ஸ்ரீயப்பதியை -மிதுனத்தை ஸ்தோத்ரம் செய்வது -முக்திக்கு சிறந்த உபாயம் –
நமது இளைய புன் கவிதைகளைத் தொடுத்து ஸ்துதி செய்வதில் காட்டிலும் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே அத்தைச் செய்வதால்
எம்பெருமான் திரு உள்ளம் விரைவில் கனியுமாதலால்
இப்படிப்பட்ட நன்மையை நாம் பெறுவதற்காகவே ஆளவந்தார் முதலிய நம் பூர்வாச்சார்யார்கள் பரம கருணையுடன்
அமுதினிலும் ஆற்ற இனிய பல ஸ்தோத்திரங்களை அனுக்ரஹித்து அருளி யுள்ளார்கள்
கூரத்தாழ்வான் அருளிச் செய்த பஞ்ச ஸ்தவங்கள் இருந்தாலும் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த இந்த ஸ்லோகமும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவமும் போன்றவற்றுக்கு இணையானாய் எதுவும் இல்லை
இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியானஸ்ரீரங்கநாச்சியார் வியமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.
இதன் காம்பீர்யம் வாஸா மகோசரம் -சொல் தொடையும் பொருள் தொடையும் அமைந்து இருக்கும் அழகு அற்புதம் என்னலாம் அத்தனை-
பெரிய பிராட்டியாருடைய குணங்களாகிற ரத்னங்களுக்கு இந்தக்கரந்தம் பொக்கிஸம் போன்றதால் ஸ்ரீ குணரத்ன கோஸம் -என்று திரு நாமம் இட்டு அருளுகிறார்
இங்கு அனுபவிக்கப்படாத பிராட்டியின் திருக்கணங்கள் வேறே எங்கும் கிடைக்க மாட்டாது என்பதே தாத்பர்யம்
இதில் –தேவி ச்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–10-
தாயே! ஸ்ரீரங்கநாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக்கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவுகோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
வைதக்த்ய வர்ண குண கும்பத கௌரவைம் யார் கண்டூல கர்ண ருஹா கவயேர தயந்தி -என்று
இது தன்னிலே தாமே அருளிச் செய்யும்படியான ஏற்றம் இது தனக்கே உரியதாகும்
பிராட்டியை முற்படத்தொழுது பிறகு பெருமாளைத் தொழ வேணும் என்கிற ஸாஸ்த்ரார்த்தம் ஆஸ்ரயண காலத்தைப் பற்றியது அன்றி ஸ்தோத்ர ரஸனையைப் பற்றியதன்று யாதலால் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வங்களுக்குப் பின்பு இத்தை அருளிச் செய்துள்ளார்
ஸ்தோத்ர ரத்னத்துக்குப்பின்பு சதுஸ் லோகி போலவும்
வைகுண்ட ஸ்த்வங்களுக்குப் பிறகு ஸ்ரீ ஸ்தவம் போலவும்
இங்கும் –
—————–
ஸ்ரீ பராசர பட்டார்ய : ஸ்ரீரங்கேச புரோஹித:
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மே அஸ்து பூயஸே–தனியன்
ஸ்ரீரங்கநாதனுக்கு முன்பாக வேத விண்ணப்பங்கள் செய்தல் போன்ற புரோஹிதங்களைச் செய்பவரும்,
கூரத்தாழ்வானின் திருக்குமாரரும் ஆகியவர் ஸ்ரீ பராசரபட்டர் ஆவார். ஸ்ரீரங்கநாயகி என்னும் உயர்ந்த செல்வத்தினை-
கருவிலே திருவாளர் -எம்பெருமானார் சம்பந்தம் என்னும் உயர்ந்த செல்வத்தினை உடைய
அந்தப் பராசர பட்டரின் -பராசரர் -பட்டர் -சாஸ்திரம் அறிந்தவர் -ஆர்யர் -சிறப்புடையவர் -திருவடிகளை அடைந்து
மே பூயஸே ஸ்ரேயஸே – அஸ்தே -நான் அதிகமான நம்மைகளை பெறுவேனாக!
————-
இந்த ஸ்லோகம் ஸ்ரீபராசரபட்டர் திருவரங்கத்தில் கண்வளரும் அழகியமணவாளனின் நாயகியான
ஸ்ரீரங்கநாச்சியார் விஷயமாக அருளிச்செய்த மிகவும் உயர்ந்த ஸ்லோகமாகும்.
முதல் நான்கு ஸ்லோகங்கள் -மங்கள ஸ்லோகங்கள் –
மேலிரண்டு ஸ்லோகங்களால் ஸ்துதிக்க தகுதி இல்லை யாகிலும் தமது புன் சொற்களால்
பிராட்டியுடைய நற்குணங்கள் வெளிப்படுமே -என்கிறார்
7/8- ஸ்லோகங்களால் புன் சொற்கள் ஆவான் என் பிராட்டி தானே கவியை நிறைவேற்றி அருள்வாள் -என்கிறார்
9-ஸ்லோகத்தால் ஸ்ரீ ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி உன்னிலும் சிறப்புடையாளாக ஸ்துதிப்பேன் கேட்டு மகிழ்க என்கிறார்
10-14- ஸ்லோகங்களில் வேத பிரமாணத்தாலும் உப ப்ரஹ்மணங்களாலும் பிரதான பிரமேயம் பிராட்டி என்கிறார் –
15-18-ஸ்லோகங்களில் -மங்களகரமான பிராட்டி யுடைய கடாஷமே நல்லன -அல்லன தீயன -என்கிறார்
19/20-ஸ்லோகங்களில் -லீலா விபூதியில் பரிஹாச ரசம் அனுபவிக்கும் படியைக் காட்டினார்
21-ஸ்லோகத்தில் -இவள் போகத்துக்கு ஏற்பட்டதே நித்ய விபூதி என்கிறார்
22- ஸ்லோகத்தில் -உபய விபூதியும் -அவனும் உட்பட பிராட்டியின் பரிகரங்களே என்கிறார் –
23-25-ஸ்லோகங்களில் அவனுடன் கூடி இருந்து போகம் அனுபவிக்கும் பிரகாரத்தைக் காண்பிக்கிறார்
26-ஸ்லோகத்தில் -அல்லாத தேவிமார் இவளுக்கு அவயவ மாத்ரமே -என்கிறார் –
27-ஸ்லோகத்தில் -இறைவனோடு கைங்கர்யத்தை ஏற்கும் நிலையைக் கூறினார் –
28-ஸ்லோகத்தில் இவளே அவனுக்கு ஸ்வரூப நிரூபக தர்மம் என்கிறார் –
29-31-ஸ்லோகங்களில் அவனது பெருமையும் இவள் அடியாகவே -என்கிறார் –
32/33 ஸ்லோகங்களில் இருவருக்கும் பொதுவான குணங்களைக் கூறுகிறார் –
34/35-ஸ்லோகங்களில் -சிறப்பான குணங்களைக் காண்பிக்கிறார் –
36-38 -ஸ்லோகங்களில் திவ்ய மங்கள விக்ரஹத்தை வர்ணிக்கிறார் –
39-ஸ்லோகத்தில் அந்த அழகுக்கு தோற்று திருவடிகளில் விழுகிறார் –
40/41 ஸ்லோகங்களில் திருக் கண்களின் கடாஷத்தை அருளுகிறார் –
42-44- ஸ்லோகங்களில் -திவ்ய மங்கள விக்ரக திருக் குணங்கள் -மென்மை இளமை சௌந்தர்யம் முதலியன என்கிறார் –
45- சம்ச்லேஷ இன்பம் சொல்கிறார்
46-47-ஸ்லோங்களில் திரு ஆபரணச் சேர்த்தி அருளுகிறார்
48-ஸ்லோஹத்தில் திரு அவதார திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
49- ஸ்லோஹத்தில் திருப் பாற்கடலில் தோன்றினதையும் கூறுகிறார் –
50 ஸ்லோகத்தில் புருஷகாரம் ஆவதற்கு வேண்டிய பொறுமையின் சிறப்பை காண்பிக்கிறார்
51- ஸ்லோகத்தில் -புருஷகாரம் செய்யும் முறையைக் காண்பிக்கிறார் –
52- ஸ்லோகத்தில் இவளை முன்னிட்டே அவனைப் பற்ற வேண்டுவதை சொல்கிறார்
53-ஸ்லோகத்தில் திருவவதரித்து மனிசர்க்காக படாதனபட்டு கருணையையும் ஸ்வா தந்த்ர்யத்தையும் சிந்தனை செய்கிறார் –
54-ஸ்லோகத்தில் அவன் இவளுக்காக அரியனவும் செய்வான் என்கிறார்
55- ஸ்லோகத்தில் -அவனும் மூழ்கும் போக்யதையைக் காண்பிக்கிறார்
56 -ஸ்லோகத்தில் எப்பொழுதும் புருஷகாரமாம் படி ஸ்ரீ ரங்கத்தில் நித்ய வாஸம் செய்து அருளும்படியைப் பேசுகிறார்
57-ஸ்லோகத்தில் -அர்ச்சாவதார சிறப்பைக் கூறுகிறார்
58-ஸ்லோகத்தில் அவளது அருளின் சிறப்பைக் கூறுகிறார்
59-60 ஸ்லோகங்களால் நைச்ச்யாநுசந்தானம் செய்து பிராட்டியே புருஷகாரம் ஆனதைப் பேசுகிறார்
61 -ஸ்லோகத்தால் இம்மை மறுமைகளை ஸ்ரீ ரெங்க நாச்சியாரே தந்து அருள வேணும் என்று
பிரார்த்தித்து தலைக் கட்டி அருளுகிறார் –
ஸ்ரீ ராமாயணம் போல அன்றி மிதுனமாக இருவராலும் கேட்க்கப் பட்ட சீர்மை இதற்கு யுண்டே –
திருமாலவன் கவியை விட திருவின் கவிக்கு ஏற்றம் யுண்டே –
த்வயம் போலே சுருங்கச் சொல்லாமல் விவரித்து சொல்லும் சீர்மையும் இதற்கு யுண்டே –
பெரிய பிராட்டியார் அகில ஜகன் மாதாவாக இருந்தும் இவருக்கு விசேஷ தாயார் -ஆகையால் பிள்ளைச் பேச்சு -இது-
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ போன்றவையும் கூட இத்தைப் போலே பிராட்டியை மகிழ்விக்க முடியாதே
இதனால் பிரபந்த வைலஷ்ணயமும் பிரபந்த கர்த்தாவின் வைலஷ்ணயமும் சிறப்பானவை விளங்கும் –
————
ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–ஸ்லோகம் – 1-
ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:-எம்பெருமானுக்கு உண்டான ஸகல சேதன அசேதன வஸ்து ஸ்ருஷ்டி ஸ்ரமத்தை
அங்கீகாரிபி: ஆலோகை: -அங்கீ கார ஸூசகங்களான கதாஸா வீக்ஷணங்களினால்
ஸார்த்த யந்த்யை ஸ்ரீரியை-ஸபலமாக்குகின்ற பெரிய பிராட்டியாருக்கு
க்ருத: அஞ்ஜலி:–ஓர் அஞ்சலி செய்யப்பட்டது என்கை
ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.
அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.
(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.
பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால்
பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).
இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!
(இங்கு கூறப்படும் உட்பொருள் – பெரியபெருமாளின் படைப்புகளாகவே இருந்தாலும்,
மஹாலக்ஷ்மியாகிய பெரியபிராட்டியார் பார்வைபட்டால் மட்டுமே அவை பயன் பெறும் என்றார்).
இத்தால் ஸ்தோத்ரம் தொடங்கும் பொழுதே ஸாஸ்த்ரார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
ஜகாத் வியாபாரத்தில் எம்பெருமானுக்கே அந்வயம் உள்ளது என்பது ஸத் ஸம்ப்ரதாயார்த்தம் அன்றோ
ஜகத் வியாபார ஸ்ரமம் எல்லாம் அவனுக்கே என்று பூர்வார்த்தத்தில் விளக்கப்பட்டு
பிராட்டியார் உடன் இருந்து அனுக்ரஹிக்குமவள் என்பது உத்தரார்த்தத்தில் விளக்கப்படுகிறது-
பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–-ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம்-44-விரித்து அருளிச் செய்தவற்றையே இங்கு சுருக்கமாக அருளிச் செய்கிறார்
ஹே வரத
பிரளய சமய ஸூப்தம்–பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன
சித் அசித் ஆக்யம்–சேதன அசேதன ஆத்மகமான
ஸ்வம் சரீர ஏக தேசம்–தனது திருமேனியின் ஏக தேசத்தை
ஸ்வ இச்சையா –தன் சங்கல்பத்தினாலேயே
விஸ்த்ருணாந-விதித்த விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு
அநு சிகிநீ –மயில் பெடையின் எதிரே
கலாபம் சித்ரம்–நாநா விதமான தோகையை
கசிதம் இவ–ஆகாசத்தை அளாவியது போலே
சிகீ இவ விதத்ய தூந்வந்–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே
க்ரீடசி ஸ்ரீ சமஷம்–ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு
கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –
அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –
ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா –-ஸ்ரீ ஸ்தவம்1-(சார்தூல விக்ரீத மீட்டர் )
அசேஷ ஜெகதாம்–எல்லா உலகங்களுக்கும்
சர்க்க உப சர்க்க ஸ்திதீ –ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும்
ஸ்வர்க்கம் துர்க்கதிம் ஆப வர்க்கிக பதம் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்
சர்வம் ச –மற்றும் உள்ள எல்லாவற்றையும்
குர்வந் ஹரி –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான்
யஸ்யா முகம் வீஷ்யா –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு
தத் இங்கித பராதீநோ–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்
அகிலம் விதத்தே –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ
அந்யதா–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்
அஸ்ய –இந்த எம்பெருமானுக்கு
தயா –அப்பிராட்டியோடே
ஐக ரஸ்யாத் –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே
க்ரீடேயம்-இயம் கிரீடா -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது
அஸ்ய ரஸதா–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக
ந ஸ்யாத் கலு–ஆக மாட்டாது அன்றோ
ச ஸ்ரீ –அந்தப் பெரிய பிராட்டியார்
ஸ்வஸ்தி திஸதாத் –நன்மையை அளிக்கக் கடவள்-
ஸ்ரீ தேசிகனும் ஸ்ரீ ஸ்துதியில் –யத் சங்கல்பாத் பவதி கமலே -என்ற ஸ்லோகத்தில் இந்த ஸித்தாந்தத்தையே அருளிச் செய்கிறார்
இது ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கியே அவதரித்த ஸ்லோகமாகையாலும்
இங்கு சார்த்யந்த்யை –என்ற வர்த்தமாந பிரயோகம் செய்து இருகையாலும்
எம்பெருமான் ஜகத் ஸ்ருஷ்ட்டியைச் செய்து அருளும் போது பிராட்டி ஸாக்ஷிணி யாய் இருக்கிறாள் என்பது இனக்குச் சொல்லப்படுகிறது அன்று
இவ்வர்த்தம் மேலே யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -என்ற ஸ்லோகத்தின் முதல் பாதத்தில் சொல்லப்படுகிறது
இங்குச் சொல்லுகிறதாவது -ஸ்ரீ ரெங்கநாச்சியாரது திருக் கோலத்தின் அதிசயமே சொல்லப்படுகிறது
இவளுடைய ஸந்நிதியில் வந்து புகுமவர்களை இவள் காருண்ய திருஷ்ட்டியோடே கடைக்கணித்து அங்கீ கரித்து அருளுவதனால் எம்பெருமான் தன்னுடைய ஜகத் ஸ்ருஷ்டி ஸ்ரமம் சபலமானதாக்காத திரு உள்ளம் பற்றுகிறார்
இப் பொருளே சார்த்யந்த்யை என்கிற வர்த்தமான நிர்தேசத்துக்கு மிகவும் இணங்கும்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருடைய அங்கீ கார ஸூசக கடாக்ஷ அம்ருத தாரைகளுக்கு இலக்காவதே சேதன ஜன்ம ஸாபல்யம் என்று சொல்லிற்றாயிற்று
————-
கடந்த ஸ்லோகத்தில் அவன் படைப்பதை இவள் ஏற்பதாகக் கூறுகிறார்.
