அவ்யக்த ரேகாமிவ சந்த்ர ரேகாம் பாம் ஸூப்ரதிக்தாமிவ ஹேம ரேகாம்
ஷதப்ரரூடாமிவ பாண ரேகாம் வாயு ப்ரபந்நாமிவ மேகரேகாம் –5-26-
நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –
———
பபூவ புத்திஸ்து ஹரீஸ் வரஸ்ய யதீத்ருசீ ராகவ தர்ம பத்நீ
இமா யதா ராக்ஷஸ ராஜ பார்யா ஸூஜாதமஸ்யேதி ஹி ஸாது புத்தே –9-13-
ஏர் கொள் இலங்கையை –2-9-10-
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை –அஹோ வீர்ய மகோ தைர்யம் -என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –திருவடி மதித்த ஐஸ்வர்யம் அன்றோ –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே –சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –
————-
பைங்காம ந அலங்காரம் வி பங்காமிவ பத்மிநீம் –15-20-
திருவாய்மொழி – -2-1-6-நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –
————
துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யதநயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந துக்கே நாவ ஸீததி —15-32-
திருவாய்மொழி – —வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
துன்பம் பின்பு இன்பம் என்று குகனை நம்ப வைத்து பிரிந்தீர் -பிரிந்த பின்பு சேர இவள் இருக்க வேண்டுமே -மடவரல் –
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார் -வெளித் தோற்றத்தில் அழகன் –
ராமன் -இப்படிப்பட்ட தசையிலும் ரமியப்பண்ணும்-தானும் ஆனந்தப்பட்டு -வாயு குமாரன் திருப்தி பட்டர் -தமப்பன் பண்ணின உபாகாரத்தை ஸ்மரிப்பித்து
-பிராணன் இவளுக்கு இருக்கும் படி செய்த உபகாரம்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
சோகம் என்னும் அக்னி சுடாதே சொல்ல வில்லையே -விரஹ அக்னி யால் முடிந்து இருக்க வேண்டாமோ -தாசோஹம் சொல்ல வைத்த கடாஷம்
பிரபு –ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -பரதந்த்ரன் அல்லனே –
பெண் பிறந்தார் தானே முடிந்து பிழைக்க முடியாது –போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது –ஆயதனம் -வாசஸ் ஸ்தானம்
தேஹம் -வளரும் -சரீரம் தேயும் -பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்-பவன சம்பவ த்ருஷ்ட்வா -வாயு குமாரன் திருப்தி -நல்ல வேளை இவள் உடம்பில் இருந்து பிரியாமல் இருந்ததால் -வாயுவை -உபகாரகன் என்கிறார்-
———
ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட பவந ஸம்பவ
ஜகாம மனஸா ராமம் ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –15-53-
திருவாய்மொழி -2-4-2-ஜீயர் அரும்பதம்-
இப்படி நிந்தித்தவன் தானே அநந்தரத்தில் கொண்டாடத் தொடங்கினான்
ஏவம் -க்ஷண கால விஸ்லேஷ அயோக்கியமான வஸ்துவாக
ஹ்ருஷ்டோ ராமம் மனஸா ஜகாம-இப்படி அவளைப் பிரிந்த பெருமாள் ப்ராணனைத் தரித்து இருந்தது நம்முடைய பாக்ய பலம் இறே என்று ஹ்ருஷ்டானானான் -என்றபடி
ராமம் -இப்படிப்பட்ட திசையிலும் நம்மை நோக்கி வைத்து நம்முடைய மனஸ்ஸை ரஞ்ஜிப்பிப்பதே என்று புத்தி பண்ணினான் என்றபடி
பவந ஸம்பவ-தம்முடைய தம்மப்பன் பண்ணின உபகாரத்தை ஸ்மரித்தான் ஆயிற்று
ப்ராண வாயு முகேந விடாமல் இருந்தவன் இறே உபகாரகன்
ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –இப்படி இவன் தரித்து இருந்ததற்கு நிபந்தநம் பிரபுத்த்வம் இறே என்று பிரபுத்வத்தைக் கொண்டாடத் தொடங்கினான்
தம் -பிரபுத்வத்தின் பெருமை இருந்தபடி என்றான் என்றதாயிற்று-
————–
த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் ஸீதாயா நாப்னுயாத் கலாம் -16-14-
ஈடு -6-2-6-மூன்று லோகத்தையும் அத்தோடு விஸ்வ ஸப்த வாஸ்யனானவன் தன்னையும் கூட ஒரு தட்டாக்கினால் பிராட்டியினுடைய ஒரு கலா மாத்ரத்துக்கு இடை நிற்க மாட்டாது-
——
ஸர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் கருதா
அசிந்தயித்வா துக்கானி ப்ரவிஷ்டா நிர்ஜனம் வநம் -16-19-
பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.
புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.
————
நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பலத்ருமாந்
ஏகஸ்த்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி —16-25-
ஈடு -5-5-5-ராக்ஷஸீ தர்சனத்தோடு புஷ்ப பலத்ரும தர்சனத்தோடு வாசி அற்று இருக்குமது காணும் இவளுக்கு-அருகு இருந்தவர்களையும் பாராளாயிற்று-
———
இமாம ஸீத கேஸாந்தம் சத பத்ர நிபேஷணாம்
ஸூகார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந –16-23-
திருவாய் -5-9-1-வைகலும் வினையேன் மெலிய –-“இமாம் அஸித கேஸாந்தாம்-
மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –
ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்-
அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா-
இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:-
இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”
இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி.-
———-
ஹிம ஹதநலி நீவ நஷ்ட சோபா வ்யஸன பரம்பரயாதி பீட்யமாந
ஸஹ சார ஹிதேவ சக்ர வாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தஸாம் ப்ரபந்நாம் –16-30-
திருவாய்மொழி – -6-2-
பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –
“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.
இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.-
———–
தஹந்தீமிவ நிஸ்வாஸைர் வ்ருஷான் பல்லவ தாரிண –17-29-
திரு நெடும் தாண்டகம் -12- திருவடி லௌகிக அக்னியால் ஊரைச் சுட்டான் -இவள் விரஹஅக்னியால் அசோக வநிகையைச் சுட்டாள்
திருவாய் -7-2-2–நெடு மூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள் -பல்லவ தாரிகளாய் இருக்கை அப்போது இவளுக்குப் பகை இறே -ஒருபடிப் பட்டு நின்று நலிகிற படி இறே அவை -ராக்ஷஸிகள் உறங்கும் போதும் உண்டு இறே உருவ இப்படியே நிற்கிற வித்தனை அவை-
—————–
மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –-21-19-
மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –21-19-
பெருமாள் திருமொழி -5-5–அன்று கண்டால் போல் கையும் வில்லுமாய் நிற்பர் -அவனுக்கு அச்சத்தாலே -தமக்கு உருவு வெளிப்பாட்டாலே – முன்னே நிற்பர்
தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் கிருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாக்க கொண்டு -புருஷர்க்ஷப –நீ அநுகூலனாய் ஓரடி வர நின்றால் அத்தையே நினைத்து நீ பண்ணின அபராதம் எல்லாம் புத்தி பண்ணுவரோ -அவர் புருஷோத்தமர் காண்-
திருவாய்மொழி – -3-6-
பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.
ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.
திருவாய்மொழி – -8-1-1-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
எவன் குற்றம் செய்யாதவன் -என்பாரும் அருகே இருக்க நான் வருந்த வேண்டிய காரணம் ஏன் –
பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20
ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-
எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்-
—–
க்யாத ப்ராஞ்ஞா க்ருதஞ்ஞ ச ஸ அநு க்ரோசச்ச ராகவ
ஸத் வ்ருத்தோ நிர் அநு க்ரோஸஸ் சங்கே மத் பாக்ய ஸம் ஷயாத் -26-13-
திருவாய்மொழி – -8-1-ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-
——-
பக்ஷி ச சாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புநஸ் புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாச முதீரயாந புநஸ் புநஸ் சோதயதீவ ஹ்ருஷ்ட -27-51-
திருவாய்மொழி – -6-2-1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.
“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.
ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.
ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.
தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.
————-
ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூமித்ரே ஹா ராம மாத ஸஹ மே ஜநந்யா
ஏஷா விபத்யாம்யஹ மல்ப பாக்யா மஹார்ணவே நேளரிவ மூட வாதா –-28-8-
திரு நெடும் தாண்டகம் –16- ஹா ராம -என்று போக்கிய வஸ்துவை நினையா ஹா லஷ்மணா என்று புஜிப்பாரை நினையா ஹா ஸூ மித்ரே என்று நிமித்த பூதரை நினையாக் கூப்பிட்டாள் இறே-
———-
அநந்ய தைவத்வம் இயம் ஷமாச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருதக்நேஷ்விவ மானுஷாணாம்
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –4-6-10-
வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி
‘அநந்ய தைவத்வம் –
‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம் உண்டு, அது காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா –
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரிய பெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன். (ஸஹ பதன்யா விசாலாக்ஷி நாராயணன் உபகமனத் )
இயம்க்ஷமாச –
இராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும்
பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌச ஸய்யா –
‘இத் தரைக்கிடை கிடந்ததும் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ் தர்மமே –
‘காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது,
‘பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால்
உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் –
‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் –
தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –
‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை?
அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் –
‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.
————
விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கஸ்ஸித் ஸஸ்த்ரஸ் யவா வேஸ்மநி ராக்ஷஸ்ய –28-16-
திருவாய்மொழி – -5-4-
எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;
“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”
“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.
வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.
————-
நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –28-17-
பெரிய திருமொழி -3-6-1–எரிகிற நெருப்பைச் சென்று கிட்டுவாரைப் போலே -ஓங்கிப் பரப்பு அடங்கலும் புஷ்பிதமாய்க் கிடக்கை
ஆஸ ஸாத –தன் ஜீவனத்தில் நைராஸ்யம் விளைந்தமை தோற்றி இருக்கிறது
நாச்சியார் திருமொழி -9-5- நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –ஆற்றாமை கரை புரண்டால் தீப்பாய ஒருப்படுமா போலே
நேமாந் புஷ்ப பலத்ருமாந் -என்னும்படி இறே இவளுக்கு இருக்கிறது –
————
ததா கதாம்தாம் வ்யதி தாம நிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீ நமாநஸாம்
ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நாம் ஸ்ரியா ஜுஷ்டம் இவ உப ஜீவிந -29-1-
திருவாய்மொழி – -6-2-ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.
———–
ஸா திர்யகூர்த்வஞ்ச ததாப்யதஸ்தாத் நிரீக்ஷ மாணா தமசிந்த்ய புத்திம்
ததர்ச பிங்காதிபதேர மாத்யம் வாதாத்மஜம் ஸூர்ய மிவோதயஸ்தம் –-31-19-
திருவாய்மொழி – -2-4-1-எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே-
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வதந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –
————-
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம்
புண்டரீக பலாசாப்யாம் விப்ர கீர்ண மிவோ தகம் –33-4-
திருவாய்மொழி – -2-4-1-கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
முடியானேயில் கரணங்கள் அவையாக -பையரவணைப் பள்ளியினாய் –சஷூர் ஸ்ரவக -கட்செவி –
மல்கி –மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது– ஆர்குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு-
———–
ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபிந –33-16-
திருவாய்மொழி – -5-3–6-வாசு தேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு.
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது
‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ?
பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.
————-
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஞாநா மானுஷாந் போகான் ஸர்வ காம ஸம்ருத்திநீ –33-18-
திருவாய்மொழி – -7-3–பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.
பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.
இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.-
அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.
‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.
——————
ப்ரா கேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன
பூர்வஜஸ் யாநு யாத்ரார்த்தே த்ரும சீரை ரலங்க்ருத –-33-29-
முயற்றி சுமந்து–பெரிய திருவந்தாதி -1-
அடிமை செய்கையில் ஒருப்பட்டு
ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்
ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –
(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )
மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்
ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்
மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )
————–
ஸ்வப்நேபி யத்யஹம் வீரம் ராகவம் ஸஹ லஷ்மணம்
பஸ்யேயம் யதி ஜீவேயம் ஸ்வப்நோபி மம மத்சரீ –-34-21-
நாச்சியார் -6-1- பிரவேசம்–பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது –
அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –
ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –
பச்யேயம் யதி ஜீவேயம் ச்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து
முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –
தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே
சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இறே
————-
ராம கமல பத்ராஷ ஸர்வ சத்த்வ மநோ ஹர
ரூப தாக்ஷிண்ய ஸம் பன்ன ப்ரஸூதோ ஜனகாத்மஜே -35-8-
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்–திருவாய்மொழி – -2-2-5-
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை –ராமயதீ ராமயா –
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ -கைமுதிக நியாயம் –
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே –அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே –சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
இப்படிப்பட்ட அவர் அழகை நீர் ஒருத்தியே சொல்லலாம் -நீர் அவனுக்கு ஏற்ற அழகு என்றுமாம் –
—————–
ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லஷ்மணே நேரிதம் வச
ததா ஸீந் நிஷ்ப்ரபோத்யர்த்தம் ராஹு க்ரஸ்த இவாம் சுமான் –-35-36-
திருவாய்மொழி – -5-3-1-பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளைய பெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க,
அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வை வர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று;
“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :ததாஸீத் நிஷ்பிரப:
அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்” – ஸ்ரீராமா. சுந். 35 : 36-
(ஸூர்ய புத்ரன்-ஸூ க்ரீவன் / இந்திரன் புத்ரன் வாலி /ராகு பிடிக்க பிடிக்க மாறுவது போலே -)
“அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசா மகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ
பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும்,
பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ
‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று.
அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசா மகோசரம் என்றபடி.
———-
ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ் யேவம் சமஜாயத –35-52-
திருவாய்மொழி – -5-9-5–
நல் நலம் தோழிமீர்காள்-
நலமாவது,
இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,
தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.
(ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்
அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ என்னும் நினைவால் இந்த திருஷ்டாந்தம் )
“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்
“வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-உண்டாயிற்று?” என்றது,
குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும்
இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;
சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,
மேல் இதற்குக் காரணம் சொல்லுகிறான்.
“இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;”
“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.
தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே
இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.
அதாவது,
1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு
அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.
2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு
இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;
இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.
“ஏவம் ஸமஜாயத –
“ஏவம் ஸமஜாயத – இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று வகையாகப் பாவம் அருளிச் செய்கிறார். அவற்றுள்,
முதலது,
‘தங்களையும்’ என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக் காரியத்திற்கு அடியேன்
வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.
இரண்டாவது பாவத்தை அருளிச் செய்கிறார்
‘இளைய பெருமாள் அடிமையில்’ என்று தொடங்கி. என்றது,
தம்பியான இளைய பெருமாளுடைய அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த ரங்கர்,
இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று தொடங்கி.
மூன்றாவது கருத்தை அருளிச் செய்கிறார்
‘தங்கள் அளவிலும்’ என்று தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
தங்களுடைய ஐஸ்வர்யத்தைக் காட்டிலும், அதிகமான ஜஸ்வர்யத்தை யுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி.
மேல் வாக்யத்தை விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’ என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்;
காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி என்னுதல்.
இவ்வாறு உண்டாயிற்று”-
இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.
———–
க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸ பர்த்துர் கர வி பூஷணம்
பர்த்தாரமிவ ஸம் ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத் –36-4-
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-
வீணை முலை மேல் தாங்கித் –
வீணையை ஸ்பர்சித்த வாறே -காந்தனானவன் சம்ஸ்லேஷ தசையில்
தன்னுடைய போக்யதையும் இவளுடைய போக்யதையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படியை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான தோளை சாஷாத் கரித்து –
அதுக்கு ஆஸ்ரயமான வடிவை சாஷாத் கரித்து
அவனை சம்ஸ்லேஷ தசையிலே தன் மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள் –
இவ் வீணையை அவனாக நினைக்கக் கூடுமோ -என்னில் –
க்ர்ஹீத் த்வா ப்ரேஷமாணா ச பர்த்தும் கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்பிராப்தா ஜானகி முதிதாபவத் -என்று
பிராட்டி பெருமாளை பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே அனுபவித்தாள் இறே –
(“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.)
க்ர்ஹீத்வா –
தேசாந்தரம் போன பந்துக்களைக் கண்டால் போல் மேல் விழுந்தாள் –
ப்ரேஷமாணா –
வைத்த கண் மாறாதே பார்த்துக் கொண்டு இருந்தாள் –
ஸா
இவன் வரவை ராவணன் வரவாக சங்கித்தவள் கிடீர் இப்படி மேல் விழுந்தாள் -என்கிறான் –
பர்த்தும் கர விபூஷணம் –
அடியில் தன்னைக் கைப் பிடிக்கும் போது தன் கையில் உறுத்தின மோதிரத்தை
அங்கன் அன்றியே
தானும் அவரும் சம்ஸ்லேஷித்த போது போகத்தின் மிகுதியாலே
ப்ரணய ரோஷம் தலை எடுத்து ஒருவரை ஒருவர் முகம் பாராதே யூடி இருப்பார்கள் –
அப்போது இருவரையும் சேர்த்து வைத்த மோதிரம் -என்னுதல் –
அதாவது
அப்போது நேர் முகம் பார்க்கையும் வார்த்தை சொல்லுகையும் இருவருக்கும் அபேஷிதமாக இருக்கும் –
வேறு சேர்ப்பார் இல்லையாகையே கையில் திரு வாழி மோதிரத்தை கழற்றி
பெருமாள் தரையிலே விழ விடுவர் –
அப்போது தான் அம் மோதிரத்தை விழ விட்டீர் காணும் என்னும் வார்த்தையை உண்டாக்கின
மோதிரம் ஆகையாலே கடகமான மோதிரம் –என்கிறது –
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா –
திரு வாழி மோதிரத்தைக் கண்டவாறே பெருமாள் கையை நினைத்தாள்
அதுக்கு ஆஸ்ரயமான தோளையும்
அதுக்கு ஆஸ்ரயமான வடிவையும் -நினைத்தாள் –
சந்நிதியில் அவரைத் தழுவிக் கொள்ளுமா போலே திரு வாழி மோதிரத்தைக் கொண்டாள்
பர்த்தாரம் இவ –
அவள் பெருமாளாகவே தழுவிக் கொண்டாள் –
இவன் பர்த்தாவைப் போலே என்கிறான் –
ஜாநகீ முதிதா பவத் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் உகவா நின்றாள் –
உதர்க்கத்தில் என்னாய் விழப் போகிறதோ என்று பீதன் ஆகிறான் ரிஷி
தாங்கி வைத்தது -என்னாதே -தாங்கி -என்கிறது –
சம்போக தசையில்
அபூர்வ வத் விஸ்மய மாததா நயா- என்கிறபடி
தன் போக்யதையாலே குமிழ் நீர் உண்டு தளர்ந்த தசையிலே
அவனைத் தன் கையாலே எடுத்து
அணைத்துக் கொள்ளும்படி ஸ்மரதி விஷயமாக அவனை நினைத்து
வீணையை எடுத்து முலையில் தாங்கின படி –
(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –
நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.)
திருவாய்மொழி – -6-2-இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.
எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.
(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான்-)
————-
தத ஸா ஹ்ரீமதி பாலா பர்த்துஸ் ஸந்தேஸ ஹர்ஷிதா
பரி துஷ்டா விஸாலாஷீ ப்ரியம் க்ருத்வா ப்ராஸம்ஸத மஹா கபிம் –36-6-
ஸ்ரீ பெரிய திருமொழி-3-6-1-ததஸ்தா
திருவடி ராம விருத்தாந்தம் சொல்ல கேட்ட அநந்தரம் உளள் ஆனாள் –
திதிர்மிணி தர்மாஸ் சிந்த்யந்தே -இதி யாயேன
சத்தை உண்டாக உண்டாக மது உண்டாயிற்று
பாலா –
ஹர்ஷம் பொறுக்க ஒண்ணாதவள் ஆயிற்று
பர்த்து சந்தேச ஹர்ஷிதா –
ரஷகரான ராம விருத்தாந்தம் கேட்டு ஹ்ருஷ்டை யானாள் –
பரி துஷ்டா –
அந்த ஹர்ஷம் புற வெள்ளம் இட்டபடி
விசாலாஷீ ப்ரா சம்சத –
ஏத்தத் துடங்கினாள்
மஹா கபிம்-
கடலை வற்ற இறைக்கக் கோலுருவாரைப் போலே-
————-
குசலீ யதி காகுத்ஸ்த்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நி ரிவோத்தித –36-13-
இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.
காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனை யன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.
————–
ந சாஸ்ய மாதா ந பிதா ந சாந்யா ஸ்நேஹாத் விசிஷ்டோஸ்தி மயா ஸமோவா
தாவத் த்வஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய –36-30-
திருவாய்மொழி – -5-4-3–“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே
‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய,
‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,
அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று,
அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது
தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;
அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும்
பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;
பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,
எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;
தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று,
அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –
நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.
“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள்,
இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து,
அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்
வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் –பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:
ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.
அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.
———-
இதீவ தேவீ வசனம் மஹார்த்தம் தம் வாநரேந்த்ரம் மதுரார்த்த முக்த்வா
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வஸோபிராமம் ராமார்த்த யுக்தம் விரராம ராமா –36-31-
“இதீவ-மேலே நெடும் போது சில பாசுரமிட்டுச் சொல்லிக் கொடு போந்தான்;
பிரணய தாரையில் ஓடுமது இருடிகளாயிருப்பார்க்கு நிலம் அன்றே? இப் புடைகளிலே என்கிறான்
தேவீ – வல்லபைகளுடைய பரிமாற்றம் கடக்க நிற்பார்க்குத் தெரியாதே அன்றோ.
வசனம் மஹார்த்தம் – கடக்க நிற்பார்க்கே அன்று; தேசிகரானவர் தங்களுக்கும் தெரியாதிருக்கை.
தம் வாநரேந்திரம் – இவனோடு ஒக்கக் கடவார் ஒருவரும் இலர்.
சேஷத்துவத்திற்கு முடி சூட்டப் பட்டார் மஹாராஜரே யாகிலும், பாரதந்திரியத்தின் எல்லையிலே நின்றான் இவன் என்கை.
இவ் வளவிலே இவள் முகம் பார்த்து வார்த்தை சொல்லப் பெற்றிலர் அன்றோ அவர்.
மதுரார்த்தம் – நிலம் அன்று என்னாக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கை.
உக்த்வா – அவனும் அவன் உடையவர்களும் வாழும்படி வார்த்தை சொன்னாள்.
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம் – ‘அழிந்தாரை ஆக்க வல்லன்’ என்னுமிடம் கண்டாள்;
தான் அழித்த தலை உண்டாம்படி வார்த்தை சொல்ல வல்லமை கேட்க வேணும் என்று இருந்தாள்.
நிர்த்தயர் ஸ்வார்த்தர் -வார்த்தை சொல்லி அழித்தது -அவை இல்லாமை வார்த்தை சொல்லுவான் என்று
எதிர்பார்த்து இருந்தது போலே இங்கும் பராங்குச நாயகி -நிர்தோஷராம் படி வார்த்தை சொல்லுகை –
ராமார்த்தயுக்தம் – இராமபிரானாகிற பிரயோஜனத்தோடு கூடியது;- தன் காரியம் செய்து தலைக்கட்ட வல்லான் ஒருத்தன்.
விரராம – நெடும்போது தான் வார்த்தை சொல்லுகையினாலும், ஸ்வாமி வார்த்தை சொல்லும் போது
மேலிட்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையினாலும் பேசாதே இருந்து அவனுக்கு இடம் கொடுத்தாள்.
ராமா – இவ்விட்டு நீட்டுகை ஒழிய வார்த்தை சொல்லாதே இருக்கிற போதை அழகை
அவர் தாம் காணப் பெற்றிலோம்,” இவனும் அடர்த்து வார்த்தை சொன்னான்.
இவ் விட்டு நீட்டுகை ஒழிய-இவள் வார்த்தை நேராக பெருமாள் கேட்காமல் திருவடி மூலம் தானே கேட்கப் பெற்றார்-
————–
நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே ராம கமல லோசநே –36-33-
திருவாய்மொழி – -10-8-9-நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-
———-
ந மாம்ஸம் ராகவோ புங்க்தே –36-41-
உண்ணாது உறங்காது –11-7-நாச்சியார்-உண்ணாது-
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே
பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே
அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –
உறங்காது –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே –
கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று-
——
அ நித்ரஸ் ஸததம் ராம ஸூப் தோபிஸ நரோத்தம
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்த்யதே –36-44-
இன வேல் நெடும் கண்கள் –நாச்சியார்-5-4-
அநித்ரஸ் சத்தம் ராம -என்று அவன் படக் கடவ பாட்டைக் கிடீர் நான் படுகிறது
இக் கண்ணுக்கு இலக்கானார் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து
ராம அநித்ர–
செல்வப் பிள்ளைகளாய் இருப்பார் பாதிப் போது நித்ரை யோடு யாய்த்து போது போக்குவது
இப்படி இருக்க நித்ரை இல்லை யாய்த்து
சிறிது போது உறங்கி சிறிது போது உணர்ந்து தான் இருப்பாரோ என்னில் –
சத்தம் அநித்ரஸ் ஸூ ப்தோஅபி ச –ஆனால் இது என்சொல்லிற்று ஆகிறது எனில் –
உணர்ந்து இருக்கச் செய்தே உணர்த்தி அற்று இருக்கும் படியைச் சொல்லிற்று யாயிற்று
பராகார்த்த அனுசந்தான பாவம் இருந்தபடி
நரோத்தம -அபிமத விஷயத்தை பிரிந்தால்
இப்படி அநித்ரையாலே நோவு படுக்கை காணும் புருஷோத்த மத்வம்-ஆவது-ந சே தேன விநா நித்ரம் லபதே புருஷோத்தமே -பால -19-29-
திருவாய்மொழி – -2-4-5–இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -செல்வம் -சம்பத் –சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து –ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –
ராமயதிதி ராம -ஸுவ வியதிரக்தரை ஆனந்திப்பிக்க -தான் தூங்கி ஆனந்தம் -அடைய விரோதம் -சிநேகத்துக்கு கொத்தை -தூங்குகிறார் –
வியத்திரிக்த பதார்த்தங்களில் கண் வைக்காமல் பிராட்டியையே நினைத்து இருப்பார் –சததம் அனித்ர -எப்போதும் தூக்கம் இல்லாமல் –
கால விசேஷ நிர்த்தேசம் இல்லை -தூக்கமே தெரியாது என்பதால் –சததம் –இப்பொழுது தூங்காமல் இருப்பதால் -நித்ரா அயோக்யதா –
காலை சந்த்யாவந்தனம் பண்ண வில்லை -காலையில் பண்ண வில்லை -என்பதே அர்த்தம் போலே
மகா ராஜர் இளைய பெருமாள் இடம் பிராட்டி நிமித்தமாக உசாவி -விசாரித்து துக்கம் மிக்கு மயங்கி தூங்கி -என்றவாறு
காதல் இன்மை என்பதும் இல்லையே –
நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –
————
ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப –38-24-
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –-திருவாய்மொழி – -5-8-1…-
பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள்
என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,
வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’ என்று தொடங்கும் வாக்கியம்.
கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.
‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.
————
கஸ் க்ரீடதி ஸரோஷேண பஞ்ச வக்த்ரேண போகிநா –38-26-
மணியே மணி மாணிக்கமே மது சூதாபணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-
பரஞ்சோதி —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-
திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –
கக்ரீடாதி -(ககா க்ரீடேதி -காகாஸூர வ்ருத்தாந்த ஸூந்த்ர -ஸ்லோகம் )
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரத்தாலே
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு -நான் இருந்தேனே -என்கிற போதை
சீற்றம் தோற்றி யாயிற்று வார்த்தை அருளிச் செய்யும் போது இருப்பது
கக்ரீடாதி –
தோற்ற அரவிலே முடிக்க வல்ல தொரு மகா சர்ப்பம்
உறங்குகிறவற்றை எழுப்பி
அத்தோடு போது போக்கி பிழைக்கப் புகுகிறவன் தான் ஆர் –
சா ரோஷேண-
அதுக்கு ஆற்றல் உண்டாக பெற்றிடம் ஜீவிப்பார் உடைய பாக்யத்தாலே யாயிற்று –
பஞ்ச வக்த்ரேண
ஐந்தலை நாகம்
போகி நா –
அது எல்லாம் வேணுமோ
வடிவைக் காண அமையாதோ முடிகைக்கு –
ப்ரக்ருதயா தர்ம சீலரானவாறே இப்படிச் சொல்லுகிறார் –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –
(ஆஸ்ரித பக்ஷ பாதி
ஆஸ்ரித விரோதிகள் இடம் கோபித்த இடம்
தர்ம சீலன் -ராமனுக்கும் பலிக்கும் -விபீஷணன் எண்ணம் )
———-
ஸ பித்ராஸ பரித்யக்த ஸூரைச் ச ஸ மஹர்ஷிபி
த்ரீந் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத —38-33-
ஸ்ரீ அமலனாதி பிரான்-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-
வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –
திருவாய்மொழி – -3-7-8–ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –
இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –
இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –
ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்
ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –
தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –
சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-
லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-
‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும்
நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன்.
ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்வச்தமான தசையில் நானே அறிவித்து வைத்தால் -ச பித்ராச -நோக்குமா போலே தான் தனக்கு உதவாத தசையிலும் உதவுவானே –
ஈஸ்வரன் -நாம் நமக்கும் ஆகாத அன்றும் -தஞ்சமாவான் தானே யாவான்
பெருமாள் பக்கம் அபராதத்தால் தமப்பன் கை விட்டான்
ச காரத்தாலே தாயும் கை விட்டாள்-
பற்றும் பொது அவள் முன்னாக பற்றும் -கை விடும் பொழுது அவன் விட்ட பின்பே இவள் விடுவாள்
வாத்சல்யம் உரைத்த இடத்திலே முந்துற விழுவது -அவள் காலிலே முந்துற விழுந்தான் –
அவள் சசிதேவி -தாயார்-மை எழுதி ஒப்பனை -த்வேஷித்தால் -விலகி -இவனும் குட நீர் வழித்து நின்றான் -நன்றாக விட்டான் பரித்யாகம் –
ஸூரைஸ்ஸ -தேவர்களும் -சஜாதீயர்களும் கை விட்டார்கள் -ச மகரிஷிபி -ஜீவ காருண்யம் உள்ளவர்களும் -கை விட்டார்கள் –
ஆன்ரு சம்சயத்துக்கு விஷய விவிஸ்தை உண்டே –
திரீன் லோகன் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் -ஒன்பதின் கால்
புகப்புக தள்ளிக் கதவை அடைத்து
தமேவ சரணம் கத -பிரம்மாஸ்திரம் ஏவின -அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் அருள் நினைந்தே -அழும் குழவி அது போலே –
நம்பன் -விச்வச நீயன் -சர்வேஸ்வரன் -எல்லா அவச்தைகளிலும் இவனே –
திருவாய்மொழி – -9-1-மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் –
————–
ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ஸ்த்த க்ருபயா பரிபாலயத் -38-34-
திருவாய்மொழி – -2-7-6-வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே-
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7–‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர்,
தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை,
நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்;
அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலே காணும்,
இவன் பூமியிலே விழுந்தது.
சரண்ய :-
ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் –
கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை.
வதார்ஹமபி –
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும்,
காகுத்ஸ்த : –
குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். ‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில்,
கிருபயா பரிபாலயது –
‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;
அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்?
ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )
———-
ஆந்ரு சம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருதா –38-41-
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்-9-3-4-
நமக்கே பணித்த –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ்த்வத்த ஏவ மயா ஸ்ருத –
கலக்கிற போதை சொல்லிற்று ஒரு வார்த்தை உண்டு
அதாகிறது –
சிலரோடு சிலர் கலந்து பிரிந்தால்
பின்னை அவர்கள் படும் வியசனம் கண்டால்
நான் பொறுக்க மாட்டேன் காண்-
இது காண் என் பிரகிருதி இருக்கும்படி -என்று கொண்டு சொல்லி வைத்தான் ஆயிற்று
பிரிந்து இவள் நோவு படுகிற போது-இது வன்றோ இவன் சொன்னது -என்று கொண்டு
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணி தரிக்கைக்காக
இது தான் ஓர் ஆளின் வாயில் இட்டு நீட்டுகை இன்றிக்கே
அவர் தம் வாயாலே சொல்ல
நான் என் செவியாலே கேட்டேன் -என்கிறாள் –
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-
கருளக் கொடியுடைய –
ஆர்த்த ரஷணத்துக்கு த்வஜம் கட்டி இருக்கிறவன்
புண்ணியன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுத்தர -38-21-
நீரும் நானுமாய் ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவாய் இருக்கச் செய்தே –
சம்ஸ்லேஷ தசையிலே -தர்மங்களில்
நீர் விரும்பி இருப்பது என் என்று கேட்டேன் -பிறர் நோவு படப் பொறுக்க மாட்டேன் –
பிறர் நோவு படப் பொறுக்க மாட்டாத இதுவே காண் நாம் வெளிறு கழிந்த தமமாக நினைத்து இருப்பது என்று அருளிச் செய்தீர்
த்வத்த ஏவ மயா ஸ்ருத –
இது தான் உம்முடைய ஆளான திருவடி வாயிலே இட்டு நீட்டுகை அன்றிக்கே
உம்முடைய வாயாலே அருளிச் செய்ய நான் செவியாலே கேட்டேன்
இது தான் பிறர் மேலே ஏறிட்டு நீர் நம்மைப் பிரிந்து நோவு பட விட்டீர் ஓம் காண் -என்று சொன்னார் ஆனார் அவர்
பிரிந்து நோவு பட விட்டு இருந்தான் என்னுமத்தைப் பற்ற அத்தைச் சொல்லுகிறாள் யாய்த்து இவள்
புண்ணியனை வரக் கூவாய்
பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –
————–
கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூஷுவேயம் மனஸ்விநீ
தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபி வாதய –-33-56-
நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.திருவாய்மொழி – -5-3–7-
ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.
இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே,
அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.
மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே
நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும்
ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான்
ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ?
அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும்
போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று
அவர் என்னைக் குறித்துச் சொல்லி விட்டார்; நானும் அப்படியே செய்து போரா நிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவு பட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச –
எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆன பின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கை யன்றோ இனி
எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-
நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.-சகாரம் உம்மைத் தொகைக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் —
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்ய வேணுமே அன்றோ;
ஆன பின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக
அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச் செய்தாள்.”-இது தான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,
அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய
மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க
அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் –
———–
ஜீவந்தீம் மாம் யதா ராம ஸம் பாவயதி கீர்த்திமாந்
தத் ததா ஹனுமன் வாஸ்ய வாஸா தர்மம் அவாப்நுஹி –39-10-
திருவாய்மொழி – -6-8-பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.
—————
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்தந
மாம் நயேத் யதி காகுத்ஸ்த்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் —39-40-
திருவாய்மொழி – -5-4–7-இவ் வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலை வேறுபாடு, -த்ருட விஸ்வாசம் –
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –
திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன,
இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது,
வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?
பர புரார்த்தந:-
அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?
மாம் நயேத் யதி –
நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :-
இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக
அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல்,
ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்;
அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் –
அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ?
இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத்
தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.
அல்லன் மாக்கள் இலங்கை யதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற் சுடுவேன் அது தூயவன் வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.
அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.
வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள்
எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு
அஞ்சினபடியாலே அன்றோ
‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.
————
யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரைஸ் சோகாபி கர்சிதை
ஸம்ஸ்ப்ருசேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி —40-3-
எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -திருவிருத்தம்-54 –
யதாதம் புருஷவ்யாக்ரம் (ஸூந் த்தர 40) -பருவம் கழிந்தது இறே
இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா
நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல வாண் புலி –
காத்ரை –
கண்டாய் இறே
ஒரு நீர் சாவியை யாய் இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்-
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே-
விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண வேணும்
(பசித்த போதே உண்ண வேண்டும்
இந்த சரீரத்தோடு கூட்டிப்போக சொன்னதால் தானே அழகர்
ஆழ்வார் திருமேனியுடன் கூட்டிச் செல்ல விரைந்தான்
ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் )
சகாமாஹம்-
அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும்
அளவு அல்லேன் நான் –
(விருப்பம் நிறைவேறியவளாவேன் என்கிறாள்
பெருமாளோ -தர்மம் ஒன்றையே ஹேதுவாக எண்ணுவார்
பிரணயித்தவம் அடியாகச் செய்ய மாட்டாரே
ஐயர் சொல்லவே மணம்
அரும்பதம் விளக்கம்
ஆள் வர விட்டாரே -ஆசையுடன் தானே அனுப்பினார் -இங்கு என்னில்
அயோத்யையில் -கூட வருவேன் என்ற பிராட்டிக்கு
ஆண் உடை உடுத்த பெண் -சொல்ல வைக்க –
உனக்கு முன் நடப்பேன் கல்லையும் முல்லையும் எடுப்பேன் சொன்னதும்
நல்லது என்றார் அத்தனையே
ஆசைக் கணவன் வார்த்தை இல்லை
ஸ்திரமாக அழைக்க வில்லை அன்றோ
அதுக்கு மேலே
தன்னுடைய அம்பு நடையாடாத இடமாய் இருக்க இத்தனை நாள் ராக்ஷஸி கையில் நோவு பட வைத்தார்
இப்பொழுது தூது சுக்ரீவர் தர்ம காரியத்தால் தான் -என்றவாறு )
ததா குரு தயாம் மயி –
அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே –
இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்
(கிருபைக்கே இருப்பிடமான பிராட்டி திருவடியின் கிருபையை இரக்கிறாளே
அவன் நிரங்குச ஸ்வா தந்த்ரன்
திருவடி தானே ஆச்சார்யன்
வராஹ பெருமாள் பெருமாள் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் -வார்த்தை -சொல் -பேச்சு நம்பி உள்ளேன்
அவை கார்யகரம் ஆகா விட்டாலும் பெரியாழ்வார் சம்பந்தம் வீணாகாதே
அவர் சக்தியில் குறை இல்லை
மத் பாபமே நிமித்தம்
கிஞ்சித் மஹ பாபம் பண்ணினவள் அன்றோ
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -)
எம்மை சேர்விக்கும் வண்டுகளே –
என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –
ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை
அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்
கார்யே கர்மணி நிர் திஷ்டே யோ பஹுந் யபி சாதயேத்
பூர்வ கார்யா விரோதேந ஸ கார்யம் கர்த்தும் அர்ஹதி –41-5-
விடுத்த திசைக் கருமம் திருத்தி –திருப்பல்லாண்டு -9-
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-