Archive for the ‘வார்த்தா மாலை’ Category

ஸ்ரீ வார்த்தா மாலாவில் ஸ்ரீ எம்பெருமானார்– அருளிச் செய்த முத்துக்கள்-

January 26, 2026

ஒரு அதிகாரிக்கு த்வய மொழிய மந்திரமில்லை. மிதுநமொழிய வஸ்து வில்லை. மிதுந கைங்கர்ய மொழியப்‌ புருஷார்த்த மில்லை -ஆசார்ய அபிமான மொழிய மோக்ஷோபாயமில்லை. பாகவத அபசார மொழிய மோக்ஷ விரோதி யில்லை என்பது எம்பெருமானாரது வைதிகக் கொள்கைகள்‌. பாகவத அபசாரம்‌ பன்னிரண்டு வகைப்படும்‌. அவை யாவன: முறையே ஜன்ம நிரூபணம்‌ (உயர்ந்த ஜன்மம்‌ என்ற செருக்கு] சரீர நிரூபணம்‌(புருஷ, ஸ்திரி விலங்கு, பறவை] என்ற பாகுபாடு; பாவநிரூபணம்‌ (பாலன்‌, விருத்தன்‌) என்ற பாகுபாடு, ஆஸ்ரம நிரூபணம்‌ (பிரம்மச்சாரி, ஸந்யாசி போன்ற பாகுபாடு) அவயவ நிரூபணம்‌ (நொண்டி, முடம்‌ என்ற பாகுபாடு) ஆலஸ்ய நிரூபணம்‌ (விண்ணப்பஞ்‌ செய்வார்‌ என்ற பாகுபாடு) வாஸ நிரூபணம்‌(கோயில்‌, திருமலை, பெருமாள்‌ கோயிலில்‌ வாழ்பவர்‌ என்றபாகுபாடு) பந்து நிரூபணம்‌ (சொந்தம்‌, உறவு அல்ல என்ற பாகுபாடு, பிரகாஸ நிரூபணம்‌ (ஆசார்யர்களையும்‌-கைங்கர்யர்களையும்‌ சமமாகக்‌ கருதுதல்‌, பிரகார நிரூபணம்‌ (நந்தவன கைங்கர்‌யம்‌ செய்யும்‌ தொண்டர்களைக்‌ கேவலமாக நினைத்தல்‌) வர்த்தக நிரூபணம்‌, தோஷ நிரூபணம்‌ எனக் கொண்டனர்‌. பகவத்‌ அபசாரத்‌தை விடப்‌ பாகவத, அபசாரம்‌ மிகக்‌ கொடுமையானது. பாகவத அபசாரம்‌ ஒன்று செய்தால்‌ அது பலவாகப்‌ பெருகும்‌. இவற்றைத்‌ தாம்‌ பண்ணுவது கூடாது என்பதோடன்றித்‌ தன்‌ மதிப்புக்குரிய ஆச்சார்யனே பண்ணினாலும்‌, ஆச்சார்யன்‌ செய்யும்‌ வரம்பு மீறிய செயல்களைச்‌ சிஷ்யன்‌ ரஹஸ்யத்தில்‌ உணர்த்த வேண்டும்‌ என்கிற படி ஆச்சார்யனும்‌ பாகவத அபசாரம்‌ செய்யாதிருக்கும்படி எடுத்‌துச் சொல்ல வேண்டும்‌.-வைஷ்ணவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அபசாரம்‌ செய்தால்‌ அவர்களை நல்ல முறையில்‌ கெஞ்சி விலக்க வேண்டும்‌. அவர்கள்‌ தனிமையில்‌ செய்த குற்றங்களை வெளிப்படுத்தக்கூடாது பிரகிருதி வாசனையால்‌ குற்றம்‌ செய்து மன்னிப்புக்‌ கேட்டவர்களை வெளிப்படுத்துதல்‌ பாகவத அபசாரமாகும்‌.-எம்பெருமானார்‌ தீர்த்தமாடி சேவித்தெழுந்து வருகிறவர்‌;பிள்ளை உறங்காவில்லிதாசர்‌ கையைப்பிடித்து வருவதற்குக்‌ காரணம்‌ கேட்க, பிராமண குலத்தில்‌ பிறந்தவர்களுக்கு, நாம்‌ உயர்ந்த குலத்தில்‌ பிறந்தும்‌ அடிமை செய்கிறோமே என்ற வருத்தமும்‌ தயக்கமும்‌ வரும்‌. ஆனால்‌ பிறருக்குக்‌ கைங்கர்யம்‌ செய்யவே பிறந்த சூத்திர வர்ணத்தவருக்கு, அந்த வருத்தம்‌, தயக்கம்‌ ஏற்படாது. உள்ளத்தால்‌. பரிசுத்தமான அவருடைய ஸ்பரிசம்‌ தமக்கும்‌ வர்ணாஸ்ரம அபிமானத்தைப்‌ போக்கி பரிசுத்தி யளிக்கிறது என்றார்‌ இராமானுஜர்‌.

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஸ்ரீ உடையவர்  ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –

ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப்  புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –

இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–

( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)

(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1- கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ – –நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ- நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் – சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –

இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —

(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)

(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-ஆத்ம குண  ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாகஉபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி-வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –-அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு-நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி-)=எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார்-எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்குமவர்-பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம்அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ  என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம-பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு-ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே-இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க-திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார்

மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் – 

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-பரிச்சின்ன ஸூகம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூகத்திலே இறே தமக்கு அந்வயம்-அதற்கு எதிர்த்தட்டான துக்கம்-அஞ்ஞானங்கள் -ஞானம் –இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.-கோபமும் அருளும்.-கோபம் -பிரசாதம் -உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் -சீதா ஸ்வ பாவமான நிழலும்

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-முக்தர் –முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூரிகள்-துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய ஸூரிகள்

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)

நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –

ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று-ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் (-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-)ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும் ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்- எம்பெருமானார் –கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம் பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள்-தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது – பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள்  -இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் –ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம் இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று –உண்டு இல்லை என்று தளரார் – என்று சொல்லுகிறது-ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்றுமிகவும் தளர்த்திக்கு யுடலாமே –-அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம் 0பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –அழு நீர் துளும்ப  அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் –சுந்தர -33-4-சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ-இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –-முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7- நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ – நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீமசேனன் அனுமன் உடலில்  துவட்சி கண்டு சொன்னான் இறே – இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்-இன்னம் இவ்வளவே அன்றிக்கே –அதனருகும் சாரார் –-இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்-அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே-அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் – அத்தை ஒரு வஸ்துவாக  புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது-ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –-ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது-என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில் இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்-தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்-சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே-இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில் பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது-ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே -தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –-பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-

ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —

(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)

ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-தம் நிலமான சம்சாரத்திலே–சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால் இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் 
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறன  இல்லை –என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப்தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இறே இங்கனம் சொல்லுகிறார்-பைதல் கைசு -நோய் முக்கைசு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –நான் அவரை பொறுக்க மாட்டேன்-நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் 

அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை -தண்ணிதானது என்-மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் –சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு-இந்த உண்மை இப்படி இருந்தாலும் —இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற ஆகாரத்தால்-தன்மையால் அன்றிக்கே-நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க-சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் – இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில் திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது – சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை-அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்-திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள் என்கிற இத்தனையும் இவ் விடத்தில் அபிப்ரேதம் –அதுக்கடி-தாயுரை செய்ததனை–(3-7-11) -என்று திரு மொழி முழுவதம் தாயார் வார்த்தை என்று நியமிக்கையாலே –

எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-திரு நாமம் சொல்லுங்கோள்-இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி–இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்–சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம்   த்வாம் பிரபன்னம் –கீதை -7-2 – -என்கிற-அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –-பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய    கல்யாண குணங்களிலே இவ்வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .

சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்

ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் எங்கன் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-கீழ் உக்தமான இவ் வஸ்து வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் இறே-பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –மந்த்ரம் -என்று–பிரதிபாத்யமும் அங்கேயாய்-பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே-1-ஜகத் காரண பூதனை –-2-சர்வாந்தராமியாய் –-3-துர் ஜ்ஜேயனாய் –-4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை அனுபவிப்புதியாகில்-அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே – சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –மறவாது வாழ்தியேல் –விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்-பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே-விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –அது இவர்க்குச் சேராது –சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே-இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் – விஷய வைலஷண்யத்தைப் பாரார் – தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது-ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்–இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ-இங்கனே சொல்லுவான் என் என்னில்-அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்-இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-வாழ்தியேல் –அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே – போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –-வாழ்ச்சி உன்னதே இறே-நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –வாழ்தியேல் -என்று தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –மன பிரதானம் தோற்ற –யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய்  இறே முமுஷூ இருப்பது –என்றும் வாழலாம் –நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே- மட நெஞ்சமே-எனக்கு பவ்யமான நெஞ்சே-விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு போக வேளையோடு வாசி அற என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் – நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
 -33–சத்தையையும் வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே இடக்கை பத்துருக் கொண்டு வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ-நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு-எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்

இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்

இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்

ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –

சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –

இந்தத்‌ தன்னேற்றங்களை பெருமாள்‌ பக்கமும்‌, நம்பெருமாள்‌ பக்கமும்‌ பெரிய நம்பியிடத்தும்‌ காணலாம்‌. எம்பெருமானாருக்கு ஒரு நிர்ப்பந்தம்‌ உண்டு. பிறருடைய துர்க்கதியைக்‌ கண்டால்‌ திருஉள்ளத்தில்‌ இரங்கி அருளிச்‌ செய்வது த்வயத்தை. அடியார்‌,தொண்டர்‌ போன்ற பிரபந்ந ஜனங்களுக்குக்‌ கூடஸ்தர்‌ என்று பெயர்‌. ஆகவே நம்மாழ்வார்‌, மங்கை மன்னன்‌ தொடக்கமான ஆழ்வார்களும்‌ எம்பெருமானார்‌ முதலான ஆச்சார்யர்களும்‌ உபதேச அனுஷ்டானங்களினாலே பிரபத்தி மார்க்கத்தைத்‌ தலைப்பெறுத்தி வளர்த்தவர்களாகையாலே பிரபந்த ஜன கூடஸ்தர்‌ என்று அழைக்கப்பட்டனர்‌.வாமனாவ தாரத்திலே தன்னுடைமையைப்‌ பெறுவதற்குத்‌ தான்‌ அர்த்தியானாற்போலே, அர்த்தியாய்‌ நின்று பாஷ்யகாரர்‌ பக்கலிலே வேதாந்தார்த்தம்‌ கேட்டு சிஷ்யனாய்‌, நாமும்‌ நம்‌ இராமானுசனை உடையோம்‌ என்‌ கையாலே, ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்று திருநாமமாய்‌ வாமனாதார அம்சமாகப்‌ புராண ஸித்தராய்‌ இருக்கிற நம்பியுடைய திருப்பதி என்று காட்டவே திருக்குறுங்குடி என்னாதே வைஷ்ணவ வாமநம்‌ என்றது.

எம்பெருமானாரது அந்திம தசையிலே, எங்களுக்குத்‌ தஞ்சமாய்‌ இருப்பதொன்றை அருள வேண்டும்‌ என்று முதலிகள்‌ கேட்கவே ‘எல்லோரும்‌ பாஷ்யத்தலே வாஸநை பண்ணுகையே நமக்குப்‌ பிரியம்‌. அது இயலாதவர்கள்‌ நத்தவனம்‌ அமைத்துத்‌ திருப்படித் தாமம்‌ (துளஸிபுஷ்பம்‌) பறித்துத்‌ திருமாலை எடுக்கையும்‌ பிரியமாய்‌ இருக்கும்‌. அது எல்லோராலும்‌ செய்ய முடியாததால்‌ ‘த்வயம்‌’ மந்திரத்தை ஜபித்து, ஸ்மரித்து அதையே விசுவாசியாய்‌ இருப்பது மிகவும்‌ பிரியமாய்‌ இருக்கும்‌ என்றார்‌.விஷ்ணுவானவர்‌ அனைவருக்கும்‌ சேஷியாய்‌ இருப்பவர்‌.நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார்‌ அவருடைய திருமேனியாவார்‌. கைங்கர்யச் செல்வம்‌ நிறைந்த எம்பெருமானார்‌ அந்த நம்மாழ்வாருடைய திருவடித் தாமரை யணையாய்‌ விளங்குகிறார்‌. அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆச்சார்ய ஸப்தம்‌ நிறை பொருளாய்‌ இருக்கிறது. அவருடைய அபிமானமே ஆத்ம ஜீவனத்தை விரும்பும்‌ எல்லாச்‌ சேதனர்களுக்கும்‌ ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேறும்‌ உபாயமாகும்‌. அவரது குணானுசந்தானமே போது போக்குக்கு விஷயம்‌. அவருக்கு முன்னும்‌ பின்னும்‌ உள்ளமற்ற ஆச்சார்யர்களுக்கு உபகாரத்வம்‌ உண்டே ஒழிய உத்தாரகத்வம்‌ கிடையாது. அவர்கள்‌ எல்லோரும்‌ அவ்வெதிராசனால்‌ சத்தைப்‌ பெற்றவர்கள்‌. ஆகவே அவ்வெம்பெருமானாருடைய திருவடிகளையே ஸம்ஸாரம்‌ அடியோடு நீங்குவதற்கு ஆஸ்ரயிக்க வேண்டும்‌ என்று நம்‌ ஜீயர்‌, வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌கூறுவர்‌. ஸோமாஸி ஆண்டான்‌ வடுக நம்பி போன்ற பலரும்‌ இக் கருத்தையே அருளியுள்ளார்கள்‌.“ஸத்யம்‌ ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌யதி ராஜோ ஜகத் குரு’என்று கணியனூர்‌ சிறியாச்சான்‌ சத்தியம்‌ பண்ணினார்‌.-இராமானுஜாச்சாரியரிடம்‌ காணும்‌ முக மலர்த்தி, அர்ச்சாவதாரத்தில்‌ விளைவதால்‌; குளிரக் கடாக்ஷித்தல்‌, வாய் திறந்து பேசுதல்‌, வாரி அணைத்தல்‌, போன்ற பேறுகள்‌, அவரோடு ஓரே காலத்தில்‌ வாழ்ந்த முதலியாண்டான்‌, கூரத்தாழ்வான்‌, அவரது குமாரர் பட்‌டர்‌, எம்பார்‌, திருக் குருகைப் பிரான்‌ பிள்ளான்‌ முதலானோருக்கு,எல்லை யற்றதும்‌, நினைத்தற் கரியதுமான ஆஸ்ரித வாத்சல்யம்‌, செளலப்யம்‌ முதலியன உள்ளங்கை நெல்லிக்கனி போல நேரில்‌ காணலாமாமிருந்தது. எம்பெருமானாருக்கு முற் காலத்தில்‌ இருந்த மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌, ஆளவந்தார்‌. நாதமுனி முதலியோருக்கு அம்முக மலர்த்தி அப்ரதஷணமாகவே இருந்தது.முதலிகள்‌ ஆழ்வானிடம்‌ எம்பெருமானார்‌ ஆளவந்தார்‌ இருவரில்‌ யாருக்குச்‌ சிறப்புண்டு என்று வினவிய பொழுது, ஆளவந்தார்‌ எம்பெருமானாருக்கு ஆச்சார்யார்‌ ஆன போதிலும்‌ அவருடைய கிருபா கடாக்ஷ்த்தாலேயே எம்பெருமானார்‌ உய்வு பெற்றவரானாலும்‌, ஆளவந்தாருக்கே சிறப்பு இருந்த போதிலும்‌, ஆசையுடையோர்க்கெல்லாம்‌ ஆரியர்கள்‌ கூறும்‌ என்ற கிருபாமாத்ர பிரசந்நாச்‌சார்யாத்வம்‌, காரேய்‌ கருணை இராமானுசரிடத்திலேயே நிலை நிற்கையாலே இவர்க்கே சிறப்பு என்றார்‌ ஆழ்வான்‌.யதிராஜரது நித்ய கர்மங்கள்‌ உடையவர்‌ பெருமாளுடைய ஸ்ரீகார்யம்‌ ஆராய்ந்து கொண்டு பகலில்‌ ஸ்ரீபாஷ்யம்‌ காலட்சேபம்‌ செய்து இரவில்‌ திருப்பள்ளியேறினால்‌, திருவாய்மொழி சேவித்த படியே கண்‌ வளர்ந்தருளுவார்‌.இரவில்‌ உறங்காவில்லிதாஸர்‌, ஸ்ரீ குண தாஸர்‌ போன்ற இராமானுஜ வேளைக்காரர்‌ இவருக்குக்‌ காவலாயிருப்பர்‌. காலையில்‌ அவரை வைணவ முதலிகள்‌ இராமனுஜ சுப்ரபாதம்‌ ஓதி துயிலெழுப்புவார்கள்‌. உடையவர்‌ கண் விழித்த பின்‌, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்துப்‌ பின்பு நீராடுவார்‌. திருவீதியிலுள்ள ஆசார்ய புருஷர்‌கள்‌ வணங்கி நிற்க காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளுவார்‌. எல்லாத்‌ திவ்ய தேசத்துப்‌ பெருமான்களுடைய பவித்திரங்களைத்‌ திருமுடியிலும்‌, கழுத்திலும்‌ சாத்திக் கொண்டு திருப் பல்லாண்டு, திருப் பள்ளி யெழுச்சி, திருப் பாவை, ஸ்ரீ ஸ்தோத்ர தனியன்களை அனுசந்தித்துக்‌ கொண்டு திருமண்‌ காப்பணிந்து தியானத்தில்‌ ஈடுபடுவார்‌. பின்னர்‌ பேரருளாளன்‌ தொடங்கி அழகிய மணவாளனை மங்களாசாசனம்‌ செய்ய கோவிலுக்குச்‌ செல்வார்‌. நம்‌ பெருமாளுக்கு ஸகல கைங்கர்யங்களும்‌ காலாகாலங்களில்‌ நடக்கும்படி பத்துக்கொத்தலுள்ளவர்களுக்கும்‌ கட்டளை இட்ட பின்‌ கோயிலிலிருந்து மடத்‌திற்கு வந்து பேரருளாளர்‌ திருவராதனம்‌ பூர்த்தி செய்து தளிகை மாறிய பின்‌ சிஷ்யர்களுக்குத்‌ தீர்த்தப் பிரசாதம்‌ வழங்கிய பின்‌ தாமும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ (பிரஸாதப்படுதல்‌) உணவு உட்கொள்ளுவர்‌.அதன்‌ பின்னர்‌ ஆளவந்தாரை நினைத்துத்‌ தியானம்‌ செய்த பின் பட்‌டரையும்‌, ஸ்ரீராமப்பிள்ளையையும்‌ கொண்டு இராமாயணம்‌ படிக்‌கச்‌ சொல்லிக்‌ கேட்பார்‌. சாயங்காலம்‌ காயத்ரி ஜபம்‌ செய்து
அனுஷ்டானங்களை முடித்தபின்‌ பேரருளாளன்‌ முன்பு பல்லாண்டு முதலியனவற்றைச்‌ சிஷ்யர்களை சேவிக்கச்‌ சொல்லுவார்‌. பின்னர்‌ அழகிய மணவாளனைச்‌ சென்று சேவித்து கோயில்‌ முழவதும்‌ திருவிளக்கேற்றி ஸந்நிதியில்‌ பொன் குத்து விளக்கிலே தெய்விளக்‌கேற்றி, மலர்மாலைகள்‌ சாத்தி இளநீர்‌ அமுது செய்வித்தருளுவார்‌.இரவிலும்‌ பகலைப் போலவே திருவாராதனம்‌ நடத்துவித்து திருவரங்கச்‌ செல்வரை எழுந்தருளுவித்து நடைப் பலிகளை நடத்தி யாகசாலை ஹோமங்களை நடத்தச்‌ செய்வார்‌.பள்ளி கொள்ளுமிடத்தில்‌ செல்வரை எழுந்தருளச்செய்து சம்பா அமுது செய்வித்து தன்வந்திரி வம்சத்தவர்‌ தயாரித்த கஷாயமும்‌ அமுது செய்வித்து, ஸ்ரீரங்கநாயகியார்‌, கோவிலையும்‌ அலங்கரிப்பித்து என்‌ திருமகள் சேர்‌ மார்பனானை’ சேர்த்தியிலே எழுந்தருளப்பண்ணி, பலவிதமான சுகந்தங்களைச்‌ சாத்துவித்து வெள்ளிக்‌ கிடாரங்களிலே பாற்குழம்பு சேர்த்து ௮முது செய்வித்து அரம்பையர்கள்‌ தாலாட்ட யாழ் குழல்‌ வீணை வாசிக்க பெருமாள்‌ பள்ளி கொண்டருளும்படி செய்து சங்குசக்கரத்தாழ்வார்களை பள்ளியறைக்குக்‌ காவலடைத்து ஸ்ரீநிதி இருக்கும்‌ இடத்தற்கு திருக் காப்புச் சேர்ப்பித்து புறப்படுவார்‌. மடத்தில்‌ பேரருளாளர்க்கும்‌ எல்லாம்‌ செய்து தாமும் பள்ளி கொள்வார்

இன்னமுத மூட்டுகேன்‌ இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம்‌ பாடவல்ல சீர்ப்பெருமாள்‌ – பொன்னஞ்‌
சிலைசேர்‌ நுதலியர்‌ வேள்‌ சேரலர்‌ கோன்‌, எங்கள்‌
குலசேகரனென்றே கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெருமாள்‌ திருமொழித் தனியன்‌
வாழிபரகாலன்‌ வாழிகலிகன்றி
வாழிகுறையலூர்‌ வாழ்வேந்தன்‌ – வாழியரோ
மாயோனை வாள்வலியால்‌ மந்திரங்‌ கொள்‌, மங்கையர்கோன்‌
தூயோன்‌ சுடர்மான வேல்‌
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருமொழித் தனியன்‌
முந்துற்றநெஞ்சே முயற்றித்‌ தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும்‌ சோலை சூழ்‌ மொய்பூம்‌ – பொருதல்‌ குருகூரன்‌ மாறன்‌ பேர்கூறு
-எம்பெருமானார்‌ அருளிய பெரிய திருவந்தாதி தனியன்‌

சீரார்‌ திருவெழு கூற்றிருக்கை யென்னும்‌ செந்தமிழால்‌
ஆராவமுதன்‌ குடந்தைப் பிரான்‌ றனடியிணைக்கீழ்‌
ஏரார்‌ மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம்‌ துணை நமக்கே.
-திருவெழு கூற்றிருக்கை தனியன்‌

“அழுக்கென்றிவையறிந்தேன்‌ அம்பொன்‌ அரங்கா
ஒழித்தருள்வாய்‌ உள்ளில்‌ வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’
-விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது

சீராரும்‌ எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி.
திருவரையிற்‌ சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும்‌ செய்ய வடிவு எப்பொழுதும்‌ வாழி.
இலங்கிய முந் நூல்‌ வாழி இணைத் தோள்கள்‌ வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல்‌ வாழி துணை மலர்க்‌ கண்கள்‌ வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில்‌ வாழி.
இனி திருப்போடெழில்‌ ஞான முத்திரை வாழியவே.

அறு சமயச்‌ செடி யதனை யடி யறுத்தான்‌ வாழியவே.
அடர்ந்து வரும்‌ குதிட்டிகளை யறத் துறந்தான்‌ வாழியவே.
செறு கலியச்‌ சிநிதுமறத் தீரத்து விட்டான்‌ வாழியவே.
தென்னரங்கர்‌ செல்வ முற்றும்‌ திருத்தி வைத்தான்‌ வாழியவே.
மறையதனில்‌ பொருளனைத்தும்‌ வாய் மொழிந்தான்‌ வாழியவே.
மாறனுரை செய்த தமிழ்‌ மறை வளர்த்தோன்‌ வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர்‌ அவதரித்தான்‌ வாழியவே.அழகாரும்‌ எதிராசர்‌ அடியிணைகள்‌ வாழியவே.

சங்கர பாற்கர யாதவ பாட்டப்‌ பிரபாகர்‌ தங்கள்‌ மதம்‌
சாய்வுற வாதியர்‌ மாய்குவரென்று சதுமறை வாழ்ந்திடுநாள்‌
வெங்கலி யிங்கினி வீறு நமக்கிலை யென்று மிகத் தளர்நாள்‌
மேதினி நஞ்சுமையாறு மெனத் துயர்விட்டு விளங்கிய நாள்‌
மங்கையராளி பராங்குச முன்னவர்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்று முவந்திடுநாள்‌
செங்கயல்‌ வாவிகள்‌ சூழ் வயல்‌ நாளும்‌ சிறந்த பெரும்பூதூர்ச்‌
சிமானிளையாழ்வார்‌ வந்தருளிய நாள்‌ திருவாதிரை நாளே

அத்தகிரி யருளாளரடி பணிந்தோன்‌ வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன்‌ வாழியவே.
பக்தியுடன்‌ பாடியத்தைப்‌ பகர்ந்திட்டோன்‌ வாழியவே.
பதின்மர்‌ கலையுட்‌. பொருளைப்‌ பரிந்து கற்றோன்‌ வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன்‌ வாழியவே.
தொல்‌ பெரிய நம்பி சரண்‌ தோன்றினான்‌ வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள்‌ சிறக்க வந்தோன்‌ வாழியவே.
சீர் பெரும்புதூர்‌ முனிவன்‌ திருவடிகள்‌ வாழியவே.

எண்டிசை யெண்‌இளையாழ்வார்‌ எதிராசன்‌ வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான்‌ குரைத்தான்‌ வாழியவே.
பண்டை மறையைத்‌ தெரிந்த பாடியத்தான்‌ வாழியவே.
பரகால னடிஇணையைப்‌ பரவுமவன்‌ வாழியவே.
தண்டமிழ்நூல்‌ நம்மாழ்வார்‌ சரணானான்‌ வாழியவே.
தாரணியும்‌ விண்ணுலகும்‌ தானுடையோன்‌ வாழியவே.
தெண்டிரைசூழ்‌ பூதூரெம்பெருமானார்‌ வாழியவே.
சித்திரையிற்‌ செய்ய திருவாதிரையோன்‌ வாழியவே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் -ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ வார்த்தா மாலையில் வார்த்தை -441-

December 17, 2025

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ ஸூக்திகள்-

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே-“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே-உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’
என்றருளிச் செய்து,
இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.-இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.

அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,-இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||

எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது) என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.-இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்-வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே–நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;-பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே-அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.-அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.-நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,-கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம் உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் – ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் – பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –மண் பிடி எடுத்து காட்டுகிறார் – பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

——————–

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலைநம்பி

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்யதேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?“-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்று என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் –ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் – –

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது-அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள் )
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை வெளிமானால் வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தாவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சார ஸங்க்ரஹம்-வார்த்தை -456-

December 17, 2025

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-தாமரைப் பூவை பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ மஹா லஷ்மியானவள் விரும்பும்படியான பெறுவதற்கு அறிய நம் ஸ்வாமியானவன்-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி  அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம் பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-நித்ய ஸூரிகள் ஜீவனம் இருக்கிற படி–‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.-மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்-அவளுக்கு மிடுக்கானவன்.-இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –தர்மத்தினுடைய பரம பிரயோஜனமான திருமகளார்-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?-அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி-சுவையன் –-ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே-திருவின் மணாளன் –இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்-அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்-புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நித்ய யவ் வன ஸ்வ பாவனை—மைந்து -மிடுக்கு இனிமை அழகு கெடுவாய், இவ் விஷயத்தைச் சிலரால் விடப் போமோ?–நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்?

—————

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ -அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –ஸூலபனுக்கு என்னவுமாம்-ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-அவர்களை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –தன் மேன்மை பாராதே -சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு இவற்றின் சத்தையை நோக்கி நிற்கும் வத்சலன் ஆனவனாலே –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்-கேசவன் தமர் ஆனார்கள் -மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாநாராயணனாலே என்கிற இடம் மா சதிரினுடைய உபபாதனம்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-அர்த்தத்தை சொல்லுகைக்காக சப் தத்தை உபாதானம் பண்ணுகிறார் -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை  அருளிச் செய்கிறார் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே-வேத மயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் நாராயணனையே குறிக்கும் –

—————-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-நிரதிசய போக்யமான திருவடிகளை—செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.-வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.-மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு –அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –நிலத்தைச் சொல்லுகிறது.-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும் அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.-செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது-சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.-இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி. இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.-மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.-‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

———————

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-4-11-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-5-4-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர்
தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்-சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்-கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்–அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.-சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?-பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-சரத்தின் பலம் -வாய் வலி –யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.-ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்-சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி-முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11–அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே–என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை—தொல் வினை தீர -அநாதி யான அவித்யாதிகள் நீங்கி-இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய ஸூரிகள் உய்வு பெறும்படி.-வீற்றிருப்பாரே –-அவன் இறைவனாம் தன்மைக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்.-‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,-‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு. ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘ வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்-லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்-க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.-‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது-பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் -கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,-அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,-இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.-கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –-பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி-அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன் -அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம் செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்–சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம் படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து-அழைத்துக் கொள் -ஆதி -மநோ வியாதி என்றவாறு -வியாதி தேக வியாதி–கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி—எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் —யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று—திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை –அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –-அது ஏது என்னில்-ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?-‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.-இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?-திருவடியில் என்ன ப்ராவண்யம் –-

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-–4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து ––இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.-அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்-

—————–

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு—தமியேனுக்கு –1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ-இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு–2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர ஸூன்யன்-அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே-நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.–பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –தமியேன்-3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,-இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை செய்ய வேண்டுவது என் என்ன-ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”– ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.-அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே-அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.-விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.தேவோ நாம சஹஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-பாரதம். என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்—-‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேஸ்வரன்.-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட–புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே-ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே – ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.-புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய், பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் –தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

————–

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை -ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.-திருமாமகள் – செல்வம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8–வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளைக் கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இறே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது-ஒசிந்த நுண்ணிடை-இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.-ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.-பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.-அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.-ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.-திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-என் ஸ்வாமிநி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு-எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே

————————–

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ர்வ கந்த: ஸர்வ ரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு –துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –‘அவன் குப்பைக்காலன் காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?(குப்பைக்காலன்-நல்லவன் விபரீத லக்ஷணை)இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்த மயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இறே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி –ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இறே –இந்த லோகங்களுக்கு ஸூகம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற-எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இறே

——————

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் ச ரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது-அடியேன் என்று நான் சொல்ல நீ ஈஸ்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை-எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி-மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்-பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய-திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –-நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –-ஆக-இப் பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்- இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —

——————–

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்
பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே -என்னடியார் யது செய்யார் –என்னும் உன் கடாக்ஷமும் –நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து-உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் – உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும்-இவ் வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே–அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம் யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் –மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று —துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-சீரியது அடிமை செய்யுமது என்று–உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இறே-உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ-என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து –என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே –கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் –கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-நித்ய ஸூரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ

————-

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண-வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் –பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி –விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் – –என்னக் கடவது இறே-நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்-க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார் –என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் –யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபாலி ஸ்ம்ருதி –எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே- -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –அப்ராப்த விஷயத்துக்கு இறே அதிகாரி சம்பத்து வேண்டுவது –கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது -சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்–சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி –
பெரிய திருவந்தாதி -54-–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –-திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் ––பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இறே–இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –-இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –-ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக-பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன-சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்–சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன--தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்- உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண்
–இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –-ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்–இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –வியக்தமாக -மதிநலம் அருளப் பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா -அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே10-4-3-துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய்தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே-இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் -தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் -கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று–அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ 

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே–இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ-தானே--புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –அவை யாவன-பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3—தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்-பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின –பாரதம் மோஷம் -என்கிறபடியே –-அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்-யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே மேலைத் தொண்டு –-அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –

———————–

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள்

December 11, 2025

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை  பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –

இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)

(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)

இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –-ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

—————

முதல் வார்த்தை (பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத்
(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர்-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் – –எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் -விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ ––அலமந்தால் -தடுமாறினால் –இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –-நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ-யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜ னார்த்தியாய் அழைக்கிறேனோ –-கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற-கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே – நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை-சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை –கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -என்பது பிரமாணம்- –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – –கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை –செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப் பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன –இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்–இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே-இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்-இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று-அலந்தேன்;-வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இறே-பாவியேன் காண்கின்றிலேன்; ஆபத் சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்-காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை-எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

——————————

இரண்டாம் வார்த்தை –(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)
அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –
இவற்றை பொகட்டு புறம்பே போய் –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை
அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-நானும் உனக்கு பிரகாரமே –அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்-மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி-ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே–என் உடைமையும் உனக்கு பிரகாரமே–யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமாநாதி கரண்யம்-என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி-வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமாநாதி கரண்யம்-அனைத்தும் அவனது சொத்து –-வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த-நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ–மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-என்னுடைய பிராணன் அவன் கையதே –நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் -மிதுனமானால்-உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ- உங்களுக்கு இது அவ்யுத் பன்னமோ –அஸ்யா தேவ்யா-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-தத் தஸ்ய சத்ரு சம்பவேத் –என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி-இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்–தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —-இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள்

————————————-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை எனபது –

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் – தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது – பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் – வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே –ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே-சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்!
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இறே பாபம்-அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்-பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

———————

நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுமரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத்தேவர் தம் துவக்கைப் பாரது ஒழிவதே (
சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே)-என்றும் –
பரம் தாமத்தை பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதி யாம் போலேயும்
ஸ்தா லீஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும்
(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய் இருக்கிற திருக் கடல் மல்லையிலே-ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே– எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .(அவஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அ வைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

——————–

ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்-மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே-அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –நளிர் அரங்கம்நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்-நாகணையான்-அனந்த சாயி-என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் -புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று-பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்-பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் –சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே ––தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே-அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-மா முகில்காள்-ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே- அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் – புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்பாம்பணையான் வார்த்தை என்னே- படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே-ஏதேனும் ஆவேனே – ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்-அது என் என்னில் –சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை-அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

————

ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(
பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-தெருளுதியாகில்-அறிவுடைய யாகில் -ஞான இந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உண்டாகில் நெஞ்சே வணங்கு –-உபகாரகனான அவன் திருவடிகளில் விழப் பார்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாக புத்தி பண்ணு அறிந்து-அவன் விட அடான் என்று அறிந்து-உனக்கு ஒரு போதாக அயோக்யதா அனுசந்தானத்தாலே அகல நினைப்பதொரு அறிவு கேடு உண்டு -அவ்வளவிலும் விடாதே கிடாய்-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே-முன்பு உபகரித்து நின்ற படி கண்டாயே
இவ்விஷயத்தை விட்டால் எத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்க –

————————

ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

——————–

எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் -விரித்துரைத்த வெநநாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான்  போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல்திருவந்தாதி -33- என்றும் இருக்கை –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே-14-அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க – அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது-நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை – அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-இது தான் –“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிறஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.-நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ-அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று-அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;-இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.
——————-

ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு  நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –
-(தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இறே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க-சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –பட்டு -என்பது- உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்- வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்தேட்டமாய் இறே இருப்பது –-இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு கலந்து கொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.-காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-15-உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன-போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன-ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –போந்து எண்ணிக் கோள் –புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்-தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் 

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
?—1-10-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இறே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்-அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய-நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே– –நனி -மிகுதி – மா -வேண்டற்பாடு-நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3-ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே –பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்னக் கடவது இறே –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.-நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா-மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை   இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“-வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று- ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்–வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல்
-என்று- பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்–தவம் –ஸூஹ்ருதம்–பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

——————

பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும்
(எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ))-எம்பாரைப் போலவும் (எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை
(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)

இப்பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப்பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிகே பட அனுசந்திப்பான்
இப்பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –
வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்-மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவடிகள்-திருமேனி -திருவதரம் -திருக்கண்கள்-திரு நாமம் திருமுடி -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய் -5-சர்வ ரஷகமுமாய் இருப்பதை விளக்கும் ஸ்ரீ அருளிச் செயல்கள்

December 4, 2025

வார்த்தை -438-
திருவடிகள் -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய்(விரஹ தாபத்தால் பாதகமாகுமே) -5-சர்வ ரஷகமுமாய்
இருக்கும் -எங்கனே என்னில் –

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே
சேஷித்வம் சொல்லிற்று

ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -5-7-10-என்கையாலே
உபாயத்வம் சொல்லிற்று

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று

அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ
ரஷகத்வம் சொல்லிற்று -(தனக்கும் தனது திருவடியையே ரக்ஷகத்வம் -ஆகவே ஸர்வ ஸப்த பிரயோகம்)

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்-இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது –அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-பிராப்தமுமாய் போக்யமுமான திருவடிகள் –சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர்பவிஷ்யதி -என்னும் என் சென்னிக்கு போக்யமுமாம் –தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்-குரை -பரப்பு -போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுதல் -ஆபரண த்வனியை சொல்லுதல்–ஒன்றும் வாராயாகிலும்,-
குசஸ்த்தலே நிலசதி சச ப்ராத ரிஹைஷ்யதி-என்று புறப்பட்டான் அங்கே -இங்கே விட்டான் என்று வருகைக்கு பிரசங்கம் ஒன்றும் இல்லையே யாகிலும்-நாம க்ராஹஞ்ச நாதஸ்ய சீதல காஹள த்வனி –என்ன கடவது இறே-வாராய் யாகிலும் கோலமாம் என்பான் என் என்னில்-வாராது ஒழிகை கூடாது -கூடிலும் என் நினைவு இது என்கிறார் -என்னை இப்படிஆக்கினாய் என்று கருத்து –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-தகவு செய்திலை;-நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இறே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்-ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இறே நலிந்து –
உதைத்த பாதத்தன்--ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இறே பூதனை நிரசன தசை

——————————–

திரு மேனியும் -1-ருசி ஜனகமுமாய் -2-உபாயமுமாய் -3-உபேயமுமாய் -4-சேஷியுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா சிறிய திருமடல் -55 -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று -(பாசுரம் தோறும் திருவடி பிரயோகம் -அனைத்துமே உபாய பரமாகவே இருக்கும்)

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று(ஆழ்வாரது பக்தி சாத்திய ஸஹஜ பக்தி -ஆகையால் -விளைவித்த -பத பிரயோகம் -ஆகவே இது உபேயத்வம் தானே)

எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று

சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3–நிறமானது கண்டார் நெஞ்சை அறிவு கெடுக்கும் படியான அழகிய மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனே -வண்ணம் உண்டு -படி -ஸ்வபாவம் -அது அருள் கொண்டு இருக்கும் -கொள்வார் அளவன்றிக்கே கொடுக்கும் ஸ்வபாவனாய் இருக்கை-வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. –மருள்-மேகத்துக்கும் எம்பெருமானுக்கும் விசேஷணம்-மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4-பேரமர் காதல்--ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹாத-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்-ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய் பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –இந் நிறத்தைக் காட்டி-என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-என் சொல்லுகேன் -கேட்ப்பாரைப் பெற்றால் சொல்லுகைக்கு பாசுரம் தான் உண்டோ-அன்னைமீர்காள்–தோழிமார் அழிந்தார்கள் –நாட்டார் அந்நிய பரர் — சேஷித்து கோள் நீங்களாய் இருத்தி கோள் -உங்களுக்குச் சொல்லவோ –

—————

திருவதரமும் –1-தாரகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-ப்ரப்யமுமாய் -4-போக்யமுமாய்
5-பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –

அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே –
நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –

பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே
ப்ராப்யத்வம் சொல்லிற்று

கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று

முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்-மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும்-அதனால் பட்ட புண்களை ஆற்றவும்-ஆராவமுதம் அனையான் -கண்ணன் —விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு-மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது-எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ – அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே– இது சருகாய்ப் போகாமே -அந் நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி-உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்-அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இறே – அது செய்ய ஒண்ணாத பின்பு-இத்தாலே என் இளைப்பைப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்-வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இறே இது –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்-பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து –திரளிலே நாம் அவனை வளைக்கும் படி என் – என்று நீ நினைக்க வேண்டா – நாங்கள் விளையாடுகிற போது எங்கள் பந்தைப் பறித்து கொண்டு போனான் -என்று சொல்லி போகாதபடி தடுத்து வைத்து-பவள வாய் முறுவலும் காண்போம் தோழி –நாம் இப்படி செய்தவாறே அவன் கால் வாங்கிப் போகாமே நின்று மந்த ஸ்மிதம் பண்ணுமே –அப்போது அவனுடைய பவளம் போல் இருக்கிற திரு அதரத்துக்கு பரபாகமான முறுவலையும்-தோழி-நாம் கண்டு அனுபவிக்க கடவோம் -என்று மனோரதிக்கிறாள்

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –கனி இருந்தனைய செவ்வாய்–அக் கண்ணாலே நிர்மமர் ஆனார்க்கு அனுபாவ்யமான விஷயம் இருக்கிறபடி –கண்ட போதே நுகரலாம் கனி போலே யாய்த்து திரு அதரத்தில் போக்யதை இருப்பது –இருந்து -என்றது அச் செவ்வி என்றும் ஒக்க ஏக ரூபமாய் இருக்கிறபடி – சதைக ரூபரூபாய -என்னக் கடவது இறே-கண்ணனை-பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால்
அவதாரத்துக்கு பிற்பாடர்க்கு உதவுவதற்காக கிருஷ்ணனாய் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படி யாய்த்து இருப்பது –கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன்– அண்டர் கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.-யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்ந்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்-பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதி களாலே ஸூசிஷிதராய் வார்ந்து வடிந்த விநயம் எல்லாம் தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும்
பட்டர் அருளிச் செய்வர் –

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5–மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி
புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது -இவை நலியாத இடத்தில் போனாலோ என்னில்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-ஒன்றும் அறிகின்றிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

