வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-ஆச்சார்ய ஹிருதயம்–84-
(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-)
வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்
அதாவது
யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி
யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை –
அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை
கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி
உத்தரிப்பிக்கைக்காக-
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே
கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-
அதாவது –
ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை-
உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந -தைத்ரியம் – –என்றும்
நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக –
கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்
அதாவது
குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை ,
அந் நிலையில் நின்றும் பேதித்து –
அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்
உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அனர்த்த கரம் என்று தோற்றும் படி
தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே தாழ இழிந்தார் என்கை ..
இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே
அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக-
அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு
நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து ..
( கோலதாம் வல்லபதாம் கோ மண்டல உத்தரம்-ஸ்லோகம் இது போலே உண்டே -)
————-
ஸ்ரீ வராஹ புராணம்–ஸ்ரீ கௌசிக புராணம் -ஸ்ரீ பராசர பட்டர்–
பரமபத நிலையன் அருளிச் செய்யும் வார்த்தை பரன் வாக்கியம் ஆகையால் பந்தம் இல்லாதார் கேட்கும்படியாய் இருக்கும்
ஷீராப்தி நாதன் வாக்யங்களைப் பார்த்தால் கடலோசை யோடே கலந்து அர்த்த ப்ரத்யாயம் ஆகாது –
மத்ஸ்ய ரூபியானவன் வாக்யத்தைப் பார்த்தால் ஒரு காலும் கரை ஏற்றம் அற்றவன் வார்த்தை யாகையாலே
ஜடாசய சம்பந்தம் தோற்றும்படியாய் இருக்கும்
கூர்ம ரூபியானவன் வார்த்தையைப் பார்த்தால் கம்பீரர் ஆகையாலும் ஸ்திரர் ப்ரமிக்கையும் கீழ்மை விடாமல் இருக்குமவன்
சொல்லும் வார்த்தை ஆகையாலே மேற் கொள்ளும் வார்த்தையாய் இராது –
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் வாக்யம் கழுத்துக்கு மேல் ஒரு படியும் கீழ் ஒரு படியும் ஆகையாலே ப்ரதோஷதிதமாய் இருக்கும்
ஸ்ரீ வாமனன் வாக்யம் -அடியில் சொன்னபடி அன்றிக்கே விஷம பதமாய் இருக்கும்
இவ்வளவும் அன்றிக்கே கவியாய் இருப்பான் ஒருத்தன் அளவிலே கண் அழிவை உடைத்தாய் இருக்கும்
பரசுராமன் வாக்யம் -பரசு தாரணம் பண்ணி சர்வ அவஸ்தைகளிலும் க்ஷமை விட்டவன்
வார்த்தை யாகையாலே ப்ரத்யயம் பிறக்கும் படி இராது
சக்ரவர்த்தி திருமகன் வாக்யம் கபிகளோடே கலந்து புண்ய ஜன பாதா பர்யந்தமாய் இருக்கும்
பல பத்ரன் வாக்யம் -சரஸ் ஸ்ரோதஸ்ஸாலே தாழப் போவாரையும் உதோத்த ப்ரவ்ருத்தர் ஆக்கினவன்
வார்த்தை யாகையாலே மத விகாரம் தோற்றி இருக்கும்
அவ்வளவு இன்றிக்கே சுத்த வர்ணனாய் இருக்கச் செய்தேயும் கலப்பை உடையவன் வார்த்தை ஆகையாலே
விஸ்வசிக்க ஒண்ணாத படியாய் இருக்கும் –
ஸ்ரீ கிருஷ்ணன் வாக்யம் பிறந்த அன்று தொடங்கி கை வந்த களவிலே காணலாம் படி இருக்கும்
கல்கி அவதாரத்தின் வாக்யம் வரப்போகிறது என்றுமது போக்கி ஒருவருக்கும் கை வந்து இருக்கும் வார்த்தை அன்று
அவ்வளவும் அன்றிக்கே அனுமானித்தே அறியவேண்டியதாய் இருக்கும்
இப்படிக்கு ஒரு அந்யதா சங்கை பண்ண ஒண்ணாதபடி
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்ட ஞானத்தின் ஒளி உரு என்றும்
ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரான் -என்றும் –
சொல்லுகிறபடி சம்யக் ஞான உபகாரகன் ஆகையாலும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய -என்று
ஞானவான்கள் விஸ்வசித்துக் கைக் கொள்ளும் படியான கிருபாதிசயத்தை யுடையவன் ஆகையாலும்
ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி யது எம்மை யாளும் யரசே -என்றும் சொல்லுகிறபடியே
ரக்ஷகத்வ பூர்த்தியை யுடையவன் ஆகையாலும்
இரும் கற்பகம் சேர் வானத்தர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று ஆழ்வாரும் பிரதம பிரபந்தத்தில் சர்வருக்கும்
இவனை ஒழிய ரக்ஷகாந்தரம் இல்லை என்று அறுதியிட்டு
சரம பிரபந்தத்தின் முடிவிலும்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் யுன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -என்று அவதாரங்கள் எல்லாம் கிடக்கச் செய்தே
இந்த அவதாரத்தில் தாம் அந்தமில் பேரின்பம் பெற்ற படியை அருளிச் செய்கையாலும்
அவனுடைய ரக்ஷகத்வமானது உத்தாரகமான ரக்ஷகத்வம் ஆகையாலும்
இப்படி பண்ணுகிற ரக்ஷணம் வாத்சல்ய மூலம் என்று தோற்றும்படி
ஏனமாய் நிலம்கொண்ட என் அப்பனே -என்றும்
அப்பன் ஊன்றி எடுத்து எயிற்றில் கொண்ட நாள் -என்றும்
வாத்சல்ய அவி நா பூதமான பித்ருத்வம் இவனுக்கு உண்டு என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ வராஹ அவதாரமே சர்வ உத்க்ருஷ்டமாகக் கடவது
இது சர்வேஸ்வரன் நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்யும் வார்த்தை யாகையாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து -என்கிறபடியே
இதுவும் உபாலம்ப விஷயம் ஆகிலோ என்னில் அவ்வார்த்தையும்
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று
அறிந்து இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ கிலேசம் பொறுக்க மாட்டாத படியான த்வரா அதிசயத்தாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து –என்று
அநந்த புஜக சம்சர்க்க தோஷத்தால் பொய்யாகிறதோ என்று அதி சங்கை பண்ணினாள் அத்தனை –
இவ்வார்த்தை அப்படி இன்றிக்கே -பார் வண்ண மடமங்கை பத்தர் -என்கிறபடியே
நாச்சியார் பக்கல் உண்டான பாவ பந்தத்தாலே பிரளய ஆர்ணவ மக்னையான இவளை அதில் நின்றும் மேல் எடுத்து
இவளுடைய கிலேசத்தைத் தவிர்த்து வைத்த அளவிலும் -சம்சார ஆர்ணவ மக்நரான தம் பிரஜைகளுடைய
துக்க நிவ்ருத்திக்கு ஒரு ஸூகர உபாயம் காணாமையாலே விஷண்ணையாய் இருக்கிற இவளைக் கண்டு
அருளின பகவான் இவள் தேறும்படியாகச் சொன்ன வார்த்தை யாகையாலே அதி சங்கை பண்ண வேண்டியது இல்லை –
ஆகையால் அவஸ்தாந்த்ரங்கள் போல் அன்றிக்கே ஸ்ரீ வராஹ அவஸ்தையில் தமக்கு அருளிச் செய்யும் வார்த்தை தப்பார் என்னும் அர்த்தத்தை
பாசி தூர்த்து கிடந்த பார் மகட்க்குப் பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே – என்று நாச்சியார் தாமே அருளிச் செய்தார் –
ஆகையால் இந்தப் புராணம் எல்லாப் புராணங்களிலும் உத்க்ருஷ்டமாகத் தட்டில்லை
————
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –
ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே –இத்தால்-திருமேனியின் நிறத்தை சொல்கிறது
எங்கும் கானத்து மேய்ந்து –காட்டிலே ஒரு பிரதிபஷ பயம் அற எங்கும் சஞ்சரித்து – கோரைக் கிழங்கு முதலானவற்றை ஜீவித்து –
களித்து விளையாடி –ஜாத் உசிதமான கர்வத்தோடு கூடிக் கொண்டு விளையாடி –
ஏனத் துருவாய் –நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை உடையனாய்
இடந்த இத்யாதி –அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை –
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னும்படி
ஸ்வ ஸ்தானத்திலே வைத்தவனாலே இன்று முடிவுதோம் –
தரணி இத்யாதி-இப்படி நிமக்நையான பூமியை எடுத்தவனால் இன்று முடிவுதோம் –
இத்தால்
பிரளய ஆபன்னையான பூமியை எடுத்தவன் –எங்களை விரஹ பிரளயத்தே தள்ளா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-
—————–
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது
ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்(திருவாய் -1-8-) என்பது
இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது
மீனோடு ஆமை கேழல் (8 -10-10-) என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –
யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்
வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற
அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –
வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான
பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –
ஏனத் துருவாய் இடந்த பிரான் – ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்
திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற
அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே
பெரியாழ்வாரும் -எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே
————
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5-5 –
சப்த த்வீயாப்தி மஹீதரையான பூமி இடிய விழுந்து -கீழில் -அண்ட பித்தியோடே சேர்ந்து கிடக்க –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷம் கொண்டு –
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட –(திருவாய் -7-4-3-ஆழி எழ )என்கிறபடியே –
மாறுபாடு உருவக் குத்தி அண்ட பித்தியினின்றுமொட்ட விடுவித்து –
ஆகாசத்தில் ஏறிட்டு -திரு எயிற்றிலே தரித்த சக்திமானாய் –
தன்னை ஒழிந்த சமஸ்த பதார்த்தங்களும் தான் இட்ட வழக்காம்படி நடத்த வல்ல சர்வ நியந்தாவாய் –
அவற்றினுடைய சத்தை ஸ்வ அதீனமாம் படி இருக்கும் சர்வ காரண பூதன் ஆனவன்
(பூமி வம்ச–உத்தாரணம் – வராஹ கோபாலர்கள் )
இடவன் எழ வாங்கி எடுத்த மலை –
வேர் பற்றோடே ஒரு கட்டி போலே கிளரும்படி வாங்கி எடுத்துக் கொண்டு நின்ற மலை –
இடவன் எழப் பறித்து என்னுதல்-பேர்த்து என்னுதல் செய்யாதே–வாங்கி என்கையாலே-அனாயேசன எடுத்தமை சொல்லுகிறது
பர்வதங்களோடே கூட பாதாள கதையான பூமியை -திரு எயிற்றிலே குத்தி ஓட்டுவித்து
எடுத்த சக்திமானுக்கு -ஒரு கட்டியை இடந்து எடுத்தால் போலே
இம் மலையை இடந்து எடுக்கையில் ஓர் அருமை இல்லை இறே –
————-
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –
அழகாலும் வடிவில் பெருமையாலும் மனஸ்ஸாலே பரிசேதிக்க ஒண்ணாத படி இருக்கையாலே
அத்வீதியமான மகா வராகமாய் இருநிலம் புக்கு இடந்து
மகா ப்ர்த்வியை பிரளயத்திலே முழுகி அண்டப்பித்தி யினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து –
தன்னுடைய அபிமான அந்தர்பூதையான பூமியை இப்படி பிரளயத்தின் நின்றும்
எடுத்தமையை கண்ட ஹர்ஷத்தாலே -அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி வந்து அணைக்க –
அழகியதாய் கறுத்து இருந்துள்ள திருக் குழலை உடையவளோடு கலந்தவனைக் கண்டார் உளர் –
——–
ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே
புருடோத்தமா-=ஒவ்தார்யம்-அதாவது-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை
என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
இவர்கள் கேடு போனால் தன் கேடு போச்சுதாக நினைத்து இருக்கை
——-
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-
வலிதான எயிறுகளை உடைய வராஹமுமாய் –
எயிற்றுக்கு வன்மை யாவது -ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட -என்கிறபடியே
அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை மறுபாடுருவ குத்தி இடந்து எடுத்து
தன் பக்கலிலே தரிக்க தக்க பலம் -கேழலாக வேண்டிற்று –பிரளயம்கதையான பூமியை
எடுக்கும் போது நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவு கொண்டு எடுக்க வேண்டுகையாலே
நீரும் சேரும் காண பணைக்கும்படி இறே வராஹா ஜாதி இருப்பது
ஆய் என்றது அவ் அவதாரத்தில் புரை அற்று இருக்கை
மாயா மிருகத்தை மோந்து பார்த்து -ராஷச கந்தம் உண்டு -என்று வெருவி ஓடி போயிற்றின இறே
மற்று உண்டான மிருகங்கள்
அப்படி இன்றிக்கே சஜாதீயங்கள் மோந்து பார்த்து -தன்னினம் -என்று விச்வசிக்கும் படி இருக்கை
மனுஷ்ய யோனியில் அவதரித்த இடத்தில் -ஈச்வரத்வ அபிமான கந்தம் அற்று
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்று இருந்தால் போல் ஆய்த்து
திர்யக் யோநியில் அவதரித்தாலும் இருக்கும்படி –
மானமிலா பன்றியாம் -என்றார் இறே இவர் திருமகளார்
மானம் இல்லாமை யாவது -ஈச்வரத்வ அபிமானம் மறந்தும் இல்லாதபடி இருக்கை
வராஹா கல்பம் வாசியா நிற்க செய்தே -ஸ்ரீ வராஹா நாயனாருக்கு முத்தக்காசை அமுது செய்விப்பது
என்று கிடந்ததாய்-இது என்ன மெய்ப்பாடு தான் -என்று நஞ்சீயர் வித்தராய் அருளுவர் -என்று பிரசித்தம் இறே
————-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
பிரளயங்கதையாய் அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை உத்தரிப்பிக்கைக்கு ஈடான ஸ்ரீ வராஹ அவதாரமாய்
———
கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –
சர்வ லோகங்களும் பிரளயத்தில் அகப்பட -ஊன்றி இடந்து எடுத்து–தானத்தே வைத்தானால் –
என்கிறபடியே ஸ்வ ஸ்தானத்திலே வைத்தான் என்கை
கொள்கையினானே -இது தான் ஸ்வபாவம் ஆனவன் என்கை –
———
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப்பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –
பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே -சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –
யிராப்பகலா –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –
ஓதுவித்து– என்னை சிஷிப்பித்து –
அதாவது -கர்ப்ப வாசமும் –இந்திரிய வச்யத்வமும் -கர்ம வச்யத்வமும் -யம வச்யத்வமும் – த்யாஜ்யம்
என்னும் அத்தை அறிவித்து
கீழில் பாட்டில் சொன்ன
தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் -நிரதிசய போக்யதையும் -தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம்
என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து
பயிற்றிப் –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி –செய்யேல் தீ வினை -என்று
பணி செய்யக் கொண்டான் –
ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி –
நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –
பண்டன்று –
இந்திரியங்களுக்கு சேஷ வர்த்தி பண்ணிப் போந்த பண்டு போல் அன்று
என்னை ஆளும் வன் கோ -என்னக் கடவது இறே
பட்டினம் காப்பே –
இந்த ரஷை உண்டாகையாலே -என் கோலாடி குறுகப் பெறா -என்கிற அர்த்தத்தை சொல்லுகிறது
இராப்பகல் என்று -மூதறிவாளர் படியாய்
திவாராத்ரி விபாகம் அற்ற படியால் அகால கால்யமான தேசம் போலே -என்றபடி –
———-
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-
பூமியானது பிரளயம் கொண்டு நீர்ச் செழும்பு ஏறிக் கிடந்ததாய்த்து -பாசி ஏறிக் கிடந்ததாய்த்து
இது தான் இதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பில் ஏறின அழுக்காய் இருக்கும் இறே -இது அவளுக்கு பிரகாரம் ஆகையாலே
ரசிகராய் இருப்பார் பிரணயிநிகள் உடம்பு அழுக்கு ஏறி இருக்க தங்கள் உடம்பு பேணிக் குளித்திரார்கள் இறே
அப்படியே ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பு அழுக்கு ஏறின வாறே தானும் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டான் யாய்த்து
பண்டு ஒரு நாள் –சம்ச்லேஷித்த -அன்றும் ஒரு நாள் -விச்லேஷித்த -இன்றும் ஒரு நாளே தான் –
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை –அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -1–என்று சொல்லுமவர்கள்
உடம்பு அளவிலும் அன்றிக்கே தேஹாத்மா அபிமானம் பண்ணி உடம்பையே விரும்பி இருக்குமவர்கள் உடம்புக்கும் அவ்வருகே
யாம்படி ஆக்கினான் -முமுஷூக்கள் படியும் அளவு அன்றிக்கே சம்சாரிகளிலும் காட்டிலும் தாழ்வாய் -என்றபடி –
உடம்பு அழுக்கு ஏறிற்று என்று லஜ்ஜிக்க வேண்டாத ஜென்மத்தை யாய்த்து ஏறிட்டுக் கொண்டது –
மானமிலா-
அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் –ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றும் சொல்லும் அளவு அன்றிக்கே
தாரக த்ரவ்யங்களும் வேறுபட்டு -அஜ்ஜாதிக்கு அடைத்தவையே – தாரகமுமாய் -ஸ்வ பாவமுமாய் யாம்படியாக வாய்த்து
அவற்றோடு தன்னை சஜாதீயம் ஆக்கின படி
முத்தக்காசை -கோரைக் கிழங்கை -அமுது செய்யும் படி இ றே தாழ விட்ட படி –
மாயா மிருகத்தைக் கண்டு -அல்லாத மிருகங்கள் மோந்து பார்த்து வெருவி ஓடின-விறே –
அப்படி அன்றிக்கே
சஜாதீயங்கள் மோந்து பார்த்தாலும் -நம்மினம் -என்று மருவும்படி யாய்த்து –
மானமிலா –-ஈஸ்வர அபிமானம் வாசனையோடு போனபடி
பன்றியாம் தேசுடை தேவர்
ஆஸ்ரீத அர்த்தமாக தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ் ஸூ
தனக்கு வேண்டு உருக் கொண்டு –திருவாய் மொழி -6-4-7-என்கிறபடியே
இச்சா க்ருஹீதமான வடிவாகையாலே எறித்து இருக்கும் இ றே ரஷகத்வம் –
திருவரங்கச் செல்வனார்
அவ்வதாரத்துக்கு உதவினோம் இல்லை என்கிற இழவு தீரும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவர்
அடிமை கொள்ளுவதற்க்காக-என்றே பள்ளி கொண்டு அருளுகிறான்
———
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -பெருமாள் திருமொழி-2-3-
ஸ்ரீ பூமிப் பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான விரோதியாய் -அவர்களுக்கு பிரகாரமான பூமியை
பிரளயம் கொள்ள உதவிற்றிலன் என்னும் அவத்யம் வாராத படி மஹா வராஹமாய் அண்ட புத்தியிலே புக்கு
ஒட்டின பூமியை ஒட்டு விடுவித்து–இவ்வபதானங்களைச் சொல்லி ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாடி –
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே அமைக்க நில்லாதே கடல் குடமாக
வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு
அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால் இவர்கள் கண்ணா நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து
அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின்
திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-
———–
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே -திருச்சந்த விருத்தம்–28-
ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே
——–
ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-
முன் ஏனமாகி –
ஸ்ரீ வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே -அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து –
பரப்பை உடைத்தான பூமியை –
அத்தை எடுக்கைக்கு ஈடான செருக்கை உடைய மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு-
(ஸ்வேத வராஹ கல்பம் -28-மனுவில் நாம் உள்ளோம் -ஒவ் ஒரு மனுவுக்கு -71-சதுர் யுகம் -இதன் ஆதியில் -)
நமஸ்தஸ்மை வராஹாய லீல யோத்த்ரதே மஹம் குர மத்யகதோ யஸ்ய மேரு கணா கணா யதே –
என்கிறபடி வளர்ந்த திரு மேனி யாகையாலே –
அன்று இணை யடி யிமையவர் வணங்க-
அப்போது அந்த உளை மயிர்களிலே-பிடரி மயிர்களிலே – ஒதுங்கிக் கிடந்த ப்ரஹ்மாதிகள்
சேர்த்தி அழகை உடைத்தான -திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஸூ கவி கடஸடா ஸங்கமை -என்னக் கடவது இறே-
உத்திஷ்ட தஸ் தஸ்ய ஜலார்த்ரகுஷேர் மஹா வராஹஸ்ய மஹீம்
ப்ரக்ருஹ்ய விதிர்ந்த்வதோ வேத மயம் சரீரம் ரோமாந்த்ரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி -என்னக் கடவது இறே –
ஜலார்த்ரகுஷேர்-பாசி தூர்த்த-இத்யாதி என்றபடி
——-
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-
பழைய வடிவை அழித்தான்-
அபிமத விஷயத்தோடே கலக்கைக்காகஅவர்கள் உகக்கும் படியே ஒப்பிப்பாரைப் போலே –
படுக்கைப் பற்றை நோக்கி பிரதான மகிஷிகள் பக்கல் முகம் பெறுவாரைப் போலே
மஹா வராஹமான வடிவில் எழிலைக் காட்டிஇவள் எழிலைக் கொண்டான் –
(கோல வராஹம் ஒன்றாய் -பெரும் கேழலார் -புண்டரீகம் )
பூமிப் பிராட்டி உடைய விபூதியை பிரளயம் கொள்ள-அத்தை எடுக்கைகாக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு வந்து எடுத்து நோக்கி
நித்ய ஸூரிகள் நடுவே ஓலக்கம் இருக்கக் கடவன்
இவ் வடிவைக் கொண்டது நமக்காக விறே என்று-அந் நீர்மையிலே தோற்று எழில் இழந்தாள் ஆயிற்று –
———–
திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-
கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே(கலங்கா பெரு நகர் காட்டுவான்0 மூன்றாம் திருவந்தாதி )
கை கழியப் போனாரும்-பிழைக்கைக்காக திருவிட வெந்தையிலெ
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே பின்னானார் வணங்கும் -என்கிறபடியே
(பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழிக் களத்தான் )-சொல்லு என்று கிரியை
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-
இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-
நை வார்த்தைர் ந ச பூஷணை-( ராக்ஷஸிகள் மத்யம் சீதாப்பிராட்டி புலம்பல் ) -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது-ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-
கிடையாதது தான் என்றால்-கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
பொன்னுக்கு-இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை – உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்
(கிரியை-இடந்து எடுத்து இடது பக்கம் வைத்துள்ளாய் )
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-
ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –
வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
த்வத் அக்ரே சரணாகதானாம் பராபவ ந தே அநுரூப-ஸ்தோத்ர ரத்னம்
உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-
இவளுடைய
வை வர்ண்யமும்
அத்யாவச்யமும்
செல்லாமையும்
வடிவு அழகும்
பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இடவெந்தை யெந்தை பிரானே –
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே திருவிடவெந்தை யில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-
(தேவிகளைப் பிரிந்து விரஹத்தால் அன்றோ ஸ்ரீ பூ வராஹப் பெருமாள்
மகாத்மாக்கள் பிரிந்து இருக்க முடியாத மார்த்வம் உமக்கும் உண்டே )
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-
நீர் வில்லை முறித்துச் சென்று கைப்பிடித்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளிலும் இளையவள் இவள் –
உம்மைப் பிரிந்தால் அவளைப் போலே
சமா த்வாதச தத்ராஹம் –அமானுஷன் போகான் -யென்று ஆசை இட்டு தரிக்க வல்லவள் அன்று
இப்படி பருவம் இளையாள் ஆகில்
முன்பே சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தம் ஆகில் அன்றோ இப்படி படக் கடவது என்றில் –
இயற்கையிலே அவள் கலந்து வைக்குமே – அத்தை தாயார் அறியாளே-
என் இத்யாதி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே
விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக
திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –
இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-
கீழ் சொன்னதுக்கு எல்லாம் மேலே அழகிதான தோள்களை உடையளான இவளுக்கு –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே
உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில் நீர் நினைத்து இருக்கிறது என்-
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-
தாய் கை விட்டமை தோற்ற சொல்லுகிற வார்த்தை – இவளுக்கு எவ்வளவாக தலைக் கட்டக் கட்டவதோ –
தாய் கை விடுதல்
தான் கை விடுதல்
செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை–2-7-10-
ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –
——–
இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்—திருவயிந்திரபுரமே–3-1-1-
இத்தை பிரளயம் கொண்ட இடத்தில் சேதனருக்கு உறுப்பாகாத ஆகாரமே ஆயிற்று திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது
கார்யம் தெரிந்தவாறே தன்னை அழிய மாறினான்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ விக்ரஹத்தைப் பரிகரித்தான்
வளைந்த கொம்பில் அகவாயில் ஏக தேசத்திலே அடக்கினான் –
இத்தால் ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகனுடைய பாரிப்பைச் சொன்னபடி
இது ஸூரஷிதம் என்று திரு உள்ளத்தில் பட்டவாறே-கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –
———-
வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-3-
கூர்மை மிக்கு இருந்துள்ள முனையை உடைய கொம்பை உடைத்தான அத்விதீய மகா வராஹமாய்
பூமிப்பரப்பு அடைய இடந்து எடுத்துக் கொண்டு
ஈஸ்வரத்தால் வந்த செருக்காலே மத கார்யமான வ்யாபாரங்களைப் பண்ணி
(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)
———
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8
சிலம்பினிடை இட்ட சிறு பரல் போலே–பெரிய மகா மேருவானது
திருக் குளம்பிலே-மேரு கணா கணாயதே-என்னும்படியே கண கணப்ப
(பெரும் கேழலார் மஹா வராஹ ஸ்புட பத்ம விலோசன )
திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி இருக்கும் இருப்பு குலுங்கும்படிக்கு ஈடாக
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி
கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்
——–
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-
மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்
விபூதியும்-அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்–யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும் எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி உடைத்தாய்–நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-
———
மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-
காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பூமியை இடந்து எடுத்து
——-
வராக மதாகி யிம் மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-
பூமியை பிரளயம் கொள்ள பிறப்பே பூமியை யிடக்க வல்ல -ஒட்டு விடுவிக்க வல்ல-வராஹமாய் பூமியை இடந்தாய்-
நாராயணனே – பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே-
———
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை–4-10-10-
வராஹ கல்பத்தின் ஆதியிலே–முன்–அண்ட பித்தியிலே ஒட்டின பூமி உரு மாய்வதற்கு முன்பே
ஏனமாகி –மகா வராஹமாகி
அன்று –அன்றைக்கு நான் உதவப் பெற்றிலேன் என்னும் அர்த்தத்திலே
ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை-
பூமியை இடந்து-திரு எயிற்றினில் கொண்டு–அந்த ஸ்ரமம் ஆறும்படியாக–கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து-திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –
————
மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–
இலை யகன்ற வேல் போலேயாய்-தர்ச நீயமாய் இருக்கிற திருக் கண்களை உடையாளாய்
ஷமை துடக்கமான ஆத்ம குணங்களால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –
முந்நீர்ப் பரப்பில் –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
எனக்கு அருள் புரியே –அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு
அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –
——-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-
பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்
அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்
மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்
இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்
நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –
———
ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-
பூமியை பிரளயம் கொண்ட அன்று ஏனமாய் இத்தை இடந்து எடுத்து –
இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானைத்-
பூம் யந்தரிஷாதிகள் அடைய தான் என்ற சொல்லில் அடங்கும்படி இத்தை பிரகாரமாக உடைய சர்வேஸ்வரனை –
தன் அடியார் மனத்து என்றும் தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை
ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே
ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய்
அத்தாலே உஜ்ஜ்வலனாய்-இருக்குமவனை –
————
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-
என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு நான் பட்டது பட அமையாதோ –
நானும் பிறவாத பிறவிகளை அன்றோ நீ வந்து பிறந்தது –(நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு )
அன்னமாயும்-வராஹமாயும்-செயலைக் காட்டி என் ஹிருதயத்தைக் கொண்டான் ஆய்த்து-
(என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் )
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -என்று பந்த ஹேதுவான தன்னையே
மோஷ ஹேதுவாம் படி பண்ணி அருளினான் –
(யஜமான சம்ஹயை இத்யாதி –2-57-60-நான்கு ஸ்லோகங்கள் கீதையில் )
——
பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-
முன்பு வராக கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய் – அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை எடுத்துக் கொண்ட
ஏறின நீர்மையை உடையவனே –என்று மாறாதே சொல்லி-அந் நீர்மையிலே தோற்று-தேவர் திருவடிகளிலே அடிமை யானேன் –
திருவடியே துணை அல்லால் துணை இலேன் –
தேவர் திருவடிகளே எனக்குத் தஞ்சம் –வேறு ஒரு ஆஸ்ரயத்தை (அபாஸ்ரயத்தை) உடையேன் அல்லேன் –
——-
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமான் உம்பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-
மேல் யுண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரிதா
ப்ரஹ்மா மாமாஸ்ரித்த ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -என்னக் கடவது இறே-
(பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் )
ஆதி வராஹ முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
(சகல மனுஷ நயன விஷய தாங்கதன் )
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அது தன்னை பழம் கதை யாக்கி இப்பொழுது இங்கே வந்து நிற்கிறவனே
——-
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம் மீசன் காண்மின்–7-8-4-
சிலம்பு துடக்கமான ஆபரணங்கள் பலவற்றையும் அணிந்து ஒரு மேருவானது நின்று விளங்குமா போலே
வராஹ வேஷத்தை உடையனாய் –
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் –
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –
அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –
பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை-7-8-10-
ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –
பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை –-பூமியை சிருஷ்டித்து
பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து திரியவும் பிரளயம் வர -வயிற்றிலே வைத்து –
திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு
இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை
ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –
———
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-
சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்து அருளும் -ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானே நான் கண்ட நல்லதுவே –
கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடைக் கொண்ட அம்மான்
ஞான வேத பிரதானம் -பாரங்கள் சுமந்து -மட்டும் இல்லாத இதன் ஏற்றம்
பூமிப் பரப்பு அடைய கடல் கொண்ட காலத்து வளைந்த கொம்பை கொண்ட ஏனமாய் –
ஏரார் உருவத் தேனமாய் –
ஆயிரம் பண்ணை பிரளயம் கொண்டால் ஆகாதோ இப்படி அழகு நிறைந்த வராஹ விக்ரஹத்தை
ஒரு கால் காணலாம் ஆகில் –
எடுத்த வாற்றல் அம்மானை-
அண்ட பித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய சர்வேஸ்வரனை –
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-
(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )
——-
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-
வெற்றியை உடைத்தாய் திண்ணியதாய் மலை போலே பெரிய வடிவையும் வெளுத்த எயிற்றையும் உடைத்தாய்
அக்னி கல்பமாய் ஜாதி உசிதமான வட்டணித்த கண்ணை உடைத்தான –
(நீல வரை இரண்டு பிறை கவ்வி -கோல வராஹம் )
வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –
——–
அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-
இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்
ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும்-ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும்
(ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )
இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –
(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் )
திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –
——–
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்—குறுங்குடியே –9-6-3-
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமாக கைக் கொள்ளும்
வடிவு ஒழிய தனக்கு என்ன ஒரு ரூபம் இல்லையாயிற்று –
செங்கண்-மா முகில் வண்ணர் மருவுமூர் –
மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே
(ஸ்ரீ யபதி கேசவன் புண்டரீகாக்ஷன் -எல்லா அவதாரங்களிலும் உண்டே )
காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
———
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-
தர்ச நீயமாய்-கண்ணுக்கு குளிர்ந்து இருக்கும் சந்தரன் கண் வைக்க ஒண்ணாத சஹஸ்ர கிரணனான ஆதித்யன்
தேவர்கள் உபரிதன லோகங்கள் ஏழு உடன்
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் –
மாதிரம் -யென்று – திக்கு-பூமிக்கு தாரகமான மேரு-அது போக்கி சேஷித்து நின்ற குல கிரிகள் ஆறும்
(ஸப்த குல பர்வதங்களும் என்றவாறு ) ஏழு கடலும் –
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் – இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
பரப்பை உடைய திருக் குளம்பில் அந்தர் வலயத்தின் ஏக தேசத்தில் அடங்கும் படி வளரா நிற்பானாய்-
(திருவடிகளிலே சேர்ந்து-ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -பரகத ஸ்வீ காரம்
பூமி போல் அசித் வத் பாரதந்தர்யம் காட்டினாலே போதுமே -நீ ரஷிக்க வேணும் என்று கூப்பிடவும் வேண்டாமே – )
சேர் ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –
அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே–இதுக்கு அடைய தகுதியான காரணம்
வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த திரு மேனி – அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –
————————-
கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-
எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.
புஷ்பஹாச ஸூகுமாரமான வடிவை-மானமிலாப் பன்றி யாக்கி –
நிலம் கோட்டிடைக் கொண்டது – இந்தக் கழஞ்சு மண்ணும் அழிந்தால்
பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய்ச் செய்து அருளிற்றோ –இத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் –
பிரளயம் கொண்ட பூமி -தன்னை எடுக்க இறே -இவன் இதுக்கு உத்தரம் சொல்லுவது –
போதரக் கனவில் கண்டு –
மிகவும் நெஞ்சிலே கண்டு –இந்த்ரியங்களால் வ்யவச்சேதம் இன்றிக்கே அவயவதாநேன விசதமாக கண்டு –
கனவு -மானஸ அனுபவம்
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி –
மநோ வாக் காயங்களாலும்-ஸ்ரத்தையாலும்=மிக்க அபிநிவேசத்தை உடையவனாய் –
விழுங்கினேற்கு இனியவாறே –
விழுங்கி னேனுக்கு இனிதாய் இருந்தது –விழுங்குகை -அனுபவிக்கை –
எவ் விஷயங்களை அனுபவித்து ரசித்துப் போந்த எனக்கு எவ் விஷயம் ரசிக்கிறது –
விழுங்கினேற்கு இனியவாறே —
எனக்கு இனிதான வழி என் தான் –எவ் வழியாலே முடிக்கப் போந்த விஷயம்
எவ் வழியாலே இனிதாயிற்று –
இது இனிதான வழியை அருளிச் செய்ய வேண்டும் –
இதுக்கு அவன் என்ன உத்தரம் சொல்லுவது –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று
சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே –
இனிய வாறு கேட்க –நான் உற்றது உண்டு -என்று அந்வயம்
———
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–
பாராளன்-பூ பாரமான பாணனை அழியச் செய்கையாலே பூமிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
பாரிடந்து-தன் நிலை குலையாமல் நிற்கச் செய்தே வந்த ஆபத்தைப் போக்கி விட்ட அளவு அன்றிக்கே –
அவள் தான் பாதாள கதையான போது ரஷித்த படியை சொல்லுகிறது –
தன்னிலை குலையாமல் நின்று சங்கல்ப்பத்தாலே ரஷிக்கை அன்றிக்கே
ஸூரி போக்யமான வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான வடிவைக் கொண்டு பிரளயம் கதையான பூமியை உத்தரித்து –
கீழ் பிராட்டியை ரஷித்த படியைச் சொல்லிற்று –
இவை இரண்ட்டாலும் ஸ்ரீ பூமி பிராட்டியை ரஷித்த படியைச் சொல்கிறது –
பாரையுண்டு – பூமியை பிரளயம் கொள்ளப் புக அந்த ஆபத்தே ஹேதுவாக திரு வயிற்றிலே வைத்து ரஷித்து
பாருமிழ்ந்து –அவ் அபேஷையும் இன்றிக்கே இருக்க-தயமானமனவாய்க் கொண்டு சிருஷ்டித்து –
பாரளந்து – அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்-அந்ய சேஷத்வத்தாலும் ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –
பாரை யாண்ட –இப்படியால் பூமியை ரஷித்தவன் –உண்டு உமிழ்ந்து அளந்து இடந்து -என்னாதே
பலகால் பார் –என்கிறது-அவவவ அபதானங்களில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
பேராளன் – இப்படி ரஷிக்கைக்கு ஹேதுவான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களுக்கு தொகை இல்லாதவன் –
இவளுக்கும் அத்தைப் பற்றி இறே திரு நாமத்தாலே சம்பந்தம் –
—————-
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-
பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று,
தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.
சர்வ-எல்லாப் பொருள்கள் விஷயமாகவும்-ஆஸ்ரித – அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை
நினைத்துப் ‘பிரான்’ என்கிறார்.-அதனை -உபபாதிக்கிறார் -விரிக்கிறார் மேல்:
பெரு நிலம் கீண்டவன் –
பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று,
சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்.- இது-சர்வ- எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் செய்த உபகாரம்.
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –
நெருங்கத் தொடை யுண்டு-பரிமள பிரசுரமாய் – வாசனை மிக்குள்ளதாய், செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாய் மாலையாலே சூழப்பட்ட -திரு அபிஷேகத்தை -திருமுடியை யுடையவன்.
விரை – வாசனை. விராய் என்றது, நீட்டும் வழி நீட்டல் விகாரம்.
இனி, ‘மலர் விராய்’ என்பதற்கு, மலர்கள் கலந்த’ என்று பொருள் கூறலுமாம்.
இதனால், ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான் என்பதனைத் தெரிவித்தபடி.
————-
ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-
சர்வாதிகனான -எல்லாரினும் அறப் பெரியனான தான், இவற்றோடு ஒத்த ச ஜாதியன் ஆனான்.
இறைவன் ஒவ்வொரு கால விசேடத்திலே முறைப்படி பிறந்திருந்தும், அனுசந்தானத்தின் பதற்றத்தாலே
ஒரே காலத்தில் எடுத்த இரண்டு அவதாரங்கள் போன்று,‘மீனோடு ஏனம்’ என்று ஒரு சேர அருளிச் செய்கிறார்.
வடிவும் செயலும் சொல்லும் அவ் வக்குலத்திற்கு-தத் ச ஜாதியருக்கு அடுத்தவையாய் இருத்தலின், ‘ஆனான்; என்கிறார்.
இவை தாம் வித்யாவதாரங்கள். இவ் வவதாரங்களைப் பார்க்குமிடத்து,
மேற்கூறிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அயர்வறும் அமரர்கள் அதிபதியைப் போன்று இருப்பது ஒன்று அன்றே?
——-
சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-
தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ள வேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார். -பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த- ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.
என்னுடை அம்மான் –சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்தவன்.
————-
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி
அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –
(ஸ்திரம் -யஜ்ஞ மூர்த்தி -மகா வராஹ-ஸ்புட பத்ம லோசனன் பெரும் கேழலார் –
நீல வரை -கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)
தன்னுள் கரக்கும்
ரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி –
உத்தர உத்தர ஆதிக்யம் சொல்லி –
கிடந்து-தொடங்கி-இடந்த —கரந்த -வயிற்றில் வைத்து ரஷித்த விருத்தாந்தம்
மேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி -ஆராய்ந்து -பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி
முன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்-
—————–
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-
ஏனமாய் –
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே,
ப்ரணயிநி- காதலி உடம்பு பேணாமல் கிடக்க,-ப்ரணயி – காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே?
ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே,
நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய்.
ஆதி –
வராக கல்பத்தின் ஆதியிலே.
அம் காலத்து –
அழகிய காலத்தில் . ரக்ஷகனானவன் -காப்பாற்றுகின்ற சர்வேஸ்வரன் தன் விபூதியைக் காப்பதற்காக-ரக்ஷணத்துக்காக –
கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.
அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் –
மஹா பிருத்வியை -பெரிய இவ்வுலகத்தை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே
ரோமாந்தரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி ‘அந்த வராக நயினாருடைய மயிர்க் கால்களில் உள்ள மஹரிஷிகள் ஸ்துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே,
‘சனகன் முதலானோர் இட்ட திருத் துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது.
இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.
—————-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-
உண்டும் –பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும்.
உமிழ்ந்தும் –திருவயிற்றிலே யிருந்து நெருக்குப் படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும்.
கடந்தும் –மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.
இடந்தும் –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் அண்ட பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக் கொண்டு ஏறியும்,
மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க,
அவளோடே கலந்தும்.
———
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-
இடந்தது –
பிரளயத்திலே அழுந்தி அண்ட பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹா வராஹமாய்ப் புக்கு
ஒட்டு விடுவித்து எடுத்து. இப்படிச் செய்த இவற்றை,
கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறது காணும்.
தெளியகில்லீர் –
அதி மானுஷ சேஷ்டிதங்களை -மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக் கொண்டே
அவனே ஆஸ்ரயணீயன் -அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள்.
இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய,
அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல், இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.
———–
ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-
கான் ஆர் ஏனமும் ஆய் –
சம்சார ஆர்ணவத்தில் -பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான்.
சோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா அத்ருஸ்யத ததா ராமோ பாலசந்த்ர இவோதித:- ஆரண். 38 : 15.
ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு
அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே,
காடு அடங்க மயில் கழுத்துச் சாயல் ஆக்கும் படியான வடிவை யுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார்.
காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி.
அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.
(தீ செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்–என்ற பரிபாடல் பகுதியையும்,
இவை கூடும் ஊழி முடிவினுள் ஏழும் ஒன்றாகிய ஆழிக்கண் அழுந்துகிற நிலமகளை அழகிய வராகமாகி
மருப்பாற் பெயர்த்தெடுத்தோய்’ என்ற அதன் உரை)
—————-
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே–5-6-1-
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக் காவலாக வைத்த கடல் தானே இதனை அழிக்க,
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும் யானே என்னா நின்றாள்.
அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்க வேணும்’ என்று விரும்பியது இல்லையே அன்றோ;
தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது.
——–
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்க லத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே–5-7-6-
ஏனமாய் நிலம் கீண்ட –
ஆபன்னரானார் -ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது.
ரக்ஷணம் -காத்தல் ஒரு தலை யானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய்,
சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-
பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமிக்கு உபகரித்தது -உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.
என் அப்பனே கண்ணா –
என்னைக் காப்பாற்றுவதற்கு-ரக்ஷணத்துக்கு – ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ?
கண்ணன் கோள் இழை வான் முகமே-திருவாய்மொழி, 7. 7 : 8. அன்றோ இவர்க்கு ரக்ஷகம்.
(என்னப்பனே கண்ணா” என்பதற்கு, வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில் வைத்து, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
என்னை’ என்று தொடங்கி. முகம் – வேறொரு பிரகாரமும், வராகத்தினது முகமும். கோலம்– வராகமும், அலங்காரமும்.)
———–
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-
உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ!
ஆன பின்பு உனக்கு இது போருமோ?’
திரு அபிஷேகம் – தொடக்கமான திவ்ய ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ நீ,
உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பை யுடைத்தான பூமியைப் படைத்து,
பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்து வைத்து,
அநந்தரம் வெளி நாடு காணப் புறப்பட விட்டு,
பின் மஹாபலி கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொண்டு,
பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி,
இப் படிகளாலே சர்வ ரஷணங்களையும் செய்யுமவன் அல்லையோ?
தொண்டனேன் மதுசூதனனே –
இவன் ரஷகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ?
மதுவைப் போக்கினால் போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை
இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே விறே குறை?
————-
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-
மஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார்
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-
ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது,
ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே, ஒன்றும் நாலாதே முன்பு போலே
ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் -தன் தன் இடத்திலே கிடக்கும்படி.
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற,
உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.
ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்குஒரு குறை வாராதே.
ஸப்த -ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.
பின்னும் –
அதற்கு மேலே,
நான்றில ஏழ் மலை தானத்தவே –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல்
தன் தன் இடத்தில் நிற்கும்படி. என்றது,
ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி.
பின்னும் பின்னும்’
என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு வியாபாரமே -செயலே அமையும் கண்டீர்!
அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக.
நான்றில ஏழ் கடல் தானத்தவே –
அவை தாம் கடினத் தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ?
அதுவும் இல்லை அன்றோ இதற்கு? நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்?
அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
இவை இப்படிக் கிடத்தல் அவன் அவஹீதானாயக் கொண்டு -குறிக்கோளுடையவனாய்க்
கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில்,
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-
மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு,
எயிற்றிலே எற்றிக் கொண்டு வ்யாபாரித்த -செயல் செய்த போது:
மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே.
அவன் இப்படி முக்யமாகக் ரஷிக்கப் புக்கால் அவை சலிக்கமோ?
அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியற ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் தம் தம் இடத்திலே நின்றன-
————-
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-
உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.
சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் அபிமதங்கள் -விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.
மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணம் -ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
பெரும்புனல் தன்னுள் ஆழ -அழுந்திய பூமி’ என்னுதல்.
அழுந்திய ஞாலம் –
அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி.
தாழப்படாமல் –
தரைப்படாமல்; மங்காமல். என்றது,
உள்ளது கரைந்து போனபின்பு இனிச் சத்தையும் கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.
தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
மஹா பிருத்வியை -பெரிய பூமியைத் தன் எயற்றிலே நீலமணி போலே கொண்ட; –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட.-உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
ரஷ்யத்தின் அளவு -அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி
தான் கொண்ட
கரைந்து போன பூமி அர்த்திக்க -வேண்டிக் கொள்ளச் செய்தது -அன்று ஆதலின்-தான் கொண்ட- என்கிறார்.
கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அது தானே
நிறம் பெறும் படியாய்க் காணும் இருப்பது;
மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாம் தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.
தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாய மானை மோந்து பார்த்து ‘ராக்ஷஸ வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?
பன்றியாம் தேசுடை தேவர் – இவ்வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்கு மத்தனை யன்றோ.
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’
கேட்டும் உணர்ந்துமே-
ஸ்ரவண மனன -கேட்டும் மனனம் செய்தும், அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி
சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?
—————–
ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-
உயிர் நீராய் இருக்க நான் என்ன சாதனத்தை செய்து-அனுஷ்ட்டித்து – வந்து கிட்டுவேன் -என்றது –
சரீரத்தை காப்பது -ரஷிப்பது- ஆத்மாவின் கார்யம் அன்றோ
சரீரம் தன்னை தானே ரக்ஷித்து பாதுகாத்துக் கொள்ளவா -என்றபடி –
சம்பந்தம் மாத்ரமேயோ -அனுஷ்டானமும் இல்லையோ -என்கிறார் -மேல் –
அகல் இடம் முழுதும் படைத்து-இடந்து -உண்டு -உமிழ்ந்து -அளந்த பெரியரேயோ –
பஹுச்யாம் -தைத்ரியம் –பல பொருள்களாகக் கடவேன் –என்று பூமிப் பரப்பு அடங்கலும் ஸ்ருஷ்டித்து -உண்டாக்கி
பிரளயத்தில் நோவு பட மகா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி –
மீண்டும் பிரளயம் வர வயிற்றில் வைத்து நோக்கிக் கொண்டு –
உள்ளே கிடந்தது தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து
மகா பலியாலே கவரப்பட்ட நிலையிலே எல்லை கடந்து நடந்து மீட்டு
இப்படி அந்த துர் தசையிலே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அபேஷா நிரபேஷமாக -விரும்புவார் இல்லாது இருந்தும்
உணர்ந்து நோக்கும் நீயே இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாமா
————
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
விஸ்த்ருதமான அகன்ற பூமியை உண்டாக்கி
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராகமாய் எடுத்தானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் ஸஹ காரி நைரபேஷ்யம் -வேறு
துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –
———-
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-
தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம – தஜ்ஜலான் எல்லா பொருள்களும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன –
தத் த்வம் அஸி -அது நீ ஆகின்றாய் –
என்றும் சொல்லக் கடவது அன்றோ –
தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –ஆகையாலே
தானே உலகு எல்லாம் -என்கிறது –
தஜ்ஜலான்
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்
தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாதரம்
ஸ்வேன ரூபேண நின்று ஸ்திதிப்பிக்க வேண்டுகையாலே –
இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று
சரீர ஆத்மா பாவத்தால் சொல்லுகிறது –
காரணனாய் இருக்கும் தன்மையை சொல்லில்
விகாராஸ் பதமாம் -வேறு படுகின்ற விகாரங்களுக்கு இடமாம் என்று சங்கித்து
சரீர ஆத்மா பாவத்தாலே சொல்லுகிறது
சரீரத்துக்கு உளதாகும் பால்யம் யௌவனம் முதலானவைகள்
ஆத்மாவை அடையாதது -தட்டாதது -போன்று
இவற்றைப் பற்றி வரும் விகாரங்கள் அவனுக்கு வாரா
என்று தோஷ அஸ்பர்சம் -குற்றம் தீண்டாமை சொல்லுகைக்காக சொல்லுகிறது
தானே படைத்து –
தம பர தேவ ஏகீ பவதி -சுபால உபநிஷத்
மூலப் பிரகிருதி பரம் பொருளில் ஒன்றுகிறது -என்கிறபடியே
ஸூஷ்ம சித் அசித்துக்களை சரீரமாக உடைய –சரீரியான தானே எல்லா உலகங்களையும் உண்டாக்கி –
அசித்தினும் வேறுபடாத நிலை உடைத்தாகையாலே-அசித் விசேஷிதமான தசையில் –
அபேக்ஷிப்பாரும் – விரும்புவாரும் இன்றிக்கே-
தயாமானமநாவாய் – அருள் உடையவனாய் தானே இறே உண்டாக்கினான்
தானே இடந்து –
ப்ரளயங்கதையான- பிரளயத்தால் மூடப் பட்ட பூமி -என்னை எடுக்க வேண்டும் -என்று
அபேக்ஷிக்கை அன்றிக்கே -விரும்பியதால் அன்று –நஷ்ட உத்தரணம் அழிந்த உலகத்தை நிறுத்தியது
தானே உண்டு –
பிரளயம் வர புகுகின்றது என்று அறிவார் இலரே
உமிழ்ந்து –
உள்ளே கிடந்தது நோவு படும் இத்தனை அல்லது
எங்களை வெளிநாடு காணப் புறப்பட வேண்டும் -என்று இரவாது இருக்க தானே உமிழ்ந்து
இப்படி சர்வ ரக்ஷணங்களையும் -பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே
தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-
—————–
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு அஞ்சன கிரி -நீல மலை இரண்டு பிறையைக் கவ்வி நிமிர்ந்தால் போலே
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –
கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ
இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று
அன்றிக்கே
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே
பிரணயிநி காதலி அழுக்கோடு இருக்க
தாமான படியே வருவார் ஆகில் பிரணயித்வத்துக்கு
காதலுக்கு நமஸ்காரமாம் -குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது
ஒன்றாய் –
வராகத்த்தின் ஜாதீய மாதரம் -இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே
விம்ம வளர்ந்த படியாலே அத்விதீயம் -ஒப்பு அற்றதாய் -என்னுதல்-
நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு
திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-சம்சார ஆர்ணவம் –
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –
———————————–
முதல் திருவந்தாதியில் -ஆறு -பாசுரங்களில் ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே –
இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்–ஸ்ரீ முதல் திருவந்தாதி–2-
—
பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் –9-
பொரா நின்ற கோட்டை உடைத்தான அத்விதீயமான வராஹமாய்
கண்ட விடம் எங்கும் இடந்து கொண்டு வருகிற படி –
ஒரு காலும் பொராது இருக்க மாட்டாத ஜாதி பிரயுக்தமான ஸ்வ பாவம் இருக்கிறபடி
பூமியைப் பொராத போது பிராட்டி திரு முலைத் தடத்தில் குங்குமத்தை யாகிலும் இடந்திடா நிற்கும் –
ஓர் ஏனம் –
அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை-
புக்கு இடந்தாய்க்கு –
அண்ட பித்தியிலே புக்கு ஒட்டிக் கிடக்கிற இத்தைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறின படி
முத்துக்கு முழுகுவார் சுற்றுக் கோணம் கொண்டு எடுக்குமா போலே
அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –
நீ எப்படிப் பெரிய பாரிப்போடே கூட அன்று எடுத்த பூமி யானது
உன் திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே யன்றோ கிடந்தது
இத்தால்
ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது
உதாரராய் இருப்பார் ஒருவருக்கு உண்ணச் சொன்னால் ஒன்பது பேர்க்குச் சோறு சமைக்குமா போலே –
——-
கேழலாய்ப் பூமி இடந்தானை யேத்தி எழும் —-25-
மகா வராஹமாய் புக்கு அண்ட பித்தியில் ஒட்டின இத்தைக் கீண்டு
பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி உஜ்ஜீவியா நிற்கும் –
———
இடந்தது பூமி—-வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது–39-
பிரளய ஆபத்து பிரஸ்துதமான பின்பு பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
பிரளய ஆபத்தில் வந்த நலிவு தீர்த்த படி –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகு-திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –
——-
பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-
இப்படித் திரு உலகு அளந்து அருளின் அன்று என் ஸ்வாமி யான உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது
இன்று வராகத்து எயிற்று அளவு போதாதவாறு என் கொலோ
இப்போது திரு எயிற்றுக்கு ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ
ஒரு நாள் போந்த பூமியானது-ஒரு நாள் போராது ஒழிவான் என்-இது என்ன பாரிப்பு தான் -என்கிறார்
நான் ஒருவனுமே உன் குணங்களிலே குமிழ் நீருண்ணா நின்றேன்-என்கிறார் –
————
ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-
தன் விபூதி அழிய தன்னைப் பேணி இருக்கை அன்றிக்கே தன்னை அழிவுக்கு இட்டு நோக்கும் ஸ்வ பாவனானவன்
திருவடிகளிலே நாடோறும் வாசனை பண்ணாதார்க்கு நித்ய விபூதி உண்டாமோ –
நாடோறும் –
நாடோறும் ஏக சிந்தையனாய்-ஏனத்து உருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –
ஊழியான் –
நாம் இல்லாத காலத்து உளனாய் நம்மை ரஷிக்குமவன்
சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார் பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –
கரணம் பிழைக்கில் மரணமாம் படியான பிரமாதத்தால் வருமவற்றுக்குப் பரிஹாரம் சொன்ன இத்தனை போக்கி
ப்ராப்ய ருசி இல்லாதார்க்கு ப்ராப்ய சித்தி உண்டாகச் சொல்லிற்றோ –
ஒருக்கால் அவனே கடவன் என்று சொல்லி
பின் பழைய வலையையே வர்த்திப்பித்துத் திரிய பேறு உண்டாமோ
முன்பு இது நெடும் காலம் இழந்தது இவ்வஸ்துவுக்கு யோக்யதை இல்லாமை யன்றே
ருசி இல்லாமை இறே
அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும்
அப்பெரிய பேற்றை பெரும் போது-தனக்கு ருசி வேண்டாவோ –
——-
இரண்டாம் திருவந்தாதியில் -நான்கு-பாசுரங்களில் ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —
நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய்-இரண்டாம் திருவந்தாதி–30-
அபரிசேத்யனாய் ஸ்ரீ ய பதியான நீ பெறாதது பெற்றாற் போலே பூமியை அளந்தாய்
நீ அன்று உலகு இடந்தாய்-அதுக்கடியாக பூமியை இடந்தாய்
அப்படி இரந்து செல்லுகைக்கும் ஒருவர் இல்லாமையாலே பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே
ஒட்டிக் கிடந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு புக்கு இடந்து ஏறினாய் என்று பிரமாணிகர் சொல்லா நின்றார்கள்
——-
பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—-இரண்டாம் திருவந்தாதி-31–
கை கழிந்து போன என்னை தன் பக்கலிலே-ஆபிமுக்யம் பண்ணுவித்து ருசியை பிறப்பித்த-உபகாரகன் என்றும் –
குராவினுடைய நன்றாய் செவ்வியை உடைத்தான-பூவினைக் கொண்டு
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க-வேணும் என்று இராதே
நாட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை உடையவன்-திருவடிகளை பணியுமவர்கள்
பலத்துக்கு பலம் இறே-ஸூ ஸூ கம் கர்த்துமவ்யயம் -என்கிறபடியே- சாதன தசையிலே இனிதாய் இருக்கை-
பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே
காட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இ றே –
——–
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–
மண் கொண்டு –பூமியை அளந்து கொண்டு-
பூமியை இடந்து கொண்டு என்னவுமாம் –
——-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-
சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –
பிரளயம் கொண்ட விடத்து மஹா வராஹமாய் எடுத்து -இத்தால் ஆபத்தே பச்சையாக நோக்கும் என்றபடி –
——————
மூன்றாம் திருவந்தாதியில் -ஒரு -பாசுரம்- ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —
கேழலாய் -மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-
சர்வாதிகனான தான் வராஹ வேஷத்தைக் கொண்டால் பின்பு அவ்வளவிலே பர்யவசிக்க இ றே அடுப்பது
அதுக்கு மேலே கேழலாய்த் தன்னை உணர்ந்தான் – ஸ்ரீ யபதி என்று உணர்ந்தால் செய்யப் போமோ-
மீளாது மண்ணகலம் கீண்டு – என்று மேலே கூட்டி-மீளாத படிக்கு ஈடாக பூமியைக் கொண்டு என்றுமாம் –
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை-உடைத்தான பூமியைக் கொண்டு ஏறினான் ஆய்த்து –
பெரிய பிராட்டியார் விரும்பும்படியான மார்வை உடையவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம் சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம் -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –
காதல் பெரிது – ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே பிச்சேறி இருக்கும் படி –
தன்னை யாசைப் படுவார் விடாயிலும் மிக்கு இருப்பதே தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய் அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-
அவள் பக்கல் காதலாலே இறே–அவள் அபிமானித்த பூமியை எடுத்தது -என்கை –
——————
நான்முகன் திருவந்தாதியில் -ஒரு -பாசுரம்- ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-
பிரளயம் கொண்ட பூமியை இடந்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-
நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்–இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-
————–
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே–திரு விருத்தம் -39-
பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரைஉடைத்தான கடல் சூழ்ந்த பூமிக்கு எல்லாம் உபகாரகன் –
பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-
—-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-
ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே -ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –
மாசுடம்பில் நீர் வாரா -ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–
பன்றியாம் தேசு -ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜசுக்கு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது இருக்கை –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ –
தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு
தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –
பெரும் கேழலார்-சிலம்பினிடை இத்யாதி –தம் பெரும் கண் மலர் –
பெரும் கேழலார் என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –
கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை
மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –
தம் பெரும் கண் மலர் -இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து
பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்-ஸ்ரீ பூமி பிராட்டியை குளிர நோக்கி
கொண்டு இருக்கிற இருப்பு –
நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –
ஒருங்கே -ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி
பிறழவைத்தார் -மிக வைத்தார் -தம்மால் தரிக்க போகிறது இல்லை
இவ்வகாலம் -சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும்
முறியுமாய் நிற்குமது போலே –
——
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-
அத்விதீயமான மகா வராகமாய் -இப்பூமியை தன திருவடிகளால் துகைத்து –
அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –
———-
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –
சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று -என் தான் -அவனையே பற்ற வேண்டுகிறது
என் என்ன -இவையாபின்னமானவன்று -பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ –
இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –
ஹேதுவாகிறது தான் என் என்ன –எறி திரை வையம் -கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான் -என்கை –
இடந்த -இத்தால் சர்வ சக்தி –என்னுமிடத்தை சொல்லுகிறது —
பிரான் -சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும் அவன் கையதே என்கிறது –
ஸ்வாமி என்கிறது -இவற்றின் உடைய ரஷன உபாய ஜ்ஞானமும் -அதுக்கு ஈடான சக்தியும்
பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை -இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும்
அவனையே பற்ற வேணும் -இனி உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –
ஆக -குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன
இரும் கற்பகம் இத்யாதி –இங்கே ஒருஸூ க்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய்
கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும் அவன் வேணும் -ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்
அவன் என் என்னில் -இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே –
இவன் கர்மத்தையும் அளந்து -இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே –
கிரியை நசித்தால்-நின்றுபலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் -அபூர்வம் என்றாதல் –
ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே -இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –
மற்ற எல்லாயவர்க்கும் -ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி –
அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் -அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –
எல்லாயவர்க்கும் -தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே -ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று
இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம் பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்
ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத்தலையில்-உண்டான அறிவு அசத் சமம் என்கை –
என்தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம் –பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –
ஞானப் பிரானை – தன்னை சூழ் த்திக் கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –
பர ரஷன உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று –
அல்லால் இல்லை –அவன் உளன் என்கை யல்ல -ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-
அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே -வழி கெட நடந்தோமா -என்று
நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவஅன்றே இவர்கள் சொல்லுகிறது -அவனை ஒழிந்த தானும்
தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –
ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –
அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை
ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் -உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று
சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே –
ஈஸ்வரனை ஒழிந்த தன் ச்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம் அருளிச் செய்கிறார் –
இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும் தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே
சஹ காரியாக உள்ளது -அவற்றைத் தவிர்க்கிறது –
நான் கண்ட -கைப் பறியாக பறித்ததாய்-புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –
புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து – அல்லாது போது கலங்கி இருக்கிற
ஜ்ஞானத்தைக் கொண்டு -பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே
பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் -அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான்
பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
கைப்பறியாய் பறித்ததாய் -ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது –
அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும் –
கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் –
பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் -அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –
———–
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப –ஸ்ரீ திருவாசிரியம்–6-
இடந்து -ஸ்ரீ வராஹ கல்பத்தில் அண்டபித்தியில் இருந்து குத்தி எடுத்து
ஸ்ருஷ்டமான அநந்தரம் பிரளயம் கொள்ள நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாக எடுத்து
ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –
——–
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-
“பூமேயே செம்மாதை நின்மார்வில் சேர்வித்து” என்ற விடத்துக் கடல் கடைந்த வரலாற்றையும்,
“பாரிடந்த” என்றவிடத்து வநாஹாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்திப்பது..
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-
அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்–
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் சொல்லுகையாலே
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்று
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி -என்று ஹேது சொன்னால் போலே –
———-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-திருவெழு கூற்றிருக்கை
வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –
இத்தால் பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –
வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில் ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –
சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –
——–
மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104
நெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை
மாமுது நீர் தான் விழுங்கப் –
பாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –
இது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு
கை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய்
ஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –
கொன்னவிலும் கூர் நுதி மேல் –
இவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி
அவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –
கூத்தனை –
என்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ
இம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –