Archive for May, 2024

ஸ்ரீ யதிராஜ விம்சதி -ப்ரமாணத் திரட்டு–

May 31, 2024

ஸ்லோகம் -1-

பாவாம்ஸ்து சக வைதேஹ்யா கிரிஸ அநு ஷு ரம்ஸ்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ் ச தே

பாவாம்ஸ்து -தேவரீர்
சக வைதேஹ்யா –பிராட்டியாரோடே கூட
கிரிஸ அநுஷு –மலைகளின் தாழ்வரைகளில்
ரம்ஸ்யதே -க்ரீடிக்கப் பார்க்கிறீர்
அஹம் -அடிமையாகிய நான்
ஜாக்ரத–விழித்துக் கொண்டு இருக்கும் தசையிலும்
ஸ்வ பதஸ் ச –கண் வளர்ந்து கொண்டு இருக்கும் தசையிலும்
தே –தேவரீருக்கு
சர்வம் கரிஷ்யாமி –ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்யக் கடவேன்

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ மன் நாராயணனுக்கே மிதுனத்தில் அடிமை செய்கையே சேஷ பூதனுக்குப் பிராப்தம் என்றபடி –

அப்படியே ஸ்ரீ ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாலுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதி சம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

—————

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –

ராமாநுஜேதி –ராமானுஜர் என்கிற
ஏஷா –இந்த
சதுரா –வேண்டும் பலன்களைத் தருவதில் ஸாமர்த்யமான
சதுர் அக்ஷரீ -நான்கு எழுத்துக்கள் கொண்ட மந்த்ரமானது
ந சேத் -இல்லாமல் போயிற்று ஆனால்
மாத்ருஸா–என்னைப் போன்ற
ஜந்தவோ-உயிர்கள்
காம் -எவ்வகையான
அவஸ்யாம் –கொடிய தசையை
பிரபத்யந்தே –அடைவார்களோ அறியேன்
ஹந்த –ஆச்சார்யம் –

————————

ஸ்லோகம் -3 -அவதாரிகை

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா –((பரோஷா மித்ரா பாந்தவ –உறவினரை பின்பும் கார்யாந்தரே)என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –

ப்ரத்யக்ஷ -ப்ரத்யக்ஷத்தில் -கண் முன்னே எழுந்து அருளி இருக்கும்படியான
குரவே –அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை உபகரித்து அருளின ஆச்சார்யர்கள்
ஸ்துத்யா–ஸ்தோத்ரம் பண்ணத் தக்கவர்கள்-

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்-(ஸ்ரீ விஷ்ணு தத்வம் )இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ் விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா

ஹே ப்ரஹ்மன்–ஓ ப்ராஹ்மணரே
ஹஸ்த பாதாதி ஸம்யுதா –கை கால்களோடு கூடினதுமான
விசித்ரா –விசித்ரமாயும்
தேக சம்பத்திர் -சரீர ஸம்பத் தானது
ஈஸ்வராய –ஸர்வேஸ்வரனான ஸ்ரீ யப்பதியின் பொருட்டு
நிவேதிதம்–ஆத்மாக்களை பூஜா த்ரவ்யங்களையும் ஸமர்ப்பிக்கதற்கு
பூர்வமேவ க்ருதா –முன்பே ஸ்ருஷ்டிக்கப் பட்டது –

மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –

பூர்வ–முன்பே
மந –மனத்தினால் சிந்தனை பண்ணி
உத்தர-அதன் பிறகு
வாக் -வாயினால் சொல்ல வேண்டும்

கிருஷ்ண அநு ஸ்மரணம்

கிருஷ்ண –பூ பார நிவ்ருத்தி பண்ணுமவனான கண்ணனை
அநு ஸ்மரணம் –அடிக்கடி த்யானம் பண்ண வேண்டும்

————

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத–ஸ்லோகம்–5-
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
ஸ்ரீ திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –

ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே-நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –சந்தஸா – காயத்ரி ச –

ஓம் இத்ய ஏக அக்ஷரம் -ஓம் என்று ஒரு அக்ஷரமாய்
நம இதி த்வே அக்ஷரே -நம என்று இரண்டு அக்ஷரமாய்
நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –நாராயணாய என்று அஞ்சு அக்ஷரமாய்
இத் அஷ்டாக்ஷரம் –இப்படி எட்டு எழுத்துக்களாய்
சந்தஸா -சந்தஸ்ஸாய்
காயத்ரி ச -காயத்ரியுமாய் இருக்கும்-

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யா மோஹ தஸ் தத் இதராணி த்ருணாய மேநே அஸ்மத் குரோர் பக்வதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே

யோ –எந்த பாஷ்யகாரர்
நித்யம் –நிரந்தரம்
அச்யுத –ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவனான ஸ்ரீ யப்பதியினுடைய
பதாம்புஜ யுக்ம –பாதாரவிந்த த்வயமாகிய
ருக்ம -ஸூவர்ணத்தினிடத்தில்
வ்யா மோஹ தஸ் –விசேஷ ஆதாரத்தை யடைந்து இருக்கிறவராய்
தத் இதராணி -அந்தப் பாதாரவிந்த த்வயத்துக்கு வேறான விஷயங்களை
த்ருணாய –த்ருண ப்ராப்யமாய்
மேநே -நினைத்து அருளினாரோ
அஸ்மத் குரோர் –அப்படிப்பட்ட என்னுடைய ஆச்சார்யரும்
பக்வத–பூஜ்யரும்
தயைக ஸிந்தோ–கிருபா ஸமுத்ரமுமாகிய
அஸ்ய ராமாநுஜஸ்ய –இந்த ராமானுஜாசார்யருடைய
சரணவ் சரணம் ப்ரபத்யே –திருவடிகளை ரக்ஷகமாக ஆஸ்ரயிக்கிறேன்

————

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||–ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 62 –

-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)

————————-

புத்த்வா ச நோ ச விஹித அகரணை நிஷித்த சம் சேவனைஸ் த்வத் அபசார சதைர் அஸஹ்யை
பக்தாகசாம் அபி சதைர் பவதாபி அகண்யை ஹஸ்தீஸ வாக் தநு மனோ ஜெனிதை ஹதோஸ்மி
-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–79-

ஹே ஹஸ்தீஸ
புத்த்வா ச –தெரிந்தும்
நோ புத்த்வா ச–தெரியாமலும்
வாக் தநு மனோ ஜெனிதை –வாக்கு என்ன சரீரம் என்ன மனஸ்ஸூ என்ன இவைகளால் உண்டாக்கப் பட்ட
பவதாபி அகண்யை –சர்வசக்தனான உன்னாலும் எண்ண முடியாத
ச விஹித அகரணை –விஹிதங்களைச் செய்யாமை யாகிற பாபங்களாலும்
நிஷித்த சம் சேவனைஸ் –ஸாஸ்த்ர நிஷித்தங்களைச் செய்கையாகிற பாபங்களாலும்
த்வத் அபசார சதைர் –உன் திறத்தில் செய்யும் பல பல அபசாரங்களாலும்
அஸஹ்யை -சர்வ ஸஹிஷ்ணுவான உன்னாலும் பொறுக்க ஒண்ணாத
பக்தாகசாம் சதைர் அபி –பல பல பாகவத அபசாரங்களாலும்
ஹதோஸ்மி -கெட்டேன்

கரண த்ரயத்தாலும் அடியேன் செய்து போரும் அபசாரங்களுக்குத் தான் ஒரு வரம்பு உண்டோ –
புத்தி பூர்வகம் ப்ரமாதிகம் அகதிகம்–த்ரிவிதமாய் இருக்குமே
இடகிலேன் ஓன்று அட்ட கில்லேன் ஐம்புலன்கள் வெல்ல கில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
அக்ருத்ய கரணத்தில் காட்டில் பகவத் அபசாரம் க்ரூரதரமாய்
அதிலும் பாகவத அபசாரம் க்ரூர தரமாய்
அது தன்னிலும் அஸஹ்ய அபசாரம் அதிமாத்ர க்ரூர தரமாய் –பகவத் நிக்ரஹம் அதிசயித்து இருக்கும்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –இருப்பினும் உனது கல்யாண குண கணங்களை எண்ணி முடித்தாலும்
என்னுடைய அபராத கணங்கள் அஸங்க்யேயங்கள்
இப்படிப்பட்ட அபராத சஹஸ்ரங்களாலே ஸ்வரூபத்தை இழந்தேன் -கெட்டேன் என்கிறார்

—————-

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–91-

ரங்க ப்ரவண

சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய

அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்

வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்

பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்

அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்

அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ

பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்

ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்

தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்

தவ பர ஏவ பவேயம் என்றபடி

சமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் –
தேவர் ஆஜ்ஜா ரூபமான
ஸ்ருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து
சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-
மத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய்
சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே
சதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும்
கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் காதாசித்கமாகவும் இன்றிக்கே
ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து
சர்வ ஸஹிஷ்ணுத்வமான ஸ்ரீ தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்

இப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்
ஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் ஸ்ரீ பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க
ச தோஷ ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –

————

கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில்
அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத்
தந்து அருள வேணும்-என்கிறார் –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–57-

ந தேஹம் –
அஹமபிமானத்துக்கு அர்ஹமாம்படி
அந்தரங்கமான சரீரத்தையும் –
தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் –

ந ப்ராணான் –
தேகாதிகளுக்கு தாரகமான பிராணன் களையும்
சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –

ந ஸ ஸூகம் –
தேஹாதிகளையும்
பிராணன் களையும்
ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –
அந்த ஸூகமும் வேண்டா –
ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –

அ சேஷாபி லஷிதம் ஸூகம் –
எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் –
ஸூகம் என் என்னில்
தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே
ஸூகம் என்று பிரியச் சொன்ன போது
அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று
மேல் கூடக் கடவது –
நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது

ந சாத்மானம் –
கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய்
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய
ஆத்மாவை –

தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப் பூதம் –
ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை
அந்தர்ப் பூதம் ஆனவன்று
எல்லாம் உபாதேயம் -என்கை

நாத –
சேஷத்வத்துக்கு புறம்பானவை
அசஹ்யம் என்கைக்கு அடியான
அவர்ஜனீய  -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது

ஷணம் அபி சஹே –
ஷண காலமும் சஹிக்க கில்லேன்
காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள்
அசஹ்யமானாப் போலே
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-
ந தேவ லோகா க்ரமணம் –
இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்

யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்
அடிமைக்குப் புறம்பானவை
அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்
அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்
உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம் –

தத் ஸத்யம் –
இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று
மெய்யாகக் கூடுமோ -என்ன
இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்

மது மதன-
திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்
சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே
போக்கி அருள வேணும் -என்னவுமாம்

விஜ்ஞாப நமிதம்
இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்
ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும்
விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –

(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே – அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)

————

நிர்க்குணம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் –கல்யாண ஏக குண ஸ்தானன் –திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு நா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப —17 ஸ்லோகம் -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று-

————-

யதா யஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈஸம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி —

யதா யஸ்ய -எந்தக் காலத்தில் ஜீவாத்மாவானவன்
ருக்ம வர்ணம் –ஸ்வர்ண ஸ்வரூபமாய் பிரகாசிக்கிற அப்ராக்ருத திவ்ய மங்கள விகிரஹத்தை யுடையவனாய்
ஈஸம் -ஜகத்துக்கு நியாமகனாய்
கர்த்தாரம் –ஜகத் கர்த்தாவாய்
ப்ரஹ்ம யோநிம் -ப்ரக்ருதிக்கு உபாதானமாயும் இருக்கிற
புருஷன் –பரம புருஷனை
பஸ்யதே–ஸாஷாத் கரிக்கிறானோ
ததா –அந்தக்காலத்தில்
வித்வான் -அந்த ப்ரஹ்ம தர்சீ
நிரஞ்சன-ப்ரக்ருதி சம்பந்தம் இல்லாதவனாய்
புண்ய பாபே விதூய –புண்ய பாபங்களை நிரஸித்து
பரமம் ஸாம்யம் உபைதி — அந்தவந்த ஸாம்யத்தை அடைகிறான் –

———–

யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞான மயம் தப தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே

யஸ் -எந்த அக்ஷர பர ப்ரஹ்மம்
ஸர்வஞ்ஞஸ் -எல்லாவற்றையும் அறிந்ததோ
யஸ் -எந்த பர ப்ரஹ்மம்
ஸர்வ வித் –எல்லா விஸேக்ஷங்களையும் அறியுமோ
யஸ்ய -எந்தப் ப்ரஹ்மத்துக்கு
தப–ஸங்கல்பமானது
ஞான மயம் -ஞானமேயோ
தஸ்மாத் -அந்தப் ப்ப்ரஹ்மத்தில் இருந்து
ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே –முன் சொன்னபடியே நாம ரூப ஆத்மகமான பிரபஞ்சம் உண்டாகிறது –

——–

பரதஸ்ய வச குர்வன் யாசமா நஸ்ய ராகவா ஆத்மாநம் நாதி வர்தே தாஸ் ஸத்ய தர்ம பராக்ரம –-அயோத்யா –111-6-

ஹே ஸத்ய தர்ம பராக்ரம–சத்தியத்தையும் தர்மத்தையும் அனுஷ்டிப்பதில் வல்லமை யுடையவனே
ராகவா–ஓ ராகவனே
யாசமா நஸ்ய–யாசிக்கும் படியான
பரதஸ்ய வச குர்வன் -பரதனுடைய வாக்யத்தைப் பூர்த்தி செய்து
ஆத்மாநம் –நீரான தன்மையை -அதாவது ஆஸ்ரித பரதந்த்ரரான தன்மையை
நாதி வர்தே தாஸ் -அதிக்ரமிக்க வேண்டாம் –

—————

அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥-10-

மநோவாக்காயைঃ * -மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும்
அநாதி³கால ப்ரவ்ருʼத்த -அடி தெரியாத நெடுநாள் முன்னாக விளைந்த
அநந்த-அளவிறந்த
அக்ருʼத்ய கரண–செய்யத் தகாதவற்றைச் செய்தும்
க்ருʼத்ய அகரண–செய்யத்தக்கவற்றைச் செய்யாது ஒழிந்தும்
ப⁴க³வத³பசார -எம்பெருமான் இடத்தில் அபசாரப்பட்டும்
பா⁴க³வதாபசார-பகவத் அடியார்கள் டத்தில் அபசாரப்பட்டும்
அஸஹ்யாபசார -பொறுக்க முடியாத படி அபசாரப் படுகையும்
ரூப * -இங்கனே யுள்ள
நாநாவித⁴ * அநந்த அபசாராந் * –பலவகைப்பட்ட -அபரிமிதங்களான குற்றங்களை

இதற்கு -அசேஷத க்ஷமஸ்வ -என்பதில் அந்வயம்-அஶேஷத: க்ஷமஸ்வ
அசேஷத –அணுவளவும் மிச்சம் இல்லாதபடி
க்ஷமஸ்வ–பொறுத்து அருள வேண்டும்

இவ் வபசாரங்கள் எப்படிப்பட்டவை என்னில்
ஆரப்³த⁴கார்யாந், * -இன்னமும் பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தவையாய் இருக்கும் அபசாரங்கள்
அநாரப்³த⁴கார்யாந்,-இன்னம் பலன் கொடுக்க ஆரம்பிக்காதவையாய் இருக்கும் அபசாரங்கள்

  • க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச –இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் -த்ரிகால வ்யாபிகளாய் இருக்கும் அபசாரங்கள்
    இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
    ஸர்வாந் * -மநோ வாக் காய அபசாரங்கள் பிரஸித்தமாய் இருக்க
    இவற்றை இங்கு அருளிச் செய்தது
    எம்பெருமானைச் சிந்திக்கவே அமைந்த மனஸ்ஸையும்
    அவனை ஸ்துதிப்பதற்காகவே அமைந்த வாக்கையும்
    அவனுக்குப் பலவித பணிவிடைகள் செய்வதற்காகவே அமைந்த தலையம் கொண்டு
    அந்தோ வ்யபசரிக்கலாயிற்றே என்று நிர்வேதம் தோன்ற அருளிச் செய்கிறார்
    இக்குற்றங்களும் அநாதிகாலம் செயகாவை அன்றோ
    ஸம்ஸாரம் ஆனாது தானே
    பஹுநி மீ வ்யதீதாநி ஜன்மாநி தவ ச அர்ஜுனா
    அநாதி யாவதாலேயே அனந்தங்களாய் இருக்குமே

மேலே அவற்றை வகையிட்டுப் பிரித்து அருளிச் செய்கிறார்
அக்ருத்ய கரண -ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாந் போன்ற விதிகளை அதிக்ரமித்து பண்ணுகிற பிராணி பீடை
-அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை
பிறர் பொருள் தாரம் இவற்றை அபஹரிக்கை
அஸத்யம் சொல்லுகை
அபஷ்யம் -பஷிக்கத் தகாதவற்றை யதேச்சமாக பஷிக்கை
ஆக இவ்வாறு பலவகைப்பட்டு இருக்கும் அக்ருத்ய கரணங்கள்

க்ருத்ய அகரணமாவது-
ஸாஸ்த்ர விஹிதங்களாகிற வர்ணாஸ்ரம தர்மங்களை சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அனுஷ்டியாது ஒழிகை
பகவத் அபசாரமாவது
தேவதாந்தரங்களோடு ஓக்க எம்பெருமானை நினைக்கையும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மானுஷ்ய ஸஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் -முதலானவை
பாகவத அபசாரமாவது
அஹங்காரத்தாலும்
அர்த்த காமங்கள் அடியாகவும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்
அஸஹ்ய அபசாரமாவது
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தநம் இல்லாமல்
ஹிரண்ய கசிபுவைப் போலே
பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால்
காணவும் கேட்கவும் பொறாதபடியாய் இருக்கை
ஆச்சார்ய அபராதமும் அஸஹ்ய அபசாரமாய் இருக்கும் -அதாவது
ஆச்சார்யர் அருளிச் செய்த அர்த்தத்தின் படியே அனுஷ்டியாமையும்
அவன் உபதேசித்த அர்த்தங்களையும் மந்திரங்களையும் அல்ப பிரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கை முதலானவை
ஆச்சார்ய பக்தரான ஸஹ ப்ரஹ்மசாரிகளுடன் ஐக ரஸமுண்டாய் வர்த்திக்கையாய் இருக்க
அது செய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும்
அஸூயையும் அவஜ்ஜையும் முதலானவையும் அஸஹ்ய அபசாரம் எனப்படும்
பாகவதர்களிடத்தில் அபசாரம் பட்டால் அது பகவத் அபசாரமாய் முடியும்
பகவான் இடத்தில் அபசாரம் பட்டால் அது பாகவத அபசாரமாய் முடியும்

எம்பெருமான் இடம் ஸம்வாதமாய் இருக்கும் இக்கிரந்தத்தில்
த்வத் அபசாரம் என்னாதே
பகவத் அபசாரம் என்பது பொருந்துமோ என்னில்
பகவத் அபசாரம் என்றே ப்ரஸித்தி பிராஸுர்யமாக இருப்பதால் குறையில்லை

இங்கு அநந்த பதம் இரண்டு பிரயோகங்கள்
முதல் பிரயோகம் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண சாமான்ய அபசாரங்களிலும்
இரண்டாவது பிரயோகம் பகவத் அபசாராதிகளிலே அந்வயிக்கும்

ஆரப்த கார்யான் -அநா ரப்த கார்யான்
கர்மங்களின் பலன் பரிபாக கிரமத்தால் தான் பலன் கொடுக்கும்
பலன் கொடுக்காத தொடங்கியவை ப்ராரப்த கர்மங்கள் என்றும் -இவையே ஆரப்த கார்யான் என்றும்
பலன் கொடுக்கத் தொடங்காதவை -ஸஞ்சித கர்மங்கள் என்றும் இவையே அநா ரப்த கார்யான் என்றும் சொல்லப்படுகின்றன –

————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சரசுவதி அந்தாதி

May 30, 2024

இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சரசுவதி அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.

கடவுள் வாழ்த்து
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

நூல்

கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1

வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. 2

உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. 3

இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே. 4

அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே. 5

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7

இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9

புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11

தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12

புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13

வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14

நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15

சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. 16

கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. 17

தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. 18

கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. 19

காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. 20

அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. 21

வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. 22

சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. 23

அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. 24

தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவார் அருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. 25

வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. 26

பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. 27

இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. 28

கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. 29

பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. 30-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களும் ஸ்ரீ திவ்ய தேசங்களும் —

May 29, 2024

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

—————

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக் கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்-பாம்பணை சயனம்திரு மெய்யம்
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்-திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்-பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம்

2. விமலாக்குருதி விமானம்

3. சுத்தஸ்த்வ விமானம்

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்

6. வைதிக விமானம்

7. உத்பலா விமானம்

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்

10. வேதசக்ர விமானம்

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்

14. ஸ்ரீகர விமானம்

15. ரம்ய விமானம்

16. முகுந்த விமானம்-

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப் போகிறது.

———
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்-திரு அயோத்தியை-திருக் கண்ணபுரம்–திருக் கோட்டியூர்-திருத் துவாரகை-திரு வடமதுரை-திருக் கோவர்த்தனம்-திரு விருந்தாவனம்-திரு வெக்கா
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –திருக்குறுங்குடி-திருப்பாடகம்–திருப்பேர் நகர்
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –திரு அத்திகிரி-திரு வல்லிக் கேணி-திரு ஆய்ப்பாடி–திருக் கோவலூர்-திரு விண்ணகர்
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்-திரு அட்டபுயகரம் /திருவாலி –/திரு ஊரகம் /திருக்கடிகை /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்–இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

————–

ஒரே பாசுர மங்களா ஸாஸனம் ——————–15 திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——–8 திவ்ய தேசங்கள்
நான்கு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———-2 திவ்ய தேசங்கள்
ஐந்து பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ————2 திவ்ய தேசங்கள்
ஆறு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ————-2 திவ்ய தேசங்கள்
ஏழு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ————– 1 திவ்ய தேசங்கள்
ஓன்பது பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——–1 திவ்ய தேசங்கள்
பத்து பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———–23 திவ்ய தேசங்கள்
11 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் —————-14 திவ்ய தேசங்கள்
12 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் —————–8 திவ்ய தேசங்கள்
13 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————5 திவ்ய தேசங்கள்
14 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————3 திவ்ய தேசங்கள்
20 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————1 திவ்ய தேசம்
21 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————-2 திவ்ய தேசங்கள்
22 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————-3 திவ்ய தேசங்கள்
24 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————-1 திவ்ய தேசம்
27 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
32 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
33 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
36 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
39 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
40 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
42 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
45 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
47 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
50 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
51 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———————2 திவ்ய தேசங்கள்
110 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
128 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–2 திவ்ய தேசங்கள்
202 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
247 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———————1 திவ்ய தேசம்

நம்மாழ்வார் திருவடி தொழும் இராப்பத்து உத்ஸவத்தின் பத்தாம் திருநாளில், ஆழ்வார்திருநகரியில் பெருமாள், தாயார்கள், ஆழ்வார் மற்றும் உடையவருக்கு மாதுளை முத்துக்களால் அமைக்கப்பட்ட ஒரு விசேஷமான மாலை அணிவிக்கப் படுகிறது.