—————–

திருக்கண்களும் -1-ரக்ஷகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-உபாயுமுமாய் –4-உபேயமுமாய் -5-பாதகமுமாய் -இருக்கும்
எங்கனே என்னில்
உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-1-9-என்கையாலே ரக்ஷகத்வம் சொல்லிற்று -அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
அமலங்களாக விளிக்கும் -திருவாய் 1-9-9- என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -திருவாய் -7-3-3-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-திருவாய் -10-3-1- -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

(அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக் கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-)

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே-சர்வ பூத ஸூ ஹ்ருதாய்-ஆனுகூல்யம் பண்ணினாரோடு-பிரதி கூல்யம் பண்ணினாரோடு-வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே –சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –அன்றிக்கே-சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10–இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது. ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ; அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை –இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் –அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது-அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.-கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.- காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் – புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான்.
ந சஷூஷா க்ருஹீயதே ‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது.-அவன் அவ் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில்,-காண்பன் –நானும் கண்டு அனுபவியா நின்றேன்.உலகத்திற்கே வேறுபட்ட -விலக்ஷண இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின்,-அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் –அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1–நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

————————————————————————————————-

வார்த்தை – 439-
திரு நாமமும் திருமுடியும்
1-பாவனமுமாய் -2-தாரகமுமாய் -3-போக்யமுமாய் -4-பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –
மாயனை –தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-திருப்பாவை -5-என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே-நாச்சியார் என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று
ஆயர் கொழுந்தே என்னும் இச்சுவை -திருமாலை -2-என்கையாலே பரம போக்யத்வம் சொல்லிற்று

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்-பூர்வமாகிறது –ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்-உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –தீயினில் தூசாகும் –நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்-அர்த்தம்-பெரியாழ்வார் மகள் ஆகையால் இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-என் –-இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-மேன்மைக்கு எல்லை யானவர்களுக்கு நியாமகனாய் இருக்குமா போலே-தாழ்வுக்கு எல்லையான இடையருக்கும் பசுக்களுக்கும் ஸூலபன் ஆனபடி-வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் ஒரு பசும் கூட்டமாய் இறே பரத்வம் இருப்பதுஎன்னும் – இஸ் ஸ்வபாவங்களை அனுபவித்தோ உமக்கு இவ்வினிமை பிறந்ததோ என்னில்-அங்கன் அன்று-திரு நாமத்தின் உடைய உக்தி மாத்ரத்திலே வந்த இனிமை –இச்சுவை தவிர –இந்த ரசத்தை விட்டு-சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –இவருடைய அறு சுவை இருக்கிறபடி –திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

—————-

திருமுடியும் -(குழல்) -1-பாவனமுமாய்–2–ரக்ஷகத்வமுமாய்-3–சேஷியுமாய்04-போக்யமுமாய் -5-பாதகமுமாய்
இருக்கும்–எங்கனே என்னில் –
கெடும் இடராயவெல்லாம் கேசவாய என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்–திருநெடும் தாண்டகம் -16-என்கையாலே -ரக்ஷகத்வம் சொல்லிற்று
முடியானே மூ வுலகும் தொழும் சீர் அடியானே–என்கையாலே-சர்வ சேஷித்வம் சொல்லிற்று
பூந்துழாய் முடியார்க்கு –திருவடி மூழிக் களத்தார்க்கு -9-7-என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் –7-7-10-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் -பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –
கேசவா வென்ன -ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்– என்கிறபடியே -சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் – பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி – இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்- முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்-என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா –யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-நாள் தோறும் குரூரமான வ்ருத்தியைப் பண்ணும் யமபடரும் கிட்ட மாட்டார் –ஸ்வ புருஷம் –இத்யாதி -தாஸ் யஞ்ஞ வராஹஸ்ய –இத்யாதி –கில்லார் -சக்தர் அல்லர் – எரிகிற நெருப்பில் ஏறச் சக்தர் யுண்டோ –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது – அற நெருங்கி இருண்ட குழலையும்-காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே-இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது – பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது-கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –என் துணையே –ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –ப்ரஷஸ்த கேஸ பாஸம்-ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் கற்றை-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இறே முதல் காணப்படுவது-அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்-ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின்,-அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது?
மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே –உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது?  இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு

ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-பூந்துழாய் முடியார்க்கு –திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி–பாண்டியன் கொண்டை -வளையம் திருத் துழாய் மேலே சாத்தி –-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –திரு மூழிக் களத்தார்க்கு–வளையம் போலேயும் ஆபரணம் போலேயும் அவ் வூரில் நிலையும் அழகுக்கு உடல் என்று இருக்கிறாள் -அவை விக்ரஹத்துக்கு ஆபரணம் ஆனால் போலே -சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் இ றே -அழகும் குணமும் ஒரு தலைத்த விஷயம் இறே

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-
நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை-ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் –ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அந்தர்யாமி திருவாராதனம்–

November 29, 2025

வார்த்தை -434-
அந்தர்யாம்ய ஆராதனம் விளக்கும் வார்த்தை-

பகவத் விஷயம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -திருவாய்மொழி -2-5-4- என்றார் –
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்கள் -திருவாய்மொழி -10-7-10-என்கிறபடியே
இருபத்து நால்வர் ஏறின ஆகாரத்திலே
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
பெரியாழ்வார் திருமொழி -4-5-3-என்கிறபடியே
நடுவில் திரு முற்றத்தில் இருபத்தரறுவர் ஆவானை உகந்தருளப் பண்ணி –
அநந்யார்ஹனாய் -அநந்ய சரண்யனாய் -அநந்ய போகனாய் -ஜ்ஞானாநந்தியான
இருபத்தைவரான ஆத்மா திருவாராதானம் பண்ணும் நம்பியாருக்கும் பரத்வம் எட்டாது –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு-அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின் கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.அதாவது, பூர்வ க்ஷணத்தில் ‘ அனுபவம் போல அல்ல ஆயிற்று உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது’ என்றபடி.

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –-வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கர்ம இந்திரியங்கள் ஐந்தும் -பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ்ஸூக்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து -8-8-3-என்று அவன் தான் இவர் பக்கல் செய்ததனை–இப்போது அவனுக்கு இவர் தாம் அறிவிக்கிறார் –ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி -ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து  என் நெஞ்சு நிறைய புகுந்தான் (10-8 )-என்று இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து  கொள்ளும் கிடீர் என்று  பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –-நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே  இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –வந்தாய் என் மனம் புகுந்தாய்(பெரிய திருமொழி – 1-10-9 )-என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து (பெரிய திருமொழி -6-2 )-என்கிறபடியே-இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே –அடியார் மனத்தாயோ-(பெரிய திருமொழி 11-5 )-வெள்ளத்தான் வேம்கடத்தான்  ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் –என்று   உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –

வ்யூஹம் கால்கடியாருக்கு
அவதாரம் அக்காலத்தில் உள்ளாருக்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களில் எப்போதும் திருவடிகளைப்
பிடித்து இருக்க ஒண்ணாது –

இவனுக்கு எப்போதும் ஒக்கப் பற்றலாவது அந்தர்யாமித்வம் இறே
இவனையே குறித்து நிற்கும் இடம் இறே அவ்விடம்
அல்லாத இடங்களில் காட்டில் அவன் அதி ப்ராவண்யம் பண்ணா நிற்பதும் இங்கே இறே
எங்கனே என்னில் –

(அர்ச்சாவதாரத்தை விட உயர்ந்த அந்தர்யாமித்வம் என்றும் அழகாக விளக்கிக் காட்டுகிறான்)

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-என்றும் –
வில்லாளன் நெஞ்சத்துளன் -நான்முகன் திருவந்தாதி -85-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் -பெரிய திருமொழி -11-3-7- என்றும் –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன்
என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய்மொழி -10-8-6-என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த விருத்தம் -65-என்றும் –

(பரத்வமும் வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் அந்தர்யாமிக்குள்ளே அடங்குவதற்கு பிரமாணங்கள்)

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்-கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க் கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக் கூட்டியும்,-எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ் முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத் தடம் கண்
’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து  என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ

தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –சகல தாப ஹராமான கடல்-சம்சாரத்தில் தாப த்ரய தப்தரானவர்களுக்கு-ஸ்ரீ திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்திக்க போம் என்கை–சீதள ஸ்வபாவமான கடல் –
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை -என்று அவனுடைய ஸ்வபாவம் இதுக்கு உண்டாய் இருக்கிற படி –சம்பந்தம் அடியான வாத்சல்யம்
(கடல் அரசன் அபசாரம் பொறுத்தார் அன்றோ பெருமாள் )பள்ளி கொண்ட படி என்னும் இத்தனை -பாசுரம் (விசேஷணம்) இடப் போகாது –-கிடந்ததோர் கிடக்கை -என்றும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும் சொல்லும் இத்தனை இறே –நாளும் வாய்க்க (8-10)-என்கிற பாட்டில் ஒரு போலி சொல்லும் இத்தனை இறே –இவர் தாமும் -வெள்ளை வெள்ளத்தின் மேல் -என்று ஆசைப்பட்ட படியே வந்து புகுந்தான் ஆய்த்து-தல சயனப்பெருமாள் போல் ஆதி சேஷன் படுக்கையை விட்டு வந்தாரா-அங்கு உள்ள சேவை கண்டு ஆனந்தம் படுவது போல் இங்கும் – இவருக்கு சேவை சாதித்தான்-ஆகவே மனதில் இல்லாமல் மனக்கடலில் என்கிறார்-பழக விட்டு –அங்கு உண்டான ஆசையை நேராக மறந்து விட்டு-ஓடி வந்து  –காதக் குதிரை கட்டி ஆய்த்து வந்தது –(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு என்றுமாம் )என் மனக் கடலில் வாழ வல்ல–அது பனிக் கடல் ஆகையாலே குளிர்ந்து இருக்கும்-இது மனக் கடல் ஆகையாலே குளிர் கெட்டு இருக்கும்(சந்தனம் சீதளம் -சந்திரன் இன்னும் சீதளம் —சத்துக்கள் மனஸ்ஸூ அவற்றை விட சீதளம் -பிரமாணம் )அது ஊற்று மாறினாலும் இது ஊற்று மாறாது-பனிக் கடலையும் தனக்கு உள்ளே அடக்கும் கடல் இறே –பரவைத் திரை பல மோதி -இத்யாதி-இக் கடலை கண்ட வாறே பனிக் கடல் காட்டுத் தீயோடு ஒத்தது –வாழ வல்ல–செருக்கரான ராஜாக்கள் பழைய படை வீடை விட்டு –தாங்களே காடு சீய்த்து சமைத்த – படை வீட்டிலே இறே ஆதாரத்தோடு இருப்பது –(ஸ்ரீ ரங்கம் -ஷீராப்திகளை விட்டு ஆசையுடன் கண் வளரும் திவ்ய தேசம் போல் )சாதன தசை போலே அன்று இறே போக தசை-பனிக் கடலையும்   விரும்புகைக்கு அடி -இவரைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு-யோக நிந்த்ரை சிந்தை செய்க்கைக்கு இறே –(ஸாத்யம் கை புகுந்த பின்பும் விடாமல் இருப்பதுக்கு காரணம் –இளம் கோயில் கை விடேல் என்ற பிரார்த்தனையாலும்-க்ருத்தஞ்ஞதா கந்தத்தாலும் )-மனக் கடலில் வாழ வல்ல –வாழ வல்ல வாசு தேவா –-அக் கடல் எங்கும் வாழ்ச்சி இறே-கீழில் பாட்டில் -வாழச் செய்தாய் -என்று –ஸ்ரீ ஆழ்வாரை வாழ்வித்து-அவ் வாழ்வு கண்டு தான் வாழுகிற  படி-மாய மணாளா நம்பீ –இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே –குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது(அந்தாமத்து அன்பு போல்-மாய-குணங்களும் –-மணாளா-திரு மேனியில் செவ்வியும்-நம்பீ -பூர்த்தி பெற்றது)

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-—மிக்க சினத்தை உடையனாய் -பெரு மிடுக்கனாய்  -வாநராதிபனுமாய் -இருந்த வாலியுடைய கர்வத்தை யழித்த- வில்லை யுடை யவன் என்னுடைய ஹிருதயத்தே யுளன் –வானவர் கோன் மதம் அழித்த வில்லாளன் அன்றோ இவன் –சரணாகத வத்சலன் -தம் பலத்தை தீயோரை அழித்து ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பயன் படுத்த வாலி தனது வலிமையை சரணாகதனான ஸூக்ரீவனை சிஷிக்க பயன் படுத்திய வில்லாளன்-அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்-ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்-பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை-லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்-எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்
– என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்புகின்றதையும் சொல்லி –-திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம்–இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் -அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் –ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் – என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி என் நெஞ்சில் நின்று அருளினான் –தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –

இங்கு இருக்கும் இடத்தில் தான் ஒருவனுமேயோ -என்னில் –
அரவத்தமளி யினொடும் -அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10 -என்கிறபடியே
நாய்ச்சிமாரோடும் சர்வ பரிகரத்தோடும் கூடி இருக்கிற இவனை இந் நம்பியார்
திருவாராதனம் பண்ணும்படி –

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 -அடியார்கள் குழாங்களுடனே வந்து புகுந்து-தான் இவர் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற படிக்கு ஸ்மாகரமாக அலை கேட்கும் படி கண் வளர்ந்து அருளுகிற உபகாரத்துக்குத் தோற்று தம் சத்தைக்கு போற்றுகை அன்றிக்கே –ரஷையின் பொருட்டு –காவலுக்கு உறுப்பாகப் போற்றுகிறார்-காத்தல் ரக்ஷை-உபய விபூதி உடன் இங்கும் அங்கும்-அரவிந்த பாவை –
அகம்படி வந்து புகுந்து -சுடர் ஆழி தானும் என்கையாலே நின்னோடும்
-இத் திருமொழியால்
திருப் பல்லாண்டில் அர்த்தத்தை நிகமிக்கிறார் –சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற அர்த்தம் –உறகல் உறகலிலே நிகமித்தார்-அடியோமோடும் நின்னோடும் -என்கிற பாட்டின் அர்த்தத்தை –அரவத் தமளியிலே -நிகமித்தார்-

ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய -என்கிறபடியே –
சத்வோத்தர காலத்திலே பிறந்து –
ஆத்மனோ ஹிதம் -என்கிற நன் ஜ்ஞானத் துறை (திருவிருத்தம்)படிந்தாடி –
அத் துறையிலே ஒரு குடம் திருமஞ்சனத்தை எடுத்து –
குரு பரம்பர அனுசந்தானத்தாலே கோயிலிலே வந்து-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான –
அனன்யார்ஹ சேஷத்வ அனுசந்தனத்தாலே தண்டனிட்டு

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
அநந்ய  சரணத்வ அனுசந்தானாம் ஆகிற திருவிளக்கை எழத் தூண்டி –
அநந்ய போகத்வ அனுசந்தானத்தாலே -பிரயோஜநாந்தரம் ஆகிற துராலை விரட்டி –
சம்பந்த ஜ்ஞான அனுசந்தானத்தாலே திருவடி விளக்கி –

அன்பினால் ஜ்ஞான நீர் கொண்டாட்டுவன் அடியனேனே -திருக் குறும் தாண்டகம் -15-என்கிறபடியே திருமஞ்சனம் செய்து –
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே -திருவாய்மொழி -4-3-2-என்கிறபடியே
வாசிக அனுசந்தானத்தாலே திருப் பரியட்டம் சாத்தி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி 4-3-2- என்கிறபடியே மானஸ அனுசந்தானத்தாலே சாத்துப்படி சாத்தி –

தேசமான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே -திருவாய்மொழி -4-3-2- என்கிறபடியே புரையற்ற அஞ்சலியாலே
திரு வாபரணம் சாத்தி –

நாடாத மலர் -திருவாய்மொழி -1-4-9- என்றும் –
விண்டு வாடா மலர் -திருவாய்மொழி -9-10-3- என்றும் –
இனமலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும்
கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6- என்றும் சொல்லுகிற ஆனுகூல்யத்தாலே திருமாலை சாத்தி –

(அடிக்கடி எட்டு மலர்கள் -அஹிம்சா ப்ரதமம் இத்யாதி -என்பக்கர் பூவும் கொணர்ந்தேன் -அஷ்ட வித கல்யாண குணங்கள் ஸூசிதம்)

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்க துலகே -திருவாய்மொழி -5-2-9- என்கிற
அனுசந்தானத்தாலே தூபம் கண்டருளப் பண்ணி
மாடு விடாது என் மனன் -பாடும் என் நா -ஆடும் என் அங்கம் -திருவாய்மொழி -1-6-3-
என்கிறபடியே பக்தி ப்ரேரிதமான ந்ருத்த கீத வாத்யம் கண்டருளப் பண்ணி

கர்த்ருத்வ நிவ்ருத்த பூர்வகமான அனுசந்தானத்தாலே –
அஹம் அன்னம் -என்கிறபடியே அவனுக்கு போக்யமாக்கி
அஹம் அந்நாத -என்கிறபடியே தானும் புஜித்து
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே யிருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்கிறபடியே
இப்படி உணர்த்தின ஆசார்யன் விஷயத்திலே க்ருதஜ்ஞதா  அனுசந்தானத்தோடே தலைக் கட்டுகை –

இருபத்து நாலுபேரில் ஐஞ்சு பேர் க்ராமணிகள்(கண் காது மூக்கு வாய் த்வக் -ஞான இந்திரியங்கள்)
இவ் வைவர் கூடே கூடாதார் ஐஸ்வர்யம் இது
இவ் வைவரோடும் கூடினார் இமையாத கண்-முதல் திருவந்தாதி -32-(ஞானக் கண்) – பறி யுண்டு விடுவார்கள் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –நெஞ்சு என்ற பேராய்-பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;

ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே -சாந்துக்கு பூக்கட்டி இறே மணம் கொடுப்பது-இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.-இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.-சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ? ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே-ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –-நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்
நானே அவர் தனம் ஆன பின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே-ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே-பெரு விலையனான திருப் பரிவட்டம்–நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் –அந்தச் சொற்கள் தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.-இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்;
‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ
?தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே-ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உத்கர்ஷ ஹே துவாய் இருக்கிற படி-சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –என்னுடைய உறுப்புகளின் காரியங்களான – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும்-இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று

வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி –எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே–‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’-விச்சேதியாத படி-கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இறே-சர்வ ஸ்வாமி யானவனுடைய ஏக ரூபமான செவ்விப் பூ போலே இருந்துள்ள திருவடியின் கீழே-அகிஞ்சித்கரமான வன்றும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்-ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்னுமா போலே இதுக்காக வாயிற்று இவனை உண்டாக்கிற்று-வைக்க-சேர்க்க–ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய்-நிரதிசய போக்யமுமான – எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே- சர்வவித கைங்கர்யங்களையும் – எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான்சேஷ பூதனுக்கு கிஞ்சித் காரத்தாலே ஸ்வரூப லாபம் ஆனால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்து கொண்டு அத்தாலே இறே ஸ்வரூப சித்தி

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ – –ஈஷத் விகசிதம் –செவ்விப் பூவைக் கொண்டு வணங்கும் கோள்-ஆஸ்ரயிங்கோள்-

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7-அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ் த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )அன்றிக்கே செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்-அத்தை மலர் என்னும்படி என் –என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே –சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –அன்றிக்கே கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை –ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –-சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-
–வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷ சூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும் கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் -இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “
அவர்களை விட மாட்டேன்” என்னுமவன்.–பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் –பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –உலகம் அடைய என்றபடி.-ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

ஈடும் யெடுப்புமிலீசன் –மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இறே பலத்து அளவிலே மீளுவது நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன–‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை?
ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு?’ என்ன,-என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது-உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன-என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது–அதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.-தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே –என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே-ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –((ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண 
)நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்  –

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –

November 29, 2025

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம் யஹம்-முதலியாண்டானின் தனியன்

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம் ராமானுஜ ஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம் ரங்கேச மங்களகரம் தநுர் தாஸம் அஹம் பஜே-பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஸ்ரீ உடையவர்  ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் விஷயமாக
ஸ்ரீ முதலியாண்டானுக்கு பணித்த பத்து வார்த்தைகள் –

ஸ்ரீ முதலியாண்டான் உள்ளம் விம்மிப்  புறம் பொசிந்து ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ உடையவரும்
நாமே உமக்கு சொல்ல வேணும் என்று இருப்பதொரு அர்த்தத்தை நீர் தாமே கேட்டீரே என்று ப்ரீதராய்
சகல வேத சாஸ்திரங்களிலும் இதிஹாச புராணங்களிலும் உள்ளதைப் பொறுக்கிச் சேர்த்து
நம் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் சொல்லப்பட்ட குஹ்யமாய் இருப்பதொரு அர்த்தத்தை
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு இப் பத்து வார்த்தைகளால் அருளிச் செய்கிறார் –

இதில் முதல் வார்த்தை –
நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
பூணூல் சாத்திய நமக்கும் சாத்தாத தாசர் போன்றவர்களுக்கும் உள்ள வாசி –
நாம் (ஆச்சார்யர்கள்)நாடு பரிக்ரஹிகைக்காகச் செய்வுதோம் –
அவர்கள் நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருப்பர்கள் -திருவாய்மொழி -10-6-2–

( உலகைத் திருத்துவதற்காக நாம் உழல வேண்டும் -அவர்களுக்கு இக் கடமை இல்லையே -நாராயணனுக்குக்கே எப்பொழுதும் பற்றியே இருக்கும் பெருமை அவர்களுக்கு உண்டே)

(வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அற பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1- கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணினபடி கண்டாயே –உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ – –நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் -ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களை விட்ட அளவேயோ-ஒரு காரணமே இல்லாமல் பந்துவாக இருக்கும் சர்வேஸ்வரனை பற்றவும் பெற்றோம் –விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ- நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் – சப்ததோஸ்மி – திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ –

இரண்டாம் வார்த்தை –
திருப்பதிகளுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயிலுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் தெப்பக் கையரைப் போலே இரண்டையும் விடோம்
அவர்கள் சாரஞ்ஞராய்க் கொண்டு விட்டத்தில் இருப்பாரைப் போலே முதல் அடியிலே நிற்பர்கள்
பிரதான ஷேத்ரம் ஒன்றில் வாழ்ந்து நிர் பரராய் இல்லாமல் –
மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் -இராமானுச நூற்றந்தாதி -60-புக்கு நிற்போம் —

(வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி
தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும்
நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்
தத் சாத்திய பகவத் கிருபையையும் அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-)

(உணர்ந்த மெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்
மணந் தரும் இன்னிசை மன்னும் இடந் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக் கொழுந்தே.–60-ஆத்ம குண  ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாகஉபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி-வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –-அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு-நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி-)=எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார்-எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்குமவர்-பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம்அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் –அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ  என்கிற திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம-பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு-ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே-இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க-திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார்

மூன்றாம் வார்த்தை –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் கலக்கங்களும் தேற்றமுமாய்-திருவாய்மொழி -6-3-2- போருவுதோம்
அவர்கள் கலக்கம் இல்லா நற்றவர்களாய் —
கலக்கமிலா நல்தவ முனிவர் -திருவாய்மொழி -8-3-10-என்னும் பெருமை உடையவர்களாய்
பல்லாண்டு கூறி இருப்பர்கள் –
(திருப்பல்லாண்டு 3/11)பல்லாண்டு கூறுதுமே பல்லாண்டு கூறுவனே என்று மங்களாசாசன பரராய் இருப்பர்கள் – 

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-பரிச்சின்ன ஸூகம் -ப்ரத்யக்ஷ சித்தம் அன்றிக்கே -சாஸ்திர ஸித்தமாய்-அபரிச்சின்னமான ஸூகத்திலே இறே தமக்கு அந்வயம்-அதற்கு எதிர்த்தட்டான துக்கம்-அஞ்ஞானங்கள் -ஞானம் –இதர விஷயங்களைப் பெறாமையால் வரும் கலக்கமும், அவற்றைப் பெற்றால் வரும் தேற்றமும்.-கோபமும் அருளும்.-கோபம் -பிரசாதம் -உஷ்ணத்தை பண்ணும் அக்னியும் -சீதா ஸ்வ பாவமான நிழலும்

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-முக்தர் –முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூரிகள்-துளக்கம் -சலனம் -அதாவது ஞானக் குறைவு -அது இல்லாத நித்ய ஸூரிகள்

ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-சூரணை-250-அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை -251-அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை -252-அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய் ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –சூரணை -253-1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது4-பிராப்தி பலமும் இதுவே எனபது –5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் -சூரணை -254-)

நாலாம் வார்த்தை
அந்தரத்துக்கும் -(கரைக்கும் )-கடலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் சம்சாரம் ஆகிற கடலிலும் மழையிலும் பெரும் காற்றிலும்
அவற்றின் உடைய லாபச் சேதங்களாலும் சோக ஹர்ஷங்களைப் பண்ணா நிற்புதோம் –

ஆவாரார் துணை என்று அலைநீர் கடலுள் அழுந்தும் நாவாய் -திருவாய்மொழி -5-1-9- போலே –
அவர்கள் இரண்டிலும் தளர்தல் அதன் அருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி-45-என்றும்
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-என்கிறபடியே நிற்பர்கள்—

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–இத்தசையில் நமக்கு துணையாவார் யார் என்று-ஷூ பிதமான கடலுக்கு உள்ளே அழுந்துகிற நாவாய் போலே சம்சார ஆர்ணவத்திலே நான் நின்று துளங்க-நாவாய் என்று அதில் நிற்கிறவர்களை சொல்கிறது -மாஞ்சா க்ரோசந்தி இத்யாதி -கேவலம் நாவாயைச் சொன்ன போது கரையிலே நின்றார் இதுக்கு துணை யாவார் யார் என்கிறார்கள் ஆகக் கடவது -அப்போது தனக்கு ஓடுகிற தசையை உணர மாட்டாத அளவைச் சொல்லுகிறது -நாவாய் (-பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-)ஆவாரார் துணை -என்கை யாவது -வ்ருஷடீ பிரதீஷாத் சாலையை என்றால் போலே யாகக் கடவது –நடுங்குகை யாவது -அசைந்து வருகை -இந்த நடுக்கத்தில் அவன் செய்வது என் என்ன-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடும் -அவ்வடிவுக்கு சேர்ந்த திவ்ய ஆயுதங்களோடும் ஆழ்வார்களை சேர்த்துக் கொண்டால் போலே என்னையும் சேர்த்துக் கொண்டான் -என்று ஆளவந்தார் நிர்வாஹம்- எம்பெருமானார் –கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் என்று இவர் உகந்த படி வந்தான் என்று அருளிச் செய்வார் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமே யாகிலும் பூ வேளைக் காரரைப் போலே ஆழ்வார்களை ஒழிய காண மாட்டார்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம் பண்ணுவர்கள் -இவர்கள் இப்படி செய்யார்கள்-தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது – பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –சர்வேஸ்வரனைப் பற்றி இருக்குமவர்கள் இப்படி இருப்பது ஓன்று யுண்டாகில் அத்தை ஒன்றாக மதித்து இராமையாலே அது உண்டு என்னும் இடம் தோற்றி இரார்கள்  -இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் –ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம் இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று –உண்டு இல்லை என்று தளரார் – என்று சொல்லுகிறது-ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்றுமிகவும் தளர்த்திக்கு யுடலாமே –-அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது –பகவத் விஷயத்தில் பேறும் பிரிவும் அனர்த்தமாம் 0பகவத் விஷயத்தில் பிரிவும் உத்தேச்யமோ என்னில் –அழு நீர் துளும்ப  அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-என்னக் கடவது இறே

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -வாரி ஸ்ரவதி சோகஜம் –சுந்தர -33-4-சம்சாரியில் காட்டில் ஜ்ஞானவானுக்கு வாசி விச்லேஷத்தில் துவட்சி யன்றோ-இத்தை அன்றோ உண்ணும் சோறில் முற்கூறும் துவளில் மா மணியும் சொல்லுகிறது –-முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7- நான் பண்ணின ஸூஹ்ருதமோ-அவன் தன்னுடைய கிருபையோ – நிர்குண பரமாத்மா சௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -பீமசேனன் அனுமன் உடலில்  துவட்சி கண்டு சொன்னான் இறே – இத்யாதிகளால் பிரிவும் உத்தேச்யம்-இன்னம் இவ்வளவே அன்றிக்கே –அதனருகும் சாரார் –-இப்படிப் பட்ட ஜீவனத்தை இழந்தோம் என்னும் தளர்த்தி இல்லாத ஜ்ஞானவானுக்கும்-அவ் விழவாலே வருவதொரு அனுதாபம் யுண்டாய் இருக்கும் இறே-அங்கனே வருவதோர் அனுதாபமும் இன்றிக்கே இருப்பார்கள் இவர்கள் – அத்தை ஒரு வஸ்துவாக  புத்தி பண்ணும் அன்று இறே அத்தை இழந்ததாலே வருவதோர் அனுதாபத்தை யுடையராய் இருப்பது-ஸ்திரம் என்று நினைத்து பின்னை அஸ்திரம் என்று இருக்கும் அவர்கள் அன்றே –-ஸ்திரமானது அஸ்திரமாய்த்து என்னில் அன்றோ சோகம் உள்ளது-என் தான் இவடினுடைய லாப அலாபங்களில் நாட்டார்க்கு வரக் கடவதான சோக ஹர்ஷங்கள் இவர்களுக்கு இன்றிக்கே இருப்பான் என் என்னில் இவர்கள் பற்றி இருக்கும் விஷயத்துக்கு அவை இரண்டும் இல்லை

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-நீயே தருகிற துக்கத்தை நீயே மாற்றாயாகில்-தன்னாலே தனக்கு விரோதி வந்தது என்றும்-தானே சாதன -அனுஷ்டானத்தாலே அது போக்கிக் கொள்வான் என்றும்-சாஸ்திரங்கள் சொல்லிக் கிடக்கச் செய்தே-இவர் அவனே துயர் தந்தான் என்பான் என் என்னில் பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையாலே சொல்லுகிறார் –தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் –நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் –நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பலபிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது-ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே -தரு துயரம் -என்னலாம் -இறே -தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே -என்றும் –நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் –இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே –துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது –-பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே-ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-

ஐந்தாம் வார்த்தை –
அணுவுக்கும் மஹா மேருவுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் சம்பந்தமும் -குடி கோத்ரமும் ஸூத்ரமுமாகப் பண்ணுவுதோம் –
அவர்கள் சம்பந்த ஜ்ஞான அனுஷ்டானமே குடி கோத்ர ஸூத்ரம் என்று இருப்பர்கள்
நாம் பண்டைக் குலம் ப்ராஹ்மாண்யம் பற்றி நின்று குடி கோத்ரம் ஸூத்ரம் என்றும் —
அவர்கள் தொண்டக் குலம் -ஜீவ பர சம்பந்த ஜ்ஞானம் ஒன்றே என்று இருப்பர்கள்—

(விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்
பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-)

ஆறாம் வார்த்தை –
கரும்புக்கும் (கல்)கண்டுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில் –
நாம் வேதம் ஆகிற கரும்பைக் கடித்து -(மறையாய நால் வேதம் -சக்கை கலந்த கரும்பு )
பல்லு முறிவுதோம் –
அவர்கள் சாரத் த்வயம் ஆகிற கண்டைக் கடித்து இன்புருவர்கள் —

(அறக் கற்கை அரிது என்று இறே-வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்-முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-சூரணை-16-)

ஏழாம் வார்த்தை
மண்ணுக்கும் விண்ணுக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில்
நாம் -மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா -திருவாய்மொழி -7-1-6- என்றும்
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ-திருவாய்மொழி -6-9-9- என்றும் –
திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன் -பெரிய திருமொழி -7-7-9- என்றும் –
பயப்பட்டு கலங்கா நிற்புதோம்

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-தம் நிலமான சம்சாரத்திலே–சம்சாரிகளுக்கும் அவ்வருகாய் இருக்கிற என்னைப் பெற்றால் இந்திரியங்கள் அளவுடையாரையும் அகப்படுத்த வல்லவை -அவை அகப்படுத்த வேண்டாதே மேல் விழுமவன் நான் -ஆனால் எல்லாம் படுத்தவோ-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-ரஷகனான உன்னில் காட்டிலும் பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே ஒருவர் இருவர் இன்றிக்கே சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்குகிறன  இல்லை –என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று இவை தனித் தனியே அலைத்து நெருக்க அவற்றுக்கு அஞ்சி வந்து சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?

தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-நெஞ்சு கலங்கும் படி-பஞ்ச இந்திரியங்களும் விஷயங்களில் மூட்டி நலியும் படியான -ஐவர் -என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது -நலிவின் மிகுதியால்-பகவத் விஷயத்தை இழப்பிக்க வேண்டுவதுண்டாய்-தன் பக்கல் அனுபாவ்யம் ஒன்றும் இன்றிக்கே இருக்கும் ஷூத்ர ஸூகத்தை அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து சப்தாதிகள் நடையாடுகிற தேசத்திலே இருக்கும் படி பாபத்தை பண்ணின என்னை -வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் -என்றவர் இறே இங்கனம் சொல்லுகிறார்-பைதல் கைசு -நோய் முக்கைசு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப் தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன் புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –நான் அவரை பொறுக்க மாட்டேன்-நீரே போக்கும் விரகு பார்க்கலாகாதோ
கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் 

அவர்கள் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -திருவாய்மொழி -8-10-4- என்றும் –
வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே எய்தில் என் -திருவாய்மொழி -8-1-9 -என்றும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் -11 -என்றும்
செய்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும்
சொல்லுகிறபடியே நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலே கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பர்கள்–

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4–பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை -தண்ணிதானது என்-மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் –சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு-எனினும் உடையவன் வைத்த இடத்தில் கிடக்கும் அத்தனை அன்றோ என்று ஓர் அர்த்த தத்வம் உண்டு-இந்த உண்மை இப்படி இருந்தாலும் —இந்த சம்சாரம் உனக்கு புறம்பு என்கிற ஆகாரத்தால்-தன்மையால் அன்றிக்கே-நான் உனக்கு அத்யந்த சேஷமாய் இருப்பவன் என்கிற தெளிவு பிறக்க பிறக்க-சேஷத்வ ஞானம் உண்டான பின்பு–சேஷமாய் இருக்கும் பொருள்–சேஷி செய்தபடி கண்டு
அவன் எல்லைக்குள் கிடக்கும் இத்தனை அன்றோ–நம்மை நிர்பந்திக்கக் கடவதோ-
என்பதே அன்றோ தேவர்க்கு நினைவு-உனக்கு இது நினைவு ஆனாலும் இந்த சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன்-அடிமை என்கிற எண்ணத்துக்கு விரோதி ஆகையாலே–சேஷத்வ பிரதிபத்தியே குலையும் படி அன்றோ இங்கு உள்ளது –

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான பரமபதம் – இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில் திரு நகரியிலே பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது – சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை-அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-ஆகையாலே திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்-திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள் என்கிற இத்தனையும் இவ் விடத்தில் அபிப்ரேதம் –அதுக்கடி-தாயுரை செய்ததனை–(3-7-11) -என்று திரு மொழி முழுவதம் தாயார் வார்த்தை என்று நியமிக்கையாலே –

எட்டாம் வார்த்தை –
இரவுக்கும் பகலுக்கும் உள்ள தன்னேற்றம் -எங்கனே என்னில்
நாம் வேதம் ஆகிற அந்த காரத்திலே தடுமாறா நிற்புதோம் –
அவர்கள் பேர் ஆயிரமும் ஓதின -பெரிய திருமொழி -1-5-10-விளக்கு ஒளியாலே
மாதவன் தன் துணையா நடந்து -மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய
கீதையின் செம்மைப் பொருள் -இராமானுச நூற்றந்தாதி -68–வழியே நடப்பர்கள் —

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாருங்கோள்-திரு நாமம் சொல்லுங்கோள்-இல்லையே வேதம் சொல்லுங்கோள் சுருதி–இங்கு திரு மொழி -வேதம் தமிழ் செய்த மாறன் -அங்கம் அன்றோ

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்

பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்–சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம்   த்வாம் பிரபன்னம் –கீதை -7-2 – -என்கிற-அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -ஸூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –-பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய    கல்யாண குணங்களிலே இவ்வருகு ஒன்றில் கால் தாழாதே சென்று என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .

சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்

ஒன்பதாம் வார்த்தை –
ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே -திரு நெடும் தாண்டகம் -4- என்று
அந்தி தோறும் மந்திரத்தை சொல்லா நிற்புதோம்(இங்கு மந்திரத்தால் என்றும் திருமந்த்ரத்தையே ஆழ்வார் அருளிச் செய்தால் காயத்ரி மந்த்ரத்தைத் சொல்லி நிற்பதற்குப் பிரமாணம்)
அவர்கள் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் எங்கன் -முதல் திருவந்தாதி -33-என்று
(காயத்ரி ஜெபத்தில் ஈடுபடாமல் )மந்திர ரத்னம் த்வயத்தைச் சிந்திப்பர்கள் —

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-கீழ் உக்தமான இவ் வஸ்து வேத சிரஸ்சிலே குஹ்யமாய் இருக்கும் -என்கிறார் –ப்ராஹ்மனர்க்கு தனம் வேதம் இறே-பிரமாண முகத்தாலே இறே -பிரமேய பூதனான ஈஸ்வரனை தனம் என்று அறிவது –மந்த்ரம் -என்று–பிரதிபாத்யமும் அங்கேயாய்-பிரதிபாதகமும் அங்கேயாய்
இருக்கிறபடி ஈஸ்வரனுக்கு திரு நாமமாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமாவில் சொல்லிற்றே-1-ஜகத் காரண பூதனை –-2-சர்வாந்தராமியாய் –-3-துர் ஜ்ஜேயனாய் –-4-தத் கத தோஷை ரசம் அஸ்பர்ஷ்டனாய் இருக்கிறவனை அனுபவிப்புதியாகில்-அவ் விஷயத்தை அனுபவிக்கும் இடத்தில் -வேதாந்த முகத்தாலே யாதல் –இதிஹாச புராணத்தாலே யாதல் -அனுபவிக்கப் பாராதே நான் இழிந்த துறையில் அனுபவிக்கப் பார் –திரு மந்த்ரத்திலே அனுபவிக்கப் பார் –திரு மந்தரத்தால் அனுபவிக்குமா போலே ஸூகரமாய் இராது இறே – சர்வம் அஷ்டாஷராந்தஸ்தம் –என்கிறபடியே –சர்வார்தங்களையும் திரளச் சொல்லும் மந்த்ரம் இறே –மறவாது வாழ்தியேல் –விஸ்மரியாதே அனுபவிப்புதியேல்-பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேது விஷயாந்தர ஸ்பர்சம் ஆகையாலே-விஷயாந்தரம் கலசாதபடி அனுபவி -என்கிறாரோ -என்னில் –அது இவர்க்குச் சேராது –சரம தசையில் சாஷாத் கரித்து அனுபவிக்கிறவர் ஆகையாலே-இனி இவர்க்கு விஸ்ம்ர்தி ஹேது என் என்னில் –
தாபத் த்ரய ஆஸ்ரயமான தேக சம்பந்ததோடே இருக்கையாலே தேகத்தைப் பாரார் –
பூர்வ வ்ருத்தத்தைப் பாரார் – விஷய வைலஷண்யத்தைப் பாரார் – தந் நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக ஈஸ்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் உண்டு –அது பகவத் அனுபவத்துக்கு விஸ்ம்ர்தி ஹேதுவாகக் கடவது-ஆகையாலே பூர்வார்தத்தில் இழியாதே அனுபவிக்கப் பார்–இவர் தாம் த்வய நிஷ்டர் அன்றோ-இங்கனே சொல்லுவான் என் என்னில்-அடியிலே ஒருக்கால் ஈஸ்வரன் கையில் நம் கார்யத்தை சமர்ப்பித்து விட்டோம் ஆகில்-இனி ஸ்வ உஜ்ஜீவனதுக்கு சிந்திக்கை யாவது பிறர் கார்யத்தில் இழிகை இறே –பிறர் கார்யம் -ஈஸ்வரன் கார்யம்
ஸ்வ ரஷணத்தோடு ஜகத் வியாபாரத்தோடு வாசி இல்லை இறே பிராப்தி இல்லாமைக்கு-வாழ்தியேல் –அவனுடைய பரத்வத்திலும் சாதனத்திலும் இழியாதே – போக்யதையில் இழிந்து அனுபவிப்புதி யாகில் –-வாழ்ச்சி உன்னதே இறே-நானும் உனக்கு சஹகாரியாம் இத்தனை இறே –வாழ்தியேல் -என்று தமக்கு கரணமான மனசை சேதன சமாதியாலே கர்த்தாவாகப் பேசுகிறார் இறே –மன பிரதானம் தோற்ற –யாவதாயுஷம் பகவத் அனுபவத்துக்கு பரிகாரம் இதுவாகையாலே -தத் சாபேஷனாய்  இறே முமுஷூ இருப்பது –என்றும் வாழலாம் –நித்ய ஸூரிகள் நடுவே இருந்து -யாவதாத்மபாவி வாழலாம் –எங்கும் ஒக்க அனுபவம் இறே இவனுக்கு உள்ளது வைஷ்ணவன் ஆகிறான் ராஜ குமாரன் இறே- மட நெஞ்சமே-எனக்கு பவ்யமான நெஞ்சே-விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி வேளையோடு
உஜ்ஜீவன வேளையோடு போக வேளையோடு வாசி அற என் பின்னே ஒழுகும் படி எனக்கு விதேகமாகப் பெற்றேனே என்று திரு உள்ளத்தைக் கொண்டாடுகிறார் – நெஞ்சமே நல்லை நல்லை -என்னுமா போலே –

நகர மருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி யுரு வெண்ணும்
அந்தியா லாம் பயன் அங்கு என்
-33–சத்தையையும் வெளிச் சிறப்பையும் பண்ணிக் கொடுக்கக் கடவனவனுடைய திரு நாமத்தையே புத்தியாலே அனுசந்தியாதே-அவன் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வா பாவிக சம்பந்தத்தை அனுசந்தித்து அவனை உகப்பியாதே இடக்கை பத்துருக் கொண்டு வாயாலே சொல்லுகிற இத்தால்
அவ்விடத்தில் பிரயோஜனமாய்த் தலைக் கட்டுவது ஏதோ-நெஞ்சு விஷயாதிகளைப் பற்றிக் கிடக்க வாயாலே சொல்லுவது கையாலே எண்ணுவதாகிற இவ்விருத்திகளால் என்ன கார்யம் உண்டு-எம்பெருமானை அகலுகையே பலித்ததாய் விடுமத்தனை-சந்த்யையாலே
எல்லா அனுஷ்டானங்களையும் நினைக்கிறது  –

பத்தாம் வார்த்தை –
பதி வ்ரதைக்கும் பர நாரிக்கும்(ஆபாச ப்ரதீதி -சந்தேகப்பட இடமுண்டு) உள்ள தன்னேற்றம் எங்கனே என்னில் –
நாம் ஆக்நேயாதி களுக்கு சேஷமாய் இருப்புதோம் -(வைதிக கர்மங்களைப்
பற்றி இருப்போம்)
அவர்கள் அவனுக்கே சேஷம் என்று -அவனை ஒழிந்தவர்களுக்கு சேஷம் அன்று என்று
அறுதி இட்டு இருப்பர்கள் –
இது இருவருக்கும் உள்ள தன்னேற்றம்

இந்தத் தன்னேற்றம் தான்
1-பெருமாள் பக்கலிலும் (-ரிஷிகள் விட குகப் பெருமாள் வானர முதலிகள் விபீஷண ஆழ்வான் போல்வார் இடமும்)
2-நம்பெருமாள் பக்கலிலும் -(லோக சாரங்கர் விட திருப் பாண் பெருமாள் இடமும்)
3-அப்பன் பக்கலிலும் -(தொண்டை மான் சக்ரவர்த்தி விட்டு குறும்பு அறுத்த நம்பி இடமும்)
4-பெரிய நம்பி பக்கலிலும் -(மாறனேர் நம்பிக்கு ப்ரஹ்ம ரதம் ஏற்றி அருளினது மூலம்) காணலாம்

இதின் ஏற்றம் தான் நமக்கும் உமக்கும் பெரியோர்களுக்கும் நித்ய அநுசந்தானம்
என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார்

ஸ்ரீ முதலியாண்டானும் -அடியேன் இத்தனை காலமும் அபசாரம் பண்ணிப் போந்தேன்
இனிச் செய்ய அடுப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய –

சரணாகதனான முமுஷுவுக்கு இப் பத்து வார்த்தையும் நெஞ்சிலே பட்ட வன்று
திருவடிகள் ஸித்திக்கும் என்று ஸ்ரீ உடையவர் ஸ்ரீ முதலியாண்டானுக்கு அருளிச் செய்தார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலி யாண்டான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த முமுஷு க்ருத்யம் -ஸ்ரீ வார்த்தா மாலையில் –

November 28, 2025

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த நாலு வார்த்தைகள் –
1-அஞ்ஞான சமயத்திலும் –
2-ஜ்ஞான சமயத்திலும் –
3-ஜ்ஞானம் பக்வமான சமயத்திலும் –
4-ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்திலும் –

1-மாதா பிதாக்களோடு -2-ரூப நாமங்களோடு -3-போஜநாதிகளோடு -4-பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு -5-விதி நிஷேதங்களோடு -6-தேச வாசங்களோடு -7-பந்து வர்க்கத்தோடு -8-ஐஸ்வர்யாதிகளோடு -9 –பிரார்த்தனைகளோடு -வாசியற பேதித்து இருக்கும் -(இந்த ஓன்பதையும் மேல் உள்ள நான்கு தசைகளிலும் வைத்து ப்ரமாணங்களைக் காட்டி அருளுகிறார்)

முதலடியான அஞ்ஞான சமயத்தில்
விவேகம் சஞ்சரியாமையாலும்
சரீரமேவ மாதா பிதரௌ ஜநயத -(ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-18–மாதா பிதாக்கள் சரீரத்தையே உண்டாக்குகிறார்கள் -ஆச்சார்யனைப் போலே ஆத்மாவுக்கு ஒரு புதுப்பிறவியை உண்டாக்குவதில்லை)என்கிறபடியே கேவல சரீரத்தை பெற்றவர்களையே
மாதா பிதாக்களாக அபிமானித்து – அவர்கள் இட்ட பேரும் -அவர்கள் நியமித்த
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -அவர்களை அநுவர்த்தித்து அத்தாலே வந்தேறியான ரூப
நாமங்களும் – அவர்கள் விரும்பின பந்து வர்க்கங்களும் –
அவர்கள் வம்ஸ அபிமாநமும் ஐஸ்வர்யமும் –
அவர்கள் கற்பித்த சம்சார வர்த்தகமுமாய்   இருப்பன சில ப்ரார்தனைகளுமாய்
சம்சாரத்தில் என்னை விஞ்சினார் இல்லை என்று தன்னை சமாப்யதிக தரித்ரனாக(ஓத்தாரும் மிக்காரும் இல்லாதவனாக) அபிமாநித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் -1-

ஜ்ஞானம் பிறந்த சமயத்தில் –
ஐஞ்சு சேர் ஆக்கையான கேவல சரீரம் அன்று -பெரிய திருமொழி -9-7-8-
ப்ராக்ருத ஏக பரனாய் -பஞ்ச விம்சகனாய்(25) -ஸ்வ ஸ்மை ஸ்வயம் ப்ரகாசனாய் –
ஏக ரூபனாய் -ஜ்ஞாநாநந்த ஏக ஸ்வரூபனாய் -அச்சேத்யனாய் -அதாஹ்யனாய் –
அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -நித்யனாய் -ஜனன மரணாதிகள் இன்றிக்கே
இருப்பான் ஒரு ஆத்மா உண்டு -வேத சாஸ்த்ரங்கள் உண்டு -புண்ய பாபங்கள் உண்டு –
வர்ண ஆஸ்ரமங்கள் உண்டு –கீழ் நின்ற நிலைகள் பாப விகாரத்தாலே பிரமித்த இத்தனை -என்று உணர்ந்து
நெகிழ்ந்து ஸ ஹி வித்யாதஸ் தம் ஜநயிதி (ஆபஸ்தம்ப தர்ம-1-1-1-16–ஆச்சார்யனே யன்றோ சிஷ்யனை ப்ரஹ்ம வித்யையின் மூலம் புதிய ஞானப் பிறவியை எடுக்க வைக்கிறான் –)என்கிறபடியே – வேத சாஸ்த்ரத்தை மாதாவாகவும் -சாஸ்திர பிரதானம் பண்ணினவனையே பிதாவாகவும் அபிமானித்து -அந்த சாஸ்திரம் விதித்த படியே போஜநாதிகளும் – ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் -வேத சாஸ்திரம் போமவர்களையும் பந்துக்களாகவும் -அந்த சாஸ்திர அபிமானத்தால் வந்தேறின ரூப நாமங்களும் – சாஸ்திர அப்யாசம் பண்ணலான தேசமாய் -சாஸ்த்ரத்தை ஐஸ்வர்யமாகவும்
ப்ரார்தனைகளாகவும் அபிமானித்து -ஆத்ம அபிமானங்களில்(அஞ்ஞான தசையில் தேஹாத்ம பரமம் -ஞானம் பிறந்து பக்வமாகாத போது ஸ்வ ஸ்வா தந்த்ர ப்ரமம்) என்னை விஞ்சினார் இல்லை-தன்னை சமாயதிக தரித்ரனாக அபிமானித்து மேனாணித்து இறுமாந்து இருக்கும் —2-

மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை
அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-மேகங்கள் சஞ்சரியா நின்றுள்ள ஆகாசம்-தேஜோ பதார்த்தம்-ஜல தத்வம் பூமி காற்று இவையாய்க் கொண்டு
பஞ்சீ க்ருதமாய் நின்ற –உபசயாத்மகமான சரீரத்தை இது (பரிணாமாய் இருக்குமே -பலவும் சேர்ந்தால் அநித்யமாகவே இருக்குமே ) நமக்கு ரஷகம் அன்று என்று புத்தி பண்ணி –பலவாய்க் கூடி ஒன்றானது தன்னடையே பிரிந்து போம் என்று பார்த்து உஜ்ஜீவிக்கப் பார்த்தாய் ஆகில் –

ஜ்ஞானம் பக்வமான சமயத்தில் –
சகல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஆத்மாவினுடைய ஸ்வா தந்த்ரம்
விநாசம் என்றும் -ஈஸ்வர ஸ்வா தந்த்ரம் இவனைக் கரை ஏற்றும் என்னும் இடமும் –
பதிம் விஸ்வஸ்ய (தைத் -உலகு அனைத்துக்கும் பதியான இருப்பவன்)-
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச ஸதா ஸ்மர-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -நீ உஜ்ஜீவிக்க வேணும் என்று எண்ணினாயாகில் -உன்னுடைய சத்யையில் உனக்கு விருப்பம் இருந்ததாகில் ஆத்மாவின் உடைமையாய் இருக்கும் தன்மையையும் எம்பெருமான் உடையவனாய் இருக்கும் தன்மையையும் -இவ்விரு தன்மைகளும் இயல்பானவையே தான் என்பதையும் எப்போதும் நினைப்பாயாக -) -இத்யாதி பிரமாணங்களாலும்
ஆலோட்ய சர்வ சாஸ்ராணி விசார்ய ச புந புந இதமேகம் ஸூ நிஷ்பந்தம் த்யேயா நாராயணஸ் ஸதா –(பார ஆனு -178-11-எல்லா சாஸ்திரங்களிலும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்த போதிலும் நாராயணன் ஒருவனே த்யானிக்கத்தக்கவன் என்பது அசைக்க முடியாத படி தேறும்) -என்று பிரமாணங்கள் சொல்லுகையாலும்
கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து
தத்வ த்ரய ஜ்ஞானத்தையும் -தத்வ த்வய வைராக்ய விஷயத்தையும் –
தத் ஏக விஷய பக்தியையும் உடையவனாய் –
தத்வ ஹிதங்களை அறியும் போது -கைப்பறி பறித்தும் (தன் ஷேமத்துக்காக தான் முயலுவதும்)-கிடந்த ஆனை கண்டு ஏறியும் (படுத்திருக்கும் யானை மேல் பாகனின் துணை இல்லாமல் தானே ஏறுவது போல் உலகமேத்தும் தென் ஆனை வடவானை மேல் ஆச்சார்யர் ஸஹாயமில்லாமல் பற்ற முயலுதல்)அல்லாமையாலே லோகத்திலே –
அர்த்த காமோபஹதன் அன்றியிலே வேத சாஸ்திர நிதான ஜ்ஞானனாய்
லோக பரிக்ரஹம  உடையனாய் இருந்துள்ள ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே சென்று
கண்ணும் கண்ண நீருமாய் -கீழ் தேகாத்ம அபிமாநியுமாயும் -கேவல ஆத்ம அபிமாநியுமாயும் தான் பட்ட அநர்த்தம் எல்லாம் நேராக விண்ணப்பம் செய்ய –
ஆசார்யனும் தன் நிரவதிக கிருபையாலே இவன் கண்ணீரைத் துடைத்து –

இரண்டு பங்குக்கு ஒரு கையோலை போலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கும்
ஆத்ம பாரதந்த்ர்யத்துக்கும் வாசகமாய் -இவ்வாத்மாவுக்கும் எம்பெருமானுக்கும் உண்டான
ஒழிக்க ஒழியாத சம்பந்தத்துக்கு –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் ஓன்று உண்டு என்று
பெரிய திருமந்த்ரத்தை ஆசார்யன் தன் இரக்கத்தாலே அருளிச் செய்து –
ஸ்வரூபத்தில் உணர்ச்சியோடு(நவவித சம்பந்தமும் சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபமும் யதாத்ம்யமாக அறிந்து) -ஸ்வ ரஷணத்தில் அசக்தியோடு -ஈஸ்வரனைப்
பேணிக் கொண்டு -வர்த்தி என்று அருளிச் செய்து அருளினால் -தான் கீழ் நின்ற நிலைகளை நெகிழ்ந்து –

எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே திருமந்தரம் –சூரணை -113-பார்யைக்கு மங்கள ஸூத்திர தாரணம் பர்த்தாவுக்கு அனந்யார்ஹை என்று காட்டுமா போலே –திரு மந்திர தாரணம் சேதனர்க்கு பகவத அனந்யர்ஹத்வ பிரகாசகம்  என்னும் இடம் தோற்ற –இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச் செய்கிறார் –அதாவது –பதினாறு இழையாய் இரண்டு சரடாய் இருக்கும் லௌகிகமான மங்கள ஸூத்ரம் போல் அன்றிக்கே –எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்ரம் போலே –எட்டு  திரு அஷரமாய்- மூன்று பதமாய் இருக்கிறது திரு மந்த்ரம் -என்கை –திரு மந்த்ரத்தை மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அதிலே த்வயமாகிற அச்சுத தாலியையும் முளைத் தாலியையும் வயிர மணி ஸ்தானத்தில் 32- எழுத்துத்தான சரம ஸ்லோகத்தையும் சேர்த்து ஆத்மாக்களுக்கு அநந்யார்ஹத்வ ப்ரகாசகமாகக் கட்டினான்)

பெற்றார் பெற்று ஒழிந்தார் -பெரியதிருமொழி -8-9-7- என்றும்
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ-பெரிய திருவந்தாதி -5-என்றும் –
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் –
பெரிய திருமொழி -1-9-1- என்று சொல்லுகிறபடியே

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-பித்ராதிகள் ராகாந்தராய் பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று – பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே –
பண்ணிப் போந்த வாசனையாலே அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –ஸகல வித பந்துவாய் -பழகியதை சொல்லி பிதா நாராயணா-த்வம் மாதா – சேலேய் கண்ணியரும் -மாதா தேவோ பவ –இவற்றைச் சொல்லி-பண்டைய நாளாலே-9-2- -எல்லா உறவும் -அடுத்து -9-3-சகல வித கைங்கர்ய பிராத்தனை போல்-எத்தால் யான் மறக்கேன் இனி- தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி யம் சோதியை எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –2-1-10- போல் இங்கு இவர்

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–பிரஜை யுண்டாக்குகைக்கு நோன்பு நோற்று வயிற்றிலே தரித்தால் ப்ரஜைக்குப் பாங்காக போஜன சய நாதிகளை நியமித்து-பிறந்தால் அ ஸூசி பிரஸ்ர வாதிகளைத் தொட்டு அளைந்து வளர்த்து இதினுடைய ஹிதங்களையே சிந்திக்கும் தாயாவாயும் நீயே-(புருஷோத்தம ப்ரவசம் -நம் சம்ப்ரதாயம் )ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது உத்பாதகன் பிதாவே இறே
ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே-ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே
ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே-(மாதா நாராயண பிதா நாராயண
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ-கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே-அன்னையாய் அத்தனாய் –
ஆச்சார்ய பரம்-உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி-அன்னை குடி நீர் அருந்தி –ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி )

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால்  நின் அடைந்தேன்

உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-நான் வேறு சிலரை பந்துக்கள் என்று
நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும்
உடையேன் அல்லேன் –புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி –(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )நிராலம்பநாய் விழுமவனுக்கு ஒரு தரையிலே விழ வேணுமே-
சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )இவன் நம்மை விட்டு
புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று உன் திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –என் குறை அறுத்து வைத்தேன்-
நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-
என்கிறார் –

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன்
உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1-தேவரே சர்வ வித பந்துவுமாய் இருக்க-சோபாதிக பந்துகளாய் –-இத் தலையில் பிரயோஜனம் உள்ள நாள் கொண்டு இவனுக்கு உதவ வேண்டும் என்று தங்களைக் கொண்டு அகல வேறு அபகாரத்தையே பண்ணுமவர்களையே பந்துக்கள் என்று நினைத்து அனர்த்தப் பட்டேன் -இவன் பக்கல் உபகாரம் கொள்ளலாம் என்று கொண்டு – இவனுக்கு உதவ வேண்டும் அன்று –அபகாரத்தை பண்ணித் தங்களைக் கொண்டு அகல நினைக்குமவர்களை பந்துக்கள் என்று நினைத்தால் அவர்கள் பந்துக் க்ருத்யம் பண்ணக் காணாமையாலே-க்லேசம் இறே சித்திப்பது-இவன் பந்துக்கள் என்று நினைத்து இருக்கும் அத்தனை இறே
அவர்கள் பக்கல் அது இல்லையே வேறு ஒரு வ்ருத்தாதிகளால் வேண்டாதே
அவர்கள் தாங்களே க்லேசத்துக்கு உடலாய் இறே இருப்பது –பட்டு ஒழிந்தேன் –பட்டேன் -என்றபடி யாகவுமாம்-அன்றிக்கே-நோய் பட்டு ஒழிந்தேன் –-அவர்களை விட்டேன் என்னவுமாம் –

திருமந்த்ரத்தை மாதாவாகவும்
ஆசார்யனையே பிதாவாகவும் அபிமானித்து
ஆசார்யன் திரு உள்ளமான ரூப நாமங்களும் -போஜநாதிகளும் ( பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள்மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்கிறபடியே அருளிச் செயல்களையே ஸாத்விக ஆகாரம்-உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறி தர நின்ற,இராமானுச னெனக் காரமுதே.-19- )-
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் -விதி நிஷேதங்களும் –
ஆசார்யன் விரும்பி வர்த்திக்கும் தேசமே த்வய தேசமாகவும் –
ஆசார்யன் திரு உள்ளத்தாலே சஹ வாஸ யோக்யராக கற்ப்பித்த
பரம சத்வ நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களே பந்துக்களாகவும்
அவர்கள் தங்களுக்கு ஐஸ்வர்யமாக அபிமாநித்து இருக்கும் ஆசார்ய கைங்கர்யமே
தனக்கு ஐஸ்வர்யமாகவும் -தத் கைங்கர்யத்தின் மேல் உண்டான பிரார்த்தனையே
தனக்கு தேக யாத்ரையாகவும் நினைத்து –

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -நின்னிலங்கு பாதமன்றி
மற்றோர் பற்றிலேன் -திருச்சந்த விருத்தம் -90- என்றும்
கற்றிலேன் கலைகள் –நல் துணையாகப் பற்றினேன் அடியேன் -பெரிய திருமொழி -1-1-8- என்றும்-
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புணைய மாட்டேன் —
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே -திருமாலை -26-என்றும் –
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து -திருவாய் மொழி -10-6-2- என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது -பெரியாழ்வார் திருமொழி -5-1-5-என்றும் சொல்லுகிறபடி தன் வேறுபாடு தோன்ற இந்நிலத்தில் பொருந்தாமையும்

பொருந்தும் நிலத்தில் புகப் பொறாமையும்  வடிவிலே தோன்றும்படி நிர்மலனாய் மோஷ பிரதனான எம்பெருமானைக் கிட்டி வாழும் அளவும் ஜ்ஞானப் பிரதனான ஆசார்யன் நிழலிலே ஒதுங்கி அவர் ப்ரீதிக்கு வர்த்தகனாய் இருந்த இடம் அறியாமல் (உப்புப்போலே உம்மைப்போலே இருக்க வேண்டுமே)இருக்கும் —3-

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-தம்முடைய
ஆகிஞ்சன்யத்தை அருளிச் செய்கிறார் –வேறு முதல் இன்றிக்கே அகதிகளான எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –இருட்டு மிக்கதனையும் விளக்கு ஒளி வீறு பெறுமாபோலே குறைவாளர்க்கு முகம் கொடுக்கையாலே விலங்கா நின்றுள்ள திருவடிகளை ஒழிய வேறு ஜீவன உபாயத்தை உடையேன் அல்லேன்-புனித –விஷயாந்தர ப்ராவண்யத்தால் அசுத்தராய் -தாம்தாம் பக்கல் சுத்தி ஹேது இன்றிக்கே இருக்கும்-குறைவாளரையும் ஸ்வ ஸ்பர்சத்தாலே சுத்தராக்க வல்ல சுத்தியை உடையவன் அல்லையோ-அதாவது –
உத்கர்ஷ்ட ஜன்மம் என்ன – வேத ஸ்பர்சம் என்ன-வேதார்த்த அனுஷ்டானம் என்ன –
இவற்றினுடைய ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹம் நின்று-விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து தருகை

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன்
அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரி தருவேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணையாக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம்
—8-ஓர் ஆச்சார்யனைப் பின் சென்று -அவன் உச்சரிக்க அநு உச்சாரணம் பண்ணி போராமையாலே சாஸ்த்ரீய ஜ்ஞானம் உண்டாயிற்று இல்லை-மனத்தை பர விஷயமாக்கி -விஷயங்களிலே ப்ரவணம் ஆகிற பாஹ்ய இந்திரியங்களை காதாசித்கதமாய் ஆகிலும் விஷயங்களில் நின்றும் மாற்றி -ப்ரத்யக் விஷயம் ஆக்கினால் நல் வழி போகுகைக்கு உறுப்பாம் இறே –
ஸ்தோத்ராதி இந்திரியங்கள் விஷயங்களிலே இழிந்து தான் நினைத்த வழியிலே கொடு போய் –மனசையும் அதுக்கு உறுப்பாக்கி போந்தேன்-விஷய ப்ரவணர் ஆனவர்கள் விஷய ப்ராவண்யம் போராது என்று ஔஷத சேவை பண்ணி இருப்பார்கள் இறே-அப்படியே விஷயங்களிலே மனசை வலிய மூட்டிப் போந்தேன்-சாஸ்த்ரீய ஜ்ஞானமும் இன்றிக்கே –
விஷய ப்ரவணனாய்ப் போருகையாலே -அறிவு கேடனாய் ஹித சிந்தை பண்ணப் பெற்றிலேன்-எனக்கு ஒரு நன்மை சம்பாதியாமையே அன்றிக்கே – பர ஹிம்சையைப் பண்ணும் விரகே சிந்தித்துப் போந்தேன் எல்லாரையும் ஹிம்சித்து நான் ஜீவிக்கும் விரகே பார்த்துப் போந்தேன் –ஒருவனுக்கு பகவத் சம்பந்தம் உண்டு இல்லை என்று தனக்கே அறியலாம் -என்று பலகாலும் அருளிச் செய்வர் ஸ்ரீ ஜீயர்-ஒருவன் நோவுபட கண்டால் -ஐயோ -என்று இரக்கம் பிறந்து இருக்கில் நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு என்று அறியலாம்-அத்தனையும் வேண்டும் -என்று இருந்தான் ஆகில் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்கலாம்-ஹேது அறிந்திலேன்–தவிர்ந்து கொடு நிற்கக் கண்டேன்-
உய்வதோர் பொருள் -என்றும்-ஆழியான் அருள் என்றும் –-சிக்கெனத் திருவருள்
 பெற்றேன் -என்றும் கீழ் சொன்னார் இறே-செல்லக் கடவ கதி உண்டு -ஸ்ரீ பரமபதம் -அங்கே புக்கு உஜ்ஜீவிக்கும்படியை அனுசந்தித்து-(திருவேங்கட யாத்திரை -அக்ரூரர் -அர்ச்சிராதி கதி மூன்றையும் பாரித்து இருக்க வேண்டுமே )அம்மியைக் கட்டிக் கொண்டு ஆற்றிலே இழிவாரைப் போலே அன்றிக்கே-பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தநாம்ருதம் -என்னுமத்தைப் பற்றினேன் –அக்கரை படுத்தி விடுமத்தைப் பற்றினேன்-
(நாரத்தைப் பற்றாமல் அயனத்தைப் பற்றி இருப்பதே நல் துணை)நாராயணா என்னும் நாமம்
அக்கரைப் படுத்தும் வஸ்துவுக்கு வாசகமான திரு நாமம் – நயாமி பரமாம் கதிம் –என்னக் கடவது இறே –

போது எல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே -26–ஏதும் இல்லேன் –அது தன்னாலே ஏதிலேன் – மநோ வாக் காயங்கள் ஒரு படி பட்டு இருப்பார் பெறும் பேற்றுக்கு
இவற்றில் ஒன்றாகிலும் வேண்டி இருக்க – அதுவும் எனக்கு இன்றிக்கே இருக்கையாலே-அரங்கற்கு-ஏதிலேன் —ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம்-என்கிற சௌஹார்தத்தையும் –ருஜூ -என்கிற படியே-ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்கள் மூன்றும் செவ்விதாய் இருக்க
ஆர்ஜவ குணத்தையும் கேட்டே போகாமே-அனுஷ்டான சேஷம் ஆக்குகைக்காக கோயிலிலே சந்நிஹிதரான தேவரீருக்கு –ஒன்றுமாகப் பெற்றிலேன் –ஒரு கரணத்தாலும் தேவரீரை ஸ்பர்சிக்கப் பெற்றிலேன் –என்னே –-அசந்நிஹிதராய் இழந்தேன் அல்லேன் – பிராப்தி இல்லையால் இழந்தேன் அல்லேன் செய்த அம்சத்திலே பிழை பிடிக்குமவராய் இழந்தேன் அல்லேன் –என் இழவுக்கு அடி பாபம் இறே –ஸ்ரீ கௌஸ்துபம் போலே உகப்பான வஸ்து கிடீர் இப்படி வ்யர்த்தமாய்ப் போய்த்தது – அரங்கத்து உறையும் இன் துணைவருக்கு கிடீர் நான் தூரஸ்தன் ஆய்த்து –கஷாய பாநம் பண்ணுமா போலே ஹித புத்தியாலே சேவிக்க வேண்டும் விஷயமாய்த் தான் இழந்தேனோ – பாலே மருந்து ஆனால் போலே தர்ச நீயரான தேவரீரே மோஷ ப்ரதராய் இருக்க வன்றோ இழந்தது –

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-அஹங்கார மமகார வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு –பெருமாள் திருமொழி -3-4-தொற்று அறப் பெற்றபடி கண்டாயே –
யானே என் தனதே -2-9-9-என்று யான்-எனது -என்னும் செருக்குகளுக்கு வசப் பட்டவர்களாய்-இருப்பவர்களோடு சம்பந்தம் அறப் பெற்றோம் –-ஒ ஒ உலகினது இயல்பே -திருவாசிரியம் -6-இவை என்ன உலகு இயற்கை -4-9-1–கொடு உலகம் காட்டேல் -4-9-7-என்னப் பண்ணின படி கண்டாயே -உங்களோடு எங்களிடை இல்லை -8-2-7- என்று கழிந்தவரே அன்றோ ––நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் —விட்டவர்கள் தம்மை வேறு ஒரு தன்மையாலே பற்றுகிறார் காணும் –ஆகாராந்தரம் -நார சப்தத்துக்குள் உண்டே -இதனாலே தானே உபதேசிக்கிறார் –
முக்தனுக்கு இவை எல்லாம் சர்வேஸ்வரன் உடைமைப் பொருள் -என்னும் தன்மையாலே உத்தேச்யம் ஆகின்ற அன்றோ இவைதாம்-தானே ஆக்கி உண்டு களித்தல் தவிர்ந்து-தந்தையோடு ஒன்றாக உண்டு களித்து ஜீவிப்பாரைப் போலே காணும் –
படுக்கைக்கு கீழே மிகப் பெரிய நிதி கிடக்க-புறங்கால் வீங்கி சாவாரைப் போலே அன்றோ-
நாராயணனாக -அந்தர்யாமியாக -இருக்கச் செய்தேயும் நண்ணாமல் இருந்த படி–
பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் -நெஞ்சு சப்ததோஸ்மி திமிர் கொண்டால் போல் நிற்குமே –பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து-வகாதது வகுத்தது என்று திமிர்த்து இருக்கிறாயோ-இதனை அனுபவியா நின்றாயோ ––

தோட்டம் இல்லவள்  ஆ தொழு  ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே  வளைப்பு வகுத்து கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்றாகி
கோட்டு மண் கொண்ட  கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே- 5-1- 5- –நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே இவற்றில் ஒன்றும் குறையாமல் திரள –என் நெஞ்சாலே வளைத்துக் கொண்டு இருந்தேன்-உன்னை ஒழிய புறம்பே
தாரக போஷக  போக்யங்களாய் இருப்பரோட்டை சஹவாசம் எனக்கு துஸ்ஸஹம்-சர்வ லோகங்களும் பிரளயத்தில் அகப்பட -ஊன்றி இடந்து எடுத்து– தானத்தே வைத்தானால் -என்கிறபடியே ஸ்வ ஸ்தானத்திலே வைத்தான் என்கை-இது தான் ஸ்வபாவம்  ஆனவன் என்கை –குவலயாபீடத்தை நிரஸ்ததாம்படி கொம்பை ஒசித்தவனே –இத்தால் பலித்தது –
சம்சாரிகள் பக்கல் நின்றும் எடுத்து – ஸ்வ ஸ்தானமான உன் திருவடிகளில் வைத்து –
அதுக்கு விரோதியான கர்மங்களையும் கழித்துத்  தர வேணும் -என்கிறார்-

ஜ்ஞான பலமான பகவத் ப்ராப்தி சமயத்தில் – தான் கீழ் நின்ற (மூன்று)நிலைகளையும் அடையநெகிழ்ந்து -ஆசார்யன் கட்டின ஸ்வரூப அநுபந்தியான மங்கள ஸூத்ரத்தில்
அர்த்த அனுசந்தானத்துடன் வர்த்தியா நிற்கச் செய்தேயும் –
பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் -விபரீத ஜ்ஞான ஜநநியான சரீர சம்பந்தத்தை ருசி வாசனைகளோடே விட்டு (மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)-ஆற்றிலே குளித்துக் கரை ஏறி புக்ககத்தில் உற்றார் அலங்கரிக்கப் போய்(மதிமுக மடந்தையர் இத்யாதி -சதம் மாலா ஹஸ்தா இத்யாதி) -வகுத்த தேசத்திலே முகம் பழகிய திரளிலே சென்று புகுந்து (ஆத்மாவுக்கு பழகின திரள் இதுவே -வந்தேறியான சரீரத்துக்கு பழகின திரள் கீழ் எல்லாமே)-தனக்கென்ன ஒரு ரூப நாமங்கள் ஆதல் –போஜன சயநாதிகள் ஆதல் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஆதல் -விதி நிஷேதங்கள்  ஆதல்-தேச வாஸம் ஆதல் -பந்துக்கள் ஆதல் -ஐஸ்வர்யம் ஆதல் -பிரார்த்தனைகள் ஆதல் –அன்றிக்கே –

அஹம் அன்னம் (நான் எம்பெருமானுக்கு போக்யப் பொருள்)என்னுதல் -சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி நிற்றல் –சதா பஸ்யந்தி -என்று வைத்த கண் வாங்காதே பார்த்து இருத்தல் – சாயாவா சத்வம் அநுகச்சேத் -(தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வஸ்தோ வா மாதரம் சாயாவா சத்வம் அநுகச்சேத் ததா ப்ரகாரம் யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -இளம் கன்றை யுடைய பசு தனது கன்றையும் கன்று தனது தாய் பசுவையும் நிழல் அசையும் பொருளைப் பின் தொடர்வது போலே பரம் பொருளைப் பின் தொடர்கிறான் முக்தாத்மா –)என்கிறபடியே சாயாவத் பர தந்த்ரனாய் வர்த்தித்து
செய்தல் எப்போதோ என்று த்வரை நடந்து செல்லுகை-

இவ் வர்த்தம் ஒரு ஆசார்யன் அங்கீகரித்த முமுஷுவுக்கு நாள் தோறும் ஆராய வேண்டுவது ஓன்று –எங்கனே என்னில் –
1-ஒருவன் ஒரு கன்னிகையை ஒரு மந்திர சம்பந்தத்தாலே கைப் பிடித்தால் –
பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து  பர்த்தாவினுடைய
அபிமானத்திலே ஒதுங்கினாப் போலேயும் -2-அனுபநீதனாவன் ஒரு மந்திர சம்பந்தத்தாலே
சிகை யஜ்ஜோபவீதங்களைத் தரித்தால் த்விஜன் என்று பேர் ஆகிறாப் போலேயும் -3-யஞ்ஞத்தில் ஒருவன் தீஷித்தால் பூர்வ அவஸ்தையின் நிலைகள் அடைய நெகிழ்ந்து
அவப்ருத ஸ்நானத்தளவும் யஜமான வேஷத்துக்கு தக்க அனுஷ்டானம் ஆகிறாப் போலேயும்-4-சந்நியாசி கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து ஆஸ்ரமத்துக்கு உசிதமான வர்த்தனத்தோடே வர்திக்கிறாப் போலேயும் –இந்த ஜீவன் முக்தனான முமுஷுவும் (ஜீவன் முக்தி நம் சம்பிரதாயத்தில் கிடையாது -வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ஸ்வாமிகள் பன்னி பன்னி ஸாதித்த அர்த்தம் –முமுஷு இங்கு இருக்கும் நாள்களில் முக்தனாகும் த்வரை யுடன் வாழ்வதையே இங்கு காட்டும் -) கீழ் நின்ற நிலைகளை அடைய நெகிழ்ந்து பகவத் கைங்கர்யம் ஒன்றிலுமே நிரதனாய் வர்திக்கிறது எப்போதோ என்று தன் நெஞ்சத்தை உருக்கி தன் வேறு பாடு தோன்ற வர்த்திக்கையே முமுஷு க்ருத்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ப்ரபன்னன் -முமுஷு வுடைய க்ருத்யங்கள்-

November 28, 2025

வார்த்தை -453-
முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு அறிய வேண்டிய அர்த்தம் நாலு உண்டு
இதில் அத்யவசாயமாய் இருப்பனவும் நாலு உண்டு -அவை எவை என்னில்
1-ப்ராப்யமும் -ப்ராப்ய அத்யவசாயமும் –
2-ப்ராபகமும்  -பிராபக அத்யவசாயமும் –
3-ஆசாரமும்  -ஆசார அத்யவசாயமும் –
4-போஜனமும்  -போஜன அத்யவசாயமும் –

இதில் ப்ராப்யம் ஆவது –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமாக –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்திலே போய் –
அங்கு உண்டான பரிபூரணமான பகவத் அநுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –

இதில் அத்யவசாயம் ஆவது –
கைங்கர்யத்தை ஒழிந்துள்ள தர்ம அர்த்தங்களிலும்
மோஷத்தில் கைவல்யம் முதலாய் உள்ள புருஷார்த்தங்களிலும்
அபோக்யதா புத்தி பூர்வகமாக இக் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –

இதில் ப்ராபகம் ஆவது –
சௌலப்யாதி கல்யாண குண விசிஷ்டனுமாய் -விக்ரஹ விசிஷ்டனுமாய்
இருந்துள்ள ஈஸ்வரன்(பிரபத்தி சரணாகதி என்பதே இந்த எண்ணம் தானே- விடுவித்து பற்றுவிக்குமவன் அவனே பிராப்பகம் உபாயம் -ஸுலப்யம் குணபூர்த்தி உள்ள அர்ச்சாவதாரத்திலே ஆழ்வார்கள் பலகாலும் சரணாகதி செய்து காட்டி உள்ளார்கள் -)

இதில் அத்யவசாயம் ஆவது –
பெரிய பிராட்டியார் புருஷகாரத்தாலே
அவன் தானே உபாயம் என்று உபாயாந்தரங்களான கர்ம ஞான பக்திகளிலே
கால் தாழாதே இவ் உபாயமே நிர பேஷ உபாயம் என்று இருக்கை

இதில் ஆசாரம் ஆவது –
உபாய ஸ்வீகாரம் பண்ணினவன் யாவதாயுஷம் மநோ வாக் காயங்களாலும்
ஸ்வரூப அநுகூலமாக வர்த்திக்கும் வர்த்தனம் -(சம்பிரதாயத்தை ஒட்டி வாழும் வாழ்க்கை முறையே ஆசாரம்)
அதாவது
பர வியூஹ விபவாதிகளில் காட்டில் அர்ச்சாவதாரத்தின் நீர்மையிலே
அதி ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே
அநுகூல வ்ருத்திகளைப் பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிர்ந்து வர்த்திக்கையும்

இதில் அத்யவசாயம் ஆவது –
கீழ் சொன்ன அநுகூல வ்ருத்திகளை பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிருகையும்
செய்யும் இடத்து
க்யாதி லாப பூஜைகளைப் பற்றவும் –
த்ருஷ்டப் பிரயோஜனர்தமாகவும் –
பகவத் ப்ராப்திக்கு சாதனமாகவும் -பிரதிபத்தி பண்ணிச் செய்யாதே –
இவ் வாசாரமே ஸ்வயம் பிரயோஜனம் என்று இருக்கை –

இதில் போஜனம் ஆவது
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு குஷி பூர்த்தியிலே அந்வயியாதே
ஷூநிவ்ருத்தி மாத்ரமே பிரயோஜனமாக ஜீவிக்கும் ஜீவனம் -(வயிற்றை நிறப்பதற்காக சாப்பிடாமல் பசியைப் போக்கவே உண்ண வேண்டும்)

இதில் அத்யவசாயம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஜீவிக்கும் ஜீவனம் என்ன
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
அமுதுபடி சாத்துப்படிகளுக்கு அர்ஹமான த்ரவ்யங்களிலே சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
இவற்றில் கால் தாழாதே
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு தேக யாத்ரை நடத்துகை ப்ரபன்ன க்ருத்யம் –

—————————

வார்த்தை -454-
1-ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
2-ஸ்வ ரஷணத்தில் அசக்தியும்
3-ப்ராப்யத்தில் த்வரையும்
4-ப்ராபகத்தில் அத்யவசாயமும்
5-விரோதியில் பயமும் –
6-உத்தேச்ய விஷயத்தில் கௌரவமும்
7-உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞ்ஞதையும்
8-உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியும் —

ஸ்வரூபத்தில் உணர்த்தியாவது –
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திருமொழி -8-9-3-என்று இருக்கை(கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றி -அந்வயமும் தள்ள வேண்டியவற்றையும் அருளிச் செய்வார்கள்)

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ
–8-9-3-அநந்யார்ஹத்வம் -திருமந்த்ரார்த்த ஞானம் அருளப் பெற்று அருளிச் செய்கிறார் இப்பதிகம் –-உயிரான பாசுரம்-கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  -பரமாத்மா அகாரம்-திருக் கண்ண புரத்தை தனக்கு
வாசஸ் ஸ்தானமாக உடையவனுக்கு –ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் இருப்புக்கு
அவ்வருகே ஓன்று போலே காணும் இது –—அடியேன் -சேஷ பூதன் -மகார அர்த்தம்
உடையானுக்கு -ஆய -சேஷத்வ வாசகம் லுப்த சதுர்த்தி–ஒருவர்க்கு உரியேனோ-அநந்யார்ஹ சேஷத்வம் குறிக்கும் உகார அர்த்தம் –-மோக்ஷ பிரதன் -ஸ்ரஷ்டா -இவன் ஒருவனே-பிரதிபந்தங்களைப் போக்கி இசைவித்து தனது தாளிணைக் கீழ் தனது பேறாக இருத்தும் ஸ்வாமி-இத்தால் தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் – பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு என்னும் இடம் சொல்லுகிறார் –

ஸ்வ ரஷணத்தில் அசக்தி யாவது –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -திருவாய்மொழி -5-8-3- என்று இருக்கை

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்
யாரே களை கண் –ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ-என்னை என் செய்கின்றாய்-நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும்,-“யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும் இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார்-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;-க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக் கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி -என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத் திருவுள்ளம்-என் நான் செய்கேன்–தாம் கை வாங்கின படி.-யாரே களைகண்-
பிறர் பக்கல் நின்றும் கை வாங்கினபடி.-என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்னும் இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன

ப்ராப்யத்தில் த்வரை யாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்று இருக்கை

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
–9-3-7-அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-மா கம் –பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என் மனம் ஏகம் எண்ணும் – என்னுடைய மனம் ஆனது-எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –இராப்பகல் இன்றியே இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது-
இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –-ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

ப்ராபகத்தில் அத்யவசாயம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -திருவாய்மொழி -5-8-8- என்று இருக்கை

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,
சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் ––சர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்மதான பின்பு கிருஷியும் உம்மதாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ

விரோதியில் பயமாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றார் போல் -பெரிய திருமொழி -11-8-3- என்று இருக்கை

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3—பாம்பு -விஷயாந்தரங்கள் )-அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை-இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –

உத்தேச்ய விஷயத்தில் கௌரவமாவது –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் –இங்கே திரிய உறுமோ பாவியேனுக்கு -திருவாய்மொழி -8-10-3- என்று இருக்கை

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3—ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-அவர்கள் ஆகிறார்
முன்னம் குறள் உருவாய் மூ அடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திருமொழி -9-4-2-என்று இருக்குமவர்கள் 
சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை யே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –ஆத்ம அனுபவத்தை குறித்து சொன்ன வார்த்தையை பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் -கீழ்ச் சொன்னவை போலே கழிக்க ஒண்ணாதே சரம அவதி இல்லாமையால் உறுமோ -என்கிறார் –பாவியேன் -பிரதம அவதிக்கும் சரம அவதிக்கும் வாசி சொல்ல வேண்டும் படி பாபத்தை பண்ணினேன்

உபகார விஷயத்தில் க்ருத்ஜ்ஞ்ஞதை யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7-
உனக்கு என் செய்கேன் –திருவாய்மொழி -2-7-8- -என்று இருக்கை

(அவன் பண்ணும் உபகாரங்கள் கிரமப்படி இருக்க வேண்டாமே -ஆகையால் மருவித் தொழும் மனமே தந்து அடுத்து என்னைத் தீ மனம் கெடுத்தான்)

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்-ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்-
பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை வடிவு அழகால் வஞ்சித்தால் போலே என்னை அநந்யார்ஹனாக்கிக் கொள்ள வல்லை காண் இச் சக்தியை உடையவனுக்கு முடியாதது உண்டோ –1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே-மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது-அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது-என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்–ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே-வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் –திருவாய்மொழி -10-10-3- என்று இருக்கை

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-விலக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –-என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –

ஸ்ரீயபதியான சர்வேஸ்வரனைப் பற்ற
ஜீவாத்மாக்களுக்கு அத்யந்த பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் ஸ்வரூபம் என்று
சதாசார்ய உபதேச முகத்தாலே சகல வேத சங்ரஹமான
ஸ்ரீ மத் அஷ்டாஷர மகா மந்த்ரத்திலே பிரதம மத்தியம பதங்களாலே தெளிய அறிந்து(பிரணவத்தால் சேஷத்வம் -நமஸ்ஸால் பாரதந்தர்யம் என்று கொள்ள வேண்டும்-பீஷ்மர் தர்மம் கேட்ட ஆறு கேள்விகளில் இறுதி கேள்விக்கு முதலில் பதிலல் சொல்லியது போல் இங்கும் சேஷத்வம் இறுதியில் இருப்பதால் பிரணவம் முதலில் உள்ளது)

ஸ்வ ரஷணத்தில் சக்தியும் பிராப்தியும் இல்லாமையாலே
மந்திர ரத்னம் என்கிற திரு நாமத்தை உடைத்தான த்வயத்தின் உத்தர வாக்யத்தாலே
பிரதிபாதிக்கப் பட்ட சித்த உபாய பூதனான ஸ்ரீயபதி திருவடிகளையே உபாயமாக
உடையனான அதிகாரிக்கு(பற்றுவது உபாயம் அல்லவே -அதிகாரி விசேஷணம் மட்டுமே தானேஸ்வ விசேஷணமான சக்ருத் பிரபத்திக்கு மேற்பட அபேஷிதமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே –

கீத உபநிஷத் ஆசார்யன்
த்யாஜ்ய தயா அகர்தவ்யமாக விதித்த அஷ்டாங்க யோக யுக்தமான கர்ம யோகமும்
தத் உபாயமான ஜ்ஞான யோகமும் –
தத் உபாயமான பக்தி யோகமும் –
எல்லாவற்றிலும் அங்கத் வேன அனுவர்திக்க கடவதான வர்ண ஆஸ்ரம யோக்யதா பாதக தர்மங்களும் த்யாஜ்யம்(வர்ணாஸ்ரம தர்மங்கள் நேராக த்யாஜ்யம் அல்லவே உபாய புத்தியால் மட்டுமே த்யாஜ்யம்)

மாமேகம் சரணம் வ்ரஜ என்று உபாதேய தயா கர்தவ்யமாக விதித்த ஷட் அங்க யோக
யுக்தமான ந்யாச வித்யையே அதிகாரமாய் இருக்கும் –

(இத்தால் ரஹஸ்ய திரயங்களும் விவரண பாவங்களாக இருப்பதால் முமுஷுவுக்கு மூன்றும் அறிய வேண்டியவை என்பதை இந்த வார்த்தை அழகாக விவரிக்கிறது)

————————————————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ எம்பெருமானும் -மலையும் -கடலும் -முகிலும் -பொன்னும்-மணியும் யானையும் தெய்வ வண்டும் நிதியும் ஸிம்ஹமும்–

November 22, 2025

வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –

இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் –
அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு இருக்கையும்கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட ஒண்ணாதாய் இருக்கையும் –

உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே(மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி) விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –

கார் முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாக சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்

———

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்

இது கைபட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

பொன்னுருவாய் –பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

————-

மணியை வானவர் கண்ணனை –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –
மாலே மணி வண்ணா –
சாம்யம் ரத்னத்துக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளில் –

1-உறங்காமை –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதா பஸ்யந்தி சூரய
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே-
2-தலைப்பில் முடிந்து ஆளலாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் பாய சீருடை
பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் –
3-மணி ரத்னம் மலையிலும் கடலில் இருக்குமே
ஒண் குறவர் மால் யானை பேர வெறிந்த பெரு மணியை -முதல் திருவந்தாதி
மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் –
4-செருக்கு பண்ணப் பண்ணும்
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மாறுளதோ இம் மண்ணின் மிசையே
எனக்கு என் இனி வேண்டுவதே
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-
5- தன்னை உடையாரை லோகம் எல்லாம் அனுவர்த்திக்கப் படும்படி பண்ணுபவன்-
6-இடைத் தரகர் கொண்டே ரத்னம் கொள்ளுவார்
வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமான்
திருப் பாதம் பணிந்து
விபீஷண ஆழ்வான் -நிவேதயமாம் ஷிப்ரம் விபீஷனம் உபஸ்திதம் –

7-ரத்னம் சில சில ஆச்ரயங்களில் அதிக மதிப்பு பெரும்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் சிறப்பு பெறுவான் எம்பெருமானும்-

8-ரத்னம் ஒளியை விட்டு இராது -எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான் -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ-
அநு ஜனர் அநு ரூபரூப சேஷ்டா –இந்திரா -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அனந்யா ஹி மா சீதா பாஸ்கரேண பிரபா யதா
ரத்னங்களில் ஒளி உத்பூதமாயும் அநுத்பூதமாயும் இருப்பது போலே ஸ்பஷ்டமாயும் மறைந்தும் பிராட்டி இருப்பாள்
வாமன

கிருஷ்ணாஜிநேந சம் வ்ருண்வன் வாமனோ வஷசி ச்ரியம்-என்ற மறைந்து இருந்தாள்

9- ரத்னம் ஒளியால் மேன்மை பெரும் -திருவில்லா தேவரை தேறேல்மின் தேவு -ச்ரத்தயா அதேவ தேவத்வம் அஸ்நுதே –
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா —

10-ரத்னம் தன்னை இழந்தவனை கதறி அழப் பண்ணும் -பரதனும் விலலாபா சபா மத்யே -கதறி அழுதான்
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடா வரைத் தோல் தயரதன் புலம்பிய புலம்பல் பிரசித்தம்
பழுதே பல பகலும் போயின -என்று அஞ்சி அழுதார்கள்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே தைவத் தேவகி புலம்பலும் பிரசித்தம்
உன்னைக் காண்பான் அலப்பாய் நான் ஆகாயத்தை நோக்கி அழுவேன் –

11-ரத்னம் அதமன் மத்யமன் உத்தமன் கையில் பட்டு -அல்ப விலை உள்ள விலை ஸ்வயம் போக்கியம் ஆகும்
இச்சுவை யான் பொய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வைகுண்ட வாசே அபி ந அபிலாஷா
எனக்கு தேனே பாலே கண்ணாலே அமுதே
அநுபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணுபவர்கள் வியாபாரிகள் போலே
சூத்திர பலார்த்திகள் செம்படவன் போல்வார்

12-சேற்றிலே ரத்னம் இருந்தால் மதிப்பு அறியாமல் இருப்பார்கள் -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே
அவஜா நந்தி மாம்மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் –
மகா ஞானிகளோ எத்திறம் உரலினோடே இணைந்து ஏங்கி இருந்த எளிவே -பிறந்தவாறும் வளர்ந்த வாறும் என்று மோஹித்து இருப்பார்கள் –

13 க்ருத்ரிமான கல்லும் ரத்னம் பேரில் இருந்தால் வாசி அறிய மாட்டாதார்கள்
தேவதாந்த்ரங்களும் பகவான் என்று போலியாக ராஜச தாமசர்கள் பிரமிக்க சாத்விகர்கள் அடுப்பில் இட்ட கல்லோபாதி நினைப்பார்கள்

——————————————————————————————————————-

முகில் வண்ணன் -மேக வண்ணன் -ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்

1- மேகம் பெய்ய வேண்டும் இடம் வரை சென்று பொழியும்
எம்பெருமானும் -வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து –
-மண் மீது உழல்வாய் -கிருபா ரசம் பொழிய -வாழ உலகினில் பெய்திடுவான் –

2-மேகம் மின்னுள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –

3- மேகம் தான் மொண்ட இடத்திலும் பெய்யும் வசிஷ்டாதிகளுக்கும் பெருமாள் உபதேசித்த்காது பிரசித்தம்

4- மேகம் பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும்
கோவிந்தேதி யதாக்ரந்தம் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி-

5-மேகம் இன்ன பொது பெய்யும் என்று அறுதி இட ஒண்ணாது -வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே -திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான் அபேஷா நிரபெஷமாக தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்

6-வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று -வளைப்புக்காக கார்யம் செய்பவன் அல்லன் -பெண்ணுலாம் சடையினானும்
பிரமனும் காண்பான் எண்ணிலா ஊழி ஊநிழி தவம் செய்தார் வெள்கி நிற்க விண்ணுளார் வியப்ப ன்று ஆணைக்கு அன்று அருளை ஈந்தவன்

7-மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றி பெய்யும் -அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -வசிசிஷ்டர் சண்டாளன் வாசி இல்லாமல் அனுக்ரஹ சீலன்
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாலி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -நிர்விசெஷமாக அனைவருக்கும் அருளை பொழிபவன் –

8-மேகம் கர்ஜித்துப் போகும் ஆடம்பரம் இன்றியும் பொழியும் -குசேலருக்கு அருள் மலை பொழிந்தான் –

9–விராட பார்வை கால ஷேபம் கேட்க மேகம் வந்து நிற்கும் -பகவத் விஷய கால ஷேபத்துக்கு இவனும் வந்து நிற்பான் –
மா முனிகள் கால ஷேப கோஷ்டியில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சாதித்துன் கொண்டு வந்தானே –

10-மேகம் சுக்திகளில் பெய்து முத்தாகும் -அடியாருக்கு இன்பமாரியாகிய எம்பெருமான் உடைய கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
இடத்தே ப்ரவஹித்து மிக்க பயன் விளைத்து முத்தன்ன அருளிச் செயல்களையும் ஸ்ரீ வசன பூஷணாதிகளையும் பயக்கும்

11-மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் -இத்யாதிப் படியே தூது விடப் பெரும் -இவனும் இன்னார் தூதன் என நின்றான் என்றும்
கோதை வேல் ஐவர் க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் -என்ற பாண்டவ தூதன் என்று அழியாப் பெயர் பெற்றான்

12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும் -எருக்கிலை போல்வன வீழ்ந்து ஒழியும்-இவனும் பரித்ராணாயா சாது நாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் -என்று சோதி வாய் திறந்து அருளினானே-கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தாயார் மகிழ ஒன்னார் தளர –

13-மேகமானது -எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் வேறு புகல் இல்லாமல் –
எம்பெருமானும் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் -என்று சாதக வ்ருத்திகளான அனன்ய கதிகளால் ப்ரதீஷிக்கப் பட்டிருப்பன் –

14-மேகமானது விருப்பம் இல்லா விடிலும் கண்ணீர் விட்டாலும் வாளா நிற்கும்-ஸ்ரீ பரத ஆழ்வான் -ஏபிச் ச சசிவைஸ் சார்த்தம் சிரஸா யாசிதோ மயா-ப்ராதுச் சிஷ்யஸ்ய
தாஸஸ்ய பிரசாதம் கர்த்துமர்ஹசி-என்று பலருடன் கண்ணநீர் சித்ரகூடத்தில் விட்டாலும்
ச காமம் அநவாப்யைவ-என்னும்படி மநோ ரதம் நிறைவேறப் பெறாமல் மீண்டு போம்படி ஆயிற்று-

15-மேகம் கடலில் படிந்து அங்கு நின்றும் எழுந்து தோன்றி வர்ஷித்து விட்டு மீண்டும் கடலில் புகும் -எம்பெருமானும் அவதார கந்தமான திருப் பாற் கடலிலே படிந்து
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்களில் கிருபா ரசத்தை பொழிந்து மீண்டும் அங்கே புகுவான்
பின் துரக்கும் காற்று இழிந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே -பெரிய திருவந்தாதி

16-மேகம் தான் தோன்றின வாறே மயில்களை சிறகு விரித்து ஆடப் பண்ணும் -கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துல்லாதார் தம்மால் கருமம் என் சொல்லீர்-என்றபடியே தத் பஷ பாதிகளை எழுந்தும் பறந்தும் துள்ளப் பண்ணும் –

——————————————————————————–

கடல் வண்ணன் -விசேஷார்த்தம்
அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோததயே -கடலை நோக்கி கடல் பள்ளி கொண்டது போலே
கருணை யம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி –
பிரதிஜலதிதோ வேலாசய்யாம் -பட்டர் –

1-நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்றிவர் -பெரிய திரு மொழி -2-8-5-
கடல் மைநாகம் போன்ற மலைகளை கொண்டது போலே இவனும் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திரு மால் -மலை போன்ற திருத் தோள்களை உடையவன்
நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவமணி குயின்ற தொடு யணி யணிந்த ககனவிலிடு நீலே வெற்பு ஒத்து இருந்தனை -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
கடல் சிறந்த நவ மணிகளை உடைத்தால் போலே இவனும் குரு மா மணிப்பூண் -கௌச்துப மணியையும் -செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் –கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கள ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் -உடையவன்
கடல் லஷ்மி பிரஸூதிக்ருஹம் ஆகையாலே பெரிய பிராட்டியாருக்கு உறைவிடம் -இவனும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்
கடல் சங்கு தங்குமிடம் இவனும் வெள்ளை சுரி சங்கு ஏந்துமவன் –

2- கடல் முன்னீர் -எல்லா வற்றுக்கும் முன்னே உண்டான நீர் -அப ஏவ சசர்ஜ ஆதௌ-நன்மைப் புனல் பண்ணி -இவனும் முனைவன் மூ வுலகாளி யப்பன் –

3- கடல் முந்நீர்-ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர் ஆகிய மூன்று வகை பட்ட நீரையும் உடைத்தாய் இருக்கும்
எம்பெருமானுக்கும் ஸ்வா பாவிக கருணை ரசமும் -பிறர் படும் துயரைக் கண்டு தோன்றும் அருள் நீறு பிராட்டியால் தூண்டுவிக்கப் பட்டு பொழியும் அருள் நீரும் உண்டே –

4-கடல் சிறு மீன் திமிங்கலம் கிளிஞ்சல் மணி மாணிக்கம் அதம உத்தம விபாகம் இல்லாமல் தன பக்கம் இடம் கொடுத்து இருப்பது போலே
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் -என்றும் ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -என்றும்
பச்யாமி தேவான் தவ தேவ தேஹ -என்கிறபடியே சர்வ அபாஸ்ரயமாய் இருப்பான் –

5-கடல் சாவா மருந்தான அமிர்தத்தை தேவர்களுக்கு அளித்தது -எம்பெருமானும் உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் -என்றும்
தன்னைப் பெற்றேற்குத் தன வாய் அமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் -என்றபடி பேரன்புடையாருக்கு சாவா மருந்தான தனது வாயமுதைத் தந்து அருள்வான் –

6-கடல் அளவிட முடியாத ஆழம் -இவனும் சமுத்திர இவ காம்பீர்ய -கொள்ள மாளா இன்ப வெள்ளம் ஆகையாலே இதில் இழிவார்க்கு உள் ஆழம் காண்பது அரிது –

7-கடல் தன பக்கல் உள்ளதை மேகத்துக்கு கொடுக்கவும் செய்யும் மேகம் பொழிவதை தன்னிடமும் பெற்றுக் கொள்ளும்
எம்பெருமானும் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் -என்றும் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்கிரபடுயே கொடுக்கவும் செய்வான்
கரோமி யத் யத் சகலம் பிரச்னை நாராயணா யேதி சமர்ப்பயாமி -கொடுப்பவற்றை கொள்ளவும் வல்லவன் தத் குருஷ்வ மதர்ப்பணம் -என்பன்-

8-கடலுக்கு மழை நீரால் அதிசயம் இல்லை முகிலுக்கு ஆத்மலாபம் -எம்பெருமானுக்கு எவ்வளவு சமர்ப்பித்தாலும் அது போலே நாம் க்ருதார்த்தர்கள் ஆவது தவிர புதிதாக அவனுக்கு செல்வா நிறைவு இல்லை

9-கடல் நீர் நம் போல்வார் வாயில் புக மாட்டாது -துவர்க்கும் -ஆசாந்த சிந்தோ கும்பீ ஸூ நோ -என்றபடி குறு முனிவனுக்கு உணவாயிற்று -எம்பெருமானும் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றின நஞ்சு -சுவை அறிந்தாற்கு அமுதிலும் ஆற்ற இனியன் –எனக்குத் தேனே பாலே கண்ணாலே அமுதே திரு மால் இரும் சோலை கோனேயாகி-என்னும்படி பரம போக்யன்-

10-கடல் அஞ்சினார்க்கு புகலிடம் இந்த்ரன் இடத்து அஞ்சின மைநாக கிரிக்கு புகலிடமாக இருந்ததே -இவனும் அஞ்சினேற்கு அஞ்சேல் என்று காவி போல் வண்ணர் வந்து
என் கண்ணின் உள்ளே தோன்றினாரே -ஆர்த்த த்ராணா பராயணஸ் ச பகவான் நாராயணோ மே கதி –

11-கடல் நீர் மா முகில் வாய் மூலம் வந்தால் அன்றி யாருக்கும் உபஜீவிக்க ஒண்ணாது -எம்பெருமானும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திரு வாய் மூலம் வந்தால் அன்றி உபஜீவிக்கலாகான்
லஷ்மீ நாதாக்ய சிந்தௌ சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நாதாத்ரௌ அப்ய ஷிஞ்சத் -என்றும்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யமாமே –

12-கடல் குளிர்ந்தே பெரும்பாலும் இருந்தாலும் ஒரு புறத்தில் பாடபாக்னி பொங்கி இருக்கும் -எம்பெருமானே தண்ணளி வே வடிவாய் இருந்தாலும்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறக்கும் –

13–கடல் சந்த்ரணைக் கண்டால் பொங்கி கிளரும் -எம்பெருமானும் ஞானிகளைக் கண்டால் தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் என்னும்படி சத சதமாகப் பணைப்பன் –

14- நாம் கடல் கரையிலே நின்றே அனுபவிக்க முடியும் -நிலவர்களே உட்புகுந்து ரத்னங்களை கொணர்வர் -நம்பிள்ளை போல்வாரே அவஹாகித்து வேதாந்த விழுப் பொருள் நிதிகளை வாரிக் கொணர்ந்து நமக்கு அளிக்க வல்லவர்கள் –

15-கடல் விஷத்தையும் தந்தது அமுதத்தையும் தந்தது இவனும் பயக்ருத் பய நாசன –நல்குரவும் செல்வமும் நரகமும் சுவர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் இருப்பவன் -பட்டர் -பல மோஷண யோஸ் த்வயைவ ஜந்து க்ரியதே ரங்க நிதே -என்பர்

16-கடல் எத்தனை தரம் பார்த்தாலும் திருப்தி பெறாமல் அபூர்வ தர்சனமாய் இருக்கும் இவனும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –

17-கடலுக்கு நதிகள் மூலம் வரவும் மேகம் மூலம் செலவும் உண்டு -அர்ச்சாவதார உண்டியலில் வரவும் உண்டு செலவும் உண்டு

18-திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவார் -நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே வேண்டும் செல்வம் -எம்பெருமான் வழியே போவார்க்கு மஹார்த்தங்கள் கிட்டும்-

19-வானர வீரர்கள் கடலைக் கடந்து விட்டாலும் உள் ஆழம் அறியாதார் -அழுந்தின மந்தர மலைக்கே தெரியும் -நாம் அவனை ஸ்துதி செய்தாலும் அறியோம் ஆழ்வார்கள் மட்டுமே அறிவார்
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆரறிவார் –ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் ஒரு பொருளை யான் அறிந்த வாறு -என்பர் திரு மழிசைப் பிரான் —

20-கடல் கலங்காது கலங்கினாலும் சீக்கிரம் தெளியும்
சீற்றம் கொள்ளான் கொண்டாலும் அருள் சீக்கிரம் சுரக்கும் -சுக்ரீவ மகாராஜர் சமுத்திர ராஜன் நரகாசுரன் போல்வார் இடம் கண்டோம்-

21- அபரிச்சேத்யமான கடலும் குறு முனிவன் கையில் ஆசமனத்துக்கு போதும்படி அடங்கி இருந்தது -வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ -பகவத் விஷயம் ஆழ்வார்களுக்கு பரிச்சேத்யம் ஆயிற்று
நண்ணா அசுரர் நலிவெய்த நல்லவமரர் பொலிவெய்த எண்ணாதன்கள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி -திருவாய் -10-7-5-
ஆனந்தம் ஒன்றையே பேசி மீண்டதே வேதம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விரிவாக பேச ஒரு கிரந்தம் வேண்டுமே என்று எண்ண
திருவாய் மொழி திரு வவதரித்த பின்னர் இன்னம் எம்பெருமானுக்கு ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் வேண்டுமே என்று எண்ணம் படி ஆனதாம் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
அனைத்தும் ஆழ்வார் திரு வாக்கிலே அடங்கி விட்டன என்றே கருத்தாகும் –

22–கடல் சம்பந்த ஞானம் இல்லாத புல்லை வெளியே தள்ளும் -மகரம் போன்றவற்றை அங்கனம் தள்ளாது -அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-5-

23–கடல் கடக்க அரிதாயினும் நாவாயால் எளிதில்கடக்கலாம்
பாதாம் போஜ வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -முகுந்த மாலை -பத்துடை அடியவக்கு எளியவன் –

24-கடல் அருகே இருந்தாலும் தாக விடாய் தீர்க்க வேறு நீர் நிலை தேட்டமாய் இருக்கும் -சாச்த்ரன்களால் எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும் அர்ச்சையில் இழிந்தால் அன்றி ஆர்த்த சாந்தி இல்லை இ றே-

25–எவ்வளவு கார்ய நிர்பந்தங்கள் இருந்தாலும் பெரிய செல்வந்தர்களும் சிறிய நேரமாவது கடல் கரை சாராது இரார்கள்
பல காரியங்களை சுருக்கிக் கொண்டு ஒரு நாழிகை பொழுது யாவது பகவத் ஆராதனத்தில் அந்வயியாது இரார்கள் –

கடலில் அலை ஓயாது -அலம் புரிந்த நெடும் தடக்கையும் ஓயாது
கடல் கோஷித்துக் கொண்டே இருக்கும் -இவனும் ஏதத் வ்ரதம் மம–மோஷயிஷ்யாமி மாசுச -நமே மோகம் வசே பவேத் -இத்யாதிகளை சாதித்துக் கொண்டே இருப்பான்
கடல் ஒரு நாளும் வற்றாது -எம்பெருமானுக்கு நாஸ்தித்வம் உண்டாகாது
கடல் ஏறுவதும் வடிவதுமாய் இருக்கும் -இவனும் சேவை சாதிப்பதும் மறைவதுமாய் இருப்பான்
இப்படி பலவும் உண்டே –

———————————————————————————————————————————-

நீர் வண்ணன் எம்பெருமான் -நீருக்கும் அவனுக்கும் சாம்யம் பல படிகளில்

1-நீர் பள்ளத்திலே பாயும் –மேட்டில் ஏற்றுவது ஸ்ரமம்-ஜாதி முதலியவற்றால் குறைந்தார் இடம் எளிதாக செல்வான்
உயர்ந்தவர் என்று மார்பு நெறித்து இருந்தால் அணுக விரும்பான்
பாண்டவ தூதனாக விதுரர் திருமாளிகை சென்றவன் ஞானத்தால் உயர்ந்த பீஷ்மாச்சார்யர் -குலத்தால் சிறந்த த்ரோனாச்சார்யர் செல்வத்தால் சிறந்த துரியோதனை பொருட்டாக மதியாமல்
முன்னமே துயின்று அருளிய முதுபயோததியோ பன்னகாதிபப் பாயலோ பச்சை ஆலிலையோ சொன்ன நால்வகைச் சுருதியோ கருதி நீ எய்தற்கு எண்ண மாதவம் செய்தது இச் சிறு குடில் என்றான் -வில்லிபுத்தூரார் பாரதம் –

2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாதே -லோகோ பின்னருசி யாக இருந்தாலும் நீர் அனைவருக்கும் வேண்டுமே -அது போலேயும் எம்பெருமானும்

3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை -சூடு வந்தேறி -தண்ணளி இயற்கை -நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறக்கலாம் –

4- நீர் சுட்டாலும் ஆற்றுவதற்கு நீரே வேண்டும் -அவன் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும் -தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை –

5- நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரித்தாய் இருக்கும் -ஆண்டாள் சூடிக் களைந்த மாலையால் விலங்கிட்டு வைத்து
புஜிக்க நின்றான் -பாண்டவர்கட்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போக விடப் பெற்றான் –

6-நீர் மற்ற பண்டங்களை சமைக்க பயன்படும் தானாக குடிக்கவும் பயன்படும் -இவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் உண்டு –
எம்பெருமானைக் கொண்டு வேறு பிரயோஜனம் பெற விரும்புவாரும் ஸ்வயம் பிரயோஜனமாய் அவனையே பெற விரும்புவாரும் உண்டே –

7-அன்னம் காய் கனி வேர் கிழங்கு பால் பின்ற பிரதி நிதிகளை சஹிக்கும் -நீருக்கு நீரே வேணும் -எம்பெருமானும் அப்படியே
ஒரு நாள் காண வாராயே-அடியேன் தொழ வந்து அருளே
என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்
நீரை ஒருவராலும் விட முடியாது கர்ம ஞான பக்தி பரபக்தி இவற்றில் எத்தை விட்டு எத்தைப் பற்றினாலும் ஒருபடியாலும் விடத் தகாதவன் –

8-சோறு உண்ணும் போதும் நீர் வேண்டும் நீர் வேறு ஒன்றையும் அபேஷியாது-உபாயாந்தரங்களுக்கும் அவனே வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –

9-கொள்ளும் பாத்ரங்களின் தாரதம்யமே அன்றி நீர் தானே குறைய நில்லாது -கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்வார் குறையே அத்தனை –அல்ப ஐஸ்வர்யகைவல்யம் பெற்று போவாரும் உண்டே -எழுவார் விடை கொள்வார் -இத்யாதி

10-நீர் ஐவகைப் பட்டு இருக்கும் -பூமிக்கு உள்ளே கிடக்கும் நீர் –ஆவரண ஜலம்–பாற் கடல் நீர் -பெருக்காற்று நீர் –தடாக நீர்
அந்தர்யாமி –பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அர்ச்சை -பெருகாற்றிலே தேங்கின மடுக்கள் போலே கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி –

11- நீரானது ச்வத பரிசுத்தம் ஆயினும் ஆஸ்ரய வசத்தால் த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும் -அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமானும்
த்யாஜ்யன் -கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள ஸ்ரீ யபதியே உபாதேயன் –

12-தோண்டத் தோண்ட சுரக்கும் நீர் -இவனும் கொள்ள மாளா இன்ப வெள்ளம் -பேசப் பேச வளர்ந்திடுவன் -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் இருப்பன்

13-நீர் பரார்தமாயே இருக்கும் -தனக்கு என்று பிரயோஜனம் இல்லாமல் -பக்தாநாம் -என்றபடி எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும் –

14-நீர் தானே பெய்ய வேணும் -ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது -எம்பெருமானும் அப்படியே –

15-நீர் கடலில் இருந்து காளமேகம் வழியாக வந்தால் அன்றி உபஜீவிக்க உரியது ஆகாது -இவனும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆச்சார்யர் மூலமாக
வந்தே உபஜீவ்யன் ஆகிறான் -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆகும் –

16–சிறியார் பெரியார் விபாகம் இன்றி ஒரே துறையிலே படிந்து குடைந்து ஆடலாம் -எம்பெருமானும் -நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் –

17- நீர் சிறிய த்வாரம் கிடைத்தாலும் உட்புகுந்து விடும் -எம்பெருமானுக்கும் சிறிய வ்யாஜ்யமே போதும் -திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -இத்யாதி –

18-தீர்த்த விசேஷங்களில் நீருக்கு மஹாத்ம்யம் அதிகம் -எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயில் திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்-

19-தாபம் மிக்கவர்கள் முகத்தில் எறேட்டுவது முதுகிலே கொட்டுவது உள்ளில் இழிச்சுவது படிந்து குடைந்து ஆடுவது போலே
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்குவர்கள் எம்பெருமானையும் –

20-நீர் வேண்டியவன் நுனி நாக்கு நனைக்கக் கிடைத்தால் போதும் என்பான் -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள்மண்ணும் விண்ணும் மகிழவே -என்பர் –

21–நீரில் சிறிய கல்லும் அமிழும் தெப்ப மரமும் மிதக்கும் – எம்பெருமான் பக்கலிலும் ப்ரஹ்மாவாய் இழந்து போவதும் இடைச்சியாய் பெற்று விடுதலும் செய்யக் கானா நின்றோம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -என்றும்
மருவு நின் திரு நெற்றியில் சுட்டி யசை தர மணி வாயிடை முத்தம் தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ள முள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-என்றும்
பகவத் குணங்களில் சிறு மா மனிதர் அமிழ்தலும் ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க் கரையிலே நிற்றலும் உண்டே –

22-துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை-போக சாதனமாயும் ஸ்வயம் போக்யமாயும் நீர் இருக்கும் -ப்ராபகனும் பிராப்யனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே —

—————————————————————

யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –

“தென்னானாய் வடவானாப் குடபாலானாய் குணபாலமதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலும் அருளிச் செய்வர்.

“என்னானை என்னப்பனெம்பெருமான்” என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வவஸ்து போலவேயிருந்து பரமாநந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே” என்னும்படியிருத்தலால் ஆனையாகச் சொல்லப்படுவன்.

2. ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல, எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டுதலாலும் ஆனையென்கிறது.

3. ஆனையானது தன்னைக்கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.

4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரமபவித்திரனாயிருக்கக் செய்தேயும்* பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமுடைய நம்போல்வாரோடே சேரத் திருவுள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே.

5. யானையைப் பிடிக்கவேண்டில் பெண்யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.

6. பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் யானை; எம்பெருமானும் 1. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

7. யானையின் பாஷை யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பிபோல்வார்க்கே தெரியும்; பேரருளாளனோடே பேசுமவரிரே நம்பிகள்.

8. யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் 1. “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும் 2. “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றுஞ் சொல்லுகிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு ஸர்வாத்மநா விதேயனிறே.

9. யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்* அலம்புரிந்த நெடுந்தடக் கையனிறே.

10. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிர மெறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமானமுது செய்து சேஷித்த ப்ரஸாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோமிறே.

11. யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை உணர்த்தி உதவுகின்றானிறே.

12. யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கையில்லையிறே.

13. பாகனுக்கு ஜீவநங்கள் ஸம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க…

யானை -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும் சோலை மழகளிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் பட்டர் –

1- யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் பொழுது எல்லாம்அபூர்வ வஸ்துவாகவே -பரமானந்தமாகவே -இருக்கும்–இவனும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு
ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -பண்டு இவரைக் கண்டது எவ் ஊரில் -என்றும் சொல்லப் பண்ணுவன்

2-ஆனை உடைய காலைப் பற்றியே ஏற வேண்டும் -இவன் திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பர் –

3- தன்னைக் கட்ட கையிற்றை தானே எடுத்துக் கொடுக்கும்-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியாகிய கயிற்றை அவனே தந்து அருள்வான் -மதி நலம் அருளினான் –

4-நீராட்டிய உடனே அழுக்கோடு சேரும் -சுத்த சத்வமயன் -பரம பவித்ரன் -இருந்தும் வாத்சல்யத்தாலே பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் உடைய நம் போல்வாருடன் சேர்வான் –

5-பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் -பிராட்டியின் புருஷகாரம் இன்றி இவனும் வசப்படான் –

6-பாகனுடைய அனுமதி இன்றி தனது பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
என்றபடி பாகவதர்களை முன்னிட்டு புகாதாராய் அங்கீ கரித்து அருளான் –

7-யானையின் பாஷை பாகனுக்கு தெரியும் -எம்பெருமான் பாஷை திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும் ஸ்ரீ காஞ்சி பூர்ண மிஸ்ரேண ப்ரீதா சர்வ அபி பாஷிணே-

8-யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்காய் இருக்கும் -இவனும்
கனி கண்ணன் போகின்றான் –காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -என்றும்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்றும் சொல்வாருக்கு சர்வாத்மநா விதேயன் இ றே–

9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் -இவன் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தால் பல கோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம் –

10-யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அந்தக் கருமுகிலை எம்மான் தன்னை –

11-யானை இறந்த பின்பும் உதவும் -இவனும் தீர்த்தம் பிரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாக தனது சரிதைகளை உணர்த்தி உதவுகிறான் –

12-யானைக்கு ஒரு கையே உள்ளது -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை இ றே

13-பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் யானை -இவனும் அர்ச்சக பரிசாரகர்களுக்கும் தன்னை நிர்வஹிக்கும் வித்வான்களுக்கும் ஜீவன உஜ்ஜீவன ப்ரதன்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

——————————————————————————————————————————-
பொன்னப்பன் மணியப்பன் –பொன்னை மா மணியை –பொன்னானாய் –பொருது வருகின்ற பொன்னே —

1- ஹேம்நா கேதோ ந தாஹேந சேதேந கஷணேந வா ஏத தேவ மஹத் துக்கம் யத் குஞ்ஜா சமதோல நம் -தீயிலிட்டோ உரை கல்லிலோ உளியை இட்டோ வெட்டினாலும்
ஹிம்சையால் வருந்தாமல் ஒளி விஞ்சி காட்டும் குந்துமணிக்கு ஒப்பாக நிறுத்திப் பார்த்தால் குன்றிப் போகும்
இன்னார் தூதன் என நின்றான் -பாண்டவ தூதன் என்றதாலே தரிப்பு உண்டாயிற்று
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அவதார பிரயோஜனம் பெற்றோம் என்று ஒளி விஞ்சி இருப்பான்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அதி சூத்திர வஸ்துக்களோடு ஒப்பிட்டால் துக்க ஹேது
ஒட்டுரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —

2–பொன்னானது மண்ணில் கலந்து இருந்தாலும் சேற்றில் அழுந்திக் கிடந்தாலும் உள்ளே மாசு ஏறப் பெறாது -எம்பெருமானும் ஹேய வச்துக்களோடு கூடி இருந்தாலும் மாசறு சோதியனே யாவான் –

3-பொன்னின் மதிப்பிக்கு ஒரு நாளும் குறை இல்லை -பொன் நகைகளுக்கு எந்நாளும் ஏற்றம் உண்டே -இவன் மதிப்பிக்கு என்றுமே கொத்தை இல்லை-

————————————————————————————————————————————————————-

ஆயர் ஏறு –ஆயர்கள் போர் ஏறு —

1-வ்ருஷபத்துக்கு சரணங்கள் நான்கு -கால் செய்கை -சிருஷ்டி சம்ரஷணம் சம்ஹாரம் மோஷ பிரதானம் –வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் -ஜகத் உத்பவ ஸ்திதி பிரணாச சம்சார விமோசன –ஆளவந்தார் –

2 வ்ருஷபம்-வ்ருஷபத்துக்கும் தர்மத்துக்கும் பெயர் -கிருஷ்ணம் தர்மம் சநாதனம் –ராமோ விக்ரஹவான் தர்ம –தர்ம சம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன் தானே சேரம தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது —

4- உணவுக்கு பிறர் கை பார்த்து இருக்கும் வ்ருஷம் -அர்ச்சையில் அப்படியே விபவத்திலும் வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனன் —

5- வ்ருஷபம் -மாடு -அறிவிலி-இவனும் அவிஜ்ஞாதா -பக்தர்கள் அபராதங்கள் பற்றி அறிவில்லாதவன் குற்றங்களில் கண் செலுத்த மாட்டான் கண் செலுத்தினாலும் நற்றமாகவே கொள்வான்

5-வ்ருஷபம் கறுவுதல் உண்டானால் முட்டித் தள்ளும் -சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் –

6-வ்ருஷபம் காசு கொடுத்து வாங்கி விட்டால் நம் வீட்டையே நாடி வரும் -பக்திக்ரீதோ ஜநார்த்தனா-நம்மையே நாடி நிற்பன் -எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே -கனிவார் வீட்டின்பமாய் இருப்பவன் —

7-வ்ருஷபம் பிறருக்கு உழைப்பதையே இயல்பாக கொண்டது -இவனும் தூது செல்வதும் தேர் பாகனாய் நிற்பதுவும் மனிசர்க்காய் நாட்டில் பிறந்து படாதன பட்டும்
ந தே ரூபம் ந சாகாரோ நா யுதானி ந்சாச்பதம் ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வா பிரகாசசே -என்றும்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவிகிம் –

8- வ்ருஷபம் பாரத்தை வஹிக்கும் -இவனும் பக்தர் யோக ஷேமங்களை வஹிப்பன் -யோக ஷேமம் வஹாமி அஹம் -ஸ்ரீ கீதை-

9-வ்ருஷபம் எத்தனை அடி பட்டாலும் லஷ்யம் பண்ணாது -இவன் அடிபட்டதும் மகாபாரதம் இ றே–ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி –தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்து அடிப்ப -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –

10-வ்ருஷபம் நிலம் உழ சாதனம் -இவனும் பக்தி உழவன்-தம் த்வாம் ஷேமக்ருஷீவலம் ஹலதரம் -பட்டர் -பக்தி யாகிற பயிருக்கு நெஞ்சு விளை நிலம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் –

11- வ்ருஷபம் நல்ல வழிகளில் நன்றாக ஓடும் -சேற்று நிலம் கண்டால் தளரும் -இவனும் நன்னெறி நின்றவர்கள் பக்கல் விரைந்து கார்யம் செய்வான்
மாய வான் சேற்று அள்ளலில் படிந்தவர்கள் இடம் தளரச் தோன்ற இருப்பன் —

———————————————————————————————————————————————–

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு /வண்டுகளோ வம்மின் /அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று அவனையும் ஆச்சார்யர்களையும் வண்டாகச் சொல்வர்

1-வண்டு சாரக்ராஹி -போதில் கமல வன்னெஞ்சம் -பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -படிந்து சாரத்தை கவர்ந்து களிப்பவன்-

2-வண்டுக்கு பத்ம அபி நிவேசம் உண்டு இவனுக்கும் பத்ம அபி நிவேசம் உண்டு-பத்மம் தாமரெஐ பத்மை பிராட்டி

3-சாகா சஞ்சாரம் உடையது வண்டு சாகை கிளை வேதம்

4-வண்டு செவிக்கு இன்பமாக பாடும் -இவனும் அப்படியே குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க —

5-வண்டின் ஜாதி வேட்டு வேளாண் குளவி தன்னிறம் ஆக்கும் -இவனும் பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டான்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்கட்கு தம்மையே ஒக்க அருள் செய்வான்

6-வண்டு சோலைகளிலே சுழலும்
இவனும் வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை –ஆராமம் சூழ்ந்த அரங்கம் முதலான திருப்பதிகளிலே அனுரக்தன் –

7-வண்டு மதுவைப் பருக தென்னா என்று முரலும் -தென்னா தென் வென்று வண்டு முரல் -தொண்டர்களின் அமுத வாக்கைப் பருகி -தென்னா என்று தெகுடாடுகிறான்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித் தென்னா வென்னும் என் அம்மான் திருமால் இரும் சோலை யானே —

——————————————————————————————————–

நிதியே திரு நீர்மலை நிலத் தொத்தே –நிதியினை பவளத் தூணை –வைத்த மா நிதியம் மது சூதனன் –அந்தர் ஹிதோ நிதி ரசி த்வம்–ஸ்ரீ கூரத் ஆழ்வான் மயானி கூடம் அநபாய மகா நிதிம் த்வாம் -ஸ்ரீ தேசிகன் –

1-நிதி கண்ணுக்கு புலப்படாதபடி மறைந்து இருக்கும் -இவனும் கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்கு தோற்றாதபடி மறைந்து நிற்கும் –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -கரந்து எங்கும் பரந்துளன் –கட்கிலி யாய் இருப்பன்

2-மறைந்து கிடக்கும் நிதி சில பாக்ய சாலிகளுக்கே புலப்படும் -யானே தவம் செய்தேன் –கோர மா தவம் செய்தனன் கொல்அறியேன் -லப்யோசி புண்ய புருஷை இதரைர் துராப -ஸ்ரீ கூரத் ஆழ்வான்

3-ஒரு வகை சித்த அஞ்சனம் அணிதவர்களுக்கு கண்ணுக்கு புலப்படுவான் -பக்த்யா சாஸ்தராத் வேதமி ஜனார்த்தனம் -சஞ்சயன் த்ருஸ்தராஷ்திரன் இடம் காட்டினான் –

4-நிதியானது தன்னைப் படைத்தவர்களை -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகர்கள் ஆக்கி ஆனந்த பரம காஷ்டையில் கொண்டு வைக்கும் –
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே —

5- நவ நிதி பிரசித்தம் -நவ ஒன்பது புதியது -எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப் பொழுதைக்கு அப்பொழுது எனக்கு ஆராவமுதமே -நவ நவமாகத் தோற்றுவன்

6-நிதி எவ்வளவு அனுபவிக்கப் பட்டாலும் கொள்ளக் கொள்ள மாலாததாய் அஷய்யமாய் இருக்கும் -இவனும் எத்தனை ஊழி காலம் அனுபவிக்கப் பட்டாலும் மேன்மேலும் பெருகிச் செல்வன் –

—————————————————————————————-

யசோதை இளம் சிங்கம் –சிற்றாயர் சிங்கமே –

1- சிம்ஹம் மிருகங்களில் ராஜா -பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –இவனே ராஜாதி ராஜன் –

2-காடுகளிலே திரியும் -ப்ருஹ தாரண்யகம் போன்ற உபநிஷத்துக்களில் உலாவுவான் –

3-சிம்ஹம் மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் –தென்னன் உயர் பொருப்பு தெய்வ வடமலை திருவத்தி மலை களிலே உகந்து வசிப்பான்
அணி மணி சேர் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -நீளா துங்கஸ் தனம் -இத்யாதி –

4- சிம்ஹம் ஒருவராலும் அடக்க முடியாதே இருக்கும் -தன்னைப் பழக்கிக் கொண்டு இருக்கும் சிலருக்கு சர்வாத்மநா விதேயமாய் இருக்கும்
இவனும் பிறர்களுக்கு அறிய வித்தகன் -பத்துடை அடியவர்களுக்கு எளியவன்
சேநேயோ உபயோர் மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத -அர்ஜுனன் நியமிக்கும் படி பவ்யனாய் இருப்பன் –

5-கம்பீர நடை நடக்கும் -கானகம் படி உலாவி உலாவி கரும் சிறுக்கன் –சிம்ஹ விக்ராந்த மாமினம் நடைச் சக்ரவர்த்து பிடிக்கலாம் படி நடை அழகு உடையவன் –
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்திர ப்ராதரி கச்சதி -ஸ்ரீ சுமுத்ரா தேவி இளைய பெருமாளை நடை அழகில் கண் வையாமல் கைங்கர்யம் செய அறிவுறுத்தினாள்-

6-சிம்ஹம் மத யானைகளை அவலீலை யாக தொலைத்து விடும் -இவனும் மது கைடப ஹிரண்ய ஹிரண்யாஷ ராவண கும்பகர்ண ஹம்ச சிசுபாலாதிகளை -மத யானைகளை கிள்ளிக் களைந்தவன் –

—————–——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .