Archive for the ‘Sri Bhashyam’ Category

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் – நான்காவது பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

July 3, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

——-

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

——–

1-4-1-ஆநுமாநிகாதி₄கரணம்-ஸாங்க்ய மதம் சொல்வது போன்ற வாக்கியங்கள்

அதி₄கரணத்தின் பின்புலம்
முதல் அத்யாயத்தின் நான்காவது பாதத்தை அணடந்துள்ளோம். கீழ் பாதங்களுக்கும் இப்பாதத்துக்கும் ஸங்கதிகள் -முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப்பட்டது அயோக₃ வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது. மேலுள் மூன்று பாதங்களால் செய்யப்படுவது (ii) அந்ய யோக₃
வ்யவச்சே₂த₃ம்
– ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது.
பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களின் வலிமையைப் பொருத்து பாதங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் – (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள் (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள் (iv) நான்காம் பாதத்தில் சாயா அநுஸாரி வாக்யங்கள் என்று.
சா₂யா என்றால் நிழல். அநுஸாரி என்றால் பின் தொடர்வது. உபநிஷத்துக்களில் சில வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தின் உபதேசங்களை நிழல் போல் பின் தொடர்பவை போல் காணப்படுகின்றன. ஸாங்க்ய மதத்தில் சொல்லும் கருத்துகள் இவ்விடங்களில் சொல்லப்படுகிறபடியால், ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்டபடி ப்ரதா₄நம் / மூல ப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் தான் ஜகத்காரணம் என்று உபநிஷத்துக்களே ஏற்கின்றன என்று பூர்வபக்ஷீ வாதிடுகிறார். –அவ் வாதத்தை நிரஸிப்பதன் மூலம் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்னும் ஸித்தாந்தத்தை வலுப்படுத்துகிறார் வ்யாஸர்.

(ப்ரஹ்மாத்மகமான பிரதானம் பிரகிருதி என்று சொல்லாமல் -நிரீஸ்வர சாங்க்ய மதம் போல் உள்ள ஸ்ருதி வாக்கியங்கள் -எண்ணிக்கையில் சாம்யம் -24 அசேதனங்கள் -25 ஜீவாத்மா -மட்டுமே சாங்க்ய மதம் -காபில மத ஸித்த அப்ரஹ்மாத்மக அசேதனங்கள் -போல் உள்ள சில ஸ்ருதி வாக்கியங்கள் -இவற்றை சொல்லி நேராக பிரதானம் காரணம் சொல்லாமல் -இருப்பதால் பிரதானமும் ஜகத்காரணம் என்கிற வாதங்களை நிரஸித்து –ப்ரஹ்ம ஏக காரணம் என்னும் கருத்தை நன்றாக நிலைநாட்ட இப்பாதம் என்றவாறு)

ஆநுமாநிகதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா என்று கூறப்பட்டது. அதற்குமேல் ஆஷேபம் எழுகிறது – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மா என்று ஒருவர் கிடையாது என்று ஸாங்க்ய மதம் சொல்வது போல் வேதமே சொல்லி யுள்ளதே என்று. அதற்கு பதிலளிக்க தான்
இந்த அதிகரணம் பிறக்கிறது.

(ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –)

விஷய வாக்யம் – கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தின் மூன்றாம் வல்லீ
இந்த்₃ரியேப்₄ ꞉ பராஹ் வர்தா ₂ அர்தே₂ப்₄யஶ் ச பரம் மந꞉ । மநஸஸ்து பரா பு₃த்₃தி₄ர் பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ ॥-இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப்பொருள்கள் உயர்ந்தவை . பொருள்களை விட மனது உயர்ந்தது. மனதை விட புத்தி உயர்ந்தது. புத்தியை விட மஹாந் என்ற பொருள் உயர்ந்தது-மஹத꞉ பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ । புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டோ₂ ஸா பரா க₃தி꞉ ॥-மஹாந் என்பதை விட அவ்யக்தம் உயர்ந்த்து. அவ்யக்தம் என்பதை விட புருஷன் உயர்ந்தவன். புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை , அதுவே எல்லை , அதுவே இறுதியான இலக்கு.

ஸந்தேஹம் – இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் (ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொள்ளாத) ப்ரதாநம் என்ற அசேதனப் பொருள் சொல்லப்படுகிறதா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இங்கு மூல ப்ரக்ருதி எனப்படும் ப்ரதாநம் தான் சொல்லப்படுகிறது.
1-ஸாங்க்ய மதத்தில் தத்துவங்களின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது – 5 கர்ம இந்த்ரியங்கள், 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 1 மனது, 5 பூதங்கள், 5 தந்மாத்ரங்கள், அஹங்காரம், மஹாந், மூல ப்ரக்ருதி என்று 24 அசேதனப் பொருள்கள் மற்றும் அறிவுடையவனான ஜீவாத்மா 25ஆவது தத்துவம் என்று. இங்கு உபநிஷத்திலும்
இந்த்ரியங்கள், உலகப் பொருள்கள், மனது, புத்தி (அஹங்காரம் என்ற தத்துவம்), மஹாந், அவ்யக்தம், புருஷன் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது ஸாங்க்ய மதத்தின் தத்துவ வரிசை நினைவுக்கு வருகிறது. எனவே இவ் விடத்தில் வேதமே ஸாங்க்ய மதத்தை உபதேசிக்கிற படியால் இங்கு அவ்யக்தம் என்ற பொருள் மூல ப்ரக்ருதியாகத் தான்
இருக்க வேண்டும். இப்படி தத்துவக் கணக்கில் ஸாங்க்ய மதத்தை வேதம் ஏற்பதால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி ப்ரதாநம் தான் ஜகத் காரணம் என்றும் வேதம் ஏற்கிறது என்று தான் ஆகும். அவர்கள் மதத்தின் படி அந்த ப்ரதாநம் என்ற பொருள் ஸ்வதந்த்ரமானது, அதற்கு உள்ளே ஆத்மாவாக பரமாத்மா கிடையாது

2-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்று 25ஆவது தத்துவமான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை என்று சொல்கிறபடியால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி பரமாத்மா என்று ஒருவரே கிடையாது என்றும் தெரிகிறது.

(தந்த்ர சித்த தத்வ ப்ரக்ரியை நினைவூட்டப் படுகிறதே -முதல் வாதம் -புருஷன் -ஜீவாத்மாவை விட -மேல் உள்ள தத்துவமே இல்லை நிரசிப்பது போல் உள்ளது -இரண்டாம் வாதம்)

இவ்விடத்தில் பூர்வபக்ஷீ ’ப்ரதாநம் மட்டுமே ஜகத்காரணம் என்று உபநிஷத் கூறுகிறது’ என்று சொல்லவில்லை , -ஏனெனில் கீழ் பல அதிகரணங்களில் பரமாத்மா ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ள து. எனவே , “உபநிஷத்தில் சில இடங்களில் ப்ரதாநமும் ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்று தான் வாதிடுகிறார்.

வேதம் காட்டும் உருவகம்
ஸித்தாந்தம் – இங்கு 7 ஸூத்ரங்களாலே வ்யாஸர் ஸித்தாந்தத்தைக் காட்டுகிறார்.
1-ஆநுமாநிகம் அபி ஏகேஷோம், இதி சேத் ந, சரீர ரூபக விந்யஸ்த க்₃ருஹீதே :, த₃ர்சயதி ச
ஏகேஷோம் –
ஒரு சிலரால் படிக்கப்படும் வேதத்தில்
ஆநுமாநிகம் அபி – அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியும் [ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது]
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
சரீர ரூபக விந்யஸ்த – ரூபகமாக (உவமையான தேராக) சொல்லப்பட்ட சரீரமே
க்₃ருஹீயத: – இங்கு எடுக்கப் படுகிறபடியால்
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது-

இவ்விடத்தில் உபநிஷத்தில் ஓர் உருவகம் காட்டப்படுகிறது. அது யாதெனில் –
ஆத்மாநம் ரதி₂நம் வித்₃தி₄ ஶரீரம் ரத₂மேவ து । பு₃த்₃தி₄ம் து ஸாரதி₂ம் வித்₃தி₄ மந꞉ ப்ரக்₃ரஹமேவ ச ॥இந்த்₃ரியாணி ஹயாநாஹு: விஷயாந் தேஷு கோ₃சரான்-இந்த சரீரம் ஒரு தேர் (ரத₂ம்), ஜீவாத்மா தான் அதற்கு ஸ்வாமீ (ரதீ), புத்தி (உறுதி) தான் தேரோட்டி (ஸாரதீ), மனது தான் கடிவாளம் (ப்ரக்₃ரஹம்), இந்த்₃ரியங்கள் தான் குதிரைகள், உலக விஷயங்கள் தான் குதிரைக்கு புல் போன்றவை-

விஜ்ஞாந ஸாரதி₂ர் யஸ்து மந꞉ ப்ரக்₃ரஹ வாந் நர꞉ । ஸ: அத்₄வந꞉ பார மாப்நோதி தத்₃விஷ்ணோ꞉ பரமம் பத₃ம் ||-புத்தி என்ற ஸாரதியையும் மனது என்ற கடிவாளத்தையும் எவன் கட்டுப் படுத்துகிறானோ , அவன் தான் பாதையின் இறுதியில் இருக்கும் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான். -இப்படி தேர், ஸாரதீ, குதிரைகள் முதலானவற்றை அடக்க வேண்டும் என்று உபதேசித்த பிறகு தான், நாம் கீழே பார்த்த விஷய வாக்யம் உள்ளது. எனவே அந்த வாக்கியத்தில் புத்தி, மனது, இந்த்ரியங்கள், பொருள்கள் முதலானவற்றைக் கட்டுப் படுத்தும் போது, எதை விட எது முக்கியமானது என்று தான் சொல்லப்படுகிறது.

புலன்களை அடக்கும் முறை
இந்த்₃ரியேப்₄ யா ꞉ பரா ஹ்யர்தா ₂
– இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப் பொருள்களை அடக்குவது முக்கியமானது – ஏனெனில் புலன்களை அடக்கி வைத்தாலும் உலகப் பொருள்கள் அறுகில் இருந்தால் அவை புலன்களை இழுத்து விடும்.
அர்தே₂ப்₄ யஶ்ச பரம் மந꞉ – பொருள்களை விட மனதை அடக்குவது முக்கியம் –-ஏனெனில் பொருள்களை விலக்கி வைத்திருந்தாலும் மனது அப்பொருள்களை நினைத்துக் கொண்டே இருந்தால் புலனடக்கம் ஸித்திக்காது.
மநஸஸ்து பரா பு₃த்₃தி₄: – மனதை விட புத்தி என்ற உறுதியை வசப்படுத்துவது முக்கியம் – ஏனெனில் ஓர் உறுதி இருந்தால் தான் மனது வழி தவறிப் போகும் போது அதைத் தடுத்து சரியான பாதைக்கு இழுத்து வர முடியும்.
பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ – புத்தியை விட உயர்ந்தவரான ஆத்மாவை வசப்படுத்துவது முக்கியம் –ஏனெனில் ஆத்மாவுக்கு அதீனமாகத் தான் கீழ் சொல்லபட்ட புலன்கள், மனது, உறுதி எல்லாம் உள்ளன.
மஹத꞉ பரம் அவ்யக்தம் – ஆத்மாவை விட அவ்யக்தம் என்ற பொருளை வசப்படுத்துவது முக்கியம் –-அவ்யக்தம் எனப்படுவது நம்முடைய சரீரம். சரீரம் ஆரோக்யமாக நம் வசத்தில் இருந்தால் தான் ஆத்மா எந்தச் செயலையும் செய்ய முடியும் என்பதால் அதை வசப்படுத்துவது முக்கியம்.
அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ – சரீரத்தை விட புருஷன் என்ற பரமாத்மாவை வசப்படுத்துவது முக்கியமானது –ஏனெனில் இவ்வுலகில் அனைத்துமே அவருக்கு அதீனமாகத் தான் இயங்குகிறது.
புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ₂ ஸா பரா க₃தி꞉ – அந்த பரமாத்மாவை விட முக்கியமாக வசப்படுத்தப்பட வேண்டிய பொருள் வேறொன்று கிடையாது. அவரே எல்லை .
இது தான் விஷய வாக்கியத்தின் சரியான பொருள் ஆகும்.

ஸித்தாந்த யுக்திகள்
உருவகத்தில் தேர், ஸாரதீ, கடிவாளம் என்று சொல்லப்பட்ட அதே பொருள்கள் அதே சொற்களால் விஷய வாக்கியத்திலும் சொல்லப்படுகின்றன, ஒன்றைத் தவிற – சரீரம் என்ற சொல்லுக்கு பதிலாக அவ்யக்தம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே , ஸந்தர்பத்தை வைத்துப் பார்த்தால், இங்கு அவ்யக்தம் எனப்படுவது தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் தான், மூல ப்ரக்ருதி அல்ல.-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்ற வாக்கியமும் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லவில்லை , வசப்படுத்தப் பட வேண்டிய பொருள்களுள் பரமாத்மாவை விட முக்கியமானது எதுவுமில்லை என்று தான் கூறப்படுகிறது.-பரமாத்மாவை வசப்படுத்துவதாவது, அவரிடம் சரணாகதி செய்து அவர் அநுக்ரஹத்தைப்
பெறுவது தான்.
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது – வேதமே இந்தப் பொருளைக் காட்டுகிறது –
ஏஷ ஸர்வேஷு பூ₄தேஷு கூ₃ட₄: ஆத்மா ந ப்ரகாஸதே । த்₃ருஶ் யதே த்வக்₃ர்யயா பு₃த்₃த்₄ யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம த₃ர்ஶிபி₄꞉ ||-இந்த புருஷன் எனப்படுபவர் எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார். அவர் வெளிப்படையாகப் ப்ரகாசிப்பதில்லை . புலன்களை அடக்கி நுட்பாக ஆராயும் புத்தியால் மட்டுமே அவர் காணப்படுகிறார்.
இப்படி உபநிஷத்தே பரமாத்மாவைப் பற்றியும், புலன்களை வசப்படுத்துவதைப் பற்றியும் சொல்கிறபடியால் இதுவே சரியான பொருள். எனவே இங்கு மூல ப்ரக்ருதி சொல்லப்படவே இல்லை .-ஆகவே , இவ் விடத்தில் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களின் வர்ணனையோ , ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவரே இல்லை என்றோ சொல்லப்படவே இல்லை -எனவே வேதம் ஸாங்க்ய மதத்தைத் தழுவி உபதேசிக்கிறது என்று கூற இயலாது. எனவே பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம் என்று உபநிஷத்துக்கள் எங்குமே ஏற்க வில்லை .-மேலும் பல யுக்திகளைக் கொண்டும் வ்யாஸர் இதை நிரூபிக்கிறார் மற்ற ஸூத்ரங்களால் -அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

1.4.1-ஆநுமாநிகாதி₄கரணம்–ப்ரக்ருதியையும் இயக்குபவர் பரமாத்மாவே

சரீரமே முக்திக்கான கருவி
1-4-1-ஆநுமாநிகதி₄கரணத்தின் முதல் ஸூத்ரத்தால் இங்கு ’அவ்யக்தம்’ என்று சொல்லப்படுபடுவது மூலப்ரக்ருதி அல்ல, -இதற்கு முன் உருவகத்தில் தேராகச் சொல்லப்பட்ட சரீரம் தான் என்று காட்டினார் வேத வ்யாஸர். இனி அதைத் தொடர்ந்து மேலும் பல யுக்திகளைக் கூறுகிறார்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது – அவ்யக்தம் என்றால் ’வ்யக்தமாக வெளிப்படையாக இல்லாதது’ என்று பொருள்-எனவே இச் சொல் பொதுவாக மூல பிரக்ருதியைத் தான் குறிக்கும். சரீரமோ வ்யக்தமானது அதாவது வெளிப்படையானது.பிறகு அவ்யக்தம் என்ற சொல் எப்படி சரீரத்தைச் சொல்லமுடியும்? என்று. இதற்கு பதில் தான் அடுத்த ஸூத்ரம் -2-ஸூக்ஷ்மம் து தத₃ர்ஹத்வாத் –ஸூக்ஷ்மமான மூல ப்ரக்ருதி அன்றோ ; அதுக்கே தகுதி உள்ளபடியால் ஸூக்ஷ்மம் து – ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும் மூல ப்ரக்ருதி தான் ஸ்ருஷ்டி நடக்கும் போது இந்த சரீரமாக மாறுகிறது. எனவே , பஞ்சின் விகாரம் (மாறுபாடான) துணியைப் பஞ்சு என்று சொல்வது போல், அவ்யக்தம் என்கிற மூல ப்ரக்ருதியின் விகாரம் (மாறுபாடான) சரீரத்தை அவ்யக்தம் என்ற சொல்லைக் கொண்டு சொல்லலாம், தவறில்லை-

விஷய வாக்கியத்தில் இருக்கும் அவ்யக்தம் என்ற சொல் சரீரத்தைச் சொல்கிறது என்று கொள்ளாமல், முதலில் உருவகத்தில் இருக்கும் சரீரம் என்ற மூல ப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று கொண்டால் என்ன? என்று பூர்வபக்ஷீ கேட்க, அதற்கு விடை தான் ஸூத்ரத்தின் அடுத்த பகுதி —தத₃ர்ஹத்வாத் – உருவகத்தின் இறுதியில் தேர், ஸாரதீ, கடிவாளம் முதலானவற்றை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று சொல்கிறபடியால், இங்கு முக்தி அடைவதற்குக் கருவிகளானவை தான் தேராகவும், -ஸாரதியாகவும், கடிவாளமாகவும் உருவகப் படுத்தப்பட வேண்டும். மூல ப்ரக்ருதியோ புருஷார்த்தம் அடைவதற்குக் கருவியாக ஆகாது. அதைக்கொண்டு எந்தச் செயலையும் செய்ய இயலாது. எனவே அதைத் தேராக உருவகம் செய்வதுஇங்கு பொருத்தமாக இருக்காது. சரீரம் தான் ’அர்ஹம்’-அதாவது“தகுதி உடையது” அதாவது புருஷார்த்தம்
அடைவதற்குக் கருவியாக இருக்கும் தகுதி உடையது. எனவே அது தான் இங்கு உருவகத்தில் பொருத்தமானது.-எனவே , பின்னால் வரும் விஷய வாக்கியத்தில் உள்ள அவ்யக்தம் என்ற சொல் தான் சரீரத்தைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிற, சரீரம் என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று மாற்றிக் கொள்ள இயலாது.

ஸாங்க்ய மதத்தை ஏற்காததன் காரணம்
ஸாங்க்ய மதத்தவரின் கேள்வி
– நீங்களும் மூல ப்ரக்ருதி என்ற பொருளை ஏற்கிறீர்கள், அதிலிருந்து தான் சரீரம் உண்டாகிறது என்றும் ஏற்கிறீர்கள் என்றால் ஏன் எங்கள் ஸாங்க்ய மதத்தைக் குறை சொல்கிறீர்கள்? அதற்கு பதில் –
3-தத₃தீ₄நத்வாத் அர்த₂வத் – “அதற்குக் கீழ் படிந்தே பயனுள்ளது”
மூல ப்ரக்ருதியான ஸ்வதந்த்ரமான ஒரு பொருள், தானாக இயங்குகிறது என்று ஸாங்க்ய மதம் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை , அதைத்தான் குறை சொல்கிறோம். தத₃தீ₄நத்வாத் பரமாத்மாவுக்கு அதீனமாக, அவருக்குக் கட்டுப்பட்டு,அவரை அந்தராத்மாவாகக் கொண்டு, அவராலே இயக்கப்பட்டு தான் மூல ப்ரக்ருதி அர்த₂வத் பயனுடையது, அதாவது-தன்னிடமிருந்து பஞ்ச பூதங்கள் முதலானவற்றை உண்டாக்குகிறது. மூல ப்ரக்ருதி இருப்பதும், நிலைப்பதும், செயல்படுவதும் கூட அந்த பரமாத்மாவால் தான். இதை ஸாங்க்ய மதம் ஏற்காதபடியால் அதைத் தவறு என்கிறோம்

(ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்-பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை-ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து-ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை-பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது என்று விடை கூறப்படுகிறது –)

4-ஜ்ஜேயத்வ அவசநாத் ச – “அறியப்பட வேண்டியது என்று சொல்லப்படாத படியாலும்”-ஸாங்க்ய மதத்தின்படி ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா என்ற இரண்டு பொருள்களைப் பற்றின உண்மையான அறிவு தான் முக்திக்கு வழி ஆகும். எனவே , இங்கு அவ்யக்தம் என்ற சொல் மூல ப்ரக்ருதியைக் குறிப்பதாகக் கொண்டு,-உபநிஷத்தே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்கிறது என்று கொண்டால், அந்த அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை’அறிய வேண்டும்’ என்று வேதம் கண்டிப்பாக சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எந்த உபதேசமும் காணப்படவில்லை . எனவே இங்கு சொல்லப்படுவது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

(த்ருஷ்ட்வத் -கண்ணுக்குத்தெரிந்த புருஷார்த்தங்கள் போல் ஆனு ஸ்ரவணாத் -ஸ்வர்க்கம் போன்றவை கேட்டு அறிந்தவையும் –அவி ஸூத்தி -தூய்மை இல்லாமல் திரும்ப வேண்டிய குறை -துக்கம் கலந்து –ஷயம் -முடியும் –அதிசயம் -உலக இன்பங்களை விட சுவர்க்கம் மேலானது போல் இதற்கு மேலானவை உண்டே-தத் விபரீதமானவே ஸ்ரேயஸ் -அழியாத துக்கம் கலசாத முக்தி -சாங்க்யர் காரிகை ஸ்லோகம் –வ்யக்தம்-கண்ணால் காண்பவை – அவ்யக்தம் பிரகிருதி –அறிவாளி -மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு அடையலாம்
இங்கு அறியப்பட வேண்டியது என்ற வேத வாக்கியம் இல்லையே -)

5-வத₃தி இதி சேத் ந ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத்
வத₃தி
– ’சொல்கிறது’ –அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் பூர்வபக்ஷீ.
அஶப்₃த₃ம் அஸ்பர்ஶம் அரூபம் அவ்யயம் ததா₂ அரஸம் நித்யம் அக₃ந்த₄வச்ச யத் ।
அநாத்₃யநந்தம் மஹத꞉ பரம் த்₄ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா₂த் ப்ரமுச்யதே ||

ஒலி தொடுவுணர்ச்சி வண்ணம் சுவை மணம் இல்லாததாய், நித்யமானதாய், மஹான் என்பதைவிட உயர்ந்ததான பொருளை அறிபவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடிகிறான்.-இவ்வாறு மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று வேதமே சொல்கிறபடியால் அவ்யக்தம் என்பது ப்ரக்ருதி தான்.

மூல ப்ரக்ருதியைப் பற்றின உபதேசமே இல்லை —இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு–ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத் – ப்ராஜ்ஞன் (மிகுந்த அறிவாளி) என்ற பரமாத்மாவின் ப்ரகரணம் அன்றோ இது-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே பரமாத்மா தான் பேசப்பட்டு வருகிறார். முதலில் புலன்களை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைய முடியும் என்று சொல்லி, பிறகு கூர்மையாகச் சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் தான் அந்த விஷ்ணுவை காண முடியும் என்று சொல்லி, தற்போது இந்த வாக்கியத்தில் ’ஒரு பொருளை’ அறிந்தால் முக்தி கிடைக்கும் என்று சொன்னால் அந்தப் ’பொருள்’ விஷ்ணுவாகத் தான் இருக்க முடியும், திடீரென்று தொடர்பே இல்லாத மூல ப்ரக்ருதியை இங்குச் சொல்வதாகக் கொள்ள முடியாது. எனவே , அவ்யக்தம் என்ற பொருள்’அறியப்பட வேண்டும்’ என்று இங்கு சொல்லாதபடியால் அது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

(இந்த வரிகளுக்கு முன்னால்-விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
-என்றும்-அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்-சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு-பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –புத்தரோத்மா மஹான் பர -என்றும்-மேலானவன் என்று உணர முடியலாம்-)

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று-பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே)

பூர்வபக்ஷீ கேட்கிறார் – இந்தப் ப்ரகரணத்தில் விஷ்ணுவும் சொல்லப்படுகிறார், ப்ரக்ருதியும் சொல்லப்படுகிறது என்று கொண்டால் என்ன? என்று. அதற்கு பதில் கூறுகிறார் வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் -6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபந்யாஸ: ப்ரஸ்ந: ச–த்ரயாணாம் ஏவ ச – உபேயம் உபாயம் உபேதா என்ற மூன்று பொருள்களுக்கு மட்டும் தான்–ஏவம் உபந்யாஸ: – இவ்வாறு அதாவது அறியப்பட வேண்டியவை என்று இங்கு உபந்யாஸம் உள்ளது-ப்ரஸ்ந: ச – கேள்வியும் கூட (அந்த மூன்றைப் பற்றித் தான் உள்ளது) நசிகேதஸ் தன் மூன்றாவது வரத்தால் முக்தி எப்படிப்பட்டது என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் உபேயம் (அடையப்படும் இலக்கு), உபாயம் (முக்தி அடையும் வழி) மற்றும் உபேதா (அடைபவர்) என்ற மூவர் தான் அடங்கியுள்ளார்கள். (ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-)யம தர்மனும் உபேயம் பரமாத்மாவே , உபாயம் பக்தி தான், உபேதா ஜீவாத்மா என்று அதனதன் தன்மைகளையே உபதேசிக்கிறார். எனவே இங்கு மூல ப்ரக்ருதியைப் பற்றிப் பேச்சே இல்லை .

(தம் துர்தர்சம்– கூடம் மறைக்கப்பட்டு அனுப்பிரவிஷ்டம் குஹாயம் புராணம் தேவம் -அவ்யாத்மயோகம் -ஆத்ம சாஷாத்காரம் வந்து த்யானம் செய்து ஹர்ஷ சோகம் தாண்டி இன்பமயமான விஷ்ணு பதம் அடைகிறான்-பிரிய தமனாக உள்ளவர்களையே தேர்ந்து எடுத்துக் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான்அன்பு பக்தியே அடையும் வழி)

7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” – (7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” –(புத்தேராத்மா மகான் பர –) புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ’மஹான்’ என்ற இடத்தில்-மஹான் என்பது அசேதனப் பொருள் அல்ல, அதை ’ஆத்மா’ என்று சொல்கிறபடியால். அதே போல், ’மஹான் என்ற ஆத்மாவை விட அவ்யக்தம் உயர்ந்தது” என்று சொல்கிறபடியால், அந்த அவ்யக்தம் ப்ரக்ருதியாக இருக்க முடியாது,-ஜீவாத்மாவை விட மூல ப்ரக்ருதி உயர்ந்தது என்று ஸாங்க்ய மதத்தில் ஏற்காதபடியால்.)

1-4-2–சமஸாதி₄கரணம்-ப்ரக்ருதியும் படைக்கப்படுவதே

ஸாங்க்ய மதத்தின் விமர்சனம்
இந்தப் பாதத்தில், கபிலாசார்யரின் ஸாங்க்ய மதத்தைச் சொல்வது போல் இருக்கும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து, அவையும் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை , பரமாத்மா ஜகத்காரணம் என்று தான் காட்டுகின்றன என்கிறார் வ்யாஸர். அதனால், முதலில் ஸாங்க்ய மதத்தை நன்கு புரிந்து கொள்வோம்-(தந்த்ர ப்ரக்ரியை -சாங்க்ய மதத்தை இப்படியும் சொல்வர்).மூல ப்ரக்ருதி’ என்பது தான் இந்த உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள். அதில் ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்கள் உள்ளன. ப்ரளய நிலையில் இம்மூன்று குணங்களும் ஸம நிலையில் இருக்கும்.-ஸ்ருஷ்டி ஏற்படும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ப்ரக்ருதி என்பது நித்யமானது, என்றும் இருக்கும்.ஸ்ருஷ்டி நடக்கும் போது, ப்ரக்ருதியிலிருந்து ’மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து அஹங்காரம் என்ற தத்துவமும் உண்டாகின்றன. பிறகு, தாமஸ அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரம், ஸ்பர்ச தந்மாத்ரம், ரூப தந்மாத்ரம், ரஸ தந்மாத்ரம் மற்றும் கந்த தந்மாத்ரம் என்ற 5 தந்மாத்ரங்களும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற 5 பூதங்களும் தோன்றுகின்றன. ஸாத்த்விக அஹங்காரத்தலிருந்து கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற 5 ஜ்ஞாந இந்த்ரியங்களும். பேச்சுப்புலன் கைகள் கால்கள் மற்றும் மலம் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்ற 5 கர்ம இந்த்ரியங்களும், மனது என்ற உட்புலனும் தோன்றுகின்றன. ஆக மொத்தம் 24 விதமான அசேதனப் பொருள்கள் உள்ளன–இவற்றை யெல்லாம் விட உயர்ந்தவர், ஜ்ஞாநம் உடையவர் ஜீவாத்மா. அவர் 25ஆவது தத்துவம்.-இவற்றுக்கு மேல் பரமாத்மா, ஈச்வரன், ப்ரஹ்மம் என்று ஒரு தத்துவம் கிடையாது. இதுதான் ஸாங்க்ய மதம்-இதில் தத்துவங்களின் வரிசை , தன்மைகள் இவற்றை யெல்லாம் ஸித்தாந்தத்திலும் ஏற்றாலும், பரமாத்மா என்று 26ஆவது ஒரு தத்துவம் உள்ளது என்றும், அவர்தான் மற்ற சேதனங்கள் மற்றும் அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவற்றை இயக்குகிறார் என்றும் சொல்கிறோம். இதுவே வேறுபாடு-இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸாங்க்ய மதம் தவறென்று காட்டப்படுகிறது.

(மந்த்ரிக உபநிஷத் -விகார ஜனணீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் -கீதையிலும் இதே போல் பஞ்ச பூதங்கள் -மனஸ் -அஹங்காரம் மஹா -அஜாம் த்ருவாம் -அவரால் இயக்கப்பட்டு -மக்களுக்கு வேண்டிய பலன்களை அவன் இயக்கத்தால் உண்டாகிறது –
முக்குண -வெள்ளை கறுப்பு சிகப்பு -சத்வ ரஜஸ் தமஸ் -மயம் -ஸர்வகாம -நினைத்தபடி உண்டாக்கி-அஞ்ஞர்கள் இப்பிரக்ருதியைக் குடிக்கிறார்கள் -அனுபவிக்கிறார்கள் -உழன்று கொண்டு குமாரர் -சிறுபிள்ளைத்தனம் -தேவதேவன் வசத்தில் பிரகிருதி வசப்பட்டு -ஆசைப்பட்டபடி இத்தை உருவாக்குகிறார் -அந்த ஈஸ்வரன் -26/27 தத்வம் என்றும் சொல்கிறார்கள் -காலத்தையும் சேர்த்தது 27—ஸ்வேதாஸ்வரம் -அறிவுடையவர் அறிவில்லாதவர் -ஈசன் -அனீசன் -போக்த்ரு -போக்யம் -பத்யதே கட்டி வைக்கப்படுகிறான் -ஈஸ்வரனை அறிந்து விடுபடலாம் -ஷரம் பிரதானம் -மூலப்பிரக்ருதியை உருவம் மாறி -அம்ருதம் அக்ஷரம் -ஜீவாத்மா -இருவருக்கும் ஈசன் ஏக -அவனையே தியானித்து பூஜை செய்து மனஸால் சாஷாத்காரித்து -அனுக்ரஹத்தால் மோக்ஷம்-விஸ்வ மாயை -இல்லாத பொருள் அர்த்தம் இல்லை -ஆச்சர்யம் -மாயா அஸ்திரம் -பிரயோகம் -ஆச்சர்யமானது -)

வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே .-அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
விகாரஜனனீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்₄ருவாம் | த்₄யாயதே அத்₄யாஸிதா தேந தந்யதே ப்ரேர்யதே புந:-பல விதமான காரியப் பொருள்களை உண்டாக்குவதாய், அறிவற்றதாய், எட்டு வடிவங்கள் உடையதாய், உண்டாக்கப் படாததாய், அழியாததான இந்த ப்ரக்ருதி பரமாத்மாவாலே அதி₄ஷ்டா₂நம் செய்யப்பட்டு(இயக்கப்பட்டு) விரிவடைகிறது செயல்படுகிறது.

ஸிதா அஸிதா ச ரக்தா ச ஸர்வகாமது₃கா₄ விபோ ₄:| பிப₃ந்தி ஏநாம் அவிஷமாம் அவிஜ்ஞாதா : குமாரகா: || வெளுப்பு, கருப்பு, சிவப்பு என்ற மூன்று வண்ணங்கணை (ஸத்த்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்கணை) உடைய இந்த ப்ரக்ருதி ஈஸ்வரனின் ஆணைப்படி இயக்கப்படுகிறது. இதன் உண்மையை அறியாத குழந்தை போன்ற
ஜீவாத்மாக்கள் இதையே குடித்து (அநுபவித்து) அதில் ஈடுபடுகிறார்கள்.

ஏகஸ்து பிப₃தே தே₃வ: ஸ்வச்ச₂ந்த₃: வசாநுகா₃ம்| தம் ஷட்₃விம்சகம் ஆஹு: ஸப்த விம்சம் அத₂ அபதர ||-ஒரு தேவன் மட்டும் தான் இந்தப் ப்ரக்ருதியைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு தான் ஆசைப்பட்டபடி இதை அநுபவிக்கிறார். அந்த பரமாத்மாவை 26ஆவது தத்துவம் என்றோ , (காலத்தையும் கணக்கிட்டால்) 27ஆவது தத்துவம் என்றோ கூறுகிறார்கள்.

வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே . அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஜ்ஞாஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ அஜா ஹ்யேகா போ₄க்த்ரு போ₄கா₃ர்த₂ரூபா|
அநீசஶ்ச ஆத்மா ப₃த்₄யதே போ₄க்த்ருபா₄வாத் ஜ்ஞாத்வா தே₃வம் முச்யதே ஸர்வபாசை : ||-
ஜ்ஞாநீ மற்றும் அறிவிலியாக, இயக்குபவர் மற்றும் இயக்கப்படுவராக இரண்டு விதமான (பரமாத்மா மற்றும் ஜீவாத்மா) நித்யமான ஆத்மாக்கள் உள்ளார்கள். அவர்கள் அநுபவத்துக்காக ப்ரக்ருதி என்ற ஒரு அழியாத தத்துவம் உள்ளது. இயக்கப்படும் ஆத்மா தானே போ₄க்தா (ப்ரக்ருதியால் வரும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவன்) என்று
எண்ணி அந்தப் ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு விடுகிறார். எப்போது இயக்கும் பரமாத்மாவை உணர்கிறானோ அப்போது எல்லா கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறார்.

க்ஷரம் ப்ரதா₄நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மநௌ ஈசதே தே₃வ ஏக: |
தஸ்ய அபி₄த்₄யாநாத் யோஜநாத் தத்த்வபா₄வாத் பூ₄யஶ்சாந்தே விஸ்வமாயா நிவ்ருத்தி: ||-
மாறிக்கொண்டே இருக்கும் ப்ரதானம், மாறாத ஜீவாத்மா எனும் இருவரையும் இயக்கும் தேவன் ஒருவனே . அவனை த்யானித்து, பூஜை செய்து, ஸாக்ஷாத்காரம் செய்தால் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.

மாயாம் து ப்ரக்ருதிம் வித்₃யாத் மாயிநம் து மஹேஸ்வரம்| அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-மாயை (ஆச்சரியமானது) என்று ப்ரக்ருதியை அறிவாய். அதை இயக்கும் மாயாவியாக ஈஸ்வரனான பரமாத்மாவை அறிவாய். இந்த மாயை எனப்படும் ப்ரக்ருதியிலிருந்து தான் பகவான் உலகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.-இப்படி ஸ்பஷ்டமாக வேதாந்தம் கூறுவதால், இதோடு முரண்பட்ட இடங்களில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறோம்

அதிகரணத்தின் பின்புலம்
1-4-2-சமஸாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் அவ்யக்தம் என்ற சொல் பொதுவாக ப்ரக்ருதியைக் குறித்தாலும்,-இங்கு சரீரம் என்ற சொல் உள்ள படியால் சரீரத்தைத் தான் குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படியானால், சரீரம்
என்ற சொல் இல்லாத இடத்தில் மூல ப்ரக்ருதியைத் தானே பொருளாகக் கொள்ள வேண்டும் என்று ஸந்தேஹம்.
விஷய வாக்யம் – ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள பின்வரும் வாக்கியம் –அஜாம் ஏகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா: |
அஜோ ஹ்யேகோ ஜுஷமாந: அநுசேதே ஜஹாதி ஏநாம் பு₄க்த போ₄காம் அஜ: அந்ய: ||-
உண்டாக்கப்படாததாய், ஒன்றாய், சிவப்பு வெள்ணை கருப்பு என்ற வண்ணங்களை உடையதாய், தன்னைப் போன்றபல பொருள்களாய் உண்டாக்கக் கூடியதாய் இருக்கும் ப்ரக்ருதியை (அஜாம் -ப்ரக்ருதி பெண் பால் சொல்) உண்டாக்கப்படாத ஒருவன் (பத்₃த₄ ஜீவாத்மா) விரும்பி அநுபவிக்கிறான், மற்றொருவன் (முக்த ஜீவாத்மா) இதை அநுபவித்து முடித்து விட்டு விடுகிறான்.

ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதத்தின்படி ஸ்வதந்த்ரமாக உலகைப்படைக்கும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? அல்லது பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டு அவரால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா?
பூர்வ பக்ஷம் – ஸாங்க்ய மதத்தில் சொன்னபடி ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் இங்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் –
1- “அஜாம்” அதாவது’உண்டாக்கப்படாதது’ என்று இங்கு ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. ஸித்தாந்தத்தில் ப்ரக்ருதியும் ப்ரஹ்மத்தின் கார்யம் தான், அதாவது உண்டாக்கப்படுவது தான். ஸாங்க்யர்கள் தான் ப்ரக்ருதி உண்டாக்கப்படாதது என்று சொல்கிறார்கள். எனவே இங்கு ஸாங்க்ய மதம் தான் பேசப்படுகிறது.
2- “ஸ்ருஜமாநாம்”-அதாவது“படைப்பவள் ” என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. “
படைப்பைச் செய்பவள் ”-“படைப்பின் கர்த்தா” என்று பொருள். கர்த்தா (செய்பவள்) என்று ஸ்வதந்த்ரமாகச் செயல்படுபவனைத் தான் சொல்ல முடியும் என்று பாணிநி மஹரிஷி தன் இலக்கண நூலில் கூறுகிறார். எனவே ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகத் தான் உலகைப் படைக்கிறது என்று வேதமே ஏற்றுக் கொண்டுள்ளது.-எனவே

அஜா என்ற சொல்லின் பொருள்
ஸித்தாந்தம் –
இந்த வாதத்தை மூன்று ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1-சமஸவத் அவிசேஷாத் – “சமஸத்தைப் போல்; குறிப்பிட்டுத் தோன்றாதபடியால்”
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (அர்வாக்₃பி₃ல: சமஸ: ஊர்த்₄வபு₃த்₄ந: ) என்று ஒரு வாக்கியம் உள்ளது. “கீழே ஓட்டை உடையதாய், மேலே பெரிதாக இருக்கும் சமஸம்” என்ற அதற்குப் பொருள்.-சமஸம் என்ற சொல் பொதுவாக யாகத்தில் உபயோகிக்கப்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.(சோமயாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரங்களுக்கு சமசம்-என்றும் க்ரஹம் சொல்வர் ) பாத்திரம் மேல்பக்கம் ஓட்டை யோடும் கீழே பெரிதாகவும் இருக்கும். ஆனால் இங்கு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. –சமஸம் என்ற சொல்லுக்கு “உண்ணும் கருவி” என்று தான் பொருள். (சமசம் –சமு பஷணே -உண்பதற்கான கருவி -பங்கஜம் -சேற்றிலே பிறந்தது உண்மையான பொருள் போல் )எனவே அச் சொல்லைக் கேட்டதும் உடனடியாக பாத்திரம் தான் குறிப்பிட்டு மனதில் தோன்றாது. உண்பதற்குப் பயன்படும் ஏதோ ஒரு கருவி சொல்லப்படுகிறது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எனவே , எந்த ஒரு பொருளும் சமஸம் என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டுத் தோன்றாதபடியால், சுற்றியுள்ள வாக்கியங்களை வைத்துத் தான் இச்சொல் எதைக் குறிக்கிறது என்று அறிய முடியும்.-அருகிலேயே ’இத₃ம் தச்சி₂ர:’ (இதுதான் தலை ) என்கிற வாக்கியம் உள்ள படியால் இங்கு சமஸம் என்ற சொல் தலையைத் தான் குறிக்கிறது என்று முடிவு செய்யலாம். தலையும் உண்பதற்குப் பயன்படுகிறது, கீழே வாய் என்ற ஓட்டையை உடையது, மேலே பெரிதாய் இருக்கக் கூடியது. எனவே இவ் வர்த்தம் பொருத்தமானதே .-அதே போல் இங்கு “அஜா” என்ற சொல்லுக்கு “உண்டாக்கப்படாதது” என்று தான் பொருள். குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி மனதில் தோன்றாது. எனவே , மற்ற வாக்கியங்களைக் கொண்டுதான் இங்கு எந்தப் பொருள் கூறப்படுகிறது என்று முடிவு செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களில் முக்குணங்களை உடையதாய், உலகப் பொருள்களை உண்டாக்குவதாய், பரமாத்மாவால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. எனவே அதுவே அஜா.-“படைப்பவன் ” என்று சொன்னாலும் ஸ்வதந்த்ரமானது என்று பொருள் கிடைக்காது-(இதுவும் பொதுவான சொல் தானே ). “தேர் ஓடுகிறது” என்று சொல்கிறோம். அங்கு தேருக்கு ஸ்வதந்த்ரமாக இயங்கும் தன்மை இல்லா விட்டாலும் “ஓடுதலைச் செய்கிறது” என்று கூறுகிறோம். அதே போல் இங்கும், பரமாத்மாவால் இயக்கப்பட்டு ப்ரக்ருதி இத்தனைப் பொருள்களை உண்டாக்கினாலும், அதை “படைப்பவள் ” என்று சொல்வது தவறில்லை –

(உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3–இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது-தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-)

உண்டக்கப்படாதது, ஆனால்-படைக்கப்பட்டது
2-ஜ்யோதி ருபக்ரமா து ததா ₂ ஹி அதீ₄யதே ஏகே
ஜ்யோதி ருபக்ரமா து
– ஜ்யோதிஸ் என்ற பரமாத்மாவிடமிருந்து பிறந்தது தான்
ஹி ஏனெனில்
ததா ₂ அவ்வாறு
ஏகே வேதாத்யயனம் செய்யும் ஒரு சிலர் அதீ₄யதே – ஓதுகிறார்கள்.
தைத்திரீய சாகையில் “அணோரணீயாந்” என்று பரமாத்மாவின் பெருமைகளை உபதேசித்து,“ஸப்த ப்ராணா: ப்ரப₄வந்தி தஸ்மாத்” என்று தொடங்கி ப்ராணன், மலை , கடல் முதலானாவை பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என்று சொல்லி, அதற்கு இடையில் நாம் பார்த்த விஷய வாக்கியத்தைப் போலவே ஒரு வாக்யம் உள்ளது
“அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸரூபாம்” என்று.(தைத்ரிய சாகையிலும் -ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் போல் வாக்கியம் உண்டே) எனவே , பரமாத்மாவால் படைக்கப்படும் பொருள்களின் வரிசையில் ப்ரக்ருதியும் படிக்கப்பட்டபடியால், ப்ரக்ருதியும் பகவானால் படைக்கப்படுவது தான் என்று தெரிகிறது. எனவே ஸாங்க்யர்கள் சொல்லும் ப்ரக்ருதியை வேதம் ஏற்கவில்லை .-மேலும், “தே அபச்யந் தே₃வாத்ம சக்திம்” என்று பகவானுடைய சக்தி (விட்டுப் பிரியாத பண்பு) என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறபடியால், அது ஸ்வதந்த்ரமானது அல்ல என்று தெரிகிறது.
கேள்வி – ப்ரக்ருதி அஜா (உண்டாக்கப்படாதது) என்றும் ஜ்யோதிருபக்ரமா (பரமாத்மாவிடமிருந்து உண்டானது) என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்? இவ் விரண்டு பண்புகளும் முரண்பட்டவை அன்றோ ? பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
3-கல்பதநாபதே₃சாத் ச மத்₄வாதி₃வத் அவிராேத₄:கல்பநோபதே₃சாத் ச – கல்பனம் (ஸ்ருஷ்டி) என்பதைப்பற்றின உபதேத்தால்
அவிராேத₄:— முரண்பாடு இல்லை
மத்₄வாதி₃வத் –-மது₄வித்₃யை முதலானவற்றில் போலே
மது₄ வித்₃யையில் உதயம் அஸ்தமனம் முதலானவற்றை உடைய ஸூர்யனுக்கும் அதில்லாத ஸூர்யனுக்கும் அந்தர்யாமியாக பரமாத்மா சொல்லப்பட்டார். இதில் முரண்பாடு இல்லை ஏனெனில் ஒன்று காரண நிலை (ஸ்ருஷ்டிக்கு முன்), மற்றொன்று கார்ய நிலை . அதே போல் இங்கும் முரண்பாடு இல்லை , இரண்டு நிலைகள் உள்ளன.-மூல ப்ரக்ருதி ப்ரளய காலத்தில் முக்குணங்களை ஸமமான நிலையில் கொண்டிருக்கும். அது படைக்கப்படாத்து, –அஜா. -அதற்குப் பின் அதுவே முக்குணங்களில் ஏற்றத் தாழ்வுகளோடு ஆகிறது. இது காரிய நிலை , உண்டாக்கப் படுகிறது. எனவே ப்ரக்ருதியை ஜ்யோதி ருபக்ரமா என்ற சொல்வதும் தவறல்ல.

(அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேக்சிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது-ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே)

—————

(இப்பாதத்தால் —நிரதிவதிக மஹிமை -ஸ்தாபிக்கப்படுகிறது -கீழ் மூன்று பாதங்களிலும் ஸ்ரஷ்டா -தேஹீ- ஸ்வ நிஷ்டா -பார்த்தோம்) 1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம்-தத்துவங்களின் எண்ணிக்கை

1.4.3 அதிகரத்தின் பின்புலம்
1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’
அஜா’ என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றாதபடியால், மற்ற வாக்கியங்களைக் கொண்டு அது பரமாத்மாவால் இயக்கப்படுவது தான் என்று முடிவு செய்தோம். இந்த அதிகரணத்தில், பரமாத்மா என்றொருவரை ஒப்புக் கொண்டால்
எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறபடியால் குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றுகிறபடியால் அப்படியே ஏற்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

விஷய வாக்யம் – சுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு வாக்கியம்- யஸ்மின் பஞ்ச பஞ்சஜநோ: ஆகாசஶ்ச ப்ரதிஷ்டி₂த: தமேவ மந்ய ஆத்மாநம்–எதில் ஐந்து ’பஞ் ஜந’ங்களும் ஆகாஸமும் நிலை பெற்றிருக்கின்றனவோ , அதுவே ஆத்மா
ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதம் சொல்லும் ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? இல்லையா?
பூர்வபக்ஷம் – இங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் சொல்லப்படுகிறது.
பஞ்ச ஜந: என்ற சொல்லுக்கு ’ஐந்து பொருள்களின் ஸமுதாயம்/கூட்டம்’ என்று பொருள். ’பஞ்ச ’ என்றால் ஐந்து.-எனவே , ஐந்து பொருள்களைக் கொண்ட ஸமுதாயங்கள் ஐந்து உள்ளன என்று தெரிகிறது. அந்த 25 பொருள்களும் ஆகாஸமும் ஜீவாத்மாவால் தாங்கப்படுகின்றன என்று தான் இந்த வாக்கியம் கூறுகிறது.
ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 25 பொருள்கள் தானே ? இங்கு 27 உள்ளனவே ? என்னில் – ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவற்றை ப்ரக்ருதி என்ற த்ரவ்யத்தின் குணங்களாகக் கொள்ளாமல் தனித் தனி த்ரவ்யங்களாகக் கொண்டால்-அசேதன தத்துவங்களே 26, அதற்கு மேல் ஜீவாத்மா 27ஆவது. எனவே அந்த எண்ணிக்கையும் பொருந்தும்.
பரமாத்மா என்று ஒரு பொருளை ஏற்றுக் கொண்டால், 28 தத்துவங்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்த வாக்கியத்தில் வேதம் 25 + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27 தத்துவங்களையே சொல்கிறது. எனவே பரமாத்மா என்றொருவர் கிடையாது. எனவே ப்ரக்ருதி அவரால் இயக்கப்படுவதல்ல, ஸ்வதந்த்ரமானது தான். எனவே அதுவே தான் ஜகத்காரணம், பரமாத்மா அல்ல – என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

உண்மையான தத்துவ எண்ணிக்கை
ஸித்தாந்தம் – 1-ந ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி நாநா பா₄வாத் அதிரேகாத் ச
ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி
– 25 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட
– (ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட ஸ்வதந்த்ரமான தத்துவங்கள் இங்கு சொல்லப்படுகின்றன என்பது) தவறு
நாநா பா₄வாத் – அவற்றைக் காட்டிலும் வேறுபட்ட படியால் (பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டபடியால்)
அதிரேகாத் ச – எண்ணிக்கை அதிகமாக உள்ள படியாலும்

இங்கு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், அவை ஸாங்க்யர்கள் சொல்லும் பொருள்கள் என்று கொள்ள முடியாது, ஏனெனில் ’-நாநா பா₄வாத்’ – ஸாங்க்ய மதத்தில்-பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத தத்துவங்களே ஏற்கப் படுகின்றன ஆனால் இந்த வாக்கியத்தில் 25 பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் ஆதாரமாகவும் பரமாத்மாவே சொல்லப்படுகிறார். எனவே இவை வேறு.

இங்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மா என்று கொள்ளலாமே ? எனில் – “அதிரேகாத் ச”- இங்குள்ள-தத்துவங்களின் எண்ணிக்கை ஸாங்க்யர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 24 அசித் + 1 ஜீவாத்மா = 25 தான். ஆனால் இங்கு 25 பொருள்கள் + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27
பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று த்ரவ்யங்கள் என்று சொன்னதும் தவறு, பல ப்ரமாணங்களில் அவை குணங்கள் என்றே சொல்லப்படுகிற படியால். எனவே காலம் என்பதையும் சேர்த்து, 26 தத்துவங்களுக்கு ஆதாரமானவர் 27ஆவது தத்துவமான பரமாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.

உண்மையில், ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத் அபி அதாவது-“25 என்ற எண்ணிக்கையை ஏற்றாலு ம்கூட” என்று ஸூத்ரம் உள்ள படியால், வேதவ்யாஸர் இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் – ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று’ஐவரின் கூட்டங்கள் ஐந்து’ சொல்லப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பொதுவான தன்மை
வேண்டும். அது இங்கு இல்லை . 5 கர்மேந்த்ரியங்கள், 5 ஜ்ஞாநேந்த்ரியங்கள், 5 தந்மாத்ரங்கள் என்று சொன்னாலும் 5 பூதங்கள் என்றொரு கூட்டத்தை அமைக்க முடியாது, ’ஆகாஸம்’ தனியாக எடுக்கப்பட்டபடியால். மேலும், ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் ஆத்மா மனஸ் என்னும் ஐந்தையும் ஒரு கூட்டமாகத் திரட்ட எந்தப் பொதுவான தன்மையும்
இல்லை . எனவே இங்கு 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொன்னதே தவறு.

(ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது)

வேத வ்யாஸரின் கருத்து
பிறகு ’பஞ்ச பஞ்ச ஜநா:
’ என்பதன் பொருள் என்ன? பஞ்ச ஜநங்கள் என்று சிலருக்குப் பெயர் வழங்கப்படுகிறது.-அவர்கள் ஐவர் எனப்படுகிறது,-’ஏழு ஸப்தரிஷிகள்’ என்பது போல். அவர்கள் யார் என்கிறது அடுத்த ஸூத்ரம் –
2- ப்ராணாதய ₃ : வாக்ய சேஷாத் – “ப்ராணன் முதலானவை , மீதமிருக்கும் வாக்கியத்தால்”
விஷய வாக்கியத்துக்கு அடுத்து வரும் வாக்கியத்தில் -(ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷுஷஸ் சஷுஸ்: ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், அந்நஸ்ய அந்நம், மனஸோ யே மநோ விது₃:) அதாவது
“ப்ராணனுக்குப் ப்ராணனாக, கண்ணுக்குக் கண்ணாக, காதுக்குக் காதாக, அந்நத்துக்கு அந்நமாக, மனதுக்குமனதாக அவர் இருக்கிறார்” என்று உள்ளது. அங்கும் ஐவர் சொல்லப்படுகிறபடியால், அந்த ப்ராணன் கண் காது அந்நம் மனஸ் என்று ஐவர் தான் பஞ்ச ஜநங்கள் என்று தெரிகிறது.
கேள்வி – காண்வ சாகையில் இதே விஷய வாக்கியம் உள்ளது, ஆனால் அதற்கு மேல் வரும் ’ப்ராணஸ்ய ப்ராணம்’ என்ற வாக்கியத்தில் ’அந்நம்’ என்பது இடம் பெற வில்லை . எனவே 4 தான் அங்கு உள்ள படியால் ஐந்து பஞ்ச ஜனங்கள் வேறாகத்தானே இருக்க வேண்டும்? பதில் – அடுத்த ஸூத்ரத்தில் -3-ஜ்யோதிஷா ஏகேஷோம் அஸதி அந்நே
ஏகேஷோம்
ஒரு சிலர் ஓதும் காண்வ சாகையில்
அஸதி அந்நே – அந்நம் சொல்லப்படாவிட்டாலும்
ஜ்யோதிஷோ ஜ்யோதிஸ்-என்ற சொல்லைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம்
காண்வ சாகையில் விஷய வாக்கியத்துக்கு முன்னால் (தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம்.: )என்று பரமாத்மாவை ஜ்யோதிஸ்ஸுக்களுக்கு (ப்ரகாஸம் கொடுக்கும் பொருள்களுக்கு) ஜ்யோதிஸ்ஸாக சொல்லப்படுகிறார். அவை எத்தனை என்றால்,
’பஞ்ச பஞ்ச ஜனா:’ என்று ஐவர் எனப்படுகிறது. ப்ரகாஸம் கொடுக்கும்
ஐவர் என்றால் எது ஜ்ஞாநத்தை ஏற்படுத்தும் இந்த்ரியங்களையே நினைவு படுத்துகிறது. -எனவே பஞ்ச ஜனர்கள் என்பவை இந்த்ரியங்களே -சஷுஸ் கண். ஸ்ரோத்ரம் காது. ப்ராணன் என்றால் வாயுவை அறியும் தோல் என்ற இந்த்ரியம். மனஸ் மனது-அந்நம் என்ற சொல் மூக்கு நாக்கு என்ற இரண்டையும் சொல்கிறது.
எனவே , இங்கு 25 என்ற எண்ணிக்கை சொல்லப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஸாங்க்ய மதம் சொல்லப்படவில்லை , பரமாத்மாவே சொல்லப்படுகிறார் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

—————–

1-4-4-காரணத்வாதி₄கரணம் ஸத் அஸத் இரண்டுமே ப்ரஹ்மம் தான்

1-4-4-அதிகரணத்தின் பின்புலம்-1-4-4-காரணத்வாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’பொருள்கள் எல்லாம் ஒன்றால் தாங்கப்படுகின்றன’ என்று
ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட்டபடியால் ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல என்று நிரூபித்தார் வ்யாஸர். அப்போது வேதாந்தத்தில் எங்கு ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட வில்லையோ அங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறது என்று கொள்ளலாமே என்று பூர்வபக்ஷீ கேட்கிறார்.

(விஷய வாக்கியம் சொல்லி சந்தேகம் முன்பு எல்லாமே -இங்கு சந்தேகம் -பல ஜகத்காரண வாக்யங்களைக் பற்றிய சந்தேகம் -வேதாந்தமே குழப்புகிறது -என்பதே பூர்வ பக்ஷம்)

ஸந்தேஹம் – வேதாந்தத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதியா? அல்லது பரமாத்மாவா ?
பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் பல முரண்பட்ட வாக்கியங்கள் இருக்கிறபடியால் ’இதுதான் ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யவே முடியாது. எனவே ’ப்ரஹ்மமே ஜகத்காரணம்’ என்று நீங்கள் சொல்வது தவறு.

சாந்தோக்ய உபநிஷத்தில் (्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது-’இந்த உலகு அனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்ததே ,-வேறு எந்தப் பொருளும் இல்லை ’ என்று சொல்லப்படுகிறது. ’இந்தக் குடங்கள் எல்லாம் முன்னால் மண் கட்டியாகவே இருந்தன’ என்று சொன்னால் குடங்களுக்கு மண் கட்டி தான் காரணம் என்று நாம் அறிவதுபோல் இந்த வாக்கியத்தால் ’இந்த உலகத்துக்கு ஸத் தான் காரணம்’ என்று அறியலாம். ஸத் என்றால் ’இருக்கும் பொருள்’ / ’உள்ள பொருள்’.

தைத்திரீய உபநிஷத்தில் (्அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது அஸத்தாக அன்றோ இவ்வுலகம்-முன்னால் இருந்தது’ என்றுள்ள தால் அஸத் தான் ஜகத் காரணம் என்று தெரிகிறது. அஸத் என்றால் ’இல்லாதது’.

‘இருப்பது’,’இல்லாதது’ என்று மாற்றி மாற்றி ஜகத் காரணப் பொருள் சொல்லப்படுகிறபடியால் இதுதான் ஜகத்காரணப் பொருள் என்று வேதாந்தத்தைக் கொண்டு முடிவு செய்யவே முடியாது.-அப்படியே முடிவு செய்தாலும்,
(தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந்நாமரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ’ என்று இவ்வுலகம் ’அவ்யாக்ருதம்’ அதாவது பெயர் மற்றும் உருவத்தால் பிரித்து அறியப்பட முடியாதபடி இருந்தது, இப்போது பெயர் மற்றும் உருவத்தால் பிரிக்கப்படுகிறது’ என்றுள்ள தால் ஜகத்காரணம் =அவ்யாக்ருதம் = அவ்யக்தம் = மூலப்ரக்ருதி என்றுதான் முடிவு செய்யலாம்.-இந்த மூல ப்ரக்ருதியே நித்யமானபடியால் (எப்போதும் இருப்பதால்) ஸத் என்றும், வடிவங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் அஸத் என்றும் சொல்லப்படுகிறது. பரமாத்மாவை இப்படி ஸத் மற்றும் அஸத் என்று கூற முடியாது.

(ஈஷதே -முளை தயார் நிலையில் உள்ள விதை போல் பிரகிருதி -ப்ரஹ்மம் -பெரியது -ஆத்மா -எங்கும் வியாபித்து இருப்பதால் -என்று அர்த்தங்கள் கொண்டு ப்ரக்ருதியையே சொல்வதாகக் கொள்ளலாம் -பூர்வ பக்ஷம்)

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்-(1) காரணத்வேந ச ஆகாசாதி₃ஷு யதா ₂வ்யபதி₃ஷ்டோக்தே:
ஜகத்காரணம் பரமாத்மாவே தான் என்று முடிவு செய்யலாம்,
யதா ₂வ்யபதி₃ஷ்டே — இது வரை ஸுத்ரங்களில் சொல்லப்பட்ட ஸர்வஜ்ஞனான பாபமற்றவரான (சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸர்வேஸ்வரேஸ்வரன் சர்வ நியந்தா இத்யாதியாக இதுவரை சொல்லப்பட்ட )பரமாத்மாவை
ஆகாசாதி₃ஷு ச –-ஆகாசம் முதலானவற்றுக்கும் கூட
காரணத்வேந –காரணமாக
உக்தே: சொல்கிறபடியால்
’ஜகத்காரணம் இது தான்’ என்று சொல்வதற்கு முன்னவே அப் பொருளைப் பற்றி வேதம் பலவிதமான உபதேசங்களைச் செய்கிறது. அந்தப் பண்புகள் எல்லாம் ஒரு ஜ்ஞாநமுடைய பொருளுக்கே பொருந்தும்,-ப்ரக்ருதிக்குப் பொருந்தாது.

தைத்திரீய உபநிஷத்தில் – (ப்₃ரஹ்ம வித் ஆப்நோதி பரம்) அதாவது
’ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் முக்தி அடைகிறான்’ என்று சொல்லி, (ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா) -அதாவது’முக்தியில் அந்த எல்லை யற்ற ஜ்ஞாநமுடைய ப்ரஹ்மத்தையே அடைகிறான்’ என்று சொல்லி, (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம ) அதாவது
’எப்போதும் மாறாமல் இருப்பதும்,-எல்லை யற்ற ஜ்ஞாநமுடையதும், அளக்க முடியாததுமாக இருப்பதே ப்ரஹ்மம்’ என்று மறுபடியும் அதற்கு-ஜ்ஞாநமிருப்பதையே அடையாளமாகக் கூறி, (தஸ்மாத்₃வா எதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது’அப்படிப்பட்ட இந்த ஆத்மாவிடமிருந்து தான் ஆகாஸம் தோன்றியது’ என்று ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது ஜ்ஞாநமுடைய பொருளை மட்டுமே குறிக்கக்கூடிய ’ஆத்மா ’ என்ற சொல்லாலே இப் பொருளைக் குறிக்கிறது.
இதே போல் சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள ஸத்₃வித்₃யையிலும் (த தை ₃க்ஷத ப₃ஹு
ஸ்யாம் ப்ரஜாயேயேதி)
என்று ’அந்த ஸத் என்ற பொருள் பார்த்தது (எண்ணியது) –-நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன் என்று’ என்று ஜ்ஞாநமிருப்பதைச் சொல்கிறது.-எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் பகுதிகள் எல்லாம் ஜ்ஞாநமுடைய பரோத்மாவையே சொல்கின்றன.

அஸத்’ என்று ஜகத்காரணம் சொல்லப்பட்டதே ? எனில், அதுவும் பரமாத்மாவே என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் -(2) ஸமாகர்ஷாத் – “ (ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மமே அந்த வாக்கியத்திலும்) இழுக்கப் படுகிறபடியால்”’அஸத்₃வா’ எனும் வாக்கியம் உள்ள ஸந்தர்பத்தைப் பார்த்தால் அதுவும் ப்ரஹ்மத்தைத் தான் சொல்லும். முதலில் (தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆநந்த₃மய:) அதாவது-’இந்த ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எல்லையற்ற ஆநந்தம் உடையவர்’
என்றுள்ளதால் ஆத்மா என்ற சொல்லைக் கொண்டும் ஆநந்தம் இருப்பதைக் கொண்டும் இந்தப்பொருள் ஒரு சேதநன்(ஜ்ஞாநமுடையது) என்று அறியலாம்.

பிறகு (ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருகஜத) அதாவது
’அந்தப் பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைத்தது’ என்று அந்தப் பொருளே ஜகத்காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் (தத₃ப்யேஷ ஸ்லோகோ ப₄வதி) அதாவது’அந்தப் பொருளைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் உள்ளது’ என்று கூறிவிட்டு (्அஸத் ₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது’இந்த உலகம் எல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன் அஸத்தாகவே இருந்தது, அதாவது அஸத் தான் ஜகத்காரணம்’ என்று சொல்லப்படுகிறது. எனவே , இதற்கு முன் சொல்லப்பட்ட ஜ்ஞாநமுடைய, ஆநந்தமுடைய, ஜகத்காரணமான
பரமாத்மா தான் இந்த வாக்கியத்திலும் கண்டிப்பாக இழுக்கப்பட வேண்டும் (குறிக்கப்பட வேண்டும்), ப்ரக்ருதி அல்ல.-இதற்குப் பின்னாலும் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே ) அதாவது
’இந்தப் பொருளின் கட்டளைக்கு பயந்து காற்று, ஸூர்யன், அக்நி, இந்த்ரன், ம்ருத்யு முதலானவர்கள் இயங்குகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.-

(ப்ருஹத் ஆரண்யாகாவில் –தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்-அதே உபநிஷத் –ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்றுஉள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-)-எனவே , அங்கும் இதே பரமாத்மா தான் இழுக்கப்பட வேண்டும், ப்ரக்ருதியால் யாரையும் ஆள முடியாதபடியால்.ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம். அது எல்லா சேதனங்கள் மற்றும் அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டது.-அப்படிப்பட்ட ப்ரஹ்மம் நித்யமாக இருக்கிறபடியால் அதுவே ஸத் எனப்படுகிறது. இப்போது சிங்கம், மனிதன், மலை , புத்தகம் என்று பல பெயர்களோடும் உருவங்களோடும் இருந்தாலும், ப்ரளய காலத்தில் இந்தப் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளோடு இல்லாதபடியால் ’அஸத்’ (இல்லாதது) என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவ்யாக்ருதம் என்ற ப்ரக்ருதி தான் ஜகத்காரணம் என்று சொன்னாலும், ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மா என்றே பொருள்.-எனவே வேதாந்தத்தைக் கொண்டு ப்ரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்று நிச்சயிக்க முடியும் என்கிறார் வ்யாஸர்–

—————

1-4-5—ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-ஜீவனே ப்ரக்ருதியை இயக்க முடியாதா?

1-4-5-அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – இதுவரை 4 அதிகரணங்களில் ப்ரதானமே ஸ்வதந்த்ரமான ஜகத்காரணம் என்று பூர்வபக்ஷீ சொன்னதை வ்யாஸர் கண்டித்தார் – ஒரு அறிவுடைய ஆத்மாவால் இயக்கப்பட்டால் மட்டுமே அறிவற்ற அசேதனப் பொருளான ப்ரக்ருதி இயங்க முடியும் என்று கூறி. இப்போது அதே ஸாங்க்யர்கள் மறுபடியும்
கேள்வி எழுப்புகிறார்கள் – சரி, ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கவில்லை , ஜிவாத்மாவால் இயக்கப்பட்டு தான் படைக்கிறது என்று கொள்ளலாம், அப்போதும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வது தவறு தான் என்று.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆம் அத்யாயத்தில் முதல் ப்ராஹ்மணம் – பா₃லாகி ப்₃ராஹ்மணம்-த்₃ருப்த பா₃லாகி: ஹ அநூசாநோ கா₃ர்க்₃ய ஆஸ । ஸ ஹோவாச அஜாத ஶத்ரும் காஶ்யம் – ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணீதி । ஸ ஹோவாச அஜாத ஶத்ரு꞉ ஸஹஸ்ர மேதஸ்யாம் வாசி த₃த்₃ம: இதி--கர்க கோத்ரத்தைச் சேர்ந்த பாலாகி என்பவன் வேதத்தின் அங்கங்களைக் கற்று- ஆனால் வேதத்தின் உண்மைப் பொருளை
ஆராய்ந்து அறியாமல், (ஸ்ரோத்ரியன் -வேதம் முழுவதும் அறிந்தவன் –அநூசாநன் -அங்கங்களை மட்டுமே அறிந்தவன்)ஆனால் மிகவும் கர்வம் உடையவனாய் இருந்தான். அவன் சிறந்த ஆத்ம ஜ்ஞாநியான காசீ தேசத்து அரசன் அஜாத சத்ருவிடம் சென்று கூறினான் – “உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று. அரசன் ப்ரஹ்மத்தை உணர்ந்திருந்தாலும் பாலாகியை ஊக்குவிப்பதற்காக உனக்கு ஆயிரம் மாடுகள் பரிசளிப்பேன் என்றான்.

ய ஏவ அஸஸௌ ஆதி₃த்யே புருஷ ஏதமே வ அஹம் ப்₃ரஹ்ம உபாஸ இதி । மா ஏதஸ்மிந் ஸம்வதி₃ஷ்டா₂ । அதிஷ்டா₂꞉ ஸர்வேஷாம் பூ₄தாநாம் மூர்தா₄ ராஜேதி வா அஹமேதமுபாஸ இதி-’ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் ’ என்று பாலாகி கூற,
’அந்தப் புருஷனைப் பற்றி என்னிடம் பேசாதே , நான் அவனை ஜீவ ராசிகளுக்கும் சிறந்தவன் என்று அறிவேன், அவன் ப்ரஹ்மம் அல்ல’ என்றார் அரசன்.
இதே போல் சந்த்ரன் மின்னல் ஆகாஸம் வாயு அக்₃நி ஜலம் கண்ணாடி பிரதி த்வனி திசைகள் நிழல் உடல் முதலானவற்றுக்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல, அது அனைத்தையுமே தவறு என்றார் அஜாத சத்ரு.

அஜாத சத்ருவின் உபதேசம்
ஸ ஹ தூஷ்ணீமாஸ கா₃ர்க்₃ய꞉| ஸ ஹோவாசா ஜாதஶத்ரு: – ஏதாவந்நூ இதி | ஏதாவத்₃தீ₄தி । நைதாவதா விதி₃தம் ப₄வதீதி । ஸ ஹோவாச கா₃ர்க்₃ய – உப த்வா யாநீதி
-இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் பாலாகி மவ்னமாக நின்றான். ’அவ்வளவு தானா?’ என்று அஜாத சத்ரு கேட்க,-’ஆம் நான் அவ்வளவு தான் அறிவேன்’ என்று பாலாகி சொல்ல,
’இத்தால் நீ ப்ரஹ்மத்தை அறிய முடியாது’ என்று அரசன் கூறினான். பாலாகி உடனே ’உம்மிடமே நான் ப்ரஹ்மத்தைப் பற்றி கற்கிறேன்’ என்றான்

யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய:-நீ சொன்ன புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர் (இதுவே விஷய வாக்கியம் -நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் )
ஸந்தேகம் – ஜகத்காரணத்தைப் பற்றிச் சொல்லும் வேதாந்த வாக்கியங்களில் ப்ரக்ருதியை இயக்குபவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?அதை முடிவு செய்வதற்கான விசாரம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவனா? பரனா?-அறியப்பட வேண்டியவர் ஜீவன் என்றால், பரமாத்மா என்ற ஓருவரே இல்லை என்றாகும், எனவே ஜீவன் தான் ப்ரக்ருதியை இயக்க வேண்டும். அறியப்பட வேண்டியவர் பரமாத்மா என்றால் அவரே ப்ரக்ருதியை இயக்குபவர்.
பூர்வபக்ஷம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான். ஏனெனில் –1- (’யஸ்ய வா ஏதத் கர்ம’) அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்றுள்ளது. கர்ம என்ற சொல்லுக்குப் பொதுவாக பாபம் மற்றும் புண்ணியம் என்று தான் பொருள். எனவே , இங்கு அறியப்படுபவராகச் சொல்லப்படுபவருக்கு பாப புண்யங்கள் உள்ளன என்று அஜாத சத்ரு கூறுகிறபடியால் அவர் உலகில் இன்ப துன்பங்கணள அநுபவிக்கும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க முடியும். பரமாத்மாவை ஒப்புக் கொள்பவர்கள் அவருக்கு பாப புண்யங்கள் உண்டு என்று ஏற்பதில்லையே

(செயப்படும் பொருள் -கர்மம் -கர்த்தா -செய்பவன் -என்ற பொருள்களும் உண்டே-குடம் குயவன் போல்–ஸித்தாந்தி சொல்வர்-இந்தப் புருஷர்களை உண்டாக்கியவர் எவனோ -முதலில் சொல்லி -இப்பொருள்கள் கொண்டால் புனர் யுக்தி தோஷம் வருமே-ப்ரஸித்தி பாபபுண்யங்களையே சொல்லும் -பூர்வ பக்ஷம் )

பூர்வபக்ஷியின் யுக்திகள்
2-தௌ ஹ புருஷம் ஸுப்தம் ஆஜக்₃மது: | தம் ஏதை தாமபி₄: ஆமந்த்ரயாம்சக்ரே | ஸ உத்தஸ்தௌ₂ | தம் பாணினா ஆபேஷம் போ₃த₄யாம்சகார | ஸ ஹ உத்தஸ்தௌ₂–
அவர்களிருவரும் ஒரு தூங்கும் மனிதனிடம் சென்றார்கள். அவனை அஜாத சத்ரு பெயரால் அழைத்தும் அவன் எழ வில்லை . பிறகு கையால் அசைத்து எழுப்ப, அவன் எழுந்தான்.-இப்படி உபதேசம் உள்ளபடியால், தூக்கம் விழிப்பு முதலானவற்றை யுடைய ஜீவனே இங்கு சொல்லப்படுகிறார்.
3-தத்₃யதா₂ ச்ரேஷ்டீ₂ ஸ்வை : பு₄ங்க்தே யதா₂ ஸ்வா: ச்ரேஷ்டி₂னம் பு₄ங்ஜந்தி ஏவமேவ ஏஷ ப்ரஜ்ஞாத்மா ஏதை : ஆத்மபி₄: பு₄ங்க்தே ஏவமேவ ஏதே ஆத்மா : ஏநம் பு₄ஞ்ஜந்தி-எப்படி ஒரு சான்றோனை அவன் சுற்றத்தா ரெல்லாம் மகிழ்விப்பார்களோ அதுபோல் இந்த ஆத்மாவை நீ சொன்ன புருஷர்கள் எல்லாம் மகிழ்விக்கிறார்கள் -இப்படி உலகிலுள்ள ஜீவ ராசிகளால் மகிழ்பவராகச் சொல்லப்படும் ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்கமுடியும்.

4-க்வ ஏஷ ஏதத்₃பா₃லாகே புருஷ: அசயிஷ்ட? அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி | ஸ யதா₃ ப்ரதிபு₃த்₄யதே ஆத்ம : ப்ராணா: யதா₂யததம் விப்ரதிஷ்ட₂ந்தே , ப்ராணேப்₄ய: தே₃வா:, தே₃வேப்₄ய: லோ கா:-இவன் தூங்கும் போது எங்கு சென்றான்? எங்கிருந்து வந்தான்? ப்ராணனோடு தொடர்புபட்ட ஆத்மாவிடம் அனைத்தும் ஒன்றாகிறது. விழிக்கும் போது அங்கிருந்து மூச்சுக் காற்று, புலன்கள் எல்லாம் பிரிந்து வருகின்றன.(ஹிதம் என்னும் நாடிகளில் இருக்கிறான் -இந்திரியங்கள் மனம் அனைத்தும் அடங்கி விடும் -இவரிடம் லயம் அடைகின்றன –இவர் விழிக்கும் பொழுது தங்கள் தங்கள் இடம் செல்கின்றன )-இங்கும் ப்ராணனோடு கூடிய ஆத்மா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.-எனவே ’ப்ரஹ்மத்தைக் கூறுகிறேன்’ என்று பாலாகி தொடங்கி, சொல்ல முடியாமல் திகைத்து, பதிலுக்கு அஜாத சத்ரு’ஜீவாத்மா தான் அறியப்பட வேண்டியவர்’ என்று உபதேசிக்கிறபடியால், ஜீவாத்மா தான் ப்ரஹ்மம், ஜகத்காரணம்.

1.4.5 ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-பரமாத்மா படைத்த உலகில் ஜீவாத்மா வாழ்கிறார்

கர்ம எனப்படுவது பாப-புண்யங்கள் அல்ல
ஜகத்வாசித்வாதிகரணம் – பூர்வபக்ஷம் (யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய: ) அதாவது“ஸூர்யன் சந்த்ரன் மின்னல் வானம் முதலான புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர்” என்று அஜாத சத்ரு பாலாகிக்கு உபதேசித்தார். கர்ம என்றால் பாபமும் புண்ணியமும்.அவற்றைக் கொண்டவர் ஜிவாத்மாவே . எனவே ஜீவாத்மாவே ப்ரஹ்மம்-இங்கு ’அவர் அறியப்பட வேண்டியவர்’ என்றதுக்கு ’பாப புண்யங்களோடு கூடின ஸம்ஸாரத்திலிருக்கும் ஜிவாத்மா அறியப்பட வேண்டியவர்’ என்று பொருள் அல்ல. ’முக்தி அடைந்த நிலையில் இருக்கும் தூய்மையான ப்ரக்ருதி வியுக்த (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட) ஆத்ம ஸ்வரூபம் அறியப்பட வேண்டும்’ என்று தான் பொருள். அதை அறிந்தால் தான் முக்தி கிடைக்கும்.

ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1- ஜக ₃த்₃வாசித்வாத் –(கர்ம என்ற சொல்) உலகத்தைச் சொல்வதான படியால்”-விஷய வாக்யத்தில் உள்ள கர்ம என்ற சொல் இந்த உலகத்தைத் தான் குறிக்கிறது. ’கர்ம’ என்றால் ’செயப்படு பொருள்’. -பரமாத்மா செய்யும் படைத்தல் என்ற செயலில் செயப்படு பொருளாக உலகம் உள்ளது, அதாவது இவ்வுலகம் அவரால் படைக்கப்படுகிறது. எனவே அதுவே கர்ம. இச் சொல் பாப-புண்யங்கண பின்வரும் காரணங்களால் குறிக்க இயலாது

(ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்-ஏன் எனில்-கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் – க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால் -ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து )

1- ’ஏதத் கர்ம யஸ்ய’ அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்கிற இடத்தில் ’இந்த’ என்ற சொல் உள்ளது. அது கண் வட்டத்தில் அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும். புலன்கள் முதலான ப்ரமாணங்களால் அறியப்படும் அருகிலுள்ள பொருள் இந்த ஜகத் (உலகம்) தான், பாப-புண்யங்கள் அல்ல.
2-இதற்கு முன் பாலாகி சொன்ன ஸூர்யன், சந்திரன், வானம், அக்நி முதலானவற்றில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் கர்மத்துக்கு வசப்பட்டவர்கள். அவர்களை யெல்லாம் ப்ரஹ்மமல்ல என்று நிராகரித்து விட்டு, அவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒருவரை உபதேசிக்கத் தொடங்கிய அஜாத சத்ரு மறுபடியும் பாப-புண்யங்களை உடைய ஒரு ஆத்மாவை ப்ரஹ்மம் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது. எனவே இங்கு கர்ம என்ற சொல் பாப-புண்யங்களைக் குறிக்க இயலாது, உண்டாக்கப்படும் இந்த உலகத்தையே குறிக்க வேண்டும்.

பூர்வபக்ஷத்தைத் தகர்த்தல்
3-பூர்வபக்ஷத்தில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படுகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருள் பொருந்தாதபடியால் அதோடு தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர்.-எடுத்துக்காட்டு – ’வகுப்பறை சத்தமிடுகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள ’வகுப்பறை ’ என்ற சொல்லுக்கு
முக்கியமான பொருள் ஓர் அறை . ஆனால் அறை சப்தமிட முடியாது. எனவே அப் பொருளை விட்டு, ’வகுப்பறையில் இருப்பவர்கள்’ என்று தொடர்புடைய மற்றொரு பொருளைக் கொள்கிறோம். அப்போது பொருள் பொருந்தும்.
அதே போல் இங்கும் ’கர்மம் யாருக்கு உள்ளதோ அவரை அறிய வேண்டும்’ என்று சொற்றொடர் உள்ளது. ஆனால் ’அவரை ’ என்ற சொல்லுக்கு ’கர்மங்களை உடையவரை ’ என்று பொருள் கொள்வது பொருந்தாது, ஏனெனில் ஸாங்க்ய மதத்தின்படி ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவின் நிலையை அறிவதால் முக்தி கிடைக்காது. எனவே அந்தச்
சொல்லுக்கு ’முக்திக்குப் பின் தூய்மையான நிலையில் இருக்கும் ஆத்மா’ என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. எனவே ’அவர்’ என்ற சொல்லில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படும்.
4- மேலும், பூர்வ பக்ஷத்தில் ’இந்தக் கர்மம் யாருடையதோ ’ என்றவிடத்தில் உள்ள ’இந்த’ என்ற சொல் வீணானது.
5-ஸித்தாந்தத்தில் ’ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , இந்த உலகத்தைப் படைத்தவர் யாரோ ’ என்று ஒரே பொருள் இரண்டு முறை கூறப்படுகிறபடியால் ’புநருக்தி’ (திரும்பச் சொல்லுதல்) என்ற குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் அது வராது, இரண்டாவது வாக்கியம் பொதுப்படையாகச் சொல்கிறபடியால். ’இந்த
ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , அவ்வளவு ஏன், இந்த உலகமே யாருடைய படைப்போ , அவரை அறிய வேண்டும்’ என்று அஜாதசத்ரு சொல்கிறபடியால் புநருக்தி இல்லை . ப்ரஹ்மத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
6-பூர்வ பக்ஷத்தில் ’இந்த ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ ’ என்றுள்ள வாக்கியம் ஜீவாத்மாவைப் பற்றினது என்று கூறுகிறார்கள். அது பொருந்தாது. ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் எல்லாம் படைக்கப் பட்டாலும், ஜீவாத்மா இந்தப் பிறவிகளை அடைந்தாலும், அவர் இந்தப் பொருள்களை படைப்பதே இல்லை . ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப பரமாத்மாவால் படைக்கப்பட்ட பொருள்களைத் தான் ஜீவாத்மா உபயோகிக்கிறார். எனவே அஸம்பவம் (பொருந்தாமை ) என்ற தோஷமும் வரும்.
இப்படி பல தோஷங்கள் பூர்வ பக்ஷத்தில் உள்ள படியால், ஸித்தாந்தத்தில் தோஷமில்லாதபடியால் இதுவே சரியானது.

மற்றவர்களைப் பற்றின பேச்சு எதற்கு?
கேள்வி –
அஜாதசத்ரு பரமாத்மாவைப் பற்றி தான் உபதேசிக்கிறார் என்றால் ஏன் இங்கு தூக்கம், விழிப்பு, உறவினர்களால் மகிழ்தல் முதலான ஜீவாத்மாவைப் பற்றின அடையாளங்களும், தூங்கும் போது புலன்கள் எல்லாம் ப்ராணனில் ஒன்றி விடுகின்றன என்று ப்ராண வாயுவைப் பற்றின பேச்சும் உள்ளது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
2-–्ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந தத்₃வ்யாக்₂யாதம்

ஜீவ முக்₂யப்ராண லிங்கா₃த் ந – ஜீவனின் அடையாளங்களும் மூச்சுக் காற்றைப் பற்றின பேச்சு என்கிற அடையாளமும்-இங்கு உள்ள படியால் இங்கு சொல்லப் படுபவர் பரமாத்மா அல்ல
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
தத்₃வ்யாக்₂யாதம் – அது முன்னமே விவரிக்கப்பட்டது
1-1-11-இந்த்ரப்ராணாதிகரணத்தில் இதே போல் ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் செய்த உபதேசத்தில் இந்த்ரன் என்ற ஜீவாத்மாவைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் உபதேசமிருந்தது. ஆனால் அங்கு இவ்வாறு முடிவு செய்தோம் –உப க்ரமம் (தொடக்கம்) மற்றும் உப ஸம்ஹாரம் (முடிவு) என்ற இரண்டிலும் பரமாத்மாவே பேசப்படுகிறபடியால்
இந்தப் பகுதி அவரையே சொல்கிறது. எனவே இந்த்ரன் மற்றும் மூச்சுக் காற்று சொல்லப்படும் இடங்களிலும் அவற்றுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா தான் கொள்ளப் பட வேண்டும்.
அதே போல் இங்கும் தொடக்கத்தில் ’ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணி’ (உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசிக்கிறேன்) என்று உள்ளது, நடுவில் ’யஸ்ய வா ஏதத் கர்ம’ (இந்த உலகமே யாரால் படைக்கப்பட்டதோ ) என்றுள்ளது, முடிவில் ’ஸர்வாந் பாப்மந: அபஹத்ய ஸர்வேஷாம் பூ₄தாநாம் ச்ரைஷ்ட்₂யம் ஸ்வாராஜ்யம் ஆதி₄பத்யம் பர்யேதி’ (இந்த ப்ரஹ்மத்தை
அறிபவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்) என்றுள்ளது. எனவே , இந்த உபதேசமே பரமாத்மாவைப் பற்றினது.
இந்த்ரன் மற்றும் ப்ராணனுக்கு அந்தர்யாமியாகப் பரமாத்மாவைச் சொல்வதன் பயன் என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லபட்டது – பரமாத்மாவை தானாகவும், ஜீவனுக்கு அந்தர்யாமியாகவும், அசேதனத்துக்கு அந்தர்யாமியாகவும்-மூன்று விதத்தில் உபாஸநம் செய்ய வேண்டும் என்று இங்கு காட்டப்படுகிறது என்று. இங்கும் அதே போல் ப்ராண வாயுவைப் பற்றின பேச்சு, ப்ராணனை அந்தர்யாமியாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று சொல்வதற்காக வந்துள்ளது. எனவே , பூர்வ பக்ஷியின் கேள்விக்கு முன்னமே பதில் அளிக்கப்பட்டு விட்டது.

பரமாத்மாவின் அரவணைப்பு
கேள்வி
– ஜீவனைப் பற்றின பேச்சு இங்கு எதற்காக வருகிறது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
3-அந்யார்த₂ம் து ஜைமிநி: ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் அபி சைவமேக
அந்யார்த₂ம் து
– (இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்வது) வேறொரு ப்ரயோஜநத்துக்காக, அதாவது பரமாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக, (ஜீவாத்மாவே அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் என்று சொல்வதற்காக அல்ல)
ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் – கேள்வியையும் பதிலையும் கொண்டு இதை அறியலாம்
அபி ஏவம் ஏகே – மேலும் ஒரு சிலர் இவ்வாறே ஓதுகிறார்கள்
இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை எழுப்புவதைப் பற்றின பேச்சு ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக அல்ல என்று அதற்குப் பின் வரும் கேள்வியையும் பதிலையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
அஜாத சத்ருவின் ப்ரஸ்நம் (கேள்வி) இவ்வாறு உள்ளது – ’இதுவரை தூங்கும் போது இந்த ஜீவாத்மா எங்கு இருந்தான்?’
ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதாக இருந்தால் ’இவன் யார்’ என்று தான் கேட்க வேண்டும். இங்கு அவர் இருந்த இடத்தைப் பற்றித் தான் கேள்வி உள்ளது. எனவே ஜீவாத்மாவைப் பற்றின பேச்சு அவரைப் பற்றி உபதேசிக்க அல்ல.
அஜாத சத்ருதுவின் வ்யாக்யானம் (பதில்)
(யதா₃ ஸுப்த: ஸ்வப்நம் ந கத₂ஞ்சந பஸ்யதி அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி,
ஏதஸ்மாத் ஆத்மந: ப்ராணா : யதா₂யதநம் விப்ரதிஷ்ட்₂ந்தே )
அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது ப்ராணனில் ஒன்றி விட்டு, பிறகு அந்த ஆத்மாவிடமிருந்து எழுந்து வருகிறார்’ என்றுள்ளது. இங்கு ப்ராணன் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மாவே , ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களிலும் ஜீவன் தூங்கும் போது பரமாத்மாவோடு ஒன்றி, தன் களைப்பை எல்லாம் போக்கிக் கொள்கிறான் என்று தான் சொல்லப்படுகிறது.
கடைசியாக, சுக்ல யஜுர் வேதத்தில் நேரடியாகவே (ஏஷ புருஷ: த்தா₃
ய ஏஷ அந்தர் ஹ்ருத₃ய ஆகாச: தஸ்மிந் சேதே )
அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது இதயத்தில் இருக்கும் ஆகாசத்தில்-(பரமாத்மாவிடம்) சயனிக்கிறார்’ என்று ஓதப்படுகிறபடியாலும் இவ்வர்த்தத்ணத அறியலாம்.
எனவே இங்கு அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் பரமாத்மாவே . அவரே ப்ரக்ருதியை இயக்கி உலகைப் படைக்கிறார்.

(பிராணன் பரமாத்மாவைச் சொல்லி அடுத்த பிராணன் ஜீவாத்மாவைச் சொல்லும் -உபநிஷத் இவ்வாறு குழப்பம் அடையும்படி இருப்பதாலேயே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ பாஷ்யமும் வேண்டி இருக்கின்றன)

—————-

1.4.6-வாக்யாந்வயாதி₄கரணம்-நம் உறவினர்களைப் ப்ரியமாக ஆக்குபவர் பரமாத்மாவே

அதிகரணத்தின் பின்புலம்
1-4-6-வாக்யாந்வயாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’கர்மம் யாருடையதோ அவர் அறியப்படவேண்டும்’ என்று சொற்றொடர் இருந்தாலும், ’கர்மம் யாருடையதோ அந்த ஆத்மாவின் தூய்மையான முக்தி அடைந்த நிலையை அறிய வேண்டும்’ என்று கஷ்டப்பட்டு பொருளை உரைத்தார் பூர்வபக்ஷீ. இவ்வதிகரணத்தில் அப்படி எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிமையாக ஜீவாத்மா தான் ப்ரக்ருதியை இயக்கிப் படைக்க வைக்கிறார் என்கிறார் பூர்வபக்ஷீ

விஷய வாக்யம் – மைத்ரேயீ ப்₃ராஹ்மணம் – ப்₃ருஹதா₃ரண்யக உபநிஷத் 2ஆம் அத்யாயம் 4ஆம் ப்ராஹ்மணம்-உத்₃யாஸ்யந்வா அரே அஹம் அஸ்மாத் ஸ்தா₂நாத் அஸ்மி । ஹந்த தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி-யாஜ்ஞவல்க்யர் இல்லற வாழ்க்கையைத் துறக்க விரும்பி, மைத்ரேயீ காத்யாயநீ என்ற தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே மைத்ரேயியைப் பார்த்து இவ்வாறு கூறினார் – “மைத்ரேயீ! நான் இந்த க்ருஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து விலகப் போகிறேன், எனவே உனக்கும் காத்யாயனிக்கும் செல்வத்தைப் பிரித்து முடிவு செய்கிறேன்” என்று.
யந்நு ம இயம் ப₄கோ ₃꞉ ஸர்வா ப்ருதி₂வீ வித்தேந பூர்ணா ஸ்யாத் கத₂ம் தேநாம்ருதா ஸ்யாமிதி । நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்யோ , அம்ருதத்வஸ்ய து ந ஆஶா அஸ்தி வித்தேந
மைத்ரேயீ கேட்டாள் – “பெரியவரே ! இந்த உலகத்தை யெல்லாம் செல்வத்தால் நிரப்பிக் கொடுத்தாலும் அதைக் கொண்டு நான் மரணமில்லாத நிலையை அடைய முடியுமா?” என்று. யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “முடியாது,செல்வத்தால் முக்தியை ஒருநாளும் அடைய முடியாது” என்று யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் । யதே₃வ ப₄க₃வாந் வேத₃ ததே ₃வ மே ப்₃ரூஹீதி-மைத்ரேயீ கூறினாள் – “எதைக் கொண்டு என்னால் முக்தி அடைய இயலாதோ அது எனக்கு வேண்டாம். முக்தி அடைவதற்கு நீர் எந்த வழியை அறிந்திருக்கிறீரோ அதையே எனக்கும் சொல்ல வேண்டும்” என்று-ப்ரியா ந: ப்ரியம் பா₄ஷஸ ஏஹ்யாஸ்ஸ்வ வ்யாக்₂யாஸ்யாமி தே--யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “இவ்வாறு நீ கூறியதால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. வா! அமர்வாய்! உபதேசிக்கிறேன்!”

பூர்வ பக்ஷியின் யுக்திகள்
ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப₄வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப₄வதி-
கணவன் தன்னுடைய எண்ணத்தால் தன் மனைவிக்குப் ப்ரியமானவனாக ஆவதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான்-இதே போல் ஜாயா (மனைவி), புத்ரன் (மகன்), வித்தம் (செல்வம்), லோகங்கள், தேவர்கள், பூதங்கள், அனைத்துமே அதனதன் எண்ணத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான் என்று உபதேசித்தார்.
ஆத்மா வா அரே த்₃ரஷ்டவ்ய꞉ ஶ்ரரோதவ்யோ மந்தவ்யோ நிதி₃த்₄யாஸிதவ்யோ । ஆத்மநோ வா அரே விஜ்ஞாநேந இத₃ம் ஸர்வம் விதி₃தம்-அந்த ஆத்மா தான் கேட்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும், த்யானிக்கப்பட வேண்டும், காணப்பட வேண்டும்.-அந்த ஆத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்.

ஸந்தேஹம் – இந்த அத்யாயத்திலேயே ஜகத்காரணம் யார் என்ற ஆராய்ச்சியே செய்யப் படுகிறபடியால், இங்கு முக்கியமான கேள்வி – “ஜீவாத்மாவால் இயக்கப் படும் ப்ரக்ருதி ஜகத் காரணமா? அல்லது பரமாத்மா ஜகத்காரணமா? என்று. அதற்காக இங்கு ஆராயப்படுவது – இந்த விஷய வாக்கியத்தில் கேட்டு, ஆராய்ந்து, த்யானித்து காணப்பட
வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா பரமாத்மாத்வா என்று.
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவே , ஏனெனில் இங்கு தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவரே சொல்லப்படுகிறார்.
தொடக்கத்தில் – கணவன் மனைவி குழந்தை செல்வம் முதலானவற்றோடு தொடர்புடைய ஆத்மா ஜீவாத்மாவே
நடுவில் -(விஜ்ஞாநக₄ந ஏவ ஏதேப்₄யோ பூ₄தேப்₄ய꞉ ஸமுத்தா₂ய தாந்யேவ அநுவிநஶ்யதி) அதாவது இந்த ஜ்ஞாந வடிவமான ஆத்மா உடலோடு தோன்றுகிறார், உடல் அழியும் போது
அழிகிறார் என்று சொல்லப் படுகிறபடியால் இங்கும் ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்.
முடிவில் – (्விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்று அறிவுள்ள ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்-முக்திக்கான வழியை அன்றோ மைத்ரேயீ கேட்டாள்? ஆம், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை அறிந்தாலே முக்தி -ஜீவாத்மாவை அறிந்தால் அனைத்தையும் எப்படி அறிந்ததாகும்? எல்லா ஜீவாத்மாக்களும் ஸமமாகவே உள்ள படியால்

வ்யாஸரின் பதில்
ஸித்தாந்தம் – 1-(வாக்யாந்வயாத் ्
– “இங்குள்ள வாக்கியங்களின் பகுதிகள் (நன்கு) அன்வயிப்பதற்காக”-யாஜ்ஞவல்க்யர் கூறும் வாக்கியப் பகுதிகளின் பொருள் ஒன்றொடொன்று பொருந்த வேண்டும், மேலும் அது மற்ற உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பொருளோடும் பொருந்த வேண்டும். எனவே பரமாத்மாவே இங்கு கூறப்படுகிறார்.
(1)-முக்தி அடையும் வழியைக் கேட்ட மைத்ரேயிக்கு யாஜ்ஞவல்க்யர் இந்த ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கிறபடியால், இந்த ஆத்மா பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களில் எல்லாம் பரமாத்மாவை அறிந்து த்யானித்தால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
(2)-(அஸ்ய மஹத: பூ₄தஸ்ய நி:ச்வஸிதம் ஏதத் யத் ருக்₃வேத₃: ) அதாவது இந்த ஆத்மாவிடமிருந்து தான் உலகமெல்லாம் உண்டாயிற்று என்று சொல்கிறபடியால், அது பரமாத்மாவே .
(3)-ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்த்தாகும் என்று சொன்னதும் பரமாத்மாவுக்கே பொருந்தும், அவரே அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கிறார். ஜீவாத்மாக்கள்அனைவரும் ஸமமாக இருப்பதால், ஒருவரை அறிந்தால் அனைவரையும் அறிந்ததாகும் என்றாலும், ஜீவாத்மாவை
அறிந்தால் அறிவற்ற அசேனப் பொருளை அறிந்ததாக ஆக முடியாது. அது பரமாத்மாவுக்கே பொருந்தும்.

(4)(्மஹத்₃பூ₄தம் அநந்தம் அபாரம்) அதாவது பெரியது, எல்லை யற்றது, கடக்க முடியாதது என்று சொல்லப்படும் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக்கூடியவை .-ந வா அரே பத்யு: காமாய’ என்ற வாக்கியத்தின் பொருள் – “கணவன் மனைவி மகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தால் நமக்குப் ப்ரியமானவர்களாக ஆவதில்லை , பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் ஆகிறார்கள்” என்று.
அதாவது, தன்னை உபாஸிக்கும் ஒரு பக்தனுக்கு பகவானே தன்னுடைய அருளால் கணவன் மனைவி குழந்தைகள் செல்வம் முதலானவற்ணற ப்ரியமாக ஆக்கி, அவற்றை வழங்குகிறார் என்று பொருள். எனவே கணவன் மனைவி செல்வம் முதலான சிறிய இன்பங்களைக் கை விட்டு, இவற்றுக்கெல்லாம் ஊற்றாக, எல்லை யற்ற ஆநந்தமே
வடிவானவரான பரமாத்மாவைத் தான் கேட்க வேண்டும், ஆராயவும், த்யானிகவும் வேண்டும் என்று கருத்து. இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இயற்கையாக நமக்குப் பிடித்ததாகவோ பிடிக்காத்தாகவோ இருப்பதில்லை , இடம் காலம் சூழ்நிலை பொருத்து தான். ஆனால் பரமாத்மா மட்டுமே மாறாமல் எப்போதும் ப்ரியமாகவே இருப்பவர்.

(தனது பக்தனுக்கு பிரியமாக இருக்க பகவானே ஸங்கல்பிக்கிறான் -என்கிறார் ராமானுஜர்)

ஜீவாத்மாவே பரமாத்மாவா?
இவ்வாறு இந்த உபதேசம் முழுவதுமே பரமாத்மாவைப் பற்றினது என்று நிரூபிக்கப் பட்டபடியால், இடையில் ஜீவாத்மாவைச் சொல்லும் சொற்களும் கூடப் பரமாத்மாவையே குறிக்கின்றது. அது எப்படி எனில் –
2-ப்ரதிஜ்ஞாஸித்₃தே ₄: லிங்க₃ம் ஆஸ்மாத்₂ய: – “இங்கு சொல்லப்பட்ட ப்ரதிஜ்ஜை ( சபதம்) நிறைவேறியதற்கு இது அடையாளம் என்கிறார் ஆச்மாத்யர் என்ற ரிஷி”-இந்த ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று இங்கு ஒரு ப்ரதிஜ்ஜை ( சபதம்) உள்ளது. அது நிறைவேறியதற்கான அடையாளம் தான் இங்கு ஜீவாத்மாவைச் சொல்லும் சொல் பரமாத்மாவைக் குறிப்பது என்பது. -உலகில் காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று என்று அறிவோம். குடம் என்ற பொருளை அதற்குக் காரணமான பொருளைக் குறிக்கும் மண் என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். அதே போல், ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து உண்டாகி, அவரிடமே லயம் அடைகிறார்; அவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல;ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கும், பரமாத்மாவை அறிந்தால் அனைத்தும் அறியப்பட்டதே .

3-(உத்க்ரமிஷ்யத: ஏவம் பா₄வாத் இதி ஔடு₃லோமி:) – “புறப்படுபவர் இதுவே போல் ஆகிறபடியால் என்று ஔடுலோமி என்ற ரிஷி கூறுகிறார்”(உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு-ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்-இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்) -ஜீவாத்மா உண்டாவதே இல்லை என்று வேதம் சொல்கிறபடியால் முன் பக்ஷம் தவறானது. எனவே ஔடுலோமி என்ற ரிஷி இவ்வாறு கூறுகிறார் – “இந்த உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடையும் ஜீவாத்மா பரமாத்மாவைப் போல் ஆகிறபடியால் இங்கு ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது” என்று-ஆனால் இதிலும் குறை உள்ளது – ஜீவாத்மா புதிதாக பரமாத்மாவைப் போல் ஆவதில்லை , இயற்கையான அத் தன்மையைத் திரும்பப் பெருகிறார். எனவே இந்தப் பக்ஷமும் தகுந்ததல்ல.

4-அவஸ்தி₂தே : இதி காச க்ருத்ஸ்ந: – “ஜீவாத்மாவுக்குள் அந்தர்யாமியாகப் பரமாத்மா உள்ள படியால் என்று காச க்ருத்ஸ்நர் என்ற ரிஷி கூறுகிறார்”-உலகத்தில் உடலைக் குறிக்கும் சொல் உள்ளிருக்கும் ஆத்மாவையும் குறிப்பதைப் பார்க்கிறோம். அதே போல் தான்
உடலான ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. இதுவே வேத வ்யாஸரும் ஏற்கும் மதம்.ஆகவே , இங்கு பரமாத்மா தான் சொல்லப்படுகிறார், ஜீவன் அல்ல. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்

(ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே – இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால் –விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான் -தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –)

—————–

1.4.7 ப்ரக்ருத்யதி₄கரணம்-உலகின் உபாதாந காரணமும் பரமாத்மாவே

(வேர் முதல் வித்து -முதல் தனி வித்தேயோ -தானோர் விதிதாய் -அபின்ன நிமித்த உபாதானம் -நம் சித்தாந்தத்தில் அசாதாரணம்-ஸர்வம் கலு ப்ரஹ்மம் -நீராய் நிலனாய் -அயனாய் சிவனாய் – -இத்தை இதில் நிரூபிக்கிறார் -)

அதிகரணத்தின் பின்புலம்
1-4-7-ப்ரக்ருத்யதி₄கரணம் – ஸங்கதி
– இதுவரை ஈஸ்வரனே கிடையாது என்று சொல்லும் ஸாங்க்யர்களின் மதம் கண்டிக்கப்பட்டு. இப்போது ஈஸ்வரனை ஒப்புக் கொண்டு, ஆனால் அவர் உலகின் நிமித்த காரணம் (படைப்பாளி) மட்டும் தான், உபாதாந காரணம் அல்ல என்று சொல்லும் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
பூர்வ பக்ஷம் – பரமாத்மா உலகின் படைப்பில் நிமித்த காரணம் மட்டும் தான், உபாதான காரணம் அல்ல-உலகில் எந்த ஒரு பொருள் உண்டாவதற்கும் மூன்று விதமான காரணங்கள் தேவை –
(1) உபாதான காரணம் – மூலப்பொருள் – குடத்துக்கு மண், துணிக்கு பஞ்சு முதலானவை போல்
(2) நிமித்த காரம் – அறிவுடைய ஆத்மா (படைப்பாளி) – குடத்துக்குக் குயவன், துணிக்கு நெசவாளி போல்
(3) ஸஹகாரி காரம் – துணை புரியும் கருவிகள் – குடத்துக்கு சக்கரம், துணிக்குத் தரி போல் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது உண்மை -ஆனால், அவர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு நிமித்த காரணமாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனெனில்,“நிஷ்கலம் நிஷ்க்ரியம்” (பகுதிகள் இல்லாதவர், செயல்கள் இல்லாதவர்) முதலான வாக்யங்களால் பரமாத்மா எந்த விதமான விகாரங்கள் (மாறுபாடுகள்) இல்லாதவர் என்று தெரிகிறது. எனவே அவர் உபாதானமாக ஆக முடியாது; உபாதானம் உருமாறியே ஆக வேண்டும்.-உபநிஷத்துக்களிலேயே ’ஜநித்ரீ பூ₄தபா₄விநீ’ (ஜீவ ராசிகளைப் படைப்பது), ’அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்(இதிலிருந்து பரமாத்மா உலகத்தைப் படைக்கிறார்) என்று பல வாக்யங்களில் மூல ப்ரக்ருதி தான் உபாதான காரணமாகச் சொல்லப்படுகிறது-உலகில் இரண்டு நியமங்களைப் பார்க்கிறோம் – (1) உபாதான காரணமும் நிமித்த காரணமும் வெவ்வேறாகத் தான் இருக்கும் (2) பல காரணங்களின் சேர்க்கையால் தான் ஒரு பொருள் உண்டாகும். எனவே , சில இடங்களில் உபநிஷத் பரமாத்மாவே உபாதான காரணம் என்று சொல்வது போல் தோன்றினாலும், உலகில் பார்த்த்துக்கு முரணாக இப்படி ஒரு தத்துவத்தை வேதத்தால் போதிக்க இயலாது. ’நெருப்பால் நனைத்தார்’ என்று சொல்வது போல் தவறாகும்.-எனவே , பரமாத்மா நிமித்த காரணமாக இருந்து, மூல ப்ரக்ருதி என்ற பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைக்கிறார். அவர் உபாதான காரணம் அல்ல.

பரமாத்மாவிடமிருந்தே உலகம் உண்டாகிறது
ஸித்தாந்தம் – 1– ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்₃ருஷ்டாந்த அநுபரோதா₄த்

(உலகுக்கு) உபாதான காரணமும் (பரமாத்மாவே , அப்போது தான்) ப்ரதிஜ்ஜையும் எடுத்துக் காட்டும் -(அநுபரோதா₄த்-)தடை படாதபடியால்
சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் அத்யாயத்தில் உள்ள ஸத்₃வித்₃யா என்பது இங்கு கூறப்படுகிறது. வேதம் கற்று வந்து கர்வத்வதாடு நிற்கும் ஸவேதகேது என்ற தன் மகனைப் பார்த்து உத்தாலகர் என்ற தந்தை கேட்கிறார்.
ப்ரதிஜ்ஞா – (्உத தம ஆதே₃சம் அப்ராக்ஷ்ய:யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்) அதாவது“எதை அறிந்தால் அனைத்தையும்அறிந்த தாகுமோ அந்த (ஆதேசம் -நியமனம் ஈசன் )ஸர்வேஸ்வரனைப் பற்றிக் கேட்டாயா”என்று. பரமாத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்பதே இங்கு ப்ரதிஜ்ஜை .
த்₃ருஷ்டாந்தம் –(्யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டே₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்) அதாவது “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் மண்ணாலான எல்லாப்
பொருள்களையும் அறிந்ததாகுமோ அதுபோல்” என்று எடுத்துக் காட்டையும் அவரே உரைக்கிறார்.
இவை இரண்டாலும் நாம் அறிவது – (1) மண் மரம் முதலான உபாதான காரணமும் குடம் மேஜை முதலான காரியமும் வெவ்வேறு அல்ல, காரணப் பொருளே தான் வேறொரு வடிவத்தையும் பெயரையும் அடையும் போது காரியப் பொருள் என்று வழங்கப்படுகிறது (2) எனவே உபாதான காரணத்தை நாம் அறிந்து விட்டால் அதிலிருந்து உண்டாகும் எல்லாப் பொருள்களையும் ஒரு முறையில் அறிந்ததாக ஆகும்
(3) அதுபோல் பரமாத்மாவை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.
எனவே இந்த ப்ரதிஜ்ஜை மற்றும் த்₃ருஷ்டாந்தத்தைக் கொண்டு பார்த்தால், பரமாத்மா உபாதான காரணமாகத் தான் சொல்லப்படுகிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவரே ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைக்கிறார் என்று மேலே சொல்லப் படுகிறபடியால் நிமித்த காரணமும் அவரே ஆவார்.
ப்ரக்ருதி படைக்கிறது என்று சொல்லும் வாக்கியங்களில்’ ’ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியான பரமாத்மா’ என்றே பொருள்.-உலகில் மண்ணுக்கு ஜ்ஞான மில்லாமையாலும், குயவனுக்கு தன் உடலைக் குடமாக மாற்றும் சக்தி இல்லாததாலும் உபாதானமும் நிமித்தமும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. பரமாத்மாவிடமோ இரண்டுமே பொருந்துகிறது.

(இதே போல் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதம் இந்த பார்க்கிற லோகம் சத்தாகவே ஒன்றாகவே இருந்தது -இரண்டாவதே இல்லை-ப்ரக்ருதி படைக்கிறது என்னும் இடங்களிலே ப்ரஹ்மம் அந்தர் யாத்மாவாகக் கொண்ட பிரகிருதி என்றே பொருள் -மண்ணை உடலாக கொண்ட பரமாத்மா -குடத்தை உடலாக கொண்ட பரமாத்மாவாக மாறினார் -நான் குழந்தை -நான் யுவா -இந்த உடலுக்குள் இருந்த ஆத்மா ஓன்று தானே -அதே போல் கொள்ள வேண்டும் – -)

மூன்று விதமான காரணங்களும் பரமாத்மாவே
2–அபி₄த்₄யோபதே₃சாத் ச –
“ஸங்கல்பத்தின் உபதேசத்தாலும்” – ஸ்ருஷ்டிக்கும் போது பரமாத்மா எடுக்கும் ஸங்கல்பம் உபநிஷத்தில் (ப₃ஹு ஸ்யாம்) அதாவது
“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று காட்டப் பட்டுள்ளது.(ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும் ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-) உபாதான காரணம் தானே பல காரியப் பொருள்களாக ஆகும். எனவே இத்தால் பரமாத்மா நிமித்த காரணம் மட்டுமல்ல, உபாதானமும் அவரே என்று தெரிகிறது.

(
யானும் தானாய் ஒழிந்தானையாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்அமுதும் ஆகித் தித்துத்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே)

3-ஸாக்ஷாத் ச உப₄யாம்நாநாத்
– “நேரடியாகவும் இரண்டும் ஓதப் படுகிறபடியால்”-உபநிஷத்தில் (्ப்₃ரஹ்ம வநம், ப்₃ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்₃யாவா ப்ருதி₂வீ நிஷ்ட₂தக்ஷு:, ப்₃ரஹ்ம அத்₄ய திஷ்ட₂த் பு₄வநாநி தா₄ரயன்) அதாவது
“உலகத்தை ப்ரஹ்மம் படைக்கும் போது, காடு போல் ஆதாரமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், மரம் போல் உபாதானமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், இயக்கப்படும் கருவிகளும் ப்ரஹ்மம் தான்” என்று ஸ்பஷ்டமாகவே ப்ரஹ்மம் உலகுக்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் என்று சொல்லப்பட்டுள்ளது.

4–ஆத்ம க்ருதே : – “தன்னையே செய்கிறபடியால்”. உபநிஷத்தில் உலகத்தின் படைப்பைச் சொல்லும் போது(தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத) அதாவது அந்த ப்ரஹ்மம் தன்னைத் தானே செய்து கொண்டது” என்று கூறப்படுகிறது. தன்னைத் தானே பலவாக ஆக்குதலால் பரமாத்மா உபதானமும் தான்.

5–பரிணாமாத் ् – “மாறுபாட்டால்”. இப்படி பரமாத்மாவே உலகமாக மாறினால் அவருக்கு துன்பம், மாறுபாடு முதலான தோஷங்கள் ஏற்படுமே என்று ஸந்தேகம் எழும். அதற்கு பதிலளிக்கிறார் வ்யாஸர் – இங்கு பரமாத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மாறுபாடு சொல்லப்படுகிறபடியால் எந்தக் குற்றமும் வராது,(ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது தோஷங்கள் தட்டாது-) -சொல்லப் போனால் தன் உடலையே உலகமாக மாற்றும் பெருமை தான் இதிலிருந்து தெரியும்.

6-யோநிஶ்ச ஹி கீ₃யதே – “யோநியாகவும் பாடப்படுகிறார் அன்றோ ”(யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்-எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால் அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –)-வேதத்தில் பல இடங்களில்“கர்தாரம் ஈஸம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம்”(படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம்-கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்-யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-)“யத்₃பூ₄த யோநிம் பரிபஸ்யந்தி தீ₄ரா:(-ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ )” என்றெல்லாம் பரமாத்மாவை யோநி என்று அழைக்கிறது வேதம். யோநி என்றால் உபாதான காரணமே . எனவே பரமாத்மாவே உபாதானம்.

இவ்வாறு பல காரணங்களால் உலகத்தைப் படைப்பதற்கு நிமித்தமாகவும் உபாதானமாகவும் ஸஹகாரியாகவும் பரமாத்மா ஒருவரே இருக்கிறார் என்னும் தத்துவத்தை வேதவ்யாஸர் நிரூபிக்கிறார் இவ்வதிகரணத்தில்.

(இவன் தானே ஐகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும்-தத்வ த்ரயம்-சூர்ணிகை -165-)

ஏகமேவ அத்விதீயம் -என்றும்
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
ஸ்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-67-அந்த நாராயணன் நான்முகனாக படைத்து தானாகவே காத்து சிவனாக இருந்து சம்ஹரிக்கவும் செய்கிறானோ -என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-70-அவனே அனைத்தையுமே ஸ்ருஷ்டிப்பவனாகவும் அனைத்தும் வரங்களையும் அளிப்பவனாகவும் -அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான் -படைப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே -காப்பவனும் அழிப்பவனும் அவனே-இத்யாதிகளால்
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

—————

1.4.8 ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம்-பர ப்ரஹ்மம் நாராயணனே

வேதாந்தம் முழுவதுமே ப்ரஹ்மத்தைத் தான் சொல்கிறது-1-4-8-ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்கியங்களுள் ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் ஸந்தர்பத்தை ஆராய்ந்து, அவ் விடத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், இதுவரை எடுத்து ஆராயப்படாத எல்லா உபநிஷத் வாக்யங்களும் கூட பரமாத்மாவையே சொல்கின்றன என்று நிரூபிக்கிறார்.
விஷய வாக்யம் – உபநிஷத்துக்களில் ஸித்தமான (முன்னமே தயாராக உள்ள) ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் எல்லாம் 1.1.1-ஜிஜ்ஞாஸாதிகரணத்தாலும் 1.1.4-ஸமந்வயாதிகரணத்தாலும் பரமாத்மாவைப் பற்றியவை என்று நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பின் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் சில குறிப்பிட்ட வாக்கியங்கள் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஆராயப் பட்டன. இந்த அதிகரணத்திற்கு விஷயம் –இது வரை எடுத்து ஆராயப்படாத வாக்யங்கள்.

(அதிதேச சங்கதி -கீழ் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏறிட்டுக் கொண்டு அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும்-இதுவரை எடுத்துக்கொள்ளாத ஜகத் காரணமாக போதிக்கும் அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும் பொருள் கொள்ள வேண்டும் -என்பதே இதற்கு சங்கதி)

ஸந்தேஹம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் முன் கூறப்பட்ட பர ப்ரஹ்மத்தையே குறிக்கின்றனவா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லவில்லை முரண்பாடு உள்ள படியால்.
ஸித்தாந்தம் – 1-ஏதேந ஸர்வே வ்யாக்₂யாதா : வ்யாக்₂யாதா :
ஸர்வே
– இதுவரை தனித் தனியாக எடுத்து ஆராயப்படாத ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்யங்கள் அனைத்தும்
ஏதேந – இத்தால் -முதல் அத்யாயத்தில் 4 பாதங்களிலும் இதுவரை சொல்லப்பட்ட ந்யாயங்களால் (யுக்திகளால்)
வ்யாக்₂யாதா : – (பரமாத்மாவையே குறிப்பவையாக) விவரிக்கப்பட்டன -சொல்லப்பட்டன
“வ்யாக்₂யாதா:” என்று மறுபடியும் ஒரு முறை படிக்கப்படுவது, இந்தச் சொல்லோடு இந்த அத்யாயம் முடிகிறது என்று காட்டுவதற்காக.

(இதே போல-2அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல்- இரண்டு தடவையும்-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–என்றும் 3-அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல் இரண்டு தடவையும்ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-என்றும் -4 அத்தியாயத்தில் முழு ஸூத்திரமே –545 -ஸூத்ரமே இரண்டு தடவை படிக்கப்படும் (அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் ) ப்ரஹ்ம ஸூத்ரம் முடிவடைவதால்)

இந்த அதிகரணத்தின் கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளியில் கூறுகிறார்

குறிப்பட்ட ஸந்தேஹமும் அதன் தீர்வும்
அக்₃ரே ஸம்வர்தநம் பா₄தி அவித்த₂வசஸி க்வாபி ஹிரண்ய க₃ர்ப₄ம்
க்₃ரஸ்தா ஸேஷ ஸ்வ கார்யே தமஸி சிவ ஏவேதி கேசித் பட₂ந்தி |
ஏதாத்₃ருக்₃வாக்ய வர்க₃ ஸ்பு₂ட₂ ப₄வத் அதி₄கா சங்கந ஸ்தம்ப₄நார்த₂ம்
ப்ராகு₃க்தாந் நீதி பே₄தா₃ந் அதிதி₃ சதி பரம் சிஷ்ய சிஷைக சித்த: ||

பூர்வ பக்ஷம் –
வேதாந்தத்தில் ஓரிடத்தில்
(ஹிரண்ய க₃ர்ப₄: ஸம வர்தத அக்₃ரே பூ₄தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்) என்று “ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஹிரண்ய கர்பன் என்ற நான்முகக் கடவுள் மட்டுமே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. மற்ற ஓரிடத்தில்
(யதா₃ தம: தந்ந தி₃வா ந ராத்ரி: ந ஸத் ந அஸத் சிவ ஏக கேவல:) அதாவது “ப்ரளயத்தில் பகலோ இரவோ அசித்தோ சித்தோ எதுவும் இல்லாத போது சிவன் மட்டுமே தனியே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. எனவே பர ப்ரஹ்மம் யார் என்று முடிவெடுக்க இயலாது. இவர்களுள் ஒருவரா? மூவருமா? மூவரைத் தவிற வேறு ஓருவரா? தெரியாது.
ஸித்தாந்தம் –முன் சொல்லப்பட்ட ந்யாயங்களைக் கொண்டே இந்த விஷயத்திலும் நாம் முடிவை எட்டலாம்.
1.1.5 ஈஷத்யதி₄கரணத்தில் – “க₃தி ஸாமாந்யாத்”
என்ற ஸூத்ரத்தில் ஸத், ப்ரஹ்ம, ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஜகத் காரணப் பொருள் நாராயணன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
1.1.6 ஆநந்த₃மயாதி₄கரணத்தில் – நான்முகனின் ஆநந்ததைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு உயர்ந்தது ப்ரஹ்மத்தின் ஆநந்தம் என்று சொன்னபடியால் நான்முகன் ப்ரஹ்மம் அல்ல என்று தெரிகிறது.
1.1.7 அந்தரதிகரணத்தில் – தாமரை போன்ற கண்ணுடையவன் ப்ரஹ்மம் என்று சொன்னபடியால் சிவன் ப்ரஹ்மமல்ல
1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் – விண்ணுலகில் இருப்பவர் ப்ரஹ்மம் என்றுள்ள படியால், அங்குள்ள வாக்யங்கள் புருஷ ஸூக்தத்தை நினைவூட்டுகிற படியால், புருஷ ஸூக்தத்தில் ஶ்ரீதேவீ மற்றும் பூதேவியின் நாயகனே சொல்லப்படுகிறபடியால் ஶ்ரீமந் நாராயணனே பரமாத்மா, பர ப்ரஹ்மம், ஸர்வேஸ்வரன், எல்லாம் ஆவார்.
ஆக இப்படி ஸமந்வய அத்யாயத்தில் 11 + 6 + 10 + 8 = 35 அதிகரணங்களால் நாராயணனே ஜகத் காரணம் எனப்பட்டது

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள
-ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்-விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான் அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்-இதம் பூர்ணம் –இத்யாதி-

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே-ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி-அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி-ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

சாந்தோக்ய உபநிஷத்-அத்யாயம்-8-(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

May 12, 2025

1.3.5 த₃ஹரதி₄கரணம்-பரமாத்மா கல்யாண குணங்களை உடையவரே –

10 ஸூத்ரங்களால் ஸித்தாந்தம்

(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||-
-ஶ்லோகம் 18 –)

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே
||-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

1.3.5 த₃ஹராதிகரணத்தின் பின்புலம்
ஸங்கதி
– முன் அதிகரணத்தில் முக்தி அடைந்த ஒரு ஜீவாத்மா ஸ்ரீ வைகுந்தம் அடைந்து பரமாத்மாவைக் காண்கிறான் என்று சொல்லப்பட்டது. அந்தப் பரமாத்மாவை ’புரிசயம்’ அதாவது-’எல்லாப் ப்ராணிகளின் உடல்களிலும் (எல்லாப் பொருள்களிலும்) இருப்பவர்’ என்று சொல்லிற்று உபநிஷத்-அதற்கு மேல் ஆஷேபம் எழுகிறது – மற்ற ஓரு
உபநிஷத்தில் எல்லா ப்ராணிகளின் உடல்களிலும் இருப்பவராக வேறு ஓருவர் தானே சொல்லப்பட்டுள்ளார் – என்று.-(புரிசயம் -பட்டணத்தில் வாழ்பவர்)

விஷய வாக்யம் – ஸாந்தோக்ய உபநிஷத்தின் எட்டாவது ப்ரபாடகம்-(அத்யாயம்) – த₃ஹர வித்₃யா அத₂ யதி₃த₃ம் அஸ்மிந் ப்₃ரஹ்ம புரே த₃ஹரம் புண்ட₃ரீகம் வேஶ்ம த₃ஹர: அஸ்மிந் அந்தராகாஶ: தஸ்மிந் யத₃ந்த: தத₃ந்வேஷ்டவ்யம் தத்₃வாவ விஜிஜ்ஞாஸி தவ்யமிதி–ப்ரஹ்ம புரம் என்றழைக்கப் படும் இந்த உடலின் உள்ளே தாமரை வடிவில் நுண்ணியதான ஓரிடம்(ஹ்ருதயம்) உள்ளது. அதற்கும் மிக நுண்ணியதான ஆகாஸம் உள்ளது. அந்த ஆகாஸத்தில் எது உள்ளதோ அதைத் தேட வேண்டும், அதையே த்யானிக்க வேண்டும்.

(ஸத்வித்யை -6 ப்ரபாடகம் -பூம வித்யை -7 ப்ரபாடகம் -இது-தஹர வித்யை எட்டாவது ப்ரபாடகம் -வேஸ்ம -இருப்பிடம்)

ஸந்தேஹம் – ஹ்ருதயத்துக்குள் ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூ₄தாகாஸம் (ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாஸம்) என்ற அசேதனப் பொருளா ? அல்லது ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – பூ₄தாகாஸம் தான் இங்கு சொல்லப்படுகிறது என்று முதலில் பூர்வ பக்ஷீ வாதிடுகிறார். காரணம் –1-ஆகாஸம் என்ற சொல் உலகில் பெரும் பாலும் பூதாகாஸத்தைக் குறிக்கத் தான் பயன் படுத்தப் படுகிறது. எனவே அச் சொல்லைக் கேட்டதும் பூதாகாஸம் தான் நினைவுக்கு வருகிறது- 2-“இந்த ஆகாஸத்தில் எது இருக்கிறதோ அதைத் த்யானிக்க வேண்டும்” என்று உபநிஷத் சொல்கிறபடியால், இந்த ஆகாஸம் த்யானிக்கப்பட வேண்டிய பொருளுக்கு இருப்பிடம் மட்டுமே , இந்த ஆகாஸத்தை த்யானிக்கத் தேவை யில்லை என்று தெரிகிறது. இது பரமாத்மாவுக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அவர் தான் த்யானிக்கப்பட வேண்டியவர் என்ற மற்ற உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆகாஸம் என்று சொல்லப்படுவது பூதாகாஸம் தான்

பரமாத்மாவே தஹராகாஸம்
ஸித்தாந்தம் –1-த₃ஹர உத்தரேப்₄ய
:-“தஹராகாஸாம் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே ,-பின்னால் வரும் வாக்கியங்களில் இருக்கும் காரணங்களால்”-ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ꞉ ஸத்ய காம꞉ ஸத்ய ஸங்க்ப:-“இந்த ஆத்மாவானவர் பாபங்களுக்கு அப்பாற் பட்டவர், மூப்பற்றவர், மரணமற்றவர், ஸோகமற்றவர், பசியற்றவர், தாகமற்றவர், அனைத்து ஆசைகளும் நிறை வேறியவர், நினைவாலேயே எதையும் நடத்தும் வல்லமை படைத்தவர்”-இங்கு ’ஆத்மா’ என்று பொதுவாகச் சொல்லப் படுகிறபடியால், இது அனைத்துப் பொருள்களுக்கும் ஆத்மாவான பரமாத்மாவையே குறிக்கும்-மேலும், இங்குச் சொல்லப்பட்ட குணங்களும் பரமாத்மாவுக்கே இயற்கை யானவை –

(கீழே -1-1-7- அந்தர் அதிகரணம் இதே உபநிஷத் வாக்கியம் பார்த்தோம்-ஆத்மா-அடைமொழி இல்லாமல் பொதுவாகச் சொன்னால் பரமாத்மாவாகத் தானே இருக்க வேண்டும் -மேலும் பல குணங்களும் பரமாத்மாவுக்கே இருந்தும் )

தத்₃யதே ₂ஹ கர்மசிதோ லோக꞉ க்ஷீயத ஏவமேவ அமுத்ர புண்ய சிதோ லோக꞉ க்ஷீயதே | ய இஹாத்மாந மநிவுத்₃ய வ்ரஜந்தி ஏதாம்ஶ்ச ஸத்யாந் காமாந் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ ப₄வதி | ஸ யதி₃ பித்ரு லோக காமோ ப₄வதி ஸங்கல் பாதே₃வ அஸ்ய பிதர꞉ ஸமுத்திஷ்ட₂ந்தி தேந பித்ரு லோகேந ஸம்பந்நோ மஹீயதே -“உலகச் செயல்களால் அடையப்படும் பயன்கள் அழிவது போல் புண்ணியத்தால் அடையப் படும் உலகங்களும் அழியக் கூடியவை தான். எவன் ஓருவன் இந்த ஆத்மாவை த்யானித்து உயிர் இழக்கிறானோ அவன் எல்லா உலகங்களிலும் தன்னிச்சையாக நடக்கும் ஏற்றம் பெருகிறான். அவன் தன் பித்ருக்களைக் காண நினைத்தாலும் அவர்கள் அவன் ஸங்கல்பத்தாலேயே அங்கு தோன்றுகிறார்கள்”.-இந்த தஹராகாஸத்தைத் த்யானித்தவர் இவ்வாறு ஸ்வதந்த்ரனாக தன்னிச்சையாக எல்லா உலகங்களிலும் செயல்படலாம்,-அவன் ஸத்ய ஸங்கல்பனாக (தன் நினைவாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவனாக) ஆகிறான்-என்று கூறியுள்ளது. -இந்தப் பெருமைகள் எல்லாம் முக்தி அடைந்தவனுக்குத் தான் உண்டு. எனவே தஹராகாஸத்தை த்யானித்தவன் முக்தி அடைகிறான் என்று தெரிகிறது. எனவே இந்த தஹராகாஸம் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.

தஹராகாஸத்திற்குள் இருப்பது என்ன?-யாவாந்வா அயம் ஆகாஶ: தாவாந் ஏஷ: அந்தர் ஹ்ருத₃ய ஆகாஶ:“இந்த (வெளியில் காணப்படும்) ஆகாஸம் என்ற வானம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இந்த தஹராகாஸம்”--இந்த வாக்கியத்தில் தஹராகாஸத்திற்கு உபமாநமாக (எடுத்துக் காட்டாக) பூதாகாஸம் என்ற வானம் சொல்லப் படுகிறது–எப்போதுமே உபமாநமும் உபமேயமும் வெவ்வேறாகத் தான் இருக்கும். எனவே இந்த தஹராகாஸம் என்பது பூதாகாஸமாக இருக்க இயலாது. அந்த பூதாகாஸம் போல் எங்கும் நிறைந்தவரான பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்–ஆகாஸத்தையே கற்பனையாகப் பிரிப்பது போல் இங்கும் இதயத்தில் உள்ள ஆகாஸம் தஹராகாஸம் என்று பிரித்து, அதற்கு எடுத்துக் காட்டாக வெளியே உள்ள ஆகாஸத்தைச் சொல்லி யிருக்கலாமே என்று கேள்வி எழலாம்-ஆனால், அப்படிக் கொண்டாலும், (யச்சாஸ்யேஹ அஸ்தி யச் நாஸ்தி ஸர்வம் தத₃ஸ்மிந் ஸமாஹிதம்) என்று “பூமி, விண்ணுலகம், ஸூர்யன், சந்த்ரன், நம்மிடம் இருக்கும் பொருள்கள், நாம் அடைய ஆசைப்படும் பொருள்கள் அனைத்தும் அந்த ஆகாஸத்தால் தாங்கப் படுகின்றன” என்று சொன்னது பொருந்தாது. ஹ்ருதயத்துக்குள் இருக்கும் சிறிய பூதாகாஸம் இவை யனைத்துக்கும் ஆதாரம் ஆக இயலாது. பரமாத்மாவுக்கே இது பொருந்தும்.

(மூன்றாம் பாதம் பகவான் தானே அனைத்தையுமே தாங்குபவர் என்ற அர்த்தம் தானே காட்டப்படுகிறது -)

கேள்வி – பரமாத்மா அளவு கடந்தவர் என்று தானே உபநிஷத் கூறுகிறது. அப்படி இருக்க, இங்கு பரமாத்மா தான் தஹராகாஸம் என்று கொண்டால் அவர் ’பூதாகாஸம் அளவு பெரியவர்’ என்று அளவு படுத்திச் சொல்வது எப்படிப் பொருந்தும்?
பதி்ல் – உலகத்தில் பொதுவாக –இஷுவத் கச்சதி ஸவிதா –’அம்பைப் போல் ஸூர்யன் செல்கிறார்’ என்கிறோம். உண்மையில் ஸூர்யன் அம்பை விட மிக வேகமாகச் செல்கிறார். ஸூர்யன் மெதுவாகச் செல்ல வில்லை என்று சொல்வதே இந்த வாக்கியத்தின் குறிக்கோள்-அதுபோல், பரமாத்மா ஹ்ருதயத்துக்குள் இருக்கிறார் என்று சொன்னால் அவர் அளவில் சிறியவரா என்று ஸந்தேஹம் வரக் கூடும் என்பதால், பூதாகாஸம் போல் பெரியவர் அவர்’ என்று சொல்லும் வாக்கியம் அவர் சிறியவரல்ல என்று சொல்கிறதே தவிற, அவர் பூதாகஸம் போல் அளவு பட்டவர் என்று சொல்ல வில்லை

கேள்வி – தஹராகாஸம் பரமாத்மா என்றால் அதற்குள் இருக்கும் த்யானிக்கப் பட வேண்டிய பாருள் எது?
பதி்ல் – ’அஸ்மிந் காமா: ஸமாஹிதா:’ என்று கல்யாண குணங்களே இவ்வாறு சொல்லப் படுகின்றன. தஹராகாஸம் என்ற பரமாத்மாவையும் அவருடைய ஒப்பற்ற கல்யாண குணங்களையும் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது.-(காமா -ஆசைப்பட வைக்கும் கல்யாண குணங்களையே சொன்னவாறு -)

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல-

நாம் அறியாத செல்வம்
தஹராகாசம் பரமாத்மா தான் என்று நிரூபிக்க, பின் வரும் வாக்கியங்களில் உள்ள சில காரணங்கணளப் பயன் படுத்தினார் வேத வ்யாஸர் ’-த₃ஹர உத்தரேப்₄ய:’ என்ற முதல் ஸூத்ரத்தில். இனி, மேலும் சில காரணங்களக் காட்டுகிறார்.

(உயர்வற உயர் நலமுடையவன் -அபரிமித கல்யாண குணங்கள் உடையவன்-குணங்கள் விபூதிகள் இல்லாதவன் என்பவரை -மிடற்றைப் பிடிக்குமா போல் முதலடியிலே அருளிச் செய்கிறா)

றி2- க₃தி சப்₃தா₃ப்₄யாம் ததா₂ ஹி த்₃ருஷ்டம் லிங்க₃ம் ச
க₃தி சப்₃தா₃ப்₄யாம்
– “செல்வதாலும் சப்தத்தாலும் (தஹராகாசம் பரமாத்மா என்று தெரிகிறது)”
ததா₂ ஹி த்₃ருஷ்டம் – அவ்வாறு அன்றோ மற்ற உபநிஷத் வாக்கியங்களில் காணப்படுகிறது.
க₃தி--அதாவது செல்வது என்பதைப் பற்றி உபநிஷத்துக்களில் இரண்டு விதமான உபதேசங்கள் காணப்படுகின்றன –
(தத்₃யதா₂பி ஹிரண்ய நிதி₄ம் நிஹிதம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே ₃யுரேவமேவேமா꞉ ஸர்வா꞉ ப்ரஜா: அஹரஹர்க₃ச் ச₂ந்த்ய ஏதம் ப்₃ரஹ்ம லோகம் ந விந்த₃ந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா₄꞉ )
“எப்படி பூமிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தை அறியாமல் மக்கள் அந்த பூமியின் மேல் சென்று வருகிறார்களோ-அது போல் இந்த ப்ரஹ்மம் என்ற தஹராகாசம் உள்ளே இருப்பதை அறியாமல் ஜீவாத்மாக்கள் மேலோட்டமாகச் சென்று வருகிறார்கள் (உடலில் வாழ்கிறார்கள்), ஏனெனில் அவர்கள் தங்கள் பாபங்களாலே திசை மாறிப் போகிறார்கள்”
இவ்வாறு புதைக்கப்பட்ட தங்கமாக தஹராகாசம் சொல்லப் படுவதால் அவர் பரமாத்மாவகத் தான் இருக்க வேண்டும்.
2-(ஸதி ஸம்பத்₃ய ந விது₃꞉ ஸதி ஸம்பத்₃யாமஹ இதி, ஸத ஆக₃ம்ய ந விது₃꞉ ஸத ஆக₃ச்சா₂மஹ இதி) – “ஜீவாத்மாக்கள் தூக்கத்தில் பரமாத்மாவோடு சேர்ந்து, உணரும் போத அவரிடமிருந்து பிரிந்து வந்தாலும் அவரை அறிவதில்லை ”. இப்படி ஸுஷுப்தி(ஆழ்ந்த உறக்கத்தில்) ஜீவாத்மாவால் அடையப் படுபவராக பரமாத்மா தான் இருக்க முடியும், பூதாகாசம் அல்ல.
சப்தம்” என்பது இங்கு ’ப்₃ரஹ்ம லோகம்’ என்ற சொல்லைக் குறிக்கிறது. அந்த ப்ரஹ்மம் என்ற சொல் மற்ற உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கவே பயன்படுத்தப் படுகிறபடியால் அவரே தஹராகாசம் என்று காட்டுகிறது.(’ப்₃ரஹ்ம லோகம்-ப்ரஹ்மமாகிற லோகம் -என்று பொருள் )
லிங்க₃ம் ச – மற்ற உபநிஷத்துகளில் இது சொல்லப்படா விட்டாலும் இந்த அடையாளங்களே போதுமானவை .

உலகங்களைத் தாங்கும் ஆகாசம்
3-த்₃ருதே : ச மஹிம்ந: அஸ்ய அஸ்மிந் உபலப்₃தே ₄:
அஸ்ய-
இந்தப் பரமாத்மாவினுடைய மஹிம்ந: மஹிமையான
த்₃ருதே : உலகங்களை யெல்லாம் தாங்கும் சக்தி
அஸ்மிந்- இந்த தஹராகாசத்திடம் உபலப்₃தே ₄ ச காணப்படுகிற படியாலும் (தஹராகாசம் பரமாத்மாவே ).

இந்த தஹராகாசத்தைப் பற்றி வருணிக்கும் போது, (அத₂ ய ஆத்மா ஸ
ஸேதுர் த்₄ருதி ரேஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய)
அதாவது
“இந்த தஹராகாசம் என்கிற ஆத்மா தான் அணை போல் இருந்து எல்லா உலகங்களையும் ஒன்றொடொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி உலகங்களை யெல்லாம் தாங்கும் தன்மை யானது உபநிஷத்துக்களில் பல இடங்களிலும் பரமாத்மாவுக்குத் தான் சொல்லப்பட்டுள்ளது – (ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ பூ₄தாதி₄பதி: ஏஷ பூ₄தபால | ஏஷ ஸேதுர்வித₄ரண ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய) என்று ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் “இவர் தான் ஸர்வேஸ்வரன், இவர் தான் ஜீவ ராசிகளுக்கெல்லாம் தலைவர், இவர் தான் அனைவரையும் காப்பவர், இவர் தான் அணை போல் எல்லா உலகங்களும் ஒன்றொ டொன்று கலக்காமல் தாங்குகிறார்” என்று உள்ளது.-எனவே பரமாத்மாவுக்கே உரிய பெருமை தஹராகாசத்துக்குச் சொல்லப் பட்டுள்ளபடியால் தஹராகாசம் பரமாத்மாவே .

4- ப்ரஸித்₃தே ₄: ச – “(ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கும் என்கிற) ப்ரஸித்தியாலும்” ஆகாசம் என்கிற சொல் உபநிஷத்துக்களில் பரமாத்மாவைக் குறிக்கப் பயன்படுவதைப் பல இடங்களில் காண்கிறபடியால் “ஆகாசம் என்றால் பரமாத்மா” என்று ப்ரஸித்தியும் உள்ளது. அத்தாலும் தஹரகாசம் பரமாத்மாவே .
தைத்திரீய உபநிஷத்தில் (கோ ஹ்யே வாந்யாத் க꞉ ப்ராண்யாத் । யதே ₃ஷ ஆகாஶ ஆநந்தோ ₃ ந ஸ்யாத்) அதாவது”ஆனந்தமே வடிவானவரான இந்த ஆகாசம் என்கிற பரமாத்மா இல்லா விட்டால் யார் இவ் வுலகத்திலும் மற்றை யுலகங்களிலும் ஜீவ ராசிகளை ரக்ஷிப்பார்கள்?”என்றுள்ளது.
சாந்தோக்ய உபநிஷத்தில் (ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶாதே ₃வ
ஸமுத்பத்₃யந்தே )
அதாவது-“ஆகாசம் என்ற ப்ரஹ்மத்திடமிருந்து தான் எல்லா பூதங்கள் உண்டாகின்றன” என்றுள்ளது-(தானும் பிரகாசமாய் இருந்து மற்றவற்றையும் பிரகாசப்படுத்துவதால் பரமாத்மாவே ஆகாசம்)

ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல
இது வரை ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசமே தஹராகாசம் என்ற பூர்வபஷம் தவறென்று நிரூபிக்கப்பட்டது. இனி ஜீவாத்மாவே தஹராகாசம் என்ற பூர்வபஷம் முன் வைக்கப்படுகிறது. அதை வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
5(्இதர பராமர்சாத் ஸ: இதி சேத் ந அஸம்ப₄வாத்)
இதர பராமர்சாத் ஸ:
-பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஓருவர் நினைவு கூறப்படுகிற படியால் அவர் தான் (தஹராகாசம்)
இதி சேத் ந – என்று கூறினால் அது சரி அல்ல
அஸம்ப₄வாத் – பொருந்தாதபடியால்

பூர்வ பக்ஷம் – தஹராகாசத்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டு வரும் உபநிஷத் இடையில் (அத₂ ய ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்
ஜ்யோதி ருப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே
) அதாவது
“இந்த ஸம் ப்ரஸாதன் எனப்படுகிற ஜீவாத்மா இந்த சரீரத்திலிருந்து புறப்பட்டு பரஞ்ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான வடிவத்தோடு வெளிப்படுகிறார்” என்று கூறுகிறது.
தஹராகாசத்தைப் பற்றிப் பேசி வரும் போது “இந்த ஜீவாத்மா” என்று கூறப்படுகிற படியால், ’இந்த’ என்ற சொல்லால் நினை கூறப்படும் தஹராகாசம் ஜீவாத்மா தான் என்று தெரிகிறது. ’இதர’ பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவரான ஜீவாத்மா ’பராமர்சாத்’ நினை கூறப்படுகிற படியால் ’ஸ:’ அந்த ஜீவாத்மா தான் தஹராகாசம்.
இந்தப் பூர்வ பஷத்தை கண்டிக்கிறார் வேத வ்யாஸர் – “இதி சேத் ந” – இவ்வாறு கூறினால் அது தவறு
அஸம்ப₄வாத் – முதல் 4 ஸூத்ரங்களில் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால்.-பாபங்களற்றவராய் இருத்தல், ஸத்ய ஸங்கல்பம், அனைத்தையும் தாங்கும் சக்தி, இவரை அறிந்தால் முக்தி அடைவது என்னும் பண்புகள் எல்லாம் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது. எனவே அவர் தஹராகாசமாக இருக்க முடியாது.

————–

1.3.5 த₃ஹரதி₄கரணம்-ஜீவாத்மாவின் உண்மையான தன்மை

(அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம:
I I -ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகம்–இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –)

ஜீவாத்மாவும் இயற்கையில் பாபமற்றவரே
1.3.5 தஹராதிகரணத்தின் 5ஆம் ஸூத்ரத்தில், தஹராகாசத்துக்குச் சொன்ன பாபங்களற்றிருத்தல் (அபஹத பாப்மத்வம்) முதலான பண்புகள் ஜீவாத்மாவுக்குப் பொருந்தாதபடியால், ஜீவாத்மாவும் தஹராகாசம் அல்ல என்று வ்யாஸர் கூறினார். அதற்கு மேல் எழும் ஓர் ஆஷேபத்தைச் சொல்லி அதற்கு பதில் அளிக்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்.
6-உத்தராத் சேத் ஆவிர்பூ₄த ஸ்வரூப: து
உத்தராத் சேத்
– “பின் வரும் வாக்கியத்தால் (ஜீவாத்மாவுக்கே அபஹத பாப்மத்வம் உள்ளதே ) என்றால்”
ஆவிர்பூ₄தஸ்வரூப: து – “ஆவிர்பாவம் அடைந்த ஸ்வரூபத்தை உடையவன் அன்றோ (அங்கு சொல்லப்படுகிறான்)”
ப்ரஜாபதியான நான்முகன் ஜீவாத்மாவைப் பற்றி செய்த உபதேசம் ஒன்று கதை வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது.“எந்த ஆத்மா பாபங்களற்றவரோ , மூப்பு மரணம் சோகம் பசி தாகம் அற்றவவரோ , எல்லா ஆசைகளும் நிரம்பியவரோ ,ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் நடத்தும் வல்லமை படைத்தவரோ அவரை அறிந்தால் எல்லா உலகங்களையும் ஜயிக்கலாம்” என்று நான்முகன் ஒருமுறை அறிவித்தார். தேவர்களுக்காக இந்த்ரனும், அஸுரர்களுக்காக விரோசனனும் அந்த ஆத்மாவை அறிவதற்காக நான்முகனிடம் வந்தனர். அவர் முதலில் தண்ணீரில் தெரியும் ப்ரதி பிம்பமே ஆத்மா என்று சொன்னார். விரோசனன் த்ருப்தி யடைந்து உடலே தான் ஆத்மா என்று நினைத்துக் கொண்டே திரும்பச் சென்றார். -ஆனால் இந்த்ரனுக்கு இது பொருத்தமாகப் படவில்லை , உடலில் பல குறைகள் காணப்படுகிறபடியால். எனவே அவருக்கு மட்டும் ப்ரஹ்மா வரிசை யாக கனவில் காணப்படுபவனும். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரும் ஆத்மா என்று கூறினார். அதையும் இந்த்ரன் ஏற்கவில்லை -கனவிலும் குறைகளைக் காண்கின்றோம் -ஆழ்ந்த உறக்கத்தில் தன்னையுமே அறியாதவனாய் இருப்பவன் எப்படிப் மேலானவனாக இருக்க முடியும் -இவ்வாறு ஒவ்வொரு நிலையையும் கழித்து -ஒவ்வொரு தடாவையும் 32 வர்ஷம் கைங்கர்யங்கள் செய்து அவனை மகிழ்வித்து இறுதியில் உண்மையான ஆத்ம உபதேசம் பெற்றான் – . எனவே இறுதியாக ஆத்மாவின் உண்மைத் தன்மையைக் கூறி அந்த ஆத்மா பாபங்களற்றிருத்தல் முதலான குணங்களை உடையவர் என்று நான்முகன் கூறினார்.இதைக் கொண்டு பூர்வபக்ஷீ ஆஷேபிக்கிறார் – ஜீவாத்மாவுக்கே அபஹதபாப்த்வம் பொருந்துமே ? என்று-ஆவிர்பூ₄த ஸ்வரூப: து – இது வ்யாஸரின் பதில். ஜீவாத்மாவுக்கு பாபமற்றிருத்தல் முதலான 8 குணங்கள் முக்தி அடைந்து, ஸ்வரூபம் முழுவதும் ஆவிர்பாவம் (விளக்கம்) அடைந்த பிறகு தான் சொல்லப்பட்டுள்ளது. தஹராகாசவமோ உடலிலிருக்கும் போதே அப் பண்புகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது. எனவே தஹராகாசம் ஜீவாத்மா அல்ல.

முக்தியில் பரமாத்மாவுக்கு நிகரானவர்
ஜீவாத்மா தஹராகாசம் அல்ல என்றால் எதற்காக “
ஏஷ ஸம்ப்ரஸாத₃: அஸ்மாத் சரீராத் ஸமுத்தா₂ய பரம்ஜ்வயாதி:
உபஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄”
அதாவது’இந்த ஜீவாத்மா இவ்வுடலை விட்டு பரமாத்மாவை அடைந்து தன்னுடைய இயற்கை நிலையை அடைகிறான்” என்று இங்கு கூறப்படுகிறது? அதற்கு பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
7-அந்யார்த₂: பராமர்ச : – “(ஜீவாத்மாவை ) நினைவு கூறியது வேறு பயனுக்காக”
இங்கு ஜீவனைப் பற்றிப் பேசியது, ஜீவாத்மா தான் தஹராகாசம் என்று சொல்வதற்காக அல்ல. தஹராகாசம் என்ற பரமாத்மாவுக்கு உள்ள மற்ற ஓரு சிறப்பை உணர்த்துவதற்காக – அதாவது அந்தப் பரமாத்மாவின் கருணை மற்றும் அநுக்ரஹத்தால் தான் ஜீவாத்மா முக்தியை அடைகிறார் என்று காட்டுவதற்காகவே .
8-அல்ப ஸ்ருதே : இதி சேத் தது₃க்தம்

அல்பஸ்ருதே : – தஹராகாசம் அல்பமானது (சிறியது) என்று சொல்லப் படுகிறபடியால் அது பரமாத்மாவாக இயலாதே
இதி சேத் – என்று கேட்டால்
தது₃க்தம் – அதற்கான விடை முன்னமே 1.2.1 ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணத்தில் “அர்ப₄கோகஸ்த்வாத் தத்₃ வ்யபதே ₃சாத் நேதி சேத் ந நிசாய்யத்வாதே₃வம் வ்யோமவச்ச” என்கிற ஸூத்ரத்தில் சொல்லப்பட்டது. பரமாத்மா அளவற்றவராய் இருந்தாலும், உபாஸகனுக்கு அனுக்ரஹிப்பதற்காக அவர் ஹ்ருதயத்துக்குள்ளும் சிறிய வடிவத்வதாடு இருக்கிறபடியால் இதில் பொருந்தாமை இல்லை.
9-அநுக்ருதே : தஸ்ய ச –
தஸ்ய அந்த தஹராகாசத்தோடு
அநுக்ருதே : ஸாம்யம் அடைகிறான் ஜீவாத்மா
என்று சொல்லப்படுகிறபடியாலும், ஜீவாத்மா வேறு தஹராகாசம் வேறு என்று தான் கொள்ள வேண்டும்.
10-அபி ஸ்மர்யதே – “மேலும் ஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது” – ஸம்ஸாரத்திலிருக்கும் ஜீவாத்மாவுக்கு முக்தி யடையும் போது பரமாத்மாவோடு ஸாம்யம் ஏற்படுகிறது என்பது பகவத் கீதை என்ற ஸ்ம்ருதியிலும் (மம ஸாத₄ர்ம்யம் ஆக₃தா🙂 (14.2) என்று கூறப் பட்டுள்ளது.
ஆக இவ்வாறு தஹராகாசம் பரமாத்மாவே , பூதாகாசமுமல்ல ஜீவனுமல்ல என்று நிரூபிக்கப்பட்டது.

॥ அஷ்டமோঽத்⁴யாய: ॥
அத² யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶஸ்தஸ்மிந்யத³ந்தஸ்தத³ந்வேஷ்டவ்யம்
தத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ॥ 8.1.1॥

தகர அதிகரணம் / பிரஜாபதி வித்யை –இதில்
ஹிருதய கமலம் தலை கீழ் பிடிக்கப்பட்ட தாமரை -ஹ்ருதய கமலம் கோலம் உண்டே –
அதற்குள் உள்ளதை உபாசிப்பாய் -கல்யாண குணங்களை -தேடி உபாசிப்பாய்
தகர -சிறிய இடைவெளி –

தம் சேத்³ப்³ரூயுர்யதி³த³மஸ்மிந்ப்³ரஹ்மபுரே த³ஹரம் புண்ட³ரீகம் வேஶ்ம
த³ஹரோঽஸ்மிந்நந்தராகாஶ: கிம் தத³த்ர வித்³யதே யத³ந்வேஷ்டவ்யம்
யத்³வாவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸ ப்³ரூயாத் ॥ 8.1.2॥

உள்ளே இருப்பதே ஆதாரம் -ஆகாசம் இடம் கொடுக்கும் -ப்ரஹ்மம் தானே இடமாக ஆகாசமாக இருக்கும்

யாவாந்வா அயமாகாஶஸ்தாவாநேஷோঽந்தர்ஹ்ருʼத³ய அகாஶ
உபே⁴ அஸ்மிந்த்³யாவாப்ருʼதி²வீ அந்தரேவ ஸமாஹிதே
உபா⁴வக்³நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம்
தத³ஸ்மிந்ஸமாஹிதமிதி ॥ 8.1.3॥

தம் சேத்³ப்³ரூயுரஸ்மிꣳஶ்சேதி³த³ம் ப்³ரஹ்மபுரே ஸர்வꣳ ஸமாஹிதꣳ
ஸர்வாணி ச பூ⁴தாநி ஸர்வே ச காமா யதை³தஜ்ஜரா வாப்நோதி
ப்ரத்⁴வꣳஸதே வா கிம் ததோঽதிஶிஷ்யத இதி ॥ 8.1.4॥

ஸ ப்³ரூயாத்நாஸ்ய ஜரயைதஜ்ஜீர்யதி ந வதே⁴நாஸ்ய ஹந்யத
ஏதத்ஸத்யம் ப்³ரஹ்மபுரமஸ்மிகாமா: ஸமாஹிதா: ஏஷ
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்போ யதா² ஹ்யேவேஹ
ப்ரஜா அந்வாவிஶந்தி யதா²நுஶாஸநம் யம் யமந்தமபி⁴காமா
ப⁴வந்தி யம் ஜநபத³ம் யம் க்ஷேத்ரபா⁴க³ம் தம் தமேவோபஜீவந்தி
॥ 8.1.5॥

அறிந்தவன் அஷ்ட குணங்களில் சாம்யா பத்தி -நீர் பூத்த நெருப்பு போலே இங்கு -ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
பாபம் தீண்டாமல் -மூப்பு இல்லாமல் –மரணம் இல்லாமல் -சோகம் இல்லாமல் -பசி இல்லாமல் –
தாகம் இல்லாமல் -நல்ல விருப்பங்கள் கொண்டு -செயல்களை முடிக்கும் சக்தன் -ஆகிய எட்டும்

தத்³யதே²ஹ கர்மஜிதோ லோக: க்ஷீயத ஏவமேவாமுத்ர புண்யஜிதோ
லோக: க்ஷீயதே தத்³ய இஹாத்மாநமநுவித்³ய வ்ரஜந்த்யேதாꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ
ப⁴வத்யத² ய இஹாத்மாநமநிவுத்³ய வ்ரஜந்த்யேதꣳஶ்ச
ஸத்யாந்காமாꣳஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
॥ 8.1.6॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

—————————————

காண்டம்1

இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம், அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாஸிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இதை அப்யாஸத்தின் மூலம் வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரம்முக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

ஸ யதி³ பித்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய பிதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந பித்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.1॥

அத² யதி³ மாத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய மாதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந மாத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.2॥

அத² யதி³ ப்⁴ராத்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ப்⁴ராதர:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ப்⁴ராத்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.3॥॥

அத² யதி³ ஸ்வஸ்ருʼலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்வஸார:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்வஸ்ருʼலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.4॥

அத² யதி³ ஸகி²லோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸகா²ய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸகி²லோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.5॥

முக்த ஜீவன் -ஆனந்தத்தில் தாரதம்யம் இல்லை -பித்ரு லோகம் போகும் சக்தியும் உண்டு –
சங்கல்பத்தாலே அனைத்தும்
ஸ்ருஷ்டிக்கும் சக்தி உண்டு -ஆனால் ஸ்ருஷ்டிக்க மாட்டான் -அனைத்தும் அவனாகவே பார்ப்பதால்

அத² யதி³ க³ந்த⁴மால்யலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
க³ந்த⁴மால்யே ஸமுத்திஷ்ட²தஸ்தேந க³ந்த⁴மால்யலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.6॥

அத² யத்³யந்நபாநலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்யாந்நபாநே
ஸமுத்திஷ்ட²தஸ்தேநாந்நபாநலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.7॥

அத² யதி³ கீ³தவாதி³த்ரலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய
கீ³தவாதி³த்ரே ஸமுத்திஷ்ட²தஸ்தேந கீ³தவாதி³த்ரலோகேந ஸம்பந்நோ
மஹீயதே ॥ 8.2.8॥

அத² யதி³ ஸ்த்ரீலோககாமோ ப⁴வதி ஸங்கல்பாதே³வாஸ்ய ஸ்த்ரிய:
ஸமுத்திஷ்ட²ந்தி தேந ஸ்த்ரீலோகேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.9॥

யம் யமந்தமபி⁴காமோ ப⁴வதி யம் காமம் காமயதே ஸோঽஸ்ய
ஸங்கல்பாதே³வ ஸமுத்திஷ்ட²தி தேந ஸம்பந்நோ மஹீயதே ॥ 8.2.10॥

ஹ்ருதி அயம் ஹிருதயத்தில் அமர்ந்து உள்ளான் -அடைந்து உள்ளான் -ஹிருதயம் –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

—————

காண்டம்2

இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாத்து. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேப்போலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசம். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.

உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அவைகள் 1.       பாவமற்றது, 2.       வயதற்றது, 3.      மரணமற்றது, 4.       துயரமற்றது, 5.      பசியற்றது, 6.       தாகமற்றது, 7.       நிறைவேறுகின்ற ஆசை,8.       நிறைவேறுகின்ற சங்கல்பம்

ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள் (இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பது) செய்வோம், ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியனத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

இந்த உலகத்தில் நாம் அடையும் எதுவும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிரான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

த இமே ஸத்யா: காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தேஷாꣳ ஸத்யாநாꣳ
ஸதாமந்ருʼதமபிதா⁴நம் யோ யோ ஹ்யஸ்யேத: ப்ரைதி ந தமிஹ
த³ர்ஶநாய லப⁴தே ॥ 8.3.1॥

அத² யே சாஸ்யேஹ ஜீவா யே ச ப்ரேதா யச்சாந்யதி³ச்ச²ந்ந
லப⁴தே ஸர்வம் தத³த்ர க³த்வா விந்த³தேঽத்ர ஹ்யஸ்யைதே ஸத்யா:
காமா அந்ருʼதாபிதா⁴நாஸ்தத்³யதா²பி ஹிரண்யநிதி⁴ம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா
உபர்யுபரி ஸஞ்சரந்தோ ந விந்தே³யுரேவமேவேமா: ஸர்வா: ப்ரஜா
அஹரஹர்க³ச்ச²ந்த்ய ஏதம் ப்³ரஹ்மலோகம் ந விந்த³ந்த்யந்ருʼதேந ஹி
ப்ரத்யூடா:⁴ ॥ 8.3.2॥

ஸ வா ஏஷ ஆத்மா ஹ்ருʼதி³ தஸ்யைததே³வ நிருக்தꣳ ஹ்ருʼத்³யயமிதி
தஸ்மாத்³த்⁴ருʼத³யமஹரஹர்வா ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.3॥

அத² ய ஏஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி தஸ்ய ஹ வா ஏதஸ்ய
ப்³ரஹ்மணோ நாம ஸத்யமிதி ॥ 8.3.4॥

தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி ஸதீயமிதி
தத்³யத்ஸத்தத³ம்ருʼதமத² யத்தி தந்மர்த்யமத² யத்³யம் தேநோபே⁴
யச்ச²தி யத³நேநோபே⁴ யச்ச²தி தஸ்மாத்³யமஹரஹர்வா
ஏவம்வித்ஸ்வர்க³ம் லோகமேதி ॥ 8.3.5॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———

காண்டம்-3

ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:

நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை.அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை, மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராத்தற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடபட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.

ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)

ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவன் அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனால் அவனுடைய அந்த புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)

ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்

அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய – இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு

பரம் ஜோதிஹி – ஞான ஸ்வரூபமாக

உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து

ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே

அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)

அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்

சத்யம் – உண்மை பேசுதல்

சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்

சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக (நித்தியமானது) இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

அத² ய ஆத்மா ஸ ஸேதுர்த்⁴ருʼதிரேஷாம் லோகாநாமஸம்பே⁴தா³ய
நைதꣳ ஸேதுமஹோராத்ரே தரதோ ந ஜரா ந ம்ருʼத்யுர்ந ஶோகோ ந
ஸுக்ருʼதம் ந து³ஷ்க்ருʼதꣳ ஸர்வே பாப்மாநோঽதோ
நிவர்தந்தேঽபஹதபாப்மா ஹ்யேஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.1॥

தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாந்த:⁴ ஸந்நநந்தோ⁴ ப⁴வதி
வித்³த:⁴ ஸந்நவித்³தோ⁴ ப⁴வத்யுபதாபீ ஸந்நநுபதாபீ ப⁴வதி
தஸ்மாத்³வா ஏதꣳ ஸேதும் தீர்த்வாபி நக்தமஹரேவாபி⁴நிஷ்பத்³யதே
ஸக்ருʼத்³விபா⁴தோ ஹ்யேவைஷ ப்³ரஹ்மலோக: ॥ 8.4.2॥

தத்³ய ஏவைதம் ப்³ரஹ்மலோகம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி
தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ
ப⁴வதி ॥ 8.4.3॥

சத் தி யம் அடக்கி ஆள்பவன் சித்தியும் அசித்தையும்
ப்ரஹ்மம் சேது -அங்கே கூட்டி செல்பவன்
இரண்டையும் கலக்காமல் பாதுகாப்பவன் –
ப்ரஹ்மசர்யம் -ப்ரஹ்மத்தை நோக்கி போவதில் உள்ள தடைகளை வெட்டி –
அவன் இடம் கூட்டிப்போவர்கள் உடன் தொடர்பு -சம்சாரிகள் இடம் பற்று அற்று

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————

காண்டம்4

அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இது நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர். 

சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

அத² யத்³யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ யோ ஜ்ஞாதா தம் விந்த³தேঽத² யதி³ஷ்டமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவேஷ்ட்வாத்மாநமநுவிந்த³தே
॥ 8.5.1॥

அத² யத்ஸத்த்ராயணமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத்³ப்³ரஹ்மசர்யேண
ஹ்யேவ ஸத ஆத்மநஸ்த்ராணம் விந்த³தேঽத² யந்மௌநமித்யாசக்ஷதே
ப்³ரஹ்மசர்யமேவ தப்³ப்³ரஹ்மசர்யேண ஹ்யேவாத்மாநமநுவித்³ய மநுதே ‘॥ 8.5.2॥

அத² யத³நாஶகாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ ததே³ஷ
ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³தேঽத²
யத³ரண்யாயநமித்யாசக்ஷதே ப்³ரஹ்மசர்யமேவ தத³ரஶ்ச ஹ வை
ண்யஶ்சார்ணவௌ ப்³ரஹ்மலோகே த்ருʼதீயஸ்யாமிதோ தி³வி ததை³ரம்
மதீ³யꣳ ஸரஸ்தத³ஶ்வத்த:² ஸோமஸவநஸ்தத³பராஜிதா
பூர்ப்³ரஹ்மண: ப்ரபு⁴விமிதꣳ ஹிரண்மயம் ॥ 8.5.3॥

தத்³ய ஏவைதவரம் ச ண்யம் சார்ணவௌ ப்³ரஹ்மலோகே
ப்³ரஹ்மசர்யேணாநுவிந்த³ந்தி தேஷாமேவைஷ ப்³ரஹ்மலோகஸ்தேஷாꣳ
ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி ॥ 8.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்5

பிரம்மசர்ய சாதனையின் பெருமை

  •        குருவுக்கு சேவை செய்தல்
  •          வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
  •          குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
  •          எளிமையான வாழ்க்கை வாழ்தல்
  •          சிற்றின்பத்தை துறத்தல்

இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்

இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்

ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.

மௌனம்       – இதனால் அடையும் பலன்

அநாஸகாயனம் – உபவாசம்

அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

இந்த ஆறு ஸாதனைகளின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை வரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான் நகரத்தில் வசிக்கலாம்.

அத² யா ஏதா ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தா: பிங்க³லஸ்யாணிம்நஸ்திஷ்ட²ந்தி
ஶுக்லஸ்ய நீலஸ்ய பீதஸ்ய லோஹிதஸ்யேத்யஸௌ வா ஆதி³த்ய:
பிங்க³ல ஏஷ ஶுக்ல ஏஷ நீல ஏஷ பீத ஏஷ லோஹித:
॥ 8.6.1॥

அபராஜிதா அவித்யை ஸ்ரீ வைகுண்டம் -ப்ரஹ்ம லோகம்
சூர்ய கிரணங்கள் மூலம் போகிறான் –

தத்³யதா² மஹாபத² ஆதத உபௌ⁴ க்³ராமௌ க³ச்ச²தீமம் சாமும்
சைவமேவைதா ஆதி³த்யஸ்ய ரஶ்மய உபௌ⁴ லோகௌ க³ச்ச²ந்தீமம் சாமும்
சாமுஷ்மாதா³தி³த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ³ஷு ஸ்ருʼப்தா
ஆப்⁴யோ நாடீ³ப்⁴ய: ப்ரதாயந்தே தேঽமுஷ்மிந்நாதி³த்யே ஸ்ருʼப்தா:
॥ 8.6.2॥

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த்: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யாஸு
ததா³ நாடீ³ஷு ஸ்ருʼப்தோ ப⁴வதி தம் ந கஶ்சந பாப்மா ஸ்ப்ருʼஶதி
தேஜஸா ஹி ததா³ ஸம்பந்நோ ப⁴வதி ॥ 8.6.3॥

அத² யத்ரைதத³ப³லிமாநம் நீதோ ப⁴வதி தமபி⁴த ஆஸீநா
ஆஹுர்ஜாநாஸி மாம் ஜாநாஸி மாமிதி ஸ
யாவத³ஸ்மாச்ச²ரீராத³நுத்க்ராந்தோ ப⁴வதி தாவஜ்ஜாநாதி
॥ 8.6.4॥

அத² யத்ரைதத³ஸ்மாச்ச²ரீராது³த்க்ராமத்யதை²தைரேவ
ரஶ்மிபி⁴ரூர்த்⁴வமாக்ரமதே ஸ ஓமிதி வா ஹோத்³வா மீயதே
ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா³தி³த்யம் க³ச்ச²த்யேதத்³வை க²லு
லோகத்³வாரம் விது³ஷாம் ப்ரபத³நம் நிரோதோ⁴ঽவிது³ஷாம் ॥ 8.6.5॥

ததே³ஷ ஶ்லோக: । ஶதம் சைகா ச ஹ்ருʼத³யஸ்ய நாட்³யஸ்தாஸாம்
மூர்தா⁴நமபி⁴நி:ஸ்ருʼதைகா । தயோர்த்⁴வமாயந்நம்ருʼதத்வமேதி
விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப⁴வந்த்யுத்க்ரமணே ப⁴வந்தி ॥ 8.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

——————

காண்டம்6

சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  sUriyaninசூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவித்மான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்கு அகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.

ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ரஜாபதிருவாச ॥ 8.7.1॥

பிரத்யாகாத்மா வித்யை — பிரஜாபதி வித்யை –நாம் என்கிற ஆத்மாவை பற்றி -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
ப்ரஹ்மாவுக்கு சரீரம் சேஷம் பிரகாரம்
விரோசனன் அசுரர் அரசன் -இந்திரன் தேவ அரசன் -இருவருக்கும் அறிய ஆசை கொண்டு

தத்³தோ⁴ப⁴யே தே³வாஸுரா அநுபு³பு³தி⁴ரே தே ஹோசுர்ஹந்த
தமாத்மாநமந்வேச்சா²மோ யமாத்மாநமந்விஷ்ய ஸர்வாꣳஶ்ச
லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாநிதீந்த்³ரோ ஹைவ
தே³வாநாமபி⁴ப்ரவவ்ராஜ விரோசநோঽஸுராணாம் தௌ
ஹாஸம்விதா³நாவேவ ஸமித்பாணீ ப்ரஜாபதிஸகாஶமாஜக்³மது:
॥ 8.7.2॥

தௌ ஹ த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணி ப்³ரஹ்மசர்யமூஷதுஸ்தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிமிச்ச²ந்தாவாஸ்தமிதி தௌ ஹோசதுர்ய
ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருʼத்யுர்விஶோகோ
விஜிக⁴த்ஸோঽபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப: ஸோঽந்வேஷ்டவ்ய:
ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச
காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ப⁴க³வதோ வசோ
வேத³யந்தே தமிச்ச²ந்தாவவாஸ்தமிதி ॥ 8.7.3॥

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத
ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேத்யத² யோঽயம்
ப⁴க³வோঽப்ஸு பரிக்²யாயதே யஶ்சாயமாத³ர்ஶே கதம ஏஷ
இத்யேஷ உ ஏவைஷு ஸர்வேஷ்வந்தேஷு பரிக்²யாயத இதி ஹோவாச
॥ 8.7.4॥

-32-வருஷம் ப்ரஹ்மசர்யம் இருந்து அதிகாரம் சம்பாதித்து கொண்டு வர சொல்ல
கண்ணுக்குள்ளே இருப்பவனே ஆத்மா அஷி புருஷன்
அம்ருதம் -அபயம் -தூக்கமே இல்லாமல் நிரதிசய சோக ரூபம் -வலக்கண்ணில் உள்ளான்

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————

காண்டம்-‍7 (பிரஜாபதி வித்யா)

         ஞானி என்பவர் யார்?

         எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?

         ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?

         எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?

         ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

ஸ்லோகம்-1

மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

       ஆத்ம ஸ்வரூபம்

       ஞானத்தை அடையும் வழி

       ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

அபஹதபாப்மா – ஆத்மா காரண சரீரமற்றது

விஜரஹ – ஸ்தூல சரீரமற்றது

விம்ருத்யு – மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது

விஷோகஹ – துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது

விஜிதாத்ய – பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது

அபிபாக – தாகமுமில்லை.

எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.

இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள்

1. அன்வேஷனம் – ஞானத்வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் ஸாதனைகள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

2. விஜிக்ஞாஸிதவ்ய – தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

ஸ்லோகம்-2

வித்யாkk க்ரகணம், வித்யா சம்பிரதான, விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாஸம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார். கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?

பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார். பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.

உத³ஶராவ ஆத்மாநமவேக்ஷ்ய யதா³த்மநோ ந விஜாநீத²ஸ்தந்மே
ப்ரப்³ரூதமிதி தௌ ஹோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே தௌ ஹ
ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி தௌ ஹோசது:
ஸர்வமேவேத³மாவாம் ப⁴க³வ ஆத்மாநம் பஶ்யாவ ஆ லோமப்⁴ய: ஆ
நகே²ப்⁴ய: ப்ரதிரூபமிதி ॥ 8.8.1॥

பிம்பம் பார்த்து -எத்தை பார்க்கிறாயா ஆத்மா -உடம்பு செய்வதையே பிம்பம் செய்ய –

தௌ ஹ ப்ரஜாபதிருவாச ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ
பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷேதா²மிதி தௌ ஹ ஸாத்⁴வலங்க்ருʼதௌ
ஸுவஸநௌ பரிஷ்க்ருʼதௌ பூ⁴த்வோத³ஶராவேঽவேக்ஷாஞ்சக்ராதே
தௌ ஹ ப்ரஜாபதிருவாச கிம் பஶ்யத² இதி ॥ 8.8.2॥

அசுரன் தேகமே ஆத்மா என்று தப்பாக புரிந்து -செல்ல -அசுரத்தன்மை வளர்ந்து –

தௌ ஹோசதுர்யதை²வேத³மாவாம் ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதௌ ஸ்வ ஏவமேவேமௌ ப⁴க³வ: ஸாத்⁴வலங்க்ருʼதௌ ஸுவஸநௌ
பரிஷ்க்ருʼதாவித்யேஷ ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தௌ ஹ ஶாந்தஹ்ருʼத³யௌ ப்ரவவ்ரஜது: ॥ 8.8.3॥

தௌ ஹாந்வீக்ஷ்ய ப்ரஜாபதிருவாசாநுபலப்⁴யாத்மாநமநநுவித்³ய
வ்ரஜதோ யதர ஏதது³பநிஷதோ³ ப⁴விஷ்யந்தி தே³வா வாஸுரா வா தே
பராப⁴விஷ்யந்தீதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய ஏவ
விரோசநோঽஸுராஞ்ஜகா³ம தேப்⁴யோ ஹைதாமுபநிஷத³ம்
ப்ரோவாசாத்மைவேஹ மஹய்ய ஆத்மா பரிசர்ய ஆத்மாநமேவேஹ
மஹயந்நாத்மாநம் பரிசரந்நுபௌ⁴ லோகாவவாப்நோதீமம் சாமும் சேதி
॥ 8.8.4॥

தஸ்மாத³ப்யத்³யேஹாத³தா³நமஶ்ரத்³த³தா⁴நமயஜமாநமாஹுராஸுரோ
ப³தேத்யஸுராணாꣳ ஹ்யேஷோபநிஷத்ப்ரேதஸ்ய ஶரீரம் பி⁴க்ஷயா
வஸநேநாலங்காரேணேதி ஸꣳஸ்குர்வந்த்யேதேந ஹ்யமும் லோகம்
ஜேஷ்யந்தோ மந்யந்தே ॥ 8.8.5॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————

காண்டம்-‍8

தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

அனுபலப்யா – சரியாக புரிந்து கொள்ளாமல்

ப்ரோவாசா – உபதேசம் செய்தல்

பரிசர்ய – காக்கப்படவேண்டும்- to take care of

இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

அத² ஹேந்த்³ரோঽப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ யதை²வ
க²ல்வயமஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம: பரிவ்ருʼக்ணே
பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ நஶ்யதி
நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: ஸார்த⁴ம் விரோசநேந
கிமிச்ச²ந்புநராக³ம இதி ஸ ஹோவாச யதை²வ க²ல்வயம்
ப⁴க³வோঽஸ்மிஞ்ச²ரீரே ஸாத்⁴வலங்க்ருʼதே ஸாத்⁴வலங்க்ருʼதோ ப⁴வதி
ஸுவஸநே ஸுவஸந: பரிஷ்க்ருʼதே பரிஷ்க்ருʼத
ஏவமேவாயமஸ்மிந்நந்தே⁴ঽந்தோ⁴ ப⁴வதி ஸ்ராமே ஸ்ராம:
பரிவ்ருʼக்ணே பரிவ்ருʼக்ணோঽஸ்யைவ ஶரீரஸ்ய நாஶமந்வேஷ
நஶ்யதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.9.2॥

இந்திரன் -ஆத்மா தேகம் வாசி சங்கை -வந்து திரும்பி வந்து சமித் பாணியாக —
மீண்டும் -32-வருஷம்
ஸ்வப்னத்தில் உன்னை பார்த்தாய் அது தான் ஆத்மா என்று சொல்ல –
கெட்டுப்போகாது உடம்பைக்காட்டி -அவனுக்கு வந்த சங்கை தீர்த்து –

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.9.3॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்-‍9

ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான். நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

குண ஆதானம் – நற்குணத்தை சேர்க்கிறோம்

தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்

தோஷ தரிசனம் – குறையைக் கண்டு கொண்டால்

நிஷேதம் ஹேது – அதை நீக்கி விடுவோம்.

ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்க கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்

இந்திரனின் விசாரங்கள்:

இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

தோஷம்-1: இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.

தோஷம்-2: உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)

தோஷம்-3: உடலின் அழிவையும் உணர்கின்றான்.

நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

ய ஏஷ ஸ்வப்நே மஹீயமாநஶ்சரத்யேஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ
தத்³யத்³யபீத³ꣳ ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴ ஸ ப⁴வதி யதி³
ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி ॥ 8.10.1॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.10.2॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம
இதி ஸ ஹோவாச தத்³யத்³யபீத³ம் ப⁴க³வ: ஶரீரமந்த⁴ம் ப⁴வத்யநந்த:⁴
ஸ ப⁴வதி யதி³ ஸ்ராமமஸ்ராமோ நைவைஷோঽஸ்ய தோ³ஷேண து³ஷ்யதி
॥ 8.10.3॥

ந வதே⁴நாஸ்ய ஹந்யதே நாஸ்ய ஸ்ராம்யேண ஸ்ராமோ க்⁴நந்தி த்வேவைநம்
விச்சா²த³யந்தீவாப்ரியவேத்தேவ ப⁴வத்யபி ரோதி³தீவ நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீத்யேவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி வஸாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாணீதி
ஸ ஹாபராணி த்³வாத்ரிꣳஶதம் வர்ஷாண்யுவாஸ தஸ்மை ஹோவாச
॥ 8.10.4॥

அதையும் பாம்பு கடிக்க -சங்கை –மேலும் -32–வருஷம்
ஆழ்ந்த நிலை உறக்கம் -தான் ஆத்மா
நான் தெரியாதே மேலும் சங்கை -5- வருஷம்
ஆக -101-வருஷம் இருந்து ஆத்மாவை அறிந்தான் இந்திரன் –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————

காண்டம்-‍10

எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும். எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது. 

குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரன்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல்.  

தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன் – ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.

தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞசபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞச பூதங்களும் ஜடமானதுதான். ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை.

ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

தத்³யத்ரைதத்ஸுப்த: ஸமஸ்த: ஸம்ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாத்யேஷ
ஆத்மேதி ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி ஸ ஹ ஶாந்தஹ்ருʼத³ய:
ப்ரவவ்ராஜ ஸ ஹாப்ராப்யைவ தே³வாநேதத்³ப⁴யம் த³த³ர்ஶ நாஹ
க²ல்வயமேவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம் ஜாநாத்யயமஹமஸ்மீதி
நோ ஏவேமாநி பூ⁴தாநி விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர
போ⁴க்³யம் பஶ்யாமீதி ॥ 8.11.1॥

ஸ ஸமித்பாணி: புநரேயாய தꣳ ஹ ப்ரஜாபதிருவாச
மக⁴வந்யச்சா²ந்தஹ்ருʼத³ய: ப்ராவ்ராஜீ: கிமிச்ச²ந்புநராக³ம இதி
ஸ ஹோவாச நாஹ க²ல்வயம் ப⁴க³வ ஏவꣳ ஸம்ப்ரத்யாத்மாநம்
ஜாநாத்யயமஹமஸ்மீதி நோ ஏவேமாநி பூ⁴தாநி
விநாஶமேவாபீதோ ப⁴வதி நாஹமத்ர போ⁴க்³யம் பஶ்யாமீதி
॥ 8.11.2॥

ஏவமேவைஷ மக⁴வந்நிதி ஹோவாசைதம் த்வேவ தே
பூ⁴யோঽநுவ்யாக்²யாஸ்யாமி நோ ஏவாந்யத்ரைதஸ்மாத்³வஸாபராணி
பஞ்ச வர்ஷாணீதி ஸ ஹாபராணி பஞ்ச வர்ஷாண்யுவாஸ
தாந்யேகஶதꣳ ஸம்பேது³ரேதத்தத்³யதா³ஹுரேகஶதꣳ ஹ வை வர்ஷாணி
மக⁴வாந்ப்ரஜாபதௌ ப்³ரஹ்மசர்யமுவாஸ தஸ்மை ஹோவாச ॥ 8.11.3॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

—————

காண்டம்-‍11

எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மஹா வாக்கியமாகும்.

இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான். குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந
ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ 8.12.1॥

அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ 8.12.2॥।

ஏவமேவைஷ ஸம்ப்ரஸாதோ³ঽஸ்மாச்ச²ரீராத்ஸமுத்தா²ய பரம்
ஜ்யோதிருபஸம்பத்³ய ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யதே ஸ உத்தமபுருஷ:
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீட³ந்ரமமாண: ஸ்த்ரீபி⁴ர்வா யாநைர்வா
ஜ்ஞாதிபி⁴ர்வா நோபஜநꣳ ஸ்மரந்நித³ꣳ ஶரீரꣳ ஸ யதா²
ப்ரயோக்³ய ஆசரணே யுக்த ஏவமேவாயமஸ்மிஞ்ச²ரீரே
ப்ராணோ யுக்த: ॥ 8.12.3॥

அத² யத்ரைததா³காஶமநுவிஷண்ணம் சக்ஷு: ஸ சாக்ஷுஷ:
புருஷோ த³ர்ஶநாய சக்ஷுரத² யோ வேதே³த³ம் ஜிக்⁴ராணீதி ஸ ஆத்மா
க³ந்தா⁴ய க்⁴ராணமத² யோ வேதே³த³மபி⁴வ்யாஹராணீதி ஸ
ஆத்மாபி⁴வ்யாஹாராய வாக³த² யோ வேதே³த³ꣳ ஶ்ருʼணவாநீதி
ஸ ஆத்மா ஶ்ரவணாய ஶ்ரோத்ரம் ॥ 8.12.4॥

பார்க்கிறான் கண்ணால் அல்ல -அனைத்தும் சங்கல்பத்தால் -சங்கல்ப ரூப ஞானம்

அத² யோ வேதே³த³ம் மந்வாநீதி ஸாத்மா மநோঽஸ்ய தை³வம் சக்ஷு:
ஸ வா ஏஷ ஏதேந தை³வேந சக்ஷுஷா மநஸைதாந்காமாந்பஶ்யந்ரமதே
ய ஏதே ப்³ரஹ்மலோகே ॥ 8.12.5॥

தம் வா ஏதம் தே³வா ஆத்மாநமுபாஸதே தஸ்மாத்தேஷாꣳ ஸர்வே ச
லோகா ஆத்தா: ஸர்வே ச காமா: ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி
ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்³ய விஜாநாதீதி ஹ
ப்ர்ஜாபதிருவாச ப்ரஜாபதிருவாச ॥ 8.12.6॥

தேகம் ஸ்வப்னம் ஆழ் நிலை-எதுவும் இல்லை -உடம்பில் விட்டு கிளம்பினவன் தான் ஆத்மா
செயற்கை கர்மாவால் சிக்கி உள்ளான்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

————

காண்டம்-‍12

சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது இவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்யம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொருக்ஷணமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

ஆத்ம-சரீர சம்பந்தம்:

இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாஸ ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.

2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.

3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு போல்.

சரீர அபிமான பலன்:

சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காத்து என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.

இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?

சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

கேள்வி-1

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக் இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?

பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள் சம்சாரப்பிரியம், ஞானியின்பிரியம். சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

கேள்வி-2

ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?

குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான் ஞானியின் ஆசை.

அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்

ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான். இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்ம்ம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான். ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான். எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது, இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்-ஆத்மா. இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிவது ஆத்மா நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்

மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

ஶ்யாமாச்ச²ப³லம் ப்ரபத்³யே ஶப³லாச்ச்²யாமம் ப்ரபத்³யேঽஶ்வ
இவ ரோமாணி விதூ⁴ய பாபம் சந்த்³ர இவ ராஹோர்முகா²த்ப்ரமுச்ய
தூ⁴த்வா ஶரீரமக்ருʼதம் க்ருʼதாத்மா
ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்ப⁴வாமீத்யபி⁴ஸம்ப⁴வாமீதி ॥ 8.13.1॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥
ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

———————

காண்டம்-‍13 (பிரார்த்தனை)

ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

காண்டம்-‍14

ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத³ந்தரா
தத்³ப்³ரஹ்ம தத³ம்ருʼதꣳ ஸ ஆத்மா ப்ரஜாபதே: ஸபா⁴ம் வேஶ்ம ப்ரபத்³யே
யஶோঽஹம் ப⁴வாமி ப்³ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோவிஶாம்
யஶோঽஹமநுப்ராபத்ஸி ஸ ஹாஹம் யஶஸாம் யஶ:
ஶ்யேதமத³த்கமத³த்கꣳ ஶ்யேதம் லிந்து³ மாபி⁴கா³ம் லிந்து³
மாபி⁴கா³ம் ॥ 8.14.1॥

கர்மங்களை போக்கி -ஸ்ரீ வைகுண்டம் புகுந்து -யசஸ்வியாக சாம்யா பத்தி -உணர்ந்தவன் பிறப்பது இல்லை

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

————————

இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரன்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

ததை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதயை உவாச ப்ரஜாபதிர்மநவே மநு:
ப்ரஜாப்⁴ய: ஆசார்யகுலாத்³வேத³மதீ⁴த்ய யதா²விதா⁴நம் கு³ரோ:
கர்மாதிஶேஷேணாபி⁴ஸமாவ்ருʼத்ய குடும்பே³ ஶுசௌ தே³ஶே
ஸ்வாத்⁴யாயமதீ⁴யாநோ த⁴ர்மிகாந்வித³த⁴தா³த்மநி ஸர்வைந்த்³ரியாணி
ஸம்ப்ரதிஷ்டா²ப்யாஹிꣳஸந்ஸர்வ பூ⁴தாந்யந்யத்ர தீர்தே²ப்⁴ய:
ஸ க²ல்வேவம் வர்தயந்யாவதா³யுஷம் ப்³ரஹ்மலோகமபி⁴ஸம்பத்³யதே
ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே ॥ 8.15.1॥

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி அஷ்டமோঽத்⁴யாய: ॥

——————————————-

காண்டம்-‍15

பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். விசார ஞானம், எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

1. ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்

2. முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்

3. சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.

4. இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.

5. அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

6. எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டபடுத்தக் கூடாது.

ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்ச்க்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம் மாஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிகாரணமஸ்த்வநிகாரணம் மேঽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே
மயி ஸந்து தே மயி ஸந்து ॥

॥ ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥

॥ இதி சா²ந்தோ³க்³யோঽபநிஷத்³ ॥

ஓம் தத் ஸத்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம் —ஸமுதாயா அதிகரணம் (2-2-3)-ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்-

March 9, 2025

சூத். 2-2-17 :: ஸமுதாய உபய ஹேதுகே அபி ததப்ராப்தி ::

புத்தாவதாராம் பகவதவதாரம் ஆன்படியாலே அவனும் ஸர்வஜ்ஞன்தான். அவனுக்கு கிஞ்சித்தும் மோகம் கிடையாது.
இல்லை மற்றவர்களை மோகிப்பனோ என்னில் அவனும் தான் ஸர்வலோக ஸுக்ருது, தயாவான் ஆனபடியாலே
விப்ரலிப்சை கிஞ்சித்தும் கிடையாதே. ஆகையாலே பாஞ்சராத்ர சாஸ்த்திரத்தைப் போலே புத்தாகமத்தையும்
பிரமாணமாக கொள்ளவேண்டும் என்று பூர்வ பக்ஷம் வருமேல் , அப்படி அன்று. புத்தாகமாம் நமக்கு பிரமாணம் ஆகாது.

வேதாபஹாரிணம் தைத்யம் மீன ரூபே நிராகரோது
ததர்த்தாபகாரோ தைத்யாம் வியாஸ ரூபி நிராகரோது

என்று புத்தாவதாரம் எடுத்து பிரவர்த்தனம் பண்ணின பிரக்ரியைகளை எல்லாம் வியாஸாவதாரம் எடுத்து நிராகரித்தார் என்பது பார்க்கத்தக்கது.
பகவானே சொன்னானாகிலும், வேத விரோதமானால் அதை நிரசிக்க வேண்டியது தான். பௌத்தர்களுடைய ஆசார பிரக்ரியைகளை
ஜைமினி பூர்வ காண்டத்தைக் கொண்டு நிரசிக்க, அவருடைய ஆசாரியரான வியாசர் அவர்களுடய தத்வங்களை நிராசனம் பண்ணுகிறார் இங்கு.

பகவான் தான் இட்ட கட்டளைகளை யார் பாலனம் பண்ணுகிறார்களோ அவர்களுக்கு எதிரானவர்களை
தண்கடல் வட்டத் துள்ளே திண்கழல் அசுரர்களை தடிந்துண்ணும் –என்றபடி அவர்களுடைய மோகன சாஸ்த்திர
நிரசனம் பண்ண பகவான் எடுத்த ஆவேசாவதாரம்தான் வியாஸாவதாரம்.

இப்படிப் பட்டதான புத்தாவதாரத்தில் என்னவெல்லாம் சொன்னாரோ, அதை பின்பற்றி இந்த கலியுகத்தில்
மாத்யமிகன்
வைபாஷிகன்
சௌத்ராந்த்ரன்
யோகோசாரன்
என்று நால்வகை பௌத்த சாகைகள் ஏற்பட அவர்களில் , முதல் முன்னம்
யோகாசாரனும், சௌத்திராந்திகனும் நிராசனம் பணப் படுகிறார்கள் இந்த அதிகரணத்தில்.

இவர்கள் நால்வருமே க்ஷணிக வாதிகள். இவர்கள் சித்தாந்தத்தில் காலம், ஆகாசம், திக்கு, விதிக்கு எதுவும் கிடையாது.
இவர்கள் மதத்தில் ஜ்ஞானம் ஒன்றுதான் ஒப்புக்கொள்ளப் படுகிறது. ஜ்ஞாத்ரு ஞேயங்கள் ஒப்புக்கொள்ளப் படவில்லை.
அந்த ஜ்ஞானமும் எப்படி இருக்கிறது என்றால் அது க்ஷணிகம் என்கிறான்.
அவ்வோ க்ஷணம் என்பதும் தோன்றும் போதே மறைவது. க்ஷணிக கடபடாதிகள் இருப்பால், க்ஷணம் என்கிற காலம்
ஆனுமானித்து அறியலாவது. அதை கடக்ஷண : என்கிறார்கள்.
இமை கொட்டும்போது, இமையோடு இமை சேரும் கால பரிமாண அளவே ஆகும் அது.
வைசேஷிகனோ ஒரு பொருள் உண்டாகும்போது உற்பத்தி, ஸ்திதி, விநாசம் என்று 3 கால அளவைகளையாவது ஒத்துக் கொள்கிறான்,
ஆனால் பௌத்தன் உற்பத்தி ஸ்திதியிலேயே விநாசம் என்பததாக அத்யந்த அல்பமாக அதை கணக்கிட்டு,
இல்லாமைக்கு ஈடாக சொல்லிவிடுகிறான்.

வைசேஷிகன் என்ன சொன்னான்? பாஷாணம்போல இருக்கிற பிரக்ருதி மேலே தர்மபூத ஜ்ஞானம் வந்தேறி என்கிறான்.
அத்வைதி ஸ்வரூபத்தில் தான் ஜ்ஞானம் உண்டு. அதற்கு சுடர், பிரகாசம், தர்மபூத ஜ்ஞானம் இவை எதுவும் கிடையாது என்றான்.
நம்முடைய சித்தாந்தத்தில் தீபம் போல ஸ்வரூப கத ஜ்ஞானம் உண்டு. தீப பிரபை போலே அத்தல் பரம்பி வருகிற
தர்ம பூத ஜ்ஞானம் என்ற இரண்டும் ஆத்மாவுக்கு உண்டு என்பதாகும்.

பௌத்தர்களின் மாதயமிகன் ஆத்மா சூன்யம் என்றான். மற்ற மூன்று பேரும் க்ஷணிக விஜ்ஞானம் ஆத்மா என்றனர்.
அதனுடைய உற்பத்தி விநாசம் எத்தனை வேகம் என்றால், அது நம்முடைய இந்த்ரியங்களால் கிரகிக்க முடியாத அளவுக்கு
க்ஷணிக பிரவிருத்தி என்றனர். அது உள்ளே இருந்தால் ஆலய விஜ்ஞானம். வெளியே வந்தது என்றால் பிரவிருத்தி விஜ்ஞானம் என்றனர்.
ஜ்ஞாத்ரு ஞேயங்கள் எல்லாம் பிரமம் என்றும் சொல்லி வைத்தார்கள்.

ஜகத் அபல பதி என்று முதல் முதலில் அத்வைத மதத்தைச் சொன்னவன் யோகாசாரன்.
இத்தால் அவர்களுக்கு அத்வைத விநாயகன் என்ற பெயரும் உண்டு. சங்கரருடைய ஆசாரியரான கௌடபாதர் அதை வாங்கி,
வைதிக மதத்தோடு பொருத்தி பிரஹ்ம ஏக வாதத்தை பிரவர்த்திப்பித்தார். இத்தால் இவர்களை ,
இந்த ஏக பிரஹ்ம காரண வாந்தியை பிரச்சன்ன பௌத்தன் என்று சொல்வதும் உண்டு.

சத்ருக்களை ஜெயிக்க அபிசார மார்க்கத்தை வேதமே சொல்வது போல, இந்த பௌத்தர்களை ஜெயிக்க அவர்களுடைய
ஏக விஜ்ஞான வாதத்தைக் கொண்டே பிரஹ்ம சத்ய வாதத்தை சித்திக்க வேண்டி வந்தது.
எப்படி கர்ம காண்டத்தை ஜைமினி பண்ணி ஜ்ஞான காண்டத்தை வியாஸர் பண்ணும்படி விட்டாரோ ,
அதே போல பௌத்தர்களுடைய ஜகன் மித்யா வாதத்தை ஒப்புக்கொண்டு சங்கரர் நிர்விசேஷ பிரஹ்ம ஸத்ய வாதத்தை செய்து போகவே ,
பகவத் ராமானுஜர் கிஞ்சித்து அதை திருத்தி, ஸவிசேஷ பிரஹ்மாத்வைதத்தை நிலை நாட்டலாயிற்று.
இல்லையாகில், பிரஹ்ம சத்யம் என்பதிலிருந்தே தொடங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா?

ஜகன் மித்யாவாதிகளான அத்வைதிகள் , போக்தா, போக்கியம், பிரேரிதா என்கிற த்ரிபுடியில்
போக்தா போக்கியம் இரண்டும் பிரகிருதி தர்மமாகையாலே அவை வியாவஹாரிகா சத்யம் என்று தள்ளி விட்டு,
பிரேரித்தாவாகிற பிரஹ்மம் ஒன்றே பாரமார்த்திகம் என்றனர். ,

வைபாஷிகனும், சௌத்திராந்தனும் ஞேயமான ஜகத்தை க்ஷணிகம் என்றாலும் அதை ஒத்துக் கொண்டவர்கள்.
அதிலும் வைபாஷிகன் அவை பிரத்யக்ஷ சித்தம் என்றான். சௌத்திராந்திகன் அனுமான சித்தம் என்றான்.
இது தான் இருவருக்குமான வித்யாசம். ஒப்புமை மூவருமே க்ஷணிக வாதிகள்.

ஜகத் காரண- காரிய வாதத்தில்
தார்கிகனுடையது — ஆரம்ப வாதம்.
வைபாஷிக, சௌத்திராந்திகன் – – ஸங்காத வாதம்
சாங்கியன் , விசிஷ்டாத்வைதி — பரிணாம வாதம்.
மாத்தியமிக்கான் — சூன்ய விவர்த்த வாதம்
(முத்துச் சிப்பியைப் பார்த்து வெள்ளி என்று பிரமித்து போல சூன்யத்தைப் பார்த்து இந்த அஹம் என்பதும்,
ஜகத்தும் வருகின்றன என்ற வாதம். )
யோகாசாரன் – விஜ்ஞான விவர்த்த வாதம்.
சங்கரர் — நிர்விசேஷ பிரஹ்ம விவர்த்த வாதம்
பர்த்ருஹரி – ஸப்த விவர்த்த வாதம் (ஸப்த விஸ்போட – Big Bang Theory)

ஸங்காத வாதிகளான வைபாஷிக, சௌதிராந்திகன் சொல்வது
நிலம், நீர், தீஎரி , கால் என்கிற நான்கும் கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம் என்கிற தன்மைகளை அடைவே
நிலம் 4ம் , நீர் கந்தம் தவிர்ந்த 3ம், எரிதீ கடை 2ம், கால் ஸ்பர்ச தன்மை மட்டும் உடைய பரமாணுக்களின் சங்காதம் ஆகும்.
பல பூமி பரமாணுக்கள் சேர்ந்து பூமியும், பல ஜல பரமாணுக்கள் சேர்ந்து ஜலமும், பல தேஜஸ் பரமாணுக்கள் சேர்ந்து தேஜஸும்,
அவ்விதமே பல வாயு பரமாணுக்கள் சேர்ந்து வாயுவும் உண்டாக, இந்த 4பூதங்களும் சேர்ந்து
தேஹம், இந்த்ரியங்களாகிற பௌதிக பொருள்கள் உண்டாகின்றன.
இந்த 4 தத்துவங்களின் அபாவமே ஆகாசம் என்றும் சொல்கிறான்.

அதில் அஹம் என்கிற ஆத்ம விஷயம்,
தேஹத்தின் உள்ளிருக்கிற பொருள்களின் ஜ்ஞானத்தின் ஸந்தானமே/சமூகமே ஆகும் .
இதை அனுமானத்தால் அறியலாம் என்கின்றனர்.
ஸௌத்ராந்திகன் பாஹ்ய பதார்த்தங்களான ஞேயங்களும் அனுமானிகமே என்கிறான் அவன்.
யோகாசாரன் பாஹ்ய பதார்த்தங்களை சொப்ன துல்யம் என்று சொல்லி மித்யா என்கிறான்.

உபயஹேதுகே ஸமுதாயே அபி — ஸ்பர்ச,ரூப, ரஸ, கந்த தன்மாத்திரங்களின் சமுதாயமான
காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய 4 பூதங்களும், அவைகளை காரணமாகக் கொண்ட தேக, இந்திரிய சமுதாயத்திலும்
ததப்ராபதி – ஸங்காதமாகும் தன்மை ஒவ்வாது, ஸர்வ க்ஷணிக வாதத்தாலே..

———–

சூத். 2-2-18 :: இதரேதர பிரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந, ஸங்காதபாவா நிமித்ததவாத் ::

இதரேதர பிரத்யயத்வாத் -இந்த சுழச்சியில் ஒன்றுக்கொன்று காரணமாக இருப்பதால்
உபபந்நம் – சமுதாயமாகும் தன்மை பொருத்தும்.
இதிசேத் ந – என்று இப்படி சொல்வது பொருந்தாது
ஸங்காத அபாவா நிமித்வத்வாத் – அவித்யை முதலானவை பூத சமுதாயத்துக்கு காரணம் ஆகமாட்டாது –

பாஹ்யார்த்த அஸ்தித்வ வாதிகளான வைபாஷிக, ஸௌத்ராந்திகன் இருவரில் ஒருத்தன் ஜகத்து பிரத்யக்ஷ பரம் என்றான்.
மற்றோருத்தன் அனுமானிக பரம் என்றான். ஸ்பர்ச, ரஸ ரூப கந்தம் இவைகளின் பரமாணுக்களின் ஸங்காதம் 4 பூதங்களாய்,
அப்படியே இந்த 4 பூதங்களின் ஸங்காத்தம் பௌதிகமான தேஹேந்திரிய மாகும் என்றும்,
இந்த ஸங்காத்தமும் க்ஷணிகம் ஆனபடியால், இவைகளின் தோற்றம் மித்யையாய் ஸத்யமன்று.
அண்டத்தில் உள்ளபடியே பிண்டத்தில் என்ற வகையில், தேகத்தின் உள்ள பொருள்களின் ஜ்ஞான ஸந்தான பரம்பரையே ஆத்மா
ஆன படியாலே கார்யா காரணம் அனைத்தும் க்ஷணிகம் என்கிறான்.

நாம் சொல்லுகிற அவித்யா, கர்ம, வாசனா, ருசி , பிரகிருதி ஸம்பந்தமாகிற 5 – பஞ்ச ஆராதி (spokes ) கர்ம பிரவாக
சக்கரத்தால் வந்த ஷாட்பாவ விகாரம் சுக துக்க ஹேது போல
இவர்களும் க்ஷணிக பொருள்களை ஸ்திரமானவைகளாக நினைப்பிடும் விபரீத ஜ்ஞானத்தால் பந்தமும்,
அதனால் ராக துவேஷமும் உண்டாகி ஜனனமரண சக்ரம் சுழல்கிறது என்கின்றனர்.

இதெல்லாம் நடக்க நாம் ஆத்மா என்பது ஸ்திரமாக உண்டு. புண்ய பாபங்கள் என்பன உண்டு.
பகவான் தான் இதை எல்லாம் நடத்துகிறான் என்று ஒத்துக் கொள்கிறோம்.
ஆனால் இவர்கள் இவை எதுவும் ஸ்திரம் என்பதை ஒத்துக்க கொள்ளாமல் அவித்யா-பிரகிருதி சம்பந்த சக்ரத்தைத் பற்றி விவரிக்கிறார்கள்.
அவர்கள் சொல்லுகிற அவித்யா என்பது
அவித்யா, விஜ்ஞானம் ஸம்ஸ்கார: நாமரூபம் ஷடாயதனம் ஸ்பர்ஸ: வேதநா திருஷ்ணா உபாதானம் பவா ஜாதி
ஜரா மரண சோக : பரிவேதனம் துக்கம் துர்மனஸ்தா என்கிற ஆரங்களைக் கொண்டதாய்
ஒன்றுக்கு கொன்று காரணமாக இருந்து லோக யாத்திரை நடக்கிறது என்கின்றனர்.
இதற்கு ஸுத்திகையில் ராஜத புத்தி பண்ணுகையாகிற அதஸ்மிந் தத் புத்தி – காரணமாகிறது என்கின்றனர்.
இவன் சொல்லுகிற ஆவித்யை பிரமத்துக்குக் காரணமாகலாம் ஒழிய, ஸங்காதத்துக்கு காரணமா முடியாது என்பது கேள்வி.

ஸர்வம் யதார்த்தம் பிரமா என்று அவன் சொல்லுகிறான்.
ஸர்வம் யதார்த்தம் ஜ்ஞானம் என்று நாம் சொல்லுகிறோம்.
சித்தம் என்பது க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவைக் குறிக்கும்.
சைத்யம் ஸ்ரத்தை வீர்யம் ஸ்ம்ருதி ப்ரீத்தி இத்தோடு பூத தாதுக்கள் சேர்வதால் தேஹேந்த்ரிய பிராணன் சம்பவிக்கின்றன என்கிறான்.

ஜ்ஞாநாதி -இச்சேதி- யததே-கரோதி- அநுபவதி- ஸுக்யதி என்று இவை அனைத்தும் எத்தனை சுருக்கமாக நடந்தாலும்
அவை நடப்பதற்கு அத்யல்ப காலமாவது வேண்டாவோ ?
அதற்குள்ளாகவே தோன்றும் பூத பௌதிகங்கள் நசிந்து விடுகின்றன என்கிற க்ஷணிக விஜ்ஞானத்தால்
சமுதாய உத்பன்னத்துக்கு அவகாசமே கிட்டாது என்பதால் இவர்கள் சொல்வது பொருந்தாது.

ஸ்திரத்தில் அஸ்திரத்தவ புத்தி பண்ணுகிற ஜீவன் அவனும் அஸ்திரம் என்றான போது,
அஸ்திரமான ஜ்ஞானத்தால், அஸ்திரமான ஜீவன் ஸ்திரத்தவ புத்தி பண்ணுகிறான் என்பது எங்கனம் பொருந்தும் ?
காரணமான அந்த பிரமாத்மக ஜீவனும் அஸ்திரமேயாய் ஸங்காதம் யாரைக் கொண்டு உண்டாகும் ?
உத்தர க்ஷணம் உண்டாக்குவதற்கு முன்பாக, பூர்வ க்ஷணம் நஷ்டமானால், பதார்த்தங்களின் உற்பத்தி எப்படி சாத்தியம் ?
இங்கு க்ஷணம் என்பது பதார்த்தங்களைக் குறிக்குமல்லது காலத்தைக் குறிக்காது.
காரணம் பௌத்தன் காலம். ஆகாசம். திக்கு இவைகளை ஒத்துக் கொள்வதில்லை என்பதை முன்பே பார்த்தோம்.
ஸதி குட்யேது சித்ர கர்ம : ? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத?
கந்தர்வ லோக சலா – என்று கூடிக் கலைகிற மேகக் கூட்டம் – ஜலதர படலம் – போல உள்ள இவர்களுடைய
க்ஷணிக வாதத்தால் இதரேயிதர பிரத்யய உத்பந்நம் அஸம்பவம்.

————–

சூத். 2-2-19 :: உத்தரோத்பாதே ச பூர்வ நிரோதாத் ::

உத்ரோத்பாதே – பின் க்ஷணம் உண்டாகும் வேளையில்,
பூர்வநிரோதாத் ச — முன் க்ஷணம் அழிந்து விடுவதால் , இவர்கள் வாதம் பொருந்தாது.

உங்களைப் போல் ஸத் காரிய வாதம் என்றால் நீங்கள் சொல்வது ஏற்புடைத்து. ஆனால் அஸத்தே காரியமாகிறது
காரணம் அஸது என்பது எங்களுடைய வாதம்.
இல்லாததனின்றும் (5ஆம் வேற்றுமை உறுபு) இருப்பு உண்டாகி நசிகிறது என்பதாக சொன்னான்.
நையாயிகன் இல்லாததால் (6ஆம் வேற்றுமை) – காரியம் அஸதாகையால் – புதிதாக உண்டாகிறது என்பதாக அவர்கள் வாதம்.

இதற்கு மறுப்பு என்ன வென்றால் – இல்லாத தின்றும் பொருள்கள் உண்டாவதானால், எப்போதுமே சிருஷ்டி நடக்கலாமே ?
காரணம் என்ற நிமித்தம் இருக்க வேண்டாவே ? என்றால் அதற்கு அவர்கள் சமாதானம் இப்படி உள்ளது.
அதாவது ஒரு பொருள் உண்டாகி நசியும் போது அந்த பொருளின் அபாவம் ஏற்படுகிறதே,
அந்த அபாவத்தால் அப்பொருளின் உற்பத்தி அடுத்தடுத்து நடப்பதற்கு காரணமாகிறது என்கிறான்.

அபாவம் ஒன்று இருந்தால் பொருள் உண்டாகும் என்றால், கட அபாவத்தால் கடம் தான் ஏன் உண்டாக வேண்டும்?
கடம். படம். அஸ்வம். சிம்மம் இவை ஏன் உண்டாக்க கூடாது என்பதற்கு அவர்கள் சொல்வதாவது
கட அபாவத்தில் இருந்து கட ஜாதிதான் உண்டாகும் வேறு பொருள் உண்டாகாது என்கிறான்.
அதாவது காரண காரியத்துக்கு விசஜாதியத்தை ஒத்துக் கொள்வதில்லை. ஸஜாதீயத்தைத்தான் ஒத்துக் கொள்வதாகச் சொல்கிறான்.

ஆக, அதை வாதத்திற்காக ஏற்றாலும், , ஒருகடத்தினுடைய அபாவத்தால்
நானா வர்த்தித – வேறு வேறு இடத்தில், தேசத்தில் உள்ள கடங்களின் உத்பன்னம் – சாத்தியமோ என்ன? இல்லை
எந்த இடத்தில் எந்த கடத்தின் அபாவம் உண்டாச்சுதோ அந்த இடத்தில் அந்த கடஜாதி உத்பன்னமே சாத்தியம் என்றான்.
தேச காலங்களை இவர்கள் ஒத்துக் கொள்ளாததால் , கிரகிக்கிற ஆலய விஜ்ஞானமோ, பிரவர்த்தக விஜ்ஞானமோ
எதுவும் ஸ்த்ரமில்லாதபோது இவர்களுடைய இந்த வாதம் தள்ளத் தக்கது.

இவர்கள் சொல்லுகிற அவித்தையைக் காட்டிலும் நாம் சொல்லுகிற அவித்யை வேறுபட்டது.
அநஹத்தில் அஹம் புத்தி பண்ணுகை அஹங்காரம்– சரீரமே ஆத்மா என்று நினைக்கை அஹங்காரம்.
இந்த பாவ பந்தம் பாரமார்த்திகம் . அத்வைதிகள் சொல்வது போல் அபாரமார்த்திகம் – ஸ்வப்ன துல்யம்.
வாக்யார்த்த ஜ்ஞானத்தால் போக்க வல்லது என்பது அல்ல. அது பகவத் கேவல கிருபையால் மட்டும் போக்க வல்லது.
பகவத் கிருபா பிரசாத லப்த ஜ்ஞாநாந் மோக்ஷ : என்பது நம்முடைய சம்பிரதாயம்.

தர்மி கல்பனார்த்தோ வரம் தர்ம கல்பனா – தர்மி ஸப்த வாச்சயமான ஆத்மா என்பது க்ஷிணிகம் தான்.
அது க்ஷணிக விஜ்ஞான சந்தானமே. அதுவே சரீரகதமாக இருக்கும் போது ஆலய விஜ்ஞானம் என்றும்,
அந்த ஆலய விஜ்ஞானம் பாஹ்ய பதார்த்தங்களோடு சையோகம் கொண்டு பாஹ்ய பதார்த்தங்களை விநிவேசனம் பண்ணிக் கொண்டால்
அதுதான் பிரவிருத்தி விஜ்ஞானம் (அ ) சித்த விஜ்ஞானம் – என்கின்றனர்.
இத்தாலே தர்மத்தையே (ஆலய விஜ்ஞானத்தையே), தர்மியாக அதாவது புத்தியையே ஆத்மா என்று சொல்வது தவறு ,
யஸ்யாநுபவ தஸ்யேவ ஸ்மிருதி : என்று ஸ்ம்ருதி, பிரத்யபிக்ஞா வியவகாரங்கள் உண்டாக.
ஸ்திரமான ஆத்மா (அ ) தர்மி இருந்தால் அல்லது மறுபடி நினைத்துப் பார்க்கை, நினைவு இவை எல்லாம் ஏற்படவழி இல்லை.

கடக்ஷணிக வாதத்தில் பலாபலன்கள் மாறிப்போவது குற்றம் என்று நாம் சொல்ல,
குற்றமாகாது என்பதற்கு அந்யதீய பாலார்த்தஸ்ய அந்யஸ்ய பிரவிருத்தி : குழந்தை பிறந்த போது தகப்பனார் செய்கிற ஜாத கர்ம,
நாம கரண ஹோமத்தில் பலன் செய்கிறவனுக்கன்றி, அவன் குழந்தைக்கு என்று வேத கர்ம காண்டத்தில் நீங்களும்
ஒத்துக் கொண்டிருக்கிற போது, எங்களுடைய வாதம் குற்றமாகாது. எங்கள் க்ஷணிக வாதத்தாலே
உற்பத்தி விரோதங்கள் உண்டாகாது என்று மறுதலிக்க;

இதற்கு உத்தரமாக, விசேஷ சாஸ்திரத்தில் சொல்லப் பட்ட ஒன்றை சாமான்ய சாஸ்திரத்துக்கு பயன் படுத்தக் கூடாது.
அர்த்தார்த்தி ராஜகுலம் கச்சேத் . போஜனார்த்தி போஜனசாலா கச்சேத் – என்பதாக சாமான்ய சாஸ்திரத்துக்கு
சாமான்ய சாஸ்திரத்தில் இருந்தே உதாகரிக்க வேண்டும் என்று அவன் வாதத்தை தள்ளிப் போட்டனர்.

————

சூத். 2-2-20 :: அஸதி ப்ரதிஜ்ஞோபரோத : யௌகபத்யம் அந்யதா ::

உற்பத்தியும் அஸத்தாலே லீனமும் அசத்தாகவே என்கிற இவர்களுடைய ஸித்தாந்தம் அதார்மிகமானது.
ஜைனனும் நைராத்மா பாவத்தை ஆதரிப்பதில்லை.
குமாரில பட்டர்
அகளங்க தேவன்
சங்கரர்
ஞாயகுஸுமாஞ்சாலி உத்யநாச்சார் என்ன
இவர்கள் எல்லோரும் கூட பௌத்த சித்தாந்தத்தை கண்டனம் பண்ணுகின்றனர்.
ஆகவே தான் இவர்களுக்கு பின்பு வந்த எம்பெருமானாருக்கு ஜகத் ஸத்யத்தை நிலைநாட்டல் எளிதாயிற்று.

அஸதி – காரணம் நசிந்த உத்தர க்ஷணம் காரியம் உண்டாகிறது –
ஒரு உத்தர கடக்ஷணத்திற்கு ஒரு பூர்வ கடக்ஷணம் அபாவம் காரணம் என்றால்
ப்ரதிஜ்ஞோபரோத — அதிபதி (இந்திரியங்கள்) ஸஹகாரி (தீபம்) ஆலம்பந (பாஹ்ய பதார்த்தங்கள்)
ஸமநந்தர ப்ரத்யயா: ( முன் க்ஷணத்தில் ஏற்பட்ட ஜ்ஞானம்) சத்வாரா விஜ்ஞாந :
உத்பத்தௌ ஹேதவ : என்கிற ஜ்ஞானம் உண்டாக காரணமாக இருக்கின்ற பௌத்த மத பிரதிஞையை அதுக்கு விரோதம்.வரும்.
அந்யதா – இந்த அவர்களுடய கொள்கையை விரோதிக்காமல் இருக்கவே காரணம் இருக்கும் போதே காரியம் உண்டாகிறது என்றால்
யௌகபத்யம் -இருந்தது (காரணம்) அழியும் முன்பே காரியம் உத்பன்னமாகிறது –
த்வி சந்திர ஜ்ஞானம் போலே காரியம் காரணம் இரண்டும் தோற்றமளிப்பதான –
காரண கடம், காரிய கடம் இரண்டும் ஒரே சமயத்தில் காணப்பட வேண்டும்.
உண்மையில் அப்படிக் காண்பதில்லை யாகையால் பௌத்த மதம் பொருந்தாது.

ஜ்ஞானம் ஏற்படுவதும் , மனப் – பிராணன் – இந்திரியம் – பாஹ்ய வஸ்து பிரதர்சனமாகிற
சுவை, ஒளி, ஒலி, நாற்றம் இவை அதே பிரகாரம் உள்வாங்கப்பட்டு புத்திக்கு அறிவிக்கப்பட்டு,
பிறகு அது நினைவுப் படிவமாக மனதில் நிறுத்தப்பட, ஆத்மாவுக்கு அவை பிரதர்சனமாகிறன.
இத்தனைப் படிகளில் எத்தனை வேகமாக நடந்தாலும், அதற்கும் ஒரு கால இடைவெளி அவசியம்.
இதனை மறுக்கும் விதமாக செய்கிற க்ஷணிக வாதத்தால், இந்திரிங்களால் விஷயங்கள் அறியப் படுதலும்,
அதனை ஆத்மா உணர்வதான ஜ்ஞான உற்பத்தியும் ஒரே க்ஷணத்தில் நிகழ்வது போலாகிவிடும். இது உண்மைக்குப் புறம்பானது.

—————-

சூத். 2-2-21 :: ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத அப்ராப்தி : அவிச்சேதாத் ::

கீழ் சூத்திரங்களால் உற்பத்தி க்ஷிணிகத்தல் உண்டாகிறது என்பது நிராகரிக்கப் பட்டன்.
இப்போது அவன் சொல்லுகிற விநாசம் (அ ) பிரளய பிரகாரமும் சரியில்லை என்பது பேசப்படுகிறது. .
நம்முடைய சித்தாந்தத்தில்
லீன் = ஸ்லேஷ்ணே என்று காரணத்தில் காரியம் போய் ஸூக்ஷ்மாவஸ்தையில் ஒட்டிக் கொள்வதையே லயம் என்கிறோம்.
திருமழிசை ஆழ்வாரும்
தன்னுளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் (திருச்சந்த விருத்தம்-10) இதையே காட்டிக் கொடுக்கிறார்.
நச அதர்ஷணே என்பதாக அவன் சொல்லுகிறான்.

