அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
——-
ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்
இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்
முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்
இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்
——–
1-4-1-ஆநுமாநிகாதி₄கரணம்-ஸாங்க்ய மதம் சொல்வது போன்ற வாக்கியங்கள்
அதி₄கரணத்தின் பின்புலம்
முதல் அத்யாயத்தின் நான்காவது பாதத்தை அணடந்துள்ளோம். கீழ் பாதங்களுக்கும் இப்பாதத்துக்கும் ஸங்கதிகள் -முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப்பட்டது அயோக₃ வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது. மேலுள் மூன்று பாதங்களால் செய்யப்படுவது (ii) அந்ய யோக₃
வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது.
பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களின் வலிமையைப் பொருத்து பாதங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் – (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள் (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள் (iv) நான்காம் பாதத்தில் சாயா அநுஸாரி வாக்யங்கள் என்று.
சா₂யா என்றால் நிழல். அநுஸாரி என்றால் பின் தொடர்வது. உபநிஷத்துக்களில் சில வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தின் உபதேசங்களை நிழல் போல் பின் தொடர்பவை போல் காணப்படுகின்றன. ஸாங்க்ய மதத்தில் சொல்லும் கருத்துகள் இவ்விடங்களில் சொல்லப்படுகிறபடியால், ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்டபடி ப்ரதா₄நம் / மூல ப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் தான் ஜகத்காரணம் என்று உபநிஷத்துக்களே ஏற்கின்றன என்று பூர்வபக்ஷீ வாதிடுகிறார். –அவ் வாதத்தை நிரஸிப்பதன் மூலம் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்னும் ஸித்தாந்தத்தை வலுப்படுத்துகிறார் வ்யாஸர்.
(ப்ரஹ்மாத்மகமான பிரதானம் பிரகிருதி என்று சொல்லாமல் -நிரீஸ்வர சாங்க்ய மதம் போல் உள்ள ஸ்ருதி வாக்கியங்கள் -எண்ணிக்கையில் சாம்யம் -24 அசேதனங்கள் -25 ஜீவாத்மா -மட்டுமே சாங்க்ய மதம் -காபில மத ஸித்த அப்ரஹ்மாத்மக அசேதனங்கள் -போல் உள்ள சில ஸ்ருதி வாக்கியங்கள் -இவற்றை சொல்லி நேராக பிரதானம் காரணம் சொல்லாமல் -இருப்பதால் பிரதானமும் ஜகத்காரணம் என்கிற வாதங்களை நிரஸித்து –ப்ரஹ்ம ஏக காரணம் என்னும் கருத்தை நன்றாக நிலைநாட்ட இப்பாதம் என்றவாறு)
ஆநுமாநிகதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா என்று கூறப்பட்டது. அதற்குமேல் ஆஷேபம் எழுகிறது – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மா என்று ஒருவர் கிடையாது என்று ஸாங்க்ய மதம் சொல்வது போல் வேதமே சொல்லி யுள்ளதே என்று. அதற்கு பதிலளிக்க தான்
இந்த அதிகரணம் பிறக்கிறது.
(ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –)
விஷய வாக்யம் – கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தின் மூன்றாம் வல்லீ
இந்த்₃ரியேப்₄ ꞉ பராஹ் வர்தா ₂ அர்தே₂ப்₄யஶ் ச பரம் மந꞉ । மநஸஸ்து பரா பு₃த்₃தி₄ர் பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ ॥-இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப்பொருள்கள் உயர்ந்தவை . பொருள்களை விட மனது உயர்ந்தது. மனதை விட புத்தி உயர்ந்தது. புத்தியை விட மஹாந் என்ற பொருள் உயர்ந்தது-மஹத꞉ பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ । புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டோ₂ ஸா பரா க₃தி꞉ ॥-மஹாந் என்பதை விட அவ்யக்தம் உயர்ந்த்து. அவ்யக்தம் என்பதை விட புருஷன் உயர்ந்தவன். புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை , அதுவே எல்லை , அதுவே இறுதியான இலக்கு.
ஸந்தேஹம் – இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் (ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொள்ளாத) ப்ரதாநம் என்ற அசேதனப் பொருள் சொல்லப்படுகிறதா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இங்கு மூல ப்ரக்ருதி எனப்படும் ப்ரதாநம் தான் சொல்லப்படுகிறது.
1-ஸாங்க்ய மதத்தில் தத்துவங்களின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது – 5 கர்ம இந்த்ரியங்கள், 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 1 மனது, 5 பூதங்கள், 5 தந்மாத்ரங்கள், அஹங்காரம், மஹாந், மூல ப்ரக்ருதி என்று 24 அசேதனப் பொருள்கள் மற்றும் அறிவுடையவனான ஜீவாத்மா 25ஆவது தத்துவம் என்று. இங்கு உபநிஷத்திலும்
இந்த்ரியங்கள், உலகப் பொருள்கள், மனது, புத்தி (அஹங்காரம் என்ற தத்துவம்), மஹாந், அவ்யக்தம், புருஷன் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது ஸாங்க்ய மதத்தின் தத்துவ வரிசை நினைவுக்கு வருகிறது. எனவே இவ் விடத்தில் வேதமே ஸாங்க்ய மதத்தை உபதேசிக்கிற படியால் இங்கு அவ்யக்தம் என்ற பொருள் மூல ப்ரக்ருதியாகத் தான்
இருக்க வேண்டும். இப்படி தத்துவக் கணக்கில் ஸாங்க்ய மதத்தை வேதம் ஏற்பதால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி ப்ரதாநம் தான் ஜகத் காரணம் என்றும் வேதம் ஏற்கிறது என்று தான் ஆகும். அவர்கள் மதத்தின் படி அந்த ப்ரதாநம் என்ற பொருள் ஸ்வதந்த்ரமானது, அதற்கு உள்ளே ஆத்மாவாக பரமாத்மா கிடையாது
2-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்று 25ஆவது தத்துவமான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை என்று சொல்கிறபடியால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி பரமாத்மா என்று ஒருவரே கிடையாது என்றும் தெரிகிறது.
(தந்த்ர சித்த தத்வ ப்ரக்ரியை நினைவூட்டப் படுகிறதே -முதல் வாதம் -புருஷன் -ஜீவாத்மாவை விட -மேல் உள்ள தத்துவமே இல்லை நிரசிப்பது போல் உள்ளது -இரண்டாம் வாதம்)
இவ்விடத்தில் பூர்வபக்ஷீ ’ப்ரதாநம் மட்டுமே ஜகத்காரணம் என்று உபநிஷத் கூறுகிறது’ என்று சொல்லவில்லை , -ஏனெனில் கீழ் பல அதிகரணங்களில் பரமாத்மா ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ள து. எனவே , “உபநிஷத்தில் சில இடங்களில் ப்ரதாநமும் ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்று தான் வாதிடுகிறார்.
வேதம் காட்டும் உருவகம்
ஸித்தாந்தம் – இங்கு 7 ஸூத்ரங்களாலே வ்யாஸர் ஸித்தாந்தத்தைக் காட்டுகிறார்.
1-ஆநுமாநிகம் அபி ஏகேஷோம், இதி சேத் ந, சரீர ரூபக விந்யஸ்த க்₃ருஹீதே :, த₃ர்சயதி ச
ஏகேஷோம் – ஒரு சிலரால் படிக்கப்படும் வேதத்தில்
ஆநுமாநிகம் அபி – அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியும் [ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது]
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
சரீர ரூபக விந்யஸ்த – ரூபகமாக (உவமையான தேராக) சொல்லப்பட்ட சரீரமே
க்₃ருஹீயத: – இங்கு எடுக்கப் படுகிறபடியால்
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது-
இவ்விடத்தில் உபநிஷத்தில் ஓர் உருவகம் காட்டப்படுகிறது. அது யாதெனில் –
ஆத்மாநம் ரதி₂நம் வித்₃தி₄ ஶரீரம் ரத₂மேவ து । பு₃த்₃தி₄ம் து ஸாரதி₂ம் வித்₃தி₄ மந꞉ ப்ரக்₃ரஹமேவ ச ॥இந்த்₃ரியாணி ஹயாநாஹு: விஷயாந் தேஷு கோ₃சரான்-இந்த சரீரம் ஒரு தேர் (ரத₂ம்), ஜீவாத்மா தான் அதற்கு ஸ்வாமீ (ரதீ), புத்தி (உறுதி) தான் தேரோட்டி (ஸாரதீ), மனது தான் கடிவாளம் (ப்ரக்₃ரஹம்), இந்த்₃ரியங்கள் தான் குதிரைகள், உலக விஷயங்கள் தான் குதிரைக்கு புல் போன்றவை-
விஜ்ஞாந ஸாரதி₂ர் யஸ்து மந꞉ ப்ரக்₃ரஹ வாந் நர꞉ । ஸ: அத்₄வந꞉ பார மாப்நோதி தத்₃விஷ்ணோ꞉ பரமம் பத₃ம் ||-புத்தி என்ற ஸாரதியையும் மனது என்ற கடிவாளத்தையும் எவன் கட்டுப் படுத்துகிறானோ , அவன் தான் பாதையின் இறுதியில் இருக்கும் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான். -இப்படி தேர், ஸாரதீ, குதிரைகள் முதலானவற்றை அடக்க வேண்டும் என்று உபதேசித்த பிறகு தான், நாம் கீழே பார்த்த விஷய வாக்யம் உள்ளது. எனவே அந்த வாக்கியத்தில் புத்தி, மனது, இந்த்ரியங்கள், பொருள்கள் முதலானவற்றைக் கட்டுப் படுத்தும் போது, எதை விட எது முக்கியமானது என்று தான் சொல்லப்படுகிறது.
புலன்களை அடக்கும் முறை
இந்த்₃ரியேப்₄ யா ꞉ பரா ஹ்யர்தா ₂ – இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப் பொருள்களை அடக்குவது முக்கியமானது – ஏனெனில் புலன்களை அடக்கி வைத்தாலும் உலகப் பொருள்கள் அறுகில் இருந்தால் அவை புலன்களை இழுத்து விடும்.
அர்தே₂ப்₄ யஶ்ச பரம் மந꞉ – பொருள்களை விட மனதை அடக்குவது முக்கியம் –-ஏனெனில் பொருள்களை விலக்கி வைத்திருந்தாலும் மனது அப்பொருள்களை நினைத்துக் கொண்டே இருந்தால் புலனடக்கம் ஸித்திக்காது.
மநஸஸ்து பரா பு₃த்₃தி₄: – மனதை விட புத்தி என்ற உறுதியை வசப்படுத்துவது முக்கியம் – ஏனெனில் ஓர் உறுதி இருந்தால் தான் மனது வழி தவறிப் போகும் போது அதைத் தடுத்து சரியான பாதைக்கு இழுத்து வர முடியும்.
பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ – புத்தியை விட உயர்ந்தவரான ஆத்மாவை வசப்படுத்துவது முக்கியம் –ஏனெனில் ஆத்மாவுக்கு அதீனமாகத் தான் கீழ் சொல்லபட்ட புலன்கள், மனது, உறுதி எல்லாம் உள்ளன.
மஹத꞉ பரம் அவ்யக்தம் – ஆத்மாவை விட அவ்யக்தம் என்ற பொருளை வசப்படுத்துவது முக்கியம் –-அவ்யக்தம் எனப்படுவது நம்முடைய சரீரம். சரீரம் ஆரோக்யமாக நம் வசத்தில் இருந்தால் தான் ஆத்மா எந்தச் செயலையும் செய்ய முடியும் என்பதால் அதை வசப்படுத்துவது முக்கியம்.
அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ – சரீரத்தை விட புருஷன் என்ற பரமாத்மாவை வசப்படுத்துவது முக்கியமானது –ஏனெனில் இவ்வுலகில் அனைத்துமே அவருக்கு அதீனமாகத் தான் இயங்குகிறது.
புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ₂ ஸா பரா க₃தி꞉ – அந்த பரமாத்மாவை விட முக்கியமாக வசப்படுத்தப்பட வேண்டிய பொருள் வேறொன்று கிடையாது. அவரே எல்லை .
இது தான் விஷய வாக்கியத்தின் சரியான பொருள் ஆகும்.
ஸித்தாந்த யுக்திகள்
உருவகத்தில் தேர், ஸாரதீ, கடிவாளம் என்று சொல்லப்பட்ட அதே பொருள்கள் அதே சொற்களால் விஷய வாக்கியத்திலும் சொல்லப்படுகின்றன, ஒன்றைத் தவிற – சரீரம் என்ற சொல்லுக்கு பதிலாக அவ்யக்தம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே , ஸந்தர்பத்தை வைத்துப் பார்த்தால், இங்கு அவ்யக்தம் எனப்படுவது தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் தான், மூல ப்ரக்ருதி அல்ல.-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்ற வாக்கியமும் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லவில்லை , வசப்படுத்தப் பட வேண்டிய பொருள்களுள் பரமாத்மாவை விட முக்கியமானது எதுவுமில்லை என்று தான் கூறப்படுகிறது.-பரமாத்மாவை வசப்படுத்துவதாவது, அவரிடம் சரணாகதி செய்து அவர் அநுக்ரஹத்தைப்
பெறுவது தான்.
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது – வேதமே இந்தப் பொருளைக் காட்டுகிறது –
ஏஷ ஸர்வேஷு பூ₄தேஷு கூ₃ட₄: ஆத்மா ந ப்ரகாஸதே । த்₃ருஶ் யதே த்வக்₃ர்யயா பு₃த்₃த்₄ யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம த₃ர்ஶிபி₄꞉ ||-இந்த புருஷன் எனப்படுபவர் எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார். அவர் வெளிப்படையாகப் ப்ரகாசிப்பதில்லை . புலன்களை அடக்கி நுட்பாக ஆராயும் புத்தியால் மட்டுமே அவர் காணப்படுகிறார்.