இங்கு, ஏற்பது மாத்திரம் அல்ல, படைப்பிற்கான காரணமும் இவளே என்றார்.
உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-
உல்லாஸ பல்லவித -ஸப்த லோகங்களின் ப்ராதுர்ப் பாவத்தினால் தளிர் பெற்றதும்
பாலித சப்த லோகீ- நிர்வாஹ கோரகித–ஸம்ரக்ஷிக்கப்பட்ட ஏழு உலகின் நிர்வாகத்தால் சஞ்சாத கோரகமுமான
நேம கடாஷ லீலாம்-அரை குறையான கடாக்ஷ வீக்ஷண லீலையை யுடையவளாய்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்-ஸ்ரீ ரெங்க திவ்ய விமான பிரதேசத்துக்கு மங்கள தீப ஜ்வாலை போன்றவளாய்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரீ யம் ஆஸ்ரயாம -பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் –
ஆழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவத்தில் -யஸ்யா கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந ஸத்யஸ் ஸமுல்லஸித பல்லவம் உல்லாஸ -என்ற ஸ்லோக சாயையிலே இதுவும் அருளிச் செய்யப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது
ஆனால் ஆழ்வான் -அருளிச் செய்யும் ஸமுல்லஸித பல்லவம்-என்பது உலகில் அந்வயம்
இங்கு உல்லாஸ பல்லவித -என்று -கடாஷ லீலையில் அந்வயம்
பிராட்டி நேம கடாக்ஷ லீலையாலே உத்பத்தியும் ரக்ஷணமும் -உத்பத்தியின் பொழுது பல்லவமாயும் –
ரக்ஷணத்தில் கோரகத்தின் முகுளத்தின் அவஸ்தை –
பெண்மைக்குத் தக்கபடி புஷப அவஸ்தைக்கு செல்லாமல்–தளிர்ப்பதும் -அரும்புவதும் – முகுள அவஸ்தை –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் -நிர்வாஹம் அதன் அரும்பு-
ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு திரு விளக்கு ஏற்றி வைக்க பிரசக்தி இல்லாமையால் மங்கள தீபம் என்கிறது
ஸ்ரீ ரெங்க நாதனோடு கூட சாம்ராஜ்ய அபிஷிக்தையாய்க் கொண்டு மிதுனம் நம்மை ரக்ஷிக்கட்டும் என்றவாறு
இப்படிப்பட்ட ஸ்ரீயை ஆஸ்ரயிக்கிறோம் என்றவாறு
இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.
அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன
(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன).
இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல.
இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்
(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.
இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.
பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.
இங்கு பல்லவித என்னும் பதம் உலகமானது துளிர்கிறது என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.
பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போன்று எனக் கருத்து.
இவள் தனது திருக் கண்களைத் திறந்து பார்ப்பதை, பெரிய பெருமாள் கவனித்தவுடன் இந்த உலகைப் படைக்கிறான்.
இவள் தனது கண்களை மூடிக்கொண்டால், இந்த உலகத்தைப் ப்ரளயத்தில் ஆழ்த்தி விடுகிறான்.
பரம்பொருளே உலகின் காரணம் என்று வேதங்களும் வேதாந்தங்களும் முழங்க,
இவர் பெரிய பிராட்டியைக் காரணமாகக் கூறுவது எப்படி?
அவனே அதற்குக் காரணம் என்பது உண்மை, ஆனால் இவளது துணையின்றி அது இயலாது.
இந்த உலகம் என்னும் இல்லறம் நடக்க, மனைவியாகிய இவள் துணை மிகவும் அவசியமானது என்று கருத்து.
இவளே பெரிய பெருமாளை நமக்குக் காண்பித்துத் தருகிறாள். அவனிடம் செல்ல இவளது சிபாரிசு (புருஷகாரம்) தேவை.
ஆனால், இவளை அடைவதற்கு எந்த ஒரு சிபாரிசும் தேவை இல்லை. தானே தனக்குச் சிபாரிசாக உள்ளாள்.
—————
தன் மீது ஸ்ரீரங்க நாச்சியார் அவளது கடாக்ஷத்தைச் செலுத்தவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.
அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–3–
அநுகல தநு காண்ட –அநு க்ஷணம் -அவன் திருத் தோள்கள்
ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோக ஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி-
மரம் போன்ற திருமாலினுடைய-கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள்- செழிப்பை உடையவளும்-
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-
உலகில் கொடியிலே பூங்கொத்தும் பூவில் படிந்த வண்டுகளுமாய் இருக்குமே
பிராட்டியாருடைய ஸ்தனங்கள் பூங்கொத்துக்கள் –திருக்கண்கள் புஷ்பங்கள் கரு விழிகள் வண்டுகள்
குளிச்சம் என்று பூங்கொத்து
ஸ்பார புஷ்பங்கள்- விகஸித்த புஷ்பங்கள்
த்வி ரேபம் -வண்டு -வண்டுக்கு வாசகமான ப்ரமா -என்னும் சொல்லில் இரண்டு ரேபங்கள் -ரகரங்கள் -இருப்பதால் த்வி ரேபம்
ரசயது மயி லஷ்மீ கல்பவல்லி கடாஷான்–நம்மை கடாக்ஷித்து அருளட்டும்-கடாக்ஷ வீக்ஷணம் செய்கிற சாமர்த்தியம் கல்பகக்கொடிக்கு இல்லையே -பெரிய பிராட்டியாருக்கே அசாதாரணம் -இங்கு பரிணாம அலங்கார பிரயோகம்
லோகத்தில் கொடி வ்ருக்ஷத்தின் மேல் படருவதால் வ்ருஷத்துக்கு அபிவிருத்தி இல்லை -கொடிக்குத் தான்
இங்கேயோ தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அபிமத ஜன சம்ச்லேஷ நிபந்தநம்
ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.
இங்கு ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீஸக என்று கூறியது காண்க – ஸ்ரீயின் நாதன் என்னும்படி,
அவள் இல்லாமல் இவனை அடையாளம் காண இயலாது என்பதைக் காட்டுகிறார்.
அவள் இல்லாமல் இவனது திருக் கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்து விடும்.
——————
ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷத்தின் பெருமையைக் கூறுகிறார்.-
அமுதப் பெருக்கான கடாக்ஷ வீக்ஷணங்களாலே நம்மை அபிஷேகம் செய்து அருளப் பிரார்திக்கிறார் இதில்
மூன்று விசேஷங்களை முற்று பாதங்களால் அருளிச் செய்கிறார்
யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–4–
முராரே-ஸ்திர சர ரசநா தாரதம்யே-யத் ப்ரூ பங்கா பிரமாணம்-ஜங்கம ஸ்தாவராதி-ஸ்ருஷ்ட்டிகளுக்கு –
சந்தன பாரிஜாத மகிழ -கள்ளிச்செடி வேப்பமரம் -இத்யாதி—ஜங்கம பதார்த்தங்களில் தாரதமயமாவது தேவ மனுஷ்ய திர்யகாதி ரூபேண பேதங்களும்
ப்ரஹ்மாதி பிபீலிக அந்தமாகக் காணும் பலவகைப்பட்ட நீச உச்ச பாவங்கள்-உச்ச நீச பாவ பேதங்களுக்கு பிரமாணம் இவளது புருவ நெருப்பே –
ஆழ்வானும் -யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்-ஸ்ரீ ஸ்தவம் -முதல் ஸ்லோகம்
இவரும் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் – நம ஸ்ரீ ரெங்க நாயக்யை யத் ப்ரூவிப்ரம பேதத ஈசேஸி தவ்ய வைஷம்ய நிம் நோந்நதமிதம் ஜகத் -என்று அருளிச் செய்தவர்களும் இங்கு அனுசந்தேயம்
வேதாந்தாஸ் –முரபிதுரசி–யத் பாத சிஹ்நைஸ்-தத்வ சிந்தாம் தரந்தி-பரத்வ நிர்ணயம் வேதாந்தங்கள் செய்வதும்-ஸ்ரீயபதியான நாராயணனுக்கே பாராம்யத்தை நிஷ்கர்ஷித்தன
பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் திருவந்தாதி
இவளுடைய சம்பந்தத்தாலேயே எம்பெருமானுக்கும் பாராம்யத்தை விளைக்கும்படியான பெருமை வாய்ந்தவள் பிராட்டி -என்றதாயிற்று
முரபித் உரஸி -இறைவனது மார்பகத்தில்-இவளது–யத் சம்பந்தேந தத்வ சிந்தாம் தரந்தி என்னாமல்-யத் பாத சிஹ்னை-ப்ரணய கேலி பரிமாற்றம் –
லஷ்மீ சரணா லாஷங்க சாக்ஷி ஸ்ரீ வத்ஸ வக்ஷஸே –என்று அன்றோ நம் பூர்வாச்சார்யர்கள் பணிக்கும் பரிசு-
போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா–விஸ்வரூபம்
எடுத்து அனுபவிக்க இழிந்தாலும் அசத் கல்பமாகவே -ஆகும்படி அன்றோ
ஸ்தோத்ர ரத்னத்திலும் –ஸ்வ வைஸ்வ ரூப்யேண ஸதா அநு பூதயாபி அபூர்வவத் விஸ்மய மாத தாநயா -என்று அருளிச் செய்ததையே இங்கு சமத்காரமாக விவரித்து அருளிச் செய்கிறார்-
ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –
நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.
இங்கு ஸ்தோத்ர முடிவிலும் –தச சத பாணி பாத -தொடங்கி யுள்ள ஸ்லோகம் முழுவதாலும் இவ்விஷயமே விவரிக்கப்படுகிறது-
தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–
தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் -கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம் –
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–—அப்படிப்பட்ட பெரிய பிராட்டியின் அம்ருத ப்ரவாஹமாகிய
கடாக்ஷ வீக்ஷணங்கள் நம்மை ஆச்சா தானம் செய்ய வேணும் -பரிபூர்ண கடாக்ஷ பூதர் ஆவோம்
இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.
ஒவ்வொரு உயிரைப் படைத்த பின்னர் ஸ்ரீரங்கநாதன் இவளது திருமுகத்தைப் பார்க்கிறான் –
இந்தப் பார்வையின் பொருள், “இந்த உயிரை எவ்விதம் படைக்கவேண்டும் என்று எனக்குக் குழப்பமாக உள்ளது,
நீயே தெளிவுபடுத்துவாயாக”, என்பதாகும்.
இதனைப் புரிந்து கொள்ளும் இவள் தனது புருவத்தின் நெறிப்பு மூலம்,
“இந்த உயிரை புகழ் பெறும் வகையில் படை, இந்த உயிரை ஞானம் உள்ளதாகப் படை,
இந்த உயிரை தாழ்ந்ததாகப் படை” என்று உணர்த்துகிறாள். இவனும் அப்படியே செய்து விடுகிறான்.
இவளிடம், “ஏன் இவ்விதம் படைக்கச் சொல்லுகிறாய்?”, என்று அவன் கேட்பது கூட இல்லை –
காரணம் அவளுக்கு அவன் அத்தனை ப்ரியமானவனாக வசப்பட்டு நிற்கிறான்.
வேதம் இல்லாமல் ப்ரம்மனால் படைக்க இயலாதது போல,
இவளது புருவ நெறிப்பு இல்லாமல் ஸ்ரீரங்கநாதனும் ஏதும் செய்வதில்லை.
இங்கு முராரி என்று நம்பெருமாளைக் கூறியது காண்க.
படைத்தல் குறித்துக் கூறும் போது ஏன் “அழித்தவன்” என்னும் திருநாமம் கொண்டு
(முரன் என்ற அசுரனை அழித்தவன்) கூறவேண்டும்?
அழிக்கும் வல்லமை இருந்தாலும், படைக்கும் போது மிகவும் எளியவனாக இவள் வசப்பட்டு நிற்பதை உணர்த்துகிறார்.
——————
யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச
அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம்
காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-
தேவி யத் யாவத் தவ வைபவம் –ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா–வைபவத்தைப் பன்னி யுரைப்பதே ஸ்தோத்ரம் -வைபவம் இத்தகையது என்பதையே அறியப்பெறாதவன் அன்றோ அடியேன்-வைபவம் பற்றி ஸ்துதிக்க ஆசை கொள்ளவும் அதிகாரி அல்லேன்
ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய -ப்ரஹ்மாதிகளும் –பிரையேறு சடையானும் பிரமனும் இந்திரனும் -என்னப்பட்ட மேலாத் தேவர்களுக்கும்
ஸ்தோதும் கே வயமிதி யத ஜக்ருஹூ –ஸ்துதிக்க நாங்கள் எவ்வளவிலோம் -என்று தங்கள் அதிகாரம் இல்லாமையையே வாய் வெருவி இருக்க–
ஜக்ருஹு—இத்தையே பரிக்ரஹித்தார்கள் –
அப்யேவம் – காவாச வயம் -இத்தை அறிந்து குத்ஸித வாக்கை யுடைய அடியேன்
தவ தேவி வாங் மனஸ் பாஷா நபிஹ்ஞம் பதம் கவயிதம் ப்ரயதா மஹே -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத
தேவரீர் உடைய அபரிச்சேதமான ஸ்வரூப வைபவத்தை கவி பாட புகுகிறேன் அந்தோ –
ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்—-நல்ல வாக்குகள் நீசனான என் வாயில் புகுந்து கெடாமல் அவற்றின் பெருமை பொலிக –
விலக்ஷணமான நைச்ய அனுசந்தானம்
அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,
அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து,
அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது?
பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர்,
உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர்.
ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர்.
இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன.
இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான்,
முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்.
வேதங்கள் ஸ்ரீரங்கநாதனின் பெருமையைக் கூறிவிடலாம் என்று முயன்றாவது பார்த்தன.
ஆனால் இவளது பெருமைகளை நம்மால் நிச்சயம் கூற இயலாது என்று முயற்சி செய்யவும் அஞ்சின.
இங்கு “இவளது பெருமைகளைக் கூறும் திறன் யாருக்கு உள்ளது”, என்று கூறாமல்,
“இவளது பெருமைகளைக் கூற யாருக்கு விருப்பம் உள்ளது”, என்று ஏன் கூற வேண்டும்?
ஒரு செயலைச் செய்ய இயலாது என்று பலரும் ஒதுங்கி யிருக்க,
ஒருவன் மட்டும் தன்னால் முடியும் என்று வருகிறான் என வைத்துக் கொள்வோம்.
அவன் தோற்றால் மிகுந்த அவமானம் அல்லவா? அது போன்று வேதங்களே ஒதுங்கிக் கொண்ட நிலையில்,
இவளைப் பற்றி நான் கூறுகிறேன் என்று வந்துவிட்டு, பின்னர் அனைவரும் பரிகசிக்கும் நிலையை
யாராவது விரும்புவார்களா? இதனால் தான் “விருப்பம்” என்றார்.
இவ்விதம் கூறி விட்டு நன்கு படித்த இவரே (பட்டர்), இவளைப் புகழ்ந்து பாட முயல்வது எப்படி என்று ஒரு சிலர் கேட்கலாம்.
இதற்கான விடையை இவர் கூறும் போது – இவளது கருணையால் தனது சொற்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும்,
அதனால் தனது கவிதைகளும் ஏற்கப்பட்டு விடும் – என்று கூறினார். இவருக்கு இந்த நம்பிக்கை எப்படி வந்தது?
இவர் ஸ்லோகம் இயற்றத் தொடங்கியதைக் கண்ட ஸ்ரீரங்கநாச்சியார், “யாரும் செய்யத் துணியாத செயலை
இந்தக் குழந்தை செய்கிறது. நாம் ஆதரிப்போம்”, என்று எண்ணி, தன்னைக் கடாக்ஷிப்பாள் என்றார்.
———————
நைச்ய அனுசந்தானம் கீழ்
இதில் ஸ்துதிக்க தாம் ஒருவரே அதிகாரி -சமத்கார அதிசயம் தோன்ற அருளிச் செய்கிறார்
ஸ்தோதாரம் உசந்தி தேவி கவய: யோவிஸ்த்ருணீதே குணாந்
ஸ்தோதவ்யஸ்ய ததச்ச தே ஸ்துதிதுரா மய்யேவ விச்ராம்யதி
யஸ்மாத் அஸ்மத் அமர்ஷணீய பணிதி ஸ்வீகாரத: தே குணா:
க்ஷாந்தி ஔதார்ய தயா ஆதய: பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரந் ப்ரதாம்.–6–
தேவி–தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-நானே ஸ்துதிக்க அதிகாரி -மற்று எவரும் இல்லை
ய -ஸ்தோதவ்யஸ்ய குணான் விஸ்த்ருணீதே தம் கவையோ ஸ்தோதார முசந்தி–ஸ்தோத்ரத்தில் இழியும் -ஸ்தோதா –
கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்பவன் அன்றோ
ததச்ச—இப்படி ஸ்தோதா உடைய லக்ஷணம் இருப்பதால் -தே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி- அடியேனே அதிகாரி -என்றவாறு-
ஹே பகவதி அஸ்மத மர்ஷணீய பணிதி ஸ்வீகாரத தே ஷாந்த்யௌதார்ய தயாதயோ –
வாய் விட்டு சொல்லாத தகாதவற்றை அடியேன் சொல்ல – குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் –இளைய புன் கவிதைகளை மழலைச் சொல்லாக கேட்டு –
பரம ப்ரீதி அடைந்து -குற்றங்களை தண்டிக்காமல் -ஷமா உதாரம் தயா வாத்சல்யாதி-குணங்கள் விஸ்தரிக்கப்படும் அன்றோ
குண கண யஸ்மாத் ஸ்வாம் ப்ரதாம் ப்ரஸ்நுவீரத்–குணங்கள் விளங்கப் பெரும் என்றவாறு
இதில் அந்யத்ர அதி வியாப்தி வராதே -ஆகவே அடியேனே அதிகாரி
ஸ்ரீரங்கநாயகியே! தேவி! பகவானாகிய நம்பெருமாளுக்கு ஏற்றவளே!
இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் அனைவரும், யார் ஒருவனை விரும்புவார்கள் என்றால் –
எந்த ஒரு பொருள் துதிக்கத் தக்கதாக உள்ளதோ, ஆனால் அந்தப் பொருளின் குணங்களை முழுவதுமாக
யாராலும் விவரிக்க இயலாமல் உள்ளதோ, அந்தப் பொருளை ஒருவன் அதன் குணங்களுடன் விவரித்தான் என்றால் –
அவனையே பெரிதும் மதிப்பார்கள் . இப்படிப்பட்ட அபூர்வமான பொருளாக இருக்கும் உன்னையும் ,
உனது குணங்களையும் வர்ணித்துத் துதிபாடும் முழுத்தகுதியும் எனக்கே வந்து விட்டது, இது எப்படி என்றால் –
நான் உன்னைத் துதிக்கும்போது எனது தாழ்மையான வாய் மூலமாக, பொருத்தம் இல்லாத சொற்கள் வந்து நிற்கும் .
ஆயினும் அதனை நீ மிகவும் மனம் மகிழ்ந்து கேட்டு நிற்பாய். இதன் மூலம் உனது உன்னதமான குணங்களான –
குற்றங்களைப் பொறுத்தல், அந்தக் குற்றங்களையும் பெருந்தன்மையுடன் ஏற்பது,
எனக்குச் சரியாகத் துதித்துக் கூற சொற்கள் அமையவில்லையே என்று நான் துன்பப்படுவதைக் கண்டு
என் மீது வருத்தம் கொண்டு எனக்கு அருளுதல் (தயை) – ஆகியவை தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது அல்லவோ?
ஒரு பொருளைக் குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
பலரும் அந்தப் பொருளைப் பற்றிக் கூற முயன்று, தோற்று விடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
இந் நிலையில், அந்தப் பொருளைப் பற்றி ஒருவன் துதிக்க, இதனைக் கேட்ட அந்தப் பொருள் தனக்கு உள்ள
தன்மைகளை தானாகவே அனைவருக்கும் வெளிப்படுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியெனில், அந்த ஒருவன் பலராலும் புகழப்பட வேண்டியவன் அன்றோ?
அப்படிப்பட்டவன் யார் என்றால் – தானே (பட்டர்) என்கிறார்.
இதனைக் கேட்ட சிலர், “உம்முடைய சொற்களோ மிகவும் தாழ்ந்தவை.
உனது வாயிலிருந்து சிறந்த சொற்கள் வெளிப்படவும் வாய்ப்பில்லை.
இப்படி உள்ளபோது நீவிர் எவ்வாறு இவ்விதம் கூறுகிறீர்?”, என்றனர்.
இதற்குப் பட்டர் வெகு சாமர்த்தியமாக விடையளித்தார் – எனது சொற்கள் தாழ்ந்தவையே.
அந்தச் சொற்கள் மூலமே ஸ்ரீரங்கநாச்சியாரின் பலவிதமான குணங்கள் தாமாகவே வெளிப்படுகின்றன:
1. அந்தத் தாழ்ந்த சொற்களால் புகழப்படும் ஸ்ரீரங்கநாச்சியார், அந்தத் தாழ்ந்த சொற்களையும் பொறுத்துக் கொள்கிறாள் அல்லவா?
இதன் மூலம் அவளது க்ஷாந்தி குணம் – குற்றங்களைப் பொறுத்தல் – வெளிப்படுகிறது.
2. “இந்தக் குழந்தை தனது தாழ்ந்த சொற்கள் கொண்டு என்னைத் துதித்து விட்டது என்று இதனை உலகம் பழிக்கக்கூடாது,
என்னைத் துதிக்க இது மிகவும் தடுமாறுகிறதே”, என்று தனது மனதில் என் மீது இரக்கம் கொள்கிறாள்.
இதன் மூலம் அவளது தயை வெளிப்படுகிறது.
3. அந்தச் சொற்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவளது வாத்ஸல்யம் – குற்றத்தையும் குணமாகக் கொள்ளுதல் – வெளிப்படுகிறது.
4. இதனால் எனது சொற்களுக்கு அதிகமான மேன்மையை அளித்துவிடுகிறாள். இதனால் அவளது ஔதார்யம் வெளிப்படுகிறது.
ஆக, எனது சொற்கள் கொண்டு அவளது குணங்களை நான் புகழ வேண்டிய அவசியம் இல்லை.
எனது துதிகள், அவளது குணங்கள் தாமாகவே வெளிப்படக் காரணமாக உள்ளனவே – என்றார்.
———————
நீர் நா வீறு பெற்று ஆச்சர்ய ஸ்துதி பண்ணுவராய் இருக்க இப்படி அருளிச் செய்யலாமோ என்ன
அடியேனுக்கு இயல்பான நா வீறு உண்டி
ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹஸேஸ்மிந் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உபக்ரமத்திலே விண்ணப்பம் செய்துள்ளேனே
தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண பலத்தாலே எனக்கு நா வீறு ஸித்திக்க வேணும் என்கிறார் ஆயிற்று –
ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7–
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ–லஷ்மீ-ஸ்வயமேவ-மதுரை கடாஷை -ந ஸூக்திம் சமக்ரயது –நிர் ஹேதுக கடாக்ஷ வீக்ஷணம் —
ஸ்ரீ ரெங்கராஜா கமலா பதலாலி தத்வம் பத்வா அபராத்யதி மம ஸ்துதி ஸாஹ ஹேஸ்மின்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –
இதனாலே திரு நா வீறு -ஸூ க்திகள் அதிசயம் உண்டாகுமே
யாம் ஸூக்திம் வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் கண்டூல கர்ண குஹராஸ் -கவயோ சத்த தயந்தி —
கவிகள் ஆசைப்படும் படி அன்றோ வைதக்யம் -பொருள் பொலிவு -வர்ண குணம் -சொல் பொலிவு –
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு- -இவை அனைத்தும் சேர்ந்தவை
கண்டூல கர்ண குஹராஸ்–தினவு கொண்ட செவிகள் உடையராய்க் கொண்டு –
ஸ்ருண்வந்தி என்னாமல் தயந்தி -என்றது பாநார்த்தகமான தாது –
பண்டிதர்களுக்கு ஸூக்தி ஸ்ரவணமே -ஸூதா பான சமம் -அன்றோ –
ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.
ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.
அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.
இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்.
இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,
இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.
இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.
குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டால் அல்லவோ தாய்க்கு மகிழ்வு ஏற்படும்?
ஆகவே தனது சொற்கள் பிழையாகவே இருந்தாலும் அதனால் நன்மையே, நான் அதனைத் திருத்தப் போவதில்லை என்கிறார் –
காரணம், அப்போது தான் ஸ்ரீரங்கநாச்சியார் இதனைக் குழந்தையின் மழலைச் சொல்லாக ஏற்று மகிழ்வாள் என்றார்.
ஆனாலும் தன்னுடைய சொல்லானது நல்ல சொல் என்கிறார். இவரே பிழை உள்ளது என்று கூறிவிட்டு,
இப்போது நல்ல சொல் என்பது எப்படி? இந்தச் சொற்கள் தாயாரைப் புகழ்வதால் நல் வாக்கு ஆனது.
அடுத்து – மதுரை: கடாக்ஷை: – என்பது காண்க. இவளது பார்வை மிகவும் குளிர்ந்தது.
இதனைக் கூறுவதற்கு முன்னால், இவளை ஸ்ரீரங்கராஜனின் மஹிஷி என்றது காண்க.
இவ்விதம் கூறக் காரணம் – அரங்கனின் பார்வையானது சரி சமமானதாகும் –
தண்டனை அளிப்பதாகவும், கருணை பொழிவதாகவும் அவனது பார்வை உள்ளது.
ஆனால் இவள் பார்வை அப்படிப்பட்டது அல்ல என்று சுட்டிக் காட்டவே, அவனது மஹிஷி என்றார்.
இவள் பார்வையானது கருணையை மட்டுமே பொழிய வல்லது.
————————-
ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:-என்றாரே -கீழ் ஸ்லோகத்துக்கு விவரணமாய் இருக்கிறது இது
கீழ் பிராட்டியிடம் நேராக விண்ணப்பம் செய்யாமல் படர்க்கையாக அருளிச் செய்து -இதில் முன்னிலையாக வைத்து தேவரீர் இப்படிப்பட்ட வாக் விலாசத்தைப் பெருக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்
அநாக்ராத அவத்யம் பஹு குண பரீணாஹி மநஸ:
துஹாநம் ஸௌஹார்த்தம் பரிசிதம் இவ அதாபி கஹநம்
பதாநாம் ஸௌப்ராத்ராத் அநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ:
த்வம் ஏவ ஸ்ரீ: மஹ்யம் பஹு முகய வாணீ விலஸிதம்.–8–
ஹே ஸ்ரீ த்வமேவ மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம்–இதில் நேராக பிராட்டியுடன் சம்போதனம்-இதில் உள்ள ஸ்ரீ ஸம்போதனம் – -கீழே படர்க்கை -இங்கே முன்னிலையாக-
இப்படிப்பட்ட வாக் விலாசத்தை பஹு முகமாக அனுக்ரஹித்து அருள பிரார்த்தனை –
த்வமேவ –நீரே -அடியேனுடைய அநந்யத்வ அத்யாவஸ்யம் குலையாமல் –-ஏவ காரத்தாலலே தேவரீர் அருள மாட்டாது ஒன்றுமே இல்லையே –
எங்கள் குடியில் தேவதாந்தர பஜநம் பண்ணுவார் இல்லையே
இராமானுசன் அடிப் பூ என் தலை மிசையே மன்னவும் –தென்னரங்கன் அணியாகம் மன்னும் பங்கய மா மலர்ப் பாவையைத் தானே போற்றும் குலம்
எந்தப்பிரார்த்தனைக்கும் பிராட்டியையே ஸ்துதிக்கத் தாக்கும் அன்றோ –
அநாக்ராதாவத்யம் -அக்ஷரம் பதம் வாக்ய தோஷ-ஸம்பந்த லேசமும் இல்லாமல்-
காதுக்குக் கடுவாய் இருத்தல் -அச் ஸீலமாய் இருத்தல் – ப்ரக்ருதி பங்காதி துஷ்டமாய் இருத்தல் -கூடாது என்கை
பஹூ குண பரீணாஹி -தோஷங்கள் இல்லாமை மட்டும் போதாதே -சப்த அர்த்த அலங்கார புஷ்டிகள் நிறைந்தவையாக இருக்க வேண்டுமே
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது எலி -என்று ஒருவன் பாடினானாம் -ஹாஸ்யாஸம் ஒன்றுக்கே இலக்கண இதில் குண பரிபோஷம் ஒன்றுமே இல்லையே
சப்த பொருள் அலங்காரங்கள் நிறைந்து இருக்க வேணும் என்கிறார்
மனசோ– சௌஹார்த்தம் -துஹா நம்-பிறர் நெஞ்சு நோவு படுமானால் இவற்றால் பயன் இல்லையே –கேட்பவர் நெஞ்சு கனிய வேண்டும் –
பரிசிதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும் அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ்பொருளை உடையதும் —
தாத்பர்யம் குரு முகமாகவே அறிய வேண்டுமே
இந்த விசேஷணம் பட்டர் ஸ்ரீ ஸூ க்திகளுக்கே தகும் -அது தன்னிலும் இந்தத் திவ்ய கிரந்தத்துக்கு விசேஷித்துத் தகும்
பதா நாம் சௌப்ராத்ராத் ஸ்ரவணயோ அநிமிஷ நிஷேவ்யம் –பத சேர்த்தி விலக்ஷணம் பொருந்து இருக்க வேணும் –கீழ்ச் சொன்ன அனைத்திலும் இது மிகச் சிறந்த அதிசயம்
ஹடாதாக்ருஷ்டாநாம் கதி பய பதாநாம் ரஸயிதா -என்னும்படி கவி சொல்ல வல்லார் பல உளரே
அப்படிப்பட்ட வர்களின் ரஸனைகளில் இந்த விசேஷம் காண வரிது
யா பதாநாம் பரா அந்யோந்ய மைத்ரீ சய்யேதி கத்த்யதே -என்னப்பட்ட சய்யா விசேஷம் ஸஹ்ருதய ஹ்ருதய ஏக வேத்யமாய் இருக்கும்
அது தான் -பதா நாம் சௌப்ராத்ரம் என்கிறது
அது உண்டாகில் ரசிகர்கள் விஸ்ராந்தி இன்றிக்கே அனுபவிப்பர்கள் ஆயிற்று
ஆக இப்படிப்பட்ட வாக் விலஸிதயத்தை அருள் புரிய வேணும் என்கிறார் ஆயிட்டு
விலஸிதம் -விலாஸம் -பர்யாயம்
மஹாலக்ஷ்மி! ஸ்ரீரங்கநாயகி! எனக்கு உன்னைக் குறித்துத் துதிகளை இயற்றத் தேவையான வாக்கு வன்மையை,
பல வழிகளில் நீ அளிக்க வேண்டும். அப்படி எனக்கு அளித்த வரம் மூலமாக உண்டான துதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றால் –
குற்றம் என்பதன் வாசனையே அவற்றில் இருத்தல் கூடாது;
பலவகையான இலக்கண குணங்கள் (நடை, பொருள் போன்றவை) அதில் காணப்பட வேண்டும்;
அதன் பொருளானது முன்பே கேள்விப்பட்டது போன்று எளிதில் விளங்குவதாக இருக்க வேண்டும்;
இனிமையான சொற்கள் கோர்வையாக இணைந்து, அந்தத் துதிகளைக் கேட்பவர்களின் காதுகளை மூடாமல் விளங்க வேண்டும்.
சொற்குற்றம், பொருள் குற்றம், வாக்கியக் குற்றம் இருக்கக் கூடாது என்றார்.
இங்கு கேட்பவர்களின் காதுகள் இமைக்காமல் திறந்தபடி கேட்க வேண்டும் என்று ரஸமாக கூறுவது காண்க.
ஸரஸ்வதி இவளது அடிமையாக உள்ளதால், அவளிடம் வேண்டுவதையும் ஸ்ரீரங்கநாச்சியாரிடமே வேண்டுகிறார்.
ஸரஸ்வதி இவளது அடிமை என்பதை, இவரது தந்தையான கூரத்தாழ்வான் – பாரதீ பகவதீ து யதீயதாஸி – என்றார்.
—————————-
அபேஷா நிர பேஷமாக அளிக்க வல்ல பெரிய பிராட்டியார் அபேக்ஷித்த பின்பும் அளிக்க மாட்டாமை இல்லையே
அங்கனமே ஆகுக என்று குளிர நோக்கித் தலை துலுக்கவே –
உள்ளமும் உடலும் பூரித்து ஸ்தோத்ரே ப்ரவ்ருத்தராகிறார்
முன்பே 230 ஸ்லோகன்களால் பூர்வ உத்தர ஸ்தகங்களால் ஸ்ரீ ரெங்கராஜனுடைய பெருமையை அருளிச் செய்தார்
இங்கு 61 ஸ்லோகங்களேயாய் சங்குசிதமாக இருந்ததே யாகிலும் -பெரிய பிராட்டியாருடைய ஒப்புயர்வற்ற பெருமையை சமத்காரமாக இங்கு அருளிச் செய்கிறார்
ஸ்ரீ ரெங்கநாதன் ஸந்நிதி வாசலிலே சடக்கென்ச் சென்று நின்று திருப்பள்ளி யுணர்த்தி ஒன்று கேட்டருளாய் என்று விண்ணப்பம் செய்கிறார் –
ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–9-
ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா –
பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்
பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்
அங்கெ சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்
தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ
ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் –
அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள்
திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்
வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெட்ரா நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்
பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு
ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –
ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்
இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன
புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி
த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்
தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்
வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –
ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-
தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –
த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர
தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –
உன்னை அடைய எங்களால் பற்றப்படுகின்ற ஸ்ரீரங்கநாயகியின் பதியே! ஸ்ரீரங்கநாதா! எங்கள் மனதிற்கு மட்டும் அல்ல,
உனது மனதிற்கும் பிடித்த பல திருக் கல்யாண குணங்கள் கொண்டவளாக ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
அவளது திருக் கல்யாண குணங்கள் காரணமாக உன்னை விட அவள் உயர்ந்தவள் என்று உன் முன்பாகவே கூறப் போகிறேன்.
இதனை உனது காதுகள் குளிர நீ கேட்க வேண்டும் . நீ கேட்பதன் காரணமாக உனது கண்களில் மகிழ்ச்சி நிலை நின்று,
அதனால் உனது பெரிய கண்கள் மின்னியபடி காணப்படும்.
இவற்றைக் கேட்பதன் மூலம் உனது அகண்ட திரண்ட தோள்கள் மகிழ்ச்சியின் காரணமாக மேலும் வளர வேண்டும்.
இதனால் அந்தத் தோள்களில் அணிவிக்கப்படும் பல அங்கிகளும் வெடித்துக் கிழிந்து போக வேண்டும்.
இங்கு பட்டர் பெரிய பெருமாள் முன்பாக நின்றார். அவரிடம் பெரிய பெருமாள்,
“நீவிர் நமது பிராட்டியைக் குறித்து துதி இயற்றி வருகிறீராமே! அவற்றில் அவளது திருக் கல்யாண குணங்கள்
வெளிப்படும்படி புகழ்ந்துள்ளீர் அல்லவா?”, என்றான்.
பட்டர், “ஆம்! உம்மை விட அவள் பல குணங்களில் உயர்ந்தவள் என்றே புகழ்ந்துள்ளோம்”, என்றார்.
இதனைக் கேட்ட அழகிய மணவாளன் கடகடவென்று சிரித்தான்.
தன்னுடைய நாயகியைக் குறித்து பட்டர் கூறப் போவதைக் கேட்க தன்னை மறந்து நின்றான்.
இதனைக் கண்ணுற்ற பட்டர் – ஸ்ருணு – கேட்பாயாக – என்ற பதம் பயன்படுத்தியது காண்க.
பட்டர் கூறக்கூற அரங்கனின் திருக் கண்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன,
அவனது திரண்ட புஜங்கள் மேலும் வளர்ந்தன. அவன் அணிந்திருந்த அங்கிகள் கிழிந்தன.
இங்கு – ஹ்ருத்யாம் – என்ற பதம் காண்க.
இதன் மூலம் பெரிய பெருமாளின் திரு மார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரைப் பட்டர் கூறுவதாகவும் கொள்ளலாம்.
எம்பெருமானும் பிராட்டியும் சேர்ந்து உள்ள போது, பிராட்டியைப் புகழ்வது சரியா என்று சிலர் கேட்கலாம்.
இதற்கான சமாதானம் – பட்டராக இவற்றைக் கூற வில்லை, பெரியபெருமாள் கேட்டதனால் தான் கூறினார்.
—————–
ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருமேனியும் பூரிக்கும் படியாக ஸ்துதிக்கப் போவதாக பிரதி ஞாதமாயிற்று கீழ்
அதன்படியே ஸ்துதிக்க இழிந்தவராய் -மாநாதீநா மேய ஸித்தி -என்கிறபடியே ப்ரமேயம் ஸித்திப்பது பிரமாண அதீனமாகையாலே பிராட்டியும் வைபவமாகிய ப்ரமேயத்திற்கு சாதகமான பிரமாணத்தை மூதலிக்க வேண்டி
இதிஹாஸ புராணாதி உப ப்ரும்ஹணங்களினால் உப ப்ரும்ஹிதமான ஸ்ருதி தான் இவ் விஷயத்திற்கு பிரமாணம் என்று அருளிச் செய்கிறார் இதில்
குணரத்ன கோஸம் என்ற பிரபந்த திருநாமமும் அர்த்தாத் ஸூசிப்பித்து அருளுகிறார் முத்ர அலங்கார வகையில் இதில் –
தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–10-
ஹே தேவி பிரதமே புமாம்ச பகவதீம் ஸ்ருதிம் -த்வத் சத் குணவ் க மணி கோச க்ருஹம் க்ருணந்தி-வாரீர் ஸ்ரீ ரெங்க நாச்சியாரே – வியாச பராசர வாலமீகி பிரபுருதிகளும் -பராங்குச பரகால யதிவராதிகளுமான பூர்வ புருஷர்கள் –சுடர் மிகு சுருதியை தேவரீர் உடைய
கல்யாண குண ரத்னங்களை இட்டு வைக்கும் பண்டாரமாக அன்றோ -அருளிச் செய்கிறார்கள் –
இவை அவன் பெருமையையும் அதிகமாக சொன்னாலும்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுதே-தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவரீருடைய பெருமையுள்ளீடு தானே
திரு வில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -என்கிறபடியே
பிராட்டியுடைய சம்பந்தம் இல்லாமல் தேவன் தேவத்வத்தை பெற முடியாதே
ஆக தேவனுடைய பெருமைகளை சொல்லும் இடம் எல்லாம் தேவியின் பெருமையைச் சொல்லிற்றாகவே கொள்ளலாம் இறே
வான் திகழும் சோலை மதிள் அரங்கன் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றது
ஸகல திவ்ய தேசத்து எம்பெருமான்களுடையவும் மஹிமை ஸ்ரீ ரெங்கநாதனுடைய மகிமையின் உள்ளீடு போலே
தேவாதி தேவனுடைய பெருமை எல்லாம் தேவ தேவ திவ்ய மஹிஷியினுடைய பெருமையின் உள்ளீடு என்கிற பரமார்த்தமும் கண் அழிவற்றதாகையாலே இங்கனே அருளிச் செய்யக் குறையில்லை யாயிற்று
பகவதீம் -ஸ்ருதிக்கு இந்த விசேஷணம்-அபவ்ருமஷே யத்வ -நித்யத்வ -நிர்தோஷத்வாதி ப்ரயுக்தமான பூஜ்யதை இட்டு
பிரதமே புமாம்ச –முன் சொல்லிய மஹரிஷிகள் -ஆழ்வார்கள் -பூர்வர்கள்
இவர்கள் பிராட்டியுடைய திருக்கல்யாண குணங்களாகிற ரத்னங்களுக்குத் கோச க்ருஹமாக அருளிச் செய்கின்றார்கள் என்றது -பிராட்டியாருடைய குணங்கள் வேதத்தில் ஸூ ரஷிதமாகக் காணக்கிடைக்கும் என்கிறார்கள் என்றபடி
மானதீனா மேய சித்தி -பிரமாணங்கள் கொண்டே பிரமேய சித்தி அன்றோ –
ஸ்ரீ குண ரத்னகோசம் -இந்த ஸ்துதி என்று அர்த்தாத் ஸூசிப்பிக்கிறார் இதில்
தத் த்வார பாடந படூ நிச சேதிஹாச சம் தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ் ஸராணி-ரத்னங்களை வெளி வாசலில் இறைத்து வைக்க மாட்டார்கள் அன்றோ -உள்ளே ஆழ்ந்து பார்த்தாலே இருப்பதை அறிய முடியும்
அதே போல் வேதமாகிய பெட்டியையும் இதிஹாச புராணாதிகளாகிற திறவு கோலை இட்டுத் திறந்து பார்க்கும் அளவில் பிராட்டியுடைய பிரபாவம் வேதங்களில் எளிதாக்க காணக்கிடைக்கும் என்கை
அவை பிராட்டியாலே அவனுக்கு பெருமை என்பதை நிரூபணம் செய்வதாலும்
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -இத்யாதி வாக்யங்களிலே ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டு இருக்கிறபடியால்
எம்பெருமானுக்குப் பெருமை சொல்லும் இடம் எல்லாம் பிராட்டியின் பெருமையையே சொல்லிற்று ஆயிற்று
சம் தர்க்கணம் ஆவது -சமீசிந தர்க்கம் -வேதார்த்த விசார ரூப மீமாம்சை
ஸூத்ரகாரர் தர்க்கத்தை வெறுத்தது பிரமாண அநு குணம் அல்லாத சுஷ்க தர்க்கத்தையே யாகும் -அது தோன்றவே இங்கு சாம் தர்க்கண -என்றது
புரஸ் ஸராணி–ஸ்ரீ லஷ்மி தந்த்ராதிகள் -அருளிச் செயல்கள் இத்யாதி களைச் சொன்னவாறு
தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய
இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி
அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ குண ரத்ன கோசம் என்ற தலைப்பு வெளிப்பட்டத்தைக் காண்க.
வேதங்கள் என்பவை இவளது குணங்களைக் காக்கும் பேழைகள் என்றார்.
ஆக மேலோட்டமாகப் பார்த்தால் வேதங்கள் பெரியபெருமாளைப் புகழ்வது போலத் தோன்றினாலும்,
ஆழ் பொருளில் இவளையே துதிக்கின்றன எனலாம்.
இவளது குணங்களை – ஒக – என்றார். இதன் பொருள் – கூட்டம் கூட்டமாக – என்பதாகும்.
அந்தக் குணங்களால் இவளுக்கு எந்தவிதமான புதிய ஏற்றம் வரப் போவதில்லை.
ஆபரணங்களாலா தங்கத்திற்கு மதிப்பு? தங்கத்தால் அல்லவோ ஆபரணங்களுக்கு மதிப்பு?
அது போல, இவளால் குணங்களுக்குப் பெருமை என்றார்.
———————-
கீழ் வேத பிரமாண விளக்கை அருளிச் செய்து
இதில் அந்த விளக்கில் வீட்டில் படும் பாட்டை அடைந்து அநர்த்தப்படுமவர்களை எடுத்து உரைத்து
இவர்கள் பிராட்டியாருடைய திவ்ய கடாக்ஷதிற்கு இறைப்பொழுதும் இலக்காகப் பெறாமையினால் தான் இப்படி அவப்பொருள்களைச் சொல்லி அநர்த்தப்படுகிறார்கள் என்கிறார்
ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்–11-
ஆஹூர் வேதாந் அமாநம் கதிசன -வேத பாஹ்யர்களைச் சொன்னார் ஆயிற்று
வேதம் அப்ரமாணம் என்னும் ஸூகத சார்வாகாதிகள் இங்கே விவஷிதர்கள்
இவர்களும் மேல் சொல்லப்படுபவர்களும் அவ்யபதேஸ்யர்கள் என்பதால் சிலர் சிலர் என்றே குறிப்பிடுகிற படி
கதிச அராஜகம் விச்வமேதத்-காபிலர் வாதம் -ஜகத்தை
அநாதம் என்கிறவர்கள் -அனுவதிக்கிறபடி -ஈஸ்வர ஸத்பாவம் இல்லை என்பர் -பிரதானம் காரணம் என்பர்
தத்வத்ரயத்தில் ஈஸ்வர ப்ரகரணத்தில் -காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள் –பிரதானம் அசேதனமாகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும் -ஸ்ருஷ்டி ஸம்ஹார வ்யவஸ்தை கூடாமையாலும் அதுவும் சேராது – என்று அருளிச் செய்ததும் அவ்விடத்து வியாக்யானமும் இங்கே அனுசந்தேயம்
ராஜன்வத் கேசிதீசம் -(விஸ்வம் ஆ ஹூ-என்றபதமும் இங்கே அநு ஷங்கம் செய்து கொள்ள வேண்டும் )-இது காணாதர் மதம் –சாஸ்த்ரத்தால் அன்றிக்கே அனுமானத்தால் ஈஸ்வரன் -ஆனுமானிக ஈஸ்வரனுக்கு நிமித்த காரணத்வ மாத்திரம் இசைகிறார்கள்-
எனவே இவர்களும் யதார்த்த வித்துக்கள் அல்லர் –
அந்யே ஈசம் தம் குணி நமபி குணைஸ் தரித்ராணம் (ஆஹு)-குண தரித்ரன் என்னும் மாயா வாதிகள்
நிர்க்குணத்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகள் ஹேய குண அபாவத்தைச் சொல்லுகின்றன என்று நிஷ்கர்ஷிக்க மாட்டாமையாலே –
அந்யே பிஷவ் ஸூராஜம் பவம் (ஆஹு )-வெந்தார் என்பும் சுடுநீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு
உலகு எழும் திரியும் பிச்சாண்டியை ஈஸ்வரன் என்பர்
இதிச ஜடாஸ் தே -இப்படி பலவும் -என்பதால் இதி ச -ஜடாஸ்-கருவிலே திரு இல்லா – மூர்க்கர்கள்
தலாதலி அகார்ஷூ–கையால் தரையை அடித்து வாத யுத்தம் செய்பவர்கள்
கேசாகேசி -தண்டாதண்டி இத்யாதிகள் போலே தலாதலியும் கொள்ளக் கடவது
குடிமையைப் பிடித்துக் கொண்டும் தடியை வீசிக் கொண்டும் யுத்தம் புரிவது போல்
கையைத் தரையிலே அறைந்து வாதம் செய்வது இயல்பு
இவை எல்லாம் ஸ்ரீ லஷ்மீ கடாக்ஷ அபாவ நிபந்தம் என்கிறது
ஸ்ரீ ரங்க ஹர்ம்யாங்கண கன கலதே யே தே ஷணம் லஷ்யம் நா சந்தே ஏவம் அகார்ஷு-ஸ்ரீ ரெங்க விமானத்தின் கீழ் படர்ந்த கனகக் கொடி அன்றோ தேவரீர் –
உமது கடாக்ஷத்துக்கு க்ஷணம் காலமும் இலக்காகாத ஜடங்கள் அன்றோ
இப்படி ஆஹூர் வேதாந் அமாநம் -வேதான் அமானம் -ஆஹூ -வேதங்களை பிரமாணம் அல்ல என்று சொல்லினார் -என்றபடி –
மூன்றாம் பாதத்தில் உள்ள தே என்பது தச் சப்தத்தின் பிரதமாபஹு வசனம்
நான்காம் பாதத்தில் உள்ள தே என்பது யுஷ்மச் சப்தத்தின் ஷஷ்டி ஏக வசன அர்த்தம் –
ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.
அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்
(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்);
இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை);
நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்);
சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும்
அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்);
மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) –
இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது
இங்கு பல மதங்களின் வாதங்களைத் தள்ளுகிறார். இவர்களில் சிலர் வேதமே இல்லை என்பவர்கள் ஆவர்.
மேலும் சிலர் வேதங்கள் உள்ளதை ஒப்புக் கொண்டாலும், அவை பரம் பொருளைக் கூறவில்லை என்றனர்.
மேலும் சிலர் வேதங்களை ஒப்புக் கொண்டு, அவை பரம் பொருளையே குறிக்கின்றன என்று ஒப்புக் கொண்டாலும்,
அந்த பரம் பொருளுக்குக் குணங்கள் இல்லை என்றனர்.
இப்படிப்பட்டவர்கள் ஸ்ரீரங்கநாச்சியாரின் பார்வைக்கு இலக்காகாதவர்கள் என்றார்.
இவளது பார்வை ஒரு நொடிப் பொழுது பட்டிருந்தாலும், அவர்கள் மிக்க பண்டிதர்களாகி இருப்பார்கள் என்று கருத்து.
ஆக இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே உண்மையான அறிவு பெற்று, பரம் பொருளான பெரிய பெருமாளை அறிய இயலும்.
———————
மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12–
பகவதி-ந நு-லஷ்மி-சகல குண சம்பத்துள்ள பெரிய பிராட்டியாரே
யேபி தன்யா -யாரோ சில பாக்யவான்கள்
பக்தி சித்தாஞ்ஜநேந-பக்தியாகிய சித்த அஞ்சனத்தை உடைத்தாய் கொண்டு -சித்தாஞ்சனம் போன்ற பக்தி -என்றுமாம்
பஹு வ்ரீஹி -பக்தி சித்தாஞ்சனம் இவ யஸ்ய தத் -சித்தாஞ்சனம்போன்ற பக்தி
பக்தியாகிய சித்தாஞ்சனதாலே என்று கொடு -ஸ்வயம் விசேஷய்மாய்க் கொண்டு -அதை வில ஸதா என்பதிலே அந்வயிப்பாரும் உண்டு
அகத்தின் உள்ளே பக்தி ஸித்தாஞ்சநத்தினாலே விளங்கும் ஞானக்கண்ணாலே வீக்ஷமாணா -என்க-
மனஸி விலசத அஷ்ணா-மனசாகிற ஞானக் கண்ணாலே
ஸ்ருதி சிரஸி நிகூடம் தே மஹிமாநம்-வேதாந்தங்களிலே மறைந்து கிடைக்கும் உமது மஹிமைகளை
நிதிம் வீஷமாணா இவ-நிதியைக் காண்பாரைப் போலே காணா நின்றவர்களாகி
நிதி யாவர்க்கும் எளிதன்றே –
உபரி உபரி சஞ்சாதாம் -அத்ருஸ்யம் -ஸ்ரீ வராத ராஜ பஞ்சாத் -ஸ்ரீ மஹா லஷ்மீ வைபவமாகிற நிதி –
புஞ்ஜதே -அனுபவிக்கிறார்களோ
தே தைவீம் சம்பதந்தே அபிஜாதா –அன்னவர்கள் மோக்ஷ ஹேதுவான தைவ சம்பத்துக்கு இட்டுப் பிறந்தவர்கள்
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய ஆஸூரீ மதா என்றும்
மாஸூசஸ் சம்பதம் தைவீம் அபி ஜாதோசி -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –
பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!
உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி?
புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும்.
இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?
இங்கு கண் மை கொண்டு புதையலைத் தேடுவது போன்று, பக்தி என்பது கொண்டு ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி
வேதாந்தங்கள் என்ன கூறுகின்றன என அறியமுடியும். அந்த ஞானம் கொண்டு அவளை அறியலாம். அதன் பின்னர்?
புதையலை எடுத்த பின்னர், அதனைக் கொண்டு ஆபரணம் செய்வது முதலான செயல்களைச் செய்து
புதையலைப் பயனுள்ளதாக்குகிறோம். இது போன்று ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றிய ஞானம் உண்டான பின்னர்,
அவள் மூலமாக நம்பெருமாள் என்ற ஆபரணத்தைப் பெற்று விடுகிறோம்.
————————–
பிராட்டியாருடைய வைபவ ப்ரதிபாதனத்திலே ஸ்ரீ ஸூக்தமானது இதம் பாரமாக ப்ரவ்ருத்தமானது என்றும்
புருஷ ஸூக்தாதிகளும் தத் வைபவ ப்ரதிபாதனத்திலே விஸ்ராந்தமாகிறது என்றும் அருளிச் செய்கிறார் இதில்
அஸ்யேசா நா ஜகத இதிதே-இத்யாதியால் ஸ்ருதியின் அநுவாதம்
அஸ்ய ஈஸாநா ஜகத: இதி அதீமஹே யாம் ஸம்ருத்திம்
ஸ்ரீ: ஸ்ரீஸூக்தம் பஹு முகயதே தாம் ச சாகாநுசாகம்
ஈஷ்டே கச்சித் ஜகத இதி ய: பௌருஷே ஸூக்த உக்த:
தம் ச த்வத்கம் பதிம் அதிஜகௌ உத்தர: ச அநுவாக:–13-
அஸ்யேசா நா ஜகத இதிதே தீ மஹே யாம் சம்ருத்திம்-ஸ்ருதி அனுவாதம் – அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்னீ -மூலம்
அநுஸந்திக்கும் வைபவ அதிசயத்தை –
ஸ்ரீ ச் ஸ்ரீ ஸூக்தம் பஹூ முகயதே -சாகைகள் தோறும் பஹு முகமாக ஸ்ரீ ஸூக்தம் விஸதீகரியா நின்றதே
தாஞ்ச சாகா நுசாகம் ஈஷ்டே கச்சிஜ் ஜகத இதி ய பௌருஷே ஸூ க்த உக்த-சர்வ ஜகத்துக்கும் ஸர்வேஸ்வரேஸ்வரன்
இவனே என்று புருஷ ஸூக்தம் ஓதா நிற்குமே
தம் உத்தர அநு வாக த்வத்கம் பதிம் அதி ஜகத் -அந்த ஸ்ரீ மன் நாராயணனை
நாராயண அநு வாகமானது உமது பர்த்தாவாக அன்றோ சொல்லிற்று
இதம் ஹி புருஷம் ஸூக்தம் சர்வ வேதேஷூ பட்யதே-
சர்வ ஸ்ருதிஷ்வனுகதம் -ஸூ க்தம் து பவ்ருஷம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
ஸ்ரீ ஸூ க்தமும் தைத்ரிய சாகை -மாத்யந்தி நாதி சகல சாகைகளிலும் உண்டே –
ஹே ஸ்ரீரங்கநாயகி! மஹாலக்ஷ்மீ! இந்த உலகத்தின் ஈச்வரி, நாயகி என்று உன்னை வேதங்கள் சில இடங்களில் ஓதியுள்ளன.
இப்படிப்பட்ட பெரும் செல்வமான உன்னை, ஸ்ரீஸூக்தம் என்ற உயர்ந்த க்ரந்தம் தனது ஒவ்வொரு மந்திரத்திலும் பலவாகப் புகழ்ந்து கூறுகிறது.
புருஷஸூக்தத்தில் இந்த உலகம் முழுமைக்கும் நாயகன் என்றும், புருஷன் என்றும் ஸ்ரீரங்கநாதன் வர்ணிக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நம்பெருமாளை அநுவாகமும் விவரித்துக் கூறுகின்றது. அந்தக் க்ரந்தங்கள் அவனை உனது கணவனாக அல்லவா ஓதின?
புருஷஸூக்தம் தனது நாயகனைக் கூறுவதாகவும், ஸ்ரீஸூக்தம் தன்னையே கூறுவதாகவும் மஹாலக்ஷ்மி,
பாஞ்சராத்ர ஆகம நூலான லக்ஷ்மி தந்த்ரத்தில் கூறினாள். அந்த வரிகள்:
1. தத்ர பும்லக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
புருஷர்களின் லக்ஷணம் கூறப்பட்டதால் அதனைத் தான் (திருவரங்கன்) கைக் கொண்டான்.
2. தத்ர ஸ்த்ரீலக்ஷணம் ஸூக்தம் ஸத்ப்ரஹ்ம குண பூஷிதம் –
பெண்களின் பெருமைகள் பேசப்பட்டதால் அதனை நான் (ஸ்ரீரங்கநாச்சியார்) கைக் கொண்டேன்.
——————————-
உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.–14-
ஹே அஸ்மத் ஜநநி உத்பாஹூஸ் த்வாம் உபநிஷத ஸா வாஹநைகா நியந்தரீம்-உபநிஷத்துக்கள் மட்டும் அல்ல –
உத்பாஹு என்றது -சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்ச்யதே –பிராமண வசனத்தை ஒட்டி –
அசவ் உபநிஷத் என்றது கீழ் ஸ்லோஹத்தில் சொன்ன உத்தரச்ச அநு வாகத்தை –
ஸ்ரீ மத் ராமாயணமபி பரம் ப்ராணிதி த்வச் சரித்ரே–சிறை இருந்த உன்னுடைய ஏற்றம் சொல்லியே –
உயிர் தரிக்கின்றது ஸ்ரீ ராமாயணமும்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாச் சரிதம் மஹத் –
கருணா காகுஸ்தன் பெருமை பிராட்டி சந்நிதியாலேயே தானே நிலை பெற்றது
பிராணிநி -ஸ்ரீ சீதா சரித்திர ப்ரதிபாதமே ஜீவ நாடி –
ஸ்மர்த்தாரோஸ் யதமே -ஸ்ம்ருதி கர்த்தாக்கள் பராசாராதி மகரிஷிகளும்
சேதிஹாசை புராணை-இதிஹாச புராணங்களாலும்
வேதாந் த்வன் மஹிம்நி பிரமாணம் நிந்யூர்-வேதங்களை உம்முடைய வைபவத்துக்கு பிரமாணம் ஆக்கினார்கள்
நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட –
புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.
இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க.
—————————————-
மாநாதீநா மேய ஸித்தி -யாகையாலே பிராட்டியாரின் வைபவமாகிற ப்ரமேயத்திற்கு இன்னின்னவை பிரமாணம் என்று காட்டி அருளினார் கீழே
இனி பிரமாண பிரதிபன்னமான பிராட்டியாரின் ஐஸ்வர்யத்தை அருளிச் செய்து போருகிறார்
ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ:–15–
ஸ்ரீ ரங்க பர்த்து ப்ரியே-
ஆகுக்ராம நியாமகா தபிவிபோ ரா சர்வ நிர்வாஹகாத்-சிறிய கிராம நிர்வாகன் -சர்வ லோக நிர்வாகன் –
ஐஸ்வர்யம் யதிஹோத்த ரோத்தர குணம் அஸ்தி -உத்தர உத்தர ஐஸ்வர்யம்
துங்கம் -மேரு போன்ற உன்னதமான வஸ்து சமூகம்
மங்கள -சந்தன குஸூம ஹரித்ரா குங்குமாதிகளாய்க் கொண்டுள்ள மங்கள வஸ்து சமூகம்
முஜ்ஜ்வலம் -மணி த்யுமணி தீபாதிகளாய்க் கொண்டுள்ள பிரசுர பிரகாச யுக்தமான வஸ்து சமூகமும்
கரிமவத் -ஹிமவான் மந்தரம் மைநாகம் -மலைகளாய்க் கொண்டு குருத்வ யுக்தமானவை
புண்யம் -யாகாதிகளான பரலோக சாதன பூத ஸூஹ்ருத்துக்கள்
புன பாவனம்-பின்னையும் கங்கா சரஸ்வதி காவேரி -பிறப்புறுதிகளான பரிசுத்தி கரங்கள் சமூகம்
தன்யம்-நவ நிதி ரூபமாய்க் கொண்டு பாக்ய பலரூப வஸ்து சமூகம்
யத் அஸ்தி தததச்ச -யாது ஓன்று உள்ளதோ இப்படிப்பட்ட மேம்பட்ட வஸ்துக்கள் எல்லாம்
விஷண புவஸ் தேபஞ்சஷா விப்ருஷ -தேவரீருடைய கடாக்ஷ கந்தளி தங்களான
ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –
ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக,
அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம்.
அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் –
இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது?
எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?
ஆழ்வானும் ஸ்ரீ ஸ்தவத்தில் –
ஐஸ்வர்யம் மஹதேவ வா அல்பமதவா –
ஐஸ்வர்யம் யத் சேஷ பும்ஸி –
என்ற இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்தவற்றையே இங்கு இவர் ஸங்க்ரஹித்ததாயிற்று
இங்கு ஸ்ரீரங்கநாதனை ஏன் கூறினார்? அனைத்தையும் படைப்பது அவனே என்பதால் ஆகும்.
அவ்விதம் அவன் படைத்தாலும், இவளது கடாக்ஷம் இருந்தால் மட்டுமே அவை துளிர்க்கும் என்பதை முன்னரே கூறினார்.
ஒருவனுக்குப் பல பொருள்கள் திருவரங்கன் அருளால் கிட்டினாலும் –
அவற்றை அனுபவிக்கக் கூடிய தகுதியையும், திறனையும், ஞானத்தையும் இவளே ஏற்படுத்துகிறாள்.
—————–
ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–16-
ஸ்ரீ ரங்கராஜ பிரணயிநி
ஏகோ மநுஷ்ய த்ருப்யத் தந்தாவளஸ்தோ–மத்த வாரணத்தில் வீற்று இருந்து
முக்தாத பத்ர ப்ரசலமணி கணாத்காரி மௌளிர் -முத்துக் கொற்றக் குடைக் கீழே -ரத்ன சரங்கள் கண கண ஒலிக்க திரு முடியை உடையவனாய்
ந தான் ஷோணி பாலான்-அச்சமயத்தில் தன்னை வணங்கின அரசர்களை
ஷணம் ந கணயதி ந தான் யத்-நொடிப்பொழுதும் லஷ்யம் செய்யாது இருக்கும் ஐஸ்வர்ய காஷ்டை யாது ஓன்று உண்டோ இதுவும்
அந்யோ மனுஷ்ய -வேறு ஒரு மனிதன்
க்ருபணம் யதா ததா -தந்த பங்க்தீ-தர்சயன் -பல் வரிசைகளைக் காட்டி தஸ்மை திஷ்டதே யதி யத் -தாரித்ய காஷ் டையை சொன்னவாறு
தத் தே நயனோ தஞ்சித ந்யஞ்சிதாப்யாம் –தேவரீருடைய கடாக்ஷ வீக்ஷண விஸ்தாரத்தாலும் சங்கோசத்தாலுமே -யாகும்
கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஓர் காவலராய் விண் தோய் வெண் குடை நிழலின் கீழ் விரி நீர் உலகாண்டு -பல ஸ்ருதி-
இவள் கடாக்ஷ உதஞ்சி தன்யஞ்சிதங்களும் தத் தத் கர்மானுகுணமாகவே யாகுமே –
யானை மீதே இருந்தாலும் யாசகத்வத்தைக் காட்டிக்கொண்டு இருப்பதை -தஸ்மை திஷ்டதே -என்ற பிரயோகம் காட்டும்
தந்த பங்க்தீ -ஏக வசனமாகக் கொள்ளும் பாடத்தை விட த்வி வசநாந்தமான பாடமே சிறக்கும்
கர்ம நிபந்தனமாகவே என்று ஸ்ருதி பல இடங்களிலும் பறையா நிற்க இங்கு பிராட்டி கடாக்ஷ நிபந்தம் என்றது -இதுவும் தத் தத் கர்ம அநு குணமாகவே யகுமாதலால் -பொருத்தமே
இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு ,
முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான்.
அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது.
அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக
அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும்,
அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே!
ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?
இவளது திருக்கண்கள் மூடுவதாலும், திறப்பதாலுமே அனைத்து உயிர்களின் ஏற்றத்தாழ்வுகள் என்றார்.
இங்கு வாமன அவதார கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவம் காண்போம்.
வாமனனாக ஸ்ரீமந்நாராயணன் மஹாபலியிடம் யாசகம் பெற வந்தான். இவன் எதனைக் கேட்டாலும் அதனை அளிப்பதற்கு
மஹாபலி தயாராகவே இருப்பதாக உறுதி அளித்தான். இதனைக் கண்ட வாமனனுக்கு வியப்பு அதிகமானது.
இவனிடம் இத்தனை ஐச்வர்யம் எவ்விதம் வந்தது என்று யோசித்தான்.
பின்னர் தன்னுடைய திருமேனியைப் பார்த்தான். ப்ரம்மச்சாரி என்பதால், தனது திருமார்பை அவன் மூடவில்லை.
அதனால் அங்கு வாஸம் செய்யும் பெரியபிராட்டி மஹாபலியைப் பார்த்தபடி உள்ளதை அறிந்தான்.
அந்தப் பார்வையாலேயே அவனுக்கு அத்தனை ஐச்வர்யம் என்று அறிந்தான்.
தனது அங்கவஸ்த்ரத்தினால் திருமார்பை மூடிக் கொள்ள, அதனால் பெரியபிராட்டியின் நேர்பார்வை தடைபட்டது.
இதன் விளைவாக வாமனன் கேட்ட மூன்றாவது அடியை மஹாபலியால் அளிக்க இயவில்லை.
ஆக இவளது திருப்பார்வைக்கு இத்தனை சக்தி உண்டு என்று கருத்து.
———————–
ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதாஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா
ததோ முகம் மதி இந்திரே பஹுமுகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–17-
அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே -பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப்புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப்புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி -ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –
ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடிபோன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.
இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.
இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.
———————–
ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–18-
ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கேட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –
மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?
இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?
பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?
——————
காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேச்வரதேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:–19-
ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ வர தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்
உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –
ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.
ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.
தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகியமணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.
———————
சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-
விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேச்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்சய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விச்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குணத்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்
ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?
இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.
தூர்த்தர் என்னும் பதம் காண்க. இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின்
பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.
—————————
யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:–21–
ஹே மாத –
தத் விஷ்ணோ பரமம் பதம் தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–அந்த திரு நாடு தேவரீருக்காகவே என்பர் வைதிகர்கள்
வைகுண்டேது பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர்ப் பாகவதைஸ் ஸஹ -என்று
திவ்ய தம்பதிகளுக்கும் ஆஸ்தானமாக இருந்தாலும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப -4-9-10- பிராட்டிக்கே பிரதான்யம் என்னக் குறை இல்லையே
யத்தூரே மனசோ -இப்படிப்பட்டது என்று நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாதது -யாருக்கு என்று இங்கு இல்லையாகிலும் –
ப்ரஹ்மாதீநாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மத வைகுண்டே திவ்ய லோகே -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
யதேவ தமஸ பாரே-பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளதோ
யத்யத்புதம்–அநு க்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம்
யத்காலா தபசேளிமம் -கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம்
ஸூரபுரீ யத் கச்சதோ துர்கதி-ஸ்வர்க்காதி லோகங்கள் துர்கதியாக அன்றோ இங்கு செல்பவர்களுக்கு
ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந -என்றபடி நரக நிர்விசேஷமாய் தோற்றுமே
சாயுஜ்யச்ய யதேவ ஸூதி -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
அதவா மத் கிராம் யத் துர்க்ரஹம்-திவ்ய தம்பதியின் திவ்ய அனுக்ரஹத்தால் எதையும் விவரிக்க வல்ல இவரே
தம்முடைய வாக்குக்கு எட்டாது என்கிறார் -ப்ரஹ்மாதிகள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது என்பது இதற்கு ஒரு சிறப்போ
பெரிய திருமொழி -6-3-4- சாந்தேந்து மென் முலையார் பாசுர வியாக்யானம்-ஐதிக்யம் –
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்ததாக பலகாலும் சொல்லும் -நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ
பட்டரும் வியவஹிக்கிறது என்று இருக்க ஒண்ணாது -அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு –
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிராயாய்த் தோற்றும் –
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும்
இப்படிப்பட்ட திரு நா வீறு பெற்ற தமக்கும் வருணிக்க நிலம் இல்லை என்பது விலக்ஷண வாக் விந்யாஸமே யாகும்
ஆக இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்
மேலே -23-ஸ்லோகத்தில் -பகவதி யுவயோராஹுரா ஸ்தானம் -என்று
திவ்ய தம்பதிகள் இருவருக்கும் உரித்ததாகச் சொல்வதோடு இது விரோதியாது –
தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?
இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.
———————-
ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22–
ஸ்ரீ ரங்கேச்வர தேவி
இதம் அகிலம் சராசரம் தவ ஹேலாயா -தேவர் திருக்கையிலே விநியுக்தமாய் இரா நின்றது –
த்வம் ந்யஞ்சத் பிரு தஞ்சத்பி -கர்ம ஸூத்ரத்தோபாதி க்ரீடாகந்துகைரிப ஐந்துபி -லீலா விபூதி அன்றோ இது
போகே விபூதி பரா-த்ரிபாத் விபூதி போகத்தில் விநியுக்தமாய் இரா நின்றது -நலமந்தம் இல்லாதோர் நாடு-
யே ஸூ ரய சதா பச்யந்தி தே புண்யா பரிசார கர்மணி-நித்ய முக்தர்களில் கைங்கர்யங்களிலே விநியுக்தர்கள்–
ஆகிலும் பணி செய்வது க்ருஹணிக்கு இறே
வயம் கேவலக்ருபா நிர்வாஹ்ய வர்கே -புபுஷுக்கள் முமுஷுக்கள் -அஸ்மதாதிகள் -நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு ஒரு படி சேஷபூதர்
சேஷித்வே பரம புமான் –பரமபுருஷன் சேஷி -கைங்கர்ய பிரதிசம்பந்தி
ஏதே தவ ஸ்பாரணே பரிகரா ஹி -சகலமும் தேவரீருடைய பெருமையில் சொருகி நிற்கும் அத்தனை –
உமக்கு உறுப்பு இல்லாத வஸ்து உபய விபூதியிலும் இல்லையே –
ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.
இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேச்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?
இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.
——————————–
ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல பூரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேஸ்வர கேஹலக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–23–
ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி–ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு அலங்காரமான தேவரீர்
யா புரீ ஆஜ்ஞா நுக்ரஹ பீம கோமல புரீ பாலா –எந்த திவ்ய நகரியானது ஆஜ்ஜையாலே பயங்கரர்களாயும்
அனுக்ரஹத்தாலே ஸுமயர்களாயும் உள்ள நகர பாலர்களை யுடைத்தாய் இரா நின்றதோ –
ஸ்மேரா ந நாஷி கமலைர் நமத புநாநாந் பேஜூஷாம் தம்ஷ்ட்ராக தாப்ரு குடிபிர் த்விஷ தோது நாநாந் -ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம்
பாகவதருக்கு -அனுகூலர் -புன்முறுவல் -கடாக்ஷம் -புனிதம் ஆக்குவார்கள்
பிரதிகூலரை கோரப்பற்கள் தடி புருவ நெறிப்பு-கொண்டு பயங்கரராய் இருப்பார்கள் -போலே
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பரம புருஷார்த்தம் –
ய அயோத்த்யேதி அபராஜிதேதி விதிதா –அயோத்யா -யாரும் யுத்தம் பண்ணி ஆக்கிரமிக்க ஒண்ணாத –
அபராஜிதா -ஒருகாலும் பராஜயம் அடைய முடியாதே
நாகம் பரேண ஸ்த்திதா–பொன்னுலகு -ஹிரண்மயபுரி –
பரேண நாகம் புரி ஹேம மயயாம் வோ ப்ரஹ்ம கோ சோஸ்தி அபராஜி தாக்க்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
ஸூதா ச்யந்திபி அத்புத போக பூம கஹநைஸ் பாவைஸ் ஸாந்தரா -அங்குள்ள பதார்த்த விசேஷங்கள் –
ஸூதா ச்யந்திபி பாவைஸ்-அமுத பெருக்கு -பரம போக்யம் –
அத்புத போக பூம கஹநைஸ்-ஆச்சர்யமான ஸூ க அனுபவ பிரகர்ஷம்
ஸாந்தரா -இப்படிப்பட்டவைகளால் மிகுந்த
தாம் யுவயோஸ் ராஜதாநீம் விது -இப்படிப்பட்ட திவ்ய புரி –
திவ்ய தம்பதிகளுடைய ராஜ தானி யாக வேதாந்திகள் அறிகிறார்கள் –
ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.
—————-
தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–24–
ஹே பகவதி ஸ்ரீர்-
தச்யாஞ்ச -கீழில் சொன்ன ராஜ தானியிலே
ஆஸ்தாந ரத்னம் -யுவயோராஹூ -திவ்ய தம்பதிகளுக்கு உரித்தான திரு மா மணி மண்டபம் ஒன்றை வேதாந்திகள்
இவ்வாறு சொல்கிறார்கள் -எப்படி எண்ணில்
த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்-தேவரீருடைய நிரவதிக திருவருள் போலே
நிரவதிகர்களான நித்ய முக்த திரள்கள் விஸ்ரமிப்பதற்கு உறுப்பான அவகாச விசேஷம்
தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை சங்கீர்ணம்-ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குதூஹலத்தாலே
வெண் கொற்றக் குடை சாமரம்-போன்ற உபகரணங்களை ஏந்தி ஆனந்த பரவசர்களாக
ஆனந்த நிக்நை-இது உகந்த விஷயத்தில் இருப்பதால் –
ஸ்நேஹாத் அஸ்தாந ரஷா வ்யஸந அபிர் சார்ங்க சக்ர அசி முக்யை அபயம் -பொங்கும் பரிவாலே அஸ்தானே பய சங்கை –
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் -10-
அந்யதா ஞான ப்ரயுக்தம் திருநாட்டிலுமா என்றால் -ஸ்நேஹாத் -ஞான தசையில் ரஷ்ய ரக்ஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்-
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்குமே
ஆநத்தை கார்ணவம் -ஆனந்த ஏக ஆர்ணவம் -அபரிச்சின்னமான ஆனந்தமே யென்று சொல்லும் அத்தனை
ஒழிய வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
திவ்ய தம்பதிகளுடைய திவ்ய பாகத்துக்கு ஏகாந்தமான இடம் –
தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.
——————–
தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–25-
ஹே தேவி
தத்ர -அத்திரு மா மணி மண்டபத்திலே -அனந்த போக விஸ்தீர்யம் -என்பதிலே இதுக்கு அந்வயம் –
திருவனந்த ஆழ்வான் திருமேனி விவரணம் மேலே –
ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் -புஷ்ப மாலை போன்ற ஸ்பர்சம் பரிமளம் -ஸுகுமார்யம் ஸுகந்த்யம் -மேலும்
ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்–பணங்களின் மணித்திரள்களின் நின்று தோன்றும் தேஜஸ் புஞ்சமே-
ஜ்யோதிர் மண்டலமே விதானம் – மேல்கட்டி
அநந்த போகம் விஸ்தீர்ய -திருமேனியை மெத்தையாக விரித்து
ததுபரி அது மேலே -நிவஸ்ய
விஸ்வம் ஏகாத பத்ரம் நயதா -மேலே காந்தேந -என்பதுக்கு விசேஷணம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர்
வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல –
ஈரரசு தவிர்த்து ரசித்து அருளும் எம்பெருமான்
அசந்க்யை தைஸ் தை சாந்தோதித குண விபவைர் த்வாம் அர்ஹதா -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு –
துல்ய சிலா வாயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோர் ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா
சாந்தோதித குண விபவைர்-நித்யோதித தசை என்றும் சாந்தோதித தசை என்றும் இரண்டு உண்டே –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
தன்னுடைய விஸ்வரூபத்தை அனுபவிக்கும் தசையே சாந்தோதித தசை
அசந்க்யேயை-எண்ணிறந்த திருக்குணங்கள் –
தைஸ் தை-அநீர்வசனீயன்கள்
காந்தேன ஸஹ -அழகிய மணவாளனுடன்
அந்யோன்ய அத்வைத நிஷ்டாக நரசகஹ நான் தேவி போகான் –பத்நாசி-பரஸ்பரம் வ்யக்தி பேதம் காண அரிதாம்படி
ஒரு நீராகக் கலந்து பரிமாறும் -இன்சுவையே வடிவெடுத்த திவ்ய போகங்களை அனுபவிக்கிறீர் –
இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?
ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.
ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.
—————————
போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–26-
போகயாவாம்பி நாந்தரீயகதயா புஷ்பாங்க ராகைஸ் சமம்
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரன் ததா
யாபிஸ்தவம் ச்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே -26–
வாமபி நாந்தரீயகதயா போக்யா-நாந்தரீயகம் -என்றது உபகரணம் –
புஷ்பாங்க ராகைஸ் சமம்–குஸூம சந்தனாதிகள் போலே
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்–ஏரியில் நீர் நிரம்பினால் உடைத்துக் கொண்டு போகாமைக்காக –
ஸாத்மிகைக்கு கலுங்கல் எடுத்து விட்டால் -உள்ளே தேங்குகிற நீரும் புற வெள்ளம் இடும் நீரும் ஒன்றே –
பரஸ்பரம் புத்தி பேதம் கொள்ளாதே -வெளியிலே தள்ளினார்கள் என்று வெறுக்காதே
பூரோத்பீடே தடாகஸ்ய பரீ வாஹ ப்ரதிக்ரியா -உத்தர ராமசரித ஸ்லோகம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரம் ததா–தேவீ பிரதான போக்யகோடி –
மற்றைய தேவிமார்கள் அவளை அனுசரித்து நிற்பார்கள்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தவனை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்-
யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே –தம்முடைய ஸ்தன புஜாதிகளான
அவயவங்களாகவே இவரும் அவர்களை நினைத்து இருப்பார்
தக்கார் பல தேவிமார் சால உடையீர் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் மால் ஓத வந்தனர் மனம் -முதல் திருவந்தாதி
இதுக்கு அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்பதை உப லக்ஷணம் ஆக்கி
சவ்பரி போலே ஒவ் ஒரு திவ்ய மஹிஷியுடன் ஒரு நீராக கலக்கிறான்
பட்டர் நிர்வாகம் -திவ்ய பூஷணம் திவ்ய பீதாம்பரம் -பரஸ்பரம் மாத்சர்யம் கொள்ளுமவை அல்லவே –
திருத்தோள் திருக்கண் அவயங்கள் ஒன்றில் ஈடுபடும் பொழுது மற்று ஓன்று ஸ்ர்த்தை கொள்ளாதது போலே
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -அசித்வத் பாரதந்தர்யம் -சீமா பூமி –
உபகரண கோடியில் அந்வயம் -ச பத்னீ ஸுஹார்த்த வைபவம் சொல்லிற்று ஆயிற்று
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?
இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.
————-
தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர்விசேஷா: ஸவயஸ இவயே நித்ய நிர்தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்கபர்த்து: தவச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:–27–
ஹே ஜனனி
தே சாத்யாஸ் ஸந்தி தேவா -ஸ்ருதியை பின்பற்றி -நித்ய முக்த பரிசாரர்களாக விளங்கா நிற்க
குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை- நித்ய நிர்த்தோஷ கந்தா -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே அழுத்தாமல் –
குண-அபஹதபாப் மத்வாதி குணங்கள் / வபுர்-திவ்ய மங்கள விக்ரஹம் -/ வேஷ-சங்கு சக்ராதிகள் தரித்த வேஷம்
வ்ருத்தமே -ஆஞ்ஞா அனுக்ரஹாதி வியாபாரம் / ஸ்வரூபை -ஞான ஆனந்த அமலத் வாதி ஆத்ம ஸ்வரூபம் /
பகவத் அனுபவ விபூதி அனுபவங்கள் -இவற்றில் வாசி இன்றிக்கே-பரம சாம்யா பன்னராய் இருக்குமவர்கள் –
போகைர்வா நிர்விசேஷாஸ் -சிறிதும் பேதம் இல்லாமல் இருப்பவர்கள்
திவ்ய தம்பதிகள் உடனும் தம்முடனும் பரஸ்பரம் -பேதம் இல்லாமல்
அத ஏவ சவயச இவ -நண்பர்களை போலே இருப்பவர்கள்
சதாபி – ஸ்ரீ ரங்க பர்த்துஸ் தவச பத பரீசார வ்ருத்யை -மிதுனத்தில் நித்ய கைங்கர்யத்தின் பொருட்டே
யாயிற்று அவர்களுடைய சத்தை –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –
ப்ரேம ப்ரத்ராண பாவ-பிரேமத்தினால் கசிந்த நிலை கொண்டும்
ஆவிலஹ்ருதய-ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே நிலை கலங்கின நெஞ்சு கொண்டும் இருப்பவர்கள்
ஸ்நேஹாத் அஸ்தாநே ராஷா வ்யசநிகள் இறே
உற்றேன் உகந்து பணி செய்து –உள் கனிந்து எழுந்ததோர் அன்பினால் நெஞ்சு உருகி நிற்கும் அளவில்
கைங்கர்யம் செய்து அல்லது நிற்க முடியாமல்
பிரேம பலாத்காரத்தாலே அடிமை செய்து அது தன்னையே போகமாகக் கொண்டவர்கள் –
அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.
கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.
———————-
ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி–28-
ஹே -சந்தர வதநே-மாதச் – ஸ்ரீ-அடியாரை உகப்பிக்க வல்ல திரு முக மண்டலம் உள்ள தாயாரே
நிஷ்கர்ஷ ஸமயே-சாஸ்த்ரார்த்தை நிஷ்கர்ஷித்து தெளிந்து சொல்லும் அளவில் –
பகவத இதம் ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம்
த்வதாச் லேஷாத் கர்ஷாத் கலு பவதி –தேவரீருடன் சேர்த்தியாலே தான் எம்பெருமானுக்கு ஸ்வா தந்தர்ய ஸ்வரூபம் சித்திக்கும்
கமிது இதமித் தந்தவ விபவ த்வம் ஆஸீ –தேவரீர் எம்பெருமானுக்கு வைபவம் –
திரு இல்லாத் தேவரை தேறேன்மின் தீவு -ஸ்ரீ யபதித்வமே பரத்வ லக்ஷணம்
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் பிதத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ ஸூக்தம் சிறிய பகுதியாக இருந்தாலும் –
ஸ்வரூப நிரூபக தர்மமாக அவனில் அந்தர்பவித்து இருப்பதால் கரை கட்டாக் காவேரியான வேதங்களில்
அவனைச் சொன்ன இடங்கள் அனைத்தும் தேவரீரையே சொல்லிற்றாகும் –
சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!
இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால்தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.
—————–
தவ ஸ்பர்சாத் ஈசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே–29-
தவஸ்பர்சா தீசம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவேதம் நோபாதே உப நிபதிதம் ஸ்ரீரசி யத
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷூ
நசைவந் த்வா தேவம் ஸ்வ தத இதி கச்சித் கவயதே –29-
கமலே-ஈசம் -தவ ஸ்பர்சாத் மங்கள பதம் ஸ்ப்ருசதி -மங்கள ஸ்வரூபையான -உம்முடைய சம்பந்த நிபந்தனத்தாலே –
ஐஸ்வர்யம் யத சேஷ பும்சி யதிதம் ஸுந்தர்ய லாவண்ய யோ ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே
சதித் யுச்சதே தத் சர்வம் த்வத் அதீனம் ஏவ – ஸ்ரீ ஸ்தவம் –
இதம் தவ உபாதே ரூப நிபதிதம் ந -தேவரீருக்கு மங்களம் இதர சம்பந்த நிபந்தநம் அன்று -அத்தை விவரிக்கிறது மேலே –
ஸ்ரீரசி யத-யத த்வம் ஸ்ரீ ரசி -தத ஏவ இதம் தவ உபாதேர் நோப நிபதிதம் -என்று அந்வயம்
ஸ்வாபாவிகமான இதனை ஓவ்பாதிகம் என்ன ப்ரஸக்தியே இல்லையே
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம்
பரிமளத்தை இட்டே பு ஷ்பத்துக்கு சொல்கிறோம் -பரிமளத்துக்கு இப்படி ஒரு நிர்பந்தம் இல்லையே -ஸ்வத சித்தம் அன்றோ –
தாம் ஜிகதிஷூ ஏவம் த்வாத் ஏவம் ஸ்வ தத இதி ந ஹி கவயதே -பரிமளத்தின் சிறப்பை சொல்கிறவன்
அதுக்கு ஒரு காரணம் சொல்வது இல்லையே –
மங்களம் பகவான் விஷ்ணுர் மங்களம் மது ஸூதந -மங்களம் புண்டரீகாஷோ -மங்களம் கருடத்வஜ –
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாஞ்ச மங்களம் -உம்முடைய சம்பத்தாலே அவனுக்கு –
தேவரீருக்கு நிருபாதிகம் அன்றோ –
தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?
நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.
இவள் அருகில் உள்ளதாலேயே பெரியபெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.
———————-
அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–30–
ஹே ஸ்ரீ தவ பூயாம்சோ-அபாங்கா- யதுபரி பதிதா தத் பரம்ப்ரஹ்மம் அபூத்–தேவரீருடைய விஞ்சிய கடாக்ஷ வீக்ஷணங்கள்
எந்த வியக்தியின் மீது விழுந்தனவோ அதுவே பர ப்ரஹ்மம் ஆனது
அமீ யத்ர த்வித்ராஸ் சச சத மகா திஸ் தததராத்–சில திவலையாக பிரசுரித்த இடம் ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகள் திக் பாலர்கள்
அத தத் உபயம் உசன் ஆம்நாய த்வாம் ப்ரணி ஜகௌ-இரண்டையும் பேசா நின்ற வேதம் தேவரீரையே பேசிற்றதாகுமே
பிரசஸ்திஸ் சா ராஜ்ஞோ யதபிச புரீ கோச கதநம் –நகரத்தையும் அதில் உள்ள நிதியையும் வர்ணித்தால் அத்தை ஆள்கின்ற
மஹா பிரபுவையை தானே குறிக்கும் –
அப்படியே தேவரீருடைய கடாக்ஷ அதீன சத்தா சாலிகள் ஆனவர்களைச் சொல்லும் வேதமும்
தேவரீருடைய உத்கர்ஷ கீர்த்தனமே ஆகும்-
மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?
இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.
நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்
—————————
ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–31–
ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதா யத்தர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
நவிகுணம்-பவதி-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –
மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?
இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.
——————————
ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:–32–
பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப்படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி
மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?
1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்
2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்
3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது
4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்
5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்
6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்
7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்
8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்
9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்
எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –
———————
அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே–33–
ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தச்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ச்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –
ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.
இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!
பட்டர் இந்த ச்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மைதானோ?”, என்று எண்ணினாள்.
அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாளோ?
——————-
இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்தச் ச்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.
யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34–
யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி -/
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை -/
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் /க்ஷமை-பொறுமை /
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு
ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.
நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி
ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)
ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்
————————–
கந கநக யுவதசாம் அபி முக்ததசாம்
யுவ தருணத்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–35-
ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய பாஷாணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –
தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது
பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும் ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனியானது பொன் போன்ற ஒளி உடையது என்பதை ஸ்ரீஸூக்தம் –
ஹிரண்ய வர்ணாம் – என்று போற்றியது காண்க.
பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————–
அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா: மந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேச்வரி சாந்த க்ருத்ரிமகதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–36-
ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர் நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ
ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்; சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்;
கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்; அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால்தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருமேனிக்கு பல தன்மைகள் கொடுத்த பின்னர், அந்தப் பொருள்கள் தங்கள் சாறை இழந்தன.
ஆயினும் பல கவிஞர்கள், அவற்றை உயர்வாகவே போற்றுவதை முரண்பாடு என்றார்.
இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் – இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.
ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்க வல்லது அல்ல – என்பதாகும்.
தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
—————————
ப்ரணம தநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–37–
இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –
ஸ்ரீரங்கநாயகீ! உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று
நீயும் பதில் வணக்கம் செய்கிறாய். இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி பட்டவுடன்
எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர் மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?
சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————————
ஏகம் ந்யஞ்ச்ய நதிக்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–38-
பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-
ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக்கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள், கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.
இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?
திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————-
ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–39-
இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று
ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).
ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.
சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————————-
த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–40-
த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –
ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?
நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.
கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———————
ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–41–
ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்
தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்துவிட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்கவல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் – தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன்.
என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.
ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழ வேண்டும், இன்னார் மீது விழக் கூடாது”,
என்று பாரபட்சம் பார்ப்பதில்லை. ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐச்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.
கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———————–
பாதாருந்து தமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம்லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–42-
பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி பேச்சைப் பொறுக்குமோ
தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள்,
உனது திருவடிகளை உறுத்தக்கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி,
அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது
(தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”,
என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி
என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக் கூடும் அல்லவோ?
நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?
இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண்த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —
————————————–
ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தநயுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதி வா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போகஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:–43–
ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி
ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக்கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு,
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை ஆகியவற்றைக் காணும் போது
நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப்பருவமும், யௌவநப்பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறுமணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.
இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குரு பரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.
பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
—————————
ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேச்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–44-
ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே -டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்;
உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது;
உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள் அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன –
ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின்
திருமார்பிற்கு, மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?
இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன?
ச்லோகம் 42ல், மலரின் மகரந்தப்பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ச்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல்,
திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார். இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு,
இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் – என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.
இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———————-
மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–45–
அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.
புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.
தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.
இந்தச் ச்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –
————————-
கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்பலதா யதா–46–
ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ
பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்பலதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநகரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணிசரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதிசப்த ஸ்தானீயம்
ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில்
பல ஆபரணங்கள் – தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி,
நவரத்ன மணிகளால் ஆன மாலைகள், அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.
இந்த ச்லோகத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் பல ஆபரணங்களைக் கூறுகிறார்.
இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.
பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறைசாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –
——————
ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–47-
ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் -காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-
ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தினமணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது
என்று கருதினான் போலும். அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.
இங்கு அனுபவிக்கிறான் என்று ஏன் கூறினார்? தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று
ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட அன்பில் மனம் உருகி நின்றாள்.
அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.
சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
—————-
யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–48-
ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –
தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?
ஸீதை இல்லை யென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லை யென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்தபோதும் அப்படியே ஆகும்.
ராமக்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும்போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரியபிராட்டியைத் தரித்தே உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———————–
ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-
விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் -உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம -என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –
ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –
பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது
எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின.
இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும்
கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?
தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச்செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோலமலர்ப்பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.
திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –
———————
மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயிததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணமி த்யுக்தி ஷமௌ ரஷத
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–50-
பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்
சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –
தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே
அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது
பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.
தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.
விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: –
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல்,
அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.
அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———-
மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏகரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பச்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–51-
மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் / பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் /
ப்ரஹ்ருஷ்யேமச –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று
நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள் அனுசந்தேயம் –
தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத்தனம் பூண்டு நிற்போம்.
எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில் மட்டும் அல்லாமல் பரமபதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.
சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள்
ஸ்ரீரங்கநாயகியான உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டதுபோல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.
——————
பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-
பிதா ஹிதபரன் -சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி -உண்டே
தாய் பிரிய பரம் -தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவில் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ –
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அலகால் திருத்தும்
ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு -சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –
அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.
பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இதன் பொருள் – இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்துவிடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.
அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால்,
அவனே வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்கமாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.
அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.
பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————–
நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விச்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–53–
நேதுர் நித்ய சஹாயிநீ ஜனனி நஸ் த்ராதும் தவ மத்ராகதா
லோகேத்வன் மகிமாவ போத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹூ
க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸோ வநே
சாதோ திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்-53–
ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலா கற்றனையோ கரிய கோவே
பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்
எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்
கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்
யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ
தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது. இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில்
நீ இராமனின் துணைவியாக திருஅவதாரம் செய்தாய். எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய்.
ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப்பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும்
உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.
இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.
தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.
அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசரபட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால்தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிறா
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
—————————–
அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தசமுகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–54–
ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தசமுகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்
தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத்தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.
இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?
பட்டர் இந்தச் ச்லோகத்தை அருளிச் செய்தவுடன் அவரிடம் ஸ்ரீரங்கநாச்சியார்,
“குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும். உங்களுக்காக அவன் என்ன செய்தான்?
நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி? இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.
உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்துதானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்
——————————
தசசத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைச்வரூப்ய விபவை: அநுரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநிமஜ்ஜதி தே–55–
அவனுடைய சர்வபிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமிதஉம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைச்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-
தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள
ஆயிரம் திருக்கைகள் என்ன, அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன,
இவற்றைத் தவிர அவனிடம் பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன?
இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும், பல அவதாரங்கள் எடுத்த போதிலும்
உனது காதல் என்னும் பெரு வெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?
இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும்,
அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்? அவளது கடைக்கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.
அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
———————–
ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்கதாமநி மோதஸே–56–
ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் -ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விச்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ரா ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –
பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .
ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்கநாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.
பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————-
ஔதார்ய காருணிகதா ஆச்ரித வத்ஸலத்வ
பூர்வேஷு ஸர்வம் அதிசாயிதம் அத்ர மாத:
ஸ்ரீரங்கதாம்நி யத் உத அன்யத் உதாஹரந்தி
ஸீதா அவதாரமுகம் ஏதத் அமுஷ்ய யோக்யா–57-
ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ
பூர்வேஷூ சர்வ மதிசாயித மத்ர மாத
ஸ்ரீ ரங்கதாம்நி யது தான்யா துதாஹரந்தி
ஸீ தாவதார முக மேத தமுஷ்ய யோக்யா –57-
அவதார விஷயே மயாப் யுத்தேசதஸ் தவ யுக்தா குணா ந ஸக்யந்தே வக்தும் வர்ஷ சதைரபி -என்கிறபடியே
அர்ச்சாவதாரத்திலே ஸமஸ்த கல்யாண குணங்களும் பூர்ணம்
ஹே மாத -ஔதார்ய காருணிகத் ஆஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ குணேஷு —
சர்வ ஸ்வ தானம் பண்ணுகை யாகிற ஔதார்யம் என்ன
பாரா துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான காருணிகத்தவம் என்ன
ஆஸ்ரித தோஷ போக்யத்வமான வாத்சல்யம் என்ன
இவை முதலான திருக் குணங்களுக்கு உள்ளே
சர்வம் அத்ர ஸ்ரீ ரங்கதாம்நி அதிசாயிதம் — ஒவ் ஒரு திருக் குணமும் திருவரங்கம் பெரிய கோயிலிலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பில் அதிசயமாக உள்ளதே
அந்யத் ஸீதாவதார முகம் -அர்ச்சாவதாரத்தில் வேறுபட்ட ஸ்ரீ சீதாவதார முதலான விபவ அவதாரத்தை
அதிசயித குணமுதா ஹரந்தீதி யத் -குணம் உத்கர்ஷம் உடையதாகச் சொல்லுகிறார்களே என்னில்
ஏதத் -அமுஷ்ய யோக்யா — ஸ்ரீ ரெங்க நாயகியான அர்ச்சாவதாரத்துக்கு அப்யாஸம் என்பதால்
இத்தால் விபவங்களில் குண அப்யாஸம் ஆகையால் அபரிஷ்க்ருத ஸ்திதியும்
அர்ச்சையில் ஸூ பரிஷ்க்ருத ஸ்திதியும் சொல்லிற்று ஆயிற்று –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! தன்னைப் பற்றிக் கூட கவலைப்படாது மற்றவர்க்கு உதவும் தன்மை (ஔதார்யம்),
மற்றவர் படும் துயரம் பொறுக்காமல் உள்ள தன்மை (காருணிகதா),
அடியார்கள் செய்யும் குற்றத்தையும் மறந்து குணமாக ஏற்றுக் கொள்ளுதல் (வத்ஸலத்வம்)
ஆகிய பல சிறந்த குணங்கள் ஸ்ரீரங்கநாச்சியாரான உன்னிடம் மிகவும் அதிகமாகவே உள்ளதே!
நீ முன்பு சீதையாகவும் ருக்மிணியாகவும் திருஅவதாரம் செய்த போதும்
அந்தக் குணங்கள் உன்னிடம் இருந்தன என பலர் கூறுகின்றனர்.
அப்போது நீ கொண்டிருந்த அந்தக் குணங்கள், இப்போது நீ கொண்டுள்ள இந்த அர்ச்சை ரூபத்திற்குண்டான பயிற்சி போலும்.
அர்ச்சாவதாரத்தில் இந்தக் குணங்கள் கொள்ளவேண்டும் என்று எண்ணி,
முன்பு எடுத்த பல திருஅவதாரங்களில் இவள் பயிற்சி எடுத்துக் கொண்டாள் போலும்.
பட்டை தீட்டத்தீட்ட அல்லவோ வைரம் ஒளிர்கிறது?
வானரர்களுக்கும் அன்பு பொழிந்த சீதை. இவ்விதம் விலங்கு இனத்திற்கும் கருணை செய்து பழகியதால் தான்,
இன்று நம் போன்று பாவம் செய்தவர்கள் ஸ்ரீரங்கநாச்சியார் முன்பாக நின்றாலும் அவளுக்குக் கோபம் வருவதில்லை போலும்
————————–
ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-
ஐஸ்வர்யம் அஷரகதிம் பரமம் பதம் வா
கஸ்மைசி தஞ்ஜலிபரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சிதுசித்தம் க்ருதமித் யதாம்ப
த்வம் லஜ்ஜஸே கதய கோய முதாரபாவ –58-
அனைத்தும் அருளிய பின்பும் அஞ்சலிக்கு சத்ருசம் இல்லை என்று லஜ்ஜை மிக்கு –
ஓன்று உண்டு செங்கண் மால் நான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அஞ்சலிம் வஹதே-என்று -க்ருதவதே என்னாமல் -அத்தலைக்கு கனத்து தோற்றும் –
பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-நம என்னலாம் கடைமை அது சுமந்தார்க்கே
கஸ்மைசித் பரம் பதம் வா விதீர்ய-பிராட்டி அத்திவாரமாக கொடுப்பதாக கொள்ளாமல்
கொடுப்பிக்கவர்களையும் கொடுப்பவர்களாக சொல்லும் லோக ரீதி பிரயோகம்
அஞ்சலி சுமப்பவன் யாராயினும் -ஜாதி வ்ருத்தம் பற்றிய நியமம் இல்லை -என்பதால் கச்மைசித் -என்கிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும்
தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்?
அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய்.
இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?
நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.
இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் –
இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா?
நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.
பட்டர் கூறுவது போன்று இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் சற்றே தலை தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
————————
ஞான க்ரியா பஜந ஸம்பத் அகிஞ்சந: அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அநபிஜ்ஞ:
ஆகாம்ஸி தேவி யுவயோ: அபி துஸ்ஸஹாநி
பத்த்நாமி மூர்க்கசரித: தவ துர்பர: அஸ்மி–59-
ஹே தேவி -ஞானக்ரியா பஜந சம்ப தகிஞ்ச நோஹம்-ஞான கர்மா பக்தி யோகங்களில் ஒன்றும் இல்லாதவன்
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதீ ந பக்திமான்
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
இச்சாதிகார சகந அநுசய அநபிஜ்ஞ–இச்சா மாத்ரத்தையே அதிகாரமாக உடைய ப்ரபத்தியை செய்யவும் சக்தி அற்றவன் –
இவை ஒன்றும் இல்லையே என்று அனுதபிக்கவும் அறியாதவன்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் —போதுவீர் போதுமினோ –
இச்சைக்கு மேற்பட்ட அதிகார சக்தி வேண்டாமே ப்ரபன்னனுக்கு -அதிலும் சக்தியும் அனுதாபமும் அற்றவன் -என்றும்
அன்றிக்கே த்வந்த சமாஸ்தமாக்கி
இச்சை -முமுஷுத்வம் / அதிகாரம் சமதமாதிகள் /சகநம் -அத்யாவசிய திருடத்வம் /அநு சயம் -அநு தாபம் /
இவை நான்கும் இன்னபடி என்று அறியாததால் -அநபிஜ்ஞ-
இதுக்கும் மேலே –
யுவயோரபி துஸ் சஹாநி ஆகாம்சி பத்தநாமி -குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் -திவ்ய தம்பதிகளாக உங்களுக்கும்
ஸஹிக்க முடியாத குற்றங்களையே கூடு பூரிக்கின்ற -பத்த்நாமி -சேர்க்கின்றேன்-
மூர்க்க சரிதஸ் காம் -மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே -என்பதற்கு அடியேன் த்ருஷ்டாந்தம்
தவ துர்ப்பரோஸ்மி –தேவரீர் தமக்கும் அன்றோ கை கழிய நின்றேன் -விஷயீகாரத்துக்கு புறம்பானேனே –
தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மோக்ஷம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த ஆசையும், அந்தப் பதவியை அடைய
வேண்டியதற்காக இயற்றப்பட வேண்டிய யோகங்கள் செய்யும் தகுதியும் எனக்கு இல்லை.
இந்த யோகங்களில் விதித்துள்ளவற்றை நான் இதுவரை செய்யவும் முயற்சிக்கவில்லை.
“சரி! போகட்டும், இவற்றைப் பெறவில்லையே”, என்று எண்ணியாவது நான் வருத்தம் கொள்கிறேனா என்றால், அதுவும் இல்லை!
இப்படியாக நான் ஞானயோகம், கர்மயோகம் , பக்தியோகம் ஆகிய உயர்ந்த செல்வங்களைப் பெறாத ஏழையாகவே உள்ளேன்.
மேலும் உன்னாலும், உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனாலும் பொறுக்க முடியாத பல குற்றங்களைச் செய்து வருகிறேன்.
இப்படிப்பட்ட தீய நடத்தையால் உனக்குப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாக உள்ளேன்.
இந்தச் ச்லோகத்தில் சரணாகதிக்கு வேண்டிய முக்கிய தகுதியான – என்னிடம் எந்த உபாயமும் இல்லை – என்று
பகவானிடம் விண்ணப்பம் செய்வது விளக்கப்பட்டது காண்க.
மேலும், பிராட்டியை முன்னிட்டே அவனை அடையவேண்டும் என்ற முறையால், இவளிடம் இதனைக் கூறுகிறார்.
மேலும் மறைமுகமாக, “எனக்குத் தகுதி ஏதும் இல்லை என்று எண்ணி, நீ என்னைக் கை விட்டுவிடுவாயா?”, என்று கேட்கிறார்.
பட்டர் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம்,
“இந்தக் குழந்தையை நீவிர் கரையேற்ற வேண்டும்”, என்று கூறினாள்.
இதனை ஏற்று நம்பெருமாள், “அப்படியே செய்வோம்”, என்று தனது அபயஹஸ்தத்தைக் காண்பிக்கிறான்.
இதனைக் கண்டவுடன், அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் தனது மகிழ்ச்சியை,
தன்னுடைய ஒளிர்தல் மூலம் உணர்த்தும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே .
——————-
இதி உக்தி கைதவ சதேந விடம்பயாமி
தாந் அம்ப ஸத்ய வசஸ: புருஷாந் புராணாந்
யத்வா ந மே புஜ பலம் தவ பாத பத்ம
லாபே த்வம் ஏவ சரணம் விதித: க்ருதா அஸி–60-
ஹே அம்ப இத்யுக்தி கைதவசதேந –போட்கனான அடியேன் பல பல நைச்ய யுக்திகளை சொல்வதால்
தான் சத்ய வசச புருஷான் புராணான் விடம்பயாமி—நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
நானோ நாநா விதம் நரகம் புகும் பாவம் செய்தேன்–
ஈவிலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-என்று அநு சந்திக்கும் –
ஸ்ரீ பராங்குச பரகாலாதி ஆழ்வார்களும் ஆளவந்தார் போன்ற பூர்வாச்சார்யர்களையும் அநு கரிக்கிறேன் அத்தனை ஒழிய
ச ஹ்ருதயமாக நைச்ய அநு சந்தானம் பண்ணினேன் அல்லேன்
உக்தி கைதவ சதேந -கள்ளத் தனமாக நூற்றுக் கணக்கில் செய்யும் நைய அநு சந்தானங்களால்-
உண்மையில் தம் பக்கல் ஒரு கைம்முதலும் இல்லாதவன் –
அத்தலையில் திருவருளே தஞ்சம் என்றே இருப்பவன் என்கிறார் மேல் –
யத்வா தவபாத பத்ம லாபே மே புஜ பலம் ந -நைச்ய அனுசந்தான அநு கரணம் அத்தனை போக்கி
என் திறத்தில் ஒரு சாமர்த்தியமும் இல்லையே –
புஜ பலம்-தோள் மிடுக்கு பொருளாயினும் சாமர்த்தியம் என்பதே பொருள் இங்கு –
சர்வாத்மநா அடியேன் அசமர்த்தன் என்றதாயிற்று
விதித த்வமேவ சரணம் க்ருதா அஸி –தேவரீர் நிர்ஹேதுகமாக அருள் செய்ய விதி வாய்த்தது என்கை –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக நான் பல விதமான கள்ளத்தனம் நிறைந்து,
நூற்றுக்கணக்கான தவறுகள் உடையவனாக இருக்கிறேன். இருந்தாலும் உனது அருள் பெற்றவர்களும்,
உண்மையை கூறுபவர்களும் ஆகிய ஆழ்வார்கள் முதலான முன்னோர்கள் கூறியதையே பின்பற்றி நிற்கிறேன்
(இப்படிக் கூறுவதும் ஒரு வகையில் பொய் என்கிறார்).
எனக்கு உனது திருவடிகளைப் பிடித்துக் கொள்வதற்கு இதைவிட வேறு எந்த உபாயமும் இல்லை.
வேறு புகலிடம் இல்லாத எனக்கு உனது கருணையால் நீயே புகலிடமாக உள்ளாய்.
இங்கு இவர் கூறுவது என்ன? நான் ஆசார்யர்களின் வாக்குகளைப் பின்பற்றுவதாகக் கூறுவது ஒரு பொய்யே ஆகும்.
இருந்தாலும் அவர்களை நான் தொழுகிறேன் என்ற காரணத்திற்காகவாவது காப்பாற்ற வேண்டும் என்றார்.
ஆசார்யர்களைத் தொழுகிறேன் என்னும் காரணத்தை முன்னிட்டாவது தன்னைக் காக்க வேண்டும்
என்று வேண்டி நிற்கும் ஸ்ரீபராசரபட்டர், திருவரங்கத்தில் உள்ளபடி சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
——————
ஸ்ரீரங்கே சரத: சதம் ஸஹ ஸுஹ்ருத்வர்கேண நிஷ்கண்டகம்
நிர்துக்கம் ஸுஸுகஞ்ச தாஸ்ய ரஸிகாம் புக்த்வா ஸம்ருத்திம் பராம்
யுஷ்மத் பாத ஸரோருஹ அந்தர ரஜ: ஸ்யாம த்வம் அம்பா பிதா
ஸர்வம் தர்மம் அபி த்வம் ஏவ பவ ந: ஸ்வீகுரு அகஸ்மாத் க்ருபாம்–61-
தம்முடைய அபேக்ஷிதத்தை விஞ்ஞாபித்திக் கொண்டு ஸ்தோத்ரம் நிகமனம் –
ஸ்ரீ ரங்கே சரத்ச்சதம்- திருவரங்கம் பெரிய கோயிலிலே மித்ர மண்டலியோடே கூட நிரா பாதகமாகவும்
பேரின்ப வெள்ளம் பெருக்கவும்
அடிமைச் சுவை மிக்க செல்வத்தை அனுபவித்திக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டு
தேவரீர் திருவடி வாரத்தில் வாழக் கடவோம் –
சகல வித பந்துவும் தேவரீரே யாகி நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு அருள பிரார்த்தனை
ஸ்ரீ ரெங்கே சரதஸ் சாதம் தத இத பஸ்யேம லஷ்மீ ஸஹம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74-
சஹ ஸூ ஹ்ருத் வர்கேண –சோபன ஹ்ருதயம் உடையவர்கள் –
பரஸ்பர ஹிதைஷிணாம் பரிசரேஷூ மாம் வர்த்தய – அபீத ஸ்த்வம் போலே
நிஷ்கண்டகம் நிர்துக்கம்–ஸூ ஸூ கஞ்ச– -ஸூ ஸூகம் என்னும் அளவு இன்றி பிரதியோகி ப்ரதிஸந்தானம் –
திருக் கோஷ்ட்டியூரில் எழுந்து அருளி இருந்து மீண்டும் ஸ்ரீரெங்கம் எழுந்து அருளின பின்பு இறே இஸ் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது
தாஸ்ய ரசிகாம் பராம் சம்ருத்திம் புக்த்வா-அங்கும் இங்கும் தாஸ்யமே பரம புருஷார்த்தம்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் ப்ரவணனாய் குண அனுபவ கைங்கர்யங்களிலே போது போக்கையும் -முமுஷுப்படி –
தாஸ்ய ரசிகாம் சம்ருத்திம்-என்றது தாஸ்ய ரசிகத்வ ரூபாம் சம்ருதம்
யுஷ்மத் பாத சரோரு ஹாந்தர ரஜஸ் ச்யாம த்வ மாம்பா பிதா -உங்களுடைய திருவடித் தாமரை களினுடைய
உள்ளே இருக்கும் துகளாக ஆகக் கடவோம் -யுஷ்மத் -பன்மை இறைவனையும் உள் படுத்தியது
தாளிணைக் கீழ் வாழ்ச்சியை ஆசசித்தபடி
ஆக திருஷ்ட அத்ருஷ்டங்கள் -இம்மை பயனுக்கும் மறுமை பயனுக்கும் ஸ்ரீ ரங்கத்திலேயே ஆசாசித்தார் ஆயிற்று –
சர்வம் தர்மமபி த்வமேவ பவ நஸ் ஸ்வீகுர் வகஸ்மாத க்ருபாம் -நீயே அன்னை அப்பன் –
இம்மை பயன் தருவதற்கு ஹேது -ஏனைய உறவுக்கும் உப லஷணம்-
தர்மம் என்று ஆமுஷ்கிக பல சாதனம் –
அனைத்தும் தேவரீரே நிர்ஹேதுகமாக கொண்டு அருள வேணும் என்றத்துடன் தலைக் கட்டுகிறார் –
தாயே! ஸ்ரீரங்கநாயகீ! ஸ்ரீரங்கத்தில் அடியார்களான எனது நண்பர்களுடன் நான் நூறு வருடங்கள் வாழ வேண்டும்.
அப்படி உள்ளபோது உன்னைத் துதிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல், துன்பங்கள் சூழாமல்,
இன்பம் மட்டுமே பெருகி நிற்க வேண்டும்.
உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த இன்பத்தை நான் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் (நம்பெருமாளையும் சேர்த்துக் கூறுகிறார்) திருவடியில் உள்ள துகள்களுடன்
நானும் ஒரு துகளாகக் கலந்து இருக்க வேண்டும்.
நீயே எனக்குத் தாயாகவும், தகப்பனாகவும், அனைத்து விதமான உறவாகவும் இருத்தல் வேண்டும்.
நான் மோக்ஷம் அடையத் தகுதியாக உள்ள அனைத்து உபாயங்களும் நீயே ஆகக்கடவாய்.
இப்படியாக என் மீது உனது கருணையை நீ செலுத்துவாயாக.
இங்கு தன்னை திருவரங்கத்தில் பல ஆண்டுகள், திவ்யதம்பதிகளுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருக்க வேண்டும்;
அந்தக் கைங்கர்யத்துக்கு எந்தவிதமான இடையூறும் வரக்கூடாது என்று வேண்டுகிறார்.
கத்ய த்ரயத்தில் எம்பெருமானாரிடம் நம்பெருமாள், “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” என்று
வாழ்த்திக் கூறியது போன்று, தனக்கு இவள் கூற வேண்டும் என்று நிற்கிறார் போலும்.
சரணாகதி கத்யத்தில் எம்பெருமானாரிடம் ஸ்ரீரங்கநாச்சியார் “அஸ்து தே” என்று கூறியது போன்று,
இங்கு இருவரும் சேர்ந்து வாழ்த்துகின்ற கண்கொள்ளா சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே
—————–
ஸ்ரீபராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீகுணரத்னகோசம் ஸம்பூர்ணம்
ஸ்ரீரங்கநாச்சியார் சமேத ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே தஞ்சம்
உலகம் உய்ய வந்த எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
ஸ்ரீபராசரபட்டர் திருவடிகளே தஞ்சம்
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீபராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்