ப்ரதி ஸங்கியா அப்ரதி ஸங்கியா விரோத– பார்க்கப்படுகிற ஸ்தூல வஸ்த்துக்களின் விநாசமும்,
கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம வஸ்து விநாசமும் ஜகத்துக்கு ஏற்படாது. காரணம்
அவிச்சேதாத் – உள்ள பொருள் அடியோடு அழியும் என்பது சேராதாகையாலே.

ருதிர் = ஆவரணே என்று பிரளயத்துக்குப் பெயர். இங்கு விநாசத்தைக் குறிக்கும்.
ஸாங்கிய = கியா = பிரகடனே பிரகடனே அனைய இதி = புத்தியில் இருப்பதையே சொல்லப் போகுமாகையால், இங்கு புத்தியைக் குறிக்கும்.
ஸங்கியாம் பிரதி விரோதம் = இந்திரியங்களுக்கு கோசாரமாகக் கூடிய விநாசம். பாஹ்யமான பதார்த்தங்களுக்கு ஏற்படுகிற ஸ்தூல விநாசம்
அப்பிரதி ஸங்கியா விரோதம் என்பது பௌத்தன் சொல்லுகிற புலன்களால் ஊகிக்க முடியாத கடக்ஷண விநாசம்.
பிரளயத்தில் வஸ்துக்கள் நாசமடைந்து கண்ணுக்குப் புலப்படாதபடி மாயமாகி விடுகின்றன.
க்ஷிணிகம் – தீப ஜ்வாலா பேத அநுமானம் = சுடர் ஒரு ஜுவாலைப் போல தோற்றினாலும், உண்மையில் அது பிரதிக்ஷணமும்,
அணு அணுவாக எண்ணை உறிஞ்சி திரி எரிவதன் தொடர்ச்சியாகும். அதுபோல
ஜோதி நிர்வாணம் = என்பது அணைந்த விளக்கின் ஜோதி மாயம் ஆவது போல என்கிறான். இதுவே நிரண்மய விநாசம் என்பது.
இப்படி அசத்தால் உண்டாவது அசத்தையே போய்ச் சேருகிறது என்று ஸ்ருஷ்டி பிரளயங்களைப் பற்றிச் சொல்கிறான்.
நாம் சொல்வது பிரஹ்மதிடத்தினின்று உண்டாகி, பிரம்ஹத்திடத்தில் போய்ச சேருகின்றது என்பதற்கு எதிர்மறையானது இவர்கள் வாதம்.
இதை வைதிகனும், ஸாங்க்யனும் கூட ஒத்துக் கொள்வதில்லை.
பௌத்தர்களும், அத்வைதிகளும் கூட பிரத்யக்ஷத்துக்கு விரோதமாக பேசுகிறார்கள் என்பதே உண்மை.

நிரந்வய விநாசம் என்பது கிடையாது. பொருள்கள் நாசமாகும்போது அவை அவஸ்தாந்திர பேதத்தை அடைகின்றனவே ஒழிய,
பதார்த்தம் இல்லாமலே போவதில்லை. பானை உடைந்தால் சில்லு. சில்லு மண்ணில் கரைந்தால் பாம்சு.
பாம்சு பிண்டமாகி மீண்டும் கடாவாஸ்தாயைப் பெறலாம்.
தார்கிகன் இப்படி மாறி உண்டாகிற திரவ்யமே வேறு என்றான்.
சாங்கியன் எள்ளுக்குள் எண்ணை இருப்பது போல் காரியம் காரணத்தில் இருக்கிறது என்றான்.
நாம் சொல்வது திரவியம் ஒன்றாய், காரண அவஸ்தையில் இருந்து காரிய அவஸ்தைக்கு மாறுகிறது என்பதாக.

திரவியம் என்றால் என்ன? எது உபாதான காரணமோ அதுதான் திரவியம்.
உபாதான காரணம் என்றால் என்ன? அவஸ்தாஸ்ரயமாக எது உள்ளதோ அதுதான் திரவியம்.
அவஸ்தா என்றால்? அபிரதக் ஸித்த ஸம்பந்தமாய், காகாசித்தமாய் இருப்பது. விட்டுப் பிரியாததாய்
பரிணமிக்கக் கூடியதாய் இருப்பது என்று பொருள்.

எரிகிற தீபம் அணைந்த பிறகு, தீபம் பிரகாசம் மாயமாவதுபோல் நிரந்வய விநாசத்தால் அஸத்தோடு சங்கமிக்கிறது என்றான்.
இதுவும் சரியில்லை. காரணம் கரி எரியும்போது ஜுவாலையோடு தூமம் வெளியேறுகிறது. அது சற்று கரிப்புகையாக இருக்கும்.
விறகு எரியும்போது புகை அம்சம் நலிந்து ஜுவாலை அதிகம் காணலாம்.
அதுபோல் தீபம் எரியும்போது தூமம் வெளுத்து கண்ணுக்குப் புலளப் படாமல் இருக்கலாம்.
விளக்கு அணையும் போது, அது புகையாக வாயு மண்டலத்தில், கலந்து அது மலினமாகி பரிணாமத்தை அடைவதே அவஸ்தா பேதம்.
எனவே நிரந்வய விநாசம் என்பது கிடையாது. எல்லாம் ஸாந்வய விநாசமாகத்தான் இருக்கிறது என்பது சித்தாந்தம்.

—————-

சூத். 2-2-22 :: உபயதா ச தோஷாத் ::

உபயதா – இல்லாத வஸ்துவிலிருந்து உள்ள பொருள் உண்டாதல், இருக்கிற பொருள் இல்லாது போவதும் ஆன இரண்டும்
தோஷாத் ச – தோஷம் உடைத்தால் , பௌத்த மதம் பொருத்தாது.

பதார்த்தங்கள் ஜாதி, ஆகாரம், வியக்தி மூன்றும் கூடிய வஸ்துவாகும்.
ஆகாரத்தையே குறிக்கும் ஜாதியானது திரவ்யத்தையே ஆஸ்ரயித்து இருப்பதாகும்.
கடத்தவம், படத்துவம், மனுஷ்யத்வம் இவை ஜாதி போல்
அஸ்வத்வம் என்பது 4 கால், குளம்பு, பிடரி மயிர், கற்றை வால் உடைய விலங்கின் ஆகாரத்துக்குள்ளே அடக்கம்.
தார்கிகன் சொல்வதுபோல் கடத்வ படத்வங்கள் அஸ்வத்தம் என்று பிரதக்காக தனித்த பதார்த்தம் இல்லை.
இன்னும் நீல கடம் என்றால், கருமை என்கிற குணம் குடத்தினுடைய அவினா பாகம்.
அதே போல அபாவம் என்பதும் அவஸ்தாந்தரமே ஒழிய தனித்து பதார்த்தம் இல்லை .

ஸது ஏவ சௌம்யா! இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
ஏகம் — துவைதிகள் சொல்லுகிற 5 விதமான பேதம் இங்கு சொல்லப்பட வில்லை.
பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான ஸ்வகத குணம் கிடையாது. விகத ஜீவாத்மா கிடையாது. விஜாதீயமான அசித்து கிடையாது என்பதால்.
அநேந ஆத்மநா அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி – பஹுஸ்யாம் பிரஜாஏய – ஸதபோ தப்பியத – தப ஆலோசநே என்று சங்கல்ப மாத்ரேண
மயி ஸர்வ இதம் ப்ரோதம் சூத்ரே மணிகணா இவ -என்று பகவான் தானும் சொல்லி இருக்கிற படியே
இந்த ஜகத்து அவனால் படைக்கப்பட்டு, தரிக்கப்பட்டு, அந்தராத்மாவாய் ஸத பத்ர கோச ஸூஜி நியாயத்தாலே
அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஜ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்
வரை அநுபிரவேசம் செய்து , நியமிப்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த அத்விதீய ஸப்தமெல்லாம்
சரீராத்மா பாவத்தை இட்டே சொல்லப் பட்டதாக பொருள்படும்..

அவனுக்கு ஒரு ஆத்மா உண்டோ? என்றால் இல்லை,
பதிம் விஸ்வ – விஸ்வபதியாய்
ஸ்வரகும் ஈஸ்வரம் – தனக்கொரு பதி இல்லையாய்
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வியாப்ய ஸ்தித நாராயண : ஸதைக ரூப ரூபாய என்று அவனுடைய ஸ்வரூபத்தில் விகாரம் இல்லையாய்
விசேஷணாம்சமான அசித்தில் ஸ்வரூபதயா விகாரமும்; சித்தில் ஸ்வபாவதயா விகாரமும் ஏற்று
பரிணமிக்கையாகிற இது மாயையால் வந்ததோ – சங்கரர்
உபாதியால் வந்ததோ – பாஸ்கரர்
சக்தியால் வந்ததோ – யாதவபிரகாசர்
அல்லாமல் பகவத் சங்கல்பத்தால் வருவது என்கிற
திரவியா-அதிரவ்ய விபாகம் அனைத்தும் சத்யம் நித்யம் பகவத் ஆஸ்ரய ஆஸ்ரயணீயம்.

உபநிஷத் சித்தமான இதை எல்லாம் இல்லை செய்து வஸ்துக்கள் துச்சத்தில் உண்டாகி, துச்சத்தில் போய் சேருகிறது.
இடையில் க்ஷணிகமாய் இருக்கிறது என்று இவர்கள் சொல்ல அது பொருந்தாது
உள் இருக்கிற ஆலய விஜ்ஞானம் என்ன, வெளியில் இருக்கிற பிரவ்ருத்தி விஜ்ஞானம் என்ன இரண்டுமே ஸ்திரமானது தான்.
இல்லாததிலிருந்து இந்த ஜகத்து உண்டானால் , இதுவும் துச்சமாய் காணப்பட வேண்டும்.
மாத்யமிகனைப் போல் இவர்கள் உலகம் சூன்யம் என்று ஒப்புக் கொள்கிறார்கள் இல்லை.
ஆன பின்பு, ஜகத் இருப்பை ஒப்புக்கொள்ளுகிற வைபாஷிகர்களின் இந்த வாதம், அவர்களுடைய
உற்பத்தி கிரமம், பிரளய கிரமம் இரண்டும் துச்சம் என்பதற்கு சேராது.

—————

சூத். 2-2-23 :: ஆகாஸே ச அவிசேஷாத் ::

ஆகாஸே ச – ஆகாச விஷயத்திலும் வைசேஷிகர் சொல்கிற சூன்ய வாதம் பொருந்தாது.
அவிசேஷாத் – பிரத்யக்ஷமாக பார்க்கப் படுகிற பூமி முதலானவற்றிற்கும், ஆகாசத்துக்கும் வேற்றுமை கிடையாதாகையால்.

வைபாஷிகன் ஆகாசத்தை நிருபாக்யா என்று வாங்மனஸா அகோசரம் என்பதுபோலே சொல்கிறான்.
அது 4 விதமான அபாவத்தோடே இருக்கிறது என்கிறான்.
1. ப்ராகபாவம் – பொருள் உண்டாவதற்கு முன்னும் இருப்பது – கடத்துக்கு மண்கட்டி
2. ப்ரத்வம்ஸாபாவம் – அது அழிந்ததற்கு பின்னும் இருப்பது – கடம் நஷ்டமாக இருக்கும் சில்லு
3. அந்யோந்யாபாவம் – கடத்வோ படத்துவம் ந ; படத்தவே கடத்வம் ந – ஒன்றின் தன்மை இன்னொன்றில் இல்லாது இருப்பது.
4. அத்யந்தாபாவம் – கடம் அடியோடு இல்லை என்கிற துச்சமான நிலை.

நிலம், நீர், தீ, வளியாகிற 4 பூதங்களின் அபாவமே ஆகாசம் என்கிற போதும் அது பிரத்யக்ஷ கோசரமாகவே இருக்க வேண்டும்.
கடாபாவம் பூதலமாக காண்கையாலே, ஆகாஸாபாவம் பாவாந்தர ஸித்தமாய் துச்சம் என்னவாகாது.
இந்த வகையில் பூமிக்கும் ஆகாசத்துக்கும் வாசி இல்லையாதலால், ஆகாசம் சூன்யமாக மாட்டாது.
நீலமாக காண்கிற ககன இடைவெளி தான் ஆகாசம் என்று காட்ட, அருகில் உள்ள ஆகாசம் நீலமாக காண்பதில்லையே
எனவே அது தோற்றம் (ஆபாஸம் ) என்று தள்ளிவிட, கிணற்றின் வீழ்சியிலும், ஊசி புகும் துளையிலும்,
பக்ஷி பறக்கும்போது ஆஸ்ரயமாயும் இருப்பதுவும் ஆகாசம் என்று விளக்கப்பட்டது.

சங்கரர் ஆகாசத்தை ஆவரணா அபாவம் என்றார்.
த்ரிவ்ருத்கரணம், பஞ்சீகரணம் ஆனபோது, ஆகாசத்தில், பிருத்வி முதலான மற்ற பூதங்களின் அம்சமும் கலந்து இருப்பதால்,
அது பிரத்யக்ஷ கம்யம் என்பது சித்தம் என்பதாக பகவத் ராமானுஜர் காட்டினார்.
ஆகாசம் பரமாணு ஸங்காத ரூபமாய் . நிரவயவம் என்பதால் அகோசரம். ஸப்தமும் அநித்யம் என்று நிராகரணம் பண்ணுகிறான்.
அப்படியானால் சப்த தன்மாத்திரத்தை எப்படி நிர்வகிப்பது? என்றால்
சப்தத்துக்கும் பொருளுக்கும் சம்பந்தம் நித்தியமாய், அவை முக்கியார்த்தத்தையே குறிக்கும்.
இதையும் பௌத்தன் ஏற்பதில்லை.

வியாச சித்தாந்தத்தில் விஷ்ணு பாரம்யத்தையே சொல்லி இருக்கிறார்.
சங்கரரும் கூட நாராயண: நாராயண: என்று விஷ்ணு பாரம்யத்தையே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.
ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் வருமிடத்து திரிமூர்த்தி சாம்யம் சொல்வது போல் பிரமை ஏற்படலாம்.

ஸத் பிரஹ்மத்துக்கு பிரகிருதி சம்பந்தமே கிடையாது. அவித்யா சம்பந்தம் வந்த போது, அதனுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் காரணமாக
மூன்று வித காரண சரீரம் ஏற்பட்டு, அவரே பிரஹ்மா, விஷ்ணு, சிவன் என்றாகி ஸ்ருஷ்டி, ஸ்திதி. சம்ஹாரங்களை செய்வதாகவும்,
இவர்களுக்கு ஆத்மா ஒன்றாய், சரீரம் மூன்றாய் த்ரிமூர்த்தி ஐக்கியம், சாம்யம் சொல்லகின்றனர் அத்வைதிகள்.
இது தவறான வாதம்.

மத்யே விரிஞ்சி கிரீஸ : விஷ்ணுரேவ அவதரிதி – என்று நாராயணனே ஸ்வயம் விஷ்ணுவாகவும்,
பிரம்ம, ருத்ராதிகளில் அந்தர்யாமியாகவும் நின்று சிருஷ்டி ஸ்திதி லயங்களை செய்கிறான் —
மச்ச, கூர்மாதி ஆதாரங்களுக்கு முன்னம், இந்த த்ரி மூர்த்திகள் நடுவே விஷ்ணுவாக அவதாரம் பண்ணினது தான்
அவனுடைய முதல் அவதாரம் என்பது நம்முடைய ஸித்தாந்தம். அதுவே வியாஸ சித்தாந்தமும் கூட.
வியாசர் இதை எங்கே சொன்னார் ? என்றால்

ஜன்மாதி அஸ்ய யத : என்று பிரஹ்மா ஸூத்ரத்தில் வியாசர் ஆதி சம்பதத்தால்
ஸ்ருஷ்டி, ஸ்திதி, பிரளயம் இந்த மூன்றையும் செய்ப்பவன் எவனோ அவன் தான் பர பிரஹ்மம் என்று சொன்னதோடு,
உத்தவ கீதை பிரகரணத்தில், பகவான் கிருஷ்ணன் திருவாக்காக

ஆத்மந : பித்ரு புத்தராப்யாம் அநுமேயோ மம பவாப்யயௌ
ந பவாப்யே வஸ்தூணாம் அவிக்ஞோ அத்வய லக்ஷ்ண :

பவா = உற்பத்தி
அவ்யயௌ = விநாசம்
ஜீவாத்மா = ந ஜாயதே ம்ரியதே வா என்று இரண்டும் அறியாதவன். இந்த அத்வைத லக்ஷ்ணத்தை உடைய ஜீவாத்மா.
இந்த உற்பத்தி விநாசத்தை யாரும் சரியாக அறிந்தார் இல்லை. காரணம் இந்த ஜீவாத்மா அத்வைத லக்ஷணமானவன்.
அவனுக்கு உற்பத்தியும் விநாசமும் கிடையாது. பிரகிருதி சம்பந்தத்தால் வந்த ஜனன மரண துவயத்தை அறியாதவன்.
பரமாத்மா அறியானோ என்னில் ?
பஹுனிமே வியதீதாநி ஜன்மநா நான்யஹம் வேத்தி தவஸார்ஜுணா – என்று அவன் அறிவான் –
ஸ்வேச்சா க்ருஹீத அபிமத உரு தேஹம் ஆனபடியாலே–ஆனால் அவன் அறிந்தபடி நாம் அறிவதில்லை.
நித்யர்களோ என்னில் , அவர்களும் இன்னொரு ஜீவாத்மாவை இட்டே அறியலாம் தாங்கள் ஸ்வத :பிறவாதவர்கள் என்பதால்.
நம் பிறப் இறப்பை நாம் அறிவதும் தனக்கொரு குழந்தை பிறப்பதைப் பார்த்தும், தன் தந்தை இறப்பதைப் பார்த்துமே யாகும்.

வைபாஷிகன் இதற்கு எதிர் தட்டாக வஸ்துக்கள் அஸத்தாலே உண்டாகிறது, அஸத்திலே போய் சேருகிறது என்பதை
இங்கு நிராகரணம் பண்ணி, சரீராத்மா பாவத்தை இட்டு சமர்த்தனம் பண்ணவேண்டி இருக்க
நீங்கள் சொல்லுகிற பஞ்ச ஸ்கந்தம் என்ன, மூலா ஜ்ஞானம் என்ன, அவித்யா நிவிர்த்தி என்ன இதுகளால் அல்ல என்பதே வியாச சித்தாந்தம் .
இதைக் கொண்டே கிரியா, தேவதா, யோகம் சூன்யம் என்பதான 4 வகைப் பட்டவரான பௌத்தர்களையும்
இந்த சமுதாயாதிகாரணத்தில் வியாசர் நிரஸனம் பண்ணுகிறார்.

இத்தால், ஸர்வ சித்தாந்த சங்கிரகத்தில் வியாஸ பாரத தர்ஸனமாக
சங்கரரால் சொல்லப்பட்ட பஞ்சவிம்சதி தத்வ விமர்சனமோ, திரிமூர்த்தி சாம்யா வாதமோ கண்டு மயங்க வேண்டாம் .
வியாஸ சித்தாந்தமும், அவருடைய சரீரக ஸித்தாந்தமும் இரண்டும் ஒன்றே அல்லது வேறு அல்ல.

—————–

ஸூத். 2-2-24 :: ஆநுஸ்ம்ருதேஸ்ச ::

பிரத்யபிஜஜ்ஞை என்பதைக் கொண்டு இரு வேறு காலங்களில் உள்ள பொருள் ஒன்றே என்று சொல்ல வேண்டுமானால்,
அந்த பொருள் ஸ்திரமானதாக இருக்க வேண்டும். பொருள்கள் க்ஷணிகமானால், இருவேறு காலங்களில்
உள்ள பொருள் ஒன்றே என்கிற இந்த பிரத்யபிஜ்ஞா ஒட்டாது.

அநுஸ்ம்ருதே : முன் அனுபவிக்கப் பட்ட பொருள் அனைத்தும் மீண்டும் அனுபவத்துக்கு வருவதால் ,
வஸ்துக்களுக்கு க்ஷணிகத்வம் செல்லுபடியாகாது என்றதற்கு
அநுஸ்மரணமாகிற பிரத்யபிக்ஞா – ஜ்வாலாபேத வியாமோகம் போலே பிராந்தியால் வந்தது என்கிறான்.

எதை வைத்து இப்படிச் சொல்கிறான் என்றால் இரண்டு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. அர்த்த க்ரியா காரித்வம்
2. ஸத்வம்
யது ஸது க்ஷணிகம் – எதெல்லாம் இருக்கிறதோ, அதெல்லாம் க்ஷணிகம், யதா ஜலதர படலம்–என்பது அவன் வாதம்.
அதற்கு ஸித்தாந்தி பிரத்யபிக்ஞா ஸோ அயம் தேவதத்த –என்ற வார்த்தை பாடில் 3 சொற்கள் உள்ளன.
இவை அனைத்தும் பிரதமா விபத்தியில் சாமான்யாதிகாரணத்தில் ( முன்நிலை படர்க்கையில் .} அமைந்துள்ளாதால்
அவை ஒரு வியக்தியையே உணர்த்தும்.
பூத காலத்தில் இருந்தவரும் இப்போது காட்சியளிக்கிற இவரும் ஆனா தேவதத்தன் என்று தானே இந்த வார்த்தைப் பாட்டுக்கு பொருள்.
எனவே சித்ரத்வம் உண்டு. யது ஸது க்ஷணிகம் என்கிற உங்கள் வாதம் பொருந்தாது- எனறாக

எதெல்லாம் ஸம்ஸ்கார பலமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமம் – என்றான்.
வெள்ளியை – ராஜதம் – முன்பே பார்த்திருந்த படியால் அதனுடைய நினைவு – சம்ஸ்காரம் புத்தியில் இருக்க,
முத்து சிப்பியைப் – சுத்திகை – பார்க்கும்போது வெள்ளி என்கிற பிரமிக்கிறான்.
ஆகவே இதெல்லாம் சம்ஸ்காராதீனமாக இருக்கிறதோ அதெல்லாம் பிரமாத்மகம் என்று சொல்லி விட்டான்.
எனவே இந்த தேவதத்தன் விஷயமான பிரத்யபிக்ஞையும் சுத்திகா ரஜத பிரமம்போலே அன்று
பார்த்த தேவதத்தன் வேறு, இவர் வேறு என்று சொல்லி விட்டான்.

அதற்கு சித்தாந்தி துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானமானால் அப்படி, எல்லா பிரத்யபிக்ஞா ஜ்ஞானமும் பிரமம் ஆகாது.
எதுபோல் என்றால்
சந்தன கொட்டடியில் மணம் வீசுவதை அறிந்த ஒருவன், மலையில் சந்தன மரத்தைப் பார்த்ததும் இதற்கு மணம் உண்டு
என்று நினைவு படுத்துவது போல –
நிர்துஷ்ட காரண ஜன்ய ஜ்ஞானம் சத்யம் என்று சொல்ல ;
இப்போது அவன் சத்வத்தை விடுத்து, அர்த்த கிரியா வாதத்துக்கு வந்தான்.

பாய்சல் நிலத்தில் உள்ள நெல் விளைகிறது. தானிய கிடங்கில் – க்ருஸூலத்தில் – வைத்த நெல் விளைகிறதோ?
சாமர்தியா அசாமார்தியம் இரண்டுக்கும் வேறுபட காண்கையால் – விருத்த தருமம் ஒரு ஆச்ரயத்தில் இருக்க வழியில்லை ஆதலால் –
இந்த நெல் இரண்டும் வேறு வேறு தான் – என்றான்.
ஆல் விதைக்க மா முளைக்குமா? அசமர்த்தமான கடம் என்றும் அசமர்த்தமே. சமர்த்தமான பீஜம் என்றும் சமர்த்தமே.
அதற்கு வேண்டியது ஸஹகாரி சையோகமே.
தரணி-ஜல சையோக ஸாகார அபாவத்தாலே நெல் க்ருசூலத்திலே முளைப்பத் தில்லை , அன்றி அசாமர்த்தியதால் அன்று –

அநுஸ்மரணம் –பூர்வாநுபூதி வஸ்து விஷய ஜ்ஞானம் பிரத்யபிஜ்ஞானம் இத்யர்த்த :
ஆகவே எதுவும் க்ஷணிகமில்லை. எல்லாம் ஸ்திரம் தான். என்று விளக்கப்பட்டது.

யஸ்யாநுபவ தஸ்யைஹி ஸ்ம்ருதி : ஸ்ம்ருதி வியதீத விஷய: மதி ஆகாமி நிர்மிதா. புத்தி தாற்காலிகா புரோக்தா
பிராஜ்ஞா த்ரைகாரிகா மதா – என்று காவ்யப் பிரகாசத்தில் உம்மதப்பட்டன சொன்னபடி
பிரத்யபிஜ்ஞா உண்டாக ஆத்மா ஸ்திரமானதாக இருக்க வேண்டும்.
ஜ்வாலாபேத வியாமோகமும் ஸ்திரமான ஆத்மா விடத்திலேயாய் , இவர்கள் சொல்லுகிற க்ஷணிக விஜ்ஞான ஆத்மாவுக்கு சொல்லப் போகாது
மேலும் வியாமோகம் ஜ்வாலைக்கு வேண்டுமானால் பொருந்தலாம், கடம் போன்ற பொருள்கள் நசிந்தபோது வியாமோகம் ஏற்பட வழியில்லை ,
வஸ்து மொத்தமாக மாயமாவ தில்லையால்–என்று விஷ்யாதர முகமாகவும் இவர்கள் வாதத்தை தள்ளிவிட

இதுவரை பிரத்யக்ஷத்தைக் காட்டி பேசியவன், இப்போது அனுமானத்தை இட்டுப் பேசு, அந்த அனுமானத்தை அவனுக்கே திருபாலாவது. .
யது ஸது தது ஸ்தாஷ்னு . யது துச்ச : ததேவ அநர்த்த கிரியாகாரி யதத்யத் ஸது தது அர்த்த கிரியா காரிரேவ .
எனவே அர்த்த கிரியா வாதம் அக்ஷணிகத்துத்வதையே காட்டும்.
தவிர, ஸ்தைர்யம் இருந்தால் தான் அனுமானத்தையே பண்ண முடியும். 5 வாக்கியங்களைச் சொல்லி அனுமானத்தை
ஸ்தாபிக்குமளவாக ஆத்மா இருக்க வேண்டுமே? க்ஷணிக விஜ்ஞானத்தால் அது ஆகாது.

இதுவரை வைபாஷிகன், சௌத்திராந்திகன் ஆகிய இரண்டு பேருக்கும் பொதுவான விஷய சூத்ர விமர்சனம் பார்த்தோம்.
வைபாஷிகன் ஜகத்தை பிரயக்க்ஷ சித்தம் என்றான்.
சௌதாந்த்ரிகன் அதை ஆனுமானிகம் என்கிறான்.
இதனை அடுத்த சூத்திரத்தில் நிராசனம் பண்ணுகிறார் சூத்ரகாரர்.

https://srivasanesa24d.blogspot.com/–33/34-july 4th

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -இரண்டாம் பகுதி –72-112-ஸ்வ மத விஸ்தாரம்-

August 13, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
 I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ஸ்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

(நிர்விசேஷ அத்வைதம் அவர்கள் நம்மது ச விசேஷ அத்வைதம் -)

72–ய ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யாந்த ரோயம் பிருதிவி ந வேத யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ய ப்ருத்வீன் அந்தரோ யமயதி ஏஷத ஆத்மாந்தர் யாம்ருத –
ஸூக்ல யஜுர் ப்ரு -கண்வ

ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத
–ஸூக்ல மாந்யந்திந

(தத்வ அதிகரணம் அடுத்து பர தேவதா அதிகரணம் -பரமை காந்தி ஆவதற்கு தத்வத்துக்கும் மேல் ஸ்வரூபம் ரூபம் இத்யாதிகளை அறிய வேண்டுமே)

ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

த்வா ஸூபர்ணா சாயுஜா சகாயா சமாநம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதி தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வா த்வத்ய நஸ்ரந் அநந்யோ அபிசாக ஸீதி
–முண்டக-3-1-1-

அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசது தத் அநு ப்ரவிஸ்ய-
ஸச் ஸத்யச் சா பவது இத்யாதி ஸத்யந்சாந்ரு தந் சாசத்யம பவது
–தைத்ரியம்

அநேந ஜீவேநாத்மநா –இத்யாதி -சாந்தோக்யம்

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருதத்வமேதி போக்தா போக்யம் ப்ரேரிதாரம்
ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஏதத்
–மந்திரிகோ

நித்யோ நித்யாநாம் சேதநஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் –கடவல்லி

பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச(பதி சேஷி -நியாந்தா குணங்கள் தேவையான பொழுது காட்டி )

ஞாஜெவ் த்வாவ் அஜவ் வீசனீசவ் இத்யாதி ஸ்ருதி சதை –மந்த்ரிகா

தத் உப ப்ரஹ்மண

ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யாம் தேவ ஸூதா தலம்–ஸ்ரீ ராமாயணம் -அதிதி தேவி ஸ்துதி

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந சத்வாஜா தேநவை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ்
தத் சர்வம் வை ஹரேஸ்தநு
–ஸ்ரீ விஷ்ணு புராணம்

அஹமாத்மா குடா கேச சர்வ பூதாசய ஸ்திதி -ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்
ஞாநம் அபோஹநம் ச
–ஸ்ரீ கீதா

இத்யாதி வேத வித் அக்ரேஸர வால்மீகி–பராசர -த்வைபாயன -வாசோபிஸ் ச
பரஸ்ய ப்ரஹ்மண ஸர்வஸ்ய ஆத்மத்வா வகமாத்-சித் அசித் ஆத்ம கசிய வஸ்து ந தச் சரீரத்வாவகமாச் ச சரீரஸ்ய ச சரீரிணம்
பிரதி பிரகார தயைவ பதார்த்ததவாத் சரீர சரீரிணஸ் ச தர்ம பேதே அபிதயோர சங்கராத் சர்வ சரீரம் ப்ரஹ் மேதி
ப்ரஹ்மணோ வைபவம் ப்ரதிபாதயத்யபி சாமாநாதி கரண்யாதிபுபி முக்ய வ்ருத்தை –
சர்வ சேதந அசேதன பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபி தீயதே

(இப்படி வேதங்களை நன்கு அறிந்த சான்றோர்களில் தலையாயவர்களானparaasaraபராசரர் த்வைபாயனர் -வ்யாஸர் -ஆகியோர்
பரப்ரஹ்மத்துக்கு எல்லாப் பொருள்களுக்கும் உயிராய் இருக்கும் தன்மையும் சேதன அசேதனப் பொருள்களுக்கு அதன் உடலாய் இருக்கும் தன்மையும்
உயிரும் உடலும் மாறுபட்ட நிலை நெறிகளை உடையவையாயினும் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தொடர்புடைய ப்ரகாரத்துவமும் இருத்தலால்
ஸாமாநாதி கரணத்தால் திரண்ட பொருளாக ப்ரஹ்மத்து எல்லாப் பொருள்களுக்கு உயிராய் உறையும் தன்மை உணர்த்தப்பட்டது -)

(அஹம் கச்சாமி -அஹம் ஆத்மாவைக் காட்டாது -தேகத்துடன் சேர்ந்த ஆத்மாவையே காட்டும்)

(கார்யம் செய்ய சரீரம் சுகம் துக்கம் அனுபவிக்க ஆத்மா -ஞானம் இதுக்குத் தானே -ஆகவே இரண்டும் சேர்ந்ததும் அஹம்
அனுகூலமாக இருக்கும் பொழுது பேத வியவஹாரமும் -பிரதிகூலமாக இருக்கும் பொழுது அபேத வியவஹாரமும் செய்கிறோம்)

(சாமானாதி கரண்யம் -ஏகார்த்த ப்ரதிபாதிதம் -விசேஷண விசேஷ்ய கொள்ளாமல் சங்கரர்)

(பின்ன பிரவ்ருத்தி நிமித்த ஏகஸ்மின் அர்த்தே ப்ரதிபாதிதம் -பர்யாய சப்தங்கள் இல்லாமல் -ஒரே பதார்த்தத்தை வெவ்வேறே பிரகாரம்
ஸ்யாமோ யுவ தேவதத்தன் -இவனை வியாவ்ருத்திக்க இரண்டு பிரகாரங்கள்)

சாமா நாதி கரண்யம் ஹி த்வயோ பதயோ பிரகார த்வய முகேந ஏகார்த்தநிஷ் டத்வம்
தஸ்ய ச ஏதஸ்மிந் பக்ஷே முக்யதா ததாஹி -தது த்வம்-இதி சாமாநாதி கரண்யே –
தது-இத்யேந ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகரம் நிரவத்யம் ப்ரஹ்ம உச்யதே
த்வம் இதி ச சேதன சாமாநாதி கரண வ்ருத்தேந ஜீவ அந்தர்யாமி ரூபி -தச் சரீரம் ததாத்மதயா அவஸ்திதம்
தத் பிரகாரம் ப்ரஹ்ம உச்யதே
இதரேஷு பக்ஷேஷு சாமாநாதி காரண்ய ஹாநி ப்ரஹ்மண ச தோஷதாச ஸ்யாத் –

ஸாமா நாதி கரணம் என்பது இரண்டு சொற்களால் குறிக்கப்படும் இரு வெவ்வேறு பொருள்கள் ஒன்றை விட்டு ஓன்று பிரிக்க முடியாத தன்மையினால் ஒரே பொருளைக் காட்டுதல் ஆகும்
வேதச் சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்வதே -அதாவது எல்லா வேத வாக்யங்களும் பொருள் உள்ளவை என்று கொள்வதே -எங்கள் தலையாய கொள்கை
அப்படியே ததுவம் என்ற வாக்யத்துக்கு ஸாமாநாதி கரணத்தின் படி
தது -அந்த -என்பதால் எல்லாவற்றுக்கும் முழு முதல் காரணமாயும்
எல்லையில்லா நன்னலம் உடையோனாகவும்
குற்றங்கள் சிறிதும் அற்றோனாகவும்
உள்ள ப்ரஹ்மமே -த்வம் -நீ என்ற சொல்லால் குறிப்பிடப்படும்
சேதனனுடன் பிரிக்க முடியாத தொடர்புடையதாய் ஜீவாத்மாவின் உள்ளுறைவதாய் -அதை உடலாக உடையதாய் -அதன் ஆத்மாவாக உறையும் ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது
மற்றை அத்வைதக் கொள்கைகளில் இரு மெய்ப் பொருள்கள்-ப்ரஹ்மம் தவிர்த்து இன்மையால் ஸாமா நாதி கரணம் வர வாய்ப்பில்லை
எனவே மற்றைக் கொள்கைகளில் இந்த சாமாநாதி கரண்யம் அழிகிறது
அதனால் ப்ரஹ்மத்துக்கு குற்றங்களின் தொடர்புடைமை வரும்)

—————

73–ஏதத் யுக்தம் பவதி
ப்ரஹ்ம ஏவ ஏவமவஸ்திதம் -இத்யத்ர -ஏவம் -சப்தார்த்த பூத பிரகார தயைவ விசித்ர சேதன அசேதநாத்மக
பிரபஞ்சஸ்ய ஸ்தூலஸ்ய ஸூஷ்மஸ்ய சத் பாவ -ததாச பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இதி அயமர்த்த ஸம்பந்நோ பவதி –
தஸ்யைவ ஈஸ்வரஸ்ய கார்ய தயா காரண தயா ச சமஸ்தான சமஸ்தி தஸ்ய சமஸ்தான தயா சித் அசித் வஸ்து ஜாதம வஸ்திதமிதி –

(பஹு -பல மட்டும் அல்ல -பரஸ்பர பின்னமான எல்லாமாகக் கொள்ள வேண்டும் நானே(ப்ரஹ்ம சரீரத்துக்கு -நானே )-ஸமஸ்த பதார்த்தமாக ஆகிறேன்)

இதை இவ்வாறு விளக்கலாம்
ப்ரஹ்மமே இவ்வாறு விளங்குகிறது -என்ற வேத வாக்யத்தில் -இவ்வாறு என்ற சொல்லின் கருப்பொருள் புலன்களால் உணரப்படும் உணரப்படாமலும் சேதன அசேதனப் பொருள்களால் பல படியாக நிறைக்கப்பட்டு இருக்கும் ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்துடன் பிரிவற்ற தொடர்புடையதாக இருத்தல் என்பது
அதனாலேயே -நான் பலவாக ஆவேன் மக்களைப் படைப்பேன் என்ற வாக்யம் பொருளுடையதாக ஆகும் –
பலபடித்தான உருவ அமைப்புள்ள சேதன அசேதன பொருள்களை தனது உடலாகக் கொண்டு அவை யாவற்றிலும் அந்த ஈஸ்வரனே கட் புலனாகும் கார்யமாகவும் கட் புலனாகாத காரணமாகவும் வஹிக்கிறான்

———

74 —நநு ச -சமஸ்தான ரூபேண ப்ரகாரதயா-ஏவம் -சப்தார்த்தத்வம் ஜாதி குணயோ ரேவ த்ருஷ்டம் –
ந த்ரவ்யஸ்ய ஸ்வ தந்த்ர ஸித்தியோக் யஸ்ய பதார்த்தஸ்ய ஏவம் சப்தார்த்ததயா ஈஸ்வரஸ்ய பிரகார மாத்ரத்வம யுக்தம்
இதி சேத்ப உச்யதே த்ரவ்யஸ்யாபி தண்ட குண்டலாதே த்ரவ்யாந்தர பிரகாரத்வம் த்ருஷ்டமேவ —

அவ்வாறு ஆகாது
உருவ அமைப்பால் பிரிவற்ற நிலை உடைமையால் இவ்வாறு என்ற சொற் பொருள் கொள்வதானால்
அதாவது-சேதனம் அசேதனம் ஆகியவை பொருள்களே -அவ்வாறு இருக்க அவை ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையை அடைதல் எவ்வாறு என்பது கேள்வி –
ஒரு பொருளுக்கு அடையாக அதன் ஜாதியையோ அல்லது குணத்தையோ தான் கொள்ள முடியும்
மாறாக மற்ற ஒரு பொருளை அதற்க்கு பிரிவற்ற நிலையை உடைய அடையாகக் கொள்ள வியலாது
இங்கு தனித்து இயங்கும் தன்மையுடைய சேதன அசேதன பொருள்களை ஈஸ்வரன் என்னும் பொருளுக்கு அடையாகக் கொள்ளுதல் பொருந்தாது என்பீராகில்
சில சமயங்களில் ஒரு பொருளும் மற்ற ஒரு பொருளுக்கு -அதை மற்றதனின்றும் பிரித்துக் காட்டும் அடையாக -தடியை உடையவன் தடிக்காரன் குண்டலம் அணிந்தோன் என்பது போல் வழங்கி வருவதைக் காண்கிறோம்

————————-

75–நநுச தண்டாதே ஸ்வ தந்த்ரஸ்ய த்ரவ்யாந்தர பிரகாரத்வே மத்வர்த்தீய ப்ரத்யயோ த்ருஷ்ட –
யதா தண்டி குண்டலீ இதி அத கோத்வாதி துல்ய தயா சேதன அசேதநஸ்ய த்ரவ்ய பூதஸ்ய வஸ்துந ஈஸ்வர பிரகார தயா
சாமாநாதி கரண்யே ந ப்ரதிபாதநம் ந யுச்யதே அத்ரோச்யதே –கவ்ரஸ்வோ மனுஷ்யோ தேவ இதி பூத சங்காதா ரூபாணாம்
த்ரவ்யாணாமேவ -தேவ தத்தோ மனுஷ்யோ ஜாத புண்ய விசேஷேண யஜ்ஜ தத்தோ கவ்ர் ஜாத பாபேந கர்மணா
அந்யஸ் சேதந புண்யாதிரேகேண தேவோ ஜாத இத்யாதி தேவாதி சரீராணாம் சேதன பிரகார தயா லோக
வேதயோ சாமாநாதி கரண்யே ப்ரதிபாதனம் திருஷ்டம்

அப்படி யல்ல -தடி போன்றவை தாங்கள் ஒரு பொருளாக இருந்து கொண்டே மற்ற ஒரு பொருளுக்கு -மனிதனுக்கு -த்வர்த்தீய ப்ரத்யயத் -vilankuவிளங்க முடியும்
உதாரணம் -தண்டி குண்டலீ –
மேலும் பசுத்தன்மை -பேசுவாய் இருத்தல் -போன்றவற்றுக்கு இணையாக சேதன அசேதன பொருள்கள் நிறைந்த ப்ரபஞ்சம் ஈசனுக்கு பிரிவற்ற நிலையில் உள்ளதால் ஸாமா நாதி கரண்யம் பொருந்தாது எனில்
பசு குதிரை மனிதன் தேவன் போன்ற உருவ அமைப்புக்கள் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆகின்றன
தனது நல் வினையின் பயனாக தேவ தத்தன் மனிதனாகப் பிறந்தான் -தன் தீ வினைகளின் விளைவாய் யஜ்ஜ தத்தன் பசுவாய் ஆனான்
வேறொரு உயிர் மிகுந்த நல்ல வினையின் பயனாய் தேவனாகப் பிறந்தான் என்றெல்லாம் மறை எல்லாம் உலக வழக்குகளில் உள்ளது
தேவன் முதலான உடல்களில் உயிரின் பிரிவற்ற நிலை உள்ளதையும் காண்கிறோம் -ஸாமாநாதி கரணம்
இங்கு உடலும் உயிரும் தனித் தனியான பொருள்கள் ஆயினும் ஒன்றுக்கு ஓன்று பிரிவற்ற நிலையுள்ளவை

(த்ரவ்யம் த்ரயம் சம்யோகம்-யுவா ஸ்யாம தேவ தத்தன் அப்ருதக் சமஸ்தானம்
குண்டலி தேவதத்தன் ப்ருதக் ஸம்ஸ்தானம்-ஜீவன் அசேதனன் ப்ரஹ்மம் -மூன்றும் த்ரவ்யம் -அப்ருதக் ஆக பிரகாரங்கள் ஆக வேண்டுமே )

த்வர்த்தீய ப்ரத்யயம் -புவநாநி விஷ்ணு -விஷ்ணு இன்றி தனித்து இயங்காத புவனம்
மத்வர்த்தீய ப்ரத்யயம் –அப்ருதக் சித்தம் –இனிச் மான் வான் -பிரிவற்ற நிலை -ஸ்ரீ மந் -ஸ்ரீ மதே

——————————

76–அயமர்த்த -ஜாதிர் வா குணோ வா ந தத்ர ஆதரந-கஞ்சன த்ரவ்ய விசேஷம் பிரதி விசேஷண தயைவ
யஸ்ய சத் பாவ -தஸ்ய தத் அப்ருதக் சித்தே தத் ப்ரகாரதயா தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாதநம் யுக்தம்
யஸ்ய புந த்ரவ்யஸ்ய ப்ருதக் சித்தஸ்யைவ கதாசித் க்வசித் த்ரவ்யாந்தரப் பிரகாரத்வ மிஷ்யதே
தத்ர மத்வர்த்தீய ப்ரத்யய -இதி விசேஷ

இதன் பொருள் –ஒரு பொருளுடன் பிரிவற்ற நிலையில் அடையாக இருப்பதற்கு -ஜாதியோ பொருளோ குணமோ முக்யமாகக் கொள்ளப் பட வேண்டாம்
எந்த ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் தொடர்பு அதற்கு பிரிவற்ற பண்பை ஏற்குமோ -அவற்றின் பிரித்து இயங்காத தன்மையால் அவ்விரு பொருள்களுக்கும் சாமா நாதி கரணம் உள்ளது என்று கொள்வதே பொருந்தும்
மீண்டும் எந்த பொருள் சாதாரணமாகத் தனித்தே இயங்கிக் கொண்டு எப்பொழுதாவது மற்ற ஒன்றிற்கு பிரிவற்ற அடையாக ஆகிறதோ அப்பொழுது அதற்கு மத்வர்த்தி ப்ரத்யயம் வர வேண்டும் என்பது சிறப்பு விதி –

—————

77–ஏவமேவ ஸ்தாவர ஜங்கமாத்மகஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ஈஸ்வர சரீரத்வேந தத் பிரகார தயைவ ஸ்வரூப சத் பாவ இதி
தத் பிரகாரீ ஈஸ்வர ஏவ தத் தத் சப்தேந அபிதீயதே இதி தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாத நம் யுக்தம்
ததே தத் பூர்வமேவ நாம ரூப வியாகரண ஸ்ருதி விவரனே பிரபஞ்சிதம் —

மேற்கூறிய படியே அனைத்து அசையும் அசையாப் பொருள்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருப்பதனால் அப் பிரிவற்ற பண்பினாலேயே அவற்றுக்கு இருப்பு ஏற்படுகிறது என்பதால் அவற்றிற்கு உரிமையானவன் ஈஸ்வரன் தத் என்று குறிப்பிடப் படுகிறான் என்று சாமா நாதி கரணத்தை அறுதியிடல் பொருந்தும்
இவையாவும் முன்பே நாம ரூப விளக்கத்தில் விரிவாகச் சொல்லப்பட்டன

———-

78–அத ப்ரக்ருதி புருஷ மஹத் அஹங்கார தந் மாத்ர பூதேந்த்ரிய -ததாரப்த-சதுர்தச புவநாத்மக ப்ரஹ்மாண்ட தத் அந்தர்வர்த்தி
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவராதி சர்வ பிரகார சமஸ்தாந ஸம்ஸ்திதம் கார்யமபி சர்வம் ப்ரஹ்ம ஏவ இதி காரண பூத
ப்ரஹ்ம விஞ்ஞாநாதேவ சர்வம் விஞ்ஞாதம், பவதீதி ஏக விஞ்ஞானம் உப பந்நதரம்-ததேவம் கார்ய காரண பாவாதி முகேந
க்ருஸ்த்ரஸ்ய சித் அசித் வஸ்துந பர ப்ரஹ்ம பிரகார தயா ததாத்மகத்வம் யுக்தம் –

மேலும் ப்ரக்ருதி புருஷன் மஹத் அஹங்காரம் தன் மாத்ரைகள் பஞ்ச பூதங்கள் பதினோரு புலன்கள் -அவைகளான பதினான்கு உலகங்கள் ப்ரஹ்மாண்டங்கள் அவற்றின் உள்ளுறையும் தேவ மனித விலங்கு ஸ்தாவரம் முதலான பலவகை அமைப்புடைய பொருள்களுக்கு -விளைவுகளுக்கு -காரணமாக ப்ரஹ்மம் இருத்தலால் -அந்த ஒன்றை அறிவதன் மூலம் மற்ற யாவையும் அறிந்ததாக ஆகும் என்பதே மிகப் பொருந்தும்
இவ்வாறு காரண காரியத் தொடர்பால் சேதன அசேதன பொருள்களுக்கு உள்ளுறை ஆத்மாவாய் இருக்கும் தன்மை ப்ரஹ்மத்திற்குச் சொல்லப்பட்டது –

————-

79–நநு ச பரஸ்ய ப்ராஹ்மண ஸ்வரூபேண பரிணாம ஆஸ்பதத்வம்-நிர்விகார நிரவத்ய ஸ்ருதி வ்யாகோப ப்ரசங்கேந நிவாரிதம்-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் இதி ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஞ்ஞா
ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தாப்யாம் பரம புருஷஸ்ய ஜகாத் உபாதான காரணத்வம் ச ப்ரதிபாதிதம்
உபாதான காரணத்வம் ச பரிணாம ஆஸ்பதத்வ மேவ கத மிதமுபபத்யதே அத்ரோஸ்யதே -ச ஜீவஸ்ய பிரபஞ்சஸ்ய
அவிசேக்ஷண காரணத்வம் யுக்தம் தத்ர ஈஸ்வரஸ்ய ஜீவ ரூப பரிணாமாப் யுபகமே
நாத்மாஸ்ருதேர் நித்யத்வாச் ச தாப்ய–ப்ரஹ்ம சூத்ரம் -2-3-3-
இதி விருத்யதே-வைஷம்ய நைர் க்ருண்ய பரிகாரஸ் ச ஜீவாநாமநாதித் வாப்யுகமேன
தத் கர்ம நிமித்தயா ப்ரதிபாதித -வைஷம்ய நைர்க்ருண்யே ந சா பேஷத்வாத் -2-1 -34—
ந கர்ம விபாகதிதி சேண்ந அநாதித்வாது ப பத்யதே சாப்யு பலப்யதேச -2-1-35-இதி
அக்ருதாப்யாகம க்ருத் விபிரணாச பிரசங்கஸ் ச அநித்யத்வே அபிஹித

மாறாகப் பர ப்ரஹ்மத்திற்கு தன்னிலையில் நின்றும் மாறுபாடு அடைதல் ஒரு பொழுதும் இல்லை என்று சாற்றப்படும் -மாறுதல் அடையாத்தன்மை -குற்றங்கள் அற்ற நிலை போன்ற மறை மொழிகளால் அறுதியிடுதல் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு
ப்ரக்ருதிஸ் ச பிரதிக் நாத் ருஷ்டாந்தநு பரோதாத் –ப்ரஹ்ம ஸூத்தரம் -1-4-
ஒன்றை அறிதலால் எல்லாவற்றையும் அறிந்ததாகும் என மறை மொழியில் மறை மற்றும் அதை விளை பொருளை எடுத்துக் காட்டி பரம புருஷன் உலகின் கருப்பொருளாகும் தன்மை விளக்கம் தரப்படுகிறது
கருப்பொருள்கள் யாவும் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால் இது எவ்வாறு பொருந்தும்
இதற்கு விடையாக
இந்த ஜீவன் ப்ரபஞ்சம் இவற்றுடன் ப்ரஹ்மத்துக்குள் பொதுப்படையான காரணம் கூறப்படுகிறது –
ஈஸ்வரன் ஜீவனாக மாறுகின்றான் எனக் கொண்டால்
மறை மொழிகளின் படி ஆத்மா உண்டாவது இல்லை -என்றும் உள்ளவன் எனத் தேறுகிறபடியால் –2-3-3-ஈசனுக்கு ஏற்றத்தாழ்வு -அருளின்மை -2-1-34-ஆகியவை ஏற்படாது –
ஜீவனுடைய பன்னெடுங்கால வினைப்பதொடர்பின் அடியாகப் படைப்பதால் ப்ரஹ்ம ஸூத்ரத்திலும் படைப்புக் காலத்தில் ப்ரஹ்மம் தவிர்த்த வேறில்லை என்பதால் வினையும் ஜீவனும் இல்லை என்று கொள்ள முடியாது
ஏன் எனில் ஜீவன் ஆரம்பம் அற்றது என்று கூறப்பட்டு இருப்பதால் -ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது என்பதே பொருந்தும் -ஜீவர்கள் நாம ரூபங்கள் இல்லாமல் ப்ரஹ்மத்தோடே ஒன்றி இருந்தனர் -என்பதால்
ஆரம்பம் இல்லாத அநாதியான ஜீவர்களின் வினைகளும் பன்னெடும் காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பொருந்தும்
இதுவே வேதத்தாலும் அறுதியிடப்பட்டது
வினைகள் படைப்புக்கு முன் இல்லை எனக் கொள்ளில் ஜீவர்கள் காரணம் இன்றித் துயர் உறுதலும் செய்யும் தீயச் செயல்கள் பலன் அளிக்காது போலும் ஏற்படும்

ததா ப்ரக்ருதே ரப்யநாதிதா ஸ்ருதிபி ப்ரதிபாதிதா –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் வஹ்நீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமானே நுசேதே
ஜஹாத்யேநாம் புக்த போகாம ஜோந்ய இதி ப்ரக்ருதி புருஷயோரஜத்வம் தர்சயதி–

இப்படியே ப்ரக்ருதியும் ஆரம்பம் அற்றது -அநாதி என்று வேதங்களால் அறுதிப்படுகிறது
பிறப்பு அற்றதும் -கருப்பு சிவப்பு வெளுப்பு நிறங்கள் கலந்ததுமான ப்ரக்ருதியை பிறப்பற்ற ஒருவன் அனுபவித்துக் கொண்டு அதன் வழி செல்கிறான்
பிறப்பற்ற மற்ற ஒருவன் அதை அனுபவிப்பதில்லை -என்று ப்ரக்ருதி புருஷர் -ஜீவர்களின் பிறப்பின்மை காட்டப்படுகிறது –

——————

80–அஸ்மாந் மாயி ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிந் சாந்யோ மாயயா சந்நிருத்த -மாயம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயி நந்து மஹேஸ்வரம்
இதி ப்ரக்ருதிரேவ ஸ்வரூபேண விகாராஸ்பத மிதிச தர்சயதி-கௌரநாத் யந்தவதி ச ஜநித்ரி பூத பாவிநீ இதிசா

ப்ரக்ருதியை -மாயாவை -ஏவல் கொள்ளும் பரமாத்மா -மாயி -அந்தப் பிரக்ருதியைக் கொண்டு உலகைப் படைக்கிறான்
வேறொருவன் -ஜீவாத்மா அதில் அடைபடுகிறான்
மாயா என்பது பிரக்ருதியாகவும் மாயி என்பது சர்வேஸ்வரனாகவும் அறியப்படுகிறது
இவ்வாறு பிரக்ருதி தனது நிலை மாறுபாடு அடையக் கூடியதாகக் காணப்படுகிறது
ஸ்ருஷ்டியின் பசுவான மூலப்ப்ரக்ருதி -சமஷ்டி -ஆரம்பமும் முடிவும் அற்றது -ஸ்ருஷ்டியின் பூதங்களை வ்யஷ்டி உண்டாக்குகிறது என அறியப்படுகிறது


ஸ்ம்ருதிஸ் ச
ப்ரக்ருதிம் புருஷஞ்ச ஏவ வித்யாநாதி உபாவபி -பூமிர் ஆபோ அநலோ வாயு கம் -மநோந் புத்தி ரேவச அஹங்கார
இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா -அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவ பூதாம் மஹா பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்
பிரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந மாயா த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் இத்யாதிகா
ஏவம் ச ப்ரக்ருதேரபி ஈஸ்வர சரீரவத் ப்ரக்ருதி சப்தோ அபி ததாத்ம பூதஸ்ய ஈஸ்வரஸ்ய தத் பிரகார சமஸ்திதஸ்ய வாசக
புருஷ சப்தோ அபி தத் ஆத்மக பூதஸ்ய ஈஸ்வரஸ்ய புருஷ பிரகார சமஸ்திதஸ்ய வாசக –
அத தத் விகாராணமபி தயைவ ஈஸ்வர -ஆத்மா -ததாக வ்யக்தம் விஷ்ணுஸ் ததா அவ்யக்தம் புருஷ கால ஏவச
ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மந் ஷோப்யஸ் ச பரமேஸ்வர -இதி அத ப்ரக்ருதி பிரகார சமஸ்திதே பரமாத்மநி பிரகார பூத
ப்ரக்ருதி அம்சே விகார பிரகார்யம்ஸோ நியாந்தா நிரவத்ய சகல கல்யாண குணாஸ்ரய ஸத்யஸங்கல்ப
ஏவ ததாச சதி காரண அவஸ்தோபி ச ஏவேதி கார்ய காரணயோர் அநந்யத்வம் சர்வ ஸ்ருதி விரோதஸ் ச பவதி-

ஸ்ம்ருதியும்
ப்ரக்ருதி புருஷன் ஆகியவைகள் ஆரம்பம் அற்றவை என அறிந்து கொள்
நிலம் நீர் நெருப்பு வளி வெளி மனம் புத்தி -மஹான் -அஹங்காரம் பத்து இந்திரியங்கள் ஆகிய எட்டு வகையாகி எனக்கு படைப்பில் துணை நிற்கின்றன
இவற்றின் நின்றும் வேறுபட்டதான ஜீவன் -அதனால் உலகு தாங்கப்படுகிறது என்று உயர்ந்த தோளாய் அறிவாயாக
என்னுடைமையான மூலப் பிரக்ருதியை எட்டு வித வேறுபாட்டை அடைவித்து பலவிதமாக உலகை மீண்டும் மீண்டும் படைக்கிறேன் –
அழியாத வினைத் திட்ப்பமுள்ள என்னால் ப்ரக்ருதியும் -அதிலுள்ள அசையும் அசையாய் பொருள்களும் நிறைக்கப்படுகின்றன என்று சொல்கிறது
இவ்வாறு மூலப்பிரக்ருதி ஈஸ்வரனின் உடலாய் இருக்கும் பண்பால் ப்ரக்ருதி என்னும் சொல்லும் -அதைக்குறிக்கும் சொற்கள் யாவும் -அதின் உயிர்நிலையான ஈஸ்வரனுடைய பிரிவற்ற நிலையைக் குறிக்கும்
அவ்வாறே ஆத்மா புருஷன் -என்ற சொல்லும் அதன் உயிர் நிலையாகவும் அதனுடன் பிரிக்க இயலா நிலை யுடையவனாயும் இருக்கும் ஈஸ்வரனையே குறிக்கும்
அவ்வாறே மஹான் மூலப்ப்ரக்ருதி காலம் ஆத்மா -யாவையும் விஷ்ணுவே -அவரே படைக்க முனபவர் படைப்படுவதும் -அவற்றில் உள்ளுறைபவரும் அவரே
பரமாத்மாவுக்கு அங்கமான ப்ரக்ருதியில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன
ப்ரக்ருதியை அங்கமாக வுடைய பரமாத்மாவின் மாறுபாடு ஏற்படுவதில்லை
இவ்வாறே ஜீவாத்மாவை அங்கமாக உடையனாதலின் அதில் ஏற்படும் குறைபாடுகள் உள்ளிருப்பவனாகவும் அங்கியாகவும் ஏவுவோனாகவும் விளங்கும் குறைபாடற்ற எல்லா நலன்களுக்கும் இருப்பிடமான வழுவாத முனைப்புடைய பரமாத்மாவிற்கு இல்லை
அங்கி-அங்கங்களை யுடையவன்

அதனாலேயே கட் புலனாகாத காரண நிலையாவோனும் அதைக் கருப்பொருளாய்க் கொண்டு கட் புலனாகும் காரியப் பொருளான உலகு முதலியவையாக ஆகுபவனும் ஈஸ்வரனே
இப்படிக் கொள்வதாலேயே காரண காரியப் பொருள்களில் வேறுபாடின்மை மறைக் கொள்கைகளுக்கு உள்ள உடன்பாடு கிடைக்கிறது –

——————–

81–ததேவம் நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்மத சாபந்ந பிரகிருதி புருஷ சரீரம் ப்ரஹ்ம காரணாவஸ்தம் –
ஜகத ததாபத்திரேவ ச ப்ரலய நாம ரூப விபாக விபக்த ஸ்தூல சிதசித் வஸ்து சரீரம் ப்ரஹ்ம கார்யாவஸ்தம் ப்ராஹ்மண
ததாவித ஸ்தூல பாவ ஏவ ஸ்ருஷ்ட்டி இத்யுச்யதே –

கட் புலனாகாத நிலையில் பெயர் உருவ மாறுபாடற்றசேதன அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரணம்இவ்வாறு இருக்கும் நிலைக்கே ப்ரளயம் என்று பெயர்இதினின்றும் தோன்றும் கட் புலனாகும் அசேதன பொருட்களை தன் உடலாக உடைய ப்ரஹ்மம் காரியம்இந்தக் கட் புலனாகும் நிலை படைப்பு எனப்படும் –
யதோக்தம் பகவதா பராசரேண-பிரதான பும்ஸோரஜயோ -காரணம் கார்ய பூதயோ-இதி

இதை ஒட்டியே பகவான் பராசரரும் -பிறப்பற்ற மூல பிரகிருதி புருஷர்கள்-இவை காரண கார்யங்களாக ஆகின்றன -என்றார்

தஸ்மாத் ஈஸ்வர பிரகார பூத
சர்வாவஸ்த ப்ரக்ருதி புருஷ வாஸிந ஸப்தா தத் பிரகார விஸிஷ்ட தயா அவஸ்திதே பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே
ஜீவாத்மவாஸி தேவ மனுஷ்யாதி சப்தவத் யதா தேவ மனுஷ்யாதி ஸப்தா தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷணாம்
ஜீவாத்ம பிரகார தயைவ பதார்த்தத்வாத் பிரகாரிணி ஜீவாத்மநி முக்ய தயா வர்த்தந்தே தஸ்மாத் ஸர்வஸ்ய
சிதசித் வஸ்துந பரமாத்ம சரீரதயா தத் பிரகாரத்வாத் பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே சர்வே தத் வாசகா ஸப்தா —

அவை ஈஸ்வரனுடன் பிரிவற்ற நிலை உடையவையாதலால் இவைகளைக் குறிக்கும் சொற்கள் யாவும் இவ்விருப்பினால் பரமாத்மாவையே உள்ளுறை பொருளாகக் காட்டுகின்றன-தேவ மனிதர்களின் பெயரும் உருவமும் அவற்றின் உள்ளுறையும் ஜீவாத்மாவைக் குறிப்பது போலே
அங்க -அங்கி நிலையினால் எல்லா சேதன அசேதன வஸ்துக்களும் அவற்றின் பெயர் உருவங்களும் ஈஸ்வரனுக்கு உடலாய் இருக்கும் தன்மையால் ஈஸ்வரனையே குறிக்கும் –

————-

82–அயமேவச ஆத்ம சரீர பாவ -ப்ருதக் சித்யநர்ஹ தாராதேய பாவ -நியந்த்ரு நியாமய பாவ -சேஷ சேஷி பாவஸ் ச
சர்வாத்மநா ஆதார தயா நியந்தரு தயா -சேஷி தயா ச ஆப்நோதீதி -ஆத்மா சர்வாத்மநா ஆதேய தயா நியாம்ய தயா சேஷ தயா ச
அப்ருதக் சித்த பிரகாரத்வாத்-அப்ருதக் சித்தம் -ஆகார சரீரம் ஏவமேவஹி ஜீவாத்மந-
ஸ்வ சரீர சம்பந்த ஏவமேவ பரமாத்மந-சர்வ சரீரத்வேந சர்வ சப்த வாச்யத்வம் —

இதுவே உடல் -உயிர்த் தொடர்பு uஎன்பது -தனித்து இயங்கும் தன்மையற்று மற்ற ஒன்றினால் தாங்கப்படும் நிலையுற்று
அதனால் இயக்குவோர் நிலையம் தொடர்பும் பெற்று இருப்பது
எல்லா விதத்தாலும் தாங்குவதாகவும் ஏவுவதாகவும் பணி கொள்வதாகவும் அதின் நின்றும் பிரித்து நிலை யற்றதாகவும் உயிர் உடலுடன் பொருந்தி இருக்கிறது இவ்வாறே பரமாத்மாவும் எல்லாவற்றையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் எல்லாச் சொற்களும் சுட்டிக் காட்டப்படுபவனாகவும் இருக்கிறான்

சேஷன் -இயக்கப்படுவோன் -தன்னை இயக்குவோனுக்காக மகிழ்வுடன் செயல் புரிவோன்
சேஷி -சேஷனைத் தன் விருப்பப்படி இயக்குபவன்-

(சரீராத்ம பாவம்-சர்வாத்மனா ஆப்நோதி -விசேஷ வியாப்தி -தேச கால அவஸ்தா வாசி இல்லாமல் -ஆதாரம் நியாம்யம் சேஷி அப்ருதக் சித்தம் -பிரகாரம்-சர்வ ஸப்த வாஸ்யன் இதனாலேயே-பர்யவசான வ்ருத்தி )

——————

83–ததாஹ ஸ்ருதி கண–சர்வே வேதா யத்பதமாமநந்தி -சர்வே வேதாயத்ரைகம் பவந்தி –(இந்த கட உபநிஷத் ஸ்ருதி -கீதை 2-8 அத்யாயத்திலும் ஸ்லோகம் இவற்றைக் கொண்டே உண்டே )

(ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—
৷৷2.70৷৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை)

(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்
—-৷৷8.22৷৷

நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் –
எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்)

இதி தஸ்ய ஏகஸ்ய வாஸ்யத்வா தேகார்த்த வாஸிநோ பவந்தி-இத் யர்த்த
ஏகோ தேவா பஹுதா சந்நிவிஷ்ட
சஹைவ சந்தம் நவிஜாநந்தி தேவா –இத்யாதி
தேவா இந்திரியாணி தேவ மனுஷ்யாதி நாமாந்தாயா மித்யா ஆத்மத்வேந நிவிஸ்ய -சஹைவ சந்தம் –
தேஷாம் இந்திரியாணி மந பர்யந்தாணி ந விஜாநந்தி இத்யர்த்த

(மனஸ் -ஏக ஆஸ்ரயம் அவனுக்கும் இந்திரியங்களுக்கும் -இருந்தாலும் இவை அறிய வில்லையே)

இப் பொருளையே வேதங்களும் கீழ்க் கண்டவாறு பகர்கின்றன
எல்லா வேதங்களும் அடையப்படும் இலக்காக எதை திரும்பத் திரும்ப பறைகின்றனவோ-எல்லா வேதங்களும் எந்த ஒருவனிடம் ஓன்று படுகின்றனவோ
அந்தப் ப்ரஹ்மம் ஒன்றே மெய்ப்பொருளாக விளங்குவதால் சொற்கள் யாவும் ஒரே பொருளை யுடையவை யாகின்றன என்பது பொருள்
ஒரே தேவன் பலவாக உள்ளுறைகிறான் -அவனை உடலுறையும் அறி புலன்கள் அறிவதில்லை
இங்கு தேவா என்பது மனத்துடன் சேர்ந்த ஞான இந்திரியங்கள்
தேவன் மனிதன் முதலிய சேதனப் பொருள்களில் உள்ளுறைவோனாக ஆத்மாவினுள் இருக்கும் அவனை அந்த ஆறு புலன்களும் அறிவதில்லை என்பது பொருள்

ததா ச பவ்ராணிகாநி வசாம்சி
நதா ஸ்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-வாஸ்யேஹி வசச பிரதிஷ்டா காரணம் பூர்வம் வசஸாம் வாஸ்ய முத்தமும் -(ஜிதந்தே )
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வித்யா –இத்யாதீ நி ஸர்வாணி ஹி வாஸாம்சி ச சரீராத்ம விஸிஷ்ட -மாந்தர்யாமிணமேவ ஆசஷதே–
ஹந்த ஹபீமா திஸ் ரோதேவதா அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ஹி ஸ்ருதி –

அவ்வாறே புராணம் உரைப்பவர்களும் -எல்லாச் சொற்களுக்கும் பொருளாய் -அதன் மெய்ப்பொருளாய் நிலையாக விளங்குவோனை நாங்கள் வணங்குகிறோம் -என்றார்கள்
சொற்களின் முடிவு பொருளால் ஆகிறது -செயல்களுக்கு எல்லாம் முதல் காரணமும் -சொற்களுக்கு எல்லாம் பொருள் முடிவும்
வேதங்கள் யாவற்றாலும் அறியப்படுபவன் யானே என்றவாறு சொற்கள் யாவும் உருவ அமைப்பொடு கூடிய உயிரைக் காட்டி அவ்வாத்மாவில் உள்ளுறையும் பரமாத்மாவைக் காட்டி பொருள் முடிவு பெறுகின்றன
என்னே தானே நிலம் நீர் தீ இவற்றின் உட் புகுந்து பொருள்களுக்கு பெயர் உருவங்களைக் கொடுக்கிறேன் என்று வேதம் கூறுகிறது-

ததா ச மாநவம் வச–பிரசாசிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் ருக்மாபம்-ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷன் பரம்
அந்த பிரவிஸ்ய-அந்தர்யாமிதயா ஸர்வேஷாம் பிரசாசிதாரம் -நியந்தாரம் அணீயாம் ச ஆத்மாந க்ருத்ஸ்ரஸ்யா சேதநஸ்ய வ்யாபகதயா
ஸூஷ்ம பூதா தேஷாம் அபி வ்யாபகத்வாத் தேப்யோபி ஸூஷ்ம தர இத்யர்த்த ருக்மாப-ஆதித்ய வர்ண –
ஸ்வப்ந தீ கம்யம் ஸ்வப்ந கல்ப புத்தி ப்ராப்யம் விசத தம ப்ரத்யக்ஷதாபந்ந அநு த்யாநை கல்ப்ய-இத்யர்த்த –
ஏநமே கே வதந்த் யக்நிம் மருதோநய ப்ரஜாபதிம் இந்திரமேக பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் இதி ஏகே வேதா இத்யர்த்த
உக்தரீத்யா பரஸ்யைவ ப்ரஹ்மண-சர்வஸ்ய ப்ரசாசித்ருத்வேந சர்வ அந்தராத்மதயா ப்ரவிஸ்ய அவஸ்திதத்தவாத்
அஞ்ஞாய தயோபி ஸப்தா சாஸ்வத ப்ரஹ்ம சப்தவத் தஸ்யைவ வாசகா பவந்தி இத்யர்த்த –

பிறகு மனுவின் வாக்யமும்
பொருள்கள் யாவற்றினுள்ளும் நிலை பெற்று ஆள்பவனாகவும்
அணு அளவிலான பொருள்களையும் விட அணுவாய் இருப்பவனும்
பொன்னென ஒளிர்பவனும்
ஞானம் என்னும் உட் கண்ணால் -நம்மால் -கனவில் காண்பது போல் காணப்படக் கூடியவனுமான
பரம புருஷன் உள்ளுறைந்து
எல்லாவற்றையும் ஆள்பவன் -என்று கூறுகிறது –

பிராணிகளுக்கு உடல் முழுவதும் நீக்கமற உயிர் நிறைந்து இருப்பதால் ஆத்மா அணு அளவினன்
அவ்வாத்மாவின் உள்ளும் பரம புருஷன் புகுந்து நிறைவதால் சேதன அசேதன பொருட்களை விட அணுவள வினன் என்பது பொருள் –
கதிர் ஒளி கனவில் மனத்திற்குக் காணப் படுவது போல்
தெள்ளத் தெளிவாக நேரில் காண்பது போல் த்யானத்தில் காணத் தக்கவன் என்பது பொருள்
இவனை நெருப்பு என்றும் காற்று என்றும் பிரமன் என்றும் இந்திரன் என்றும் உயிர் மூச்சு என்றும் கூறப்படுபவனான
நிலையான மேலான ப்ரஹ்மம் என்று வேதங்கள் கூறுகின்றன -என்று பொருள்

பர ப்ரஹ்மம் எல்லாப் பொருட்களிலும் உள்ளுறைந்து அவற்றை ஆட்சி செய்வதால் தீ முதலிய சொற்கள் அவற்றுள் நிலை பெற்று இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் சொற்களே என்பது இங்கு பொருள்

ததாச ஸ்ம்ருத் யந்தரம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் சஹு தாசநாந் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணுமே வ யஜந்தி தே இதி
பித்ரு தேவ ப்ராம்ஹண ஹுதாசநாதி ஸப்தா தந் முகேந ததந்தராத்ம பூதஸ்ய விஷ்ணோ ரேவ வாசகா இத்யுக்தம் பவதி —

அவ்வாறே ஸ்ம்ருதிகளிலும்
பித்ருக்களை தேவர்களை அக்னியுடன் சேர்ந்த அந்தணர்களைக் குறித்து யாகம் செய்பவர்கள் எல்லாப் பொருட்களுக்கும் உள்ளுறை பவனாகிய விஷ்ணுவையே குறித்து யாகம் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது
பித்ருக்கள் அந்தணர் அக்னி ஆகிய சொற்கள் தத் தத் முகமாக தமக்கு உள்ளுறைபவனான விஷ்ணுவையே குறிக்கும் சொற்கள் என்பதே சரியான கொள்கை –

—————————

84–அத்ரேதம் சர்வ ஸாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மாந ஸ்வயம் அங்குசித அபரிச்சின்ன நிர்மல ஞான ஸ்வரூபா சந்த-
கர்ம ரூப அவித்யா வேஷ்ட்டிதா-தத் காம அநு ரூப ஞான சங்கோச மாபந்நா ப்ரஹ்மாதி ச தம்ப பர்யந்த விவித விசித்ர
தேஹேஷு ப்ரவிஷ்டா தத் தத் தேஹோசித லப்த ஞான பிரசரா தத் தத் தேஹாத்ம அபிமாந தத் உசித கர்மாணி குர்வாணா-
தத் அநு குண ஸூக துக்கோப போக ரூப சம்சார ப்ரவாஹம் பிரதிபத்யந்தே -ஏதேஷாம் சம்சார மோசனம்
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே இதி –

(கர்மாவும் அவித்யாவும் பகவத் நிக்ரஹ ரூபமே-வேஷ்ட்டிதா-மூடப்பட்டு)

ஸாஸ்த்ரங்கள் யாவும் கூறும் மையக் கருத்துப் பொருள் இதுவேயாகும்
ஜீவாத்மாக்கள் தன்னடையே குறைவற்ற அளவு கடந்த அப்பழுக்கு அற்ற ஞானத்தை யுடையவைகள்
தன் செயல்களினால் ஏற்பட்ட வினைப் பயனால் அறியாமை சூழப்பட்டு அவ் வினைகளுக்கு ஏற்ப ஞானக் குறைவின் பலனாக
பிரமன் முதல் புல் ஈறான பலவிதமான உருவமுடைய உடல்களில் நுழைந்து அவ் வமைப்புகளில் விருப்பம் கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்து கொண்டு அதனடியாய் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டு முடிவற்ற பிறவிச் சுழலில் தடுமாறுகிறது
இப்படிப்பட்ட ஜீவன்களுக்கு பிறவிச் சுழலில் நின்றும் விடுபட பகவானிடம் சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை –

——————-

85–ததர்த்தம் பிரதம மேஷாம் தேவாதி பேத ரஹித ஞாநைக ஆகார தயா ஸர்வேஷாம் சாம்யம் ப்ரதிபாத்ய –
தஸ்யாபி ஸ்வ ரூபஸ்ய பகவச் சேஷதைக -ஸ்வரூபைக ரசதயா பகவதாத் மகதாமபி ப்ரதிபாத்ய -பகவத் ஸ்வரூபம்
ச ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந தயா சகல இதர விஸஜாதீயம் -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஆஸ்ரயம் –
ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தயா ஸர்வஸ்ய ஆத்ம பூதம் ப்ரதிபாத்ய
தத் உபாஸநம் சாங்கம் தத் ப்ராபகம் ப்ரதிபாத யந்தி சாஸ்த்ராணீதி —

அதன் பொருட்டு -முதற் கண் தேவன் முதலான வேறுபாடுகளுள்ள ஜீவன்கள் அனைத்தும் ஞானத்தளவில் ஒரே படிப்பட்டவையாய் இருத்தலைக் கூறி
அந்த ஞான உருவிற்கு இறைவனுக்கு அடிமைப்பட்டு இருத்தலே இயல்பான பண்பு என்றும்
இறைவனையே தன் ஆத்மாவாக உடையவை என்றும் கூறி
இறைத் தன்மை தீயக் குணங்கள் யாவற்றுக்கும் எதிர்த்தட்டாய் இருத்தலையும் நற் பண்புகள் யாவற்றுக்கும் உறைவிடமாய் இருத்தலையும்
தன்னை ஒழிந்த மற்றை யாவற்றின் நின்றும் மாறுபட்டு இருத்தலையும்
உயர்வற உயர் நலமுடையதாய் இருத்தலையும்
தன் வழுவாத வினைத் திட்பத்தால் சேதன அசேதன பொருட்கள் யாவினுள்ளும் ஆத்மாவாய் விளங்குவதையும் விளக்கி
அவனைக் குறித்த தியானத்தை அதன் அங்கங்களுடன் செய்தலே அவனை அடையும் நெறி என்பதையே சாஸ்திரங்கள் பகர்கின்றன

ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமம் –மாறா விருப்பம் நிறைவேற்றுவதற்கான வினைத் திடபம்

———————

86–யதோக்தம் -நிர்வாணமய ஏவாயமாத்மா ஞாநமய அமல -துக்க அஞ்ஞான மலா தர்மா ப்ரக்ருதேஸ்தே நசாத்மந
ப்ரக்ருதி சம்சர்க்கக் க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தா தர்மா
இத்யர்த்த ப்ராப்த அப்ராப்த விவேகேந ப்ரக்ருதி ரேவ தர்மா இத்யுக்தம் –

அவ்வாறே இந்த ஆத்மா வினைகளின் தொடர்பு அற்றவன் -ஆனந்த மயமானவன் -ஞான மயமானவன் தூய்மை யானவன் -துன்பம் அறியாமை ஆகிய கறைகள் உடல் தொடர்பால் மட்டுமே ஏற்படுகின்றன
இவை ஆத்மாவிற்குக் கிடையாது -உலகின் உடல் தொடர்பால் செய்யப்பட வினை விளைவாகவே இவை ஏற்படுகின்றன -ஆத்மாவின் இயல்பினால் அன்று -என்று பொருளாடும்
இதற்கு ஏற்படும் விளைவுகள் உலகின் இயல்பு என்பது வெளிப்படை –

—————————

87–வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணேகவி ஹஸ்திநி ஸூநி ஸைவ ஸ்வ பாகே ச பண்டித சம தர்சிந –ஸ்ரீ கீதை -5–18-இதி
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப ப்ரக்ருதி ஸம் ஸ்ருஷ்டஸ்ய ஆத்மந ஸ்வரூப விவேசநீ புத்தி ஏஷாம் தே பண்டிதா-
தத் ப்ரக்ருதி விசேஷ வி யுக்த ஆத்ம யாதாத்ம ஞான வந்த -தத்ர தத்ர அத்யந்த விஷம ஆகாரே வர்த்த மாநம் ஆத்மாநம்
சமாநா காரம் பஸ்யன்தீதி சம தர்சிந இத்யுக்தம்
ததிதமாஹ-இஹைவ தைர்ஜித ஸ்வர்க்கோ ஏஷாம் சாம்யே ஸ்திதம் மந நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தேஸ்திதா –
இதி நிர்தோஷம் தேவாதி ப்ரக்ருதி விசேஷ ரூப சம்சர்க்க தோஷ ரஹிதம் ஸ்வரூபேணா வஸ்திதம் சர்வம் ஆத்ம வஸ்து
நிர்வாண ரூப ஞான ஏக ஆகாரதயா சமம் இத்யர்த்த —

கல்வியும் அடக்கமும் நிறைந்த அந்தணன் பசு யானை நாய் அதை தின்னும் சண்டாளன் -இவர்களிடம் -ஆத்மாக்களிடம் -கற்றறிந்தோர் சமமான நோக்குடையவர்களாய் இருப்பார்கள்
தேவ விலங்கு மனித தாவர உடல்களால் உலகுடன் பிணைக்கப்பட்டு இருக்கும் ஆத்மாக்களை அவ்வுடல்களில் நின்றும் பகுத்து அறியும் இயல்புடையவர்களே பண்டிதர் -கற்றறிந்தோர் -சம நோக்குடையவர் -எனப்படுவர்
உலகியலின் தாழ்மை நீக்கி ஆத்மாவின் மெய்யியல் யறிந்து பலவகையான ஏற்றத் தாழ்வுகளுடன் கூடியிருக்கும் ஆத்மாக்களை ஓரு படிப்பட்டவர் என்று அறிவோரே சம நோக்குடையவர் எனப்படுவர்

எந்த ஞானிகள் மனத்தில் ஆத்மாக்கள் யாவும் சமம் என்ற எண்ணம் நிறைந்து இருக்கிறதோ அவர்கள் இவ்வுலகிலேயே துறக்கத்துக்கு ஈடான நிலையை அடைகின்றனர்
தேவன் முதலான உடல்களில் நின்றும் நீங்கிய ஆத்மா குற்றம் அற்றது
ஆத்மாக்கள் யாவும் தம் மெய்யுருவில் ஆனந்தத்தையும் ஞானத்தையும் சமமாக யுடையவர்கள் என்பது தெளிவு

சண்டாளன் -பிறவி செயல் இவற்றால் இழிந்து கொடூரமான செயல்களையே செய்பவன்

—————-

88–தஸ்யைவம் பூதஸ்ய ஆத்மந பகவஸ் சேஷதகை ரஸதா தந் நியாம்யதா ததேக ஆதாரதா ச தத் தத் சரீர –
தத் தநு ப்ரப்ருதிபிஸ் சப்தை-தத் சாமாநாதி கரண்யேந ச ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாச புராணாதிஷு
ப்ரதிபாத்யதே இதி பூர்வமேவ யுக்தம் —

இந்நிலையை யுடைய ஆத்மா பகவானுக்கு அடிமைப்பட்டு இருப்பவனாகவும் -அவனால் ஏவப்படுபவனாகவும் -அவனையே பற்றுக்கோடாக யுடையவனாயும் இருத்தலால்
அவ்வுடல் அமைப்புக்கள் அந்த ஸாமா நாதி கரணத்தால் பகவானையே காட்டுகின்றன என்பது
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் அறுதியிடப்பட்டு இருக்கிறது என்பது முன்பே விளப்பட்டு விட்டது

———

89–தைவிஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
மாமேவயே பிரபந்த்யந்தே மாயா மேதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14–இதி
தஸ்யை தஸ்ய ஆத்மந கர்ம க்ருத விசித்ர குண மய ப்ரக்ருதி ஸம் சேர்க்க ரூபாத் சம்சாராத் மோக்ஷ
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே
இத்யுக்தம் பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிபி ஸ்ருதி பிஸ் ச —

என்னுடைய அலகிலா விளையாட்டால் விளைந்த -முக் குணம் நிரம்பிய இந்தப் பிரக்ருதி மாயா -கடத்தற்கு அரியது
எவர்கள் என்னயே சரணம் அடைகிறார்களோ -பிரபத்தி செய்கிறார்களோ -அவர்கள் இந்தப் பிரக்ருதியைக் கடக்கின்றனர்
செய்த வினைகள் முக்குணத் தொடர்பு அவற்றின் நின்றும் கிட்டும் பல படித்தான பிரகிருதியின் தொடர்பு ஆகிய பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பகவானைச் சரண் அடைவதால் அன்றி -பிரபத்தி செய்வதால் அன்றி-மற்ற ஒன்றால் கிட்டாது எனக் கூறப்படுகிறது
மறை மொழியும் பரமாத்மாவை அடைய வேறு வழி கிடையாது எனப் பகர்கிறது-

————

90—மயாததமிதம் சர்வம் ஜகதவ்யக்த மூர்த்திநா
மத்ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்திதா –ஸ்ரீ கீதை
ந ச மத் ஸ்தாநி பூதாநி பாஷ்யமே யோகம் ஐஸ்வர்யம்
இதி சர்வ சக்தி யோகாத் ஸ்வ ஐஸ்வர்ய வை சித்ரியமுத்தம்
ததாஹ-விஷ்டப்யாஹமீதம் க்ருத்ஸனமேகாம் சேந ஸ்திதோ ஜகத் இதி
அநந்த விசித்ர மஹா ஆச்சர்ய ரூபம் ஜகத் மம அயுதாம் சாம்சேந ஆத்ம தயா பிரவிஸ்ய
சர்வம் மத் சங்கல்பேந விஷ்டப்ய அநேந ரூபேண அநந்த மஹா விபூதி அபரிமிதோதோர குண சாகர
நிரதிசய ஆச்சர்ய பூத ஸ்தித அஹம் -இத்யர்த்த –

கட் புலனாகாத என்னால் வியாபிக்கப் பட்ட இவ்வுலகும் பிராணிகளும் என்னிடத்தில் இருக்கின்றன -என்னால் தாங்கப்படுகின்றன -நான் அவைகளால் தாங்கப்படுவதில்லை –
மேலும் இயற்கையாகவே வருகின்ற அளவற்ற செல்வமுடைய என்னை இந்தப் பிராணிகள் அறிவதில்லை
இவ்வாறு ஈஸ்வரனின் எல்லா வல்லமையும் எல்லா ஐஸ்வர்யமும் பெற்றுள்ள ஆச்சர்யமான தன்மை விவரிக்கப் பட்டன
அவ்வாறு இவ்வுலகு முழுவதையும் என்னுடைய ஒரு சிறு பகுதியாலேயே தாங்குகிறேன்
முடிவற்ற ஆச்சர்யமான உருவுடைய இவ்வுலகு எனது சக்தியின் பத்தாயிரத்தின் ஒரு பகுதியின் ஒரு சிறு பகுதியாலேயே உயிரின் உயிராய் நிறைக்கப்பட்டு யாவும் எனது வழுவாத வினைத் திட்பத்தினாலே தாங்கப்படுகின்றன
எல்லை யற்ற ஆச்சர்யமுடைய இவ்வுலகையும் உயிர்களையும் எல்லையற்ற வள்ளன்மை யுடைய நான் செல்வமாகக் கொண்டிருக்கிறேன் என்பது பொருளாகும் –
ஐஸ்வர்யம் -செல்வம்
யோகேஸ்வரம் -இயற்கையாகவே செல்வங்களை உடையனாய் இருத்தல் –

————

91–ததிதமாஹ-ஏகத்வே சதி நாநாத்வம் நாநாத்வே சதி ஸைகதா -அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிதும் அர்ஹதி –
இதி பிரசாசி த்ருதவேந ஏக ஏவ சந் விசித்ர சித்சித் வஸ்துஷு அந்தராத்மதயா பிரவிஸ்ய–தத் தத் ரூபேண
விசித்ர பிரகார விசித்ர கர்ம காரயந் நாநா ரூபதாம் பஜதே-
ஏவம் ஸ்வ அல்பாம்சேந து ஸர்வாஸ்சர்யமயம் நாநா ரூபம் ஜகத் தத் அந்தராத்மதயா பிரவிஸ்ய
விஷ்டப்ய நாநாத்வேநா வஸ்திதோபி சந்
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண -ஸர்வேச்வரேச்வர பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம நாராயண
நிரதிசய ஆச்சர்ய பூத நீல தோய்த்த சங்காச புண்டரீக தல அமலாய தேஷண-சஹஸ்ராம்ஸூ சஹஸ்ர கிரண
பரம வ்யோம்நி தத் அக்ஷரே பரமே வ்யோமந் -இத்யாதி ஸ்ருதி சித்த ஏக ஏவ அதிஷ்டதே —

ஒன்றாய் இருந்தும் பலவாகவும் பலவாறு இருந்தும் ஒன்றாகவும் திகழ்வதான சிந்தனைக்கு எட்டாததுமான ப்ரஹ்மத்தின் வடிவை யாரே அறியத்தக்கவர் –
ஆச்சர்யமான சேதன அசேதன பொருள்களில் உள் நுழைந்து அந்தந்த ஆச்சர்யமான உருவங்களைக் கொண்டு விசித்ரமான செய்கைகளை செய்வித்துத் கொண்டு ஒன்றாகவே இருந்து கொண்டு பலபடி பட்டதாகத் தோன்றும் யாவற்றையும் ஆள்கின்றனனாக -ப்ரஹ்மம் -விளங்குகிறான்-தனது அற்ப ஒரு சிறு பகுதியால் பல ஆச்சர்யங்கள் நிறைந்த பலபடிப் பட்ட உலகை உள்ளுறைந்து தாங்கிக் கொண்டு இருப்பவனாய்
எல்லையற்ற நற் குணங்களுடையவனாய் -ஈஸ்வரர்கள் யாவருக்கும் ஈஸ்வரனாய் -தேவாதி தேவனாய் பர ப்ரஹ்மமாய் எல்லையற்ற ஆச்சர்யங்கள் யுடையவனாய் அளவற்ற ஒளியுடையோனாய் நீருண்ட மேகம் போன்ற மேனியனாய் தாமரை இதழ் ஒத்த கண்களை உடையவனாய் புருஷோத்தமனான நாராயணன் பரமபதத்தில் ஏகாந்தமாக உளுந்து அருளியிருக்கிறான்
வேதங்களில் ஆழ்ந்த கருத்தாய் விளங்குபவன் -மறைந்த முழைகளில் இருப்பவன் பரம பதத்தில் இருக்கிறான் –
அழிவற்ற அவன் பரமபதத்தில் விளங்குகிறான் -இவ்வாறு ஸ்ருதிகளால் தேறிய பொருளாய் விளங்குவோன் ஒருவனே –

ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய கஸ்ய சித் பி வஸ்துந ஏக ஸ்வபாவஸ்ய -ஏக கார்ய சக்தி யுக்தஸ்ய –
ரூபாந்தரயோக ஸ்வ பாவாந்தர யோக -சக்தி யந்திர யோகஸ் ச நகடதே தஸ்ய ஏதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-
சர்வ வஸ்து விஸாஜாதீய தயா சர்வ ஸ்வாபவத்வம் சர்வ சக்தி யோகஸ் சேதி ஏகஸ்யைவ விசித்ர அநந்த நாநா ரூபதா
ச புநரபி அநந்த அபரிபித ஆச்சர்ய யோகேந ஏக ரூபதா ச ந விருத்தா இதி வஸ்து மாத்ர சாம்யாத்
விரோத சிந்தந யுக்தா இத்யர்த்த –

ப்ரஹ்மம் தவிர்த்த மற்ற எப்பொருளுக்கும் ஒரு படிப் பட்ட பண்பு -ஒரு முகமான செயல் திறன் ஒரே உரு மட்டும் உண்டு -மாறாக மற்றோர் உருமாறு தன்மையும் மாறுபட்ட பண்புகளும் வேறு பட்ட செயல் திறனும் ஏற்படுதல் இல்லை தம்முள் மாறுபட்ட பல படிப்பட்ட பொருள்களின் பண்புடையவனாயும் செயல் திறன் யாவையும் யுடைய ஒன்றாய் எல்லை யற்ற பற்பல ஆச்சர்யமான உருக்கள் உள்ளதாய்
இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தையும் தன் எல்லையற்ற ஆச்சார்யமான இருப்பு நிலையால் தன் யோக சக்தியால் ப்ரஹ்மம் பெற்று இருத்தல் மாறுபாடு உடையது அல்ல –
பொருட்களில் மாறுபாட்டால் மட்டும் ப்ரஹ்மம் மாறுபாடு உடையது எனக் கொள்ளத் தகாது –

யதோக்தம்
சக்த்ய சர்வ பாவாநாம் அசிந்ய ஞான கோஸரா யாதோதோ ப்ரஹ்மணஸ் தாஸ்து சர்காத்யா பாவ சக்தய பவந்தி
தபாதாம் ஸ்ரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இதி -ஏதத் யுக்தம் பவதி -ஸர்வேஷாம் அக்னி ஜலாதீநாம் பாவாநாம் ஏகஸ்மின்நபி பாவே த்ரஷ்டைவ சக்தி தத் விஸாஜாதீய
பாவாந்தரேபி இதி ந சிந்தயிதும் யுக்தா ஜலாதவ் அத்ருஷ்டாபி தத் விசாஜாதீயே பாவகே பாஸ்வரத்வ உஷ்ணத்வாதி சக்தி
யாதாருச்யதே ஏவமேவ சர்வ வஸ்து விஸாஜாதீயே ப்ரஹ்மணி சர்வ சாம்யம் நாநு மாதும் யுக்தம்
இதி அத விசித்ர அநந்த சக்தி யுக்தம் ப்ரஹ்ம இத்யர்த்த ததாஹ
ஜெகதே தந் மஹா ஆச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத் மந தேநாஸ்சர்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத்தை இதி –ஸ்ரீ பாகவதம் –

மேலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்
தவசிகளில் சிறந்தவரே -மைத்ரேயரே -தீ நீர் போன்றவற்றில் அவற்றுக்கு என சிறப்பான பண்புகள் இருப்பது போல் நம் மனதிற்கு எட்டாத திறமைகள் யாவும் உடையதாயும் -அவ்வாறே ஆக்கல் அளித்தல் அழித்தல் திறன்களை யுடையதாயும் இருத்தல் ப்ரஹ்மத்திற்கே உரிய பண்பு -என்று கூறப்பட்டு உள்ளது
தீ நீர் போன்றவற்றிற்கு ஒவ்வொரு சிறப்புத் தன்மைகள் இருக்கின்றன
ஆயின் அவற்றின் நின்றும் வேறுபட்ட பொருள்களின் பண்புகள் அவற்றில் காணக் கிடைப்பதில்லை
நீருக்கு அதன் பண்பின் நின்றும் ஒளி விடும் திறன்
இல்லை -அவ்வாறே ஒளிர்தல் வெப்பமடைதல் எனும் பண்புகளை யுடைய தீயில் நீரின் பண்பு காணப்படுவதில்லை
ஆயின் ப்ரஹ்மம் ஒன்றில் மட்டும் இது போன்ற எல்லாப் பொருள்களின் பண்புகளும் திறன்களும் காணப்படும்
அதாவது -விசித்ரமான பண்புகளை யுடையது ப்ரஹ்மம் என்பது விளங்கும்
அவ்வாறே அக்ரூரரும் நம்பி மூத்த பிரானையும் கிருஷ்ணனையும் கோகுலத்தில் நின்றும் அழைத்துச் செல்லுகையில் -ஸ்ரீ மத் பாகவதம் -பல ஆச்சர்யமான உருக்களுடைய இவ்வுலகு உன் உரு -அந்த ஆச்சர்யமான உன் உருவில் கண்ணா நான் கலந்தேன் -என்றார்

————-

92-ததே தத் நாநாவித அநந்த ஸ்ருதி நிகர -சிஷ்ட பரிக்ருஹீத தத் வ்யாக்யான பரிஸ் ஸ்ரமாத் அவதாரிதம்
ததாஹி -பிரமாணாந்தரா பரி த்ருஷ்ட -அபரிமித பரிணாம-அநேக தத்வ நியத க்ரம விஸிஷ்டவ்
ஸ்ருஷ்ட்டி ப்ரலயவ் ப்ராஹ்மண அநேக விதா ஸ்ருதயோ வதந்தி

அப்படிப்பட்ட இது -ப்ரஹ்மம் -சான்றோர் களால் கைக் கொள்ளப் பட்ட எல்லை யற்ற பலபடிப்பட்ட வேதங்களின் திரள் கருத்தாய் அவர்களுடைய உரை நன்கு ஆராய்ந்து நிறுவப் பெற்றதுஅவ்வாறே வேதங்கள் தவிர்த்த மற்ற மெய்யுரைகளால் அறியப்பட முடியாததாயும் -எல்லையற்ற பரிணாமம் யுடையதாயும் பல தத்வங்களின் ஒழுங்கான விதி முறைகள் நிறைந்ததாயும் உள்ள ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழில்களைச் செய்யும் ப்ரஹ்மம் பலவிதமாக பல வேதங்களில் சொல்லப்படுகிறது –


நிரவத்யம் -நிரஞ்சனம் -விஞ்ஞானம் -ஆனந்தம் -நிர்விகாரம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -நிர்குணம் -இத்யாதிகா
நிர்குணம் ஞான ஸ்வரூபம் ப்ரஹமேதி காஸ்சந ஸ்ருதயோ அபி ததபி

குற்றமின்மை –தனித்தன்மை நிறைந்த அறிவுடைமை ஆனந்தமுடைமை மாறுபாடின்மை பிளவு படாமை செயலின்மை அமைதியுடைமை தீய பண்புகள் அற்ற தன்மை ஆகிய தீய குணங்கள் அற்ற அறிவுருவானது ப்ரஹ்மம் என்று சில வேதங்கள் மொழிகின்றன

நேஹ நாநாஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ச ம்ருத்யு மாப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி
யத்ரத்வஸ்ய ஸர்வாத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத் தத்கேந கம் விஜாநீயாத்–இத்யாதிகா
நாநாத்வ நிஷேதவாதிந்ய சாந்தி காஸ்சந ஸ்ருதய

(நிரவத்யம் –கர்ம சம்பந்தம் அற்றது –நிரஞ்சனம்-கர்ம பல சம்பந்தம் அற்றது-நிஷ்க்ரிய-அதனால் நிர் அயவவம் )

(ஸாஸ்த்ர ஞானமும் ஞான பலனும் ஷாந்திக்கு ஹேது -கிரியைகளும் கிரியைகளின் பலமும் அஷாந்திக்கு ஹேது)

பலவாகத் தோன்றும் எதுவும் இல்லை -இதைப் பலவாகக் காண்பவன் அழிவின் நின்று மீண்டும் அழிவையே அடைகிறான்
இங்கு உள்ள பொரு ட் கள் யாவும் அவனே -அதுவே என்று இருக்கையில் அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க முடியும் எவ்வாறு பிரித்து உணர -அறிய முடியும் -என்று மறுத்துக் கூறும் பல சொற்களும் சில வேதங்களில் இருக்கின்றன –

யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வாபி வதந் யதாஸ்தே –
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத் புருஷா ததி-

எல்லாம் அறிந்தவன் -எல்லாவற்றிற்கும் அறிவானவன் -அறிவையே தவமாக -நெறியாக -உடையவன் -பொருட்கள் யாவற்றிற்கும் பெயர் உருவங்களைக் கொடுப்பவன் -மின்னொளி பெற்ற பரம புருஷனிடம் இருந்து -கால அளவுகள் -நிமிடங்கள் -தோன்றின

அபஹத பாப்மா விஜரோ வி மிருத்யு விசோகோ விஜிகத்ஸ்ஸோபிபாச சத்யகாம ஸத்யஸங்கல்ப இதி சர்வஸ்மிந்
ஜகதி ஹேய தயா அவகதம் சர்வம் குணம் ப்ரதிஷித்ய-நிரதிசய கல்யாண குண அநந்த்யாம்
சர்வஞ்ஞதாம் சர்வ சக்தி யோகம் சர்வ நாம ரூப வியாகரணம் ஸர்வஸ்ய ஆதாரதாம் காஸ்சந ஸ்ருதய ப்ருவதே

பாபங்கள் அற்றது -கிழத்தன்மை அற்றது அழி வற்று துயர மற்று பசியற்று தாகமற்று நிலை பெற்ற வினைத் திட்பம் யுடையவனாய் -அடைய வேண்டிய தேவைகள் ஏதும் அற்றவனாய்என்றும் உலகின் தீய குணங்களுக்கு எதிர்த்தட்டாய் -நற் குணங்கள் யாவும் நிறைந்தவனாய் -அளவற்ற நற் குணக் கடலாய் -யாவும் நிறைந்தவனாய் -யாவும் அறிந்தவனாய் -எல்லாம் அறிந்தவனாய் எல்லாவற்றிற்கும் பெயர் உருவம் கொடுப்பவனாய் -யாவற்றிற்க்கும் பற்றுக் கோடனாய் என்று சில வேத வாக்யங்கள் கூறுகின்றன –

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநி-
ஐததாத் மியமிதம் சர்வம் ஏகஸ்மிந் பஹுதாவிஜாரா இத்யாதிகா
ப்ரஹ்ம ஸ்ருஷ்டம் ஜகத் நாநாகாரேம் ப்ரதிபாத்ய தத் ஐக்யம் ச ப்ரதிபாத யந்தி காஸ்சந ஸ்ருதய

இவை யாவும் ப்ரஹ்மமேஅது இவற்றைப் படைத்து அழித்து காத்தலைச் செய்வதால் இவை யாவும் ஆதாரமாக உடையது -இவ்வாறு ப்ரஹ்மத்தால் படைக்கப்பட்ட இவ்வுலகு பலவிதமாக இருக்கிறது போன்றசில வேத மொழிகள் ப்ரஹ்மத்தின் படைப்பின் பல படித்தான் தன்மையைப் பேசி அதனுடன் ப்ரஹ்மம் ஒன்றி இருத்தலைச் சொல்கின்றன

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வ
போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா
பிரஜாபதிரகாம யாத பிரஜா ஸ்ருஜயேதி
பதிம் விஸ்வ ஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்
ஸர்வஸ்ய வசீ சர்வஸ் யேசாந இத்யாதிகா ப்ரஹ்மண சர்வஸ்மாத யந்யத்வம் ஸர்வஸ்ய ஈஸி தத் யத்வம் ஈஸ்வரத்வம்
ச ப்ரஹ்மண -ஸர்வஸ்ய சேஷதாம் பதித்வம் ச ஈஸ்வரஸ்ய காஸ்சந் ப்ரதிபாத யந்தி
அந்தப் ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநாநாம் சர்வாத்மா -ஏஷத ஆத்மா அந்தர்யாம் அம்ருத
ஆத்மாவையும் அதைத் தூண்டுவோனையும் தனித் தனியானவை என்று அறிவாயாக –
துய்ப்பவன் துய்க்கப்படும் பொருள் துய்க்கச் செய்பவன் இருப்பதை அறிவாயாக
ப்ரஜாபதி ப்ரஜைகளைப் படைக்க விரும்பினான்
உலகிற்கும் தனக்கும் தனிப் பெரும் தலைவன் -நிலையானவன் -மங்களமானவன் -அண்டினாரை நழுவ விடாதவன் –
ஈஸ்வரர்கள் என்று கூறப்படுபவர்களின் நின்றும் வேறுபட்ட மஹேஸ்வரன்
தேவர்கள் எனப்படுவோரிலும் வேறுthevanதேவன்
எல்லோரையும் தன் வசப்படுத்துவோன்-எல்லாருக்கும் தான் வசப்படாதவன் எல்லோருக்கும் ஆள்பவனாய் இருப்பவன் -எல்லாவற்றையும் தன் செல்வமாக உடைyentruyellaameஎல்லாம்
ப்ரஹ்மம் எல்லாவற்றிலும் உட் புகுந்து இருத்தலையும்
எல்லாவற்றுக்கும் தலைவனாக இருத்தலையும்
இவை யாவற்றையும் தன் செல்வமாக அடைந்து இருத்தலையும் விளக்கி ப்ரஹ்மத்தின் எல்லாவற்றையும் ஆளுதல்
எல்லாவற்றையும் செல்வமாக உடைமை
எல்லாவற்றுக்கும் தலைமை
ஆகிய சிறப்புக்களை சில மறை மொழிகள் பறை சாற்றுகின்றன
இந்த ஆத்மா எல்லாவற்றிற்கும் நிலை பெற்று இருப்பவன்
இந்த ஆத்மா உள் இருப்பவன் அமுதமானவன் அழிவற்றவன்

யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆப சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் இத்யாதி
யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யு சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் இதி
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ப்ரஹ்மணஸ் ச சரீராத்ம பாவம் தர்சயந்தி காஸ்சந இதி
நாநா ரூபாணாம் வாக்யாநாம் அ விரோத முக்யார்த்த பரித்யாகஸ் ச யதா சம்பவதி ததைவ வர்ணனீயம் –

எவனுக்கு நிலம் உடலோ -எவனுக்கு நீர் உடலோ -எவனுக்கு தீ உடலோ -என்றும்
எவனுக்கு மூலப் ப்ரக்ருதி -கட் புலனாகாதது -உடலோ -எவனுக்கு ஆத்மா உடலோ -எவனுக்கு அழியும் ம்ருத்யு யமன் -உடலோ -எவனுக்கு உலகு உடலோ -என்று
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றை யாவும் அதற்கு உடலாகவும் அது அவற்றுக்கு உயிராகாவும் உறையும் தன்மையை சில வேத வாக்யங்கள் காட்டுகின்றன –
இவ்வாறு பலவாறு ப்ரஹ்மத்தின் நிலை கூறும் மொழிகளில் ஒன்றுக்கு ஓன்று கருத்து மாறுபடாது -முக்யமான பொருளைக் கை -விடாது எவ்வாறு அதன் நிலை தேறுகிறதோ
அதை ஆராய்வோம் –

வர்ணிதம் ச -அதிகார ஸ்ருதய ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா–நிர்க்குண வாதாஸ் ச பிராகிருத ஹேய குண நிஷேத
விஷய தயா வ்யவஸ்திதா நாநாத்வ நிஷேத வாதாஸ் ச ஏகஸ்யைவ ப்ரஹ்மண சரீர தயா பிரகார பூதம் சர்வம் சேதன அசேதனம் வஸ்த்விதி
சர்வஸ்யாத் மதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்திதமிதி ஸூ ரஷிதா-சர்வ விலக்ஷணத்வ பதித்தவ ஈஸ்வரத்வ-கல்யாண குணாகரத்வ –
ஸத்ய ஸங்கல்பத்வாதி வாக்யம் ததப்யுபகமாதேவ ஸூ ரஷிதாம் ஞான ஆனந்த மாத்ர வாதிச -ச்ரவஸ்மாதந் யஸ்ய சர்வ கல்யாண
குணாஸ்ரயஸ்ய சர்வேஸ்வரஸ்ய சர்வ சேஷிணே -சர்வ ஆதாரஸ்ய சர்வ உத்பத்தி ஸ்திதி ப்ரலய ஹேது பூதஸ்ய
நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய சர்வாத்ம பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபநி ரூபக தர்ம -மல ப்ரத்யநீக அநந்த ரூப
ஞானமேவேதி ஸ்வ பிரகாச தயா ஸ்வரூபமபி ஞானமேவேதி ச ப்ரதிபாதநாத் அநு பாலிதம் ஐக்ய வாதாஸ் ச
சரீராத்ம பாவேந சாமாநாதி கரண்ய -முக்யார்த்ததோப பாதநாதேவ ஸூஸ்திதா —

(இரண்டுமே சம ப்ராதான்யம் என்பதால் அபஹத பாப்மாதகாதிகளையும் சொல்லி ஸத்ய காமத்வம் ஸத்ய சங்கல்பத்துவம் ஒரே வாக்கியத்தில் சொல்லிற்று)