இப்படி உபநிஷத்தே பரமாத்மாவைப் பற்றியும், புலன்களை வசப்படுத்துவதைப் பற்றியும் சொல்கிறபடியால் இதுவே சரியான பொருள். எனவே இங்கு மூல ப்ரக்ருதி சொல்லப்படவே இல்லை .-ஆகவே , இவ் விடத்தில் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களின் வர்ணனையோ , ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவரே இல்லை என்றோ சொல்லப்படவே இல்லை -எனவே வேதம் ஸாங்க்ய மதத்தைத் தழுவி உபதேசிக்கிறது என்று கூற இயலாது. எனவே பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம் என்று உபநிஷத்துக்கள் எங்குமே ஏற்க வில்லை .-மேலும் பல யுக்திகளைக் கொண்டும் வ்யாஸர் இதை நிரூபிக்கிறார் மற்ற ஸூத்ரங்களால் -அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –
1.4.1-ஆநுமாநிகாதி₄கரணம்–ப்ரக்ருதியையும் இயக்குபவர் பரமாத்மாவே
சரீரமே முக்திக்கான கருவி
1-4-1-ஆநுமாநிகதி₄கரணத்தின் முதல் ஸூத்ரத்தால் இங்கு ’அவ்யக்தம்’ என்று சொல்லப்படுபடுவது மூலப்ரக்ருதி அல்ல, -இதற்கு முன் உருவகத்தில் தேராகச் சொல்லப்பட்ட சரீரம் தான் என்று காட்டினார் வேத வ்யாஸர். இனி அதைத் தொடர்ந்து மேலும் பல யுக்திகளைக் கூறுகிறார்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது – அவ்யக்தம் என்றால் ’வ்யக்தமாக வெளிப்படையாக இல்லாதது’ என்று பொருள்-எனவே இச் சொல் பொதுவாக மூல பிரக்ருதியைத் தான் குறிக்கும். சரீரமோ வ்யக்தமானது அதாவது வெளிப்படையானது.பிறகு அவ்யக்தம் என்ற சொல் எப்படி சரீரத்தைச் சொல்லமுடியும்? என்று. இதற்கு பதில் தான் அடுத்த ஸூத்ரம் -2-ஸூக்ஷ்மம் து தத₃ர்ஹத்வாத் –ஸூக்ஷ்மமான மூல ப்ரக்ருதி அன்றோ ; அதுக்கே தகுதி உள்ளபடியால் ஸூக்ஷ்மம் து – ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும் மூல ப்ரக்ருதி தான் ஸ்ருஷ்டி நடக்கும் போது இந்த சரீரமாக மாறுகிறது. எனவே , பஞ்சின் விகாரம் (மாறுபாடான) துணியைப் பஞ்சு என்று சொல்வது போல், அவ்யக்தம் என்கிற மூல ப்ரக்ருதியின் விகாரம் (மாறுபாடான) சரீரத்தை அவ்யக்தம் என்ற சொல்லைக் கொண்டு சொல்லலாம், தவறில்லை-
விஷய வாக்கியத்தில் இருக்கும் அவ்யக்தம் என்ற சொல் சரீரத்தைச் சொல்கிறது என்று கொள்ளாமல், முதலில் உருவகத்தில் இருக்கும் சரீரம் என்ற மூல ப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று கொண்டால் என்ன? என்று பூர்வபக்ஷீ கேட்க, அதற்கு விடை தான் ஸூத்ரத்தின் அடுத்த பகுதி —தத₃ர்ஹத்வாத் – உருவகத்தின் இறுதியில் தேர், ஸாரதீ, கடிவாளம் முதலானவற்றை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று சொல்கிறபடியால், இங்கு முக்தி அடைவதற்குக் கருவிகளானவை தான் தேராகவும், -ஸாரதியாகவும், கடிவாளமாகவும் உருவகப் படுத்தப்பட வேண்டும். மூல ப்ரக்ருதியோ புருஷார்த்தம் அடைவதற்குக் கருவியாக ஆகாது. அதைக்கொண்டு எந்தச் செயலையும் செய்ய இயலாது. எனவே அதைத் தேராக உருவகம் செய்வதுஇங்கு பொருத்தமாக இருக்காது. சரீரம் தான் ’அர்ஹம்’-அதாவது“தகுதி உடையது” அதாவது புருஷார்த்தம்
அடைவதற்குக் கருவியாக இருக்கும் தகுதி உடையது. எனவே அது தான் இங்கு உருவகத்தில் பொருத்தமானது.-எனவே , பின்னால் வரும் விஷய வாக்கியத்தில் உள்ள அவ்யக்தம் என்ற சொல் தான் சரீரத்தைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிற, சரீரம் என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று மாற்றிக் கொள்ள இயலாது.
ஸாங்க்ய மதத்தை ஏற்காததன் காரணம்
ஸாங்க்ய மதத்தவரின் கேள்வி – நீங்களும் மூல ப்ரக்ருதி என்ற பொருளை ஏற்கிறீர்கள், அதிலிருந்து தான் சரீரம் உண்டாகிறது என்றும் ஏற்கிறீர்கள் என்றால் ஏன் எங்கள் ஸாங்க்ய மதத்தைக் குறை சொல்கிறீர்கள்? அதற்கு பதில் –
3-தத₃தீ₄நத்வாத் அர்த₂வத் – “அதற்குக் கீழ் படிந்தே பயனுள்ளது”
மூல ப்ரக்ருதியான ஸ்வதந்த்ரமான ஒரு பொருள், தானாக இயங்குகிறது என்று ஸாங்க்ய மதம் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை , அதைத்தான் குறை சொல்கிறோம். தத₃தீ₄நத்வாத் பரமாத்மாவுக்கு அதீனமாக, அவருக்குக் கட்டுப்பட்டு,அவரை அந்தராத்மாவாகக் கொண்டு, அவராலே இயக்கப்பட்டு தான் மூல ப்ரக்ருதி அர்த₂வத் பயனுடையது, அதாவது-தன்னிடமிருந்து பஞ்ச பூதங்கள் முதலானவற்றை உண்டாக்குகிறது. மூல ப்ரக்ருதி இருப்பதும், நிலைப்பதும், செயல்படுவதும் கூட அந்த பரமாத்மாவால் தான். இதை ஸாங்க்ய மதம் ஏற்காதபடியால் அதைத் தவறு என்கிறோம்
(ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்-பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை-ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து-ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை-பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது என்று விடை கூறப்படுகிறது –)
4-ஜ்ஜேயத்வ அவசநாத் ச – “அறியப்பட வேண்டியது என்று சொல்லப்படாத படியாலும்”-ஸாங்க்ய மதத்தின்படி ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா என்ற இரண்டு பொருள்களைப் பற்றின உண்மையான அறிவு தான் முக்திக்கு வழி ஆகும். எனவே , இங்கு அவ்யக்தம் என்ற சொல் மூல ப்ரக்ருதியைக் குறிப்பதாகக் கொண்டு,-உபநிஷத்தே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்கிறது என்று கொண்டால், அந்த அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை’அறிய வேண்டும்’ என்று வேதம் கண்டிப்பாக சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எந்த உபதேசமும் காணப்படவில்லை . எனவே இங்கு சொல்லப்படுவது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.
(த்ருஷ்ட்வத் -கண்ணுக்குத்தெரிந்த புருஷார்த்தங்கள் போல் ஆனு ஸ்ரவணாத் -ஸ்வர்க்கம் போன்றவை கேட்டு அறிந்தவையும் –அவி ஸூத்தி -தூய்மை இல்லாமல் திரும்ப வேண்டிய குறை -துக்கம் கலந்து –ஷயம் -முடியும் –அதிசயம் -உலக இன்பங்களை விட சுவர்க்கம் மேலானது போல் இதற்கு மேலானவை உண்டே-தத் விபரீதமானவே ஸ்ரேயஸ் -அழியாத துக்கம் கலசாத முக்தி -சாங்க்யர் காரிகை ஸ்லோகம் –வ்யக்தம்-கண்ணால் காண்பவை – அவ்யக்தம் பிரகிருதி –அறிவாளி -மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு அடையலாம் –
இங்கு அறியப்பட வேண்டியது என்ற வேத வாக்கியம் இல்லையே -)
5-வத₃தி இதி சேத் ந ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத்
வத₃தி – ’சொல்கிறது’ –அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் பூர்வபக்ஷீ.
அஶப்₃த₃ம் அஸ்பர்ஶம் அரூபம் அவ்யயம் ததா₂ அரஸம் நித்யம் அக₃ந்த₄வச்ச யத் ।
அநாத்₃யநந்தம் மஹத꞉ பரம் த்₄ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா₂த் ப்ரமுச்யதே ||
ஒலி தொடுவுணர்ச்சி வண்ணம் சுவை மணம் இல்லாததாய், நித்யமானதாய், மஹான் என்பதைவிட உயர்ந்ததான பொருளை அறிபவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடிகிறான்.-இவ்வாறு மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று வேதமே சொல்கிறபடியால் அவ்யக்தம் என்பது ப்ரக்ருதி தான்.
மூல ப்ரக்ருதியைப் பற்றின உபதேசமே இல்லை —இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு–ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத் – ப்ராஜ்ஞன் (மிகுந்த அறிவாளி) என்ற பரமாத்மாவின் ப்ரகரணம் அன்றோ இது-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே பரமாத்மா தான் பேசப்பட்டு வருகிறார். முதலில் புலன்களை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைய முடியும் என்று சொல்லி, பிறகு கூர்மையாகச் சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் தான் அந்த விஷ்ணுவை காண முடியும் என்று சொல்லி, தற்போது இந்த வாக்கியத்தில் ’ஒரு பொருளை’ அறிந்தால் முக்தி கிடைக்கும் என்று சொன்னால் அந்தப் ’பொருள்’ விஷ்ணுவாகத் தான் இருக்க முடியும், திடீரென்று தொடர்பே இல்லாத மூல ப்ரக்ருதியை இங்குச் சொல்வதாகக் கொள்ள முடியாது. எனவே , அவ்யக்தம் என்ற பொருள்’அறியப்பட வேண்டும்’ என்று இங்கு சொல்லாதபடியால் அது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.
(இந்த வரிகளுக்கு முன்னால்-விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்-அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்-சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு-பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –புத்தரோத்மா மஹான் பர -என்றும்-மேலானவன் என்று உணர முடியலாம்-)
இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று-பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே)
பூர்வபக்ஷீ கேட்கிறார் – இந்தப் ப்ரகரணத்தில் விஷ்ணுவும் சொல்லப்படுகிறார், ப்ரக்ருதியும் சொல்லப்படுகிறது என்று கொண்டால் என்ன? என்று. அதற்கு பதில் கூறுகிறார் வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் -6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபந்யாஸ: ப்ரஸ்ந: ச–த்ரயாணாம் ஏவ ச – உபேயம் உபாயம் உபேதா என்ற மூன்று பொருள்களுக்கு மட்டும் தான்–ஏவம் உபந்யாஸ: – இவ்வாறு அதாவது அறியப்பட வேண்டியவை என்று இங்கு உபந்யாஸம் உள்ளது-ப்ரஸ்ந: ச – கேள்வியும் கூட (அந்த மூன்றைப் பற்றித் தான் உள்ளது) நசிகேதஸ் தன் மூன்றாவது வரத்தால் முக்தி எப்படிப்பட்டது என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் உபேயம் (அடையப்படும் இலக்கு), உபாயம் (முக்தி அடையும் வழி) மற்றும் உபேதா (அடைபவர்) என்ற மூவர் தான் அடங்கியுள்ளார்கள். (ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-)யம தர்மனும் உபேயம் பரமாத்மாவே , உபாயம் பக்தி தான், உபேதா ஜீவாத்மா என்று அதனதன் தன்மைகளையே உபதேசிக்கிறார். எனவே இங்கு மூல ப்ரக்ருதியைப் பற்றிப் பேச்சே இல்லை .
(தம் துர்தர்சம்– கூடம் மறைக்கப்பட்டு அனுப்பிரவிஷ்டம் குஹாயம் புராணம் தேவம் -அவ்யாத்மயோகம் -ஆத்ம சாஷாத்காரம் வந்து த்யானம் செய்து ஹர்ஷ சோகம் தாண்டி இன்பமயமான விஷ்ணு பதம் அடைகிறான்-பிரிய தமனாக உள்ளவர்களையே தேர்ந்து எடுத்துக் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் –அன்பு பக்தியே அடையும் வழி)
7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” – (7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” –(புத்தேராத்மா மகான் பர –) புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ’மஹான்’ என்ற இடத்தில்-மஹான் என்பது அசேதனப் பொருள் அல்ல, அதை ’ஆத்மா’ என்று சொல்கிறபடியால். அதே போல், ’மஹான் என்ற ஆத்மாவை விட அவ்யக்தம் உயர்ந்தது” என்று சொல்கிறபடியால், அந்த அவ்யக்தம் ப்ரக்ருதியாக இருக்க முடியாது,-ஜீவாத்மாவை விட மூல ப்ரக்ருதி உயர்ந்தது என்று ஸாங்க்ய மதத்தில் ஏற்காதபடியால்.)
1-4-2–சமஸாதி₄கரணம்-ப்ரக்ருதியும் படைக்கப்படுவதே
ஸாங்க்ய மதத்தின் விமர்சனம்
இந்தப் பாதத்தில், கபிலாசார்யரின் ஸாங்க்ய மதத்தைச் சொல்வது போல் இருக்கும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து, அவையும் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை , பரமாத்மா ஜகத்காரணம் என்று தான் காட்டுகின்றன என்கிறார் வ்யாஸர். அதனால், முதலில் ஸாங்க்ய மதத்தை நன்கு புரிந்து கொள்வோம்-(தந்த்ர ப்ரக்ரியை -சாங்க்ய மதத்தை இப்படியும் சொல்வர்).மூல ப்ரக்ருதி’ என்பது தான் இந்த உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள். அதில் ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்கள் உள்ளன. ப்ரளய நிலையில் இம்மூன்று குணங்களும் ஸம நிலையில் இருக்கும்.-ஸ்ருஷ்டி ஏற்படும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ப்ரக்ருதி என்பது நித்யமானது, என்றும் இருக்கும்.ஸ்ருஷ்டி நடக்கும் போது, ப்ரக்ருதியிலிருந்து ’மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து அஹங்காரம் என்ற தத்துவமும் உண்டாகின்றன. பிறகு, தாமஸ அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரம், ஸ்பர்ச தந்மாத்ரம், ரூப தந்மாத்ரம், ரஸ தந்மாத்ரம் மற்றும் கந்த தந்மாத்ரம் என்ற 5 தந்மாத்ரங்களும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற 5 பூதங்களும் தோன்றுகின்றன. ஸாத்த்விக அஹங்காரத்தலிருந்து கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற 5 ஜ்ஞாந இந்த்ரியங்களும். பேச்சுப்புலன் கைகள் கால்கள் மற்றும் மலம் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்ற 5 கர்ம இந்த்ரியங்களும், மனது என்ற உட்புலனும் தோன்றுகின்றன. ஆக மொத்தம் 24 விதமான அசேதனப் பொருள்கள் உள்ளன–இவற்றை யெல்லாம் விட உயர்ந்தவர், ஜ்ஞாநம் உடையவர் ஜீவாத்மா. அவர் 25ஆவது தத்துவம்.-இவற்றுக்கு மேல் பரமாத்மா, ஈச்வரன், ப்ரஹ்மம் என்று ஒரு தத்துவம் கிடையாது. இதுதான் ஸாங்க்ய மதம்-இதில் தத்துவங்களின் வரிசை , தன்மைகள் இவற்றை யெல்லாம் ஸித்தாந்தத்திலும் ஏற்றாலும், பரமாத்மா என்று 26ஆவது ஒரு தத்துவம் உள்ளது என்றும், அவர்தான் மற்ற சேதனங்கள் மற்றும் அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவற்றை இயக்குகிறார் என்றும் சொல்கிறோம். இதுவே வேறுபாடு-இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸாங்க்ய மதம் தவறென்று காட்டப்படுகிறது.
(மந்த்ரிக உபநிஷத் -விகார ஜனணீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் -கீதையிலும் இதே போல் பஞ்ச பூதங்கள் -மனஸ் -அஹங்காரம் மஹா -அஜாம் த்ருவாம் -அவரால் இயக்கப்பட்டு -மக்களுக்கு வேண்டிய பலன்களை அவன் இயக்கத்தால் உண்டாகிறது –
முக்குண -வெள்ளை கறுப்பு சிகப்பு -சத்வ ரஜஸ் தமஸ் -மயம் -ஸர்வகாம -நினைத்தபடி உண்டாக்கி-அஞ்ஞர்கள் இப்பிரக்ருதியைக் குடிக்கிறார்கள் -அனுபவிக்கிறார்கள் -உழன்று கொண்டு குமாரர் -சிறுபிள்ளைத்தனம் -தேவதேவன் வசத்தில் பிரகிருதி வசப்பட்டு -ஆசைப்பட்டபடி இத்தை உருவாக்குகிறார் -அந்த ஈஸ்வரன் -26/27 தத்வம் என்றும் சொல்கிறார்கள் -காலத்தையும் சேர்த்தது 27—ஸ்வேதாஸ்வரம் -அறிவுடையவர் அறிவில்லாதவர் -ஈசன் -அனீசன் -போக்த்ரு -போக்யம் -பத்யதே கட்டி வைக்கப்படுகிறான் -ஈஸ்வரனை அறிந்து விடுபடலாம் -ஷரம் பிரதானம் -மூலப்பிரக்ருதியை உருவம் மாறி -அம்ருதம் அக்ஷரம் -ஜீவாத்மா -இருவருக்கும் ஈசன் ஏக -அவனையே தியானித்து பூஜை செய்து மனஸால் சாஷாத்காரித்து -அனுக்ரஹத்தால் மோக்ஷம்-விஸ்வ மாயை -இல்லாத பொருள் அர்த்தம் இல்லை -ஆச்சர்யம் -மாயா அஸ்திரம் -பிரயோகம் -ஆச்சர்யமானது -)
வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே .-அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
விகாரஜனனீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்₄ருவாம் | த்₄யாயதே அத்₄யாஸிதா தேந தந்யதே ப்ரேர்யதே புந:-பல விதமான காரியப் பொருள்களை உண்டாக்குவதாய், அறிவற்றதாய், எட்டு வடிவங்கள் உடையதாய், உண்டாக்கப் படாததாய், அழியாததான இந்த ப்ரக்ருதி பரமாத்மாவாலே அதி₄ஷ்டா₂நம் செய்யப்பட்டு(இயக்கப்பட்டு) விரிவடைகிறது செயல்படுகிறது.
ஸிதா அஸிதா ச ரக்தா ச ஸர்வகாமது₃கா₄ விபோ ₄:| பிப₃ந்தி ஏநாம் அவிஷமாம் அவிஜ்ஞாதா : குமாரகா: || வெளுப்பு, கருப்பு, சிவப்பு என்ற மூன்று வண்ணங்கணை (ஸத்த்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்கணை) உடைய இந்த ப்ரக்ருதி ஈஸ்வரனின் ஆணைப்படி இயக்கப்படுகிறது. இதன் உண்மையை அறியாத குழந்தை போன்ற
ஜீவாத்மாக்கள் இதையே குடித்து (அநுபவித்து) அதில் ஈடுபடுகிறார்கள்.
ஏகஸ்து பிப₃தே தே₃வ: ஸ்வச்ச₂ந்த₃: வசாநுகா₃ம்| தம் ஷட்₃விம்சகம் ஆஹு: ஸப்த விம்சம் அத₂ அபதர ||-ஒரு தேவன் மட்டும் தான் இந்தப் ப்ரக்ருதியைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு தான் ஆசைப்பட்டபடி இதை அநுபவிக்கிறார். அந்த பரமாத்மாவை 26ஆவது தத்துவம் என்றோ , (காலத்தையும் கணக்கிட்டால்) 27ஆவது தத்துவம் என்றோ கூறுகிறார்கள்.
வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே . அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஜ்ஞாஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ அஜா ஹ்யேகா போ₄க்த்ரு போ₄கா₃ர்த₂ரூபா|
அநீசஶ்ச ஆத்மா ப₃த்₄யதே போ₄க்த்ருபா₄வாத் ஜ்ஞாத்வா தே₃வம் முச்யதே ஸர்வபாசை : ||-ஜ்ஞாநீ மற்றும் அறிவிலியாக, இயக்குபவர் மற்றும் இயக்கப்படுவராக இரண்டு விதமான (பரமாத்மா மற்றும் ஜீவாத்மா) நித்யமான ஆத்மாக்கள் உள்ளார்கள். அவர்கள் அநுபவத்துக்காக ப்ரக்ருதி என்ற ஒரு அழியாத தத்துவம் உள்ளது. இயக்கப்படும் ஆத்மா தானே போ₄க்தா (ப்ரக்ருதியால் வரும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவன்) என்று
எண்ணி அந்தப் ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு விடுகிறார். எப்போது இயக்கும் பரமாத்மாவை உணர்கிறானோ அப்போது எல்லா கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறார்.
க்ஷரம் ப்ரதா₄நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மநௌ ஈசதே தே₃வ ஏக: |
தஸ்ய அபி₄த்₄யாநாத் யோஜநாத் தத்த்வபா₄வாத் பூ₄யஶ்சாந்தே விஸ்வமாயா நிவ்ருத்தி: ||-மாறிக்கொண்டே இருக்கும் ப்ரதானம், மாறாத ஜீவாத்மா எனும் இருவரையும் இயக்கும் தேவன் ஒருவனே . அவனை த்யானித்து, பூஜை செய்து, ஸாக்ஷாத்காரம் செய்தால் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.
மாயாம் து ப்ரக்ருதிம் வித்₃யாத் மாயிநம் து மஹேஸ்வரம்| அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-மாயை (ஆச்சரியமானது) என்று ப்ரக்ருதியை அறிவாய். அதை இயக்கும் மாயாவியாக ஈஸ்வரனான பரமாத்மாவை அறிவாய். இந்த மாயை எனப்படும் ப்ரக்ருதியிலிருந்து தான் பகவான் உலகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.-இப்படி ஸ்பஷ்டமாக வேதாந்தம் கூறுவதால், இதோடு முரண்பட்ட இடங்களில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறோம்
அதிகரணத்தின் பின்புலம்
1-4-2-சமஸாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் அவ்யக்தம் என்ற சொல் பொதுவாக ப்ரக்ருதியைக் குறித்தாலும்,-இங்கு சரீரம் என்ற சொல் உள்ள படியால் சரீரத்தைத் தான் குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படியானால், சரீரம்
என்ற சொல் இல்லாத இடத்தில் மூல ப்ரக்ருதியைத் தானே பொருளாகக் கொள்ள வேண்டும் என்று ஸந்தேஹம்.
விஷய வாக்யம் – ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள பின்வரும் வாக்கியம் –அஜாம் ஏகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா: |
அஜோ ஹ்யேகோ ஜுஷமாந: அநுசேதே ஜஹாதி ஏநாம் பு₄க்த போ₄காம் அஜ: அந்ய: ||-உண்டாக்கப்படாததாய், ஒன்றாய், சிவப்பு வெள்ணை கருப்பு என்ற வண்ணங்களை உடையதாய், தன்னைப் போன்றபல பொருள்களாய் உண்டாக்கக் கூடியதாய் இருக்கும் ப்ரக்ருதியை (அஜாம் -ப்ரக்ருதி பெண் பால் சொல்) உண்டாக்கப்படாத ஒருவன் (பத்₃த₄ ஜீவாத்மா) விரும்பி அநுபவிக்கிறான், மற்றொருவன் (முக்த ஜீவாத்மா) இதை அநுபவித்து முடித்து விட்டு விடுகிறான்.
ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதத்தின்படி ஸ்வதந்த்ரமாக உலகைப்படைக்கும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? அல்லது பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டு அவரால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா?
பூர்வ பக்ஷம் – ஸாங்க்ய மதத்தில் சொன்னபடி ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் இங்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் –
1- “அஜாம்” அதாவது’உண்டாக்கப்படாதது’ என்று இங்கு ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. ஸித்தாந்தத்தில் ப்ரக்ருதியும் ப்ரஹ்மத்தின் கார்யம் தான், அதாவது உண்டாக்கப்படுவது தான். ஸாங்க்யர்கள் தான் ப்ரக்ருதி உண்டாக்கப்படாதது என்று சொல்கிறார்கள். எனவே இங்கு ஸாங்க்ய மதம் தான் பேசப்படுகிறது.
2- “ஸ்ருஜமாநாம்”-அதாவது“படைப்பவள் ” என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. “
படைப்பைச் செய்பவள் ”-“படைப்பின் கர்த்தா” என்று பொருள். கர்த்தா (செய்பவள்) என்று ஸ்வதந்த்ரமாகச் செயல்படுபவனைத் தான் சொல்ல முடியும் என்று பாணிநி மஹரிஷி தன் இலக்கண நூலில் கூறுகிறார். எனவே ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகத் தான் உலகைப் படைக்கிறது என்று வேதமே ஏற்றுக் கொண்டுள்ளது.-எனவே
அஜா என்ற சொல்லின் பொருள்
ஸித்தாந்தம் – இந்த வாதத்தை மூன்று ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1-சமஸவத் அவிசேஷாத் – “சமஸத்தைப் போல்; குறிப்பிட்டுத் தோன்றாதபடியால்”
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (அர்வாக்₃பி₃ல: சமஸ: ஊர்த்₄வபு₃த்₄ந: ) என்று ஒரு வாக்கியம் உள்ளது. “கீழே ஓட்டை உடையதாய், மேலே பெரிதாக இருக்கும் சமஸம்” என்ற அதற்குப் பொருள்.-சமஸம் என்ற சொல் பொதுவாக யாகத்தில் உபயோகிக்கப்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.(சோமயாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரங்களுக்கு சமசம்-என்றும் க்ரஹம் சொல்வர் ) பாத்திரம் மேல்பக்கம் ஓட்டை யோடும் கீழே பெரிதாகவும் இருக்கும். ஆனால் இங்கு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. –சமஸம் என்ற சொல்லுக்கு “உண்ணும் கருவி” என்று தான் பொருள். (சமசம் –சமு பஷணே -உண்பதற்கான கருவி -பங்கஜம் -சேற்றிலே பிறந்தது உண்மையான பொருள் போல் )எனவே அச் சொல்லைக் கேட்டதும் உடனடியாக பாத்திரம் தான் குறிப்பிட்டு மனதில் தோன்றாது. உண்பதற்குப் பயன்படும் ஏதோ ஒரு கருவி சொல்லப்படுகிறது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எனவே , எந்த ஒரு பொருளும் சமஸம் என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டுத் தோன்றாதபடியால், சுற்றியுள்ள வாக்கியங்களை வைத்துத் தான் இச்சொல் எதைக் குறிக்கிறது என்று அறிய முடியும்.-அருகிலேயே ’இத₃ம் தச்சி₂ர:’ (இதுதான் தலை ) என்கிற வாக்கியம் உள்ள படியால் இங்கு சமஸம் என்ற சொல் தலையைத் தான் குறிக்கிறது என்று முடிவு செய்யலாம். தலையும் உண்பதற்குப் பயன்படுகிறது, கீழே வாய் என்ற ஓட்டையை உடையது, மேலே பெரிதாய் இருக்கக் கூடியது. எனவே இவ் வர்த்தம் பொருத்தமானதே .-அதே போல் இங்கு “அஜா” என்ற சொல்லுக்கு “உண்டாக்கப்படாதது” என்று தான் பொருள். குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி மனதில் தோன்றாது. எனவே , மற்ற வாக்கியங்களைக் கொண்டுதான் இங்கு எந்தப் பொருள் கூறப்படுகிறது என்று முடிவு செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களில் முக்குணங்களை உடையதாய், உலகப் பொருள்களை உண்டாக்குவதாய், பரமாத்மாவால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. எனவே அதுவே அஜா.-“படைப்பவன் ” என்று சொன்னாலும் ஸ்வதந்த்ரமானது என்று பொருள் கிடைக்காது-(இதுவும் பொதுவான சொல் தானே ). “தேர் ஓடுகிறது” என்று சொல்கிறோம். அங்கு தேருக்கு ஸ்வதந்த்ரமாக இயங்கும் தன்மை இல்லா விட்டாலும் “ஓடுதலைச் செய்கிறது” என்று கூறுகிறோம். அதே போல் இங்கும், பரமாத்மாவால் இயக்கப்பட்டு ப்ரக்ருதி இத்தனைப் பொருள்களை உண்டாக்கினாலும், அதை “படைப்பவள் ” என்று சொல்வது தவறில்லை –
(உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –
பிருஹு –4-2-3–இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது-தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-)
உண்டக்கப்படாதது, ஆனால்-படைக்கப்பட்டது
2-ஜ்யோதி ருபக்ரமா து ததா ₂ ஹி அதீ₄யதே ஏகே
ஜ்யோதி ருபக்ரமா து – ஜ்யோதிஸ் என்ற பரமாத்மாவிடமிருந்து பிறந்தது தான்
ஹி ஏனெனில்
ததா ₂ அவ்வாறு
ஏகே வேதாத்யயனம் செய்யும் ஒரு சிலர் அதீ₄யதே – ஓதுகிறார்கள்.
தைத்திரீய சாகையில் “அணோரணீயாந்” என்று பரமாத்மாவின் பெருமைகளை உபதேசித்து,“ஸப்த ப்ராணா: ப்ரப₄வந்தி தஸ்மாத்” என்று தொடங்கி ப்ராணன், மலை , கடல் முதலானாவை பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என்று சொல்லி, அதற்கு இடையில் நாம் பார்த்த விஷய வாக்கியத்தைப் போலவே ஒரு வாக்யம் உள்ளது
“அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸரூபாம்” என்று.(தைத்ரிய சாகையிலும் -ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் போல் வாக்கியம் உண்டே) எனவே , பரமாத்மாவால் படைக்கப்படும் பொருள்களின் வரிசையில் ப்ரக்ருதியும் படிக்கப்பட்டபடியால், ப்ரக்ருதியும் பகவானால் படைக்கப்படுவது தான் என்று தெரிகிறது. எனவே ஸாங்க்யர்கள் சொல்லும் ப்ரக்ருதியை வேதம் ஏற்கவில்லை .-மேலும், “தே அபச்யந் தே₃வாத்ம சக்திம்” என்று பகவானுடைய சக்தி (விட்டுப் பிரியாத பண்பு) என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறபடியால், அது ஸ்வதந்த்ரமானது அல்ல என்று தெரிகிறது.
கேள்வி – ப்ரக்ருதி அஜா (உண்டாக்கப்படாதது) என்றும் ஜ்யோதிருபக்ரமா (பரமாத்மாவிடமிருந்து உண்டானது) என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்? இவ் விரண்டு பண்புகளும் முரண்பட்டவை அன்றோ ? பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
3-கல்பதநாபதே₃சாத் ச மத்₄வாதி₃வத் அவிராேத₄:—கல்பநோபதே₃சாத் ச – கல்பனம் (ஸ்ருஷ்டி) என்பதைப்பற்றின உபதேத்தால்
அவிராேத₄:— முரண்பாடு இல்லை
மத்₄வாதி₃வத் –-மது₄வித்₃யை முதலானவற்றில் போலே
மது₄ வித்₃யையில் உதயம் அஸ்தமனம் முதலானவற்றை உடைய ஸூர்யனுக்கும் அதில்லாத ஸூர்யனுக்கும் அந்தர்யாமியாக பரமாத்மா சொல்லப்பட்டார். இதில் முரண்பாடு இல்லை ஏனெனில் ஒன்று காரண நிலை (ஸ்ருஷ்டிக்கு முன்), மற்றொன்று கார்ய நிலை . அதே போல் இங்கும் முரண்பாடு இல்லை , இரண்டு நிலைகள் உள்ளன.-மூல ப்ரக்ருதி ப்ரளய காலத்தில் முக்குணங்களை ஸமமான நிலையில் கொண்டிருக்கும். அது படைக்கப்படாத்து, –அஜா. -அதற்குப் பின் அதுவே முக்குணங்களில் ஏற்றத் தாழ்வுகளோடு ஆகிறது. இது காரிய நிலை , உண்டாக்கப் படுகிறது. எனவே ப்ரக்ருதியை ஜ்யோதி ருபக்ரமா என்ற சொல்வதும் தவறல்ல.
(அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேக்சிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது-ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே)
—————
(இப்பாதத்தால் —நிரதிவதிக மஹிமை -ஸ்தாபிக்கப்படுகிறது -கீழ் மூன்று பாதங்களிலும் ஸ்ரஷ்டா -தேஹீ- ஸ்வ நிஷ்டா -பார்த்தோம்) 1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம்-தத்துவங்களின் எண்ணிக்கை–
1.4.3 அதிகரணத்தின் பின்புலம்
1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’
அஜா’ என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றாதபடியால், மற்ற வாக்கியங்களைக் கொண்டு அது பரமாத்மாவால் இயக்கப்படுவது தான் என்று முடிவு செய்தோம். இந்த அதிகரணத்தில், பரமாத்மா என்றொருவரை ஒப்புக் கொண்டால்
எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறபடியால் குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றுகிறபடியால் அப்படியே ஏற்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.
விஷய வாக்யம் – சுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு வாக்கியம்- யஸ்மின் பஞ்ச பஞ்சஜநோ: ஆகாசஶ்ச ப்ரதிஷ்டி₂த: தமேவ மந்ய ஆத்மாநம்–எதில் ஐந்து ’பஞ் ஜந’ங்களும் ஆகாஸமும் நிலை பெற்றிருக்கின்றனவோ , அதுவே ஆத்மா
ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதம் சொல்லும் ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? இல்லையா?
பூர்வபக்ஷம் – இங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் சொல்லப்படுகிறது.
பஞ்ச ஜந: என்ற சொல்லுக்கு ’ஐந்து பொருள்களின் ஸமுதாயம்/கூட்டம்’ என்று பொருள். ’பஞ்ச ’ என்றால் ஐந்து.-எனவே , ஐந்து பொருள்களைக் கொண்ட ஸமுதாயங்கள் ஐந்து உள்ளன என்று தெரிகிறது. அந்த 25 பொருள்களும் ஆகாஸமும் ஜீவாத்மாவால் தாங்கப்படுகின்றன என்று தான் இந்த வாக்கியம் கூறுகிறது.
ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 25 பொருள்கள் தானே ? இங்கு 27 உள்ளனவே ? என்னில் – ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவற்றை ப்ரக்ருதி என்ற த்ரவ்யத்தின் குணங்களாகக் கொள்ளாமல் தனித் தனி த்ரவ்யங்களாகக் கொண்டால்-அசேதன தத்துவங்களே 26, அதற்கு மேல் ஜீவாத்மா 27ஆவது. எனவே அந்த எண்ணிக்கையும் பொருந்தும்.
பரமாத்மா என்று ஒரு பொருளை ஏற்றுக் கொண்டால், 28 தத்துவங்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்த வாக்கியத்தில் வேதம் 25 + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27 தத்துவங்களையே சொல்கிறது. எனவே பரமாத்மா என்றொருவர் கிடையாது. எனவே ப்ரக்ருதி அவரால் இயக்கப்படுவதல்ல, ஸ்வதந்த்ரமானது தான். எனவே அதுவே தான் ஜகத்காரணம், பரமாத்மா அல்ல – என்று பூர்வ பக்ஷியின் வாதம்.
உண்மையான தத்துவ எண்ணிக்கை
ஸித்தாந்தம் – 1-ந ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி நாநா பா₄வாத் அதிரேகாத் ச
ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி – 25 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட
ந – (ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட ஸ்வதந்த்ரமான தத்துவங்கள் இங்கு சொல்லப்படுகின்றன என்பது) தவறு
நாநா பா₄வாத் – அவற்றைக் காட்டிலும் வேறுபட்ட படியால் (பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டபடியால்)
அதிரேகாத் ச – எண்ணிக்கை அதிகமாக உள்ள படியாலும்
இங்கு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், அவை ஸாங்க்யர்கள் சொல்லும் பொருள்கள் என்று கொள்ள முடியாது, ஏனெனில் ’-நாநா பா₄வாத்’ – ஸாங்க்ய மதத்தில்-பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத தத்துவங்களே ஏற்கப் படுகின்றன ஆனால் இந்த வாக்கியத்தில் 25 பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் ஆதாரமாகவும் பரமாத்மாவே சொல்லப்படுகிறார். எனவே இவை வேறு.
இங்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மா என்று கொள்ளலாமே ? எனில் – “அதிரேகாத் ச”- இங்குள்ள-தத்துவங்களின் எண்ணிக்கை ஸாங்க்யர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 24 அசித் + 1 ஜீவாத்மா = 25 தான். ஆனால் இங்கு 25 பொருள்கள் + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27
பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று த்ரவ்யங்கள் என்று சொன்னதும் தவறு, பல ப்ரமாணங்களில் அவை குணங்கள் என்றே சொல்லப்படுகிற படியால். எனவே காலம் என்பதையும் சேர்த்து, 26 தத்துவங்களுக்கு ஆதாரமானவர் 27ஆவது தத்துவமான பரமாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.
உண்மையில், ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத் அபி அதாவது-“25 என்ற எண்ணிக்கையை ஏற்றாலு ம்கூட” என்று ஸூத்ரம் உள்ள படியால், வேதவ்யாஸர் இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் – ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று’ஐவரின் கூட்டங்கள் ஐந்து’ சொல்லப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பொதுவான தன்மை
வேண்டும். அது இங்கு இல்லை . 5 கர்மேந்த்ரியங்கள், 5 ஜ்ஞாநேந்த்ரியங்கள், 5 தந்மாத்ரங்கள் என்று சொன்னாலும் 5 பூதங்கள் என்றொரு கூட்டத்தை அமைக்க முடியாது, ’ஆகாஸம்’ தனியாக எடுக்கப்பட்டபடியால். மேலும், ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் ஆத்மா மனஸ் என்னும் ஐந்தையும் ஒரு கூட்டமாகத் திரட்ட எந்தப் பொதுவான தன்மையும்
இல்லை . எனவே இங்கு 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொன்னதே தவறு.
(ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது)
வேத வ்யாஸரின் கருத்து
பிறகு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்பதன் பொருள் என்ன? பஞ்ச ஜநங்கள் என்று சிலருக்குப் பெயர் வழங்கப்படுகிறது.-அவர்கள் ஐவர் எனப்படுகிறது,-’ஏழு ஸப்தரிஷிகள்’ என்பது போல். அவர்கள் யார் என்கிறது அடுத்த ஸூத்ரம் –
2- ப்ராணாதய ₃ : வாக்ய சேஷாத் – “ப்ராணன் முதலானவை , மீதமிருக்கும் வாக்கியத்தால்”
விஷய வாக்கியத்துக்கு அடுத்து வரும் வாக்கியத்தில் -(ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷுஷஸ் சஷுஸ்: ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், அந்நஸ்ய அந்நம், மனஸோ யே மநோ விது₃:) அதாவது
“ப்ராணனுக்குப் ப்ராணனாக, கண்ணுக்குக் கண்ணாக, காதுக்குக் காதாக, அந்நத்துக்கு அந்நமாக, மனதுக்குமனதாக அவர் இருக்கிறார்” என்று உள்ளது. அங்கும் ஐவர் சொல்லப்படுகிறபடியால், அந்த ப்ராணன் கண் காது அந்நம் மனஸ் என்று ஐவர் தான் பஞ்ச ஜநங்கள் என்று தெரிகிறது.
கேள்வி – காண்வ சாகையில் இதே விஷய வாக்கியம் உள்ளது, ஆனால் அதற்கு மேல் வரும் ’ப்ராணஸ்ய ப்ராணம்’ என்ற வாக்கியத்தில் ’அந்நம்’ என்பது இடம் பெற வில்லை . எனவே 4 தான் அங்கு உள்ள படியால் ஐந்து பஞ்ச ஜனங்கள் வேறாகத்தானே இருக்க வேண்டும்? பதில் – அடுத்த ஸூத்ரத்தில் -3-ஜ்யோதிஷா ஏகேஷோம் அஸதி அந்நே
ஏகேஷோம் ஒரு சிலர் ஓதும் காண்வ சாகையில்
அஸதி அந்நே – அந்நம் சொல்லப்படாவிட்டாலும்
ஜ்யோதிஷோ ஜ்யோதிஸ்-என்ற சொல்லைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம்
காண்வ சாகையில் விஷய வாக்கியத்துக்கு முன்னால் (தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம்.: )என்று பரமாத்மாவை ஜ்யோதிஸ்ஸுக்களுக்கு (ப்ரகாஸம் கொடுக்கும் பொருள்களுக்கு) ஜ்யோதிஸ்ஸாக சொல்லப்படுகிறார். அவை எத்தனை என்றால்,
’பஞ்ச பஞ்ச ஜனா:’ என்று ஐவர் எனப்படுகிறது. ப்ரகாஸம் கொடுக்கும்
ஐவர் என்றால் எது ஜ்ஞாநத்தை ஏற்படுத்தும் இந்த்ரியங்களையே நினைவு படுத்துகிறது. -எனவே பஞ்ச ஜனர்கள் என்பவை இந்த்ரியங்களே -சஷுஸ் கண். ஸ்ரோத்ரம் காது. ப்ராணன் என்றால் வாயுவை அறியும் தோல் என்ற இந்த்ரியம். மனஸ் மனது-அந்நம் என்ற சொல் மூக்கு நாக்கு என்ற இரண்டையும் சொல்கிறது.
எனவே , இங்கு 25 என்ற எண்ணிக்கை சொல்லப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஸாங்க்ய மதம் சொல்லப்படவில்லை , பரமாத்மாவே சொல்லப்படுகிறார் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.
—————–
1-4-4-காரணத்வாதி₄கரணம் ஸத் அஸத் இரண்டுமே ப்ரஹ்மம் தான்
1-4-4-அதிகரணத்தின் பின்புலம்-1-4-4-காரணத்வாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’பொருள்கள் எல்லாம் ஒன்றால் தாங்கப்படுகின்றன’ என்று
ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட்டபடியால் ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல என்று நிரூபித்தார் வ்யாஸர். அப்போது வேதாந்தத்தில் எங்கு ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட வில்லையோ அங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறது என்று கொள்ளலாமே என்று பூர்வபக்ஷீ கேட்கிறார்.
(விஷய வாக்கியம் சொல்லி சந்தேகம் முன்பு எல்லாமே -இங்கு சந்தேகம் -பல ஜகத்காரண வாக்யங்களைக் பற்றிய சந்தேகம் -வேதாந்தமே குழப்புகிறது -என்பதே பூர்வ பக்ஷம்)
ஸந்தேஹம் – வேதாந்தத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதியா? அல்லது பரமாத்மாவா ?
பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் பல முரண்பட்ட வாக்கியங்கள் இருக்கிறபடியால் ’இதுதான் ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யவே முடியாது. எனவே ’ப்ரஹ்மமே ஜகத்காரணம்’ என்று நீங்கள் சொல்வது தவறு.
சாந்தோக்ய உபநிஷத்தில் (्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது-’இந்த உலகு அனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்ததே ,-வேறு எந்தப் பொருளும் இல்லை ’ என்று சொல்லப்படுகிறது. ’இந்தக் குடங்கள் எல்லாம் முன்னால் மண் கட்டியாகவே இருந்தன’ என்று சொன்னால் குடங்களுக்கு மண் கட்டி தான் காரணம் என்று நாம் அறிவதுபோல் இந்த வாக்கியத்தால் ’இந்த உலகத்துக்கு ஸத் தான் காரணம்’ என்று அறியலாம். ஸத் என்றால் ’இருக்கும் பொருள்’ / ’உள்ள பொருள்’.
தைத்திரீய உபநிஷத்தில் (्அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது அஸத்தாக அன்றோ இவ்வுலகம்-முன்னால் இருந்தது’ என்றுள்ள தால் அஸத் தான் ஜகத் காரணம் என்று தெரிகிறது. அஸத் என்றால் ’இல்லாதது’.
‘இருப்பது’,’இல்லாதது’ என்று மாற்றி மாற்றி ஜகத் காரணப் பொருள் சொல்லப்படுகிறபடியால் இதுதான் ஜகத்காரணப் பொருள் என்று வேதாந்தத்தைக் கொண்டு முடிவு செய்யவே முடியாது.-அப்படியே முடிவு செய்தாலும்,
(தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந்நாமரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ’ என்று இவ்வுலகம் ’அவ்யாக்ருதம்’ அதாவது பெயர் மற்றும் உருவத்தால் பிரித்து அறியப்பட முடியாதபடி இருந்தது, இப்போது பெயர் மற்றும் உருவத்தால் பிரிக்கப்படுகிறது’ என்றுள்ள தால் ஜகத்காரணம் =அவ்யாக்ருதம் = அவ்யக்தம் = மூலப்ரக்ருதி என்றுதான் முடிவு செய்யலாம்.-இந்த மூல ப்ரக்ருதியே நித்யமானபடியால் (எப்போதும் இருப்பதால்) ஸத் என்றும், வடிவங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் அஸத் என்றும் சொல்லப்படுகிறது. பரமாத்மாவை இப்படி ஸத் மற்றும் அஸத் என்று கூற முடியாது.
(ஈஷதே -முளை தயார் நிலையில் உள்ள விதை போல் பிரகிருதி -ப்ரஹ்மம் -பெரியது -ஆத்மா -எங்கும் வியாபித்து இருப்பதால் -என்று அர்த்தங்கள் கொண்டு ப்ரக்ருதியையே சொல்வதாகக் கொள்ளலாம் -பூர்வ பக்ஷம்)
வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்-(1) காரணத்வேந ச ஆகாசாதி₃ஷு யதா ₂வ்யபதி₃ஷ்டோக்தே:
ஜகத்காரணம் பரமாத்மாவே தான் என்று முடிவு செய்யலாம்,
யதா ₂வ்யபதி₃ஷ்டே — இது வரை ஸுத்ரங்களில் சொல்லப்பட்ட ஸர்வஜ்ஞனான பாபமற்றவரான (சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸர்வேஸ்வரேஸ்வரன் சர்வ நியந்தா இத்யாதியாக இதுவரை சொல்லப்பட்ட )பரமாத்மாவை
ஆகாசாதி₃ஷு ச –-ஆகாசம் முதலானவற்றுக்கும் கூட
காரணத்வேந –காரணமாக
உக்தே: சொல்கிறபடியால்
’ஜகத்காரணம் இது தான்’ என்று சொல்வதற்கு முன்னவே அப் பொருளைப் பற்றி வேதம் பலவிதமான உபதேசங்களைச் செய்கிறது. அந்தப் பண்புகள் எல்லாம் ஒரு ஜ்ஞாநமுடைய பொருளுக்கே பொருந்தும்,-ப்ரக்ருதிக்குப் பொருந்தாது.
தைத்திரீய உபநிஷத்தில் – (ப்₃ரஹ்ம வித் ஆப்நோதி பரம்) அதாவது
’ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் முக்தி அடைகிறான்’ என்று சொல்லி, (ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா) -அதாவது’முக்தியில் அந்த எல்லை யற்ற ஜ்ஞாநமுடைய ப்ரஹ்மத்தையே அடைகிறான்’ என்று சொல்லி, (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம ) அதாவது
’எப்போதும் மாறாமல் இருப்பதும்,-எல்லை யற்ற ஜ்ஞாநமுடையதும், அளக்க முடியாததுமாக இருப்பதே ப்ரஹ்மம்’ என்று மறுபடியும் அதற்கு-ஜ்ஞாநமிருப்பதையே அடையாளமாகக் கூறி, (தஸ்மாத்₃வா எதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது’அப்படிப்பட்ட இந்த ஆத்மாவிடமிருந்து தான் ஆகாஸம் தோன்றியது’ என்று ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது ஜ்ஞாநமுடைய பொருளை மட்டுமே குறிக்கக்கூடிய ’ஆத்மா ’ என்ற சொல்லாலே இப் பொருளைக் குறிக்கிறது.
இதே போல் சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள ஸத்₃வித்₃யையிலும் (த தை ₃க்ஷத ப₃ஹு
ஸ்யாம் ப்ரஜாயேயேதி) என்று ’அந்த ஸத் என்ற பொருள் பார்த்தது (எண்ணியது) –-நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன் என்று’ என்று ஜ்ஞாநமிருப்பதைச் சொல்கிறது.-எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் பகுதிகள் எல்லாம் ஜ்ஞாநமுடைய பரோத்மாவையே சொல்கின்றன.
’அஸத்’ என்று ஜகத்காரணம் சொல்லப்பட்டதே ? எனில், அதுவும் பரமாத்மாவே என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் -(2) ஸமாகர்ஷாத் – “ (ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மமே அந்த வாக்கியத்திலும்) இழுக்கப் படுகிறபடியால்”’அஸத்₃வா’ எனும் வாக்கியம் உள்ள ஸந்தர்பத்தைப் பார்த்தால் அதுவும் ப்ரஹ்மத்தைத் தான் சொல்லும். முதலில் (தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆநந்த₃மய:) அதாவது-’இந்த ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எல்லையற்ற ஆநந்தம் உடையவர்’
என்றுள்ளதால் ஆத்மா என்ற சொல்லைக் கொண்டும் ஆநந்தம் இருப்பதைக் கொண்டும் இந்தப்பொருள் ஒரு சேதநன்(ஜ்ஞாநமுடையது) என்று அறியலாம்.
பிறகு (ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருகஜத) அதாவது
’அந்தப் பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைத்தது’ என்று அந்தப் பொருளே ஜகத்காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் (தத₃ப்யேஷ ஸ்லோகோ ப₄வதி) அதாவது’அந்தப் பொருளைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் உள்ளது’ என்று கூறிவிட்டு (्அஸத் ₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது’இந்த உலகம் எல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன் அஸத்தாகவே இருந்தது, அதாவது அஸத் தான் ஜகத்காரணம்’ என்று சொல்லப்படுகிறது. எனவே , இதற்கு முன் சொல்லப்பட்ட ஜ்ஞாநமுடைய, ஆநந்தமுடைய, ஜகத்காரணமான
பரமாத்மா தான் இந்த வாக்கியத்திலும் கண்டிப்பாக இழுக்கப்பட வேண்டும் (குறிக்கப்பட வேண்டும்), ப்ரக்ருதி அல்ல.-இதற்குப் பின்னாலும் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே ) அதாவது
’இந்தப் பொருளின் கட்டளைக்கு பயந்து காற்று, ஸூர்யன், அக்நி, இந்த்ரன், ம்ருத்யு முதலானவர்கள் இயங்குகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.-
(ப்ருஹத் ஆரண்யாகாவில் –தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்-அதே உபநிஷத் –ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்றுஉள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-)-எனவே , அங்கும் இதே பரமாத்மா தான் இழுக்கப்பட வேண்டும், ப்ரக்ருதியால் யாரையும் ஆள முடியாதபடியால்.ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம். அது எல்லா சேதனங்கள் மற்றும் அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டது.-அப்படிப்பட்ட ப்ரஹ்மம் நித்யமாக இருக்கிறபடியால் அதுவே ஸத் எனப்படுகிறது. இப்போது சிங்கம், மனிதன், மலை , புத்தகம் என்று பல பெயர்களோடும் உருவங்களோடும் இருந்தாலும், ப்ரளய காலத்தில் இந்தப் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளோடு இல்லாதபடியால் ’அஸத்’ (இல்லாதது) என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவ்யாக்ருதம் என்ற ப்ரக்ருதி தான் ஜகத்காரணம் என்று சொன்னாலும், ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மா என்றே பொருள்.-எனவே வேதாந்தத்தைக் கொண்டு ப்ரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்று நிச்சயிக்க முடியும் என்கிறார் வ்யாஸர்–
—————
1-4-5—ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-ஜீவனே ப்ரக்ருதியை இயக்க முடியாதா?
1-4-5-அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – இதுவரை 4 அதிகரணங்களில் ப்ரதானமே ஸ்வதந்த்ரமான ஜகத்காரணம் என்று பூர்வபக்ஷீ சொன்னதை வ்யாஸர் கண்டித்தார் – ஒரு அறிவுடைய ஆத்மாவால் இயக்கப்பட்டால் மட்டுமே அறிவற்ற அசேதனப் பொருளான ப்ரக்ருதி இயங்க முடியும் என்று கூறி. இப்போது அதே ஸாங்க்யர்கள் மறுபடியும்
கேள்வி எழுப்புகிறார்கள் – சரி, ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கவில்லை , ஜிவாத்மாவால் இயக்கப்பட்டு தான் படைக்கிறது என்று கொள்ளலாம், அப்போதும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வது தவறு தான் என்று.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆம் அத்யாயத்தில் முதல் ப்ராஹ்மணம் – பா₃லாகி ப்₃ராஹ்மணம்-த்₃ருப்த பா₃லாகி: ஹ அநூசாநோ கா₃ர்க்₃ய ஆஸ । ஸ ஹோவாச அஜாத ஶத்ரும் காஶ்யம் – ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணீதி । ஸ ஹோவாச அஜாத ஶத்ரு꞉ ஸஹஸ்ர மேதஸ்யாம் வாசி த₃த்₃ம: இதி--கர்க கோத்ரத்தைச் சேர்ந்த பாலாகி என்பவன் வேதத்தின் அங்கங்களைக் கற்று- ஆனால் வேதத்தின் உண்மைப் பொருளை
ஆராய்ந்து அறியாமல், (ஸ்ரோத்ரியன் -வேதம் முழுவதும் அறிந்தவன் –அநூசாநன் -அங்கங்களை மட்டுமே அறிந்தவன்)ஆனால் மிகவும் கர்வம் உடையவனாய் இருந்தான். அவன் சிறந்த ஆத்ம ஜ்ஞாநியான காசீ தேசத்து அரசன் அஜாத சத்ருவிடம் சென்று கூறினான் – “உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று. அரசன் ப்ரஹ்மத்தை உணர்ந்திருந்தாலும் பாலாகியை ஊக்குவிப்பதற்காக உனக்கு ஆயிரம் மாடுகள் பரிசளிப்பேன் என்றான்.
ய ஏவ அஸஸௌ ஆதி₃த்யே புருஷ ஏதமே வ அஹம் ப்₃ரஹ்ம உபாஸ இதி । மா ஏதஸ்மிந் ஸம்வதி₃ஷ்டா₂ । அதிஷ்டா₂꞉ ஸர்வேஷாம் பூ₄தாநாம் மூர்தா₄ ராஜேதி வா அஹமேதமுபாஸ இதி-’ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் ’ என்று பாலாகி கூற,
’அந்தப் புருஷனைப் பற்றி என்னிடம் பேசாதே , நான் அவனை ஜீவ ராசிகளுக்கும் சிறந்தவன் என்று அறிவேன், அவன் ப்ரஹ்மம் அல்ல’ என்றார் அரசன்.
இதே போல் சந்த்ரன் மின்னல் ஆகாஸம் வாயு அக்₃நி ஜலம் கண்ணாடி பிரதி த்வனி
திசைகள் நிழல் உடல் முதலானவற்றுக்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல, அது அனைத்தையுமே தவறு என்றார் அஜாத சத்ரு.
அஜாத சத்ருவின் உபதேசம்
ஸ ஹ தூஷ்ணீமாஸ கா₃ர்க்₃ய꞉| ஸ ஹோவாசா ஜாதஶத்ரு: – ஏதாவந்நூ இதி | ஏதாவத்₃தீ₄தி । நைதாவதா விதி₃தம் ப₄வதீதி । ஸ ஹோவாச கா₃ர்க்₃ய – உப த்வா யாநீதி -இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் பாலாகி மவ்னமாக நின்றான். ’அவ்வளவு தானா?’ என்று அஜாத சத்ரு கேட்க,-’ஆம் நான் அவ்வளவு தான் அறிவேன்’ என்று பாலாகி சொல்ல,
’இத்தால் நீ ப்ரஹ்மத்தை அறிய முடியாது’ என்று அரசன் கூறினான். பாலாகி உடனே ’உம்மிடமே நான் ப்ரஹ்மத்தைப் பற்றி கற்கிறேன்’ என்றான்
யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய:-நீ சொன்ன புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர் (இதுவே விஷய வாக்கியம் -நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் )
ஸந்தேகம் – ஜகத்காரணத்தைப் பற்றிச் சொல்லும் வேதாந்த வாக்கியங்களில் ப்ரக்ருதியை இயக்குபவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?அதை முடிவு செய்வதற்கான விசாரம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவனா? பரனா?-அறியப்பட வேண்டியவர் ஜீவன் என்றால், பரமாத்மா என்ற ஓருவரே இல்லை என்றாகும், எனவே ஜீவன் தான் ப்ரக்ருதியை இயக்க வேண்டும். அறியப்பட வேண்டியவர் பரமாத்மா என்றால் அவரே ப்ரக்ருதியை இயக்குபவர்.
பூர்வபக்ஷம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான். ஏனெனில் –1- (’யஸ்ய வா ஏதத் கர்ம’) அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்றுள்ளது. கர்ம என்ற சொல்லுக்குப் பொதுவாக பாபம் மற்றும் புண்ணியம் என்று தான் பொருள். எனவே , இங்கு அறியப்படுபவராகச் சொல்லப்படுபவருக்கு பாப புண்யங்கள் உள்ளன என்று அஜாத சத்ரு கூறுகிறபடியால் அவர் உலகில் இன்ப துன்பங்கணள அநுபவிக்கும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க முடியும். பரமாத்மாவை ஒப்புக் கொள்பவர்கள் அவருக்கு பாப புண்யங்கள் உண்டு என்று ஏற்பதில்லையே
(செயப்படும் பொருள் -கர்மம் -கர்த்தா -செய்பவன் -என்ற பொருள்களும் உண்டே-குடம் குயவன் போல்–ஸித்தாந்தி சொல்வர்-இந்தப் புருஷர்களை உண்டாக்கியவர் எவனோ -முதலில் சொல்லி -இப்பொருள்கள் கொண்டால் புனர் யுக்தி தோஷம் வருமே-ப்ரஸித்தி பாபபுண்யங்களையே சொல்லும் -பூர்வ பக்ஷம் )
பூர்வபக்ஷியின் யுக்திகள்
2-தௌ ஹ புருஷம் ஸுப்தம் ஆஜக்₃மது: | தம் ஏதை தாமபி₄: ஆமந்த்ரயாம்சக்ரே | ஸ உத்தஸ்தௌ₂ | தம் பாணினா ஆபேஷம் போ₃த₄யாம்சகார | ஸ ஹ உத்தஸ்தௌ₂–அவர்களிருவரும் ஒரு தூங்கும் மனிதனிடம் சென்றார்கள். அவனை அஜாத சத்ரு பெயரால் அழைத்தும் அவன் எழ வில்லை . பிறகு கையால் அசைத்து எழுப்ப, அவன் எழுந்தான்.-இப்படி உபதேசம் உள்ளபடியால், தூக்கம் விழிப்பு முதலானவற்றை யுடைய ஜீவனே இங்கு சொல்லப்படுகிறார்.
3-தத்₃யதா₂ ச்ரேஷ்டீ₂ ஸ்வை : பு₄ங்க்தே யதா₂ ஸ்வா: ச்ரேஷ்டி₂னம் பு₄ங்ஜந்தி ஏவமேவ ஏஷ ப்ரஜ்ஞாத்மா ஏதை : ஆத்மபி₄: பு₄ங்க்தே ஏவமேவ ஏதே ஆத்மா : ஏநம் பு₄ஞ்ஜந்தி-எப்படி ஒரு சான்றோனை அவன் சுற்றத்தா ரெல்லாம் மகிழ்விப்பார்களோ அதுபோல் இந்த ஆத்மாவை நீ சொன்ன புருஷர்கள் எல்லாம் மகிழ்விக்கிறார்கள் -இப்படி உலகிலுள்ள ஜீவ ராசிகளால் மகிழ்பவராகச் சொல்லப்படும் ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்கமுடியும்.
4-க்வ ஏஷ ஏதத்₃பா₃லாகே புருஷ: அசயிஷ்ட? அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி | ஸ யதா₃ ப்ரதிபு₃த்₄யதே ஆத்ம : ப்ராணா: யதா₂யததம் விப்ரதிஷ்ட₂ந்தே , ப்ராணேப்₄ய: தே₃வா:, தே₃வேப்₄ய: லோ கா:-இவன் தூங்கும் போது எங்கு சென்றான்? எங்கிருந்து வந்தான்? ப்ராணனோடு தொடர்புபட்ட ஆத்மாவிடம் அனைத்தும் ஒன்றாகிறது. விழிக்கும் போது அங்கிருந்து மூச்சுக் காற்று, புலன்கள் எல்லாம் பிரிந்து வருகின்றன.(ஹிதம் என்னும் நாடிகளில் இருக்கிறான் -இந்திரியங்கள் மனம் அனைத்தும் அடங்கி விடும் -இவரிடம் லயம் அடைகின்றன –இவர் விழிக்கும் பொழுது தங்கள் தங்கள் இடம் செல்கின்றன )-இங்கும் ப்ராணனோடு கூடிய ஆத்மா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.-எனவே ’ப்ரஹ்மத்தைக் கூறுகிறேன்’ என்று பாலாகி தொடங்கி, சொல்ல முடியாமல் திகைத்து, பதிலுக்கு அஜாத சத்ரு’ஜீவாத்மா தான் அறியப்பட வேண்டியவர்’ என்று உபதேசிக்கிறபடியால், ஜீவாத்மா தான் ப்ரஹ்மம், ஜகத்காரணம்.
1.4.5 ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-பரமாத்மா படைத்த உலகில் ஜீவாத்மா வாழ்கிறார்
கர்ம எனப்படுவது பாப-புண்யங்கள் அல்ல
ஜகத்வாசித்வாதிகரணம் – பூர்வபக்ஷம் – (யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய: ) அதாவது“ஸூர்யன் சந்த்ரன் மின்னல் வானம் முதலான புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர்” என்று அஜாத சத்ரு பாலாகிக்கு உபதேசித்தார். கர்ம என்றால் பாபமும் புண்ணியமும்.அவற்றைக் கொண்டவர் ஜிவாத்மாவே . எனவே ஜீவாத்மாவே ப்ரஹ்மம்-இங்கு ’அவர் அறியப்பட வேண்டியவர்’ என்றதுக்கு ’பாப புண்யங்களோடு கூடின ஸம்ஸாரத்திலிருக்கும் ஜிவாத்மா அறியப்பட வேண்டியவர்’ என்று பொருள் அல்ல. ’முக்தி அடைந்த நிலையில் இருக்கும் தூய்மையான ப்ரக்ருதி வியுக்த (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட) ஆத்ம ஸ்வரூபம் அறியப்பட வேண்டும்’ என்று தான் பொருள். அதை அறிந்தால் தான் முக்தி கிடைக்கும்.
ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1- ஜக ₃த்₃வாசித்வாத் – “ (கர்ம என்ற சொல்) உலகத்தைச் சொல்வதான படியால்”-விஷய வாக்யத்தில் உள்ள கர்ம என்ற சொல் இந்த உலகத்தைத் தான் குறிக்கிறது. ’கர்ம’ என்றால் ’செயப்படு பொருள்’. -பரமாத்மா செய்யும் படைத்தல் என்ற செயலில் செயப்படு பொருளாக உலகம் உள்ளது, அதாவது இவ்வுலகம் அவரால் படைக்கப்படுகிறது. எனவே அதுவே கர்ம. இச் சொல் பாப-புண்யங்கண பின்வரும் காரணங்களால் குறிக்க இயலாது
(ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்-ஏன் எனில்-கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் – க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால் -ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து )
1- ’ஏதத் கர்ம யஸ்ய’ அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்கிற இடத்தில் ’இந்த’ என்ற சொல் உள்ளது. அது கண் வட்டத்தில் அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும். புலன்கள் முதலான ப்ரமாணங்களால் அறியப்படும் அருகிலுள்ள பொருள் இந்த ஜகத் (உலகம்) தான், பாப-புண்யங்கள் அல்ல.
2-இதற்கு முன் பாலாகி சொன்ன ஸூர்யன், சந்திரன், வானம், அக்நி முதலானவற்றில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் கர்மத்துக்கு வசப்பட்டவர்கள். அவர்களை யெல்லாம் ப்ரஹ்மமல்ல என்று நிராகரித்து விட்டு, அவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒருவரை உபதேசிக்கத் தொடங்கிய அஜாத சத்ரு மறுபடியும் பாப-புண்யங்களை உடைய ஒரு ஆத்மாவை ப்ரஹ்மம் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது. எனவே இங்கு கர்ம என்ற சொல் பாப-புண்யங்களைக் குறிக்க இயலாது, உண்டாக்கப்படும் இந்த உலகத்தையே குறிக்க வேண்டும்.
பூர்வபக்ஷத்தைத் தகர்த்தல்
3-பூர்வபக்ஷத்தில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படுகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருள் பொருந்தாதபடியால் அதோடு தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர்.-எடுத்துக்காட்டு – ’வகுப்பறை சத்தமிடுகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள ’வகுப்பறை ’ என்ற சொல்லுக்கு
முக்கியமான பொருள் ஓர் அறை . ஆனால் அறை சப்தமிட முடியாது. எனவே அப் பொருளை விட்டு, ’வகுப்பறையில் இருப்பவர்கள்’ என்று தொடர்புடைய மற்றொரு பொருளைக் கொள்கிறோம். அப்போது பொருள் பொருந்தும்.
அதே போல் இங்கும் ’கர்மம் யாருக்கு உள்ளதோ அவரை அறிய வேண்டும்’ என்று சொற்றொடர் உள்ளது. ஆனால் ’அவரை ’ என்ற சொல்லுக்கு ’கர்மங்களை உடையவரை ’ என்று பொருள் கொள்வது பொருந்தாது, ஏனெனில் ஸாங்க்ய மதத்தின்படி ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவின் நிலையை அறிவதால் முக்தி கிடைக்காது. எனவே அந்தச்
சொல்லுக்கு ’முக்திக்குப் பின் தூய்மையான நிலையில் இருக்கும் ஆத்மா’ என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. எனவே ’அவர்’ என்ற சொல்லில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படும்.
4- மேலும், பூர்வ பக்ஷத்தில் ’இந்தக் கர்மம் யாருடையதோ ’ என்றவிடத்தில் உள்ள ’இந்த’ என்ற சொல் வீணானது.
5-ஸித்தாந்தத்தில் ’ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , இந்த உலகத்தைப் படைத்தவர் யாரோ ’ என்று ஒரே பொருள் இரண்டு முறை கூறப்படுகிறபடியால் ’புநருக்தி’ (திரும்பச் சொல்லுதல்) என்ற குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் அது வராது, இரண்டாவது வாக்கியம் பொதுப்படையாகச் சொல்கிறபடியால். ’இந்த
ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , அவ்வளவு ஏன், இந்த உலகமே யாருடைய படைப்போ , அவரை அறிய வேண்டும்’ என்று அஜாதசத்ரு சொல்கிறபடியால் புநருக்தி இல்லை . ப்ரஹ்மத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
6-பூர்வ பக்ஷத்தில் ’இந்த ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ ’ என்றுள்ள வாக்கியம் ஜீவாத்மாவைப் பற்றினது என்று கூறுகிறார்கள். அது பொருந்தாது. ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் எல்லாம் படைக்கப் பட்டாலும், ஜீவாத்மா இந்தப் பிறவிகளை அடைந்தாலும், அவர் இந்தப் பொருள்களை படைப்பதே இல்லை . ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப பரமாத்மாவால் படைக்கப்பட்ட பொருள்களைத் தான் ஜீவாத்மா உபயோகிக்கிறார். எனவே அஸம்பவம் (பொருந்தாமை ) என்ற தோஷமும் வரும்.
இப்படி பல தோஷங்கள் பூர்வ பக்ஷத்தில் உள்ள படியால், ஸித்தாந்தத்தில் தோஷமில்லாதபடியால் இதுவே சரியானது.
மற்றவர்களைப் பற்றின பேச்சு எதற்கு?
கேள்வி – அஜாதசத்ரு பரமாத்மாவைப் பற்றி தான் உபதேசிக்கிறார் என்றால் ஏன் இங்கு தூக்கம், விழிப்பு, உறவினர்களால் மகிழ்தல் முதலான ஜீவாத்மாவைப் பற்றின அடையாளங்களும், தூங்கும் போது புலன்கள் எல்லாம் ப்ராணனில் ஒன்றி விடுகின்றன என்று ப்ராண வாயுவைப் பற்றின பேச்சும் உள்ளது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
2-–्ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந தத்₃வ்யாக்₂யாதம்
ஜீவ முக்₂யப்ராண லிங்கா₃த் ந – ஜீவனின் அடையாளங்களும் மூச்சுக் காற்றைப் பற்றின பேச்சு என்கிற அடையாளமும்-இங்கு உள்ள படியால் இங்கு சொல்லப் படுபவர் பரமாத்மா அல்ல
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
தத்₃வ்யாக்₂யாதம் – அது முன்னமே விவரிக்கப்பட்டது
1-1-11-இந்த்ரப்ராணாதிகரணத்தில் இதே போல் ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் செய்த உபதேசத்தில் இந்த்ரன் என்ற ஜீவாத்மாவைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் உபதேசமிருந்தது. ஆனால் அங்கு இவ்வாறு முடிவு செய்தோம் –உப க்ரமம் (தொடக்கம்) மற்றும் உப ஸம்ஹாரம் (முடிவு) என்ற இரண்டிலும் பரமாத்மாவே பேசப்படுகிறபடியால்
இந்தப் பகுதி அவரையே சொல்கிறது. எனவே இந்த்ரன் மற்றும் மூச்சுக் காற்று சொல்லப்படும் இடங்களிலும் அவற்றுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா தான் கொள்ளப் பட வேண்டும்.
அதே போல் இங்கும் தொடக்கத்தில் ’ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணி’ (உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசிக்கிறேன்) என்று உள்ளது, நடுவில் ’யஸ்ய வா ஏதத் கர்ம’ (இந்த உலகமே யாரால் படைக்கப்பட்டதோ ) என்றுள்ளது, முடிவில் ’ஸர்வாந் பாப்மந: அபஹத்ய ஸர்வேஷாம் பூ₄தாநாம் ச்ரைஷ்ட்₂யம் ஸ்வாராஜ்யம் ஆதி₄பத்யம் பர்யேதி’ (இந்த ப்ரஹ்மத்தை
அறிபவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்) என்றுள்ளது. எனவே , இந்த உபதேசமே பரமாத்மாவைப் பற்றினது.
இந்த்ரன் மற்றும் ப்ராணனுக்கு அந்தர்யாமியாகப் பரமாத்மாவைச் சொல்வதன் பயன் என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லபட்டது – பரமாத்மாவை தானாகவும், ஜீவனுக்கு அந்தர்யாமியாகவும், அசேதனத்துக்கு அந்தர்யாமியாகவும்-மூன்று விதத்தில் உபாஸநம் செய்ய வேண்டும் என்று இங்கு காட்டப்படுகிறது என்று. இங்கும் அதே போல் ப்ராண வாயுவைப் பற்றின பேச்சு, ப்ராணனை அந்தர்யாமியாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று சொல்வதற்காக வந்துள்ளது. எனவே , பூர்வ பக்ஷியின் கேள்விக்கு முன்னமே பதில் அளிக்கப்பட்டு விட்டது.
பரமாத்மாவின் அரவணைப்பு
கேள்வி – ஜீவனைப் பற்றின பேச்சு இங்கு எதற்காக வருகிறது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
3-அந்யார்த₂ம் து ஜைமிநி: ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் அபி சைவமேக
அந்யார்த₂ம் து – (இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்வது) வேறொரு ப்ரயோஜநத்துக்காக, அதாவது பரமாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக, (ஜீவாத்மாவே அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் என்று சொல்வதற்காக அல்ல)
ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் – கேள்வியையும் பதிலையும் கொண்டு இதை அறியலாம்
அபி ஏவம் ஏகே – மேலும் ஒரு சிலர் இவ்வாறே ஓதுகிறார்கள்
இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை எழுப்புவதைப் பற்றின பேச்சு ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக அல்ல என்று அதற்குப் பின் வரும் கேள்வியையும் பதிலையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
அஜாத சத்ருவின் ப்ரஸ்நம் (கேள்வி) இவ்வாறு உள்ளது – ’இதுவரை தூங்கும் போது இந்த ஜீவாத்மா எங்கு இருந்தான்?’
ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதாக இருந்தால் ’இவன் யார்’ என்று தான் கேட்க வேண்டும். இங்கு அவர் இருந்த இடத்தைப் பற்றித் தான் கேள்வி உள்ளது. எனவே ஜீவாத்மாவைப் பற்றின பேச்சு அவரைப் பற்றி உபதேசிக்க அல்ல.
அஜாத சத்ருதுவின் வ்யாக்யானம் (பதில்)
(யதா₃ ஸுப்த: ஸ்வப்நம் ந கத₂ஞ்சந பஸ்யதி அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி,
ஏதஸ்மாத் ஆத்மந: ப்ராணா : யதா₂யதநம் விப்ரதிஷ்ட்₂ந்தே ) அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது ப்ராணனில் ஒன்றி விட்டு, பிறகு அந்த ஆத்மாவிடமிருந்து எழுந்து வருகிறார்’ என்றுள்ளது. இங்கு ப்ராணன் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மாவே , ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களிலும் ஜீவன் தூங்கும் போது பரமாத்மாவோடு ஒன்றி, தன் களைப்பை எல்லாம் போக்கிக் கொள்கிறான் என்று தான் சொல்லப்படுகிறது.
கடைசியாக, சுக்ல யஜுர் வேதத்தில் நேரடியாகவே (ஏஷ புருஷ: த்தா₃
ய ஏஷ அந்தர் ஹ்ருத₃ய ஆகாச: தஸ்மிந் சேதே ) அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது இதயத்தில் இருக்கும் ஆகாசத்தில்-(பரமாத்மாவிடம்) சயனிக்கிறார்’ என்று ஓதப்படுகிறபடியாலும் இவ்வர்த்தத்ணத அறியலாம்.
எனவே இங்கு அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் பரமாத்மாவே . அவரே ப்ரக்ருதியை இயக்கி உலகைப் படைக்கிறார்.
(பிராணன் பரமாத்மாவைச் சொல்லி அடுத்த பிராணன் ஜீவாத்மாவைச் சொல்லும் -உபநிஷத் இவ்வாறு குழப்பம் அடையும்படி இருப்பதாலேயே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ பாஷ்யமும் வேண்டி இருக்கின்றன)
—————-
1.4.6-வாக்யாந்வயாதி₄கரணம்-நம் உறவினர்களைப் ப்ரியமாக ஆக்குபவர் பரமாத்மாவே
அதிகரணத்தின் பின்புலம்
1-4-6-வாக்யாந்வயாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’கர்மம் யாருடையதோ அவர் அறியப்படவேண்டும்’ என்று சொற்றொடர் இருந்தாலும், ’கர்மம் யாருடையதோ அந்த ஆத்மாவின் தூய்மையான முக்தி அடைந்த நிலையை அறிய வேண்டும்’ என்று கஷ்டப்பட்டு பொருளை உரைத்தார் பூர்வபக்ஷீ. இவ்வதிகரணத்தில் அப்படி எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிமையாக ஜீவாத்மா தான் ப்ரக்ருதியை இயக்கிப் படைக்க வைக்கிறார் என்கிறார் பூர்வபக்ஷீ
விஷய வாக்யம் – மைத்ரேயீ ப்₃ராஹ்மணம் – ப்₃ருஹதா₃ரண்யக உபநிஷத் 2ஆம் அத்யாயம் 4ஆம் ப்ராஹ்மணம்-உத்₃யாஸ்யந்வா அரே அஹம் அஸ்மாத் ஸ்தா₂நாத் அஸ்மி । ஹந்த தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி-யாஜ்ஞவல்க்யர் இல்லற வாழ்க்கையைத் துறக்க விரும்பி, மைத்ரேயீ காத்யாயநீ என்ற தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே மைத்ரேயியைப் பார்த்து இவ்வாறு கூறினார் – “மைத்ரேயீ! நான் இந்த க்ருஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து விலகப் போகிறேன், எனவே உனக்கும் காத்யாயனிக்கும் செல்வத்தைப் பிரித்து முடிவு செய்கிறேன்” என்று.
யந்நு ம இயம் ப₄கோ ₃꞉ ஸர்வா ப்ருதி₂வீ வித்தேந பூர்ணா ஸ்யாத் கத₂ம் தேநாம்ருதா ஸ்யாமிதி । நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்யோ , அம்ருதத்வஸ்ய து ந ஆஶா அஸ்தி வித்தேந
மைத்ரேயீ கேட்டாள் – “பெரியவரே ! இந்த உலகத்தை யெல்லாம் செல்வத்தால் நிரப்பிக் கொடுத்தாலும் அதைக் கொண்டு நான் மரணமில்லாத நிலையை அடைய முடியுமா?” என்று. யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “முடியாது,செல்வத்தால் முக்தியை ஒருநாளும் அடைய முடியாது” என்று யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் । யதே₃வ ப₄க₃வாந் வேத₃ ததே ₃வ மே ப்₃ரூஹீதி-மைத்ரேயீ கூறினாள் – “எதைக் கொண்டு என்னால் முக்தி அடைய இயலாதோ அது எனக்கு வேண்டாம். முக்தி அடைவதற்கு நீர் எந்த வழியை அறிந்திருக்கிறீரோ அதையே எனக்கும் சொல்ல வேண்டும்” என்று-ப்ரியா ந: ப்ரியம் பா₄ஷஸ ஏஹ்யாஸ்ஸ்வ வ்யாக்₂யாஸ்யாமி தே--யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “இவ்வாறு நீ கூறியதால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. வா! அமர்வாய்! உபதேசிக்கிறேன்!”
பூர்வ பக்ஷியின் யுக்திகள்
ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப₄வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப₄வதி-கணவன் தன்னுடைய எண்ணத்தால் தன் மனைவிக்குப் ப்ரியமானவனாக ஆவதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான்-இதே போல் ஜாயா (மனைவி), புத்ரன் (மகன்), வித்தம் (செல்வம்), லோகங்கள், தேவர்கள், பூதங்கள், அனைத்துமே அதனதன் எண்ணத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான் என்று உபதேசித்தார்.
ஆத்மா வா அரே த்₃ரஷ்டவ்ய꞉ ஶ்ரரோதவ்யோ மந்தவ்யோ நிதி₃த்₄யாஸிதவ்யோ । ஆத்மநோ வா அரே விஜ்ஞாநேந இத₃ம் ஸர்வம் விதி₃தம்-அந்த ஆத்மா தான் கேட்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும், த்யானிக்கப்பட வேண்டும், காணப்பட வேண்டும்.-அந்த ஆத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்.
ஸந்தேஹம் – இந்த அத்யாயத்திலேயே ஜகத்காரணம் யார் என்ற ஆராய்ச்சியே செய்யப் படுகிறபடியால், இங்கு முக்கியமான கேள்வி – “ஜீவாத்மாவால் இயக்கப் படும் ப்ரக்ருதி ஜகத் காரணமா? அல்லது பரமாத்மா ஜகத்காரணமா? என்று. அதற்காக இங்கு ஆராயப்படுவது – இந்த விஷய வாக்கியத்தில் கேட்டு, ஆராய்ந்து, த்யானித்து காணப்பட
வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா பரமாத்மாத்வா என்று.
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவே , ஏனெனில் இங்கு தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவரே சொல்லப்படுகிறார்.
தொடக்கத்தில் – கணவன் மனைவி குழந்தை செல்வம் முதலானவற்றோடு தொடர்புடைய ஆத்மா ஜீவாத்மாவே
நடுவில் -(விஜ்ஞாநக₄ந ஏவ ஏதேப்₄யோ பூ₄தேப்₄ய꞉ ஸமுத்தா₂ய தாந்யேவ அநுவிநஶ்யதி) அதாவது இந்த ஜ்ஞாந வடிவமான ஆத்மா உடலோடு தோன்றுகிறார், உடல் அழியும் போது
அழிகிறார் என்று சொல்லப் படுகிறபடியால் இங்கும் ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்.
முடிவில் – (्விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்று அறிவுள்ள ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்-முக்திக்கான வழியை அன்றோ மைத்ரேயீ கேட்டாள்? ஆம், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை அறிந்தாலே முக்தி -ஜீவாத்மாவை அறிந்தால் அனைத்தையும் எப்படி அறிந்ததாகும்? எல்லா ஜீவாத்மாக்களும் ஸமமாகவே உள்ள படியால்
வ்யாஸரின் பதில்
ஸித்தாந்தம் – 1-(வாக்யாந்வயாத் ् – “இங்குள்ள வாக்கியங்களின் பகுதிகள் (நன்கு) அன்வயிப்பதற்காக”-யாஜ்ஞவல்க்யர் கூறும் வாக்கியப் பகுதிகளின் பொருள் ஒன்றொடொன்று பொருந்த வேண்டும், மேலும் அது மற்ற உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பொருளோடும் பொருந்த வேண்டும். எனவே பரமாத்மாவே இங்கு கூறப்படுகிறார்.
(1)-முக்தி அடையும் வழியைக் கேட்ட மைத்ரேயிக்கு யாஜ்ஞவல்க்யர் இந்த ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கிறபடியால், இந்த ஆத்மா பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களில் எல்லாம் பரமாத்மாவை அறிந்து த்யானித்தால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
(2)-(அஸ்ய மஹத: பூ₄தஸ்ய நி:ச்வஸிதம் ஏதத் யத் ருக்₃வேத₃: ) அதாவது இந்த ஆத்மாவிடமிருந்து தான் உலகமெல்லாம் உண்டாயிற்று என்று சொல்கிறபடியால், அது பரமாத்மாவே .
(3)-ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்த்தாகும் என்று சொன்னதும் பரமாத்மாவுக்கே பொருந்தும், அவரே அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கிறார். ஜீவாத்மாக்கள்அனைவரும் ஸமமாக இருப்பதால், ஒருவரை அறிந்தால் அனைவரையும் அறிந்ததாகும் என்றாலும், ஜீவாத்மாவை
அறிந்தால் அறிவற்ற அசேனப் பொருளை அறிந்ததாக ஆக முடியாது. அது பரமாத்மாவுக்கே பொருந்தும்.
(4)(्மஹத்₃பூ₄தம் அநந்தம் அபாரம்) அதாவது பெரியது, எல்லை யற்றது, கடக்க முடியாதது என்று சொல்லப்படும் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக்கூடியவை .-ந வா அரே பத்யு: காமாய’ என்ற வாக்கியத்தின் பொருள் – “கணவன் மனைவி மகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தால் நமக்குப் ப்ரியமானவர்களாக ஆவதில்லை , பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் ஆகிறார்கள்” என்று.
அதாவது, தன்னை உபாஸிக்கும் ஒரு பக்தனுக்கு பகவானே தன்னுடைய அருளால் கணவன் மனைவி குழந்தைகள் செல்வம் முதலானவற்ணற ப்ரியமாக ஆக்கி, அவற்றை வழங்குகிறார் என்று பொருள். எனவே கணவன் மனைவி செல்வம் முதலான சிறிய இன்பங்களைக் கை விட்டு, இவற்றுக்கெல்லாம் ஊற்றாக, எல்லை யற்ற ஆநந்தமே
வடிவானவரான பரமாத்மாவைத் தான் கேட்க வேண்டும், ஆராயவும், த்யானிகவும் வேண்டும் என்று கருத்து. இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இயற்கையாக நமக்குப் பிடித்ததாகவோ பிடிக்காத்தாகவோ இருப்பதில்லை , இடம் காலம் சூழ்நிலை பொருத்து தான். ஆனால் பரமாத்மா மட்டுமே மாறாமல் எப்போதும் ப்ரியமாகவே இருப்பவர்.
(தனது பக்தனுக்கு பிரியமாக இருக்க பகவானே ஸங்கல்பிக்கிறான் -என்கிறார் ராமானுஜர்)
ஜீவாத்மாவே பரமாத்மாவா?
இவ்வாறு இந்த உபதேசம் முழுவதுமே பரமாத்மாவைப் பற்றினது என்று நிரூபிக்கப் பட்டபடியால், இடையில் ஜீவாத்மாவைச் சொல்லும் சொற்களும் கூடப் பரமாத்மாவையே குறிக்கின்றது. அது எப்படி எனில் –
2-ப்ரதிஜ்ஞாஸித்₃தே ₄: லிங்க₃ம் ஆஸ்மாத்₂ய: – “இங்கு சொல்லப்பட்ட ப்ரதிஜ்ஜை ( சபதம்) நிறைவேறியதற்கு இது அடையாளம் என்கிறார் ஆச்மாத்யர் என்ற ரிஷி”-இந்த ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று இங்கு ஒரு ப்ரதிஜ்ஜை ( சபதம்) உள்ளது. அது நிறைவேறியதற்கான அடையாளம் தான் இங்கு ஜீவாத்மாவைச் சொல்லும் சொல் பரமாத்மாவைக் குறிப்பது என்பது. -உலகில் காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று என்று அறிவோம். குடம் என்ற பொருளை அதற்குக் காரணமான பொருளைக் குறிக்கும் மண் என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். அதே போல், ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து உண்டாகி, அவரிடமே லயம் அடைகிறார்; அவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல;ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கும், பரமாத்மாவை அறிந்தால் அனைத்தும் அறியப்பட்டதே .
3-(உத்க்ரமிஷ்யத: ஏவம் பா₄வாத் இதி ஔடு₃லோமி:) – “புறப்படுபவர் இதுவே போல் ஆகிறபடியால் என்று ஔடுலோமி என்ற ரிஷி கூறுகிறார்”(உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு-ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்-இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்) -ஜீவாத்மா உண்டாவதே இல்லை என்று வேதம் சொல்கிறபடியால் முன் பக்ஷம் தவறானது. எனவே ஔடுலோமி என்ற ரிஷி இவ்வாறு கூறுகிறார் – “இந்த உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடையும் ஜீவாத்மா பரமாத்மாவைப் போல் ஆகிறபடியால் இங்கு ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது” என்று-ஆனால் இதிலும் குறை உள்ளது – ஜீவாத்மா புதிதாக பரமாத்மாவைப் போல் ஆவதில்லை , இயற்கையான அத் தன்மையைத் திரும்பப் பெருகிறார். எனவே இந்தப் பக்ஷமும் தகுந்ததல்ல.
4-அவஸ்தி₂தே : இதி காச க்ருத்ஸ்ந: – “ஜீவாத்மாவுக்குள் அந்தர்யாமியாகப் பரமாத்மா உள்ள படியால் என்று காச க்ருத்ஸ்நர் என்ற ரிஷி கூறுகிறார்”-உலகத்தில் உடலைக் குறிக்கும் சொல் உள்ளிருக்கும் ஆத்மாவையும் குறிப்பதைப் பார்க்கிறோம். அதே போல் தான்
உடலான ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. இதுவே வேத வ்யாஸரும் ஏற்கும் மதம்.ஆகவே , இங்கு பரமாத்மா தான் சொல்லப்படுகிறார், ஜீவன் அல்ல. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்–
(ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே – இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால் –விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான் -தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –)
—————–
1.4.7 ப்ரக்ருத்யதி₄கரணம்-உலகின் உபாதாந காரணமும் பரமாத்மாவே–
(வேர் முதல் வித்து -முதல் தனி வித்தேயோ -தானோர் விதிதாய் -அபின்ன நிமித்த உபாதானம் -நம் சித்தாந்தத்தில் அசாதாரணம்-ஸர்வம் கலு ப்ரஹ்மம் -நீராய் நிலனாய் -அயனாய் சிவனாய் – -இத்தை இதில் நிரூபிக்கிறார் -)
அதிகரணத்தின் பின்புலம்
1-4-7-ப்ரக்ருத்யதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஈஸ்வரனே கிடையாது என்று சொல்லும் ஸாங்க்யர்களின் மதம் கண்டிக்கப்பட்டு. இப்போது ஈஸ்வரனை ஒப்புக் கொண்டு, ஆனால் அவர் உலகின் நிமித்த காரணம் (படைப்பாளி) மட்டும் தான், உபாதாந காரணம் அல்ல என்று சொல்லும் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
பூர்வ பக்ஷம் – பரமாத்மா உலகின் படைப்பில் நிமித்த காரணம் மட்டும் தான், உபாதான காரணம் அல்ல-உலகில் எந்த ஒரு பொருள் உண்டாவதற்கும் மூன்று விதமான காரணங்கள் தேவை –
(1) உபாதான காரணம் – மூலப்பொருள் – குடத்துக்கு மண், துணிக்கு பஞ்சு முதலானவை போல்
(2) நிமித்த காரணம் – அறிவுடைய ஆத்மா (படைப்பாளி) – குடத்துக்குக் குயவன், துணிக்கு நெசவாளி போல்
(3) ஸஹகாரி காரணம் – துணை புரியும் கருவிகள் – குடத்துக்கு சக்கரம், துணிக்குத் தரி போல் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது உண்மை -ஆனால், அவர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு நிமித்த காரணமாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனெனில்,“நிஷ்கலம் நிஷ்க்ரியம்” (பகுதிகள் இல்லாதவர், செயல்கள் இல்லாதவர்) முதலான வாக்யங்களால் பரமாத்மா எந்த விதமான விகாரங்கள் (மாறுபாடுகள்) இல்லாதவர் என்று தெரிகிறது. எனவே அவர் உபாதானமாக ஆக முடியாது; உபாதானம் உருமாறியே ஆக வேண்டும்.-உபநிஷத்துக்களிலேயே ’ஜநித்ரீ பூ₄தபா₄விநீ’ (ஜீவ ராசிகளைப் படைப்பது), ’அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்(இதிலிருந்து பரமாத்மா உலகத்தைப் படைக்கிறார்) என்று பல வாக்யங்களில் மூல ப்ரக்ருதி தான் உபாதான காரணமாகச் சொல்லப்படுகிறது-உலகில் இரண்டு நியமங்களைப் பார்க்கிறோம் – (1) உபாதான காரணமும் நிமித்த காரணமும் வெவ்வேறாகத் தான் இருக்கும் (2) பல காரணங்களின் சேர்க்கையால் தான் ஒரு பொருள் உண்டாகும். எனவே , சில இடங்களில் உபநிஷத் பரமாத்மாவே உபாதான காரணம் என்று சொல்வது போல் தோன்றினாலும், உலகில் பார்த்த்துக்கு முரணாக இப்படி ஒரு தத்துவத்தை வேதத்தால் போதிக்க இயலாது. ’நெருப்பால் நனைத்தார்’ என்று சொல்வது போல் தவறாகும்.-எனவே , பரமாத்மா நிமித்த காரணமாக இருந்து, மூல ப்ரக்ருதி என்ற பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைக்கிறார். அவர் உபாதான காரணம் அல்ல.
பரமாத்மாவிடமிருந்தே உலகம் உண்டாகிறது
ஸித்தாந்தம் – 1– ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்₃ருஷ்டாந்த அநுபரோதா₄த்
(உலகுக்கு) உபாதான காரணமும் (பரமாத்மாவே , அப்போது தான்) ப்ரதிஜ்ஜையும் எடுத்துக் காட்டும் -(அநுபரோதா₄த்-)தடை படாதபடியால்
சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் அத்யாயத்தில் உள்ள ஸத்₃வித்₃யா என்பது இங்கு கூறப்படுகிறது. வேதம் கற்று வந்து கர்வத்வதாடு நிற்கும் ஸவேதகேது என்ற தன் மகனைப் பார்த்து உத்தாலகர் என்ற தந்தை கேட்கிறார்.
ப்ரதிஜ்ஞா – (्உத தம ஆதே₃சம் அப்ராக்ஷ்ய:யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்) அதாவது“எதை அறிந்தால் அனைத்தையும்அறிந்த தாகுமோ அந்த (ஆதேசம் -நியமனம் ஈசன் )ஸர்வேஸ்வரனைப் பற்றிக் கேட்டாயா”என்று. பரமாத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்பதே இங்கு ப்ரதிஜ்ஜை .
த்₃ருஷ்டாந்தம் –(्யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டே₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்) அதாவது “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் மண்ணாலான எல்லாப்
பொருள்களையும் அறிந்ததாகுமோ அதுபோல்” என்று எடுத்துக் காட்டையும் அவரே உரைக்கிறார்.
இவை இரண்டாலும் நாம் அறிவது – (1) மண் மரம் முதலான உபாதான காரணமும் குடம் மேஜை முதலான காரியமும் வெவ்வேறு அல்ல, காரணப் பொருளே தான் வேறொரு வடிவத்தையும் பெயரையும் அடையும் போது காரியப் பொருள் என்று வழங்கப்படுகிறது (2) எனவே உபாதான காரணத்தை நாம் அறிந்து விட்டால் அதிலிருந்து உண்டாகும் எல்லாப் பொருள்களையும் ஒரு முறையில் அறிந்ததாக ஆகும்
(3) அதுபோல் பரமாத்மாவை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.
எனவே இந்த ப்ரதிஜ்ஜை மற்றும் த்₃ருஷ்டாந்தத்தைக் கொண்டு பார்த்தால், பரமாத்மா உபாதான காரணமாகத் தான் சொல்லப்படுகிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவரே ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைக்கிறார் என்று மேலே சொல்லப் படுகிறபடியால் நிமித்த காரணமும் அவரே ஆவார்.
ப்ரக்ருதி படைக்கிறது என்று சொல்லும் வாக்கியங்களில்’ ’ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியான பரமாத்மா’ என்றே பொருள்.-உலகில் மண்ணுக்கு ஜ்ஞான மில்லாமையாலும், குயவனுக்கு தன் உடலைக் குடமாக மாற்றும் சக்தி இல்லாததாலும் உபாதானமும் நிமித்தமும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. பரமாத்மாவிடமோ இரண்டுமே பொருந்துகிறது.
(இதே போல் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதம் இந்த பார்க்கிற லோகம் சத்தாகவே ஒன்றாகவே இருந்தது -இரண்டாவதே இல்லை-ப்ரக்ருதி படைக்கிறது என்னும் இடங்களிலே ப்ரஹ்மம் அந்தர் யாத்மாவாகக் கொண்ட பிரகிருதி என்றே பொருள் -மண்ணை உடலாக கொண்ட பரமாத்மா -குடத்தை உடலாக கொண்ட பரமாத்மாவாக மாறினார் -நான் குழந்தை -நான் யுவா -இந்த உடலுக்குள் இருந்த ஆத்மா ஓன்று தானே -அதே போல் கொள்ள வேண்டும் – -)
மூன்று விதமான காரணங்களும் பரமாத்மாவே
2–அபி₄த்₄யோபதே₃சாத் ச –“ஸங்கல்பத்தின் உபதேசத்தாலும்” – ஸ்ருஷ்டிக்கும் போது பரமாத்மா எடுக்கும் ஸங்கல்பம் உபநிஷத்தில் (ப₃ஹு ஸ்யாம்) அதாவது
“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று காட்டப் பட்டுள்ளது.(ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும் ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-) உபாதான காரணம் தானே பல காரியப் பொருள்களாக ஆகும். எனவே இத்தால் பரமாத்மா நிமித்த காரணம் மட்டுமல்ல, உபாதானமும் அவரே என்று தெரிகிறது.
(யானும் தானாய் ஒழிந்தானையாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்அமுதும் ஆகித் தித்துத்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே)
3-ஸாக்ஷாத் ச உப₄யாம்நாநாத் – “நேரடியாகவும் இரண்டும் ஓதப் படுகிறபடியால்”-உபநிஷத்தில் (्ப்₃ரஹ்ம வநம், ப்₃ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்₃யாவா ப்ருதி₂வீ நிஷ்ட₂தக்ஷு:, ப்₃ரஹ்ம அத்₄ய திஷ்ட₂த் பு₄வநாநி தா₄ரயன்) அதாவது
“உலகத்தை ப்ரஹ்மம் படைக்கும் போது, காடு போல் ஆதாரமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், மரம் போல் உபாதானமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், இயக்கப்படும் கருவிகளும் ப்ரஹ்மம் தான்” என்று ஸ்பஷ்டமாகவே ப்ரஹ்மம் உலகுக்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் என்று சொல்லப்பட்டுள்ளது.
4–ஆத்ம க்ருதே : – “தன்னையே செய்கிறபடியால்”. உபநிஷத்தில் உலகத்தின் படைப்பைச் சொல்லும் போது(தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத) அதாவது அந்த ப்ரஹ்மம் தன்னைத் தானே செய்து கொண்டது” என்று கூறப்படுகிறது. தன்னைத் தானே பலவாக ஆக்குதலால் பரமாத்மா உபதானமும் தான்.
5–பரிணாமாத் ् – “மாறுபாட்டால்”. இப்படி பரமாத்மாவே உலகமாக மாறினால் அவருக்கு துன்பம், மாறுபாடு முதலான தோஷங்கள் ஏற்படுமே என்று ஸந்தேகம் எழும். அதற்கு பதிலளிக்கிறார் வ்யாஸர் – இங்கு பரமாத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மாறுபாடு சொல்லப்படுகிறபடியால் எந்தக் குற்றமும் வராது,(ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது தோஷங்கள் தட்டாது-) -சொல்லப் போனால் தன் உடலையே உலகமாக மாற்றும் பெருமை தான் இதிலிருந்து தெரியும்.
6-யோநிஶ்ச ஹி கீ₃யதே – “யோநியாகவும் பாடப்படுகிறார் அன்றோ ”(யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்-எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால் அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –)-வேதத்தில் பல இடங்களில்“கர்தாரம் ஈஸம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம்”(படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம்-கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்-யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-)–“யத்₃பூ₄த யோநிம் பரிபஸ்யந்தி தீ₄ரா:(-ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ )” என்றெல்லாம் பரமாத்மாவை யோநி என்று அழைக்கிறது வேதம். யோநி என்றால் உபாதான காரணமே . எனவே பரமாத்மாவே உபாதானம்.
இவ்வாறு பல காரணங்களால் உலகத்தைப் படைப்பதற்கு நிமித்தமாகவும் உபாதானமாகவும் ஸஹகாரியாகவும் பரமாத்மா ஒருவரே இருக்கிறார் என்னும் தத்துவத்தை வேதவ்யாஸர் நிரூபிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
(இவன் தானே ஐகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும்-தத்வ த்ரயம்-சூர்ணிகை -165-)
ஏகமேவ அத்விதீயம் -என்றும்
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
ஸ்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-67-அந்த நாராயணன் நான்முகனாக படைத்து தானாகவே காத்து சிவனாக இருந்து சம்ஹரிக்கவும் செய்கிறானோ -என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-70-அவனே அனைத்தையுமே ஸ்ருஷ்டிப்பவனாகவும் அனைத்தும் வரங்களையும் அளிப்பவனாகவும் -அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான் -படைப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே -காப்பவனும் அழிப்பவனும் அவனே-இத்யாதிகளால்
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-
—————
1.4.8 ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம்-பர ப்ரஹ்மம் நாராயணனே–
வேதாந்தம் முழுவதுமே ப்ரஹ்மத்தைத் தான் சொல்கிறது-1-4-8-ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்கியங்களுள் ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் ஸந்தர்பத்தை ஆராய்ந்து, அவ் விடத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், இதுவரை எடுத்து ஆராயப்படாத எல்லா உபநிஷத் வாக்யங்களும் கூட பரமாத்மாவையே சொல்கின்றன என்று நிரூபிக்கிறார்.
விஷய வாக்யம் – உபநிஷத்துக்களில் ஸித்தமான (முன்னமே தயாராக உள்ள) ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் எல்லாம் 1.1.1-ஜிஜ்ஞாஸாதிகரணத்தாலும் 1.1.4-ஸமந்வயாதிகரணத்தாலும் பரமாத்மாவைப் பற்றியவை என்று நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பின் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் சில குறிப்பிட்ட வாக்கியங்கள் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஆராயப் பட்டன. இந்த அதிகரணத்திற்கு விஷயம் –இது வரை எடுத்து ஆராயப்படாத வாக்யங்கள்.
(அதிதேச சங்கதி -கீழ் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏறிட்டுக் கொண்டு அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும்-இதுவரை எடுத்துக்கொள்ளாத ஜகத் காரணமாக போதிக்கும் அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும் பொருள் கொள்ள வேண்டும் -என்பதே இதற்கு சங்கதி)
ஸந்தேஹம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் முன் கூறப்பட்ட பர ப்ரஹ்மத்தையே குறிக்கின்றனவா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லவில்லை முரண்பாடு உள்ள படியால்.
ஸித்தாந்தம் – 1-ஏதேந ஸர்வே வ்யாக்₂யாதா : வ்யாக்₂யாதா :
ஸர்வே – இதுவரை தனித் தனியாக எடுத்து ஆராயப்படாத ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்யங்கள் அனைத்தும்
ஏதேந – இத்தால் -முதல் அத்யாயத்தில் 4 பாதங்களிலும் இதுவரை சொல்லப்பட்ட ந்யாயங்களால் (யுக்திகளால்)
வ்யாக்₂யாதா : – (பரமாத்மாவையே குறிப்பவையாக) விவரிக்கப்பட்டன -சொல்லப்பட்டன
“வ்யாக்₂யாதா:” என்று மறுபடியும் ஒரு முறை படிக்கப்படுவது, இந்தச் சொல்லோடு இந்த அத்யாயம் முடிகிறது என்று காட்டுவதற்காக.
(இதே போல-2அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல்- இரண்டு தடவையும்-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–என்றும் 3-அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல் இரண்டு தடவையும்ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-என்றும் -4 அத்தியாயத்தில் முழு ஸூத்திரமே –545 -ஸூத்ரமே இரண்டு தடவை படிக்கப்படும் (அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் ) ப்ரஹ்ம ஸூத்ரம் முடிவடைவதால்)
இந்த அதிகரணத்தின் கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளியில் கூறுகிறார்
குறிப்பட்ட ஸந்தேஹமும் அதன் தீர்வும்
அக்₃ரே ஸம்வர்தநம் பா₄தி அவித்த₂வசஸி க்வாபி ஹிரண்ய க₃ர்ப₄ம்
க்₃ரஸ்தா ஸேஷ ஸ்வ கார்யே தமஸி சிவ ஏவேதி கேசித் பட₂ந்தி |
ஏதாத்₃ருக்₃வாக்ய வர்க₃ ஸ்பு₂ட₂ ப₄வத் அதி₄கா சங்கந ஸ்தம்ப₄நார்த₂ம்
ப்ராகு₃க்தாந் நீதி பே₄தா₃ந் அதிதி₃ சதி பரம் சிஷ்ய சிஷைக சித்த: ||
பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் ஓரிடத்தில்
(ஹிரண்ய க₃ர்ப₄: ஸம வர்தத அக்₃ரே பூ₄தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்) என்று “ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஹிரண்ய கர்பன் என்ற நான்முகக் கடவுள் மட்டுமே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. மற்ற ஓரிடத்தில்
(யதா₃ தம: தந்ந தி₃வா ந ராத்ரி: ந ஸத் ந அஸத் சிவ ஏக கேவல:) அதாவது “ப்ரளயத்தில் பகலோ இரவோ அசித்தோ சித்தோ எதுவும் இல்லாத போது சிவன் மட்டுமே தனியே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. எனவே பர ப்ரஹ்மம் யார் என்று முடிவெடுக்க இயலாது. இவர்களுள் ஒருவரா? மூவருமா? மூவரைத் தவிற வேறு ஓருவரா? தெரியாது.
ஸித்தாந்தம் –முன் சொல்லப்பட்ட ந்யாயங்களைக் கொண்டே இந்த விஷயத்திலும் நாம் முடிவை எட்டலாம்.
1.1.5 ஈஷத்யதி₄கரணத்தில் – “க₃தி ஸாமாந்யாத்” என்ற ஸூத்ரத்தில் ஸத், ப்ரஹ்ம, ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஜகத் காரணப் பொருள் நாராயணன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
1.1.6 ஆநந்த₃மயாதி₄கரணத்தில் – நான்முகனின் ஆநந்ததைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு உயர்ந்தது ப்ரஹ்மத்தின் ஆநந்தம் என்று சொன்னபடியால் நான்முகன் ப்ரஹ்மம் அல்ல என்று தெரிகிறது.
1.1.7 அந்தரதிகரணத்தில் – தாமரை போன்ற கண்ணுடையவன் ப்ரஹ்மம் என்று சொன்னபடியால் சிவன் ப்ரஹ்மமல்ல
1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் – விண்ணுலகில் இருப்பவர் ப்ரஹ்மம் என்றுள்ள படியால், அங்குள்ள வாக்யங்கள் புருஷ ஸூக்தத்தை நினைவூட்டுகிற படியால், புருஷ ஸூக்தத்தில் ஶ்ரீதேவீ மற்றும் பூதேவியின் நாயகனே சொல்லப்படுகிறபடியால் ஶ்ரீமந் நாராயணனே பரமாத்மா, பர ப்ரஹ்மம், ஸர்வேஸ்வரன், எல்லாம் ஆவார்.
ஆக இப்படி ஸமந்வய அத்யாயத்தில் 11 + 6 + 10 + 8 = 35 அதிகரணங்களால் நாராயணனே ஜகத் காரணம் எனப்பட்டது
மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள-ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்-விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான் அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்-இதம் பூர்ணம் –இத்யாதி-
இப்பாத அதிகரண அர்த்தங்களை
1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –
ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே-ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி-அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி-ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-