Archive for the ‘Prabandha Amudhu’ Category

ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் உகந்த ஸ்ரீ அருளிச் செயல் பாசுரங்கள் —

September 2, 2022

அலங்காராசனத்தில் செவிக்கு இன்பம் தரும் இனிய ஸ்தோத்ரங்களால் எம்பெருமானை
இன்புறச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் சொல்லும்

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி யாடி விழாச் செய்து திருந்து நான்மறையூர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–ஸ்ரீ பெரியாழ்வார் -4-4-7-
திருந்து நான்மறை என்றது ஸ்ரீ நம்மாழ்வாருடைய நாலு வேத சாரமான நான்கு திவ்ய பிரபந்தகளை –

அமரர்கள் தம் தலைவனை அந்தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியைப் பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை –ஸ்ரீ குலசேகர பெருமாள் -1-4-

செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ஸ்ரீ பெரிய திருமொழி -2-8-2–
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்க்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை -2-10-4-
செம்மொழி வாய் நாள் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலை -6-6-10-
செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் திசை முகனை யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் ஆகுதியின்
புகையார் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே -7-8-7-
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறு புலியூர் -7-9-3-
கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் –ஆறங்கம் வல்லவர் தோளும் தேவ தேவ பிரான் கோட்டியூரானே-9-10-9-

————-

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

——-

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –நாச்சியார் திரு மொழி–2-9-

உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ -நம்மோடு அணைகை பொல்லாததோ -எத்தனையேனும் யோகிகளும்
நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது -உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –
எங்களுக்கும் அழகிது -ஆனாலும் இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் – அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும் வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று
நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ச்லேஷத்தில் உண்டான இசைவை மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –

———–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

———-

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-

நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இறே அவன் –

நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே
அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ –
இங்கனே செய்யத் தகாது -என்று போர வெறுத்தவாறே

கூட நின்றவர்களும் –
இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி –
மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து –
த்வயத்திலே வளர்ந்து –
த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம் -என்று பிரசாதித்தான்

திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்

கிருஹஸ்தாஸ்ரமம் விட்டு சன்யாஸ்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து
ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும் என்றபடி –

———

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

ஏறு திருவுடையான் –
நாள் செல்ல நாள் செல்ல ஏறி வருகிற சம்பத்தை உடையவன்
நிரபேஷனாகையாலே இவன் இடுகிற த்ரவ்யத்தில் தாரதம்யம் பாரானாய்த்து

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங மாத்ரமாய்ப் போகாமே –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீ கரிக்க வல்லனேயோ-
அத்ரி பகவான் ஆஸ்ரமத்தில் சாயம் சமயத்திலே நின்று நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் என்று
நின்றால் போலே இவைற்றை ஸ்வீகரிக்க வல்லனேயோ

ஏறு திருவுடையான் –
ஆரூட ஸ்ரீ –
இத்தையே ஸ்ரீ கூரத் தாழ்வான் ஸ்ரீ சுந்தர பாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்தார்

வங்கி புரத்து நம்பி ஸ்ரீ பாதத்திலே யாய்த்து சிறியாத்தான் ஆஸ்ரயித்தது-
போசள ராஜ்யத்தில் நின்றும் வந்த நாளிலே
ராஜ கேசரியிலே ஆச்சான் நடந்து இருந்தானாய் காண வேணும் என்று அங்கே சென்று கண்டு இருக்கும் அளவிலே
நம்பி எனக்கு இங்கனே பணிக்கக் கேட்டேன்
பாஹ்ய சமயங்களில் உள்ளாரும் ஒரு வஸ்துவைக் கொண்டு
அது தனக்கு ஜ்ஞானாதிக்யத்தையும் உண்டாக்கி கொள்ளா நின்றார்கள்
அவர்களில் காட்டிலும் வைதிக சமயமான நமக்கு ஏற்றம் –
ஸ்ரீ யபதி ஆஸ்ரயணீயன் என்று பற்றுகிற இது காண்-என்று பணித்தானாம் –

நம்பியின் தந்தையும் குமாரரும் ஆச்சி எனப் பெயர் பெற்றவர் -பெரிய திருமுடி அடைவு

ஆகையால் இறே நாம் இரண்டு இடத்திலும்
அவள் முன்னாக த்வயத்தை அனுசந்திக்கிறது
ஜகத் காரண்த்வாதிகளைக் கொள்ளப் புக்கால் ஒரூருக்கு ஒருத்தன் ஸ்ரஷ்டாவாக இருக்கும் –
காரணம் து த்யேய-
ஸ்ரீ யப்பதித்வம் தான் ஆஸ்ரயாந்தரத்தில் கிடப்பது ஓன்று அன்றே –
திருவில்லா தேவரை தேறல் மின் தேவு —

————-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு போது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று

———

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

1-இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்
பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —
கைவல்ய கோஷ்டியில் –
மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-
பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

2-கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார் அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே
என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே
சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே
சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

3-அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே –
அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம் என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே-
அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –

———–

கண்ணால் கண்ட பதார்த்தங்களை எல்லாம் பாதகமாக்கி -பின்னையும் விடாதே –
மேகங்கள் நின்று வர்ஷிக்கப் புக்கதாய்க் கொள்ளீர் –
திருமலை நம்பி இவ்விரண்டு பாட்டையும் ஆதரித்து போருவராய் –
அவ்வழியாலே-நம்முடையவர்கள் எல்லாரும் ஆதரித்துப் போருவார்கள்
இப்பாட்டையும் மேலில் பாட்டையும் அனுசந்தித்து –
கண்ணும் கண்ணீருமாய் ஒரு வார்த்தையும் சொல்லாதே வித்தராய் இருப்பாராம்

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

—————–

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதார்த்தம் -வேத பிரதிபாத்யன்
ஓலைப் புறத்தில் கேட்டுப் போரும் வஸ்து கண்ணுக்கு இலக்காய் வந்து கிட்டி
இட்டீட்டுக் கொள்ளும் உடம்பைக் கொண்டு
தன்னை புஜிக்குமவர்கள் ஸ்வரூபங்களை விட்டு திரு மேனியை விரும்புமா போலே
தானும் ததீய விஷயத்தில் ஸ்வரூபாதிகளை விட்டு உடம்பை யாய்த்து விரும்புவது
இருவரும் உடம்பை யாய்த்து விரும்புவது

திருமாலை ஆண்டான் -பிரகிருதி ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று கேட்டுப் போரா நிற்கச் செய்தேயும்
இத்தை விட வேண்டி இருக்கிறது இல்லை
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாம் என்று ஆதரியா நின்றேன் -என்றாராம் –

மெய்ப்பொருள் – ஆத்மா/ கைப்பொருள்- ஆத்மீயம்

————

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலைத்தலைச் சரம் துரந்து-இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து
நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து
வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-

இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-

——————

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–ஸ்ரீ திரு மாலை-11

நஞ்சீயர் இப்பாட்டைக் கேட்டவன்று
தம்மிலே அனுசந்திதுப் போகா நிற்க
ஒரு சேவகனும் ஸ்திரீயும் விவாதம் பண்ணின அளவிலே
அவனுக்கு இவள் சொன்ன வார்த்தையை கேட்டு
வித்தரான வார்த்தையை அனுசந்திக்கிறது
அதாகிறது
பிணங்கின அளவிலே உன்னால் என் செய்யலாம்
ஏழைக்கும் பேதைக்கும் அன்றோ -சாமந்தனார் -ராஜா -பத்திரம் காட்டிற்று என்றால் –
பட்டரை ஆஸ்ரயித்த சோழ சிகாமணி பல்லவ ராயர்க்கு
ராம லஷ்மண குப்தாஸா – என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்து
கடல்கரையில் வெளியை நினைத்து இருக்கும் என்றத்தை அனுசந்திப்பது

அத்தைக் கூடக் கேட்ட
நஞ்சீயரும்-
பிள்ளை விழுப்பரையரும்-
நம்பி ஸ்ரீ கோவர்த்தன தாசருமாக
இதுக்குச் சேர்ந்து இருந்தது என்று
இலை துணை மற்று என்நெஞ்சே – என்கிற பாட்டை அனுசந்தித்தார்கள்
ஆக
அநந்ய கதிகளான நமக்குத் தஞ்சம் சக்கரவர்த்தி திருமகன் -என்கை

———

நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–-ஸ்ரீ பெரிய திருமொழி–3-6-9-

திரு மெய்ய மலையாளா !
அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –

நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்
கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ

அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய
எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்

புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-

ஆக
இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –
இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

—————————————

அருளாழிப் புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
தான் புறப்படுதல் -வைகாசி கருட சேவை -தானே ஆஸ்ரிதற்கு அருள
அழகு செண்டேற புறப்படுதல்- ஆனி கருடன் -பெரியாழ்வார் சாத்து முறை
ஆடி கருடன் கஜேந்திர யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல்
ஓன்று கேட்டால் மூன்று கருட சேவையும்
ஆழ்வார் போகம் ஓன்று கேட்டால் -இஹ போகம் ஸ்வர்க்காதி போகம் பரம போகம்
ஓன்று கேட்டால் நாலாயிரம் ஆழ்வார் நாத முனிகளுக்கும் ஆழ்வார் அருளினார்
பிள்ளை லோகாச்சார்யார் சாத்து முறை –பொய்கையாழ்வார் ஐப்பசி திரு ஓணம் –
நாள் பாசுரம் அன்னல் முடும்பை பாசுரம் சாதிப்பார்கள் –
திரு ஓணம் தோறும் புறப்பாடு
திருக்காஞ்சியில் தேவப்பெருமாள் திருக்கோயிலில் பிள்ளை லோகாச்சார்யார் தனியான சந்நிதி அதனால் இல்லை
ஈடு பெற காரணமும் இவனே -திருவடி ஊன்றிய தேவப் பெருமாள் –
ஈ உண்ணி பத்ம நாபர் -சடாரி சாதித்து -மஹா உதாரர்

கார்த்திகை தீபம் முந்திய பரணி தீபம் கச்சி வாய்ந்தான் மண்டபத்தில் மாலை 8 மணிக்கு திரு மஞ்சனம்
திருக்கச்சி நம்பி நினைவாக -அன்று தான்
திரு நாடு எழுந்து அருளிய தினம்

பெருமாள் வந்து செய்தி சொல்லிய பின்பு தாயார் எழுந்து அருளி
சேர்த்தி புறப்பாடு
திரும்பியும் தாயார் ஆஸ்தானம் சேரும் வரை காத்து இருந்து பின்பே கண்ணாடி அறைக்கு எழுந்து அருளுவார்
ஸ்ரீ வல்லபன் அன்றோ –

—————-

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;
தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி,
‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

———–

உய் வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண் கழல்கள்மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

வையம்மன்னி வீற்றிருந்து மண்ணுர்டே விண்ணுமாள்வர்-“பூமியிலே எம்பெருமானாரைப்போலே ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயோடே நெடுங்காலமிருந்து இங்கே யிருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறுமுறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்; அங்கேபோனால் ‘ஆண்மின்கள் வானகம் ஆழியான்தமர்’ என்கை யன்றிக்கே இங்கே யிருக்கச் செய்தே தாங்களிட்ட வழக்காகப் பெறுவர்.” என்பது நம்பிள்ளையீடு.

நஞ்சீயர் பட்டர் திருவடிகளில் ஆச்ரயித்தபின்பு நெடுங்காலம் பட்டர்பாடே அர்த்த விசேஷங்கள் கேட்டு இன்புறவேணுமென்று இருந்தார்-

இருக்கையில் பட்டர் திருநாட்டுக்கெழுந்தருள நேர்ந்துவிட்டது;

இந்த வருத்தத்தினால் நஞ்சீயர் “வையம்மன்னி வீற்றிருந்து” என்ற இவ்விடத்தை அருளிச்செய்யும்போது உருத்தோறும் வெகுநிர்வேதப்படுவராம்.

பட்டர் இருபத்தெட்டு (அல்லது 32) பிராயத்திலே திருநாட்டுக்கெழுந்தருளினாரென்று சிலர்கூறுவதுண்டு.  இதற்குப் போதுமான பிராமணம் கிடைத்திலது; ஆராய்ந்து பார்க்குமளவில்; பட்டர் ஐம்பது ஐம்பத்தைந்து பிராயம் எழுந்தருளியிருந்தார் என்று சொல்வதற்குச் சான்றுகள் உள்ளன.  நூற்றிருபது திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்த எம்பெருமானாரை நோக்குமிடத்து பட்டர் எழுந்தருளியிருந்தது மிகவும் ஸ்வல்பகாலம் என்று சொல்லலாம்படியுள்ளது.

———————

துவளில் மா மணி -6-5- ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினை யுடையவராய்,
“வேத வாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை
மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும் போதும்.

“பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச் செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது

மேலே அநுபவித்த அநுபவம் தான் மானச அநுபவ மாத்திரமாய்,
புறத்திலேயும் அநுபவிக்க வேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்

‘உனக்கு இப்போது உதவாதபடி தூரத்திலே யுள்ளவை’ என்னுதல்,
‘சென்ற காலத்தில் அவதாரங்கள்’ என்னுதல்,
உகந்தருளின நிலங்களிலே உள்ளே நிற்கிறவனளவிலே ஈடுபட்டவளாதல் செய்தாளாய் மீட்க நினைக்கிறீர்கோளோ?
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?

“கணபுரம் கை தொழும் பிள்ளை” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்னுமாறு போலே.
யாரே இருவர் கன புரம் பேச அந்த சொல்லைக் கேட்டே கை தொழும் -முக்கோட்டை அவருக்கு அது இவருக்கு இது –
இவளை மீட்கப் பார்ப்பதே, இவள் படியைப் புத்தி பண்ணி யன்றோ மீட்பது!
இவள் படி கை மேலே காணா நிற்கச் செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?

————–

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.

இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலைபோல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————-

வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேனேறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான் தாளிணை யென் தலை மேலே.–10-6-5-

பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ;

அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம் பற்றித் திருமாலை திருப் பரிவட்டம் முதலான வரிசைகளை வரவிட்டருளினவளவிலே

“நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப் பார்த்துச் சிரித்தாராம்.

———–

ஸ்ரீ பகவத் பிராப்த்திக்கு கண் அழிவு அற்ற சாதனம் திருமலை என்று இப் பாட்டை
ஸ்ரீ எம்பார் எப்போதும் அனுசந்தித்து இருப்பர்-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி–76-

ததீய சேஷத்வ  பர்யந்தமாக பேற்றைப் பெறுகையாலே ப்ராப்யத்தில் ஒரு குறை இல்லை
சாதனம் அவன் தலையிலே கிடக்கப் பெறுகையாலே ப்ராபகத்திலே வருவதொரு குறை இல்லை –
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–திருவாய்மொழி -3-3-7-தம் தாமுக்கு உள்ளதை இறே தருவது –

——————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார்  பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு  உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

———-

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

தேனாகிப் பாலாம் திருமாலே -என்ற இடம்
சீயர் அருளிச் செய்யும் போது இருக்கும் அழகு சாலப் பொறுக்கப் போகாது
என்று பிள்ளை போர வித்தராய் அருளிச் செய்வர்

சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்ரை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ –
என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –

————

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

இன்னுயிர்ச் சேவல் -9-5–இதன் விவரணம்

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)

————-

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –-திரு விருத்தம் –82-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஜீயர்
எனக்கு இப்பாட்டுச் சொல்ல அநபிமதமாய இருக்கும்
என்று அருளிச் செய்வர்
உரு வெளிப்பாட்டாலே ஸர்வேஸ்வரனுடைய திருக்கண்கள் பாதகமாகிறபடியைச் சொல்லுகிறது
இவளுடைய ஆற்றாமை யுண்டாகில் இறே இப்பாசுரம் சொன்னால் நமக்கு சாத்மிப்பது

————-

பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் –
ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே –
தன் பக்கலிலே பிராவண்ய அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் –
பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –

இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே –
அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் –
அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன –
பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல –
ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன –
ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே –

வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் –
அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே –
கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –
பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே வித்தர் ஆனீரே என்ன –

நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-
எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் –
என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன –

அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன –
அது எனக்கு போகாது –
இப்பாசுர மாத்ரத்தை நினைத்து இருப்பேன் -என்றாராம் –

நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே கொண்டாடி அருளிச் செய்தார் –
தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – திரு-விருத்தம்-95 – திருமாலிருஞ்சோலை -10-8-–

யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது –
பற்றுவது ஏதேனும் ஒன்றாக அமையும் –
அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு-
சர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-
இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –

த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்கிறபடியே
இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
மாதாவினைப் பிதுவை –
சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று –
இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –

திருமாலை –
ஸ்ரீ யபதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –

வணங்குவனே –
இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து –
தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு
சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே –
அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –

———–

பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்து கிடப்புதீர் என்று அறிகிறிலோம்-உம்மை-விஸ்வசிக்க போகிறது இல்லை –
அத்ய ராஜ குலச்ய ஜீவிதம் த்வதீனம் ஹே புத்திர வியாதி தே சரீரம் பரிபாததே நச்சித் -அயோத்யாகாண்டம் -8 7-9 – –
ரசவாதம் கீழ்ப் போமாம் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் மோஹித்து கிடக்க -திருத் தாய்மார் வந்து சொல்கிறார்கள் –
இப்படை வீடாக-உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்கிறது -சக்கரவர்த்தி துஞ்சினான் -பெருமாள் பொகட்டுப் போனார் –
நீ இருந்தாய் என்கிறார்கள் அன்று-உன் முகத்தில் பையாப்பு கண்டால் அவர் மீளுவர் என்னும் அத்தாலே
அன்றோ இது ஜீவித்து கிடக்கிறது -நீ இல்லை என்று கேட்கில் இத் திக்கில் என்றும் நோக்குவரோ –
புத்ர வ்யாதிர் நுதே கச்சித் சரீரம் பரிபாதிதே -என்றும் -அபி வ்ருஷா -என்கிறபடிக்கே படை வீட்டில்-ஸ்தாவரங்கள் அடைபட
நோவோன்றாய் இருக்கச் செய்தே -பிள்ளாய் உனக்கு நோய் என் -என்று-கேட்கும்படி வேண்டி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி –
அப்படி சத் பிரக்ருதிகளாய் இருக்கையாலே – இன்ன போது மோஹிப்புதீர் என்று தெரிகிறது இல்லை –
சௌலப்ய குணத்தை உபதேசிக்க புக்கு -எத்திறம் -என்று மோஹித்து கிடக்குமவர் இறே இவர் –

ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு -கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை
நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே -பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து –அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க -ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் –
அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று கை கவித்து கொடு வந்து –
நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன -லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –

பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில் நாலிரண்டு ஒவியல் கொண்டு
பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –
பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே -அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் –
அப்படியே செய்து கொடு போந்தார்களாய் -இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து -இத்தை ஒரு நாள்
குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் -அதில் சொன்ன வார்த்தைகள் என் என்ன –
ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து –
நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –

நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே -இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –
தலைவி தனக்குத் தலைவன் இடத்து உள்ள அன்பு உறுதியைத் தோழிக்கு கூறல் —

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- செஞ்சொல் கவிகாள் -10-7-

ஆசை உடைய நான் பேசாது இரேன் இறே-பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ-
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான்-
உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள்
தங்களுக்கே அன்றி -அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் –
அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே
உறங்கி குறட்டை விடா நிற்க -அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே
இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே
வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் –
உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே

பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் –
அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான் பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

———-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -முதல் திருவந்தாதி 76-

எம்பார்-விடியும் பொழுது தொடங்கி ஓவாதே அநுஸந்திக்கும் பாசுரம் –

————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கேசவ நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

(புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:)
(இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:)

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு.
பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும்.
சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும்.
கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.

அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர்.
ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
“கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்”

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார்.
க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்).
நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன்.
அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான்.
ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது.
ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க,
அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம்.
பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார்.
பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார்.
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார்
(வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்…).
திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார்.

வாழி கேசவா!!!

நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவ ப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

———-

திவ்யப்ப்ரபந்தம் 3776 ஆக இருப்பினும் 4000 பாசுரமாக கணக்கில் கொள்வது எப்படி?

“இலங்கெழு கூற்றிருக்ககையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிருநூற்றிருபத்தே ழீந்தான் வாழியே “
என்னும் அப்பிள்ளையருளிய வாழித்திருநாமத்தைப் பின்பற்றி திருமடல்களில் ஈரடி கொண்ட கண்ணிகளை
ஒரு பாட்டாகக்கொண்டு சிறிய திருமடல் 77 1/2 பாட்டாகவும்,
பெரியதிருமடல் 148 1/2 பாட்டாகவும் கொண்டு மூன்றாமாயிரத்தில் மொத்தப் பாசுரங்கள் 817 என்று கொண்டு
சில பதிப்புகளில் திருவாய்மொழியோடு சேர்த்து திவ்யப்ரபந்தம் நாலாயிரம் பாட்டாகக் கணக்கிடப்பட்டது.

“சிறியமடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும் சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும் (தேசிகப்ரபந்தம் 389) என்னும்
பிரபந்த பாட்டில் உள்ளபடி சிறியமடலை 40 பாட்டாகவும்
பெரிய திருமடலை 78 பாட்டாகவும் கொண்டு
மூன்றாமாயிரம் 709 பாசுரங்களாகவும்
திருவாய்மொழியையும் இராமானுஜ நூற்றாந்தாதி 108 பாட்டையும் சேர்த்து 4000 பாசுரங்களாக கணக்கிடப்படுகிறது.

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———

கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )

————–

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

—————

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

—————

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரிலே பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

——————

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

கேசவன் பேர் இட்டு –
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவாம் கே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
கேசவ க்லேச நாசன -என்கிறபடியே
க்லேச நாசனாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை இட்டு –
கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித் திருமினோ –
நீங்கள் அந்த பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து சந்தோஷத்தோடு இருங்கள்
தேனித்து இருக்கை யாவது -இனியராய் இருக்கை

நாயகன் நாரணன்
நாயகன் -என்றது – சர்வ சேஷி -என்றபடி
நாரணன் -என்றது -சமஸ்த கல்யாண குணாத்மகன்-என்றபடி

இத்தால் –
ஆஸ்ரிதரத்தை ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியையும்
குண யோகத்தையும் உடையவன் என்கை

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்

——————

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

————-

பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-16-

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

——————-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே –2-7-1-

நம்முடைய வாழ்வு -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ -வி லஷணமாக உள்ளது -கேசவன் தமர் என்னும்படியான சிறப்பு பெற்றார்கள்
சர்வேஸ்வரன் -கண் அழகால் என்னை ஈடுபடுத்திக் கொண்டு
வடிவு அழகாய் முடூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ கரித்த மகா உபாகாரகன் நாராயணனாலே மா சதிர் பெற்றோம்
கேசவன் -கேசாபாசம்/கேசி நிரசித்தவன் /பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன் –

—————–

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

————–

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

————

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:3688/1

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவாய் உடையவன்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோஹம்

அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்-விரோதி -நிரசன சீலன் –

கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத பிரசஸ்த கேசன் –
செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்

நாரணன் –
ஆஸ்ரித வத்சலன் -அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்

சீ மாதவன் –
அதற்கு அடியான ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆனவன்

கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே ஆஸ்ரிதற்கு அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்

வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்

என்று என்று
நிரந்தரமாக -எப்பொழுதும்

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

————–

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி
நம்முடைய சேஷத்வத்தை -அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –
பிரசஸ்த கேசன் -நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி
நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-பிராப்தி பந்தகமாய் -அடைவதற்குத் தடைகளாய்-அநாதி கால ஆர்ஜிதமான –
பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள் எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண
கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கேசவனாகிய மருத்துவனை –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலாய் இருக்கும் அன்றோ –

————-

கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது
மருதரும் வசுக்களும் அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள்

கிளர் ஓளி மணி முடி
மிக்க ஒளியை யுடைய ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேயம்
வ்யூஹ விபவங்கள் அளவு அன்றிக்கே திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகையாலே நீர்மையிலே தோற்று
சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————-

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

————-

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
ப்ரஸித்த நாமம் ஆதல்

—————

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு

பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –

————–

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு –
ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள்-
புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளே-ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் காட்டும் திரு நாமம்

நாராயணன் மூர்த்தி கேசவன் –
வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

————–

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

———————–

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

——————-

தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

——————

கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

———————

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

————–

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

கேசவன் -இத்யாதி –
ஆன பின்பு -பிரசஸ்த கேசவனோடே-
அவ் வை லக்ஷண்யத்தில் எடுப்புண்டு பின் பற்றித் திரிகிற இவளை –

————

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

(கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரம் -குலசேகரப்பெருமாள் )

நித்ய வாசம் பண்ணுகிற ஸௌசீல்ய குணயுக்தனாய்-
ஆஸ்ரித விரோதிகளை -மதுவை – நிரசித்தால் போலே நிரசித்து பொகடுமவனாய் –
அவர்களுக்கும் அனுபாவ்யமாம்படி பிரசஸ்தமான திருக் குழலை உடையனாய் இருக்கிறவனே

பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

——————–

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

பிரம ருத்ரர்களுக்கு காரண பூதன் ஆகையாலே -கேசவன் -என்னும்
திருநாமத்தை உடையவனே –

—————

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

கேசவா என்றும்
பிரசச்த கேச வனானவனே-என்றும்

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும் –
உன்னால் அல்லது செல்லாதவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்றும்

————–

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

—————

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

—————-

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

——————–

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———–

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

—————

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் –
ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்;
எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்;
நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

—————

கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
ப்ரஹ்ம ஹத்யைக்கு -பிராயச்சித்தமாக -கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு பிராயச்சித்தம் -கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –
ப்ராயச்சித்தமும் -கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன

கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
ராவணன் ஒருவனும் பிரதிகூல்யம் -தீ வினை செய்ய ராக்ஷஸ ஜாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே
எல்லாம்-
அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
என்ன –
கார்யத்தில் வந்தால் -அர்த்தக்ரியா காரியாயே – அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின்
யுக்தி -வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –

இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
பிரசஸ்த கேசனாய் -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-சம்சார துரிதங்கள் –
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் -தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

————-

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

————

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என் நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் – —கண்டேன் -கண்டு கொண்டேன் –போன்றவை ஒரே பாசுரத்தில் பல காலும் உள்ள -பாசுரங்கள் –

December 11, 2021

ஸ்ரீ அருளிச் செயல்களில் –கண்டேன் -கண்டு கொண்டேன் -போன்ற -பாசுரங்கள்
ஞானம் தர்சன பிராப்தி -நடு நிலை -காலஷேபம் -உத்தர க்ருத்யம்
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலய -அகிஞ்சநோ- அகதி — த்வம் ஏவ உபாய பூத மே பவ –
இதி பிரார்த்தனா மதி சரணாகதி ச தேவப்ஸ்மின் ப்ரயுஜ்யதாம் –ஸ்ரீ பாஞ்ச ராத்ர வசனம்

———-

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-2-1-

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-

கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

உருவு கரிய ஒளி மணி வண்ணன் புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-

எழில் கொள்மகர குழை இவை திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-

பரமன் தன நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-

கன்று இனங்கள் மறித்து திரிவான் குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 – –

அவதார விசிஷ்டனாக சர்வேஸ்வரனை கண்ணாலே காண வேண்டும் என்று தேடித் திரிகிறார் சிலரும்
அப்படி தேடி கிறிகோள் ஆகில் அவனை உள்ளபடி கண்டார் உளர் -என்று சொல்லுகிறார் சிலருமாக கொண்டு
தம்மை இரண்டு வகையாக வகுத்து நின்று பேசி இனியர் ஆகிறார் -இத் திரு மொழியில் –

நாடுதிரேல்-என்றும் -கண்டார் உளர் -என்றும் பன்மையாக அருளிச் செய்தது
கட் கண்ணால் காண்கையில் அபேஷா ரூப ஞான வ்யக்திகளும்
உட் கண்ணால் கண்டு அதில் ஊற்றத்தாலே பாஹ்ய அனுபவமும்
சித்தித்தது என்று தோற்றும்படியான ஞான வ்யக்திகளும் பல உண்டு ஆகையாலே

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளர் தரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1 1-

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4 1-2 –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4 1-3 –

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1 4-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால்
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 5-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1 8-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

——–

கண்டீரே -என்று -பரம பக்தி தசையை -கேட்கிறவர்கள் பாசுரத்தாலும்
கண்டோம் -என்று-தான் பெற்ற பேற்றை – சொல்லுகிறவர்கள் பாசுரத்தாலும் –
ஆக தான் பெற்ற பேற்றைச் சொல்லித் தலைக் கட்டுகிறது

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –-14-1-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

தருமம் அறியா குறும்பனைத் தன் கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

———

கண்டாள் கொலோ –
ஸ்ரவண ஜ்ஞானம் என்று தோற்றி இருக்கிறது இல்லை
கண்டவர்களுக்கு தெரியுமா போலே தெரியுமோ இவள் வார்த்தையை கேட்டு அறிந்த நமக்கு –
கண்டாள் கொலோ –
நெடுநாள் நோன்பு நோற்று பெற்ற தாயான முன்னே அறிந்த அம்சம் மறைக்கக் கடவதே இருக்க
என் முன்னே இப்படி வெளியிட்டுச் சொல்லும் போது
அவ்விஷயத்தில் இப்படி ஒரு சக்ருத் தர்சனம் உண்டாய் இருக்க வேணுமே –
ஒரு கால் கண்டால் பூர்வ வாசனையும் மறக்கும் படியான
வை லஷண்யம் உள்ளத்து அவ்விஷயத்துக்கே இறே
கலை இலங்கும்படியான பேச்சை உடையராய் இருப்பார் அவ் ஊரில் உள்ளார் –
அப்படியே இவள் பேச்சைக் கொண்டு-இவள் திருக் கண்ண புரத்திலே புக்கு
சௌரிப் பெருமாளை சாஷாத் கரித்தாள் ஆகாதே என்று சொல்லலாய் இரா நின்றது –
அகவாயில் ஓட்டம் எல்லாம் வார்த்தையிலே தெரியும் இறே

ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4-

———–

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

கண்ண புரம் என்று காட்டினாள்-
பிரான் இருந்தமை காட்டினீர் -என்று அவனைக் காட்டினாள் தாயார் –
அவன் இருந்த ஊரை காட்டுகிறாள் இறே இவள் –
இது போலே காணும் சதாசார்யானில் காட்டில் சத் சிஷ்யனுக்கு உண்டான வாசி –
உனக்கு பிராப்ய பிர்ராபகங்கள் இரண்டும் ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
அதவா –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–
திருக் கண்ண புரத்தை காணி கோள்-அஞ்சலியைப் பண்ணி கோள்
என்று சொல்லப் புக்கு-முடியும் சொல்ல மாட்டாதே குறையும் ஹஸ்த முத்ரையாலே காட்டினாள் –
அதவா –
காணுமோ -என்கிறாள் –
இக் கண்ணால் கொள்ளும் பிரயோஜனம் திருக் கண்ண புரத்தை காண்கை அன்றோ –
இத்தை நிஷேதிப்பாரும் சிலர் உண்டாவதே -என்று-விஷண்ணை யாகிறாள் -என்றுமாம் –

கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ-
ஒரு தேச விசேஷத்திலே போனால்-சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –
இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே —8-10-9-

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
விரோதி போகப் பெற்ற அளவேயோ – அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –
நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய் –
கண்ண புரத்துறை யம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டையாய் இருந்தபடி –

—-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–-திரு நெடும் தாண்டகம்–-21–

கண்டும் -குணம் கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கச் செய்தே –கண்டும் –என்கிறபடி -என் என்னில் –
கண் என்று உட் கண்ணாய் -ஜ்ஞான சாஷாத் காரத்தை சொல்கிறது –
அவன் பண்ணின தாழ்ச்சிகளை அனுபவித்து இருக்கச் செய்தேயும் -என்றபடி –
கண்டும்
முன்பு உன் பக்கல் கேட்டுப் போந்தேன் இத்தனை இ றே -கேட்டாப் போலே கண்டு வைத்தும்
கண்டும்
நெடுநாள் சாதனானுஷ்டானம் பண்ணி காண வேண்டிய விஷயம் அனாயாசமாக கண்ணுக்கு விஷயமாக
இருக்கச் செய்தே கிடாய் நழுவ விட்டது –
காணாத போது வெருவ ப்ராப்தமாய் இருக்க கண்டு வைத்து கலங்கினேன் –
கண்டு தெளிய கில்லீர் -என்னக் கடவது இறே –

——-

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே–திருக் குறும் தாண்டகம் –1-

கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே –
சுவடு அறிவிக்கும் தனையும் இறே வருத்தம் உள்ளது – பின்னை அத்தலை -இத்தலையாம் -இத்தனை –
கண்டு கொண்ட –
நான் கண்டு கொண்டேன் -என்று திரு அரசடியிலே காட்டிக் கொடுத்த காட்சி
ஏது செய்தால் மறக்கேன் -என்று மறந்து விட ஒண்ணாதபடி இறே மனசிலே புகுந்து காட்டிக் கொடுத்தது –
கண்டு கொண்ட –
கேட்டது கண்டால் போலே இருக்கிறது காணும்
ஸ்வரூப ஞானம் பிறந்தவர் ஆகையாலே -பண்டே வுண்டாய் – இழந்தது கண்டால் போலே இருக்கிறது –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்ட லமந்தால் இரங்கி யொரு நாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயி றுதிக்கும் கரு மா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர் தனக்கும் ஆங்கு அனையாய்
செம்மடல் வரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியவர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உள நலங்கூர
இம்மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –9-2-7-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

———

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ——முதல் திரு வந்தாதி–99-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —இரண்டாம் திருவந்தாதி–24-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ——மூன்றாம் திருவந்தாதி—-1-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம் —2-

கீழே பஞ்ச வர்ணம் -அதில் பச்சை வர்ணம் சேர்ந்து இங்கு )
பஸ்யதாம் சர்வ தேவா நாம் யயவ் வக்ஷஸ் தலம் ஹரே -என்று
பிராட்டி -தானே ஆசைப்பட்டு வந்து ஏறும்படியான மார்பு படைத்த -ஸ்ரீ யபதி

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-நான்முகன் திருவந்தாதி-86-

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – திரு விருத்தம்– 97- –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –பெரிய திருவந்தாதி–28-

காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்–
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே–சிறிய திருமடல்–

தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 –

இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .
(ஜென்ம கர்மம் மே திவ்யம் யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்

பிரார்த்தித்து பெற வேண்டிய வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-
கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும்
கண்டேன் -இத்யாதிப் படியே-மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
ததீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-
கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை–
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை
பரம பதத்தில் -நின்றும் மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .
காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன்

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

October 30, 2021

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆழ்வார்கள்அருளிச் செயல்களில் ஸ்ரீ அம்புயத்தாளுறை திரு மார்பனின் திருநாமங்கள்– ஸ்ரீ திருவஹீந்திரபுரம் திரு ஸ்ரீநிவாஸ தேசிகன் ஸ்வாமி

October 4, 2021

அக்காரக்கனியே!
அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
அங்கண்ணன்
அங்கனாயகன்
அங்கண்மா ஞாலத்து அமுது

அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து மிழ்ந்தாய்!
அச்சுதா!
அஞ்சனக்குன்றம்
அஞ்சனவண்ணன்
அஞ்சன வண்ணனே ஆயர் பெருமானே! –10-

அஞ்சனம் புரையும் திருவுருவன்
அசோதைதன் சிங்கம்
அசோதைக் கடுத்த பேரின்பக் குலவிளங்களிறு!
அசோதை இளஞ்சிங்கம்
அட்ட புயகரத்தாதி

அடர் பொன்முடியான்
அடலாமையான திருமால்
அடலாழி கொண்டான்
அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன்
அடியவர்க்கு அருளி அரவணை துயின்ற ஆழியான் –20-

அடியவர்கட் காரமுதமானான்
அண்டவாணன்
அண்டத்தமரர் பெருமான்
அண்ணலமரர் பெருமான்
அணங்காய சோதி

அணி நகரத்துலகனைத்தும் விளங்கும் சோதி
அணி நீலவண்ணன்
அணிநின்ற செம்பொனடலாழியான்

அணிவாணுதல் தேவகி மாமகன்
அணி மணி ஆசனத்திருந்த அம்மான்
அதகன்
அத்தா! அரியே!
அத்தனெந்தை ஆதிமூர்த்தி –30-

அத்தன் ஆயர்களேறு
அந்தணர் தம் அமுதம்
அந்தணாளி மாலே!
அந்தமாய் ஆதியாய்! ஆதிக்கும் ஆதியாய்!
அந்தமில் புகழ்க் காரெழிலண்ணலே!