இது இவ்வாறு விவரிக்கப் படுகிறது
ப்ரஹ்மம் மாறுபாடு அற்றது என்னும் மொழிகளால் அதன் உள்ளுரு -ஆத்ம ஸ்வரூபம் -மாறு படாது இருத்தல் கருப் பொருளாய்க் கொள்ளப் படுகிறது
குணம் அற்றது என்று வாதிக்கும் மொழிகள் உலகியலின் இழி குணங்கள் சிறிதும் இன்மையைப் பேசுகின்றன
பலப்படிப் பட்டதாய் இருத்தலை மறுக்கும் வாக்கியங்களில் ஒரே ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதனப் பொருட்கள் நிலை பெற்று
அவற்றுள் நுழைந்து வதிதல் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
மற்றவற்றின் நின்றும் மாறுபட்டு அவை யாவற்றுக்கும் தலைவனாய் -அவற்றைத் தன் உடைமைகளாய்க் கொண்டு நற் பண்புகளின் கடல் எனத் திகழ்தல் -பிழை படா வினைத் திட்பம் உடைமை போன்ற சொற்களால் அதன் பண்புகள் ஒத்துக் கொள்ளப் படுகின்றன
ப்ரஹ்மம் மற்ற சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் மாறு பட்டது -நற் குணங்கள் யாவற்றுக்கும் இருப்பிடமானது -எப்பொருளையும் தன் உடைமையாய்க் கொண்டது -எதனையும் தன் அடிமை கொள்ள வல்லது – யாவற்றிக்கும் பற்றுக் கோடானது -யாவற்றிற்கும் ஆக்கல் அளித்தல் அழித்தலுக்கு காரணமானது குற்றங்கள் அற்றது -மாறு பாடு அற்றது -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பது -என்றும்
தனது அறுதியிடும் பண்பாக மலங்கள் அற்றதும் -ஞான ஆனந்தமே உரு வெடுத்ததாய் -தானே ஒளிர்வதாய் -ஞான மயமாய் இருக்கும் தன்மையைக் கொண்டதாய் ஞான ஆனந்தம் உள்ளது என்றும் -ஞான ஆனந்தம் மட்டுமே ப்ரஹ்மம் என்று அறுதியிடும் சொற்களும் உறுதி செய்கின்றன
ஐக்ய வாதத்தால் -ஒன்றே உண்டு எனக் கொள்வதால் -உடல் உயிர் தொடர்பால் -ஸாமா நாதி கரணம் -ஆகுபெயர் திரள் பொருளாய் நன்கு விளங்குகிறது

—————–

93–ஏவம் ச சதி அபேதா வா போதோ வா வ்யாத்யாத்ம கதாயா வா -வேதாந்த வேத்ய-கோயம் அர்த்த சர்மர்த்திதோ பவதி ?<br>ஸர்வஸ்ய வேத வேத்யத்வாத் சாவம் சமர்த்திதம் -சர்வ சரீரதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்த்திதம் இதி -அபேத சமர்த்தித-<br>ஏகமேவ ப்ரஹ்ம நாநா பூத சித் அசித் வஸ்துப் பிரகாரம் நாநாத் வேந அவஸ்திதம் இதி பேதா பேதவ்<br>அசித் வஸ்து நஸ் ச சித் வஸ்து நஸ் ச ஈஸ்வரஸ்ய ச ஸ்வரூப ஸ்வபாவ வை லஷண்யாத் அசம்காராஸ் ச பேத சமர்த்திதா

இக் கூற்றுக்களால் ஓரே படித்தாய் இருத்தலா அபேதமா -பல படித்தாய் இருத்தலா பேதமா -இரண்டும் கலந்ததா -எது வேதாந்தத்தால் இங்கு நிறுவப்படுகிறது -என்று கேட்டால்
இவை யாவும் மறை மொழிகளாதலால் இவை aயாவுமே கொள்ளப் பட வேண்டும் எதுவும் தள்ளப்பட லாகாது –
எல்லாவற்றையும் உடலாகக் கொண்டு அவற்றின் நின்றும் பிரிவற்ற நிலையில் ப்ரஹ்மம் ஒன்றே உறைகிறது என்பதால் பேதமின்மையும் ஒரே ப்ரஹ்மம் பல உருவங்களுடைய சேதன அசேதன பொருள்களில் பலவகையாக உறைந்து விளங்குகிறது -என்பதால்
பேதா பேதமும்
சேதன அசேதன பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டு அவற்றுக்கு உடமைகாரனாய் விளங்கி அவற்றின் நின்றும் உருவாலும் உயிராலும் வேறுபட்டு இருப்பதால் பேத வாதமும் ஒத்துக் கொள்ளப் படுகிறது

———–

94–நநு ச -தத்வமஸி ஸ்வேத கேதோ -தஸ்யதா தேவ சிரம் -இதி ஐக்ய ஞான மேவ பரம புருஷார்த்த லேசான மோக்ஷ சாதனம்
இதி கம்யதே நைத தேவம் -ப்ருதகாத்மாநம் பிரேரிதாரம் சமதவா ஜூஷ்டஸ்தஸ்தே நாம்ருதத்வமேதி
இதி ஆத்மாநம் பிரேரிதாரம் ச அந்தர்யாமிணம் ப்ருதக்மத்வா தத ப்ருதக்த்வ ஞானத்தோதோ தேந பரமாத்மநா ஜூஷ்ட அம்ருதத்வமேதி
இதி சாஷாத் அம்ருதத்வ பிராப்தி சாதனம் ஆத்மந நியந்துஸ் ச ப்ருதக்பாவ ஜினாமம் இத்யவகம்யதே
ஐக்ய வாக்ய விரோதாத் ஏதத் ஏதத் அபரமார்த்த ச குண ப்ரஹ்ம பிராப்தி விஷயமிதி அப்யுப கந்தவ்யம்
இதி சேத் ப்ருதக் ஞானஸ்யைவ சாஷாத் அம்ருதத்வப் பிராப்தி சாதனத்தவ ஸ்ராவணாத் விபரீதம் கஸ்மாத் ந பவதி –

அவ்வாறு இல்லை -நீயே அதுவாகிறாய் ஸ்வேத கேது -உபாஸிப்பவனுக்கு -அதுவரை hடான் -ஐக்ய ஞானம் அடையும் வரை தான் -கால விளம்பம் -உடலை நீத்தவுடன் ப்ரஹ்மமாகவே ஆகி விடுகிறான் என்று –
ஒன்றேனும் அறிவே பெறற்கு அரிய பேர் ஆனந்த மோக்ஷத்தை அடைவிக்கும் ஸாதனமாகிறது -என்று கூறுவீர்களாகில் -அத்வைதிகள்-அவ்வாறும் இல்லை –
ஆத்மாவையும் அதை ஆள்பவனையும் தனித் தனியானவர்கள் என அறிந்து -அவன் அருளுக்கு இலக்காகி -மோக்ஷம் அடைகிறான் -என்று ஆத்மாவின் உள்ளுறைவோனாய் -அதை ஆள்பவன் வேறுபட்டு விளங்குகிறான் என்பதை உணர்ந்து அந்த வேறுபட்ட ஞானத்தாலேயே அந்தப் பரமாத்மாவை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருக்கிறது
ஆயினும் உலகம் ஒருபடித்தானது என்ற அபேத ஞானத்தாலே மேலான மோக்ஷத்தை அடைகிறான் என்றும்
அதற்கு மாறாக உலகம் பல படித்தானது என்னும் பேத ஞானத்தாலே தாழ்ந்த குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை அடைதலாகும் என்பீராகில்
பேத ஞானத்தால் மோக்ஷத்தை அடைகிறான் என்று வெளிப்படையாகக் கூறப்பட்டு இருப்பதால் -அபேத ஞானத்தால் அவ்வாறு கூறப்படவில்லை -அதற்கு aமாறுபாடான கருத்துக் கொள்வது விபரீதமாகும் ஆகையால் ஐக்ய ஞானத்தால் கிடைப்பது தாழ்ந்த மோக்ஷம் என்று ஏன் கொள்ளக் கூடாது –

ஏதத் யுக்தம் பவதி -த்வயோ துல்யயோ விரோதே சதி அவிரோதந தயோ விஷய விவேச நீய -இதி கதம விரோத இதி சேத்
அந்தர்யாமி ரூபேண அவஸ்தித தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண சரீர தயா பிரகாரத்வாத் ஜீவாத்மந-தத் பிரகாரம் ப்ரஹ்ம ஏவ தவம்
இதி சப்தேந அபி தீயதே ததைவ ஞாதவ்யம் இதி தஸ்ய வாக்யஸ்ய அர்த்த ஏவம் பூதாத் ஜீவாத் ததாத்மதயா அவஸ்தி தஸ்ய
பரமாத்மநோ நிகில தோஷ ரஹிததயா ஸத்யஸங்கல்பத்வாத் யநவதிக யதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரத்தவே
ந ச ய ப்ருதக்பாவ ஸோநுசந்தேய இதி அஸ்ய வாக்யஸ்ய விஷய இத்யயமர்த்த பூர்வமேவ அஸக்ருத் யுக்த –

இதை விளக்குவோம் -ஒத்த பலமுடைய இரு கருத்துக்கள் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடாகத் தோன்று மாகில் -அவற்றின் மாறுபாடுகளை விலக்கி -இரு கருத்துக்களுக்கும் ஏற்பப் பொருள் கொள்ளுதலே தகுந்தது –
மாறு பாடு எங்கே தோன்றுகிறது எனில்
ஆத்மாவில் உள்ளுறைவோனாக பர ப்ரஹ்மம் இருக்கிறது -அதற்கு உடல் என்னும் நிலையில் அதின் நின்றும் பிரிவற்றதாக ஆத்மா விளங்குகிறது
இது முறையே -தத் -அது -த்வம் -நீ என்ற சொற்களால் கூறப்படுகிறது-இதை அறிவதே மெய் ஞானம் என்பதே பொருள் -இவ்வாறு பிராணிகளின் உயிர்களுக்கும் அதன் உள்ளுறைவோனாகவும் குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் -மெய்யான வினைத் திட்பம் உடையோனாகவும் -எல்லையற்ற அதிசயமான நற் குணங்களை யுடையோனாகவும் -தனித்தன்மை இங்கு கொள்ளத் தக்கது –
இதுவே இவ் வாக்கியத்தின் பொருள் -இது முன்பே பலதடவை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது –

———–

95–போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா-இதி போக்ய பூதஸ்ய வஸ்துந அசேதனத்வம் பரார் தத்வம்-சதத விகாராஸ்ப தத்வம் –
இத்யாதய ஸ்வபாவா போக்து ஜீவாத்மநஸ் ச அமல அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வ பாவஸ்யைவ அநாதி கர்ம ரூபா வித்யாக்ருத
நாநாவித ஞான சங்கோச விகாசவ் போக்ய பூதா சித் வஸ்து சம்சர்க்கஸ் ச பரமாத்மா உபாஸநாத் மேஷஸ் ச இத்யாதய
ஸ்வ பாவா ஏவம் பூத போக்த்ரு போக்யயோ அந்தர்யாமி ரூபேண அவஸ்தாநம் ஸ்வரூபேண
ச அபரிமித குணவ்க ஆஸ்ரயத்வேந அவஸ்தானம் இதி பரஸ்ய ப்ரும்ஹண த்ரிவிதா வஸ்தாநம் ஞாதவ்யம் இத்யர்த்த —

துய்ப்பவன்- துய்க்கப்படுவது -இவற்றைத் துய்க்கச் செய்பவன் -என்பதை அறிந்து என்பதால் துய்க்கப்படும் பொருட்கள் அறிவற்றவையாகவும் -பிறருக்கே யாகவும் -எப்பொழுதும் மாறுபாடு அடைந்து கொண்டு இருப்பவை யாகவும் இருத்தலே அவற்றின் பண்புகள் ஆகின்றன –
துய்ப்பவன் -ஜீவாத்மா -குற்றமற்று அளவற்ற ஞானத்தையும் -ஆனந்தத்தையும் -பண்புகளாய்க் கொண்டவனாய் -துவக்கற்ற வினையின் அடியாகப் பிறந்த -பல படித்தான ஞானச் சுருக்கையும் விரிவையும் உடையோனாய் அசேதன பொருட்களைத் துய்ப்போனாய் பரமாத்மாவை உபாஸித்து வீடு பேறு அடைதலைத் தன் செயல்களாக உடையவனாய் இருக்கிறான்
இவ்வாறு துய்ப்பவன் -துய்க்கப் படுவதற்கு உள்ளுறைவோனாக இருந்து கொண்டு -தன் மெய்யுருவில் அளவற்ற நற் குணங்களுக்கு இருப்பிடமாய் இருத்தல் ப்ரஹ்மத்தின் பண்பு -இவ்வாறு மூன்று படிப்பட்ட பொருள்கள் அறியத் தக்கவை என்பது பொருள்-

—————-

96 —தத்வமஸி -இதி சத் வித்யாயாம் உபாஸ்யம் ப்ரஹ்ம ச குணம் ச குண ப்ரஹ்ம பிராப்திஸ் ச பலம் –
இத்யபியுக்தை பூர்வாசார்யை வ்யாக்யாதம்

அது நீயாகிறாய் -தத்வமஸி -என்ற வாக்யத்திற்கு பண்புகளுடன் கூடிய உபாஸனையால் -பண்புகள் நிறைந்த ப்ரஹ்மத்தை இடையறாது தியானித்து உயர்வற உயர் நலம் உடைய ப்ரஹ்மத்தையே அடைதல் என்று முந்தையோர் உரைகளில் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது –
யதோக்தம் வாக்யகாரேன-யுக்தம் தத் குணக உபாஸநாத் -இதி வ்யாக்யாதம் ச த்ரமிட ஆச்சார்யேனே வித்ய விகல்பம் வததா-
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண தைவதம் குண கணம் மனசா அநுதாவேத் தாதாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே
இதி தத்ரபி ச குண ஏவதா ப்ராப்யதே -இதி சச்சித்த ஸத்வித்யா நிஷ்ட –
ந நிர் நிர்புக்ணதைவதம் குண கணம் மனசாநுதா வேத்-
அபஹத பாப்மத்வாதி கல்யாண குண கணம் தைவதாத் விபக்தம் யத்யபி தஹர வித்யா நிஷ்ட இவ
சச்சித்தோ நஸ்மரேத் ததாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே-தேவ ஸ்வரூப அநு பந்தித்வாத்-
சகல கல்யாண குண கணஸ்ய கேநசித் பரதேவதா அசாதாரண்யேந நிகில ஜகாத் காரணத்வாதிந குணேன உபாஸ்யமாநோபி
தேவதா வஸ்துந ஸ்வரூப அநு பந்தி சர்வ கல்யாண குண விஸிஷ்ட ஏவ உபாஸ்யதே அத ச குணம் ஏவ ப்ரஹ்ம
தத்ராபி ப்ராப்யம் இதி ஸத்வித்யா தஹர வித்யயோ விகல்ப இத்யர்த்த –

இதை ஒட்டியே வாக்யகாரரும் -அந்த குணங்கள் இடையறாது தியானிப்பதே தகுந்தது -எனக் கூறி யுள்ளார் –
உரையாசிரியர்களான த்ரமிடாச்சார்யரும் இதையே இடையறாத த்யான நெறிகளில் -வித்யைகளில் -மாறுபாடுகள் இல்லை என்கிறார் –
உபநிஷத்துக்களில் 32 ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -அவற்றில் ஸத் வித்யையும் தஹர வித்யையும் அடங்கும் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் ப்ரஹ்மத்தின் செயல்பாட்டுப் பண்புகளை மனத்தில் கொள்கிறார்கள்
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள்ப்ரஹ்மத்தின் வெளிப்படையான பண்புகளை நினைக்கிறார்கள் –
ஸத் வித்யையில் ஊற்றமுடையவர்கள் பாபம் சிறிதும் அற்றல் போன்ற நற் குணங்கள் நிறைந்த ப்ரஹ்மத்தை பக்தி செய்கிறார்கள் –
அவ்வாறே தஹர வித்யையில் ஊற்றமுடையவர்கள் இந்த பண்புகளை நினைக்காமல் ப்ரஹ்மத்தின் உள்ளுறை பண்புகளை ஸ்துதிக்கிறார்கள் –
தேவனுடைய உள்ளுரு நற் குணங்கள் யாவும் நிறைந்தது என்பதால் அதன் சிறப்புக் குணங்களான உலகின் காரணப் பொருளாய் இருப்பது போன்றவைகளும் உள்ளுருவிற்கு எப்பொழுதும் யுடைய நற் குணங்கள் யாவும் இடையறாது த்யானிக்கப் படுகின்றன –
ஆகையால் எந்த விதமாக இடையறாத த்யானம் அமைந்தாலும் அதனால் உபாஸிக்கப் படுவதும் அவ்வாறு த்யானிக்கப் படுவதும் அதனால் அவர்கள் இறுதியில் அடைவதும் உயர்வற உயர்நலம் உடைய ப்ரஹ்மத்தையே நெறிகளில் மட்டும் மாறுபாடு உள்ளது என்பதே பொருள் –

————-

97–நநு ச ஸர்வஸ்ய ஐந்தோ பரமாத்மா அந்தர்யாமி தந் நியாம்யம் ச சர்வம் -இத்யுக்தம் –
ஏவம் ச சதி விதி நிஷேத சாஸ்த்ராணாம் அதிகாரி ந த்ருச்யதே ய ஸ்வ புத்யைவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸக்த-
ச ஏவம் குர்யாத் ந குர்யாதிதி விதி நிஷேத யோக்ய ந ஸைஷ த்ருச்யதே -சர்வஸ்மிந் ப்ரவ்ருத்தி ஜாதி
ஸர்வஸ்ய பிரேரக பரமாத்மா காரயிதா -இதி தஸ்ய சர்வ நியமனம் ப்ரதிபாதிதம் ஸ்ரூயதே ச ஏஷ ஏவ சாதுகர்ம காராயதி
தம்யமேப்யோ லோகேப்யே உந்நிநீஷதி ஏஷ ஏவ அசாது கர்ம காராயதி தம் யமதோ நிநீஷதி
இதி சாத்வ சாது கர்ம காரயித்ருத்வாத் நைர் க்ருண்யம் ச –

பிராணிகள் யாவற்றிலும் உள்ளுறைந்து அவற்றை ஏவல் கொள்கிறான் -என்பதால்
விதித்தல் தடுத்தல் ஆகிய வற்றைச் செய்பவர் என்று ஒருவரும் காணப்படுவதில்லை
பரமாத்மா தானே ஒருவரை ஒன்றில் ஈடுபடுத்தலும் விலக்கலும் செய்வதால் சில செயல்களைச் செய்விப்பவதும் செயல்களில் நின்றும் விலக்குதலும் ஆகிய விதித்தல் தடுத்தல் இங்கு காணப்படுவதில்லை ஏன் எனில் யாவற்றையும் செயல் படத் தூண்டுபவன் பரமாத்மாவே யாதலால் யாவும் அவன் செயல் என்று கொள்ளப்படும் –
வேதத்திலும் இப்படிப்பட்ட நற் கருமங்கள் செய்பவன் உலகில் உயர்த்தப் படுகிறான் -இப்படிப் பட்ட தீய செயல்களைச் செய்பவன் தாழ்த்தப் படுகிறான் என்று கூறப்பட்டுள்ளது -இவ்வாறு ஒருவரை நற் செயல்களும் மற்ற ஒருவரை தீய செயல்களைச் செய்யத் தூண்டுவதால் ஈஸ்வரனுக்கு நடு நிலைமை தவறுதல் ஏற்படும்

அதிர உச்யதே -ஸர்வேஷாமேவ சேதநாநாம் சிச் சக்தி யோக ப்ரவ்ருத்தி சக்தி யோக -இத்யாதி
சர்வம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரிகரம் சாமாந்யேந சம்பவித்தாய தந் நிர்வஹணாய-தத் ஆதாரோ பூத்வா அந்தப் பிரவிஸ்ய
அநுமந்த்ரு தயா ச நியமனம் குர்வந் -சேஷித்வேந அவஸ்தித பரமாத்மா ஏததாஹித சக்திஸ் ஸந் ப்ரவ்ருத்தி நிவ்ருத்யாதி
ஸ்வயமேவ குருதே-ஏவம் குர்வாண மீஷமாண பரமாத்மா உதாசீந ஆஸ்தே அத சர்வம் உபபந்நம் –

அது அவ்வாறு அல்ல -எல்லாச் சேதனப் பொருள்களுக்கும் உயிர் எனும் ஞானப்பொருள் காணப்படுவதால் அவற்றுக்கு -உடல் புலன்களைக் கொண்டு -ஒரு செயலை செய்வதற்கு திறமை ஏற்படுகிறது –
ஒரு செயலில் ஈடுபடுவதற்கும் அதினின்று விலகுவதற்கும் ஆன அறிவு ஏற்படுகிறது -இவற்றை அளித்த ஸர்வேஸ்வரன் உள்ளிருந்து கொண்டு ஆத்மா விரும்பிய செயலைச் செய்ய அனுமதி அளித்து தான் நடு நிலையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் –
இதனால் அவன் அளித்த உடல் புலன்கள் அறிவு இவை பலனுடையவை ஆகின்றன-

சாத்வ சாது கர்ம காரயித்ருத்வம் து வ்யவஸ்தித விஷயம் ந சர்வ சாதாரணம் –
யஸ்து பூர்வம் ஸ்வயமேவ அதி மாத்ரம் ஆநு கூல்யே ப்ரவ்ருத்த தம் பிரதி ப்ரீதி -ஸ்வயமேவ பகவான்
கல்யாண புத்தி யோகதானம் குர்வந் கல்யாணே ப்ரவர்த்தயதி
ய புந அதி மாத்ரம் பிராதி கூல்யே ப்ரவ்ருத்த தஸ்ய து க்ரூராம் புத்திம் ததந் ஸ்வயமேவ க்ரூரேஷ் வேவ கர்மஸூ பரேரயதி பகவாந்
நற் செயல்களைப் புரிதல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவது இல்லை
எவர் முற் பிறப்பில் ஸாஸ்த்ரங்களில் கூறியபடி-விதிக்கப்பட்டவற்றை பெரும் அளவில் செய்து இருக்கிறாரோ -அவருக்கு நற் புத்தியையும் -நற் செயல்களில் விருப்பத்தையும் ஏற்படுத்துகிறான் –
அப்படியே எவர் அதிக அளவில் தீயச் செயல்கள் செய்திருக்கிறாரோ அவருக்கு கொடுமையான புத்தியைக் கொடுத்து -தானே கொடுமையான செயல்களிலே ஈடுபடுத்துகிறான் –

யதோக்தம் பகவதா-தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே
தேஷாமேவாநுகம் பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாஸாயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
தா நஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாந் ஆஸூரீஷ் வேவ யோநிஷு இதி –

அவ்வாறே பகவத் கீதையில்
என்னிடம் எப்பொழுதுமே சேர்ந்து இருக்க விரும்புகிறவர்களுக்கும் பக்தி செலுத்துவோருக்கும் என்னை அடைவதற்கு வழி காட்டியான பரமாத்மா பற்றிய ஞானத்தை -பர ஞானத்தை -விருப்புடன் அளிக்கிறேன்
அப்படிப்பட்ட பக்தியில் ஒன்றி இருப்பவர்களிடம் என் அருளினாலேயே அவர்கள் மனதுக்கு உகப்பானவனாய் எனது ஞானமாகிற ஒளி விளக்கால் பண்டை வினைகளால் உண்டான அஞ்ஞானமாகிற அந்தகாரத்தை அழிக்கிறேன்
என்னை வெறுப்பவர்களை கொடியவர்களாய் மாந்தரில் கடையராய் அமங்கலமானவர்களாய் ஆகும்படி தொடர்ந்து பிறப்பு இறப்புகளைக் கொடுத்து அசுரப் பிறவிகளில் தள்ளுகிறேன் என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது

———————

98–சோயம் பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம நிரதிசய புண்ய சஞ்சயஷீண -அசேஷ ஜென்ம உபசித பாபராஸே
பரம புருஷ சரணாரவிந்த -சரணாகதி ஜெநித ததாபி முக்யஸ்ய -தத் ஆச்சார்ய உபதேச உப ப்ரும்ஹிதா சாஸ்த்ராதி கத
தத்வ யாதாத்ம்ய அவ போத பூர்வக -அஹர் அஹர் ரூப சீயமாந -சம தம தப ஸுவ்ஸ-ஷம-ஆர்ஜவ -பய அபய ஸ்தாந விவேக தயா –
அஹிம் சாத்யாத்ம குணா பேதஸ்ய-வர்ணாஸ்ரம உசித பரம புருஷ ஆராதன வேஷ-நித்ய நைமித்திக கர்ம உப சங்ஹ்ருதி –
நிஷித்த பரிகார நிஷ்டஸ்ய-பரம புருஷ சரணார விந்தை யுகள ந்யஸ்தா
ஆத்மாத்மீயஸ்ய தத் பக்தி காரிதா நவரதஸ்துதி -ஸ்ம்ருதி -நமஸ் கிருதி யதந கீர்த்தன குண ஸ்ரவண -வசந-த்யான –
அர்ச்சன பிரணாமாதி ப்ரீதி பரம காருணிக புருஷோத்தம பிரசாத வித்வஸ்தஸ்வாந் தஸ்ய அநந்ய ப்ரயோஜன
அநவரத நிரதிசயப் பிரிய விசத தம ப்ரத்யக்ஷதா பந்ந அநு த்யான ரூபக்த்யைக லப்ய —

இப்படிப்பட்ட பர ப்ரஹ்மமான புருஷோத்மன் -எல்லையற்ற நற் செயல்களைச் செய்தவனாய் -பிறப்பினால் வந்த வினைத்தொடர் சிறிதும் அற்றவனாய் -பரம புருஷனுடைய திருவடித் தாமரைகளையே சரணம் அடைந்தவனாய் -அதில் ஊற்றம் உடையோனாய் அதனால் தூண்டப்பட்டு ஓர் நல்லாசிரியனை அடைந்து அவனால் உபதேசிக்கப் பட்ட ஸாஸ்த்ரங்களின் அடியாக மெய்ப் பொருளை உணர்ந்தவனாய் தினம்தோறும் வளர்கின்ற புலன் அடக்கம் -புலன்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுதல் -ஸாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விரதங்களை மேற் கொண்டு மனத் தூய்மை யாதல் -உடல் சொல் செயலால் தூய்மையாய் இருத்தல் -மனம் மொழி மெய்களால் ஒருப்பட்டு இருத்தல் – அஞ்சுவது அஞ்சாமை பகுத்து அறிதல் -இரக்கம் பிறருக்குத் துன்பம் நினையாது இருத்தல் பொறை ஆகிய நற் குணங்கள் கைவரப் பெற்றவனாய் -தனக்கு ஏற்ப வர்ணாஸ்ரம நெறிகளைக் கடைப் பிடிப்பவனாய் பரம புருஷனை ஆராதிப்பவனாய் -நாள் தோறும் மற்றும் சிறப்பான நாட்களிலும் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்பவனாய் -விலக்கப்பட்ட செயல்களின் நின்றும் விலகியவனாய் -பரமபுருஷனுடைய திருவடித் தாமரைகளில் தனது உடல் உயிர்ச் சுமைகள் யாவையும் வைத்தவனாய் -அந்த பக்தி மேலீட்டில் இடைவிடாது ஸ்துதித்தல் -நினைத்தல் -வணங்குதல் -அதற்கான முயற்சிகளைச் செய்தல் -அவன் புகழ் பாடுதல் -அவன் பண்புகளைக் கேட்டல் -அவனைப் பற்றியே பேசல் -இடைவிடாது மனத்திருத்தல் அர்ச்சித்தல் தண்டன் இடுதல் -இவற்றால் மனம் உகந்து ஈசனால் தன் மன இருள் நீங்கியவனாய் -வேறு பலன்களை எதிர் நோக்காது -என்றும் எல்லாவற்றிலும் அன்புடையவனாய் -அவனுடைய திரு உருவை -மிகத் தெளிவாக நேரே காண்பது போன்ற நிலையை பக்தியுடன் கூடிய தியானத்தால் அடைய முடியும்-

————–

99–ததுக்கதம் பரம குருபிஸ் பகவத் யாமுனாச்சார்ய பாதவ் –
உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய -இதி ஞான யோக கர்ம யோக
ஸம்ஸ்க்ருத அந்தக் கரணஸ்ய–இத்யர்த்த –

அதை ஒட்டியே பரம ஆச்சார்யனும் மதிப்புக்கு உரியவரான யமுனாச்சார்யரும் -கர்ம ஞாந யோகங்களைச் செய்து -அதனால் தூய்மை யடைந்த மனத்துடன் ஒரே நினைவாக -நிலை நிற்கிறவராலேயே எம்பெருமான் அடையத் தக்கவன் -என்று கூறி இருக்கிறார் -ஞான கர்ம யோகங்களால் நன்கு பண் படுத்தப்பட்ட மனம் -என்று பொருள் –
ததாச ஸ்ருதி —
வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வே தோபயம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –இதி –
அத்ர அவித்யா சப்தேந வித்ய இதரத் வர்ணாஸ்ரம ஆசாராதி பூர்வோக்தம் கர்ம உச்யதே
வித்யா சப்தேந பக்தி ரூபாபந்ந த்யானம் உச்யதே —

அவ்வாறே வேதமும் -ஞானம் கர்மம் இரண்டும் ஒன்று என்று அறிபவர் கர்மத்தினால் பிறவிச் சூழலைக் கடந்து ஞானத்தால் அழிவற்ற நிலை எய்துகிறார் –
இங்கு அவித்யை என்ற சொல்லால் வித்யையாகிற ஞானத்தின் நின்றும் வேறுபட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கு ஏற்ற செயல்கள் சுட்டிக் காட்டப் படுகிறது
வித்யை என்பது பக்தியே உருவெடுத்த ஞானம் என்று சொல்லப்பட்டது –

யதோக்தம் -இயாஜஸோபி ஸூ பஷந் யஞ்ஞாந் ஞாந வ்யாபாஸ்ரய –
ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா இதி
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நாந்யப் பந்தா அயநாயா வித்யதே
ய ஏநம் விதுரம்ருதாஸ்தி பவந்தி –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி -இத்யாதி வேதந சப்தேந த்யானமேவா பிஹிதம்
நிதித்யாசி தவ்ய-இத்யாதிநா ஐக அர்த்யாத்-ததேவ த்யானம் புநரபி விசிநஷ்டி –
நாயமாத்மா ப்ரவசனேந லப்ய -நமேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷா வ்ருணுதே தேந லப்ய-
தஸ்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம் -இதி பக்தி ரூபா பந்ந அநு த்யாநேநைவ லப்யதே
ந கேவல வேதேந மாத்ரேண நமேதயா-இதி கேவலஸ்ய நிஷித்தத்வாத் ஏததுக்தம் பவதி –
யோயாம் முமுஷு வேதாந்த விஹித வேதந ரூப த்யாநாதி நிஷ்ட-யதா தஸ்ய தஸ்மிந் நேவ அநு த்யாநே
நிரவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ததைவ தேந லப்யதே பர புருஷ இதி –

(தத்வமஸி-மோக்ஷ சாதனா உபதேசம் -அத்வைதிகள் ஞான மாத்திரம் -ஐக்ய ஞான விசேஷம் உண்டான அனந்தரம் மோக்ஷம்
உபாஸனமே மோக்ஷ சாதனம் -பக்தி ஒன்றிய பக்தி -உடன் சேர்ந்து- துஷ்ட -குண அனுபவம்-பிராட்டி போல பிரிக்க முடியாமல் -)

யதோக்தம் பகவதா புருஷஸ்ய பரப் பார்த்தா பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா -பக்த்யாத்வ நந்யயா ஸக்ய
அஹமேத்வம் விதோர்ஜூந ஞானம் த்ருஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப பக்த்யாம் மாம் அபி ஜாநாதி

அதற்கு ஏற்ப தத்வ த்ரய ஞானத்தால் -ப்ரஹ்ம ஞானம் ஏறிடப்பட்டு கடமைகளை ஆற்றுவதாலே அழிவை விலக்கி ஞானம் நிரம்பியவராய் ஸுபமான யாகங்கள் பலவற்றை இறை வழிபாடாக செய்தார்அப் பரமாத்மாவை இவ்வாறு அறிபவன் இவ்வுலகிலேயே மோக்ஷம் அடைந்தவனாகிறான் -பரமாத்மாவை அடைவதற்கு வேறு வழிகள் ஏதும் இல்லை -எவர்கள் இந்தப் பரமாத்மாவை அறிகின்றனரோ அவர்கள் மோக்ஷம் அடைகின்றனர்ப்ரஹ்மத்தை அறிந்தவன் பர உலகை அடைகிறான் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் அந்தப் ப்ரஹ்மம் போன்றே ஆகிறான் -என்று கூறப் பட்டு இருக்கிறது -வேதனம் என்ற சொல் தியானம் செய்தல் இடைவிடாது நினைத்தல் இவற்றுடன் ஒத்த பொருள் கொண்டதாகிறது -இந்தப் பரமாத்மா நினைவிலே மட்டும் அடையப்படுவது இல்லை -தெளிந்த அறிவினாலும் அடையப்படுவதில்லை -பல கேள்வியிலும் அல்ல -எவனை பரமாத்மா விரும்புகிறானோ அவனாலேயே அடையப்படுகிறான் -அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு தன் திருமேனியை -இந்தப் பிரபஞ்சத்தை தானே காட்டிக் கொடுக்கிறான் -பக்தியே உருவெடுத்த ஞானத்தால் மட்டும் அடையப்படுகிறான் -வறட்டு தியானத்தால் அடையப்படுபவன் அல்ல -தெளிந்த அறிவினால் அல்ல என்பது அறிவு ஒன்றையே உடைய தியானத்தால் அல்ல -என்று விலக்குகிறது -இது கீழ் வருமாறு விளக்கப்படுகிறது -வீடு பேறு வேண்டி வேதாந்தத்தால் ஏற்பட்டு இருக்கும் தெளிவான ஞானத்தால் அதில் ஊற்றம் உடையவனாய் இருப்போன் அந்த தியானத்திலேயே எல்லையற்ற விருப்பம் கொண்டவனாகி அதனடியாகவே பரம புருஷனை அடைகிறான்அவ்வாறே பகவத் கீதையிலும்பார்த்தனே பரம புருஷனாகிய நான் -மற்றவைகளால் அல்லாது என்னிடமே செலுத்தப்படும் பக்தியால் மட்டுமே அடையத் தக்கவன் -எதிரிகளை வாட்டுபவனே அர்ஜுனா என்னைப் பற்றி மெய்யறிவு கொள்வதற்கும் -என்னைப் பார்ப்பதற்கும் என்னைத் துய்ப்பதற்கும் வேறொரு இடத்தில் அன்றி என்னிடமே செலுத்தப்படும் பக்தியாலே மட்டுமே இயலும் -11-54-
யாவாந் யஸ் சாஸ்மி தத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததந்தரம் -இதி ததனந்தரம் மாம் தத ஏவ பக்கத்தே விசாதே
இத்யர்த்த பக்திர் அபி நிரதிசய ப்ரிய அநந்ய ப்ரயோஜன ஸ்வ இதர வை த்ருஷ்ண்யாவஹ ஞான விசேஷ
ஏவேதி தத் யுக்த ஏவ தேந பரேண ஆத்மநா வரநீயோ பவதீதி தேந லப்யதே இதி ஸ்ருதி யர்த்த

உள்ளுருவாலும் பண்புகளாலும் குணங்களாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவன் என்பதை பரம் பொருள் மீதான பக்தியாலே உள்ளபடி அறிந்து பிறகு அந்த பரபக்தியாலேயே என்னை முழுமையாக அடைகிறான் -என்று கூறப்படுகிறது -பிறகு இப்படிப்பட்ட பக்தியாலேயே என்னை நன்கு துய்க்கிறான் -என்பது பொருள்-பக்தி என்பது -எல்லையற்ற விருப்புடன் வேறு பயன் கருதாது மற்றைய விருப்பங்கள் யாவும் நீங்கியதாய் இருப்பது -வைராக்யம் -இதற்கேற்ப ஒழுகுபவர் பரமாத்மாவால் தன்னுடையவன் என்று கருதப்பட்டு அவனாலேயே தன்னிடம் சேர்த்துக் கொள்ளப் படுகிறார் என்பதே மறையின் பொருள்
ஏவம் வித பயபக்தி ரூப ஞான விசேஷஸ்ய உத்பாதாக -பூர்வ யுக்த அஹர் அஹர் ரூப ஸீயமாந ஞான பூர்வக –
கர்ம அநு க்ருஹீத பக்தி யோக ஏவ –

யதோக்தம் பகவதா பராசரேன
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமாந்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாணய தத் தோஷகாரக -( ஸ்ரீ விஷ்ணு புராணம் -காண்டிக்ய கேசித்வஜ உபாக்யானம் -)

இப்படிப் பட்ட ஞானத்தால் தூண்டப்பட்டு முன்பே விளக்கிய தினம் தோறும் வளரும் ஞானத்திற்கு தான் கைக் கொண்ட வர்ணாஸ்ரம தர்மங்கள் வழியாகப் பெற்ற பக்தியாலே ஜீவனிடம் பக்தி யோகம் உண்டாகும்

அப்படியே பராசரரும் -மனிதர்கள் வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதன் மூலமாக விஷ்ணுவை ஆராதித்தே பரமபுருஷனை அடைய இதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்கிறார் –
இதி நிகில ஜகத் உத்தாரணாய அவநிதளே அவதீர்ண பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம ஸ்வயமேவ ஏதத் உக்தவாந்
ஸ்வ கர்ம நிரதஸ் சித்தம் யதா விந்ததி தச் ச்ருணு -யத ப்ரவ்ருத்தி பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மாநவ –இதி யதோதித க்ரம பரிணத பக்த்யேக லப்ய ஏவ —

இவ் வுலகை மேம்படுத்துவதற்காக அவதரித்த பர ப்ரஹ்மமான புருஷோத்தமனே இதைச் சொல்கிறான்
தன் கடமைகளைச் செய்பவன் எவ்வாறு வீடு பேறு அடைகிறான் என்பதைக் கேட்ப்பாயாக
எவனிடமிருந்து இப் பொருட்கள் யாவற்றிக்கும் தோற்றம் முதலியவை ஏற்படுகின்றதோ -எவனாலே இவை யாவும் நிறைக்கப்பட்டுள்ளதோ -அவனைத் தனக்குரிய வர்ணாஸ்ரமப்படி -கடைமைப்படி -ஆராதனையைச் செய்து மனிதன் மேலான வீடு பேற்றை அடைகிறான் –
இவ்வாறு தனக்கு உரிய கடைமைகளை முறையாகச் செய்து அதனால் தூண்டப்பட்ட பக்தியாலேயே பகவான் அடையப் படுகிறான்

—————-

100-பகவத் போதாயன -டங்க-த்ரமிட -குஹதேவ-கபர்தி -பாருசிப்ரபிருதி -அவிகீத-சிஷ்ட பரிக்ருஹீத –
புராதன வேத வேதாந்த வ்யாக்யான ஸூவ்யக் தார்த்த ஸ்ருதி நிகர நிதர்சிதோயம் பந்தா —
அநேந -சார்வாக -சாக்ய-ஓவ்லூக்ய -அஷபாத -ஷபனிக-கபில -பதஞ்சலி -மத அநு ஸாரினோ
வேத பாஹ்யா வேதா வலம்பி குத்ருஷ்ட்டி பிஸ் ஸஹ நிரஸ்தா –

போதாயன பகவான் -டங்கர் -த்ரமிடர் -குஹ தேவர் -கபர்தி -பாருசி -முதலான சிறந்த சான்றோர்களால் கைக் கொள்ளப் பட்ட பழமையான வேத வேதாந்த விரிவுரைகளில் வேதக்கூட்டங்களின் திரண்ட கருத்துக்கள் தெளிவாகக் காட்டப்பட்டு இருக்கின்றனஇதற்கு மாறான -ஸார்வாக -நாஸ்திக – சாக்ய -புத்த -ஓவ்லுக்ய-நியாய தர்க்க வாதிகள் அக்ஷ பாத-வைசேஷிகம் சமண கபில -சாங்க்ய – பதஞ்சலி-யோகம் ஆகியோருடைய கொள்கைகளைப் பின் பற்றுவோர் வேதங்களுக்குப் புறம்பானவர்கள் என்றும்அவைகளுக்கு உட்பட்ட பொருளைத் திரித்து கூறுவோர்கள் என்றும் விலக்கப் படுகின்றனர்
வேதா வலம்பிநாம் அபி யதா வஸ்தித வஸ்து விபர்யஸ்த த்ருஸாம் பாஹ்ய சாம்யம் மநுநைவ யுக்தம்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யஸ்ஸ காஸ் ஸ குத்ருஷ்டய
சர்வஸ்தா நிஷ்பல ப்ரேத்ய தமோந் நிஷ்டா ஹி தா சம்ருதா இதி
ரஜஸ் தமோப்யாம ஸ்ப்ருஷ்டம் உத்தமம் சத்வமேவ ஏஷாம் ஸ்வாபாவிகோ குண தேஷாமேவ வைதிகீ ருசி –
வேதார்த்த யாதாத்ம்ய அவபோதஸ் ச இத்யர்த்த –

வேதங்களை மறுத்தோரும் -அவற்றுக்கு அவப்பொருள் கொள்வோரும் ஒரே படித்தானவர்கள் -என்று மநு கூறுகிறார்
வேதங்களையும் ஸ்ம்ருதிகளையும் மறுப்போரும் அவப்பொருள் கொள்வோரும் தமோ குணம் நிறைந்தவர்கள் என்றும்
அவர்களுடைய கருத்துக்கள் உடலை விட்டோடும் உயிருக்கு நற் பலன்களைத் தராதவைகள் என்பதும் பெரியோர்கள் கொள்கை –
ரஜஸ் தமஸ் இவைகளால் தீண்டப்படாத ஸத்வ குணம் நிறைந்த உத்தமர்களே வேதப் பொருளில் உண்மையான விருப்பம் கொண்டு அதனடியாக அவற்றின் மெய்ப் பொருளை அறிய முடியும் என்பது பொருள்

யதோக்தம் மாத்ஸ்யே —

ஸங்கீர்ணா சாத்விகாஸ் ஸைவ ராஜசா தமஸாஸ் தயா இதி கேசித் ப்ரஹ்ம கல்பா ஸங்கீர்ணா –
கேசித் சத்வ பிராயா -கேசித் ரஜஸ் பிராயா -கேசித் தமஸ் பிராயா -இதி கல்ப விபாக முத்தகா சத்வ ரஜஸ் தமோ மாயாநாம்
தத்வாநாம் மஹாத்ம்ய வர்ணனஞ்ச தத் தத் கல்ப ப்ரோக்த புராணே ஷு சத்வாதி குண மயேந ப்ரஹ்மணா க்ரியதே இதி ச யுக்தம் –
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா-தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ணயதே இதி

அவ்வாறே மத்ஸ்ய புராணத்தில்கலப்படமான ஸாத்விக ராஜஸ தாமஸ குணங்கள் மேலிட்ட படைப்புக் கால அளவுகள் ப்ரஹ்ம கல்பங்கள் உள்ளனபடைப்புக் கால அளவுகளில் சில கலந்த குணமுடையவை -சில aஸ்த்வ குணமுடையவை -சில ரஜஸ்ஸையும் சில தமஸ்ஸையும் கொண்டவைஅவைகளுக்கு ஏற்ப ஸத்வ ரஜ தமோ குணங்கள் நிறைந்த தேவதைகளின் பெருமை விவரிக்கப் படுகிறதுஅந்தந்த கல்பங்களில் தோன்றிய புராணங்களை ஸத்வ முதலான குணங்கள் நிறைந்ததாக ப்ரம்மா செய்தார் என்பது பொருள் -முன்பு எந்த எந்தக் கல்பங்களில் எந்த எந்தப் புராணங்கள் ப்ரம்மாவினால் சொல்லப் பட்டதோ அவைகள் அந்தந்த குண மேலீட்டான தேவதைகளைப் பரக்கப் பேசுகிறது –
விசேஷ தஸ் ச யுக்தம்
அக்ரேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தமசேஷு ப்ரகீர்த்யதே
ரஜஸே ஷு ச மஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ வித்து
சாத்விகேஷ்வத கல்ப்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்
சங்கீர்ணேஷு சரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே–இத்யாதி
ஏதத் யுக்தம் பவதி–ஆதி ஷேத்ரஞ்ஞத்வாத் ப்ரஹ்மண தஸ்யாபி கேஷுசிதஹஸ் ஸூ சத்வம் உத்ரிக்தம் கேஷுசித் ரஜஸ் கேஷுசித் தமஸ்–

யதோ யுக்தம் பகவதா
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வாதிவிதேவே ஷு வா புந
சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத்ரிபிர் குணை இதி –ஸ்ரீ கீதை
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச ச ப்ரஹினோதி தஸ்மை -இதி ஸ்ருதே
ப்ரஹ்மணோபி ஸ்ருஜ்யத்வேந ஸாஸ்த்ர வஸ்யத் வேந ச ஷேத்ரஞ்ஞத்வம் கம்யதே சத்வ ப்ராயேஷு அஹஸ் ஸூ தததிரோஷூ
ச யாநி புராணாநி ப்ரஹ்மணா ப்ரோக்தாநி தேஷாம் பரஸ்பர விரோதி சாதி சாத்விகாஹஸ் ப்ரோக்தம் புராணமேவ யதார்த்தம்
தத் விரோதி அந்யத் அத்யர்த்தம் -இதி புராண நிர்ணயாயைவ இதம் சத்வ நிஷ்டேந ப்ரஹ்மணா அபிஹிதமிதி விஞ்ஞாயதே இதி –

இதில் சிறப்பாகக் கூறப்படுவதாவது
அக்நி சிவன் பெருமை தமஸ் கல்பத்திலும்
ப்ரம்மாவின் புகழ் ராஜஸ கல்பத்திலும்
ஹரியின் பெருமை ஸத்வ கல்பத்திலும்
இவை கலந்த இடத்தில் ஸரஸ்வதி பித்ருக்கள் பெருமையும் சொல்லப்படுகின்றன என்று பெரியோர்கள் தெளிந்து அறிவித்து இருக்கிறார்கள் –
இது மேலும் முதல் ஜீவனான பிரம்மாவிற்கு சில காலங்களில் ஸத்வமும் சில ஸமயம் ரஜஸ்ஸும் சில பொழுது தமஸ்ஸும் தலை தூக்கியும் இருக்கும் -அவற்றுக்கு ஏற்ப புராணம் அமையும்
அவ்வாறே கீதையிலும்
பூமியிலும் வானிலும் இருக்கும் பொருள்கள் யாவும் மூலப் பிரக்ருதியின் தொடர்பின்றி விடுபட்டவை அல்ல என்று சொல்லப் பட்டுள்ளது –
வேதத்திலும் யார் பிரமனை முன்னதாகப் படைத்து அவனுக்கு வேதங்களை ஓதுவித்தாரோ என்று இருப்பதால் பிரமனும் படைக்கப்படும் ஸாஸ்த்ரங்களுக்கு உட்பட்டும் ஜீவாத்மாவாகிறான் –
ஸத்வ குணம் மேலோங்கிய நாட்களிலும் அதற்கு மாறுபட்ட நாட்களிலும் எந்த எந்தப் புராணங்களை ஓதுகிறானோ அவைகள் முறையே நற் குணங்களையும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் புராணங்களின் கருத்துக்களில் மாறுபாடு தோன்றுமாயின் ஸத்வ புராணங்களின் பொருளே கொள்ளத் தக்கது என்றும் மற்றவை தள்ளத் தக்கது என்றும் அறுதியிடப் பட்டு இருக்கிறது –

———-

101–சத்வாதிநாம் கார்யஞ்ச ச பகவதைவ யுக்தம்
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம் -ரஜசோ லோப ஏவ ச பிரமாதமவ் ஹவ் தாமச பகவதோ ஞான மேவ ச

ஸத்வம் முதலான குணங்களின் செயல்களை aபகவானே விவரிக்கிறார்ஸத்வத்தினால் -ஆத்ம யாதாத்ம ஞானமும் -ராஜஸத்தினால் பேராசையும் தமஸ்ஸினால் கவனக் குறைவு மயக்கம் அஞ்ஞானம் ஆகியவையும் ஏற்படுகின்றன
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பய அபயே பந்தம் மோக்ஷம் ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –
யயா தர்மம் அதர்மஞ்ச கார்யஞ்ச அகார்யமே வச-அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் சா பார்த்த ராஜஸீ
அதர்மம் தர்மம் இதியா மந்யதே தமஸா ஆவ்ருதா சார்வார்த்தாந் விபரீதாம்ஸ்
ச புத்திஸ் சா பார்த்ததாமஸீ இதி–ஸ்ரீ கீதை -18-30-/31-/32—

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே–
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷

பார்த்த –குந்தீ புத்ரனே
ப்ரவ்ருத்திம் ச –இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும்
நிவ்ருத்திம் ச –மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும்
கார்யாகார்யே –இந்தக் கர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும்(அடிப்படை தர்ம நெறி -ஆச்சாரம் -கார்யம்-உடல் பலம் வயசு ஆயுசு பொறுத்து கார்யம்)
பயாபயே–பயத்திற்கும் பயமின்மைக்கும் இடமாய் இருப்பவற்றையும்(பய ஸ்தானம் அபய ஸ்தானம் -எத்தைக் கண்டு அஞ்சுவோமோ அஞ்ச மாட்டாமோ அவற்றைச் சொன்னவாறு-ஸாஸ்த்ரம் பற்றி நடப்பது-அபயம் கொடுக்கும் மீறு நடப்பதும் கோரமானது முன்பே சொன்னானே)
பந்தம் மோக்ஷம் ச –சம்சாரத்தில் கட்டுப்படுவது அதில் இருந்து விடுபடுவது ஆகியவற்றைப் பற்றிய உண்மையையும்
யா வேத்தி –எந்த அறிவு அறிகிறதோ
புத்திஸ் ஸா ஸாத்த்விகீ–அந்த அறிவு ஸத்வ குணத்தால் உண்டானதாகும்

குந்தீ புத்திரனே -இவ் வுலகச் செல்வங்களுக்கு சாதனமான தர்மத்தையும் மோக்ஷத்திற்கு சாதனமான தர்மத்தையும் –
இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்குச் செய்யத் தக்கவையும் செய்யத் தகாதவையும் பயத்துக்கும் பயமின்மைக்கும்
இடமாய் இருப்பவற்றையும் சம்சாரத்தில் கட்டுப்படுவது -அதிலிருந்து விடுபடுவது -ஆகியவை பற்றிய உண்மையையும்
எந்த அறிவு அறிகிறதோ -அந்த அறிவு சத்வ குணத்தால் உண்டானதாகும்

பயக்ருத் பய நாஸன -அவனை அனுசந்திக்க அபயம்-நம் தோஷம் ஸம்ஸார தோஷம் அனுசந்திக்க பயம் –

சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை -நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் –
பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி –
இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்

புத்தி அறிந்து கொள்கிறது தப்பு -நான் அறிந்து கொள்கிறேன் என்றே கொள்ள வேண்டும் -புத்தி உள்ளபடி உண்மையாக்க காட்டிக்கொடுக்கும் –

—————

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–
அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ--৷৷18.31৷৷

பார்த்த–அர்ஜுனா
யயா -எந்த அறிவால்
தர்மமதர்மம் ச -தர்மத்தையும் அதர்மத்தையும் –கீழ் சொன்ன ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கொள்ள வேண்டும் –
கார்யம் சாகார்யமேவ ச–கார்யத்தையும் செய்யத் தக்கவையும் -செய்யத் தகாதவையும் -அடிப்படை ஆசாரம் பற்றியவை
அயதாவத் ப்ரஜாநாதி -தவறாக அறிகிறானோ -கீழே யதாவத் ஸ்பஷ்டமாக இல்லை -இங்கு இருப்பதால் அந்த அர்த்தம் தானாகவே கிட்டுமே -உள்ளபடி அறிந்து கொள்ளாமல் இருப்பவன் இங்கு
புத்திஸ் ஸா ராஜஸீ-அதுவே ராஜஸ புத்தி யாகும்

குந்தீ புத்திரனே – எந்த அறிவாலே தர்மத்தையும் அதர்மத்தையும் -செய்யத் தக்கத்தையும்-செய்யத் தகாததையும் –
தவறாக ஒருவன் அறிகிறானோ -அந்த அறிவு ரஜோ குணத்தால் உண்டானது –
தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி –
புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –

தர்மியில் மாறாட்டம் விபரீத ஞானம் தாமசம் -தர்மத்தில் மாறாட்டம் அந்யதா ஞானம் ராக்ஷஸம்

—————–

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸா வ்ருதா–
ஸர்வார்தாந் விபரீதாம்ஸ்ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ–৷৷18.32৷৷

பார்த்த -குந்தீ புத்ரனே
யா -எந்த புத்தி
தமஸ ஆவ்ருதா–தமஸ்ஸால் -மூடப்பட்டு -ஞான பரப்பைத் தடுக்கப்பட்டு –
அதர்மம் தர்மமிதி -இது ஓன்று எடுத்துக்காட்டு -அதர்மத்தைத் தர்மம் என்று நினைக்கிறதோ-இருப்பதை இல்லாததாகவும் உயர்ந்த ஒன்றை தாழ்ந்ததாகவும் மாற்றி அறிபவன்-
ஸர்வார்தாந் –எல்லா அர்த்தங்களையும்
விபரீதாம்ஸ் ச மந்யதே-நேர் மாறாக அறிகிறதோ
புத்திஸ் ஸா தாமஸீ-தாமஸ புத்தி எனப்படும்

குந்தீ புத்திரனே – எந்த அறிவானது தமோ குணத்தால் சூழப் பட்டதாய் – அதர்மத்தை தர்மம் என்று அறிகிறதோ –
சித்தமாயும் சாத்யமாயும் இருக்கும் எல்லாப் பொருள்களையும் நேர் மாறாக அறிகிறதோ –
அந்த அறிவு தமோ குணத்தால் உண்டாகும் புத்தியாகும் –
தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி —
எத்தனை அழிந்தாலும் மாற்றிக் கொள்ளாத புத்தி -தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக –
சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்

ஆவ்ருதா இங்கு மட்டும் -அப்பொழுது அப்பொழுது தமஸாலே சூழப்பட்டவனாய் என்றபடி

மனு -வேதத்தால் சொல்வதை மாற்றி அறியும் புற சமயிகள்-தமோ குணத்தால் சூழப்பட்டவர்கள்

————
சர்வான் புராணார்த்தாந் ப்ரஹ்மணஸ் ச காசாத் அதிகம் யைவ ஸர்வாணி புராணாநி புராண காரா சக்ரு யதோக்தம்
கதயாமி யதா பூர்வம் தஷாத்யை முநி சத்தமை பிருஷ்ட ப்ரோவாச பகவான் அப்ஜ யோநி பிதாக–இதி ஸ்ரீ விஷ்ணு புராணம்
அபவ்ருஷேயேஷு வேத வாக்யேஷூ பரஸ்பர விருத்தேஷு கதமிதிசேத் தாத்பர்ய நிஸ்சயாத் அவிரோத பூர்வமேவ யுக்த —

புராணங்கள் யாவும் பிரம்மனிடம் இருந்தே பெறப்பட்டதாக புராணக்காரர்கள் கூறி இருக்கின்றன
அதற்கு ஏற்ப ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் தக்ஷர் முதலான முனிவர் தலைவர்கள் தாமரைப்பூவில் உதித்த பிரமனிடம் இருந்து கேட்க்கப்பட்டவைகளை உள்ளபடியே சொன்னார்கள் என்று கூறப்பட்டுள்ளது –
யாராலும் செய்யப்படாத வேத வாக்கியங்களில் ஒன்றுக்கு ஓன்று tமாறுபட்ட கருத்துக்கள் வருமாகில் அவற்றின் உண்மையான ஆழ் பொருள் அறிந்தால் அம் மாறுபாடு நீங்கும் -என்பது முன்பே சொல்லப்பட்டது-

————————-

102– யதபிசேதம் விருத்தமிவ த்ருஸ்சதே
ப்ராணம் மனசை ஸஹ கரணை நாதாந்தே பராத்மநி ஸம்ப்ரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸாநாம் ப்ரத்யாயீத ஏவம் ஸர்வமிதம்–அதர்வண சிகா
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே ஸம்ப்ரா ஸூயந்தே ந கரணம்—
காரணம் து த்யேய–
சர்வைஸ்வர்ய சம்பன்ன சர்வேஸ்வர சம்பு
ஆகாச மத்யே த்யேய –அதர்வண சிகா
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்திகஸ் சித் விருக்ஷ ஏவஸ் தப்தோ திவி திஷ்டத்
ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் ததோ யதுத்ர தரம் ததுரூப மநா மயம் ய ஏதத் விதுர ம்ருதாஸ்தே பவந்தி
அதேதர து ஸ்வ மேவாபி யந்தி சர்வாணன சிரோக்ரீவ சர்வ பூத குஹாஸய சர்வ வ்யாபிச பகவான் தஸ்மாத் சர்வ ததஸ் சிவ –அதர்வ சிகா
யதா தமஸ் தன்னாதிவா ந ராத்ரி ந சந் ந சாசச் சிவ ஏக கேவல ததஷரம் தத் ஸவிது வரேண்யம்
பிரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ –ஸ்வேதாசவதரா-
இத்யாதி -நாராயண பரம் ப்ருஹ்ம இதி ச பூர்வமேவ ப்ரதிபாதிதம் தேநாஸ்ய கதம விரோத —

ஒன்றுக்கு ஓன்று மாறுபாடான கருத்துக்களைக் கொண்ட வாக்யங்கள் பின் வருமாறு
1- உயிர் மூச்சை மனம் புலன்களுடன் niruththuநிறுத்தி பரமாத்மாவான ஈசானனை தியானிக்கக் கடவன்
2-ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகியவர்கள் படைக்கப்படுகிறார்கள் அவர்கள் காரணமாக மாட்டார்கள்
எது காரணமோ அதுவே த்யானிக்கப்பட வேண்டும்
செல்வங்கள் யாவும் நிறைந்து எல்லோருக்கும் தலைவனாய் இருக்கும் சம்புவை ஹ்ருத யாகாச நடுவில் தியானிக்க வேண்டும்
3- எவரைக் காட்டிலும் மேம்பட்டோர் சிறிதும் இல்லையோ எவரைக் காட்டிலும் சிறியவர் பெரியவர் இல்லையோ
எவர் விண்ணில் உணர்வுகள் இன்றி மரம் போல் இருக்கிறாரோ அவரால் இவ்வுலகு நிறைந்து இருக்கிறது
அவருக்கு மேம்பட்டோர் யாருமில்லை
அவர் உருவம் அவயவம் அற்றவர்
இதை அறிபவர்கள் அழிவது இல்லை -அறியாதவர்கள் துயரம் அடைகிறார்கள் –
எல்லாப் பிராணிகளின் தலையிலும் கழுத்திலும் ஹிருதயக் குகையிலும் நிறைந்து இருப்பவர்
எல்லா வற்றிற்கும் கதியானவர் -அவரே சிவன்
4-எப்பொழுது தமஸ் பகல் இரவு சேதன அசேதனப் பொருள்கள் முதலியவை இல்லையோ அப்பொழுது சிவன் மட்டும் இருந்தான்
அவனே அழிவற்றவன்
ஞாயிற்றின் ஒளி யாவும் அறிந்தவன்
பழமையானவன்
இதற்கு நாராயணனே பர ப்ரஹ்மம் என்று முன்பே கூறப்பட்டு விளக்கப் பட்டு இருக்கிறது
அதற்கு இக் கூற்றுக்கள் மாறுபாடானவை அல்ல

———–

103–அத்யல்பமேதத்
வேதவித் ப்ரவரப்ரோக்த வாக்ய அந்யய உப ப்ரும்ஹிதா வேதாஸ் சாங்கா ஹரிம் பிராஹு ஜகாத் ஜென்மாதி காரணம்
ஜன்மாத்யஸ்ய யதஸ்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்ய அபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ தத் ப்ரஹ்மா இதி
ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹமேத்யவ கம்யதே-தச்ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ப்ரலய ப்ரகரனேஷ் ஏவ அவ கந்தவ்யம்
ச தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
இதி ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா ஜகாத் அந்தர்யாமிதாதி முகேந பரம காரணம் சச் சப்தேந ப்ரதிபாதிதம் –

இது மிகவும் அற்பமானது
ஹரியே உலகின் படைப்பு முதலியவற்றிற்குக் காரணம் என்று அங்கங்களோடு கூடிய வேதம் அறுதியிடுவதாக வேதம் அறிந்தோர்களில் தலையாயவர்கள் தங்கள் மொழிகளால் நிறுவியிருக்கின்றனர் –
இவ்வுலகிற்கு பிறப்பு முதலியவை எம்பெருமான் இடமிருந்தே உண்டாவதால் அந்த ப்ரஹ்மமே காரணம் –
எவனிடமிருந்து இந்த உயிர்கள் யாவும் உண்டாயினவோ அவ்வாறு உண்டானவை யாரால் வாழ்கின்றனவோ -எவரிடத்தில் அவை ஓடுகின்றனவோ -அதுவே அறியத்தக்கது -அதுவே ப்ரஹ்மம் என அறிவாயாக -என்று
உலகின் பிறப்பு முதலானவற்றிற்கான
காரணம் அறுதியிடப்பட்டுள்ளது
எங்கு உலகின் பிறப்புsoolappattசொல்லப்பட்டு இருக்கிறதோ அங்கிருந்தே ப்ரஹ்மமானது அறியப்பட வேண்டும்
குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது
ஒன்றாகவே பிரிது ஓன்று இல்லால் இருந்தது என்று
ஜகத்தின் பிறப்புக்கு மூலப்பொருள் செய்வோன் கருவி என உபாதான நிமித்த அதன் உள்ளுறைந்து இயக்கம் ஸஹகாரி -முகமாக எல்லாக் காரணமாகவும் ஸத் ஒன்றே சொல்லப்பட்டு இருக்கிறது –

அயமேவார்த்த-
ப்ரஹ்ம வா இதமே கமே வாக்ர ஆஸீத் -இதி சாகாந்தரே ப்ரஹ்ம சப்தேந ப்ரதிபாதித
அநேந சச் சப்தாபி ஹிதம் ப்ரஹமேத் யவகதம்
அயமேவார்த்த சாகாந்தரே
ஆத்மா வா இதமேக ஏவாக்ரா ஆஸீத் -நாந்யத் கிஞ்சந மிஷத்-இதி
ததா -சத் -ப்ரஹ்ம -சப்தாப்யாம்-ஆத்மைவ அபிஹித -இதயவ கம்யதே-
ததாச சாகாந்தரே
ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந நேமேத்யா வா ப்ருத்வீ -இத்யாதிநா
சத் ப்ரஹ்ம ஆத்மதி பரம காரண வாஸிபி சப்தை நாராயண ஏவ அபிதீயதே இதி நிஸ் ஸீயதே —

வேறொரு வேத சாகையில்
ப்ரஹ்மம் மட்டுமே இங்கு முதலில் இருந்தது -என்று ப்ரஹ்மம் காரணமாக் கூறப்பட்டு இருக்கிறது –
அதனால் ஸத் என்று கூறப்பட்டது ப்ரஹ்மம் என்றே தெரிகிறது –
மற்றொரு சாகையில்
முதலில் ஆத்மா ஓன்று மட்டுமே இருந்தது -மற்ற எதுவும் சிறிதும் இல்லை -என்று கூறப்பட்டு இருக்கிறது –
ஆகவே ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -என்ற சொற்கள் ஒரே பொருளைக் கொண்டவை எனத் தேறுகிறது –
அவ்வாறே நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரம்மாவும் இல்லை ஈசானனும் இல்லை வானமோ பூமியோ இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது
இவைகளால் ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா போன்ற முதல் காரணத்தைக் குறிக்கும் சொற்கள் -நாராயணன் -என்று மட்டுமே குறிக்கும் என அறுதியிடப்படுகிறது

—————-

104–ய மந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி இத்யாரப்ய-நைந மூர்த்வம் நதிர் யஞ்சம் ந மத்யே பறி ஜக்ரபது –
ந தஸ்யேசே கஸ்சன் தஸ்ய நாம மஹாத் யசஸ்
ந சந்த்ருசே திஷ்டதி ரூப மஸ்ய ந சஷூஷா பச்யதி கஸ்ச நைநம் -ஹ்ருதா மநீஷா மனசா அபிக்லுப்தோ
ய ஏனம் விதுரம் ருதாஸ்தி பவந்தி -இதை சர்வ ஸ்மாத் பரத்வம் அசய ப்ரதிபாத்ய -நதஸ் யேசே கஸ்சன-
இதி தஸ்மாத் பரம் கிமபி ந வித்யதே இதி ச ப்ரதிஷித்ய
அத்ப்ய ஸம்பூதோ ஹிரண்ய கர்ப இத்யஷ்டவ இதி தேந ஏக வாக்யதாம் கமயதி தச்ச மஹா புருஷ பிரகரணம்-
ஹரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ இதி நாராயண எவேதி த்யோதயதி-

எவன் கடலில் இருப்பதாக ஞானிகள் கூறுகின்றனரோ என்று துவங்கி மேல் பக்கத்திலும்-கீழப் பக்கத்திலும் -இடைப் பக்கத்திலும் அறியப்படாதவன் –
அவனை யாரும் உள்ளிருந்தோ வெளியிருந்தோ ஏக முடியாது -மிகவும் புகழுடையவன் -அவனுடைய உருவம் கட் புலனாகாதது -அவனை யாரும் கண்களால் காண்பதில்லை -ஞான பக்திகளுடன் கூடியவர் மனத்தால் இருதயத்தில் காணப்படுபவன் -இவனை அறிபவர் சாகா நிலை அடைகின்றனர் -என்று யாவும் அறிபவனை இவ்வாறு விளக்கி
அவனுக்கு மேற்பட்டவன் யாருமில்லை என்று அவனுக்கு மேற்பட்டு அவனை ஏவக்கூடியவன் ஒருவரும் இல்லை என்பதைக் கூறி –
அத்ப்ய ஸம் பூததோ ஹிரண்ய கர்ப்ப -என்று தொடங்கும் எட்டு வாக்கியங்கள் முதலில் சொன்னதோடு சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை –
ஒரே கருத்து உடையவை என்பது விளங்கும் –
அவை பரம் பொருளை காரண மஹா புருஷனைக் குறிப்பவை இதன் தொடர்பில் பூமி தேவி முதலானோரும் லஷ்மியும் உனக்கு மனைவிகள் என்று மிகத் தெளிவாக நாராயணனையே குறிக்கின்றன

—————-

105-அயமர்த்த-
நாராயண அநுவாகே பிரபஞ்சித -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இத்யாரப்ய-ச ப்ரஹ்ம ரஸசீவ சேந்த்ர ச அஷரா பரம் ஸ்வராட்
இதி சர்வ சாகாசூ பரதவ ப்ரதிபாதந பராந் அக்ஷர-சிவ -சம்பு -பர ப்ரஹ்ம பரஞ்சோதி -பரதத்வ -பாராயண -பரமாத்மாதி –
சர்வ சப்தாந் தத் குண யோகிந நாராயண ஏவ ப்ரயுஜ்ய தத் வ்யதிரிக்தஸ்ய சமஸ்தஸ்ய ததா யத்ததாம் —
தத் வ்யாப்யதாம் -தத் ஆதாரதாம்-தந் நியாம்யதாம்-தத் சேஷதாம் -ததாத்மகதாம்-ச ப்ரதிபாத்ய ப்ரஹ்ம சிவயோர் அபி
இந்திராதி சமாந ஆகார தயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதிதம்
இதம் ச வாக்யம் கேவல பாதத்வ ப்ரதிபாதந பரம் அந்யத் கிஞ்சிதபி அத்ர நவிதீயதே-அஸ்மின் வாக்யே ப்ரதிபாதி தஸ்ய
சர்வஸ்மாத் பரத்வேந அவஸ்திதஸ்ய ப்ரஹ்மண வாக்யாந்த்ரேஷு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் இத்யாதிஷு உபாஸநாதி விதீயதே —

இதன் பொருள் நாராயண அநுவாகத்திலே நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது
பல தலைகளை யுடையவன் என்று ஆரம்பித்து -அவனே பிரமன் இந்திரன் அழிவற்றவன் பரமாத்மா என்று எல்லா சாகைகளிலும் பரத்வத்தைச் சொல்லிய பிறகு அழிவற்றவன் சிவன் சம்பு பர ப்ரஹ்மம் பர தத்வ பராயண பரமாத்மா போன்ற சொற்களால் அந்தந்த பண்புகளால் நாராயணன் ஒருவனே காட்டப்பட்டு
அவனை ஒழிந்த மற்றவை rயாவும் அவனாலேயே படைக்கப்பட்டு-அவனாலே நிறைக்கப் பட்டு -அவனையே பற்றுக் கோடாகக் கொண்டு -அவனாலே ஏவப்பட்டு -அவனுக்கு கீழ்ப்பட்டு அவனையே ஆத்மாவாக யுடையதாகக் கூறப்பட்டு -ப்ரம்மா சிவன் முதலியோர் இந்திரனைப் போலவே அவனுடைய செல்வங்களாக கருதப் பட்டுள்ளனர்
இங்கு எடுக்கப்பட்ட வாக்யம் -நாராயணனின் மற்றப் பண்புகளையோ செல்வங்களையோ கூறாமல் அவனது ஒப்பில்லா உயர்ந்த பரத்வ நிலையை மட்டுமே விதிக்கிறது -இங்கு கூறப்பட்ட அவனுடைய யாவற்றுக்கும் மேம்பட்ட தன்மையை உடையதான ப்ரஹ்மத்தை இடையறாது தியானிப்பதன் மூலம் பரநிலையை அடையலாம் என்று இடையறாத் தியானத்தை விதிக்கிறது –

————

106–அத -ப்ராணம் மனசை ஸஹ கரணை -இத்யாதி வாக்கியம் சர்வ காரணே பரமாத்மநி காரண
பிராணாதி சர்வம் விகார ஜாதம் உப ஸம்ஹ்ருத்ய -தமேவ பரமாத்மாநாம் ஸர்வஸ்ய ஈஸாநாம் த்யாயீத இதி
பர ப்ரஹ்ம பூத நாராயணஸ்யை வத்யாநம் விதாதி-

பிறகு -உயிர் மூச்சையும் புலன் களுடன் கூடிய மனத்தையும் என்ற -வாக்யத்தால் -எல்லாவற்றிற்கும் காரணமான பரமாத்மாவை உயிர் மூச்சு புலன்கள் ஆகிய மாறுபடுபவைகளில் நின்று விலக்கி ஒரு முகப்படுத்தி அந்தப் பரமாத்மாவையே எல்லாவற்றிற்கும் ஈசன் என்று த்யானிக்கப் படவேண்டும் என்று பர ப்ரஹ்மமான நாராயணனையே தியானிக்க விதிக்கிறது-
பதிம் விஸ்வஸ்ய
ந தஸ்யேஹ கஸ்சந-இதி தஸ்யைவ சர்வேசாநதா ப்ரதிபாதிதா–அத ஏவ சர்வ ஐஸ்வர்ய சம்பந்ந
சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே த்யேய -இதி
நாராயணஸ்யைவ பரம காரணஸ்ய சம்பு சப்த வாஸ்யஸ்ய த்யானம் விதீயதே -கஸ்ச த்யேய -இத்யாரப்ய-காரணம் து த்யேய –
இதி கார்யஸ்ய அத்யே யதா பூர்வக காரணைக த்யேயதா பரத்வாத் வாக்யஸ்ய –
தஸ்யைவ நாராயணஸ்ய பரம காரணதா சம்பு சப்த வாச்யதா ச பரம காரண பிரதி பாதனைக பரே நாராயண
அநு வாக ஏவ பிரதி பந்நா இதி தத் விரோதி அர்த்தாந்தர பரி கல்பனம் காரணஸ்யைவ த்யேயத்வ விதி வாக்யே ந யுஜ்யதே –

உலகைக் காப்போன்
அவனுக்கு மேம்பட்டோன் யாரும் இல்லை -என்று அவனுடைய தனிப் பெரும் தலைமை பேசப்படுகிறது
மேலும் செல்வங்கள் யாவும் நிறைந்தவன்-எல்லாவற்றுக்கும் தலைவன் சம்பு -வானிடை விளங்குவோன் தியானிக்கப்படத் தக்கவன் -வேண்டும் என்று
நாராயணனையே பரம காரணமாக சம்பு என்னும் சொல்லால் தியானம் செய்ய விதிக்கிறது
எவன் த்யானிக்கப்பட வேண்டும் எனத் துவங்கி காரணமானவனே த்யானிக்கத் தக்கவன் -என்று காரியப் பொருட்களைத் த்யானிப்பதை விலக்கி காரணப் பொருளையே தியானிக்க வேண்டும் என விதிக்கிறது

அதனால் நாராயணனுடைய முதல் காரணத் தன்மையினால் சம்பு என்ற சொல்லுக்குப் பொருளாக முதல் காரணத் தன்மையைக் கூறி பிறகு நாராயண அநுவாகத்தில் கூறியதை விளக்கி அதற்கு மாறுபட்ட பொருள்களை விலக்கி காரணமே த்யானிக்கத் தக்கது என்று விதிக்கிறது –

——————-

107–யதபி–ததோ யதுத் தர தரம் -இத்யத்ர புருஷாதந் யஸ்ய பரதர தத்வம் பிரதீயதே -இத்யப்யதாயி -ததபி
யஸ்மாத் பரந் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்தி கஸ்சித்–இத்யத்ர
யஸ்மாத் அபரம்-
யஸ்மாத் அந்யத் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி கேநாபி பிரகாரேண புருஷ வ்யதிரிக்தஸ்ய பரத்வம் நாஸ்தி -இத்யர்த்த
அணீயஸ்த்வம் -ஸூஷ்மத்வம்-ஜ்யாயத்வம் -ஸர்வேஸ்வரத்வம் -சர்வ வ்யாபித்வாத் -சர்வேஸ்வரத்வாத்-அஸ்ய
ஏதத் வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி அணீயஸ்த்வம் ஜ்யாயஸ்த்வம் ச நாஸ்தி இத்யர்த்த
யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்சித்-இதி புருஷா தந்யஸ்ய கஸ்யாபி ஜ்யாயஸ்த்வம் நிஷித்தம் இதி –
தஸ்மாதந் யஸ்ய பரத்வம் ந யுஜ்யதே இதி ப்ரத்யுக்தம் –

இங்கு அதினின்றும் மேம்பட்டது -என்று பரம புருஷனை விட மேம் பட்ட உயர் நிலை கூறப்படுவது போல் காணப்படுகிறது –
யஸ்மாத் பரந்நா பர மஸ்தி கிஞ்சித் யஸ்மாந்நாணீயோ ந ஜ்யா யோஸ்தி கஸ்சித் -என்ற மந்திரத்துக்கு கீழ் வருமாறு பொருள் கொள்ள வேண்டும் –
யஸ்மாத் அபரம் -எதினின்றும் வேறுபட்ட து ஓன்று சிறிது அளவும் பெரியதல்லவோ –
அதாவது -எவ் வழியிலும் புருஷனை விடப் பெரியது எதுவும் இல்லை என்று பொருள் –
அணீயஸ் த்வம் –நுண்ணியதாய் இருத்தல்
ஜ்யாயஸ்த்வம் -எல்லாவற்றிற்கும் தலைமை
எங்கும் நிறைந்து இருப்பதால் -எல்லாவற்றிற்கும் தலைமையாய் இருப்பதால் அவனின்றும் வேறுபட்ட எதற்கும் நுண்மை முதன்மை ஆகியவை இல்லை என்பது பொருள் –
யஸ்மாந் நாணீயோ நா ஜ்யோஸ்தி கஸ்சித்-என்று புருக்ஷனைத் தவிர்த்து வேறு எதற்கும் முதன்மையாய் இருத்தல் மறுக்கப் படுகிறது
இதனால் புருஷனின்றும் வேறுபட்டது எதுவும் இல்லை என்பது வெளிப்படை –

கஸ்தர் ஹி அஸ்ய வாக்யஸ்ய அர்த்த ?
அஸ்ய பிரகரணஸ்யோபக்ரமே-தமேவ விதித்வாதி ம்ருத்யு மீதி -நாந்ய பந்தா வித்யதேயநாய -இதி
புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுதாம் -தத் வ்யதிரிக்தஸ்ய அபததாம் ச ப்ரதிஞ்ஞாய -யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –இத் யேததந்தேந புருஷஸ்ய சர்வ ஸ்மாத் பரத்வம் ப்ரதிபாதிதம்-
யத புருஷ தத்வமேவ உத்தர தரம் -ததோ யதுத் தரதரம் -புருஷ தத்வம் ததேவ அரூபாம் -அநாமயம்-ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி–
அதே தர துக்கமே வாபி யந்தி இதி புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுத்வம் ததிதரஸ்ய ச அபதத்வம்
ப்ரதிஞ்ஞாதம் ச ஹேதுகமுப ஸம்ஹ்ருதம் -அந்யதா உப க்ரமகத ப்ரதிஞ்ஞாப்யாம் விரூத்யேத

அப்படி என்றால் இந்த வாக்கியத்தின் பொருள் என்ன –இவ் வாக்கியத்தின் இடத்தையும் தொடர்பையும் ஆராய்வோமானால் துவக்கத்தில்அந்தப் பரம புருஷனையே இடையறாது தியானித்து பிறவிச் சுழல் எனும் கடலைத் தாண்ட வேண்டும் -வேறு வழி ஏதுமில்லை -என்று புருஷனை இடையறாது தியானித்து மோக்ஷம் அடையத் தகுந்த வழி -அதனினும் வேறு வழி ஏதுமில்லை என்று அறுதியிட்டு எவனைவிட மேம்பொருள் ஏதும் இல்லையோ அவனே முழுமையாவான் – எல்லோருக்கும் மேலான புருஷன் என்று புருஷ பரத்வம் கூறியது -அப்படியே அந்த புருஷத்வமே மிக உயர்ந்தது என்று விளக்கி பிறகு அதனினும் சிறந்த புருஷத்வம் வினைகளால் வரும் உருவம் அற்றது -செயலால் வரும் இன்ப துன்பங்கள் அற்றது -என்பதை அறிபவன் மோஷத்தை அடைகிறான் -அறியாதவன் துக்கத்தை அடைகிறான் -என்று புருஷத்வமே மோக்ஷ காரணம் என்றும் மற்றவை தாழ்ந்தவைகள் என்றும் கூறி துவக்கத்தில் கூறிய கருத்து அறுதியிடப் பெறுகிறதுஇதை மாறுபட்டு பொருள் கொண்டால் துவக்கமும் முடிவும் தொடர்பு அற்றவை யாகும் –
புருஷஸ் யைவ ஸூத்தி குண யோகே சிவ சப் தாபி -தே யத்வம் சாஸ்வதம் சிவமச்யுதம்–இத்யாதிநா
ஞாதமேவ புருஷ ஏவ சிவ சப்தாபி ஹித-இதி அநந்தரமேவ வததி–மஹாந் ப்ரபுர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக இதி –

புருஷனுடைய தூய்மைப் பண்பாக சிவன் என்ற பதம் உபயோகப்படுத்தப் படுகிறது–நிலை பெற்றவன் -தூய்மையானவன் -அடியார்களை நழுவ விடாதவன் -என்பதும் நோக்கத் தக்கது -சிவ என்னும் பதத்தால் புருஷனே கடைசியிலும் கூறப்படுகிறான் -மேலும் அதனால் மஹா புருஷன் ஸத்வ குணத்தை நிதியாக உடையவன் என்று இக்கருத்தையே உறுதி செய்கிறது –

———————-

108–உக்த்தேநைவ ந்யாயேந -ந சந்ந சா சச் சிவ ஏவ கேவல –இத்யர்த்த சர்வம் நேயம்
கிஞ்ச-
அம்பஸ்ய பாரே –இத்யனு வாகே -ந தஸ்யேசே கஸ்சந இதி நிரஸ்த சாமாப்யதிக சம்பவாநஸ்ய புருஷஸ்ய –
அணோர் அணீயாந் -இத்யஸ் மிந்நதுவாகே வேத -ஆந்யந்தா ரூபதயா வேத பீஜ பூத ப்ரணவஸ்ய ப்ரக்ருதி பூத
அகார வாச்யதயா மஹேச்வரத்வம் ப்ரதிபாத்ய தஹர புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்திதயா உபாஸ்யத்வம் யுக்தம் –

இவ்வாறு விளக்கப்பட்ட aநியாயங்களால் ந ஸந்ந சாஸச் சிவ ஏவ கேவல-nஎனும் aவாக்யத்திலுள்ள சிவ என்னும் சொல் சிவனைக் குறிப்பதல்ல என்பது எவரும் அறிந்ததேமேலும் -அம்பஸ்ய பாரே -என்ற அநுவாகத்தில் -அவனுக்கு மேம்பட்டவன் யாருமில்லை -என்று மற்றவர்களை மறுத்து நிறுவப்பட்ட புருஷன் என்பவன் அணுவிலும் அணுவாக இருப்பவன் எனக் கூறப்பட்டு இருக்கிறதுஇந்த அநுவாகத்தில் வேதத்தை ஒதத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஓம் என்று சொல்லப்பட வேண்டும் -என்று விதித்துஅதன் பகுதியான அ என்னும் எழுத்தால் யாவருக்கும் மேன்மையான தன்மை கூறப்பட்டு அவனை ஹ்ருதயத் தாமரையில் உள்ள தஹர ஆகாசத்தில் இருப்பவனாகத் தியானிக்க விதிக்கிறது –
அயமர்த்த
சர்வஸ்ய வேத ஜாதஸ்ய ப்ரக்ருதி பிரணவ யுக்த -ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி அகார -பிரணவ விகாரோ வேத ஸ்வ ப்ரக்ருதி பூதே
பிரணவ லீன -ப்ரணவோபி அகார விகார பூத ஸ்வ பிரகிருதவ்-அகாரே லீன -தஸ்ய பிரணவ ப்ரக்ருதி பூதஸ்ய-
அகாரஸ்ய-ய பர வாஸ்ய ச ஏவ மஹேஸ்வர இதி சர்வ வாசக ஜாத ப்ரக்ருதி பூத அகார வாஸ்ய சர்வ வாஸ்ய ஜாத
ப்ரக்ருதி பூத நாராயணோ ய ச மஹேஸ்வர -இத்யர்த்த –

இதன் பொருளாவது
எல்லா வேதங்களுக்கும் பிறப்பிடம் ஓம் எனும் ப்ரணவம்
அந்தப் ப்ரணவத்தின் பகுதி -வேர்ச்சொல் அ காரம் ப்ரணவத்தின் விரிவே வேதம் -ப்ரணவம் அகாரத்தின் விரிவு -அவ்வாறே அவைகள் முடியும் இடமும் லயம் -முறையே ப்ரணவம் அகாரம் ஆகின்றன –
இந்த அகாரத்தினால் அறுதியிடப் படுபவன் -எனவே அவனே மஹேஸ்வரன்
இதனால் சொற்கள் யாவற்றுக்கும் வேராக அகாரமும் அவைகளால் சுட்டப்படும் பொருள்கள் யாவற்றுக்கும் வேராக இருக்கும் -நாராயணனே மஹேஸ்வரன் -என்று தேறுகிறது

யதோக்தம் பகவதோ –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகாத்தை பிரபவ ப்ரலயஸ் ததா மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய —
அக்ஷராணாம் அகாரோஸ்மி-ஸ்ரீ கீதை –

இக் கருத்தையே கீதையில் பகவான்-நான் இவ்வுலகு அனைத்துக்கும் உத்பத்தி இடமாகவும் முடிவு இடமாகவும் இருக்கிறேன்அர்ஜுனா என்னிலும் வேறுபட்ட எப் பொருளும் என்னை விட மேலானதாக இல்லை என்றும்எழுத்துக்களில் அகாரம் ஆகிறேன் என்றும் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறான் –
இதி அ இதி ப்ரஹ்ம இதி ஸ்ருதே –
அகாரேவை சர்வ வாக் -இதி ச வாசக ஜாதஸ்ய அகார ப்ரக்ருதித்வம் வாஸ்ய ஜாதஸ்ய ப்ரஹ்ம ப்ரக்ருதித்வம் ச ஸூ ஸ்பஷ்டம்

அ -என்பது ப்ரஹ்மம் என வேதம் கூறுகிறதுஅகாரத்தின் நின்றும் சொற்கள் யாவும் தோன்றுகின்றனசொற்கள் தோன்றுவதற்கு அ காரணமாக இருப்பது போலே அச் சொற்களின் பொருள்கள் யாவற்றிற்கும் அ காரத்தின் பொருளான ப்ரஹ்மம் என்பது வெள்ளிடை மலை
அத -ப்ரஹ்மண-அகார வாச்யதா ப்ரதிபாதநாத் அகார வாஸ்யோ நாராயண ஏவ மஹேஸ்வர -இதி சித்தம் –
தஸ்யைவ -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இதி கேவல பரதத்வ விசேஷ ப்ரதிபாதந பரேண-நாராயண அநு வாகேந சர்வ ஸ்மாத் பரத்வம் பிரபஞ்சிதம் –
அநேந அநந்ய பரேண ப்ரதிபாதிதமேவ பரதத்வம் -அந்ய பரேஷு சர்வேஷு வாக்யேஷு கேநாபி சப்தேந ப்ரதீயமாநம்
ததேவேதி அவகம்யதே-இதி -ஸாஸ்த்ர த்ருஷ்டயாதூபதேசோ வாமதேவ வைத்த –இதி ஸூத்ரா காரேண நீர்ணீதம்

பிறகு ப்ரஹ்மத்தை அகாரத்தால் கூறி -அதன் பொருளான நாராயணனே மஹேஸ்வரன் என்பது தன்னடையே கிடைக்கிறது -அவனையே ஆயிரம் தலைகள் உடையவன் -என்று பரத்வத்தை விளக்கிய பிறகு நாராயண அநுவாகத்தில் யாவற்றையும் விஞ்சினவாகக் கூறிஇவ்வாறு தனக்கு உவமை இல்லாதவன் -எனும் நிலையே பரத்வம் என்று நிறுவுகிறதுஇவ்வாறு தனக்கு உவமை மேலானவன் இன்மையைக் கூறி -தன்னிலும் வேறுபட்ட சொற்கள் யாவற்றிற்கும் மேம்பட்டு இருப்பது போல் அவனும் இருக்கிறான் என விளக்குகிறதுமற்றையோர் தனக்கு தனிப் பெரும் முதன்மை கூறிக் கொள்வது -ஸாஸ்த்ரங்கள் நன்கு அறிந்த வாம தேவர் -அவன் தன்னுள்ளும் இருப்பதை அறிந்து அவனே யாவும் செய்வதாகக் கூறிக் கொள்வது போன்றதுஇது ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நன்கு விளக்கப் பட்டு இருக்கிறது
ததேதத்க்வ பரம் ப்ரஹ்ம சித் ப்ரஹ்ம சிவாதி சப்தாவகதமிதி கேவல ப்ரஹ்ம சிவயோ ந பரத்வ பிரசங்க –
அஸ்மின் அநந்ய பரே னுவாகே தயோர் இந்திராதி துல்ய தயா தத் விபூதித்வ ப்ரதிபாதநாத் கசித் ஆகாய பிராணாதி சப்தேந
பரம் ப்ரஹ்மாபிஹிதம் இதி பூதாகாச பிராணாதே யதா ந பரத்வம் –

இவன் ஒருவனே பர ப்ரஹ்மமாய் இருக்க பிரம்மா சிவன் போன்ற சொற்களால் குறிக்கப் படுவோருக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்பது அதே நூலில்
வேறொரு இடத்தில் இந்திரன் போன்றோரும் இவ்வாறு கூறிக் கொள்ளுகையால் ஆகாயம் போன்ற சொற்கள் எவ்வாறு உத்பத்திக்குக் காரணமாகச் சொல்லப்பட்டு இருந்தாலும் அவை பர ப்ரஹ்ம்ம் அல்லவோ -அது போன்று இங்கும் சிவனுக்கு பர ப்ரஹ்மத்வம் கிடையாது என்று சொல்லப் படுகிறது –

———————-

109–யத் புநர் இதமா சங்கிதம்-
அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம -தஹரோஸ்மிந் நந்தராகாச -தஸ்மிந் யதந்தஸ் தந்வேஷ்டவ்யம்
ததுவாத விஜிஞ்ஞாசித்வயம்-இத்யத்ர ஆகாச சப்தேன ஜகதுபாதாந காரணம் ப்ரதிபாத்ய தத் அந்தரவர்த்திந –
கஸ்யசித்த தத்வ விசேஷஸ்ய அந்வேஷ்டவ்யதா ப்ரதிபாத்யதே அஸ்ய ஆகாசஸ்ய நாம ரூபயோ நிர்வஹகத்வ ஸ்ரவணாத்
புருஷ ஸூக்தே புருஷஸ்ய நாம ரூபயோ கர்த்ருத்வ தர்சநாஸ்ச-ஆகாச பர்யாய பூதாத் புருஷாத் அந் யஸ்ய அந் வேஷ்டவ்யதயா
உபாஸ்யத்வம் பிரதீயதே இதி

இது மற்ற ஒரு ஐயத்தைத் தோற்றுவிக்கிறதுபர ப்ரஹ்மத்திற்கு இருப்பிடமான இவ் வுடலில் ஹ்ருதயத்திலுள்ள தாமரை மலர் போன்ற இடத்திலுள்ள மிகச் சிறிய வெளியானது தேடி அறியத் தக்கது -அதுவே இடையறாது த்யானிக்கத் தக்கது -என்று உடலிலுள்ள ஆகாயம் குறிப்பிடப் படுகிறது -மேலும் அதனுள் உறைவதாயும் தன்னுடைய தொடர்பால் அதற்குச் சிறப்பளிப்பதாயும் -உலகிற்கு பருப்பொருள் காரணமானதாயும் வேறொன்று குறிக்கப்பிடப் பட்டு அது அந்த ஆகாசத்திற்கு பெயர் உருவம் அளிப்பதாயும் -அதற்கு மேலாண்மை யுடையதாயும் -புருஷ ஸூக்தத்தில் ஓதப்பட்டு இருக்கிறது -அதனால் ஆகாசத்தில் நின்றும் வேறுபட்டு புருஷன் என்ற பெயரும் உருவமுமுடைய ஒருவனே உபாஸிக்கத் தக்கவன் எனக் கொள்ளல் வேண்டும் -என முற் கூற்று கூறப்படுகிறது –
அநாதிதா வேதாநாம் அதிருஷ்ட ஸாஸ்த்ர விதாம் இதம் சோத்யம் -யத தத்ர ஸ்ருதிரேவ அஸ்ய பரிகார மஹா வாக்யகாரஸ் ச –

இக் கூற்றை தோற்றம் நிர்ணயிக்க முடியாத மறைகளாலும் ஸாஸ்த்ரங்களாலும் நுணுகி ஆராய்ந்தால் அவைகளில் இருந்தே தக்க விடையளிக்கும் மொழிகள் காணக் கிடைக்கின்றன –

தஹரோ அஸ்மின் நந்தர் ஆகாச -கிம் தத்ர வித்யதே யத் அந்வேஷ்டவ்யம் யத் வாவ விஜிஞ்ஞாசிதவ்யம் இதி சோதிதே-
யாவான் வா அயம் ஆகாச தாவநேஷோந்தர் ஹ்ருதய ஆகாச -இத்யாதிநா -அஸ்ய அகார சப்த வாஸ்யஸ்ய -பரம புருஷஸ்ய –
அநவதிக மஹத்வம் சகல ஜகத் காரணத்தயா -சகல ஜகத் ஆதாரத்வம் ப்ரதிபாத்ய -அஸ்மின் காமா ஸமாஹிதா
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ வி மிருத்யு ஸத்யஸங்கல்ப -இதி
அபஹதபாப்மத்வாதி -ஸத்யஸங்கல்பத்வ பயந்த குண அஷ்டகம் தஸ்மிந் நிஹிதம் இதி பரம புருஷவத்-பரம புருஷ குண அஷ்டகஸ்யாமி
ப்ருதக் விஜிஞ்ஞாசி தவ்யதா ப்ரதிபாதித யிஷயா தஸ்மிந் யதந்தஸ்ய தன்வேஷ்டவ்யம் இதயுக்தம் இதி ஸ்ருதியைவ சர்வம் பரிஹ்ருதம் —

ஏதத் யுக்தம் பவதி -கிம் ததத்ர வித்யதே யதந் வேஷ்டயம் இத்யஸ்ய சோத்யஸ்ய -தஸ்மிந் ஸர்வஸ்ய ஜகத ஸ்ரஷ்டத்வம்-ஆதாரத்வம் –
நியந்த்ருத்வம் -சேஷித்வம் -அபஹத பாப்மாதயோ குணாஸ் ச வித்யந்தே-இதி பரிகார இதி
தஹரம் என்பது ஹிருதயக் குகை -உள்ளுறை வெளி -அதனால் எது அறியப்படுகிறது -எது அறியத்தக்கது -எது ஆராயப்பட வேண்டியது என ஆராயின் கட் புலனாகும் வெளி எவ்வளவு பரந்ததோ அவ்வளவு இவ்வெளியும் பரந்ததே -என்று பரமபுருஷனுக்கு உரிய அளவற்ற விரிவும் -அவன் உலகிற்கு காரணமாதலும் -யாவற்றிற்கும் பற்றுக்கோடாக இருத்தலும் விளக்கப்பட்டு -இவனிடத்தில் விரும்பத் தக்கவை யாவும் நிறைந்து இருக்கின்றன
இந்தப் பரமாத்மா பாபம் அற்றவன் -மூப்பற்றவன் -அழிவற்றவன் – துயரமற்றவன் -பசியற்றவன் -தாகமற்றவன் -விருப்பங்கள் யாவும் அடையப் பெற்றவன் -தவறாத வினைத்திட்பம் உடையவன் -என எட்டுப் பண்புகளை உடையவன்
அவனையும் அவனுடைய இப் பண்புகளையும் தனித் தனியாக தியானிக்க வேண்டும்
அதுவே தஹராகாசம் என்று பரமாத்மாவையே தஹராகாசம் என்று நிலை நிறுத்துகிறது
இதன் விளக்கம்
இதில் என்ன உள்ளது -அது எவ்வாறுள்ளது என்று ஆராய்கையில் அகில உலகினையும் படைத்தல் -அவற்றிற்கு பற்றுக் கோடாதல் -அவற்றை அடக்கி ஆளுதல் -அவற்றைப் பணி கொள்ளுதல் -மேற் கூறிய எட்டுப் பண்புகள் இந்த ஆகாசத்தில் விளங்குகின்றன -என்பது தெளிவு –

ததாச வாக்யகார வசனம்–தஸ்மிந் யதந்த-இதி காம வ்யபதேச -இதி காம்யந்தே இதி காமா அபஹத பாப்மத் வாதயோ குணா இத்யர்த்த

அவ்வாறே ப்ரஹ்ம ஸூத்ரத்திலும்தஸ்மிந் யதந்த -என்ற இடத்தில் எல்லோரும் விரும்பும் குணங்களைக் குறிப்பிட்டு இருக்கிறதுஅதாவது பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள்
ஏதத் யுக்தம் பவதி -யத் ஏதத் தஹர ஆகாச சப்தாபி தேயம் -நிகில ஜகத் உதய விபவ லய லீலம்-பரம் ப்ரஹ்ம
தஸ்மிந்யத் அந்தர் நிஹிதம் அநவதிக அதிசயம் அபஹத பாப்மத்வாதி குண அஷ்டகம் தத் உபயமபி அன்வேஷ்டயம் விஜிஞ்ஞாசி தவ்யம் இதி
யதா ஆஹ-அதய இஹாத்மாந மனு வித்யா வ்ரஜயந்த்யே தாம்சச சத்யாந் காமாம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி -இதி –

இதை மேலும் விளக்குவோம்
எது தஹாராகாஸம் எனப் படுகிறதோ அதுவே உலகு யாவையும் படைத்து காத்து அழித்து வினை புரியும் ப்ரஹ்மம்
அதனுடைய பாபமற்று இருத்தல் முதலான எட்டுக் குணங்கள் ஆகிய இரண்டையும் தேட வேண்டும் -மனத்தில் நிலை நிறுத்த வேண்டும் -எனக் கூறுகிறது
பிறகு எவர்கள் பரமாத்மாவையும் அவனுடைய இந்த எட்டுக் குணங்களையும் அறிந்து பரமபதம் செல்லத் தகுதியானவர்களோ அவர்களுக்குத் தாங்கள் விரும்பும் உலகுகளுக்குச் செல்லும் திறன் தன்னடையே ஏற்படுகிறது -எனக் கூறுகிறது –

——————

110–ய புந -காரணஸ்யைவ த்யேயதா ப்ரதிபாதந பரே வாக்யே-விஷ்ணோ அநந்ய பரவாக்ய ப்ரதிபாதித பரதத்வ பூதஸ்ய
கார்ய மத்யே நிவேச ச -ஸ்வ கார்ய பூதத்வ சங்க்யாபூரணம் குர்வத-ஸ்வ லீலயா ஜகத் உபகாராய ஸ்வ இச்சாவதார இத்யவ
கந்தவ்ய யதா லீலயா தேவ சங்க்யா பூரணம் குர்வத-உபேந்த்ரத்வம் பரஸ்யைவ யதாச ஸூர்ய வம்சோத்பாவ
ராஜ சங்க்யா பூரணம் குர்வதா -பரஸ்யைவ ப்ரஹ்மணோ தாஸாதி ரூபேண ஸ்வ இச்சாவதார –
யதா ச ஸோம வம்சங்க்யா பூரணம் குர்வதோ பகவத-பூ பாராவ் தரணாய
ஸ்வ இச்சயா வஸூ தேவ க்ருஹேவதாரா ஸ்ருஷ்ட்டிப் பிரளய ப்ரகாரனோஷு நாராயண ஏவ
பரம காரண தயா ப்ரதிபாத்யதே இதி பூர்வமே வோக்தம் —

மீண்டும் –
காரணம் ஒன்றே த்யானிக்கத் தக்கது என்று கூறி இருப்பதால் -அந்தக் காரணம் என்பது யாது என ஆராய்ந்தால்-மற்றை தேவதைகளைப் பற்றிக் குறிப்பிடாத நாராயண அநுவாகத்தில் பர தத்வமான காரணம் –
ஆயினும் அவன் கார்யமான மற்ற தேவதைகளுக்கும் ஏற்றத்தைக் கொடுக்க தன் விருப்பத்தாலேயே கீழ் இழிந்து -அவர்களில் ஒருவராக எண்ணப்படும் படி தன்னைத் தாழ விடுகிறான்
தன் அந்த எண்ணத்தின் படியே உபேந்த்ரன் போன்ற பிறப்புகளை எடுக்கிறான் -அவ்வாறே தன் இச்சையால் ஸூர்ய வம்ஸத்தில் தாஸரதியாகத் தோன்றுகிறான்
பூமி பாரம் நீக்க வாஸூ தேவன் வீட்டில் அவதரித்து சந்த்ர வம்சத்தில் வைத்து எண்ணப்படுகிறான்
படைப்பு பிரளய காலங்களில் பரம காரணமாக நாராயணனாக தன் நிலையில் இருக்கிறான்
இவ்வாறு கொள்வதால் மட்டுமே வேத வாக்யங்கள் ஓன்று படுகின்றன –

——–

111–யத் புந -அதர்வ சிரஸ் -ருத்ரேண ஸ்வ சர்வ ஐஸ்வர்யம் பிரபஞ்சிதம் தது-
சோ அந்தராதந்தரம் ப்ராவிசது-இதி பரமாத்ம பிரவேசாதுக்தம் -இதி ஸ்ருதியைவ வ்யக்தம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூபதேசா வாம தேவவத் -இதி ஸூத்ர காரேண ஏவமாதீநாம் அர்த்த ப்ரதிபாதித

மீண்டும் -அதர்வ ஸிரஸ் என்னும் வேதப் பகுதியில் ருத்ரனால் தனது செல்வங்கள் என்று பரக்கத் பேசப் படுபவைகள்நான் அகத்தின் அகத்தையும் நிறைப்பவன் -என்று பரமாத்மாவால் அவன் நிறைக்கப் பட்டு இருத்தலால் வேதக் கருத்துக்களுக்கு இசையும்வாம தேவர் போன்று ஸாஸ்திரம் நன்கு அறிந்தோர் செய்யும் உபதேசம் -என்று இது போன்ற சொற்களுக்கு பொருள் கொள்ள வேண்டும் என்று ப்ரஹ்ம ஸூத்ரத்தில் நிறுவப் பட்டு இருக்கிறது-
யதோக்தம் ப்ரஹ்லாதேநாபி –
சர்வ கத்வாதநந் தஸ்ய ச ஏவாஹ மவஸ்திதித–ஏரவாஹ மத்தஸ் சர்வம் மஹம் சர்வம் மயி சர்வம் சநாதநே–இத்யாதி

அவ்வாறே ப்ரஹ்லாதனும்எப்பொருளிலும் ப்ரஹ்மம் நிறைந்து இருப்பதால் அதாக நான் இருக்கிறேன் -என்னிடம் இருந்தே யாவும் தோன்று கின்றன – நானே யாவுமாய் ஆகிறேன் அழிவற்று இருக்கிறேன் -என்று சொல்கிறார்
அத்ர சர்வகத்வாத நந்தஸ்ய இதி ஹேதுருத்த ஸ்வ சரீர பூதஸ்ய ஸர்வஸ்ய சிதசித் வஸ்துந ஆத்மத்வேந சர்வகத பரமாத்மா
இதி சர்வே சப்தா சர்வ சரீரம் பரமாத்மாநாமே அபிதத தீத் யுக்தம் அத காம் இதி சப்த ஸ்வாத்ம பிரகாரிணம் பரமாத்மநமேவ ஆசஷ்டே
அத இதம் உச்யதே
ஆத்மேத்யேவ து க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தன்னிஷ்பதே இத்யாதிநா காம் க்ருஹண உபாஸநம் வாக்ய காரேண –
கார்யாவஸ்த காரணாவஸ்தாஸ் ச ஸ்தூல ஸூஷ்ம அசித் சித்த வாஸ்து சரீர பரமாத்மைவ இதி -ஸர்வஸ்ய தந்நிஷ் பத்தே -இத்யுக்தம்–
ஆதமேதி தூப கச்சந்தி க்ராஹயந்நி ச-இதி ஸூத்ரா காரேண ச —

இதற்குக் காரணம்
ப்ரஹ்மம் எல்லை யற்று யாவற்றின் உள்ளும் நுழைந்து இருத்தல் என விளக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரஹ்மம் சேதன அசேதன பொருட்களை தன் உடலாகக் கொண்டு ஆத்மாவாகக் கொண்டு நிறைந்து இருப்பதால்
எல்லாச் சொற்களும் யாவற்றையும் உடலாக யுடைய பரமாத்மாவையே குறிக்கும் என்பதே பொருள்
பிறகு நான் என்ற சொல்லும் தன் ஆத்மாவைக் காட்டி அதைத் தன் உடலாகக் கொண்டு அதனுள் விளங்கும் பரமாத்மாவையே குறிக்கிறது

பிறகு த்யானிக்கையில் நம் ஆத்மாவிற்குள் பரமாத்மா இருக்கிறான் என்றே தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லப்படுகிறது -ஏன் என்றால்
அவனே யாவற்றிற்கும் தோற்றக் காரணமாய் இருக்கிறான் என்றும் விளக்கப் படுகிறது
அவன் காரண நிலையில் கட் புலனாகாத சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் சேதனங்களையும் கார்ய நிலையில் கட் புலனாகிற சேதனத்துக்குள் இருக்கும் அசேதன பொருள்களையும் தனக்கு உடலாகக் கொண்டு இருப்பதால் அவனிடமிருந்து யாவும் உண்டாகின்றன என்று கொள்வதே முறை
அவனை ஆத்மா உயிர் -என்றே உபாஸகர்கள் யாவரும் இடையறாது த்யானிக்கிறார்கள் –
ஸாஸ்த்ரங்களும் அவ்வாறே நமக்குக் காட்டிக் கொடுக்கின்றன என்பதே ப்ரஹ்ம ஸூத்ரகாரரின் கொள்கை –

———

112–மஹா பாரதே ச ப்ரஹ்ம ருத்ர சம்வாதே ப்ரஹ்மா ருத்ரம் ப்ரத்யாஹ-
தவாந் தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்தா–இதி ருத்ரஸ்ய ப்ரஹ்மணஸ் ச-அந்யே ஷாஞ்ச தேஹினாம்
பரமேஸ்வரோ நாராயண அந்தராத்மதயா வஸ்தித -இதி-
ததாதத் ரைவ -விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மஹேஸ்வர –
இதி தத்ரைவை -ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரேதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –
இதி அந்தராத்மதயா அவஸ்தித நாராயண தர்சித பதவ் ப்ரஹ்ம ருத்ரவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார்யகரவ்–இத்யர்த்த –

மஹா பாரதத்தில் -பிரம ருத்ர உரையாடலில் பிரம்மா உனக்கும் எனக்கும் உடல் படைத்த யாவருக்கும் அந்த பர ப்ரஹ்மமே அந்தராத்மா வாகிறான் என்று கூறுகிறார் –
ருத்ரனுக்கும் பிரம்மாவுக்கும் மற்றைய உடல் படைத்தோர் யாவருக்கும் பரமேஸ்வரனாய் இருப்பவன் நாராயணனே –
அவனே அந்தராத்மாவாக நிலை பெற்று இருக்கிறான்-என்று இதற்குப் பொருள்

அதிலேயே மேலும் -அளவற்ற தேஜஸ்ஸை யுடைய பவனுக்கு சிவனுக்கு -விஷ்ணுவே ஆத்மா என்றும்
தொடர்ந்து -இப்படிப் பட்ட தேவர்களில் சிறந்த ப்ரம்மா சிவன் ஆகியோர் நாராயணன் மகிழ்ச்சியுடனும் கோபத்துடனும் இருக்கையில் முறையே படைக்கப் பட்டார்கள் என்றும்
அவனால் வழி காட்டப்பட்டு படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்றும் சொல்லப் படுகிறது –

அந்தராத்மாவில் இருந்து கொண்டு நிலை பெற்ற நாராயணனால் தூண்டப் பட்டே ப்ரம்ம ருத்ரர்கள் படைத்தலையும் அழித்தலையும் செய்கின்றனர் என்பது இதன் பொருள்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் மூலமும் தமிழ் அர்த்தமும் -முதல் பகுதி –பிரதிபக்ஷ நிரஸனம்-

July 14, 2024

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

——-

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I
I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: I
I–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

இனி மேலே கத்யமாகவே அருளிச் செய்கிறார் –

3–அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

உலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் புரியும்படி நற் பொருளை நிலை நிறுத்து வதற்காக வேதக் கூட்டங்Thaliaதலை எனப்படும் உப நிஷத்துக்களில் நின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப் படுகிறது

ஜீவாத்மா அதன் மெய் நிலை பரமாத்மா அதன் மெய் நிலை இவற்றை அறிந்து வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்து அந்தப் பரம புருஷானின் இரு திருவடிthyaanaத்யானம் அர்ச்சனம் வணக்கம் இவைகளை அவனுடைய உகப்புக்காகச் செய்து அவனை அடைவதையே பலனாகக் கொள்ள வேண்டும் –

உபநிஷத்துக்களின்றும் இனி வரும் பொருள் நன்கு அறிவிக்கப்படுகிறது –
யாதாத்ம்ய ஞானமும் – வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப் பிடித்து பரம புருஷனின் திருவடித் தாமரைகளில் த்யானம் அர்ச்சனம் நமஸ்காரம் இவற்றை பகவத் ப்ரீதி அர்த்தமாகக் -கைங்கர்ய பரமாக -அவன் உகப்புக்காகச் செய்து இத்தையே ஸ்வயம் பிரயோஜனமாகக் கொள்ள வேண்டும்

அஸ்ய ஜீவாத்மநோ அநாத் யவித்யா ஸஞ்சித புண்ய பாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ ப்ரவேஸ க்ருத தத் தத் ஆத்மாபிமான ஜெனித அவர்ஜனீய பவபய வித்வம்ஸநாய தேஹாதி வ்யதி ரிக்த ஸ்வரூப -தத் ஸ்வ பாவ -தத் அந்தர்யாமி பரமாத்ம -தத் ஸ்வபாவ -தத் உபாஸன-தத் பல பூதாத்ம ஸ்வரூப ஆபிர்பாவ பூர்வக அனவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே ப்ரவ்ருத்தம் வேதாந்த வாக்ய ஜாதம்
தத்வமஸி
அயமாத்மா ப்ரஹ்ம
ய ஆத்மநி திஷ்டன் ஆத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்ய ஆத்மா ஸரீரம் ய ஆத்மான் அந்தரோ யமயதி ஸதே ஆத்ம அந்தர்யாம் யம்ருத
ஏஷ –ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண
தமேதம் வேத அநு வசனனேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேந தாநேந தபஸா நஸகேந
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
தமேவம் வித்வானம் ருதமிஹ பவதி நான்யப்பந்தா அயனாய வித்யதே –
இத்யாதிகம்

இந்த ஜீவாத்மா உடன் தோன்றிய அசேதனப் பொருள்கள் அதன் ஆரம்பம் இல்லாத் தொடர்புகள் -புண்ய பாபங்கள் -அதன் அடியான ஜன்மங்கள் -ப்ரம்மா முதல் தேவர் மனிதர் விலங்கு ஸ்தாவரம் முதலான நான்கு விதப் பிறப்புக்கள்
அதனால் ஏற்பட்ட அந்தந்த சரீரங்களையே ஆத்மாவாக நினைத்து அதனால் ஏற்பட்ட பிறவிச் சுழல் பயத்தைப் போக்கி -உடலின் நின்றும் வேறுபட்ட ஆத்மா அதன் மெய் நிலை அதன் மெய்க்குணம் -அதற்க்கு உள்ளுறைவானாயுள்ள பரமாத்மா -அதன் மெய்நிலை குணம் இவற்றையும் அறிasthmஆத்ம மெய் நிலை எய்தி குறைவற்ற ப்ரஹ்மானந்தம் அடைதல் எனச் சொல்ல வந்தது வேதாந்தம்

ஆப்நோதி -ப்ரஹ்மத்தை அடைகிறான் -ஆனால் ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்ற அத்வைதிகளின் கொள்கை தவறாகக் கூறுகிறது

————–

4–ஜீவாத்மந ஸ்வரூபம்
தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷ ரூப நாநாவித பேத ரஹிதம்
ஞான ஆனந்த ஏக குணம்
தஸ்யை தஸ்ய கர்ம க்ருத தேவாதி பேத வித்வஸ்தே ஸ்வரூப பேதோ வாசா மகோசர ஸ்வ சம்வேத்ய
ஞான ஸ்வரூபம் இத்யேதாவ தேவ நிர்தேஸ்யம் தச்ச ஸர்வேஷாம் ஆத்மாநாம் சமாநம்

(மோக்ஷ தசையில் ஸ்வரூப பேதம் மட்டுமே இருக்கும் -எல்லா ஆத்மாக்களும் சமம் -தேவாதி பேத ஆகாரங்கள் போன பின்பும் வெவ்வேறே ஜீவன்)

(ஸ்வ சம்வேத்ய-ஸ்வயம் வேத்ய -ஸ்வயம் ப்ரகாஸம்)

ஜீவாத்ம மெய் நிலை–தேவ மனித விலங்கு ஸ்தாவரம் என்ற நான்கு பிறப்புகளில் தான் ஏற்று இருக்கும் அசேதன பொருளின் வேறுபாட்டுக்கு ஏற்ப பற்பல விதமாய் இருக்கும்
குணம் ஞானமும் ஆனந்தமும் எப்பொழுதும் கொண்டிருக்கும் -அந்த அப்படிப்பட்ட ஜீவாத்மாக்களுக்கு வினைகளால் ஏற்பட்ட புண்ய பாபங்களுக்கு ஏற்ப தேவர் முதலிய உருவ வேறுபாடு சொற்களுக்கு அடங்காது –
தானே அறியப்படுவது
ஆத்மாவுக்கு ஞானமும் ஆநந்தமுமே மெய் நிலை என்பது வெளிப்படை -இதனால் ஆத்மாக்கள் அனைத்தும் ஒருபடித்தானவை –

——

5-ஏவம் வித சித் அசித்தாத்மக பிரபஞ்சஸ்ய -(ஸ்ருஷ்டிக்கப்பட்ட ) உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தன ஏக ஹேது பூத
ஸமஸ்த ஹேய பிரத்ய நீக தயா-அநந்த கல்யாணைக தான தயாஸ(ஏக தான தயா அனைத்துக்கும் ஏக ஆஸ்ரயம் இவனே )-(இரண்டாலும் விலக்ஷணன் )
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
சர்வாத்ம
பர ப்ரஹ்ம
பரஞ்சோதி
பரமாத்மா
சதாதி சப்த பேதைர் நிகில வேதாந்த வேத்யோ பகவான் நாராயண புருஷோத்தம
இத் யந்தர்யாமி ஸ்வரூபம்

(ஸ்வரூபம் விளக்கி மேல் ஸ்வ பாவம்)

தஸ்ய ச வைபவ ப்ரதிபாதன பரா பேத ஸ்ருதய
ஸ்வ இதர ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாதாந்தர ஆத்ம தயா நிகில நியமனம்
தத் சக்தி -ததம்ச -தத் விபூதி -தத் ரூப -தத் சரீர -தத் தனு -ப்ரப்ருதிஸ் சப்தை தத் சாமாநாதி கரண்யேந ச ப்ரதிபாத யந்தி

(சக்தி ரூபம் -அகிலம் ஜகத்
அம்சம் -அம்சாதிகரணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம் -branch office போல்
விபூதி -விபூதிமான்
ரூப -சரீர -தனு)

இவ்வாறு சேதன அசேதன பொருள்கள் கலந்த பிரபஞ்சத்தின் படைப்பு காப்பு அழிப்பு ஆகிய பிறவிச் சூழலில் தள்ளும் தாழ்ந்த குணங்களுக்கு எதிர்த்தட்டாக முடிவற்ற குணங்களுக்கும் ஆனந்தத்திற்கும் இருப்பிடமாய்
தன்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பொருள்களிலும் சிறந்தவனாய்
அளவற்ற நற்குணங்கள் கூட்டங்கள் உள்ளவனாய்
ஸர்வாத்ம
பர ப்ரஹ்மம்
பரஞ்சோதி
பரதத்வம்
பரமாத்மா
ஸத்
என்று பலவகையான சொற்களால் எல்லா வேதங்களாலும் குறிப்பிடப் படுபவனாய் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீSakthiசக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவனாய் ஈர் ஏழு பதினான்கு உலகுகளையும் பரமபதத்தையும் உடையவன்
நாராயணன் புருஷோத்தமன் என்னும் சொற்களால் அறியப்படுபவன்

இப்படிப்பட்ட சிறப்புகளால் கூறப்படுவது ஜீவாத்மா பரமாத்மாவை வேறு படுத்திக் கூறும் வேதங்களுக்கு ஒத்து இருக்கும்
அவ்வாறே அந்த சக்தி -அந்த அம்சம் -அந்தச் செல்வம் -அந்த உருவம் அந்த உடல் என்று கூறும் சொற்கள் ஸாமா நாதி கரண்யத்தால் அவனுடைய ஆளுமையையே குறிக்கின்றன
ஆகவே எல்லாச் சொற்களும் அவனுடைய பெருமையைக் கூறுகின்றன என்பதில் முரண் இல்லை

————

6-தஸ்ய வைபவ ப்ரதிபாதன பராணாம் ஏஷாம் சாமாநாதி கரண்ய அதீநாம்

(ப்ரஹ்மம் வைபவம் காட்டும் சாமானாதிகார பரமான ஸ்ருதி வாக்கியங்கள் -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சேஷ சேஷி -நியந்தரு நியாம்ய சரீரி சரீர- ஆதார ஆதியே பாவம்-ஒன்றும் ஒன்றியே இருக்கும்-
ஒன்றும் தேவும் யாதும் இல்லா அன்று –)

விவரணே ப்ரவ்ருத்தா கேசந(அநாதரணீயம் -ஐக்யம் சொல்லி மேல் மேல் )
நிர்விசேஷ ஞான மாத்ரமேவ ப்ரஹ்ம–(சின் மாத்ர -ஒன்றை விலக்க மாத்ர பத பிரயோகம் -சித் ஏவ -வேறே ஒன்றை விலக்கும்
சித் -ஞானம் ஒன்றே -ஞாதா -ஜேயமும் இல்லை )தச்ச நித்ய முக்த ஸ்வ பிரகாசம் அபி
தத்வமஸ்யாதி சாமாநாதி கரண் யவகத ஜீவ ஐக்யம்(தத் ஸப்த வாசியான ப்ரஹ்மம்- த்வம் ஸப்த வாசியான ஸம்ஸாரி ஜீவன் உடன் ஐக்யம் )
ப்ரஹ்மைவ அஞ்ஞம்  முச்யதேச (அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம் ப்ரஹ்மமே ப்ரஹ்மம் ஏவ பத்த ஜீவன் முக்த ஜீவன் ) நிர் விசேஷ சின்மாத்ராதி ரேகி
ஈஸ ஈஸிதவ்ய (பதார்த்த தாரதம்யங்களுக்கு உப லக்ஷணம் )அநந்த விகல்ப ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஜகத் மித்யா(கயிறு பாம்பு யாதாத்ம்ய ஞானத்தால் அறிவது போல் இதம் ப்ரஹ்மம்-ஞான நிவர்த்ய பதார்த்தம் மித்யா -ஞான மாத்திரம் மோக்ஷம் அவர் பக்ஷம் )
கஸ்சித் பத்த கஸ்சித் முக்த இதீயம் வ்யவஸ்தா ந வித்யதே(பந்தப்படுவதும் விடுபடுவதும் மித்யா-வ்யவஸ்தையும் மித்யா )
இத பூர்வம் கேசந முக்தா இத்யயம் அர்த்தோ மித்யா
ஏகமேவ சரீரம் ஜீவவத் நிர் ஜீவாநி தாராணி சரீராணி(ஓன்று மட்டுமே ஜீவன் உள்ள சரீரம் -மற்றவை ஜீவன் இல்லா சரீரங்கள்-நாநாவித தோற்றம் வாசனையால் -அநாதி )
தச்ச சரீரம் கிமிதி ந வ்யவஸ்திதம் ஆசார்யோ ஞானஸ் யோபதேஷ்டா மித்யா -ப்ரமாதா மித்யா –
ஸாஸ்த்ரம் ச மித்யா -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் ச மித்யா-
ஏதத் சர்வம் மித்யா- பூதேநைவ சாஸ்த்ரேணாவகதம் -இதி வர்ணயந்தி(இப்படி சிலர் வியாக்யானம் பண்ணுகிறார்கள் )

(ஞானம் -ஆச்சார்யன் இரண்டு இருக்க முடியாதே
ஞானத்துக்கு ஆஸ்ரயமான ஆச்சார்யன் -அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமான சிஷ்யன்-

ப்ரமாதா ப்ரமாணம் ப்ரமேயம் அனைத்தும் மித்யா-தத்வமஸி வாக்கியமும் ப்ரஹ்ம வ்யா வ்ருத்தி அதுவும் மித்யா )

அந்தப் பரமாத்மாவின் பெருமையைக் கூறுவதையே பொருளாக யுடைய ஸாமாநாதி கர்ணயத்தை விவரிக்க வந்த சிலர்
ப்ரஹ்மம் என்பது குணம் ரூபம் விபூதிகள் அற்ற தன்னொளி கொண்டது மட்டும் -அதற்கு நித்யர்கள் முக்தர்களைப் போல தன்னொளி கொண்டு இருந்தாலும் தத்வமஸி என்ற ஸாமாநாதி கரண்யத்தால் சொன்ன
ப்ரஹ்ம ஜீவ ஒருமை -ப்ரஹ்மமே அறியாமை நிறைந்தது -பிறவிச் சூழலில் கட்டுப்படுகிறது -அதினின்றும் விடுபடுகிறது -என்று பொருள் படுகிறது
குணங்கள் அற்ற ஞானம் மட்டுமே ப்ரஹ்மமானால் -ஆள்பவன் -ஆளப்படுபவன் -பிரபஞ்சம் முதலிய அநேக பிரிவுகளை யுடைய யுலகம் எல்லாம் பொய்
கட்டுப் பட்டவன் விடு பட்டவன் என்ற ஒழுங்கு இல்லை
இதற்கு முன் சிலர் முக்தி அடைந்தார்கள் iஎன்பது இல்லை
ஒரே சரீரத்தில் மட்டும் ஜீவன் இருக்கிறது -மற்றவை ஜீவன் அற்றவை -அந்த ஜீவனுடைய உடல் எது என்பது வரையறுக்கப் படவில்லை –
ஞானத்தை உபதேசிக்கும் ஆச்சார்யனும் அதை அறியும் சீடனும் பொய் -அறிய முயலுபவனும் பொய் -ஸாஸ்த்ரங்களும் அதனால் கிடைக்கும் அறிவும் பொய்
இது இவ்வாறு இருப்பது பொய்யான ஸாஸ்திரத்தாலேயே அறியப்படுகிறது -என்று வர்ணிக்கின்றனர்

——————–

அத பாஸ்கர பஷ சங்க்க்ஷேபம்
7-அபரே து–அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணோ பேதாமபி ப்ரஹ்ம -ஏதேனைவ ஐக்யாவ போதேந முச்யதே
நாநாவித அமல ரூப பரிணாம ஆஸ்பதம் ச இதி வ்யவஸ்திதா

(ப்ரஹ்மம் நிர் விசேஷம் அல்ல -ஜகத்தும் -மித்யை அல்ல -சத்யம் என்பர்-உபாதி -கல்பித்து -புண்ய பாப கர்மாவே உபாதி இவையும் சத்யம் மித்யை அல்ல
உபாதியால்  ப்ரஹ்மமே பரிணாமம் அடைந்து அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமாகி நாநா விதமாக தோன்றுகிறது என்பர்-ஏகமேவ அத்விதீயமாக இருக்க -உபாதி -ஸ்வா பாவிக தர்மத்துக்கு விபாகம் உண்டாக்கும் -முக்த தசையில் ஐக்யம் என்பர் -)

பாஸ்கரர் கொள்கைக்குச் சுருக்கம்

மற்றும் சிலர் -பாவங்கள் ஒட்டாத நற் குணங்களை யுடையது ப்ரஹ்மம் -என்று வேதம் சொல்லும் என்றாலும் -கூட உயிர் ப்ரஹ்ம பலன்கள் தொடர்பு முதலியவற்றோடு கட்டுப்படுதல் விடுபடுதல் முதலான பலவித குறைகளுடன் கூடி பரிணாமத்தை அடைகிறது என்று கூறுகிறார்கள்

பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவற்றைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாக இருப்பினும் பொருள் ஒன்றைக் கொள்வதாக ஸாமா நாதி கரணம் என்று வடமொழி இலக்கணத்துக்கு தமிழ் இலக்கணத்தில் அன் மொழித் தொகைக்கு நெருங்கியது –

————

அத யாதவ பிரகாச பஷ சங்க்க்ஷேபம்
8–அந்யே புந ஐக்யாவ போத யாதாத்ம்யம் வர்ணயந்த
ஸ்வாபவிக நிரதிசய அபரிமித உதார குண சாகரம் ப்ரஹ்மைவ -ஸூர நர திர்யக் ஸ்தாவர -நாரகி ஸ்வர்க்ய பவர்கி –
சேதனைக ஸ்வபாவம்– ஸ்வபாவதோ விலக்ஷணம் அவிலக்ஷணஞ்ச வியதாதி நாநாவித பரிணாம
ஆஸ்பதம்ச இதி ப்ரத்யவதிஷ்டந்தே

(நாரகி ஸ்வர்க்ய பவர்கி –நரகம்-ஸ்தான விசேஷம் இல்லை -நரக அனுபவம் செய்யும் ஆத்மா -நாரகி
பாப பல ரூப துக்க அனுபவம் செய்பவனாகவும் -புண்ய பல ரூப இன்ப அனுபவம் செய்பவனாகவும்

அபவர்க்கி -இதுவும் ஸ்தான விசேஷம் இல்லை -அனுபவத்தை சொன்னவாறு

ப்ரஹ்மமே ஸ்வரூபேண பரிணாமம் அடைகின்றது என்பர் )

யாதவ பிரகாசர் கொள்கைச் சுருக்கம்

வேறு சிலர் -தத்வமஸி போன்ற வாக்யங்கள் கலத்தலை எவ்வாறு உள்ளபடி சொல்வதாக வர்ணிக்கிறார்கள் என்றால்
இயற்கையாகவே ஒப்புயர்வற்ற அளவற்ற மேன்மையான குணங்களின் கடலாக இருக்கும் ப்ரஹ்மமே மனித விலங்கு ஸ்தாவர -நரகில் உழலும் -ஸ்வர்க்கத்தில் மகிழும் -முக்தியடைந்த அறிவின் தன்மையை அடைகிறது
இயற்கையாகவே சிறந்த தாழ்ந்த ஆகாயம் முதலானவைகளாக மாறுதலை அடைகிறது -என்று கூறுகிறார்கள் –

—————

அத சங்கர பஷ ப்ரதிஷேபம்
9–தத்ர பிரதம பக்ஷே ஸ்ருத்யர்த்த பர்யா லோசன பரா-துஷ் பரிஹராந் தோஷாந் உதாஹரந்தி

பிரகிருத பராமர்சி தச் ஸப்தாவக தஸ்ய ப்ரஹ்மண ஸ்வ சங்கல்ப கிருத ஜகத் உதய விபவ லயாதய
(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் வாக்கியம் )தத் ஐஷ்த பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாரம்ய
சந் மூலா (ஸத் ப்ரஹ்மமே மூலமாகக் கொண்டு )ஸோம்யேமாஸ் சர்வாஸ் ப்ரஜாஸ் சதாயதநாஸ் (ஆயதனம் இருப்பிடம் )சத் பிரதிஷ்டாஸ் (அதிலேயே லயம் )இத்யாதிபிஸ் பதைஸ்
ப்ரதிபாதிதாத் சம்பந்தி தயா பிரகாரணாந்தர நிர்திஷ்டா(இதே போல் வேறே பிரகரணங்களிலும் உண்டே )
சர்வஞ்ஞதா -சர்வ சக்தித்வ-(ஸங்கல்ப மாத்ரத்தால் செய்யும் சக்தி )சர்வேஸ்வரத்வ (நியந்த்ருத்வம் )-சர்வ பிரகாரத்வ -(சரீர சரீரீ பாவம் )சமாப்யதிக நிவ்ருத்தி -சத்ய காமத்வ -ஸத்ய ஸங்கல்பத்வ –
சர்வ அவபாசகத்வாத் (இவன் அதீனத்தாலே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள் )யநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா
அபஹதபாப்மா இத்யாதி அநேக வாக்யாவகத் நிரஸ்த நிகில தோஷதா ச சர்வே தஸ்மிந் பக்ஷே விஹன்யந்தோ –(நிர்விசேஷ ப்ரஹ்மம் ஸித்திக்காதே )

சங்கரர் கொள்கை சுருக்கம்

வேதப் பொருள்களை முன்னும் பின்னும் நன்கு ஆராய்ந்தவர்கள் –ஆளவந்தார் போன்றோர் -அந்த முதல் பக்ஷத்தில் உள்ள விலக்க முடியாத குற்றங்களை கீழ்க் கண்டவாறு எடுத்துக் காட்டுகிறார்கள்
இந்த இடத்தில் தத் என்று குறிப்பிடப் படும் சொல் ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அந்தப் ப்ரஹ்மம் தானே செய்ய விரும்பியதாக உலகங்களின் தோற்றம் பாதுகாப்பு அழிவு முதலியவை ஆகின்றன –
நான் பலவாக ஆவேன் -என்று அது நினைத்தது -எனத் தொடங்கி -எல்லாம் அந்த ஸத் -தை ஆதாரமாகக் கொண்டவை அதனிடமே நிலை பெறுபவை -என்று பல சொற்களால் சுட்டிக் காட்டப்படும் -தத் -அது என்ற பதம் இவ்விடத்தில் அதனுடன் தொடர்புடைய எல்லாவற்றையும் அறியும் தன்மை யுடையது
எதையும் செய்யும் ஆற்றல் உடையது
எல்லாவற்றையும் ஆளும் தன்மை படைத்தது
எல்லாவற்றையும் சூழ்ந்து உள்ளது
தனக்கு ஒப்பும் மிக்கும் அற்றது
தன் ஒளியால் பிரகாசிப்பது போன்ற ஒப்பு மிக்கும் அற்ற -அளவற்ற கல்யாண குணங்களை யுடையது என்பது விளங்குவதாலும்
பாபங்கள் சிறிதும் அற்றது என்று பல இடங்களிலும் தாழ்ந்த குணங்கள் இன்மையைக் காட்டுவதாலும்
மேற்கூறிய பக்ஷம் அழிக்கப் படுகிறது –

ஸர்வ வேதாந்தப் ப்ரத்யயம் -ஸர்வ ஸாகாப் ப்ரத்யயம்
ஜகத் அஜகத் ஜகதா ஜகத் -விட்ட விடா விட்டு விடா
ஒன்றும் தேவும் -ஈடு வியாக்யானம் ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -ஸ்ருதி விளக்கம் உண்டு –

———–

10-அத ஸ்யாத் -(மேல் அத்வைதிகள் வாதம் )-உபக்ரமேபி (ப்ரகரண ஆரம்பத்தில் )ஏக விஞ்ஞாநேந-சர்வ விஞ்ஞான முகேன காரணஸ்யைவ சத்யதாம் ப்ரதிஜ்ஜாய(இது அனுப பன்னம் என்று சொல்ல மூன்று த்ருஷ்டாந்தங்கள்-ம்ருத் பண்டம் -நாம ரூபங்கள் அசத்தியம்-அழியுமே – மண் என்பதே ஸத்யம் -ஸ்வரூப மாத்ரம் ஸத்யம்- இதர ஸர்வம் மித்யா )
தஸ்ய காரண பூதஸ்யைவ சத்யதாம் விகார பூதஸ்ய ச அசத்தியதாம் ம்ருத் திருஷ்டாந்தேந தர்சியித்வா ஸத்ய பூதஸ்யைவ ப்ரஹ்மண
சதேவ ஸோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதி(சத்தாகவே இருந்தது விஜாதீயம் இல்லை -ஒன்றாகவே இருந்தது ஏகமேவ -சஜாதீயம் இல்லை -அத்விதீயம் ஸூவ கத பேதமும் இல்லை )
சஜாதீய விஜாதீய  நிகில பேத நிரசநேன–நிர்விசேஷ தைவ ப்ரதிபாதிதா –
ஏதச் சோதகாநி ப்ரகாராணந்தர வாக்ய அந்யபி
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
விஞ்ஞானம் -ஆனந்தம் -இத்யாதீனி சர்வ விசேஷ ப்ரத்யநீகைககாரதாம் போதயந்தி
ந ச ஏகாகார அவபோதநேபி பதாநாம் பர்யாயதா ஏகத்வேபி வஸ்துன சர்வ விசேஷ ப்ரத்ய
நிகாகாரத்வோபஸ்தாபநேந சர்வபதானாம் அர்த்வத்வாத் இதி

(ஞான ஸ்வரூபம்-ஸ்வயம் பிரகாசம் சேதனம் ஸஜாதீயம் -விஜாதீயம் அசேதனம் -ஸ்வ கத குணங்கள்-விசேஷணங்கள் இத்யாதி அனைத்துமே மித்யா

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-சத்யம் ப்ரஹ்மம் ஞானம் ப்ரஹ்மம் அநந்தம் ப்ரஹ்மம் -மூன்று ப்ரஹ்மம் ஆகும் என்பர் ஏகத்வம் போகும்
வேறுபட்டது என்று சொல்லவே வந்தது -என்பர்-விசேஷணமாகக் கொள்ளாமல் ஸ்வரூப பரமாகக் கொண்டு வியாக்யானம் செய்வர் –
நிர்விகாரம் சத்யம் -அஜடம் வேறுபட்டது -அளவு பட்டவையில் வேறு பட்டது -என்பர் )

(நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரவத்யம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
கள -அவயவம்- அவயவங்கள் இல்லாமல் -அதனால் கார்யங்கள் செய்யாமல் -ப்ரவ்ருத்தி இல்லாமல்-குணங்கள் இல்லாமல்
நிரவத்யம் -நிரஞ்சனம்-கர்ம சம்பந்தமும் பலமும் அற்ற குறை இல்லாமல் -திர்யக் கர்ம சம்பந்தம் இல்லாமல் கர்ம பல சம்பந்தம் மட்டுமே கொண்டது -)

அது அவ்வாறு அல்ல
துவங்குகையிலேயே எந்த ஒன்றை அறிவதால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -அதைக் காரணமாகக் கொண்டு உறுதிப்பட்டு காரணப் பொருள் ஒன்றே உண்மை -அதின் நின்றும் வெளிப்படும் கார்யப் பொருள்கள் உண்மையல்ல -என்பதை
மண் -அதின் நின்றும் செய்யப்படும் குடம் காரணத்தைக் உண்மையானது ப்ரஹ்மம் மட்டுமே –
குழந்தாய் அந்த மெய்ப்பொருள் மட்டுமே முதலில் இருந்தது -தனியாக இருந்தது -இரண்டாவது ஒன்றும் இல்லை -என்று ஸஜாதீய பேதம் -ஒருபடிப்பட்ட மாறுபாடுகள் -பல தென்னை மரங்கள் இருப்பினும் ஒரு குறிப்பிட்ட மரத்தை மற்றைய தென்னை மரங்களில் நின்றும் வேறுபடுத்துவது –
விஜாதீய மாறுபாடான வேறுபாடு -பல மரங்கள் இருப்பினும் மா மரங்கள் இல்லை புளிய மரங்கள் உள்ள தோப்பு என்னுமா போல்
ஸ்வகத பேதம் -ஒரு பொருளின் உறுப்புக்கள் தம்முள் மாறுபடுவது -தலை கால் கண் போன்று அடிமரம் வேர் பூ போன்று -அனைத்து பேதங்களையும் நீக்கும் முகமாய் அது நிர் விசேஷம் குணங்கள் அற்றது என்று கூறப்பட்டு இருக்கிறது
இது போன்ற ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லும் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்பதற்கு ப்ரஹ்மம் அஸத்யம் அற்றது அஞ்ஞானம் அற்றது அளவுபட்டது அன்று என்றும்
அவ யவம் அற்றது செயல் அற்றது குணம் அற்றது எதிலும் ஒட்டாதது என்றும்
அறிவு நிறைந்தது ஆனந்தம் உள்ளது போன்ற குணங்களைக் கூறும் பதங்களுக்கு எதிரிடையானது என்றும் பொருள் கூறப்பட்டு இருக்கிறது
இவ்வாறு கூறுகையில் நற் குணங்களைச் சொல்லி அதற்க்கு எதிரிடையான குணம் இல்லை என்று கூறுவதால் ஒரு பொருள் பன் மொழி ஆவதால் அவற்றைத் திரும்பத் திரும்பிச் சொல்லும் குற்றம் ஏற்படுகிறது
ஒரு முறை சொன்னால் நிறைவேறுமே என்ற வினாவிற்கு
பொருள் ஒன்றேயாயினும் குணங்கள் பலபட்டவை யாதலாலும் அவை யாவும் தனித் தனியே மறுக்கப் பட்டதாகிறது என்று அத்வைதிகள் ஸமாதானம் சொல்லுகிறார்கள்

ப்ரஹ்மத்தைப் பற்றிய ஸ்ருதி வாக்யங்கள் காரண வாக்யங்கள் என்றும் சோதக வாக்யங்கள் -அதன் குணங்களை ஆராயும் வாக்யங்கள் -என்றும் இருவகைப்பட்டு இருக்கும் –

———–

11-நைததேவம் (அவ்வாறு அல்ல )-ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞானம் ஸர்வஸ்ய மித்யாத்வே ஸர்வஸ்ய ஞாதவ்ய
ஸ்யாபாவாது நசேத்ஸ்யதி ஸத்ய மித்யாத்வயோ ஏகதா ப்ரஸக்திர்வா
அபிது ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிக்ஞா ஸர்வஸ்ய ததாத்மகத்வே நைவ சத்யத்வே சித்யதி –

(ஏவம் அஸ்தி விஞ்ஞானேந ஸர்வம் நாஸ்தி விஞ்ஞானேந அல்லவேஏக விஞ்ஞாநேன-கரண த்ருதியீ அல்ல -அபேதே த்ருதியீ -ஒன்றை அறிவதில் மற்றவற்றை அறிவது எல்லாம் அடங்கி இருக்கும் என்றவாறு )

இது இவ்வாறு இல்லை -ஒன்றை அறிந்து கொண்டு அந்த ஞானத்தினால் மற்ற ஒன்றுமே இல்லை என்று சொல்லப்படும் மற்றப் பொருள்களை எவ்வாறு அறிய முடியும் –
அல்லது உண்மை என்றே சொல்லும் பொய் என்ற சொல்லும் ஒரே பொருளைக் கொண்டு இருக்க வேண்டும் –
மாறாக இவ் வுலகம் உயிர் பொருள்களும் அவனுக்கு உடல் என்று கொண்டால் -உடல் உயிர் இவை தனித்தனியே இயங்காதவை யாகையால் -இவ்வுயிரை அறிவதால் அவ்வுடலை அறிந்ததாகும்

மீமாம்ஸம் அத்வைதத்தை உண்மையற்றது என்ற ஓலம் -அஸத்யப் பிரலாyenakkuஎனக் குறிப்பிடுகிறது –

————

12-அயமர்த்த-ஸ்வேத கேதும் ப்ரத்யாஹ
ஸ்தப்தோசி உததம ஆதேசம் பிராஷ்ய இதி
பரிபூர்ண இவ லஷ்யஸே தானாச்சார்யான் பிரதி தமப்ய ஆதேசம் ப்ருஷ்ட்வானசி
இதி ஆதிஸ்யதே அநேநேத்ய ஆதேச ஆதேச பிரசாசனம்

(ஆதேசம்-உபதேச விஷயம் -அத்வைத மதத்தில் -ஞானத்துக்கு விஷயம் மித்யை -ஞான பின்னம் ஜேயம்-
ஞான மாத்ரம் ஸத்யம் என்பர் -அறியப்படும் விஷயம் இல்லையே
ப்ரஹ்மம் தவிர மற்றவை மித்யை என்பதே உபதேச விஷயம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வமஸி -நீ த்வம் அல்ல -அந்த தத் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
அந்த விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்டாயா –
ஏக விஞ்ஞானம் -இதர ஸர்வம் மித்யை
நாமோ ஆவேசம் -உபதேச அர்த்தம் இல்லை -ஆதேச கர்த்தா-சர்வ நியந்த்ருத்வம்-பகவத் பரமாகவே நாம் அர்த்தம்   -அவர்கள் கர்மணி –
நியமனம் ஏஷ ஆவேச -ஏஷ உபதேச -இரண்டும் சுருதி சொல்லும்
ஆ உப இரண்டும் -உபதேச பலம் சிஷ்யனுக்கு

(சதேவ -காரண ஸ்ருதி -ஸத்தில் இருந்தே உருவானது -ப்ரஹ்மம் ஒன்றும் மட்டுமே காரண அவஸ்தையில் -மற்றவை இதில் ஒன்றி –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூப ரஹிதம்-ஏகமேவ -அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -அத்விதீயம் லோகத்தில் காண்பது போல் அல்லவே -ஸகல இதர விலக்ஷணம்-ஸர்வ ஸரீரத்வம் -ஸர்வ கல்யாண குணாத்மகம் அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -)

(அக்ரே இதற்கு முன்னால் -பூர்வ காலீத்வம் -சதேவ -ஸத் ஒரே பதார்த்தமாக இருந்து -அதுவே உபாதான காரணம்
சர்வஞ்ஞத்வ குண விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஏகமேவ -அதுவே நிமித்தமும் உபாதானமும் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
லோகத்தில் இது போல் இல்லையே என்ன இது அத்விதீயம்)

ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத இத்யாதிபிரை ததாச மாநவம் வச
பிரசாசிதாரம் ஸர்வேஷாம் இத்யாதி அத்ராபி ஏகமேவ இதி ஜகதுபாதாநதாம் ப்ரதிபாத்ய அத்விதீய –
பதேந அதிஷ்டாத்ரந்தர நிவாரணாத் அஸ்யைவ ப்ரதிபாத்யநே
அத -தம் பிரசாசிதாரம் ஜகத் உபாதான பூதமபி ப்ருஷ்ட்வானசி -யேந ஸ்ருதேந மதேந அஸ்ருதம மதம விஞ்ஞாதம்
ஸ்ருதம் மதம் விஞ்ஞாதம் பவதி -இத்யுக்தம் ஸ்யாத் -நிகில ஜகத் உதய விபவ விலயாதி காரண பூதம் ஸர்வஞ்ஞத்வ –
சத்ய காமத்வ-ஸத்ய ஸங்கல்பத்வாத்ய-அபரிமித உதார குண சாகரம் கிம் ப்ரஹ்ம த்வயா ஸ்ருதம் –இதி ஹார்த்தோபாவ —

ஸ்வேத கேதுவை -அவருடைய தந்தை வினவினார்
எல்லாம் அறிந்தவன் போல் காணப் படுகிறாயே –
அந்தக் கட்டளையின் -ஆதேசத்தின் -பொருளைக் கேட்டு அறிந்தாயா –
முழுமையாக்கும் இலக்கோடு உன்னுடைய ஆசானிடம் இருந்து அந்தக் கட்டளைப் பொருளை அறிந்து இருக்கிறாயா –
பரமாத்மாவால் நியமிக்கப் படுகிறது என்பதால் அதனை கட்டளை என்கிறோம் -ஆதேசம் என்றால் மீற முடியாத ஏவல்

அந்தப் பரமாத்மாவின் கட்டளைப் படி -ஹே கார்க்கி ஸூர்ய ஸந்த்ரர்கள் நிலை பெற்று இருக்கிறார்கள் -என்று ஒரே பொருளைக் கொள்ள வேண்டும்
அப்படியே மநு ஸ்ம்ருதியிலும் -எப்பொருளையும் உள்ளிருந்து நியமிப்பவன் என்று கூறப்பட்டு இருக்கிறது –
இங்கும் -ஸத் வாக்யத்திலும் -உலகின் உத்பத்திக் காரணம் ஒன்றே என்று காட்டி -இப்படி உள் புகுந்து நியமிப்பது வேறில்லை என்பதையும் எவன் உலகைப் படைப்பவனாய் இருப்பானோ –
எவனை அறிந்தால் -த்யானித்தால் -அறியப்படாதது அறியப்பட்டதாகவும் -கேட்கப்படாதது கேட்கப்பட்டதாகவும் ஆகுமோ -அவனை அறிந்தாயா என்பதே சரியான பொருளாகும் –
உலகின் படைத்தல் -காத்தல் -அழித்தல் -இவற்றுக்குக் காரணமானவனாயும் -எல்லாவற்றையும் அறிந்தவனாயும் -எந்த விருப்பங்களும் இல்லாதவனாயும் -எச் செயலையும் செய்ய வல்லவனாய் இருப்பவனாயும் –
ஆகிற குணக்கடலாய் இருப்பவனாகிய ப்ரஹ்மத்தை அறிந்து இருக்கிறாயா -கேட்டு இருக்கிறாயா -என்பதே அவருடைய மனப் பூர்வமான எண்ணம் –

————-

13–தஸ்ய நிகில காரணதயா காரணமேவ நாநா சமஸ்த்தான விசேஷ ஸம்ஸ்திதம் கார்யம் இதயுச்யத இதி காரண பூத
ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரக ப்ரஹ்ம விஞ்ஞாநேன கார்ய பூதம் அகிலம் ஜகத் விஞ்ஞாதம் பவதீதி ஹ்ருதி நிதாய –
யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம்-ஸியாத் இதி புத்ரம் பரதி ப்ருஷ்டவான் பிதா —

ஸ்வேத கேதுவின் கேள்வியும் உத்தாலகர் பதிலும்

அந்தப் ப்ரஹ்மம் உலகின் காரணமாகவும் பற்பல சிறப்பான நிலை வேறுபாடுகளை உடையதாகவும் இருப்பதால் உலகி காரணம் என்றும் கார்யம் என்றும் சொல்லப்படுகிறது –
சேதன அசேதனப் பொருள்களை உடலாக யுடைய கட்புலனாகாத காரணமான அவனை அறிவதால் கார்யமான பூத உலகை முழுமையாக அறிந்ததாகும் என்னும் கருத்தை மனத்தில் கொண்டு –
எதை அறிந்தால் கேட்கப்படாதது கேட்கப் பட்டதாகவும் அறியப்படாதது அறியப்பட்டதாகுமோ அதை அறிந்தாயா என்று தந்தை வினவினார்-

———-

14–ததேதத் சகலஸ்ய வஸ்து ஜாதஸ்ய ஏக காரணத்வம் பித்ரு ஹ்ருதி நிஹித மஜானன் புத்ர பரஸ்பர விலக்ஷணேஷு
அந்யஸ்ய ஞானேந ததந்ய ஞானஸ்ய கடமானதாம் புத்தா பரிசோத யதி –கதந்நு பகவஸ் ச ஆதேச இதி –

முன் சொல்லப்பட்ட ஒன்றை அறிவது எல்லாப் பொருள்களையும் அறிவதாகும் என்று ஒரே காரணமாய் இருக்கும் தன்மையை தந்தை மனதில் கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மகன்-ஒரே பொருளை அறிவதால் ஒன்றுக்கு ஓன்று மாறுபாடுடைய எண்ணற்ற பொருள்களை அறியும் நிலை எவ்வாறு ஏற்படும் என எண்ணி -அந்தக் கட்டளை எவ்வாறு உள்ளது தந்தையே -எனத் திருப்பிக் கேட்க்கிறான்

——–

15–பரிசோதித புந ததேவ ஹ்ருதி நிஹிதம் ஞானானந்த அமலத்வ ஏக ஸ்வரூபம் அபரிச்சேத்ய மஹாத்ம்யம் –
ஸத்ய சங்கல்பத்வ மிஸ்ரை அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணைர் ஜுஷ்டம் அதிகார ஸ்வரூபம்
பரம் ப்ரஹ்மைவ நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரம் -ஸ்வ லீலையைவ ஸ்வ சங்கல்பேந –
அநந்த விசித்ர ஸ்திரத் ரஸ ரூப ஜகத் சமஸ்த்தானம் ஸ்வாம் சேநாவஸ்தி தமிதி தத் ஞானேந அந்யஸ்ய
நிகிலஸ்ய ஞாததாம் ப்ருவன் லோக த்ருஷ்டம் கார்ய காரணயோர் அநந்யத்வம் தர்சயிதும் த்ருஷ்டாந்தமாஹ

இவ்வாறு வினவப்பட்ட தந்தை தனது மனக்கிடக்கையைத் தெளிவாகக் காட்டுவதற்காக -அளவிடற்கு அரிய ஞானம் மகிழ்ச்சி தூய்மை நிலை பெற்ற செயல்பாடுடைமை ஒப்பற்ற அளவற்ற நற் குணங்கள் தொகுப்பாய் மாறுபடாத உருவமுடைமை இவற்றுடன் கூடிய கட் புலனாகாத பிரிக்க இயலாப் பண்புள்ள ப்ரஹ்மமே தன் விளையாட்டில் தன் விருப்பப்படி அளவற்ற பலவகைப்பட்ட நிற்பன நடப்பன யாகிய பற்பல உயிர்களை தன் அம்சமாகப் படைக்கிறது என்ற அந்த அறிவினால் மற்றப் பொருள்களுடைய அறிவும் ஏற்படும் -என்பதை உலகியல் கார்ய காரண தொடர்பால் உணர்த்துகிறார் –

———-

16–யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத் வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்
ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி ஏகமேவ ம்ருத் த்ரவ்யம் ஸ்வ ஏக தேசேந நாநா வியவஹாராஸ் பதத்வாய-
யதா கட சரா வாதி நாநா ஸமஸ்த்தாநா அவஸ்தா ரூப விகாரபந்நம் நாநா நாமதேயமபி ம்ருத்திகா சமஸ்த்தான விசேக்ஷத்வாத்
ம்ருத் த்ரவ்யமேவேதி வியவஸ்திதம் நவாஸ்த வந்தரம் இதி யதா ம்ருத் பிண்ட விஞ்ஞாநேன தத் சமஸ்த்தான விசேஷ

கட சராவாதி ரூபம் சர்வம் விஞ்ஞாதம் ஏவ பவ்தீத்யார்த்தா

குழந்தாய் -ஒரே மண்ணுருண்டையால் மற்று எல்லாம் மண்ணாலே ஆனது என்ற அறிவு ஏற்படுகிறது –
அது பல உருக்களாக மாறுபடும் போது பல பெயரிட்டு அழைக்கப் பட்டாலும் மண் என்னும் ஒரு பொருளே உண்மையாகிறது –
ஒரே மண் கட்டி அதன் ஒரு பகுதியால் பற்பல உருவங்கள் உள்ளதாகப் பேசப்படுகிறது
எப்படி குடம் வாணாய் போன்ற பல உருவ நிலை வேறுபாடுகளை உடைய வடிவ மாறுபாடுகளும் பற்பல பெயர்களையும் தன் நிலை வேறுபாட்டால் மண் கட்டி பெற்றாலும் மண் என்றே பேசப்படுகிறதோ -அந்த பற்பல பெயர்கள் அதற்கு நிலை வேறுபாட்டால் மட்டுமே ஏற்பட்டதோ -அப்படிப்பட்ட மண்ணுருண்டையை அறிவதால் அதன் பல வடிவ நிலை வேறுபாடுகளை குடம் வாணாய் என்று அறிந்ததாகும் என்பதே பொருள் –

———————

17–ததஸ் க்ருத்ஸ்ரஸ்ய ஜகதோ ப்ரஹ்ம ஏக காரண தாம ஜாநந் புத்ர ப்ருச்சதி -பகவாம்ஸ் த்வமேவ மே தத் ப்ரவீது-
இதி ததஸ் சர்வஞ்ஞம் சர்வசக்தி ப்ரஹ்ம ஏவ சர்வ காரணம் இத் யுபதிசந் சஹோவாச
சதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
இதி அக்ர இதம் இதி ஜகந் நிர்திஷ்டம்
அக்ர இதிச ஸ்ருஷ்டே பூர்வ கால தஸ்மிந் காலே ஜகத் சதாத்மகதாம்
சத் ஏவ இதி ப்ரதிபாத்ய தது ஸ்ருஷ்ட்டி காலே அப்யவிசிஷ்டம் இதி க்ருத்வா
ஏக மேவ இதி ஸ்தாபந் நஸ்ய ஜகத்-ததா நீம விபக்த நாம ரூபதாம் ப்ரதிபாத்ய தத் ப்ரதிபாத்தேநேந
ஏவ சதோ ஜகத் உபாதானத்வம் ப்ரதிபாதிதம் இதி ஸ்வ வ்யதிரிக்த நிமித்த காரணம் அத்விதீய பதேந ப்ரதிஷித்தம் இதி —

ஸத் -என்பது தான் ஜகத் காரணமாகிறது என்பதன் விளக்கம்

அளவில் அடங்கா உலகிற்கு ப்ரஹ்மமே ஒரே காரணமாகும் என்பதை அறிந்தால் மற்றவை எல்லாம் அறிந்ததாகும் என்பதை அறியாத மகன் -தேவரீரே எனக்கு அதைக் கற்ப்பிப்பீராக -என்று கேட்டான் –
அவர் -எல்லாம் அறிந்த -எல்லாம் வல்ல -ப்ரஹ்மமே உலகிற்கும் எல்லாக் காரணமும் ஆகிறது என்று உபதேசிக்கும் முகமாய்
ஒளி பொருந்திய முகமுடையவனே -அறிவுள்ள அறிவற்றவைகளால் நிறைந் த இவ்வுலகு படைப்புக்கு முன் -பிரளய காலத்தில் காரணப் பொருளாகிய ப்ரஹ்மத்துடன் வேறுபாடு இன்றி -கட் புலனாகாத நிலையில்-ஒன்றி பிறிது ஓன்று இல்லாமல் இருந்தது -என்றார்
அவ்வாறு காரணப் பொருளாகவே ஒன்றி இருந்ததால் -ஸதேவ -ஸத் ஆகவே -என்று குறிப்பிட்டு –
பிறகு படைப்புக் காலத்தில் அப் ப்ரஹ்மம் வெளிப்படையாக மட்டுமே இருந்ததால் ஏக மேவ -என்று கூறினார் –
இப்படிப் பின்பு பல உருவங்களோடு படைக்கப்பட்ட உலகிற்கு அந்த ஸத் என்பதே முதல் பொருள் ஆகையால் அதை ஒழிந்த வேறு ஒரு காரணம் இல்லை என்பதற்காக அத்விதீயம் என்னும் பதத்தால் நிலை நிறுத்துகிறார்

உபாதான காரணம்-மூலப்பொருள் -சித் அசித் விஸிஷ்ட பிரம்மா -அணு நிலையில் சேதன அசேதனப் பொருள்களுடன் சேர்ந்த ப்ரஹ்மம்
நிமித்த காரணம்-செய்வோன் -ஸூஷ்ம ப்ரஹ்மம் -அவற்றின் உயிராய் -உள்ளுறையும் -கட் புலனாகா செய்வோன் ப்ரஹ்மம்
ஸஹ காரி காரணம் -செய் கருவி -அதன் ஞான சக்திகள் -ப்ரஹ்மத்தின் -அறிவும் திறனும்

———–

18–தமாதேசம பிராஷ்யோ யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி -இதி ஆதாவேவ பிரசாசிதைவை ஜகத் உபாதானம் இதி
ஹ்ருதி நிஹிதம் இதாநீ மபிவ்யக்தம் ஏததேவோப பாதயதி–ஸ்வயமேவ ஜகத் உபாதானம் -ஜகந் நிமித்தம் ச சத்
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய –இதி ததேதத் ஸச் சப்த வாஸ்யம் பரம் ப்ரஹ்ம -சர்வஞ்ஞம்-சர்வசக்தி -ஸத்யஸங்கல்பம் –
அவாப்த ஸமஸ்த காமமபி லீலார்த்தம் -விசித்ர அநந்த சித் அசிந் மிஸ்ர ஜகத் ரூபேண காமேவ பஹுஸ்யாம் தளர்த்த ப்ரஜாயேய –
இதி ஸ்வயமேவ சங்கல்ப்ய ஸ்வாம்ஸைக தேசாதேவ வியதாதி பூதாநி ஸ்ருஷ்ட்வா புநரபி ஸைவ ஸச் சப்தா பிஹிதா பரா தேவதா
ஏவம் ஐஷத ஹந்தாஹா மிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்ம அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகர வாணி இதி –
அநேந ஜீவேந ஆத்மநா இதி ஜீவஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாத்ய ப்ரஹ்மாத்மக ஜீவ அநு ப்ரவேசாதேவ க்ருதஸ்நஸ்ய
அசித் வஸ்துநோ நாம ரூப பாத்தகம் இதிச தர்சயதி

பண்புடைப் ப்ரஹ்மத்தின் இருவகைக் காரணப் பொருத்தமும்
அது பல பெயர் உரு உடுப்பதன் விளக்கமும்

அந்தக் கட்டளையை அறிந்தால் கேட்க்கப் படாதது கேட்கப் பட்டதாகும் -என்று முன்பு நன்கு தீர்மானிக்கப் பட்ட உலகின் மூலப் பொருளையே தன் மனத்தில் கொண்டுள்ளார் என்பதை இங்கே வெளிப்படுத்துகிறார் –
உலகிற்கு மூலப் பொருள் காரணமான அந்த -ஸத் -செயலாற்ற நினைத்து
நான் பலவாக ஆகக் கடவேன் -பிரஜைகளைப் படைப்பேன் – என்று முனைந்தது
அப்படிப்பட்ட -ஸத் -என்பதால் விளக்கப்படும் பர ப்ரஹ்மம் தான் –
எல்லாம் அறிவதாகவும் –
எல்லாம் வல்லதாகவும் –
உண்மையான வினைத் திட்பம் யுடையதாகவும் –
வேறு பலன் எதையும் எதிர்பாராததாகவும்
அவா வற்று இருந்தும் தன் விளையாட்டு மகிழ்ச்சிக்காக மட்டுமே பல்வேறு வகைப்பட்ட எண்ணற்ற சேதன அசேதன பொருள்களோடு கூடிய உலகமாகத் தானே ஆவேன் என்று முடிவெடுத்து
தன் அம்சத்தில் ஒரு பகுதி -சேதன அசேதன பொருள்களை யுடைய தன் உடலின் ஒரு பகுதி -யால்
ஆகாயம் முதலான பூதங்களைப் படைத்தது
மீண்டும் அந்த ஸத் -நிலம் நீர் நெருப்பு என்பது போன்ற தேவதைகளாகி -பூதங்களாக ஜீவாத்மாக்களின் உட் புகுந்து
அவற்றுக்குப் பெயரும் உருவும் யுடையவைகளாக ஆக்குவேன் என்றது
ஜீவாத்மாக்கள் என்றதனால் ஜீவர்கள் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக யுடையவர்கள் என்பது காட்டப்படுகிறது –
ஜீவனை யுடலாகக் கொண்ட ப்ரஹ்மத்தினால் மட்டுமே எல்லா சேதனப் பொருள்களும் இருப்பைப் பெறுகின்றன –
இதனாலேயே எல்லாப் பொருள்களும் பெயர்களையும் குருக்களையும் அடைகின்றன –

————-

19–ஏதத் யுக்தம் பவதி (இவ்வாறு சொல்லப்பட்டது சாரம் )ஜீவாத்மாது ப்ரஹ்மண-சரீர தயா பிரகாரத்வாத் ப்ரஹ்மாத்மக
யஸ்ய ஆத்மா சரீரம் -இதி ஸ்ருத் யந்தராத்-ஏவம் பூதஸ்ய ஜீவஸ்ய சரீரதயா பிரகார பூதாநி
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த்தாநாநி வஸ்தூநி இதி ப்ரஹ்மாத்ம ஏகாநி தாநி ஸர்வாணி
அத தேவோ மனுஷ்ய யஷோ ராக்ஷஸ பஸூ ம்ருக பஷீ வ்ருஷோ லதா காஷ்டம் சிலா த்ருணம் கட பட இத்யாதயஸ்
சர்வே ப்ரக்ருதி ப்ரத்யய யோகேந அபிதாய கதயா பிரசித்தா ஸப்தா லோகே தத் த்ரவ்ய வாஸ்ய தயா பிரதீயமான
தத் தத் சமஸ்தான வஸ்து முகேந தத் அபிமாநி ஜீவ –
தத் அந்தர்யாமிப் பரமாத்மா பர்யந்தம் ஸங்காதஸ் யைவ வாசக –இதி –

இதை விவரிப்போம்
ஜீவாத்மா பரமாத்மாவுடன் பிரிக்க முடியாத உறவுடையதாக -ப்ரஹ்மத்துக்கு உடலாகிறது –
எதற்கு ஆத்மா உடலோ என்று வேதத்தில் கூறப்படுகிறது –
இப்படிப்பட்ட ப்ரஹமத்திற்கு ஜீவாத்மா உடலாய் இருப்பதால் -தேவன் மனிதன் போன்ற ஜீவாத்மாவின் உடலாகும் பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மத்திற்கும் உடலாகின்றன –
இவ்வுருக்கள் தேவர்கள் மனிதர்கள் யக்ஷர்கள் ராக்ஷஸர்கள் பசுக்கள் விலங்குகள் பறவைகள் மரங்கள் கொடிகள் கட்டை பாறைகள் புல் குடம் ஆடை என்று எல்லாம் பகுதி விகுதிகளால் குறிக்கப்படும் சொற்களாகி –
அவை சுட்டும் பொருளுக்கு உருவமாகி
அதனுள் உறையும் ஜீவாத்மாவையும்
அதை உடலாகக் கொண்ட பரமாத்மா வரை சுட்டிக் காட்டும் சொற்கள் ஆகின்றன –

ப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியும் உறவு -விசேஷணம்
அப்ருதக் ஸித்தம் -பிரிக்க முடியாத உறவு -பிரகாரத்வம்

—————–

தத்வமஸி -ஸ்ருத்யர்த்தம்
20–ஏவம் சமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மகப் பிரபஞ்சஸ்ய சதுபாதாநதா -சந் நிமித்தா சத் ஆதாரதா –
சந் நியம்யதா-ஸச் சேஷதாதி சர்வம்ச -சந் மூலா ஸோம்யேமா சர்வா பிரஜா ஸதாயதநா சத் பிரதிஷ்டா -இத்யாதிநா
விஸ்தரேண ப்ரதிபாத்ய கார்ய காரண பாவாதி முகேந
ஏததாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம்
இதி க்ருத்ஸ் நஸ்ய ஜகத்தை ப்ரஹ்மாத்மகத்வம் ஏவ சத்யம் இதி ப்ரதிபாத்ய க்ருத்ஸ் நஸ்ய ஜகத ச ஏவமாத்மா க்ருத்ஸ்நம்
சஜகது தஸ்ய சரீரம் தஸ்மாத் த்வம் சப்த வாஸ்யமபி ஜீவ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிஜ்ஞாதம்-
தத் த்வமாய் -இதி ஜீவ விசேஷ உப ஸம்ஹ்ருதம் -ஏதத் யுக்தம் பவதி
ஐதாத்ம்யம் இதம் சர்வம் -இதி சேதன அசேதன பிரபஞ்சம்
இதம் சர்வம்
இதி நிர்திஸ்ய-தஸ்ய பிரபஞ்சஸ்ய ஏஷ ஆத்மா இதி ப்ரதிபாதித பிரபஞ்ச உத்தேசேந
ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாதிதம் இத்யர்த்த —

(ஞானம் எல்லாம் அனுஷ்டான பர்யந்தமாக ஆக வேண்டும் அன்றோ -உபாசனத்துக்காக அளிக்கப்பட ஞானம் )

இவ்வாறு சேதன அசேதன பொருள்களின் திரளான பிரபஞ்சத்தின் ஆத்மாவான -ஸத்தையையே சொல்லுகிறது
ஸத்தாய் பொருள் காரணமாக யுடையதாயும் -அதுவே ஆக்குவோனாகவும் –அதனாலே தாங்கப்பட்டதாயும் -நிலை நிறுத்தப் பட்டதாயும் -அதனாலே ஏவப் படுவதாயும் -அதற்கு அடிமைப் பட்டதாயும் -இப்படி எல்லாவிதத் தொடர்புடையதாயும் -உள்ள அந்த ஸத்தை
குழந்தாய்
அதையே மூலமாக உடையவை யாவையும் மக்களும் அதையே இருப்பிடமாகக் கொண்டவை -அதிலேயே நிலை பெற்று இருப்பவை என்று பரக்கச் சொல்லி –
காரண கார்ய தொடர்பால் இங்குள்ள முழுமையான உலகு யாவையும் இதையே ஆத்மாவாகக் கொண்டு இருக்கின்றன –
அதுவே உண்மை என்று கூறி -இது ஒன்றே ஆத்மா உலகு முழுவதும் அதனுடைய உடல் –
உரையாடிக் கொண்டு இருக்கும் ஸ்வேத கேதுவைச் சுட்டிக் காட்டி –
அதனால் அது என்று குறிக்கப்படும் ஸத் உனக்கும் ஆத்மாவாக -நீ அதனின்றும் பிரிக்க முடியாத தொடர்புடையவனாக -பிரகாரமாக -இருக்கிறாய் என்பதை
தத்வமஸி என்று
உத்தாலகர் நிறுவுகிறார் –

———–

21–தத் இதம் ப்ரஹமாத் மகத்வம் கிம் ஆத்ம சரீர பாவேந –
உத ஸ்வரூபேண –
இதி விவேச நீயம்-ஸ்வரூபேண திசேத் ப்ரஹ்மண-ஸத்ய ஸங்கல்பத்வாதய
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத் யுபக்ரம அவகதா பாதிதா பவந்தி
சரீராத்ம பாவேந ச ததாத்மகத்வம் ஸ்ருத் யந்தராத் விசேஷதோ அவகதம் அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம்
சர்வாத்மா இதி பிரசாசி த்ருத்வ ரூபாத்மவேந ஸர்வேஷாம் ஜனாநாம்
ஆத்மா சர்வம் சாஸ்ய சரீரம் இதி விசேஷதோ ஞாயதே ப்ரஹமாத் மகத்வம்
ய ஆத்ம திஷ்டந் ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மா அந்தர்யாம் யம்ருத-இதிச –
அத்ராபி அநேந ஜீவேநாத்மநா இதி இதமேவ ஞாயத இதி பூர்வமே வோக்தம் —

(சரீராத்மா -என்பதால் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூபேணே இல்லை-ஸ்வரூபத்தால் ஒன்றானால் ஸ்ருதி வாக்கியங்கள் பாதகம் ஆகுமே )

இந்தப் ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பது எப்படி –
உடலுக்குள் உயிராய் உறைந்து இருக்கிறதா
அல்லது அதுவே மாறுபட்டு இந்த உருவாக ஆகியதா -என்று ஆராய்வோம் –
அது தானே மாறியது என்று கொண்டால் ப்ரஹ்மமானது -நான் பலவாக ஆகக் கடவேன்-மக்களைப் படைப்பேன் -என்று மெய்யான வினைத்திட்பம் கொண்டு அதனால் அது வினையாற்றியது எனத் துவக்கத்தில் சொல்லியது தவறாக ஆகும்
மாறாக உடை உயிர்த் தொடர்பு எனில் -அந்தப் ப்ரஹ்மத்தின் பொருள்களில் உள்ளுறையும் தன்மை மறைப் பொருள்களால் சிறப்பாக அறியப்பட்டு இருக்கிறது
உயிரிகளின் உள்ளுறைந்து ஆள்பவன் -எல்லாவற்றுக்கும் ஆத்மாவாகிறான் -என்றும்
நன்கு நிலை நிறுத்தப் பட்டவனாய் எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து ஏவுகிறவனாய் இருக்கிறான் என்றும்
உள் நுழைந்து என்றும்
எல்லாவற்றுக்கும் ஆத்மா -என்றும்
எல்லா மக்களுக்கும் ஆத்மா -எல்லாம் அவனுடைசிறப்பாக அறியப்படும் ய உடல் -என்றும்
ப்ரஹ்மத்தின் உயிர் நிலைத் தொடர்பு சிறப்பாக அறியப்படும்
மேலும் ஆத்மாவில் ஆத்மாவாய் உள்ளிருந்து எவன் ஆள்கிறானோ -அந்த ஆத்மாவின் உள்ளுறைபவன் இனிமையானவர் -என்று
எல்லாம் சொல்லப்படுகின்றன

மேலும் இதே உபநிஷத்தில் -புறப்பாடு இன்று எல்லா உயிர்களிலும் என்றும் முன்பே சொல்லப்பட்டு இருக்கிறது –

——–

22–அத -ஸர்வஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம சரீரத்வாத் சர்வ சரீரம் சர்வ பிரகாரம் சர்வை சப்தை
ப்ரஹ்மைவாபி தீயத இதி-ததுத்வம் -இதி சாமாநாதி கரண்யே ந ஜீவ சரீரதயா ஜீவ பிரகாரம் ப்ரஹ்மை வாபிஹிதம் –
ஏவமபிஹிதே சதி அயமர்த்தோ ஞாயதே த்வம் இதிய பூர்வம் தேஹஸ் யாதிஷ்டாத்ருதயா பிரதித ச பரமாத்ம சரீரதயா
பரமாத்ம பிரகார பூத பரமாத்மா பர்யந்த ப்ருதக் ஸ்திதி -ப்ரவ்ருத்தி –அநர்ஹ—அத –த்வம்-இதி சப்த
தத் பிரகார விசிஷ்டம் தத் அந்தர்யாமிணமே வாசஷ்டே இதி அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வியகரவாணி –
இதி ப்ரஹ்மாத்மகதயைவ ஜீவஸ்ய சரீரிண ஸ்வ நாம பாக்த்வாத்
தது த்வம் இதி சாமா நாதி கரண ப்ரவ்ருத்தயோர் த்வயோரபி பதயோ ப்ரஹ்மைவ வாஸ்யம் -தத்ர -தது- பதம் –
ஜகத் காரண பூதம்-சர்வ கல்யாண குணாகரம் -நிரவத்யம்-நிர்விகாரமா சஷ்டே த்வம் இதிச -ததேவ ப்ரஹ்ம ஜீவ அந்தர்யாமி
ரூபேண ஸ்வ சரீர ஜீவ பிரகார விசிஷ்டமாசஷ்டே ததேவம் ப்ரவ்ருத்தி நிமித்த பேதேந ஏகாஸ்மின் ப்ரஹ்மணயேவ ததுத்வம் –
இதி த்வயோ பதயோர் வ்ருத்திருக்தா-ப்ரஹ்மணோ நிரவத்யத்வம் நிர்விகாரத்வம்
சர்வ கல்யாண குணாகரத்வம் ஜகத் காரணத்வம் ச அபாதிதம் –

தத்வமஸி -என்ற ஸ்ருதியின் பொருளை நிலை நிறுத்தல்

பிறகு ப்ரஹ்மத்திற்கு சேதன அசேதன வஸ்துக்கள் யாவும் உடலாய் -எல்லா வகையிலும் பிரிவற்ற தொடர்புடையதாய் இருப்பதால் எல்லாச் சொற்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கின்றன என்று கொள்ள முடியும்
அவ்வாறே அது -தது -நீ த்வம் -என்று ஸாமாநாதி கரண்யத்தால் -ஒரு பொருள் பன் மொழியால் -உயிரை உடலாக உயிருடன் பிரிவற்ற ப்ரஹ்மத்தையே காட்டுகிறது –

இவ்வாறு கூறப்படுவதால் கீழ்க்கண்ட விளக்கம் இதற்குப் பொருளாகக் கிடைக்கிறது
த்வம் -நீ -என்பதால் -எவன் முன்பே உடலுள் இருந்து ஏவுபவனாய் தோன்றுகிறானோ -இங்கு ஸ்வேத கேதுவின் ஆன்மா -அவன் பரமாத்மாவிற்கு உடலாதலால் -பரமாத்மாவின் நின்றும் பிரித்த நிலையற்றவனாய் -அவனைப் பிரிந்து இயங்க இயலாதவனாய் இருப்பதால் -அவனுடன் பிரிக்க இயலா தொடர்புடைமையால் அவனுள் இருக்கும் பரமாத்மாவையே இச்சொல் காட்டுகிறது

அது நீ -என்பது ஒரு பொருள் பன் மொழியால் பரமாத்மாவையே இரு சொற்களும் காட்டுகின்றன –
அது -தது -என்னும் பதம் உலகின் காரணமாய் -நற் குணங்கள் யாவும் கொண்டதாய் -இழி குணங்கள் அற்றதாய் -மாறுபாடு அடையாததாய் -இருக்கும் நிலையைக் காட்டுகிறது –
நீ-த்வம் -என்பதனால் -அதற்கு உடலாய் பிரிவற்ற நிலையை யுடைய ஜீவாத்மாவின் உயிராய் உள்ள பரமாத்மாவைக் காட்டுகிறது –
அதனால் அது என்னும் சொல் பொருள் காட்டும் தன்மையால் -ப்ரவ்ருத்தி நிமித்தம் -நீ என்னும் சொல்லுடன் ஒருபடிப்பட்டது

ஆகவே அது நீ என்னும் இரு சொற்களும் குறையற்றதும் மாறுபாடற்றதும் -நற் பண்புகள் யாவும் நிறைந்ததும் -உலகிற்குக் காரணமானதுமான ப்ரஹ்மமே என்று நிரூபிக்கப் பட்டது

ஸாமாநாதி கரணம்
பொருள் தன்மை குணம் வகை செயல் ஆகியவைகளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளைக் காட்டினால்
சொற்கள் பலவாய் இருந்தாலும் பொருள் ஒன்றாகக் கொள்வது ஸாமாநாதி கரணம் என்று பெயர் –

————

23-அஸ்ருத வேதாந்தா புருஷா (சதாச்சார்ய உபதேசம் ஸ்ரவணம் பண்ணாதார்- )சர்வே பதார்த்தம் சர்வே ஜீவாத் மனஸ் ச ப்ரஹ்மாத்மகா இதி ந பஸ்யந்தி
சர்வ ஸப்தாநாம் ச கேவலஷு தத் தத் பதார்த்ததேஷூ வாஸ்யைக தேசேஷூ வாஸ்ய பர்யவஸாநம் மன்யந்தே
ஸ்ருத வேதாந்தஸ்து (கற்றார் அதயேவ நான்மறையாளர் ஆவார்)வேதாந்த வாக்ய ஸ்ரவணேன ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா
ச ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் சர்வ ஸப்தாநாம் தத் தத் பிரகார ஸம்ஸ்திதா ப்ரஹ்ம வாசித்வம் ச ஜாநந்தி —

(வாசக அர்த்தம் ப்ரஹ்மம் வரை பர்யவசிக்கும்-ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா-வேதத்தின் உட் பொருள் நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -பிரதான பரதந்தர அர்தம் )

வேதாந்தத்தைக் கேட்டு அறியாதவர்கள் ஆகையால் -பாமர மக்கள் எல்லாப் பொருள்களும் அதற்கு அபிமானியான ஜீவாத்மாவும் -அதை உடலாகக் கொண்ட பரமாத்மாவைக் காட்டும் என்று அறியார்கள்
அதனால் அவர்கள் சொற்கள் -அதனதனால் குறிப்பிடப்படும் பொருட்களை மட்டும் தனிப்பட்டுக் குறிக்கின்றன என்று கொள்கிறார்கள் –
வேதாந்தத்தைக் கேட்டு அறிந்தவர்கள் அதன் பயனாக பொருள்கள் ப்ரஹ்மத்தின் செயல் என்றும் ப்ரஹ்மத்தை உள்ளுறை பவனாக உடையது என்றும்
அதனால் சொற்கள் யாவும் அதனால் கொள்ளப்படும் பொருளையும் அதனுடன் பிரிவற்ற நிலையை யுடைய பரமாத்மாவையும் காட்டும் என்று அறிகிறார்கள்

———-

24–நந் வேவம் கவாதி ஸப்தாநாம் தத் தத் பதார்த்த வாசிதயா வ்யுத்பத்திர் பாதிதா ஸ்யாத்
நைவம் சர்வே ஸப்தா அசிஜ் ஜீவ விசிஷ்ட்ட பரமாத்மநோ வாசகர் இத்யுக்தம் நாம ரூபே வ்யாகரவாணி இத்யத்ர
தத்ர லௌகிகாஸ்து புருஷா சப்தம் வ்யவஹரந்தஸ் சப்த வாஸ்யே பிரதாநாம் சஸ்ய பரமாத்மன ப்ரத்யஷாத் யபரிசேத்யவாத்
வாஸ்யைகதேச பூதே வாஸ்ய சமாப்தி பர்யவசாதே வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி பூர்யதே –
ஏகமேவ வைதிகாஸ் ஸப்தா சர்வே பரமாத்மா பர்யந்தாந் ஸ்வார்த்தாந் போத யந்தி —

அப்படி என்றால் பசு முதலிய சொற்கள் அந்த அந்த பொருட்களைக் குறிப்பதாகத் தானே உலகில் காணப்படுகிறது
அது அப்படி யல்ல –
பெயர் உருக்களைக் கொடுக்கக் கடவேன் என்று பரமாத்மா உள் நுழைந்து ஆக்குவதால் எல்லாச் சொற்களும் -சேதன அசேதன பொருட்களை உடலாகக் கொண்டு உள்ளுறையும் பரமாத்மாவைத் தான் காட்டுகின்றன –
ஆயினும் உலகில் உள்ள மாந்தர்கள் வழக்கில் உள்ள சொற்களைக் குறிக்கும் ஒரு பகுதியான கட் புலனாகும் பொருளை மட்டுமே கொண்டு கட் புலனாகாத ஜீவ பரமாத்மாக்களை நீக்கி
இதனாலேயே அச் சொற்களின் பொருள் முடிந்ததாகக் கருதுகிறார்கள்
இவ்வாறு மெய்ப்பொருள் அறியும் திறன் வேதாந்தஞானத்தாலேயே கிடைக்கும்
இவ்வாறே வேதச் சொற்கள் யாவையுமே பரமாத்மா வரையிலான பொருளைக் காட்டுகின்றன –

——-

25-வைதிகா ஏவ சர்வ ஸப்தா ஆதவ் வேதாதேவோத்ருத் யோத்ருத்ய பரேண ஏவ ப்ரஹ்மணா சர்வபதாதீந் பூர்வவத்
ஸ்ருஷ்ட்வா தேஷு பரமாத்ம பர்யந்தேஷு பூர்வவத் நாம தயா ப்ரயுக்தா ததாஹ மனு -1-21-
ஸர்வேஷாம் நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக் வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே இதி
சமஸ்தா சமஸ்தாநாநி ரூபாணீதி யாவது ஆஹ ச–பகவான் பராசர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய ஏவாதவ் தேவதீநாம் சகாரச -இதி ஸ்ருதிஸ் ச
ஸூர்ய சந்த்ர மசவ் ததா யதா பூர்வகமகல்பயத்-இதி
ஸூர்யாதீந் பூர்வவத் பரிகல்ப்ய நாமாநி ச பூர்வச் சகரேத் யர்த்த —

ஏவம் ஜகத் ப்ராஹ்மண ஓர் அநந்யத்வம் பிரபஞ்சிதம் -தேந ஏகேந ஞாநேந ஸர்வஸ்ய ஞாததா உபபாதிதா பவதி –
ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரியதா ப்ரதிபாதநேந ததாத் மகத்யைவ் சத்யத்வம் நான்யதேதி தத் சத்யம் –
இத் யுக்தம் யதா த்ருஷ்டாந்தே ஸர்வஸ்ய ம்ருத் விகாரஸ்ய ம்ருதாத்மநைவ சத்யத்வம் –

(தேவதாதிகரணம் இத்தையே விளக்கும்)

சொற்கள் யாவும் வேதத்தில் உள்ளவையே
ஏன் எனில் –
வேதத்தில் இருந்தே சொற்களைப் பொறுக்கி எடுத்து அதற்கு ஏற்ப முன் கல்பத்தில் இருந்தபடியே பிரம்மா படைத்தான் என்பதனால் அவைகள் பரமாத்மா வரை காட்டி பொருள் முடியும்
அப்படியே மனுவும் கூறுகிறார்
அந்தப் பகவான் பொருட்களுக்கு பலவகையான பெயர்களையும் உருக்களையும் முன்பு இருந்த படியே வேதச் சொற்களுக்கு ஏற்ப தனித் தனியாகப் படைத்தான் -1-21-
பராசரரும்
பெயரும் உருவம் யுடையதாயும் உயிர்களாலும் பொருட்களாலும் நிறைந்த உலகுகளை -பிரபஞ்சத்தை -தேவர்கள் முதலான வகைகளையும் -தத் தமக்குறிய செயல்களையும் வேதச் சொற்களைக் கொண்டே -அந்தப் ப்ரம்மா முதலில் படைத்தான் -என்கிறார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
வேதமும்
முதலில் ஸூர்ய ஸந்த்ரர்களை -முன் -பூர்வ கல்பத்தில் -இருந்தபடியே பரமாத்மா படைத்தான் -என்கிறது
ஸூர்யன் முதலானவர்களும் முன்பு இருந்தபடியே படைக்கப்பட்டு அதன்படியே பெயரிடப் பட்டனர் என்று அறியலாம்

இவ்வாறே உலகும் ப்ரஹ்மமும் வேறுபட்டு இராமை நிரூபிக்கப் பட்டது-அதனால் ஒன்றை அறிவதால் மற்ற ஓன்று தானே அறியப் பட்டதாகிறது -எப்பொருளும் பரமாத்மாவின் செயல் என்று சொல்லப்படுவதால் -அதை ஆத்மாவாகக் கொண்டிருப்பதால் மட்டுமே அப் பொருளுக்கு இருப்பு -சத்யத்வம்-வஸ்துத்வம் -ஏற்படுகிறது-இவ் விருப்பு கொண்ட -அது உண்மை -உள்ளது -என்று கூறப்படுகிறது
அதையே இந்த எடுத்துக் காட்டால் இப்பொருள்கள் மண்ணின் மாறுபாட்டால் ஏற்படுபவை யாதலின் மண் என இருப்பது உண்மையே எனப் பேசப் படுகிறது

————-

26–சோதக வாக்ய அந்யபி (பரிசுத்தமாக ஸ்வரூபத்தை நிரூபிக்கும் வாக்கியங்கள் )நிரவத்யம் சர்வ கல்யாண குணாகரம் பரம் ப்ரஹ்ம சோதயந்தி

பண்புரைக்கும் சொற் தொடர்களும் -சோதக வாக்யம் -கூட குற்றமற்ற நற் பண்புகள் யாவும் கடலென நிறைந்துள்ள பரப் ப்ரஹ்மத்தையே ஆய்ந்து அமைகின்றன

———-

27–சர்வப் ப்ரத்யநீக ஆகாரதா போதநேபி தத் ப்ரத்யநீக ஆகாரதாயாம் பேதஸ்ய அவர்ஜனீயத்வாந்ந நிர்விசேஷத்வ ஸித்தி–

எல்லாக் குணங்களுக்கும் எதிர்த் தட்டான நிலையைச் சொன்னாலும் -அந்தவந்த மாறுதல்களைச் சொல்வதால் வெவ்வேறு பொருள்கள் கூறப்பட்டு விடும் -அதாவது குணங்கள் அற்றது என்பது விலக்கப்படும்

——–

அத்வைதப் பொருள்
ஒரு பொருளுக்கு இடப்படும் அடைமொழி அதை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டும்
அவ்வாறே ப்ரஹ்மமும் -ஸத்யம் ஞானம் அநந்தம் -என்று குறிக்கப் படுகிறது
இதை அடைமொழிகள் என்று கொண்டால் ப்ரஹ்மமும் இவ்வடை மொழிகளுடைய ஒரு பொருள் என்று தோன்றுவதால் -அதனால் ப்ரஹ்மத்தின் இருப்பும் பண்புகளும் ஏற்படுவதால் அத்வைதிகள் இதை ஏற்பதில்லை
ஏன் எனில் அவர்கள் கருத்துப்படி ப்ரஹ்மம் குணமற்றது இருப்பற்றது உருவமற்றது
ஆகவே அவர்கள் இந்த மூன்று சொற்களுக்கும் பின்வருமாறு பொருள் கொண்டனர்
ஸத்யம் -அஸத்யம் அற்றது -இருப்பில்லாமை இல்லாதது
ஞானம் -அஞ்ஞானம் இல்லாதது -அறிவின்மை இல்லாதது
அநந்தம் -அளவு இல்லாதது

இதற்கு அபாவம் -இன்மை -என்பதே பொருளாவதால் மூன்று தனித் தன்மையான இன்மைகள் தேவையில்லை

இவ்வாறு கொள்வதால்
ப்ரஹ்மத்திற்குத் தனி உருவமும் குணங்களும் இல்லை என்றும்
அது ஞானம் மட்டுமே என்றும் கொள்கின்றனர்

விஸிஷ்டாத்வைதப் பொருள்
இங்கு இம் மூன்று பதங்களுக்கும் பின்வருமாறு பொருள் கொள்ளப் படுகிறது
1-ஸத்யம் –நிருபாதிக சத்தாயோதி -தன இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாதது -என்றும்
நிர் விகார ஆஸ்பதம் -என்றும் மாறுபாடு அற்றது -என்றும்
மற்றைய உயிருள்-உயிரல் -பொருள்கள் பரமாத்மாவின் விருப்படி மாறுபாடு அடைபவை

2- ஞானம் -முக்காலங்களிலும் -எந்நிலையிலும் -அசங்குசித -குறைவடையாத அறிவு
ஆத்மாவுக்கும் ஞானம் குணமானாலும் -அது நித்யமானாலும் -குறைவுடையதாய் இருக்கும்
பத்தனுக்கு -எப்போதும் குறைபட்டது
முக்தனுக்கு -முன்பு குறைபட்டது
நித்யனுக்கு -பரமாத்மாவின் நினைவால் மட்டும் குறைவு படாது இருப்பது

3- அநந்தம் –அபரிச்சேத்ய -அளவிறந்தது -அளவு படுதல் இல்லாதது
இடம் காலம் பொருள்களால் -மூன்றாலும் அளவு படாதது
பரமாத்மா தவிர்ந்த மற்றவை இம்மூன்று வகையாலும் அளவு பட்டவை

அதாவது ப்ரஹ்மம்
தன் இருப்புக்கு வேறு ஒன்றின் துணை நாடாமலும்
என்றும் மாறுபாடு இல்லாமலும்
எக்காலத்தும் எந்நிலையிலும் குறைவடையாத ஞானத்தோடும்
இடம் காலம் பொருள்கள் எனும் மூன்று வகையாலும் அளவிட முடியாததாகவும் இருக்கிறது

————

28–நநு-
ஞான மாத்திரம் ப்ரஹமேதி ப்ரதிபாதிதே நிர் விசேஷ ஞான மாத்திரம் ப்ரஹமேதி நிஸ் ஸீயதே —
நைவம் ஸ்வரூப நிரூபண தர்ம ஸப்தா ஹி தர்ம முகேந ஸ்வரூபம் அபி ப்ரதிபாத யந்தி கவாதி சப்தவத்-ததாஹ ஸூத்ரகார
தத் குண சாரத்வாத் வ்யபதேச -ப்ராஞ்ஞவது -இதி
( ஞான குண சாரத்வாத் ஆத்மநோ ஞானம் இதி வியபதேச-யதா ப்ராஞ்ஜேந ப்ரஹ்மணா விபஸ்சிதா–யஸ் சர்வஞ்ஞ சர்வவித் –
இதி சர்வஞ்ஞ ஏவ ஞான குண சாரத்வாத் சத்யம் ஞானம் இதி வியபதிஸ்யதே )
யாவதாத்ம பாவித்வாச்ச ந தோஷ இதி ஞாநேந தர்மேன ஸ்வரூபம் அபி நிரூபிதம் நது ஞான மாத்ரம் ப்ரஹமேதி கதம்
இதமவகம்யத இதி சேத்-யஸ் சர்வஞ்ஞ ஸர்வவிது-இதி ஞாத்ருவத்வஸ்ருதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
விஞாதாரம் அரே கேந விஜாநீயாத் –இத்யாதி ஸ்ருதி சதா சமதிகதமிதம்-ஞானஸ்ய தர்ம மாத்ரவாத் தர்ம மாத்ரஸ்ய
ஏகஸ்ய வஸ்துத்வ ப்ரதிபாதாந நுப பத்தேஸ் ச
அத ஸத்ய ஞாநாதி பதாநிஸ் வார்த்த பூத ஞானாதி விசிஷ்டமேவ ப்ரஹ்ம ப்ரதிபாத யந்தி

ப்ரஹ்மத்திற்கு பண்புகள் இல்லை என்பதை மறுத்தல்

மாறாக ஞானம் மட்டுமே ப்ரஹ்மம் எனில்
அடையற்ற ஞானமே ப்ரஹ்மம் என்று நிச்சயிக்கப் படும்
அறிவதும் அறியப்படுவதும் வேறு இல்லை என்றதாகும் –
அவ்வாறு இல்லை –
ஒரு பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்தும் அடைமொழிகள் அப்பொருளுக்கு உரிய பண்பு செயல் ஆகியவற்றால் அதை மற்றவற்றின் நின்றும் பிரித்துக் காட்டும் –
எடுத்துக் காட்டாக -பசு முதலியவை -மற்றைய நாலு கால் பிராணிகளின் நின்றும் அதன் பசுத்தன்மை-கோ தன்மை -அதை வேறு படுத்துகிறது –
இதைக் கூறும் இடத்து ப்ரஹ்ம ஸூத்ர காரரும் -எந்தக்குணம் ஒரு பொருளில் விஞ்சி இருக்குமோ அந்தக்குணத்தை யிட்டே அப்பொருளை அழைக்கலாம் என்கிறார்

ஞானத்தையே பண்பாக உடையதாதலின் ஆத்மாவுக்கு ஞானம் என்றே பெயர்
பரமாத்மா -வாலறிவன் -ஆனந்தம் -பரமாத்மா –
மேலும் எந்தக் குணம் ஒரு பொருள் உள்ள மட்டும் அதை விட்டு பிரியாமல் இருக்குமோ அதே குணத்தையிட்டு அதைக் குறிப்பதில் தவறில்லை –
அதனால் ஞானம் என்னும் பண்பினால் அதை யுடைய பரமாத்மாவும் குறிக்கப் படும்

அந்த ஞானமே பரமாத்மா என்பதில்லை -எப்படி எனில்
ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -எல்லாவற்றையும் அறிகிறான் -எல்லா விதத்தாலும் அறிகிறான் –

———–

29–தத் தவம் இதி த்வயயோர் அபி பதயோ -ஸ்வார்த்த ப்ரஹாணேந நிர்விசேஷ வஸ்து ஸ்வரூப உபஸ்தான
பரத்வே முக்கியார்த்த பரித்யாகச்ச-
நநு
ஐக்ய தாத்பர்ய நிஸ்ஸயாத் ந லக்ஷணா தோஷா ஸோயம் தேவ தத்த இதிவத் –
யதா ஸோ அயம் -இத்யத்ர ச இதி சப்தேன தேசாந்தர காலாந்தர சம்மந்தீ புருஷ பிரதீயதே
அயம் இதி ச சந்நிகித தேச வர்த்தமான கால சம்மந்தீ தயோ சாமாநாதி கரணேந ஐக்யம் பிரதீயதே
தத்ர ஏகஸ்ய யுகபாத் விருத்த தேச கால சம்பந்திதயா பிரதீதீர்ந கடத இதி த்வயோர் அபி பதயோ
ஸ்வரூப மாத்ரோப ஸ்தாபந பரத்வம் ஸ்வரூபஸ்ய ச ஐக்யம் ப்ரதிபாத்யதே இதி சேத் –

(தத் தவம் அஸி -அஹம் ப்ரஹ்மாஸ்மி -இது வரை நான் என்று பிரமித்தது இல்லை -இதுவே அத்வைதி வாதம்
கங்கா கோ சாலை லக்ஷணையால் கங்கைக் கரையில் –
இரண்டு பதங்களுக்கும் லக்ஷணையால் அமுக்கிய வாதம் கொள்ளக் கூடாதே)

(ஞானம் த்வி விதம்-முதலில் இந்திரியங்கள் மூலம் அறிந்த ஞானம் ஓன்று
ஸ்ம்ருதி -இந்திரிய ஸஹ காரம் வேண்டாம் இதுக்கு -ஸம்ஸ்காரம் -மனப் பதிவு ஒன்றுமே வேண்டும்
அனுபவம் பற்றிய நினைவு -ப்ரத்யக்ஷம் -விஷய சம்யோகத்தால் வந்தது
தேவ தத்தன் ஸகா தேவ தத்தா அயம் தேவ தத்தா -)

தத்வமஸி என்னும் வாக்கியத்திற்கு அத்வைதிகள் சொல்லும் பொருளுக்கு மறுப்பு
அது நீ -தத் த்வம் என்ற இரண்டு சொற்கள் அவை உண்மையாகக் குறிப்பிடும் பொருளை விட்டு -நேராகக் ஆட்டும் பொருளை மட்டும் கொண்டு அவை குணங்கள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் எனக் கொண்டால் அதன் மெய்ப் பொருளைத் தள்ள வேண்டி வரும்

மாறாக அத்வைதிகள் கூறுவது போல் -குணம் இன்மையால் இரண்டும் ஒன்றே என்று கொண்டால் இலக்கணை மீறும் குற்றம் ஆகிறது
எடுத்துக் காட்டாக
இவரே அந்த தேவதத்தன் என்று கூறுகையில்
இவர் என்பதனால் அப்பொழுது அவ்விடத்தில் காணப்படுபவரும்
அந்த என்பதனால் பிறிதொரு சமயத்தில் வேறொரு இடத்தில் காணப்பட்ட வரும் ஒருவரே என்பதாகிறது –
இங்கு தேவதத்தன் என்பவருக்கு கடந்த கால இடத் தொடர்புகளும் நிகழ் கால இடத் தொடர்புகளும் முக்கியமாகக் கொள்ளப் படாமல் தேவ தத்தன் என்னும் நபரே முக்கியமாகக் கொள்வது போல் பொருள் கொண்டு விட வேண்டும் என்பது அத்வைதிகள் முடிவு

இதம் ரஜதம் -ஒளி மிக்க பொருளைக் கண்ட வுடன் அது வெள்ளி என்று தோன்றுகிறது
அருகில் சென்று பார்த்த போது -ந இதம் ரஜதம் -இது வெள்ளி அல்ல சிப்பி -என்று முடிவாகிறது –
முதலில் அறிவு பாதிக்கப் பட்டு இருந்தது –
பிறகு மெய்யறிவு உண்டாகி அது இல்லை என்றதாயிற்று
இலக்கணைக் குற்றம் –எடுத்துக் காட்டு-மஞ்சாக்ரோதை -கட்டில்கள் சத்தம் போடுகின்றன -என்பதில் கட்டில்கள் என்பதற்கு அதில் அமர்ந்து இருக்கும் மனிதர்களை யென்றே கொள்ள வேண்டும் –
ஏன் எனில் தனியாகக் கட்டில்களுக்கு ஒலி எழுப்பும் திறனில்லை –
தச மத்வம் அஸி -அந்தப் பத்தாவது ஆள் நீ

————-

30–நைத வேதம்
சோயம் தேவதத்த-இத்யத்ராபி லக்ஷணா கந்தோ ந வித்யதே விரோத பாவாத் –
ஏகஸ்ய பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தோ ந விருத்த தேசாந்தர ஸ்திதி பூதா சந்நிஹித தேச ஸ்திதி வர்த்ததே
அத பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தி தயா ஐக்ய ப்ரதிபாதனம விருத்தம் தேச த்வய விரோதஸ் ச கால பேதேந பரிஹ்ருத
லக்ஷணாயாம் அபி ந த்வயோர் அபி பதயோர் லக்ஷணா ஸமாச்ரயணம் ஏகேநைவ லஷிதேந விரோதி பரிஹாராத் –
லக்ஷணாபாவ ஏவ உத்த தேசாந்தர சம்பந்தி தயா பூதஸ்யைவ அந்ய தேச சம்பந்தி தயா வர்த்தமானத்வா விரோதாத்
ஏவ மாத்ராபி ஜகத் காரண பூதஸ்யைவ பரஸ்ய ப்ரஹ்மண
ஜீவ அந்தர்யாமி தயா ஜீவாத்ம த்வம விருத்தமிதி ப்ரதிபாதிதம் -யதா பூதயோர் அபி ஹி த்வயோர் ஐக்யம்
சாமாநாதி கரண்யேந பிரதீயதே -தத் பரிந்யாகேந ஸ்வரூப மாத்ர ஐக்யம் ந சாமநாதி கரண்யஸ்யார்த்தா
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மிந் நர்த்தே வ்ருத்திஸ் சாமாநாதி கரண்யம் (பதாஞ்சலி அருளிய லக்ஷணம் )-இதி ஹி
தத்வித ததா பூதயோர் ஏவ ஐக்யம் உபபாதிதம் அஸ்மாபி –

அது அவ்வாறு அல்ல
இவர் அந்த தேவதத்தன் என்பதில் இலக்கணைக் குற்றம் வராது -ஏன் எனில் இவர் அந்த என்ற சொற்களுக்கு மாறுபட்ட பொருளைக் குறிக்காமையால் ஒரு நபருக்கு -பொருளுக்கு -கடந்த காலத்தில் வேறொரு இடத்துடன் உள்ள தொடர்பு -நிகழ் காலத்தில் கண் முன் காணும் இடத்துடன் உள்ள தொடர்புக்கு மாறுபாடுடையதன்று
ஒருவருக்கு இரு வேறு பீடத்துடன் உள்ள தொடர்பின் கால மாறுபாட்டால் சமன் செய்யப்படுகிறது

இலக்கணையாகக் கொண்டாலும் இரண்டு பாதங்களும் இலக்கணையால் சுட்டிக் காட்டப்படும் ஒரே பொருளினால் அவ்விரண்டு சொற்களும் ஒன்றேயாக ஒரு பொருளுடையவையாக ஆகமாட்டா
இங்கு கடந்த காலத்தில் வேறோர் இடத்தில் தொடர்புடையதாக இருந்தமையும்
தற் சமயம் இங்கு காணப்படுதலும் ஒரு நபருக்கு இலக்கணைக் குற்றமாக முடியாது
அதே போல் உலகின் காரணமாய் இருக்கும் தன்மை யுடைய ப்ரஹ்மம் -தத் -ஆத்மாவின் உள்ளுறையாய் விளங்கி -அந்த ஆத்மாவின் நின்றும் வேறுபட்ட ஒரு ப்ரஹ்மத்தைக் குறிக்கிறது –
அவ்வாறு அந்த இரண்டு குணமுள்ள ப்ரஹ்மமும் ஒன்றே என்பதால் ஸாமாநாதி கரணம் –சமன் செய்து பொருள் கோடல் -கிடைக்கிறது
இப்படிக் கொள்வதைத் தவிர்த்து -தத் த்வம் -அது நீ என்ற இரு சொற்களும் தம் தம் பொருளைக் குறிக்காது –
தம்மின்றும் வேறுபட்ட ஒரே ஆத்மா -பரமாத்மா =ஜீவாத்மா -என்ற பொருளைத் தர இயலாது
வேறுபட்ட பொருள் காட்டும் இரு சொற்கள் தத் தம் நேர் பொருளை விட்டு ஒரே பொருளை -வஸ்துவை அடை மொழியினால் காட்டுதல் ஸாமா நாதி கரணமாகும் -சமன் செய்து பொருள் கோடலாகும் –
இதனால் இரு சொற்களாலும் ஒரே பொருள் -வஸ்து -குறிக்கப்படும் என்றே அறியப்பட்டது

இலக்கணை யாவது ஒரு சொல் தனக்குரிய நேர் பொருளைத் தவிர்த்து பழக்கத்தினாலோ -பண்பு மிகுதியினாலோ -அதினிலும் வேறுபட்ட ஒரு பொருளைக் கொள்வது
எடுத்துக் காட்டு
உலக வழக்கில் கம்பி நீட்டினான் என்று கூறுகையில் ஒரு கொல்லன் உலோகத்தைக் கம்பியாக நீட்டுவதைக் கொள்ளாது -ஒருவன் தப்பி ஓடி விட்டான் -என்பதையே கொள்கிறோம் –

இங்கு அது என்ற சொல் தொலைவில் இருக்கும் ஒன்றைக் காட்டும் –
நீ என்பது அண்மையில் கண் முன்னே காணப்படும் ஒருவனைக் குறிக்கும்
இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பிட வேண்டுமானால் அவை இரண்டும் தத் தம் அடைமொழிகளால் மட்டும் காட்ட இயலும் –
இல்லை எனில் அது நீ என்ற இரண்டு சொல் ஒரு பொருள் பன் மொழி -ஆ -பசு -போலாகும்
அவ்வாறு கொள்வது தவறு –
அவற்றுக்கு அடை -விசேஷணம் -உண்டு என்றால் ப்ரஹ்மத்திற்குப் பண்புகள் உண்டு என்று ஏற்பட்டு தமது பண்பற்ற ப்ரஹ்மம் என்ற கொள்கை மாறுபடும் என்பதால் அத்வைதிகள் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் –

———

31–உபக்ரம விரோத உப சம்ஹாரே வாக்ய தாத்பர்ய நிஸ்ஸயஸ் ச ந கடதே உபக்ரமே ஹி
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத்யாதிநா
ஸத்ய ஸங்கல்பத்வம் ஜகத் ஏக காரணத்வம் அப்யுக்தம் தத் விரோதி ச அவித்யாஸ்ரயத்வாதி ப்ரஹ்மண

(ஸப்தம் -வாக்ய சேஷம் -அது பிரகரண சேஷம் – -அது ஸாஸ்த்ர சேஷம் –
லிங்கம் அடையாளங்கள் -1-உபக்ரமம் உபஸம்ஹாரம்-இதுவே பிரதானம் -2-அப்பியாசம் -3-அபூர்வ வத் -4-பலம் -5-அர்த்தவாதம் -6-உபபத்தி ஆறும் உண்டே
சரீராத்மா பாவத்துக்கு உபக்ரமம் உப சம்ஹாரம் ஏகார்த்தம்)

துவக்கத்தில் சொன்ன பொருளும் முடிவில் கொண்ட பொருளும் ஒன்றே என்பது முடியாது –
துவக்கத்தில் அது நினைத்தது பலவாகக் கடவேன் மக்களைப் படைப்பேன் என்று உண்மையான வினைத்திட்பம் கொண்டு இருந்ததே உலகிற்குக் காரணமாயிற்று என்பது வெளிப்படை
அதற்கு மாறாகக் கொண்டால் அந்த ப்ரஹ்மத்திற்கு மக்களைப் படைக்கும் திறனும் அதற்கான ஞானமும் இல்லை
அது அஞ்ஞானத்திற்கு இருப்பிடமானது என்றதாகும்

அத்வைதிகள் அறிவே ஞானமே ப்ரஹ்மம் என்று முதற் கொள்கையாய் கொண்டுள்ளனர்
அவித்யை என்பதனாலேயே அது தன்னை மற்றை உயிர்களாக நினைத்து மயங்குகிறது
அந்த மயக்கமே இந்தப் பொய்யான உலகு உண்மை போல் தோன்றும் காரணம் என்பது அவர்கள் முடிவு
உலகைப் படைக்கும் அறிவு ப்ரஹ்மத்திற்கு இல்லை என்றால் ப்ரஹ்மமே ஞானம் என்று கொண்டது பொருந்தாது
அதாவது அவர்களே தங்கள் முதற் கொள்கைக்கும் முடிவான இருப்புக்கும் மாறுபடுகின்றனர்-

———-

32–அபி ச அர்த்த பேத தத் சம்சர்க்க விசேஷ போதந க்ருத பத வாக்ய ஸ்வரூப லப்த பிராமண பாவஸ்ய சப்தஸ்ய
நிர் விசேஷ வஸ்து போதநா சாமர்த்யாத்ந நிர்விசேஷ வஸ்து நி சப்த பிரமாணம்
நிர் விசேஷ இத்யாதி சப்தாஸ்து கேந சித் விசேஷேண விஸிஷ்டதயா அபஹதஸ்ய வஸ்துநோ வஸ்த்வந்தராவகத விசேஷ
நிர்சேஷதக தயா போதகா இதரதா தேஷாமப்யநவ போதகத்வமேவ ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண பதஸ்யை அநேக விசேஷ
கர்பிதத்வாத் அநேக பதார்த்த சம்சர்க்க போதகதவாச்ச வாக்யஸ்ய-

(சப்தம் ப்ரக்ருதி ப்ரத்யாத்மகம் பகுதி விகுதி சேர்ந்தே இருக்கும் -பேத ப்ரதிபாத்யம் ஆகவே இருக்குமே -கடம் -வேறே ஒன்றை வியாவர்த்திக்கைக்காக சொல்கிறது-ஆத்மா ப்ரஹ்மம் -ஞான மாத்திரம் -ஞாத்ருத்வாதி விசேஷணங்கள் இல்லாமல் –
ஞானம் சப்தத்தால் வஸ்து நிர்த்தேசம் என்பர்)

மேலும் ஒவ்வொரு சொல்லும் பகுதி விகுதியாய் நின்று ஒரு குறிப்பிட்ட பொருளை மற்றவற்றின் நின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது
அவ்வாறே பல சொற்களின் தொடையான சொல் தொடரும் தனக்கென ஒரு தனித்த பொருளையே காட்டும்
அவைகள் எக்காலத்தும் பண்புகள் அற்ற ஒரு பொருளைக் காட்டும் திறன் அற்றவை இவ்வாறு பொருள் காட்டும் தன்மையே நமக்குக் கொள்ளத் தக்கது

பண்புகள் அற்றது என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும்
சொற்கள் யாவும் தத் தமக்குரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும்
அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்புற்ற பொருள் என்று எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது

உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம்
அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –

————–

33–அத ஸ்யாத் -நாஸ்மாபி நிர்விசேஷ ஸ்வயம் பிரகாசேசே வஸ்துநி சப்த பிரமாண மித்யுச்யதே
ஸ்வதஸ் சித்தஸ்ய பிராமணன – பேக்ஷத்வாத் சர்வை சப்தை தது பராக விஷேஷா ஞாத்ருத்வாதய சர்வே நிவர்த்தயந்தே
சர்வேஷு விஷே சேஷு வஸ்து மாத்ரம் அநவச் சிந்நம் ஸ்வயம் பிரகாசம் ஸ்வத ஏவாவதிஷ்டதே -இதி –

பண்புகள் அற்ற ப்ரஹ்மத்தின் தன்னொனிர் தன்மை என்னும் வாதத்திற்கு மறுப்பு

அது அவ்வாறாயின் -நாங்கள் ப்ரஹ்மத்திற்கு சொற்கள் -ஸப்தம் -சாட்சி பிரமாணம்-என்று சொல்லவில்லை –
ப்ரஹ்மம் தானே வெளிப்படும் பொருள் என்பதால் அதனைப் பிற -சொற்கள் முதலியன -காட்டிக் கொடுக்க முடியாது –
ஸாஸ்த்ரங்களின் எல்லாச் சொற்களும் தங்களுக்குள்ள சிறப்பான போல் கூறும் தன்மையால் குணம் அற்ற ப்ரஹ்மத்தின் மீது ஏற்பட்டு இருக்கும் பண்புகள் யாவையும் விலக்குகின்றன என்கிறார்கள்

அது அவ்வாறு அல்ல -எந்தச் சொல்லால் அப்பொருள் -ப்ரஹ்மம் -சுட்டிக் காட்டப்பட்டு அதன் பண்புகள் விலக்கப் படுகின்றன –
ஞானம் மட்டும் என்ற சொல்லாலா
அதுவும் கூட பண்பு உள்ள பொருளையே காட்டுகிறது –
அச்சொல்லின் பகுதி விகுதிகளால் அது தனக்கு உரிய பொருள் கூறும் தன்மையால் பண்புகள் உள்ள பொருளையே காட்டுகிறது –
ஞா -அறிதல் என்ற பொருள் படுதலால் செய்கையைக் காட்டி -அதனால் செய்பவனையும் -செய்யப்படும் தொழிலையும் காட்டும் –
தி -இது பெண் பால் ஒருமை விகுதி

ப்ரஹ்மம் தானாகவே காட்டிக் கொடுக்கிறது என்றாலும் அதன் நிலைச் சிறப்பால் பண்பற்ற பொருளைக் காட்ட முடியாது
இங்கு ஞப் தே என்பதால் பிறர் துணை யன்றி இயற்கையாகவே ஞானமுடையது ப்ரஹ்மம் என்பது பெறப்படுகிறது –

———-

34–நைததேவம்
கேந சப்தேந தத் வஸ்து நிர்திஸ்ய தத் கதா விசேஷா நிரஸ்யந்தே –
ஞாப்தி மாத்ர சப்தேந -இதி சேத் –
ஸோபி ச விசேஷ மேவ வஸ்து அவலம்பதே ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண விசேஷ கர்ப்பித தத்வாத தஸ்ய –
ஞா -அவ போதநே இதி ச கர்மக-ச கர்த்ருதுக கிரியா விசேஷ க்ரியாந்தர வ்யாவர்த்தக-ஸ்வபாவ விசேஷஸ் ச
ப்ரக்ருதயா அவகம்யதே ப்ரத்யயேந லிங்க சங்க்யாதயா-
ஸ்வத ஸித்தாவபி ஏதத் ஸ்வபாவ விசேஷ விரஹே ஸித்திரே வநஸ்யாத் –
அந்ய சாதந ஸ்வ பாவதயா ஹி ஞப்தே ஸ்வதஸ் சித்தருஸ்யதே–

(ஞா -அவ போதநே-அறிதல் -ஏதாவது ஒன்றைப் பற்றியே இருக்க வேண்டும் -யார் அறிகிறான் -யாரை அறிகிறான் எதை அறிகிறான் கேள்வி வருமே
மாத்திரம் சப்தம் இவற்றை விவரிக்காதே -லிங்கம் அடையாளம் –)

பண்புகள் அற்றது -என்பது நாம் எடுத்துக் கொண்ட பொருள் மற்றவைகளுக்கு உள்ள பண்புகள் உடையதன்று என்று மறுதலிப்பதாகும் –
சொற்கள் யாவும் தத் தமக்கு உரிய ஒரு குறிப்பிட்ட பொருளைக் காட்டும் என்பதும் -அப்பொருள் மற்றவற்றின் நின்றும் வேறுபட்டது என்பதால் பண்புகள் அற்ற சிறப்பற்ற பொருள் என்ற எதுவும் சொற்களால் கிடைக்க முடியாது –

உலகின் மொழிகள் யாவும் அவற்றில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு குறிப்பிட்ட தன்மையையே காட்டுகின்றன காட்டுகின்றன –
அது பொருளாகவோ பண்பாகவோ வினையாகவோ இருக்கலாம் -அதனால் அச்சொல் தான் காட்டும் பொருளை மற்றச் சொற்களின் பொருள்களில் இருந்து வேறுபடுத்துகிறது –
ஆதலால் பண்புகள் அற்ற பொருள் என்று ஓன்று இருக்க முடியாது –

—————

35–ப்ரஹ்ம ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஸர்வதா ஸ்வயமேவ ப்ரகாஸதே சேத் ந தஸ்மிந் அந்ய தர்மாத் யாச சம்பவதி –
ந ஹிரஜ்ஜூ ஸ்வரூபே அவபா சமாநே சர்ப்பத்வாதி அத்யஸ்யதே அத ஏவ ஹி பவத்பி
ஆச்சாதிகா அவித்யா -(ஆச்சாதிகா அவித்யா – பொருளை மட்டும் மறைத்தல் -விசேஷகா அவித்யா -பண்புகளை மறைத்தல் –
என்று இரண்டு வகை அவித்யா உண்டே – ) அப்யுபகம்யதே ததஸ் ச ஸாஸ்த்ரீய நிவர்த்தக ஞானஸ்ய ப்ரஹ்மணி திரோஹிதாம்ஸோ
விஷய அந்யதா தஸ்ய நிவர்த்திகத்வம் ச ந ஸ்யாத் -அதிஷ்டாநாதிரேகி ரஜ்ஜூத்வ ப்ரகாஸதேந ஹி சர்ப்பத்வம் பாத்யதே –
ஏகஸ்சேத் விசேஷோ ஞான மாத்ரே வஸ்துநி சப்தேந அபிதீயதே ச ச ப்ரஹ்ம விசேஷணம் பவதி இதி சர்வ ஸ்ருதி ப்ரதிபாதித
சர்வ விசேஷண விசிஷ்டம் ப்ரஹ்ம பவதி அத பிரமாணிகாநாம் ந கேநாபி ப்ரமாணே ந நிர்விசேஷ வஸ்து ஸித்தி —

(ஞானம் அந்நயாதீன ஸ்வயம் பிரகாசம்-ஸ்வ தர்மம் – -தன்னுடைய சம்பந்தத்தால் பிரகாசம் அற்ற சேதனப் பொருள்களை பிரகாசிக்கும்
ஒரு பொருளை விஷயீகரித்தால் தானே ஸ்வயம் பிரகாசம் ஆகும் –
நிர்விசேஷ வஸ்துவுக்கு ஸ்வயம் ப்ரகாஸத்வம் சாதிக்க முடியாதே
ஸ்வயம் பிரகாச வஸ்து மேல் பிரமம் உண்டாகவே முடியாதே)

(நான் வேடுவன் -நான் ப்ரம்மத்துக்கு விஷயம் அல்லவே -வேடுவன் தப்பாக அறிவதில் தானே பிரமம் ஆகலாம்
ஸ்வயம் பிரகாச வஸ்து பிரமத்துக்கு விஷயம் ஆகவே முடியாதே)

———–

36 —நிர்விகல்பக ப்ரத்யஷேபி ச விசேஷமேவ வஸ்து பிரதீயதே -அந்ய தா ச விகல்பகே ஸோயமிதி–
பூர்வாவகத பிரகார விஸிஷ்ட ப்ரத்யயா நுபபத்தே-
வஸ்து ஸமஸ்த்தாந விஷய ரூபத்வாத் கோத்வாதே -நிர்விகல்பக தசாயாமபி ச சமஸ்தானமேவ வஸ்து இத்தம்-இதி பிரதீயதே
த்விதீயாதி ப்ரத்யயேஷு தஸ்யைவ சமஸ்தாந விசேஷஸ்ய அநேக வஸ்து நிஷ்டதா மாத்ரம் பிரதீயதே சமஸ்தாந ரூப
பிரகாரக்யஸ்ய பதார்த்தஸ்ய அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து விசேஷணத்வம்
த்விதீயாதி ப்ரத்யயாவகம்ய மிதி த்விதீயாதி ப்ரத்யயா ச விகல்பகா இதயுச்யந்தே

பண்புகள் அற்ற மெய்ப்பொருட் காட்சி
பண்புகள் அற்ற பொருளைக் காட்ட முடியும் என்பதை மறுத்தல்

சிறப்புத் தன்மைகள் அற்ற மெய்ப்பொருள் காண் முறையும் -ஏதோ ஒரு பண்புடன் கூடிய பொருளையே காட்டும் –
இல்லையெனில் ஸ விகல்ப ஞானத்தில் சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறையில் -இவன் அதே தேவதத்தன் -என்று சொல்லும் போது முன்பு தேவதத்தனும் பின்பு அவனுடைய பண்புகளும் அறியப்பட்டன என்பது தவறாகும்
ஒருபடிப்பட்டதான பண்புகள் ஏதோ இருப்பதால் மட்டும் இவ்விதம் சொல்ல முடியும் –
ஒரு பிராணி அதன் உருவ அமைப்பு பண்புகள் முதலியவற்றால் -பசு -என்று அறியப்பட்டு பின்னர் அதைப்போன்ற பல பிராணிகளைக் காண்கையில் அவைகளும் பசுவே -என்று அறியப்படுகின்றன –
இரண்டாம் முறை அதே உருவ அமைப்புக் கொண்ட பல பொருள்கள் பார்க்கப்படுகின்றன –
இவ்வாறு உருவ அமைப்பு ஒற்றுமை கொண்ட பல பொருள்கள் சிறப்புக் குணமுடையதாய் இருத்தல் இரண்டாவது நோக்குதலில் ஆரியப் படுவதால் அது சிறப்புள்ள மெய்ப்பொருள் காண் முறை எனப்படுகிறது

ப்ருதக் ஸித்தம் –விசேஷணம் பிரிக்கப் படக் கூடியது
அப்ருதக் ஸித்தம் –குணம் -பிரகாரம் -பிரிவற்றது
நிர் விகல்பம் -ஒரு பொருளை மற்றவற்றில் நின்றும் பிரித்து அறிதல்
ஸ விகல்பம் -அதே போன்று பல பொருள்களை அறிதல்

ப்ரஹ்மத்தின் தனிப்பட்ட பண்புகள் உயர்வற உயர் நலம் உடைய நற் குணக்கடல்
தன்னை அடைந்தோரையும் அவ்வாறு ஆக்கும் வல்லமை படைத்தது
2-பசு என்னும் விலங்கு மற்ற விலங்கு வகைகளின் நின்றும் மாறுபடுவதை முதலாவதாகவும்
பல பசுக்கள் தமக்குள்ள சில வித்யாசங்களுடன் இருத்தலை அதன் பிறகும் அறிய முடியும்
3-இவன் அதே தேவ தத்தன் என்பது ப்ரத்யபிஞ்ஞா-நினைவு கூறுதல் –

————-

37–அத ஏவ ஏகஸ்ய பதார்த்தஸ்ய பின்னா பின்ன ரூபேண விருத்தம் வ்யத்யாத்மகத்வம் ப்ரத்யுக்தம் சமஸ்தானஸ்ய ஸம்ஸ்தானீன
பிரகாரதயா பதார்த்தாந்தரத்வம் பிரகாரத்வா -தேவ ப்ருதக் சித்யநர் ஹத்வம் -ப்ருதக் அநு பலம்பஸ் சேதிநத்வயாத் மகத்வ ஸித்தி –

பிறகு இந்த ஒன்றான பொருளின் மாறுபாடுள்ள மாறுபாடற்ற தன்மைகள் அவை உடைமை இன்மையாலேயே அறியப்படுகின்றன –
ஒரு அமைப்பும் அதை உடைய பொருளும் பிரிக்க முடியாமையால் ஓன்று மற்ற ஒன்றுக்கு அடையாகிறது-ஒன்றாகவே காணப்பட்டாலும் ஒரு பொருளும் அதன் அமைப்பும் தனித்து இயங்காமல் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டதாகும் -அதனால் ஸ விசேஷத்வம் பண்பு உடைமை வெளிப்படும்

எடுத்துக் காட்டு -குடமும் நிறமும்

———–

38–அபி ச நிர்விசேஷ வஸ்து வாதிநா ஸ்வயம் பிரகாச வஸ்துநி ததுபராக விசேஷா சர்வைஸ் சப்தை நிஷித்யந்தே
இதிவததா கே தே ஸப்தா நிஷேதகா -இதி வக்தவ்யம்-
வசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி விகார நாம தேயயோ வாசாரம் பண மாத்ரத்வாத்
யத் தத்ர காரண தயா உப லஷ்யதே வஸ்து மாத்ரம் ததேவ சத்யம் அந்யத சத்யமிதி இயம் ஸ்ருதிர் வததி இதி சேத்
நைததுப பத்யதே ஏகஸ்மின் விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதீதி ப்ரதிஞ்ஞாதே அந்ய ஞாநேந அந்ய ஞாநா சம்பவம்
மந்வாநஸ்ய ஏகமேவ வஸ்து விகாரத்ய வஸ்தா விசேஷண பாரமார்த்திகே நைவ நாநா ரூபமவஸ்திதம் சேத்
தத்ர ஏகஸ்மின் விஞ்ஞாதே தஸ்மாத் விலக்ஷண சமஸ்தானாந்தர மபி ததேவ வஸ்து இதி தத்ர த்ருஷ்டாந்தோயம் நிதர்சித–
நாத்ர கஸ்யசித் விசேஷஸ்ய நிஷேதக கோபி சப்த த்ருச்யதே வாசாரம்பண மிதி வாசா வ்யவஹாரேண-ஆரப்யதே இதி ஆரம்பணம் —
பிண்ட ரூபேண ஸம்ஸ்திதாயா ம்ருத்தி காயா நாமச அந்யத் வியவஹாரஸ் ச அந்ய கட சராவாதி ரூபேண அவஸ்தி தாயா
தஸ்யா ஏவ ம்ருத்திகாயா அந்யாநி நாமாநி வியவஹாரஸ் ஸ அந்யாத்ருசா தாதாபி ஸர்வத்ர ம்ருத்தி காத்ர வ்யமேகமேவ
நாநா சமஸ்தான நாநா நாமதேயாப்யாம் நாநா வ்யவஹாரேண ச ஆரப்யத இதி ஏததேவ சத்யம் -இத்யநேந
அந்ய ஞாநேந அந்ய ஞான சம்பவோ நிதர்சித நாத்ர கிஞ்சித் வஸ்து நிஷித் யத–இதி பூர்வமேவ அயமர்த்த பிரபஞ்சித

இங்கும் பொருள் குணங்கள் அற்றது என்று வாதிப்போர் கனமற்ற அப்பொருளின் மேல் ஏற்றிச் சொல்லப்படும் அடைகளினால் அதன் குணங்கள் விலக்கப் படுகின்றன என்று கூறும் நிலையில் தானே ஒளிரும் ப்ரஹ்மத்தில் அதில் ஏறிட்டுச் சொல்லப்படும் சொற்களால் அதன் குணங்கள் விலக்கப்படுகின்றன என்று கொண்டால் அவ்வாறு கூறப்படும் சொற்கள் யாவை என்று கேட்க்கிறோம்

மண்ணுருண்டை எடுத்துக் காட்டில் அது ஒன்றே உண்மை -அதனால் உண்டாகும் குடம் வாணாய் என்பவை உலகியலியல் பெயரிட்டு அழைப்பதற்கு மட்டுமே -என்று விடை அளிக்கப்படுகிறது –
ஏன் எனில் எந்தப் பொருளின் நின்றும் மற்றவை உருவாகின்றனவோ அப் பொருள் மட்டுமே உண்மை என்று கொள்வது நில்லாது -எப்படி என்றால் –
எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ -என்று கேட்கப்பட்டு இருப்பதால் ஒரே பொருள் -மாறுபாடு அடைந்து பல பொருள்களாக ஆகையில் -அந்த முதல் பொருளை அறிவதனால் அதன் மாறுபாடான மற்றப் பொருள்களையும் அறிய முடியும் என்று தான் பொருள் படும்
இங்கு எதிர்மறைச் சொற்கள் ஏதும் இல்லாமையாலே இவ்வாறு இல்லை என்று கொள்வது முடியாது
வாசம் -பேச்சு வழக்கில் ஆரம்பம் துவக்கப்படுத்தல் -அழைக்கப் படுதல் -மற்றையப் பொருள்களின் நின்றும் வேறுபடுத்தி என்பதற்காக பிண்டமாக இருந்த மண் பிண்டம் என்றும் மாறுதல் அடைகையில் குடம் வாணாய் என்றும் ஒவ்வொரு உருவுக்கும் தனிப்பெயர்களாக வருகின்றன –
இப்படி மண்ணின் நின்றும் வேறுபட்ட அமைப்பை யுடையவை யாயினும் இப்பொருட்கள் யாவ்ய்ம் மண்ணாலேயே ஆகி இருப்பதால் வை மண் என்பதும் உண்மை –
அவர் வேறுபொருட்களால் ஆக்கப்பட்டதல்ல என்றே ஆசானால் விளக்கப் படுகிறது -பிற பொருட்கள் எதுவும் இல்லை என்று எங்கும் கூறப்பட வில்லை

ஒரு பொருள் தான் இருக்கும் நிலையின் நின்றும் மாறுபட்டு மற்ற ஒரு நிலையை அடைவது விகாரம் எனப்படும் –

(ஏக பதார்த்த விஞ்ஞானம் காரண கார்ய பாவத்தால் சர்வ விஞ்ஞானம் என்பது அல்ல
ஏக விஞ்ஞானத்தில் அடங்கிய சர்வ விஞ்ஞானம் என்கிறார்
ஏக விஞ்ஞான பின்ன சர்வ விஞ்ஞானம் -அபி –
ஏகம் ம்ருத் பிண்டம் -ஸர்வ குடம் மடக்கு போல்வன-இவையும் ம்ருத் பண்டம் போல் ஸத்யம் தானே )

39–அபி ச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இத்யாதிநா ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய மித்யாத்வம் ப்ரதிஞ்ஞாதம் சேத்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந –இத்யாதி த்ருஷ்டாந்த -ஸாத்யவிகலஸ்யாத் -ரஜ்ஜூ சர்ப்பாதிவத் ம்ருத்திகா விகாரஸ்ய
கட சராவத இதர சத்யத்வம் ஸ்வேத கேதோ ஸூஸ்ரூஷோ பிரமானாந்தரேண யுக்தயா ச அசித்தமிதி ஏததபிசிஷாத இஷிதமிதிசேத்
யதா இதி த்ருஷ்டாந்த தயா உபாதானம் ந கடதே-

இங்கும் எந்த ஒன்றைக் கேட்டால் கேட்கப்படாத மற்றவை கேட்டதாக ஆகுமோ -என்பதால் -வரஹ்மம் தவிர்த்த மற்றைப் பொருள்களின் இன்மை தெரிவிக்கப் படுகிறது என்று மாயா வாதிகள் கூறுவார்களானால் -எந்த மண்ணுருண்டையை அறிந்தால் குழந்தாய் மற்றவையும் அறிந்ததாகும் -என்ற எடுத்துக் காட்டால் அவர்கள் கூற்று பயன் அற்றதாகிறது
அதற்கு மாறாக பொய் என்று நன்கு அறியப்பட்ட கயிற்றில் பாம்பைக் காணுதல் போன்ற எடுத்துக் கட்டைத் தவிர்த்து மண்ணுருண்டையின் விகாரங்களே குடம் சாருவும் போன்றவை என்று காட்டப்பட்டு இருப்பதால் -அவை மண்ணாலேயே நிறைந்தவை -அவை யாவும் பொய் என்பது மறுக்கப் படுகிறது –

———-

40–சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இத்யத்ர
சதேவ -ஏகமேவ -இதி அவதாரண த்வயேந-அத்விதீயம் -இத்யநேந-சந் மாத்ராதிரேகி -சஜாதீய -விஜாதீயா —
சர்வே விசேஷா நிஷித்யந்த இதி பிரதீயதே இதி சேத்
நைவ தேவம் -கார்ய காரண பாவா வஸ்தாத் வயாவஸ்தி தஸ்ய ஏகஸ்ய வஸ்துந ஏகா வஸ்தஸ்ய ஞாநேந அவசித்தாந்தர
அவஸ்தி தஸ்யாபி வஸ்த்வ ஐக்யேந ஞாததாம் த்ருஷ்டாந்தேந தர்சாயித்வா
ஸ்வேத கேதோரா பிரஞ்ஞாதம் ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரணத்வம் வக்தும்
சதேவ சோம்யேதம்–இத்யாரப்தம்-இதமக்ர சதேவா ஸீத் -இதி அக்ர இதி கால விசேஷ இதம் சப்த வாச்யச்ய பிரபஞ்சஸ்ய
சதா பத்தி ரூபம் க்ரியாம் சத்த்ரவ்யதாம் ச வததி
ஏகமேவ இதிச அஸ்ய நாநா நாம ரூப விகார ப்ரஹாணம்-ஏதஸ்மிந் ப்ரதிபாதிதே அஸ்ய ஜகத-சதுபாதநதா பிரதி பாதிதா பவதி-
அந் யாத்ரா உபாதான காரணஸ்ய ஸ்வ வ்யாதிரிக்தா திஷ்டாத்ரா பேஷா தர்சநேபி சர்வ விலக்ஷணத்வா தஸ்ய
சர்வஞ்ஞஸ்ய ப்ரஹ்மண சர்வசக்தி யோகோ ந விருத்த இதி
அத்விதீய-பதம் அதிஷ்டாத்ரந்தரம் நிவாரயதி சர்வ சக்தி யுக்தத் வாதேவ ப்ரஹ்மண-காஸ்சந ஸ்ருதய ப்ரஹ்மம் உபாதான காரணத்வம்
ப்ரதிபாத்ய நிமித்த காரணம் அபி ததேவேதி ப்ரதிபாத யந்தி யதேயம் ஸ்ருதி —

(ஜகத் காரணம் ப்ரஹ்மமே அறியாத ஸ்வேத கேதுவுக்கு அறிவிக்கும் வாக்யமே இந்த சுருதி வாக்கியம்)

சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்-என்ற வாக்கியத்தில் -சதேவ-ஏகமேவ –என்ற இரு தெற்று ஏகாரங்களும் -அத்விதீயம்-இரண்டாவது அற்றது -என்பதாலும் -மற்ற எவையும் அற்ற -ஸத் -அதனுடன் ஒருபடிப்பட்ட-அதினின்றும் மாறுபட்ட -மற்ற குணங்கள் யாவற்றையும் விலக்குகிறது என்று கூறுவதாகவும் கொள்ள முடியாது –
செயல் விளைவு தொடர்பினால் ஒரே பொருளின் இரு வேறுபட்ட இரு நிலைகளில் ஒன்றை அறிவதால் மற்றது தானே அறியப்படும் என்பதைக் காட்ட
இந்த எடுத்துக் காட்டை ப்ரஹ்மம் ஒன்றே இவ்வுலகு அனைத்திற்கும் காரணம் என்பதை ஸ்வேத கேதுவிடம் -குழந்தாய் ஸத் ஒன்றே இருந்தது என்று தொடங்கி முதலில் ஸத் என்றே இருந்தது என்று கூறுகிறார்முதலில் என்பது ஒரு காலச் சிறப்பு -பிரளய நிலை –
இதம் என்பதற்குப் பொருள் இப்பிரபஞ்சம் -அதாவது படைப்புக்கு முன் இவ்வுலகு எல்லாம் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருந்த நிலையையும் -ஸத் என்ற பெயருடனேயே இருந்ததையும் கூறுகிறது –
ஓன்றே என்பதால் இப்பொழுது காணப்படும் பற்பல பெயர்களும் உருவங்களும் அற்றும் இருந்தது என்று கூறி
இந்த உலகிற்கு அந்த ஸத் என்பதே மூலப்பொருள் காரணமாகவும் அதினின்றும் வேறுபட்ட ஒரு செய்வோன் எனும் நிமித்த காரணம் இன்றியும்
அதுவே தன்னுடைய எல்லாம் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாத் திறமைகளும் கை வரப் பெற்ற தன்மையால் அது ஒன்றாகவே -மற்றத் துணை ஏதும் இன்றி-உலகைப் படைத்தது என்பதைக் குறிக்க அத்விதீயம் -இரண்டாவது அற்றது – என்று கூறுகிறது –
எல்லாத் திறன்களும் இயற்கையாகவே உடையவன் என்பதால் ப்ரஹ்மமே மூலப்பொருளும் செய்வோனும் ஆயிற்று என்று கூறி சில ஸ்ருதிகளில் ப்ரஹ்மத்தை மூலப் பொருள் காரணமாகச் சொல்லி பிறகு செய்வோனாகவும் கூறப்படுவதையும் எடுத்துக் காட்டுகிறது

உலகில் மூலப்பொருள் ஒரு போதும் செய்வோன் ஆக முடியாது – இந்த வரையறை ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாது – ஏன் எனில் அது எல்லாத் திறன்களும் யுடையது

ஸதா பத்தி -ஸத் ஆபத்தி -உயிருள் -உயிரில் பொருள்களுடன் எப்போதும் கூடியிருக்கும் கட் புலனாகா நிலை –

———-

41-அந்யாஸ் ச ஸ்ருதய ப்ரஹ்மணோ நிமித்த காரணதாம நுக்ஞாய–தஸ்யைவ உபாதானதா தி கதமிதி பரிச்சோத்ய
சர்வசக்தி யுக்தத்வாத் உபாதான காரணம் ததிதரா சேஷோபகரணம் ச ப்ரஹ்மைவ இதி பரி ஹரந்தி
கிம் ஸ்வித்தனம்-க உ சவ்ருஷ ஆஸீத் –யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு-மனிஷினோ
மனசா ப்ருச்சேதேது தது யதத்ய திஷ்டத் புவநாநி தாரயந்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்மம் ச வ்ருஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு மணீஷிநோ மனசாவிப்ரவீமி
வ ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயந் இதி சாமான்யதோ த்ருஷ்டேந விரோத மா சங்க்ய ப்ரஹ்மண
சர்வ விலக்ஷணத்வேந பரிகார யுக்த

வேறு சில ஸ்ருதிகள் ப்ரஹ்மத்தை செய்வோனாகவும் கொண்டு இதற்கு மூலப்பொருள் எது என ஆராய முற்பட்டு ப்ரஹ்மத்திற்கு திறமைகளும் உண்டு என அறுதியிட்டு அதனால் மூலப்பொருளாகவும் அதுவே ஆயிற்று என நிறுவின
ஞானிகளே இந்த பிரபஞ்சம் என்னும் மாளிகையை உருவாக்கியவர் யார் -அதற்கு மரம் எக்காட்டின் நின்றும் எடுக்கப் பட்டது -எந்த மரம் உபயோகிக்கப் பட்டது

ப்ரஹ்மாகிற காட்டில் ப்ரஹ்மமாகிற மரத்தால் இந்த மாளிகை ஆயிற்று
ஞானிகளே -நான் மனப் பூர்வமாகச் சொல்லுகிறேன் -ப்ரஹ்மம் உள் நுழைந்து யாவற்றையும் தாங்கிக் கொண்டு இருக்கிறது -பொதுவாக ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட மூலப் பொருள்கள் செய்வோன் காரணமாக ப்ரஹ்மம் இருக்க முடியுமோ-என்ற ஐயத்தை நீக்குகிறது –

———

42–அத சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் இத்யத்ராபி அக்ரே இத்யாத்யநேக விசேஷ ப்ரஹ்மண ப்ரதிபாதிதா-
பவதமிமத விசேஷ நிஷேத வாஸீ கோபி சப்த ந த்ருச்யதே ப்ரத்யுத ஜகத் ப்ரஹ்மணோ கார்ய காரண பாவ ஞாபநாய
அக்ர இதி கால விசேஷ சப்தாவ ஆஸீத் இதி கிரியா விசேஷ ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா
ச நிமித்த உபாதானயோர் பேத நிரசநேந தஸ்யைவ ப்ரஹ்மண சர்வ சக்தி யோகஸ்சேதி
அப்ரஞ்ஞாதா சஹஸ்ரஸோ விசேஷா ஏவ ப்ரதிபாதிதா

பிறகு -குழந்தாய் ஸத் ஒன்றே முதலில் இருந்தது என்ற இந்தவிடத்திலும் முதலில் போன்ற அடைமொழிகளால் ப்ரஹ்மம் நிரூபிக்கப் படுகிறது –
உங்கள் கருத்துப்படி ப்ரஹ்மத்தைக் குணங்கள் அற்றது என்று சொல்லி விளக்கும் சொற்கள் ஏதும் காணப்பட வில்லை -நேர் மாறாக ப்ரஹ்மத்திற்கும் உலகிற்கும் கார்ய காரணத் தொடர்பு உண்டு என்பதை முதலில் என்ற காலம் காட்டும் சொற்களாலும் –
இருந்தது என்ற சொற் சிறப்பாலும் உலகிற்கு மூலப் பொருளாகவும் செய்வோனாகவும் இருந்தது என்று கூறி -கார்ய காரணத்திற்கு உரிய மூலப்பொருள் செய்வோன் எனும் காரணங்களின் வேறு பாட்டை மறுத்து எல்லா சக்தியும் கைவரப் பெற்ற அந்த ப்ரஹ்மமே இரண்டுமாயிற்று என்று கூறி நாம் அறியாத ஆயிரக்கணக்கான சிறப்புகள் ப்ரஹ்மத்திடம் உள்ளன என்று நிரூபித்து இருக்கிறது

—————-

43–யதோ வாஸ்தக கார்ய காரண பாவாதி ஞாபநே ப்ரவ்ருத்தம் -அத ஏவ
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் -இதயாரப்ய அசத் கார்ய வாத நிஷேதஸ் ச க்ரியதே குதஸ்து கலுஸோம் யைவம் ஸியாத்
இதி பிராகஸத உத்பத்தி அஹேதுகா இத்யர்த்த ததேவ உபபாதயதி கதம்ம் சதஸ் சஜ்ஜாயதே
இதி அசத உப பந்நம் அசதாத்மகமேவ பவதி இத்யர்த்த யதாம்ருத உத் பந்நம் கடாதிகம் ம்ருதாத் மகம் –
சத உத்பத்திர் நாம வ்யவஹார விசேஷ ஹேது பூத அவஸ்தா விசேஷ யோக —

இங்கு கார்ய காரணத் தொடர்பைச் சுட்டிக் காட்ட வேண்டிய உண்மையான காரணம் என்ன என்னில்
இன்மையே முதலில் இருந்தது என்று துவங்கும் இன்மை வாதத்தை மறுத்து -குழந்தாய் இவ்வாறும் சிலர் சொல்லுகிறார்கள் இன்மையினின்றும் இன்மை தான் வர முடியும் என்று கூறுகிறார் –
எப்படி மண்ணின் நின்றும் பண்ணப்பட்ட குடம் முதலியவை மண்ணாகவே இருக்கின்றனவோ அப்படி அவற்றிற்கு பேச்சு வழக்கில் குறிக்கப் படுவதற்கு பெயர்கள் அம்மண்ணின் வேறுபட்ட நிலையில் ஏற்படுகின்றன என்று விளக்குகிறார் –

————

44–ஏதத் யுக்தம் பவதி -ஏகமேவ காரண பூத த்ரவ்யம் அவஸ்தாந்தர யோகேந கார்யமித்யுச்யத இதி
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம் தது அஸத்கார்யவாதே ந சேத்ஸ்யதி -ததாஹி நிமித்த சமாவாய்ய
சமாவாயி ப்ரப்ருதிபிஸ் காரணை அவயவ்யாக்யம் கார்யம் த்ரவ்யாந்தரமேவ ஆரப்யத இதி காரண பூதாத் வஸ்துந கார்யஸ்ய
வஸ்த்வந்த்ரத்வாத் ந தத் ஞாநேன அஸ்ய ஞாததா கதமபி சம்பவநீதி–கதம் அவயவி த்ரவ்யாந்தரம் நிரஸ்யதே
இதி சேத் காரணகதா வஸ்தாந்தர யோகஸ்ய த்ரயாந்தரோத்பத்திவாதிந சம்பிரதி பந்நஸ்யைவ ஏகத்துவ நாமாந்தர
வ்யவஹாராதே ரூப பாதகத்வாத் த்ரவ்யாந்தரா தர்சினாஸ் ச –
இதி காரணமேவ அவஸ்தாந்தரா பந்நம் கார்யம் இத்யுச்ய தே இத்யுக்தம் –

இதை விளக்குவோம் –
காரணமாகும் முதற் பொருள் -அதன் நிலை மாறு பாட்டால் -பிரிதொரு பொருளாக -காரியப் பொருளாக -மாறுகிறது –
அதனால் அக்காரணப் பொருளை நன்கு அறிவதன் மூலம் அதனடியாகப் பிறக்கும் கார்யப் பொருட்கள் அறியப்பட்டனவாகும் என்பது நிரூபிக்கப் படுகிறது –
முதற் பொருளான காரணப் பொருளே பொய்யானது எனில் அதினின்றும் கார்யாப் பொருட்கள் ஏதும் பிறப்பதில்லை
இங்கு ஒரு செயலுக்கு -உலகு படைத்த – செய்வோநின் அதன் இன்றியமையாக் காரணம்
பிரிக்க இயலும் காரணம் முதலியவை இன்மை என்பதினின்றும் எவ்வாறு உண்டாக முடியும்
பல உறுப்புக்களின் சேர்க்கையினாலேயே ஒரு முழுப்பொருள் உருவாகும் அந்நிலையில் அவ்வுறுப்புக்கள் அப்பொருள்களுக்குக் காரணமாகின்றன
உதாரணம் -நூலும் துணியும்
முழுமையான நிரையில் உறுப்புக்களின் தனிப் ர் பெய மறைந்து முழுப் பொருளின நிலைக்கும் ஆகவே காரணத்தை -உறுப்புக்களை -அறிவதால் -கார்ய முழுப்பொருள் அறியப்படும்

இன்மை என்பதின் நின்றே உலகு தோன்றியது என்னும் வைசேஷிகர்கள் கொள்கை இதனால் மறுக்கப் படுகிறது
அவர்கள் கொள்கைப்படி நூலே துணியாக மாறுகிறது என்று கொள்ளப் படும்

———

அசத் கார்ய வைசேஷிக வாத நிரசனம் –
45–நநு -நிரதிஷ்டானப்ரமா சம்பவ ஞாபநாய அஸத்கார்ய வாத நிராச க்ரியதே -ததாஹி -ஏகம் சித்ரூபம் சத்யமேவ
அவித்யாச்சாதிதம் ஜகாத் ரூபேண விவர்த்ததே இதி அவித்யாஸ்ரயத்வாய மூல காரணம் சத்யமித்யப் யுபகந்தவ்யம்
இதி அஸத்கார்யவாத நிராச
நை ததேவம் -ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த முகேந சத்காரியவாதஸ்யைவ ப்ரஸக்தத்வாத்
இத்யுக்தம் பவத் பக்ஷே நிரதிஷ்டான ப்ரமா சம்பவஸ்ய துரூப பாதத்வாச் சா யஸ்ய ஹி சேதநகதோ தோஷ
பாரமார்த்திக தோஷாஸ் ரயத்வம் ச பாரமார்த்திகம் தஸ்ய பாரமார்த்திக தோஷேண யுக்தஸ்ய
அபாரமார்த்திக கந்தர்வ நகராதி தர்சனம் உபபந்நம்
யஸ்யது தோஷஸ் ச அபாரமார்த்திக்க தோஷாஸ்ரயத்வம் ச அபாரமார்த்திகம் தஸ்ய அபாரமார்த்திகே
நாப்யாஸ்ரயேண தத் உப பந்நம் இதி பவத்பஷே நநிரதிஷ்டான ப்ரமா சம்பவ —

அல்ல -ஆதாரப் பொருள் ஒன்றி இன்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் -என்ற இன்மை வாதம் -அத்வைதிகள் வைசேஷிகரோடு வாதிக்கையில் -மறுத்தல் செய்யப்படுகிறது
அவ்வாறே குணங்கள் ஏதுமற்ற ஞானம் ஓன்று மட்டும் -அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு உலகின் உருவில் காண்கிறது எனில்
அந்த அஞ்ஞானத்திற்கு ஆதாரமானது அந்த ஞானம் -ப்ரஹ்மம் -என்பதால் இன்மை வாதம் மறுக்கப் படுகிறது –
அவ்வாறு எனில் ஒன்றை அறிவதால் மற்ற எல்லாவற்றை அறிந்ததாகும் என்று கூறு முகத்தான் -உண்டு -என்னும் வாதமே சொல்ல வந்தது என்பதே சரி –
உங்கள் பக்கத்தில் ஆதாரமின்றி அறிவு மயக்கம் உண்டாக முடியும் எண்டு நிரூபிப்பது கடினம்
எந்தக் கொள்கையில் ஆதாரம் உண்மையானதாகவும் அதற்கு ஏற்பட்ட குறையும் அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பும் உண்மையானதாகவும் கொள்ளப்படுகிறதோ –அங்கு தான் அக்குறை பட்டால் -கந்தர்வ நகரம் -வானத்தில் மேகங்களின் அமைப்பு நகரம் போல் தோற்றுதல் – போன்ற பொய்த் தோற்றங்கள் உண்டாக முடியும் என்று அறிகிறோம் –
எங்கு குறைபாடும் பொய்யோ -அதற்கு ஆதாரமும் பொய்யோ – அங்கு பொய்யான பொருள்களில் பொய்த் தொடர்பால் -பொய்த் தோற்றம் ஆதாரம் இன்மையால் உங்கள் வாதத்தின் படி தோன்ற இயலாது –

————–

46–சோத கேஷ்வபி -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி ஷு சாமாநாதி காரண்ய வ்யுத்பத்தி ஸித்தாநேக குண விசிஷ்டை கர்தாபிதாநம்
அவிருத்தமிதி சர்வ குண விசிஷ்டம் ப்ரஹ்ம அபிதீயத இதி பூர்வமேவோக்தம்

ப்ரஹ்மத்தின் குணங்களை ஆய்ந்து தெரிவிக்கும் வேத வாக்யங்களான -பரமாத்மா மட்டற்ற மகிழ்வே வடிவானது -ஸத்யம் ஞானம் -அநந்தம் –ஆனந்தோ ப்ரஹ்ம -என்றவைகளில் ஸமாநாதி கரண்யத்தால் பல அடைமொழிகளால் கூறப்படும் பரமாத்மா நற் குணங்கள் யாவும் யுடையவன் -என்பது முன்பே நிரூபிக்கப் பட்டு விட்டது –

—————

47–அதாத ஆதேஸோ நேதி நேதி இதி பஹுதா நிஷேதோ த்ருஸ்யத இதி சேத் கிமத்ர நிஷித்யத இதி வக்தவ்யம்
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் சா மூர்த்த மேவச இதி மூர்த்தா மூர்த்தாத்மக பிரபஞ்ச ஸர்வோபி நிஷித்யத
இதி சேத் ப்ரஹ்மணோ ரூபதயா அப்ரஞ்ஞாதம் சர்வம் ரூபதயா உபதிஸ்ய புநஸ்ததேவ நிஷேத்தும யுக்தம் –
ப்ரஷால நாத்தி பங்கஸ்ய தூரதஸ்பர்சனம் வரம் இதி நியாயாத் கஸ்தர்ஹி நிஷேதக வாக்யார்த்த
ஸூத்ரகார ஸ்வயமேவ வததி -ப்ருகிருதை தாவத்வம் ஹி பிரதிஷே ததிததோ பரவீதி ச பூய –
இதி உத்தரத்ர அத நாமதேயம் சத்யஸ்ய சத்யமிதி பிராணாவை சத்யம் தேஷா மேஷ சத்யம்
இத்யாதிநா குண கணஸ்ய ப்ரதிபாதிதத்வாத் பூர்வ பிரகிருதை தாவந் மாத்ரம் ந பவதி ப்ரஹ்மேதி ப்ரஹ்மணா
ஏதாவாந் மாத்ரதா ப்ரதிஷித்யதே இதி ஸூத்ரஸ் யார்த்த–

ஆகையால் பிறகு கட்டளை இல்லை இல்லை என்று பலவிடங்களிலும் மறுக்கும் சொற்கள் காணப்படுகின்றனவே என்பீராகில் அவை எதை மறுக்கின்றன என்ற கேள்வி வரும் –
உருவமுள்ளது -கடினமானது -உருவமற்றது -கடினமற்றது -என்ற இரு உருக்கள் ப்ரஹ்மத்திற்கு உள்ளன என்று கடினமற்ற தன்மையுடைய ப்ரஹ்மத்தின் உருக்கள் மறுக்கப் படுகின்றனதா எனில் -இப் பிரபஞ்சத்திலுள்ள கடின கடினமற்ற பொருட்களுக்கு ப்ரஹ்மம் உயிராய் இருக்கிறது என்று கூறி பிறகு அப் பொருட்களே இல்லை -பொய் – என்று மறுப்பது சரியல்ல -கால் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சேற்றை மிதித்துச் செல்ல வேண்டும் என்பது போல் -இது நீதிக்குப் புறம்பானது அப்படியானால் அந்த மறுப்புகளுக்குப் பொருள் என்ன –
ஸூத்ரகாரர் -வ்யாஸர் – சொல்வது போல் ப்ரஹ்மம் காணப்படும் உலகின் அளவு மட்டுமே என்பதை அக்கட்டளை மறுக்கிறது
இவற்றின் பெயர்கள் உண்மை -உயிர்கள் உண்மை -இவற்றின் உள்ளிருக்கும் ப்ரஹ்மமும் உண்மை என்று மேலும் ஸூத்ரகாரர் கூறி ப்ரஹ்மத்தின் குணங்களை நிரூபித்தால் உலகளவு மட்டுமே ப்ரஹ்மம் என்பது மறுக்கப் படுகிறது –

———

48–நேஹா நா நாஸ்தி கிஞ்சன -இத்யாதிநா நாநாத்வ பிரதிஷேத ஏவ த்ருச்யதே இதி சேத்
அத்ராபி உத்ரத்ர ஸர்வஸ்ய வஸி ச்ரவஸ்யேசாந -இதி ஸத்ய ஸங்கல்பத்வ சர்வேஸ்வரத்வ ப்ரதிபாதநாத்
சேதன அசேதன வஸ்து சரீர ஈஸ்வர இதி ஸர்வ ப்ரகார ஸம்ஸ்தித சர்வேஸ்வர ச ஏக ஏவேதி தத் ப்ரத்யநீக
ப்ரஹ்மாத்மக நாநாத்வம் பிரதி ஷித்தம்–ந பவதபி மதம் சர்வாஸூ ஏவம் பிரகாராஸூ ஸ்ருதிஷு இயமேவஸ்திதி —
இதி நக்வசிதபி ப்ராஹ்மண ச விசேஷத்வ நிஷேத வாஸி கோபி சப்தோ த்ருச்யதே

இவ்வாறு பல சிறிதும் இல்லை -போன்று பலவாக இருப்பதை விளக்கும் சொற்கள் காணப்படுகிறதே என்பீராகில் அங்கும் இவ் வாக்கியத்தைத் தொடர்ந்து
எல்லோருக்கும் வசப்பட்டவன் எல்லோரையும் வசப்படுத்துவோனாகவும் என்று மெய்யான செயல் திறன் உடையவனாகவும் -எல்லாவற்றுக்கும் தலைவனாகவும் சொல்லப்படுவதால் உயிருள் உயிரில் பொருள்களை உடலாக உடைய தனிப்பெரும் தலைவன் அவன் ஒருவனே என்று கூறி அதற்கு எதிர்த் தட்டான அவனை நீங்கிய பல் பொருட்கள் இருப்பதாகக் கொள்வதைத் தான் மறுக்கிறது -உங்கள் கூற்றை அல்ல –
இவ்வாறே மற்ற வேதங்களிலும் இடங்களிலும் பொருள் கொள்ள வேண்டும்
இதனால் ப்ரஹ்மத்திற்கு குணம் ஏதும் இல்லை என்று கூறும் சொற்கள் ஏதும் வேதங்களில் இல்லை –

———

49–அபிச நிர்விசேஷ ஞான மாத்ரம் ப்ரஹ்மம் தச்ச ஆச்சாதிகா அவித்யா திரோஹித ஸ்வ ஸ்வரூபம்
ஸ்வகத நாநாத்வம் பச்யதி -இத்யயமர்த்தோம -ந கடதே-
திரேதாநம் நாம பிரகாச நிவாரணம் -ஸ்வ ஸ்வ ஸ்வரூபாதிரேகி பிரகாச தர்மா நப்யுபகமேந பிரகாசஸ்யைவ
ஸ்வரூபத்வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச பர்யாயம் ஞானம் நித்யம் ச ச பிரகாச -அவித்யா திரோஹித –
இதி பாலிச பாஷிதமிதம்-அவித்யா பிரகாச திரோஹித்த இதி பிரகாச உத்பத்தி பிரதிபந்தோவா வித்யமாநஸ்ய விநாஸோவா ?
பிரகாசஸ்யா நுத்பாத்யத் வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச நித்யோ நிர்விகாரஸ் திஷ்டதி -இதி சேத்
சத்யாயாமப்ய வித்யாயாம் ப்ரஹ்மணி ந கிஞ்சித திரோஹிதம் இதி நாநாத்வம் பாஸ்யதி
இதி பவதாமயம் வ்யவஹார சத்ஸூ அநிர்வசநீய ஏவ

மேலும் குணங்கள் சிறுதும் அற்ற ஞானம் மட்டுமேயாக உள்ள ப்ரஹ்மம் தன்னைச் சூழும் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு தன்னிடத்தில் இல்லாதவற்றை பலவாகப் பார்க்கிறது என்பது பொருந்தாது-
மறைப்பது என்பது ஒளியைத் தடுப்பது -அதினின்றும் -ப்ரஹ்மத்தின் நின்றும் -வேறுபட்ட ஒளியை மறைப்பது என்பதை -ஒளி ப்ரஹ்மத்தின் நின்றும் பிரிக்க முடியாத ஓர் அங்கம் -அத்வைதிகள் ஒத்துக் கொள்ளாததால் மறைப்பு என்பது ப்ரஹ்மத்துக்கே ஏற்பட்டு அது அழிந்து விடும் என்பதாகிறது
இங்கு ஒளி என்பது -ஒரு பொருள் பன் மொழியால் -ஞானம் -அது என்றும் அழியாதது -அந்த ஞானம் அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது எனக் கூறுதல் அறியாப் பிள்ளைப் பேச்சு
அவ்வாறே அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டது என்றால் -ஞானம் தோன்றுவதற்கு தடையாகிறதா -அன்றி முன்புள்ளது அழிக்கப் பட்டதா -ஞானம் நித்யம் -என்றும் உள்ளது -ஆக்க முடியாது என்பதால் அதன் அழிவு என்று கொள்ள வேண்டும் -ஞானம் என்றும் மாறு படாதது எனில் அஞ்ஞானம் அதை ஏறிட முடியாது -அதன் ஒளி மறைக்கப்படுவது இல்லை -அதனால் ப்ரஹ்மம் தானே பலவாறாகக் காண்கிறது என்னும் உங்கள் கூற்றை சான்றோர்கள் ஏற்க மாட்டார்கள் –

————–

இதுக்கு அத்வைதி வாதம்
50–நநு ச பவதாபி விஞ்ஞான ஆத்மா அப்யுப கந்தவ்ய -ச ச ஸ்வயம் பிரகாச –
தஸ்ய தேவாதி ஸ்வரூபாத்மாபிமாநே ஸ்வரூப பிரகாச திரேதாந மவஸ்யாஸ் ரயணீயம்-ஸ்வரூப ப்ரகாசே சதி
ஸ்வாத்மநி ஆகாராந்தராத்யசா யோகாதி அதோ பவதஸ்ச சமாநோ யம் தோஷ மிஞ்ச அஸ்மாக மேகஸ்மிந்நேவ ஆத்மநி
பவதுதீரிதும் துர்கடத்வம் வாதம் ஆத்மானந்த் யாப்யுபகமாத் சர்வேஷ்வயம் தோஷ பரிஹரணீய–

அன்று உங்கள் பக்கத்தில் நீங்கள் ஆத்மாவை விஞ்ஞான மயம் என்று கொள்கிறீர்கள் -அதுவும் தானே ஒளிருவது –அதற்கு தேவன் முதலான உடல்களில் இருந்து கொண்டு அவ்வுடலே தானாக மயங்கும் ஞான மறைப்பு ஏற்படுகிறது
தனக்குள் ஞானம் என்றும் குன்றாதவனாயின் ஆத்மா அது புகுந்து இருக்கும் உடலின் தன்மைகளை ஏறிட்டுக் கொள்ள முடியாது –
அது எங்கள் கொள்கைக்கு ஈடான குற்றமே -மேலும் நாங்கள் ஒரே ஆத்மா என்று கொண்டு இருப்பதால் இக்குறை அதன் மீது மட்டும் காணப்படும் -மாறாக உங்கள் கொள்கையில் அவை பலவாகையால் குறைகளும் பலவாக -அதிகமாக உள்ளதாகவே கொள்ளப்பட வேண்டும்
இதை எவ்வாறு மறுப்பீர்கள் -என்று அத்வைதி கிடக்கிறார் –

————-

இதுக்கு உத்தரம்
51—அதிர உச்யதே -ஸ்வ பாவத-மல ப்ரத்யநீக அநந்த ஞானாந்த ஏகம் ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக -அதிசய அபரிமித உதார குண சாகரம்
நிமிஷ காஷ்டா கலா முஹுர்த்தாதி பரார்த்த பர்யந்த -அபரிமித வியவச்சேத ஸ்வரூப சர்வ உத்பத்தி ஸ்திதி விநாசாதி
சர்வ பரிணாம நிமித்த பூத கால க்ருத பரிணாமாஸ்ப்ருஷ்ட அநந்த மஹா விபூதி -ஸ்வ லீலா பரிகர ஸ்வ அம்ச பூத
அநந்த பத்த முக்த நாநாவித சேதன தத் போக்கிய பூத அநந்த விசித்ர விதித்த பரிணாமாஸ்பத சேதநே தர வஸ்து ஜாத
அந்தர்யாமித்வ க்ருத சர்வ சரீரத்வ சர்வ பிரகார வஸ்தாநாவஸ்திதம் பரம் ப்ரஹ்ம ச வேத்யம் தத் சாஷாத்கார ஷம
பகவத் த்வைபாயன -பராசர -வாலமீகி -மநு -யாஜ்ஞவால்க்ய -கௌதம–ஆபஸ்தம்ப -பரப்ருதி முனி கண பிரணீத-
வித்யர்த்தவாத மந்தரூப -வேத மூல -இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரோ உப ப்ரும்ஹண பரமார்த்த பூத அநாதி நிதந –
அவிச்சின்ன ஸம்ப்ரதாய -ருக் யஜுஸ் -சாம -அதர்வண ரூப அநந்த சாகம் வேதம்ச அப்யுகச்சதாமஸ்மாகம் கிம் நசேத்ஸ்யதி –

அது விளக்கப்படுகிறது
இயற்கையாகவே அழுக்குகளின் எதிர்த் தட்டாயும் -(மயக்கம் -ஞானம் -துக்கம் -ஆனந்தம் )அளவற்ற ஞான ஆனந்தத்தை தன் குணமாகவும் -இயற்கையாகவே உயர்வற உயர்ந்து -அளவற்று -ஈகையின் கடலாய் -நிமிடம் காஷ்டை கலை முஹூர்த்தம் பரார்த்தம் ஈறான காலக் கணக்குகளால் சிறிதும் அளவிட முடியாத நிலை யுடையனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல் காத்தல் அழித்தல் -இடையில் தோன்றும் வேறுபாடுகளுக்குக் காரணமான காலத்தின் தொடர்பு சிறிதும் அற்றவனாய் -அளவற்ற பெரும் செல்வம் யுடையவனாய் –
தனது விளையாட்டிற்கான தனது சாயலான அளவற்ற பக்த முக்த பலவித உயிர்ப் பொருள்களுடைய மகிழ்ச்சிக்கும் அவற்றுக்குத் தேவையான பொருள்களுக்கும் இடமும்
பலவகைப்பட்ட வேறுபட்ட உயிர் உயிரல் பொருள்களின் உள் நுழைந்து ஏவுகிறவனாய் -அவை யாவற்றையும் தனது உடலாகக் கொண்டு எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்து விளங்குவது பர ப்ரஹ்மம் –
அதே நேராகக் கண்டு உணர்ந்த வ்யாஸர் வால்மிகி மநு யஜ்ஜ வல்க்யர் கௌதமர் ஆபஸ்தம்பர் போன்ற முனிவர்களால் இதிஹாஸங்கள் புராணங்கள் தர்ம ஸாஸ்த்ர துணை நூல்கள் போன்று உண்மையான வடிவான என்றும் நிலை பெற்ற ரிக் யஜுர் ஸாம அதர்வணம் ஆகிய பல சாகைகளை உள்ளடக்கிய வேதங்களையே மெய்யாகக் கொண்டும் தொடர்பு அறாத சான்றோர் நெறி ஒழுக்கம் எங்களுக்கு எது நிலைக்காமல் போகும் –

—————

52-யதோக்தம் -பாகவதர் த்வைபாயநேந -மஹா பாராதே
யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்
த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அஷர ஏவச-ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த -அஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வ அந்ய
காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந
அவ்யக்தாதி விசேஷாந்தம் பரிணாமர்த்தி சம்யுதம்-கிரீடா ஹரேரிதம் சர்வம் சாரம் இத்யாவதார்யதாம்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாவ்யய–கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் –
இதி கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே இதி கிருஷ்ணஸ்ய சேஷ பூதம் இத்யர்த்த –

பகவதா பராசரேண-அப்யேவம் யுக்தம்
ஸூத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி ஸ வ்த்யதே –
மைத்ரேய -பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் ய சேஷத-
பகவத் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி -ஏவமேஷ மஹா சப்தோ-மைத்ரேய பகவான் இதி பரம ப்ரஹ்ம பூதஸ்ய
வாஸூ தேவஸ்ய நாந்யக -தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமந்வித -சப்தோயம் நோநசாரேண -த்வந் யத்ரஹ்யுபசாரத-
ஏவம் பிரகாரம் அமலம் நித்யம் வியாபகம் அஷயம்-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்யம் பரமபதம்

கலா முஹுர்த்தாதி மயஸ் ச காலோ நயத்வியூதே-பரிணாம ஹேது -கிரீடதோபாலகஸ் ஏவ சேஷ்டா -தஸ்ய நிசாமய -இத்யாதி மநூநாபி
பிரசாசி தாரம் ஸர்வேஷாம் அணீ யாம்சம் அணீயசாம் -இத்யாதி யுக்தம் யாஜ்ஞ வால்க்யேந அபி
ஷேத்ரஞ்ஞஸ் யேஸ்வர ஞாநாத் வி ஸூத்தி -பரமா மதா-இத்யாதி
ஆபஸ்தம்பேநாபி பூ பிராணிநஸ் சர்வ குஹாசயஸ்ய இதி சர்வே பிராணிந குஹாசயஸ் ச பரமாத்மந
பூ புரம் சரீரம் இத்யர்த்த பிராணிந இதி ஜீவாத்மக பூத ஸங்காத —

மேலும் கிருஷ்ண த்வைபாயனர்-வ்யாஸர் -மஹா பாரதத்தில் எவன் என்னை முதலும் முடிவும் அற்றவனாக உலகின் தனிப்பெரும் தலைவனாக அறிகிறானோ-ஸ்ரீ கீதை -15-16-17-என்று கூறுகிறார்
அழியும் ஷரன் என்னும் பத்தாத்மாவும் அழிவற்ற அஷரன் என்னும் முக்தாத்மாவும் புகழ் பெற்றவர்கள் என்றும்
இவர்களில் ஷர புருஷன் எல்லா பிராணிகளும் குடியிருப்பவன் அக்ஷர புருஷன் அத்தொடர்வு அற்றவன் என்றும்
இவர்களின் நின்றும் வேறு பட்டவனான தலை சிறந்த புருஷன் ஒருவன் இருக்கிறான்
அவன் காலத்தை மாறுபாடு அடையச் செய்பவனாயும்
தான் காலத்தால் மாறுபடுத்த முடியாதவனாகவும் இருக்கிறான் என்றும்
பரமாத்மாவின் அந்த சிறந்த இடமானது காலத்தின் இயல்பு செல்லாததாகவும் -அதனுடன் ஒப்பிடுகையில் இந்த்ர லோகம் முதலியவை நரகங்கள் என்னும் படி இருக்கும்
இவைகள் மூலப் பிரகிருதி தொடங்கி மஹான் போன்ற மாற்றங்களை யடைந்து வளர்ச்சி தாழ்ச்சி யாகிற மாறுபாடுகளை யுடைத்தாய் இருக்கும்
கிருஷ்ணன் இடத்திலேயே இவ்வுலகங்கள் தோன்றுகின்றன
கிருஷ்ணனுக்காகவே இவ்வுயிர்களும் உலகுகளும் படைக்கப் பட்டு இருக்கின்றன என்றும்
கிருஷ்ணனுக்காகவே செய்யப்பட்டது -என்றும்
ஸாஸ்திரங்களில் சொல்லப்படுவதால் இவை யாவும் கிருஷ்னனுக்கே அடிமைத் தொழில் பூண்டவை

பகவான் பராசரரும் -தூய்மையானவனாயும் பெரும் செல்வம் உள்ளவனாகவும் பர ப்ரஹ்மம் சொல்லப்படுகிறது
மைத்ரேயா எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாய் இருப்பவனே பகவான் என்ற சொல்லால் குறிக்கப் படுபவன்
ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம்-அதாவது தன்னைத் தவிர பிற அனைத்தையும் -ஆன்மாக்கள் உட்பட தன் உடைமையாகப் பெற்று இருத்தல் -வீர்யம் தேஜஸ் ஆகிய குணங்களை யுடையவன் பகவான் என்ற சொல்லால் குறிக்கப்படுபவன்
தீக்குணங்கள் சிறிதும் அற்றவன் –
இந்த சிறந்த சொல்லல் குறிக்கப் படுபவன்
வாஸூ தேவன் ஆகிற பர ப்ரஹ்மத்தைத் தவிர மற்ற ஒருவர் இல்லை
பூஜிக்கத் தகுந்த சிலருக்கு உபசாரமாக இச்சொல் உயர் அடைமொழியாக வழங்கப் படுகிறது
அழுக்குகள் அற்ற என்றும் உள்ள எங்கும் இருப்பவனான விஷ்ணுவிற்கு மட்டுமே இப்பதம் பொருந்தும்
கலை முஹூர்த்தம் என்னும் அளவுகளை அளக்கப்படும் காலம் -இந்தப் பரமபதத்தில் மாறுபாடு அற்றது
பாலகன் விளையாடுவது போன்ற இந்த கிருஷ்ணனைப் பார் என்று கூறுகிறார்
மநுவும் எல்லோரையும் உள்ளிருந்து ஆள்பவன் அணுவான பொருள்களுக்குள்ளும் நிறைந்து இருப்பவன் என்று கூறுகிறார்
யஞ்ஞ வல்கியரும் ஜீவாத்மாவுக்குள் உள்ளுறைபவன் ஈஸ்வரன் என்ற ஞானத்தால் மேலான தூய்மை ஏற்படுகிறது என்று கூறுகிறார்
ஆபஸ் தம்பரும் புரம் எனப்படும் ஜீவாத்மாக்களின் ஹிருதயக் குகையில் இருப்பவன் -பரமாத்மா -என்று கூறுகிறார்
இதனால் எல்லாப் பிராணிகளிலும் வசிக்கிறேன் பரமாத்மா என்று அறியப்படுகிறது –

—————

53–நநு ச கிம் அநேந ஆடம்பரேண-சோத்யம் து ந பரிஹ்ருதம்
உச்யதே -ஏவம் அப்யுகச்சதாம் அஸ்மாகம் ஆத்ம தர்ம பூதஸ்ய சைதன்யஸ்ய ஸ்பாவிகஸ்யாபி கர்மணா
பாரமார்த்திகம் சங்கோசம் விகாசம் ச ப்ருபதாம்-ஸர்வமிதம் பரிஹ்ருதம்
பவதஸ்து பிரகாச ஏவ ஸ்வரூபமிதி பிரகாசோ ந தர்ம பூத தஸ்ய சங்கோஸோ -விகாசோ வா ந அப்யுகம்யதே
பிரகாச பிரஸ்ர அநுத் பத்திமேவ திரோதாந பூதா கர்மதயா குர்வந்தி-அவித்யா சேத் திரோதாநம் திரோதாந பூதயா தயா
ஸ்வரூப பிரகாச பூத நாச பூர்வமேவ யுக்த அஸ்மாகம் து அவித்யா ரூபேண கர்மணா ஸ்வரூப
நித்ய தர்ம பூத ஞான பிரகாச சங்குசித தேந தேவாதி ஸ்வரூப ஆத்ம அபிமாநோ பவதீதி விசேஷ —

இப்படிப் பல வகையான ஆடம்பர வர்ணனை எதற்கு -மறுப்புக்குப் பதில் ஏதும் இல்லையே ஏன் என்று கேட்பீராகில் முன்பு விளக்கப்பட்ட கொள்கைகளைக் கைக்கொள்ளும் எங்களுக்கு ஆத்மாவும் அதினின்றும் பிரிவற்ற குணமான ஞானமும் தன்னடையாக தன் வினைப்பயனாய் சுருக்கம் விரிவு ஆகியவற்றை அடைகிறது என்பதால் மேற் சொன்னவை யாவும் பதில் அளிக்கப் படுகிறது –
தங்களால் சொல்லப்படுகிற பொருளே ஒளிரும் -ஒளிர்வது அதன் குணமல்ல -அதற்கு குறை நிறைகள் ஏற்படுவதில்லை என்று தங்கள் சொல்வதனால் மறைப்பு என்பது அஞ்ஞானத்தால் ஆத்மாவே அழிக்கப் படுகிறது என்று பொருள் ஆகிறது –
இதற்கு மாறாக அதன் இயல்பான ஞானம் குன்றும் போது அவ் வாத்மா தன்னை யறியாது ஆத்மாவும் உடலும் ஓன்று என்று மயங்குகிறது
ஆனாலும் ஆத்மாவின் தான் எனும் தனித்தன்மை அழிவதே இல்லை –

———

54–யதோக்தம் -அவித்யா கர்ம சமஞாந்யா-த்ருதீய சக்திரிஷ்யதே–
யயாக்ஷேத்ர சக்திஸ் சா வேஷ்டித அந்ரூப சர்வகா -சம்சார தாபந் அகிலாந் அவாப்நோத்யதி சந்ததாத்தயா திரோஹித
த்வாச் சா சக்தி ஷேத்ரஞ்ஞ சம்ஜிதா சர்வ பூதே ஷுபூ பாலா தாரதம்யே நவர்த்ததே –
இதிநா ஷேத்ரஞ்ஞாம் ஸ்வ தர்ம பூத ஞாநஸ்ய கர்ம சம்ஞயா அவித்யயா சங்கோசம் விகாசம் ச தர்சயதி-

எவ்வாறு எனில் -ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது போல் -மேலான ஸக்தியான ஆத்மா மற்ற ஒரு ஸக்தியான ப்ரக்ருதி மூன்றாவது ஸக்தியான வினைப் பயன் என்பவை மூன்றும் விஷ்ணுவின் சக்திகள்
இந்த ஆத்மாவின் சக்தியால் எல்லாப் பிராணிகளும் சூழப்பட்டு இருக்கின்றன -இதனால் சூழப்பட்ட ஆத்மா பிறப்புச் சூழலில் கட்டுண்டு உழலுகிறான் -எல்லா உயிர்களிலும் இச்சக்தி ஏற்றத் தாழ்வுகளுடன் -வினைகளுக்கு ஏற்ப -விளங்குகிறது
இதனால் ஆத்மாவின் இயல்பான குணமான ஞானம் -குறைவு நிறைவு அடைந்ததாகக் காணப்படுகிறது –

————

55–அபி ச -ஆச்சாதிகா அவித்யா ஸ்ருதிபிஸ் ச ஐக்ய உபதேச பலாச் ச ப்ரஹ்ம ஸ்வரூப திரோதாந ஹேது தோஷ ரூபா
ஆஸ்ரீயதே தஸ்யாஸ் ச மித்யா ரூபத்வேந பிரபஞ்ச வத்-ஸ்வ தர்சன மூல தோஷாபேஷத் வாத் ந சா மித்யா தர்சன மூல
தோஷஸ்யாதிதி ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத்

தஸ்யாஸ் ச அநாதித்வேபி மித்யா ரூபத்வாதேவ-ப்ரஹ்ம த்ருஸ்யத்வேந ஏவ அநாதத்வாத் தத் தர்சன மூல
பரமார்த்த தோஷா நப்யுபகமாச் ச ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத் தஸ்ய நித்யத்வாத் நிர்மோஷ ஏவ ப்ரஸஜ்யதே

உங்கள் கொள்கையின் படி அஞ்ஞானத்தால் சூழப்பட்டு ப்ரஹ்மம் தன்னைப் பலவாகக் கண்டு திகைக்கிறது
இதற்கு வேதங்களில் வரும் அபேத வாக்கியங்களை-(எடுத்துக் காட்டு -கயிறு -பாம்பு -) துணை கொள்கிறீர்கள் –
அதாவது பொய்யான பிரபஞ்சம் எனப்படுவது -பொய்யான அல்லது இல்லாத அஞ்ஞானம் என்பதைக் கொண்டே நிரூபிக்கப் பட வேண்டும்
அப்படியானால் பொய்யான அஞ்ஞானத்தை வேறு எதைக் கொண்டு நிரூபிப்பது

இந்த அஞ்ஞானம் -அவித்யை -என்பது மிகப் பழமையானது -அதற்கு இன்மை என்பது கிடையாது என வாதிட்டால் அதன் பழமை ப்ரஹ்மத்துடன் ஓன்று எனக் கொள்ள வேண்டும்
அந்நிலையில் இந்த அஞ்ஞானத்திற்கு ப்ரஹ்மமே காரணமாகும் –
ஆகவே ப்ரஹ்மம் இருக்கும் வரை அஞ்ஞானம் இருக்கும்
ஆகவே அஞ்ஞானம் அழிய ப்ரஹ்மமும் அழிய வேண்டும் -இது ஏற்புடையது அல்ல –
ஆகவே அஞ்ஞானம் அழிக்க முடியாத ஓன்று என்றும்
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்ட இரண்டாவது என்றும் ஒப்புக் கொள்ள வேண்டும் –

——-

56–அத ஏவ -இதம் அபி நிரஸ்தம் –
ஏக மேவ சரீரம் ஜீவவத் -நிரஜீவாநி இதராணி சரீராணி -யதா ஸ்வப்ந த்ருஷ்ட-நாநாவித சரீராணாம் நிர்ஜீவத்வம்-
தத்ர ஸ்வப்நே த்ருஷ்டு சரீரம் ஏவ ஜீவவத் -தஸ்ய ஸ்வப்ந வேலாயாம் த்ருஸ்ய பூத நாநாவித அநந்த சரீராணாம் நிர்ஜீவத்வமேவ –
அநேந கேநைவ அந்யேஷாம் ஜீவாநாம் சரீராணாம் ச பரிகல்பிதத்வாத் ஜீவா மித்யா பூதா இதி ப்ரஹ்மண-
ஸ்வ ஸ்வரூப வ்யதிரிக்தஸ்ய ஜீவ பாவஸ்ய சர்வ சரீராணாம் ச கல்பிதத்வாத் ஏகஸ்மிந்நபி சரீரே சரீராவத்
ஜீவ பாவஸ்ய ச மித்யா ரூபத்வாத் ஸர்வாணி சரீராணி மித்யா ரூபாணி தத்ர ஜீவ பாவஸ்ய மித்யா ரூப
இதி ஏகஸ்ய சரீரஸ்ய தத்ர ஜீவ ஸத்பாவஸ்ய ச ந கஸ்சித் விசேஷ அஸ்மாகம் து ஸ்வப்நேரு த்ருஷ்ருஸ் சரீரஸ்ய
தஸ்மிந் ஆத்ம ஸத்பாஸ்ய ச ப்ரபோத வேலாயாமபாதி தத்வாத் அந்யேஷாம் சரீராணாம் தத் கத ஜீவாநாம்
ச பாதி தத்வாத் தே சர்வே மித்யா பூதா ஸ்வ சரீர மேகம் தஸ்மிந் ஜீவ பாவஸ்ய பரமாத்த இதி விசேஷ —

(சரீரத்தில் ஒரே ஜீவன் -மற்றவை நிர்ஜீவ -அவற்றுக்கும் ப்ரவ்ருத்தி உண்டே -ஸுபரி 50 சரீரம் எடுத்தாலும் ஒரே ஜீவன் தானே –
சுக துக்க அனுபவம் எவ்வாறு –
தர்ம பூத ஞானம் இரண்டாவது ஒத்துக் கொள்ள மாட்டார்களே அத்வைதி –
ஸ்வப்னம் நித்யம் -ஒரே ஜீவன் -மற்றவை நிர் ஜீவன் உள்ள சரீரம் –
தர்ம பூத ஞானம் கொண்டே இவற்றை நிர்வஹிக்க முடியும்)

இக்காரணத்தாலேயே கீழ் வரும் ஒரே உடல் வாதமும் மறுக்கப் படுகிறது
ஒரே உடல் மட்டும் உயிருடன் கூடியிருக்கிறது -மற்றவை உயிர் அற்றவர்கள் -கனவில் பலரைக் கண்டாலும் அவர்கள் உயிர் அற்று பொய்யாகவும் அங்கு கனவு காண்பவன் ஒருவனே உயிருடன் இருப்பது போல் அவனால் கனவு காணப்படும் பல பிராணிகள் உயிர் அற்றவை
இவ்வாறு கனவில் தோன்றும் உயிர்களும் உடல்களும் கனவு காண்பவனுடைய கற்பனையே -யாவும் பொய்யானவை என்பது போல் ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே -கற்பனையே -என்று சொன்னால் உலகில் ஒரு ஜீவாத்மாவும் அதன் உடலும் பொய்யாகத் தானே ஆகும்
அதனால் ஒரே உடலில் மட்டும் உயிர் இருக்கிறது என்ற உங்கள் கொள்கை எவ்வகையிலும் சிறப்புப் பெற்றதல்ல
கனவு காணும் உடலும் உயிரும் பாதிக்கப் பட்டவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப் படாதேவை யாகவும் மற்றைய உடல்களும் உயிர்களும் அஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டவை யாகவும் இருப்பதால் கனவு காண்பவன்
அவனுடைய உடல் உயிர் ஆகியவை உண்மை என்று சொல்லும் எங்கள் கொள்கையே சிறப்பாகும்

———–

57–அபி ச கேநவா அவித்யா நிவ்ருத்தி ? சா ச கீத்ருஸீ-இதி விவேச நீயம்-
ஐக்ய ஞானம் நிவர்த்தகம் -நிவ்ருத்திஸ் ச அநிர் வசநீய ப்ரத்யநீக ஆகாரா இதி சேத் அநிர் வசநீய ப்ரத்ய நீகம் நிர்வசநீயம்-
தச்ச சத்வா ? அசத்வா ? த்வி ரூபம் வா ? கோட்யந்தரம் ந வித்யதே –

ப்ரஹ்ம வ்யதிரேகேண ஏததத்ப்யுகபமே புநரப்ய வித்யா ந நிவ்ருத்தா ஸ்யாத் ப்ரஹ்ம ஏவ சேந் நிவ்ருத்தி
ததுப்ராகப்ய விசிஷ்டமிதி வேதாந்த ஞாநாத் பூர்வ மேவ நிவ்ருத்திஸ்யாத் ஐக்ய ஞானம் நிவர்த்தகம்
ததபாவாத் சம்சார இதி வாத தர்சனம் விஹந்யேத –

(சத்தான ப்ரஹ்மமோ அசத்தான முயல் கொம்பு-ஆகாசத் தாமரை -மலடி மகன் – போல்வன துக்கம் தராதே
அநிர் வசன நீயமான மற்றவையே துக்கம் தருமவை
ப்ரஹ்மத்தை நிரூபிக்கும் பிரமாணங்களும் மித்யை என்றால் -ஸர்வ சூன்ய வாதிகளுக்கு ஒப்பர் ஆவாரே

அனைத்தும் அந்த அந்த தேச காலத்தில் சத்தியமே -அலைகள் இப்பொழுது இல்லை என்றாலும் முன்பு இருந்தது மித்யை அல்லவே )

அறியாமையின் நின்றும் நீங்குதல் எவ்விதம் இருக்கும் -அது எவ்வாறு காணப்படும் -என்பது ஆராயத் தக்கது
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலத்தல் -நீக்கம் -என்னும் விடுதலை நிலை சொற்களுக்கு அப்பால் பட்ட நிலைக்கு எதிர்த்தட்டானது எனில் சொற்களால் விவரிக்கப் படுகிறது என்றதாகும்
அப்படியாயின் அது உயிர்ப்பொருளா உயிரல் பொருளா -இரண்டும் கலந்ததா -பலபடிப்பட்டதா என அறிய முடியாதது

ப்ரஹ்மம் தவிர்ந்த மற்ற ஓன்று ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலக்கின்றது எனின் ப்ரஹ்மத்தின் நின்று வேறு பட்ட ஓன்று உள்ளது என ஒத்துக் கொள்ள வேண்டும் –
அப்போதும் அத்வைதம் நில்லாது
ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டு ஒன்று இருக்குமாயின் அது அறியாமை யுடனேயே கூடி இருக்க வேண்டும் -அதாவது அறியாமை அழியவில்லை என்றாகும்
மாறாக நீக்கம் என்பது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறுபட்டது அல்ல என்று கொண்டால் அது தான் ஓன்று என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்பும் இருப்பது -எனவே நீங்கும் அறிவு என்று ஓன்று கிடையாது என்பதாகவும் நீங்கும் அறிவு கிட்டா விட்டால் பிறவிச் சுழலே என்ற கூற்றுக்கு விரோதமாகவும் ஆகிறது
அவ்வாறு அன்றி நீக்கம் உண்மை யல்ல என்று கொண்டால் அது ப்ரஹ்மத்தின் நின்றும் மாறு பட்டதா அல்லவா எனக் கேள்வி வரும்
அப்படி யானால் முன்பே கூறியது போல் அதற்கு வேறொரு அஞ்ஞானம் துணை வேண்டும் -ஆகவே எந் நிலையிலும் அஞ்ஞானத்துக்கு நீக்கம் இல்லை என ஆகிறது –

———–

58–கிஞ்ச நிவர்த்தக ஞாநஸ்யாப்ய வித்யா ரூபாத்வாத் -தந் நிவர்த்தக ஞானம் ஸ்வேத ஸமஸ்த பேதம் நிவர்த்ய
க்ஷணிகத்வாதேவ ஸ்வயமேவ விநஸ்யதி -தாவாநல விஷ நாசந விஷாந்தரவத் இதி சேத் ந –
நிவர்த்தக ஞாநஸ்ய ப்ரஹ்ம வ்யாதிரிக்தத்வேந தத் ஸ்வரூப தத் உத்பத்தி விநாசாநாம் மித்யா ரூபத்வாத்
தத் விநாச ரூபா அவித்யா திஷ்டத்யேவேதி தத் விநாச தர்சனஸ்ய நிவர்த்தகம் மந்தவ்யமேவ –
தாவாக்ந்யா தீநாமபி பூர்வா வஸ்தா விரோதி பரிணாம பரம்பரையா அவ்ரஜ நீயைவ

ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை பொய் எனக் கொண்டால் வேத ஸாஸ்த்ரங்களால் ஏற்படும் -சான்றுகளால் ஏற்படும் -அறிவும் பொய்யாகும்
மற்ற ஒன்றான கட் புலனாதலால் ஏற்படும் அறிவும் என்றும் அழிவதில்லை
ஆகவே அஞ்ஞானம் தோன்ற வழியில்லை

இவ்விரண்டில் எந்த ஞானத்தால் -இந்த அஞ்ஞானத்தின் நின்றும் விடுதலை கிடைக்கிறது என ஆராய்வோம்
இந்த விடுதலை ஞானம் எல்லா அஞ்ஞானங்களையும் ஒரே கணத்தில் நீக்கி -தானும் அழிந்து விடுகிறது
காட்டுத்தீ விஷ முறிவு மருந்து போல் தன் தொழில் முடிந்தவுடன் தானும் அழிந்து விடுகிறது என்பீராயின் அது அவ்வாறு அல்ல
இந்த விடுதலை அறிவும் ப்ரஹ்மத்தின் நின்று மாறுபட்டு இருப்பதால் அதன் நிலை தோற்றம் அழிவு ஆகியவையும் பொய்யானவையே
ஏன் எனில் -அந்த விடுதலை அறிவு அழிந்த பின்பு அது அழிந்தது என்று கொள்ள வேண்டுமாகையால் அவ்வழிவு மெய் என்றதாகிறது
எடுத்துக் காட்டிய காட்டுது தீயும் விஷ முறிவும் தங்களது முந்தைய நிலையின் நின்றும் வேறுபட்டு வேறொரு நிலையை அடைந்து இருக்கின்றனவே ஒழிய அவைகளுக்கு அழிவு ஏற்படவில்லை

பிரமாண ஜன்ய ஞானம் –சான்றுகளால் ஏற்படும் அறிவு
ஸ்வரூப ஜன்ய ஞானம் –கட் புலனாதலால் ஏற்படும் அறிவு
அஞ்ஞானம் அவித்யை -பல் பொருள் காட்சி -பொய் யறிவு -பிறவிச் சூழல் -நீங்க வேண்டிய அறிவு

————–

59–அபி ச சிந் மாத்ர ப்ரஹ்ம வ்யதிரிக்த க்ருத்ஸ்ந நிஷேத விஷய ஞாநஸ்ய கோயம் ஞாதா ?
அத்யாச ரூப இதி சேத் -ந தஸ்ய நிஷேத்யதாயா நிவர்த்தக ஞாந கரமத்வாத் தத் கர்த்ருத்வ அநுப பத்தே
ப்ரஹ்ம ஸ்வரூபமேவ இதி சேத் ந ப்ரஹ்மண-நிவர்த்தக ஞானம் பிரதி ஞாத்ருத்வம் கிம் ஸ்வரூபம் உத அத்யஸ்தம் ?
அத்யஸ்தம் சேத் அத்யத்யாச தந் மூல அவித்யாந்தரம் ச நிவர்த்தக
ஞான விஷய தயா திஷ்டத்யேவ -தந் நிவர்த்தகாந்தராப்யுபகமே தஸ்யாபி த்ரி ரூபதயா அநவஸ்த்தைவ
ஸர்வஸ்ய ஹி ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே ஞானத்வமேவ ஹீயதே -கஸ்ய சித் கஞ்சன அர்தவிஸேஷம் ப்ரதி ஸித்தி ரூபத்வாத்
ஞானஸ்ய த்ரி ரூபத்வ விரஹே பவதாம் ஸ்வரூப பூத ஞானவத் நிவர்த்தக ஞானமபி அநிவர்த்தகம் ஸ்யாத்
ப்ரஹ்ம ஸ்வரூபஸ் யைவ ஞாத்ருத்வாத் யப் யுபகமே அஸ்மதீய பக்ஷ ஏத பரி க்ருஹீதஸ்யாத்
நிவர்த்தக ஞான ஸ்வரூப ஞாத்ருத்வம் ச ஸ்வநிவர்த் யந்தர்கதம் –இதி வசனம்
பூதல வ்யதிரிக்தம் க்ருத்ஸ்னம் சின்னம் தேவ தத்தேன –இத் யஸ்யாமேவ சேதன க்ரியாயாம் அஸ்யா சேதன
க்ரியாயா சேத்ருத்வஸ்ய ச சேத் யாந்தர் பாவ வசனவத் உபஹாஸ்யம்

மேலும் ப்ரஹ்மம் ஞானமே வடிவானது -அது நீங்கிய யாவையும் பொய்யே என்றால் அறிபவன் என்பவன் யார் –
அந்த ப்ரஹ்மம் தானே ஜீவாத்மாவில் ஏறிட்டுக் கொள்கிறது எனில் -அவ்வாறு இருக்க முடியாது
ஏன் எனில் இந்த விடுதலை அறிவுக்கு அறிபவனாக எழுவாயாக -அவன் இருக்க முடியாது -ப்ரஹ்மத்தின் நின்றும் அவன் வேறுபடாமையால் –
ப்ரஹ்மமே இவ் வறிவைப் பெறுகிறது என்பதுவும் சரியில்லை -ஏன் எனில் இவ் வறிவு ப்ரஹ்மத்துக்கு இயல்பானதா அல்லது அதன் மேல் ஏற்றிச் சொல்லப் பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இயலாது –
அது இயல்பானது எனில் அஞ்ஞானம் வர வழியில்லை –
ஏறிடப் பட்டது எனில் ப்ரஹ்மத்திடம் அதின் மேல் ஏறிடப் பட்ட அஞ்ஞானமும் அதனால் நான் அறிகிறேன் -என்ற நினைவும் இருக்கும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை யாதலால் இவை எப்பொழுதும் ப்ரஹ்மத்துடன் இருக்கும் –
இந்நிலையில் இவ்விரண்டும் வேறொரு ஞானத்தால் போக்கப்படும் எனில் அதற்கு காரணமானவன் யார்
அவ்வறிவு எத்தகையது
அதனால் அறியப்படுவது எது
என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது

இதற்கு மாறாக அறிதல் என்பது ப்ரஹ்மத்திற்கு இயல்பாகவே இருக்கிறது எனில் நீங்கள் எங்களுடைய கொள்கைகளை ஒத்துக் கொண்டதாக ஆகிறது
இந்த விடுதலை ஞானத்தால் எவை எல்லாம் அழிக்கப் படுமோ அதில் அந்த ஞானமும் அடங்கி யுள்ளது என்று கூறுவது நகைப்புக்கு இடமாகும்
இந்த பூமியைத் தவிர எல்லாவற்றையும் தேவதத்தன் தோண்டினான் என்ற கூற்றில் அவன் தோண்டக் கூடிய பூமியை விட்டு விட்டு தேவதத்தன் முடியாத பிறவற்றைத் தோண்டியதாக தோண்டினான் என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் கொள்வது போல் –

——–

60–அபி ச நிகில பேத நிவர்த்தகம் இதம் ஐக்ய ஞானம் கேந ஜாதம் இதி விவேசநீயம் ஸ்ருத்யைவ இதி சேத்
ந தஸ்யா ப்ரஹ்ம வ்யதிரக்த்தாயா அவித்ய பரிகல்பிதத்வாத் பிரபஞ்ச பாதக ஞான உத்பாதகத்வம் ந சம்பவதி –
ததாஹி துஷ்ட காரண ஜன்யமபி ரஜ்ஜூ சர்ப்ப ஞானம் துஷ்ட காரண ஜன்யேந -ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப –
இதி ஞாநேன நபாத்யதே ரஜ்ஜூ சர்ப்பயே வர்த்தமநே -கேநசித் ப்ராந்தேந புருஷேண ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப
இதி யுக்தேபி அயம் பிராந்த இதி ஞானதே சதி தத் வசனம் ரஜ்ஜூ சர்ப்ப ஞானஸ்ய பாதகம் ந பவதி –
பயம்ச ந நவர்த்ததே-ப்ரயோஜனவத் ஸ்ரவண வேலாயாமே வஹி ப்ரஹ்ம வ்யதிரிக்தத்வேந
ஸ்ருதே ரபி பிராந்தி மூலத்தவம் ஞாதம் இதி

(ஞானம் ஒருவருக்கு உண்டாக வேணுமே
ஞானம் போல் ஞானம் பெற்ற ஜீவனும் அழியும் -நிவர்த்தகம் யாருக்கு -நிவர்த்தக ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே)

இந்த ஜீவாத்மாவிற்கு உலகம் பரமாத்மாவினின்றும் வேறு பட்டு தோன்றும் அறிவைத் தவிர்த்து தான் ப்ரஹ்மத்துடன் ஒன்றிய ஓன்று என்ற அறிவு எதனால் ஏற்படுகிறது என ஆராய்வோம்
வேதத்தால் ஏற்படுகிறது என்றும் கொள்ள முடியாது –
ஏன் எனில்
வேதம் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டது -அதனால் அது பொய் -அவித்யா -அதினின்றும் ப்ரபஞ்சம் பொய் என்றும் அறிவு ஏற்பட வாய்ப்பில்லை
எப்படி எனில்
பொய்யறிவினால் உண்டான கயிற்றில் பாம்பைக் காண்பதை மற்றொரு பொய்யறிவினால் உண்டான இது கயிறு இறே -பாம்பு அல்ல -என்ற எண்ணத்தினால் போக்கடிக்க முடியாதது போல் கயிற்றைப் பாம்பு என மயங்கி அச்சம் கொண்ட ஒருவனுக்கு அவனைப் போன்றே மயங்கிய அறிவுடைய ஒருவனால் வழங்கப்படும் பாம்பல்ல -கயிறு தான் -என்ற அறிவுரை முந்தையனவால் –
இவனும் நம் போல் மயங்கியவன் -இவனுடைய அறிவு கொள்ளத்தக்கது அல்ல என்ற எண்ணத்தால் -அவனுக்கு முன்பு தோன்றிய பாம்பு என்ற அறிவும் அதனடியாகப் பிறந்த பயமும் மாறாதது போல்
உலகம் பல படித்தானது என்று ஞானம் அழிவதற்காக வேதம் சொல்லும் சொற்களும் கேட்க்கப்படுகையிலேயே
இவை ப்ரஹ்மத்தின் நின்றும் வேறு பட்டன -ஆகவே மயக்கத்தை ஊட்டுவன என்ற அறிவு மாறாது

கிஞ்ச -நிவர்த்தக ஞானஸ்ய ஞாது தத் சாமக்ரீ பூத சாஸ்த்ரஸ்ய ச ப்ரஹ்ம வ்யதிரிக்த தயா யதி பாத்யத்வமுச்யதே
ஹந்த ஹந்த தர்ஹி பிரபஞ்ச நிவ்ருத்தே மித்யாத்வ மாபததீதி பிரபஞ்சஸ்ய ஸத்ய தாஸ்யாத்-
ஸ்வப்னந த்ருஷ்ட புருஷ வாக்யாவகத பித்ராதி மரணஸ்ய மித்யாத்வே ந பித்ராதி சத்யதாவத்
கிஞ்ச தத்வமஸ்யாதி வாக்யம் ந பிரபஞ்சஸ்ய பாதகம் பிராந்தி மூலத்வாத் ப்ராந்தப்ர யுக்த ரஜ்ஜூ சர்ப்ப பாதக வாக்யவத்

எந்த தெளிவுறுத்தும் அறிவும் அதை யுடையவனும் அதை அறிவதற்குத் துணையான கருவிகளும் ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டவை யாகையால் பொய் என்று கொள்ளப் படுகின்றனவோ அவ்வறிவு எவ்வாறு உண்டாக முடியும்
அதனால் ப்ரபஞ்சம் பொய் என்று காட்டும் அறிவே பொய்யாவதால் பிரபஞ்சம் மெய்யே என்றாகி விடும்
எடுத்துக் காட்டாகக் கனவில் ஒருவன் தனது தந்தையின் இறப்பை ஒருவர் மூலம் அறிந்து பிறகு விழித்த போது தந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு கனவில் வந்த நிகழ்ச்சி பொய் -பொய்யான தகவலால் உண்மை மாறுபடுவது இல்லை என்று அறிகிறான்
இவ்வாறே
தத்வமஸி -போன்ற சொற்களும் ப்ரபஞ்சத்தின் உண்மையை மறுப்பது இல்லை
அவைகளும் பொய்யான ஸ்ருதியால் சொல்லப்படுவதால்

ந நுச ஸ்வப்நே கஸ்மின் சித்பயே வருத்தமாநே ஸ்வப்நசாயாமேவ் -அயம் ஸ்வப்ந –
இதி ஞாதேஸ்தி பூர்வ பய நிவ்ருத்தி த்ருஷ்ட்வா தத்வ தத்ராபி சம்பவதி இதி நைவம் ஸ்வப்ந வேலாயாமேவ
ஸோ பி ஸ்வப்ந -இதி ஞாதே சாதி புனர் பய நிவ்ருத்திரேவ த்ருஷ்டேதி ந கஸ்சித் விசேஷ ஸ்ரவண
வேலாயாமேவ ஸோ அபி ஸ்வப்ந இதி ஞாத மேவேத் யுக்தம்

இல்லை எனில் கனவு காண்கையில் ஏற்பட்ட பயத்தை ஒருவன் தன் கனவில் தோன்றியது உண்மை யல்ல என்ற எண்ணத்தைக் கனவிலேயே கொண்டாலும் இரண்டாவதும் கணவாகையாலே கொள்ளத் தக்கதல்ல என்ற உணர்வால் அச்சம் விலகாது
அது போல் இச்சொற்களைக் கேட்பதால் மட்டும் ப்ரபஞ்சம் பொய் என்ற அறிவு எப்படி ஏற்படும் –

—————

61–யதபி சேத முக்தம் -ப்ராந்தி பரிகல்பிதத்வேந மித்யா ரூபமபி சாஸ்திரம் – சத் அத்விதீயம் ப்ரஹ்ம –
இதி போதாயதி-தஸ்ய சதோ ப்ரஹ்மணோ விஷயஸ்ய பஸ்ஸாத் ந பாத ந தர்சந நாத் ப்ரஹ்ம ஸூஸ்திதமேவ
இதி ததயுக்தம் -ஸூந்ய மேவ தத்வம் -இதி வாக்யேந தஸ்யாபி பாதிதத்வாத் இதம் ப்ராந்தி மூலம் வாக்யம்
இதி சேத் -சத் அத்விதீயம் ப்ரஹ்ம -இதி வாக்யமபி ப்ராந்தி மூலமிதி த்வயைவ யுக்தம் பஸ்ஸாத்த
ந பாத்தா தர்சனம் து சர்வ ஸூந்ய வாக்ய ஸ்யைவவேதி விசேஷ –

மயக்கத்தோடு கூடி இருந்தும் பொய் அவித்யை வடிவமாயினும் ஸாஸ்த்ரம் போதிக்கிற ப்ரஹ்மம் தவிர்த்த ஏதும் இல்லை -என்ற கொள்கை பிறகு அதற்கு மாறுபட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை யாதலால் அது ஏற்புடையதே
ஆயினும் இன்மையே சூன்யமே மெய்ப்பொருள் என்றும் ஒரு சொல் அதற்குப் பின் மாத்யமிக புத்த சமயிகளால் சொல்லப் பட்டு இருப்பதால் அது உண்மையாக முடியாது அவ்வாறு அல்ல
மாத்யமிகர் வாக்கியம் மயக்கத்துடன் கூடியது என்பீராயின் நீங்களும் ஸாஸ்த்ரம் மயக்கத்துடன் கூடியது என்றே கொள்கிறீர்கள்
ஒரு பொருள் இருக்கிறது என்று சொல்லி பிறகு அது இல்லாத போது அது இல்லை என்று எடுத்துக் கழிக்கும் சொல் வலுவானது
அதன் படி இன்மையே மெய்ப்பொருள் என்பது வலுவுடையதாகிறது

———-

62–சர்வ ஸூந்ய வாதிந ப்ரஹ்ம வ்யதிரிக்த வஸ்து மித்யாத்வ வாதிநஸ் ச ஸ்வ பஷ சாதனா பிரமாண பாரமார்த்யா
நப்யுபகமேந அபியுக்தை பாதாநதிகார ஏவ ப்ரதிபாதித –ஸர்வதாசது பாயாநாம் பாதமார்க்க ப்ரவர்த்ததே
அதி காரோ அநுபாயத்வாத் ந பாதே ஸூந்ய வாதிந இதி –

(ந சத் ந அஸத் ந ஸத்அஸத் -மாத்மிகன்-ஸர்வ சூன்ய வாதம் கண்டிக்க விரும்பாமல் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் -பிரசன்ன பவுத்தர் )

(விஷ நிவ்ருத்தி மருந்து விஷத்தை நிவர்த்தித்து தானும் நிவர்த்தியாவது போல்
ஞானம் அவித்யயை நிவர்த்தத்த பின்பு தானும் அழிந்து -ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் என்பர்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டதா கேள்வி வராதே -)

யாவும் இன்மையே என்பருக்கும்
ப்ரஹ்மம் தவிர்த்த மற்றவை யாவும் பொய்யே என்போர்க்கும்
தங்கள் வாதத்தை நிலை நிறுத்தக் காட்டுகின்ற சான்றுகள் யாவும் பொய்யாகவும்
யாவும் பாதிக்கப் பட்டவை யாகவும் ஆகி விடுகின்றன
உண்மையான சான்று உடையவர்களுக்கே வாதத்தில் -வாதம் செய்வதில் -எப்பொழுதும் அதிகாரம் உண்டு
யாவும் பொய் என்பவர்களுக்கு வாதத்தை அதிகாரம் இல்லை -என்றவாறு
(குமாரில பட்டர் சொன்னது )

———–

63–அபி ச ப்ரத்யக்ஷ த்ருஷ்டஸ்ய பிரபஞ்சஸ்ய மித்யாத்வம் கேந ப்ரமாணேந சாத்யதே-
ப்ரத்யக்ஷஸ்ய தோஷ மூலத்வேந அந்யதா ஸித்தி சம்பவாத் -நிர்தோஷம் சாஸ்திரம் அநந்யதா சித்தம் ப்ரத்யக்ஷஸ்ய பாதகம்
இதி சேத் கேந தோஷேண ஜாதம் ப்ரத்யக்ஷம் அநந்த பேத விஷயம் இதி வக்தவ்யம் –
அநாதி பேத வாசநாக்ய தோஷ ஜாதம் ப்ரத்யக்ஷம் இதி சேத் -ஹந்த-தர்ஹி அநேந ஏவ தோஷேண ஜாதம் ஸாஸ்த்ரம பீதி
ஏக தோஷ மூலத்வாத் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ -ந பாத்ய பாதக பாவ ஸித்தி
ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம்
சாஸ்திரம் து பிரத்யஷாத் யபரிச்சேத்ய சர்வாந்தராத்மத்வ சத்யத்வாத் அநந்த விசேஷேண விஸிஷ்ட ப்ரஹ்ம ஸ்வரூப
தத் உபாஸநாத் யாராதன பிரகார -தத் பிராப்தி பூர்வக தத் பிரசாத லப்ய பல விசேஷ ததநிஷ் கரண மூல நிக்ரஹ விசேஷ விஷயம் –
இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத
அநதி நிதன -அவிச்சின்ன பாட ஸம்ப்ரதாயதாத் யநேக குண விஸிஷ்டஸ்ய சாஸ்த்ரஸ்ய பலீயஸ்த்வம் வததா ப்ரத்யக்ஷ
பாரமார்த்ய மவஸ்யம் அப்யுப கந்தவ்யம் இதி அலமநேந ஸ்ருதி சத விததிவாத வேக பராஹத
குத்ருஷ்ட்டி துஷ்ட யுக்தி ஜால தூல நிரசநேன இத் யுபகம்யதே

(யாருக்கு உண்டாகிறது என்று கொண்டால் கூட நிவர்த்தக ஞானம் எதனால் உண்டாகிறது -அடுத்த கேள்வி
ப்ரத்யக்ஷத்தாலயா ஸ்ருதியாலாயா கேள்வி வருமே-ஸ்வயம் பிரகாசம் இல்லையே –
ஆகவே ப்ரமாணத்தால் தானே உண்டாகி இருக்க வேண்டும்
இதுக்கு ஸ்ருதி பிரமாணம் சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐக்யம் போதக வாக்கியங்கள் என்பர்

ப்ரத்யக்ஷத்தால் பலவாக காண்கிறோமே என்னில்-தேக வாசனை -இந்திரியங்கள் குறையே காரணம் என்பர்-ஸ்ருதி ஒருவர் சொல்ல காதால் நாம் கேட்க்கிறோமே அதுவும் மித்யை -துஷ்ட இந்திரிய பலம் அர்த்த பிரதிபத்தி புத்தி மாறலாம் -ஸாஸ்த்ரம் நிர்தோஷமாக இருந்தாலும்- ஸ்வ பாவ தோஷங்கள் உண்டாகும் அன்றோ-ப்ரத்யக்ஷத்துக்கும் தோஷம் சொல்லக் கூடாது என்பதே நம் சம்ப்ரதாயம்  -ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம் -இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத-)

(பேதம் ப்ரத்யக்ஷம் நிரூபிக்கும் அபேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம்
சரீராத்மா பாவம் ஒன்றே சுருதி விஷயம் ஆகும் -பிரதிதந்தரம் நம் சம்பிரதாயத்துக்கு)

மேலும் நமக்குக் கண் கூடாய் இருக்கும் இப்பிரபஞ்சத்தின் பொய்மையை எந்த ப்ரமாணங்களைக் கொடு நிரூபிக்க முடியும்
நாம் நேரே காணும் இவ்வுலகில் காணப்படும் பல வேறுபாடுகள் குறைபாடுகளுக்கு நாம் தக்க காரணம் காட்ட முடியும்
ப்ரஹ்மம் ஒன்றே உண்மை -மற்றவை யாவும் பொய்யே என்று கூடும் ஸாஸ்த்ரத்தின் கூற்று நாம் நேரில் காண்பதை விட வலிது எனில் எக்குறை பாட்டால் நாம் காணும் பல் வேறுபாடுகள் காணப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறதே
மோக்ஷம் அடைய 32 ப்ரஹ்ம வித்யைகளைக் கூறுகிறதே
அப்படியாயின் அதுவும் உலகியலோடு ஒத்த குறைபாடுள்ள தாகையால் அதன் கருத்து நேரில் கட் புலனாவதை எவ்வாறு வெல்லும்
ஆகாயம் காற்று போன்ற பஞ்ச பூதங்களும்
அவைகளால் விளைந்த ஒலி தொடு உணர்வு போன்றவைகளும்
மனிதர்கள் முதலான பல் வேறு உடல் அமைப்புக் கொண்ட பிராணிகளும் கண்களால் காணப் படுகின்றன -உணரப் படுகின்றன
எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்கல் உண்மையாக இருத்தல் போன்ற எண்ணற்ற நற் குணங்களோடு கூடிய பரமாத்ம நிலையும்
அதை ஆராதனம் மூலம் கொடை நல்லறம் ஆகியவை செய்து வழி பட்டு அதன் கருணையால் கிடைக்கும் வீடு பேறு போன்ற நான்கு பேறுகளும்
ப்ரஹ்மத்துக்கு உகப்பு அல்லாததைச் செய்து அதனால் வரும் கேடுகளும் தண்டனைகளும் ஸாஸ்த்ரங்களால் விளக்கப் படுகின்றன
ஆகவே இவை இரண்டும் வெவ்வேறு வகையான பொருள்களைக் கூறுவன வாகையால் ஒன்றால் மற்ற ஒன்றை எவ்வாறு பாதிக்கப் படும்
மேலும் கட் புலனாவது என்ற சான்றை நீங்களும் ஒத்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
காதுகளால் கேட்டு
மனத்தில் நிறுத்திக் கொள்வதால் தான் ஸாஸ்த்ரங்கள் உள்ளவை என்ற நிலையைப் பெறுகின்றன

முதலும் முடிவும் அற்று தொடர்பு அறாது உபதேசத்தால் வந்த பல நலன்களோடு கூடிய ஸாஸ்த்ரம் வலுவுள்ளது என்று ஒப்பிய உங்களால் கண் கூடாகத் தெரியும் உலகமும் ஒத்துக் கொள்ளப் பட வேண்டும் –
முடிவாக நேர் அற்ற நோக்கு உடையோரால் அவர்களால் வாதிக்கப்படும் உக்திகளால் செப்பிடு வித்தை போல் காணப்படும் இப்பொய்மை வாதமாகிற பஞ்சு பல வேத வாக்யங்களால் நன்கு விளக்கப்பட்ட புயல் காற்றால் அடித்துச் செல்லப்படும் எனக் கூறி அமைகிறேன்

—————–

பாஸ்கர மத கண்டனம்
64–த்விதீயே து பக்ஷே உபாதை ப்ரஹ்ம வ்யதிரிக்த -வஸ்த்வாந்தராந் ப்யுபகமாத் ப்ரஹ்மண்யேவா உபாததி
சமசர்க்காத் ஓவ்பாதிகாஸ் சர்வே தோஷா ப்ரஹ்மண்யேவாபவேயு
ததஸ் ச அபஹதபாப் மத்வாதி நிர்தோஷ ஸ்ருத யஸ் சர்வா விஹந்யந்தே -யதா கடாகாசதே
பரிச்சின்னதயா மஹா ஆகாசாத் வை லக்ஷண்யம் பரஸ்பர பேதஸ் ச த்ருச்யதே -தத்ரஸ்தா தோஷாவா குணா வா
அநவச் சிந்நே மஹா ஆகாஸே ந சம்பந்யந்தே -ஏவம் உபாதை க்ருத பேத வ்யவஸ்தித ஜீவ கதா தோஷா
அநு பஹிதே பரே ப்ரஹ்மணி ந சம்பந் யந்தே இதி சேத் நைததுபத்யதே நிரவயவஸ்ய ஆகாசஸ்ய அநவச் சேத் யஸ்ய கடாதிபி –
சேதா சம்பவாத் -தேநை வாகாசேந கடாதயஸ் ஸம்யுக்தா இதி ப்ராஹ்மண உபாயச்சேத் யத்வாத் ப்ரஹ்ம ஏவ உபாதி ஸம்யுக்தம் ஸ்யாத் –
கட ஸம்யுக்தாகா ச பிரதேச அந்யஸ் மாதாகாச ப்ரதேசாத் பித்யதே-இதி சேத் ஆகாசஸ்யை கஸ்யைவ பிரதேச பேதேநே
கடாதி ஸம்யோகாத்-கடாதவ் கச்சதி தஸ்ய ச பிரதேசஸ்ய அநியம இதி ப்ரஹ்மண்யேவ
உபாதி ஸம்சர்க்க ஷணே ஷணே பந்தோ மேஷஸ் ச பவதீதி சந்த பரிஹஸந்தி–

(உபாதி சம்சர்க்கம் -ப்ரஹ்மத்துக்கு அபஹத பாப்மத்வாதிகள் சுருதி விருத்தம்
அபரிச்சின்ன ஆகாசம் -நடுவில் கடம் வைத்தால் கடாகாசம் -தோற்ற -இதன் குறைகள் மஹா ஆகாசத்தில் காணப்பட வில்லை
ஜீவர்கள் கடாகாசம் போல் -சேதிக்க முடியாதே -ஆகாசம் ஸூஷ்மம் -கடம் ஸ்தூலம் சேதிக்க முடியாதே -அதே போல் ப்ரஹ்மம் ஸூசமம் -உபாதி – ஸ்தூலம்

கர்மாக்கள் தர்ம பூத ஞான த்வாரா ஆத்மாவில் -ப்ரஹ்மத்துக்கு சங்குசித ஞானம் இல்லையே-விகார அநர்ஹம் -)

பாஸ்கரர் கொள்கைக்கு மறுப்பு
இரண்டாவது மதத்திலும் சூழலின் தாக்கம் -ப்ரஹ்மம் தவிர்த்த வேறு பொருள்கள் -ஒப்புக் கொள்ளப் படாமையால் ப்ரஹ்மத்தின் இடத்திலேயே சூழலின் தாக்கத்தால் வரக்கூடிய எல்லாக் குறைபாடுகளும் ப்ரஹ்மத்திலேயே ஏற்படுகின்றன
அதனால் பாபமற்ற தன்மை முதலான குறைகள் அற்றதாகப் ப்ரஹ்மத்தைக் கூறும் மறை வாக்கியங்கள் அழிக்கப்படும் -பொருள் அற்றவை யாகும் –
அவ்வாறே குடத்தினுள் உள்ள வெளி அளவு பட்டதாகவும் மற்றைப் பெரு வெளி அளவு படாததாகவும் ஒன்றுக்கு ஓன்று மாறுபட்டுத் தோன்றுகின்றன
அதனால் அளவு பட்ட வெளியின் நிறை குறைகள் பெரு வெளியின் தொடர்பு அற்றவை யாகின்றன
அது போலவே சூழலின் தாக்கத்தால் ஜீவனிடம் தோன்றும் குறை நிறைகள் ப்ரஹ்மத்தின் தொடர்பு அற்றது என்பீராகில் அது கொள்ளத் தக்கது அல்ல

அவயவங்கள் அற்ற பெரு வெளி குடம் போன்றவற்றால் பிளவு படுத்தக் கூடியது அல்ல
அது எப்போதும் குடத்தின் வெளியோடு கூடியே இருக்கும்
அது போல் ப்ரஹ்மமும் அவயவங்கள் அற்றதால் பிளக்கப்பட முடியாதலால் ஜீவனுடைய நிறை குறைகளையும் கொண்டு இருக்கும் –
குடத்தின் உள்ளிருக்கும் சிறு வெளியும் அது தவிர்த்த கூடத்திற்கு வெளியில் உள்ள பெரு வெளி எனக் கருதப் படுகிறது என்பது போல் இங்கும் கொள்ளலாம் எனில்
ஒரே வெளி குடத்தின் தொடர்பால் இரண்டாகக் கருதப் படுகையில் அக்குடம் உருண்டு செல்கையில் அதற்கு ஒவ்வோர் நிலையிலும் வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் தொடர்பும் தொடர்பின்மையும் ஏற்படுகிறது
இதனால் குடத்திலுள்ள சிறு வெளி இது என்று பிரித்துக் காண இயலாது
அதே போல் ப்ரஹ்மத்தின் எப்பகுதி சூழலை தயக்கத்துடன் தொடர்புடையது எப்பகுதி தொடர்பு அற்றது எனப் பிரித்துக் காண முடியாது
ஆகவே ஜீவனுக்கு உள்ள குறை நிறைகள் ப்ரஹ்மத்திலும் காணப்பட வேண்டும்
அதாவது உடல் புலன்கள் தொடர்பால் வரும் கட்டும் அது நீங்கினால் வரும் வீடும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்ற நகைப்புக்கு இடமான நிலை ஏற்படும் –

உபாதி -சூழலின் தாக்கம் -அருகில் உள்ள ஒரு பொருளின் தொடர்பால் மற்றதில் ஏற்படும் மாறுதல்
எடுத்துக் காட்டு -வெள்ளை நிறப்பொருள் அருகில் உள்ள செம்பருத்திப் பூவினால் சிவப்பாகக் காணப்படுதல்

————–

65–நிரவயவஸ் யாகாசஸ் யைவ ஸ்ரோத்ர இந்த்ரியத்வேபி இந்திரிய வ்யவஸ்தாவத்
ப்ரஹ்மண்யபி வ்யவஸ்தா உபபத்யதே இதி சேத்
ந வாயு விசேஷ ஸம்ஸ் க்ருத கர்ண பிரதேச ஸம்யுக்தஸ்யைவ ஆகாச பிரதேசஸ்ய ஸஸ்ய இந்த்ரியத்வாத்
தஸ்ய ச பிரதேசாந்த்ராத் பேதா நியமேபி இந்திரிய வ்யவஸ்தா உபபத்யதே-
ஆகாசஸ்யது ஸர்வேஷாம் சரீரேஷு கச்சத்ஸூ அநியமேந சர்வ பிரதேச ஸம்யோக இதி
ப்ரஹ்மண்யாபி உபாதி ஸம்யோக பிரதேசா நியம ஏவ

(ஆகாசம் -சப்த குணகம் -காதில் நுழைந்து -ஸ்தோத்திரிய இந்திரியம் உணரும் -ஸம்யுக்த-ஸம்யோக)

அவயமற்ற ஆகாயம் செவிப்புலன் எனப்படுவது போல் ப்ரஹ்மத்திற்கும் புலன்கள் அற்று கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஏற்படலாம் எனில்
அது இயலாது
காற்றுடன் தொடர்புடையதாய் காதின் உள்ளிருக்கும் சிறு வெளி ஒலிகளை அறியக் காரணமாவதால் செவிப்புலன் எனப் பெயர் பெறுகிறது
அதை ஒழிந்த ஆகாயம் இவ்வாறு பகுதிகளாக பிரிக்கப்படாதது
மேலும் ஆகாயத்திற்கு காது மட்டும் அன்றி உடலின் எல்லாப் பகுதிகளுடன் தொடர்பு இருக்கிறது
அதனால் ஒரு குறிப்பிட்ட ஆகாயப் பகுதி ஒரு குறிப்பிட்ட புலனுடன் எப்பொழுதும் தொடர்பு கொண்டு இருக்கிறது என வரை யறுக்க முடியாது
ஆயினும் அது உடல்களின் தொடர்பால் எப்பொழுதும் இயங்கிக் கொண்டு இருப்பதால் அத் தொடர்பு நிலையுடையதாய் இருக்கிறது
இந்த செவிப் புலன் வெளியை மற்ற வெளியின் நின்றும் தனியாக பிரிக்கவோ குறிப்பிடவோ முடியாது
இவ்வாறு ப்ரஹ்மத்திற்குக் கொண்டால் ப்ரஹ்மம் எப்பொழுதும் சூழலின் தயக்கத்தோடு தொடர்பு யுடையதாக மட்டுமே இருக்க முடியும் –

66–ஆகாசஸ்ய ஸ்வரூபேண ஏவ ஸ்ரோத்ரிந்த் ரியத்வம் அப்யுபகம்யாமபி இந்திரிய வ்யவஸ்தா யுக்தா பரமார்த்த
தஸ்து ஆகாச நஸ்ர இந்திரியம் –
வைகாரிகாத் அஹங்காராத் ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஹி வைதிகா யதோக்தம்

செவிப்புலன் என்பது ஆகாயத்தின் மாறுபாட்டால் ஏற்படுகிறது என்ற உங்கள் கருத்தை ஒத்துக் கொண்டு அதற்கு மேற்கூறியபடி பதில் அளித்தோம்
உண்மையில் ஆகாயம் செவிப்புலன் அல்ல
வைகாரிகம் போன்ற அஹங்காரங்களில் நின்றும் பதினோரு இந்திரியங்கள் உண்டாகின்றன என்பது வைதிகர்கள் கருத்து
உங்கள் கருத்து அதற்கு முரணானது –

பகவதா பராசரரேண-
தைஜசாநி இந்த்ரியாண்யாஹு -தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி அயமர்த்த வைகாரிக தேஜச பூதாதி இதி த்ரிவிதோ அகங்கார -ச ச க்ரமாத் சாத்விக ராஜஸ தமசஸ் ச
தத்ர தாமஸாத் பூதாதே ஆகாசாதீநி பூதாநி ஜாயந்தே இதி ஸ்ருஷ்ட்டி க்ரம முக்த்வா -தைஜஸாத் ராஜஸ அஹங்காராத்
ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஸ்வ மத முச்யதே -தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி தேவா இந்திரியாணி ஏவம் ஆஹங்காரி காணாம்
இந்திரியாணாம் பூதைஸ் சாப்யாயநம் மஹா பாராதே உச்யதே

பராசரர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
தைஜஸத்தின் நின்றும் -அதாவது ராஜஸ அகங்காரத்தின் நின்றும் -புலன்கள் உண்டாயின என்று சிலர் சொல்லுவர்
ஆயின் அவை பதினொன்றும் வைகாரிகத்தின் நின்றும் -அதாவது ஸாத்விக அஹங்காரத்தின் நின்றும் -உண்டாயின என்றும்
அதனால் அவற்றுக்கு வைகாரிகங்கள் என்று பெஅர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறோம்
இதன் பொருள் -வைகாரிகம் தைஜஸம் பூதாதி என்பவை மூன்று அஹங்காரங்கள்
இவைகள் முறையே ஸாத்விக ராஜஸ தாமஸங்களாகும்
இவற்றில் தாமஸ த்தின் நின்றும் ஆகாயம் முதலிய பூதங்கள் பிறக்கின்றன என்று படைப்பின் ஒழுங்கைக் கூறுகையில்
தைஜஸமாகிற ராஜஸ அகங்காரத்தின் நின்றும் பதினோரு புலன்கள் பிறக்கின்றன என்றும் கூறி
தனது கொள்கையாக புலன்கள் வைகாரிகத்தின் நின்றும் பிறக்கின்றன என்று நிறுவுகிறார்
தேவா என்பது புலன்கள்
இதையே அஹங்காரத்தின் நின்று புலன்கள் தோன்றி பஞ்ச பூதங்களால் வளர்க்கப் படுகின்றன என்று மஹா பாரதமும் சொல்கிறது –


பவ்தீகத்வேபி இந்திரியாணாம் ஆகாசாதி பூத விகாரத்வதேவ ஆகாசாதி பூத பரிணாம விசேஷா –
வ்யவஸ்திதா ஏவ சரீரவத் புருஷானாம் இந்திரியாணி பவந்தி இதி -ப்ரஹ்மணி அச்சேத்யே நிரவயவே-
நிர்விகாரேது அநியமேந அநந்த ஹேயோபாதி ஸம் சேர்க்க தோஷா துஷ் பரிஹர ஏவ இதி –
ஸ்ரத்ருதாநாநாமேவ அயம் பஷ இதி ஸாஸ்த்ர விதோ ந பஹுமந்யந்தே –
ஸ்வரூப பரிணாம அப்யுகமாத் அதிகார ஸ்ருதி பாத்யதே நிரவத்யதா ச ப்ரஹ்மண-சக்தி பரிணாம –
இதி சேத் கேயம் சக்திரித் யுச்யதே ? கிம் ப்ரஹ்ம பரிணாம ரூபா ? உத ப்ரஹ்மணோ அநந்யா கா அபி ?
இதி உபய பக்ஷே அபி ஸ்வரூப பரிணாம அவர்ஜனீய ஏவ —

பஞ்ச பூதங்களைப் பிறப்பிக்கிற பூதாதியின் மாறுபாடான இந்தப் புலன்கள் ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களின் துணையால் உடலை அடைந்து செயல்படுகின்றன என அறியப்பட்டது
மாறாக ப்ரஹ்மத்தின் பொறிகள் அற்ற மாறு பாடற்ற தன்மை பொறிகளின் தொடர்பால் பழுது படுகிறது என்னும் வாதம் சான்றோர்கள் முன்பு பாஸ்கரர் கொள்கையாக வைக்கப் படுகிறது

ப்ரஹ்மமே மாறுபாடு அடைந்து இவ்வாறாகிறது என்பீராகில் அதன் மேற்கூறிய தன்மைகள் பாதிக்கப்படும்
அவ்வாறு அன்றி தன் ஆற்றலால் ப்ரஹ்மம் மாறுபடுகிறது என்றால் அவ்வாற்றல் என்பது என்ன
அது ப்ரஹ்மத்தின் நின்றும் வேறுபட்டதா –
எவ்வாறு
இக் கேள்விகளுக்கு பதில் எதுவானாலும் ப்ரஹ்மத்தின் நிரையில் மாறுபாடு தோன்றுவதை ஒத்துக் கொள்ள முடியாது
ஏன் என்றால்
இவர்களுடைய ப்ரஹ்மத்துக்குத் தனியான குணங்கள் ஏதுமில்லை
ப்ரஹ்மம் தவிர்த்து மற்ற எப்பொருளும் இல்லை -என்னும் கொள்கையை இவர்களே மறுக்க நேரிடும் –

—————

யாதவ பிரகாச பக்ஷம் மறுப்பு
67–த்ருதீயே அபி பக்ஷே ஜீவ ப்ரஹ்மணோ பேதவதபேதஸ்ய சாப்யுபகமாத்-தஸ்ய ச தத் பாவாத்
ஸுவ்பரி பேதவத் ஸ்வ அவதார பேதவச் ச ஸர்வஸ்ய ஈஸ்வர பேதத்வாத் சர்வே ஜீவ கதா தோஷா தஸ்யைவ ஸ்யு —

(இவரும் பரிணாம வாதி -கீழ் உபாதியால் பரிணாமம் -இவர்கள் ஸ்வரூபத்தால் பரிணாமம் என்கிறார்கள்
நாமோ ஸ்வ பாவ -சரீரம் மாத்திரம் பரிணாமம்)

மூன்றாவது கொள்கை -ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் வேறுபாடின்மையையும் ஒருங்கே ஒத்துக் கொள்கிறது
ப்ரஹ்மத்துக்கு ஜீவ பாவத்தில் ஸுவ்பரி முனிவரின் ஈடுபாடு போன்றும் -(உயிர் ஒன்றாய் இருக்கச் செய்தே பல உடல்களைக் கொள்ள முடிவது போல் ஆகும் என்றவாறு )
ஈஸ்வரனுக்கு தன் அவதாரங்களில் ஈடுபாடு போன்றும்
(ஏற்பட்டு ப்ரஹ்மத்துடன் ஒன்றியவுடன் அது நீங்கி விடுகிறது ) தோன்றும் யாவையும் ப்ரஹ்மத்தின் வேறுபாடுகளே
இவ்வாறு கூறினால் ஜீவனுக்குள்ள குறைபாடுகள் ப்ரஹ்மத்திற்கும் ஏற்படும்

இதற்கு முன் கூறிய பாஸ்கரர் மற்றும் யாதவப் பிரகாசர் கொள்கைகளின் படி ஈஸ்வரனும் பிரபஞ்சமும் உண்மை
முற் கூற்றில் ஈஸ்வரனுக்கு உயிரல் பொருட்களின் தொடர்பால் ஜீவன் என்ற ப்ரமை ஏற்படுகிறது என்றும்
இரண்டாவதில் ஈஸ்வரனே ஜீவனாகவும் அசேதனமாகவும் மாறுகிறது என்றும் கொள்ளப் பட்டு இருக்கிறது
ராமானுஜர் அக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறார் –

—————

68–ஏகத் யுக்தம் பவதி –
ஈஸ்வர ஸ்வரூபேண ஏவ ஸூர நர திர்யக் ஸ்தாவராதி பேதேந அவஸ்தித இதி ஹி ததாத்மகத்வ வர்ணனம் க்ரியதே ?
ததா சதி ஏக ம்ருத் பிண்டாரப்த கட சராவாதி கதாந் யுதகாஹரணாதீதி சர்வ கார்யாணி யதா தஸ்ய ஏவ பவந்தி
ஏவம் சர்வ ஜீவ கத ஸூக துக்காதி சர்வம் ஈஸ்வர கதமேவ ஸ்யாத் இதி கட கரகாதி சமஸ்தாநா நுப யுக்த
ம்ருத்ரவ்யம் யதா கார்யாந்தராநந் விதம் ஏவ மேவ ஸூர பஸூ மனுஜாதி-ஜீவத்வ அநுப யுக்தேஸ்வர
சர்வஞ்ஞ ஸத்ய ஸங்கல்பத்வாதி குணாகர இதி சேத் சத்யம் -ச ஏவ ஈஸ்வர ஏகாநாம் சேந கல்யாண குணாகரக
ச ஏவ ச அந்யே நாம் சேந ஹேய குணாகர இத்யுக்தம் த்வயோரம் சயோ ஈஸ்வரத்வா விசேஷாத் —

(கடத்தால் தீர்த்தம் கொண்டு வரலாம்
ம்ருத் பண்டத்தால் முடியாதே
காரிய பதார்த்த குணங்கள் எல்லாம் காரணத்தில் இருக்க வேண்டியது இல்லையே
ஜீவ இன்ப துன்பங்கள் ஈஸ்வரனுக்கு இருக்க வேண்டியது இல்லை
ஆகார பேதம் -பிண்ட ஆகாரம் குட அகாரம்
ப்ரஹ்மம் நிர் அவயவம் -ஸ்வரூபமே பரிமாணம் என்பர் -ஆகவே இந்த த்ருஷ்டாந்தம் இதுக்கு சரி இல்லை என்பர்)

இத்தை விளக்குவோம்
ஈஸ்வரன் தானாகவே தேவ மனித மிருக ஸ்தாவரங்களாக பரிணாம அடைகிறான் என்றும்
அதே ப்ரஹ்மம் ஆத்மாவையும் இருக்கிறது என்றும் சொல்லப் படுகிறது
அப்படி என்றால் ஒரே மண் உருண்டையால் ஆன குடம் வாணை ஆகியவற்றுக்குள்ள நீர் கொணரும் தன்மை அந்த மண் உருண்டைக்கும் காரியமாக வேண்டும்
அதே போல் எல்லா ஜீவ காரியங்களும் அதன் இன்ப துன்பங்களும் ஈஸ்வரனுக்கு ஏற்பட வேண்டும்
ஆனால் ஈஸ்வரன் குறைபாடு அற்றவன் என்று வேதம் சொல்லி இருப்பதால் இக் கருத்து ஒப்புக் கொள்ளத் தக்க தல்ல

த்வாவம் ஸவ்யவஸ்திதவ் இதி சேத் கஸ்தேந லாப ? ஏகஸ்யைவ ஏகாநாம்சேந நித்ய துக்கித்வாத் அம்சாந்தரேண
ஸூகித்வமபி ந ஈஸ்வரத்வாய கல்பதே-யதா தேவதத்தஸ்ய ஏகஸ்மிந் ஹஸ்தே சந்தந பங்காநுலேப-
கேயூர கடக அங்குலீயக அலங்கார ஏதஸ்யை வாந் யஸ்மிந் ஹஸ்தே முத்கராபிகாத காலாநலஜ் வாலாநு பிரவே சஸ்ஸ
தத்வதேவ ஈஸ்வரஸ்ய ஸ்யாத் இதி ப்ரஹ்ம ஞான பஷாதபி பாபீயாநயம் பேதாபேத பஷ அபரிமித துக்கஸ்ய
பாரமார்த்திகத்வாத் ஸம்ஸாரிணாம் அநந்தத்வேந துஸ்தரத்வாச் ச தஸ்மாத் விலக்ஷனோயம் ஜீவாம் ச-
இதி சேத் ஆகதோ சி தர்ஹி மதீயம் பந்தாநம்
ஈஸ்வரஸ்ய ஸ்வரூபேண தாதாம்ய வர்ணநே ஸ்யாத் அயம் தோஷ ஆத்ம சரீர பாவேந து தாதாம்ய ப்ரதிபாதநே
நகஸ்சித் தோஷ -ப்ரத்யுத நிகில புவந நியமநாதி மஹாந் குண கண ப்ரதிபாதிதோபவதி சாமநாதி கரண்யம் ச முக்ய வ்ருத்தம்

இக்குறையை நீக்கும் முகமாய் ப்ரஹ்மம் இரண்டு பகுதிகளாய் -ஜீவனாக ஆவதாகவும் ப்ரஹ்மமாக ஆதலுமாக இருப்பதாகக் கொள்வீர்களாயின் அதனாலும் பயன் ஏதும் இல்லை
அவ்வாறு கொள்வதால் ஒரு பகுதி எப்போதும் துயரத்துடனும் மற்றொரு பகுதி எப்பொழுதும் மகிழ்ச்சியுடனும் ஒன்றுக்கு ஓன்று கலவாததாயும் உள்ளது என்றதாகும்
இது ஈஸ்வரத் தத்துவத்துக்கு முரணானது
எப்படி தேவ தத்தன் என்று ஒரே மனிதனுக்கு ஒரு கையில் சந்தனக்காப்பு அணிவித்து அணிகள் பூண்டு இருத்தலும்
மற்றொரு கையில் உலக்கையால் இடித்தலும் தீயில் நுழைத்தலும் ஏற்படின் அவன் நிலை எவ்வாறு இருக்குமோ
அது போலவே ஒரு பக்கத்தில் அளவற்ற இன்பம் கிடைத்தாலும் உடலின் மறு பகுதி துன்புறும் போது அந்த இன்பம் நிலை நிற்காமல் போவது போலே ஈஸ்வரனுக்கு நீங்காத துயரமே உணர்வாகும்
இக்கொள்கை சங்கரரின் ப்ரஹ்ம அஞ்ஞானக் கொள்கையினின்றும் மாறுபட்ட பேதாபேதம் -பிரிவு பட்டும் பிரிவு ப்டாதுமாய் இருப்பது என்ற நிலையைக் கொள்வதால் உலகியலாரின் துன்பங்கள் யாவும் அளவற்றதாய் ப்ரஹ்மத்துக்கு ஏற்படும்
அவ்வாறு இன்றி இந்நிலையைத் தவிர்க்க ஈஸ்வரனின் ப்ரஹ்மப் பகுதி வேறு ஜீவப்பகுதி வேறு என்பீராயின் நீங்கள் எங்கள் கொள்கையைக் கைக்கொள்வீர்கள்

இக்கொள்கைகள் ஈச்வரனுடன் ஆத்மா உயிர் ஒன்றிய நிலையில் உள்ளது என்று கொள்வதால் இக்குற்றங்கள் ஏற்படுகின்றன
அஃதன்றி ஈசன் உயிராகவும் ஜீவாத்மா அதன் உடலாகவும் மாறி ஒரு நிலையில் இருக்கின்றன என்ற எங்கள் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்னும் கொள்கையைக் கொண்டால் இக்குற்றங்கள் யாவும் வாராது
மாறாக அண்டங்கள் யாவையும் ஆட்சி செலுத்தும் சிறப்பான கல்யாண குணங்களே வெளிப்படும்
இதனால் ஸாமா நாதி கரணமும் நன்கு பொருந்தும் –

——–

69–அபிச ஏகஸ்ய வஸ்துநோஹி பிந்நாபிந்நத்வம் விருத்தத்வாத் ந சம்பவதீதி யுக்தம்
கடஸ்ய படாதி பிந்நத்வே சதி தஸ்ய தஸ்மிந் ந பவா -அபிந்நத்வே சதி தஸ்ய ச பாவ -இதி ஏகஸ்மிந்தேசே ச ஏகஸ்ய ஹி
பதார்த்தஸ்ய யுகபத ஸத்பாவ-அ சத் பாவச் ச விருத்த ஜாதயாத்மநா பாவ வ்யக்தாத்மநா ச அபாவ இதி சேத்
ஜாதே முண்டேந வ்யக்தயா சா பேத சதி கண்டே முண்டஸ் யாபி ஸத்பாவ பிரசங்க கண்டேந சஜாதேஸ்ய பிந்நத்வே
ஸத்பாவ பிந்நத்வே அசத் பாவ அஸ்வே மஹிஷதஸ்யேவேதி விராதோ துஷ் பரிகார ஏவ

மேலும் ஒரே பொருளில் குறையும் நிறையும் இருத்தலும் -இன்மையும் இருக்கிறது என்பது ஒவ்வாதது –
குடத்தில் துணியின் தொடர்பின்மையால் துணியின்மை என்ற நிலை ஏற்படுகிறது
ஆயின் அவ்வாறில்லை என்று மறுக்கப்படுமானால் குடமும் துணியும் ஒரே பொருள் என்ற கிடைக்கும்
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் இருப்பும் இன்மையும் ஏற்பட முடியாது –
தொகுப்புக்கு ஜாதிக்கு -இருக்கும் குணங்கள் உறுப்புக்கு இல்லை எனில் தொகுத்துப் பார்க்கும் நிலையும் பகுத்துப் பார்க்கும் நிலையும் -ஜாதி வேறு -வ்யக்தி வேறு -என்று அறிந்தால் அன்றி கொம்புள்ளதும் மோழையும் ஓன்று எனவாகும்
கோமனுள்ளத்து எனில் தொகுப்புடன் ஜாதியுடன் -பிரிவற்ற தன்மையும் மோழை எனில் தொகுப்பினின்றும் ஜாதியினின்றும் பிரிவுறுதலும் தோன்றும்
ஆகவே பிரிவின்மையும் பிரிவும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்பது தவறான பாதமாகும்
குதிரையும் எருமையும் -கால்நடைகள் என்ற தொகுப்பில் இருந்தாலும் -அவைகள் தனித்த குணங்கள் உள்ளவை யாதலால் ஒரே ஜாதியில் பேதாபேதம் உண்டு என்று கொள்வதால் இரண்டும் ஒன்றாக ஆக முடியாது

ஜாதி -ஒரே ஒருபடித்தான அமைப்பும் பண்புகளும் உள்ள பொருள்களின் தொகுப்பு
வியக்தி -மேற்படி தொகுப்பில் உள்ள ஒரு பொருள் -தொகுப்பின் உறுப்பு

————–

70–ஜாத்யாதே வஸ்து சமஸ்தாந தயா வஸ்துந பிரகாரத்வாத் -பிரகாரப் பிரகாரினோச் ச பதார்த்தாந்தரத்வம்
பிரகாரஸ்ய ப்ருதக் சித்ய நர்ஹத்வம்-ப்ருதக் கநு பலம் பஸ் ச தஸ்ய ச சமஸ்தாநஸ்ய ச
அநேக வஸ்துஷு பிரகார தயா அவஸ்திதிஸ் ச இத்யாதி பூர்வமேவ யுக்தம்

ஒருபடித்தான உருவ குண அமைப்புடைய பொருள்களின் தொகுப்பு ஜாதி எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரகார பிரகாரி சம்பந்தம் உடையன எனப்படுவதால் பொருளும் ஜாதியும் பிரிவும் பிரிவற்ற தன்மையும் -பேத அபேத -உடையன என்று கூறுதல் தகாது
ஒரு பொருள் அதன் ஜாதியினின்றும் தனித்துப் பேசப்படுகையில் இந்த வாதம் பயன் அற்றது
இது முன்பே விளப்பட்டுள்ளது

பிரகாரம் -ஒரு பொருளினின்றும் வேறுபட்டதாயும்
அதினின்றும் தனித்து இயங்கும் தன்மை அற்றதாயும்
அப்பொருளை சிறப்பான அடையாகவும் இருத்தல்

பிரகாரி -அப்பண்பை யுடையது

உதாரணம் -நீலத்துணி என்னும் பொருளுக்கு நீலம் பிரகாரம் –

———————-

71–சோயம் இதி புத்தி பிரகார ஐக்யாத் அயமபி தண்டீ இதி புத்தி வத் -அயமேவ சஜாத்யாதி பிரகாரோ வஸ்துநோ பேத
இத் யுச்யதே தத் யோக ஏவ வஸ்துந பிந்நம் இதி வ்யவஹார ஹேது ரித்யர்த்த ச ச வஸ்து நோ பேத வ்யவஹார ஹேது
ஸ்வஸ்ய சம்வேதந வத் யதா சம்வேதநம் வஸ்துநோ வ்யவஹார ஹேது -ஸ்வஸ்ய வ்யவஹார ஹேதுஸ் ச பவதி –
அத ஏவ சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் பேத க்ராஹி இத்யாதிவாதா நிரஸ்தா ஜாத்யாதி சம்ஸ்தி ததஸ்யைவ
சமஸ்தாந ரூப ஜாத்யாதே பிரதியோக்ய பேஷயா பேத வ்யவஹார ஹேதுத்வாச் ச ஸ்வரூப பரிணாம தோஷஸ் ச
பூர்வமே வோக்த இதி மதாந்தரக் கண்டநாக்ய பூர்வ பாக ஸமாப்த —

அவனே இவன் என்ற அறிவு -பண்பு ஒருபடிப்பட்டு இருத்தலால் இவனும் தடியை யுடையவன் என்று அறிகிறது
இந்த ஜாதிப் பண்பினால் பொருள்களுள் பேதம் ஏற்படுகிறது
இவ்வாறு உலகில் காணப்படும் பொருள்கள் யாவும் ஜாதிவாரியாகப் பிரிக்கப் பட்டு இருப்பது கண் கூடு
ஒரு பொருளை அறிய ஜாதி காரணமாகிறது
ஞானம் தன் இருப்பையும் காட்டி -மற்றப் பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையுடன் காட்ட காரணமாகிறது –
ஒரு பொருளைப் பார்க்கையில் அப்பொருளை மட்டும் அறிவு அறிகிறது
அதன் அமைப்பு பண்புகளை அறிவதில்லை என்ற அத்வைதியின் வாதம் தள்ளப்படுகிறது
ஜாதிப் பிரிவுகள் உள்ள பொருள்களைத் தான் கண் அறிகிறது
பார்க்கப்படும் பொருள்களின் அமைப்பைக் கொண்டே அதின் ஜாதியும் -அது மற்றதின் நின்றும் வேறுபட்டது என்ற அறிவும் ஏற்படுகிறது –
இதனாலேயே ப்ரஹ்மம் தானே பரிணாமம் அடைகிறது என்பது மறுக்கப் பட்டது –

இத்துடன் பிற கொள்கை மறுப்பு என்னும் முதற் பகுதி முற்றுப் பெறுகிறது

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -சதுர்த  பாதம் –

March 6, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச
-கடவல்லீஷு இந்த்ரியேப்யஸ் பரா ஹ்யர்தா அர்த்தேப் யஸ்ச பரம் மனஸ் –மநஸஸ் ச பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர மஹதஸ் பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி -இத்யத்ர
கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் அவ்யக்த சப்தாபிதேயமுத நேதி ஸம்சய -ப்ரதாநம் இதி பூர்வ பக்ஷ -மஹத பரம் இத்யாதி தத் தந்தர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாநாத் புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி பஞ்ச விம்சக புருஷ அதிரிக்த தத்த்வ நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து
ந அவ்யக்த ஸப்தேந ப்ரதாநம் இஹ க்ருஹ்யதே -பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச இத்யாதி நா உபாஸநா நிர்வ்ருத்தயே வஸ்யேந்த்ரியத்வா பாதாநாய யே ஆத்ம சரீர புத்தி மந -இந்திரிய விஷயா -ரதி ரத சாரதி ப்ரக்ரஹ ஹய கோசரத்வேந ரூபிதா தேஷு வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதி நோச்யந்தே -தத்ர சேந்த்ரி யாதய ஸ்வ ஸப்தேநைவ க்ருஹ் யந்தே ரதத்வேந ரூபிதம் ஸரீரம் இஹ அவ்யக்த -பரிணாமத்வேந அவ்யக்த ஸப்தேந க்ருஹ்யத இதி நேஹ தத்தந்த்ர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாந கந்த அவ்யக்தாத் புருஷ பர இதி ச ந பஞ்ச விம்சக –அபி து ப்ராப்ய பரமாத் மைவ அந்தர்யாமி தயோபாஸநஸ் யாப் யுபாய பூத இதி ஸ இஹ வஸீ கார்ய காஷ்டாத்வேந புருஷாந்ந பரம் கிஞ்சித் இத் யுக்த
ஸூத்ரார்தஸ்து – ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் -ஆநுமாநிகம் ப்ரதாநம் ஜகத் காரணத்வேந மஹத-பரம் அவ்யக்தம் இத்யாம் நாயதே இதி சேத் தந்ந அவ்யக்த ஸப்தேந சாரீராக்ய ரூபகவிந்யஸ் தஸ்ய க்ருஹீதே பூர்வத் ராத்மாதிஷு ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு ரதத்வேந ரூபி தஸ்ய சரீரஸ்யாத்ராவ்யக்த ஸப்தேந க்ருஹீதேரித் யர்த -அதோ வஸீ கார்யத்வே பரா இஹ உச்யந்தே –தர்சயதி சைநமர்தம் வாக்ய சேஷ இந்திரியாதீநாம் நியமன பிரகாரம் ப்ரதிபாதயன் யச்சேத் வாங்மநஸீ இத்யாதி –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

கதம் அவ்யக்த ஸப் தஸ்ய சரீரம் வாஸ்யம் பவதீத்யா சங்க்யாஹ
111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்
 –து ஸப்தோ அவதாரணே –ஸூஷ்மம் அவ்யக்தம் ஏவ அவஸ்தாந்தரா பன்னம் சரீரம் பவதி தத் அவஸ்தஸ் யைவ கார்யார் ஹாத் வாத் -யதி ரூபக விந்யஸ்தா ஆத்மாதய ஏவ வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதிநா க்ருஹ் யந்தே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

தர்ஹி அவ்யக்தாத் புருஷ பர புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி புருஷ க்ரஹணம் கிமர்த்த மித்யத ஆஹ
112–தத் அதீநத்வ அதர்தவத் 
-அந்தர்யாமி ரூபேண அவஸ்தித புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் –ப்ரயோஜநவத் பவதி –அத உபாஸந நிர் வ்ருத்தவ் வஸீ கார்ய காஷ்டா பரம புருஷ இதி ததர்தம் இஹ ரூபக விந்யஸ்தேஷு பரிக்ருஹ்யமாணேஷு பரஸ்யாபி புருஷஸ்ய க்ரஹணம் –உபாஸன நிர்வ்ருத்த யுபாய காஷ்டா புருஷ ப்ராப்யஸ் சேதி -புருஷாந்ந பரம் கிஞ்சித் சா காஷ்டா ஸா பரா கதி இத்யுக்தம் –பாஷ்ய ப்ரக்ரியயா வா நேய மிதம் ஸூத்ரம் –பரம புருஷ சரீர தயா தத் அதீனத்வாத் பூத ஸூஷ்மம் அவ்யாக்ருத மர்தவதிதி ததிஹாவ்யக்த ஸப்தேந க்ருஹ்யதே நா ப்ரஹ்மாத்மகம் ஸ்வ நிஷ்டம் தந்த்ர ஸித்தம் இதி –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச –யதி தந்த்ர ஸித்த ப்ரக்ரியே ஹாபி ப்ரதோ ததா அவ்யக்தாஸ் யாபி ஜ்ஜேயத்வம் வக்தவ்யம் -வ்யக்த அவ்யக்தஜ்ஞ விஞ்ஞாநாத் இதி ஹி தத் ப்ரக்ரியா -ந ஹ்யவ்யக்த மிஹ ஜ்ஜேயத்வேநோக்தம் அதஸ் சாத்ர ந தந்த்ர ப்ரக்ரியாகந்த –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத் யுபக்ரம்ய மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யத இதி ப்ரதாநஸ்ய ஜ்ஜேயத்வம் அந்தர மேவ வததீயம் ஸ்ருதிரிதி சேத் தந்ந அஸப்தம் அஸ்பர்சம் இத்யாதி நா ப்ராஞ்ஞ–பரம புருஷ ஏவ ஹ்யத் ரோச்யதே ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே –இதி ப்ராஜ்ஞஸ் யைவ ப்ராக்ருதத்வாத் –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச –அஸ்மின் ப்ரகரணே யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே–இத்யாரப்யா ஸமாப்தே பரம புருஷ தத் உபாஸன உபாஸகா நாம் த்ரயாணாம் ஏவைவம் ஜ்ஜே யத்வேந உபந்யாஸ ப்ரஸ் நஸ் ச த்ருஸ்யதே ந ப்ரதானாதேஸ் தாந்த்ரிகஸ்யாபி –அதஸ் ச ந ப்ரதான மிஹ ஜ்ஜேயத்வேந யுக்தம் –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

116–மஹத் வச் ச –யதா புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்த ஸாமாநாதி கரண்யாந் மஹச் சப்தேந ந தாந்த்ரிகம் மஹத் தத்த்வம் க்ருஹ்யதே ஏவம் அவ்யக்த சப்தேநாபி ந தாந்த்ரிகம் ப்ரதாநம் —7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
 -அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
 –ஸ்வேதாஸ் வதரே அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் ஸ ரூபா –அஜோ ஹ்யேகோ ஜூக்ஷமாணோ அநுஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய இத்யத்ர கிமஜா சப்தேந தந்த்ர சித்தா ப்ரக்ருதிரபி தீயதே உத ப்ரஹமாத் மிகேதி ஸம்சய –
தந்த்ர ஸித்தேதி பூர்வ பக்ஷ அஜாமேகா மித்யஸ்யா அகார்யத்வ ப்ரதீதே பஹ்வீநாம் ப்ரஜாநாம் ஸ்வா தந்தர்யேண காரணத்வ ஸ்ரவணாச் ச –ராத்தாந்தஸ்து -ந தந்த்ர ஸித்தாயா ப்ரக்ருதே ரத்ர க்ரஹணம் ஜனன விரஹஸ்ரவண மாத்ரேண தந்த்ர சித்தாயா ப்ராக்ருதே ப்ரதீதி நியமாபாவாத் -ந ஹி யவ்கிகாநாம் ஸப்தாநாம் அர்த ப்ரகரணாதிபிர் விசேஷ்யவ்யவஸ்தாபகைர் விநா விஸேஷே வ்ருத்தி நியம ஸம்பவ ந சாஸ்யாஸ் ஸ்வாதந்தர்யேண ஸ்ருஷ்டி ஹேதுத்வமிஹ ப்ரதீதிம் அபி து ஸ்ருஷ்டி ஹேதுத்வ மாத்ரம் தத் ப்ரஹமாத்மிகாயாஸ் ச ந விருத்தம் -அத்ர து ப்ரஹ்மாத் மிகாய ஏவ ஸாகாந்தர ஸித்தயா ஏதத் ஸ ரூப மந்த்ரோதிதயா ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸைவேதி நிஸ்ஸீயதே –
ஸூத்ரார்தஸ்து –நாயமஜா ஸப்தஸ் தந்த்ர ஸித்த ப்ரதான விஷய –குத –சமஸவத விசேஷாத் யதா அர்வாக்பிலஸ் சமஸ இதி மந்த்ரே சமஸ சாதனத்வ யோகேந ப்ரவ்ருத்தஸ்ய சமஸ சப்தஸ்ய சிரஸி ப்ரவ்ருத்தவ் –யதேதம் தச்சிர ஏஷ ஹ்யர்வாக்பிலஸ் சமஸ இதி வாக்ய சேஷ விஸேஷோ த்ருஸ்யதே ததா அஜாமேகாமித்யஜாஸப்தஸ்ய தந்த்ர ஸித்த ப்ரதாநே வ்ருத்தவ் விஸேஷா பாவான்ந தத் க்ரஹணம் ந்யாய்யம் –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

அஸ்தி து ப்ரஹ்மாத் மிகாயா ஏவ க்ரஹணே விஸேக்ஷ இத்யாஹ

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம யஸ்யா உபக்ரம –காரணம் ஸா ஜ்யோதி ரூப க்ரமா –து சப்தோ அவதாரணே –ப்ரஹ்ம காரணிகைவைஷா –அஜா –ததா ஹ்ய தீயத ஏகே யதா ரூபோ அயம் அஜாயா ப்ரதி பாதகோ மந்த்ர ததா ரூபமேவ மந்த்ரம் ப்ரஹ்மாத் மிகாயா தஸ்யா ப்ரதிபாதக மதீயத ஏகே ஸாகிந –அணோர் அணீயான் மஹதோ மஹீயான் இத்யாதி நா ப்ரஹ்ம ப்ரதிபாத்ய ஸப்த ப்ராணா -ப்ரபவந்தி தஸ்மாத் சப்தார் சிக்ஷஸ் ஸமித ஸப்த ஜிஹ்வா -ஸப்த இமே லோகா பேஷு சரந்தி ப்ராணா குஹாஸ யாந்தி ஹிதாஸ் ஸப்த ஸப்த –அதஸ் ஸ முத்ரா கிர யஸ்ச ஸர்வ இத்யாதி நா ப்ரஹ்மண உத் பன்னத்வேந ப்ரஹ்மாத்ம கதயா ஸர்வ அநுசந்தான விதாந ஸமயே -அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் இதி ப்ரதி பாத்யமாநா ப்ரஹ்மாத்மிகை வேதி தத் ப்ரத்யபிஜ் ஞாநாதி ஹாப்யஜா ப்ரஹ்மாத் மிகை வேதி நிஸ்ஸீயதே –9–

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

அஜாத்வம் ஜ்சோதி ரூப க்ரமாத்வம் ச கதமுப பத்யதே இத்யத ஆஹ
119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத
 –கல்பநா –ஸ்ருஷ்டி ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இத்யாதி தர்சநாத் -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதி ஹி ஸ்ருஷ்டிரி ஹோபதிஸ்யதே –ப்ரலய வேலாயா மேஷா ப்ரக்ருதி பரம புருஷ ஆஸ்ரயா காரண அவஸ்தாதி ஸூஷ்மாவயவா ஸக்தி ரூபேண அதிஷ்டதே தத் அவஸ்தாபி பிராயேண அஸ்யா அஜாத்வம் -ஸ்ருஷ்டி வேலாயாம் புநஸ் தச் சரீராத் ப்ரஹ்மண ஸ்தூல அவஸ்தா ஜாயதே தத் அவஸ்தா ஜ்யோதி ரூப க்ரமேதி ந கஸ்ஸித் விரோத மத்வாதிவத் –யதா ஆதித்யஸ் யைகஸ் யைவ கார்ய அவஸ்தாயாம் -அசவ் வா ஆதித்யோ தேவமது இதி வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் தஸ்யைவ –அத தத ஊர்த்வம் உதேத்ய நைவோதேதர நாஸ்த மேதைகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா நாம ரூப ப்ரஹாணேந காரண அவஸ்தாயாம் ஸூஷ்மஸ் யைகஸ் யைவ அவஸ்தா நாம் ந விருத்யதே தத் வத் –10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
 –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
 –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித –தமேவ மந்ய ஆத்மாநம் வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இத்யத்ர கிம் சாங்க்யோக்தாநி பஞ்ச விம்சதி தத்தவாநி ப்ரதிபாத்யந்தே உத நேதி ஸம்சய –தாந்யே வேதி பூர்வ பக்ஷ
பஞ்ச பஞ்ச ஐநா இதி ஹி பஞ்ச ஸங்க்யாவிஸிஷ்டா -பஞ்ச ஐநா பஞ்ச விம்சதிஸ் ஸம்பத் யந்தே -கதம் -பஞ்ச ஐநா இதி ஸமாஹார விஷயோ அயம் ஸமாஸ பஞ்ச பூல்ய இதிவத் –பஞ்சபிர் ஜனைரா ரப்தஸ் ஸமூஹ -பஞ்ச ஜன பஞ்ச ஜனீத்யர்த லிங்க வ்யத்யய சாந்தஸ பஞ்ச ஐநா இதி பஹு வஸனாத் ஸமூஹ பஹுத்வம் சாவகம்யதே -தே ச கதீத்ய பேஷாயாம் பஞ்ச பஞ்ச ஐநா இதி பஞ்ச சப்த விசேஷிதா -பஞ்ச ஜன ஸமூஹா இதை பஞ்ச விம்சதிஸ் தத்தவாநி பவந்தி மோஷாதிகாராத் தாந்த்ரி காண் யேவேதி நிஸ்ஸீயந்தே -ஏவம் நிஸ்ஸிதே சதி தமேவ மன்ய ஆத்மாநம் -வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி பஞ்ச விம்சக மாத்மாநம் ப்ரஹ்ம பூதம் வித்வான் அம்ருதோ பவதீதி –ராத்தாந்தஸ்து –யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஐநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித -இதி -யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரத்வாத் ததாதேயாநாம் தத்த்வாநாம் ப்ரஹ்மாத்மகத்வ மவகம்யதே
யச்சப்த நிர் திஷ்டம் ச தமேவ மன்ய ஆத்மாநம் -இதி தச்சப்தேந பராம்ருஸ்ய ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி நிர்தேசாத் ப்ரஹ்மேதி நிஸ்ஸீயதே -அதோ ந தாந்த்ரிக ப்ரசங்க –ஸூத்ரார் தஸ்து –
பஞ்ச பஞ்ச ஐநா இத்யத்ர பஞ்ச விம்சதி ஸங்க்யோப ஸங்க்ரஹா தபி ந தாந்த்ரி காணீமாநி தத்தவாநி யஸ்மின் நிதி யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரதயா தாந்த்ரிகேப்யோ நாநா பாவாத் -ஏஷாம் தத்தவாநாம் ப்ருதக் பாவாதித்யர்த -அதி ரேகாச் ச -தாந்த்ரி கேப்யஸ் தத்வாதி ரேக ப்ரதீ தேஸ் ச யஸ்மிந் நிதி நிர் திஷ்ட மதிரிக்த மஹாஸஸ் ச -ந ஸங்க்யோப ஸங்க்ரஹாத பீத்யபி சப்தேன ஸங்க்யோப ஸங்க்ரஹோ ந ஸம்பவ தீத்யாஹ –ஆகாஸஸ் ய ப்ருதங் நிர்தேசாத் –அத பஞ்ச ஐநா இதி ந ஸமாஹார விஷய அபி து திக் ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷய பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா கேசித் தே ச பஞ்சை வேதி ஸப்த ஸப்தர்க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா பஞ்ச பதார்த்த ப்ராணாதய இதி வாக்ய சேஷாதவ கம்யதே –பிராணஸ்ய பிராணமுக சஷுஷஸ் சஷு ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரமந்நஸ் யான்நம் மனஸோ யே மநோ விது இதி ப்ரஹ்மாத்மகா நீந்திரியாணி பஞ்ச பஞ்ச ஜனா இதி நிர் திஷ்டாநி ஜநநாச் ச ஜநா –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

காண்வ பாடே அந்த வர்ஜிதாநாம் சதுர்ணாம் நிர்தேசாத் பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா நீந்த்ரியாணீதி கதம் ஞாயத இத்யத் ராஹ
122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்யந்தே
 –ஏகேஷாம் -காண்வா நாம் வாக்ய சேஷே அஸத்யன்ன சப்தே வாக்யோபக்ரம கதேந தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரிதி ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி விஞ்ஞாயந்தே –கதம் -ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி ப்ரஹ்மணி ப்ரதீயதே –நிர் திஷ்டே ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேதி கே தே ப்ரகாஸகா இத்ய பேஷாயாம் –பஞ்ச பஞ்ச ஜநா –இத்ய நிர்ஜ் ஞாதா விசேஷா பஞ்ச ஸம்க்யா ஸம்க்யாதா ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி அவகம்யதே –அத யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித இதீந்த்ரி யாணி பூதாநி ச ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதா நீதி ந தாந்த்ரி கதத் த்வ கந்த —13-இதி ஸம் க்யோப ஸம் க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
 –ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
 –ஜகத் காரணவா தீநி வேதாந்த வாக்யாநி கிம் ப்ரதான காரண தாவதைகாந்தாநி -உத ப்ரஹ்ம காரண தாவதைகாந்தாநீதி ஸம்சய –ப்ரதான காரண தாவாதை -காந்தா நீதி பூர்வ பக்ஷ -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் இதி க்வசித் ஸத் பூர்விகா ஸ்ருஷ்டிராம் நாயதே அந்யத்ர அசதேவேதே மக்ர ஆஸீத் -அஸத்வா இதமக்ர ஆஸீத் ததா தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இதி -அவ்யாக்ருதம் ஹி ப்ரதாநம் –அத ப்ரதான காரணதாவாத நிஸ்ஸயாத்ததே காந்தான்யேவ –ராத்தாந்தஸ்து –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யுபக்ரம்ய தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத இத்யாதிஷு சர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாத நாத்தஸ் யைவ ப்ரஹ்மண காரண அவஸ்தாயாம் நாம ரூப விபாக சம்பந்தி தயா ஸத் பாவா பாவாதஸத வ்யாக்ருதாதி சப்தேந வ்யபதேஸ இதி ப்ரஹ்ம காரண தாவாதை காந்தான்யேவ-ஸூத்ரார்தஸ்து-ஆகாஸாதி பத சிஹ்நிதேஷு தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இத்யாதிஷு ஸர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாதநாத் ஸர்வேஷு ஸ்ருஷ்டி வாக்யேஷு யதா வியபதிஷ்டஸ் யைவ காரணத்வே நோக்தே ப்ரஹ்ம காரண தாவாதை காந்தாநி –யதா வியபதிஷ்டம் –ஸார்வஜ்ஞயாதி -யுக்ததயா அஸ்மாபிர் வ்யபதிஷ்டம் –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

ததா ஸதி -அஸத்வா இதமக்ர ஆஸீத் இதி கிம் ப்ரவீதீத்யத ஆஹ
124-ஸமா கர்ஷாத்
 –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பஹுபவந ஸங்கல்ப பூர்வகம் ஜகத் ஸ்ருஜதோ ப்ரஹ்மணஸ் ஸர்வஞ்ஞஸ்ய-அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாத் காரண அவஸ்தாயாம் நாம ரூப சம்பந்தி த்வா பாவேந அஸதிதி ப்ரவீதி –ஏவம் தத்தேதம் தர்ஹ்யவ்யாக்ருதம் ஆஸீத் இத்யாதிஷு -ஸ ஏஷ இஹாநு ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்ய சஷு இத்யாதி பூர்வாபரபர்யா லோசநயா தத்ர தத்ர சர்வஞ்ஞஸ்ய ஸமாகர்ஷோ த்ரஷ்டவ்ய —15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத் 
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
 –கௌஷீதகி நாம் ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர வேதி தவ்ய தயோபதிஷ்ட –சாங்க்ய தந்த்ர ஸித்த புருஷ உத பரமாத்வேதி ஸம்சய -புருஷ ஏவ ப்ரக்ருதி வியுக்த இதி பூர்வ பக்ஷ –யஸ்ய வைதத் கர்ம இதி கர்ம சப்தஸ்ய க்ரியத இதி வ்யுத் பத்த்யா ஜகத் வாசித்வாத் க்ருத்ஸ்னம் ஜகத் யஸ்ய கார்யம் ஸ பரமபுருஷ ஏவ வேதிதவ்யதயோப திஷ்டோ பவதீதி –ஸூத்ரமபி வ்யாக்யாதம் –16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் –ஏவமே வைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்ம பிர் புங்க்தே -இத்யாதி போக்த்ருத்வ ரூப ஜீவ லிங்காத் –அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இதி முக்ய ப்ராண லிங்காச் ச நாயம் பரமாத்மேதி சேத் –தஸ்ய பரிஹார ப்ரதர்தன வித்யாயாமேவ வ்யாக்யாத –பூர்வாபர ப்ரகரண பர்யா லோசநாய பரமாத்ம பரமிதம் வாக்யமிதி நிஸ்ஸிதே சத்யன்ய லிங்காநி தத் அநுகுணதயா நேதவ்யாநீத் யர்த –
நநு -தவ் ஹ ஸூப்தம் புருஷ மீயது மாஜக்மது இதி ப்ராண நாம பிரா மந்த்ரணா ஸ்ரவண யஷ்டிகா தோத்தாபநாதிநா சரீர இந்த்ரிய ப்ராணாத்யதிரிக்த -ஜீவாத்ம ஸத்பாவ ப்ரதி பாதந பரமிதம் வாக்யமித்யவகம்யத இத்யாதி உத்தரம் படதி–17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே -து ஸப்தஸ் சங்கா நிவ்ருத்த் யர்த –ஜீவ ஸங்கீர்த்தந மந்யார்தம் –ஜீவாதிரிக்த ப்ரஹ்ம ஸத்பாவ ப்ரதி போதநார்த மிதி ப்ரஸ்ன ப்ரதி வசநாப்யாமவ கம்யதே -ப்ரஸ்னஸ் தாவஜ் ஜீவ ப்ரதி பாதநாநந்தரம் க்வைஷ ஏதத் பாலாகே புருஷோ அசயிஷ்ட இத்யாதிக –ஸூஷுப்த ஜீவ ஆஸ்ரய விஷய தயா பரமாத்ம பர இதி நிஸ்ஸித–ப்ரதி வசநமபி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இத்யாதி கம் பரமாத்ம விஷயமேவ -ஸூப்த புருஷ ஆஸ்ரய தயா ஹி ப்ராண ஸப்த நிர் திஷ்ட பரமாத்மைவ ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி இத்யாதிப்ய -ஜைமிநி க்ரஹண முக்தஸ்யார் தஸ்ய பூஜ்யத்வாய -அபி சைவ மேகே -ஏகே வாஜஸநேயிந இதமேவ பாலாக்ய ஜாத ஸத்ரு ஸம் வாத கதம் ப்ரஸ்ன ப்ரதி வசன ரூபம் வாக்யம் பரமாத்ம விஷயம் ஸ்பஷ்ட மதீயதே க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ்தஸ் மிஞ்சேத இத்யே ததந்தம் —18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 –ப்ருஹ தாரண்யகே மைத்ரேயீ ப்ராஹ்மணே ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே
ஸ்ரோ தவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸி தவ்ய இத்யாதவ் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட புருஷ தந்த்ர ஸித்த உத பரமாத்மேதி ஸம்சய –தந்த்ர ஸித்த பஞ்ச விம்சக ஏவேதி பூர்வ பக்ஷ பதி ஜாயா புத்ரவித்த மித்ர பஸ்வாதி ப்ரிய சம்பந்த்யாத்மா ந பரமாத்மா பவிதுமர்ஹாதி –ஸ ஏவ ஹி ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே –ராத்தாந்தஸ்து –ந பத்யாதீ நாம் காமாய பத்யாதய ப்ரியா பவந்தி ஆத்மநஸ்து காமாய இத்யுக்த்தவா -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி நிர் திஷ்ட ஆத்மா ஜீவாதிரிக்தஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -யத் ஸங்கல்பாயத்தம் பத்யாதீ நாம் ஸ்வ சம்பந்திந ப்ரதி ப்ரியத்வம் ஸ ஹி ஸத்ய ஸங்கல்ப பரமாத்மா -ஆத்மஜ் ஞாநேந ஸர்வஞ்ஞாநாதயோ அபி வஹ்யமாணா பரமாத்மந்யேவ சம்பவந்தி
ஸூத்ரார்தஸ்து –வாக்யஸ்ய க்ருத்ஸ் நஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட ஆத்மா பரமாத்மைவ –அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -இதம் ஸர்வம் யதயமாத்மா -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வஸிதமேதத்யத் ருக்வேத -யேநேதம் ஸர்வ விஜாநாதி தம் கேந விஜா நீயாத் –இதி ஹி க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யந்வயோ த்ருஸ்யதே -19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
 –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

ஏதேப்யோ பூதேப்யஸ் சமுத்தாய தாந்யே வாநுவிநஸ்ய தீதி ஜீவ லிங்கஸ்ய மதாந்தரேண நிர்வாஹமாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
 –ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய பரமாத்ம கார்ய தயா பரமாத்மநோ அநந்யோ ஜீவ இதி ஜீவ சப்தேந பரமாத்மநோ அபி தாநம் இத்யாஸ்ம ரத்ய -மதம் -20-

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப 

130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யத இதி சரீராத் உத் க்ரமிஷ்யத அஸ்ய ஜீவஸ்ய பரமாத்ம பாவாஜ் ஜீவ சப்தேந பரமாத்மநோ அபிதானம் இத் ஒவ்டு லோமி ஆசார்யோ மேநே –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் இத்யாதி பிர் ஜீவாத்மன் யந்தராத்ம தயா பரமாத்மநோ அவஸ்திதே -ஜீவாத்ம சப்தஸ்ய பரமாத்மநி பர்யவஸாநாஜ் ஜீவாத்ம சப்தேந பரமாத்மந அபிதாந மிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ ஸூத்ர காராபிமத மித்யவ கம்யதே த்ரயாணாம் அந்யோன்ய விரோதாத் இத பரம வசநாச் ச –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச 
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் 
–பரம் ப்ரஹ்ம கிம் ஜகதோ நிமித்த காரண மாத்ரம் உதோ பாதான காரணமபீதி ஸம்சய –நிமித்த காரண மாத்ரமிதி பூர்வ பக்ஷ -ம்ருத் குலாலாதவ் நிமித்த உபாதாநயோ பேத தர்ச =நாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி பிர் பேத ப்ரதி பாதநாத் ப்ரஹ்மணோ அவிகாரத்வ ஸ்ருதி விரோதாச் ச –ராத்தாந்தஸ்து –யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி ப்ரஹ்ம விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதி ஞானான் யதாநுப பத்த்யா யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் இதி ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தேந ததுப பாத நாச்ச ஜகத் உபாதான காரணம் அபி ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ப்ரமாணாந்தரா வசித ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம் யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணஸ் சர்வஞ்ஞஸ்ய ஸர்வ சக்தே கார்ய காரண உபயா அவஸ்தாயாம் அபி ஸ்வ சரீர பூத சித் அசித் பிரகார தயா அவஸ்திதஸ்யைகஸ்யைவ நிமித்தத்வம் உபாதாநத்வம் சாவிருத்தம்
சரீர பூதா சித் வஸ்து கதோ விகார இதி கார்ய அவஸ்தா வஸ்திதஸ்யாபி சரீரண பரமாத்மந அவி காரித்வம் ஸித்த மேவ -சித் அசித் வஸ்து சரீரஸ்ய ப்ரஹ்மண ஏவோ பாதா நத்வே அபி ப்ரஹ்மண்ய புருஷார்த்த விகாராஸ்பர்ஸ ப்ரதர்சனாய ஹி அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் தஸ்மிம்ஸ் சான்யோ மாயயா சந்நிருத்த இதி வ்யபதேஸ ப்ரதிஞ்ஞாத்ருஷ்டாந்தாநு ப ரோதாத் உபா தாநம் ச ப்ரஹ்மைவேதி ஸூத்ரார்த –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

133-அபித்யோபதேஸாச் ச –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி ஸ்ரஷ்டுர் ப்ரஹ்மணஸ் ஸ்வஸ்யைவ ஜகதா காரேண பஹு பவந சிந்தநோபதேஸாச் ச ஜகத் உபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி நிஸ்ஸீயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –கிம்ஸ் வித்வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் இத்யாதி நா ஜகத் உபாதாந நிமித்தாதவ் ப்ருஷ்டே ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் இத் யுபாதாநம் நிமித்தம் சோபயம் ப்ரஹ்மைவேதி ஹி ஸாஷாதாம் நாயதே -அதஸ் சோபயம் ப்ரஹ்ம -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

135-ஆத்ம க்ருதே -ததாத்மாநம் ஸ்வயமகுருத இதி ஸ்ரஷ்டுராத்மந ஏவ ஜகதாகாரேண க்ருதிருபதிஸ்யதே -அதஸ் சோபயம் ப்ரஹ்மைவ –நாம ரூப பாவாப்யா மேகஸ்ய கர்ம கர்த்ரு பாவோ ந விருத்த –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ 
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

யத் யாத்மாந மேவ ப்ரஹ்ம ஜகதாகாரம் கரோதி தர்ஹி ப்ரஹ்மணோ அபஹத பாப்மத்வாதிகமநவதிகாதிஸய –ஆனந்த ஸ்வரூபத்வம் ஸர்வஞ்ஞத்வம் இத்யாதி ஸர்வம் விருத்யதே அஞ்ஞத்வ அஸூகித்வ கர்ம வஸ்யத்வாதி விபரீத ரூபத்வாத் ஜகத இத்யத உத்தரம் படதி

136-பரிணாமாத் –அஜ்ஞ ப்ரஹ்ம விவர்தவாதே -ஹி தத் பவத்யேவ -அஜ்ஞாநஸ்ய தத் கார்ய ரூபா நந்தா புருஷார் தஸ்ய ச வேதாந்த ஜன்யஜ் ஞான நிவர்த்யஸ்ய ப்ரஹ்மண்யேவா ந்வயாத் ததா ஸாஸ்த்ரஸ்ய ப்ராந்த ஜல்பிதத் வாபாதாச் ச -அவி பக்தா நாம ரூப ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கஸ்ய ப்ரஹ்மணோ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரத்வேந பரிணாமோ ஹி வேதாந்தேஷுபதிஸ் யதே -தத்தேதம் தர்ஹ்யயாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இத்யேவ மாதிபி -அபுருஷார்த்தாஸ் ச விகாராஸ் சரீர பூத சித் அசித் வஸ்து கதா –காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச ஆத்மபூதம் ப்ரஹ்ம அபஹத பாப்மத்வாதி குணகமேவ -ஸ்தூல ஸூஷ்ம அவஸ்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மத்வம் ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாரப்ய யஸ்யாவ்யக்தம் சரீரம் யஸ்யாஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ இத்யேவமாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் அதஸ் ஸர்வம் அநவத்யம் –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் பரி பஸ்யந்தி தீரா கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் இத்யாதிஷு ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய பரம புருஷ யோநித்வேந கீயதே -ஹி ஸப்தோ ஹேதவ் யஸ்மாத் யோநிரிதி கீயதே தஸ்மாச் சோபாதாநமபி ப்ரஹ்ம –யோநி ஸப்தஸ் சோபாதாந காரண பர்யய –28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
 –யதோ வா இமாநி –இத்யாதிஷுதா ஹ்ருதேஷு வாக்யேஷு ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நோக்த ந்யாய கலாபேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா –பதாப்யாஸோ அத்யாய –பரி ஸமாப்தித்யோத நார்த –29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம் –

March 6, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார தீப உத்த்ரியதே

——————————

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-1-3-

1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம் கிம் ஜீவ உத பரமாத்வேதி ஸம்சய ஜீவ இதி பூர்வ பக்ஷ மந ப்ரப்ருதீ ந்த்ரியாதார்த்தவ ஸ்ருதே உத்தரத்ர நாடீ சம்பந்தாத் ஜாயமாநத்வ ஸ்ருதேஸ் ச –ராத்தாந்தஸ்து -நிருபாதிக ஆத்மத்வ அம்ருத சேது த்வயோ -பரமாத்ம தர்மயோ ஸ்ரவணாத் பரமாத்மை வாயம் –ஸர்வம் நியந்தருதயா ஆப்நோ தீதி ஹ்யாத்மா –அம்ருதஸ்ய ப்ராபக தயா சேதுஸ் ச ஸ ஏவ நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வஞ்ச — ஸந்ததம் ஸிராபிஸ் து லம் பத்யாகோஸ ஸந்நிபம் அஜாயமாநோ பஹுதா விஜாயதே இத்யாதி ஷு ஸர்வ சமாஸ்ரயணீயத்வாய அஜஹத் ஸ்வ பாவஸ் யைவ பரமாத்ம நோ அபி த்ருஸ்யதே இதி ஸூத்ரார் தஸ்து –த்யு ப்ருதிவ்யாதீநாமாயதநம் பரமாத்மா ஸ்வ ஸப்தாத் –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச பந்தான் முக்தஸ்ய ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பரமாத்மா –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –ஆநு மாநம் –அநுமாந கம்யம் ப்ரதாநம் யதா தத் வாசி ஸப்தா பாவாத் ததிஹ ந க்ருஹ்யதே –ததா ப்ராண ப்ருத பீத் யர்த –அதஸ் சாயம் பரமாத்மா –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ஜீவாத் பேதேந வ்யபதேசாச் சாயம் பரமாத்மா –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி நா பரமாத்மந ஏவ ப்ரக்ருதத்வாத் -5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி கர்மபலமநஸ்நத -பரமாத்மநோ தீப்ய மாந தயா ஸ்திதே -ஜீவஸ்ய கர்ம பரவசதயா தத் பலாதநாச்ச பரமாத்மநோ ஜீவாத் பேதாவகமாத் அம்ருத ஸேதுர்த் யுப்வாத்யாயதநம் ந ஜீவ -அத்ருஸ்யத்வாதி குணக இத்யநேந பரமாத்மத்வே ஸ்தாபிதே அபி நாடீ ஸம்பந்த பஹுதா ஜாயமாநத்வ லிங்காத் யா அவாந்தர ப்ரகரண விச்சேதா சங்கா ஸா நிராக்ருதா -த்யுப் வாத்யாயதநமிதி வைஸ்வா நரஸ்ய த்ரை லோக்ய சரீரத்வாதிநா பரமாத்மத்வ நிர்ணய இதி மத்யே வைஸ்வாநர வித்யா நிரூபிதா —6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
 –ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத் 
–சாந்தோக்யே -யத்ர நான்யத் பஸ்யேதி நானயச் ஸ்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா இத்யத்ர பூம ஸப்த நிர்திஷ்டோ நிரதிசய வை புல்ய விஸிஷ்ட ஸூக ஸ்வரூப கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாத்மேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ –தரதி ஸோகமாத்மவித் இதி ப்ரக்ரம்ய நாமாதி பரம் பர யோத்தரோத்தர பூயஸ்த்வேந ப்ரஸ்ன பிரதி வசனாப்யாம் ப்ரவ்ருத்தஸ் யாத்ம யுபதேஸஸ்ய ப்ராண ஸப்த நிர் திஷ்டே ப்ரத்யகாத்மநி ஸமாப்த்தி தர்சநாத் ப்ரத்யகாத்மந ஏவ பூமஸம் ஸப்த நமிதி நிஸ்ஸீயதே –ராத்தாந்தஸ்து -யத்யபி ப்ரஸ்ன பிரதிவசநாப்யாம் உத்தர உத்தர பூயஸ்த்தவ வசனம் ப்ராணே பர்யவஸ்திதம் ததாபி பிராணாவேதிநோ அதிவாதித்தவம் உக்த்வா -ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதி வததி இதி து சப்தேன உபாஸக பேதம் ப்ரதிபாத்ய -தஸ்ய ஸத்ய உபாஸகஸ்ய பூர்வஸ்மாதாதிக்ய உபதேசாத் ஸத்ய சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ பூம விசிஷ்டம் இதி –ஸூத்ரார்தஸ்து -பூம குண விசிஷ்டம் பரம் ப்ரஹ்ம ஏவ ஸம் ப்ரசாதாதத் யுபதேசாத் –ஸம் ப்ரஸாத –ப்ரத்யகாத்மா ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத்ஸமுத்தாய பரம் ஜ்யோதி ரூப ஸம் பத்ய இத்யாதி உபநிஷத் ப்ரஸித்தே –ஏஷ து வா அதி வததி இதி ப்ரத்யகாத்மநோ அதிகதய உபதேசாத் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்யாதிக்ய வாதித்வம் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ –ஸ்வ மஹிம ப்ரதிஷ்டிதத்வ -ஸர்வாத்மத்வஸர்வ உத்பத்தி ஹேதுத்வா தீநாம் பூம்நி ஸ்ரூய மாணாநாம் தர்மாணாம் பரஸ்மின் நேவ ப்ராஹ்மண் யுப பத்தேஸ் ச பூமா பரம் ப்ரஹ்ம ஏவ -8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
 –வாஜிநாம் கார்கி ப்ரஸ்நே ஸ ஹோவாசைதத்வை தத் அக்ஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்த்ய ஸ்தூல மநண் வஹ்ரஸ்வம தீர்கமலோஹிதமஸ் நேஹ மச்சாயம் இத்யத்ர அக்ஷர ஸப்த நிர் திஷ்டம் ப்ரதாநம் -ஜீவோ வா உத பரமாத்மா இதி ஸம்சய ப்ரதாநம் ஜீவோ வா ந பரமாத்வேதி பூர்வ பக்ஷ –கஸ்மின் து கல்வாகாச ஓதஸ் ச கல் வாகாச ஓதஸ் ச ப்ரோதஸ் ச இத் யுக்தே ஆகாசாதார தயோச்ய மாந மக்ஷரம் ப்ரதாநம் ஜீவோ வா ப்ரதா நஸ்ய விகாரா தாரத்வாஜ் ஜீவஸ்யா சித்வஸ்த்வாதாரத்வாத் ந பரமாத்வேதி –ராத்தாந்தஸ்து -யதூர்த்வம் கார்கி திவ இத்யாரப்ய காலத்ரய வர்திந க்ருத்ஸ்னஸ் யாதார தயா நிர் திஷ்ட ஆகாஸோ அவ்யாக்ருதமேவ ந வாயுமாநாகாஸ –தத பஸ்ஸாத் கஸ்மின்நு கல் வாகாச ஓதஸ்ஸ ப்ரோதஸ்ஸ இதி ப்ருஷ்டே ததா தராத யோஸ்யமாநமேதத் அக்ஷரம் ந ப்ரதாநம் பவிதும் அர்ஹாதி –நாபி ஜீவ -ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ர மஸவ் வித்ருதவ் திஷ்டத இத்யாரப்ய ப்ரஸாஸ நாத் சர்வாதாரத்வ ஸ்ருதே –ஸூத் ரார் தஸ்து -ஏதத் வை ததஷரம் கார்கி இதி நிர்திஷ்டம் அக்ஷரம் பரமாத்மா அம்பராந்தத்ருதே –அம்பரம் வாயுமாநாகாஸ அம்பராந்த அம்பர பார பூதம் அம்பர காரண மிதி யாவத் காரணாபத்தி ரேவ ஹி கார்யஸ் யாந்த ஸ சாம்பராந்த அவ்யாக்ருதம் ப்ரதாநம் தஸ்ய த்ருதே –தாரணாத் –அவ்யாக்ருத்ஸயாபி த்ருதே ரக்ஷரம் பரமாத்மைவேத் யர்த –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

ஏவம் தர்ஹி ஜீவோ பவிதும் அர்ஹாதி தஸ்ய ப்ரதான த்ருத் யுப பத்தேர் இத்யா ஸங்க்யாஹா

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் இதி ப்ரஸாஸ நாச்ச் ரூயதே -ப்ரஸாஸநம் -ப்ரக்ருஷ்டம் ஸாஸனம்அப்ரதிஹதாஜ்ஞா –ந சா ப்ரதி ஹதாஜ்ஞயா க்ருத்ஸ் நஸ்ய சித் அசித் ஆத்மகஸ்ய ஜகதோ த்ருதிர் ஜீவே உப பத்யதே –அதோ ந ஜீவ –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அஸ்ய அக்ஷரஸ்ய பரம புருஷாதன் யத்வம் வ்யாவர்தயதி வாக்ய சேஷ –அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா ஸர்வைரத்ருஷ்ட மேததக்ஷரம் ஸர்வஸ்ய த்ரஸ்ட்ரித்யாதி ப்ரதான ஜீவா ஸம்பாவ நீயார்த ப்ரதிபாதநாத் —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
 –ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
 –ஆதர்வணிகாநாம் ஸத்ய காம ப்ரஸ்நே ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய –ஸ ஸாம பிருந்நீயதே ப்ரஹ்ம லோகம் ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர த்யாதீ ஷதி கர்மதயா வ்யபதிஷ்ட பரம புருஷ கிம் ஹிரண்ய கர்ப –உத பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம இதி ஸம்சய –ஹிரண்ய கர்ப இதி பூர்வ பக்ஷ -பூர்வத்ரைக மாத்ரம் ப்ரணவம் உபாஸீநஸ்ய மனுஷ்ய லோக ப்ராப்திம் பலம் த்விமாத்ரம் உபாஸீநஸ் யாந்தரிக்ஷ லோக ப்ராப்திம் ச பலமபிதாயா நந்தரம் ய புந ரேதம் த்ரி மாத்ரேண இதி த்ரி மாத்ரம் ப்ரணவம் உபாஸீ நஸ்ய பலத்வே நோச்யமாந ப்ரஹ்ம லோகஸ்த புருஷே க்ஷண கர்ம பூதஸ் சதுர்முக ஏவேதி விஞ்ஞாயதே மனுஷ்ய லோகாந்தரிக்ஷ லோக ஸாஹசர்யாத் ப்ரஹ்ம லோகோ அபி ஷேத்ரஞ்ஞ லோக இதை நிஸ்ஸயாத்
ராத்தாந்தஸ்து –பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷதே இத் ஈஷதி கர்மதயா நிர் திஷ்ட புருஷ விஷயேஸ் லோகே –தமோங்காரேணை வாய நேநாத்வேதி வித்வான் யத் தச்சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி நிருபாதிக சாந்தத்வ அம்ருதத்வாதி வ்யபதேசாத் பரமாத்மை வாயமிதி நிஸ்ஸீயதே -ஏவம் பரமாத்மத்வே நிஸ்ஸிதே ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தத் ஸ்தானமேவ அபிததாதி இத்யவகம்யதே
தத் விஷய தயோதாஹ்ருதே ச ஸ்லோகே யத் தத் கவயோ வேதயந்த -தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய –இத்யேவமாதிபிஸ் ஸூரிபிர் த்ருஸ்யத்வ வசனம் ததேவ த்ரபயதி -ஸூத்ரார் தஸ்து –ஈஷதி கர்ம ஸ பரமாத்மா த்யாய தீஷத்யோ ரேக விஷயத்வேந த்யாயதி கர்மா அபி ஸ ஏவேத் யர்த -வ்யபதேசாத் -தத் விஷய கதயா சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரம் சேதி பரமாத்ம தர்மாணாம் வ்யபதேசாத் —12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய 
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய –
-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர ஹ்ருதய புண்டரீக மத்ய வர்தீ தஹர ஆகாஸஸ் ஸ்ரூயமாண கிம் பூதகாச -உத ஜீவ அத பரமாத் வேதி ஸம்சய –ப்ரதமம் தாவத் பூதாகாஸ இதி யுக்தம் ஆஸ்ரயிதும் இதி பூர்வ பக்ஷ
ஆகாஸ சப்தஸ்ய பூதாகாஸோ ப்ரஸித்தி ப்ராசுர்யாத் ஆகாஸ அந்தர்வர்த்திநோ அந்யஸ்ய அன்வேஷ்ட வ்யதா ப்ரதீதேஸ் ச –ராத்தாந்தஸ்து –கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ்டவ்யம் இதி சோதிதே யாவான் வா அயமாகாச இத்யாராப்ய ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் இத் யந்தேந தஹர ஆகாஸஸ் யாதி மஹத்த்வ ஸர்வ ஆஸ்ரயத்வ அஜரத்வ சத்யத்வாத்ய பி தாய அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா இத்யாகாஸ அந்தர் வர்திநோ அன்வேஷ்டவ்யா காமா இதி ப்ரதிபாத்ய கோ அயம் தஹர ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட -கே தத் ஆஸ்ரயா காமா இத் யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய ஸங்கல்ப இத் யந்தேந ஆகாஸ ஸப்த நிர் திஷ்ட ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத் வாதயஸ்தத் விசேஷண பூதா இதி ப்ரதிபாத யத் வாக்யம் அபஹத பாப்மத்வாதி விஸிஷ்ட பரமாத்மாநமாஹ –உபக்ரமே ச அன்வேஷ்ட வ்யதயா ப்ரதிஜ்ஞாத ஆகாஸ ஆத்மா ஏதத் விசேஷண பூதா அபஹத பாப்மத் வாதய காமா இதி வாக்யம் ஞாபயத் அத ய இஹாத்மாந மநுவித்ய வ்ரஜந்த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி இத் யுப ஸம்ஹரதி -அதோ அயம் தஹர ஆகாஸ அபஹத பாப்மத் வாதி விஸிஷ்ட பரமாத் மேதி நிஸ்ஸீயதே ந பூத ஆகாசாதிரிதி -ஏவம் தர்ஹ் யஸ்மிந் வாக்யே அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இதி ப்ரத்யகாத்ம ப்ரதீதே -தஸ்ய சோத்தரத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணகத்வாவகமாத் ப்ரத்யகாத் மைவ தஹராகாச இதி பூர்வ பஷீ மன்யதே –ராத்தாந்தீ து ப்ரத்யகாத்மா கர்ம பரவசதயா ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் த்யாத் யவஸ்தாபி திரோஹித அபஹத பாப்மத்வாதிக பரமாத்மநம் உப ஸம்பந்த தத் ப்ரஸாதாதாவிரர்பூத குணக பிரஜாபதி வாக்யே ப்ரதிபாதிந தஹர ஆகாஸஸ்த்வ திரோஹித நிருபாதிக அபஹத பாப்மத்வாதிக பிரத்யாகாத்மன்ய ஸம்பாவ நீய ஜகத் விதரண ஸமஸ்த சித் அசித் வஸ்து நியமநாத் யநந்த குணக பிரதிபன்ன இதி நாயம் ப்ரத்யகாத்மா தஹராகாஸ அபி து பரமாத்மை வேதி மன்யதே —
ஸூத்ரார்தஸ்து -தஹராகாச பரம் ப்ரஹ்ம உத்தரேப்ய –உத்தர வாக்யக தேப்ய அபஹத பாப்மத் வாதி பரமாத்மா அசாதாரண தர்மேப்யோ ஹேதுப்ய –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –அஸ்மின் தஹாராகாஸே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் அஹரஹர்யா கதிஸ் ஸ்ரூயதே யஸ் ச தஹராகாஸாவமர்ஸ ருபை தச் ஸப்த ஸாமாநாதி கரண தயா ப்ரயுக்தோ ப்ரஹ்ம லோக ஸப்த தாப்யாம் தஹராகாச பரம் ப்ரஹ்மேத் யவகம்யதே -தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம ஷேத்ரஞ்ஞா உபர்யுபரி சஞ்ச ரந்தோ ந விந்தே யுரேவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்த்ய ந்ருதேன ஹி ப்ரத்யூடா இதி ததா ஹி த்ருஷ்டம் –ததா ஹ்யன்யத்ர பரஸ்மின் ப்ராஹ்மண் யேவம் ரூபம் கமநம் த்ருஷ்டும் ஏவமேவ கலு சோம்யேமாசர்வா ப்ரஜாஸ் ஸதி சம்பத்ய ந விதுஸ் ஸதி ஸம்பத்ஸ் யாமஹ இதி –ததா ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச பரஸ்மின் ப்ரஹ்மண் யேவ த்ருஷ்ட –ஏஷ ப்ரஹ்ம லோகஸ் ஸம்ராடிதி ஹோவாச இதி லிங்கம் ச –மா பூதன்யத்ர தர்சனம் அஸ்மின் ப்ரகரணே ஸர்வாஸாம் ப்ரஜாநாம் ஸ்ரூயமாண மஹரஹர் கமநம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச தஹராகாச ஸஸ்ய பரமாத்மத்வே பர்யாப்தம் லிங்கம் -ச ஸப்தோ அவதாரணே -ஏததேவ பர்யாப்தமித் யர்த –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அஸ்ய

த்ருத்யாக் யஸ்ய பரமாத்மநோ மஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேரயம் பரமாத்மா –த்ருதி -ஜகத் விதரணம் பரமாத்மநோ மஹிமேத் யன்யத்ராவகம்யதே –ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதிரேஷ பூத பால ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –ஸா ச அஸ்மிந்தஹராகாஸ உப லப்யதே –அத் ய ஆத்மா ஸ ஸேதுர்வி த்ருதி ரேஷாம் லோகாநாம ஸம் பேதாய இதி –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

81-ப்ரசித்தேஸ் ச –கோ ஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத் யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸாதேவ ஸமுத்பத்யந்தே இத்யாதிஷ் வாகாஸ சப்தஸ்ய பரஸ்மின் ப்ரஹ்மணி ப்ரஸித்தே ஆகாஸ ஸப்த ஏவ பரமாத்ம தர்ம விசேஷிதோ பூதகாச சங்காம் நிவர்த்தய தீத் யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –பரமாத்மந

இதர ஜீவ அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய இத ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ஏவ தஹாராகாச இதி சேத் தன்ன பூர்வோக்தாநாம் குணாநாம் தஸ்மிந் ந சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தராத் –பிரஜாபதி வாக்யாத் அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவோ அவகம்யத இதி சேத் தன்ன ஜாகரி தாத்ய வஸ்தாபிர நாதி கால ப்ரவ்ருத்தாபி புண்ய பாப ரூப கர்ம மூலாபி திரோஹித குணக பர ப்ரஹ்மோபாஸ ஜெனிததுப ஸம்பத்த்யா ஆவீர் பூதஸ்வ ரூபோ அசவ் ஜீவஸ் தத்ர பிரஜாபதி வாக்யே அபஹத பாப்மத்வாதி குணக கீர்தித தஹராகாசஸ் த்வதி ரோஹித ஸ்வரூப அபஹத பாப் மத்வாதி குணக இத்யஸ்மிந்தஹராகாஸே ந ஜீவ சங்கா –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

தஹர வாக்யே ஜீவ பரா மர்ஸ கிமர்தமிதி சேத் தத்ராஹ

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-பரம் ஜ்யோதிஸ் ஸ்வரூப தஹராகாஸோப ஸம்பத்த்யா அஸ்ய ஜீவஸ்யா ந்ருத திரோஹித ஸ்வரூபஸ்ய ஸ்வரூப ஆவிபாவோ பவதீதி தஹராகாசஸ்ய ஜகத் விதரணாதிவஜ் ஜீவ ஸ்வரூப ஆவீர் பாவாபாதந ரூப ஸம்பத் விசேஷ ப்ரதி பாதநார்தோ ஜீவ பராமர்ஸ –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –தஹரோ அஸ்மின் நித்யல்ப பரிமாண ஸ்ருதி ராராக்ரப மிதஸ்ய ஜீவஸ்யைவோப பத்யதே ந து ஸர்வஜ் மாஜ் ஜ்யாயஸோ ப்ரஹ்மண இதி சேத் தத்ர யதுத்தரம் வக்த்வயம் தத் பூர்வமேவோக்தம் -நிசாய்யாத் வாதித்யநே ந –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச -அநு க்ருதி –அநு கார தஸ்ய பரமாத்மநோ அநு காராத்தி ஜீவஸ்ய ஆவீர் பூத ஸ்வரூபஸ்ய அபஹத பாப்மத்வாதி குணகத்வம் அதோ அநு கர்து ஜீவாத் அநு கார்ய பர ப்ரஹ்ம பூதோ தஹாராகாச அர்த்தான்தர பூத ஏவ –தத் அநு காரஸ் ச தத் ஸாம்யாபத்திஸ் ஸ்ரூயதே யதா யஸ்ய பச்யதே ருக்ம வர்ணம் கார்தாரமீசம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி இதி –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

87-அபி ஸ்மர்யதே –ஸ்மர்யதே ச தத் உபாஸநாத் தத் ஸாம்யா பத்தி ரூபாநுக்ருதிர் ஜீவஸ்ய இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித 
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித –
-கட வல்லீஷ்வாம் நாயதே —

அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே -ஏதத் வைதத் -உத்தரத்ர ச அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக -ததோ பரிஷ்டாத் அங்குஷ்ட மாத்ர புருஷோ அந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட இதி அத்ராங்குஷ்ட ப்ரமிதோ ஜீவாத்மா உத பரமாத்மேதி ஸம்சய -ஜீவாத் மேதி பூர்வ பக்ஷ –அந்யத்ர ஸ்வீக்ருத ஸ்பஷ்ட ஜீவ பாவே புருஷே அங்குஷ்ட ப்ரமிதத்வஸ்ருதே -ப்ராணாதி பஸ் ஸஞ்சரதி ஸ்வ கர்மபிர் அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்ய ரூப இதி -ராத்தாந்தஸ்து –தத்ர ஸ்வ கர்ம பிர் இதி ஜீவ பாவ நிஸ்ஸயவதத்ராபி ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பூத பவ்யேஸித்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி -ஸூத்ரார்தஸ்து –ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி பூத பவ்யேஸி த்ருத்வ தர்சநாத் பரமாத்மைவேதி
ஸூத்ரார்தஸ்து ஸப்தாதேவ ப்ரமித –அங்குஷ்ட ப்ரமித பரமாத்மைவ ஈஸாநோ பூத பவ்யஸ்யேதி பரமாத்ம வாசி ஸப்தாத்

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

கதமநவச் சின்னஸ்ய பரமாத்மநோ அங்குஷ்ட ப்ரமிதத்வ மித்யா சங்க்யாஹ
89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் 
–உபாஸ நார்த்தம் உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வாத் உபாஸக ஹ்ருதயஸ்ய அங்குஷ்ட மாத்ரத்வாத் ததபேஷயேதம் அங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸ கத்வ ஸம்பாவநயா மனுஷ்யாநதி க்ருத்ய ப்ரவ்ருத்தத் வாச்சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
 –தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

1-3-7-தேவாதி கரணம்
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத் –மனுஷ்யாதிகாரம்

ப்ரஹ்ம உபாஸந ஸாஸ்த்ரமித்யுக்தம் –தத் ப்ரசங்கேந தேவாதீ நாமபி ப்ரஹ்ம வித்யாயாம் அதிகாரோ அஸ்தி நவேதி சிந்த்யதே ந தேவாதீநாம் அதிகார அஸ்தீதி பூர்வ பக்ஷ –பரி நிஷ் பன்னே ப்ரஹ்மணி சப்தஸ்ய ப்ராமாண்ய சம்பவே அபி தேவாதீநாம் விக்ரஹாதி மத்த்வே ப்ரமாணா பவாத் மந்த்ரார்த்தவாதாநாம் -அபி விதி சேஷ தயா விக்ரஹாதி ஸத் பாவபரத்வா பாவாத் விக்ரஹவந் நிர் வர்த்யாஹரஹரநுஷ்டீயமாந விவேகாதி சாதன ஸப்தக ஸம்ஸ் க்ருதமநோ நிஷ் பாத்யோபாஸந நிர் வ்ருத்தவ் தேஷாம் ஸாமர்த்யா பாவாத்
ராத்தாந்தஸ்து –ஜகத் ஸ்ருஷ்டி ப்ரகரணேஷு நாம ரூப வ்யாகரண ஸ்ருத்யைவ தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வம் ஸித்யதி -தேவாதீ நாம் தேஹ இந்த்ரியாதி கரணமேவ ஹி நாம ரூப வ்யாகரணம் மந்த்ரார்த்த வாத யோஸ் ச ததுபலப்தே –தயோர் அநுஷ்டேய-ப்ரகாஸந ஸ்துதி பரத்வே அபி ததுப பத்தயே தத் ஸத் பாவே பிரமாணத்வாத் தேவாதீ நாம் விக்ரஹாதி மத்த்வ ஸித்தி -நஹி விக்ரஹாதி மத்தயா ஸ்துதி ப்ரகாஸநம் ச ததபாவே சம்பவதி —
அதஸ் ஸாமர்த்ய ஸம்பவாதஸ் த்யேவாதிகார –ஸூத்ரார்தஸ்து ததுபர்யபி தேப்ய –மனுஷ்யேப்ய உபரி வர்த்தமாநாநாம் தேவாதீநாமப்யதிகாரோ அஸ்தி
யத்வா தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ்வபி சம்பவதி தேஷாம் அபி ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாசன ப்ரகாரஜ் ஞாந தத் அர்த்தித்வதது பாதாந ஸாமர்த்ய சம்பவாத் –பூர்வோபார் ஜிதஜ் ஞாநா விஸ்மரணாத் ஞான ஸம்பவ தாபத்ரய அபிஹதி பூர்வக ப்ரஹ்ம குணஜ் ஞாநாச் சார்தித்வ ஸம்பவ –ஸ்ருஷ்டி வாக்ய மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹவத்த்வாதி தர்சநாத் ஸாமர்த்ய ஸம்பவஸ் சேதி பகவான் பாதராயணோ மன்யதே –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –கர்மணி யாகாதவ் விக்ரஹ வத்த்வே ஸதி ஏகஸ்ய யுகபதநேகயாகேஷு ஸந்நிதான அநுப பத்தேர் விரோத ப்ரஸஜ்யதே இதி சேத் தன்ன ஸக்தி மதாம் ஸுபரி ப்ரப்ருதீநாம் யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –விரோத இதி வர்ததே –மா பூத் கர்மணி விரோத -ஸப்தே து வைதிகே விரோத ப்ரஸஜ்யதே விக்ரஹத்த்வே ஹி தேஷாம் ஸாவ யவத்வே நோத்பத்தி விநாஸ யோகா துத்பத்தே ப்ராக் விநாஸா தூரத்வம் ச வைதிகாநாம் இந்த்ராதி ஸப்தாமாமர்தா ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாதிதி சேத் தன்ன அத ப்ரபவாத் அத வைதிகா தேவ ஸப்தாத் இந்த்ராதே ப்ரபவான் -பூர்வ பூர்வேந்திராதவ் விநஷ்டே வைதிகாதிந்ராத்யாக்ருதி -விசேஷ வாசிந ஸப்தா திந்ராத்யாக்ருதிவிசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரமபரமிந்த்ராதிகம் ஸ்ருஜிதி பிரஜாபதிரிதி வைதிகஸ்ய சப்தஸ்ய ந கச்சித் விரோத –
ந ஹி தேவதைத்தாதி ஸப்தவத் இந்த்ராதி ஸப்தா வ்யக்தி விசேஷ சங்கேத பூர்வகா ப்ரவ்ருத்தா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி விசேஷ வாசிந இதி தேஷாமபி நித்ய ஏவ வாஸ்ய வாசக பாவ வைதிகாதிந்த்ராதி சப்தாத் ததர்த்த விசேஷம் ஸ்ம்ருத்வா குலாலாதிரிவ கடாதிகம் பிரஜாபதிஸ் ஸ்ருஜதீதி குதோ அவகம் யதே -ப்ரத்யக்ஷ அனுமானாப் யாம் -ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமித்யர்த்த -ஸ்ருதிஸ் தாவத் வேதேந ரூபே வ்யாகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி –ததா ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிம ஸ்ருஜத இத்யாதிகா
ஸ்ம்ருதிரபி ஸர்வேஷாம் ச ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதுக் ப்ருதுக் வேத சப்தேப்ய ஏதாதவ் ப்ருதுக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே -நாம ரூபம் ச பூதாநாம் க்ருத்யா நாம் ச ப்ரபஞ்ச நம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீ நாம் சகார ச இத்யாதிகா –29-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

93-அத ஏவ ச நித்யத்வம் –யத ப்ரஜாபதி வைதிகாச் சப்தா தர்தாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸ்ம்ருத்வா ததாகாரம் ஸர்வம் ஸ்ருஜதி -அதஸ் ச வஸிஷ்ட விஸ்வா மித்ராதீ நாம் மந்த்ர ஸூக்தாதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மயஸ்ய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டத்யேவ–ப்ரஜாபதிர் ஹி நைமித்திக பிரளயாந்தரம் மந்த்ர க்ருதோ வ்ருணீதே -விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதீத்யாதி வேத ஸப்தேப்யோ அநதீத மந்த்ராதி தர்சன சக்த வசிஷ்டாத்ய க்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா வசிஷ்டத்வாதி பத ப்ராப்தே அனுஷ்டித கர்ம விசேஷ அம்ஸா ஸ் அநு ஸ்ம்ருத்ய தத் ஆகார விசேஷான் தான் வஸிஷ்டாதீன் ஸ்ருஜதி -தே சாநதீத்யைவ வேதைகதேஸ பூத மந்த்ராதீன் ஸ்வரதோ வர்ணதஸ் சாஸ்கலிதான் படந்தி -ததேஷாம் மந்த்ராதி க்ருத்வே அபி வேத நித்யத்வம் உப பத்யதே –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

ப்ரஜாபதி ப்ரப்ருதிஷுஸர்வேஷு தத்த்வேஷ்வ வ்யாக்ருத பர் யந்தேஷு அவ்யாக்ருத பரிணாம ரூபேஷு சப்தமயேஷி வேதேஷு ச விநஷ்டேஷ்வ வ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தவ் கதம் வேதஸ்ய நித்யத்வ மித்யத்ர ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச –அவ்யாக்ருத ஸ்ருஷ்ட்யா வ்ருத்தா வபி ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாதேவ ந கஸ்ஸித் விரோத ஆதி சர்கே அபி ஹி பரம புருஷ பூர்வ ஸம்ஸ்தாநம் ஜகத் ஸ்மரன் ததைவ ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வ அநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருதயா ஹிரண்ய கர்ப்பாய ததாதீதி -பூர்வ ஸம்ஸ்தான மேவ ஜகத் ஸ்ருஜதீதி கதமவகம்யதே -தர்சநாத் ஸ்ம்ருதேஸ் ச –தர்சனம் ஸ்ருதி அஹோ ராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோ வஸீ ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வ மகல்பயத் திவம் ச ப்ருத்வீம் சாந்தரிஷமதோ ஸூவரிதி யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச ஸ்ம்ருதிராபை யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே –த்ருஸ்யந்தே தாநி தாந்யேவ ததா பாவா யுகாதிஷு -இதி ஏததேவ வேதஸ்ய நித்யத்வம் யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம விசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேணோச் சார்யத்வம் பரம புருஷோ அபி ஸ்வரூப ஸ்வா ராதன தத் பலயாதாத்ம்யாவ போதி வேதம் ஸ்வ ஸ்வரூபவந் நித்யமேவ பூர்வ அநு பூர்வீ விசிஷ்டம் ஸ்ம்ருத்வா ஆவிஷ்கரோதி -அதோ தேவாதீநாம் ப்ரஹ்ம வித்யாதி காரே ந கஸ்சித் விரோத –29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
 –சாந்தோக்ய அசவ் வா ஆதித்யோ தேவ மது இத் யுபக்ரம்ய –தத் யத் பிரதமம் அம்ருதம் தத்வஸவ உப ஜீவந்தி இத்யுக்த்வா ஸ ய ஏததேவம் அம்ருதம் வேத வஸூநாமேவைகோ பூத்வா அக்னி நைவ முகேநைத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யதி இத்யாதிநா ருக் யஜுஸ் ஸாமாதி வேதோதித கர்ம ஸம்பாத்ய ரஸாதாரதயா மதுமயஸ் யாதித் யஸ்ய பூர்வ தக்ஷிண பஸ்ஸிமோத்தரோர்த்வாம் ஸாந் வஸூ ருத்யாதித்ய மருத் ஸாத்யநாம்நாம் தேவ கணாநாம் போக்யத்வேந அபிதாய தைர்புஜ்யமாநாகாரேணாதித்யாம் ஸாநு பாஸ்யாநு பதிஸ்ய தாநேவாதித்யாம் ஸாம்ஸ் ததா பூதான் ப்ராப்யஅநு பதி ஸதி –ஏவமாதிஷு பாஸ நேஷுவஸ்வாதீநாம் உபாஸ்யாந்தர் கதத்வேந கர்ம கர்த்ரு பாவ விரோதாத் ப்ராப்யஸ்ய வஸூத் வாதே ப்ராப்தத் வாச்ச –ராத்தாந்தஸ்து –ப்ரஹ்மண ஏவ ததவஸ் தஸ்யோ பாஸ்யாதீநாம் ஸதாம் ஸ்வா வஸ்த ப்ரஹ்ம அநு ஸந்தாநா விரோதாத் கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்தத்வா விரோதாஸ் ச வஸ்வாதீநாம் அதிகார சம்பவதீதி –ஸூத்ரார் தஸ்து மது வித்யாதிஷு வஸ் வா தீநாம் அநதிகாரம் ஜைமிநிர் மன்யதே -அசம்பவாத் -வஸ்வாதீநாம் ஏவ உபாஸ்யாநாம் உபாஸகத்வ அசம்பவாத் வஸூத் வாதே ப்ராப்தத்வாதேவ ப்ராப்யத்வா சம்பவாச் ச –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணி தேவ மனுஷ்ய யோரதிகார ஸாதாரண்யே ஸத்யபி ஜ்யோதிஷாம் ஜ்யோதி —பரம் ப்ரஹ்ம தேவா உபாஸதே இதி விசேஷ வசனம் வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதாத்தேஷு தேஷாம் அநதிகாரம் த்யோதயதி -தேவா இதி ஸாமான்ய வசனம் ச -வஸ்வாதி விசேஷ விஷய மித்ய வகம்யதே -அந் யேஷாம விரோதாத் –31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –து -ஸப்த பக்ஷம் வ்யாவர்த்தயதி –வஸ்வாதீ நாம் மது வித்யாதிஷு அதிகார ஸத் பாவம் பகவான் பாதராயணோ மன்யதே -அஸ்தி ஹி வஸ்வாதீ நாமேவோபாஸ் யத்வம் ப்ராப்யத்வம் ச இதாநீம் வஸூ நாமேவ ஸதாம் கல்பாந்தரே வஸூத் வஸ்ய ப்ராப்யத்வ சம்பவாத் ப்ராப்யத்வம் சம்பவதி -ஸ்வாத்மநாம் ப்ரஹ்ம பாவ அநு ஸந்தான ஸம்பவாது பாஸ்யத்வம் ச சம்பவதி -ய ஏதா மேவம் ப்ரஹ்ம உப நிஷதம் வேத இதி ஹி க்ருத்ஸ்நாயா மது வித்யாயா ப்ரஹ்ம வித்யாத்வ மவகம்ய தே –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி 
-ப்ரஹ்ம வித்யாயாம் ஸூத்ரஸ் யாப்யதிகாரோ அஸ்தி -நேதி ஸம்சய –அஸ்தீதி பூர்வ பக்ஷ –அர்தித்வ ஸாமர்த்ய சம்பவாத் –ஸூத்ரஸ்யாநக்நி வித்யத்வே அபி மநோ வ்ருத்தி மாத்ரத்வாத் உபாசனநஸ்ய சம்பவதி ஹி ஸாமர்த்யம் -ப்ரஹ்ம ஸ்வரூப தத் உபாஸந ப்ரகாரஜ் ஞானம் சேதிஹாஸ புராண ஸ்ரவணாதேவ நிஷ்பத்யதே
அஸ்தி ஹி ஸூத்ரஸ் யா பீதிஹாஸ புராண ஸ்ரவணாநுஜ்ஞா -ஸ்ராவயேச் சதுரோ வர்ணாந் க்ருத்வா ப்ராஹ்மண மக்ரத இதி –ததா தத்ரைவ விதுராதீ நாம் ப்ரஹ்ம நிஷ்டத்வம் த்ருஸ்யதே -உபநிஷத் ஸ்வபி -ஆஜஹாரமாஸ் ஸூத்ரா நேநைவ முகே நாலாப யிஷ்யதா இதி ஸூத்ர சப்தேநா மந்த்ர்ய ப்ரஹ்ம வித்யோபதேஸ தர்சநாச் ஸூத்ரஸ்ய அபீ ஹாதிகாரஸ் ஸூஸ்யதே –ராத்தாந்தஸ்து –உபாஸநஸ்ய மநோ வ்ருத்தி மாத்ரத்வே அபி அநதீதவே தஸ்ய ஸூத் ரஸ்ய உபாஸநோபாய பூதஜ் ஞாநா சம்பவாத் ந சார்மத்ய ஸம்பவ -கர்ம விதிவத் உபாஸநா விதயோ அபி
த்ரை வர்ணிக விஷயாத்யயநக்ருஹீதஸ் வாத்யாயோத் பன்ன ஞாந மேவ உபாஸநோபாய தயா ஸ்வீ குர்வதே —
இதிஹாஸா தயோ அபி ஸ்வாத்யாய ஸித்த மேவ ஞானம் உப ப்ரும்ஹ யந்தீதி ததோ அபி நாஸ்ய ஞான லாப –ஸ்ரவாணானுஜ்ஞா து பாப ஷயாதி பலா -விதுராதீ நாம் து பவாந்தர வாஸநய ஞான லாபாத் ப்ரஹ்ம நிஷ்டத்வம் -ஸூத்ரேத்யா மந்த்ரணம் அபி ந சதுர்த்தி வர்ணத்வேந அபி து ப்ரஹ்ம வித்யா வைகல் யாச்சு கஸ்ய ஸம்ஜா தேதி –அதோ ந ஸூத்ரஸ் யாதிகார –ஸூத்ரார் தஸ்து -ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஹம்ஸோக்தா நாதர வாக்ய ஸ்ரவணாத்ததை வாசார்யம் ப்ரத்யாத்ரவ ணாச்சார்யே தஸ்ய ஸூஷ்ரூ ஷோர் வித்யா அலாப க்ருதா ஸூக் ஸூஸ்யதே –ஹி சாப்தோ ஹேதவ் –யஸ்மா தஸ்ய ஸூகே ஸூஸ்யதே அதஸ் ஸோச நாச் ஸூத்ர இதி க்ருத்வா ஆசார்யோ ரைக்வ ஜான ஸ்ருதிம் ஸூத்ரேத்யா மந்த்ரயதே ந ஜாதி யோகே நேத்யர்த –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –-அஸ்ய ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்வாவக தேஸ் ச ந ஜாதி யோகேந ஸூத் ரேத்தயா மந்த்ரணம் ப்ரகரண ப்ரக்ரமே ஹி பஹு தாயீ இத்யாதி நா தாந பதித்வ பஹு தர பக்வாந் நதாயித்வக்ஷத்த்ருப்ரேக்ஷண பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஜாந ஸ்ருதேஸ் ஸூஸ்ரூஷோ ஷத்ரியத்வம் ப்ரதீதம் –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகம் ச காபேய மபிப்ரதாரிணம் ச இத்யாதி நா –
அப் ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணா ந்தரே ஹி காபேய ஸஹஸரிண சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச
அதோ அஸ்யாம் வித்யாயாம் அந்விதோ ப்ராஹ்மண அதிதரோ ஞான ஸ்ருதி பிர் அபி ஷத்ரியோ பவிதும் அர்ஹாதி –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபதேஸே உப த்வா நேஷ்யே இத் யுப நயன ஸம்ஸ் கார பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ சநாச்சாநதிகார -ந ஸூத்ர பாதகம் கிஞ்சிந்த ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூஸ்ரூஷோர் ஜாபாலேஸ் ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேர் நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி ப்ரதிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தாண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் பரி ஸமா பயதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் மிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் -மஹத் பயம் வஜ்ரமுத்யதம் பயாதஸ்யாக்நிஸ்தபதி இத்யாதவ் ப்ராண ஸப்த நிர் துஷ்டாங்குஷ்ட ப்ரமித ஜெனித பய நிமித்தாக்நி வாயு ஸூர்ய ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் ஸ்ரூயமாணாதங்குஷ்ட ப்ரமித பரமாத்மை வேதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

106-ஜ்யோதிர் தர்சநாத் –அஸ்மின்நேவ ப்ரகரணே தத் சம்பந்தி தயா ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி ஸர்வேஷாம் சாதகஸ்யா நவதிகாதி ஸயஸ்ய பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய ப்ரஹ்ம பூதஸ்ய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா –41—இதி ப்ரமித அதி கரணம்

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
 –சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத் 
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்ருதம் ஸ ஆத்மா இத்யத்ர ஆகாஸ ஸப்த நிர்திஷ்ட கிம் முக்தாத்மா உத பரமாத்மேதி ஸம்சய –முக்த இதி பூர்வ பக்ஷ -தூத்வா சரீர மக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவாமி இதி முக்தஸ்யாநந்தர ப்ரக்ருதத்வாத் –ராத்தாந்தஸ்து –நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா இதி ஸ்வயம் அஸ்ப்ருஷ்ட –நாம ரூப தயா நாம ரூபயோர் நிர்வோட்ருத்வேந ரூயமாணோ அயம் ஆகாசோ பக்த முக்தோபயா வஸ்தாத் ப்ரத்யகாத்மந அர்த்தாந்தரத் வாத் பரமாத்மைவ
ஸூத்ரார்த்தஸ்து –ஆகாஸ பரமாத்மா தஸ்ய நாம ரூபாயோர் நிர்வோட்ருத்வதத ஸ்பர்ச லக்ஷணார்த் தாந்தரத்வ வ்யபதேசா-ப்ரத்யகாத்மநோ ஹ்யர்த்தாந்தர பூத ஏவ நாம ரூபயோர் நிர்வோடா-பாத்தாவஸ்தஸ்தாவன் நாம ரூபாப்யாம் ஸ்ப்ருஷ்டஸ் தத் பரவஸஸ் சேதி ந நிர்வோடா முக்தஸ்யாபி ஜகத் வியாபார ரஹிதத் வான்ந நிரவோட் ருத்வம் –ஆதி சப்தேந நிருபாதிக ப்ரஹ்மத்வ அம்ருதத்வாத்மத்வா தீதி க்ருஹ்யந்தே தாநி நிருபாதிககாநி முக்தஸ்யாபி ந சம்பவந்தி –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

நநு தத்வமஸ்யாதி நைக்ய வ்யபதேஸாத் நேஹ நாநாஅஸ்தீதி பேத ப்ரதிஷே தாச்ச ந ப்ரத்யகாத்மந அர்த்தாந்தர பூத பரமாத்மேத்யா சங்க்யாஹ
108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –வ்யபேதசாதிதி வர்த்ததே –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்த ப்ராஜ்ஜேநா ஆத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் லுப்த ஸகல விசேஷ விஞ்ஞாநாத் ப்ரத்யகாத்மநஸ் ததாநீ மேவ ஸர்வஞ்ஞதயா பேத வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத எவ் பரமாத்மா –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத பரமாத்மா ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இத்யாதவ்
ஐக்யோபதேஸ பேத ப்ரதிஷேதவ் து ப்ரஹ்ம கார்யத்வ நிபந்தநா விதி –தஜ்ஜ லான் இதி -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்ருதி பிரேவ வ்யக்தவ் –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதார்த்த சாரமும் தீபமும்-மூலம்–பிரதம அத்யாயம் -பிரதம  பாதம் –

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சார- மூலஉத்த்ரியதே

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம்

ஸ்ரீ யகாந்தோ அநந்தோ வர குண கணைகாஸ் பத வபுஸ்
ஹதா சேஷாவத்ய பரகமபதோ வாங் மனஸயோ
அபூமிர் பூமிர்யோ நதஜந த்ருஸாம் ஆதி புருஷோ
மனஸ் தத் பதாப்ஜே பரி சரண ஸக்தம் பவது மே
ப்ரணம்ய சிரஸா ஆச்சார்யாம்ஸ் ததா திஷ்டேந வர்த்தமநா
ப்ரஹ்ம ஸூத்ர பதாந்தஸ்த வேதாந்தார்த ப்ரகாஸ்யதே

அத்ரேயம் ஏவ ஹி வேத விதாம் ப்ரக்ரியா –
அசித் வஸ்துநஸ் ஸ்வரூப தஸ் ஸ்வ பாவதஸ் ஸாத்யந்த விலக்ஷண -தத் ஆத்ம பூதஸ் -சேதனஸ் ப்ரத்யகாத்மா
தஸ்மாத் பத்தான் முக்தான் நித்யாச்ச –
நிகில ஹேய ப்ரத்ய நீக தயா -கல்யாண குணைக தாந தயா ச
ஸர்வ அவஸ்த சித் அசித் வ்யாபகதயா தாரக தயா -நியந்த்ரு தயா சேஷி தயா ஸாத்யந்த விலக்ஷண பரமாத்மா
யதோக்தம் பகவதா -த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச
ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத யோ லோக த்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர யஸ்மாத் ஷர மதீதோ அஹம் அஷராத் அபி சோத்தம அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தம இதி

ஸ்ருதிஸ் ச
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -பதிம் விஸ்வஸ்யாத் மேஸ்வரம்
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்திதஸ் -இத்யாதிகா
கூடஸ்த -முக்த ஸ்வரூபம் யேத்வஷரம் அநிர்தேஸ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்த்யம் ச கூடஸ்தம் அசலம் த்ருவம் இத்யாதி வ்யபதேசாத்
ஸூத்ர காரஸ் சைவமேவ வததி நேதரோ அநு பபத்தே பேத வ்யபதேசாத் அநு பபத்தேஸ் து ந சாரீர கர்ம கர்த்ரு வ்யபதேஸாச் ச ஸப்த விசேஷாத் ஸம் போக ப்ராப்திரிதி சேந்ந வைசேஷ்யாத்
ந ச ஸ்மார்தமதத் தர்மாபிலாபாச் சாரீரஸ் ச உபயே அபி ஹி பேதேநைந மதீயதே விசேஷண பேதே வ்யபதேஸாபப்யாம்

ச நேதரவ் முக்தோபஸ்ருப்ய வ்யபேதஸாச் ச ஸ்தித்யத நாப்யாம் ச
இதர பரமர்ஸாத் ஸ இதி சேந்நா சம்பவாத் உத்தராச்சேதாவிர் பூத ஸ்வரூபஸ் து ஸூஷுப்த் யுத்க்ராந்த்யோர் பேதேந பத்யாதி ஸப்தேப்ய -அதிகம் து பேத நிர்தேசாத் அதி கோபதே ஸாத்து பாதாரயணஸ் யைவ தத் தர்சநாத் ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச்ச இத்யாதிபி
ந ஸாவித்யா க்ருத முபாதி க்ருதம் வா பேதம் ஆஸ்ரித்யைதே நிர்தேஸா -இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகதா–சர்கே அபி நோப ஜயந்தி ப்ரலயே ந வ்யதந்தி ச ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி -முக்தோபஸ்ருப்ய வ்யபதாஸாச் ச உத்தராச் சேத் ஆவிர்பூத ஸ்வரூபஸ்து

ஸம்பத்ய ஆவீர்பாவஸ் ஸ்வேந ஸப்தாத் ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹிதத் வாச் ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச இதி ஸர்வ அவித்ய உபாதி விநிர் முக்த மதி க்ருத்யைவ பேத உபபாதநாத்
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரேஷு ஸர்வத்ர பேதே நிர்திஷ்டே -சித் அசித் ஈஸ்வர ஸ்வரூப பேதஸ் ஸ்வா பாவிகோ விவஷித இதி நிஸ் சீயதே
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம –தஜ்ஜலா நிதி சாந்த உபாஸீத -வாசா ரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –
ஸ தேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமே அத்விதீயம் –ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத –சந் மூலாஸ் சோம்யேமாஸ் ஸர்வா ப்ரஜாஸ் ஸதாயதநாஸ் ஸத் ப்ரதிஷ்டா
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-

தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ஸ்வேத கேதோ ஷேத்ரஞ்ஞம் ஷாபி மாம் வித்தி தத் அந்யத் வமாராம்பண ஸப்தாதிப்ய இதி பரஸ்ய ப்ரஹ்மண -காரணத்வம் க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய கார்யத்வம் காரணாத் கார்யஸ்ய அநந்யத்வம் சோஸ்யமாந மேவமேவோப பத்யதே
ஸர்வ அவஸ்தஸ்ய சித் அசித் வஸ்துந பரமாத்ம ஸரீரத்வம் பரமாத்மானஸ்சாத்மத்வம் யஸ் ப்ருதிவ்யாம் திஷ்டன்யஸ்ய ப்ருத்வீ ஸரீரம் -யஸ் ஆத்மநி திஷ்டன்யஸ்ய யாத்மா ஸரீரம் யஸ் ஆத்மநம் அந்தரோ யமயதி –யஸ்ய அவ்யக்தம் ஸரீரம் -யஸ்ய அக்ஷரம் சரீரம் –யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் -ஏஷ ஸர்வம் பூதம் அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -அந்த ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்ம இத்யாதி ஸ்ருத்ய ஏவ உப திஷ்டமிதி
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட பரமாத்மா காரணம் -ஸ ஏவ பரமாத்மா ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கார்யமிதி -காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச சித் அசித் வஸ்து சரீர கதயா தத் ப்ரகார பரமாத்ம ஏவ ஸர்வ ஸப்த வாஸ்ய இதி பரமாத்ம சப்தேந ஸர்வ ஸப்த சாமானதி கரண்யம் முக்ய மேவ உப பன்நதரம்
அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சாபவத் இத்யாதி ஸ்ருதி ரேவ மமர்த்தம் உப பாதயதி
ஸர்வம் ஆத்மதயா அநு ப்ரவிஸ்ய தச் சரீரத்வேந ஸர்வ ப்ரகார தயா ஸ ஏவ ஸர்வ ஸப்த வாஸ்யோ பவதீத் யர்த
பஹுஸ்யாம் இதி பஹு பவந சங்கல்போ அபி நாம ரூப விபாகா நர்ஹாதி ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கதயைகதா அவஸ்தி தஸ்ய விபக்த நாம ரூப சித் அசித் சரீர கதயா பஹு ப்ரகாரதா விஷய இதி வேதவித் ப்ரக்ரியா -யே புநர் நிர்விசேஷ கூடஸ்த ஸ்வ ப்ரகாஸ நித்ய சைதன்ய மாத்ரம் ப்ரஹ்ம ஞாதவ்யத யோக்தமிதி வதந்தி தேஷாம்
ஜந்மாத் யஸ்ய யத
ஸாஸ்த்ர யோநித்வாத்
தத் து சமன்வயாத்
ஈஷதேர் நா ஸப்தம் –இத்யாதே
ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத ஸ நந் நிஹிதத் வாச்ச போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
அநா வ்ருத்திஸ் ஸப்தாதந அநா வ்ருத்திஸ் ஸப்தாத் இத்யந் நஸ்ய ஸூத்ர கணஸ்ய ப்ரஹ்மணோ ஜகத் காரணத்வ பஹுபவந ஸங்கல்ப ரூபேஷணாத் யநந்த விசேஷ ப்ரதிபாதன பரத்வாத் ஸர்வம் ஸூத்ர ஜாதம் ஸூத்ர காரோதாஹ்ருதா
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இத்யாத்யா -ஸர்வ ஸ்ருதயஸ் ச ந சங்கச்சந்தே
அதோச்யேத யேநாஸ்ருதம் ஸ்ருதம் இத் யேக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞானம் ப்ரதிஜ்ஞாய -யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இத்யேகம் ம்ருத் பிண்டாரப்த கட ஸராவாதீநாம் தன் ம்ருத் பிண்டாத் அநந்ய த்ரவ்ய தயா தஜ் ஞாநேந தேஷாம் ஞாததேவ ப்ரஹ்ம ஞாநேந ததாரப் தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் ஆத்ம கஸ்ய ஜகதஸ் தஸ்மாதநதிரிக்த வஸ்து தயா ஞாததா ஸம்பவ தீத் யுப பாத்ய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதீதம் ஸப்த வாஸ்யஸ்ய சித் அசித் ஆத்மக ப்ரபஞ்சஸ்ய ஸ்ருஷ்டே பிராங் நிகில பேத ப்ரஹாணேந ஸச் ஸப்த வாஸ்யேநைகதா பத்திம் கட சராவாத் யுத்பத்தே ப்ராக் உத்பாதக ம்ருத் பிண்ட ஏகதா பத்திவத் அபிதாய ததைக்ஷத பஹுஸ் யாம் இதி ததேவ ஸச் ஸப்த வாச்யம் ப்ரஹ்ம சித் அசித் ஆத்மக ப்ரபஞ்ச ரூபேண ஆத்ம நோ பஹு பவநம் ஏக ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி ரூபேண பஹு பவந வத் சங்கல்ப்ய ஆத்மாந மேவ தேஜஸ் ப்ரப்ருதி ஜகத் ஆகாரேண அஸ்ருஜதேதி சாபிதாய ஐததாம் யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா தத்வமஸி இத்யபிதா நாத் ப்ரஹ்மைவா வித்யா க்ருதேந பாரமார்த்திகேந வோபாதிநா ஸம்பத்தம் தேவாதி ரூபேண பஹு பூத மதி வேதவித் ப்ரப்யுவ கந்தவ்யமிதி தத யுக்தம் ஞாஜ்ஜவ் த்வாவஜாவீ சனீஸவ் நித்யோ நித்யோநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் இத்யபி ஸ்ருதி பி
ஜீவா நாமஜத்வ நித்யத்வ பஹத்வ வசநாத் யதி கட சராவாதேருத் பத்தே ப்ராகேகீ பூதஸ்யைவ ப்ரஹ்மணஸ் ஸ்ருஷ்ட் யுத்தர காலீநம் நாநாவித ஜீவ ரூபேண பஹுத்வம் உச்யதே ததா ஜீவானாம் அஜத்வ நித்யத்வ பஹுத்வாதி விருத்யதே
ஸூத்ரவிரோதஸ் ச இதர வ்யபதேசாத் ஹிதா கரணாதி தோஷ ப்ரஸக்தி இதி ப்ரஹ்மைய தேவ மனுஷ்யாதி ஜீவ ஸ்வரூபேண பஹு பூதம் சேதாத்மநோ ஹித கரணாதி தோஷ ப்ரஸக்திரித் யுக்த்வா அதிகம் து பேத நிர்தேசாத் இதி ஜீவாத் ப்ரஹ்மணோ அர்த்தாந்தரத்வம் யுக்தம் –
ததா ச வைஷம்ய நைர்க்கருண்யே ஜீவா நாம் பூர்வ பூர்வ கர்ம அபேக்ஷத்வாத் விஷம ஸ்ருஷ்டே இதி பரிஹ்ருதே –
ததா ந கர்மாவிபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யு பலப்யதே ச இதி ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இதி ஸ்ருஷ்டே பிராக விபாக வஸனாத் ஸ்ருஷ்டே ப்ராக் ஜீவா நாம பாவாத் தத் கர்ம ந ஸம்பவதீதி பரிசோத்ய ஜீவா நாம் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வாதிதி பரிஹ்ருதம் -நாத்ம ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இத்யாத்மந உத்பத்த்ய பாவஸ் சோக்தோ நித்யத்வம் ச ஸ்வாப் யுபகம விரோதஸ் ச
ஆமோஷாஜ் ஜீவ பேதஸ்யாநாதித்வம் ஸர்வை ரேவ ஹி வேதாந்தி ப்ரப்யுப கம்யதே -அதஸ் ஸ்ருதி விரோதாத் ஸூத்ர விரோதாத் ஸ்வாப்யுபக விரோதாஸ் ச ஸ்ருஷ்டே பிராகே கத்வாவதாரணம் நாம ரூப விபாகாபாவாபிப்ராயம் நாம ரூப விபாகா நர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து ஸக்தி பேத ஸஹம் சேதி ஸர்வைரப்யுப கம்யதே –இயாம்ஸ் து விசேஷ அவித்யா பரி கல்பநே அப்யுபாதி பரி கல்பநே அபி ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்யா வித்யா சம்பந்தி நஸ் சோபாதி சம்பந்தி ந சேதனஸ் யா பாவாத வித்யோபாதி ஸம்பந்தவ் தத் க்ருதாஸ் ச தோஷா ப்ரஹ்மண ஏவ பவேபுரிதி சந் மாத்ர ப்ரஹ்ம வாதே அபி ப்ராக் ஸ்ருஷ்டேஸ் சந் மாத்ரம் ப்ரஹ்மைக மேவ ஸ்ருஷ்ட் யுத்தர காலம் போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண த்ரிதா பூதம் சேத்
கட சராவ மணிக வஜ் ஜீவேஸ்வரயோர் உத்பத்தி மத்த்வம நித்யத்வம் ச ஸ்யாத் -அதை கத்வா பத்தி வேலாயாமபி போக்த்ரு போக்ய நியந்த்ரு ஸக்தி த்ரயம் அவஸ்திதம் இதி சேத் கிமிதம் ஸக்தி த்ரய ஸப்த வாஸ்யமிதி விவேச நீயம் –
யதி சந் மாத்ரஸ்யைகஸ் யைவ போக்த்ரு போக்ய நியந்த்ரு ரூபேண பரிணாம ஸாமர்த்யம் ஸக்தி த்ரய -ஸப்த வாஸ்யம் ஏவம் தர்ஹி ம்ருத் பிண்டஸ்ய கட சராவாதி பரிணாம சமர்த்தஸ்ய தத் உத்பாதகம் இவ ப்ரஹ்மண ஈஸ்வர அதீநாம் உத்பாதகத்வம் இதி தேஷாம நித்யத்வ மேவ அதேஸ் வராதீ நாம் ஸூஷ்ம ரூபேண அவஸ்திதி ரேவ ஸக்தி ரித் யுச்யேத தர்ஹி ததரிக்தஸ்ய சந் மாத்ரஸ்ய ப்ரஹ்மண ப்ரமாணா பாவாத் ததப் யுபகமே ச தத் உத்பாத்ய தய ஈஸ்வர அதீனாம் அநித்யத்வ பிரசங்காச் ச த்ரயாணாம் நாம ரூப விபாகா நர்ஹ -ஸூஷ்ம தஸா பத்திரேவ ப்ராக் ஸ்ருஷ்டே ரேகத்வா வதாரணாவ ஸேயேதி வக்தவ்யம்
ந ததா தேஷாம் ப்ரஹ்மாத்ம கத்வ அவதாரணம் விருத்யதே
அதஸ் ஸர்வ அவஸ்தா வஸ்தி தஸ்ய சித் அசித் வஸ்துந ப்ரஹ்ம சரீரத்வ ஸ்ருதேஸ் ஸர்வதா ஸர்வ சப்தைர் ப்ரஹ்மைவ கார்ய பூதம் ஜகத் நாம ரூப விபாகாநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம காரண மிதி ததேவ ம்ருத் பிண்டஸ்தாநீயம் -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் இத்யுச்யதே -ததேவ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து விசிஷ்டம் ப்ரஹ்ம கார்யமிதி ஸர்வம் சமஞ்ஜஸம்
ஸ்ருதி நியாய விரோதஸ்து தேஷாம் பாஷ்யே ப்ரபஞ்சித இதி நேஹ ப்ரதன்யதே -பாஷ்போதித அதிகரணார்த்த ச ஸூத்ரார்த்த விவரண ஸூக க்ரஹணாய ஸம் ஷேபண உபன்யஸ்தே

சாரீரக அத்யாய பதார்த்த ஸங்க்ரஹ
தத்ர ப்ரதமே பாதே -ப்ரதான புருஷா வேவ ஜகத் காரண தயா வேதாந்தா ப்ரதிபாத யந்தீத்யா சங்க்ய ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குணாகரம் ப்ரஹ் மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யந்தீத் யுக்தம் –
த்விதீய த்ருதீய சதுர்த பாதேஷு காநிசித் வேதாந்த வாக்யாநி ப்ரதாநாதி ப்ரதிபாதன பராணீதி தன் முகேந ஸர்வ அசேஷபமா சங்க்ய தான்யபி ப்ரஹ்ம பராணீத் யுக்தம்
தத்ர அஸ் பஷ்ட ஜீவாதி லிங்க காநி வாக்யாநி த்விதீயே நிரூபிதாநி -ஸ்பஷ்ட லிங்ககாநி த்ருதீயே -சதுர்தே து ப்ரதாநாதி ப்ரதிபாதநச் சாயாநு ஸாரீணீத விசேஷ
அத பிரதம அத்யாயே ஸர்வம் வேதாந்த வாக்ய ஜாதம் -ஸார்வஞ்ய-ஸத்ய சங்கல்பத்வாதி யுக்தம் ப்ரஹ்மைவ ஜகத் காரண தயா ப்ரதிபாத யதீதி ஸ்தாபிதம்

த்வதீயே து ஸாங்க்யாதி வேத பாஹ்ய பக்ஷ ப்ரதிக்ஷேப முகேந தஸ்யை வாதரணீ யதா ஸ்திரீக்ருதா

த்ருதீய சதுர்த்யோ வேதாந்த வாக்யாநாமன்யோன்ய விப்ரதிஷேதாதி தோஷ கந்தாபாவக்யாபநாய வியதாதீநாம் ப்ரஹ்ம கார்யதா ப்ரகாரோ விசோத்யதே

தத்ர த்ருதீய பாதே ச சித் அசித் பிரபஞ்சஸ்ய ப்ரஹ்ம கார்யத்வே ஸத்யப்யசிதம் ஸஸ்ய ஸ்வரூபான் யதா பாவேந கார்யத்வம் சிதம்ஸஸ்ய ஸ்வ பாவான் யதா பாவேந ஞான சங்கோச விகாஸ ரூபேண கார்ய தோதிதா

சதுர்தே

து ஜீவ உபகரணாநாம் இந்த்ரியாதீநாம் உத்பத்தி ப்ரகார இதி ப்ரதமேநாத்யா யத்வயேந முமுஷுபிர் உபாஸ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிஸய அசங்க்யேய கல்யாண குண கணம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்மேதி ப்ரதிபாதிதம்
உத்தரேண த்வயேந ப்ரஹ்ம உபாஸன ப்ரகாரஸ் தத் பல பூத மோக்ஷ ஸ்வரூபம் ச சிந்த்யதே

தத்ர த்ருதீயஸ்தே பிரதம பாதே ப்ரஹ்ம உபாஸிஸிஷ உத்பத்த்யே ஜீவஸ்ய ஸம் ஸரதோ தோஷா கீர்திதா

த்விதீயே சோபாஸிஸிஷ உத்பத்த்யேஏவ ப்ரஹ்மணோ நிரஸ்த நிகில தோஷதா கல்யாண குணாகரதா ரூப உபய லிங்கதா ப்ரதிபாத்யதே

த்ருதீயே து ப்ரஹ்ம உபாஸன ஏகத்வ நாநாத்வ விசார பூர்வகம் உபாஸநேஷு உப ஸம்ஹார்ய அநுப ஸம்ஹார்யகுண விசேஷா பிரபஞ்சிதா

சதுர்த்தே து உபாசனஸ்ய வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாகத்வம் யுக்தம்

சதுர்த்த அத்யாயே ப்ரஹ்ம உபாஸனபல சிந்தா க்ரியதே

தத்ர ப்ரதமே பாதே ப்ரஹ்ம உபாசன பலம் வக்தும் உபாசன ஸ்வரூப பூர்வக உபாசன அநுஷ்டான ப்ரகாரோ வித்யா மஹாத்ம்யம் சோஸ்தே

த்விதீய து ப்ரஹ்ம உபாஸீநாநாம் ப்ரஹ்ம ப்ராப்தி கத் யுபக்ரமே பிரகார சிந்தித

த்ருதீயே த்வர்ச்சிராதிகதி ஸ்வரூபம் அர்ச்சிராதி நைவ ப்ரஹ்ம ப்ராப்திரிதி ச ப்ரதிபாத்யதே

சதுர்தே து முக்தஸ்ய ப்ரஹ்ம அநுபவ பிரகாரஸ் சிந்த்யதே –
அதோ முமுஷு பிர் ஞாதவ்யம் நிரஸ்த நிகில தோஷ கந்தம் அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா கரம் நிகில ஜகத் ஏக காரணம் பரம் ப்ரஹ்ம தஜ் ஞானம் ச மோக்ஷ சாதனம் அஸக்ருதாவ்ருத்த ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் உபாஸனாத்மகம் உபாஸன பலம் ச அர்ச்சிராதிநா பரம் ப்ரஹ்ம உபஸம்பத்ய ஸ்வ ஸ்வரூப பூத ஞானாதி குண ஆவிர்பாவ பூர்வக அநந்த மஹா விபூத்ய அநவதிக அதிசய அநந்த ப்ரஹ்ம அனுபவோ அபுனரா வ்ருத்தி ரூப இதி சாரீரிக ஸாஸ்த்ரேண யுக்தம் பவதி

1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

அதிராயம் அத ஸப்த ஆனந்தர்யே வர்த்ததே -அதஸ் ஸப்த சிரஸ்கத்வாத் -அதஸ் ஸப்தஸ் ச பூர்வ வ்ருத்தஸ்ய ஹேதுபாவே -பூர்வ வ்ருத்தம் ச கர்மஜ் ஞானம் இதி விஞ்ஞாயதே ஆரிப்ஸிதஸ்ய ப்ரஹ்ம ஞானஸ்ய வேதார்த்த விஸாரைகதேஸத்வாத் –அதீத வேதஸ்ய ஹி புருஷஸ்ய கர்ம ப்ரதிபாதநோபக்ர மத்வாத் வேதாநாம் கர்ம விசார ப்ரதமம் கார்யம் இதி -அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா -இத்யுக்தம் -கர்மணாம் ச ப்ரக்ருதி விக்ருதி ரூபாணாம் தர்மார்த்தகாம ரூப -புருஷார்த்த சாதனதா நிஸ்ஸய -ப்ரபுத்வாதார்த்விஜ்யம் இத்யந்தேந ஸூத்ர கலாபேந ஸம் கர்ஷேணேந க்ருத –ஏவம் வேதஸ்யார்த –பரத்வே கர்மணாம் ச ததர்தத்வே தேஷாம் ச கேவலாநாம் த்ரிவர்க பலத்வே நிஸ்ஸிதே சதி வேதைகதேஸ பூத வேதாந்த பாகே கேவல கர்மணாம் அல்ப அஸ்திர பலத்வம் ப்ரஹ்ம ஞானஸ்ய ச அநந்த ஸ்திர பலத்வம் ஆபாததோ த்ருஷ்ட்வா அனந்தரம் முமுஷோ ரவதாரிதபரி நிஷ்பன்ன வஸ்து போத ஜனந ஸப்த சக்தே -புருஷஸ்ய ப்ரஹ்ம புபுத்ஸா ஜாயத இதி அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா இதி கர்ம விசார அநந்தரம் தத ஏவ ஹேதோர் ப்ரஹ்ம விசார கர்தவ்ய இத் யுக்தம் பவதி –ததிதமாஹ ஸ்ருதி –
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந்நாஸ்த்யக்ருத க்ருதேந தத் விஞ்ஞா நார்தம் ஸ குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் பிரசாந்த சித்தாய சமான்விதாய யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாஸதாம் தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம் இதி
ப்ராஹ்மண -வேத அப்யாஸ ரத -கர்ம சிதான் –கர்மணா ஸம்பாதிதான் லோகான் –ஆராத்யக்ஷயிஷ்ணுத்வேந க்ஷயஸ்வபாவான் கர்ம மீமாம்ஸயா பரீஷ்ய அக்ருத -நித்ய பரம புருஷ க்ருதேந -கர்மணா ந ஸம்பாத்ய இதி யோ நிர்வேத மாயாத் ஸ தத் விஞ்ஞானார்தம் குருமேவ அபி கச்சேத் ஸமித் பாணி -ஸ்ரோத்ரியம் -வேதாந்த வேதிநம் ப்ரஹ்ம நிஷ்டம் -சாஷாத் க்ருத பரம புருஷ ஸ்வரூபம் -ஸ -குரு -ஸம்யகுபஸந்நாய தஸ்மை யேந வித்யா விஸேஷேண அக்ஷரம் –ஸத்யம் பரம புருஷன் வேத வித்யாத் -தாம் ப்ரஹ்ம வித்யாம் ப்ரோவாஸ –பரப்ரூயாத் இத்யர்த –ஸ குருமேவ அபி கச்சேத் –தஸ்மை ஸ வித்வான் ப்ரோவாஸ இத்யன்வயாத் அப்ராப்தத்வாச் ச விதாவபி லிடோ விதாநாத் –சந்தஸி லங் லிட் இதி –-1- இதி ஜிஜ்ஞாஸ அதிகரணம் –1-

க -க- க 1-1-1-ஜிஜ்ஞாஸ அதிகரணம்
1-ஓம் அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா 

ப்ரஹ்ம மீமாம்ஸா விஷய ஸா கிம் ஆரம்பணீயா உத அநாரம்பணீ யேதி ஸம்சய -ததர்தம் பரஷ்யதே -வேதாந்தா கிம் ப்ரஹ்மணி ப்ரமாணம் உத நேதி
ததர்தம் பரி நிஷ்பந்நே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்ய அவதாரணம் சம்பவதி நேதி ந சம்பவதி இதி பூர்வ பக்ஷ
ஸம்பவதீதி ராத்தாந்த -யதா ந சம்பவதி -ததா பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதன ஸாமர்த்யா பாவாத் ஸித்த ரூப ப்ரஹ்மணி ந வேதாந்தா ப்ரமாணம் இதி தத் விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆராம்பணீயா யதா சம்பவதி ததா ஸித்த்யேப்யர்த்தே சப்தஸ்ய போதனா ஸாமர்த்ய சம்பவாத் வேதாந்தா ப்ரஹ்மணி பிரமாணம் இது சா சாரம்பணீயா ஸ்யாத் -அத்ர பூர்வ பக்ஷ வாதீ மன்யதே –வ்ருத்த வ்யவஹாராத் அந் யத்ர வ்யுத்பத்த்ய சம்பவாத் வ்யவஹாரஸ்ய ச கார்ய புத்தி பூர்வகத்வேந கார்ய ஏவார்த்தே ஸப்த சக்த்வ தாரணாத் பரி நிஷ் பன்னே அர்தே ப்ரஹ்மணி ந வேதாந்தா பிரமாண மிதி தத் விசாரரூபா ப்ரஹ்ம மீமாம்ஸா ந ஆரம்பணீயேதி -ஸித்தாந்தஸ்து பாலா நாம் மாதா பித்ரு ப்ரப்ருதி -அம்பாதாத மாதுல ஸிஸூ பஸூ பக்ஷி ம்ருகாதி ஷு அங்குல்யா நிர்திஸ்ய-தத் தத் அபிதாயிநஸ் ஸப்தான் ப்ரயுஞ்ஞாநை -க்ரமேண பஹுஸஸ் ஸிஷிதாநாம் தத் தச் ஸப்த ஸ்ரவண சம நந்த்ரம் ஸ்வாத்மநா மேவ ததர்த்த புத்தி யுத்பத்தி தர்சநாத் சப்தார்த்தயோ ஸம்பந்த அந்தரா தர்சநாத் சங்கே தயித்ரு புருஷாஜ் ஞாநாச் ச போத்ய போதக பாவ ஏவ சப்தார் தயோஸ் ஸம்பந்த இதி நிஸ் சின்வாநாநாம் பரி நிஷ் பன்னே அர்தே சப்தஸ்ய போதகத்வ அவதாரணம் ஸம்பவ தீதி ப்ரஹ்மணி வேதாந்த வாக்யா நாம் ப்ராமாண்யாத் ததர்த்த விசாராகாரா ப்ரஹ்ம மீமாம்ஸா ஆராம்பணீயேதி
ஸூத்ரரார் தஸ்து –அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா –அத இத்யா நந்தர்யே-அத இதி ச வ்ருத்தஸ்ய ஹேதுபாவே ப்ரஹ்மணோ ஜிஞ்ஞாஸா ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–ஞாதும் இச்சா ஜிஞ்ஞாஸா=இச்சாயா இஷ்ய மாண ப்ரதாநத்வாதிஷ்ய மாணம் ஞானம் இஹாபிப்ரேதம்
பூர்வ வ்ருத்தாத் அல்ப அஸ்திர பல கேவல கர்மாதிகமாத நந்தரம் தத ஏவ ஹேதோர் அநந்த ஸ்திர பல ப்ரஹ்மாதிகம கர்தவ்ய –க —ஜிஞ்ஞாஸாதி கரணம் –க –

1-1-2-
2-ஜந்மாத் யஸ்ய யத
 -அஸ்ய விசித்ர சித் அசித் மிஸ்ரஸ்ய வ்யவஸ்தித ஸூக துக்க உப போகஸ்ய ஜகத- ஜன்ம ஸ்திதி லயா யத தத் ப்ரஹ்மேதி ப்ரதிபாதயதி ஸ்ருதிரித் யர்த –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இதி –ஸூத்ரே யத இதி ஹேதவ் பஞ்சமீ ஜனி ஸ்திதி லயாநாம் ஸாதாரணத்வாத் -ஜநி ஹேதுத்வம் ச நிமித்த உபாதான ரூபம் விவஷிதம் -யத இதி ஹி ஸ்ருதி -இஹ உபய விஷயா கதமிதி சேத் -யதோ வா இமாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் ச உபய விக்ஷயத்வாத் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம் -ததைஷத பஹுஸ் யாம் ப்ரஜாயேயேதி –தத் தேஜோ அஸ்ருஜத இத்யத்ர ஸதேவ இதம் அக்ர ஏகமேவ ஆஸீதிதி உபாதாநநாம் ப்ரதிபாத்ய –அத்விதீயம் இதி அதிஷ்டாத் ரந்த்ர நிவாரணாத் ஸச் ஸப்த வாஸ்யம் ப்ரஹ்மைவ நிமித்தம் உபாதாநம் சேதி விஞ்ஞாயதே –ததா ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாத்மந ஏவ விசித்ர ஸ்திரத்ரஸ ரூபேண பஹு பவநம் ஸம் கல்ப்ய ததைவ ஸ்ருஷ்டி வசநாச் ச –அதஸ் ஸ்ருதா வபி யத இதி ஹேதவ் பஞ்சமீ –அத் ரைவ ப்ரஹ்மணோ ஜகன் நிமித்த தத்வம் உபாதாநத்வம் ச ப்ரதிபாதநம் -அர்த விரோதாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி விசேஷ ஸ்ருத்யா சாஷிப்ய ப்ரக்ருதிஸ் ச ப்ரதி ஞாத்ருஷ்டாந்தாநு பரோதாத் அபித்ய உபதேஸாச் ச ஸாஷாச் சோபாயாம்நாநாத் ஆத்ம க்ருதே இத்யாதி பிர் ஸூத்ரை பரி ஹரிஷ்யதே –2–

நநு ச ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி ஸத்ய ஸங்கல்பம் நிரவத்ய தயா நிரஸ்த ஸமஸ்தா புருஷார்த்த கந்தம் ப்ரஹ்மைவாத்மாநம் விசித்ர சித் அசித் மிஸ்ரம் ஜகத் ரூபமிதம் ஸர்வமஸ்ருஐதேதி கதமுப பத்யதே –ததேதத் ஸூத்ர கார ஸ்வயமேவ பரி சோத்ய பரி ஹரிஷ்யதி –அபீதவ் தத்வத் ப்ரசங்காத ஸமஞ்ஸம் இதர வ்யபதேசாத்திதா கரணாதி தோஷ பிரசித்தி -இதி சோத்யம் -பரிஹாரஸ்து ந து த்ருஷ்டாந்த பாவாத் அதிகம் து பேத நிர்தேசாத் இதி ச –ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்ய ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந சாதிப க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷராத்மாநாவீஸதே தேவ ஏக அசித் வர்கம் ஸ்வாத்மநோ போக்யத்வேந ஹரதீதி போக்தா ஹர இத்யுச்யதே

த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அக்ஷர ஏவ ச –ஷரஸ் ஸர்வாணி பூதாநி கூடஸ்தோ அக்ஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத –யோ லோக த்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர

யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அக்ஷராதபி சோத்தம –அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம –இத்யாதி ஸ்ருதி ஸ்ம்ருதி கணை ப்ரத்யகாத்மநோ அதிகமர்த்தாந்தர பூதம் ப்ரஹ்ம தச்ச ப்ரத்யகாத்ம சரீர கதயா தத் ஆத்ம பூதம் ப்ரத்யகாத்மநஸ் தச் ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மவத் வஞ்ச யா ஆத்மநி திஷ்டன் யஸ்ய ஆத்மா ஸரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் ஸ சரீரஸ் யாத்மந கார்ய அவஸ்தா ப்ராப்தா வபி குண தோஷ வ்யவஸ்திதே ர் த்ருஷ்டாந்த பாவாத் ப்ரஹ்மணி ந தோஷ ப்ரஸக்தி இதி நா ஸாமஞ்ஜஸ்யம் வேதாந்த வாக்யஸ்யே தி ந து த்ருஷ்டாந்த பாவாத் இத்யுக்தம் த்ருஷ்டாந்தஸ் ச தேவ மனுஷ்யாதி ஸப்த வாஸ்யஸ்ய ஸ சரீரஸ் யாத்மந மனுஷ்யோ பாலோ யுவா ஸ்தவிர இதி நாநாவஸ்தா ப்ராப்தா வபி பாலத்வ யுவத்வ ஸ்தவிரத் வாதய-சரீர கதா தோஷா நாத்மாநம் ஸ்ப்ருசந்தி ஆத்ம கதாஸ் ச ஞான ஸூகாதய ந சரீரமிதி -அத கார்யா வஸ்தாம் காரணா வஸ்தம் ச ப்ரஹ்ம ச ப்ரஹ்ம ப்ரத்யகாத்ம சரீர தயா தத் ஆத்ம பூதமிதி ப்ரத்யகாத்ம வாசிநா சப்தேந ப்ரஹ்ம அபிதாநே தச் ஸப்த ஸாமாநாதி கரண்யே ச ஹேதும் வக்தும் நிரஸ நீயம் மதத்வயம் ப்ரதிஞ்ஞா ஸித்தே லிங்கமாஸ்மரத்ய -உத்க்ர மிஷ்யத ஏவம் பாவாதித் யவ்டுலோமி இத் யுபந்யஸ்ய அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இதி ஹேதுருக்த தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் ஸச் ச த்யச்சா பவத் இத்யாதிநா ப்ரத்யகாத்மா ஆத்ம தயா அவஸ்தாநாத் ப்ரஹ்மணஸ் தச் சப்தேநாபிதாநம் –தத் ஸாமாநாதி கரண்யேன வ்யபதேசாச் சேத் யுக்தம் –ததா வைஷம்ய நைர் க்ருண்யே ந ஸாபேஷத்வாத் ந கர்மா விபாகா திதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப் யுபலப்யதே ச இதி தேவ மநுஷ்யாதி விஷம ஸ்ருஷ்டேர் ஜீவ கர்ம நிமித்தத்வம் ஜீவாநாம் தத் தத் கர்ம ப்ரவாஹணாம் சாநாதித்வம் ச ப்ரதிபாத்ய ததநாதித்வம் ச நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஜ்ஞாஜ்ஜவ் த்வவ் இத்யாதி -ஸ்ருதி ஷுபலப்யத இத் யுக்த்வா தத நாதித்வ அபி ப்ரலய காலே சித் அசித் வஸ்துநோர் போக்த்ரு போக்யயோர் நாம ரூப விபாகா பாவாத் ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் – நான்யத் கிஞ்சந மிஷத் இத்யாதாவே கத்வாவதாரண முப பத்யதே இதி ஸூத்ர காரேண ஸ்வயமேவ யுக்தம் –ததா ச நாத்மா ஸ்ருதேர் நித்யத்வாச்ச தாப்ய இதி ப்ரத்யகாத்மநோ நித்யத்வாதநுத் பத்தி முக்த்வா ஜ்ஜோ அத ஏவ இதி தஸ்ய ஞாத்ருத்வ மேவ ஸ்வரூப மித்யுக்தம் –
உத் க்ராந்திகத்யாகதீநாம் இத்யாதிநா அனுத்வம் சோக்தம் –தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேஸ ப்ராஜ்ஞவத் யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் இதி ஜ்ஞாது சப்தேந வ்யபதேஸோ ஞான குண சாரத்வாத் ஞாநைக நிரூபணீய ஸ்வ பாவத் வாச்சேத் யுக்தம்
நித்யோபலப்த்யநுபலப்தி பிரசங்கோ அந்நிய தர நியமோ வான்யதா இதி ஞான மாத்ர ஸ்வரூபாத்ம வாதே ஹேத்வாந்தராயத் தஜ் ஞாநவாதே ஸர்வ கதாத்மவாதே ச தோஷ உக்த –கர்தா ஸாஸ்த்ரார்த்த வத்த்வாத் உபாதாநாத் விஹாரோபதேஸாச் ச வ்யபதேஸாச் ச க்ரியா யாம் ந சேந்நிர்தேஸ விபர்யய உப லப்திவத நியம சக்தி விபர்யயாத் ஸமாத்ய பாவாச் ச -யதா ச தஷோ அபயதா இத்யாத்மந ஏவ ஸூபாஸூபேஷு கர்ம ஸூ கர்த்ருத்வம் ப்ரக்ருதேர கர்த்ருத்வம் ப்ரக்ருதேஸ் ச கர்த்ருத்வே தஸ்யாஸ் சாதாரணாத்வேந ஸர்வேஷாம் பல அநுபவ பிரசங்காதி ச ப்ரதிபாதிதம் –பராத்து தச் ஸ்ருதே –க்ருத ப்ரயத்நாபேஷஸ்து விஹித ப்ரதிஷித்தா வையர்த் யாதிப்ய -இத்யாத்மந ஏவ கர்த்ருத்வம் பரம புருஷாநுமதி ஸஹ க்ருத மித்யுக்தம்
அம்ஸோ நாநா வ்யபதேஸாத் அந்யதா சாபி தாஸகித வாதித்வ மதீயத ஏகே மந்த்ர வர்ணாத் அபி ஸ்மர்யதே ப்ரகாசாதி வத்து நைவம் பர ஸ்மரந்தி ச இதி அநீஸயா ஸோசதி முஹ்யமாந –ஜுஷ்டம் யதா பஸ்யத்யன்யமீஸமஸ்ய மஹிமாநமிதி வீத ஸோக -ஷரம் த்வவித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே யஸ்து ஸோ அந்நிய ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிம்ச ந வேத நாந்தரம் தயோர் அந்நிய பிப்பலம் ஸ்வாத் வத்தி அநஸ்நந் நந்யோ அபிசாக ஸீதி ஜ்ஞாஜ்ஜவ் த்வாவஜாவீஸ நீசவ் பிருதகாத்மாநம் ப்ரேரி தாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ்தேநாம்ருதத்வமேதி யதா பஸ்யஸ் பஸ்யதே ருக்ம வர்ணம் கர்தார மீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சந பரமம் ஸாம்யம் உபைதி -ஸ காரணம் கரணாதிபாதியோ ந சாஸ்ய கஸ்சிஜ் ஜனிதா ந ஸாதிப -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் இத்யாதி ஷு ப்ரத்யகாத்மந -பரமாத்மநஸ் ச கர்ம வஸ்யத்வேந ஸோசித்ருத்வேநா ஸர்வஜ்ஞத்வேந உபாஸநாயத்த முக்தித்வேந நிர்வத்யத்வேந ஸர்வஞ்ஞத்வேந ஸத்ய சங்கல்பத்வேந சர்வேஸ்வரத்வேந ஸமஸ்த கல்யாண குணா கரத்வாதிநா ச ஸ்வரூபஸ்ய ஸ்வ பாவஸ்ய நாநத்வ வ்யபதேஸாத் –தயோரேவ தத்வமஸி அயமாத்மா ப்ரஹ்ம யோ அசவ் ஸோ அஹம் யோ அஹம் ஸோ அசவ் அத யோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்யோ அஸா வந்யோ அஹமஸ் மீதி ந ஸவேத அக்ருத்ஸ்நோ ஹ்யேஷ ஆத்மேத்யேவோபா ஸீத ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா இதி ச ஸர்வ ஜீவாத்ம வ்யாபித்வேநா பேத வ்யபதேஸாச் ச உபய வ்யபதேஸா விரோதேந பரமாத்மாம்ஸோ ஜீவாத்மேத் யப்யுப கந்தவ்யம்

ந கேவலம் ந்யாய ஸித்த மிதம் ஸ்ருதி ஸ்ம்ருதி ப்யாம் சாம்ஸத்வ முக்தம் ஜீவாத்மந -பாதோ அஸ்ய விச்வா பூதாநி மமைவ அம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூதஸ் ஸநாதந இதி -அம்சத்வம் நாம ஏகவஸ்த்வேகதேஸத்வம் –ததா ஸத் யுபயோ ரேக வஸ்துத்வேநா விரோதோ ந ஸ்யாதித்யா சங்க்ய ப்ரகாசாதி வத்து நைவம் பர இதி பரி ஹரதி
அந்நிய விஸேக்ஷணதைக ஸ்வபாவ ப்ரகாஸ ஜாதி குண சரீர விஸிஷ்டாநக்நிவ்யக்தி குண் யாத்மந -ப்ரதி ப்ரகாஸ ஜாதி குண ஸரீராணாம் யதா அம்சத்வம் ஏவம் பரமாத்மாநம் ப்ரத்யகாத்ம ஸரீரகம் ப்ரதி ப்ரத்யகாத்மநோ அசம்த்வம் ஏவமம்சத்வே யத் ஸ்வ பாவ அம்ச பூதோ ஜீவ நைவ மம்ஸீ பரமாத்மா ஸர்வத்ர விஸேக்ஷண விஸேஷ்ய யோஸ் ஸ்வரூப ஸ்வ பாவ பேதாத் –ஏவஞ்ச கர்தா சாஸ்த்ரார் தவத்வாத் பராத்து தச் ஸ்ருதி இத்ய நந்த ரோக்தம் ச ந விருத்யதே

ஏவம் ப்ரகாஸ சரீரவஜ் ஜீவாத்மநா மம்ஸத்வம் பராஸராதய ஸ்மரந்தி ச
ஏக தேச ஸ்திதஸ்ய அக்நேர் ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண ஸக்திஸ் ததேயமகிலம் ஜகத்
யத் கிம்சித் ஸ்ருஜ்யதே யேந சத்த்வ ஜாதேந வை த்விஜ
தஸ்ய ஸ்ருஜயஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரேஸ்தநு
தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோரம்ஸ ஸமுத்பவா இதி

அந்யதா பாரமார்த்திகா பாரமாத்திகோபாதி சமாஸ்ரயணேந ப்ரத்யகாத்மநோ அஸம்த்வே ப்ரஹ்மண ஏவ வேதாந்த நிவர்த்யா ஸர்வே தோஷா பவேயுரிதி ஆபாசா ஏவ ச இத்யாதி ஸூத்ரைருக்தம் -அதஸ் ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா ததாத்ம பூதமேவ ப்ரஹ்ம கதாசித விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் காரண அவஸ்தம் கதாசிச் ச விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரம் தத் கார்ய அவஸ்தம் ப்ரஹ்ம -ஸர்வதா சித் அசித் வஸ்து சரீர கதயா தத் விஸிஷ்டத்வேத்மபி ப்ரஹ்மண பரிணாமித்வா புருஷார்த்த ஆஸ்ரயத்வே சரீர பூத சேதன அசேதன வஸ்து கதே ஆத்ம பூதம் ப்ரஹ்ம ஸர்வதா நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அஸங்க்யேய ஞான ஆனந்தாத் யபரிமித உதார குண சாகரம் அதிஷ்டத இதி ப்ரஹ் மைவ ஜகன் நிமித்தம் உபாதாநம் சேதி யதோ வா இமாநி இத்யாதி வாக்யம் ப்ரதிபாதயத்யேவேதி ஜந்மாத் யஸ்ய யத தத் ப்ரஹ்மேதி ஸூஷ்டூக்தம்

ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யஸ்ய சாயமர்த -யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய அவ்யக்தம் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதி ஸ்ருதே -ப்ரஹ்மண ஸர்வதா சித் அசித் வஸ்து சரீரகத்வாத் சதேவேதமீதாநீம் ஸ்தூல சித் அசித் வஸ்து சரீர கத்வேந விபக்த நாம ரூபம் அக்ரே ப்ரலய காலே ஸூஷ்ம தஸா பன்ன சித் அசித் வஸ்து சரீரகதயா நாம ரூப விபாக அநர்ஹாமேவ ஆஸீத் -ஸ்வயமேவ ப்ரஹ்ம ஸர்வஞ்ஞம் ஸர்வ ஸக்தி நிமித்தாந்தராநபேஷமத்விதீயம் சாதிஷ்டத்

ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி தன்நாம ரூப விபாகாநர்ஹா ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரகதயா ஏகமேவாவஸ்திதம் நாம ரூப விபாகார்ஹா ஸ்தூல தசாபத்த்யா பஹு ப்ரகாரம் ஸ்யாமிதி ஐக்ஷத –ஸ்யாம் ப்ரஜாயேய இதி வ்யஷ்டி சமஷ்டி வ்யபதேஸ –சித் அசிதோ பரஸ்ய ச ப்ரலய காலே அபி வ்யவஹாரா நர்ஹா ஸூஷ்ம பேத ஸர்வைர் வேதாந்தி ப்ரப்யுபகத அவித்யா க்ருத பேதஸ்ய உபாதி க்ருத பேதஸ்ய ச அநாதி த்வாப் யுபகமாத் இயாம்ஸ்து விசேஷ -ப்ரஹ்மைவாஜ்ஞம் உபாதை ஸம்பத்தம் சேதி ஸர்வ ஸ்ருதி ந்யாய விராதோ அந்யேஷாம் –ததபாவாத விரோதஸ் ச அஸ்மாகம் இதி —2-இதி ஜந்மாத் யதி கரணம் –2-க க உ –1-1-2-


உ -2- ஜந்மாத் யஸ்ய யத –
தைத்தரீயகே –யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி -யத் ப்ரயந்த் யபி ஸம் விஸந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம இத்யேதத் வாக்யம் விஷய
கிமேதஜ் ஜிஜ்ஞாஸ்ய தயா ப்ரதிஞ்ஞாதம் ப்ரஹ்ம ஜகஜ் ஜன்மாதி காரண தயா லக்ஷண தஸ் ப்ரதிபாத யிதும் சக்நோதி ந வேதி ஸம்சய -ந சக்நோ தீதி பூர்வ பக்ஷ —
குத -ஜகஜ் ஜன்மாதீநாம் உப லக்ஷண தயா விசேஷணதயா வா ப்ரஹ்ம லக்ஷணத்வா சம்பவாத்
உப லக்ஷணத்வே ஹ்யுபலஷ்யஸ் யாகாராந்தர யோகோ அபேக்ஷித -ந சேஹ ததஸ்தி அத உப லக்ஷணத்வம் ந சம்பவதி விசேஷணத்வே அபி அநேக விசேஷண விசிஷ்டதயா அபூர்வஸ்யை கஸ்ய ப்ரதிபாத கத்வம் ன் சம்பவதி விசேஷணாநாம் வ்யாவர்த்தகத்வேந விசேஷண பஹுத்வே ப்ரஹ்ம பஹுத்வ ப்ரஸக்தே
-ராத்தாந்தஸ்து ஏகஸ்மின் ந விருத்தா நாம் விசேஷணாநாம் அநேகத்வ அபி ஸ்யாமத்வ யுவத்வாதி விஸிஷ்ட –தேவ தத்தவஜ் ஜகஜ் ஜன்மாதி விசிஷ்டம் ப்ரஹ்மைக மேவ விசேஷ்யம் பவதி
உப லக்ஷணத்வே ஜன்மாதி பிருப லஷ்யஸ்ய ப்ரஹ்ம ஸப்தாவகத ப்ருஹத் த்வாத் யாகாராஸ் ச சந்தீதி ஜகஜ் ஜன்மாதி –காரணம் ப்ரஹ்மேதி லக்ஷணத ப்ரதிபாதயிதம் சக்நோ தீதி –ஸூத்ரார்த்த -அஸ்ய விவித விசித்ர போக்த்ரு போக்ய பூர்ணஸ்ய ஜகத யதோ ஜன்மாதி தத் ப்ரஹ்மேதி பிரதிபாதயிதும் சக்நோத்யே தத் வாக்யமிதி –உ–இதி ஜந்மாத் யதிகரணம் —

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வ அதி கரணம்
3 ஸாஸ்த்ர யோநித்வாத் –

ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விஸிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதாநத்வம் நிமிதத்வம் ச நாநுமாந கம்யமிதி ஸாஸ்த்ர ஏக ப்ராமாணகத் வாத்தஸ்ய யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயத்யேவேதி ஸித்தம் –3-இதி ஸாஸ்த்ர யோநித்வதி கரணம்

1-1-3- -ஸாஸ்த்ர யோநித்வாத்
யதோ வா இமாநி –இத்யாதி வாக்யமேவ விஷய
தத் கிம் ஜகாத் காரணே ப்ரஹ்மணி ப்ரமாணம் -உத நேதி ஸம்சய -நைதத் பிரமாணம் இதி பூர்வ பக்ஷ -அநுமான ஸித்த ப்ரஹ்ம விக்ஷயத்வாத்–பிரமாணாந்தரா விஷயே ஹி ஸாஸ்த்ரம் பிரமாணம் -ஜகதஸ் சாவ யத்வேந கார்யத்வாத் –கார்யஸ்ய ஸ்வ உபாதான உப கரண ஸம் ப்ரதான ப்ரயோஜனாத் யபிஜ்ஞ கர்த்ருகத்வாத் ஜகந் நிர்மாண கார்ய சதுர -கர்ம பரவஸ பரிமித ஸக்த்யாதி ஷேத்ரஞ்ஞ விலக்ஷணஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ ஸக்தஸ் ஸர்வேஸ்வர அநுமான ஸித்த இதி தஸ்மிந் யதோ வா இமாநி பூதாநி இத்யாதி வாக்யம் பிராமணம் இதி -ராத்தாந்தஸ்து -ஜகத கார்யத்வே -அப்யேகதைவைகேநைவ க்ருத்ஸ்னம் ஜகத் நிர்மித மித்யத்ர ப்ரமாணா பாவாத் -ஷேத்ரஞ்ஞாநா மேவ விலக்ஷண புண்யா நாம் ஞான ஸக்தி வைசித்ர்ய ஸம்பாவ நயா காதாசித் கஸ்ய சிஜ் ஜகத் ஏகதேச நிர்மாண ஸாமர்த்ய சம்பவாத் தததிரிக்த புருஷ அநுமானம் ந சம்பவதீதி ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மணஸ் தத் ப்ரதிபாதகத்வேந தஸ்மிந் -யதோ வா இமாநி பூதாநி –இத்யாதி வாக்கியம் -ப்ரமாணம் இதி —
ஸாஸ்த்ரம் யோநி -யஸ்ய காரணம் பிரமாணம் தத் ப்ரஹ்ம ஸாஸ்த்ர யோநி -பிரமாணாந்தர அவிஷயத்வேந ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் ப்ரஹ்மண தஸ்மிந் யதோ வா இமாநி இத்யாதி -வாக்யம் பிரமாணம் இதி ஸூத்ரார்த்த –3-இதி -ஸாஸ்த்ர யோநித்வாதி கரணம் –3

1-1-4-சமன்வய அதி கரணம்
4-தத் து சமன்வயாத் –

புருஷார்த தயா அந்வய ஸமன்வய சாஸ்த்ராக்ய ப்ரமாணஸ்ய புருஷார்த்த பர்யவசாயித்வே அபி ப்ரஹ்ம ஸ்வஸ்ய பரஸ்ய சாநுபவிது -அவிஸேஷேண ஸ்வரூபேண குணை விபூத்யா ச அநுபூயமாநம் அநவதிக அதிசய அநந்த ரூபமிதி புருஷார்தத்வேநாபி தேயதயா அந்வயாத் ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வ முபபந்ந தரமிதி நிரவத்யம் நிகில ஜகதேக காரணம் ப்ரஹ்ம வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுக்தம்-தஸ்யை கஸ்யை கதைவ க்ருத்ஸ்ன ஜகன் நிமித்தத்வம் தஸ்யைவோபாதாநதயா ஜகத் ஆத்மகத்வம் ச நாநுமாநாதி கம்யமிதி ஸாஸ்த்ரக பிரமாண கத்வாத் தஸ்ய ச அநவதிக அதிசய அநந்த ரூப தயா பரம புருஷார்தத்வாத் வேதாந்தா ப்ரதிபாத யந்த்யேவ இதி ஸ்திரீக்ருதம் –-4-இதி ஸமன்வய அதி கரணம் –4-

4- தத் து சமன்வயாத் 
ப்ரஹ்மணஸ் ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி நேதி விசார்யதே –ந ஸம்பவ தீதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரவ்ருத்தி நிவ்ருத்த் யன்வய விரஹிணோ ப்ரஹ்மணி ஸ்வரூபேணா புருஷார் தத்வாத் புருஷார்த்த அவ போதகத்வேந ச ஸாஸ்த்ரஸ்ய ப்ராமாண்யாத்-மோக்ஷ சாதன ப்ரஹ்ம த்யான விதி பரத்வே அபி அஸத்யபி ப்ரஹ்மணி தத் த்யான விதாந சம்பவாத் ந ப்ரஹ்ம ஸத்பாவே தாத்பர்யமிதி ப்ரஹ்மண -ஸாஸ்த்ர ப்ரமாணகத்வம் ந சம்பவதி
ராத்தாந்தஸ்து அதிசயித குண பித்ரு புத்ராதி ஜீவனஜ் ஞானவத் அநவதிக அதிசய அநந்த ஸ்வரூப ப்ரஹ்ம ஞானஸ்ய நிரதிசய புருஷார் தத்வாத் தஸ்ய ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சம்பவதி -ஆனந்தோ ப்ரஹ்ம -யதேஷ ஆகாஸ ஆனந்தோ ந ஸ்யாத் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இத்யாதிபிர் அநவதிக அதிசய அநந்தஸ்வரூபம் ப்ரஹ்மேதி ஹி ப்ரதிபாத்யதே –
அதோ ப்ரஹ்ம ஸ்வேந பரேண வா அப் யநுபூயமாநம் நிரதிசய அனந்த ஸ்வரூப மேதி தத் ப்ரதிபாதன பரஸ்யைவ ஸாஷாத் புருஷார்த்த அன்வய -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரஸ்ய து தத் ஸாத்ய பல சம்பந்தாத் புருஷார்த்த அந்வய இதி
ஸூத்ரார்த்த -து ஸப்த ப்ரஸக்தா சங்கா நிவ்ருத்யர்த்த –தத் பூர்வ ஸூத்ர உதிதம் ப்ரஹ்மண ஸாஸ்த்ர யோநித்வம் சமன்வயாத் ஸித்த்யதி –ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி —4- இதி சமன்வய அதிகரணம் -4-

———–

அத பரம் பாத ஸேஷேண ஜகத் காரண தயா ப்ரதான புருஷ ப்ரதிபாதநா நர்ஹாதயா ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் நிரஸ்தாவித்யாதி -ஸமஸ்த தோஷ கந்தமபரிமிதோதார குண சாஹரம் ப்ரஹ்மைவ வேதாந்தா ப்ரதிபாத யந்தீத் யுச்யதே –தத்ர தாவத் ப்ரதாநம் வேதாந்த பிரதிபாதநா நர்ஹாமித்யாஹ

1-1-5-ஈஷத் யதி கரணம்
5- ஈஷதேர் நா ஸப்தம்
 –அஸப்தம் ஆநு மாநிகம் ப்ரதாநம் ந தத் வேதாந்த வேத்யம் –குத –ஈஷதே –ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் இதி ப்ரஸ்துத ஜகத் காரண வ்யாபாரவாசிந –ஈஷதேர்தாதோ ஸ்ரவணாத் ததைஷத பஹு ஸ்யாம் இதி –5-

1-1-5-ஈஷத் அதிகரணம்
5-ஈஷதேர் நா ஸப்தம்

யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி -ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் விஷய
தத் கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் –உத அநவதிக அதிசய அநந்தம் ப்ரஹமேதி ஸம்சய –ப்ரதானமிதி பூர்வ பக்ஷ —
குத
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அன்வயேநாநுமாநாகார வாக்ய வேத்யத்வாத் –
யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதிநா -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாநம் ப்ரதிஞ்ஞாய -யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந இதி த்ருஷ்டாந்தேந ஹ்யுபபாத்யதே -ஏவம் அநு மானிகம் ஏவ ஏதத் வாக்ய வேத்யமிதி நிஸ் சீயதே –
ஸதேவ சோம்யேதம் இதி சச்சப்த ப்ரதான விஷய -ததைஷத பஹுஸ்யாம் இதி ச கௌணம் ஈஷணம் பவிதுமர் ஹாதி தத்தேஜ ஐஷத -இத்யாதி கௌணேக்ஷண ஸாஹசர்யாச் ச -ராத்தாந்தஸ்து –ததைக்ஷத பஹுஸ்யாம் இதி பஹு பவந ஸங்கல்ப ரூபேக்ஷண அந்வயாத் -ஸதேவ சோம்ய இதி காரண வாசி ஸச் ஸப்த விஷயோ நா சேதநம் ப்ரதாநம் -அபி து ஸார்வஜ்ஞய ஸத்ய சங்கல்பாதி யுக்தம் பர ப்ரஹ்மை வேதி நிஸ் சீயதே -ந ச அநு மானாகார மேதத் வாக்யம் ஹேதுத்வநு பாதாநாத்
அந்ய ஞாநேநாந்யஜ் ஞாநா ஸம்பவ பரிஜிஹீர்க்ஷயா து த்ருஷ்டாந்த உப பாதாநாம் –ந ச முக்யேக்ஷண சம்பவே கௌண பரிக்ரஹ ஸம்பவ –தேஜஸ் ப்ரப்ருதி சரீரகஸ் யாந்தர் யாமிணோ வாசகத்வாதிதி பரமேவ ப்ரஹ்ம ஜகத் காரண வாதி வேதாந்த வேத்யம் –இதை –
ஸூத்ரார்த்தஸ் ச –ஈஷதேரிதி ஈஷதிதாத்வர்தஸ் ஈஷணம் –ஸப்த ப்ரமாணம் யஸ்ய ந பவதி தத ஸப்தம் -பரோக்தமாநுமாநிகம் ப்ரதாநம் –
ஸதேவ சோம்யேதம் இதி ஜகத் காரண தயா ப்ரதிபாதித அந்வயிந ஈஷண வ்யாபாராந்நா சேதனம ஸப்தம் தத் அபி து ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் ப்ரஹ்மைவ ஜகத்காரணமிதி நிஸ் சீயதே –இதி –5-

6-கௌணஸ் சேந்நாத்ம ஸப்தாத் —
தத் தேஜ ஐஷத இத்யாதிஷ்வ சேதநே அபி வஸ்துநி ஈஷதிஸ் ஸ்ரூயதே தத்ர கௌண =ஏவமத்ராபி ப்ரதான ஏவேக்ஷதிர் கௌண இதி சேத் நைததுப பத்யதே ப்ரஸ்துதே ஸச் ஸப்த வாஸ்யே ஸ்ரூயமாணாச் சேதன வாசிந ஆத்ம ஸப்தாத் ஸ ஆத்மா தத்த்வமஸி ஸ்வேத கேதோ இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே -தேஜ ப்ரப்ருதிஷ்வபி ந கௌணமீ க்ஷணம் –தேஜ ப்ரப்ருதி ஸப்தைரபி தத் தச் சரீரகம் ப்ரஹ்மைவாபி தீயதே அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ப்ரஹ்மாத்மக ஜீவ அநு பிரவேசா தேவ ஸர்வஸ்ய வஸ்துநோ நாம ரூப பாக்த்வாத் –தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் தத் அநு ப்ரவிஸ்ய-ஸச் சத்யாச்சாபவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச –விஞ்ஞானம் சா விஞ்ஞானம் ச –ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமபவத் இதி சேதனமசேதநம் ச ப்ருதங் நிர்திஸ்ய ததுபயமநு ப்ரவிஸ்ய சத்யச் ஸப்த வாஸ்யோ அபவதிதி ஹி ஸமாந ப்ரகரணே ஸ்பஷ்டமபிஹிதம்

6-கௌணஸ் சேந் நாத்ம ஸப்தாத்
தத்தேஜ ஐக்ஷத -இத்ய சேதனகத கௌணேக்ஷண சாஹசர்யாத் -ததைக்ஷத இத்யர்த ஈஷதிர் கௌண இதி சேந்ந ஆத்ம சப்தாத் –
ஸச் ஸப்தாபிஹிதே ஈஷிதரி ஐ ததாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா இதி ஸ்ரூயமாணாச் சேதன வாசிந –
ஆத்ம ஸப்தாதயமீக்ஷதிர் முக்ய ஏவேதி ப்ரதீயதே –ஐததாத்ம்யமிதம் ஸர்வம் இதி தேஜ ப்ரப்ருதீ நாமபி ததாத்மகத்வாவகமாத் தேஜ ப்ரப்ருதீ ஷணமபி முக்யமே வேத்யபி ப்ராய –6-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேஸாத் –இதஸ் ச ப்ரதாநாதர் தாந்தர பூதம் ப்ரதாநாதர் தாந்தர பூதம் ஸச் ஸப்தாபி ஹிதம் ஜகத் காரணம் -ஸச் ஸப்தாபிஹித தத்த்வ நிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் –தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஹி தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதிஸ்யதே -ப்ரதான காரணவாதி நாமபி ஹி ப்ரதான நிஷ்டஸ்ய மோஷோநாபிமத-7-

7-தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத்
இதஸ் ச ஸச் ஸப்தாபி ஹிதம் ந ப்ரதாநம் அபி து பரமேவ ப்ரஹ்ம –தத்த்வமஸி இதி ஸதாத்மகதயா ப்ரத்யகாத்ம அநு ஸந்தான நிஷ்டஸ்ய தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யே அத ஸம்பத்ஸ்ய இதி மோக்ஷ உப தேசாத் தத் காரணம் பரமேவ ப்ரஹ்ம -7-

8-ஹேயத்வா வசநாச் ச –யதி ப்ரதானமத்ர விவஷிதம் ததா தஸ்ய ஹேயத்வாத் அத்யேயத்வமுச்யேத ந த்துச்யதே -மோக்ஷ சாதநதயா த்யேயத்வமே வாத்ரோச்யதே தத்த்வமஸி ஸ்வேத கேதோ இத்யாதிநா –8-

8-ஹேயத்வா வசநாச் ச —
யதி ப்ரதாநம் இஹ காரண தயா விவஷிதம் ததா தஸ்ய மோக்ஷ விரோதித்வாத்தே யத்வம் உச்யதே -ந சோஸ்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் –8-

இதஸ் ச ந ப்ரதாநம்
9-ப்ரதிஜ்ஞா விரோதாத் —

ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா விரோதாத் -ஸச் ஸப்த வாஸ்ய தத்த்வ ஞாநேந தத் கார்ய தயா சேதன அசேதன ஸர்வ வஸ்து ஞானம் யேநாஸ்ருதம் ஸ்ருதம் பவதி இத்யாதி நா ப்ரதிஞ்ஞாதம் தத்தி ப்ரதான காரண வாதே விருத்யதே-சேதநஸ்ய ப்ரதான கார்யத்வாபாவாத் -ப்ரதாநாதர்தாந்தர பூத ப்ரஹ்ம காரண வாதே சித் அசித் வஸ்து சரீரம் ப்ரஹைவ நாம ரூப விபாகா விபாகாப்யாம் கார்யம் காரணம் சேதி ப்ரஹ்ம ஞாநேந க்ருத்ஸ்நஸ்ய ஞாததோப பத்யதே –9-

9-ப்ரதிஞ்ஞா விரோதாத்
ப்ரதான வாதே ப்ரதிஞ்ஞா ச விருத்யதே யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி வஹ்யமாண காரண விஞ்ஞாநேந சேதன அசேதன மிஸ்ர க்ருத்ஸ்ன ப்ரபஞ்ச ஞானம் ஹி ப்ரதி ஞாதம் -சேதன அம்சம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் தஜ் ஞாநேந சேதன அம்சோ ந ஞாயத இதி ந ப்ரதாநம் காரணம் -9-

இதஸ் ச ந பிரதானம்
10-ஸ்வாப்யயாத் –
-ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய விஜாநீஹி இதி –யத்ரை தத் புருஷஸ் ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி -ஸ்வம பீதோ பவதி தஸ்மாதேநம் ஸ்வபிதீத்யாசக்ஷதே -ஸ்வம் ஹ்யபீதோ பவதிஇதி ஜீவஸ்ய சேதனஸ்ய ஸூஷுப்தஸ்ய ஸதா சம்பந்நஸ்ய ஸ்வாப்யவசநாத் ப்ரதாநாதர்தாந்தர பூதம் ஸச் ஸப்த வாஸ்யமிதி விஞ்ஞாயதே –ஸ்வம பீதோ பவதி–ஆத்மாந மேவ ஜீவோ அபீதோ பவதீத்யர்தா -சித் வஸ்து சரீரகம் ததாத்ம பூதம் ப்ரஹ்மைவ ஜீவ சப்தேநாபி தீயத இதி நாம ரூப வ்யாகரண ஸ்ருத் யுக்தம் -தஜ் ஜீவ சப்தாபிதேயம் பரம் ப்ரஹ்மைவ ஸூஷுப்தி காலே அபி ப்ரலய கால இவ நாம ரூப பரிஷ்வங்காபாவாத் கேவல ஸச் சப்தாபிதேயமிதி ஸதா ஸோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வமபீதோ பவதி இத்யுச்யதே –ததாஸமாந ப்ரகரணே நாம ரூப பரிஷ்வங்காபாவேந ப்ராஜ்ஜேநைவ பரிஷ்வங்காத் ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ் வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் இத்யுச்யதே -ஆமோஷாஜ் ஜீவஸ்ய நாம ரூப பரிஷ்வங்கதேவ ஹி ஸ்வ வ்யதிரிக்த விஷய ஞான உதய –ஸூஷுப்தி காலே ஹி நாம ரூபே விஹாய ஸதா ஸம் பரிஷ் வக்த -புநரபி ஜாகரதஸாயாம் நாம ரூபே பரிஷ் வஜ்ய தத் தன்நாம ரூபோ பவதீதி ஸ்ருத் யந்தரே ஸ்பஷ்டமபிதீயதே யதா ஸூ ப்த ஸ்வப்நம் ந கதஞ்சன பஸ்யதி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி -ஏதஸ்மாதாத்மந ப்ராணா யதாயதநம் விப்ரதிஷ்டந்தே ததா த இஹ வ்யாக்ரோ வா ஸிம்ஹோ வா வ்ருகோ வா வராஹோ வா யத் யத் பவந்தி இதி –10-

10-ஸ்வாப்யயாத்
ஸ்வம் அபீதோ பவதி -ஸதா சோம்ய ததா ஸம்பந்நோ பவதி இதி ஜீவஸ்ய ஸூஷுப் தஸ்ய ஸ்வாப்யயஸ் ஸ்ரூயதே -ஸ்வ காரணே ஹ்யப் யய ஸ்வாப்யய–ஜீவம் ப்ரதி ப்ரதானஸ்யா காரணத்வாத் ஸ்வாப்யய ஸ்ருதி விருத்யதே –அதஸ் ச ந ப்ரதாநம் அபி து ப்ரஹ்மைவ –10-

11-கதி சாமான்யாத் –ஸகல உபநிஷத் கதி ஸாமாந்யாதஸ் யாமப் யுப நிஷதி ந ப்ரதாநம் காரணமிதி ஞாயதே ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் ஸ ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி ஸ இமால் லோகாநஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்ஸிஜ் ஜநிதா ந சாதிப இத்யாதி ஸகல உப நிஷத்ஸூ ஸர்வேஸ்வர ஏவ ஹி ஜகத் காரணமிதி ப்ரதி பாத்யதே –11-

11-கதி சாமான்யாத்
இதர உப நிஷத் கதி சாமான்யா தஸ்யாம் சோபநிஷதி ந ப்ரதாநம் காரணம் விவஷிதம்
இதராஸூ சோபநிஷத்ஸூ -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்–தஸ்மா தேதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னம் ச ஜாயதே பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச ஸ காரணம் கரணாதிபாதிப ஆத்மநி கல்வரே விதிதே ஸர்வமிதம் விதிதம் -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய விஸ்வ ஸிதமேதத்யத்ருக்வேத புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் தஸ்மாத் விராட ஜாயத ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத்
ஸ இமான் லோகந ஸ்ருஜத தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் =ஸ ஏகாகீ ந ரமேத இதி ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஏவ காரணதயா ப்ரதிபாத்யதே -அஸ்யாஸ் ச தத் கதி சாமான்யா தத்ராபி ஸ ஏவ காரண தயா ப்ரதிபாதன மர்ஹா தீதி ந ப்ரதாநம் –11–

12-ஸ்ருதத்வாச் ச –ஸ்ருதமேவ ஹ்யஸ்யாம் உப நிஷதி -ஆத்மத ப்ராண –ஆத்மந ஆகாஸ இத்யாதவ் ஆத்மந ஏவ ஸர்வ உத்பத்தி -அத ப்ரதாநாத சேதநாதர்தாந்தர பூதஸ் ஸர்வஞ்ஞ-புருஷோத்தம ஏவ ஜகத் காரணம் ப்ரஹ்மேதி ஸ்திதம் —12-இதி ஈஷத் யதி கரணம் –5-

12-ஸ்ருதத் வாஸ் ச
ஸ்ருதமே வாஸ்யாம் உப நிஷதி ஆத்மத ஏவேதம் ஸர்வம் இதி -அதஸ் ச ஸதேவ சோம்ய இத்யாதி ஜகத் காரணவாதி வேதாந்த வேத்யம் ந ப்ரதாநம் -ஸர்வஞ்ஞம் ஸத்ய ஸங்கல்பம் பரம் ஏவ ப்ரஹ்ம இதி ஸ்திதம் —இதி -ஈஷத் யதிகரணம் –5-

—————–

1-1-6-ஆனந்த மய அதி கரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸாத் 
–யத்யபி ப்ரதாநாதர்தாந்தர பூதஸ்ய ப்ரத்யகாத்மநஸ் சேதநஸ்ய ஈஷண குண யோக ஸம்பவதி ததா அபி ப்ரத்யகாத்மா பத்தோ முக்தஸ் ச ந ஜகத் காரணம் -தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாராப்ய தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யஸ்ய ஆனந்த மயத்வ ப்ரதி பாதநாத் காரண தயா வ்யபதிஷ்டோ அயம் ஆனந்த மய ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -குத அப்யாஸாத் ஆனந்த மயஸ்ய நிரதிசய தயா ஸிரஸ்காநந்த மயத்வேநாப்யாஸாத் தே யே சதம் ப்ரஜாபதேர் ஆனந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் சந இதி ஹி வேத்யத்வேநாயமாநந்த மயோ அநவதிக அதிசயோ அப் யஸ்யயதே –13-

1-1-6- ஆனந்த மய அதிகரணம்
13-ஆனந்த மயோ அப்யாஸத்

தைத்திரீயகே –தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இதி -ப்ரக்ருத்ய தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இத்யத்ர ஜகத் காரண தயா அவகத -ஆனந்தமய -கிம் ப்ரத்யகாத்மா -உத பரமாதமேதி ஸம்சய -ப்ரத்யகாத்மேதி பூர்வ பக்ஷ -குத -தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா இத் யாநந்த மயஸ்ய சாரீரத்வ ஸ்ரவணாத் –ஸாரீரோ ஹி சரீர சம்பந்தீ -ச ச ப்ரத்யகாத்ம ஏவ -தஸ்ய சேதநத்வேநேஷா பூர்விகா ஸ்ருஷ்டி ரூப பத்யத இதி -ராத்தாந்தஸ்து -ஸ ஏஷ ஆனந்தஸ்ய மீமாம்ஸா பவதி இத்யாராப்ய-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் இதி நிரதிசய தஸா சிரஸ்கோ அப்யஸ்யமாந ஆனந்த ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மண இதி நிஸ் சீயதே -சாரீராத்மத்வம் ச பரமாத்மந ஏவ தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத -இத்யாகாஸாதி ஜகாத் காரண தயா அவகத ஏவான் நமயஸ்ய சாரீர ஆத்மேதி ப்ரதீயதே ஆத்மாந்தர நிர்தேசாத்
ஸ்ருத் யந்த்ரேஷு -ப்ருதிவ் யக்ஷராதீநாம் சரீரத்வம் பரமாத்மந ஆத்மத்வம் ச ஸ்ரூயதே யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாராப்ய-ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி
அன்னமயஸ் யாத்மைவ ப்ராண மயாதிஷு தஸ்யைக்ஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இத் யநுக்ருஷ்யத இதி ப்ரத்யகாத்மநோ விஞ்ஞான மயஸ்ய ச ஸ ஏவ சாரீர ஆத்மா -ஆனந்த மயே து தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா யஸ் பூர்வஸ்ய இதி நிர்தேச -ஆனந்தமயஸ்யாநன்யாத்மத்வ ப்ரதர்சநார்த்த -அதோ ஜகத் காரண தயா நிர்திஷ்டம் ஆனந்தமய பரமாத்மைவேதி —
ஸூத்ரார்தஸ்து –ஆனந்த மய ஸப்த நிர் திஷ்ட ஆகாசாதி ஜகாத் காரணபூதஸ் ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ் பரமாத்மா –
குத
தஸ் யாநந்தஸ்ய நிரதிசய ப்ரதீதி பலாத் -ஸ ஏகோ மாநுஷ ஆனந்த -தே யே சதம் இத்யாத் யப் யாஸாத் தஸ்ய ச ப்ரத்யகாத்மந்ய ஸம்பாவிதஸ்ய தததிரிக்தே பரமாத்மன்யேவ சம்பவாத் –13-

14-விகார ஸப்தாந்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஸ வா ஏஷ புருஷோ அந்நர ஸமய இதி விகாரார்த மயப் ப்ரகரணாத் ஆனந்த மய இத்யஸ்யாபி விகாரார்தத்வம் ப்ரதீயதே -அதோ அயம் ஆனந்த மய நா விகார ரூப பரமாத்மா இதி சேந்ந அர்த விரோதாத் பிராசுர்யார்த ஏவாயம் மயடிதி விஞ்ஞாயதே தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம் பூத இதி ஹ்ய விகார ஆத்மா ப்ரக்ருத –ப்ரகரணே ச விகாரார்தத்வம் ப்ராண மய ஏவ பரித்யக்தம் –உக்தேந ந்யாயேந ஆனந்த ப்ராசுர்யாத் பரம புருஷா ஏவாயமாநந்த மய –14-

14-விகார ஸப்தான்நேதி சேந்ந ப்ராசுர்யாத் –ஆனந்த மய -இதி விகாரார்த்தான் மயட் ஸப்தான்நாயம விக்ருத பரமாத்மா -அஸ்ய ச விகாரார்தத்வமேவ யுக்தம் அன்னமய இதி விகார உபக்ரமாதிதி சேந்ந-ப்ரத்யகாத்மநோ அபி ந ஜாயதே ம்ரியதே வா இத்யாதி விகார ப்ரதி ஷேதாத் ப்ராசுர்யார்த்த ஏவாயம் மயடிதி நிஸ்ஸயாத் -அஸ்மிம்ஸ் சா நந்தே யதோ வாசோ நிவர்த்தந்தே இத்யாதி வஹ்யமாணாத் பிராசர்யாதயமாநந்த ப்ரசுர பரமாத்மைவ -நஹ் யநவதிக அதிசய ரூப ப்ரபூதாநந்த ப்ரத்யகாத்மநி ஸம்பவதி –14-

15-தத் தேது வ்யபதேஸாச் ச –ஏஷ ஹ்யேவா நந்தயாதி இதி ஜீவான் ப்ரத்யா நந்த ஹேதுரயமா நந்தமயோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாயம் ந ப்ரத்யகாத்மா –15-

15-தத்தேது வ்யபதேசாச் ச -ஏஷ ஹ்யேவா ஆநந்தயாதி இதி ஜீவான் ப்ரதி ஆனந்த யித்ருத் வ்யபதேசாதயம் பரமாத்மைவ –15-

16-மாந்த்ர வர்ணிகமேவ ச கீயதே–ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதமேவ தஸ்மாத் வா ஏதஸ்மாத் இத்யாதி நா ஆனந்த மய இதி கீயதே –அதஸ் ச ந ப்ரத்யகாத்மா –16-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி மந்த்ர வர்ணோதிதம் ப்ரஹ்மைவ தஸ்மாத் வா ஏதஸ் மாதாத்மந இத்யாரப்ய ஆனந்தமய இதி ச கீயதே –ததஸ் சா ஆனந்த மயோ ப்ரஹ்ம -16-

17-நேதரோ அநுப பத்தே –இதர –ப்ரத்யகாத்மா மந்த்ர வர்ணோதித இதி நாசங்க நீயம் ஸோ அஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதா இதி ப்ரத்யகாத்மநோ பத்தஸ்ய முக்தஸ்ய ச ஈத்ருஸ விபஸ்சித்த்வாநுப பத்தே –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய இதி விசித்ர ஸ்திரத்ரஸ ரூப பஹு பவந ஸங்கல்ப ரூபமிதம் விபஸ்சித்த்வமிதி ஹ்யுத்தரத்ர வ்யஜ்யதே -முக்தஸ்ய ஸர்வஞ்ஞஸ்யாபி ஜகத் வ்யாபாராபாவாதீத்ருஸ –விபஸ்சித்த்வா ஸம்பவ –17–

ப்ரத்யகாத்மந பரி ஸூத்தம் ஸ்வரூபம் மந்த்ர வர்ணோதித மித்யா சங்க்யாஹ
17-நேதரோ அநுப பத்தே
 –பரஸ்மாத் ப்ரஹ்மண -இதர ப்ரத்யகாத்மா ந மந்த்ர வர்ணோதித -தஸ்ய விபஸ்சிதா ப்ரஹ்மணா இதி விபஸ்சித்வ அநுப பத்தே –விவிதம் பஸ்யச் சித்த்வம் ஹி விபஸ் சித்த்வம் தச்ச ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேய இத்யாதி வாக்யோதித நிருபாதிக பஹு பவந ஸங்கல்ப ரூபம் ஸர்வஞ்ஞத்வம்
தத்து ப்ரத்யகாத்மந பரி ஸூத்தஸ் யாபி ந சம்பவதி ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சந்நிஹிதத் வாச்ச இதி வஹ்ய மாணத்வாத் –அத பரம் ப்ரஹ்மைவ மாந்த்ர வர்ணிகம் –17-

இதஸ் ச
18-பேத வ்யபதேஸாச் ச
 –தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞாந மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி ஹி விஞ்ஞாந மயாத் ப்ரத்யகாத்மநோ பேதே நாயமா நந்த மயோ வ்யபதிஸ்யதே –ந ச விஞ்ஞாந மய விஷய தயா உதாஹ்ருதஸ் லோகே விஞ்ஞானம் யஞ்ஞம் தநுதே இதி வ்யபதேஸாத் விஞ்ஞாந மயோ புத்தி மாத்ர மித்யா சங்க நீயம் -யதஸ் ஸூத்ரகார ஏவ இமாம் ஆசங்காம் பரி ஹரிஷ்யதி வ்யபதேசாச் ச க்ரியாயாம் ந சேந்நிர்தேஸ விபர்யயய இதி -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே இதி யஜ்ஞாதி க்ரியாயாம் ஜீவஸ்ய கர்த்ருத்வ வ்யபதேஸாச் ச ஜீவ கர்தா –விஞ்ஞான சப்தேந ஜீவஸ்யா வ்யபதேஸே புத்தி மாத்ர வ்யபதேஸே ச விஞ்ஞாநேநேதி நிர்தேச விபர்யயஸ் ஸ்யாத் புத்தே கரணத்வாதிதி –18-

18-பேத வியபதேஸாஸ் ச –-பீஷாஸ்மாத் வாத பவதே இத்யாதிநா -அக்னி வாயு ஸூர்யாதி ஜீவ வர்கஸ்ய ஆனந்த மயாத் ப்ரஸாஸிது -ப்ரஸாஸி த்வயத்வேந பேதோ வ்யபதிஸ்யதே –அதஸ் சாநந்தமய பரமாத்மேதி –
யோஜனாந்தரம் -தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் -அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய இதி விஞ்ஞாந மயாஜ் ஜீவாதா நந்த மயஸ்ய பேதோ வ்யபதிஸ்யதி –விஞ்ஞான மயோ ஹி ஜீவ ஏவ ந புத்தி மாத்ரம் -மயட் ச் சுருததே –அதஸ் சா நந்த மய பரமாத்மா –18-

இதஸ் ச
19-காமாச்ச நாநுமாநாபேஷா
 –ஸோ அகாமயத பஹுஸ்யாம் இதி ஸ்வ காமாதேவாஸ்ய ஜகத் ஸர்கஸ் ஸ்ரூயதே ப்ரத்யகாதமநோ ஹி யஸ்ய கஸ்ய சித் ஸர்கே ஆநு மாநாபேஷா த்ருஸ்யதே –அநு மாந காம்யம் ப்ரதாநம் ஆநு மாநம் –19-

19-காமாச் ச நாநுமாநாபேஷா –ஸோ அகாமயத இத்யாரப்ய இதம் ஸர்வமஸ்ருஜத இதி காமாதேவ ஜகத் ஸர்கஸ்ரவணாத் அஸ்ய ஆனந்த மயஸ்ய ஜகத் சர்கே நாநுமாந கம்ய ப்ரக்ருத்யபேஷா ப்ரதீயதே
ப்ரத்யகாத்மநோ யஸ்ய கஸ்ய சிதபி சர்கே ப்ரக்ருத் யபேஷாஸ்தி -அதஸ் சாயம் ப்ரத்யகாத்மநோ அந்ய பரமாத்மா –19-

இதஸ் ச
20- அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி-
– அஸ்மின் ஆனந்த மயே அஸ்ய ப்ரத்யகாத்மந ஆனந்த யோகம் ஸாஸ்தி ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அத ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூத ஸர்வஞ்ஞ புருஷோத்தம ஜகத் காரண பூத ஆனந்த மய –20- இதி ஆனந்த மய அதி கரணம் –6-

20-அஸ்மின் நஸ்ய ச தத் யோகம் ஸாஸ்தி -ரஸோ வை ஸ -ரஸம் ஹ்யே வாயம் லப்த்வா ஆனந்தீ பவதி இதி அஸ்மின் -ஆனந்த மயே ரஸ ஸப்த நிர்திஷ்டே அஸ்ய அயம் ஸப்த நிர்திஷ்டஸ்ய
ஜீவஸ்ய தல்லாபாதா நந்த யோகம் ஸாஸ்தி ஸாஸ்த்ரம் -ப்ரத்யகாத்மநோ பல்லாபாதா நந்த யோக -ஸ தஸ்மாதன்ய பரமாத்மை வேத்யா நந்த மய -பரம் ப்ரஹ்ம –20- இதி ஆனந்த மயாதிகரணம்–7-

————

1-1-7-அந்தராதிகரணம்
21-அந்தஸ் தத் தர்ம உபதேஸாத் –அயம்

ஜகத் காரண பூத விபஸ் சிதாநந்த மய கஸ்சிதுபசித புண்ய விஸேஷோ ஜீவ விஸேக்ஷ தேஹ யோகாத் விஞ்ஞாயதே நாயம் பரமாத்மேதி நா சங்க நீயம் -ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ இத்யாதவ் ஸ்ரூயமாண புருஷாகார பரமாத்மைவ –குத -தத் தர்ம உபதேஸாத் –ஸ ஏஷ ஸர்வேஷாம் லோகாநாமீஸ ஸர்வேஷாம் காமாநாம் தஸ்யோதிதி நாம ஸ ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உசித இதி நிருபாதிக ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வம் ஸ்வத ஏவா கர்மவஸ்யத்வம் ச ப்ரத்யகாத்மநோ அர்த்தாந்தர பூதஸ்ய ஹி பரம புருஷஸ் யைவ தர்ம வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு த்ரி குணாத் மக ப்ரக்ருத்யநந்தர் கத அப்ராக்ருதஸ்வ அசாதாரண ரூப வத்த்வம் ச ஞானாதி குணவத்த்ஸ்யைவ ஹி ஸ்ரூயதே
ஞானாதயோ அபி -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச இத்யாதிஷு ஸ்ருதத்வாத் தஸ்ய குணா விஞ்ஞா யந்தே –ததா ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் இத்யாதிஷு அப்ராக்ருத ஸ்வ அசாதாரண ரூப ஸ்ரவணாத் தத்வத்தா ச விஞ்ஞாயதே -ததே தத் வாக்யகாரஸ் சாஹ -ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே இதை ப்ராஞ்ஞஸ் ஸர்வ அந்தரஸ் ஸ்யாத் லோக காமேஸோபதேஸாத் ததோதயாத் பாப்மநாம் இத்யுக்த்வா-தத் ரூபஸ்ய கார்யத்வம் மாயா மயத்வம் வேதி விசார்ய ஸ்யாத்ரூபம் க்ருதகமநுக்ர ஹார்தம் தச்சேத ஸாமைஸ் வர்யாத் இதி நிரஸ நீயம் மதமுபந்யஸ்ய ரூபம் வாதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் இதி –வ்யாக்யாதம் ச த்ரமிடா சார்யை ந வா மாயா மாத்ரம் அஞ்ஞஸைவ விஸ்வஸ்ருஜோ ரூபம் தத்து ந சஷுஷா க்ராஹ்யம் மநஸா த்வ கலுஷேண சாதனாந்தர வதா க்ருஹ்யதே –ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாஸா மநஸா து விஸூத்தேந இதி ஸ்ருதே –ந ஹ்யரூபாயா தேவ தாயா ரூபமுபதிஸ்யதே –யதா பூதவாதி ஹி ஸாஸ்த்ரம் –யதா மாஹார ஜனம் வாஸ –வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் இதி ப்ரகாரணாந்தர நிர்தேசாத் இதி -ஸாஷிண இதி ஹிரண்மய இதி ரூப ஸாமான்யாச் சந்த்ர முகவத் இதி ச வாக்யம் –தச்ச வ்யாக்யாதம் தைரேவ –ந மயடத்ர விகார மாதாய ப்ரயுஜ்யதே அநாரப் யத்வாதாத்மந இத்யாதிநா –அத ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ் சார்தாந்தர பூதோ நிருபாதிக விபஸ்சித் அநவதிக அதிஸய அநந்தோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்ய ரூப புருஷோத்தம பரம் ப்ரஹ்ம ஜகத் காரமும் இதி வேதாந்தை ப்ரதிபாத்யத இதி நிரவத்யம் –21-

1-1-7-அந்தராதிகரணம்
20-அந்தஸ் தத் தர்ம உபதேசாத் –சாந்தோக்யே ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ய ஏஷோ அந்தரஷிணி புருஷோ த்ருஸ்யதே இத்யஷ் யாதித்யாதாரதயா ஸ்ரூயமாண புருஷ
கிம் ஜீவ விசேஷ உத பரம புருஷ இதி ஸம்சய–ஜீவ விசேஷ இதி பூர்வ பக்ஷ
குத -ஸ சரீரித் வாத் -சரீர ஸம் யோகோ ஹி கர்ம வஸ்யஸ்ய ஜீவஸ்ய ஸ்வ கர்ம பல போகாயேதி -ராத்தாந்தஸ்து –ஸ ஏஷ ஸர்வேப்ய பாப்மப்ய உதித இத்யாதிநா அபஹத பாப்மத்வ பூர்வக ஸர்வ லோக காமே ஸத்வ உபதேசாத் -தேஷாம் ச ஜீவேஷ்வ சம்பவாத் அயமஹ்யாதித் யாதார புருஷோத்தம ஏவ -ஸ்வ அசாதாரண விலக்ஷண ரூப வத்த்வம் ச ஞான பல ஐஸ்வர்யாதி கல்யாண குண வத்தஸ்ய சம்பவதி -ஸ்ரூயதே ச தத் ரூபஸ்ய அப்ராக்ருதவம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பாரே இத்யாதவ் –ஸூத்ரார்தஸ்து –ஆதித்யாத் யந்தஸ் ஸ்ரூயமாண புருஷ பரம் ப்ரஹ்ம –தத் அசாதாரண அபஹத பாப்மத்வாதி தர்ம உபதேசாத் –21–

22-பேத வ்யபதேஸாச் சாந்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தரோ யமாதித்யோ ந வேத யஸ்ய யாதித்யஸ் ஸரீரம் ய ஆதித்ய மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர் யாம் யம்ருத இத்யதி தைவதம் யஸ் சஷுஷி திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் இத்யத் யாத்மம் -யஸ் ஸர்வேஷு லோகேஷு திஷ்டன் நித்யதி லோகம் யஸ் ஸர்வேஷு பூதேஷு திஷ்டன் நித்யதி பூதம் யஸ் ஸர்வேஷு வேதேஷு திஷ்டன் நித்யதி வேதம் யஸ் ஸர்வேஷு யஜ்ஜேஷு திஷ்டன் நித்யதி யஜ்ஞம் இத் யந்தர்யாமி ப்ராஹ்மணே ஸூபாலோப நிஷதி ச ய பிருத்வீ மந்தரே ஸஞ்சரன் இத்யாரப்ய யோ அவ்யக்தம் அந்தரே ஸஞ்சரன் யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரன் யோ ம்ருத்யும் அந்தரே ஸஞ்சரன் யஸ்ய ம்ருத்யுஸ் ஸரீரம் யம் ம்ருத்யுர் ந வேத ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இதி ஸர்வே தேவ ஸர்வ லோக ஸர்வ பூத ஸர்வ வேத ஸர்வஞ்ஞ ஸர்வாத்மோ பரிவர்தமாந தயா தத் தச் சரீர தயா தத் தத் அந்தராத்ம தயா தத் ததவேத்ய தயா தத் தன் நியந்த்ருதயா சைப்யஸ் சர்வேப்ய பேத வ்யபதேஸாச் சாயம் அபஹத பாப்மா நாராயண ப்ரதாநாத் ப்ரத்யகாத்மநஸ்சார் தாந்தர பூதோ நிகில ஜகதேக காரணமித்தி ஸித்தம் –22-

22-பேத வியபதேசாச் சான்ய –ய ஆதித்யே திஷ்டன் நாதித்யா தந்தர –ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தர –இத்யாதிபிர் -ஜீவாத் பேத வியபதேசாச் சாயம் ஜீவா தன்ய பரமாத்மைவ –-22–இதி அந்தர் அதிகரணம் –

1-1-8-ஆகாஸ அதி கரணம்
1-1-9-ப்ராண அதி கரணம்
23-ஆகாஸஸ் தல்லிங்காத்
24-அத ஏவ ப்ராண

ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ்தம் யந்தி ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ அபி ஸம் விஸந்தி ப்ராண மேவ அப்யுஜ்ஜிஹதே இத்யாதவ் –ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் இத்யாதிநா சாமாந்யேன நிர் திஷ்டஸ்ய ஜகத் காரணஸ்ய பூதாகாஸ ப்ராண ஸஹசாரி ஜீவ வாசி ஸப்தாப்யாம் விசேஷ நிர்ணய சங்காயாம் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்திஸ்யமாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் பூதாகாஸ ஜீவாப்யாமர் தாந்தர பூத பரம புருஷ ஏவாத்ர ஆகாஸ ப்ராண ஸப்த நிர்திஷ்ட இதி நிஸ்ஸீயதே –தத் ப்ரஸித்திஸ் து –பஹு பவந ரூபேக்ஷண அநவதிக அதிசய அநந்த ஜீவ அநந்த ஹேதுத்வ விஞ்ஞாந மய விலக்ஷணத்வ நிகில புவந பயாபய ஹேதுத்வ -ஸர்வ லோக ஸர்வ காமேஸத்வ ஸர்வ பாப்மோதயா ப்ராக்ருத -ஸ்வ அசாதாரண ரூப விஸிஷ்டஸ்ய ரவிகர விகஸித புண்டரீக நயனஸ்ய ஸர்வஞ்ஞஸ்ய ஸத்ய ஸங்கல்பஸ்ய கரணாதிபாதி பஸ்ய பரம புருஷஸ்யைவ நிகில ஜகத் ஏக காரணத்வாதிதி ஸ ஏவ ஆகாஸ ப்ராண ஸப்தாப்யாம் ஜகத் காரணத்வேநாபி தீயதே இதி நிர்ணயோ யுக்த ஏவ —23-24-ஆகாஸாதி கரணம் -ப்ராண அதிகரணம் ச –8-9-

1-1-8-ஆகாஸாதி கரணம்
23-ஆகாஸஸ் தல் லிங்காத்
 –சாந்தோக்ய –அஸ்ய லோகஸ்ய கா கதி இத்யாகாஸ இதி ஹோவாஸ ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாஸம் ப்ரத்யஸ் தம் யந்தி இத்யத்ர ஆகாஸ ஸப்த -நிர்திஷ்டம் -ஜகத் காரணம் -கிம் ப்ரஸித்த ஆகாஸ –உத ஸமஸ்த சித் அசித் வாஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ஆகாஸ -இதி பூர்வ பக்ஷம் –குத
ஆகாஸ சப்தஸ்ய லோகே தத்ரைவ வ்யுத்பத்தே -யதோ வா இமாநி பூதாநி இத்யாதி ஸாமான்ய லக்ஷணஸ்ய ஸதாதி ஸப்தாநாம் அபி சாதாரணத்வேந ஆகாஸதேவ ஸமுத்பத்யந்தே இதி விஸேஷே பர்யவஸாநாத் -ஈஷா –க்ஷணா தயோ அப்யாகாச ஏவ ஜகத் காரணமிதி நிஸ்சிதே ஸதி கௌணா வர்ணநீயா இதி –ராத்தாந்தஸ்து -ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்தவந் நிர்தேசாத் -பிரஸித்தேஸ் சேஷா பூர்வகத்வாத் சித் அசித் வஸ்து விலக்ஷணம் ஸர்வஞ்ஞம் ப்ரஹ்ம ஆகாஸ ஸப்த நிர்திஷ்டமிதி
ஸூத்ரார்தஸ்து –ஆகாஸ ஸப்த நிர்திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ப்ரஸித்த வந் நிர்திஸ்ய மாநாத் ஜகத் காரணத்வாதி லிங்காத் —23-இதி ஆகாஸாதி கரணம் –1-1-8-

1-1-9-ப்ராண அதிகரணம்
24-அத ஏவ ப்ராண –சாந்தோக்ய -ப்ரஸ்தோதர்யா தேவதா ப்ரஸ்தாவமந்வாயதா இதி பிரஸ்துத்ய கதமா ஸா தேவதேதி –ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராணமேவாபி ஸம் விஸந்தி -ப்ராண மப்யுஜ் ஜிஹதே ஸைஷா தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தர இத்யத்ர நிகில ஜகத் காரண தயா ப்ராண ஸப்த நிர் திஷ்ட-கிம் ப்ரஸித்த பிராண உதோக்த லக்ஷணம் ப்ரஹ்மேதி ஸம்சய –ப்ரஸித்த ப்ராண இதி பூர்வ பக்ஷ –
குத -ஸர்வஸ்ய ஜகத ப்ராணாயத்தஸ்திதி தர்சநாத் ச ஏவ நிகில் ஜகதேக காரண தயா நிர்தேச மர்ஹாதீதி –ராத்தாந்தஸ்து ஸிலா காஷ்டாதி ஷு அசேதநேஷு சேதன ஸ்வரூபேஷு ச ப்ராணாயத்த ஸ்தித்யபாவத் ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி இதி ப்ரஸித்த வன்னிர்தேசா தேவ ஹேதோ ப்ராண ஸப்த நிர் திஷ்டம் பரமேவ ப்ரஹ்ம ஸூத்ரமபி வ்யாக்யாதம் —24-இதி ப்ராண அதிகரணம் –1-1-9-

1-1-10-ஜ்யோதிர் அதி கரணம்
25-ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் 
–அத யதத பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வ தத்யதி தமஸ்மிந் நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஸர்வஸ்மாத் பரத்வேந நிர்திஸ்யமாந தயா ஸகல காரண பூதஜ்யோதிக்ஷ -கௌஷேய ஜ்யோதி ஷைக்யாபிதாநாத் ஸ்வ வாக்யே விரோதி லிங்கா தர்ச நாச்ச ப்ரஸித்தமேவ ஜ்யோதிர் ஜகத் காரணத்வேந ப்ரதிபாத்யத இதி ஸங்காயாம் யத்யபி ஸ்வ வாக்யே விரோதி லிங்கம் ந த்ருஸ்யதே –ததா அபி பூர்வஸ்மின் வாக்யே பாதோ அஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி ப்ரதிபாதி தஸ்ய ஸர்வ பூத சரணஸ்ய பரம புருஷஸ்யைவ த்யு சம்பந்தி தயா அத்ராபி ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸ ஏவ ஜ்யோதிஸ் சப்தேந ஸர்வஸ்மாத் பரத்வேந ஸகல காரண தயா அபீதீ யதே -அஸ்ய ச கௌஷேய ஜ்யோதிஷைக்யாபிதாநம் பலாயோபதிஸ் யத இதி ந கஸ்ஸித் விரோத –அகில ஜகதேக காரண பூத பரம புருஷோ அப்ராக்ருத ஸ்வ அசாதாரண திவ்யோ வர்ணோ திவ்ய ரூபஸ் தமஸ பரஸ்தாத் வர்தத இதி தஸ்யைவ நிரதிசய தீப்தி யோகாத் ஜ்யோதிஸ் ஸப்தாபிதேயத்வம் விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வத ப்ருஷ்டேஷு அநுத்த மேஷுத்தமேஷு லோகேஷு வாஸஸ் ச யுஜ்யதே –25-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம்
25-ஜ்யோதிஸ் சரண அபிதாநாத்
 –சாந்தோக்ய அத யத்த பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷு ஸர்வதா ப்ருஷ்டேஷ்வ நுத்தமேஷுத்தமேஷு லோகேஷு இதம் வா வத்யதிதமஸ்மிந்நந்த புருஷே ஜ்யோதி இத்யத்ர ஜகத் காரணத்வ வ்யாப்த நிரதிசய தீப்தி யுக்த தயா ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம்
கிம் ப்ரசித்த ஆதித்யாதி ஜ்யோதி உத பரமேவ ப்ரஹ்மேதி ஸம்சய -ப்ரஸித்த ஜ்யோதிரிதி பூர்வ பக்ஷ –குத
இதம் வாவ தத்யதி தமஸ்மின் நந்த புருஷ ஜ்யோதி இதி கௌஷேய ஜ்யோதிஷா பிரஸித்தே நைக்யாவகமாத் ஸ்வ வாக்யே
தததிரிக்த பர ப்ரஹ்ம அசாதாரண லிங்கா தர்ச நாச்ச -ராத்தாந்தஸ்து -ப்ரஸித்த ஜ்யோதிஷோ அந்ய தேவ பரம் ப்ரஹ்மேஹ நிரதிசய தீப்தி யுக்தம் ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் –குத –
பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபதாஸ்யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்ய த்யு சம்பந்தி தயா நிர் திஷ்டஸ் யைவ சதுஷ் பதோ ப்ரஹ்மண -அத யதத பரோ திவோ ஜ்யோதி இத்யத்ர ப்ரத்யபிஜ் ஞாநாத் –தச்ச பரமேவ ப்ரஹ்மேதி விஞ்ஞாதம் ஸர்வேஷாம் பூதா நாம் தஸ்ய பாதத்வேந வியபதேசாத்
ஏவம் பர ப்ரஹ்மத்வே நிஸ்சிதே கௌஷேய ஜ்யோதிக்ஷ ததாத்மகதவ அநு சந்தானம் பலயோபதிஸ் யத இதி ஞாயதே –
ஸூத்ரார்த்தஸ்து -ஜ்யோதிஸ் ஸப்த நிர் திஷ்டம் பரம் ப்ரஹ்ம அஸ்ய ஜ்யோதிஷ பூர்வ வாக்யே ஸர்வ பூத் பாதத்வம் –ஸர்வ பூத பாதத்வம் ச பரஸ்யைவ ப்ரஹ்மண உப பத்யதே –25-

26-சந்தோபிதா நாந்தேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத் ததா ஹி தர்சனம் –பூர்வத்ர காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர் யாக்யச் சாந்த பிரஸ்துத மிதி நாத்ர பரம புருஷாபிதாநமிதி சேத் நைதத் பரம புருஷஸ் யைவ காயத்ரீ ஸாத்ருஸ்யஸ்யாநு ஸந்தாநோபதேஸத்வாத் தஸ்ய சந்தோ மாத்ரஸ்ய ஸர்வ பூதாத்மகத்வாநுப பத்தேரேவேதி நிகம்யதே –அந்யத்ராபி ஹ்யன்யஸ்ய சந்தஸ் சாத்ருஸ்யாத் சந்தோ நிர்தேஸா த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே இத்யாரப்ய சைஷா விராட் இத்யாதவ் –26-

26–சந்தோ அபிதாந் நாந்நேதி சேந்ந ததா சேதோ அர்பண நிகமாத்ததாஹி தர்சனம் —காயத்ரீ வா இதம் ஸர்வம் இதி காயத்ர்யாக்யச் சந்தஸ ப்ராக்ருதத்வாத் ஸர்வ பூத பாதத்வேந காயதர்யா ஏவாபிதா நான்ந ப்ரஹ்மேதி சேத் நைதத் –
ததா சேதோ அர்பண நிகமாத் –காயத்ரீ யதா பவதி ததா ப்ரஹ்மணி சேதோ அர்பணோபதேஸாத் -காயத்ரீ ஸாத்ருஸ்யம் சதுஷ் பாத்த்வம்
ப்ரஹ்மண்யநு ஸம்தேயமித் யுபதிஸ்யதே -காயத்ர்யாஸ் ஸர்வாத்மகத்வ அநுப பத்தேரித் யர்த –ததா ஹி தர்சனம் ததா ஹ்யன் யத்ராபி ப்ய சந்தஸ ஏவ சாத்ருஸ் யாச் சந்தஸ் சப்தே நாபிதாநம் த்ருஸ்யதே தே வா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே தச சம்பத்யந்த இத்யாரப்ய சைஷா விராடன்னாத் இதி –26-

27-பூதாதி பாத வ்யபதேஸாப பத்தேஸ் சைவம் –பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயைஸ் சதுஷ்பதேதி வ்யபதேஸஸ் ச பரம புருஷ காயத்ரீ ஸப்த நிர் திஷ்டே ஹ்யுப பத்யத இதி பூர்வோக்த ப்ரகார ஏவ சமஞ்ஜஸா–27-

27-பூதாதி பாத வ்யபதேசோப பத்தைஸ் சைவம்- பூத ப்ருதிவீ சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ய சைஷா சதுஷ்பதா இதி பூதாதீ நாம் -பாதத்வ வ்யபதேஸோ ப்ரஹ்மண்யேவோப பத்யத இதி ப்ரஹ்மைவ காயத்ரீ ஸப்த நிர் திஷ்ட மிதி கம்யதே–27

28-உபதேஸ பேதான்நேதி சேந்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பூர்வத்ர த்ரி பாதஸ்யாம்ருதம் திவி இதி பரம புருஷோ வ்யபதிஸ் யதே –அத்ர அத யதத பரோ திவ இதி பஞ்சம்யா நிர் திஷ்ட த்யு சம்பந்தி ஜ்யோதிரிதி ந ப்ரத்யபிஜ்ஜேதி சேத் நைதத் உபயஸ்மிந் நபி வ்யபதேஸே விரோதா பாவாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரதஸ் ஸ்யேந இதி வ்யபதேஸ –அத்ர திவ பரத்வமேவ உபயத்ர விவஷித மித்யர்த —28-இதி ஜ்யோதிர் அதி கரணம் –10-

28-உபதேஸ பேதான்நேதி சேன்நோபயஸ்மிந் நப்ய விரோதாத் –பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி இதி பூர்வ வாக்யோதிதம் பரம் ப்ரஹ்மை வாஸ்து –ததாபி அத யதத பரோ திவோ ஜ்யோதி –இதி த்யு ஸம்பந்த மாத்ரேண நேஹ தத் ப்ரத்யபிஜ் ஞாயதே தத்ர ஸாத்ர சவ்ய உபதேச பிரகார பேதாத் தத்ர ஹி திவி இதி த்யா ஸப்தம்யா நிர் திஸ்யதே இஹ ச திவ பரோ ஜ்யோதி இதி பஞ்சம்யா ததோ ந ப்ரதி ஸந்தானமிதி சேந்ந உபயஸ்மிந்நபி வ்யபதேஸ உபரிஸ்திதி ரூபார்தைக் யேந ப்ரதிஸம்தாநா விரோதாத் யதா வ்ருஷாக்ரே ஸ்யேந வ்ருஷாக்ராத் பரத ஸ்யேந இதி —28-ஜ்யோதிர் அதிகரணம் –1-1-10-

1-1-11-இந்த்ர ப்ராண அதி கரணம்-29-ப்ராணஸ் ததாநுகமாத் –ஆத்ம நாம் ஹித தம ரூப மோக்ஷ சாதநோபாஸந கர்ம தயா ப்ரஞ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்ய ப்ராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமா யுரம்ருதமித் யுபாஸ்ஸ்வ இதி விதாநாத் ஸ ஏவ ஜகத் காரணம் -காரணோபாஸநம் ஹி மோக்ஷ ஸாதனம் –தஸ்ய தாவமேவ சிரம் யாவன்ன வி மோஷ்யே அத ஸம்பத்ஸ்யே இதி ஸ்ருதேரிதி நா சங்க நீயம் –ப்ராண ஸப்த ஸமாநாதி கரணேந்த்ர ஸப்த நிர் திஷ்டோ ஜீவா தர் தாந்தர பூத யுக்த லக்ஷண பரமாத்மைவ–குத ததா அநு கமாத் -பரமாத்ம அசாதாரணாநந்தாஜராம்ருதாதிஷ் வஸ்ய இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ்யாநுகமோ ஹி த்ருஸ்யதே ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்ம அஜரோ அம்ருத இதி –29-

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம்
29-ப்ராணஸ் ததாநுகமாத்
 –கௌஷீதகீ ப்ராஹ்மணே ப்ரதர்தந வித்யாயாம் த்வமேவ வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ப்ரதர்தந யுக்த இந்த்ர பிராணோ அஸ்மி ப்ரஞ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இத்யாஹா –அத்ர ஹிததம உபாஸன கர்மதயா நிர் திஷ்ட இந்த்ர ப்ராண ஸப்தாபிதேய
கிம் ஜீவ –உத பரமாத் மேதி ஸம்சய –ஜீவ இதி பூர்வ பக்ஷ -குத
இந்த்ர சப்தஸ்ய ஜீவ விஸேஷே ப்ரஸித்தே –ப்ராண ஸப்தஸ் யாபி தத் ஸமாநாதி கரணஸ்ய -ஸ ஏவார்த இதி தம் மாமாயு ரம்ருதம் இத் யுபாஸ்வ இதி தஸ்யைவ உபாஸ்யத்வ உப தேஸா திதி –ரத்தாந்தஸ்து
இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டம் ஜீவாதர் தாந்தர பூதம் பரம் ப்ரஹ்ம ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஞ்ஞாத்மா ஆனந்தோ அஜரோ அம்ருத இதீந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் யைவ ஜீவேஷ்வ ஸம்பாவித அனந்தத்வ அஜரத்வ அம்ருதத்வ ஸ்ரவணாத்
ஸூத்ரார்தஸ்து –உபாஸ்யதய உபதிஷ்டம் இந்த்ர ப்ராண ஸப்த அபிதேயம் பரம் ப்ரஹ்ம -ததேதி பிரகார வசன பர ப்ரஹ்ம ப்ரகார பூதேஷ்வா நந்தாதிஷு அஸ்ய அநுகமாத் –29-

30-ந வக்துராத்மோப தேஸாதிதி சேதத் யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மிந் –உபக்ரமே ஹி மாமேவ விஜாநீஹி இதி த்வாஷ்ட்ரவதாதிநா பிரஜ்ஞாத ஜீவ பாவஸ்ய இந்த்ரஸ்யோபதேஸாத் உப ஸம்ஹாரஸ் ததநு குணோ வர்ண நீய இதி சேத் நைதத் அத்யாத்ம ஸம்பந்த பூமா ஹ்யஸ்மின் –அத்யாத்மம் -பரமாத்ம தர்ம பரமாத்ம தர்ம ஸம்பந்த -பஹு த்வமஸ் மிந்த்ர ஸப்தாபிதேயே
வாக்யோபக்ரம ப்ரப்ருத்யோப ஸம் ஹாராத்த்ருஸ்யதே –யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே இதி ஹித தமோபாஸநம் ப்ராரப்தம் –தச்ச ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி -நா ஸர்வஸ்ய காரயித்ருத்வம் –ஏவமேவைதா பூத மாத்ரா இத்யாரப்ய பரஜ்ஞா மாத்ரா ப்ராணேஷ்வர்பிதா இதி ஸர்வாதாரத்வம் ததா ஆனந்தாதயஸ் ச ஏஷ லோகாதிபதி இத்யாதிநா சர்வேஸ்வரத்வம் ச –30-

30-ந வக்துர் ஆத்ம உபதேஸாதிதி சேதத் ஆத்ம ஸம்பந்த பூமாஹ் யஸ்மிந் –நாயம் உபாஸ்ய பரமாத்மா மாமேவ விஜாநீஹி தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ இதி ப்ரஞ்ஞாத ஜீவஸ் யேந்த்ரஸ்ய வக்துஸ் ஸ்வாத்மந உபாஸ்யத்வ உபதேசாத் உபக்ரமே ஜீவ பாவ நிஸ்சயே ஸத் யுப ஸம்ஹாரஸ்ய தத் அநு குணதயா நேயத்வாதிதி சேந்ந —
அத்யாத்ம ஸம்பந்த தஸ்ய பூமா பஹுத்வம்
ஜீவாதர் தாந்தர பூதாத்மா அசாதாரண தர்ம ஸம்பந்த பஹுத்வம் அஸ்மின் ப்ரகரணே உபக்ரம ப்ரப்ருத்யோப ஸம்ஹாராது பலப்யதே –உபக்ரமே தாவத் யம் த்வம் மனுஷ்யாய ஹிததமம் மன்யஸே இதி ஹ்யநே நோச்யமானம் உபாஸனம் பரமாத்ம உபாசன மேவ தஸ்யைவ ஹித தமத்வாத் ததா ஈஷா ஏவ ஸாது கர்ம காரயதி இத்யாதி ஸாத்வ ஸாது கர்மணோ காரயித்ருத்வம் பரமாத்மந ஏவ தர்ம தத்யதா ரதஸ்யா ரேஷு நேமி ரர்பிதா நாபாவரா அர்பிதா ஏவமேவைதா பூத மாத்ரா ப்ரஞ்ஞா மாத்ராஸ் வர்பிதா ப்ரஞ்ஞா மாத்ரா ப்ராணோ அர்பிதா இதி ஸர்வா தாரத்வம் ச தஸ்யைவ தர்ம ஆனந்தாத யஸ் ச ஏஷ லோகாதி பதிரேக்ஷ ஸர்வேச இதி ச ஹீதி ஹே தவ் அத பர ப்ரஹ்மை வாயமித் யர்த –30-

31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தூபதேஸே வாம தேவவத் –நாம ரூப வ்யாகரணாதி சாஸ்த்ராத் ஸர்வ ஸப்தை பரமாத்மைவாபி தீயத இதி த்ருஷ்ட்யா தஜ் ஞாபநாயாய மிந்த்ரா சப்தேந பரமாதமோபதேஸ –ஸாஸ்த்ரஸ்தா ஹி வாமதேவாதய –ததைவ வதந்தி –தத்தை தத் பஸ்யந் ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மநுரபவம் ஸூர் யஸ் ச இதி –31-

பரமாத்மைவோ பாஸ்யஸ் சேத் கதமிந்த்ரோ மாம் உபாஸ்வ இத் யுபாதிதேஸேத்யத ஆஹ
31-ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாத் உப தேசோ வாமதேவவத்
 –இந்த்ரஸ்ய ஜீவஸ் யைவ ஸத -ஸ்வாத்மத்வேந உபாஸ்ய பூத பரமாத்ம உபதேஸோ அயம் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா –அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா –தத்த்வமஸி -ய ஆத்மநி திஷ்டன் நாத்மநோ அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா ஸரீரம் ய ஆத்மாநாம் அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ஏஷ ஸர்வபூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண இத்யாதீதி ஹி சாஸ்த்ராணி பரமாத்மாநம் ஜீவாத்மந ஆத்மதயோ பதிதிஸூ -அதோ ஜீவாத்ம வாசிநஸ் ஸப்தா -ஜீவாத்ம சரீரிகம் -பரமாத்மாநமேவ வதந்தீதி ஸாஸ்த்ர த்ருஷ்டார்தஸ்ய தஸ்ய மாமேவ விஜாநீஹிமாம் உபாஸ்ஸ்வ இதி ஸ்வாத்ம சப்தேந பரமாத்ம உபதேசோ அயம் ந விருத்த்யதே –யதா வாமதேவ ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா ஸ்வாத்ம சரீரிகம் பரமாத்மாநம் பஸ்யன்னஹமிதி பரமாத்மா நமவோசத்
தத்தை தத் பஸ்யன் ந்ருஷிர் வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்ய்யஸ் சாஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர இதி –31

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சே ந்நோபாஸா த்ரை வித்யாதாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் த்ரி ஷீர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநம் யாவத் தயஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவதாயு இத்யாதி ஜீவ லிங்கம் முக்ய ப்ராண லிங்கம் ஸாஸ்மின் த்ருஸ்யதே இதி நைவமிதி சேந்ந –உபாஸாத் த்ரை வித்யாத் ஹேதோ ஜீவ சப்தேந ப்ராண சப்தேந ச பரமாத்மநோ அபி தாநம் –அந்யத்ராபி பரமாத்மந ஸ்வரூபேணோபாஸநம் போக்த்ரு சரீர கத்வேந போக்ய போகோபகரண சரீர கத்வேந இதி த்ரி விதம் பரமாத்மோபாஸந மாஸ்ரிதம் –யதா ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இதி ஸ்வரூபேண -தத் அநு ப்ரவிஸ்ய ஸச் சத்யச் சா பவத் இத்யாதி –ஸத்யம் சாந்ரு தஞ்ச சத்யமபவத் இதி போக்த்ரு சரீரகத்வேந போக்ய போக உபகரண சரீரகத்வேநச இஹாபி தத் ஸம்பவாதேவமுபதேஸ -ஜந்மாத யஸ்ய யத இத்யாதிஷு ஸத் ப்ரஹ் மாத்மேதி ஸாமாந்ய ஸப்தைர் ஹி ஜகத் காரணம் ப்ரக்ருதி புருஷாப்யா மர்தாந்தர பூதமிதி ஸாதிதம் ஜ்யோதிஸ் சரணாபிதாநாத் இத்யஸ்மின் ஸூத்ரே புருஷ ஸூக்தோதிதோ மஹா புருஷோ ஜகத் காரணமிதி விசேஷதோ நீர்ணீதம்–ஸ ஏவ பரஜ்ஞாத ஜீவ வாசிபிரிந்த்ராதி ஸப்தைரபி க்வசித் க்வசித் ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா தத் தச் சரீர கதயா சோபாஸ்யத்வாயோபதிஸ் யத இதி ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூப தேஸோ வாம தேவவத் இதி உபாஸா த்ரை வித்யாத் இதி ஸாதிதம் —32- இதி இந்த்ர ப்ராண அதி கரணம் –11-

32-ஜீவ முக்ய ப்ராண லிங்காந்நேதி சேந்நோபாஸா த்ரைவித்யா தாஸ்ரிதத்வாதிஹ தத் யோகாத் -த்ரி ஸிர் ஷாணம் த்வாஷ்ட்ரமஹநமருந் முகான்யதீன் ஸாலா வ்ருகேப்ய ப்ராயச்சம் –யாவத் த்யஸ் மிஞ்சரீரே ப்ராணோ வசதி தாவதாயு இதி ஜீவ முக்ய ப்ராண லிங்காத் நாத்யாத்ம ஸம்பந்த பூம்நா பரமாத்மத்வ நிஸ்சய இதி சேந்ந -பரமாத்மந ஏவ ஸ்வா காரேண ஜீவ சரீரீகத்வேந ப்ராண சரீரீகத்வேந சோபாஸா த்ரை வித்யாத்தேதோ தத் தச் சப்தேநாபிதாந மிதி நிஸ்ஸீயதே -அந்யத்ராபி ப்ரஹ்ம உபாஸனே த்ரை வித்யஸ் யாஸ்ரிதத்வாத் ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –ஆனந்தோ ப்ரஹ்ம இதி -ஸ்வா காரேண உபாஸ்யத்வம் ஸச்ச த்யச்சா பவத் இத்யாதிநா போக்த்ரு சரீரகத்வேந போக்ய சரீரகத்வேந ச
இஹ ப்ரதர்தன வித்யாயாமபி தஸ்ய த்ரை வித்யஸ்ய சம்பவாத் அத இந்த்ர ப்ராண ஸப்த நிர் திஷ்டஸ் பரமாத்மா —32-இதி இந்த்ர ப்ராண அதிகரணம் -1-1-11-

ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -பிரதம பாதம் ஸம் பூர்ணம்

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -சதுர்த பாதம்

March 5, 2024

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
-அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
–வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
–ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
–ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

30-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப பாவாதாத்ம சப்தேந பரமாத்மாபிதாந மிதி ஒவ்டு லோமி –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

March 4, 2024

—————————————————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
–தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-