இந்த மாலையில் மாதுளை முத்துக்கள் கோர்க்கப் படுவதில்லை. நெருக்கமாகக் கட்டப்படுகிறது. மிகுந்த பொறுமையும், நேரமும், சிரத்தையும் எடுத்து இந்த மாலைகளைக் கட்டுவதற்கு இவ்வூரில் மிகச் சிலரே இருக்கிறார்கள். இந்த மாலையை ’மாணிக்க மாலை’ என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

108 DIVYADESAMS – SYNOPSIS
Divya desam No. Naadu Divyadesam Name Moolavar Name (Utsavar Name included in most of divyadesams) Utsavar Name (Identified Seperately on some divyadesams) Thayar Name Moolavar Kolam (Posture) Theertham Vimanam Thala Vriksham (Tree) Pratyaksham Agamam Azhwargal mangalasasanam Landmark
1 Chozha Thiruvarangam Sri Ranganathar / Azhagiya Manavalan / Periya Perumal Namperumal Sri Ranganayaki / Sriranga Nachiyar / Periya Piratiyar South facing Kidandha Kolam {Sleeping Posture} (Bhujanga sayanam) Chandra Pushkarani / Ubaya Thirukaveri / Kollidam Pranavakara Vimanam Punnai Dharmavarman / Iravivarman / Vibishinan / Kaveri / Chandran Pancharathram All Azhwars excepting Madhurakavi azhwar 10 Kms from Trichy Bus Stand
2 Chozha Thiruuraiyur / Urandhai Sri Azhagiya Manavalan Sri Ranganathar Kamalvalli Nachiyar / Uraiyur Valli / Vasalakshmi North facing Nindra Kolam (Standing Posture) Kalyana Theertham / Suriya Pushkarani / Kudamuruti Nadhi Kalyana Vimanam Iravivarman / 33 crores devargal Pancharathram Thirumangai azhwar 3 Kms from Trichy Rlwy Station
3 Chozha Thanjai Mamanikovil 1) Sri Nilamega perumal
2) Sri Manikundra perumal
3) Sri Narasingha perumal
1) Sengamalavalli
2) Ambujavalli
3) Thanjai Nayagi
1) East facing Vitrurirndha Kolam (Sitting Posture)
2) East facing Amarndha Kolam (Sitting Posture)
3) East facing Amarndha Kolam (Sitting Posture)
1) Kannika Pushakarani / Amrudha Nadhi / Vennaaru
2) Srirama theeratham
3) Suriya Pushkarani / Srirama Theertham
1) Soundarya Vimanam
2) Manikuda Vimanam
3) Veda Sundara Vimanam
1) Parasara Munivar (sage)
2) Markandeyar
3) Markandeyar
Vaikanasam Bhudhathazwar & Thirumangai azhwar 3 Kms from Thanjavur Rlwy Station
4 Chozha Thiruanbil Thiruvadivayakiya Nambi Sundararajan Soundaryavalli Nachiyar / Ayagiyavalli Nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) {Bhujanga Sayanam} Manduka Pushkarani / Kollidam Tharaga Vimanam Brahma / Valmiki / Bhumipirati Pancharathram Thirumazhisai azhwar 8 Kms from Lalkudi Rlwy Station
5 Chozha Thirukarambanur / Uthamar Kovil Sri Purushothaman Purvadevi / Poornavalli East facing Kidandha kolam (Sleeping posture) {Bhujanga Sayanam} Kadhamba Theertham Udhyoga Vimanam Kadali (Vazhai) Kadhamba Munivar / Thirumangai azhwar / Ubarisaravaga King / Sanaka Munivar / Sanandhana Munivar / Sanathkumara Munivar Vaikanasam Thirumangai azhwar 8 Kms from Trichy Rlwy Station
6 Chozha Thiruvellarai / Suvethagiri Sri Pundarikakshan Senbaghvalli / Pangayaselvi / Pankajavalli East facing Nindra Kolam (Standing posture) Kusahasthi Theertham / Manikarnika Theertham / Sukra Theertham / Pushkala Theertham / Shirabdhi pushkarani / Padma Theertham / Kandha Theertham / Varaha Theertham Vimalakruthi Vimanam Garudan / Sibhi Chakravarthi / Nilamagal / Markandeyar / Lakshmi / Brahma / Rudran Pancharathram Periya azhwar / Thirumangai azhwar 11 Kms from Srirangam
7 Chozha Thirupullabhudhangudi Sri Valvil Raman Raman Potramaraiyal / Hemabhjavalli East facing Kidandha kolam (Sleeping posture) Jadayu Theertham / Kruthra Theertham Sobhana Vimanam Jadayu Vaikanasam Thirumangai azhwar 5 Kms from Swamimalai
8 Chozha Thirupernagar / Koviladi / Appakudathaan Sri Appakudathaan / Appala Ranganathan Indradevi / Kamalavalli West facing Kidandha kolam (Sleeping posture) Indra Pushkarani / Kollidam Indra Vimanam Palasavanam Upamanyu Munivar / Parasara Munivar Pancharathram Thirumazhisai azhwar / Namazhwar / Periya azhwar / Thirumangai azhwar 10 Kms from Lalgudi Rlwy Station
9 Chozha Thiruadhanur / Ghopuri Sri Andalakumayan Ranganayaki / Bhargavi / Kamalahasini / Srichakranivasini / Mandhirpretheswari East facing Kidandha kolam (Sleeping posture) Suriya Pushkarani / Chandra Pushkarani Pranava Vimanam Punnai / Padali Thirumangai azhwar / Kamadhenu / Brigu / Agni Pancharathram Thirumangai azhwar 2 Kms from Swamimalai
10 Chozha Thiruazhundhur / Therazhundhur Sri Devadhirajan / Sri Aamaruviappan / Sri Ghosakan Sengamalavalli / Rakthabjanayaki East facing Nindra Kolam (Standing posture) Dharsa Pushkarani Kaaruda Vimanam Thirumangai azhwar / Uparicharavasu / Kaveri / Agathiya munivar / Markandeyar / Kambar / Dharmadevadhai / Garudar Pancharathram Thirumangai azhwar 10 Kms from Mayiladudurai
11 Chozha Thirusirupuliyur Sri Arumakadalamudhan / Sri Jalasayana perumal Kribha Samudhiran Thirumamagal Nachiyar / Dhayanayagi South facing Kidandha kolam (Sleeping posture) Ananthasaras / Manasa pushkarani Nandiyavartha Vimanam Vilvam Vyasa Munivar / Balavyakara Munivar / Adhiseshan Pancharathram Thirumangai azhwar 13 Kms from Mayiladudurai
12 Chozha Thircherai Sri Saaranathan Saaranayagi / Chara Nachiyar / Panchalakshmi East facing Nindra Kolam (Standing posture) Saara Pushkarani Saara Vimanam Kaveri / Markandeyar Pancharathram Thirumangai azhwar 14 Kms from Kumbakonam
13 Chozha Thalaisanganan Madiyam / Thalaisangadu Sri Nanmadhiyan / Sri Vyoma Sothipiran Vensudar / Ulaganathan Thalaisanga nachiyar / Sengamalavalli East facing Nindra Kolam (Standing posture) Chandra Pushkarani Chandra Vimanam Chandran / Paramapadha Nityasurigal / Devargal Pancharathram Thirumangai azhwar 13 Kms from Sirkazhi
14 Chozha Thirukudandhai / Kumbakonam Sri Sarangapani Sri Aravamudhan Komalavalli East facing Kidandha kolam (Sleeping posture) {Udhyoga / Uthana Sayanam} Hema pushkarani / Kaveri / Arasalaru Vaidhiga / Vedaveda Vimanam Hema Maharishi / Komalavalli thayar Pancharathram Bhudhathazwar / Peyazhwar / Thirumazhisai azhwar / Nam azhwar / Periya azhwar / Andaal / Thirumangai azhwar Kumbakonam
15 Chozha Thirukandiyur / Kandanapuram Sri Harasapavimochanan / Sri Balinathan Sri Kamalanathan Kamalavalli East facing Nindra Kolam (Standing posture) Kamalamoksha pushkarani / Kabalmoksha theertham / Bali theertham / Padma theertham / Kudamuruti Aru Kamalakruthi Vimanam Arasamaram Sivaperuman / Agathiyar Vaikanasam Thirumangai azhwar 10 Kms from Thanjavur
16 Chozha Thiruvinnagar / Uppuliappan Kovil Sri Uppuliappan / Srinivasan Sri Prasanna Venkatesan Bhoomidevi nachiyar / Dharanidevi / Vasundhara East facing Nindra Kolam (Standing posture) Ahorathra pushkarani / Arthi pushkarani Vishnu Vimanam / Sudarshana Vimanam Thulasivanam Kaveri / Markandeyar / Garudar / Dharmadevadai Vaikanasam Poygai azhwar / Peyazhwar / Nam azhwar / Thirumangai azhwar 6 Kms from Kumbakonam
17 Chozha Thirukannapuram Sri Sowrirajan / Sri Neelamegan Kannapura nayagi East facing Nindra Kolam (Standing posture) Nithiya pushkarani Uthpalaga Vadaga / Uthpalavarthagam Vimanam Kanva munivar / Garudar / Thandaga mamunivar / Uparisaravaga king Vaikanasam Nam azhwar / Kulasekara azhwar / Periya azhwar / Andaal / Thirumangai azhwar 6 Kms from Nannilam (Near mayiladudurai)
18 a) Chozha Thiruvaali Sri Vayalali Manavalan / Lakshmi Nrusimhan Sri Thiruvaali Nagaralan Amrithakadavalli West facing Vitrurirndha Kolam (Sitting Posture) Lakshani / Aahladha pushakarani Astakshara Vimanam Thirumangai azhwar / Karthama prajapathi Vaikanasam Kulasekara azhwar / Thirumangai azhwar 8 kms from sirkazhi
18 b) Chozha Thirunagari Sri Vedarajan / Sri Vayalali Manavalan Sri Kalyana Ranganathan Amudhavalli West facing Vitrurirndha Kolam (Sitting Posture) Lakshani / Aahladha pushakarani Astakshara Vimanam Thirumangai azhwar Vaikanasam Kulasekara azhwar / Thirumangai azhwar 1.5 kms from Thiruvaali
19 Chozha Thirunagai / Nagapattinam Sri Neelamegan Sri Soundariyarajan Soundariyavalli / Gajalakshmi East facing Nindra Kolam (Standing posture) Saara Pushkarani Soundariya Vimanam / Badhrakodi Vimanam Mamaram Nagarajan / Thirumangai azhwar Pancharathram Thirumangai azhwar 2 Kms from Nagapattinam Rlwy station
20 Chozha Thirunaraiyur / Nachiyar Kovil Sri Srinivasan / Sri Vasudevan / Sri Naraiyur Nambi / Sri Vasudevan Vanjulavalli Nachiyar East facing Nindra Kolam (Standing posture) Manimuktha pushkarani / Sangarshana, Pradhyumna, Anirudha, Sambha theertham Hema vimanam / Srinivasa vimanam Brahma / Medhavi Maharishi Vaikanasam Thirumangai azhwar 10 Kms from Kumbakonam
21 Chozha Nandhipura Vinnagaram / Nathankovil Sri Jagannathan / Sri Vinnagara perumal / Srinivasan / Sri Nathanathan Sembagavalli West facing Amarndha Kolam (Sitting Posture) Mandira Pushkarani / Nandhi theertham Mandara Vimanam Nandhi / Sibhi chakravarthi Vaikanasam Thirumangai azhwar 5 Kms from Kumbakonam
22 Chozha Thiru Indhalur Sri Parimala Ranganathan / Sri Maruviniya Maindhan / Sri Sugandhavana Nathan Parimala Nayagi / Chandrasapavimochanavalli / Pundarikavalli / Sugandha nayagi East facing Kidandha kolam (Sleeping posture) {Vira Sayanam} Indhu pushkarani / Chandra pushkarani Vedamodha / Vedhachakra / Vedhagandha vimanam Chandran / Kaveri / Amberishan / Brahma Pancharathram Thirumangai azhwar 5 Kms from Mayiladudurai Rlwy station
23 Chozha Thillai Thiruchithirkudam / Chidhambaram Sri Govindarajan Sri Devadhidevan / Parthasarathy Pundarikavalli East facing Kidandha kolam (Sleeping posture) {Bhoga Sayanam} Pundarika pushkarani Satvika vimanam Pannini, Pathanjali, Vyakrapadhar, Thilai moovayiravar, Kanva munivar Vaikanasam Kulasekara azhwar / Thirumangai azhwar 2 Kms from Chidhambaram Rlwy station
24 Chozha Thadaalan kovil / Sirkazhi sirama vinagaram Sri Thadaalan / Trivikaraman Sri Trivikrama Narayanan Loga Nayagi / Mattavizh kuzhali East facing Nindra kolam (Standing posture) Sanga pushkarani / Chakra theertham Pushkalavartha vimanam Astakona Mamunivar / Romeysar Vaikanasam Thirumangai azhwar 1 km from Sirkazhi Rlwy station
25 Chozha Sri Thirukudalur / Aaduthurai Perumal kovil Sri Vayangkatha perumal / Jagathrakshan / Uyyavandhar Padhmasanavalli / Pushpavalli / Padhmasini East facing Nindra kolam (Standing posture) Chakra theertham / Kaveri Sutha Satva Vimanam Nandhaka Mamunivar / Amberisan Vaikanasam Thirumangai azhwar 13 kms from Thiruvaiyaru
26 Chozha Thirukannangudi Sri Loganathan / Sri Shyamalameni perumal Sri Damodhara Narayanan Aravindhavalli Nachiyar / Loganayaki East facing Nindra kolam (Standing posture) Sravana pushkarani Uthpalavadhaka vimanam Vagula / Kayamagizh Brahma / Brugu munivar / gouthamar / chaithyar / madrar/ Ubharisaravasu Vaikanasam Thirumangai azhwar 3 kms from Kivalur Rlwy station
27 Chozha Thirukannamangai Sri Bakthavatchalar / Sri Badravi perumal Abhishekavalli / Kannamangai nayagi East facing Nindra kolam (Standing posture) Dharsna pushkarani Uthpalavadhaka vimanam Magizha maram Varunan / Romeysa munivar / Brugu munivar / 33 crores devargal Vaikanasam Thirumangai azhwar 6 kms from Thiruvarur Rlwy station
28 Chozha Kavithalam / Kapisthalam Sri Gajendravaradhan / Atrankarai Kannan Ramamanivalli / Potramaraiyal / Sengamalavalli East facing Kidandha kolam (Sleeping posture) Gajendra pushkarani / Kapila theertham kaganakruthi vimanam Hanumar / Gajendran / Kuhu alias Kandharvan Vaikanasam Thirumangai azhwar 3 Kms from Papanasam Rlwy station
29 Chozha Thiruveliyangudi / Bhargavapuri Sri Kolavilli Raman / Shirabhdhinathan Sringara Sundara perumal Maragadhavalli East facing Kidandha kolam (Sleeping posture) Sukra theertham / Brahma theertham / Indra theertham / Parasara theertham / Sukra pushkarani Pushkalavartha vimanam Kadali (Sevazhai) Sukran / Brahma / Parasarar / Indran / Brugu / Mayan / Markandeyar / Bhoomadevi Vaikanasam Thirumangai azhwar 2 kms from senganur (Near Mayiladudurai)
30 Chozha Manimada kovil / Thirunagur Narayanaperumal thirukovil Sri Naranarayanan / Sri Nandhavilakku perumal Narayanan / Alatharkku Ariyan Pundarikavalli East facing Amarndha kolam (Sitting posture) Indra Pushkarani / Rudra pushkarani / Iravadha theertham Pranava Vimanam Indran / 11 Rudrargal / Madanga Mamunivar Pancharathram Thirumangai azhwar 8 kms from Sirkazhi rlwy station
31 Chozha Vaigunda Vinnagaram / Thirunagur Vaikundhanadhar kovil Sri Vaigundanadha Perumal / Thamaraikanudayapiran Vaikundavalli East facing Amarndha kolam (Sitting posture) Lakshmi pushkarani / Udhanga puskarani / Vraja theertham / Bhujanga theertham Anantha Sathya Varthaga vimanam / Sathyavradha vimanam Ubharivasu / Udhanga mamunivar / Iravadhesvarar alia Sivan / Swathakethu King Pancharathram Thirumangai azhwar Thirunangur Vadakuvidhi (Near Sirkazhi)
32 Chozha Thiru Arimeya Vinnagaram / Thirunangur Kudamadukuthar Sri Kudamadukutha Perumal Chathurbhuja Gopalan Amrithakadavalli East facing Amarndha kolam (Sitting posture) Dhanuskodi theertham / Amritha theertham Ucha Sringa Vimanam Udhangamamunivar Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
33 Chozha Thirudevanaarthogai / Kizhasalai Sri Deivanayagan Madhava perumal Kadalmagal Nachiyar / Madhava Nayagi East facing Nindra kolam (Standing posture) Sopana pushkarani / Devasabha pushkarani / Devagunda pushkarani Sopana Vimanam Vashista mamunivar / Udanga munivar Pancharathram Thirumangai azhwar 2 kms from Thirunangur
34 Chozha Thiruvannpurudothomam / Thirunangur Purushothama perumal Sri Purushothaman Sri Purushothama nayagi / Pankajavalli East facing Nindra kolam (Standing posture) Thiruparkadal theertham Sanjivi vikraga vimanam / Panchagraha vimanam Ubhamanyu / Vyakrapadha munivar Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
35 Chozha Sempon Seikovil / Thirunangur Sempon Arangar Sri Perarulalan / Sri Damodharan Hemarangar / Sempon Arangar / Ranganathar Alimamalar Nachiyar / Sridevi / Bhoodevi East facing Nindra kolam (Standing posture) Hema pushkarani / Kanaka theertham / Nithya pushkarani Veda vimanam / Kanaka vimanam / Kanakavalli vimanam Rudran / Drudanethra munivar / Ananthan Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
36 Chozha Thiruthetri Ambalam / Thirunangur Pallikonda perumal Sri Sengannmal / Ranganathar / Sri Lakshmi Arangar Sengamalavalli East facing Kidandha kolam (Sleeping posture) Suriya Pushkarani / Sesha theertham Vedha Vimanam / Suruthimaya vimanam Nachiyar / Anantha azhwar Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
37 Chozha Thirumanikudam Thirumanikuda Nayagan / Varadharajan / Gajendra Varadhan Thirumamagal Nachiyar East facing Nindra kolam (Standing posture) Chandra pushkarani Kanaka vimanam / Prasana vimanam Garuda azhwar / Chandran Pancharathram Thirumangai azhwar 1 Kms from Thirunangur
38 Chozha Thirukavalampadi Sri Gopalakrishnan / Rajagopalan Madavaralmangai / Sengamala Nachiyar / Rukmani / Sathyabamai East facing Nindra kolam (Standing posture) Thadamalar poigai / Hemabuja pushkarani Suyambhu vimanam / Vedhamodha vimanam Rudran / Viswaksenar / Mitradevar Pancharathram Thirumangai azhwar 11 kms from Sirkazhi
39 Chozha Thiruvellakulam / Annankovil Srinivasan / Kannan / Narayanan / Annanan perumal Alarmelmangai / Padhmavathi / Poovar Thirumagal / Mahalakshmi East facing Nindra kolam (Standing posture) Thiruvellankula theertham / Svetha pushkarani Thathvarasidha vimanam / Thathvathyodhaga vimanam Svetharajan Pancharathram Thirumangai azhwar 18 kms from Sirkazhi
40 Chozha Thiruparthanpalli Sri Thamaraiyal Kelvan Parthasarathi Thamarai Nayagi West facing Nindra kolam (Standing posture) Sangaras – Ganga theertham / Katga pushkarani Narayana vimanam Arjunan / Varunan / Indran / 11 Rudras Pancharathram Thirumangai azhwar 12 kms from Sirkazhi
41 Nadu Thiruvahindhipuram / Ayindhai Sri Deivanayagan Devanathan / Divishadhnathan / Vibhudhanathan / Dasasathyan / Moovaragya Oruvan / Sthirajothi / Anakajyothi Hemambhujavalli / Vaikundanayagi / Bhargavi East facing Nindra kolam (Standing posture) Garuda nadhi / chandra theertham / Sesha theertham / Bhu theertham / Brahma theertham Chandra vimanam / Sutha sathva vimanam / chandra nirmidha vimanam Garudan / Chandran / Indran / Adhiseshan / Sivan Vaikanasam Thirumangai azhwar 5 Kms from Cuddalore
42 Nadu Thirukovalur / Koval nagar Sri Trivikraman Ayanar / Kovalan / Gopalan Poongoval nachiyar / Pushpavalli East facing Nindra kolam (Standing posture) with Right Leg measuring Akasam Pennai aru / Krishna theertham / Sukra theertham Srikara Vimanam Mahabali Chakravarthi / Mirugandu munivar / Brahma / Indran / Gukshi / Sownakar / Kasyapar / Kavalar / Kushathvajar / Poygai azhwar / Bhoodathaazhwar / Peyazhwar Vaikanasam Poygai azhwar / Bhoodathazhwar / Thirumangai azhwar Near Cuddalore
43 Pandiya Thirumaliruncholai (Kallazhagar) Sri Azhagar / Kallazhagar / Maliruncholai nambhi / Sundarabaghu / Paraman Sundaravalli East facing Nindra kolam (Standing posture) Noopura gangai / Silambaru Soma sandha vimanam Shandanam (Sandal) Malayathuvasapandiyan / Dharmadevadhai Vaikanasam Bhoodhathazhwar / Peyazhwar / Namazhwar / Periyaazhwar / Andaal / Thirumangai azhwar 19 Kms from Madurai
44 Pandiya Thirukotiyur / Thirukostiyur Sri Uraga Melanaiyaan Sowmya Narayanan Thirumamagal nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) Deva pushkarani / Amara pushkarani / Thiruparkadal Astanga vimanam Palamaram (Pine) Indran / Kadhamba mamunivar Vaikanasam Bhoodhathazhwar / Peyazhwar / Thirumazhisai azhwar / Periyaazhwar / Thirumangai azhwar 10 Kms from Thirupathur
45 Pandiya Thirumeyyam / Sathyagiri Sri Sathyagirinathan Meyyappan / Rajagopalan Uyyavandhal / Ujjivana thayar East facing Nindra kolam (Standing posture) Kadhamba pushkarani / Sathya theertham Sathyagiri vimanam Pala maram (Pine) and Arasamaram Sathiyadevadhaigal / Adhiseshan Vaikanasam Thirumangai azhwar 12 Kms from Pudhukottai
46 Pandiya Thirupullani a) Sri Adhi Jagannathan b) Chakravarthi Thirumagan Kalyana Jagannathan Kalyanavalli / Padhmasini a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Kidandha kolam (Dharpa sayanam)
Hema pushkarani / Chakra theertham / Rathnakara samudhram Kalyana Vimanam / Swasthik vimanam Arasamaram Aswatha Narayanan / Samudhrarajan / Pullaranyamunivar Vaikanasam Thirumangai azhwar 9 Kms from Ramanathapuram
47 Pandiya Thiruthankal / Thiruthangal / Sripuram Sri Nindra Narayanan Thiruthankalappan Senkamala thayar East facing Nindra kolam (Standing posture) Papavinasa theertham Devachandra vimanam / Hamsa vimanam / Somashanda vimanam Sridevi / Chaliyapadiyan / Orupuli pandiyan / Srivallabhan Vaikanasam Bhoodhathazhwar / Thirumangai azhwar Near Virudhunagar
48 Pandiya Thirumoghur / Mohanapuram Sri Kalamega Perumal Thiurmoghur Aapthan / Aththan / Kudamadu koothan Moghurvalli / Moghanavalli / Meghalatha nachiyar East facing Nindra kolam (Standing posture) Kshirabdhi pushakarani / Thaala thamarai thadam Kethaki vimanam Vilvam Brahman / Rudran / Ajarudhran Pancharathram Nam azhwar / Thirumangai azhwar 11 Kms from Madurai
49 Pandiya Thirukoodal / Koodalazhagar Sri Koodalazhagar / Vyuga Sundararajan Maduravalli / Vagulavalli / Varagunavalli / Maragadhavalli East facing Amarndha kolam (Sitting posture) Hema pushkarani / Chakra theertham / Kruthamala / Vaigai Astanga vimanam Brughu munivar / Senakadhi mamunivargal / Periyaazhwar Vaikanasam Thirumazhisai azhwar / Thirumangai azhwar Madurai city
50 Pandiya Thiruvilliputhur Sri Vadabhadrasai Sri Rangamannar Andaal / Kodhai nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) Thirumukalam (Kaveri, Ganga & Yamuna) / Triveni thadakam Samsana vimanam/ Sowmiya vimanam Mandooka munivar / Periyaazhwar Vaikanasam Periya azhwar / Andaal Near Virudhunagar
51 Pandiya Thirugurukoor / Azhwar Thirunagari – Nava (nine) Thirupathi Sri Adhinathan / Adhipiran Adhinadhavalli / Gurukoorvalli East facing Nindra kolam (Standing posture) Brahma theertham / Thamirabharani Govinda vimanam Puliya maram (tamarind) Brahma / Namazhwar / Madhurakavi azhwar Pancharathram Namazhwar 25 Kms from Tirunelvelli
52 Pandiya Thiruthoolaivilli mangalam / Rettai thirupathi – Nava (nine) Thirupathi a) Sri Devapiran / Srinivasan
b) Sri Aravindarlochanan
a) Ubhaya Nachimargal
b) Garudathadankanni nachiyar
a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Amarndha kolam (sitting posture)
Varuna theertham / thamirabharani Kumudha vimanam Indran / Vayu / Varunan Vaikanasam Namazhwar 3 kms Azhwar thirunagari
53 Pandiya Thirupulingudi – Nava (nine) Thirupathi Sri Kayichinavendhan / Bhoomipalar Malarmangai nachiyar / Poomagal nachiyar / Pulingudivalli East facing Kidandha kolam (Sleeping posture) Varuna theertham / Niruruthi theertham Vedha sara vimanam / sruthisara sekara vimanam Varunan / Niruruthi / Dharmarajan / Narar Vaikanasam Namazhwar Near Srivaikundam Rlwy station
54 Pandiya Thenthiruperai – Nava Thirupathi Sri Magara Nedunkuzhaikadhar / Nigaril Mughil vannan Kuzhaikadhuvalli nachiyar East facing Amarndha kolam (Sitting posture) Sukra pushkarani / Sangha theertham Bhadra vimanam Sukran / Esanya Rudran / Brahman Pancharathram Namazhwar Near Srivaikundam Rlwy station
55 Pandiya Thiruvaigundam – Nava Thirupathi Sri Vaigundanadhan / Kallapiran Vaigundavalli / Bhoodevi / Kallarpiran nachiyar East facing Nindra kolam (Standing posture) Brudhu theertham / kalasa theertham / thamirabharani Chandra vimanam Brudhu chakravarthi / Indran / Brahman / Namazhwar Pancharathram Namazhwar Near Srivaikundam Rlwy station
56 Pandiya Varagunamangai – Nava Thirupathi Sri Vijayasana perumal Varagunavalli / Varagunamangai East facing Amarndha kolam (Sitting posture) Deva pushakarani / Agni theertham / Akanasa theertham Vijayakodi vimanam Agni / Romesa munivar / Sathyavan / Vedavith Vaikanasam Namazhwar Near Srivaikundam Rlwy station
57 Pandiya Thenkulandhai / Perungulam – Nava Thirupathi Srinivasan / Mayakuthan Alarmelmangai / Kulandhavalli / Balavalli East facing Nindra kolam (Standing posture) Perungulam Anandha nilaya vimanam Devaguru Brahspathi Vaikanasam Namazhwar 11 Kms from Srivaikundam Rlwy station
58 Pandiya Thirukollur – Nava Thirupathi Sri Vaithamanidhi / Nikshabhavithan Kumudhavalli / Kollurvalli nachiyar / Pallavalli nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) Kubhera theertham / Thamirabharani / Nidhi theertham Srikara Vimanam Kubheran / Madhurakavi azhwar / Navanidhigal Vaikanasam Namazhwar 3 Kms from Srivaikundam Rlwy station
59 Pandiya Sirivara Mangai / Vanamamalai / Nanguneri Sri Thothadhirinathan Sri Deivanayagan Sirivaramangai / Thothadiriammai East facing Amarndha kolam (Sitting posture) Indra theertham / Setruthamarai theertham Nandhavarthana vimanam / Padhmakara vimanam Brahma / Indran / Romesa munivar / Brugu mamunivar / Markandeyar / Garudan / Urvashi / Thilothamai / Sindhanattu mannan Vaikanasam Namazhwar 29 Kms from Tirunelvelli
60 Pandiya Thirukurungudi Sri Nindra Nambi / Kurungudi nambi / Irundha nambi / Vaishnava nambi / Vaduga nambi / Kidandha nambi / Malaimel nambi / Thiruparkadal nambi Sundaraparipuranar Kurungudivalli nachiyar East facing Nindra kolam (Standing posture) Thiruparkadal / Panchathurai / Sindhu Nadhi / Anjana pushkarani Panjakedhaka vimanam / panjagraha vimanam Sivaperuman / Gajendran Vaikanasam Periazhawar / Thirumazhisai azhwar / Namazhwar / Thirumangai azhwar 42 Kms from Tirunelvelli
61 Thondai Thirukachi / Kancheepuram Sri Varadharajan / Perarulalan / Devadhirajan / Athiyuran / Devaperumal Peundevi / Mahadevi West facing Nindra kolam (Standing posture) Ananthasaras / Sesha theertham / Varaha theertham / Brahma theertham / Padma theertham / Vegavathi Punyakodi vimanam Brughu / Naradhar / Adhiseshan / Brahma / Gajendran Pancharathram Bhoodathazhwar / Peyazhwar / Thirumangai azhwar 70 Kms from Chennai
62 Thondai Thiruasttapuya karam / Chinna Kancheepuram Sri Adhikesavan / Gajendra Varadhan / Chakradarar Alarmelmangai West facing Nindra kolam (Standing posture) Gajendra pushkarani Kakanakruthi Vimanam / Chakrakruthi vimanam / Vyomagara vimanam Gajendran Pancharathram Peyazhwar / Thirumangai azhwar 1 Kms from Thirukachi
63 Thondai Thiruthanka / Vilakoli Kovil Sri Deepaprakasar / Vilakoli / Divyaprakasar Maragadhavalli West facing Nindra kolam (Standing posture) Saraswathi theertham Srikara Vimanam Saraswathi Vaikanasam Thirumangai azhwar 2 Kms from Thirukachi
64 Thondai Thiruvellukai / Chinna Kancheepuram Sri Ayagiya Singhar / Mukundha Nayagan Velukaivalli / Amrudhavalli East facing Amarndha kolam (Sitting posture) Kanaka saras / Hema saras Kanaka vimanam Brugu Munivar Vaikanasam Peyazhwar / Thirumangai azhwar 3 Kms from Thirukachi
65 Thondai Thirupadakam / Periya Kancheepuram Sri Pandavadoodhar Rukmani / Sathyabama East facing Amarndha kolam (Sitting posture) Matsya theertham Vedhakodi vimanam / Bhadra vimanam Janameyan / Haritha munivar / Arjunan Pancharathram Bhoodathazhwar / Peyazhwar / Thirumazhisai azhwar / Namazhwar / Thirumangai azhwar Periya Kancheepuram
66 Thondai Thiruneeragam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Jagadeesha perumal Nilamangaivalli West facing Nindra kolam (Standing posture) Akrura theertham Jagadeeswara vimanam Akrurar Vaikanasam Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Kovil
67 Thondai Nilathingal Thoondathan / Periya Kancheepuram Sri Nilathingal Thoondathan / Chandrasoodar Ner Oruvar Illa Valli / Nilathingal thoodathal West facing Nindra kolam (Standing posture) Chandra pushkarani Purushasuktha vimanam / Surya vimanam Sivan / Parvathi No Vainava agamam since inside Sivan koil Thirumangai azhwar Inside Ekampareswarar Koil
68 Thondai Thiru Uragam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Peragathan Amudhavalli nachiyar / Amruthavalli nachiyar West facing Nindra kolam (Standing posture) Naga theertham / Sesha theertham Sara Srikara vimanam Adhiseshan Vaikanasam Thirumazhisai azhwar / Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Koil
69 Thondai Thiruvekka / Chinna Kancheepuram Sri Yathothkari / Sonna Vannam Seidha peruma / Vega Sethu Komalavalli West facing Kidandha kolam (Sleeping posture) Poigai pushkarani Vedha Sara vimanam Brahma / Poigai azhwar / Thirumazhisai azhwar / Kannikannan Pancharathram Poigai azhwar / Peya azhwar / Thirumazhisai azhwar / Nam azhwar / Thirumangai azhwar 1 Kms from Thirukachi
70 Thondai Thirukaragam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Karunakaran / Karagathan Padmasini nachiyar West facing Nindra kolam (Standing posture) Ambarisha saras / Akkarayu theertham Vaman Vimanam / Ramya Vimanam Karaga Maharishi / Meganikethanarishi Vaikanasam Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Kovil
71 Thondai Thirukarvanam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Kalvar / Navaneethasoran / Vennai Unda Kalvan Kamalvalli / Thamaraiyal West facing Nindra kolam (Standing posture) Gowrithadakam / Tharathara theertham Pushkala vimanam Gowri / Mahabali / Aswathama / Kargiya munivar Vaikanasam Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Kovil
72 Thondai Thirukalvanur / Periya Kancheepuram Sri Adhivaragar Anjalaivalli / Abahaya nachiyar West facing Nindra kolam (Standing posture) Nithiya pushkarani Vamana vimanam Aswatha Narayanan / Parvathi / Thirumagal No Vainava agamam since inside Amman koil Thirumangai azhwar Inside Kamakshiamman Kovil
73 Thondai Thirupavalavannan / Periya Kancheepuram Sri Pavalavannan Pavalavalli West facing Amarndha kolam (Sitting posture) Chakra theertham Pavala vimanam Parvathi / Brughu / Aswini Devadaigal Vaikanasam Thirumangai azhwar 1 Kms Kanchi Rlwy station
74 Thondai Thiruparameswara Vinnagaram / Periya Kancheepuram Sri Paramapadhanathan / Vaigundanathan Viagundavalli West facing Amarndha kolam (Sitting posture) Iramadha theertham Mukundha vimanam Pallavamannan Vaikanasam Thirumangai azhwar 0.5 Kms Kanchi Rlwy station
75 Thondai Thiruputkuzhi / Chettisathiram Sri Vijayaraghavan / Agavapungavan Maragadhavalli East facing Amarndha kolam (Sitting posture) Jadayu Theertham Vijayakodi vimanam Jadayu Vaikanasam Thirumangai azhwar 11 kms from Kanchi
76 Thondai Thirunindravur / Thinnanur Sri Bakthavatchalar / Sri Badravi perumal Sudhavalli / Ennai Petra Thayar East facing Nindra kolam (Standing posture) Varuna pushkarani / Vrudhakshira pushkarani / Palaru Uthpala Vimanam / Srinivasa Vimanam Varunan / Samudrarajan Pancharathram Thirumangai azhwar 1.5 kms from Thirunindravur Rlwy station
77 Thondai Thiruevalur / Thiruvallur Sri Veeraraghavar / Evvul Kidhandhan / Vaidyaveeraraghavan Kanakavalli / Vasumathi East facing Kidandha kolam (Sleeping posture) Hruthapa Vinasa pushkarani Vijayakodi vimanam Salihothra Mamunivar Pancharathram Thirumazhisai azhwar / Thirumangai azhwar 40 Kms from Chennai
78 Thondai Thiruneermalai a) Sri Neervanan / Nilamugilvanan
b) SanthaNrusimhar
c) Trivikraman
d) Ranganathar
a) Annimamalar mangai
d) Ranganayaki
a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Amarndha kolam (Sitting posture)
c) East facing Nadandha kolam (Walking posture)
d) South facing Kidandha kolam (Sleeping posture – Manikka sayanam)
Mannikarnika thadagam / Shira pushkarani / Karunya pushkarani / Siddha pushkarani / Swarna pushkarani Thoyagiri vimanam / Niradhri vimanam Veppalai Thondaiman / Brughu / Markendayar / Valmiki Vaikanasam Bhoodathazhwar / Thirumangai azhwar 5 Kms from Pallavaram Rlwy station (Near Chennai)
79 Thondai Thiruvidavendhai / Thirvidandhai Sri Lakshmi Varahar Nithyakalyana perumal Komalavalli nachiyar East facing Nindra kolam (Standing posture) Kalayana theertham / Varaha theertham Kalyana vimanam Punnai Markandeyar / Mahabali / Kalavamamunivar Vaikanasam Thirumangai azhwar 40 Kms from Chennai (on the way to Mahabalipuram)
80 Thondai Thirukadalmallai / Mahabalipuram / Mammallapuram Sri Thalasayana Perumal Thalasayanathu Uraivar / Ulagu Uyya Nindran Nilamangai thayar East facing Kidandha kolam (Sleeping posture) Pundarika pushkarani / Garudanathi Kakanakruthi Vimanam / Anantha vimanam Pundarika Mamunivar Vaikanasam Bhoodathazhwar / Thirumangai azhwar 65 Kms from Chennai
81 Thondai Thiruvallikeni / Triplicane a) Sri Venkatakrishnan
b) Sri Ranganathar
c) Chakravarthi Thirumagan
d) Sri Varadharajar
e) Sri Thelliyasingar
Parthasarathi a) Rukmani
b) Vedhavalli
c) Sita
a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Kidandha kolam (Sleeping posture)
c) South facing Nindra kolam (Standing posture)
d) East facing Amarndha kolam on Garudan (Sitting posture)
e) West facing Amarndha kolam (Sitting posture)
Kairavini saras / Indra theertham / Soma theertham / Meena theertham / Agni theertham / Vishnu theertham Anandha vimanam / Pranava vimanam / Pushpaka vimanam / Sesha Vimanam / Deiviga vimanam a) Sumathi / Thondaiman / Arjunan / Rukmani
b) Madhuman
c) Saptharomar
d) Athri Mamunivar / Jabali Mamunivar
e) Brughu / Markandeyar
Vaikanasam Peyazhwar / Thirumazhisai azhwar / Thirumangai azhwar 4 Kms from Chennai Central Rlwy station
82 Thondai Thirukadigai / Sholingur Sri Yoga Nrusimhar / Akkarakani Thakkan / Bhakthavatsala perumal Amruthavalli East facing Amarndha kolam (Sitting posture) Amrutha theertham / Thakkan kulam / Pandava theertham Simha Kostakruthi vimanam / Simhakra vimanam Hanumar / Saptha Rishigal Vaikanasam Peyazhwar / Nam azhwar / Thirumangai azhwar 14 Kms from Sholingur Rlwy station
83 Malai Thiruvanandhapuram / Ananthapuranagar Sri Ananthapadmanabhan Hari Lakshmi East facing kidandha kolam (Sleeping posture) – Bhujanga sayanam Matsya / Padma / Varaha theerthangal Hemakuda vimanam 11 Rudras / Chandran / Indran / Divakara munivar / Vilvamangala swamigal Thandra Samusayam Nam azhwar 2 Kms Tvpuram Rlwy station
84 Malai Thiruvanparisaram / Thiruparisaram / Thiruvannpadhisaram Thirukuralappan / Thiruvazhmarbhan Kamalavalli East facing Vitrurirndha Kolam (Sitting Posture) Soma theertham / Lakshmi theertham Indrakalyana vimanam Thirumagal / Kari / Udayanangai / Garudan / Saptharishigal (7 sages) Thandra Samusayam Nam azhwar 4 Kms between Nagercoil and Tirunalveli route
85 Malai Thirukatkarai Sri Katkaraiappan Vatsyavalyavalli nachiyar / Perunjselva nayagi West facing Nindra kolam (Standing posture) Kapila theertham Pushkala vimanam Kapilamamunivar Thandra Samusayam Nam azhwar 11 Kms from Ernakulam
86 Malai Thirumuzhikalam Thirumuzhikalathan / Sri Sukthinathan Madhuraveni nachiyar East facing Nindra kolam (Standing posture) Sanga theertham / Sukthi theertham / Perungulam / Sitraru Soundarya vimanam / Sundara vimanam Harithama munivar / Devarishigal Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar 5 Kms from Angamali Rlwy station
87 Malai Thirupuliyur (Linked to Pancha pandavas – Bheeman) Sri Mayapiran Porkodi nachiyar East facing Nindra kolam (Standing posture) Pragnya saras theertham / Punjsunai theertham Purushothama vimanam / Purushasuktha vimanam Saptharishigal (7 Sages) Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar 6 kms from Senganur Rlwy station
88 Malai Thirusengundrur / Senganur (Linked to Pancha pandavas Dharmar) Sri Imayavarappan Senkamalavalli / Swarnavalli West facing Nindra kolam (Standing posture) Sanga theertham / Thirussitraru Jagajothi vimanam Rudran Thandra Samusayam Nam azhwar 48 Kms from Kottarakara Rlwy station
89 Malai Thirunavai Sri Navaimkundan / Sri Narayanan Malarmangai East facing Nindra kolam (Standing posture) Senkamala saras / Kamalathatakam Veda vimanam Thirumagal / Gajendran / Nava Yogigal (9 yogis) Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar 2 Kms from Thirunavai Rlwy station
90 Malai Thiruvallavazh / Thiruvalla Sri Kolapiran / Thiruvazhmarbhan / Sri Vallabhan / Alangarpiran Selvathirukozhundhu nachiyar / Vatsalyadevi East facing Nindra kolam (Standing posture) Kandakarna theertham / Pamba nadhi Sathuranga kola vimanam Kandakarnan / Sankara mangalathu ammai Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar Kollam to Ernakulam Route
91 Malai Thiruvanvandur / Thiruvamandur (Linked to Pancha pandavas Nakulan) Sri Pambanaiappan / Kamalanathan Kamalavalli West facing Nindra kolam (Standing posture) Papanasa theertham / Pambha theertham Vedalaya vimanam / Sakalaveda vimanam Markandeyar / Naradhar Thandra Samusayam Nam azhwar 5 kms from Thirupulliyur
92 Malai Thiruvaattaru / Thiruvattar Sri Adhikesavan Maragadhavalli West facing Kidandha kolam (Sleeping posture) Kadalvai theertham / Vattaru / Rama theertham Astanga vimanam / Astakshara vimanam Parasuramar / Chandran Thandra Samusayam Nam azhwar Nagercoil to Thiruvanandhapuram
93 Malai Thiruvithuvakkodu (Linked to all Pancha pandavas) Sri Uyyavandhan / Abhayapradhanan Vithuvakkottu valli / Padmapani nachiyar West facing Nindra kolam (Standing posture) Sukra theertham Thathuva Kanchana vimanam Ambarishan Thandra Samusayam Kulasekara azhwar 5 kms from Pattambi Rlwy station
94 Malai Thirukadithanam / Thirukodithanam (Linked to Pancha pandavas Saghadevan) Sri Amrudhanarayanan / Adhpudhanarayanan Karpagavalli East facing Nindra kolam (Standing posture) Bhumi theertham Puniyakodi vimanam Rukmanga mannan / Devaragal Thandra Samusayam Nam azhwar 1 Kms from Thiruvalla
95 Malai Thiruvaranvilai / Aranmula (Linked to Pancha pandavas Arjunan) Thirukuralappan / Pambanaiappan / Seshasanar Padmasini nachiyar North facing Nindra kolam (Standing posture) Vedavyasa saras / Pamba theertham / Vyasa theertham Vamana vimanam Brahma / Vedavyasar / Arjunan Thandra Samusayam Nam azhwar 7 Kms from Thirusengundrur
96 Vada Thiruvenkadam / Tirupathi a) Sri Govindarajan – Kizh Tirupathi
b) Srinivasan / Ezhumalaiyan / Balaji / Thirvenkadamudayan / Venkatasalapathi / Venkadanathan – Mel Tirupathi
Kalyana Venkateswarar a) Pundarika valli
b) Padmavathi thayar / Alarmel mangai
a) East facing Kidandha kolam (Sleeping posture)
b) East facing Nindra kolam (Standing posture)
Swami pushkarani / Seshachala swami theertham (varaha theertham) / Vaikunda theertham / Akasaganga Anandanilaya vimanam Thondaiman chakravarthi / Sanmugan Vaikanasam All Azhwars excepting Madhurakavi azhwar & Thondaradipodi azhwar 11 Kms from Renigunda Rlwy station
97 Vada Singavel Kundram / Ahobilam Sri Ahobila Narasimhar / Prakaladha varadhan / Nava (9) Nrusimhar namely, Jwala, Ahobila, Malola, Kroda, Karancha, Bargava Yogananda, Chatravada, Pavana 9 Utsava Murthi including Malola Nrusimhar Lakshmi / Amrudhavalli / Senjulakshmi East facing Amarandha kolam (Sitting posture) Bhavanasini theertham / Papavinasa theertham / Baragava theertham / Indra theertham / Nrusimha theertham / Gaja theertham Kugai vimanam / Kurugai vimanam Garudan / Prakaladhan Pancharathram Thirumangai azhwar 145 Kms from Kadappa Rlwy station
98 Vada Thiru Ayodhi / Ayodhya Sriraman / Chakravarthi Thirumagan / Raghunayagan Sitapiratti North facing Amarndha kolam (Sitting posture) Paramapadha sathya theertham / Charayu nadhi Pushkala vimanam / pushpaka vimanam Bharadan / Devas / Mamunivargal Nam azhwar / Kulasekara azhwar / Periya azhwar / Thondaradipodi azhwar / Thirumangai azhwar 5 kms from Faisabad Rlwy station
99 Vada Thirunaimisaranyam / Nimsar Sri Devarajan / Sri Hari Sri Harilakshmi / Pundarikavalli East facing Nindra kolam (Standing posture) Chakra theertham / Komuki nadhi / Gomathi theertham / Divyavisranthi theertham Sri Hari vimanam Indran / Sukran / Chandran / Devarishi / Vedavyasar / Suthapuranikar Thirumangai azhwar 3 kms from Naimisaranyam Rlwy stations
100 Vada Thirusalagramam Sri Murthi Sridevi nachiyar North facing Nindra kolam (Standing posture) Chakra theertham / Kandaki Nadhi Kanaka vimanam / Kakana vimanam Brahma / Rudran / Kandaki Periya azhwar / Thirumangai azhwar 128 Kms from Kathmandu (Nepal)
101 Vada Thirubadariyasramam / Badrinath Sri Badrinarayanan Aravindhavalli East facing Amarandha kolam (Sitting posture) Thapthakunda theertham Thapthakanchana vimanam Badri Vruksham (Ilandhai maram) Naran Periya azhwar / Thirumangai azhwar 275 Kms from Haridwar
102 Vada Thirukandam Kadinagar / Devaprayag Sri Neelamegan / Purushothaman Pundarikavalli East facing Nindra kolam (Standing posture) Mangala theertham / Aadhi ganga Mangala vimanam Bharadwaja munivar / Brahma Periya azhwar 93 Kms from Haridwar
103 Vada Thirupiridhi / Joshimutt Sri Paramapurushan Parimalavalli East facing Kidandha kolam (Sleeping posture) Indra theertham / Govardhana theertham / Manasasaras Govaradhana vimanam Parvathi Thirumangai azhwar 170 Kms from Devaprayag
104 Vada Thiruvadamadurai / Madura Sri Govardhanesan / Balakrishnan Sathiyabhama nachiyar East facing Nindra kolam (Standing posture) Indra theertham / Govardhana theertham / Yamuna Govaradhana vimanam Vasudevar / Devaki / Indran Nam Azhwar / Periya azhwar / Andaal / Thondaradipodi azhwar / Thirumangai azhwar 3 Kms from Madura Rlwy Station
105 Vada Thirudwarakai / Dwaraka Sri Kalyana Narayanan / Dwarakadeesan / Dwarakanathji Kalyananachiyar / Lakshmi / Rukmani West facing Nindra kolam (Standing posture) Gomathi nadhi Hemakuda vimanam Panchali (Draupathi) Thirumazhisai azhwar / Nam Azhwar / Periya azhwar / Andaal / Thirumangai azhwar 2 kms from Dwaraka Rlwy station
106 Vada Thiruvaipadi / Gokulam Sri Navamogana Krishnan Rukmani / Sathyabama East facing Nindra kolam (Standing posture) Yamuna Hemakuda vimanam Nandhakopar Periya azhwar / Andaal / Thirumangai azhwar 6 Kms from Madura Rlwy station
107 Vada Thiruparkadal / Kshirabdhi / Vyugam Sri Kshirabdhinathan Sri Bhudevi / Kadalmagal nachiyar / Kshirabdhi nachiyar South facing Kidandha kolam (Sleeping posture) Amrudha theertham / Thiruparkadal Astanga vimanam Brahma / Rudran / Devargal All azhwars excepting Madurakavi azhwar & Thirupana azhwar Parkadal
108 Vada Thiruparamapadham / Thirunadu / Vaigundam / Paramapadham / Nitya Vibudhi Sri Paramapadhanathan / Sri Paravasudevan Periyapirattiyaar South facing Amarndha kolam (Sitting posture) Virajanadhi / Ayiramadha pushkarani Ananthanga vimanam Adhiseshan / Garudan / Viswaksenar / Nithyasurigal / Mukthargal Poigai azhwar / Peya azhwar / Thirumazhisai azhwar / Nam azhwar / Periya azhwar / Andaal / Thirupana azhwar / Thirumangai azhwar Parama padham

ஸ்ரீ அயோத்யா அடைந்த ஸ்ரீ ஆனந்த ராமன்-ஸ்ரீ கோவிந்த ராஜர் காட்டி அருளும் நாள் காட்டி-

May 29, 2024

வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்கிறார். த்வம் அப்ரமேயஶ்ச, துராஸதஶ்ச, ஜிதேந்த்ரியஶ்ச, உத்தம தார்மிகஶ்ச. அக்ஷய்யகீர்திஶ்ச விசக்ஷணஶ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் ‘நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

கம்பர், ராமநாமத்தின் மகிமையை, “ நன்மையும், செல்வமும் நாளும் பெருகுமே, தின்மையும், பாவமும் சிதைந்து தேயுமே, சென்மமும், மரணமும் இன்றித் தீருமே, இம்மையே ராமாவென்ற இரண்டு எழுத்தினால்” என்றும், “நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம், விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும், நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே” என்றும் கூறுகிறார்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

அநுமான்கார்ஹி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. 76 படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் அழகிய சிலைகளையும் கொண்டு கம்பீரத்தோறறத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. ஆஞ்சேநேயரின் பெரிய திருவுருவ சிலையைத்தவிர, அவருக்கும், அவரது தாயார் அஞ்சனாதேவிக்கும் இங்கே சிலைகள் உண்டு

அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு தென்னிந்திய பாணி கோவில் உள்ளது. தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ளது. இராமன் சந்நிதியில், ராமன், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன், அனுமன், மற்றும் கருடன் என்று எல்லோரும் சேர்ந்து தரிசனம் தருகின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் மணவாளமாமுனிகள் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

  1. ராம ஜென்ம பூமி, இதற்கு வடக்கே பரதன் அவதரித்த இடமும், ராமஜென்ம பூமியின் கிழக்கே லக்ஷ்மண, சத்ருகுண ஜென்மபூமிகளும் உள்ளன.
  2. ஹனுமான் கடி
  3. சரயு நதி (ராம் காட், லக்ஷ்மண் காட், குப்தார் காட்) லக்ஷ்மண் காட், இங்கிருந்து தான் லக்ஷ்மணன் தன்னுடைய அவதார முடிவின் போது தன்னுடைய சுய ரூபமான ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷனாக மாறி பரமபதம் அடைந்தான். அதனால் இது சஹஸ்ராதார தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். குப்த காட் என்ற இடத்தில இருந்து தான் ராமன் பரமபத்திற்கு எழுந்து அருளினான்.
  4. வால்மீகி பவன்
  5. தசரத பவன்
  6. அம்மாஜி மந்திர் தெற்கு பக்க கோவில்போல் அமைப்பும், பூஜைகளும்
  7. கனகபவனம் என்று அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கைகேயியின் அரண்மனை – இராமன் சீதை அந்தப்புரம்
  8. லகட்மண்டி பரத் பவன் என்று தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம்
  9. வசிஷ்ட ஆஸ்ரமம்
  10. பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும் வரை காத்திருந்து நாட்டை ஆண்ட நந்திகிராமம் (இது அயோத்தியிலிருந்து சுமார் 20 மைல்
  11. பிட்டூர் – இது கான்பூருக்கு அருகில் உள்ளது, வால்மீகி ஆஸ்ரமம் உள்ளது. லவ குசர் பிறந்த இடம். துருவன் தவம் செய்த இடம்.
  12. ப்ரயாக்ராஜ் அருகில், ஶ்ருங்கிபேரபுரம் என்று குகன் ராமனை சந்தித்து கங்கையை கடந்த இடம், குகன் மந்திர்
  13. ப்ரயாக்ராஜ் நகரில் பரத்வாஜமுனிவரின் ஆஸ்ரமம், த்ரிவேணி சங்கமம்
  14. சீதாமர்ஹி (பிஹார்) – சீதா அவதரித்த இடம்
  15. பஸ்ர் பிஹார் – தாடகா வனம், வதம், யாக சம்ரக்ஷணம், வைகுந்தநாதர் கோவில் . வாமன அவதார ஸ்தலம் (தற்போது, பிஹார் ஜெயில்)
  16. ஜனக்புரி (நேபாளம்) – தனுஷாதம், ஜனகபவன்
  17. சித்திரகூட் – மந்தாகினி ஆறு, ராமன் காட், துளசிதாசர் பவன்

—————

சுக்ல பஷ பஞ்சமி வனவாசம் புறப்படுகிறான்
அடுத்த நாள் சஷ்டி குகன் ஸஹ்யம்
சப்தமி இங்குள மரத்தடியில் தங்கி
அஷ்டமி பரத்வாஜ ஆஸ்ரமம்
நவமி
தசமி -சித்ர கூடம்
ஏகாதசி -தசரதன் மரணம்
துவாதசி தூதர்
பவுர்ணமி கேகேய தேசம் சேர்கிறார்கள்
கிருஷ்ண பக்ஷ நவமி பரதன் அயோத்யா வந்து
13 நாள் சம்ஸ்காரம் வைகாசி மாதம் -சுக்ல பஷ பஞ்சமி

ராமனை அழைத்து வர பாதை சரி பண்ண 4-5- நாள்கள் ஆயின
வைகாசி வளர்பிறை சுக்ல ஏகாதசி குகன் இருக்கும் இடம் கங்கைக்கரை அடைந்து
துவாதசி பரத்வாஜர்
அடுத்த நாள் ராமனை சேவித்து மூன்று நாள் தங்கி
கிருஷ்ண பக்ஷ த்விதியை புறப்பட்டு
வைகாசி கிருஷ்ண பஷம் சதுர்த்தி பாதுகா பட்டாபிஷேகம்
பஞ்சமி -ராமன் அத்ரி ஆஸ்ரமம் சென்று 10 வருஷம் வனவாசம்
கோதாவரி பஞ்சவடி
14 வருஷம் சித்திரை மாதம் சீதா அபஹாரம்
வைகாசி சுக்ரீவன்
ஆடி மாதம் வாலி வாதம்
ஐப்பசி வானரங்களை அனுப்பி
பங்குனி மாதம் சீதையை திருவடி காண்கிறான்
வளர்பிறை -சுக்ல பஷ சதுர்த்தி தீ வைக்க
மறு நாளே-பங்குனி பவுர்ணமி ராமன் இடம் சேர்க்கிறார்கள் -ஒரே நாளில்
பங்குனி அமாவாசை ராமன் வதம் -15 நாளிலே வால்மீகி -கம்பர் 30 நாள்
வளர்பிறை சுக்ல பஷ பிரதமை ராவண ஸம்ஸ்காரம்
த்விதியை விபீஷணன் பட்டாபிஷகம்
மன்னன் தானே மன்னன் ஆணையை மாற்றி சீதையை விடுவிக்க வேண்டும்
ராஜ நீதி அறிந்த பெருமாள் -ஆகவே அடுத்த நாள் சீதையை விடுவித்தான்
த்ருதீயை புறப்பட்டு -பஞ்சமிக்குள் திரும்ப வேனும்
சதுர்த்தி கிஷ்கிந்தை
பஞ்சமி பரத்வாஜர் ஆரமம் சேர்ந்தான்
12 வயசில் யாகம் காத்தஹு –
12 வராஹம் அயோத்யையில் வாழ்ந்து
25 வயதில் காட்டுக்கு
38-39- திரும்பி -சீதாப் பிராட்டிக்கு 32-33-

————-

சத்ருக்னன் -பரதனுக்கு
ஒரு அண்ணன்-பரதன் – வானகம் போக -காடாள நிலமங்கை விட்டு
ஒரு அண்ணன் -லஷ்மணன் -அவனுக்குத் தொண்டு செய்ய பின்னே போக
ஒரு அண்ணன்-ராமன் – கானகம் போக
அடியேன் போனகம் பருகி இருக்கவா
எண்ணில் கோடி ராமர் எனினும் அண்ணல் உனக்கு நிகராகுமோ-1-3-1000-கீழ் இப்பொழுது கோடி-கௌசல்யை-

————————

Maharishi Valmiki has recorded in ‘Bal Kaand’, Sarga 19 and Shloka 8 & 9 (1/18/8,9), that Shri Ram was born on 9th Tithi of Chaitra month when the position of different planets vis-a-vis zodiac constellations and nakshatras (visible stars) were:

i) Sun in Aries; 

ii) Saturn in Libra; 

iii) Jupiter in Cancer; 

iv) Venus in Pisces; 

v) Mars in Capricorn; 

vi) Lunar month of Chaitra; 

vii) 9th day after no moon; 

viii) Lagna as Cancer (Cancer was rising in the east); 

ix) Moon on the Punarvasu (Gemini constellation & Pllux star); 

x) Day time (around noon).

This data was fed into the software. The results indicated that this was exactly the location of planets /stars in the noon of January 10, 5114 BC.

Thus, Shri Ram was born on January 10, 5114 BC (7121 years back). As per the Indian calendar, it was the ninth day of Shukla Paksha in Chaitra month and the time was around 12 to 1 noon time. This is exactly the time and date when Ram Navmi is celebrated all over India.

The present Ayodhya has shrunk in size and the rivers have changed their course about 40 km north /south. Shri Ram went out of Ayodhya in his childhood (13th year as per Valmiki Ramayan) with Rishi Vishwamitra who lived in Tapovan (Sidhhashram). From there he went to Mithila, King Janaks’ kingdom. Here, he married Sita after breaking Shiv Dhanusha.

Researchers have gone along the route adopted by Shri Ram as narrated in the Valmiki Ramayan and found 23 places which have memorials that commemorate the events related to the life of Shri Ram. These include :

Shringi Ashram,

Ramghat,

Tadka Van,

Sidhhashram,

Gautamashram,

Janakpur (now in Nepal),

Sita Kund, etc.

Memorials are built for great men and not for fictitious characters. Date of exile of Shri Ram: It is mentioned in Valmiki Ramayans’ Ayodhya Kand (2/4/18) that Dashratha wanted to make Shri Ram the king because Sun, Mars and Rahu had surrounded his nakshatra and normally under such planetary configuration the king dies or becomes a victim of conspiracies.

Dashrathas’ zodiac sign was Pisces and his nakshatra was Rewati.

This planetary configuration was prevailing on the January 5, 5089 BC,

and it was on this day that Shri Ram left Ayodhya for 14 years of exile.

Thus, he was 25 years old at that time (5114-5089).

There are several shlokas in Valmiki Ramayan which indicate that Shri Ram was 25-years-old when he left Ayodhya for exile. 

Valmiki Ramayan refers to the solar eclipse at the time of war with Khardushan in later half of 13th year of Shri Rams’ exile. It is also mentioned it was amavasya day and Mars was in the middle. When this data was entered, the software indicated that there was a solar eclipse on October 7, 5077 BC, (amavasya day) which could be seen from Panchvati. The planetary configuration was also the same – Mars was in the middle,

on one side were Venus and Mercury and on the other side were Sun and Saturn.

On the basis of planetary configurations described in various other chapters, the date on which Ravana was killed works out to be December 4, 5076 BC, and Shri Ram completed 14 years of exile on January 2, 5075 BC, and that day was also Navami of Shukla Paksha in Chaitra month. Thus Shri Ram had come back to Ayodhya at the age of 39 (5114-5075). 

A colleague, Dr Ram Avtar, researched on places visited by Shri Ram during his exile, and sequentially moved to the places stated as visited by Shri Ram in the Valmiki Ramayan, starting from Ayodhya he went right upto Rameshwaram.

He found 195 places which still have the memorials connected to the events narrated in the Ramayana relating to the life of Shri Ram and Sita These include Tamsa Tal (Mandah), Shringverpur (Singraur), Bhardwaj Ashram (situated near Allahabad), Atri Ashram, Markandaya Ashram (Markundi), Chitrakoot, Pamakuti (on banks of Godavari), Panchvati, Sita Sarovar, Ram Kund in Triambakeshwar near Nasik, Shabari Ashram, Kishkindha (village Annagorai), Dhanushkoti and Rameshwar temple. 

In Valmiki Ramayan it is mentioned that Shri Ram’s army constructed a bridge over the sea between Rameshwaram and Lanka.

After crossing this bridge, Shri Ram’s army had defeated Ravana. Recently,

NASA put pictures on the Internet of a man-made bridge, the ruins of which are lying submerged in Palk Strait between Rameshwaram and Sri Lanka.

Recently the Sri Lankan Government had expressed the desire to develop Sita Vatika as a tourist spot. Sri Lankans believe this was Ashok Vatika where Ravana had kept Sita as a prisoner (in 5076 BC).

Indian history has recorded that Shri Ram belonged to the Suryavansh and he was the 64th ruler of this dynasty. The names and other relevant particulars of previous 63 kings are listed in Ayodhya ka Etihaas written about 80 years ago by Rai Bahadur Sita Ram. Professor Subhash Kak of Lousiana University, in his book, The Astronomical Code of the Rig Veda, has also listed 63 ancestors of Shri Ram who ruled over Ayodhya.

Sri Ram’s ancestors have been traced out as: Shri Ram, King Dashratha, King Aja, King Raghu, King Dilip and so on. From Kashmir to Kanyakumari and from Bengal to Gujarat, everywhere people believe in the reality of Shri Ram’s existence, particularly in the tribal areas of Himachal, Rajasthan, Madhya Pradesh and the North-East.

Most of the festivals celebrated in these areas revolve around the events in the life of Shri Ram and Shri Krishna.  

The events and places related to the life of Shri Ram and Sita are true cultural and social heritage of every Indian irrespective of caste and creed. Therefore, it is common heritage.

After all, Shri Ram belonged to the period when Prophet Mohammed or Jesus Christ were not born and Muslim or Christian faiths were unknown to the world.

The words Hindu (resident of Hindustan) and Indian (resident of India) were synonymous. India was also known as Bharat (land of knowledge) and Aryavarta (where Aryans live) and Hindustan (land of “Hindus” – derived from word Indus). 

During Ram Rajya, the evils of caste system based on birth were non-existent. In fact, Maharishi Valmiki is stated to be of Shudra class (scheduled caste), still Sita lived with him as his adopted daughter after she was banished from Ayodhya.

Luv and Kush grew in his ashram as his disciples. We need to be proud of the fact that Valmiki was perhaps the first great astronomer and that his study of planetary configurations has stood the test of times. Even the latest computer softwares have corroborated his astronomical calculations, which proves that he did not commit any error.

Shabri is stated to be belonging to the Bheel tribe. Shri Ram’s army, which succeeded in defeating Ravana, was formed by various tribals from Central and South India.

The facts, events and all other details relating to the life of Shri Ram are the common heritage of all the Indians including scheduled castes, scheduled tribes, Muslims, Christians, etc.

-Prophet Mohammad was born 1,400 years ago.

-Jesus Christ was born 2,000 years back.

-Gautam Buddha was born 2,600 years back,

-whereas Ram was born 7,000 years back.

——————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

May 29, 2024

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

—————

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக் கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்-பாம்பணை சயனம்திரு மெய்யம் 
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்-திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்-பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 

2. விமலாக்குருதி விமானம்  

3. சுத்தஸ்த்வ விமானம்      

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்      

6. வைதிக விமானம்  

7. உத்பலா விமானம்        

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்   

10. வேதசக்ர விமானம்  

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்     

14. ஸ்ரீகர விமானம்      

15. ரம்ய விமானம்   

16. முகுந்த விமானம்- 

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்      

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப் போகிறது.

———
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்-திரு அயோத்தியை-திருக் கண்ணபுரம்–திருக் கோட்டியூர்-திருத் துவாரகை-திரு வடமதுரை-திருக் கோவர்த்தனம்-திரு விருந்தாவனம்-திரு வெக்கா
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –திருக்குறுங்குடி-திருப்பாடகம்–திருப்பேர் நகர்
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –திரு அத்திகிரி-திரு வல்லிக் கேணி-திரு ஆய்ப்பாடி–திருக் கோவலூர்-திரு விண்ணகர்
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்-திரு அட்டபுயகரம் /திருவாலி –/திரு ஊரகம் /திருக்கடிகை /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்–இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

————–

அ காரம் நடுவில் உ காரமும்  ம காரமும் ஏக சிம்காசனம் -பொன்னும் முத்தும் மாணிக்கமும் –
அணி புதுவை தண்  தெரியல்
–ஸ்ரீ மிதிலை பிறந்து ஸ்ரீ அயோதியை புகுந்தாள்
ஸ்ரீ நப்பின்னை கும்பன்  இடம் பிறந்து –ஸ்ரீ ஆய்ப்பாடி புகுந்தாள்  
ஸ்ரீஆண்டாளோ பிறந்த புகுந்த இடம் இது -ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை —
ஸ்ரீ விஷ்ணு சித்தர்–மார்பம் என்பதோர் கோவில் அமைத்து -மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி-ஆர்வம் என்ற  ஓர் பூவை சேர்த்து–

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம்.
அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை:
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும்,
தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க,
சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும்,
அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு- மாதுளம் பூ;
மரவல்லி இலை- கிளியின் உடல்;
இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;
கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;
கட்டுவதற்கு வாழை நார்;
கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.
இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய
இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன.
இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி.
இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர்.
சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மற்றும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில்,
பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும்,
அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
———————————————————————————————————-———————————

ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.

அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.

த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.

கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.

ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்

வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.

கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான்  கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ.  எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.

இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில்  கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு

பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால்

நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.

தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.

துவஜ அவரோஹணம்  – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.

த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக  ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.

சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு  புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.

விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.

பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.

வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.

கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.

ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது

பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.

ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி  ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.

ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.

ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.

நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.

விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது

தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்

கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.

அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம் 

ஸ்ரீ திருவல்லிக்கேணி -ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவ விவரணம்

முதல் நாள் காலை -தர்மாதி பீடம் -ஸ்ரீ உபய விபூதி நாத ஸூசகம் – -ஸ்ரீ முதல் திருவந்தாதி -திரு வீதியில்

மாலை புன்னை மர வாஹனம் -ஸ்ரீ கண்ணன் திருப் புல்லாங்குழல் ஊதும் திருக்கோலம்
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் புத்தூர் பெறாத அன்று
பாரதம் கை செய்த அத்தூதன் -ஸ்ரீ பெரியாழ்வார் -2-1-1-

இரண்டாம் நாள் காலை -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி சேவை –
விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் -71-என்றும் பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்
பாம்பணை மேல் சேர்ந்தாய் -97-என்பதற்கு ஏற்ப சேஷ வாஹனம்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -81-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்

இரண்டாம் நாள் மாலை -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே
என் சிற்றாயர் சிங்கமே -ஸ்ரீ பெரியாழ்வார் –3-3-5-என்பதற்கு ஏற்ப ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள் காலை -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி சேவை -பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன் மேல் கண்டாய் தெளி –57-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கருட வாஹனம் சேவை

ஏகாந்த சேவையில் திருக்கண்டேன் — என் ஆளி வண்ணன் பால் இன்று -1-சேவை

மூன்றாம் நாள் மாலை –உரக மெல்லணையான் கையில் உரை சங்கம் போலே மட அன்னங்கள் –ஸ்ரீ பெரியாழ்வார் –4-4-4-
என்பதற்கு ஏற்ப ஹம்சா வாகனத்தில் பறவை ஏறு பரம் புருடனாக-5-4-2-சேவை
இவன் தானே உலகினில் பேர் இருள் நீங்க அன்று அன்னமதாய்-1-8-10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

நான்காம் நாள் காலை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி சேவை -நீயே எரி சுடரும் -20-என்பதற்கு ஏற்ப –
நான்முகனை படைத்த நாராயணன் -1-என்பதால் பரத்வம் பொலிய ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -ஸூர்ய பிரபையில் சேவை

நான்காம் நாள் மாலை -ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ நாச்சியார் திருமொழி சேவை –
கதிர் மதியம் போல் முகத்தான் -1-என்றும்
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -7-4-என்பதற்கு ஏற்ப சந்த்ர பிரபை சேவை –

ஐந்தாம் நாள் காலை -ஸ்ரீ திருவிருத்தம் சேவை -நாயகா பாவனையில் பூர்ணமாக அருளிச்செய்த
ஸ்ரீ திவ்ய பிரபந்தம் அன்றோ ஆகவே நாச்சியார் திருக்கோலம்

ஐந்தாம் நாள் மாலை -ஸ்ரீ பெருமாள் திருமொழி சேவை –
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை -10-11-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள் காலை -திருச்சந்த விருத்தம் சேவை -ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ -8-என்பதற்கு ஏற்ப
திரு அபிஷேகம் அணிந்து பரத்வம் பொலிய ஆனந்த விமானத்தில் எழுந்து அருளுகிறார் –

ஆறாம் நாள் மாலை ஸ்ரீ முதல் ஆயிரம் நிகமித்து-
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி -28-என்றும்
விண்ணுளார் வியப்ப வந்த ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா -44 -என்பதற்கு என்ற ஆனை வாஹனம்

ஏழாம் நாள் காலை ஸ்ரீ திருவெழு கூற்று இருக்கை சேவிக்கப் பெற்று ஸ்ரீ பெரிய திருமொழி சேவை -என்பதற்கு ஏற்ப திருத்தேரில்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -2-3-1-என்றும்
பார்த்தன் தன் செல்வத் தேர் ஏறி சாரதி -2-10-8-என்பதற்கு ஏற்பவும் திருத்தேரில் சேவை –

எட்டாம் நாள் காலை முதலில் ஸ்ரீ சிறிய மடல் சேவிக்கப் பெற்று பின்பு ஸ்ரீ பெரிய திருமொழி தொடர்ந்து சேவை
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி-என்றும்
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப-3-3-3-என்றும்
ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து -3-9-7-என்றும்
பாடல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமார –4-4-3-என்பதற்கும் ஏற்ப
வெண்ணெய்த் தாழிக் கண்ணனாக சேவை

எட்டாம் நாள் மாலை -ஆடல் மா வலவன் கலிகன்றி பாசுரங்கள் சேவைக்கு ஏற்ப குதிரை வாஹனம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு ஆபரணங்கள் கொள்ளை அடிக்க எழுந்து அருளுவதும் –
ஸ்ரீ திருமந்திர உபதேசம் செய்து திருத்திப் பணி கொள்வதும் –
மீண்டும் வாடினேன் வாடி வருந்தினேன் -முதல் பதிகம் அனுசந்திப்பதும் -முக்கிய நிகழ்வுகள்

ஒன்பதாம் நாள் காலை -மட்டை அடி உதவும் -எட்டாம் நாள் மாலை சேர்த்தியில் எழுந்து அருளி –
வேடு பறியின் போது தொலைத்த திரு மோதிரத்தை தேடிக்கொண்டு தனியாக எழுந்து அருளி –
ஸ்ரீ நம்மாழ்வார் -பெரியவருக்காக பொறுத்தோம் என்பதும் -மின்னிடை மடவார் –திருவாய் மொழி -7-2-சேவித்து

அன்று இரவில் காதில் கடிப்பிட்டு -10-8-பதிகம் சேவை -உத்சவத்தில் பூர்த்தியாலும்
ஸ்ரீ பெரிய திருமொழி பூர்த்தியை முன்னிட்டும் தங்க சப்பரத்தில் எழுந்து அருளி சேவை

பத்தாம் நாள் -துவாதச ஆராதனம் -பூர்ணமாக ஸ்ரீ திருவாய் மொழி திருச்செவி சாத்தி அருளுகிறார்

அன்று இரவில் குளிர்ச்சியாக வெட்டிவேர் திருத்தேரில் புறப்பாடு –
ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் குளிரும்படி ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி சேவை

ஸ்ரீ திருவரங்கம்
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!”

திருவேங்கடம்
“கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு!
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு!
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு!
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு!
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு!
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே!”

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே –

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்

செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும் அடைவதில்லை.

காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் ||

அர்ச்சாவதாரத்தில், இருந்தும் கிடந்தும் நின்றும் பகவான் ஸ்ரீமந் நாராயணன்,
அவன் குழந்தைகளாகிய நம்மைத் திரும்பப் பெறுவதில் வைகுண்டத்தில்
தொடங்கிப் பல திவ்யதேசங்களில்,முயற்சித்தாலும், அவனது திருவுள்ள வேட்கை
பூலோக வைகுண்டத்தில் –திருவரங்கத்தில், வெற்றி அடைந்தது

ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |
ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ தாடீபஞ்சகம்-

May 28, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ முதலியாண்டான்

திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம்

அவதார ஸ்தலம் : பேட்டை

ஆசார்யன்எம்பெருமானார்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

முதலியாண்டான் அருளிச்செய்தவைதாடீ பஞ்சகம்ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)

ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார் (ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர்). மற்றும்  எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின்  த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். குறிப்பு: ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமுடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம்  முதலியாண்டானும்,  ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்
–தனியன்

1)யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடிநிலைகளாக (பாதுகைகளாக) அறியப்படுகிறாரோ, அந்த தாசரதி என்னும் திருநாமம் உடையவரான ஸ்ரீ முதலியாண்டானுடைய திருவடியிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

யச் சக்ரே பக்த நகரே தாடி பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய ஸச் ஸாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

2)யாரொருவர் பக்தநகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி) தாடீபஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தாரோ, அந்த ராமாநுஜருடைய ப்ரியசிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –

————————————————————————————————————————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர  யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

—————————————————————————————————————————————–

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

————————

போம் வழியைத் தரும் என்னும் இன்பமெல்லாம் புசித்து வழிபோய் அமுதவிரசையாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளிவிசும்பை
நண்ணி நலந்திகழ் மேனிதன்னைப்பெற்று
தாம் அமரர் வந்து எதிர்கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப
மாமணிமண்டபத்துச் சென்று
மாமலராள்கோன்
மடியில்வைத்துகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே…

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்

நாம் இறந்தபின்னர் நமது ஆத்மாவானது
பரமபதத்தை அடையும் சிறந்த வழியான அர்ச்சிராதி மார்க்கமாகச்செல்லுகிறது.அந்த வழியில் உள்ள இன்பம் முழுவதையும் அனுபவிக்கிறது.அமிர்தம் நிறைந்த விரஜாநதியில் நீராடிமகிழ்கிறது.ஸம்ஸாரதுன்பம் அனைத்தும் நீங்கியபடி அனைத்து மாசுகளும் கழித்துவிடுகிறது.அதன்பின்னர் பரமபதத்தையடைந்து தனது இயல்பான ஸ்வரூபம் ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ப்ரகாசத்துடன் கூடிய ஸத்வ உடலை(அப்ராக்ருத) எடுத்துக்கொள்கிறது.அதன்பின்னர் நித்யசூரிகளால் வரவேற்கப்பட்டபடி செல்கிறது.நன்கு அலங்கரிகப்பட்ட திருமாமணி மண்டபத்தில் வீற்றுள்ளவனும் தாமரைமலரில் அவதரித்த மஹாலக்ஷ்மியின்
நாயகனுமாகிய ஸ்ரீவைகுண்டநாதனை அடைகிறது.
அவன் அந்த ஆத்மாவையெடுத்து, தனது மடியில்வைத்து உச்சிமுகர்ந்து ஆனந்தம் அடையச்செய்கிறான்.
இப்படிப்பட்ட உயர்ந்த
பேறு என்பது நமக்கு
எம்பெருமானார் ஒருவரால் மட்டுமே அளிக்கக்கூடியது ஆகும்

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கமிருக்க
ஆனந்தமயமான மாமணி மண்டபத்துப்
படியாதுமில் படுக்கையாயிருக்கும் அனந்தன் பணாமணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகு மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை
நல்கு என் எதிராசா!

-🌸ஆர்த்திப்ரபந்தம்
-🌸ஸ்ரீமாமுனிகள்.

எனக்கு ஸ்வாமியாகவுள்ள எம்பெருமானாரே!
ஆதிசேஷன் கருடன் விஷ்வக்சேனர் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் போன்ற பலரும் மணிகள் முத்துக்கள் என்று தோன்றுவதுபோல் வரிசையாக நின்று வணங்கியபடி உள்ளனர். அங்குள்ள திருமாமணிமண்டபத்தில் ஆதிசேஷன் என்ற படுக்கைமீது அவனது படங்களில் உள்ள ரத்தினக்கற்கள் ஜொலிக்க எம்பெருமான் சயனித்துள்ளான்.அவனது வலது பக்கத்தில் அவனை எப்போதும் பிரியாத பெரிய பிராட்டியும் இடது பக்கத்தில் பூமாதேவியும் நீளாதேவியும் பொருந்தியுள்ளனர். இப்படிப்பட்ட மூன்று கொடிகளின் நடுவே மலர்ந்துள்ள தாமரை போன்று ஏழு உலகங்களும் ஆட்சி செய்தபடி உள்ள ஸ்ரீவைகுண்டநாதனை நான் விரைந்துசென்று வணங்கும்படி நீயே அருளவேண்டும்.

பெரியபெருமாளால் கூரத்தாழ்வானுக்குப் பெரியவீடு கிடைக்கப்பெற்று
ஆழ்வான் ஸம்பந்தத்தால்
தனக்கும் பேறு கிடைத்ததென்று
ஆனந்தக்கூத்தாடுதல்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா/
தஸ்ய தாஸரதே:பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம்//

எம்பெருமானாருக்குப் பாதுகையாகவும்
த்ரிதண்டமாகவும் விளங்கும்
ஸ்ரீ தாஸரதி என்றழைக்கப்படும்
ஸ்ரீ முதலியாண்டான்.

ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவ ஸ்வாமிகள் (முதல்வர்கள்), இவரை ஆண்டானாக (ஆளும் பிரானாக) மதித்ததினால், இவர் “முதலியாண்டான்” ஆனார்.

ஆனால் இவரோ, எதிராசருக்கும் அவர்களுக்கும் அடிமையாய் இருப்பதையே விரும்பினார்.

சீதனவெள்ளாட்டி….

ஒரு சமயம் இராமானுசர் இவரைத் தனது ஆசார்யரான பெரியநம்பிகளின் குமாரத்தியான (மகள்) அத்துழாய்க்கு சீதன வெள்ளாட்டியாக (பணிப்பெண்) அனுப்பினார்; இவரும், அத்துழாயின் மாமியார் அகத்தில் ஒரு பணிப்பெண் செய்யும் அடிமைத் தொழில்களை மன நிறைவுடன் செய்தார். இராமானுசரிடம் இவர் கொண்ட ஆசார்ய பக்தி எவ்வளவு மேன்மையானது இதன் மூலம் தெரிகிறது..

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே

———–

பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்து காரியம் மந்த்ரித்து வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி யாதுஞ்சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்தவென்னும் மூன்று முடிக்குரிய இளவரசு….

-ஆசார்யஹ்ருதயம்
-🌸ஸ்ரீ அழகியமணவாளப்
பெருமாள் நாயனார்🌸

ஸகலபரிஜன சேவ்யனாய்க்கொண்டு தன் வீறுதோற்றப் பகலோலக்கமிருக்கையும்
ராஜ்யத்திலுள்ளார் தோஷகுணங்களறிகைக்காக ராத்ரியிலே பிறரறியாதபடி கறுப்புடுத்து
நகரசோதனம் செய்கையும் ராஜ்யத்தில் சிக்ஷைரக்ஷைகளுக்காகக் கார்யவிசாரம் செய்கையும் பின் துஷ்டஸத்வ நிரஸநார்த்தமாக வேட்டையாடுகையும் அந்த ச்ரமமந் தீரப் பூந்தோப்புக்களிலே அபிமத விஷயங்களோடே விளையாடுகையுமாகிற ராஜநீதியானது உபயவிபூதியிலும் ஏகதேசமும் சேஷியாதபடி தன்னுடைய திவ்யாஜ்ஞையை நடத்துமவன்,பேரரசு விசும்பரசு ஓரரசு ஆகிற சௌலப்ய,பரத்வ,ப்ரணயித்வங்களாலே வந்த மூன்று முடிக்குரிய வான் இளவரசு…(ஸர்வேஸ்வரன்).

-🌺ஸ்ரீ மாமுனிகள் ஸ்ரீஸூக்தி🌸

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் கீதா தியான -மஹாத்ம்ய ஸ்லோகங்கள்-ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம்–

May 27, 2024

ஸ்ரீ கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

———

ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-
1-

ஓம்
பார்த்தாயா –பார்த்தனுக்காக
பகவதா நாராயணேந –பகவன் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதி போதிதாம் –தானே உபதேசித்தது
வ்யாஸேந புராண முநிநா-பழமையான முனிவர் வியாஸரால்
க்ரதிதாம் மத்யே மஹா பாரதம் –மஹா பாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப பகவத் கீதே–தாயே பகவத் கீதே
அஷ்ட தச அத்யாயிநீம் -பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டவளே
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் -சர்வம் ப்ரஹ்மாத்மஹம் என்ற அத்வைத அம்ருதத்தை பொழியும் இறைவியே
பவத் வேஷிணீம் -பிறப்பை நீக்குபவளே
த்வாம் அநு சந்ததாமி –உன்னை த்யானிக்கிறேன்

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்

.பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.

—————–

நமஸ் அஸ்து தே வ்யாஸ விசால புத்தே புல்ல அரவிந்த அயத பத்ர நேத்ர
யேந த்வயா பாரத தைல பூர்ண ப்ரஜ்வாலித ஞான மய பிரதீப

வ்யாஸ -வ்யாஸ பகவானே
விசால புத்தே –விசாலமான ஞானம் புத்தி கொண்டவரே
புல்ல அரவிந்த அயத பத்ர நேத்ர –பூத்த தாமரை இதழ்கள் போன்ற திருக்கண்கள் கொண்டவரே
யேந த்வயா பாரத -உங்களால் இந்த மஹா பாரதம்
தைல பூர்ண -எண்ணை ஊற்றப்பட்டு நிறைந்ததான
ப்ரஜ்வாலித ஞான மய பிரதீப –ஞான மயமான ஒளி பரப்பும் விளக்கு என ஒளிர்கிறது
நமஸ் அஸ்து தே –உங்களுக்கு வணக்கங்கள்

அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.

இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவு கூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாச பூர்ணிமா எனப்படுகிறது.

———-

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||–3-

ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக் குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்த சாரதியாக , இன்னொரு கையில் ஞான முத்திரையுடன், கீதை என்கிற பாலைக் கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.

—-

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||-4-

உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.

பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,’ என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப் பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெறத் தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.

பாலைக் கறந்த பின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.

ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
-சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் –
ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை

சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம்

——–

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–5-

இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.

வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்

வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.

ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.

——

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்ய க்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||-6-

பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப் போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.

பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.

சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.

கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

—-

பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.

—-

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.

—-

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

—————————

கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித​: ||

இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

————–

கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||

கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

—————–

மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||

பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

—————–

கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ர விஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||

பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ர விஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

————–

பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||

விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்த பின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

—————–

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​: =  கண்ணனே பால் கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

—————–

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

————-

ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||

ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

———————

ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா
– (மஹா. பீஷ்ம. 43/1)

ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?

————-

ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.

ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.

ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் –
(வராஹபுராணம்)

(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

——————–

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்

பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.

அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.

அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.

ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்

பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

————

ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம்

தாரோ உவாச:

1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ

நிலமகள்-சொன்னது:

பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

ஸ்ரீ விஷ்ணுர் உவாச:

2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே

ஸ்ரீ விஷ்ணு சொன்னது:

கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
அவனே முக்தன், இவ் வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.

3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்

கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.

4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை

கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.

5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:

தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.

6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி

எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.

7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்

கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
கீதா ஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.

8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா

எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.

9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.

10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்

உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.

11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா

முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.

12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்

மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.

13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்

பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.

14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே

வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.

15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்

கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.

17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்

கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.

18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே

மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.

19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.

ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.

20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்

இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.

21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:

கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.

22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்

இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

ஸூத உவாச:

23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்

ஸூதர் சொன்னது:

கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.

இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

————–

கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

————

1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்.
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீயுத்த காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 27, 2024

அஹம் ச ரகு வம்சச்ச லஷ்மணச்ச மஹா பல
வைதேஹ்யா தர்சநே நாத்ய தர்மத பரி ரக்ஷிதா
–1-12-

திருவாய்மொழி – -6-8–1-நல் நலம் –
அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,
ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,
மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,
வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக,
தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?
வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”
‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி
(உழைக்கும்படி – தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.

“அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.

—————-

ஏஷ ஸர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத
மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந
-1-14-

உடனே உண்பன் நான் என்று –பெரிய திருமொழி-5-8-2-
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )

ஒண் பொருள் –
சீரிய அர்த்தம்

திருவாய்மொழி – -4-1-5-ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’ என்கையாலே, கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;
‘அபிமதம்’என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது;
சர்வ ஸ்வபூத : –இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே
எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!
மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –
ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.
மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று
குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி,
இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;
‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ என்பது.

—-

நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா
ஏததேவாநுசோசாமி வயோஸ் யாஹ்யதி வர்த்ததே
–5-5-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-3-4-மங்கை நல்லாய் தொழுதும்  எழு –
ஓம் காண்-
உன் பருவம் நோக்கி அழகிதாக உண்டாகை இறே-கடுகப் புறப்படாய்-என்கிறாள் –

தன்னுடைய பருவம் அழியா நின்ற நின்ற பின்பு
நீ பருவம் நோக்குகிறோம் என்று இருக்கிற இத்தால் பிரயோஜனம் என் –
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே-என்றார் இறே
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா எததேவா நு ஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்திலே வர்த்தியா நின்றாள் -என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
இனி வலிய ரஷசாலே பிரிவும் பிறந்தது –
இனி எங்கனே நாம் சாதிக்கும் படி –என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது கடக்க இருந்தாள் ஆகில் கடலை அணை செய்து நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு கொடுத்து பொகடத் தீருகிறது அக்கார்யம்
நான் இது ஒழிந்த அல்லாத வற்றுக்கும்  வெறேன்
இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது
அது ஏது என் என்னில்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே  –
இவை போல காலம் என் அம்பால் மீள விடலாவது ஓன்று அன்று இறே
அணைக்கு கிழக்கு பட்ட நீரை மீட்கப் போகாது இறே –

திருவாய்மொழி – -2-1-10-புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்-
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்-இனியாவது எம்மை சோரேல்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம் –பின் நின்ற காதல் –கழிய மிக்கோர் காதல் –
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே

—————-

வாஹி வாத யத காந்தா தம் த்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருச
த்வயி மே காத்ர ஸம் ஸ்பர்ச சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம
–5-6-

திருவாய்மொழி….6-8-3-தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ –“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?
த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.
நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” -அற்றது பொருந்தும்படி
வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு.
த்ரௌபதி வார்த்தையால் இற்று விழுந்த மாம்பழம் கொம்பிலே ஒட்டிக் கொண்டதே போலே –
“காணப்பட்டாள் சீதை” “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.
என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.
நிர்பயம் -காற்று காண முடியாதே -வாயு பகவான் போலே இல்லை -உன் மூலம் சீதையை அணைக்கப் பெற்றேனே
சந்த்ரனை -உன்னைக் கண்டால் போலே -சொல்ல வேண்டுமே -காற்றை பார்த்து கண்டாரை கண்டால் போலே –
சந்தரன் தாரகம் போலே உன் ஸ்பர்சம் தாரகம் -ஸ்பர்சம் போலே தர்சனம் –வாயுவைத் திருஷ்டாந்தம் ஆக்கி -என்றுமாம் 

———–

உத்ப பாத கதா பாணிச் சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷஸை–16-17-

திருவாய்மொழி – -4-9-கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது 

————

தீப்த பாவக சாங்காசை சிதை காஞ்சன பூஷணை
நத்வா மிச்சாம்யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் சரை
–16-24-

ஸ்ரீ பெரிய திருமொழி-2-8-2-ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-

தீ வாய் வாளி –திருவாய்–6-10-4-
பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது;
படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை.
ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்து கொண்டு செல்லா நிற்கும்.
குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. -குணம் -நாண்- சாடு -குண ஹீனம் -கிருபா ஹீனம் –
“தீப்த பாவக ஸங்காஸை: – படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.

“தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.
காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.
“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே,
அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.
நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன்.
நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது;
அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே,
தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”
“ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

————–

மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –18-3-

ஸ்ரீ திரு விருத்தம் -42-மித்ர பாவேன-
அவன் பக்கலில் பாவமே அமையும் –
அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-
அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –
இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –
இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

திருவாய்மொழி – -5-1-1-“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே
எம்பார், ‘சர்வ ஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை
அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.

இப்போது கிருபா பரதந்திரனாய் இருந்தானே யாகிலும், சர்வஜ்ஞன் சர்வசக்தி அலனோ, அபராதங்கட்குத் தகுதியாக அவற்றின்
காரியங்களும் பிறவாவோ?-என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “மித்ரபாவேந” என்று தொடங்கி.
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்.” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:3.
இந்தச் சுலோகத்தில் உள்ள “தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,
“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ -என்றும் அருளிச்செய்கிறார்.

———

ஸூஹ்ருதோ வா பவத் விதா –18-15-

திருவிருத்தம் -56–ஸூஹ்ருதோ வா பவத் விதா –நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரியாகி அவனிலும் நம்மை அந்தரங்கராக்கி கார்யம் கொள்ளும் தனை ஸுஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார்-

————

பிசாசாந் தானவான் யஷான் பிருதிவ்யாம் சைவ ராக்ஷஸான்
அங்குல்ய அக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
–18-23-

திருப்பல்லாண்டு -1-கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து -புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ -மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்-
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட-அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்தது-

————

கிம் புநர்மத் விதோ ஜநா –18-25-

திருவாய்மொழி – -6-8-6-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத்
தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும்
என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு.
அது, அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,
‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.
இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:
‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி
கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –
மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –
சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

—————

ஆர்த்தோ வா யதிவா திருப்த ப்ரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா
–18-23-

ஸ்ரீ திரு விருத்தம் -42–ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

(அரும்பதம்
சரணாகதி ஸ்லோகம்
காற்றுத்தானும் வேண்டாவாயிற்று தனது காலின் மேன்மை
அவன் ஸுஹார்த்தம் எதுவுமே வெண்டாதே
ஆபி முக்கிய ஸூ சகமான ஆர்த்த ப்ரபத்தியும் வேண்டா
மானஸ பிரபத்தியும் வேண்டா
மித்ரா பாவேந உண்டே
ஆனால் ஆர்த்த பிரபத்தியோ திருப்த பிரபத்தியோ
சரணம் சொன்ன எதிரியாகவோ -பரேஷாவாக – இருக்கட்டும் -துல்ய விகல்பமாக உள்ளதே
ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே
பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி
அதிகாரி வேண்டுமே
புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும்
தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்
இத்தையே மேல் வியாக்யானம் விளக்கும் )

ஆர்த்தன் ஆகையாவது –
இத் தலையை பெறில் ஜீவித்தும்
பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை– 

த்ருப்தன் ஆகையாவது –
நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே
நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே
நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –

(நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து
கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்
திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி
ஆர்த்த ப்ரபன்னன்
நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழ்வாரைப் போலே சொல்லுவது
நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல் )

(அவனுக்கு உடன் பேறு
இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு
பலம் வேறுபாடு உண்டே என்னில்
இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை
ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே
கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்
18 நாடான் பெரும் கூட்டம் உண்டே )

ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி
எங்கனே எனில்
இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே –
சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –

ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் –
ஆர்த்தி பரிகரமான இடத்தில் –
இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –
ஆகையாலே
ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –

த்ருப்தனுக்கு –
இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது
இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும்
அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –

(விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி
முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க
அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே
நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே
இரக்கமே பரிகரம் என்றதாயிற்று -)

பரேஷாம் கத அரி –
சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –
அதாவது –
உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –
கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே )

ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –
அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க
பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –

ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது –
அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி
ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –

(பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –
கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே )

க்ருதாத்மன-
இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –
தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –
(க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் -தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால் )

திருவாய்மொழி – -6-2-“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

———–

யதிவா ராவண ஸ்வயம் –18-19-

திருவாய்மொழி – -10-2-2-ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா-
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –அது உள்ளது இராவணனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே-
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே-நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே-

———–

ராகவேணாபயே தத்தே ஸன்னதோ ராவண அநுஜ–19-1-

திருவாய்மொழி – -8-7-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலே-

———–

ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி –19-321-

திரு விருத்தம் -42-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –
இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று
பெருமாள் முதலிகள் அடைய கேட்க –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –
2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –
3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –
பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –

சமுத்ரம் –
பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –

ராகவோ ராஜா –
ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே
அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்
இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?

சரணம் கந்து மர்கதி –
வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே
அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –

(அதிகாரி நியமம் இல்லை
கால தேச பிரகார நியதி களும் இல்லை
கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் )

சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய்
(குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று

(அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி
த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி
சாதேவேச்மின் பிரயுஜ்யதாம்
சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும் )

————-

தத சாகர வேலாயாம் தர்ப்பாநாஸ்தீர்ய ராகவ
அஞ்ஜலிம் பிராங்முக க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோ ததே
பாஹும் புஜக போகாப முபதாயாரி ஸூதந
–21-1-

திருவாய்மொழி – -6-9-3-கிடந்தும் –
“பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலைக்கு அணையாகக் கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள்
கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு சமுத்திரத்திற்கு நேர் முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;

“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம்
ஈட்டிலே உள்ளதே -பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்-

திருவாய்மொழி – -2-8-7-கிடந்து –
1-திருப் பாற் கடலிலே கிடந்தபடி யாதல் –
2-அஞ்சலிம் க்ருத்வா –பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்தபடி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும்படி
படுக்கை எல்லாம் திரு வநந்த ஆழ்வான் அம்சம்
அரி ஸூதன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –கிடந்ததோர் கிடந்த அழகிலே-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றாயோ காகுத்தா -இங்கே மல்லணை —

———

ஷமயா ஹி ஸமா யுக்தம் மா மயம் மகராலய
அஸமர்த்தம் விஜாநாதி திக் க்ஷமா மீத்ருசே ஜநே
–21-21-

திருவாய்மொழி – -6-10-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

————

ராம லஷ்மண குப்தா ஸா ஸூக்ரீவேண ச வாஹிநீ
பபூவ துர்த்தர்க்ஷ தரா ஸர்வைரபி ஸூரா ஸூரை
–25-32-

திருவாய்மொழி – -6-9-3-காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற் போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கை வாங்கினேன், (ஸ்வ ரக்ஷணம் தவிர்ந்தேன் )
இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக் கொள்.

“இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.

கடற்கரையிலே விட்ட போது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப் போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனை பேரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ;
உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
(ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்யவம் இல்லாத போது தானே அவன் ரக்ஷித்து அருளுவான் –
முதலிகள் பரிவாலே நோக்கிக் கொண்டு இருந்தார்கள் -பக்தி பாரவஸ்யத்தால் பரிந்து –
பொங்கும் பரிவாலே -தட்டு மாறிக் கிடந்ததே )

—————–

ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபிஷேசித -27-2-

பெரிய திருமொழி-4-6-3–ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே 
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-

ஸ்ரீ மதா
உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது

ராஜ ராஜேன
உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –

லங்காயாம்  அபிஷேசித –
இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்
அவன் பரிகரமாய் இருந்து வைத்து
அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே
இப்படி சொல்லுகைக்கு அடி
அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே
இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ  -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-

————–

அத ஹரி வர நாத ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிசி சரபதி மாஜவ் யோஜயித்வா ஸ்ரமேண
ககந மதி விலாஸம் லங்கயித்வார்க்க ஸூநு
ஹரி வர கண மத்யே ராம பார்ஸ்வம் ஜகாம
–40-29-

திருவாய்மொழி – -7-4-1–பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திரு முன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று
பொறாமையாலே-பொறுக்காத படியாக – மேல் விழுந்தார் அன்றோ?

அத ஹரி வர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸி சர பதிம் ஆஜௌ யோஜ யித்வா ஸ்ரமேண,
ககந மதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரிவர கண மத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

‘அத ஹரி வர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.
நிசி சர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜ யித்வா ஸ்ரமேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதி விசாலம் லங்கயித்வா – பரப்பை யுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்க ஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.
பிறப்புக்கு ஈடாகச் செய்தார். தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ?
ஹரி வர கண மத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’
என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

திருவாய்மொழி – -10-6-8-அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே
பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே
இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்று
பெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32-
திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-
வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-
ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத –
ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது
தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்
பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –
ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-
பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –
நிசிசர பதிம் –
களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி
தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –
ஆஜௌ –
அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –
யோஜயித்வா ஸ்ரமேண-
அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –
ககன மதி விசாலம் லங்கயித்வா –
நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –
அர்க்க ஸூந-
அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –
உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –
ராம பார்ச்வம் ஜகாம-
பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே
நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார்
பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து
திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-
கொழு மணி முடிகள் தோறும் கொண்டன குழுவின் கூட்டம்
அழுதயர் வுறுகின்றான் தன் அடித்தலம் அதனில் சூட்டித்
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ள யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே -கம்பர் வுயுத் மகுட பங்கம் படலம் -27-

—————

த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –41-4-

திருவாய்மொழி – –1-2-6-முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பிராட்டிக்காக கிஞ்சித் அவதி பட்டாய் இதற்கு நிமித்த பூதையான அவளிலும் பிரிய-பிரிய தர -பிரிய தம -இளைய பெருமாள் பரத -சத்ருக்னன்
-இவர்களுக்கு ஜீவனமான என் திரு மேனியும் வேண்டேன் -என்றாரே பெருமாள்
கிஞ்சித் கொஞ்சம் ஆபத்து வந்து இருந்தால் -வாயால் சொல்ல முடியாமல் -சீதை விடுவேன் சொல்லும் வாயால் –

திருவாய்மொழி – -4-5-8-இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.-‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக் கொள்ள வேண்டிற்று?

———–

சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம்

திருவாய்மொழி – -7-1-ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.

———–

சத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வமகமத் கபே -59-118-

திருவாய்மொழி-1-3-1-சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று –வஸ்து ஸ்வபாவம் இருக்கும் படி யாயிற்று இது –

————-

ஸ்மரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர–60-3-

பெரிய திருமொழி-8-1-1-சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா  நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

சிலை –
ஒன்றை இட்டு விசேஷிக்க வேண்டாதே
தன்னையே சொல்ல  அமைந்து இருக்கிற ஸ்ரீ சார்ங்கம் –

—————-

சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜ நீயஸ்ய விக்ரமை
பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ்த்வயா –1
06-6-

பெரிய திருமொழி-2-8-2-வெந்திறல் இத்யாதி -வெவ்விய திறல் உண்டு -பர அபிந சாமர்த்தியம் -அத்தை உடையரான வீரர்கள்
தாங்கள் மடல் எடுக்கும்படியான ஆண் பிள்ளைத் தனம் உடையவர் சக்கரவர்த்தி திருமகனார் –

ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-

————–

உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ப்ராப்தே பரிபவே நம
அத்ய வை நிர்ப்பயா லங்காம் ப்ரவிஷ்டாஸ் ஸூர்ய ரஸ்மய
–114-82-

பெரிய திருமொழி-1-2-2-(ராவணன் பட்டுக் கிடக்க மண்டோதரி-அருளிச் செய்த ஸ்லோஹார்த்தம்-)
ஆதித்ய கிரணங்கள் உள் புகுந்து சஞ்சரியா நின்றன கிடாய் –
இதுக்கு முன்பு இல்லாத ஓன்று இப்பொழுது உண்டாயிற்று கிடாய்-
முன்பு நெல் உலர்த்த வேண்டுவது சஞ்சரித்து போம் இத்தனை யாயிற்று ராவண பயத்தாலே –
இப்போது நிர்பயமாய்க் கொண்டு உலாவா நின்றன –

————

மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந ப்ரயோஜநம்
க்ரியதா மஸ்ய ஸம்ஸ்கார மமாப்யேஷ யாததவ –
114-101-

திருவாய்மொழி – -2-7-சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

———

நிப்ருதஸ் பிரணத் ப்ரஹ்வ–116-

திருவாய்மொழி – -2-7-2-நிப்ருதஸ் -ஒரு அவயவத்திலே எல்லா அவயவங்களை அடங்கும்படி இருக்கை
பிரணத் -வேறு சிலர் எடுக்க வேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை
ப்ரஹ்வ–இப்படிக்கிடந்தோம் என்னுமது நெஞ்சில் நடையாடாது இருக்கை

———–

தாஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயா மீஹ தூர்பலா –116–41-

திருவாய்மொழி – -5-4-5-என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே,
திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப் பட்டவர்களாகையாலே
என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில்,
அது தனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன
‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்து போந்த இப் பெண் பையல்களை
இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன,
“துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள்
கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.”
இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று
“தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய்,
ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-

திருவாய்மொழி – -6-10-10-“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ.
என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித் தர வேணும்’ என்ன,
‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி.
ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.
“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில்,
திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

————-

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருணமார்யேண ந கச்சின் ந அபராத்யதி —
116-45-

பாபாநாம் வா ஸுபாநாம் வா-
இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம்.
நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;
“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.
“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.

இன்று வந்தான் என்றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தானென் றுண்டோ புகலது கூறுகின்றான்
தொன்றுவந்தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.

அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ
நாம் முகம் கொடுக்கவேண்டுவது.
நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கை கொடுக்குமே;
கோ தானம் பசுவின் வாலைப் பிடித்து தாங்களே தாண்டுவார்களே –
கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள்.

வதார்ஹாணாம் –
தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்
தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,
‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்
உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.
“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும்
“நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.

பிலவங்கம-
பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.
அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;
யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;
நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.

கார்யம் கருணம் –
இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்.

ஆர்யேண –
இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.
அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.
“நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.

ந கஸ்சித் ந அபராத்யதி-
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்!
திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ?
நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ?
நீ தான் குற்றவாளன் அல்லையோ?

பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்:
அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்;
தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்;
என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்;
தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்க மாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி;
இத்தனை நாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்?

பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என் பக்கல் தன்றோ குற்றம்?
இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று,
பெருமாள் அருளிச் செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ

இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்!

‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி போக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்;
நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகு வாசல் உண்டோ?’ என்கிறாள்.

—————–

தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதி கூலாஸி மே த்ருடம் –118-17-

திருவாய் -2-3-7- இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி -நேத்ர தோஷத்தால் வந்தது போக்கி தீப தோஷத்தால் வந்தது அன்று -என்று

சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யார்த்தீ சேத் ஸ்வயம் பவேத்
ப்ரசாஸ்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் அகிலாம் ரகு நந்தன
–128-16-

திருவிருத்தம் -51-ஐயர் நியமிக்க ஆச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் ராஜ்யத்தைத் தனக்கே கொடுத்துப் போரச் செய்தேயும் நம்மைப் பின் தொடர்ந்து வந்து சொன்ன நாள் எல்லை கடந்தால் பின்னை ஒரு க்ஷணம் நான் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சில் படுத்திப் போந்தான் -இன்று நாம் சென்று கிட்டினால் பதினாலு ஆண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே நீ முடி சூடு என்றால் -அல்லேன் என்னாதே அத்தை இசையப் பெறுவது காண் –ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு நாம் பிள்ளையை முடி சூட்டிக் கண்டு தீரப் பெறுவது காண்
சநைர் ஜகாம ஸாபேஷா -என்கிறதை ஸாவேஷா -என்று திருத்தி கீழ் விழியால் பார்த்துப் போனார் என்று பொருள் சொன்ன படியைப் பட்டர் கேட்டருளி -அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் உப கரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் -என்னும் அபேக்ஷை யோடே போனார் என்கிறது காண் என்று அருளிச் செய்தார்-

———-

ந ஹி தே ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம்
பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை தர்ம வத்ஸலம் –
128-16-

திருவாய் -9-2-2-ந ஹி தே இத்யாதி -அருகே இருக்கச் செய்தேயும் இவனைச் சூழ இருக்கிற பவ்ரரானவர்கள் இவனை அநுபவிக்கையில் நசை அற்றார்கள் -அதுக்கடி என் என்னில்
ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம் பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை –பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ -இவனோ தான் நமக்குத் தொங்கப் புகு கிறான் என்று இருந்தார்கள்
தர்ம வத்ஸலம் -இதுக்கும் அவனோடு ஒக்கும் -தர்மத்துக்காகத் தன்னை அழிய மாறினான் இறே அவன்-

—————–

ததோ ஹர்ஷ ஸமுத்பூதோ நிஸ்வநோ திவமஸ் ப்ருஸத்
ஸ்த்ரீ பால யுவ வ்ருத்தாநாம் ராமோயமதி கீர்த்திதே
–130-31-

திருவாய் -3-7-3-தம் தாம் கற்பு அழியும் வார்த்தை சொன்னால் -என்று இருக்கும் ஸ்த்ரீகள் -முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலர்கள் –வாய் விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள் -கரண பாடவம் இல்லாத வ்ருத்தர்கள் -இவர்கள் அத்தனை பேரும் வாய் விட்டு ஏத்தும் படி யாயிற்று பெருமாள் அழகு-

————-

ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி –131-80-

திருப் பல்லாண்டு –8-இந்த்ரன் வரக் காட்டிய ஹாரத்தைப் பெருமாள் வாங்கிப் பார்த்து அருளிப் பிராட்டிக்குக் கொடுக்கிற போது அத்தை வாங்கு கிறவள் பெருமாளை ஒரு கண்ணாலும் திரு வடியை ஒரு கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷிதஜ் ஞாஸ்து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் யாகையாலே அவனுக்கு கொடுக்க லாகாதோ என்று அருளினார்
ஸூபகே-அடியார் ஏற்றம் அறிந்து கொண்டாடுகைக்கு ஈடான ஸுபாக்யம் உள்ளது உனக்கே யன்றோ என்ன -உம்முடைய திரு உள்ளத்தாலே யன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி அருளிச் செய்ய நான் முற் பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்க லாகாதோ -என்றார்-

————-

ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம் அபவந் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –
-131-101-

அழகிய மணவாளப் பெருமாள் நாய னார் வியாக்யானம் -அமலனாதி பிரான்-2- -ராமோ ராமோ ராம இதி –பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது அத்தனை என்று இறே நிர்வஹிப்பது
இத் த்ரை வித்யத்துக்குப் பொருள் -1-ரூப ஒவ்தார்ய குணங்களை வென்ற வடிவு அழகும் -2-ரூப ஒவ்தார்ய குணை -என்கிற படியே -அத்தை அனுபவிக்கக் கொடுக்கையும் -3- கொடா நின்றால் இறு மாப்பு அற்று இருக்கையும்
பும்ஸாம் தாருண்யமச -என் கிற படியே ஸ்த்ரீ பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்கிறது –
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆவது
ப்ரஜா நாம் அபவந் –மாதா பிதாக்களுக்கு அன்று -வஸிஸ்டாதிகளுக்கு அன்று -ஜநி தர்மாக்களுக்கு
கதா –லோக யாத்ரை களுக்கு உறுப்பாம் வார்த்தை களும் பெருமாளைப் பற்றி அல்லாது இராது
ராம பூதம் ஜகத் பூத் –ஜகத்தடைய ராம அத்வைதம் ஆய்த்து -ஐததாத்ம்யமிதம் ஸர்வம் –என்கிற பொது அல்ல
ராம பூதம் என்று ராம அத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வைதத்தை வ்யா வர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு வில் கொண்டு லீலா ரஸம் அனுபவிக்கிற காலத்திலேயோ என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –தஹ பச என்கிற காலத்தில்

திருவாய் -7-3-1-ராமோ ராமோ ராம இதி –சோறு சோறு சோறு என்பாரைப் போலே
ப்ரஜா நாம் அபவந் கதா-மநி தர்மாக்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே
ராம பூதம் ஜகத் பூத் –நாடு அடங்க ராம அத்வைதம் ஆன படி
நித்ய விபூதியில் பரி மாறக் கடவது இங்கே பரி மாறுகைக்கு ஹேது என் என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –நாடு அடங்கலும் தம் தாமுடைய கர்ம பலம் புஜிக்கப் பெற்றார்கள் இல்லை –ராம பாக்யமே அனுபவித்து விட்டது-

————

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திச் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி
–உத்தர காண்டம் -1-

அமலனாதி பிரான் -பிரவேஸம் —
ஸ்நேஹோ மே பரமோ -என் தன் அளவன்றால் யானுடைய அன்பு
ராஜன் த்வயி -இது தானும் என்னால் வந்த தன்று -அதுவும் அவனது இன்னருளே
நித்யம் ப்ரதிஷ்டித -இன்று அன்றாகில் மற்ற ஒரு போது கொடு போகிறோம் என்ன
அங்கன் செய்யுமது அன்று -தர்மியைப் பற்றி வருகையாலே
நின்னலால் இலேன் காண் –என்னுமாப் போலே
பக்திச் ச நியதா -ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த நிலை ஸ்நேஹம்
பக்தி யாவது நில் என்ன குருஷ்வ என்னும் படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை
வீர -தன்னைத் தோற்ப்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா இங்கு வெல்ல முடியாது
தானும் வீர னாகையாலே தோற் ப்பித்த துறையைப் பிடித்துப் பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அந்யத்ர -என்கிறது மற்று யாரானும் உண்டு என்பார் என்னுமாப் போலே கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் தனக்கு அஸஹ்யமாய் இருக்கிற படி

திருவாய் -7-5-1-ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்ச நியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;

‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.-

—————

ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷோ ந ராஞ்ஜோ ந ச ராகவஸ்யா
வந ப்ரவேஸே ரகு நந்தனஸ்ய மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத் –
அயோத்யா காண்ட ஸ்லோகம் -இப்போது இந்த ஸ்லோகம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை

ஓர் பழி –திரு நெடும் தாண்டகம் -12-
அத்விதீயமான பழி –

(இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.)

(‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.)

ஏ பாவமே
இவள் குறையும் அன்று
அவன் குறையும் அன்று
நான் பண்ணின பாபமே இதுக்கு ஹேது என்கிறாள் –

ந மந்தராயா -இத்யாதி –
இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதை மந்தரை என்று நினையா -அவளுடைய தோஷம் அன்று
அவள் வார்த்தை கேட்ட கைகேயி தோஷம் என்று நினைத்தான்

ந ச மாதுரஸ்ய-இவளுடைய தோஷமும் அன்று –
இவள் வார்த்தையைக் கேட்ட சக்கரவர்த்தி தோஷம் என்று நினைத்தான் –

தோஷோ ந ராஜ்ஞா-ராஜாவுக்கு ஒரு தோஷம் இல்லை
அவன் வார்த்தை கேட்டு -தமக்கு வகுத்த அபிஷேகத்தை பொகட்டு காட்டிலே போன அவர் குற்றமே இத்தனை –

ந ச ராகவஸ்ய -அவருக்குத் தான் குற்றம் என்
அவர் அபிஷிக்தராய் அனுகூல வ்ருத்தி பண்ண கடவனாய் இருக்க
அதுக்கல்லாத என் பாபமே இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதம் –

வனப்ரவேச ரகு நந்தனஸ்ய -இக்குடி வாழப் பிறந்த செல்வப் பிள்ளை
வனவாசம் பண்ணுகைக்கு நிமித்தம் என் பாபமே யாம் இத்தனை –
கூனி சொன்னது கைகேயி கேட்க வேண்டா
அவள் சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டா
அவன் சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டா

கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது-அடியாத்தி யாகையாலே
கைகேயி சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில்
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்ன வார்த்தையை
பர்த்தாவுக்கு கேட்க வேணுமோ –

சக்கரவர்த்தி சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில் –
தர்ம ஆபாசத்தை ஆலம்பனம் ஆக்கிக் கொண்டு
ஸ்திரீ பாரதந்த்ர்யத்தாலே பிரமித்து சொன்ன வார்த்தையை பெருமாளுக்கு கேட்க வேணுமோ
தம்முடைய அந்ய வ்யதிரேகங்களில் நான் படும் பாடு அறிவர் தாம் ராஜ்ய ப்ராப்தர் என்னும் இடம் அறிவர்
ஆன பின்பு அவனைக் கட்டி இட்டு வைத்து ராஜ்யத்தை ஆளத் தட்டேன் –
அவன் சொன்ன வசனத்தை அநாதரித்து -ராஜ்யத்தை ஆண்டார் ஆகில்
தம்முடைய வ்யதிரேகத்தில் நான் முடியாத படி ரஷித்தார் ஆகில் ஆயத்தே
ஆகையால் என் பாபமே இதுக்கு நிமித்தம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான் —

(நானே தான் ஆயிடுக
இல்லாத குற்றத்தை இருப்பதாக ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே இருப்பதாக இசைவதே
நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்)

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 25, 2024

அவ்யக்த ரேகாமிவ சந்த்ர ரேகாம் பாம் ஸூப்ரதிக்தாமிவ ஹேம ரேகாம்
ஷதப்ரரூடாமிவ பாண ரேகாம் வாயு ப்ரபந்நாமிவ மேகரேகாம்
–5-26-

நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

———

பபூவ புத்திஸ்து ஹரீஸ் வரஸ்ய யதீத்ருசீ ராகவ தர்ம பத்நீ
இமா யதா ராக்ஷஸ ராஜ பார்யா ஸூஜாதமஸ்யேதி ஹி ஸாது புத்தே
–9-13-

ஏர் கொள் இலங்கையை –2-9-10-
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை –அஹோ வீர்ய மகோ தைர்யம் -என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –திருவடி மதித்த ஐஸ்வர்யம் அன்றோ –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே –சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –

————-

பைங்காம ந அலங்காரம் வி பங்காமிவ பத்மிநீம் –15-20-

திருவாய்மொழி – -2-1-6-நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

————

துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யதநயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந துக்கே நாவ ஸீததி —
15-32-

திருவாய்மொழி – —வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
துன்பம் பின்பு இன்பம் என்று குகனை நம்ப வைத்து பிரிந்தீர் -பிரிந்த பின்பு சேர இவள் இருக்க வேண்டுமே -மடவரல் –
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார் -வெளித் தோற்றத்தில் அழகன் –
ராமன் -இப்படிப்பட்ட தசையிலும் ரமியப்பண்ணும்-தானும் ஆனந்தப்பட்டு -வாயு குமாரன் திருப்தி பட்டர் -தமப்பன் பண்ணின உபாகாரத்தை ஸ்மரிப்பித்து
-பிராணன் இவளுக்கு இருக்கும் படி செய்த உபகாரம்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
சோகம் என்னும் அக்னி சுடாதே சொல்ல வில்லையே -விரஹ அக்னி யால் முடிந்து இருக்க வேண்டாமோ -தாசோஹம் சொல்ல வைத்த கடாஷம்
பிரபு –ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -பரதந்த்ரன் அல்லனே –
பெண் பிறந்தார் தானே முடிந்து பிழைக்க முடியாது –போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது –ஆயதனம் -வாசஸ் ஸ்தானம்
தேஹம் -வளரும் -சரீரம் தேயும் -பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்-பவன சம்பவ த்ருஷ்ட்வா -வாயு குமாரன் திருப்தி -நல்ல வேளை இவள் உடம்பில் இருந்து பிரியாமல் இருந்ததால் -வாயுவை -உபகாரகன் என்கிறார்-

———

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட பவந ஸம்பவ
ஜகாம மனஸா ராமம் ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –15-53-

திருவாய்மொழி -2-4-2-ஜீயர் அரும்பதம்-

இப்படி நிந்தித்தவன் தானே அநந்தரத்தில் கொண்டாடத் தொடங்கினான்
ஏவம் -க்ஷண கால விஸ்லேஷ அயோக்கியமான வஸ்துவாக
ஹ்ருஷ்டோ ராமம் மனஸா ஜகாம-இப்படி அவளைப் பிரிந்த பெருமாள் ப்ராணனைத் தரித்து இருந்தது நம்முடைய பாக்ய பலம் இறே என்று ஹ்ருஷ்டானானான் -என்றபடி
ராமம் -இப்படிப்பட்ட திசையிலும் நம்மை நோக்கி வைத்து நம்முடைய மனஸ்ஸை ரஞ்ஜிப்பிப்பதே என்று புத்தி பண்ணினான் என்றபடி
பவந ஸம்பவ-தம்முடைய தம்மப்பன் பண்ணின உபகாரத்தை ஸ்மரித்தான் ஆயிற்று
ப்ராண வாயு முகேந விடாமல் இருந்தவன் இறே உபகாரகன்
ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –இப்படி இவன் தரித்து இருந்ததற்கு நிபந்தநம் பிரபுத்த்வம் இறே என்று பிரபுத்வத்தைக் கொண்டாடத் தொடங்கினான்
தம் -பிரபுத்வத்தின் பெருமை இருந்தபடி என்றான் என்றதாயிற்று-

————–

த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் ஸீதாயா நாப்னுயாத் கலாம் -16-14-

ஈடு -6-2-6-மூன்று லோகத்தையும் அத்தோடு விஸ்வ ஸப்த வாஸ்யனானவன் தன்னையும் கூட ஒரு தட்டாக்கினால் பிராட்டியினுடைய ஒரு கலா மாத்ரத்துக்கு இடை நிற்க மாட்டாது-

——

ஸர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் கருதா
அசிந்தயித்வா துக்கானி ப்ரவிஷ்டா நிர்ஜனம் வநம்
-16-19-

பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

————

நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பலத்ருமாந்
ஏகஸ்த்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி —
16-25-

ஈடு -5-5-5-ராக்ஷஸீ தர்சனத்தோடு புஷ்ப பலத்ரும தர்சனத்தோடு வாசி அற்று இருக்குமது காணும் இவளுக்கு-அருகு இருந்தவர்களையும் பாராளாயிற்று-

———

இமாம ஸீத கேஸாந்தம் சத பத்ர நிபேஷணாம்
ஸூகார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந –
16-23-

திருவாய் -5-9-1-வைகலும் வினையேன் மெலிய –-“இமாம் அஸித கேஸாந்தாம்-
மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –
ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்-
அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா-
இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:-
இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”
இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி.-

———-

ஹிம ஹதநலி நீவ நஷ்ட சோபா வ்யஸன பரம்பரயாதி பீட்யமாந
ஸஹ சார ஹிதேவ சக்ர வாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தஸாம் ப்ரபந்நாம் –16-30-

திருவாய்மொழி – -6-2-

பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.-

———–

தஹந்தீமிவ நிஸ்வாஸைர் வ்ருஷான் பல்லவ தாரிண –17-29-

திரு நெடும் தாண்டகம் -12- திருவடி லௌகிக அக்னியால் ஊரைச் சுட்டான் -இவள் விரஹஅக்னியால் அசோக வநிகையைச் சுட்டாள்

திருவாய் -7-2-2–நெடு மூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள் -பல்லவ தாரிகளாய் இருக்கை அப்போது இவளுக்குப் பகை இறே -ஒருபடிப் பட்டு நின்று நலிகிற படி இறே அவை -ராக்ஷஸிகள் உறங்கும் போதும் உண்டு இறே உருவ இப்படியே நிற்கிற வித்தனை அவை-

—————–

மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –
-21-19-

மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –21-19-
பெருமாள் திருமொழி -5-5–அன்று கண்டால் போல் கையும் வில்லுமாய் நிற்பர் -அவனுக்கு அச்சத்தாலே -தமக்கு உருவு வெளிப்பாட்டாலே – முன்னே நிற்பர்
தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் கிருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாக்க கொண்டு -புருஷர்க்ஷப –நீ அநுகூலனாய் ஓரடி வர நின்றால் அத்தையே நினைத்து நீ பண்ணின அபராதம் எல்லாம் புத்தி பண்ணுவரோ -அவர் புருஷோத்தமர் காண்-

திருவாய்மொழி – -3-6-

பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

திருவாய்மொழி – -8-1-1-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
எவன் குற்றம் செய்யாதவன் -என்பாரும் அருகே இருக்க நான் வருந்த வேண்டிய காரணம் ஏன் –
பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்-

—–

க்யாத ப்ராஞ்ஞா க்ருதஞ்ஞ ச ஸ அநு க்ரோசச்ச ராகவ
ஸத் வ்ருத்தோ நிர் அநு க்ரோஸஸ் சங்கே மத் பாக்ய ஸம் ஷயாத்
-26-13-

திருவாய்மொழி – -8-1-ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-

——-

பக்ஷி ச சாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புநஸ் புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாச முதீரயாந புநஸ் புநஸ் சோதயதீவ ஹ்ருஷ்ட
-27-51-

திருவாய்மொழி – -6-2-1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

————-

ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூமித்ரே ஹா ராம மாத ஸஹ மே ஜநந்யா
ஏஷா விபத்யாம்யஹ மல்ப பாக்யா மஹார்ணவே நேளரிவ மூட வாதா –
-28-8-

திரு நெடும் தாண்டகம் –16- ஹா ராம -என்று போக்கிய வஸ்துவை நினையா ஹா லஷ்மணா என்று புஜிப்பாரை நினையா ஹா ஸூ மித்ரே என்று நிமித்த பூதரை நினையாக் கூப்பிட்டாள் இறே-

———-

அநந்ய தைவத்வம் இயம் ஷமாச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருதக்நேஷ்விவ மானுஷாணாம்

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –4-6-10-

வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி

‘அநந்ய தைவத்வம் –
‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம் உண்டு, அது காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா –
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரிய பெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன். (ஸஹ பதன்யா விசாலாக்ஷி நாராயணன் உபகமனத் )
இயம்க்ஷமாச –
இராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும்
பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌச ஸய்யா –
‘இத் தரைக்கிடை கிடந்ததும் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ் தர்மமே –
‘காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது,
‘பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால்
உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் –
‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் –
தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –
‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை?
அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் –
‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

————

விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கஸ்ஸித் ஸஸ்த்ரஸ் யவா வேஸ்மநி ராக்ஷஸ்ய –28-16-

திருவாய்மொழி – -5-4-

எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.

————-

நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –28-17-

பெரிய திருமொழி -3-6-1–எரிகிற நெருப்பைச் சென்று கிட்டுவாரைப் போலே -ஓங்கிப் பரப்பு அடங்கலும் புஷ்பிதமாய்க் கிடக்கை
ஆஸ ஸாத –தன் ஜீவனத்தில் நைராஸ்யம் விளைந்தமை தோற்றி இருக்கிறது

நாச்சியார் திருமொழி -9-5- நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –ஆற்றாமை கரை புரண்டால் தீப்பாய ஒருப்படுமா போலே
நேமாந் புஷ்ப பலத்ருமாந் -என்னும்படி இறே இவளுக்கு இருக்கிறது –

————

ததா கதாம்தாம் வ்யதி தாம நிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீ நமாநஸாம்
ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நாம் ஸ்ரியா ஜுஷ்டம் இவ உப ஜீவிந
-29-1-

திருவாய்மொழி – -6-2-ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

———–

ஸா திர்யகூர்த்வஞ்ச ததாப்யதஸ்தாத் நிரீக்ஷ மாணா தமசிந்த்ய புத்திம்
ததர்ச பிங்காதிபதேர மாத்யம் வாதாத்மஜம் ஸூர்ய மிவோதயஸ்தம் –
-31-19-

திருவாய்மொழி – -2-4-1-எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே-
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வதந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –

————-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம்
புண்டரீக பலாசாப்யாம் விப்ர கீர்ண மிவோ தகம்
–33-4-

திருவாய்மொழி – -2-4-1-கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
முடியானேயில் கரணங்கள் அவையாக -பையரவணைப் பள்ளியினாய் –சஷூர் ஸ்ரவக -கட்செவி –
மல்கி –மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது– ஆர்குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு-

———–

ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபிந –33-16-

திருவாய்மொழி – -5-3–6-வாசு தேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு.
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது
‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ?
பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

————-

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஞாநா மானுஷாந் போகான் ஸர்வ காம ஸம்ருத்திநீ
–33-18-

திருவாய்மொழி – -7-3–பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.-

அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

——————

ப்ரா கேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன
பூர்வஜஸ் யாநு யாத்ரார்த்தே த்ரும சீரை ரலங்க்ருத –
-33-29-

முயற்றி சுமந்து–பெரிய திருவந்தாதி -1-
அடிமை செய்கையில் ஒருப்பட்டு

ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்

ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )

மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்

ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்

மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்

பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )

————–

ஸ்வப்நேபி யத்யஹம் வீரம் ராகவம் ஸஹ லஷ்மணம்
பஸ்யேயம் யதி ஜீவேயம் ஸ்வப்நோபி மம மத்சரீ –
-34-21-

நாச்சியார் -6-1- பிரவேசம்–பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது –
அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –

ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ச்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து
முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –

தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே
சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இறே

————-

ராம கமல பத்ராஷ ஸர்வ சத்த்வ மநோ ஹர
ரூப தாக்ஷிண்ய ஸம் பன்ன ப்ரஸூதோ ஜனகாத்மஜே
-35-8-

தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்–திருவாய்மொழி – -2-2-5-
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை –ராமயதீ ராமயா –
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ -கைமுதிக நியாயம் –
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே –அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே –சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
இப்படிப்பட்ட அவர் அழகை நீர் ஒருத்தியே சொல்லலாம் -நீர் அவனுக்கு ஏற்ற அழகு என்றுமாம் –

—————–

ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லஷ்மணே நேரிதம் வச
ததா ஸீந் நிஷ்ப்ரபோத்யர்த்தம் ராஹு க்ரஸ்த இவாம் சுமான் –
-35-36-

திருவாய்மொழி – -5-3-1-பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளைய பெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க,
அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வை வர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று;
“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :ததாஸீத் நிஷ்பிரப:
அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்” – ஸ்ரீராமா. சுந். 35 : 36-
(ஸூர்ய புத்ரன்-ஸூ க்ரீவன் / இந்திரன் புத்ரன் வாலி /ராகு பிடிக்க பிடிக்க மாறுவது போலே -)
“அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசா மகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ
பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும்,
பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ
‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று.
அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசா மகோசரம் என்றபடி.

———-

ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ் யேவம் சமஜாயத –35-52-

திருவாய்மொழி – -5-9-5–

நல் நலம் தோழிமீர்காள்-
நலமாவது,
இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,
தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.

(ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்
அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ என்னும் நினைவால் இந்த திருஷ்டாந்தம் )

“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்
“வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-உண்டாயிற்று?” என்றது,
குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும்
இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;
சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,
மேல் இதற்குக் காரணம் சொல்லுகிறான்.

“இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;”
“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.
தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே
இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

அதாவது,
1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு
அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.
2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு
இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;
இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.
“ஏவம் ஸமஜாயத –

“ஏவம் ஸமஜாயத – இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று வகையாகப் பாவம் அருளிச் செய்கிறார். அவற்றுள்,
முதலது,
‘தங்களையும்’ என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக் காரியத்திற்கு அடியேன்
வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.
இரண்டாவது பாவத்தை அருளிச் செய்கிறார்
‘இளைய பெருமாள் அடிமையில்’ என்று தொடங்கி. என்றது,
தம்பியான இளைய பெருமாளுடைய அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த ரங்கர்,
இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று தொடங்கி.
மூன்றாவது கருத்தை அருளிச் செய்கிறார்
‘தங்கள் அளவிலும்’ என்று தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
தங்களுடைய ஐஸ்வர்யத்தைக் காட்டிலும், அதிகமான ஜஸ்வர்யத்தை யுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி.
மேல் வாக்யத்தை விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’ என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்;
காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி என்னுதல்.
இவ்வாறு உண்டாயிற்று”-
இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.

———–

க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸ பர்த்துர் கர வி பூஷணம்
பர்த்தாரமிவ ஸம் ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத்
–36-4-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-

வீணை முலை மேல் தாங்கித் –
வீணையை ஸ்பர்சித்த வாறே -காந்தனானவன் சம்ஸ்லேஷ தசையில்
தன்னுடைய போக்யதையும் இவளுடைய போக்யதையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படியை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான தோளை சாஷாத் கரித்து –
அதுக்கு ஆஸ்ரயமான வடிவை சாஷாத் கரித்து
அவனை சம்ஸ்லேஷ தசையிலே தன் மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள் –

இவ் வீணையை அவனாக நினைக்கக் கூடுமோ -என்னில் –
க்ர்ஹீத் த்வா ப்ரேஷமாணா ச பர்த்தும் கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்பிராப்தா ஜானகி முதிதாபவத் -என்று
பிராட்டி பெருமாளை பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே அனுபவித்தாள் இறே –

(“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.)

க்ர்ஹீத்வா –
தேசாந்தரம் போன பந்துக்களைக் கண்டால் போல் மேல் விழுந்தாள் –

ப்ரேஷமாணா –
வைத்த கண் மாறாதே பார்த்துக் கொண்டு இருந்தாள் –

ஸா
இவன் வரவை ராவணன் வரவாக சங்கித்தவள் கிடீர் இப்படி மேல் விழுந்தாள் -என்கிறான் –

பர்த்தும் கர விபூஷணம் –
அடியில் தன்னைக் கைப் பிடிக்கும் போது தன் கையில் உறுத்தின மோதிரத்தை

அங்கன் அன்றியே
தானும் அவரும் சம்ஸ்லேஷித்த போது போகத்தின் மிகுதியாலே
ப்ரணய ரோஷம் தலை எடுத்து ஒருவரை ஒருவர் முகம் பாராதே யூடி இருப்பார்கள் –
அப்போது இருவரையும் சேர்த்து வைத்த மோதிரம் -என்னுதல் –

அதாவது
அப்போது நேர் முகம் பார்க்கையும் வார்த்தை சொல்லுகையும் இருவருக்கும் அபேஷிதமாக இருக்கும் –
வேறு சேர்ப்பார் இல்லையாகையே கையில் திரு வாழி மோதிரத்தை கழற்றி
பெருமாள் தரையிலே விழ விடுவர் –
அப்போது தான் அம் மோதிரத்தை விழ விட்டீர் காணும் என்னும் வார்த்தையை உண்டாக்கின
மோதிரம் ஆகையாலே கடகமான மோதிரம் –என்கிறது –

பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா –
திரு வாழி மோதிரத்தைக் கண்டவாறே பெருமாள் கையை நினைத்தாள்
அதுக்கு ஆஸ்ரயமான தோளையும்
அதுக்கு ஆஸ்ரயமான வடிவையும் -நினைத்தாள் –
சந்நிதியில் அவரைத் தழுவிக் கொள்ளுமா போலே திரு வாழி மோதிரத்தைக் கொண்டாள்

பர்த்தாரம் இவ –
அவள் பெருமாளாகவே தழுவிக் கொண்டாள் –
இவன் பர்த்தாவைப் போலே என்கிறான் –

ஜாநகீ முதிதா பவத் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் உகவா நின்றாள் –
உதர்க்கத்தில் என்னாய் விழப் போகிறதோ என்று பீதன் ஆகிறான் ரிஷி
தாங்கி வைத்தது -என்னாதே -தாங்கி -என்கிறது –
சம்போக தசையில்
அபூர்வ வத் விஸ்மய மாததா நயா- என்கிறபடி
தன் போக்யதையாலே குமிழ் நீர் உண்டு தளர்ந்த தசையிலே
அவனைத் தன் கையாலே எடுத்து
அணைத்துக் கொள்ளும்படி ஸ்மரதி விஷயமாக அவனை நினைத்து
வீணையை எடுத்து முலையில் தாங்கின படி –

(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.)

திருவாய்மொழி – -6-2-இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான்-)

————-

தத ஸா ஹ்ரீமதி பாலா பர்த்துஸ் ஸந்தேஸ ஹர்ஷிதா
பரி துஷ்டா விஸாலாஷீ ப்ரியம் க்ருத்வா ப்ராஸம்ஸத மஹா கபிம்
–36-6-

ஸ்ரீ பெரிய திருமொழி-3-6-1-ததஸ்தா
திருவடி ராம விருத்தாந்தம் சொல்ல கேட்ட அநந்தரம் உளள் ஆனாள் –
திதிர்மிணி தர்மாஸ் சிந்த்யந்தே -இதி யாயேன
சத்தை உண்டாக உண்டாக மது உண்டாயிற்று
பாலா –
ஹர்ஷம் பொறுக்க ஒண்ணாதவள் ஆயிற்று
பர்த்து சந்தேச ஹர்ஷிதா –
ரஷகரான ராம விருத்தாந்தம் கேட்டு ஹ்ருஷ்டை யானாள் –
பரி துஷ்டா –
அந்த ஹர்ஷம் புற வெள்ளம் இட்டபடி
விசாலாஷீ ப்ரா சம்சத –
ஏத்தத் துடங்கினாள்
மஹா கபிம்-
கடலை வற்ற இறைக்கக் கோலுருவாரைப் போலே-

————-

குசலீ யதி காகுத்ஸ்த்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நி ரிவோத்தித
–36-13-

இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனை யன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

————–

ந சாஸ்ய மாதா ந பிதா ந சாந்யா ஸ்நேஹாத் விசிஷ்டோஸ்தி மயா ஸமோவா
தாவத் த்வஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய
–36-30-

திருவாய்மொழி – -5-4-3–“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே
‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய,
‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,
அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று,
அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது
தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;
அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும்
பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;
பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,
எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;
தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று,
அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –
நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.
“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள்,
இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து,
அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் –பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:
ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.
அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

———-

இதீவ தேவீ வசனம் மஹார்த்தம் தம் வாநரேந்த்ரம் மதுரார்த்த முக்த்வா
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வஸோபிராமம் ராமார்த்த யுக்தம் விரராம ராமா
–36-31-

“இதீவ-மேலே நெடும் போது சில பாசுரமிட்டுச் சொல்லிக் கொடு போந்தான்;
பிரணய தாரையில் ஓடுமது இருடிகளாயிருப்பார்க்கு நிலம் அன்றே? இப் புடைகளிலே என்கிறான்
தேவீ – வல்லபைகளுடைய பரிமாற்றம் கடக்க நிற்பார்க்குத் தெரியாதே அன்றோ.
வசனம் மஹார்த்தம் – கடக்க நிற்பார்க்கே அன்று; தேசிகரானவர் தங்களுக்கும் தெரியாதிருக்கை.
தம் வாநரேந்திரம் – இவனோடு ஒக்கக் கடவார் ஒருவரும் இலர்.
சேஷத்துவத்திற்கு முடி சூட்டப் பட்டார் மஹாராஜரே யாகிலும், பாரதந்திரியத்தின் எல்லையிலே நின்றான் இவன் என்கை.
இவ் வளவிலே இவள் முகம் பார்த்து வார்த்தை சொல்லப் பெற்றிலர் அன்றோ அவர்.
மதுரார்த்தம் – நிலம் அன்று என்னாக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கை.
உக்த்வா – அவனும் அவன் உடையவர்களும் வாழும்படி வார்த்தை சொன்னாள்.
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம் – ‘அழிந்தாரை ஆக்க வல்லன்’ என்னுமிடம் கண்டாள்;
தான் அழித்த தலை உண்டாம்படி வார்த்தை சொல்ல வல்லமை கேட்க வேணும் என்று இருந்தாள்.
நிர்த்தயர் ஸ்வார்த்தர் -வார்த்தை சொல்லி அழித்தது -அவை இல்லாமை வார்த்தை சொல்லுவான் என்று
எதிர்பார்த்து இருந்தது போலே இங்கும் பராங்குச நாயகி -நிர்தோஷராம் படி வார்த்தை சொல்லுகை –
ராமார்த்தயுக்தம் – இராமபிரானாகிற பிரயோஜனத்தோடு கூடியது;- தன் காரியம் செய்து தலைக்கட்ட வல்லான் ஒருத்தன்.
விரராம – நெடும்போது தான் வார்த்தை சொல்லுகையினாலும், ஸ்வாமி வார்த்தை சொல்லும் போது
மேலிட்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையினாலும் பேசாதே இருந்து அவனுக்கு இடம் கொடுத்தாள்.
ராமா – இவ்விட்டு நீட்டுகை ஒழிய வார்த்தை சொல்லாதே இருக்கிற போதை அழகை
அவர் தாம் காணப் பெற்றிலோம்,” இவனும் அடர்த்து வார்த்தை சொன்னான்.
இவ் விட்டு நீட்டுகை ஒழிய-இவள் வார்த்தை நேராக பெருமாள் கேட்காமல் திருவடி மூலம் தானே கேட்கப் பெற்றார்-

————–

நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே ராம கமல லோசநே –36-33-

திருவாய்மொழி – -10-8-9-நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-

———-

ந மாம்ஸம் ராகவோ புங்க்தே –36-41-

உண்ணாது உறங்காது –11-7-நாச்சியார்-உண்ணாது-
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே
பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே
அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –

உறங்காது –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே –
கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று-

——

அ நித்ரஸ் ஸததம் ராம ஸூப் தோபிஸ நரோத்தம
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்த்யதே
–36-44-

இன வேல் நெடும் கண்கள் –நாச்சியார்-5-4-
அநித்ரஸ் சத்தம் ராம -என்று அவன் படக் கடவ பாட்டைக் கிடீர் நான் படுகிறது
இக் கண்ணுக்கு இலக்கானார் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து
ராம அநித்ர
செல்வப் பிள்ளைகளாய் இருப்பார் பாதிப் போது நித்ரை யோடு யாய்த்து போது போக்குவது
இப்படி இருக்க நித்ரை இல்லை யாய்த்து

சிறிது போது உறங்கி சிறிது போது உணர்ந்து தான் இருப்பாரோ என்னில் –
சத்தம் அநித்ரஸ் ஸூ ப்தோஅபி ச –ஆனால் இது என்சொல்லிற்று ஆகிறது எனில் –
உணர்ந்து இருக்கச் செய்தே உணர்த்தி அற்று இருக்கும் படியைச் சொல்லிற்று யாயிற்று
பராகார்த்த அனுசந்தான பாவம் இருந்தபடி

நரோத்தம -அபிமத விஷயத்தை பிரிந்தால்
இப்படி அநித்ரையாலே நோவு படுக்கை காணும் புருஷோத்த மத்வம்-ஆவது-ந சே தேன விநா நித்ரம் லபதே புருஷோத்தமே -பால -19-29-

திருவாய்மொழி – -2-4-5–இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -செல்வம் -சம்பத் –சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து –ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –

ராமயதிதி ராம -ஸுவ வியதிரக்தரை ஆனந்திப்பிக்க -தான் தூங்கி ஆனந்தம் -அடைய விரோதம் -சிநேகத்துக்கு கொத்தை -தூங்குகிறார் –
வியத்திரிக்த பதார்த்தங்களில் கண் வைக்காமல் பிராட்டியையே நினைத்து இருப்பார் –சததம்  அனித்ர -எப்போதும் தூக்கம் இல்லாமல் –
கால விசேஷ நிர்த்தேசம் இல்லை -தூக்கமே தெரியாது என்பதால் –சததம்  –இப்பொழுது தூங்காமல் இருப்பதால் -நித்ரா அயோக்யதா –
காலை சந்த்யாவந்தனம் பண்ண வில்லை -காலையில் பண்ண வில்லை -என்பதே அர்த்தம் போலே
மகா ராஜர் இளைய பெருமாள் இடம் பிராட்டி நிமித்தமாக உசாவி -விசாரித்து துக்கம் மிக்கு மயங்கி தூங்கி -என்றவாறு
காதல் இன்மை என்பதும் இல்லையே –

நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –

————

ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப –38-24-

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –-திருவாய்மொழி – -5-8-1…-

பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள்
என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,

வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’ என்று தொடங்கும் வாக்கியம்.

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.
‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.

————

கஸ் க்ரீடதி ஸரோஷேண பஞ்ச வக்த்ரேண போகிநா –38-26-

மணியே மணி மாணிக்கமே மது சூதாபணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-
திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

கக்ரீடாதி -(ககா க்ரீடேதி -காகாஸூர வ்ருத்தாந்த ஸூந்த்ர -ஸ்லோகம் )
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரத்தாலே
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு -நான் இருந்தேனே -என்கிற போதை
சீற்றம் தோற்றி யாயிற்று வார்த்தை அருளிச் செய்யும் போது இருப்பது

கக்ரீடாதி –
தோற்ற அரவிலே முடிக்க வல்ல தொரு மகா சர்ப்பம்
உறங்குகிறவற்றை எழுப்பி
அத்தோடு போது போக்கி பிழைக்கப் புகுகிறவன் தான் ஆர் –

சா ரோஷேண-
அதுக்கு ஆற்றல் உண்டாக பெற்றிடம் ஜீவிப்பார் உடைய பாக்யத்தாலே யாயிற்று –

பஞ்ச வக்த்ரேண
ஐந்தலை நாகம்

போகி நா –
அது எல்லாம் வேணுமோ
வடிவைக் காண அமையாதோ முடிகைக்கு –

ப்ரக்ருதயா தர்ம சீலரானவாறே இப்படிச் சொல்லுகிறார் –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –
(ஆஸ்ரித பக்ஷ பாதி
ஆஸ்ரித விரோதிகள் இடம் கோபித்த இடம்
தர்ம சீலன் -ராமனுக்கும் பலிக்கும் -விபீஷணன் எண்ணம் )

———-

ஸ பித்ராஸ பரித்யக்த ஸூரைச் ச ஸ மஹர்ஷிபி
த்ரீந் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத —
38-33-

ஸ்ரீ அமலனாதி பிரான்-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-

வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –

திருவாய்மொழி – -3-7-8–ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –

இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –

இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –

ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்

ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –

தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –

சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-

லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-

‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும்
நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன்.
ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்வச்தமான தசையில் நானே அறிவித்து வைத்தால் -ச பித்ராச -நோக்குமா போலே தான் தனக்கு உதவாத தசையிலும் உதவுவானே –
ஈஸ்வரன் -நாம் நமக்கும் ஆகாத அன்றும் -தஞ்சமாவான் தானே யாவான்
பெருமாள் பக்கம் அபராதத்தால் தமப்பன் கை விட்டான்
ச காரத்தாலே தாயும் கை விட்டாள்-
பற்றும் பொது அவள் முன்னாக பற்றும் -கை விடும் பொழுது அவன் விட்ட பின்பே இவள் விடுவாள்
வாத்சல்யம் உரைத்த இடத்திலே முந்துற விழுவது -அவள் காலிலே முந்துற விழுந்தான் –
அவள் சசிதேவி -தாயார்-மை எழுதி ஒப்பனை -த்வேஷித்தால் -விலகி -இவனும் குட நீர் வழித்து நின்றான் -நன்றாக விட்டான் பரித்யாகம் –
ஸூரைஸ்ஸ -தேவர்களும் -சஜாதீயர்களும் கை விட்டார்கள் -ச மகரிஷிபி -ஜீவ காருண்யம் உள்ளவர்களும் -கை விட்டார்கள் –
ஆன்ரு சம்சயத்துக்கு விஷய விவிஸ்தை உண்டே –
திரீன் லோகன் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் -ஒன்பதின் கால்
புகப்புக தள்ளிக் கதவை அடைத்து
தமேவ சரணம் கத -பிரம்மாஸ்திரம் ஏவின -அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் அருள் நினைந்தே -அழும் குழவி அது போலே –
நம்பன் -விச்வச நீயன் -சர்வேஸ்வரன் -எல்லா அவச்தைகளிலும் இவனே –

திருவாய்மொழி – -9-1-மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் –

————–

ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ஸ்த்த க்ருபயா பரிபாலயத்
-38-34-

திருவாய்மொழி – -2-7-6-வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே-

குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7–‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர்,
தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை,
நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்;
அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலே காணும்,
இவன் பூமியிலே விழுந்தது.
சரண்ய :-
ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் –
கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை.
வதார்ஹமபி –
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும்,
காகுத்ஸ்த : –
குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். ‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில்,
கிருபயா பரிபாலயது –
‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;
அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்?
ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )

———-

ஆந்ரு சம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருதா –38-41-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்-9-3-4-

நமக்கே பணித்த –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ்த்வத்த ஏவ மயா ஸ்ருத  –
கலக்கிற போதை சொல்லிற்று ஒரு வார்த்தை உண்டு
அதாகிறது –
சிலரோடு சிலர் கலந்து பிரிந்தால்
பின்னை அவர்கள் படும் வியசனம்  கண்டால்
நான் பொறுக்க மாட்டேன் காண்-
இது காண் என் பிரகிருதி  இருக்கும்படி -என்று கொண்டு சொல்லி வைத்தான் ஆயிற்று

பிரிந்து இவள் நோவு படுகிற போது-இது வன்றோ இவன் சொன்னது -என்று கொண்டு
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணி தரிக்கைக்காக
இது தான் ஓர் ஆளின் வாயில் இட்டு நீட்டுகை இன்றிக்கே
அவர் தம் வாயாலே சொல்ல
நான் என் செவியாலே கேட்டேன் -என்கிறாள் –

பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

கருளக் கொடியுடைய –
ஆர்த்த ரஷணத்துக்கு த்வஜம் கட்டி இருக்கிறவன்

புண்ணியன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுத்தர -38-21-

நீரும் நானுமாய் ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவாய் இருக்கச் செய்தே –
சம்ஸ்லேஷ தசையிலே -தர்மங்களில்
நீர் விரும்பி இருப்பது என் என்று கேட்டேன் -பிறர் நோவு படப் பொறுக்க மாட்டேன் –
பிறர் நோவு படப் பொறுக்க மாட்டாத இதுவே காண் நாம் வெளிறு கழிந்த தமமாக நினைத்து இருப்பது என்று அருளிச் செய்தீர்

த்வத்த ஏவ மயா ஸ்ருத –
இது தான் உம்முடைய ஆளான திருவடி வாயிலே இட்டு நீட்டுகை அன்றிக்கே
உம்முடைய வாயாலே அருளிச் செய்ய நான் செவியாலே கேட்டேன்
இது தான் பிறர் மேலே ஏறிட்டு நீர் நம்மைப் பிரிந்து நோவு பட விட்டீர் ஓம் காண் -என்று சொன்னார் ஆனார் அவர்
பிரிந்து நோவு பட விட்டு இருந்தான் என்னுமத்தைப் பற்ற அத்தைச் சொல்லுகிறாள் யாய்த்து இவள்

புண்ணியனை வரக் கூவாய்
பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –

————–

கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூஷுவேயம் மனஸ்விநீ
தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபி வாதய –
-33-56-

நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.திருவாய்மொழி – -5-3–7-

ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.

இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே,
அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.

மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே
நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும்
ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான்
ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ?
அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும்
போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று
அவர் என்னைக் குறித்துச் சொல்லி விட்டார்; நானும் அப்படியே செய்து போரா நிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவு பட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச –
எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆன பின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கை யன்றோ இனி
எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-
நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.-சகாரம் உம்மைத் தொகைக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் —
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்ய வேணுமே அன்றோ;
ஆன பின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக
அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச் செய்தாள்.”-இது தான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,
அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய
மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க
அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் –

———–

ஜீவந்தீம் மாம் யதா ராம ஸம் பாவயதி கீர்த்திமாந்
தத் ததா ஹனுமன் வாஸ்ய வாஸா தர்மம் அவாப்நுஹி
–39-10-

திருவாய்மொழி – -6-8-பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

—————

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்தந
மாம் நயேத் யதி காகுத்ஸ்த்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் —
39-40-

திருவாய்மொழி – -5-4–7-இவ் வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலை வேறுபாடு, -த்ருட விஸ்வாசம் –
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –
திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன,
இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது,
வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?
பர புரார்த்தந:-
அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?
மாம் நயேத் யதி –
நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :-
இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக
அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல்,
ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்;
அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் –
அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ?
இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத்
தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

அல்லன் மாக்கள் இலங்கை யதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற் சுடுவேன் அது தூயவன் வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.

அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.

வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள்

எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு
அஞ்சினபடியாலே அன்றோ
‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.

————

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரைஸ் சோகாபி கர்சிதை
ஸம்ஸ்ப்ருசேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி —
40-3-

எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -திருவிருத்தம்-54 –

யதாதம் புருஷவ்யாக்ரம் (ஸூந் த்தர 40) -பருவம் கழிந்தது இறே
இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா
நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல  வாண் புலி –

காத்ரை –
கண்டாய் இறே
ஒரு நீர் சாவியை யாய்  இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- 
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே-
விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண  வேணும்

(பசித்த போதே உண்ண வேண்டும்
இந்த சரீரத்தோடு கூட்டிப்போக சொன்னதால் தானே அழகர்
ஆழ்வார் திருமேனியுடன் கூட்டிச் செல்ல விரைந்தான்
ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் )

சகாமாஹம்-
அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும்
அளவு அல்லேன் நான் –

(விருப்பம் நிறைவேறியவளாவேன் என்கிறாள்
பெருமாளோ -தர்மம் ஒன்றையே ஹேதுவாக எண்ணுவார்
பிரணயித்தவம் அடியாகச் செய்ய மாட்டாரே
ஐயர் சொல்லவே மணம்
அரும்பதம் விளக்கம்
ஆள் வர விட்டாரே -ஆசையுடன் தானே அனுப்பினார் -இங்கு என்னில்
அயோத்யையில் -கூட வருவேன் என்ற பிராட்டிக்கு
ஆண் உடை உடுத்த பெண் -சொல்ல வைக்க –
உனக்கு முன் நடப்பேன் கல்லையும் முல்லையும் எடுப்பேன் சொன்னதும்
நல்லது என்றார் அத்தனையே
ஆசைக் கணவன் வார்த்தை இல்லை
ஸ்திரமாக அழைக்க வில்லை அன்றோ
அதுக்கு மேலே
தன்னுடைய அம்பு நடையாடாத இடமாய் இருக்க இத்தனை நாள் ராக்ஷஸி கையில் நோவு பட வைத்தார்
இப்பொழுது தூது சுக்ரீவர் தர்ம காரியத்தால் தான் -என்றவாறு )

ததா குரு தயாம் மயி –
அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே –
இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்

(கிருபைக்கே இருப்பிடமான பிராட்டி திருவடியின் கிருபையை இரக்கிறாளே
அவன் நிரங்குச ஸ்வா தந்த்ரன்
திருவடி தானே ஆச்சார்யன்
வராஹ பெருமாள் பெருமாள் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் -வார்த்தை -சொல் -பேச்சு நம்பி உள்ளேன்
அவை கார்யகரம் ஆகா விட்டாலும் பெரியாழ்வார் சம்பந்தம் வீணாகாதே
அவர் சக்தியில் குறை இல்லை
மத் பாபமே நிமித்தம்
கிஞ்சித் மஹ பாபம் பண்ணினவள் அன்றோ
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -)

எம்மை சேர்விக்கும் வண்டுகளே –
என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை
அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

கார்யே கர்மணி நிர் திஷ்டே யோ பஹுந் யபி சாதயேத்
பூர்வ கார்யா விரோதேந ஸ கார்யம் கர்த்தும் அர்ஹதி
–41-5-

விடுத்த திசைக் கருமம் திருத்தி –திருப்பல்லாண்டு -9-
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ கிஷ்கிந்தா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ஸ தாம் புஷ்கரிணீம் கத்வா பத்ம உத்பல ஜஷா குலம்
ராமஸ் சவ்மி த்ரி ஸஹிதோ விலலாபா குலேந்த்ரிய
-1-1-

இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று-
அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
ஸ –
பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்-
இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –
பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –
பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார்
கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் –
பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –

உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –
பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –
அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மா

ஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126-
ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே
விலலாப ஆகுலேந்த்ரிய –
பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது

——-

மயூரஸய வநே தூநம் ரக்ஷஸா ந ஹ்ருதா ப்ரியா
தஸ்மாந் ந்ருத்யதி ரம்யேஷு வநேஷு ஸஹ காந்தயா –1
-40-

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே-3-6-1–மயூரஸ்ய நேநூநம் ரஷா பஹ்ருதா ப்ரியா –
இந்த மயில்கள் இருந்த இடத்தில் வந்திலனோ அப்பையல்-என்கிறார் –
இருவரை இருப்பார் எல்லாரையும் –
தனி யாக்கினான் என்றே யாயிற்று இருப்பது –

கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-10-3-1-கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

———-

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்ச்வாஸ இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர
-1-71-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–1—பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு   மேற்பட
ஆழ விழியுமது   அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத  –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –

———-

பத்ம ஸுகந்திக வஹம் சிவம் சோக விநாஸநம்
தன்யா லஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம் –
-1-105-

ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–8-2-
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ

பம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக் காலாலே துகை உண்ணக் கடவேனோ

பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –
சிவம்
 -இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –
சோக விநாசனம்
 -நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இறே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே –
அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்-

ஈடு -1-4-7–பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
அரி மிதியான -வண்டு காலால் மிதிக்கப்பட்ட -என்றுமாம்
-சிவம் கலப்பற்று பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
தாய்த் தலை தென்றல் -பிரதமம் ஸ்லாக்கியமான தென்றல் –
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது -பிராணனை போக்கி -நல்லது பண்ணும்படி –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -பாடபாக்னி -கடலுக்குள் வெப்பமான அக்னி போலே –

சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு ஸூதநே –3-9-
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்-8-1-1-சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –

அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து-1-2-1-

வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும்
அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-
(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் போலே )

சத்ரு நாசனே -என்கிறது கிடக்க –
சக்ர சாப நிபே -என்கிறதை அனுபவிக்கிறார்
உகப்பாரோடு உகவதாரோடு வாசி யற இரண்டு திறத்தாரையும் அழிக்கும் ஆயிற்று –

சக்ர சாப நிபே -இத்யாதி
இந்திர தனுஸ் போலே அனுகூலருக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க
வேண்டும்படி தர்சநீயமாக இருக்கும் –

க்ருஹீத்வா -வில் பிடித்த பிடியிலே பிரதிகூலர் முடிந்து போம் படியுமாய் இருக்கும் –
அநுகூலரை அழகாலே அழியச் செய்யும் —
பிரதி கூலரை அம்பாலே அழியச் செய்யும் –

————-

ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவ பரி கோபமா
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா
-3-15-

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-திரு விருத்தம் -44-

நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —

ஆயதா –
திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –

ஆயதா ஆஜான பாஹூ —
திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –

பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )

சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –

கிமர்தம் ந விபூஷிதா –
இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –

(திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ )

————

நாந் ருக் வேதவிநீ தஸ்ய நா யஜுர் வேத தாரிண
நா ஸாம வேத விதுஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் –3-29-

பெரிய திருமொழி-8-1-

என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )

———–

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -4-11-

ஈடு -1-1-1- இளைய பெருமாளை நீர் இவருக்கு என்ன ஆவீர் என்ன -பெருமாள் ஒருபடி நினைத்து இருப்பர் -நானும் ஒருபடி நினைத்து இருப்பன் -என்றார்
அவர் நினைத்து இருக்கும்படி என் -நீர் நினைத்து இருக்கும்படி என் என்ன
அவர் தன் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்றார் இறே –

———–

லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி –4-18-

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—
ஸூக்ரீவம் நாதம் இச்சதி
 –கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-

லோக நாத புரா பூத்வா –
லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இறே

இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இறே
அநாதன் இறே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்

ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள –
அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் –
இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு
உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் –
 என்று அருளிச் செய்து அருளினாராம்

———

நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்நா நாம் பரா கதி
ஆர்த்தா நாம் ஸம்ஸ்ரயஸ் ஸைவ யஸஸ்ஸைக பாஜநம்
–15-19-

திருவிருத்தம்-58-

திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –( பெரியாழ்வார் )
ஆஸ்ரித ரஷகனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –

நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )

நிவாச வ்ருஷ ஸாதூநாம்-
வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்-
அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-
கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன

அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –

பெருமாள்-என்றாள் –

ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன –
சொல்லுகிறாள்

நிவாச வ்ருஷ ஸாதூநாம் –
இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –
பூவாயும்
பழமாயும் 
நிழலாயும்-
தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும்
தன் கீழே இருந்து தன்னை அழியச்  செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் –
இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –
(வாஸம் மட்டும் அல்லவே
நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம்
கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )

நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ –
செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –

ஆபன்நாநாம் –
ஒதுங்கோம் என்னாமை போராது காண் –  
ஆபன் நராகவும் வேணும் காண் –

நான் தான் ஆபன்னன் அன்றோ –
உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –

ஆர்த்தா நாம் –
ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –
ஆபத்தை இசையவும் வேணும் காண் –
நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –

இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு
இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன

யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்-
இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –

நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே
அவர்களை சொல்லுகிற  இதில்  ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க
இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் –
வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே –
கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –

ஏக பக்திர் விசிஷ்யதே -என்கிற ஞானியை சொல்கிறதாய்-
முந்துற சம்சாரத்தில் நொந்து –  
பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-
அநந்தரம்
பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    –
இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –

(நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )
இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே
ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்
ஆபன்னானாம் கைவல்ய பரர்
ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி
அனைவருக்கும் -பராம் கதி )

————-

அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுர் ஊர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்த்துஸ் சைவ அநுஜம் ஸுபா –19-26

திருவாய்மொழி – -5-10–6-நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இனித் தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்து போனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.
(வல்லசுரர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ -)

நின்றும் –6-9-3-
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.

———————

நிஸ் ஸ்வநம் சக்ர வாகாணாம் நிசம்ய ஸஹ சாரி ணாம்
புண்டரீக பலா சாஷீ கதம் ஏஷா பவிஷ்யதி
–30-10-

திரு விருத்தம் -51-

அழைக்கின்றதே –
கார்யப்பாட்டால் கூப்பிடா நின்றது –
வழிப்பறிக்காரர் அழைக்குமா போலே –

ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று
அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை –
அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று

(இப்படி ஓசை படுத்தின இடத்துக்கு மேல்
பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதா பிராட்டிக்கு )

நிச்வசஞ் சக்ரவாகாநாம்  –
பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான  படி–

சஹ சாரணாம்-
பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்-

புண்டரீக விசாலாட்ஷி-
வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே
வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –

கதேமேஷா பவிஷ்யதி –
என்ன துன்பம் பட்டாளோ-

—————-

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் –
-32-17-

திருவாய்மொழி – -1-1-5-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் -நாண் ஒலி -கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே-

———–

ஸா ப்ரஸ் கலந்தீ மத விஹ்வாஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸ லக்ஷணா லஷ்மண ஸந்நிதானம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி -33-38-

மென்னடைய அன்னங்காள்–திருவாய் ஈடு-1-4-3-
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தேற்றமாய் வந்து திற -தேராமல் வந்து திறந்த தாரை போலே இல்லாமல் -அங்கே வியாக்யானம்
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கல்வியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும்
-இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –-சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –-மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –

—–

கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே –33-41-

திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
ஓதி நாமம் குளித்து –உச்சிதன்னால் –பாதம் நாளும் பணிவோம் –உபாய புத்தியாக -திருப்புல்லாணி —
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸுவ பிரவ்ருத்தி –
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள்
-என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே –
உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே -காமம் கோபம் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள் -விஸ்வாமித்ரர் கதை -தாரை –
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு- ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
பதிகத்துக்கு நிதானம் அபராத சஹத்வம் தானே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-