுடைய நிர்ஹேதுக ப்ரஸாதத்துக்கு இலக்கான ஆழ்வார்களை அவதரிப்பித்தான்

அவர்களாகிறார் -சர்வேஸ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகையாலே ஸகல ஸம்ஸார சேதனரும் த்யாஜ்ய உபாதேய விபாகம் பண்ணி உஜ்ஜீவிக்கும் படிக்கு உடலாக ஸர்வாதிகாரமான திராவிட ரூப பிரபந்தங்களை அருளிச் செய்து ஜகத்தை வாழ்வித்தார் சிலராயிற்று –

இதில் முதலாழ்வார்கள் வ்யாஸாதி பரம ரிஷிகளில் வ்யாவ்ருத்தர்களே யாகிலும் லௌகிக ஞானமும் கலசி கிராம ஏக ராத்ரமாகத் திரிந்தார்கள் என்பது ஓன்று உண்டு –
திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்கள் சிறிது காலம் லௌகிக ஞானம் மேலிட்டுக் காலாந்தரத்திலே பகவன் நிர்ஹேதுக ப்ரஸாதத்துக்கு இலக்கானார்கள் என்பது ஓன்று உண்டு

அக்குறைகள் ஒன்றுமே இன்றிக்கே -நம்மாழ்வார்
உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம் யுதா –என்கிறபடியே
திருத்துழாய் மணத்தோடே அங்குரிக்குமா போலே
கேவலம் ஸ்வச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசந –என்கிறபடியே
பகவந் நிர்ஹேதுக ப்ரஸாதத்தாலே கர்ப்பே அபி ஷிக்தராய் லௌகிக ஞான பூர்வகமான ப்ரவ்ருத்தி லேசமும் இன்றியே
பால ஆஷோட ஸாப் தாத்து மூக பாவம் கமிஷ்யதி –என்கிறபடியே
திருவவதாரம் தொடங்கி பதினாறு திரு நக்ஷத்ரத்து அளவும் -ஸ்தந்யாதிகளும் இன்றிக்கே வாக்ய வ்யவஹாராதிகளும் இன்றியே
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் –என்கிறபடியே
தாரக போஷக போக்யங்கள் எல்லாமே எம்பெருமானேயாய் -தத் குண அனுபவமே ஸம் வர்த்தகமாக வளர்ந்து போந்தார் ஒருவராய்த்து –

இவர் ப்ரபாவத்தை நரூபிக்கும் போது பிராட்டிமாரிலும் நித்ய ஸூரிகளிலும் உபய விபூதியிலும் வ்யாவ்ருத்தராய் இருப்பர் -எங்கனே என்னில்
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் -என்று ஓரோர் ஆகாரத்தாலே அவர்களோடு ஓக்க விகல்பிக்கலாம் படி மூவர் படியையுமாய் இருக்கிற இதற்கும் மேலே
பிறந்திட்டாள் -என்று அந்யாத்ருஸமான வேறுபாட்டை யுடையளான இவள் ஒருத்தி இங்கனே பிறப்பதே
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் -என்று ஈடுபடும்படிக்கு உடலான ஏற்றத்தையும் யுடையராய்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் –என்கிறபடியே
ஸ்தாந விகல்பத்தாலும் உபய விபூதியிலும் அடங்காத தன்மையாய் இருப்பர் –

யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
மாறுளதோ இம்மண்ணின் மிசையே -என்றும்
முக்தகண்டமாக உபய விபூதியிலும் தம்மோடு ஒப்பார் ஒருவரும் இல்லை -என்றார் இறே
இவ்வாழ்வாருக்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரத்திலும் இல்லை -நித்ய விபூதியிலும் இல்லை -தம்படி தாமும் அறியார் -ஸம்ஸாரிகளும் அறியார் -ஈஸ்வரனும் அறியான் –
ஒரு ஸாதனத்தைச் சமைய அனுஷ்டித்து இதனாலே நமக்கு இப்படி ஒரு வீறுடைமை வரும் -என்று இருக்க வந்தது அல்லாமையாலே தாமும் அறியார் -இவரைப்போலே சகல இதர விலக்ஷணராய் இருப்பாரை ஸம்ஸார மண்டலத்திலே காணாமையாலே சம்சாரிகளும் அறியார் –
தன்னுடைய ஞான சக்த்யாதி குணங்கள்
அவ்யுச்சிந் நாஸ் ததஸ்த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்த ஸம்யமா-என்கிறபடியே
அநுஸ் யூதமான ஸ்ருஷ்ட்டி பரம்பரையில் ஒரு வ்யக்தியிலே யாகிலும் இப்படிப்பலிக்கக் காணாமையாலே ஈஸ்வரனும் அறியான்
விண்ணுளாரிலும் சீரியர் –என்கிறபடியே நித்யர்களிலும் வ்யாவ்ருத்தரராய் இருக்கும் அளவன்றிக்கே புருஷோத்தமனான சர்வேஸ்வரனுடனும் ஒப்புச் சொல்லலாம் படியான வைபவம் இறே இவரது –

ஸ ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்றும்
ஞாநீ த்வாத்மைவ மே மதம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் தானே ஞாநாதிக்யத்தை இட்டு ஒரோ வ்யக்திகளைத் தன்னோடு ஓக்கவும் தனக்குத் தாரகமாகவும் சொன்னபடி கண்டால் இவர் விஷயத்தில் சொல்ல வேண்டா விறே
இன்னமும் புவியும் இரு விசும்பும் நின் இத்யாதி
உபய விபூதியும் நின் சங்கல்பத்திலே கிடக்கிறது -ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரிய த்வாரா புகுந்து விச்சேதம் இன்றிக்கே என்னுடைய ஹ்ருதயத்திலே உளனாக நின்றாய் -இப்படியான பின்பு விபூதியை யுடைய நீயோ விபூதிமானை யுடைய நானோ பெரியவன் என்றும் அறிவார் இல்லை -அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்துக் காணாய் என்றுஉபய விபூதியில் யுக்தனுடனே மறு தலைக்கும் படியாக வைபவத்தை யுடையராய்
தெய்வத்தின் இனமோர் அனையீர்களாய் -என்று ஒருவரே இருவர் இன்றிக்கே நித்ய ஸூரிகள் எல்லோரும் கூடினாலும் தமக்கு ஒரோ வகைக்கு ஒப்பாம்படியான பெருமையைக் யுடையராய் இருப்பர்

இப்படி ஸகல இதர வ்யாவ்ருத்தராய் -ஸர்வ பிரகார விலக்ஷணரான இவ்வாழ்வார் அவதரித்தது ஸம்ஸாரி சேதனர் பண்ணின ஸூஹ்ருத பலமாய்த்து
ததோகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா தேவகீ பூர்வா சந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -என்று
சர்வேஸ்வரன் அவதரித்தால் போலே யாய்த்து இவ்வாழ்வார் அவதரித்தது -அவதார கார்ய பேதத்தாலே அச்யுத பானுவினுடைய ஆவிர்பாவத்திலும் வகுள பூஷண பாஸ்கர உதயம் வ்யாவ்ருத்தமாகும்
யத் கோ ஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வாஸதி யத்ர ஸ சங்க சக்ர -யந் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய-என்று
அச்யுத பானுக்கு விகஸியாத ஹ்ருத் பத்மங்களும் விகஸித்து ஆதித்ய அநி வார்யமாய் உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரமும் நீங்கினதும் வகுள பூஷண பாஸ்கர உதயமான பின்பு இறே

இப்படி அஞ்ஞான தமோ நிவர்த்தகராய் -ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே –என்கிறபடியே எல்லோரும் தம்மைப் போலவே பகவத் ஏக பரராம்பாடி அவதரித்த இவ்வாழ்வார் விஷயத்திலே தேவு மற்றறியேன் -என்று
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்களை
அறுதியிட்டு தத் ஏக நிஷ்டராய்ப் போருமவராய்த்து ஸ்ரீ மதுரகவியாழ்வார்

இப்படி இவர் ததீய சேஷத்வமே உத்தேச்யம் என்று அறுதியிடுகைக்கு வந்த வழி தான் ஏது என்னில்
நம்மாழ்வாரை பொய் நின்ற ஞானமும் தொடங்கி அவாவற்று வீடு பெற்ற -அளவும் செல்ல அனுபவித்த இடத்திலே அவர் தமக்கு உத்தேச்யமாகத் திருவாய் மொழியில்
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை -யிலே
புருஷார்த்த காஷ்டையாகத் ததீய சேஷத்வத்தையே அறுதியிடுகையாலே
ஸ்வ ஆச்சார்ய ருசி பரிக்ருஹிதமான அர்த்தமே தமக்கு உத்தேச்யம் என்று நினைத்து ததீய அக்ரேஸரான இவ்வாழ்வாரையே தேவு மற்று அறியேன் என்று பற்றுகிறார்

ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே ஸாத்விகருக்குப் பரிக்ராஹ்யம் என்னும் இடமும் மஹாபாரத சாரமான சஹஸ்ர நாம அத்தியாயத்தில் சொல்லிற்று இறே -ஸ்ரீ பீஷ்மர் பக்கலிலே ஸகல அர்த்தங்களையும் குறைவறக்கேட்ட தர்மபுத்ரன் இவன் தனக்கு உத்தேச்யமாக ஸ்வீ கரித்து தத்வ ஹிதங்களே தனக்கு உத்தேச்யம் என்று நினைத்து
கோ தர்மஸ் ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத -என்று கேட்க
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிகதமோ மத -என்று தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசத்தான் இறே

த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலேயே எம்பெருமானே ஆஸ்ரயணீய தைவம் என்று நீங்கள் பற்றுகிறது என்ன-அஃது ஒன்றும் அன்று எம்பெருமானார் காழிச்சால் மூலையில் தேவதையை ஆஸ்ரயித்தார் யாகில் அதுவே எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக் கடவது -என்றாள் -அந்த நியாயத்தாலே ஆழ்வார் தமக்குத் தஞ்சமாக நினைத்திருந்த ததீய சேஷத்வத்தையே விரும்பித் தமக்குப் புருஷார்த்தமாக அத்ய-வசிக்கிறார்-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கல் அனுஷ்டான சேஷமாகக் காணப்பட்டது –
வேத உப ப்ரும்ஹணார்த்தாயா தாவ க்ராஹயத ப்ரபு -என்று வேத உப ப்ரும்ஹண அர்த்தமாக ப்ரவ்ருத்தமான ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் தர்ம ஸம் ஸ்தாபன அர்த்தமாக அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
கர்த்தா காரயிதா ச ஸ –என்கிறபடியே அனுஷ்ட்டிப்பிக்கைக்காக -ஒருவன் சொன்னதை ஒருவன் செய்யக்கடவன் -என்கிற முறை நேராக அழிந்து கிடைக்கையாலே பித்ரு வசன பரிபாலனாதி களாலே ஸாமான்ய தர்மத்தை அனுஷ்ட்டித்தார் பெருமாள் –
பிதுர் வசன நிர்தேசாத்
அகஸ்திய வஸனாத்
ஸூக்ரீவ வஸனாத் –என்று இறே இவருடைய அனுஷ்டானம் –

சேஷ பூதன் நிருபாதிக சேஷியைக் குறித்து கிஞ்சித் கரித்துத் தான் உளனாகக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இறே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

இப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா என்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -இங்கு மாதா பிதாக்களைக் கேள்வி கொள்ளுதல் பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்-செய்யும் அளவு
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் -என்றான் இறே சதாநீகன்
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
கச்சதா என்றதிலே அர்த்த ஸித்தம் அன்றோ-ததா என்கிறது என் என்னில் அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -இங்கு அதுக்கு ஆஸ்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்கிறது -ஆகவே புனர் யுக்தி தோஷம் இல்லை -சேஷத்வ விரோதிகள் அன்றோ இரண்டுமே –
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இறே-அகமாவது உத்தேச்ய விரோதி -இவ்விடத்தில் ராமபக்தி -அல்லாதார்க்கு ராமபக்தியும் கலசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாபம் என்னப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -என்று பாப சப்த வாஸ்யம் -ஆகையாலே பரத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம சவுந்தர்யத்தில் இழிந்து ராம பக்தியில் கால் தாழுமதுவும் பாபமாம் இத்தனை –ராமே பிரமாதம் மா கார்ஷி புத்ர பிராதரி கச்சதி -என்று ராம அனுவ்ருத்திக்கும் இடைச்சுவராகச் சொல்லிற்று இறே
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ லஷ்மணன் என்றும் ராஜ்யத்தைப் பாரமாக நினைப்பவனாகையாலே பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன் உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் பரிசு மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இறே இருப்பது
நீத-என்கையாலே சேஷத்வத்தில் அசித் கல்பனாய் போந்தான்
ப்ரீதி புரஸ்க்ருத என்கையாலே ஸ்வரூப அனுரூபமான விருத்தியலே சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று இறே அபியுக்தர் வார்த்தை
அநக -நித்ய சத்ருக்ந-என்று பாவனத்வ போக்யதையாலும் அவனையே பற்றினான் என்றுமாம்
இவற்றுக்குப் பிரயோஜனம் என்ன என்னில்
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இறே
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு ஸ்ரீ வைஷ்ணவ விஷயீ காரத்துக்கு முன்னர் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

இப்படி இவர் பரமாச்சார்யரான ஆழ்வார் விஷயத்தில் -தேவு மற்று அறியேன் -என்று தேவதா பிரதிபத்தியைப் பண்ணுகைக்கு அடி என் என்னில்
தேவ மிவ ஆச்சார்யம் உபாஸீத -என்றும்
ஆச்சார்யோ தேவோ பவ -என்றும்
ஆச்சார்யர் விஷயத்தில் தேவதா பிரதிபத்தி பண்ணச்சொல்லி வேதாந்தம் விதிக்கையாலும்
குருர் ஏவ பர ப்ரஹ்ம
ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாச் சர ரூபி ந சம்சய
ஏஷ வை பகவான் ஸாஷாத் பிரதான புருஷேஸ்வர
யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மரத்தய மயீம் தநும் -மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
இது முதலான ப்ரமாணங்களிலே சர்வேஸ்வரன் தானே ஆச்சார்யனாய் வந்து அவதரித்து ஸம்ஸார ஆர்ணவ மக்நரான ஸம்ஸாரி சேதனரை கேவலம் தன் கிருபையாலே சாஸ்த்ரார்த்தங்களை உபதேசித்து உத்தரிப்பிக்கும் என்று முக்த கண்டமாகச் சொல்லுகையாலும்

க்ருதே அத்ரி ஸூநுர்ப் பகவான் த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச -என்று
ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா -என்று
நாஸ்திக ஜநாக்ராந்தமான கலியுகத்தில் சர்வேஸ்வரனுடைய அம்ச அவதாரமாய் -தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார் என்றும்

கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -என்று
கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் பக்த ரூபேண வந்து அவதரிப்பான் என்று சொல்லுகையாலும்

கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -என்று
ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து
அந்த நதீ விசேஷங்களிலே ஜல பானம் பண்ணுபவர்களுக்கு பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகையிலே பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே
த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –என்றும்
தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி என்றும்
நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம் -என்றும்
அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ -என்றும் சொல்லுகிறபடியே
அந்த நதீ தீரத்திலே -நல்லார் நவில் குருகூரில் -யுக வர்ண கிரமத்திலே -அவதரித்த சர்வேஸ்வரன் தானே
குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் –என்கிறபடியே
ஸப்த புருஷம் பகவத் ஏக பரராம்படியரான காரியார் இடத்திலே வந்து அவதரித்து -காரி மாறன் சடகோபன் என்று பரம ஆப்த தமரான தாமே அருளிச்செய்யும் படி ப்ரக்யாத ப்ரபாவராகையாலே
இவ்வாழ்வாரே ஸகல ஜன ஜீவாதுவாய் -சர்வோத்தரகமான பகவத் அவதாரமே என்று அறுதியிட்டு அவரே பர தேவதை என்று ஸ்ரீ மதுர கவிகள் பற்றினார் யாயிற்று –

அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆச்சார்யத்வ பிரதிபத்தி பண்ணினார் ஆழ்வார்
இவர் ஆச்சார்ய விஷயத்தில் பகவத் பிரதிபத்தி பண்ணுகிறார் தேவு மற்றறியேன் -என்று –
ஈஸ்வர ஆச்சார்யத்வங்களாகிற தர்ம த்வயங்களும் கார்ய பேதத்தாலே வ்யக்தி த்வய சாதாரணமாய்க் காண்கையாலே இருவர் பக்கலிலும் இரண்டு பிரதிபத்தியும் நடக்கக் குறையில்லை
ஸ்ரீதர ஆதி குரவே -என்று ஸ்ரீயப்பதியான ஈஸ்வரன் தானே பிரதம ஆச்சார்யனாய்
ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த –என்கிறபடியே
குரு பரம்பரையும் ஞாதவ்யமாகையாலே தத் பரம்பரா ப்ரவர்த்தாகத்வமும் ஸ்வ நிஷ்டமாகையாலே சரம ஆச்சார்யத்வமும் தன்னை ஒழிய அனுபபன்னமாகையாலே ஆச்சார்ய அவதாரமும் ஈஸ்வர க்ருத்யமாம் அத்தனை –

சம்பவாமி யுகே யுகே -என்று வாயோலை செய்தது ஆச்சார்ய அவதாரத்தை ஒழிய அன்று இரே -ஆகையாலே நம்மாழ்வார் பகவத் அவதார விசேஷமாகையாலே அவர் விஷயத்தில்
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்களை
அறுதியிட்டு ஸ்ரீ மதுரகவிகளும் தத் ஏக நிஷ்டராகக் குறையில்லை

இப்படி ஸ்ரீ மதுரகவி யாழ்வார் பர தேவதையாக பிரதிபத்தி பண்ணின ஆழ்வார் விஷயத்திலே பிரதம பர்வமான ஈஸ்வரன் தானே சரம பர்வமான ஆழ்வாராய் வந்து அவதரித்தார் என்றும் உத்தேச்யத்வ பிரதிபத்தி பண்ணாதே ஸஜாதீயத்வ பிரதிபத்தி பண்ணினவர்கள் யாவதாத்ம பாவி ரௌரவாதி நரகத்தில் அழுந்துவர்கள் அத்தனை –
விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ் -யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரகபாதி நவ் -என்று
ஆச்சார்ய விஷயத்திலே மனுஷ்யத்வ பிரதிபத்தி பண்ணினவனுக்கு நரக பதனமே பலமாக ஸாஸ்த்ரம் சொல்லா நின்றது இறே
நம்மாழ்வார் பகவத் அவதார விசேஷம் பிரதிபத்தி தான் ஆஸ்ரித அக்ரேஸராய் பிரமாண பரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலை நிற்கும்-யத் ஸார பூதம் தத் உபாஸி தவ்யம் -என்றும்
பஜேத் ஸார தமம் ஸாஸ்த்ரம் -என்றும்
சொல்லுகிறபடியே ஸகல சாஸ்த்ரா ஸாரார்த்தமாய்
ஸ்ரீ மதுரகவிகள் நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாச்சார்யர்களாலே உபதேச பரம்பரா ப்ராப்தமாய் –ஆத்மாவைப் நேரே வகுத்த விஷயமாய் -ஸ்வா தந்தர்யாதிகள் கலசாதே எப்போதும் காருண்ய ஏக விஷயமாய் -அதி ஸூலபமாய் -மோக்ஷ ஏக ஹேதுவாய் இருந்துள்ள சரம பர்வமான நம்மாழ்வாரையே
உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் –என்கிறபடியே
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் பற்றி நிர்ப்பரராய் இருக்குமவர்களுக்குப் பேற்றிலே கண்ணழிவு இல்லை-ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் -என்று
பிரதம பர்வமான ஈஸ்வரனைப் பற்றினவர்களுக்குப் பேற்றிலே சம்சயமுண்டு -சரம பர்வமான ஆச்சார்யனைப் பற்றினவர்களுக்குப் பேற்றிலே கண்ணழிவு இல்லை என்னா நின்றது இறே
குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து -என்று
அவதார விசேஷமான ஆச்சார்யனே ஸம்ஸார உத்தாரகன் என்று சாஸ்த்ரா ஸங்க்ரஹ தாத்பர்யமாகையாலே
பரம ஆச்சார்யரான நம்மாழ்வாரே ஸம்ஸார உத்தாரகர் என்னும் அர்த்தம் ஸூ வ்யக்தம் –

மற்றை யாழ்வார்கள் இவருக்கு கரணவத் பரதந்த்ராகையாலே ஏதத் அந்தர்பூதராம் அத்தனை -இவ்வாழ்வார் தாமீ அர்ச்சாவதார சமாதியாலே பூர்வமேவ கிலங்களான ஸர்வ பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குத் திருவாய் மலர்ந்து தாமே அருளிச் செய்கையாலே இதர பிரபந்த வக்தாக்களான ஆழ்வார்கள் இவருக்கு அநந்யார்ஹராய் அவயவ பூதராகக் குறையில்லை -இப்படி ஸகல இதர விலக்ஷணராய் பரமாச்சார்யரான நம்மாழ்வாரே சாஷாத் பகவத் அவதாரமே என்றும்
அவர் திருவடிகளே உபாயம் என்றும்
அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்
அவருடைய முக உல்லாசமே பரம ப்ரயோஜனமாகவும்
அவர் எழுந்து அருளி இருக்கிற இடமே ப்ராப்ய பூமியாகவும்
அவருடைய விக்ரஹ அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகளாகவும்
பிரதிபத்தி பண்ணி விஸ்வஸித்து இருக்கும்
சரம அதிகாரி சேகரராய்த்து ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் –

இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இரே -எங்கனே என்னில்
அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்

அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்
அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னாடி மெய்மையே -என்றார்
அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –
அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்
அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்
அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றால் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்
அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –
அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்
அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –
அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –
அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்
அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –
அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்
அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்
அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –
அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –
அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்
அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –
அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –
அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் -அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –

இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து
தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்
அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்
ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –
அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –
இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்
ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்
தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்
பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –
இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய்
தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்
இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –
இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி -வியாக்யானம் -ஸ்ரீ திருக்குடந்தை உ வே திருமலாச்சார்யார் ஸ்வாமிகள் -பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ வே வேங்கடாசச்சார்யார் ஸ்வாமிகள்-

January 24, 2025

ஸ்ரீ திருமண்டங்குடியில் -கலி 287 -பிரபவ வருஷம் மார்கழி -கிருஷ்ண பக்ஷம் -சதுர்த்தசி -செவ்வாய் கிழமை -கேட்டை நக்ஷத்ரம் -ஸ்ரீ வைஜயந்தி மாலா வனமாலிகை அம்சமாக வேதியர் குலத்தில் திருவவதரித்தார்-அநவரதம் திருவரங்கத்து எம்பெருமான் மேல் நிலை நின்ற சிந்தையராய் ராய்‌ அழகிய மணவாளனுக்குத்‌ திருமாலை கட்டிச்‌ சாத்தித்‌ திரு நந்தவன கைங்கரியம்‌ விடாது செய்து கொண்டு கொண்டு, 45 – பாசுரத்‌தால்‌ திருமாலை யென்ற பிரபந்தத்தையும்‌, பத்துப்‌ பாசுரமுள்ள திருப்பள்ளி யெழுச்சியையும்‌, திருவாய்‌ மலர்ந்தருளி உலகத்தை வாழ்வித்தருளினார்‌ –தீ வினைகளனைத்தையும்‌ வேருடனறுத்துத் துடைத்து உய்வதற்கு, எம்பெருமான்‌ தமரடிகளி லொட்டிய தூசியைத்‌ தலை மேற் கொள்ளலே தக்க பிராயச்‌ சித்தமென மனதில் கொண்டவராதலால்‌, “தொண்டரடிப் பொடி” என்றதையே தமது திருநாமமாக உகந்தருளினார் –

முதலில்‌ நித்ய விபூதியிலுள்ள பர வாசு தேவனாகிய பரப்‌ ப்ரஹ்மமே இந்த அணி யரங்கன்‌ பரமபுருஷாரத்த மாகிய வீட்டின் கண்‌ ஆசை யுற்ற முமுஷுக்களாகிய யோகிகளுக்கு த்யேயனுய்‌, பரம கதி யாய்‌, ௮ஷரமாய் , பரஞ்சோதி ஸ்வரூபனாய்‌ அகில உபநிஷத்துக்களிலும்‌ பிரதி பாதிக்கப் படுமவனாயுள்ள பர வாஸூதேவனாகிற பரப் ப்ரஹ்மத்தைத் தியானித்து அடையத் தக்க சேதநர்கள்‌ அளவிறந்து இடையறாது வரும்‌ பிறவிக்குக் காரணமாகிய வித்தை வறுத்தழித்து, மறு படியும்‌ திரும்புதலில்லா ஸாஸ்வத பரம பதத்தில்‌ எஞ்ஞான்றும்‌ வரம்பில் இன்பம் யுடையவராய் வீற்று இருப்பர் என்று கூறப்படுகிறது – அப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவமாகிய பரம பதத்தின்‌ லக்ஷணம் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கூறி இருக்கிறது -(1-22-47–53)-

இதன் பொருள்–ஞான மயனான விஷ்ணுவினுடைய ஞான ரூப பரம பதமானது முயற்சி வேண்டாததாயும்‌, ஒருவராற்‌ கற்பிக்க வேண்டாததாயும்‌, எங்கும் ஓழிவற நிறைந்து நின்றதாயும்‌, ஒத்‌திலதாயும்‌, அபரோக்ஷமாய்த்‌ தனக்குத் தானே விளங்‌கி ஸாக்ஷாத் கரிக்கத் தக்கதாயும்‌, தன்னிலை யிற்றானே யுளதாயும்‌, கூறற்குரிய குறிப்பற்றதாயும்‌, ஒடுக்க முடையதாயும்‌, ௮ச்சமிலதாயும்‌, தூயதாயும்‌, எவ்வித பாவனைக்கும் மெட்‌டா தாயும்‌, பற்றிலதாயுமுள்ளபடி மிரா நின்றது. அப்படிப்பட்ட பரம பதத்தில்‌ உட்பற்று புறப்‌ பற்றனைத்தையுமறுத்து எந்த யோகிகள்‌ ஒன்றி யொடுங்குகிறார்களோ, ௮வர்‌கள்‌ பிறவியாகிற விதையைத்‌ தீய்த்து விடுகிறார்கள்‌, இந்தப்படி குற்ற மற்ற தாயும்‌, என்றுமுளதாயும்‌, முற்றவுநின்றதாயும்‌, அழிவற்ற தாயும்‌, எவ்வித வேறுபாடிலதாயும்‌, இருக்கிற விஷ்ணு என்ற பெயரை யுடைய உயர்ந்த நிலையான பரப் ப்ரஹ்மத்தை யடைகிற பரம யோகி யானவன்‌ திரும்பப்‌ பிறவி யென்‌னும்‌ பெரும் வலையுள்‌ அகப்படமாட்டான்-

அஸ்திர பூஷண அத்யாயம்
௧) ஜீவாத்மா (புருடன்‌) – ஸ்ரீகெளஸ்துப மணிஸ்வரூபமாகவும்‌,
(௨) பிரகிருதி – ஸ்ரீவத்ஸம்‌ (திருமறு) ஆகவும்‌.
(௩) புத்தி அதாவது – மஹான் – தண்டு ஆகவும்‌,
(௪) பூதாதி அதாவது தாமஸ அஹங்காரம்‌ சாரங்கம்‌ ஆகவும்‌,
(டு) இங்திரியாதி – ஸாத்விக அஹங்காரம்‌ சங்கம்‌ ஆகவும்‌.
(௬) மனசு -திருவாழி ஆகவும்‌.
(௭) சூஷ்ம பஞ்ச பூதமும் ஸ்‌தூல பஞ்சபூதமும்‌- வைஜயந்தி மாலை யாகவும்‌
(௮) ஞானேந்திரிய கர்மேந்தரியங்கள் பத்தும்‌ பாணங்களாகவும்‌,
(௯) தெருள்‌ (ஞானம்‌) நந்தகமாகிய கத்‌தியாகவும்‌.
(௧௦) மருள்‌ (௮ஞ்ஜானம்‌) – ௮க் கத்தியின் உறையாகவும்

புருடன் மணி வரமாகப் பொன்றா மூலப் பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் உறையாக ஆங்கு அரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வன மாலையாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே–அதிகார ஸங்க்ரஹம்-41-

தொண்டரடிப்பொடி யாழ்வார் முதலில்‌ ஸ்வருப உபாய புருஷார்த்த சூந்யராய்‌, தேகத்தில்‌ ஆத்ம புத்தியைப் பண்ணி, சப்தாதி விஷயங்களில்‌ ஸம்‌ஸரித்துக் கொண்டு ஸூப்‌தரா யிருந்தார்‌, அதைக் கண்டு பெரிய பெருமாள் நிரவதிக கிருபையாலே அவரிடம்‌ சென்று உணர்த்தி தன்னைக்‌ காட்‌ டிக் கொ டுத்து, விஷயாந்த்ரப் பிராவண்யத்தை மாற்றி , ஸ்வருபாது ரூபமான அபிநிவேசத்தைத்‌ தன் பக்கலிலே பிறப்பித்தார்‌, அப்போது இவ் வாழ்வாரும்‌ ௮ஞ்‌ஞானம்‌ நீங்கி சத்வந்தலையெடுத்து ”ஆதலால் பிறவி வேண்டேன்‌?’ என்றும்‌,-எம்பிராற்காட்‌ செய்யாதே யென்செய்வான்‌ தோன்றினேனே” என்றும்‌
அத்‌யவஸிக்கும்படியான ஞானம் பிறந்து
புன் கவிதையேனும்‌ எம்பிராற்‌கு இனிய வாறே” என்று திருமாலையிற்‌ சொல்லியபடி. பெரிய பெருமாளுக்‌ இனிதான வாசிக கைங்கரியத்தைப்‌ பெற்று நின்றார்‌, இப்படிப்பட்ட ஞான விசேஷத்தை யுடையரானபடியை நினைத்து, இவரை யிப்படிப்‌ பெறும்‌ படியாயிற்றே யெனப்‌ பிரீதிப்‌ பிரகர்ஷத்தாலேயும்‌, இவரை வென்ற தன்‌ வைபவத்தை நினைத்தும்‌, எல்லாரையுமிவரைப் போலே நம் பக்கலிலே பிரவணராக்கும் விரகேதோ? என்று ததேகாக்‌ர சித்தராய்க் கொண்டு பள்ளி கொண்‌ டருளினார்
ஆழ்வாரும்‌ கைங்கரியத்‌ த்வரையாலே சென்று, பெருமாளை நிர்ப்பந்தித்துத்‌ திருப் பள்ளி யுணர்த்துகிறார்

இப்பிரபந்தத்தின்‌ ஸாராம்சமாவது – உன்னடியார்க்கு ஆட்படுத்தா யென்றும்‌, தூய பர்யந்தமான காயிக கைங்கரியத்தைக்‌ கொண்டருள வேணு மென்றும்‌, பெரிய பெருமாளைப்‌ பிரார்த்திக்கப்‌ படுகிறது

இதிற்‌ பாசுரங்கள் – ௧0,
இவைகள்‌ எல்லாவற்றுள்ளும்‌ மன்னரை வந்திகள்‌ உணர்த்துமாப்போலே பிரபாத ஸூசகங்களைச்‌ சொல்லி ஆராத யோக்யமான கலமாயிற்றென்றும்‌, திருப்பள்ளி யுணர்ந்தால்‌ கண்டருளும்‌ படி. மங்கள வஸ்துக்கள்‌ நிறைந்தபடி யையும்‌, மங்கள வாத்யங்கள்‌ முழங்கு படியையும்‌ கூறி தொண்டரடிப் பொடியான அடியேனும்‌ நான்முகன் முதலிய தேவர்கள்‌ அனைவரும்‌ தேவரீர் திருப் பள்ளி யுணரும்‌ வடிவழகு கண்டு ஆனந்தித்துத்‌ திருவடி தொழுது, மங்களா சாஸனம் செய்ய வேண்டுமென்று ௮வசரப்‌ பிரதிஷீகராய்க் காத்து நிற்கின்றோம்‌, ஆதலால்‌ உணர்ந்தருளிக்‌ கடாக்ஷித்து கைங்கரியங்‌ கொள்ள வேணுமென் றும்‌ பெரிய பெருமாளைத் தொண்‌ டரடிப் பொடி ஆழ்வார்‌ பிரார்த்திக்கிறார் -.

இத் திருப்பள்ளி யெழுச்சியாகிய பிரதம ஆராதனதை யாழ்வார்‌ உப லக்ஷணமாகக்‌ கூறியபடியாம்‌-நாம்‌ நாள்முழமுவதும்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ புரியத் தக்க யதோக்தமான ஷோடஸ உபசார யுக்தமான திருவார தனம் எனக்கொள்ள வேண்டும்

————–

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

திருமாலை ஆண்டான்-தனியன் அருளிச் செய்தவர்-ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் 

தம்‌ – அந்த
ஏவ – (பர வாசுதேவம்‌ என்‌பதோடு அந்வயம்‌)-பர வாஸூ தேவனே என்றபடி
மத்வா – பிரபத்தி செய்து
பர வாசுதேவம்‌ – பரம பத நாதனாகவே
ரங்கேசயம்‌ – திருவரங்கத்தில்‌ பள்ளி கொண்ட
ராஜவ,த்‌ – சககிரவர்‌தியைப் போல்
௮ர்ஹணியம்‌ – பூஜ்யராய்
ப்ராபோதகீம்‌-திருப் பள்ளி யுணர்த்‌துவதான
யக் ௮க்ருத – யார் செய்தாரோ
ஸூக்திமாலாம்‌ – நல்ல சொன் மாலையை-மாலா ஸப்தத்தாலே திருமாலை திவ்ய பிரபந்தமும் ஸூசகம்
பக்தாங்க்ரிரேணும் –தொண்டர் அடிப்பொடி என்ற
பகவந்தம் -ஆழ்வாரை
ஈடே-ஸ்துதி செய்து பணிகிறேன்

காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்

ஸ வாஸுதேவோ ரங்கேஸ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்!

விமாநம் ப்ரணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம்

ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஸக:

வைகுந்தத்தில் ஓடுகின்ற விரஜை நதிதான் காவேரீ! ஸ்ரீரங்கவிமானமே வைகுந்தமாம்! வாஸுதேவனே அரங்கன்! ப்ரணவமே விமாநம்! விமானத்தின் நான்கு கலசங்கள் நான்கு வேதங்கள்! உள்ளே கண்வளரும் அரங்கனே ப்ரணவத்தினால் விவரிக்கப்படும் பரம்பொருள்!

இங்‌கு இருந்த வண்ணமே, “இப் புவனியும்‌ விண்ணுலகும்‌, அங்காதுஞ்‌ சோராமே யாள்‌கின்ற வெம்பெருமான்‌, செங்கோலுடைய திருவரங்கச் செல்வர்‌- என்றபடி, இரண்‌டு விபூதிகளையும்‌ காத்தருளுகிறான்

சக்‌ரவர்‌த்தியைப்போல்‌ பக்‌தியுடன்‌ பூஜிக்கப் படத் தக்கவராய்‌ திருவரங்கத்தில்‌ பள்ளி கொண்ட ௮ழகிய மணவாளனை, மறைகளின்‌ உச்சியில்‌ விளங்‌கும்‌ ஸாஷாத் பரமபத நாதனென்றே உய்த்துணர்ந்து பிரபத்தி பண்ணி, வைகறைப் பொழுதில்‌ துயிலினின்று உணர்த்துவதான நல்ல சொன் மாலையை அருளிச் செய்தவர்‌ யாரோ, அப்படிப்பட்ட வைபவத்தை யுடைய ஞானாதி குண பூர்ணரான தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரைத் துதித்துத் தொழுகிறேன்

—————–

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்

தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு

திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி

வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்த தனியன்

மண்டங்குடி என்பர் –திரு மண்டங்குடி என்றும் கூறுவர்
மா மறையோர் -மிக்க வேதியர்
மன்னிய சீர்-நிலை பெற்ற புகழையுடைய
தொண்டர் அடி பொடி -தொண்டர் அடி பொடி-என்ற திருநாம கொண்ட ஆழ்வார்
தொன் நகரம் -புராதனமான நகரம்
வண்டு-பிரமங்கள்
திணர்த்த -நெருங்கி முரலும்-நீர்ப்பூக்கள் மலரும் படியாக நீர் வளத்தைச் சொன்னபடி-
வயல் -கைதைகள் சேர்ந்து
தென் -தர்சனீயமான
அரங்கத்து -திருவரங்கத்து பெரிய கோயிலிலே
அம்மானை -திருக்கண் வளர்ந்து அருளுகிற ஸர்வ ஸ்வாமியான-அழகிய மணவாளனை
பள்ளிவுணர்த்தும் பிரான் –திருப்பள்ளியின் நின்றும் துயில் நீத்தலை விண்ணப்பம் செய்யும் ஸ்வாமிகள்-உபகாரன் -பின்புள்ளவரும் அநுஸந்திக்கும் படி அபகரித்து அருளியவர்
வுதித்த ஊர்–திருவவதரித்த தேசம்

———————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அனைத்து உலகும் காத்தளிக்கும்‌ அழகிய மணவாளா! இப்போது ஆதித்யன்‌ உதய கிரியை வந்தடைந்திருக்கிறான்‌-ராத்திரி முழுவதும்‌ நிபிடமாயிருந்த இருளானது விலகிப் போயிற்று-திருவாராதனஞ்செய்வதற்கு யோக்யமான நல்ல உதய காலமாயிற்று-தாமரை செங்கழுநீர் முதலிய பெரிய புஷ்பங்களெல்‌லாம்‌ விகஹிதமாய்த்‌ தேன் சொரிந்து வெள்ளமிடாநின்றன- தேவர்களும்‌ ராஜாக்களும்‌ ஒருவர்‌ஃகொருவர்‌ முற்கோலி வந்து கூடி. உபய விபூதி யுக்தனான உனது திருக் கண்ணோக்கமான எதிர்ப் பக்கத்தில்‌ நிறைந்து நிற்கின்றார்கள்‌-இவர்களோடே வந்த இவர்கள்‌ வாகனமாகிய பெரிய ஆண் யானைத்‌ திரள்களும்‌, பெண் யானைத் திரள்களும்‌ பேரிகைகளும்‌ சப்திக்கும் போது எல்லாத் திக்குகளிலும்‌ அலை யெறியா நின்ற சமுத்திர கோஷத்தை யொத்திருக்கின்றது-ஆத லால்‌ திருவரங்க மேவிய செல்வனாரான தேவரீர்‌! திருப் பள்ளி யுணர்ந்து ௮டியோமைக்‌ கடாக்ஷித்து ௮டிமை கொண்டருள வேணும்-

———————–

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

அன்னமாயருமறை பயந்த ஆதிப் பிரானே ! தேவரீர்க்கு விண்ணப்பம்‌- விடியற்காலத்துக்‌ கீழ் காற்றானது செழுமையான முல்லை மலரின்‌ பரிமளத்தை யளைந்து கொண்டு வந்து *நீங்கள்‌ உறங்குகிறதென்‌’ என்‌று உணர்த்துவது போல சூழ்ந்து கொண்டு முகங்களிலே வீசுகின்றன- அன்றியும்‌ தாமரைப் பூவாகிய படுக்கையிலே உறங்கின ௮ன்ன மிதுநங்கள்‌ இரவு முழுவதும்‌ பனியால் நனைந்து போன தம்மழகிய சிறகுகளை யுதறிக் கொண்டு உணர்ந்தெழுந்து விட்டன, ஆகையால்‌ திருவாராதனத்துக்கு யோக்கியமான காலமாயிற்று-விழுங்கின முதலையினுடைய பிலத் வாரத்தை யொத்த பெரிய வாயில்‌ எயிற்றாலே நெருக்‌குண்டு அதன்‌ பல் விடத்தால்‌ நோவு பட்டுப்‌ பயந்து கதறிக் கூவின ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வானுடைய பெரிய ஆபத்தைத் தீர்த்தருளின பரமோபகாரகனாய்‌, கோயிலில்‌ நித்திய ஸன்னிதி பண்ணி யருளும்‌ ஆஸ்ரித வாத்ஸல்யனான தேவரீர்‌ அடியேங்களுடைய ஆர்த்தி யெல்லாம்‌ தீரும்படி. யுணர்ந்தருளிக்‌ கடாக்ஷித்‌தருள வேனும்‌-

———

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

ஸர்வ சரண்யனான ஓ ஸ்வாமீ! தேவரீர்‌ திருவடிகளில்‌ விண்ணப்பம்‌-பார்த்த விடமெங்கும்‌ ஆதித்ய கணங்கள்‌ பரம்பி நிற்கின்றன-இரவெல்லாம்‌ பளிச்சுப் பளிச்சென்று ஒளி விசிக் கொண்டிருந்த நக்ஷத்தரங்கள்‌ ஒளி மழுங்கிப் போயின- விஸ்தாரமாய்‌ நிலவெறிக்கும்‌ குளிர்ந்த சந்த்ரனும்‌ பிரகாசம்‌ குறைந்து வேற்றுருவடைந்தான்‌-எல்லி முழுதும்‌ பரவி நின்ற இருளும்‌ விலகிப் போயிற்று-பசுமையான சோலைகளிலுள்ள பாக்கு மரங்களின்‌ பாளைகள்‌ விகஸிதமாய்‌ அவற்றின் மணத்தை விடிவோறைக்‌ காற்றானது. விசேஷமாய்‌ வாரிக் கொண்டு வருகின்றது- ஆதலால்‌ தேஜஸ் பிரசுரமான திருவாழி யாழ்வானைத்‌ திருக்கையில் தரித்தருளின ஒ ஸ்வாமீ! திருவரங்கத்தைக்‌ கோயில் கொ ண்ட திருவின் மணாளா ! தேவரீருடைய திரு வடிவழகை ௮டியோம்‌ அனுபவிக்கும்படி திருப் பள்ளி யுணர்‌ந்தருள வேணும்-

————–

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

பதவுரை

மேடு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

பருத்த வயிற்றை யுடைய இளம் பருவத்து எருமைகளைக்‌ கட்டவிழ்த்து விடுகிற இடையர்களூதும்‌ புல்லாம்குழலோசையும்‌, எருதுகளின் கழுத்தில்‌ கட்டி யிருக்கும்‌ மணிகளின்‌ ஓசையும்‌ -இவ் விரண்டும்‌ கூடிச் சேர்ந்த சப்தமானது திஸ்க்குகளனைத்துஞ்‌ சென்றொலி கொண்டது–கழனிகளில்‌ அலர்ந்த தாமரை செங்கழுகீர் முதலிய மலர்களிலுள்ள மதுவைப்‌ பானஞ்செய்யும்‌ வண்‌டுக் கூட்டங்கள்‌ அங்கங்கு சிதறி யோடிப்‌ போய் விட்டன-முற் காலத்தில்‌ இலங்கையில் வாழ்ந்த அரக்கர் குலத்தை அடியுடனறுத்த அழகிய ஸ்ரீசார்ங்கத்தைத்‌ திருக் கைகளிலேந்தியவராய்‌, பிரமாதி வானவர்க்கும்‌ அதிபனான ஸ்வாமியே ! விசுவாமித்திர மா முனிவருடைய யாகத்தை யாதொரு கலிவும்‌ வாராமற்‌ பாதுகாத்து யாக முடிவிற்‌ செய்யும்‌ ஸ்நாநத்தையும்‌ செய்து வித்தவராய்ப்‌ பகைவரைக் கொல்லும்‌ வலிமை யுடையவராய்‌ திருவயோத்‌தியை யாளும்‌ எம் ஸ்வாமியான சக்கரவர்த்தித்‌ திருமகனே | உபய விபூத யுக்தனான திருவரங்க மேவிய செல்வனே ! தேவரீர்‌ திருப் பள்ளி யுணர்ந்து அடியோமுக்கு முகங் கொடுத்தருளி ௮டிமை கொண்டருள வேணும்-

————-

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

ஆஸ்ரித பராததீனரான ஸ்வாமீ! தேவரீர்க்கு விண்ணப்பம்‌-விகஸிதமான புஷ்பங்களை யுடைய திருச் சோலையிலுள்ள பக்ஷிக் கூட்டங்கள்‌ உணர்ந்து ஆர வாரியா நின்றன-இருளுக்கிருப்பிடமான இராத்‌திரியானது விலகிற்று-ஆராதன யோக்யமான விடியற் காலமானது வந்தது-கீழ்த் திசையிலே கோஷிக்‌கிற ஸ்வபாவமுடைய சமுத்திரத்தின்‌ ஒலியானது எங்கும்‌ வியாபித்தது-மதுபானம் பண்ணிக் களிக்கிற வண்டுகள்‌ ரீங்காரஞ்‌ செய்து கொண்டிருக்கும்‌ நாநா விதமான புஷ்பங்களாலே தொடுத்து சுந்தரமான ௮சைந்தாடும் மாலையைக்‌ கைகளிலே ஏந்திக் கொண்டு அமரர்கள்‌ மந்திர புஷ்பம் பண்ணிப்‌ பரிமாறுகைக்‌காக அருளப்பாடிடுவது எப்டோதோ’ என்று அவஸரப் பிரதீக்ஷகராய்‌ வந்து. நின்றார்கள்‌-ஆகையால்‌, அனைத்துலகுக்கும்‌ நாதனே ! ஸ்ரீவிபீஷணாழ்வான்‌ தாஸ வ்ருத்தியைப் பண்ணுகிற திருவரங்கத்திலே திருப் பள்ளி கொண்டருளும்‌ தேவரீர்‌ உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் –

———–

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

பராவரேசனான ஸ்வாமீ! தேவரீர்க்கு விண்ணப்பம்‌) அழகாய்ப்‌ பெரியதான தேர்களை யுடைய துவாதச ஆதித்தியர்களும்‌, ஜகத்துக்கு நிர்வாஹகரான ஏகாதச உருத்‌திரர்களும்‌, எப்போதும்‌ விட்டு இறங்காத மயில் வாஹநத்தை யுடைய சுப்பிரமணியனும்‌, நாற்பத்தொன்பதின்மரான மருத் கணங்களும்‌, அஷ்ட வசுக்களும்‌ ஸபரிவாரமாய்‌ ஒருவர்க் கொருவர்‌ முற்கோலி வந்து நெருங்கி நிற்பதுமன்றி இவர்களுடைய வாஹநமான குதிரைகளும்‌ இரதங்களும்‌ மற்றும்‌ பாட்டுகள்‌ ஆட்டங்களுடனே தேவ ஸேநாபதியான சுப்பிரமணியனோடு வந்த நிபிடமான ஸேநா ஸமூஹமும்‌, மாமேருவை யொத்‌திருந்துள்ள கோயிலில்‌ தேவரீர்‌ திருக் கண்ணோக்கத்துக்கு எதிரிலே, பிரதம கடாக்ஷம்‌ பெறுகைக்காகத்‌ திரண்டு வந்து நிற்கின்றது- ஆகையால்‌ கோயிலின் கண்‌ திருக்‌ கண் வளர்ந்தருளும்‌ தேவரீர்‌ இவர்களைக்‌ கடாக்ஷிப்பதற்காகத்‌ திருப் பள்ளி யுணர்ந்தருள வேணும் –

——————–

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

திருமறு மார்பனான ஸ்வாமீ, தேவரீர்‌ திருவடிகளில்‌ விண்ணப்பம்‌-எங்களுக்கு ஸ்வாமியான உமது திருக் கோயிலின்‌ வாசலிலே தேவர்க்‌ கதிபதியான இந்திரனும்‌ அவனுடைய ஐராவதமென்ற யானையும்‌ வந்திருப்பது மன்றி, ௮ண்டாந்தர்‌ வர்த்திகளான தேவர்களும்‌, இவர்களுடைய பரிவாரங்களும்‌, ஒருவராலுஞ்‌ செய்து முடிக்க வொண்ணாத ௮ருமையான தவத்தைப்‌ புரிந்த ஸநகாதி மஹர்ஷிகளும்‌, மருத் கணங்களும்‌, சுந்தார்கள்‌ நெருக்கவும்‌, அவர்களுடனே யிச்சாதார்கள்‌ தள்ளவும்‌ யக்ஷர்களும்‌, ஒன்றாகக் கூடி, தேவரீர்‌ திருப் பள்ளி யுணரும் போதை ௮ழகு கண்டு திருவடி,தொழுது திருப் பல்‌லாண்டு பாடவேண்டும் என்ற குதூஹலத்தாலே ஒருவர்க்கொருவர்‌ முற்கோலி வந்து இடி யுண்டு மோஹித்து, ஆகாசாவகாச மிடமடையும்படி. புகுந்து நிற்கிறார்கள்‌, பார்த்தருளீர்‌, ஆகையால்‌ ஸர்வ ஸ்வாமியான தேவரீர்‌ திருப்‌ பள்ளி உணர்ந்தருளி இவர்களை யடிமை கொண்‌டருள வேணும்-

——————

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை  -நோக்கி செல்வது
வாயுறை= அருகம் புல்- மா நிதி- சங்க பத்ம நிதி வந்து விஸ்வரூபம் -உபகரணங்கள் வந்து சேர்ந்தன –
வம்பு=-மணம் கபிலை=-காம தேனு -படி மெய்க்கலம்-சொல்லாத எல்லா உப கரணங்கள் எல்லாம் –
ஏற்ப்பன–தகுதியானவை –  ஆகவே திருப் பள்ளி உணரலாம் என்றுமாம்
தோன்றினான் இரவியும்–நாலாவது தடவை இரவியொளி சொல்கிறார்-
அம்பர தலம்-ஆகாச பரப்பு–பிராத காலம் சந்நிகிதம் ஆனது –
தகுதி படைத்தன காண்டற்கு -ஏற்ப்பன வாயின -திருப் பள்ளி உணர்ந்து  அருள -என்றுமாம்

ஸர்வ ரக்ஷகனான ஸ்வாமியே! தேவரீர்‌ திருவாராதனத்துக்கு ௮நுரூபமான பிராதக் காலமானது ஸன்னிஹிதமாயிற்று-தேவரீர்க்கு ஸமர்ப்பிப்பதற்காக ஸத்ர்சமான, பரிமளமுள்ள அறுகம் புல்லும்‌ ஸ்லாக்யமான சங்க நிதி பத்ம நிதிகளும்‌, கையில்‌ ஏந்திக் கொண்டும்‌ ஸர்வ ஸ்வாமியான தேவரீர்‌ கண்டருளுகைக்காக கபிலா சுரபிகஞம்‌, ஒளி பொருந்திய திருக் கண்ணாடி. முதலாக மற்ற உபகரணங்களெல்லாவற்றையுங் கொண்டு, தேவர்களும்‌ ௮நந்யப்‌ பிர யோஜாரான ரிஷிகளும்‌, மங்கள கீதம்‌ பாடுகைக்குத்‌ தும்புரு நாராதரகளும்‌, அவசரப்‌ பிரதீக்ஷகராய்‌ வந்து நின்றார்கள்‌- இவர்களன்றியும்‌, ஸஹஸ்‌ர கிரணனான சூரியனானவன்‌ தன்னுடைய மிக்க தேஜஸ்ஸைப்‌ பரப்பிக் கொண்டு தோன்றி விளங்குகிறான்‌, ௮ந்தகாரமானது ஆகாசத்தினின்றும்‌ விலகப்‌ போயிற்று, ஆகையால்‌ ௮ழகிய மணவாளனான தேவரீர்‌ திருப் பள்ளி யுணர்ந்தருளி அவற்றைக்‌ கண்டருளி ஆஸ்ரிதரான எங்களுடைய ஆந்தரமான இருட்டைப் போக்கி யருள வேணும்

——–

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே
–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

————

என்தன்‌ ஆருயிர்‌ அனைய வெந்தாய் ! தேவரீர்‌ திருவடிகளில்‌ விண்ணப்‌பம்‌ (தேவரீர்‌ உணர்ந்து தருளும் போது மஙகள கானம்‌ கேட்பதற்காக) குற்ற மற்ற சிறு பறையையும, ஒரு தந்தியை யுடைய வாக்யத்தையும்‌, மத்தளமும்‌ வீணையும்‌, வேய்ங்குழல் புலலாங்குழல் முதலிய குழல்களையும்‌ இவற்திலுண்‌டான நாதமானது திக்குகளெலலாம் நிறைந்து முழங்குமபடி இசையைக்‌ கூட்டி மங்களமான கீதங்கள்‌ பாடத் தந்த கிந்நர்களும்‌, கருடர்களும்‌, கந்தரவர்களும்‌, இன்னும்‌ மற்றுள்ளார்களும்‌, ராத்திரி யெல்லாம்‌ இடையறாது மாதவததைப்‌ புரிகின்ற ரிஷிகளும்‌, அனைத்துத்‌ தேவர்களும்‌, சாரணர்களும்‌, யக்ஷர்களும்‌, சித்தர்களும, இவர்கள் எல்லாரும்‌ தேவரீர் திருப் பள்ளி யுணர்ந்தரும் போதுள்ள தேவரீருடைய திருவடி வழகைக் கண்டு திருவடித்‌ தொழ வேண்டுமென்று த்வரையாலே நெருங்கி நின்றார்கள்‌-ஆனதுபற்றி ஸர்வ ரக்ஷகனான தேவரீர்‌ ௮டியேனுக்காகத் திருப் பள்ளி யுணர்ந்தருளி அழகோலக்‌கமாயிருந்து எல்லாரும்‌ வாழும்படி கடாக்ஷித்‌து அடிமை கொண்டருள வேணும்

—————-

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

காவேரியாமல் சூழப்பட்‌ட கோயிலில் கண் வளர்ந்தருளும்‌ மலர் மகள்‌ மார்‌பா! தேவரீர்க்கு அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பம்‌-திவ்ய பரிமளத்தை யுடைய தாமரைப் புஷ்பங்கள்‌ அலர்ந்துவிட்டன. அம்மலர்க்குக் கேள்வனுன ஆதித்தியனும்‌ ௮லை எறியும்‌ சமு்திரத்தில்‌ உதப கிரியின்‌ மேலே வந்து தோன்றினான்‌-உடுக்கையைப் போன்ற இடையை யுடைய ஸ்‌த்ரீகள்‌ நீராடி, தங்கள்‌ சுருண்டமயிர் முடிகளைப்‌ பழிந்து உதறி விட்டு தம் தம்‌ வஸ்‌திரங்களைத்‌ தரித்துக்‌ கொண்டு கரையேறினார்கள்‌, ஆதலால்‌ விடியற் காலம்‌ ஆயிற்று- தேவரீர்‌ சாத்‌தி யருளுகைக்குத்‌ தகுதியான திருத் துழாய் மாலையும்‌ திருப் பபடலிகையுமாய்த்‌ தோன்றின தோளை யுடையனாய் தொண்டரடிப்பொடி யென்னும்‌ பேரை யுடைய அடியேன்‌ எளியன்‌ என்று கிருபை செய்து தேவரீருடைய தொண்டர்க்குத்‌ தொண்டனாவக்குவதற்காக, உணர்ந்தருளி கிருபை செய்‌து அருள வேணும்‌-

———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களில் இனி -இன்னம் -இன்னும் -பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

January 23, 2025

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை-229 –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்-

இனிமேல் இவர் பிரதமத்தில் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை-திரு விருத்தம்-1–என்று ஆர்த்தராய் சரணம் புக்க போதே
விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல்
இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே வைக்கைக்கு
ஹேது பல உண்டு என்னும் அத்தையும்
அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –

உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த –
நச்சுப் பொய்கை யாகாமைக்கு –
பிரபந்தம் தலைக் கட்ட –
வேர் சூடுவார் மண் பற்றுப் போலே –
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும்
ஆர்த்த் யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .–

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை
இனி யாம் உறாமை -திரு விருத்தம் -1-என்று
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற
பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய்
திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-10-8-10–என்று திரு அடிகளைக் கிட்டி –
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —

பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –

தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –

வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –

ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே –
இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான
விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி வளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13-என்றும்-
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-என்றும்

4-இனி அவர் கண் தங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-

6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-

7-எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-

9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-

10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-

14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-

15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-

18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்றும்

(ஆறாம் பத்திலும் எட்டாம் பத்திலும் இல்லை
இனி -வேறே இடங்களில் –9-10-10-ஹர்ஷத்தால் பாடியவை போல்வன இங்கு எடுக்கப்பட வில்லை -)

இப்படி இருபதின் கால் கூப்பிடும் படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..

ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது –
ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் –
இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –

————————————

இனி (142)

இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4–3-8-4-

இப் பெண் பிள்ளையை பெற்ற தாயார் ஆனவள் –
இவளைப் பிரிந்த பின்பு – பிராணனோடு தரிக்க மாட்டாளோ என்று சொல்லுவாரோ
அன்றிக்கே அவிகிருதராய் இருப்பாரோ

—–

ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவுஅணை பள்ளியானே – நாலாயி:427/4–4-10-5-

இனி என்னைக் காக்க வேண்டும் –-அந்த வையத்தில் உள்ளார் படி அன்றிக்கே –
உன்னுடைய அங்கீகார விசேஷத்தாலே வ்யாவர்த்தனாய் – உனக்கு மங்களா சாசனம் பண்ணி அன்றி தரியாதபடியான பின்பு-இப்படி இருக்கிற என்னை –-என்னுடைய புருஷார்தத்துக்கு விரோதியான யமபடரால் வரும் நலிவில் அந்வயம் இன்றி
ரஷித்து அருள வேணும்

(இனி என்னை-திருப்பல்லாண்டில் பரத்வ ஸ்வபாவ அனுகுணம் -பரமேஷ்டியை சூழ்ந்து இருந்து பல்லாண்டு இங்கு யமபடரால் நலிவு பிரகரணம் )

———–

புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2–5-3-1-

புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன்-
புக்க இடம் எல்லாம் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் –
அந்தர்யாமித்வம்  -பரத்வம் -வியூகம் -விபவம் -அர்ச்சாவதாரம் -அளவாக

அறப் பறித்து -என்று அநிஷ்ட நிவ்ருத்தியும்
கண்டு கொண்டேன் -என்று இஷ்ட பிராப்தியும்
பண்ணித் தந்தோம் ஆகில் -இனி போய் வர அமையாதோ -என்ன –

இனிப் போக விடுவது உண்டோ –
அறப் பறித்து -என்றும் -கண்டு கொண்டேன் -என்றும் தாம் செய்தாராய் அருளிச் செய்கைக்கு அடி –
பிதா தேடின அர்த்தத்தை -தன்னது -என்னும் புத்திரனைப் போலே –

இனிப் போய் வர அமையாதோ என்ன -இனி  போக விடுவது உண்டே –
1-விரோதியில் சிறிது கிடத்தல் –
2-காட்சியிலே சிறிது கிடத்தல் –
3-இவை இரண்டுக்கும் மூலமான ஸூஹ்ருதம்  என் கையில் கிடத்தல் –
செய்யில் அன்றோ நான் போக விடுவது –

(1-அஞ்ஞானாதிகள் இருந்தால்
2-உனது வைலக்ஷண்யத்தில் குறை இருந்தால்
3-சாதனாந்தரம் அன்வயம் இருந்தால்
அன்றோ நான் போக விடுவது -)

உன்னாலே பெற்ற நான் -என்னாலே இழப்பேனோ –
பேறு அவனாலே இழவு இவனாலே –
அவன் பெறுகைக்கு கிருஷி பண்ணும்
இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதால் போலே
அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –
(கர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு )

போக விடுவது உண்டே –
இனி நான் போகல் ஒட்டேன் -என்று போக்கும் உண்டாய் –
ஒட்டேன் -என்கை அன்றிக்கே –
போக என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –

உண்டே –
உனக்கு தெரியாதோ போகைக்கு ஹேது உண்டாகில் என்று
அவனைகர்மமும் கிருபையும் ஹேதுக்கள் இவற்றுக்கு கேட்கிறார் ஆகவுமாம்-

————–

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1–– 5-3- 2-

வளைத்து வைத்தேன்-உதாரர் வாசலிலே -தரித்தருமாய் -அந்தருமாய் இருப்பார் –
பெற்று அன்றி போகோம்-என்று கிடக்குமா போலே –வளைத்து கிடக்கிறார் –ஸ்ரீ பரத ஆழ்வான் பர்ண சாலை வாசலிலே வளைத்து கிடந்தான் இறே

இனி   போகல் ஒட்டேன் –உன் சுவடு அறிந்த நான் பின்பு போக விடுவேனோ

உன் தன் இந்திர ஞாலங்களால் ஒளித்திடில்–அதாவது பொய்யை  மெய் என்னும்படி பிரமிக்கை –அபோக்யங்களை போக்கியம் ஆக்குகை- மம மாயா துரத்யயா-

————–

உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன் – நாலாயி:455/1— 5-3-3- –

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்-
1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )
2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )
4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)
இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை–நமக்கு உபாயத்வம் அனுசந்தித்து
உபேயத்தில் ஆசையுமே உள்ளது-ஆழ்வார்களுக்கு இவை நாலும் உண்டு

தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்

இனிப் போய் –-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –-இவற்றை பொகட்டு புறம்பே போய் –போகை யாவது –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றோடு நாளை என்றே
யித்தனை காலமும் போய்க் கிறி பட்டேன் இனி உன்னைப் போகல் ஒட்டேன்–5- 3-8 –

இனி
1-கரண களேபரங்களை தந்து
2-அஜ்ஞாத ஸூஹ்ருதத்தைப் பிறப்பித்து –
3-இதர விஷயத்தில் ருசியைக் குலைப்பித்து –
4-உன் பக்கல் ருசியைப் பிறப்பித்து –
5-அபிமதமும் நீயே என்னும் இடமும் -பிறப்பித்த பின்பு

இனி-நான் ஏதும் உன் மாயம் ஓன்று அறியேன் -(பெரியாழ்வார் – 4-10 ) இனி இது உன் மாயம் என்று அறிந்த பின்பு –உன்னை-ரஷகனுமாய் –உபாய பூதனுமாய் – ப்ராப்ய பூதனுமாய் -இருக்கிற -உன்னை–போகல் ஒட்டேன் – பெற்றினி போக்குவேனோ உன்னை -என்கிறபடியே
1-உபாயாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –
2-ப்ராப்யாந்தரத்தில் அந்வயம் உண்டாதல் –
3-இரண்டும் நீயானால் பெற்ற போது பெறுகிறோம் -என்று ஆறி இருத்தல் செய்யல்
இறே உன்னைப் போக சம்மதிப்பது –

———–

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே—5 -3-9 –

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்- அன்று நான் பிரார்த்தித்த படியே திரு மலையிலே வந்து-என் விரோதியைப் போக்கி – ஞானத்தைப் பிறப்பித்த உன்னை வந்து கண்டு கொண்டேன் –புக்கினில் புக்கு (பரத்வாதிகளில் புக்கு )-இனிப் போக விடுவது உண்டே – கர்ப்பத்திலே கிலேசப்படுகிற வன்று -அடிமையிலே உற்று இருந்த நான்
அடிமை கொள்ளுகைக்கு சுலபன் ஆன இன்று போக விடுவேனோ-ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தையும் – அந்ய சேஷத்வத்தையும் கழித்து கொண்ட படியை மூதலிக்கிறார்

————

என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –

உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –
விரோதி நிவ்ருத்தியும் பிறந்து – அபேஷிதமும் பெற்றதாகில்  – இனி பதறுகிறது என்

———————

மன்னடங்க மழு வலம் கை கொண்ட  விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5- 4-6 –

என் சேஷத்வத்தையும் –உன் சேஷித்வத்தையும் உருதிப் படுத்த பின்பு   உனக்கு போக்கு இனி எவ்விடத்தில் – என் ஸ்வ யத்னத்தாலே வந்ததாகில் இறே உனக்கு போகல் ஆவது –
உன் அருளால் புகுந்த நீ போகக் கடவையோ –இனி உன் கிருஷி பலித்து – திருப் பல்லாண்டு தொடங்கி இவ்வளவும் வந்த பின்பு போக்கு வரத்து உண்டாம் படியோ நாம் இருவரும் கலந்த படி –

————-

இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7

இனித் தான் எழுந்திராய் –எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ –
எழுந்திராய் –எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால் உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ –எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி;
மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.-

————–

ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

இனி என்றும் பொய்கைக்கு வாரோம்- ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது – பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –

———–

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

அவனோ வந்திலன் –அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து
வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து-இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்
அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்-அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

———–

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-

என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்–என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்-என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்-உங்களுக்கு இனி ஓன்று போதுமே – அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –இனி –அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது –சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ
பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும்-நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –

———–

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1–12-2-

லஜ்ஜித்து மீள வேண்டுவது –இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே –லஜ்ஜை போகையாவது முடிகை இறே –இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ – சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது-சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ
தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது-தர்மி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோஇனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

————

இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-

காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே இவ் வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே-இனி அவ்வருகே போய்-ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள் -பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –

———

ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

அடியேன்-இவை காண்கையே பிரயோஜனமாக இருக்கிற நான்-ஒன்றும் காணப் பெற்றிலேன் – காணுமாறு இனி வுண்டேனில் அருளே—நீ நினைத்தக்கால் செய்ய ஒண்ணாதது இல்லை -நான் இவை காணும் படி அருள வேணும் –

—————–

இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1-திரு மாலை-18-

இனித் திரைத் திவலை மோத –ஒண் சங்கதை வாள் ஆழியான் -என்ற இடம் போலே இவ்விடமும் ஒரு கடைக் குறைத்தலாய் இருக்கிறது யாய்த்து –இனிதாக திரைகளில் உண்டான திவலையானது ஸ்பர்சிக்க –மலை போலே சில பெரும் திரைகள் வந்து முறிந்து சிறு திவலையாய்-துடை குத்தி உறக்குவாரைப் போலே திரு மேனியைப் ஸ்பர்சியா நிற்கும்

————

எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4-திரு மாலை-30-

இப்படி தோஷ பிரசுரனான எனக்கு –இனி –என் தோஷத்தை அனுசந்தித்து-நான் எனக்கு ரஷகனாகை தவிர்ந்து -தேவரீர் பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு-கதி என் சொல்லாய் –
போக்கடி சொல்லாய் – போக்கடிக்க சூழ்ந்து கொண்டு வைத்து -அவனைச் சொல்லாய் -என்னும்படி இறே பிராப்தியிலும் இருப்பது –

———–

துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1–பெரிய திருமொழி-1-4-4-

இப்போது உனக்கு உறுதியாக ஒரு நல் வார்த்தை சொல்லுகிறேன் -நெஞ்சே கேள்
சொல்லச் செய்தே பின்னையும் சொல்லாததின் பலமே யாகாமே நீ அவனைத் தொழுது உஜ்ஜீவிக்கப் பாராய் –

————–

எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4–1-10-9-

இனி -இத்யாதி-எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் – ஆன பின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ- (நாம் உனக்காம் படி நீ என் நெஞ்சினில் பற்ற பற்றின பற்று விடுவேனோ என்றபடி-இவர் பற்றவில்லையே )

—————-

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள் புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ–3-5-8-

உனக்கு வந்த கிருபை மாறாதபடி இருக்கையாலே இனி நீ போவாய் ஆனால் அறையோ அறை – ஹேது மாறில் இறே அதன் கார்யம் மாறுவது-உன்னால் அல்லது செல்லாத என்னை விட்டு நீ இருக்கவுமாய் போகவுமாய் இருப்பார் நெஞ்சில் இருக்க ஒண்ணாது –(விதி வாய்க்கின்றது-அறையோ-என் நெஞ்சை விட்டு வன் நெஞ்சில் இருக்க ஒட்டுவேனோ )

—————-

எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1

ரஜஸ் தமஸ்  ஸூக்களாலே அபிபூதராய் ஆராயாதே சிலர் காலிலே குனியும் இத்தனை போக்கி –எண்ணில் –-ஆராயில்-த்யானத்துக்கு விஷய பூதனான  ஈஸ்வரன் இவனை ஒழிய வேறு ஒருவர் இல்லை என்று சனகாதிகள் அழகு மிகு இருந்துள்ள பண்ணிலே மிக கானத்தோடு பாடி –

——–

உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – தெய்வம் பிறிது அறியேன்  திருவிண்ணகரானே—6-3-6-நாலாயி:1473/3

நெஞ்சாலே அசந்நேவ-என்கிறபடியே அசத் கல்பனாய் உரு மாய்ந்து போன நான்
இப்போது உஜ்ஜீவிக்கும் படி தேவரை அனுவர்த்தித்தேன்   – இவ் வாத்மாவுக்கு நீயே சேஷி
உன்னைக் குறித்து இவ்வாத்ம வஸ்து அத்யந்த சேஷம் -என்கிற முறையாலே –இனி யாதும் மற்றோர் தெய்வம் பிறிது அறியேன்  – தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –திருவிண்ணகரானே –
இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே-விண்ணகரானே )

———-

கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-

உம்முடைய பாகம்-( மூப்பு-) ஒன்றையும் புத்தி பண்ணுகிறிலீரோ – எங்களுடைய ஒப்பனையை நீர் இனி ஏத்திக் காண்பது- என்று இங்கனே பண்ணுகிற ஷேப உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே –

————

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-7-

உன்னை ஒழிய அறியாத படி இருக்கிற என்னுடைய நெஞ்சிலே வந்து புகுந்து இருந்து
இனி இங்கு நின்றும்  போயிருக்கவுமாய் -போகவுமாய் – இருப்பார் நெஞ்சில் போய் இருக்க ஒட்டேன் – (போகவுமாய் -இருப்பார் நெஞ்சில் -விஸ்லேஷத்தில் தரிப்பார் நெஞ்சில் )ஒட்டேன் என்றாலும் நாம் தவிரோம் என்றால் – வளைத்து வைத்தேன் – நீ போகில் நான் முடிவன் -என்கிறார் – இத்தலை இழக்க வரும் அளவில் -இட்ட அடி பேர்க்க மாட்டான் –

———–

இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

அவனுடைய நிக்ரஹ பலமான பாபங்கள் என்னைக் கிட்ட வற்றோ – அவசியம் அநு போக்தவ்யம் -என்கிற வசனத்தைக் கொண்டு அனுபவித்தால் அல்லது நசியேன் என்று கொண்டு சிலவை  நிற்றல்(ந புக்தம் ஷீயதே கர்மம் சஞ்சித கர்மம் ) பிராரப்தம் காண் என்று சிலவை நிற்றல் செய்ய வற்றோ –இனி -என்றது எத்தைக் கொண்டு என் என்ன – இம்மையே அருள் பெற்றமையால் –இஹ லோகத்திலேயே பகவத் பிரசாதத்தைப் பெற்ற படியாலே இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் –

————

தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3

ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே–உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –திரு மாலே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனிச் செய்வது ஓன்று அறியேன் – இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-

————

பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே- நாலாயி:1659/3-–8-2-2-

இப்படி இடைவிடாமல்  இருந்து துஸ் சிஷை பண்ணச் செய்தேயும் இவள் மீள என்பது ஓன்று உண்டோ –இனி இவள் நாணுமோ –சம்சர்க்கஜ ப்ராவண்யத்தாலும்  மீள மாட்டாள் –
ஸ்வ கத பிராவண்யத்தாலும் மீள மாட்டாள் – உனக்கு இது வாகாது காண்-என்று சொல்லுகிற நான் லஜ்ஜித்து மீளும் இத்தனை போக்கி இவள் மீளுமோ என்கிறாள் –
ஆசார்யனாலும் பசை இல்லை இறே-நாம் அவர் வசப்பட்டு ஸத் ப்ரக்ருதியாக இல்லா விட்டால் இரண்டும் வேண்டி அன்றோ இருப்பது-

———–

விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/–8–5-7-

நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )

————-

பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் -போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3- நாலாயி:1770/3

வ்யதிரேகத்தில் இவள் உளள் ஆகாள் என்னலாம் படி கலந்து வைத்து தன்னைக் கொண்டு பின்னை அகன்றான் ஆயிற்று –நின்னை கலக்க பொறுப்பாரை அன்றோ பிரிவது – உன் சௌகுமார்யம் கண்டு வைத்துத் தான் பிரிவானோ –பிரியேன் இனி என்று அகன்றான்
கடுக  பிரிந்து கொடு நின்றால் இடி விழுந்தால் போலே இவள் முடிந்து கொடு நிற்கும் என்று பார்த்து பிரிவு சாத்மிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே பிரிவை பிரசங்கித்தான் ஆயிற்று –
(போய் வருகிறேன் என்று சொல்லாமல் பிரியேன் -பிரிவை இவள் உணர வியதிரேகத்தில் சொல்லி தயார் படுத்துகிறான் )
அதாகிறது – இவன் அந்த சம்ஸ்லேஷ சமயத்தில் சொன்ன வார்த்தை யாகாதே இது -என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை ( நினைத்து ) பண்ணித் தரிக்கைக்காக – இங்கன்  அன்றாகில் சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பான பாசுரம் அன்றே இது –

(சம்ஸ்லேஷ தசையில் பொய் சொன்னான்-கலவியில் ஒரு வகை தானே – என்று உணர்ந்து
பிரிந்த பின்பு சமாதானம் பண்ணிக் கொள்ளலாமே-அகலகில்லேன் இறையும் -என்னுமா போல் பிரியேன் என்பது சம்ஸ்லேஷ தசையில் உன்மஸ்த்தக தசையில் சொல்லுவது போல் இல்லை-பிராட்டி அகலாமல் சொல்லும் வார்த்தை போல் அல்லவே இவனது )

பிரியேன் இனி என்று அகன்றான் –-சொலவுக்குச் சேராத செயலைச் செய்தான் –
இப்படி கலந்து வைத்து பிரியுமது ஒரு சைதன்ய க்ருத்யம் அன்று இறே
பாவியேன் என் ஆற்றாமை கண்டால் கூட இருக்க அன்றோ அடுப்பது
இவன் தான் அணைத்த கையை நெகிழ்த்தே வார்த்தை சொல்லுவது –
அப்போது உடம்பில் பிறக்கும் வை வர்ண்யம் காணுமே-இது கண்டால் போகலாமா
இவள் தான் பிரிவு அறியாள் ஆகிலும் -தன் கார்யம் செய்கை தவிராதே தன்னால் தகையலாவது அன்று இறே –

————-

இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் ––9-3-7– நாலாயி:1774/2

இரவும் பகலும் இருந்து இனிக் கண் உறங்காது ஒழிகிற இத்தால் என்ன பிரயோஜனம்  உண்டு –அநித்ரஸ் சததம் ராம (ஸூந்தர ) -என்று இவன் இருக்குமது கேட்டு
அதடியாக நாம் -நசமேஸ்தி நித்ரா (ஸூந்தர)-என்று இருக்கும் அன்று அன்றோ அபிமத சித்தி உள்ளது –அவன் ருசி முன்னாக –இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே –ஆனால் பின்னை   அவனுக்கு இரக்கம் இல்லை என்கிறதோ -என்னில்-ஓம் -அப்படி சொல்லக் குறை இல்லை இறே -இப்போது அவன் வாராமையாலே –இல்லையாகில் வருகைக்கு சக்தி இல்லை -என்னுதல்-சிலருக்கு பர தந்த்ரன் -என்னுதல் -சொல்ல ஒண்ணாது இறே
முறை கெட்டுச் சொல்ல வேண்டும்படியான தசை பிறந்தால் முறை உடைய அவனுக்கு வரக் குறை என்-தொழுதும் எழு -என்று கொண்டு பழி யாகிறதோ –

———–

பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2

பல சொல்லி என்- தான் செய்த தப்பின் பலம் தானே அனுபவித்தான் –
அன்றிக்கே இன்னார் பட்டார் என்று அறியாமையாலே ராவணன் பட்டான் -என்னவுமாம் –
பிற்பட்ட காலத்திலே சொல்லுகிறார் ஆகையால் இவருக்கு அவன் பட்டான் என்று சொல்லவுமாம்-இனி யாவர்க்கு உரைக்கோம் – இனி இத்தை ஆர்க்கு இருந்து சொல்லுவோம்  –

——————

எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – –10-7-13–நாலாயி:1920/2

உன்னைப் பெற்ற இதுவே அமையாதோ-வயிறு எரிச்சலுக்கு வேண்டுவது –
நீ ஒரு செயலைச் செய்ய வேணுமோ –

————

வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – 11-2-4–நாலாயி:1965/4

நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது –இதற்கு இனி என் செய்கேன் — ஓர் அபலை இதுக்கு கடகிடவோ -(கடுகு -பரிகாரம் )

————-

நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே –11-2-8– நாலாயி:1969/4-

இனி இருந்த படியாலே சரீரமானது சிதிலமாய் முடிந்து பிழைக்கும் இத்தனை போக்கி
இனி நமக்கு ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை யாகாதே –

—————-

இனி களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – 11-6-4–நாலாயி:2005/2-

இனி இவர்களுக்கு ரஷகர் யாரும் இல்லை -என்று த்ரை லோகத்தையும் முறையாலே
(க்ருத அக்ருதக க்ருதக்ருதக மூன்று வகையில் ஏழும் கொள்ளலாம் )

———–

துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – 11-8-8–நாலாயி:2029/2-

ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின நிருபாதிக பந்துவான தேவர்
அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் –
தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன்

———–

இடைகழியே பற்றி இனி –முதல் திருவந்தாதி-86– நாலாயி:2167/4-

ஸ்ப்ருஹணீயமாய்-அழகியதாய் திருக் கோவல் இடை கழியே பற்றி இப்போது இப்படி நின்றான் -என்னுதல்-இனிமேல் எல்லாம் இப்படி நிற்கும் -என்னுதல்-இனி -என்கையாலே
அநாதி காலம் இழந்தது பெற்றமை யடையத் தோற்றி இருக்கிறது –
இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர் கொடேன் -திருவாய் மொழி -2-7-3-என்னக் கடவது இறே-திருக் கோவலூரிலே வந்து நிற்கிறது – தன் கர்ம பல அனுபவம் பண்ணுகைக்காக அன்று இறே – சம்சாரிகள் நரகத்தில் புகாதபடி காக்க விறே –ஆழ்வார்கள் எல்லாரையும் அவதரிப்பிக்கைக்காகப் பொற் கால் பொலிய விட்ட தேசம் இறே –இடை கழிக்கு உள்ளும் புறமும் காட்டுத் தீ போலே இரா நின்றது -(சேஷத்வம் அறியாத சம்சாரிகள் வெளியில் இருக்க -உபாயாந்தர ரிஷிகள் -அசித்வத் பாரதந்தர்யம் அறியாதவர்கள் உள்ளே இருக்க -)
காமுகரானவர்கள் உகந்த விஷயத்தின் யுடைய கண் வட்டம் விட்டுப் போக மாட்டாதாப் போலே(காமுகரானவர்கள்-இங்கு லோக விலக்ஷணமாக மிதுனம் )திரு வாசலுக்கு புறம்பு போக மாட்டாதே உள்ளுப் புக மாட்டாதே ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் திருக் கோவலூர் இடை கழியைப் பற்றி ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனான நீயும் -உன்னிலும் முற்பட்ட திரு மகளாருமாக எங்களோடு கலக்கப் பெற்ற உகப்பின் கனத்தாலே பரந்த கால் பாவி
இப்போது தரித்து நின்றாயே–என்று அனுபவிக்கிறார் –

———–

இனி யார் புகுவார் எழு நரக வாசல் முனியாது மூரித்தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87– நாலாயி:2168/1

இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் யுண்டோ —
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே –எழுகிற நரக வாசல் யுண்டு -எல்லோரும் போய்ப் புகுகிற நரக வாசல் என்னுதல்-
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று என்கை-

———–

என் பாக்கியத்தால் இனி – –34-நாலாயி:2215/4

சௌந்தர்யத்துக்கும் நீர்மைக்கும் தோற்று ஸ்துதித்து தேவர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –இதுக்கு அடி-தேவருடைய கடாஷத்தாலே -என்னுதல் —
என்னுடைய விலக்காமை யாகிய பாக்கியத்தாலே -என்னுதல் –

————–

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை -88– நாலாயி:2269/1

ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –அவனாலே அவனைப் பெறுதல் -அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -தன்னாலே அவனை இழத்தல் –பிரதிகூலராய் இழப்பாரும்-அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும்-ஆக இழக்கை இரண்டு விதம் –

————

எங்கு அணைந்து காண்டும் இனி -–82– நாலாயி:2363/4

இனி நான் எங்கே கிட்டிக் காணக் கடவேனோ-லௌகிகர் படியிலும் காண விரகற்று
அவன் தானே காட்டும் வைதிகர் படியாலும் காண விரகற்ற பின்பு இனி நான் காண்கை என்று ஒரு பொருள் உண்டோ-கிட்டாது ஒழிய மாட்டேன்-கிட்ட மாட்டேன் –

——

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

நிரதிசய போக்யனாய் யுள்ளவன்-தான் கிட்டிக் காண அரியனாய் இருந்தானே யாகிலும்
இப்போது அவன் காண முடியாதான் ஒருவன் ஆகிலும்
அன்றிக்கே-சரீர சம நந்தரத்திலும் காண வரியன் யாகலும்-சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று தோன்றாதபடி பூமியை அபஹரித்து நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து சகல லோகங்களையும் தன் கீழே இட்டுக் கொண்ட பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே-அழகிய திருவடிகளை யுடையவன் 

இனி உள்ளத்தின் உள்ளே உளன் – இப்போது என் ஹ்ருதயத்தின் உள்ளே சந்நிஹிதன் ஆனான்-புக்க ஆயுச்சுக்கு மரணம் இல்லை இறே-மேல் செய்த படி செய்கிறான்
பெற்ற வம்சத்தை ஒருவரால் இல்லை செய்ய ஒண்ணாது இறே
இப்படி சந்நிஹிதன் என்றதே யாகிலும் கீழ்ச்   சொன்ன  அபரிச்சேத்யதையே பலித்து விடுகிறது –

———

இன்று ஆக நாளையே ஆக இனி சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7- – நாலாயி:2388/1

இன்றாதல் நாளையாதல் சில காலம் கழிந்தாதல் உன்னுடைய கிருபை என் பக்கலிலே –அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை-அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில் என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே-

———-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95- – நாலாயி:2476/4

இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் மா நாட்டைக் கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது பரம பக்தி உக்தனானேன்(கண்ணே உன்னைக் காணாக் கருதி- மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் )புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம்   பண்ணும் விபூதியையும் உபேஷித்து விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்-சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –-இனி யறிந்தேன் -இத்யாதி -யால்-

————–

இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் – நாலாயி:2478/2-

தேவரீர் திருவடிகளை பிடித்த பின்பு நாங்கள் ஸ்பர்சியாத படி சம்சாரிகள் வியசனம் தம்மது என்று நினைப்பவர் ஆகையால் யாம் என்கிறார்-ஆத்மனி பஹு வசனம்-இனி – ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு-

——-

இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே-4- – நாலாயி:2481/2

துழாய் தான் விழுங்க வருகிறதே-பாரீர் என்ன தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது-இனி அந்த அழகிய துழாய் தான் விழுங்குவது எந்தப் பிரதேசத்தை
இந் நெஞ்சத்தில் புள் அயர விழுங்கினதாய் அயர மிக்கதோ
நிர் விசேஷமாக அப் புள்ளே விழுங்கிற்றே இது வேத மார்க்க அநு சாரிகளை -தத் விரோதிகள் பாதிக்க வர உலகு உண்டவனைப் போலே இத்தை -நம்மை நம்பி வந்ததே -என்று உகந்து அபிமானித்துத் தன் திரு வயிற்றிலே வைத்துக் கொள்ளுகை-

இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே – நாலாயி:2490/4

ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்-எனை வூழிகள் ஈர்வனனே-கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன-ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து- 1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –

(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )

———-

நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே -பாசுரம் -25- நாலாயி:2502/4

நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்-அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய அதி பிரவிருத்தி யானது இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று-இவளோ முடியா நின்றாள்-இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்-திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை-காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது-உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ–இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –

——–

நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/3

ஈங்கிவள் தன் நிறையோ-இவ்விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய
ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது-இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய்-ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு-ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-இத்தால் அநந்த க்லேச பாஜனமாய்
கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து
ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால் ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

———–

தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே -திருவாசிரியம் -4– நாலாயி:2580/8-

அடியவர்க்கு இனி நாமாள் ஆகவே–ப்ரயோஜனாந்தர பரரான தேவதைகளுக்காக தன் உடம்பு நோவ கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் நீர்மையிலே தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு–இனி நாம்-ஆத்ம சத்தை உள்ளவன்று தொடங்கி பாகவத சேஷமாய்ப் போருவது பிராப்தமாய் இருக்க கர்மத்தால் நான் என்றும் என்னது என்றும் போந்தோம்-இனி சேஷித்த காலமாகிலும் இவ்வஸ்து பாகவத சேஷம் என்னும் இடத்தை அவன் காட்ட –
அவன் பிரசாதத்தாலே கண்ட நாம் – அவர்களோடே ஒப் பூணாய் ஒத்த தரமாகவோ என்னில்-ஆளாக-சேஷ பூதராக-ஆளாகவே அவர்களுக்கும் ஆளாய் – நான் எனக்கு -என்ற இருப்பும் கலந்து செலவோ என்னில் – ஆளாகவே — ஆளாகும் தரம் அன்றிக்கே சேஷத்வமே வடிவாக-

————–

தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண்
நெஞ்சே அவர் திறத்தே-பெரிய திருவந்தாதி-9- – நாலாயி:2593/2,3

இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்-பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்; அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.-அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.-உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில் அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தன் பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.-அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதை யாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது- நல்ல படியாகவோ தீய படியாகவோ ஏதேனுமொரு விதமாக நம்மைப் பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே
பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.-நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

———–

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -58- நாலாயி:2642/1

மாற்றேல் இனி வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்
(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )-இறையிலி ஏது என்னில்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –-இவ் விறையிலியை மாற்றாதே கொள்

————–

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70- – நாலாயி:2654/4

சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார்
இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்-இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என் பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –

——-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே-71 – நாலாயி:2655/1

உன் ஐஸ்வர்யத்தை நான் தானே சொல்லுவது உண்டோ -என்னவுமாம்
உன்னுடைய நீர்மையை நான் சொல்லுவது உண்டோ என்னவுமாம்

———

இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல்–87— நாலாயி:2671/1

இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு-

———–

துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்-இராமானுஜ நூற்றந்தாதி-21- – நாலாயி:2811/2

இனி-அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-எம்பெருமானார் என்னைக் காப்பாற்றி விட்டார் -இனி ஏன் நான் துவள வேண்டும்-என்கிறார் அமுதனார் –

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —- நாலாயி:2838/3

இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ-தேவரீரும் அடியேனும்-ஆகிற இருவருக்கும் ஸ்வரூப லாபமும் குண லாபமும் ஆகிற பரம பிரயோஜனம் சித்தித்த பின்பு -இப்படி இருவருக்கும் பிரயோஜமாய் இருக்க –இனி நாம் பழுதே அகலும் பொருள் என் -இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் -நாம் என்றது தம்மையும் எம்பெருமானாரையும் –அன்றிக்கே -நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே -எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் -நாம் பழுதே அகலும் பொருள் என் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவி தொழும் மனமே தந்தாய் -அறியாதன அறிவித்த அத்தா நீ-செய்தன அடியேன் அறியேன் -என்கிறபடியே நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ பாவத்தால் நான் பிறப்பேன் ஏலும் -இனி எந்தை-எதிராசன் தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்கிறபடியே -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும்  -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –

————-

வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே–56- – நாலாயி:2846/4

லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு-மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது –என்னுடைய மனஸ்சானது-ஸ்ம்ரியாது –-முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் –

பண்ணிக் கொண்டு போந்த என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய

திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய -வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –

முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை

ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக்

கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி  நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண ஸாலிந -என்னக் கடவது இறே –

என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது

என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்

————

வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2

அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து-இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும்-சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் -அத்சாவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ -என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –

பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3-

பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும் சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று பெறுவித்து அருளினவரே ! இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை -தென் அரங்கர் சீர் அருளும் இது தனக்கு ஒப்பாக மாட்டாது என்று காணும் இவருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது-அரங்கன் கருணையும் -ஒரு கால் ஸ்வா தந்த்ர்யத்தால் பயன் இன்றி போவதாய் இருத்தலின் –என்றும் பயன் குன்றாத எம்பெருமானார் கருணைக்கு ஒப்பாகாது என்கிறார் .

————–

உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல் – நாலாயி:2876/2-

ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம்  விடாதே நிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று – அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ  சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –

————-

நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே – நாலாயி:2888/3-

தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ – அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே – அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ – மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –

—————

மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4

அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க  மாட்டாது – தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் – இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் .–பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி –என்று சொல்லுகிறார் காணும்-மற்று ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதும் செய்ய வேண்டா என்கிறார் -பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி  நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே 

—————-

நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் –-–1-4-4- நாலாயி:2935/3-

உனக்கு ஆதரணீயமாம் படி நன்றான அவளுடைய ஸத்பாவம் இனிமேல் அவரிடத்து நிற்க மாட்டாது என்று ஒரு வார்த்தை-ஈண்டு எனச் சென்று சம்ச்லேஷி யீராகில் அவள் கிடையாள் என்று ஒரு வார்த்தை சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்-இனி-பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது-இனி–ஆன அளவும் கால் கட்டிப் பார்த்தாளாதலின், ‘இனி’ என்கிறாள்.

—————-

சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது – நாலாயி:2939/3-

சாயலோடு கூட நல்ல நிறத்தை இழந்தேன் நான் -இனி உன் பிரகிருதி அறிந்து உன்னை வளர்ப்பாரை தேடு –-நான் முடிந்தேன் என்று கருத்து –இப்படி ஈடுபட்ட பின்பு உன்னுடையதான வாய் அலகுக்கு உள்ளே புக மதுரமான அடிசிலை ஊட்டுவாரை புறம்பே போய் ஆராய வேணும் காண்-இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண்–இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.சரம தசையில் தம்முடைய திரு ஆராதனப் பிள்ளையைப் பார்த்து -தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்-அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே- என்று அருளிச் செய்தார் பெரிய திருமலை நம்பி –

————-

வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – 1-7-7–நாலாயி:2971/4-

தானே ஒட்டிக் கொண்டு வந்து தன்னுடைய குண சேஷ்டித ஆவிஷகாரத்தாலே என் நெஞ்சை வஞ்சித்து அகப்படுத்தி இந்த ஹேயமான ப்ரக்ருதியோடே சம்பந்த்தித்து இருக்கிற ஆத்மாவோடு ஸம்ஸ்லேஷித்து வர்த்திக்கிற இவன் -தன்னை விடுவேன் என்றால் என்னை விட ஒட்டுமோ -என்கிறார் –என் ஆத்மாவோடு கலந்து அக்கலவியால் அல்லது செல்லாத தன்மையை உடையவன் –அத்தாலே சத்தை பெற்றானாய் நடக்கிறவன் இனி என்னை நெகிழ்த்துக் கொள்ள ஒட்டுமோ –இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன் பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ –இப்படிக் காரணம் இல்லாமல்-நிர்ஹேதுகமாக – என்னை அங்கீகரித்தவன்,
நான் தன் பக்கல் நின்று நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் இசைவானோ?
இனி, ‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்- பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

———-

தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை
– நாலாயி:2972/2,3

ஆஸ்ரித வத்சலனாகையாலே அவன் தானும் என்னை விடான் -என் பக்கல் உள்ள குண ஹானியாலே என்னை விட நினைக்கிலும் – சர்வேஸ்வரன் தன்னாலும் என்னுடைய நெஞ்சை விட முடியாது -நெஞ்சோடு உள்ள சம்பந்தத்தால் என்னையும் விட முடியாது –
நெஞ்சை விட முடியாது ஒழிவான் என் என்னில் அது நப்பின்னைப் பிராட்டி யடிமை-அந்தப்புர பரிகரத்தை ராஜாவாலும் அநாதரிக்க ஒண்ணாது–இனி–தனித்து அகல்விக்க சர்வ சக்தியான தானும் இனி மாட்டான் – முன்பு போலே விஷயாந்தர சக்தம் அன்றே -அவன் தான் -மேன்மையையுடைய பூர்வரான நித்ய ஸூரி களுக்கு தாரகாதி சமஸ்தத்துக்கும் தானே முதல்வனானவன்றோ – ஆதலால் -அவர்களை விடில் அன்றோ என்னையும் என் நெஞ்சையும் விடுவது-எனவே, ‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’-

————-

அமர தழுவிற்று இனி அகலுமோ – நாலாயி:2973/4-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அர்த்தி கல்பகனாய் –நிரதிசய ஸுந்தர்யத்தை உடையனான எம்பெருமானோடே ப்ருதக் நிர்தேசா அநர்ஹமாம் படி ஸம்ஸ்லேஷிக்கையாலே இனி என்னாலும் அவனை விட முடியாது –இனி யகலுமோ
ப்ருதக் ஸ்திதி யுபலம்பம் இல்லாதபடி ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாக சம்ச்லேஷித்தும் அகல பிரசங்கம் உண்டோ பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்துவ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ ஜாதி குணங்களை பிரிக்க ஒண்ணாதாப் போலே த்ரவ்யத்துக்கும் நித்ய தாதாஸ்ரயத்வம் உண்டாகையாலே பிரிக்க ஒண்ணாதாய் இறே இருப்பது-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும்,
‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –

—————-

எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – 1-10-2–நாலாயி:2999/2-

எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-
எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்-நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும் -இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் –என்னினி வேண்டுவம்–சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –பரம பத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார்.
‘இறைவன், இவ் வாத்துமாப் பக்கல் -அப்ரதிஷேதத்துக்கு வெறுப்பின்மைக்குக்-அவசரம் – காலம் பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு, இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன்-ஹிதாம்சமாக செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி.
இப்படி இருக்கிற பகவானுடைய ஸ்வரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது. இறைவன், தன்னுடைய ஸ்வரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா ‘மாஸூச:’ என்றது போன்று, இவரும் இறைவனுடைய ஸ்வரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார்.
இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

———–

என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/2

பகவத் விஷயம் என்னில்-பிரதி கூலியாதே பாங்காய் இருக்கிற உன்னைப் பெற்றால் இனி நமக்கு சாதிக்க முடியாது உண்டோ நமக்கு இனி என்ன குறை உண்டு-உன்னைப் பெற்றால் என் செய்யோம் என்று சாத்திய அம்சம் உண்டாக சொன்ன இடம் தப்பச் சொன்னோம்
உன் பக்கல் விலக்காத அளவே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் இனி சாத்திய அம்சம் உண்டோ அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்திய அம்சம் தானுண்டோ-

————

மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10– நாலாயி:3007/4-

மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இ றே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்–பெரு விலையனான ரத்னம் கை புகுந்தால் -அத்தை முடிந்து அனுபவியாதே உதறுவார்களோ-மறவாமைக்குப் பரிகரம் அவன் கையில் உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே -மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்-

———–

மூவா முதல்வா இனி எம்மை சோரேலே –2-1-10– நாலாயி:3018/4-

மூவாது ஒழி கை யாவது -இளகி வருகை -அதாகிறது ஒன்றும் செய்யாதானாய் ரக்ஷணைத்தே ஒருப்படுகை–இத்தால் சொல்லிற்று ஆயிற்று -அப்படியே என்னுடைய விரோதிகளை போக்கி இம் மஹா அவசானத்திலே வந்து சம்ச்லேஷித்து என்னை உண்டாக்கினவனே -என்கிறார்
இனி எம்மைச் சோரேலே –-இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போறும் இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்-கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள்.
இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.-முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் -இவ்வஸ்துவை -இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும் என்பாள், ‘இனி’ என்கிறாள்.
‘போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி-

————-

எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -2-3-4— நாலாயி:3034/2-

எனது ஆவி தந்தொழிந்தேன் – என்னுடைய ஆத்ம வஸ்துவைத் தேவரீருடைய திருவடிகளிலே சமர்ப்பித்தேன்.-அழகிது; இதுதான் எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன்.-இனி மீள்வது என்பது உண்டே-சத்யோ தசாஹமாக தந்தேன் -மீள்வு என்றோர் அர்த்தம் தானும் உண்டோ –ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது.-இனி மீள என்கிற கதை யுண்டோ -என்று ப்ரீதி யதிசயத்தாலே பிரமித்து ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி அநந்தரம்-அத்தை நிரூபித்து -என்னுடைய அந்தராத்மாவுக்கும் அந்தராத்மாவும் நீயே — சர்வ லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து அருளிய என் ஸ்வாமியே – என்னுடைய ஆத்மா யார் -நான் யார் -ஏதேனும் சம்பந்தம் உண்டோ – கொடுத்த நீ தானே கொண்டாயானாய் என்று அநு சயிக்கிறார் –

———

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் –2-3-5- நாலாயி:3035/1-

திருவடிகளில் அடைவிலர் ஆகில் எத்தனையேனும் அளவுடையாருடைய அறிவுகளாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத என் நாதனே –அதாகிறது -துரியோதனனால் பரிச்சேதித்தல் ராவணனால் எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை–ஹிமவான் -இத்யாதி
வாயு ஸூ நோஸ் ஸூ ஹ்ருத் வேந பக்த்யா பரமயாஸச சத்ருணா மப்ரகம்ப்யோ அபி லகுத்வமகமத் கபே –இனி–உன பாதம் சேர்ந்தேனே-என்பதுடன் அந்வயம்
ஆர் ஞானங்களாலும் எழான் -ஆர் எடுக்கிலும் எழான்-இனி நுன பாதம் சேர்ந்ததேனே –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’
அன்றி, ‘இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,
அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’ என்றுமாம்-(இவருக்கு வாழ்ச்சி பகவத் அனுபவமே இறே –
இனி -என்றதும் மூன்று அர்த்தங்கள்-அறியாதன அறிவித்த பின்பு
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போல் சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்த பின்பு
இனி யாம் உறாமை -நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை யுடைய –
உனது அங்கீ கார பலத்தை யுடைய நாங்கள் அணுகாத படி –-வாயும் திரை யுகளில் வியசனம் தீர-ஊனில் வாழ் உயிரில் ஸம்ஸ்லேஷித்த போதே உனபாதம் சேர்ந்தேன் அன்றோ )

——-

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்உலகும் உண்டான் உகந்து வந்து – நாலாயி:3070/1

எனக்கு ஆப்தவ்யமாய் இருப்பது ஓன்று உண்டோ-பிரளய காலத்தில் இஜ் ஜகத்தை அடைய திரு வயிற்றிலே வைத்துக் கொண்டவன் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய தனக்கு செல்லாமையாலே அத்யபி நிவிஷ்டனாய் என்னுள் புகுந்தான்
இனி ஒரு காலும் விஸ்லேஷிப்பதும் செய்யான்-எனக்காக்கில் இனி முடியாதது உண்டோ -ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதாப் போலே என்னை ஒழிய செல்லாதனாய் சம்பந்தத்தைப் பார்த்து உட்ப்புகுந்தான் ஒரு நீராகக் கலந்தான் -தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றிக்கே உகந்து புகுந்தான் இவனுக்கும் ஜகத்துக்கும் செல்லாமை ஒக்கும் -உகப்பு ஏற்றம் இவ்விஷயத்தில் இவனுக்கு-உரலுக்கும் கண்ணனுக்கும் ஒரே வாசி அழுகை போலே -மத் சம்பந்திகள் அளவும் கீழ் மேல் ஓடும்படி புகுந்தான் –அந்த பூமிக்கு -பிரளயம் கழிந்த வாறே அகல வேணும் -இவனுக்கு அதுவும் இல்லை -முதலிலே பிரிவை பிரசங்கிக்க ஒட்டுகிறிலன் –

———–

அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-

ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே-நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது
என்றும் சேர்த்தல் மாறினரே – என்றும் கிட்டக் கடவதான தண்மை தவ்ர்ந்தார்கள்
நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை
எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்-முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –மோஷயிஷ்யாமி -தன்னடையே ஓடிப்போமே -கிருஷ்ண சம்பந்தம் -இங்கே கிருஷ்ண த்ருஷ்ண சம்பந்தம் –குலம் -சப்த சப்தச்ச சப்த – -தச பூர்வா தச உத்தர தன்னோடு -அந்தன்-ஒருவன் அநந்தன் ஒருவன் -கூட்டிப் போவது போலே-ஆழ்வார் குருடர்களான நம்மையும் கூட்டிப் போவார் –

————-

கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே
–2-6-9-

திருமலையில் புகுந்து நின்று அருளின படியையும் -உன்னுடைய திரு வவதாரங்களையும் -உன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களையும் – உன்னுடைய அழகையும் -ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருந்து அருளும் படியையும் -மற்றும் உள்ள படியை யடங்க எனக்கு போக்யமாகக் காட்டி யருளி உன்னை என்னுள்ளே ஒன்றாகக் குழைத்து அருளின நீ இனி எங்கே போவது -போவேன் என்றால் தான் போக முடியுமோ -என்கிறார் –

—————–

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

இனி-போன காலமே போரும் -இனி விடேன் என்னா நின்றான் –
பழுதே பல காலும் போயின -என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனர் இருக்கும் இருப்பை தான் இரா நின்றான் –புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

யான் –உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –
உன்னை-என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்-நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் –இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று நிராசராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.-எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்;
ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் பண்ணினானாக அமையும்’ என்று அருளிச்செய்வர்.-ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம்-

—————-

கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-

அன்று சேரப் பெறாத நான் என்று சேர இருக்கிறேன் -சேராது ஒழி யில் இவ்வாத்மா முடிகை நிச்சிதம்இனி அவனுடைய ஈச்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –
இனி ஆத்மாவதிகமாக அவன் திருவடிகளைச் சேருகை என்ற ஒரு பொருள் இல்லை என்று நசை அற்றுக் கூப்பிடுகிறார் –எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே-எல்லாரையும் அடிமை கொண்டவனை அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான்,
ஒரு சாதன விசேஷத்தைப்-அனுஷ்டானத்தைப் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்-

—————–

ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?
–3-9-10-

கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாக தகுமோ-இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–கவியான எனக்கு இனி காலமுள்ளதனையும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுதியோ –அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ -கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப்
பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று
தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச்செய்கிறார்.

————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
–4-5-1-

ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானைத் திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு என் கைகளினுடைய விடாய் எல்லாம் தீரும் படி தொழுது திருவாய் மொழி படுக்கைக்கு பாக்யம் பண்ணினேன் -எனக்கு இனி ஒரு நாளும் ஒரு குறையில்லை-என்றே -சொல் மாலைகள் ஒருகால் பல்லாண்டு என்று விடுகை அன்றிக்கே-அத்தையே பலகாலும் சொல்லுகை – நம இத்யேவ வாதிந -என்கிறபடியே கைகள் ஆரத் தொழுது- வைகுந்தம் என்று காய் காட்டும் -தாயவனே என்று தடவும் என் கைகள் -என்னும் கைகளின் விடாய் தீர்க்கும்படி தொழுது சொல் மாலைகள் வாடாத மாலைகள்

ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறது-இவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல்
பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே-பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –
இனி என்ன குறை எழுமையுமே--இங்கே ஸ்வரூப அனுரூபமான கிஞ்சித் காரம் பண்ணின எனக்கு பின்பு ஒரு நாளும் ஒரு குறை இல்லை தேஹ சம்பந்தம் அற்றதில்லை -ஒரு தேச விசேஷம் சித்தித்தது இல்லை என்கிற குறைகள் ஒன்றும் இல்லை-இது எத்தனை குளிக்கு நிற்கும் என்ன-எழுமையுமே-என்றும் ஓக்க சப்த சப்த ச சப்த ச –தச பூர்வாந்த சாபரான் -என்றது இறே-

———–

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?
–4-5-6-

ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு-இன்று தொட்டும் இனி என்றுமே?– அடிமையை இழிந்த இன்று தொடங்கி-மேல் உள்ள காலம் எல்லாம் -அரியது இல்லை –
தீர்ப்பாரை யாம் இனி அடுத்து நிற்க இறே -இவர் வார்த்தை சொல்லுகிறது-பேற்றில் இழவு தோற்றாத படியான விஷயம் இறே-திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -அடிமைத்தனம் அநாதி –இசையாமல் இழக்கிறோம் இசைவித்து தான் தாள் இணை அடிக்கீழ் இருத்தும் அம்மான் அன்றோ )

———–

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–
4-5-8-

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்கிறவர்கள் தான் எனக்கு எதிரோ-த்ரிபாத் விபூதி என்னா-இங்கே இருந்து கவி சொல்ல வல்ல எனக்கு ஒத்தார்களோ
தெளி விசும்பு ஆகையால் அந்நிலம் தானே சொல்லுவிக்கும்-இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இந்நிலம் அத்தை தவிர்ப்பிக்கும்-சீதனையே தொழுவார் விண்ணுளா ரிலும் சீரியர் என்ன கடவது இறே

இதற்கு, ‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால்,
அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’-ஆசு கவித்துவம்- என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி.
அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே,-சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை;
அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி,
‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல்
தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘ஆசு கவியாகக் கவி சொல்லிச் சமைக்க வல்லேனான எனக்கு’ என்பது.-பட்டர் நிர்வாஹத்திற்குக் கருத்து, ‘தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்பது.-‘என்னாகியே’ என்ற பாசுரம், திருவாய். 7. 9 : 4.‘உடைகுலைப்படாதே’என்றது ‘பரவசப்படாமல்’ என்றபடி.

——————————-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ
?–4-5-9-

இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-நித்ய ஸூ ரிகளுக்கும் அனுபவிக்கும் மேன்மையை யுடையனானவனை-வியாப்தியோடு அவதாரத்தோடு சேஷ்டிதத்தோடு பரத்வத்தோடு வாசியறக் கபளீ கரித்து-கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–கவி சொல்ல வல்ல எனக்கு இனி எதிர் உண்டோ ஓர் ஓர் ஆகாரத்தை ஸ்துதிக்கப் புக்குப் பிற்காலிக்கும் உபய விபூதியிலும் எதிர் இல்லை என்று கருத்து –

——-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே
.–4-6-1-

நம்மைப் போல் அன்றியே தரித்து நின்று இனி –இனி நோய் தீர்ப்பாரை நாம் எங்கனே தேடுவோம்-இந்நோய் தீர்ப்பாரை -என்னோடு உங்களோடு வாசியற
நோயின் அடி அறியாத எல்லாரும் கூட ஆராய என்றாலும் எங்கனே ஆராய்வோம் -இவள் பரிசரத்தில் பரிஹரிக்கைக்கு ஆள் இல்லை -மோஹிக்கைக்கு ஆள் உண்டு அத்தனை –இனி- கடல் வண்ணார் இது செய்தார் காப்பார் யார் என்று ஒளஷதமே ரோத ஹேதுவானால் பரிஹாரம் உண்டோ –நச்சு மா மருந்தம் இ றே மோஹிக்கப் பண்ணுகிறது-நிர்வாணம் பேஷஜம் பிஷக் –ஆனபின்பு-எங்ஙனம் நாடுதும் —எங்கனே தேடுவோம் –தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –
இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்;
‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்;
‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்து கொண்டிருக்கும் போது
‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
‘இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது?
ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்;
அன்றிக்கே,
‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
அன்றிக்கே,
‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, -சொல் என்றே கட்டுவிச்சி சொன்னாள் –
‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ ‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது?
‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தே அபத்யம்-
என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.

———————-

மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே
.–4-9-6-

அடிமை கொண்ட பின்பு.-னக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே!-உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒண்ணாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை-என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே-நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும் –இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள் கேட்டிற்குக் கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’-என்னை முதல் அங்கே அழைத்துக் கொண்டருள வேண்டும்,’

——–

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.
–5-1-1-

ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –பகவானுடைய கிருபையைப் பக்க பலமாகக் கொண்டு ஈச்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை அறைகூவுகிறார்.-

———–

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
–5-1-3-

இப்படி என்னைத் திருத்துக்கைக்காக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவனே உன் கிருஷி பலித்த பின்பு நித்ய அவசர பிரதீஷனாய் நிரதிசய போக்யனான உன்னை விட்டு நச்வரமாய் துராராதமான எத்தைக் கைக் கொள்ளுவேன் –பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே-சத்ருசமான பரமபதத்தை விட்டு -விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே அவசர பிரதீஷனான பின்பு-முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று -அவசர ப்ரதீஷனனாக நீ இருக்க -நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் வருந்தி ஆராதித்தாதிலும் கிடைப்பது ஒன்றும் இல்லாதவர்களை-துராரதரைப் பற்றவோ –

———————–

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
– நாலாயி:3348/4

பூர்வ க்ஷணத்தில் அறியாதே இருக்க -இங்கனே பலித்துக் கொடு நின்றேன்
அடியேன் மனத்தே மன்னினார்–சம்பந்தம் அடியாக மனசிலே செறிந்தார்-போக்யைகளான ஸ்த்ரீகளும் -அதுக்கு உறுப்பான நிரவதிக சம்பத்தும் -குணவான்களான புத்திரர்களும் பரிவுடைய தாயும் தந்தையும் ஆவார் அவரே -க்லேசகரமான-அவ்வோ பந்துக்களாலே க்லேசப் பட வேண்டா -மாதா பிதா பிராதா -அஹம்தாவத்-யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.-அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.-நற்றாதை நீ தனிநாயகன் நீ வயிற்றிற் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது காணுதி இன்றெனக் கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.- என்பது கம்ப ராமாயணம்.

————–

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-
நாலாயி:3364/1

இனி -என்று தன் வடிவைக் காட்டுகிறாள் -மேல் அடங்க இனி என்கிற இதன் விவரணம்
தோழீ -இப்படி அவகாஹிப்பதற்கு முன்னே மீட்க வேண்டாவோ –
நம்மை -நிறத்தில் வேறுபாடு அவளுக்கும் ஒத்து இருக்கும் படி -ஏஹம் துக்கம் ஸூ கஞ்ச சவ்-வாயாலே மடல் எடுக்க வேண்டா என்கிறாள் அத்தனை வைவர்ணயம் இருவருக்கும் ஒத்து இருக்கும் –யாமுடைத் துணை என்னும் தோழி மாறும் எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ-எனக்கு அவன் வேணும் என்னும் அளவு இறே இவளுக்கு உள்ளது –இவள் நோவு போக வேணும் -என்றும் இருவரும் சேர வேணும் என்றும் இரட்டித்து இறே அவள் நோய் இருப்பது –ததா ஸீன் நிஷ் பிரபோத்த்யர்த்தம் ராஹு க்ரஸ்த இவாம் சுமான்-என்று பெருமாளின் காட்டில் ஒழி மழுங்கினார் இறே மஹா ராஜர்-முதலடியில் உள்ள ‘இனி’ என்ற சொல்லின் பொருளைப் பாசுரத்தில் மேல் உள்ள மூன்று அடிகளும் விரிக்கின்றன.
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான், முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்த; ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும் தோழீ என்று-

————

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே
.–5-3-6-

என்னை -தாயார் பிழையாள்-ஊரார் பழி சொல்லுவார்கள் கிடாய் -என்ன மீளாத என்னை –
இனி உமக்கு ஆசை இல்லை-இவ்விஷயத்தில் மூட்டுகை அன்றிக்கே-மீட்கப் பார்க்கில் பின்பு உங்களுக்கு என் பக்கல் நசை இல்லை –இனி-உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்-இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.
ஆசை இல்லை-இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.-

———–

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே
.–5-4-2-

கண்ணனும் வாரான், நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை – இனி-ஆவி காப்பார் யார் –-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –

————-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இறே ஆதித்யன் போக்குவது -அதனைப் போக்கும்போது நிலவனுமாய் அந்தரங்கமானவனுமே வேணுமே.–விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –

————

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –– நாலாயி:3407/1

இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே-இனி -என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –

இனி-உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ,
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ?
ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால்,-காருணிகனாயும் இருந்து –ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ?
இனி –என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ.
ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை.
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?(உனக்கு சரீரம் என்று அறிந்த பின்பு–மெய் உண்மை என்றும் சரீரம் என்றும் சாடு)

—————

அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

அடிமை கொள்ளுகைக்காக பிராட்டியோடே கூட திருக் குடந்தையில் வந்து காண் வளர்ந்து அருளுகிறவனே -ஒரு தேச விசேஷத்தில் என்ன வேண்டாத படி -தேசத்தில் குறை இல்லை -ஸ்ரீ யபதி யாகையாலே ப்ராப்யத்தில் குறையில்லை -பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா -என்ற இளைய பெருமாளை போலே பற்றுகிறார் –மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இறே -ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –ராஜ புத்திரன் சிறையில் இருந்தால் முடி வைத்து சிறை விடுவிப்பாரைப் போலே-
திருப்பாவை அனுசந்தானம் செய்து கொண்டே சிகிச்சை பண்ணுவார்களாம் பட்டரை-

———–

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வைகள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்-சாத்தியாம்சத்துக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமே’ என்கிறார்கள். அவனும் ஒன்றை –பந்து கழல் -நினைத்து, ‘ஆகில் எனக்குச் ‘சாத்தியாம்சம் தான் இல்லையோ?’ என்று கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்-

———————

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

இப்படி ஒருத்தருக்கும் நிலம் அல்லாத கிரித்ருமத்தை அபலைகளான நாங்கள் அறியவோ -நித்திய ஸூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்று படுத்திப் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ?

————

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-

நுகர வைகல் வைகப்பெற்றேன் -அனுபவத்தோடு காலம் கழிய பெற்றேன் என்னுதல்-அனுபவிக்கலாம் படி காலம் நெடுக்கப் பெற்றேன் என்னுதல்
எனக் கென்னினி நோவதுவே--ப்ரீதி பிரேரிதனாய் அனுபவிக்கிற எனக்கு இப்படி காலம் நித்தியமான பின்பு -விஸ்லேஷம் ஆகிற நோவு உண்டோ-காலம் நெடுகுவது குறுகுவது ஆகாத இடந் தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தி யுண்டோ எனக்கு என்கிறார்.
அன்றிக்கே,-அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல்.-இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ,-சம்சார ரஷண்ம் -பலிக்காததே அவனது நோவு –ரஷிக்க இசைவதே அவன் நோய்க்கு பரிகாரம் –
இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ.
உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

——

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

அவன் சேஷ்டிதங்களை அனுபவித்து நெஞ்சு நெகிழ்ந்து இச் சேஷ்டிதங்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன் -இனி எனக்கு வேண்டுவது என்-இவ்வனுபவத்தோடே காலம் செல்லப் பெற்ற எனக்கு அவாப்தவ்யம் உண்டோ –-அவனுடைய செயல்களை நினைத்து அகவாய் உடை குலைப்பட்டு வேறு பிரயோஜனம் இல்லாதவனாய்க் கொண்டு காலம் போக்கப் பெற்றேன்.
நெஞ்சு நெகிழ்ந்து செயல்களோடே பொருந்தும்படி காலங்களைக் கூடப் பெற்றேன்.
எனக்கு என் இனி வேண்டுவது – இனி அடையத் தக்கது ஒன்று இல்லை என்கிறார்.-

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

இடைவிடாமல் அநுஸந்திக்கும் நெஞ்சு உடையேன் –காரணம் பந்த மோஷாயா -என்கிற பொதுமை தவிர்ந்து அசாதாரணமான நெஞ்சை பெற்றேன் – பஞ்சஸாத் கோடி விஸ்தீரணையான பூமியில் எனக்கு எதிர் யார்-பூமி பரப்பை யுடைத்து என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ?-பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப் போலே கவி பாடி அடிமை செய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவி பாடி அடிமை செய்யப் பெற்ற எனக்கு, பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.-

—————

நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

அநுஸந்திக்கும் நெஞ்சு -நெஞ்சு என்னும் உட் கண் -என்ன கடவது இறே-
அங்கனம் அன்றியே -முடியானே யில் கரணங்களை யுடையாராகையாலே மனஸ்ஸூ சஷூர் இந்திரிய விருத்தியும் லபிக்க வற்றான படி சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் –இந்த விஷயத்தைக் காணப் பெற்றிலோம்’ என்கிற கலக்கமும்-இதர தேவதைகளை ரக்ஷகர் என்கிற கலக்கமும் -ஈஸ்வரனுடைய ரக்ஷணத்தில் அதி சங்கை பண்ணும் கலக்கமும் -தனக்குத் தானே கடவன் என்கிற கலக்கமும் இல்லை –என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் போலே – உபாய அம்சத்தில் கண் வைக்காமல் பிராப்ய அம்சத்தில் கண் வைத்து கைங்கர்யமே யாத்ரையாக போக வேண்டும் –

————-

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

தொலைவில்லி மங்கலம்தொழும் இவளை –அழும் தொழும்-இளைய பெருமாளுக்கு சாம்யம் -நாயனார்பர வியூஹ விபவங்களிலே தொழுதவள் அல்லள்-அது தன்னிலும் உள்ளு நிற்கிற அரவிந்த லோசன் அளவாகில் அன்றோ மீட்கலாவது-அவனோடே சம்பந்தம் உள்ள இடம் எங்கும் புக்கு அவகாஹித்தவளை மீட்கப் போமோ -விஷயம் பரோஷமாய்-எட்டாது கான் என்று மீட்கவோ -ப்ரத்யக்ஷ விஷயம் பரிச்சின்னம் என்று மீட்கவோ-தொழும் இவளை -ஞானா நந்தங்களுக்கு முன்னே நிரூபகம் இ றே பாரதந்தர்யம் -தொழுகையே நிரூபகமாய் இருக்கிறவளை -தாஸோஹம் வாஸூ தேவஸ்ய -ப்ராஞ்சலீம் ப்ரஹவமாஸீனம் -ஒன்றை உருகு பதத்தில் பிடித்தால் வலித்தாலும் அப்படியே உருவ நிற்கும் ஆயிற்று
நீர் -இவளுடைய ப்ராவண்யத்தில் சாதனா புத்தி பண்ணுகிற நீங்கள்
இனி -இவளுக்கு இவ் ஊரைக் காட்டின பின்பு
அன்னைமீர்!-ப்ராப்த யவ்வனை யானாலும் -பெற்றோம் என்கிற ப்ராப்தியைக் கொண்டு மீட்கப் போமோ –அவ்வருகு பட்டாலும் நியந்தரு தையைக் கொண்டு மீட்கவோ

தொழுகை தேக யாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்க வேண்டும் என்பாள்
இனி’ என்கிறாள்.

—————-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–
6-7-3-

லீலா உபகரண ரசமும் திரு நாம மேயான இருப்பை விட்டு -அங்கு என்ன ஏற்றகத்துக்குப் போனாள்-என் புத்திக்கு வசமான செயல்களை யுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப் போனாள்.
அன்றிக்கே,
நிருபாதிகமான பெண்மையை யுடையவள் என்னலுமாம். –
மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல –
விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனே யாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே
அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப் போய்’ என்கிறாள்.

———

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

இதில் காட்டில் அங்கு என்ன -ஏற்றகம் உண்டாய் போனாள் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் என்று இருக்க மாட்டிற்று இலள் -தனக்கு சர்வ ஸ்வமான ஸ்ரீ யபதி கண் வளர்ந்து அருளுகிற வூரிலே -பிராட்டியோபாதி தன் பக்கல் வ்யாமுக்தனானவன் வர்த்திக்கிற வூரிலே –இனிப் போய் –வேறே சில பொருள்கள் கொண்டு போது போக்க வேண்டும் பருவத்திலே, அவற்றை விடும் படியான பாகம் பிறந்த இதற்கு மேலே ஓர் ஏற்றஃகம்-அதிசயம் உண்டாகப் போனாளோ?-சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற முக்தனுக்குப் பிறந்த ஞானம்,
இவளுக்கு இங்கே இருக்கச் செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ? என்றபடி.-

—————

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனி போய் ––6-7-6– நாலாயி:3522/1

பெற்றோரை விடும் படி இவ்விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இ றே ப்ராவண்யத்துக்கு எல்லை-வந்தேறியைக் கை விட்டால் எப்பொழுதும் சித்தமாயிருப்பதற்குச் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?
ஸ்வதஸ் சித்தம் பகவத் கைங்கர்யம் -தேடித் போக வேண்டாம் என்றபடி –

————–

அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய்6-7-7-– நாலாயி:3523/2-

அஹோராத்ரம் அவன் வ்யாமோஹம் அனுபவிக்கிற இவ்விடத்தை விட்டு என்ன ஏற்றம் பெறப் போனாள் -யயவ்ச காசித் ப்ரேமாந்தா-என்கிறபடியே இருட்சி கை கொடுக்க இறே போயிற்று-அவன் தன் பக்கல் செய்யும் வியாமோகத்தைச் சொல்லிக் கூப்பிடும் இதற்கு மேலே தன் வியாமோகம் காட்டப் போனாளே.
அன்றிக்கே, கண்ணும் தோற்றாமல் நெஞ்சும் பறியுண்டிருக்கும் இதற்கு மேலே, இனிப் போய், வேறே ஒன்று உண்டோ அநுபவிப்பது? 

———-

ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய்6-7-9-– நாலாயி:3525/2-

ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்-இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப் போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –இனி மேல் –‘தனக்கு’ என்கிற எண்ணத்தின் அளவிலே உண்டறுக்க மாட்டாதவனுக்கு –திருப்தி படுத்தல் –ஒன்று கொடுத்துக் குறை தீரப் போனாளே.“தே பூயிஷ்டாம்-உனக்கு அதிகமான ‘நம’ என்ற சொல்லைச் சொல்லுகிறோம்” என்றே அன்றோ அவன் இருப்பது.அவன் படியை நினைத்தால் இவளுக்கு இங்கே இருக்க அமையாதோ?

———

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – -6-7-10–நாலாயி:3526/1

புகுந்த விருத்தாந்தத்தை நினைக்கில் ஆழம் காலாய் இரா நின்றது -தன்னோடு ஓக்க உறங்காமையாலே தெய்வங்களைக் கூட்டிக் கொள்கிறாள்-நெடுங்கண்– போக்தாக்கள் அளவில்லாத கண் –இளமான்-தன் கையில் பிரஹ்மாஸ்திரம் என்று அறியாத பருவம்
இனிப்போய்-சர்ப்ப யாகத்தில் போலே அவன் தான் வந்து விழும் படியான கண்ணைப் படைத்த இவள் -தான் போகை மிகை என்கை –விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்! இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!-இனிப் போய் –-யார் செய்யக் கூடியதை யார் தான் செய்கிறார்?
ஸ்வரூப ஞானம் உடைய -கண் படைப்பாளும் தானாய்ப் -புறப்பட்டுப் போவாளும் தானாவதே!-இத்தலை செல்லாதிருத்தற்குச் ஸ்வரூப ஞானமே அமையுமே யன்றோ.-ததேக உபாயத்வம் – பாரதந்த்ர்ய ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யத்ன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது

————————

ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் – நாலாயி:3565/3

ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் யார் மருந்தாகுவார் -பிறர் அல்லாத அற்றைக்கு நீ துணை என்று இருக்கலாம் -நீ கை விட்டால் நோக்கக் கடவார் உண்டோ -மருந்தாவது எது என்னாதே யார் என்கிறது ஒரு பரம சேதனன் மருந்து ஆவான் என்று இருக்கிறார் -நிர்வாணம் -பேஷஜாம் பிஷக்-என் இடையாட்டம் பிறரைக்கொண்டு காரியம் இல்லை: நான் நோவுபடாநின்றேன்.-நீ கை வாங்கினாய். ஆன பின்பு எனக்கு ஒரு இரட்சகர் உளரோ?
நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு: நீ விட்ட அன்று யார் உண்டு?-மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந்திருவந்தாதி, 4.-
அநிஷ்டம் -சம்சாரம் -தொலைக்கும் -இஷ்டமான மோக்ஷம் கொடுக்கும் பொருளும் –போக்யமான அனுபவமும் நீயே-

————-

நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் –7-1-9- நாலாயி:3569/3-

-பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை-

———-

உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும் – நாலாயி:3586/2

வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.-

—————

முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3

கிருஷ்ணனுடைய பும்ஸத்வத்துக்கு என் ஸ்த்ரீத்வத்தை தோற்றேன் -விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்-அவன் அவ்வபதானம் செய்வதற்கு முன்பே மீட்கப் பார்க்க வேண்டாவோ-

———–

ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3

பிடித்தாரைக் கொண்டு வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்க வேண்டாவோ என்ன -நீ என் தசையைக் கண்டு சிதிலை ஆகா நின்றாய் -தாய்மார் ஹிதம் சொல்லி மீட்க்கத் தேடா நின்றார்கள் -இனி பழி சொல்லுவாரை கொண்டு போது போக்கும் அத்தனை இறே -போது போக்குகைக்கு என் நெஞ்சை அழைத்து தருவாரும் இல்லை -அத்தை அழைத்து தரும் போது நெஞ்சிலும் அண்ணியராக வேணும் இறே –இனி யாரைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது –ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது- யாரைக் கொண்டு தான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே?-இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?

————-

ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ? -8-2-3--நாலாயி:3684/2

யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ -ஆனாலும் ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான லஜ்ஜையை விடாதே நோக்க வேண்டாவோ என்ன –
நன்னுதலீர் !இனி நாணித் தான் என் ?-ஜகத்து எல்லாம் அடைய பழி சுமந்த பின்பு லஜ்ஜித்து என்ன பிரயோஜனம் உண்டு -நன்னுதலீர்-நுதல் -நெற்றி -உங்கள் முகத்தில் எழில் அழியாது இருக்க என் முகத்தில் எழில் குடி போன படி கண்டி கோளே -இந்த நெடுவாசியை பார்த்து அன்றோ வார்த்தை சொல்லுவது – –

—————-

கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் 8-2-4-நாலாயி:3685/1

சம்ச்லேஷ அர்த்தமாக சென்றேன் -ஸ்வரூபத்தை அழிய மாறி யன்றோ நான் சென்றது
இனி என் கொடுக்ககேன்-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எத்தை இழப்பது –கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து – அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என்பாடு அற்று வாசனையோடு போம்படியாக இழந்து–
அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்–ஆதலின் எல்லாம் என்கிறது-

————-

அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர்8-2-6-– நாலாயி:3687/3-

இப்படி நோவு படுத்தினவன் தான் தன்னோடு ஸ்பர்சம் உள்ளவற்றை தந்து ஆகிலும் என்னை உஜ்ஜீவிப்பிக்கிறிலன் -அபிமதம் கிட்டாது ஒழிந்தால் சத்தையை நோக்க வேண்டாவோ –ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்-நலிந்த இவனுக்கு கூப்பிடாதே யாருக்கு கூப்பிடுவோம் சொல்லி கோளே -சம்பந்தம் இல்லாதார் வாசலிலே சென்று கூப்பிடவோ-

———-

நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் 8-2-9-நாலாயி:3690/4

இந்திரன் ராஜ்யம் பெற்றான் -மஹா பலி உதார குணம் காட்டிப் போந்தான் நான் எனக்கு சர்வ ஸ்வம்மான அடக்கைத்தையும் லஜ்ஜையையும் இழந்தேன்-இனி என் கொடுக்கேன்-இனி எத்தை கொடுப்பேன்-கீழே நாலாம் பாட்டில் இனி என் கொடுக்கேன் என்று சொல்லிற்று -இதுக்கும் அதுக்கும் வாசி என் என்னில் -பெரிய திருவடி முதுகில் இருப்பிலும் கையும் திரு வாழி யுமான சேர்த்தியிலும் தோற்று நாயக் கூத்தனை யாதரித்து கலக்கச் சென்று கிட்டாமையாலே வந்த இழவு அதில் -ஸ்ரீ வாமனனுடைய அழகிலும் சேலத்திலும் தோற்று மஹா பலியைப் போலே சர்வஸ்வத்தையும் இழந்தேன் என்கிறது இதில்-

————

என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – 8-2-10-நாலாயி:3691/1-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்-எனக்கு உறவு முறையாரான நீங்கள் வடிவு அழகிலும் ஸ்த்ரீத்வத்திலும் குறைவற்று இருக்கையாலே நிர் துக்கைகளாய் இருந்தி கோள்
யான்-எல்லாம் இழந்து அவசன்னையாய் இருந்தேன்
இனிச் செய்வதென் -இப்படியான பின்பு எத்தைச் செய்வேன் -இவற்றை மீட்க்கவோ -அவனை நியமிக்கவோ -எல்லா அளவிலும் தரித்து இருக்க வேண்டாவோ -என்கிறாள் –

——–

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே8-7-2-– நாலாயி:3738/4-

பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –
இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –
இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

—————–

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் இருள் தானற வீற்றிருந்தான்8-7-3--நாலாயி:3739/1-

அருள் தான் இனி யான் அறியேன்-என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்
-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்--அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி-தன் குறைவு தீர்ந்தானாய் -பெறாப் பேறு பெற்றானாய்-அவ் வேறுபாடு தோற்ற இரா நின்றான்-இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ–

—————–

அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே -9-5-2– நாலாயி:3826/4-

இராமாவதாரத்தில் மெய்யும்- கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –ஆகையாலே அவன் பொய்யன் ஆகில் என் -மெய்யன் ஆகில் என் –
இருந்தபடியே உகப்போம் இத்தனை அன்றோ நாங்கள்-என்று தொடர்ந்த கார்யத்தில் முதிர நின்றன –அத்தனை ஆம் –இனி என் உயிர் அவன் கையதே –இனி அவ்வளவே அன்றோ –
இவற்றின் ஒருப்பாடு இருந்தபடியால் அவன் நினைவே தலைக் கட்டி விட்டதே அன்றோ -என்கிறாள் –என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு-என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –

———

பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
– நாலாயி:3834/2,3

நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்-பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இறே -ராமாவதார வாசனையால் –

————

யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ – நாலாயி:3866/4

நான் முடியா நின்றேன் -இனி இப் பேறு பெற இருக்கிறார் யாரோ -நதே மனுஷ்யா -என்கிறபடியே மனுஷ்யர்க்கு கூட்டு அல்லர் அந்தோ –உடைமையான எனக்கு உள்ளது உடையவனுக்கு இன்றிக்கே ஒழி வதே –நதே மனுஷ்யா தேவா தே எ சாரு சுப குண்டலம்-முகம் த்ரஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா-64-69- தசரதன் புலம்பல் –
மனிதர்களுக்கு கூட்டு அல்லர் –-இனி -என்ற சொல்-நான் முடிந்தேன் என்பதனைக் காட்டுகிறது –

—————-

இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4

வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ – இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இ றே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் – வரைந்து நோக்குவான் ஒருவனாய் நான் ஆறி இருக்கேனோ-
வரும் இடத்தில் தடை உண்டு என்று ஆறி இருக்கிறேனோ-என்னைப் பாது காத்து கொள்வதில் எனக்கு சம்பந்தம் உண்டாய்த்தான் ஆறி இருக்கிறேனோ

—————

இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – 9-9-3-நாலாயி:3871

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்-எனக்கு தாரகமான அழகு பாதகமானால் எனக்கு பிராணனை நோக்க விரகு உண்டோ-என்னது என்று அபிமானித்த -உடம்பு பகை ஆயிற்று –என்னது -என்று அபிமானித்த அழகு பகை ஆயிற்று –இனி இருந்து என்னுடைய உயிரை பாதுகாப்பாது என்ற-ஒரு பொருள் உண்டோ –

—————–

எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – –9-9-6-நாலாயி:3874/4

சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –
ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-

————-

அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் -9-9-8- நாலாயி:3876/2

கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –
இனியதனிலும்பர்-பின்னையும் அதுக்கு மேலே மதுவையும் மணத்தையும் உடைத்தான-மல்லிகையாலே செறியத் தொடுத்த மாலை-மந்தம் செறிவு —-அழகிய பசும் சாந்து-இவையும் நலியா நின்றன –

———————

ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – -9-10-9-நாலாயி:3888/2

உத்தராகமானது சேஷியாது -புகுதருவான் நின்ற வினைகளும் -உத்தராகம் -அடைய மாட்டா
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -போலே ––அவன் திருவடிகளிலே தலை சாய்க்க என்னுடைய சகல துரிதங்களும் போவதான பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ –

————-

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை -9-10-10– நாலாயி:3889/1

சகல துக்கங்களும் போம் -இனி எனக்கு என்ன குறை யுண்டு -பகவத் அனுபவ விரோதி துரிதங்கள் போன பின்பு -எனக்கு அனுபவிக்கைக்கு ஒரு தேச விசேஷம் தேடித் போக வேண்டி இருந்ததோ -என்னால் வருவது போவதான பின்பு அவனால் வருவதற்கு ஒரு குறை யுண்டோ -பக்தியில் இழிய பரிகரம் கர்ம ஞான யோகம் இல்லாமல் -பிரபத்தியில் வியவசாயம் இல்லாமல் -யுக்தி மாத்ரத்தால்-அல்லல் -போம் -போக்கிட்டு என்ன -என்றால் -எனக்கேல் இனி என் குறை –-என்கிறார் –

—————

நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே10-1-3–நாலாயி:3893/4-

இன்று நாம் –நன்று நணுகுதும் –அவன் சர்வ ரக்ஷகனான பின்பு -ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் -நன்றாகக் கூடுவோம் -ஸ்ரீ மதுரையை காலயவன ஜராசந்தாதிகள்-கிட்டினால் போல் அன்றியே –ப்ரஹ்மாதிகள் ஷீராப்தியை கிட்டினால் போல் அன்றியே –அநந்ய பிரயோஜனராகக் கிட்டுவோம் –ஆவார் ஆர் துணை -திருவாய் மொழி -5-1-9-என்று-இருக்கிற நம்முடைய துன்பம் கெடும்படியாக-

—————-

மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே10-3-2- நாலாயி:3914/4

இவ்வளவிலே நீ செய்ய வேண்டுவது -மேன்மேலும் உன்னை பிரிவானத்தை நாங்கள் யுடையோராம் படியாக உன்னுடைய பசு நிரை மேய்க்கப் போக்குக்களானவை தவிர்வனவாக வேணும்-இனி -முன்புத்தை பிரிவுகளுக்கு ஜீவித்து இருந்தேன் ஆகிலும் இனி ஜீவித்து இருக்க மாட்டேன் –

———

இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் – 10-6-1-நாலாயி:3946/3

-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —

——————–

இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1- நாலாயி:3990/4

இனி-உன்னைக் காட்டின மாத்ரம் அன்றியே-பரம பதத்தில் சுவட்டினை அறிவித்த பின்பு-நான் –வழிச் சுவடு அறிந்த நான்-போகல் ஒட்டேன் –தம்முடைய செல்லாமையாலும்-சம்பந்தத்தாலும்-தடுக்கவும் வளைக்கவும் உரியர் ஆனபடி –
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14 ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்- செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்- என்றான் இறே-வரும் போது உன் ஸ்வா தந்த்ர்யத்தால் வரலாம் அத்தனை -அல்லது-போம் போது உன் கார்யம் உன்னதோ – இவர்க்கு இப்படி சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறிய தமக்கு உண்டான விரைவாலேயும்- விரும்பிய அளவில் இவர் கார்யம் செய்யப் பெறாத பிற்பாட்டுக்கு-ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு-மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் -என்று- நாணம் கொள்ளுபவன் ஆகையாலும் அன்றோ –

———–

மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – -10-10-6-நாலாயி:3995/2

மனத்துக்கு அமையாமையாலே-எக்காலத்தும் அனுபவித்தாய் –இனி உண்டு ஒழியாய்-
நீ தொடங்கின கார்யத்தையும்-நடுவே குறை கிடக்க விடாதே-அங்கீ கரித்து அருளாய் -என்றது-நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் துணை செய்தது உண்டோ –திருவிருத்தம் தொடங்கி அனுபவித்தாயே –உன் கார்யத்துக்கு உன்னை வேண்டிக் கொள்ள வேண்டுமோ-
இவருடைய அமுதத்துக்கு அனுபவிக்கும் தன்மை உண்டு காணும் –போக்த்ருத்வம் உண்டே -இவ்வாத்மாவையும்-இதனுடைய சரீரத்தையும் விரும்புகை உனக்குச் சேருமோ-
நீ உகந்தாருக்குச் சேருமோ –

—————

நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ – -10-10-7-நாலாயி:3996/4

ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-
பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து-
என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ-
நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –

————

பெற்று இனி போக்குவனோ உன்னை என் தனி பேருயிரை – 10-10-8–நாலாயி:3997/1-

சிறிதும் அறிய முடியாதவனான உன்னை-பெற்று வைத்து-இனி விட உபாயம் -இல்லை-என்கிறார்-பெற்று இனிப் போக்குவேனோ உன்னை –ஓர் அச்சு இல்லாக் காசாய் போகிற்றாகில் போகிறது-என்று இருக்கிறேனோ–அன்றிக்கே-உன்னை நீ அறியாயோ -என்னுதல்-மிக மிகத் தாழ்ந்தவனாய் இருந்த எனக்கு-மிகவும் தாரகனான உன்னைப் பெற்று வைத்து-இனி நான் உன்னை விடுவேனோ –அத்யந்த விஸஜாதீயனாய் இருந்து எனக்கு மிகவும் சத்தா தாரகனான உன்னைப் பெற்று வைத்து – இனித் தப்ப விடுவேனோ-ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே -இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –

———–

இன்னும் (5)
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் -பெரிய திருவந்தாதி-87- நாலாயி:2671/1

இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு

——–

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-98– நாலாயி:2888/1

தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –இடுமே-/ சுடுமே / நடுமே –/ விடுமே -பிரி நிலை ஏவகாரம் -இட மாட்டார் –சுடாது -நட மாட்டார் – விட மாட்டார் -என்றபடி –ஆகையால் நைய வேண்டாமே –கர்ம ஜென்ம சூழல் தப்புவோம்
தாய் போலே அன்றோ ஸ்ரீ ஸ்வாமி –அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான –தனக்கே யாக நம்மை கொள்வார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் இல்லையே கர்ம அனுகுணமாக செய்வதற்கு –நம் வசம் -ருசிக்கு அனுகுணமாக காட்டிக் கொடுக்காமல் – -ரக்ஷணமும் அவர் ஆதீனம் -என்றவாறு –சரணம் என்றால் -ஆல் -சரம பர்வ நிஷ்டை துர்லபம்-அன்றோ -யுக்தி மாத்திரமே அமையும் -மேவினேன் அவன் பொன்னடி -படர்க்கை –
நேராக கூட செல்ல வேண்டாம் -இருந்த இடத்திலே நாவினால் நவின்றாலே போதுமே-

————–

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

அநாதி காலம் இழந்த நான் அநந்த காலம் இழக்கவோ-முறை அறியாத காலம் இழந்தேன் ஆகில் முறை அறிந்த காலமும் இழக்கவோ -ருசி பிறவாத காலம் இழந்தேன் ஆகில் ருசி பிறந்த பின்பும் இழக்கும் அத்தனையோ –இன்னும் தளர்வேனோ –
“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?
‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,
‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

—————–

நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் -–7-1-1- நாலாயி:3561/2

நண்ணிலா வகையே -நான் கிட்டாத படியே -சிலர் நித்ய சித்தர் ஆனால் போலே நான் நித்ய சம்சாரியாம் படி-காதாசித்கமாகக் கிட்டாது ஒழிகை அன்றிக்கே, கிட்டாது ஒழிதலே ஸ்வபாவமாக. என்றது, ‘இனி நண்ணப் புகா நின்றேமோ?’ என்றிருக்கிறார் என்றபடி.-நலிவான் -அவனைக் கிட்டாமைக்கு மேல்பட தமக்கு நலிவு இல்லை என்று இருக்கிறார்-நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு;-திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ் வாத்துமாவுக்கு நலிவு. -தொழுகையே எழுகை போலே
இந்தக் கொடுமையான வகையே நலிவான். இன்னம் -இந்திரியங்களுக்கு அலைந்து உன்னைத் சரணம் புக்க பின்பும்-‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற பின்பும்.
எண்ணுகின்றாய்-என்னை நித்ய சம்சாரியாக்கி அகற்றும் விரகு எண்ணுகிறான் என்று இருக்கிறார்-‘ஈஸ்வரனுக்கு வேறு வேலை இல்லை என்றிருக்கிறார்.பாண்டவர்கள் காரியத்தை எண்ணினாற்போலே, இங்குக் காரியம் செல்லா நிற்கச் செய்தே, மந்திரமும் செல்லுகிறபடி.‘இவரை நம் பக்கலினின்றும் பிரித்தோமாம் விரகு என்னோ?’ என்று சிந்திக்கிறான் என்றிருக்கிறார்.

————

இன்னும் போவேனே கொலோ என்-கொல் அம்மான் திருவருளே10-7-3--நாலாயி:3959/4-

இன்னும் போவேனே கொலோஎனக்கு இத்திசைக்கு அவ்வருகே ஒரு போக்கிடமுண்டோ-ஒரு திக்குக்கு உட்பட்ட நான் இனி அவ்வருகு போவேனோ–இவன் இப்படி கிடந்தது படுகைக்கு-இனி அவ்வருகு போகையாவது -திருமலையில் சம்பந்தத்தை அறுத்துக் கொள்ளுகை- அன்றோ –இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்-எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-

————-

இன்னம் (17)
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/3
இப்போதும்  அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –-இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி-இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி
அதிலும் த்ருப்தி பிரவ்பாமல் -இன்னமும் வேண்டி இருப்பன் நான் என்று சொல்லி –போந்து நின்றான் –அந்ய பரரைப் போலே அங்கு நின்றும் விடப் போந்து நில்லா நின்றான் –

—————–

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை -3-7-3– நாலாயி:288/3

முலையோ முழு முற்றும் போந்தில -என்கிறபடியே -முலைகள் ஆனவை
ஆண் முலைக்கும் பெண் முலைக்கும் வாசி தோற்ற முகம் திரண்டு கிளர்ந்தன இல்லை
இவள் தான் யுவதி யானாலும் தாயாருக்கு அவளுடைய சைசவம் இறே தோற்றுவது-

—————

அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் – 5-2-6-நாலாயி:448/3

இன்னம் அற்றம் உரைக்கின்றேன் –-இன்னம்-மீண்டும் உங்களுக்கு அறுதி சொல்கிறேன்-அநாதி காலம் ஈஸ்வரனை விட்டு -தரைப் பட்டு போம் படி பண்ணினவர்களே-துர் அவகாஹமான  வினைகளே-போகப் பாருங்கோள்-

————-

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ – நாலாயி:488/1-

இவர்கள் அழைக்கிறது தன் அனுசந்தானத்துக்கு விக்நம் ஆகையாலே பேசாதே கிடக்க –இன்னம் உறங்குதியோ -என்கிறார்கள் – கிருஷ்ண விரஹத்தாலே தளர்ந்து உறக்கம் இன்றிக்கே- உன் கடாஷமே பற்றாசாக நாங்கள் நின்ற பின்பும்-உறங்கும் அத்தனையோ –
கிருஷ்ணானுபவத்துக்கு ஏகாந்தமான காலம் சித்தித்து இருக்க உறங்கக் கடவையோ -என்றுமாம் – உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார் உண்டோ -என்ன –நாங்கள் வருவதற்கு முன்பு உறக்கத்தை பொறுத்தோம் ஆகிலும் நாங்கள் வந்தால் உறங்கக் கடவதோ-துவண்ட எங்கள் ஆர்த்த த்வனி கேட்டும் கண் உறங்குவதே உனக்கு-கிருஷ்ண அனுபவத்துக்கு ஏகாந்தம் பெற்றாலும் உறங்கக் கடவதோ-

————–

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – -பெருமாள் திருமொழி -6-5-நாலாயி:702/4-

அப்பாவி உன்னை -அறியாதவள் ஆகையாலே மெய் என்று இருக்கிறவள் வெறுக்கும் படி
அவளை விட்டு இங்கு என் செய்ய வந்தாய்-அங்கனே சில யுண்டோ எனக்கு -அநந்ய கதி யன்றோ என்று அவன் சொல்ல-இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— குறைவாளரைப் போலே சில வார்த்தை சொல்லக் கடவீரோ – நீர் பூர்ணர் அல்லீரோ –-அங்கே நடவீர் –

——————–

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே –  6-8-நாலாயி:705/4-

நீ நியத ஸ்வ பாவன் அல்லாமையாலே என் கையிலேயும் ஒரு நாள் வந்து அகப்படக் கூடும் இறே – அகப்பட்டாயாகில்-என் சினம் தீர்வன் நானே– ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி – கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ – அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

———-

வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல் –—9-4–- நாலாயி:733/1-

வந்தவாறே இன்னம் போம் போது ஒருக்கால் கண்டு போம் என்னும் –
இப்படி யாகும் இவன் யாத்ரை தான் இருப்பது –

———-

தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
– நாலாயி:2022/2,3-

நீ சொன்னவற்றுக்கு  மறு மாற்றம் சொன்னாயே யாகிலும் பின்னையும் உன்னை வடிம்பிட்டுக் கேட்க வேணும் என்னும் நிர்பந்தம் இல்லாத மனுஷ்யர்கள் உடைய கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அனுகுணமாக சம்சரிப்பிக்கிறாயோ-என்று
சம்சரிக்கைக்கு கர்மம் பண்ணுவான் அவன் இறே –அதுக்கு ஈடாக பிரவர்த்திக்கும் அது  அன்றோ வேண்டுவது ஆனாலும் சரீரத்தோடு இருக்கச் செய்தே அன்றோ உமக்கு ஜ்ஞானம் பிறந்தது  -என்ன-நெடு நாள் தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று அகன்று போந்ததும் இச் சரீரத்தோடு அன்றோ –இன்னம் கழிந்த காலம் அநாதி-மேல் உள்ள காலம் அநந்தம் ஆன பின்பு ச்ம்சரித்த காலம் போராதோ இது தண்ணியது என்றும் அத்தைக் கழித்துத் தருவாய் நீ என்றும் அறிந்த பின்பும் இந்த நோவு பட வேணுமோ –

ஆனாலும் இத்தைக் கழித்துத் தருவோம் நாம் -என்னும் அறிவைப் பிறப்பித்தோமே -என்ன-ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – ஆகில் நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ – சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-ஆறு பெருகித்  தன் வேரை அகழ்ந்து   பொகடா நின்றால் பேர நிற்றல் பரிஹரித்துக் கொள்ளுதல் கூப்பிடுதல்
செய்வது அறியாது இறே-பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும் பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் –-பயமே இறே இவனுக்கு உள்ளது –
அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )-நன்றும் அஞ்சுவன் -(திருவாய் )-மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே – பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில்
என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –

———-

தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – -11-8-3–நாலாயி:2024/1

தூங்கார் பிறவிக்கள் – தூங்குதல் -அசைவும் உறங்குதலும் –-அசைவு மிக்க ஜன்மம் -என்னுதல்-தம பிரசுரமான ஜன்மம் -என்னுதல்-இன்னம் புகப் பெய்து –இதுக்கு முன்பு பட்டது போராதோ –வாங்காய் என்று– மீட்க்கைக்கு தாமும் கூட்டு என்னும் இடத்துக்கு
பாசுரம் இட்டுச் சொல்லுகிறிலர் –சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப் –-பரிஹாரத்தில் வந்தால் தம்மை அசித் சமராக நினைத்தாரே ஆகிலும் சேதனரான வாசிக்கு பயம் அனுவர்த்திக்கையும் தவிராதே –

———

உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – -11-8-4–நாலாயி:2025/1

இத் தேஹத்தில் அஹம் புத்தி பண்ணலாம் படி பொருந்திப் போந்த ஜன்மங்களிலே
தேஹத்திலே அஹம் புத்தி பண்ணிப் போருகையாலே-அதுவே விஸ்த்ருதமாய்-ஆத்ம வஸ்து தேய்ந்து போம் இறே-தேஹாத்மா அபிமான ஜனகமாய் இருக்கிற ஜன்மங்களிலே
இன்னமும் என்னுடைய கர்மானுகுணமாக பிரவேசிப்பித்து –

——————–

இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே-ஸ்ரீ திரு விருத்தம் -30– – நாலாயி:2507/4

தூது போந்த உமக்கு தூது வந்த பின்பும் போகீரோ —ந காலஸ் தத்ரவை பிரபு-என்று இருந்தீரோ-அவ் இடம் கால க்ருத பரிணாமம்  உள்ள தேசம் என்று அறிந்து இலீரோ —
பகலும் இரவுமாய் இருக்கும் காணும் அங்கு-அது தன்னிலும் ஒரு பகல் ஆயிரம் ஊழி யாய் அன்றோ செல்லுகிறது-

——

உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -84-நாலாயி:2874/4

இவ்வளவும் சொல்லிப் போந்த இவை அன்றிக்கே இன்னமும் அவர் தம்மாலே நான் பெற்ற பேற்றை சொல்லப் புக்கால் முடிவு இல்லை –நான் பெற்றவற்றுக்கு ஒரு தொகை இல்லாமையாலே கணக்கிட்டு சொல்ல மாட்டிற்று இலேன் என்கிறார் –இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் –உலப்பு -முடிவு -எல்லை-

——————–

கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே –-5-1-10– நாலாயி:3350/4

மேல் வரும் விரோதத்தைப் போக்குகைக்கும் இன்னம் கற்கியாக இருந்தான் என்றது,
என் காரியம் சமைந்த பின்பும் “சம்சாரத்தில் நின்றும் கால் வாங்குந்தனையும் இவர்க்கு என் வருகிறதோ?” என்று கொண்ட குதை–எடுத்துக் கொண்ட உத்யோகம் – மாறுகின்றிலன் என்றபடி.-நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன்
என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும்.-நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத் தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான்.-நீர் கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன்.-எப்போதும் மழை பெய்யக் காத்து இருக்கும் மேகம்

—————

திருக்குடந்தை ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ – 5-8-10-நாலாயி:3427/4

என்னை அடிமை கொள்ளுகைக்குத் திருக்குடந்தையிலே வந்து அண்மையில் இருப்பவனே! என்றது,-நான் கிட்டாத அம்சத்துக்கு நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி.
நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி-ஒரு நத்தம் இல்லாதான் ஒருவனையோ நான் பற்றிற்று. இதனால், பரத்துவம் வியூகம் விபவம் என்னுமிவற்றைக்காட்டிலும்
இதற்கு உண்டான வேறுபாட்டினைத் தெரிவிக்கிறார்.
உனக்கு ஆட்பட்டும் – சம்சாரிகளை அநுபவிப்பிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும்.
அடியேன் –யாருடைய வஸ்து இங்ஙனே அலமந்து திரிகிறது.
இன்னம் உழல்வேனோ-என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக நினைத்திருக்கிற நான், இன்னம் எத்தனை திருப்பதிகள் புக்குத் தட்டித் திரியக்கடவேன் என்கிறார்.-

————-

கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/3

நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவை யெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றா நின்றது காண்?விரகு அடித்தாய் -வீண் -கிறி செய்து -சம்சாரத்தில் பொருந்தாமல் நீயும் கிடைக்காமல் துடிக்கும் படி செய்தாய் –பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற் போலே,பகவத் குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?
“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?-கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே? என்று ஒன்று உண்டோ என்கிறார். என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.

—————-

கூவி கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9– நாலாயி:3547/4

அந்நிய பர உக்தியில் -வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.கால அவதி -கேட்க்கும் பிரகரணத்தில் பிராப்ய நிஷ்கரஷம் பண்ணுகிறார் –‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன்
என்னும் சத்தி யோகம் கூறியபடி.-பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.
இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-‘கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது.

இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.-இதர விஷயங்களின் காட்சி முடியும்படியாய்,உன் திருவடிகளின் இனிமை அறிந்து விட மாட்டாத அளவு பிறந்து பின்பு – இன்னம் தாழ்க்குமத்தனையோ?பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,-இதனைக் கேட்டுச் சீயர் அழ,-‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

————-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே
–10-8-10-நாலாயி:3977

இது தானே மாறி மாறி உயிர் உள்ள அளவும் செல்லுகையே அன்றோ வேண்டுவது-
மீண்டு வருகை இன்றி ஒழிகை யாவது -மீளாது ஒழிகை-சம்பந்தம் இல்லாததாக இருக்கிறதோ என்னில்-
எந்தாய் – இவ் வநுபவம் ஆத்மாவோடு கூடியது என்கிறது –ஸ்வரூப பிராப்தம் –
இத்தலைக்கு அடிமையும்-தேவர்க்கு ஏவும் தனமையை உடைய தலைமைத் தன்மையும் அன்றோ ஸ்வரூபம்- இவர் விரும்பிய போது அவனும் செய்கிறோம் என்ன-ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

--------------------------------------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

January 20, 2025

ஸ்ரீ திருவல்லிக்கேணி -பகல் பத்து- இராப் பத்து அனுபவம்-

பகல் பத்து முதல் நாள்–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் திருக்கோலம்
ஸ்ரீ பார்த்தா சாரதி ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் மஹா மண்டலத்தில் திரு ஓலக்கம் -1-45-pm திரு ஆராதனம் -தளிகை -அருளப்பாடு -2-11 pm
சேவை தொடக்கம்-திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திரு மொழி –2-25 pm தொடங்கி -4-20-pm வரை 2 பதிகம் –
சாற்று முறை -தீர்த்த்ம் சடகோப விநியோகம்
உள் புறப்பாடு -6 pm மணிக்கு தொடங்கி -வரதர் சந்நிதி திருமழிசை ஆழ்வார் சந்நிதி ஆனால் சந்நிதி -6-45-pm
ஆளவந்தார் சந்நிதி -7-25-pm
ஒய்யாளி -பின்பு 8-00 pm -மணிக்கு

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு-அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே
இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே –நம்பி என்கிறது-என்னுடைய உஜ்வலமான நாமம் இந்த லோகத்தில் எவ்வளவு செல்லும்
அவ்வளவும் உனக்கு ராஜ்ஜியம் நடக்க கடவது என்று அருளி செய்த
ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ
–81-என்கிறபடியே அவ் அவதார குணம் எல்லாம் இங்கே பிரகாசிக்கும்படி திருமலைக்கு- நிர்வாஹகனாய் இருக்கிறவனுக்கு –

பகல் பத்து -2 நாள் ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலம்

சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க 
குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது 
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப 
கறைவையின் கணங்கள் கால் பரப்பி இட்டுக் கவிழ்ந்து இறங்கி செவி ஆட்ட கில்லாவே -3-6-8 – –

சிறு விரல்கள் தடவி பரிமாற –
கரும் சிறுக்கன் -என்ற பருவத்துக்கு தகுதியாம்படி சிறுத்து இருந்துள்ள திரு விரல்கள் ஆனவை –
திருக் குழலின் துளைகளில் புதைக்க வேண்டுவது –
புதைத்து திறக்க வேண்டுவது –
திறக்கைகாக குழலின் துளைகளை தடவிக் கொண்டு வ்யாபரிக்க

செம் கண் கோட –
இட வணரை இடத் தோளோடே சாய்த்து துளை தோறும் கண்ணோட நின்று ஊதுகையாலே 
சிவந்து இருந்த திருக் கண்கள் ஆனவை வக்கரிக்க 

செய்ய வாய் கொப்பளிக்க –
வாய் கடை கூட -என்கிறபடியே
இரண்டு கடை வாயையும் குவித்து ஊதுகிற போது –
சிவந்த திருப் பவளமானது அக வாயில் உண்டான வாயுவினுடைய பூரிப்பாலே குமிழ்க்க 

குறு வெயர்ப் புருவம் கூடலிப்ப-
உலாவி உலாவி குழலூதுகிற ஆயாசம் பொறாமல் ஸௌ குமார்யத்தாலே 
குறு வெயர்ப்பு அரும்பின-பரம்பின – திருப் புருவமானது மேலே கிளர்ந்து வளைய 

கோவிந்தன் குழல் கொடூதின போது –
கோ ரஷணத்திலே தீஷிதனாய் –
அவற்றை மேய்த்துக் கொண்டு திரியுமவன் –
அவன் மேய்ந்து வயிறு நிறைந்த ஹர்ஷத்தால் –
சர்வ ஜந்து ஜாத மநோஹரமான  திருக் குழலைக் கொண்டு ஊதின போது 

பறைவையின் கணங்கள்
பஷிகளினுடைய திரள்கள் 

கூடு துறந்து –
தம் தாமுடைய வஸ்தவ்ய ஸ்தலங்களை விட்டு  

வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப –
குழலோசை வழியே ஊதுகிறவன் அளவும் வந்து சூழ்ந்து கொண்டு –
வெட்டி விழுந்த  காடு போலே பரவசமாய் கிடக்க 

கறைவையின் கணங்கள்-
பசுக்களினுடைய திரள்கள் ஆனவை 

கால் பரப்பி இட்டுக் –
பாரவச்யத்தாலே கால்களை பரப்பி 

கவிழ்ந்து இறங்கி –
தலைகளை மிகவும் நாற்றிக் கொண்டு 

செவி ஆட்டகில்லாவே –
செவியை இசைக்கில் இசைக்கு பிரதிபந்தகம் ஆம் -என்று 
செவியை ஆட்டவும் மாட்டாதே நின்றன — 

பெரியாழ்வார் திரு மொழி சாற்று முறை -உள் புறப்பாடு

————————————-

பகல் பத்து -3 நாள் ஸ்ரீ காளிங்க நர்த்தன திருக்கோலம்

திருப்பாவை -நாச்சியார் திரு மொழி -ஸேவை9 பத்து வரை

மகுடியும் வாசிப்பார்கள் புறப்பாட்டின் முடிவில்-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
 -12-7-

பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

நீள் கடம்பு –
இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

புகப் பாய்ந்த –
கால் ஆழக் குதிக்க

வாய்த்த காளியன்
தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

மேல் நடமாடிய-
ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

கூத்தனார் வரில் –
ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

கூடிடு கூடலே-
உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

—————————

பகல் பத்து -4 நாள் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலம்

பெருமாள் திருமொழி ஸேவை-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை-தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
சிவந்த தளிர்கள் நடுவே விகசியா நின்றுள்ள புஷ்பங்களை உடைத்தாய் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான
சோலையாலே அலங்க்ருதமான ஊரிலே

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அநந்ய பிரயோஜனரான பிராமணர் மூவாயிரம் பேர் -திரண்டு மங்களா சாசனம் பண்ண

அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே–
கோப்புடைய சீரிய சிங்காசனம் என்னும்படியே மஹார்கங்களான ரத்னங்களை யுடைத்தான-சிம்ஹாசனத்திலே
தன் மேன்மை தோற்ற வீற்று இருந்த ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார் –

———

பகல் பத்து -5 நாள் ஸ்ரீ ஏணிக் கண்ணன் திருக்கோலம்

முதல் ஆயிரம் சாற்று முறை ஸேவை

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து –
க்ருஷ்ணன் மேலே விழுகைக்கு உறுப்பாக பரப்பு மாறக் காய்ந்து ஓங்கி நின்ற விளாவான
அசுரனுடைய கனிகளை -கன்று விட்டு எறிந்து உதிர்த்து

எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து –
விளாவான அசுரனை அழியச் செய்து க்ருஷ்ணன் கிட்டின பின்பும் பேராதே நின்ற
பூங்குருந்தை ஊசி வேரோடே பறித்து விழ விட்டு –

இதுவும் அவன் மேலே விழுந்து புஷ்பாபசயம் பண்ணுகைக்கு உறுப்பாக பரப்பு மாறப்
பூத்து நின்றது ஆய்த்து –

இவை இரண்டாலும் அனுகூல வேஷராய் நலிய வந்த அசுரர்களை அழியச் செய்தபடி
சொல்லிற்று –

மா பிளந்த –
ப்ரதிகூலனாயே வாய்பாறி ஊரை அழிக்க வல்ல கேசியை அநாயேசேந இரு கூறாகப்
பிளந்து அவ்வாபத்தைப் போக்கினான்

கைத்தலத்த கண்ணன் என்பரால் –
ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன்
என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்

ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின் பேய்ச்சி பாலை உண்டு
ஆய்ச்சி பாலை உண்டு -வெண்ணெய் உண்டு –
யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –
இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால்
அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –

பேய்ச்சி பாலை உண்டு –
தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து –
அவ்வழியாலே அவளை முடித்து –

யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி
பின் மண்ணை உண்டு –
க்ருஷ்ணனுடைய மௌக்த்யத்தை அனுபவித்த சமனந்தரம் தத் ஸத்ர்சமான வட தள
சாயினுடைய மௌக்த்யத்தை யனுபவிக்கிறார் –
கல்ப அவசாநத்திலே சிறிய திரு வயிற்றிலே ஜகத்தை அடைய அமுது செய்தால்
சாத்மியாது என்று அறியாதே மௌக்த்யம் இ றே வட தள சாயி உடைய மௌக்த்யம்

பண்டு ஓர் ஏனமாய வாமனா —
கல்பாதியிலே ஒரு ஸ்ரீ வராஹமாய் -ஒருத்தர் அர்த்தியாக இருக்க பூமியை எடுத்து ரஷித்து
அந்த பூமியை மகாபலி அபஹரிக்க ஸ்ரீ வாமனனாய் அளந்து கொண்டவனே –

1-தன்னை அழிய மாறி ரஷித்த சௌலப்யத்துக்கும்
2-வரையாதே எல்லாரையும் தீண்டின சீலத்துக்கும்
க்ருஷ்ணாவதாரத்தொடு சாம்யம் உண்டாகையாலே
இவ்வதாரங்களை அனுபவிக்கிறார் –

——————————————————

பகல் பத்து -6 நாள் ஸ்ரீ பரம பத நாதன் திருக்கோலம்
இன்று தொடங்கி மூலவர் தர்சனம் -மீசை இல்லாமல் ஐந்து நாள்களுக்கு ஸேவை

பெரிய திரு மொழி தொடக்கம்
ஸ்தல பாசுரம் -சேவை பொழுது மூலவர் ஹார்த்தி -ஐந்து நாள்களுக்கு மீசை இல்லாமல் சேவை

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
-2-3-1-

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

வியாக்யானம் –

அடுத்து –
மேல் விழுந்து கிட்டி

ஆர்த்து எழுந்தாள் –
ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு –
கிளர்ந்து வந்து தோற்றினவள் –

பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை
(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்
கூர்மை கூரிய
திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்

விளங்கு இத்யாதி
கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி
நித்ய சூரிகள் கார்யத்தை நிர்வஹித்து கொண்டு போகிறவன்-

நண்ணார் -இத்யாதி –
சத்ருக்கள் முன்பே
இந்த்ரனுடைய அபிசந்தி பூர்வகமாக வருகிறது ஆகையாலே
(நண்ணார்-எதிர்த்து வந்த இந்திரனும் -அவனுக்கு எதிரிகளான கோப கோபிமார்கள் -)
பெரிய வேகத்தோடு கோஷித்துக் கொண்டு தோற்றின
மஹா வர்ஷத்தை கோவர்த்தன கிரியைத் தரித்து
பண்ணின உபகாரத்தையும் அறியாதே
ஸ்வ ரஷணத்துக்கும் பரிகாரம் இல்லாத (அநந்யார்ஹ -ஆகிஞ்சன்யம்)பசுக்களை
நோக்குகைகாக தடுத்தான் ஆயிற்று

தடாகங்களாலே சூழப்பட்ட தர்ச நீயமான சாளக்கிராமத்தை அடை நெஞ்சே –

—————

————–

பகல் பத்து -7 நாள் ஸ்ரீ பகாசூர வத திருக்கோலம்

பெரிய திரு மொழி -3 பத்தும் 4 பத்தும் ஸேவை

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

—————

பகல் பத்து -8 நாள் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக திருக்கோலம்

பெரிய திருமொழி -5-6-7 ஸேவை

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

இரக்கம் முதல் படி -அருள் அடுத்து – இன்னருள் அடுத்து -இத்தை உபபாதிக்கிறது மேல் –
இங்கு ஒழி-பிரிவு இருந்தால் தானே சேர்க்கையில் சுகம் உண்டு இங்கேயே நில்
சொற்கள் வந்து-கர்ணா கர்ணிகையாய் வந்து

ஏழை –
அஞ்ஞன்
ஏழை என்ன அஞ்ஞன் என்று காட்டுமோ என்னில் -சபலன் என்ற படி –
விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே –
அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் –
என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –
யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் –
விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞா -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
(மற்ற வேறே பெண்ணை ஏர் எடுத்துக் பார்க்காத யசஸ்ஸூ )
இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –

(விஷய சாபல்ய ஹேதுவான அஞ்ஞானம்
அபோக்யங்களில் போக்யதா புத்தி பண்ணுவது –
கீழ் இரண்டையும் -அவாந்தர பேதங்களைச் சொன்னது இதன் குரூரம் அறிவதற்காக
விஷய ப்ராவண்யமாக பரிணமிக்கும் விபரீத ஞானம் -)

ஏதலன் –
சத்ரு
தாயைச் சோறு வேண்டும் போது
வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –
ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி
(யுத்த காண்ட ஸ்லோகம் -கருட இறக்கையால் நாக பாசம் –
விரோதிகள் இடம் வாத்சல்யம் -குகன் தாய் இடம் விரோதி )
மர்யாதா நாஞ்ச-என்கிறவர்க்கு   எதிர் தட்டாம்படி
மர்யாதா பங்கம் பண்ணி இறே இருப்பது
இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது-
(ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -அனுஷ்டானத்தைச் சொன்னவாறு )

கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்
கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்
பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே –
இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே
இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி –
இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –

இம் மூன்றாலுமாக
பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து –

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி-
இவை ஒன்றும் பாராதே யாய்த்து இரங்கிற்று –
ருஷீணாம் அக்னி கல்பா நாம் -என்று
ஜன்ம வித்யா வ்ருத்யங்களை உடையராய் இருக்கும்
உபாசகரான ருஷிகளுக்கும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும் இளைய பெருமாளுக்கும்
சாதன சித்த்யர்த்தமாகவும்
போக சித்யர்த்தமாகவும்
இரங்கும் இரக்கத்தை இறே
இவர் அளவில் இரங்கிற்று –
(சாதனா நிஷ்டர்களுக்கும் கைங்கர்யமே பிரார்த்திக்கும் இளைய பெருமாளுக்கும்
இவர் இரக்கமே உபாயம் )

அதவா
என்னாது இரங்கி –
இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –
ந தர்ம நிஷ்டோஸ்மி-ந ஆத்மவேதி –
அமர்யாதா-
(நல்லவை இல்லை தீயவை சகலமும் உண்டு என்பதுக்கு இரண்டு பிரமாணங்கள் ஸ்தோத்ர ரத்னம் )
ராவணே நாம -இத்யாதிகளில்
சரணம் புகுவார் ஸ்வ நிகர்ஷத்தை  முன்னிட்டு
கொள்ளக் கடவர்கள் என்னா நின்றது இறே –

ஸ்ரீ குகப் பெருமாள் சொல்லக் கடவ பாசுரத்தை
இவர் சொல்லுவான் என் என்னில்
அவருடைய கருத்தாலே-

மற்று அவர்க்கு –
அவனுக்கு அதுக்கு மேலே –

இன்னருள் சுரந்து –
இவ் விஷயீ காரத்துக்கு மேலே
இனிய அருளைச் சுரந்து
இன்னருள் –
தன் பேறான அருள்

சுரந்து –
வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை
சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –

இத்தை உபபாதிக்கிறது மேல் –
மாழை மான் மட நோக்கி-
நிகர்ஷம் சொன்னால்
பிரதமத்தில் முன்னிடக் கடவ
அர்த்தத்தைச் சொல்லுகிறது –
முக்த்தமான மானின்  உடைய மிருதுவான நோக்குப் போலே
உள்ள நோக்கை உடையவள் –
இத்தால் சம்பந்தம் இருவரோடும் ஒத்து இருக்கச் செய்தே
இவளுடைய கடாஷத்தின் உடைய முற்பாடு சொல்லுகிறது –
இவனைப் பாரா அவனைப் பார்க்கும் –
ப்ரேஷிதாஜ்ஞாச்து கோசலா இறே –
பிரணயினி பிரணயிகளுக்கு வாயால் சொல்லுவது இல்லை இறே –
(உள்ளே ஓடும் எண்ணத்தை அறிபவர் கோசல தேசத்தார்
அதுக்கும் மேலே அபிமத அநுரூப பிரணயி )
இத்தனை குறைவாளனை  விஷயீ கரியாது ஒழிகிறது என் –
என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால்
இவள் வழியே போவான் ஒருவன் இறே –

யுன் தோழி –
உனக்கு ஸ்வாமிநி- என்னாதே
தோழி என்கிறார் -நீர்மையாலே
சீரியார் சேஷ பூதரையும் -அண்ணா ஆச்சி -என்னா நிற்பார்கள் இறே
இவர்கள் தான் இங்கன் அல்லது சொல்லா நிற்க மாட்டார்கள்
மித்ர பாவேன-
(சர்வ லோக சரண்யனாக வந்தவனை -நண்பனாகக் கொண்டு )
மித்ர மௌபயிகம்-
தேன மைத்ரீ பவதுதே –
(காலைப் பிடிக்கவும் யோக்யதை இல்லா ராவணனுக்கு உபதேசம் நட்பு கொள்வாய்
உன் குடி இருப்பு நிலைக்க -சரணாகத வத்சலன் என்று சொல்லியும் )

இவ் வார்த்தை போழ்க்கனாய் இருக்கை
(உபசார வார்த்தையாக கபடமாக இல்லாமல்
பிராப்தி சமயத்தில் நிரஞ்சனம்- சாம்யா பத்தி-ஸாதர்மம் ஆகதா
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
குண சாம்யத்தையும்
போக சாம்யத்தையும்
தேக சாம்யத்தையும்
போக்ய சாம்யத்தையும்
கொடுத்து இறே வைப்பது –

உம்பி யெம்பி –
உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –
இங்கனே சொல்லுவான் என் என்னில்
பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை
அவரோபாதியாக நினைத்து இருக்கும்
இளைய பெருமாள் கருத்தாலே

பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் சச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட வருளினாய் -என்றும்
சொல்லுகிறபடியே
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -என்று
சம்சாரத்தில் நின்றும் ஒருவன் முக்தனாய்ச் சென்றால்
ஸ்ரீ பாதம் விளக்கி ஸூரிகள் ஆதரிக்கக் கடவர்கள்
என்னா நின்றது இறே
அவர்களிலே பிறி கதிர் பட்டு  போந்தவர் இறே இளைய பெருமாள்

இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் பண்ணிக் கொடுத்த படி-
தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
சொல்லக்  கடவது இறே  –
(பாகவத அபிமானம் பெற்றுக் கொடுப்பதே சேமம் விமலத்வம் )

என்று ஒழிந்திலை-
அவ்வளவிலே விட்டிலை
பிராட்டியை தோழி என்றும்
இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே
ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –

உகந்து –
உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்
உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே
(உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )

தோழன் நீ எனக்கு –
ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி
புருஷகாரத்தை முன்னிட்டு
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
அநந்தரம்
உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே
அத்தைச் சொல்லுகிறது –
(நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

இங்கு ஒழி –
பின்பு தொடர்ந்து போகப் புக்கால் காணும் இவரும் ( கலியனும் )-
படை வீடு கெடாமைக்கு ஒருவனை வைத்தோம்-
வழி யடி கெடாத படி   இங்கே இரும்-
ஸ்வ இச்சா அனுரூபமாக வன்றியிலே
க்ரியதாம் இதி – யிலே அங்கும் உள்ளது-
(சிஷ்யச்ச தசஸ் ச என்று சொல்லி பரதாழ்வான் -வருவான் அவனுக்கு வழி காட்ட வேண்டுமே
இதுவும் பாகவதருக்கு சேஷமாக்குதல்
தான் ஆசைப்பட்ட -இஷ்ட விநியோக அர்ஹனாக்கி )

என்ற சொற்கள் –
அவ் வர்த்தங்கள் அன்றிக்கே
அப் பாசுரம் காணும் இவரை வருத்துகிறது

வந்து –
ஒரு கால விசேஷத்திலேயாய் இருக்க
கர்ண பரம்பரையாக வந்து
இவர் நெஞ்சிலே யாய்த்து ஊற்றி இருந்தது
இப் பாசுரம் தன்னை
குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –
( வேதம் தமிழ் செய்த பரகாலன் )

அடியேன் மனத்து இருந்திட-
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி -என்னுமா   போலே
இவர் நெஞ்சிலே யாய்த்து வேர் விழுந்தது
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம்
சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடைக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –

(சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி பிரியாணி மதுரானி அம்ருதாணி பரதன் பேச்சைப் பற்றி பெருமாள் –
எப்பொழுது நான் சேருவேனோ என்று எல்லாம் பிதற்றி
சேஷன் வார்த்தை சேஷி திரு உள்ளத்தில் அது
இங்கு ஒழி -பரதன் கைங்கர்யத்துக்காக சொன்னது போல் எனக்கும் கொடுத்து அருள வேணும் )

ஆழி வண்ண –
ரத்னங்களால் கடல் நிரம்பி இருக்குமா போலே
ஆஸ்ரயநீயத்துக்கு ஏகாந்தமான  குணங்களால் நிரம்பின கடல் –
அபார காருண்யா -இத்யாதி
யதா ரத் நாநி ஜலதேர சந்க்க்யே யானி புத்ரக
ததா குணாஹ்ய நந்தச்ய
அஸங்யேய மகாத்மான
உத்பத்தியும் அங்கேயுமாய்
வாசமும் அங்கேயுமாய்
புறம்பு ஓர் இடத்தில் அன்றிக்கே
எல்லாரும் ஆதரிக்கும்படி ரத்னங்கள்
இருக்குமாப் போலே யாய்த்து குணங்கள் இருக்கும்படி

அதவா
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே
வடிவைக் கண்ட போதே
சாம்சாரிகமான தாபங்கள் உடைய ஆறும்படி யாய்த்து இருப்பது –

நின்னடி இணை  –
அனந்தரத்தில் சரணவ் என்கிற பதத்தை நினைக்கிறது –
(பூர்வ வாக்ய அர்த்தமே இப்பாசுரம் -ஆழி வண்ண நாராயண -)

அடைந்தேன்
பிரபத்யே வர்த்தமான கிரியா பதம் அமுக்கியம் இவருக்கு

அணி பொழில் திருவரங்கத் தம்மானே
ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது

அணி -என்று
பொழிலுக்கு விசேஷணமுமாய்
கோயிலுக்கும் விசேஷணுமுமாய்  இருக்கிறது
அதாகிறது
சம்சாரத்துக்கு ஆபரணம் போலே இருக்கை
சோலை வாய்ப்புக் கண்டு சாய்ந்தால் போலே இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் தேட்டமாய் அன்றோ இங்கு சாய்ந்து அருளிற்று

அம்மானே -உடையவன் ஆகையாலே
உடைமை தேட்டமாய் அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –

——————

பகல் பத்து -9 நாள் ஸ்ரீ முரளி கண்ணன் திருக்கோலம்

பகல் பத்து -10 நாள்-சாற்றுமுறை – ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்

இராப்பத்து -2 நாள் வேணுகோபாலன் திருக்கோலம்
5 நாள் ரத்னாங்கி ஸேவை
6 நாள் திருவேங்கடமுடையான் திருக்கோலம்
7 நாள் -முத்தங்கி ஸேவை
8 நாள் -ராஜ மன்னார் ஸேவை
9 நாள் -கோவர்த்தன கிரி திருக்கோலம்

—————————

பகல் பத்து முதல் திரு நாள்
நம் பெருமாள் பீதாம்பரம் -மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்து அருளி
ரத்ன பாண்டியன் கொண்டை சாற்றி அருளி
திரு நெற்றிப் பூ சாற்றி
ஸேவை சாதித்து அருளுகிறார்

அரங்கன்
வைகுண்ட ஏகாதசி உற்சவம் : பகல் பத்து 3ஆம் நாள் நாச்சியார் திருமொழிக்காக
நம்பெருமாள் – மாம்பழ நிற பட்டு அணிந்து
அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6வட முத்து சரம்
பின்புறம்
அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து புறப்பாடு கண்டுருளினார்


நீராட்டு உத்சவம் –
பகல் பத்தில் நான்கு நாள்கள்
காலை பெரிய வீதிப்புறப்பாடு 8-20 தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து நீராட்டு மண்டபம் வந்து சேர்க்கிறாள்
பின்பும் போர்வைகள் களைதல்-உபசாரம் -நலுங்கு -நீராட்டம்
பின்பும் குளக்கரை புற்ப்பாடு
மாலை மாத்துதல்
பெரியாழ்வார் விருந்து முதல் நாள் -நம்மாழ்வார் விருந்து அடுத்த நாள் -ஆளவந்தார் விருந்து அடுத்த நாள்

அடுத்து உடையவர் விருந்து -அடுத்து பேயாழ்வார் விருந்து –பூதத்தாழ்வார் விருந்து –

————

ஸ்ரீ ஆண்டாள் -நாச்சியார் திருக் கோயிலே திரு அத்யயன உத்ஸவம்
பகல் பத்து முதல் நாள்
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் மூல ஸ்தானத்தில் -கோபால விலாஸத்தில் -இருந்து பகல் பத்து மண்டபத்துக்கு மாலை புறப்பாடு
ஸ்ரீ வேதாப்பிரான் பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாஷித்து கோபால விலாஸம் சேர்தல்
விண்ணப்பம் செய் கோஷ்ட்டி
ஸ்ரீ பெரிய பெருமாள் கருட வாகனம் -ஸ்ரீ பெரியாழ்வார் யானை வாகனம் -ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி கல்யாணம் மண்டலத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம்
இரவில் நாச்சியார் மாட வீதி -பெரிய பெருமாள் மாட வீதி கண்டருளி தோளுக்கு இனியானில் பகல் பத்து மண்டபம் சேர்தல்
ஆழ்வார்கள் பகல் பத்து மண்டபம் சேர்ந்து திருத்திரை வாங்குதல்
திருவாராதனம் கோஷ்ட்டி அருளப்பாடு -திருப்பல்லாண்டு வியாக்யானம்
பெரியபெருமாள் பக்தி உலாவுதல்
ஸ்ரீ ரெங்க மன்னாருடன் புறப்பாடு -மூலஸ்தானம் சேர்தல்
முதல் நாள் மட்டுமே இரவில் நடக்கும்
இதே போல் இராப்பத்திலும் முதல் நாள் மட்டுமே பகலிலே நடக்கும்
வியாக்யானம் பாசுரங்கள்
2 நாள் -சென்னியோங்கு வியாக்யானம்
3 நாள் -திருப்பாவை
4 நாள் -ஊனேறு செல்வம்
5 நாள் -திருமாலை
6 நாள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு -வாடினேன் வாடி
7 நாள் -தூவிரிய மலர்
8 நாள் -பண்டை நான் மறை
10 நாள் -தெள்ளியீர் -அக்கும் புலியின் -முந்தூர்ஸ்
10 நாள் -அமிர்த மதனம் -திரு நெடும் தாண்டகம் –
வைகுண்ட ஏகாதசி
காலை ஸ்ரீ பெரிய பெருமாள் தோளுக்கு இனியானாலும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி
விரஜை தீர்த்தம் பிரசாதம்
ஸ்ரீ வைகுண்ட வாசல் திறப்பு -ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்தால் -மாடவீதி கந்தாடை வீதி எழுந்தருளி இராப்பத்து மண்டபம் சேர்தல்
முதல் நாள் திருக்கொட்டகையிலே நடக்கும்
திருவாய் மொழி துவக்கம் -அரையர் அருளிப்பாடு -உயர்வற muthal பாசுரம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்தி உலாவுதல்
அரையர் வியாக்யானம் உயர்வற உயர் நலம்
மற்ற நாள்கள் வியாக்யானம் பாசுரங்கள்
2 நாள் -கிளர் ஒளி இளமை
3 நாள் -ஒழிவில் காலம்
4 நாள் -ஒன்றும் தேவும்
5 நாள் -எங்கனேயோ
6 நாள் -உலகமுண்டா பெருவாயா
7 நாள் -கங்குலும் பகலும்
8 நாள் -நெடுமாற்கு அடிமை
9 நாள் -மாலை நண்ணி
10 நாள் -சாத்து முறை -தாள தாமரை -முனியே நான்முகனே
11 நாள் -இயற்பா சாத்துமுறை
8 நாள் -திருவேடுபரி -குதிரை வாகனம் புறப்பாடு -இராப்பத்து ஸ்ரீ ஆண்டாள் சென்னியில் நடக்கும்
நீராட்ட உத்ஸவம்
பிரியா விடை
இரவில் ஸ்ரீ ஆண்டாள் மூல ஸ்தானத்தில் இருந்து புறப்பாடு -மாட வீதி வழியாக ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதி சேர்தல்
அங்கு ஸ்ரீ ஆண்டாள் ஏகாந்த திருமஞ்சனம்
கைத்தல ஸேவை
பெரிய பெருமாள் மூல ஸ்தானம் சேர்தல்
திருவாராதனம்
அரையர் வியாக்யானம் -திருப்பாவை முதல் பாட்டு -மற்ற பாசுரங்கள் ஸேவை
ஸ்தலத்தார் உத்சவ வைபவம் வாசித்தல் -பஞ்சாங்கம் வாசித்தல் –
பொது ஜன ஸேவை
அதிகாலை ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு -ஸ்ரீ பெரியாழ்வார் மங்களா ஸாஸனம் -மூல ஸ்தானம் சேர்தல்
ஸ்ரீ ஆண்டாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோபுர வாசலில் போர்வை படி களைந்து திருவடி விளக்கம்
அரையர் நாள் பாட்டு -தீர்த்த கோஷ்ட்டி
விடாய் ஆற்றி மண்டபங்களில் விடாயாற்றி யாகி எண்ணெய் காப்பு மண்டபம் சேர்தல்
பட்டர் பிரான் சுருள் கோஷ்ட்டி
ஸ்தலத்தார் திருவாசிரியம் ஸேவித்தல்
எண்ணெய் காப்பு சேவை -ஷோடச உபசாரம்
பக்தி உலாவுதல்
நீராட்டத்தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்
ஈரவாடை தீர்த்தக்கோஷடி பக்தி உலாவுதல் -அம்மானை விளையாடுதல் -படியேற்ற சேவை
முதல் நாள் காலை யில் தங்கப்பல்லக்கில் புறப்பாடு -மாலையில் துளசி வாகன புறப்பாடு
இரண்டாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை சந்திரன் பிரபை ஸேவை
மூன்றாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில் கண்ணன் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தோளுக்கு இனியானில் புறப்பாடு
நான்காம் நாள் -தங்கப்பல்லக்கில் முத்தங்கி ஸேவை -முத்து மாலையுடன் -மாலை சேஷ வாகனம்
ஐந்தாம் நாள் காலை -தங்கப்பல்லக்கில்
பெரிய பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் ஸேவை -மாலை தங்க ஹம்ஸ வாகனம்
ஆறாம் நாள் காலை வீற்று இருந்த திருக்கோலம் சவுரித் திருமஞ்சனம்
மூக்கூத்தி ஸேவை -இரவு கனக தண்டியல்
ஏழாம் நாள் காலை தங்கப்பல்லக்கில் தங்க கவசம் -இரவு ஆளேறும் பல்லக்கு
8 நாள் -ஸ்ரீ மணவாள மா முனிகள் மங்களா ஸாஸனம் -ஸ்ரீ ஆண்டாள் மா முனிகள் சந்நிதிக்கு எழுந்து அருளி ஸேவை
அசுத்த நாள் கனு -ஸ்ரீ ஆண்டாள் தோளுக்கு இனியானில் ஸ்ரீ பெரியாழ்வார் சந்நிதிக்கு எழுந்து அருளி தொடர்ந்து
முத்துக் குறி அரையர் சேவை ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் நடைபெறும்
காலை ஸ்ரீ பெரிய பெருமாள் பல்லக்கில் எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்து அருளி கனுப்பரி வேட்டை நடைபெறும்

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி ஸமேத வேங்கட கிருஷ்ணன் பார்த்தா சாரதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் —

ஸ்ரீ திருப்பாவை-உபன்யாசங்களில் இருந்து சாரம்-

January 20, 2025

காத்யாயனி மஹாமாயே மஹாயோகி³ன்யதீ⁴ஶ்வரி .
நந்த³கோ³பஸுதம்ʼ தே³வி பதிம்ʼ மே குரு தே நம꞉ .
இதி மந்த்ரம்ʼ ஜபந்த்யஸ்தா꞉ பூஜாம்ʼ சக்ரு꞉ கமாரிகா꞉ .. 4..

ஏவம்ʼ மாஸம்ʼ வ்ரதம்ʼ சேரு꞉ குமார்ய꞉ க்ருʼஷ்ணசேதஸ꞉ .
ப⁴த்³ரகாலீம்ʼ ஸமானர்சுர்பூ⁴யான்னந்த³ஸுத꞉ பதி꞉ .. 5..

உஷஸ்யுத்தா²ய கோ³த்ரை꞉ ஸ்வைரன்யோன்யாப³த்³த⁴பா³ஹவ꞉ .
க்ருʼஷ்ணமுச்சைர்ஜகு³ர்யாந்த்ய꞉ காலிந்த்³யாம்ʼ ஸ்னாதுமன்வஹம் .. 6..

நத்³யாம்ʼ கதா³சிதா³க³த்ய தீரே நிக்ஷிப்ய பூர்வவத் .
வாஸாம்ʼஸி க்ருʼஷ்ணம்ʼ கா³யந்த்யோ விஜஹ்ரு꞉ ஸலிலே முதா³ .. 7..

ப⁴க³வாம்ʼஸ்தத³பி⁴ப்ரேத்ய க்ருʼஷ்ணோ யோகே³ஶ்வரேஶ்வர꞉ .
வயஸ்யைராவ்ருʼதஸ்தத்ர க³தஸ்தத்கர்மஸித்³த⁴யே .. 8..

ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.

ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம் செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,

மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்து விட்டு,
யமுனை நதியில் இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.

இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய்

ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்

ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்

ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்

அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்

கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை

மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்

காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம

அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்

இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ

இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்

பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்

நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-

தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –

கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்

தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்

பாவை-காத்யாயினி நோன்பு அழகிய பெண்களால் –பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம்.- விக்ரஹம் வடிவில் வைத்து நோன்பு -கோபிகளின் நோன்பு கண் மணி போல் காப்பான் -இஞ்சி – திருவே பாவையாகி நோன்பு -திருப்பாவை -திருப்பு ஆவை

கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!-இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

தாத்பர்யம் சந்திரிகை -மாதங்களில் நான் மார்கழி-மூன்று காரணங்கள்
1-ஆகம சாஸ்திரம் படி வர்ஷ முதல் மாதம் மார்கழி -அர்ப்பணிக்க -தை பிறந்தார் வழி பிறக்கும் –
2-முதல் வடிவம் கேசவஸ்ய மாதம் -மார்கழி -கார்த்திகை தாமோதரன் மாதம்
3-விரதம் -இறை வழிப்பாட்டுக்கு ஏற்பட்ட காலம் -தேவர்களுடைய ப்ரஹ்ம முஹூர்த்தம்

சொல்லுதல் இசைத்தல் ஓதுதல் அறைத்தால் பொழிதல்
சாற்றுதல்
சொல்லுதல்
விளம்பரப்படுத்தல்
விற்றல்
நிறைத்தல்
அடித்தல்
உணர்த்துதல்
சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள்.
பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்

With yesterday’s Tiruppavai Kalakshepam Sattrumurai our Swamy has delivered Tiruppavai upanyasam 50 times in the last 33 years .

நம் ஸ்வாமி நமக்கே, நாமும், நாங்கள், நாங்களும், நாம் என்று முதல் 5 பாசுரங்களில் உள்ள பலவிதமான ‘நாம்’ என்பதின் அர்த்தங்களையும் (வித்யாசங்களையும்), நமக்கே பறை தருவான், அறை பறை, பறை தருதியாகில், சாலப் பெரும் பறையே, பாடிப் பறை கொண்டு, நீ தாராய் பறை என்பதில் உள்ள பலவிதமான ‘பறை’ சப்தத்திற்கும் அர்த்தங்களை அருளிச்செய்தது மிகவும் ரஸோக்தியாக அமைந்தது.

கறவைகள் பாசுரத்தின் வ்யாக்யான விளக்கமும் அற்புதம். அதில் இறுதியில், பேற்றின் க4நத்துக்கு கீழ் விளைந்ததெல்லாம் அத்வேஷமாத்ரமாயிருக்குமிறே என்று அருளிச்செய்தது மனத்துக்கு மிகவும் க4னமாக அமைந்தது. கோதோபனிஷதாக உள்ள திருப்பாவையையே அத்வேஷமாத்ரம் என்று கூற வேண்டும் என்றால், அந்த பேற்றின் பெருமையை நாம் அறியவே முடியாதோ என்று தோன்றுகின்றது.

நேற்றைய காலக்ஷேபத்தில் வங்கக்கடல் கடைந்ததின் ஸ்வாபதேசம் மிக அருமை. அதிலும் பிராட்டியிலும் ப்ரேம விஷயமான ஆத்மாவை லபித்தவன் என்பதில் நம் ஸ்வாமி உடனே இராமாயணத்திலிருந்து உதாரணம் அருளிச்செய்தது மிகவும் அற்புதம்.

இந்த அற்புதமான திருப்பாவை காலக்ஷேப அனுபவத்தை திரும்பத் திரும்ப நினைத்தால், மறுபடியும் உடனே மார்கழி திங்கள் முதல் நாளாக அமையக்கூடாதோ என்று தோன்றுகின்றது. திருப்பாவை மார்கழியில் அமைந்ததால் தான் எம்பெருமானும் மாதங்களில் மார்கழியாக உள்ளானோ!

மார்கழி திங்களில்
வையத்தில் உள்ள நம் போல்வார்க்கு
உத்தமனாய்
ஆழிமழைக்கண்ணாவான நம் ஸ்வாமி (பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகன்)
நாம் எம்பெருமானை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும்,
பிள்ளாய், பேய்ப்பெண், கோதூகலமுடைய பாவாய், மாமான் மகள், நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய், கோவலர் தம் பொற்கொடி, நற்செல்வன் தங்காய், போதரிக்கண்ணினாய் என்று பலவிதமான ஶ்ரோதாக்கள் / பாகவதர்கள் இருக்கும் காலக்ஷேப கூடத்தில் (பாவைக்களம்)
நம்மாழ்வாரை ஒத்த நாவுடையான நம் ஸ்வாமியும்,
இளங்கிளியான இளைய ஸ்வாமியும் இணைந்து
உபகாரக உத்தாரக ஆசார்யனாய் நாயகனாய் நின்று
ஆத்மஸ்வரூபமான ஈஸ்வரமுகவிகாஸமான அம்பரத்தையும், ஸ்வபோக்த்ருத்வபுத்தி நிவ்ருத்தியான தண்ணீரையும், கைங்கர்யமான சோறையும் எவ்வாறு பெருவது எனும் ஜ்ஞான விசேஷத்தை அருளிச்செய்து,
நப்பின்னை பிராட்டியின் புருஷகாரத்தைப் பெற்றுத்தந்து,
ஆற்றப்படைத்தானாகவும் ஆற்றப்படைத்தான் மகனாகவும் நின்று எம்பெருமானிடம் நமக்காக விண்ணப்பம் செய்து,
சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ என்பது போல் ஜாயமானம் ஹி புருஷம் யம் பஶ்யேத் மதுஸூதன: ஏன்பதிலிருந்து ஆரம்பித்து ஸ்வபோக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை வரை நம்மை பக்குவப்படுத்தி,
நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்வதற்காக,
அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று எம்பெருமானை மங்களாசாஶனம் செய்து,
நம் வருத்தமும் தீர்ந்து மகிழ்வதற்காக
ஸாம்யாபத்தி, ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் தேஹாவஸானே அருள்வதாக உறுதி அளித்து,
குறையொன்றும் இல்லாத நம் ஸ்வாமி
மற்றை நம் காமங்களையும் மாற்றி வழுவிலா அடிமையை அருள்வதாக நமக்கு நிச்சயித்து மார்கழி மாதம் முழுவதும் நீராட்டல் அனுபவத்தை அருளிச்செய்ததற்கு நம் ஸ்வாமிக்கு பல்லாண்டு பாடுவோம். எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்றும் ப்ரார்த்திப்போம்.

திருப்பாவையில் தோழிகளை எழுப்பும் பாசுரத்தில் முதன்முதலாக பொய்கையாழ்வாரை !! எங்கனே எனில் பிள்ளாய் எழுந்திரு !! என்னும் முகமாக!! இவ்வாழ்வாரும், கிருஷ்ணானுபவத்தில் ஊற்றம் உள்ளவரென்றும், இவள் சூடிக்கொடுத்த வடிவுக்கு , இவ்வாழ்வாரும், வையம் தகளியாய் !! வார்க்கடலே !! நெய்யென்றும்!! மாலுங்கருங்கடலே !!
எந்நோற்றாய்!! என்று எம்பெருமானின் அங்க செளந்தர்யத்தைப் பேசினதாலும் , சூடிக்கொடுத்த வடிவுக்கு நேரென்று ஒப்புமைப்படுத்தியும், கிருஷ்ண ஷேஷ்டிதங்கள், பலவற்றையும் , இவர் பாடினதாலேயும் , “ஒன்றுமதனை உணரேன் நான் !! என்று மெளக்த்யம் தோன்ற , பிள்ளைப் பெண் ” என்ற ஸ்வாபதேசத்தை ஸ்வாமிவிளக்கியது அருமை !!
மேலும் நாயகனாகத் பெருமானின் வைபவத்தையும் தர்சித்ததாலும், மேலும் ஸ்தீரி ஸ்வபாவமாகவே,
பலப் பல பாசுரம் பாடியவராதலால், ‘பேயாழ்வாரைப் பேய்ப்பெண்ணே !!என்று உணரபட்டவரென்றும்,
“கோதுகலமுடையப்பாவாய்” என பூதத்தாழ்வாரையும்!!
நாலாம் பாட்டில் ” திருமழிசைப்பிரானை ” மாமன்மகளுக்கு ஒப்புமைப்படுத்தி ஸ்வாமி ஸாதித்தது அதிஅத்புதம்!!
பார்க்கவ மகரிஷிக்கு புத்தரர், பார்கவி , மகாலஷ்மிக்கு சகோதரர், எனவே மாமான் மகள் , அனைவருக்குமே !! என்பது ரஸமே !!
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மானாக குலசேகரர் , எங்ஙனே எனில் , இளம் ஆய்ச்சியராய், எல்லிப்பொழுதில் ஏமத்தூடி என , ஸ்தீரி பாவத்தில் , இங்கு எதற்கு வந்தாய்!! அங்கே நட!! எனவும் ,ரங்கயாத்ரை நித்ய அனுபவமாக நடத்தி காட்டியவராகையாலும் என்பதும்,
பெரியாழ்வாரை கோவலர் தம் பொற்கொடியே !! என கிருஷ்ணானுபவத்தையே நித்தமும் கொண்டிருந்தவரென்பதையும்,
தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நற்செல்வன் தங்காயென, பெரியாழ்வாரின் பிற்பட்டவராய், அவரைப்போன்றே இவரும் மாலாக்காரர் , ஆதலால் என பல்வேறு கோணத்தில் கூறியது, கேட்கும் பாக்யம் என்னே !!
என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே !! என ஸ்ரீரஙகநாதனிடத்தில் வியாமோகமே வடிவெடுத்த ” திருப்பாணாழ்வாரை , போதரிக்கண்ணினாய் என அழைப்பது பொருத்தமே !! என பலபடிகளாலும் விளக்கியது அருமை !!
வாய் பேசும் நங்கை “சடகோபன்” எனபதனை , அவரின் கிருஷ்ணா அனுபவ பாடல்களின் கனத்த பிரேமம் காதலை, “நாணும் நிறைவும் எனகிங்கில்லை “எனவும் , பங்கயக்கண்ணனையே!! என்ற பல பாசுரங்களாலும் நாவீறுடையப்பிரான் அவரே !! என்பதை பலபடிகளாலும் விளக்கியதை, நாங்கள் அனுபவித்ததைச் சொல்ல ஸத்தையில்லை!! ஸ்வாமி !!
மென்கிளி என மிழற்றும் , “அவன் பின் கெண்டையொன் கண் மிளிரக்கிளி போல் மிழற்றிநடந்து !! செல்லும் பரகாலனே !! இளங்கிளி !! என்பதனை அனுபவ பூர்வமாக ஸ்வாமி விளக்கிய காலட்ஷேபம் இனிது !! இனிது !!
பாசுரங்கள் ,சேவையில் இவ்வாழ்வாரெல்லாம் நினைவில் தோன்றச் செய்த, பெருமையெல்லாம், ஸ்வாமியையே !! சேரும் !! என்பதில் ஜயமில்

கோதை நாச்சியாரின் திருப்பாவைக் காலட்ஷேபம் , ஸூத்த ஸத்வ தொண்டையாச்சாரியரின் வியாக்யானமும் , வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் ஸ்வாபதேசத்துடனும் , ஸ்வாமி அதி அற்புதமாக விளக்கி வருகிறார் !!
மார்கழி நோன்பு , நீராடல் என்பது பிரம்மத்துடனான அனுபவம் , ஆச்சாரியர்களுக்கு , பிரம்மம் என்பதை விட கிருஷ்ணானுபவம் என்பதே , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் என்பதனையும் , பாசுர விளக்கமாக ஸ்வாமியின் காலட்ஷேபத்தில் , வெகுவாக அனுபவித்து வருகிறோம். ஆண்டாள் காலத்துக்கே சென்று , அவளுடனே ஆயர் பெண்களை எழுப்பி , நந்தகோபன் , யசோதை , பலராமன் , நப்பின்னை கண்ணனை எழுப்பி , படுக்கை பேச்சாக இல்லாது , வீர சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் , வந்த காரியம் கேட்டு அருள் புரிவாயாக !! என அன்புடனும் ஆதரத்துடனும் அவனை எழுப்பி , திருக்கண்கள் மலர விழித்து என்பதில், கண்ணனின் திருக்கண்கள் , கிங்கிணிப்போலவும் , தாமரைப்புஷ்பம் போன்ற , சிவந்த திருக்கண்கள் சிறிது சிறிதே மலர , முதலில் ,தேகமே ஆத்மா என்ற முதல் சாபம் நீங்க , தான் ஸ்வதந்திரன் அல்ல என்பதனை உணர , திருக்கண்கள் கொஞ்சம் மலர , நாம் அவனுக்கு அடிமை என்பதே !! ஸ்வரூபம் என்பதனை உணர்த்த ( இவ்விடத்திலும் மனைவி கணவனுக்கு சேவை செய்வது போன்றதும், அதுவே கணவன் செய்வது ப்ரீத்தியாலே என விளக்கியது ரஸம்) பிறகு மற்றப்பேருக்கன்றி கண்ணனுக்கு !! என உணர , மேலும் மலர , தான் ஜ்ஞாதா என்று உணரும் போதும் , தன்னைத் தான் அனுபவிக்கும் கைவல்யமும், ஒழிந்து , அதுக்கும் இசைந்து வர , தன்னை ரட்ஷிக்க தான், என நினைவு அகல ,அதுக்கு இசைந்த பிறகு , மற்ற உபாயங்களை என்ற நினைவகற்றி, அவனே உபாயம் என்ற நினைவின்படி, தன் காரியத்துக்கு தன்னால் என நினைவகற்றி , , பாராதீனமாக, தான் என நினைவொழிந்து, அவனுக்கே பர தந்திரனாய் , பரதாழ்வான் போல் நின்று , சமஸ்த கல்யாண குணங்களை அனுபவித்து ,அந்த அனுபவத்தின் பிரீத்தியாலே !! கைங்கர்யம் செய்ய புகுந்து , அதுவும் தன் ஆனந்தத்திற்கு அல்ல ஈஸ்வர உகப்பிற்கே !! எனும் நிலையிலே !! முழு கண்ணழகையும் சேவிக்க !! ,என்று , ஸ்வாமி விளக்கினது மிக இனிமை !!
நடந்த திருவடிகளுக்கு போற்றி போற்றி !! என பல்லாண்டு பாடினதையும் , மேலும் இன்றைய பாசுரத்தில், தேவகி பிராட்டியை ஒருத்தி எனவும் , யசோதையையும் ஒருத்தி என விளக்கினதைக் கேட்டதுண்டு. ஆனால் ஓர் இரவு என்று , கண்ணனைப் பெற்றுக் கொடுத்ததும் , அவ்விரவே ,அவன் கோகுலத்துக்கு சென்று , மறைத்து வளரவும் , வழி வகுத்தது என அவ்விருட்டுக்கு ஸ்வாமி , பல்லாண்டு கூறி விளக்கியது அத்புதம்!!
மேலும் ஸ்வாப தேசத்தில் குருபரம்பரையின் விவரணம் என்றும் , பத்து ஆயர்பெண்களின் பிரதிசம்பந்தியாக , பத்து ஆழ்வார்கள் , என அவர்களின் பாசுரமடியாகவே உள்ள விவரணத்தை , ஸ்வாமி மடைத் திறந்தாற் போல் பிரவாகித்தது அருமை.
” கை கரவாத மேகம் !!
எதிர் பொங்கி மீதலிப்ப , மாற்றாதே பால் சொரியும் !! வள்ளல் பெரும் பசுக்கள் !! ஆழிப்போல் மின்னி !! வலம்புரிப் போல் , நின்று அதிர்ந்து!! தாழாதே !! சாரங்கம் உதைத்த சர மழைப் போல், இவ்வுலகம் வாழ !! ஆஸ்ரிதர்கள் வாழ !! நாங்களும் மார்கழி நீராட !! ஸ்வாமியின் காலட்சேபம், தொடர்ந்து , அனைவரும் கேட்டு இன்புற !! என , திருமறுமார்பன் !!அருள் புரிவாராக!!🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚡⚡

இந்த பாசுரங்கள் ஒவ்வொன்றும் ரஹஸ்ய த்ரயத்தை விளக்க வந்த ஆதாரமாய், ஸ்வருபத்தையும் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் கொடுக்க வல்லது. அனன்யார்க சேஷ பூதனான இந்த ஜீவாத்மாவிற்கு வேறு சக்தி ப்ராப்தி இல்லை. ப்ரீதிகாரி த புருஷார்த்தமே என அறிந்து இவையால் ஸ்வஞானம், ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் என கண்ணனை அடைய படிக்கட்டுக்களாய் மார்கழி நோன்பு நூற்றார்கள். ஸ்வாபதேசமாய் சம்பிரதாய அர்த்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது .இதற்கு விஸஸதமாய் வாக் ஸ்ரீமான் வானமாமலை பொன்னடிகால் ஜீயர், ஸீத்த ஸத்வ தொட்டைய்யா ச்சாரியார் ஆகிய இருவரும் வ்யாக்யானம் அருளியதின் அடியொற்றி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் அதன் அர்த்த விசேஷங்களை முன்வைத்தார். திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் சாரார்த்தத்தை உள்ளடக்கி உள்ளது. மந்திர ரத்னமாய் போற்றப்படும் த்வயம் . அவனையே சாக்ஷாத் சித்த புண்ணியமாக கொள்கின்றனர் .அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்திற்கு முதல் பாசுரத்திலிருந்து பறை என்ற பேரி வாத்தியததை கண்ணன் கொடுக்க, யதாஸ்ருதக்ராஹியாய் – மேம்போக்கான அர்த்தத்தை கொண்டவனே. தாத்பர்ய ஞானம் இல்லாதவனே. இதை நாங்கள் பிரார்த்தித்து வரவில்லை. புருஷார்த்தமாய் கைங்கர்யத்தை பிரார்த்தித்து வந்தோம். பாகவதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லே இளங்கிளியே பாசுரத்தில் கூறியுள்ளாள். பகவான்
எப்படி நடக்க வேண்டும் என்பதை சிற்றஞ்சிறு காலே பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளாள்.
29 வது பாசுர விளக்கம் – கண்ணா சிறுகாலே – சிறு விடியல் நேரத்திற்கே வந்து உன்னைப் பணிந்து உன் பொன் தாமரை.-ஸ்பரு ஹீயமான- மதிக்கத்தக்க பாவனமாகவும் பரம் போக்கியமாகவும் உள்ளஉன்திருவடித்தாமரைகளை மங்களாசாசனம்
பண்ணி வாழ்த்தும் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடை குலத்தில் பிறந்த உனக்குநாங்கள் அந்தரங்க தொண்டு கைங்கர்யாதை புரிய ப்ரார்த்திக்கிறோம். இந்தக் கொட்டுப் பறையை பெற நாங்கள்
வரவில்லை. காலமுள்ள அளவும்
ஏழேழு பிறவிக்கும் உனக்கே உன் ஒருவனுக்கே நாங்கள் ஆட்செய்வோம். அடிமை செய்யக் கடவோம். எங்களுடைய மற்றைய ஆசைகளையும் ஸ்போக்திருத்வத புத்தியையும்தவிர்த்து அருள வேண்டும்.
வியாக்யானம் – இங்கு ஸத்வம் நிறைந்து காணப்படும் சிற்றஞ்சிறுகாலே என்பதை குறிப்பிட்டு ஆற்றாமையால்( துறை தள்ளி) வந்து எங்கள் வருகையே மிகை – அதிகம் என்று இருக்கும் உன்னை சேவித்து, உன் திருவடி தாமரைக்கே மங்களாசாசனம் பண்ணுகிறோம்.அவன் பறையை கொடுக்க, தாத்பர்ய அர்த்தம் புரியாதவனே எல்லா காலங்களிலும் நாங்கள் லக்ஷ்மணன் ராமனிடம் பிரார்த்தித்து போல் தாஸனின் கைங்கர்யமாய்- போற்றும் பொருள் என்பது கைங்கர்யத்தை பரார்த்தமாய் உன் ஆனந்தத்திற்குபுரிய வந்தோம். நாங்கள் ஆத்ம ஸ்வருபத்திற்கு உகந்ததையே கேட்போம். அதிருஷ்ட பலத்தை நாங்கள் கேட்டதாக இருக்கனும். அவன் கொடுக்க நாங்கள் கொள்வதாய் – போதயந்த பரஸ்பரமாய் இருக்க வேண்டும். த்ருஷ்ட பலத்தை கேட்டதாக சொல்லக்கூடாது என்றாள்.
ஏனைய எங்களுடைய ஆசைகளை தவிர்த்து கைங்கர்ய பேறை கொடுக்க
வேண்டும்.
3௦வது பாசுர விளக்கம் – கப்பல்கள் உடைய திருப்பாற் கடலை தேவர்களுக்காக கடந்த மாதவனை – ஸ்ரிய பதியை சந்திரனை ஒத்த முகமுடைய ஆய்ச்சிகள் வணங்கி பறையாகிய புருஷார்த்தமான உண்மை பொருளை அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் குமாரத்தியான தன்நிலை பாவஸீத்தியில் ஆண்டாள், இதனையே
30 திவ்ய பாசுரங்களாக அருளினாள். இவற்றை தவறாமல் ஒதுபவர்கள் ஈரிரண்டு பெருக்கமான தோள்களைப் பெற்ற செங்கண் திருமால் அருளால் எங்கும் திருவருள் பெற்று இன்பம் அடைவார்கள்.
வ்யாக்யானம் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி அதாவது க்ருபை என்ற ஸங்கல்பம் என்ற மந்திர பர்வத்திற்கு கடாக்ஷம் என்ற கைகளால் கடைந்து ஆத்மவஸ்துவான ஜீவாத்மாவை லபித்தவன். பகவான் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ நாம போக்தா என்றும் நினைக்கும் கேசியை ,அந்த புருஷன் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ அந்த புருஷன்சந்திரன் போல் ஒளியுடன்
ஆஹ்லாத கரமாய் குளிர்ச்சியுடன் காணப்படுகிறார். நாம் அவரிடத்தில் ஞான பக்தி வைராக்ய பூஷித ராய் அவரைத் தவிர வேறு ஒன்றை கேட்காமல் இருக்க வேண்டும். பெரியாழ்வார் சூட்டின மாலை கோதை அந்த கோதை பாடியது தீந்தமிழ் பாமாலை. பூமாலையை சூட்டிக் கொடுத்த சுடர்கொடி. இதை நாம் தலையால் தரித்து இந்த இனிய திவ்ய ப்ரபந்தத்தை ஒரு பாட்டுக் கூட குறையாமல் எப்போதும் அனுசந்தித்து பல்கி பெருக பெருக கூடிய நாலு திருத் தோள்கள் உடையவனான சிவந்த கண்கள் உடைய மலர்ந்ததிருமுகத்தை உடையவனான உபய விபூதிக்கு நாயகனான திருமாலை –
எல்லா சொத்திற்கும் அவன் தேவதை. அவனுக்கு அவள் தேவதை. காலத்திற்கு பிற்பட்ட நாம் எப்போதும் இந்த லோகத்து ஞானம் அந்த லோகத்து அதிர்ஷ்ட விஷய ஞானம் பெற்று கண்ணனை எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாசுரத்திற்கும் உள்ள சாரத்தை ஒவ்வொரு வரி தோறும் சிறப்பித்து அத்புதமாய் ஸ்ரோத்தாக்களுக்கு பகவத் அனுபவத்தை கொடுத்த ஞான திவாகர் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என ப்ரார்த்திக்கிறோம். க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

“புருஷகார வைபவம்”
பலவகையான நல்விஷயங்களை உள்ளடக்கியது மார்கழி மாதம் என்பதனால் பகவான் “மாதங்களில் நான்மார்கழி”
என்றுரைத்தான். அப்படியான மாதத்தில்
ஸ்ரீ ஆண்டாளருளிய
திருப்பாவையைப் பாடி
அதனுள் சொல்லப்பட்ட
பகவதனுபவமேற்படுவதற்கான விஷயங்களைச் சொல்லவேணுமென்கிற
தாகம் மேலோங்கிட ஸ்வாமி மேற்கொண்ட
இக்காலஷேப வைபவத்தால் அடியேன் கொண்ட அநுபவமானது:
பார்கடலில் பையத்
துயிலும் பரமனடிபாட, குள்ளக்குளிர நீராடி, அக, புற அழுக்குகள்
நீங்கிட அறியாதவற்றைச்
சொல்லும் வேதமும், அதனால் சொல்லப்பட்ட
பகவானின் தன்மையைக் கூறும்வேதாந்தக்கருத்து
களையும் அறிந்ததனால்
ஏற்பட்ட ஜ்ஞாநத்தால் கைக்கொள்ளவேண்டிய
“அர்த்த பஞ்சகம்” மற்றும்
“ரஹஸ்யத்ரய” ஸாரங்கள்
இப்பாசுரங்களிலே மறைப்பொருளாக சொல்லப்பட்டிருப்பதை
மிகவிஸ்தரமாகச் சொல்லி; ஆக, சம்ஸாரயாத்ரையிலிருந்து
சற்றே விலகி பகவதநுபவ
யாத்ரையை மேற்கொள்ள
பகவானின் பொற்தாமரையடி போற்றி,
அது சுவாதீனமாய்க் கிட்ட பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி அவனும், அவளும் இசலி, இசலிப் பரியும் பரிவைக் கொண்டு அவர்களது சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்பதைச்சொல்லி: ஆகையால்
இம்முப்பது பாசுரங்களை நிச்சலும் தப்பாமல் பாடிட “செங்கண்
திருமுகத்துச் செல்வத்திருமாலின் திருவருள் பெறும் இன்பமே
சம்மானம்” என்று ஒரு தாயின் வாத்ஸல்யத்தோடு, கருணைபொங்க, அன்புமேலோங்க தனக்காகவே எனையாட்கொண்ட ஸ்வாமி அருளிப்போந்த
இக்காலஷேபமும் ஒரு
” புருஷகார வைபவமே”!!

பாதகங்கள் தீர்க்கும் பரமனடிபாடும் கோதைத்தமிழின் யதார்த்தத்தை அதியத்புதமாக விளக்கி
அதனுள் சொல்லப்பட்ட
வேத,வேதாந்தக்கருத்துகளையும் அறிந்து கொள்ள வைத்த ஸ்வாமி திருவடிகளிலேயே உழன்று
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றேனாகி,
அன்னவர்க்கே ஆட்செய்யும்
சேவகமும் வேண்டியே பல்லாண்டு
பாடுகிறேன் மகிழ்ந்து!!💐🙌🏻🙏🙏

திரு ஆயர்பாடியில் பஞ்ச லக்ஷ பெண்கள் கிருஷ்ணானுபவத்தை அடைய ஹேமந்த ருதுவில் மார்கழி மாதத்தில் நோன்பு தூற்றார்கள். அதை ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு அனுகாரம் செய்தாள் அவள் பேச்சு, நடை, முடி அனைத்தும் இடைப்பெண் போல் மாறியது. அந்த ஆண்டாள் அனுக்ரஹித்தது திருப்பாவை 30 பாசுரங்கள். கலியுகத்தில் இருந்து கொண்டு இதை நாம் நித்ய அனுசந்திக்கும் போது ஆண்டாளின் பூரண அனுக்ரஹகம் நமக்கும் கிட்டும். வேதம் அனைத்திற்கும் வித்தாகும் ஐயைய்ந்தும் ஐந்தும் ஆன திருப்பாவையை வைஷ்ணவ த்ரயத்தை எம்பெருமானார் சர்வாதிகாரமாய் அனுசந்திக்க- அதை திவ்ய ப்ரபந்தமாய் யாரும் கற்கலாம் என ஸ்வாமி ராமானுஜர் இதை நியமனம் பண்ணி வைத்தார். அதில் விசேஷித்த 30 பாசுரங்கள் – இந்த பாசுரங்கள் ஒவ்வொன்றும் ரஹஸ்ய த்ரயத்தை விளக்க வந்த ஆதாரமாய், ஸ்வருபத்தையும் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் கொடுக்க வல்லது. அனன்யார்க சேஷ பூதனான இந்த ஜீவாத்மாவிற்கு வேறு சக்தி ப்ராப்தி இல்லை. ப்ரீதிகாரி த புருஷார்த்தமே என அறிந்து இவையால் ஸ்வஞானம், ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் என கண்ணனை அடைய படிக்கட்டுக்களாய் மார்கழி நோன்பு நூற்றார்கள். ஸ்வாபதேசமாய் சம்பிரதாய அர்த்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது .இதற்கு விஸஸதமாய் வாக் ஸ்ரீமான் வானமாமலை பொன்னடிகால் ஜீயர், ஸீத்த ஸத்வ தொட்டைய்யா ச்சாரியார் ஆகிய இருவரும் வ்யாக்யானம் அருளியதின் அடியொற்றி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் அதன் அர்த்த விசேஷங்களை முன்வைத்தார். திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் சாரார்த்தத்தை உள்ளடக்கி உள்ளது. மந்திர ரத்னமாய் போற்றப்படும் த்வயம் . அவனையே சாக்ஷாத் சித்த புண்ணியமாக கொள்கின்றனர் .அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்திற்கு முதல் பாசுரத்திலிருந்து பறை என்ற பேரி வாத்தியததை கண்ணன் கொடுக்க, யதாஸ்ருதக்ராஹியாய் – மேம்போக்கான அர்த்தத்தை கொண்டவனே. தாத்பர்ய ஞானம் இல்லாதவனே. இதை நாங்கள் பிரார்த்தித்து வரவில்லை. புருஷார்த்தமாய் கைங்கர்யத்தை பிரார்த்தித்து வந்தோம். பாகவதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லே இளங்கிளியே பாசுரத்தில் கூறியுள்ளாள். பகவான்
எப்படி நடக்க வேண்டும் என்பதை சிற்றஞ்சிறு காலே பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளாள்.
29 வது பாசுர விளக்கம் – கண்ணா சிறுகாலே – சிறு விடியல் நேரத்திற்கே வந்து உன்னைப் பணிந்து உன் பொன் தாமரை.-ஸ்பரு ஹீயமான- மதிக்கத்தக்க பாவனமாகவும் பரம் போக்கியமாகவும் உள்ளஉன்திருவடித்தாமரைகளை மங்களாசாசனம்
பண்ணி வாழ்த்தும் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடை குலத்தில் பிறந்த உனக்குநாங்கள் அந்தரங்க தொண்டு கைங்கர்யாதை புரிய ப்ரார்த்திக்கிறோம். இந்தக் கொட்டுப் பறையை பெற நாங்கள்
வரவில்லை. காலமுள்ள அளவும்
ஏழேழு பிறவிக்கும் உனக்கே உன் ஒருவனுக்கே நாங்கள் ஆட்செய்வோம். அடிமை செய்யக் கடவோம். எங்களுடைய மற்றைய ஆசைகளையும் ஸ்போக்திருத்வத புத்தியையும்தவிர்த்து அருள வேண்டும்.
வியாக்யானம் – இங்கு ஸத்வம் நிறைந்து காணப்படும் சிற்றஞ்சிறுகாலே என்பதை குறிப்பிட்டு ஆற்றாமையால்( துறை தள்ளி) வந்து எங்கள் வருகையே மிகை – அதிகம் என்று இருக்கும் உன்னை சேவித்து, உன் திருவடி தாமரைக்கே மங்களாசாசனம் பண்ணுகிறோம்.அவன் பறையை கொடுக்க, தாத்பர்ய அர்த்தம் புரியாதவனே எல்லா காலங்களிலும் நாங்கள் லக்ஷ்மணன் ராமனிடம் பிரார்த்தித்து போல் தாஸனின் கைங்கர்யமாய்- போற்றும் பொருள் என்பது கைங்கர்யத்தை பரார்த்தமாய் உன் ஆனந்தத்திற்குபுரிய வந்தோம். நாங்கள் ஆத்ம ஸ்வருபத்திற்கு உகந்ததையே கேட்போம். அதிருஷ்ட பலத்தை நாங்கள் கேட்டதாக இருக்கனும். அவன் கொடுக்க நாங்கள் கொள்வதாய் – போதயந்த பரஸ்பரமாய் இருக்க வேண்டும். த்ருஷ்ட பலத்தை கேட்டதாக சொல்லக்கூடாது என்றாள்.
ஏனைய எங்களுடைய ஆசைகளை தவிர்த்து கைங்கர்ய பேறை கொடுக்க
வேண்டும்.
3௦வது பாசுர விளக்கம் – கப்பல்கள் உடைய திருப்பாற் கடலை தேவர்களுக்காக கடந்த மாதவனை – ஸ்ரிய பதியை சந்திரனை ஒத்த முகமுடைய ஆய்ச்சிகள் வணங்கி பறையாகிய புருஷார்த்தமான உண்மை பொருளை அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் குமாரத்தியான தன்நிலை பாவஸீத்தியில் ஆண்டாள், இதனையே
30 திவ்ய பாசுரங்களாக அருளினாள். இவற்றை தவறாமல் ஒதுபவர்கள் ஈரிரண்டு பெருக்கமான தோள்களைப் பெற்ற செங்கண் திருமால் அருளால் எங்கும் திருவருள் பெற்று இன்பம் அடைவார்கள்.
வ்யாக்யானம் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி அதாவது க்ருபை என்ற ஸங்கல்பம் என்ற மந்திர பர்வத்திற்கு கடாக்ஷம் என்ற கைகளால் கடைந்து ஆத்மவஸ்துவான ஜீவாத்மாவை லபித்தவன். பகவான் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ நாம போக்தா என்றும் நினைக்கும் கேசியை ,அந்த புருஷன் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ அந்த புருஷன்சந்திரன் போல் ஒளியுடன்
ஆஹ்லாத கரமாய் குளிர்ச்சியுடன் காணப்படுகிறார். நாம் அவரிடத்தில் ஞான பக்தி வைராக்ய பூஷித ராய் அவரைத் தவிர வேறு ஒன்றை கேட்காமல் இருக்க வேண்டும். பெரியாழ்வார் சூட்டின மாலை கோதை அந்த கோதை பாடியது தீந்தமிழ் பாமாலை. பூமாலையை சூட்டிக் கொடுத்த சுடர்கொடி. இதை நாம் தலையால் தரித்து இந்த இனிய திவ்ய ப்ரபந்தத்தை ஒரு பாட்டுக் கூட குறையாமல் எப்போதும் அனுசந்தித்து பல்கி பெருக பெருக கூடிய நாலு திருத் தோள்கள் உடையவனான சிவந்த கண்கள் உடைய மலர்ந்ததிருமுகத்தை உடையவனான உபய விபூதிக்கு நாயகனான திருமாலை –
எல்லா சொத்திற்கும் அவன் தேவதை. அவனுக்கு அவள் தேவதை. காலத்திற்கு பிற்பட்ட நாம் எப்போதும் இந்த லோகத்து ஞானம் அந்த லோகத்து அதிர்ஷ்ட விஷய ஞானம் பெற்று கண்ணனை எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாசுரத்திற்கும் உள்ள சாரத்தை ஒவ்வொரு வரி தோறும் சிறப்பித்து அத்புதமாய் ஸ்ரோத்தாக்களுக்கு பகவத் அனுபவத்தை கொடுத்த ஞான திவாகர் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என ப்ரார்த்திக்கிறோம். க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

ஒரு பெண் புருஷனைக் கண்டு ஸநேஹிக்கை பள்ளமடையாகையாலே,
ஆழ்வார்களுள் பெண்ணான ஆண்டாள்
அருளிய திருப்பாவையைக்
கொண்டு “மாரகழிசுனையாடலை”யும்,அதன் மூலம் நோற்கப்படும் நோன்பு என்று ஒரு வ்யாஜ்யத்தாலே நம்பெருமாள் பக்கலிலே சென்று, அவனுக்கு சேஷமாயிருக்கிற, அநவரதமும் ஸம்ஸார சாகரத்திலே கிடந்துறங்கும்
ஆத்மாக்களாகிய நாம்
அநர்த்தப்படாதபடி, நம்மை
எழுப்பி பகவதநுபவ ப்ரீதிகாரித கைங்கர்யத்தில் ஈடுபட்டுய்ய, சுனையாடலின் செம்மை, மேன்மை, அருமைகளையும் அதிலே
ஆழ்பொருளாய்ச் சொல்லப்பட்டுள்ள வைஷ்ணவ தர்மத்திலுள்ள
சாஸ்ரார்த்தங்களையும் இரு பெரு மஹநீயர்களின்
ஸ்வாபதேச வ்யாக்யானங்களைக் கொண்டு நமக்கு வேண்டுவனவெல்லாம்
ஆந்தனையும் கைகாட்டி, உள்ளுமாறுய்ய அறிவுத்
தொண்டு புரியும் நம் ஸ்வாமி ஸ்ரீ ஆண்டாளுதித்த திருவாடிப்பூரத்தின் முன்
திருநட்சத்திரமாம் ஆடி மகந்தன்னில் உதித்தமையாலே ஆண்டாளுக்கு முன்னானார் என்று போற்றியாம் வந்தோம் புகழ்ந்து,
வடமொழி, தென்மொழிப் புலமையும்,
சமயநுட்பப் புலமையும், சொற்பொழிவுத் திறமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற நம் ஸ்வாமி எப்பொழுதும்
அத்திருவருள் கொண்டு
நமக்கு சத்விஷயங்களை
அருளவேணுமென *ஆண்டாளின் திருவடிகளை
வழுத்துவோம் மனமே மகிழ்ந்து!!*

சிற்றஞ்சிறுகாலே , கோபிமார்களின் ஸத்வோர்த்தமான காதலுடனும், அதே அனுகாரத்துடனே தோழிகளையும் அழைத்துக்கொண்டு , தானே !! ஸத்கரித்து, நம்மைப்போன்று திருப்பாவை அனுசந்தானம், என்னும் ,தோல்கன்றே , போல்வாரையும் ,
[ ] வந்தார்களே !! என கலங்கி அருள, கண்ணனே !! முற்பட்டு,
[ ]
[ ] அதீத வாத்ஸல்யத்தாலே, நாங்கள் ஒரு வ்யாஜ்யமாய்க் கேட்ட, தோல் பறையை தர முனைந்ததுப் போலன்றி, எங்களுக்கு புருஷார்த்தமான , இவ்வாயர்பாடியிலே பிறந்தது , எங்களுக்காக ,நீயும் !!வந்துதித்த இங்கேயே , உனக்கு கைங்கர்யம் என்பதே பறை ( இவ்விடத்தில் மங்களாசாசனம் என்பது , பல்லாண்டு பாடுவது மட்டுமன்றி, பூத்தொடுத்தல், தளிகை பண்ணுதலும் அவ்வெம்பெருமானுக்கு மங்களம் பாடுதலுக்கு சமம் என்று விளக்கியது , பெரிய புரிதலுடனான அதி அத்புத அனுபவம்) பிற உறவுகளை விட்டே , உன்னையே எல்லாமாகவும் பற்றின எங்களுக்கு , எல்லா உறவுக்கும், பண்ண வேண்டிய கைங்கர்யங்களை எல்லாம் லஷ்மண, குகனைப் போல நாங்களே !! உனக்குச் செய்து, ஸத்தை , பெறுவதே ப்ராதனம் , என ‘உனக்கே ‘ எனும் பதத்தின் மூலமாக, ஆண்டாளின், வேண்டுகோளை ,விளக்கியது சுகானுபவம் !!
[ ] பெரியாழ்வாரைப் போல கைங்கர்யம் , வைகுண்டதைதிலும் தொடர வேண்டுவதை , நினையாதே, கண்ணனின் பார்வை வட்டத்துக்குள்ளேயே, ஏதேனும் கைங்கர்யம், அதுவும் எங்கள் உகப்புக்குக்கன்றி, கண்ணனின் ஆனந்தத்திற்கே !! ஆக வேண்டும் என ஆயர்குடிப் பெண்ணாகவே கோதை !! வேண்டுவது ,” இங்கே இப்பிறப்பே மகிழ்வர்” எனும்படி கருணையுடன் ஞான ஜென்மாக்களாய் ஆக்கி, இந்த இடத்திலே, திருப்பாவை, ஸாதித்துக் கொடுக்கும் சேவிப்பாற்கு , என ஸ்வாமி , விளக்கியதைக் கேட்டதே !! பெரும் புண்யம்!!
[ ] மேலும் வங்ககடலைக் கடைதல் எனும் வ்யாஜத்தாலே !!
வங்கம் ,ஜீவனின் தேகமே எனவும் , அதற்கு சலனமின்றி, தன் சங்கல்பத்தாலே !! கிருபை என்னும் கயிறு கொண்டு, தன் கடாக்ஷ்ம் , எனும் கையாலே !! கடைந்து , பெறுவது , பிராட்டியை விடவும் , பிரேமமான , நம் போன்ற, ஆத்ம வஸ்து ( இங்கு இராம சுக்ரீவ ஸம்வாதம் அருமை ) எனவும் ,

கடல் கடைந்து ,பிராட்டியைப் பெற்றான், என்றே ,கேட்டுகந்த , நமக்கு , அவன் பெறுவது , நம்மையே !! எனவும் அதுவும் அவனுகப்புக்கே, என தெளிவது , நம் ஸ்வாமியின் கருணையடியான , சொல்லுதலின்றி தரிக்காத பகவானின் வ்ருத்தாதந்தத்தை, நம் போலோற்கு, ஆண்டாளின் , ஸ்ரீஸூக்தியாலே !! என்பது , நாம் பெற்ற பெரும் பேறு !! செல்வத்திருமாலாலே !! என
பல்லாண்டு !! பல்லாண்டு!! ஸ்வாமிக்கு !! பாடி மகிழ்ந்து குளிர்வோம் !!🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻

திருப்பாவையில் முப்பது தீர்த்தங்கள் 🕉️

1️⃣ மார்கழித் திங்கள் –
வ்ரஜா நதி – வைகுண்டம்

2️⃣ வையத்து வாழ்வீர்காள் –
சமுத்திர ராஜன் – திருப்பாற்கடல்

3️⃣ ஓங்கி உலகளந்த –
கங்கை – இமயமலை

4️⃣ ஆழி மழைக் கண்ணா –
வருண தேவன்

5️⃣ மாயனை மன்னு –
யமுனா – விருந்தாவனம்

6️⃣ புள்ளும் சிலம்பின காண் –
சரஸ்வதி – மானா, பத்ரிநாத்

7️⃣ கீசுகீசு என்று –
புண்டரீக புஷ்கரணி – மாமல்லபுரம்

8️⃣ கீழ்வானம் –
தக்ஷிண பிநாகினி (தென்பெண்ணை) – திருக்கோவலூர்

9️⃣ தூமணி மாடத்து – தாமிரபரணி – நெல்லை, தூத்துக்குடி

1️⃣0️⃣ நோற்றுச் சுவர்க்கம் –
பாலாறு – காஞ்சிபுரம்

1️⃣1️⃣ கற்றுக் கறவை –
பாரதபுழா – கேரளா

1️⃣2️⃣ கனைத்து இளம் –
வைகை – மதுரை

1️⃣3️⃣ புள்ளின் வாய் –
சந்திர புஷ்கரணி – ஸ்ரீரங்கம்

1️⃣4️⃣ உங்கள் புழக்கடை –
காவிரி – திருவரங்கம்

1️⃣5️⃣ எல்லே ! இளங்கிளியே –
நம்பி ஆறு – திருக்குறுங்குடி

1️⃣6️⃣ நாயகனாய் நின்ற –
ராதா குண்ட் , ஷியாம் குண்ட் – கோவர்தன்

1️⃣7️⃣ அம்பரமே தண்ணீரே –
யசோதா குண்ட் – நந்தகாவ்

1️⃣8️⃣ உந்துமத களிற்றன் –
அனந்த சரஸ் – காஞ்சிபுரம்

1️⃣9️⃣ குத்து விளக்கெரிய –
லலிதா குண்ட் – நிதிவனம், விருந்தாவனம்

2️⃣0️⃣ முப்பத்து மூவர் –
வேணுகூபம் – பண்டீரவனம்

2️⃣1️⃣ ஏற்ற கலங்கள் – இந்திரத்யும்ன சரோவர் – ஜகன்னாத் புரி

2️⃣2️⃣ அங்கண்மா ஞாலத்து –
பத்மதீர்த்தம் – திருவனந்தபுரம்

2️⃣3️⃣ மாரி மலை முழைஞ்சில் –
பாவநாசினி – அஹோபிலம்

2️⃣4️⃣ அன்று இவ்வுலகம் –
சந்திரபாகா – பண்டரிபுரம்

2️⃣5️⃣ ஒருத்தி மகனாய் –
கோமதி – துவாரகா

2️⃣6️⃣ மாலே ! மணிவண்ணா –
சரயு – அயோத்யா

2️⃣7️⃣ கூடாரை வெல்லும் –
ஸ்வாமி புஷ்கரணி – திருமலை திருப்பதி

2️⃣8️⃣ கறவைகள் பின்சென்று –
ஹரித்ரா நதி – மன்னார்குடி

2️⃣9️⃣ சிற்றம் சிறு காலே –
சக்ர தீர்த்தம், நைமிசாரண்யம்

3️⃣0️⃣ வங்கக்கடல் கடைந்த –
திருமுக்குளம் – ஸ்ரீவில்லிபுத்தூர்.✍🏼🌹

மார்கழி -சரமஸ்லோகார்த்தம் ப்ராப்ய பிரதானம் -ஸ்வரூபம்
வையத்து– த்வயம்–ப்ராப்ய பிராப்தி பரம்-பேற்றுக்கு தவரிக்கவும் வேண்டும் -செய்யும் கிரிசைகள் –திண் என்றும் இருக்கும் திருவடிகளே
ஓங்கி -திருமந்திரம் -பிராப்தி பரம் -பேர் பாடி பொழுது போக்கு -அச்சுவை பெறினேம் வேண்டேன்

ரஹஸ்ய த்ரவ்யம் முதல் மூன்று பாசுரார்த்தம்– -ஆழி மழைக் கண்ணா ததீய சேஷத்வம்-அந்தர்யாமி இதில் அர்ச்சா அடுத்து மன்னு வடமதுரை மைந்தன்

ஆழி மழைக் கண்ணா –11 கட்டளைகள் இடுகிறாள்–11-ழ காரம்

வடமதுரைக்கு மற்ற முக்தி ஷேத்ரங்கள் கைங்கர்யம் -சத்ர சாமரங்கள் பத்னி பாத ஸ்தானங்கள்-ஸப்த புண்ணிய ஷேத்ரங்கள்-முக்தி தரும் மோட்சத் தலங்கள்-7–வடமதுரை–ராஜா -ஸிம்ஹாஸனம்–துவாரகை—அயோத்தி–ராணி ஸ்தானம்–ஹரித்வார்–காசி–உஜ்ஜயினி (அவந்திகா)—காஞ்சி

அங்குஷ்டா கட்டைவிரலையே புருஷ லிங்கம் மற்ற விரல்கள் ஸ்த்ரீ லிங்கம் -அசித் -பத்த முக்த நித்ய -மற்ற விரல்கள் -ஸத்வ ரஜஸ் தமஸ் -விரல்கள் அளவும் ஒரே மாதிரியாக இருக்காவே

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் >>

  1. மார்கழித் திங்கள் – நாராயணனே நமக்கே பறை தருவான் – பரமபதம்.
  2. வையத்து – பாற்கடலில் பையத் துயின்ற – க்ஷீராப்தி.
  3. ஓங்கி – ஓங்கி உலகளந்த உத்தமன் – திருக்கோவலூர்.
  4. ஆழிமழை – பாழியம் தோளுடை பத்மநாபன் – திரு அனந்தபுரம் .
  5. மாயனை – வடமதுரை மைந்தன் – மதுரா .
  6. புள்ளும் – வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து – திருவண் வண்டூர்.
  7. கீச்சு கீச்சு – கேசவனைப் பாடவும் – திருவாய்ப்பாடி.
  8. கீழ்வானம் – தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் – வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.
  9. தூமணி மாடம் – குன்றின்மேல் விளக்கு – திருக் கடிகை.
  10. நோற்று சுவர்க்கம் – நாற்றத் துழாய்முடி நாராயணன் – திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை – முகில் வண்ணன் பேர் பாட – காளமேகப் பெருமாள் திருமோகூர்.

  1. கனைத்திளம் – தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.
  2. புள்ளின்வாய் – பள்ளிக் கிடத்தியோ – திருக்குடந்தை.
  3. உங்கள் புழக்கடை – நாவுடையாய் – செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் – தேரழுந்தூர்.
  4. எல்லே – மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் – திருவல்லிக்கேணி.
  5. நாயகனாய் – மாயன் மணிவண்ணன் – திருக்குறுங்குடி.
  6. அம்பரமே – அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் – சீர்காழி.
  7. உந்து மத களிறு – பந்தார் விரலி மைத்துனன் – திருநறையூர்.
  8. குத்து விளக்கு – மலர்மார்பா – திருவிடவெந்தை.
  9. முப்பத்து மூவர் – செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் – திருப்பாடகம்.
  10. ஏற்ற கலங்கள் – ஊற்றமுடையாய் பெரியாய் – பெரும்புறக் கடல் – திருக்கண்ண மங்கை.
  11. அங்கண்மா ஞாலம் – அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து – திருமாலிருஞ் சோலை.
  12. மாரி மலை முழஞ்சில் – பூவை பூ வண்ணா – திருவரங்கம்.
  13. அன்றிவ் உலகம் – குன்று குடையாய் – கோவர்த்தனம்.
  14. ஒருத்தி – கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் – திருக்கண்ணபுரம்.
  15. மாலே மணிவண்ணா – ஆலின் இலையாய் – பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் – சீர் கோவிந்தா – (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை – குறை ஒன்றுமில்லாத கோவிந்தா – (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை – பறை கொள்வான் கோவிந்தா – (துவாரகை.)

39 வங்கக் கடல் – அணிபுதுவை – (ஸ்ரீவில்லிபுத்தூர்).

(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

ஐந்தாம் பட்டு ஆளவந்தார் -யமுனைத் துறைவன்
செல்வ சிறுமியர் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
செய்யும் கிரிசைகள் -நாதமுனி பெரிய யோகி-
அடுத்து -உய்யக்கொண்டாரும்–உய்யுமாறு எண்ணி– -நாடு எல்லாம் பிணம் கிடைக்க மணம் புரிவார் உண்டோ
அடுத்து -மணக்கால் நம்பியும்–சேறு உகள –சார்ங்கம் உதைத்த -ராம மிஸ்ரர் –

நாராயணனே மாயன் -துயின்ற பரமனும் மாயன் -உத்தமனும் மாயன் -பத்ம நாபனும் மாயன்-ஊழி முதல்வன் -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பத்ம நாபன் சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -இரண்டுமே மாயன் -தாமோதரனும் மாயன்

“தூயோமாய்”
ஒரு விளக்கு எப்படி
தனக்கும் பிறர்க்குமாக இருக்குமோ,அதேபோல
ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களைக் கொண்ட
” திருப்பாவை” யின் மூலம்,
பகவானை அடையும் வழியை அறியாதவர்க்கு,
ஒரு ஒளிவிளக்காக இருந்து கண்ணனை அடைய வேணும் எனும்
ருசி/ ஆசையுடையோர்க்கு பகவத்கைங்கர்ய வழியை ஒரு நோன்பைக் காரணமாகக் கொண்டு அனைவர்க்குமாக காட்டி அருளியத்தை: ஒரு ப்ரபந்நனுக்கு அநவரதம் அநுசந்தேயமான இத்திவ்யப் பாமாலை, ஆக்ஞையில் வாராது;
ஆசைப்படவேண்டும; எனவே, வாருங்கோள்
என்றழைத்து இதனுள் பொதிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துகளை வ்யாக்யானச் சக்ரவர்த்தியான ஸ் வாமி
பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தை கைக்கொண்டு தனக்கே உரிய பாணியில் பல ப்ரமாணங்களையும், மேற்கோள்களையும் கொண்டு கோர்த்து கோர்த்து நம் ஸ்வாமி வழங்கும் பொழிவில் மூழ்கிப் பேரின்பத்தில் திளைப்பது ஒரு சுஹானுபவம். அந்த வகையில் நாமனுபவித்தச் சில இடங்கள்:
“நாராயணனே”என்பது பரவாஸுதேவனையும்(சரமஸ்லோகத்துக்குமானது)
“பையத்துயின்ற பரமனை”
என்பது வ்யூகமென்றும்(த்வயத்துக்கானது)
“உத்தமன் பேர்பாடி” விபவத்தையும்(துருமந்திரத்துக்கானது)
“ஆழிமழைக் கண்ணா”
என்பதன் மூலம் வருணபகவானான
பரஜன்யஸ்வாமி உலகினில் பெய்த மழையால் ஊரார்களைக் குளிப்பாட்டியதைப்போல,
நாங்களும் நீராடக் கடவோம் மகிழ்ந்து என்பதனையும்,
“ஆயர்குலத்தின் அணிவிளக்கை” பரிசுத்தமான மலர்களைக்கொண்டு பூஜித்து, வாயினால்பாடி, மனத்தினால் சிந்திக்க
“சஞ்சித கர்மம் மற்றும் ப்ராரப்தகர்மத்தினால் ஏற்பட்ட அனைத்து பாவங்களும் தீயிலிட்ட பஞ்சைப்போல் பொசுங்கிவிடும் என்று விளக்கியது:
அடுத்து, ” படிந்து”, “உகந்து”, நிறைந்து”, ” “மகிழ்ந்து” மற்றும் “தூயோமாய் வந்து” என்று நவவித பக்திகளை முதல் ஐந்து பாசுரத்திலே சொல்லப்பட்டிருப்பதையும்,
பட்டுத்திருந்தும் வாசிகளான ஒரு முமுஷுவோ (அ) பரமைகாந்தியோ அல்லாதாரும் உய்யுமாறு
பண்ணும் “உந்து” தலில் ஒரு தாய்க்கு தன் சேய்வசம் உள்ள அன்பினை “உச்சிமோந்து”
வெளிப்படுத்தும் விதமாக பகவானின் திருநாமங்களின் ஏற்றத்தைச் சொல்லி நம்மை நல்வழிப்படுத்தும்
ஸ்வாமியை நாமும் ‘”தூயோமாய் வந்து”
தூமலர்த்தூவித் தொழுவோமென ஆண்டாள் காட்டிப்போந்தவாறே முன்னோர் செய்தமுறை தப்பாது செயற்படும் ஸ்வாமியை மனத்தினால் அநுதினம் சிந்தித்து துதிப்போம்

🌺காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம் போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதை யெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது!

“🌹இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள் தான் செய்யணும். இது வரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித் தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்’நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.

🌹ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழை நாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.

வித்தினை உள்ளத்துக்கு கொண்டு –வித்தினை –முதல் இரண்டு அத்தியாயங்கள் -ஜகத் காரணமான ப்ரஹ்மம் -நாராயணனை -பரமனை -உத்தமனை -பத்ம நாதனை -மாயனை -த்யேய வாஸ்து நிர்ணயம் கீழே தியானித்து-உள்ளத்துக்கொண்டு -சாதன அத்யாயம் -மூன்றாம் அத்யாயம் –

திரு அனந்தல் ஸேவை –திருபள்ளி எழுச்சி -ஸூப்ரபாத ஸேவை

பேர் -நாம மகிமை 14 பாசுரங்கள் பூதத்தாழ்வார்
துழாய் -14 பாசுரங்கள் -பேயாழ்வார்

துயில் அணை மேல் கண் வளரும் -9
கோட்டுக் கால் கட்டில் மேல் -பஞ்ச சயனத்தின் மேல் -19
மாடியில் -கட்டிலில் -படுக்கையில் -ஒரே வ்யக்தி கண் வளரும்

கோதுகலமுடைய -வேண்டற்பாடு உடையவால் -பெரியவா ச்சார்யன் பிள்ளையும் மா முனிகளும் -உயர்ந்த குலத்தில் தோன்றிய -திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாப தேச வியாக்யானம்

பிஷாசான் -ஹரி கண ஈஸ்வர
மித்ரா பாவேந -விபீஷணன்
சக்ருதேவ -பிரபன்னனுக்கு –
இவ்வாறு ஆராய்ந்து அருள்வாய்
மற்றவர்கள் வரம் கொடுக்கும் பொழுது ஆராயாமல் அருளி பின்பும் இவனை சரணம் அடைந்து தங்களுக்கு வரும் அநர்த்தங்களையும் போக்கிக் கொள்வார்கள்-

ருக்மிணி பொற் கோடி
லஷ்மணன் -நற் செல்வன்
ராமன் -மனத்துக்கு இனியான்

கற்றுக்கறைவை –முத்திறமும் உண்டு -சத்வ குணம் பசு -தமஸ் ரஜஸ் -ஆடு எருமை –கற்று எருமை -பசுப்பால் பகவத் கைங்கர்யம் -எருமைப்பால் -லௌகிக வியாபாரம் –

வியாழன் உறங்கிற்று அஸ்தமித்தது -அமங்கள சொல் அருளிச் செய்யாமல்
பாலில் ஸ்ரீனிவாசன் இருந்தது -ஸ்ரீனி வாசம் எறும்பு

புள்ளின் வாய் கீண்டவன் புள் இன் வாய் -ஜடாயு -ஆயுஷ்மான் -பெரிய உடையார் -இந்து முகூர்த்தம் -தொலைந்த ஓன்று அப்படியே கிட்டும் -ஆஞ்சநேயர் பெருமாள் காதில் ஓதிய மந்த்ரம் -யுத்தம் விற்கவும் படைத்த நினைவு படுத்திய வ்ருத்தாந்தம்

இரா வண்ணன் கருமை நிறம் கொண்ட ராமன்-ராமன் ரா இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களில் மன்னன் -ராவணனை ராமன் கொன்றான் சொன்னாலும் பொருந்தும்

ஆழ்வார்களில் ஆழ்ந்து அருளிச் செயல்களில் ஆழ்ந்து-ஆராவமுதப்பெருமாள் ஆராவமுத ஆழ்வார் திரு நாமம் பெற்றார்-அத்யயன உத்சவம் மார்கழியில் இங்கு நடக்கும் -தைமாதம் ப்ரஹ்ம உத்சவம் நடக்க இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவே

மண்ணுண்ணி மாப்பிள்ளையே-காவிறையே, கூவிறையே உங்களப்பன் கோவில் பெருச்சாளி, கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே!”-தமிழ் மொழியில் எதையும்கூறி உரை சொல்ல முடியும்

கன்னா பின்னா மன்னா
கன்னா = வாரி வழங்குவதில் வல்லவனான கர்ணனைப் போன்று விளங்கும் கொடைவள்ளலே ! பின்னா = அவனுக்குப்பின் பிறந்த தர்மபுத்திரனைப் போன்று நீதி வழுவாதவனே ! தென்னா மன்னா = தென்னாடு முழுவதும் ஆளும் மன்னனே ! சோழங்கப் பெருமாளே = சோழ வம்சத்தின் பெருமையை நிலைநாட்ட வந்த தலைவனே !-மண் உண்ணி மா பிள்ளையே -உலகம் உண்ட பெரிய வாயன் -ஸ்ரீ யப்பத்தி-காவிறையே என்றால் கா என்பது கற்பகம் அதற்கு இறைவன் இந்திரன்
கூ என்பது பூமி அதனிறைவன் நம் பெருமான் அதாவது அரசன் உங்கப்பன் கோ என்பது உங்கள் தந்தையும் பெரிய சக்கர வர்த்தி அவர் வில் வித்தையில் பெரிய ஆள் அதையே வில் பெருச்சாளி

ராமனும் கண்ணனும் ஒருவனே என்றார்கள் கீழ் -எவ்வாறு ஒருவரே என்பதை சங்கொடு சக்கரம்ஏந்தும் தடக்கையன் -பங்கய கண்ணன் -என்கிறார்கள்

நான் -நாண் -இரண்டுமே அஹங்காரச் சொற்கள்
புழக்கடை -கடைத்தலை வாழும் சோம்பர் -தலைக்கடை வாசல் புறம்

அரவணைப்பள்ளியானைகேசவனைப் பாடும் ” ஹரி”
எனும் பேச்சரவம், தயிரரவம் கேட்டிலையோ, கண்ணனை துயில் எழுப்ப வா என்றும்;
: நுனிப்புல் மேய நமக்கு முன் செல்லும் கறவையினங்களையும் நிறுத்தி உன் வாசலில் நிற்கிறோம்; கண்ணனைக் கொண்டாட வா என்றும்;
: பகவானின் திருநாமங்களான “மாமாயன், மாதவன், வைகுந்தனில்
மூன்றாவதான “வைகுந்தனை” எங்களுடன் சேர்ந்து பாடவா என்றும்;
: வேதத்தின் சுருக்கான, ஸாரமான, மங்கலத்தைச்
சொல்லும் நாராயணனின் அருள் பெற்றவளே; படுக்கையிலிருந்து எழுந்து வந்து எங்களுடன்
சேர்வாய் என்றும்;
: கோவலர்தம் பொற்கொடியே, மிக்கசெல்வங்களையுடையவளே, இடையனின் தங்கையே நோன்புக்கு நீயும் வருவாய் என்றும்;

: இடைச்சியாய் க்ருஷணாநுபவத்தைப்
பாடினாலும் இடையிடையே ஸ்வரூபத்துக்கநுரூபமான
கைங்கர்யச் செல்வனைப்
பெற்ற”மனத்துக்கினிய”னான ஸ்ரீராமனையும் பாட கோவலர்களின்வாரிசே
நீ எங்களுடன், சேர்வாய் என்றும்;
: ஜ்ஞானத்தின்சீர்மையை
காட்டும் ” கண்ணழகு உடையவளே”, பொல்லா அரக்கனை கொன்ற ஸ்ரீ ராமனைப் பாடி நாம் எல்லாரும் ஒன்றாக அநுபவிப்போம் என்றும்
பாடிப் போந்ததை::
வியாக்யானச் சக்ரவர்த்தியான பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமியின் விரிவுரை, வேதவேதாந்தஙகள்,
இதிகாச புராணாதிகள் மற்றும் ஆழ்வார்களின்
பாசுரங்களிலும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களுக்கநுகுணமான ஆழ்ந்த கருத்துகள் சொல்லப்பட்டிருக்கும் செயலியையும் ஒரு சங்கிலித்தொடராகச் சேர்த்துச் சொல்லி;
பகவத்விஷயத்தின் சுவடறிந்தும் மறந்து கிடக்கும் அடியேன் போன்றவர்கள் கடைத்தேறவும்,
பரார்த்த
கைங்கர்யம் பகவத் விஷயத்தோடு நில்லாமல்
பாகவதவிஷயமாயும் இருக்கத் தன்னையே ஒரு
கொழுகொம்பாய்ப் பிடித்துக் கொண்டு நோன்பு நோற்க நம்மை அழைத்துச் செல்லும்
“மனத்துக்கினியனான” நம் ஸவாமியின் திருவடிகளைப் பற்றி வீண் பேச்சுக்களைத் தவிர்த்து
எப்பொழுதும் திருமாலின் கதைகளையே பேசியும், உய்யுமாரெண்ணியும்
உகந்தே இருப்போம்!!
” பொலிக, பொலிக, பொலிக!!

பாவைக் களம் -திருவஞ்சிக்களம் -திரு மூழிக் களம் -செல்வம் மறப்பித்த ஸ்தலம்

ஒரு கால் நந்த கோபன் மேலும் மற்ற ஒரு கால் யசோதா பிராட்டி மேலும் பலதேவன் கால் நூபுரம் த்வனி கேட்டு பாசுரம் -அடியை விடாதவர்கள் அன்றோ இவர்கள்

சாலப்பல நாள் இன்னம் தளர்வேனோ – -திருமந்த்ரார்த்தம் –இன்னம் உறங்குதியோ-இன்னம் மூன்று அர்த்தங்களும்-மூன்று பாசுரங்களாலும் அங்கு சர்வ கால ரக்ஷகத்வம் -சர்வ ரக்ஷகத்வம் -சர்வ பிரகார ரக்ஷகத்வம் -அங்கு சொல்லி -புருஷகாரம் -இருக்கவும் ரக்ஷகன் இருந்தாலும் -அடியேன் சம்பந்தம் அறிந்த பின்பும் இன்பம் தளரவனோ -இன்னும் கெடுப்பாயோ- -இன்னும் குறுகாதோ-6-9-திருவாய் மொழியில்7-8-9 பாசுரங்கள் மூன்று இன்னும்-இன்னும் எண்ணுகின்றாய் -7-1- பிராட்டி முன்னாக சரணம் அடைந்த பின்பும்-உற்றேன் உன பாதம் பெற்றேன் உகந்து பணி செய்தேன் -இரண்டுமே ப்ராப்யம் –
இனியும் ஈதே வேண்டுவது -அங்கும் இனியும்–இன்னும் கார் வண்ணமே

செல்வா பலதேவா -நற் செல்வனாகி இருந்து வெறும் செல்வனாகி தூங்கலாமோ -கைங்கர்யம் இழந்தாயே-பிராட்டி மூலம் கைங்கர்யம் செய்ய உபதேசித்து நன்மையை மீண்டும் பெற்றான்–கன்னிகை இல்லாமல் கல்யாணமா -என்று காட்டி அருளினவன்-திருமந்திர சாரமே இவன்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை- -கீழ் ஆச்சார்யன் -மந்த்ரம் -பொருள் -இங்கு சாரம்

உந்து மத களிற்றன் -உகாரம் -18-குத்து விளக்க எரிய -க் +உ -19- -முப்பத்து மூவர்-ம் +உ -20-மேல் மூன்று பாசுரங்கள் அவளையும் -அவள் அவன் நாம் சேர்க்கையும் உண்டே

ந பின்னை–பிரிவே இல்லாமல் பின்னால் போகாமல் வஞ்சுள வல்லித்தாயார் போல் -நம்பியைக் கையில் வைத்துக் இருக்கும் நம்பிக்கை நாச்சியார்-கண்ணன் பின் பிறந்தவள் கும்பன் திரு மகள்-மாதவிப்பந்தல் -ஸ்ரீ வில்லி புத்தூரிலும் அழகர் கோயிலிலும் உண்டே-உந்து மத களிற்றன்-கண்ணனே களிறு -பராங்குசன்-

தனிக் கோயில் நாச்சியார் இடம் பிரார்த்தனை -உந்து -உபய நாச்சியார் உடன் கூடிய அவனிடம் சரணாகதி குத்து -திருமார்பு நாச்சியார் சேர்த்தியில் கைங்கர்யம் முப்பத்து மூவர்

நேத்ருத்வம் உந்து -நித்ய யோகம் -குத்து விளக்கு-தத் இங்கித பராதீனன்-

ஏற்ற கலங்கள் -திருப்பாவையில் திருப்பள்ளி எழுச்சி -அன்று –போற்றி -திருப்பல்லாண்டு-ஆர்ய புத்ரா -ஆற்றப் படைத்தான் மகனே -சாஸ்திரம் படி கணவனை அழைக்க வேண்டிய முறையை நப்பின்னை சொல்லிக் கொடுத்த படி –

சூடகமே -ஏவகார சீமாட்டி -அனைத்துமே கண்ணன் -கன்றுக் குட்டிகள் ஆயர் சிறுமியர்கள் போல இவனே முன்பு ஆனான் -உன்னையே அர்த்தித்து வந்தோம் என்றவர்கள் தானே –

நம் காமங்கள் மாற்று -எம் இல்லை -அவனையும் சேர்த்து -விளையாட்டுக்காக -அவன் செய்யலாம் -அவனையும் சேர்த்து அருளிச் செய்கிறார்

28ம் பாசுரத்திற்கு த்வயத்தின் முன்வாக்கியத்தையும் 29ம் பாகரத்தில் பின்வாக்கியத்தையும் சாதித்தாள். இந்த 28ம்மாகரத்தில் இறைவா நீ தாராய் பறை என்று ப்ரார்த்தித்தாள் ( முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை
தருவான் என்றாள்

28ம்பாசுரத்தில் ப்ராபகத்தையும் ௨9ம்பாகரத்தில் முழுமையான ப்ராப்ய ப்ராபக ப்ரார்த்தனை செய்கிறார். இந்த 6 உபாய வர்ணத்தை – த்வயத்தின் முன்பகுதி அர்த்தத்தை சொல்லி 28வது பாசுரத்தில் சரணம் ப்ரபத்யே என கூறுகிறாள். ஆக 18, 19, ௨௦வது பாசுரங்கள் ஸ்ரீமத் சப்தம், 21, 22, நாராயணாய , 23, 24- சரணௌ சப்தரித்தல் 25 – சரணம் விளக்கம் – அநிஷ்டத்தை தொலைத்து . இஷ்டத்தை கொடுக்குமாறு அர்த்தித்தல் ( வருத்தம் தீர்ந்து அருளேலோ) 26 – யார் உபாயம் என்று கூறுவது 27 – கூடியிருந்து குளிர்ந்து ஸாயுஜ்ய மோக்ஷம் – 28வது பாசுரம் சரணாகதியை சொல்வது

18 முதல்20 வது பாசுரம் வரை பிராட்டி சம்பந்தம் சொல்லப்பட்டது. நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே – நாரங்களுக்கு அயனமாய் இருக்கிறார். நாராயண – சேதன அசேதனங்களுக்கு விசிஷ்டனாய், குணவிசிஷ்டனாய், விக்ரஹ விசிஷ்டனாய லஷ்மி விசிஷ்டராய் இருக்கிறார். 21ம் பாகரத்தில் . போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து – என குணத்தை புகழ்கிறாள். 22ம் பாசுரம் – கடாக்ஷத்தை பிரார்த்திப்பது 23 – அவர் திருவடிகளே உபாயம். உபாயமான நீ எங்களை தேடி வர வேண்டும் என பரகத ஸ்வீகார மே ஸ்வீகாரம் என்கிறாள். 24 நடந்த திருவடிகளுக்கு பல்லாண்டு பாடினாள். 25வது பாசுரத்தில் தேவரீரே பறை என்ற புருஷார்த்தம் 26வது பாசுரத்தில் அவரும் நாமும் சேர்ந்து 8 குணங்களில் சாம்யாபத்தி – அவருக்கு நிகரான தன்மை. 26வது பாசுரத்தில் ஆலின்கிலையாய் அருள் – அகடித கடனா சாமர்த்தியத்துடன் கூடிய பரத்துவம் சொல்லப்பட்டுள்ளது. சாம்யாபத்தி மோக்ஷம். பரத்துவம் உடையவர் கொடுத்தால் தான் உயர்ந்த சாம்யாபத்தியாய் இருக்கும். 27வது பாகரத்தில் 8 குணங்களில் பெருமானுக்கு நிகர். ஆனந்தம் எப்படி இருக்கும் அடியார்களுடன் சேர்ந்து பகவானை அனுபவிப்போம். 27. சாயுஜ்ய பதவி கிட்டுவது 28வது பாசுரம் ப்ரபன்னனிற்கு உண்டான நிஷ்டையை ப்ராப்யத்தை இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புண்ணியம் யாம் உடையோம் – இங்கு புண்ணியமே பெருமாள்தான் உன் திருவடிகளையே உபாயமாக ளித்த உபாயமாக உன்னையே கொடுத்தாய்.29ம் பாதரம் – ப்ராபகம் . திருப்பாவை ஆகிறது இப்பாசுரம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து -திருமந்திரத்தில் பிறந்து
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -துவாதச அஷரி -ஓம் நமோ பகவத் வாஸூ தேவர் -மகனாய் ஒளித்து வளர-யாதவ ஸிம்ஹம் போலவே நரஸிம்ஹ -வாமன -ராகவ ஸிம்ஹம் -ரெங்கேத்ர ஸிம்ஹம் -ராமானுஜ சீயம் அனைவருக்கும் பொருந்தும்

திருத்தக்க செல்வம் -அவனையே சொன்னவாறு -வருத்தமும் தீர்ந்ததும் அவனுக்கே

ஆ ந ந -இல்லை என்பதை இல்லை -எப்பொழுதும் உண்டு -ஆநநம் முகம் -நம்மோடே உற்றோடே ஆவீர் -நமக்கே ஆட் செய்வீர் என்பவன் -லஷ்மீ கல்யாண வைபோகமே அருளி நிகமனம் -மா தொடங்கி -எங்கும் திரு வருள் பெற்று இன்புறுவர்

அங்கு அப்பறை –பரமன் அடி பாடி -ஒரு பறை -பரம புருஷார்த்தம் -ப்ரீதி காரித ததீய கைங்கர்யம் -ததீயாருக்காகவே-அப்பறையே நீங்காத செல்வம்-குண அனுபவம் -கைங்கர்ய நிஷ்டர் -பறை இரண்டு வகை -முனிவரும் யோகிகளும் -கலந்து பேசின -கூட்டமாக அனுபவம்-

கணுப் பண்டிகை பாடல் :

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும்
காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்

காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்

கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்

வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமர்க்களமாய் வாழ வெச்சேன்

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் எடுத்து வெச்சேன்

எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பம் கேட்டு வெச்சேன்

தூப தீபம் காட்டி வெச்சேன்
இதயத்தோடு எதுத்து வெச்சேன்

கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கண்ணனை வணங்கி வெச்சேன்

ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பிறந்த அகம் ஓங்கி வளர ஆழ்வார் எம்பெருமானாரை வணங்கி வெச்சேன்

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் திருக் கல்யாணம் -ஸ்ரீ திருமலை நல்லான் ஸ்ரீ ராமகிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்

January 20, 2025

மார்க்க சீர்ஷ விரதம் கிரந்தம் சிரோமணி வி நிர்மிதம்
நிரூப யைவம் ஸ்லோஹம் ஆஹதே சிகோ வரதோ முதா
–கார்ப்பங்காடு ஸ்ரீ தேசிக வரதாச்சார்யர் ஸ்வாமிகள் மங்களா ஸாஸனம்

முதல் அங்கம் -முதல் களம்
ஸ்ரீ ஆண்டாளும் அனுக்ரஹை தோழியும் வருகிறார்கள்
ஆண்டாள்
–சகி -இச்சோலையைப் பார் -என்ன நேர்த்தி -எத்தனை வனப்பு -அதுவும் மாலை நேரம் -தங்கத்தை உருக்கியது போன்ற தன் செங்கிரணங்களை -ஏழைகள் குடிசையில் உத்யானத்திலும் பாரத பரப்பிக் கொண்டு இருக்கின்றான் – எங்குப் பார்த்தால் தங்கக் கொடிகள் -தங்க புஷ்பங்கள் தங்கப் பறவைகள் -இவ்வுலகம் அழியக் கூடியதாகையாலே வெறுக்கத் தக்கது என்றும் வேதாந்திகள் கூறுகின்றனரே –அது இயற்க்கைச் சேவை அறியாதவர் வாத்யம் என்பதை எனது அபிப்பிராயம் -தினம் தோறும் தங்கதிரினைக் கதிரவன் இங்கனம் வீசுவது இல்லையா -பிரளய காலத்திலும் இவற்றை அழிக்க மனமில்லாமல் ரஸிகக் கடவுள் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றுகிறான் –

அனுக்ரஹை -ஆம் -இயற்கையில் எவர் மனம் தான் ஈடுபடாது -இவ்விதம் இருப்பது வழக்கம் தான் என்று லஷ்யம் செய்யும் மூடர்கள் தான் இதை வெறுக்கின்றனர் -முற்றும் துறந்த முனிவர்களும் கூட இயற்கையினில் தங்களை திட மனத்தைக் கொள்ளை கொடுத்து விடுகின்றனர் -இது அவர்கள் இன் மொழியை ஆராய்ந்தால் நன்கு புலப்படும் -ஏன் நின் தந்தையும் கூட இயற்கை அன்னைக்கே தமது கவி முழுவதும் கப்பம் விடுகின்றார் அன்றோ-இக்கொடியைப் பார் -இக்கொள் கொம்பை எவ்வாறு இறுகத் தழுவிக் கொள்கிறது -இதில் வைத்தால் நாட்டத்தை யாரால் திருப்ப முடியும் –

ஆண்டாள் -ஆச்சர்யத் தோற்றத்துடன் -அதைப் பார்த்த வண்ணம் -சசி நெடுநாள் பிரிந்த மணாளனையும் பெண் மணியும் போன்று இக் கொடி கொம்பைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது -அம்மடந்தையரின் மந்த ஹாஸத்தை மலர்ந்த மலர்கள் பரிஹசிக்கின்றன –மலர்களில் ததும்பும் தேனைப் பருகும் வண்டினங்கள் இனிது முரல்கின்றன -தென்றலுக்கு அசையும் அசைவு அதைத் தலை யசைத்து புகழ்வதை ஒக்கும் -இக் கொம்பை விட்டுப் பிரிந்தால் -பிரியில் தரியேன் -என்னும் உத்தம ஸ்த்ரிகள் போல் இக் கொடி என்ன பாடு பாடும் -பிரியேன் என்ற பெருமையால் அன்றோ இது அந்தமில் பேரின்பத்தை அனுபவிக்கிறது -உயரிய தம்பதிகளின் காதலின் மேம்பாட்டை இக் கொடி நன்கு விளக்கிக் காட்டுகிறது

அனுக்ரஹை -புன்னகையுடன் -நீ கூடுவது முற்றிலும் பொருந்தும் -ஆனால் உன்னுடைய வார்த்தைகள் இத்தைக் கண்டு பொறாமைப்படுவதை விளக்குகின்றனவே-

ஆண்டாள் -இல்லை சகி -நான் பொறாமைப் படவில்லை -உண்மையிலேயே இவ்வுலகில் காதலுக்கு இணை கிடைக்கவே கிடையாது -ஆகையால் தானே கவியரசர்கள் அதையே கையாள்கின்றனர் -உலகில் சிறந்தவை எல்லாமே கவி வாணர்களின் இன் மொழிகளுக்கு இடமாவது இயல்பே அன்றோ -ஸ்வாமியான பரமாத்மாவிடம் தாஸர்களான ஜீவாத்மாக்கள் செலுத்தும் பக்திக்கும் காதல் தான் தகுந்த த்ருஷ்டாந்தம் -ஞானிக்கு நான் பிரியன் -எனக்கு அவன் பிரியன் -என்றான் கீதாச்சார்யன் -இக்காதலின் உண்மையை அறிந்தே முற்றிலும் துறந்த முனிவர்களும் மறு ஜென்மம் கோபிகளாகப் பிறந்து கண்ணனை அனுபவிக்கிறார்கள் -முனிவர்களிலும் பன் மடங்கு ஞானாதிகரான பராங்குசர் முதலிய நம் பெரியோரும் மறு பிறவி வரை கூடத் தாங்க இயலாமல் அதே பிறவியில் ஆணாய் இருந்தும் உண்மைப் பெண்டிர் நிலைமை எய்தி பரமாத்மாவிடம் காதல் கொண்டு உருகி நைந்தனர் எனில் காதலின் மேம்பாட்டை நான் இயம்பவும் வேண்டுமோ-

அனுக்ரஹை-ஆணாய் இருந்தும் பெண்மை யுற்ற பெரியோரினும் நீ பெரியை -ஏன் எனில் உண்மையாகவே பெண் மகளாய்த் தோன்றிய நின் காதல் அவர்களுடைய காதலிலும் சீரியது அன்றோ –

ஆண்டாள்-சிறிது கோபத்துடன் -தலை குனிந்து -நான் காதல் கொண்டேனோ -யாரிடம் -இஃது என்ன விந்தை -நான் அறியாமல் என் காதலை நீ அறிந்து கொண்டு விட்டனை போலும் -இனி இது போன்ற அடுக்காத சொற்களை விடுக்காதே –

அனுக்ரஹை–ஏன் மறைகின்றனை -நீ நின் காதலனைக் காணாமல் படும் பாடுகளை எல்லாமே நான் நன்கு அறிவேன் -நின் முகம் வெளுத்து இருக்கிறது -ஒளி மழுங்கவில்லை -இதன் காரணம் விரஹத்தைத் தவிர வேறு ஏதாக இருக்க முடியும் -நோய் இல்லாமல் உனது உடம்பு இளைக்கக் காரணம் எது -நீ அடிக்கடி பெரு மூச்சு விடுகின்றாயே அது எதற்க்காக –நீ இப் பூஞ் சோலைக்கு அடிக்கடி வர விரும்புவது இல்லையே -குயில் ஓசையிலும் தென்றல் காற்றிலுமுள்ள பயம் தானே -அழகிய மணவாளனைப் பற்றிப் பேசும் போது எல்லாம் நின் மேனியில் தோன்றும் மயிர்க் கூச்சலை நான் பன் முறை கணடு இருக்கிறேன் -எனவே நின் மனதைக் கவர்ந்த கள்வன் அவனே என்றும் நான் நன்கு அறிவேன் –மேலும் இலக்குமன் போலே பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளிடம் பற்றுக் கொண்ட நீ அவன் திவ்ய வைபவங்களை பாடினால் மட்டுமே உறங்குவாய் என்றும் உன் தந்தை கூற நான் கேள்விப்பட்டது இல்லையோ -பால்யத்திலேயே இவ்வாறு என்றால் இப்போது இந்த யவ்வன தசையில் அவனிடம் பற்றுக் கொள்ள இல்லை என்பது ஏற்கப் பாலாது ஆகுமோ-

ஆண்டாள்-தலை குனிந்து -சகி நீ என்னையே இவ்வாறு பரிஹஸிக்கவோ இங்கு வந்தனை -பரிஹஸிக்கும் ஆற்றன் இல்லாத பழியைச் சுமத்துவதில் நீ கொஞ்சமும் அஞ்சுவது இல்லை -நான் மறுத்திடிலோ ஒன்றுக்குப் பத்து வார்த்தை –அம்மா போதும் நிறுத்திக் கொள்

அனுக்ரஹை-புன்னகையுடன் -நீ என்ன கூறினாலும் உண்மையை மறைக்க முடியுமோ -பிரிவாற்றாமை முற்றிய பின்னர் நீயே வலியக் கூற வேண்டி இருக்கும் -அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன் –சிறிது தூரம் சென்று பூக் கொய்கின்றனள் –

ஆண்டாள்–தனக்குள் -சகியை நான் சினந்து கூறி விட்டேன் -வேறு வார்த்தையாடி என் சகியின் உள்ளம் உகக்கக் செய்கிறேன் –
வெளியில் -சகி -இச் சோலைக்கு ஈடு இவ்வுலகிலினேயே இல்லை என்கின்றனர் -இது உண்மை தானா -உன் அபிப்ராயம் என்ன-

அனுக்ரஹை-இச் சோலையை விட பன் மடங்கு வனப்பு வாய்ந்த மற்றுமோர் சோலை இருக்கிறது –

ஆண்டாள்-அது எங்கு உள்ளது -அதை நான் காண அவா வுறுறேன் –

அனுக்ரஹை-அச்சோலை வெகு தூரத்திலே இல்லை -ஆழ்ந்த நாவி என்னும் வாவியுடன் கூடியதும் -மூன்று மடிப்புகளாகிய படிக்கட்டுகள் உடையதும் -தோள்கள் என்னும் கொடிகளுடன் கூடியதும் -கண்கள் என்னும் வண்டு இனங்கள் உடையதுமான நின் வடிவமே அச்சோலை -நின் வடிவச் சோலைக்கும் இச் சோலைக்கும் நெடு வாசி உண்டு என்பது என் அபிப்ராயம் –

ஆண்டாள்–பரிஹஸிப்பது உன் பிறவிக் குணம் போலும் –

அனுக்ரஹை-சகி -இங்கே என் பக்கம் வா -மண மலி மலர்கள் இங்கு மலிந்து இருக்கின்றன -பொற் கொடியாளான யுன்னை இக் கொடி தன் வண்டு ஒலியால் அழைக்கின்றது

ஆண்டாள்-இங்கு இல்லாவிடில் அன்றோ அங்கே வர வேண்டும்

அனுக்ரஹை-ஆமாம் சகி வர வேண்டாம் -வந்தால் வண்டினங்கள் இம்மலர்களை விட்டு நின் முக மலரின் கண் வீழ்ந்து -அதர மதுவைப் பருகி விடும் -தேவர்களுக்கு எல்லாம் கடல் கடைந்து அம்ருதம் எடுத்துக் ஈந்த வள்ளலுக்கு எனச் சேமித்து வைத்துக் இருக்கும் மதுவைக் கேவலம் வண்டினங்கள் பருகக் கொடுப்பது நியாயமோ-

ஆண்டாள்– சகி -உனக்கு என்னால் பதிலும் கூற இயலாது -என்று வேறு ஒரு இடமும் சென்று -சகியின் சாமர்த்தியம் தான் என்னே -எவ்வளவு புத்திக் கூர்மையும் ஊஹமும் அவளுக்கு -எனது விரஹ வேதனையை அவள் எவ்வாறு அறிந்து கொண்டனளோ -நான் எவ்வளவு மறைத்தாலும் அவள் ஒப்பவில்லை -இன்னாரிடம் காதல் கொண்டேன் என்னும் உண்மையைத் துணிந்து பணிக்கின்றனள்-ஆஹா காமத்தீயுள் புகுந்து கதுவக் கங்குல் யாமங்களில் தென்றலுக்கு இலக்காய் நான் படும் படு மறைத்தற்கு உரியதோ -மெல்ல மெல்ல மலயானிலம் வந்து வீசவே என் விரஹ அநலம் விரைந்து பொங்கி எழகின்றது –காற்றுக்கும் நெருப்புக்கும் ஸ்நேஹம் உண்டு என்றும் உலகினில் கூறுகின்றனர் -இவ்வுண்மையை என் போன்ற விரஹி தான் முதல் முதலில் உணர்ந்து இருக்க வேண்டும் -இவ்வனம் வசித்தற்கு இனிய சோலை எனும் மாற்றம் ஏமாற்றமாகவே முடிந்தது -இதைக் காம தேவன் தன் கூரிய கணைகள் வைக்கும் படைச் சாலையாகவே யானும் கருதுகிறேன் -ஆகா காம தேவனின் மஹிமை அளவிடற்கு அரியது -கடவுளாலும் அவன் கட்டளையைக் கடக்க முடியாது -காம தேவா என்னைக் கலக்க வேண்டாம் -தொழுது முப்போதும் உன் முன்னடி வணங்கித் தூ மலர் தூவி ஏத்துகின்றேன் -பாற் கடல் வண்ணன் என் கண்ணனுக்கே பணி செய்து வாழ அருள் புரிவாய் -அம் மாயவனுக்கு அன்றி மானிடருக்கு என்றும் பேச்சுப் படில் யானும் வாழ கில்லேன் கண்டாய் -இது நிச்சயம் -கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள வேண்டும் -அந்தோ காமன் கழலடி வணங்கியும் என்னை ஏன் அவன் படைகள் அடர்கின்றன -இதோ இக் குயிலின் கோலாஹலம் ஆலா ஹாலத்திலும் கொடிதாய் உள்ளது -ஏ குயிலே என்றும் இக் காவில் இருந்து என்னைத் ததர்த்தாதே -யான் என்புருகி நெடும் கண்கள் இமை பொருந்தாமல் பல நாளாகத் துன்பக் கடலில் புக்கு உழல்கிறேன் -அன்புடையாரைப் பிரிவதால் உண்டாகும் நோயை நீயும் அறிகின்றிலையோ -நற் பொழில் வாழ் நற் குயிலே -அக்கார் வண்ணக் கண்ணன் வரக் கூவ வேண்டும் – இன்றேல் என் பொன் வளை களைக் கொண்டு தருதல் வேண்டும் -இரண்டத்தில் ஒன்றைத் திண்ணமாக நீ செய்தாக வேண்டும் -இன்றேல் இப் பூங்காவில் வாழ ஒட்டாது நான் விரட்டுவேன் -பூ இதழ்கள் மெல்லியவை அன்றும் -உண்மையில் அவை கத்தி முனையிலும் கூரியவையே -சந்தனம் என் தனத்துக்கு செந்தணல் தான் -பகலிலுள்ள வேதனை விட இரவில் என்னை மிகவும் துன்புறுத்துகின்றது -ஒரு கங்குல் ஆயிரம் ஊழிகளே -அதிலும் சுக்ல பக்ஷமாகில் கேட்க வேண்டியதில்லை -என் கதி அதோ கதி தான் -திங்கள் ஊடறுத்து என்னை நலியும் முறை மிகவும் பெரியது -அமாவாசையில் மறைந்த மதி ஏன் மீண்டும் உதிக்கிறான் -பாபிகள் இவ்வுலகை எளிதில் விடுவது இல்லை -ஆஹா உலகில் தீயோர் வேஷம் மிகவும் விசித்ரமானது -சந்திரன் எவ்வளவு கொடியவன் -அவன் குளிர்ந்தவனாகக் கொண்டாடப்படுகிறான் -இவன் கொடுமையை இவ்வுலகு அறிவது இல்லை -நஞ்சு அரவமும் இவன் வெப்பம் தங்கள் மாட்டாமல் அன்றோ இவனை உமிழ்ந்து விடுகிறது -இக்கொடியோன் தன் கிரணங்களால் பனி எனும் புனர் பெயர் பூண்ட நெருப்புத் தணல்களை வாரிக் கொட்டுகிறான் -இதை யாரால் பொறுக்க முடியும் -எல்லாம் அறிந்த அக்கள்வன் என் நிலைமையை மட்டுமே உணர்கிலனோ -பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதற்க்கு ஆசையினால் கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலித்து என் ஆவியை ஆகுலம் செய்யவும் அவன் இதை உணராதவன் போல் பஞ்சிலும் மெல்லிய அரவணையில் திருமாலுடன் கூடிக் களிக்கின்றனனே -இது நியாயம் ஆகுமோ -தீமை செய்யும் சிரீதரா நான் தினம் தோறும் உனக்கு மலர்மாலை சூட்டிப் பரிவுடன் தருகின்றேனே -நீ மட்டுமே ஏன் என் கூந்தலில் மலர் சூட்டக் கூடாது -இன்றாவது வந்து என் ஆசையை நிறைவேற்றித் தர வேண்டும் -இறைவன் வருவானா என்றும் கூடல் இழைத்துப் பார்ப்போம் -கீழே அமர்ந்து கூடல் இழைக்கிறாள்
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்க்
காமவன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோ மகன் வரில் கூடிடு கூடலே

இதற்குள் அனுக்ரஹை வந்து விடுகிறாள் –

ஆண்டாள்– சடக்கென எழுந்து -சகி எவ்வளவு நேரம் -நான் போதுமான பூக் கொய்து விட்டு நின் வரவை நெடு நேரம் எதிர்பார்த்து நிற்கிறேனே-

அனுக்ரஹை-என் வரவை எதிர்பார்க்கத் தனி இடம் வேண்டுமா -நீ எதிர் பார்க்கும் அக் கார்க் கடல் வண்ணனைத் திண்ணமாய் என் உதவி இன்றி நண்ண முடியாது -பிராண சகிக்கும் கூட மறைக்கும் ரஹஸ்யம் ஓன்று உண்டு போலும்

ஆண்டாள்– கோபக்குறியோடு பார்க்கிறாள்

அனுக்ரஹை-சகி தனியே பூக் கொய்யாமல் ஏதோ நினைத்து உருகியதால் இங்கனம் உன்னை உன்னைக் கூறினேன் -இதற்க்கு ஏன் கோபம் -கையைப் பிடித்துக் கொள்கிறாள்

இருவரும் செல்கின்றனர்
முதல் அங்கம் முதல் களம் முற்றிற்று –

————

முதல் அங்கம் -2- களம்-இடம் –ஸ்ரீ வட பெரும் கோயில் சந்நிதி -ஸ்ரீ வில்லி புத்தூர்
கையிலே குடலையுடன் பெரியாழ்வார் வருகிறார்

பெரியாழ்வார் -சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி-
நாரணா -மஹா பிரபோ -வட பத்ர ஸாயீ -ஸர்வ லோக சரண்யா -கருணைக் கடலே -எஞ்சலில் என்னுடை இன்னமுதே -நன்மை தீமைகள் ஒன்றுமே அறியாத நான் ஓவாதே நமோ நாரணா என்பேன் -தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டமின்றி உன் பொன்னடிக்கீழ் வைக்கின்றேன் -அடியேன் உண்ணா நாள் பசியாவது ஒன்று இல்லை -நமோ நாராணா என்றும் எண்ணா நாளே எனக்குப் பாட்டினி நாள் –ஆசையினாலே உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் துள்ளம் சோர யுன்னை நாள் தோறும் தொழுது ஏத்தும் நன்மையே எனக்கு அருள் செய்ய வேண்டும் -கொங்கைச் சிறுவரை என்னும் பொதும்பினில் அழுந்திக் கிடந்து உழலும் என்னை வல் வினைகள் மாற்றி பங்கப்படா வண்ணம் செய்த நின்னருள் கண்டாய் இவ்வுலகினில் மிக்கது -பிரம குருவாகி வந்து நீ என் வன்னெஞ்சம் புகுந்து என் சென்னித்திடரில் பாத இலச்சினை வைத்தால் இப்பண்பினை என் என்பேன் –
பை அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி -பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நீர் செய்வான் பிறந்த பாவ காரிகள் படர்ந்த இப்பாரினில் -மரகத மலை போல் நிலை பெயராமல் நீ படுத்து இருக்கும் படி என்னே -குடையும் செருப்பும் இல்லாமல் கடிய வெங்கானிடைக் கன்றின் பின் போன நின் சிறுக்குட்டச் செங்கமல அடிகள் வெதும்பி -கண்கள் சிவந்து -உடலம் சிதைந்த தனாலோ அயர்ந்து நீ உறங்குகின்றனை -உன்னை இது காறும் தனியே விட்டு இருந்த என்னின் மனம் வலியான் ஒருவன் உண்டோ -பஞ்சாயுதங்களே என் சிறுகுட்டனின் பள்ளி அரையைப் பார்த்துக் கொள்ளுங்கோள்-

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய  சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –

ஆஹா என்ன அதிசயம் -வான் இளவரசு வைகுந்தக் குட்டன் ஆயர் குலக்கொழுந்து ஆயினன் -என்ன கருணை -அவன் தன் கருணை எல்லையை உள்ளவாறு கண்டார் ஒருவர் உளரோ -அவன் தான் கண்டனனோ -இதை அறியாதவனுக்கு ஸர்வ்ஞ்ஞன் என்ற பட்டமாம் -ஓஹோ எல்லை இருந்திடில் அன்றோ அவன் காண முடியும் -அதனால் தான் அப் பட்டம் அவனுக்கு நிலத்து இருக்கிறது – ஸர்வேஸ்வரா உன் உந்திக் கமலத்துள் இருந்தும் அயன் நின்னடிக்கமலம் காண்கின்றிலன் -அத்தகைய நீ கேவலம் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் அவதரித்தனையே -இஃது ஒன்றே உனது கருணைக்கும் ஸுலப்யத்தத்துக்கும் அளவின்மையை நன்கு உணர்த்துகிறது -உறி வெண்ணெய் உண்டு -ஊரார்கள் எல்லாரும் காண உரலோடு கட்டுண்டு அடிபட்டு கன்றுகள் மேய்த்து நின் தோழரோடு கலந்து நினைத்து எளிமை தான் என்னே -இத்தகையனான உன்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த யசோதையின் பாக்கியமே பாக்யம் -உன் பிள்ளைச் சுவை எல்லாம் பெற்றாள் யசோதை -உன் திரு விளையாடல்களைக் கண்டு களிக்கும் அம்மங்கையின் கண்களே கண்கள் -மற்றவை புண்களே ஆகும் -அது எல்லாமே எனது காலங்களில் நடை பெறக்கூடாதோ -அசோதையைப் போலே யான் களிக்கும் நாட்களும் கிடைக்குமோ -இது என் பைத்தியம் -அவை நடந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன -அதைப்பற்ற நினைப்பதால் யாது பயன் -ஆகிலும் என்ன -எதற்கும் மனம் தானே காரணம் –முற் காலத்தில் யசோதை உனக்கு மலர் சூட்டி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது போல் யானும் நான் மகிழுறக் கூடாது-

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –

என்று ஒரு மாலையை எடுத்து உற்றுப் பார்த்துக் கண்களில் நீர் வடிய
ஐயோ இது என்ன பாவம் -யார் இவ் வடாத கார்யம் செய்தது -பகவத் அபசாரத்துக்கு அல்லவா உள்ளான் ஆனேன் -இதில் என்னைத் தவிர வேறு யாரை நொந்து கொள்வது -கோயிலுக்கு மாலை கொண்டு வருவதற்கு முன்பே நான் ஏன் கவனித்து இருக்கக் கூடாது-ஐயோ எம்பெருமான் திரு உள்ளம் இதனால் எவ்வளவு சீற்றம் கொண்டதோ -கேசம் சம்பந்தப்பட்டால் எவ்வளவு அசுத்தம் -இம் மாலையில் அது சம்பந்தப்பட்ட வேண்டிய காரணம் என்ன–தன்னை அறியாமல் யவருடையது ஏதேனும் இதில் சேர்ந்து விட்டதோ -ஆம் அப்படித்தான் -நமது இல்லத்தில் ஒருவரும் தன்னை அறிந்து இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள் –
மறுபடியும் மாலையை உற்று நோக்கிப் பெரு மூச்சுடன் –
இவ்வளவு நீண்டும் கறுத்தும் உள்ள கேசம் கோதையினுடையது தான் -சந்தேகம் இல்லை -அவள் சகிகளுக்குக் கூட இவ்வளவு நீண்ட கூந்தல் கிடையாது -ஆஹா அவள் தானோ இக்கொடுமை இழைத்தனள் -அடி கொடியவளே -அபசாரத்திற்கு ஆளாக்கி விட்டாயே -இக் கொடிய எண்ணம் உனக்கு ஏன் உண்டாயிற்று -தினம் தோறும் இவ்விதம் தான் நீ செய்து வருகின்றனையோ -பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான் அன்றோ -இன்று நீ அகப்பட்டுக் கொண்டனை -ஹும் -பகவானுக்குச் சாத்திக் களைந்த பின் மனம் குன்றி விடுமோ –
சே இது என்ன எண்ணம் -நமது குழந்தை இவ்வாறு செய்து இருப்பாளோ -ஒருக்காலும் இல்லை -அவள் தான் மஹா பக்தையாயிற்றே -என்னிடம் அழகிய மணவாளன் வைபவத்தை எவ்வளவு குதூகலமாகக் கேட்ப்பாள் -அச்சமயங்களில் அவளுக்கு உண்டாகும் ஆனந்தக் கண்ணீரையும் மயிர்க் கூச்சலையும் நான் நேரிலே கண்டு இருக்கின்றேனே -அவளா இவ்வாறு செய்தனள் -இல்லவே இல்லை -ஒரு வேளை அவலாய் அறியாமலேயே அவனது கேசம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாமே -அவள் அபசாரம் செய்யவில்லை -நான் தான் அவளை நிந்தித்ததால் பாகவத அபசாரத்துக்கும் இலக்கானேன்-

ஐயோ நான் மனத்தை எவ்விதம் சமாதானம் படுத்திக் கொண்டால் தான் என்ன-அது நிம்மதி அடையவில்லையே -இக் கேசம் தலையிலே சூடிக் களைந்த பொழுது சிக்குண்டு அறுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது – இல்லாவிடில் மாலையைச் சுற்றி சுற்றி எவ்வாறு இருக்க முடியும் -இது அறியாமையால் நடந்து காரியம் அன்று-சந்தேகமே இல்லை -ஆஹா ஸ்த்ரீகளின் ஸ்வ பாவம் தான் என்ன-அவர்களது இயல்பினை இவ் வுலகில் யாவரே அறிபவர் -அவர்கள் மனம் ஆழ் கடலினும் ஆழம் உடைத்தே -அக் கொடியவள் பகவானிடம் பக்தி உள்ளவள் போல் எவ்வளவு பாசாங்கு செய்தனள் -நான் உண்மை என்று அல்லவா அகம் மகிழ்ந்து இருந்தேன் -எல்லாம் வேஷமா -இதோ உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன் -இனி விஷ்ணு பக்தி இல்லாத உன்னோடு ஸஹ வாஸமே எனக்கு அடுக்காது –

பகவானை நோக்கி -ஸர்வேஸ்வரா -அடியேன் அறிவின்மையால் இழைத்த அபராதம் அனைத்தும் பொறுத்து அருள வேண்டும் -வேறு புது மாலைகள் கொணர்ந்து சாத்துகிறேன்
குடலையை எடுத்துக் கொண்டு திரும்பி விடுகிறார்-

உள்ளிருந்து ஒரு குரல் உண்டாகிறது -ஆழ்வீர் ஆழ்வீர் நில்லும் நில்லும் போக வேண்டாம் -இங்கே வாரும்

ஆழ்வார் திரும்பி வந்து கைகட்டி நிற்கிறார்

அசரீரி -இதோ உமது கையில் துலங்கு மலங்கல் நின் மகள் கோதை சூடிக் களைந்ததே ஆகும் -தினம் தோறும் அவள் இவ்வாறு செய்து வருகின்றனள் -நீர் நினைப்பது போல் இது பக்தி இன்மையால் செய்த கார்யம் அல்ல -பரம பக்தியால் செய்த காரியமாகும் -நாமும் இதனை மனம் உகந்து ஏற்கிறோம் -தினம் போல் இன்றும் இம் மாலையை இவ்வழகிய கேசத்துடனே சாத்தி எமது உள்ளத்தைக் குளிர வைப்பீராக –

ஆழ்வார் -அவ்வாறே செய்கிறேன் -அவ்விதம் செய்து கை கூப்பிய வண்ணம் – பிரபோ அடியேன் கோதையிடம் அபசாரப் பட்டு விட்டேன் -அதைப் பொறுத்து அருள வேண்டும் –

அசரீரி -அவ்வாறே ஆகுக -என் பிராண நாயகியிடம் புரிந்த அபராததுக்குப் பிராயச்சித்தமாகப் பிரதி தினமும் அவள் சூடிக் களைந்த மாலைகளையே சாத்துவீராக -இதனால் என் மனமும் அவள் மனமும் குளிர்ச்சி அசையும் -போய் வாரும்

ஆழ்வார் விடை பெற்று வெளியே வருகிறார்

ஆழ்வார் -ஆஹா என்னே கோதையின் பக்தி -பிஞ்சிலேயே பழுத்து விட்டனள் -நமக்கு இன்னமும் அவ்வளவு பரிபக்குவம் ஏற்பட வில்லை -ஆஹா நின் மகள் என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாக இருந்தது -பகவான் திரு வாயினால் நின் மகள் என்றும் கூறப்பெற்ற பாக்யம் ஒன்றே நமக்குப் போதும் -அகம் சென்று அவள் வாயால் சூடிக்களைந்த வரலாறு கேட்டு அகம் மகிழ்கிறேன் –
செல்கிறார்
முதல் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

————–

முதல் அங்கம் -மூன்றாம் களம்
இடம் –பெரியாழ்வார் திரு மாளிகை -பெரியாழ்வாரும் அவர் மனைவி விரஜையும் பேசிக் கொள்கின்றனர் –

விரஜை –நாதா உலகப் பற்றை அறவே ஒழித்து விட்டீர்களே -நம் அரும் தவப் புதல்வி பக்குவ நிலைக்கு வந்து விட்டனள் அன்றோ -இன்னும் ஏன் அவளுக்கு மணம் முடிக்க மனம் கொள்ளவில்லை -அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே இல்லை போலும் –

ஆழ்வார் –கண் மணி -இல்லாமல் என்ன-உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்க்கும் நம் மகளுக்கு நாடு நகரும் அறிய நல்லதோர் கல்யாணம் செய்யவே நான் கருதுகிறேன் -ஆனால் நம் புதல்வி கோதை அறிவிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் -இணையின்றி விளங்குகின்றனள் அன்றோ -அவள் மனம் இவ்வுலகினில் எவரைத் தான் நாடும் -அழகிலும் அறிவிலும் அவளுக்குத் தக்க வரன் இவ்வுலகில் ஏது -அதனால் தான் என்ன செய்வது என்றே தோன்றாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறேன் –

விரஜை -நாதா பகுத்தறிவு அற்ற ஒரு கொடியும் ஓர் கோலைத் தழுவிடில் அன்றோ வாழ்கின்றது -பெண்ணாகப் பிறந்த ஒருத்தி இவ் வுலகினில் நாதன் இல்லாமல் வாழ்வது எங்கனம் –

ஆழ்வார் -உண்மை தான் -ஆனால் கொடியும் தன்னைத் தாங்க வல்ல கோலையே நாடுகின்றது -அணங்கிலும் பேர் அழகு வாய்ந்த பெண்மணி ஆண்டாளைத் தரிக்க வல்ல ஒரு கோல் இவ்வுலகினில் எங்கே உள்ளது – அதனால் தான் இவ் வுலகில் கண் அவள் மனம் பற்றைத் துறந்து விட்டது –

விரஜை -ஆகில் அவள் எண்ணம் என்ன-மணமே வேண்டாம் என்கின்றனளா -பாரதந்திர்யம் அன்றோ பேதையர்க்கு அழகு –

ஆழ்வார் -அது கொண்டே அவள் மனம்-கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடுகின்றது -நாம் உகக்கும் தேவர் என்று நாகணை மிசையான் மிசை கடல் போலும் காமத்தனள் ஆயினள் -நம் தந்தை நந்தேவரை வருவிப்பரேல் அது காண்டும் என்று உறுதி பூண்டு இருக்கின்றனள் -ஆனால் இள மடந்தை யாகையாலே இவ் வுண்மையை வெளியிட இயலாது உழல்கின்றனள்

விரஜை –ஆச்சர்யத்துடன் -திருமாலையா -இது என்ன விந்தை -மறையவரும் மறை முடியும் இன்னம் அவர் கழலிணை காணவில்லையே -இஃது என்ன பைத்தியம் -எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடுவாரும் உண்டோ –

ஆழ்வார் -பேதாய் அவ்வாறு கூற வேண்டாம் -பத்துடை அடியவருக்கு ஸர்வேஸ்வரன் மிகவும் எளியவன் அன்றோ -பிறர்களுக்கு அவன் அரியவனே -அரசனுக்குச் சத்ர சாமரங்கள் போலே அவனுக்குப் பரத்வ ஸுலப்யங்கள் ஒருங்கே அமைந்துள்ளன என்பதை நீ கேட்டு அறியாய் போலும் –

விரஜை -நாதா -என்னவெனிலும் ஈஸ்வரன் நாயகனாய் அமைவது இயலாத கார்யம் -இதற்குப் பிராட்டி சம்மதம் வேண்டாவோ -பிராட்டி முகம் நோக்கிய பின்னர் தானே எக் காரியமும் செய்வது அவன் இயல்பு -எனவே இது ஒரு நாளும் நடவாது -எதற்கு இந்தப் பேராசை –

ஆழ்வார் -பேதாய் -அப்படி நினைக்க வேண்டாம் -நமது கோதை தன் மனதைக் கொள்ளை கொடுத்தது போலே அவன் மனத்தையும் கொள்ளை கொண்டு விட்டனள் -ஆகவே இது நடவாத கார்யம் அன்று-

விரஜை –நீங்கள் இதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் –

ஆழ்வார் -ஒவ்வொரு நாளும் மாலுக்கு எனக் கொய்த மலர்களை இவள் சூடிக் காறை பூண்டு கண்ணாடி கண்டு தன் கைவளை குலுக்கி -கூறை உடுத்தி -தன் கொவ்வைச் செவ்வாய் திருத்திப் பின்னர் களைந்து வந்தனள் -அம் மலர்களை மலர் மங்கை மணாளன் மகிழ்வுடன் ஏற்று வருகின்றனன் -தன் மணாளன் இம் மலர்களைச் சூடியதும் மலர்மகளும் மண் மகளும் அவனைப் பொறாமையுடன் பார்க்கின்றனர் -அக் கொடிய பார்வையை அவன் லஷ்யம் செய்யவே இல்லை -நான் நேற்றுக் கொண்டு போன மாலையிலே கேசம் சம்பந்தப்பட்டு இருந்ததால் சாத்தாமல் திரும்பினேன் -அப்பொழுது தினம் தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே சாத்தும் படி பகவான் எனக்குக் கட்டளை இட்டார் –

விரஜை –ஆச்சர்யத்துடன் – அப்படியா -என்ன பெருமை நம் புதல்விக்கு -இவளைப் பெண் எனப் பெறும்படி யாம என்ன நோன்பு நோற்றோமோ –

ஆழ்வார் -இப்பொழுதாவது தெரிந்ததா -அவள் திருமணத்தைப் பற்றி நினைக்க நாம் கொஞ்சமேனும் அருகர் இல்லை -திரு மார்பனே தேடி வரும் சீர்மையினள் அன்றோ அவள் -ஆயினும் அவ்விருவர் சேர்த்து இருக்கும் நம்மாலானதைச் செய்து நாம் சத்தை பெற வேண்டும் –

விரஜை -ஆம் அதற்கு என்ன தடை -இதோ அவளை எனது இரு கரங்களாலும் மார்புறத் தழுவ வேண்டும் -போய் வருகிறேன் -விடை கொடுங்கோள்

ஆழ்வார் -நானும் வருகிறேன் –
இருவரும் செல்கின்றனர்

முதல் அங்கம் முற்றிற்று –

————–

இரண்டாம் அங்கம் -முதல் களம்
அனுக்ரஹை ஒரு கையிலே தீர்த்த பாத்திரமும் மற்றுமோர் கையிலே துளஸீ புஷ்ப்பங்களும் ஏந்தி வருகின்றனள்
அனுக்ரஹை–எங்கோ காலடி சப்தம் கேட்க்கின்றதே -யாராக இருக்கக் கூடும் -நமது தந்தையாக இருக்கலாமோ -அவர் என் சகியின் நிலையை அறிந்து கொண்டால் ஆராத் துயரில் ஆழ்ந்து விடுவாரே -என்ன செய்வது-

இதற்குள் சுசீலை வருகிறாள்
சுசீலை –சகி -எனக்கு ஆண்டாளைப் பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது -இவ்வளவு பயங்கர நிலையிலும் தந்தைக்குத் தெரிவியாமல் இருப்பது பேதமைத்தனம் அல்லவா -ஆகையால் நான் தந்தையிடம் தெரிவித்து விட்டேன் -அவர் ஆராதனம் முடிந்ததும் -உத்யானம் வருவதாகக் கூறி இருக்கிறார் –

அனுக்ரஹை-ஹும் இது என்ன கார்யம் -இது ஜுரமோ -மதன தாபம் தானே -இதற்கு ஏன் பயப்பட வேண்டும் -தந்தையிடம் கூறியதை அவளுக்கு நீ தெரிவிக்க வேண்டாம் -ஏற்கனவே அவள் உண்மையைக் கூறாது மறைத்து விட்டாள் -தந்தை வரும் முன்பே அவளிடம் இருந்து உண்மையை அறிந்து நான் தூது சென்றது -முதலியவற்றைக் கூறி அவளை சமாதானப் படுத்தி விடுவோம் –

சுசீலை -இனி அவள் உண்மையைக் கூறாது இருக்க முடியாது
இருவரும் செல்கின்றனர் –

இரண்டாம் அங்கம் முதல் களம் முற்றிற்று

———————-

இரண்டாம் அங்கம் -இரண்டாம் களம்
இடம் –செண்பகப் பூந் தோட்டம்-நேரம் மாலை
ஓர் அழகிய தாமரைக்குளம் -அலைகள் மெல்ல வீசுகின்றன -அதன் கரையிலே கொடியினாலான வீடு ஓன்று உள்ளது -அதன் நடுவே தாமரை இலைகளும் பூக்களும் விரிக்கப் பட்டு உள்ளன -அதில் ஆண்டாள் சயனித்துக் கொண்டு இருக்கிறாள் -அருகில் சுசீலை உட்க்கார்ந்து இருக்கின்றனள் -அநுக்ரஹை குளத்தில் இருந்து மலர்களைக் கொய்து ஆண்டாளுக்கு வீசி வருகின்றனள்

சுசீலை -சகி -நம் தோழி ஏன் இவ்விதம் மிரள மிரள விழிக்கின்றனள்

அநுக்ரஹை-உற்று நோக்கி -சுசீலை -நமது சகி முன்னிலும் அபாய நிலைக்கு வந்து விட்டனள் -பரிதியின் பிரிவாற்றாத பங்கயக் கொடி போன்று வாடி விட்டனள் -என்ன செய்வது-உண்மையை உரைக்காமல் மறைக்கின்றனள் -பிடிவாதம் செய்கிறாள் -ஆகாரம் உட் கொள்ளவே இல்லை -ஆகாரம் கொண்டு வரலாமா என்று கேள் –

சுசீலை -அவ்விதம் செய்து பதில் கிடையாமல் பெரு மூச்செறிந்து -அநுக்ரஹை-நமது சகி மூர்ச்சித்து விட்டனள் -காரியம் பெரிதாகி விட்டது -விளையாடுவதாக நாம் இதை ஏன் மறைத்தோம் –

அநுக்ரஹை-சசியின் முகத்தை உற்று நோக்கிப் பெரு மூச்சு எறிகின்றனள் -இருவரும் ஒன்றுமே தோன்றாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்கின்றனர் –

அநுக்ரஹை-சற்று மன உறுதியுடன் -சுசீலா பயப்படாதே -இவள் முகத்திலே ஒளி மழுங்கவே இல்லை -ஆகையால் இது மன்மதனின் திரு விளையாடலே -எதற்கும் நமக்கு ஈஸ்வரன் இருக்கிறான் -நமது இன்னல் நோய்கட்க்கு அவனது தீர்த்தமும் -துளஸியும் தான் தக்க மருந்தாகும் -அவன் தண் அம் துழாய் இந் நாநிலத்தில் என்ன தான் செய்யாது -நான் தீர்த்த பாத்திரத்தில் கொணர்ந்த தீர்த்தத்தையும் துளஸியையும் இங்கே கொண்டு வா

சுசீலை அவ்வாறே செய்கின்றனள் -தீர்த்தத்தைக் கையிலே வாங்கி -ஏ வடபத்ர ஸாயீ -ஆபத் பாந்தவா -அமுதினும் இனிய அருள் கூர் அண்ணலே -பேதை யாம் படும் பாட்டை நீர் அறிகிலீரோ -அன்பர் மனம் நொந்திடில் நின் மனம் வெந்திடும் என்கின்றனரே –அத்தகைய தயை இத் தையல் விஷயத்தில் மந்தித்ததோ -இதை விட உனது தயைக்கு ஏற்ற கலன் எங்கே உளது -நின் பேர் அன்புக்கு உரிய ஆண்டாளை இதோ எழுப்பித்துத் தந்து அருள வேண்டும் –
தீர்த்தத்தை ஆண்டாள் திரு முகத்திலே தெளித்துத் துழாய் வாடை வீசுகிறாள்

ஆண்டாள் மெல்ல மெல்ல உணர்வு உறுகின்றனள்

சுசீலை -சகி -அநுக்ரஹை-நம் சகிக்குத் துழாய் மாலை சூட்டு

அநுக்ரஹை-அவ்வாறே செய்கின்றனள்

சுசீலை -ஆண்டாளை நோக்கி -சகி -உண்ணல் உறாமையும் உள் மெலிவும் தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் -என்று நீ அடிக்கடி கூறுபவள் ஆயிற்றே -அநுக்ரஹை துழாய் மாலை சூட்டியும் நீ ஏன் தெளிந்து எங்கள் மனம் களிப்புறச் செய்ய வில்லை -பர உபதேச மாத்திரமோ உனது வார்த்தை –

ஆண்டாள் -தளர்ந்த குரலில் துழாய் மாலை சூட்டி இருக்கிறீர்களா –

அநுக்ரஹை-அதையே நீ அறியவில்லையே -இந்நிலையிலும் நீ நோயின் காரணம் கூறாவிடில் நாங்கள் என்ன செய்வோம்

சுசீலை -அநுக்ரஹை-நீ அரங்கம் சென்ற அன்று இவள்

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

என்று புலப்பத்தில் சங்கைச் சிதைந்தனள் -பின்னர் நான் கேட்டதற்கு மறுமாற்றம் கூறாது மறைந்தனள் -இதனால் நான் இவள் மாதவன் தன் வாய் அம்ருதம் பருகவே இப்பாடு படுகின்றனள் என்றும் தீர்மானித்துக் கொண்டேன் -இவள் அனுமதி இன்றி நீ திருவரங்கதிற்கு தூது சென்றது நல்லதாயிற்று -உனது ஊஹத் திறமை போற்றத் தக்கது –

ஆண்டாள் -சிறிது தெளிந்த முகத்துடன் -திருவரங்கத்திற்கு தூது சென்றனளா -ஏன்

அனுக்ரஹை -ஏனோ -நீ ஏன் நோய் உற்றனை -இதை முதலில் கூறி -பின்னர் நான் கூறுகிறேன்

ஆண்டாள் –தனக்குள்ளே -இனி நான் வெட்க்கி மறைப்பதால் பயனில்லை -தோழியரிடம் சொல்லியே தீர வேண்டும் –
வெளிப்படையாக -சகி காள் -நான் உண்மையைக் கூறி விடுகிறேன் -இனி என்னால் தாங்க இயலாது -பெண்ணின் வருத்தம் அறியாத கொடிய கடிய திருமாலால் தளர்ந்து நான் நோவுற்றேன் -அவன் தண் அம் துழாய் கொண்டு என் நெற்றி மென் குழல் மேல் சூட்டினதால் தான் நான் இப்பொழுது சிறிதாவது பேசும் திறன் பெற்றேன் -நீங்கள் என்னைக் காக்க வேண்டில் அவன் தன்னடியில் சேர்த்து விடுங்கோள் -அவனிடம் உள்ள என் கோபம் எல்லாமே தீர பயன் ஒன்றுமே இல்லாத இக் கொங்கைகளை அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து விடுகிறேன் –

அனுக்ரஹை -சசி -கணவனிடம் இவ்வளவு கோபம் கொள்ளலாமோ -அடக்கம் அன்றோ மங்கையருக்கு அணிகலம் –

ஆண்டாள் -இனி நான் அடங்க இயலாது -என் கணவன் ஒரு பெண் கொடியை வதம் செய்யவும் துணிந்து இருக்கிறான் -இந்நிலையில் நான் அடங்கி இருந்திடில் இறப்பது திண்ணம் -அவனுக்காக வாடி வதங்கின இம்மேனி இனி இடர் தீரக் அக்குமரன் கோலப் பணைத் தோளுடன் இம்மைப் பிறவியிலேயே அணையா விடில் -இனிப்போய் மறு பிறவியில் எய்துவதால் தான் என்ன பயன் -ஆகையால் அல்லல் இழைத்த அக் கள்வனையே வேட்க்கையுற்று மிக விரும்பும் என்னை அவனிடமே சேர்த்து விடுங்கோள்

அனுக்ரஹை -அவன் உன்னிடம் தன்னைச் சேர்க்கும் படி தன் துணைவனை வேண்டுகின்றனனே –

ஆண்டாள் -எவன்

அனுக்ரஹை-அப்பச்சை பசும் தேவன்

ஆண்டாள் -இச்சை உடையரேல் இதற்குள் இவ்விடம் வந்திருக்க மாட்டாரோ –

அனுக்ரஹை-அவன் இச்சை யுடையவன் தான் -கருடன் வாயிலாக நின் இணையில்லா எழில் கேட்டு இளகிய உள்ளத்தனாய் ஏங்கி நிற்கின்றனன் -ஆயினும் ரெங்க நாச்சியாருக்காக அஞ்சி இங்கு வர முடியாமல் தவிக்கிறான் –

ஆண்டாள் -வெற்றிக் கருளன் அன்றோ -தந்தையில் பரிவரான அவரிடம் செய்த வேண்டுகோள் வீணாகுமோ –

அனுக்ரஹை-ஆம் -தாகம் உள்ளவர் இருக்கும் இடத்தில் தண்ணீர் கொணர்ந்து வார்ப்பாரைப் போலே ஆசைப்பட்டார் இருக்கும் இடத்தில் அவனையே கொணர்ந்து உதவுபவன் அன்றோ அவன் -முதலை வாய்ப்பட்ட களிறு கத்தரிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்னும் போது உதவின செய்ய -அவனுக்கும் புள்ளரையன் அன்றோ வேண்டியதாயிற்று -அதனால் தான் அவனை அருளாழிப் புள் என்று பெரியோர்கள் சொல்லுகின்றனர் -ஆகையால் ஆடும் கெருளக் கொடி யுடையான் வந்தருள் செய்வதும் நிச்சயம் -நீ பயப்படாதே –

ஆண்டாள்–இவ்வளவு துணிவாகக் கூறுகின்றனையே -இவ்விஷயம் உனக்கு இவ்வளவு உறுதியாக எப்படித் தெரிந்தது –

அனுக்ரஹை–நீ மறைத்தாலும் திருவரங்கச் செல்வனார் மேல் நின் சிந்தை சென்று இருப்பதை நான் வெகு நாட்களுக்கு முன்னரே தெரிந்து கொண்டேன் -சில நாட்களுக்கு முன்னர் சோலையில் மாலை நேரத்தில் இவ்விஷயத்தை நான் பிரஸ்தாபித்த போது நீ மிகவும் சினந்தனை -நீ மறைத்ததாலேயே இவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது -அவனிடம் உள்ள நினது கடலின் மிகப்பெரிய காதலை நீ கூறா விடினும் நின் செய்கைகள் தெரிவித்தன -ஆதலால் உன் அனுமதி இன்றியே திருவரங்கத்துக்குத் தூது சென்று அவன் தன் நிலைமையை அறிந்து கொண்டு வந்தேன் -இனி மேலேனும் உண்மையைக் கூறு -கடியன் கொடியன் -என்று திருவரங்கரைத் தானே நீ குறித்தனை உன் வாயால் இத்தை ஒப்புக் கொள்

ஆண்டாள்-நாணி புன்னகையுடன் -ஆம் சகி

எழிலுடைய இன் சகி காள் என்னரங்கத்தின் இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே

சுசீலை -அநுக்ரஹை -நீ போனதைக் கூட அறியாமல் இவள் அவ்வளவு மெய் மறந்து இருந்தனள் பார்

ஆண்டாள் -நீ போனது உண்மை தானா

அநுக்ரஹை-ஏன் நான் கூறியதில் உனக்கும் நம்பிக்கை இல்லையோ

ஆண்டாள் -பிராண சகி -இல்லாமல் இல்லை -ஆயினும் என்னைத் தேற்றுவதற்கு நீங்கள் செய்த உபாயமோ இது என்று சந்தேஹப் படுகின்றேன் –

அனுக்ரஹை -அவனிடமுள்ள கட்டடங்க காதல் இஷ்ட சகியின் சொற்களைக் கூடச் சந்தேகிக்கச் செய்கிறது -காதலின் மஹிமை தான் என்ன-

ஆண்டாள் -இல்லை சகி -என்னுடைய நன்மையைக் கருதி நீங்கள் இவ்வாறு செய்து இருக்கலாம் என்றும் நினைத்தேன் –

அனுக்ரஹை–நாங்கள் இவ்விதம் செய்து இருக்கலாம் -கடிதத்தைக் காட்டி -ஆயினும் அவர் கொடுத்த கடிதம் ஓன்று உளதே -இதுவும் எங்கள் கற்பனையில் அடங்குமோ

ஆண்டாள் -புன்னகையுடன் கடிதம் கிடைத்துள்ளதோ -எங்கே பார்ப்போம் -கையை நீட்டுகிறாள் –

அனுக்ரஹை -கடிதத்தைக் கொடுத்து -சகி -இனி மேலாவது சகிகள் சொல்லை சங்கிக்காமல் இருப்பாயா –

ஆண்டாள் -கடிதத்தைக் கண்ணிலும் தலையிலும் வைத்து நாணி வணங்கிய முகத்திலே புன்னகை தவழ மெதுவாக வாசிக்கிறாள் –

அனுக்ரஹை -சகி உன் காதல் தான் பறை அடித்த பரம ரஹஸ்யம் ஆயிற்றே – உரக்க வாசித்தால் என்ன-

ஆண்டாள் –செய்தி கொணர்ந்த நீயே வாசித்து நாம் எல்லோரும் கேட்டுக் களிக்க வேண்டும் -சுக துக்கங்களை பங்கிட்டுக் கொண்டால் தான் பொறுத்துக் கொள்ள முடியும் என்பது உண்மையான அனுபவம் -ஆகையால் நீயே வாசி –

அனுக்ரஹை -ஆகில் கொடு -கையை நீட்டுகிறாள்

ஆண்டாள் -கடிதத்தை உற்றுப் பார்த்த வண்ணமே இருக்கிறாள்

அனுக்ரஹை-கொடுக்க மனம் இல்லையா

ஆண்டாள்-இதை அவர் கைப்பட எழுதினாரோ -எழுத்துக்கள் மணி மணியாக இருக்கின்றனவே -கண்ணில் ஒத்திக் கொள்கிறாள் -ஆனால் மை சிதறி இருக்கும் காரணம் என்ன-

அனுக்ரஹை-அவர் கண்ணும் கண்ண நீருமாய் எழுதினார் -அதனால் தான் கண்ணீர் சிந்தி மை சிதறி இருக்கிறது -இது அவர் படும்பாட்டை யுணர்த்த தகுந்த சாட்சியாம் யன்றோ -மேலும் அச் சமயம் பிராட்டியின் பாதச் சிலம்பு ஒலி காதில் பட்டது -உடன் பூ வணை முதலியவைகளைக் கருடனைக் கொண்டு அப்புறப் படுத்தி விட்டு மை உலரும் முன்பே கடிதத்தை மடித்துக் கொடுத்து என்னையே வேறு ஒரு வழியாக அனுப்பி விட்டார் -இதுவும் அதற்கொரு காரணம்

ஆண்டாள்-தேனைச் சக்கரைப் பாத்திரத்தால் பருகுவிப்பது போல் உன் செவிக்கு இனிய செஞ்சொல்லால் இக் கடிதமாம் தேனைப் பருகச் செய் -கடிதத்தைக் கொடுக்கிறாள்

அனுக்ரஹை -வாசிக்கின்றனள்

ரங்கராஜன் -திருவரங்கம் –
எனது ஆருயிர் அனைய நங்காய் -நினது எழிலால் எனது இதயம் கொள்கை கொண்டு விட்டாய் -மன்மதன் தமது அம்புகளால் என்னை இடைவிடாது கொளுத்து கின்றனன் -இனி நான் பிழைக்க வழி யில்லை -நினைத்து கருணை அரிய பார்வையே உற்ற துணையாகும் என்றும் நம்புகிறேன் –

ஆருயிர் அனைய நங்காய் அரும் புகழ்ப் பட்டன் கோதாய்
சீரிய எழிலால் என் தன் சிந்தனை கவரச் செய்தாய்
கூரிய கணைகள் கொண்டு கொளுத்து கின்றனனே மாரன்
நாரி நின் கருணை மாரி தனை யல்லால் துணை இலேனே —
நின் பால் உயிருள்ள
ரங்கராஜன்

ஆண்டாள் -சகி என்பால் பேர் இரக்கம் கொண்டு பேர் உதவி புரிந்த நினக்குத் தலை யல்லால் கைம்மாறு இலேன்

அனுக்ரஹை -உன் ஸஹ வாஸத்தால் நினது அரும் குணங்களின் லவலேசம் என்னிடம் ப்ரதி பலித்திடில் நீ அதனைப் பாராட்டுதல் தகாது -இக் கடிதத்துக்கு ஏற்றால் போல் நினது அரும் காதலை வெளிப் படுத்துமோர் பதில் விடுத்து நெடும் கணாளனை யடுக்க வழி பார் –

ஆண்டாள் -அவன் ஏலாப் பொய்கள் உரைப்பவன் யாயிற்றே -அவன் கடிதத்தை நம்பி நாம் பதில் விடுக்கலாமோ –

அனுக்ரஹை -ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று உன் தந்தை அடிக்கடி கூற நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமே -அவனிடம் உனக்கும் ஏன் இவ்வளவு அவ நம்பிக்கை –

ஆண்டாள் -தந்தை விஷயத்தில் அவனாலே பொய் சொல்ல ஒண்ணாது -அது கொண்டே -ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று அவரைக் கொண்டு தன்னைக் கவி பாடிக் கொண்டனன் — பாவியேன் நான் பிறந்த பின்னர் அவன் பொய்களையே உரைப்பான் ஆயினன் -என் வல்வினை அவன் ஸ்வ பாவத்தையும் கூட மாற்றி விட்டது போலும் -பாம்பணை மேல் படுக்கும் அவனுக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உண்டாயின போலும் -இத் தகையோன் கடிதத்தை நம்பி நான் பதில் எழுதலாமோ –

அனுக்ரஹை -ப்ரபந்ந குலத்தில் பிறந்த உனக்குப் பராமனைச் சேர சந்தேகம் ஏன்

ஆண்டாள் -ராமன் இரு விதம் பேசான் என்னும் பிருதம் பிடித்த பெருமான் படியே என் விஷயத்தில் மாறுபடுகிறதே -ப்ரபன்னரான பட்டர் பிரான் சம்பந்தம் கொண்டு நான் ஆறி இருப்பது எப்படிப் முடியும் –

அனுக்ரஹை -சகி அவ்விதம் நினைக்க வேண்டாம் -அவன் படும் பாட்டை நேரில் நான் கண்டு வந்திருக்கிறேன் -உன் பிரிவாற்றாத அப் பாம்பணையான் பூவணை மிசை பள்ளி கொண்டு துடி துடிக்கிறான் -சந்திர ஒளியினால் அவன் மனம் வெடி படுகின்றது –

சுசீலை -பாபி சந்திரன் தான் பிறந்தவிடம் என்று கூடப் பாராமல் அவர் மனம் தகர்க்கின்றனன் போலும் –

அனுக்ரஹை -புன்னகையுடன் -இக்கலியில் தந்தையிடம் மைந்தர் இருக்க வேண்டிய விதத்தைச் சந்திரன் கற்ப்பிக்கின்றனன் –

ஆண்டாள் -ஆகில் நான் பதில் எழுதத் தான் வேண்டும் என்று சகி ஆஞ்ஞாபிக்கின்றனளா –

அனுக்ரஹை -ஆஞ்ஞாபிக்க வில்லை -யோசனை கூறுகிறேன்

சுசீலை -எழுதுவதற்கான சாதனங்களைக் கொணர்ந்து தருகிறாள்

ஆண்டாள் -ஒரு புருவத்தை உயர்த்தி வளைத்து யோசிக்கின்றாள்

சுசீலை -சகீ அனுக்ரஹை -நமது சகியின் புருவம் எவ்வளவு அழகாக மன்மதன் வளைத்த வில் போல் வளைந்து இருக்கிறது

அனுக்ரஹை-ஆம் இச்சமயம் அவ் வரங்கன் இவள் எதிரில் நின்றால் என்ன பாடு படுவான் –

சுசீலை -தந்தை தாய் பாராமல் தமது ஆணையைச் செலுத்துபவனான மன்மதனின் சமநிலை ஆச்சர்யமானது

ஆண்டாள் –சகிகாள் கேளுங்கோள்

கோதை நாயகி -ஸ்ரீ வில்லி புத்தூர்
அரங்கம் தனில் இலங்கும் என் நாதா -அநங்கன் என்னும் கொடியவனால் அபலையாகிய நான் அநவரதம் அல்லல் படுகிறேன் -மாதவா உன்னைச் சரண் அடைகிறேன் -நான் நீ அலால் இலேன் காண் -என்னை நீ குறிக் கொள்ள வேண்டும் -அநாதையான என்னை ஸநாதையாக ஆக்குவது நின் கடைமை -உன்னைக் கரம் கூப்பி இறைஞ்சுகின்றேன் -காக்கும் திறன் உனக்கும் அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை -இரக்கம் கொண்டு என்னை நீ புரக்க விரைந்து வா -இன்றேல் நான் இன்றே முடிவேன் -ஒரு பெண் கொடியை வதம் செய்தான் என்னும் வசைச் சொல் உனக்கு வேண்டாம் -பழி ஏறாது கண் பார்த்து அருள்வாயாக

அரங்கனே அலர் வாழ் மங்கை அலகிலா வகன் மார்போனே
சரங்களால் அநங்கன் என்னைத் தகிக்கின்றான் இனி என் செய்வேன்
கரம் குவித்து இறைஞ்சுகின்றேன் காப்பவர் இலரால் நீயே இரங்கி என் எதிரே வந்தால் இறந்திடாது உயிர் வாழ்வேன்
நின் தனை உற்ற அடியாள்
கோதை நாயகி

அனுக்ரஹை –சகி வெகு அழகு -நின் சொல் திறம் போற்றத் தக்கது பக்தியும் நின் காதலை இக்கடிதம் நன்கு வெளிப்படுத்துகின்றது -இது காறும் மண்ணுற்ற மின் என இருந்த உனக்கும் இனி அரங்கக் கொண்டலில் மின் என விளங்கும் காலம் கிட்டி விட்டது

ஆண்டாள் -இக்கடிதம் அரங்கர் பால் சேர்வது எங்கனம்

அனுக்ரஹை -சுசீலையின் மூலமாக இதை ஆம் அனுப்ப வேண்டும் -சுசீலையை நோக்கி -சகி இக்கடிதம் அரங்கர் கையிலே சேர வேண்டும் -பிராட்டியார் கண்ணில் பட்டு விடக் கூடாது –

சுசீலை -அப்படியே -கடிதம் பெற்று செல்கிறாள்

ஆண்டாள் -சகி நாம் இந்தக் கார்யத்தைப் பிராட்டிக்குத் தெரியாமல் சாதித்துக் கொள்ள முடியுமா -அப்படி நினைப்பது அறிவீனம் அன்றோ -அவளை வைத்தன்றோ அவனது வாழ்வு

அனுக்ரஹை -உண்மை தான் -ஆனால் முதலில் நீ அவன் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாய் -இனி உன் விரஹத்தை அவ்வரங்கன் தாங்க இயலாது -எனவே அவனது நிலைமைக்கு ஏற்ப நின் காதலன் நிறைவேற்றத் திருமகள் தயங்க மாட்டாள் -மற்ற மங்கையர் அரங்கனை அணைந்திடில் தமது இரு கொங்கை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்வதாகவே எண்ணுவது அவள் இயல்பு -எனினும் பிராட்டிமார் மனம் உகக்க ஒரு உபாயம் அனுஷ்ட்டிப்பது தான் நல்லது

ஆண்டாள் –ஆம் உண்மை தான் -அரங்கனை அடைவதற்குத் திருமகள் புருஷகாரம் இன்றியமையாதது – அவ்விருவர் சேர்த்தியில் தான் நாம் அடிமை செய்ய ஆசை கொள்ள வேண்டும் -பிரித்துத் பற்றினதால் தான் தங்கை மூக்கும் தமையன் தலையும் இழந்தனர் -இருவர் சேர்த்தியில் ராவணனினும் கொடிய காகம் தலைபெற்றது -ஆனால் இவ்வலியை நமக்கு உபதேசிப்பவர் யார் –

அனுக்ரஹை -ஏன் நமது தந்தை தான்

ஆண்டாள் தந்தையிடம் -திரு வரங்கச் செல்வனார் என் மெய்ப்பொருளும் கொண்டார் -என்று நான் எவ்விதம் தெரிவிப்பேன் -நான் ஒரு விதம் எண்ணியிருக்க இவளும் வேறொன்று எண்ணுகின்றாள் -என்று அவர் கூறிடில் நான் என்ன செய்வேன்

திடீரென பெரியாழ்வார் வந்து கொண்டே -எனது அரும் தவப் புதல்வியே -உன் எண்ணத்திற்கு என் எண்ணம் மாறுபடுமோ -உன்னை உரப்பவே நான் ஒன்றுமே மாட்டான் -நானும் இந்த நல்ல காரியத்தில் பங்கு எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன் –

இருவரும் திடுக்கிட்டு எழுந்து சேவிக்கின்றனர் -ஆண்டாள்-ஓரமாக ஒதுங்கி இருகின்றனள்-

அனுக்ரஹை -ஒரு மானுரி ஆஸனம் கொணர்ந்து -தந்தையே இவ்வாசனத்தை அலங்கரித்து அருள வேண்டும் –
ஆழ்வார் ஆசனத்தில் அமர்ந்து இருவரையும் உட்காரக் கை காட்டுகிறார் -இருவரும் உட்காருகின்றார்கள் –ஆண்டாள் மட்டுமே நாணத்தால் ஓரம் உட்க்காருகின்றனள் –

பெரியாழ்வார் -ஆண்டாளை நோக்கி -கோதாய் தந்தையிடம் நாண வேண்டுமோ -நீ தான் சற்று முன் உன் தோழியிடம் -இனி என்னால் அடங்க இயலாது -என்று கூறினை -காதல் விஞ்சிடில் எப்பொழுதும் -நாண் மட அச்சம் நமக்கு இங்கு இல்லை – என்று இருக்க வேண்டாமே

ஆண்டாள் தலை குனிந்து பேசாது இருக்கிறாள்

அனுக்ரஹை -நும் தம் புதல்வியும் என் தோழியான இவள் ரங்கராஜனைக் கணவனாகக் கொள்ளுமாறு தக்கவோர் உபாயம் எடுத்துக் உபதேசியுங்கோள்

ஆண்டாள் அனுக்ரஹையைக் கோபக் குறியோடு பார்க்கிறாள்

பெரியாழ்வார் -கோதாய் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் கலந்த வெட்கம் -உன் நன்மையைக் கருதி உன் தந்தையிடம் உண்மையைக் கூறினதற்காகவே இந்தப் பார்வை -அனுக்ரஹை -சகி இந்தப் பார்வை கீர்வை எல்லாமே ரங்கராஜன் விஷயத்தில் இருக்கட்டும் -இங்கே செல்லாது

ஆண்டாள் மறுமுறையும் முறைத்துப் பார்த்துப் போகப் பார்க்கிறாள் -அனுக்ரஹை கையைப்பிடித்து உட்க்கார்த்தி விடுகிறாள்

பெரியாழ்வார் -கோதாய் நான் இந்த விஷயத்தைக் தெரிந்து கொண்டு விட்டேன்-நீ இதற்காக நாணவோ அஞ்சவோ வேண்டாம் -கைத்தலத்திலுள்ள மாடு -செல்வம் -அழியக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்து உனக்குப் பெருப்பெருத்த கல்யாணம் செய்ய நான் ஆசை கொண்டு விட்டேன் -நீ ரங்கராஜனிடம் காதல் கொண்டது நான் செய்த தவப்பயன் என்றே கருதுகிறேன் -செடியில் உள்ள பூ ஈசன் அடிக் கமலத்தில் தானே நழுவி விழுந்திடில் எனக்கு அது மகிழ்வே அன்றோ-ஆகையால் நீ அவ்வரங்கனை அடையத் தக்கதோர் உபாயம் கூறுகிறேன் -கேள் -முற்காலத்தில் ஆய்ப்பாடியில் ஆய்ச்சியர் நோன்பு நோற்றுக் கண்ணனை அடைந்தனர் -அஃதே போல் நீயும் நோன்பு நோற்க வேண்டும் -ஆய்ச்சியர்க்கு மார்கழி நோன்பே சீர் கெழு கண்ணனைச் சேர்வதற்கு ஏற்றதாய் இருந்தது -அந்நோன்பை நீயும் கைக் கொள்ளலாம் -அதன் விவரத்தைக் கூறுகிறேன் -இங்கே வா
ஆண்டாள் அவ் வண்ணமே வரக் காதண்டைச் சிலவற்றை உபதேசிக்கிறார் –
ஆண்டாள் -தனக்குள் -தந்தையர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

அனுக்ரஹை -இந் நோன்பு என் சகியின் பேர் ஆத்திரத்திற்கு ஏற்ப சீக்கிரம் பயன் தரத் தக்கது தானே

பெரியாழ்வார் -அதற்கு என்ன ஸந்தேஹம் -இந்நோன்பில் கண்ணனின் பேர் அன்புக்கு உரிய நப்பின்னையைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டும் -கண்ணன் இந் நோன்புக்கு இரங்கியே தீருவன் -பின்னர் ரங்கராஜன் கைபுகுந்தான் என்பதைக் ஐயம் என்ன-கண்ணனும் அவனும் வேறு அன்றே -ஆகையால் நப்பின்னையைப் புருஷகாரமாகக் கொண்டு இந் நோன்பினை நோற்றல் வேண்டும் –

அனுக்ரஹை -நோன்புக்கான ஏற்பாடு செய்வோம் வாருங்கோள்

எல்லாமும் எழுந்து செல்கின்றனர்

இரண்டாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

————–

இரண்டாவது அங்கம் மூன்றாம் களம்
இடம் -பழைய காலத்து வீட்டு வாசல் வராண்டா
ஒரு கிழவர் தம் மேனியில் பன்னிரு திருமண் மின்ன கையில் உள்ள தீர்த்த பாத்திரத்தை ஓரிடம் வைத்து விட்டு -ஒரு கரத்தால் கோலூன்றி -மறு கரத்தால் தொந்தியைத் தடவிக் கொண்டு உலாவிய வண்ணம்
ஆஹா என்ன இனிமை -எத்துணை போக்யமாய் பெருமாள் அமுது செய்து இருந்தார் -அமுதம் அருந்தும் தேவரும் இதை அறிந்திடில் நிச்சயமாக அமிழ்த்தினை உமிழ்ந்திடுவர் -எவ்வளவோ படே படே பேர் வழிகளின் ததீயாராதனம் எல்லாமே யான் கண்டிருக்கிறேன் -ஓன்று கூட என்னுடைய முழு புகழ்ச்சிக்கும் உரியதாக இல்லை -ஆனால் இன்றைய ததீயாராதனத்தையோ எனின் என்னைக் கேளாமல் ருசி அறிந்த என் நாக்கு புகழத் தொடங்குகிறது -ஆஹா பாருங்களேன் -எவரைக் காணிலும் என்னைப் போல் முகம் மலர்ச்சியும் உதர நிமிர்ச்சியும் யுடையவர்களாகவே காணப்படுகின்றனர் -என்ன பராமரிப்பு -ஒரு ஆவலாதி கூடக் கிடையாது -மீசையை முறுக்கிக் கொண்டு -இவ்வளவு வயசாகியும் அசக்திக்கு உறைவிடமான எனக்கு யவ்வனம் திரும்பி வந்து விட்டது போலும் -அழுத்தத்தினால் அந்திமப் பருவத்தைத் தடுக்கலாம் -என்ன ஆச்சார்யன் -இந்த அமுதத்தினால் கழிந்த யவ்வனமும் திரும்பியதே -இது ததீயாராதனம் அருந்தாத எத்துணை ஜவான்கள் போருக்கு வந்திடினும் அவர்களை வென்று விடலாம் -தன்னுடம்பைப் பார்த்துக் கொள்ளுகிறார்

இதற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்து -உடம்பைப் பார்த்துக் கொள்ள கண்ணாடி வேணுமா -உள்ளே போய் அம்மாகிட்டே வாங்கிண்டு வரேன்
கிழவர் -உள்ளே போய் வாங்கிண்டு வா பார்ப்போம்
சிறுவன் உள்ளே சென்று கண்ணாடி வாங்கித் தருகிறான்
கிழவர் -அடே பயலே -நான் எப்படி இருக்கிறேன் -முன்னே போலவா இருக்கிறேன் –
சிறுவன் -இல்லை தாத்தா வயசாச்சு இல்லையோ -முன்னை விட கன்னம் எல்லாம் சுருங்கிப் போச்சு -முன்னைப் போல எப்படி இருப்பீள்
கிழவர் -முன்னை விட பயில்வானாக இருப்பதால் நான் சொல்லுகிறேன் -நீ கன்னம் சுருங்கிப் போச்சு என்கிறாயா
சிறுவன் -பயில்வானா -என்ன தாத்தா நா ஓடரேன் -உம்மாலே பிடிக்க முடியுமோ
கிழவர் -அடே இனி மேல் தாத்தா என்றும் அழைக்கக் கூடாது தெரியுமா -அழைத்தால் அப்படியே சட்டினி தான்

தன் காலால் பூமியைக் உதைக்கிறார்
சிறுவன் -தாத்தா இது எண்ணம் இப்படி உதைக்கிறீர்
கிழவர் -இது என் உண்ணும் தாத்தாவா -ஊன்று கோலைக் கொண்டு அடிக்க வருகிறார் –
சிறுவன் -சிறு தூரம் ஓடி -தாத்தா தொந்தி குலுங்க ஏன் ஓடி வருகிறீர் -வயிற்றிலே என்ன வியாதியோ பாவம் -இப்படிப் புடைத்து இருக்கிறது -இதோடு ஒடி வரலாமோ –
கிழவர் -அட போக்கிலி -சிறிது அங்கே நில்லு -ஊன்று கோலைக் கிறு கிறு என்றும் சுற்றிக் கொண்டு ஓடி வருகிறார் –
சிறுவன் -உதட்டைக் காண்பித்து -தாத்தா சிலம்பு விளையாட்டு வேடிக்கையாக இருக்கிறது -தாத்தா என்னைப் பிடி பார்க்கலாம்

திரைக்குள் இருந்து -அடே பெரியோர்கள் இடம் விளையாடலாமா -இரு உன்னை இதோ
பையன் திரும்பிப் பார்த்து ஓடி விடுகிறான்

திருவேங்கடாச்சார்யார் வருகிறார்
கிழவர் -தனது கையைப் புருவத்தில் வைத்து உற்று நோக்கி -யாரது -திருவேங்கடாச்சார்யர் ஸ்வாமியா -பார்த்ததா சிறுவனின் திரு விளையாட்டை

திருவேங்கடாச்சார்யார் -ஆகட்டும் அவனை நான் கண்டிக்கிறேன்

கிழவர் -அது எல்லாமே இருக்கட்டும் -கீழே ஏழி இருக்க-

இருவரும் உட்காருகின்றனர் –

கிழவர் -இன்று ததியாராதனத்துக்கு எழுந்து அருளினீரே -எப்படி

எப்படி என்றும் கேட்கவும் வேண்டுமோ -இவ்வளவு வைபவமாக இதுவரை ஒரு விசேஷமும் எங்கும் நடக்க வில்லை என்றும் கூடச் சொல்லலாம் –

அடியேன் நினைக்கும் போலவே தேவரீரும் சொல்வதே -ஆண்டாள் செய்யும் இந்த வைபவம் நம் ஊருக்கே ஒரு பெருமை கொடுக்கிறது என்றும் நினைக்கிறேன் – தேவரீர் அபிப்ராயம் எப்படியோ –

அவலோன் நடத்தும் வைபவம் இருக்கட்டும் -அவள் அவதரித்ததே நமது ஊருக்கே பெருமை -ஈசனிடம் எண்ணரும் பக்தி கொண்ட இப் பெண் மணியைப் பெறும் பாக்யம் நம் நந்நகருக்கு அன்றோ கிடைத்தது -இப் பெருமை மற்ற எந்த ஊருக்கு உண்டு

கிழவர் -ஸந்தேஹம் என்ன அவள் செய்யும் இத் ததீயாரானத்தை முன்னிட்டு அன்றோ அளவில்லா ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கு ஸேவை சாதிக்கிறார்கள்

ததீயாராதனத்துக்கோ இங்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸேவை சாதிக்கிறார்கள் -ஆண்டாளிடம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அளவும் கடந்த பக்தி உண்டு -அதனால் இவ்வளவு பெரிய ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியை நாம் ஸேவிக்க முடிந்தது –

கிழவர் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஏன் ஆண்டாளிடம் பிரியம் தெரியுமா -அவள் அடிக்கடி இப்படித் ததீயாராதனம் செய்து அவர்களைக் களிப்பிப்பதால் தான் -ருசி கண்ட பூனை விடுமா -இவ் வைபவத்துக்கும் கூட்டத்துக்கும் குறைச்சல் இல்லை –

என்ன தேவரீரே இப்படிச் சாதிக்கிறது -அவர்கள் வருவதில் தேவரீருக்கு என்ன-தேவரீருக்கு என்ன சாப்பாட்டில் குறை உண்டோ –

கிழவர் -கிடையாது கிடையாது இவ்வளவு கூட்டத்தையும் அவளே நின்று பராமரித்தாள் என்பதற்கு இதை நான் சொல்ல வந்தேன்

திருவேங்கடாச்சார்யார் -தனக்குள் -ஏதடா -இவரே புகழ்ந்து விட்டாரே -என்ன ஆச்சார்யம் -வெளியில் -ஆம் வந்த குழாத்தைப் பராமரிப்பதில் ஆண்டாளுக்கு இணை இவ்வுலகினில் கிடையாது என்பதை மிகையில்லை -அவளது செந்தாமரை போன்ற முகத்திலே சந்ததமும் மந்த ஹாஸம் தவழ்ந்து கொண்டே இருக்கிறது -விருந்து முகம் வேறுபடில் அப்பொழுதே அவள் முகம் வாடி வருந்தும் என்பதற்கு ஐயம் இல்லை -அவள் அகம் அமர்ந்து ஈதலை விட முகன் அமர்ந்து இன் சொற் கூறுவதை எவரும் கொண்டாடுகின்றனர் –

கிழவர் -பட்டர் பிரான் என்ன நோன்பு நோற்றாரோ -இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பெற்றார் –

ஆம் அவர் செய்த அறச் செல்வம் ஊரடி ஊருணி போல் அனைவருக்கும் பயன் படுகிறது –

கிழவர் -அனைவருக்கும் என்ன பயன் படுகிறது -ததீயாராதனம் தானே

நகைத்து தேவரீர் ததீயாராதனத்தையே கனவு காண்கிறாப் போலே இருக்கிறதே

கிழவர் -வேறு என்ன பயன்படுகிறது -கொஞ்சம் சொல்லவே -கேட்ப்போம்

இதை நான் சொல்லவும் வேண்டுமோ -இப்பெண்மணி அவதரித்த பின்னர் நம் நகரில் வியாதி துர்பிக்ஷம் திருடர் பயம் முதலியன தலைக் காட்டவே இல்லை யன்றோ -இதை விட அனைவருக்கும் வேறு என்ன பயன் வேண்டும்

கிழவர் -கோபித்துக் கொள்ளக் கூடாது -இவள் பிறப்புக்கும் திருடருக்கும் என்ன ஸம்பந்தம் -இவள் என்ன போலீஸ் அதிகாரியா திருடர்களைத் தடுப்பதற்கு –

திருவேங்கடாச்சார்யார் -ஆம் சம்பந்தம் உண்டு

ஆண்டாள் பிஞ்சிலே பழுத்தவள் -அஷ்டாக்ஷர ஸித்தி பெற்றவள் -அஷ்டாக்ஷரத்தில் கூறியபடி ஈஸ்வரனுக்கு அநந்யார்ஹையாய் ஆட்பட்டு மானிடருக்கு என்றும் பேச்சுப்படில் வாழ முடியாதவளாய் இருக்கின்றனள் -எவ்விடத்தில் அஷ்டாக்ஷர ஸித்தி பெற்றவர்கள் அங்குள்ளவர் கொண்டாடும்படி இருக்கிறார்களோ அங்கு வியாதி திருடர் பயம் முதலியன உண்டாகா என்றும் சாஸ்திரங்கள் முறையிடுகின்றன –

கிழவர் -இவள் அனுஷ்டிக்கிறாளே இப்பொழுது ஒரு நோன்பு -இதுவும் அக் கரிய கண்ணனைக் குறித்துத் தானோ

ஆம் -அவனை நோக்கிய வைபவங்களில் அவன் அடியார் விஷயங்களில் ஆண்டாள் மிக்க கவனமுடையவள்

ஆம் கண்டு கொண்டேன் இத் ததீயாராதனத்தில் -அதிலும் கிழவர்கள் இடம் அதிகமான ப்ரீதி யுண்டு என்பதைக் கூட நான் தெரிந்து கொண்டேன் –

அது என்ன கிழவர்களிடம் மாத்திரம் அதிகம் ப்ரீதி

அதற்குப் பலவித சான்றுகள் உண்டு -அதில் ஒரு உதாரணம் மாத்திரம் சொல்லுகிறேன் -இன்று பெரும்பாலும் ததீயாராதனத்தில் மெதுவான பஷணங்களே உபயோகப்படுத்தப் பட்டன-அதன் கருத்து என்ன-பல் இழந்த கிழவர்கள் இதனால் தானே திருப்தி அடையக் கூடும் –அதனால் தான் கூறுகிறேன் -கிழவர்கள் இடமும் விசேஷமான பக்தி என்று

புன்னகையுடன் -நன்று நன்று-எவ்வளவு அதிசய ஆராய்ச்சி -அதிரசத்தை விட இவ்வாராய்ச்சி அதி ரசமுள்ளது –

கிழவர் -அது இருக்கட்டும் -ஆசீர்வாதம் இப்போது தானே நடக்கப் போகிறது -தக்ஷிணை எவ்வளவு கொடுக்கிறாளோ பார்ப்போம் -பெரிய இடத்துக் கார்யம்

சிரித்துக் கொண்டு தேவரீருக்கு வயசாகியும் ஏன் ஆசை விடவில்லை

எனக்கு என்ன வயசாகி விட்டது -இப்பொழுது நான் ஒரு ஜவானாகி விட்டேன் -நிமிர்ந்து தன் மார்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார்

தேவரீர் பலவானான் ஆனதைக் கண்டு தேவரீர் ஆசையும் பலம் பெறுகிறதோ

கிழவர் -எல்லாருக்கும் ஆசை இல்லையோ -ஆசை இல்லாவிட்டால் அங்கு எதற்குப் போகிறார்கள்

ஆசீர்வதிப்பது மூலம் தங்கள் நன்றியைச் செலுத்துவதற்காகவே –

கிழவர் -ஓஹோ -பலமாக மண்டையை ஆட்டுகிறார் –

திரையில் வாத்திய ஒலி கேட்க்கிறது -இருவரும் எழுந்து செல்கின்றனர் -சிறிது நேரத்தில் ஆசீர்வாத ஒலி கேட்க்கிறது

இரண்டாம் அங்கம் முற்றிற்று


மூன்றாம் அங்கம் -முதல் களம்
இடம்–திருவாய்ப்பாடி வீற்று வாசல் திண்ணை
ஆதி நாராயண கோபர்
அநந்த கோபர்
கேசவ கோபர்
முதலிய சிலர் உட்க்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்

அநந்த -ஏ ஐயா நம்ம ஊரில் மழை இல்லையே -என்ன பண்ணலாம் -இப்போ பலத்த இரண்டு மழை பெய்தால் போதும் -கா மேனிக்கூடக் காணாட்ட சம்சாரி என்ன பண்ணுவது -மழைக்கு அறிகுறியே இல்லையே -தாய் முகம் நோக்கும் சிசு போலே பயிர்கள் வானம் நோக்கி வாடுகின்றனவே -நாம் எல்லாமே எப்படிப் பிழைக்கிறது –

கேசவ-போன பாட்டம் குறை இல்லாமல் இருந்தது -இந்தப் பாட்டம் எந்தப்பாவி கண் வைத்தானோ இப்படி யாய்விட்டது

ஆதி நாராயணன் -பழம் கதை எதுக்கு ஐயா -பசிச்சவன் பழம் கணக்கு பார்ப்பது போல் -இப்போ என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கோ –

அநந்த -கேசவகோபரைக் காண்பித்து இதோ பெரியவராய் இருக்கிறார் -இவரே சொல்ல வேணும் -சொல்லுங்கள் ஐயா

கேசவ-முன்பு இவ்வாறு மழை இல்லாமல் போக -எல்லாரும் சேர்ந்து யோசனை பண்ணி நமது தேவதைக்குப் பூஜை வைத்தார்கள் -அம்மிடுத்தான் -கொட்டிருச்சு மழை –

ஆ ஆ அப்படியா நாமம் இப்பொழுது அப்படியே செய்யலாம் என்கிறீரோ

அதன் விபரம் தெரிந்தால் அல்லவோ நாம் செய்வது-அத்தைச் சொல்லுங்கோ

ஆமம் அதைச் சொல்லுங்கோ முதலில்

கேசவ-நம்ம ஊரில் சின்னப் பெண்கள் எல்லாரும் சேரனும்-நம்ம தேவதை நாராயணன் மேல் நோன்பு நோக்க வேணும் -நோன்பு வேண்டிய சாமான்களை சேகரித்துக் கொடுக்க ஒரு வாலிபனை நியமித்தால் போதும் -நாம் கவலைப்பட வேண்டாமே –

நம்ம பெண்களுக்கு நோன்பு நோக்க வழி தெரியுமோ

நமது சம்சாரத்தைச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிட்டால் போதும்

ஒரு வாலிபனை நியமிக்கப் வேண்டுமே -யாரை நியமிக்கலாம் -சொல்லுங்கோ

நம்ம அநந்த கோபர் மகன் ரொம்ப நல்லவன் -அட்டி இல்லாமல் சட்டென சாமான்கள் எல்லாமே சேகரித்துக் கொடுப்பான்

அநந்த -அவன் இவ்வேலைக்கு ஏத்தவன் இல்லை -நம்ம நந்தகோபர் மகன் தான் இந்த வேலைக்குத் தக்கவன்

எல்லாமும் கேட்டுக் குலுங்க நகைக்கின்றனர்

ஆதி நாராயண கோபர் -படபடப்புடன் கேலி பண்ணுகிறீர்களா -திருடன் கையிலே பணப்பெட்டியை யாரேனும் கொடுப்பார்களா -நம் பெண்களைத் திருடிய கள்ளன் அல்லவோ அவன் -நாம் முழிச்சுக் கொண்டு இருக்கும் போதே நம் கண்ணில் மண்ணைத்தூவி நம்ம பெண்களை கொள்கை கொண்டு போனான் -அதுக்க்காகத் தானே அவனை சிறையில் அடைத்தது -சிறையில் அசைக்க நீங்கள் தானே சிபாரிசும் செய்தீர்கள் -இப்பொழுது இவ்வாறு சொல்ல உங்களுக்கு இரண்டு நாக்கா

அநந்த -ஏன் இந்தப் படபடப்பு -நமக்கு இப்பொழுது அவனாலே காரியமாக வேண்டி இருக்கிறதோ -அவன் தான் இந்த வேலைக்குத் தக்கவன் -நீங்கள் அவனைத் தெரிந்து கொள்ள வில்லை -நன் அறிவேன்-அவன் பிறந்த பின்பும் ஊரே செழிப்பாச்சுதே -அவனை சிறையில் அடைச்சோம் -மழை இல்லாமல் போய்ச்சு-அவனை வெளியில் விட்டாலே போதும் -மழை பொழியும் -அவன் என்ன சாதாரணமானவனா –

எல்லாரும் –ஆமாம் ஆமாம் உண்மை அவன் தான்-இதுக்குத் தக்கவன்

ஆதி நாராயண கோபர் -எல்லாரும் சம்மதித்த பின்பும் நானே போய் நந்தகோபர் இடம் சொல்லி ஆவணி விடுவித்து இங்கே கூட்டி வாரேன் -போகிறார் –

அநந்த கோபர் -ஏனய்யா – நான் சொல்வது பொய்யா நிஜமா -அவன் சாதாரண மனிதனாய் இல்லை -நம்ப நாராயணன் தான் நமக்காக இப்படி வந்துள்ளான் -சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுது எவ்வளவு ஆச்சார்யமானப் சேட்டைகள் பண்ணி உள்ளான் -பூதனையைக் கொல்லவில்லையா -சகடத்தை உதைத்து அழிக்க வில்லையா -மருத மரத்தைச் சாய்க்க வில்லையா -இவை எல்லாமே சின்னக் குழந்தை செய்யும் செயல்களா -ஆகையால் இவன் நாராயணனே என்பதை தெளிவு -நீங்களும் யோசித்துப் பாருங்கோ -இவனை வைத்துக் நோன்பு நோற்கச் செய்தால் மழை கட்டாயம் பெய்யும் -நீங்களே சொல்லுங்கோ

எல்லாரும் -ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது நிசம்
அநந்த கோபர் -அதோ இருவரும் வந்து விட்டார்கள்
கண்ணனும் ஆதி நாராயண கோபரும் வர
கண்ணன் -கை கூப்பி அனைவரையும் சேவிக்கிறான்
அநந்த கோபர் -ஹும் ஹும் பெரியோரை ஸேவித்த பலனாக உனக்கு சிறையில் இருந்து விடுதலை உண்டாகட்டும் –
கண்ணன் -விடுதலை அடைய ஆசீர்வாதம் வேணுமா நினைத்தால் போதாதா

கேசவ-ஏன் கொஞ்சம் நினைச்சிக்கோயே பார்ப்போம்

கண்ணன் -நான் நினைச்சு என்ன பயன் -எல்லாரையும் கட்டில் இருந்து விடுவித்தாலும் உங்களுடைய அன்புக் கட்டுதலை என்னாலே அவிழ்த்துக் கொள்ளப் போமோ -அன்புக்கு நான் அடியான் அன்றோ

ஆதி நாராயண -இன்னும் அந்த உதாரப் பேச்சு

அநந்த -இயற்க்கை மறையாது அன்றோ

கண்ணன் -பெரியோர்களே என்னை அழைத்தது எதற்கு

அநந்த -புன்னகையுடன் -உன்னை விடுதலை பண்ணிரலாம் என்னுதான்

ஆதி நாராயண -குற்றம் பண்ணலே என்று ஒத்துண்டால் தான் விடுதலை தெரியுமோ -ஒத்துக் கொண்டு அப்படியே நடக்கணும்

கண்ணன் -ஆஹா அப்படியே ஒத்துக் கொள்கிறான் -குற்றமற்ற நான் ஏன் இவ்விதம் ஒப்புக் கொள்ளக் கூடாது -உண்மையைக் கூறி விடுகிறேன் கேளுங்கோள் -நான் களங்கம் அற்றவன் -குற்றம் என்பதே என்னைப் பற்றி நிற்காது-ஒளியை இருள் பற்றி நிற்குமோ -ஆனால் நீங்கள் என்னிடம் குற்றம் இருப்பதாகப் பிரமிக்கிறீர்கள் -இல்லாத பழி என் மேல் சுமத்தப் படுகிறது –நீங்கள் நன்கு உணர்வது ஆராய்ந்து பார்த்தால் என் குற்றமின்மை விளங்காமல் போகாது -இத்தகைய நான் இனியும் ஏன் குற்றம் அற்று இருப்பதாக வாக்களிகக் கூடாது –

அநந்த கோபர் -இந்த வாக்கு அளிப்பதோடு வேறு ஒரு காரியமும் செய்யணும் -அதையும் ஒப்புக் கொண்டால் விடுக்கிறோம் –

கண்ணன் -அது என்ன கார்யம்

அநந்த கோபர் -நம்ம ஊரில் பெண்களை எல்லாரும் நோம்பு நோற்கப் போகிறார்கள் அன்றோ –

கண்ணன் -தனக்குள் -நம் நினைவு பலித்து விட்டது -வெளியில் -ஏன்

அநந்த கோபர் -மழைக்காக -மழை இல்லை என்பது கூட உனக்குத் தெரியாதோ

கண்ணன் -சிறையில் அடைபட்ட நான் இதை எப்படி அறிவேன் -பெண்கள் நோன்பு நோற்றால் நான் செய்ய வேண்டும் கார்யம் என்ன-

நீ அந்தப் பெண்களுடன் இருந்து நோம்புக்கு வேணுங்கர சாமான்கள் எல்லாமே சேகரித்துக் கொடுக்க வேணும் – இது தான் உன் கார்யம்

கண்ணன் -பெரியோர்களே -மன்னிக்க வேண்டும் -இக்காரியத்தை செய்ய முடியாதவனாக இருக்கிறேன் -பாவையர் முகம் பாராத போதே நான் பழி சுமந்தேன் -இனிப் பாவையர் முகம் பார்த்திடிலோ கேட்க வேண்டாமே –

இனி மேல் அவ்விதிப் பழி ஒன்றுமே வாராது ஏற்றுக்கொள்

தயவு செய்து இக் காரியத்துக்கு என்னை ஏவ வேண்டாம் -இதைத் தவிர வேறு ஏதாயினும் நான் செய்யத் தடையில்லை –

நீ இவ்விதம் பிடிவாதம் செய்தால் நாங்கள் என்ன செய்வது-உன்னுடைய அமுத கீத வலைப்பட்டு ஓடி வரும் பசுக்களாவது பசும் புல் வேண்டாவோ -விசும்பில் துளி வீழின் அல்லால் பசும் புல் தலை காண்பது அரிதன்றோ -நீ அழகிய கையால் குழல் கொண்டு ஊதின போது கறவைக் கணங்கள் பரவசமாகிக் கால்கள் பரப்பித் தலை கவிழ்ந்து தம் செவிகளைக் கூட அசையாமல் நின்று நினது அமுத கீதம் கேட்டுக் களிக்க வேண்டாமே -இதற்க்காகவாவது நீ இக் காரியத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் –

கண்ணன் -சரி உங்கள் நிர்பந்தத்துக்காக ஏற்றுக் கொள்கிறேன் -ஆனால் இனிமேல் என் மேல் பழி சுமத்தக் கூடாது -இது நான் உங்களுடன் செய்து கொள்ளும் கட்டுப்பாடு -சம்மதமா

எல்லாமும் சம்மதிக்கிறார்கள்

அநந்த கோபர் -இனி நாம் போகலாம் -கண்ணனை நோக்கி -நோன்புக்கு எவ்விதக் குறைவின்றிப் பார்த்துக் கொள் – எல்லாப் பொறுப்பையும் உன்னிடமும் தான் போட்டு இருக்கிறோம் –

கண்ணன் -அது தானே வேண்டுவது -எக் காரியத்தையும் பற்று அற்று என்னிடம் பொறுப்பாகத் தள்ளி விடில் அது எவ்வ்த்தைக் குறையும் இன்றி நிறைவேறுவதற்கு ஐயம் என்ன-

கோபர்கள் போகின்றனர்

கண்ணன் -ஆஹா எனது பாக்கியமே பாக்யம் -இவ் வூரார் மழை இல்லாமல் பரிதவிக்கின்றனர் -எனக்கு அது களிப்பூட்டு கின்றது -இப்பொழுது மழை பெய்திடில் என்னை இவர்கள் விடப் போகிறார்களா -ஏன் அவ் வனிதையரின் மதிவதனம் கண்டு மகிழுறக் கூறுவார்களா -அம் மடந்தையரின் தவப் பலனாகாத் தான் மழையின்றிப் போயிற்றுப் போலும் -ஐயோ என்னைக் காணாது அவர்கள் மனமுடைந்தார்களோ -என் மீது அன்பு கொடு உருகுமவர் மனம் மாறுபடில் இவ்வுலகம் வாழ முடியுமோ -ஆஹா என்ன ஆனந்தம் -நானும் அவர்களும் கூடிக் களிக்கும் காலம் கிட்டி விட்டது -இனி நான் இங்கு தாமதிப்பதில் பயன் இல்லை -கதிரவன் மறைந்தவுடன் உத்யானம் போக வேண்டும் -நான் அங்குச் சென்று எதிர்பார்ப்பதை எனது இன்னுயிர் நங்கைகளுக்கு என் தோழன் நற் செல்வன் மூலமும் அறிவிக்க வேண்டும் -இதோ நான் என் மணாட்டி நப்பின்னையுடன் உத்யானம் போகப் போகிறேன் -இது வரை எனக்கு இரவு தான் பல பல ஊழிகளாக இருந்தது -ஆனால் இன்றோ ஒரு பகலே பல பல ஊழிகளாக இருக்கிறதே -கதிரவன் ஏன் சோம்பேறியாக இருக்கிறான் -என்றும் இடுக்கண் இழைத்த நற் கங்குல் தான் இன்று மகிழுறும் மங்கள வேளை யாயிற்று -ஏ மங்களக் கங்குலே எங்கள் மனம் களிப்புற நீ நெடு நேரம் தங்க வேண்டும் -பகல் இத்தோடு ஒழியட்டும் -இனிப் பகலே வேண்டாமே -ஆஹா இத் உத்யாயனம் -குளிர்ந்த காற்று -நளிர் மலர்களின் ஸூ கந்தம் -மலர்ந்த செந்தாமரை போன்ற அம்மடந்தையரின் மந்த ஹாஸம் -என்ன சுகம் -நங்கைமீர் இம்மங்களக் கங்குலில் ஒரு க்ஷணம் கூட வீணாகக் கூடாது -இச் சோம்பேறி ஸூர்யன் தொலைந்ததும் உங்கள் முகமாகிற சந்திரன் என் முன் துலங்க வேண்டும் -வாருங்கள் வந்து களி கூறுங்கள்

செல்கிறார்

மூன்றாம் அங்கம் முதல் களம் முற்றிற்று

——–

மூன்றாம் அங்கம் -இரண்டாம் களம்
இடம் -ஸ்ரீ வில்லி நகர் வட பெரும் கோயிலுடையான் ஸந்நிதி
ஆண்டாளும் அவள் தோழிகளும் வருகின்றனர் –

ஆண்டாள் -தனக்குள் -கை கூப்பிய வண்ணம் ஆலிலையில் துயிலும் தூயோய் -நின்னையடைய நான் எத்தனை நாட்கள் தான் தவம் செய்வது-செய்யினும் என்னை யாளுடைய நின் மனம் கல்லினும் கடிதாயுளதே -நீ இலாது தனி யினி நான் இருக்க முடியாது -காரியவாகிப் புடை பரந்து செவ்வரியோடிய நின் கண்ணகம் கருணை மழை பொழிந்ததும் நீ வாளா இருப்பது விந்தையே -அல்லது நின் மனத்தின் கண் உள்ள கபடம் என்னும் விஷயத் தீயினாலோ நின் கண்ணகம் செந்நிறம் கொண்டதோ -முற்காலத்தில் ஜானகியைப் பெற வில் முறித்தும் அணை கட்டியும் வாள் அரக்கன் நீண் முடி பொடிப்படச் செய்தும் அரும் புகழ் கொண்டது வீண் கட்டுக் கதையோ -ருக்மிணிப் பிராட்டியாரை கபட நாடகம் நடித்து நீர் நீர் ஏற்றுக் கொள்ள வில்லையோ -ஆயர் தம் கொம்பினுக்காக ஆன் விடைகள் ஏழு அடர்க்க வில்லையோ -என் விஷயத்தில் மட்டும் வாளா இருப்பது ஏன் -இப்பொழுது உன்னை யான் அடைய ஒரு உபாயம் அனுஷ்ட்டிக்கப் போகிறேன் -இது தான் முடிவானது -இதற்கும் கருங்கல் போல் இரங்காது இருந்தால் அரங்கா என எனது உயிரை விடத் துணிவேன் -இதுவரை அரும்பாடு பட்டு சம்பாதித்த நின் புகழை இனி ஒரு நொடியில் பறக்கடித்து விடுவேன் -பெண் பழி வீணே போகாது –
சகிகளைப் பார்த்து-எனது இன்னுயர்த் தோழிகாள் -இப்பொழுது நாம் ஆய்ச்சியராக ஸர்வேஸ்வரனை வணங்குகிறோம் -ஏதும் அறியாத இடையர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனைப் பெறும் புண்ணியம் படைத்தனர் -இதனால் ஆரணம் காணா நாரணனுக்கு ஆயர்களிடமுள்ள அளவில்லா அன்பு வெளியாகின்றது அன்றோ -ஸ்ரீ மன் நாராயணன் தச அவதாரமும் மற்றும் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் -அவைகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரமே சீரியது என ஆன்றோர் கூறுகிறார் -அதற்க்கு காரணம் அவ் வவதாரத்தில் நம் போன்ற பேதையர்கள் துன்பம் முக்கியமாகக் கருதிப் போக்கடிப்பட்டது தான் -கிருஷ்ண அவதாரத்தில் ஆயிரக் கணக்கான ஆய்ச்சியர் உய்ந்து போயினர் -ஆகையால் பேதையரான நாம் உய்ய வேண்டில் அந்த அவதாரத்தில் தான் ஈடுபட வேண்டும் -ஆனால் அவ்வவதார காலமோ மிகவும் முந்தியது -அவன் வளர்த்த ஆய்ப்பாடியும் அதிக தூரத்திலே உள்ளது -அபலையாகிய யாம் அங்குப் போக பலம் ஏது -ஆகையால் நமக்கு ஒரே வழி தான் உள்ளது -கண்ணனைப் பிரிந்த துன்பம் தாங்க மாட்டாமல் கோபியர் அவனைப் போலவே நடித்து உயிரைத் தரித்துக் கொண்டனர் -அதே போல தான் நாமும் நடிக்க வேண்டும் -அங்கனம் செய்தால் நாம் கண்ணனைப் கலப்பது திண்ணம் -நமது ஸ்ரீ வில்லி புத்தூரே ஆய்ப்பாடி -பகவானைப் பார்த்துக் -இவ் வட பத்ர ஸாயியே கிருஷ்ண பகவான் -யாமே கோபியர் -இனி என்ன வேண்டும் -இது முதல் யாம் விடியற் காலம் எழுந்து மார்கழி நோன்பு நோற்க வேண்டும் -நீங்கள் எல்லோரும் விடிவோரையில் ஆயத்தமாய் இருங்கோள் –

ஒருத்தி -சகி நாம் உள்ளுணர்ச்சியின் எழுச்சியால் ஆய்ச்சியர் ஆவது தடையில்லை -ஆனால் வட பத்ர ஸாயியைக் கண்ணனாகக் கூறினாயே -அவன் கண்ணனாக எப்படிப் நடிப்பான்

ஆண்டாள் -நாம் உண்மையில் ஆய்ச்சியர் ஆயிடின் இவன் கண்ணனாக நடிப்பதற்கு ஐயம் என்ன-எனினும் யான் இப் பரம் பொருளை வேண்டிக் கொள்கிறேன்
கை கூப்பி பிரபோ -நான் வேதப்பட்டார் பிரான் புதல்வியாகி உன்னிடமும் உண்மையான அன்பு கொண்டவளாயின் எங்கள் கண் முகப்பே கண்ணனாகத் தோன்றி எங்களது நோன்பை நிறைவேற்றித் தந்து அருள வேண்டும் –
கீழே விழுந்து வணங்குகிறாள்

அசரீரி -கோதாய் நின் பக்தியை மெச்சுகிறோம் -எமக்கும் உனக்கும் இனி ஏதும் குறைவில்லை -உனது அபீஷ்டத்தைப் பூர்த்தி செய்வது எனது கடைமை –

ஆண்டாள் புத்துணர்வுற்று உருகும் நெஞ்சுடன்
ஆலிலைத் துயில்வாய் போற்றி
அருளலைக் கடலே போற்றி
பாலினும் இனியாய் போற்றி
பரம நின்மலனே போற்றி
சீலமில் இடையர் தீம்பில் சிந்தை நன்கு உகப்பாய் போற்றி
நாலு இரண்டு அறியா எங்கள் நாயக போற்றி போற்றி –

சகிகள் -ஆஹா என்ன ஆச்சர்யம் -என்ன ஆச்சர்யம் -அடியார்களிடம் என்ன பரிவு -எல்லாம் வல்ல இறைவன் எனது ஆண்டாளின் அன்பு வலை வாய்ப்பட்டு அவளிட்ட கட்டளைப்படி நடக்கிறேன் எனின் இதை விட என்ன ஆச்சார்யன் இருக்கிறது –

ஆண்டாள் -சகிகாள் நீங்களும் நமது நோன்பு நிறைவேறுமாறு இறைவனை இறைஞ்சுங்கள் -இறைஞ்சவே அவன் திருக்கண்களால் நாம் உண்மையாகவே ஆய்ச்சிமாராகவே திருந்தவே நோக்கி உமக்கு அருள்வன் காண்மின்

சகிகள் அவ்வண்ணமே செய்ய உடன் அவர்கள் எல்லாரும் உண்மையில் ஆய்ச்சிமாராகவே மாறுகின்றனர் – அக்கோயில் நந்தகோபர் அரண்மனையாகத் தோன்றுகிறது -ஸ்ரீ வில்லி புத்தூரை ஆய்ப்பாடியாகவே பார்க்கிறார்கள்

ஆய்ச்சியர் தலைவி -தோழிகாள் நாம் நாளை முதல் நோன்பு நோற்க வேண்டும் என்றும் -நமது பிராண நாயகன் அதற்கு உதவி செய்வான் என்றும் -அதற்காக அவனை விடுதலை செய்து இருக்கிறது என்றும் கூறினார்களே -விடுதலை பெற்றால் நமது பிராண நாயகன் எங்கே இருப்பான் -நாம் நமது பாக்யம் பலித்தது என்று அவனைத் தேடி வந்தது போலே அவனும் நம்மைத்தேடி வந்திருப்பானோ -அல்லது இவ்வளவும் பொய்யாய் இருக்கலாமோ –

ஒருத்தி -ஒருவேளை தன் பிராண நாயகி நப்பின்னை வீட்டுக்குப் போய் இருப்பானோ என்னவோ

தலைவி -ஆமாம் இருக்கலாம் -வாருங்கோள் நாம் அங்கேயே போவோம் -அவள் தான் நம்மை விட அவனுக்கு அதிகம் பிரியமானவள் அன்றோ -அவன் அங்கே தான் இருப்பான் -வாருங்கோள் போவோம்

எல்லாமும் போகும் பொழுது திடீர் என நற் செல்வன் வந்து -இன்று உங்கள் நாயகன் கண்ணன் விடுதலை பெற்றான் -நப்பின்னையுடன் அவன் இப்பொழுது தான் அவன் உத்யானம் செல்கிறான் -நீங்களும் அங்கு தவறாமல் வந்து விட வேண்டுமாய்த் தெரிவிக்கச் சொன்னான் -எல்லாரும் விரைவில் செல்லுங்கோள்

தலைவி புன்முறுவலுடன் -நற் செல்வ-நற் செய்தி கொணர்ந்த உனது உபகாரத்தை எங்களால் மறக்க முடியாது –

நற் செல்வன் -நான் என்ன உபகாரம் செய்தேன் -மேகம் செய்த உபகாரத்தை என்று கூறுங்கோள் -மேகம் மழை பெய்து இருந்தால் உங்களால் இப்பொழுது கண்ணனைச் சேர முடியுமா

தலைவி -ஆமாம் மழை இல்லாமல் போனது எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது -ஆனால் இனி மேல் மழை பெய்தால் தான் எங்களுக்கு நன்மை யுண்டு –

நற் செல்வன் -இனிமேல் மழை பொழிவதற்கு ஐயம் என்ன-எல்லாம் கண்ணன் சித்தம் -போய் வாருங்கோள்

நற் செல்வன் செல்கிறான்

தலைவி -தோழி காள் நப்பின்னையின் பாக்யமே பாக்யம் -நாம் அவள் பாக்கியத்தில் சிறிதளவாவது பங்கெடுத்துக் கொள்வோம் -போவோம் வாருங்கோள்

ஒருத்தி -தோழீ நாளை முதல் அவன் நன்மை விட்டுப் பிரிய மாட்டான் அன்றோ -நல்ல வேளையாக நமக்கு நோன்பு வாய்த்தது –

தலைவி -ஆம் நாளை விடிவோரை நாங்கள் எழு முன்பே நீ விரைந்து வந்து எங்களை எழுப்புவாயாக –

அப்படியே செய்கிறேன் -எங்கள் புழக்கடைத் தோட்டத்தில் ஆம்பல் வாய் மூடு முன்பே நான் எழுந்து உங்களை எழுப்புகிறேன் -நானாச்சு அதற்கு-

மற்ற ஒருத்தி -எதற்கு இவ்வளவு வாய் வீச்சு -தன் மாமி வீட்டு வேலை எல்லாம் செய்த பிறகு தானே நீ எழுந்திருப்பாய் -நாளை மட்டும் எப்படி ஆம்பல் வாய் மூடு முன்பே கூம்பு முன்பே எழுந்திருக்கப் போகிறாய் –

பாரேன் நாளைக்கு

தலைவி -இது தன் கார்யம் அன்றோ ஆகையால் முன்னரே எழுந்து இருந்து விடுவாள் -தோழீ இவள் வார்த்தையைப் பொய்யாக்க வேண்டும் -அதற்காகவாவது நீ முதன் முதலில் அவளையே போய் எழுப்பு –

அப்படித்தான் செய்ய வேண்டும் -அப்பொழுது தான் அவள் நம்புவாள்

திரைக்குள் குழலோசை கேட்க்கப் படுகிறது

தலைவி -ஆஹா கோவிந்தன் குழல் கொடு பொழிலிடையே அமுத கீத மொழி பொழிகின்றனன் -இவ்வமயம் அவ்வமுத கீத ரஸத்தால் அங்கே மரங்கள் நின்று மது தாரை பாயும் -மலர்கள் வீழும் -வளர் கொம்புகள் தாழும் -பாறையும் உருகும் -கண்ணுக்கும் காதுக்கும் விருந்து அளிக்கும் இவ்வரிய நேரத்தை விட்டு இங்கு நிற்கின்றோமே -சதிரான சமயம் இதுவே -வாருங்கோள் -ஓடி வாருங்கோள் -பணம் படைத்தும் அனுபவியாத லோபி போலே இவ்வமுத கீதத்தை அனுபவியாமல் நாம் இங்கு நிற்கலாமோ -ஓடி வாருங்கோள் –

எல்லாமும் பரபரப்புடன் மலர்க் கூந்தல் அவிழ்ந்து மயில் தொகை போல் தொங்க நெகிழ்ந்த உடைய ஒரு கையால் பிடித்துத் கொண்டு வேகமாகத் தோட்டத்திற்க்குச் செல்கின்றனர்

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யோல்கியோட  அரிக்கண் ஓட   நின்றனரே – 3-6-2- –

மூன்றாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று


மூன்றாம் அங்கம் மூன்றாம் களம்

ரெங்கராஜன் அரண்மனை -திருவரங்கம் –
ரெங்கராஜனும் கருடனும் பேசிக்கொண்டு இருக்கின்றர்

ரங்கராஜன் -நண்ப -என் கண்கள் பஞ்சடைந்து விட்டன-எதிரில் உள்ள வஸ்துக்களையும் கூட நான் பார்க்க முடியவில்லையே

கருடன் -அரசே அஞ்ச வேண்டாம் -பிஞ்சிலேயே அன்பு விஞ்சிய நெஞ்சினாளான அச் செஞ்சொலாளைத் தாங்கள் விரைவில் பெறப்போகிறீர்கள்

தினம் விரைவில் விரைவில் என்றால் என்ன செய்வது -ஒவ்வொரு நிமிடத்திலும் என் காதல் வேதனை கரை கட்டாக் காவேரி போல் பெருகிக் கொண்டே போகிறதே

பிரபு -அம் மங்கை தன் தோழிகளுடன் தங்களை அடைவதற்காக நாளைக்காலை முதல் மார்கழி நோன்பு நோற்கப் போவதாகக் கேள்வி -அதனால் தான் விரைவில் பெறப் போகிறீர்கள் -என்கிறேன்

சந்தோஷக் குறியுடன் -அப்படியா -என்னைப்போல் அவளும் காதல் கொண்டுள்ளாள் என்று சொல்லு

ஆமாம் -இதற்கு என்ன தடை

காதல் கொண்டால் தான் என்ன-எங்களுக்கு இடையே எத்தனையோ ஆறுகளும் ஊர்களும் காடுகளும் மலைகளும் குறுக்கே நிக்கின்றனவே -இவ்வளவையும் தாண்டி நாங்கள் எப்படி ஓன்று சேரப் போகிறோம் –

அரசே காதல் சங்கிலியால் தாங்களும் அம் மங்கையை கட்டுப்பட்டு இருக்கிறீர்கள் -இக்கட்டுதலை அவிழ்க்க ஆராலும் ஆகாது -அயஸ்ஸைக் காந்தம் இழுப்பது போல் உங்களில் ஒருவர் ஒருவரைத் தன்னிடத்துக்கு இழுத்து விடப்போவது திண்ணம் -அதில் சந்தேகத்தை விட்டு விடுங்கள்

என்ன நண்பா நீ செல்வது விந்தையாய் இருக்கிறதே -காதல் வேதனையையே ராணிக்கு மறைக்கக் கஷ்டப்படுகிறது -இந்நிலையில் அம்மங்கையைக் கைப்பிடிப்பதை எப்படிப் மறைக்க முடியும் –

தங்கள் சுதந்தரர் -தங்களை ராணி தடுக்க முடியுமோ

நண்பா அப்படிக் கூற வேண்டாம் -ராணி முகம் கோண என்னால் நடக்க முடியாத

ராணியே தங்கள் திருமணத்தை நடத்தி வைப்பாளே -பாருங்கோள்

ஏது

முதன்முதலில் அம்மங்கையின் தூதாக ஒரு தோழி அனுக்ரஹை வந்தாளே -அவளிடம் ராணியைப் புருஷகாரமாகப் பற்றும்படி நான் சொல்லி அனுப்பி இருக்கிறேன் –

நல்ல கார்யம் செய்தனை -உன் முன் யோசனை மிகவும் பாராட்டத் தக்கது

இனி ஸந்தேஹமே இல்லையே அவர்கள் நோன்பு பலிப்பதற்கு

ஆம் என் பாக்யம் பலிக்க ஸந்தேஹம் இல்லை -ஏன் நண்ப அம்மங்கையர் நோன்பு நோற்கின்றனரே -கண்ணன் வேண்டாமோ அதற்கு-

தங்கள் கண்ணனாகப் போகிறீர்களா

புன்னகையுடன் -அப்பாக்யம் யாருக்குக் கிடைத்து இருக்கிறதோ -யாருக்கேனும் கிடைக்கட்டும் -நாம் அந்நோன்பினை யாவது பாரத்தால் என்ன-நான் தான் அம்மங்கையை நேரில் காண்பது -நண்ப நீ கண்டிருக்கின்றாயே அப்பெண்மனையை -அவள் எத்தகையவள் -சிறிது கூறு -கேட்டு இன்புறுகிறேன்

மஹா ராஜா தங்களைக் கூடக் கலக்குகின்றானே காமதேவன் -அவன் அம்மங்கை தன்னிடமே தன் படைகளோடு தங்கு கின்றனன் -ஆகையால் தான் அவன் தங்களையே கலக்கும் பலம் பெற்று இருக்கின்றனன் –

நாண் இத்தலையில் வைத்தான் நளிர் முகப்புருவமாகும்
நீள் நெடும் சிலைகட்க்கு ஏற்ப நீல ஐம் படைகள் வைத்தான்
காண் அரும் மேனி வைத்தான் இடை தனில் கலவிச் செல்வம்
வேணனி வளர் மென் கொங்கை வைத்து மேலாக்கும் இட்டான்

இத்தகைய வனிதையின் வனப்பை நான் எவ்விதம் வருணிக்க முடியும்

நண்ப -நாம் இப்பொழுதே அங்கு போக வேண்டும் -அதற்குச் சாக்கிட ஒரு காரணத்தை யோசித்துப் பார்

திடீர் என்று விதூஷகன் அலறிக் கொண்டே ஓடி வந்து -ஐயோ ஐயோ மஹா ராசா -ரெங்கராஜன் காலண்டை வந்து விழுகிறான் –
பரபரப்புடன் என்ன சமாசாரம்

மஹா ராசா –உடல் நடுங்கி -ஒரு –ஒரு

சீக்கிரம் சொல்லித் தொலை சமாசாரத்தை

நடுங்கி -நான் –இல்லை –அங்கு ஒரு புலி

புலியா எங்கு-

நடுங்கிக் கொண்டே ஆமாம் நான்

அடக் கஷ்டமே இடத்தைச் சொல்லித் தொலை

அங்கே தான் மஹா ராசா

இது என்னடா எந்த இடத்தில்

கருடன் -புலி உன்னை எந்த இடத்தில் பார்த்தது –

புலி என்னைப் பார்க்கவில்லை -நான் தான் பார்த்தேன் -தப்பிச்சிண்டேன்

இது என்ன வேடிக்கை செய்கிறான்

ரெங்க -யாரடா -ஒரு சேவகன் வர -இவன் என்ன புலி கிலி என்கிறான் -உண்மைதானா போய் விசாரித்து வா

சேவகன் -ஒண்ணும் இல்லை புலி ஊருக்குள் வந்தது -அதைக் கொன்று போட்டாச்சு

சரி நீ போய் வா

செத்த புலிக்கா இந்தப்பயம்

சாகலை அது தூங்கரது

இது என்ன பரிகாஸம்

பரிகாஸம் இல்லை சத்யமாகச் சொல்லுகிறேன்

சேவகன் செத்துவிட்டது என்கிறானே

இவன் கிடக்கிறான் சோத்துப்புலி -அது குறட்டை விட்டுத் தூங்குகிறது -செத்துப்போச்சாம்

நகைத்து உன் வீட்டுக்கட்டிலிலா

ஆமாம் மஹாராசா -அது காட்டுப்புலி அல்ல வீட்டுப்புலி –

காட்டுப்புலிக்கா பயப்படுகிறவன்

கருடன் -நகைத்து -தன் மனைவியைச் சொல்கிறானோ

மனைவி இல்லை -வீட்டுப்புலி -அப்பப்பா அது நேற்று ராத்திரி எனது காதை என்னமாய்க் கடிச்சிட்டது -காதைப்பிடித்துக் கொள்கிறான் -நல்ல வேளை -இப்போ தூங்குகிற சமயம் பார்த்து தப்பிச்சு விட்டேன் –

ஏன் கடித்து விட்டது

நேற்று ராத்திரி அப்புலி எனது உதட்டைக் கடிக்க வந்தது -முத்தமாம் இது -அப்போ நான் சொன்னேன் -உதட்டைக் கடிக்காதே வேதம் ஓதும் வாய் எச்சிலாகி விடும் -அதற்கு இசைந்து உதட்டுக்குப் பதிலாக காதை-முத்தம் இல்லை -கடித்தது

கருடனும் ரெங்கராஜனும் சிரிக்கிறார்கள்

மாராசா -ஒரு விண்ணப்பம் வேதம் ஓதும் வாயை எச்சிலாக்காத பெண்ணை எனக்கு மணம் செய்விக்க வேண்டும்

நீர் பயந்தாங்கொள்ளி யாச்சே -உமக்கு யார் பெண் கொடுப்பது

நான் பயந்தாங்கொள்ளியா-அன்றைக்கு அந்தப்புலி சொல்லிற்று -புருஷர்கள் அனைவரும் பயந்தாங் கொள்ளி களே என்ன-நான் பயந்தாங் கொள்ளி அல்ல -உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இத்தனை நாள் இருந்தேனே -என்று நேரடியாகவே அவளிடமே சொன்னேனே

ஒரு பெண்டாடியிடமே இவ்வாறு ஆனால் இரண்டு பெண்டாட்டிகள் உனக்கா

ஏன் முடியாது -நாளைக்கே மொட்டை போட்டுக்கொள்கிறேன்

எதற்கு

அவர்கள் எனது முடியைப்பிடித்து ஆட்ட முடியாதே

ரெங்க -போதும் உனது ஓட்டை வாயை மூடிக்கோ -நாங்கள் பேசிக்கொள்வதை யாரிடமும் சொல்லக் கூடாதே –

கருடன் -தனக்குள் இவர் தமாஷ் நின்றும் விட்டது -வேறே என்ன சொல்லப்போகிறார் -இவர் பெண்மணியைப் பற்றித்தான் இருக்கும் -அதற்க்குள் வேறே வழியில் திருப்பி விடுகிறேன் -வெளியே பேசுகிறான் -மஹா ராஜா நாட்டில் காட்டு மிருகங்கள் மலிந்து விட்டன போலும் -நாம் —

ரெங்க -சந்தோஷத்துடன் ஆம் நண்பா நாம் வேட்டையாடும் சாக்கில் அவ்விடம் போய்ப் பார்த்துக் விட்டால் என்ன-

கெருடன் -தனக்குள் மறுபடியும் அந்தப் நினைவு–நல்லது -வெளியில் மஹா ராஜா அரசராகிய நீங்கள் அகாரணமாக அங்கு எப்படிப் போக முடியும் என்று யோசிக்கிறேன்

மாறு வேடம் பூண்டு செல்வோம் -எப்படியாயினும் அந்நங்கையைக் காண வேண்டும்

விதூ -நங்கையைக் காண வில்லையோ இன்னும்

நீ கண்டிருக்கிறாயோ

விதூ -ஆமாம் இதோ பாருங்கோ -கையை நீட்டி இதோ நம் கை

உன்னை வாயைப் பொத்திக் கொள்ளச் சொன்னேனே –

திரைக்குள் கிணீர் குரல்
நான் வேதப்பட்டர் பிரான் புதல்வியாகி நின்னிடம் அன்பு செலுத்துவது உண்மையாயின் -எங்கண் முகப்பே கண்ணனாகத் தோன்றி அருள வேண்டும்

விதூ -மஹாராஜா -இது என்ன-இது என்ன-நடுங்கி ராஜனண்டை ஓடி வருகிறான் –

கெருடன் -பயந்தாங் கொள்ளி -உட்க்காரு கீழே

ரெங்க -நண்ப இது என்ன யார் குரல் ஆதரம் பெருகுகிறதே -என்ன அன்புக்கனிவு -குளிர்ச்சி

கருட -வேறு யார் இப்படிப் பேச முடியும் -தங்கள் காதலி தான்

ரெங்க -பொருந்தும் பொருந்தும் -குயிலின் குரலும் குழந்தை மழலையும் இதற்கு நிகராகா -நண்ப இப்பெண்மணியை இப்பொழுது காண வேண்டும் -புறப்படு –எந்தத் புறப்படுகிறார் –

கருடன் -அப்பெண்மணிக்கு பதில் சொல்லுங்கோள்

அவள் என்ன பிரார்த்தித்தாள்

அரசருக்கு மதி மயக்கம் தலை மண்டி இருக்கிறது -அவள் நோன்புக்குத் தங்களை கண்ணனாக வாவது இருக்கும்படி பிரார்த்தித்தாளே

அவளை எங்கே

ஊரிலேயே இருந்து பிரார்த்திக்கிறாள் -அவள் பேச்சு பக்தி என்கிற தந்திக்கம்பி வழியே வந்து தங்கள் காதண்டை ஒலிக்கிறது -அவள் பிரார்த்தனைக்கு இணங்கிப் பதில் கூறுங்கோள் -போவோம்

ரெங்க -கோதாய் நின் பக்தியை மெச்சுகிறோம் -நமக்கு இனி ஒரு குறையும் இல்லை -உனது அபீஷ்டத்தை நிறைவேற்றுவது எனது கடைமை –

சிறிது நேரத்தில் மறுபடியும் குரல் கேட்கிறது –

ஆலிலைத் துயில்வா போற்றி அருளலைக் கடலே போற்றி
பாலினும் இனியாய் போற்றி பரம நின்மலனே போற்றி
சீலமில் இடையர் தீம்பில் சிந்தை நன்கு உகப்பாய் போற்றி
நாலிரண்டு அறியா எங்கள் நாயக போட்டி போற்றி –

ரெங்க -ஆஹா அம்மங்கையின் திருவாயில் நின்று பெருகும் திருவாசகச் செந்தேன் எவ்வளவு தித்திப்பாய் இருக்கிறது -இது இ எதிர்பாராமல் நான் பெற்ற பேறு

விதூ -மஹா ராஜா இன்று எனக்கு லட்டோடு சாப்பாடு போட்டிடணும்

கெருட-அரசே அம்மாதரின் திருமுகச் சேவையும் இன்று தான் தங்களுக்குக் கிடைக்கப் போகிறது –

ஆம் நண்ப எல்லாமே உனது உதவியால் தானே

விதூ -மஹா ராஜருக்கு கல்யாணம் நடக்கப்போகிறது -எனக்கும் ஒரு பெண்ணை -புலியை இல்லை -பல்லை இளிக்கிறான்

உனக்கும் இசைந்த பெண் அகப்பட வேண்டுமே

மஹா ராஜருக்கு மட்டுமே இசைந்து இருக்கிறாளோ அப்பெண்

ஆம்

மஹா ராஜரைப்போல் அழகாய் இருப்பாளோ

ஆம்

ஏன் ஐயா பொய் சொல்கிறாய் அவளுக்கும் இவர் போல் மீசை உண்டோ

உனக்கும் மீசை முளைத்த இசைந்த பெண்ணைத் தேடுவோம் -நீ வீட்டுக்குப் போ –

மஹா ராஜா நானும் வருகிறேன் -நோன்பு சாப்பாடு சாப்பிடுகிறேன்

அரசே இவனும் வரட்டும் -ஓட்டை வாய்

ரெங்க -விஷ்வக் சேனரிடம் சொல்லி விட்டு வா -நாம் வரும் வரை ராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு வா

கருடன் செல்கிறான்

விதூ -நீங்கள் கண்ணனாகப் போகிறீர்களா -வேஷம் போட்டுக் கொள்ளுங்கோ பார்க்கிறேன்

நான் இப்பொழுதே கண்ணனாகிக் கொள்ளுகிறேன்

விதூ -நீங்கள் மஹாராஜாரா -இல்லை போல் இருக்கே –

என்னை மஹா ராஜா என்று அழைக்கக் கூடாது-நான் கண்ணன் -நீ என் தோழன் நற் செல்வன் -நமது ஊர் ஆய்ப்பாடி -தெரிகிறதா

நான் மாப்பிள்ளை தோழனா -பலே -என் பாடு வேட்டை தான்

சரி போ நற் செல்வனாக வந்து சேர்
விதூஷகன் போகிறான்

எனது பிராண நாயகியின் நோன்பை -என் பாக்ய பலனை அனுபவிப்பதற்காக நான் கண்ணனாகி விட்டேன் -வில்லி நகரை ஆய்ப்பாடியாகத் தோன்றும்படி செய்து விட்டேன் -எனது தலைவியும் தோழிகளும் எனது அனுக்ரஹத்தால் ஆய்ச்சிகளாகி விட்டனர் -எனது அகடி தகடநா சாமர்த்தியத்தால் -வில்லிநகர் கிழவர்களிடம் ஆய்ச்சியர் நூற்கும் நோன்பை நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து விட்டேன் -விதூஷகன் நற்செல்வனாகி விடும்படி செய்தேன் -கெருடன் நப்பின்னை நாயகி யாகட்டும் -நான் நிலவரையில் அடைபட்டதால் பிரிந்து வருந்தும் உணர்ச்சியும் உண்டாகட்டும் அவனுக்கு -பட்ட மஹிஷிகள் நப்பின்னையாக வா என்றும் எப்படி அழைப்பேன் -நானும் ரெங்கராஜன் என்னும் உணச்சியை மறந்து கண்ணனாகி விட வேண்டும் -நோன்பு முடியும் வரை ஆய்ச்சியர் கோலத்திலேனும் கண்ணன் உணர்ச்சியோடாவது அவளை அனுபவிக்க முடியும் அன்றோ

மூன்றாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று
மூன்றாம் அங்கம் முற்றிற்று

————————————-

நான்காம் அங்கம் -முதல் களம்

அழகிய தாமரைக்குளக்கரை -விசித்திரமான பறை –
நப்பின்னையும் கண்ணனும் அதில் மறந்து இருக்கின்றனர்
இருவரும் மாலை தொடுத்த வண்ணம் சம்பாஷித்துக் கொண்டு இருக்கிறார்கள்

கண்ணன் -கண்மணி இன்று எவ்வளவு புண்ணிய நாள் -நாம் இருவரும் பிரிந்து எங்கி எதிர் பார்த்தது இந்நாளைத் தானே -பிரிந்து கூடுவதால் உண்டாகும் இன்பம் பெரிது தானே -நீயே கூறு -இன்று போல் என்றேனும் உனக்கும் இத் தகைய இன்பம் உண்டாகி இருக்கிறதோ

நப்பின்னை -பிராண பிரிய-தாகம் உள்ளவனுக்குத் தண்ணீரும் இனியது தானே -எப்போ எப்போ என்றும் எதிர்பார்த்துக் காதல் தாகம் கொண்ட நமக்கு இச் சேர்த்தி ஏன் இன்பம் பயக்காது –

கண்ணன் -நாம் கூடிக் களித்து விளையாடும் இச்சோலை நிச்சயம் இத்தனை நாட்களாக நம் வரவை எதிர் பார்த்து இருக்கும் -நீ என்ன நினைக்கின்றனை –

நப்பின்னை -நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் -வந்த விருந்தாகிய நாம் அருந்த வளைந்து அசைகிற கிளைகளாகிய கைகளால் அழைத்து அரிய பழங்களை ஈந்து நம் மனம் உகக்கச் செய்யும் இவ்வனம் நமது வரவை எதிர்பார்த்து இருந்தது என்பதில் ஐயம் என்ன-

கண்ணன் -ஆம் இவ்வனம் ஒரு பெரிய வள்ளல் போன்றது -வள்ளலைச் சார்ந்தோர் எள்ளளவேனும் வருந்த இடமும் உண்டோ -அதைப்போல் இவ்வனத்தைச் சார்ந்த எதைக் காணிடினும் அது வருந்தாமல் இருக்க அரும் தவம் செய்ததோ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது -பறவையினங்கள் தங்கள் கூட்டில் தம் பேடு குஞ்சுகளுடன் கொஞ்சிக் குலாவுகின்றன -இக்குளத்தில் சிறிய அலைகளால் அசையும் ஆம்பலில் மதுவுண்டு மதம் கொண்ட வண்டினங்கள் இனிய இசையுடன் அரசன் குமாரர் போல் ஊஞ்சல் ஆடுகின்றன -ஸ்தாவரங்களைப் பார் -என்ன ஆனந்தம் அவைகளுக்கு -பூங்கொத்துக்களாகிற கொங்கைகளையும் -தளிர்களாகிய அதரத்தையும் கண்டு காமுற்ற மரங்கள் தங்கள் கிளைகளாகிற கரங்களால் இம்மலர்க்கொடிகளாகிற மடமாதரை இறுகத் தழுவி மகிழ்கின்றன -இக்கொடி மடவாரும் இளங்காற்றினால் அசையும் மலர்களில் நின்றும் தேனாகிய ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்து கொண்டு இருக்கின்றனர் -பிரிந்து கூடும் நம்மை இக்கொடி மாது பூத்துப் புன் முறுவலால் பரிகாஸம் செய்கின்றன போலும் -இத்தகைய வனத்தில் ஆனந்தமில்லாத ஒன்றை நாம் காண முடியுமோ

நப்பின்னை -ஏன் ஆனந்தம் இல்லாதது ஒன்றுமே இல்லையோ -இத்தாமரைக் கொடியைப் பாருங்கோள் -எப்படி வாடி வதங்கி இருக்கிறது -இவ்வுலகில் ஓன்று இன்புறுவதுவும் மற்ற ஓன்று துன்புறுவதுவும் இயல்வே அன்றோ

கண்ணன் -ஆம் -ஆனால் இக்கொடி கதிரவனாகிய தமது கணவனைப் பிரிந்து வாடி வதங்குகிறது -விரஹிகளுக்கு சுவர்க்கத்திலும் சுகமில்லை -நீயும் நான்முகன் பிரிந்தநிலையில் -நேற்று வரையில் என்ன பாடு பட்டோம் -நீயோ நானோ நேற்று இச்சோலைக்கு வந்திருந்தால் –

உண்மை தான் -விரஹிகள் படும் துன்பத்துக்குக் கங்குகரை கிடையாதன்றோ -நீங்கள் கூறியபடி இப் பங்கயக் கொடி இவ்வுண்மையை நன்கு விளக்கிக் காட்டுகிறது –

இதே கொடி காலையில் கணவனைக் கண்டதும் மலர் முக மலர்ந்து வண்டு எனும் இருண்ட திலகம் அணிந்து களித்துக் கொளித்துக் காதலர் பிரிந்து கூடும் புணர்ப்பினில் உண்டாகும் யுணர்ச்சியை யுணர்த்தப் போகின்றது -என்னே உலக நிலை –

நாதா தாங்கள் கவி மரபினில் தோன்றிய கவி வாணர் போலே அழகாக வர்ணிக்கிறீர்கள் -இக்கொடி இப்பொழுது ஏங்கி நிற்கும் நிலையினை நன்கு வர்ணியுங்கோள் -கேட்டு இன்புறுகிறேன்

நன்கு கூறினை -கவி வாணர்கள் அரசர்களிடம் பரிசு பெறக் கவி இசைப்பார்கள் -அதே போலே நான்முகன் உன்னிடமும் பரிசு பெற ஒரு கவி கட்டுகிறேன் –

என்னிடம் என்ன பரிசை எதிர்பார்க்கிறீர்கள் –

நான் எதிர்பார்க்கும் பரிசு பெரியது -ஆனால் அது உனக்கு சிறுசே

அது என்ன சொல்லுங்கோள் -உங்களுக்கு இல்லாத எது எனக்கு மட்டுமே உரியதாய் உள்ளது

ஓன்று உண்டு -அது நீ இசைந்தால் மட்டுமே எனக்குக் கிடைக்கும் -கடல் மண் எல்லாமே சேர்ந்தாலும் இதுக்கு விலை யாகுமோ என்று சொல்லத்தகும் பெருமை வாய்ந்த செல்வம் அது –

அது எது என்று சொல்லுங்கோள் பின்னர் தான் நான் இசைய முடியும்

நீ இசைவதாக வாக்களித்தால் தான் நான் சொல்லுவேன்

என்னாலே முடியுமானால் இசையத் தடை என்

உனக்கு அது சிறுசு என்று முன்பே சொல்லி விட்டேனே

இசைகிறேன்

நான் கவி கட்டுகிறேன் -அது சுவை உடைத்தாயின் உன் தோள்களாகிய தங்கக் கொடி களால் என் அங்கத்தைக் கட்டி விட வேண்டும் -இது தான் நான் உன்னிடமும் எதிர்பார்க்கும் விலை யற்ற பரிசு

நாணிப் புன்முறுவலுடன் -அழகாய் இருக்கிறது -நல்ல பரிசை எதிர்பார்க்கிறீர்கள்

இப்பரிசுக்கு என்ன-இதை விட நான் உன்னிடமும் எதிர்பார்க்க வேண்டியது என்ன இருக்கிறது -இப்பரிசு பெற்றிடில் என் ஜென்மம் சபலமாகும் -நான் பிறந்தது அடலாயர் கொம்பினுக்கே தான்

நாணி முறுவலுடன் -பெண்கள் முதலில் தழுவுவது வழக்கமில்லையே

பாற் கடல் கடையும் போது பங்கயவல்லி பத்மநாபன் மார்பகத்தைத் தழுவ வில்லையா -இதோ காணும் கொடிகள் கொள் கொம்பினைத் தான் ஆலிங்கனம் செய்ய வில்லையா –

பங்கய வல்லியும் இங்குள்ள கொடிகளும் சுயம்வர காலத்தில் மட்டுமே தாங்களே கணவனைத் தேடித் தழுவிக் கொண்டாலும் -தழுவிய பின்னர் மாலும் இம்மரங்களும் இன்னும் தன்னங்கத்தில் தாங்குகின்ற தன்மையையும் கவனியுங்கோள்

உன்னையும் இப்பொழுது ஒரு சுயம்வரம் தான் நடத்தச் சொல்லுகிறேன்

ஆன் விடைகள் ஏழும் அடர்த்து நீங்கள் தான் என்னை சுயம் வரித்து இருக்கிறீர்களே –

பரிசு கொடுக்க இசைந்து இப்படி மறுக்கலாமா

ஓஹோ இதற்குத் தான் முன்பே வாக்களிக்கச் சொன்னீர்கள் போலும் -நல்லது -தங்கள் கவி சுவை உடைத்து இருந்ததாகில் நான் வாக்கு தவறக் கூடாது தான் – எதை விடத் தங்கள் கவி சுவை யுடைத்து இருந்தால் -அதைக் கூறுங்கோள்

நீ உலகில் எதை மிகச் சுவை யுடையதாகக் கருதுகிறாய்

தங்களைத் தான்

என்னை விட என் கவி சுவை யுடைத்தாய் இருந்ததாகில் பரிசு கொடுக்கிறேன் என்கிறாயோ

ஆம்

என்னை விட உனக்கும் மற்ற ஒன்றுமே ரசியாது என்பாயே

ஆம் ரசியாது தான் அது என் ஸ்வ பாவம்

மற்றக் கவிகளை விடச் சுவை யுடைத்தாய் இருந்ததாகில் என்றும் தான் கொள்ள வேண்டும்

மற்றக் கவிகள் எவை

உலகில் உள்ள கவிகள்

தங்கள் கவியை விட சுவையுள்ள வேறு ஒரு கவியை நான் சொல்லி விட்டால்

அப்பொழுது உனக்கு நான் பரிசு தருகிறேன்

புன்னகையுடன் என்ன பரிசு

உனக்கு என்ன வேண்டும்

தாங்கள் விரும்பிய பரிசு தான்

ஏட்டைத் திருப்பி விட்டனையோ

ஆமாம் இப்பொழுது பரிசு பந்தயமாகி விட்டது

நமது கவிகளில் இது அதிகச்சுவை யுடைத்து என்று தீர்மானிப்பவர் யார்

எவ்விதத்திலும் ஒத்த நம்முடைய அந்தராத்மாக்கள் தான்

தோல்வியுற்ற பின்னர் நான் மாட்டேன் வெட்கமாய் இருக்கிறது என்று இப்பொழுது போல் பின் வாங்கக் கூடாது –

புன்னகையுடன் தோல்வியுற்றால் பின் வாங்க வில்லை

மட்டார் குழலாள் இம்மலர்க்கொடி
மொட்டால் நின் தனம் ஓக்க முயன்றும்
வட்டாய் நின் முக மாண்புற்றிடவும்
எட்டாமை யினால் ஏங்கு கின்றதால்

நாணித் தலை குனிந்து -நன்கு வருணிக்கிறீர்கள் –

இக்கொடி ஏங்குவதற்கு இதைவிட என்ன காரணமுள்ளது

இதன் தன்மையைத் தான் வர்ணிக்கக் கூறினேன் -என்னை இதில் பிணைப்பான் என்

நீ வருணி கேட்ப்போம்

நான் இவ்வருணனையில் பிணைக்கப் போவதில்லை தங்களை

புன்னகையுடன் வருணனையில் எண்ணெய் பிணைக்க வேண்டாமே –உன் இரு

கோபக்குறியோடி பார்த்துத் தலை குனிகிறாள்

ஒரு கையால் நாடியை உயரத்தி-என் ஆசைக் களஞ்சியமே -இதற்கு என்ன கோபம் -நான் கூறியதில் என்ன குற்றம் இருக்கிறது -நடவாத அல்லது நடக்கப் போகாத எதை யாவது சொல்லி விட்டேனா

தங்கள் பரிஹாஸத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது

இப்படிக் கோபித்துக் கொண்டு விட்டால் நான் பந்தயத்தை மறந்து விட மாட்டேன் –

ஓஹோ தாங்கள் ஜெயித்து விட்டதாகவே கனவு காண்கிறீர்கள் போலும்

நான் ஜெயிப்பதற்கு ஐயம் என்ன-உனக்கு முடியுமானால் தான் இதற்குள் பதில் கவி கூறி என்னை ஜெயிக்கத் துணிந்து இருப்பாயே

என்னாலே ஜெயிக்க முடியாதா பார்ப்போமே -கேளுங்கோள் எனது பாட்டை

களங்க மதி தீண்ட வரக்கரம் விரித்தே
கணவனு மேல் திசை மாது தன்னைச் சேர
வள மிகு தேனெனும் செல்வம் கொள்ளை கொண்டே
வண்டினம் தம் பெண்டிரோடு குமுதமேக
இளங்கமல முகம் வாடி ஏங்கி நிற்கும்
இக் கொடியை வாவி எனும் பாவி யந்தோ
உளம் உருக வரு திரையாம் கரங்களாலே
உந்தி வெளி தள்ளு நிலை பார்க்க ஒணாதே

ஆஹா வெகு அழகு

நாதா இக்கவி தங்களுக்கு சுவை ஊட்டுகின்றதா

என் இன்னுயிர் மானே -இதற்கு என்ன தடை -கலவிப் போரில் நினது இனிய அதர மதுவும் குழறும் மழலைச் சொற்களும் போல புலமைப் போரிலும் உன் கவிச்சுவை ஈறில இன்ப வெள்ளத்தில் என்னை மூழ்கும் படி செய்து விட்டது

நாதா இப்பொழுது யார் வென்றவர் -நீங்களே சொல்லுங்கோள்

நீ தான் -தோற்ற நான் பந்தயத்தை இப்பொழுது நான் நிறைவேற்றுகிறேன் –

புன்முறுவலுடன் -பந்தயம் நிறைவேற்றுவது இருக்கட்டும் -என் கவி சுவை யுடைத்தாயின் என் காதிற்கு இன்பம் பயக்கும்படிக் குழலூதி இன்னிசை யமுதம் பரிசு அளியுங்கோள்

நின் தேனூறும் திருவாயில் நின்றும் தோன்றும் ஒரு வாசகமேனும் வெளிவரின் என் குழலோசை செவிகட்கு நாராசமே யாம் அன்றோ -அதை ஊதுவான் என்

நாதா நெடு நாளாக நான் தங்கள் குழல் இசையில் நசை கொண்டேன் -இன்று நாம் தனித்துக் கூடியும் இதை நான் பெறா விடில் ஏன் பாக்யத்தை என்ன என்பேன்-

பேதாய் என் குழலோசை கேட்பது பாக்ய பலன் என்று கருதுகிறாயோ

ஆம் அதற்கு என்ன தடை

நீ தான் குழலை வென்ற குளிர் வாயினள் ஆயிற்றே -பின்னை ஏன் என் குழலை மெச்சுகின்றனை –

நாதா நின் செந்தாமரைக் கண்கள் மிளிரக் குழலூதி இசை பாடினால் அவ்வழகும் இசையும் கண்டு நான் உளன் மகிழ்வேன் –

ஆகில் அப்படியே செய்கிறேன்
கண்ணன் குழலூதுகிறான்
நப்பின்னை உளமுருகிக் கண்கள் நீர் பனிப்ப இமை கொட்டாமல் அவ் வழகையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள்-

சிறிது நேரம் கழித்து -கண்மணி இது என்ன-தன்னை மறந்து என்ன யோசிக்கின்றனை

திடுக்கிட்டு -பிராணேச தாங்கள் என்னருகே இருக்கும் போது எனக்கு யோஜனை ஏது -தங்கள் கீதம் கேட்டு உருகி எழுது சித்திரம் போல் ஆயினேன் –

திரைக்குள் பாத சிலம்பொலி கேட்க்கின்றது

நாதா எங்கோ காலடி சப்தம் கேட்க்கின்றதே

காது கொடுத்து -ஆம் இப்பொழுது யார் ஈண்டு வருவது –

நாதா நீங்கள் தானே சிறிது நேரத்துக்கு முன்பு நற் செல்வன் மூலம் என் தோழிகளுக்கு இங்கு வரத் தெருவித்ததாகச் சொன்னீர்களே -அவர்களாய் இருக்கலாம் -அதற்குள் மறந்து விட்டீர்களே

ஆம் மறந்து விட்டேன் -அம்ருதம் நிறைந்த அதரம் தரித்த நினது மதுரத் திரு முகத்தை கண்டு இவ்வுலகையே நான் மறந்து விட்டேனே -இதில் என்ன ஆச்சர்யம்

தலை குனிந்து நயம் படப் பேசுவதை மட்டும் மறக்க வில்லை போலும்

அவர்கள் தான் வருகிறார்களா என்று பார்

எழுந்து பார்த்து-ஆம் நாதா அவர்கள் தான்-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யோல்கியோட  அரிக்கண் ஓட   நின்றனரே – 3-6-2- –

நும் தோழிகள் தானே வருகின்றனர் -நாம் மறைந்து கொண்டு சிறிது வேடிக்கை பார்ப்போமா

நாதா இது தகாது -எத்தனையோ நாட்களாகத் தங்களைப் பிரிந்து வருந்திய இம்மான் விழியினரை நாம் ஏன் ஒளிந்து பரக்க பரக்க விழிக்க வைக்க வேண்டும் –

பேதாய் பிரிவாற்றாமல் படும் பாட்டை நேரே கண்டால் நமக்கு வேட்கை அவர்கள் மீது மீதூறும் அன்றோ

இனி வேட்கை மீதூறுவதாவது -உங்கள் காதல் தான் கடலின் மிகப்பெரியதாய் இருக்கிறதே

ஆயினும் அம்மான் விழியினரின் பயந்து வெருண்டு மருளும் கண்களின் அழகை இப்பொழுது தானே காண முடியும்

தாங்கள் கண்ணழகை காமுறுகிறீர்கள் -அவர்கள் பாடு என்னாகும் -முடிந்ததே விடுவார்களே

முடியும் வரை நாம் பார்த்து இருப்போமோ -வா ஒளிந்து கொள்வோம்
கண்ணன் எழுந்து கையைப் பிடித்து எழுப்ப இருவரும் பாறையடியில் குதித்து ஒளிந்து கொள்கின்றனர்

ஆய்ச்சியர் வருகின்றனர்

தலைவி -சகிகாள் -அவர்களைக் காணோமே -என் செய்வது

ஒருத்தி -அவர்கள் நன்மை ஏமாற்றி விட்டனர் -நாம் வீடு திரும்புவதா

மற்ற ஒருத்தி -அவர்கள் அவ்விதம் செய்திருக்க மாட்டார்கள் -ஏமாற்ற இதுவோ தருணம்

தலைவி -அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் -அதிலும் நம் தோழி நப்பின்னை வராமல் ஏமாற்ற இடம் கொடுத்திருக்க மாட்டாள் -மேலும் நாம் குழலோசை கேட்டது பொய்யோ -நீங்கள் தேடிப் பாருங்கோள் -அவன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு தான் இருப்பான் –

ஆம் நம் தோழி கூறுவது உண்மை -நம்மைத் தனியே விட்டு சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது அவன் வழக்கம் தானே

நீங்கள் ஆங்காங்கு சென்று தேடிப்
பாருங்கோள்

எல்லாமும் தேடச் செல்கின்றனர்

தலைவி -பெரு மூச்செறிந்து -ஐயோ இத்தனை நாட்களாக கிழடுகள் செய்த இடையூறுகளால் துன்பப்பட்ட நான் இன்று அத் துன்பம் மறைந்தது என்று உள்ளம் மகிழ்ந்தேனே -நற் செல்வன் செஞ்சொல்லைக் கேட்டதும் முன் இருந்த நிலையெல்லாம் மறந்து எனக்கு என்ன களிப்பு -என்ன பூரிப்பு -எத்துணை கர்வம் –அக்களிப்பும் பூரிப்பும் கர்வமும் என்னை விட்டு எங்கு தொலைந்தன-ஐயோ நான் எண்ணி இருந்தது என்ன -நான் கட்டின பிரமாண்டமான மனக்கோட்டை ஒரு நிதியில் தகர்த்து எறியப்பட்டதே -அவன் குழலோசை கேட்டு குதூ ஹலித்து ஓடி வந்தேனே -இவ்வளவு ஆசை காட்டி அவன் மோசம் செய்துவிட்டானே -முழுதும் தான் தேடி விட்டோமே -இனி என் தோழிகள் எங்கே காணப் போகிறார்கள் -அவன் மனம் கல்லினும் கடிது போலும் -இனி என்னால் நடக்கவும் முடியாது-அவனைக் கண்டால் ஒழிய நான் இங்கு விட்டு எங்கும் போகேன் -மாமிமார் வந்து அழைத்திடினும் நான் போகப்போவது இல்லை -நாணி இனி ஓர் கர்மமும் இல்லை -அவன் முகத்தன்றி விழியேன் -இதோ தெரியும் பாறை மீது உட்க்கார்ந்து கொள்கிறேன்-

சில அடிகள் நடந்து கீழே உற்று நோக்கி -ஆஹா கண்ணன் இங்கே வந்தே உள்ளான் -இங்குத் தான் சகிகள் வரவில்லையே -ஆனால் காலடி காணப்படுகிறது –
மேலும் சிறிது உற்று நோக்கி -ஆம் -அவன் தான் வந்துள்ளான் -சங்கு சக்கரம் முதலிய திருவடி ரேகைகள் துலங்குகின்றன –
மற்றுமோர் அடியும் காணப்படுகிறது -அது நப்பின்னையதாய் இருக்கலாம் ஆம் நப்பின்னையது தான் -பின்புறம் பள்ளமாயும் முன்புறம் உயர்ந்ததாகவும் காணப்படும் இவ்வடி தேர்த்தட்டு போன்ற பிற்றட்டு வாய்ந்த அவளுடையது தான் என்பதில் ஐயம் இல்லை -அவ்விருவரும் தனித்து இவ்விடம் வந்திருப்பது உண்மை –
இவ்வடி வழியே சென்றால் நான் அவர்களைக் கண்டு பிடித்துக் கொள்ளலாம் –

அவ்வடி வழியே சென்று பாறை ஏறி –ஆஹா இதை விட அவர்கள் வந்ததிற்கு வேறு என்ன அடையாளம் வேண்டும் -அவர்கள் இருவரும் இப்பாறையில் தான் மாலை தொடுத்துக் கொண்டு இருந்தனர் போலும் -ஆஹா அவர்கள் இருவரும் தனித்தனியே தொடுத்த மாலைகளை எனக்காக இங்கு வைத்து விட்டு போயிருக்கிறார்கள் போலும் –

அம்மாலைகள் இரண்டையும் எடுத்து ஒன்றாக முடித்துக் கொண்டு
ஐயோ நான் எவ்வளவு பாக்யமற்றவள்
கண்களில் நீர் வடிகிறது
இம்மாலையை என் பிராணநாதன் அன்றோ கழுத்தில் அணுவிக்க வேண்டும் -ஐயோ நானாகவே அணிந்திட வேண்டும் –
மாலையை அணிந்து வானம் நோக்கி
எனது இன்னுயிர்த் துணைய ய் நீ எங்கே சென்று மறைந்து கொண்டனை -இது காறும் உள்ளே உருகி நைந்து வருந்திய நான் இன்று என் பாக்யம் பலித்தது என்று எண்ணி இருக்க நீ இங்கனம் சோதனை செய்யலாமோ -உன் விளையாட்டு வெகு அழகாய் இருக்கிறது -என்னால் முடிந்த மட்டும் தேடிப் பார்க்கிறேன் -கண்டால் நல்லது -இல்லையானால் இங்கேயே நான் முடிவேன் -நீ இல்லாமல் தனித்து இனி நான் வீடு திரும்பப் போவதில்லை -இது உறுதி-

பாறையின் ஓர் புறம் இறங்கி அங்குக்காணாமல் வேறிடம் சென்று அங்கும் அடிகளைக் காணாமல் மரம் செடி புதர்களிலும் அவர்களைக் காணாமல் பாறை ஏறி
இது என்ன விந்தை -சிறிது நேரத்துக்கு முன்பு குழலோசை கேட்டது -இன்னும் அவர்கள் இங்கு வந்ததற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன -இருந்தாலும் காண முடியவில்லையே -இங்கிருந்து அவர்கள் மந்திரத்தால் அந்தரத்தில் மறைந்து விட்டனரோ -பல நாள் மழையின்றி வெயிலால் வாடிய கொடி முகிலொலி கேட்பது போல் நற் செல்வனுடைய இனிய சொல் கேட்டேன் -ஆனால் நப்பின்னை மின்னலுடன் அம்முகில் எங்கோ சென்று விட்டது -இஃது என் ஊழ் வினைப்பயன் போலும் -இனி என் சகிகள் கண்டால் தான் கண்டது -நான் அவர்கள் அமர்ந்த இப்புண்ணிய பாறையில் உட்க்கார்ந்து கொள்கிறேன்
உட்க்காருகிறாள்

நப்பின்னையும் கண்ணனும் ஒளிந்த இடத்திலிருந்து பார்கின்றனர்

நப்பின்னை -நாதா உங்களுக்கு இது நியாயம் இல்லை -ஐயோ என்ன பாடு படுகிறாள் -இவள் தாபம் தணிய உங்களது தர்சநம் கொடுங்கோள்

மான் விழியாய் நின் தோழியின் மிரண்டு இருண்ட கண்களின் அழகை இப்பொழுது பார் -இந்த வாவியில் பாய்ந்தோடும் கயல்களால் மிளிரும் குவளைகள் தான் இவள் கண்ணுக்கு நிகராகுமா -இவளுடைய அகன்ற கண்ணகத்தில் கண்ணீர் அலமருகின்றதைப் பார் -இந்நிலையை வாழ்த்துக் கூறி பார்த்து இருப்பதா-அல்லது தர்சனம் கொடுத்துக் கலைத்து விடுவதா -நீயே கூறு

தலைவி -பெரு மூச்செறிந்து இரக்கமேலொன்றும் இலாதாய் -உலங்குண்ட விளங்கனி போல் என் உள் மெலியப்புகுந்து என்னை ஏன் வாதை செய்கின்றனை

கண்ணன் -என் இளங்கிளியே -உன் தோழி என்ன சொல்கின்றனள் -கேட்டனையா -அவள் என்னை இவ்வளவு கடிந்து கூறிடினும் அதுவும் எவ்வளவு மதுரக் கொழுஞ்சாறாய் இருக்கிறது பார் -மென் கிளி போல் மிக மிழற்றும் சொற்களில் சினம் கலந்தாலும் ஓர் இனிமை தான்

தலைவி -ஆஹா கஷ்டம் என்றால் கடிதில் தொடரும் போலும் -நாம் அவனை மறந்து சிறிது வருத்தம் இல்லாமல் போம் என்றால் முடிகிறதா -கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் நீங்களுமா என்னைப் பாதிக்க வேண்டும் -நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் –அந்தக் கள்வனின் உரு ஒளிக்காட்டி என்னை நீங்கள் துன்புறுத்துகிறீர்களே -எதற்க்காக -எனக்கு உய்யும் வழக்கொன்று உரைக்கக் கூடாதா –

நப்பின்னை -நாதா தங்களுக்கு இரக்கம் இல்லையா -அரி சினத்தால் பெற்ற தாய் அகற்றிடினும் அவள் தன் பாலமுதத்தை நினைந்து தவழ்ந்து தளர் நடை வந்து காலைக்கட்டி அழும் குழந்தையின் குரல் போலே இவளது தினக்குரல் மனதை உருக்குகின்றதே

நங்காய் இவளது உண்மை அன்பு உள்ளத்தை உருக்குகின்றது தான் -எனினும் சிறிது பொறுத்து இன்ப மூர்த்தியான இவளைச் சேருவோம்

தலைவி -ஐயோ எங்களுக்கும் மெய்யனல்லாத உன் தன் பொய்யைக் கேட்டு நான் ஏன் வந்திருக்க வேண்டும் -என்னை வருக எனக் குறித்திட்டு ஏன் நீ மறைந்தாய் -இற்றை இரவிடை என்னை நீ அகன்று போனால் என்றும் என் பக்கம் வரக்கூடாது -இது உறுதி

கண்ணன் -தனியாக -என்னால் எப்படி அகல முடியும்

தலைவி -ஓ கொடிய கடிய போட்கனே -நீ இப்பொழுது இல்லாமல் வேறு எப்பொழுது வந்தாலும் பயன் என்ன-நீ என்னை ஏற்றுக் கொள்ள விரும்பா விடினும் என் முகம் நோக்கிப்போ என விடை தந்தாலும் அதுவும் மிக நல்லது -முடிந்து இடர் தீரவாவது அப்பொழுது முடியும் –

நப்பின்னை -இனி தாங்கள் அரை நிமிடமும் தாமதிக்கக் கூடாது -அவளது தாபத்தைச் சீக்கிரம் தணியுங்கோள் -இல்லை எனில் நான் போய் தாங்கள் இருக்குமிடத்தை யவளுக்குக் காட்டி விடுவேன்

கண்ணன் -ஆம் இனி நாம் தாமதிக்கக்கூடாது –

தலைவி -ஐயோ என்ன கஷ்டம் -இப்பஞ்ச மஹா பாதகர்கள் சேர்ந்து என்னைப் படுத்தும் பாட்டை நான் எப்படி தரிப்பேன் -இப்பாதகர் களுக்கு என் பெரு மா மாயன் நிறம் எப்படிக் கிடைத்தது -என்னைத் துன்புறுத்துவதற்காகவே அந்தப்புறம் போலே உள்ளும் கரியான் தன் நிறத்தை இப்பாதகருக்கு ஈந்தான் போலும்-

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

அந்தோ நீங்கள் நாழிகை கூறிட்டு முறை வைத்து இவ்வேழையைத் தகர்த்துகிறீர்களே -இவ்வேளையில் என்னைத் தகர்த்வதற்க்கு கருவிளையின் முறை போலும் -நன்று நன்று -தீமை செய்யும் தலைவ-இனியும் எவ்வளவு தான் தீம்பு செய்யப் போகிறாய் -பார்ப்போம் -இப்படியாவது உயிரை விடுவனே தவிர இதை விட்டு இனி புரையும் பெயர கில்லேன்

கண்ணன் -மெல்ல தலைவியின் பின்னண்டை வந்து கண்ணைப் பொத்துகிறான்

தலைவி -திடுக்கிட்டு யாரது

பதில் கூறாமல் இருக்கிறான்

பதில் சொன்னால் பவள முத்து உதிர்ந்திடுமோ -விளையாட இது தான் தருணமோ

தனது ஸ்வரத்தை மாற்றிக்கொண்டு -நான் தான் -இது தான் விளையாடத் தருணம்

தனக்குள் -இது யார் குரல் -தெரிய வில்லையே -வெளிப்படையாக -விளையாடுவதற்கு நல்ல தருணம் பார்த்தாய் -நீ யார் -உன் பெயரைச்சொல்லு -நான் தான் என்றால்

கண்ணன் -நீ யார் என்றால்

தலைவி -கடும் சினத்துடன் -இது என்ன-புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை -இப்படிக் குறும்பு செய்யும் நீ யார் -விடு முதலில் உன் கையை-
தனக்குள் -யாராக இருக்கக்கூடும் -நம் தலைவன் தீண்டும் உணர்ச்சி உண்டாகிறது -சினத்தை வரவேற்பினும் மனம் இடம் தரவில்லையே

கண்ணன் -குறும்பு செய்யும் நான் குறும்பன்

தலைவி -போதும் போதும் நின் கையை விடு
தன் கையால் அவன் கையை எடுக்கிறாள்

கண்ணன் கையை விட்டுப் பாறை அடியிலே குதித்து ஒளிந்து கொள்கிறான்
தலைவி கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து கீழ் இறங்கித் தேடுகிறாள்
இதற்குள் ஆய்ச்சியர் கண்ணனைக் காணாமல் வருத்தத்துடன் திரும்புகின்றனர்

நாங்கள் எங்கும் தேடினோம் -காண வில்லன் -என்ன செய்வது

நான் இப்பாறையில் உட்க்கார்ந்து இருக்கும் பொழுது யாரோ எனது கண்ணை வந்து பொத்தினார் -நான் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒளிந்து கொண்டுவிட்டார் -ஒரு வேளை அவரே கண்ணனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் -அவ்வித உணர்ச்சி எனக்கு உண்டாயிற்று -ஆகையால் நாம் இங்கேயே நன்கு தேடுவோம் -வாருங்கள்

நப்பின்னை -எங்கே கீழே குதித்த என் நாதனை -சுற்றும் பார்த்தும் காணாமல் -ஓஹோ அவன் என்னையும் ஏமாற்றி விட்டனன் போலும் -எனது தோழிகள் இங்கே தேடி வருவதற்கு முன்பே நானே இவர்களிடம் சென்று உண்மையைக் கூறுகின்றேன் -ஆய்ச்சியரிடம் செல்கின்றனள்-

கண்ணன் -முன்பு ஒளிந்திருந்த இடம் வந்து -என் பிராண நாயகி தனது தோழிகளிடம் போய்விட்டாள் -அவர்களை ஏமாற்றுவதை இவள் மட்டுமே பார்த்திருந்தாள் அன்றோ -இப்பொழுது இவளையும் ஏமாற்றுகிறேன் -எனது பிராண நாயகியை எனது கையால் அலங்கரிப்பதற்க்காக அவளது அணி ஆடைப்பெட்டியை அவளும் அறியாமல் இங்கே கொண்டு வந்திருக்கிறேன் அன்றோ -அவற்றைக் கொண்டு நானே பெண் வேடம் பூண்டு இவேந்திழையார் குழாத்துடனே நுழைந்தே இவர்களை ஏமாற்றுகிறேன்
அவ்வண்ணமே செய்து கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொள்கிறான்
ஆஹா மிகவும் எனக்குப் பெண் கோலம் பொருத்தமாய் இருக்கிறது -நான் கண்ணன் தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறதே -எனது சவுந்தர்யம் என்னையே மயக்குகின்றதே -இவர்களை ஏன் மயக்காது
மெல்ல மறைந்து வந்து பெண்களை கூட்டத்துடன் கலந்து கொள்கிறான்

தலைவி -நப்பின்னையைக் கண்டு -தோழீ இஃது என்ன கார்யம் -வேலால் துன்னம் பெய்தால் போல் நீ இருந்தும் அவனை அல்லல் விளைவிக்க வைத்தனையே -உள்ளே உருகி நைவேனை உளாளோ இலளோ என்னும் நிலையிலும் முகம் காட்டாத அக்கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை எங்கே -என்னை சற்று முன்னர் கண்ணைப் பொத்தியது யார்-

நப்பின்னை -தோழீ நான் அல்லல் விளைவிக்கச் செய்வேனோ -நான் வேண்டாம் என்று மறுத்தும் அவன் நீ படும்பாட்டை மருந்து பார்த்துக் கொண்டு இருந்தனன் -இனி இறைப்பொழுதும் முகம் காட்டாமல் இருக்கக் கூடாது என்று நான் வற்புறுத்திய போது அவனே வந்து நின் கண்ணிப் பொத்தினன் -திரும்பி பாறையடியில் குதித்தவன் எங்குச் சென்றனனோ -காணோம் -அவன் என்னையும் ஏமாற்றி விட்டான்

தலைவி -தோழீ இது என்ன மாயம் -இனி என்றும் இவ்விடம் வாரோம் -அவன் நமக்கு ஆராவமுதம் போல் தோன்றினாலும் பனியால் உள்ளுறையும் நெருப்பை மறைக்கும் இச்சந்திரிகை போலே உள்ளூர வேம்பேயாக வளருகிறான் -ஆனாலும் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாதது போல் அவனை அன்றி நம் மனம் பிறிது ஓன்றைக் கனவிலும் கருதுவது இல்லையே -நாம் என்ன பண்ணுவோம் -நம்மைப் போலே அவனும் இருந்தால் தானே -பொய் சொல்லி ஏமாற்றுவதே அவனது ஸ்வ பாவமாயிற்று –

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3-

கண்ணன் -தனியாக தன் தலையை அசைக்கிறான்

நப்பின்னை -ஆம் சகி -கூடவே இது வரையிலும் இருந்த என்னையும் உங்களைப்போல் அவன் ஏமாற்றி விட்டானே -அவனை எப்படி நம்புவது –

ஒருத்தி -நப்பின்னையை நோக்கி -நீங்கள் ஒளிந்து இருந்த இடம் எது -ஒரு வேளை அவன் இப்போதும் அங்கேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்கிறானோ என்னவோ

தலைவி -ஏது -ஒருக்காலும் அவன் அங்கு இருக்க மாட்டான் -அங்கு இருந்து தானே நம் தோழி நப்பின்னை வந்து இருக்கிறாள் -எனினும் அவன் அமர்ந்த அவ்விடத்தைக் கண்டாவது சிறிது களிக்கலாம் -போவோம் வாருங்கோள்

நப்பின்னை முன் செல்ல எல்லோரும் அவர்கள் ஒளிந்து இருந்த இடம் செல்கிறார்கள் –

கண்ணன் -வேறாக நின்று-ஆஹா இக்காட்சியே அழகான காட்சி -என்னைத்தேட என் கூடவே இருந்த நப்பின்னை செல்கிறாள் -இப்பெண்களோ பாவம் கூடவே கலந்து வரும் என்னைக் கூடத் தெரிந்து கொள்ளாதபடி அவ்வளவு சித்த்ப்ரேமை கொண்டிருக்கிறார்கள் -என்னை நானே கண்ணன் தானா என்று சந்தேகிக்கும் போது இவர்கள் என்னை எங்கனம் தெரிந்த கொள்ளப் போகிறார்கள் –
மறுபடியும் கூட்டத்தோடு கலந்து கொள்கிறான்-

நப்பின்னை -நாங்கள் இங்கே தான் ஒளிந்து கொண்டோம் -அவன் நீ படும்பாட்டை இங்கே இருந்து தான் எட்டி எட்டிப் பார்த்தான்

தலைவி -கீழே கிடந்த அவனது புல்லாங்குழலை எடுத்து-சகிகாள் அம்மாயனை நாம் எவ்வளவு முயன்றாலும் காணமுடியாது -அவனைக்காண்பதற்கு உபாயம் அவனது பேர் அருள் ஒன்றே -ஆகையால் அவன் இஷ்டப்பட்ட போது வந்து கொள்ளட்டும் -அவனுடைய புல்லாங்குழல் கிடைத்து இருக்கிறது -அது வரை நாம் ஆறி இருக்க நான் தான் கண்ணன் -இதோ என் பிராண நாயகி நப்பின்னை -நாங்கள் இருவரும் அவன் இருந்தது போலவே இப்பாறையில் உட்க்கார்ந்து கொள்கிறோம் நான் குழல் ஊதுவேன் -நீங்கள் எல்லோரும் மண் போலவே சிறிது தூரத்திலே நின்றும் ஓடி வர வேண்டும் -பின்னர் நாம் இப்பொழுது கண்ணனைக் கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ -அதை எல்லாமே என்னிடத்தில் செய்ய வேண்டும் -சரி தானே என் யோஜனை

சகிகள் -ஆம் இது நல்ல யோஜனை -நாம் இப்படிச் செய்தால் தான் பிரிவாற்றாமையை சிறிதாவது பொறுத்துக் கொள்ள முடியும் –

கண்ணன் -தனக்குள் -நாம் இவர்களுடன் ஓட்டம் பிடிப்பதா -அல்லது இவளோடு இருந்து விடுவதா
யோஜித்து தலைவி யண்டை வந்து -சகி அவனைப்பிரிந்து நான் போரக் கிலேசப்படுகிறேன் -என்னால் ஓட இயலாது -ஆகையால் நான் நீயாக -ஆய்ச்சியர் தலைவியாக -இருந்து விடுகிறேன்

தலைவி -ஆச்சர்யத்துடன் பார்த்த வண்ணம் தனக்குள் -இவர் யார் -கன்னங்கரிய மேனி -என் அன்பனின் சாயைக்குச் சமமாக யோகம் பெற்று இருக்கிறதே -முன் பின் தெரியாதவராயினும் -இவரைக்கண்டதும் என் மனம் உருகுகிறதே -காரணம் என்ன-இவரும் நம்மைப்போலவே அவரது பிரிவாற்றாதவர் -இவரையும் அவன் இங்கு வரக்கூறினான் போலும்
வெளிப்படையாக -நீர் யார் -எனக்குத் தெரியவில்லையே

கண்ணன் -என் பெயர் கிருஷ்ணா -எனக்கு அயலூர் -இப்பொழுது தான் இவ்வூரில் கல்யாணம் நடந்தது -இன்று பகலில் நம் ஈசன் பீதக ஆடை உடை தாழப் பெரும் மேகக் கன்றே போல் எங்கள் வீதியார வந்தான் -வந்த அம்மணி வண்ணனிடம் என் மனம் குடி கொண்டு விட்டது -அவனும் என் நிலைமை அறிந்து இன்று இரவு உங்களோடு தோட்டத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு கூறினான் -நான் பொட்ட -சடக்கென போய்ப் பட்டுடுத்தி யணி பூண்டு புறப்பட்டு வந்தேன் -இங்கு அவனைக் காணோம் -அவன் பிரிவாற்றாமையைப் பொறுத்துக் கொள்ள நீ கூறிய யோஜனை சால நல்லது -நீ கண்ணனானால் கண்ணனுக்கு நீ போலே உனக்கு ஒரு தலைவி வேண்டும் அன்றோ -அவளாக நான் இருக்கிறேன் என்கிறேன்

ஒருத்தி -ஆம் இவள் அசலூர்ப் பெண் -பத்து தினங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது -கண்ணன் நிலவரையில் அடைபட்டு இருந்ததால் நாம் எல்லோரும் கல்யாணத்துக்குப் போகவில்லை –

கண்ணன் -தனக்குள் நல்ல வேளை -இங்கு வராத ஒரு புதுப்பெண்ணின் பெயரைச் சொன்னது நல்லதாயிற்று

நப்பின்னை -சகி -நம் தலைவனைப் போலவே நம் சகி கிருஷ்ணாவும் இருக்கிறாள் பார்

தலைவி -நான் பார்த்தவுடனேயே நினைத்து கொண்டு விட்டேன்
கிருஷ்ணாவையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறாள்

நப்பின்னை -சரி சகிகாள் -நீங்கள் போய் நான் குழலூதிய பின்னர் ஓடி வாருங்கோள்

எல்லோரும் செல்கின்றனர் -மூவரும் பாறை மீது அமர்கின்றனர்-

தலைவி -கிருஷ்ணா நீ இன்று தான் முதல் முதலில் அக்கள்வனின் வலையினில் அகப்பட்டனையோ

ஆம் இன்று தானே அவன் விடுதலை பெற்றான்

நப்பின்னை -ஒரு வேளை அவனைக்கண்ட மாத்திரத்திலேயே தளர்ந்து விட்டனையே -எப்பொழுதும் அவனையே வாரிப்பருகும் நாங்கள் என்ன பாடு படுவோம்

தலைவி -சகிகாள் நான் கிருஷ்ணனாகப் பாவித்துக் குழலூதுகிறேன் -நீங்கள் ஆளுக்கு ஒரு பக்கம் என்னருகில் அமருங்கோள்
இருவரும் அருகே அமருகின்றனர்

கிருஷ்ண -நாதா-குழலோசை குழந்தைகளின் மழலைச் சொற்களை விட இனிதானது -அதிலும் குழலின் தொளையில் விரல்களை விரவி நின் அதர அம்ருதத்தை ஊட்டிய பின் கேட்க வேண்டுமோ –
தலைவியின் தொடையோடு தொடையிடித்து நெருங்கி உட்க்காருகிறார்

நப்பின்னை -ஆம் -நிதமும் அதர அம்ருதத்தைப் பருகும் பாக்யம் இக்குழலுக்குக் கிடைத்துள்ளது

கிருஷ்ணா –பிராண நாயகி -இல்லையில்லை -பிராண நாயக-நினது அதர அம்ருதத்தை முதன்முதலில் எனக்குப் பருக தர வேண்டும் -இல்லையானால் குழலின் இசை இன்ப வெள்ளத்தில் நான் தரித்து நிற்க முடியாது –

தலைவி -தனக்குள் -இது என்ன ஆச்சர்யம்-கண்ணைப் பொத்தும் பொழுது உண்டான உணர்ச்சி கிருஷ்ணா என் மேல் இடித்து உட்க்காரும் பொழுது உண்டாகிறது -பிராண நாயக என்று அழைப்பதற்குப் பதிலாக பிராண நாயகி என்று அழைத்தது எனக்குப் பெரிய ஸந்தேஹத்தை உண்டாக்குகின்றது -ஒரு வேளை கிருஷ்ணன் தான் கிருஷ்ணாவாக வந்துள்ளானோ -பொறுத்துப் பார்ப்போம்
வெளிப்படையாக -பிராண நாயகி என்றும் கூறினையே -இப்படி யாரையேனும் இதுவரை அழைத்தது உண்டோ –

கிருஷ்ணா -தனக்குள் -ஏது அகப்பட்டுக் கொண்டேனோ -வெளிப்படையாக -இல்லை -நான் என்னைக் கண்ணன் என்றும் நினைத்துக் கொண்டேன்

தலைவி குழலூதுகிறாள் -கிருஷ்ணாவும் நப்பின்னையும் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தனர் -ஆய்ச்சிகள் ஓடி வந்து குழலோசை கேட்டு நிற்கின்றனர் –

தலைவி -ஆய்ச்சிகளைக் கண்டு என்னாருயிர் அனைய நங்கைமீர் வாருங்கோள்
சடக்கென எழுந்து மூவரும் அக்கூட்டத்தோடே கலந்து கொள்கின்றனர்

கிருஷ்ணா -நாத எனது தோழிகள் அனைவரும் வந்து விட்டனர் -பட்ட நிலா காய்கிறது -நமக்கு உண்டாகும் ஆனந்த வெள்ளத்துக்கு ஒரு போக்கு விட வேண்டும் -இல்லாவிடில் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு விடும் –

தலைவி -போக்கு விடுவதற்கு வழி எண்ணம்

ராஸக்ரீடை விளையாடலாம்

ஆம் அது தான் தக்க வழி

நப்பின்னை -கிருஷ்ணா இன்று தானே நீ எம் மணி வண்ணனைக் கண்டதாகக் கூறினை -இவ்விளையாட்டு விஷயத்தை நீ எவ்வாறு தெரிந்து கொண்டாய்

கிருஷ்ணா -இன்று நான் காணும் போது இவ்விளையாட்டின் விபரத்தைக் கூறி -இதில் தனக்கும் மிகவும் பிரியம் என்றும் இன்று இது தான் விளையாடப் போவதாகவும் கூறினான்

ஏமாற்றுவதில் நம் தலைவனை விஞ்சுவார் யாரும் இல்லை

தலைவி இரண்டு பெண்களுக்கு ஒவ்வொரு கிருஷ்ணனாகப் பொறுக்குகிறாள்

நப்பின்னை -ராஸக்ரீடையில் நான் தான் கண்ணனாக இருப்பேன்

தலைவி -சரி நானும் கிருஷ்ணாவும் உன் பக்கத்தில் இருக்கிறோம் –

எல்லாமும் வட்டமாய் இருந்து விளையாடுகிறார்கள் -அப்பொழுது கிருஷ்ணாவின் அரையில் இருந்து துகில் நழுவ பீதக வாடையை நப்பின்னை கண்டுவிடுகிறாள்

நப்பின்னை -தனக்குள் கிருஷ்ணா அணிந்து இருக்கும் அணி ஆடைகள் எல்லாம் என்னுடையவை போல் இருக்கின்றனவே -முன்னமே நான் சிறிது ஸந்தேஹம் கொண்டேன் -அதற்கு ஏற்றால் போல் பீதகவாடை துலங்குகிறது -உண்மையில் இவள் கிருஷ்ணா இல்லை -கண்ணன் தான் -எப்படியாவது இவ்வுண்மையை சீக்கிரத்தில் தெரிந்து கொள்கிறேன் –

ராஸக்ரீடை முடிகிறது

தலைவி -இனி நாம் என்ன செய்யலாம் –

நப்பின்னை -தனக்குள் -ஜலக்ரீடை செய்ய வேண்டும் என்றும் சொல்வோம் -அப்பொழுது தான் கிருஷ்ணாவின் உண்மை தெரியவரும் -வெளியில் -கயல் கண்ணாய் இந்த வாவியில் நாம் ஜலக்ரீடை செய்வோம் –

தலைவி -ஆம் அங்கனமே செய்வோம்

கிருஷ்ணா -தனக்குள் இப்பொழுது நாம் எப்படி தப்பிப்பது -துகில் களைந்து கரையில் வைக்க வேண்டியதாய் இருக்குமே
வெளியில் -முதலில் தலைவி கண்ணனாய் இருந்தாகி விட்டது -நப்பின்னையும் அவ்வாசையை நிறைவேற்றிக் கொண்டாள் -இப்பொழுது நான் தான் கண்ணனாய் இருப்பேன்

நப்பின்னை -தனக்குள் -உண்மை விளங்கி விட்டது -அக்கள்வனே என் நகைகளைக் களவாடி இக்கோலம் கொண்டிருக்கிறான்-அவனை இப்பொழுது தப்பிக்க விடப்போவதில்லை
வெளியில் -இல்லை இல்லை நான் தான் கண்ணனாய் இருப்பேன் -அடிக்கடி மாறினால் சுவை குன்றிப்போம்

கிருஷ்ணா -முறைப்படி நான் தான் கண்ணனாய் இருக்க வேண்டும் -மேலும் நான் புதியவள் -துகில் களைவது என்றால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது –

தலைவி -சகி கிருஷ்ணா தான் கண்ணனாய் இருக்கட்டுமே -பேரும் உருவமும் அவனைப் போலவே இவளுக்கும் இருக்கிறது -ஆனால் துகில் பறித்து மரம் ஏறத் தெரியுமா

நப்பின்னை -தெரியாது -புதியவளான கிருஷ்ணனுக்கு கண்ணனாக நடிக்க எப்படித் தெரியும்

தலைவி -ஆம் அது தெரியாமல் கண்ணனாக எப்படி இருக்க முடியும்

கிருஷ்ணா -எனக்கு அது எல்லாமே தெரியும் -நான் நடிப்பதைக் கண்டால் நீங்கள் என்னையே அவனாக நம்பி விடுவீர்கள்

நப்பின்னை -நீ என்ன கூறினாலும் உன்னை இக்கோலத்துடன் கண்ணனாக நடிக்க விடப்போவது இல்லை -இக்கோலத்தைக் களைந்து வா -உன்னைக் கண்ணனாக நம்புவோம் –

கிருஷ்ணா -நான் எக்கோலத்தைக் களைந்து வர வேண்டும் –

இப்பெண் கோலத்தை

நீயும் இப்பெண் கோலத்தைக் களைய வேண்டும் அன்றோ -கண்ணனாக நடிக்க வேண்டுமானால் –

உண்மையில் பெண் மகளான நான் என் பெண் கோலத்தை எவ்வாறு களைய முடியும்

கிருஷ்ணா -கோபத்துடன் சகிகாள் கேளுங்கோள் -இவள் தான் பெண் மகளாம் -நான் பெண் மகளன்றாம் -ஆகில் நான் இங்கு எதற்க்காகக் கண்ணனைத் தேடி வர வேண்டும் -நீங்களே விளையாடிக் கொள்ளுங்கோள் -எனது பிராண நாயகன் வந்ததற் பின் வந்து கொள்கிறேன்
வேகமாகச் செல் கிறாள்

தலைவி -தனக்குள் -நப்பின்னை ஏன் இவளைக் கோபித்துக் கொள்ளும்படி செய்கிறாள் -அக்கரியானையே ஒத்த இவள் பக்கத்தில் இருந்ததால் தான் எனக்கு ஒரு வித உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்றே -இனி என் செய்வேன்
வெளியில் -கிருஷ்ணா நீ ஏன் கோபித்துக் கொள்கிறாய் -திரும்பி வா -நீயே கண்ணனாக இரு

கிருஷ்ணா -என் பெண்மையையே பொய் என்னும் சொல் வந்தபின்பு நான் அங்கு வர முடியாது

உண்ணும் வேகமாகச் செல்லும் போது ஆடையின் தலைப்பு ஒரு கிளையில் மாட்டிக் கொண்டு விடுகிறது -அவ்வமயம் தலைவி ஓடி ஓடிச் சென்று தலைப்பைப் பிடித்துக் கொள்ள கிருஷ்ணா திமிறிச் செல்ல முயல -அப்பொழுது நப்பின்னை வந்து தலையுடன் சேலையை பலமாக இழுத்து உருகி விடுகிறாள் -கிருஷ்ணா அரையில் பீதகவாடையும் உடம்பில் பெண்கள் அணியும் திகழ புன்முறுவலுடன் நிற்கிறார் -எல்லோரும் ஆச்சர்யத்துடன் ஒன்றுமே தோன்றாமல் அவனையே கண்ணாரக் கண்டு களிக்கின்றனர் –

நான்காம் அங்கம் முதல் களம் முற்றிற்று


நான்காம் அங்கம் -இரண்டாம் களம்

திருவாய்ப்பாடியில் ஒரு தெரு
காலம் -பின் மாலை

தலைவி வருகிறாள்

வானத்தை நோக்கி -இம்மதி நிம்மதி இன்றி எம் போன்ற பேதையரைத் துன்புறுத்தி விளையாடினன் -இவ்வமயம் அவன் வீழ்ச்சி காலம் நெருங்கி விட்டது -இவ்வுலகினில் சிலர் இளமையில் அளவிலாத் தீமைகள் புரிந்து இறுதியில் நல்லவராவதுண்டு -அது போல் இதுகாறும் இடுக்கண் இழைத்த இத்திங்கள் அந்திம வேளையில் என் தன் உள்ளம் குளிரச் செய்கின்றனன் -ஒவ்வொருவரது நிலையும் மாறுவது இவ்வுலகில் இயல்வே -கொழுநனைத் தழுவ நான் செல்ல இச்சந்திரன் பெரிதும் உதவுகின்றனன் அன்றோ -இருளாய் இருந்தால் அவ்விருள் நிறக் கண்ணைக் காண முடியுமோ -ஆஹா இவ்விரவு முழுவதும் அவ்வரியனது போகம் என் தோழி நப்பின்னைக்குக் கிடைத்ததே -கவிப் பந்தயத்தில் அவள் அவனை வென்றாளாம் -அதற்காக தமது சரீரத்தையே அவளுக்குப் பரிசாக அளித்தனன் -இவ்விரவில் அவள் ஒருவளே சுகம் பெற்றனள் -எம் போன்றவர்கள் ஏற்கனவே பிரிந்த துன்பத்துக்கும் மேல் கூடிய மறுபடியும் பிரிந்ததால் அந்தமின்றி வருந்த வேண்டி இருக்கிறதே -அனுபவிக்க அனுபவிக்க காதல் தீ வளருமே அன்றி குறையாது -அனுபவத்தை காதல்தீக்கு விறகு என்னலாம் -காதலின் மஹிமை சொல்வதற்கு அரியது –காதலருக்கு நடுவே ஒரு ஆறு அல்லது சமுத்திரம் -ஏன் உலகமே இருந்தாலும் அவர்களை காதல் தேவதை சேர்த்து வைத்து விடும் –காதல் மந்த்ரம் தேவ மந்திரத்தில் -வீட்டில் ஒளிந்து இருந்தாலும் காதலனைக் கடிதில் சேர்ப்பித்து விடுகிறது -சிறையில் அடைப்பட்ட என் காதலனை விடுவித்தது இந்தக் காதல் மந்திரமே -உண்மையில் காதலைப் பிரிக்க தெய்வத்தாலும் ஆகாது -சந்திரிகையை சந்த்ரனிடமிருந்து பிரிக்க வல்லார் யார் -நிறை ஆறு கடல் நோக்கிச் செல்வது போல் நாங்கள் அக்கரும் கடல் வண்ணனைக் கலந்து சத்தையை -பெண்மையை -பெறப் போகிறோம் -என் தோழிகள் என்னை வந்து எழுப்புவதாகக் கூறினார்களே -இன்னும் ஏன் வரவில்லை – இது எவ்வளவு அரிய சீரிய நேரம் -இந்நேரத்தை வீணே விட்டு வாளா இருக்கின்றனரே -இத்தகைய நேரம் கிடைப்பது எளிதோ -நாள் என ஓன்று போல் காட்டிலும் இக்காலம் கழிந்தது கழிந்தது தானே -நாளை இது மீளுமோ -நானே சென்று அவர்களை —

இதற்குள் சிலர் வருகின்றனர்-

தலைவி -சகிகாள் வாருங்கோள் வாருங்கோள் நீங்கள் வரவில்லையே என்று நினைத்தேன் -வந்து விட்டீர்கள் -உங்களுக்கு நூறு வயதிற்கு குறையில்லை -வேண்டும் அளவும் கண்ணனை அனுபவித்துக் கொள்ளலாம்

வந்தவர் -அக்கரியனைப் பிரிந்து வந்தது முதல் நீ உறங்கவேயில்லை என்பதை உனது சிவந்த கண்ணகம் சொல்கிறது -உன்னை நாங்கள் எப்படிப் முன்பே வந்து எழுப்ப முடியும்

தலைவி -ஏற்கனவே நெடுநாளாக அனுபவித்து வரும் விரஹத்தீயை சிறிது நேரம் கூடிப் பிரிந்தது பெரிதும் வளர்த்து விட்டது -நான் எப்படி உறங்க முடியும்

என்ன ஆனந்தத் தோற்றம்

எங்கே

உன் முகத்திலே –மேகத்தைக் கண்ட மயில் இனங்கள் இடத்திலும் போலவும் நிதிகண்ட தரித்ரனிடத்தில் போலவும் -தாய்கண்ட சேய்களின் இடத்தில் போலவும் -பரிதி கண்ட பங்கயத்திலும் -சக்கரவாக தம்பதிகள் இடத்தில் போலவும் -அளவிடமுடியாத ஆனந்தத்தோற்றம் உனது முகத்திலே தென்படுகிறதே

தலைவி -ஆம் சகி -ஆனந்திக்க வேண்டிய நேரம் இது -நான் மட்டுமல்ல -நீங்களும் தான் -சுக துக்கங்கள் நமக்கு இங்கு தனியே கிடையாதே -அவை நமக்குப் பொதுவானவை -நாம் முன் ஜென்மத்தில் என்ன நோன்பு நோற்றோமோ -இத்தகைய அரிய சீரிய நேரம் கிடைக்கப் பெற்றோம்

முன் ஜென்ம நோன்பின் பயனாக கூறும்படி இந்நேரம் என்ன சீர்மை பெற்றது

கூறுகிறேன் -ஸாவதானமாகக் கேளுங்கோள் -பொதுவாக விடிவோரை -ஆதலால் மிகவும் கொண்டாடத்தக்கது -சாத்விகமான காலம் இதுதான் -இத்திங்கள் முப்பதுமே சாத்விக காலம் தான் -தேவர்களுக்கு உத்தராயணம் பகலாகும் -அதற்கு முந்திய ப்ரஹ்ம முஹூர்த்தமான விடிவோரை காலம் இத்திங்கள் முப்பதும் -நாம் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் இந்த நேரம் ஏன் -இம்மாதமே ஏற்றமுள்ளது -அதற்கு ஐந்து காரணங்கள் உண்டு -முதலாவது மிகவும் குளிர் மிகவும் வெப்பம் இல்லாமல் நம் நாயகனைப் போல் இருக்கும் யோகம் -இரண்டாவது தை முதல் ஆரம்பமாகும் தேவர்களுடைய பைகளுக்கு முந்திய ப்ரஹ்ம முகூர்த்த மான சாத்விகமான காலம் இது -மூன்றாவது நம் ஈசனுக்கு நேசமான மாதமாதலால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகந்த காலம் -மாதங்களில் நான் மார்கழி யாகிறேன் என்கிறார் அன்றோ -நான்காவது எல்லாப் பயிர்களும் பலிக்கும் காலமாதலால் நம் மநோ ரதமும் பலிக்கும் காலம் -ஐந்தாவது நாம் நம் நாதனை நண்ணி பலம் -நலம் -பெறுவதை பொறாத விருத்தர் குளிருக்கு அஞ்சி வெளிப் புறப்படாத காலம்

நாம் நோன்பு ஆரம்பிக்கும் போது இத்தகைய நேரம்-மாதம் – நேர்பட்டதே -இதுவே நமது கார்யம் நிறைவேறப்போவதற்கு அறிகுறி -நீ என்ன நினைக்கின்றனை

மாதம் மட்டுமா பக்ஷமும் அதற்கு ஏற்றால் போலே நேர்பட்டு இருக்கிறதே -அதைப் பாருங்கோள்

பக்ஷத்திற்கு என்ன ஏற்றம்

இதை நான் கூற வேண்டுமோ -விண்ணைக் காண்மின் -மீன் எனும் பூக்கள் பூத்த வான் எனும் சோலையில் த்விஜராஜன் -சந்திரன் -பூர்ணனாய் ரோஹிணியுடன் -வாருணி -மேல் திசை -கள்ளுமாம் -சேவித்து விளையாடி மகிழ்கின்றான்-மயங்குகின்றனன் – அன்றோ -இதனால் சுக்ல பக்ஷ பூர்த்தி என்றும் உங்களுக்கு விளங்க வில்லையா -சுக்ல பக்ஷத்தில் நற் கார்யங்கள் செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரங்களும் கூறுகின்றன அன்றோ -அதுவும் தெய்வாதீனமாய் நேர்பட்டதே

அப்படியே மாதத்தைத் போலவே பக்ஷமும் நேர்பட்டதால் மிகவும் ஆனந்தம்

சகிகாள் -என்ன ஆனந்தம் பாருங்கள் -இன்று நாளும் நன்னாள்

ஆச்சர் யத்துடன் -நாளும் நன்னாளா எப்படி

சகிகாள் -மேகத்தால் ஆகாயம் மறைபட்ட நாளை துர்தினம் என்பர் பெரியோர் -இன்று ஆகாயத்தைப் பாருங்கள் -நிர்மலமாய் கன்னங்கரேல் என்று நம் நாதனை ஒக்கும் யோகம் பெற்று இருக்கிறது -சந்திரன் சந்திக்கையை மேகம் முதலிய தடங்கலின்றி அடங்க எங்கும் பரப்பி இந்நாள் ஏன் நன்னாள் ஆகாது -முன் காலத்தில் மஹா விஷ்ணு தேவர்களுக்கும் மட்டுமே அம்ருதம் கொடுத்ததாக நாம் கேள்விப்படுகிறோம் -ஆனால் இன்று அக்காட்சியை நாம் நேராகவே அனுபவிக்கிறோம் -ஆகாயமாகிய மாயன் -சந்திரனாகிற வெள்ளிக் கிண்ணத்தில் உள்ள சந்திரிகையாகிற வெளுத்த அமுதத்தை முன் போல் வஞ்சகம் இல்லாமல் எல்லாருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கிறான் -நம் கருத்துக்கு விருத்தரான -விரோதிக்கும் கிழவர்களே-கருத்து ஒன்றுபட்டுக் கண்ணனைக் கலந்து கொள்ளக் குறிப்பிட்ட இது நன்னாளே அன்றோ -மேலும் நம் நாதனே ஆதரவுடன் என்னை வந்து எழுப்புங்கோள் பறை தருகிறேன் என்றும் குறிப்பிட்ட இது மிக மிக நன்னாளே அன்றோ

சகி விடியப்போகிறது நாம் செய்ய வேண்டியது யாது

நாம் இப்பொழுது நீராட வேண்டும்

இப்பொழுது என்பில் இழை கோப்பது போலே பனிவாடை ஈர்கின்றதே -எப்படி நீராடப் போகிறோம்

சகி காள் பயப்பட வேண்டாம் -நான் நீராட்டம் என்றும் குறிப்பிட்டது கண்ணன் கலவியைத்தான் -கலவியை சுனையாடல் என்பது தமிழ் மக்களின் மரபுன்டை

குளிக்க என்றும் சொல்லாமல் நீராட என்றும் கூடியது கூட மரபுச் சொல் தானோ

நகைத்து -பரி ஹசிக்கிறீர்களா -கணவனைக் கௌரவிப்பது பெண்டிரின் கடமை -கணவனைச் சேர்ந்தோரையும் கௌரவிக்க வேண்டும் -இன்றேல் கணவனையே அகௌரவிப்பது போல் ஆகிவிடும் -நீங்கள் என் தோழிகளாயினும் என் ஈசனிடம் பாசம் வைத்தவராதலின் குளிக்க என்று கூறாமல் நீராட என்று மரியாதை சொல் கொண்டு கூறினேன்

இந்நோன்பில் சேர புதிய பெண்களை ஆசைப்படுகிறார்கள் -அவர்கள் சேர்ந்து கொள்ள ஏதேனும் யோக்யதை தேடிக்கொள்ள வேண்டுமா

இது என்ன விந்தை -நாம் எல்லாமே என்ன யோக்கியதை தேடிக்கொண்டோம் -ஆசை ஓன்று தான் இதற்கு வேண்டுவது -ஆகையால் இப்பொழுதே அவர்களை அழைத்து வர வேண்டும்

ஒருத்தி போய் மற்ற சிலருடன் வருகிறாள்

வாருங்கோள் வாருங்கோள் -எச்சமயத்திலும் கண்ணனைச் சேருவதற்கு ஏற்றபடி அணிகள் அணிந்த நேரிழையீர் -வானோர் இறையின் நீர்மை கரை மல்கும்படிச் சீர்மை பெற்ற இத்திருவாய்ப்பாடியலே வாழ்ந்து -கண்ணன் கலவியாம் செல்வமும் -அதை அனுபவிப்பதற்கு ஏற்ற பருவமும் பெற்ற நீங்களோ இந்நோன்பில் சேருவதற்கு யோக்யதை வேணுமா என்று கேட்பது -சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள் -வாருங்கோள் -வந்து கூடுங்கோள்

சகி நாம் சிறுமியர் ஆயிற்றே -இந்நோன்பை நிறைவேற்றும் ஆற்றலுக்காக ஏதேனும் யோக்யதை தேடிக்கொள்ள வேண்டுமோ என்று ஸந்தேஹித்தோம்-

சசி காள் -நம்மால் செய்யற் பாலது என் -நமக்கு ஆற்றல் ஏது -அது ஈசனிடம் உள்ளதன்றோ -கூரிய வேலேந்தும் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனும் -ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் ஸிம்ஹமும் -கார் மேனியனும் -செங்கண்ணனும் -கதிர் மதியம் போல் முகத்தனுமான ஸ்ரீ மன் நாராயணனே நமது விருப்பத்தைத் நிரப்பித் தருவான் -நானே நாராயணன் என்று நம் முன்பே தமது பரத்வத்தைக் காட்டும் நம் பர்த்தா தானே நம் நோன்பை நிறைவேற்றித் தருவான் -நாம் எதிலும் முயல வேண்டியதில்லை -முயலும் கூடாது -பெற்று எடுத்த தாய் பசித்து அழும் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டி மகிழ்வது போல் -அவனும் நம் நோன்பை நிறைவேற்றி -பாலே போன்ற சீரிலே -சவுந்தர்யாதி குணங்களிலே -பெரும் பசியரான நம் பசியைப் போக்குவதற்கு முயன்று கொள்வான்

ஊருக்கு ஒப்ப பறை பெறுவதாகக் கூறுவோம் -உண்மைப்பறை நமக்கு –ஆத்மாவுடைய ஸ்வரூபத்துக்கு ஏற்ற கைங்கர்யம் -சேதனராகையாலே அத்தையே பிரார்திக்கக் கடவோம் -இந்நோன்பினால் நமக்கு அந்த உண்மைப்பறை கிடைக்கும் -நம்மைத்தடுத்த கிழவர்களே புகழும் படி மழையும் பொழியும்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்

இந்நோன்புக்கு அங்கமாக நாம் செய்ய வேண்டுவது என்ன-

அவனாலே பேறு என்றும் இருக்கும் நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை -எனினும் இவ்வுலகம் ஒப்பச்செய்ய வேண்டிய சிலவற்றைக் கூறுகிறேன் -பரமபதத்தில் நின்றும் அண்டினவர் கூக்குரல் கேட்க்கும்படி பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாட வேண்டும் –பரமனும் கண்ணனும் வேறு அன்றே -ஆகையால் நம் கற்பு நெறிக்குக் குறையில்லை -பாடவே வேறொன்றும் நமது மனதுக்கு உகக்காது -விரித்துக் கூறுவான் என் -நம் மரபிற்கே விருப்பமான நெய் உண்ணோம் பாலுண்ணோம் -நாட் காலே -விடிவோரை -நீராடிக் கண்களில் மையிட்டு எழுந்தோம் -நாம் மலரிட்டு நாம் முடிய மாட்டோம் -செய்யாதன செய்யோம்-நம் தோழிகள் மற்றவரையும் இந்நோன்பிலே கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் -இன்றேல் செய்யாதன செய்தோமாவோம் -நாம் பிறருக்குத் இன்னல் விளைக்கும் பொய்யுரைகளைச் சென்று ஓதோம் -நாம் விளையாட்டாக ஏசிக்கொண்டதைக் கூட நம் நாதனிடம் சொல்லக்கூடாது -துர்ஜனங்களான ராஜசிகளுடைய தர்ஜனத்தையே -அதட்டலையே -பிராட்டி பெருமாளிடம் கூறினாள் இல்லை -அப்படி நாம் நம் நாதனிடம் கூறினால் தீக்குறளைத் சென்று ஓதினோமாவோம் -நற்பாத்திரம் அறிந்து இடும் ஐயமும் ப்ரஹ்மசாரி சந்நியாசிக்கட்க்கு இடும் பிச்சையும் அவர்கள் கொண்டு ஆம் போதும் என்னும் அளவும் இல்லை என்னாது கைநீட்டிக் கொடுக்க வேண்டும் -ஏன் நம் நாதனையே உள்ளபடி அறிந்து ஒருவரே அவனையே நம்மிடம் வந்து கேட்டால் தடையில்லாமல் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம் -நம்மோடு இவ்வுலகமும் உய்யும் வழி இதுவே –

வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பைய துயின்ற பரமனடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்

அங்கத்தோடு இந்நோன்பின் விபரத்தைக் கூறியது போல் இதன் பயனையும் விபரமாகக் கூறு -கேட்டு இன்புறுகிறோம் –

நம்முடைய பயன் கண்ணன் கலவியே -உலகைச் சாரும் பயனைக் கூறுகிறேன் -இவ்வுலகம் விரும்பாவிடினும் கருணை கொண்டு எல்லார் முடியிலும் அடியிட்டு ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாம் நம் பாவைக்கு -நோன்புக்கு -நீராடினால் -தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் -நோய் பஞ்சம் முதலியன இருந்த இடமும் தெரியாமல் பறந்து ஓடிப்போம் -ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையும் பெய்வதால் நம்மூரோடு இந்நாடு எல்லாம் நெற்பயிர்கள் திரி விக்ரமனிடம் போட்டியிடுவது போல் ஓங்கி வளரா நிற்கும் -அந்நெற்பயிருக்குள் நண்டு போக இடமில்லாமல் துள்ளி விழா நிற்கும் -அவ்வமயம் நெற்பயிறூடே வளர்ந்த குவளை மலர்கள் அசைய அவைகளில் உள்ள வண்டினங்கள் ஊஞ்சலில் பஞ்சணையில் துயிலும் அரச குமரர் போல் உறங்கா நிற்கும் -மேலும் தயங்காமல் ஒருப்பட்டு ஒரே நிலையில் பருத்த மடுவினைப் பற்றி வாங்கினால் குடம் குடமாகப் பாலால் நிறைக்கும் வள்ளன்மை வாய்ந்த பெரும் பசுக்கள் வாய்ந்தவராய் நம்மூரார் எல்லாரும் நீங்காத செல்வம் நிறைந்து இருப்பார்கள் -புண்ணியம் அடியாக வரும் செல்வம் தான் நீங்கும் -கண்ணன் கருணை அடியாக வரும் செல்வம் நீங்காது -இவை எல்லாமே நமது நோன்பின் பயனாகும்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

நன்கு கூறினை -உனது ஆழ்ந்த கருத்துள்ள அழகிய மொழிகளால் எங்களுக்கு மிகவும் ஆர்வம் பெருகி விட்டது -இனித் தாமதிப்பான் என் -வா போகலாம் —

நமது சகிகள் இன்னும் பலர் வரவில்லையே -போகும் வழியில் அவர்களையும் எழுப்பிக் கூட்டிக் கொண்டே போக வேண்டும் -போவோம் வாருங்கோள்

எல்லாரும் செல்கின்றனர்

நான்காம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

நான்காம் அங்கம் முற்றிற்று


ஐந்தாம் அங்கம் -முதல் களம்

ஆய்ப்பாடியில் வெட்ட வெளியான இடமும்
பர்ஜன்ய தேவன் பிரவேசிக்கிறான்

ஆஹா உபய விபூதிகளுக்கும் நிர்வாஹகனான சர்வேஸ்வரன் தன்னைத் தாழ விட்டு இடை மடவாரது பணியாளாய் இவ் வூரில் எழுந்து அருளி இருக்கிறான் எனின் இவ்வூரின் பெருமையை யார் அறிவர் -ஸ்ரீ மன் நாராயணனது நீர்மை இங்குப் பரமபதம் அளவும் அலை எறியும்படி அன்றோ ப்ரவஹிக்கிறது -இடக்கை வலக்கை அறியா ஆயர் சிறுமியர் எங்கே -உலகம் அனைத்தையுமே ஒடுக்கி ஆளும் ஒரு தனி நாதன் எங்கே -மறையவரும் மறை முடியும் அவ்விறைவனை இறைஞ்சியும் இன்னும் கழலிணை காணாது கலங்குகின்றனரே -அவன் கழலிணை காணா எம் போன்ற தேவர்கட்க்கு தான் ஒரு அளவு உண்டோ -விண்ணுக்கு வெறும் சுமையாக எம் போன்றவர்கள் இருந்து என்ன-போய் என்ன-இவ்வூர் சிறுமியரது சீர்மையில் எள்ளளவு கூட எம்மிடம் இல்லையே -இப்பெண் மணிகள் மழைப் புத்தேளான ஆக்கமில்லா எனக்காக நோன்பு நோற்கின்றனராம் -உண்மையில் இந்நோன்பு கரிய வள்ளலை நோக்கியது என்பதை யான் அறியாமல் இல்லை -எந்நோன்பும் அவனது ஆராதனமே என்பது புராதன சாஸ்திரங்களின் கருத்து -இம்மடந்தையரோ அவன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தராவார் -உலகிற்கு ஏற்ப இவர்கள் எனக்காக நோன்பு நோற்பதாகக் கூறுகின்றனர் -இனி நான் வாளா இருக்கலாகாது -மழை பொழிந்திடல் வேண்டும் -இல்லாவிட்டால் மஹா பாகவதர்களான இம்மடவார் மதிமுகம் மாறுபடும் -படவே கருணை வள்ளலது உள்ளம் கலங்கி விடும் -நான் வெகு விழிப்புடன் இத்தையலாருக்குத் தக்க உதவி செய்திடல் வேண்டும் -மானிடர் தானே என்று அவமதித்தல் கூடாது -அடியாராதலின் படி சாய்ந்து முடியால் வணங்கத் தக்கவர் ஆகிறார்கள் -அவர்கள் இடமே சென்று நான் செய்ய வேண்டிய அடிமை யாது என்று கேட்க்கிறேன்

ஆய்ச்சியர் சிறிது தூரத்திலே பாடிக்
கொண்டு வருகின்றனர் –

ஆஹா இவர்கள் வந்து விட்டனர் -இவர்களுடன் கீதம் உள்ளத்தை நவநீதம் என உருக்குகிறது -உலகில் சங்கீதத்தைப் போலே உள்ளம் கவருவது ஒன்றுமே இல்லை -வேதங்களில் கீதத்தாலே ஸாமம் சிறந்தது -சொல்லின் சுவைக்கு சங்கீதம் உரை கல்லானது -சங்கீதமும் சாஹித்யமும் இல்லாதவன் கொம்பும் வாலும் இல்லாத ஒரு தாழ்ந்த பசுவாகி விடுகிறான் -பசுவும் சிசுவும் பாம்பும் கூட சங்கீதத்தில் லயித்து விடுகின்றனர் -எத்தகைய துன்ப நிலையிலும் சங்கீதம் உள்ளத்தில் களிப்பினை பொங்கச் செய்யும் -தங்கச் சங்கம் போன்ற இவர் தம் கண்டக் குரல் தீய அசுரர் நடலைப்பட முழங்கும் பாஞ்ச ஜன்யத்தின் முழக்கம் பக்தர் தம் குழாத்தைப் போலே என்னைப் பரவசமாக்குகிறது -சங்கீதம் இனிது -இவர் தம் குரல் இனிது -மேனி இனிது -திருமால் திரு நாமம் இனிது -வேறு இனி என்ன வேண்டுவது –
மெய் மறந்து பரவசமாகி நிற்கிறான்

ஆய்ச்சியர் நெருங்கி விடுகின்றனர்

தலைவி -தனக்குள் -இங்கு நிற்கும் பெரியார் யார் -இவர் மெய் மறந்து பகவத் குண அனுசந்தானம் செய்கிறார் போலும் -பெரியோர்களை வணங்காமல் செல்வது நன்மைகளுக்கு பங்கமாய் விடும்
வெளியில் -சகி காள் -இப்பெரியவரை வணங்குங்கோள் -நம் நோன்புக்கு இதனால் நன்மை உண்டாகும்
எல்லாமும் வணங்குகின்றனர்

பர்ஜன்யன் -கீதம் நின்று விட்டதால் உடன் திடுக்கிட்டு -அபசாரம் -அபசாரம் -கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்

தலைவி -பெரியோய் நீவிர் யார் பர உபகாரமே புரியும் தங்கள் தர்சனம் எமக்கு என் நன்மை பயக்கப் போகிறதோ –

பர்ஜன்யன் -வணக்கத்துடன் -அம்மணி என் பெயர் பர்ஜன்யன் -மழை பொழி தேவன் -உங்களுடைய நோன்பின் உண்மையை நான் அறிந்து கொண்டேன் -அடியாராக உங்களைப் படி சாய்ந்து வணங்கி

தலைவி -அபசாரம் அபசாரம்

நான் எப்பொழுது என்ன விதமான அடிமை செய்ய வேண்டும் என்று கேட்க வந்தேன் -நியமித்து அருளுக –

பெரியோய் சிறுமியரான எங்களைக் கணிசித்து வலிய உதவ வந்த நினது வள்ளன்மைக்கு ஓர் அளவிலது-திருமால் திருமேனி ஒக்கும் யோகம் படைத்த நினது வடிவை யாம் என்றென்றும் மறவோம் -எங்களுக்கு உதவ வேண்டிய விதத்தை வேண்டிக் கொள்கிறேன் – கேட்டருளுக
ஓ ஆழி மழைக்கு அண்ணா -கடல் நிறக் கபீரனே -நின் வள்ளன்மையில் எள்ளளவும் உள்ளடக்கிடாமல் -நல்லவர் தீயவர் பாராமல் -நாடடஙக எமக்காக மழை பொழிந்திடல் வேண்டும் -இப்பொழுதே பொட்டென புறப்பட்டுப் போய் ஆழியுள் புக்கு மணலே மீதாம்படி நீர் முகந்து கொள்ள வேண்டும் -எங்கும் பரந்து முகம் காட்டாமல் புரக்கும் அரியைப் போல் இராமல் உலகம் அனைத்தும் உன் பேர் முழக்கம் கேட்டு உளம் மகிழுமாறு கர்ஜித்து -விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே எங்கும் பரந்து கொள்ள வேண்டும் -ஊழி முதல்வன் உருவம் போல் நின் மெய் கறுத்திடல் வேணும் -வலிமையையும் பரப்பும் அழகும் வாய்ந்த தோள் களுடைப் பற்பநாபன் கையில் துலங்கும் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்க்க வேண்டும் -அவனது சாரங்கம் எனும் வில்லிட்ட சர மழை போல் விடாது மழை பொழிய வேண்டும் – சர மழையால் அரக்கர் அடங்க அழிந்தனர் -நீ யாரும் வாழ உலகினில் பெய்திட வேண்டும் -இவ்விதம் செய்தால் நாம் உன் வடிவைப் போல இந் நன்றியையும் மறவாமல் மார்கழி நீராடுவோம் –

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி

ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து

பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்

பர்ஜன்யன் -அம்மணி நன்று கூறினை -என் கடைமைப்படி இது எல்லாம் நான் செய்து முடிக்கிறேன் -நின் புகழ்சிக்கு ஏற்ப இது பெரிய உதவியாமோ –

பெரியோய் இவை நின் கடைமையின் பாற்பட்டன என்பது உண்மையே -ஆயினும் மழை வேண்டும் காலத்தில் செய்த இவ்வுதவி ஞாலத்திலும் மாணப்பெரிதாம் அன்றோ

ஆகட்டும் அப்படியே செய்கின்றேன்

இருவரும் வணங்குகின்றனர் -பர்ஜன்யன் செல்கிறான்

ஒருத்தி -என்ன ஆச்சார்யன் இப்பொழுது வந்தவர் யார் -மழைக்குத் தேவனாமே -ஒரு தேவதை சிறுமியரான நமக்கு வலிய வந்து உதவுகிறதே –

நம் நாதனுக்காக நமக்கு வந்து உதவுகிறான் -இது என்ன ஆச்சர்யம் -நாம் பரிசுத்தராய் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க-கழிந்த பாபங்களும் இனி வரும் பாபங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுக் குவை போலே உரு மாய்ந்து போமே -இதில் என்ன அதிக விந்தை –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

மறுபடியும் பாடிக்கொண்டே செல்கின்றனர்

ஐந்தாம் அங்கம் முதல் களம் முற்றிற்று


ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம்

திருவாய்ப்பாடி சிறிய கோயில் பக்கம்
வசிஷ்டர் வியாசர் சுகர் நாரதர் -ஆக நான்கு முனிவர்கள் வருகின்றனர் –

வியாசர் -நாரத மகரிஷே -இவ்வுலகினில் மஹான்கள் வசிக்கும் எத்தனையோ புண்ணிய ஷேத்ரங்கள் இருக்கின்றனவே -அவைகள் இடக்கை வலக்கை ஆயர்கள் வசிக்கும் ஆய்ப்பாடிக்கு நிகராகுமோ -சர்வேஸ்வரனது ஸுவ் சீல்ய ஸுவ் லப்ய குணங்கள் இங்கே தானே கங்குகரையின்றி ப்ரவஹிக்கிறது –

நாரதர் -வாரீர் வ்யாஸ முனிவரே -நீர் சொல்லிய அனைத்துமே சத்தியமே -முன்பு சர்வேஸ்வரன் அயோத்தியில் இஷ்டரான சிஷ்டருடன் பழகிப் பேரானந்தம் கொண்டனன் -இப்பொழுது இங்கோ ஏதும் அறியாத இடையருடன் ஏக போகனாய் -ஸுவ் சீல்ய குணம் -தாழ்ந்தவருடன் சேர்ந்து பழகும் குணம் -நிறம் பெறும்படி நடந்து கொள்கின்றனன்

மஹர்ஷே இதனால் தானே மற்ற அவதாரங்களை விட இவ்வவதாரம் சீரியதாகிறது

சுகர் -தந்தை கூறியது உண்மையே -மற்ற அவதாரங்களை விட ராம அவதாரமே சீரியது -தன்னை தசரத குமாரனான மனிதனாகவே எண்ணி அவன் காரியத்தை நடத்திப் போந்தான் -இவ்வவதாரமோ அதை விடச் சீரியது -ஜாதி தொழில் முதலியவற்றில் தாழ்ந்தவர்களோடு கலந்து பழகுவதோடு தன் பரத்வத்தையும் பார் அறியச் செயவது இவ் வவதாரத்தில் தானே

வசிஷ்டர் -இரண்டும் சீரிய அவதாரங்கள் தான்

நாரதர் -சுக ப்ரஹ்ம ரிஷே -பரத்வம் என்றதினால் எனக்கு நினைவு உண்டாகிறது -நெடுநாளாக எனக்கு பரத்வ நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது -காயோடு கனி யுண்டு நெடும் காலம் தவம் செய்தேன் -பின்னும் பல இடங்களிலே அலைந்து உழன்றேன் -பின்னர் கண்ணபிரானால் எனது எண்ணம் நிறைவேறியது -அது முதல் இவ்வுண்மை எனக்குப் புலனாயிற்று –
கண்ணன் கழலிணை நண்ணினால்
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தான் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
அது முதல் நான் யாருக்கும் இவ்வுண்மையை உபதேசித்து வருகிறேன்

திண் நன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லைஓர் கண்ணே.

ராமாவதாரத்தில் இத்தகைய வரலாறு ஒன்றையும் காணோமே -ஆகையால் அவ்வவதாரத்தை விட இவ்வ்வாதாரமே சீரியது என்று நான் நினைக்கிறேன்

வசிஷ்டர் -கண்ணன் அவதாரம் சீரியது தான் எனினும் ராமாவதாரத்தை விடச் சீரியது எனல் தகாது -சேது பந்தனம் முதலிய அதி மானுஷ செயல்களினால் அவ்வவ தாரத்திலும் பரத்வம் பார் அறியப் பரவி இருக்கிறது -கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற அரும் பாவி சொற்கேட்டு மெல்லிய அடிகளில் ரத்தம் பீறிட -நேரிழையும் இளம்கோவும் –பிராட்டியும் இலக்குவனும் -பின்னே போக -நெடும் கானமிடை நடந்து புகழ் கொண்ட வல் வில் ராமனை இன்றும் மறை முனிவர் நெஞ்சத் தாமரையில் இருத்தி அருத்தித்து வழி படுகின்றனர் –ஆஹா அக்கூற்றுத்தாய் கொடிய வனம் போ என்றிடவும் அச்சீதை மணாளன் சிறிதும் சீற்றமில்லாமல் புன்முறுவலுடன் அத்தை ஏற்றுக்கொண்ட காட்சி யாருடைய மனத்தை உருக்காது –
அப்பொழுது தயரதன்
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-
என்று என்னை நோக்கி புலம்பிய புலம்பல் என் மனத்தை உருக்கி விட்டது -தர்ம ஸம் ஸ்தாபனத்துக்கு அவதரித்த அம் மைந்தனோ இப்புலம்பலை சிந்தை செய்யாது தர்மத்தை ஸ்தாபிக்கவே கானகம் சென்றான் -தர்ம ஸ்வரூபி ராமன் -குறும்பு செய்வானோர் மகன் கண்ணன் -ஏக பத்னீ விரதம் ராமனுடையது -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் என்ற கணக்கிலே பாஹு பத்னீ விரதம் கண்ணனுடையது -பெண்களைக் களவாடிய வாலியையும் ராவணனையும் வதை செய்தவன் அவன் -வெண்ணெயையும் பெண்களையும் களவாடுபவன் இவன் -தான் சடை முடி தாங்கி குரங்கினையும் அரக்கனையும் கொன்று அவர் தம் தம்பியருக்கு பொன் முடி சூட்டினவன் அவன் -தன் சொந்த மாமனான கஞ்சன் வயிற்றினுள் நெருப்பு என நின்று அவனையே முடித்தவன் இவன் -இத்யாதி காரணங்களைப் பார்த்தால் ராமாவதாரத்துக்குத் தான் ஏற்றம் கூற வேண்டும் -ராவண வத அநந்தரம் பிரமன் சிவன் முதலிய தேவர்களும் அவனைத் துதி செய்ததால் அவனே பரன் என்பது தெள்ளியதாக விளங்கும்

வியாசர் -சுகர் -தாத்தா தாங்கள் ரவிகுல குருவாய் இருந்ததால் தங்களுக்கே உரிய சொந்தமாகி விடுவானோ -அவனிடம் எங்களுக்கு அபிமானம் அல்லது பக்தி இல்லையா -அவனிடமுள்ள அபிமானம் இவவவ தாரத்தின் உண்மைக் குணங்களை தங்களுக்கு மறைத்து விட்டது போலும்-

வசிஷ்டர் -புன்முறுவலுடன் தாடியைத் தடவிக்கொண்டே -குழந்தைகளே ராம அவதாரத்தை விட இவ்வவதாரத்தில் தான் ஸுவ் சீல்ய ஸுவ் லப்ய குணங்கள் நிறம் பெறுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் -என் அபிமானம் இவ்வுண்மையை எனக்கு மறைத்து விடவில்லை -ஆகிலும் பாமரர் கருதுவது என்ன-கண்ணன் தீம்பன் கள்வன் பெண்களை கற்பழிக்கின்றனன் -இவ்வவதாரம் இப்படி எல்லாமே எண்ண இடமும் கொடுக்கிறது -ராம அவதாரத்தில் இப்படி நினைப்பதற்கு இடமில்லை -ஆகையால் இவ்விஷயத்தில் ராம அவதாரத்துக்கு ஒரு தனி ஏற்றமே தானே

நாரதர் -ஸ்வாமி தேவரீர் சற்று ஆராய்ந்து கூறிடல் வேண்டும் -நானும் ராம அவதாரத்தைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டிருக்கிறேன் -ராமனது அரிய குணங்களை உலகு எங்கும் பரப்பிய வால்மீகிக்கும் நான் தான் முதல் முதலில் சுருங்க அவ்வவ தாரத்தைப் பற்றி உபதேசித்தேன் -ராமன் தன்னை மனிதனாக எண்ணி நடந்து கொண்டது உண்மை -கண்ணனோ அவ்விதம் செய்தாலும் அடிக்கடி தானே விண்ணோர் பெருமாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டி விடுகிறான் -குற்றமற்ற பரம் பொருள் பெண்கள் கற்பை அழிக்குமா -பாமரரும் இங்கனம் சந்தேஹிப்பதற்கு இடமில்லையே -பெண்களுடன் சேர்ந்து விளையாடுகின்றனனே எனில் அது கற்பை அழிப்பது ஆகாது -மற்றவருக்கு என்று பேச்சுப்படில் வாழ மாட்டாத மங்கையர் ஆகிற ஜீவாத்மாக்களை அனுபவிக்கின்றான் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்
கூறை பரிப்பது முதலிய ஸ்ருங்காரங்களுக்குக் கருத்தாவது -அப்பெண் மணிகளுக்கும் தனக்கும் இடையே உள்ள யாராலும் தாண்டுத்தற்க்கு அரிய தன் மாயையைத் தானே விலக்குவதாகும் -கூறை பரித்த பின் உண்டாகும் அனுபவம் ப்ரஹ்ம ஆனந்தமே ஆகும் -ஆடவருக்கும் இவ்வித நிலைமை உண்டாயினும் எல்லா ஆத்மாக்களுக்கும் உண்மையில் பெண் தன்மை தான் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுவதால் பெண்டிரது நிலையே வர்ணித்துக் கூறப்படுகிறது -பகவத் விமுகரும் இவ் விஷயத்தில் இறங்கும் படி இவ்வுலகிற்கு ஏற்ப மங்கைமாரது சிருங்கார ரசம் பெரியோர்களால் நன்கு வர்ணித்துக் கூறப்படுகிறது -நவநீத ஸுவ்ர் யத்தால் வெண்ணெய் என உருகும் இளம் நெஞ்சினரது உள்ளத்தைக் கவரும் தனது உண்மை நிலையை உணர்த்துகின்றனன் -ஆகையால் கண்ணன் அவதாரத்தில் எத்தகைய உண்மைத் தீம்புகளுக்கும் இடமே இல்லை என்பதை எவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்

வியாசர் -சுகர் காதண்டை -சுக நம் தாத்தாவுக்கு நாரதர் தக்க பதில் அளித்தார் -நீ என்ன நினைக்கின்றனை

சுகர் -ஆம் அப்பா தாத்தாவிடம் நாம் என்ன பதில் சொல்ல முடியும் -சொல்வதைக் கேட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் -இந்தக்கிழவருக்கு ஏற்ற வல் கிழவர் நாரதர் தாம் -கிழவர்கள் சண்டையில் நமக்கு என்ன-

ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே வருகிறார்கள்

நாரதர் -வசிஷ்டரைப்பார்த்து -ஸ்வாமி அடியேன் அதிகத்தனமாக ஏதாவது —

வசிஷ்டர் -அபசாரம் -அபசாரம் -தேவர் கூறியது அவ்வளவும் உண்மையே

வியாசர் -இதோ ஆய்ச்சியர் வந்து விட்டனர் -இவர்களுக்கு இடைஞ்சலாக நாம் இங்கே நிற்பது கூடாது -ப்ரஹ்ம வித்துக்களைப் போல் இவர்கள் முகம் களங்கமில்லாமல் எள்ளளவு அழகாக தெளிந்த நீர் உள்ளேயுள்ள சாமான்களை விளக்கிக் காட்டுவது போலே அந்தரங்க சுத்தியை வெளிப்படுத்துகிறது பாருங்கள் -நாம் இச் சந்நிதியில் சென்று இறைவனடி இறைஞ்சுவோம் வாருங்கோள்

எல்லாமும் ஹரி நாராயணா என்று பாடிக்கொண்டே செல்கின்றனர்

ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று


ஐந்தாம் அங்கம் –மூன்றாம் களம்

திருவாய்ப்பாடியில் ஒரு வீதி
ஆய்ச்சியர்கள் பிரவேசிக்கின்றனர் -சிலர் வந்து கலந்து கொள்கின்றனர்

ஒருத்தி -சகி -நேற்று நம்மோடு வந்தவர் சிலர் இன்னும் வரவில்லையே

வந்தவர் -அவர்களுக்கு இந்நோன்பில் சிரத்தை இல்லை போலும் -இருந்தால் இதற்கு முன்பே எழுந்து வந்திருக்க மாட்டார்களா

ஆம் உண்மை தான் கண்ணனைப் பிரிந்த நமக்கு உறக்கும் வந்ததா-அவர்களும் உண்மையில் பிரிந்து நொந்திடுவரேல் உறக்கம் வருமா

அவர்களை எல்லாம் இனி எதிர்பார்ப்பதில் பயன் இல்லை -நேரமாகிறது -நாம் போவோமே -முனிவரின் அரி அரி என்ற பேர் அரவம் கேட்டு உடனே நாங்களே வரவில்லையா

தலைவியை நோக்கி -ஏன் சகி நாம் போகலாமா

தலைவி -சகி நாம் அவர்கள் இல்லாமல் தனித்துப் போகக்கூடாது

அவர்கள் தான் இவ்விஷயத்தில் ஸ்ரத்தை இல்லாமல் இருக்கிறார்களே

ஏன்

ஸ்ரத்தை இருந்திருந்தால் இவர்களைப் போல அரி அரி என்ற பெரிய சப்தம் கேட்ட பிறகேனும் வந்திருக்க மாட்டார்களா

அப்படியே நினைக்க வேண்டாம் பிரிந்த துன்பம் அவர்களுக்கும் இல்லாமல் இல்லை

பின்னை ஏன் இன்னும் உறங்குகின்றனர்

தலைவி -சகி நன்கு சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்கப் பண்ணும் -சிலரை மயங்கப் பண்ணும் -அதே போல் அவர்களைப் பிரிவுத் துன்பம் மயங்கப் பண்ணி இருக்கிறது -இதனால் அவர்களுக்கு ஸ்ரத்தையே இல்லை என்றும் கூறலாமா-

ஒருத்தி -ஒரு வீட்டைச் சுட்டிக்காட்டி இவ் வீட்டுப்பெண் இவ்விஷயத்தில் புதியவள் ஆயிற்றே -அவளையும் எழுப்பச் செல்வோமா

தலைவி -ஆம் அவளைத் தான் முதலில் எழுப்ப வேண்டும் -கதவண்டை வந்து -சகி பொழுது விடிந்து விட்டதே -எழுந்திரு சீக்கிரம் நோன்புக்கு நேரமாகிறதே

நீங்கள் உறங்காமல் இருக்கிறீர்கள் -விடிந்தமைக்கு என்ன அடையாளம்

பறவைகள் எழுந்து கூவுகின்றனவே

உறங்காது அலையும் நீங்கள் அவைகளைக் கிளப்பி விட்டிருப்பீர்கள் உங்கள் பேர் இரைச்சலால்

திரைக்குள் சங்கூதும் த்வனி கேட்க்கிறது

கருட வாஹனாரூடனான சர்வேஸ்வரன் சந்நதியில் திருப்பள்ளி எழுப்பும் சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ
பதில் இல்லாமையால் தனக்குள் -புதியவள் இவள் -நாம் வந்து நிற்பதையும் லஷ்யம் செய்யவில்லை -ஆகிலும் இவளை எழுப்பியே தீர வேண்டும்
வெளியில் -சிறு பெண்ணே எழுந்திரு

உங்களை எல்லாம் எழுப்பியது யார்

நீ கூடியது போலச் சிலர் உறங்கவே இல்லை -சிலர் பேய்ப்பாலுண்டு கள்ளத்தால் வந்த சகடத்தைக் கட்டழிந்து சிதறும் படி சோறு காலால் உதைத்த நமது நாதனாகிய பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டருளும் காரண பூதனை முனிவர்களும் யோகிகளும் மனத்தில் த்யான செய்து மெள்ள எழுந்து ஸ்துதிக்கும் ஹரி ஹரி சப்தம் கேட்டு உளன் மகிழ்ந்து குளிர்ந்து எழுந்தனர்-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்

வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

உள்ளிருந்து வந்து கலந்து கொள்கிறாள்

ஒருத்தி -ஒரு வீட்டைக் காட்டி -இந்த வீட்டுக்காரி நோன்பில் மிகவும் ஆர்வமுள்ளவளாய் இருந்தாளே -இன்னும் ஏன் வரவில்லை-

ஆம் அவள் எழாதது ஆச்சர்யமே

நான் சென்று அவளை எழுப்புகிறேன் -இவ்விஷயம் எல்லாமே தெரிந்தும் தன்னை மறந்து இவள் இன்னும் உறங்குகின்றனளே
வாயிற் கதவண்டை வந்து உள் நோக்கி -சகி போது விடிந்தது எழுந்திரு –

விடியட்டும் அவசரப்படாதே -விடிந்த பின் வருகிறேன்

விடிந்த பின்பா -நன்றாய் இருக்கிறது -வலியன் குருவிகள் கீசு கீசு என்றும் பேசும் அரவம் உன் காதில் விழவில்லையா -விடியாமலோ அவர்கள் பேச்சரவம் கேட்க்கிறது

நீங்கள் அவைகளைக் கிளப்பி விட்டு இருப்பீர்கள்

நாங்கள் கிளப்பி விட்டு இருப்போமோ -விடிந்ததே இனிப் பகல் முழுவதும் எப்படிப் பிரிவைத் தரிப்போம்-என்று அவை கலந்து பேசும் பேச்சரவம் நீ கேட்டிலையோ -வேறென்ன அடையாளம் வேண்டும்

பிரிந்த நீங்கள் தளர்ச்சியை வலியன் குருவியின் குரலில் உள்ளதாகக் காண்கிறீர்கள் -விரஹிகிள் இவ்வுலகையே தம்மைப் போலவே பிரிந்து வருந்துவதாகவே தான் பார்ப்பார்கள் -இது விடிந்தமைக்கு அடையாளம் அன்று-

அடி அறிவிலி என்ன சொன்னாய் -எழுந்து வந்த நாங்கள் எல்லாம் பைத்யக்காரர்களா

நான் அறிவிலி என்பது இருக்கட்டும் -விடிந்தமைக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லு -இதோ வந்து விடுகிறேன்

ஆய்ச்சியர் குழல் அவிழ்ந்து பரிமளம் கமழ அச்சுத்தாலியும் முளைத்தாலியும் கல கல என்றும் சப்திக்க -கை சலுக்கும் படி மத்தினால் தயிர் கடையும் ஓசையும் நீ கேட்டிலையோ

இவ்வூரில் எப்பொழுதும் தயிர் கடைவது ஸ்வ பாவம் அன்றோ -இது எவ்விதம் விடிந்தமைக்கு அடையாளம் ஆகும்

சிறிது நேரம் அவள் வரவை எதிர்பார்த்து -எங்களுக்கு எல்லாமே தலைமை வகிக்கும் முறை இது தானோ -நாயகப்பெண் பிள்ளாய் சொன்னதற்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிப் பேசாதே கிடப்பது நாயகத் தன்மைக்குச் சேரும் என்றும் இருக்கிறாயோ

சகி இவள் இதற்கு எழுந்திருக்க வில்லை -நான் ஒரு வழி சொல்லுகிறேன் இவள் திடுக்கிட்டு இப்பொழுது எழுந்து வர -ஸ்ரீமந் நாராயணன் கண்ணனாக அவதரித்து வளரும் காலத்திலே கேசி என்பானோர் அசுரன் நலிய வந்தான் என்று கூறி -உடன் கண்ணனுக்கு என்ன வருகிறதோ என்றும் துடிக்கிட்டு எழுந்திப்பாள்

கிருஷ்ணனை கேசி வந்து நலியப் புகுந்தது காண் -துணுக்கென எழுந்து வா

வரக்காணாமல் -சகி இன்னும் எழுந்து வரவில்லையே –

ஆகில் அவனை அவன் கொன்றான் காண் என்று கூறு -விஜயக் கணவனை அணைந்து கொள்ள உடன் எழுந்து வருவாள்

கேசியைக் கண்ணன் கொன்று விட்டான் -உடன் அவனை அணைத்துக் கொள்ள வா
கேசி என்பவன் கேளடி கண்ணனால்
தேசு அழிந்து சிதைந்தனன் சீக்கிரம்
ஆசை நாயகன் தன்னை அணைந்திட
நேசமுடன் துயில் நீக்கி நெருங்கி வா

உள்ளிருப்பவள் இவள் பாட்டைக்கேட்டு மெய் மறந்து இருந்தனள்

கேசவனைப் பாடுவது உனக்குத் தாலாட்டு போல் இருக்கிறதோ -எழுந்து விரைந்து வா-

தலைவி -வரக் காணாமையால் ஜன்னல் வழியே உள் நோக்கி -ஆம் கேசவனைப் பாடுவதைக் கேட்டு கிருஷ்ணன் விஷயத்தை அனுசந்தித்து மெய் மறந்து இருக்கின்றனள் -ஆஹா அநுஸந்திக்கும் இவள் முகத்திலே என்ன தேஜஸ்ஸு -சகி நாங்கள் இந்த தேஜஸ்ஸு கண்டு களிக்க வேண்டும் -உன் அழகைக் காணுமாறு நீயே வந்து கதவைத் திற-

சகி அப்படியே செய்கிறேன் -இதோ வந்து விட்டேன்-

கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்

கதவைத் திறந்து புன்முறுவலுடன் தலைவி யோடு சேர்ந்து கொள்கிறாள்

ஒருத்தி -மற்ற ஒரு வீட்டைக் காட்டி இவ் -வீட்டுக்காரி இன்னும் வரவில்லையே

ஏன் இவள் இன்னும் வரவில்லை-இவள் மிக்க குதூஹலமுடையவள் ஆயிற்றே -நாம் இவளை எழுப்புவோம்
கதவண்டை வந்து -கோதுகுலமுடைய பாவாய் -எழுந்திரு -கீழ் வானம் வெளுத்து விட்டதே -இன்னும் உறங்கலாமா

கிழக்கு வெளுக்கவில்லை -உங்கள் முக மதியின் ஒளியினால் அங்கனம் தோன்றுகின்றது போலும்

பனிப்புல் மேய விடிவோரையில் விடப்பட்டு எருமைகள் வயல்கள் எங்கும் பரந்தன -அவற்றின் பின்னே கண்ணன் போய் விடப் போகிறானே -பின்னை யாரைக் காண்பது எழுந்திரு –

உங்கள் முகத்து ஒளியால் இருள் திரள் போகின்றது போலும் -அவற்றை நீங்கள் எருமைகள் என்று பிரமிக்கிறீர்கள்

நாங்கள் பிரமித்ததாகவே இருக்கட்டும் -நீ விடியவில்லை என்பதை எப்படி அறிந்து கொண்டாய்

இவ்வூர்ப் பெண்களை உங்களை ஒழிய மற்றவர்கள் இன்னும் உணராதலால்

உன்னை ஒழிய எல்லாரும் போய் விட்டார்களே – நீ தான் எழுப்ப வேண்டும்படியாய் தூங்குகின்றாய்

அப்படியா போய் விட்டார்களா -போவதையே பெரிய சுகமாக எண்ணி என்னை மறந்து அவர்கள் தான் போய் விட்டார்களே -நான் எழுந்து இனி எங்கே போக –

அவர்கள் போனாலும் நீ வரவில்லை என்று அவர்களைப் போகாமல் தடுத்து உன்னை எழுப்புவதற்காக உன் வாசலிலே வந்து மேற் போக மாட்டாமல் நிலை நின்றோம் -எழுந்திரு

நான் இப்பொழுது எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்

நம் நெஞ்சிலே பொங்கி எழுகிற கிருஷ்ண அனுபவ ப்ரவாஹத்திற்கு போக்கு வீடாக நாம் வாயார நினைத்த படி பாடக்கடவோம் -பின்னர் பறை கொண்டு -கேசியின் வாயைப் பிளந்து -சாணூர மல்லரைக் கொன்ற தேவாதி தேவனான நம் கண்ணனைப் நாம் சென்று சேவிக்க வேண்டும் விரஹம் தின்ற நம் சரீரத்தை கண்டு ஐயோ ஐயோ என்று நம் குறைகளை ஆராய்ந்து -நாம் சென்று இவர்களுக்கு உதவப் பெற்றிலோமே -என்று அவன் இரங்கியே தீருவான் –
ஆக அவன் அருளுக்குக் காரண பூதையான நீ எழுந்து வா-

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய

பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்

உள்ளிருப்பவள் கதவைத் திறந்து வந்து கலந்து கொள்கிறாள்

ஒருத்தி -மற்றோர் வீட்டைக் காட்டி -சகி -இந்த வீட்டைப் பார் -தூய மணிகளால் ஆக்கிய மாடம் -நாலா பக்கங்களிலும் விளக்குகள் எறிந்து கொண்டு இருக்கின்றன -மணி மாடத்துக்கு விளக்குகள் எதற்க்காக -அழகுக்காக வைத்திருக்கிறார்கள் போலும் -புகையைக் காணோம் -பரிமளம் கம கம என்று கமழ்கின்றது -என்ன ஆச்சர்யம்

எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து நிற்கின்றனர்

தலைவி -மணிமாடமாகையாலே உன் ஜோடிப்பு எல்லாமே வெளியில் தெரிகிறது –
வாயிலண்டை வந்து -சகிகாள் இன்னும் என்ன ஆச்சர்யம் பாருங்கள் -நமக்கு மெல்லிய மலர்ப் படுக்கை வெம் பள்ளியாய் இருக்கிறது -இவளோ துயில் அணையிலே பொருந்தி எவ்விதமோ கண் வளருகின்றனள் -கண்ணன் தானே தேடி வந்த போது வரட்டும் -நான் அவனைத் தேடிப் போகப் போவதில்லை -என்று இவள் நினைப்பு போலும்

ஒருத்தி -சகி உனக்குத்தான் இவள் மாமான் மகளாயிற்றே -உறவு கொண்டாடி சிறிது அதட்டியே எழுப்பு -அப்பொழுது தான் இவள் சீக்கிரம் எழுந்திருப்பாள்

அடி மாமான் மகளே மணிக்கதவம் தாள் திற

உள்ளிருப்பவள் பேசாது இருக்க-அவள் தாய் -அவள் எழுப்புகிறாள் -நீ ஏன் பேசாது இருக்கிறாய் –

தலைவி -மாமி அவளைச் சீக்கிரம் எழுப்பி விடு

தாய் -அவள் எழுப்புகிறாள் -நீ ஏன் பேசாது இருக்கிறாய் –

எழுந்திருக்காததைக் கண்டு -மாமி உன் மகள் என்ன ஊமையா -பேசாது இருக்க-அல்லது செவிடோ எங்கள் சப்தம் கேட்க்காது இருக்க-சோம்பேறியா அசையாது இருக்க-இவள் எழுந்திருக்கக் கூடாது என்று காவலிட்டு வைத்திருக்கிறதோ -அல்லது மந்த்ர வாதம் செய்திருக்கிறதோ

தாய் -உள்ளிருந்தே அவள் உணரும்படி திரு நாமங்களைச் சொல்லுங்கோள் -எழுந்திருந்து விடுவாள்

என் தோழிகள் தான் -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று இவ்விதமாகப் பல நாமங்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார்களே -நாமம் பலவும் நவின்றோம் -அவளை எழுப்பு-

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்

நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்-

ஒருத்தி -சகி நேரமாகிறது -அவன் போய் விட்டால் நாம் என் செய்வோம்

தலைவி -உள் நோக்கி -அழகாய் இருக்கிறது -நீ எமக்குத் தலைவி யன்றோ -அச்செருக்காலே விடிந்த பின்பும் கிடந்து உறங்குகின்றனை போலும் -நோற்று அழகாய் பலம் பெற்று விட்டனை -தூக்கத்தை விட வேறு என்ன பலன் இருக்கிறது -தூக்கம் தான் உனக்கும் சுவர்க்கம் -நீ எழா விட்டாலும் அங்கே இருந்து ஒரு வார்த்தையாயினும் தரக்கூடாதா -மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-ஆமாம் எஜமானியாய் இருப்பார்கள் பேசுவாரோ –

சகி இங்கே கம் என்று திருத்துழாய் வாடை வீசுகிறதே -கண்ணனுடன் கலந்தனளோ என்னவோ -அதனால் தான் அப்படி உறங்குகிறாள்

அவனோடே கலந்தாலும் கலக்காவிட்டாலும் இத்தைப் பற்றி பிரஸ்தாபித்தாலே உடன் சடக்கென எழுந்திருப்பாள்
உள் நோக்கி -அம்மனாய்-இரவெல்லாம் கண்ணனுடன் கலந்தனை போலும்-அதனால் தான் விடிந்ததும் உணர்ந்ததிலை-நீ மட்டும் அனுபவித்தால் போதுமா -கண்ணனுக்கு உடம்பு கொடுத்தால் எங்களுக்கு ஒரு வார்த்தை யாகிலும் தரக்கூடாதா –

நீங்கள் ஏன் பழியிடுகிறீர்கள் -ஏற்கனவே அவனைப் பிரிந்து வருந்தும் என் மீது புண்ணில் புளி பெய்தால் போலப் பழியைச் சுமத்துகிறீர்கள் -அவன் இங்கு இருக்கிறானா பாருங்கள்

நீ அவனை மறைத்திருப்பாய் -திருத் துழாய் வாசனை கம் என்று வீசுகிறதே -அவனை மறைத்தாலும் வாசனையை மறைக்க முடியுமா

இரவில் தோட்டத்தில் நாம் அவனை அணைத்துக் கொள்ள வில்லையா -அவ்வாசனையாய் இருக்கலாம் -அவன் ஒரு சமயம் அணைத்து விட்டால் தான் பரிமளம் ஐந்து ஆறு தடவை குளிக்கும் வரை நிற்குமே -மேலும் இவ்வளவு கட்டும் காவலுமாய் யுள்ள இடத்தில் அவனை யுள்ளே விடுவார்களா -என் தாயைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கண்ணன் கலவிக்கு விரோதிகளாயிற்றே –

அவன் கதவைத் திறந்து தான் வர வேணுமா -ஒரே காலத்தில் எங்கும் இருந்து பல லீலைகள் புரிபவன் அன்றோ –

உங்களை என்னாலே பதிலும் சொல்லி வெல்ல முடியாது -அவன் என்னவோ இங்கில்லை –

பின்னை ஏன் நீ விடிந்ததும் உணர்ந்திலை

எனக்கு என்னவோ மிகவும் தூக்கம் வந்துவிட்டதம்மா –

புன்னகையுடன் -உனக்கு மட்டுமில்லை -பண்டொரு நாள் கும்பகர்ணனுக்கும் இப்படி உறக்கம் வந்திருக்கிறது -நீ இதிலே பெருமை கொள்ள வேண்டாம் -கும்ப கர்ணன் நமக்குப் பறை தரும் புன்னியனிடம் வீரத்தால் தோற்று கூற்றுக்கு இரையாயினன் -அவனே உறக்கத்தில் உனக்குத் தோற்று தன் உறக்கத்தை உனக்குக் கப்பம் கட்டி விட்டான் போலும் -உன்னது அவனது இரண்டுமே சேர்ந்து கொண்டால் உனக்கேன் பேர் உறக்கம் வராது

சகி என் மீது பழி சுமத்த வேண்டாம் -இதோ எழுந்திருக்கிறேன் -எழுந்து சோம்பல் முறிக்கிறாள்

ஆஹா என்ன அழகு இவள் சோம்பல் முறிக்கும் போது –
மற்றவர்கள் எல்லாரும் வந்து பார்க்கிரார்கள் –
அடி அணி போன்றவளே –எங்கள் நிலையைக் கண்டும் இன்னுமேன் தாமதம் –

உள்ளிருப்பவள் அரை குலையத் தலை குலையக் கதவைத் திருக்க விரைந்து வருகிறாள்

சகி தடுமாறாமல் நெகிழ்ந்த உடையை நன்றாக உடுத்து தூக்கம் தெளிந்தவளாய் வந்து கதவைத் திற -படுக்கையில் கிடந்தபடியே கலவிச் சின்னத்துடன் வெளியே வராதே –

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே

தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

ஒரு மட்டுக்கு இவளை எழுப்பினோம் -ஒரு வீட்டைக்காட்டி –இவ்வில்லத்தாள் குலத்தாலும் அழகாலும் குணத்தாலும் நம் கண்ணனுக்கு நிகரானவள் -இவளை முன்னிட்டு அன்றோ நாம் செல்ல வேண்டும் –

ஆம் சகி இவளை நானே எழுப்புகிறேன் -செல்வமும் வீரமும் வாய்ந்து குற்றமில்லாதது இவள் தன் குலம் -அழகும் குணமுமோ அளவிடற்கு அரியவை –

சகி அதோ பார் இவள் தந்தை எழுந்து பால் கறந்து கொண்டு இருக்கிறார் -இவள் மட்டுமே ஏன் எழுந்திருக்கவில்லை

சகிகாள் -நான் இவள் குலம் செல்வமும் வீரமும் வாய்ந்தது என்றும் கூறியது எவ்வளவு பொருந்தி இருக்கிறது பாருங்கோள் -என்ன ஆச்சர்யம் -கன்றுகளாயினும் பால் கறக்கும் பசுக்கூட்டங்கள் தான் எத்தனை -இவர் இத்தனை இவர் ஒருவரே நின்று கறக்கிறார் எனின் இவர் வலிமையை என் என்பது –

சகி -நம் கண்ணன் பெருமையைப் பொறாத சில சத்ருக்கள் இருக்கும் இடம் சென்று -அவர்கள் திறல் அழிய -யுத்தமுறை தவறாமல் குற்றமின்றி போர் புரிவரான இவர் இத்தனை பசுக்களைக் கறப்பது பேர் ஆச்சர்யம் இல்லையே

உள் நோக்கி -குற்றமொன்றில்லாத கோவலர் தம் நற் குலத்தில் தோன்றிய பொற்கொடியே-துயில் எழு –பாம்பின் படம் போல் அகன்று அழகிய நிதம்பம் வாய்ந்த மயில் போன்றவளே துயில் எழு -எங்களோடு புறப்படு நோன்பிற்காக –

எல்லாமும் வந்துவிட்டனரா நான் புறப்பட

ஆம் நின் சுற்றமான தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடவும் நீ அசையாமல் பேசாமல் கிடக்கின்றனையே -ஏன் -கண்ணன் கலவி என்னும் செல்வம் வாய்ந்த பெண்ணே -நீ அச்செல்வத்தை விட்டு என்ன பயனுக்காக இப்படி உறங்குகிறாய் -புறப்பட்டு சீக்கிரம்-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்

வந்து கலந்து கொள்கிறாள்

மற்றோர் வீட்டண்டை வந்து -சகி காள் -இந்தத் தொழுவைப் பாருங்கள் -பால் கறப்பார் ஒருவரும் இல்லையா -இவ் விளங்கற்று எருமைக் கூட்டங்கள் எல்லாம் பால் கறவாமையால் முலை கடுக்கக் கதறி -தன் கன்றுக்கு இரங்கி -அக்கன்றுகளையே நினைந்து -அதனாலேயே முலை வழியே இடைவிடாமல் பாலைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றனவே –

ஆம் இது யார் வீடு -இந்த இல்லம் பால் பெருகிச் சேறாகி விட்டது -கன்றுகளையும் ஊட்டாமல் பாலையும் வீணாக்கி இவ்வீட்டுக் கோபாலர் எங்கே போனார்-

தலைவி -இது நற் செல்வன் வீடு -நமது கண்ணனுக்கு இவன் உற்ற துணைவன் அல்லவா -இவன் தானே கண்ணன் விடுதலை அடைந்த செய்தியை நமக்குத் தெரிவித்தான் -தூங்கி எழுந்ததும் தன் துணைவன் கண்ணனுக்காக ஏதேனும் செய்ய வேண்டியிருக்கும் அதற்க்காகப் போயிருப்பான் -தன் கார்யத்தைக் கூட விட்டு அவன் கண்ணனுக்காக முன்பே எழுந்து போயிருக்கின்றனனே -அவன் தங்கையும் அது போல் எழுந்து வந்திருக்கின்றனளா

இல்லை இல்லை

வாயிலண்டை வந்து -சகி நற் செல்வன் தங்காய் -உன் தமையன் கண்ணனுக்காகப் பால் கறப்பது போன்ற தன் கார்யங்களையும் கூட விட்டுப் போய் விட்டனனே -நீ அவன் தங்கையாய் இருந்தும் இன்னும் உறங்கலாமா -நாங்கள் உன்னை எழுப்ப வந்திருக்கிறோம் -உடன் எழுந்திரு -மேலே தலையிலே பனி கொட்டுகிறது -கீழே பால் பெருகச் சேறான இடத்தில் நிற்கிறோம் -இதற்கிடையே மயக்கம் -நாங்கள் என்ன செய்வோம் -நிற்கவும் முடியவில்லை -உன் வாயிற் கடையிலுள்ள தண்டியத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம் -உடனே எழுந்து எங்களைத் தேற்று –

சகி இவள் நற் செல்வன் போல் இல்லை –பெண்களின் வருத்தம் அறியாமல் அவர்களைப் புரிய விடுகிறான் -என்று கண்ணன் மேல் இவளுக்குக் கோபம் -இவள் மனத்துக்கு இனியான் ஸ்ரீ ராமன் தான் -உண்ணாது உறங்காது ஒலி கடலை
ஊடறுத்து ஒரு பெண்ணிற்காக அன்றோ அவன் பெரும் பாடு பட்டான் -அதனால் தான் ராமன் மீது இவளுக்குப் பிரியம் -அவனைப் பாடினால் இவள் உடனே எழுந்து வந்து விடுவாள் என்று நினைக்கிறேன் –

ஆம் சகிகாள் பாடுவோம் ராமனைப் பற்றி

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு பேதுற்ற வெஞ்சினத்தால்
திண்ணார் மதிள்சூழ் தென்னிலங்கைக் கோமானை
புண்ணாக வாளி தொளைத்தானைப் போற்றுவோமே

வரக் காணாமையாலே -நாங்கள் தான் கண்ணனை விட்டு உன் மனதுக்கு இனியானைப் பாடிவிட்டோமே -அப்படிப் பாடவும் நீ ஏன் வாய் திறக்கவில்லை -நாங்கள் பனித்தலை வீழ என்று எங்கள் நிலைமையை உணர்த்திய பின்பும் நீ எழுந்திருக்கவில்லையே -இனித்தான் என்ன-ஈது என்ன பேர் உறக்கம் –உகந்த இல்லாதது -பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலில் நின்றும் அழைப்பது ஊரார்கள்க்கு எல்லாம் தெரியட்டும் என்று இருக்கிறாயோ -ஆகில் அவர்கள் எல்லாருமே தெரிந்து கொண்டு விட்டார்கள் -இனிமேலேயாயினும் எழுந்திரு –

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

வந்து கலந்து கொள்கிறாள்-

ஒரு வீட்டைக்காட்டி இந்தவீட்டுப் பெண் மணி இன்னும் எழுந்து வரவில்லையே

ஏன் இவள் இன்னும் எழுந்து வரவில்லை-கண்ணனை அனுபவிப்பதில் இவள் வல்லவளாயிற்றே

இரவில் உத்யானத்தில் விளையாடிவிட்டு நானும் இவளும் வீட்டுக்கு வரும் போது இவள் சொன்னாள் -கண்ணன் என் அழகை இன்று கொண்டாடினானே -இது உள் கருத்துடன் இருக்குமோ -அல்லது கபடத்தாலா என்று- நான் உண்மையாகத்தான் கூறி இருக்க வேண்டும் என்றும் சொன்னேன் -அதற்கு இவள் -இதை நான் பார்த்து விட வேண்டும் -நான் விடிவோரை நோன்பிற்கு எழுந்து அவனிடம் வரப்போவதில்லை -என் கண்ணழகில் உண்மையாக ஈடுபட்டு இருந்தால் அவன் தானே இங்கு வரட்டும் -என்று சொன்னாள் -அவ் வபிப்பிராத்துடன் தான் இன்னும் இவள் எழுந்திருக்க வில்லை என்று நினைக்கிறேன் –

அப்படியே -ஆகில் நீங்கள் பாடிக்கொண்டே செல்ல முன்பே போங்கள் -நான் இவளை எழுப்பி கொண்டு வந்து சேர்ந்து விடுகிறேன்

எல்லாரும்
கள்ளக் கருத்தோடே வந்த வக் காதகப்
புள்ளைப் பிளந்தானை பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் குள்ளக் குளிரக் குடைந்து நீராடுவோம்
என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள்

தலைவி -வீட்டண்டை வந்து -சகி மலர் போன்றும் மான் போன்றும் அழகிய கண்ணுடையவளே -பெண்கள் எல்லாரும் பகாசுரனையும் ராவணனையும் வதம் செய்த வீரத்தை வாயாடப் பாடிக் கொண்டே நோன்பு நிற்கும் இடத்திற்குப் போய் விட்டார்களே -நீ சென்று எழுப்ப வேண்டிய பிள்ளைகள் -இளம்பெண்கள் -கூட உனக்கு முன்பே எழுந்து புறப்பட்டார்கள் -நீ மட்டும் ஏன் உணர வில்லை

போது விடிந்தததோ எல்லாரும் போவதற்கு –

ஆம் விடிந்தது -சுக்ரன் எழுந்தது -குரு நக்ஷத்ரம் அஸ்தமித்து விட்டது

எதையோ பார்த்து நீ சுக்கிரனும் குருவுமாய் நினைக்கிறாய்

பறைவைகளானவை காலை யானவாறே சிலும்புகின்றன பார்
சிறிது நேரம் எதிர்பார்த்தும் அவள் வாராமையாலே
தனக்குள் -சகி சிறிது முன்பு கூறியது உண்மை தான் -தன் கண் அழகால் அவன் தான் இங்கு வரட்டுமே என்று இவள் இறுமாந்து இருக்கிறாள்
வெளியில் -அடி போதரிக் கண்ணினாய்!-உன் கண் அழகால் அவனை வரவழைத்துத் தனியே அவனை அனுபவிக்கலாம் என்றும் இருக்கிறாயோ -அவனைத் தனித்து அனுபவிக்க வேண்டும் என்கிற கள்ள எண்ணத்தை விட்டு எங்களோடு கலந்து -காலையில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் படுக்கையிலே படுத்துக் கொண்டு இருக்கின்றனையே -அவ்வின்ப வெள்ளத்தைத் தனியே நீ அனுபவிக்க முடியாது -மெல்லிய இயல்பினை யுடையவளே -இன்று நல்ல நாள் -அவனை நாம் எல்லாரும் கூடி யநுபவிக்கக் கோபர்கள் கூட ஒப்புக் கொண்ட நாள் -வந்து சீக்கிரம் கலந்து கொள் –

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

உள்ளிருப்பவள் வெளியே வர அவளும் தலைவியாக வேகமாக முன்னே செல்லும் கூட்டத்தோடு கலந்து கொள்கின்றனர்

ஒரு வீட்டைக்காட்டி சகி நேற்று இந்த வீட்டுக்காரி என்ன சொன்னாள்

ஓஹோ இன்னும் அவள் வரவில்லையே

நான் தான் சொன்னேனே -மாமி வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்தால் பிறகு தான் இவள் எழுந்திருப்பது வழக்கம் -ஆம்பல் வாய் மூடும் முன்பு எழுந்திடுவாளாம் -என்ன சாமர்த்தியம்

இவள் சொன்னதைச் சுட்டிக் காட்டி நீயே இவளை எழுப்பு

அடி -எங்களை முன்னமே எழுப்புவதாக வாய் வீச்சு வீசின பொய் சொல்லாத உத்தம நங்காய் -உங்கள் புழைக்கடைத் தோட்டத்திலுள்ள குளத்திலே செங்கழு நீர் மலர்ந்தது -ஆம்பல் மொட்டாகி விட்டது -நீயே பார்த்துக் கொள் -ஸத்ய சீலையான நீ பொய் சொல்லும் எங்கள் வார்த்தையை நம்பா விட்டால்

இனித்தான் செங்கழு நீர் அலரப் போகிறது -ஏன் ஆத்திரப்படுகிறாய்

காஷாயமுடுத்து வெளுத்த பற்களை யுடைய தவசிகள் கோயிலிலே பூஜை பண்ணப் போயிருக்கிறார்கள் -அதற்கு என்ன சொல்லப் போகிறாய் -தான் சொன்னபடி நடக்கவில்லையே என்றும் வெட்கம் சூடு சுணை கொஞ்சம் கூடக் கிடையாது -பேச்சில் மட்டுமே குறைச்சல் இல்லை -அடி நாவுடையாய் எழுந்திரு –

என்னை இவ்வளவு கோபித்துக் கொள்கிறாயே -நான் வந்து என்ன செய்யப் போகிறேன்

நீ ஒன்றுமே செய்ய வேண்டாம் -பங்கயக் கண்ணானை நீ வாயாலே பாட வேண்டும் -அதுவே போதும்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

உடன் வந்து கலந்துகொண்டு பாடிக்கொண்டே அவர்களிடம் செல்கின்றனர்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணன் பவளச் செவ்வாயினன்
திங்கள் திருமுகச் சேயிழையாருடன்
மங்கள மூர்த்தி மகிழ்வெய்தி வாழி

சகிகாள் –சிறிது சந்தடி இல்லாமல் நில்லுங்கள் -இங்கு இளங்கிளி யினுடையது போல் இனிய குரல் கேட்க்கின்றதே

சிறிது நேரம் காது கொடுத்து -ஆம் சகி என்னைப் பாட வேண்டும் என்றனையே -இவள் அல்லவா பாட வேண்டும் -இவள் குரலைக்கேட்டால் கிளியும் குயிலும் இனி வாயைத் திறவாமல் போய் விடும் -சிறிது அமைதியாய் கேளுங்கோள் -என்ன படுகிறாள் -சாப்பாட்டு எப்படிப் இருக்கிறது என்பதை தெரிய வரும்

எல்லாரும் சாவதானமாய்க் கேட்க்கின்றனர்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணன் பவளச் செவ்வாயினன்
திங்கள் திருமுகச் சேயிழையாருடன்
மங்கள மூர்த்தி மகிழ்வெய்தி வாழி

சகி நீ பாடிய பாட்டைத்தான் படுகிறாள் -என்ன இனிமை -என்ன குளிர்ச்சி -என்ன உருக்கம் –

அடுத்த வீடு தானே -இதைக்கேட்டு அனுபவித்து உருக்கமாகப் படுகிறானள்

வீட்டண்டை வந்து -இளங்கிளியே -உன் குரலில் தான் எத்தனை இனிமை ஆஹா

சசி எழுப்பச் சென்று குரலைக் கொண்டாடி இருந்தால் –எழுப்பி அவள் நம் முன்னிலையில் பாடிய பின்பல்லவா புகழ வேண்டும் –

இளங்கிளியே நாங்கள் உனக்காக வாசலில் காத்து நிற்கிறோமே -நீ படுக்கையை விட்டு இன்னும் எழுந்திராமல் இருக்கலாமா –

நான் தனக்குள் பாடிக் கொண்டு இருக்கும் போது அதற்கு இடைஞ்சலாக சில் என்று அழையாதீர்கள்

என் பேச்சைக்கூட கேட்க கூடாமல் உனக்கும் என்ன மேன்மை யடி யம்மா வந்து விட்டது

எனக்கு ஒரு மேன்மையும் இல்லை -நீங்கள் தான் மேன்மையுள்ளவர்கள் -நங்கைமீர் சிறிது பேசாது இருங்கோள் -இதோ வந்து விடுகிறேன்

நங்கைமீர் என்று எங்களையோ மேன்மை யுள்ளவர்களாகச் சொல்லுகிறாய் -நீ வெட்டு ஓன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் கெட்டிக்காரி என்பது எங்களுக்கு இன்று தானா தெரியும் -உன் வாயைப் பண்டே நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்

நீங்கள் தான் நீ வெட்டு ஓன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் கெட்டிக்காரர்கள் -அப்படி இல்லாமலா இப்படிப் பேசுகிறீர்கள்

சில் என்று அழையாதீர்கள் என்று முதன்முதலில் நீ தானே சொன்னாய்

அது ஒரு குற்றமா -நீங்கள் பாடின பாட்டின்படியே கண்ணன் குணங்களை அனுபவிப்பதனால் உங்கள் வார்த்தையைக் கேட்க முடியா விட்டால் அது என் குற்றமா -ஆனால் நீங்கள் பாடியதும் குற்றமாகத்தான் முடிந்து விடும் -இது எதற்கு -நானே கெட்டிக்காரியாக இருந்தால் இருந்து விட்டுப் போகிறேன் -நான் இப்பொழுது எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் –

தாமதியாமல் எங்களோடு கலந்து கொள்ளவேண்டும் -நாங்கள் எல்லாமிருக்க எங்களுக்கு இல்லாத வேறு என்ன உனக்கும் மாத்ரமே இருக்கிறது எங்களை விட்டுத் தனியே அவனைப் பாடி அனுபவிக்க

எல்லாமும் வந்துவிட்டார்களா

ஆம் வந்து விட்டார்கள்

ஆனால் எல்லாரும் உள்ளே வாருங்கோள்

நீ வெளியே வந்து எல்லாரும் வந்து விட்டார்களா என்று எண்ணிப் பார்த்துக் கொள்

நான் வெளியே வந்ததும் செய்ய வேண்டிய கார்யம் யாது

நின் குழலை வென்ற குளிர் வாயால் நமது மாயனைப் பற்றி பாட வேண்டும் –

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.-

நல்ல என் தோழிகாள் நலமெய்த வாரீர்
வெல்லற்கு அரியவோர் வேழத்தைக் கொன்று
மல்லரை மல்லினில் மாற்றழியச் செய
வல்லனை மாயனை வாயினால் வாழ்த்துவோம்
பாடிக்கொண்டே வெளியில் வந்து கலந்து கொள்கிறாள்

ஐந்தாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று

ஐந்தாம் அங்கம் முற்றிற்று


ஆறாம் அங்கம் -முதல் களம்

நந்தகோபன் அரண்மனை
வாசலில் ஒரு சேவகன் நின்று கொண்டு இருக்கிறான்

அப்ப அப்பா அரண்மனையில் வேலை பார்ப்பது கத்தி நுனியை நாக்கால் நெருடுவது போலாம் என்பர்கள் -அது உண்மை -ஸூர்யனுக்காவது ஒய்வு இருக்கும் -அரண்மனைச் சேவகர்கள் அப்பெயரையே கேட்டு அறியார்கள் -இரவு முழுவதும் தினம்தோறும் விழித்து இருப்பது என்றால் அது இலகுவான கார்யமா -ஒரு நாளா இரண்டு நாளா -வருஷம் முந்நூற்று அறுபது நாளும் இப்படியே தான்-இப்பொழுதோ விடியல் காலமாகி விட்டது -இனிப் பயமில்லை – அதோ தோரண வாசல் காப்பான் உறங்கவில்லையா -அதே போல் நானும் சிறிது சாய்ந்து கொள்கிறேன் –
சாய்ந்து கொள்கிறான்

ஆய்ச்சிகள் பிரவேசிக்கின்றனர்

ஒருத்தி -வாயிற் காப்பவன் உறங்குகிறான் -நாம் அவன் அறியாமல் உள்ளே நுழைந்து விட்டால் என்ன

ஆம் சகி -அது தான் நல்லது -அவன் விழித்துக் கொண்டால் முதன் முதலில் சகுனத் தடை போல் ஒரு வேளை தடுத்தாலும் தடுத்து விடுவான்

தலைவி -சகி காள் -இவன் தடுத்தாலும் சரி -தடுக்கா விட்டாலும் சரி -இவனுக்குத் தெரியாமல் நாம் உள்ளே நுழைவது நியாயமாகாது -நந்தகோபன் கோயில் காப்பானே எழுந்திரு –

வாயிற் காப்போன் விழித்த வாக்கில் யாரது

உள்ளே செல்ல வேண்டும்

பெரு மூச்சுடன் போம்படி ஜாடை காட்டி விடுகிறான்

எல்லாரும் தோரண வாயில் அடைகிறான்

தோரண வாயிற் காப்பானே மணிக்கதவம் தாள் திறக்க வேண்டும் -எழுந்திரு

திடுக்கிட்டு எழுந்து -யாரது என்னை ஏன் எழுப்புகிறீர்கள்

உள்ளே போக வேண்டும்

இரவு நேரத்தில் உள்ளே விட முடியாது

நாங்கள் ஆயர் சிறுமியர்கள் தான்

நீங்கள் எதற்க்காக வந்தீர்கள்

நோன்புக்கு பறை பெறுவதற்காக

விடிந்த பின் வாருங்கோள் பறை வாங்கிக் கொள்ளலாம்

நாங்கள் இப்பொழுது பறை பெறுவதற்கு பேர் ஆர்வம் கொண்டுள்ளோம் –

உங்களுக்கு பேர் ஆர்வம் இருந்தால் நான் என்ன செய்ய முடியும் -எஜமானன் உத்தரவின்றி உள்ளே விட முடியாது

மாயன் மணி வண்ணன் நேற்றே எங்களை விடிவோரை வரும்படிக்குத் திருவாய் மலர்ந்து அருளி இருக்கின்றனனே

அது எல்லாமே எனக்குத் தெரியாது -விடிந்த பின் வாருங்கோள் -ஆக்ஷேபிக்க வில்லை

தன்னைத் துயில் எழுப்பிப் பறை கொள்ளும்படி கூறி இருக்கின்றனனே -விடிந்த பின்பு வந்தால் நாங்கள் எப்படி அவனை எழுப்ப முடியும்

உங்களை நான் எப்படி நம்ப முடியும்

வேறொரு காரியத்துக்காக நாங்கள் வரவில்லை-நோன்பு நோற்கும் நாங்கள் பொய் சொல்ல மாட்டோம் -தூயோமாய் வந்தோம்

நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்பதையும் உங்கள் வார்த்தையை கொண்டு தானே நம்ப வேண்டி இருக்கிறது

கெஞ்சிய முகத்துடன் –முதன் முதலில் நோன்புக்குச் சகுனத் தடை போல் தடுத்து விடாதே அப்பா -உனக்குப் புண்ணியமுண்டு -சகி காள் இவனைக் ப்ரார்த்தியுங்கோல்

எல்லாரும்
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

வாயிற் காப்போன் கதவைத் திறக்க ஆய்ச்சியர்கள் உள்ளே நுழைகின்றனர்

தலைவி -சசி காள் நாம் முதன் முதலில் கண்ணனை எழுப்பி விடக் கூடாது -முந்துற நமக்குக் கண்ணனைத் தந்து உதவிய நந்தகோபனையும் யசோதையையும் எழுப்ப வேண்டும் -பின்னர் கண்ணனையும் பலதேவனையும் எழுப்புவோம்

அப்படியே செய்வோம் -பாடுகின்றனர்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

சகி காள் நாம் ஆத்திரப்பட்டு எழுப்பும் முறையில் பிசகி விட்டோம் -பெரியோர்களை எழுப்பிய பின்னர் நப்பின்னையை நாம் எழுப்பி இருக்க வேண்டும் -முந்துறவே உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் என்று கண்ணனை எழுப்பி விட்டோம் -நப்பின்னையுடைய புருஷகாரம் இல்லாவிட்டால் நாம் கண்ணனைப் அனுபவிக்க முடியாது -ஆகையால் புருஷகாரத்திற்காக அவளை முதலில் எழுப்புவோம் –

ஓஹோ நப்பின்னையை எழுப்புவதற்காகக் கள்ள உறக்கம் கொள்கின்றானோ
ஆம் சுகி அவன் ஸ்வ பாவமே இது தான் -இப்பொழுது மட்டும் அன்று-எப்பொழுது ஆயினும் அவன் தன்னைப் புருஷகாரமில்லாமல் அனுபவிக்க விட மாட்டான்

ஆகில் அவளைச் சீக்கிரம் நீயே எழுப்பு நேரமாகிறதே

சகி நப்பின்னாய் -கந்தம் கமழும் குழலி! -எப்பொழுதும் மத ஜலத்தைப் பெருக விடும் கரியினைப் போன்றவனும் எதிரிகளிடமிருந்து ஓட வேண்டா தோள் வலிமை படைத்தவனுமான நந்த கோபாலன் மருமகளே! எழுந்து கதவைத் திற -பொழுது விடிந்தது-கோழி கூவியாகி விட்டது -பந்தல் போலப் படர்ந்த குருக்கத்திக் கொடியின் மேலிருந்து விடிந்தமைக்கு அடையாளமாகக் குயிலினங்கள் காலையில் விருதாவளி படித்து எழுப்பும் பாடகர்கள் போலப் பலகாலும் கூவுகின்றன கேள்
பதிலும் இல்லாமையால் ஜன்னலண்டை வந்து உற்று நோக்கி
சகி காள் நப்பின்னை நமது உற்ற உறவான கண்ணனுடன் பந்தாடிக்கொண்டு இருந்தனள் போலத் தோன்றுகிறது -அவள் பந்தாடியதால் மிகவும் அயர்ந்து உறங்குகின்றனள்

நம்மைப் போல பிரிந்து இருந்தால் அன்றோ உண்ணாது உறங்காது இருக்கப் போகிறாள் -பந்து கை புகுந்ததற் பின்பு அவள் உறங்குவதற்கு என்ன-

அடி பந்தார் விரலி-நீயும் அவனும் மைத்துன்மையாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி விளையாடும் போது -உன் பக்கத்திலே நின்று அவன் தோல்விக்கு வசை பாடுவோம் -அழகிய மென்னடை அன்னம் போல் வந்து நின் செந்தாமரைக் கைகளில் அணிந்த வளையல்கள் குலுங்க கதவைத் திற-

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

சகி இனி நாம் கண்ணனை எழுப்ப வேண்டியதில்லையோ

ஏன் வேண்டாம் இனித்தான் அவனை எழுப்ப வேண்டும்

அவன் நப்பின்னை இட்ட கட்டளைப்படி நடப்பவன் என்றனையே -அவளை எழுப்பினாலே அவன் எழுந்து விடுவனோ என்று நினைத்தேன்

நான் சொல்வது பொய்யா -ஜன்னல் வழியே உள்ளே உற்று நோக்கிப் பார் -அவன் அவளிடம் எவ்வளவு மயங்கி மண்டிக் கிடக்கிறான் என்பது தெரிய வரும் –

அவ்வண்ணமே உற்று நோக்கி ஆச்சர்யத்துடன் -ஆம் சகி காள் உள்ளே பாருங்கள் -என்ன ஆச்சர்யம்-படுக்கை அறைக்குத்தான் எவ்வளவு ஜோடிப்பு -தந்தத்தினால் அழகு படச் சித்தரித்து வேலைகள் அமைக்கப்பட்ட நல்ல கால்களுடன் கூடிய ஓர் கட்டில் -அருகே குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது -கட்டில் மேலே மெத்தென்ன பஞ்ச சயனம் விரிக்கப்பட்டுள்ளது -அப் பஞ்சசயனத்தில் தேன் ஒழுகு பூங்குழலினளும் செவ்வாயினளும் சிற்றிடை யினளுமான நப்பின்னையின் செப்பெனத் திகழும் கொங்கைகளில் தன்னையே பதியவைத்து -தாமரை மொட்டில் வண்டு போலும் -மாணிக்கச் ஷேப்பில் சிமிள் போலும் படிந்து கிடக்கின்றன
எல்லாரும் ஆவலுடன் ஜன்னலண்டை வந்து உள்ளே உற்றுப் நோக்குகிறார்கள்

தலைவி -ஜன்னல் வழியே உற்று நோக்கி -அகன்ற மார்பினனே -நாங்கள் வந்தவுடன் சடக்கெனத் துயில் எழுந்து வரா விடினும் அங்கிருந்தே ஒரு வார்த்தை யாயினும் கூறக் கூடாதா -உன் கூட இருக்குமவள் புறப்பட்டு வர ஒட்டாளாகில் அங்கிருந்தே வருந்தேல்மின் என்று ஒரு வார்த்தை கூறுவதும் அரிதோ
சகிகளை நோக்கி -சகி காள் நப்பின்னையுடன் அவன் சேர்ந்து இருப்பதால் நமது கார்யம் விரைவில் நிறைவேறும் என்று இருந்தோமே -நப்பின்னையே இப்பொழுது நம் காரியம் தாமப்பிதற்க்குக் காரணமாய் இருக்கிறாள் -என் வார்த்தைக்கு மறுமாற்றம் சொல்லப் புகுந்த அவனை அவள் தன் கண்ணால் ஜாடை காட்டிப் பேச ஒட்டுகிறிலள் -நாம் மையிட்டு எழுதோம் என்றும் இருக்கிறோம் -அவளோ கண்ணில் மையிட்டு அவ்வழகால் அவனை அகப்படுத்திக் கொண்டு இறுமாந்து இருக்கின்றனள்
உள் நோக்கி -மையிட்ட அழகாய் அகன்ற கண்ணுடையவளே -நீ உன் கண் அழகால் சொன்ன சொற் கேட்டு நடக்கும் உன் மணாளனை எழுப்பித் தருவாய் என்று இருந்தோம் –நீயே அவனைப் பேசவும் ஒட்டுகிறதில்லை -க்ஷண காலம் கூட நீ அவன் பிரிவைப் பொறுக்க முடியாதவள் ஆயிற்றே -உன்னைப் போலத் தானே நாங்களும் -ஒரு க்ஷண நேரம் எங்களுக்காக அவனை எழுப்பி அவன் எழுந்திருக்கும் போது உண்டான பிரிவைப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா -இது கூட நீ செய்கிறதில்லை -உண்மையாகச் சொல்லுகிறேன் -இது உனக்குத் தகாது –

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

சகி ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வ பாவமாக வுடைய நம் நாதன் இனியும் வரவில்லை-நப்பின்னையை இது தகாது என்று நீ சிறிது சினந்து கூறியதை அவன் பொறுக்க வில்லை போலும் -ஆகையால் இப்பொழுது நீ நப்பின்னை அழகைப் புகழ்ந்து இருவரையும் ஒரே சமயத்தில் எழுப்பிப் பார் -அவன் அவசியம் வந்து தீருவான்

அப்படிச் செய்தாவது பார்ப்போம்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே சென்று அவர்களது நடுக்கத்தைத் தொலைக்கும் பலமுடையோய் -துயில் எழு -கடல்படா அமுதான உன்னை விட்டு கடல் படு அமுதம் விரும்பும் தேவர்கட்கே உதவும் நீ -உன்னை அன்றி இலாத அபலைகளான எங்களைப் பிரிந்து நோவு பட்ட பிறகேனும் வந்து ரக்ஷிக்கக் கூடாதா -அண்டினோரைக் காப்பதும் விரோதிகளுக்குத் தீமை செய்வதும் அன்றோ உன் ஸ்வ பாவம் -இப்பொழுது நீ அண்டினோருக்கும் தீமை செய்யும் சிரீதரனானாயோ -எங்களுக்காக நீ செய்ய வேண்டிய கார்யம் யாது -ஒன்றும் இல்லையே -விமலா துயில் எழு -அதுவே போதும் -செப்புப் போன்ற மென் கொங்கையும் செவ்வாயும் சிறிய மருங்குலும் படைத்த நப்பின்னை நங்காய் -இலக்குமி போன்றவளே துயில் எழு

நப்பின்னை -உள் இருந்தே -நான் எழுந்திருந்து உங்களுக்குத் செய்ய வேண்டியது என்ன-

தலைவி -தனக்குள் -ஒரு மட்டுக்கு எழுந்தாள் அம்மா-
வெளியில் நீ எழுந்து விசிறியும் கண்ணாடியும் உன் மணாளனும் தர வேண்டும் -தந்து இப்பொழுதே பிரிந்து வருந்தும் எங்களை உன் கணவனோடு கூட்டி நீராட்ட வேண்டும் -அவன் அழகில் நாங்கள் ஈடுபட்டவர்களானாலும் நீ அவனைத் தந்தால் -நீ தந்த கண்ணன் -என்று அவனிடம் நாங்கள் ஈடுபடுவோம் –

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

நப்பின்னை கதவைத் திறந்து வெளியே வருகின்றனள்
ஆய்ச்சியர் புன்முறுவலுடன் அவளை வரவேற்கின்றனர்

சகி நீ இருந்தும் இவ்வளவு ஏன் தாமதம்

நப்பின்னை -நானும் உங்களில் ஒருத்தி தானே -நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணனை எழுப்ப வேண்டி இருக்க நீங்கள் மட்டும் நான் இல்லாமல் அவனை எழுப்ப ஆரம்பித்தீர்கள் அன்றோ -அதனால் தான் இதுவரை தாமதிக்கும்படி செய்தேன் -இனி நாம் எல்லோரும் சேர்ந்து அவனை எழுப்புவோம் வாருங்கோள்

எல்லோரும் உள்ளே செல்கின்றனர்

கறக்கும் கலங்கள் பொங்கும்படி பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் வாய்ந்த நந்தகோபன் திருமகனே
அண்டினவரை ஆதரிப்பதில் திண்மையுடைய பெரியோய் -உலகில் காணக் கூசாமல் வந்து அவதரித்த சுடரே -துயில் எழு -சத்ருக்கள் வலி இழந்து தோற்று உன்னடிக்கீழ் வீழ்வது போல் நாங்களும் உன் குணங்களுக்குத் தோற்று வந்தோம் -மாற்றார் உனது அம்புகளுக்குத் தோற்றனர் -நாங்கள் உன் குணங்களுக்குத் தோற்றோம் -தோற்ற நாங்கள் எல்லோரும் ஆற்ற கில்லோம் -தோற்கடித்த உன் குணங்களைப் பாடி யுனக்கு பல்லாண்டு பல்லாண்டுகளாக மங்களங்கள் உண்டாக வேணும் என்று ஆஸாஸிக்க வந்தோம் -பிரிவாற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டுகிறதில்லை -ஆகையால் நீ வந்து எங்களைக் கை கொடுக்க வேண்டி யிருக்க நாங்களே வந்து நின் புகழ் பாடா நின்றோம் -கண் விழித்து அருள்வாயாக -பங்கய லோசன-அகன்று அழகிய இப்பார் முழுதும் தார் வேந்தராய் அரசாண்ட மன்னர் எல்லோரும் தம் தமது அபிமானங்களை விட்டு ராஜ்யாதிகாரத்தைத் துறந்து உன் பாணங்களுக்குத் தோற்று உன் சிம்ஹாசனத்திற்கு கீழே குழுமிப் படுகாடு கிடப்பதைப் போலே நாங்களும் எங்கள் பெண் தன்மை ஒழிந்து வேறு சுக அனுபவங்களை இறையும் எண்ணாமல் நின் பள்ளிக் கட்டில் கீழே கிட்டி விட்டோம் -கணவன் வந்து கை கொடுத்திடில் வாழ்வோம் – என்று இருந்த இடத்திலே இருப்பே பெண் தன்மைக்குச் சேரும் -எங்கள் ஆற்றாமை அப்படி இருக்க ஓட்டுகிறது இல்லையே –கிண்கிணி -சலங்கை போல் பாதி மலர்ந்த தாமரை போன்ற கண்களைச் சிறுக சிறுக விழித்து எம் மேல் கடாக்ஷ அம்ருதத்தைப் பொழியக் கூடாதா – நீர் இல்லாமல் வாடிய பயிர்களில் ஒரே தடவையாக வெள்ளத்தைப் பாய்ச்சினால் அவை பயிராகா அன்றோ -அதே போல் முதல் தடவையிலேயே நினது கடாக்ஷ அம்ருதத்தை முழுதும் எம்மேல் பொழிந்திடில் அதை எங்களுக்கு அனுபவிக்கும் ஆற்றல் கிடையாது -வாடும் பயிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஜலம் பாய்ச்சவதைப் போலே சிறுக சிறுக எங்கள் மேல் விழிக்க வேண்டும் -பின்னர் நாங்கள் முழுப்பார்வையும் தரிக்கும் ஆற்றல் படைத்ததும் கோப காலத்தில் ஸூர்யன் போலவும் குளிர்ந்த காலத்தில் சந்திரன் போலவும் உள்ள இரண்டு கண்களாலும் எங்கள் மேல் நோக்குவாயானால் நாங்கள் அவசியம் அனுபவித்தே விடவேண்டிய எங்கள் துக்கம் எல்லாமே தொலைந்து போம் -ஆகையால் கடிதில் கண் பார்த்து அருள்வாயாக-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

கண்ணன் -எழுந்து உட்க்கார்ந்து -வாருங்கள் வாருங்கோள் -நீங்கள் வெகு நேரம் காத்து நிற்கிறீர்களோ -நான் பெரிய குற்றம் செய்து விட்டேன் -நீங்கள் வரும் முன்பே நான் எழுந்து உங்கள் காரியத்தை -இல்லை இல்லை -நமது காரியத்தைச் செய்ய வேண்டி இருக்க-நீங்கள் எல்லோரும் வந்து பல படிப்பட்ட எழுப்பும் வரையிலும் நான் பேசாதே கிடந்தேனே -நீங்கள் இக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் -நான் செய்ய வேண்டிய கார்யத்தைச் சொல்லுங்கோள் -அப்படியே செய்து சடக்கென முடிக்கிறேன்-

பூவைப்பூ வண்ணா -தூங்கி எழுந்த நீ இங்கிருந்தே எங்கள் காரியத்தை ஆராயக் கூடாது -அழகிய ஆஸ்தான மண்டபத்தில் ஸிம்ஹாஸனத்தில் இருந்து யாம வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேண்டும் -மழைக் காலங்களில் மலைக் குகைகளில் படிந்து கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் உறங்கி எழுந்து -தீப்பொறி பறக்கச் செங்கண் விழித்து பிடரி மயிர் -கேசரம் -சிலும்பும்படி நாலா பக்கத்திலும் புடை பெயர்ந்து தன் உடம்பை உதறி நிமிர்த்துக் கர்ச்சித்துப் புறப்பட்டுப் போவது போல் நீயும் நின் கோயிலில் நின்றும் இதோ இந்த மணி மண்டபத்துக்கு எழுந்தருளி வெற்றி ஆஸனத்தில் அமர்ந்து எங்கள் காரியத்தை ஆராய்ந்து அருள வேண்டும் –

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

கண்ணன் -புன்முறுவலுடன் -நன்கு வர்ணித்தனை -அப்படியே செய்வோம்
கண்ணன் முன்னும் கோபியர் பின்புமாக நடந்து செல்கின்றனர்

நப்பின்னை -சகிகாள் -நம் நாதனுடைய நடையழகைப் பாருங்கள் -முன் அவதாரத்தில் இவன் உலகு இழந்த இந்திரனின் ஆர்த்தி தீரும் படி -இவ் வுலகை எல்லாம் கல்லும் கானும் பாராமல் நாம் கூடக் கூசிப்பிடிக்கும் மெல்லியவடி இட்டது போல் இப்பொழுது நம் ஆர்த்தி தீரும்படி தன்னடிகளின் மென்மை பாராதே நடந்து செல்கின்றனனே -முன்பாவது இரண்டு அடி -இப்பொழுது எட்டுப் பத்து அடிகள் அன்றோ -இவ்வடிகளுக்கு மங்களம் உண்டாகட்டும்

ஒருத்தி -சகி முன் அவதாரத்தில் பிராட்டியைப் பிரித்த பாபி இருந்த தென்னிலங்கையை -புலி கிடந்த புதரை அடைவது போலக் கானகத்தில் எவ்வாறோ இம் மெல்லடி யிட்டு நடந்து சென்று திறல் காட்டினனே -இதற்கு மங்களம் உண்டாகட்டும் -அங்கே ஒருத்திக்காக நடந்தான் -இங்கே பலருக்காக நடக்கிறான்

ஏன் வேறு அவதாரத்துக்குப் போக வேண்டும் -இவ்வவதாரத்திலேயே பாருங்கள் -இம்மெல்லடி கொண்டு தானே சகடாசுரன் உருக்குலைய உதைத்தனன் -அப்புகழுக்கு மங்களம் பாடுவோம் -இது மட்டுமா -கன்றுரு எடுத்து நலிய வந்த அசுரனைக் கருவியாகக் கொண்டு கபித்தாசுரன் மேலே வீசினானே -என்ன துணிவு -அவ்விரு பகைவரும் சேர்ந்து கொண்டு இட்டால் என்ன ஆகும் -அவ்வமயம் எறியும் பொழுது மடித்த திருப் பாதத்திற்கு மங்களம் பாடுவோம் –
குன்று குடையாக எடுத்தானே -அப்பொழுது அப்பாரத்தை எல்லாம் இம்மலரடிகள் தானே தாங்கின –
இவன் கையிலுள்ள பகை கெடுக்கும் வேல் தானே பகைவர் உள்ள விடம் என்றும் கூடப் பாராமல் இவனது பாதங்களை நடக்கச் செய்கிறது -இவ்வேலும் கையுமாய் இருப்பதற்கு யாதொரு தீங்கும் வராமல் இருக்க வேண்டுமே
இதற்கு எல்லாம் மங்களம் பாடுவோம்

கண்ணன் ஆஸ்தான மண்டபத்தண்டை செல்கிறான்

நாதா இவ்விடத்தில் தான் எங்கள் காரியத்தை ஆராய வேண்டும் -உண்மையாக எங்கள் கார்யத்தைச் சுருக்கிக் கூறி விடுகிறேன் -என்றைக்கும் உனது வீர சரித்ரம் பாடி உன்னை அனுபவிக்க ஊரார் இசைந்து இன்று வந்தோம் -இதற்கு இசைந்து இரங்க வேண்டும் –

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

எல்லோரும் உள்ளே செல்கின்றனர்

ஆறாம் அங்கம் முதற் களம் முற்றிற்று


ஆறாம் அங்கம் இரண்டாம் களம்

நந்தகோபன் அரண்மனை -ஆஸ்தான மண்டபம்
ஸிம்ஹாஸனத்தில் கண்ணன் அமர்ந்திருக்கின்றான்
அருகே ஆய்ச்சியர்கள் நிற்கின்றனர்

சிறுமியர்காள் உங்களுக்கு வேண்டுவது என்ன-நீங்கள் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள்

எங்களிடம் பெரு மயக்குடை மணி வண்ணா -மார்கழி நீராட வந்தோம் –அந் நோன்பிற்கு உபகரணங்கள் வேண்டும் -எங்கள் பிரதிபந்தகங்களைப் போக்கி விடு -விடவே நாங்கள் உன் சேவகம் பாடி மகிழ வேண்டும் –

மார்கழி நீராட்டம் என்றால் என்ன

இது தெரியாதா -இது ப்ரஸித்தமான நோன்பு அன்றோ

யாகம் முதலியவை போல் இது எங்கே கூறப்பட்டு இருக்கிறது –

அவை போல் அல்ல காண் இது-நம் பெரியோர்கள் செய்வது-சிஷ்டாசாரத்தை விட மேற் பிரமாணம் எது

ஆகில் வேண்டுவது சொல்லுங்கள் -இவர்கள் கட்டழகைக் கண்டு இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் மெய் மறந்து இருக்கிறான்

நாதா எங்களிடம் பெரு மயக்கன் என்று நான் கூறியது உண்மை யாயிற்றே -சதுரங்கமாடுபவர் போல் எங்கள் மதுர அங்கத்தைக் கண்டு அதே கவனமாய் மற்றவற்றை மறந்து விட்டால் நாங்கள் எப்படி வேண்டிக் கொள்வது -நாங்கள் வேண்டுவதை நீ கவனமாகக் கேட்ப்பாயாகில் கூறுகிறேன்

புன்னகையுடன் உங்கள் வையம் என் கண்ணுக்கு இனிதாய் இருப்பது போல் உங்கள் இனிய வடிவத்தில் உண்டாம் குரலும் என் செவி கட்க்கு இனிதாம் அன்றோ -கூறுங்கள் கேட்டு இன்புறுகிறேன்

கேட்டு இன்புற்றால் போதுமோ -நாங்கள் வேண்டுவன கொடுக்க வேண்டுமே

அப்படியே கொடுக்கிறேன்

ஞானத்தை எல்லாமே நடுங்க முழங்கும் பால் போன்ற நிறமுள்ள உன் பாஞ்ச ஜன்யத்தைப் போலவே பல சங்கங்கள் வேண்டும்

வேறு என்ன வேண்டும்

மிகவும் பெரிய பறை என்ற வாத்யம் வேண்டும்

வேறு

பல்லாண்டு பாடி மங்களா ஸாஸனம் பண்ணுபவர் வேண்டும்

இன்னும்

மங்கள தீபம் வேண்டும்
கொடிகள் விதானம் முதலியவையும் வேண்டும்

பஞ்ச ஜன்யத்தை ஒத்த சங்கங்கள் உலகில் கிடையாது -ஆகையால் என் பாஞ்ச ஜன்யத்தையே வாங்கிக் கொள்ளுங்கள் –
பாரோர்கள் எல்லாம் மகிழக் குடக் கூத்தாடின போது நான் அரையில் கட்டின பறையைப் பெறுங்கள் -பல்லாண்டு பாட நம் அந்தரங்கர் ஒருவரைத் தருகிறோம்
விளக்குக்கு நப்பின்னைப்பிராட்டியையும் கொடிக்குக் கருடக் கொடியையும் -மேற் கட்டிக்கு அத்தாளத்தையும் -உத்தரீய வஸ்திரத்தையும் -கொண்டு செல்லுங்கள்

ஓரொன்று பாராது -இப்படி இருப்பன பல வேண்டும்

ஒற்றொன்று தானே உளது -இல்லாதவைக்கு எங்கே போவது

உனக்குக் கிடையாதது ஓன்று உண்டோ

எனக்கு என்றால் எளியதாகி விடுமோ

ஆலினிலையாய் -ஒரு பாலகனாய் ஆலிலை மேல் மேலொரு நாள் உலகெல்லாம் உண்டு திரு வயிற்றில் அடக்கிக் கண் வளர்ந்து அருளும் அக்டி தகடநா ஸாமர்த்யம் வாய்ந்த உனக்குக் கிடையாதது எது -எங்களுக்காகவாவது அவைகளை உண்டாக்கிக் தந்தருள வேண்டும் -உன்னை அடைந்தாரைத் தன்னைப் போலவே ஆக்குவதே உன் ஸ்வ பாவம் அன்றோ -அப்படியே உன் பஞ்ச ஜன்யம் முதலியவற்றைத் தந்தருள வேண்டும் –

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

நீங்கள் இந்த நோன்பினால் என்ன பலன் பெறப் போகிறீர்கள்

கூடாரை -சத்ருக்களை -வெல்லும் குணமுடைக் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை பெறுவதே எங்கள் நோன்பின் பலனாம் -பின்னர் நாங்கள் உன்னிடமிருந்து கீழ் வரும் சம் மானம் பெறுவோம் -நீ கொடுக்கும் சம் மானம் இந்நாடு புகழும்படி இருக்க வேண்டும்
சம்மானமாவன -கைகளுக்கு இடும் சூடகம் -தோள் வளை –காதுக்கு இடும் தோடு -செவிக்கு அலங்காரமாக வைத்துக் கொள்ளும் பூ -காலுக்கு இடும் பாடகம்

சரி இவ்வளவு தானே

இவ்வளவு மட்டுமல்ல -எவ்வளவு அணி கலங்கள் உண்டோ அவ்வளவும் வேண்டும் -பல் கலனும் யாம் அணிவோம்

சரி அணிந்து கொள்ளுங்கோள்

நாங்கள் அணிதலாவது -தனித்து இருக்கும் போது நாங்கள் மலரிட்டுக் கூட முடியும் -நீயும் நாங்களும் சேர்ந்து காலத்தில் பல்கலனும் நீயும் நப்பின்னையுமாகப் பூட்டவே நாங்கள் அணிவோம்

பிறகு

ஆடை உடுப்போம்

புன்னகையுடன் -ஏன் இப்பொழுது ஆடை இல்லாமலா வந்திருக்கிறீர்கள்

நாணத்தால் மவ்னமாய் இருக்கின்றனள்

நப்பின்னை -இதுவரை தங்களே யுடுத்துக் கொண்டனர் -நீ உடுத்து உடாதது உடையன்று என்று இவர்கள் அபிப்ராயம் போலும்

இரவில் தோட்டத்தில் யானும் உன் உடை உடுத்து உங்களை ஏமாற்றினேன் அன்றோ -அது போல் இவர்கள் என் ஆடையை -பீதாம்பரத்தை -உடுக்க வேணும் என்கின்றனர்
தலைவியை நோக்கி -நாம் ஆடை மாற்றிக் கொள்ள வேணும் -அப்படித்தானே

நாணத்துடன் நோன்பு நாளாகையாலே நல்லாடை உடுப்போம் என்கிறேன்

நல்ல ஆடையாவது

நப்பின்னை -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை

நீங்கள் இருவரும் என்னைப் பரிஹஸிக்கிறீர்கள்

இல்லை இல்லை உன் உண்மையான ஆசையைக் கூறினோம் -மேலே சொல்லு

நப்பின்னை -சகி கூறை பறித்தோடும் கள்வனிடம் கூறை உடுப்போம் என்கின்றனையே -கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடப் போன போதே இவனும் மறைந்து வந்து கூறை பறித்துக் குருந்திடை இருந்து கூறை கொடாமல் வேதனைப் படுத்தியதை நீ மறந்து விட்டனையோ –

புன்னகையுடன் தோட்டத்தின் இரவு வேளையில் நீயும் இவளும் சேர்ந்து ஒரு புதிய பெண்ணின் துகிலைப் பறிக்க வில்லையோ -அது மட்டுமே நியாயமோ

ஆம் ஆம் இரவில் நல்ல கார்யம் செய்தனை -புதுப் பெண்ணாம் -இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்தவள் போல் அன்றோ நடித்து விட்டனை

ஆசை யுடுப்பதோடு முடிந்து விட வில்லை -அதன் பின்னே எங்களுடன் கூடவே இருக்க வேண்டும்

கூடி இருந்து நான் செய்ய வேண்டியது என்ன

நாம் எல்லோரும் கூடி புஜிக்க-உண்ண -வேண்டும்

புஜிக்க என்ன வைத்திருக்கிறீர்கள்

நினது கைங்கர்யமும் பாரதந்தர்யம் போலே ருசிகரமான பாற் சோறும் நெய்யும் இருக்கின்றன

அவற்றை எப்படிப் புஜிக்க வேண்டும் தெரியுமா

ஆம் அறிவோம் -நின் தனக்கும் எங்கள் மரபினில் அவதரித்த பின்னர் தானே இவைகளை நன்கு அனுபவிக்கத் தெரிந்தது -நாங்கள் தனித்தால் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -உன்னோடு கூடியே பாற் சோறே தெரியாமல் மூடும்படி நெய் பெய்து கையிலே எடுத்தால் நெய் முழங்கை வரை பெருகலாம்பாடி அக்கார அடிசில் ஆக்கி பிரிந்த துன்பத்தை மறந்து குளிர்ந்து இருப்போம்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

அப்படியே செய்வோம் -என்னையே ப்ராபகமாக -உபாயமாக -பற்றி நிற்கும் நீங்கள் எனது ஆத்மா -ஆகவே உங்கள் விருப்பை நிரப்ப நான் கடமைப் பட்டு இருக்கிறேன்

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா எங்களிடம் அறிவு ஒன்றுமே என்பதே இல்லை -ஞான பக்திகளுடைய வாஸனையே வீசினதில்லை -கறவைப் பசுக்களோடு பசுக்களாய்க் காடுமேடு திரிந்து தின்னும் அறிவொன்றும் இல்லா ஆயர் தம் குலம் எங்களுடையது -நாங்கள் இக்குலத்தில் நீ பிறக்கும்படிக்கு என்ன புண்ணியம் படைத்தோமோ-

புன்னகையுடன் -நன்றாய் இருக்கிறது -முரண்படப் பேசுகின்றனையே -புண்ணியமுளதாம் -அறிவில்லையாம் -புண்ணியம் யுடையோருக்கு அறிவு இருந்து தீருமே

நான் முரண்படப்பேசுவதாலேயே அறிவின்மை விளங்கவில்லையா -நாங்கள் அறிவிலிகளே யாயினும் நீ குறைவற்ற கோவிந்தன் அன்றோ -உனது பூர்ணிமை -குறைவின்மை – எங்கள் அறிவின்மைக் குறையைப் போக்குமன்றோ -குறைவற்ற பூர்ணனான நீ நிரபேஷனாய் இக்குலத்தில் அவதரித்து எங்கள் அறிவின்மை பள்ளத்தை உனது குறைவின்மை மேடு கொண்டு நிரப்பி விட்டனை என்கிறேன்

நீ வழக்காடுவதில் வல்லவள் அன்றோ -அறிவில்லாத நீ எப்படிப் இவ்வாறு வழக்காடுகின்றனை -இதைச் சொல்லு

இதுவும் நின்னது இன்னருளாலே தான்

எனக்கு நிறையுண்டாயினும் இதைக்கொண்டு உங்கள் அறிவின்மையாகிய பள்ளத்தை எப்படி நிரப்ப முடியும் -மேட்டுக்கும் பள்ளத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் வேண்டாமே நிரப்ப

நீ எங்களுக்கு உறவன்றோ -நிறைவாளனான நீ குறைவாளரான எங்களுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறாய்

உறவு ஒரு குடநீரோடே போகி விடுமே
(கட ப்ரஹரம் என்னும் கர்மத்தில் ஒரு நீருள்ள குடத்தை உடைக்க நாயிகா நாயக சம்பந்தம் விட்டுப்போம் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறது -இது பழைய காலத்தில் விவாஹ ரத்தாகும் )

போகாது -உன் தன்னோடு உறவு உன்னாலோ நாம் எல்லாருலாமோ போக்கடிக்க முடியாதது-

ஏன்

பெரியோர் கூறக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்

பெரியோர் கூறியது என்ன-

தலைவி
இன்றாக நாளையாக இனிச் சிறிது
நின்றாக நின்னருளே என்பாலதே -நன்றாக
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே
நாரணனே நீ யன்றி இலை

அப்பெரியவர் உன்னைச் சேர்ந்தவர் -ஆகையால் இப்படி கூறி இருக்கிறார்

ஆகில் உன்னாலேயே வெளியிடப்பட்ட திருமந்த்ரத்தைப் பார் -அதில் முதல் எழுத்தான அகாரம் உண்மையை உணர்த்தும்

எப்படி

அவ்வெழுத்து ரக்ஷகன் என்கிற அர்த்தத்தைக் காட்டி எமக்கும் உனக்குமுள்ள ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை உணர்த்துகின்றதோ

தலையை அசைத்து நன்கு வழக்கு அறிந்து கூறினை

இறைவ-நாங்கள் சிறுமியர் -அன்புடையோர் -சிறுமையாலும் அன்பினாலும் வந்த அஞ்ஞானத்தாலே செய்த குற்றங்களை எல்லாம் பொறுத்து அருள வேண்டும் -நீர்மை குடி கொண்ட உன்னைப் பரத்வத்தைப் காட்டும் நாராயணன் முதலிய பெயர் இட்டுச் சொன்ன குற்றத்தையும் பொறுத்து அருள வேண்டும் -நீர்மை பிரகாசிப்பதற்கு எனப்பிறந்த உனக்குப் பரத்வத்தைக்காட்டும் சொற்கள் கொண்டு கூறுவதைப் பொறுக்க முடியாதது தான் -அன்பினால் அறிவின்மையால் அச் சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே -நாங்கள் விரும்பிய பறையைத் தந்தருள்-

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

திங்கள் திருமுகத்துச் சேயிழையீர் -நீங்கள் என்னைப் பெறுவதற்காகப் பேர் ஆத்திரம் கொண்டு இருப்பது போலத் தான் நானும் இருக்கிறேன் -போவோம் வாருங்கள் நமது மநோ ரதத்தை நிறைவேற்றிக்கொள்ள

கோவிந்தா எனது முடிவைச் சுருக்கமாகக் கூறி விடுகிறேன் -அதன் படி அருள் செய்ய வேண்டும் -சிற்றம் சிறுகாலையில் வந்து உன் பொற்றாமரை அடி போற்றும் காரணம் யாது என் எனின்

மெய் மறந்து தனக்குள் –ஆஹா இம்மங்கை பேசும் போது என்ன அழகு -கோவைச் செவ்வாய் அமுத ஊற்று -வெளுத்த பற்களின் ஒளி -அச்செவ்வாய் மீது பவளத்தரை மேல் பனிமதி பிரகாசிப்பது போன்று இருக்கிறது -நான் இந்தத் சந்திரிகையை அனுபவிக்கும் ஓர் சகோர பக்ஷி

நான் சொல்வதை நான் கேட்கவில்லையே -நீ வேறு கவனமாய் இருக்கின்றனை -என் சொல் காட்டில் எறிந்த நிலாத் தானோ

செஞ்சொற் கிளியே -நான் ஓர் சகோர பக்ஷி -நீ பேசும் போது நின் செவ்வாயில் வீசும் நிலாவை நான் அனுபவித்து கொண்ட இருக்கிறேன் -ஆஹா என்ன அழகு

நப்பின்னை -நாதா என் சகி தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் பொழுது அவள் அழகில் நின் மனம் சென்று விட்டால் அவள் வார்த்தையை எப்படிக் கேட்டு அதன்படி செய்ய முடியும்

மனம் நிலை நில்லாதது -எனினும் நான் அதை அடக்கிக் கேட்க முயலுகின்றேன்

என் சகியின் வார்த்தையை ஓர்த்த மனத்தினனாய் பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆராய வேண்டி இருக்கிறதோ யோகீஸ்வரர் போல்

ஆம் இவள் அழகு படுத்தும் பாடு இது -தலைவியை நோக்கி அழகுக் களஞ்சியமே -மேலே சொல் கேட்க்கிறேன் – கண்ணை மூடிக் கொள்கிறார்

நப்பின்னை -இது ஏன்

ஓன்று பார்க்க வேண்டும் -அல்லது கேட்க வேண்டும் -இப்பொழுது கேட்கப் போகிறேன் -கண்ணைத் திறந்தால் இவள் அழகைக் காண்பேனே அன்றி கேட்க முடியாது

நான் சொல்வதைக் கவனமாக கேட்க வேண்டும்

அப்படியே –

கன்றுகள் மேய்த்து உழைக்கும் காடு வாழ் சாதியரான இடைக்குலத்திலே பிறந்த நீ எங்களைக் கொண்டு அடிமை கொள்ளா மல் இருக்கக் கூடாது –

நீங்கள் நோன்புக்கு உபகரணமான -சங்கும் பறையும் கொடியும் விலைக்கும் விநாதனமும் அன்றோ கேட்டீர்கள் -அவைகளைக் கொண்டு போங்கள் -வேறு அடிமையாவது என்ன

முக்கியமான பறையைக் கொடுக்கிறான்

நாங்கள் இன்று இப்பறை கொள்ள வந்தவர்கள் இல்லை -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்னோடு எல்லா உறவும் கொண்டவர்களாகவே நாங்கள் இருக்க வேண்டும் -அவ்வுறவைத் தெரிவிக்க வேணும் –

மற்றும் வேண்டுவது என்ன

நாங்கள் செய்யும் அடிமை உனக்கேயாக இருக்க வேண்டும் -உனக்கும் எங்களுக்கும் உகப்பான அடிமை எங்களுக்கு வேண்டாம் -மற்ற எங்கள் விருப்பங்களை இதோடு மாற்றி விட வேண்டும் -அடிமை செய்வது எங்களுக்காக என்ற நினைப்பை மாற்ற வேண்டும் -இதற்காகவே நாங்கள் வந்தோம்

பின்னை ஏன் கொடி விதானம் பறை முதலியவற்றைக் கேட்டீர்கள்

நாங்கள் நோன்பு என்பதோர் வ்யாஜம் கொண்டு வந்தபடியால் உலகத்தோடு ஒட்டு ஒழுக வேண்டி அவைகளை வேண்டினோம் -நோன்பு நோலுங்கோள் என்றும் அனுமதித்த கிழவர்களிடம் இவற்றைக் காட்டினால் உன் முகம் கண்டு களிக்கக் கூறுவர்-இந்நோன்பினால் அன்றோ உன்னோடு நாங்கள் சேர முடிந்தது -அதற்காக அவைகளை நாங்கள் வேண்டினோம் -உண்மையில் எங்களுக்குப் பறை அந்தரங்க கைங்கர்யமே –

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

நல்லது செல்வோம் வாருங்கோள் -எழுந்து இருக்கிறான்

நாதா முடிவில் ஒரு வேண்டுகோள் -அதற்கும் அருள வேண்டும் -இவ்வாய்ப்பாடியில் நாங்கள் பறை கொண்ட வழியை இப்படியே நோன்பு நோற்பவரும் பாடுவோரும் நடிப்போரும் கேட்ப்போரும் நினைது திரு முகத்துச் செங்கண் இறைக் கருணைப் பார்வைக்கு இலக்காகி இன்பம் பெற வேண்டும்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

அப்படியே ஆகுக

எல்லோரும் செல்கின்றனர்

ஆறாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

—————–

ஆறாம் அங்கம் -மூன்றாம் களம்
திருவரங்கம்
ரங்கராஜனும் கருடனும் தனித்துப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்

நண்ப இவ்வுலகில் காமத்தீயை விடக் கொடியது ஒன்றுமே இல்லை – தீ தன்னைத் தொட்டால் தான் சுடும் – காமத்தீயோ பிரிந்தால் சுடுமதாய் யுள்ளது -தீயினும் கொடிய இத்தை நான் எப்படி ஆற்றுவேன்

அரசே தாங்கள் காமத்தை அவ்வளவு இழிவு படுத்தி விடக்கூடாது -காமத்தைப் போல் இனிது இவ்வுலகில் கண் உள்ளதோ

ஆமாம் காமம் இனிதானது தான் -அம்ருதமாவது அருந்தும் போது தான் இனிமை பயக்கும் -இதுவோ அனுபவத்தை நினைத்தாலே அளவில்லா மகிழ்ச்சி யூட்டுகிறது – ஆயர் குலத்திலேனும் அம்மங்கையை நான் அனுபவித்ததை நினைத்தால் இப்பொழுதும் என்ன ஆனந்தம் உண்டாகிறது –

அப்ப இருக்கத் தாங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்களே

கவலை இல்லாமல் எப்படி இருக்க முடியும் -முன் அனுபவத்தை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தால் போதுமா -பழம் கணக்கு பசி ஆற்றுமா -அவ்வனுபவத்தை இப்பொழுது நினைத்துச் சிறிது மகிழ்வதால் தான் பிரிந்து வருந்தும் இந்நிலையிலும் உயிர் வாழ முடிகிறது -இனி அதுவும் முடியாது போல் இருக்கிறதே-

ஏன்

இதோ பங்குனி போக இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன -பின்னர் என்ன காலம் வரப்போகிறது தெரியமா -நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது

வஸந்த காலம் வரப்போகிறது

அப்பா என்ன கஷ்டம் -அது மதானன் செங்கோல் நடாத்தும் காலம் -கூற்றுப் போல் குயில் கூவும் காலம் -ஐயோ

அரசே அஞ்ச வேண்டாம் -அக் காலத்திற்குள் அம் மங்கையைக் கைப் பிடித்து விடுவீர்கள்

இப் பங்குனிக்குள்ளேயா

ஆமாம்

எனக்கு என்னவோ நண்பன் வார்த்தையை கூட நம்பிக்கை யுண்டாக வில்லை -தையிலும் மாசியிலும் தூக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டே காலம் கழித்தேன் -இம்மாதத்திலோ அதுவும் முடியாத -உயிர் இருந்தால் தான் இந்தக்கவலை எல்லாம்
பெரு மூச்செறிந்து -ஆஹா அப்பெண்மணியின் அழகை நான் மறுமுறை காணாமலா போகவேண்டும் -நல்லது -அடே மாரனே -வஞ்சக -இரும்புகள் தான் உனது பாணங்கள் -பூ அரும்புகள் அன்று-அடே பாதக -அவள் மீதும் இது போலே நீ அன்பு எய்கின்றனையோ இல்லையே -ஐயோ என் ஆண்மை எல்லாம் எங்கே மாயமாய் மறைந்தன -நண்ப எனக்கு என் ராஜ்யம் கைவிட்டுப் போய் விட்டால் எவ்வளவு வருத்தம் உண்டாகும் -அதைவிடப் பன் மடங்கு இப்பொழுது வருத்தம் பொங்கி எழுகின்றது -என்ன செய்யலாம் -கருடன் மீது சாய்ந்து கொள்கிறார்

கருட -தனக்குள் -நம் அரசனின் நிலையை வெகு மோசமாகி விட்டது -இவ்வருத்தத்தை எப்படியாவது நாம் மறக்கடிக்க வேண்டும் –
வெளியில் -அரசே தாங்கள் முன்பு பாணன் என்பானொரு அசுரனை வென்று பெரும் புகழ் படைத்திருக்கிறீர்கள் -ஆனால் இங்கே இப்பொழுது பஞ்ச பாணர் போராட்டம் பொறுக்கக் கூடியதாய் இல்லை -தாங்கள் கூட அவரை வெல்ல முடியாத போலிருக்கிறது-

எழுந்து பஞ்ச பாணரா -ஒருவன் போனான் -பஞ்ச பேர் முளைத்து இருக்கிறார்களா -எங்கே அவர்கள் -வில்லெடுத்து நாண் ஏற்றுகிறார்

தாங்கள் அவரை வெல்வது அரிது

ஏன் நீயே இப்படி சொல்கிறாய்

தாங்கள் உட்பட மூ உலகையும் அடக்கும் ஆற்றல் படைத்தவர் அவர் -ஆதலின் இவ்வாறு கூறினேன்

கோபத்துடன் என்னை அடக்கும் ஆற்றலா -இனி மேல் அல்லவா அது தெரியப் போகிறது -காண்பி அவர் இருக்கும் இடத்தை -இவருக்கும் பரசிவன் ஸஹாயத்துக்கு வந்திருக்கிறானா –

இல்லை இல்லை அவர் இவன் உடலை எரித்து விட்டார்

எரித்தது மன்மதனை அன்றோ

ஆம் அவரைத்தான் பஞ்ச பாணர் என்று கூறினேன் -அவருக்கு ஐந்து பாணங்கள் உண்டு அன்றோ –

ரங்கராஜன் நாணித்தலை குனிகிறார்

வீரனுக்கும் வில்லுக்கும் சேர்ந்தால் போல் நாண் -வெட்கமும் -ஏறி விட்டதே

நண்ப நீ கூட என்னைப் பரிஹசிக்கின்றனையே -நல்ல தருணம் பார்த்தனை -ஐயோ அந்த சுந்தரிக்காக நான் என்ன பாடெல்லாம் பட வேண்டி இருக்கிறது -அடி சுந்தரி -உனக்குக் கொஞ்சம் கூடத் தயை இல்லையா

கையிலே இருந்து வில் நழுவுகிறது -சோர்ந்து உட்க்கார்ந்து விடுகிறார்

கருடன் -தனக்குள் -சிறிது மறக்கடித்தே னாயினும் மறுபடியும் அந் நினைவுக்கே நம் அரசன் திரும்பி விட்டார் -ஆகட்டும் -சமாதானப் படுத்திப் பார்க்கிறேன்
வெளியில் -ஆழ் மனம் உடையீர் -தங்கள் மனத்திலும் துக்கம் தலை தூக்கலாமா -கப்பல் சென்றாலும் கடல் கலங்குவது உண்டோ

நண்ப-கப்பல் சென்றான் கடல் கலங்காதது என்பது உண்மையே -ஆனால் மலை கொண்டு அலை கடல் கடையும் போது கடல் எவ்விதம் கலங்கியது -மலை போல் வந்த இப்பிரிவினால் எனது மனக்கடல் ஏன் கலங்காது

அரசே தாங்கள் இனி அம் மங்கையைச் சேர சங்கை கொள்ள வேண்டாம் -ஏன் எனில் இம் மங்களப் பங்குனிக்குள் அவள் தங்களைச் சேர்ந்தால் ஒழிய உயிருடன் இருக்க முடியாத நிலைக்கு வந்து விட்டனள்

அப்படியே அவள் இங்கே என்னைத் தேடி வரப் போகிறாளா

வந்து விட்டதாகவே தீர்மானித்துக் கொள்ளுங்கோள்

ஆச்சர்யத்துடன் -வந்து விட்டனளா -எங்கே -நாலு பக்கங்களிலும் பார்த்து-ஆம் நண்ப நீ கூறியது உண்மையே -அப்பெண்மணி இதோ வந்து விட்டனள் -என்ன ஆச்சர்யம் -புன்முறுவலுடன் அவள் காணும் அழகைப்பார்-ஆஹா இந் நுண்ணிடை பெருத்த இரு கொங்கைகளையும் எப்படித் தாங்குகிறது –

மையோ குழல் மழையோ முகமதியஞ்சிருள் திரளோ
வெய்யோன் மதன் வளைவில் விடு கணையோ விழி வேலோ
ஐயோ இரு பெரு மா மலை அழகாருமோர் கொம்பின்
பொய்யோ வெனும் இடை தன்னிடை பொருகின்றதே அம்மா

எனது உயிரே வா மயிலே வா குயிலே வா கொஞ்சு கிளியே வா -இதுகாறும் விரஹத்தால் வெந்த எனது நெஞ்சினை குளிரச் செய் -எனது ஆசைக்களஞ்சியமே உயிரைப்போல் நமது உடலையும் ஒன்றாகச் செய்து விடு -இனிப்பிரிய முடியாதபடி
சுவரண்டை ஓடுகிறார்

கருடன் – விரைந்து முன் சென்று அறிவுடை மேலோய் -அப்பெண்மணி இன்னும் வந்துவிடவில்லை -நினது கைக்கொண்டு வரைந்த சித்ரமிது

ரெங்கராஜன் திடுக்கிட்டு பிரமித்து நிற்கிறார் -கருடன் கைகொடுத்து ஆசனத்தில் அமர்த்துகிறார்

சிறிது நேரம் கழித்து -நண்ப இது சித்ரமா -என்ன விசித்திரம் -சித்திரத்திலேயே இவ்வளவு வனப்பும் கவர்ச்சியும் -நேரில் கண்டாய்

ஆல் எதற்கு -தாங்கள் நேராக கண்களார அம்மங்கையின் வனப்பைக் கூடிய சீக்கிரத்தில் பருகப் போகிறீர்கள்

நண்ப நான் நினைக்கிறேன் -என்னைப் போலவே சித்திரம் எழுதி பிராமணாள் உயிர்ப்பிக்கப் பட்டவள் தான் அவ்வனிதா மணி என்று

அப்பெண்மணியை பிரமன் ஸ்ருஷ்டிக்க வில்லை -இந் நாநிலத்தின் சாரமே உருவெடுத்தால் போல் தானே வந்து உதித்தனள்-

ஒக்கும் -பிரமனுக்கு இத்துணை வனப்பு வாய்ந்த ஓர் பெண் மணியைப் படைக்கும் திறமேது -நண்ப இச் சித்திரத்தை எடு -என் நண்ப இச் சித்திரத்தில் அவள் அழகில் கோடியில் ஒரு பங்கேலும் காணப்படுகிறதோ –

முழு அழகும் காணப்படுகிறது -அதனால் தானே அப்பெண்மணியை நேரிலே கண்டாற் போலே தங்களுக்குப் பிரமம் உண்டாயிற்று –

அவளும் சித்திரத்தில் வல்லவளாய் இருப்பாள் அல்லவா

ஆம் அதை அவள் எழுதிய எழுத்துக்களே உணர்த்துகின்றனவே –

உண்மை தான் -சுசீலையின் மூலமாக வந்த கடித எழுத்துக்கள் என் கண் முன்பே நிற்கின்றன -அக்கடிதம் எனக்கு சிறிது ஆற்றல் அளிக்கிறது -அதனால் அக்கடிதத்தை நான் கீழே வைப்பதே கிடையாது –
கடிதத்தை எடுக்கக் காணாமல் -அந்தோ என் செய்வேன் -அழுகிறார் –

அரிய வீரனே இது என்ன செயல் -நான் கடிதத்தைக் கண்டு பிடித்துத் தருகிறேன் -தைரியத்தைக் கைக்கொள்க –

இதற்குள் சபை கூடுவதற்காக மணி அடிக்கப்படுகிறது

நண்ப சபை கூட மணி அடித்தாகி விட்டது -இச்சித்திரத்தைப் பத்திரமாக மறைத்து வை

கருடன் அவசரத்தோடு மறைத்து வைக்கிறார் -சபையோர்கள் வந்து வணங்கி தக்க ஆசனத்தில் அமருகின்றனர் -பிராட்டி ரெங்கராஜனுடன் ஸிம்ஹாஸனத்தில் அமருகிறாள்

இதற்குள் ஓர் சேவகன் வாயிலில் பெரியாழ்வார் வந்து இருப்பதாகத் தெரிவிக்கிறான்

உடனே அவரை அழைத்து வா

உத்தரவுப்படி -செல்கிறான்

பெரியாழ்வாரும் ஆண்டாளும் வருகின்றனர் -ரெங்கராஜன் முதலிய யாவரும் எதிர்கொண்டு வரவேற்கின்றனர் -யாவரும் ஆசனத்தில் அமருகின்றனர் -ஆண்டாள் மட்டும் நிற்கிறாள் பெரியாழ்வார் பக்கலில்

அரங்கச் செல்வம் ஓங்கட்டும்

ரெங்க -தனக்குள் நான் இதுகாறும் எவளுக்காக அளவில்லாமல் அல்லால் பட்டேனோ -அந்நங்கை இதோ வந்து விட்டனள் -பிராட்டி என் மார்பில் தான் வசிக்கின்றனள் -இப்பெண்மணியோ என் நெஞ்சினுள்ளேயே நித்ய வாஸம் செய்கின்றனள் -ஆனால் பிராட்டி முன்னிலையில் இவளை நாம் எப்படிப் ஏற்பது
வெளியில் -அந்தணர் ஏறே எங்களை சன்மானித்து இங்கு எழுந்து அருளிய காரணத்தைக் அறிய விரும்புகிறேன்-

பெரியாழ்வார் -இவ்விடத்து ஸ்ரீ முகப்படி இப் பெண் மணியை இங்கே சமர்ப்பிக்க வந்தேன்

ஆச்சர்யத்துடன் -ஸ்ரீ முகமா–ஏது ஸ்ரீ முகம்

திடுக்கிட்டு -என்ன அதற்குள் மறந்து விட்டீர்களா

நான் தங்களுக்கு கடிதம் எழுதவில்லையே

இதோ தங்கள் கடிதம் இருக்கிறதோ -கடிதத்தைக் காட்டுகிறார்

இது என் கடிதமா

ஆம் தங்கள் கையெழுத்து கூட இருக்கிறதே

நான் தங்களுக்குக் கடிதம் எழுதியதாக ஞாபகம் இல்லையே

தங்களுக்கு ஞாபகம் இல்லை -அரசரான படியால் -நான் கடிதத்தை நேராகக் காட்டுகிறேன் -அதற்கு என்ன செய்வது-

கருட அதை வாங்கிப்பார் -நான் கையெழுத்திட்டு இருக்கிறேனா என்றும்

வாங்கி -ஆம் இது தங்கள் கையெழுத்து தான்

ஆச்சர்யத்துடன் அப்படியா -அதைப்படி கேட்போம்

கருடன் வாசிக்கிறார்
ரெங்கராஜன் -திருவரங்கம்
அன்பு மிகுந்த பட்டர்பிரானுக்கு
நாம் தங்கள் காதல் புதல்வியின் காதல் பக்தியில் கட்டுண்டோம் – திருமகளும் இசைந்தனள் -நிகழும் பங்குனியில் உத்தர நாள் பவுர்ணமி திதி வெள்ளிக்கிழமை அன்று அன்பு மிக்காளை அழைத்து அவைக்கண் வரவும் -நாம் மனம் உகந்து ஏற்றுக் கொள்வோம்
இங்கனம்
தங்கள்
அழகிய மணவாளன்

ஆஹா இது என்ன ஆச்சர்யம் -நான் இப்பெண்மனையை அழைத்து வரும்படி எழுதினேனா -இல்லவே இல்லை -இது ஏதோ சூழ்ச்சியாக இருக்கிறது –

கோபத்துடன் -சூழ்ச்சியா வெகு அழகாகச் சொல்கிறீர்கள் -பிறந்தது முதல் கபடம் என்பதையே கேட்டு அறியாத எம் போன்றோர் செய்கை ஓர் பெரிய ராஜ்ய அதிகாரிக்குச் சூழ்ச்சியாகத் தோன்றும்-

அந்தணரரே சினம் கொள்ளக் கூடாது -நான் கடிதம் எழுதி இருந்தால் கணக்கில் இருக்கும் அல்லவா

இது என்ன ராஜீய விஷயமா -கணக்கில் வரிசை எண்ணம் நகல் காப்பி முதலியவை இருப்பதற்கு –

ராஜீய கணக்கில் இல்லாதாயினும் சொந்தக் கணக்கிலாவது இருந்தே தீரும்

சொந்தத்திலும் இது ரஹஸ்யமாயிற்றே

இது ரஹஸ்யமானால் கடிதத்தில் அவைக்கண் வரும்படி எழுதியிருக்குமா -தாங்கள் தான் சபைக்கு வருவீர்களா

அப்படியானால் கணக்கைப் பாருங்கள

கருடா கணக்கைப் பார்

கடிதக் குறிப்பு கணக்கைப் பார்த்து -இதில் தாங்கள் கடிதம் எழுதியதாகக் காணவில்லை

நாம் பொய் சொல்கிறோமா

பிராட்டியை நோக்கி -ஏன் அம்மா தாங்களும் இசைந்ததாகக் கடிதத்தில் காண்கிறதே -தாங்களாவது இவ்விஷயத்தில் நியாயம் கிடைக்க வழி செய்யலாகாதா –

தனக்குள் -என் கணவன் இப் பெண்மணியிடம் காதல் கொண்டதை எனக்காக மறைக்கின்றனன் -இனிப் பொறுத்துப் பார்ப்போம்
வெளியில் -ப்ராஹ்மண உத்தமரே இதுவரையிலும் என் கணவன் இப்பெண்மணியிடம் காதலன் கொண்டதாகவே தெரிவிக்க வில்லையே

இது என்ன அரசனே இவ்விதம் செய்தால் கேட்பது யார் -இது இருக்கட்டும் -தங்கள் இப்பெண்மணியை விரும்பியதற்கு வேறே சில சான்றுகளும் இருக்கின்றன -அவைகளை இப்பெண்மணியைக் கொண்டே சொல்லச் சொல்லுகிறேன்
ஆண்டாளை நோக்கி -இனி அஞ்சுவதில் பயனில்லை -முன்னர் நடந்தவைகளை இப்போது தெரிவித்து விடு

நாணிக் குனிந்து -நான் இச்சபையில் கூசாது எப்படி தெரிவிப்பேன்

ரங்க -தனக்குள் -அந்தோ நான் எவ்வளவு வன்னெஞ்சன் -வலிய வரும் மணியைத் தெருவில் எறிவாருண்டோ -இப்பெண்மணி பிராட்டி முலம் என்னையே அடையாலாகாதோ -இவள் தன் செஞ்சொற்கள் நெடுநாள் தேனில் ஊறின போலும் -ஐயோ தேனுள்ள இடமும் தெரிந்தும் செல்ல மாட்டா வண்டினம் போல் தவிக்கின்றேனே

குழந்தாய் பயப்படாதே தைர்யமாகச் சொல்லு

ஆண்டாள் வெட்கத்தால் சொல்ல மாட்டாதே குழறுகின்றனள்

ரெங்கநாயகி -தனக்குள் -எனக்காக எனது நாதன் காதல் கொள்ளாதவன் போல் நடிக்கின்றனன் -இந்நங்கையோ நாணத்தால் சொல்ல மாட்டாதே தவிக்கின்றனள் -இந்நிலையிலும் நான் வாளா இருத்தல் தகாது
வெளிபடையாக -நாத தங்கள் மனம் இப்படிக் குழப்பம் அடைந்தால் என்ன செய்வது-இப்பெண்மணியிடம் அடங்காத காதல் கொண்டும் நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள் -உங்கள் காதலன் இக் கடிதம் தான் நன்கு வெளிப் படுத்துகின்றதே

நான் இக்கடிதம் எழுதவே இல்லையே

நாதா ஏன் மறைக்க வேண்டும் -உங்கள் இருவர் காதலையும் நான் நன்கு அறிவேன் -இப்பெண்மணியிடம் வந்த கடிதமும் என் கை வசமே உள்ளது –
கடிதத்தைக் காட்டுகிறாள்
தங்களது சயன அறையில் இரு மூன்று தினங்களுக்கு முன்பு நான் கண்டெடுத்தேன் -இக்கடிதத்தில் அலர் வாழ் மங்கை–அலகிலா அகன் மார்போனே -என்று குறிப்பிட்டதைக் கண்டு நான் பெரு மகிழ்சி அடைந்தேன்-

இவள் என்னைப் புருஷகாரமாகப் பற்றி இருக்கிறாள் -ஆதலின் இவள் பேரின்பம் பெற நான் முயற்சித்தேன் -உடனே உங்கள் கையெழுத்திட்டு நானே இக்கடிதம் எழுதி அனுப்பினேன் -இப்பெண்மணி எழுதின கடிதத்தைக்கொண்டேனும் ஆறி இருக்கும் உங்களுக்கு இதைக் காணாமல் பெரும் துன்பம் அதிகமாக விடப் போகிறதே என்று இறையும் பிரியாதே இரண்டு மூன்று தினங்களாக விநோதமாக போது போகும்படி செய்தேன் -இதற்குள் எவ்விதத்தேலும் இன்று இப்பெண்மணியை அழைத்து வரும்படி பணியாட்களையும் அனுப்பினேன் -இன்று இவள் வரும் நாளாகையாலே நான் தங்களை நெருங்க வில்லை -ஆகையால் கோபத்தை விட்டு இம் மாதை ஏற்று அருளுங்கோள்-

ரெங்க -புன்முறுவலுடன் உன் அனுமதிக்குத் தான் இவ்வளவு தாமதம்

ரெங்கநாயகி கீழ் இறங்கி ஆண்டாளையும் ஆசனத்தில் ஏற்றி அரியனது அருகில் அமரச் செய்து தானம் அமருகின்றனள்

பெரியாழ்வார் -மெய்மறந்து -ஆஹா என்ன ஆனந்தம் -எனக்கு எத் துணைப் பெருமை கிடைத்து விட்டது–இத் தகைய பெண்மணியைப் பெற்றதால் அன்றோ சர்வலோக சரண்யனைக் கண்ணாரக் கண்டு களிக்கும் பெற்றுமை பெற்றேன் -கடும் தவம் புரிந்தும் நெடும் கணாளை அடுக்க மாட்டாது இடர்பாடும் மானிடருக்கு ஓர் அளவுண்டோ –முள்ளுடைத்தேனும் மணமுள்ள மலர் தருவதால் அன்றோ தாழையை மாந்தர் மதிக்கின்றனர் -அதே போல் யானும் கோதை -மாலை -ஆண்டாளுமாம் -கொடுப்பதால் அன்றோ அரங்கனால் மாமனார் என மதிப்பிடப் பெற்றேன்-ஆஹா என் பெண்மணி மணவாளர் அரவணைப் பள்ளி கொள் மணவாளரோடு மணம் பிரிந்து கூடி விட்டனள் -இவ்வுயரிய தம்பதிகட்க்குத் திருஷ்ட்டி வாராமே பல்லாண்டு பாடுவோம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஆஹா அவ்வருள் இறைச் செங்கண் மாலினைக் கண்டு கொண்டே இருந்தால் போதாதோ -ஆராவமுதன் அன்றோ அவன் –
கண்ணை விழித்துப் பார்த்து அங்கு ஒருவரையும் காணாது ஏங்கி
அந்தோ அம் மாயப் பிரானை மறைந்தான் போலும் -ஞானப்பிரானை இவ்வூனக் கண்ணாலே எவ்வளவு நேரம் தான் காண முடியும் -கோதாய் நீ நெடுநாள் ஸேவை தந்தவளாயிற்றே -நீயுமோ மறைந்தனை -கோதாய் -உன்னைச் செங்கமலச் செல்வி போல் வளர்த்தேன் -அது போல் அங்கும் நீ வளருவாயா -அந்தோ எனக்கு வேறு ஒரு மகவும் இல்லையே -நீ அஞ்சு குடிக்கு ஒரே சந்ததி யாயிற்றே -இனி யார் முகம் கண்டு மகிழ்வேன்-

ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4-

அசரீரி -மாமா வருந்த வேண்டாம் -நாம் வில்லி நகரில் நின் மகளுடன் அரங்க மன்னார் எனப்பெயர் பூண்டு மணமகனாய் ஸேவை ஸாதிக்கிறோம் -மகிழ்வுடன் செல்வீராக

தன்யோஸ்மி -முன்பும் நின் மகள் என்ற அமிழ்தைச் செவி மடுத்தேன் -இப்பொழுதும் அதே போல் -ஆஹா அரங்கன் நான் இருக்கும் இடம் தேடி வரப் போகிறான் -வேறு இனி என்ன வேண்டுவது

வாழ்க அழகிய மா மணவாளனார்
வாழ்க மலரிடை வாழ் மணவாட்டியும்
வாழ்க மலர் முடி வைத்த மணாட்டியும்
வாழ்க இறை கழல் வாழ்த்துமவர்களே

செல்கிறார்

ஆறாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று

ஆறாம் அங்கம் முற்றிற்று

வாழ்க வாழ் கடல் வையகம் எல்லாம்
வாழ்க வாழ் கருத்துள்ளுடைக் கவி வரர்
வாழ்க வாழ்வார்கள் இம்மண் மிசை வாய் மொழி
வாழ்க வாழ்க இம்மார்கழி நோன்புமே

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பாவை அனுபவம்-முதலும் மற்றவையும் -இரண்டாவதும் மற்றவையும் -இத்யாதி-இங்கும் அங்கும்- —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் –ஸ்ரீ வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் உடன் தொகுத்தவை–

January 3, 2025

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி
எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்கிற இடத்தில்
முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்திலே
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று

கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது

நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும்
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்

கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்

நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும்
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

முதலில் அருளிய -நாராயணன் பர வஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –-ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு-அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் (பெரிய திருமொழி -6-10 )என்று – அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் – அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது –மாதாவின் முன்பு பிரஜைகள் செய்த குற்றம் பிதாவுக்கு தோற்றதால் போலே பிராட்டி சந்நிதி யுண்டானால் சேதனருடைய அபராதங்கள் அவனுக்குத் தோற்றாது-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை – ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது-பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை – பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே போக்க வல்லவன்-அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற
நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம் –

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –

மா மாயன் மாதவன் என்றும் –
கேசவனைப் பாடவும் -என்றும் –
மா வாய் பிளந்தானை என்றும் சொன்னவற்றோடே தலைக் கட்ட வேணும் 

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்–கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும்
நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும்
சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்

முதலில் அருளியதே விவரித்து மேல் 29
பாசுரங்களும் நாராயணனே நமக்கே பறை தருவான் -பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம் இது தன்னையே மேலில் பாட்டில் விபரிக்கின்றான –

மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்-
மேல் பிராபகம் –பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –

முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –

நந்த கோபன் குமரன் –பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி-வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால்
இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –

பட்டர் பிரான் கோதை
பாராசர்யனான வியாசன் என்று ஆப்திக்குச் சொன்னால் போலே பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு இவளுக்கு உத்கர்ஷ ஹேது-பெரியாழ்வார் மகள் ஆகையாலே சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –ஆற்றப் படைத்தான் மகனே -என்று இறே
ப்ரதிபாத்யனுக்கு ஏற்றம் –விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்று இவருக்கு தேவராய்
வட பெரும் கோயில் யுடையான் நிறம் பெற்றான் –இவர் மகளாய் ஆண்டாள் நிறம் பெற்றாள்-ஒரு மகள் தன்னை யுடையேன் என்று இவள் சம்பந்தம் இறே
தமக்கு உத்கர்ஷமாகச் சொல்லுவது 

நந்த கோபன் குமரன் –யசோதை இளஞ்சிங்கம் -முதலிலும் -அம்பரமே பாசுரத்திலும்-நந்தகோபாலா எழுந்திராய் -யசோதா அறிவுறாய் – தாய் தந்தை -உண்டே
வகுள மாலிகை -திருமலை நம்பி -இருவருமே திருமலையில் உண்டே
பெற்றும் பேறு இழந்தது தேவகியும் புற்றும்

முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல் ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –

கார்மேனி -செங்கண்-
வடிவாலே அணைத்து-கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து-கண்ண பிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல் ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார் மேனி” எனப்பட்டது.-தங்கள் ஆடப் போகிற தடாகம்(கார் மேகத்தில் அன்றோ நீராடப்போகிறார்கள் )-செங்கண் அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் – அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே–அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே–ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை –இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –

செங்கண் திரு முகத்து
பெண்களைக் கண்ட பின்பு அலப்ய லாபத்தாலே திருக் கண்களும் செவ்வி பெற்று
திரு முகமும் குளிர்ந்த படி-கண்ணன் கோள் இழை வாண் முகம் – அதிலே நீரார் கமலம் போல் செங்கண்- தோழிமார் பாரி கோள் என்று ஒருவருக்கு ஒருவர் காட்டி அனுபவித்த
கடாக்ஷமும் முகமும்-செங்கண்-கதிர் மதியம் போல் முகத்தான் – பங்கயக் கண்ணானை –
செங்கண் சிறுச் சிறிதே –-அங்கண் இரண்டும் கொண்டு என்று முடிய இம் முகமும் கடாக்ஷமும் இறே இவர்கள் நெஞ்சிலே கிடந்தது –
திங்கள் திருமுகம் -என்று ஸ்ரீ கோபிமார் முகத்தையும் அவர்கட்க்கு அனுபாவ்யனானவன் -செங்கண் திருமுகம் -முகத்தையும்
ஒரு முகப்பட அனுபவிக்கிறார்கள்-

——–

1-7-10 மூன்றிலும்நாராயண குண த்ரயம் அருளி காட்டுகிறாள்நாராயணனே நமக்கே பறை தருவான்-இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்–சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –நாராயணன் மூர்த்தி-கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ–கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் – ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான் அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்–நாராயணன் – முகம் தோற்றாமே நின்று- வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்நாராயணன் –அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ – வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ – உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –நாற்றத் துழாய் முடி நாராயணன் -ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ-நாராயணன் -இங்கு மூன்றாவது -நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் –அழியாத குணக்கடல் நிறைந்தவன்-ரம் -அழிய வைக்கும்
கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –

———

1-28-29-
முதலில் அருளிய -பறை தருவான் -என்றதை -பிராப்ய பிராபகங்களை
சிற்றம் -கறவைகள் -விவரித்து அருளுகிறாள் –பறை என்று பிராப்யம் சொல்லி -தருவான் பிராபகமும் –பிராப்யம் முன்னாக அருளி -பிராபகம் பின்னாக அருளி -வயுத் பத்தி வேளையிலே -இப்படி –சப்த த்வயத்திலே அருளியதை காதா த்வயத்தாலே விவரிக்கும் இடத்து கறவை -என்று பிராபகம் முன்னாக -சிற்றம் என்று பிராப்யம் பின்னாக -அனுஷ்டான வேளையிலே இப்படி மாறாடி தான் இருக்கும்

முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்- சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது – நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம்

உன் பொற்றாமரை அடி -என்றும் –சரண -சப்தார்த்தமும் –

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே – மாதவனே என்றும் – மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –செல்வத் திருமாலால் -என்றும் – பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-

——-

முதலும் 29 பாசுரமும்
முதலில் பிராப்ய பிரதிக்ஜை-29 பாட்டில் பிரப்யத்தை -கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –என்று நிஷ்கர்ஷிக்கிறாள் –
முதல் பாட்டில் -பறை -என்று மறைத்து கூறப்பட்டு -அதை இங்கே வ்யக்தமாக்கப்பட்டது –

——–

முதலும் இரண்டாவதும் -முதல் பாசுரத்தில் நாராயணனே -ஏவகாரம் -மாமேகம் என்றால் போலே-உபாய நைர பேஷ்யம் -நிர பேஷ உபாய பூதன் இறே பரமாத்மா –
இரண்டாம் பாட்டில் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -சில வியாபாரங்களை கர்தவ்யங்களாக கூறுவது -நிர பேஷ உபாயத்வ பஞ்சகம் ஆகாது – உபாயத்வேன துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லை கைங்கர்ய ரூபேண சாஸ்திர விஹிதங்களை கர்தவ்யங்கள் என்றபடி

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –செய்யும் கிரிசைகள்-பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை —இச்சைக்கு விதேயத்வம் உண்டோ – நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள் –கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் –நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்-அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –

—————-

முதல்-26-30
முதல்-29-30-
முதல் பாட்டில் மூல மந்த்ரார்த்தையும் –
26 பாட்டில் சரம ச்லோகார்த்தத்தியும் –
30 பாட்டில் த்வயார்த்தத்தையும் அனுபவிக்கலாம் -29 பாட்டில் மூல மந்த்ரார்தம் வியக்தம் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற – ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –ஆகையால் இப்பாட்டு திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று – இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.இம்மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை

மாலே மணி வண்ணா–நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்-சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் -)ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.-வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து
–என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள் தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம் பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட , மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.-பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே – அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான். என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்-மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யம் செய்யும் பொழுது ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து -ப்ரபல தர விரோதி –மற்றை நம் காமங்கள் மாற்று –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
ப்ராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே –
எனக்கும் பிறருக்கும் அல்ல எனக்கும் உனக்கும் அல்ல -உனக்கே –
மாம் -ஏகம் -என்னையே -ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்வது
இதே போல் ப்ராப்யத்தில் -அவன் ஆனந்தத்துக்காகவே -மேல் படி
போக்தாவாகவே இருக்க வேண்டும்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ரங்கள் போக்யங்கள்
அஹம் அன்னம் நாமே போக்ய பதார்த்தம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –நீராடப் போதுவீர் –
(இவள் எடுத்த எடுப்பிலே நீராடப் போதுவீர் )
எல்லாரும் போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில் முதலடியிலே நின்று
அது நிலை நிற்கைக்காக ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்-
(பாகவத கைங்கர்யம் நிலை நிற்க பகவத் கைங்கர்யம் வேண்டுமே )

கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த
ஞான சக்திகளும் தோற்றுகையாலே
நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்

7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

———————

இரண்டும் முப்பதும்
இரண்டாம் பாசுரத்தில் -பையத் துயின்ற பரமன் -பாற்கடல் கிடக்கை
30 பாசுரத்தில் கடைந்த -கடல் கடைந்த சரித்ரம்
பௌவ நீர் கிடந்தது –கடைந்த பெற்றியோய் -திருச் சந்த விருத்தம் -28

பையத் துயின்ற--பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே–ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி-முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி- இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது -சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி-பரமன்-தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே-திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு-வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது-கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்-சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்-வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் – அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை–கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்றுஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –(திருச்சந்த 28)-

கடைந்த பெற்றியோய் – துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் – ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் –

———–

இரண்டும் -29 th பாசுரமும்
அடி பாடி -திருப்பாத கமலங்களின் அனுபவம் -தொடங்கி
அடியே போற்றும் -திருவடிகளின் அனுபவம் முடிக்கிறாள் –

அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

அடி பாடி –மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே- திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்–பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே–அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி-அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூசகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்-அம்பரீஷன் துர்வாசர் )சிவந்து-ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்த வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்-பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் – பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்–இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ-திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்-சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)

மாற்றார் உனக்கு வலி தொலைந்து-உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே-சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடி இல்லாமையாலே
உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே – மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே -என்றுமாம் –அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும் குணங்களுக்குத் தோற்று வந்தோம் –லௌகிக சத்ருக்களடைய உன்னுடைய மிடுக்குக்கு தங்கள் வலி மாண்டு உன் திருவாசலிலே பழைய ராஜ்யத்தைக் கொடுத்து நீ போ என்றாலும் முன்புத்தை எளிவரவை நினைத்து பொறுக்க மாட்டாதே உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமா போலே –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி –பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே-யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி – -திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –-திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-அடி போற்றி அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் – சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள் சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் – அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்-திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை – போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள் அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்-செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்

கழல் போற்றி-விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்உன் பொற்றாமரை அடியே –மகார்க்கமுமாய் போக்யமுமாய் பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –
வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை-சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை  அடியே –போற்றும்-ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி –அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே
(திருமார்பை ஆசைப்படும் அத்திரு-திருவடியை ஆசைப்படும் இத்திரு )உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ –காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-அவை –உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் — வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –இது மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே இப் பொன்னடி இருப்பது –உன் –பொன்னடி – எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -(பொது நின்ற பொன் அம் கழல் )
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் – கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் – விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ –பொற்றாமரை அடி அன்றோ –சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்0ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3) தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால் கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே அழித்தாய் உன் திருவடியால் -கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று
ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 ) இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –

பரமன் அடி பாடி –அடி போற்றி – கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –

———–

இரண்டும் முப்பதும் –
அடி பாடி -திருவடிகளை பிரஸ்தாபித்து கேசவனை -திருக் குழல் அனுபத்தில் முடிக்கிறாள்
பெரியாழ்வார் திருமொழி 1-2- போலே பாதாதி கேசம் அனுபவம் –

கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்து இட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே -1-2-2-கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை  வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-பழம் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-பரமன் தன
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

———-

இரண்டும் 29 th பாசுரமும் –
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
29th பாட்டில் கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –

செய்யும் கிரிசைகள் கேளீரோ–கேளீரோ – பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே- இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே- பகவத் விமுகர் கோலாஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே-என்று
அவர்கள் இந்த லாப அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்-இருக்கையாலே -கேளீரோ -என்கிறார்கள் –மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணும் காலம் —
அசை இடுவார் உண்டோ – இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-கேளீரோ -என்று அந்ய பரத்தையை தவிர்க்கிறார்கள்-இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்-இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல-போதயந்த பரஸ்பம் பண்ண – ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது தரிக்க ஒண்ணாதாய் இருக்கிற படி-கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் –கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து– நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –காதால் கேட்பது -முன்னோர் உபதேசம் கேட்பது-

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் – இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் – வடிவு அழகிலும் பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி அந்நிய பரனாய் இருந்தான் –எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால்
ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இறே இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு-கேளீரோ (2 )-என்று பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் – இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று-

—————–

மூன்று-17-21-
மூன்றிலும் திரி விக்கிரம அனுபவம்
அவனே திரி விக்ரமன் இறே

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி–ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே- மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி – பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் – உவந்த உள்ளத்தனாய் -என்னக் கடவது இறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே சிறுப்பது பெருப்பதாகிறது-செய்யும் ஆனைத் தொழில்களும் — ஆஸ்ரித பக்ஷ பாதமும் – வடிவு அழகும் – வாத்சல்யமும் – அவன் ஒரு வூருக்குக் கை யாளானால் போலே இவன் ஒரு நாட்டுக்காக எளியனான படியாலுமாக-அணைந்து இருக்கையாலே சொல்லுகிறார்கள் –உத்தமன் – இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினான் ஆக அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கிறபடி-தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே – ப்ராப்யமும் ப்ராபகமும் தானே-

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி ஊடருத்து-விம்ம வளந்த – இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –உம்பர் கோமானே – இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-ஆண்களுமாய் பிரயோஜனாந்த பரருமாய் வேணுமோ முகம் கொடுக்கைக்கு – அநந்ய பிரயோஜனைகளுமாய் அபலைகளுமானால் ஆகாதோ
எங்களுக்கு முகம் காட்டும் போது சிறுப்பது பருப்பதாக வேணுமோ – இருந்தபடியே காட்ட அமையாதோ-உன் வாசி அறியாதே அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை
உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ

அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி–பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான் தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர
திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள் அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்-

————-

நான்கு -23 th பாசுரம் –
நான்காவது பாசுரத்தில் மேகத்துக்கு ஆண்டாள் நியமனம்
23 th பாசுரத்தில் மேக வண்ணனுக்கு நியமனம் –

இப்படி பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அனுவர்த்திக்க கடவர் ஆகையாலே- வர்ஷ தேவதையான பர்ஜன்யன்-நாம் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் -என்று வந்து- நான் இங்குத்தைக்கு செய்யும் அடிமையை நியமிக்க வேணும் -என்ன- செய்யக் கடவ படியை – இன்ன படியும் இன்ன படியும் -என்று-கையோலை செய்து கொடுக்கிறார்கள்-நாட்டார் சிறுமை பாராதே-உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி-உன்னுடைய ஔதார்யத்தில் ஒன்றும் மாறாத படி தோற்ற வேணும்-சமுத்ரத்திலே போய் புக்க வேணும் அதிலும் வாய்கரையிலே ஆக ஒண்ணாது -நடுவே சென்று இழிய வேணும் –கடலை மணலே சேஷிக்கும்படி கிரஹிக்க வேணும்-நாட்டார் விடாயும் எங்கள் விடாயும் கெடும்படி மின்னி முழங்கி வில் விட்டுத் துளித்துக் கொடு வர வேணும்-ஆகாச அவகாசம் இடமடையும் படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்க வேணும்-ஜகத் காரண பூதன் ஆனவனுடைய வடிவு போல் இருக்க வேணும்-அவன் அகவாயில் தண்ணளி இதுக்குத் தேட ஒண்ணாதே –இதினுடைய அகவாயும் நீர் அன்றோ என்னில்
அவன் நீர்மையைப் பார்த்தால் இது நெருப்பு என்னலாம் படி யன்றோ இருப்பது –சிருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை சிருஷ்டித்த திரு நாபீ கமலத்தை உடைய-சர்வேஸ்வரன் கையில்-திரு ஆழியோ பாதி மின்ன வேணும்-பாரத சமரத்தில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி போலே இருக்க வேணும்- அனுகூலர் வாழவும் பிரதி கூலர் முடியவும் ஆக வேணும் -நின்று அதிர்ந்து – அது போல் ஒரு கால் முழங்கி விட ஒண்ணாது-மாறாதே நின்று அதிர வேணும் –ஆர்த்திக்கு முற்பாடனாய் ரஷிக்கும் ஈஸ்வரனைப் போல் ஆக வேணும்-

சீரிய சிங்காசனத்து இருந்து-நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ – பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது-சீரிய சிங்கம் என்றதோடு –அறிவுற்று என்றதோடு – தீ விழித்து -என்றதோடு – வாசி அற இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –இவையா இவையா என்று தனித் தனியே ஆகர்ஷகம் இறே-மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்-சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ-உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம் ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே-புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி-சதுர்க்கதி இறே-நடையிலே ரிஷபத்தின் உடைய வீறும் மத்த கஜத்தின் உடைய மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை–எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் – எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்-இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-பெண்காள் –ஒருவரை ஒருவர் எழுப்பி – எல்லாரும் திரண்டு நம் வாசல் காக்குமவனை எழுப்பி –
ஐயரை எழுப்பி ஆய்ச்சியை எழுப்பி நம்மை எழுப்பி அண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –

———

நான்காம் பாசுரமும் 16th பாசுரமும்
வருண தேவனை அழைக்கும் ஆய்ச்சியர் ஆழி மழைக் கண்ணா -என்கிறார்கள் –
இது இ றே ஸ்ரீ வைஷ்ணவ திரு நாமம் –
ஏகாந்தீ வயப தேஷ் டவ்ய நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவய தஸய சர்வம ஸ ஏவ ஹி -என்னக் கடவது இறே –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் அடியான் என்று இறே —
இந் நியாயம் பதினாறாம் பாட்டிலே- கோயில் காப்பானே -வாசல் காப்பானே -என்ற இடத்திலும் ஒக்கும் —

ஆழி மழைக் கண்ணா —மழைக்கு த்ருஷ்டியாய் நிர்வஹிக்குமவன் ஆகையால் –
மழைக் கண்ணன் என்று அதிகரித்த காரியத்தை இட்டுச் சொல்கிறார்கள்–ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது, “குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால் இன்னது பிடித்தான் என்பது போலே –இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும் கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்-தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும் இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –

கோயில் காப்பானே –வாசல் காப்பானே- சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் – இன்னது பிடிப்பான் -என்னுமா போலே அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –இத்தால் சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது-யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் – ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே-

———–

ஐந்தாம் -16 th -28 th -29 th பாசுரங்கள்
ஐந்திலும் 16 th பாசுரத்திலும் -தூயோமாய் -தூயோமாய் -என்று கூறப் பட்டது இறே  – சுத்தி
அறிவு ஒன்றும் இலாத ஆய்க் குலத்து பெண்களுக்கு சுத்தியாகச் சொல்லப் பட்டது -ஸ்ரீ வைஷ்ணத்வம் இறே-
அது ஆகிறது -அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் இறே
ஆத்ம யாதாத்மய ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு இந்த அசுத்தி இல்லாமை
இரண்டு பாசுரங்களிலும் சுருங்க கூறப்பட்டு -இது தன்னை 28 th -29 th பாசுரங்களில் விஸ்தரிக்கிறாள் ஆண்டாள் –

தூய பெரு நீர் யமுனை -அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே – திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக முழங்கால் மட்டாக வெற்றிக்கு கொடுத்த சுத்தியைச் சொல்கிறது-தூய்மை யாகிறது பகவத் ஸ்பர்சம் இறே (கீழே கைங்கர்யம் )கிருஷ்ணனும் பெண்களுமாக ஜல க்ரீடை பண்ணி ஒருவருக்கு ஒருவர் கொப்பளித்ததால் வந்த சுத்தி யாகவுமாம் –ஜலக் க்ரீடையிலே பெண்களும் அவனுமாக கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம்

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கதூயோமாய் -இடைச்சிகள் தூய்மை இறே – தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா – அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா – நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –தூயோமாய் -அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தூ மலர் மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்-
அநந்ய பிரயோஜனமான பூ விறே-பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்-

தூயோமாய் வந்தோம்-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –பறை -என்று ஒரு வியாஜ்யம் –
அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் – அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய-ஸ்வ யத்னமாதல் ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் – உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

————-

ஐந்து -21-25
பகவத் அவதாரத்தை மக ரிஷிகள் வசன அநு குணமாக -தோன்றும் -தோற்றம் -என்று வர்ணித்த ஆண்டாள் 25 பாசுரத்தில் ஆழ்வார்கள் திரு உள்ளப்படி பிறந்து என்கிறாள் -சம்சாரி தான் தாய் வயிற்றில் பத்து மாசம் தங்கி பிறக்கிறான் -அவன்- பிறப்பை அறுப்பானான பகவான்– பன்னிரு திங்கள் தாய் வயிற்றில் தங்கிப் பிறக்கிறான் –
இது இறே அவன் அவதார ரகசியம் -தத ச த்வாதசே  மாசே -பன்னிரு திங்கள் வயிற்றில் என்னக் கடவது இறே

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை–பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் – முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது-தோன்றும் –தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி – கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி – பிறந்தது குணமாகைக்காக -பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்-பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே (ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )

ஒருத்தி மகனாய் பிறந்து –ஆவிர்பவிக்க லாகாதோ – பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ – பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் – இவன் பிறந்த போதே-ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்-நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும் அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –அவன் பிறவி நமக்கு என்று கோல – நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –பிறந்து-சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால் தூணிலே தோன்றினாலே போலே ஆதல் – ஆனைக்கு உதவினால் போலே யாதல் – வந்து உதவ அமைந்து இருக்க ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்-

——–

ஐந்து -15-இவ்விரண்டு பாசுரங்களிலும் மாயனை -என்ற சொல் உள்ளது
அர்த்த பேதம் காண்க

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை-மாயனை– பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே -மாயன் -என்கிறது –கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது- ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்-
அவதரித்தான் என்று- அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து- அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு – எத்திறம் -என்கிறார்கள்-மாயனை – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் – நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் – உபய விபூதி உக்தனாய் –
ஸ்ரீ யபதியாய் ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –யாதோ வாசோ நிவர்த்தந்தே– யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்– பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி – மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –மாயனை–தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்–தன் கையிலே எதிரிகள் படுவது எல்லாம் -நம் கையில் தான் பட்டு நமக்குத் தோற்று – அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை-

——————-

ஆறாம் பாசுரம் -13 th பாசுரம்
இரண்டிலும் -புள்ளும் சிலம்பின -சொற்றொடர் இருப்பினும் பொருளில் வேற்றுமை உள்ளது-முதலில் கூட்டில் நின்றும் சிலம்பின படியை சொல்லிற்று –
மேலே கூட வழியே போகும் இடம் எல்லாம் ஆகாரார்த்தமாக சிதறின படியைச் சொல்லுகிறது – இது கால பேதத்தை அநு சரித்து சிஹ்ன பேதம் கூறின படியாம் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்—மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே- வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –-இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது 

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்-கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது -அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று– இப்போது பறந்து போகத் தொடங்கிற்–அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –

———–

ழும் எட்டும்
ஏழாம் பாசுரத்தில் கேசவன் என்ற சப்தத்தைக் கூறி
எட்டாம் பாசுரத்தில் -மாவாய் பிளந்தான் -என்று அதன் பொருளை ஆண்டாள் கூறுகிறாள் –
கேசி ஹந்தா -கேசவன் -என்றபடி –

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ–நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று- வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –-மூர்த்தி –
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது-கேசவன் – கண்ணுக்கு தோற்ற நின்று-
நம் விரோதிகளை போக்குமவன்
-அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்-(சிலருக்கு அச்சம் கொடுக்கும் -அஸ்தானே பய சங்கை பண்ண வைக்கும் )திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை-மாவாய் பிளந்தானை
நம் விரோதிகளை போக்கி நம் அச்சம் தவிர்த்த உபகாரகன் அன்றோ தாரானோ-மாவாய்
ஸ்ரீ நாரத பகவான் நாம் முடிந்தோம் என்று கதறிக் கொண்டு வந்து விழும் படி இறே வந்து தோன்றின படி – நமக்காக கேசியைக் கொன்று திருவாய்ப்பாடியிலும் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும் உண்டான வன்னியம் அறுத்து பெண்ணும் பேதையும் சகடச் சாத்தாகப் போம்படி பண்ணினவன் நம் கார்யம் செய்யானோ-

——–

ஒன்பதும் பத்தும்
ஒன்பதாம் பாசுரத்தில் -அனந்தல் -என்றும்
பத்தாம் பாசுரத்தில் ஆற்ற அனந்தல் உடையாய் –
இதன் மர்ம அர்த்தத்தை வியாக்யானம் கொண்டு தெளிக

உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ–கிருஷ்ணனுக்கு நெடும் போது ஆடல் கொடுத்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ – நெஞ்சுக்கும் விஷயம் அங்கேயோ –தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள் பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள் 

ஆற்ற வனந்தல் உடையாய்–சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை –ஆர்த்த த்வனி கேளாத படி அனந்தலினுடைய மிகுதி –எங்களுக்கு அங்கே (நந்த கோபன் வாசலில் ) போய் துயில் எழப் பாட வேணுமோ – நீ உணரும் படி காண அமையாதோ –

—————-

ஒன்பதும் -20 th பாசுரமும்
ஒன்பதாம் பாசுரத்தில் மா மாயன் -மாதவன் -வைகுந்தன் -என்று திரு நாம த்ரயத்தில் மத்யத்தில் மாதவன் – அருளி -மத்ய மணி நியாயத்தை கொண்டு அர்த்த நிர்வாஹம் பண்ண பாங்காக அமைந்து உள்ளது – மாதவன் ஆகையாலே மா மாயன் சுலபன் –
மாதவன் ஆகையாலே வைகுந்தன் பராத்பரன் -என்றபடி பரத்வ சௌலப்யங்களுக்கு நிதானம் ஸ்ரீ ய பதித்வம் -என்றபடி –
இருபதாம் பாட்டிலும் இதே நியாயத்தை கொண்டு வியாக்யானம் –
உக்கமும் தட்டொளியும் தந்து -உன்  மணாளனையும் தந்து -என்றது ஆய்த்து

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-மா மாயன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-மாதவன் – அதுக்கடியான ஸ்ரீ ய பதி-
அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்-(சுவையன் திருவின் மணாளன் –அவள் இடம் கற்ற சுவை ராஸிக்யம் -குருகுல வாஸம் )வைகுந்தன் – ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்-அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் –மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்- நீர்மைக்கு அடியான திரு நாமங்களும் இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று -என்கிறார்கள்-

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-உக்கமும் தட்டொளியும் தந்து-ஆல வட்டமும் கண்ணாடியும் –
நோன்புக்கு வேண்டும் உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்-தந்து உன் மணாளனை -உன்னோட்டைக் கூட்டுகிறது எங்களுக்கு உறுப்பு என்று இருந்தோம்– அன்றாய்த்தோ உக்கத்தோ பாதி அவனையும் தர வேணும் –உன் மணாளனை –இவற்றோபாதி உனக்கு உபகரண கோடியிலேயாய்- தன் கார்யம் உன் புத்தி அதீனமாம் படி இருக்கிறவனை-புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யன் ஆனவனை உக்கத்தோபாதி அவனையும் இவள் தர வேணும் -என்கை –உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு-

———

பத்தும் பதினொன்றும்
பத்தாம் பாட்டில் புண்ணியன் என்று பகவான் உபாய பூதன் -என்று கூறி
அடுத்து -அவனை முகில் வண்ணன் -என்று கூறியதின் கருத்து –
புண்ணியன் -தர்மம் என்றபடி ஷ்ரேயஸ் சாதனமான சாஷாத் தர்மம் அவன் இ றே –
அந்த புண்ணியத்தை தர வல்ல உதாரனும் அவனே
-பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -தந்தனன் தன் தாள்  நிழலே -என்னா நின்றது இறே
முகில் வண்ணன் -என்று மேகம் போல் உதாரன் -என்றபடி –

போற்றப் பறை தரும் புண்ணியனால் -கிருஷ்ணம் தர்மம் சநாதநம் – புண்ணியன் ஆகையாவது – சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நீர் நெருப்பு -புண்ணியன் கூற்றம் -பெருமாள் கோபம் -சேராச் சேர்க்கைகள்-புண்ணியனால் -வீழ்ந்த -வீழ்க்கப்பட்ட இல்லையே -வீட்டில் பூச்சி போல் -வீழ்ந்தான் அன்றோ வல்லரக்கர் புக்கு அழுந்த தயரத மரகத மணித்தடம் –

முகில் வண்ணன் பேர் பாட-பரம உதாரனும்-ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை -நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற-நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட-விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணன்-

———-

பத்தும் -19th பாசுரமும் –
பத்தாம் பாட்டில் -மாற்றமும் தாராரோ -என்று கோபிகையை குறித்து கூறியது –
ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கண்ணனுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் அவளே
மாற்றமும் தாராரோ -உடம்பு அவனுக்கு தந்தால்  வாய் வார்த்தை எங்களுக்கு தரலாகாதோ -என்கிறாள் –
19 th பாசுரத்தில் வாய் திறவாய் -என்று கண்ணனை குறித்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா -நப்பின்னை பிராட்டி
ஆலிங்கனத்தாலே மலர்ந்த மார்பு படைத்தவனே -வாய் திறவாய் -மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்கு தந்தால் ஆகாதோ -என்றபடி -அனன்யா என்று ஏக த்ரவ்யம் போலே இருப்பவர்களை புறப்படச் சொலுவார் ராவணாதி களோ பாதி இறே -ஆகையால் -எழுந்திராய் -என்கிறி லர்கள் – இவ்வர்த்தம் இரண்டு பாசுரங்களுக்கும் ஒக்கும்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ-வாசலைச் செம்மினால் வாயையும் செம்ம வேணுமோ – கண்ணைப் பட்டினி கொண்டாவோ பாதி செவியையும் பட்டினி கொள்ள வேணுமோ –ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தர் ஆனால் ஏன் என்னலாகாதோ- படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ
போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ-உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ-இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்-

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்–மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ –-உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே ஒரு வார்த்தை சொல்லாய்-தன்னால் அல்லது செல்லாதே உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு ஒரு வார்த்தையும் அரிதோ – அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்-

———–

பதினோராம் பாசுரம் -20 th
பதினோராம் பாட்டில் -செற்றார் -பதம் பாகவதர்கள் உடைய சத்ருக்களைக் குறிக்கிறது –
சர்வம் விஷ்ணு மயம் -என்று இருக்கும் பாகவதர்களுக்கு நேராக சத்ருக்கள் இல்லை –
பகவத விரோதிகளையே தங்கள் விரோதிகளாக நினைக்கிறார்கள் –
நின்பால் பொறுப்ப அரியன கள் பேசில் —-ஆங்கே தலையை அறுப்பதே கருமம் -என்னா நின்றது இறே –
இருபதாம் பாட்டில் -செற்றார் -பதம் பகவத் விரோதிகளைக் குறிக்கிறது
தன்னை ஒழிந்த அனைத்தையும் தனக்கு விபூதியாக கொண்டஸ்ரீ மன் நாராயணனுக்கு – விபூதிமானுக்கு நேராக சத்ருக்கள் இருக்க பிராப்தி இல்லை -ஆயினும் பாகவத அபசாரம் பட்டவர்களை தனது சத்ருக்களாக நினைக்கிறான் -ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்-குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே–செற்றார்-இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் -கிருஷ்ணனுடைய மினுக்கம் பெறாதவர்கள் – சத்ரோஸ் சகா ஸாத் ஸம்ப்ராப்த -என்று ராவண சஹாசத்தின் நின்றும் வந்தான் என்னாதே நம் எதிரியான பையல் ஓலக்கத்தின் நின்றும் வந்தான் என்று அங்கதப் பெருமாள் பேசினால் போலே
(வாலிக்கு நண்பனாக இருந்தாலும் சத்ரு என்றாரே அங்கதன் )
ஆண்டாளும் இவ்வூரில் ஸம்ருத்தி பொறாதவர்களை சத்ருக்கள் என்கிறாள் –பகவத் ஸம்ருத்தி பொறாதார் பாகவதருக்கு சத்ருக்கள் – பாகவத ஸம்ருத்தி பொறாதார் எம்பெருமானுக்கு சத்ருக்கள் –இரண்டும் உண்டு இறே கஞ்சனுக்கு – தீய புந்திக் கஞ்சன் (பெரியாழ்வார் 2-2)-இத்யாதி – சாது சனத்தை நலியும் (திருவாய் -3-5-)பாண்டவர்களுக்கு சத்ருக்கள் நமக்கு சத்ருக்கள் என்று த்விஷதன்னம்-என்றான் இறே கிருஷ்ணன்
இவள் தானும் மாயன் இராவணன் -(நாச்சியார் 5-3 )என்று செவ்வைப் போர் அறியாத பையல் -என்று அருளிச் செய்தாள்-

செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்-நீ ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும் –-ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்று இருக்கிற தனக்கு சத்ருக்கள் இல்லை இறே – ஆஸ்ரிதருடைய சத்ருக்களே இறே தனக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் – ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணிக் கொடுக்கும் –பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் —சந்தம் மல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி-செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-)

———

பதினொன்றாம் பாசுரமும் பன்னிரண்டாம் பாசுரமும்
பதினோராம் பாட்டில் கர்ம அனுஷ்டான தத்பரர் களுடைய பெண்ணை எழுப்புவதையும் –
அடுத்து -ஸ்வ தர்மத்தை காற் கடை கொண்டவனுடைய தங்கையை எழுப்புவதாகவும்
சொற் தொடர் அமைந்து உள்ளது -இது தன்னை பூர்வர்கள் நன்கு விளக்கி அருளி இருக்கிறார்கள் – கர்மம் உத்தேச்யமா த்யாஜ்யமா -என்று விசாரம் செய்து நிஷ்கர்ஷித்தார்கள் -வியாக்யானம் கண்டு தெளியவும் –

கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில் விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்-பல கறந்து
அநேக ரித்விக்குகள் செய்யக் கடவ சடங்கை அதிலே கூர்மை யுடையவன் ஒருவனே செய்யுமா போலேயும் ப்ராஹ்மணர் வேதத்தை அடைய அதிகரிக்குமா போலேயும்
ஷத்ரியன் பருவம் நிரப்புவதற்கு முன்பே யுத்தத்தில் நிலவன் ஆனால் போலேயும்
ஈஸ்வரன் ஒருவனுமே சர்வ ஆத்மாக்களினுடையவும் கர்ம அனுகுணமாக நாம ரூபங்களை பண்ணி நியமனாதிகளைப் பண்ணுமா போலேயும் பசுக்கள் அநேகம் ஆகிலும் ஜாதியில் மெய்ப்பாட்டாலும் – ஜாதி உசிதமான விருத்தி யாகையாலும் ஒருத்தன் அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-மஹத்தான அந்தரங்க கைங்கர்யம் செய்த நற் செல்வன் -அதனாலே இவனைப் பற்றி பெருமையுடன் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்)-சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே-அவர்களுடைய அனுஷ்டானமும் இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்-விசேஷ தர்மம் இவன் -சாமான்ய தர்மம் முந்திய பாசுர கோவலன்-இத்தைச் செய்யாமல் சக்கரவர்த்தி இழந்தே போனானே-நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது–நற் செல்வன்லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –

———-

12 th /21 th பாசுரங்கள்
12 th பாசுரத்தில் எருமை விருத்தாந்தம் -தனது கன்றுக்கு பால் கொடுக்காத நிலையில்
எருமை கனைக்கிற இது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்க பெறாத காலத்தில் பகவன்
குமிறின குமிறலுக்கு ஸ்மாரகம் -என்றவாறு –
21 th பாசுரத்தில் வள்ளல் பெரும் பசுக்கள் விருத்தாந்தம் -பாகவத ஸ்மாரகம் -பகவத்
விஷயத்தை வாரி வாரி வளங்கும் வள்ளல்கள் -தவ கதாம்ருதம் –க்ருண நதி யே பூரிதா ஜநா –என்று இறே கோபிகா கீதம் -ஆழ்வாரும் பதிகம் தோறும் வண் குருகூர் சடகோபன் -என்று தன்னை அருளிச் செய்து கொண்டார் இறே-அதிதி சப்த வாசயர் இறே பாகவதர்கள் -அதிதிகள்-திதி பார்த்து வருவது இல்லை -அவர்கள் வந்து நம்மிடம் பெற்று போகிறார்கள் –
இவர்கள் வந்து தம்முடைய பகவத் ஞானத்தை வழங்குகிறார்கள் -இதுவே வாசி –

கனைத்து-உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே – ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் – ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –கன்றுக்கிரங்கி –தன் முலைக் கடுப்பு கிடக்க -கன்று என் படுகிறதோ -என்று இரங்கி – எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் -ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்–கலம் இடுவார் இல்லை என்றால் அத்தால் தவிராது – முலையில் கடுப்பு போகாது – போந்தனையும் நின்று பால் சொரியும்-ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே-சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை அன்றிக்கே தன் கார்யம் செய்ததாக உபகரிக்கும் படி உதார ஸ்வபாவமாய் இருக்கை –சிலர் அர்த்தியாய இருக்கச் செய்யாதே-வீடுமின் முற்றவும் என்று அருளிச் செய்தது-அத்தை நினைத்து இறே ஸ்ரீ மதுர கவிகள் –அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே -என்றது-(இன்ப மாரியான )வண் சடகோபரான இவரைப் போலவே
அருள் மாரியாகையாலே திரு மங்கை ஆழ்வாரும் முந்துற யுரைக்கேன் (9-8)- சொல்லுகேன் வம்மின் – நமரும் உரைமின் -என்று அருளிச் செய்தார்-

———

13th /22 nd பாசுரங்கள்
13 th பாசுரத்தில் போதரிக் கண்ணினாய் -ஒரு பக்த சிகாமணியின் கண்ணழகு கூறப்பட்டது
22 nd  பாசுரத்தில் -அம் கண் இரண்டும் -என்று பகவானுடைய கண் அழகு கூறப்பட்டது –

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்–ஜிதம் தே புண்டரீ காஷ–தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை – ஆங்கு மலரும் -இத்யாதி — ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும் திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –பங்கயக் கண்ணானை-கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்-தூது செய் கண்கள் இறே-9-9-9–இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை – அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும் அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –செங்கண் – வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை-அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம் ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம் வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே-பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே-நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே-கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் – என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே-ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே-அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே-ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

————

14 th /23 rd பாசுரங்கள்
14th -தங்கள் திருக் கோயில்
23 rd -உன் திருக் கோயில் –16-நந்த கோபனுடையகோயில் காப்பானே 
நந்தகோபனுடைய கோயில் -உன் கோயில் என்றது
இவ்விரண்டுக்கும் முரண்பாடு இல்லை -வாஸ பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது -இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய பிரதாந்யம் கோலக் கடவது இறே – பிரணவம் போலேயும் -ஹிருதய கமலம் போலேயும் -திருவரங்கம் நம்மூர் -என்னக் கடவது இறே –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்-தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ -திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் படி —தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ-தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள் தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே
திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

நீ பூவைப் பூ வண்ணா வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிஉன் கோயில்-நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் – இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே – பிரணவம் போலவும் – ஹ்ருதயக் கமலம் போலவும் திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் ) எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –உபய பிரதானம்-அர்ஜுனன் தேர் தட்டு-
ராச மண்டலம்-ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல்

நந்த கோபனுடைய கோயில் காப்பானே –நந்த கோபனுடைய கோயில் கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் – ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய் நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று
பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன் தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –

————-

15 th /29 th பாசுரங்கள்
இரண்டும் திருப்பாவை சாரம் பாசுரங்கள்
15 th -வ்யாக்யானத்தில் திருப்பாவை யாகிறது இப்பாட்டு –
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையில் சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது -அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்ரீ ஸூ க்தி –

பாகதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப் பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து, ‘இக்குற்றம் அடியேனுடையதுதான் ஷமித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாதலால், அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று – பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.-இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது-ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-

திருப்பாவை ஆகிறது இப்பாட்டு-பாகவத வைபவம் எல்லே பகவத் வைபவம் இதில்
த்வயார்த்தம் -சரணாகதி கீழ் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் பிரபல தம விரோதி -களை அற்ற கைங்கர்யம் -ஸூய போக்த்ருத்வ புத்தி தவிர வேண்டுமே-மற்றை நம் காமங்கள் மாற்று–மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா-ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது-போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே –பிராப்ய பூமியிலும் – மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் பிதற்றும் பாசுரம்-பசிக்கு மருந்து -பசியைஉண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –

———–

15 th /23 rd பாசுரங்கள்
15 th பாசுரத்தில் நீ போதராய் -என்று பாகவத சிகாமணியின் நடை யழகு காண ஆசைப்பட்ட படி –23 rd  பாசுரத்தில் -போந்தருளி -என்று பகவானுடைய நடை அழகு காண ஆசைப்பட்ட படி

ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்-ஒல்லை நீ போதாய் –உன்னை அரை க்ஷணம் காணாது ஒழியில் எங்களுக்கு பிராண ஹானி – புறப்படாது ஒழியில் உனக்கு அநர்த்தமாய்த் தலைக் கட்டும்-போந்து எண்ணிக் கோள் – புறப்பட்டு மெய்ப் பாட்டுக் கொள்- மெய்க் காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் பேர் சொல்லுகையும் –
தொட்டு எண்ணுகையும்- ஸ்பர்ச ஸூகம் அனுபவிக்கையும்- பெண்களுக்கு ஸங்க்யை இல்லாமையால் எண்ணி முடிக்கும் தனையும் இவளைப் பிரியாதே அனுபவிக்கையும் –பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ-

நீ பூவைப் பூ வண்ணா வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளி— சதுர்க்கதி இறே
நடையிலே ரிஷபத்தின் உடைய வீறும் மத்த கஜத்தின் உடைய மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை-நமக்கு இவை எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் – எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம் இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-பிராட்டியோடே இறே கண் வளர்ந்து அருளுவது – அவள் எங்களைத் தனித் தனியே நோக்கி அருளும்படி
நப்பின்னைப் பிராட்டி திருக் கையை ஊன்றிக் கொடு திருப் பள்ளி அறையில் நின்றும்
பெரிய திரு மண்டபத்து ஏறப் புறப்பட்டு அருள வேணும்

——————-

17 th /24 th பாசுரங்கள்
17 th  கழல் -பாகவத ஸ்ரீ பாத சம்பந்தம் பெற்ற வீர கழல் அனுபவிக்கப்பட்டது –
24th -கழல் போற்றி -பகவத் ஸ்ரீ பாதம் பெற்ற வீரக் கழலுக்கு பல்லாண்டு பாடப்படுகிறது –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா—-சிவந்து ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்யப் பட்ட வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே – இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்- இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும் அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கழல் போற்றி கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் – காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல் கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி -நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-

———-

18th /29 th பாசுரங்கள்
18 th பாசுரத்தில் நந்தகோபாலன் மருமகளே -என்றும்
29 th பாசுரத்தில் -பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த -கோவிந்தா -என்ற சொல் தொடரால் –பெருமானும் பிராட்டியாரும் இருவரும் ஆய்க்குலத்தையும் ஆயர் சம்பந்தத்தையும் விரும்புகிறார்கள் என்று அறியல் ஆகிறது –

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்-ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே-கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் – இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் – இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் – இவள் உகக்குமது ஆகையாலும் இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் – புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே–சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான
இடைச் சாதியிலே வந்து பிறந்த எங்களை அடிமை கொள்ளாது ஒழிய ஒண்ணாது –பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் – ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது
தாங்கள் உண்ணாத குலம் –இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ-நீ பிறப்பிலியாய் பிறவாதார் (நித்யர்( நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு (முக்தர்) முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ –
பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ – வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது – பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த எங்கள் பெற்றத்து ஆயன் வட மதுரைப் பிறந்தான் (திருவாய் -9)-என்று அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –நீளா குலேந ஸத்ருசீ – எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –எங்களை-திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க
நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப் பாடி யான எங்களை ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் (திருவாய் – 10-3-8 )என்று நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –இவ் வாய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது – ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-(திருச்சந்த 41 )பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை – பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் – பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் – இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை-

————

19 th /30 th பாசுரங்கள்
19 th பாசுரத்தில் -நப்பின்னை திருமேனி சம்ச்லேஷத்தால் விளைந்த கண்ணன் உடைய
திருமேனி விகாசத்தை -மலர் மார்பா -என்று கூறினார்கள் கோபிகைகள் –
30 th பாசுரத்தில் திருப்பாவை கேட்ட காலத்தில் கண்ணன் உடைய திருமேனி
விகாசத்தை ஈரிரண்டு மால் வரைத் தோள் -என்று ஆண்டாள் கூறுகிறாள் –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்–திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால் சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ என்னில் விரோதியாது
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –மலர் மார்பா-அவன் அண்டை கொண்ட அரணும்- இவள் ஜீவனமும் –முலையைப் பற்றி அவன் கிடைக்கும் – மார்பைப் பற்றி இவள் கிடக்கும் –இவள் முலைப் பரப்பு எல்லாம் ஒரு முலைக்குப் போராத படி அகன்ற மார்பை யுடையவன்
பெரிய வரை மார்பு இறே அது –முற்றாரா வன – முலையாள் அகலத்துள் இருப்பாள் (திருநெடும் -19 )-என்னக் கடவது இறே-திரு முலைத் தடங்கல் உறுத்தும் படி அணைத்த ஸ்பர்ச ஸூ கத்தாலே பூ அலருமா போலே விகசிதமான மார்பை யுடையவன்-நித்ய அநபாயினியாய் இருக்கிறவர்களுடைய சம்ஸ்லேஷத்தால் வரும் விகாரம் இல்லை என்கிறது அன்றே – ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்தவம் அவத்யம் அத்தனை இறே
இவ்விகாரம் உண்டானால் கல்யாண குணங்களே யாம் அத்தனை – மலராது குவியாது என்றது ஸ்வரூபம் இறே –யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தனபந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ-புடைக்கலந்தானை — வரை நெடும் தோள் -மூர்த்தி கண்டீர் -(பெரிய திருமொழி 4-4)(தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் அன்றோ அடிக்கவும் அணைக்கவும் அலர்வானே )இவளோடு அணைந்த பின்பு இவ் விகாசம் பிறவாதாகில் இவர்களுக்குத் தான் என் செய்ய –அவனுக்கு விகாசத்தைப் பண்ணி ஸ்வரூபம் பெற இருக்கிறவர்கள் இறே இவர்கள் நித்ய கிங்கர – கோவிந்தர்க்கு ஒரு குற்றேவல் – அவனை விகசிப்பிக்கை இவர்களுக்கு ஸ்வரூபமாய் இறே இருப்பது-நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்–இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்- உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும் இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –பெண்களை அணைக்கப் புக்க பின்பு கிருஷ்ணனுக்கு திருத் தோள்கள் பணைத்த படி –(பெரிய பிராட்டி ஸ்லோகம் கேட்டு அரங்கன் கவசம் வெடித்தது போல் ) வேய் இரும் தடம் தோளினாரோடு-அணைந்த தோள்கள் இறே-

———–

22nd /23rd பாசுரங்கள்
22nd -வந்து தலைப் பெய்தோம் -என்று அவனுக்கும் தங்களுக்கும் உள்ள பிராப்தி
சம்பந்தத்தை சொல்லி -23rd பாசுரத்தில் பிராப்தி பலமானவற்றை பிரார்த்திக்கிறார்கள் –
அவனுடைய நடை அழகு காண இ றே கண் படைத்தது –
நம் ஆழ்வாரும் கொண்ட பெண்டிர் -9-1-பதிகத்தில் பிராப்தியை சொல்லி –
அடுத்த பதிகம் பண்டை நாளாலே -9-2-பிராப்தி பலத்தை வேண்டினார் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்து உள்ளார் –

நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்–கீழே எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யசனம் எல்லாம் சபலமாம்படி வந்து கிட்டப் பெற்றோம் –
அநாதி காலம் இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள் இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப் பெற்றோம் ஒருபடி வந்து கிட்டப் பெறுவதே -என்கை – விசத்ருசமான இது சங்கதமாகப் பெறுவதே-அந்த ராஜாக்களை போலே நாங்களும் அநாதி காலம் பண்ணிப் போந்த
தேகாத்ம அபிமானத்தாலே இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்
நிர்ஹேதுகமாக கிட்டப் பெற்றோம்-யாதிருச்சிகமாக பிறப்பதொரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் கடாக்ஷத்துக்கு யோக்யனாய் அனந்தரம் தேஹாத்மாக்கள் உடைய ஸ்வரூபத்தை விவேகித்து – தேஹாத்ம அபிமானத்தை விட்டு ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்தர்யத்தையும் விட்டு ஈஸ்வரனுக்கு சேஷம் என்றும் – புருஷார்த்தம் அவன் என்றும் – ருசி விளைந்து –
அது பெறுகைக்கு அடியான உபாயமாகவும் – அவன் தன்னைப் பற்ற விளம்பம் பொறாத படி த்வரை விளைந்து திருவடிகளில் வந்து கிடக்கும் அளவாய் விட்டது இறே-

சங்கம் இருப்பார் போல் -22-என்ற வார்த்தையைக் கேட்டு
நீங்கள் அநந்ய கதிகள் என்பதே நப்பின்னைப் பிராட்டி பரிக்ரஹமாய் இருந்து வைத்து
என்று திரு உள்ளம் புண்பட்டு – உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
இங்கனே குன்னங்குறிச்சியாகக் (சிறுபிள்ளை வார்த்தை -அமுக்கியமாக )கேட்டருள ஒண்ணாது – பேர் ஓலக்கமாய் இருந்து நீ கேட்டருளுமா போலே கேட்டருள வேணும் -என்கிறார்கள்-கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார் குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ் வதிகாரத்தைச் சொல்லுகிறது-இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் –
எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம் இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-கண் வளருகிற போதை அழகும் –உலாவுகிற போதை அழகும் – கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே-இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் – வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு–81-

அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்–92-

என்னை உன் அழகிய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும் –
திருவடிகளைத் தலையிலே வைத்து அருள வேணும் –
திருப்பள்ளி யுணர்ந்து பிராட்டியோடே கூட இருந்து அருள வேணும் –
எழுந்திருந்து என்னெதிரே வந்து அருள வேணும் -என்று இப்புடைகளிலே
தம்முடைய மநோ ரதங்களை யடைய அபேக்ஷிக்கிறார் –ப்ராப்தியை அனுபவித்தார் கீழ் -பிராப்தி பலத்தை அபேக்ஷிக்கிறார் இதில் –இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் – சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் — சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்- ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-

இதே போல்

19th /23rd பாசுரங்கள் –
19th -கிடந்த -என்று அவன் கிடந்ததோர் கிடை அழகு அனுபவிக்கப்பட்டது –
23rd -இங்கனே போந்தருளி -என்று அவன் நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் காண ஆசைப் -படுகிறாள்
திருப் புளிங்குடி கிடந்தானே -என்று அவன் கிடந்தவாற்றை கண்ட ஆழ்வார் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
மூ யுலகும் தொழ இருந்து அருளாய் –
காண வாராயே –
நின்று அருளாய்
இருந்திடாய் –
என்று நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் பிரார்த்தித்தால் போலே ஆண்டாளும் பிரார்த்திக்கிற படி –

26th /27th பாசுரங்கள் –
26th பாசுரத்தில் நோன்புக்கு உபகரணம் வேண்டிய ஆயர் -சிறுமியர்
அடுத்து -27th பாசுரத்தில் -நோன்பு முடிவு பெற்ற பிறகு -பெற வேண்டிய சம்மானத்தை பிரார்த்திக்கிறார்கள் –

1-ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப் பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –

2-போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே -இடமுடைத்தான-பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
3-பல்லாண்டிசைப்பாரே-
4-கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
5-கொடியே-த்வஜம்
6-விதானமே-மேல் கட்டி
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள் )

உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன-பல சங்கங்கள் வேணும்-ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே-லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –-பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம் முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் -திருப் பல்லாண்டு பாடுகைக்கு-
அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்
பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்–பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான-கைங்கர்யமும் வேணும் –விதானமே புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும் விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்

கீழில்- தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –சூடகமே அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே – இவர்கள் ஆபரணம் பூண்ட கையை அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது – அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் – வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே – அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –(பாணி கிரஹணம் முதல் அன்றோ )தோள் வளையே -கையைப் பிடித்த அனந்தரம் – அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி- இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-தோடே தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –செவிப் பூவே -அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்-பாடகமே-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்–சூடகமே இத்யாதி-1-பிடித்த கைக்கும் –-2-அணைத்த தோள்களுக்கும்-3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும் 4-ஸ்பர்சத்துக்கும் 5-தோற்று விழும் துறைக்கும்–சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற — திருக்கையால் தாள் பற்ற –கையைக் காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

———–

2nd /26th பாசுரங்கள்-
2nd -செய்யாதன செய்யோம் -என்று பூர்வர்கள் செய்யாத கார்யங்களை செய்வது இல்லை
என்று பிரதிக்ஜை செய்தார்கள் -தத் அநு குணமாக அனுஷ்டாநத்தைக் கூறுகிறது 26th பாசுரம் –மேலையார் செய்வனகள் -என்று தங்களுடைய நோன்பு சிஷ்டாசார சித்தம் -ஆகையால் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகிறார்கள் –

செய்யாதன செய்யோம்-விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட-ஆசசரிக்க கடவோம் அல்லோம்-அதாகிறது – ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்- ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை –நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –(விரூப்யை ஆக வாய்ப்பு -சூர்ப்பணகை தனியே சென்று பட்ட பாடு அறிவோம் )பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –(போவான் போகின்றாரைக் காத்து உன்னைக் கூவுவான் வந்தோம் என்பவர்கள் அன்றோ )

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்-பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும் வியாசன் சொன்னான் மனு சொன்னான் ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள் யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று – ஞானவான்களுடைய வசனத்தையும் அனுஷ்டானத்தையும் அன்றோ பிரமாணமாகச் சொல்கிறது –வேதங்களுக்கு முன்னே அன்றோ தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது-யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்-யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ

————-

27th /28th /29th பாசுரங்கள் –
கோவிந்த நாம த்ர்யார்த்தம்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா-கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ –பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-பசுக்களுக்கும் தோற்குமவனே

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ–அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு – நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை – நம்மை அறிந்தாலும் விரகு இல்லை-அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற
உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா–பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-அபிதா வ்ருத்தியைப் போக்கி தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே -பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே – பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –எங்களையும்
எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று ஞான பூர்வகமான உபாய ஸ்வீகாரம் பண்ணுகிற இடமாகையாலே குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை அவ்விடத்திலே-ப்ராப்ய ருசியாலே கண்ணாஞ்சுழலை இடுகையாலும் பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான ரோஷத்தாலும் இவ்வளவும் சொல்ல வேணும் இறே இங்கு-அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால் பர வ்யூஹாதிகளையும் யாதவ வம்சத்தையும் விட்டு இடைச் சேரியில் ஸூலபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் – கெடுவாய் நாங்கள் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்-என்று பட்டர் அருளிச் செய்த வார்த்தை – இடையனாகையாலே அபிதாந வ்ருத்தி போமித்தனை -தாத்பர்ய வ்ருத்தி போகாது என்கை போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )

——–

28th /29th
கறவை -என்ற 28th பாசுரத்தில் -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –என்று பிராப்தியை சொல்லி -சிற்றம் -29th பாசுரத்தில் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று பிராப்தி பலமான கைங்கர்யத்தை பிரார்த்தித்த படி –

உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது–உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-நீ எங்களுக்கு உறவு அன்றோ –நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ –பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே- ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் 1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது – எங்களாலும் விட ஒண்ணாது – இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு-பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ – ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ-1-அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக பந்தமும் உன்னோடே –
2-குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
3-ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் (திரு விருத்தம்-54 )ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே –
4-தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று கார்ய காரண பந்தமும் உன்னோடே –
5-என்னுயிர்க் கண்ண பிரான் -என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
6-நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே –
7-எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே –
இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்–திரு நாட்டிலே இருக்க்கவுமாம் ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம் அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை- காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை

உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று
வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )

உனக்கே நாம் ஆட்செய்வோம் –-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து நீ உகந்த அடிமை செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது-கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே (திருவாய் – 4-10-10-)என்றபடி உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –

கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று – கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -(திரு விருத்தம் -30) (கண்ணன் கோவிந்தன் என்ற நிலையே நாங்கள் வேண்டுவது) இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இறே நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் – (பராங்குச நாயகி -தீர்க்க சிந்தையந்தி நிலை வேண்டுமே )ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் – அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் – (நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்-அப்பாஞ்ச ஜன்யம் )-நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் ஏற்றம் போக்த்ருதம் விட போக்ய புத்தி ஏற்றம் -ஆச்சார்ய ஹ்ருதயம் )

கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே-

————-

1st /30th பாசுரங்கள் –
மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு அநுபவ ரசிகர்களுக்கு பெரு விருந்து –

பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –
11-வைகுந்தன் -13-புண்ணியன் -14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –
16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -18-மணி வண்ணன்
19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்
30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இ றே பிறந்து படைத்த ஐ ஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இ றே -இவனே ஸ்ரீ ய பதி என்றபடி –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .