Archive for November, 2023

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –இரண்டாம் பத்து –

November 30, 2023

விண் தொழ வேறு இன்றித் தன்னுள் வைத்து – வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும், வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற சீலத்தை நினைத்து விண்ணினுள்ளார் தொழாநிற்பார்கள்–பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பர்களோ?’என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்றருளிச் செய்தார். 

என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார், ‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ? நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.–எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த வளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த முதலிகளுட்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக்கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷணவர்’ என்றனர்; எம்பார், ‘அங்ஙனன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி ‘இசைவித்து’ என்கிறபடியே அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதமகுரு,’ என்றருளிச்செய்தார்.

திண்மதியைமுன்பே சேர்ந்திருக்குமவர்கட்குத் திண்ணிதான மதியைக் கொடுக்குமவனை. அதாவது, அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று, ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன, ‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே? உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றான்.0ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின்-குணாதிக விஷயமாகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; ‘ஸ்ரீபரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்விராமபிரானுடைய முகத்தில் விழிக்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக்கொண்டு கிடந்தான். 

திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை-மால்யவானில் பெருமாள் இருந்த போது கார்காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு ‘வசிஷ்டசிஷ்யன் ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான், விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. -இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

திரு உடம்பு வான் சுடர் – அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார்-ஈஸ்வரனுக்கு விக்ரஹமில்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர், ‘திருவுடம்பு வான்சுடர்’ என்னப் பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹமில்லை, குணமில்லை’ என்கிறவர்கள் செய்து வைக்கமாட்டாத பாவமில்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?” என்றருளிச்செய்வர் நஞ்சீயர்.-பலகாலும் விக்கிரத்தை வருணிக்கிறபடியை அனுசந்தித்து நம்பிள்ளை ஈடுபடுகிறார்.

“அப்பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாக இல்லை; பெண்ணாகவுமில்லை; அலியாகவுமில்லை; ஆணாகவுமில்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவுமில்லை; குணமாக இல்லை; மற்றைக் கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,” என்னும் வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகிருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி! நாட்டில் காணப்படுகின்ற மூன்றின் படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், ‘பிள்ளை இயலறிவுக்குப் போந்திருந்ததில்லையே! ‘ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கின்றாராதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?” என்றருளிச்செய்தார்.

எங்கும் பக்கம் நோக்கு அறியான் -‘ஆழ்வார் பக்கல் இறைவனுக்கு உண்டான 4அளவு கடந்த காதலைத் தவிர்க்க வேண்டும்’ என்று நாய்ச்சிமார் விரும்பி வார்த்தைகள் கூறினும் அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டுகின்றிலன்.–ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச்செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை: – ‘அப்பன் ஸ்ரீபாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷமுண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய, அது கேட்கவேணும் என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்தேற, அப்பனும் அங்கே ஒரு குட்டிச்சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க, ‘இவரைச் சமாதி பங்கம் பண்ணவொண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க, அப்பனும் யோகத்திலே எழுந்தருளியிருக்கின்றவர் திரும்பிப் பார்த்து, ‘இங்கே சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள, ‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு, ‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச்செய்கைக்கு ஏது என்?’ என்ன, ‘நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும் அவர் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்றுதரம் அங்கே எட்டிப் பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக்குடியில் சிலர் வந்தார் உண்டாகவேணும் என்றிருந்தேன்காணும்’ என்றருளிச்செய்தார். 

சம்பந்தமுடையார் அளவும் பெருகினபடியைக் கண்டு, ‘இது இறைவன் என்பக்கல் செய்த பக்ஷபாத மிகுதி அன்றோ?’ என்று இனியராய், தம்மை அங்கீகரிக்கைக்கு ஈடான குணங்கள் செயல்கள் முதலியவற்றை அநுசந்தித்து, அவற்றிற்கு வாசகமான பன்னிரண்டு திருப்பெயர்களாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்–‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரிப்பான் என்?’ எனின்,–சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால், அது பின்னை அவன் அவளில் நில்லாதேயன்றோ? ‘இருடிகள் குடியிருப்பை அழித்தான் மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தான்; இவையெல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காதொழிவது காண்’ என்றிருந்தோம்; அந்நாளில் அது பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப்பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்கவேண்டுமோ? வேண்டுவன செய்யப்பாரும்; நீர் இறாய்த்திருந்தீராகில், குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனையன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் கடக்க நில்லீர்,’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது. ‘ஸ்ரீ மஹாராஜர்க்குச் சத்துரு’ என்று வாலியைக் கொன்ற பின்னர் மஹாராஜர் கண்ணநீர் பொறுக்கமாட்டாமல் தாமும் கண்ணநீர் விழவிட்டார். ‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது,’ என்கிறபடியே ஸ்ரீ மாலாகாரர் பக்கல் அங்கீகாரம், அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீ கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம், அவன் தம்பியளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில், அவன் முன்னாகப் போ’ என்றருளிச் செய்தான்.

இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.-எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பாராம். –ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்து வாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.–நெடுமாற்கடிமை’  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச் சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார். ‘பிராட்டியே! ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக்கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகிறோம்,’ என்று அருளிச்செய்தார் பட்டர்

‘தனக்கேயாக எனைக்கொள்ளும் இஃதே–நம்முடைய பேற்றினை அறுதி இடுவோம்’ என்று பார்த்து, 1‘நீ இங்ஙனே நில்’ என்று அவனை நிறுத்தி வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.-இது குஹ்ய தமம்’ என்பதற்கு ஐதிஹ்யம்-எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, குஹ்யமாகவாம் அருளிச்செய்வது.

ஞானக் கை தா’ என்பதற்கு இரு பொருள் அருளிச் செய்கிறார்; ஒன்று, ‘நான்  பெற்றேன் என்று தெளியும்படி செய்ய வேண்டும்’ என்று முன்னர்க்கூறியது. மற்றொன்று,  ‘பரபத்தி பரஞான’ என்று தொடங்கி இங்கு அருளிச்செய்வது. முன்னைய பொருளில்,  ‘ஞானம்’ பிரத்யக்ஷரூப ஞானம்; இரண்டாவது பொருளில், பத்திரூப ஞானம்.  இவ்விருபொருள்களினும் சங்கதி பேதம் ஒழிய அர்த்த பேதம் இல்லை.இங்கே எம்பார்க்கு ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை நினைவுகூர்வது. அதாவது, ‘கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கைகொடுத்தால், எடுக்குமவர்களுக்கும் எளிதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்குமிறே; அப்படியே ஆகிறது,’ என்று.எம்பார்; ஆண்டான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஒருவரை அறியாமல் பகவச்  சம்பந்தத்தைப் பண்ணி, ஆண்டான் திருவடிகளில் ஆஸ்ரயித்தவர் என்று அறிந்த பின்  பயப்பட. அப்போது ஆண்டான் அருளிச்செய்த வார்த்தை என்றபடி.

இத்திருவாய்மொழியில், இவர் அறுதியிட்ட பிராப்பியமாவது, 2மலர்மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று ‘தனக்கேயாக என்னைக்கொள்ளும் ஈதே’ என்பதே அன்றோ? அதனை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். 3‘சர்வேஸ்வரன் மூன்று விதமான சேதநரையும் சொரூபத்திற்குத் தகுதியாக அடிமை கொள்ளுகின்றான்; நாமும் அப்படியே சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெறுவோமே!’ என்று அருளிச்செய்கிறார் என்று இவ்விடத்திலே எம்பார் அருளிச்செய்வர். 4‘முத்தரும் நித்தியரும், தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பிப்பார்கள்;-முத்தரும் நித்தியரும் ‘அஹமந்நம் அஹமந்நம்’ என்று  அவனை ஆனந்திப்பித்து, அவன் உகந்த அவ்வழியாலே ‘அஹமந்நாத’ என்று  தாங்களும் ஆனந்திப்பர்கள் என்றபடி.  பத்தர், தாங்கள் ஆனந்தியாமல் அவனை ஆனந்திப்பிப்பர்; ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ அன்றே? பத்தர், ‘அறிவில்லாத சம்சாரிகள் தங்களுடைய  சுக துக்கங்களுக்குத் தாம் காரணர்  அல்லர்; ஈஸ்வரனாலே ஏவப்பட்டே  சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடைகிறார்கள்;’ என்கிறபடியே, தாங்கள்  ஆனந்தியாமல் அவனுக்கு லீலா விஷயமாய்க்கொண்டு அவனை ஆனந்திப்பிப்பர்கள்  என்றபடி. -மயர்வு அற மதி நலம் அருளப் பெற்றவர்கள், ‘இறைவன் திருவுள்ளமானபடி செய்கிறான்’ என்று இராமல் ‘தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே’ என்று பிரார்த்திப்பான் என், திருவுள்ளமானபடி செய்கிறான் என்றிராதே?’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் எம்பாரைக் கேட்க, ‘அது கேளீர், முன்பு பிரிந்தன்று; பின்பு பிரிவுக்குப் பிரசங்கம் உண்டாயன்று; இரண்டும் இன்றி இருக்கத் திருமார்விலே இருக்கச்செய்தே, ‘அகலகில்லேன், அகலகில்லேன்’ என்னப்பண்ணுகிறது விஷய ஸ்வபாவமிறே; அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது,’ என்றருளிச்செய்தார். 

 பிரபந்நர்கள் வலஞ்செய்யலாமோ? வலம் செய்தல் உபாய கோடியில் சேராதோ?’ எனின்-‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டரும் பிரதக்ஷணம் பண்ணாநிற்கப் பின்னே சேவித்துக்கொண்டு போனேன்; அல்லாதார் கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப்போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –இரண்டாம் பத்து –

November 30, 2023

1. விஷயதே மஹாராஜ ராம வ்யஸந கர்ஸிதா:
அபிவ்ருக்ஷா; பரிம்லாநா: ஸபுஷ்பாங்குர கோரகா: ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன

———


2. உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச
பரிஸூஷ்க பலாஸாநி வநாநி உபவநாநி ச. –ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

ஸ்ரீராமபிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளையுடையன ஆயின்

இவையெல்லாம் தம்மைப்போன்று இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் வருந்தி, துக்கத்தையுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தையுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டு 1ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று, இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

———


3. ஸீதே ம்ருத: தேஸ்வஸூர: பிதராஹீந: அஸி லஷ்மண. –ஸ்ரீராமா. அயோத். 102 : 4

ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு.

——–


4. நசஸீதா த்வயாஹீநா நசாஹம் அபிராகவ
முகூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவோத் த்ருதௌ.–ஸ்ரீராமா, அயோத். 53 : 31.

இத்திருவாய்மொழியில், இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், 3மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்.

———


5. கிரயோ வர்ஷதாராபி: ஹந்யமாநா ந விவ்யது:
அபி பூயமாநா: வ்யஸநை: யதாதோக்ஷஜ சேதஸ:. – பாகவதம். 10. 20 : 15.

சர்வேஸ்வரன் காப்பவன் என்று இருப்பார், மூவகைத் துன்பங்களாலும் வருகின்ற இடையூறுகட்கு இடையாதே இருக்குமாறு போன்று, மலைகள் போன்ற அலைகள் மேலே தாவிச் சென்றாலும் அதற்குச் சலியாமல் இருக்கின்ற நாரையே!

———-


6. பதிஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத : பாரம்நாஸஸாத ஆப்லவோயதா. –ஸ்ரீராமா, அயோத். 119 : 36

பின்பு, நாயகனைப் பிரிந்து இவள் நோவுபடுகிறபடியைக் கண்டு கண்ணுறங்காது; ‘ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி. அப்படியே அன்றோ இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

——–


7. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந:
மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.–ஸ்ரீராமா. சுந். 9 : 30.

 

பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-என்கிறாள்.

———


8. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸிவம் அச்யுதம்.–தைத்திரீய நாராய. 11 : 8.

 

இறைவன் உயிர்கட்கெல்லாம் ஈஸ்வரனாயும், மங்களகரனாயும், உயிர்களைக் கைவிடாதவனாயும் இருக்கிறான்,’

——–


9. யஸ்ய அஸ்மி. 

இறைவனைச் சேர்ந்தவனாக நான் ஆகின்றேன்

————


10. தௌ வநாநி கிரீம்ஸ்சைவ ஸரிதஸ்ச ஸராம்ஸிச
நிகிலேந விசிந்வாநௌ ஸீதாம் தஸரதாத்மஜௌ.  ஸ்ரீராமா. ஆரண். 61 : 20.

கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.

தசரத சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆகையாலே, தேடப் பிறந்தவர்கள் அல்லர்’  என்றும்,
சீதாம்’என்றதனாலே, ‘தேடிக்கண்டிலோம் என்று ஆறியிருக்கலாம் விஷயமன்று’ என்றும்,
‘இத்தால், அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருளுண்டோ? ஜீவித்தல் சக்கியமன்று’
என்றும் உரையாசிரியர் அச்சுலோகத்திற்கு விசேடப்பொருள் அருளிச் செய்வர்.

——-


11. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம.–ஸ்ரீராமா. யுத் 18 : 33.

 

அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? ‘என்னை அடைந்தவர்களை எல்லாத் துன்பத்தினின்றும் நீக்கிப் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு’ என்று கூறிய வார்த்தை-இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, (ஆயின், அவ்வார்த்தை பொய்யோ?’ எனின், இப்பொழுது தனக்கு உதவாமையாலே பொய் என்று இருக்கின்றாள். ‘ஆயின், பொய் என்று இருக்கின்றவள் மெய்ந்நீர்மை தோற்கக் கூடுமோ?’ எனின், இராமாவதாரத்தில் மெய்யும் 1கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.-ஆயுதம் எடேன்’ என்ற சூளுறவைப் பொய்யாக்கின கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்  என்றபடி-)பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.

———

12. ஏஹிஏஹி புல்லாம்புஜபத்ர நேத்ர
நமோஸ்துதே தேவவர அப்ரமேய.
ப்ரஸ்ஹ்ய மாம் பாதய லோகநாத
   ரதோத்த மாத் பூத ஸரண்ய ஸங்க்ஸேய.-(பார. பீஷ்ம.  59 : 98)

ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி   மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை  மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்  பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்  இருக்கிற வரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோக நாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது   அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள்.

  ‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
  காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
  நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
  வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’-  என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்

———


13. ஸபங்காம் அநலங்காராம் விபத்மாம் இவ பத்மிநீம்
வ்ரீளிதாம் துக்க ஸந்தப்தாம் பரிம்லாநாம் தபஸ்விநீம். –ஸ்ரீராமா. சுந். 15 : 22.

14. அவ்யக்தலேகாம் இவ சந்த்ரலேகாம்
    பாம்ஸூ ப்ரதிக்தாம்இவ ஹேமலேகாம்
    க்ஷதப்ர்ரூடாம்இவ பாணலேகாம்
    வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம்

நைவாய எம்மே போல் -நைவையுடைய எங்களைப் போன்று. இனி, ‘நைவு தான் ஒரு வடிவு கொண்டாற்போன்று இருக்கின்ற எங்களைப் போன்று’ என்று கூறலுமாம்; ‘பூமியினின்றும் தோன்றினவளைப் போன்றிருந்தவளும், அதனை அழித்து அலங்காரம் செய்கின்றவர்கள் இன்மையின் ஒப்பனை அழிந்திருந்தவளும், பெருமாள் வரினும் ‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், அம்பு வாய் (அம்பு பட்ட புண்.)உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகதுண்டங்கள் போல இருந்தவளும், (பெருமாளுடைய திருமேனியிற் பிரிக்கப்பட்ட ஏகதேசம் என்று தோற்ற இருந்தாள்  என்றபடி.)ஆன சீதை’ என்றார் வால்மீகி பகவானும்.

——–


15. பதிஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸிதேக்ஷணா
ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களாநி அபிதத்நுஷீ. 

——–


16. ஸ தவ அதர்ஸநாத் ஆர்யே ராகவ: பரிதப்யதே
மஹதா ஜ்வலதா நித்யம் அக்நிநேவாக்நிபர்வதா:. –ஸ்ரீராமா. சுந்த. 35 : 44.


17. அந்தர்தாஹேந தஹந: ஸந்தாபயதி ராகவம்
வந தாஹாபிஸந்தப்தம் கூடோக்நிரிவ பாதபம். –ஸ்ரீராமா. அயோத். 85 : 17

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான்

ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

—————


18. ஸாரதீம் ரஜநீஞ்சைவ த்ருஷ்ட்வா ஜ்யோத்ஸ்நாநு லேபநாம்
காமவ்ருத்தஞ்ச ஸூக்ரீவம் நஷ்டாஞ்ச ஜனகாத்மஜாம்
   புத்த்வா காலமதீதஞ்ச முமோஹ பரமாதுர:.–  ஸ்ரீராமா, கிக்ஷ்கிந். 30 : 3.

கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும்

———


19. ந மே துக்கம் ப்ரியாதூரே ந மே துக்கம் ஹ்ருதேதிவா
   ஏததேவ அநுஸோசாமி வய: அஸ்யா: ஹி அதிவர்த்ததே.-ஸ்ரீராமா. யுத்த 5 : 5.

போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

——–   


20. அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
    க்ருதக்ருத்ய: ததாராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ. –சங்க்ஷேப ராமாயணம். 

விபீஷணனுக்கு முடி சூட்டிய பின்னர்ச் செய்து முடிக்க
வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தவராய் நடுக்கமும் தீர்ந்து மகிழ்ந்தவர் ஆனார்’

இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்; திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி. துளக்கு அறுதலாவது, ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான 1ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல் 2‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. இனி, துளக்கு அறுதலாவது, ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது

————-


21. க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிச அப்யய:
   க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம். -மஹாபாரதம். பீஷ்ம பர்வம்.

 சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.

———-


22. ஸ்தயம் ஸத்யம் புநஸ்ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
   வேத ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி நதைவம் கேஸவாத் பரம்.

அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் – இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.

    ‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.  

————

23. அத்யத்புதம். இதம் வாக்யம் தவ ராம ஸூபாக்ஷரம்
     பாவந: ஸர்வலோகாநாம் த்வமேவ ரகுநந்தந, –ஸ்ரீராமா. உத்தர. 82 : 9.

அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்

—————


24. நஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

 

காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,

மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

————


25. தத: கரோத பரீதேந ஸம்ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேணச்சிந்நம் தஸ்ய ஸிரோமயா.–மத்ஸபுராணம்

தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

——–
26. ஸஏஷ ப்ருது தீர்க்காக்ஷ: ஸம்பந்தீ தே ஜநார்த்தந: – பாரதம்.

27. தம்இமம் ஸர்வஸம்பந்நம் ஆசார்யம் பிதரம் குரும்
அர்ச்யம் அர்ச்சிதும் இச்சாம: ஸர்வே ஸம்மந்தும் அர்ஹத.–பாரதம், ராஜசூய

பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள்.

இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

———–


28. பஹூஸ்யாம் பிரஜாயேயேதி. பக். –தைத்திரீய. ஆனந். 6 : 3.

நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள்

  ஜ்ரும்பிதம் தத்தநு: த்ருஷ்ட்வா ஸைவம் விஷ்ணு பராக்ரமை:
அதிகம் மேநிரே விஷ்ணும் தேவா: ஸர்ஷிகணா: ததா. – ஸ்ரீராமா. பால. 75 : 19.

மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான (சந்தேகம் கொள்ளும்படி)தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

—–


29. ராம: கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மநோஹர:
ரூபதாக்ஷிண்ய ஸம்பந்ந: ப்ரஸூதோ ஜநகாத்மஜே. –ஸ்ரீராமா. சுந். 53 : 8

தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார்.

ராம சர்வாங்க சுந்தரராய் இருக்கை. கமலபத்ராக்ஷ – அதிலே ஒரு சுழியாயிற்று-  அமிழ்ந்துவராக்கு வேண்டுவது. ‘அக்கண் அழகுக்கு எல்லை என்?’ என்னில், ஸர்வ  ஸத்வ மநோஹர:- திர்யக் ஜாதியனாய்ப் பணையோடு பணை தத்தித் திரிகிற என்  நெஞ்சையும் அபஹரித்தன்றோ? ரூப தாக்ஷிண்ய ஸம்பந்த ப்ரஸூத; – தேக  குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றதுதான் ஒளத்பத்திகமாயிருக்கும்.  ஜநகாத்மஜே -‘அற விஞ்சச் சொன்னாய்; இனி, இங்ஙன் சொல்லலாவார் உண்டோ, இல்லையோ?’ என்று பிராட்டிக்குக் கருத்தாக, பின்னை உம்மைச் சொல்லலாம், நீரும்  உண்டு’ என்கிறான்திருவடி

——-

30. ஏஷ ஸம்ப்ரஸாதா: அஸ்மாத் ஸமுத்தாய பரஞ்ஜ்யோதி:
உபஸம்பத்ய ஸ்வேநரூபேண அபிநிஷ்பத்யதே. –சாந்தோக்கியம்.

31. நாராயண பரோஜ்யோதி:. –தைத்திரீய நாரா, அநு. 11.

32. ஸ்வாபாவிக அநவதிகாரிஸய ஈஸித்ருத்வம்
நாராயண த்வயி நம்ருஷ்யதி வைதிக: க:. –தோத்திர ரத்நம், 11.

பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி

————


33. விஷ்ணுபக்தி விஹீந: ய: ஸர்வ ஸாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய நபவேத் தஸ்ய உத்பத்தி: நிரூப்யதாம்.-பத்மபுராணம்.

பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின் கண் ஐயப் படும்.’

——–
34. யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம்
தத் அபஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்யகுகௌ மஹாத் மந:.–பாரதம், ஆரண்ய.

தன்னுள் ஒடுங்க நின்ற1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற(இது அவாந்தர சம்ஹாரத்தைக் குறித்தது.). இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம்(இது மஹாசம்ஹாரத்தைக் குறித்தது. இப்பொருளில் ‘கவர் வின்றி’ என்பதற்கு, ‘ஒன்றும்
தப்பாமல்’ என்று பொருள் கொள்க.)

————

35. நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே.
ஸமர்த்தோ த்ரூஸ்யதே கஸ்சித் தம்விநா புருஷோத்தமம்.

காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்  விரிகமல உந்தியுடை விண்ணவனை’-  என்றார் இளங்கோவடிகள்.

—————-

36. அந்யம் தேஹி வரம் தேவ ப்ரஸித்தம் ஸர்வஜந்துஷூ
மர்த்யோ பூத்வா பவாநேவ மாம் ஆராதய கேஸவ. 

கள்வா1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த

——-

37. தேவகார்யாவதாரேஷூ மநுஷ்யத்வம் உபேயிவாந்
     த்வாமேவ ஆராதயிஷ்யாமி ஹரத்வம் வரதோபவ. –ஹரி வம்ஸம்.கைலாச யாத்திரை.

38. அஞ்ஜலிம் ஸம்புடம் க்ருத்வா விஷ்ணும் உத்திஸ்ய ஸங்கர:
உமயா ஸார்த்தமீஸாநோ மாஹாத்ம்யம் வக்தும் ஐஹத.

நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ (மீன் துடித்தல் போல நாக்குத் துடிக்கிறபடி’)என்றான். 7நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?

———–

39. ஸங்கை: ஸூராணாம் திவி பூதலஸ்தை:
ததா மநுஷ்யை: ககநேச கேசரை:
ஸ்துத: க்ரமாந்ய: ப்ரசகார ஸர்வதா
மம அஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி–
. விஷ்ணு தர்மம்.

ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட

——

40. ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஐஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தக்கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:

இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.

ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்  சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ  சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த  இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’  என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்  பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்  பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –  ‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த  போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –  ஸம்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-  தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்  இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி  ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்  இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’  என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

——–

41. மநஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் –ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.

———


42. ஸர்வகந்த: ஸர்வரஸ:. –சாந். உபநிட 2 : 14.

‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.

————
நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே நதத் ஸம:ச அப்யதிகஸ்ச த்ருஸ்யதே. -அதிமா நுஷ ஸ்தவம், 15.

எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்

———-

43. ப்ரஹ்மேஸமத்ய கணநா கணநார்க்க பங்க்தௌ
இந்த்ராநுஜத்வம் அதிதே: தநயத்வயோகாத்
இக்ஷ்வாகுவம்ஸ யதுவம்ஸ ஜநிஸ்ச ஹந்த
ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந:  பக். 65.

————-

44. யஸ்மாத் தர்மாந் ஆசிநோதி ஸ ஆசார்ய:
தஸ்மை நத்ருஹ்யேத் கதாசந
ஸஹி வித்யாத: தம் ஜநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜன்ம
ஸரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: –ஆபஸ்தம்ப தர்ம சூத்

தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார்.

———–

45. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் விரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸச:ஸ்ரீ கீதை. 18 : 66

46. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹ்ருத் கதி:  நாராயண: 

இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள்.-(ஸ்ரீராமா, யுத். 33 : 18) 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது சுபாலோபநிடதம்.. 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது  பெரிய திருவந். 5

——————-

47. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:.

48. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸா நூஷூரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

 

49. குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மியம் நேஹ வித்யதே
க்ருதார்த்த: அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்ப்யதே.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’ என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார், ‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும்.

முலையோ முழுமுற்றும் போந்தில; மொய்பூங் குழல்குறிய;
கலையோ அரையில்லை;நாவோ குழறும் ‘கடல்மண்ணெல்லாம்
விலையோ!’ எனமிளிரும்கண் இவள்பர மேபெருமான் மலையோ திருவேங் கடமென்று
கற்கின்ற வாசகமே?’–திருவிருத்தம். 60

——–

50. க்ரயஸ்ச பரிவ்ருத்திஸ்ச விபாகஸ்ச ஸமே யதி
ஆதஸாஹாத் நிவர்த்தந்தே விஷமே நவ வத்ஸராத். –.

51. வபுராதிஷூ யோபிகோபி வா குணத: அஸாநியதா ததாவித:
தத் அயம் தவ பாதபத்மயோ: அஹம் அத்யைவ மயா ஸமர்ப்பித:.–ஸ்தோத்திர ரத்நம், 52.

52. மமநாத யத் அஸ்தி யோஸ்மி அஹம் ஸகலம் தத் ஹி தவைவ மாதவ

நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ: அதவா கிந்நு ஸமர்ப் பயாமி தே.–ஸ்தோத்திர ரத்நம், 53.

மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும், 3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீஆளவந்தார் திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.  

———                          

53. இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா
நித்யம் ப்ரியாஸ்தவது கேசந தேபி நித்யா:
நித்யம் த்வ தேகக பரதந்த்ர நிஜஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸநம் ந: –ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், 36.

எனது ஆவி யார் யான் ஆர்  – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

————

54. த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்
ஏஷமே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவோ துரதிக்ரம:. –ஸ்ரீராமா. யுத். 36 : 11.

சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்

————

55. ந அஹம் ஆராதயாமி த்வாம் தவபத்த: அயம் அஞ்சலி:
வரார்த்திநாந்த்வம் வரத ப்ரயச்ச அபிமதாந் வரான். –விஷ்ணு தர்மம்.

அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக்கொண்டு சென்று, 5‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன,நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போகவல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான். ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை. இனி, தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம்

————

56. அமர்ஷீ துர்ஜயோ ஜேதா விக்ராந்தோ புத்திமாந் பலீ
ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: நித்யம் பிராணோ பஹிஸ்சர:.–ஸ்ரீராமா. ஆரண் 34 : 14.

மூக்கை அறுத்தவன் ஸ்ரீராமனோ?’ எனில், ஆம்; கையாலே அறுக்க வேண்டுமே? 3‘ஸ்ரீராமபிரானுக்கு இலக்குமணன் வலத்தோள்’ எனப் புகலும் ஸ்ரீராமாயணம்.

நீருள எனின்உள் மீனும் நீலமும்
பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்? அருளு வாய்’ என்றான்.–
  என்ற கம்பராமாயணச் செய்யுள்


57. யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹகச்சதி.

பின் நெறிக் கொண்ட நெஞ்சனாய் -‘இறைவன் எவ்வெவ் வழியில் செல்லுகின்றான்? இவ்வுயிரும் அவ்வவ்வழியெல்லாம் கூடவே செல்லுகிறது’ என்கிறபடியே,2 அவன் பின்னே நெறிப்பட்ட நெஞ்சையுடையனாய். இதனால், ‘தவம் எய்தினன்’ என்கிற பலத்தைச் சொல்லுகிறாராதல். ‘பின் நெறி’ என்பது, ‘பிரபத்தியை’ எனலுமாம். பின் நெறி – 3பின்னே சொன்னவழி என்றபடி.

58. ஸ: அஸ்துதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணாவிபஸ்சிதா.–ஆனந்தவல்லி, 1 : 2.

இவ்வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற்குணங்களை அவ்விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே, தம்முடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி ‘இறைவனை அனுபவிக்கப்பெற்றேன்’ என்று மகிழ்கிறார்.

 

59. ஆகர்ண பூர்ணை: இஷூபி: ஜீவலோகம் துராஸதை:
கரிஷ்யே மைதிலீஹேதோ: அபிஸாசம் அராக்ஷஸம் –ஸ்ரீராமா. ஆரண் 64 : 66

 குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – 2’சீதா பிராட்டியின் பொருட்டு, பாணங்களால் இவ்வுலகத்தில் பிசாச சாதி அற்றதாயும், இராக்கத சாதி அற்றதாயும் செய்வேன்’ என்கிற படியே, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களும் உறவினர்களுமான இவர்களாலே குழாங்கொண்டு வரத்தின் வலிமை தோள் வலிமை என்பனவற்றால் தழைத்து வேர் ஊன்றின இராக்கதனுடைய சாதியினைக் கிழங்கு எடுத்த சக்கரவர்த்தி திருமகனை.

60. கதாநு அஹம் ஸமேஷ்யாமி பரதேந பஹாத்மநா
ஸத்ருக்நேந ச வீரேண த்வயாச ரகுநந்தந.–ஸ்ரீராமா. ஆரண். 16 : 10.

61. குஹேந ஸஹிதோ ராம: லக்ஷ்மணேந ச ஸீதயா. –ஸ்ரீராமா. பால. 1 : 29

இலக்குமணா! மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார் பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே, (கிழிக்குறை – நிறைந்திராமல் குறைந்திருக்கிற பணப்பை. கிழி – பணப்பை. ‘வேண்டிய,  வேதங்கள் ஒதி விரைந்து ‘கிழி அறுத்தான்’ என்ற இடத்துக் ‘கிழி’ என்பது இப்பொருட்டு.)கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான், குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார் வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது, 5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும் 6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும் படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம்.

62. ராமலக்ஷமண ஸீதார்த்தம் ஸ்ரவந்தீம் வாரிநேத்ரஜம்
அஸக்ருத் ப்ரைக்ஷத ததா ந்ருத்யந்தீமிவ மாதரம். –ஸ்ரீராமா. அயோத். 40 : 25.

63. ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே
நரம் ஸ்ரியாஜூஷ்டம் இவ உபஜீவிந:.–ஸ்ரீராமா. சுந். 29 : 1 .

ஸ்ரீகௌசல்யையார் பெருமாளைப் பிரிந்து துடிக்கிற துடிப்பை 1‘ஸ்ரீராமன், தாயை நர்த்தனஞ் செய்கின்றவளைப் போன்று பார்த்தான்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி பகவான். ஆதலால், வடிவழகியார் செய்யும் வியாபாரங்கள் எல்லாம் கண்ணுக்கு இனியவாகவே இருக்கும். அன்றியும் பிராட்டி, பிரிந்து அழகு அழிந்திருக்கிற சமயத்திலேதான் 2‘மங்கள சொரூபியாய் இருந்தாள்’ என்று ஸ்ரீவால்மீகி கூறுகிறார். ஆதலால், அழகியார், என்றும் வடிவழகியாரேயாவர்.

64. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருசன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.–ஸ்ரீராமா. பால. 1 : 38.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின், 4குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; 5‘ஸ்ரீ பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்வாராம பிரானுடைய முகத்தில் விழ்க்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் அன்றோ?

 

65. மந: பூர்வோ வாக் உத்தர:.

இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை.

66. மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வ மே. –ஸ்ரீராமா. சுந். 64 : 15.

பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ (திருச்சந். 105.)ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது. 2‘அழகானவளும் மதுரமான வார்த்தையுடையவளும்’ என்கிறார் ஸ்ரீவால்மீகி. ‘பாடிப்பாடி’என்ற அடுக்கு, முதல் கூப்பீடுபோல அன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்ததிருத்தலையும் தெரிவிக்கும்.

67. கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி ஸோகஜம்
புண்டரீக பலாஸாப்யாம் விப்ரகீர்ணம் இவ உதகம். –ஸ்ரீராமா. சுந். 33 : 4.

 கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? (முடியானே’ என்ற திருவாய்மொழியின்  பொருளை ஈண்டு நினைத்தல் தகும்.)மங்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது 5யார் குடி வேர் அற?’ (இராவணன் குடி வேர் பறியவோ, இராக்காதர்கள் என்று
சொல்லப்படுகிற எல்லாருடைய குடிகளும் வேர் பறியவோ?’)என்று பட்டர் அருளிச்செய்வர். 6‘யாரைச் சேதநராகக் கொண்டு?’என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். 7‘பாவியேன், யான் வந்த இவ்வரவு, உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லையே!’ என்று இரங்குகிறான் திருவடி.

யாரைச் சேதநராகக் கொண்டு?’ என்றது, ‘யாருடைய இன்பத்திற்காக?’ என்றபடி.  சேதநன் -இன்பத்தை நுகர்கின்றவன். ‘தாமரை இதழிலே முத்துப்பட்டாற்போன்று  இருக்கிற இந்த அழகினை அனுபவித்தற்குத் தக்கவரான பெருமாள் அருகில்  இல்லாதிருக்க, இக் கண்ணீருக்குப் பயன் யாது?’ என்பது கருத்து.

68. ஸாதிர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாத் நிரீக்ஷ மாணாம் அசிந்த்யபுத்திம்

ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம் வாதாத்மஜம் ஸூர்யம் இவ உதயஸ்தம்.–ஸ்ரீராமா. சுந். 31 : 119.

எங்கும் நாடி நாடி – தன் ஆபத்தே செப்பேடாக, வருதற்கு உரித்து அல்லாத திக்குகளையும் பார்க்கிறாள். நினைவின்றியே இருக்கச் செய்தேயும், வாராத் திருநாமம் செவிப்பட்டவாறே 1‘விலங்கப் பார்ப்பது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது ஆனாள்’ என்றார் ஸ்ரீவால்மீகி. ‘ஆயின், வருவதற்கு உரித்து அல்லாத திக்கிலும் தேடுவான் என்?’ என்னில், சம்பாவனை இல்லாத திக்கிலும் வந்து தோற்றுமவன் ஆகையாலே, தேடுகிறாள். ‘ஆயின், பரத்துவம் முதலிய நிலைகளை விட்டு, இவர் அவதாரத்தையே பேசுவான் என்?’ எனில், 2‘பத்துடை அடியவர்க்குப் பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போகமாட்டார். இனி, ‘எங்கும் நாடி நாடி’ என்பதற்கு, தன் கொய்சகம் உட்படப் பாராநின்றாள்’ என்று பட்டர் அருளிச்செய்வர். ‘அதற்குக் கருத்து என்?’ என்னில், 3‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்கிறபடியே, அவன் இருந்த இடமாகையாலே

கீழே பார்த்ததற்குக் கருத்து என்?’ என்னில், பூமியைப் பிளந்து  கொண்டு புறப்பட்டு ஒருவன் திருநாமம் சொல்லச் சம்பாவனையுண்டாகில், அல்லாத
திக்கிலும் உள்ளது என்று பார்த்தாள்; அன்றிக்கே, ‘மாஸோபவாசிகள், ‘சோறு’ என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள்,’ என்னுதல்; அங்ஙனன்றிக்கே, ‘சிம்சுபா  விருக்ஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள்’ என்னுதல். யூம சிந்த்ய புத்தம் ததர்ஸ் – அவன்  வடிவு காண்பதற்கு முன்னே அகவாயையாயிற்றுப் பரிசோதித்தது; ‘இந்நிலத்திலே புகுந்து  இடங்கொண்டு நாம் இருந்த இடந்துருவி நிலை குத்த வல்ல நெஞ்சையுடைய  வனன்றோ?’ என்று. பிங்காதிபதேரமாத்யம் – ‘இவன் ஸ்வதந்த்ரல்லன்; இராஜ கார்யம்  இவன் கையிலே உண்டு’ என்று அறிந்தாள். வாதாத்மஜம் – பெருமாளுக்குப் பிராணஹேதுவான பிராட்டிக்குப் பிராணனைக் கொடுக்கையாலே ‘இவன் சர்வர்க்கும்  பிராணஹேதுவானு வாயுபுத்திரன்’ என்று தோன்ற இருந்தான். சூர்யமிவோதயஸ்த்தம் –  இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது. பெருமாளாகிற ஆதித்திய உதயத்துக்கு  அருணோதயம் என்னலாம்படி இருந்தான்; ஆகையிறே, இலங்கை நாலுமதிளுக்கு நடுவு  ‘ஹரி ஹரி’ என்கிறபடியே இருக்கிறது.’

69. மத்த: ஸர்வம் அஹம் ஸ்ரவம் ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்மா ஆத்மஸம்ஸ்ரய:.– ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19 : 85.

என்னிடமிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; எல்லாம் என்னிடத்தில் லயம் அடைகின்றன; எல்லாப் பொருள்களும் நானாகவே இருக்கிறேன்’ என்னும் தெளிவுடையவனுக்குத் தோன்றினவன், கலங்கின 1அபலைக்குத் தோன்றானோ!’ என்று வாடுகிறாள் என்கிறாள் என்றபடி. 


70. தாதா யதாபூாவம் அகல்பயத்.–தைத்திரீய நாராயண் உபநிடதம்.

இவ்வாணுதலே – ஒளியுடன் கூடின நுதலையுடைய இவள். ‘இவ்வழகுக்கு இலக்கானார் படுமதனை இவள் படுவதே!’ என்பாள், ‘வாடும் இவ்வாணுதல்’ என்கிறாள். ‘இவள் முடிந்தால் 6‘பிரமன் முன் காலத்தில் இருந்தபடியே படைத்தான்’ என்பது போன்று, உம்முடைய மேன்மையாலே ‘இன்னம் இப்படிப்பட்டது ஒரு வடிவத்தை உண்டாக்கலாம்’ என்று இருக்கிறீரோ?’ என்பது திருத்தாயாருடைய உடகோள். ‘நன்று; இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி.

70a. இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்மசரீ தவ
       ப்ரதீச்சசைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா.–ஸ்ரீராமா. பால. 73 : 24.

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்     

71. துஷ்கரம் க்ருதவாந் ராம்: ஹீநோ யத் அநயா ப்ரபு:
    தாரயதி ஆத்மநோ தேஹம் ந ஸோகேநாவஸீத்தி. –ஸ்ரீராமா. சுந். 15 : 53

இப்பெண்பிள்ளை நிலையைக்கண்ட திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை. மால்ய வானில் பெருமாள் இருந்த போது கார் காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு, ‘வசிஷ்ட சிஷ்யன், ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான் விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. ‘இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

72. துல்ய ஸீல வயோ வருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
    ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சேயம் அஸிதேக்ஷணா.–ஸ்ரீராமா. சுந். 16 : 5.

சக்கரவர்த்தி திருமகனுக்குத் தகுந்த சீலம், வயது, ஒழுக்கம், ஒத்த குலம், இராஜ இலக்கணம் இவற்றையுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு, பெருமாள் தகுந்தவர்; கறுத்த கண்களை  உடையளான இப்பிராட்டியும் பெருமாளுக்குத் தகுந்தவர்’ என்னும் படி காணும் இருக்கிறது. உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் – ‘விஷயத்திற்குத் தகுதியாக அன்றோ ஆசையும் இருப்பது? உம்மை அணைய ஆசைப்பட்டாளோ? காட்சியிலேயும் அருமைப்படுத்து வீரோ?’ என்பாள், ‘காணும் ஆசை’ என்கிறாள். 1‘ஆசை என்னும் கடல்’ (பெரிய திருமொழி, 4. 9 : 3.)என்கிறபடியே,’ ஆசையாகிய கடலிலே அழுந்தாநின்றாள்’ என்பாள், ‘ஆசையுள்’ என்கிறாள். நைகின்றாள்’ என்பதில், 4இவளைத் தரிப்பிக்க வேண்டா; அடியில் நிலையிலே நிறுத்த அமையும்’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இதனால், ‘வாடுகை தான் தேட்டமாம்படி ஆயிற்று என்கிறாள்’ என்றயடி..

73. நைவ தம்ஸந் ந மஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந். –ஸ்ரீராமா. சுந். 36 : 42.

நீர் இரக்கம் இலீர்6‘தன் சரீரத்தின்மேல் தங்கி இருந்த காட்டு ஈக்களையும் கொசுக்களையும் பாம்புகளையும் ஓட்டமாட்டார்’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த துன்பத்தால், மற்றைப் பிராணிகளால் உண்டாகும் துன்பத்தையும் அறியாதிருந்த நீர், இப்பொழுது நோவுபடுகை தவிர்ந்தால், சாமான்யமான இரக்கமும் போகவேண்டுமோ? ‘ஆயின், நீரே இரங்கல் வேண்டும்; நீர் இரங்கும்படி செய்யத் தக்க சாதனம் இவளிடத்து இன்று என்று கூறுவது போன்று, ‘நீர் இரக்கமிலீர்’ என்று கூறுவது எற்றிற்கு? ‘நைகின்றாள்’ என்று திருத்தாயார் கூறியது, இறைவன் இரக்கத்திற்குச் சாதனம் ஆகாதோ?’ எனின், ‘இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது. ‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின், ‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம், அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்

74. நாயம் ஆத்மா ப்ரவசநேந லப்யோ நமேதயா ந பஹூநா ஸ்ருதேந

யம் ஏவ ஏஷ வ்ருணுதே தேநலப்ப: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருதே தநூம் ஸ்வாம்.–முண்டகோபநிடதம். 3. 2 : 3

இப்பரம்பொருள், மனத்தாலும் நிதித்தியாசனத்தாலும் மிகுந்த கேள்வியாலும் அடையத்தக்கவன் அல்லன்; இறைவன் எவனை வரிக்கின்றானோ, அவனால் அடையத் தக்கவன்,’ என்கிறபடியே, தானே காட்டாக காணும் இத்தனையே.

இவ்வுபநிடத வாக்கியத்தின் பொருளோடு ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய் முதற்பொருளை   உணர்தற்கு உபாயம் மூன்று; அவை, கேள்வி, விமரிசம், பாவணை என்பன: அவற்றுள்  கேள்வி இதனாற்கூறப்பட்டது,’ என்னும் (கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப் படுவர் மற்றீண்டு வாரா நெறி.-குறள். 356)பரிமேலழகருரை ஒரு புடை ஒப்பு நோக்கத்தகும்                        

75. விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:–ஸ்ரீராமா. பால. 1 : 18.

சக்தியில் விஷ்ணுவைப் போன்றவர்; பார்க்கத் தகும் தன்மையில் சந்திரனைப் போன்றவர்’ என்கிறபடியே, பல பொருள்களையும் இவளுடைய படிக்கித் திருஷ்டாந்தமாகக் கூறக் கூடியவாறு இவள்தன் நிலை இருக்கிறது

76. தஹந்தீமிவ நிஸ்வாஸை: வ்ருக்ஷாந் பல்லவதாரிண:
ஸங்காதமிவ ஸோகாநாம் துக்கஸ்ய ஊர்மிமிவ ஸ்திதாம்.–ஸ்ரீராமா. 17 : 29.

உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் – கொண்டு வருவதற்குப் பரிகரம் இருந்தும் வரக்காணாமையாலே மனமானது வேர்பறியும்படி நெடுமூச்சு எறியாநிற்கும். 1‘கழுத்தளவு நீரில் இருக்கிற தளிர்களை யுடைய மரங்களைத் தனது மூச்சுக் காற்றினால் கொளுத்துகின்றவள் போல இருக்கிற சீதை’ என்றார் ஸ்ரீவால்மீகி பகவான். 2தண்ணீர் மிக – நெடுமூச்சாகப் புறப்பட்டு, புறப்படாதது கண்ணீராய்ப் புறப்படா நின்றது. கலங்கிக் கைதொழும் – 3தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே காதலி? இவளே – 4அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழாநின்றாள்.  

 

மகளிர், தெளிந்திருக்கும் காலத்துக் கணவனது அன்பைப் பெறுவதற்கு அவனை  வணங்கமாட்டார்’ என்பது கருத்து. ‘ஞானிகள் இறைவனுடைய திருவருளைப் பெறுதல்  நிமித்தம். அவனை வணங்கமாட்டார்கள்’ என்ற விசேடப்பொருளும் தோன்றும்.
அடியேன் நான் முயற்சியின்றி நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே’ என்றார்  திவ்வியகவி.

77. அநித்ர: ஸததம் ராம: ஸூப்தோபிச நரோத்தம:
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரந் ப்ரதிபுத்யதே.–ஸ்ரீராமா. சுந். 38 : 48 

சீதேதி மதுராம் வாணீம் வியாகரந் ப்ரதிபுத்யதே’ என்று வாய்வெருவுவான்  அவன் கிடீர். அநித்ரஸ் ஸததம் ராம: – நித்திரையோடே காலக்ஷேபம் பண்ணவேண்டும்  செலவுடையவர், ஸந்ததம் அநித்ரராயிருப்பர். சுப்தோபிச – ஸததம் நித்ர : என்று  வைத்து, ஸூப்தோ பிச என்கிறது, பராகர்த்த அநுசந்தான அபாவத்தைப் பற்ற.  நரோத்தம: – அபிமத விஸ்லேஷத்தில் இங்ஙனே இருக்கைபோலே – புருஷோத்தமத்தமாவது.’

இவள் இராப்பகல் வாய் வெரீஇ – 2‘ஆடவர் திலகனான ஸ்ரீராம்பிரான் எப்பொழுதும் உறக்கம் இல்லாதவராக இருக்கிறார்; ஒருகால் உறங்கினராயினும், ‘சீதா’ என்கிற மதுரமான வார்த்தையினைச் சொல்லிக் கொண்டு விழித்துக் கொள்ளுகிறார்’ என்கிறபடியே, ‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள். ‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் 3‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் *கவனம், ஞாபகம்.)பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும். ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின், வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.

78. மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹத்அஹ்தி நஸம்ஸய:
ஸமர்த்தாவபி தௌ யந்மாம் நாவேக்ஷேதே பரந்தபௌ.
பக். 106.

79. அச்சேத்ய: அயம் அதாஹ்ய: அயம் அக்லேத்ய: அசோஷ்ய ஏவச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசல: அயம் ஸநாதந: –ஸ்ரீகீதை. 2 : 24.

உள்உள் ஆவி உலர்ந்து – உள்ளே இருக்கும் மனத்திற்குத் தாரகமான ஆத்துமா சருகாய் வருகிறபடி. 2‘இவ்வாத்துமா வெட்ட முடியாதவன், கொளுத்த முடியாதவன், நனைக்க முடியாதவன், உலர்த்த முடியாதவன்’ என்று சொல்லப்படுகிற இத்தன்மையும் போயிற்று என்கிறாள். ‘ஆயின், உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், 3பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே -வேவாரா வேட்கை நோயாகையாலே -அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று

80. அந்தகாரே அதி தீவ்ரேச நரஸிம்ஹம் அநுஸ்மரேத்
     தரதி அகிலதுக்காநி தாபார்த்தோ ஜலஸாயிநம்
    கருடத்வஜ அநுஸ்மரணாத் விஷவீர்யம் ப்ரஸாம்யதி.–விஷ்ணு தர்மம். அத், 40.

வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் -‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும். 4‘தாபத்தாலே பீடிக்கப்பட்டவன் தண்ணீரில் சயனித்திருக்கிற நாராயணனை நினைக்கக் கடவன்’ என்பது விஷ்ணு தர்மம்.   

81. சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி
ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணாம். ஸ்ரீராமா. சுந். 66 : 10.

தான் பட்ட – 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

அளவுபடை-சிறுபடை; இங்கு, நாயகன். பெரும்படை – நாயகி. கண்ணழகு  முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.

82. ததோ மலிந ஸம்வீதாம் ராக்ஷஸீபி: ஸமாவ்ருதாம்
உபவாஸ க்ருஸாம் தீ நாம் நிஸ்வஸந்தீம் புந: புந: –ஸ்ரீராமா. சுந். 15 : 18

இந்தச் சுலோகம், பலகாலும் பெருமூச்சு விடுதற்கு மேற்கோள்.–பின் அழுக்குப் புடைவையை உடுத்தவளும் அரக்கியரால் சூழப்பட்டவளும் பட்டினியால் இளைத்தவளும் எளியவளும் அடிக்கடி பெருமூச்சு எறிகின்றவளுமான பிராட்டி’ என்கிறார். ஸ்ரீவால்மீகியும். 3உள்ளம் மலங்க’ (திருவாய். 2. 4 : 4)என்ற இடம், வெட்டி விழுந்த படி சொல்லிற்று. 4உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ (திருவாய். 2. 4 : 7)என்ற இடம், உலர்ந்தபடி சொல்லிற்று; இங்கு, ‘தன நெஞ்சம் வேவ’ என்கையாலே, நெருப்புப் பற்றி எரிகிறபடி சொல்லுகிறது.

83. ஸஹி தேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி:
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷணு: ஸநாதந:.–ஸ்ரீராமா. அயோத். 1 : 7.

கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் – கிளர்ந்த ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில் இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால், 2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ (இலங்கையை அடியோடு அழித்தது போன்று, இவளையும் அழியாதே  கொள்ளும்)என்ற தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் – இவளுடைய இளமை பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள்,(உம்முடைய ஜீவனம்’ என்றது, ‘மணநோக்கம் உண்டானே’ (பெரியதிரு. 8. 10 : 1.)  என்றதனை நோக்கி;) ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

84. உதார வ்ருத்தார்த்த பதை: மநோரமை:
ததாஸ்ய ராமஸ்ய சகார கீர்த்திமாந்
ஸமாக்ஷரை:ஸ்லோகஸதை: யஸஸ்விந:
யஸஸ் கரம் காவ்யம் உதாரதீ: முநி: — ஸ்ரீராமா. பால. 2 : 42.

வண்சடகோபன் சொல் –2‘உதாரகுணத்தையுடையவரும் மனனசீலருமான ஸ்ரீவால்மிகி இராகவனுடைய கீர்த்தியினை உண்டு பண்ணுகிற இந்தக் காவியத்தைச் சுலோகங்களாலே செய்தார்’ என்கிறபடியே, மானச அனுபவத்தோடு அல்லாமல் வாசிகம் ஆக்கி நாட்டை வாழ்வித்த வண்மையர் ஆதலின், ‘வண்சடகோபர்’ என்கிறார்.

85. கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ: ஆகர்ஷதே ஜலே
தயோ: த்வந்த்வ ஸமம் யுத்தம் திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரகம்.– விஷ்ணு தர்மம், 68.

கஐந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது; முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’ 2என்றதனைப் போன்றது ஒன்றாம், மேல் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த துக்கம்;-பிரிவால் உண்டாகிய துன்பம் முடிக்கத் தேட,  நசையானது முடிக்க ஒட்டாமல் ஜீவிப்பிக்க, இப்படியே, மேல் ‘ஆடிஆடி’ என்ற  திருவாய்மொழியில் ஆழ்வாருடைய நிலை சென்றது என்றபடி.

 

86. அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தமஸ்வீக்ருத
ப்ரணீத மணிபாதுகம் கிமிதிச ஆகுலாந்த: புரம்
அவாஹந பரிஷ்க்ரியம் பதகராஜம் ஆரோஹத:
கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம: –ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், உத். 59.

87. ஸ்தலஸ்தம் தாரயாமாஸ க்ராஹம் சக்ரேண மாதவ:

அத்துக்கம் எல்லாம் ஆறும்படியாக, 4‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’ என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே, மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் முறைபிறழத் தரித்துக் கொண்டு, மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’(திருவாய். 2. : 4. 4)

88. ஸ ஏகாகீ ந ரமேத. -மஹோபநிடதம்.

அந்த ஸ்ரீமந்நாராயணன் தனியராக மகிழ்ச்சி அடைந்திலர்’

89. அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைகரூப ரூபாய விஷ்ணுவே ஸர்வஜிஷ்ணவே. -ஸ்ரீ விஷ்ணு புரா. 1 . 2 : 1

செந்தாமரைத்தடம் கண் – துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக் கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம்

90. ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்
ருக்மாபம் ஸ்வப்ந தீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்.-மனு ஸ்மிருதி. 12 : 122.

செந்தாமரை அடிகள் – நோக்குக்கும் புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே – திருவடிகளிலே விழுந்து அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.

 ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்  கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்  கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி  சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்  ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.

91. இச்சாக்ருஹீத அபிமதோருதேஹ:
ஸம்ஸாதி தாஸேஷ ஜகத்திதோஸௌ. — ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.

92. ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹ நூமத:
மயா காலம் இமம் ப்ராப்ய தத்த: தஸ்ய மஹாத்மந:–ஸ்ரீ ராமா. யுத். 1 : 13.

விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச்செய்வர் நஞ்சீயர். ‘ஆயின், இவ்வாழ்வார் அருளிச் செய்யின், அது பிரமாணமோ?’ எனின், மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றோ? (இதனால், இவர் அனுபவ பரவாஹ ரூபமான ஸ்ரீசூக்தியும் பரமப் பிரமாணம் என்றபடி)அவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்? 2‘தனது இச்சையால் மேற்கொள்ளப்பட்ட பல சரீரங்களையுடையவன்’ என்கிறபடியே, தனக்கும் விரும்பத் தக்கதாய் இருப்பது ஆதலானும், 3‘மஹாத்துமாவான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்டது இவ்வாலிங்கனமே; இவ்வாலிங்கனமானது எல்லா வகைச் சொத்தாகவும் உள்ளது’ என்கிறபடியே, தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.

93. தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதா தரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸிமூர்ஜிதம். –ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 63

வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின், ‘வான் சுடர்’ என்கிறார். 4‘பேரொளியின் கூட்டத்தைப் போன்றவன்’ என்பது விஷ்ணு புராணம். 5இப்படித் திருமேனி பஞ்ச சக்தி மயமாய் இருக்கச் செய்தும், ‘ஆறு குணங்களையுடைய திருமேனி’ என்கிறது குணங்களுக்குப் பிரகாசகம் ஆகையைச் சுட்டியேயாம்.-பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.

94. பஸ்பர்ஸாங்கம் ததா விஷ்ணு: பிஸாசஸ்யாபி ஸர்வத:
கரேண ம்ருதுநா தேவ: பாபாந்நிர்மோசயந் ஹரி:–ஹரி வம்ஸம்.

கை கமலம் – 2‘மென்மையான திருக்கை’ எனிகிறபடியே, தம்மை அணைத்த கை. ‘இவர், ஒரு கால் சொன்னதைப் பலகால் சொல்லுவான் என்?’ என்னில், முத்துக்கோக்க வல்லவன் முகம்பாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று, இவரும் ஒரோமுக பேதத்தாலே மாறிமாறி அனுபவிக்கிறார்.

95. யச்சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் ததஹம் அர்ஜூந
நததஸ்தி விநா யத்ஸ்யாத் மயா பூதம் சராசரம். –ஸ்ரீ கீதை. 10 : 39.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு, ‘இறைவன் உருவமாக இல்லாத பொருள் தான் இல்லை என்று பொருள் கூறலுமாம். 2‘இயங்கியற்பொருளும் நிலையிற்பொருளுமாகக் காணப்படுகின்றவை எவையோ, அவை எல்லாம் என்னை அன்றி இல்லை’ என்பது ஸ்ரீ கீதை. உலகத்துப் பொருள்கள், இறைவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, சொரூபத்தாலே; இறைவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது, காதலாகிய பண்பாலே.

தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்பதற்கு இரண்டு கருத்து  அருளிச்செய்கிறார். முன்னையது, சங்கல்பாஸ்ரிதம்; உள் – உள்ளம். இரண்டாவது,  சொரூபாஸ்ரிதம்; தன்னுள் – தன்னிடத்தில். ஸ்ரீகீதையின் சுலோகம், சொரூபாஸ்ரிதத்திற்கு  மேற்கோள்.

96. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ.– தைத்தீரிய ஆனந். 9 : 1

தன்னைப் பேசப் புக்கால் வேதங்களும் எல்லை காணமாட்டாது 3‘வாக்கிற்கு அப்பாற்பட்டவனே’ என்று மீளும்படி இருப்பானாய் இருக்கின்ற தண்துழாய் மாலையனை. எல்லை காண வொண்ணாத பரம்பொருளுக்குத் திருத்துழாய் மாலை அடையாளம் ஆதலின், ‘தன் முடிவு ஒன்று இல்லாத தண்துழாய் மாலையனை’ என்கிறார்.

 

97. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸூ: விதாதா க்ருத லக்ஷண:–ஸ்ரீ சஹஸ்ரநாமம்.

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – 4அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் 5செம்பளித்து (மூடிக்கொண்டு.)வந்து கலந்தான். இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி. இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் ‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து ஒரு கணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்று கூறலுமாம்.
கண்செம் பளித்திருந்து கைத்துருத்தி நீர்தூவி அம்புதத்தைப் பார்த்திருப்பான் அற்று.’–ஞானசாரம், 33

98. நைநம் வாசா ஸ்த்ரியம் ப்ருவந் நைநம் அஸ்த்ரீபுமாந் ப்ருவந்
புமாம்ஸம் நப்ருவந் நைநம் வதந் வததி கஸ்சந  அ இதி ப்ரஹ்ம.–
2. ருக்வேதம், ஆர. 2 : 2.

99. ஸவை ந தேவாஸூர மர்த்யதிர்யங்
ஸ்த்ரீந ஷண்டோ ந புமாந் நஜந்து:
ந அயம் குண: கர்மந ஸத் ந ச அஸத்
நிஷேத ஸேஷோ ஜயதாதஸேஷ: —
3. பாகவதம், 8. 3 : 24.

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாட்டில் காண்கிற ஆண்களின்படியும் அல்லன், பெண்களின்படியும் அல்லன், உபயோகத்திற்குத் தகுதியில்லாத அலியின்படியும் அல்லன். பட்டர் இவ்விடத்தில், 2‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை; ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை. அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; 3‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை; ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை; கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ என்னும் இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், 4‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே! (4. இயலறிவுக்கு – சொல் இலக்கணத்துக்கு. ‘அர்த்தஞானமே அன்றிச் சப்த ஞானமும்  இல்லையே!’ என்றபடி.)‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.

100. ஸ்துத: அஹம் யத்தவயா பூர்வம் புத்ரார்த்திந்யா தத் அத்யதே.
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாத: அஹம் யத்தவ உதராத்.

காணலும் ஆகான் -ஆண் பெண் அலி என்னும் இவற்றைக் காண்கிற பிரமாணங்களால் காணப்படாதவன். இத்தால், 2ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை. உளன் அல்லன் அல்லாதார்க்கு. இல்லை அல்லன், அடியார்கட்கு. இவற்றை விரிக்கிறார் மேல்: பேணுங்கால் பேணும் உருவாகும் –3‘தேவீ, நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானேஉனக்குப் புத்திரனாய்த் தோன்றவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானே உனக்குப் புத்திரனாய்த் தோன்றிவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான். இனி, இதற்குத் 4‘தன்னை அர்த்திக்குங் காட்டில் அன்போடு தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிப்பான்’ என்று கூறலுமாம்      

பேணுங்கால் பேணும் உருவாகும்’ என்பதற்கு, இரு பொருள் அருளிச்செய்கிறார்:
முன்னையது, ‘அடியார்கள் ஆசைப்பட்ட வடிவோடே அவதரிக்கும்’ என்பது;  பின்னையது, ‘மங்களாசாசனம் செய்ய வேண்டும்படியான விக்கிரகத்தையுடையவனாய்  அவதரிக்கும்’ என்பது. முதற்பொருளில், பேணுதல் – விரும்புதல். இரண்டாவது  பொருளில், பேணுதல் – பரிவு.

101. மஹாத்மந: ஸங்க சக்ராஸிபாணே:
    விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸூதேவாத்மஜஸ்ய.  பாரதம், கர்ண பர்வம்.

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை – தன்படிகளைப் பேசப் புக்கால், 3ஆனந்தவல்லியிற்சொல்லுகிறபடியே, (யாதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது. (தைத்தீரிய ஆனந். 9 : 1) அந்த ஆனந்த  குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன’)பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை. அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று. 4‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்பவனும், ஜெயசீலனும், வசுதேவருக்குப் புத்திரனும், எங்கும் நிறைந்தவனுமான கண்ணபிரானுடைய நற்குணங்கள் உலகங்கள் அனைத்தும் சேர்ந்து பதினாயிரம் வருஷங்கள் கூறினாலும் கூறி முடிவு பெறா,’ என்பது பாரதம்

102. வைதேஹி ரமஸே கச்சித் சித்ரகூடே மயா ஸஹ
     பஸ்யந்தீ விவிதாந் பாவாந் மநோ வாக்காய ஸம்யதா.-ஸ்ரீராமா. அயோத். 94 : 18

இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று 2ஐயங்கொண்டு, அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் ஐயத்தை நீக்கி, அவனை உளன் ஆக்குகிறார். 3‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடுகூட இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றாற்போலே ஆயிற்று இதில் சுவையும்; 4‘மைதிலி, உன்னை அறிந்தாயே நம்மை அறிந்தாயே, கலக்கிற தேசம் அறிந்தாயே! என்கிறார் என்றபடி.

சம்ஸ்லேஷ ரசாதிசயத்துக்கும், அத்தாலே  ஐயங்கொண்டதற்கும் மேற்கோள், ‘விதேககுலத்தில்’ என்று தொடங்கும் பொருளையுடைய  சுலோகம். ரமியாநிற்கச்செய்தே ‘ரமஸேகச்சித்’ என்கையாலே, நீர் வாய்ப்பும் நிழல்  வாய்ப்புமான சித்திரகூட பரிசரத்தில் அழகையும், தங்கள் சேர்த்தியழகையும் கண்டு, ‘இது  தொங்கப் புகுகிறதோ!’ என்று ஐயங்கொண்டது தோன்றுகிறது. அப்படிப் பெருமாள்  ஐயங்கொண்டது போன்று, இங்கும், ஆழ்வார் விஷயத்தில் இறைவனுக்கும் ஐயம்  உண்டாயிற்று என்றபடி.

103. குமுத: குந்தர: குந்த:–சஹஸ்ரநாமம்.

செய் குந்தா வரும் தீமை – செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்குந்தீமை. இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை எனப்பொருள் கூறலுமாம். உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா – உன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருப்பார்க்கு வாராதபடி நீக்கி, அசுரத்தன்மையுடையவர்கள் மேலே போகடும்படியான சுத்தியையுடையவனே! குந்தம் – குருந்தம் என்ற சொல்லின் விகாரம்; அது ஆகுபெயராய் அதன் மலருக்கு ஆயிற்று; அதன் மலர் வெளுத்து இருக்குமாதலின், அவ்வழியாலே பரிசுத்தத்தை நினைக்கிறது. இனி, ‘குந்தன்’ என்பதனை இறைவனுடைய திருபெயர்களில் ஒன்றாகக் கோடலும் அமையும், 4குமுத, குந்தா, குந்த’ என வருதல் காண்க.

104. விஸ்ருஷ்டம் பகதத்தேந ததஸ்த்ரம் ஸர்வ காதுகம்
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸஞ்சாத்ய மாதவ: —பாரதம்.

 முன் பிராதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே, பின்னர் அவர்கள் பகைவர்கள் மேலே போகடுவான் என்பதனைத் தெரிவித்தபடி. கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் முகங்காட்டினவாறே மருகாந்தாரத்தில் அசுரர்கள் மேலே தொடுத்தமையை 5ஸ்ரீராமாயத்தால் உணர்க. அங்ஙனம் ஒரு போக்கடி கண்டிலனாகில், 6‘பகதத்தனால் விடப்பட்டதும் எல்லாப் பொருள்களையும் அழிக்கக் கூடியதுமான அந்தச் சத்தி என்னும் பாணத்தைக், கிருஷ்ணன் அருச்சுனனை மறைத்துத் தன் மார்பிலே ஏற்றுக்கொண்டான்’ என்கிறபடியே, 1பகதத்தன் விட்ட சத்தியை, அருச்சுனனைத் தள்ளித் தன் 2அந்தப்புரத்திலே (மார்பு.)ஏற்றாற்போலே, தாம் ஏறிட்டுக்கொண்டு அனுபவித்தல் செய்யுமித்தனை. 3பாவங்கள்தாம் – அசேதனமாய் இருப்பன சில கிரியா விசேடங்களாய் அவை செய்தபோதே நசிக்கும்; செய்தவன் அறிவில்லாதவன் ஆகையாலே செய்ததை மறப்பான்; முற்றறிவினனான சர்வேஸ்வரன் உணர்ந்திருந்து பலத்தை நுகர்விக்க நுகர்வான் இத்தனை. அவன் மார்பிலே ஏற்றுக்கொள்கையாவது. ‘பொறுத்தேன்’ எனத் தீர்தல். 4‘அபூர்வங்காண், சத்திகாண், பலாநுபவம் பண்ணுவிக்கிறது’ என்று கூறுவதைக் காட்டிலும், முற்றறிவினனான இறைவன் செய்விக்கிறான் என்கை அழகிதே அன்றோ?

105. ஸ்ருத அயமர்த்த: ராமஸ்ய ஜாமதக்ந்யஸ்ய ஜல்பத:– பாரதம், மோக்ஷதர்மம்
பக் 153.

106. நிரவத்ய: பர: ப்ராப்தே: நிரதிஷ்ட: அக்ஷர: கிரம:
ஸர்வேஸ்வர பராதார தாம்நாம் தாமாத்மகாக்ஷய –ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 1 : 48.

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை – ஒருகால் திருக்கண்களாலே குளிர நோக்கினால் அதிலே தோற்றுச் சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று 1அடைவு கெட ஏத்தாநிற்பர்கள் ஆயிற்று நித்தியசூரிகள். 2‘ஜமதக்நியின் புதல்வரும் அடைவு கெடப் பேசுகிறவருமான பரசுராமரிடத்தில் இப்பொருள் கேட்கப்பட்டது’ என்பது பாரதம். தலை மகனை – இவர்கள் ஏத்தாநின்றாலும் 3‘குற்றம் இல்லாதவர், அடைவதற்கு முடியாதவர்’ என்கிறபடியே, அவன் பரன் ஆகவே இருப்பான்

துழாய் விரை பூமருவு கண்ணி எம்பிரானை – விரையும் பூவும் மருவி இருந்துள்ள துழாய்க்கண்ணி எம்பிரானை. நித்தியசூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்; இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான். அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’ என்றபடி

107. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.–உபநிடதம்.

கடவுள் உளன் என்று நினைத்தால் இவனும் உள்ளவன் ஆகின்றான்’ என்கிறபடியே உய்வு பெற்று. போந்து -சம்சாரிகளைக்காட்டிலும் வேறுபட்டவனாய். இருந்து – பாரம் இல்லாதவனாய் இருந்து. ‘வள்ளலே! மதுசூதனா! உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்க

 

108. ஆத்ம மாயாமயீம் திவ்யாம் யோகநித்ராம் ஸமாஸ்ரித:
ஆத்மாநம் வாஸூதேவாக்யம் சிந்தயந் மதுஸூதந:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6.4 : 6.

ஐந்து பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் – பெருவெள்ளத்துக்குப் பல 3வாய்த்தலைகள் (வாய்க்கால்கள்.)போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பல தலைகளை உடையவனாய், கட்குடியரைப் போலே ஆடுகின்றவனாய், 4சைத்திய சௌகுமார்ய சௌகந்தியங்களை உடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே, ‘எல்லாப்பிராணிகளும் கரைமரம் சேர்ந்தாம் விரகு என்?’ என்று யோகநித்திரையில் திருவுள்ளம் செய்த என் நாயன் ஆனவனே! யோகநித்திரை – 5‘பரமபுருஷன் வாசுதேவன் என்ற தன்னைச் சிந்தித்துக் கொண்டு தனது மாயாரூபமான பிரகிருதி சம்பந்தம் இல்லாத யோக நித்திரையை அடைந்தார்’ என்கிறபடியே, தன்னை நினைத்தல். எந்தாய் – நீர்மையைக் காட்டி என்னை உனக்கே உரிமை ஆக்கினவனே! ‘உன்னைச் சிந்தை செய்து செய்து – நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம் உண்டோ?’ என மேலே கூட்டுக.

109. ஆத்மாவா அரே த்ர்ஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய:
மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய: — பிருகதாரண்ய உபநிடதம். 4 : 5.

 உன்னைச் சிந்தை செய்து செய்து – இனிமையாலே விட ஒண்ணாது இருக்கிற உன்னை மாறாமல் நினைத்து. உன்னை – இனியனுமாய் அடையத் தகுந்தவனுமான உன்னை. சிந்தை செய்து செய்து – 2‘தியானம் செய்யத் தக்கவன்’ என்கிற ஒரு விதியினாலே தூண்டப்பட்டவனாயல்லாமல், இனிமையாலே விடமாட்டாமல் எப்பொழுதும் நினைத்து.

110.  உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.–நரசிம்ஹ அநுஷ்டுப்

என் முன்னைக் கோள் அரியே– 4நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்; அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி. கோளரி‘மஹாவிஷ்ணும்’ என்கிற 5மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.(மிடுக்காவது, சர்வலோக வியாபன சக்தி.) 6ஜ்வலந்தம்’ என்கிற ஒளியையுடைய சிங்கம் என்னுதல். முடியாதது என் எனக்கே – நீ சூளுறவு செய்த அக்காலத்திலேயே தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?     

111. ஸபித்ராச பரித்யக்த: ஸூரைஸ்ச ஸமஹர்ஷிபி:
    த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் கத: –ஸ்ரீராமா. சுந்த. 38 : 33.

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ – முக்காலத்திலும், பரிவுடைய தாய் செய்வதும் செய்து, ஹிதத்தைச் செய்கின்ற தமப்பன் செய்வதும் செய்து, 2‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் விடப்பட்டான்’ என்கிறபடியே. அவர்கள் விடுமளவிலும், தான் தனக்குப் பார்க்கும் ஹிதமும் பார்க்கும்படி 3எல்லா வகையாலும் அடையத் தக்கவனுமாய், உபகாரத்தைச் செய்கிறவனுமாய் உள்ள உன்னை, உதவியை நினையாநின்ற நான் கிட்டப் பெற்று வைத்து, விடக் காரணம் உண்டோ

112. விதித: ஸஹிதர்மஜ்ஞ: ஸரணாகத வத்ஸல:
     தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சஸி. — ஸ்ரீராமா. சுந்த. 21 : 20.

பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே– பரம்பி இருப்பதாய், 4இயல்பிலே அமைந்த (தொன்மை – பழமை; அதனால் பலித்த பொருள், ‘இயல்பிலேயமைந்த’ என்பது.)நற்குணங்களையுடையையாய், மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகன் ஆனவனே! 5‘பெருமாள் தர்மத்தையுடையவர்; சரணாகதி புகுந்தவனிடத்தில் அன்புடையவர்; எல்லாராலும் அறியப்பட்டவர்; ஆகையால், பிழைத்திருப்பதற்கு நீ விரும்புவாயேயானால் உனக்கு அவ்விராமனோடு நட்பு உண்டாகவேண்டும்’ என்கிறபடியே, பகைவர்கள் கூட்டத்திலும் பிரசித்தமாம்படி பரந்திருத்தலின் ‘பாகின்ற புகழ்’ என்கிறார்.

113. மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந: ப்ரயோஜநம்
      க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்கார: மமஅபிஏஷ யதா தவ.–ஸ்ரீராமா. யுத். 114 : 101

‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் (எமர் கீழ் மேல் எழு பிறப்பும்)அங்கீகரிப்பான் என்?’ எனின், சர்வேஸ்வரன் ஒருவனை அங்கீகரித்தால், அது பின்னை அவன் அளவிலே நில்லாதே அன்றோ? 2‘இருடிகள் குடியிருப்பை அழித்தான்; மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீஜடாயு மஹாராஜரை நலிந்தான். இவை எல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; இவன் ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவதுகாண்’ என்று இருந்தோம்; அது அந்நாளில் பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ? வேண்டுவன செய்யப் பாரும்; நீர் இறாய்தது   இருந்தீராகில், 1குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை அன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கட்ட நில்லீர்’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீவிபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது – ஸ்ரீவிபீஷ்ணாழ்வானைப் பெருமாள் தமக்கு உடன் பிறந்தவனாகக் கொண்டார்  ஆகையாலே, அவனுக்குத் தமையனான இராவணனும் உடன் பிறந்தவன் ஆவன்;  ஆதலின், தம்மைக் ‘குடல் தொடக்குடையாரிலே ஒருவன்’ என்கிறார்

கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்  மாற்றே மாற்றல் இலையே; நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலர்எனும்  வேற்றுமை இன்று;அது போற்றுநர்ப் பெறினே.’–(பரிபா. 4)

உயிர்களது இயல்பான் நினக்குப் பகையும் நட்பும்  உளபோலத் தோன்றுவதல்லது நின் இயல்பான் அவை உளவல்ல என்றவாறாம்’

 ‘அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கித்
  தன்னதோ ளிணையை நோக்கி, ‘வீடணா! தக்க தன்றால்;
  என்னதோ இறந்து ளார்மேல் வயிர்த்தல்?நீ இவனுக்கு ஈண்டு
  சொன்னதோர் விதியி னாலே கடன்செயத் துணிதி’ என்றான்.’ 
  என்றார் கம்பநாடரும்.

114. இத்யேவம் ஆர்த்தஸ்ய ரகுப்ரவீர: ஸ்ருத்வாவசோ     வாலி ஜகந்யஜஸ்ய
    ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம்  விமநா பபூவ. –ஸ்ரீராமா. கிஷ்கிந். 23 : 24.

115. தர்மே மநஸ்ச தே பத்ர ஸர்வகாலம் பவிஷ்யதி
    யுஷ்மத் ஸந்ததி ஜாதாநாம் தீர்க்கம்ஆயு: பவிஷ்யதி. –ஸ்ரீவிஷ்ணு புரா 5. 19 : 27.

‘மகாராஜர்க்குப் பகைவன்’ என்று வாலியைக் கொன்ற பின்னர், மகாராஜர் கண்ண நீர் பொறுக்கமாட்டாமல் 3‘விடப்பட்ட கண்ணநீரை உடையவர் ஆனார்’ என்கிறபடியே, தாமும் கண்ணநீர் விழ விட்டார். 4‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது!’ என்கிறபடியே, ஸ்ரீமாலாகாரர் பக்கல் அங்கீகாரம் அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீகண்டாகர்ணன் பக்கல் பண்ணின அங்கீகாரம் அவன் தம்பி அளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில் 5‘அவன் முன்னாகப் போ’ என்று அருளிச்செய்தான். ஆக, இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.

எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீவைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பராம். ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்துவாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.

நெடுமாற்கடிமை’  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச்  சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

116. க இதி ப்ாஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
     ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவன் தமர் – பிரசஸ்தகேசனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள். என்றது, அவனுடைய அவயவங்களின் அழகிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றபடி. அன்றிக்கே, பகைவர்களை அழிக்கும் பண்பிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல்; அன்றிக்கே, 1‘க என்பது பிரமனுடைய பெயர்; நான் எல்லாப் பொருளையும் நியமிக்கிற சிவன் ஆகின்றேன்; நாங்கள் இருவரும் தேவரீர் திருமேனியில் உண்டானோம். ஆதலால், ‘கேசவன்’     

கேசவன் என்பதற்கு மூன்று பொருள் அருளிச்செய்கிறார்; கேசத்தை யுடையவன்; கேசம்  – மயிர் முடி. ‘கேசி’ என்னும் அசுரனைக் கொன்றவன் கேசவன்; பிரமனையும்  சிவனையும் தன் திருமேனியிலே வைத்திருப்பவன் கேசவன். பிரசஸ்தகேசன் – நீண்ட  மயிர் முடியை உடையவன்.

117. ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ்தம் உதகம் குரு
    குலம் தாரயதே தாத ஸப்த ஸப்தச ஸப்த ச. –மஹாபாரதம்.

118. தஸபூர்வாந் தஸ அபராந் ஆத்மாநம்ச. –போதாயனதர்மம்:

சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது; ‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது. இத்தால் இறைவன் அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி. எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும் கேசவன் தமர் ஆனார்கள் என்க. 1‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும், 2‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.

உன்னைஇங்கு உயிர்த்த ஆற்றால் உரைக்கும்நின் குலத்து மூவேழ்
  என்னும்நன் மரபு ளோரும் இயைந்தனர் புனிதம் என்றால்
  அன்னவன் புனிதன் ஆதற்கு ஐயம்என்? அவனுக்கு ஈமம்
  மன்னுநல் வினைசெய் கென்ன மைந்தன்அவ் வினைசெய் தானால்.’-
  என்னும் பாகவதச் செய்யுள் . 7-ஆம் ஸ்கந்தம். இரணியனைக்  கொன்ற அத். 107.

119. நாராயண பரம்பிரஹ்ம தத்வம் நாராயண; பர:
    நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயணபர:

நாரணன் – ‘இதற்குப் பொருள் என்?’ என்னில், முழு ஏழ் உலகுக்கும் நாதன் -சர்வ ஸ்வாமி. ‘இவ்வர்த்தத்தில் பிரமாணம் என்?’ என்னில், வேத மயன் -‘நாராயண பரப்பிரஹ்ம’ என்று இது போன்று பிரமாணங்களால் ‘சர்வ ஸ்வாமி’ என்று ஓதப்படுகிறவன். காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் – தன்உலகத்தில் (மண் ஆதியான) காரணமாயும், (குடம் முதலான) காரியமாயும், (தண்ணீர்கொண்டு வரலாகிற) பலமாயும் வரக் கூடியதான இவற்றுக்கு 1நியந்தாவாக உள்ளவன். (காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன்’ என்ற இதனால்,  ஐம்பெரும்பூதங்களையும், அவற்றின் காரியமான அண்டம் முதலானவற்றையும் அவற்றில்  வசிக்கிற ஆத்துமாக்களின் செயல்களையும் கூறியபடி.)-இனி, 2‘கிரியா சாதனம், அது அடியாக வரும் கிரியை, அதனால் சாதிக்கப்படுகிற காரியம், இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன்’ என்றும் ஆம்

கிரிதா சாதனம் – மட்பிண்டம். தண்டசக்கரங்கள் முதலானவைகள். கிரியை  – தொழில்.  அதனால் சாதிக்கப்படுகிற காரியம், குடம் முதலான காரியங்கள். இங்குக் கூறிய  இரண்டாவது பொருளால், நிமித்தகாரணம் முதற்காரணம் துணைக்காரணங்களையும்,  அவற்றின் காரியமான படைத்தல் முதலான காரியங்களையும், அவற்றால் உண்டான  தேவர்கள் முதலான பதார்த்தங்களையும் தெரிவித்தபடி.

120. ஸ்தலஸ்தஸ்ய ச ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ராக்ஷஸ:
     நஸமம் யுத்தம் இதி ஆஹூ: தேவ கந்தர்வ தாநவா:–ஸ்ரீவிஷ்ணு புரா.

சீர் அணங்கு அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று வாரணம் மருப்பு ஒசித்த பிரான் – சேஷத்வத்திற்குத் தகுதியான ஆத்தும குணங்களைத் தரிக்கின்றவர்களாய்ப் பிரகிருதி சம்பந்தம் இல்லாத தன்மையரான நித்தியசூரிகள், இவ்வருகு உண்டான சம்சாரிகள்,இப்படி, ‘சிறியார் பெரியார்’ என்னும் வாசி இன்றிக்கே, எல்லாரும் 3எழுத்து வாங்கி ஏத்தும்படியாக நின்று, 4குவலயாபீடத்தின் கொம்பை வருத்தம் இன்றி முரித்த உபகாரகன். 5‘தரையில் இருக்கும் இராமனுக்கும் தேரில் இருக்கும் அரக்கனுக்கும் சண்டை தகுந்தது அன்று என்று தேவர்கள் கந்தருவர்கள் தானவர்கள் ஆகிய இவர்கள் கூறினார்கள்’ என்பது போன்று, ‘அமரர் பிறர் தொழுது ஏத்த நின்று’ என்கிறார்    

அகாரத்தின் விவரணமான நாராயண சப்தத்திலே ‘அவ ரக்ஷண’ என்கிற ரக்ஷகத்வமும் அர்த்தசித்தமாகையாலே, ‘வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்’ என்று அரிஷ்ட  நிவர்த்தியையும் இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

121. மாதர் லக்ஷ்மி யதைவ மைதிலஜந: தேநாத்வநா: தேவயம்
     த்வத் தாஸ்யைகரஸ அபிமாந ஸூபகை: பாவை: ஹரிம் [ இஹ  அமுத்ரச
     ஜாமாதா தயித:தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா
      பஸ்யேம ப்ரதியாம யாமச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேம ச.–குணரத்நகோசம் 52-ஆம் சுலோகம்

மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார்(மாதவன் என்றதே கொண்டு – நான் ‘மாதவன்’ என்று கூறிய சொல்மாத்திரத்தையே கொண்டு; ‘). ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக் கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்’ என்று அருளிச்செய்தார் அன்றே பட்டர்?    

அல்லாத திருநாமங்களுக்கும் இதற்கும் வாசி அறிவதே!’ என்று இதனையே குவாலாகக் கொண்டான் ஆதலின், ‘மாதவன் என்றதே கொண்டு’ என்கிறார். என்னை – மற்றைத் திருப்பெயர்கட்கும் இதற்கும் வாசி அறியாத என்னை. 

122. காமவ்ருத்தம்ச ஸூக்ரீவம் நஷ்டாம்ச ஜநகாத்மஜாம்
      புத்வா காலமதீதம்ச முமோஹ பரமாதுர: ஸ்ரீராமா. கிஷ்கிந். 30 : 3.

முன்பு கழிந்த காலம் கழிந்துவிட்டது அன்றோ? இதனால், மேலுள்ள காலம் மிகச் சிறிய காலமாகத் தோன்றாநின்ற தாயிற்று ஈஸ்வரனுக்கு! 1‘பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன், அரவணைமேல் கண்டு தொழுதேன்’ என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருப்பைத் தான் என்பக்கலிலே கொண்டுள்ளான் என்கிறார். ‘சுக்கிரீவன் சொன்ன தவணைக் காலம் கடந்துவிட்டது என்று கருதி மூர்ச்சித்தார்’ என்கிறபடியே, இராநின்றான் என்றபடி.

123. கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா
      நிஷ்க்ருதி: விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்ருதி:.ஸ்ரீராமா. கிஷ். 33 : 12. 

தீது அவம் கெடுக்கும்தீதாவது, பொய்ந்நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த பாவங்கள்; அவமாவது, ஞானம் பிறந்த பின்பு தம்மை அறியாமல் நேர்ந்தவைகள் ஆக, இவ்விரண்டாலும் பகவானை அடைவதற்குத் தடையாக இருந்த கர்மங்களைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘பசு வதை செய்தவன் விஷயத்திலும், சுராபானம் செய்பவன் விஷயத்திலும், திருடன் விஷயத்திலும், விரதங்களை நியமம் தவறி நடத்தினவன் விஷயத்திலும், பிராயச் சித்தம் பெரியோர்களால் சொல்லப்பட்டது; நன்றி கெட்டவன் விஷயத்தில் பிராயச்சித்தம் சொல்லப்படவில்லை’ என்கிறபடியே, பிராயச்சித்தம் உள்ள பாவங்களையும் அஃது இல்லாத பாவங்களையும் சொல்லிற்றாகவுமாம். ‘இவற்றைக் கெடுப்பது கஷாயத்தைக் குடிக்கச் செய்தோ?’ என்னில், அமுதம் – தன்னுடைய இனிமையை அனுபவிப்பித்ததாயிற்று.

124. வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ்வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி. -ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

செந்தாமரைக்கண் குன்றம் – வாக்கு இத்திரியத்திற்கே அன்றிக் கண்ணுக்கும் இனியனாய் இருக்கை. இத்தலையில் தீதும் அவமும் போக்கினானாய் இருக்கை அன்றியே, 1‘தனக்கு உண்டாய்க் கழிந்தது’ என்று தோன்றும்படி வடிவில் பிறந்த பேரொளியோடு விளங்குகிறான் ஆதலின், செந்தாமரைக் கண் குன்றம்’ என்கிறார். 2‘மனிதர்கட்குத் துன்பம் வரும் காலத்தில் அவர்கள் படும் துன்பத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான துன்பத்தைத் தான் அடைகின்றான்’ என்கிறபடியே இருக்குமவனன்றோ இறைவன்

125. அவாக்யநாதர: -சாந். உபநிட. 3 : 14.

குடக்கூத்தாவது. 2‘எல்லாம் நிறைந்தவனாதலின், ஒன்றிலும் விருப்பம் இல்லாதவன்; ஆதலால், மௌனமாக இருக்கிறான்,’ என்கிறபடியே, இருக்கக் கூடிய பொருள், 3தைரிய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச்சாவி வெட்டி ஆடினபடி இது.

126. பரதஸ்ய வச: குர்வந் யாசமாநஸ்ய ராகவ
ஆத்மாநம் நாதிவர்த்தேதா: ஸத்ய தர்ம பராக்ரம.

தேவும் என்றது, இறைமைத் தன்மையினை. தன்னை என்கிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மையை; அது அன்றோ 1தானான தன்மை? ‘ஆத்மாநம் நாதி வர்த்தேதா: – நீரான தன்மையை இழவாதே கொள்ளும்’ என்றார் வசிஷ்ட பகவானும். இச்சுலோகத்திலுள்ள ‘ஆத்மாநம்’ என்பதனை ஸ்ரீ பரதாழ்வானுக்கு அடைமொழியாக்கி, ‘ஆத்துமாவைப் போன்ற பரதனை இழவாதே கொள்ளும்’ என்று இதற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவர் சிலர். ‘நீரான தன்மையாகிறது, அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவராய் இருத்தல்; ‘உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து, நீரான தன்மையை இழவாதே கொள்ளும் 2என்கிறான்’ என்று பொருள் அருளிச்செய்வர் பட்டர். பாடி ஆடத் திருத்தி – தரிசு கிடந்த நிலத்தைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போன்று, நித்திய சூரிகள் யாத்திரையே யாத்திரையாம்படி திருத்தி. ‘ஆயின், மேல் அடியில், ‘என்று என்றே குனித்து’ என்றதற்கும், இங்குப் ‘பாடி ஆடி’ என்பதற்கும் வேற்றுமை என்?’ என்னில், மேலிடம், 3சௌலப்யத்திலே நோக்கு; இங்கு, இறைமை,

தானான தன்மை – தன்னுடைய சுவபாவம்; அதாவது, இறைவனுக்கு இயற்கைத்  தன்மையாவது, அடியார்கட்குப் பரதந்திரனாய் இருத்தல் என்பதாம். ‘அப்படி ஆஸ்ரித  பாரதந்தர்யமே தானான தன்மையாக இருக்குமோ?’ எனின், அதற்கு, ‘ஆத்மாநம்  நாதிவர்த்தேதா:’ என்னும் ஸ்ரீராமாயணச் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்.

சத்தியம் தர்மம் பராக்கிரமம் இவற்றையுடைய இராகவனே! யாசிக்கின்ற  பரதனுடைய வார்த்தையை மறுத்து நீரான தன்மையை (ஆஸ்ரித பாரதந்தர்யத்தை)  இழவாதே கொள்ளும்’ என்கிறான்

சௌலப்யத்திலே நோக்கு’ என்றது, ‘கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன்’ என  வருகின்றவற்றை நோக்கி. ‘இங்கு, இறைமை சௌலப்யம் இரண்டிலும் நோக்கு’ என்றது,  ‘தேவும் தன்னையும்’ என்றதனை நோக்கி. தேவு என்றதில் இறைமைத்தன்மை; தன்னை  என்றதில் சௌலப்யத் தன்மை, சௌலப்யத்தை, அநுசந்தித்த காரணத்தால் வந்த  கூத்தைச் சொல்லுகிறது; இறைமைத்தன்மையினையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்த  காரணத்தால் வந்த பாடுதல் ஆடுதல்களைச் சொல்லுகிறது என்றபடி.

127. விஸோதித ஐட : ஸ்நாத: சித்ர மால்யாநுலேபந:
      மஹார்ஹ வஸந: ராம: தஸ்தௌ தத்ர ஸ்ரியா ஜ்வலந்.–(ஸ்ரீராமா. யுத்.  131 : 15.)

திருமலையாண்டானிடத்தில் எம்பெருமானார் திருவாய்மொழி கேட்டருளுகிற காலத்தில் பாசுரந்தோறும் சில வார்த்தைகளை அருளிச்செய்து, ‘இது அர்த்தம் ஆனாலோ?’ என்றால், ‘இது விஸ்வாமித்திர சிருஷ்டி; ஆளவந்தார் அருளிச்செய்யக் கேட்டறியேன்’ என்று பணிக்குமாம் ஆண்டான். ஆண்டான் ‘இப்பாசுரத்திற்கு விஸ்வாமித்திர் சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ’ என்ன, எம்பெருமானார் 1இப்பாசுரத்தால், தன் அவயவ சௌந்தர்யத்தால் என்னைத் தனக்கு ஆக்கினான் என்கிறார்’ என்று அருளிச்செய்தனராம். அதுவும் கிடக்க, பட்டர், ‘ஆழ்வாரையும் ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்ததனால் திருமேனியிற்பிறந்த பேரொளியைச் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்வர்; ‘நீராட்டம் முடிந்த பின் பல வித மலர்களால் கட்டப்பட்ட மாலை, கலவைச் சந்தனம் இவற்றை அணிந்திருப்பவரும், மிக உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்திருப்பவருமான ஸ்ரீராமர், சுத்தமான திருக்குழலை உடையவராய் அந்தச் சிம்மாசனத்தில் அலங்கார இலக்குமியோடு பிரகாசித்தவராய் நின்றார்,’ என்றார் ஸ்ரீ வால்மீகியார்.      

சபரிகரமாகத் தம்மை அங்கீகரித்தது எத்தாலே?’ என்னில், ‘தன்னுடைய அவயவ  சௌந்தர்யத்தாலே என்கிறார்’ என்பது எம்பெருமானாருடைய திருவுள்ளம். ‘எமர்  ஏழெழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கின குணத்துக்குத் தோற்று, ‘விட்டிலங்கு’  என்று இன்னோரன்ன விசேஷணங்களை இட்டு ஏத்துகிறார்,’ என்பது  திருமாலையாண்டான் நிர்வாஹம்.

128. ஸோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா
அத்ருஸ்யத ததா ராம: பால சந்த்ர இவோ தித: –ஸ்ரீராமா. ஆரண். 38 : 15.

விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு 1‘இராமர் தமது திருமேனியின் ஒளியாலே தண்டகவனத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரன் போன்று காணப்பட்டார்’ என்னுமாறு போன்று இராநின்றது வடிவழகு; தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி.

129. தேஹி மே ததாமி தே. –யஜூர்வே. 1 : 8. ‘

துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும் – கல்பந்தோறும் கல்பந்தோறும் துதி செய்த பாடல்களைக்கொண்டு பாடுவது ஆடுவதாம்படி பண்ணினான். துதி சூழ்ந்த பாடல் – துதி உருவமான பாடல்கள் என்னுதல்; துதிக்கப்படுகிற குணங்களை விளாக்கொலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல். ‘நின்று’ என்கிறார், 2‘எனக்குக்கொடு’ என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை இன்றியே இருத்தலின்.

எனக்கு நீ ஒரு பலனைக் கொடு; நான் உனக்கு ஒருபலனைக்  கொடுக்கிறேன்’ என்று வேறு பிரயோசனங்களைக் கொண்டு நீங்காமல் என்றபடி.

130. ஸதம் நிபதிதம் பூமௌ ஸரண்ய: ஸரணாகதம்
      வதார்ஹம்அபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத். –ஸ்ரீராமா. சுந். 38 : 34.

தங்களிலும் (தங்கட்குக் கேடுவரினும் கிருபையே மிகுந்து  என்றபடி.)திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்; கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் 2கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.

ககுஸ்த வம்ஸத்தில் பிறந்த சரண்யரான அவ்விராமபிரான்,  பூமியில் விழுந்தவனும் சரணம் அடைந்தவனுமான அந்தக் காகாசுரன் கொல்லத்  தக்கவனாயிருந்தும், பரமகிருபையால் அவனைக் காப்பாற்றினார்’

எந்தை நின்சர ணம்சரண் என்றஇ தன்னால்
முந்தை நின்குறை யும்பொறை தந்தனம்; முந்துன்
சந்தம் ஒன்று கொடித்திரன் கண்கள் தமக்கே
வந்தொர் நன்மணி நிற்கென வைத்ததும் வைப்பாய்.’ –கம்பரா. சுந். சூடா. 82)

சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டுஎறிய அனைத்துலகும் திரிந்தோடி
‘வித்தகனே! இராமாவோ! நின்னபயம்!’ என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓர் அடையாளம்–(பெரியாழ். 3. 10 : 6)

131. சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
     தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸூதுஷ்கரம்.–ஸ்ரீ கீதை. 6 : 34.

மருவித் தொழும் மனமே தந்தாய் – கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார்   -அளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்

132. நது மாம் ஸக்ஷ்யஸே தர்ஷ்டும் அநேநைவ ஸ்வ சக்ஷூஷா
திவ்யம் ததாமி தே சக்ஷூ: பஸ்ய மே யோகம் ஜஸ்வரம்.– ஸ்ரீ கீதை, 11 : 18.

உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி

என் வாமனனே வல்லைகாண் – வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் – உகப்பின் மிகுதி.           

133. ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜாம்.
      வக்ஷஸ்தலேந ஸ்ரியம் உத்வஹந் விபு:
      விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசநோ
      மமாஸ்து மங்கள்ய விவிருத்தயே ஹரி;–விஷ்ணு தர்மம்.

சிரீதரன் – பெரியபிராட்டியாரைத் திருமார்விலே உடையவன். செய்ய தாமரைக் கண்ணன்1‘பிராட்டியைத் திருமார்விலே தரித்துக்கொண்டு இருப்பவரும், எங்கும் நிறைந்தவரும் விசாலமான தாமரை இதழ் போன்ற திருக்கண்களை உடையவரும்’ என்கிறபடியே, நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமாறு போன்று, பிராட்டி மார்வில் இருக்கையாலே குளிர்ந்த கண்ணழகினையுடையவன்

134. ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்.–சாந்தோக்கிய உபநிடதம். 6. 2 : 1. 

தனி முதல்வனை –3‘சத் என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத் தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது’ என்கிறபடியே மூன்று விதக் காரணமும் தானேயாய் இருக்கிற இருப்பை அறியப்போமோ?

 

135. த்யக்த்வா காமம் பயம் குரோதம் லோபம் மோஹம்ச மத்ஸரம்
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 4 : 50.

மூவகைத் துன்பங்களாலே நொந்த சம்சாரி சேதனன், 3‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே, 4இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப் போன்று இருக்கின்றான் ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது. 5சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி    

136. ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய:–சங்க்ஷேபராமாயணம்.

 பூம்பாவை ஆகம் புணர்வது2இன்பமே ஒரு வடிவுகொண்டவளாய் ஒரு காரணத்தால் வந்த பெண்மையினையுடையள் அல்லாதவளாய் உள்ள பெரிய பிராட்டியாரோடே கலந்து ஒழுகுவது. ஆகம் புணர்வது என்றதனால், 3ஆத்ம குணங்கள் குமரி இருந்து போமித்தனை. 4மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே ‘அணைவது, புணர்வது’ என்கிறார்.

ஆத்ம குணங்கள் குமர் இருந்துபோம் இத்தனை’ என்பதற்கு, பரமரசிகனான  சர்வேஸ்வரன் பிராட்டியினுடைய திருமேனியின் சௌந்தர்யம் முதலிய குணங்களில்  ஈடுபட்டதனால் ஆத்ம குணங்கள் பர்யந்தம் சென்றிலன் என்பதும், அதனால்,  பிராட்டியின் ஆத்ம குணங்கள் பயன் அற்றுக் கிடக்கின்றன என்பதும் கருத்து

மூவர்க்கும் போகம் ஒத்திருக்கையாலே’ என்றது, அக்ர்யப் பிராய நியாயத்தாலே,  பிராட்டியோடே கூட எடுக்கையாலே இவ்விருவர்க்கும் பிறக்கும் ரசம், சேர்த்தியைக்  கண்டு அனுபவிக்கையாலே திருவனந்தாழ்வானுக்கும் உண்டு என்பதாம். இதற்கு  மேற்கோள் காட்டுகிறார், ‘காட்டில் கட்டிய ஆசிரமத்தில்’ என்று தொடங்கி, இச்சுலோகம்,  சங்க்ஷேபராமாயணம். இதற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்: – ரம்யமா வசதம்  கிருத்வா – அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்குத்  தகுதியாகச் சமைத்த மாளிகைகளிலும் திருவுள்ளத்துக்குப் பொருந்தி அழகியதாய்  இருந்தது காட்டிலே இளைய பெருமாள் சமைத்த ஆசிரமமாயிற்று. த்ரயோ ரமமாணா: –  நாயகரான பெருமாள் ரசம் அன்றே பிராட்டியது? பிராட்டிக்குப் பிறக்கும் ரசம் அன்றே  பெருமாளது? அப்படியே, அச்சேர்த்தி கண்டு உகக்குமவரன்றோ இளையபெருமாள்?  வநே -‘படைவீடர் காட்டிலே வசித்தார்கள்’ என்று தோற்றாமல், காடர் காட்டிலே  வசித்தாற்போலே பொருந்தி இருந்தபடி. படைவீடர் – படைவீட்டிலே இருப்பவர்கள்;  படைவீடு – நகரம். அக்ர்யப் பிராயம் – முதன்மை பெற்றவர்கள் வகுப்பிலே சேர்த்தல்.  இது ஒரு நியாயம்.

பிராட்டி, இளையபெருமாள் ஆகய மூவரும் களிக்கின்றவர்களாய் வாழ்ந்தார்கள்’ என்றார் ஸ்ரீ வால்மீகி. ஆக, சொல்லிற்றாயிற்று, சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாகத் திருவனந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை, முக்தப் பிராப்பியபோகம் என்றபடி

137. தஸ்யா: ஸிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:
     ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்தர: ஸ: அக்ஷர: பரம: ஸ்வராட்.–தைத்திரீயநாரா. உப. 11. 

138. ஆப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர்வ்யஸ்திதா:
      ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வஸவர்த்திந: -விஷ்ணு தர்மம்

இங்கு ‘முதல்’ என்கையாலே, இவ்வுலகத்தில் காரிய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும், இதுதான் ஆவது அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது. இதனால், பிரமனும் சிவனும் 2சம்சார பத்தர்கள் என்னுமிடமும், சர்வேஸ்வரனே மோக்ஷத்தைக் கொடுக்கவல்லான் என்னுமிடமும் சொல்லுகிறது. ஆக, அடையத் தக்கவன் அவனே; பிரமனும் சிவனும் அடையத் தக்கவர்களல்லர் என்கை. 3‘பிரமன் முதல் புழு இறுதியாக உள்ள இவ்வுலகத்துப் பொருள்கள் புண்ணிய பாவ ரூப கருமங்களால் உண்டு பண்ணப்பட்ட சம்சாரத்துக்கு உட்பட்டவைகள்’ என்னாநின்றது அன்றோ? ஆக, இப்படிப் பிரஹ்ம ருத்திரர்களுக்கும் காரணனாய் இருக்கையாலே வந்த மேன்மை உடையவன்.    

139. ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
      த்வாமேவ ஸரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

140. ஸ்ம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
     விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்.

புணைவன்’ என்பதற்கு, ‘புணையாமவன்’ என்றும், ‘சர்வபர நிர்வாஹகனாமவன்’ என்றும் பொருள் கோடலுமாம். 2‘ஞானிகள் தேவரீரையே சரணமாக அடைந்து, கொடியதாயும் எல்லை இல்லாத துக்கத்துக்கு இருப்பிடமாயும் இருக்கிற சம்சாரமாகிற கடலைத் தாண்டுகிறார்கள்,’ என்றது காண்க. ‘விஷ்ணு போதம்’ என்று கூறப்பட்டுள்ளது அன்றே? (விஷ்ணுவாகிற ஓடம். இது, விஷ்ணு தர்மம்.)இதனால், ஓர் இடத்தைப் பற்றி நிற்கை அன்றிக்கே, அக்கரையும் இக்கரையுமாய் நிற்கும் ஓடம் என்பது போதரும்.

பனிநின்ற பெரும்பிறவிக் கடல்கடக்கும் படிபற்றி நனிநின்ற சமயத்தோர் எல்லோரும் நன்றுஎன்னத்
தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகில்  இனிநின்ற முதல்தேவர் என்கொண்டுஎன் செய்வாரே?’    –விராதன் வதைப். 52)   —    

141. முக்தி: மோக்ஷோ மஹாநந்த:

142. நிரஸ்த ஆதிஸயாஹ்லாத ஸூக பாவைக லக்ஷணா
     பேஷஜம் பகவத் ப்ராப்தி: ஏகாந்தாத்யந்திநீமதா. —

மேற்பாசுரத்தில் ‘பிறவிக்கடல் நீந்துவார்க்கு’ என்ற அதனுடைய விவரணமாய் இருக்கின்றது இப்பாசுரம். நீந்தும் துயர்ப்பிறவி உட்பட மற்று எவ்வெவையும் நீந்தும் – கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான பிறப்புத் தொடக்கமான மற்றும் உண்டான 1அபக்ஷயகேடு முதலானவைகளையும் (உண்டாதல், பிறத்தல், பரிணமித்தல், வளர்தல்,  குறைதல், மரணம் என்பனவற்றை அபக்ஷயம்-குறைதல்.)கடத்தும். ‘கடக்க அரிது’ என்பது போதர ‘நீந்தும்’ என நிகழ்காலச் சொல்லால் அருளிச்செய்கிறார். துயர் இல்லா வீடு முதலாம் -துக்கத்தின் வாசனையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம். இனி, இதனை ஒரு தொடராகக் கொண்டு, ‘கடக்க அரிதான துக்கத்தை உடைத்தான பிறவி தொடக்கமாக நீந்தும் துயரான மற்றும் எவ்வெவையும் இல்லாத மோக்ஷத்துக்குக் காரணமாம்’ என்று பொருள் கோடலுமாம். 2இப் பொருளில், இரண்டாம் அடியிலுள்ள ‘நீந்தும்’ என்பதும் பெயரெச்சம். இவர் ’வீடு’ என்கிறது, பிறவி நீங்குதல் மாத்திரத்தை அன்று; சுகமாக இருத்தலையே இலக்கணமாகவுடைய பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுகிறது. ‘ஆயின், வீடு என்ற சொல் பகவானிடத்தில் அனுபவிக்கும் அனுபவத்தைச் சொல்லுமோ?’ எனின், 3‘முக்திர் மோக்ஷா மஹாநந்த’ என்பது நிகண்டு.

முதல் இரண்டு அடிகட்கு, இரண்டு வகையாகப் பொருள்  அருளிச்செய்கிறார். முதற்பொருள், அநிஷ்ட நிவர்த்தி பூர்வமாக இஷ்டப் பிராப்தியைச்  சொல்லுகிறது. இரண்டாவது பொருள், கேவலம் இஷ்டப் பிராப்தியைச் சொல்லுகிறது.

முத்தி என்பதும், மோக்ஷம் என்பதும், பெரிய ஆனந்தம் என்பது ஒரு பொருளன’  என்பது பொருளாம். இங்கு மோஷத்திற்கு ‘மஹானந்தம்’ என்ற பெயர் இருத்தல்  கருதத்தக்கது.

143. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்ம்ருதௌ
     ததாதர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம், சாந்தி பர்வம், 169.

144. உத்பாத்ய ப்ருதிவீம் ஸம்பயக் ஸ்தாபயித்வா யதாபுரம்
     ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி த்வாம் ஆவிஸ்ய ப்ரஜாபதே.-விஷ்ணு தர்மம்.

புணர்க்கும் அயன் ஆம் – இவற்றைப் படைத்தலையே தொழிலாகக் கொண்டிருக்கிற பிரமனும் ஆம். அழிக்கும் அரன் ஆம் – சுடுதடி போலே இவற்றை அடைய அழித்துக் கொண்டிருக்கிற சிவனும் ஆம். 2‘அந்த நாராயணனால் நன்கு காண்பிக்கப்பட்ட படைத்தல் அழித்தல் என்னும் தொழில்களை உடையவர்களாய்ப் படைத்தல் அழித்தல்களைச் செய்கிறார்கள்’ என்றும், 3‘பிரமனே! உன்னிடத்தில் அந்தாரத்துமாவாய் நின்று சிருஷ்டியைச் செய்யப்போகிறேன்’ என்றும் வருகிறபடியே, அவன் அந்தராத்துமாவாய் நின்று நடத்துவிக்க இவற்றைச் செய்கிறார்கள். புணர்த்த தன் உந்தியோடு மன்னிப் புணர்க்கும் அயன் ஆம் ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம் – இவைதாம் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றி இருந்த போதாயிற்று;    பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று, இவர்களும் திருமேனியை விட்டு விலகின், ஆற்றல் இல்லாதவர்கள் ஆவர்கள் என்றபடி. 1இத்தால், சாமாநாதிகர்ணயத்தாலே அந்தர்யாமித்துவம் சொல்லிற்று. ‘புணர்த்த தன் உந்தி’ என்கையாலே, 2காரணத்துவம் சொல்லிற்று; ‘ஆகத்து மன்னி’ என்கையாலே, திருமேனியைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினை உடையவர் என்னுமிடம் சொல்லிற்று.

145. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரமிதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யபயம்.–ஸ்ரீ கீதை, 9 : 2.

பலம் முந்து சீரில் படிமின் – அவனுடைய பலம் முற்பட்டிருக்கின கல்யாணகுணங்களிலே அன்புடையர் ஆகுங்கோள். 5‘செய்வதற்குச் சுக ரூபமாக இருக்கும், நினைத்த பலன்களைக் கொடுத்துத் தான் அழிவில்லாமல் இருக்கும்’ என்னும்படி அறுதி செய்யப்பட்ட விஷய 6சாரஸ்யத்தாலே, சாதன தசையே தொடங்கி இனியதாய் இருத்தலின் ‘பலம் முந்து சீர்’ என்கிறார். ஓவாதே – ‘பௌர்ணமி அல்லாத மற்றை நாள்களில் கடல் தீண்டலாகாது’ என்னுமாறு போன்று ஒரு நியதி இலை இதற்கு    

146. மர்யாதாநாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ: –ஸ்ரீராமா. சுந். 35 : 11

அந்த இராகவன் உலகினுடைய மரியாதையைச் செய்கிறவன், செய்விக்கிறவன்’ என்றார் ஸ்ரீ வால்மீகி

ஒழுக்கத்தை அநுஷ்டித்துக் காட்ட வந்த அவதாரங்கள்

அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித்
திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தி”–கம்பர்

147. யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத்ததேவ இதரோ ஜந:
      ஸயத் ப்ரமாணம் குருதே லோக: ததநுவர்த்ததே. –ஸ்ரீ கீதை, 3 : 21.

பெரியவன் எதனை எதனைச் செய்கிறானோ, அதனையே மற்றை மக்களும் செய்கிறார்கள்; அப் பெரியவன்  எதனைப் பிரமாணமாக வேண்டுமென்று செய்கிறானோ, அதனையே உலகமும் அநுசரிக்கிறது’, என்பது ஸ்ரீ கீதை.

இப்படித் தாழவிட்டு அவதரிக்கிறவன்தான் யார்?’ என்னில், தேவாதி தேவபெருமான் – மனித மணம் பொறாத தேவ மணம் பொறாத நித்திய குரிகட்கு அவ்வருகானவன்.

148. வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
     ஆபத் விமோசந மஹேஷ்ட பலப்ரதாநை:
      க: அந்ய: ப்ரஜாபஸூபதீ பரிபாதி கஸ்ய
      பாத உதகேந ஸஸிவ: ஸ்வஸிரோத்ருதேந.–ஸ்தோத்திர ரத்தினம்.

149. ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார ஸிரஸா ஹர:
பாவநார்த்தம் ஜடாமத்யே யோக்ய: அஸ்மி இதிஅவதாரணாத்– ஈஸ்வர சம்ஹிதை.

 தீர்த்தன்1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல்.

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
  மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் – கறைகொண்ட
  கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
  அண்டத்தான் சேவடியை ஆங்கு-நான்முகன் திருவந். 9

குறைகொண்டு – தன்னுடைய செல்லாமையை முன்னிட்டுக்கொண்டு. நான்முகன்  குண்டிகைநீர் பெய்து – அருகே நின்ற தர்ம தத்துவம் ஜலமாய் இவன் குண்டிகையிலே  பிரவேசித்தது, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -ஸ்ரீ புருஷசூக்தாதிகளைக் கொண்டு துதித்து. கறை கொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் -‘யுக்தாயுக்த  நிரூபணம் பண்ண அறியாதே இவன் அநீதியிலே கைவளராநின்றான்; அது போக  வேணும்’ என்று இவன் ஜடையிலே ஏறும்படி அவன் திருவடிகளை விளக்கினான்;ஸ்ரீபாததீர்த்தம் கொண்டு துஷ்புத்திரர்கள் தலைகளிலே தெளிக்குமாறு போன்று’ என்பன
மேல் பாசுரத்துக்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்.

 ‘புவிஅளந்தவன் பொன்னடித் தாமரை   
  தவழும் கங்கைஅம் தண்புனல் பொன்னென
  அவிர்ச டாமுடி மீதுவைத் தன்றுகொல்
  சிவனும் ஓர்சிவ னாகித் திகழ்ந்தனன்-பாகவதம், 3-ஆம் ஸ்கந்தம், கபிலர் தத்துவம் உரைத்த அத். செய். 51)

தேனந்து சோலை அரங்கேசர் சேவடி மேல்விசயன்
  தானந்த நாளையிற் சார்த்திய மாலையும் தாள்விளக்கும்
  வானம் தரும்கங்கை நன்னீரும் சென்னியில் வைக்கப்பெற்ற
  ஆனந்தத் தான்அல்ல வோமுக்க ணான்மன்றுள் ஆடுவதே?’–திருவரங்கக்கலம். 45.

150. பார்த்தோ விஜேதா மதுஸூதநஸ்ய
      பாதாரவிந்த அர்பபித சித்ரபுஷ்பம்
      ததர்ஸ கங்காதர மௌளிமத்யே
      பபூவவீர: க்ருத நிஸ்சயார்த்த: -ஸ்ரீகீதை, 11 : 40

151. நம: புரஸ்தாத் அத பருஷ்டத: தே. 

பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?

152. தத: ஸாகர வேலாயாம் தர்ப்பாந் ஆஸ்தீர்ய ராகவ:
     அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹூம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந: –ஸ்ரீராமா. யுத். 21 : 1.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்

பாஹூம்புஜகபோகாபம் – திருவனந்தாழ்வான் மேலே  சாய்ந்தாற்போலேயாயிற்றுத் திருக்கையை மடித்துச்சாய்ந்தால் இருக்கும்படி. அரிஸூதந:
கிடந்த கிடையிலே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை –பிரதிஸிஸ்யே  மஹேததே:- ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பரிசித்துச் சாய்ந்தாற்போலே இருக்கை’

153. உடஜே ராமம் ஆஸீநம் ஜடாமண்டல தாரிணம். ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

 கிடந்து -திருப்பாற்கடலிலே கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்; இருந்து – பரமபதத்திலே இருந்தபடியாதல்; 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீராமர்’ என்கிறபடியே, இருடிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தபடியாதல்

154. அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ஸதநு: ஊர்ஜிதம்
       ராமம் ராமாநுஜம் சைவ பர்த்து: சைவ அநுஜம் ஸூபா.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 19 : 25.
நின்று – திருமலையிலே நின்ற படியாதல்; இராவணனைக் கொன்ற பின்னர்க் கையும் வில்லுமாய் இலங்கையிலே நின்றபடியாதல்; 3‘வலிய வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீராமனையும் இலக்குமணனையும், தன் கணவனுக்குத் தம்பியான சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே வாலியைக் கொன்று நின்ற நிலையாதல்

155. தவஸ: பரமோதாதா ஸங்க சக்ர கதாதர:
     ஸ்ரீ வத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்ய: ஸாஸ்வதோ த்ருவ:.–ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரியின் கூற்று.

அவர்களுடைய பெண்கள் பக்கலிலே கேட்குமித்தனையே அன்றோ இவனுடைய பரத்துவம்? 4‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே இருக்கிற ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், கொடுக்கிறவர், ஸ்ரீவத்சம் என்னும் மறுவைத் திருமார்விலுடையவர், பிரியாமல் இருக்கிற பெரிய பிராட்டியாரையுடையவர், ஒருவராலும் வெல்ல முடியாதவர்,   

156. த்வம் அப்ரமேய: ச துராஸதஸ்ச ஜிதேந்த்ரிய: ச உத்தம     தார்மிக: ச
     அக்ஷயகீர்த்தி: ச விசக்ஷண: ச க்ஷிதிக்ஷமாவாந்   க்ஷதஜோபமாக்ஷ:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 24 : 31. இது தாரையின் கூற்று.

தேவரீர் வேதங்களாலும் அளவிட முடியாதவர்; அணுக முடியாதவர்; இந்திரியங்களை வென்றவர்; உயர்ந்த தார்மிகர்; அழிவற்ற கீர்த்தியினை உடையவர்; பூதேவி போன்ற பொறுமை உடையவர்; இரத்தம் போன்ற திருக்கண்களையுடையவர்’ என்னுதல் சொல்லாநிற்பர்கள் அன்றே?

செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
  கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
  ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு
  ஊழி யாவரும் உணரா
  ஆழி முதல்வ!நின் பேணுதும் தொழுது.’ –(பரி. 2 : 15  -19

காலவீட்டம் கழிந்த பின் உயிர்கள் உளவாதற்பொருட்டு  அந்நிலத்தினை எடுத்திட்ட கேழல் கோலத்தால், திகழ்வரப் பெயர் பெற்ற இவ்வராக
கற்பம் நின் செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனை உணர்த்துதலின், அச்செயல்கள்  பலவற்றையும் செய்கின்ற நின் முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாத’-  என்ற அதன் உரை

157. மயாததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்திநா
     மத்ஸ்தாநி ஸர்வபூதாநி நசாஹம் தேஷூ அவஸ்தித:–ஸ்ரீ கீதை, 9 : 4.

கண்ணன் எங்கும் உளன் – இது ஆயிற்று அவன் சொன்ன தப்பு; ‘சர்வேஸ்வரன் எங்கும் உள்ளவன்’ என்றான். 1‘இவ்வுலகம் எல்லாம் என்னால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன’ என்றும், 2‘யாது ஒன்று இருக்கின்றது, அது என்னை அன்றி இல்லை,’ (ஸ்ரீ கீதை, 10 : 39)என்றும் அவ்விறைவன் தான் சொன்னவார்த்தை ஆயிற்று இவன் தான் சொல்லிற்று   

158. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்ய
     ஸச்ச த்யச்சாபவத். –தைத்திரீய ஆனந். : 6.

 வேர் முதலாய் வித்தாய்2மூன்றுவித காரணமும் தானேயாய். பரந்து –3‘உயிர்களைப் படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்; பிரவேசித்து, அறிவுடைப்பொருள், அறிவில் பொருள்கள் ஆனார்’ என்கிறபடியே, முந்துற இவற்றை அடைய உண்டாக்கி, பின்னர்ப் பொருளாதல் பெயரடைதல்களுக்காக அவற்றுள் அநுப்பிரவேசித்து, இப்படி உலகமே உருவமாய் நின்று. தனி நின்ற கார்முகில்போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேன்-‘இப்படி, உலகமே உருவமாய் நின்ற அளவே அன்றி, தன்னுடைய சிறப்புத் தோன்றும்படி ஸ்ரீவைகுண்டத்திலே மழை பெய்யும் மேகம் போலே இருக்கிற அழகிய திருமேனியையுடையனாய் இருந்தும், கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாள் ஆனவனை நான் முந்துற முன்னம் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்கிறார்.

முதல் துணை நிமித்த காரணங்கள். வேர் –  துணைக் காரணம்; முதல் – நிமித்த காரணம்; வித்து – முதற் காரணம்.
ஞானசத்தியாதிகளோடு கூடிய வேஷத்தால் துணைக் காரணமும், சங்கல்பத்தோடு கூடிய  வேஷத்தால் நிமித்த காரணமும், சூஷ்ம சித்து அசித்துகளோடு கூடின தன்மையால்  முதற் காரணமும் கொள்க.

159. அம்பஸ்ய பாரே புவநஸ்ய மத்யே
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயாந்

ஸூக்ரேண ஜ்யோதீம்ஷி ஸமநுப்ரவிஷ்ட:
ப்ரஜாபதி: சரதி கர்ப்பே அந்த:

160. உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ராஜந் புத்ர மஹாபஸ:
த்வத்விதா ந ஹிஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸம்மதா:–ஸ்ரீராமா. அயோத். 72 : 24.

கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான் அன்றோ      

161. ஸபாஷ்பகலயா வாசா கலஹம் ஸஸ்வரோ யுவா
    விலலாப ஸபா மத்யே ஜகர்ஹேச புரோஹிதம்.
    ராஜ்யம்சஅஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹஸி
    ததம் தஸரதாத் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக. –ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 11.

162. ஏகஸ்மிந்நபி அதிக்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜ்ஜிதே
தஸ்யுபி: முஷிதேநேவ யுக்தம் ஆக்ரந்திதும் ப்ருஸம்.
     

163. நியமாதிக்ரமம் ரஹஸி போதயேத். 

அன்னத்தின் குரல் போன்று குரலையுடைய யுவாவாகிய அந்தப் பரதாழ்வான், கண்ணீர்   அடைப்பினால் தெளிவில்லாத வார்த்தைகளால் சபை மத்தியில் கதறினான்;  புரோகிதனான வசிஷ்டனையும் குறை கூறினான்; இராஜ்யமும்  நானும் இராம்பிரானுடைய  சொத்து; இந்த விஷயத்தில் தர்மத்தைச் சொல்லக்கடவீர்; தசரதரிடமிருந்து பிறந்தவன்  ராஜ்யத்தை அபஹரித்துக்கொள்ளுகின்றவனாக எப்படி ஆகக்கூடும்?

விலலாப சபா மத்யே – ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக் கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’ என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச – சந்தியாவந்தனத்திற்குப் பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் – அழகியதாக இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே – சபையின் மத்தியிலே புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின் அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய – ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின், ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’ என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: – 5அவர் போகட்டுப் போன ராஜ்யத்தை  அபகரித்து, அவரைப் பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.

  ‘தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்
பள்ளம்எனும் தகையானைப் பரதன்எனும் பெயரானை’–கம்பநாட்டடிகள் திருவாக்கு

குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
  கிருதார்த் தோஹம் பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’

சேஷபூதனான என்னைப் பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்  என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;  தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச் செய்து அத்தால்  வந்த கைங்கர்ய பலத்தை  அடைந்தவனாகப் போகிறேன்

ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத் தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி.

164. ஏவம் உக்தஸ்து ராமேண லக்ஷமண: ஸம்யதாஞ்ஜலி:
ஸீதாஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம்வசநம் அப்ரவீத்.

165. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
     ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாம்இதி மாம் வத.

பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே கிரியதாமிதி மாம் வத.’(ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )

 ‘ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்தவரே! தேவரீர் பல வருஷங்களாக இருக்கும் போதும்  நான் பரதந்திரனாகவே இருக்கிறேன்; தேவரீரே மனோகரமான ஓர் இடத்தைப் பார்த்து,  ‘இந்த இடத்தில் பர்ணசாலை கட்டுக’ என்று என்னை நியமித்தருளவேண்டும்.

மேலும், 4பரவா நஸ்மி – (ஸ்ரீராமா. ஆரண். 15 : 7. )உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்றார் இளையபெருமாள். இத்தகைய பராதந்திரியத்தை ஆயிற்று இவர் ஆசைப்படுகிறது.

‘இதுதான் ஒருவர் விரும்புவதும் அன்று; விரும்புவார் இன்மை யான் நான் கொடுத்துப் போருமதுவும் அன்று; அவ்வழி புல் எழுந்து போயிற்றுக் காணும்’ என்று இறைவன் அநாதரித்திருக்க, ‘புருஷன் அர்த்திக்க வருமது அன்றோ புருஷார்த்தமாவது? இப்பேறு இத்தனையும் நான் பெற்றேனாக வேண்டும்’ என்று இவர் விரும்ப, 1அவனுந் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக்கட்டுகிறார்.

பரவாநஸ்மி – பரதந்திரனாக இருக்கிறேன். நான் பரதந்திரனாக  இருக்கிறேன் என்றதனால் நீர் ஸ்வதந்திரராக இருக்கின்றீர் என்பது போதருதலின்,
அதனையே, ‘உம்முடைய அஸ்மிதை போல அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை’ என்று அருளிச் செய்கிறார். அஸ்மி – ஆகிறேன்; ஆகிறேன் ஆகுந்தன்மை – அஸ்மிதை.

நீருள எனின்உள் மீனும் நீலமும்;
  பாருள எனின்உள யாவும்; பார்ப்புறின்
  நாருள தனுவுளாய்! நானும் சீதையும்
  யாருளர் எனின்உளேம்? அருளுவாய்’ என்றான். -கம்ப. நகர் நீங். 157
   

166. யாவந்ந சரணௌ ப்ராது: பாரத்திவ வ்யஞ்ஜநாந்விதௌ
ஸிரஸா தாரயிஷ்யாமி நமே ஸாந்தி: பவிஷ்யதி.–ஸ்ரீராமா. அயோத். 98 : 8.

பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்றார்கள்; ‘பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி, நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான். மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போன்று, இவரும் ஈறு இல் இன்பத்து இருவெள்ளத்திலே முழுகிப் பூச்சூட இருக்கின்றார் ஆதலின், ‘பற்புத்ததலை சேர்த்து’ என்கிறார்.

இராஜ லஷணம் பொருந்திய தமையனாரான ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளை  என் தலையில் எதுவரையிலும் தரிக்கமாட்டேனோ’ அது வரையிலும் எனக்குச்  சாந்தியானது உண்டாகமாட்டாது. -. இது, ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ  சத்ருக்நாழ்வானிடம் கூறியதானாலும், ஸ்ரீகௌசல்யையார் முதலாயினாரோடும்  கூறியதாகவும் கோடல் தகும்.

167. பரமாபதம் ஆபந்ந: மநஸா அசிந்தயத் ஹரிம்
     ஸது நாகவர: ஸ்ரீமாந் நாராயண பாராயண: –விஷ்ணு தர்மம். 68.

கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நீ விரைந்து வந்து விழுந்தபடி அறியாயோ? 3பெரிய ஆபத்தை அடைந்தது, கூப்பிடுதற்கும் ஆற்றல் அற்று மனத்தினாலே நினைந்தது’ என்கிறபடியே, சர்வேஸ்வரனாகிய நீயும் உன்றன்னைப் பேணாமல் வந்து விழும்படியான ஆபத்தே அன்றோ?’ என்றபடியாம். யானையும் தன் அளவிலே படும் துன்பம் என்பார், ‘கைம்மாத் துன்பம்’ என்கிறார், இனி, துதிக்கை ஒழிய முழுகிற்று’ என்பார், ‘கைம் மா’ என்கிறார்’ எனலுமாம். ‘அப்படி, உமக்கு ஆபத்து உண்டோ?’ என்ன, ‘அங்கு முதலை ஒன்று; எனக்கு முதலை ஐந்து: அங்கு ஆயிரம் தெய்வ யாண்டு; இங்கு அநாதிகாலம்; அங்கு ஒரு சிறு குழி; இங்குப் பிறவி என்னும் பெருங்கடல்;அதற்குச் சரீர நாசம்; எனக்கு ஆத்தும நாசம்; அங்கு யானையின் காலை முதலை பற்றியது; இங்கு என்னுடைய நெஞ்சை அன்றோ அருவித் தின்றிடுகிறது? ஆதலால், அதற்கும் இதற்கும் உள்ள வாசி பாராய். கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கின அதுவும் தமக்குப் போக்கியது என்று இருக்கின்றார் ஆதலின் ‘பிரானே’ என்கிறார். ‘அதற்கு உதவினமை உண்டு; உமக்கு என்?’ என்ன, அம்மா -‘அதற்கும் எனக்கும் ஒவ்வாதோ தேவரீருடைய சம்பந்தம்? நீர் சுவாமி அன்றோ?’ ‘நீர் யார்?’ என்ன, அடியேன்-நான் அடியவன். ‘நன்று; இவருடைய சொரூபத்தையும் பற்றித் ‘தவிர ஒண்ணாது’ என்று விரும்புகிறீரோ?’ என்ன, வேண்டுவது – வேண்டிப் பெறத்தக்கது. ‘இதுவாகில் வேண்டுவது, இது செய்கிறோம்; இதுவும் இன்னம் எதுவும் வேண்டும்?’ என்றான். இஃதே – 1நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து என்ற இதுவே’ என்கிறார்.

168. துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோரத:
யதி நாஸம் நவிந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா. –ஜிதந்தா ஸ்தோத்திரம்.

துன்பத்தை நீக்க வேண்டும்’ என்கிறேன். அல்லேன்; 2‘துன்பம் வந்த காலத்திலும், உன்னை அடைந்திருக்கிற என்னுடைய எண்ணமானது கேட்டை அடையாமல் இருந்ததே ஆனால், அதைக்கொண்டு எப்பொழுதும் பேறு பெற்றவனாக இருக்கிறேன்’ என்கிறபடியே, ‘ஏதேனும் 3உத்கிரமண சமயத்திலும் உன் திருவடிகளை நான் இளையாதே ஏத்தும்படி செய்தருளவேண்டும்’ என்றபடி

169. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
      தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம். –யஜூர்வேதம் ஆ. பிர. 3. 8 : 17.

பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை – பிறத்தற்குக் காரணமான கர்மம் இல்லாதிருக்கவும், கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறவாத பிறவிகளிலே பிறக்க வல்ல, எல்லார்க்கும் தலைவனை. 2‘கர்மம் காரணமான பிறப்பு இல்லாமல் இருக்கிற சர்வேஸ்வரன் இச்சை அடியாகப் பல விதமாக அவதரிக்கிறான்; அதன் காரணத்தைப் பெரியோர்கள் அறிவார்கள்,

170. யத்ரருஷய: ப்ரதமஜாயே புராணா:

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே அன்றோ?’ என்கிறார்; அதாவது, பகவானுடைய அனுபவத்தில் மிக்காராய், ‘எல்லாவற்றையும் அறிந்தவர்கள், பழையராய் இருந்தும் புதியராகவே காணப்படுகின்றவர்கள்’ என்கிறபடியே, வேதத்திலே குற்றமற்றவர்களாகச் சொல்லப்பட்டுள்ள நித்திய சூரிகள் அனுபவிக்கின்ற அக்காரம் போலவும், கனி போலவும் உள்ள உன்னுடைய இனிமையின் மிகுதியை எனக்குப் பிரகாசிப்பித்தவனே! அன்றோ?’ என்கிறார்.

நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன்’ என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க, ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது; ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.

171. தத்ஹி ஏதத் பஸ்யந்ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே
அஹம் மநு: அபவம் ஸ்ூர்யஸ்ச.–ஸ்ரீராமா. அயோத். 31 : 25.

பொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ?’ என்ன, யானே நீ – யானும் நீயே. 3முத்தர்கள், 4‘நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னாநிற்பர்; சம்சாரத்தில் தெளிவுடையார் 5‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’ எல்லாப் பொருள்களும் நானே’ என்னாநிற்பர்; இங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை?’ எனின், ‘அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘

172. ஏகம் ஸதைகம் பரம: பரேஸ:
     ஸவாஸூதேவோ நயத: அந்யத் அஸ்தி. –பிருகதாரண்ய உபநிடதம், 3.

173. த்ரய ஏவாதநா ராஜந் பார்யா தாஸ: ததா ஸூத:
     யத்தே ஸமதிகச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத்தநம். -ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 85.

அஹம் பிரஹ்ம அஸ்மி – நான் ராஜபுத்திரன்’ என்னுமாறு போன்று, ‘நான் பிரஹ்மம்’ என்னலாம்படி அன்றோ 6சம்பந்தம் இருக்கும்படி? ‘ஆயின், 7‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ?’ எனின், அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி. என் உடைமையும் நீயே – 8‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே, ‘என் உடைமையும் நீயே’ என்கிறார். ‘இது எங்கே நிகழக்கண்டு சொல்லும் வார்த்தை?’ என்ன, ‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது?’ என்கிறார்

174. அஹோ வீர்யம் அஹோ தைர்யம் அஹோஸத்வம்  அஹோத்யுதி: –ஸ்ரீராமா. சுந். 49 : 17.

175. பபூவ புத்திஸ்து ஹரீஸ்வரஸ்ய யத் ஈத்ருஸீ ராகவ தர்மபத்நீ
இமாயதா ராக்ஷஸ ராஜபார்யா: ஸீஜாதம்அஸ்யேதி ஹி  ஸாதுபுத்தே: — ஸ்ரீராமா. சுந். 9 : 12.

ஏர் கொள் இலங்கையை – காட்சிக்கு இனியதாய்க் கட்டுடைத்தான இலங்கையை. 2‘இது என்ன வீரியம்! இது என்ன தைரியம்! இராக்ஷச அரசனான இராவணனுக்கு எல்லா இலக்கணங்களும் பொருந்தி இருப்பது ஆச்சரியம்’ என்றும், 1‘இராவணனும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைக் கண்டவாறே, ‘பையல், தானும் பெண்களுமாய் இருக்கிற இருப்பைப் பெருமாளும் பிராட்டியுமாய் இருக்கச் சம்மதித்தானாகில், இந்த ஐஸ்வரியம் குலையாதிருக்குமே!’ என்றும் நினைத்தான், ‘பகைவர்கட்கும் நன்மை வேண்டும்’ என்று இருக்கும் புத்தியையுடைய அனுமான்; தானும் ஒரு கூட்டத்துக்குத் தலைவன் ஆகையாலே இங்ஙனே இருப்பது ஒரு புத்தி பிறந்தது’ என்றும் கூறப்படுகின்றபடியே, திருவடி மதிக்கும்படியான இலங்கை ஆதலின், ‘ஏர் கொள் இலங்கை’ என்கிறார்.

176. பால்யே க்ரீடநகா ஸக்தா: யௌவநே விஷயோந்முகா:
177. தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயஸே ஸதா. –ஸ்ரீ விஷ்ணு புரா. 17. 74 : 75. இது பிரஹ்லாதாழ்வான் கூற்று.

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – ‘கிளர் ஒளி இளமை’ என்றது, 1‘மனத்தில் உண்டாகும் சிரத்தையாய், பிறந்த இச் சிரத்தை இதினின்றும் மாறி வேறு விஷயங்களில் பிறப்பதற்கு முன்னே’ என்றபடி. என்றது, ‘ஒருவனுக்கு ஒரு விஷயத்தில் ஒரு கால் சிரத்தை பிறக்கும்; அவனதனக்கே அவ்விஷயத்திலே சிரத்தை இன்மையும் பிறக்கக் கூடியதாய் இருக்கும். ஆக, பிறந்த ருசி மாறுவதற்கு முன்னே’ என்றவாறு. ‘கிளர் ஒளி இளமை’ என்பதற்கு, ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்பது பொருள். ஒளி என்றது, ஞானத்தை; அது ஈண்டு இச்சைக்கு ஆயிற்று. ‘இளமை’ என்றது, அவ்விச்சை உண்டாகும் ஆரம்ப நிலையைக் குறித்தது. அந்த இச்சை தோன்றுவது மனத்திலே ஆகையாலே ‘மனத்தில் உண்டாகும் சிரத்தை’ என்று பொருள் அருளிச்செய்கிறார்

இனி, ‘கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்’ என்பதற்கு,  ‘அடையத் தக்கது’ என்னும் நினைவு பிறந்தாலும், 2‘கரணபாடவம் இல்லையே!’ (கரணங்கள் தத்தம் காரியங்களைச் செய்வதற்குத் தக்க ஆற்றலுடன் சேர்ந்திருத்தல்.)என்று கை வாங்க வேண்டாதபடி கரணபாடவம் உள்ள போதே என்று பொருள் கூறலுமாம். உயர்வு பற்றி ‘ இளமை கெடுவதன் முன்னம்’ என்றாராயினும், இனம் பற்றிப் பால்ய யௌவன பருவங்களையும் கொள்க. 3‘பாலியத்தில் விளையாட்டில் ஆசையுள்ளவர்களாகவும், யௌவன காலத்தில் விஷயங்களை அனுபவித்தலில் பற்றுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று கூறி, ‘ஆகையாலே, பால்யத்திலே அறிவோடு கூடினவனாய் எக்காலத்திலும் புகழின்பொருட்டு முயற்சி செய்தல் வேண்டும்’ என்றும் கூறுதல் காண்க.

178. யத் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூதேவோ நசிந்த்யதே
ஸாஹாநி: தத் மஹத் சித்ரம் ஸாப்ராந்தி: ஸாசவிக்ரியா.

தளர்வு இலர் ஆகில் – ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால் வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும் புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் (கேட்டினையடைகின்றவர்கள்.)அல்லாதாராய் ஒழிய வேண்டில் எனலுமாம்

தளர்விலராகில்’ என்பதற்கு, இருவகைப் பொருள் அருளிக் செய்கிறார்; முன்னையது, ‘திருமலையைச் சாராமையாகிற துக்கம் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது ஸ்ரீ  ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள். பின்னையது, ‘திருமலையைக்  கிட்டுகைக்கு விரோதியான பாவங்கள் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது  எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள் 

179. நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நா சாஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.

பக்தா நாம்’ என்கிறபடியே, பிறர்களுக்கு உரியதாய் நிரதிசய போக்கியமாய் இருக்கும்  விஷயம் அன்று; ஆதலின், ‘மதியாது’ என்கிறார்

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப் பைம்பூம் பள்ளி
  அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்’–திருவாய். 4. 4. 5.

பாண்தேன் வண்டுஅறையும் குழலார்கள்பல் லாண்டுஇசைப்ப
  ஆண்டார் வையமெல்லாம் அரசாகிமுன் ஆண்டவரே
  மாண்டார் என்றுவந்தார் அந்தோமனை வாழ்க்கைதன்னை
  வேண்டேன் நின்னடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே!’–பெரிய திருமொழி. 6. 2 : 5

180. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்திரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.–ஸ்ரீகீதை.
    

181. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
    தர்ம ஸம்ஸ்த்தாபநார்த்தாய ஸ்ம்பவாமி யுகே யுகே. –ஸ்ரீகீதை. 4 : 8.

182. தத: தக்கோகுலம் ஸர்வம் கோ கோபீஜந ஸங்குலம்
அதீவார்த்தம் ஹரி: த்ருஷ்ட்வா மைத்ரேய அசிந்தயத்ததா.–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்2‘பசுக்கள் ஆயர்கள் ஆயச்சிகள் எல்லாரும் வருந்திக் கொண்டிருக்கிற அந்தக் கோகுலம் முழுதையும் கிருஷ்ணன் பார்த்து அப்போது சிந்தித்தான்’ என்கிறபடியே, ஆயர்களும் ஆய்ச்சிகளும் நோவுபட ஒரு மலையை எடுத்து நோக்கினவன், அந்த ஐஸ்வர்யத்தோடு வந்து நித்தியவாசம் செய்யுங்கோயில். இதனால், அரியன செய்தும் அடைந்தவர்களைப் பாதுகாப்பவன் என்பதனைத் தெரிவித்தபடி. ஐந்து லட்சம் குடிகளும் நிழலிலே ஒதுங்கலாம்படி மலையின் பரப்பு இருந்தது ஆதலின், ‘பெருமலை’ என்கிறார். பீடு – பெருமை; என்றது, ஆபத்திற்குத் துணையாதல் முதலாயினவற்றை. ‘பெரு மலை எடுத்தான் பீடு உறை கோயில்’ என்றதனால், ‘ஒரு மலையை 3ஆதேயமாகக் கொண்டு ரஷித்தவன், ஒரு மலையை ஆதாரமாகக் கொண்டு காப்பாற்றுகின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி. ‘ஆயின், திருமலையில் நிற்றல் காத்தலுக்கோ?’ எனின், 4‘சாதுக்களைக் காத்தற்காகவும், துஷ்டர்களை அழித்தற்காகவும், தர்மங்களை நிலைநிறுத்துதற்காகவும், யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்கிறபடியே, விரோதிகளைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கை அன்றோ 5அவதாரங்களுக்குப் பிரயோஜனம்?

183. ஸமுத்வஹந்த: ஸலிலாதிபாரம் பலாகிநோ வாரிதரா நதந்த:
மஹத்ஸூ ஸ்ருங்கேஷூ மஹீதராணாம் விஸ்ரம்ய விஸ்ரம்ய
புந: ப்ரயாந்தி. -ஸ்ரீராமா. கிஷ். 28 : 22.

நின்ற இடத்தே நின்று பெய்வது ஒரு மேகமும், போவதும் வருவதுமாய் இருந்து பெய்வது ஒரு மேகமும் என ஊர்க்கு மேகம் இரண்டாதலின்’ ‘வருமழை தவழும்’ என்கிறார். ‘ஆயின், இறைவன் மேகமோ?’ எனின், ‘புயல் மழை வண்ணர்’ என்றாரே முன்னர்

மிக அதிகமான தண்ணீரைத் தாங்குவனவும், கொக்குகளின் வரிசையையுடையனவும், ஒலிப்பனவுமான மேகங்கள், மலைகளின் பெரிய கொடுமுடிகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றன’ என்பவாகலின், ‘மழை தவழும்’ என்கிறார்.

184. ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்யச தீமத:
     ந அத்யர்த்தம் க்ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே.-ஸ்ரீராமா. சுந். 16 : 4

அறம் முயல் ஆழ்ப்படையவன் கோயில்3‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறபடியே, (இங்கு, பெருமாளைக் காட்டிலும் அடியார்களைக் காப்பதில்
சிரத்தையுள்ளவன் இலக்குமணன் என்பதனைக் காட்டுவதற்காக ‘அறிவுடைய இலக்குமணன்’ என்கிறார்.)அடியார்
களைப் பாதுகாத்தலிலே முயலாநின்றுள்ள திரு ஆழியை ஆயுதமாக உடையவன் வந்து வாழ்கிற தேசம். 1சர்வேஸ்வரன் கடைக்கணித்துவிட அரைக்கணத்திலே வாராணசியை எரித்து வந்து நின்றவன் ஆதலின், ‘அறம் முயல் ஆழி’ என்கிறார்.

185. அகர்த்தமம் இதம் தீர்த்தம் பரத்வாஜ நிஸாமய
ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந் மநுஷ்ய மநோ யதா. –ஸ்ரீராமா. பால. 2.

மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை புற மலை சாரப் போவது கிறியே – 2‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே, மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே பகவானை அடைதலை வேண்டியிருப்பார்க்கு வருத்தம் அற அடையக்கூடிய நல்விரகு.

186. ய: த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்க: நிரயோ ய: த்வயா விநா
இதிஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மாய ஸஹ. –ஸ்ரீராமா. அயோத். 30 : 18.

187. யதி த்வம் ப்ரஸ்திதோ துர்க்கம் வநம் அத்யைவ ராகவ
    அக்ரத: தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குஸகண்டகாந். –ஸ்ரீராமா. அயோத். 27 : 9.

188. நச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ
     முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

நரகு அழுந்தாதே – பிரிவால் வரும் துன்பத்தை நுகராமல். ‘ஆயின், ‘நரகு’ என்பது, பிரிவுத் துன்பத்தைக் காட்டுமோ?’ எனின், நரகங்களும் இவர்களுக்கு முடிவு செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பது? ‘காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?     

189. ய ஆத்மதா பலதா.– யஜூர் வேதம், காண்டம், 7, 5 : 36.

வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே – சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் – திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.   (வலம் செய்தல் – வலிமையை உண்டாக்குதல்; ‘வலம்’ பலம் என்ற சொல்லின் சிதைவு.  முதற்பொருளில், வலஞ்செயல் – வலம் வருதல்.)

வானோர் வலம் செயும் மாலிருஞ்சோலை – பெருமாள் காட்டுக்கு எழுந்தருளுகிற போது இலக்குமணபரதர்கள் பின் தொடர்ந்தது போன்று, சர்வேஸ்வரன் இங்கே போருகையாலே நித்தியசூரிகளும் போந்து வலஞ்செய்கிற மாலிருஞ்சோலை. உகந்தருளின மற்றைத் திவ்விய தேசங்கள் எல்லாம் கிடக்க, திருவேங்கடத்தை 4‘விண்ணோர் வெற்பன்’ (திருவாய். 1. 8 : 3.)என்றார் மேல்; இங்கே இதனை ‘வானோர் மாலிருஞ்சோலை’ என்கிறார்; ‘இதற்கு நினைவு என்?’ எனின், ‘குழந்தைக்குத் தாயினுடைய உறுப்புகள் எல்லாம் கிடக்க முலைக்கண்ணிலே அன்றோ வாய் வைக்கலாகாவது? அப்படியே இங்குத் 5‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையாவடிவு அமைந்த, அன்ன நடைய அணங்கு’ (பெரிய திருமடல், 6,7.)என்கிறபடியே, அவை இரண்டும் முலைகள் ஆகையாலே, அவர்களுக்கேயாகி இருத்தலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார்

190. ய: அந்யதாஸந்தம் ஆத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
     கிம் தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா.–பாரதம் உத்தியோக பர்வம். இது திருதராஷ்டிரனைப் பார்த்து சனத்ஸூஜாதன் கூறுவது.

 சூது என்று களவும் சூதும் செய்யாதே-நமக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது என்று சூதும் களவும் செய்யாமல். 2நூல்கள் ‘செய்தல் ஆகாது’ என்று இவ்விரண்டனையும் விலக்குகின்றமையால், ‘சூதும் களவும் செய்யாதே’ என்கிறார். இனி, களவாவது, 3‘ஆத்துமாவைத் திருடின திருடன்’ என்கிறபடியே, ஆத்துமாவைத் திருடுதல் என்றும்; சூதாவது, ஸாத்விகனாய்ப் பிராமாணிகனாய் இருப்பான் ஒருவன், ‘சர்வேஸ்வரன் இரட்சகன்’ என்று நம்பி இருந்தால், ‘காண்கிற சரீரத்துக்கு அப்பால் ஓர் ஈஸ்வரனாவது என்? ஆத்துமா வாவது என்?’ என்று காணக் காணக் கொள்ளை கொள்ளுதல் என்றும் 4கூறலுமாம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –முதல் பத்து –

November 29, 2023

ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சிக்கொடி முதலானவை வளைந்து பிழைக்கும்; அவை போல’இறைவனுடைய குணங்களின் எடுப்பு இருந்தபடி கண்ட நமக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை; அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார்

——————–

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன் – பகவானுடைய ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள் மனிதர்களுடைய ஆனந்தம் தொடங்கிப் பிரமானந்தத்து அளவும் சென்று பின்னையும் அதற்கு மேல் உத்பிரேக்ஷித்துக் கொண்டு சென்று (புனைந்துரைத்தல்; தற்குறிப்பேற்றம்.)பின்னையும் அளவிட்டு அறியமாட்டாது, 4அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ (தைத்திரீ. ஆன. 9 : 1)என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்த குணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன? இக்குணங்கள் எல்லாம் தமக்கு நிலையமாகப் பேசுகிறார் இவர்இறைவனின் வேறுபட்ட எல்லாப் பொருள்களிலும் எல்லா வகையாலும் வருகின்ற மேன்மையினை ஈண்டு ‘உயர்வு’ என்கிறார். அற – அம் மேன்மை இன்றியே ஒழிய; ஈண்டு ‘அற’ என்றது, மற்றைத் தெய்வங்கள் உயர்வே இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று; இறைவனுடைய மேன்மையினையும் பிற தெய்வங்களினுடையமேன்மையினையும் பார்த்தால்,

‘சூரியன்முன் நட்சத்திரங்கள் போலவும், மஹாமேரு மலையினுச்சியில் நின்றவனுக்குக் கீழுள்ள கடுகு முதலியவை போலவும்’ (உள்ளனவாக இருக்கச்செய்தே இல்லை என்னலாம்படி இருக்கையைத் தெரிவித்தபடி. இதனால், அவர்கள் உயர்வின் சிறுமையைத் தெரிவித்தபடி. இனி, 1‘உயர்வற’ என்பதற்கு, ‘எல்லோருக்கும் உயர்வு உண்டாகும் போது வருத்தமுண்டு; அப்படி வருந்த வேண்டுமோ?’ என்றால், ‘உயர்வற உயராநிற்கும்’ என்று உரைத்தலுமாம். உயர்வு – வருத்தம். இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் 2‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்தார்.).

கண்ட இடமெங்கும் பயிர்பட்டிருக்கும் நன்செய் நிலம் போன்று’ -. ‘கரை கட்டாக் காவிரி போன்று’(ஒரு காலத்தில் காவேரி கரை கட்டப்படாமல் இருந்ததையும், பின்னர்க்  கரிகாற்பெருவளத்தானால் கரை கட்டப்பட்டமையும் இங்கு நினைவு கூர்க.)குணங்கள் பரந்திருந்தால் இவற்றுள் யாதாயினும் ஒன்று பயன் இல்லாமல் பாடு பட்டுக்கிடக்குமோ?’ என்னில், நலம் – கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நன்செய் நிலம் போன்று எல்லாக் குணங்களும் ஒக்கக் கொள்ளத் தக்கனவாக இருக்கும். இங்கு ‘நலம்’ என்றது, ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது. அன்றி, குணங்களின் தொகுதியினைச் சொல்லுகிறது என்றும், ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான விபூதிகளைச் சொல்லுகிறது என்றும் கோடலும் பொருந்தும். உடையவன் – இக் குணங்களை உள்ளவை என்று கூறுதலோடு அமையாது, இவற்றைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன். இதனால், இக்குணங்கள் இடையில் தோன்றியவையல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத் தெரிவித்தபடி

—————–

மதிநலம் அருளினான் -பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச்செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பத்தி. அந்தப் பத்தியின் நிலையிலே இறைவனுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய்வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பத்திதான் இவ்வாழ்வாருடைய பத்தி. ‘ஆழ்வார் 1பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், ‘நாமனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓராண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப்பொருள்களைத் தேடிக்கொள்வது போன்று’உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ யாவான் இவர்க்கு.

அருளினன் – ஒரு விதக்காரணமும் பற்றாமல் அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின், ‘எனக்கு அருளினன்’ என்றிலர். இனி, தாம் விரும்பாமல் இருக்கவும், ‘மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப்போன்று’ தானாகவே அருள் செய்துகொண்டு நின்றான் ஆதலின், ‘அருளினன்’ என்கிறார்

இப்படி இருக்கிற இவர்கள் பலராகத் தான் ஒருவனாக இப்பதனால், இவர்களைப் பின் பற்றிக்கொண்டு தன்னுடைய சேஷியாந்தன்மை ஆகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அதிபதி – அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’ ‘யானைக்குக் குதிரை வைத்தல் போன்று’– என்றது, பிடி கொடுக்குமாறு போன்று  இருந்து பிடி கொடாமையைப் பற்ற. யானைக்குக் குதிரை வைக்கையாவது,  யானையின் வேகத்தைப் பரீக்ஷிக்கின்றவர்கள், குதிரையை முன் நடத்தி  யானையைப் பின் நடத்துவார்கள்; யானையும் துதிக்கையாலே குதிரையைத் தொடும்படி கிட்டச் சென்று பின்னையும் தொடமாட்டாதே ஒழியும்.  அப்படியே, நித்தியசூரிகட்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்றபடி.

————-

என் மனனே, இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனையே முன்பு. இருவர் கூடப் பள்ளியில் ஓதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உயர்வு உண்டாயின், மற்றையவன் அவனோடே ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாறு போன்று -‘மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, (ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.)நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

————–

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்; மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி; அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று ஒரே தொடராகக் கொள்க. இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு; மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’ எனத் தனித்தனி தொடராகக் கோடலும் பொருந்தும் அங்ஙனம் கொள்ளுமிடத்து, ‘கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ (பகவத்கீதை. 11 : 40.)என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியது போன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க. ஆயின், ‘உயர்வற உயர்நலம் உடையவன் அயர்வறு மமரர்கள் அதிபதி’ என்று இறைவனுடைய தன்மைகளை ஒரு சேரக் கூறி, பின் அவன் செய்த உதவியை ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்ன வேண்டியிருக்க, ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்ற பின்னர், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று அவ்வளவும் போகமாட்டாமல்  உபகாரத்தின் நினைவாலே ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிறார்.’

இப்பாட்டால், ‘இறைவனுக்குக் குணமில்லை; விக்கிரகம் இல்லை; விபூதி இல்லை’ என்று சொல்லுகின்றவர் எல்லாரும் மறுக்கப்பட்டவராவர், அவர்களை எதிரிகளாக்கிச் சொல்ல வேண்டா; தமது மதத்தை நிலை நிறுத்தவே, மற்றைய மதங்கள் மறுக்கப் பட்டனவாம். 3நெற்செய்யப் புல்தேயுமா போலே, தாமாகவே மறுக்கப்பட்டவர் ஆவர்கள் அவர்கள்.

‘உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று; ‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று; ‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது; ‘தொழுது எழு’ என்கையாலே 5பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று; ‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தை யுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.

—————-

மனன் உணர்வு அளவு இலன்-இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ (பிரஹதாரண். 4. 6 : 62.)என்று அளவிட்டு அறிய முடியாது என்கை. ‘ஆயின், மனன் உணர்வு அளவு இலன் என்பதற்கு மன அறிவினால் அறிய முடியாதவன் என்று கூறின் வரும் குற்றம் உளதோ?’ என்னில், முதலிலே ஞான விஷயம் அன்று என்னில், பொருளே இல்லை என்று வரும் அன்றே? ஆதலால், அணு அளவினதான ஆத்துமாவை அறியுமாறு போன்று, எங்கும் பரந்திருக்கிற இறைவனை அறியப்போகாது என்கை.‘

பொறி உணர்வு அவை இலன்-‘பொறி’ என்பன கண் முதலிய உறுப்புகள். அவற்றால் அறியப்படும் பொருள்களின் தன்மையன் அல்லன், ‘எந்த இறைவனை உயிர் அறியாதோ, எந்த இறைவனைப் பூமி அறியாதோ’ என்று இறைவனை அறியமாட்டாமையில் உயிர்ப் பொருளையும் உயிரல் பொருளையும் ஒரு சேரக் கூறியிருத்தலைப் போன்று, ஈண்டும் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் இவ்விரண்டன் தன்மையிலும் வேறுபட்டவன் இறைவன் என்று அருளிச்செய்கிறார். அதாவது, ‘இறைவன் காணப்படுகின்ற உயிரல் பொருள்களின் தன்மையில் வேறுபட்டிருத்தலைப் போலவே, காணப்படாத உயிரின் தன்மையிலும் வேறுபட்டவன்’ என்றபடி. பிறவிக் குருடன் பொருள்களைப் பார்க்கின்றிலன் எனினும், தெளிந்த பார்வையினை யுடையவனும் பார்க்கின்றிலன் எனினும் பார்க்க மாட்டாமையில் இருவரும் ஒப்பு ஆவர் என்க.

—————

எனன் உயிர் – இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்; இனி, உபலக்ஷணத்தால், ‘எவனுக்கு உயிர்கள் அனைத்தும் சரீரமோ’ என்கிறபடியே, எல்லா உயிர்களுக்கும் தாரகன் என்று கோடலுமாம். ‘இறைவனுடைய தன்மையினைக் கூறும் இவ்விடத்தில் ‘என்னுயிர்’ என்று கூறவேண்டியது என்?’ எனின், இவ்வுயிர்களை எல்லாம் தனக்குச் சரீரமாகக் கொண்டு தான் ஆத்துமாவாய்த் தாரகனாய் இருப்பவன் என்னும் அர்த்தமும் சொல்லவேண்டுவது ஒன்றாதலின் சொல்லுகிறார்: மிகுநரை இலன் – ‘இறைவனாகிய தான் உயிர்களைச் சரீரமாகக் கொண்டு தாரகனாய் எல்லாரையும் ஏவுகின்றவனாய் இருப்பது போன்று, தன்னையும் ஏவக்கடவது ஒரு வேறு பொருள் உளதோ?’ எனின், மேம்பட்டாரை யுடையன் அல்லன். ‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ (ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.)என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச்செய்கிறார்.

———–

இவ்வுலகங்கள் இறைவன் உடைமை என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின்,-அரசர்கட்கு நாடெங்கும் தமது ஆணை செல்லுமாயினும், தங்கள் தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக் குடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் விளையாட்டின்பம் தூய்க்குமாறு போன்று’

திருவிண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே’ (திருவாய். 6. 3 : 5.)என்கிறபடியே, இறைவனும் இறைவியுமாகக் கண் குளிரப் பார்த்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி, அவர்கட்கு விளையாட்டு இன்பம் துய்த்தற்குக் காரணமாய் இருத்தலால் உடைமை என்பதனை அறிதல் கூடும்.

———

செல்வங்களைச் சேர்க்கின்ற தன்மையிலும் ஆபத்துகளைப் போக்குந்தன்மையிலும் புருடோத்தமனாகிய இறைவனைத் தவிர, ஆற்றலுடைய வேறு ஒருவன் காணப்படுகின்றான் இலன்,’ (ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.)என்றும், ‘காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று,’ (தைத்திரிய நாராய. 6. : 10.)என்றும் பிரமாணங்கள் இருத்தலால் எல்லா நன்மைகளையும் செய்து தர வல்லவனாய், பகையையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய வேறு ஒருவர் பக்கல் இந்தக் காக்குந்தொழில் கிடவாது-செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று’

வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ, (ஓம்’ என்னும் பிரணவம். ‘ஓம் எனும் ஓரெழுத்து அதனின்
உள்ளுயிர், ஆமவன் அறிவினுக்கு அறிவும் ஆயவன்,’ என்ற கம்பராமாயணச்  செய்யுள் (இரணியன் வதை, 76))அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’ என்று உபநிடதம் புகலும்.

————-

அவன் அவன் அந்தப் பத்தியோடு அத்தேவர்களை ஆராதனை செய்கின்றான்; என்னால் கொடுக்கப்பட்ட பலனையும் அடைகின்றான்,’ (ஸ்ரீ கீதை. 7 : 22.)என்றும் இறைவன் ஸ்ரீ கீதையில் அருளிச்செய்தபடியே, அவ்விரு திறத்தார்களுடைய உயிர்களுக்குள் உயிராய் நின்றனர் என்று கூறலும் ஒன்று. இதனால், இறைவன்  இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே, அவர்களும் அடைந்தவர்கள் ஆகின்றார்கள்; இவர்களும் பலத்தைக் கொடுக்கின்றவர்கள் ஆகின்றார்கள்; இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் பற்றவும் மாட்டார்கள்; இவர்கள் பலனைக் கொடுக்கவும் மாட்டார்கள் என்பது விளங்கும். அதாவது–(இரவில் சத்திரங்களில் தங்கியிருக்கும் தம்  மக்களுக்கு உணவினை ஊட்டுதல்; இது தாயரின் செய்கை.(அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவர்கட்குப் பலனைக் கொடுக்கும் ஆற்றல் உள்ளதாவது,’ என்றபடி

—————

நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். 1ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, (ஆகிருதி–சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய  பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.  அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது  அச் சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று  என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது – ஒரு சொல் தனக்குரிய  பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும்  செல்வது.)தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். ‘பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல’ தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும், செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று’(குணத்தோடு கூடிய பொருள்’ என்ற இடத்தில், செந்நிறத்தையுடைய பசு  என்ற பொருள் தோன்றினாலும், பசு என்னும் குணியைக் கொள்ளாது  ‘செந்நிறம்’ என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று)முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், சாமாநாதிகரண்யம் சித்தியாது. (எம் திடரே’ என்ற பதத்தினோடு  பொருள் பொருந்தாது என்றபடி.)ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக் களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங் காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன.

————–

என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – இப்படிப் பல வகையினராக இருக்கையாலே காலம் உள்ள வரையிலும் ஆராய்ந்தாலும் இன்னபடிப்பட்ட தன்மையினையுடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர். என்றும் ஓர் இயல்வொடு நின்ற – ‘விருஷல விவாக மந்திரம் போலே என்றும் ஓர் இயல்வொடு நின்றவராவது என்?’ என்னில், (விருஷல விவாக மந்திரம்போலே நினைவு அரியவர்,’ எனக் கூட்டுக.  விருஷல விவாக மந்திரம் – ஒரு சாதியினர் திருமணம் செய்யும் போது கூறும்  மந்திரம். அவர்கள் கூறும் மந்திரம் முற்கூறியதற்குப் பிற்கூறுவது  மாறுபாடுடையது என்பது தோன்றுகிறது.)என்றும் ஒருபடிப்பட்ட தன்மையினை யுடையவர் என்று நினைக்க அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டிருக்கும் என்கை. எம் திடர் – மனிதர்களால் செய்யப்படாத வேதங்களால் சொல்லப்பட்டவன் ஆகையால், வந்த திடத்தின் தன்மையைச் சொல்லுகிறார். இப்படி, சிறந்த திடமான பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடைய இலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்

————-

எல்லாம் தான் என்னலாம்படி இருப்பினும், ‘மண்ணே குடம்’ என்பது போன்று இராமல். ‘உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ (தைத்திரீயம்)இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று ‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’(பிரஹதாரண்யம்) 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ (பிரஹதாரண்யம்)என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார். ஆயின், ‘மரத்திலே தேவதத்தன் நின்றான்,’ என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம் இல்லை. ‘சாதி குணங்கள் ஒரு வடிவிலே கிடந்தன,’ என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம் இல்லை. தாரகமாகவும் நியாமகமாகவும் சேஷியாகவும் இருக்கின்ற ஒரு பொருளிலே ஆத்தும பாவத்தையும், தார்யம் நியாம்யம் சேஷம் இவற்றோடு கூடியிருக்கின்ற ஒரு பொருளிலே சரீர பாவத்தையும் கோடல் வேண்டும்.

தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும்  இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது,  தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள்.

நியாம்யமாவது, சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு  வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல்.
சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று, இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.

————–

இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் – இவற்றை அடியாகக்கொண்டு மேலே பரந்து விரிந்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி. ‘ஆய்’ என்றது ‘ஆக்கி’ என்கிறபடி. ‘பல பொருள்களாக விரிகின்றேன்’ (தைத்திரீய. ஆன. 6. 3.)என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், வைதிக நிர்த்தேசம் இருக்கிறபடி. (மறைமொழி.)அவை அவைதொறும்-அவ்வப்பொருள்கள் தோறும். அப்பொருள்களில் நிறைந்து நிற்குமிடத்துப் பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல அன்றி ஒவ்வொரு பொருளிலும் அவ்வச் சாதித் தன்மை நிறைந்திருத்தல் போன்று எல்லாப் பொருள் களிலும் தனித்தனியே குறைவு அற நிறைந்து நிற்பான் என்பார், ‘அவை அவை தொறும்’ என்கிறார்.

————-

உளன் என்கிற சொல்லாலே சொன்னால். உனக்கு விருப்பமான இல்லாமை சித்திக்காதது போன்று, இல்லை என்கிற சொல்லாலும் உனக்கு விருப்பம் இல்லாத அர்த்தமே காண் சித்திப்பது; ஆன பின்னர், நீ இல்லை என்கிற சொற்கொண்டே அவன் உண்மையைச் சாதிப்பான். உலகத்தில் உண்மை இன்மைச் சொற்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்? அப்படிக் கொள்ளில், நீ நினைக்கிற பொருள் உன்னால் சாதிக்கப் போகாது; அங்ஙனம் கொள்ளாயாகில் வாதந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை.’

சர்வ சூந்யவாதம் சித்தியாது-எல்லாம் உள்ளவை’ என்று கூறின், எப்பொருள் தோன்றுமோ,  அப்பொருளே ‘எல்லாம் இல்லவை’ என்று கூறினும் தோன்றுவதாம்,  உலகத்தில் ‘உள்ளது’ என்றும், ‘இல்லது’ என்றும் இரண்டு வகையாக  வழங்குகிற சொற்களை ஆராய்ந்தால், உள்ளதான பொருளுக்கே
தோன்றுகிற நிலைமை வேறுபாடுகள் என்பது விளங்கும். ‘இங்கே குடம்  இருக்கிறது,’ எனின், மண்ணினுடைய நிலைமை வேறுபாடு தோன்றும்:
அதாவது, முன்பு மண்ணாய் இருந்த பொருள் இப்பொழுது குடமாகிய  வேறொரு நிலையைப் பெற்றுள்ளது என்றபடியாம். ‘குடம் உடைந்தது,’
எனின், குடம் என்னும் காரிய நிலைமையை விட்டு மண்ணாகிய காரண நிலையாய் மாறிவிட்டது என்றபடியாம். ஆகவே, எவ்வகையிலும் எவ்வகைச்
சொல்லாலும் அடியோடு இல்லாமை பெறப்படாது. ‘ஆயின், முயற் கொம்பு இல்லை,’ ‘ஆகாயத் தாமரை இல்லை’ என்ற இடங்களில் முழுதும் இன்மை
விளங்குகின்றனவே! இவ்விடங்களில் வேறொரு நிலைமையை யடையும் தன்மை கூற முடியாதே?’ எனின், இச்சொற்களாலும் முழுதும் இன்மை ஒரு
போதும் பெறப்படாது. ‘யாங்ஙனம்?’ எனின், ‘முயற் கொம்பு இல்லை,’ எனின், ‘முயல் இல்லை, கொம்பு இல்லை’ என்று பெறப்படுமோ? முயலுக்கும்
கொம்புக்கும் சம்பந்தமின்று என்பதே பெறப்படும்; அப்பொருள்களுள் ஒன்றற் கொன்று சம்பந்தம் இன்று என்று சம்பந்தம் இன்மை மாத்திரம்
பெறப்படுமே யன்றி அப் பொருள்களே அடியோடு இல்லை என்பது ஒரு போதும் பெறப்படாது அன்றே? ஆகவே, சர்வ சூன்ய வாதம் ஒரு போதும்
பெறப்பட வகையின்று என்பதாம்.

———————

பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்து உளன் – பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் நீரினது பரமாணுத்தோறும் நிறைந்து நிற்பான். நீரின் பரமாணுக்களின் கூட்டமே கடலாதலின், ‘நீர் தொறும்’ என்கிறார். ‘ஆயின், ஒன்றாகக் காணப்படுகின்றதே?’ எனின், நீர்ச்செறிவாலே திரண்டு தோன்றுகிறது, இத்தனையேயாம். ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. ஆகாயத்திலும் பெரியன் (சாந்தோக்கிய உபநிடதம்.)என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் – அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ் வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்-

—————

இவை பத்தும் வீடே – இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன. இனி, ‘இச்செய் அடைய நெல்’ என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று, ‘இவை பத்தும் வீடு’ என்றது, வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று பொருள் கூறலுமாம்.

வீடு’ என்பதற்கு இரு பொருள் கூறப்படுகின்றன; முதற் பொருள்,  ‘விடப்பட்டன’ என்பது. இரண்டாவது பொருள், ‘மோக்ஷம்’ என்பது;
இரண்டாவது பொருள் காரணத்தைக் காரியமாகக் கூறிய உபசாரம்.

————-

சிறு குழந்தை கையிலே பாம்பைப் பிடித்துக் கொண்டு கிடந்தால், போகடச் சொல்லி, பின்னர், ‘பாம்பு’ என்பாரைப் போலேயும், ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்கா நிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘வெளியே வா,’ என்று சொல்லி, பின்னர், ‘நெருப்பு’ என்பாரைப் போலேயும் முந்துற ‘விடுங்கோள்’ என்கிறார். ‘ஆயின், அத்தகைய தீய செயல் இவ்வுயிர்கட்கு யாது?’ எனின், பிறப்பு இறப்புகட்கு நடுவேயன்றே இவை தாம் நோவு படுகின்றன?

————-

முற்றவும்சண்டாளர் இருப்பிடத்தை அந்தணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும் சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று, யான் எனது என்னுஞ் செருக்கால் கெடுக்கப்பட்டு இருப்பனவற்றில் சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே! ஆகையால், ‘முழுவதும் விடுங்கோள்,’ என்கிறார்.

வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுகு சிறையிலே (அழுகுதற்குக் காரணமான சிறை.)கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறை விடுகை தானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாக இருக்கையாலே விடுகை யாகிற பேற்றைப் பெற்று என்றபடி.

—————-

வீடு செய்மின் – அவன் உடையவனாய் உங்கள் ஆத்துமாவை நோக்கிக் கொண்டிருக்கிறான்; ஆதலின், நீங்களும் ‘நான்’ ‘எனது’ என்று அகலப் பாராமல், உங்களை அவன் பக்கல் சமர்ப்பிக்கப் பாருங்கள்; அதாவது, அவன் உடையவனான பின்பு அவ்விறைவனோடு விவாதம் இல்லாமையே உங்களுக்கு வேண்டுவது என்பதாம். அவ் விவாதம் இல்லாமையையே ஈண்டு ‘வீடு செய்மின்’ என்கிறார். ‘இதனால் பேறு என்?’ என்னில், வேறு பிராயச்சித்தம் செய்ய வேண்டுவது இன்றாம். ‘அதற்குக் காரணம் என்ன?’ எனின், யான் எனது என்னுஞ் செருக்குக் கிடக்கப் பிராயச்சித்தம் செய்தல் என்பது, மிகத்தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கு ஊட்டினதைப் போன்றது ஓன்றாம். மேலும், உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் செய்தல் வேண்டும். உடையவன் சர்வேஸ்வரன்; இவன் ‘என்னது’ என்று கொண்ட பொருள், பொருள்களுள் மிகச் சிறந்ததான உயிர்ப் பொருள். மற்றும், போகடுகிற பொருள் தான் ஆகையாலே பிராயச்சித்தம் செய்வதற்கு வேறு அதிகாரியும் இல்லையே? ஆகையால், நீங்களும் உடையவன் பக்கல்  ‘வீடுசெய்மின்’ என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை-

—————

மன் உயிர் ஆக்கைகள் – உயிர் பொருந்தி யிருக்கின்ற சரீரங்கள் என்னுதல்; நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் என்னுதல், திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, (திரியும் பொருள் – நாய்.)ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின், ‘உயிர் யாக்கைகள்’ என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின், ‘மகிழ் அலகு ஒன்றே போல் மாறும்பல் யாக்கை’ என்கிறபடியே, ‘ஓரலகு தானே காணி நிலையிலே நிற்பது கோடி நிலையிலே நிற்பது ஆமாறு போன்று, (ஓர் அலகு – ஒரு விதை) ஓர் உயிர் தானே கர்மங்களின் வேறுபாட்டினால் தேவ சரீரம் முதலான சரீரங்கள் பலவற்றை மேற் கொள்ளுதல். இனி, உயிர் என்பதனைத் தொகுதி ஒருமையாகக் கொண்டு பல உயிர்கள் என்று கோடலுமாம். 

———–

இறை சேர்மின் – அடையத் தக்கன அல்லாதவற்றை நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள். சம்சாரி இறைவனை அடைதல், கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற் போன்று இருக்கையாலே  ‘சேர்மின்’ என்கிறார்.

————–

புல்கு – குண ஞானமுடையவனுக்கு, குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் அங்கநா பரிஷ்வங்கம் (பெண்ணின் கல்வி)போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்

———-

பற்றிலன் ஈசனும் – ‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’ (ஸ்ரீ கீதை.)என்கிறபடியே, எல்லா நற்குணங்களோடும் கூடினவனாய், ஞானம் ஆனந்தம் குற்றம் இன்மை இவற்றையே வடிவாக உடையவனாய், ஏவப்படுகின்றவர்களான நித்தியசூரிகளை உடையவனாய்த் திரை மாறின கடல் போலே பரமபதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபாடு இரானோ?’ என்னில,

முற்றவும் நின்றனன் – அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்; ‘ஆயின், அப்படி நின்ற இடம் உண்டோ?’ எனின், ‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில், பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று, நித்தியாஸ்ரிதையான பிராட்டியாலும் -எப்பொழுதும் ‘அகலகில்லேன் இறையும்’ என்று மார்பில்  எழுந்தருளியிருக்கிற பெரிய பிராட்டியாராலும்.காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்.(ஸ்ரீராமா. யுத். 41 : 4.)

———-

அடங்க எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே – கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு, ‘நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய செல்வம் இவை எல்லாம்,’ என்று நினைந்து, அவ்விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக்கடவன்; ‘சேரின் பயன் யாது?’ எனின், அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம்; ‘சேஷிக்கு அதிசயத்தை விளைத்தால் இவ்வாத்துமாவுக்குப் பயன் யாது?’ எனின், அவனுக்குச் சேஷமாக இருக்கும் இவ்வாத்துமாவினுடைய சொரூப சித்தி, சேஷிபக்கல் கிஞ்சித்காரத்தாலேயாய் இருக்குமே? அதாவது, அடிமை சித்திப்பதே பலன் என்றபடி. ‘நன்று; லீலா விபூதியைக் கட்டடங்க நன்றான செல்வம் என்னலாமோ? இவ்விபூதி தாழ்ச்சியையுடையது அன்றோ?’ எனின், போகபூமியாய் இருக்கும் நித்திய விபூதி; கர்மங் காரணமாக அவனாலே ஏவப்படுவதாய் இருக்கும் இவ்வுலகம்; இதனை ‘அவன் உடைமை’ என்று நினைக்கப் புக்கவாறே இதில் கர்மங் காரணமான தன்மை தோன்றாது; அவன் உடைமை என்னும் தன்மையே தோன்றும்.

ஆயின், இன்று அடங்குகையாவது என்? தொன்று தொட்டே அவன் விபூதியில் சேர்ந்தேயன்றோ இருக்கின்றேன்?’ என்னில், உடைமை உடையவன் என்னும் சம்பந்த ஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியிலேயே ஒருவனாய்ச் சேர்தல் வேண்டும்; கடல்அளவிடக் கூடாததாக இருப்பினும், அதன் உள்ளில் மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாம்; அன்றே? அது போன்று, சம்பந்த ஞானம் அடியாகக் கிட்டலாம்;கடலிலே புக்க துரும்பானது இரண்டு  தலையிலும் நினைவின்றிக்கே இருக்கவும், திரைமேல் திரையாகத் தள்ளுண்டு  போந்து கரையிலே சேருகிறது இல்லையோ? சம்பந்த ஞானம் இல்லாத துரும்பையன்றே கடல் கரையிலே ஏறத் தள்ளுகிறது? ‘ஆயின், சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.

———

உள்ளம் உரை செயல், உள்ள இம் மூன்றையும் உள்ளி – வெளிப்பொருள்களில் விருப்பத்தைச் செலுத்தும் மனத்தை உட்பொருளை நோக்கும்படி செய்தால், அது இறைவனை நினைத்தற்குக் காரணமாகும்; அந்நினைவு முதிர்ந்து வழிந்து, ‘பொங்கேழ் புகழ்கள் வாயவாய்’ (திருவாய். 8. 10 : 4.)என்கிறபடியே, சொல்லாகப் புறப்படுகைக்குக் காரணமாகும் வாக்கு; குணங்களால் அடிமை பூண்டு இருக்கிறேன்,’ என்கிறபடியே, திருவடிகளிலே விழுந்து எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்குக் காரணமாகும் உடல். (ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.)உள்ள இம்மூன்றையும் – இவைதாம் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே சேஷியான தான் இவற்றை உண்டாக்கிவைத்தான்; இவையும் வேறு சிலவும் தேடவேண்டா-தாம் உளரே,(இரண்டாந்திருவந். 21.)நா வாயில் உண்டே’(முதல் திருவந். 95..)–உள்ள இம் மூன்றையும் உள்ளி -ஆராய்ந்து; ‘இவற்றை எதற்காகப் படைத்தான்? இவைதாம் இப்போது இருக்கிறபடி என்?’ என்று ஆராய்ந்து பார்த்தால், அவை அடையத் தகாத பொருள்களில் அன்புடன் கூடியிருத்தல் விளங்கும். கெடுத்து – அவற்றினின்றும் மீட்டு. –இறை உள்ளில் ஒடுங்குபாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போன்று, அடையத் தக்க பொருளில் ஆக்கப் பார். அதாவது, கரணங்களை அவன் விஷயத்தில் அன்புடன் இருக்கச் செய் என்றபடி.

தாமுளரே – தந்தம்மைத் தேட வேண்டாவே. தம் உள்ளம் உள்  உளதே – எனக்குச் சற்றுப்போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு
தரல்வேண்டும் என்று தனிசு (கடன்) வாங்க வேண்டாவே. தாம் உளரானால்  உண்டான நெஞ்சம் உண்டே என்றபடி.

தாமரையின் பூ உளதே – நைக்கு  எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே. ‘தாமரையின் பூ உளதே’ என்றது, எல்லா  மலர்களுக்கும் உபலக்ஷணம். ஏத்தும் பொழுது உண்டே – காலத்தை  உண்டாக்கி வைத்தானே. அதனைத் தனிசு வாங்க வேண்டாவே. வாமனன்,  தன் உடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளன் ஆவான் ஒருவனாய்  இருந்தானே. திருமருவுதாள் – அவனுடைய ஐஸ்வரியப் பிரகாசமான  திருவடிகள். மருவு சென்னியரே – இப்படிப்பட்ட திருவடிகளில்
சேருகைக்குத் தலையாக்கி வைத்தானே. செவ்வே அரு நரகம் சேர்வது  அரிது – இப்படி இருக்கச்செய்தே, இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடித  தேடிக் கொண்டு போகிறபடி எங்ஙனேயோ?

நா வாயில் உண்டே – இது முன்னம் புறம்பு தேடிப் போகவேண்டாவே.  நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே – ஆயிரம்
எழுத்துக்களைக் கொண்டது ஒரு மந்திரம்போல அன்றி எட்டு எழுத்தாய்  நடுவே பிரிவு இல்லாதே சொல்லலாந்திருப்பெய்ர உண்டாக்கி வைத்தானே.
மூவாத மாக்கதிக்கட் செல்லும் வகை உண்டே – மீண்டும் வருதல் இல்லாத  மோக்ஷத்தை உண்டாக்கி வைத்தானே. என் ஒருவன் தீக் கதிக் கண் செல்லுந்
திறம் – இங்ஙனே இருந்த பின்பு இவர்கள் தண்ணிய வழி தேடிப் போகிறபடி  எங்ஙனேயோ!

————-

இன்பத்தில் இச்சை யுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்குரிய காலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருத்தல் போன்று’

————-

‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்; ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத்தக்கவன்’ என்றார் இரண்டாந்திருவாய்மொழியில்; இத்திருவாய்மொழியில் அவனது 1சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின், ‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச்செய்கின்றீர்; இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப்போமோ? அப்படியே, சர்வேஸ்வரனாய், எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை இந்த அற்பனான 2சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன, ‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே? அப்படியே, இச்சம் சாரிசேதனனுக்கு வழிபடலாம்படி அவன் தன்னைக் கொண்டு வந்து தாழவிட்டு எளியனாமாகில், இவனுக்கு வழிபடத் தட்டு இல்லையே?’ என்று கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச்செய்கிறார்.

—————–

எளிமையே உய்வு பெறுவதற்கும் கேடு உறுவதற்கும் காரணம் என்பதற்கு  எடுத்துக்காட்டும் மேற்கோள்,அறவோர் சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்; விடாயர் அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகாநிற்பார்கள்; விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்; சிலர், அதன் ஒளியிலே உய்வு பெறுவார்கள். ‘ஆயின், இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின், ‘வாசத்தடம்’, (திருவாய். 8. 5 : 1.)‘மரகதமணித்தடம்’ (திருவாய். 10. 1 : 8.)என்றும், ‘வேங்கட மலைமேல் மேவிய வேத நல்விளக்கை’,(பெரிய திருமொழி, 4. 3 : 1.) ‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை’,(திருப்பாவை, 5.) ‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ (பெருமாள் திருமொழி, 10. 1.)-என்றும் -மருக்கிளர் தாமரை வாச நாண் மலர்   நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்((கம். யுத். 475)”இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க

————

‘மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’(. ஸ்ரீகீதை. 10 : 12.) என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக் கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, ‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன். அதாவது, ‘ஒருவன் கறுத்திருக்க ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே? அப்படியே எனக்கும் இது நிலை நின்ற தன்மை,’ ( ஸ்ரீகீதை. 11 : 54.)என்றான் அன்றே?’ என்றபடி

————–

ஸ்ரீராமாவதாரத்திலும் இராவணன் படைகளுடன் கூடினவனாய்க் கொண்டு எடுக்கப் புக்க இடத்தில் நெஞ்சிற் பகையாலே எடுக்க மாட்டிற்றிலன்; திருவடி தனியனாய் இருந்தும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்; இங்ஙன் அன்றாகில் ‘இராவணனுக்குக் கனக்க வேண்டும்’ என்றும், ‘திருவடிக்கு நொய்தாக வேண்டும்’ என்றும் அன்றே? ஆதலால், பொருள் தன்மை இருக்கும்படி இது. இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ (ஸ்ரீராமா. யுத். 59 : 111.)‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ (ஸ்ரீராமா. யுத். 59 : )என்பன ஸ்ரீராமாயணம்.

உள்ளி வெம்பிணத் துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’ —  
என்னும் கம்பராமாயணச் செய்யுள்கள் நோக்கல் தகும்.

———–

எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக் கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப் பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, (ஸ்ரீ ராமா. அயோத். 87 : 4.)மோஹித்துக் கிடந்த இவர், விசாலமான கண்களையுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ ( ஸ்ரீராமா. சுந். 38 : 8.)என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப்பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார். ‘(ஸ்ரீ ராமா. அயோத். 87 : 4.)

காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’–என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.

பெருமாளும் பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல்  புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’ எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே  காணப்படுகின்றனவே! ஆதலால், பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’  (அயோத். 88.  14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப் பெருமாள் ஆச்சிரமத்தினின்று நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான்  வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன; பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின், சிறந்த காவல் செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை பெறுவதும்.

————–

அமைவுடை அற நெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து-ஒரு தருமத்தைச் செய்தால் தொடங்கும்போதே பயன் இன்றிக் கழியினும் கழியும்; இடையில் சிற்சில தடைகள் நேரினும் நேரும்; அங்ஙனம் அன்றி, சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று, பலத்தோடே சேர்ப்பிக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றாலும் ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்திருக்குமாறு போன்று, ‘இவ்வறத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இலர்,’ என்னும்படி சமைந்திருக்கை.

—————

தானாம் அமைவுடை நாரணன்’ என்பதற்கு, 4ஒருவன் ஒருவனை ‘உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்ன வேண்டும்?’ என்றால், தன் மனைவி மக்களையுங் கூட்டிக் கொண்டு ‘எனக்குக் கல நெல் வேண்டும்’ என்கிறான் அன்றே? அப்படியே, இவை அடங்கலும் தன் ‘அஹம்’ சொல்லுக்குள்ளே அடங்க, தான் இவற்றுக்கு அபிமானியாய் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் என்று பொருள் கோடலுமாம்.

————

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-தீயாரை அழித்து நல்லாரைக் காக்கின்றவனாதலின், அரி என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான் ஒருவன்; இருவன் திருநாபிக்கமலத்தில் நேராகத் தோன்றியவனாதலின், அயன் என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான்; ஒருவன் அழித்தல் ஒன்றுக்கே உரியவனாய் அரன் என்னும் பெயரையுடையவனாய் இருக்கிறான்; ஒரு உணர்த்தி, சொரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, சுபாவத்தைப் பற்றியது; இவர்களைப் பற்றிக் கூறுகிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவை தம்மைப் பலகாலும் சொல்லிப் பார்த்து, மனப்பட்டது ஒன்று-1இலிங்கத்துக்கே உயர்வு தோற்றும்படியாய் இருப்பது ஒரு பிரபந்தம் செய்து தரவேண்டும்’ என்பாரைப் போன்று, ஓர் உருவத்திலே ஒரு சார்பாகச் சாயாது, இவர்கள் சொரூபங்களையும் சுபாவங்களையும் பலகாலும் ஆராய்ந்து பார்த்தால், கோல் விழுக்காட்டால்(தானாகவே விழுதல்.) ஒருவனே உயர்ந்தவன் என்பது உங்கள் மனத்திலே தோன்றும். உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்-தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால் உணர்ந்து, அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து வணங்குங்கோள் என்பதாம்.

மற்றைப் புராணங்கள், ஒரு தெய்வத்தின் சிறப்புப் பெயரினைக் கூறி,  ‘இத்தெய்வத்தின் பெருமைகளை எங்கட்குக் கூறவேண்டும்’ என்று
முனிவர்கள் கேட்க, அதற்கு ஏற்பக் கூறுகிறார் என்று தொடங்கப்  பெறுவனவாம். ‘பரம்பொருள் யாவன்? அவனுடைய பெருமைகளை
எங்கட்குக் கூறவேண்டும்,’ என்று முனிவர்கள் கேட்க, அதற்கு விடை  கூறுவதாகத் தொடங்கப் பெறுகின்றன, ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ ராமாயணம்
முதலிய நூல்கள். இவற்றைத் திருவுள்ளத்தே கொண்டு தான் ‘இலிங்கத்துக்கே  உயர்வு’ என்ற வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.

————-

நம்முடை நாளே – கெடுகின்றவர்களே! நம்முடைய வாழ்நாளின் நிலையை அறிவீர்கள் அன்றோ! விரைவில் அடைவதற்குப் பாருங்கள். ‘நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், 1மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? 2‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம் அருளிச் செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.

————-

நாளும் நின்று அடும்-நாள்தோறும் இடைவிடாமல் நின்று வருத்துகின்ற; பரமாணுவைச் சேர்ந்த பாரிமாண்டல்யம் (பாரிமாண்டல்யம்-பரமாணுக்களின் அளவு. நித்திய பரதந்திரம்-என்றும்  உள்ளதாயும் பிறர்க்கு உரிமைபட்டதாயும் இருத்தல்.) முதலியவைகள் நித்தியமாக இருக்கவும் நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும், இறைவனுடைய சொரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும் அக்குணங்கள் நித்திய பரதந்திரமாக இருக்குமாறு போன்றும் நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம. ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, ‘எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? (ஸ்தோத்திர ரத்தினம், 25.)என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம். பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள். உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும். 

———

 ‘பருவமல்லாத காலங்களில் கடல் தீண்டலாகாது என்னுமாறு போன்று    ஒரு நியதியில்லை

 ‘பால் குடிக்கும் குழந்தைகள், தாயின் மார்பினை அகலின் நாக்கு வரளுமாறு போன்று’ பிரமனும் திருநாபிக்கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.

இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில், ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகாகுணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்துகொண்டு செல்வார்கள். மற்றும் ‘சாமந்தர்கட்குப் (சிற்றரசர்கள். அமைச்சரும் ஆவர்.)புறம்பே நாடுகள் மிகுதியாக இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்கட்கு மேன்மையாக நினைத்திருப்பதைப் போன்று’இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் 2பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் 3அடைய வளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

இப்பத்தைக் கற்ற போதே இவனை நித்தியசூரிகளில் ஒருவனாக நினைப்பன்; பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை. அதாவது, சிறையிலே இருந்த இராசகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று’நித்தியசூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி. ‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது; அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று, இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.

    ‘இது மற்றொரு காரகம் என்னுமாறு போன்றுமேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்

சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘    ‘பசியில்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம் எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள், ‘உணவு உண்ணலாகாது’ என்று விலக்குமாறு போன்று’-மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்; பெயர நிற்கவே, இவர் கலங்கினார்.

பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில், 3அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், கூடி இருக்கும் போது தரிக்கை, பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, அவனுக்கே இன்பத்தை அளிக்கை, அவன் காப்பாற்றுகின்றவனாகத் தாம் காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை. ‘ஆயின், பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில்,    தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க, ‘வையங் கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று’-இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; 5முற்றுவமை இருக்கிறபடி. ‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’ எனின், இராஜ இருடி பிரம இருடியான பின்னர் அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை

    ‘சக்கரவர்த்தி திருமகள் திருவவதரித்த பின்பு வானரசாதி வீறு பெற்றாற்போன்றுஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

  அம் சிறைய    ‘குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய்வைக்குமாறு போன்று’பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண வைக்கிறாள்

    ‘ஆசாரியனுடைய ஞானத்தை உத்தேசித்துச் சிஷ்யன் வணங்குவது போன்று’இவளும் சிறகிலே கண் வைக்கிறாள்.

இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், ‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு     ‘வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று’–வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய  கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால்  நெஞ்சு பறியுண்கை.

இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே,     ‘என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப்போலேகாணும் காரியங்கொள்ளுவது’

அம் சிறைய சேவலுமாய்-அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாகி. ‘திருமகள் கேள்வன்’ என்பது போன்று, சேவலிடத்துத் தான் அன்பு செலுத்துவதற்குக் காரணம் பேடையே என்பாள், ‘நின் சேவல்’ என்கிறாள்.    

வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின்,    ‘அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாத போது அவர்கள் வருந்துவார்கள்; அது போன்று’இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள். 

என் தூதாய் – அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய். அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலேகாணும் கிடக்கிறேன்,’ என்றபடி,    

இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள்    ‘   

 ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள்.  ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல்  அடியாக இட்டுவந்தாள். மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளாலே  தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள். ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம  சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடியே  பேணாதே வந்தாள். ஸலக்ஷணா – புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள்.  லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு  வந்தாள். தாரா – தாரையானவள். நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில்  வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்கு  என்று தோற்றும்படி இருந்தாள். ஸ்ரீராமா. கிஷ். 33 : 37. அப்படிப்பட்ட  நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று  இருக்கிறாள்.

கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.

’நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன, ‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்? 2திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’ (பிரதானனான அரசன் ஓலையை மறுத்தவன், கணக்கன் ஓலை கேட்கப்  போகின்றானோ?’ என்றபடி.)கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய், பின்னையும் ஆசையின் மிகுதியினாலே, 3‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று ( ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.)கூறியது போன்று கூறுகின்றாள் மேல்

அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர,((நாய்ச். திரு. 11 : 7.))விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றை தாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.கடலிலே ஏற்றமிட்டு இறைத்தும் தண்ணீர் பெறாத ஒருவனைப் போன்று, சர்வ ரக்ஷகனைப் பற்றிவைத்தும் நான் விரும்பிய பொருள் கிடையாதபடியான  பாவம்’ என்பது பொருளாம். இங்குத் தண்ணீரைப் போன்றது, ஜீவனம்.

 நாரணனைக் கண்டக்கால்-உயிரக்கூட்டங்களினுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய், இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருது ஊதிக்கொண்டு திரிகிறவரைக் கண்டால், இங்கு, ‘இப்பெயர் 1காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்; ‘கள்ளிச்செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள் என்ற தொனிப் பொருளும் தோன்றும்    -காரண இடுகுறிப் பெயராவது – அவயவப் பொருள் நிறைந்ததாய் அச்சொல்லே  அதற்கு அசாதாரணமான பெயராய் இருத்தல். கள்ளிக்கு மஹா விருக்ஷம் என்ற  பெயர் இடுகுறி.

    ‘இராசாக்கள் இராசத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாறு போன்று’

பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம். அதாவது, ‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால், சம்சாரத்தில் குறைவான நிலைபோய், பரமபதத்தில் சென்று, தன் சொரூபத்தைப் பெற்று விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.

இத் திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின், மேல் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர், ‘இவரை இங்ஙனம் நோவு பட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று, அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்;

‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியசூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, ‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? (ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.)மேலும், இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே பிராட்டி? (ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப்  பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,-  என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.)அப்படியே, இவரும், ‘ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப்புக்கார்.

நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது,     ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று’எனக்குத் தாரகங்காணும்; இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்; நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு,’ 

நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்; நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும், ‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, 4கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும், 

வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து, ‘அருவினையேன்’ என்கிறார். தார்மிகனாய் இருப்பான் ஒருவன், இராசத தாமத குணங்கள் மேலிடப்பட்டவனாய் வீட்டில் தீயினை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று வருந்துகிறார்.

தளவு ஏழ் முறுவல்-காட்டுப் பசுவினைக் கண்டவாறே வீட்டிலுள்ள பசு நினைவிற்கு வருதல் போன்று, நப்பின்னைப் பிராட்டியினுடைய பற்களின் வரிசையைக் கண்டவாறே முல்லை அரும்பு நினைவிற்கு வருதலின், ‘தளவேழ் முறுவல்’ என்கிறார்

‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், தவறு செய்தேன்,’ என்றார் மேல் பாசுரத்தில்; ‘தவறு செய்தேன் என்ற இடம் தவறு,’ என்கிறார் இப்பாசுரத்தில்; ‘யாங்ஙனம்?’ எனின், சண்டாளன் ‘வேதம் போகாது’ என்றுதான் சொல்லப் பெறுவனோ? அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்? அன்பினால் நனைந்த மனத்தையுடைய பிரமன் முதலியவர்கள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்! ‘நான் தவறு செய்தேன்’ என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று, மேல் நின்ற நிலையையும் நிந்தித்துக்கொண்டு அகலுகிறார்.

அவன் இவைகொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டுநன் மாலைகள் தூயன ஏந்தி’ (. திருவிருத்தம், 21.)என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும், பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின், அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக்கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும் ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார்

சிவன் இவர்களோடு கூடியிருப்பின் தனக்கும் அவர்கட்கும் வேற்றுமை இன்றித் தனது உயர்விற்குக் குறைவு வாராதோ?’ என்னில், இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க.

அவன் என் நாயனே1உடைமை தப்பிப் போகப் புக்கால் உடையவர்கள் ஆறியிருப்பர்களோ? பெறுகைக்கு ஈடாக முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள், அவன் நடக்க வல்லனான சமயத்திலே, ‘வேறு தேசம் போவேன்’ என்றால் விட்டு ஆறியிராள் அன்றே? அப்படியே, நெடுநாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக்கொண்டு நான் அகன்று போகப் புக்கால், அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார், ‘எம்பெருமானே’ என்கிறார்.

மான்ஏய் நோக்கி-மானோடு ஒத்த கண்களையுடையளாய். இனி, காரியப்பாடு அறக் கண்ணாலே அவனை ஒருக்கால் நோக்கினால், ஒரு பாட்டம் மழை விழுந்தாற் போலே குளிரச் செய்கின்ற கண்கள் என்று கூறலுமாம்-நோக்கி’ என்பதற்கு இரு பொருள்: ஒன்று, கண்களை யுடையவள்.- மற்றொன்று, கண். காரியப்பாடற-வேறு பயனின்றி, அதாவது, அன்புடன்  என்பதாம்.

தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ’ என்கிறபடியே, எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போன்று இருக்கின்ற மென்மையினையுடையவள் என்று கூறலுமாம். மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ (ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.)என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே. மாம்பழத்தோடு ஒரு வித சம்பந்தம் இல்லாதிருக்கவும் ஒரு வகை வண்டு ‘மாம்பழ உண்ணி’ என்ற பெயரை அடைவது போன்று, ‘ஸ்ரீ’யோடு சம்பந்தம் இல்லாதிருக்கவும் ‘ஸ்ரீமான்’ என்ற பெயரைத் தரித்திருக்கின்ற பிறறைப் போல அல்லன் இறைவன் என்பார், ‘மார்பிற் கொண்டாய் மாதவா’ என்கிறார். மடவாளை மார்பிற் கொண்டவனாயிருப்பதனால், அருளுவிப்பாரும் அருகே இருக்க ‘எனக்கு அருளாய் என்று வேண்டுவது என்?’ என்றபடி.

கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-வனவாசத்திற்குக் காரணமான குப்ஜையைச் சொல்லிற்றாய், இளமையில் சுண்டுவில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு; அதனை நோக்கிச் சொல்லுகிறார். அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள். அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார். அன்றி, 1தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம் இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டுவில் நிமிர்க்குமாறு போன்று கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று. ‘தெறித்தாய், நிமிர்த்தாய்’ என்றபடி. ‘ஆயின், கிருஷ்ணனுக்கு வில் உண்டோ?’ என்னில், வேலிக்கோல் வெட்டி விளையாட்டு வில் ஏற்றித் திரியுமவன் அன்றோ கிருஷ்ணன்? (பெரியாழ்வார் திருமொழி, 2. 6 : 1.)‘தருமம் அறியாக் குறும்பனைத் தன்கைச் சார்ங்க மதுவேபோல்’ என்று வில் உண்டாகவே அருளிச்செய்து வைத்தாள் அன்றே ஸ்ரீ ஆண்டாள்? (நாய்ச்சியார் திருமொழி, 14 : 6.)அவள் அருகில் இல்லாது ஒழியினும் உன்னைக் கிட்டினார்க்குத் தாழ்வு வருமோ என்கிறார் இதனால். கோவிந்தா-விலங்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ?

போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்றது, ஒரு கள்ளன் ஒரு  பிராமணன் வீட்டில் கன்னம் இட, அது ஈரச்சுவராகையாலே
இறுத்திக்கொண்டு இறக்க, அவ்வளவில் அவன் உறவினர் வந்து  பிராமணனைப் பழிதரவேண்டும் என்ன, இரண்டு திறத்தாரும் அரசன் பக்கல்
போக, அவ்வரசனும் அறிவற்றவனாய் மூர்க்கனுமாகையாலே, ‘பிராமணா, நீ  ஈரச்சுவர் வைக்கையால் அன்றோ அவன் இறந்தான்? ஆகையால், நீ
பழிகொடுக்க வேண்டும்’ என்ன, ‘எனக்குத் தெரியாது; சுவர் வைத்த  கூலியாளைக் கேட்கவேண்டும்’ என்ன,  அவனை அழைத்து, ‘நீயன்றோ
ஈரச்சுவர் வைத்தாய்? நீ பழி கொடுக்க வேண்டும்,’ என்ன, அவனும்  ‘தண்ணீர் விடுகிறவன் போரவிட்டான்; என்னாற் செய்யலாவது என்?’
என்ன, அவனையழைத்துக் கேட்க, அவனும் ‘குசவன் பெரும் பானையைத்  தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று’ என்ன, அவனையழைத்துக் கேட்க,
அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேசி போகவரத் திரிந்தாள்;  அவளைப் பார்க்கிற பராக்கிலே பானை பெருத்தது’ என்ன, அவளை
யழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான்  புடைவை தாராமையாலே போகவரத் திரிந்தேன்,’ என்ன,  அவனையழைத்துக்கேட்க, அவனும், ‘என்னால் அன்று; துறையில் கல்லில்  ஓர் அமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று,’  என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து ‘நீயன்றோ  இத்தனையும் செய்தாய்? நீ பழி கொடுக்க வேண்டும்,’ என்ன, அவன் மௌனி  ஆகையாலே பேசாதிருக்க, ‘உண்மைக்கு உத்தரம் இல்லை என்று  இருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்,’ என்று, அரசன் அவன் தலையை  அரிந்தான் என்பது கதை.

வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும் படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார். மதுசூதா-மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று என் விரோதியைப் போக்கினவனே! இதனால், ‘அவ் வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியைப் போக்குவாயும் நீயன்றோ?’ என்கிறார். உன் தேனே மலரும் திருப்பாதம் – ‘இவை ஒன்றும் இல்லை யாயினும் அடியில் உன் இனிமையைப் பார்த்தால் தான் விடப் போமோ?’ என்கிறார்.

அருளாய் சேருமாறு வினையேன்கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக்கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருளவேண்டும். தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

 அடியேன் சிறிய ஞானத்தன்-சம்சாரிகளில் அறிவு கேடர் முற்றறிவினர் என்னுமாறு போன்று’, என் அறிவு கேடு! ‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே. அன்றி, ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று; ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. ‘நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம். சிறிய ஞானத்தன் – மிகச் சிறிய அறிவினையுடையவன். அறிதல் ஆர்க்கும் அரியானை-எத்துணை வியக்கத் தக்க அறிவினை யுடையராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன் இயற்கையிலேயே முற்றறிவினையுடைய தனக்கும் அறியப் போகாதவன்; 2‘தனக்கும் தன் தன்மை அறிவு அரியான்’ அன்றோ?

என்னைநீ இகழ்ந்தது என்றது எங்ஙனே! ஈச னாய   உன்னைநீ உணராய்; நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை?’-கம்ப. யுத். 606)

 சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து – 2எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார், மாயப் பற்று அறுத்து-ருசி வாசனைகளையும் கழித்து. –தீர்ந்து – தான் செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய். இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.

இறைவனும் ஆழ்வாரும் என்னும் இருவருடைய தொழிலாகவுங் கொண்டு  ‘தீர்த்து’ என்பதற்கு இரு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருளுக்கு, ‘தன்பால் மனம் வைக்கத் திருத்தித் தீர்ந்து வீடு  திருத்துவானானான்’ எனக் கூட்டுக. இரண்டாவது பொருளுக்கு ‘தீர்ந்து
வைக்கத் திருத்தி வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக. முதற்பொருளில், இறைவன் தொழில்; இரண்டாவது பொருளில் ஆழ்வார் தொழில்.

நெடுமால்-இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் என்கிறார். இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வலைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார் எனலுமாம்.

மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக்கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று, அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஆழ்வார். 2பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத சுகுமாரரைப் போன்று, ( பிடி-ஒரு பிடி சோறு)நின்ற நின்ற நிலைகள்தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

பால் ஏய் தமிழர் – பால் போலே இனிய தமிழை யுடையவர்கள். இசைகாரர் – இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீமதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார். பத்தர் – ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண்சுழளும்’ என்று இருக்குமவர்கள். ஆழ்வான் ஒரு முறை ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது; இசைகாரர் என்றது, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; பத்தர் என்றது, பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். ஸ்ரீ ஆளவந்தார் பாலேய் தமிழர் என்கிறது, முதலாழ்வார்களை; இசைகாரர் என்கிறது, திருப்பாணாழ்வாரை; பத்தர் என்கிறது, பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்

ஆயிரத்தின்பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு – ‘கடலிலே முத்துப்பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே பொருந்தி இருக்கிற இத்திருவாய்மொழியை வல்லார்க்கு. பரிவது இல்லை-‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, இறைவன் வந்து காட்சி அளித்தவாறே ‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

உயர்வு தாழ்வு பாராமைக்கு அடி என்?’ என்னில், ஈசனை – ‘வகுத்த சுவாமி ஆகையாலே’ என்கிறார். புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால், ‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ!’ என்று நெஞ்சாறலோடே தலைக்கட்டவேண்டி வரும்; மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல் படவேண்டாத இருக்கலாம் அன்றே? அப்படிப்பட்ட சம்பந்தத்தைப்பற்ற ‘ஈசன்’ என்கிறார் என்றபடி.

பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் – தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச்சொல்ல, நான் முந்துறச்சொல்ல’ என்று பிணங்கி நித்தியசூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப் போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன். அதாவது, 1‘இரத்தினாகரம் போலே குணங்கள் சேருகைக்குக் கொள்கலமானவன்’ என்றபடி. இனி, ‘குணம் கெழு கொள்கையினான்’ என்பதற்கு, குணங்கள் வந்து கெழுமுகையைச் சுபாவமாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம். கெழுமுகை-சேர்கை.
இனி, 2இத்திருப்பாசுரத்தால், முற்றறிவினர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகாநின்றது என்கிறார்’

தாள்கள் தலையில் வணங்கி-அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு திருவடியைப் போலே போது போக்கி. நாள் கடலைக் கழிமின் – இறைவனுடையஇனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலேயுள்ள நாள்கள் ஒருகடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள்கடல்’ என்கிறார். இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து பிறவிப் பெருங்கடலைக் கழித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

கரும்பு தின்னக் கூலி போன்று ஒரு பலன் இன்றே யாயினும் தொழுகைதானே பலன் ஆதலின், ‘தொழுமின்’ என்றவர், மீண்டும் ‘தொழுதால்’ என்கிறார். இப்படிச் செய்தால், வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். அழிவு இன்றி ஆக்கம் தரும் – ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.

பிறவாரே-ஆயிரத்திலும் இந்தப் பத்தையும் கற்க வல்லார் பிறவார். பிறக்கை சுட்டி அன்றே ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று, ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்கிறார்? இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம் இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப்பெறுவர்கள் ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்.

ஆழிப்படை அந்தணனை-ஆத்தும அனுபவ விரோதியைப் போக்கைக்குக் கருவியான திருச்சக்கரத்தைக் கையிலே யுடையவன். அந்தணன்-பிராமணன். சாணிச்சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை; இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை. ‘சுத்தி குணத்தோடு கூடினவன்’ என்று ஆயிற்று அவர்கள் நினைப்பது. ‘கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்-மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் யுருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்

வைப்பாம்ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், 1பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் – ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின்,  ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச்செய்தார் ஆவர்

 ஆயர் கொழுந்தாய் – ஆயர்கட்குப் பிரதாநனாய் இருக்கும் இருப்பை அருளிச் செய்தார் மேல்; இங்கு, அவர்களில் ஒருவனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறார். அதாவது, அவர்கள் வேராக தான் கொழுந்தாய் இருக்குமவன் என்கிறார். இதனால், வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்பட வாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும் என்பதனைத் தெரிவித்தபடி

செடி சீய்த்துக் குடி ஏற்றின படை வீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று, ‘புறம்பேயும் சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான் ஆதலின், ‘மனத்தே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார். ‘இப்படி இருந்து செய்கிறது என்?’ என்னில், உயர் வினையே தரும் – ஞான விஸ்ரம்ப பத்திகளைத் தாரா நின்றான். இனி, இதற்கு, ‘இயமன் முதலானோர் தலைகளிலே அடியிடும் படியான சிறப்பைத் தாரா நின்றான்’ எனலுமாம். தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான் ஆதலின்,  ‘தந்து’ என்னாது ‘தரும்’ என்கிறார். ‘ஆயின், பத்தியை மேன் மேலும் தருவானோ?’ என்னில், ‘காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’, ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’ என்பன இவருடைய திருவாக்குகள்

என் விளக்கை – அறிவின்மையாகிற இருள் போகும்படி என்னிடத்து ஒரு விதக் காரணமும் இன்றி, தன்னுடைய சொரூபம் உருவம் குணம் உலகம் முதலான விபூதிகளை எனக்கு விளங்கச் செய்தவனை. விளக்காவது, தன்னையுங் காட்டிப் பொருள்களையுங் காட்டுவது ஒன்று அன்றோ? அது போன்று, இறைவனும் இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும சொரூபத்தையும் விரோதி சொரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார். ‘என் விளக்கை என்பான் என்? அல்லாதார்க்கும் ஒவ்வாதோ?’ என்னில் இவரைப் போன்று மற்றையோர்க்குப் பத்தி இல்லையே? பத்தி உண்டாகில் அன்றோ இவ்விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்

பிரான் – நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன். எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை நினைத்துப் ‘பிரான்’ என்கிறார். அதனை விரிக்கிறார் மேல்: பெரு நிலம் கீண்டவன் – பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று, சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-மராமரம் எய்த மாயவன் – மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து, ‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன். இது அடியார் விஷயமாகச்செய்த உபகாரம்.

தான் ஒட்டி வந்துஇக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார்.

என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து – தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப்போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை –தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே இடங்கொண்டு குடித்தலை அன்றி, மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவனை–அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்

மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்கும் -பகவத் அனுபவத்தால் உண்டான அன்பினால் பிறந்தவையாய் இருப்பினும் 1சொற்கள் தாம் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆகவேண்டும்’ என்று ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று மேல் விழுந்தன ஆதலின், ‘மிடைந்த சொல்’ என்கிறார். ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்களுக்குச் செல்வமும் கைவல்யமும் உறுதிப்பொருள் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப்போம். (பாவங்களை ஒடுவிக்கும்’ என்ன வேண்டியவர், காரண காரிய
உபசாரத்தாலே ‘நோய்களை ஒடுவிக்கும்’ என்கிறார்)இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் (பெரிய திருமொழி. 8. 10 : 7.)என்கிறபடியே, சிதறுண்டு தனித்தனியே ஓடச்செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற் சென்று சேரினும் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’ அல்லாதனவாகக் கெடும் என்பார், ‘உடைந்த ஓடுவிக்கும், என்கின்றார் எனலுமாம்.

தாங்குதல் வாகனத்துக்குத் துக்கத்தைத் தருவது அன்றோ?’ என்னில், மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன் மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு–காமத்தில் இச்சை யுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். ‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார்(ஸ்தோத்திர ரத்நம், 41.) ஸ்ரீ ஆளவந்தாரும்.

நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்க வேண்டாவோ?’ எனின், அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள அறிவுத் தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாக வுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’ எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின், கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில் திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற் கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.-சொரூபத்திற்குத் தக்கனவான பரிமாற்றங்கள் இவைதாம்; ஆகையாலே, நித்தியமாயிருக்குமாதலின் ‘நீடு நின்று’ என்கிறார். இறைவன் இவர்களை ஒழியச் செல்லான்; இவர்கள் அவனை ஒழியச் செல்லார்கள் ஆதலின், ‘நின்று’ என்கிறார். அவை-‘புள்’ என்றும், ‘துழாய்’ என்றும் சொல்லுகையாலே ‘அவை’ என்ற அஃறிணைச் சொல்லால் அருளிச் செய்கிறார். ஆடும் – சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது, விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது, ‘அவை ஆடும்’ என்கிறார். அம்மானே-‘நித்திய சூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும் அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங் கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.-விண்ணோர் வெற்பன்-‘வானவர் நாடு’(திருவாய். 3. 9 : 9.) என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார். இதனால்,–சீர் கற்பன்-அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து, ‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று இளையபெருமாள் கூறியது போன்று, ( ஸ்ரீ ராமா. அயோத். 3 : 19.)அவனுடைய நற் குணங்களை அந்த நற் குணங்களாலே தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன். –வைகலே-ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்; 3எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்தியசூரிகளைப் போன்று (இருக்கு வேதம்)நானும் இதுவே தொழிலாக இருப்பன்.

நீர் அவன் நற்குணங்களைக் கற்றீராகில், அவன் தான் செய்கிறது என்?’ என்னில், ‘நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று, அவனும் என்னை விட்டு எனது சரீரத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார்.பொய் கலவாது என் மெய் கலந்தான்-அவ் வெண்ணெயில் செய்த விருப்பம் பொய் இல்லாதது போன்று, என் சரீரத்துடன் கலந்த கலவியிலும் பொய் இல்லை,’ என்கிறார். 4‘அழுக்குடம்பு’ (திருவிருத்தம், 1.)என்று யான் வெறுக்கும் இச்சரீரம் இறைவனுக்கு விரும்பத்தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார். இதனால், அவன் மேல்  விழ மேல் விழத் தாம் பின் வாங்குகின்றமை தோன்றுகிறது.

ஏழ் விடை கொண்டான்-நப்பின்னைப் பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாய் இருந்த இடபங்கள் ஏழனையும் வென்றான். ‘இன்ன படை வீட்டை வென்றான்’ என்று கூற வேண்டுவதனை ‘இன்ன படை வீட்டைக் கொண்டான்’ என்று கூறுவது போன்று 2‘ஏழ் விடை கொண்டான்’ என்கிறார்.-உண்டான் ஏழ் வையம்-பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான். இவற்றால் ‘தனக்குச் சிநேகிகளாய் இருப்பார்க்குச் செய்யுமதும் செய்தான்; தான் செய்யும் இரட்சணத்தை விலக்காதார்க்குச் செய்யுமதும் செய்தான்,’ என்பனவற்றைத் தெரிவித்தபடி. அதற்கு மேல், தண் தாமம் செய்து – குளிர்ச்சியை யுடைத்தான பரமபதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான். இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு, 3இவ்வுலகில் இருக்கிற என்னைப் பரமபதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ என்று பொருள் கூறலுமாம்

சங்கு சக்கரம் அம் கையில் கொண்டான் – 4சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், (ஆட்கொள்ளத் தோன்றிய  ஆயர் தங் கோவினை’ என்கிறபடியே, அடிமை கொள்ளுதலைக் குறித்தது.) கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள் தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிப்பான். ‘ஆயின், எல்லா அவதாரங்களிலும் திவ்விய ஆயுதங்கள் உளவோ?’ எனின், எல்லா அவதாரங்களிலும் உண்டு; அரசர்கள் கறுப்பு உடுத்துப் புறப்பட்டால், (நகரி சோதனைக்காக மாறுவேடங்கொண்டு  புறப்படல்.)விரும்புகிற காலத்தில் முகங்காட்டுகைக்காக அந்தரங்கர் மறைந்து திரிவர்; அது போன்று, தோற்றாதேயும் நிற்பர்கள். ‘கூரார் ஆழி வெண்சங்கேந்தி வாராய்’ (திருவாய். 6. 9 : 1.)என்னும் இவர்களுக்கு அப்படியேயன்றே தோன்றுவது?’ வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங்கைகளில் திவ்விய ஆயுதங்களைத் தரித்தான்,’ என்பார், ‘அம் கையில் கொண்டான்’

ஒன்பதாந்திருவாய்மொழி – ‘இவையும் அவையும்’அருச்சுனன், ‘விபூதி 2சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான (ஸ்ரீ கீதை. 11 : 8.)விடாயைப் பிறப்பித்துப் பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி5 அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய், அது தன்னையும் 1குளப்படியிலே கடலை மடுத்தாற் போன்று அன்றி, (மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு. ‘என்னுடைச்  சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்-  ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.)பொறுக்கப் பொறுக்கப் பரிமாற, இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார்-என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பன வற்றை நோக்கி, ‘எல்லா  இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பன வற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.

 பொருசிறைப் புள் உவந்து ஏறும் – சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொள்ளுவதாக நினைத்து, ‘வா’ என்று அழைத்தால், அவனுடைய அங்கீகாரத்தால் உண்டான மகிழ்ச்சியினால், பெருக்காறு சுழித்தாற் போன்று தன்னில் தான் பொருகின்ற சிறகை யுடையவனாய்க் கொண்டு தோன்றுவான் ஆதலின், ‘பொரு சிறைப் புள்’ என்கிறார். இறைவனும் ‘நாம் இவனை மேற் கொள்ளப் பெற்றோமே!’ என்று திரு வுள்ளத்தில் பிரீதியோடே மேற்கொள்ளுவான் ஆதலின், ‘உவந்து ஏறும்’ என்கிறார்.- பூ மகளார் தனிக்கேள்வன்-மலரில் மணம் வடிவு கொண்டாற் போன்று இருப்பாராய், இன்ப வடிவினரான பெரிய பிராட்டியார்க்கு வல்லபன். என்றது, இப்படிப்பட்ட ஐஸ்வரியத்துக்கு 1இரண்டாம் விரலுக்கு ஆளில்லாதபடி இருக்கிறவன்’ என்றபடி

ஒக்கலை வைத்து – பரிவுடைய யசோதைப் பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப் பால் உண் என்று தந்திட – ‘முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; ‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார்

நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஒக்கவும் தோற்றிய ஈசன் – தன் கூட்டத்துக்கும் உபகாரகனாய்ப் பிரசித்தனாய் இருக்கிற சிவனோடே கூட, அவனுக்கும் தந்தையான பிரமனும், அவனுக்கு இப்பால் உள்ள இந்திரன் தொடக்கமாக இங்கேயுள்ள எல்லாரையும், அத்திக் காயில் 5அறுமான் போன்று ஒன்றாக (அறுமான் – கொசுகு.)அரும்பிக்கும்படி ( தளிர் வெடிக்கும்படி.)பண்ணின சர்வேஸ்வரன். மாயன்-உண்டாக்கிய உலகத்திலே அநுப்பிரவேசம்(தொடர்ந்து புகுதல்.) முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன்

‘நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார். ‘ஆயின், இவர் உகந்தபடியே இறைவன் வருதற்குக் காரணம் யாது?’ எனின், தம்மால் காதலிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள், அவர்கள் விரும்புகிறவாறே பூசிப் புலர்த்தித் தம்மை அலங்கரித்துக் கொண்டு போமாறு போன்று, ஆழ்வார் இருக்கும் இடத்திற்குச் செல்லும் இறைவனும் ஆழ்வார் விரும்பிய வாறே திருத்துழாயால் தன்னை அலங்கரித்துக்கொண்டு சென்றான். இவர் உகப்பதும் திருத்துழாயே, அவன் கொடுப்பதும் திருத்துழாயே அன்றோ? 1புள்ஊர்தி கள் ஊரும் துழாய்க் கொயல்வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.(திருவிருத்தம். 24.) ‘எங்ஙனம்?’ எனின், திருத்தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர். இவள் தானும் (திருவாய். 2. 4 : 5.)‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, (திருவாய். 2. 4 : 9. -இப் பாசுரம் தாயார் கூற்றே யாயினும், ‘என்னும்’ என்று  மகள் ஆசைப் படுவதாகக் கூறுவதால் மகள் கூற்று என்னக் குறையின்று.)‘கண்ணன் கழல்துழாய் பொன்செய் பூண்மென் முலைக்கு என்று மெலியும்’, (திருவாய். 4. 2. : 10. இப்பாசுரமும் அத் தன்மையதேயாம்.)இறைவனும், ‘தன் மன்னு நீள்கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே, இவளுக்கு அன்றி நல்கான்.   (திருவாய். 6. 8 : 6. இது, ‘இறைவன் கொடுப்பதும் திருத்துழாயே’ என்பதற்கு  எடுத்துக்காட்டு.)

பொரு படை ஆழி சங்கு ஏந்தும்-பணைத்துப் பூத்த கற்பகத் தருப் போலே யாயிற்று, போருக்குக் கருவிகளான திவ்விய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும்படி. போர் செய்வதற்குக் கருவிகளாய் இருத்தலின், ‘பொரு படை’ என்கிறார்.

கமலக்கண்ணன் என் கண்ணினுளானே – திருமேனியின் அழகாகிய பெருவெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின் ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார். வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் 3கண் வட்டக் கள்ளனாம் ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகின்றார்–

கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி அமலம் தெய்வத்தோடு உலகம் ஆக்கி-திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்து, எல்லாரிலும் வேறுபட்ட பிறவியை யுடையவனாய், தனக்கு இப்பால் உள்ளவற்றைப் படைக்குமிடத்தில் சர்வேஸ்வரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி ஞானம் நிறைந்த நான்முகனை நெற்றிக் கண்ணனான சிவபெருமானோடு உண்டாக்கி, அவ்வளவில் முடிவு பெறாமல், சத்துவகுணம் மிக்குள்ள தேவர்களோடே உலகங்களை உண்டாக்கினவன். ‘நெய்யுண்ணி’ என்னுமாறு போன்று ‘ஆக்கி’ என்றது, ‘ஆக்குந் தன்மையன்’ என்றபடி. என் நெற்றியுளானே – கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் (அவ்வருகு போக்கு இல்லாமையாலே பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல்’  என்கிறார்.)என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார், ‘நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.

எனது உச்சியுளான்-தேவர்கள் தன்னைப் பெறுகைக்கு இப்படித் தடுமாறா நிற்க, என்னைப் பெறுகைக்கு அவற்றை எல்லாம் தான் பட்டு வந்து, என் உச்சியிலுள்ளவன் ஆகின்றான். இராசாக்கள் அந்தப்புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று, இறைவன் இவர் திருநெற்றியினின்றும் திருமுடி ஏறப் போகாநின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், ‘அமரரும் எல்லாம் தொழாநிற்க வந்து எனது உச்சியுளான்’ என்கிறார்.

 நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார்

நிமிர்ந்த அக் கரு மாணிக்கம்நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின் ‘அக் கரு மாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.

நெஞ்சமே நல்லை நல்லைசொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் தாய் தந்தையர்களைப் போன்று, இவரும் நெஞ்சை மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார்.(நெஞ்சு இருப்பது மார்பிலேயாகையாலே ‘மார்விலேயணைத்து’ என்கிறார்.) 3‘என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர், இன்னம் சொல்லீரோ?’ (திருவிருத்தம், 30. )என்கிறபடியே, இவர்தாம் இறைவன் பக்கல் தூது விடுமாறு போன்று, நெஞ்சாகிய தனக்கும் தூது விடும்படி இவர்தம்மை விட்டு இறைவன் பக்கலிலே நிற்க வல்ல நெஞ்சு ஆகையாலே ‘நல்லை நல்லை’ என அடுக்குத் தொடரால் கூறுகின்றார்

ஆரி ருக்கிலுமென் நெஞ்ச மல்லதொரு வஞ்ச மற்றதுணை இல்லையென்று
ஆத ரத்திவனொடு தூது விட்டபிழை யாரி டத்துரைசெய் தாறுவேன்?
சீரி ருக்குமறை முடிவு தேடரிய திருவ ரங்கரைவ ணங்கியே
திருத்து ழாய்தரில்வி ரும்பி யேகொடு திரும்பி யேவருதல் இன்றியே
வாரி ருக்குமுலை மலர்ம டந்தையுறை மார்பி லேபெரிய தோளிலே
மயங்கி யின்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே’–( திருவரங்கக்  கலம்பகம், 24)

நெஞ்சமே சொன்னேன் – ‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலே காணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு ‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார்(ஸ்ரீ கீதை, 18 : 67.). ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று 4‘பதண் பதண்’ (பரிதபிக்கையைக் காட்டுவனவாம்; ‘பதறினேன்,  பதறினேன்’ என்றபடி.)என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.(இது, வியாச பகவான் கூற்று. ‘வேத சாஸ்திரங்களைக் காட்டிலும் மேலான  சாஸ்திரங்கள் இல்லை; அது போன்று, கேசவனைக் காட்டிலும் உயர்ந்த  தெய்வம் பிறிது இல்லை; இது சத்தியம், மீண்டும் சத்தியம், மீண்டும் சத்தியம்’  என்பது அந்தச் சுலோகத்தின் பொருள்.)

நெஞ்சமே, சொன்னேன்’ என்பதற்கு மூன்று வகையில் கருத்து  அருளிச்செய்கிறார். இம் மூவகைக் கருத்தையும் முறையே காண்க.  ‘சார்கொடான்’ என்னுதலே போதியதாக இருக்க, மேல் ‘சொன்னேன்’  என்று அருளிச் செய்வதனால் இங்ஙனம் கருத்துக் கொள்ள வேண்டும்

தாயும் தந்தையும் ஆய் – தாய் தந்தையர்களைப்போன்று அன்புள்ளவனாய். இவ்வுலகினில் வாயும் ஈசன் – அவர்கள் அளவு அன்றிக்கே, குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் தாயைப் போலே, சம்சாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன். ‘அடையத் தக்கவன் ஆகையாலே ‘இங்கு வந்து அவதரிக்கிறான்’ என்பார். ‘ஈசன்’ என்கிறார். இனி, ‘இங்கு வந்து அவதரித்து ஈர் அரசு தவிர்க்கையாலே ‘ஈசன்’ ஆனான்’ எனலுமாம்.

நெஞ்சிலே வைத்தேன். சொல்லுவன்-நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்துத் தூஷித்த அளவேயோ? பிறர் அறியும்படி வைத்தேன். பாவியேன் – 1விலக்ஷண போக்கியமான இப்பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே! சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார். ‘ஆயின், பகவானை நினைக்கையும் சொல்லுகையும் பாவத்தின் பயனோ?’ என்னில், புரோடாசத்தை (வேள்வித்தீயில் இடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள்.)நாய் தீண்டினாற்போன்று நித்தியசூரிகள் அநுபவிக்கும் பொருளை அழிக்கை பாவத்தின் பலம் அன்றோ? எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை-நினையாவிடில் அரைக்கணம் தரிக்கமாட்டாத நித்தியசூரிகள் நினைத்து அநுபவித்து அவ்வநுபவம் வழிந்து ‘எங்களுக்குப் பரிவன் ஆனவனே! சுவாமியானவனே!’ என்று தங்கள் நெஞ்சிலே வைத்துச் சொல்லும்படியான செல்வத்தையுடையவனை நானும் சொன்னேன்; ஆதலால், இப்பொருளை ஒருவர் நம்பாதபடி அழித்தேன்,’ என்கிறார்.

அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை – உபமானம் அற்றதாய், ஓட்டு அற்ற செம்பொன் போன்று (உருக்கிச் சுத்தம் செய்த பொன்.)எல்லை அற்ற ஒளி உருவமாய், வாக்கு மனங்களால் அளவிட்டு அறிய முடியாத திவ்விய மங்கள விக்கிரகத்தை யுடையவனை. இதனால் ‘வடிவழகிலே குறையுண்டாய்த் தான் மறக்கவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

மறப்பனோ இனி யான் என் மணியையே-மறவாமைக்குக் கருவி அவன் கையிலே உண்டாய் இருக்க, இனி மறக்க உபாயம் உண்டோ? மேல் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாமல் கழிந்தமை போன்று, இனி மேல் வருகின்ற காலமும் மறக்க விரகு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி. 3மறந்தேன் உன்னை முன்னம்’ (பெரிய திருமொழி, 6, 2 : 2.)என்கிறபடியே, அநாதி காலம் மறந்தே போந்தவர் ஆதலின், அது தோன்ற ‘யான்’ என்கிறார். ‘பெரு விலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்து புகழை யுடைத்தான நீலமணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்கியமாம்படி செய்துவைத்தான்,’ என்பார் ‘என் மணியை’ என்கிறார்.

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்     அணியை–முன்றானையிலே முடிந்து ஆளலாம்படி சுலபனாய் இருக்கிறவனை, நித்தியசூரிகள் தலைவனை, தனக்குத்தானே ஆபரணம் போன்ற அழகினையுடையவனை

 —————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –முதல் பத்து –

November 29, 2023

அசித்தாகிறது, முக்குணங்களோடு கூடியதாய் என்றும் உள்ளதாய், எங்கும் நிறைந்ததாய், எப்பொழுதும் வேறு பாட்டினை அடையக்கூடியதாய், விடத்தக்கது என்று அறியத்தக்கதாய் இருக்கும். இப்படியிருக்கின்ற அசித்தில் இனிமை இருப்பதாக நினைத்துச் சம்சாரத்தை உறுதியாக்கிக்கொள்ளவேண்டும் என்று இருக்குமவனும் சர்வேஸ்வரனைப் பற்றல் வேண்டும்; இது விடத்தக்கது என்னும் நினைவு உண்டாகி, இதனைக் கழித்துக்கொள்ளல் வேண்டும்: ‘என்னை?’ எனின், ‘சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’ என்று கூறும் சுவேதாஸ்வதர உபநிடதம். ‘என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’ ( ஸ்ரீ கீதை 7 : 14.)என்கிறபடியே, ‘நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது; என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ள வேண்டும்,’ என்றான் இறைவன். அதுதன்னையே இவ்வாழ்வாரும்  ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா, சொல்லாய் யான் உன்னைச் சார்வதுஓர் சூழ்ச்சி,’ என்று அருளிச்செய்தார்(திருவாய். 3. 2: 3.) பிள்ளைதிருநறையூர் அரையர் : “ஒரு குருவி பிணைத்தபிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறதில்லை; சர்வசக்தி கருமானுகுணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால் கட்டி யவிழ்த்துக் கொள்ளுமித்தனை காண்.”

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்   தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்’–  என்ற தனிப்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.

—————-

உடையவன் – இக்குணங்களை உள்ளவை என்று கூறுதலோடு அமையாது, இவற்றைக் கொண்டு நிரூபிக்கவேண்டும்படியாக இருப்பவன். இதனால், இக் குணங்கள் இடையில் தோன்றியவை யல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத் தெரிவித்தபடி —ஆழ்வான், பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க்குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான். 3அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்’;(ஸ்ரீ விஷ்ணுபு. 6. 5 : 84.) ‘எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;(வியாசபார. வீடுமபருவம்.)’ ‘மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’; (ஸ்ரீ ராமா. கிஷ். 15 : 20.) ‘அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும். ( ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.) ‘இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.(ஸ்தோத்திரரத்தினம். 11.)

‘இப்படி, குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக்குணங்களாலே    தனக்கு நிறமாகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அங்ஙன் இரான்; தன்னைப் பற்றிக் குணங்கள் நிறம் பெறவேண்டும்படி இருக்கின்றான் இறைவன் என்பதனை அருளிச் செய்கிறார் ‘யவன்’ என்ற சொல்லால். ’உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’ (பிரஹதா. உபரி. 6. 5 : 23.)

————

மதி நலம் அருளினன் -பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச் செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பத்தி. அந்தப் பத்தியின் நிலையிலே இறைவனுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய்வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பத்திதான் இவ்வாழ்வாருடைய பத்தி. ‘ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார்.(உடல் உயிரோடு கூடி நிலைத்திருப்பதற்குக்  காரணமாக இருப்பது. அதாவது, நாம் உடலோடு கூடி வாழ்ந்து இருப்பதற்கு  உணவு இன்றியமையாதது போன்று, ஆழ்வார், தம் உடலோடு கூடி வாழ்ந்து  இருப்பதற்குப் பத்தி இன்றியமையாதது என்பதாம். ‘பத்தி’ என்றது, பத்தி  காரணமாகச் செய்யப்படும் கைங்கரியங்களை.) ‘எவ்வாறு?’ எனின், ‘நாம் அனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓர் ஆண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக் கொள்ளுகின்றோம் அன்றோ? அது போன்று, உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ யாவான் இவர்க்கு.(திருவாய். 6. 7 : 1.)
அருளினன் – ஒரு விதக் காரணமும் பற்றாமல் அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின், ‘எனக்கு அருளினன்’ என்றிலர். இனி, தாம் விரும்பாமல் இருக்கவும், மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போன்று, தானாகவே அருள் செய்துகொண்டு நின்றான் ஆதலின், ‘அருளினன்’ என்கிறார் எனலுமாம்.

————–

நின்றிலர் இருந்திலர் -தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன. ‘ஆயின், தொழில் செய்வதற்காயின் இறைவன் திருவருள் வேண்டும்; தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘சுவர்க்கத்தினின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே! அப்படியே, 1நிவர்த்திக்கும் அவன் வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார்.

—————

தாம் நுகர்ந்த நுகர்ச்சியின் இன்பப் பெருக்கு இருக்கிறபடி. தாம் நுகர்ந்த பொருள் தனியே நுகருமது அன்றிக்கே இருந்தது; ஆதலால், ‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்; தாம் இறைவன்பால் காதல் கரை புரண்டு நிற்பது போன்று அவர்கள் ஐம்புல ஆசையில் அறிவு மயங்கியிருந்தார்கள்; கண்டதும் அவர்கள் கேட்டினை நீக்கியல்லது நிற்க ஒண்ணாத நிலையினை அடைந்தார். ‘என்னை?’ எனின், ‘வைஷ்ணவதர்மம்’ அதுவாதலின், ‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று சீயர் பலகாலும் அருளிச்செய்வர்; அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்; ‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி. ‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில், இவர்கள் அறிவு உள்ளவர்களாய் இருக்கிறார்கள்; ஐம்புல இன்பங்களுள் வாசியறிந்து, தீயவை கழித்து, நல்லவை பற்றி அனுபவிக்கும் தன்மை இவர்களிடத்தில் இருக்கிறது; ஆதலால், அவர்கள் பற்றியிருக்கும் பொருள்களின் தாழ்வினையும், பற்றத்தக்க இறைவனுடைய மேன்மையினையும் இவர்களுக்கு அறிவித்தால், அவற்றை விட்டு இறைவனைப் பற்றக்கூடும் என்று பார்த்து, இறைவனுடைய நன்மையினையும், இவர்கள் பற்றியுள்ள பொருள்கள் அற்பம், நிலையின்மை முதலிய குற்றங்களால் கேடு அடைந்தவை என்பதனையும், பற்றுமிடத்தில் வரும் இடையூறுகளை நீக்குந் தன்மையினையும், பற்றுமிடத்தில் இன்று புதிதாகச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை, பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்பதனையும், பற்றுவார்க்கு நினைக்கத் தகும் மந்திரம் இன்னது என்பதனையும், அவனை வணங்கும் தன்மையினையும் அருளிச்செய்து கொண்டு மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை முன்னிட்டு இறைவனிடத்தில் பத்தியைச்செய்து அடையுங்கோள் என்று பரோபதேசம் செய்ய மூளுகிறார்.

இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘எல்லையில் அந் நலம்’ என்றதனைப்  பற்றி, ‘இறைவனுடைய நன்மையினை’ என்கிறார். ‘மின்னின் நிலையில்’
என்றதனைப்பற்றி, ‘இவர்கள் பற்றியுள்ள பொருள்கள். . .கேடு அடைந்தவை’  என்கிறார். ‘அது செற்று’ என்றதனைப்பற்றி, ‘பற்றுமிடத்தில் வரும்
இடையூருகளை நீக்குந் தன்மையினையும்’ என்கிறார்.

அடங்குக உள்ளே’ என்றதனைப்பற்றிப் ‘பழைய சம்பந்தத்தையுணர அமையும்’ என்கிறார். ‘வண் புகழ் நாரணன்’ என்றதனைப்பற்றி, ‘மந்திரம்
இன்னதென்பதனையும்’ என்கிறார். ‘இறை சேர்மின்’ என்றதனைப்பற்றி,  ‘வணங்குந்தன்மையினை’ என்கிறார். ‘வீடுமின் முற்றவும்’ என்றதனைப் பற்றி,
‘வைராக்கியத்தை முன்னிட்டு’ என்கிறார். ‘அந்நலம் புல்கு’ என்றதனைப்  பற்றிப் ‘பத்தியைச் செய்து’ என்கிறார்.

—————

இனி, இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி: பற்றிலன் ஈசனும் – 1‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’ (ஸ்ரீ கீதை.)என்கிறபடியே, எல்லா நற்குணங்களோடும் கூடினவனாய், ஞானம் ஆனந்தம் குற்றம் இன்மை இவற்றையே வடிவாக உடையவனாய், ஏவப்படுகின்றவர்களான நித்தியசூரிகளை உடையவனாய்த் திரை மாறின கடல் போலே பரமபதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபாடு இரானோ?’ என்னில,

முற்றவும் நின்றனன் – அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்; ‘ஆயின், அப்படி நின்ற இடம் உண்டோ?’ எனின், ‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில், பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று, (ஸ்ரீராமா. யுத். 41 : 4.) நித்தியாஸ்ரிதையான பிராட்டியாலும் காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்.

பற்றிலையாய் – விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு? அவன் முற்றில் அடங்கு – அவனையே எல்லாமாகப் பற்றப் பார்: ஆயின், அவன் எல்லாமாக இருப்பனோ? எனின், 4எல்லாப் பொருளும் வாசுதேவனே’ என்றும்,(ஸ்ரீ கீதை. 7 : 10.) ‘தாயும் தகப்பனும் உடன் பிறந்தோனும் வீடும் காப்பாற்றுமவனும் நட்டோனும் கதியும் நாராயணனே ஆவன்,’ என்றும், ‘சுற்றத்தார்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயன்பொருட்டு,’ என்றும் வருவனவற்றால் அவன் எல்லாமாக இருப்பான் என்பது ஓர்தல் தகும்.(சுபால உபநிடதம்.)

 பட்டர் : சம்பந்த ஞானமே வேண்டும் என்றார்; ‘எங்ஙனம்?’ எனின், ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக்குங்காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாய்ப் பொருள் தேடப் போனான்; இருவரும், தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பறுத்து எய்ய வேண்டும்படி விவாதமுண்டான சமயத்தில், இருவரையும் அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்தால், கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுவார்களன்றோ? அது போன்று ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால் ஒருவன் இருவினைப் பயன்களை நுகராநிற்பவன்; நாம் ஏவப்படும் பொருள் என்னும் முறையறியவே பொருந்தலாமன்றே!

ஓர் அரசகுமாரன் பூங்காவொன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தமப்பனதுகாண்’ என்னவே, நினைத்தபடி நடந்து கொள்ளலாமன்றோ! ஆன பின்னர், ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்’ என்னும் நினைவே வேண்டுவது, தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்,’ என்கிறார்.

———–

எம்பெருமானார் : ஓர் அயநத்தினன்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார் ஸ்ரீபாதத்திலே புக, அவருடைய சிறு பெயரைச் சொல்லி, ‘சிங்கப்பிரான்! இன்று அயநங்காண்’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, ‘உயிர் உடலை விட்டு நீங்கும் அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓராண்டு கழியப்பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்ததில்லையோ!’ என்றருளிச்செய்தார்.

எம்பார் ஒரு முறை, ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு ‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப்புகுந்ததே அன்றோ! இனி, சிந்தாவிஷயம் உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.

—————

வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான மந்திரம் யாது?’ என்ன, அது இன்னது என்றும், அதனுடைய பொருள் நினைத்தற்கு உரியது என்றும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச்செய்ய வேண்டுமோ?’ எனின், இம்மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளாநிற்பர்; நம் ஆசாரியர்கள், ‘ஆத்தும சொரூபம் இன்னபடி என்பதற்கு ஏற்றதாயுள்ள இதனுடைய பொருள் நினைவு மோக்ஷத்திற்குச் சாதனம்’ என்று தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள். மற்றும் வேதங்களுக்கும் இவ்வாழ்வார்க்கும் இம்மந்திரம் சொல்லச் சமயம் வாய்த்த போது முன்னர் மந்திரத்தைச் சொல்லி, பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்; அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல் செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்; அதற்குக் காரணம், பொருளின் நினைவு இன்றியமையாதது ஆகையாலே. 1‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,(திருவாய். 1. 3 : 3.)’ 2‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ (திருவாய். 2. 7 : 2.)என்பன தமிழ் மறை. 3‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ ‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’ என்பன வடமொழி மறை.(தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.)

ஆழ்வான் : ஆழ்வான் இப் பாட்டளவு வரப் பணித்து,(எண்பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறுஇல    வண்புகழ் நாரணன், திண்கழல் சேரே). இப் பாட்டு வந்தவாறே ‘இத்தையும் நும் ஆசிரியர் பக்கல் கேட்டுக் கொள்ளுங்கள்,’ என்ன, பட்டரும் சீராமப்பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, ‘இன்ன போது இன்னார் இருப்பார், இன்னார் போவார் என்று தெரியாது. இருந்து கேளுங்கள்,’என்று திருமந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டைக் கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தார்.

ஆழ்வானுடைய முந்தின வார்த்தை,  கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.

———–

பத்துடையடியவர்’ –எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்; ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத்தக்கவன்’ என்றார் இரண்டாந்திருவாய்மொழியில்; இத்திருவாய்மொழியில் அவனது 1சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின், ‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச்செய்கின்றீர்; இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப்போமோ? அப்படியே, சர்வேஸ்வரனாய், எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை இந்த அற்பனான -பிறவிப்பெருங்கடலில் நன்றாக உழன்று சஞ்சரிக்கின்ற  ஆத்துமா.-சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன, ‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே? அப்படியே, இச்சம் சாரிசேதனனுக்கு வழிபடலாம்படி அவன் தன்னைக் கொண்டு வந்து தாழவிட்டு எளியனாமாகில், இவனுக்கு வழிபடத் தட்டு இல்லையே?’ என்று கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச்செய்கிறார்.
‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின், நல்வினை அற்ற மக்கள் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத் தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து கேடுறுதற்கும், நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க

எம்பெருமானார் : சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விவரமாகச் சொல்லிக் கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு ‘இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடலாயிற்று; அவ்வெளிமைதானே பற்றுகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே! என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச் செய்தார்

—————-

நம் திருவுடை அடிகள்தம்-திருமகள் கேள்வனான சுவாமியினுடைய இதனால், நித்திய யோகத்தை அருளிச்செய்கிறார்.பட்டர் : ‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில் அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனையடையுமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நந்திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி,’ என்னாநின்றது கண்டீரே!’ என்றருளிச்செய்தார்.நலம் கழல்-அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக்கொள்ளுந் திருவடிகள்.

————-

நான்காந்திருவாய்மொழி – ‘அஞ்சிறைய’–மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, (இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர். வேற்றுமைகள் வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,
‘லிளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள்  வினையான் முடியின் காரகம் எனப்பெறும்.   குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்.’(சூ. 14.))
என்ற இலக்கணக்கொத்து நினைவிற்கு வருகின்றது. இந்தவாக்கியம் மேற்கூறிய  மூன்று திருப்பதிகங்கட்கு இத்திருப்பதிகம் நெறியால் வேறுபட்டது என்பதற்கு மேற்கோள். )மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு.

முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்றற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இத்திருவாய்மொழி வந்த அளவில் ‘இது காமுகர் வாக்கியமாக இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; ‘இறைவன் கேட்கத்தக்கவன், நினைக்கத்தக்கவன், தியானம் செய்யத்தக்கவன், பார்க்கத்தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவனாதலாலே.

——————

இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக, இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூதுவிடுகிறாள்.-அபராதஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.

பட்டர் : சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு திரியச் சாதி வீறு பெற்றபடி,’ என்று ரசோக்தியாக அருளிச் செய்வர்.

—————-

அத்தகைய தீவினைகளையுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின், இறைவனால் அத் தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?

தெற்காழ்வான் : ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்: தெற்காழ்வார் கையில் திருவாழியாலே (திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் இறைவன்  திருப்பெயர். திருவாழி – அவர் கையிலுள்ள சக்கரம்.)வினையை அறுத்துக்கொண்டு போகில் போகும் அத்தனை ஒழிய, ஒன்றிரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாவம்!’ என்று திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையில் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.

இவ்வைதிஹ்யம்-புண்ணிய தினத்தில்  பாவங்கள் போகும்பொருட்டுப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடல் வேண்டாவோ  என்று கேட்ட கோளரியாழ்வான் என்ற ஒருவர்க்குத் தெற்காழ்வான் என்ற   ஒருவர் கூறும் விடை.

—————-

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-என் நீர்மை கண்டு-என் மென்மைதனைக் கண்டு அருள் செய்து, நாம் பிரியுமது தகாது’ என்னாதே போகட்டுப் போனவர்க்கு

பட்டர் : பட்டரை ஒரு தமிழ்ப் புலவர், ‘கேட்டிரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்றிருக்க வேண்டாவோ?’ என்றருளிச்செய்தார்; கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதுமுளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன்,’ ‘காதலர் தொடுவுழித் தொடுவுழி’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்றருளிச்செய்தார்.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’-திருக்குறள், 1187.

‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’-குறுந்தொகை, 399.

—————-

‘ஓர் வாசகம்’ என்கிறாள். ‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ எனின், தாரான் தரும்– என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ (சிறிய திருமடல்.)என்றார் பரகால நாயகியார். 2செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ (நாய்ச்சியர் திருமொழி, 13 : 9.)என்றார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார். 3கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே’ (திருவாய். 4. 7 : 3.)என்றார் இவ்வாழ்வார் நாயகியும். தான் ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்; அப்பறவைகளால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே.

பட்டர் : ‘நம்பியேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கென்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷணவர்களுடன் பரிமாறும், படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்றருளிச்செய்தார்.

—————-

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் – சமுதாய சோபையோடு நிறத்தில் நிறைவையும் இழந்தேன். ‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது; ‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’ இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள். இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்

பெரிய திருமலைநம்பி : பெரிய திருமலை நம்பி, தமது இறுதிக் காலத்திலே, தமக்கு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பு திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனியுனது, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

————–

 பட்டர் : புகைபூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர்செதுகையிட்டுப் புகைக்க அமையும், கண்டகாலி இடவும் அமையும்’ என்றருளிச்செய்வர். இங்ஙனம், பட்டர் அருளிச்செய்தவாறே, ‘இறைவனுக்குக் கண்டங்கத்தரிப்பூவை அருச்சித்தல் கூடாது’ என்று சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று நஞ்சீயர் கேட்க, ‘அவனுக்கு ஆகாது என்கிறதன்று; பறிக்கிற அடியார் கையில் முள் பாயும் என்பதற்காகத் தவிர்த்தனகாணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும்முன் கண்டக்கால்’ (பெரிய திருமொழி. 11. 7 : 6.)என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் திருமங்கை மன்னன் அருளிச்செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இன்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்த மில்லாத பொருள்தான் வேண்டும் என்றிருந்தானாகில், ‘புள்ளாய் ஓரேனமுமாய்’ (பெரிய திருமொழி. 11. 7 : 6.)அவதரிப்பானோ? ஸ்ரீவைகுண்டத்தில் இரானோ?’ என்றருளிச்செய்தார்.

பின்னர் ‘நஞ்சீயர்’ வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது ‘ஸ்ரீவராக நாயனார்க்கு முத்தக்காசை (கோரைக் கிழங்கு.)அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப்பட்டிருத்தலைக்கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடுதான்!’ என்று மிகவும் ஈடுபட்டவரானார்.

————–

அமுதிலும் ஆற்ற இனியன்-தேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்? ஆற்ற இனியன்-மிகவும் இனியன்

நம்பி திருவழுதி நாடு தாசர் : நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையும் விட்டு!’ என்பராம்.நிமிர் திரை நீள் கடலானே – ‘அண்மையில் இலன்’ என்றுதான் விடுகிறார்களோ! அவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார், ‘கடலான்’ என்கிறார். ‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ளலாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 1‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ (திருவாய். 8. 10 : 8.)என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய், தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’ என்கிறார். 2‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ (முதல் திருவந். 19.)என்பது பொய்கையார் திருவாக்கு.

————-

எண்ணிலும் வரும் ‘கடம்’ படம், ஈஸ்வரன்’ என்றால், ‘நம்மை ‘இல்லை’ என்னாமல், இவற்றோடு ஒக்க எண்ணினான் அன்றே?’ என்று வரும்.

அன்றிக்கே, ‘இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா, இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன்’ என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப்போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான் என்று கூறலுமாம்.

அன்றிக்கே, ‘இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான் என்று பொருள் கூறலும் ஒன்று.

அன்றிக்கே, நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் என்று கோடலுமாம். வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.

என் இனி வேண்டுவம்-‘பரமபத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார். ‘இறைவன், இவ்வாத்துமாப்பக்கல் வெறுப்பின்மைக்குக் காலம் பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு, இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி. இப்படி இருக்கிற பகவானுடைய சொரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது. இறைவன், தன்னுடைய சொரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்சவேண்டா ‘மாசுச:’ என்றது ( ஸ்ரீகீதை. 18 : 66 )போன்று, இவரும் இறைவனுடைய சொரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார். இவற்றால், வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது, அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

பட்டர் : பட்டர் திருவோலக்கத்துக்குச் சாஸ்திரியாயிருப்பார் ஒரு பிராமணர் பல காலும் செல்வர்; அவரைக் கண்டால் பட்டர் ‘வந்தாயோ, போனாயோ’ என்று சாமான்யமாக வியவஹரித்து அருளிச்செய்வர்; ஒரு ஸ்ரீவைஷ்ணவர், பலகாலும் சேவிக்க எழுந்தருளுவர்; அவரைக் கண்டால் மிகவும் கிருபை பண்ணி ஆதரித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பார். இதனைப் பல காலும் கண்டிருப்பார் ஒருவர் வந்து, பட்டரைச் சேவித்து, ‘ஸ்வாமீ’ தேவரீர் திருவோலக்கத்துக்கு வருகிற சாஸ்திரி பிரசித்தராயிருக்கிறவர்; அவர் வந்தால் சாமான்யமாக வியவஹரித்தருளுகிறது, ஒரு சாது ஸ்ரீவைஷ்ணவர் வந்தார் என்றால் அவரை மிகவும் பிரதிபத்தி பண்ணி அருளுகிறது காரணத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன, ‘ஆனால், எப்போதும் போலே நாளையும் அவ்விரண்டு பேர்களும் வருவார்கள்; அப்போது நீயும் எப்போதையும் போலே பார்த்திரு; காரணம் சொல்லுகிறோம்’ என்ன, அவரும் அப்படியே பார்த்திருக்க, அவரை எப்போதையும் போலே வினவியருளி, ‘நீர் ஆரைத்தான் பரதத்துவம் என்று நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சில பிரமாணங்கள் பிரஹ்மாவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் விஷ்ணுவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் சிவனே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; ஆகையினாலே, நம்மாலே நிச்சயிக்கப் போமோ?’ என்ன, ‘நன்று’ என்று இருந்து, அவர் போனவாறே, ஸ்ரீவைஷ்ணவர் எழுந்தருளிச் சேவிக்க, அவரையும் கிருபை செய்தருளி, ‘தேவரீர் யாரைத்தான் பரதத்துவம் என்றிருப்பீர்?’ என்ன, ‘தேவரீர் ஸ்ரிய:பதி நாராயணனே பரதத்துவம் என்றருளிச்செய்யுமே! அஃதொழிய அடியேன் வேறு ஒன்றறியேன்,’ என்ன, ‘இன்னம் உமக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது என்?’ என்ன, ‘எம்பெருமானார் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று பிரசாதித்தருளுமே, அத்தையே தஞ்சமாக நினைத்திருப்பேன்,’ என்ன, திருவுள்ளம் உவந்து, ‘அபசாரத்தை க்ஷமித்தருள்க! திருமாளிகைக்கு எழுந்தருள்க!’ என்றருளிச்செய்து பார்த்திருந்தவரைப் பார்த்து, ‘கண்டீரே இருவர்க்கும் உண்டான தாரதம்யம்? ஆகையாலே, இவரை வணங்கவோ, அவரை வணங்கவோ? இப்படியன்றோ ஸ்வரூப ஸ்திதி இருந்தது?’ என்றருளிச்செய்ய, அவரும் கிருதார்த்தரானார் என்ற ஐதிஹ்யம் ‘துயக்கன் மயக்கன்’ (பா. 95) என்ற பாசுரத்தில், ஜீயர் அரும்பதத்தில் காணப்படுகின்றது.

வேல்வெட்டி நம்பியார் : வேல்வெட்டி நம்பியார், நம்பிள்ளையைப் பார்த்து, ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கிருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டியிருக்கிறதோ?’ என்று கேட்க, ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடைவதற்குத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிறவிடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்றில்லை; ‘ஆக இத்தால் சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள், இட்சுவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே சில நியமங்களோடே சரணம்புக்கார்; ஸ்ரீவிபீஷணாஷ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா; அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்,’ என்றருளிச் செய்தார்.

பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

எம்பிரான்-கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில், எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்?’ ‘தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப்பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், (இங்கு ஐம்பெரும்பூதங்களை அருளிச்செய்ததனால், எல்லாப்  பொருள்களையும் உபலக்ஷணத்தாற்கொண்டு, ‘தன்னை ஒழிந்த எல்லாப்  பொருள்களும்’ என்று தொடங்கும் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.)தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ்வாத்துமாவிற்கு ஒரு குறையுண்டோ?’ என்கிறார்.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –முதல் பத்து –

November 29, 2023

 பால் ஏய் தமிழர் – பால் போலே இனிய தமிழையுடையவர்கள். இசைகாரர் – இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீமதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார். பத்தர் – ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண்சுழளும்’ என்று இருக்குமவர்கள். ஆழ்வான் ஒரு முறை ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது; இசைகாரர் என்றது, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; பத்தர் என்றது, பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். ஸ்ரீ ஆளவந்தார் பாலேய் தமிழர் என்கிறது, முதலாழ்வார்களை; இசைகாரர் என்கிறது, திருப்பாணாழ்வாரை; பத்தர் என்கிறது, பெரியாழ்வாரை’ என்று அருளிச்செய்வர். ஆக, இயல் அறிவார் இசையறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

—————-

இரண்டாந்திருவாய்மொழி – ‘வீடுமின்’ 

மோக்ஷசாஸ்திரம் இறைவன் தன்மையினைக் கூறுவதும் இறைவனை அடையும் வழியைப் பற்றிக் கூறுவதும் என இருபகுதிப்பட்டு இருக்கும். மோக்ஷசாஸ்திரமான  வேதாந்த சூத்திரம் நான்கு அத்தியாயங்களாய், முன் இரண்டும்  பரம்பொருளைக கூறுவனவாயும், பின் இரண்டும் அதனை அடையும்  வழியினைப் பற்றிக் கூறுவனவாயும் இருத்தல் பற்றி இத்திருவாய் மொழியும்  மோக்ஷசாஸ்திரமாதலின், முதல் இரண்டு பதிகங்களால் அவ்விரண்டனையும்  அருளிச்செய்கிறார் என்பதாம்.

அவற்றுள், பரம்பொருளைப் பற்றிக் கூறுவேண்டுவன எல்லாம் மேல் திருவாய்மொழியிலே அருளிச்செய்தார். பரம்பொருளை அடையும் வழியினைப் பற்றிச் சுருக்கமாக இத்திருவாய் மொழியால் அருளிச்செய்கிறார். ‘

அவ்வழிதான் யாதோ? என்னில், இத்திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போருவர்.

எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர், பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பத்தி விஷயமாக’ என்றது, சாத்திய பத்தி விஷயமாக என்றபடி, பிரபத்தி  வேத குஹ்யமான ரஹஸ்ய உபாயம் ஆகையாலே முதலில் அதனை
வெளியிட ஒண்ணாது என்று திருவுள்ளம் பற்றிப் பிரபத்தியின் பர்யாயமான  சாத்திய பக்தியாலே அருளிச்செய்தார் என்றபடி.பின்னர்,  எம்மாரும் அவ்வாறே பத்தி விஷயமாக அருளிச்செய்தார். ‘ஆயின், ஒன்று பத்தி விஷயமாகக் கூறுதல், இன்றேல், பிரபத்தி விஷயமாகக் கூறுதல் செய்யாது நினைந்தவாறு பொருள் கூறுதல் பொருந்துமோ?’ எனின், இவருடைய பத்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது?

இறைவனுடைய திருவருளே உபாயம் என்று அறுதியிட்டு இருக்கும்  இவருடைய சித்தாந்தத்தைப் பார்த்தால், ‘பிரபத்தியே உள்ளது; பத்தி
இவர்க்கு இல்லை,’ என்றும், ஆர்த்தியின் மிகுதியாலே பிரபத்தியைப்  பண்ணும் இவருடைய அநுஷ்டானத்தைப் பார்த்தால், ‘பத்தியே இவர்க்கு
உள்ளது; மற்றையது இல்லை,’ என்றும் நினைக்கும்படியாக இருக்கின்றது  என்றபடி.

————–

உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ -(திருவாய். 3. 8 : 9.)என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர் திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல், ‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ (திருவாய். 1. 3 : 10.)என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும், ‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ (திருவாய். 5. 3 : 5.)என்றும், ‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் (திருவாய். 5. 4 : 10.)என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், ‘முன்னங்குறளுருவாய் மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ (பெரிய திருமொழி. 9. 4 : 2.)என்றார். ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.

—————-

துயர் அறு சுடர் அடி – துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் (முதன்மையினையுடையவர்கள்; பெரியோர்கள்.)அருளிச்செய்வர்; அதாவது, எல்லா ஆத்துமாக்களினுடைய எல்லாத் துன்பங்களையும் போக்குதலையே தம் இயல்பாகவுடைய திருவடிகள் என்பதாம். இனி, 4எம்பெருமானார், ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ ( ஸ்ரீராமா. அயோத். 2 : 42.)என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத் தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

———–

கடையாநிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல் ‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடை(வெந்ததும் வேகாததுமாக; கொத்தை வேகாதது.)வதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்தபடியைச் சொல்லுகிறார்,’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பார். களவினில்-களவு செய்யும் சமயத்தில்; களவு செய்யத் தொடங்குஞ்சமயத்திலே அகப்பட்டானாதலின், ‘களவினில்’ என்கிறார். ‘கடைகிற காலத்தில் களவு காணும்படி யாங்ஙனம்?’ எனின், கடைகிற பராக்கிலே 2நிழலிலே ஒதுங்கிச் சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான்.

———–

பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே – பரப்பையுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான். இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பார். ‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

———

அருளாத திருமாலார்க்கு-இதற்குக் ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் (ந கச்சின் ந அபராத்யதி -ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.)அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ என்று இன்னாதாகிறாள்,’ என்று 1திருக்குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர். ‘ஆயின், பிராட்டியின்மேல் வெறுப்பாக, பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலேயன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.-திருமாலார்’ என்ற சொல்லுக்கு நஞ்சீயர் நிர்வாகத்தில், ‘திருவினிடத்தில்  மாலார்’ என்பது பொருள், பிள்ளான் நிர்வாகத்தில், ‘திருவின் மாலுக்கு  விஷயமாக இருப்பவர்’ என்பது பொருள்.

————

பின்னை யான் ஒட்டுவேனோ – ‘எவ்வகையிலும் இரேன்’ என்னுமாகில், பின்னை, நான் அவன் போக்கை இசைவேனோ? ‘நன்று; இறைவன் தனக்குத் தானே உரியவன் ஆதலின், போகானோ?’ எனின், என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு(குறைவு.) உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப்போமோ?’ என்பதாம். இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று (நான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டு இருத்தலைப் போன்று, இறைவன்  அடியார்கட்குக் கட்டுபட்டவன் ஆதலின், அடியவனாகிய என்னுடைய அனுமதி இன்றி என்னை நீங்கான்,’ என்றபடி.)திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். தொங்குகை-திரிதல்.

———–

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – முக்காலத்திலும் ஒப்பு இல்லாதான். ‘சித்து, அசித்து, ஈஸ்வரன்’ என்னும் முப்பொருள்களே நம் மதத்தில் கூறப்பட்டுள்ளன; அவற்றுள், உயிர்ப்பொருள் உயிரல் பொருள் இவற்றின் தன்மையினின்றும் வேறுபட்டவன் இறைவன் என்பதை முன்னர் அருளிச்செய்தார்; ‘இங்குக் கூறுவது என்?’ என்னில், ‘திரள ஒப்பு இல்லையாகில், ஒரு வகையாலேதான் ஒப்பு உண்டோ?’ என்னில் அதுவும் இல்லை என்கிறார்,’ என்று அருளிச் செய்வர் இராமாநுசருக்கு முன்னர் இருந்த  பெரியோர். அவ்வாறு அன்றி, 5‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்மிய திருஷ்டாந்தம இல்லை என்கிறது,’ என்று பட்டர் அருளிச்செய்வார். ‘சிறந்த போர் வீரர்கள் பகைவர்கள் விஷயத்தில் திருடர்களைப் போன்று வஞ்சனையாகக் காரியங்களைச் செய்யமாட்டார்கள்,’ ( மாகம். 16 : 52.)என்பது வைதர்மிய திருஷ்டாந்தத்திற்கு உதாரணமாம்.

————

பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ (ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.)தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்-இது பட்டர் நிர்வாஹம்

———-

எனிவரும் இயல்வினன் – எளிமையை இயல்பாகவுடையவன். ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்றார் மேல்; தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார். எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்; இவனுக்கு எளிமை சொரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி. நிலைவரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை; ‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டுக. இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு, ‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர். அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீவிஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின்பொருட்டுப் போகா நிற்கச்செய்தே கண்டாகர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை. இத்தாற்பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

————–

ஆயர் கொழுந்தாய் – ஆயர்கட்குப் பிரதாநனாய் இருக்கும் இருப்பை அருளிச்செய்தார் மேல்; இங்கு, அவர்களில் ஒருவனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறார். அதாவது, அவர்கள் வேராக தான் கொழுந்தாய் இருக்குமவன் என்கிறார். இதனால், வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்படவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற்கண் வாடும் என்பதனைத் தெரிவித்தபடி. அவரால் புடை உண்ணும்-‘திருவாய்ப்பாடியில் உள்ள ஐந்து லட்சம் குடிகளிலும் ஸ்ரீ கிருஷ்ணனை நியமிக்க உரியர் அல்லாதார் இலர்’ என்பார், அவனால் அல்லது அவளால் என்று கூறாது, ‘அவரால்’ எனப் பன்மை வாசகத்தால் அருளிச் செய்கிறார். ‘மரத்தாலே ஓர் அடி அடிப்பார் போலேகாணும்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. மாயப் பிரானை – எல்லா விருப்பமும் முற்றுப்பெற்ற சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து, அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர்கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத் தலைக்கட்டமாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப்பிரானை’ என்கிறார்.

——–

இத்திருவாய்மொழி 4இறைவனுடைய பரத்துவத்தைக் கூறுகிறது என்பாரும், பரத்துவத்திற்கு உரிய இலக்கணங்களைக் கூறுகிறது என்பாரும், மேல் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர். இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர்
விண்ணோர்க்கு’ என்பது முதலான திருப்பாசுரங்களை நோக்கிப் ‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர். ‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம்
அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப்பாசுரங்களை நோக்கிப் ‘பரத்துவத்திற்கு உரிய இலக்கணங்களைக் கூறுகிறது, என்பர். ‘அம்மான் சீர்,
கற்பன் வைகலே என்ற திருப்பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.‘ஆயின்’ இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே பட்டருடைய திருவுள்ளம். ‘யாங்ஙனம்?’ எனின், பத்தர் முத்தர் நித்தியர் என்னும் மூவகைச் சேதநரோடும் இறைவனாகிய தான் பரிமாறும் இடத்தில், அவர்களைத் தன் நினைவின் வண்ணம் வருமாறு செய்தல் இன்றி, நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போன்று, தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் என்னும் அம்முறையிலே அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச்செய்கிறார்.

————-

தோள் இணை மேலும் – ‘அன்பினால் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்கிறபடியே, அணைக்க விரும்புகிற திருத்தோள்களிலும், நன்மார்பின்மேலும் – அணைப்பிக்குமவள் இருக்கிற திருமார்பிலும். சுடர் முடி மேலும் – அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும். தாள் இணைமேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான் தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினையுடைய சர்வேஸ்வரன். இனி, இவ்வடிகட்குப் பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப்பொருள் அருளிச்செய்வர்; அப்பொருள் வருமாறு: வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான். காதலர்களாய் இருப்பவர்கள் அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்; அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் 2கோயில் கட்டணத்துக்குக் (கோயில் கட்டணம் – அந்தப்புரம்.)கொடுத்தான்; ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்துகொள்ளுவார்கள் இத்தனையன்றோ? ஆதலின், தான் சூடினான்; சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக்கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்; ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ? தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமாநீள்’–மேல் திருவாய்மொழியில், தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகின்றார் என்று மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 1இங்கு, மேல் எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்துப் பட்டர் அருளிச்செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது, மேல் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்? பேற்றில் இனி, ‘இதற்கு அவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது 2ஒன்றும் இன்று; இனி, இதனுடைய பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது; பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்; 3இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது; ‘ஏன இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும், வெறுப்பின்மை எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்; இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில், இத்தலையில் பரமபத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே; என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே; மற்றும், சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே? 1‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது? மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்லவழி போக வேண்டும்’ என்று உறுப்புகளைக் கொடுத்துவிடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரமபத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனேயாவன்; ஆதலால், ‘நித்தியசூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான், அவன் திருவருள் இருக்கும்படி என்?’ என்று, மேல் திருவாய்மொழியில் தலைமுடிவாகப் பிறந்த சேர்க்கையாலாய சுவையை நினைத்து இன்புறுகிறார் என்பது.

மேல் திருப்பதிகத்தில், ‘ஆழ்வார், தம்முடைய எல்லா அவயவங்களிலும்  இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகிறார்’ என்ற கருத்தில்,
முன்புள்ள பெரியோர்களுடைய திருவுள்ளத்தைப் பட்டர் அடி  ஒற்றினாராயினும், ‘இறைவன், ஒருவிதக் காரணமும் பற்றாத திருவருளால்
தம்முடைய எல்லா அவயவங்களிலும் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகிறார்’ என்று பட்டர் அருளிச்செய்யும் அழகு அறிஞர் கண்டு
மகிழ்தற்குரியது. மேல் திருப்பதிகத்தில் பிறந்த ‘சர்வாங்க சம்ஸ்லேஷத்துக்கு  ஏதுவாக, இத்திருப்பதிகத்தில் ஏதாவது ஒன்றைக் கூறியது உண்டோ?’ என்று
ஆராய்ந்து பார்த்து, காணாமையாலே பட்டர் இங்ஙனம் அருளிச்செய்கிறார்.

‘ஒன்றும் இன்று’ என்பது என்? பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்கிறது  ஏற்றம் அன்றோ?’ என்ன, ‘அன்று’ என்கிறார் ‘இனி, இதனுடைய
பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது’ என்பதனாலே. ஆதலால் பேறு கனத்திருந்தது என்று கூட்டுக.

 ‘இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில்  இல்லாதிருந்தது’ என்ற வாக்கியத்தை, ‘அங்ஙனமிருந்தும், நித்தியசூரிகள்
பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்’ என மேல்   வரும் வாக்கியத்தோடே கூட்டுக.

————–

நாடாத மலர் நாடி – ‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர் நஞ்சீயர், ‘எண்திசையும் உள்ள பூக்கொண்டு’ (திருவாய். 4. 7 : 8.)என்கிறபடியே, ‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச்செய்வர். நாடோறும்-இதுதான் ஒரு நாள் தேடி விடுதல் அன்றி இடைவிடாமல் என்றபடி. கிஞ்சித்கரித்துச் சொரூபத்தைப் பெறுகின்ற இவ்வாத்துமாவிற்கு, இடைவிடுதல் சொரூபத்திற்கு இழுக்கு ஆதலின், ‘நாடோறும்’ என்கிறாள். நாரணன்தன்-இடைவிடாமல் தொண்டுகளைச் செய்யத் தக்கவாறு எல்லாப்பொருள்கட்கும் சுவாமியானவன். வாடாத மலர் அடிக் கீழ்-செவ்வி மாறாத பூப்போன்று இருக்கிற திருவடிகளின் கீழே. சொரூபத்திற்கு இழுக்கு ஆனாலும் (சொரூபத்திற்கு இழுக்கு ஆனாலும்’ என்றதன் கருத்து, இவ்வுயிர்கள்
நாராயணனுக்கு உரிமைப்பட்டவை அல்லவாயினும் என்பது.)விட ஒண்ணாதபடி எல்லையற்ற இனிய பொருளாகவுமிருக்கிற திருவடிகள் ஆதலின், ‘வாடாத மலரடி’ என்கிறாள்

—————-

முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ? இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம். விதி-நியாயம். ‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

——–

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் – கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’என்று பொருள் அருளிச்செய்வர் பிள்ளையமுதனார்.

முதலில் சிதையாமே – அவற்றை உண்டாக்குமிடத்துத் தானான தன்மையில் குறை வாராதபடி இருப்பான். அதாவது – விசேடணங்களான சேதன அசேதனங்களினுடைய சொரூப சுபாவ விகாரங்கள் விசேடியமான பரம்பொருள் உருவத்தில் இல்லை என்றபடி.(சின்னூல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பி பின்னும், அந்நூல் அருந்தி  விடுவது போல அரங்க ரண்டம், பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே, மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே’ என்றார்  பிள்ளைப்பெருமாளையங்கார். சொரூப விகார மில்லாமலிருந்துகொண்டே சிலவற்றை உண்டாக்குதலும், அங்ஙனம் உண்டாக்கினவற்றை உட்கொள்ளுதலும் அற்பச்சத்தியையுடைய சிலந்திப் பூச்சிக்கு இயல்பாகும் போது, சொரூபத்திற்கு விகாரமில்லாமலிருந்து கொண்டே அண்டங்களைப்  படைத்தலும் விழுங்குதலுமாகிய இயல்பு சர்வ சத்திகளான இறைவனுக்குக் கூடுதல் அரிதன்று என்பதாம். ‘ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசத்திக்குக் கூடாதொழியாதிறே,’ என்ற தத்துவத்திரயமும் ஈண்டுக்  கருதுதல் தகும்.) ‘ஆயின், அப்படி உளதாமோ?’ எனின், மட்பிண்டமானது பானை, அகல் முதலிய பொருள்களாக மாறியவுடனே அம்மண் உருண்டையான உருவம் அழிந்துவிடும்; இங்கு அது இல்லை. ‘நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று இவன் படி,’ என்கிறார். மனம் செய் ஞானத்து உன் பெருமை – இப்படி இருக்கிற சங்கல்ப ரூப ஞானத்தையுடைய உன் பெருமை உண்டு. உன் வேறுபட்ட தன்மை அது ‘ஆயின், உலகிற்குக்காரணம், சங்கல்ப ரூப ஞானமோ?’ எனின், அன்று; ‘சூக்கும சித்து அசித்துகளுடன் கூடின இறைவனே உலகிற்குக் காரணம்; ஆயினும், இவ்விறைவன் காரணமாகும்போது சங்கல்பம் முன்னாக ஆதல் வேண்டும். ‘ஆயின் சங்கல்பத்தையுடைய அவ்விறைவன் காரணமாதல் வேண்டும், சங்கல்பம் காரணமாகாதே?’ எனின்,  4நான் பல வகைப் பொருள்களாக விரிகிறேன்,’ என்கிற சங்கல்பத்தின் முக்கியத்துவத்தாலே ‘மனஞ்செய் ஞானத்தைக்’ காரணமாக அருளிச்செய்கிறார்.

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஈட்டில் பிரமாணங்கள் –முதல் பத்து –

November 29, 2023

1- ப்ருந்தாவநம் பகவதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா
ஸூபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்திமபீப்ஸீதா.–ஸ்ரீ விஷ்ணு புராணம்

பகவான்’ என்னும் திருநாமத்தையுடையவனும், எக்காரியங்களையும் வருத்தம் இன்றிப் பயனுடன் முடியும்படி செய்கின்றவனும், பசுக்களின் வளர்ச்சியை விரும்புகின்றவனும் ஆன கண்ணபிரான், தனது தூய்மையான மனத்தினால்

2. உத்பந்ந நவஸஷ்பாட்யா ஸக்ரகோபாஸ்த்ருதாமஹீ
ஸ்தலீமாரதகீவாஸீத் பத்மராக க்ருதாந்தரா.-ஸ்ரீ விஷ்ணு புராணம்

‘பிருந்தாவனம் புற்கள் நிறைந்த காடாக மாறல்வேண்டும்,’ என்று நினைந்த அளவில், 4தோன்றிய புற்களாலே நிரம்பி, இந்திர கோபம் என்னும் பட்டுப்பூச்சிகள் பரவப் பெற்ற பூமியானது, இடையிடையே பதுமராகக் கற்கள் பதித்த மரகதமணி மயமானது ஓர் இடத்தைப் போலத் தோன்றியது,’ என்னலாம்படி மாறியது போன்று, இவரும் உண்மைப் பொருள்களை உள்ளவாறு 5விளக்கமாக அறிய வல்லவரானார்.

3. “ப்ரதாநக்ஷேத்ரஜ்ஞபதி: குணேஸ:
ஸம்ஸாரபந்த ஸ்திதிமோக்ஷஹேது:”- சுவேதாஸ்வதர உபநிடதம், அத். 6.

சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’

4. தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம்ஏதாம் தாந்தி தே.– ஸ்ரீ கீதை 7 : 14.

என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’

5. ஜராமரணமோக்ஷாய மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே
தே பிரஸ்ம தத்விது: க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்மச அகிலம்-ஸ்ரீ கீதை. 7 : 29.

முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும்பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’

6. ஸம்ஜ்ஞாயதே யேந தத்அஸ்ததோஷம் சுத்தம் பரம்  நிர்மலம் ஏகரூபம்

ஸம்த்ருச்யதே வாபி அதிகம்யதே வா தத் ஜ்ஞாநம்   அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 ; 87.

பகவானை அறிகிற அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லப்படும்; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானவை எல்லாம் அஞ்ஞானமாகச் சொல்லப்பட்டன,’

7. தத்கர்ம யந்நபந்தாய ஸா வித்யா யாவி முக்தயே
ஆயாஸாய அபரம் கர்ம வித்யா அந்யா ஸில்பநைபுணம்.–ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 19: 41.

பந்தத்தை உண்டாக்காத தொழிலே தொழில்; மோக்ஷத்தை உண்டாக்கும் கல்வியே கல்வி; மற்றைத் தொழில்கள் எல்லாம் வருத்தத்தை

8. கலௌ ஜகத்பதிம் விஷ்ணும் ஸர்வஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம்
நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்ட உபஹதா ஜநா:–ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 41.

ஓ மைத்திரேயரே, கலியுகத்தில், உலகத்திற்குத் தலைவனும் எங்கும் நிறைந்திருப்பவனும் எல்லாரையும் படைத்தவனும் ஈஸ்வரன் என்ற பெயரை உடையவனும் ஆன திருமாலை பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள் வழிபடுகின்றார்கள் இலர்

9. துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:
தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரியதர்ஸநம்.

மனிதசரீரம் கிடைத்தல் அரிது; கிடைப்பினும், கிடைத்த அச்சரீரமும் கணநேரத்தில் அழியுந்தன்மையது; அழியாதிருப்பினும், ஸ்ரீ வைகுண்டநாதனே நமக்குப் பற்றுக்கோடு என்னும் ஞானம் உண்டாதல் மிகவும் அரிது என்று நான் நினைக்கிறேன்,’

மானிடராக வரலரி தோர்மண் டலத்தினெறி
  மானிடராக மிலாதவ ராதன் மலரயனார்
  மானிடராகமத் தாலன்ப ராய அரங்கத்துளெம்
  மானிடராக மலரடிக் காட்படும் வாழ்வரிதே.’– என்ற திவ்விய கவியின் திருவாக்கு

10. மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஸ்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்வத:–ஸ்ரீகீதை. 7: 3.

மனிதர்களில் ஆயிரவருள் ஒருவன் சித்தியின்பொருட்டு முயல்கின்றான்; அங்ஙனம் முயல்கிற ஞானிகள் ஆயிரவருள் ஒருவன் என்னை அறிகிறான்; இது உண்மை,’ என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான்.

11. தத: அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீபூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா.– ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3: 2.

தேவகி கருத்தரித்த பிறகு எல்லா உலகங்களாகிற தாமரையை மலர்த்துவதற்காக, தேவகியாகிற கீழைச்சந்தியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’

12. ஹஸிதம் பாஷிதம் சைவ கதி: யா யச்ச சேஷ்டிதம்
தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபஸ்யதி:-ஸ்ரீராமா. பால. 3 : 4.

ஸ்ரீ ராமபிரானுடைய நகையினையும் பேச்சையும் நடையினையும் செயல்களையும் மற்றும் உண்டான எல்லாவற்றையும் என் சங்கற்பத்தால் அருளப்பெற்ற தவ வலிமையால் உண்மையாக நன்கு அறிவாய்,’ என்கிறபடியே, பிரமனுடைய திரு அருளால் ஸ்ரீ வான்மீகி பகவான் எல்லாவற்றையும் அறிந்தது போன்று,

13. உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித: ஸஹியுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம்.–. ஸ்ரீகீதை. 7 : 18.

ஐஸ்வரியம் ஆத்மலாபம் ஏதேனும் ஒரு புருஷார்த்தம் ஆகவுமாம். அவற்றை நம் பக்கலிலே கொள்ளுமவர்கள் உதாரர்; ஞானியானவன் எனக்குத் தாரகன்,’ என்று சர்வேஸ்வரன் அருளிச்செய்த ஞானிகளுக்கு முதன்மை பெற்றவராய் இருப்பர்.

14. பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோலக்ஷ்மி வர்த்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ–ஸ்ரீராமா. பால. 18 : 27.

கைங்கர்யத்தை வளர்த்துப் போருமவனான இலக்குமணன் இளமைப்பருவம் தொடங்கி ஸ்ரீ ராமபிரானிடத்தில் பரம சிநேகிதனாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, இளமைப்பருவந்தொடங்கிப் பெருமாள் திருத்தொட்டிலோடு அணையத் திருத்தொட்டில் இடாதபோது பள்ளி கொள்ளாத இளைய பெருமாளைப் போன்று, அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து’

15-நசஸீதா த்வயாஹீநா நசஅஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவ   உத்த்ருதௌ.–ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

இராகவரே, உம்மைப் பிரிந்து பிராட்டி பிழைக்க மாட்டாள்; நானும் பிழைக்க மாட்டேன்,’ என்பது இளைய பெருமாள் திருவார்த்தை

தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன், நீர் நசை அறும் அளவும் பிழைத்து இருக்குமாறு போன்று, நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திருவுள்ளத்திலே உண்டு என்று அறியும் அளவுங்காணும் நாங்கள் பிழைப்பது; ஆதலால், உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இலள்; யானும் இலன்; பிழைத்து இருப்போமாயின், ஒரு முகூர்த்த நேரமே பிழைத்திருப்போம்,’ என்றார் இளைய பெருமாள்.

:

16. நதேவலோக ஆக்ரமணம் ந அமரத்வம் அஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா.-ஸ்ரீராமா, அயோத். 31 : 5

வானவர் நாடு. என்கிற பரமபதம், ஆத்மலாபம், உலகங்களின் ஐஸ்வரியம் இவை இத்தனையும், உமக்குப் புறம்பாக வரும் அன்று வேண்டேன்,’ என்ற இளைய பெருமாளைப் போன்று, இவரும்

17. அஹம்தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபலக்ஷயே
ப்ராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:

நான் சக்கரவர்த்தியிடத்தில் தமப்பன் முறையைப் பார்க்கின்றிலேன்; எனக்கு ஸ்ரீ ராம பிரானே தமையனும் சுவாமியும் உறவும் தமப்பனுமாக இருக்கின்றான்

(21)

18. பவாம்ஸ்து ஸஹவைதேஹ்யா கிரிஸாநுஷூ ரம்ஸ்யதே
அஹம்ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே.

நான் இரவு பகல் எந்நேரத்திலும் எல்லா அடிமைகளையும் உமக்குச் செய்வேன்; நீரோ, பிராட்டியோடு மலை அடிவாரங்களில் இன்புற்றிரும்,’ என்று இளைய பெருமாள் எவ்வகைத் தொண்டுகளையும் செய்து அல்லது தரியாதது போன்று; இவரு

19. விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிஞ்ச ஜநார்த்தன
பூய: கதய த்ருப்தி: ஹி ஸ்ருண்வதோ நாஸ்திமே அம்ருதம்

ஓ ஜனார்த்தனரே, உம்முடைய கல்யாண குணங்களின் சேர்க்கையையும், விபூதி நியமனத்தையும் மீண்டும் விரிவாகக் கூறுக; ஏன் என்றால், உம்முடைய மாகாத்மியமாகிய அமிருதத்தைக் கேட்கும் எனக்குத் திருப்தி கிடையாது,’ என்று கூறிய அருச்சுனனைப் போலவும்

20. கர்மாபிதப்தா: பர்ஜந்யம் ஹ்லாதயந்தமிவ ப்ரஜா:
நததர்ப ஸமாயாந்தம் பஸ்யமாநோ நராதிப:

சமீபத்தில் வருகிற ஸ்ரீ ராமபிரானைப் பார்த்துக்கொண்டேயிருந்தும் தசரத சக்கரவர்த்தி திருப்தி அடைந்திலன்,’ என்று கூறப்படுகின்ற தசரத சக்கரவர்த்தியைப் போலவும்,

21. தர்மாத்மா ஸத்யஸௌசாதி குணாநாம் ஆகர: ததா
உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம்ய: ஸதாபவத்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 15 : 15.

அறத்தின் உருவமாயும் சத்தியம் ஒழுக்கம் முதலியவற்றிற்குக் கொள்கலமாயும் சாதுக்களுக்கு எல்லாம் உவமானமாகச் சொல்லத் தக்கவனாயும் எவனொரு பிரகலாதன் இருந்தான்’ என்று பிரகலாதனைச் சாதுக்களுக்கு எல்லாம் உவமைக்கு எல்லையாகச் சொல்லுவது போன்று, இவரும்

22. அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
க்ருதஞ்ஜஸ்ய பஹூஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாம நாமத:.-ஸ்ரீராமா கிஷ். 4 : 12.

நான் பின் பிறந்த தம்பி; அவருடைய குணங்களால் அடிமையை அடைந்துள்ளேன்.’ என்று குணங்களுக்குத் தோற்று அடிமை புக்க இளைய பெருமாளைப் போன்று, இவரும் பகவானுடைய குணங்களிலே தோற்று. 3‘உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே,’ என்கிறார்.

                                   

23. மாநிஷாத பாதிஷ்டாம் த்வமகம: ஸரஸ்வதீ: ஸமா:
யத்க்ரௌஞ்சமிதுநாத் ஏகம் அவதீ: காமமோஹிதம்.

நிஷாத – ஓ வேடனே,
த்வம் – நீ,
யத் – யாதொரு  காரணத்தால்,
கிரௌஞ்ச மிதுநாத் – இரண்டாகக் கூடியிருந்த அன்றிற்
பறவைகளில்,
காமமோஹிதம் – காமத்தால் மோகத்தையடைந்த,
ஏகம் – ஓர்  ஆண் பறவையை,
அவதீ: – கொன்றாயோ, (அதனால்)
ஸாஸ்வதீ: –  நிலைத்திருக்கிற,
ஸமா: – வருஷங்களில்
பிரதிஷ்டாம் – இருப்பை,
மாகம: –  அடையமாட்டாய்’ என்றவாறு.

‘மா நிஷாத – ஸ்ரீநிவாசனே, த்வம் – நீ, யத் – யாதொரு காரணத்தால், கிரௌஞ்ச மிதுநாத் – இருவராகக் கூடியிருந்த
இராக்கதர்களான இராவண மண்டோதரி என்னும் இவர்களில், காம  மோஹிதம் – ஆசையால் பீடிக்கப்பட்ட, ஏகம் – ஒருவனை (இராவணணை),
அவதீ: – கொன்றாயோ, (அதனால்) ஸாஸ்வதீ: ஸமா: – நிலைத்துள்ள  வருஷங்களில், பிரதிஷ்டாம் – இருப்பை, அகம: – அடையக்கடவாய்’ என்பது.

24. மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம.

ஹே பிரஹமந் – ஓ முனிவனே,
இயம் ஸாஸ்வதீ – ‘மாநிஷாத’ என்னும் இந்த ஸ்லோகமானது,
மசசந்தா தேவ – என்னுடைய திருவருளால்,
தேப்ரவிருத்தா – உனக்கு உண்டாயிற்று,
ஹே ருஷி ஸத்தம – முனிபுங்கவனே,
த்வம் – நீ,
ஸர்வம் ராம சரிதம் – இராமசரிதம் எல்லாவற்றையும்,
குரு – செய்வாய்.

25. ஹரிகீர்த்திம் விநாஏவ அந்யத் ப்ராஹ்மணேந நரோத்தம
பாஷாகாநம் நகாதவ்யம் தஸ்மாத் பாபம் த்வயாக்ருதம்.-மச்ச புராணம்.

மக்களுள் உயர்ச்சி பெற்ற அரசனே, பிராமணன், திருமாலின் புகழினைத் தவிர, ஏனையோர் புகழை வேறு மொழியில் பாடக் கூடாது; அங்ஙனம் இருக்கவும், வேறு மொழியில் பாடியதைக் கொண்டு அவனை வெளியே போகச் செய்த காரணத்தால் நீ பாவம் செய்தவன் ஆனாய், என்று இயமன் கூறியதாக மச்சபுராணத்திலே கூறப்படுகின்றது

26. பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி
ஸர்வைஷணா விநிர்முக்த: ஸபைக்ஷம் போக்தும் அர்ஹதி.-பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.

எவன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தியினையுடையவனாக இருக்கின்றானோ அவன் மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை உடையவனாக இருக்கின்றான்

27. அகுத்ஸிதே கர்மணி ய: ப்ரவர்த்ததே
நிவ்ருத்த ராகஸ்யக்ருஹம் தபோவநம்.–இதிகாச சமுச்சயம்

ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற்கு உரிய வனமாம்,’ என்கிறபடியே, ஆசை நீக்கியவனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு ஏகாந்தத் தலம் என்பது போதரும். ‘

28. ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததாப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

ஆக, இவ்வைம்பொருள்களுமே திருவாய்மொழியால் சொல்லப்படுகின்றன. அல்லாதவை ஆநுஷங்கிக சித்தமாய் வந்தன இத்தனை(இடையிலே வந்தவை’ என்றபடி.). ‘யங்ஙனம்?’ என்னில், பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் என்றும், அநந்யார்ஹ சேஷத்துவமே சொரூபம் என்றும், இறைவனுடைய குணங்களை அநுபவிப்பதால் உண்டாகும் பிரீதியால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்றும், அகங்கார மமகாரங்கள் அதற்கு விரோதி என்றும், அவை நீங்குதற்கும் கைங்கரிய சித்திக்கும் சர்வ சுலபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும், ஐம்பொறிகளையும் அடக்கல் தொடக்கமாகக் கைங்கரியம் முடிவாக உள்ளவை அவ்வுபாயத்திற்குப் பலம் என்றும் சொல்லப்பட்டன.

அடையத் தகுந்த பரம்பொருளின் சொரூபத்தையும், அடைகின்ற ஆத்துமாவின் சொரூபத்தையும், அடையும் உபாயத்தையும், அடைவதற்குப் பலத்தையும், அப்படியே அடைவதற்கு விரோதியையும் இதிகாச புராணங்களுடன் கூடின எல்லா வேதங்களும் கூறுகின்றன; மகாத்துமாக்களும் வேதங்கள் வேதங்களின் பொருள்கள் இவற்றை அறிந்தவர்களுமான முனிவர்களும் சொல்லுகிறார்கள்,’ என்பதை விவரிக்கும் முறையில் எல்லா வேதங்களினுடைய கருத்து இவ்வைம்பொருள்களுமே என்றும், இவ்வைம்பொருள்களும் திருவாய்மொழிக்கு வாக்கியார்த்தமாக அமைந்துள்ளன என்றும் பெரியவங்கிப் புரத்து நம்பி அருளிச்செய்தார்.

29. உத்திஷ்ட உத்திஷ்ட கிம்ஸேஷே ராஜந் புத்ரமஹாயஸ:
த்வத்விதா நஹி ஸோசந்தி ஸந்த: ஸதஸி ஸத்தமா:.. ஸ்ரீராமா. அயோத்.

தமையனாராகிய ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் மனம் உவக்கும் அடிமைகளைச் செய்யவேண்டும் என்ற வேணவாவோடு வந்து சேர, கைகேயி 4‘ராஜந்’ என்ற சொல் கேட்டு ஸ்ரீ பரதாழ்வான் பட்டபாடு போலே இருக்கிறது, திருவிருத்தத்தில் நிலை; திருச்சித்திரகூட மலையிலே பெருமாள் எழுந்தருளியிருந்தார்

30. ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
ப்ராது:ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்தும் அர்ஹஸி.-ஸ்ரீராமா. அயோத். 101 : 12.

என் ஒருவன் கண்ணில் கண்ணநீர் பொறுக்கமாட்டாதவர் இத்தனை பேர் ஆற்றாமை கண்டால் மீளாது ஒழிவரோ? எனக்கு விருப்பமான காரியங்களைத் தம் தலையாலே இரந்து செய்யக்கடவ அவர், நான் என் தலையாலே இரந்த காரியத்தை மறுப்பரோ? நான் தம் பின் பிறந்தவன் அல்லனோ? பின் பிறந்தவன்

31. ஸகாமம் அநவாப்யைவ ராமபாதௌ உபஸ்ப்ருஸன்
நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகமந காங்க்ஷயா.-ஸ்ரீராமா. பாலகா. 1 : 38.

ஸ்ரீ ராமபிரான் வருவார் என்ற பேரவாவோடு நந்திக்கிராமத்தில் இருந்து அரசை நடத்திக்கொண்டிருந்தார்’ என்கிறபடியே, பதினான்கு ஆண்டும் ஆசையை வளர்த்துக்கொண்டிருந்தாற்போலே இருக்கிறது – பெரிய திருவந்தாதியில்; மீண்டு எழுந்தருளித் திருவபிஷேகம் செய்து கொள்ள, ஸ்ரீ பரதாழ்வானும் 4சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெற்றாற்போல இருக்கிறது, இவர்க்குத் திருமொழியில் பேறு.

32. ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநிச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்தம் யச்ச அந்யதபி வாங்கமயம்.–பாஞ்சராத்திர ஆகமம்.

இருக்கு யஜூர் சாமவேதங்களும், அப்படியே அதர்வணமும், மற்றும் ஒலி உருவமாக உள்ளவை அனைத்தும், எட்டு எழுத்துக்களையுடைய திருமந்திரத்திற்குள் அடங்கி இருப்பனவாம்’ என்கிறபடியே, நான்கு வேதங்களின் சுருக்கம் திருமந்திரமாய், அதனுடைய சுருக்கம் பிரணவமாய், அதனுடைய சுருக்கம் 6அகரம் ஆயினாற்போன்று, திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பதிகம்; முதல் திருப்பதிகத்தின் சுருக்கம் முதல் மூன்று திருப்பாசுரங்கள்; முதல் மூன்று திருப்பாசுரங்களின் சுருக்கம், முதல் திருப்பாசுரம்; முதல் திருப்பாசுரத்தின் சுருக்கம், முதல் அடி. 7மற்றும், ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் முதலானவைகளைச் செய்த முனி புங்கவர்களும் சுருக்கியும் விவரித்தும் செய்து போந்தமை அவ்வந்நூல்களால் தெளிக.

33. யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் நபிபேதி குதஸ்சநேதி. – தைத்திரீ. ஆன. 9 : 1.

அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்தகுணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன

34. ஸர்வே க்ஷயாந்தாநிசயா: பதநாந்தா: முச்சரயா:
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம்.-ஸ்ரீராமா. அயோத். 105.16.

செல்வம், அழிதலை முடிவாகவுடையன; உயர்வு, இறங்குதலை முடிவாகவுடையன; சேர்க்கை, பிரிதலை முடிவாகவுடையன; வாழ்தல், சாதலை முடிவாகவுடையன

35. ஸமஸ்த கல்யாண குணாத்மக: அஸௌ.-ஸ்ரீ விஷ்ணுபு. 6. 5 : 84.

அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்

36. வர்ஷாயுதை: யஸ்யகுணா நஸக்யா வக்தும் ஸமேதைரபி
ஸர்வலோகை:
மஹாத்மந: ஸங்கசக்ராஸி பாணே: விஷ்ணோர்ஜிஷ்ணோர்
வஸூதேவாத்மஜஸ்ய.-வியாசபார. வீடுமபருவம்.

எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;’

37. ஜ்ஞாந விஜ்ஞாந ஸம்பந்ந: நிதேசே நிரத: பிது:
தாதுநாமிவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்.-ஸ்ரீ ராமா. கிஷ். 15 : 20.

மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’

38. தே தம்ஊசு: மஹாத்மாநம் பௌர ஜாநபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே.-ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.

அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும்

39. ஸ்வாபாவிகாநவதிகாதிஸயாஸங்க்யேய கல்யாண குணகண:–ஸ்தோத்திரரத்தினம். 11.

இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

40. யதா ஸைந்தவகந: அநந்தர: அபாஹ்ய: க்ருத்ஸ்ந:
ரஸ கநஏவ, ஏவம்வா அரே அயமாத்மா அநந்தர:

அபாஹ்ய: க்ருத்ஸ்ந: ப்ரஜ்ஞாந கநஏவ.–பிரஹதா. உபரி. 6. 5 : 23.

உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’

41. தம் அக்ரதும் பஸ்யதி வீதஸோக: தாது: ப்ரஸாதாத் மஹிமாநம் ஈஸம்.-தைத். நாராயண. 6 : 10.

மிக்க பெருமையோடு கூடியவனும் எல்லாப் பொருள்களையும் நியமிக்கின்றவனுமான

42. வ்யஸநேஷூமநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸ வேஷூச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி.-ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத்தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், 6இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வ

 

43. அஸந்நேவ ஸபவதி அஸத் ப்ரஹ்மேதிவேதசேத்
அஸ்தி ப்ரஹ்மேதிசேத வேத ஸந்தமேநம் ததோவிது: இதி.-தைத்திரீய. ஆன : 6.

கடவுளை உள்ளபடி அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்னும் நிலை கழிந்து, ‘கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்,’ என்கிறவர்கள் கோட்டியிலே எண்ணலாம்படியாக நன்னெறியில் செல்லப் பார்ப்பாய்

44. மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கி முக்த்யை நிர்விஷயம் மந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.

மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

45. நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டத: தே நம: அஸ்துதே ஸர்வத ஏவ ஸர்வ
அநந்தவீர்ய அமிதவிக்ரம: த்வம் ஸர்வம் ஸமாப்நோஷி தத: அஸிஸர்வ:–பகவத்கீதை. 11 : 40.

கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியதுபோன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க.

46. யதோவா இமாநிபூதாநி ஜாயந்தே யேநஜாதாநி ஜீவந்தி
யத்ப்ரயந்தி அபிஸம்விஸந்தி தத்விஜிஞ்ஜாஸஸ்வ தத் ப்ரஹ்ம.- தைத்திரிய. பிருகு. 1.

எவனிடத்திலிருந்து இந்தப் பொருள்களெல்லாம் உண்டாகின்றனவோ, எவனால் உண்டானவை பிழைக்கின்றனவோ, அழிவினை அடைந்து பிரளயத்தில் எவனை அடைகின்றனவோ அவனை அறிவாய்; அவன்தான் பரம்பொருள்,’

47. ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபிவாசா, மநாஸாது விஸூத்தேந,–வேதவாக்கியம்

மிக்க தூய்மையோடு கூடிய மனத்தால் அறியப்படுகிறான் இறைவன்

48. அதாத ஆதேச: நேதிநேதி நஹி ஏதஸ்மாத் இதிநேதி அந்யத்பரம் அஸ்தி.- பிரஹதாரண். 4. 6 : 62.

இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ என்று அளவிட்டு அறிய முடியாது

49. யம் ஆத்மா நவேத, யம் ப்ருதிவீ நவேத.தைத்திரீய. பிருகு. 6 : 1.

50. ஆநந்தோ ப்ரஹ்மேதி வ்யஜாநாத்.

ஆனந்தமே இறைவன்,’ ‘ஆனந்தமயமானவன்’

51. ப்ரஹித: ப்ரதநாய மாதவாந் அஹம் ஆகாரயிதும் மஹீப்ருதா
நபரேஷூ மஹௌஜஸ: சலாதபகுர்வந்தி மலிம்லுசா இவ.-ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.

இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச் செய்கிறார்.

52. நதஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே ந தத் ஸமஸ்ச அபி அதிகஸ்ச த்ருஸ்யதே,
பராஸ்யஸக்தி: விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ- ஜ்ஞாநபல க்ரியாச.

53. ஸஉத்தம:புருஷ: ஸதத்ர பர்யேதிஜக்ஷத் க்ரீடன்
ரமமாண: ஸ்தீரிபி: வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜநம் ஸ்மரந் இதம்ஸரீரம்.-
சாந்தோக்யம், 7 : 26.

முத்தன் ஆனவன் எல்லாப்பொருள்களையும் பார்க்கின்றான்,’ என்கிறபடியே, ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகாநின்றது முத்தனுக்கு.

54. பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்.– தைத்திரீயநாரா. 11 : 8.-தைத்திரீ. நாரா. 6. 1 : 11

உலகத்திற்குத்தலைவன்’ என்னுமித்தனை

55. யச்சகிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா,
அந்தர் பஹிஸ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:
தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.

உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்

56. தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிஸத் ததநுப்ரவிஸ்யஸ்ச்ச த்யச்ச அபவத்.-தைத்திரீயம்.

57. அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா.-தைத்திரீயம்.

பொருள்களை. இவற்றை உண்டாக்கி, உயிர் வழியாக அநுப்பிரவேசித்துப் பின்னர் இவற்றிற்குப் பொருளாகை, பெயர் பெறுகை என்னும் இவை உண்டாம்படி செய்து, 4‘எல்லாச் சேதநர்களுடைய உள்ளத்திலும் பிரவேசித்து நியாமகனாய்ச் சர்வர்க்கும் ஆத்துமாவாய் இருக்கும் படியை’ ‘ஓடு’ என்பது காட்டுகிறது. ‘

58. த்வாஸூபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம்
பரிஷஸ்வஜாதே, தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய: அபிசாகஸீதி–இருக்கு வேதம்.

தான் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராய் நின்றால், சரீரத்தினுடைய வளர்தல் தேய்தல் முதலிய நிலை மாறுபாடோ, உயிர்களுடைய இன்பதுன்பங்களோ தன்னையும் பொருந்தும்படி இருக்கின்றானோ?’ என்னில், புலன் அலன் – தான் ஒட்டு அற்று நின்று விளங்காநிற்பவன்; 5அவ்வப்பொருள்களினுடைய தன்மைவேறுபாடுகளும் இன்பதுன்பங்களும் தன்னைத் தீண்டாவண்ணம் இருப்பான் என்பதாம். 6‘பரமான்மா சீவான்மா என்று கூறப்படும் இருவர், சிறந்த ஞானரூபமான சிறகுகளையுடையவர்களாய், ஒத்த குணங்களையுடையவர்களாய்,

59. கிம்நு ஸ்யாத் சித்தமோஹ: அயம்பவேத் வாதகதி: துஇயம்
உந்மாதஜ: விகாரோவா ஸ்யாத்இயம் ம்ருகத்ருஷ்ணிகா.–ஸ்ரீராமா. சுந். 34. 23.

அந்நலனுடை ஒருவனை’ என்கிறார். நணுகினம் – ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – இது, பொய்யோ? 1‘இது ஏதேனும் மயக்கம் ஸ்வப்பனம் முதலியவைகளோ?’ என்று பிராட்டி நினைந்தாற்போன்று, இவரும் ‘நணுகினம் நாமே’ என்கிறார்

60. கச்சித் நதுஷ்டோவ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம்தே மஹதீ ஸேநா ஸங்காம் ஜநயதீவமே–ஸ்ரீராமா. அயோத். 85 : 7.

 அஹம் என்றால் இறைவன் அளவிலே சென்று முடிய வேண்டும்படியாக இருக்க, தேகத்து அளவிலே ஆகும் படியன்றோ முன்பு போந்தது? கைகேயி, ‘அரசனே!’ என்று விளிக்கும்படியாகப் பிறந்து, 3‘அவள் மகனாய்க் கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ?’ என்று எண்ணும்படியான நிலையில் நின்ற நான்– கீழ்வயிற்றுக்கழலை அறுக்க வருகிறானோ – கீழ்வயிற்றில் எழுந்த  கட்டியைப்போன்று துன்புறுத்த வருகின்றானோ என்றபடி.

61. சத்ருக்நஞ்ச அப்ரவீத் ஹ்ருஷ்ட: தாநமாத்யாம்ஸ்ச ஸர்வஸ:
மந்யே ப்ராப்தாஸ்ஸ்ம தம்தேஸம் பரத்வாஜ:யம் அப்ரவீத்-ஸ்ரீராமா. அயோத். 99 : 8 – 9.

அப்பரத்துவாச பகவான் சொன்ன ஆச்சிரமத்தை அடைந்தேனோ என்று ஐயப்படுகிறேன்!’ என்றான் ஸ்ரீ பரதாழ்வான்

62. க்வதே ராமேண ஸம்ஸர்க்க: கதம் ஜாநாஸி லக்ஷ்மணம்
வாநராணாம் நராணாஞ்ச கதம் ஆஸீத ஸமாகம:.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 2.

காட்டிலே வசிக்கின்ற குரங்குகளுக்கும் நாகரிகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும் ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே?’ என்று

63. ஸர்வர்க்ஷ ஹரிஸைந்யாநாம் ஸூக்ரீவம் அகரோத் பதிம்
ராம ஸூக்ரீவயோ: ஐக்யம் தேவிஏவம் ஸமஜாயத.-ஸ்ரீராமா. சுந்த. 35 : 31.

பெருமாளும் மகாராஜரும் சேர்ந்த சேர்த்தி, பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க, அடியேன் அந்தப்புரக் காரியத்திற்கு வரும்படியாக அன்றோ? நானும் 2இங்ஙனே கூடிக் கொண்டு நிற்கக்கண்டேனித்தனை,’ என்றான் சிறிய திருவடி. இறைவனுடைய அனுபவத்துக்குப் புறம்பான நாம், அன்றி, இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் என்பார் ‘நாமே’ என்கிறார் எனினுமாம்.

(

64. ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி ஸாந்த உபாஸீத.-சாந்தோக்யம். 3. 4.

இவை எல்லாம் பிரஹ்மம் அல்லவா

65. தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேதகேதோ.-சாந்தோக்யம். 6. 12.

இது நீயாய் இருக்கிறாய்

ஆய்நின்ற’ என்னுஞ்சோல், பொருள்களைக் காட்டுவதோடு அமையாமல், இறைவன் அளவுஞ்சொல்லும்படி என்?’ என்ன,உடலும், உடலை விரும்பி நிற்கின்ற உயிரும், உயிருக்குள் தங்கி இருக்கின்ற இறைவனும் ஆன இக்கூட்டம் இத்தனைக்கும் வாசகமாக நிற்கிறது இச்சொல். ‘அவர்’ என்றது ‘இவையாகி நிற்கிறார் அவர்’ என்றபடி

66. நஹிபாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவத்யந்யஸ்ய கஸ்யசித்.-ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.

காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று

67. யத்வேதாதௌ ஸ்வர: பரோக்தோ வேதாந்தேச ப்ரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதிலீ நஸ்ய ய: பர: ஸமஹேஸ்வர:-தைத்திரிய நாராய. 6. : 10.

செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ-அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’

68. அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ.-பரத்துவாச சம்ஹிதை.

இரு கைகளையும் குவித்துச் செய்கிற ஓர் அஞ்சலி என்னும் மேலான முத்திரையானது, இறைவனுடைய திருவருளை விரைவிலே உண்டாக்கக் கூடியதாக இருக்கின்றது,

69. க்ருதாபரா தஸ்யஹிதே நாந்யத் பஸ்யாமி அஹம்க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதநாத்.
ஸ்ரீராமா. கிஷ்.

இளையபெருமாளுடைய நாண் ஒலியினைக் கேட்ட மகாராஜர், கழுத்தில் அணிந்திருந்த மாலையினை அறுத்து எறிந்து, குரங்குகள் இயற்கையாகச் செய்கின்ற தொழில்கள் சிலவற்றைச் செய்துகொண்டு அருகே நின்ற திருவடியைப் பார்த்து, ‘இச்சமயத்தில் நாம் செய்யத்தக்கன யாவை?’ என்று கேட்க, ‘அபராத காலத்தில் அநுதாபம் பிறந்து மீண்டோம் என்று நினைப்பதற்கு எளியன் அல்லோம்; சில செய்வோம்; தீரக் கழிய அபராதம் பண்ணினோம்; செய்த பின்னர் இனி, ஓர் அஞ்சலி நேராமற் போகாது,’ என்ற கருத்து அமைய, 2‘செய்யப்பட்ட பாவங்களையுடைய உனக்கு இலக்குமணனைக் கண்டு இரு கைகளையும் கூப்பி வணங்கி, அதன் திருவருளைப் பெறுதல் தவிர, அவனைப் பொறுப்பிக்கைக்கு வேறு வழி ஒன்றையுங் காணேன்,’ என்றான் திருவடி என்று கூறும் ஸ்ரீ ராமாயணமும் இங்கு அறிதல் தகும்.

70. யோயோ யாம் யாம் தநும்பக்த: ஸ்ரத்தயார்ச்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்.–பகவத்கீதை. 7 : 21.

எவன் எவன் பத்தியுள்ளவனாகி எவ்வெத்தேவர்களை வணங்குவதற்கு விரும்புகின்றானோ, அவன் அவனுக்கு அவ்வத்தேவர்களை வணங்குதற்கு உரிய பத்தியினை நான் கொடுக்கிறேன்

71. ஸதயாஸ்ரத்தயா யுக்த: தஸ்யாராதநமீஹதே
லபதேசத்த: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்

72. அருணயா பிங்காக்ஷ்யா ஸோமங்க்ரீணாதி.

நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். (ஆகிருதி – சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய
பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது   அச்சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று
என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது – ஒரு சொல் தனக்குரிய   பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும்
செல்வது.)2குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும் செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று, தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று 3முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், 4சாமாநாதிகரண்யம் சித்தியாது. ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன.

73. அநேந ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி.–சாந்தோக்யம், 6 : 3

இந்த உயிர்களை எல்லாம் உடலாகக் கொண்டு இருக்கிற நான், உயிர்களுக்குள் உயிராகப் புகுந்து இவற்றிற்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’

74. யஸ்யாத்மா ஸரீரம். . .யஸ்யப்ருதிவீ ஸரீரம்.–தைத்திரீயம்

உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று 2‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’ 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார்.

தாரகன் – தரித்துக்கொண்டிருப்பவன். நியாமகன் – ஏவுகின்றவன். சேஷி –  தன் விருப்பின்படி விநியோகங்கொள்ளுகின்றவன்.

தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும் இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது, தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள். நியாம்யமாவது,
சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா
வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல்.  சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று,
இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.

75. ஆத்மந ஆகாஸ: ஸம்பூத:, ஆகாஸாத்வாயு:-தைத்திரீ. ஆனந். 1.

திடம் விசும்பு எரி வளி நீர் நிலம் – திடம் என்பதனைப் பிரித்து ‘எரி’ முதலிய ஏனைய நான்கு பூதங்கட்கும் கூட்டுக. இனி, 6‘பரம்பொருளிடத்திலிருந்து ஆகாயம் உண்டாயிற்று,’ என்கிறபடியே, ஏனைய நான்கு பூதங்கட்கும் முன்னே தோன்றி, அவை அழிந்தாலும் சில நாள் நின்று பின் அழியக்கூடியது ஆகையாலே விசும்பிற்குத் திடம் என்ற அடை புணர்த்து ஓதினார் எனக்கோடலுமாம். இனி, 1‘காரணமான பூதங்கள், காற்றுத் தீ நீர் மண் என்னும் நான்கேயாம்,’ என்கிற (பார்ஹஸ்யபத்திய சூத்)அருகமதத்தாரை மறுக்கும் பொருட்டு, விசும்பிற்குத் ‘திடம்’ என்ற அடையினைத் தந்து அருளிச்செய்தார் என்றலும் ஒன்று. ஆக, ஐம்பூதங்களையும் அருளிச்செய்கிறா

76. சத்வார்யேவ பூதாநி மிதஸ்ஸம்பத்தாநி. 

77. பஹூயாம் ப்ரஜாயேயேதி. தைத்திரீய. ஆன. 6. 3.

பல பொருள்களாக விரிகின்றேன்’ என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், வைதிக நிர்த்தேசம்-மறைமொழி.-  இருக்கிறபடி

78. யமாத்மா ந வேத.–. பிரஹதாரண்யம்.

எவன் ஒருவன் உயிர்களால் அறிய முடியாதவனோ’ என்கிறபடியே, பிறர்களால் காண முடியாதவனாய் இருப்பான். எங்கும் பரந்து உள்ளும் புறமும் நிறைந்து ‘இதற்குப் பிரமாணம் என்?’ என்னில், உளன் சுடர்மிகு சுருதியுள் – புருஷனால் செய்யப்படாததாய், குற்றம் இல்லாததாய் இருக்கிற வேதங்களால் சொல்லப்பட்டவன். பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் போன்று வேறு காரணங்களால் கழித்துத் தள்ள ஒண்ணாதபடி இருத்தலின், ‘சுடர்மிகு’ என்றும், முன்னர் உள்ள பெரியோர்கள் கூறி வந்த முறையைப் பின்பற்றியே பின் வருகின்றவர்களும் கூறிக்கொண்டு வருகின்றமையின், ‘சுருதி’ என்றும் அருளிச்செய்கிறார்.

79. அக்ஷரம் அம்பராந்த த்ருதே:-பிரஹதாரண்யம், 5 : 8.

80. கஸ்மிந்நு கலு ஆகாஸ ஓதஸ்ச ப்ரேரதஸ்ச.

ஆகாயம் என்று கூறப்படுகின்ற மூலப்பகுதியானது எவனிடத்தில் குறும்பாவாகவும் நெடும்பாவாகவும் கோத்துக் கொண்டு கிடக்கிறது?’ என்று உபநிடதத்தில் கார்க்கி வித்தையில் ஆகாச சப்தத்தால் மூலப்பகுதியைச் சொல்லுகையாலே இவரும் ‘விண்’ என்ற சொல்லால் மூலப்பகுதியினை அருளிச்செய்கிறர்

ஆகாயம்’ என்ற சொல் மூலப்பகுதியைத்தான் காட்டுகிறது என்று கொள்ளுமாறு யாங்ஙனம்?’ எனின், 3ஆகாயத்திற்குக் காரணமான மூலப்பகுதியைத் தரித்திருப்பதனால் அக்ஷரம் என்று சொல்லப்படுமவன் பரம்பொருளே,’ என்பது பிரம சூத்திரம் ஆதலின், (சாரீரக மீமாம்சை, சூ. 9.)மூலப்பகுதியின் காரியமான ஆகாயத்தைக் காட்டுகிற ‘விண்’ என்ற சொல்லால் காரணமான மூலப்பகுதியை உபசாரத்தால் அருளிச்செய்கிறார்

81. யஸ்ய ப்ரஹ்மச க்ஷத்ரஞ்ச உபேபவத ஓதந;
ம்ருத்யு: யஸ்ய உபஸேசநம் கஇத்தா வேத யத்ர ஸ:-கடவல்லி. 1 : 2.

யாவன் ஒருவனுக்குப் பிராமண க்ஷத்திரிய சாதிகள் இரண்டும் உணவாக இருக்கின்றன? யாவன் ஒருவனுக்கு யமதருமன் ஊறுகாய் நிலையிலே இருக்கின்றான்? அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவருக்கு அறிய நிலமோ?’

இங்ஙனம் உணவாகக் கூறப் படுதலின், இவரும், உணவின் தொழிலாகிய ‘  அவை முழுது உண்ட’ என்னும் சொல்லால் அழித்தலை அருளிச் செய்கிறார்

82. பர: பராணாம் பரம: பரமாத்மா ஆத்மஸம்ஸ்தித:
ரூபவர்ணாதி நிர்த்தேஸ விஸேஷண விவர்ஜித:-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 10.

உயர்ந்தவர்கட்கு எல்லாம் உயர்ந்தவன் இறைவன்,’ என்கிறபடியே, அவர்கள்தங்களுக்கும் மேலானவனாய் இருக்குமவன். 3‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவா, ‘என்பது திருவாய், 8. 1 : 5.)

83. விஷ்ணு: ஆத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:-பாரதம்

மிக்க ஒளியினையுடைய உருத்திர பகவானுக்குத் திருமால் உயிராக இருக்கின்றார்; ஆதலால், அந்தச் சிவபெருமான் வில்லினுடைய நாணினைத் தொடும் ஆற்றலையடைந்தான்’ என்றார் அடி அறியும் வியாசர்

84. யோ ப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்
யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை.–சுவேதாஸ்வதரம்.

நாராயணன் உலகங்களை எல்லாம் படைப்பதற்கு முன்னர்ப், பிரமனை முதலில் படைத்தான்; அப்பிரமனுக்கு வேதங்களைக் கற்பித்தான்,’ என்கிறபடியே, அதற்கும் இறைவன் அடியாக இருப்பான்.

85. ஏதௌ த்வௌ விபுத ஸ்ரெஷ்டௌ ப்ரஸாத க்ரோதஜௌ ஸ்மிருதௌ
ததா தர்ஸித பந்தாநௌ ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகௌ.–பாரதம். சாந்தி பர். 169.

அரன் என உலகு அழித்து உளன் அயன் என உலகு அமைத்து உளன் – ‘அரன் செய்தான்; அயன் செய்தான்’ என்ன உலகையழித்தும் அமைத்தும் உளன். பிரமன் சிவன் என்னும் இவர்கள் இருவரும் தேவர்களுக்குள் தலைமை பெற்றவர்கள்; இறைவன் தெளிந்திருந்த காலத்தும் கோபத்துடன் இருந்த காலத்தும் உண்டானவர்களாக எண்ணப்படுகிறார்கள்; இவர்கள், அவ்விறைவனாலே காட்டப்பட்ட வழிகளையுடையவர்களாய், படைத்தல் அழித்தல்களாகிய காரியங்களைச் செய்கிறார்கள்,’ என்று இவ்வாறு பிரமாணங்கள் உள்ளபடியால் படைப்பில் ஒரு பகுதியும் அழிப்பில் ஒரு பகுதியுமே அவர்களுக்கு உள்ளவை; அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன். ஆகையாலே, சொன்னேன் அத்தனை; ஒருவனிடத்திலே பக்ஷபாதத்தாலே சொன்னேன் அல்லேன்,’ என்று குத்ருஷ்டிகளை மறுக்கிறார்.

86. ஏஷம ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா:–சாந்தோக்கிய உபநிடதம்.

நீர் தொறும்–ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. 2‘ஆகாயத்திலும் பெரியன் என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் – அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்

87. அத்ர க்ருத்ர: பததி.

88. ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகி: பகவாந்ருஷி:-ஸ்ரீராமா. பா. 4 : 1.

இறைவனுடைய திருவடிகளின்மேல். குருகூர்ச் சடகோபன் சொல்- 3‘வால் மீகிர்ப் பகவான் ருஷி:’ என்பது போன்று ஆப்திக்கு உடலாக அருளிச்செய்கிறார்.

89. பாட்யே கேயேச மதுரம் ப்ரமாணை: த்ரிபி: அந்விதம்
ஜாதிபி: ஸ்ம்தபி: பத்தம் தந்த்ரீலய ஸமந்விதம்.

90. பாதபத்த: அக்ஷரஸம: தந்திரீலய ஸமமவித:-ஸ்ரீராமா. பா. 2 : 18.

91. காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்நம் ஈத்ருஸை: கரவாணி அஹம்.

நிரன் நிறை’ என்று கொண்டு நேரே நிறுத்தப்படுகை. அதாவது- நான்கு அடிகளோடு கூடியதாயும், ஒவ்வோர் அடியும் எழுத்துகளால் ஒத்ததாயும், வீணையின் நரம்பு தாளங்கள் அவற்றிற்கு ஒத்ததாயும் இருக்கின்ற ஸ்ரீராமாயணம்,’ என்பது போன்று, இங்கும் செய்யுள் இலக்கணத்திற்குறையாமல் எழுத்து அசை சீர் தளை அடிகளும் பொருளும் அந்தாதியும் முறையாக நிறுத்தப்படுதல் என்னுதல்

92. உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்யைகாந்திகாத்யந்திக பக்தியோகைகலப்ய:–ஆத்தும சித்தி.

பத்தி என்பது ‘கர்ம ஞானங்கள் இரண்டாலும் அலங்கரிக்கப்பட்ட மனத்தையுடையவனுக்கு’ என்கிறபடியே, கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப்பட்ட மனத்தினையுடையவனுக்கு உண்டாவது அன்றோ?

93. நாஸம்வத்ஸர வாஸிநே ப்ரப்ரூயாத்.-முண்டக உபநிடதம், 1. 2 : 13.

-ஒரு வருடம் குருகுலவாசம் செய்யாத மாணவனுக்குச் சொல்லக்கடவன் அல்லன்,’ என்னும் விதிக்குக்கட்டுப்பட்டவராயும் அன்று.–வீடுமின்’ என்று பலரைக் குறித்துப் பரோபதேசம் செய்கையாலே ‘ஒரு  வருடம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

94. ஸோஹம் பருஷிதஸ்தேந தாஸவச்ச அவமாநித:
த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் ஸரணம் கத:-ஸ்ரீராமா. யுத். 17 : 14.

95. பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச
பவத்கதம்மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநிச.–ஸ்ரீராமா. யுத். 19 : 5.

புத்திரர்களையும் மனைவியையும் விட்டுவிட்டு ஸ்ரீராகவனைச் சரணமாக அடைகிறேன்,’ என்றும், 2‘என்னால் விடப்பட்டது இலங்கை’ என்றும் விடுகை முன்னாக அன்றோ முன்பு பற்றினவர்களும்-விபீஷணன் முதலியோர்.- பற்றினார்கள்? ‘

96. யமோ வைவஸ்வதோ ராஜா ய: தவஏஷஹ்ருதிஸ்தித:
தேந சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூந் கம:-பிரஹதாரண்யம்.

 உம் உயிர் வீடு உடையானிடை – எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில். அன்றி, இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக உடையவனிடத்தில்’என்றும், ‘உம்உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ என்றும்,  (ஈண்டு, விடுதல் – சமர்ப்பித்தல்)உம் உயிரை வீட்டினை (அதாவது – மோக்ஷத்தினை) உடையவனிடத்தில்’ என்றும் பொருள் கூறலும் ஆம். ‘அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ? நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’ என்பார், ‘உயிர்’ என்றும், ‘அதுதானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ என்பார், ‘உம் உயிர்’ என்றும் அருளிச்செய்கிறார். பொதுவிலே ‘உடையானிடை’ என்கிறார்; சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால் 1வண்புகழ் நாரணன்’ என்கைக்காக.

97. அநாத்மநி ஆத்மபுத்தி: யா அஸ்வே ஸ்வமிதி யா மதி:
அவித்யா தருஸம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம்-ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.

98. அச்யுத அஹம் தவஅஸ்மி இதி ஸைவ ஸம்ஸார பேஷஜம்.–ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 11.

உயிர் அல்லாத சரீரத்தில் உயிர் என்ற புத்தியும், தன்னைச் சார்ந்தன அல்லாதவைகளில் தன்னுடையவை என்னும் புத்தியும், அறிவின்மையாகிற மரம் தோன்றுவதற்கு இரண்டு விதைகளாய் இருக்கின்றன’, எனப் பிறப்பு ஈனும் வித்து இன்னது என்றும், 2‘அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! நான் உனக்கு அடியவனாய் இருக்கிறேன் என்று நினைக்கும் அறிவானது, பிறப்பினை மாற்றுதற்கு மருந்தாக இருக்கின்றது’, என அதனை நீக்குதற்கு வழி இன்னது என்றும் ஸ்ரீவிஷ்ணு புராணம் கூறுகின்றது. ஆதலால், அளிக்குமவன் ‘எப்போது பாதுகாப்போம்’ என்று சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இவன் பக்கல் விலக்காமை உண்டானால் விரோதி போகத் தட்டு இல்லை என்கை.

99. ஸம்ஸாரார்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம்
விஷ்ணுபோதம் விநாநஅந்யத் கிஞ்சித் அஸ்திபராயணம்.-விஷ்ணு தர்மம், 122.

பிறப்பாகிய பெருங்கடலில் மூழ்கினவர்களாய் ஐம்புலன்களாகிற நீர் வாழ் பிராணிகளால் இழுக்கப்படுகின்றவர்களாய் உள்ள மக்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கிற விஷ்ணுவாகிற ஓடத்தினைத் தவிர, சிறந்த வேறே பாராயணம் இல்லையே

100. ஜ்யோதீம்ஷிவிஷ்ணு: புவநாநிவிஷ்ணு: வநாநிவிஷ்ணு: கிரயோதிஸஸ்ச
நத்ய: ஸமுத்ராஸ்ச ஸஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்திச விப்ரவர்ய.–ஸ்ரீ விஷ்ணு. புரா. 2. 21 : 93.

101. ஸத்யஞ்ச அந்ருதஞ்ச ஸத்யம் அபவத்.–தைத்திரீயம். 6.

‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ என்று விஷ்ணு புராணமும்5‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ என்று தைத்திரீய உபநிடதமும் கூறுதல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.

102. ப்ரஸாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ
தந்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்யோபஜீவந:– ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.

‘பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்

103. ஸமோஹம் ஸர்வபூதேஷூநமேத்வேஷ்ய: அஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி துமாம் பக்த்யா மயிதே தேஷூ சாப்யஹம்.-ஸ்ரீ கீதை. 9 : 24.

 முற்றவும் நின்றனன் – ‘எல்லாப் பிராணிகளுக்கும் நான் ஒத்தவன்; எனக்கு எவனும் பகைவன் இலன்; அன்பனும் இலன்; எவர்கள் என்னைப் பத்தியால் அடைகின்றார்களோ, அவர்கள் போலவே நானும் அவர்களிடத்தில் அன்புடன் வசிக்கின்றேன்,’ என்கிறபடியே அடையும் திறத்தில் ஒத்தவனாய் இருந்தான்.

கடுநவையுண்டாக வருத்தும் வெகுளியும் அருளும்  கோட்டமும் செப்பமும் ஆகிய மறமும் அறமும் உடையாரிடத்து
உடையையாய் இல்லாரிடத்து இல்லாயாய் இருத்தல் அல்லது  மாற்றாருயிரின் கண்ணும் கேளிருயிரின் கண்ணும் அதனை மாற்று
தற்றொழிலும் அதற்கு எமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை; நினக்கு  மாற்றோரும் கேளிரும் இலராதலான். என்றது, குற்றமாகிய மறமுடையாரிடத்து  இல்லையாதலும், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும்  செம்மையுமுடையையாய் அஃதில்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப்  பகையாயினாருயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்குக் கேளிராயினாருயிரின்கண் அதற்கு ஏமஞ்செய்தற்றொழிலும் உடையையல்லை;  அவ்விரு திறத்தாரும் நினக்கு இன்மையான் என்றவாறு,’ என்ற பரிபாடல்  உரைப்பகுதி ஒப்பு நோக்கல் தகும்.

104. வாஸூதேவோஸி பூர்ண:

105. இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
த்வயி கிஞ்சித் ஸமாபன்னே கிம்கார்யம் ஸீதயாமம.-ஸ்ரீராமா யுத். 41 : 4.

இங்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே ‘அடியவர்’ என்கிறார். 1உனக்கு நலிவு சிறிது வந்து இருப்பின், சீதையால்தான் எனக்கு என்ன பயன்?’ என்று, இன்று கிட்டிற்று ஒரு குரங்கை, (சுக்கிரீவனை.)என்றும் தன்னையே அடைந்திருக்கிற பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் அன்றோ! ஆதலால், இறைவனுக்கு அடியவர்களாய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் ஒரு திருவடி, ஒரு திருவனந்தாழ்வான் அல்லர்; இங்கு, இவ்விலக்காமையினை யுடையவர்களேயாவர். ‘காரணம் என்னே?’ எனின், அவர்கள் உள்ள குணத்தை அனுபவித்திருப்பவர்கள், அத்தனையே யாம்; குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலில் அன்றே!-

106. பஹூநாம் ஜந்மநாம் அந்தேஜ்ஞாநவாந் மாம்ப்ரபத்யதே
வாஸூதேவ: ஸ்ர்வம் இதி ஸ மஹாத்மா ஸூதுர்லப:

107. மாதா பிதா ப்ராதா நிவாஸ: ஸரணம் ஸூஹருத்கதி: நாராயண:

108. பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தாரமித்ரா தயோபிவா
ஏகைக பலலாபாய ஸர்வலாபாய கேஸவ:

109. ப்ராயஸ: பாபகாரித்வாத் ம்ருத்யோ: உத்விஜதே ஜந:
க்ருதக்ருத்யா: பாதீக்ஷந்தே ம்ருத்யும் ப்ரியம் இவ அதிதிம்.

110. ஸர்வே வேதா: ஸர்வ வேத்யா: ஸஸ்ஸ்த்ரா:
ஸர்வேயஜ்ஞா: ஸர்வ இஜ்யாஸ்ச க்ருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாபதா:

111. நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண:பர:
நாராயணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண:பர:.-தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8. 

உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ 4‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,

112. நித்யம் த்வதேக பரதந்த்ர நிஐஸ்வரூபா:
பாவத்க மங்கள குணாஹி நிதர்ஸனம் ந:–ஸ்ரீ வைகுண்டராஜ ஸ்தவம், 35.

‘தேவரீருடைய குணங்கள் அன்றோ எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றன

113. பித்யதே ஹ்ருதய க்ரந்தி: சித்யந்தே ஸர்வ ஸம்ஸயா:
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே- முண்டக உபநிடதம்.

‘நம்மைக்காட்டிலும் உயர்ந்தவர்களான பிரமன் சிவன் இவர்களைத் தனக்கு அடிமையாகவுடைய இறைவனைப் பரபத்தியால் பார்த்த அளவில் மனத்தில் இருக்கின்ற அவா முதலியன அழிகின்றன,’

114. ததோமாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸதே ததநந்தரம்.– ஸ்ரீ கீதை, 18 : 55.

பரபத்தியால் என்னை உண்மையாக அறிகின்றவன் பிறகு என்னையே அடைகின்றான்

115. பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜூந
தாந்யஹம் வேத ஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப.-ஸ்ரீ கீதை, 4 : 5.

பகைவர்களை அழியச் செய்கின்ற அருச்சுனா, எனக்கும் பல பிறவிகள் கழிந்தன; உனக்கும் பல பிறவிகள் கழிந்தன; ஆயின், அப்பிறவிகள் பலவற்றையும் யான் அறிகின்றேன்; அவற்றை நீ அறியாய்,’ என்று அருச்சுனனை நோக்கி, ‘நீ பிறந்தது போன்று, நானும் பிறக்கின்றேன்,’ என்கிறான் கிருஷ்ணன்; அருச்சுனன் பிறந்தது பொய் அன்று; ஆதலால், இறைவன் அவதரித்ததும் பொய் அன்று.

116. ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-ஸ்ரீ கீதை, 4 : 9.

அருச்சுனன் பிறவிக்குக் காரணம் கர்மம்; இறைவன் பிறவிக்குக் காரணம் யாது?’ எனின், இச்சையே; இது தன்னை அவதார ரஹஸ்யத்தில் தானும் அருளிச் செய்தான் அன்றே,  ‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’ என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும். 6நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்; 7அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;

117. மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந
தோஷோ யத்யபிதஸ்ய சியாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம்.ஸ்ரீ ராமா. யுத். 18 : 3.

நண்பன் என்ற பாவனையைக்கொண்டு வந்த இவ்விபீடணனை நான் ஏற்றுக்கொள்ளாது விடமாட்டேன்,’ என்னுமவன்

118. அப்ரவீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதோ விபீஷண:
அந்தரிக்ஷ கத:ஸ்ரீமாந் ப்ராதாவை ராக்ஷஸாதியம்.-ஸ்ரீராமா. யுத். 16. 17.

119. லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந: பஹி: ப்ராண இவாபர:-ஸ்ரீராமா. பால. 18 28.

இராவண பவனத்தை விட்டு ஆகாசத்தில் கிளம்பின போதே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மி குடி கொண்டபடியினால் அன்றோ, 7விபீடணனை, ‘ஆகாயத்தை அடைந்த ஸ்ரீமான்’ என்றார்? 8‘இலக்குமணன் லக்ஷ்மியால் நிறையப் பெற்றவன்’ என்றார் இளைய பெருமாளை. இது அன்றோ இவனுக்கு நிலை நின்ற ஐசுவரியம்; இத்தைப் பற்ற ‘உடை’ என்கிறார்.

120. இமௌ ஸ்ம முநிஸார்த்தூல கிங்கரௌ ஸமுபஸ்திதௌ
ஆக்ஞாபய யதேஷ்டம் வை ஸாஸநம் கரவாவகிம்.-ஸ்ரீராமா. பாலகா. 34 : 4.

விஸ்வாமித்திர முனிவரே, உம்மைச் சேர்ந்து சரணம் அடைந்தவர்களாய் இருக்கிறோம் நாங்கள்; ஆணை இட்ட காரியங்களைச் செய்தோம்; இனி எந்தக் காரியங்களைச் செய்யவேண்டும்? விரும்பும் காரியத்தைக் கட்டளை இடுங்கள்,’ என்கிறபடியே, ‘நான் உங்கள் அடியான்; என்னை வேண்டினபடி ஏவிக் காரியங்கொள்ளுங்கள்,’ என்று நிற்பான் என்றபடி

121. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யம் ஆதிதேவம் அஜம் விபும்.–ஸ்ரீகீதை. 10 : 12.

122. பக்த்யாது அநந்யயா ஸக்ய: அஹமேவம் வித: அர்ஜூந
ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்த்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப,-ஸ்ரீகீதை. 11 : 54.

மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’ என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக்கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, 5‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன்

123. ப்ராம்யதாம் அதர ஸம்ஸாரே நராணாம் கர்மதுர்கமே
ஹஸ்தாவலம்பநோஹ்யேகோ பக்தி கரீதோ ஜநார்தந:–வைஷ்ணவ தர்மம்.

உலகங்களை எல்லாம் ஆளும் அரசபுத்திரன் ஒருவன், ஒரு கால விசேடத்தில் சிறிய பொருளுக்காக அடிமைப்படுவானாயின், பின், தன் செல்வக்கிடப்புக் காட்டி மீள ஒண்ணாதது போன்று, சர்வேஸ்வரனும் பத்தியில் நிலை நின்றவனுக்குத் தன்னை அறவிலை செய்து கொடுத்தால், பின்னை, மேன்மை காட்டி அகலமாட்டான்; கழுத்திலே ஓலைக்கட்டித் ‘தூதுபோ’ என்னலாம்படி தன்னைக் கையாள் ஆக்கி வைப்பான். 1‘மக்கள் செய்யும் பத்தியினால், அவர்கட்குத் தன்னை அறவிலை செய்து கொடுக்கின்றான் இறைவன்; அவ்விறைவனாகிய ஜனார்த்தனனே அவர்கட்கு எப்பொழுதும் கையாளாக இருக்கின்றான்,’ என வருதலும் இங்கு ஓர்தல் தகும்.

124. ஹிமவாந் மந்தரோ மேரு: த்ரைலோக்யம் வா ஸஹாமரை:
ஸகயம் புஜாப்யாம் உத்தர்த்தும் ந ஸங்க்யே பரதாநுஜ:ஸ்ரீராமா. யுத். 59 : 111.

125. வாயு ஸூநோ: ஸூஹ்ருத்த்வேந பக்த்யா பரமயா ச ஸ:
ஸத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வம் அகமத் கபே:ஸ்ரீராமா. யுத். 59 : 120

இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ 4‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ என்பன ஸ்ரீராமாயணம்

உள்ளி வெம்பிணத் துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’ —  
என்னும் கம்பராமாயணச் செய்யுள்கள் நோக்கல் தகும்.

126. அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம்வநே.–ஸ்ரீராமா. ஆரண். 37 : 108.

‘ஜனகனுடைய குலத்தில் பிறந்த சீதை விரும்பும் கணவனாக எவன் இருக்கிறானோ, அவனுடைய திறல் வலி அளி முதலிய குணங்கள் அளவிட்டு அறிய முடியாதன,’

127. ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீஸ்ச பத்ந்யௌ.

உனக்கு பூதேவியும் ஸ்ரீதேவியும் என மனைவியர் இருவர்’ எனக் கூறப்பட்டுள்ளது அன்றே? அங்குக்கூறிய அந்த இலட்சுமி சம்பந்தத்தைத் தாம் அங்கீகரித்தமை தோன்ற, ‘மலர் மகள் விரும்பும் நம் அடிகள்’ என்கிறார் இங்கு.

128. தாம்நா சைவோதரே பத்வா-ப்ரத்ய பத்நாத் உலூகலே
க்ருஷ்ணம் அக்லிஷட கர்மாணம் ஆஹச இதம் அமர்ஷிதா.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 14-

129. யதி ஸக்நோஷி கச்ச த்வம் அதிசஞ்சல சேஷ்டித
இதி உக்த்வா அதநிஜம் கர்ம ஸா சகார குடும்பிநீ.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 : 15-

‘யசோதையானவள், தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டுபிடித்து, தாம்பாலே ஓர் உரலோடே அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தினாள்; பொத்தி, ‘துரு துருக்கைத் தனம் அடித்துத் திரிந்த நீ வல்லையாகில் போய்க்காணாய்!’ என்று உறுக்கிவிட்டால் போகமாட்டாதே இருந்தான்

இப்படிப்பட்ட இறைவனுடைய சீரிய சக்தி பல படியாகக் கேட்கப்படுகின்றது’ என்று ஓதப்படும் பொருள், இவளுக்கு எளியதான படியினால் சொல்லுகிறாள்

130. மந்யே ஸாபரணா ஸூப்தா ஸீதா அஸமிந் ஸயநோத்தமே
தத்ர தத்ர ஹி த்ருஸ்யந்தே ஸக்தா: கநக பிந்தவ:

131. ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:
பரிஷ்வஜ்ய ருரோத உச்சை: விஸம்ஜஞ: ஸோக கர்ஸித:

132. ஸாதம் ஸமீக்ஷ்யைவ ப்ருஸம் விஸம்ஜ்ஞா கதாஸூ கல்பேவ பபூவ ஸீதா.
சிரேண ஸம்ஜ்ஞாம் ப்ரதிலப்யசைவ விசிந்தயாமாஸ விஸாலநேத்ரா.–ஸ்ரீராமா. சுந். 38 : 8.

பெருமாளும் பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல்  புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’ எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே  காணப்படுகின்றனவே! ஆதலால், பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’  (அயோத். 88.  14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப்பெருமாள் ஆச்சிரமத்தினின்று நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான்  வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன; பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின்,  சிறந்த காவல் செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை பெறுவதும்.

எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக்கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப்பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக்கொண்டிருந்த இடத்தைகாட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் என்னும்படி இங்கு,மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, மோஹித்துக் கிடந்த இவர், விசாலமான கண்களை யுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப் பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார்.

காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’–  என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.

133. அஜாயமாநோ பஹூதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்.

 பல பிறப்பாய்-தெளிவுடைய தான் சொல்லும் போதும் 2பல பிறவி’ என்பன்; உண்மையினைக் கூறும் வேதங்கள் கூறும்போதும் பல வேறுபட்ட சாதிகளில் பிறக்கிறான்’ என்று கூறும்; அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார், பல பிறப்பு’ என்பர். பிறருக்காகத் தாழ நின்றோம் என்ற நினைவு சிறிதும் இன்றி, அவ்வப் பிறவியின் தன்மைக்குத் தக்கவாறு இருந்தான் ஆதலின், ‘பிறந்து’ என்னாது ‘பிறவியாய்’ என்கிறார்.

134. ஆத்மாநம் மாநுஷம் மந்யேராமம் த ரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யத: ச அஹம் பகவாம்ஸ்தத் ப்ரவீதுமே.-ஸ்ரீராமா. யுத். 120 : 11.

135. ந அஹம் தேவோ ந கர்தர்வோ நயக்ஷோ நசதாநவ:
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோந்யதா.-ஸ்ரீ விஷ்ணு புராணம். (5. 13 : 12.)

பரத்துவ நினைவு சிறிதும் இன்றி இருந்தான் என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின், என்னை நான் மனிதனாகவே நினைக்கின்றேன்;’ என்ற ஸ்ரீ ராமன் வார்த்தையாலும், -நான் தேவன் அலன், கந்தருவன் அலன், இயக்கன் அலன் அசுரனும்  அலன். நான் உங்களுக்குச் சுற்றத்தானாய்த் தோன்றி யிருக்கிறேன்; இப்படித்  தோன்றி யிருப்பதனால் வேறு விதமாக நினைக்கத்தக்கவன் அல்லன்,- என்ற ஸ்ரீகிருஷ்ணன் வார்த்தையாலும் அறிதல் தகும்

136. யுவா ஸூவாஸா: பரிவீத ஆகாத் ஸ உ ஸ்ரேயாந் பவதி ஜாயமாந:-யஜூர் வேதம். 3. 6 : 9.

 இருவர்க்கும் பிறவி ஒத்து இருக்க, இறைவனுக்கு நற்குணங்கள் ஒளி பெறுகைக்குக் காரணம் யாது?’ எனின், 1‘அவன் பிறந்தவனாய் நன்மையுடையவனாகவே இருக்கின்றான்,’ என்கிறபடியே, கர்மம் காரணமாகப் பிறக்கும் பிறவியாய் இருப்பின், பிறக்கப் பிறக்கப் புகர் அழியும்; திருவருள் காரணமாக வருகிற பிறவி ஆகையாலே புகர் பெற்று வாராநிற்கும். அவ்விறைவனே புகழையுடையான்

137. நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே
நமோநம: அநந்த மஹா விபூதயே
நமோநம: அநந்த தயைக ஸித்தவே.-ஸ்தோத்திர ரத்தினம், 21.

எம்பெருமான்’ என்ற சொல்லால், ‘அடியார்க்கு எளியனாய் அடியர் அல்லாதார்க்கு அரியனான என் 2நாயன் நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக்கொடுக்கிறார். 3‘மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகாத உனக்கு வணக்கம் வணக்கம்; மனம் வாக்கு இவற்றிற்குப் புலனாகின்ற உனக்கு வணக்கம் வணக்கம்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

138. ஸஹஸ்ர பாஹூ: ஸர்வஜ்ஞோ தேவோநாம ஸஹஸ்ரவாந்.

139. நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம்
வேத ஸப்தேப்ய ஏவாதௌ தேவாதீநாம் சகார ஸ:–பாரதம்.

பேரும் ஓர் ஆயிரம் – அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திருநாமங்களையுடையவனாய் இருக்கை. குணம் பற்றி வருவனவும், சொரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார். 4‘தேவனுடைய பெயர்கள் ஆயிரமாக இருக்கின்றன,’ எனப் புகலும் பாரதம்

140. அநேக ஜீவேந ஆத்மநா அநுப்ரவிஸ்ய நாமரூபே வ்யாகரவாணி:

பிற’ என்ற சொல் திருமேனியைக் காட்டுமோ?’ எனின், ‘உயிர்கட்குப் பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணினான்’ என்றும். பெயர்களையும் உருவங்களையும் உண்டுபண்ணுகிறேன்,’ என்றும் பெயரோடு உருவமும் சேரக் கூறப்பட்டிருத்தலின்; ஈண்டுப் ‘பிற’ என்பது 7திருமேனியைக் காட்டும்

141. தத்ர பூஜ்யபதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
ஸப்த: அபயம் ந உபசாரேணஹி அந்யத்ரஹி உபசாரத:

142. நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே.- ஸ்ரீகீதை, 9 : 14.

143. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.-ஸ்ரீகீதை, 9 : 34. 

வணக்குடைத் தவநெறி வழி நின்று-வனக்கத்தையுடைய பத்திமார்க்கமாகிற வழியிலே நின்று; பகவத்கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில் ‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ என்று கூறி, பின்னர், என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால், இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவநெறி’ என்கிறார்

பகவான் என்பதற்கு ஆறு குணங்களை யுடையவன் என்பது பொருளாதலின்,  குணங்களை யுடையான் பக்கல் செலுத்தம் பத்தி இன்பமயமாக
இருக்குமாதலின், ‘காதலியோடு கலக்கும் கலவி போன்று இன்ப மயமாக  இருக்கும்’ என அருளிச் செய்கிறார்.

144. ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநம்யம் தப:-முண்டகோபநிடதம் 1. 1 : 10.

பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் அதனைச் சொல்லுகிறார்; அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’ என்கிற நியாயத்தாலேயாதல், இவனுடைய அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலேயாதல்.

தவநெறி’ என்பதற்குப் பத்தி  மார்க்கம், பிரபத்தி மார்க்கம் என்னும் இரண்டனையும் பொருளாகக் கொள்க.

145. ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே.ஸ்ரீகீதை, 2 : 59.

ருசி வாசனைகளும் நீங்குகின்றன,’

146. மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார:-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், 2 : 8.

பிரமனுக்கும் சிவனுக்கும் மத்தியில் முதல் அவதாரம்’ என்கிறபடியே, பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே தோன்றி நிற்கும் நிலையாய் இருந்தது முதல் அவதாரம்;

147 ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண:-சுபால உபநிடதம்.

நன்று எழில் நாரணன் – ‘நன்று’ என்பதனால், அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார். ‘எழில்’ என்பதனால், ‘நீங்கின குற்றங்களையுடையவனும் மோக்ஷத்தையுடையவனும் ஒளி உருவனும் ஒருவனேயானவனும் ஆன நாராயணன்’ என்கிற புகரை நினைக்கிறார். இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு, வடிவின் அழகினைப் பார்த்தவாறே, ‘கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, ‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும் நன்றான அழகு என்று கூறலுமாம். திருப்பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க்கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின், ‘நாரணன்’ என்கிறார்.

148. ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகரணீம் ப்ரஹ்ம விஷ்ணுஸிவாத்மிகாம்
ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவாநேகஏவ ஜநார்த்தந:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 23.

படைத்தல் காத்தல் அழித்தல்களைச் செய்கிற பிரமன் விஷ்ணு சிவன் என்னும் பெயர்களை, பகவான் என்ற பெயரையுடைய ஜனார்த்தனன் ஒருவனே அடைகிறான்,’ என்கிறபடியே, பெயர்களில் ஒக்க எடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பரியாயமான ஜனார்த்தன

149. நந்தந்தி உதிக ஆதித்யே நந்தந்தி அஸ்தமிதே ரவௌ
ஆத்மநோ நாவபுத்யந்தே மநுஷ்யா ஜீவிதக்ஷயம்.-ஸ்ரீராமா. அயோத். 105 : 24.

நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? ‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம்  அருளிச்செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.

150. ஸூக்ருத: ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம்–சாட்யாயன சாகை.

151. அபூத பூர்வம் மமபாவி கிம்வா ஸர்வம் ஸஹேமே ஸஹஜம் ஹி துக்கம்
கிம்து த்வதக்ரே ஸரணாகதாநாம் பராபவோ நாத ந தேநுரூப:-ஸ்தோத்திர ரத்தினம், 25.

நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், (காலம் அறியப்படாமல் வருகின்றமையை நோக்கி ‘உடல்களின் சேர்க்கையும்  நித்தியம்’ என்கிறா)அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம. ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, 5எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம்

பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள்

152. யதா இஷீகதூலம் அக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத.
ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே.-சாந்தோக்ய உபநிடதம், 5. 2

உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும். ‘6தீயிற்போடப்பட்ட நாணற்பஞ்சானது எப்படி அழிகின்றதோ,அப்படியே அவனுடைய எல்லாப் பாபங்களும் நாசத்தை அடைகின்றன

இங்கு, ‘தாயைக் குடல் விளக்கஞ்செய்த  தாமோதரனைத், தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது, வாயினால்
பாடி மனத்தினால் சிந்திக்கப், போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்,’ என்ற திருப்பாவை ஒப்பு நோக்கல் தகும்.

153. மேரு மந்தர மாத்ரோபி ராஸி: பாபஸ்ய கர்மண:
கேஸவம் வைத்யம் ஆஸாத்ய துர்வியாதிரிவ நஸ்யதி.-விஷ்ணு தர்மம். 78.

பாபத்தின் உருவமான கர்மங்களின் கூட்டம், மேருமலை மந்தரமலை இவற்றின் அளவாக இருந்தாலும், கேசவனாகிய மருத்துவனைக் கிட்டின அளவில், கெட்ட நோய்கள் போன்று நாசத்தை அடைகின்றன,

154. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் திகச்சதி
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி– ஸ்ரீ கீதை, 9 : 81.

ஓர் குறைவு இல்லை – ‘மேல் ஒரு குறையும் வாராது. இனி, விரும்பியவை அனைத்தும் எய்தும்,’ எனலும் ஆம் ‘அருச்சுனா, இவ்வர்த்தத்தில் நம்மை நம்பிச் சூளுறவு செய்வாய்; நம்மைப் பற்றினவர்களுக்குக் கேடு வாராதுகாண்; பகவானை அடைவதற்கும் வினை கிடக்கைக்கும் ‘தீயால் நனைப்பது’ போன்று, என்ன சேர்த்தி உண்டு? அது பொருத்தம் அற்றது,’ என்பது பகவான் திருவாக்கு

155. துராசாரோபி ஸர்வாஸீ க்ருதக்நோ நாஸ்திக: புரா
ஸமாஸ்ரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா ஸரணம்யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்ந:பாரதம் சாந்தி பர்வம்.

156. ந வாஸூதேவ பக்தாநாம் அஸூபம் வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் வாப்யுபஜாயதே.பாரதம் அநுசாசன பர்வம்.

தீய ஒழுக்கமுடைமை, உண்ணத் தகாதனவற்றை உண்டல், நன்றி செய்தவனுக்குத் தீமை செய்தல், வேதநெறியினை இல்லை என்றல் ஆகிய இவற்றைப் பல காலம் செய்து போந்தவனான ஒருவன் ‘இவன் அனுகூலன் ஆவது எப்போதோ!’ என்று காலம் பார்த்திருக்கும் இறைவனைச் சென்று பற்றுவானாயின், பற்றிய அவனை, பின்னர்க் குற்றம் அற்றவனாக நினைத்தல் வேண்டும்; ‘எதற்காக?’ என்னில், இவனைக் குறைய நினைக்கையாவது, பகவானுடைய பெருமையைக் குறைய நினைக்கையேயாம்,’ என்றும், 4‘வாசுதேவனுடைய அடியார்களுக்கு ஒரு பொழுதும் கேடுகள் இல்லை,’ என்றும் கூறும் பாரதத்தையும் இங்கு உணர்க.

ஆதலால், இனி, நீங்கள் செய்யவேண்டுவது ஒன்று உண்டு; மனன் அகம் மலம் அறக் கழுவி – சர்வேஸ்வரன், பிரமன் சிவன் இவர்களுக்கு நடுவில் கலந்து நின்றால், ‘இவனோ கடவான், மற்றையவர்களோ!’ என்று ஐயப்படுமது தவிர்ந்து, ‘சர்வேஸ்வரனே கடவான்’ என்கிற மனத்தின் தூய்மை உண்டாக வேண்டும். ‘

157. த்விதா பஜ்யேயம் அப்யேவம் நநமேயம்து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ: ஸ்வபாவ: துரதிக்ரம:.ஸ்ரீ ராமா. யுத். 36 : 11.

மாளும் ஓரிடத்திலும்-முடிகின்ற ஒரு கணத்திலும். வணக்கொடு மாள்வது வலம்-இரண்டு துண்டுகளாக வெட்டப்படக் கடவேன்; அப்பொழுதும் வணங்கேன்,’ என்னாது கிடக்கிற சீரைப்பாயைக் (சீரையாகிய பாயையும்.)கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும். இறைவனையும் பற்றி வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராமல், முடிகிற சமயத்திலே அடையவே பின்னைப் பெற்றோடே தலைக்கட்டும் ஆதலின், ‘மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலம்’ என்கிறார். இதனால், பிறந்தது முதலாக அடைந்தாலும் பலன் இல்லை, இறைவனுக்கு வேறுபட்ட தேவர்கள் பக்கல்; இறைவன் விஷயத்தில் அடைவதிலே தொடங்கி உடனே முடிந்தாலும் பலன் தப்பாது என்கிறார்

158. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே.ரீ கீதை. 4 : 8

 பிரமன் முதலியோர்கட்கும் காரணனாய் அவர்களுக்கு இரட்சகனான சர்வேஸ்வரன், அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின், 1பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும்-பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காக’ என்றது,  ‘நல்லார்கள் தம்மை நலம் புரிந்து காத்தல்’ என்றதன் பொருள். ‘ருசியைத்   தோற்றுவிப்பவன் ஆகைக்காக’ என்றது, ‘எல்லாம் முந்தை அறம் நாட்டம்  உய்த்தற்கு’ என்றதன் பொருள். ‘ஆயின், ‘பொல்லாரைப் போக்கல்’ என்றது  என்னை?’ எனின், ‘பொல்லாரைப்போன்று நெறி போக்கல் அதனுடைய  பலமாய் வருமதுவே’ என்ற வாக்கியத்தால் அது அமுக்கியம் என்கிறார்.
அது, சங்கற்பமாத்திரத்தாலே செய்யலாம் ஆகையாலே, பிரதானம் அன்று  என்றபடி. விரைவும் ருசியும் நேரிற் கண்டால் அல்லது உண்டாகா; ஆதலால்,
அவற்றிற்கே பிராதாந்யம்.

159. பஸ்ய ஏகாதஸ மே ருத்ராந் தக்ஷிணம் பார்ஸ்வம் ஆஸ்ரிதாந்.-மோக்ஷ தர்மம், 36, 11.

160. ப்ரஹ்மாணம் ஈஸம் கமலாஸநஸ்தம் ருஷீம்ஸ்ச ஸர்வாந் உரகாம்ஸ்ச திவ்யாந்.ஸ்ரீ கீதை, 11 : 15.

 வலத்தனன் திரிபுரம் எரித்தவன் – ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார். முப்புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திருமேனியில் வலப்பாகத்தைப் பெற்றுச் சொரூபத்தை அடைந்தவனாய் இருப்பன். 1‘எனது வலப்பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர் பதினொருவரையும் பார்ப்பாய்,’ என்பது மோட்ச தர்மம். ஏழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து – எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித் திருநாபிக் கமலத்தில் இருப்பான். ‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர். 2‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று. இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான காத்தலுக்கும் உபலக்ஷணம்.

161. அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா.–ஸ்ரீ கீதை.

162. த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி.-ஸ்தோத்திர ரத்தினம், 31.

தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார். 2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.

163. ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே.-ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 2.

அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து – வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

164. தத் விப்ராஸ: விபந்யவ: ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே விஷ்ணோ: யத் பரமம்பதம்.-இருக்கு வேதம்.

சடகோபன் குற்றேவல்கள் – இத்திரு நகரிக்குத் தலைவரான ஆழ்வார் சொற்களைக்கொண்டு அடிமை செய்தபடியாயிற்று இவைதாம். ஆயின், சொல் அடிமை மாத்திரம் போதியதாமோ?’ எனின், எல்லாம் நிறைந்த இறைவன் விஷயத்தில் சொற்களைக் கொண்டு செய்யும் அடிமைக்கு மேற்படச் செய்யலாவன இல்லையே! -அப்பரமபதத்தில் இருக்கிற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டே யிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கும் தொழில் இதுவே அன்றோ?

165. அயம் அபர: காரக நியம:-இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர். 

166. ஆத்மாவா அரேத்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய:-பிரஹதாரண்யம். 6. 5 : 6.

மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. ‘இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, (வேற்றுமைகள்  வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,)மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; 3இறைவன் கேட்கத் தக்கவன், நினைக்கத் தக்கவன், தியானம் செய்யத் தக்கவன், பார்க்கத் தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவன் ஆதலாலே.

167. ஆர்த்தோ வா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா.-ஸ்ரீ ராமா. யுத். 18 : 28

ஆர்த்தன் – பேறு பெறுவதற்கு விரைகின்றவன்.  திருப்தன் – ‘பெறுகின்ற காலத்தில் பெறுவோம்,’ என்று இருப்பவன்.
ஆர்த்தன் – அமிதவாதி. திருப்தன் – மிதவாதி.

ஆயின், ‘சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘பசி இல்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம்,’ எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் ‘உணவு உண்ணலாகாது,’ என்று விலக்குவது போன்று, மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்;

168. ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர பலார்த்தந:
மாம்நயேத் யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருஸம் பவேத்.- ஸ்ரீராமா. சுந். 9 : 30.

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே-மதி கலங்கி, அறிவு அழிந்தாள் என்மின். தன் அறிவு அழிந்தாளாகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்; அதாவது, நாம் கொடுத்த அறிவு கொண்டு என்னை அழைத்துக்கொண்டு செல்லும் அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று பிராட்டி இருந்தது போன்று இருப்பாள் என்றபடி. மதி எல்லாங் கலங்கி-‘தாம் மயர்வு அறுத்துத் தந்த ஞானப்பரப்பெல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்மின்; அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவிப்பீர்’ என்றபடி. ‘மேல் எழச்சிறிது கலங்கிற்றாகிலும் பின்பும் நாம் கொடுத்த அறிவு அன்றோ?

169. ஹம்ஸகா ரண்டவாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம்
க்ஷீப்ரம் ராமாய ஸம்ஸத்வம் ஸீதாம் ஹரதி ராவண:ஸ்ரீராமா. ஆரண். 49 : 32.

170. ஆஸோக ஸோகாபநுத ஸோக உபஹத சேதஸம்
த்வந்நாமாநம் குருக்ஷிப்ரம் ப்ரியாஸந்தர்ஸநேந மாம்.ஸ்ரீராமா. ஆரண். 6 : 17.

பறவை முதலானவைகளைத் தூதுவிடல் பண்டைய மரபு ஆமோ?’ எனின், அன்னங்களும் நீர்க்காகங்களும் நிறைந்திருக்கின்ற கோதாவிரி நதியே, உன்னை வணங்குகிறேன்; ‘சீதையை இராவணன் தேரில் ஏற்றுக்கொண்டு செல்கிறான்,’ என்று நீ இராமனிடம் சென்று விரைவிற்கூறு,’ என்று பிராட்டியும், ‘சோகத்தினை நீக்குதலையே இயல்பாகவுடைய அசோக மரமே, கலங்கி இருக்கும் எனக்குப் பிராட்டி இருக்கும் இடத்தினைத் தெரிவித்து, என்னையும் விரைவில் உன் பெயரைப் போலவே செய்,’ என்று பெருமாளும் கூறுதலால், தூது விடல் பண்டைய மரபேயாம்.

171. ஸபர்யாபூஜித: ஸம்யக் ராமோ தஸரதாத்மஜ:
பம்பாதீரே ஹநுமதா ஸங்கதோ வாநரேணஹ,-ஸ்ரீராமா. பால. 1 : 57

இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், 2‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று இருந்தது என்றபடி.வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய  கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால்
நெஞ்சு பறியுண்கை

172. ஸப்ராது: சரணௌ காடம் நிபீட்ய ரகுநந்தந:
ஸீதாம்உவாச அதியஸா: ராகவஞ்ச மஹாவ்ரதம்.-ஸ்ரீராமா. அயோத். 31. 12.

இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே, என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் காரியங்கொள்வது

173. ஏஹபஸ்ய ஸரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்
ஹதாநாம் ராக்ஷஸை: கோரை: பஹூநாம் பஹூதாவநே.ஸ்ரீராமா. ஆரண். 6 : 16.

முனிவர்கள் இராக்கதர்களால் துன்புறுத்தப்பட்ட தங்களுடைய சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்.

174. விக்ராந்த: த்வம் ஸமர்த்த: த்வம் ப்ராஜ்ஞ: த்வம் வாநரோத்தம
யேநஇதம் ராக்ஷஸபதம் த்வய ப்ரதர்ஷிதம்.-ஸ்ரீராமா. சுந். 36 : 7.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது.

175. ததாவித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந: பரமம் ஸாம்யம் உபைதி.-முண்டக உபநிடதம். 3. 1 : 3.

பிரகிருதி சம்பந்தம் இல்லாதவனாய்ப் பரம சாம்யத்தையடைகிறான்” என்கிறபடியே, பரமபதத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றாலும் இறைவனை ஒத்தவர்களாய் அன்றோ இருப்பார்கள்? நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை அறிவது யாங்ஙனம்?’ என்று அன்றோ நாங்கள் இருக்கிறோம் என்பது அவற்றுக்குக் கருத்தாகக் கொண்டு மேல்வார்த்தை சொல்லுகிறாள்: வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப் பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.

176. அக்ரூர: க்ரூர ஹ்ருதய: ஸீக்ரம் ப்ரேரயதே ஹயாந்.-ஸ்ரீ விஷ்ணு புரா. 3. 18 : 19.

அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே, 1தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று. புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;

177. பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்துருசிரே தேஸே க்ரியதாம் இதி மாம் வத.-ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

இதனைச் செய் என்று நியமிக்கவேண்டும்’ என்று இளைய பெருமாள் கூறியது போன்று, ‘நான் ஏவ அன்றே, நீங்கள் போகின்றீர்கள்?’ என்பாள் ‘விடு தூதாய்’ என்றாள். சென்றக்கால் ‘பிறருக்காகத் தூது போகை கிடைப்பது ஒன்றோ? சென்றால், எனக்கு முன்னே உங்களுக்கு அன்றோ பலன் சித்திக்கப் புகுகிறது? (இறைவனை நேரிற் கண்டு மகிழ்தல்.)என்பாள், ‘சென்றக்கால்’ என்கிறாள். இனி, ‘பிறர்க்காகத் தூது போதலால் உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ?’ (அடிக்கழஞ்சு : அடி – ஈண்டுப் பாதத்தைப் பெயர்த்து வைத்தல்; கழஞ்சு –  பொன் ; அதாவது – மேன்மை பெறுதல் என்றபடி.)என்பாள், அங்ஙனம் கூறுகிறாள் எனலுமாம். வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின், அரச குமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாதபோது (வெற்றிலை கொடாதபோது.)அவர்கள் வருந்துவார்கள் : அது போன்று, இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள்

178. ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:
மயாகாலம் இமம் ப்ராப்ய தத்த்: தஸ்ய மஹாத்மந:ஸ்ரீராமா. அயோத். 2 : 42.

மனிதர்களுக்குத் துன்பம் வந்த போது அவர்கள் அடையும் துன்பத்தைக்காட்டிலும் சரீரங்களை ஸ்ரீராமபிரானுக்குக் காட்டியது’ போன்று, இவளும் ‘எனக்கு’ என்று, விரகம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள். இனி, ‘அவனோடே கலந்து பிரிந்து, ‘கண்ணாலே காணப்பெறுவது என்று காண்’ என்னும் விருப்பத்தோடே இருக்கிற எனக்கு,’ என்று பொருள் கூறலுமாம். அருளி – இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

179. லோகே த்வந் முக ஸத்ருஸம் க்வாபிந த்ருஷ்டம் இதி மயி வததி ராகாத்
ஹரி ஹரி குபி தாஸா அபூத் அந்யத் உபக்ராந்தம் அந்யத் ஆபதிதம்.–ஸ்ரீராமா. சுந். 36 : 7.

இவள் நாரையைப் புகழ்ந்து கொண்டாடியது, “வானர உத்தமனே, நீ மிக்க பளமுடையவன்; நீ மிக்க ஆற்றல் வாய்ந்தவன்; நீ மிக்க அறிவு நிறைந்தவன்,” என்று பிராட்டி புகழ்ந்தது போன்று இருந்தது

180. ஸா ப்ரஸ்கலந்தீ மதவிஹ்வலாக்ஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸலக்ஷணா லக்ஷ்மண ஸந்நிதாநம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி:–ஸ்ரீராமா. கிஷ். 33 : 37-

ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள்.
ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல் அடியாக இட்டு வந்தாள்.
மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளால் தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள்.
ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடிய பேணாதே வந்தாள்.
ஸலக்ஷணா – புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள்.
லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்.
தாரா – தாரையானவள்.
நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்க என்று தோற்றும்படி இருந்தாள்.
அப்படிப்பட்ட நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று இருக்கிறாள்.

இளையபெருமாளுடைய வில்லின் நாண் ஒலி செவிப்பட்ட பின்னர், மது அருந்தியதால் உண்டான கலக்கமும் தெளிந்து, கழுத்தில் மாலையையும் அறுத்துப் போகட்டு, ‘இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், 1கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் எனினும், அமையும். ‘ஆயின், பட்டத்துத்தேவியை முன்னிடலாமோ?’ எனின், 2இளையபெருமாளுடைய திருவுள்ளத்தில் சிவிட்குத் தாரையையிட்டு ஆற்றவேண்டிற்றுக்காணும் இருந்தது.

181. கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்.– ஸ்ரீராமா. யுத். 21 : 77.

ஆயிரம் பசுக்களைக் கொடுத்த கைகள்’ என்கிறபடியே, கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு. இதனால், தலைவர் கால தூர தர்சி (மிக்க தூரத்திலுள்ளவற்றை எல்லாம் அறிகிறவர்)என்பதனைத் தெரிவிக்கிறாள். கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.

182. தத்சித்த விமலாஹ்லாத க்ஷீணபுண்யசயா ததா
ததப்ராப்தி மஹாதுக்கவிலீநா ஸேஷபாதகா.
சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்வாஸ தயாமுக்திம் கதாஅந்யா கோபகந்யகா.

183. அதவாகிம் ததாலாபை: அபராக்ரியதாம் கதா.
அப்யஸௌ மாதரம் த்ரஷ்டும் ஸக்ருத்அபி ஆகமிஷ்யதி–ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.

ஆசையின் மிகுதியினாலே, ‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று கூறியது போன்று கூறுகின்றாள் மேல்:

184. நசாஸ்ய மாதா நபிதா நசாந்ய:
ஸ்நேஹாத் விசிஷ்ட: அஸ்தி மயா ஸமோவா
தாவத்த்யஹம்தூத ஜிஜீவிஷேயம்
யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய.-ஸ்ரீராமா. சுந். 36 : 30.

பெருமாள் பக்கல் குறையேயாய், தன் பக்கல் குறை தோற்றாதபடி வார்த்தை அருளிச் செய்தவாறே ‘நாமோ தாம் இங்கு நன்றாகச் செய்தோம், பெருமாளைப் பிரிந்த பின்னர் முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே!’ என்ன ‘மாதா என்றும் பிதா என்றும் பலர் பக்கலிலும் 2பாலி பாயக் கூடியதான அன்பை, பெருமாள், என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடைசெய்து போந்தார்; அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர, விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றைதாள் இருந்தேனாகில்காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.

ஊணிலா யாக்கை பேணி உயர்புகழ் சூடாது உன்முன்
நாணிலாது இருந்தேன் அல்லேன்; நவையறு குணங்கள் என்னும்
பூணெலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய்.’கம்ப. யுத். 1603.

185. ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத்விரதம் மம.-ஸ்ரீராமா. யுத்த. 18 : 33.

அருளாத நீர்-‘என்னை வணங்குகின்றவனை நான் பாதுகாக்கிறேன்; இது எனக்கு நோன்பு,’ என்று திருவருள் புரிவதற்குச் சங்கற்பித்திருக்குமாறு போன்று, அருளாமைக்குச் சங்கற்பித்திருக்கிற நீர். 3‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேடம் என்று அறிகிலோம்; ‘அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்

186. ஜீவந்தீம் மாம் யதாராம: ஸம்பாவயதி கீர்த்திமாந்
தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசாதர்மம் அவாப்நுஹி.-ஸ்ரீராமா. சுந். 3 : 10

கீர்த்தியை யுடைய இராமன் என்னைப் பிழைத்து இருப்பவளாக எப்படிக் கௌரவிப்பாரோ, அப்படி உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது,’ என்றாள் பிராட்டியும். ‘நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது? அவன் அருள் செய்யப் போகின்றானோ?’ என்ன, ‘நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப்புள்-அருட்கடலான பறவை. ‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே ‘அருளாழிப்புள்’ என்கிறாள்

187. பத்ம ஸௌகந்திகவஹம் ஸிவம் ஸோகவிநாஸநம்
தந்யா லக்ஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம்.–ஸ்ரீராமா. கிஷ்கிந். 1 : 105,

என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத் தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக் கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான் மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை இவளுக்கு

நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே, அந்தர ஜாதி காலிலே துகை உண்பதே-ஆகாயத்தில் உண்டாகிற காற்றாலே. ‘தாழ்ந்த
சாதியின் கால்களிலே’ என்பது தொனிப் பொருள்.

188. அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்சு: விதாதா க்ருதலக்ஷண:-ஸஹஸ்ரநாமம்.

189. பாபாநாம்வா ஸூபாநாம்வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேண நகஸ்சிந்ந அபராத்யதி.-ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.

நான் படுகிற துன்பம் போராது என்று கீழாண்டைச்சிகை (பழங்கணக்குகளிலே நிற்கிற நிலுவை.)வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, ‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’ என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக் ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவு படுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை

190. ஸகுருஷ்வ மாஹாத்ஸாஹ க்ருபாம் மயி நரர்ஷப
ஆந்ருஸம்ஸ்யம் பரோதர்ம: த்வத்தஏவ மயாஸ்ருத:–ஸ்ரீராமா. சந். 40 : 41.

பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.

191. கிம்கோபமூலம் மநுஜேந்தரபுத்ர கஸ்தேந ஸந்திஷ்டதி வாங்கிநிதேஸே
கஸ்ஸூஷ்க வ்ருக்ஷம்வநம் ஆபதந்தம் தவாக்நிம் ஆஸீததி நிர்விஸங்க:–ஸ்ரீராமா. கிஷ்கிந். 33 : 40.

கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்-மநுஜேந்த்ரபுத்ர – அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த  குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டுகொண்டு போந்தார் உங்கள்  தமப்பனார்; அவர் வயிற்றிலே பிறந்து, குற்றம் செய்தோம் என்று தலையறுக்க வந்து நின்றீர் நீர்; அழகிதாயிருந்தது உம்முடைப் போக்கு? கஸ்தேந  ஸந்திஷ்ட திவாஙநிதேஸே – சாஸ்திரவஸ்யமன்றிக்கே கண்டதிலே கடுகச் சாபலத்தைப் பண்ணி மீளமாட்டாத விலங்குளை நீரே ‘இழந்த போகங்களை புஜிப்பது’ என்று சேர்த்துவிட்டு. நீர் சொன்னவற்றைச் செய்தன என்று தலையறுக்க வந்து நின்றீர்; இப்படிச் சொல்லாம்படியன்றே இவர்
பொறையிருப்பது?’ என்பது அச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த  பொருள்.

192. லௌகிகம் வைதிகம் வாபிததா ஆத்யாத்மிகம் ஏவ வா
ஆத்தீத யதோஜ்ஞாநம் தம்பூர்வம் அபிவாதயேத்.

193. ஜடிலம் சீரவஸநம் ப்ராஞ்ஜலிம் பதிதம்புவி
ததர்ஸராமோ துர்தர்ஸம்யுகாந்தே பாஸ்கரம்யதா.–ஸ்ரீராமா. அயோத். 100 : 1.)

ஜடிலம்-நல்ல மாலை வத்தால் ‘பிள்ளை பரதன் மயிருக்காயிருந்தது’ என்றாயிற்றுச் சக்கரவர்த்தி கூறுவது; அவனாயிற்றுச் சடை புனைந்திருக்கிறான்.
சீரவஸநம்-நல்ல வஸ்திரம் கண்டால் ‘இது பிள்ளைக்கு ஆம்’ என்று கூறுவர்; அவனன்றோ மரவுரி உடுத்திருக்கிறான்’ ப்ராஞ்ஜலிம்-அவர்கள் இரந்து கொடுக்கப் பெறுமவன், தன் விருப்பத்துக்குத் தான் இரப்பாளனாயிருந்தான்.
பதிதம் புவி – ‘படுக்கையுறுத்தும்’ என்று மடியில் கண் வளருமவனாயிற்றுத் தரைக் கிடை கிடக்கிறான்.
ததர்ச ராமோ துர்த் தர்சம்- வத்த கண் வாங்காதே கண்டு கொண்டிருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாதபடி இருக்கிறவனை.
யுகாந்தேபாஸ்கரம் யதா–பெருமாள் ஒருவர்க்கும் கண் வைக்க ஒண்ணாமையே யன்றி ‘உலகமே அழியப் புகுகின்றதோ!’ என்னும்படி யிருந்தான்’

சாதுர்த்திகம் – இது ஒரு முறை ஜூரம்; நான்கு நாள்களுக்கு ஒரு முறை  வருவது; உடலிலுள்ள நீர் இரத்தம் சதை எலும்பு இவற்றைப் பற்றி வருவது.
‘சாதுர்த்திகமாயிராதது போன்று’ என்றது, ஸ்ரீராமபிரானைப் பிரிந்ததால்  உளதாய விரஹதாபமாகிய நோய் விட்டு நீங்குதல் இன்றி, என்றும்
நிலைபெற்று நின்று ஸ்ரீ பரதாழ்வானை வருத்தியதாதலின், உலகமக்கட்கு விட்டுவிட்டு வருகின்ற முறை ஜூரம் முதலிய நோய்களைப் போன்றது
அன்று ஸ்ரீ பரதாழ்வானுடைய நோய் என்றபடி.

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய் – ‘எனது நிலையை அங்கே சென்று சொல்,’ என்ன, சொல்லாதே இருந்தொழிந்தாய்; ‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் 1சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள். ‘வந்தொழிந்தான், போயொழிந்தான்’ என்பன போன்று, ‘இருந்தொழிந்தாய்’ என்பதும் ஒரு சொல். தானும் நாயகனும் சேர இருத்தலை ஒரு வார்த்தையினாலே நோக்கலாய் இருக்கவும், அது செய்யாது ஆறியிருந்தது ஆதலின், ‘இருந்தொழிந்தாய்’ என்கிறாள்.

வெயர்த்த மேனியன் விழிபொழி மழையன்மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்துழந்து அழிவான்
அயிர்த்து நோக்கினும் தென்றிசை அன்றிவேறு அறியான்
பயத்த துன்பமே உருவுகொண்டு என்னலாம் படியான்.’–
  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஈண்டு நினைவு கூர்க.

194. ஸ்ருஷ்ட: த்வம் வநவாஸாய ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ: புத்ர ப்ராதரி கச்சதி.- ஸ்ரீராமா. அயோத். 40 : 5.

நீ காட்டில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று இளையபெருமாளைப் பார்த்துச் சுமித்திராதேவி கூறியது போன்று, இவளும் ‘வைக்கவே வகுக்கின்று’ என்கிறாள். ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய், எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான் என்றபடி. ‘ஆயின், தொண்டு செய்வதால் உயிர்களுக்குச் சொரூப லாபம் ஒழிய இறைவனுக்கு இத் தொண்டுகளால் பயன் இல்லை யாதலின், அவதாரிகையில் ‘நிதி உண்டு’ என்ற எடுத்துக்காட்டுச் சேராதே?’ எனின், அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் சொரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக்கொண்டு அன்றோ சொரூப சித்தி?

195. அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸூவீர்யம் அபாஸ்ருஜத்.

எல்லாப் பொருளுமாக விரிகின்றேன்’ என்கிறபடியே, தன் திருமேனியின் மலர்த்தியே உலகம் ஆதலின் ‘ஆக்கி’ என்னாது ‘ஆய்’ என்கிறாள்.
ஆழி நீர் கடல் தோன்றி- 2‘அப்பரம்பொருள் முதன்முதலில் தண்ணீரையே படைத்தார்’ என்கிறபடியே, மிக்க தண்ணீரையுடைய ஏகார்ணவத்தை உண்டாக்கி. அதனுள்ளே கண்வளரும்-இவ்வருகு உண்டான படைத்தல் முதலியவற்றிற்காக அங்கே வந்து கண்வளர்ந்தருளும்

196. வாஹிவாதயத: காந்தா தாம்ஸ்ப்ருஷ்ட்வா மாமபிஸ்ப்ருஸ
த்வயி மே காத்ரஸ்ம்ஸ்பர்ஸ: சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:- ஸ்ரீராமா. யுத். 5 : 9.

சீதா பிராட்டியால் பார்க்கப்பட்ட சந்திரனை நான் பார்க்கிறேன்; ஆதலால், கண்ணின் கலவி உண்டாயிற்று’ என்பது போன்று, கண்டாரைக் காணும் இத்தனை அன்றோ தனக்கு

197. விசித்ரா தேஹஸம்பத்தி: ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா.ஸ்ரீ விஷ்ணு தத்துவம்.

இது சொல்லி-‘வைக்கவே வகுக்கின்று’ என்கிற வார்த்தையைச் சொல்லி. இனி, ‘இறைவனை நிவேதிக்கும் பொருட்டே கைகால் முதலிய உறுப்புகளையுடைய விசித்திரமான இச்சரீரமானது முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘தேவர் திருவடிகளிலே எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்காக அன்றோ இதனை உண்டாக்கினாய்?’ என்னும் இதனைச் சொல்லி என்று கூறலும்

198. அகாலபலிநோ வ்ருக்ஷா: ஸர்வேசாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந்நயோத்யாம் ப்ரதி கச்சத:ஸ்ரீராமா. யுத். 127, 17.

வளம் வயல் – ‘மரங்கள் காலம் அல்லாத காலங்களிலும் பலத்தையுடையனவாய் இருந்தன,’ என்கிறபடியே, திருநகரியும் தளிரும் மொட்டுமாகவே எப்பொழுதும் இருக்குமாயிற்று. வாய்ந்து

கண்ணனை – இவ்வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே அடியார்க்கு எளியவன் ஆனான். இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் கிருஷ்ணன் என்னவும் ஆம். இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்பியமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

கண்ணன்’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார். முதற்பொருள்,  கண்ணுக்கு விஷயமானான் என்பது; இப்பொருளில், குறிப்பு
வினையாலணையும் பெயர்; இரண்டாவது பொருளில் பெயர்ச்சொல்.

‘வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்துஇமை யாது நின்ற
மாதரார் கண்க ளூடே வாவுமான் தேரிற் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத்தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்.’–என்ற கம்பராமாயணச் செய்யுள்

 199. யதிப்ரீதி: மஹாராஜ யதி அநுக்ராஹயதா மயி
ஜஹிமாம் நிர்விஸங்க: த்வம் ப்ரதிஜ்ஞாம் அநுபாலய.-ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.

200. நகலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீஜலே
த்யஜேயம் ராகவம் வம்ஸே பர்த்து: மாபரிஹாஸ்யதி.-ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.

தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியஸூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, ‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? மேலும்,  இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே  பிராட்டி? (நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப்  பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,’ என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.)அப்படியே, இவரும், ‘ஊருணியிலே (ஊருணி-குளம். ‘ஊரிலுள்ள மக்களால் தண்ணீர் உண்ணப்படுவது’ என்பது
பொருள்.)கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய ஸூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப் புக்கார்-

201. நஷ்டோமோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரஸாதாத் மயா அச்யுத
ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யேவசநம்தவ.-ஸ்ரீகீதை. 18 : 73.

உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, ‘கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,

202. க்ருஷ்ணாஸ்ரயா: க்ருஷ்ணபலா: க்ருஷ்ணநாதஸ்ச பாண்டவா:
க்ருஷ்ண: பராயணம் தேஷாம் ஜ்யோதிஷாமிவ சந்த்ரமா:-பாரதம், துரோணபர்வம், 183 : 24.

வல் ஆன் ஆயர் தலைவனாய் – ‘பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்தவர்கள்; அவனையே வலிமையாக உடையவர்கள்; அவனையே தலைவனாக உடையவர்கள்,’ என்பது போன்று, கிருஷ்ணனைத் துணையாகக்கொண்டு நாட்டினை அழித்துத் திரியும் மிடுக்கைப்பற்ற ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்

203. ஹேஸூந்தர ஏகதரஜந்மநி க்ருஷ்ணபாவே
த்வௌ மாதரௌச பிதரௌச குலேஅபித்வே
ஏகக்ஷணாத் அநுக்ரஹீதவத: பலம்தே
நீளாகுலேந ஸத்ருஸீகில ருக்மணீச.–சுத்தரபாஹூ ஸ்தவம், 7.

வாரீர் அழகரே, உம்முடைய கிருஷ்ணாவதாரத்தில் இரண்டு தாய்மாரையும் இரண்டு தமப்பன்மாரையும் இரண்டு குலத்தையும் ஒரு கணத்தில் ஏற்றுக் கொண்ட உமக்குப் பலன், குலத்தோடு ஒத்திருக்கிற நப்பின்னைப் பிராட்டியும் உருக்குமிணிப் பிராட்டியும்’ என்றார் கூரத்தாழ்வானும். இத்தால் – ‘ஆயர்குலத்தினன் ஆகையாலே நப்பின்னைப்பிராட்டியை ஏற்றாய்; அரசகுலத்தினன் ஆகையாலே உருக்குமிணிப்பிராட்டியை ஏற்றாய்’ என்றபடி

வல் ஆன் ஆயர் தலைவனாய்–அவ் வன்மையாவது, தலையிருக்க உடம்பு குளித்தும், 1உடம்பு இருக்கத் தலை குளித்தும் அன்றே அவர்கள் திரிவார்கள்? எல்லாரும் கார்த்திகை புதியதற்குக் குளித்தார்களாகில் இவன் அதுவும் செய்யாதே இடைத்தனத்தில் ஊன்றி இருத்தல். ‘இவன் இவ்வாறு இருத்தற்குப் பயன் யாது?’ எனின், இப்படி இருக்கில் அல்லது அவ்வாயர்கள் பெண் கொடார்கள் அன்றே? ஆதலால், பெண் கோடலே பயன்.

204. துல்யஸீலவயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம்
ராகவ: அர்ஹதி வைதேஹீம் தம்சஇயம் அஸிதேஷணா.– ஸ்ரீராமா. சுந் 16 : 5.

தக்க வயதினையும் ஒழுக்கத்தினையும் குலத்தினையும் உடைய பிராட்டிக்குத் தக்கவர் அந்த ஸ்ரீராமபிரான்; கறுத்த கண்களையுடைய பிராட்டியும் அந்த ஸ்ரீராமனுக்குத்தக்கவள்,’ என்கிறபடியே, ஈண்டும், கிருஷ்ணனும் நப்பின்னைப்பிராட்டியும் ஒத்தவர்களாய் இருந்தும், எருதுகளை முன்னிட்டு அவற்றைத் தழுவச் செய்தனர் ஆதலின், ‘வல் ஆன் ஆயர்’ என்கிறார்’ எனலும் ஒன்று.    இளஏறு ஏழும் தழுவிய – யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் 4ஊட்டியாக ஒருக்காலே தழுவினான்

205. ஸ: அவதீர்ணோ ஜகர்யத்தே மாம் அக்ரூரேதி வக்ஷ்யதி.- ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 17 : 12.

நினைந்து நைந்து வணங்கினால் – பிரமன் முதலிய தேவர்கள், திருவாராதனத்திற்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களைச் சமைத்துக்கொண்டாயிற்று இழிவது. நாம் இவற்றைக்கொண்டு சென்றால் நம்மைக் குளிர நோக்குவனே; ‘ஸ்ரீ கிருஷ்ணர் என்னைப் பார்த்துக் ‘குற்றம் அற்ற அக்குரூரனே’ என்று அழைத்துப் பேசுவார்,’ என்று, கம்ஸன் ஏவலால் கிருஷ்ணனை அழைக்கச் சென்ற அக்குரூரன் நினைத்துச் சென்றது போன்று, ‘நம்மை வினவக்கடவனே’ என்று இங்ஙனே முந்துற நினைப்பார்கள்; பின்னர், தரித்திருக்க மாட்டாதே கட்டுக் குலைந்த மனமுடையவர்கள் ஆவார்கள். உள் கரைந்து உருகி – நையுமது தூலம் என்னும்படி உள்கரைவர்கள்; பின்னர், ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாதபடி மங்குவார்கள். ‘இப்படிப் படுகின்றவர்கள்தாம் யார்?’ என்றால், இமையோர் பலரும் முனிவரும் – பிரமன் முதலான தேவர்களும், சனகன் முதலான முனிவர்களும், ‘ஆயின், இச்செயல் முனிவர்களுக்குப் பொருந்தும்; செருக்கினைக்கொண்ட தேவர்களுக்குப் பொருந்துமோ?’ எனின், இராசத தாமத குணங்களால் மேலிடப்பட்ட போது செருக்குக் கனத்து இருக்குமாறு போன்றே, சத்துவம் தலை எடுத்த போது பகவானுடைய குணங்களை அனுபவித்துக் கட்டுக்குலைந்து உருகுகிறபடியும் கனத்திருக்கும். புனைந்த கண்ணிநீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – இப்படி அவர்கள் அன்பே மிக்கு இருப்பவர்கள்

206. ஸதேவ ஸோம்யஇதம் அகர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்.

 நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 4‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் – கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’

தான் ஓர் உருவே தனி வித்தாய்-‘சோமபானம் செய்தற்குரிய சுவதே கேதுவே, காணப்படுகிற இவ்வுலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்து’ என்று சொல்லக்கூடியதாய், நாம ரூபங்கள் இன்மையின் ஒன்றாய், அடையத்தக்க இரண்டாவது பொருள் வேறு இல்லாததாய் இருந்தது,’ என்கிறபடியே 3இங்கும், இரண்டு இன்மையைக் காட்டுகிற ‘தான் ஓர் தனி’ என்னும் பதங்கள் மூன்று உண்டாய் இருந்தன; ‘இச்சொற்களுக்குப் பயன் யாது?’ எனின், படைத்தலை அருளிச் செய்வதனால் காரண விஷயமாகக் கிடக்கின்றன. மூன்று காரணங்களும் தானே என்கை. ‘தான்’ என்கிற இதனால், முதற்காரணம் வேறு இல்லை என்கை. ‘ஓர்’ என்கிற இதனால் துணைக்காரணம் வேறு இல்லை என்கை. ‘தனி’ என்கிற இதனால், நிமித்த காரணம் வேறு இல்லை என்கை

தன்னுளே ஆகியும்-‘இவையும் அவையும்’ என்று இங்ஙனம் பிரித்துப் பேச ஒண்ணாதபடி. அவன் ஒருவனே’ என்கிறபடியே, தான் என்கிற சொல்லுக்குள்ளே ஆகும்படி தன் மேலே ஏறிட்டுக்கொண்டு தரித்து இருந்தபடியைச் சொல்லுகிறார்

207. ஸப்ரஹ்மா ஸஸிவ: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட்.- நாராயண அநுவாகம்.

இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, 1தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க. இனி, தன்னின் மூவர் முதலாய-பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம். 2இந்திரனோடு கூட’ என்று புகலும் உபநிடதமும்.

முன்னுரு வாயினை நின்திரு நாபியின் முளரியின் வாழ்முனிவன்
தன்னுரு வாகி இருந்து படைத்தனை பலசக தண்டமுநீ
நின்னுரு வாகி யளித்திடு கின்றனை நித்த விபூதியினால்
என்னுரு வாகி யழிக்கவும் நின்றனை ஏதமில் மாதவனே!’–  என்று சிவபிரான், கண்ணபிரானை நோக்கிக் கூறிய கூற்று ஈண்டு
நினைக்கத் தகும். வில்லி பா. 13-ஆம் போர். 220.

208. தயா அவலோகிதா தேவா விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தயா
லக்ஷ்ம்யா மைத்ரேய ஸஹஸா பராம் நிர்விடுதிமாகதா:–ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.

மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே

209. நதேரூபம் நச ஆகாரோ ந ஆயுதாநி நசாஸ்பதம்
ததரபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே.-ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.

வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும்படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார்

210. ததஸ்ய ப்ரியம் அபிபாதோ அஸ்யாம் நரோயத்ர தேவயவ: மதந்தி
உருக்ரமஸ்ய ஸஹிபந்து: இத்தா விஷ்ணோ: பதேபரமே மத்வ உத்ஸ:-விஷ்ணு சூக்தம்.

உன் தேனே மலரும் திருப்பாதம்’ என்று அதனையே விரும்புகிறார் என்று கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால், தேனே மலரும் திருப்பாதம் என்பதற்கு, 2‘திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்த இறைவனுடைய திருவடிகளினின்று அமிர்தவெள்ளம் உண்டாகிறது’ என்கிறபடியே, தேன் போன்று இனிய கங்கையானது தோன்றுகின்ற திருவடிகள் என்று பொருள் கொள்க.

211. க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம்தவாங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்.

கேசவா-(என்று பிரம ருத்திரர்களுக்கு உத்பாதகனான பிரத்யும்நனைச் சொல்லுகிறார்.)‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்; எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்; நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்

212. ஸ்துத: அஹம் யஸ்ந்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்யதே
ஸபலம் தேவி ஸஞ்ஜாதம் ஜாதோஹம் யத்தவ உதரரத்.ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 8 : 14.

213. ப்ராதுர்ப்பவதி லோகாநாம் பாலநார்த்தம் ஸ்வலீலயா
ந ஏஷ கர்ப்பத்வம் ஆபேதே ந யோந்யாம் அவஸத் ப்ரபு:பாரதம்.

முன்னமே உலகு ஏழ் உண்டாய்-முன்பு ஒரு காலத்திலே உலகங்கள் ஏழனையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய். உமிழ்ந்து-பின்னர் அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்து. மாயையால் புக்கு வெண்ணெய் உண்டாய் – இச்சையால் புக்கு வெண்ணெய் உண்டாய். ஈண்டு ‘மாயை’ என்றது, 2மாயா வயுநம் ஞானம்’ என்கிறபடியே, இச்சா பரியாயமான ஞானத்தை. அது செய்யுமிடத்தில் சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே? ஆதலால், சிறு மனிசர், உவலை யாக்கை நிலை எய்தி – சிறிய மனிதர்களுடைய தாழ்ந்த சரீரத்தினுடைய நிலையைப் பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனிக்கு உண்டாக்கிக்கொண்டு வந்து இப்படிச் செய்தாய். ‘கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழிகோல்கை, சறையினார்’ என்னும் நிலையுள்ள ஆயர்கள் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி வெண்ணெய் அமுதுசெய்தான் என்றபடி. ‘தேவகியே நீ முற்பிறவியிற்செய்த நல்வினையானது இப்பொழுது பலத்தைத் தந்திருக்கின்றது; நான் எக்காரணத்தால் உன்னுடைய உதரத்தின் வழியால் உண்டானேனோ’ என்பதனால் கர்ப்பவாசம் சொல்லியிருந்தும், ‘இந்தக் கிருஷ்ணன் கர்ப்பவாசம் செய்யும் தன்மையை அடையவில்லை; யோநியிலும் வசிக்க இல்லை,

214. தஸ்யா: ஸ்தநம் பபௌ க்ருஷண: ப்ராணை: ஸஹநநாதச
ஸ்தந்யம் தத் விஷ ஸம்மிஸ்ரம் ஆஸீத் ஜகத் குரோ:ஹரி வம்ஸம். 53.

தீய அலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய-‘பூதனையை முடித்து உலகத்துக்கு ஒரு தலைவனைத் தந்த உலக குருவான கிருஷ்ணனுக்கு விஷத்தோடு கூடிய அம் முலைப்பால் சுவையுடையதாயிற்று,’ என்கிறபடியே, உலகத்துக்கு வேர்ப்பற்றானவனை ‘முடிக்கப் பார்த்த நெஞ்சில் தீமையை யுடையளாய், யசோதைப் பிராட்டியைப் போன்று அன்பு தோற்றப் பலவாறு பேசிக்கொண்டு வருகின்றவளாய், தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனையுடையவளான பூதனை முடியும்படியாக  தூய குழவியாய்-ஐஸ்வரியமான மேன்மையும் நடையாடாநிற்கவும், அது தோற்றாதபடி கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தையுடையனாய். ‘இவனுக்குப் பிள்ளைத்தனத்தில் குறை இல்லையாகில், அதன் காரியம் காணாது ஒழிவான் என்?’ என்னில், விடப்பால் அமுதா அமுது செய்திட்ட-விஷம் அமிருதாம் முகூர்த்தத்திலேயாயிற்றுப் பிறந்தது. ‘ஆயின், அவள் இறக்கும்படி எங்ஙனம்?’ எனின், தர்மியை வேறு ஒன்று ஆக்க ஒண்ணாமையாலே விரோதித்த அசுரக் கூட்டங்கள் இறந்தார்கள் இத்தனை மாயன் – விஷம் அமிருதாம்படி புசித்துத் தன்னைத் தந்து நன்மை உண்டாக்கின ஆச்சரியத்தை யுடையவன்.

அவள் பால் உயிர் – அவளுடைய தாழ்ந்த சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர். பால்-ஏழனுருபு. செக-முடியும்படி. இனி, ‘அவள் பால் உயிர் செக’ என்பதற்கு, ‘அவள் பாலும் உயிரும் முடியும்படி என்று கோடலும் ஆம். ‘முலையூடு உயிரை, வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே,’ என்றார் திருமங்கை மன்னனும். ‘முலை உண்டான்’ என்றால் ‘முலைப்பால் உண்டான்’ என்று பொருள் படுமாறு போன்று, ‘முலையூடு’ என்ற இடத்தும் ‘முலை’ என்றது முலைப்பாலை. உண்ட பெருமான் – ‘முலையின் வழியே வருகின்ற விஷம் கலந்த பாலைக் குடித்து, அவளை முடித்து, உலகிற்கு எல்லாம் குருவாகிய தன்னைத் தந்தவன்’ என்கிறபடியே, அவள் முலை உண்டு அவளை முடித்து, உலகிற்கு ஒரு சேஷியைத் தந்தவன்.

215. திலதைலவத் தாருவஹ்நிவத் துர் விவேச த்ருகுண க்ஷண க்ஷரண ஸ்வபாவ அசேதந
ப்ரக்ருதிவ்யாப்திரூப துரத்யய பகவந் மாயா திரோஹித ஸ்வப்ரகாஸ:–ஸ்ரீ ரங்க கத்யம்.

சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து – ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,

216. த்வதங்க்ரி முத்திஸ்ய கதாபி கேநசித் யதா ததாவாபி ஸக்ருத்க்ருத: அஞ்ஜலி:
ததைவ முஷ்ணாத்யஸூபாந்யஸேஷத: ஸூபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே.-ஸ்தோத்திர ரத்தினம்

உன்னுடைய திருவடிகளைக் குறித்து ஒரு காலத்தில் ஒருவன் எவ்விதத்திலாயினும் ஒரு முறை அஞ்சலி செய்ய முயற்சி செய்வானேயாயின், செய்யப்படும் அவ்வஞ்சலியினால், அப்பொழுதே பாவங்கள் அனைத்தும் அடியோடே ஓடி விடுகின்றன; மேலும், அவ்வஞ்சலியானது, புண்ணியங்களைக் கொடுத்துப் போஷித்துத் தானும் அழியாமல் இருக்கின்றது,’ என்பது ஸ்தோத்திர ரத்தினம். இங்கு, ‘உன்னுடைய திருவடிகள்’ என்றதனால், மற்றைத் தேவர்களைக் காட்டிலும் இறைவனுக்கு உண்டான வேற்றுமையும், இறைவனிடத்தில் அடியார்கள் இழியுந்துறை திருவடிகள் என்னுமிடமும் அருளிச்செய்தாராவார். மேலும், ‘ஒரு காலத்தில்’ என்றதனால், இன்ன காலத்தில் இன்ன காரியங்களைச் செய்யவேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘ஒருவன்’ என்றதனால், இந்தத் தகுதிகளையுடையவனே இக்காரியத்தை மேற்கோடல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறுபடுத்தியும், ‘எவ்விதத்தாலாயினும்’ என்றதனால், இன்ன முறையில் இக்காரியத்தைச் செய்தல் வேண்டும் என்று விதிக்கிற விதியினின்று வேறு படுத்தியும், ‘ஒரு முறை’ என்றதனால், பல வருடங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கிற தீர்க்க சத்திரம் முதலான யாகங்களினின்று வேறுபடுத்தியும், ‘அஞ்சலி’ என்றதனால், மிக்க பொருட் செலவினாலும் சரீரத்தின் பிரயாசை முதலியவற்றாலும் செய்யப்படுகின்ற அஸ்வமேதயாகம் முதலியவற்றினின்று வேறுபடுத்தியும், ‘பாவங்கள்’ என்ற பன்மையால், ஒரு தர்மம் ஒரு பாவத்தையே போக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அடியோடே’ என்றதனால், வாசனை கிடக்கப்போக்கும் கர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘புண்ணியங்களை’ என்ற பன்மையால் ஒரு தர்மம் ஒரு பலனையே கொடுக்கும் என்று கூறப்படுகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும், ‘அழியாமலிருக்கின்றது’ என்றதனால், பலன்களைக் கொடுத்துத் தாம் அழிந்து போகிற தர்மங்களினின்று வேறுபடுத்தியும் அருளிச்செய்திருத்தல் நோக்கல் தகும். மற்றும், ‘ஓடிவிடுகின்றன’ என்றதனால், 1சும் எனாதே கைவிட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே, பாவங்கள், இவன் தான் தொடர்ந்து பிடிப்பான் என்று நினைத்து இவனை அறியாமலே போய் விடும் என்பதனையும், ‘கொடுத்துப் போஷிக்கிறது’ என்றதனால், தீவினைகளைப் போக்குதலேயன்றி, அது போன இடம் எங்கும் நன்மையினையே நிறையச்செய்யும் என்பதனையும் தெரிவித்தவராவர்.

217. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்ய ப்ரயச்சதி
ததஹம் பத்தியுபஹ்ருதம் அஸ்நாமி ப்ரயதாத்மந:.- ஸ்ரீகீதை.

பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

218. அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதாவநேஜநாத்
அந்யத் குஸல ஸம்ப்ரஹ்நாத் நசஇச்சதி ஜநார்த்தந:பாரதம்.

பச்சிலை மலர் பழம் நீர் ஆகிய இவற்றை எவன் ஒருவன் அன்போடு கொடுக்கின்றானோ, தூய மனத்தினனான அவனால் பத்தியோடு கொடுக்கப்பட்ட அவற்றை நான் உண்கிறேன்,’ என்பது ஸ்ரீகீதை. இதனால், பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்; இப்படித் தரப்பட்டவற்றை மனோரத பதத்துக்கும் அவ்வருகானவை கைப்புகுந்தாற்போன்று நினைக்கிறான்; அல்லது, அவன் அன்பினால் கலங்கித் தருமாறு போன்று, இறைவனும் கலங்கி அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் என்பன விளங்குதல் காண்க.

219. யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்தகத புத்திபி:
தா: ஸர்வா: ஸிரஸா தேவ: ப்ரதி க்ருஹ்ணாதி வை ஸ்வயம்.–பாரதம், மோக்ஷ தர்மம். 

ஸ்ரீகிருஷ்ணனானவன், பூர்ண கும்பத்தைக் காட்டிலும் வேறு ஒன்றையும் விரும்பான்; அவனுடைய திருவடிகளைக் கழுவுதலே சாலும்; அதனைத் தவிர வேறு ஒன்றனையும் விரும்பான்,’ என்பது மகாபாரதத்தில் சஞ்சயன் கூற்று. இதனால், ஒருவன் இறைவனை ஆராதனை புரிதல் வேண்டும் என்று முயன்ற அளவிலேயே அவனுக்கு வயிறு நிறையும் என்பது பெறுதும். ‘இறைவனாகிய தன்னை அன்றி வேறு ஒரு பலனையும் விரும்பாத பெரியோர்களால் தூய்மையான மனத்துடன் செய்யப்படும் காரியங்கள் எல்லாவற்றையும், தேவனாகிய பகவான் தானே தலையால் ஏற்றுக்கொள்ளுகிறான்,’ என்பது மோக்ஷ தர்மம். இதனால், தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக்கிடப்பு உண்டாயினும் 5மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.

இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

220. ஏதத் ஸாமகாயந் ஆஸ்தே.–தைத்திரீ. பிரு. 10.

பாடி – சர்வேஸ்வரனைக் கிட்டினால் வாக்கு நியதியோடே நிற்கையின்றி, மகிழ்ச்சிக்குப் போக்கு விட்டுப் பாடி. விரிவது மேவல் உறுவீர். ‘மேற் சொல்லப் படுகின்ற சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறபடியே, பாடி

221. ந கண்டகாரிகா புஷபம் தேவாய விநிவேதயேத்.

புகை பூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகை(கூளம்; பதர்.)யிட்டுப் புகைக்க அமையும்; கண்டகாலி இடவும் அமையும்,’ என்று அருளிச்செய்வர்.

222. ஸாஸ்த்ர யோநித்வாத். உத்தர மீமாம்சை, 1. 1 : 3.

வேத முதல்வன் என்பது, ‘வேதவாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே, வேதங்களால் சொல்லப்பட்டவன் என்கை

223. தேவாநாம் மாநவாநாஞ்ச ஸாமாந்யம் அதிதைவதம்
ஸர்வதா சரணத்வந்த்வம் வ்ரஜாமி ஸரணம்தவ.-ஜிதந்தா. 1 : 2.

 ஈடும் எடுப்பும் இல் ஈசன்–சிலரை வெறுத்தல், சிலரை ஏற்றுக்கோடல் செய்யாத சர்வேஸ்வரன். இறைவனுக்கு ஆத்துமாக்கள் பக்கல் உண்டான சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப்போகாது அன்றே? 4‘தேவர்கட்கும் தானவர்கட்கும் நீயே தெய்வம்’ என்கிறபடியே, ஏற்றுக் கொள்ளுமவன் பக்கலுள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு ஆதலின், ‘ஈடும் எடுப்பும் இல் ஈசன் என்கிறார் =

224. ஸகலுஏவம் வர்த்தயந் யாவதாயுஷம் ப்ரஹ்மலோகமபி
ஸம்பத்யதே நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே.-சாந்தோக். உபநிட. 8 : 15.

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். –அழிவு இன்றி ஆக்கம் தரும் – ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.

225. ஏஷஹிஏவ ஆநந்தயாதி.-ஆனந்தவல்லி, 7.

மேல் திருவாய்மொழியில் ‘எளிய முறையில் ஆராதிக்கத் தக்கவன் இறைவன்,’ என்றார்; ‘அவ்வாராதனையானது இன்ப மயமாய் இருக்கும்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில். 1திருமகள் கேள்வனாய், எல்லா நற்குணங்கட்கும் கொள்கலனாய், எல்லா ஆத்துமாக்களுக்கும் சேஷியாய், எல்லை இல்லாத ஆனந்தத்தையுடையவனாய் ‘மேற்கூறிய இறைவன் தன்னைக் கிட்டினாரையுந் தான் சந்தோஷிப்பிக்கிறான்,’ என்கிறபடியே, தன்னைக் கிட்டினாரையும் ஆனந்திப்பிக்கக் கடவனாய் இருப்பவன் இறைவன் ஆதலின், அவனுடைய ஆராதனையானது இன்ப மயமாக இருக்கும் என்கிறார்.

226. அஸ்ரத்ததாநா: புருஷா: தர்மஸ்ய அஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு ஸம்ஸாரவர்த்மநி.-ஸ்ரீ கீதை. 9 : 3.

இறைவனுடைய ஆராதனையானது அவனாலும் விரும்பப் படும்  தகையது என்பதற்குக் காட்டப்படும் மேற்கோள்கள்.‘பகைவர்களை அழிக்கின்ற அருச்சுனா, வழிபட்டு வணங்குதலாகிய இந்தத் தர்மத்தில் அன்புடன் கூடின முயற்சி இல்லாதவர்கள் செய்த குற்றங்கள் அத்தனையும் பொறுத்து அவர்களை நல் வழியிற் செலுத்துகின்ற என்னை யடையாது, அழிவினை உண்டு பண்ணுகிற சம்சாரத்தை விரும்பி அவ்வழியே போகின்றார்கள்,

227. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷாவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம்.ஸ்ரீகீதை, 9-2.

இந்த ஞானமானது எல்லா வித்தைகளுக்குள்ளும் உயர்ந்தது; இரகஸ்யங்களுக்கு எல்லாம் தலையாயது; உத்தமமானது; பரிசுத்தமானது; நேராக என்னைக் காட்ட வல்லது; மோட்சத்திற்குச் சாதனமானது; செய்வதற்கு இனிமையாய் இருப்பது; என்றும் அழிவற்றது,’ என்றும் பகவான் தானும் அருளிச்செய்தான். ஆக, இப்படி வழிபடுதலே தொடங்கி, மோட்சத்தை அடைதல் ஈறாக, அவன் சம்பந்தமான காரியங்கள் அனைத்தும் இன்பமயமாகவே இருக்கவும், அவனை விட்டு மிகச்சிறிய பயனைக்கொண்டு அகலுவதே!’ என்று கேவலரை நிந்தித்துக்கொண்டு,(இத்திருவாய்மொழியில் முதல்  திருப்பாசுரத்தை நோக்கி.) இதனை ஒழியில் தாம் உளர் ஆகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே இவ்வழிபாட்டின் இனிமையைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.என்னுள், இரான் எனில் பின்னை யான் ஓட்டுவேனோ?’ என்றதனை
நோக்கித் ‘தாமுளராகாதபடி’ என்கிறார்

228. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸூக்ருதிந: அர்ஜூந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸூ: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப.ஸ்ரீ கீதை, 7 : 16

அருச்சுனா, நீங்கின செல்வத்தை மீண்டும் அடைய விரும்புகின்றவன், புதிய செல்வத்தை விரும்புகின்றவன், கேவலன், இறைவனையே அடைய வேண்டும் என்று விரும்புகின்றவன் என்னும் இந் நால் வகைப்பட்ட நல் வினைகளை யுடைய மக்கள் என்னை வணங்குகிறார்கள்’ என்பது இறைவன் திருவாக்கு.(நல்வினைகளையுடைய மக்கள்’  என்றதனால், நல்வினையின் தாரதம்மியம் சித்தம் என்று கொள்க, )ஆக, அவரவர்களுடைய நல்வினைகளுக்குத் தகுதியாகப் புருஷார்த்தங்களில் ருசி உண்டாகும்; ருசிக்குத் தகுதியாக வழிபாடு உண்டாகும்; வழிபாட்டிற்குத் தகுதியாகப் பலம் இருக்கும் என்று அறிதல் தகும்.

229. ய ஆத்மதா பலதா.வேத மொழி

வைப்பாம் – ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் – ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தியோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின்(உண்டறுத்தல்ஜீர்ணமாக்கிக்கோடல்.)‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர். 4‘இறைவன் தன்னைக் கொடுக்கிறான்; தன்னை அனுபவிப்பதற்குத் தக்க வலிமையையுங் கொடுக்கிறான்,’ என்பது வேத மொழி. ‘இப்படிச் செய்வது யார்க்கு?’ என்னில், அடியரை-5‘வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு, இனி, இதற்கு, ‘அவனைப்பற்றி வேறு ஒரு பயனைக் கொண்டு அகலாமல், அவன்தன்னையே பற்றி அவன் 7படிவிடப் பிழைக்கின் அடியார்கள்’ என்று பொருள் கூறலுமாம்

230. தம்த்ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர கதாதரம்
அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 68.

ஒண் சுடர்க்கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இராநின்றான்’ என்கிறார். இனி, இதனால், தம்மை வசீகரித்த அழகை அருளிச்செய்கின்றார் என்று கூறலுமாம். ‘வலிமை பெற்ற ஒளியின் தொகுதி போன்றவன்’ என்பது ஸ்ரீ விஷ்ணு புராணம். ‘இப்படித் தன் பேறாக உபகரித்தவன், தன் உபகாரங்கொள்வார் இல்லாதான் ஒருவனோ?’ என்னில், அயர்வு இல் அமரர்கள் ஆதிக்கொழுந்தை-

231. அத்யமே மரணம் வாபி தரணம் ஸாகரஸ்யவா.–ஸ்ரீராமா. யுத். 21 : 8.

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் – நான் இசைந்து ‘என்னுடைய மனத்தில் இருத்துவேன்’ என்றிலேன். ‘இசைவு என்னால் வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னால் வந்ததாவது?’ என்றபடி. தான் ஒட்டி வந்து ‘இக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார். என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து – தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப் போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

232. யத்ர ருஷய: ப்ரதமாஜா யே புராணா:யஜூர் வேதம்.

முன்னை அமரர் முழு முதலான்– ‘ஞானவான்களும் முன்னர்த் தோன்றியவர்களும் ஆதிமுதற்கொண்டே முதியராய் இருந்தும் புதியராய்த் தோன்றுகிறவர்களுமான நித்தியசூரிகள் எங்கு உள்ளார்களோ, அந்தப் பரமபதத்தில்’ என்கிறபடியே, பழையராய் இருந்துள்ள நித்தியசூரிகளுடைய சொரூபம் ஸ்திதி முதலானவைகள் தன் அதீனமாம்படி இருக்கிறவன்

233. ராமேண ஹி ப்ரதிஜ்ஞாதம் ஹர்யர்க்ஷ கண ஸந்நிதௌ
உத்ஸாதநம் அமித்ராணாம் ஸீதா யை: பரிவஞ்சிதா.ஸ்ரீராமா. சுந். 5. 11 : 32.

முதுமை நிறைந்த வானரங்களின் கூட்டத்தில் சூளுறவு செய்தான்’ என்கிறபடியே, நித்திய சூரிகள் முன்னிலையில் சூளுறவு செய்தான்

234. ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷணோவா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்.ஸ்ரீராமா. யுத். 18 : 34.

235. ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலாபலம்.ஸ்ரீராமா. யுத். 19 : 6.

அகலில் அகலும்-விபீஷணனே ஆயினும், அன்றி, இராவணன் தானே ஆயினும், இவனை அழைத்துக்கொண்டுவா,’ என்கிற ஆசை உள்ளே கிடக்கவும் கண்ண நீரோடே கைவாங்கும். அதாவது, ‘நான் இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்பொழுதும் வணங்க மாட்டேன்,’ என்னும் உறுதியோடே நிற்கில் முடித்துவிடுவான் என்பதாம். அணுகில் அணுகும் – தன் பக்கலில் எதிர் முகம் ஆனால், ‘இராக்கதர்களுடைய பலாபலத்தை உள்ளவாறு எனக்குச் சொல்லுவாய்,’ என்பான். அதாவது, இளையபெருமாள் நிற்க, நால் அடி வர நின்றவனான விபிஷணனை அன்றோ

236. யத்ர க்ருஷ்ணௌ ச க்ருஷ்ணாச ஸத்யபாமாச பாமிநீ
நச அபிமந்யு: நயமௌ தம் தேஸம் அபிஜக்மது:பாரதம், உத்தியோகபர். 49.

பொரு அல்லன் – அடியார்கள் தன்னைக் கிட்டுமிடத்தில் தடையுடையன் அல்லன். பொரு என்று ஒப்பாய், ஒப்பாவது நேர்நிற்குமதாய், அத்தால் தடையைச் சொல்லிற்றாய், தடையையுடையன் அல்லன் என்றபடி. 1‘கிருஷ்ணனும் அருச்சுனனும் திரௌபதியும் அழகுள்ள சத்தியபாமையும் எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அந்த இடத்தில்’ புத்திரர்களும் புக ஒண்ணாத சமயத்திலே அன்றே சஞ்சயனை அழைத்துக் காட்சி அளித்தது?

237. வஸீ வதாந்ய: குணவாந் ருஜூ: ஸூசி: ம்ருது: தயாளு: மதுர: ஸ்திர: ஸம:—ஸ்ரீ ஸ்தோத்திர ரத்தினம், 18.

மேல் திருவாய்மொழியில் ‘இறைவன் எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; 1அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.(ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,  ‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி ‘ஆர்ஜவ  குணத்தைச் சொல்லுகிறார்இத்திருவாய்மொழியில்’ என்கிறார். )‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் ஆர்ஜவகுணத்தை அருளிச்செய்தார்; இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின், சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன் திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு தான் 2பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. ‘சௌசீல்யம், ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப்படினும், வேறு வேறு என்பதே நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். ஸ்ரீ ஆளவந்தார் 3‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச்செய்து, பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச்செய்தார்.

238. உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க ஸோபிநா.–ஸ்ரீ ஸ்தோத்திர ரத்நம், 41.

மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன்மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு. ‘ஆயின், பெரிய திருவடியின்மேல் எழுந்தருளல் அங்கு உள்ளார்க்குக் காட்சி கொடுத்தற்காக அன்றோ?’ எனின், பெரிய திருவடியை மேற்கொள்ளுமதுதான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய சொரூப லாபத்துக்காகவும் இருக்கும். மற்றும், காமத்தில் இச்சையுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். ‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.

239. ஸ்ரக் வஸ்த்ராபரணை: யுக்தம் ஸ்வாநு ரூபை: அநுபமை:
சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை:- பௌஷ்கர சம்ஹிதை

 சூடும் தண் துழாய் – திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும் அளவில் அப்போதே பறித்துத் திருக்குழலிலே வைப்பன். ‘ஆயின், துழாய்க்கு அறிவு உண்டோ?’ எனின், 3‘மலர்மாலைகள், பீதாம்பரம், ஆபரணங்கள் முதலானவைகள் திருமாலினுடைய திருமேனிக்குத் தக்கவைகளாகவும், ஒப்பு அற்றவைகளாகவும் ஞானத்தோடு கூடினவைகளாகவும், வேறு ஒன்றன் துணையின்றித் தாமே பிரகாசிக்கின்றவைகளாகவும் இருக்கின்றன,’ என்னும் பௌஷ்கர சம்ஹிதை இங்கு அறிதல் தகும். ‘ஆயின், நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘

அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்கவேண்டாவோ?’ எனின், 4அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள அறிவுத்தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாகவுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’ எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின், கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில் திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.

240. சக்ஷ்ர்தேவாநாமுத மர்த்யாநாம்.– யஜூர் வேதம். 4. 6 : 8.

 கண்ணாவான் – ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற கருதி அர்த்தத்தை அருளிச்செய்கிறார். கண்ணாமவன் என்றபடி. இனி, இதற்குக் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம். மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் – இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்துகொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.

தண்ணார் வேங்கடம் – இறைவனுக்குக் காத்தற்கு உரிய பொருள்கள் கிடையாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி, இவ்வுயிர்கட்குப் பாதுகாப்பவனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் ஆற்றி இரு திறத்தார்க்கும் குளிர்ச்சியை உண்டாக்க வல்லது ஆதலின், ‘தண்ணார் வேங்கடம்’ என்கிறார். ‘குளிர் அருவி வேங்கடம்’ என்பர் ஸ்ரீ ஆண்டாள். விண்ணோர் வெற்பன்-‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார்.

241. நது மாம் ஸக்ஷ்யஸே த்ருஷ்டும் அநேகஏவ ஸ்வசக்ஷூஷா
திவ்யம் ததாமி தேசக்ஷூ: பஸ்ய மே யோகம் ஐஸ்வரம்.- ஸ்ரீ கீதை. 11 : 8.

அருச்சுனன், ‘விபூதி சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக 3உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப் (பத்தி ரூபாபந்ந ஞானத்தை விளங்கச் செய்து.)பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர்(மூன்றாம் பாசுரத்தின் ‘ஒரு கதியின் சுவை தந்திட்டு’)ஒருவரோடு பரிமாறுகிறானாய், அதுதன்னையும் குளப்படியிலே (மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)கடலை மடுத்தாற்போன்று அன்றி, பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,(என்னுடைச்  சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்-  ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.) இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, (என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா  இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை  நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார்.

242. யஸ்ய ப்ரஸாத ஸததம் ப்ரஸீதேயு: இமா: ப்ரஜா:
ஸ ராமோ வாநரேந்த்ரஸ்ய ப்ரஸாதம் அபிகாங்க்ஷதே.-ஸ்ரீ ராமா. கிஷ், 4 : 21.

243. ஏஷ தத்வாச வித்தாநி ப்ராப்யச அநுத்தமம் யஸ:
லோகநாத: புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி.–ஸ்ரீ ராமா. கிஷ். 4 : 18.

பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான். ‘எந்த இராமனுடைய திருவருளால் இம்மக்கள் எப்பொழுதும் தெளிந்த மனத்தையுடையவர்களாய் இருக்கின்றார்களோ, அப்படிப்பட்ட இராமன் சுக்கிரீவனுடைய அருளை நல்ல மனத்துடன் விரும்புகிறான்,’ என்றும், ‘தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதனாய் இருக்கும் ஸ்ரீராமர், சுக்கிரீவனை நாதனாக விரும்புகிறார்’ என்றும், கூறப்படுகின்றவாறே, ‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார், ‘என்னுடைச்சூழலுளானே’ என்கிறார்.

244. ஏஷ ஸர்வாயுதோபேத: சதுர்பி: ஸஹராக்ஷஸை:
ராக்ஷஸோப்யேதி: பஸயத்வம் அஸ்மாந் ஹந்தும் ந ஸம்ஸய:–ஸ்ரீராமா. யுத். 17 : 5.

ஒக்கலை வைத்து – பரிவுடைய யசோதைப்பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப்பால் உண் என்று தந்திட – ‘முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; ‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார். இனி, தருகை, கொடுக்கையாய் வழங்குகையாலே ‘தந்திட’ என்றார் எனலுமாம். வாங்கி – அவள் முலை கொடாவிடில் தரியாதாளாய்க் கொடுத்தாற்போன்று, இவனும் முலை உண்ணாவிடில் தரியாதானாய் உண்டான் ஆதலின், ‘வாங்கி’ என்கிறார்.

245. யோ வாசி திஷ்டன் வாச: அந்தர: யம் வாக் நவேத யஸ்ய வாக் சரீரம்.

என்னுடை நாவினுளான் – என்னுடைய துதிக்கு விஷயமானான். இனி இதற்கு ‘வாக்கில் இருந்துகொண்டு வாக்கின் உள் இருக்கிறான்,’ என்கிற படியே, ‘வாக்கு இந்திரியத்துக்கு அந்தர்யாமியாய் உள்ளவன்’ என்று கூறலும் ஒன்று.

246. அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாதோ அஹமந்நாத:.தைத்திரீய உபநிடதம், பிரு. 10.

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது  அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு  அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’ என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை–  திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து  நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்  பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்  செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்  செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்  அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்  ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்   பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)   ‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது  கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி  அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்  திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்  புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்  படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’  (இரண்டாந்திருவந். 71.)

247. வத்யதா மேஷ தண்டேந தீவ்ரேண ஸ்சிவைஸ்ஸஹ
ராவணஸ்ய ந்ருஸம்ஸஸ்ய ப்ராதா ஹிஏஷ விபீஷண:-ஸ்ரீராமா. யுத். 17 : 27.

248. பரதஸ்ய வதே தோஷம் ந அஹம் பஸ்யாமி ராகவ
பூர்வாபகாரிணாம் த்யாகோ நஹி அதர்மோ விதீயதே.ஸ்ரீராமா. அயோத். 96 : 24.

249. அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீநி ஆயுதாநி தம்
ரக்ஷந்தி ஸகலாபதப்ய: யேநவிஷ்ணு: உபாஸித:.–விஷ்ணு தர்மம், அத் : 78.

அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. ‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? ‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், ‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே, சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.திருவாழியாழ்வானும், இஷீகாஸ்திரமும், தூர்வாசரையும் காகத்தையும்  மெள்ளமெள்ளப் பின் தொடர்ந்தமை இங்கு நினைவு கூர்க. அவ்வாறு  தொடர்ந்தமையாலன்றோ அவர்கட்குச் சரணாகதிக்கு அவகாசம் கிடைத்தது.-நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார்

250. ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம் கந்தும் அர்ஹதி.-ஸ்ரீராமா. யுத். 19 : 31.

இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க, 1அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீவிபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை; ‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள் இக்ஷவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா, அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்’, என்று அருளிச்செய்தார். பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.

251. தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷூ நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸூபாந் ஆஸூரீஷ்வேவயோநிஷூ-ஸ்ரீ கீதை, 16 : 19.

எம்பிரானை-மேல் பாசுரத்திற்கூறிய அவன் நீர்மையை நினைத்து ‘என் நாயன் ஆனவனை’ என்கிறார், எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை – தம்மளவிலேயாய் அடியற்று இருக்கையன்றியே, தம் குடிக்கு நாயகன் ஆனவனை என்கிறார். இவர் இப்படித் துதித்தவாறே, பிரயோஜநாந்தரபரருடைய பாசுரத்துக்கும் அநந்யப் பிரயோஜனருடைய பாசுரத்துக்கும் வேற்றுமை அறியுமவன் ஆதலின், ‘இப்படித் துதிக்கிறவர் யாவர்?’ என்று குளிர நோக்கினான். ‘தண் தாமரைக் கண்ணனை’ என்கிறார். ‘ஆயின், 6என்னை வைக்கின்றவர்களையும், வெறுக்கின்றவர்களையும். கொடிய தன்மைகளை யுடையவர்களையும், தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’ என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை கொம்பு போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே யுடையவனை என்கிறா

252. இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நசாஸூஸ்ரூஷவே வாச்யம் நசமாம் ய: அப்யஸூயதி.–ஸ்ரீ கீதை, 18 : 67.

நெஞ்சமே சொன்னேன் – ‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு ‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று ‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய திவ்ய கிரந்தம்

November 29, 2023

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-————————-

அத பரமைகாந்திநோ பகவதாராதன  ப்ரயோகம்  வக்ஷ்யே! 

பிறகு பரமைகாந்திகளினுடைய பகவானின் ஆராதன க்ரமத்தைச் சொல்லுகிறேன்.

பகவத் கைங்கர்யே கரதி! பரமைகாந்தி பூத்வா! ஸ்வஶேஷ பூதேநமயா!
ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை:| ஶ்வகீயை ரேவகல்யாணதமை:|
ஔபசாரிக ஸாம்ஸ்பர்ஶிகாப்வயஹாரிகை: போகைரகில பரிஜந பரிச்சாந்விதம்!
ஸ்வாத்மாநம் ப்ரீதம்| காரயிது முபக்ரமதே இத்யநுஸந்த்யாய தீர்த்தம் கத்வா|

ஶுசௌ தேஶே பாதௌ ப்ரதூல்யாசம்ய| தீரம் ஸம்ஶோத்ய|
ஶுசௌ தேஶே மூலமந்த்ரேண ம்ருத  மாதாய| த்விதா க்ருத்வா|
ஶோதித தீரே நிதாய| ஏகே நாதிக பாகேந தேஹமஹ ப்ரக்ஷாளநம் க்ருத்வா| நிஜம்யாசம்ய|
ப்ராணாயாம  த்ரய மாஸீநோ பகவந்தம் த்யாயநு| க்ருத்வாந்யம் ம்ருத்பாகமாதாய| வாமபாணி தலேத்ரிதா க்ருத்வா|

ப்ருதக் ப்ருதக் ஸம்ப்ரோக்ஷ்ய| அபிமந்த்ரைகேந திக்பந்தன அஸ்த்ர மந்த்ரேணகுர்யாது|
அந்யே நதீர்த்தஸ்ய பீடம் இதரேண காத்ரலேபநம் தத: பாணீ ப்ரக்ஷால்ய| உதகாஞ்சலி மாதாய|
தீர்த்தஸ்ய அர்க்யாந்த முதுக்ஷீப்ய|
பகவது வாம பாதாங்குஷ்ட விநிஸ்ஸ்ருத கங்கா ஜலம் தீர்த்த ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய|

மூல மந்த்ரேணாபி மந்த்ரிய உதகாஞ்ஜலி மாதாய| ஸப்த க்ருத்வோபி மந்த்ரியஸ்வ மூர்த்நிஸிம்சேத்| 
ஏவம் த்ரி: பஞ்ஜக்ருத்வ ஸப்த க்ருத்வோவா தக்ஷிணேந பாணிநா ஜலமாதாயாபி மந்த்ரிய|
பீத்வா ஆசம்ய ஸ்வாத்மாநம் ஸம்ப்ரோக்ஷ்ய|
தீர்த்தேநி மக்னோ பகவத் பாதாரவிந்த விந்யஸ்த ஶிரஸ்கோ யாவச்சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா|
உத்தீர்ய ஶுக்ல வஸ்த்ர தரோ த்ருதோத்தரீய ஆசம்ய| ஊர்த்வ புண்ட்ராம்ஸ்த தத்தந் மந்த்ரேண தாரயித்வா| 

————

பகவானுடைய கைங்கர்யமொன்றிலேயே ஆசையுடைய பரமைகாந்தியாயிருந்து
பகவாநேவ ……… உபக்ரமதே என்றநுஸந்தித்துத் தீர்த்தக் கரைக்குச் சென்று பரிசுத்தமான இடத்தில் கால்களை யலம்பி,
ஆசமனம் செய்து, கரையை யலம்பி விட்டுப் பரிசுத்தமான இடத்திலிருந்து மண்ணை எடுத்து, இரண்டு பாகங்களாகப் பிரித்து,
முன்னால் அலம்பப் பட்டிருக்கிற கரையில் வைத்து பெரியதாகிய ஒரு பாகம் மண்ணினால் உடம்பு முழுவதையும் தேய்த்து
அழுக்கைப் போக்கடித்துக் கொண்டு ஜலத்தில் முழுகி, ஆசமனம் செய்து, கரையில் உட்கார்ந்து
பகவானை த்யாநம் செய்து கொண்டு மூன்று ப்ராணாயமங்களைச் செய்து,

மற்றொரு பாகம் மண்ணை எடுத்து இடத்து உள்ளங்கையில் மூன்று பாகமாகப் பிரித்து வைத்துக் கொண்டு தனித்தனியே ப்ரோக்ஷித்து,
மூல மந்திரத்தினால் ஜபித்து, ஒரு பாகத்தை எடுத்து அஸ்திர மந்திரத்தினால் திக் பந்தனம் செய்ய வேண்டும்.
மற்றொரு பாகத்தினால் இனி ஆவாஹனம் செய்யப் போகிற தீர்த்தத்திற்குப் பீடம் கல்பிக்க வேண்டும். மற்றொரு பாகத்தினால் உடம்பு முழுவதையும் பூசிக் கொள்ள வேண்டும்.

பிறகு கைகளை யலம்பி, இரண்டு கைகளிலும் ஜலத்தை எடுத்து , தீத்த்தத்தில் முன் சேர்க்கப் பட்டிருக்கிற பீடத்தில்
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலிலிருந்து உண்டான கங்கா தீர்த்தத்தை ஆவாஹனம் செய்து, அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து,
மறுபடியும் இரண்டு கைகளிலும் தீத்த்தத்தை எடுத்து,ஏழு தடவை மூல மந்திரத்தை உச்சரித்துத் தன் தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.
இப்படி மூன்று,ஐந்து அல்லது ஏழு தடவை ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டியது.

பிறகு வலது கையினால் ஜலத்தை எடுத்து அஷ்டாக்ஷரத்தினால் ஜபித்து உட்கொண்டு, ஆசமனம் செய்து
தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு, ஜலத்தில் முழுகியிருந்து கொண்டு
பகவானுடைய திருவடிகளில் தன்னுடைய தலை வைக்கப் பட்டிருப்பதாக த்யானித்துக் கொண்டு
ஶக்தியுள்ள வரையில் அஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பிறகு கரையிலேறி பரிசுத்தமான வஸ்திரங்களை தரித்துக் கொண்டு, திரு மண் காப்புகளை
அந்தந்த மந்திரங்களினால் பகவானை த்யானித்துக் கொண்டு தரிக்க வேண்டும்.

—————

பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண
ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய|
பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா –
அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா|
ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந்
பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய !
ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

ஸுப்ரக்ஷாளித | பாணிபாத: ஸ்வாசாந்த: ஶசௌ தேஶே அதிமநோஹரே நிஶ்ஶபேத் புவம் ஸம்க்ருஹ்ருயதாம்|
ஶோஷணாதிபிர் விஶோத்ய| குரு பரம்பரயா பரம குரும் பகவந்த முபகம்ய தமேவ ப்ராப்யத்வேந| ப்ராபகத்வேந|
அநிஷ்ட நிவாரகத்வேந| யதாவஸ்தித ஸ்வரூப ரூபகுண | விபூதி லீலோபகரண| விஸ்தார மநு ஸந்த்யாய தமேவ| ஶரண முபகச்சேத்|
அகிலஹேயே த்யாதிநா| ஏவம் ஸரணமுபகம்ய| தத்ப்ரஸாதோப ப்ரஹ்மித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வர மாத்மந:
ஸ்வாமித்வேநாநுஸந்த்யாய அத்யர்த்த ப்ரியாவிரத விஶதத மப்ரத்யக்ஷ ரூபாநு த்யாயேந த்யாயந் நாஶீத|
ததஸ்ததநுபவ ஜநிதாதி மாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜா மாரபேத|

———-

பிறகு தேவதைகள், ரிஷிகள்,பித்ருக்கள் இவர்கள் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று
த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்து பரிசுத்தமான இடத்தில் வஸ்திரத்தைப் பிழிந்து ஆசமனம் செய்து விட்டு
(ஸ்நான காலத்தில்)ஆவாஹனம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தன்னிடத்திலே அஷ்டாக்ஷரத்தினால்
ஆஹ்வானம் செய்து விட்டு ஆராதனம் செய்ய வேண்டிய இடத்திற்குப் போக வேண்டும்.

நன்றாகக் கை கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு பரிசுத்தமாயும் அழகாயும் ஓசை யில்லாததுமான இடத்தில்
தனக்கு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த பூமியை ஶோஷண தாஹன ப்லாவனங்களினால் சுத்தி செய்து
குரு பரம்பரையை முன்னிட்டுப் பகவானை த்யானம் செய்துகொண்டு அந்த பகவானையே
அடைய வேண்டிய ப்ரயோஜனமாகவும் அதை அடைவிக்கும் உபாயமாகவும்
அனிஷ்டங்களைப் போக்கடிப்பவனாகவும் அந்த பகவானுடைய உள்ளபடியான ஸ்வரூபம், ரூபம், குணங்கள், விபூதிகள்,
இவைகளின் விவரங்களை யெல்லாம் விஸ்தாரமாய் அனுஸந்தித்து,

“அகிலஹேய ப்ரத்யநீக”   என்றாரம்பிக்கும் கத்யத்தினால் ஶரணமாக வடைய வேணும்.
இப்படிச் ஶரணமாகவடைந்து அவனுடைய அனுக்ரஹத்தினால் வ்ருத்தி செய்யப்பட்ட மனோ தைர்யத்தை யுடையவனாய்
அந்த ஸர்வேஸ்வரனாகிய பகவானையே தனக்கு ஸ்வாமியாக அனுஸந்தானம் செய்து கொண்டு
மிகவும் ப்ரியமாகவும் இடைவிடாமலும் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பதைப்போல் மிகவும் விஶதமாகவுமிருக்கிற
த்யானத்தினால் அனுஸந்தானம் செய்துகொண்டிருக்க வேண்டும்.
பிறகு அப்படிப்பட்ட அனுபவத்தினால் உண்டாக்கப்பட்ட ப்ரீதியினால் செய்விக்கப் படுகின்ற பரிபூர்ண கைங்கர்யமாகிய ஆராதனத்தை ஆரம்பிக்க வேண்டும்.

—————–

பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநா
நேநாத்மநா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த: கரணை;| ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாந்
ஔபசாரிக ஸாம் ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாநதி ப்ரபூதாநதி|
ப்ரிய தமாநதி ஸமக்ராநத்யந்த பக்தி க்ருதாநகில பரிஜந பரிச்சதாந்வி தாயஸ்வஸ்மை|
ஸ்வ ப்ரீயதே ஸ்வயமே ப்ரதிபாதயிது முபக்ரமதே| இத்யநு ஸந்த்யாய|

ஸ்வ தேஹே பஞ்ஜோபநிஷந் மந்த்ராந் ஸம்ஹாரக்ரமேணந்யஸ்ய  ப்ராணேயாமேந ஏகேந தக்ஷிண பாணிநா|
நாபிதேஶே மூலமந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூதே சண்டவாய்வ்யாப்யாயித
நாபிதேஶஸ்த வாயுநா ஶரீர அந்தர் பஹிஶ்ச ஸர்வ தத்வமயம் |
தத்வ க்ரமேண விஶோஷ்ய| புந:ப்ராணேயாமே நைகேந ஹ்ருத்தேஶ மூலமந்த்ரம் ந்யஸ்ய|
மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந
ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாதாங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேஶயேத்|

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரதா யோக்யதாமாபாத்யா|
தஸ்மாதாதாய  தத்வாம பாதாங்குஷ்டா தஸ்தாத் மூலமந்த்ரேணாத்மாநம் விந்யஸ்ய,
தேவவாமபாதாங்குஷ்டநகஶிதாம்ஶுமண்டலாத்கலத் திவ்யாமாதாரஸை: ஆத்மாநம் அபிஷிஞ்ஜேத்|
ஏவமாத்மானம் அபிஷிச்ய| பகவத் ப்ரஸாதேந தத் அம்ருதமயம் ஸர்வ கைங்கர்யைக மநோஹரம்
ஸர்வ கைங்கர்யைக யோக்யம் ஶரீரம் லப்த்வா தஸ்மின் ஶரீரே பஞ்ஜோபநிஷன்மந்த்ரான் ஸ்ருஷ்டி க்ரமேண விந்யஸேத்|

ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்டியாத்மநே இதிமூர்த்தனி ஸ்ப்ருஶேத் |
ஓம் யாம் நம: பராய புருஷாத்மநே இதி நாஸிகாக்ரே
ஓம் ராம் நம: பராய விஶ்வாத்மநே இதி ஹ்ருதயே!
ஓம் வாம் நம: பராய நிவ்ருத்யாத்மநே இதி குஹ்யோ|
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மனே நம இதி பாதயோ|
ஏவம் ந்யாஸம் குர்யாத் தத்தத் ஶக்தி மயத் பூதம் தேஹம் த்யாயேத்|

————-

பகவாநேவ ………உபக்ரமதே என்றனுஸந்தானம் செய்து தன்னுடைய தேஹத்தில் பஞ்சோபநிஷத் மந்திரங்களை
ஸம்ஹாரக்ரமமாக ந்யாஸம் செய்து ஒரு ப்ராணாயாமம் செய்து வலது கையினால் தொப்புளில் மூல மந்திரத்தை ந்யாஸம் செய்து
‘மந்த்ரோத்பூத சண்டவாவ்யாப்யாயித நாபிதேஶஸ்தே வாயுநா ஶரீர மந்தர்பஹிஶ்ச தத்வக்ரமேண ஶோஷயாமி’ என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் ஶோஷணம் செய்யப்பட்டதாக த்யானித்து மறுபடியும் ப்ராணாயாமம் செய்து
மூல மந்திரத்தினால் ஹ்ருதயத்தில் ந்யாஸம் செய்து
“மந்த்ரோத்பூதசக்ராக்நி ஜ்வாலோப ப்ரஹ்மித ஜாடராக்னிநா தக்த தத்தத்ஸமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ
ஸர்வ கில்பிஷ ஸர்வாஜ்ஞானதத்வாஸநம் ஶரீரம் தாஹயாமி”என்றநுஸந்தானம் செய்து
ஶரீரம் முழுவதும் கொளுத்தப் பட்டதாக த்யாநம் செய்து , பகவானுடைய
வலது காலின் கட்டை விரலின் கீழே தன்னுடைய ஜீவாத்மாவைச் சேர்த்துவிட வேண்டும்.

மற்றொரு ப்ராணாயாமம் செய்து பகவானுடைய அனுக்ரஹத்தினால் பகவானுடைய கைங்கர்யம் செய்வதற்கு
யோக்யத்தை யடைந்தவனாக த்யாநம் செய்து அந்தத் திருவடிகளின் கட்டை விரலின் கீழே இருக்கிறதாகவும்
அந்தக் கட்டை விரலிலிருந்து பெருகி வருகிற அம்ருத மயமான ஜலத்தினால் தன்னை அலம்பப் பட்டதாகவும்,
அந்த அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்யக் கூடிய யோக்யதையை யுடைய ஶரீரத்தை
யடைந்ததாகவும்,த்யானித்து அந்த ஶரீரத்தில் பஞ்சோபநிஷத்  மந்திரங்களை ஸ்ருஷ்டி க்ரமமாக ந்யாஸம் செய்ய வேண்டும்.
“ஓம் ஷௌம் நம: பராய பரமேஷ்ட்யாத்மநே “ என்று தலையையும்,
“ஓம் யாம் நம: பராய புருஷாத்மநேநம:” என்று மூக்கையும்,
“ஓம் ராம் நம்பராய விஶ்வாத்மநே நம:” என்று மார்பையும்,
“ஓம் வாம்நம: பராய நிவ்ருதாத்மநே நம:”என்று குஹ்யத்தையும்,
ஓம் லாம் நம: பராய ஸர்வாத்மநே நம:” என்று கால்களையும் தொட வேண்டும்.
அந்தந்த ஶக்தி ஸ்வரூபமான தேஹம் கிடைத்ததாக த்யானிக்க வேண்டும்.

—————

தரங்க முக நந்தினீ ஹேமாப்ஜ நாயிகா ஸமேத
ஸ்ரீ தேவநாத பர ப்ரஹ்மணே நம:
ஸ்ரீமதே மகுள பூஷண மஹா குரவே நம:
ஸ்ரீமதே பகவதே பாஷ்யகாராய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேஶிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹா தேஶிகாய நம:

—————

ஸ்ரீ அவதாரிகை

ஸ்ரீ பாஷ்யகாரரருளிச் செய்த நித்ய க்ரந்தத்திற்கு ஸதாசார்ய ஸம்ப்ரதாயாகதமாய்,
ஆசார்யோபதேஶத்தி னாலறியப்பட்ட அர்த்த விசேஷங்களை எளிதில் எல்லோரும் தெரிந்து
கொள்ளும் பொருட்டுத் தமிழில் ஒரு வ்யாக்யானம் செய்யப்படுகிறது.

அதில் பகவதாராதன ப்ரயோகம் மாத்திரம் ஸ்ரீ பாஷ்யகாரரினாலருளிச் செய்யப்பட்டிருப்பதினால்
அந்தப் பகவதாராதனம் ஸ்நாநாதிகளான பரிசுத்தியைக் கொடுக்கக்கூடிய கர்மங்களை யனுஷ்டிக்காமல் செய்ய முடியாதென்பது
ந ஹி ஶௌச மக்ருத்வைவ ஸமாராதனமஹர்தி’ 
ஸந்த்யாஹீநோஶுசிர்நித்ய மநர்ஹஸ்ஸர்வ கர்மஸு’ என்றிவை
முதலிய ப்ரமாணங்களினா லேற்படுகிறபடியினால் அப்படிப்பட்ட ஸ்நானம், ஸந்த்யாவந்தனம்,
முதலிய கர்மங்களை எல்லோரும் அறிந்தனுஷ்டிக்குமாறு அவைகள் தமிழில் ஸங்க்ரஹிக்கப் படுகின்றன.

ஒவ்வொரு தினத்தையும் ஐந்து காலமாகப் பிரித்து அந்தந்தக் காலங்களில் அந்தந்த க்ரியைகளை யனுஷ்டிக்க வேண்டும்.
அவைகளாவன:—அபிகமனம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம், என்பவை.
அபிகமனமாவது காலையிலும் ஸாயங்காலத்திலும் அனுஷ்டிக்க வேண்டியது.
அதாவது ஸ்நானம் முதலிய கர்மங்களைச் செய்துவிட்டுப் பகவானை ஆஶ்ரயிப்பது.
அதாவது அன்றையதினம் நடக்கவேண்டிய க்ருத்யங்கள் முழுமையும் குறைவற ஸரியாய் நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்திப்பது.
உபாதானமாவது பகவானுடைய ஆராதனத்திற்கு யுபயுக்தமான த்ரவ்யங்களை ஸம்பாதிப்பது.

அது வெளியிலிருக்கும் புஷ்பம், சந்தனம், முதலியவைகளை ஸம்பாதிப்பதும்,
‘அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்’ ‘எட்டுமாமலர்’ இத்யாதிகளிலும் சொல்லப்படுகிற
ஶாந்தி முதலிய குணங்களை ஸத்க்ரந்த காலக்ஷேபாதிகளினால் ஸம்பாதிப்பதும் என்று இருவகைப்படும்.
இஜ்யையாவது மாத்யாஹ்நிகஸ்நாநம் முதலாக ஆரம்பித்துப் பகவதாராதனம், முதலியவைகள் செய்து அனுயாகம் வரையில் செய்வது,
ஸ்வாத்யாயமாவது வேதம், இதிஹாஸ புராணங்கள், அருளிச்செயல்கள், த்வயம் முதலிய மந்திரங்கள்
இவைகளின் அர்த்தானுஸந்தானம் செய்து, பகவானிடத்தில் பக்தியையும் ஜ்ஞானத்தையும் நாளுக்கு நாள் வளரச் செய்வது.
இதற்குப் பிறகு ஸாயமபிகமனம் என்பது ஸாயம் ஸந்த்யாவந்தநமும் பகவானை ஸேவிப்பதும்.
யோகமாவது பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை நித்திரை வருமளவும் த்யானம் செய்து கொண்டிருத்தலும்,
நித்திரை வரும் பொழுதும் பகவானுடைய திருவடிகளில் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருப்பதாக
த்யானம் செய்துகொண்டு தூங்குதலும். இவைகளின் விவரங்கள் எழுதப் படுகின்றன

அபிகமனம்
தூக்கம் விழித்தல்–
ஸூர்யோதயத்திற்கு  ஒரு முஹூர்த்தகாலம் முன்னாலேயே தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு
ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரிர் ஹரி: ஹரி: என்று சொல்லி க்ராஹ க்ரஸ்தே கஜேந்த்ர ருததி ஸரபஸம் தார்க்ஷ்ய
மாருத்ய தாவந் வ்யாகூர்ணந்மால்ய பூஷாவஸந பரிகரோமேக கம்பீர கோஷ: ஆபிப்ராணோ ரதாங்கம்
ஶரமஸி மபயம் ஶங்கசாபௌ ஸகேடௌ ஹஸ்தை: கௌமோதகீமபய வதுஹரி ரஸாவம்ஹஸாம் ஸம்ஹதேர்ந: நக்ராக்ராந்தே கரீந்த்ரே மருளித நயநே|
மூலமூலேதி சிந்நே நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதி புநஸ்தா த்ருஶோ மாத்ருஶேஷு!
இத்யேவம் த்யக்த ஹஸ்தே ஸபதி ஸுரகுணே! பாவ ஶூந்யே ஸமஸ்தே மூலம்
யத் ப்ராதுராஸீத்  ஸ திஸது பகவாந் மங்களம் ஸந்ததம் ந: |
ப்ராத:ஸ்மராமி  பவபீதி மஹார்தி ஶாந்த்யை: நாராயணம் கருடவாஹந மஞ்ஜநாபம்|
க்ராஹிபி பூத மதவாரண முக்தி ஹேதும் சக்ராயுதம் தருண வாரிஜ பத்ரநேத்ரம்  ||
ப்ராதர் நமாமி மநஸா வசஸா ச மூர்த்நா பாதாரவிந்த யுகளம் பரமஸ்ய பும்ஸ: |
நாராயணஸ்ய நரகார்ணவதாரணஸ்ய பாராயண ப்ரவண விப்ர பராயணஸ்ய|
ப்ராதர் பஜாமி பஜதா மபயம் கரந்தம் ப்ராகர் ஸர்வ ஜன்ம க்ருத பாபபயாபநுத்யை; |
யோக்ராஹ வக்த்ர பதிதாங்க்ரி கஜேந்த்ர கோர ஶோக ப்ரணாய மகரோத் த்ருத சங்க சக்ர: ||
ஶ்லோகத்ரயமிதம்  புண்யம் ப்ராதருத்தாய: ய” படேத்| லோக த்ரய குருஸ்தஸ்மை தத்யாதாத்ம பதம் ஹரி: ||
என்கிற ஶ்லோகங்களை ஹரி: என்னும் பதத்திற்கு விவரணம் செய்வதாக த்யானித்துக் கொண்டு அனுஸந்தானம் செய்யவேண்டும்.

அதாவது ஹரதீதி ஹரி: என்கிற வ்யுத்பத்தியினால் ஸகல பாபங்களையும் போக்கடிக்கிறவனென்றும்,
ஹரி: என்கிற அவதாரம் செய்து கஜேந்திரனுடைய துக்கத்தைப் போக்கடித்ததினாலும்
இந்த ஶ்லோகங்கள் ஹரி: என்னும் பதத்தினர்த்தத்தை விவரணம் செய்கின்றன. ஶக்தியுடையவனாயும் ஸாவகாசமுமிருந்தால், நூற்றெட்டுத் திருப்பதி விஷயமான த்யான ஶ்லோகங்களையும்,
தஶாவதார ஸ்தோத்திரங்களையும், பெரிய கத்யத்தையும், இன்னும் பகவத் பரங்களான ஸ்தோத்ராதிகளையும்
கேட்கிறவர்களுக்கு அதி மனோ ஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டியது.

பிறகு ‘பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைக ரஸேநாநேநாத்மநா கர்த்ரா
ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷஸ் ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம் யோகாப்யாம் கர்ம ஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்’ என்று முதல் நாள் ஆரம்பிவிக்கப்பட்ட யோகத்தை முடித்து
ஸாத்விகத்யாகம் செய்து ‘அநேந யோகாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ:’ என்றநுஸந்திக்கவேண்டியது.

பிறகு அந்தப் படுக்கையிலேயே உட்கார்ந்து கொண்டு தன்னுடைய வாழ்நாட்கள் வ்யர்த்தமாய்ப் போனதையும்,
பரம புருஷார்த்தமாகிய மோக்ஷம் தனக்குக் கிடைக்காமல் போனதையும் யோசித்து நிர்வேதப்பட வேண்டும்.
ப்ரபத்தி பண்ணிக் கொள்ளாதவனாயிருந்தால் இப்படி அகிஞ்சனனாய் எண்ணிறந்த பாபங்களுக்கு இருப்பிடமாய்
அந்தப் பாபங்களைப் பரிஹாரம் செய்துகொள்ளுவதற்கு மார்க்கத்தை யறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிற தன்னுடைய தீனதஶையைப் பார்த்து

”மாற்றமுளவாகிலும்”,
“சேமமேவேண்டித் தீவினை பெருக்கி”
“அமர்யாத: க்ஷூத்ர:” என்றிவை முதலிய இடங்களில் சொல்லுகிறபடியே
நிர்வேதப்பட வேண்டிய தவஶ்யம். ப்ரபன்னனாயிருந்தால் “இந்த ஹர்ஷம் விவேகியுமாய் ஹேயமான ஶரீராதிகளோடே
துவக்குண்டிருக்கிற இவனுக்கு நிர்வேதமிஶ்ரமாய் நடந்ததே யாகிலும் நிர்வேதமும் ஶோக நிவ்ருத்தியும்
பின்ன விஷயங்களாகையாலே விரோதமில்லை” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளிச்செய்யப்பட் டிருக்கிறபடியினாலும்,
இதன் வ்யாக்யானத்திலும் “பின்ன விஷயமாகையினாலே” என்பதற்கு உபாயம் துஷ்கரம் என்கிற துக்கமில்லாமையினாலும்
பலத்திற்கு விளம்பமில்லை என்பதினாலும் நிஸ்ஸம்ஶயனுமாயிருப்பதினாலும் ஸந்தோஷம் உண்டாகிறது.

நிர்வேதம் அப்பொழுதே பலங்கிடைப்பதற்கு விரோதியான ஶரீரம் அநுவர்த்திக்கையினாலும்
அதினால் ஸுகதுக்கங்கள், புண்ய பாபங்கள் உண்டாகின்றன வாகையினாலும் உண்டாகிறது.
ஆகையினால் விரோதமில்லை என்றருளிச் செய்யப்பட்டிருப்பதினாலும் நிர்வேதப்பட வேண்டியதவஶ்யம்.
அதுவும் ஸம்ஸாரத்தில் நிவ்ருத்தி பிறந்து கடுக மோக்ஷத்தை யபேக்ஷிக்கும் த்வரை யுண்டாவதற்காக என்று பூர்வாசார்யர்களின் திருவுள்ளம்.

பிறகு கேவலம் நிர்வேதத்தோடே முடியுமானால் ஸர்வகார்யங்களுக்கும் விரோதியாகையினால்
மேல் நடக்க வேண்டிய கைங்கர்யங்கள் ஸரியாக நடக்க வேண்டியதற்காக
“கதத்திற்கு ஶோகியாதே வருகிற நீருக்கு அணைகோலும் கணக்கிலே” “இனிப் பகவதாராதனாதிகளைச்செய்து காலத்தை
‘தரித்தெழுதி வாசித்துங்கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது’ என்றும் ,
வர்தமாநஸ் ஸதா சைவம் பாஞ்சகாலிக வர்த்மநா|
ஸ்வார்ஜிதை கந்த புஷ்பாத்யை: ஶுபைஶ்ஶக்த்யநுரூபத: ஆராதயந் ஹரிம் பக்த்யாகமயிஷ்யாமி  வாஸராந்|”
என்றும் சொல்லுகிறபடியே ஸபலமாகக் கழிக்கப் போகிறேன் என்கிற ஸாத்விக தைர்யத்தை யடைந்து
படுக்கையிலிருந்துகொண்டே ஶ்ரோத்ராசமனம் செய்துவிட்டு (வலது காதை வலது கையினால் தொட்டு)

க்ருதம் ச கரிஷ்யாமி |பகவந்நித்யேந பகவத் ப்ரீத்யர்தேந மஹாவிபூதி சாதுராத்ம்ய பகவத் வாஸுதேவ
பாதாரவிந்தார்சநே நாபிகமநாக்க்யேந பகவத் கர்மணா பகவந்தம் வாஸுதேவ மர்சயிஷ்யாமி”  என்று
ஸங்கல்பித்துக்கொண்டு, பகவதோ பலேந பகவதோ வீர்யேண பகவஸ்தேஜஸா பகவத:
கர்மணா பகவத: கர்ம கரிஷ்யாமி பகவதோ வாஸுதேவஸ்ய” என்று அநுஸந்தானம் செய்து,
பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூப ஸித்தி ப்ரவ்ருத்தஸ்வஶேஷதைகரஸேந மயா ஸ்வகீயைஶ் சோக்கரணை:
ஸ்வராரநைக ப்ரயோஜநாய பரம புருஷ: ஸர்வஶேஷீ ஸ்வஶேஷ பூதமிதம்பிகமநாக்யம் கர்மஸ்வஸ்மை
ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி” என்று ஸாத்விகத்யாகம் செய்து,

குருபரம்பரானு ஸந்தானபூர்வமாகப் பகவானைச் ஶரணமாக அடைந்து,
த்வயாராதனகாமோயம் வ்ருதம் சரிதுமிச்சதி| ஸங்கல்ப ஸித்த்யை பகவந் பூரயாஸ்ய மநோரதாந்” என்கிற ஶ்லோகத்தினால்
கைங்கர்யங்கள் நிர்விக்னமாய் ஸரிவர நடக்கவேண்டுமென்று பகவானை ப்ரார்த்தித்து ,
ஸத் ஸங்காத் பவநி ஸ்ப்ருஹோகுருமுகாத்  ஸ்ரீஶம்ப்ரபத்யாத்மவாந்| ப்ராரப்தம் பரிபூஜ்ய கர்ம ஶகலம் ப்ரக்ஷீணகர்மாந்தர|
ந்யாஸாதேவ நிரங்குஶேஶ்வரதயார்லூந மாயாந்வயோஹார்தாநுக்ரஹ லப்தமத்ய தமநித்வாராத் பஹிர்நிர்கத|
முக்தோர்சிர்ந பூர்வபக்ஷ ஷடு தங்க்மாஸாப்த வாதாம் ஶுமத் க்லௌ  வத்யுத்வருணேந்த்ர தாத்ருமஹித;
ஸீமாத்மஸிந்தாப்லுத: ஸ்ரீவைகுண்டமுப்யேத நித்ய மஜடம் தஸ்மின் பரப்ரஹ்ம ஸாயுஜ்யம் ஸமவாப்ய நந்தனி ஸமஸ்தேநைவ தந்ய:
புமாத்|ப்ராதர் நித்யாந் ஸந்தேயம் பரமார்தம் முமுக்ஷுபி: ஶ்லோக த்வயேந ஸம்க்ஷிப்தம் ஸுவ்யக்தம் வரதோ ப்ரவீத்” என்கிற
ஶ்லோகங்களையும் அதின் அர்த்தமாகிய தானடையப் போகிற புருஷார்த்தத்தின் பெருமைகளையும் அனுஸந்தானம் செய்து
அதிக ஸந்தோஷத்தை யடைந்தவனாய் பகவந் நாமங்கள் பூர்வாசார்யர்களருளிச்செய்த பகவத் ஸ்தோத்திரங்கள்
இவைகளை அதிமனோஹரமான ஸ்வரத்துடன் அனுஸந்திக்க வேண்டும்.

ஸாவகாசமிருந்தால் வேதம் முதலியவைகளின் திருவை முதலியவைகள் செய்யலாம்.
பிறகு படுக்கையை விட்டெழுந்திருந்து “ஓம் நம: க்ஷீதிபராய” என்கிற மந்திரத்தை உச்சரித்து
பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீவராஹ நயினாரை ப்ரார்த்தித்து விட்டு வலது காலைத் தூக்கிப் பூமியில் வைத்து
“நமோஸ்து ப்ரிய தத்தாயை துப்யம் தேவி வஸுந்தரே! த்வம் மாதா ஸர்வலோகாநாம் பாதஸ்பர்ஸம் க்ஷமஸ்வமே” என்று
பூமிதேவியைப் ப்ரார்த்திக்க வேண்டும். பிறகு “விஷ்ணோ: க்ரமோஸி” என்றாரம்பிக்கும் மந்திரத்தினால்
திரிவிக்ரமனை த்யானம் செய்துகொண்டு நடக்க வேண்டும்.

ஸ்நானம் செய்தல்
(பகவச் ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட ஸ்நான விதி)

பிறகு பகவானுடைய ஸந்நிதித் துறை, பாகவதர்கள் ஸ்நானம் செய்யும் துறை, இவைகளுக்குச் சென்று
கரையை யலம்பி கை கால்களை யலம்பிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து
கையில் பவித்திரத்தைத் தரித்துக் கொண்டு மூன்று தடவை ப்ராணாயாமம் செய்யவேண்டும்.

ப்ராணாயாமம் செய்யும் விதம்
சுண்டு விரல் பவித்திர விரல் இவைகளினால் இடது பக்கம் மூக்கை அமுக்கிக் கொண்டு வலது பக்கத்தினால் தேஹத்திலிருக்கும் காற்றை வெளிவிட்டு,
கட்டை விரலினால் வலது மூக்கை மூடிக்கொண்டு இடது பக்கத்தினால் மூச்சை உட்கொண்டு அப்படியே இரண்டு துவாரங்களையும் மூடிக்கொண்டு,
வாய், கண், இவைகளை மூடிக்கொண்டு மனதில் பகவானை த்யானம் செய்து ஸப்த வ்யாஹ்ருதிகளையும்,
காயத்ரியையும், காயத்ரி ஶிரஸ்ஸையும் மூன்று தடவை உச்சரித்து கடைசியில்
வலது மூக்கினால் காற்றை வெளிவிட்டு வலது காதை ப்ரணவத்தினால் தொடவேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக் கொண்டு குரு பரம்பராநுஸந்தானம் செய்து
‘ஸ்ரீகோவிந்த’ என்றாரம்பித்து திதிவார நக்ஷத்திரங்களைச் சொல்லி
ஸ்ரீ பகவதாக்ஜ்ஞயா ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்தம் கர்மண்யதா ஸித்த்யர்தம் ப்ராத ஸ்நானமகம் கரிஷ்யே’ என்று
ஸங்கல்பித்துக்கொண்டு க்ருதஞ்ச கரிஷ்யாமி என்று முன்போல் அநுஸந்திக்கவேண்டும்.

அதில் யோகாக்யேந என்பதற்கு பதிலாக ப்ராதஸ்நானாக்யேந என்றநுஸந்திக்க வேண்டும்.
இப்படியே மற்ற இடங்களிலும் அந்தந்தக் கர்மத்தை அநுஷந்திக்க வேண்டியது.
அப்படியே பகவதோபலேந என்கிற பல மந்திரத்தையும், பகவாநேவ என்கிற ஸாத்விகத்யாகத்தையும் செய்யவேண்டும்.

புண்ய தீர்த்தங்களைப் பற்றிய த்யான ஶ்லோகங்களைத் தெரிந்த வரையிலும் அநுஸந்திக்கிறது.
இப்படியே பகவத் பாகவதாசார்யர்களின் விஷயமாயும் அனுஸந்திக்கிறது.
இதற்குமேல் பாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் விதிக்கப் படுகிற ஸ்நானத்தின் விவரம் இந்த நித்யத்திலேயே மாத்யாஹ்நிக ஸ்நாந ப்ரகரணத்தில்
சொல்லப்படுகிறபடியினாலே அங்கு சொல்லி இருப்பதைப் போல செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்த பிறகு வலது காலை ஜலத்திலும் இடது காலைக் கரையிலுமாக வைத்து உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்து கரையில் நின்று கொண்டு-ஆசார்யர்கள் விஷயமாயும் பகவான் விஷயமாயும் த்யான ஶ்லோகங்களைச் சொல்லிக்கொண்டு
இரண்டு வஸ்திரங்களில் ஒன்றினால் தலைப் பாகத்தையும் மற்றொன்றினால் மற்றப் பாகங்களையும் துடைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வ்யாஹ்ருதி த்ரயங்களினால் உலர்ந்த வேஷ்டியை ப்ரோக்ஷித்து
தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேஶ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோஹஸ்தாப்யாம் ஆததே என்கிற மந்திரத்தைச் சொல்லி எடுத்து
உதூத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: த்ருஶே விஶ்வாய ஸூர்யம் என்று ஸூர்யனுக்குக் காண்பிவித்து,
அவதூதகும் ரக்ஷோ அவதூதாத்ராதய: என்கிற மந்திரத்தைச் சொல்லி உதறி,
ஆவஹந்தீ விதந்வாநாகுர்வாணாசீரமாத்மந: வரஸாம்ஸி மமகாவஶ்ச அந்நபாநேச ஸர்வதா| ததோ மே ஶ்ரிய மாவஹ என்கிற மந்திரத்தைச் சொல்லி,
உத்தரீயத்தைத் தலையில் சுற்றிக் கொண்டு யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக் காதில் சுற்றிக் கொண்டு
கௌபீனத்தைத் தரித்துக் கொண்டு, முழங்கால்களையும், கைகளையும் மண் ஜலம் இவைகளினா லலம்பிக்கொண்டு
வஸ்திரம், உத்தரீயம் இவைகளை உடுத்திக் கொண்டு கால்களை யலம்பி இரண்டு தரம் ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்து

ஸ்ரீபகவதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்தம் மந்த்ரஸ்நானம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து
ஆபோஹிஷ்டா மயோபுவ| தாநஊர்ஜ ததாந| மஹேரணாயசக்ஷஸே| யோவஶ்ஶிவதமோரஸ:| |
தஸ்யபாஜயதேஹத: உஶதீரிவமாதர: தஸ்மா அரங்க மாமவ| யஸ்யக்ஷயாயஜிந்வத| ஆபோஜநயதாசந: |என்கிற
மந்திரங்களினால் க்ரமமாய் கால், தலை, ஆகாசம் இவைகளிலும், தலை ஆகாசம், கால் இவைகளிலும்,
ஆகாசம், தலை, கால் இவைகளிலும் முறையே ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாநஸ ஸ்நானம் செய்ய வேண்டும். அதாவது ஆகாசத்தில் ஆயிரம் கோடி ஸூர்யன் உதயமானாற்போல
ப்ரகாசித்துக் கொண்டிருப்பவனாயும், ஶங்கம், சக்கரம், கதை, சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற
நான்கு திருக்கைகளையுடையவனாயும், கிரீடம், தோள்வளைகள் முதலிய ஸர்வாபரணங்களினா லலங்கரிக்கப்பட்டவனாயு மிருக்கிற பகவானையும்,
தாமரைப் புஷ்பங்களைப்பொல் ப்ரகாசித்துக் கொண்டும், ஶங்க சக்ராதி ரேகைகளோடு கூடிய திருவடிகளையும் ,
அந்தத் திருவடிகளிலிருந்து உத்பத்தியான கங்கை தன் தலையில் விழுந்து ப்ரும்மாந்திரத்தினால் உள் நுழைந்து
உள்ளும் வெளியுமாகத் தன்னுடைய ஸரீரம் அலம்பப்பட்டதாயும் த்யானம் செய்யவேண்டும்.
ஸ்நானம் செய்யும் பொழுது உபயோகித்திருந்த வஸ்திரத்தைப் பிழிந்து தனக்கு எதிரில் வைக்காமல் பக்கத்தில் வைத்துக் கொள்ளவேணும்.

பிறகு இந்த இடத்தில் ப்ரஸந்தானு ப்ரஸக்தியாக தர்ம ஶாஸ்திர க்ரமமான ஸ்நான விதி ஆஹ்நிகாதிகளில்
எழுதப்பட்டிருந்தபோதிலும் அனுஷ்டான பரம்பரையில் வராததினால் இங்கு எழுதவில்லை.
ஶக்தி இல்லாதவனா யிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும்.
தீட்டு முதலியவைகளினால் அசுத்தனாயிருந்தால் வெந்நீரில் ஸ்நானம் செய்யக்கூடாது.
ஶிரஸ்நானம் செய்ய ஶக்தி இல்லாமலிருந்தால் தொப்புள் வரையில் அலம்பி மேல் பாகங்களை ஈரத்துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கும் ஶக்தி இல்லாமலிருந்தால் ஶாஸ்திரங்களில் விதிக்கப் பட்டிருக்கும் மற்ற ஸ்நானங்களில்
தன் அதிகாரத்துக்குத் தகுந்ததான ஒன்றைச் செய்ய வேண்டும்.  ,

ஊர்த்வ புண்ட்ரம் தரித்தல்
தீர்த்த ஹரியில் ஜலத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து உத்தரணியினால் ஜலமெடுத்து
“வீர்யாய அஸ்த்ராயபட்” என்கிற அஸ்திர மந்திரத்தினால் இடது கையை அலம்பி, ப்ரணவத்தினால் திருமண்ணைக் கையில் எடுத்துவைத்து
‘கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம்  கரீஷிணீம்| ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம் த்வாமிஹோபஹ்வயேஶ்ரியம் என்று குழைத்து
அஸ்திர மந்திரத்தினால்   ரக்ஷையை எட்டுத் திக்குகளிலும் செய்து, ப்ரணவத்தினால் கலந்து, மூல மந்திரத்தினால் ஜபித்து,
ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை எழுதி, ஆள் காட்டி விரலினால் குழைத்து,

விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவாநி விமமேரஜாகும்ஸியோ அஸ்கபாய உத்தரகும் ஸதஸ்தம் விசக்ரமாணஸ்த்ரேதோருகாய:| |’ என்கிற மந்திரத்தையும்,-த்வாதஶாக்ஷரத்தையும் ஜபித்து, ‘விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்டமஸி விஷ்ணோ: ஶ்நப்த்ரேஸ்தோ
விஷ்ணோஸ்யஸூரஸி விஷ்ணோர்த்ருவமஸி வைஷ்ணவமஸி விஷ்ணவேத்வா|
உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஶதபாஹுநா|| பூமிர்தேநுர்தரணீ   பூததாரிணீ|
ம்ருத்திகே ஹநமேபாபம் யந்மயா த்ருஷ்க்ருதம் க்ருதம் | த்வயா ஹதேந பாபேந ஜீவாமி ஶரதஶ்ஶதம் |
ம்ருத்திகே தேஹி மே புஷ்டிம் த்வயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம்|| என்கிற மந்திரங்களை உச்சரித்து

ஆள்காட்டி விரலினால் கொஞ்சம் எடுத்து ப்ரணவத்தினால் சிரஸ்ஸில் தரித்து,
பவித்திர விரலினால் நெற்றி முதலிய இடங்களில் பகவானுடைய திருவடிகளைப் போன்ற ஊர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக் கொள்ளவேண்டியது.
நெற்றியிலும் நடுவயிற்றிலும், மார்பிலும், முன் கழுத்திலும், வலது வயிற்றிலும், வலது கையிலும்,வலது கழுத்திலும்,
இடது வயிற்றிலும், இடது கையிலும், இடது கழுத்திலும், அடி முதுகிலும், பின் கழுத்திலுமாக க்ரமமாகத் தரிக்கவேண்டியது.
தரித்துக் கொள்ளும்போது கேஶவாதி பன்னிரண்டு நாமங்களையும் ‘ஓம் கேஶவாய நம:’என்று முறையே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றாக உச்சரித்துக்கொண்டு இட்டுக் கொள்ள வேண்டியது.
மிகுதி திருமணை த்வாதஶாக்ஷரத்தினால் ஶிரஸில் தரித்துக் கொள்ள வேண்டியது.

பகவானுடைய திருமேனி ஸம்பந்தமுடைய மஞ்சள் முதலியவைகள் சேர்ந்த ஸ்ரீசூர்ணத்தை எடுத்துக் குழைத்து
கீழ்க்கூறிய க்ரமப்படி புண்ட்ரங்களின் நடுவில் தரிக்கவேண்டியது.
ஶ்ரியை நம:, அம்ருதோத்பவாயை நம:,கமலாயை நம:, சந்த்ரஸோதர்யை நம:, விஷ்ணுபத்ந்யை நம:, வைஷ்ணவ்யை நம:, வராரோஹாயை நம:,
ஹரிவல்லபாயை நம:, ஶார்ங்கிண்யை நம:, தேவதேவ்யை நம,, மஹாலக்ஷ்ம்யை நம:, லோகஸுந்தர்யை நம:, ஸர்வாபீஷ்ட பலப்ரதாயை நம: என்று
முறையே உச்சரித்துக் கொண்டு தரிக்க வேண்டும். பிறகு ஒம் கேஶவாய நம: என்கிற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு புண்ட்ரங்களைக் க்ரமமாகத் தொட வேண்டும்.

பிறகு கையைக் கூப்பிக்கொண்டு சதுஶ்சக்ரம் நமஸ்யாமி கேஶவம் கநகப்ரபம்! நாராயணம் கநஶ்யாமம் சதுஶ்ஶங்கம் நமாம்யஹம்|
மாதவம் மணிபங்காபம் சிந்தயாமி சதுர்கதம்| சந்த்ரபாஸம் சதுஶ்ஶார்ங்கம் கோவிந்தமஹமாஶ்ரயோ
விஷ்ணும் சதுர்ஹலம் வந்தே பத்ம கிஞ்ஜல்க ஸந்நிபம்| சதுர்முஸலமப்ஜாகம் ஸம்ஶ்ரியே மதுஸூதநம்:
அக்னி வர்ணம் சது:கட்கம் பாவயாமி த்ரிவிக்ரமம்| வாமநம் பால ஸூர்யாபம் சதுர்புஜம் விபாவயே|
ஶ்ரீதரம்  புண்டரீகாபம் சது: பட்டஸமாஶ்ரயே| சதுர்முத்கரமப்யேமி  ஹ்ருஷிகேஶம் தடித்ப்ரபம்|
பஞ்சாயுதம் பத்ம நாபம் ப்ரணமாம்யர்கரோசிஷம்| தாமோதரம் சதுஷ்பாஶமிந்த்ரகோபநிபம் பஜே|
வாஸுதேவ முபாஸேஹம் பூர்ணேந்த்வயுத ஸந்நிபம்| என்று
அந்தந்தப் புண்ட்ரங்களுக்கு எதிரில் கையைக் கூப்பிக் கொண்டு ப்ரார்த்திக்க வேண்டும்.

பின்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த பன்னிரு திரு நாமப் பாட்டுக்களையு மநுஸந்திக்க வேண்டும்.
புண்ட்ரம் தரித்துக் கொண்டபிறகு கையலம்பக் கூடாது.
ஸாவகாசமில்லாமற் போனாலும், ஶக்தி இல்லாமற்போனாலும், நெற்றியிலும், பின்கழுத்திலும் அவஶ்யம் தரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு புண்ட்ரங்களையும் ஒரு பொழுதும் தவிரக்கூடாது.

பிறகு, “அஸ்மத் குருப்யோ நம: அஸ்மத் பரம குருப்யோ நம: அஸ்மத் ஸர்வ குருப்யோ நம: ஸ்ரீமதே வேதாந்த குரவே நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமதே மஹாபூர்ணாயநம: ஸ்ரீமத்யாமுநமுநயே நம: ஸ்ரீராமமி ஶ்ராய நம: 
ஸ்ரீபுண்டரீகாக்ஷாயநம: ஸ்ரீமந் நாதமுநயே நம: ஸ்ரீமதே ஶடகோபாய நம: ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாயநம: ஶ்ரியை நம: ஶ்ரீதராயநம:

அஸ்மத்தேஶிகமஸ்மதீயபரமாசார்யாந் அஶேஷாந் குரூந் ஸ்ரீமல்லக்ஷ்மண யோகிபுங்கவ மஹாபூர்ணௌ முநிம் யாமுநம்|
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் ஶடத்வேஷிணம் ஸேநேஶம் ஶ்ரியமிந்த்ரா ஸஹசரம் நாராயணம் ஸம்ஶ்ரயே|| ‘

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கியானடைவே – யவர் குருக்கள் நிரை வணங்கி, பின்னருளால்
பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி, நன்னெறியை யவர்க்குரைத்த
உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன்னமுதத் திருமகளென்றிவர்களை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே’ என்றும்,

தன்னுடைய ஆசார்யனுடைய தனியன் முதலியவைகளையும்
விஸ்தாரமாக அனுஸந்திக்க வேண்டும். துளஸி மணி மாலை, தாமரை மணி மாலை, திருப் பவித்திரம், முதலியவைகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
திருவடி ஜோட்டை ஶிரஸில் தரித்துக்கொண்டு தர்ப்ப பவித்திரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

தேவர்ஷி பித்ரு தர்ப்பணம்
கால் கைகளை யலம்பி, ஆசமனம் செய்து ஸ்ரீபகவதாஜ்ஞ்யா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம்
ஸ்நாநாங்கம் தேவர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்துக் கொண்டு
தேவதைகள், ருஷிகள், பித்ருக்கள், எல்லோரும் பகவானை அந்தர்யாமியாக வுடையவர்கள் என்று த்யானித்துக் கொண்டு தர்ப்பணம் செய்யவேண்டும்.

ப்ரஹ்மாதயோ யே தேவாஸ்தான் தர்ப்பயாமி!
ஸர்வாம் தேவாம்ஸ் தர்ப்பயாமி! ஸர்வ தேவகணாம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வதேவ பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ தேவகண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
நுனி விரல்களால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை நிவீதமாக்கிக்கொண்டு இரண்டு கட்டை விரல்களிலும் மாட்டிக் கொண்டு
ஒம் க்ருஷ்ணத்வைபாய நாதயோயே ருஷ்ய: தாந் ருஷிம்ஸ்தர்ப்யாமி ! ஸர்வாந் ருஷீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வருஷிகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வருஷிகணபத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று
இரண்டு கைகளின் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

யஜ்ஞோபவீதத்தை ப்ராசீனாவீதமாகத் தரித்துக்கொண்டு
ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வாந் அக்னிகவ்யவாஹ நாதயோ யே பிதர: தாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வாந் பித்ரும்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வ பித்ருகணாம்ஸ் தர்ப்பயாமி ! ஸர்வபித்ருபத்நீம்ஸ் தர்ப்பயாமி !
ஸர்வ பித்ரு கண பத்நீம்ஸ் தர்ப்பயாமி ! என்று வலது கைக்கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவினால் தர்ப்பணம் செய்யவேண்டும்.

பிறகு ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பய தமேபித்ரூந் என்று
இரண்டு கைகளிலும் ஜலமெடுத்து ப்ரதக்ஷிணமாகச் சுற்றி இடது பக்கம் கரையில் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
என்று சொல்லி மூன்று தடவை ஜலத்தை இறைக்க வேண்டும்.
யஜ்ஞோபவீதத்தை க்ரமமாகத் தரித்துக் கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.

ஶிரஸ்நானம் செய்யாத பக்ஷத்திலும் தீட்டு முதலியவைகளுக்காக ஸ்நானம் செய்யும் போதும், தேவருஷி பித்ரு தர்ப்பணம் செய்யக்கூடாது.
பகவாநேவ என்றாரம்பித்து, ப்ராத ஸ்நாநாக்யம் கர்மஸ்வஸ்மைவ ப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் என்று
ஸாத்விக த்யாகம் செய்து அநேந ப்ராதஸ்நாநாக்யேந பகவத் கர்மணா பகவாந் ப்ரீத்யதாம் வாஸுதேவ: என்று
ப்ராத ஸ்நானத்தை முடிக்க வேண்டும்.

தத: ஸ்நாநார்த மாஸாந மாநீய கந்தாதிபி: அப்யர்ச்ய: |
பகவந்தம் ப்ரணம்ய: அநுக்ஞாப்ய: பாதுகே ப்ரதாய|
ஸ்நாநாஸநோ பவிஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண்யபநீய விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸ்நாநஸாடிகாம் ப்ரதாய| அர்க்ய பாத்ய ஆசமனீய பாதபீட ப்ரதாந தந்தகாஷ்ட ஜிஹ்வா|

நிர்லேகந கண்டூஷ முகப்ரக்ஷாளந| ஆசமன தர்ஶ ப்ரதர்ஶந ஹஸ்த ப்ரக்ஷாளந|
முகவாஸ தாம்பூல தைலாப்யங்க உத்வர்த்தனாமலகதோயம் கதப்லோத தேஹஶோதந
சாடிகா ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான கந்த புஷ்ப தூப தீப ஆசமன ந்ருத்த கீத வாத்யாதி ஸர்வ மங்களயுக்தா

அபிஷேக நீராஞ்ஜன ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமன கூர்ச்ச ப்ராஸாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்ஜந ஆசமன தேஹஶோதந ப்லோத
வஸ்த்ர உத்தரீய யஜ்ஞோபவீத ஆசமனாநி தத்யாத்|  

பிறகு ஸ்நானாஸநத்தை ஸமர்ப்பிவித்து சந்தனம், புஷ்பம், முதலியவைகளினால் ஆஸனத்தை அலங்கரித்துப்
பகவானை ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பிவித்து ஸ்நானாஸநத்தில் பகவான் எழுந்தருளினபிறகு
வஸ்திரம், ஆபரணம், மாலை முதலியவைகளைக் கழற்றி விஷ்வக்ஸேனரிடத்தில் ஒப்புக் கொடுத்து ஸ்நானசாடிகை ஸமர்ப்பிவித்து
அர்க்யம் பாத்யம், ஆசமனீயம், பாதபீடம், தந்தகாஷ்டகம், ஜிஹ்வாநிர்லேகனம், கண்டூஷம், முகப்ரக்ஷாளநம்,
ஆசமனம், ஆதர்ஶப்ரதர்ஶநம், ஹஸ்தப்ரக்ஷாளனம், முகவாஸ தாம்பூலம், தைலாப்யங்கம், உத்வர்த்தனம்,
ஆமலகதோயம், கங்கதம், ப்லோத தேஹஶோதனசாடிகை, ஹரித்ரா லேபனம், ப்ரக்ஷாளனம், வஸ்திரம், உத்தரீயம்,
யஜ்ஞோபவீதம், பாத்யம், ஆசமனம், பவித்திரம், கந்தம், புஷ்பம், தூபதீபம், ஆசமனம், தேஹஶோதனம், வஸ்திரம்,
உத்தரீயம், யஜ்ஞோபவீதம், ஆசமனம் இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.

தத: அலங்காராஸநம் அப்யர்ச்ய: ப்ரணம்ய|
அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய| தத்ர உபவிஷ்டே பூர்வவத் ஸ்நாநீய வர்ஜம்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஶுத்தோதகாநி மந்த்ரேண கல்பயித்வா|
பகவதே அர்க்ய பாத்ய ஆசமனீயாதி தத்வா கந்த புஷ்ப பாதஸம்மர்தன வஸ்த்ர உத்தரீய பூஷண உபவீத ஆசமனீயாநி தத்வா|
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ர பூஷணாந்தம் தத்வா|

கந்தாதீந் தேவாநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரதாய| தூபதீப ஆசமனாந்தம் தத்யாத்|
அத பார்ஸ்வ பரிவாராணாம் கந்தாதிநேவ தத்யாத்| கந்த புஷ்ப ப்ரதாநாலங்கார ஊர்த்வ புண்ட்ராம் ஜநாதர்ஶ
தூப தீப ஆசமன த்வஜ சத்ர சாமர வாஹந ஶங்க சிஹ்ந காஹ்ள பேர்யாதி ஸகல ந்ருத்த கீத வாத்யாதிபி அப்யர்ச்ய |
மூல மந்த்ரேண புஷ்பம் ப்ரதாய ப்ரத்யாகாரம் புஷ்பம் ப்ரதாய|

த்வாதஶாக்ஷரேண விஷணு ஷடக்ஷரேண விஷ்ணு காயத்ரியா பஞ்சோபநிஷதை: புருஷ ஸூக்த ருக்பி:
புஷ்பம் ப்ரதாய அந்யைஶ்ச பகவந் மந்த்ரை: ஶக்தஶ்சேத் புஷ்பம் ப்ரதாய|
தேவ்யாதி பார்ஷதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா|

ப்ரணம்ய| ப்ரதி திஶம் ப்ரதக்ஷிணம் ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்ஜலிம் தத்வா|
புரத: ப்ரணம்ய| ஶ்ருதி ஸுகை: ஸ்தோத்ரை: ஸ்துத்வா|
ஸ்வாத்மாநம் நித்ய கிங்கரதயா நிவேத்ய ததைவ த்யாத்வா |
யதாஶக்தி மூல மந்த்ரம் ஜபித்வா| ஸர்வேப்யோ போக பூரணீம் மாத்ராம் தத்வா|

பிறகு அலங்காராஸநத்தைப் பூஜித்து பகவானை ப்ரணாமஞ்செய்து அனுமதி பெற்றுக் கொண்டு,
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளினபிறகு, முன்போலவே
ஸ்நாநீயம் தவிர அர்க்யம் பாத்யம் ஆசமனீயம் ஸர்வார்த்ததோயம் இவைகளைக்
கீழ்ச் சொல்லியதைப் போலப் பரிகல்பனம் செய்து கொள்ள வேண்டும்.

பகவானுக்கு அர்க்ய பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பிவித்து
கந்தம், புஷ்பம், பாதஸம்மர்த்தனம், வஸ்திரம், உத்தரீயம்,  பூஷணம், யஜ்ஞோபவீதம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிவிக்க வேண்டும்.
மற்றெல்லா பரிவாரங்களுக்கும் ஸ்நாநம் வஸ்திரம் பூஷணங்கள் வரையில் ஸமர்ப்பித்துக்
கந்தம் முதலியவைகளைப் பகவானுக்கு ஸமர்ப்பிவித்த பிறகு ஸமர்ப்பிக்க வேண்டும்.

அதுவுமன்றிக்கே பரிவாரங்களுக்குக் கந்தம் முதலியவைகளை மாத்திரம் ஸமர்ப்பிக்க வேண்டியதாகவுமாம்.
(அர்க்ய பாத்ய ஆசமனாதிகள் வேண்டியதில்லை) கந்தம், புஷ்பம், அலங்காரம், ஊர்த்வ புண்ட்ரம், அஞ்ஜனம்,
ஆதர்ஶம், தூபம், தீபம், ஆசமனம், த்வஜம், சத்ரம், சாமரம், வாஹனம், சங்கம், சின்னம், காஹளனம், பேரி முதலிய
ஸகல நர்த்தனம், கீதம், வாத்யம், முதலிய உபசாரங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் புஷ்பம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
இப்படியே த்வாதஶாக்ஷரம், ஷடக்ஷரம், விஷ்ணு காயத்ரி, பஞ்சோபநிஷத் மந்திரங்கள், புருஷ ஸூக்த ருக்குகள், இவைகளினாலும்,
மற்ற இதர பகவந் மந்திரங்களினாலும், ஶக்தி உள்ளவரையில் புஷ்பங்களை ஸமர்ப்பிக்க வேண்டும்.
அப்படியே தேவி முதலியவர்களுக்கும் அவரவர்கள் மந்திரங்களினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

நாலு திக்குகளிலும் ப்ரணாமம் செய்து ப்ரதக்ஷிணம் செய்து புஷ்பாஞ்ஜலி ஸமர்ப்பிக்க வேண்டும்.
முன்பக்கத்தில் ப்ரணாமம் செய்து செவிக்கினிய ஸ்தோத்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.
பிறகு தன்னை, பகவானுடைய நித்யதாஸனாக அங்கீகரிக்க வேண்டுமென்று ஸமர்ப்பித்து, ஶக்திக்குத் தக்கபடி
திருவஷ்டாக்ஷரத்தை ஜபம் செய்து, ஸர்வ போகங்களையும் பூர்த்தி செய்யக் கூடிய மாத்திரையைத் தீர்த்தத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும்.

———

முகவாஸ தாம்பூல ப்ரதாய| அர்க்யம் தத்வா | போஜ்யாஸநம் அப்யர்ச்ய | ப்ரணம்ய| அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய |
தத்ர உபவிஷ்டே பாத்ய ஆசமனீய அர்ஹணாநி தத்வா|
குடம் மாக்ஷிகம் ஸர்பி| ததி: க்ஷீரஞ்சேதி பாத்ரே நிக்ஷிப்ய விஶோத்ய |
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய: மதுபத் பவநத ஶிரா: ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மதா: |

பூத்வா ப்ரதாய ஆசமனம் தத்யாத் | யத்கிஞ்சித் த்ரவ்யம் பகவத்தேயம் தத்ஸர்வம் ஶோஷணாதிபிர் விஶோத்ய|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய தத்யாத் ததஶ்ச காம் ஸ்வர்ண ரத்னாதிகம் ச யதாஶக்தி தத்யாத்|
தத”: ஸுஸம்ஸ்க்ருதாந்ந மாஜ்யாட்யம் ததிக்ஷீர மதூநி பலமூல வ்யஞ்ஜநாநி மோதகாம்ச
அந்யாநி லோகே ப்ரியதமாநி ஆத்மநஶ்சேஷ்டாநி ஶாஸ்த்ராவிருத்தாநி ஸம்ப்ருத்ய ஶோஷணாதி க்ருத்வா|
அர்க்ய ஜலேந ஸம்ப்ரோக்ஷ்ய| அஸ்த்ர மந்த்ரேண ரக்ஷாம் க்ருத்வா|

ஸுரபி முத்ராம் ப்ரத்ருஶ்ய அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத்| 
அதிப்ரபூத மதி ப்ரிய தமமதி ஸமக்ர மத்யந்த பக்தி க்ருத மிதம் ஸ்வீகுரு |
இதி ப்ரணாம பூர்வகம் அத்யந்த ஸாத்வ ஸவிநயா வந்தோ பூத்வா நிவேதயேத்|
ததஶ்சாந் பாந தர்ப்பணே ப்ரதாய|

ஹஸ்த ப்ரக்ஷாளந ஆசமன ஹஸ்த ஸம்மார்ஜந சந்தன முகவாஸ தாம்பூலாநி தத்வா|
ப்ரணம்ய| புந: மந்த்ராஸநம் கூர்ச்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ய அநுஜ்ஞாப்ய  பாதுகே ப்ரதாய|
தத்ர உபவிஷ்டே கந்தமால்யாதிக மபோஹ்ய| விஶ்வக்ஸேநாய தத்வா|
பாத்ய ஆசமனீய கந்த புஷ்ப தூப தீப ஆசமன பூப பலா ஆசமனாநி தத்வா| முகவாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதிபி: அப்யர்ச்ய:| |
ப்ரதக்ஷிண த்வயம் க்ருத்வா| தண்டவத் ப்ரணம்ய  பர்யங்காஸநம் அப்யர்ச்ய| அநுஜ்ஞாப்ய| பாதுகே ப்ரதாய|

தத்ரோபவிஷ்டே பாத்யாசமநே தத்வா| மால்யபூஷண வஸ்த்ராணி அபநீய| விஶ்வக்ஸேநாய தத்வா|
ஸுகஶயநோசிதம் ஸுக:ஸ்பர்ஸம் வாஸ: தது சிதாநி பூஷணாதி உபவீதம் ச ப்ரதாய| ஆசமனீயம் தத்வா|
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகவாஸ தாம்பூலாதிபி: அப்யர்ச்ய|
ஸ்வநீயாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஶேஷதைகரஸேந அநேநாத்மநா|

கர்த்ரா ஸ்வகீயைஶ்ச தேஹேந்த்ரியாந்த கரணை: ஸ்வகீய கல்யாண தமத்ரவ்ய மயாநௌபசாரிக
ஸாம்ஸ்பர்ஶிகாப்ய வஹாரிகாதி ஸமஸ்த போகாந் அதிப்ரபூதாநதி ப்ரியதமாநதி ஸமக்ராநத்யந்த
பக்தி க்ருதாநகிர பரிஜந பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே ஸ்வயமேவ ப்ரதி பாதி தவாந் இத்யநுஸந்தாய பகவந்தம் அநுஜ்ஞாப்ய:

பகவந் நிவேதிதாத் ஹவிஶ்ஶேஷாத் விஶ்வக்ஸேநாய கிஞ்சிதுர்ருத்ய: நிதாயாந்யத்
ஸர்வம் ஸ்வாசார்ய ப்ரமுகேப்யோ வைஷ்ணவேப்ய:: ப்ரதாய பகவத்யாக ஶிஷ்டை: ஜலாதிபி: த்ரவ்யை: |
விஶ்வக்ஸேநம் அப்யர்ச்ய| பூர்வோத்ருதம் ஹவிஶ்ச தத்வா|
ததர்சநம் பரிஸமாப்ய: பகவந்தம் அஷ்டாங்கேந ப்ரணம்ய: ஶரணமுபகச்சேத்| மநோபுத்தி மாநேந ஸஹந்யஸ்ய தராதலே|

கூர்மவச் சதுர பாதாந் ஶிரஸ்தத்ரைவ பஞ்சமம் | ப்ரதக்ஷிண ஸமேதேந ஏவம் ரூபேண ஸர்வதா|
அஷ்டாங்கேந நமஸ்க்ருத்ய ஹ்யூப விஶ்யா க்ரதோவிபோ|
உரஸா ஶிரஸாசைவ வபுஷா மநஸா கிரா: பத்ப்யாம்  கரப்யாம் ஜாநுப்யாம் ப்ரணமோஷ்டாங்க உச்யதே|
இத்யுக்தாஷ்டாங்க ப்ரணாம: ஶரணாகதி ப்ரகாரஶ்ச பூர்வோக்த: தத:
அர்க்ய ஜலம் ப்ரதாய| பகவந்தம் அநுஜ்ஞாப்ய |பூஜாம் ஸமாபயேத்|

————-

பிறகு முகவாஸ தாம்பூலம் ஸமர்ப்பித்து, அர்க்யம் கொடுத்து போஜ்யாஸநம் ஸமர்ப்பிக்க வேண்டும்.
போஜ்யாஸநத்தைப் பூஜித்து பகவானிடத்தில் ப்ரணாமம் செய்து அனுமதி பெற்றுக் கொண்டு பாதுகைகளை ஸமர்ப்பித்து
அந்தப் போஜ்யாஸநத்தில் பகவான் எழுந்தருளிவிட்டதாக த்யானித்து பாத்யம், ஆசமனீயம், அர்க்யம்
இவைகளை ஸமர்ப்பித்து மதுபர்க்கம் ஸமர்ப்பிக்க வேண்டியது.

அதாவது வெல்லம், தேன், நெய், தயிர், பால் இவைகளைத் தனித்தனியே பாத்திரங்களில் வைத்து
ஶோஷணதாஹந ப்லாவனங்களைச் செய்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து அமுது செய்தருளப் பண்ண வேண்டும்.
பிறகு பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய பசுமாடு, ஸ்வர்ணம், ரத்னங்கள்,தனதான்யங்கள் இவைகள் முதலிய எல்லா வஸ்துக்களையும்
பகவானுக்கு எதிரில் வைத்து அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து பகவானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு நன்றாகவும் பரிசுத்தமாகவும் பாகம் செய்யப்பட்ட அன்னங்களையும், நெய், தயிர், பால், தேன், பழம், கிழங்குகள் முதலிய
வ்யஞ்ஜனங்களைத் தனக்கு இஷ்டங்களாயும் ஶாஸ்திரங்களுக்கு விரோதமில்லாமலுமிருப்பவைகளை ஸம்பாதித்துப் பகவானெதிரில் ஸமர்ப்பித்து
அர்க்ய தீர்த்தத்தினால் ப்ரோக்ஷித்து, அஸ்திர மந்திரத்தினால் திக்பந்தனஞ்செய்து, ஸுரபி முத்திரையைக் காண்பித்து, அர்க்ய தீர்த்தத்தை எடுத்து
“அதிப்ரபூதம்………இதம் ஸ்வீகுரு” என்று ப்ரணாமம் செய்து ப்ரார்த்தித்து மிகுந்த விநய பக்தியுடன் தலைகுனிந்து நின்று ஸமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு அநுபானம், தர்ப்பணம், இவைகளையும் ஸமர்ப்பித்து ஹஸ்த ப்ரக்ஷாளநம், ஆசமனம், ஹஸ்த ஸம்மார்ஜனம், சந்தனம், முகவாஸ தாம்பூலம்
இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும், பிறகு ப்ரணாமம் செய்து மந்திராஸநத்தைத் துடைத்துப் பூஜித்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து, அதில் பகவான் எழுந்தருளின பிறகு, முன் ஸமர்ப்பித்த சந்தனம், மாலை முதலியவைகளைக் களைந்து
விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து பாத்யம், ஆசமனீயம், சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், ஆசமனம், பக்ஷ்யம், பழம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பிக்க வேண்டும்.

முகவாஸ தாம்பூலம் ந்ருத்த கீத வாத்யங்களினால் ஆராதனஞ்செய்து, இரண்டு தடவை ப்ரதக்ஷிணம் செய்து
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பர்யங்காஸநத்தைத் துடைத்து பகவானிடத்தில் உத்திரவு பெற்றுக்கொண்டு
பாதுகைகளை ஸமர்ப்பித்து அதில் பகவான் எழுந்தருளியதாக த்யானஞ்செய்து பாத்யம், ஆசமனீயம், இவைகளை ஸமர்ப்பித்து
மாலை, பூஷணங்கள், வஸ்திரங்கள் இவைகளைக் களைந்து விஷ்வக்ஸேநரிடம் கொடுத்து
ஸுகஶயனத்திற்குத் தகுந்ததாய் ஸுகமான ஸ்பர்ஶத்தை உடையதான வஸ்திரம், பூஷணம், மாலை, உபவீதம் இவைகளை ஸமர்ப்பித்து
ஆசமனீயம் ஸமர்ப்பித்து சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், ஆசமனீயம், முகவாஸ தாம்பூலம் இவைகளை ஸமர்ப்பித்து,

“ ஸ்வநியாம்ய…….ப்ரதிவாதிதவாந்” என்று ஸாத்விகத்யாகஞ்செய்து பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு
பகவானுக்கு நிவேதனஞ்செய்யப்பட்ட ஹவிஸ்ஸின் மிகுதியிலிருந்து விஷ்வக்ஸேநருக்காகக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு
மற்றை எல்லா ஹவிஸ்ஸுக்களையும் தன்னுடைய ஆசார்யன் முதலான எல்லா வைஷ்ணவர்களுக்கும் ஸமர்ப்பித்து
பகவானுடைய ஆராதனத்தில் மிகுந்த தீர்த்தத்தினால் விஷ்வக்ஸேநருக்கு ஆராதனஞ்செய்து
முன்னமேயே எடுத்து வைத்திருக்கும் ஹவிஸ்ஸை நிவேதஞ்செய்து அந்த ஆராதனத்தை முடித்துப்
பகவானை ஸாஷ்டாங்கமாக ஸேவித்து ஶரணாகதி செய்ய வேண்டும்.

‘மனது, புத்தி, அஹங்காரம், இரண்டு கைகள், இரண்டு கால்கள், தலை இவைகளை ஆமைபோல் வைத்துக் கொண்டு ஸேவிப்பது’ என்றும்,
‘ப்ரதக்ஷிணங்களோடு கூடிய இப்படிப்பட்ட ஸாஷ்டாங்க ப்ரணாமத்தினால் பகவானை ஸேவித்து அவனெதிரில் உட்கார்ந்து’ என்றும்,
‘மார்பினாலும், தலையினாலும், ஶரீரத்தினாலும், மனதினாலும், வாக்கினாலும், கால்களினாலும்,
கைகளினாலும், முழங்கால்களினாலும், ப்ரணாமம் செய்வது ஸாஷ்டாங்க ப்ரணாமம்’ என்றும்
சொல்லப் படுகிறது என்று ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்யும் விதம் சொல்லப் பட்டது.
ஶரணாகதி செய்யும் விதமும் முன்னமேயே சொல்லப் பட்டது.
பிறகு அர்க்யம் ஸமர்ப்பித்துப் பகவானிடத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு ஆராதனத்தை முடிக்க வேண்டும்.

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த  ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

November 29, 2023

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாயதீர்த்தம் கத்வா

ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா

அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய

ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவத்தியாள நல்லூர் –ஸ்ரீ ஆனை அழுங்குங்குளம்-ஸ்தல மான்மியம் –ஸ்ரீ மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார் ஸ்வாமிகள் —

November 29, 2023

நல்ல தமிழ் அறிந்தோருக்கு மிகவும் பரிச்சயமான மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றி அருளிய லக்ஷக்கணக்கான
தமிழ்ப் பாடல்களில் ஒன்று மதுரகவி திருவத்தியாள நல்லூர் ஸ்தல மான்மியம் என்பது.
திருவத்தியாள நல்லூர் எது? இதுவே மணவை என்றும் சொல்லப்படும் திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் வீரவ நல்லூரை அடுத்துள்ள ஒரு அழகான சிற்றூர்.

பொதியமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. என்ன சிறப்பு?
ஊரின் மற்றொரு பெயரையும் சொல்லிவிட்டால் படிப்பவர்களில் அநேகமாக அனைவருக்குமே தெரிந்துவிடும்.
ஆனை அழுங்குங்குளம் என்ற அழகான பெயர். அழுங்கும் என்றால் வருந்துதல், ஆனை வருந்திய குளம் அதாவது-மடு.
இது தான் அன்று ஆதிமூலமே என்று அழைத்த ஆனையின் குரலுக்கு அரக்கப் பரக்க நாராயணன் ஓடி வந்து
அபயம் அளித்த ஊர் என்று. கஜேந்திர மோக்ஷம் நிகழ்ந்த அந்த ஊரின் ஸ்தல மான்மியத்தை
தன் மதுர கவிகளால்  சுவை சொட்டச் சொட்ட அருளி யிருக்கிறார் நம் ஸ்ரீ மதுர கவி ஸ்வாமிகள்
அவற்றுக்கு ஸ்ரீ கம்பன் திரு இராமன் ஸ்வாமிகள் அளித்துள்ள எளிமையான சிறு குறிப்புகளையும் சேர்ந்து பார்ப்போம்

காப்புகள்

சித்தி யாளத் தினம் முனி வோர் புகழ்
அத்தி யாள நல் லூரருண் மான்மியம்
பத்தி யாளர் பரவும் படி சொல
முத்தி யான முதலடி போற்றுவாம்.   –1-

சித்தி ஆள – மோட்ச நிலை அடைய;
தினம் – நாள்தோறும்;
முனிவோர் – ரிஷிகள்;
புகழ் – போற்றும்;
அத்தியாளநல்லூர் – அத்தியாள நல்லூர் என்ற தலத்தின்;
அருள் மான்மியம் – அருள்சேர் புராணம்;
பத்தியாளர் – பக்தர்கள்;
பரவும்படி சொல – படித்து வணங்கும்படி கூற;
முத்தியான – பரமபதநாதனான;
முதல் அடி – மூலப்பொருளின் திருவடி;
போற்றுவாம் – துதிப்போம்

நம்மாழ்வார் துதி

ஆறன் பாயணி வோன் அரன் ஆதியோர்
தேறன் பார் திரு வாய்மொழி செப்பு நா
வீறன் பார் புகழ் மேன்மைக் குருகை வாழ்
மாறன் பாத மலர்தினம் வாழ்த்துவாம்.  –2-                                                                               .

ஆறு அன்பாய் அணிவோன் அரன் — கங்கையை அன்பாகச் சூடிய சிவன்;
ஆதியோர் – முதலாம் இறைவர்கள்;
தேறு அன்பார் — தெளிகின்ற அன்புசால்;
திருவாய்மொழி – திருவாய்மொழிப் பிரபந்தம்;
செப்பும் – கூறும்;
நா வீறன் – நா வண்மையன்;
பார் புகழ் – உலகு புகழும்;
மேன்மை – மேலான;
குருகை வாழ் மாறன் — குருகை நகர் வாழ் நம்மாழ்வார்;
பாத மலர் – திருவடித் தாமரை;
தினம் – நாள்தோறும்;
வாழ்த்துவாம் – போற்றுவோம்.

முத்திதரு மாநெறியை முன்னி அயல்நின்ற
அத்துவித பாசமற ஆங்குயிர்கள் எல்லாம்
சொத்தமல னுக்கெனல்வி ளக்குசுகு ணப்பேர்
வத்துமுனி யுத்தமனை மன்னும் உளம் வைப்பாம்.     .3.

முத்தி தரும் – வீடு பேற்றுக்கு;
மாநெறியை முன்னி – சிறந்த மார்க்கம் நினைந்து;
அயல் நின்ற – அண்மையில் இருந்த;
அத் துவித – அந்தத்துவைதம் (இருவகை) என்ற;
பாசம் அற – பற்று ஒழிய;
ஆங்குயிர்கள் எல்லாம் – ஜீவராசிகள் அனைத்தும்;
சொத்தமலனுக்கு எனல் — இறைவனின் சொத்து என்பதை;
விளக்கு – பொலியச் செய்;
சுகுணப்பேர் – நற்குணமென்ற பெயருடைய;
வத்து முனி – பொருளாம் முனிவன் (இராமாநுஜன்);
உத்தமனை – சிரேஷ்டனை;
மன்னும் உளம் வைப்பாம் – விளங்கும் மனத்தில் (வைப்போம்) துதிப்போம்.

ஆழி சூழ்தரும் அவனிஓர் குடைநிழ லளிக்கும்
ஆழி நாயகற்(கு) அன்புறு தூதனாய் அடல்கொண்(டு)
ஆழி தாயணி வீழிவாய் அழகுறும் சீதைக்(கு)
ஆழி நல்கும்எம் அனுமனைப் பரவியன் புறுவாம்.     .4.

ஆழிசூழ் தரும் அவனி — கடல்சூழ் புவியை;
ஓர் குடை நிழல் – ஒரே ஒரு வெண்கொற்றக் குடையின் கீழ்;
அளிக்கும் – ஆளும்;
ஆழி நாயகற்கு – சக்கரம் தரித்த திருமால் ராமனுக்கு;
அன்புறு தூதனாய் – பக்திசார் தூதனாக;
அடல் கொண்டு – வலிமையுடன்;
ஆழிதாய் – கடல் தாவி;
அணிவீழிவாய் அழகுறும் – அழகிய கொவ்வைச் செவ்வாய் எழில் சேர்;
சீதைக்கு – ஜானகிக்கு;
ஆழி நல்கும் – கணையாழி தரும்;
எம் அனுமனை – எங்களாஞ்சநேயனை;
பரவி – துதித்து;
அன்புறுவாம் – அவனன்பைப் பெறுவோம்.

பொய்கையொடு பூதம் பேய் மழிசை வேந்தன்
பொற்குருகை வரு மாறன் திருக்கோ ளூர்வாழ்
அய்யனருட் சேரலர்கோன் விண்டு சித்தன்
ஆண்டாள்மெய்த் தொண்டரடிப் பொடியார் பாணன்
மெய்யுறுசீர் வாட்கலியன் புரையில் கேள்வி
வேதாந்த தேசிகன்விண் மண்ணோர் போற்று
மையறுமா மணவாள முனிவன் பாத
மரைப்போதெப் போதுமுளம் வைத்து வாழ்வாம்.           .5.

திருக்கோளூர் வாழ் அய்யன் – மதுரகவி;
பொய்கை, பூதம், பேய் எனும் முதலாழ்வார்கள்,
திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி, குலசேகர ஆழ்வார்,
பெரியா.ழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி, திருப்பாணன், திருமங்கைமன்னன்
ஆகிய பன்னிரு ஆழ்வார்களுடன்,
புரையில் கேள்வி – குற்றமற்ற ஞானம் உடைய வேதாந்த தேசிகன்,
விண்ணும் மண்ணும் போற்றுகின்ற மணவாள மாமுனிகள்,
இவர்களது பாதமரைப்போது – திருவடி மலர்கள், எப்போதும் உளம் வைத்து, வாழ்வோம்.

வேரி யம்பொழில் வில்லிபுத் தூர்நலம் மேவ
சீரி யன்றமா மறையவர் தமக்கொரு திலகன்
பேரி யன்றமெய் வீரரா கவனெனப் பேசும்
ஆரி யன்கழல் அனுதினம் முடிமிசை அணிவாம். –6-                    

வேரி அம்பொழில் – எழிலும் மணமுமுள்ள சோலைசேர்,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர்,
நலம் மேவ – நன்மை அடைய,
சீரியன்ற – சிறப்புப் பெற்ற,
மா மறையவர் தமக்கு — வேதியர்களுக்கு,
ஒரு திலகன் –ஒப்பற்ற திலகம் போன்றவன்,
பேர் இயன்ற – பெருமை சார்ந்த,
மெய் – உண்மையுள்ள,
வீரராகவனென – வீரராகவன் என்று,
பேசும் –கூறும்,
ஆரியன் கழல் – குரவன் (ஆசார்யன்) பாதம்,
அனுதினம் – தினந்தோறும்,
முடி மிசை அணிவாம் – தலை மேல் சூடுவோம்.

அவையடக்கம்

சித்தி யாடரு தேவர்மா தவர்தினம் வழுத்தும்
அத்தி யாளநல் லூரருள் மான்மிய மதனை
பத்தி யாற்றமிழ்ப் பாவினாற் பாடினன் சிறந்த
புத்தி யாளரென் புலமையை நகுவரோ புலவீர்.     .7.

சித்தி ஆள் தரு – மோட்சம் கைவந்த; தேவர் – வானவர்; மாதவர்—மகரிஷிகள்; தினம் வழுத்தும் – நாளும் துதிக்கும்; அத்தியாளநல்லூர் அருள் மான்மியமதனை – அத்தியாள நல்லூர்ப் புராணத்தை; பத்தியால் – அன்பால்; தமிழ்ப்பாவினால் – தமிழ்ப் பாடல்களால்; பாடினன் – இசைத்தனன்; சிறந்த புத்தியாளர் – பேரறிஞர்கள்; என் புலமையை – என் கல்வியறிவை; நகுவரோ—பழிப்பரோ; புலவீர் – அறிஞர்களே!

எண்ணும் எண்ணெயும் ஆமென எவற்றினும் உறையும்
கண்ணன் மாதவன் கரியவன் கசேந்திர வரதன்
அண்ண னாயிரம் பெயரவ னருளினால் இந்தப்
புண்ணியக் கதை சொற்றிடத் துணிந்தது போலாம்.       .8.

எண்ணும் எண்ணெயும் ஆம் என – எள்ளும் எண்ணெயும் போல; எவற்றினும் – அனைத்தினுள்ளும்; உறையும் – விளங்கும்; கண்ணன் மாதவன் கரியன் – மாதவப் பேருடைய கார்வண்ணக் கண்ணன்; கசேந்திர வரதன் – ஆனையரசுக்கு அருளியவன்; அண்ணன் – பெரியவன்; ஆயிரம் பெயரவன் – சகசிரநாமன்; அருளினால் –கிருபையால்; இந்தப் புண்ணியக் கதை – இந்தத்தரும காதை; சொற்றிடத் துணிந்தது – கூறத்துணிந்தது; போல் ஆம் – அசை.

எழுத்து சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைக்கும்
வழுத்(து) இலக்கண வகைசிறி(து) அறிந்திலன் மாட்சி
பழுத்த நுண்ணறி வாளர்முன் பாடிடத் துணிதல்
சுழுத்தி யிற்பரம் புருடனைத் தெரிந்துசொல் லுதலே.      .9.

எழுத்து சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று – ஐந்திலக்கணம் என; இசைக்கும் – கூறும்; வழுத்திலக்கண வகை – சிறந்த இலக்கண வகை ; சிறிது அறிந்திலன்—கொஞ்சமும் தெரியாதவன்; மாட்சி – சிறப்பு; பழுத்த – கனிந்த; நுண்ணறிவாளர் முன் – கூர்மையான அறிஞர்முன்; பாடிட – இசைக்க; துணிதல் – தொடங்குவது; சுழுத்தியில் – புலன்கள் உறங்குகையில்; பரம் புருடனை – பரமாத்மாவை; தெரிந்து – அறிந்து ; சொல்லுதல் – கூறுதலாம்

நாட்டுச் சிறப்பு

மாம ணித்திர ளருவிசால் பொதியமால் வரையிற்
றேம லர்த்திரள் செந்திரு முகமெனச் செழிப்பப்
பூம ணிக்குளம் பொலிதர வருபெரும் பொருனைக்
காமர் பெற்றது பாண்டிய நாடெனக் கரைவார்.    .10.

.மாமணித் திரள் – பேரழகு திரண்ட; அருவிசால் – நீர்வீழ்ச்சிகளமைந்த; பொதியமால் வரையில் – பொதிகை மாமலையில்; தேமலர்த் திரள் – மிகுதியான மணம்நிறை புஷ்பங்கள்; செந்திரு முகமென – செய்ய இலக்குமி முகம்போல்; செழிப்ப – வளமுடன் விளங்க; பூமணிக்குளம் பொலிதர – பொலிவுள்ள அழகிய நெற்றிபோல் விளங்க; வருபெரும் பொருனை – வரும் பெரிய பொருனை நதியின்; காமர் –எழில்; பெற்றது – கொண்டது; பாண்டிய நாடென; கரைவார் – கூறுவார்கள்

வேறு

காவெலாம் மயிலின் ஈட்டம் கரைஎலாம் பணிலம் வாசப்
பூவெலாம் வண்டு செந்தேன் பொழிமதுத் தடத்துப் பொய்கைத்
தாவெலாம் அன்னம் பண்ணைத் தலனெலாம் தரளம் சார்ந்த
மாவெலாம் குயில்கள் அந்த வனமெலாம் மணியின் சும்மை            .11.

காஎலாம் – சோலை எங்கும்; மயிலின் ஈட்டம் – மயிலின் கூட்டம்; கரை எலாம் – வரப்புகளில் எங்கும்; பணிலம் – சங்குகள்; செந்தேன் பொழி – செவ்விய தேன் சொரியும்; வாசப் பூ எலாம் – மணமுள்ள மலர்கள் எல்லாம்; வண்டு – தும்பிகள்; மதுத்தடத்து – இனிய தடாகத்தும்; பொய்கை – குளங்களின்; தா எலாம் – பள்ளங்கள் யாவிலும்; அன்னம் – அன்னப் பட்சிகள்; பண்ணைத் தலனெல்லாம் – வயல்களெல்லாம்; தரளம் – முத்துக்கள்; சார்ந்த – அருகுள்ள; மாஎலாம் – மாமரங்களிலெல்லாம்; குயில்கள் – கோகிலங்கள்; அந்த வனமெலாம் – அந்தக் காடுகள் முற்றும்; மணியின் – நவமணிகளின்; சும்மை – தொகுதி.

கரும்பொடு தென்னை பூகம் கதலிபால் வருக்கை காமர்
அரும்புதண் ஆதம் வானம் அளாவுகுங் குமங்கள் எல்லாம்
விரும்பிவந் தேற்போர்க்(கு) ஈயும் வித்தக ரென்னத் தோன்றச்
சுரும்பின மவர்பா லேற்கும் தீனரிற் பரந்து சூழும்.                       .12.

கரும்பொடு – கன்னலுடன்; தென்னை –தென்னை மரம்; பூகம் –பாக்கு மரம்; கதலி – வாழை; பால் வருக்கை – பால்மர வர்க்கங்களான பலா போன்றவை; காமர் – அழகு; அரும்பு – விரியும்; தண் ஆதம் – குளிர்ந்த மாமரம்; வானம் அளாவு – வானம் முட்ட ஓங்கிய; குங்குமங்கள் – குங்கும மரங்கள்; எல்லாம் –யாவும்; விரும்பி வந்து – ஆசையுடன் உற்று; ஏற்போர்க்கு – இரப்பவர்களுக்கு; ஈயும் – அளிக்கும்; வித்தகர் என்னத் தோன்ற – அறிஞர் எனக் காட்சி தர; சுரும்பினம் – வண்டுகள்; அவர்பால் – அவ்வித்தகரிடம்; ஏற்கும் –இரக்கும்; தீனரில் – வறிஞர்போல்; பரந்து சூழும் – பரவலாகச் சுற்றி இருக்கும்.

திருவொடு செருக்கும் வல்ல செய்கையும் மறமும் கோளும்
பொருளும்புன் மதியும் பெற்ற பூரியர் தலைபோல் நின்று
மருளறு ஞானத் தோர்தம் முடிஎன வளைந்து பாரில்
இருளுற வானுற் றோங்கும் இரும்பணை யாவும் செந்நெல்.       .13.

திருவொடு – செல்வமுடன்; செருக்கும் – அகந்தையும்; வல்ல செய்கையும் – வலிய செயலும்; மறமும் – பாவமும்; கோளும் – புறங்கூற்றும்; பொருளும் – மக்களும்; புன்மதியும் – இழிந்த புத்தியும்; பெற்ற – கொண்ட; பூரியர் – கீழ்மக்கள்; தலைபோல் – சிரம்போல்; நின்றும் – நிமிர்ந்தும்; மருளறு – மயக்கமற்ற; ஞானத்தோர் – அறிஞர்; தம்முடி என – தங்கள் தலைபோல; வளைந்து – குனிந்து; பாரில் – பூமியில்; இருளுற – இருட்டுச் சார; வானுற்று – விண்ணையடைந்து; ஓங்கும் – உயரும்; இரும்பணை யாவும் – பெரும் பண்ணைகள் எல்லாம்; செந்நெல் – செம்மையான நெற்கள் நிலவும்.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூபாஷித நீவி–முதல் பத்ததி–அநிபுண பத்ததி–த்ருப்தபத்ததி (கர்விஷ்டபத்ததி.)

November 29, 2023

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தா சார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி ||

க்ரந்தத்தின் அவதாரிகை –
இந்த க்ரந்தம் 144-ச்லோகங்கள் அடங்கியது. 12- பத்ததிகள் அடங்கியது. 12- ச்லோகங்கள் ஓர் பத்ததி.
பத்ததி என்பது நடக்கவேண்டிய மார்க்கத்தில் ஒரோர் விஷயத்தைப் பற்றினது. 12 என்பது ஸுர்யர்களின் ” கணக்கு. 12-ஸூர்யர்கள் உளர்.
அவர்களில் விஷ்ணு என் னும் ஆதித்யன் நான் என்றார் கீதையில் வாஸுதேவன், ஸூர் யன் எப்படி இருட்டைப்போக்கி வஸ்துக்களை ப்ரகாசப்படுத்துவரோ,
அறியாமல் தூங்குபவருக்கு ப்ரபோதத்தைக் கொடுப்பரோ, கச்மலங்களை நீக்கிச் சுத்தியைச் செய்வரோ, வ்யாதிகளை நீக்கி ஆரோக்யத்தை அளிப்பரோ,
அப்படியே அஹங்காரம் அக்ஞானம், தௌர்ஜந்யம், அஸூயை முதலிய இருட்டுக்களைப் போக்கி, ஆத்மாவின் அசுத்திகளை நீக்கி அதைச் சுத்தமாக்கி,
ஆத்மாவின் வ்யாதிகளைத் தீர்த்து ஸ்வரூபத்தில் விழிப்பைத் தந்து இந்த க்ரந்தம் மோக்ஷமார்க்கத்திற்கு உபகாரமாகவேண்டு மென்று நோக்கு.
12-அஷரங்கள் கொண்ட வாஸுதேவமந்த்ரத்தின் கணக்கையும் இங்கே ஸூசிக்கிறார்.

ஸ்வாமி திருவடிகளில் மிகுந்த ப்ரதிபத்தியை யுடைய அவிஜ்ஞரான ஸிஹ்ம நாயக ரென்னும்
வேங்கடகிரி ராஜ்யத்து அரசரொருவரின் ப்ரார்த்தனைக்கு இணங்கி இந்த க்ரந்தம் நிர்மாணம் செய்யப்பட்டது.
ராஜமஹேந்திரத்து ராஜாவையும் அவ்வரசர் ஜயித்து அந்தாட்டையும் சேர்த்து ஆண்டாரென்பர்.
வேங்கடேசன் கண்டாவதாரமான கவிஸிம்ஹத்தினிடத்தில் மஹாபண்டிதரும் கவியுமான அந்த வேங்கடகிரி அரசருக்கு
பக்தி கௌரவங்கள் ஏற்படுவதும், திரு வேங்கடநாட்டுக்கு அரசரும் திருவேங்கடமுடையான் பக்தருமான
அவரிடம் ஸ்வாமிக்கு க்ரூபாதாக்ஷிண்யங்கள் இருப்பதும் ஸஹஜங்களே.
ராஜஸபையைப் பெண்பாம்பென்று அறுதியிட்டு ஸபைகளிலிருந்து ஒதுங்கியிருப்பவராயி னும்,
திருவேங்கடமுடை,யான் பக்தராகிய ராஜாவின் வேண்டுகோளை அங்கீகரித்தது உசிதமே.

ராஜா ஸ்வயம் கவியானதாலும் அவர் ஸதஸ்ஸில் அநேக வித்வான்களும் கவிகளும் இருந்திருக்கவேண்டுமாதலாலும்,
அவர்கள் எல்லோரும் ஆச்சர்யப்படும்படி இக்காவ்யம் அமைக்கப் பட்டு, அவர்கள் ச்லாகையைப் பெற்றது.
ஒரு பதமேனும் இக் காவ்யத்தில் அகராதி பார்க்க அவசியமுள்ள தன்று. ஸ்ரீமத்ராமா யணத்தைப் போல மிக லளிதமான ச்லோகங்களால் அமைந்தது.
கடைசியில் ‘கடோசலளிதம்’ என்று தாமே வர்ணிக்கிறார். ராமாயணத்தைப் போலவே த்வநிமய மானது ;
ஸமுத்ரத்தில் போல் த்வனிரத்தங்கள் ஆழ்ந்து கிடக்கும். முராரி கவி ராமாயணத்தை ஸர்வகவி ஸமூஹங்களுக்கும் பொதுவான “ஸுபாஷிதநீவி என்று வர்ணித்தார்.
கவிகளுக்கெல்லாம் மூலமான ஆதாரம் என்று வால்மீகிக்கே விஸ்மயத்தையுண்டாக்கின அவருடைய ஆதிகாவ்யத்திற்கு
முராரிகவி சாற்றின ஸுபாஷிதநீவி என் னும் திருநாமத்தையே இந்தக் காவ்யத்திற்கு ஸ்வாமி சாற்றியிருப்பதால்,
ஸமுத்ரத்தைப்போல் ராமாயணம் ரத்தங்களால் ஆட்யம், எல்லோர் செவிகளுக்கும் மனோஹரம்” என்பதுபோல்
இதுவும் த்வநியினால் காட்டப்படும் தாத்பர்யரத்னங்களால் பூர்ணமாய், பின்வரும் கவிகளுக்கு ஓர் மூலாதாரமாய் இருக்க வேண்டுமென்பது நோக்கு.
நீவி என்பது மூலதனத்தையும், வஸ்த்ரத்தின் முடிப்பையும் சொல்லும். இந்த மூலதனத்தை நன்றாய் ஹ்ருதயத்தில் ஓர் கவி ரக்ஷித்துவைத்தால்,
இதிலிருந்து அனேக அழகான சாடுச்லோகங்களை வருத்தி( )செய்துகொள்ளலாம்.

வஸ்த்ர முடிப்பு என்ற பொருளைக்கொண்டு, மஹாபாரதத்திலும் நைஷதத்திலும் பெரியோரிடம் கேட்காமல்
அறியக் கூடாத க்ரந்தக்ரந்திகள் என்னும் முடிச்சுகள் இருப்பது போல, இந்த க்ரந்தத்திலும் அநேக தாத்பர்பாத்னங்கள் முடிப்புக்கட்டி முத்ரை போடப் பட்டிருக்கின்றன;
ஸம்ப்ரதாயமாகப் பெரியோரிடம் கேட்டே அவற்றை அறியவேண்டுமென்று அடுத்த ச்லோகத்தில் ஸாதிக்கிறார்.
‘முடிச்சவிழ்ப்பவர்’ என்னும் திருடர்கள் ச்லோக சப்தங்களைத் திருடினாலும் அவ்வபூர்வக் கருத்துக்களை
அவிழ்த்துக் கைப்பற்றமுடியாதென்றும் அங்கே ஸாதிக்கிறார்.

ஸிஹ்மராஜாவின் தெளிவுக்காக நீதிகளையும் வேதாந்ததத்துவங்களையும் கவிகளுக்கும் வித்வான்களுக்கும்
பரிஹாஸ மாய் மிகவும் ரஞ்ஜகமான முறையில் ஸ்வாபதேச அந்யாபதேசங்களாலும், ச்லேஷை ஸமாஸோக்தி வ்யாஜஸ்துதி
முதலிய அலங்காரங்களாலும் பல அபூர்வ த்வநிகளாலும் நெஞ்சில் தைக்கும்படி கவி ஸிஹ்மத்தால் ரசனை செய்யப்பட்ட
இந்த க்ரந்தத்தின் உட்கருத்துக்களையெல்லாம் “64-கலை களையும் கசடறக்கற்ற மஹா மேதாவிகள் தான் அறியக்கூடும்” என்று
சது::சாஸ்திரபண்டிதரான காஞ்சி – ஸ்ரீபட்டப்பாஸ்வாமி தாம் ஆரம்பித்துச் சில ச்லோகங்களுக்கு மட்டிலும் செய்துள்ள வ்யாக்யானத்தில் ஸாதித்தார்.
ஸ்ரீவைஷ்ணவ உலகத்தின் அபாக்யத்தால் சில ச்லோகங்களின் வ்யாக்யா னத்துடனேயே அந்த ஸ்வாமியின் காலம் சென்றுவிட்டது.
அதிலுள்ள அபூர்வக் கருத்துக்களை அந்தந்த ச்லோகத்தின் முடிவில் தனியாக ஸங்க்ரஹிப்போம்

ப்ரதம ஸுஜநாய பும்ஸே மஹ்யமபி ப்ரதம துர் ஜநாய நம: |
ஸர்வம் ஹத: க்ருதம் யௌ ஸக்ருதுபகார அபகாராப்யாம் || (1)–இந்த க்ரந்தத்திற்கே இது மங்கள ச்லோகம்,

(ப-ரை) ப்ரதம ஸுஜநாய – (எல்லாருக்கும்) முதலான அதாவது மேற்பட்ட (அல்லது முந்தி தானே வலுவில் நெருங்கும்) அனுகூலபுத்தி என்னும் ஸௌஜந்யத்தையுடைய,
பும்ஸே – புருஷன் பொருட்டு, :
நம: – நமஸ்காரம் (நமஸ்கரிக்கிறேன் ) (மனத்தாலும் வாக்கினாலும் உடலினாலும்)
ப்ரதமதுர் ஜனாய (எல்லோருக்கும் மேற்பட்ட (நிஷ்காரணமாய் முன்யே தீங்கைச் செய்யும்) துஷ்ட மனுஷ்பனான,
(மஹ்ய மபி) – என்பொருட்டும்,
ந88 [su:) – நமஸ்காரம் (நமஸ்கரிக்கிறேன்),
யௌ எவ்விருவரும், (எவரும் நானும்.),
ஸக்ருதுபகார அபகாராப்யாம்] – ஒரு தடவை உபகாரத்தாலும் ஒரு தடவை அபகாரத்தாலும்,
க்ருதம்] – முன் செய்யப்பட்டுள்ள,
ஸர்வம்] – எல்லாவற்றையும்,
ஹத:) – அழிக்கிறார்களோ?

அன்பில் ஸ்வாமி வ்யாக்யான‌ம் தொட‌ர்கிற‌து
தாத்பர்யங்கள் –
பெருமாளுடைய ஸௌஜந்யம், தயை, ஸம்ஸார விமோசனம் அளிப்பது முதலிய மங்கள குணங்களையும்,
ஆஸ்ரிதருடைய விரோதி நிரஸனத்தையும் அனுஸந்தித்து அவரை நமஸ்கரிப்ப தாகிய மங்களம்.
பெருமாள் ஹனனம் செய்வதாகப் பேசுவது ஆஸ்ரிதர்கள் பாபக் கூட்டத்தின் விஷயமானதால் அதுவும் மங்களமாகத் தட்டில்லை.
ஆஸ்ரித பாபக்னன், ஸந்தாபக்னன், அபஹத பாப்மா, அகிலஹேய ப்ரத்யநீகன் என்று தொடங்கும் அவை எல்லாம் மங்களமேயாகும்.
பூர்வ பாபங்களின் விநாசம்’ பக்தி என்னும் உபாயத்தின் ‘பலம்’ என்றார் ஸூத்ரகாரர்.
“ஸர்வ பாபங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்; நீ சோகியாதே’ என்று கீதையின் முடிவு ச்லோகத்தையும் இங்கே ஸூசிப்பது மங்களமே.
வஸிஷ்டர் கௌஸல்யையின் குழந்தைக்குச் சாற்றிய “ராமன் என்னும் திருநாமம் ஜகத்திற்கு ப்ரதம மங்களம்” என்றார் காளிதாஸர்.
இந்த ஸ்லோகத்தில் முதல் ஸுஜனர்’ என்று ராமனை’ நினைப்பதுமன்றி இந்தப் பத்ததியின் முடிவில்
எல்லையற்ற குணக் கூட்டங்களையுடைய ராமனை’ ஸ்பஷ்ட மாகக் குறிக்கிறார்.

இந்த முதல் பத்ததிக்கு ‘அநிபுணமார்க்கம்’ என்று பெயர்.
வித்வான்களைத் திருத்துவதில் இக்காவ்யத்திற்கு முக்கிய நோக்கு.
வித்யை என்னும் தாய், ஞானமென்னும் பாலைக் கொடுத்தும் சிலருக்கு அவிநயம் என்னும் அஹங்கார விஷத்தையும் கலந்து கொடுத்து விடுகிறாள்.
அஹங்காரம், டம்பம், மதம், அஸூயை, க்ருதக்னதை முதலிய கொடிய தோஷங்களுக்கு நாம் இடங் கொடுப்பது ஸுபுணமல்ல, சமர்த்தல்ல.
எல்லா உத்கர்ஷமும் ஈச்வரன் கொடுத்த பிச்சையாயிருக்க, அவனை மறந்து அஹங்காரப்படுவது தௌர்ஜந்யம்.
ஈஸ்வர னுடைய ஸர்வ கர்த்ருத்வத்தை மறந்து தன் செய்கை என்று அபிமானிப்பதினால் எல்லாக் குணங்களும் கெடுகின்றன.
ஈஸ்வரன் கொடாமல் நமக்கு எது கிடைக்கும் என்கிற இந்தத் தெளிவு இல்லாமல் தன் ஸ்வாதந்தரியத்தைப் பற்றுவதால் மற்ற பல குணங்கள் இருப்பினும் வீணாகும்.

தன் வினைப்பயனாக ஈஸ்வரன் ஓர் கஷ்டத்தை ஹிதத்னத எண்ணிக் கொடுக்தால் அநிபுணர் அதைப் பற்றி
அவனை நிந்தித்து அவன் முன் செய்த நன்றிகளை எல்லாம் மறந்து அதனால் க்ருதக்னராவார்.
க்ருதக்னதையிலும் கொடிய தோஷமில்லை. அதற்கு ப்ராயச்சித்தம் இல்லை.
அந்தக் கொடிய அதர்மம் முன் செய்த தர்மங்களை நாசம் செய்துவிடும். க்ருதஜ்ஞரில் உத்தமன் ஈச்வரன்.
க்ருதக்னரில் ப்ரதமர் நாம். அவர் ப்ரதம புமான், புருஷோத்தமன்.
நமக்கு ஸர்வவிதபந்துவும் அதிஸுலபருமான அவரைச் சரணம் புகாத நாம் நராதமர்.
அவர் ஸுஜனலார்வபௌமர், நாம் துர்ஜனஸார்வபௌமர்.

அவர் நம்முடைய ஏதோ ஒரு ப்ரகாரமான வணங்குதல் என்னும் அல்ப உபகாரத்திற்கு ஸந்தோஷித்துக்
கோடிக்கணக்கான நம் முன் பாபங்களை மன்னித்துத் தனக்கு ஸமானமான பேரின்பத்தை நமக்கு அளிப்பவர். நாம் நமக்கு ஈஷத்துக் கஷ்டம் வரும்போது
ஈஸ்வரனை நிந்தித்தும், ஈஸ்வரன் நமக்குப் பிரதி க்ஷணமும் அளிக்கும் ஸர்வவித உபகாரங்களையும் தெளர்ஜந்யத்தால் மறந்தும்,
‘அஹம்மே’ என்று ஸ்வாதந்தரியத்தைப் பற்றுவதால், முன் செய்த நல்வினைகளை வீணாக்குகிறோம்.
அவர் ஓர் அல்ப உபகாரத்தால் நம்முடைய எல்லாத் தீவினை களையும் போக்கும் விசித்திரமான க்ருதஜ்ஞர், ஸுஜனர்.-
நமக்கு ஓர் அபகாரம் செய்யப்பட்டதாக நம்முடைய நினைப்பினால் மட்டும் நாம் கோபத்தையும் விரோதத் தையும்பற்றி
முன் செய்த நல்வினைகளையெல்லாம் அழித்து வீணாக்குகிறோம்.
பிறர் நமக்கு எத்தனையோ உபகாரங்கள் செய்திருந்தாலும், ஓர் அபகாரம் நேர்ந்ததும்
அத்தனை முன் உபகாரங்களையும் மறந்து கொடிய விரோதியாகிறோம்.

நாம் சிரகாலமாக ஸம்பாதித்த தர்மத்தை ஒரு நொடிப்பொழுதில் தொலைத்துவிட்டு, நம்மை நாம் நிபுணர் என்று நினைக்கிறோம்.
உண்மையில் நாம் மிகவும் அதிபுணரே என்று அநிபுண’ சப்தத்தின் தாத்பர்யம்.
நாம் நிபுணரென்று நாம் எண்ணுவதை விலக்குவதில் கருத்து.
பிறரை ஏமாற்றுவதால், தம்மைச் சமத்தாக நினைப்பவர் உண்மையில் தம்மையே வஞ்சித்துக்கொள்ளுவதால் அநிபுணரே.
தானேல் எம்பெருமான் அவனென்னாகி யொழிந்தான்” என்று முதல் ஸுஜனரான ஆழ்வார்
ஈஸ்வானுடைய ஸௌஜந்யத்தில் ஆழங்கால்பட்ட படிக்கும், சாக்கடைக் குழி போன்றதும், இருட்டறை போன்றதுமான ஹ்ருதய குகைக்குள்
ஸர்வபூதங் களுக்கும் ஈஸனனான பரமபுருஷன் ஜீவனென்னும் பக்ஷியோடு கூடத் தானும் ஒரு பக்ஷிபோல்
எக் காலத்திலும் இணை பிரியாத் தோழனாய்க் கூடவே இருக்கிறான் என்று
வேதபுருஷன் ஆழங்கால் பட்ட படிக்கும்,

முன் பாதியால் ஈஸ்வரனையும் தம்மையும் ஏகரூபமாக ஒன்றாக நமஸ்காரத்திற்கு உத்தேச்யமாகவும்,
பின் பாதியாலிருவரையும் சேர்த்து ஒரு ஜோடியாகவும் வைசித்ரியத்தை விளக்கிப் பேசுகிறார்.
அவர் தன்னுடைய ஸஹஜஸௌஜந்யத்தால் என்னுள் பிரவேசித்து, என்னுள்ளே மன்னியும் நிற்க,
நான் அவனை மறந்தும், உபேக்ஷித்தும், திரஸ்கரித்தும் அபராதம் செய்கிறேன்.
அவன் ‘ த்வம் மே ‘ என்று என்னைத் தன்னதாக்கி என் பாரத்தைச் சுமந்து என்னைக் காப்பாற்றப் பேசினால்
நான் அதை மறுத்து ‘ அஹம் மே ‘- ‘ நான் எனக்கே உரியேன் உனக்குரியேனல்லேன் ‘ என்று அஹங்காரத்தையும் ஸ்வாதந்திரியத்தையும் பாராட்டுகிறேன்.

‘பிரதமஸுஜன்’ என்பதால் அவன் முன்பே வலுவில்’ தன் ஸௌஜன்யத்தைக் காட்டுகிறவன் என்றும் பொருள் .
ராகவன் முதலில் வலுவில் அழைத்துப் பேசுபவன், முறுவலோடு குளிர்ந்து பேசுபவன்’ என்றார் ருஷி.
பிரத்யுபகாரத்தை அபேக்ஷிக்காமல் உபகாரம் செய்யும் ஸ்வபாவம் அவனுடையது.
அபகாரிகள் விஷயத்திலும் அவன் ஸாதுவாய் ஸுஜனனாயிருப்பவன்.
“மஹ்யம் நமோஸ்து கவயே நிர பத்ரபாய ” வெட்கமற்ற கவியாகிய எனக்கு நமஸ்காரம் இருக்கட்டும்’ என்று
ஆளவந்தார் ஸ்தோத்திர ரத்னத்தில் முதலில் ஸாதித்ததை அனுஸரித்து இங்கும் முதலில் ‘மஹ்யம் நம” என்று ஸாதிக்கிறார்.

இருவரையும் தராசில் நிறுப்பது போல் நிறுத்து “எல்லாம் ஸமம்; ஆனால் அவர் விஷயத்தில் ஸு என்றும் என் விஷயத்தில் துர் என்றும் விசேஷிக்க வேணும்.-இருவர் செய்வதும் ஸர்வத்தையும் ஹனனம்; அவருக்கு நிமித்தம் ஒருகால் உபகாரம், எனக்கு நிமித்தம் ஒருகால் அபகாரம்.
அங்கும் உப, அப என்றுதான் பேதம். அனேக பாகங்கள் ஒற்றுமையென்றும் ஈஷத்தே பேதமென்றும் இவர்களை
துல்யயோகிதையாலே சேர்ப்பது உசிதமே யென்றும் ரஸமாய்க் காட்டுகிறார்.

முதலான புமான்’ என்பதால் ‘புருஷோத்தமன்’ என்றும் கிடைக்கிறது.
ஆந்ருச்ம்ஸ்யம், தயை முதலிய ஆறு குணங்கள் ராகவனென்னும் புருஷோத்தமனைப் பூஷிக்கின்றன என்றார் ருஷி.
‘உலகத்திலும் வேதத்திலும் நான் புருஷோத்தமனென்று பிர ஸித்தமானவன்’ என்றார் கண்ணன் கீதையில்.
‘ஹரி ஒருவன் தான் புருஷோத்த மனென்று எப்படி ருஷிகளால் ஸ்மிருதிகளில் ப்ரஸித்தமாய் பேசப் படுகிறானோ’ என்றார் காளிதாஸர்.
‘புருஷோத்தமன் யார்’ என்று ஆளவந்தார் கேட்டதற்கு காளிதாஸரே பணித்த பிரஸித்தியையும் காட்டுவதில் திருவுள்ளம்.
‘எனக்கும்’ (மஹ்யமபி) என்னுமிடத்தில் ‘அபி’ என்பதற்கு நிந்தை என்னும் பொருளையும் கொள்ளலாம்.
பெருமாளோடு கூட்டிப் பேசுவதாகவும் பேசலாம்.
‘தயை, குணங் களுக்குள் பட்ட மஹிஷி; நான் அபராதி களுக்குள் சக்ரவர்த்தி’ என்பதைப் போல் இங்கு நம்மையே பரிஹஸிக்கத் திருவுள்ளம் .
இப்படித் தம்மை யிகழ்ந்து பேசுவதெல்லாம் நம் அநுஸந்தானத்தின் பொருட்டு என்பதை மறக்கக் கூடாது.
நீசனேன், அமர்யாத.’ என்பதைப்போல.
கிருதக்னதைக்கு பயந்து சாணக்ய – சந்திர குப்தர்களுக்குச் சாத்ருவான ராக்ஷஸன் அவர்கள் சேவகத்தில் அமர இணங்கி சந்தன தாஸனென்னும் ஸ்னேஹிதரை விடுவித்தான்;
குளிர் காலத்தில் குளிர்தேசத்தில் பொறுக்கக்கூடாதபடி குளிர் காற்று வீசுகையில், ‘வீசு வீசு குளிர்காற்றே மனுஷ்யர் களின் கிருதக்னதையைப் போல
நீ அத்தனை துஸ்ஸஹமோ’ என்று ஓர் கவி பேசுவதும் இதன் ப்ரஸித்தியைக் காட்டும்.
(ஸ்வபாவத்தாலேயே நீர் கிருதக்ஞர்’ என்று முதலில் பெருமாளையும் மேலே “நான் கிருதக்னன், துர்மானி’ என்று
தம்மையும் ஆளவந்தார் ஸாதித்ததை அனுஸரித்து ஸ்வாமி இங்கே ஸாதிக்கிறார்.
கிருதக்னனாகிய துர்ஜனனுக்கு பிராயச்சித்தமே கிடையாதே,
அவனைப் பெரியோர் என்ன பிராயச்சித்தம் செய்தாலும் தம்மோடு சேர்த்துக்கொள்ளமாட்டாரே,
கிருதக்னதா தோஷத்தை எப்படித் தொலைத்து பெருமாளோடு சேரக்கூடும், எப்படி மோக்ஷம் அடையக்கூடும்
என்கிற சங்கைகள், ஒருகால் வணங்குவதென்னுமுபகாரத்தால் முன் செய்த தீவினைகளெல்லா வற்றையும்
நாசம் செய்கிறானென்று பின்பாதியால் பரிஹரிக்கப் பட்டன. எல்லாமென்பதில் கிருதக்னதையும் அடங்கும்.
“முன்பு தூராசாரனும், கிருதக்னனும், நாஸ்திகனுமாய் இருந்தாலும் ஆதிதேவனை (ப்ரதமனை) சிரத்தையோடு
ஸமாஸ்ரயித்தால் பரமாத்மாவின் பிரபாவத்தாலவனை நிர்தோஷனென்று அறி” என்கிற வசனத்தையும் இங்கே நினைத்து
கிருதக்னதை என்னும் தெளர்ஜன்யம் உள்பட எல்லாத் தோஷங்களும் ஓர் வணக்கினால் தொலையும் என்று ஸாதிக்கிறார்.
ஈஸ்வர தத்துவத்தையும், மற்ற ஸாதுக்களையும் தூஷிப்பதில் ருசியாகிய தௌர்ஜன்யத்தையும்
இங்கேயுள்ள துர்ஜனசப்தத்தால் கொள்ளவேணும்.
ராமனைத் தூஷிக்கும் தெளர்ஜன்பத்தை பன்னிரண்டாவது சுலோகத்தில் ஸாதிக்கிறார்.
ஸீதை விஷயத்திலும் ஜனங்கள் அபவாதம் பேசியதால் அவர்கள் “அதிதுர்ஜனர்” என்று சொல்லவேண்டுமென்று
பவபூதி பேசியதையும் ஸ்வாமி நினைத்து இங்கே ப்ரதமதுர்ஜனர்’ என் கிறார்.
நீதிசதகத்தில் பர்த்ருஹரி ஐஸ்வர்யத்திற்கு ஸுஜனதை விபூஷணமாகும்’ என்றதையும் நினைத்து
இந்த நீதி காவ்யத்தில் இங்கே ஸர்வஸ்வரன் விஷயத்தில் ‘ஸுஜன சப்தத்தை பிரயோகிக் கிறார்.
முதலடியில் பெருமாளை நமஸ்கரித்தவுடனே தௌர்ஜன்யம் நீங்கி அவர் தாஸனாகி அவர் சரீரமாகத்
தமக்குமுபாஸ்யத்வம் கூடலாமென்பது ‘ப்ரதமதுர்ஜன’ என்பதின் ஓர் த்வநிப் பொருள்.
‘முன்பு துர்ஜனன்’ என்றதால் இப்பொழுது ஸுஜகனாகி பெருமாளுக்கு ஸ்வஜனமானதை ஸூசிக்கும்.

ஸ்ரீபட்டப்பாஸ்வாமி ஸாதித்த பொருள்கள் :-

(1) தைவ ஸம்பத்து மோஷத்திற்கு அனுகூலம்; ஆஸுரஸ்வபாவம் மோகத்திற்கு ப்ரதிகூலம்.
ஆஸுரஸ்வபாவங்களை வெறுக்கும்படி செய்ய நிபுணமான பரிஹாஸ வசனங்களால் நம் தெளர்ஜந்யத்தை
நாமே பரிஹஶித்து வெட்கச் செய்து அவற்றை ஒழிக்கும்படி உபதேசிப்பது இந்தச் சாடு ஸ்லோகங்களின் ப்ரயோஜனம்.

(2) ஒரே அஞ்ஜலிக்கு வசப்படும் ஸர்வோத்கிருஷ்ட ஸுஜனனான ஈஸ்வரனை ஒருகால் வணங்கி
ஸர்வ துக்கமும் தீர்ந்து சாஸ்வதமான பேரின்பத்தை அடைவதல்லவா சமத்தர் காரியம்.
செய்நன்றி மறப்பதால் பாதகியாகி முன் ஸம்பாதித்த புண்யத்தை அழிப்பவர் நிபுணராவரோ?

(3) ” நாராயணனென்பவர் ஸர்வஸ்ய சரணம் ஸஹ்ருத்” என்று உபநிஷத்து ஓதிற்று, ‘
ஸர்வபூதங்களுக்கும் ஸுஹ்ருத்தாக என்னைத் தெரிந்துகொள்பவன் சாந்தியை அடைவான்’ என்று கீதோபநிஷத் பணித்தது.
பிரத்யுபகாரத்தை எதிர்பாராமல் உபகரிப்பவர் ஸுஹ்ருத்தென்னும் ஸூ ஜனர். அபகாரம் செய்யாதவரிடமும் அபகாரம் செய்பவர் துர்ஜனர்.

(4) ‘முதல்வன்’ என்பதற்கு இந்தக் குணத்தில் எல்லோரையும் அதிசயித்தவன் என்பது பொருள்.
”உயர்வற உயர்” ஸௌஜந்ய நலமுடையவன்.-நாம் இயற்கையில் அவனுக்குத் தாஸர்கள்.
ஸ்வாமிக்கு ஓர் வேலைக்காரன் எப்பொழுதும் ஆஜ்ஞையை மீறுதல்,  த்ரோஹம் பண்ணுதல் முதலிய அபராதங்களைச் செய்து கொண்டேயிருந்தால்,
இவ்வுலகத்திலுள்ள யஜமானர் அவனை வேலையில் வைத்துக்கொள்வரோ?
இத்தனை ஆஜ்ஞாத்ரோஹங்களும் செய்து கொண்டேயிருந்து ஓர் நாள் அவர் திருவடியைப் பிடித்துக் கொண்டு
“இத்தனை கொடிய அபராதங்களையும் மன்னிக்கவேண்டும்” என்று ஒருதரம் ப்ரார்த்தித்தால்
அதைக் கேட்டு எல்லாக் குற்றங்களையும் மன்னித்து உடனே உத்யோகத்தைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வரோ?

(5) நமக்கு ஈஸ்வரன் ராஜா. ராஜா எப்படி யிருக்கிறானோ, ப்ரஜைகளும் அப்படியே யிருக்க வேண்டியது உசிதம்.
அவர் ப்ரதம ஸுஜனராயிருக்க, நாம் ப்ரதம துர்ஜனராயிருப்பதழகோ?
நாமும் ஸுஜனராகவே இருக்கவேண்டாவோ ? ராஜாவின் ஸ்வபாவத்துக்கு நேர் எதிராகவுமிருக்க வேண்டுமோ ?
அவர் ஸௌஜந்யத்தின் எல்லையாயிருக்க, நாம் தௌர்ஜயத்தின் எல்லையாயிருக்க வேண்டுமோ ?

(6) இங்கே நம: என்கிற சப்தத்தினால் பிரபத்தியைச் சொல்லலாம்.
நமஸ்காரம் என்பது ஒருவனுக்கு மற்றொருவனைக் குறித்து உயர்ந்தவன் என்றே அபிப்பிராயத்தை
உண்டு பண்னும் காரியமாகையால், தன்னையே தான் நமஸ்கரித்துக் கொள்ளுவது என்பது பொருந்தாது.
என்னுடைய ஸ்வபாவமான தெளர்ஜயத்துக்கு நமஸ்காரமென்பது கொள்ளல் வேண்டும். “
துரீச்வரர்களின் வீட்டுத் திண்ணையில் யாசகராய் உட்காரும் துராஸிகைக்கு (துக்கமான இருப்புக்கு) அஞ்ஜலி செய்கிறேன் ”
என்ற இடத்தில் போல் தௌர்ஜந்யம் என்னை அணுகாமல் தூரத்தில் இருக்கவேண்டும் என்று அபிப்பிராயத்தைக் காட்டுகிறது.
இங்கு தெளர்ஜந்யம் என்பது அஹந்தை, அஹந்தையே! நீ என்னை அபேக்ஷிக்கக்கூடாது, என்னை விலக்க வேண்டும்,
அம்மா ஆசையே உனக்கு நமஸ்காரம்” என்று விலகியிருப்பதைப் பிரார்த்திப்பது உண்டு.

{7) பிரதமஜைனரான பெருமாளை நமஸ்கரித்து அவரை ஹிருதயத்தில் எழுந்தருளப் பண்ணுகையில்
அவருக்கு நேர் விரோதியான அஹந்தை’ என்னும் ப்ரதம தெளர்ஜயத்தையும்’ அங்கே கூடவிருக்க விடலாமோ ?
பெருமாள் எழுந்தருளி விட்டார் . அவருக்கு எதிரியான நீ தயவு செய்து வெளியே போய் ஒதுங்கி யிருக்க வேண்டும். ‘அஹந்தே நாஹந்தே’.

(8) நம: என்பதற்கு, பெருமாள் விஷயத்திலும்,  தௌர்ஜந்யத்தின் விஷயத்திலும்
‘நமஸ்காரம்’ என்றே ஒரே விதமான பொருளையே ஸ்வ ரஸமாய்க் கொள்ளலாம்.
“ருத்ரரே! உமக்கு நமஸ்காரம். நீர் என்னை ஹிம்ஸியாதிருக்கவேண்டும்” என்று பேசுமிடத்தில் போல
‘அஹந்தை என்னும் தெளர்ஜந்யமே உனக்கு நமஸ்காரம், நீ என்னை ஹிம்ஸியாதே’ என்பது பொருள்.

(9) ‘ஸூ ஜன’ என்பது ஸௌஜந்யத்தில் ஸ்வபாவமான ருசியைக் காட்டும்;
துர்ஜன என்பது தெளர்ஜந்யத்தில் ஸ்வபாவமான ருசியைக் காட்டும்.

(10) பெருமாள் சேஷியாகவும், தான் சேஷனாகவும் ரஸித்து ரஸம் ஓடுகிறது.
அஹந்தை என்னும் பானகத் துரும்பினால் அந்த ரஸ பானத்தில் ரஸ பங்கம் வரும்.

(11) ஹத;- என்பதற்கு வீணாக்குகின்றார்கள் என்பது பொருள்.

(12) இங்கே உபகாரம் என்பதற்கு உண்மையில் உபகாரம் என்று எண்ணி நாம் செய்யாவிடினும்
ஈஸ்வரன் புத்தியால் உபகாரமென்று கிரஹிக்கப் படுவது என்பது பொருள்.
“கதஞ்சிதுபகாரேண” என்பதை நினைக்க வேண்டும்.
அதைப் போலவே அபகாரம் என்பதற்கும் அபகாரம் என்று நாம் நினைப்பது என்றும் பொருள்.
ராவணனும் சரணம் புக வந்திருக்கலாமென்கிற எண்ணத்தினால் இங்கு சரணமடைய வந்திருக்கிறவன்
ராவணனாகவிருந்தாலும் அழைத்து வா என்கிற வார்த்தையை உண்டு பண்ணுகிற
பரமோதாரமான அநுகூல எண்ணமானது ஸௌஜந்யம்.
ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்றார். இன்னாரை என்று குறிப்பிடவில்லை.
யாரேயாகிலுமாகுக. ராவணனேயாகிலும் ஸரி .

(13) முதல் ஸுஜனர் ராமர். முதல் துர்ஜனன் ராவணன் போன்ற பத்துத்தலையுடைய என் மனது.
அவன் வணங்க மாட்டேனென்றது போல என் மனதும் அவரை வணங்காது.
அவரை நமஸ்கரித்து என் அஹங்காரமாகிய ராவணனைத் தலையறுத்து எனக்கு அபயமளித்து
என்னை ஸுஜனராக்க வேண்டுமென்று மனோரதம்.

(14) அலங்காரம் முதலிய பல விஷயங்களில் காட்டப்பட்டிருக்கும் ஆச்சர்யமான ரஸங்கள் பலவுள.

————-