அந்தமில் புகழாய்!
அந்தமில் புகழ் அனந்தபுர நகராதி
அந்தமில் வரையால் மழை தடுத்தான்
அந்தமிலாக் கதிர் பரப்பி அலர்ந்ததொக்கும் அம்மானே!
அப்பனே! அடலாழியானே! –40-

அப்புலவ புண்ணியனே!
அம்பர நற்சோதி!
அம்புயத்தடங்கண்ணன்
அம்மான் ஆழிப்பிரான்
அமரர் தம் அமுதே!

அமரர்க்கரிய ஆதிப் பிரான்
அமரர்கள் ஆதி முதல்வன்
அமரர்க் கரியேறே!
அமரர் தலைமகனே!
அமரர்க்கருள் செய்துகந்த பெருமான் திருமால் –50-

அமரரேறே!
அமுதம் பொதியின் சுவை
அமுதாய வானேறே!
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அரங்கத்தரவணைப் பள்ளியானே!

அரங்க மா நகருளானே!
அரங்கமேய அண்ணலே!
அரவணை மேல் பள்ளிகொண்ட முகில் வண்ணனே!
அரவணையான்
அரவினணை மிசை மேயமாயனார் –60-

அரவிந்த லோசனன்
அரவிந்த வாயவனே!
அரவிற் பள்ளிப் பிரான்
அரியுருவ மானான்
அரியேறே என்னம் பொற்சுடரே!

அரிமுகன் அச்சுதன்
அரும் பெருஞ்சுடர்
அருமா கடலமுதே!
அருவாகிய ஆதி
அருள் செய்த வித்தகன் –70-

அலங்கல் துழாய் முடியாய்!
அலம்புரிந்தடக்கை ஆயனே! மாயா!
அலமுமாழிப் படையுமுடையார்
அல்லிக் கமலக் கண்ணன்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந்தோளன்

அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
அல்லி மாதர மரும் திரு மார்பினன்
அலைகடல் கடைந்த அம்மானே!
அலைகடல் கடைந்த ஆரமுதே! –80-

அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே!
அலை நீருலகேழும் முன்னுண்ட வாயா!
அலை கடலரவமளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்
அழகனே!
அழலும் செருவாழி ஏந்தினான்

அழலுமிழும் பூங்காரரவணையான்
அழறலர் தாமரைக் கண்ணன்
அளத்தற்கு அரியனே!
அளவரிய வேதத்தான் வேங்கடத்தான்
அறமுயலாழிப் படையான் –90-

அறம் பெரியன்
அறிஅரிய பிரானே!
அற்புதன் நாராயணன்
அனந்த சயனன்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா!

அனந்தனணைக் கிடக்கும் அம்மான்
அன்பா!
அன்றிவ்வுலக மளந்தாய்
அன்றுலகமுண்டு மிழ்ந்த கற்பகம்
அன்றுலக மளந்தானே! –100-

அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகளன்பனே!
அன்னமும் கேழலும் மீனுமாய் ஆதியை
அன்னமதானானே அருமறை தந்தோனே!
அலையும் கடல் கொண்டவையம் அளித்தவன்
அம்புயத்தாள் கணவன்

அழியாதவருளாழிப் பெருமான்
அருளாளப் பெருமான்
அருளாழியம்மான்
அத்திகிரித் திருமால்
அயனார் தனித்தவங் காத்த பிரான் –110-

அருமறையினுச்சிதனில் நின்றார்
அருள் வரதர்
அருளாளர்
அமலனவியாத சுடர்
அளவில்லா ஆரமுதம்

அத்திகிரி அருள் முகிலே!
அருமறையின் பொருளனைத்தும் விரித்தார்
அடியவர் மெய்யர்
அடியவர்க்கு மெய்யன்
அடைக்கலம் கொண்ட திருமால் –120-

அந்தமிலாதி தேவன்
அருளாலுதவும் திருமால்
அம்புயத் தாளாரமுது
அயன் மகவேதியிலற்புதன்
ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த வேத முதல்வன்

ஆளும் பரமனைக் கண்ணனை
ஆழிப் பிரான்
ஆடிய மா நெடுந்தேர் படை நீரெழச் செற்ற பிரான்
ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை
ஆழியங் கண்ண பிரான்–130-

ஆயர்க்கதிபதி அற்புதன்
ஆழியங்கண்ணா!
ஆறாமத யானையடர்த்தவன்
ஆயர்களேறு அரியேறு
ஆலின் மேலால் அமர்ந்தான்

ஆயிரம் பேருடையான்
ஆழியான்
ஆலின் இலை மேல் துயின்றான்
ஆகத்தனைப் பார்க்கருள் செய்யுமமம்மான்
ஆழி வண்ணனென்னம்மான்–140-

ஆதியாய் நின்றார்
ஆயிர வாய் நாகத்தணையான்
ஆலிலையில் முன்னொருவனாய முகில் வண்ணா!
ஆழியேந்தினான்
ஆழிவலவன்

ஆழிக் கிடந்தான்
ஆல்மேல் வளர்ந்தான்
ஆதி நெடுமால்
ஆதிப் பெருமான்
ஆழிசங்கம் படைக்கலமேந்தி–150-

ஆழியங்கை அம்மான்
ஆடரவமளியில் அறிதுயிலமர்ந்த பரமன்
ஆராவமுதம்
ஆறாவெழுந்தான் அரியுருவாய்
ஆயர்கள் போரேறே!

ஆழிப்படை அந்தணனை
ஆலிலைச் சேர்ந்தவனெம்மான்
ஆதிமூர்த்தி
ஆதியஞ்சோதி
ஆராவமுதூட்டிய அப்பன்–160-

ஆவியே ! ஆரமுதே!
ஆய் கொண்ட சீர்வள்ளல்
ஆலிலை யன்னவசம் செய்யும் அண்ணலார்
ஆற்ற நல்லவகை காட்டுமம்மான்
ஆதிப்பிரான்

ஆதிப் பெருமூர்த்தி
ஆற்றலாழியங்கை அமரர் பெருமானை
ஆலினீளிலை ஏழுல குமுண்டு அன்று நீ கிடந்தாய்
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை
ஆம் வண்ணம் இன்னதொன்றென்று அறிவதரிய அரியை–170-

ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி
ஆழியங் கண்ணபிரான்
ஆதியாய் நின்ற என் சோதி
ஆழியங்கை யெம்பிரான்
ஆவியே!அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!

ஆதியான்
ஆயன் அமரர்க்கரியேறு
ஆயர்கள் நாயகனே!
ஆழியங்கையனே!
ஆயர்தங்கோ–180-

ஆயர் பாடிக்கணி விளக்கே!
ஆலத்திலையான்
ஆமாறு அறியும் பிரானே!
ஆயா!
ஆயரேறு

ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு
ஆலினிலையாய்
ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய்
ஆலை நீள் கரும்பன்னவன்
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகமுண்டவனே!–190-

ஆதி தேவனே!
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற
ஆதி தேவ
ஆமையான கேசவ!

ஆழிமேனி மாயனே!
ஆலின் மேலோர் கண் வளர்ந்த ஈசன்
ஆயர் பூங்கொடிக் கினவிடை பொருதவன்
ஆதியாயிருந்தாய்
ஆதியை அமுதத்தை–200-

ஆழித் தடக்கையன்
ஆமருவி நிரை மேய்ந்த அணியரங்கத்தம்மான்
ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்
ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின்றான்
ஆழியாலன்றங்காழியை மறைத்தான்

ஆயனாயன்று குன்றமொன்றெடுத்தான்
ஆழி வண்ண!
ஆயிரம் பேருடையவாளன்
ஆரா இன்னமுது
ஆதி வராஹமுன்னானாய்–210-

ஆழியேந்திய கையனே!
ஆதியுமானான்
ஆலிலைமேல் கண் துயில் கொண்டுகந்த கருமாணிக்க மாமலை
ஆடற் பறவையன்
ஆழிவண்ணர்!–220-

ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்
ஆயிரம் பேரானை
ஆதிமுனேனமாகி அரணாய மூர்த்தி
ஆதியாதி ஆதி நீ
ஆடரவின்வன்பிடர் நடம் பயின்ற நாதனே!–220-

ஆய நாயகர்
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆழி வலவா!
ஆயர்க்கதிபதி அற்புதன்
ஆலம் பேரிலையன்னவசம் செய்யும் அம்மானே!

ஆழிநீர் வண்ணன் அச்சுதன்
ஆற்றலாழியங்கை அமரர் பெருமானை
ஆசறு சீலன்
ஆற்ற வல்லவன்
ஆடுபுட்கொடி ஆதிமூர்த்தி–230-

ஆணிச் செம் பொன்மேனி யெந்தாய்
ஆற்ற நல்லவகை காட்டும் அம்மானை
ஆரமுதூட்டிய அப்பனை
ஆர்ந்த புகழச்சுதன்
ஆழிப்படை அந்தணனே!

ஆழிசங்கம் படைக்கலமேந்தி

இருடிகேசா
இலங்கைமாநகர் பொடிசெய்த அடிகள்
இன்னார் தூதனென நின்றான்
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றான் –240-

இலங்கொளிசேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானே!
இருள் நாள் பிறந்த அம்மான்
இமையோர்க்கு நாயகன்
இமையோர்தம் பெருமான்
இறைவன்

இமயம் மேய எழில் மணித் திரள்
இன ஆநிரை காத்தான்
இளங்குமரன்
இன ஆயர் தலைவன்
இலங்கை செற்றான் –250-

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான்
இராமன்
இமையோர் பெருமான்
இமையோர் தலைவா!
இருள்விரி சோதி பெருமான்

இலங்கைக்குழா நெடுமாடம் இடித்த பிரானார்
இமையோர்தன் சார்விலாத தனிப்பெரு மூர்த்தி
இருளன்னமாமேனி எம்மிறையார்
இரைக்கும் கடல் கிடந்தாய்
இன்னமுத வெள்ளம் –260-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன்
இலங்கை பாழாளாகப் படை பொருதான்
இனத்தேவர் தலைவன்
இழைகொள் சோதி செந்தாமரைக் கண்ணபிரான்
இமையோரதிபதியே!

இமையோர்களேத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே!
இன்னமுதே!
இன்தமிழ் பாடிய ஈசன்
இமையவரப்பன் என்னப்பன்
இமையவர் பெருமான் –270-

இமையவர் தந்தை தாய்
இனமேதுமிலான்
இன்னுரை ஈசன்
இறையவன்

ஈசனென் கருமாணிக்கம்
ஈட்டிய வெண்ணெயுண்டான்
ஈன் துழாயான்

உகப்புருவன்
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவன் –280-

உத்தமனே!
உம்பர் கோன்
உம்பர் கோமானே!
உம்பர் வானவர் ஆதியஞ்சோதி
உம்பருலகினில் யார்க்கும் உணர்வரியான்

உயிர்க்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா!
உருவக் குறளடிகள்
உருவமழகிய நம்பி
உரைக்கின்ற முகில் வண்ணன்
உலகமுண்ட பெருவாயா! –290-

உலகளந்த உத்தமன்
உலகளந்த மால்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!
உலகேத்தும் ஆழியான்
உலகேழு முண்டான்

உலகுக்கோர் தனியப்பன்
உலகுண்ட ஒருவா! திருமார்பா!
உலகுண்டவன் எந்தை பெம்மான்
உலகளந்த பொன்னடியே!
உலகளப்பானடி அடி நிமிர்ந்த அந்த அந்தணன் –300-

உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான்
உம்பர் போகமுகந்து தரும் திருமால்
உத்திர வேதிக்குள்ளே உதித்தார்
உம்பர் தொழும் கழலுடையார்
உவமையில திலகு தலைவனார்

உம்பர் தொழும் திருமால்
உள்ளத்துறைகின்ற உத்தமன்
உயிராகி யுள்ளொளியோடுறைந்த நாதன்
உலகம் தரிக்கின்ற தாரகனார்
உண்மையுரைக்கும் மறைகளிலோங்கிய உத்தமனார் –310-

உலப்பில் கீர்த்தி யம்மானே!
உலகுக்கே ஓருயிருமானாய்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்
உயர்வற உயர்நலமுடையவன்
உடன்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்

உலகமளந்தானே!
ஊழிப்பிரான்
ஊழிமுதல்வன்
ஊழியான்
ஊழிபெயர்த்தான் –320-

ஊழியெல்லாமுணர்வானே!
ஊற்றமுடையாய் பெரியாய்

எங்கள் தனி நாயகனே!
எங்கள் குடிக்கரசே!
எங்களீசனெம்பிரான்

என் சோதி நம்பி!
என் சிற்றாயர் சிங்கமே!
எண்ணற்கரியானே!
எம்மீசனே!
எழிலேறு –330-

எம் விசும்பரசே !
என் கண்ணனெம்பிரான்
என் அன்பனே!
என்தன் கார்முகிலே!
என்னுயிர்க் காவலன்

என்னப்பா!
எம்பிரான்
என்னையாளுடைத்தேனே!
எண்ணுவாரிடரைக் களைவானே!
எயிற்றிடை மண் கொண்ட எந்தை –340-

எங்கள் நம்பி கரியபிரான்
என் பவள வாயன்
என் கடல் வண்ணன்
எம்மி ராமாவே !
எந்தை தந்தை தம் பெருமான்

என்னையாளுடையப்பன்
எண்ணிறந்த புகழினான்
எங்கள் தனி நாயகனே !
என்னமர் பெருமான்
என்னாருயிரே ! அரசே ! –350-

என் பொல்லாக் கருமாணிக்கமே !
என்னிருடீகேசன்
என்னுடையாவியே !
எங்கள் பிரான்
என் திருமகள் சேர் மார்பனே!

எந்தை மால்
எட்டு மா மூர்த்தி என் கண்ணன்
எட்டவொண்ணாத இடந்தரும் எங்களெம் மாதவனார்
எங்கள் பெற்றத் தாயன்
எழுத்தொன்றில் திகழ நின்றார் –360-

ஏதமின்றி நின்றருளும் பெருந்தகை
ஏத்தருங்கீர்த்தியினாய்
ஏரார்ந்த கருநெடுமாலிராமன்
ஏரார்ந்த கண்ணிய சோதை இளஞ்சிங்கம்
ஏவரி வெஞ்சிலையான்

ஏழுலகுக்காதி
ஏழுலகுமுடையாய்
ஏழுலகப் பெரும் புரவாளன்
ஏனத்துருவாகிய ஈசன்
ஏனமாய் நிலங்கீண் என்னப்பனே ! –370-

ஐயனே ! அரங்கா!
ஐவாய்பாம்பினணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதி

ஒண்சுடராயர் கொழுந்தே!
ஒத்தார் மிக்காரையிலையாய மாமாயன்
ஒருபாலகனாய் ஞாலமேழு முண்டான்

ஒருநாள் அன்னமாய் அன்றங்கரு மறை பயந்தான்
ஒளி மணி வண்ணன்
ஓங்கி யுலகளந்த உத்தமன்
ஓங்கோத வண்ணனே !
ஓதமா கடல் வண்ணா! –380-

ஓதநீர் வண்ணன்
ஓரெழுத்து ஓருருவானவனே !

கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்
கடல் போலொளி வண்ணா!
கடல் வண்ணர்

கடற்பள்ளியம்மான்
கடல் ஞாலத்தீசன்
கடல் வண்ணா!
கடவுளே!
கடியார் பொழிலணி வேங்கடவா! –390-

கணபுரத்தென் காகுத்தன்
கண்ணனென்னும் கருந்தெய்வம்
கண்ணபிரான்
கண்ணுக்கினியன்
கமலக் கண்ணன்

கரிய முகில் புரை மேனி மாயன்
கருங்குழற்குட்டன்
கரும்பெருங்கண்ணனே
கருஞ்சிறுக்கன்
கருந்தடமுகில் வண்ணன் –400-

கருவுடை முகில் வண்ணன்
கருவினைபோல் வண்ணன்
கருமுகிலெந்தாய்
கரும்பிருந்த கட்டியே!
கடற்கிடந்த கண்ணனே!

கருந்தண்மாகடல் திருமேனி அம்மான்
கருத்தனே!
கருமாணிக்கச் சுடர்
களங்கனி வண்ணா! கண்ணனே!
கற்கும் கல்விநாதன் -410-

கன்று குணிலா எறிந்தாய்
கன்னலே ! அமுதே!
கண்ணா என் கார்முகிலே!
கரும்போரேறே!
கடற்பள்ளி மாயன்

கருளக் கொடியானே!
கஞ்சைக் காய்ந்த கழுவில்லி
கண்ணபுரத்தென் கருமணியே!
கங்கைநீர் பயந்த பாத!
கதநாகம் காத்தளித்த கண்ணன் –420-

கலையார் சொற்பொருள்
கருங்கடல் வண்ணா!
கருமாமுகில் வண்ணர்
கடல் வண்ணனார்
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்

கன்று மேய்த்தினிதுகந்த காளாய்
கருந்தேவனெம்மான்
கடிசேர் கண்ணிப் பெருமானே!
கறந்த பால் நெய்யே!
கடலினுளமுதமே! –430-

கட்கரிய கண்ணன்
கட்டெழில் சோலை நல்வேங்கட வாணன்
கடல்ஞாலமுண்டிட்ட நின்மலா!
கடிய மாயன்
கறங்கு சக்கரக் கனிவாய்ப் பெருமான்

கடலின்மேனிப்பிரான்
கமலத்தடங்கண்ணன்
கரிய முகில் வண்ணன்
கடற்பள்ளி அண்ணல்
கரிய மேனியன் -440-

களிமலர்த்துளவன் எம்மான்
கருமாணிக்கம்
கருகிய நீலநன்மேனி வண்ணன்
கடிபொழில் தென்னரங்கன்
கடல் கவர்ந்த புயலோடுலாங்கொண்டல் வண்ணன்

கடல் கிடக்கும் மாயன்
கலந்து மணி இமைக்கும் கண்ணா
கலங்காப் பெரு நகரம் காட்டுவான்
கமல நயனத்தன்
கருவளர் மேனி நம் கண்ணன் –450-

கருவாகிய கண்ணன்
கண்ணன் விண்ணோரிறை
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால்
கருணை முகில்
கமலையுடன் பிரியாத நாதன்

கருணைக் கடல்
கருதவரம் தரு தெய்வப் பெருமாள்
காண இனிய கருங்குழற் குட்டன்
காண் தகு தாமரைக் கண்ணன்
கார்மலி மேனி நிறத்துக் கண்ணபிரான் –460-

கார்முகில் வண்ணன்
கார் வண்ணன்
கார்க்கடல் வண்ணன்
கார்தழைத்த திருவுருவன்
காரணா கருளக் கொடியானே!

காரார்மேனி நிறத்தெம்பெருமான்
காரானை இடர்கடிந்த கற்பகம்
காரொடொத்தமேனி நங்கள் கண்ணன்
காரொளி வண்ணனே! கண்ணனே!
காயாமலர் வண்ணன் –470-

காராயின காள நன் மேனியன்
காய்சினப் பறவை யூர்ந்தானே!
காய்சின வேந்தே! கதிர் முடியோனே!
காயா மலர் நிறவா!
காயாவின் சின்ன நறும் பூத் திகழ் வண்ணன்

காரார் கடல் வண்ணன்
கார் கலந்த மேனியான்
கார்வண்ணத்து ஐய!
கார் மேக வண்ணன்
கார் போல் வண்ணன் –480-

கார் மலி வண்ணன்
காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
காளமேகத் திருவுருவன்
காத்தனே!
காரார்ந்த திருமேனி கண்ணன்

காமருசீர் முகில் வண்ணன்
கானுலாவிய கருமுகில் திருநிறத்தவன்
காகுத்தா கரிய கோவே!

கிளரும் சுடரொளி மூர்த்தி
கிளரொளி மாயன் –490

குடக்கூத்தன்
குடமாடுகூத்தன்
குருத்தொசித்த கோபாலகன்
குரைகடல் கடைந்தவன்
குறியமாணெம்மான்
குன்றம் குடையாக ஆகாத்த கோ

குன்றமெடுத்தானிரை காத்தவன்
குன்றமொன்றெடுத்தேந்தி மாமழை அன்று காத்த அம்மான்
குரவை முன் கோத்த கூத்த எம்மடிகள்
குருமாமணிக்குன்று
குன்றால் மாரி தடுத்தவன் –500-

குடமாடி மதுசூதன்
குன்றால் மாரி தடுத்துக் காத்தானே!
குன்றமேந்திக் கடுமழை காத்த எந்தை
குவலயத்தோர் தொழுதேத்தும் ஆதி
குளிர்மாமலை வேங்கடவா!

குடத்தையெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே!
குறையொன்றுமில்லாத கோவிந்தா!
குன்று குடையாய் எடுத்தாய்
குலமுடைக் கோவிந்தா!
குன்றெடுத்தாய் –510-

குன்றமெடுத்தபிரான்
குடந்தைத் திருமாலே
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்
குற்றமறியாத கோவலனார்

கூராழிப்படையான்
கூனற்சங்கத் தடக்கையன்

கெழுமியகதிர்ச் சோதி
கேடில் விழுப்புகழ்க் கேசவன்
கேழல் திருவுரு
கை கலந்த ஆழியான் –520-

கைந் நின்ற சக்கரத்தன்
கை கழலா நேமியான்
கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே!
கொந்தார் துளவ மலர் கொண்டவனே!
கொண்டல் வண்ணா!

கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
கோலமாணிக்கமென்னம்மான்
கோலங்கரிய பிரான்
கோவலனே!
கோவிந்தா! –530-

கோளரி மாதவன்
கோமள ஆயர்கொழுந்தே
கோயிற் பிள்ளாய்
கோபால கோளரி
கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்

கோவலனெம்பிரான்
கோணாகணையாய்!
கோலால் நிரை மேய்த்த எம்கோவலர் கோவே!
கோதில் செங்கோல் குடைமன்னரிடை நடந்த தூதர்
கோல வல் விலிராம பிரானே! –540-

கோவலனே! குடமாடீ!
கோவலர் குட்டர்
கோனே குடந்தைக் கிடந்தானே
கௌத்துவமுடைக் கோவிந்தன்

சக்கரத்தண்ணலே!
சங்கு சக்கரத்தாய்

சந்தோகா பௌழியா!
சாமவேதியனே நெடுமாலே!
சந்தோகா ! தலைவனே!
சங்கேறு கோலத்தடக்கைப் பெருமான்–550-

சவிகொள் பொன் முத்தம்
சங்கொடு சக்கரத்தன்
சக்கரக் கையனே!
சக்கரக் கை வேங்கடவன்
சங்கமிடத்தானே!

சங்கோதப் பாற் கடலான்
சார்ங்கத்தான்
சிரீதரனே! சிறந்த வான் சுடரே!
சீலமெல்லையிலான்
சீர்கெழு நான்மறையானவரே!–560-

சீ மாதவன்
சீர்கொள் சிற்றாயன்
சீலமிகு கண்ணன்
சீர்ப்பெரியோர்
சீரார்சிரீதரன்

சீலப் பெருஞ்சோதி
சுடர் கொளாதி
சுடர் ஞானமின்பமே
சுடர்ச்சோதி முடிசேர் சென்னியம்மானே!
சுடர் நீள் முடியாய்–570-

சுடர் நேமியாய்
சுடர்ப் பாம்பணை நம்பரன்
சுவையன் திருவின் மணாளன்
சுழலின் மலி சக்கரப் பெருமாள்
சுடரொளி ஒரு தனி முதல்வன்

சுடர்கொள் சோதி
சுடராழியான்
சுவையது பயனே
சுடர்போல் என் மனத்திருந்த வேதா!
சுடராழிப்படையான்–580-

சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடி மாரி
சூட்டாயநேமியான்
செங்கண் மால்
செஞ்சுடர்ச்சோதி
செஞ்சுடர்த்தாமரைக் கண்ணா!

செம்மின் முடித் திருமால்
செய்ய கமலக் கண்ணன்
சென்னி நீண் முடியாதியாய்
செய்யாளமரும் திருவரங்கர்
செய்யாளன்பர்–590

சேண்சுடர்க்குன்றன்ன செஞ்சுடர்மூர்த்தி
சொற் பொருளாய் நின்றார்
ஞாலப் பிரான்
ஞாலமுண்டாய் ஞால மூர்த்தி
ஞாலமுற்றுமுண்டுமிழ்ந்தான்

ஞாலம்விழுங்கும் அநாதன்
ஞாலம் தத்தும் பாதன்
ஞான நல்லாவி
ஞானப்பிரான்
தடம் பெருங்கண்ணன்–600-

தண்ணந் துழாயுடையம்மான்
தண் துழாய் விரைநாறுகண்ணியன்
தண் துழாய்த் தாராளா!
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான்
தண் வேங்கடமேகின்றாய்

தம்மானென்னம்மான்
தன்சொல்லால்தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
தன்தனக்கின்றி நின்றானை
தனக்கும் தன்தன்மை யறிவரியானை
தன்னடியார்க்கினியன்–610-

தருமமெலாம் தாமாகி நிற்பார்
தனித் தாதை
தனித் திறலோன்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்
தன் கழலன்பர்க்கு நல்லவன்

தன்னடிக்கீழுலகேழையும் வைத்த தனித் திருமால்
தந்தையென நின்ற தனித் திருமால்
தண் துளவ மார்பன்
தனக்கிணையொன்றில்லாத திருமால்
தன் திருமாதுடனிறையுந்தனியாநாதன்–620-

தண் துழாய் மார்பன்
தாசரதீ!
தாதுசேர்தோள் கண்ணா!
தாமரைக் கண்ணன்
தாமரைக்கையாவோ?

தாமரைக் கண்ணினன்
தாமரையன்ன பொன்னாரடி எம்பிரான்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
தாள்களாயிரத்தாய்
தார்தழைத்த துழாய்முடியன்–630-

தாயெம்பெருமான்
தாமரைக் கண்ண னெம்மான்
தாமரைமேலய னவனைப் படைத்தவனே!
தாமரைமேல் மின்னிடையாள் நாயகனே!
தாரலங்கல் நீள் முடியான்

தாளதாமரையான்
தாமரையாள் திருமார்பன்
தாதையரவணையான்
தாமனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார்
தாமரையாளுடனிலங்கும் தாதை–640-

திருக் கலந்து சேரு மார்ப!
திரிவிக்கிரமன்
திருநாரணன்
திருக்குறளப்பன்
திருமங்கை மணாளன்

திருவிருந்த மார்பன்
திருமகளோடு இனிதமர்ந்த செல்வன்
திருமகளார் தனிக் கேள்வன்
திருமாமகள் கேள்வா! தேவா!
திருமார்பன்–650-

திருவமர் மார்பன்
திருமாலார்
திருவிண்ணகர் சேர்ந்தபிரான்
திருவேங்கடத்தெழில்கொள் சோதி
திருவேங்கடத்தெம்பிரானே!

திருவுடைப் பிள்ளை
திருவைகுந்தத்துள்ளாய் தேவா!
திறம்பாத கடல்வண்ணன்
திருவே! என்னாருயிரே!
திருமாமகள்தன் கணவன்–660-

திருமறுமார்பான்
திருவுக்கும் திருவாகிய செல்வா!
திருவாழ் மார்பன்
திருநீர்மலை நித்திலத்தொத்து
திருவயிந்திரபுரத்துமேவு சோதி

திருவெள்ளக்குளத்துள் அண்ணா!
திகழும் மதுரைப் பதி
திரண்டெழுதழைமழை முகில்வண்ணன்
திருவாயர்பாடிப் பிரானே!
திருந்துலகுண்ட அம்மான்–670-

திருநீலமணியார்
திருநேமிவலவா!
திருக்குறுங்குடி நம்பி
திருமணிவண்ணன்
திருநறையூர் நின்ற பிரான்

திருச்செய்ய நேமியான்
திருமாலவன்
திண்பூஞ்சுடர்நுதி நேமி அஞ்செல்வர்
திருமாமணி வண்ணன்
திருமலை மேல் எந்தை–680-

திருமங்கை நின்றருளும் தெய்வம்
திருமொழியாய் நின்ற திருமாலே!
திருப்பொலிந்த ஆகத்தான்
திரைமேல் கிடந்தான்
திருமோகூர் ஆத்தன்

திருக்கண்ணபுரத்து ஐயன்
திலகமெனும் திருமேனிச் செல்வர்
தினைத்தனையும் திருமகளை விடாதார்
திருவத்தியூரான்
திகழரவணையரங்கர்–690-

திருமகளார் பிரியாத தேவன்
திருவுடனே அமர்ந்த நாதன்
திருமகளோடு ஒருகாலும் பிரியாநாதன்
திருநாரணனென்னும் தெய்வம்
திருமகளார் பிரியாத் திருமால்

தீவாய்வாளி மழை பொழிந்த சிலையா!
தீவாய் நாகணையில் துயில்வானே!
தீங்கரும்பின் தெளிவே!
தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
தீர்த்தன்–700-

துணை மலர்க் கண்களாயிரத்தான்
துவராபதி யெம்பெருமான்
துழாயலங்கல் பெருமான்
துழாய் முடியார்
துயர் தீர்க்கும் துழாய் முடியான்

துளவ முடி யருள் வரதர்
துளங்காவமுதக் கடல்
துவரை மன்னன்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன்
தூ மொழியாய்–710-

தூவி யம் புள்ளுடையாய்
தூ மணி வண்ணன்
தெண்டிரைக்கடற் பள்ளியான்
தெய்வப் புள்ளேறி வருவான்
தெய்வ நாயகன்

தெளிவுற்ற கண்ணன்
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
தெள்ளியார் வணங்கப்படும் தேவன்
தேசுடையன்
தேசமுன்னளந்தவன்–720-

தேவக்கோலப்பிரான்
தேவகி சிங்கமே!
தேவகி சிறுவன்
தேவர்கள் நாயகன்
தேவர்பிரான் –

தேவாதிதேவபெருமான்
தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!
தேனே இன்னமுதே!
தேவர்க்கும் தேவாவோ!
தேன்துழாய்த்தாரான்–730-

தேங்கோதநீருருவன் செங்கண்மால்
தேசுடைய சக்கரத்தன் சங்கினான்
தேங்கோத வண்ணன்
தேனின்ற பாதன்
தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகர்

தேனமர் செங்கழலான்
தேசொத்தார் மிக்காருமிலாதார்
தேனார் கமலத் திருமகள்நாதன்
தேரிலாரணம்பாடிய நம் தேவகி சீர் மகனார்
தேனுளபாதமலர்த் திருமால்–740-

தேனவேதியர் தெய்வம்
தொல்லைநன்னூலிற்சொன்ன உருவும் அருவும் நீயே
தோலாத தனி வீரன்
தோளாத மா மணி
நந்தன் மதலை

நந்தா விளக்கின் சுடரே!
நம் கண்ணன் மாயன்
நம் கோவிந்தன்
நம் சுடரொளி ஒரு தனி முதல்வன்
நம் திருமார்பன்–750-

நரனே நாரணனே
நல்லாய்
நறுந்துழாய்ப் போதனே
நன் மகளாய் மகளோடு நானில மங்கை மணாளா
நம் அத்திகிரித் திருமால்

நம் பங்கயத்தாள் நாதன்
நறுமலர்மகள்பதி
நங்கள் நாயகன்
நந்துதலில்லா நல்விளக்கு
நன்மகன்–760-

நந்திருமால்
நம்மை யடைக்கலம் கொள்ளும் நாதர்
நாகணை மிசை நம் பிரான்
நாகத் தணையான்
நாராயணனே!

நாறுபூந்தண்துழாய் முடியாய்
நாகணை யோகி
நான்முகன்வேதியினம் பரனே
நாறுதுழாய் முடியான்
நாதன்–770-

நாகமலை நாயகனார்
நாராயணன் பரன்
நிகரில் புகழாய்
நிரை மேய்த்தவன்
நிலமங்கைநல்துணைவன்

நிலமாமகட்கினியான்
நிலவு புகழ் நேமி யங்கைநெடியோன்
நிறங்கிளர்ந்த கருஞ்சோதி
நிறந்திகழும் மாயோன்
நிறைந்த ஞான மூர்த்தி–780-

நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியான்
நின்னொப்பாரையில்லா என்னப்பா!
நிலை தந்த தாரகன்
நியமிக்குமிறைவன்
நீண்ட தோளுடையாய் .

நீண்டமுகில் வண்ணன் கண்ணன்
நீதியான பண்டமாம் பரமசோதி
நீரார் கமலம் போல் செங்கண்மால்
நீரேற்றுலகெல்லாம் நின்றளந்தான்
நீரோத மேனி நெடுமாலே!–790-

நீலமாமுகில் வண்ணன்
நீலமுண்டமன்னன்ன மேனிப் பெருமாள்
நீள்கடல் வண்ணனே!
நெடுமால்
நெடியான் .

நேமிவலவா!
நேமி அரவணையான்
பங்கயத்தடங்கண்ணன்
படநாகணைக் கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
பணங்கொளரவணையான்–800-

பண்புடையீர்
பண்புடை வேதம் பயந்த பரன்
பத்துடையடியவர்க்கெளியவன்
பரஞ்சோதி
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன்

பரஞ்சுடர்
பரமனே!
பரனே பவித்திரனே!
பனிப் புயல் வண்ணன்
பரன்–810-

படைத்தேந்துமிறைவன்
பரவும் மறைகளெல்லாம் பதம் சேர்ந்தொன்ற நின்ற பிரான்
பாகின்றதொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமனே!
பாமருமூவுலகுமளந்த பற்ப பாதாவோ!
பாமருமூவுலகுமளந்த பற்பநாபாவோ! –820-

பாம்பணையப்பன்
பாரளந்தீர்
பாரிடந்த அம்மா!
பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்
பாரென்னும் மடந்தையை மால் செய்கின்ற மாலார்

பாற்கடலான்
பார்த்தன்தேர்முன்னே தான்தாழ நின்ற உத்தமனார்
பிறப்பிலி
பிறப்பில் பல்பிறவிப் பெருமான்
பின்னை தோள் மணந்த பேராயா! –830-

பீடுடையப்பன்
பீடுநான்முகனைப் படைத்தான்
புணர்ந்த பூந்தண்டுழாய் நம்பெருமாள்
புயற்கரு நிறத்தினன்
புயல் மழைவண்ணர்

புயல் மேகம் போல் திருமேனி அம்மான்
புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடிய பிரான்
புள்ளூர்தி
புள்ளை யூர்வான்
புனத்துழாடாய் முடிமாலை மார்பன் –840-

புனிதன்
புண்ணியனார்
புராணன்
பூத்தண்துழாய் முடியாய்
பூந்துழாய் மலர்க்கே மெலியுமடநெஞ்சினார்

பூமகள் நாதன்
பூமகள் நாயகன்
பூம்பிணைய தண்டுழாய் பொன்முடியம் போரேறே!
பூவில்நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமான்
பூவினை மேவியதேவி மணாளனை –850-

பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியனார்
பெற்றமாளி
பெரு ஞானக் கடல்
பேராயிரமுடையான்
பேராழிகொண்ட பிரான்

பேராத அருள் பொழியும் பிரான்
பேரருளாளன்
பேராயிரமும் திருவும் பிரியாத நாதன்
பைகொள் பாம்பணையாய்
பைகொள் பாம்பேறி உறை பரனே! –860-

பைங்கோத வண்ணன்
பைந்நாகப்பள்ளியான்
பைவிடப் பாம்பணையான்
பொய்யிலாத பரம்சுடரே!
பொருநீர்த்திருவரங்கா!

பொலிந்துநின்ற பிரான்
பொன் நெடுஞ்சக்கரத்தெந்தை பிரான்
பொன்முடியன்
பொன்பாவை கேள்வா!
பொன்னாழிக்கையென்னம்மான் –870-

பொன்னூலினன்
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்கோதா!
போதார் திருவுடன் பொன்னருள் பூத்த நம் புண்ணியன்
மண் மகள் கேள்வன்
மலர் மங்கை நாயகன்

மணி மாயன்
மத்தமாமலை தாங்கிய மைந்தன்
மதுசூத அம்மான்
மது நின்ற தண்துழாயம்மான்
மதுசூதனன் –880-

மதுவார் தண்ணந்துழாயான்
மதுரைப் பிறந்த மாமாயனே!
மதுவின் துழாய் முடிமாலே!
மயர்வற மதிநலமருளினன்
மருப்பொசித்த மாதவன்

மல்லாகுடமாடீ!
மறுத்திருமார்வன்
மறையாளன்
மற்றொப்பாரையில்லா ஆணிப்பொன்னே!
மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே! –890-

மன்னு பெரும்புகழ் மாதவன்
மணிமுடி மைந்தன்
மாணிக்குறளனே!
மாணிக்குறளுருவாய மாயவனே!
மாதவனே!

மாதாய மாலவனை
மாநீர் வண்ணர்
மா மணி வண்ணன்
மாமதுவார் தண்டுழாய் முடிமாயவன்
மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் –900-

மாயக் கடவுள்
மாயக் கூத்தன்
மாயன் மணி வண்ணன்
மாயவனே!
மால் வண்ணனே!

மாலவனே!
மாவாய் பிளந்தானே!
மாலே மணி வண்ணா!
மாலாய்ப் பிறந்த நம்பி
மாலே செய்யும் மணாளன் -910-

மின்னார் மணிமுடி விண்ணவர் தாதை
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன்
முடிகளாயிரத்தாய்
முடிசேர் சென்னியம்மா!
முடிவிலீயோ!

முகில் வண்ணன் கண்ணன்
முதல் மூவர்க்கு முதல்வன்
முது வேத முதல்வன்
முத்தமே என் தன் மாணிக்கமே!
முத்தீ மறையாவான் –920–

முனிவர்க்குரிய அப்பனே!
முத்தனார் முகுந்தனார்
மூவர்தம்முள்ளும் ஆதி
மூவா முதல்வா
மூவுலகளந்த சேவடியோயே!

மையகண்ணாள் மலர்மேல் உறைவாளுறை மார்பினன்
மைய வண்ணா மணியே!
வடமதுரைப் பிறந்தான்
வடி சங்கம் கைக் கொண்டான்
வடிவுடை வானோர் தலைவனே! –930-

வண்ண மாமணிச் சோதி!
வண் துழாய் மால்
வண் புகழ் நாரணன்
வண்ணமருள்கொள் அணி மேக வண்ணா
தண்டார் தண்ணந்துழாயான்

வண்தாமரை நெடுங்கண் மாயன்
வராஹத்தணி யுருவன்
வளரொளி மாயோன்
வள்ளலே! மணி வண்ணா!
வண்மையுகந்தவருளால் வரந்தரும் மாதவனார் –940-

வண் துவரைக் கண்ணன்
வண்டுவரைக்கரசான நம் மாயன்
வண்மை யுடைய அருளாளர்
வண்டுவரீசன்
வாமனா!

வாயும் ஈசன் மணி வண்ணன்
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன்
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
வானவர் தம் நாயகன்
வான தம் மெய்ப் பொருள் –950-

வானவராதி
வானவர் தெய்வம்
வானக்கோன்
வானுளார் பெருமான்
வானோர் கோமானே!

வானோர் தொழுதிறைஞ்சும் நாயகத்தான்
வான்கலந்த வண்ணன்
வானமருந்திருமால்
வாரண வெற்பிறையவன் வாசுதேவன்
விட்டுவே! –960-

விண்ணவர் கோன்
விண்ணோர் நாயகன்
விண்ணோர் பெருமான்
விண்ணகத்தாய்
விடரிய பெரிய பெருமாள்

வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வெள்ளைப் பரிமுகர் தேசிகர்
வெறித் துளப வித்தகனார்
வெறியார் துளவுடை வித்தகன்
வெற்றிக் கருளக் கொடியோன் –970-

வெண்புரி நூலினன்
வேங்கடவாணன்
வேங்கட நல்வெற்பன்
வேங்கடத்தெம் வித்தகன்
வேங்கடத்து மேயான்

வேத முதல்வன்
வேத முதற் பொருள்
வேழ மலை நாயகனார்
வேழ மலை மெய்யவனே!
வையமெல்லாமிருள் நீக்கும் மணிவிளக்கு–980-

வைகுந்தம் கொடுக்கும் பிரான்
வைகுந்தன்
வையமளந்தானே!
வைகுந்தா மணி வண்ணனே!

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் — மருந்து -பத பிரயோகங்கள் —

September 18, 2021

உயிர் மருத்துவன் ஒருவனே. அவனைத்தான்-மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!* என்று பெரியாழ்வாரழைக்கிறார். வைத்யோ நாராயணோ ஹரி: என்று வைதிகர்கள் சொல்லுவர்கள். ஸஹஸ்ரநாமத்தில்(நிர்வாணம் பேஷஜம் ) பிஷக் * என்று பிஷக்காகச் சொல்லப்படுகிறான்.*மருந்தும் பொருளுமமுதமுந்தானே என்கிறார் பேயாழ்வார்-மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கென்று பெருந் தேவர் குழாங்கள் திருநாட்டிலே பிதற்றிக்கொண்டிருப்பதாக நம்மாழ்வாரருளிச் செய்கிறார். திருநாட்டிலும் மருந்து வேண்டியிருக்கிறது. இதன் மருமத்தை த்வயத்தின் முடிவிலுள்ள நம:பதம் காட்டும்;திருவாய்மொழியில் (7-1-5) *ஆர்மருந்தினியாகுவார்? என்கிறார். ‘ஆர்மருத்துவராகுவார் ” என்றாராகில் பொருத்தமாயிருக்கும். ஆர்மருந்தாகுவாரென்றது விலக்ஷண ப்ரயோகமாகவன்றே வுள்ளது; ஆழ்வார் அசேதனமான மருந்தைக் கொள்பவரல்லர் என்பது இதனால் விளங்கிற்றன்றே. கைகால் முளைத்த மருந்துதான் உயிர்நோயைத் தீர்க்கும் மருந்தாகும். சுடராழி சங்கேந்தியிருக்கும் மருந்தையே நம்மாழ்வார் நாடுகிறார். நம்மாழ்வாரைச் சேர்ந்த நாமும் அதையே நாடுவோம். அந்தமருந்தின் பிரதிநிதிகள் ஆசாரியர்கள். * பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து ஸேவை ஸாதிக்கின்றனர்.

————-

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்–பெரியாழ்வார் -2-7-1-

அரு மருந்து ஆவது அறியாய் –
நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை
இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்
அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

அரு மருந்து ஆவது அறியாய்
பெறுவதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறாய் இல்லை –
இவன் ஆரா வமுது இறே
இது கடல் படா அமுது இறே
ஆகை இறே அரு மருந்து ஆயிற்று –

மருந்து -அம்ருதம்
இம் மருந்து தான்
சந்நிதி பண்ணின போது போக்யமுமாய்
நீங்கின போது சத்தா நாஸ பரிஹாரமுமாய் இறே இருப்பது –

————

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே -3-7-10 –

மருத்துவ பதம் -இத்யாதி
மருத்துவனானவன் சமைக்கிற ஒவ்ஷதத்திலே -பாகம் பார்த்து செய்யாத போது –
அது கை தவறுமா போலே –
இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள்
கை கழிந்தாள் என்னும் வார்த்தை லோகத்தில் உண்டாவதுக்கு முன்பே

ஒருப்படுத்திடுமின் -இத்யாதி
தன்னுடைமையை -மகா பலி -என்னது -என்று இருக்க
விரகாலே அவன் பக்கலில் நின்று வாங்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் பக்கலிலே
இவளை நீங்களே சேர்த்து விடும் கோள் –
நீங்கள் சேராத போது-இவள் ஸ்வபாவத்தாலும் இரண்டு தலையும் சேர்ந்தே விடும்
ஆன பின்பு ஏற்கவே நீங்களே சேர்த்து விடும் கோள் என்று த்வரிப்பிக்கிறார்கள்

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன்
ஆரோக்யாதிகளுக்கு(ஆதி -ஆயூஸ்ஸூக்கள்-உயர -இளைக்க -இத்யாதிகள் ) ஹேதுவாக ஓவ்ஷதங்கள்
சமைப்பார் பாகம் பார்க்குமா போலே
பருவம் தப்பாமல் பார்க்க வேணும் இறே பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு
அது தப்பினாள் என்னும் வார்த்தை பிறப்பதற்கு முன்பே

ஒருப்படித்திடும் இனி இவளை உலகளந்தான் இடைக்கே
வரையாதே திரு உலகு அளந்து ரஷித்த ஸர்வ ரக்ஷகன் பக்கல் நெஞ்சு
ஒருமித்துக் கொண்டு போய் விடப் பாருங்கோள்

இடுமின்
கொண்டு போய் இட்டு வைக்கப் பாருங்கோள் -என்னுமாம் –

ஸ்வரூபானுரூபமான புருஷார்த்தத்திலும் காட்டில்
விஷய அனுரூப புருஷார்த்தம் உத்தேச்யம் என்று அறுதியிட்டுச்
சரம பர்வ ஸ்திதியை பிரதம பர்வத்திலே கொண்டு போய்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
சேர்க்கப் பாருங்கோள் என்கிறது –

————

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும்  மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா –
மருந்தாய் இருக்கை அன்றிக்கே –
மருந்து அறிவதும் செய்யும் –

இது தான் –
மலை மேல் மருந்துமாய் –
ஏக மூலிகையுமாய் –
ஸக்ருத் சேவ்யுமாய்-
பலியாத மருந்து பல காலும் சேவித்தாலும் பலியாது இறே

இவ் ஒவ்ஷதம் தான்
வேறு ஒரு ஒவ்ஷதம் பொறாத அளவு அன்றிக்கே –
மீண்டு தன்னையும் பொறாது

மருத்துவன் -என்று ஆசார்யன்
ஆய் – -என்று ஏறிட்டு கொண்டான் என்றது
ஆகையால் இறே-
பீதக வாடைப் பிரானார் வந்து இவரை -இராப்பகல் ஒதுவித்தது –

மா மணி வண்ணா
மருந்து இருக்கிறபடி –
மணி மந்திர ஒவ்ஷதம் -என்னக் கடவது இறே

மணியும் –
மந்த்ரமும் –
ஒவ்ஷதமும் -நாட்டுக்கு வெவ்வேற

இங்கு எல்லாம் ஒரு தலைத்த விஷயம்

அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரம் என்று
நெஞ்சுக்கு இனிய மந்த்ரமும்

மறவாத மந்த்ரமும் –
வாழும் மந்திரமும் -இது இறே
அச்சுதன் அமலன் (3-4 )இறே
நச்சு மா மருந்தம் -(3-4 )
நழுவ விடாததுமாய் –
ஹேயத்தைக் கழிக்குமதாய்  –
ஆசைப்படும் மருந்து இறே –

வைப்பாம் மருந்தாம் ( 1-7-5 )-என்று
இரண்டும் ஒன்றான மருந்து இறே –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே (மூன்றாம் திருவந்தாதி )-என்று மூன்றும் ஒன்றான மருந்து இறே

(மருந்து அநிஷ்ட நிவர்த்தக உபாயம்
பொருள் இஷ்ட பிராப்தி உபாயம் -சாதனம்
அம்ருதம் ப்ராப்யம் )

பொருள்-உபாயம் -சமஸ்த வஸ்து ஹீநோபி –
அம்ர்தம் ப்ராப்யம் –
மருந்து -விரோதி நிவர்தகம் -பந்தம் அறுப்பதோர் மருந்து -என்னக் கடவது இறே
என்றும் ஒன்றான மருந்து இறே

தீர் மருந்து இல்லா ஐந்து நோய்க்கு ஆர் மருந்து ஆகுவார் -(திருவாய் – 7-1-5 )
மருந்து -என்று அஞ்ச வேண்டாதபடி தீர் மருந்தான மருந்து இறே

தீர்க்கும் மருந்து –
ஊருகிற பாம்புக்கு தடை இடுமா போலே –
வருகிற நரகத்தை தீர்க்கும் மருந்து –
அற்றவர்கட்கு அரு மருந்து (பெருமாள் திருமொழி )-என்ன கடவது இறே

ஆனை தன் பலம் அறியாதாப் போலே –
அரு மருந்து ஆவது அறியாய் -என்ன கடவது இறே –

ஆர்க்கும் அறிய ஒண்ணாத பிரேம வியாதியும் அகப்பட தீரும் என்னும் படி
கை கண்ட மருந்து இறே –

போக மகிழ்ச்சிக்கு மருந்து (9-3 )-என்று
ஒரு விபூதியாக கொண்டாடும் மருந்து -இறே

மறு பிறவி தீர்க்கும் மருந்து
மருத்துவனைச் (மருந்தகாகச் )சொல்லி –
மருந்து செய்யும் கார்யம் சொல்லுகிறது மேல் –

வருகிற ஜன்மங்களைப் போக்கி தவிர்க்கை யாவது –
வீடு அறுக்கை
மறுமைக்கு மருந்தினை (பெரிய திருமொழி -7-10 )-என்று சொல்லக் கடவது இறே

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
மருந்தாகும் அது அன்றிக்கே
மருந்து அறிவதும் செய்யும்
இது தான் மலை மேல் மருந்து

நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனே
இவருடைய மருந்து இவனுடைய வடிவு அழகு ஆய்த்து
நச்சு மா மருந்து இறே
மருந்தும் -இத்யாதி

மறு பிறவி தவிரத் திருத்தி
புனர் ஜென்மம் இல்லாத படி
ஜன்மாந்தர ஹேதுவான ப்ரக்ருதி சம்பந்தம் அறும் படி திருத்தி

—————-

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-ஸ்ரீ நாச்சியார் திருமொழி-12-2-

பாணியாது என்னை மருந்து செய்து -பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பாணித்தல் -காலம் தாழ்த்தல் —
காதல் நோயைத் தீர்க்கப் பரிஹாரம் செய்தல்
தாழாதே எனக்கு வேண்டும் பரிஹாரம் பண்ணி –

பண்டு பண்டாக்க யுறுதிராகில்-
பண்டு -சம்சஸ்லேஷ நிலை
பண்டு பண்டு -முந்திய நாயகனைப் பற்றி அறியாத நிலை
சம்ஸ்லேஷத்துக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாக்கப் பார்த்தி கோளாகில்-
கலக்கப் புக்கவன்று தொடங்கி-மெலிவுக்கு இறே கிருஷி பண்ணிற்று –

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
மாணியுருவாய் –
உண்டு என்று இட்ட போதொடு -இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதொடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையவனாய்

யுலகளந்த மாயனைக் காணில் –
த்ரை லோகத்தையும் அளந்து கொண்ட ஆச்சர்ய பூதனைக் காணில் –
குண ஜ்ஞானத்தால் ஜீவித்து இருக்கும் அவஸ்தை இல்லை என்கிறது
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருக்கும் -8-3- நிலை தாண்டிற்றே

தலை மறியும்-
தொடருகிற பாம்பை திரிய விடுவிக்குமா போலே –
பிரிவாற்றாமையால் வந்த நோய் தீரும்

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் –
உங்கள் ஆணையே -உங்கள் மேல் ஆணை என்றபடி
நீர் என்னை நோக்க வேண்டில் -என்னுதல்
நான் தெரிந்து இருந்து உங்களுடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் பண்ணும் படியாக
என்னை நோக்கப் பார்க்கில் -என்னுதல்

ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்-
அவன் தீம்புக்கு பெற்ற தாய் -பெரு நிலை -துணை -நிற்கும் ஊரிலே-
என்னைக் கொண்டு பொய் போகடப் பாருங்கோள்-
அங்கனம் தீமை செய்வார்களோ நம்பீ-ஆயர் மட மக்களை –பெரிய திருமொழி -10-7-11-என்று இறே அவள் சொல்லுவது

———–

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்-
இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன -தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்

பரம பிராப்யமாய் –
நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை –
உடையவன் திருவடிகளிலே
உனக்கே நாம் ஆட் செய்வோம் என்று

பிரியாது என்றும் இருப்பரே––
சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே
என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்

தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————–

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—ஸ்ரீ பெருமாள் திருமொழி- 5-4-

வாளால் அறுத்து சுடினும் –
ஹிம்சகர் சாதனத்தைக் கொண்டு அறுப்பது -சுடுவதானாலும்

மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் –
அஹிதங்களை மேல் மேல் என பிரவர்த்திப்பிக்க செய்தேயும்
பிஷக்கு –அவன் நமக்கு ஹித காமன் -என்று அவனுக்கு
தனது சர்வஸ்தையும் கொடுத்து
அவன் பக்கலிலே ஸ்நேஹத்தைப் பண்ணும் வ்யாதியாளரைப் போலே

மாயத்தால் மீளா துயர் தரினும் –
மம மாயா -என்னும்படி உன்னுடையதான பிரகிருதி சம்பந்தத்தாலே
அபுநராவர்த்தி லஷணமே துக்கத்தை விளைக்கிலும்

வித்துவ கோட்டு அம்மா ! நீ-மீளா துயர் தரினும் –
எனக்கு த்யாஜ்யமான சம்சாரத்திலே என்னுடைய ரஷணத்துக்காக குடி ஏறி இருக்கிற நீ
நித்ய துக்கத்தை விளைக்கிலும் –
பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே—
ஆளா -ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக

வுன தருளே பார்ப்பன் –
இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –
இப்படி இருக்கைக்கு நிபந்தனம் என் என்னில்

அடியேனே—
அடியேன் ஆகையாலே –
என் ஸ்வரூபத்தையும் உன் ஸ்வரூபத்தையும் நேராக அறிந்தவன் ஆகையாலே –
அன்று கண்டாப் போலே கையும் வில்லுமாக நிற்பன் –
அவனுக்கு-ராவணனுக்கு- அச்சத்தாலே தனக்கு உருவு வெளிப்பாட்டாலே முன்னே நிற்பர்

தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் க்ருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாகக் கொண்டு
புருஷர் ஷப–நீ அநு கூலனாய் ஓரடி வர நின்றால்-அத்தையே நினைத்து
நீ பண்ணின அபகாரம் எல்லாம் புத்தி பண்ணுவாரோ
அவர் ஸ்ரீ புருஷோத்தமன் காண் –முன்பூழி காணான்-குற்றத்தை மறக்கும் –
அன்றியே –
குற்றம் செய்த நாளை நினைக்கில் குற்றம் என்று ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு அருளிச் செய்த படியே
இனி நீர் அல்லது புகல் இல்லை என்கிறார் —

————-

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ –8-6–

அற்றவர்கட்க்கு அரு மருந்தே! –
கர்ப்ப பூதாஸ்த போதநா –என்று இருக்குமவர்களுக்கு -அரு மருந்தே —
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-என்று இருக்கும் மருந்து ஆனவனே

—————-

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே -ஸ்ரீ பெரிய திருமொழி—5-7-2-

பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும்
இப்படிப் பட்ட சம்சார சம்பந்தத்தை போக்கக் கடவதான பேஷஜமும்
( நிர்வாணம் பேஷஜம் பிஷக் அவனே )
இஸ் சம்சார பந்தம் அற்றால் இருக்கக் கடவ நிஷ்கல ஸ்வபாவமும்

———–

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

———–

வைப்பாம் மருந்தாம் அடியரை வல் வினைத்
துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பா லவன் எங்கள் ஆயர் கொழுந்தே–1-7-2-

வைப்பாம் –
ஆடு அறுத்துப் பலியிட்டு-‘-அரைப்பை யாக்கி -பணப்பை யாக்கி,- இஷ்ட விநியோக அர்ஹமாம்படி –
தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் -சேமித்து வைக்கும் சேமநிதி போன்று,
ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.

மருந்தாம் –
‘ஆயினும்,-ஷூத்ர – சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ் வுயிர்கட்கு அன்றோ
சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்?
இவன் அவ் விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில்,
அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான
சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார்.
இதனால், பிராபகத்வம் கூறிய படி.

ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ் விரண்டாலும்
பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச் செய்தார் ஆவர்.

————–

அணங்குக்கு அரு மருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே–4-6-7-

அணங்குக்கு அரு மருந்து என்று –
அப்ராக்ருத ஸ்வபாவையான -தெய்வத் தன்மையை யுடைய இவளுக்குத் தகுதியான பெறுதற்கு அரிய மருந்து என்று.
இவள் வைலக்ஷண்யமும் -வேறுபட்ட சிறப்பினையும் அறிந்திலீர்கோள்’ என்பாள், ‘அணங்குக்கு’ என்கிறாள்.

—————-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே–5-2-7-

மறுத்தும் அவனோடே கண்டீர்-
நீங்கள் ‘அவனிலும் இவர்கள் ஆஸ்ரயணீயர்- அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற,
இவர்கள் உங்களை அவன் பக்கலிலே கொண்டு போய் அன்றோ காப்பாற்றுவது.
“நஹிபாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம் பவதி அந்யஸ்ய கஸ்யசித்”-ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 19.
காப்பாற்றுவதில் நிலை நிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும்
ஈஸ்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே,
என்றும் ரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலே யாம்.
வேறு சிலரை ஆச்ரயிக்க -ஆராதிக்க அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான்

————-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

செடியார் வினைகள் தீர் மருந்தே-
செடி -பாபம் –
பாபத்தோடே பொருந்தின அஸத் கர்மங்களால் -தீய வினைகளா லுண்டான
துக்கத்தைப் போக்குகைக்கு மருந்தானவனே!
அது புஜிப்பிக்கைக்கு -உண்பிக்கைக்கு விரோதிகளைப் போக்கும்படி.
அன்றிக்கே, தூறு மண்டின பாவங்களைப் போக்குகைக்கு மருந்தானவனே என்னுதல்.
அந்த அமுதம் தானே காணும் மருந்தாகிறது.
மருந்தும் பொருளும் அமுதமும் தானே”–மூன்றாந்திருவந். 4. – என்றும்,
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு”-திருவாய். 9. 3 : 4 – என்றும் கூறுகிறபடியே
அவன் தன்னை ஒழிய வேறு மருந்தும் இல்லையே.
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன் அன்றோ.பெரியாழ்வார் திரு. 5. 3 : 6.–

திருவேங்கடத்து எம்பெருமானே –
அவ் வமுதம், உண்பார்க்கு மலை மேல் மருந்து அன்றோ.
அவ் வமுதம், உண்பார்க்குச் சாய் கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி.

இமையோர் அதிபதியாய், கொடியா அடு புள் உடையானாய், செடியார் வினைகள் தீர் மருந்தாய்,
திருவேங்கடத்து எம்பெருமானாய், கோலக் கனி வாய்ப் பெருமானாய்,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே? என்கிறார்.
பட்டர், “நித்யத்திலே, ‘அமுது செய்யப் பண்ணும் போது ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’
என்று இருக்கின்றதே, என்ன ஸ்தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது?” என்ன,
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சை மாமலை போல் மேனி’ என்பன போலே இருக்கும்
திருப் பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்று அருளிச் செய்தார்.

————-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின் னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலி னீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!–7-1-4-

வினையேன் வினை தீர் மருந்தே –
பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே!
என்னுடைய சப்தாதி விஷய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் -ப்ராவண்யத்தை -ஈடுபாட்டினைப் போக்கி
என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?

————-

தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங் குடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்!அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

தீர் மருந்து இன்றி-
வேறு ஒரு பிரதி கிரியை -பரிகாரம் – உண்டாகிலும் ஆற்றலாம் அன்றோ?
சர்வ சக்தியாலும் போக்கப் போகாதன்றோ?

ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு-
ஐம்புலன்களாகிற நோயாலே இவ்வாத்மாவை முடிக்கும் சரீரமாகிற செக்கிலே இட்டு.

திரிக்கும் ஐவரை-
பாதிக்கிற ஸ்தோத்ராதிகளை -வருத்துகின்ற ஐம் பொறிகளை. என்றது,
சரீரத்திலே புகுவித்து ஓசை முதலிய புலன்களைக் காட்டி நெருக்குகிற செவி முதலிய பொறிகளை’ என்றபடி.

நேர் மருங்கு உடைத்தா அடைத்து-
எதிரும் பக்கங்களுமாக அடைத்து. என்றது,
அபிமந்யு என்ற ஓர் இளைஞனை நலிகைக்கு அதி ரதர் மஹா ரதர் என்னுமவர்கள் அடங்கலும்
சூழப் போந்து அடைத்தால் போலே, இந்திரியங்களுக்குக் கை யடைப் பாக்கி’ என்றபடி.

நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்-
இதுவோ தான் எனக்கு நிலை நிற்கப் புகுகிறது?
இங்ஙனே தான் செல்லுகிறதோ?’ என்று இருக்க ஒண்ணாதபடி உன் பக்கல் செய்த
நம்பிக்கையையும்-விஸ்வாசத்தையும் – குலையா நின்றாய்.
ஆனால், நம் படி இதுவாகில், உமக்கு ஒரு பரிகாரம் தேடிக் கொண்டாலோ?’ என்றான்;

ஆர் மருந்து இனி ஆகுவார்-
என் இடையாட்டம் பிறரைக் கொண்டு காரியம் இல்லை:
நான் நோவு படா நின்றேன். நீ கை வாங்கினாய்.
ஆன பின்பு எனக்கு ஒரு ரஷகர் உளரோ? நானும் பிறரும் இல்லாத அன்று நீ உண்டு:
நீ விட்ட அன்று யார் உண்டு? ஆனால் நீரோ?’ என்றான்;
நானும் கையும் திருவாழியுமாய் இருந்தேனாகில் நான் என்னை நோக்கிக் கொள்ளேனோ?
மருந்தாம் போதும் ஒரு சேதநன் வேணுமன்றோ?
மருந்தும் பொருளும் அமுதமும் அவனே அன்றோ இவர்க்கு?-மூன்றாந் திருவந்தாதி, 4.

——————-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று –
நங்கள் போக மகிழ்ச்சிக்கு-மருந்தே -என்று –
உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்தை-வர்த்திப்பவனே –
மேலும் மேலும் வளர்க்கின்றவனே என்று –

இப்படிச் சொல்லுகிறவர்கள் தாம் யார் என்னில் –
பெரும் தேவர் –அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான –சம்சாரத்தின் சம்பந்தம் சிறிதும் இல்லாதாரான
நித்ய ஸூரிகள் –

குழாங்கள்-
அவர்கள்-கிண்ணகத்தில் இழிவாரைப் போலே-திரள் திரளாக ஆயிற்று இழிவது –

பிதற்றும் –
ஜன்னி ஜுரம் பிடித்தவர்களைப் போன்று-பலவாறாக கூப்பிடா நிற்ப்பார்கள் –

பிரான் –
அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் உபகாரகன் –

—————

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——மூன்றாம் திருவந்தாதி–3-

தீர்க்கும் மருந்து –
அனுபவித்தால் அல்லது விடாத நரகத்தைக் கடக்கைக்கு பேஷஜம் ஆனவன்
மருத்துவன் என்று அவன் ஸ்வ பாவம் சொல்லுகிறது
கருத்து இருக்கும் என்னுமா போலே
மனஸ்ஸூக்குப் புகுருகைக்கு அடி இவ்வாத்மா தானே இறே
ஆத்மைவ ரிபுராத் மன –

வரு நரகம் தீர்க்கும் மருந்தாய்க் கொண்டு மனத்துள்ளான் –
சம்சார சம்பந்தத்தை அறுப்பானாய்க் கொண்டு மனசிலே புகுந்தான் –

அனுபவித்து அல்லது விடாத நரகத்தைக் கடைக்கைக்கு பேஷஜம் ஆனவன் –
மனத்துள்ளான்-என்னுடைய மனசிலே உள்ளான் –

தண் துழாய் மார்வனாய் மலராள் தனத்துள்ளானாய் மா கடல் நீருள்ளானாய்
சினத்துச் செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணனாய் மனத்துள்ளானவன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –

ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அத்தாலே தேங்கின கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்-
அந்த மா கடலிலே பள்ளி கோளைப் பழக விட்டு என் மனக் கடலிலே வந்து நித்ய வாசம் பண்ணி வாழுமவனானவன் –
தப்பாமல் வரக் கடவதான சம்சாரம் ஆகிற நரகத்தை சவாசனமாகப் போக்கும் ஒவ்ஷதம்

———–

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே –
மருந்து என்று
விரோதி நிரசன மாதரத்தைக் கொண்டு
பொருள் என்று
உபாயம் ஆக்கி
அமுதமும் தானே -என்று
உபேயத்தைச் சொல்லுகிறது –

விரோதியைப் போக்குவானும்
அபிமதத்தைத் தருவானும்
அபிமதம் தானும்
அவனே -என்றபடி

அநிஷ்ட நிவாரண பூர்வகமான
இஷ்ட பிராப்தி பண்ணித் தருவானும் அவனே -என்றபடி

அன்றிக்கே
மருந்து என்று உபாயமாக்கி
பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின
ஜஞ்யாக்யம் பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து

அர்தியாய் வருகையாலே பொருளானான்

திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்

திரு வுலகு அளந்து அருளின எம்பெருமான் திருவடிகளே
சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –

திருந்திய செங்கண் மால் –
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம்படி
திருந்திச் சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்

அன்றிக்கே
திருந்திய –
ப்ராப்ய பிராபகங்கள் ஆகை-
ஸ்வரூப பிரயுக்தமாகை -என்றுமாம்

அன்றிக்கே
இவ்வாத்மா திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே
இவற்றுக்கு ஈடாக தன்னைத் திருத்திக் கொண்டு இருக்கும் -என்றுமாம்

இவை திருந்தாதே இருக்குமா போலே
அவன் என்றும் திருத்தி இருக்கும் -என்றுமாம் –

செங்கண்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்

மால் –
வ்யாமுக்தன் -என்றுமாம் –
ஆங்கே பொருந்தியும் நின்று –
ஸ்ரீ யபதி வந்து நீர் ஏற்கிறான் என்று
கூச வேண்டாதபடி இரப்பிலே பொருந்தி நின்று –

பொருந்தியும்
ரஷணத்திலே பொருந்தப்பட்டு –

நின்று –
அதிலே திரு உள்ளம் மண்டி நின்று

உலகம் உண்டு உமிழ்ந்தும்
லோகத்தை வயிற்றிலே வைத்து காத்தும்
வெளி நாடு காண உமிழ்ந்தும்
நீரேற்றும்
தன்னது அல்லாதது கொள்வாரைப் போலே

நீர் ஏற்றும்
அலாப்ய லாபம் போலே

மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
நீர் ஏற்ற லோகத்தை மூவடியாலே அளந்தவனுடைய திருவடிகள் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
உண்டு -மருந்தான படி
உமிழ்ந்து -பொருளான படி
செங்கண் மால் -அமுதமான படி
என்றுமாம் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –
மருந்து என்று உபாயம் ஆக்கி பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

————

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–62-

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

———–

மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்துப் ————90
பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறையாகி———–91
முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே —-ஸ்ரீ பெரிய திருமடல்

மன்னு மருந்து அறிவீர் இல்லையே –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று
கடலைச் சரணம் புக என்றால் போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே
இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –

முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்-
இவை யுன்டாகை தவிராவாகில் முதுகிலே யானால் ஆகாதோ
முன்னே இருந்து காணக் காணச் செவ்வி யழிய வேணுமோ
வயோ அச்யா ஹயாதி வர்த்ததே -யுத்த -5-5–என்னுமா போலே –

மன்னு மருந்து –
தப்பாத மருந்து –

அறிவீர் இல்லையே –
அறிவார் இல்லையோ-இது பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –
ஜகத்திலே ஓர்-ஆந்தராளிகனைக்-கடகரைக் – கிடையாதோ -என்று
இவ்வருக்கு உண்டான பேறுகள் அல்பமாய் அஸ்த்ரமாய் இருக்கையாலே
பரிஹாரங்களும் அவ்வளவேயாய் இருக்கும் இறே
இது அங்கன் இன்றிக்கே யாவதாத்மபாவியான பேறாகையாலே பரிகாரமும் நிலை நின்ற பரிஹாரமாய் இருக்கும் இ றே –

மருந்து அறிவீர் இல்லையே என்ற வாயோடு -உண்டு உண்டு -என்றால் போலே இருக்க
சேய்க்களின் கழுத்திலே மணி யோசையானது செவிப்பட்டது –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் -வளை விசேஷங்கள் —

July 9, 2021

கலை வளை
அஹம் மம கிருதிகள் —ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை -147-

( கலை அஹம் கிருதி -வளை மம கிருதி
மேகலை மேம் பொருள் -சரீரம் பற்றிய -அஹங்காரம் –
கை வளை-என்னுடைய மமகாராம் )

அதாவது –
கைவளையும் மேகலையும் காணேன் -திரு நெடும் தாண்டகம் -22-என்றும்
கலையாளா அகல் அல்குல் கன வளையும் கையாளா –பெரிய திருமொழி -5-5-2–இத்யாதிகளில் சொல்லுகிற
கலையும் வளையுமான – பகவத் அனுபவ விரோதி ஆகிற அஹங்காரமும் -மம கிருதியும் என்கை-
அஹங்காரம் மமகாரங்கள் இரண்டும் பகவத் அனுபவ விரோதி ஆகையால் இறே
மத்யம பதத்தாலே இவை இரண்டையும் கழித்து கொண்டு
த்ருதீய பதத்தாலே பகவத் அனுபவம் சொல்லிற்று —

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு ,கை தொழக் கூடும் கொலோ –திருவாய் -5-9-9-–என்றும் ,
ஈண்டிய சங்கும் நிறையும் கொள்வான்-திருவாய் -8-2-2-என்றும் ,
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையும் –திருவாய் -9-7-6–என்கிற இடங்களிலே
த்யாஜ்யமான அஹம் மம காரங்கள் அன்றிகே ,
சேஷோஹம்-
என்னுடைய திருவரங்கர் -என்றார் போலே இருந்துள்ள
அஹம் மம தைகளைச் சொல்லிற்றாகக் கொள்ளலாம் ஆகையாலே
அங்குத்தைக்கும் இதுவே ஸ்வாபதேசமாக கொள்ளக் குறை இல்லை —

( அஹங்காரம்-ஆத்ம விஷயம் -தேகாத்ம அபிமானம் –கைவல்யம் வைராக்கியம் என்றுமாம் –
மமகாராம் -தேக விஷயம்-ஸ்வ ஸ்வா தந்தர்ய அபிமானம் – -ஐஸ்வர்யாதிகள் வைராக்கியம் -என்றுமாம்
சித் ஈஸ்வரன் வ்யாவ்ருத்தி -சேஷத்வம்
அசித் சித் வ்யாவ்ருத்தி -ஞாத்ருத்வம் )

————

சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே -2 9-10 – –

இல்லம் புகுந்து என் மகளைக் கூவி
என் அகத்திலே புகுந்து
என் மகள் பேரைச் சொல்லி அழைத்து
கையில் வளையை கழற்றிக் கொண்டு
அவள் கையில் அடையாள வளையலைக் கழற்றிக் கொண்டு போய்
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
கொல்லையில் நின்றும் கொண்டு வந்து
அங்கே நாவல் பழம் விற்றுத் திரிவாள் ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து –

நல்லன நாவற் பழங்கள் கொண்டு
செவ்வி குன்றாத பழங்களைத் தெரிந்து கொண்டு -போரும் போராது -என்று சொல்லுகிற அளவிலே

நான் கண்டு -இவ்வளை உனக்கு வந்தபடி என் -என்று அவளைக் கேட்க

அவள் -இவன் தந்தான் -என்ன

நீயோ இவளுக்கு வளை கழற்றிக் கொடு வந்து கொடுத்தாய்-என்ன –

நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன்
என் கையில் வளை கண்டாயோ
நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறது கேட்டாயோ
கையில் வளை கழற்றுவது கண்டாயாகில் உன் வளையை அங்கேயே பறித்துக் கொள்ளாமல் விட்டது என் –
என்றால் போலே சில மித்யைகளைச் சொல்லி
மந்த ஸ்மிதம் செய்கிறதைக் கண்டு
இவனைப் பிடித்தவள் வளையை மறந்து இவனை விட்டு
உன்னைத் தீம்பு அற நியமிக்கும் படி அவளைச் சொல்லுகிறேன் -என்று போந்து
அவனுடைய சூழல்களை இவளுக்குச் சொல்லி முறைப்படுகிறார்கள் –

————

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் -2 10-1 – –

சேற்றால் எறிந்து வளை துகில் கைக் கொண்டு
நாங்கள் எங்களுடைய லீலா உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு –விமுகைகள் ஆன அளவிலே
எங்களைச் சேற்றில் இருந்து எங்கள் வளைகளையும் துகில்களையும் கைக் கொண்டு

காற்றில் கடியனாய் ஓடி
ஓடுகிற காற்றைப் பிடிக்கிலும் அகம் புக்கு-இவனைப் பிடிக்க ஒண்ணாதபடி தன்னகத்திலே சென்று புக்கு

மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
நாங்கள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைத்தாலும் ஏன் என்கிறான் இல்லை –
ஏன் என்றாகில் இன்று முடியார்கள் இறே
ஏன்-என்னும் போது-அவன் குரலிலே தெளிவும் கலக்கமும் கண்டு தரிப்பர்கள் இறே –

வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்
ஏன் என்கை அரிதாய்-உறவு அற்றாலும்
எங்கள் கையில் வளை -கலை -முதலாகத் தர வேணும் – என்று நாங்கள் பல காலும் சொன்னால்
அதுக்கு ஒரு உத்தரம் சொல்ல வேண்டாவோ தான் –

வளைத் திறம் பேசானால்-என்கையாலே
வளை பெறுவதிலும் பேச்சுப் பெறுவதில் காணும் இவர்களுக்கு அபேக்ஷிதம்
பிரணயினிகள் -வளை -கலைகள் -என்றால் போலே காணும் தம் தாம் அபிமதங்களைச் சொல்வது –

இத்தால்-
அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய ஸாதந பரராய் இருப்பாரையும் விஷயீ கரிக்கும் என்னும் அர்த்தம் தோற்றுகிறது
ஆற்றில் இருந்து விளையாடுபவர்கள் -ஓம் நம–அநந்ய ப்ரயோஜனராய் -நம நம -அர்த்தம் புரிந்தவர்கள்–அநந்ய ஸாதந பரராய்-

ஸாதனம் ஆகையாவது -அவனுடைய வ்யாமோஹ ஹேது -என்று இறே அறிவுடையார் நினைத்து இருப்பது –
(வளை -துகிலை கழற்றி ஒன்றும் இல்லை நம்மிடம் என்று அறிந்தவர்கள் )

சேற்றால் எறிந்து -என்கையாலே அவன் நீர்மையாலே தாங்கள் ஈடுபட்டார்கள் என்னும் இடம் தோற்றுகிறது –
(இறங்கி -தாழ விட்டு வந்தமை அறிந்தவர்கள் )

எறிந்து -என்கையாலே அவன் ஈடுபாட்டிலன் என்னும் இடம் தோற்றுகிறது –
(தூவி என்று இருந்தால் ஈடுபட்டமை தோற்றும்
வீட்டில் இருந்து விளையாடி இருக்க வேண்டுமே -ஆற்றில் வந்ததால் கோபம் )
அடையாளம் குறித்துப் போனானாய் இறே அவன் இருப்பது –

வளை -துகிலைக் கொண்டு -என்கையாலே
சேஷத்வத்தையும் பாரதந்தர்யத்தையும் பறித்துக் கொண்டான் என்கிறது
(அவனுக்கு பிடிக்காத சேஷத்வம் பாரதந்தர்யம்-தன்னை நோக்காமல் ஈஸ்வரனைப் பார்த்து இருக்க வேண்டும்
ஆட் செய்
எனக்கு ஆட் செய்
எனக்கே ஆட் செய்
எக் காலத்திலும்
இடைவீடு இன்று
என் மனத்தே மன்னி
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -பார்த்தால் அழகிலே ஈடுபடுவோம் ஆகவே படர்க்கை -)

சேஷத்வத்தை பறிக்கை ஆவது -தன் வயிறு நிறைத்துப் போகை இறே
பாரதந்தர்யத்தைப் பறிக்கை யாவது -இவர்களை அலைவலை -ஆக்குகை இறே

காற்றில் கடியனாய் ஓடி என்கையாலே (ரூப ரஹித ஸ்பர்ஸவான் காற்று )
ஸ்பர்ச இந்திரிய க்ராஹ்ய துர்லபன் -என்கிறது

அகம் புக்கு என்கையாலே
ஸ்வ போக்த்ருத்வ நிபந்தமான ஸ்வ தந்தர்ய ஸ்தானத்திலே புக்கான் என்னும் இடம் தோற்றுகிறது
(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே )

மாற்றமும் தாரானால் என்கையாலே
அவாக்ய அநாதர அம்ருத போகி -என்னும் இடம் தோற்றுகிறது

(கிருஷ்ணா கிருஷ்ணா என்று கூப்பிட்டாலும் ஏன் என்கிறான் இல்லை
ஏன் என்னும் பொழுது அவன் தெளிவும் கம்பீரமும் தெரியுமே -இதனால் முடிய மாட்டார்களே )

வளைத் திறம் பேசானால் -என்கையால்
விஷய அநுரூப ப்ராப்ய ப்ரகாசன் என்னும் இடம் தோற்றுகிறது

(அனுக்ரஹ விஷயமாக இருப்பவர்கள் -உங்களுக்கு வளையல் வேண்டாம் -தானே ப்ராப்யம் அறிவிக்கிறான்
துரியோதனன் கேட்ட ஒரு கோடி சைன்யம் கொடுத்து -அவனுக்குத் தக்கபடி செய்பவன் )

இன்று முற்றம் -என்ற இத்தால்
சரம அதிகாரம் நாசத்தை நிரூபித்தால் -உஜ்ஜீவனத்தில் நிரூபித்தால் ஒழிய
நடுவு நிலை இல்லை என்று நம்பி அருளிச் செய்த வார்த்தையும் தோற்றுகிறது –
(binary போல் பூஜ்யமும் ஒன்றுமே இங்கும் )
அதாவது
பர்வ க்ரமமாக நசிக்கிறான் என்னுதல் உஜ்ஜீவிக்கிறான் என்னுதல் செய்யாது என்றபடி –

——–

இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று  கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-

எதிர் நின்று அங்கு இன வளை இழவேல் என்ன –
அவன் வரவுக்கு எதிராக -அந்த ஸ்தலத்திலே நின்று –
உன்னுடைய இள வளைகளை இழவாதே கொல் என்று நான் சொல்ல –
எதிர் நிற்கை -என்றும் வளை இழக்கை -என்றும் இரண்டு இல்லை போலே காணும் –

இன வளை -என்கையாலே –
எதிர் நின்றவர்கள் கையில் ஒரு வளையும் தொங்காது என்னும் இடம் தோற்றுகிறது –

வளை இழக்கை யாவது   -ஸ்த்ரீத்வம் அழிகை இறே

சந்தியில் நின்று கண்டீர் –
என் சொல் கேளாமல் ஊர் பொதுவான அவன் வருகிற வழியான சந்தியிலே நின்று கண்டீர்

நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே –
முன்பு ஸ்த்ரீத்வத்தால் பரி பூரணையாய் இருந்த இவளுடைய பரிவட்டத்தோடே கூடச்
சரி வளையும் கழலா நின்றது

கோல் வளை -கழல் வளை -வரி வளை -என்னுமா போலே
சரி வளை என்றும் ஒரு வளை விசேஷம்

கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினர் (நாச்சியார்-11-2 )-என்கிறபடியே முன்பே
சரி வளை -என்ற பேராய் இருந்த இத்தை -நாமம் மாத்ரம் அன்றிக்கே –
கையில் தொங்காமல் சரிந்து கழன்று போம்படி
பண்ணினான் ஆய்த்து -அவன் தன்னுடைய காட்சியாலே –

———

அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-

அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை –
ஏவம் பிரகாரங்களான அலங்காரங்களோடு வரும் இடைப் பிள்ளை உடைய –

பிள்ளை -என்கையாலே –
யுவாகுமாரா -என்கிற பருவத்தை சொல்கிறது

அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
மேலீடான ஸுந்தர்ய பூர்த்தியைக் கண்டு மிகவும் விரும்பி

விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்
விலங்கி நில்லா விட்டால் மத்த கஜத்தின் முன்னே நிற்பாரைப் போலே பிராப்தி அளவும் செல்ல ஒட்டாத அளவே அன்றிக்கே
ரக்ஷகத்வாதி குணங்கள் அளவும் செல்ல ஒட்டாத சவுந்தர்யத்தின் முன்னே விரும்பி நின்று ஆசைப்படுவாரும் உண்டோ –

வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே
என்னுடைய நியந்த்ருத்வத்தையும் மறுத்தால் தான் தன்னுடைய
ஸ்த்ரீத்வ அபிமானம் தான் நோக்கலாய் இருக்கிறதோ
மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய் சுத்தமுமான வளைகள் கழன்றோ தான் உடம்பு மெலிவது –
வளை கழலத் தக்கது அமையாதோ மெலிய
மெலிகின்றதே என்ற வர்த்த மானத்தாலே –
இனி வளைக்கு ஆஸ்ரயம் இல்லையோ என்று தோற்றா நின்றதே என்னுதல் –

வளை –தோள் வளை யாகையாலே
பலகாலும் கழலுவது அணிவதாய்ப் போருகையாலே அதுவோ என்று இருந்தாள்
எடுத்து அணியத் தொங்காமையாலே -மெலிவு கண்டாளாய்
கண்ட பிரகாரத்தைச் சொன்னாள் ஆதல் –

———–

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கோவைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுருகின்றாளே – 3-7-8- –

தன் கையில் வளை குலுக்கும்-
தானே கழலுகிற வளைகளும் குலுக்கினால் மிகவும் விழ விறே ப்ராப்தம் –
விழுந்தவை விழுந்தே போயிற்றன
விழாதவை கழலா நிற்கச் செய்தே மநோ ரத சமயத்திலே பூரித்தன இறே
அவன் குணங்களை நினைத்து இருந்த கனத்தாலே குலுக்கக் குலுக்கப் பூரித்தன என்னுமது ஒழிய
சிதிலமாய் விழுந்தன என்கை மார்த்தவதுக்குப் போராதே –

ஆச்சார்ய வசன அபிமானத்தாலே இதர அபிமானம் குலைந்து ப்ராப்த அபிமானத்துடைய மிகுதி
இவள் தன்னாலும் ஆச்சார்யன் தன்னாலும் குலைக்க ஒண்ணாது என்னும் இடம் தோற்றுகிறது –
கையில் வளை குலுக்கும் -என்கையாலே –

———-

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர் –4-6-3-

பிள்ளைக்கு உச்சியில் தடவத் தக்க எண்ணையையும்
நெற்றியிலே அலங்காரமாக தொங்கும்படி கட்டத் தக்க சுட்டியையும் –
கைக்கு அலங்காரமாக இடத் தக்க வளையையும்-
இத்தால்
பிள்ளை தலை காயாமல் தடவ -தப்புகைக்கு -எண்ணி பெறலாம்
பிள்ளை பணிகள் ஆனவை பெற்று பூட்டலாம் -என்று ஆய்த்து -பிறர் பேர் இடுகையில் இழிகிறது

———

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–18–

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும் செந்தாமரைக் கையால் – அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –

சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலாய் இருக்கை –
சங்கு தங்கு முன்கை நங்கை -இறே – நாங்களும் அத் த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இறே இருப்பது –
சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இறே இவர்களுக்கு உள்ளது –
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ-
யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
செந்தாமரைக் கை–
மாஸூச கை பார்த்து இருப்பாரோ நாங்கள்–சரணம் பற்றாத உங்களுக்கும் நான் இருப்பேன் ராஷசி –
லகு தரா ராமஸ்ய கோஷ்டி கிருதா -பட்டர்–நீங்கள் செய்த பாபத்துக்கு அஞ்ச வேண்டாம்
அவன் ஸ்வா தந்த்ர்யம் அஞ்ச வேண்டாம் வைத்த அஞ்சல் கை செந்தாமரைக் கை
அவனும் ஆசைப் படும் கை -கை மேல் என் கை வைத்து–
பெண் கை மேலே —அணி மிகு தாமரைக் கை மேலே செந்தாமாரைக் கை
பந்து பிடித்து சிவந்த கை
மேகம் முழங்கி சீரார் வளை ஒலிப்ப–பசியர் சோற்றை வர்ணிப்பது போலே–கையிலோ நின்றும் கழலாத சீர்மை
வளை ஒலி கண்ணன் எழ வேண்டும்–நாங்களும் ஒலி கேட்டு வாழ–
கிடந்த இடத்தே இருந்து–நாலடி நடந்து வந்து -அவனும் நாங்களும் நடை அழகு காண
மகிழ்ந்து திறவாய்-தலை விதி என்று வராமல்–ஆர்த்தி சாஸ்திரம் அர்த்தம் பரிதாபம்
உகந்து வந்து–மகிழ்ந்து மார்கழி நீராட–எதோ உபாசனம் ததோ பலம்–நாங்கள் நோற்ற நோன்பு நீ மகிழ தான்
உன்னுடைய மகிழ்ச்சி தான் எங்கள் மகிழ்ச்சி–இதுவே பலம்–
தர்மத்துக்கு திறவாமல்–மகிழ்ந்து–பேறு உன்னதாக வேண்டும்
அவன் உடையார் பக்கல் அவனை விட–முக விகாசத்தில் தோற்றும்படி–
கண்ணுக்கு இறை வந்து
வளை
செவி பட்டினி தீர–
பேர் பாட நாக்கு பட்டினி–
செந்தாமாரைக் கை ஸ்பர்சம்–கந்தம் நுகரும்–சர்வ இந்த்ரியங்கள் விடாய் தீர்க்க
மனஸ் மகிழ்வு உன்னதாக இருக்க

சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே–தாமரை போன்ற திருக் கையாலே –
இவ்விடத்தில் -கையாவது -ஜ்ஞானம்
ஜ்ஞானக் கை என்றார் – ஆழ்வார் –
ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன இதர விஷய நிவ்ருத்தி –
சௌந்தர்யம்-ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி –
சௌகுமார்யம் -நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-
சௌகந்த்யம் -இப்படி இருந்துள்ள ஞானத்தாலே –
சீரார் வளை ஒலிப்ப—
நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்-பகவத் சம்பந்த சூசகங்களான-
ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

———-
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்–24-

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்–
பரம பிரணயி ஆகையாலே தன் தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
சூடகமே –
அணி மிகு தாமரைக் கை இவர்கள் ஆசை படுவது போலே-
அடியார் கையை தான் அணிய ஆசை படுகைக்கு இட கடவ ஆபரணம்
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம் –
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே-அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோடே –
பொற்றோடு பெய்து -என்று-பண்டே தோடு இட்டாலும்-அவன் இட்டாப் போலே இராது இறே –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே-
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
அனைய -பல
கிரீட -ஹார –கௌச்துப நூபுராதி அபரிமத திவ்ய பூஷணம்-
பல பலவே ஆபரணம்-ஆபரணங்கள் அழகு கொடுக்கும் அவயவங்கள் இவர்களுக்கு

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்–பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

———-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–நாச்சியார் திரு மொழி-–2-3-

நாங்கள் பட்ட பிரயாசத்தைப் பாராய் -வண்டல் உள்ள இடம் தேடி –அதிலே நுண்ணிய மணல் தேடி —
அது தன்னை தெள்ளி -துர்ப்பலைகளாய் இருக்கிற நாங்கள்-
வளை கொண்டு பாடாற்றுகையே தொடங்கி அரிதாய் இருக்கிற கைகளைக் கொண்டு கிலேசப் பட்டோம் –
அவன் ஸ்பர்சித்த வளையாதலால் சிரமப் பட்டோம் –

————

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே–5-1-

எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –மணி முடி மைந்தன் அன்றோ –
முறை செய்யா விடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத்தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ
மன்னு –
தர்மி உண்டாய் -குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –
பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் -அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –
புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ -ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ
உயர்வற உயர் நலம் உடையவன்–நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ச்லாக்யதை மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –
மாதவன் –
இப்போது இக்குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து ந கச்சின் ந அபராத்யதி –யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ
ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ
இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -ஜிதந்தே -1-5-
மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –
மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –
தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம் சஞ்சாத்ய மாதவ -துரோண பர்வம் -29-18-
வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை
ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணச்யதி -நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-

———

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே-என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்-அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி-ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே

நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி

———

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

ஆஸ்ரித விரோதிகளை தானே கை தொடானாய் போக்கு மவன்
இரணியனை -யுடலிடந்தான்-
விரோதியைப் போக்கவும் தன்னை அழிய மாறவும் வேணும் என்று சொல்லுகிறேன் அல்லேன்
தன் உடைமை தான் பெறுவாள் என்று நினைக்க அமையும்

தான் கொண்ட சரி வளைகள்
கழலுகிற வளையல்கள்
சரி என்னும் ஆபரணமும் வளையல்கள் என்னும் ஆபரணமும் என்னுமாம்
அவன் வந்தாலும் தொங்காது போலே காணும்
தருமாகில் சாற்றுமினே–
தாராது ஒழிகையே-ஸ்வ பாவம் என்று இருக்கிறாள்
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாராது ஒழியிலும் ஒழிவர் இ றே-ஆனாலும் நமக்கு நசை அறாது இ றே

சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான்
தவிரிலும் தவிருகிறான்
நீங்கள் அறிவித்துப் போருங்கோள்-

————-

திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

பிரணயி இல்லாதான் ஒருவன் அல்லன்
ஒரு நத்தத்தில் பிறவாதான் ஒருவன் அல்லன்
ஒரூரிலே பிறந்து வளர்ந்தார் வந்தியிடார்கள் இறே -பிறர் துன்புரும்படி சண்டையிட மாட்டார்களே
திரு விளையாடு திண் தோள்
பெரிய பிராட்டியாருக்கு லீலார்த்தமாக சேண் குன்று சமைத்தால் போலே யாய்த்து திருத் தோள்கள் இருப்பது
திருமால் இரும் சோலை நம்பி-
ஆரியர்கள் இகழ்ந்த மிலேச்ச பூமியில் உள்ளாருக்கு ஸூலபனானவன்
இனக் குறவர் புதியது உண்ணும் எழில் மாலிரும் சோலை எந்தாய் -பெரியாழ்வார் -5-3-3-
அதுக்கு உள்ளே உண்டு இறே சீலமும்
நம்பி –
சொல்லிச் சொல்லாத குணங்களால் பூரணன் ஆயத்து –

வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –
தாம் இருந்த இடத்தில் நாங்கள் சென்றோம் ஆகில் எங்களை நலிய பிராப்தம்
நாங்கள் இருந்த இருப்பிலே தாமே வந்து எங்களுடைய உயிர் நிலை அறிந்து -வளையை அறிந்து
வந்தி பற்றும்
எங்கள் இசைவு இன்றிக்கே இருக்க -எங்கள் வளை கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
தாம் விரும்பின வளை என்று நாங்கள் இத்தைக் கொண்டு தரிப்போமானால் இத்தையும் கைக் கொள்ளுகைக்கு வழக்கு உண்டோ
வழக்கு உள்ள இடத்தில் அன்றோ கைக் கூலி கொள்ளுவது -கைக்கூலி -கையில் வளையை -கையில் உள்ள பொருளை –
ஆன பின்பு எனக்கு ஜீவிக்கைக்கு ஒரு விரகு சொல்லி கோளே
இல் புகுந்து –வரி வளை வந்தி பற்றும் -வழக்குளது -என்று அந்வயம்

———-

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-

இவ் வவசாதத்தில் வந்து நீர் உதவாது ஒழிந்தது என் -என்று கேட்டால்
இன்னத்தாலே என்று தமக்கு மறுமாற்றமாக சொல்லலாவது ஓன்று உண்டு என்று நினைத்து இருக்கிறாரோ கேளி கோள்-
என் உகப்பில் குறை உண்டாயோ -வளை இழந்து அவன் வளையை ஆசைப்படுகை -என் உகப்பு –
தம் உகப்பில் குறை உண்டாயோ -தம் உகப்பு -என் வளையைக் கைக் கொள்ளுகை
தம்முடைய ரஷணத்தில் குறை உண்டாயோ -கோயிலிலே சேருகையே ரஷணம்-
என்னுடைய ரஷ்ய ரஷண பாவத்தில் குறை உண்டாயோ -முகத்தை நோக்காரால்-என்று இருக்கை-
எத்தாலே நான் உதவிற்றிலன் -என்று சொல்ல இருக்கிறார்
தம் கையில் குறை இல்லை
என் கையில் குறை இல்லை
இனி என் சொல்லுவதாக இருக்கிறார் –
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாம் நினைத்தது செய்து தலைக் கட்டும் இத்தனை யன்றோ -என்று சொல்ல நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை அல்ல –
பரம பிரணயி அன்றோ-
பர தந்த்ரராய் இருப்பார் செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது நிர்பந்திக்கக் கடவர்களோ என்று நினைத்து
இருக்குமத்தும் வார்த்தை யல்ல
எனது ஆற்றாமையை அறிவாரே
நம் கையில் உள்ளது ஒன்றும் கொடோம் –பிறர் கையில் உள்ளது கொள்ளக் கடவோம் -என்று நினைத்து
இருக்குமதுவும் வார்த்தை யல்ல
வன்மையுடையார் செய்தபடி கண்டிருக்கும் அத்தனை அன்றோ மென்மையுடையார் என்று நினைத்து இருக்கக் கடவர் அல்லர்
உம்முடைய கையில் வளை நீர் கொடாது ஒழிகிறது என் என்று கேட்டால் -நான் உகந்து இருக்கையாலே -என்று சொல்ல
நினைத்து இருக்கிறாரோ -அது பின்னை பிறர்க்கு இல்லையோ
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகை போலே காணும் இவள் தானும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு கிடக்கிறது –
நாமும் கனாக் கண்டு -ஆசைப்பட்டு -கிடப்பது இத்தை அன்றோ என்று சொல்ல இறே அவரும் நினைத்து இருப்பது
அது தமக்காகக் கண்டதோ —ந தே ரூபம் நா யுதா நி —பக்தாநாம் -என்று அன்றோ இருப்பது
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ-யாமுகக்கும் என் கையில் சங்கமும் -என்று சேர்த்து
தாம் உகந்தது நம் கையில் கிடக்கும் அத்தனை
பிறர் உகந்ததும் நம் கையில் கிடக்கும் இத்தனை
நாம் உகந்ததும் கொடோம் -பிறர் உகந்ததும் கொடோம் -என்று நினைத்து இருக்குமது அழகோ
உகந்தார் உகந்தது பெறுதல் -உடையார் உடையது பெறுதல் செய்ய வேண்டாவோ
உகந்தார் உகந்தது பெறும் போது-தன் கையில் உள்ளவை என் கையில் வர வேணும்
உடையார் உடையது பெறில் என் கையிலவை என் கையில் கிடக்க வேணும்
இரண்டும் சம்ச்லேஷத்தை ஒழியக் கூடாது இ றே
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்று ஒரு சங்கு பெற ஆசைப் பட்ட என்னை
தான் கொண்ட சரி வளைகள்-8-5-என்று ஒரு ஜாதியாக இழக்கும் படி பண்ணுவதே
ஈஸ்வர ஜாதி -என்ற ஒரு ஜாதி உண்டாகில் இ றே தம் கையில் வளையோடு சஜாதீயம் உண்டு என்று சொல்லலாவது –
தம் கையில் வளை ஆபரணமாகத் தோற்றுகையாலே-அவன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஆபரணமாக தோற்றுகிறது
அத்தனை அல்லது ஆயுதமாகத் தோற்றுகிறது இல்லை காணும் இவளுக்கு
நாரீணாம் உத்தமையாய் வளை இட்டால் போலே அவன் புருஷோமத்வத்துக்கும் வளை இட்டான் என்று இருக்கிறாள் யாய்த்து –

ஏந்திழையீர்
ஏந்தப் பட்ட இழையை உடையீர் -தரிக்கப் பட்ட ஆபரணத்தை உடையீர்
பிரளயத்திலும் தப்பிக் கிடப்பாரைப் போலே நீங்கள் எங்கே தப்பிக் கிடத்தி கோள்
மயூரச்ய வநே நூநம் ரஷசா ந ஹ்ருதா ப்ரியா -கிஷ்கிந்தா -1-40-என்று இருவராய் இருப்பாரை எல்லாம் பிரித்தான் என்று
இருந்தார் இ றே பெருமாள் -அப்படியே வளை கையில் தொங்கினார் ஒருவரும் இல்லை என்று இருந்தாள் போலே காணும்
நீங்கள் தப்பிக் கிடந்தபடி எங்கனே -என்கிறாள்
அவனோடு கலந்து பிரிந்த படியால் ப்ராதேசிகம் ஆகமாட்டாது என்று தோற்றி இருந்தது ஆய்த்து –
ஆபரணம் இழந்தார் வழக்கு ஆபரணம் பூண்டு இருந்தார் பக்கலிலே கேட்கும் அத்தனை இ றே
குறையாளர் வழக்கு குறைவற்றார் பக்கலிலே இ றே கேட்பது
யுவாக்கள் வழக்கு சன்யாசிகள் பக்கலிலே அன்றே கேட்பது -யுவாக்கள் பக்கலிலே இறே கேட்பதுவும்
நீயும் சில நாள் வைத்துக் கொண்டு இரு -என்பார் பக்கல் அன்றே கேட்பது
ஆண்களோ பாதி இறே இவளுக்கு ஓடுகிற தசை அறியாமைக்கு இவர்களும் –

———

எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-

எம்மானார் –
ஜிதந்தே -என்னுமா போலே ஸ்வா பாவிகமான சேஷித்வத்துக்குத் தோற்றுச் சொல்லும் வார்த்தை அல்ல
இப்படி அழகு குவியலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவர் –

என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே-
எழில் கொண்டார் என்று அவர்க்கு இத்தை எங்கனே நாம் குற்றமாகச் சொல்லும்படி
பிரணயித்வத்தில் ஏதேனும் தப்ப நின்றாராகில் அன்றோ நம்மால் அவர்க்கு குற்றம் சொல்லலாவது
ஏக கண்டரானவர்க்கு -நம்மோடு ஒத்த மனத்தராய் -நாம் என்ன குற்றம் சொல்லுவது
அவர் பிரிந்தாலும் கழலாத படி திண்ணிய வளை தேடி இட்டோம் ஆனோம் நாம்
அவர் இதினுடைய நாமத்தையே மெய்யாக்கினார்
விச்லேஷத்திலும் தொங்கும் வளையை தேடி இட்டோம் ஆனோம் நாம் -அவர் ஒரு ஷணமும் தொங்காத படி ஆக்கினார் -என்ற அழகு பாரீர்
இது அங்கும் ஏறப் பற்றது இல்லை
அவர் கையில் வளை கழன்றதாகில் இவள் கையில் வளை தொங்கும் இறே
அவர்க்கும் இச் செல்லாமை உண்டு என்று அறிந்தால் இவர் கையில் வளை கழலாதாயத்து –சலிக்கிற படி
நீ ஒருத்தியே இழந்ததாகச் சொல்லுகிறது என் -இங்கனே யன்றோ எல்லாரும் இருப்பது -என்ன
என்னை ஒழிய ஆரேனும் வளை இழந்தார் உண்டோ -என்கிறாள் –என்னுடைய கழல் வளையையே -என்ற ஏவகாரத்தால் –

——————

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
தம்முடைய ஆஜ்ஞா அனுவர்த்தனம் -ஸ்வ சங்கல்பத்தினாலே நடத்துமது போராது என்று கோயிலிலே வந்து சாய்ந்தவர்
பெரிய பெருமாளோ பின்னை உபய விபூதியையும் ஆள்கிறார் -என்னில்
அல்ல –அவர் இட்டதோர் ஏவல் ஆள் -பெரிய பெருமாளும் அல்லர் காண் -செங்கோல் தானே ஆள்கின்றது –செங்கோல் -ஆஜ்ஞை

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே —
தமக்கு ஒரு குறை உண்டாய் -என் கையில் வளை ஒழியச் செல்லாமை குறைப்பட்டு அவ்விடர் தீருகைக்காக கொண்டாரோ-
எனக்கு கிலேசத்தை விளைக்கைக்காக செய்தார் அத்தனை அன்றோ
கழலாத படி திண்ணியதாக இட்ட வளையையும் கொண்டார் -கீழ்ப் பாட்டில் சொன்னபடியே –கோல் வளையையும் கொண்டார் -இங்கே

————

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-

பிச்சைக் குறையாகி –
மகா பலி பக்கல் பெற்றுக் குறை உண்டாய்
அது என் கையால் பெற வேணும் என்னும் இச்சையாலே
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் –
அம் மண்ணோ பாதி இச்சையும் என் வளையில் உடையராகில் -என்றுமாம்
தாம் இரந்த மண்ணில் வீறும்-என் கையில் வளையில் வீறும் தாம் சொல்லக் கேட்டு இருக்கும் அத்தனை இறே நாம்
தாம் இரந்த பூமியாருக்கு ஆபரணமாக வற்று -இடப்பட்ட வளையின் மேல் –
ஸ்ரீ யபதியாய் கொடுத்து வளர்ந்த கையை உடையவராய் இருக்கிறவர் தாம் கழஞ்சு மண் பெறுகைக்கு தம்மை இரப்பாளராக்கி
அதில் பண்ணின விருப்பம் என் பக்கலிலே பண்ணி இருந்தாராகில்
என் கையில் வளையாலே குறை தீர வேணும் என்னும் இச்சை உண்டாகில்
என் கையில் வளையாலே குறை நிரப்ப வேணும் என்னும் இச்சை உண்டாகில்
இத்தெருவே போதாரே—
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு-4-5- -என்கிறபடியே எங்கள் தெருவில் எழுந்து அருளாதோ பின்னை –
அசுரனுடைய யஜ்ஞ வாடத்தில் நடந்த நடையை இத்தெருவில் நடந்தால் ஆகாதோ –
என் கண் வட்டத்தில் நடந்தால் ஆகாதோ
தன உடைமை அல்லாததைக் கொடுத்து ஔதார்யம் கொண்டு இருக்கிறவனைப் போலே இருப்பேனோ நான்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன் -என்று இருக்குமவள் அன்றோ நான்-
கொண்டானை யல்லால் கொடுத்தானை யார் பழிப்பர்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை குறை சொல்லுவார் இல்லை
தனக்குக் கொடுத்தவனுக்கு அபகாரத்தைப் பண்ணுவதே -இவன் தன்னில் க்ருதக்னர் இல்லை -என்னா நிற்பார்கள்
தன்னது அல்லாதவற்றைக் கொடுத்தவனை அன்றோ நெல்லிலே வைத்துத் தெரிக்க வேண்டுவது -என்கிறார் –
என்னது -என்று இருந்த வன்று -அவனுக்கு -என்று கொடுக்க பிராப்தம்
பிரமித்த அன்றாய்க் கொடுக்க பிராப்தி உள்ளது
உணர்த்தி உண்டானவாறே –அதவா கிந்நு சமர்ப்பயாமி தே-என்னா நின்றார்களே இ றே
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தால் அவனுடைய ஸ்வரூப குணங்களோ பாதி அங்கே தோற்றக் கடவதாய்த்து இது
அவனுடைய ப்ராப்யத்வத்தில் ஏக தேசமாய் அந்வயிக்கும் அத்தனை
ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக பற்றினால் அனுபவ சமயத்திலும் ஆத்ம யாதாம்ய ஜ்ஞானம் முன்னாக வி றே அனுபவிப்பது
-யதோபாசனம் பலம் ஆகையாலே

—————

மாந் தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறை நில்லா என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-

வளைகளும் இறை நில்லா-
ஆகாசத்தில் நிற்பது ஒரு வளை இல்லையே
சைதில்யம் உபாயாந்த சுரேஷூ யாச்யபி -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -பக்தியால் -விரஹ தாபத்தால் )
இன்னம் இவற்றில் அவனுக்கு வாசி உண்டு
அவன் பிரியேன் என்று பிரிவை உணர்த்தி யாகிலும் போம் இறே
இவையோ சடக்கெட போய்க் கொடு நின்றது

என் தன் ஏந்திழை இவளுக்கு-
என்னுடையவள்- தரிக்கப்பட்ட ஆபரணத்தை உடையவள் –
இவள் ஆபரணங்களால் அலங்க்ருதையாய்
இருக்கும் இருப்பைக் கண்டு கொண்டு இருக்குமதே தாரகமாக
காணுமவள் தான் நினைத்து இருப்பது –
இவள் ஆபரணம் பூண்டு இருக்கும் இருப்பை
கண்டு அனுபவிக்க எனக்கு இவளோட்டை பர்யவசிக்குமா போலே இருந்தது –

——————

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–3-6-6-

ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன்
என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –
சம காலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ
இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும் உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும்
இவள் கையில் வளை சேஷிக்கில்

வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

திருவாலி யிலே உத்தேச்ய வஸ்து சுலபமாயிற்று என்றவாறே கண்ணுறக்கம் குடி போயிற்று ஆயிற்று
என் கன வளையும் கடவேனோ!
என் உடம்பில் உள்ளது வேணுமாகில் கொள்ளுகிறாய்
நான் பொன்னிட்டு கொண்ட வளையில் என் பிராப்தி உண்டு
அவனும் பொன் கொடுத்து இறே கொண்டு போகுகிறது -வைவர்ண்யத்தைக் கொடுத்து –
இவனுக்கும் இவள் உடம்பில் உள்ளது கொள்ளும் போது
இவள் மேல் எழுத்து இட வேண்டாம் காணும்
(மேல் எழுந்தது வேண்டா காணும் -மேல் எழுந்த வளையை கொள்ளுவான் என்
சாமான்யமானது கூடாது ஸ்லாக்யமான வளையல் என்றுமாம் )
ஸ்வாபாவிக மானத்தோடு-(என் கண் துயில் கொண்டு) ஔபாதிக மானத்தோடு-(என் கன வளையும்) வாசி
இன்றிக்கே ஏதேனும் இத்தனையோ நீ கொள்ளுகைக்கு வேண்டுவது –
அவன் இத்தை விரும்பப் புக்கவாறே என்னது என்று ஒரு தலை தானும் பற்றுகிறாள்-
(ஆழ்வார் தன்னது என்னுமவை எல்லாம் இவனுக்கு உத்தேச்யம் -என்னுடைய பந்தும் தந்து போ போல்
மன் மநா பவா –மாம் நமஸ் குரு-அவன் என்னது என்னிடமே சொல்வது போல் )

இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே !–3-6-8-

தன் உடம்பில் துள்ளுகிற முயலைப் போக்கவும் மாட்டாதே
பருவம் நிரம்பாதே இருக்கிறவனுக்கு-இள மதிக்கு அன்றோ நான் – வளை இழந்தேற்கு
இது நடுவே இத்யாதி –
விபூதியை -நீ வைத்த ஆளான சந்திரனை -இட்டு நலிகை அன்றிக்கே நீரும் தூசி ஏறப் புக்கீரோ
போரிலே த்வந்த யுத்தம் பண்ணா நிற்கச் செய்தே-நடுவே வந்து பொருவாரைப் போலே-
விடு நகமும்-( கிட்டிக் கோல் ) சம்மட்டியும் இட்டு நலியா நிற்க அது போராது
என்று உடையவன் தானே நலியுமா போலே —
விபூதியை இட்டு நலிகை தவிர்ந்து நீ தானே கை தொடானாய் நலியப் பார்த்தாயோ –

சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே–3-6-9-

திரு மெய்ய மலையாளா ! அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று –
நீ யாள வளையாள மாட்டோமே –
இருந்தபடியால் உன் பரிக்ரமாகையும்-கையில் வளை தொங்குகையும் என்று ஒரு பொருள் உண்டோ –
இப்போது தன் ஆற்றாமையாலே ஒன்றைச் சொல்லுகிறாள் அத்தனை போக்கி
ஒரு காலும் கையில் வளை தொங்குகைக்கு விரகு இல்லை காணும் –
கிட்டினால் தானே ஹர்ஷத்தால் பூரித்து நெரிந்து இற்று போம்
பிரிந்தான் ஆகில் தானே கழன்று போம் –
உன்னுடைய பரிக்கிரமாய் எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு நோக்குகை என்று ஒரு பொருள் உண்டோ
அம்மங்கி அம்மாள் உடைய சரம தசையில் நஞ்சீயர் அறிய எழுந்து அருளினவர்
அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து
முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே
என்று அருளிச் செய்தார்-
ஆக இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் அழிவு அற்று இருக்கிற படியையும் –
இத்தலையில் அபேஷை குறைவற்று இருக்கிறபடியையும் –இவை எல்லா வற்றையும் சொல்லுகிறது –

—————

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

வெள்ளி வளைக்கை பற்றப்-
உக்தியிலே துவக்குண்டு சப்தையாய் நின்றாள்-அவ்வளவிலே வந்து கையைப் பிடித்தான் –
ந பிரமாணீ க்ருத பாணீர் பால்யே பாலேந பீடித்த -என்கிறபடியே
(அக்னி பிரவேசம் பண்ணும் சீதாபிராட்டி வார்த்தை )
பிடித்த பிடியிலே -அங் கண்ணன் உண்ட என்னுயிர்க் கோதிது-திருவாய்மொழி–என்னும்படியாயிற்று பிடித்தது
முன்பு நெடுங்காலம் தாய் பக்கல் பண்ணின வாசனை-முதலடியிலே வந்து அழியும்படி-கழியும்படி – யாயிற்று பற்றின பற்று
இடைச்சிகள் பொன்னையும் மாணிக்கத்தையும் அழிய மாறி -வெள்ளி வளை யாயிற்று இடுவது-

———

இங்கு வளையல்களை மட்டும் இழந்தவற்றை பத்தும் பத்துமாக அருளிச் செய்கிறார்
இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
இழந்தது என் கன வளையே —8-3-2-
என் செறி வளையே —8-3-3-
இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-
இழந்தேன் என் வரி வளையே—8-3-5-
இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-
இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-
இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

கோவர்த்தன கிரியை தோள் அசையும்படி எடுத்துக் கொண்டு நின்றான் ஆயிற்று –
மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய்
பெரிய மிடுக்கையும் உடைத்தாய்-மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –
(அரியன செய்தவன் என்னை அறியாமல் இருக்கிறானே )

மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே —8-3-2-

அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட அச் செயலுக்கு வளை இழந்தேன் –
மாடங்கள் அழகிலும் -படுக்கை வாய்ப்பாலும் -களிறு தரு புணர்ச்சி -உலக இயல்பு -வளை இழவாமை-
இங்கு தன்னையே நமக்கு ரஷித்து அளித்த செயல்

செங்கண் மால் யம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
சங்கு தங்கு முன் கை நங்கையாய் இருக்க வேண்டியவள் அன்றோ இழந்தேன் –

புணர் மருதம் இற நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-

இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர் விவரமாய் இருக்கிற மருதுகள்
முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-

முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –

அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-

தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ
என்று இருந்தாயிற்று வளை இழந்தது –
(ஈஸ்வரனாக தன்னை நினைத்தவனை நஸ்வரன் என்று காட்டிய அவதாரம் அன்றோ )

உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-

பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த சர்வேஸ்வரனுக்கு
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –

செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு -உத்பாதகனை -விஸ்வசித்து முடிந்தேன் -என்கிறாள் –

பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

தூங்கு மெத்தை போலே அசையா நின்றுள்ள திரு வநந்த ஆழ்வான் மடியிலே ஏறட்டுக் கொண்டு
ஆயிரம் வாயாலும் அனுபவத்துக்கு பாசுரமான ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணுகையால் வந்த பெருமையை உடையவனுக்கு
யசோதை பிராட்டி தன் மடியிலே வைத்துக் கொண்டு ஆடுமா போலே ஆயிற்று –
(அது எளிமையால் மேன்மை இது மேன்மையால் மேன்மை )
இழந்தேன் என் பெய் வளையே-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து வளை இழந்தேன் -என்கிறாள் –

—————————

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;–4-4-2-

பெய் வளைக் கைகளைக் கூப்பி-
அவனைத் தொழுவித்துக் கொள்ளும் பரிகரம் உடையவள் தான் தொழா நின்றாள்-
அவளைத் தொழுவிக்கப் போலே காணும் கையில் வளை கொண்டது
அவன் சங்கு சக்கரம்-கடல் வண்ணன் என்றவாறே -கழன்ற வளைகளை ஒழிய -சரிந்த வளைகள் பூரித்தன-காணும் –
கையிலே பிரம்மாஸ்திரம் இருக்க இவள் படும் பாடு இது –
பரகால நாயகி திருக்கையில் மடல் போலே –
வீரக் கழல் உடன் பட்டு கிடப்பாரைப் போலே இவள் கிடக்கிற கிடை –

———-

வினை யுடையாட்டியேன் பெற்ற
செறிவளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?–4-4-3–

முன் கையிலே செறிந்த வளையை யுடையவள்;
இதுவன்றோ இருக்கத் தகும்படி!
முன்பு இருக்கும்படியாதல்,
பின்பும் அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல்.
அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை அன்றிக்கே,
இவள் உடம்பிலே அவன் உடம்பில் திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள்,
‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல்.

——–

வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறையிலமே–4-8-7-

நீல மணி போலே வளரா நின்றுள்ள ஒளியை யுடையவன்.
கை மேலே இலக்கை-(மாத ஜீவனமான பணமும், இலட்சியமும்) பெறாதார்க்கு-அன்றாடு – நாடோறும்
படி ( ஜீவனமான பணமும், இலட்சியமும். படி – ) விட வேண்டுமே அன்றோ?
படி விடாத போது அரை ஷணமும் நில்லார்களே அவர்கள்.
படி கண்டறிதியே’-முதல் திருவந். 85. என்றபடி இப்படிக் கண்டு ஜீவிக்குமது இறே

சதா பஸ்யந்தி ஸூரய எப்பொழுதும் பார்த்துக் கொண்டே யிருக்கிறார்கள்,’ என்கிறபடியே,
இப்படிக் கண்டு ஜீவிக்குமதே யன்றோ உள்ளது?

மணி நீல வளர் ஒளி’ என்பது என்? அப்போது திருமேனி வெளுத்து அன்றோ இருந்தது?’ என்னில்,
சிறுக்கன் துன்பம் தீரப் பெற்றோமே!’ என்று திருமேனி குளிர்ந்த படியைச் சொல்லுகிறது.

அவ் வடிவை யுடையவன் தானே வந்து மேல் விழுந்து விரும்பி வாங்கி இட்டுக் கொள்ளாத
இவ் வளையால் எனக்கு என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.

————

வரி வளையால் குறையில்லாப் பெரு முழக்கால் அடங்காரை-4-8-8-

ஸ்ரீ பாஞ்சஜன்யத்தாலே. வளை – சங்கு.முகத்திலே வரியை யுடைய –

குறை இல்லாப் பெரு முழக்கால் –
சகோஷா தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் – அந்த ஒலியானது திருதராஷ்டிரன்
புத்திரர்களுடைய நெஞ்சுகளைப் பிளந்தது,’ என்றும்,
ஜகத் சா பாதால வியத்தி கீஸ்வரம் ப்ரகம் பயாமாச – அந்தப் பாஞ்சஜன்யமானது, பாதாளம் ஆகாயம் திக்குகள்
திக்குப்பாலர்கள் ஆகிய இவற்றோடு கூடின உலகத்தை நடுங்கச் செய்தது,’ என்கிறபடியே,
பகைவர்கள் அளவு அல்லாத மஹா த்வனியால் -பெரிய ஒலியாலே.
ஹஸ்தேந ராமேண – கையினாலே ஸ்ரீராமனாலே’ என்னுமாறு போலே
வரிவளையால் பெருமுழக்கால்’ என்பது வேற்றுமை உருபு மயக்கம்.

——

என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

என்னுடைய பந்தும் கழலும்
கைப்பட்ட பந்தையும் கழலையும் போர விரும்பப் புக்கான்.
என்னுடைய பந்தும் கழலும் –
பாவியேன், நீ எங்கே செய்ய வேண்டியன வற்றை எங்கே செய்கிறாய்?
அவை நீ நினைக்கின்றவர்களுடைய பொருள்கள் அல்ல காண்; அவை எங்களுடைமை காண்’ என்றார்கள்.
அதுதான் மெய்யே’ என்றான். இவன் விருப்பத்துக்கு அது தானே யன்றோ வேண்டுவது;
யஸ்யை தே தஸ்ய தத் தனம் -அரசனே! மனைவி வேலைக்காரன் மகன் ஆகிய இவர்கள் ஒருவனுக்கு
அடிமைப்பட்டவர்களே; இவர்கள் எவருக்கு அடிமைப் பட்டவர்களோ அவருக்கு இவர்களுடைய பொருள்களும்
அடிமைப்பட்டனவாம்” என்கிறபடியே, மற்றையது அநந்தரத்தே -உடனே -வரும் அன்றோ.

அதாவது ஸ்வரூப ஞானமுடைய உன்னுடைய மமகார விஷயம் அடங்கலும்
என்ன தன்றோ என்று போகத் தொடங்கினான் –
இனி, இத் திருவாய் மொழியினுடைய ப்ரவேசத்திலே ‘முடியப் பார்க்கிறாள்’ என்று சொல்லிற்று ஒன்று உண்டு.
அது, இப் பதத்திலே தோற்றுகிறது.
அவன் சந்நிதியிலே ‘என்னது’ என்று சொல்லுகைக்கு மேற்பட்டது ஒரு முடிவு இல்லை அன்றோ.
த்வ்யக்ஷரஸ்து பவேத் ம்ருத்யு: த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம்
மமேதி த்வ்யக்ஷர: ம்ருத்யு: நமமேதி ச சாஸ்வதம்”- பாஞ்சராத்திரம்

யானென தென்னும் செருக் கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். -திருக்குறள்.

மம என்ற இரண்டு எழுத்துக்கள் நாசத்துக்குக் காரணமாகின்றன”“ என்பது அன்றோ சாஸ்திரம்.
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யயுத்ஸவ: மா மகா: பாண்டவாஸ்
சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய” , ஸ்ரீ கீதை. 1 : 1.
என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்” என்கிற விடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி:
என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான், அது வன்றோ விநாச பர்யந்தம் ஆகி விட்டது” என்று.
இது தான் தத்தவ கதையே -உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று,
பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கை யன்றோ உறவு அறுகையாவது.

என்னுடைய பந்தும் கழலும்-
ஆத்மே த்யேவது க்ருஹணீயாத் – தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே,
ஒன்றை ஒன்று உபாசியா நிற்கச் செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ
இரண்டு வஸ்துக்களுக்கும் -ப்ரத்யாசத்தி -தொடர்பு- இருக்கிறபடி.
ஸ்வரூபம் விசதமானால் -தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

தந்துபோகு நம்பி-
நீ இங்கே கால் தாழாநின்றாய்;
இதற்கு ஒரு தாத்பர்யம் -கருத்து அறியாதே உன்னை உபேக்ஷிக்கத் தொடங்குவர்கள்; அதற்கு முன்னே போ.
நம்பீ
முகப் பழக்கமும் இன்றிக்கே இருந்தது; முதலியாருமாய் இரா நின்றீர்;
கடுகப் போகப் பாரும் என்பாள் ‘நம்பீ ’ என்கிறாள்.
கண்ட காட்சி புல்லெழுந்து போனபடி யன்றோ இவள் இங்ஙன் சொல்லுகிறது” என்று பெரிய முதலியார் பணிப்பர்.
என்னுடைய பந்தும் கழலும்’ என்ற இடம், அவன் பொகடுகைக்குச் சொன்ன வார்த்தை.
தந்து போகு’ என்றதனால், அவன் விரும்பினவை ஒழியத் தனக்குச் செல்லாது என்னுமிடம் தோற்றுகிறது.
நம்பி –
ஷோடச ஸ்திரீ ஸஹஸ்ராணி சதமேகம் ததோதிகம்
தாவந்தி சக்ரே ரூபாணி பகவாந் தேவகீ ஸுத:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 31 : 17.
பதினாறாயிரம் பெண்களையும் அதற்கு மேலே ஒரு நூறு பெண்களையும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் விவாகம் செய்து கொண்டார்”
என்கிறபடியே, உமக்குப் போனவிடம் எங்கும் கொண்டாட்டத்தால் குறை இல்லை;
எங்களுக்கு உம்மை ஒழிய வேறு கதி இல்லை;
இனி, உம்முடைய திருக் கரங்களின் ஸ்பர்சம் -சம்பந்தமுண்டாய்ப் பொகட்டவை கொண்டாகிலும்
எங்களுக்கு ஜீவித்துக் கிடக்க வேணும்;
ஆன பின்னர், அவற்றை எங்களுக்குத் தந்து போம்.
அன்றிக்கே
உயிரை வைத்துப் போம்” என்பாரைப் போலே ‘தந்து போகு’ என்கிறாள் என்னுதல். என்றது,
இவன் இவற்றைக் கைவிட்டுப் போக மாட்டான் என்று அறிந்து-
மர்மஞ்ஜை -அவன் மனக் கருத்தை அறிந்தவர்கள் -ஆகையாலே ‘தந்து போகு’ என்கிறார்கள்

——–

கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

தர்ச நீயமாய் -காட்சிக்கு இனியவாய் வாத்சல்யத்தாலே சிவந்து,
விகாசாதிகள் -மலர்ச்சி முதலானவைகளை யுடையவான திருக் கண்களை யுடையவனுக்கு.
தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்” என்று திருக் கண்களாலே யாயிற்று அகப்படுத்திக்கொண்டது.
விசேஷணம் தோறும் அவனுக்கு என்று தனித் தனியே அகப்பட்ட துறைகளைச் சொல்லுகிறாள்.
மாலுக்கு’ என்று தொடங்கி, தன் மகள் மேல் பட்ட அம்புகளை எண்ணுகிறாள்;
இது ஒரு குத்து, இது ஒரு வெட்டு, இது ஒரு அம்பு என்று.

என் கொங்கு அலர் ஏலம் குழலி –
மதுஸ்யந்தியாய் தேன் பெருக்கு எடுக்கின்ற பூக்களை யுடைத்தாய்,
நறு நாற்றத்தை யுடைத்தான குழலை யுடைய என் பெண் பிள்ளை.
கொங்கு – தேன், அலர் – பூ, ஏலம் – நறுநாற்றம்.
இவள் மயிர் முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழி நீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்!
பங்களப் படை கொண்டு, தனி வீரம் செய்வாரை அழிக்குமாறு போலே-

இழந்தது சங்கே –
இவள் மயிர் முடி கண்டு அவன் இழக்கக் கடவதனை இவள் இழந்தாள்.
சங்கு -வளை

————

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரிவளை –
முன்பு உங்களோடு என்னோடு வாசியற எல்லார்க்கும் உண்டான வளை-என்னுதல் –
அன்றிக்கே
த்வம் வ்யச்ய அஸி மே ருத்ய ஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ
சுக்ரீவோ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரக்ருஷ்டவத் -கிஷ்கிந்தா 5-18-
இன்ப துன்பங்கள் நம் இருவருக்கும் ஒன்றே -என்கிறபடியே
இன்ப துன்பங்கள் ஒன்றாக சொல்லிப் போந்த நீங்கள் அனுஷ்டானத்தில் வந்தவாறே
பேதிப்பதே -வேறுபடுவதே -என்கிறாள் -என்னுதல்
இப்போது அனுஷ்டானத்தில் -செய்கையில் வேற்றுமை என் என்ன –
கை மேலே கண்டிலேமோ -நான் சங்கை அற்று இருக்கிறேன்
நீங்கள் சங்கை உடையீர் கோளாய் இருக்கின்றீர் கோள் அல்லீரோ –

வரி வளை
வரியை உடைய வளை -என்னுதல் -தர்ச நீயமான -அழகிய வளை -என்னுதல் –
இவளைத் தரிப்பிக்கைக்காக அவர்களும் வருந்தி தரித்து இருப்பார்கள் அன்றோ –
பிராட்டியை பிரிந்த இடத்தில் பெருமாளைக் காட்டிலும்
தம்முடைய காவல் சோர்வாலே வந்தது என்று தளர்த்தி இரட்டித்து இருக்கச் செய்தேயும்
பெருமாள் தளருவர் என்று தம்முடைய தளர்த்தி தோற்றாதபடி இளைய பெருமாள் தரித்து இருந்தாப் போலே
இவர்களும் தரித்து இருப்பார்கள் வளையை –

சங்கம் சரிந்தன –
நான் இத்தை யாருக்கு மறைத்து யாருக்கு வெளி இடுவது
ஜகத் அஸ்தமிதம் -உலகமே அழிந்தது என்றது போலே காணும் இருக்கிறது –
இவளைக் கிடையாத போதை நாயகன் இலன்-
நாயகன் இல்லாத போது உபய விபூதியும் இல்லை -என்றது
இவள் கையும் வளையுமாக இராத அன்று நாயகன் உளனாக மாட்டான் –
இருவருமான சேர்த்தியில் உண்டாகக் கூடிய உபய விபூதியும் அழியும் என்றபடி –

——

காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காணப் பெற்றால்
ஈண்டிய சங்கும் –திரண்ட வளையையும்
ஒரு வலம்புரி கிடந்த இடத்தே ஆயிரம் சங்குகள் சேரும்
வலம் புரி ஆழியன் வேங்கட வேதியன் -அன்றோ –
நிறைவும் –அடக்கத்தையும்
கொள்வான் -கொள்கைக்காக
தன் பக்கல் தொங்காதவை எல்லா வற்றுக்கும் புகல் அங்கே என்று இருக்கிறான் –
இவளுக்கு கை முதல் அங்கே அன்றோ
இது வாகில் உன் துணிவு காலம் சென்றவாறே நீயே இளைத்து மீளுகிறாய் -என்ன
எத்தனை காலம் இளைக்கின்றேனே
இது சொல்லி பகட்டக் கேட்பேனோ-இந்த ஆசையோடு எத்தனை காலம் உண்டு இளைத்துப் போருகிறது-

——

நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

நீலமான நிறத்தை யுடையதாய்
மலர்-விஸ்த்ருதமாய்
நெடு-அபரிச்சேத்யமாய்
சோதி இத்யாதி-தேஜஸ்ஸாலே சூழப் பட்டு -அபரிச்சேதயமாய் இருப்பதொரு காளமேகத்தின் நிறம் போலே
இருக்கிற நிறத்தினை யுடையனாய்
அவ்வடிவை பரார்த்தமாக்கி வைக்கும் அவன் அபஹரித்த தர்ச நீயமான வளையோடே கூட
அவன் வாய் புலற்றும் நிறத்தையும் மீட்டுக் கொள்ளுகைக்காக
காலம் எல்லாம் கூடச் சென்றும் ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
நன்னுதலீர் இனி நாணித் தான் என்
எத்தனை காலம் கூடச் சென்று-நெடும் காலம் சம்ஸ்லேஷார்த்தமாகக் கூடச் சென்று என்னுதல்

—–

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன் கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன்பு பரிசு இழந்தேன்–8-2-4-

இனி என் கொடுக்கேன் –-பண்டே எல்லாம் இழந்த பின்பு இனி எதனை இழப்பது –
கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய இழந்து –
தர்ச நீயமான -அழகிய வளை –நெஞ்சு -தொடக்கமானவற்றை எல்லாம் என் பாடு அற்று
வாசனையோடு போம்படியாக இழந்து
எல்லாம்-அவன் விபூதியைப் போலே யாகும் இவள் பரிகரத்தின் பரப்பும்
ஆதலின் எல்லாம் என்கிறது
வைகல் பல் வளையார் முன் பரிசு இழந்தேன் –
கழற்றிப் பூணும் ஆபரணமும் இழவாதவர்கள் முன்பே கழற்ற வேண்டாத ஆபரணமான பரிசு உண்டு –
பிரகாரம் -நாணம் -அதனையும் இழந்தேன்

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்–8-2-8-

நம்முடையவான நிறமும் வளையும் நெஞ்சும் ஆகிய
பாஹ்யங்களோடு -புறப் பொருள்களோடு ஆந்தரங்களோடு -உட் பொருள்களோடு வாசி அற
நம் பக்கல் ஒன்றும் எஞ்சாதவாறு கைக் கொண்டான்
அடையும் வைகுந்தமும்-சேரும் பரமபதமும்
இத் தலையில் உள்ள எல்லாமும் நேராகக் கொண்டு
எட்ட ஒண்ணாத நிலத்தில் போய் பாரித்து வெற்றி கொண்டாடி இருந்தான் -என்கை

—————–

மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

என் வார்த்தையான தூது வார்த்தையைச் சொல்லப் பார்த்தீர் கோள் ஆகில்
என்னுடைய அழகிய வளையும் கலையும் சீர் கேடு அடைந்தபடியைச் சொல்லும் கோள்
அன்றிக்கே
செப்புதிரே யாகில் -அது தானே எனக்கு சுடர் வளையும் கலையும் ஆம் -என்னுதல்
அறிவிக்கும் அதுவே குறை–அவன் வரவு தப்பாது –

சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் –9-7-7-

இத்தலையில் தனக்கு பிரயோஜனமான அம்சத்தை -பாகத்தை கொண்டு
என்னைப் பொகட்டுப் போனான் -என்றது
தனக்கு தாரகமானவற்றைக் கொண்டு அல்லாதவற்றை பொகட்டுப் போனான் -என்றபடி –
சங்கம் சரிந்தன -என்ற திருப் பாசுரத்தில் கூறிய படியே
எல்லாப் பொருள்களும் உருக் குலைந்து கிடக்க –
சுடர் வளையும் கலையும் -என்று விசேஷித்து கூறியது என் என்ன –
கைக்கு அடங்கியதையும் கொண்டு மடிச் சரக்கையும் கொண்டு போனான் என்றது
முக்கிய பொருள்களை மாத்ரம் கொண்டு போனான் என்றபடி –

———

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ-10-3-7-

விரஹ கார்ஸ்யத்தாலே -பிரிவினால் உண்டாகிய மெலிவால் வெள் வளைகளும் மேகலைகளும் கழன்று விழும்படியாகவும்
வெள் வளை –சங்கு வளை- பிறர் அறியாதபடி பல் காலும் எடுத்து இடுவது பேணுவது ஆனாலும்
அவை நிராஸ்ரயமாக- பற்றுக் கொடு இன்றி நில்லாவே ஆகாசத்தில் தொங்காவே –
அப்படி காணும் உடம்பு இளைத்தபடி –

——-

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
தினி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே–திரு விருத்தம்–13-

துக்கம் வளரா நின்றுள்ள காதலை உடைத்தான துழையை துழாவி வருகிற குளிர்ந்த வாடையை
இரு முறியாக வெட்டி இனி வளையை காப்பவர் ஆர் ?தண் வாடை அமூர்தம் மூர்த்தம் ஆகிற படி பாதகத்வத்தில் உறைப்பு
இனி வளை காப்பவர் ஆர் ? -வந்து கிட்டுவது காணும் என்று இருக்கிறாள்
எனை வூழிகள் ஈர்வனவே –அநேகமான கல்பங்கள் ஈரா நின்றன ..
ஆழ்வாருக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை இருந்த படி சொல்கிறது-

——

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

கொயல்வாய் மலர் மேல்-வட்டமாய் செவ்வியை உடைத்தான மாலையிலே மனம் ஆயிற்று-
எம் கோல் வளைக்கே -என்னால் முடிய புகுகிறது என்று அறிகிலேன்
மலர் மேல் மனத்தொடு -அந்த கரணம் பிரவணம் ஆன படி-

——–

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

என்னுடைய வளை நிமித்தமாக-
கண்ணன் இத்யாதி–சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும்
ரஷியா நின்ற வாஞ்சையை பக்னம் ஆக்கா நின்றது
நம் கோன் உகக்கும் துழாய் –சம்சாரத்தின் அபலையான இவளை பெற்றால்
என் செய்யாது–சர்வேஸ்வரன் தானே உபய விபூதியையும் ரஷிக்க கடவ ஆக்ஜையை
பக்னம் ஆக்கா நின்றான்-என் உடையவளை நிமித்தமாக
இவனை அழிக்க தொடங்கினால் வேறு ரஷிப்பார் யார் என்றுமாம்

———

கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது–47-

இத்தால் ஆழ்வாருடைய ப்ரக்ருதியா உண்டான மார்த்வத்தையும் ஆற்றாமையையும் இவர் ஆசைப்பட்டது அந்தரங்க விருத்திகள்
ஆகையால் அது பெறாமையால் வரும் ஆற்றாமை பாடாற்றலாம் அல்லது என்னும் இடத்தையும் கேட்டவர்கள்-
இனி இவரைக் கிடைக்க மாட்டாதோ என்னும்படியான தம் தசையைப் பார்ஸ்வத்தவர்கள் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –

——-

சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

வளை விற்கும் செட்டிகள் பக்கலிலே விலைக்கு கொண்ட சங்கங்களை வாங்கிக் கொள்ள பாரா நின்றது –
நாங்கள் தன்பாடே சென்றோமோ-தன்னை நெருக்கி கொண்டோமோ
வேரித் துழாய் துணையா –
நறு நாற்றத்தை உடைய திருத் துழா யை தனக்கு கூட்டுப் படையாக கொண்டு –
அங்கு நின்று மிலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
சக்கரவர்த்தி திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

———

நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன் வளைத் திறமே – -69 – –

உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா -வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக
வருந்தில் வருந்து -அப்பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று –
அதற்கு மங்களாசாசனம் பண்ணு –
இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் -அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும்
தரிப்பித்த படியை சொல்லிற்று கீழ் –
இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹ்ராக பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது –
அவனாகில் ரஷகனாய் -இத்தலையாகில் ரஷ்யகமாய் இருக்கும் இறே –
வருந்தேன் உன் வளைத் திறமே -மாசு ச -என்கிறாள் -அஹம் த்வா -என்று இருவருடையவும் சொல்லி வைத்து இறே -மாஸூச -என்றது –
இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது -பிரத்யஷ்யமான சந்த்யையை-
ருஷபங்கள் என்று சொல்லுகிறது என் என்ன -புன் தலை மாலை ஆகையாலே –
புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –
வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல் -என்று அந்வயம்

———

இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே–76-

நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ –
வெள் வளைக்கே -தம்தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –
தானும் வெண் திங்களாய் -இதுவும் வெள் வளை யாகையாலே -நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –
வியன் தாமரை இத்யாதி -வாசி அறியாதார் என் செய்யார்கள் -விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் –
ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும்
பண்ணுமதான வெண் திங்கள் -நங்கள் வெள் வளைக்கே விடம் போலே விரிதவிது வியப்பே –
ஸ்வா பதேசம்
இத்தால் -திரு உலகு அளந்து அருளின போது -சாத்தின அச் செவ்வி மாலையை இப்போது
பெற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே அனுகூல பதார்த்தங்கள் அடைய பாதகமாய் இருக்கிறபடியை சொல்லுகிறது –
முதலியாராக -ஸ்வாமி ஆகைக்காக-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வராஹ நாயனார் பிரபாவம் —

July 6, 2021

வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-ஆச்சார்ய ஹிருதயம்–84-

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-)

வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்
அதாவது
யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி
யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை –
அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை
கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி
உத்தரிப்பிக்கைக்காக-
அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே
கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –

பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-
அதாவது –
ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை-
உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந -தைத்ரியம் – –என்றும்
நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக –
கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –

இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்
அதாவது
குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை ,
அந் நிலையில் நின்றும் பேதித்து –
அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்
உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அனர்த்த கரம் என்று தோற்றும் படி
தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே தாழ இழிந்தார் என்கை ..

இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே
அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக-
அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு
நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து ..

( கோலதாம் வல்லபதாம் கோ மண்டல உத்தரம்-ஸ்லோகம் இது போலே உண்டே -)

————-

ஸ்ரீ வராஹ புராணம்–ஸ்ரீ கௌசிக புராணம் -ஸ்ரீ பராசர பட்டர்–

பரமபத நிலையன் அருளிச் செய்யும் வார்த்தை பரன் வாக்கியம் ஆகையால் பந்தம் இல்லாதார் கேட்கும்படியாய் இருக்கும்

ஷீராப்தி நாதன் வாக்யங்களைப் பார்த்தால் கடலோசை யோடே கலந்து அர்த்த ப்ரத்யாயம் ஆகாது –

மத்ஸ்ய ரூபியானவன் வாக்யத்தைப் பார்த்தால் ஒரு காலும் கரை ஏற்றம் அற்றவன் வார்த்தை யாகையாலே
ஜடாசய சம்பந்தம் தோற்றும்படியாய் இருக்கும்

கூர்ம ரூபியானவன் வார்த்தையைப் பார்த்தால் கம்பீரர் ஆகையாலும் ஸ்திரர் ப்ரமிக்கையும் கீழ்மை விடாமல் இருக்குமவன்
சொல்லும் வார்த்தை ஆகையாலே மேற் கொள்ளும் வார்த்தையாய் இராது –

ஸ்ரீ ந்ருஸிம்ஹன் வாக்யம் கழுத்துக்கு மேல் ஒரு படியும் கீழ் ஒரு படியும் ஆகையாலே ப்ரதோஷதிதமாய் இருக்கும்

ஸ்ரீ வாமனன் வாக்யம் -அடியில் சொன்னபடி அன்றிக்கே விஷம பதமாய் இருக்கும்
இவ்வளவும் அன்றிக்கே கவியாய் இருப்பான் ஒருத்தன் அளவிலே கண் அழிவை உடைத்தாய் இருக்கும்

பரசுராமன் வாக்யம் -பரசு தாரணம் பண்ணி சர்வ அவஸ்தைகளிலும் க்ஷமை விட்டவன்
வார்த்தை யாகையாலே ப்ரத்யயம் பிறக்கும் படி இராது

சக்ரவர்த்தி திருமகன் வாக்யம் கபிகளோடே கலந்து புண்ய ஜன பாதா பர்யந்தமாய் இருக்கும்

பல பத்ரன் வாக்யம் -சரஸ் ஸ்ரோதஸ்ஸாலே தாழப் போவாரையும் உதோத்த ப்ரவ்ருத்தர் ஆக்கினவன்
வார்த்தை யாகையாலே மத விகாரம் தோற்றி இருக்கும்
அவ்வளவு இன்றிக்கே சுத்த வர்ணனாய் இருக்கச் செய்தேயும் கலப்பை உடையவன் வார்த்தை ஆகையாலே
விஸ்வசிக்க ஒண்ணாத படியாய் இருக்கும் –

ஸ்ரீ கிருஷ்ணன் வாக்யம் பிறந்த அன்று தொடங்கி கை வந்த களவிலே காணலாம் படி இருக்கும்

கல்கி அவதாரத்தின் வாக்யம் வரப்போகிறது என்றுமது போக்கி ஒருவருக்கும் கை வந்து இருக்கும் வார்த்தை அன்று
அவ்வளவும் அன்றிக்கே அனுமானித்தே அறியவேண்டியதாய் இருக்கும்

இப்படிக்கு ஒரு அந்யதா சங்கை பண்ண ஒண்ணாதபடி
ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்ட ஞானத்தின் ஒளி உரு என்றும்
ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரான் -என்றும் –
சொல்லுகிறபடி சம்யக் ஞான உபகாரகன் ஆகையாலும்

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய -என்று
ஞானவான்கள் விஸ்வசித்துக் கைக் கொள்ளும் படியான கிருபாதிசயத்தை யுடையவன் ஆகையாலும்

ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி யது எம்மை யாளும் யரசே -என்றும் சொல்லுகிறபடியே
ரக்ஷகத்வ பூர்த்தியை யுடையவன் ஆகையாலும்

இரும் கற்பகம் சேர் வானத்தர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று ஆழ்வாரும் பிரதம பிரபந்தத்தில் சர்வருக்கும்
இவனை ஒழிய ரக்ஷகாந்தரம் இல்லை என்று அறுதியிட்டு

சரம பிரபந்தத்தின் முடிவிலும்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் யுன்னைப் பெற்று இனிப் போக்குவனோ -என்று அவதாரங்கள் எல்லாம் கிடக்கச் செய்தே
இந்த அவதாரத்தில் தாம் அந்தமில் பேரின்பம் பெற்ற படியை அருளிச் செய்கையாலும்

அவனுடைய ரக்ஷகத்வமானது உத்தாரகமான ரக்ஷகத்வம் ஆகையாலும்
இப்படி பண்ணுகிற ரக்ஷணம் வாத்சல்ய மூலம் என்று தோற்றும்படி
ஏனமாய் நிலம்கொண்ட என் அப்பனே -என்றும்
அப்பன் ஊன்றி எடுத்து எயிற்றில் கொண்ட நாள் -என்றும்
வாத்சல்ய அவி நா பூதமான பித்ருத்வம் இவனுக்கு உண்டு என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ வராஹ அவதாரமே சர்வ உத்க்ருஷ்டமாகக் கடவது

இது சர்வேஸ்வரன் நாச்சியாரைப் பார்த்து அருளிச் செய்யும் வார்த்தை யாகையாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து -என்கிறபடியே
இதுவும் உபாலம்ப விஷயம் ஆகிலோ என்னில் அவ்வார்த்தையும்
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் -என்று
அறிந்து இருக்கச் செய்தேயும் விஸ்லேஷ கிலேசம் பொறுக்க மாட்டாத படியான த்வரா அதிசயத்தாலே
பாம்பணையாருக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உளவாய்த்து –என்று
அநந்த புஜக சம்சர்க்க தோஷத்தால் பொய்யாகிறதோ என்று அதி சங்கை பண்ணினாள் அத்தனை –

இவ்வார்த்தை அப்படி இன்றிக்கே -பார் வண்ண மடமங்கை பத்தர் -என்கிறபடியே
நாச்சியார் பக்கல் உண்டான பாவ பந்தத்தாலே பிரளய ஆர்ணவ மக்னையான இவளை அதில் நின்றும் மேல் எடுத்து
இவளுடைய கிலேசத்தைத் தவிர்த்து வைத்த அளவிலும் -சம்சார ஆர்ணவ மக்நரான தம் பிரஜைகளுடைய
துக்க நிவ்ருத்திக்கு ஒரு ஸூகர உபாயம் காணாமையாலே விஷண்ணையாய் இருக்கிற இவளைக் கண்டு
அருளின பகவான் இவள் தேறும்படியாகச் சொன்ன வார்த்தை யாகையாலே அதி சங்கை பண்ண வேண்டியது இல்லை –
ஆகையால் அவஸ்தாந்த்ரங்கள் போல் அன்றிக்கே ஸ்ரீ வராஹ அவஸ்தையில் தமக்கு அருளிச் செய்யும் வார்த்தை தப்பார் என்னும் அர்த்தத்தை
பாசி தூர்த்து கிடந்த பார் மகட்க்குப் பண்டு ஒரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே – என்று நாச்சியார் தாமே அருளிச் செய்தார் –
ஆகையால் இந்தப் புராணம் எல்லாப் புராணங்களிலும் உத்க்ருஷ்டமாகத் தட்டில்லை

————

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 -10-9 –

ஆகாசத்தில் நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே –இத்தால்-திருமேனியின் நிறத்தை சொல்கிறது
எங்கும் கானத்து மேய்ந்து –காட்டிலே ஒரு பிரதிபஷ பயம் அற எங்கும் சஞ்சரித்து – கோரைக் கிழங்கு முதலானவற்றை ஜீவித்து –
களித்து விளையாடி –ஜாத் உசிதமான கர்வத்தோடு கூடிக் கொண்டு விளையாடி –
ஏனத் துருவாய் –நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை உடையனாய்
இடந்த இத்யாதி –அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த இந்த பூமியை –
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே -என்னும்படி
ஸ்வ ஸ்தானத்திலே வைத்தவனாலே இன்று முடிவுதோம் –
தரணி இத்யாதி-இப்படி நிமக்நையான பூமியை எடுத்தவனால் இன்று முடிவுதோம் –
இத்தால்
பிரளய ஆபன்னையான பூமியை எடுத்தவன் –எங்களை விரஹ பிரளயத்தே தள்ளா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் இன்று முடிவுதோம் -என்கை-

—————–

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா–ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-3-7-

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது
ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்(திருவாய் -1-8-) என்பது
இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது
மீனோடு ஆமை கேழல் (8 -10-10-) என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –
யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்
வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற
அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –

வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான
பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –
ஏனத் துருவாய்  இடந்த பிரான் –  ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்
திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற
அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே
பெரியாழ்வாரும் -எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே

————

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 -5-5 –

சப்த த்வீயாப்தி மஹீதரையான பூமி இடிய விழுந்து -கீழில் -அண்ட பித்தியோடே சேர்ந்து கிடக்க –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷம் கொண்டு –
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட –(திருவாய் -7-4-3-ஆழி எழ )என்கிறபடியே –
மாறுபாடு உருவக் குத்தி அண்ட பித்தியினின்றுமொட்ட விடுவித்து –
ஆகாசத்தில் ஏறிட்டு -திரு எயிற்றிலே தரித்த சக்திமானாய் –
தன்னை ஒழிந்த சமஸ்த பதார்த்தங்களும் தான் இட்ட வழக்காம்படி நடத்த வல்ல சர்வ நியந்தாவாய் –
அவற்றினுடைய சத்தை ஸ்வ அதீனமாம் படி இருக்கும் சர்வ காரண பூதன் ஆனவன்
(பூமி வம்ச–உத்தாரணம் – வராஹ கோபாலர்கள் )
இடவன் எழ வாங்கி எடுத்த மலை –
வேர் பற்றோடே ஒரு கட்டி போலே கிளரும்படி வாங்கி எடுத்துக் கொண்டு நின்ற மலை –
இடவன் எழப் பறித்து என்னுதல்-பேர்த்து என்னுதல் செய்யாதே–வாங்கி என்கையாலே-அனாயேசன எடுத்தமை சொல்லுகிறது
பர்வதங்களோடே கூட பாதாள கதையான பூமியை -திரு எயிற்றிலே குத்தி ஓட்டுவித்து
எடுத்த சக்திமானுக்கு -ஒரு கட்டியை இடந்து எடுத்தால் போலே
இம் மலையை இடந்து எடுக்கையில் ஓர் அருமை இல்லை இறே –

————-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

அழகாலும் வடிவில் பெருமையாலும் மனஸ்ஸாலே பரிசேதிக்க ஒண்ணாத படி இருக்கையாலே
அத்வீதியமான மகா வராகமாய் இருநிலம் புக்கு இடந்து
மகா ப்ர்த்வியை பிரளயத்திலே முழுகி அண்டப்பித்தி யினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து –
தன்னுடைய அபிமான அந்தர்பூதையான பூமியை இப்படி பிரளயத்தின் நின்றும்
எடுத்தமையை கண்ட ஹர்ஷத்தாலே -அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி வந்து அணைக்க –
அழகியதாய் கறுத்து இருந்துள்ள திருக் குழலை உடையவளோடு கலந்தவனைக் கண்டார் உளர் –

——–

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே
புருடோத்தமா-=ஒவ்தார்யம்-அதாவது-அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை
என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
இவர்கள் கேடு போனால் தன் கேடு போச்சுதாக நினைத்து இருக்கை

——-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-

வலிதான எயிறுகளை உடைய வராஹமுமாய் –
எயிற்றுக்கு வன்மை யாவது -ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட -என்கிறபடியே
அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை மறுபாடுருவ குத்தி இடந்து எடுத்து
தன் பக்கலிலே தரிக்க தக்க பலம் -கேழலாக வேண்டிற்று –பிரளயம்கதையான பூமியை
எடுக்கும் போது நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவு கொண்டு எடுக்க வேண்டுகையாலே
நீரும் சேரும் காண பணைக்கும்படி இறே வராஹா ஜாதி இருப்பது
ஆய் என்றது அவ் அவதாரத்தில் புரை அற்று இருக்கை
மாயா மிருகத்தை மோந்து பார்த்து -ராஷச கந்தம் உண்டு -என்று வெருவி ஓடி போயிற்றின இறே
மற்று உண்டான மிருகங்கள்
அப்படி இன்றிக்கே சஜாதீயங்கள் மோந்து பார்த்து -தன்னினம் -என்று விச்வசிக்கும் படி இருக்கை
மனுஷ்ய யோனியில் அவதரித்த இடத்தில் -ஈச்வரத்வ அபிமான கந்தம் அற்று
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்று இருந்தால் போல் ஆய்த்து
திர்யக் யோநியில் அவதரித்தாலும் இருக்கும்படி –
மானமிலா பன்றியாம் -என்றார் இறே இவர் திருமகளார்
மானம் இல்லாமை யாவது -ஈச்வரத்வ அபிமானம் மறந்தும் இல்லாதபடி இருக்கை
வராஹா கல்பம் வாசியா நிற்க செய்தே -ஸ்ரீ வராஹா நாயனாருக்கு முத்தக்காசை அமுது செய்விப்பது
என்று கிடந்ததாய்-இது என்ன மெய்ப்பாடு தான் -என்று நஞ்சீயர் வித்தராய் அருளுவர் -என்று பிரசித்தம் இறே

————-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

பிரளயங்கதையாய் அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை உத்தரிப்பிக்கைக்கு ஈடான ஸ்ரீ வராஹ அவதாரமாய்

———

கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –

சர்வ லோகங்களும் பிரளயத்தில் அகப்பட -ஊன்றி இடந்து எடுத்து–தானத்தே வைத்தானால் –
என்கிறபடியே ஸ்வ ஸ்தானத்திலே வைத்தான் என்கை
கொள்கையினானே -இது தான் ஸ்வபாவம் ஆனவன் என்கை –

———

எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப்பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –

பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே -சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –
யிராப்பகலா –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –
ஓதுவித்து– என்னை சிஷிப்பித்து –
அதாவது -கர்ப்ப வாசமும் –இந்திரிய வச்யத்வமும் -கர்ம வச்யத்வமும் -யம வச்யத்வமும் – த்யாஜ்யம்
என்னும் அத்தை அறிவித்து
கீழில் பாட்டில் சொன்ன
தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் -நிரதிசய போக்யதையும் -தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம்
என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து
பயிற்றிப் –
இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி –செய்யேல் தீ வினை -என்று
பணி செய்யக் கொண்டான் –
ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி –
நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –
பண்டன்று –
இந்திரியங்களுக்கு சேஷ வர்த்தி பண்ணிப் போந்த பண்டு போல் அன்று
என்னை ஆளும் வன் கோ -என்னக் கடவது இறே
பட்டினம் காப்பே –
இந்த ரஷை உண்டாகையாலே -என் கோலாடி குறுகப் பெறா -என்கிற அர்த்தத்தை சொல்லுகிறது
இராப்பகல் என்று -மூதறிவாளர் படியாய்
திவாராத்ரி விபாகம் அற்ற படியால் அகால கால்யமான தேசம் போலே -என்றபடி –

———-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

பூமியானது பிரளயம் கொண்டு நீர்ச் செழும்பு ஏறிக் கிடந்ததாய்த்து -பாசி ஏறிக் கிடந்ததாய்த்து
இது தான் இதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பில் ஏறின அழுக்காய் இருக்கும் இறே -இது அவளுக்கு பிரகாரம் ஆகையாலே
ரசிகராய் இருப்பார் பிரணயிநிகள் உடம்பு அழுக்கு ஏறி இருக்க தங்கள் உடம்பு பேணிக் குளித்திரார்கள் இறே
அப்படியே ஸ்ரீ பூமிப் பிராட்டி உடம்பு அழுக்கு ஏறின வாறே தானும் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டான் யாய்த்து
பண்டு ஒரு நாள் –சம்ச்லேஷித்த -அன்றும் ஒரு நாள் -விச்லேஷித்த -இன்றும் ஒரு நாளே தான் –

மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை –அழுக்கு உடம்பு -திரு விருத்தம் -1–என்று சொல்லுமவர்கள்
உடம்பு அளவிலும் அன்றிக்கே தேஹாத்மா அபிமானம் பண்ணி உடம்பையே விரும்பி இருக்குமவர்கள் உடம்புக்கும் அவ்வருகே
யாம்படி ஆக்கினான் -முமுஷூக்கள் படியும் அளவு அன்றிக்கே சம்சாரிகளிலும் காட்டிலும் தாழ்வாய் -என்றபடி –
உடம்பு அழுக்கு ஏறிற்று என்று லஜ்ஜிக்க வேண்டாத ஜென்மத்தை யாய்த்து ஏறிட்டுக் கொண்டது –
மானமிலா-
அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் –ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றும் சொல்லும் அளவு அன்றிக்கே
தாரக த்ரவ்யங்களும் வேறுபட்டு -அஜ்ஜாதிக்கு அடைத்தவையே – தாரகமுமாய் -ஸ்வ பாவமுமாய் யாம்படியாக வாய்த்து
அவற்றோடு தன்னை சஜாதீயம் ஆக்கின படி
முத்தக்காசை -கோரைக் கிழங்கை -அமுது செய்யும் படி இ றே தாழ விட்ட படி –
மாயா மிருகத்தைக் கண்டு -அல்லாத மிருகங்கள் மோந்து பார்த்து வெருவி ஓடின-விறே –
அப்படி அன்றிக்கே
சஜாதீயங்கள் மோந்து பார்த்தாலும் -நம்மினம் -என்று மருவும்படி யாய்த்து –
மானமிலா –-ஈஸ்வர அபிமானம் வாசனையோடு போனபடி
பன்றியாம் தேசுடை தேவர்
ஆஸ்ரீத அர்த்தமாக தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ் ஸூ
தனக்கு வேண்டு உருக் கொண்டு –திருவாய் மொழி -6-4-7-என்கிறபடியே
இச்சா க்ருஹீதமான வடிவாகையாலே எறித்து இருக்கும் இ றே ரஷகத்வம் –
திருவரங்கச் செல்வனார்
அவ்வதாரத்துக்கு உதவினோம் இல்லை என்கிற இழவு தீரும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவர்
அடிமை கொள்ளுவதற்க்காக-என்றே பள்ளி கொண்டு அருளுகிறான்

———

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -பெருமாள் திருமொழி-2-3-

ஸ்ரீ பூமிப் பிராட்டியோட்டை சம்ச்லேஷத்துக்கு இடைச்சுவரான விரோதியாய் -அவர்களுக்கு பிரகாரமான பூமியை
பிரளயம் கொள்ள உதவிற்றிலன் என்னும் அவத்யம் வாராத படி மஹா வராஹமாய் அண்ட புத்தியிலே புக்கு
ஒட்டின பூமியை ஒட்டு விடுவித்து–இவ்வபதானங்களைச் சொல்லி ப்ரீதி பிரகர்ஷத்தாலே பாடி –
காவேரி பெரு வெள்ளமாய் மலைப் பண்டம் கொண்டு வருமா போலே அமைக்க நில்லாதே கடல் குடமாக
வெள்ளம் இடுகிற கண்ணீரைக் கொண்டு
அங்குப் பாங்காக திரு அலகு பணி செய்து வைத்தால் இவர்கள் கண்ணா நீராலே சேறாக்குவார்கள் யாய்த்து
அமங்கலமான புழுகு நெய்யாலே அலங்கரித்து உள்ள தோஷம் தீர மங்களார்த்தமான ஸ்ரீ வைஷ்ணவர்களின்
திருவடிகளில் அழகிய சேற்றை யணிவன்-

———–

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே -திருச்சந்த விருத்தம்–28-

ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே

——–

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

முன் ஏனமாகி –
ஸ்ரீ வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே -அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து –
பரப்பை உடைத்தான பூமியை –
அத்தை எடுக்கைக்கு ஈடான செருக்கை உடைய மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு-
(ஸ்வேத வராஹ கல்பம் -28-மனுவில் நாம் உள்ளோம் -ஒவ் ஒரு மனுவுக்கு -71-சதுர் யுகம் -இதன் ஆதியில் -)
நமஸ்தஸ்மை வராஹாய லீல யோத்த்ரதே மஹம் குர மத்யகதோ யஸ்ய மேரு கணா கணா யதே –
என்கிறபடி வளர்ந்த திரு மேனி யாகையாலே –
அன்று இணை யடி யிமையவர் வணங்க-
அப்போது அந்த உளை மயிர்களிலே-பிடரி மயிர்களிலே – ஒதுங்கிக் கிடந்த ப்ரஹ்மாதிகள்
சேர்த்தி அழகை உடைத்தான -திருவடிகளை ஆஸ்ரயிக்க –
ஸூ கவி கடஸடா ஸங்கமை -என்னக் கடவது இறே-
உத்திஷ்ட தஸ் தஸ்ய ஜலார்த்ரகுஷேர் மஹா வராஹஸ்ய மஹீம்
ப்ரக்ருஹ்ய விதிர்ந்த்வதோ வேத மயம் சரீரம் ரோமாந்த்ரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி -என்னக் கடவது இறே –
ஜலார்த்ரகுஷேர்-பாசி தூர்த்த-இத்யாதி என்றபடி

——-

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்
வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்துறை கின்ற
ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே -2-6-3-

பழைய வடிவை அழித்தான்-
அபிமத விஷயத்தோடே கலக்கைக்காகஅவர்கள் உகக்கும் படியே ஒப்பிப்பாரைப் போலே –
படுக்கைப் பற்றை நோக்கி பிரதான மகிஷிகள் பக்கல் முகம் பெறுவாரைப் போலே
மஹா வராஹமான வடிவில் எழிலைக் காட்டிஇவள் எழிலைக் கொண்டான் –
(கோல வராஹம் ஒன்றாய் -பெரும் கேழலார் -புண்டரீகம் )
பூமிப் பிராட்டி உடைய விபூதியை பிரளயம் கொள்ள-அத்தை எடுக்கைகாக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு வந்து எடுத்து நோக்கி
நித்ய ஸூரிகள் நடுவே ஓலக்கம் இருக்கக் கடவன்
இவ் வடிவைக் கொண்டது நமக்காக விறே என்று-அந் நீர்மையிலே தோற்று எழில் இழந்தாள் ஆயிற்று –

———–

திவளும் வெண் மதி போல் திரு முகத் தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
வவளும் நின்னாகத்திருப்பது மறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
குவளை யங்கண்ணி கொல்லி யம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த
விவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே–2-7-1-

கலங்கா பெரு நகரில் புகப் பெறாதே(கலங்கா பெரு நகர் காட்டுவான்0 மூன்றாம் திருவந்தாதி )
கை கழியப் போனாரும்-பிழைக்கைக்காக திருவிட வெந்தையிலெ
வந்து நிற்கிற என் குல நாதன் ஆனவனே பின்னானார் வணங்கும் -என்கிறபடியே
(பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழிக் களத்தான் )-சொல்லு என்று கிரியை

இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-2-

இவளுடைய பிரகிருதி அறிந்து கலக்கைக்காக திருவிட வெந்தையில் வந்து எழுந்து அருளி இருக்கிற நீ
உன்னுடைய திரு உள்ளத்தாலே நினைத்து இருக்கிறது என் –

ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இட வெந்தை யெந்தை பிரானே -2-7-3-

நை வார்த்தைர் ந ச பூஷணை-( ராக்ஷஸிகள் மத்யம் சீதாப்பிராட்டி புலம்பல் ) -என்னும்படி பண்ணுகைக்குகோ
நீ இங்கே வந்து இருக்கிறது-ராம அவதாரத்தில் இழவு தீர்க்கைக்கு அன்றோ இங்கு வந்து இருக்கிறது

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-4-

கிடையாதது தான் என்றால்-கிடைக்கும் அதில் போலே சாபலத்தை பண்ணுமவள்
பொன்னுக்கு-இவளும் தன் சாபலமும் பட்டது படுகிறாள் என்று ஆறி இருக்க ஒண்ணாத படி இருக்கும் மகள் –
இடவெந்தை – உக்தியாலே தன் சாபலம் தோற்ற இருக்கிற இவளைப் போல் அன்றிக்கே
கிரியையாலே சாபலம் தோற்ற இருக்கிற நீ நினைத்து இருக்கிறது என்
(கிரியை-இடந்து எடுத்து இடது பக்கம் வைத்துள்ளாய் )

ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

ஆசைப்பட்டாய் இறே — அழகிதாய உண்டாயுது இறே என்று ஏசுகிற சத்ருக்கள் முன்பே –
வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
த்வத் அக்ரே சரணாகதானாம் பராபவ ந தே அநுரூப-ஸ்தோத்ர ரத்னம்
உகவாதார் முன்பே நம்முடையார் நோவுபட விட்டுப் பார்த்திருக்குமது நமக்கு போராது என்று இருக்கக் கடவ நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என் –
நதேநுரூப-நாத ந அநுரூப -ஸ்தோத்ர ரத்னம்
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆகில் போரும் என்னவுமாம் –இப்படி கைவிட்டு இருக்குமது உமக்கு போராது-

என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-6-

இவளுடைய
வை வர்ண்யமும்
அத்யாவச்யமும்
செல்லாமையும்
வடிவு அழகும்
பிறப்பும்
இருந்தபடியாலும் உமக்கு உதவாது ஒழியப் போமோ-
இடவெந்தை யெந்தை பிரானே –
இவளைக் காட்டில் உமக்கு உண்டான வைவர்ண்ய உத்யோதகம் இறே திருவிடவெந்தை யில் இருப்பு –
உடம்பு வெளுப்பு அன்றாகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்க அமையும் இறே –
உம்முடைய வைவர்ண்யம் தோற்ற திருவிடவெந்தையில் எழுந்து அருளி இருக்கிற நீர்
இவளிடை யாட்டத்தில் நினைந்து இருந்தது என்-
(தேவிகளைப் பிரிந்து விரஹத்தால் அன்றோ ஸ்ரீ பூ வராஹப் பெருமாள்
மகாத்மாக்கள் பிரிந்து இருக்க முடியாத மார்த்வம் உமக்கும் உண்டே )

இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

நீர் வில்லை முறித்துச் சென்று கைப்பிடித்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளிலும் இளையவள் இவள் –
உம்மைப் பிரிந்தால் அவளைப் போலே
சமா த்வாதச தத்ராஹம் –அமானுஷன் போகான் -யென்று ஆசை இட்டு தரிக்க வல்லவள் அன்று
இப்படி பருவம் இளையாள் ஆகில்
முன்பே சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தம் ஆகில் அன்றோ இப்படி படக் கடவது என்றில் –
இயற்கையிலே அவள் கலந்து வைக்குமே – அத்தை தாயார் அறியாளே-
என் இத்யாதி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளைக் கை பிடிக்கைகாக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே
விட்டுக் கொண்டு இருந்தால் போலே
இவளைப் பெறுகைகாக
திருவிடவெந்தையில் விட்டுக் கொண்டு இருக்கிற நீர் இவள் விடை யாட்டத்தில் என் நினைந்து இருந்தீர் –

இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-8-

கீழ் சொன்னதுக்கு எல்லாம் மேலே அழகிதான தோள்களை உடையளான இவளுக்கு –
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னும்படியே
உனக்கு தகுதியாம்படியாய் இருக்கிற இவளிடை யாட்டத்தில் நீர் நினைத்து இருக்கிறது என்-

என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-

தாய் கை விட்டமை தோற்ற சொல்லுகிற வார்த்தை – இவளுக்கு எவ்வளவாக தலைக் கட்டக் கட்டவதோ –
தாய் கை விடுதல்
தான் கை விடுதல்
செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி

என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை–2-7-10-

ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில்
வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

——–

இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்—திருவயிந்திரபுரமே–3-1-1-

இத்தை பிரளயம் கொண்ட இடத்தில் சேதனருக்கு உறுப்பாகாத ஆகாரமே ஆயிற்று திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது
கார்யம் தெரிந்தவாறே தன்னை அழிய மாறினான்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ விக்ரஹத்தைப் பரிகரித்தான்
வளைந்த கொம்பில் அகவாயில் ஏக தேசத்திலே அடக்கினான் –
இத்தால் ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகனுடைய பாரிப்பைச் சொன்னபடி
இது ஸூரஷிதம் என்று திரு உள்ளத்தில் பட்டவாறே-கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –

———-

வையணைந்த நுதிக் கொட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-3-

கூர்மை மிக்கு இருந்துள்ள முனையை உடைய கொம்பை உடைத்தான அத்விதீய மகா வராஹமாய்
பூமிப்பரப்பு அடைய இடந்து எடுத்துக் கொண்டு
ஈஸ்வரத்தால் வந்த செருக்காலே மத கார்யமான வ்யாபாரங்களைப் பண்ணி
(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)

———

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8

சிலம்பினிடை இட்ட சிறு பரல் போலே–பெரிய மகா மேருவானது
திருக் குளம்பிலே-மேரு கணா கணாயதே-என்னும்படியே கண கணப்ப
(பெரும் கேழலார் மஹா வராஹ ஸ்புட பத்ம விலோசன )
திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி இருக்கும் இருப்பு குலுங்கும்படிக்கு ஈடாக
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி
கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்

——–

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்
விபூதியும்-அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்–யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும் எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி உடைத்தாய்–நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-

———

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு பூமியை இடந்து எடுத்து

——-

வராக மதாகி யிம் மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

பூமியை பிரளயம் கொள்ள பிறப்பே பூமியை யிடக்க வல்ல -ஒட்டு விடுவிக்க வல்ல-வராஹமாய் பூமியை இடந்தாய்-
நாராயணனே – பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே-

———

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை–4-10-10-

வராஹ கல்பத்தின் ஆதியிலே–முன்–அண்ட பித்தியிலே ஒட்டின பூமி உரு மாய்வதற்கு முன்பே
ஏனமாகி –மகா வராஹமாகி
அன்று –அன்றைக்கு நான் உதவப் பெற்றிலேன் என்னும் அர்த்தத்திலே
ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை-
பூமியை இடந்து-திரு எயிற்றினில் கொண்டு–அந்த ஸ்ரமம் ஆறும்படியாக–கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து-திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –

————

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

இலை யகன்ற வேல் போலேயாய்-தர்ச நீயமாய் இருக்கிற திருக் கண்களை உடையாளாய்
ஷமை துடக்கமான ஆத்ம குணங்களால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –
முந்நீர்ப் பரப்பில் –பிரளயத்தில் அகப்பட நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனே –
எனக்கு அருள் புரியே –அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு
அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை பெரிய பணியோ –

——-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு ஏறுகைக்காக வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்
அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்
மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்
இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்
நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

———

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

பூமியை பிரளயம் கொண்ட அன்று ஏனமாய் இத்தை இடந்து எடுத்து –
இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானைத்-
பூம் யந்தரிஷாதிகள் அடைய தான் என்ற சொல்லில் அடங்கும்படி இத்தை பிரகாரமாக உடைய சர்வேஸ்வரனை –
தன் அடியார் மனத்து என்றும் தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை
ஒருவன் காலில் முள் பாய்ந்தால் சரீரி யானவன் நோவு படுமா போலே
ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம் படி இதுக்கு அபிமானியாய் இருக்கிற இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு சர்வ வித போக்யனாய்
அத்தாலே உஜ்ஜ்வலனாய்-இருக்குமவனை –

————

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

என்னுடைய துக்க நிவ்ருத்திக்கு நான் பட்டது பட அமையாதோ –
நானும் பிறவாத பிறவிகளை அன்றோ நீ வந்து பிறந்தது –(நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு )
அன்னமாயும்-வராஹமாயும்-செயலைக் காட்டி என் ஹிருதயத்தைக் கொண்டான் ஆய்த்து-
(என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் )
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா -என்று பந்த ஹேதுவான தன்னையே
மோஷ ஹேதுவாம் படி பண்ணி அருளினான் –
(யஜமான சம்ஹயை இத்யாதி –2-57-60-நான்கு ஸ்லோகங்கள் கீதையில் )

——

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

முன்பு வராக கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய் – அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை எடுத்துக் கொண்ட
ஏறின நீர்மையை உடையவனே –என்று மாறாதே சொல்லி-அந் நீர்மையிலே தோற்று-தேவர் திருவடிகளிலே அடிமை யானேன் –
திருவடியே துணை அல்லால் துணை இலேன் –
தேவர் திருவடிகளே எனக்குத் தஞ்சம் –வேறு ஒரு ஆஸ்ரயத்தை (அபாஸ்ரயத்தை) உடையேன் அல்லேன் –

——-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமான் உம்பாராளும்
அரனே ஆதி வராஹ முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே—7-7-4-

மேல் யுண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரிதா
ப்ரஹ்மா மாமாஸ்ரித்த ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -என்னக் கடவது இறே-
(பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம் )
ஆதி வராஹ முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே வராஹ கல்பத்தின் யுடைய ஆதியிலே
மகா வராஹமாய் வந்து அவதரித்து கண்ணுக்கு இலக்கை நின்று நோக்கினவனே-
(சகல மனுஷ நயன விஷய தாங்கதன் )
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அது தன்னை பழம் கதை யாக்கி இப்பொழுது இங்கே வந்து நிற்கிறவனே

——-

சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றியாகி
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம் மீசன் காண்மின்–7-8-4-

சிலம்பு துடக்கமான ஆபரணங்கள் பலவற்றையும் அணிந்து ஒரு மேருவானது நின்று விளங்குமா போலே
வராஹ வேஷத்தை உடையனாய் –
இலங்கு புவி மடந்தை தனை யிடந்து புல்கி எயிற்றிடை வைத்து அருளிய வெம்மீசன் காண்மின் –
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி –
அந்த பூமிக்கும் அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை அணைத்து- அந்த பூமி தன்னை திரு எயிற்றிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே வைத்து அருளின அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் கிடீர் –

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை-7-8-10-

ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –
பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை –-பூமியை சிருஷ்டித்து
பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து திரியவும் பிரளயம் வர -வயிற்றிலே வைத்து –
திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு
இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை
ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –

———

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்து அருளும் -ஏனத்துருவாய் கிடந்த ஞானப்பிரானே நான் கண்ட நல்லதுவே –
கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடைக் கொண்ட அம்மான்
ஞான வேத பிரதானம் -பாரங்கள் சுமந்து -மட்டும் இல்லாத இதன் ஏற்றம்
பூமிப் பரப்பு அடைய கடல் கொண்ட காலத்து வளைந்த கொம்பை கொண்ட ஏனமாய் –
ஏரார் உருவத் தேனமாய் –
ஆயிரம் பண்ணை பிரளயம் கொண்டால் ஆகாதோ இப்படி அழகு நிறைந்த வராஹ விக்ரஹத்தை
ஒரு கால் காணலாம் ஆகில் –
எடுத்த வாற்றல் அம்மானை-
அண்ட பித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய சர்வேஸ்வரனை –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

——-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

வெற்றியை உடைத்தாய் திண்ணியதாய் மலை போலே பெரிய வடிவையும் வெளுத்த எயிற்றையும் உடைத்தாய்
அக்னி கல்பமாய் ஜாதி உசிதமான வட்டணித்த கண்ணை உடைத்தான –
(நீல வரை இரண்டு பிறை கவ்வி -கோல வராஹம் )
வராஹமாய் பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் – பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –

——–

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்
ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும்-ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும்
(ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )

இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த ஜகத் காரண பூதனானவன் –
(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் )
திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –

——–

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்—குறுங்குடியே –9-6-3-

ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமாக கைக் கொள்ளும்
வடிவு ஒழிய தனக்கு என்ன ஒரு ரூபம் இல்லையாயிற்று –
செங்கண்-மா முகில் வண்ணர் மருவுமூர் –
மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே
(ஸ்ரீ யபதி கேசவன் புண்டரீகாக்ஷன் -எல்லா அவதாரங்களிலும் உண்டே )
காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

———

தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –11-4-3-

தர்ச நீயமாய்-கண்ணுக்கு குளிர்ந்து இருக்கும் சந்தரன் கண் வைக்க ஒண்ணாத சஹஸ்ர கிரணனான ஆதித்யன்
தேவர்கள் உபரிதன லோகங்கள் ஏழு உடன்
மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் –
மாதிரம் -யென்று – திக்கு-பூமிக்கு தாரகமான மேரு-அது போக்கி சேஷித்து நின்ற குல கிரிகள் ஆறும்
(ஸப்த குல பர்வதங்களும் என்றவாறு ) ஏழு கடலும் –
பாதமர் சூழ் குளம்பினக மண்டலத்தின் ஒரு பாலோடுங்க வளர் – இவை அடையத் திருவடிகளிலே சேர்ந்து
பரப்பை உடைய திருக் குளம்பில் அந்தர் வலயத்தின் ஏக தேசத்தில் அடங்கும் படி வளரா நிற்பானாய்-
(திருவடிகளிலே சேர்ந்து-ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -பரகத ஸ்வீ காரம்
பூமி போல் அசித் வத் பாரதந்தர்யம் காட்டினாலே போதுமே -நீ ரஷிக்க வேணும் என்று கூப்பிடவும் வேண்டாமே – )
சேர் ஆதி முன் ஏனமாகிய யரணாய மூர்த்தி யது நம்மை யாளும் அரசே –
அனுரூபஸ் சவை நாத – என்னுமா போலே–இதுக்கு அடைய தகுதியான காரணம்
வராஹ கல்பாதியிலே மஹா வராஹமாய் ரஷித்த திரு மேனி – அது நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹ வஸ்து –

————————-

கேட்க யானுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!—ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -4-

எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரமரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.

புஷ்பஹாச ஸூகுமாரமான வடிவை-மானமிலாப் பன்றி யாக்கி –
நிலம் கோட்டிடைக் கொண்டது – இந்தக் கழஞ்சு மண்ணும் அழிந்தால்
பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய்ச் செய்து அருளிற்றோ –இத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் –
பிரளயம் கொண்ட பூமி -தன்னை எடுக்க இறே -இவன் இதுக்கு உத்தரம் சொல்லுவது –
போதரக் கனவில் கண்டு –
மிகவும் நெஞ்சிலே கண்டு –இந்த்ரியங்களால் வ்யவச்சேதம் இன்றிக்கே அவயவதாநேன விசதமாக கண்டு –
கனவு -மானஸ அனுபவம்
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி –
மநோ வாக் காயங்களாலும்-ஸ்ரத்தையாலும்=மிக்க அபிநிவேசத்தை உடையவனாய் –
விழுங்கினேற்கு இனியவாறே –
விழுங்கி னேனுக்கு இனிதாய் இருந்தது –விழுங்குகை -அனுபவிக்கை –
எவ் விஷயங்களை அனுபவித்து ரசித்துப் போந்த எனக்கு எவ் விஷயம் ரசிக்கிறது –
விழுங்கினேற்கு இனியவாறே —
எனக்கு இனிதான வழி என் தான் –எவ் வழியாலே முடிக்கப் போந்த விஷயம்
எவ் வழியாலே இனிதாயிற்று –
இது இனிதான வழியை அருளிச் செய்ய வேண்டும் –
இதுக்கு அவன் என்ன உத்தரம் சொல்லுவது –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று
சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே –

இனிய வாறு கேட்க –நான் உற்றது உண்டு -என்று அந்வயம்

———

பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்–20–

பாராளன்-பூ பாரமான பாணனை அழியச் செய்கையாலே பூமிக்கு நிர்வாஹகன் ஆனவனே –
பாரிடந்து-தன் நிலை குலையாமல் நிற்கச் செய்தே வந்த ஆபத்தைப் போக்கி விட்ட அளவு அன்றிக்கே –
அவள் தான் பாதாள கதையான போது ரஷித்த படியை சொல்லுகிறது –
தன்னிலை குலையாமல் நின்று சங்கல்ப்பத்தாலே ரஷிக்கை அன்றிக்கே
ஸூரி போக்யமான வடிவை அழிய மாறி
தத் அனுரூபமான வடிவைக் கொண்டு பிரளயம் கதையான பூமியை உத்தரித்து –
கீழ் பிராட்டியை ரஷித்த படியைச் சொல்லிற்று –
இவை இரண்ட்டாலும் ஸ்ரீ பூமி பிராட்டியை ரஷித்த படியைச் சொல்கிறது –
பாரையுண்டு – பூமியை பிரளயம் கொள்ளப் புக அந்த ஆபத்தே ஹேதுவாக திரு வயிற்றிலே வைத்து ரஷித்து
பாருமிழ்ந்து –அவ் அபேஷையும் இன்றிக்கே இருக்க-தயமானமனவாய்க் கொண்டு சிருஷ்டித்து –
பாரளந்து – அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்-அந்ய சேஷத்வத்தாலும் ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –
பாரை யாண்ட –இப்படியால் பூமியை ரஷித்தவன் –உண்டு உமிழ்ந்து அளந்து இடந்து -என்னாதே
பலகால் பார் –என்கிறது-அவவவ அபதானங்களில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
பேராளன் – இப்படி ரஷிக்கைக்கு ஹேதுவான குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களுக்கு தொகை இல்லாதவன் –
இவளுக்கும் அத்தைப் பற்றி இறே திரு நாமத்தாலே சம்பந்தம் –

—————-

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மரா மரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ?–1-7-6-

பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று,
தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.
சர்வ-எல்லாப் பொருள்கள் விஷயமாகவும்-ஆஸ்ரித – அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை
நினைத்துப் ‘பிரான்’ என்கிறார்.-அதனை -உபபாதிக்கிறார் -விரிக்கிறார் மேல்:

பெரு நிலம் கீண்டவன் –
பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று,
சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்.- இது-சர்வ- எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் செய்த உபகாரம்.

பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –
நெருங்கத் தொடை யுண்டு-பரிமள பிரசுரமாய் – வாசனை மிக்குள்ளதாய், செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாய் மாலையாலே சூழப்பட்ட -திரு அபிஷேகத்தை -திருமுடியை யுடையவன்.
விரை – வாசனை. விராய் என்றது, நீட்டும் வழி நீட்டல் விகாரம்.
இனி, ‘மலர் விராய்’ என்பதற்கு, மலர்கள் கலந்த’ என்று பொருள் கூறலுமாம்.
இதனால், ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான் என்பதனைத் தெரிவித்தபடி.

————-

ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-

சர்வாதிகனான -எல்லாரினும் அறப் பெரியனான தான், இவற்றோடு ஒத்த ச ஜாதியன் ஆனான்.
இறைவன் ஒவ்வொரு கால விசேடத்திலே முறைப்படி பிறந்திருந்தும், அனுசந்தானத்தின் பதற்றத்தாலே
ஒரே காலத்தில் எடுத்த இரண்டு அவதாரங்கள் போன்று,‘மீனோடு ஏனம்’ என்று ஒரு சேர அருளிச் செய்கிறார்.
வடிவும் செயலும் சொல்லும் அவ் வக்குலத்திற்கு-தத் ச ஜாதியருக்கு அடுத்தவையாய் இருத்தலின், ‘ஆனான்; என்கிறார்.
இவை தாம் வித்யாவதாரங்கள். இவ் வவதாரங்களைப் பார்க்குமிடத்து,
மேற்கூறிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அயர்வறும் அமரர்கள் அதிபதியைப் போன்று இருப்பது ஒன்று அன்றே?

——-

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ள வேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார். -பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த- ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.
என்னுடை அம்மான் –சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்தவன்.

————-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-

கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் –
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தை பரிக்ரஹித்து -பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி
அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும் –
(ஸ்திரம் -யஜ்ஞ மூர்த்தி -மகா வராஹ-ஸ்புட பத்ம லோசனன் பெரும் கேழலார் –
நீல வரை -கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்)
தன்னுள் கரக்கும்
ரஷிக்க என்று ஒரு பேரை இட்டுக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாதே வயிற்றிலே வைத்து ரஷித்த படி –
உத்தர உத்தர ஆதிக்யம் சொல்லி –
கிடந்து-தொடங்கி-இடந்த —கரந்த -வயிற்றில் வைத்து ரஷித்த விருத்தாந்தம்
மேலொரு காலம் பிரளயம் வரும் -என்று ஏலக்கோலி -ஆராய்ந்து -பிரளயம் வந்தாலும் இங்குண்டோ என்று இளைத்துக் காட்டலாம் படி
முன்புத்தையது ஒன்றும் தெரியாதபடி வைக்கும்-

—————–

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–4-2-6-

ஏனமாய் –
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே,
ப்ரணயிநி- காதலி உடம்பு பேணாமல் கிடக்க,-ப்ரணயி – காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே?
ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே,
நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவையுடையவனாய்.
ஆதி –
வராக கல்பத்தின் ஆதியிலே.
அம் காலத்து –
அழகிய காலத்தில் . ரக்ஷகனானவன் -காப்பாற்றுகின்ற சர்வேஸ்வரன் தன் விபூதியைக் காப்பதற்காக-ரக்ஷணத்துக்காக –
கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது.
அகல் இடம் கீண்டவர் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினள் –
மஹா பிருத்வியை -பெரிய இவ்வுலகத்தை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறினவனுடைய திருவடிகளிலே
ரோமாந்தரஸ்தா முநயஸ் ஸ்துவந்தி ‘அந்த வராக நயினாருடைய மயிர்க் கால்களில் உள்ள மஹரிஷிகள் ஸ்துதி செய்கிறார்கள்,’ என்கிறபடியே,
‘சனகன் முதலானோர் இட்ட திருத் துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது.
இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.

—————-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

உண்டும் –பிரளய ஆபத்திலே திருவயிற்றிலே வைத்து நோக்கியும்.
உமிழ்ந்தும் –திருவயிற்றிலே யிருந்து நெருக்குப் படாதபடி வெளி நாடு காணப் புறப்பட விட்டும்.
கடந்தும் –மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.
இடந்தும் –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் அண்ட பித்தியிலே செல்ல முழுகி எடுத்துக் கொண்டு ஏறியும்,
மணம் கூடியும் –
பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க,
அவளோடே கலந்தும்.

———

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே–4-10-3-

இடந்தது –
பிரளயத்திலே அழுந்தி அண்ட பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹா வராஹமாய்ப் புக்கு
ஒட்டு விடுவித்து எடுத்து. இப்படிச் செய்த இவற்றை,
கண்டும் –
இவர்க்குப் பிரத்யக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறது காணும்.
தெளியகில்லீர் –
அதி மானுஷ சேஷ்டிதங்களை -மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக் கொண்டே
அவனே ஆஸ்ரயணீயன் -அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள்.
இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மை நிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின்,
கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய,
அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல், இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

———–

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கான் ஆர் ஏனமும் ஆய் –
சம்சார ஆர்ணவத்தில் -பிறவிப் பெருங்கடலில் நின்றும் என்னை எடுக்கைக்கு வராகத்தினது உருவத்தைக் கொண்டான்.
சோபயன் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா அத்ருஸ்யத ததா ராமோ பாலசந்த்ர இவோதித:- ஆரண். 38 : 15.
ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு
அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்” என்கிறபடியே,
காடு அடங்க மயில் கழுத்துச் சாயல் ஆக்கும் படியான வடிவை யுடையவன் என்பார்‘கானார் ஏனம்’ என்கிறார்.
காடு அடங்கக் கோலம் செய்தலைக் குறித்தபடி.
அன்றிக்கே, மனித சஞ்சாரம் இல்லாத காட்டிலே வாழ்கின்ற ஏனம் என்பார் ‘கானார் ஏனம்’ என்கிறார் என்னலுமாம்.

(தீ செங் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசிலா யிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்
ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்–என்ற பரிபாடல் பகுதியையும்,
இவை கூடும் ஊழி முடிவினுள் ஏழும் ஒன்றாகிய ஆழிக்கண் அழுந்துகிற நிலமகளை அழகிய வராகமாகி
மருப்பாற் பெயர்த்தெடுத்தோய்’ என்ற அதன் உரை)

—————-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே–5-6-1-

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக் காவலாக வைத்த கடல் தானே இதனை அழிக்க,
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும் யானே என்னா நின்றாள்.
அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்க வேணும்’ என்று விரும்பியது இல்லையே அன்றோ;
தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது.

——–

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்க லத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே–5-7-6-

ஏனமாய் நிலம் கீண்ட –
ஆபன்னரானார் -ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது.
ரக்ஷணம் -காத்தல் ஒரு தலை யானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய்,
சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய்.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-
பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமிக்கு உபகரித்தது -உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி.

என் அப்பனே கண்ணா –
என்னைக் காப்பாற்றுவதற்கு-ரக்ஷணத்துக்கு – ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ?
என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ?
கண்ணன் கோள் இழை வான் முகமே-திருவாய்மொழி, 7. 7 : 8. அன்றோ இவர்க்கு ரக்ஷகம்.
(என்னப்பனே கண்ணா” என்பதற்கு, வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில் வைத்து, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
என்னை’ என்று தொடங்கி. முகம் – வேறொரு பிரகாரமும், வராகத்தினது முகமும். கோலம்– வராகமும், அலங்காரமும்.)

———–

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

உனக்கு ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் பாதுகாப்பவன் அல்லையோ நீ!
ஆன பின்பு உனக்கு இது போருமோ?’
திரு அபிஷேகம் – தொடக்கமான திவ்ய ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ நீ,
உலகத்திற்கு எல்லாம் காரணனாய்ப் பரப்பை யுடைத்தான பூமியைப் படைத்து,
பின் பிரளய ஆபத்து வர வயிற்றிலே எடுத்து வைத்து,
அநந்தரம் வெளி நாடு காணப் புறப்பட விட்டு,
பின் மஹாபலி கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொண்டு,
பின் நைமித்திகப் பிரளயத்திலே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி,
இப் படிகளாலே சர்வ ரஷணங்களையும் செய்யுமவன் அல்லையோ?

தொண்டனேன் மதுசூதனனே –
இவன் ரஷகன் என்னுமிடத்துக்கு முன்னே ஒன்று தேடிச் சொல்ல வேணுமோ?
மதுவைப் போக்கினால் போலே நான் இந்திரியங்கட்குக் கட்டுப்பட்டிருத்தலை
இன்று இருந்து போக்கினவன் அன்றோ?
தன் படிகளைக் காட்டி எனக்குப் புறம்பு உண்டான வாசனையைப் போக்கி-
இன்று கைக்கு எட்டாதிருக்கிற இதுவே விறே குறை?

————-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே–7-4-3-

மஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார்
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-
ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது,
ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே, ஒன்றும் நாலாதே முன்பு போலே
ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் -தன் தன் இடத்திலே கிடக்கும்படி.
இவன் பெரிய யானைத் தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற,
உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.
ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்குஒரு குறை வாராதே.
ஸப்த -ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின.

பின்னும் –
அதற்கு மேலே,

நான்றில ஏழ் மலை தானத்தவே –
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல்
தன் தன் இடத்தில் நிற்கும்படி. என்றது,
ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி.

பின்னும் பின்னும்’
என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு வியாபாரமே -செயலே அமையும் கண்டீர்!
அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக.

நான்றில ஏழ் கடல் தானத்தவே –
அவை தாம் கடினத் தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ?
அதுவும் இல்லை அன்றோ இதற்கு? நீர்ப் பண்டம் அன்றோ தண்ணீர்?
அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக.
அவற்றின் கடினத் தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை;
அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.
இவை இப்படிக் கிடத்தல் அவன் அவஹீதானாயக் கொண்டு -குறிக்கோளுடையவனாய்க்
கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில்,

ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-
மாறுபடுருவத் தைக்கும் படியாகக் குத்தி. அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு,
எயிற்றிலே எற்றிக் கொண்டு வ்யாபாரித்த -செயல் செய்த போது:
மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே.
அவன் இப்படி முக்யமாகக் ரஷிக்கப் புக்கால் அவை சலிக்கமோ?
அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியற ஸ்வ ஸ்வ ஸ்தானத்தில் தம் தம் இடத்திலே நின்றன-

————-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7-5-5-

உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள
மஹா வராகமாய் எடுத்து ரஷித்த குணத்துக்கு?’ என்கிறார்.
சூழல்கள் சிந்திக்கில் –
தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில்.
தாங்கள் தாங்கள் அபிமதங்கள் -விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில்.

மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரக்ஷணம் -ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும்
ஆச்சரியத்தை யுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ?

ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை –
ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல்.
பெரும்புனல் தன்னுள் ஆழ -அழுந்திய பூமி’ என்னுதல்.
அழுந்திய ஞாலம் –
அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி.

தாழப்படாமல் –
தரைப்படாமல்; மங்காமல். என்றது,
உள்ளது கரைந்து போனபின்பு இனிச் சத்தையும் கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி.

தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட –
மஹா பிருத்வியை -பெரிய பூமியைத் தன் எயற்றிலே நீலமணி போலே கொண்ட; –
தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட.-உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து
நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே,
ரஷ்யத்தின் அளவு -அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை;
முகாந்தரத்தாலே -வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி
தான் கொண்ட
கரைந்து போன பூமி அர்த்திக்க -வேண்டிக் கொள்ளச் செய்தது -அன்று ஆதலின்-தான் கொண்ட- என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று –
அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி.
ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அது தானே
நிறம் பெறும் படியாய்க் காணும் இருப்பது;
மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே.
மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக் கொண்டு.
மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாம் தன்மை பின்னாட்டாதபடி இருக்கை.
தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்று நம்பும்படி அக வாயில் புரை அற்று இருக்கை.
மாரீசனாகிய மாய மானை மோந்து பார்த்து ‘ராக்ஷஸ வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்?
பன்றியாம் தேசுடை தேவர் – இவ்வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்கு மத்தனை யன்றோ.
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக் காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’
கேட்டும் உணர்ந்துமே-
ஸ்ரவண மனன -கேட்டும் மனனம் செய்தும், அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி
சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ,
பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

—————–

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்கு றைந்தது கடைந் தடைத் துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

உயிர் நீராய் இருக்க நான் என்ன சாதனத்தை செய்து-அனுஷ்ட்டித்து – வந்து கிட்டுவேன் -என்றது –
சரீரத்தை காப்பது -ரஷிப்பது- ஆத்மாவின் கார்யம் அன்றோ
சரீரம் தன்னை தானே ரக்ஷித்து பாதுகாத்துக் கொள்ளவா -என்றபடி –
சம்பந்தம் மாத்ரமேயோ -அனுஷ்டானமும் இல்லையோ -என்கிறார் -மேல் –

அகல் இடம் முழுதும் படைத்து-இடந்து -உண்டு -உமிழ்ந்து -அளந்த பெரியரேயோ –
பஹுச்யாம் -தைத்ரியம் –பல பொருள்களாகக் கடவேன் –என்று பூமிப் பரப்பு அடங்கலும் ஸ்ருஷ்டித்து -உண்டாக்கி
பிரளயத்தில் நோவு பட மகா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி –
மீண்டும் பிரளயம் வர வயிற்றில் வைத்து நோக்கிக் கொண்டு –
உள்ளே கிடந்தது தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து
மகா பலியாலே கவரப்பட்ட நிலையிலே எல்லை கடந்து நடந்து மீட்டு
இப்படி அந்த துர் தசையிலே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அபேஷா நிரபேஷமாக -விரும்புவார் இல்லாது இருந்தும்
உணர்ந்து நோக்கும் நீயே இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாமா

————

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே –
விஸ்த்ருதமான அகன்ற பூமியை உண்டாக்கி
பிரளயம் கொண்ட பூமியை மஹா வராகமாய் எடுத்தானும் அவனே
அவனே -என்ற ஏ காரத்தால்
படைத்தல் முதலான கார்யங்களில் ஸஹ காரி நைரபேஷ்யம் -வேறு
துணைக் காரணம் இல்லாமையைச் சொல்லுகிறது –

———-

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம – தஜ்ஜலான் எல்லா பொருள்களும் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன –
தத் த்வம் அஸி -அது நீ ஆகின்றாய் –
என்றும் சொல்லக் கடவது அன்றோ –

தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –ஆகையாலே
தானே உலகு எல்லாம் -என்கிறது –

தஜ்ஜலான்
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்
தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாதரம்
ஸ்வேன ரூபேண நின்று ஸ்திதிப்பிக்க வேண்டுகையாலே –
இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று
சரீர ஆத்மா பாவத்தால் சொல்லுகிறது –
காரணனாய் இருக்கும் தன்மையை சொல்லில்
விகாராஸ் பதமாம் -வேறு படுகின்ற விகாரங்களுக்கு இடமாம் என்று சங்கித்து
சரீர ஆத்மா பாவத்தாலே சொல்லுகிறது
சரீரத்துக்கு உளதாகும் பால்யம் யௌவனம் முதலானவைகள்
ஆத்மாவை அடையாதது -தட்டாதது -போன்று
இவற்றைப் பற்றி வரும் விகாரங்கள் அவனுக்கு வாரா
என்று தோஷ அஸ்பர்சம் -குற்றம் தீண்டாமை சொல்லுகைக்காக சொல்லுகிறது

தானே படைத்து –
தம பர தேவ ஏகீ பவதி -சுபால உபநிஷத்
மூலப் பிரகிருதி பரம் பொருளில் ஒன்றுகிறது -என்கிறபடியே
ஸூஷ்ம சித் அசித்துக்களை சரீரமாக உடைய –சரீரியான தானே எல்லா உலகங்களையும் உண்டாக்கி –
அசித்தினும் வேறுபடாத நிலை உடைத்தாகையாலே-அசித் விசேஷிதமான தசையில் –
அபேக்ஷிப்பாரும் – விரும்புவாரும் இன்றிக்கே-
தயாமானமநாவாய் – அருள் உடையவனாய் தானே இறே உண்டாக்கினான்

தானே இடந்து –
ப்ரளயங்கதையான- பிரளயத்தால் மூடப் பட்ட பூமி -என்னை எடுக்க வேண்டும் -என்று
அபேக்ஷிக்கை அன்றிக்கே -விரும்பியதால் அன்று –நஷ்ட உத்தரணம் அழிந்த உலகத்தை நிறுத்தியது

தானே உண்டு –
பிரளயம் வர புகுகின்றது என்று அறிவார் இலரே

உமிழ்ந்து –
உள்ளே கிடந்தது நோவு படும் இத்தனை அல்லது
எங்களை வெளிநாடு காணப் புறப்பட வேண்டும் -என்று இரவாது இருக்க தானே உமிழ்ந்து

இப்படி சர்வ ரக்ஷணங்களையும் -பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே
தானே உலகு எல்லாம் –
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-

—————–

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக் –
ஒரு அஞ்சன கிரி -நீல மலை இரண்டு பிறையைக் கவ்வி நிமிர்ந்தால் போலே
பிறையில் மறுவைப் போன்றதாயிற்று -திரு எயிற்றில் கிடந்த பூமி –

கோல வராகம் –
மாசு உடம்பில் நீர் வாரா நின்ற நிலை அன்றோ
இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயம் ஆயிற்று
அன்றிக்கே
பாசி தூரத்து கிடந்த பார் மகள் -என்கிறபடியே
பிரணயிநி காதலி அழுக்கோடு இருக்க
தாமான படியே வருவார் ஆகில் பிரணயித்வத்துக்கு
காதலுக்கு நமஸ்காரமாம் -குறைவாம் இத்தனை அன்றோ –என்னுதல்-
அவன் அழிவுக்கு இட்ட வடிவிற்கே அன்றோ இவர் ஆலத்தி வழிக்கிறது

ஒன்றாய் –
வராகத்த்தின் ஜாதீய மாதரம் -இனத்தோடு சேர்ந்ததாய் -என்னுதல்
மூன்று உலகங்களையும் கண் செறி இட்டால் போலே -மறைத்தால் போலே
விம்ம வளர்ந்த படியாலே அத்விதீயம் -ஒப்பு அற்றதாய் -என்னுதல்-

நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் –
பிரளயம் கொண்ட பூமியை அண்டத்தின் உடைய சுவரிலே புக்கு
திரு எயிற்றிலே கொண்டு எடுத்தால் போலே-சம்சார ஆர்ணவம் –
பிறவிக் கடலிலே மூழ்கின என்னை எடுத்தவனே –

———————————–

முதல் திருவந்தாதியில் -ஆறு -பாசுரங்களில் ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே –

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்–ஸ்ரீ முதல் திருவந்தாதி–2-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மா வடிவில் நீ யளந்த மண் –9-

பொரா நின்ற கோட்டை உடைத்தான அத்விதீயமான வராஹமாய்
கண்ட விடம் எங்கும் இடந்து கொண்டு வருகிற படி –
ஒரு காலும் பொராது இருக்க மாட்டாத ஜாதி பிரயுக்தமான ஸ்வ பாவம் இருக்கிறபடி
பூமியைப் பொராத போது பிராட்டி திரு முலைத் தடத்தில் குங்குமத்தை யாகிலும் இடந்திடா நிற்கும் –
ஓர் ஏனம் –
அழிவுக்கு இட்ட உடம்புக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை-
புக்கு இடந்தாய்க்கு –
அண்ட பித்தியிலே புக்கு ஒட்டிக் கிடக்கிற இத்தைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறின படி
முத்துக்கு முழுகுவார் சுற்றுக் கோணம் கொண்டு எடுக்குமா போலே
அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –
நீ எப்படிப் பெரிய பாரிப்போடே கூட அன்று எடுத்த பூமி யானது
உன் திரு எயிற்றிலே ஒரு நீல மணி அழுத்தினால் போலே யன்றோ கிடந்தது
இத்தால்
ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது
உதாரராய் இருப்பார் ஒருவருக்கு உண்ணச் சொன்னால் ஒன்பது பேர்க்குச் சோறு சமைக்குமா போலே –

——-

கேழலாய்ப் பூமி இடந்தானை யேத்தி எழும் —-25-

மகா வராஹமாய் புக்கு அண்ட பித்தியில் ஒட்டின இத்தைக் கீண்டு
பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி உஜ்ஜீவியா நிற்கும் –

———

இடந்தது பூமி—-வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது–39-

பிரளய ஆபத்து பிரஸ்துதமான பின்பு பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்
பிரளய ஆபத்தில் வந்த நலிவு தீர்த்த படி –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகு-திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –

——-

பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

இப்படித் திரு உலகு அளந்து அருளின் அன்று என் ஸ்வாமி யான உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது
இன்று வராகத்து எயிற்று அளவு போதாதவாறு என் கொலோ
இப்போது திரு எயிற்றுக்கு ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ
ஒரு நாள் போந்த பூமியானது-ஒரு நாள் போராது ஒழிவான் என்-இது என்ன பாரிப்பு தான் -என்கிறார்
நான் ஒருவனுமே உன் குணங்களிலே குமிழ் நீருண்ணா நின்றேன்-என்கிறார் –

————

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-

தன் விபூதி அழிய தன்னைப் பேணி இருக்கை அன்றிக்கே தன்னை அழிவுக்கு இட்டு நோக்கும் ஸ்வ பாவனானவன்
திருவடிகளிலே நாடோறும் வாசனை பண்ணாதார்க்கு நித்ய விபூதி உண்டாமோ –
நாடோறும் –
நாடோறும் ஏக சிந்தையனாய்-ஏனத்து உருவாய்
உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –
ஊழியான் –
நாம் இல்லாத காலத்து உளனாய் நம்மை ரஷிக்குமவன்

சீயர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்து இருப்பார் பெரிய கோயில் தாசர் என்று ஒருத்தர் உண்டு
அவர் ஒரு கால் வந்து நல் வார்த்தை கேட்டுப் போகா நிற்க
அங்கே இருந்தான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
நீர் நெடு நாள் உண்டோ இங்கு வந்து -என்ன
ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த வன்றே பேறு சித்தம் -அன்றோ
நடுவு இழந்தது அன்றோ எனக்கு இழவு-என்ன
அசல்கை நின்ற நிலையிலே நம்பிக்கை யுடையதும் மாண்டிருந்ததையும் கெட்டு
என் சொன்னாய்
நாடோறும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்று அன்றோ சொல்லுச் சொல்லுகிறது
திருவந்தாதி கேட்டு அறியாயோ
சீயர் பாதத்தில் நாலு நாள் புக்குப் புறப்பட்ட வாசி தோற்றச் சொல்லுதில்லையீ-என்றானாம் –

கரணம் பிழைக்கில் மரணமாம் படியான பிரமாதத்தால் வருமவற்றுக்குப் பரிஹாரம் சொன்ன இத்தனை போக்கி
ப்ராப்ய ருசி இல்லாதார்க்கு ப்ராப்ய சித்தி உண்டாகச் சொல்லிற்றோ –
ஒருக்கால் அவனே கடவன் என்று சொல்லி
பின் பழைய வலையையே வர்த்திப்பித்துத் திரிய பேறு உண்டாமோ
முன்பு இது நெடும் காலம் இழந்தது இவ்வஸ்துவுக்கு யோக்யதை இல்லாமை யன்றே
ருசி இல்லாமை இறே
அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும்
அப்பெரிய பேற்றை பெரும் போது-தனக்கு ருசி வேண்டாவோ –

——-

இரண்டாம் திருவந்தாதியில் -நான்கு-பாசுரங்களில் ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய்-இரண்டாம் திருவந்தாதி–30-

அபரிசேத்யனாய் ஸ்ரீ ய பதியான நீ பெறாதது பெற்றாற் போலே பூமியை அளந்தாய்
நீ அன்று உலகு இடந்தாய்-அதுக்கடியாக பூமியை இடந்தாய்
அப்படி இரந்து செல்லுகைக்கும் ஒருவர் இல்லாமையாலே பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே
ஒட்டிக் கிடந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு புக்கு இடந்து ஏறினாய் என்று பிரமாணிகர் சொல்லா நின்றார்கள்

——-

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—-இரண்டாம் திருவந்தாதி-31–

கை கழிந்து போன என்னை தன் பக்கலிலே-ஆபிமுக்யம் பண்ணுவித்து ருசியை பிறப்பித்த-உபகாரகன் என்றும் –
குராவினுடைய நன்றாய் செவ்வியை உடைத்தான-பூவினைக் கொண்டு
இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க-வேணும் என்று இராதே
நாட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை உடையவன்-திருவடிகளை பணியுமவர்கள்
பலத்துக்கு பலம் இறே-ஸூ ஸூ கம் கர்த்துமவ்யயம் -என்கிறபடியே- சாதன தசையிலே இனிதாய் இருக்கை-

பிரான் பெரு நிலம் கீண்டவன் –திருவாய் -1-7-6-

இன்ன புஷ்பம் கொண்டு என்னை ஆஸ்ரயிக்க வேணும் -என்று இராதே
காட்டில் புஷ்பத்துக்கு சஜாதீயமான வடிவை யுடையவன் –
மஹா வராஹமான வடிவை யுடைத்தாய் -ஆபரணம் தேட வேண்டாதபடி -ஒரு படி சாத்தினாப் போலே இருக்கை-
அவன் கைக்கு எட்டின தொரு வடிவு கொண்டால் பூவும் கைக்கு எட்டித்து ஓன்று அமையும் இ றே –

——–

மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

மண் கொண்டு –பூமியை அளந்து கொண்டு-
பூமியை இடந்து கொண்டு என்னவுமாம் –

——-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

சேதன அர்க்க அனுபாவ்யமான குணங்களை உடைய சேஷியை –
பிரளயம் கொண்ட விடத்து மஹா வராஹமாய் எடுத்து -இத்தால் ஆபத்தே பச்சையாக நோக்கும் என்றபடி –

——————

மூன்றாம் திருவந்தாதியில் -ஒரு -பாசுரம்- ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —

கேழலாய் -மீளாது மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —–54-

சர்வாதிகனான தான் வராஹ வேஷத்தைக் கொண்டால் பின்பு அவ்வளவிலே பர்யவசிக்க இ றே அடுப்பது
அதுக்கு மேலே கேழலாய்த் தன்னை உணர்ந்தான் – ஸ்ரீ யபதி என்று உணர்ந்தால் செய்யப் போமோ-
மீளாது மண்ணகலம் கீண்டு – என்று மேலே கூட்டி-மீளாத படிக்கு ஈடாக பூமியைக் கொண்டு என்றுமாம் –
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை-உடைத்தான பூமியைக் கொண்டு ஏறினான் ஆய்த்து –
பெரிய பிராட்டியார் விரும்பும்படியான மார்வை உடையவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம் சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம் -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –
காதல் பெரிது – ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே பிச்சேறி இருக்கும் படி –
தன்னை யாசைப் படுவார் விடாயிலும் மிக்கு இருப்பதே தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய் அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-
அவள் பக்கல் காதலாலே இறே–அவள் அபிமானித்த பூமியை எடுத்தது -என்கை –

——————

நான்முகன் திருவந்தாதியில் -ஒரு -பாசுரம்- ஸ்ரீ வராஹ நாயனார் அனுபவம் உண்டே —

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-
பிரளயம் கொண்ட பூமியை இடந்து எடுக்கைக்காக
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-
நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்–இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

————–

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே–திரு விருத்தம் -39-

பொங்கா நின்ற மூன்று வகைப் பட்ட நீரைஉடைத்தான கடல் சூழ்ந்த பூமிக்கு எல்லாம் உபகாரகன் –
பிரளய ஆபத்திலே ரஷித்தவன்-

—-

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

ரஷ்யத்தின் அளவு அன்றிக்கே -ரஷகனுடைய பாரிப்பு இருக்கிற படி –
மாசுடம்பில் நீர் வாரா -ஏறும் அழுக்கு எல்லாம் ஏறும் படியாக இருக்கை–
பன்றியாம் தேசு -ஆத்மாநாம் மானுஷம் மன்யே -என்று கேழலான தேஜசுக்கு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் தேஜஸ் போராது இருக்கை –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதியை ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ –
தன்னை அறியாதார்க்கு முகம் கொடுத்தவனுக்கு
தன்னை அறியும் அவர்களுக்கு தான் முகம் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ –
பெரும் கேழலார்-சிலம்பினிடை இத்யாதி –தம் பெரும் கண் மலர் –
பெரும் கேழலார் என்ற உடம்பு-அடைய-கண்ணாய் இருக்கை –
கடல் போலே பெருத்து அது நிறைய தாமரை பூத்தாற் போலே இருக்கை
மகா வராஹஸ் ஸ்ப்புட பத்ம லோசன –
தம் பெரும் கண் மலர் -இப் பிரளயம் கொண்ட பூமியை எடுத்து
பிராட்டிக்கு கார்யம் செய்தானாய்-ஸ்ரீ பூமி பிராட்டியை குளிர நோக்கி
கொண்டு இருக்கிற இருப்பு –
நம் மேல் –அவள் பிரஜையான நம் மேல் –
ஒருங்கே -ஸ்ரீ பூமி பிராட்டி பக்கலிலும் பாலி பாயாதபடி
பிறழவைத்தார் -மிக வைத்தார் -தம்மால் தரிக்க போகிறது இல்லை
இவ்வகாலம் -சருகாய் கிடக்கும் மரங்களும் ஒரோ காலத்தே தளிரும்
முறியுமாய் நிற்குமது போலே –

——

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

அத்விதீயமான மகா வராகமாய் -இப்பூமியை தன திருவடிகளால் துகைத்து –
அது தன்னை அடைய-தன் திரு மேனியிலே செருக்காலே எங்கும் ஏறிட்டு கொண்டவன் –

———-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99- –

சர்வ சேதனருக்கும் சர்வேஸ்வரனைப் பற்ற அடுக்கும் -என்று -என் தான் -அவனையே பற்ற வேண்டுகிறது
என் என்ன -இவையாபின்னமானவன்று -பரார்தமாக தன்னைப் பேணாதே -ரஷிப்பான் ஒருவனைப்-பற்ற வேண்டாமோ –
இது ஹேது கர்ப்ப பிரதிக்ஜ்ஜை –
ஹேதுவாகிறது தான் என் என்ன –எறி திரை வையம் -கடல் சூழ்ந்த பூமியை பிரளயம் கொள்ள –
பிறர்க்காக தன்னை அழிய மாறுவான் ஒருவன் ஆகையாலே -ரஷ்யத்துக்காக தன்னைபாராதே-அழிய மாறுவான் -என்கை –
இடந்த -இத்தால் சர்வ சக்தி –என்னுமிடத்தை சொல்லுகிறது —
பிரான் -சக்தியே அன்றிக்கே இவற்றை ரஷிக்கைக்கு ஈடான பிராப்தியும் அவன் கையதே என்கிறது –
ஸ்வாமி என்கிறது -இவற்றின் உடைய ரஷன உபாய ஜ்ஞானமும் -அதுக்கு ஈடான சக்தியும்
பிராப்தியும் உள்ளது அவன் பக்கலிலே என்கை -இவனுடைய அஞ்ஞான அசக்திகளாலும்
அவனையே பற்ற வேணும் -இனி உடைமை பெறுகைக்கு உடையவனே யத்நிக்கும் அத்தனை இறே –
உடைமை தான் யத்நிக்குமது இல்லை இறே -ஆகையாலும் அவனே வேணும் –
ஆக -குறைவாளர்க்கோ அவனைப் பற்ற அடுப்பது என்ன
இரும் கற்பகம் இத்யாதி –இங்கே ஒருஸூ க்ருதத்தைப் பண்ணி அதுக்கு பலமாக ஸ்வர்க்கத்திலே போய்
கல்பக வ்ருஷம் அபேஷித சம்விதானம் பண்ண இருப்பார்க்கும் அவன் வேணும் -ஸ்வ கர்ம பலன் அனுபவிக்கிறான் ஆகில்
அவன் என் என்னில் -இவன் பண்ணின கிரியை இங்கே நசியா நின்றது இறே –
இவன் கர்மத்தையும் அளந்து -இவன் தன்னையும் அளந்து பலம் கொடுப்பான் ஓர் ஈஸ்வரன் வேணும் இறே –
கிரியை நசித்தால்-நின்றுபலம் கொடுக்கைக்கு கிரியா சக்தி என்றாதல் -அபூர்வம் என்றாதல் –
ஒன்றைக் கொள்ளா நின்றார்கள் இறே -இனி ஓன்று கற்பிக்கும் இடத்தில் ஒரு பரம சேதனனைக் கற்பிக்க அமையாதோ –
மற்ற எல்லாயவர்க்கும் -ஷயியான பலத்தை அனுபவிக்கிறவர்கள் தங்களுக்கே அன்றி –
அநந்த ஸ்திர-பலத்தை அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கும் அவன் வேணும் -அவர்களுக்கும் அனுபவத்துக்கு தங்கள் சத்தை-வேணுமே –
எல்லாயவர்க்கும் -தேக யாத்ரைக்கு அவ்வருகு அறியாதே -ஸ்தூவோஹம் க்ருசோஹம்-என்று
இருக்கிற மனுஷ்யாதிகளுக்கும் வேண்டும் சம்விதானம் பண்ணிக் கொடுக்கைக்கும் அவனே வேணும்
ஜ்ஞானாதிகரையும் அதற்க்கு குறைய நின்றாரையும் ஒக்க எடுக்கையாலே இத்தலையில்-உண்டான அறிவு அசத் சமம் என்கை –
என்தான் ஜ்ஞானத்தால் அன்றோ மோஷம் –பேற்றுக்கு இத்தலையில் ஜ்ஞானம் உண்டாக வேண்டாவோ என்ன –
உண்டாகவுமாம் இல்லையாகவுமாம் – அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார் –

ஞானப் பிரானை – தன்னை சூழ் த்திக் கொள்ளுக்கைக்கு ஈடான-அறிவு இறே இவன் பக்கலிலே உள்ளது –
பர ரஷன உபாயம் உள்ளது அவனுக்கே யாயிற்று –
அல்லால் இல்லை –அவன் உளன் என்கை யல்ல -ஈஸ்வரன் இல்லை என்று சாஸ்திரம் எழுதுகிறவனும்-
அந்திம சமயத்தில் வந்தவாறே -சஹஸ்ருதி நலியா நின்றது -என்றான் இறே -வழி கெட நடந்தோமா -என்று
நாஸ்திகரும் கூட அங்கீகரிக்கிற அளவஅன்றே இவர்கள் சொல்லுகிறது -அவனை ஒழிந்த தானும்
தான் பரிக்கிரஹிக்கிற உபாயங்களும் அடைய கழுத்துக் கட்டி என்கை –

ஒரு விசை திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு நடந்த இடத்தே இவ் அர்த்தத்தை அருளிச்-செய்வதாக
ஒரு ஏகாந்த ஸ்தலத்தை எம்பெருமானாரையும் கொண்டு புக்கராய் -திருப்பணி செய்வான் ஒருத்தன் அங்கே உறங்கி குறட்டை விடா நிற்க –
அவனைக் கண்டு அனர்த்தப் பட்டோம் -என்று-இவ்விசைவுக்கு தவிர்ந்து பிற்றை இசைவிலே இத்தை நம்பி அருளிச் செய்ய கேட்டு அருளி
ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற அளவிலே-உச்சி வெய்யிலிலே வந்து புகுந்து நம்பி இவ்வர்த்தத்தை
ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று அருளிச் செய்தார் -உனக்கு இது சொல்லாது இருக்க மாட்டேன் இறே -என்று
சஹகாரி நைரபேஷ யத்தை அருளிச் செய்தார் இறே –
ஈஸ்வரனை ஒழிந்த தன் ச்வீகாரமும் உபாயம்-இல்லை என்பதற்கு இந்த ஐதிஹ்யம் அருளிச் செய்கிறார் –

இனி பல போக்தாவான தன் ஸ்வரூபமும் தான் பரிக்கிரஹித்த உபாயங்களுமே இறே
சஹ காரியாக உள்ளது -அவற்றைத் தவிர்க்கிறது –
நான் கண்ட -கைப் பறியாக பறித்ததாய்-புண்ய பாபங்கள் கலந்து இருக்கையாலே –
புண்யம் தலையெடுத்த போதாக வெளிச் செறித்து – அல்லாது போது கலங்கி இருக்கிற
ஜ்ஞானத்தைக் கொண்டு -பிறரை பிரமிப்பைக்கு சொல்லும் விப்ரலம்ப வாக்கியம் அன்றிக்கே
பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையேனாய் -அவ் வெளிச் செறிப்பு கொண்டு அறுதி இட்டு-சொன்ன வர்த்தம் இது தான்
பிறர்க்கு சொல்ல வேணும் என்று சொல்லிற்றும் அல்ல –
என் அனுபவத்துக்கு போக்கு விட்டு சொன்ன பாசுரம் -என்கிறார் –
கைப்பறியாய் பறித்ததாய் -ஸ்வ யத்னத்தால் சாதிக்கப்பட்ட -இத்தால் ருஷிகளை சொல்லுகிறது –
அத்தை இத்தை -பரத்வத்தையும் சௌலப்யம் இரண்டையும் –
கோயில் கூழை -நியதி இல்லாதா வியாபாரம் -கோயில் பரிசாரகம் செய்யும் வியாபாரம்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் -அமுது செய்த அடையாளம் –
பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயிலான எம்பெருமானாரும் -அர்ச்சாவதாரத்தில் விபவ சமாதி பண்ணுவதும் –
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

———–

படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப –ஸ்ரீ திருவாசிரியம்–6-

இடந்து -ஸ்ரீ வராஹ கல்பத்தில் அண்டபித்தியில் இருந்து குத்தி எடுத்து
ஸ்ருஷ்டமான அநந்தரம் பிரளயம் கொள்ள நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹா வராஹமாக எடுத்து
ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –

——–

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத்தருகு –7-

“பூமேயே செம்மாதை நின்மார்வில் சேர்வித்து” என்ற விடத்துக் கடல் கடைந்த வரலாற்றையும்,
“பாரிடந்த” என்றவிடத்து வநாஹாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்திப்பது..

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்–
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் சொல்லுகையாலே
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்று
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி -என்று ஹேது சொன்னால் போலே –

———-

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-திருவெழு கூற்றிருக்கை

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –
மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –
இத்தால் பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில் ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –
சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

——–

மன்னிவ் வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்கப் ——-103
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்
கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை ——-104

நெடுநாள் சர்வேஸ்வரனதாய் அடிபட்டுப் போருகிற இந்த பூமிப் பரப்பை
மாமுது நீர் தான் விழுங்கப் –
பாடி காப்பாரே களவு காணுமா போலே பூமிக்கு ரஷகமான கடல் தானே கொள்ளை கொள்ள –
பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பின்-கொன்னவிலும் கூர் நுதி மேல் வைத்தெடுத்த கூத்தனை –
இது உரு மாய்ந்து போமாகில் நாம் வ்யாபரித்து போருமது தான் எது -என்று மீண்டு
கை வாங்காதே -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாதே இருப்பதொரு மகா வராஹமாய்
ஜலத்திலே புக்கு உடைந்து எடுத்து கொண்டு அண்டத்தை கொம்பிலே
ஒரு நீல மணி அழுத்தினால் போலே யாயிற்று எடுத்து வைத்துக் கொண்டபடி –
கொன்னவிலும் கூர் நுதி மேல் –
இவன் ரஷகன் என்று அனுகூலித்தால் பிழைத்துப் போம் இத்தனை போக்கி
அவனோடு எதிரிட்டால் முடிந்து போம் இத்தனை –
கூத்தனை –
என்றும் ஒக்க பூமியை கீழ் மண் கொண்டு பிரளயம் கொண்டு போனால் ஆகாதோ
இம் மநோ ஹாரி சேஷ்டிதத்தை காணப் பெறில் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -இரண்டாம் பத்தில் -கிளி -குயில்–கோழி-வண்டு–எம்பெருமான் குணம் பாடி – இன்னிசைக்கும் பாசுரங்கள் –

June 3, 2021

வண்டு இசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-3–

சில ராஜ புத்ரர் துடை குத்த விட்டு உறங்குமா போலே
விரோதியான ருஷபங்களைப் போக்கி -ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியோடே
பரம ரசிகன் வர்த்திக்கிற தேசம் ஆகையாலே
அங்குத்தை திர்யக்குகளும் ஸ்ருங்கார ரச பிரதாநமாய் இருக்கும் –
இவை போகத்திலே அந்வயித்து பல அனுபவம் பண்ணி வர்த்தியா நிற்கும் ஆயிற்று –

————

பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-6-

அப்பூவில் மது பானம் பண்ண நினைத்த வண்டுகள் ஆனவை
அம்மேகத்துக்கும் கொடிக்கும் நடுவே நுழைந்து புக்கு மது பானத்தை பண்ணிக் களித்து
அச் செருக்குக்கு போக்கு விட்டு ஆளத்தி வைத்து இசை சொல்லா நிற்கும்
அச் சோலை அடைய மது பானம் பண்ணிக் கழித்துப் பாடுகிற வண்டுகளின் உடைய
இசை ஆரவாரமாய் இருக்கும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கொடி பிரஜைகளை ரஷிக்க வேண்டும் என்று இசிக்க
செய்கிறோம் இறே என்று அவன் இசிக்க
உள்ளாடைய தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ணுகிற ஆரவாரமாய் இருக்கும் –

ஸ்ரீ அலர் மகளை கொடியாகவும்
ஸ்ரீ எம்பெருமானை முகிலாகவும்
புஷ்பங்களை பிரசாத விசேஷங்கள் ஆகவும்
வண்டுகள் தேவ கணங்கள் ஆகவும் -உரூபகம்

—–

எம்பெருமானை வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை–1-2-10-

வரியை உடைத்தாய் -தர்ச நீயமாய் இருந்துள்ள வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணிக் களித்து த்வனியா நின்றுள்ள பரந்த பொழிலை உடைத்தாய்
ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று-

———-

அன்பாய் யாயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே—1-3-3-

பரிமளத்தை வகுத்தாப் போலே இருக்கிற வண்டுகள்
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
அனுபவத்துக்கு போக்கு விட்டு பாடுகிறன வாயிற்று –

————

வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே–1-3-5-

என்றும் ஒக்க அனுபவமே யாத்ரையாக செல்லும் தேசம் –
சில நாள் அனுபவித்து பின்பு இருந்து வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா

———–

பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

நெருங்கி இருந்துள்ள சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள மாலையை உடையவன்

—–

மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-7-

மருள் இந்தளம் என்கிற பண்ணை வண்டுகள் பாடா நின்ற திருமலையை
வாஸஸ் ஸ்தானமாகக் கொண்டு –

———

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்–2-2-10-

முக்தர் சாம கானம் பண்ணுமா போலே மது பான மத்தமாய் வண்டுகள் பாடா நின்றுள்ள
பரந்த பர்யந்தத்தை உடைத்தான திருமங்கைக்கு ராஜாவான ஆழ்வார் –

———

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண

———

வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே—2-4-9-

செவ்விப் பூக்களின் மேலே படிந்து பரி மளிதமான வண்டுகள் த்வனியா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைத்தான மா மலையாவது –

———

வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

திரண்ட வண்டுகளானவை மதுபான மத்தமாக பாடும் பாட்டைக் கேட்டு -அத்தாலே –
நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று
(கான ரூபமான திருவந்தாதிகளே நீராக விளைந்த கரும்பு தானே கண்ணன் )

———-

கமல நன் மலர்த் தேறல் அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-

ஷட் பத-ஸ்ரீ த்வயம் – ஏக நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில்
தேனைக் குறைவற உண்டு-ஆசையாலே-
ஆகையாலே நித்யஸூரி பரிஷத் கதனான வாஸூதேவ தருவின் பாத மலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்-

——–

செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

சிவந்த வாயை உடைத்தான கிளியானது
நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள தில்லை-

——

சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே——3-4-9-

சிறகை உடைத்தான வண்டுகள் ஆனவை
மதுபானத்தாலும் பரிமளத்தாலும் களித்து பாடா நின்றுள்ள –

——–

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திரு வாலி
ஏ வரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே–3-6-1-

செருக்கராய் இருக்கும் ராஜ புத்ரர்கள் முசிந்த படுக்கையை காற்கடை கொண்டு
செவ்விப் படுக்கையிலே செண்டேறுமா -சென்று ஏறுமா -போலே
கழிய அலர்ந்த பூவில் நின்றும் போய் செவ்விப் பூவிலே
படிந்து காணும் மது பானம் பண்ணுகிறது –
கொடு வர வேண்டா
அறிவிக்கும் அத்தனை இறே இத் தலைக்கு வேண்டுவது –
கிருபை வருகை-அவன் பணியே வாராது ஒழியும் அன்று ரஷகனுக்கு குறையாமே –
நீங்கள் அறிவித்த அநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டு தானே வாரா நிற்கும்-

——–

பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே–3-6-2-

புருஷகார வாசனையால் பெண் வண்டை முதலில்
இதில் ஆண் வண்டை தூது
வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான்
வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு
சொல்லவற்றுக் காணும் இவை தான் –
(ஆச்சார்யர் பிரபாவம் இது அன்றோ )

———

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !–3-6-8-

அவ் ஊரில் குயில்கள் ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணா நிற்கும் ஆயிற்று
அவ் ஊரில் குயில்கள் ஆனவை மது பானம் பண்ணி களித்து ஆலியா நிற்கும் ஆயிற்று –
இவ் ஊரில் குயில்கள் ஒன்றும் இறே உறாவிக் கிடக்கிறது

——-

எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-

பார்த்த பார்த்த இடம் எங்கும் காந்தாரம் என்கிற பண்ணை-அந்தேனை உண்டு
தர்சநீயமான வடிவை உடைத்தாய் -தேன் என்று பேரை உடைத்தான
வண்டுகள் ஆனவை மதுபானம் பண்ணி இசை சொல்ல –
மாடே களி வண்டு –
அதனுடைய பர்யந்த்தே சம்ச்லேஷத்தால் ஹ்ருஷ்டமாய் களிக்கிற வண்டுகள் ஆனவை –
மிழற்ற –நிரம்பா மென் சொல்லாலே ஆலத்தி வைக்க

——–

வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-

இவற்றிலே புக்கு மது பானம் பண்ணி உள்ளு புகுந்த த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
வண்டுகள் ஆனவை பல இசைகளையும் பாட அவற்றைக் கேட்டு மயில்கள் ஆடா நின்றுள்ள திரு நாங்கூர்-

———

மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

வரியை உடைத்தான வண்டானது முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
தேதென என்று இசை பாடா நின்றுள்ள திருத் தேவனார் தொகை
தென்ன தென்ன என்று இங்கனே சொல்லக் கடவது
ஆளத்தி வைக்கையைச் சொன்னபடி

———-

கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-3-

மேகங்களின் உடைய மிக கோஷமான அதுவே வாத்தியமாக
ஸ்ரமஹரமாய் பரந்து இருந்து உள்ள பொழிலின் நடுவே மயிலின் உடைய சங்கமானது ஆட
அங்கே மது பானம் பண்ணுகிற வண்டுகள் ஆனவை
இவற்றின் இடைய காலுக்கு ஈடாக இசை பாடா நின்றுள்ள திவ்ய தேசம்

——-

நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

நெல்லின் மேல் தொடுத்த பூக்களை உடைத்தான குவளையானது நிறைந்த சூழலிலே
அழகிய சிறகை உடைத்தான வண்டின் உடைய ஒலியும்
விலஷணமான கண்ணை உடையரான ஸ்திரீகள் உடைய சிற்றடிமேல் சிலம்பு ஒலியும்
இரண்டும் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாத நிரம்பா மென் சொற்கள் ஆகையாலே
சிலம்பு ஒலிக்கும் வண்டின் உடைய ஒலிக்கும் வாசி தெரிக்கப் போகிறது இல்லை-

——–

பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-

நிரை நிரையான பூக்களை உடைத்தான செருந்தி அரும்பின முத்தை உடைத்தான புன்னை
இவற்றில் உண்டான -பொதும்புகளிலே -த்வாரங்களிலே –
தர்ச நீயமான வடிவை உடைய வண்டுகள் நெருங்கிக் கொண்டு
மது வனத்தில் புக்க முதலிகள் போலே (மது வனத்தால் ராமன் முதுகு பிழைத்ததே )
பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே
ஆலத்தி வையா நிற்கும் ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –

——-

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

பரிமளத்தை உடைத்தான மலரின் மேலே
சுரும்பு -என்று வண்டிலே ஒரு அவாந்தர ஜாதி-அவை ஆரவாரத்தைப் பண்ண
அழகு மிக்கு இருந்துள்ள மயில்கள் ஆட
வரியையும் சிறகையும் உடைத்தான வண்டுகள் ஆனவை
அவற்றின் காலுக்கு ஈடாகப் பாடா நிற்கும் ஆயத்து –

——-

மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-

மாறாத முது நீரில்–தாமரைப் பூவின் மேலே–வரியை உடைத்தான வண்டு
மது பான மத்தமாய்க் கொண்டு இசை பாட –

——–

நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-

நறுவியதாய்-குளிர்ந்து-இனிதாய் இருந்துள்ள தேனைப் பானம் பண்ணின வண்டுகள்
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
கால நியதி பாராதே-எப்போதும் ஒக்க குறிஞ்சி என்கிற பண்ணைப் பாடா நிற்கும் ஆய்த்து –

——

மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

ஒப்பிலாத புகரை உடைய வாய் மரகதம் போலே இருந்துள்ள
பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –
ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி வண்டுகள் ஆனவை
இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

———-

மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

மாறாத பூக்களை உடைத்தான தாழை தேமா என்கிற இவற்றாலே
நெருங்கின சோலையின் உள்ளே சுரும்புகள் ஆனவை
மதுபானம் பண்ணி–உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாமையாலே
தென்ன தென்ன -என்று ஆளத்தி வைக்க
வண்டுகள் ஆனவை அதில் முறுகின பாட்டை -பரி பக்குவமான பாட்டை பாடா நிற்கும் ஆய்த்து –

——–

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-

ஆகாச அவகாசம் வெளி யடையும் படி வளர்ந்த அசோகம் ஆனது சிவக்கப் பூத்துக் கிடக்க
இதிலே மது பானம் பண்ணலாம் என்று -அதுக்காக வண்டுகள் சஞ்சரிக்க
அத்தைக் கண்ட குயில்கள் ஆனவை-நெருப்பு என்று அருகே செல்ல அஞ்சி நின்ற மாவிலே ஏறி
இவை நெருப்பிலே அகப்பட்டனவாகக் கொண்டு
அந ஷர ரச பேச்சாலே -அவ்யக்தமான பேச்சாலே -படு கொலை கிடி கோள் -என்றாப் போலே
கூப்பிடா நின்றது யாய்த்து –
இதில் வாசமும் நித்யமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் யாய்த்து -(படப்பை –கொடித் தோட்டம் )

——–

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

ஜலத்தில் உண்டான ரஸ்யதையாலே வண்டுகள் ஆனவை மொய்த்துக் கிடக்கும் யாய்த்து –
வண்டுகள் ஆனவை மது பான மத்தமாய்க் கொண்டு பாடுகைக்கு ஈடான
மது ஒழுகா நின்றுள்ள புனல் ஆனது வந்திழி காவிரியாலும்
அண்ட அவகாசம் அடைய காந்தியா நின்றுள்ள பொழிலாலும்
சூழப் பட்டு தர்ச நீயமான தென்னரங்கமே

—–

மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள்
தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை
அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம் –

——-

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரப்பு மாறப் பூத்த பொழில்களின் மேலே நாநா வர்ணமான மயில்கள் ஆனவை ஆலியா நிற்கும் –
செவ்வித் தாமரைப் பூவிலே மது பான அர்த்தமாக இழிந்த வண்டுகள் ஆனவை
அவற்றின் உடைய காலுக்கு இசையப் பாடா நிற்கும் –

——

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-

சிஷா பலத்தாலே மது பாநமத்தமாய் பாடும் போது பண்ணிலே ஆளத்தி வையா நின்றுள்ள
வண்டுகளை உடைத்தான மயிர் முடியை உடைய –

——-

பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

பண் பேராத படி வண்டுகள் த்வனியா நின்றுள்ள பரந்த பொழிலை உடைய
தண் சேறை அம்மான் தன்னை –

——

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் மதுபான மத்தமாய்த் த்வநிக்க –
கமுகுகள் திரண்ட சோலைகள் தோறும் குயில்கள் ஆனவை முக்தர் சாமகானம் பண்ணுமா போலே கூவ –
அதினுடைய பாட்டுக்கு ஈடாக மயில்கள் ஆலிக்க –

——-

களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

——

தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-7-

மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள
ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று –

—–

துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-9-

நெருங்கின மாதவியும் சுர புன்னை பொழிலும் சுற்றிலே ஓங்கின செண்பங்களையும் உடைத்தாய் –
அவற்றிலே படிந்த வண்டுகள் ஆனவை முரன்று இசை பாடா நின்றுள்ள
திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
(செண்பகங்களில் வண்டுகள் படிந்தால் உயிர் இழக்கும் என்பர் கவிகள்
இங்கு தேனைக் குடித்து தென்னா தென்னா என்கிறது
திவ்ய தேசத்தில் பிரதிகூலர் இல்லையே
வானரங்கள் பூஞ்சுனை புக்கு -திவ்ய தேசம் முயலை இருக்காதே -போல் இங்கும் )

———

உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே —9-3-8-

சோலை மேல் உயர இருக்கும் யாயிற்று வண்டினங்கள்
தேவர்கள் சம்சார வெக்காயம் தட்டாமல் இருக்குமா போலே
மதுபான மத்தமாய்க் கொண்டு செருக்கி வருகிற வண்டினங்கள் ஆனவை
அதுக்கு போக்கு வீடாக அங்கே இருந்து இசை பாடா நிற்கும் ஆயிற்று –
இசை கேட்டால் பொறுக்கும் படியான தேசத்து ஏறப் போவோம் -என்றபடி –

—–

என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

இரவு பகல் என்று வாசி அன்றிக்கே என்றும் ஒக்க மது பானத்தை பண்ணி வந்த பௌஷ்கல்யம்
வடிவிலே தோற்ற இருக்கிற வண்டானது
உள்ளு புக்க த்ரவ்யம் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே இசை பாட –
அது தனக்கு என்னத் தேடித் போக வேண்டாதே இருந்த இடத்தே வந்து கந்தியா நிற்கும் ஆயிற்று –
(இங்கு உள்ளாருக்கு பரகத ஸ்வீ காரமே நிஷ்டை )

———–

கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமா முகில் போல் நிறத்தன்
உரையார் தொல் புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய் –10-10-2-

பகவத் விஷயத்தில் உபகாரகராய் இருப்பாரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவதாய் இறே இருப்பது –

—————–

கூவாய் பூங்குயிலே
குளிர் மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக்
கூவாய் பூங்குயிலே —10-10-3-

தர்ச நீயமான உன் படியைக் காட்டி கண்ணுக்கு இரை இட்டாப் போலே
செவிக்கும் இரை இடப் பாராய் –

——-

கொட்டாய் பல்லிக் குட்டி
குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக்
கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

என்றும் ஒக்க பர ஹிதமே பண்ணிப் போருகை உனக்கு சத்தா பிரயுக்தம் அன்றோ –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்னுமா போலே இருக்கிறது –

——-

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே –10-10-5-

உன் வடிவைக் காட்டி ரஷித்தால் போலே உன்னுடைய பேச்சாலும் ரஷிக்கப் பாராய் –

—–

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –திரு நெடும் தாண்டகம்–14–

திரு நாமம் சாத்மித்த படியாலே அவகாசத்திலே கிஞ்சித் கரிக்க பெற்றோமே
என்கிற ப்ரீதி பிரகர்ஹத்தாலே சொல்ல –
ப்ரீதி ப்ரேரிதையாய்க் கொண்டு கேட்டு-
சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திரு சொன்ன இடத்தில் கேட்ப்பாரைப் பெற்றது இல்லை –
இப்போது சாம்யை யாகையாலே கேட்பாரை பெற்றது என்கிறாள் –
செல்வன் நாரணன் என்ற சொல் கேட்டலும் – என்னுமா போலே –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் –
இது சொன்ன திரு நாமம் தனக்கு தாரகமாய் இருக்கையாலே உன்னை வளர்த்த பிரயோஜனம் பெற்றேன் என்கிறாள் –
ஆபத் சகனானவன் ஆபத்தை விளைத்துப் போனான்
அத்தசையிலும் நீ ஆபத் சகமாகப் பெற்றேன் என்கிறாள்
வருக வென்று
முன்கை முப்பத்தின் காதமாய் இருக்கிறபடி
மடக்கிளியை
லஜ்ஜா விஷ்டமான கிளி -என்னுதல்-
பவ்யமான கிளி என்னுதல்-

வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று –
தன்னோட்டை சம்பந்தத்தை ஔ பாதிகம் ஆக்குவதே –என்றும்
சேஷ பூதரான நாம் ஸ்வரூப ப்ராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
உபகாரம் கொண்டால் போலே சொல்லுவதே -என்றும்
லஜ்ஜாவிஷ்டமாய் இருந்தது –
சேஷ பூதன் ஸ்வரூப பிராப்தமான கிஞ்சித் காரத்தைப் பண்ண
தர்மதம் பரிரஷித -என்றான் இறே –
சேஷி பவ்யதையான போது இவள் கொண்டாடப் புக்க வாறே தன்னுடைய சேஷத்வம் தோற்ற
நிப்ர்த ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே ஒதுங்கின படியை சொல்லுகிறது

கை கூப்பி வணங்கினாளே –
அந்த உபகார ச்ம்ர்தியானது அவ்வளவில் பர்யவசியாமையாலே அஞ்சலியைப் பண்ணினாள் –
லஜ்ஜை தன்னையும் கை விட்டது
அதுக்கு ஹேது என் என்னில் –
வாத்சல்யத்தாலே செய்ததுக்கு வழக்கு பேசக் கடவோமோ என்னும் நினைவாலே
வணங்கினாளே-
அஞ்சலி சாத்மித்தது இறே என்னா -காலிலே விழுந்தாள்-
உடையவர் முதலிகளும் தாமுமாக நீராட எழுந்து அருளுகிற போதை
சமூஹத்தைக் கண்ட ப்ரீதியாலே பெரிய நம்பி தெண்டன் இட
விநயம் பாவிப்போம் ஆகில் தெண்டனை ச்வீகரித்தோம் ஆவுதோம் என்று பேசாதே எழுந்து அருளினார் இறே –

——–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –