Archive for April, 2024

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-4-2-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-2-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களும் நீராயுருகும்படி குழலூதிக் கொண்டு -திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உகந்து
நிரை மேய்த்து அருளினபடியையும் -பசு மேய்க்க எழுந்து அருளின ஆயாசத்தால் வந்த ஸ்ரமமும்
நப்பின்னைப் பிராட்டியைப் பிரிகையால் வந்த ஸந்தாபமும் தீருகைக்கு சிசிரோபசாரமாக அவளுடைய ப்ரேம கர்ப்பாதி
சீதள திவ்ய அவலோகந அம்ருத வர்ஷ அபி ஷிக்தனாய் ததீய புண்ய கந்த வாசித அநந்த அதி கந்தரான
கவரீ பரிமள அனுபவ நிரதரனாய்க் கொண்டு அவளுடைய நிரதிசய ஸூக ஸ்பர்சமான திருத் தோள்களோடே புணர்ந்ததும் உள்பட
மற்றுமுள்ள ஸர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் நினைந்து மனம் குலைந்து இப்படி ஸ்நேஹத் தோடே
காலத்தைப் போக்கப் பெற்ற எனக்குத் திரு நாட்டிலே தான் சத்ருசர் உளரோ -என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-4-2-

தொல் அருள் நல் வினையால்  சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

கானத்தோடே இனிய குழலை  ஊதிற்றும்–பசு மேய்த்து வந்த இளைப்பு தீரும்படி அவனை தன்னுடைய முக்தமான அழகிய கண்களாலே அம்ருதத்தை வர்ஷித்தால் போலெ குளிர நோக்கி திருக் குழலிலே பரிமளம் அவன் திரு மேனி எல்லாம் வெள்ளம் இடும்படி தழுவின நப்பின்னை பிராட்டி யுடைய தோள்களில் கலந்ததுவும் -நப்பின்னை பிராட்டியோட்டை சம்ச்லேஷத்தால் அத்யாச்சர்யமான அழகையும் உடையனாய் அனுக்ரஹ சீலனாய் இருக்கை –நேயத்தோடு கழிந்த போது -இனிமையோடு போன காலம் –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-4-2-

அநந்தரம் ஆச்சர்யமான ஆகாரத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நினைத்தார் நெஞ்சை நெகிழப் பண்ணும் சேஷ்டிதங்களை
ச ஸ்நேஹ அநு சந்தானம் பண்ணிக் காலம் எல்லாம் போகா நின்றது –
நித்ய அனுபவம் பண்ணுகிற விலக்ஷண தேசம் எனக்கு சத்ருசமோ -என்கிறார் –

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் –பெண்கள் நெஞ்சு வசீக்ருதமாகைக்காக-கேய -தாழ்ச்சி தோற்றின கேயங்களை வைத்து
இனிதாம்படி குழல் ஊதினதும்-அக்குழல் வழியே பெண்கள் வருமோ பாதி பசுக்களும் வரும்படி அக்குழலையூதி-நிரை மேய்த்ததும்
கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் -கெண்டை போலே முக்தமான திருக் குழல்களையுடைய
நப்பின்னைப் பிராட்டி திருத் தோளோடு ஸம்ஸ்லேஷித்த இதுவும்
மற்றும் பல–பின்னையும் ஹ்ருத்யமாய்க் கொண்டு பலவாய் இருப்பனவான
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து–ஆச்சர்ய ரூபத்தை யுடையவனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நித்ய அநு பாவ்ய
சேஷ்டிதங்களை நினைத்து நைஞ்சு குலைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–ஸ்நேஹத் தோடே போதுகள் போகா நின்றன -எனக்கு எந்த
லோகம்தான் ஒப்பு ஆவது -பரமபதம் தான் ஒப்போ -என்று கருத்து –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-4-2-

தொல் அருள் நல் வினையால்  சொலக் கூடுங்கொல் -என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே திரு நாட்டில் தான் தன்னோடு ஒப்பார் உண்டோ என்கிறார் –

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–6-4-2-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் –
கேயம் -என்று கானம் / தீங்குழல்-இனிய குழல் /பர தந்திரனாய் பசு மேய்க்கப் புகையால் வரவு தாழ்த்தேன் இத்தனை -என்றால் போலே சில பாசுரங்களை நெஞ்சை வருத்தும் இசையோடு கூட்டி பெண்கள் நெஞ்சில் மறம் மாறும் படி குழல் ஊதிற்றும் –
நிரை மேய்த்ததும்
அக்குழல் ஓசையே தாரகமாக வளருமவை யாயிற்று பசுக்கள் -பெண்களும் அக் குழல் ஓசை வழியே சேருமவர்கள்-ஒன்றைக் கொண்டு எல்லா காரியமும் செய்ய வல்லான் இ றே
கெண்டை ஒண்கண்-வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்
பசு மேய்த்த விடாய் தீருவது நப்பின்னை பிராட்டி தோளோடு அணைந்தாயிற்று -நப்பின்னை பிராட்டி முக்தமான அழகிய திருக் கண்களாலே குளிர நோக்கி அழகிய திருக் குழலில் பரிமளத்தாலே திருமேனியை வாசிதமாக்கி -பசு மேய்த்து வந்த சிரமம் தீர -பர்த்தாராம் பரிஷஸ் வஜே–என்கிறபடியே அணைக்க அவள் தோளோடு கலந்ததும்
மற்றும் பல-மற்றும் உண்டான பிராட்டிமாரோடு கலந்த படி
மாயக் கோலப் பிரான்-நப்பின்னை பிராட்டியாரோடே கலவியால் வந்த ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமான அத்யாச்சர்யமான ஒப்பனையை யுடையனாய் -உபகார சீலனானவனுடைய
தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
கிருஷ்ண சேஷ்டிதங்களை நினைத்து அத்தாலே நெஞ்சு நெகிழ்ந்து –
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே.–
இனிமையோடே கழிந்த காலம் -ஒரு தேச விசேஷத்திலும் தான் எனக்கு எதிர் உண்டோ -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே அனுபவ வேளையில் போலே ஸ்ம்ருதி வேளையிலும் இனிமையோடே செல்லக் கடவதானால்-எனக்கு எங்கே எதிர்-

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-4-2-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

ஆச்சர்யமான ஆகாரம் -நினைத்தார் நெஞ்சம் நெகிழப் பண்ணும் -அன்பு கனிவு ஆசை ஸ்நேஹம் –
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண்-பெண்கள் நெஞ்சை -கானம் -கேயம் -வசீகரித்து -தாழ்ச்சி தோற்றிய
மூங்கில் -இனிதாம் படி -அக் குழல் வழியே பெண்கள் பசுக்கள் வர –
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல-நப்பின்னை சம்ஸ்லேஷித்த இதுவும் -பக ஹிருத்யமாய்
மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-ஆச்சர்ய ரூபம் -கிருஷ்ணன் அனுபாவ்ய சேஷ்டிதங்கள் -குண அனுபவம் பண்ணி
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே-ஒப்பிலா அப்பன் -முன்- பரமபதம் தான் ஒப்போ –

வேய்ங்குழலிலே இனிய பாட்டுக்களை வைத்து ஊதியதும் பசுக்களை மேய்த்ததும், கெண்டைமீன் போன்ற பிரகாசம் பொருந்திய
கண்களையும் வாசனைபொருந்திய பூக்களை யணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னைப் பிராட்டியினுடைய தோள்களைக் கூடியதும்,
மற்றும் பலவான, அழகிய மாயப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைய அன்போடு காலங்கள் கழிகின்றன;
ஆதலால் எனக்கு எந்த உலகம்தான் ஒப்பாகும்.
மற்றும் பல செய்கை என்க. நினைந்து மனம் குழைந்து போது நேயத்தோடு கழிந்த என்க. குழைந்து – குழைய; எச்சத்திரிபு. கேயம் – பாட்டு.
கழிந்த – கழிகின்றன; கால மயக்கம். மாற்றிக் கூட்டாமல், கழிந்த போது – கழிந்த காலத்தில் என நேரே பொருள் கூறலுமாம். உலகம் : ஆகுபெயர்.

“தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்”-5-9-10- என்று பிரார்த்தித்த படியே பெறுகையாலே,
திருநாட்டிலே தான் என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கேயம் தீம் குழல் ஊதிற்றும் –
தான் நினைத்த பெண்களுடைய பெயரை வைத்துப் புணர்த்துச் சுவைப் பாட்டாக வைத்து ஊதிற்றும்.
கேயம் – பாட்டு. தீம் – இனிமை. இனிமையை யுடைய பாட்டு என்றபடி.

நிரை மேய்த்ததும் –
இதுக்கும் பசு மேய்க்கைக்கும் ஒன்றே பரிகரம்.
குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும்.
சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கை வந்திருக்குமாறு போலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கை வந்திருக்கும்படி.
வேற வியாபாரம் இல்லையே கிருஷ்ணனுக்கு -குழல் வைத்தே சம்ஸ்லேஷம் -கோதண்டம் வைத்து பெருமாள் வியாபரிப்பது போலே
இது வைஸ்ய வர்ண தர்மம் -அது ஷத்ரியன் வர்ண தர்மம்-

கெண்டை ஒண் கண் வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் –
கரனைக் கொன்ற அன்று, பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்”
–“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.
என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று,
பசு மேய்த்து வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக் கண்களாலே
குளிர நோக்கி அழகிய திருக் குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனை யுடைய
தாம்படி ஆக்கித் தன் தோள்களோடே அணைத்ததுவும்.

கெண்டை ஒண் கண் –
கெண்டை போலே மிக இளமையினை யுடையனவாய்,
அமிருதத்தைப் பெய்தாற் போலே குளிர நோக்குகிற திருக் கண்கள்.

வாசம் பூங் குழல் –
வாசம் செய் பூங் குழலிற் காட்டிலும் –திருவாய். 10. 10 : 2.-பொலிவை யுடைத்தான
தன்னே்ற்றமுடைய குழலை யுடையவள்.
வாசப் பூம் குழல் வாசனையே இவளது குழல் -கந்தம் கமழும் குழலி

பின்னை தோள்கள் மணந்ததும் –
அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும்.
மணத்தல் – கலத்தல்.
“தோளி”சேர் பின்னை –இது, திருவாய். 4. 2 : 5.-என்கிறபடியே, இவளுக்கு அழகு கை விஞ்சி யிருக்குமே.

பெண்களை அழைக்கை மற்றும் பல-
மற்றைப் பிராட்டிமாரோடு கலந்த படி.
(கீழே மற்றும் பல -சேஷ்டிதங்களைச் சொல்லி யாயிற்றே
இங்கு மற்றும் -மற்ற கோபிமார்கள் )
சக்கரவர்த்தித் திருமகனுக்கு அத்யயநம், ஆசாரிய சேவை, அஸ்திர சஸ்திரப் பயிற்சிகள் உண்டாமாறு போலே,
இவனுக்கு, எல்லாம் இவையே அல்லவோ.

மாயம் கோலம் பிரான்-
நப்பின்னைப் பிராட்டியோடே கலந்த ஒற்று மஞ்சளும் தானுமான மிக்க ஆச்சரியமான ஒப்பனை யுடைய உபகாரகன்.
அன்றிக்கே,
நப்பின்னைப் பிராட்டியோடு கலந்தாற் போலே,
அல்லாத பிராட்டிமார் “கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்,
தங்கு மேல் என் ஆவி தங்கும்” –நாய்ச்சியார் திருமொழி, 8 : 7.என்று இருக்குமவர்களுடைய
திரு முலைத் தடத்தில் குங்குமக் குழம்பும் கோயிற் சாந்துமாய் நின்ற அழகினைச் சொல்லவுமாம்.

தன் செய்கை நினைந்து மனம் குழைந்து நேயத்தோடு கழிந்த போது –
அவன் செயல்களை நினைத்தவாறே நெஞ்சு தன் வசம் இன்றி அழியும்படி.
“நினை தொறும், நெஞ்சு இடிந்துகும்” –. 9. 6 : 2.என்றே அன்றோ இருப்பது.

நேயத்தோடு கழிந்த போது –
நினைக்கப் படுகின்ற பொருளினுடைய இனிமையாலே நினைவு தான் இனிதாய்க் கழிந்த போது.
நேயம் – நேசம் ( இனிமை ஸ்நேஹம் )

எனக்கு எவ் வுலகம் நிகர் –
ஒரு தேச விசேடத்தில் தான் எனக்கு ஒப்பாவார் உளரோ?
அநுபவ வேளை போலே நினைக்கின்ற காலத்திலும் இனிமையோடே செல்லக் கடவதானால் எனக்கு எங்கே ஒப்பு?
ஆகாச வாயர் எனக்கு எதிரோ!
( ஆகாசம் கிடைக்குமா பார்த்து இருக்கும் சம்சாரிகளைச் சொல்லிக் கழிக்கக் கூடாதே )
வாய் – இடம். பரமாகாசம் என்கிற பரம பதமாகிற இடத்திலுள்ளார் தாம் எனக்கு ஒப்பாரோ!!
உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய ஸூரிகள் என்றபடி.
பிரார்த்தித படி பெற்றதால் பரம பதத்திலும் சமம் தனக்கு இல்லை என்கிறார்-

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-4-1-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

நாக பர்யங்க சாயியான பரம புருஷன் ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் வந்து பிறந்து அருளி –
பிரணயி ஜன சம்ச்லேஷ ஏக போகனாகையாலே
திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகளோடு திருக் குரவை கோத்து ஸம்ஸ்லேஷித்து அருளினபடியையும்
பிரணயி ஜன பரித்ராண அர்த்தமாகையாலே தத் ஸம்ஸ்லேஷித்தில் காட்டிலும்
தனக்கு போக்யமான கோவர்த்தன மஹா கிரி சமுத்தரணமும்
விஷ அநல ஜ்வால அநபிபவநீய மஹாஹ்ரநிவாஸி காளிய நிரசன பரப்ருத ஆச்சர்ய
ஸர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் அனுபவித்து
அவ்வனுப ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கனாய் அவற்றையே அலற்றி இரவு நன்பகலும் நான் தவிர்கிலன்
எனக்கு இனி என்ன குறையுண்டு என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-4-1-

ப்ரீதி பூர்வகமாக இரவும் பகலும் ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

உரவுநீர்ப் பொய்கை-விஷ ஜலம் -வலிய நீர் என்றுமாம்
அரவில் பள்ளிப் பிரான்-திரு அவதாரம் பண்ணுகைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -நாகணை மிசை நம்பிரான் ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறது
மாய வினைகள்-ஆச்சர்யமான சேஷ்டிதங்கள்
இரவும் நன்பகலும்-எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கிற காலம் ஆகையால் நன்றான இரவும் பகலும் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-4-1-

முதல் பாட்டில் அவதார கந்தமான அனந்த ஸாயித்த்வத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை
ப்ரீதி ப்ரேரிதராய்க் கொண்டு சொல்லி அவிச்சின்னமாக நடக்கப் பெற்றோம் -நமக்கு என்ன குறை உண்டு -என்கிறார் –

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்-ஆய்ச்சியாரோடே கூட திருக்குரவையிலே எல்லாப் பெண்களும்
தன் கை கோத்தாராம்படி வனமாலை போலே இடையிடையே தன்னைக் கலந்து கோத்ததும்-
இந்தப் பெண்களோட்டை ரசத்துக்கு விலக்காக வந்த மழையைத் தடுக்கைக்காக ஒரு மழையை எடுத்து ஏழு நாள் அநாயாசேன
தரித்துக் கொண்டு நின்றதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல–முதிர்ந்த ஜலத்தை யுடைத்தான பொய்கையில் காளியனை முனிந்து
நியமித்த பிரகாரமும் முதலாக மற்றும் பலவாய்
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி–ஏஷ ஸ்ரீ மான் நாராயணா ஷீராப்தி நிகேதன -என்கிறபடியே
அவதார அர்த்தமாக கண் வளர்ந்து அருளின நாக பர்யந்தத்தை விட்டு வந்த உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆச்சர்யங்களான
சேஷ்டிதங்களையே ப்ரீதி பரவசனாய்க் கொண்டு
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–குண கதனத்துக்கு உறுப்பான நன்மையை யுடைய இரவும் பகலும் ஓய்கிறிலோம்
நமக்கு என்ன குறைவு யுண்டு –
அநு பாவ்ய சங்கோசத்தால் வரும் குறை யுண்டோ
அனுபவ விச்சேதத்தால் வரும் குறை யுண்டோ -என்று கருத்து
தவிர்கிலேன் என்ன குறை எனக்கு என்றும் பாடம் சொல்லுவார்

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-4-1-

அஹோ ராத்ரம்   ப்ரீதி பூர்வகமாக  ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவிக்கப் பெற்றேன் -இனி எனக்கு என்ன குறை உண்டு என்கிறார் –

குரவை  ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
மின்னிடை மடவாரிலே அகலப் புக்கு தாழ நின்று பொருந்தின படி -இடைப் பெண்களோடு பொருந்தினால் போலே இருக்கிறதாயிற்று -தன்னோடு அவர்களை கோக்கை அன்றியே -அவர்களோடு தன்னை கோத்த படி -பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களோடு கலந்த ப்ரீதி உண்டாயிற்று இவரோடு கலந்த ப்ரீதி –
கோக்கை -தொடுக்கை -கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து இ றே குரவைக் கூத்து -ஆவது
குன்றம்ஒன்று ஏந்தியதும்
அவர்களை அனுபவிக்கை அன்றியே -அவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கின படி -இந்திரன் பசி க்ராஹத்தாலே அழிய வர்ஷிக்கத் தொடங்கின வாறே முன்னே நின்றதொரு மலையை எடுத்து ரஷித்த படி
ஏந்தியதும் -ஏழு வயசில் ஏழு நாள் ஒருபடிப்பட மலையை எடுத்துக் கொடு நிற்கச் செய்தேயும் -ஆச்ரிதார்த்த ப்ரவ்ருத்தி ஆகையால் வருத்தம் அற்று இருந்த படி
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –
நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –
உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை
பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்
இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்
அரவில் பள்ளிப் பிரான்-
அவதரிக்கைக்காக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் -ஆஸ்ரித விரோதியான சர்ப்பத்தை போக்கினான் -அஜ் ஜாதியிலே ஒருவனுக்கு உடம்பு கொடுத்தான் -ஜாதி பிரயுக்தம் அன்று நிரஸனம் -ஆஸ்ரித விரோதி என்று -பிறந்த வாற்றில் -நாகணை மிசை நம்பிரானை ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறார்
தன் மாய வினைகளையே அலற்றி
ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதியாலே அடைவு கெடச் சொல்லி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.
நல்ல இரவும் நல்ல பகலும் -சுடர் கொள் இராப் பகல் என்று விரஹத்தில் அக்னி கல்பமான அஹோராத்ரம் போல் அன்று இ றே
தவிர்கிலன்-விடு கிறி லேன்
என்ன குறைவு எனக்கே.
கால பேதம் உள்ள தேசத்திலே இருந்து -ஏக ரூபமாக அனுபவிக்கப் பெற்ற எனக்கு -ஒரு தேசத்திலே போக வேணும் என்னும் குறை உண்டோ –

————

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-4-1-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

அவதார கந்தம் -அநந்த சாயித்வம் -உடைய -கிருஷ்ணன் உடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை ப்ரீதி ப்ரேரிதராய் -அவிச்சின்னமாகப் பெற்றோமே
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்-திருக் குரவையில் -வகை மாலை போலே இடை இடையே தன்னைக் கலந்தும் –
முகம் அறிந்து பொன் கோத்தால் போலே -ரசத்துக்கு இடையூறு -மழையை தடுக்க -அநாயாசேன ஏழு நாள்கள்
உரவு நீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல-முதிர்ந்த நீர் -முனிந்து நியமித்த பிரகாரம் -காய்ச்சின வேந்தன் -மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி-நாக பர்யங்க உத்ஸ்ருஷ்ஜ்ய -க்யாகதோம் மதுராம் புரிம் -அவதாரார்தமாக பள்ளி கொண்ட —
கிருஷ்ணன் உடைய ஆச்சர்யமான சேஷ்டிதங்களை ப்ரீதி பரவசனாகக் கொண்டு
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே-இரவும் பகலும் வாசி இல்லாமல் -மத்யம மணி நியாயம் நல் இரவு நல் பகல்
நன் பகலும் -குண கதனத்துக்கு உறுப்பான நன்மை
அனுபாவ்ய சங்கோசம் இல்லாத குறை இல்லையே –
அனுபவ விச்சேத குறையும் இல்லை –
காலத்தாலும் குறை இல்லை –
தவிர்கிலம் -பன்மை பாட பேதம்

ஆய்ச்சியரோடு குரவைக் கூத்தினைக்கோத்து விளையாடியதும், கோவர்த்தனம் என்னும் மலையை ஏந்திக் குடையாகப் பிடித்ததும்,
வலிய தண்ணீரையுடைய பொய்கையிலே கிடந்த காளிங்கன் என்னும்பாம்பினை ஓட்டினதும், இவை முதலான மற்றும் பலவான,
ஆதிசேட சயனத்தையுடைய பெருமானது ஆச்சரியமான செயல்களையே சொல்லிக் கொண்டு
நல்ல இராப் பொழுதும் நல்ல பகற் பொழுதும் தவிரேன்; எனக்கு வேறு என்ன குறை உளது?
மற்றும் பல மாய வினைகளை என்று கூட்டுக. அலற்றித் தவிர்கிலன் என்க.
இத் திருவாய்மொழி, அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.

பகலும் இரவும் கிருஷ்ணனுடைய குணங்களைப் பிரீதி முன்னாக அநுபவிக்கப் பெற்ற எனக்கு,
இனி ஒரு குறை இல்லை என்கிறார்.

ஆய்ச்சியரோடு குரவை கோத்ததும்-
“பிறந்தவாறும்” என்றாற் போலே தொடங்கி ஓர் அவதாரம் முன்னாக இழியாமல், இதிலே இழிவான் என்? என்னில்,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் உண்டான தம்முடைய பிரணய ரோஷத்தினைப் போக்கித் தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி,
திருக் குரவைக் கூத்தில் பெண்களோடே கலந்து அவர்களை அநுபவிப்பித்தாற் போலே இருக்கையாலே,
அது முன்னாகப் பேசுகிறார்.

அன்றிக்கே,
நாம் அநுசந்திக்கில் அன்றோ ஓர் அடைவாக இழிவது!
அவன் அநுபவிப்பித்தபடியே பேசுகிறாராகையாலே திருக் குரவைக் கூத்தினை முதல் முன்னம் பேசுகிறார் என்னுதல்,
திருக் குரவையில் பெண்களோடு உண்டான கலவியையாயிற்று இவர்க்கு முதலிலே காட்டிக் கொடுத்தது.
ஐந்து லக்ஷம் குடிகளிலுள்ள பெண்கள் எல்லாரோடும் கலந்த பிரீதி உண்டாயிற்று, இவர் ஒருவரோடு கலந்து பிரீதி.

தன் செல்லாமையாலே ஆயர் பெண்களுடைய மாலையிலே தன்னை முதன்மை இல்லாதவனாகச் செய்து
கொண்டு கோத்ததும். -“குரவை பிணைந்த குழகும்” என்று ஆசைப்பட்டபடியே அநுபவிக்கிறார்.
பெண்களுடைய மாலையிலே இடையீடாகத் தன்னைக் கோக்கிற போது, ‘விஜாதீயன் ஒருவன் கலந்தான்’ என்று தோற்றாதபடி
அவர்களோடே ஒரு நீராகக் கலந்தபடி. -ஒரு காதில் குண்டலம் தோடு சாத்திக் கொண்டு நீராக கலந்தானே –
பெண்களும் பெண்களும் அல்லவோ கைகளைக் கோத்து விளையாடுவார்.
திருக்குரவையில் இவனை ஒழியப் பெண்களுக்குச் செல்லாதது போலே காணும்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில், ஆழ்வாரை ஒழிய இவனுக்குச் செல்லாமை விளைந்தபடி,
கோக்கை – தொடுத்தல். கை கோத்துக் கொண்டு ஆடும் கூத்து அன்றோ, குரவைக் கூத்து ஆகிறது.

குன்றம் ஒன்று ஏந்தியதும் –
சுவர்க்கம் என்று கொண்டு ஒரு போக பூமியாய், அங்கே தேவ மாதர்களோடே கழகம் இருந்து
புண்ணியத்தின் பலத்தை அநுபவம் பண்ணி மிக்க சுகத்தோடு இருப்பான் இந்திரன் ஒருவன் உளன் அன்றோ;
அந்த அநுபவத்தைப் பூமியிலே ஒரு பருவத்திற் பெண்களோடே கூடப் பூர்ணமாக அநுபவித்திருக்கிற இருப்பைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமையால் பொறாமை மிக்கு, ‘நமக்கு இட்ட சோற்றை உண்டான்’ என்று
ஒரு வியாஜமாகக் கல் மழையைப் பெய்வித்தான்;
அப்போது கைக்கு எட்டிற்று ஒரு மலையை எடுத்துத் தரித்துக் கொண்டு நின்ற படி.

ஒருவன் இங்கே ஒரு நாள் மூக்குப் புதைக்குங் காட்டில் ‘நம்முடைய போகம் பகுந்து போகப் புகா நின்றது’ என்று அஞ்சி
அவரை உவரை வர விட்டுக் கலக்குமவன் அன்றோ.
‘இப்படி அநுபவிக்கிறான் சர்வேஸ்வரன்’ என்று அறியான் அன்றோ;
இவன், தன்னை மனித சஜாதீயன் ஆக்கிக் கொண்டு இருக்கையாலே.
அன்றைய தினத்தில் கல் மழையில் பசுக்களுக்கும் இடையர்க்கும் வந்த ஆபத்தைத் தீர்த்தாற் போலே யாகாதே,
இவர்க்கும் “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் வந்த ஆபத்தைத் தீர்த்தபடியும்.

ஏந்தியதும்-
பிறர் பொருட்டு ஆகையாலே கைக்கு ஓர் ஆபரணம் போலே ஆயிற்று.
அது தான் வருத்தமற்று இருந்தபடி. பூ ஏந்தினாற் போலே இருந்தது.
ஏழு வயதிலே ஏழு நாள் ஒருபடிப் பட தரித்துக் கொண்டு அன்றோ நின்றது!
‘இப்படி ஏழு வயதிலே ஏழு நாள் தரித்ததற்கு என் செய்வோம் நாம்’ என்று ஒருவர் நெஞ்சாறல் படாதபடி
ச கோத்திரியாய் நின்றே அன்றோ இவன் இவற்றை ரக்ஷித்தது.
( அஹம் வோ பாந்தவோ ஜாத என்றவன் அன்றோ )

உரவு நீர்-
தறை காண ஒண்ணாமையால் உண்டான ஆழத்தை யுடைத்தான மிடுக்கை யுடைய நீர் என்னுதல்.
அன்றியே,
காளியனுடைய விஷத்தால் ஒருவர்க்கும் கிட்ட ஒண்ணாத வலியை யுடைய நீர் என்னுதல்.
அன்றிக்கே,
முதுநீர் ஆகையாலே வலிய நீர் என்னுதல்.
உரவு -ஆழம் -விஷம் -வலிய-

நாகம் காய்ந்ததும் –
நாகத்தை ஓட்டியதும்.
பாம்பு அடித்து மேலிட்டுக் காணும் பெண்களோடே ஜலக் கிரீடை பண்ணிற்று.

உள் பட மற்றும் பல –
இவை முதலான செயல்களுக்கு ஓர் எண் இல்லை.
“பிறந்தவாறும்” என்ற திருவாய்மொழியில், வலிமைக் குறைவாலே சொல்ல மாட்டிற்றிலர்;
இங்கு, உகப்புத் தலை மண்டை யிட்டுச் சொல்ல மாட்டுகிறிலர்.
மற்றும், இப்படிப் பெண்களுடைய கலவிக்குத் தண்ணீர்த் துரும்பு அறுத்தவை பலவாம்.

அரவில் பள்ளிப் பிரான் –
நாட்டார் உறக்கம், தமோ குணத்தால் மறைக்கப்பட்டதாய்த் தங்கள் பொருட்டேயாய் இருக்கும்;
இவன் உறக்கம் பிறருடைய ரக்ஷணத்தின் பொருட்டு இருக்கும்.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் அல்லனோ.-திருவாய். 5. 4 : 11.–
உறங்கினானாகில் பிறருடைய ரக்ஷணத்துக்கு உடலாயிருக்கும்;
உணர்ந்திருந்தானாகிலும் அப்படியே; இது என்ன உபகாரந்தான்!

அரவில் பள்ளிப் பிரான் –
மேலே, ஒரு பாம்போடு உண்டான சேராமை சொல்லிற்று;
இங்கு, ஒரு பாம்போடு உண்டான சேர்த்தி சொல்லுகிறது.
அங்கு, போகத்தைக் காற் கடைக் கொண்டமை சொல்லிற்று;
இங்கு, போகப் பிராவண்யம் சொல்லுகிறது.
போகம் -பாம்பு -இனிமை

பிரதிகூலனான காளியனைப் பறக்க ஓட்டினான்;
அநுகூலனானவனைப் படுக்கையாகக் கொண்டான்.
இவன் தான் -அநந்த முகமாக -பல பல முகமாக அநுகூலிக்கும்;
அவனும்-அநந்த முகமாக – பல பல முகமாக அடிமை கொள்ளும்.
ஆயிரம் பைந்தலை அனந்தன் அல்லனோ.-பெரியாழ்வார் திருமொழி, 4. 3 : 10.
(பஹு முகமாக கைங்கர்யம் செய்யவே )

அரவில் பள்ளிப் பிரான் –
அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்;
அன்றியே,
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” –திருவாய். 5. 10 : 11.என்றதனை நினைக்கிறாராதல்.

தன் மாய வினைகளையே அலற்றி –
அவனுடைய ஆச்சரியமான செயல்களையே வாய் விட்டுத் துதி செய்து இரவும் நன் பகலும் தவிர்கிலன்-
பகவானுடைய அநுபவத்திற்கு உறுப்பாகாத அன்றே அன்றோ
சுடர் கொள் இராப் பகலாக இருப்பது; – திருவாய். 2. 1 : 4.-(அக்னி கக்கும் இரவாக அன்றோ அங்கு )
அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார்.
பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது,

என்ன குறைவு எனக்கே –
“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்று கொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேச விசேடம் தேடி
அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதி சோறு கட்ட வேண்டும்படி குறைவாளனா யிருந்தேனோ?
ஒரே தன்மையதான அநுபவம் அன்றோ அங்கு உள்ளது;
“காலம் ஸபசதே தத்ர ந கால: தத்ரவை ப்ரபு:” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா.
பட்டைப் பொதி சோறு – பாக்குப் பட்டையில் கட்டுகிற சோறு.
பல இருதுக்களில் விளையாடினார்” –“விஜஹார பஹூந் ருதூந்”- என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25. என்கிறபடியே,
அந்த அந்தக் காலங்கள் தோறும் உண்டான அநுபவ விசேடங்களை அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு குறை உண்டோ?
அன்றிக்கே,
பரத்துவ அநுபவமே அன்றோ அங்கு உள்ளது;
சீல குண அநுபவமுள்ளது இங்கே அன்றோ. ஆதலின் “என்ன குறைவு எனக்கே” என்கிறார் என்னுதல்.
(ஒரே திவ்ய தேசம் அங்கு இங்கு பஹு வாக உள்ளவை அன்றோ )

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-4-குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்-ப்ரவேஸம்

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி —

இப்படி திரு விண்ணகரிலே எம்பெருமானைக் கண்டு அவனுடைய ஸர்வ நியந்த்ருத்வ ஸுசீல்ய ஸுந்தர்யாதி கல்யாண குணங்களை
அநு பாவித்து நிரதிசய ப்ரீதி யுக்தராய் சம்ஹு ராந்தரான ஆழ்வாரைக் கண்டு எம்பெருமான் ப்ரீதனாய் –
பிறந்தவாற்றில் இவருடைய இழவு எல்லாம் தீரும்படி
தன்னுடைய திவ்ய அவதாரம் தொடங்கித் திரு நாட்டில் எழுந்து அருளுகை பர்யந்தமாக நடுவுள்ள
ஸர்வ திவ்ய சேஷ்டிதங்களையும் காட்டி அருளக் கண்டு அநு பவித்து-
தத் அநுபவ ஜெனித நிரவதிக நிரவ்ருதியாலே பரிபூர்ண மநோ ரதனானேன்-என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —

ஸ்ரீ ராம விருத்தாந்தத்திலே திருவடியைப் போலே ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்திலே சக்தரான ஆழ்வார் தாம் பிரணய கோபத்தால்
-மின்னிடை மடவாரிலே -எம்பெருமானோடு சம்ச்லேஷிப்பேன் அல்லேன் -என்று மிறங்கின நம்மை –
ஆவேன் என்னப் பண்ணி அருளின உபகாரகத்தை -நல்குரவிலே அனுசந்தித்து –
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் என்கையாலே -தூரஸ்தன் என்று இன்னாதான ஆழ்வார்
-அணியவாய் எண்ணி முடிக்க ஒண்ணாதனவாய் உள்ள ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தங்களை காட்டி அருளக் கண்டு
-தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று மநோ ராதித்த படியே இனிதாகப் பேசி அனுபவிக்கிறார்
பிறந்த வாற்றில்-பல ஹானியால் பேச மாட்டிற்று இலர்
குரவை ஆய்ச்சியரில் -எல்லா சேஷ்டிதங்களையும் தரித்துப் பேசுகிறார்-

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி —

நாலாம் திருவாய் மொழியில் -கீழ் விருத்த விபூதி யோகத்தால் தன் அகடி கடநா சக்தியைக் காட்டி -பல பிரதான சமர்த்தன்
என்கிற பிரதிபத்தியைப் பிறப்பித்த ஸர்வ ஸ்மாத் பரனுடைய ஸூக மத்வ ஸூச நார்த்தமாக
அவனுடைய அனந்த ஸாயித்தவத்தையும்
ஆச்சர்ய ஆகாரவத்தையும்
அதிசயித உஜ்ஜ்வல்யத்தையும்
அப்ராக்ருத விக்ரஹவத்தையும்
அர்த்திகளுக்கு அபேக்ஷிதா கரத்வத்தையும்
அந்நிய அபிமான நிவர்த்தகத்வத்தையும்
அதிசயித போக்ய ஆகாரத்தையும்
அர்த்தியாயும் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளூம் படியையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
பரஞ்சோதி ஸ்வரூபவத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகாரனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய மநோ ஹரியானா அகில சேஷ்டிதங்களையும் இங்கே இருந்து
அனவரத அனுபவம் பண்ணப் பெற்ற எனக்கு ஆர் இனி நிகராவர் என்று ஹ்ருஷ்டராய்க் கொண்டு
அவனுடைய ஸூப ஸூகத்வத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி –

பிறந்தவாற்றிலே குணங்களை தரித்து நின்று அனுபவிக்க வல்லனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புக்கார்
-திரு வண் வண்டூரில் தூது விட்டார் –
அவன் வரக் கொண்டு மின்னிடை மடவாரிலே ப்ரணய ரோஷத்தால் அகலப் புக்க தம்மைச் சேர விட்ட உபகாரத்தை அனுசந்தித்தார் –
சர்வ நியந்தாவான மேன்மை யுடையவன் என்னை தாழ நின்று பொருந்த விட்டுக் கொள்வதே -என்று உபகார ஸ்ம்ருதியால் ஏத்தினார் –
இதில் ஸ்ரீ கிருஷ்ண அவதார சேஷ்டிதங்களை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்று திருவடி ஸ்ரீ ராமாவதராத்திலே பிரவணனாய் இருக்குமா போலே இவரும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யாயிற்று பிரவணராய் இருப்பது
மாசறு சோதியில் -சேணுயர் வானத்து இருக்கும் –என்று தூரஸ்தன் -என்று இன்னாதாரான இழவு தீர
இந்த லோகத்தில் ஸ்ரீ பிருந்தாவனத்தில் பெண்களோடு பரிமாறின பரிமாற்றத்தைக் காட்டிக் கொடுக்க அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார்
மானேய் நோக்கிலே தொல் அருள் நல் வினையால் சொல்லக் கூடுங்கோல் -என்று நாக்கு நீர் வந்து திரு நாமம் சொல்வது என்றோ
என்று ஆசைப்பட்ட இழவு தீர ஸ்ரீ கிருஷ்ண குணங்களை அனுபவித்து பேசி ப்ரீதர் ஆகிறார்
சன்மம் பல பல -விலேயிலும் -ஒரு குறைவிலன் என்றார்
இதிலும் என்ன குறைவு எனக்கு என்றார்
அதுக்கும் இதுக்கும் வாசி என் என்னில் -அங்கு சம்சாரிகளில் காட்டில் வ்யாவருத்தனாகப் பெற்றேன் என்றார்
இதில் குண அனுபவ ப்ரீதி பிரகர்ஷத்தாலே எனக்கு ஒரு குறைவு இல்லை என்கிறார் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி —

இத் திருவாய்மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பர்.
அவனும் இராமாவதார மல்லது போக்கி அறியான்; அவனுடைய பிரபந்தமும் அப்படியே.
இவரும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்;
இத் திருவாய்மொழி கிருஷ்ணனுடைய சரிதை ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது.

அன்றிக்கே,
“சூரனே! என் எண்ணமானது வேறு இடத்தில் செல்வது இல்லை” என்று கொண்டு
‘பர நிலையும் கூட வேண்டேன்’ –
“ஸநேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி”- என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி என்னுதல்.

“சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்” -5-3-9-என்கிறபடியே, கிட்டி நின்று அநுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீர,
பூமியிலே ஆகப் பெற்றது;-அவதரித்து என்றபடி –
“தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங் கொல்?” -5-9-10-என்றே யன்றோ இவர் ஆசைப் பட்டது.
அதாவது,
நா நீர் வந்து திருநாமம் சொல்லுகையாகிறது புண்ணியத்தின் பலமே அன்றோ.

“பிறந்தவாறும்”-5-10- என்ற திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
அவை இறந்த காலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே,
சம காலத்தில் நடக்கும் செயல் போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை
‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து,
இப்படி வல்லார் இவன் அல்லது இலர் கண்டீர்-6-3- என்று தலைக் கட்டுகிறாரா யிருக்கிறது.
(இப்படி 5-3- தொடங்கி 6-3 -இவ்வாறு தலைக்கட்டி இத்திருவாய் மொழி என்கிறார் ஆயிற்று )

“சன்மம் பல பல”-3-10- என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே;
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில்,
அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை;
இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க,
தம் வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய் விடுகிறார்.

சன்மம் பல பல-3-10-அவதார சேஷ்டிதங்கள்
பிறந்தவாறும் -5-10 -அவதார சேஷ்டிதங்கள்
6-2/6-4- நேரே சங்கதி -6-3- பிராசங்கிகம்-சேர மாட்டேன் என்றவரை சேர்த்த வ்ருத்த கடநா சாமர்த்தியம் இடைச் சேர்க்கை
4-10-/5-2—நேரே சங்கதி –5-1- போலே – உபகார பரம்பரை சொல்லி அருளியது போலே –

சேஷத்வம் பாரதந்த்ர்யம் மறந்து -இருப்பதே ஆழ்வார் தம் வசம் இல்லை –
எனக்கு நிகர் யார் -ஸ்வாதந்த்ர்யம் தோன்ற அருளிச் செய்கிறார்
கிருஷ்ணானுபவம் இப்படி பண்ண வைக்கிறதே –

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-11-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் இன்றியே சர்வாத்மாக்களும் கண்டு வாழுங்கோள் என்று அவர்கள் கண் முகப்பே
நிமிர்ந்த தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்திலும்
எம்பெருமானுடைய ஸர்வ நியந்த்ருத்வத்தைச் சொன்ன இத்திருவாய் மொழியை வல்லார்
அயர்வறும் அமரர்களுக்கு நிஸ் சம்சயமாக பிரதம பூஜ்யராவர் என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-11-

நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு போக்யராவார் என்கிறார் –

காண்மின்கள்  உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னை-
லோகத்தில் உள்ள எல்லீரும் கண்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் என்று அவர்கள் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-
ஆயிரம் திருவாய் மொழிகளிலும் அவனுடைய ஜெகன் நிர்வாகத்தை சொன்ன இது திரு வாய் மொழி வல்லார்
கோணைஇன்றி -மிறுக்கு இன்றி
குரவர்களே.-கௌரவ்யர்

——————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-11-

அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள் நித்ய ஸூரி களுக்கு
நித்ய கௌரவ்யராவார்கள் -என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-லோகத்தேர் இத்தைக் காணுங்கோள் என்று
பரஸ்பர விருத்தரானவர்கள் கண் எதிரே வளர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன–திருவடிகளை யுடைய த்ரிவிக்ரம அப தானத்தில் போலே
பரஸ்பர விருத்த பதார்த்தங்களில் பலவகையும் பரந்த சர்வேஸ்வரனை
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்-பகவத் ஆஞ்ஞா ரூபமாய் இருக்கிற ஆயிரத்தில்
திரு விண்ணகர் விஷயமான இப்பத்தையும் வல்லவர்கள்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–ஒரு மிறுக்கு அற நித்ய ஸூ ரிகளுக்கு என்றும் கௌரவ்யர் ஆவர்கள்
இது கலி விருத்தம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-11-

நிகமத்தில் இது திருவாய் மொழி வல்லார் நித்ய ஸூரிகளுக்கு கௌரவ்யர் என்கிறார் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-தாளிணையன்தன்னைக்
நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே
குருகூர்ச் சடகோபன் சொன்ன-
இந்த ஸுலப்யத்தை அநு சந்தித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன திரு விண்ணகர் விஷயமான இப்பத்தை அப்யஸிக்க வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.
மிறுக்கு இன்றிக்கே நித்ய ஸூ ரிகளுக்கு என்றும் ஓக்க கௌரவ்யர் ஆவார்

——–

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-11-

காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

ஸூரிகளுக்கு நித்ய கௌரவ்யர்கள் ஆவார்கள்
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த-திருவிக்ரமன் திருவடிகள் -செப்பிடு வித்தை போலே
குனிந்து இருக்க அறியாமல் தீண்டி -சின்ன திருவடியைக் காட்டி -நிமிர்ந்த -பரஸ்பர வ்ருத்தரானவர்கள் உலகீர் –
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன-அபதானம் போலே -பல வகைகளிலும் பரந்த -சர்வேஸ்வரன் -திரு நகரிக்கு நிர்வாகர்
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்-நியமன ரூபம் -பகவத் ஆஜ்ஞ்ஞை ரூபம் –
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே-கௌரவர் -மதிக்கத் தக்கவர்கள்
கோணை மிருக்கு குற்றம் -பொருந்தாமை இல்லாமல் -நித்ய ஸூரிகளுக்கு என்றும் கௌரவர் ஆவார்கள்

உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளை யுடைய சர்வேஸ்வரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த
ஸ்ரீ சடகோபரால் அருளிச் செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப் பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற
திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப் பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி
நித்திய ஸூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.
சடகோபன் சொன்ன திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.

முடிவில், இத் திருவாய்மொழி வல்லார் நித்திய ஸூரிகளுக்கு நாள் தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை –
‘உங்கள் தலைகளிலே நான் காலை வைக்கக் கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து,
நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே
இவர்கள் கண் முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளை யுடையவனை.

காண்மின்கள் –
இது ஓர் ஆச்சரியம் என்ன வேண்டிற்றுக் காணும் ‘தலைகளிலே அடி படப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.
அவன் காட்டியதும் வியப்பு –
ஆழ்வார் இப்படி பொருந்தாததை பொருந்த விட்டாரே என்று வியந்து அருளிச் செய்ததார் என்றுமாம் –
அவனாக தீண்டியதை இறாய்த்து இருப்பார்களும் உண்டே என்ற ஆச்சர்யமுமாம் –

குருகூர்ச் சடகோபன் சொன்ன –
இந்தச் சௌலப்யத்தை அநுபவித்தவர் சொன்ன வார்த்தை யாகையாலே ஆப்தம் என்கை.

ஆயிரத்து ஆணை திரு விண்ணகர் இப் பத்தும் வல்லார் –
ஈஸ்வரனுடைய உலக நியமனத்தைச் சொன்ன இத் திருவாய்மொழி வல்லார்.
ஆணை -ஐஸ்வர்யம் -நியமனம் –
நியமன சாமர்த்தியம் காண அர்ஜுனன் வேண்ட கீதாச்சார்யன் காட்டி அருளினான் -அதே போலே இங்கும்

விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் –
நித்திய ஸூரிகளுக்குக் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் கௌரவிக்கத் தக்கவராவர்.

இதில் கோணை இல்லை –
ஒரு மிறுக்கு இல்லை. என்றது, என் சொல்லியவாறோ? எனின்,
சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்திய ஸூரிகளுக்கு, நித்திய சம்சாரியானவன் இதனைக் கற்ற அளவிலே
கௌரவிக்கத் தக்கவராதல் எங்ஙனே? என்னில்,
அங்கே இருந்து வைத்தே ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியை நினைத்து உவகையராம் நிலையுள்ளது முக்தர்க்கு ஆகையாலே,
இங்கே இருந்தே, அவர்கள் அநுசந்தானத்தைச் செய்கிற இவனை,
‘சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள் என்பதனைத் தெரிவித்தபடி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.- என்ற திருக் குறளையும்,
அதன் பரிமேலழகர் உரையையும் இங்கே நோக்குக.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-10-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-10-

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

சாயா தப அல்ப மஹத் தீர்க்க ஹ்ரஸ்வ சராசரங்களை பிரகாரமாக வுடையனாய் -மதுரமாகப் பாடுகிற வண்டுகள் வாழுகிற
திரு விண்ணகர் என்னோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெற்ற தேசமாகையாலே இனி
ஆத்மார்த்தமாக இவ்விடத்தை விடேன் என்று எழுந்து அருளி இருந்த எம்பெருமானுடைய
திருவடிகள் அல்லது நமக்கு மற்றொரு கதி இல்லை –
அவனுடைய கடாக்ஷம் பெறுவதற்கு முன்பு என்னுடைய சத்தை இல்லாமையாலும்
அவன் கடாக்ஷித்து அருளினவாறே நான் உளனாகையாலும்
நமக்கு அவன் அல்லது கதியில்லை என்னும் இடம் எல்லாருக்கும் ப்ரத்யஷிக்கலாம் -என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-10-

அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

சிறுமை பெருமை– அணுத்வ மஹத்வங்கள் /
குறுமை நெடுமையுமாய்ச்– நடுவுள்ள ஹரஸ்வ தீர்க்கங்கள் / -சுழல்வன நிற்பன- ஸ்தாவர ஜங்கமங்கள் /
அவை அல்லனுமாய்-இவற்றில் இவனுக்கு வியாப்தி கர்ம நிபந்தம் அல்லாமையாலே -தன் பக்கல் அவற்றின் தோஷம் தட்டாது ஒழிகை
மழலை வாய்வண்டு-இனிய மிடற்று ஓசை யுடைய வண்டு-

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-10-

அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள்
அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்–தாப சாந்திகரமான சாயையும் -தாபகரமான ஆதபமும் –
சிறுமைக்கு எல்லையான அணுத்வமும் பெருமைக்கு எல்லையான மஹாத்த்வமும் –
மத்யம பரிமாணங்களில் யுண்டான ஹ்ரஸ்வத்மமும் தீர்க்கத்வமுமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்-சராசராத்மகமான மற்றுமுள்ள பதார்த்தங்களுமுமாய் –
இப்படி ஸர்வ சரீரியாகா நிற்கச் செய்தே அவற்றினுடைய ஸ்வ பாவத்தை யுடையவன் அல்லாதவனுமாய் —
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்–மௌக்யமான வாக் வ்யவஹாரத்தை யுடைய வண்டுகள்
ஸ்வ போக்ய லாபத்தாலே வாழும்படியான திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனுடைய
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–திருவடிகளை ஒழிய வேறு ஒரு ரஷக வஸ்துவை யுடையோம் அல்லோம் –
இது நிரூபித்துக் கொள்ளுங்கோள் –

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-10-

அவனுடைய திருவடிகள் அல்லது மற்றொரு ரக்ஷகம் இல்லை என்னும் இடத்தை புத்தி பண்ணுங்கோள் என்கிறார் –

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-

நிழல்வெய்யில்-சீத ஹே துவான நிழலும் -உஷ்ண ஹேதுவான வெய்யிலும்
சிறுமை பெருமை -அணுத்வ மஹத்வங்கள்
குறுமை நெடுமையுமாய்ச்-மத்யம பரிமாண வஸ்துக்களில் உண்டான ஹரஸ்ய தீர்க்கங்கள்
சுழல்வன நிற்பன -ஸ்தாவர ஜங்கமங்கள்
மற்றுமாய் -அ நுக்தமான சர்வமுமாய்
அவை அல்லனுமாய்-தத் கத தோஷைரஸம்ருஷ்டனாய் இருக்கை
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர்
மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்
மன்னு பிரான்-கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை
காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-10-

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-

பரஸ்பர வ்ருத்த ஆகாரமான -சகல சராசரங்கள் -விபூதி -சர்வேஸ்வரன் திருவடிகளைத் தவிர
வேறு ரஷகம் இல்லை-காண்மின்களே.- நீங்களே நிரூபித்திக் கொள்ளலாம்
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்-அணு மஹத்-எல்லை -நடுவில் குறுமை நெடுமை -அனைத்துமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்-சரம் ஜங்கமம் அசரம் ஸ்தாவரம் -சர்வ சரீரி -ஸ்வ பாவம் இல்லாதவன் –
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்-முக்தமான வாய் வியாபாரம் -பாடும் -போக்யத லாபத்தாலே வண்டுகள் வாழும் நித்ய வாசம்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.-வேறே ரஷகத்வம் இல்லையே -மனசால் காண்மின்கள்-

நிழலும் வெய்யிலுமாகி, சிறுமையும் பெருமையுமாகி, குறுமையும் நெடுமையுமாகி, திரிகின்றவையும் நிற்கின்றவையுமாகி, மற்றுமாகி,
அவை அல்லனுமாகி, இசை பாடுகின்ற இளமை பொருந்திய வண்டுகள் வாழ்கின்ற திரு விண்ணகரில் எழுந்தருளியிருக்கின்ற பிரானுடைய
திருவடிகளே அல்லாமல் மற்றும் ஒரு பற்றுக்கோடு இலோம்; நீங்களே காணுங்கோள்.
அல்லனுமாய் மன்னு பிரான் என்க. களைகண் – பற்றுக்கோடு.

அவன் திருவடிகள் அல்லாமல் வேறு ஒரு ரக்ஷகம் இல்லை என்னுமிடத்தைப் புத்தி பண்ணுங்கோள் என்கிறார்.

நிழல் வெய்யில் –
குளிர்ச்சிக்குக் காரணமான நிழலும். உஷ்ணத்திற்குக் காரணமான வெய்யிலும்.

சிறுமை பெருமை –
சிறுமைக்கு எல்லையான அணுத்வமும், பெருமைக்கு எல்லையான மகத்வமும்

குறுமை நெடுமை
மத்திம அளவிலுண்டான குறுகுதல் நீளுதல்கள்.

சுழல்வன நிற்பன –
ஜங்கமங்களும், தாவரங்களும்.

மற்றுமாய் –
சொல்லப்படாதன எல்லாமாய். ‘மற்றும்’ என்றது சொல்லப்படாதனவற்றைத் தழுவுகின்றது.-
அநுக்த சமுச்சயம்-

அவை அல்லனுமாய் –
அவற்றுக்கு அந்தர்யாமியாய் நிற்கச்செய்தே அவற்றின் தோஷங்கள் தட்டாதபடி நிற்பான் என்று
மூவுலகங்களுமாய் அல்லனாய்-6-3-6- சொல்லப்பட்டதே அன்றோ;
இனி, இங்கு என்? என்னில்,
அவற்றிற்கு வரும் அவஸ்தைகளை யுமுடையனல்லனாய் நிற்பன் என்பதனைத் தெரிவித்தபடி.
அவை: சேதனனிடத்தே உள்ள சுக துக்கங்களும்,
அசேதனத் திடத்தேயுள்ள வளர்தல் முதலானவைகளுமாம்.
அகர்ம வச்யத்வம் அங்கே சொல்லி –
அவற்றுக்கு வரும் அவஸ்தைகள் –
பாப புண்ய ரூப கர்மங்களுக்கு வரும் சுக துக்கங்களும் அல்லன் என்கிறார் இங்கே

மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் –
பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே
நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

கழல்கள் அன்றி மற்று ஓர் களை கண் இலம் –
அவன் திருவடிகளை ஒழிய வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம்.
“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே,
திருவடிகள் தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்’ என்கிறார்.
“மா மேகம் சரணம் வ்ரஜ”-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.
“மறு பிறப் பறுக்கும் மாசில் சேவடி”- என்பது, பரிபாடல்.

காண்மின்களே –
இது அர்த்த வாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.
அர்த்தவாதம் – புனைந்துரை.

சமன் கொள் வீடு கொடுக்கும் தடம் குன்றம் போலே திருவடியே சரண் –ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகள் –
அவன் விட்டாலும் அவள் விட மாட்டாள் -இருவரும் விட்டாலும் விடாத திண் கழல் –
ததீய சேஷத்வமே திண்மை என்றபடி –

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-9-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-9-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

சுட்டுரைத்த நன் பொன் ஒளியையும் அத்யுஜ்ஜ்வலமான ரத்னத்தின் ஒளியையும் யுடைத்தான திரு உடம்பை யுடையனாய்
அழகியனாய்த் தன் ஒப்பார் இன்றியே இருந்த திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் அழகாலே எனக்கு ஸ்வாமியாய்
தன்னுடைய ஸுசீல்யத்தாலே பெற்ற தாயும் வளர்த்த தாயும் பண்ணக் கடவ ஸ்நேஹத்தை என் பக்கலிலே பண்ணி
ஸ்வ விஸ்லேஷ ஜெனிதமான என்னுடைய நிரவதிக சந்தாபம் எல்லாம் போம்படி அதி சீதளமாய் ம்ருத சஞ்ஜீவனமான
தன் திருவடிகளின் நிழலை எனக்குத் தந்து அருளினான் -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-9-

என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்-

என்னப்பன்  எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

எனக்கு உறுதியான என் பிதாவாய் -தோழியாய் -பொன்னும் மணியும் முத்தும் போலே போக்யனாய் -எனக்கு அவ்வளவும் அன்றிக்கே மிகவும் உபகாரகனாய்
என் போல்வாருக்கு எளியனாம் படி திரு விண்ணகரிலே வருகை யாகிற உபகாரகத்தை பண்ணினவன் -உபகாரகனாம் இடத்திலே தனக்கு ஒப்பு இல்லாதவன் –

—————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-9-

அநந்தரம் பரஸ்பர விருத்த ஆகாரமான பந்து வர்க்கமும் ஸ்ப்ருஹணீய வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாக யுடையனான
தன்னுடைய உபகாரகத்வத்துக்கு ஒப்பில்லாத சர்வேஸ்வரன் தன்னுடைய பாதச் சாயையை எனக்குத் தந்து அருளினான் என்கிறார் –

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்–எனக்கு அசாதாரணனாய் என் சத்தா ஹேதுவாய் இருந்துள்ள பிதாவாய்
அந்த பும்ஸ்த் வத்துக்கு விருத்தமான ஸ்த்ரீத்வத்தை யுடைய செவிலித் தாயானவளாய் –
அவளைப் போலே வளர்த்து விடுகை யன்றிக்கே பெற்றவளாக வேறுபாட்டையுடைய நல் தாயாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்–பொன் போலே தன்னுடைய ஸ்ப்ருஹணீயதையை பிரகாசிப்பித்தும் –
அதில் காட்டில் உஜ்ஜ்வல்யத்தாலும் மஹார்ஹத்தையாலும் வேறுபட்ட ரத்னம் போலே தன்னுடைய தேஜஸ்விதையை பிரகாசிப்பித்தும்
முத்துப் போலே தன் சீதளமான நீர்மையை பிரகாசிப்பித்தும் -இப்படி பஹுமுகமாக-எனக்கு உபகாரகனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்–ஓளி விடும்படி பொன்னான மதிலால் சூழப்பட்ட திரு விண்ணகரிலே
வர்த்திக்கிற ஸர்வ ஸ்வாமியாய் -இப்படி ஸர்வ பிரகார உபகாரகத்வத்துக்கு
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–தனக்கு ஒப்பில்லாத மஹா உபகாரகனானவன்
தன் திருவடிகளின் நிழலை எனக்குத் தந்து அருளினான்

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-9-

என்னுடைய சிரமம் எல்லாம் தீரும் படி தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9-

என்னப்பன் எனக்காய்
பூதா நாம் யோ அவ்யய பிதா என்கிற போது வன்றிக்கே -எனக்கே யான பிதாவாய் –
இகுளாய் -தோழியாய் -இது தமிழர் நிர்வாகம் -நம்முடையவர்கள் செவிலித் தாய் -என்று நிர்வஹிப்பர்கள்-தாய்க்கு தோழியாய் இருக்கும் இ றே செவிலித் தாய் -அத்தைச் சொல்கிறது –
என்னைப் பெற்றவளாய்ப்-உடம்பு நொந்து பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-
பொன்னும் மணியும் முத்தும் போலே எனக்கு உபகாரகன் –
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
மின்னா நின்றுள்ள பொன் மதிள் சூழ்ந்த திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகை யாகிற உபகாரத்தை பண்ணினவன் –
தன்னொப்பார் இல்லப்பன் –
உபகாரகரில் தன்னோடு ஒப்பார் இல்லாத உபகாரகன் -ப்ரணய ரோஷத்தால் நான் அகலப் புக தான் தாழ நின்று பொருந்த விட்டுக் கொண்டவன் –
தந்தனன் தன தாள்நிழலே.-
தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-9-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-

நிதானப் பாசுரம் இது -பரஸ்பர வ்ருத்த ஆகாரம் பந்து வர்க்கம் -ஸ்ப்ருஹணீய வஸ்து -பிரகாரம் -உபகாரத்வத்துக்கு ஒப்பு இல்லாத
சர்வேஸ்வரன் பாதச் சாயை தந்து அருளினான்
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்-சத்தைக்கு ஹேது இவன் -இகுள் -வளர்த்த தாய் -ஸ்த்ரீத்வம்
செவிலித்தாய் -பெற்றவள் நல் தாய் -பந்து வர்க்கத்தில் வேறுபாடு
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்-பொன் போலே ஸ்ப்ருஹணீயத்வம் பிரகாசிப்பித்தும் –
அதில் காட்டில் ஔஜ்வல்யத்தால் மிக்கு மஹார்கதை-ரத்னம் போலே தேஜஸ் பிரகாசிப்பித்தும்
அதில் காட்டில் நீர்மை குளிர்த்தியாலும் வியார்வர்தமான -முத்தப்பன்-நீர்மையை பிரகாசப்படுத்தி -என்னப்பனுமாய்-பஹு முக உபகாரகன்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த அப்பன்-சர்வ ஸ்வாமி -மதில்களும் பொன் மணி முத்து
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே–உபகாரத்தில் ஒப்பார் இல்லாத -திருவடி நிழல் தந்து அருளினான்

எனக்கு என் அப்பனாகியும், எனக்குச் செவிலித் தாயாகியும், என்னைப் பெற்ற தாயாகியும், பொன்னைப் போன்றவனும் மணியைப் போன்றவனும்
முத்தைப் போன்றவனும் என் அப்பனும் ஆகியும், பிரகாசிக்கின்ற அழகிய மதிள்களாற் சூழப்பட்ட திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி யிருக்கின்ற அப்பன், தனக்குச் சமானமானவர்கள் இல்லாத அப்பன் தன்னுடைய திருவடிகளின் நிழலைத் தந்தான்.
எனக்கு என்னப்பன் ஆய் என்று மாற்றுக. இகுளை – தோழி. ஆய் ஆய் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அவன்தன தாள் நிழல் தந்தனன் என்க.

எனக்குச் சரணமான மாத்திரமே யன்று, மற்றும் எல்லாமும் அவனே என்கிறார்.
அன்றிக்கே,
எனக்கு எல்லா வகையாலும் உபகாரகனாம் தன் திருவடி நிழலை,
‘அல்லேன்’ என்ன,
வலிய எனக்குத் தந்தான் என்கிறார் என்னுதல்.

எனக்கு என் அப்பன் ஆய் –
எனக்கு அசாதாரணனாய்ச் சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய்.
பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப் போல் அன்றியிலே,
தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக் கடவ தமப்பனாய்.

இகுளாய் –
எனக்கு நடந்த செயலைப் பற்றிச் சொல்லுவதற்குரிய தோழியுமாய்.
இகுளை என்று தோழிக்குப் பெயர். அது கடைக்குறைந்து ‘இகுள்’ என நிற்கிறது.

என்னைப் பெற்றவளாய் –
வளர்த்துக் கொள்ளியான தாயைப் போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலே வைத்து நோக்கிப் பெற்ற தாயாய்.

பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் –
வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள;
எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன்.

மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் –
மின்னா நின்றுள்ள பொன் மதிளாலே சூழப்பட்ட திரு விண்ணகரிலே நின்ற உபகாரகன்.

தன் ஒப்பார் இல் அப்பன் –
சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்க வல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன்.

இதற்கு, ‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ,
‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள,
‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச் செய்வர்.

தன தாள் நிழல் தந்தனன் –
‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக,
“அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கை-மமதையைப்- போக்கி,

திருவடி நிழலை எனக்குத் தந்தான்.
அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.

திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி.
திருவடிகள் என்றும்- தண்டனை என்றும் பொருள்.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-8-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-8-

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

தன் திருவடிகளை பிராபிக்கைக்கு விரோதியான ஸமஸ்த பாபங்களையும் போக்கி ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளின் நிழலிலே
வைத்து அருளும் ஸ்வ பாவனாய் -ஆஸ்ரித விரோதிகளைத் தன் திருவடிகளில் சேராதே
அவர்களுக்கு அதி பயங்கர ம்ருத்யு பூதனாய் இருந்த எம்பெருமான்
தென்திசைக்குப் புகலிடமாகத் திருவிண்ணகரிலே புகுந்து அருளி இருந்து எனக்கு ப்ராப்யமாய் -எனக்கு த்ருஷ்டியாய் –
என்னைக் கொண்டு ஸர்வ சேஷ விருத்தியும் கொண்டருளி எனக்கு ஸ்வாமியானான் -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-8-

வன்சரண்  சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

எனக்கு சரணமான மாத்திரமே அல்ல -மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் —
அநந்ய பிரயோஜனரை பரிக்ரஹித்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தெற்கு திக்குக்கு சரணாக -எனக்கு ஸூ லபன்–என்னை அடிமை கொண்டு உபகரித்தவன் –

——————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-8-

அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் –
ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்-அநு கூலமான தேவர்களுக்கு அப்ரதி ஹராமான புகலிடமாய் –
பிரதி கூளரான அசுரர்களுக்கு குரூரமான ம்ருத்யுவுமாய்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்–தாத்ருஸ விஹாபத்தை யுடைய லௌகிகரை தன் பாதச் சாயையில்
ஒதுக்கியும் ஒதுக்காதுமாயுமாய் இருப்பானாய்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்–தெற்குத் திக்குக்கு புகலிடமான திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரனாய்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–என்னை அங்கீ கரிக்கைக்காக ஸ்ரீ கிருஷ்ணனாய்
என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவன் -ஸர்வ பிரகாரத்தாலும் எனக்கு அசாதாரணமான புகலிடம் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-8-

எல்லார்க்கும் புகல் என்ற மாத்திரம் அன்றிக்கே எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் –எனக்கு புகலான மாத்திரம் அன்றியிலே-மற்றும் எல்லாம் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் -என்கிறார் –

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தன் பாதச் சாயையிலே அநந்ய பிரயோஜனரை வைத்தும் -அல்லாதாரை பஹிஷ்கரித்தும் –
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
தக்ஷிணா திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மணா -என்கிறபடியே தெற்குத் திக்குக்கு சரணமான
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–
எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-8-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

அனுகூல பிரதிகூல விஷயங்களான ஸ்வ பாவங்கள் -சர்வேஸ்வரன் -ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் -எனக்கு அசாதாராண புகல் இடம்
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்-தேவர்களுக்கு -திண்ணிய சரண் -அசுரர்களுக்கு யமன் போலே
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்-தாத்ருச வேறுபாட்டை உடைய லௌகிகரை-இங்கும் தேவர் அசுரர் உண்டே
பாதச் சாயையில் வைத்தும் வைக்காமலும் –
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-தெற்குத் திக்குக்கு புகலிடம் –
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே-என் சுவாமி -சர்வ பிரகாரத்தாலும் சாதாரணமான புகல் இடம் –

தேவர்கட்குச் சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன் திருவடிகளின் நிழலிலே வைத்துக் காப்பாற்றியும்,
பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக் காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப் புகலிடமான திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே
எழுந்தருளி யிருக்கிற பிரான் என் கண்ணன் என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.
சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க.
கண்ணனாகிய என்னப்பன் என் சரண் என்க. என்சரண் – எனக்குச் சரண்.

எனக்குப் புகலான மாத்திர மன்றிக்கே, மற்றும் எல்லாமும் திரு விண்ணகர் சேர்ந்த பிரானே என்கிறார்.
எனக்கு விசேஷணமான புகல் என்கிறார் –
(எனக்கு சர்வ வித பந்து என்றும் எனக்கு விசேஷித்து புகல் என்கிறார் )

சுரர்க்கு வன் சரண் ஆய் –
தேவர்களுக்காகத் தன்னை அம்புக்கு இலக்கு ஆக்கி அவர்களை வலிய ரக்ஷகனாய். –
முப்பத்து மூவர் முன் சென்று –

அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களுக்கு ‘அந்தகன் தண்ணீர்’ என்னும்படி வெவ்விய கூற்றமுமாய் –
அந்தகன்-யமன் -தண் கூற்றம்
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்து -அடித்த அடியே போதுமே —

தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும் –
தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக் கொண்டும்.
சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும்.
உலகம் -அர்ஜுனன் -கண்ணனுக்கு அந்த அளவு சஹ்யம் -உயர்ந்தோர் மாட்டே உலகம் -திருவடி பற்றினவர்

தென் திசைக்குச் சரண் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“புண்ணிய சரித்திரங்களை யுடைய எந்த அகத்தியராலே தெற்குத் திக்கானது புகலிடமாகச் செய்யப்பட்டதோ”
“தஷிணா திக் கிருதா யேந ஸண்யா புண்ய கர்மணா”- என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 82.

பத்திக்கு வரம்பாகிய பார்த்தன் பல தீர்த்தம்
அத் திக்கினும் எத் திக்கினும் ஆம் என்றவை ஆடிச்
சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகித்
தத்திச்சொரி அருவித்தட அரவக்கிரி சார்ந்தான்.-என்பது, வில்லிபாரதம்.என்கிறபடியே,
தெற்குத் திக்கிற்குப் புகலிடமான திருவிண்ணகரிலே கிட்டின உபகாரகன்.
அவர் குரு முனிவர்
இவர் குருகை முனிவர் –
தென் திசை இருவருக்காக வணங்குகிறோம் –

என் சரண் –
எனக்குப் புகலிடம்.

என் கண்ணன் –
எனக்குப் பவ்யனானவன்.

என்னை ஆளுடை என் அப்பன் –
என்னை அடிமை கொள்ளுதற்கு உரியவன், எனக்கு உபகாரகன்.
‘உலகம்’ என்பது, உயர்ந்தோர் மாட்டு.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-7-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-7-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

நிரதிசய தேஜோ மய திவ்ய ரூபனாய் ஸமஸ்த ஹேயாஸ்பாத ஸர்வ ஜகச் சரீரனாய் -ஸமஸ்த ஹேய ரஹிதனாய் –
துர் விஜ்ஜே யனாய் ஆஸ்ரித அர்த்தமாக பிறந்து அவர்களோடு ஸம்ஸ்லேஷித்தும் பிரதிகூலர்க்குக் கைத்தவம் செய்தும்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய திருவடிகள் அல்லது ஒருவருக்கும் ஆத்ம ரஷகம் இல்லை என்கிறார் –

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-7-

பரஞ்சுடர்  உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் -அப்ராக்ருதமான திரு உடம்பை உடையவனாய் -ஜகத் சரீரனாய் -அதீந்திரனாயும் -கண் காண வந்து திருவவதாரம் பண்ணியும் -ஆஸ்ரிதற்காக அத் திரு உடம்போடு நெடு நாள் வர்த்தித்து அருளியும்-இப்படி ஸூ லபனாய் வைத்து தன்னை யுகாவாதார் திறத்து வஞ்சனங்கள் பண்ணியும் –

——

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-7-

அநந்தரம் ஆஸ்ரித அநாஸ்ரித விஷயமான ஆகார பேதத்தை யுடைய சர்வேஸ்வரன்
திருவடிகளே சரவர்க்கும் பிரபல ஆஸ்ரயம் என்கிறார் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்–ஆஸ்ரித அநு பாவ்யமான அப்ராக்ருத விக்ரஹத்தையும் –
அநாஸ்ரிதர்க்கு அநு பாவ்யமான ஹேயதையால் பூரணமான ஜெகதாகாரத்தையும் யுடையனாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்-அநாஸ்ரித விஷயத்தில் பிரகாசியாதேயும் –
ஆஸ்ரித விஷயத்தில் பிரகாசித்தும் – பிரகாசிக்கும் விஷயத்தில் ஸ்த்திரனாயும் -இதர விஷயத்தில் அஸ்த்திரனாயும் இருப்பானாயும் –
ப்ரஹ்ம ருத்ராதிகள் ஸ்வ அபிமத சித்த்யர்த்தமாக
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்–தம்தாம் தலைகளால் வணங்கும்படி திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரனுடைய
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–சமாப்யதிக தரித்ரமான ஸ்ரைஷ்ட்யத்தை உடைய
திருவடிகள் ஒழிய ஸர்வ சேதனர்க்கும் அபயஸ்த் தலமாம் படி பிரபலமான புகலிடம் வேறில்லை –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-7-

எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார் –

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–6-3-7-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
நிரவதிக தேஜோ ரூபனாய் -அப்ராக்ருதமான திரு மேனியை யுடையனாய் -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஜகத் சரீரனாய் –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
யமாத்மா நவேத-என்று அவனுக்கு அத்ருஷ்டனாய்க் கொண்டு அந்தராத்மாவாய் நின்றும் –
ஆவிர்ப்பூதம் மஹாத்மான -என்று ராம கிருஷ்ணாதி அவதாரங்களை பண்ணியும் -அவ்வோ இடங்களிலே பதினோராயிரம் ஆண்டு -நூறாண்டு -நின்றும்
தன் படிகள் சிசுபாலாதிகளுக்கு தோற்றாத படி பண்ணியும் -ஆஸ்ரிதற்கு தோற்றும் படி பண்ணியும் –கைதவம் -வஞ்சனம்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
ப்ரஹ்மாதிகள் தலையால் வணங்கும் படி திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் –
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.–
வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்
சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இ றே இருப்பது –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-7-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

ஆஸ்ரித அநாஸ்ரிதர் விஷயமான ஆகார பேதம் -உடைய சர்வேஸ்வரன் திருவடிகளே சர்வருக்கும் பிரபல ஆஸ்ரயம்
பொது நின்ற பொன் அம் கழல் -இது முக்கிய பாசுரம்-6-3-9-பாசுரம் பதிகத்துக்கு நிதான பாசுரம்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் -அழுக்கு-பதிந்த ஜகதாகாரம்
மரத்தை கடலை வணங்கி -இயற்கை -என்பர் அநாஸ்ரிதர் -பத்ம நாப அமரப் பிரபு –
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்-மறைந்தும் -அநாஸ்ரிதர் விஷயத்தில் -ஆஸ்ரிதர் விஷயத்தில் தோன்றியும் –
பிரகாசிக்கும் விஷயத்தில் ஸ்திரமாக -இதர விஷயத்தில் அஸ்திரமாகவும் –
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-ப்ரஹ்மாதிகள் தங்கள் அபேஷிதம் பெற வணங்கும்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-அவனே சரண்யன் –
சமாப்திக தாரித்ர்யம் பெருமை உடைய திருவடிகள் ஒழிய பிரபல ஸ்தலம் இல்லை

பிரகிருதி சம்பந்தம் இல்லாத திருமேனியை யுடையவனாயும், உலகத்தையே உருவமாக வுடையவனாயும், கண்களுக்கு வெளிப்படாது மறைந்தவனாயும்,
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்த அந்த அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று
நிற்கின்றவனாயும், வஞ்சனையான காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால் வணங்குகின்ற திரு விண்ணகரம்
என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பை யுடைத்தான
திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய உபாயம் வேறு ஒன்று இல்லை.
உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.

எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.

பரஞ் சுடர் உடம்பாய்-
“திரு மேனி ஒளிகளின் கூட்டம்” -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”-இது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 67.
என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான அசாதாரண திவ்விய விக்கிரகத்தை யுடையனாய்.

அழுக்குப் பதித்த உடம்பாய் –
முக் குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாக வுடையனாய். -நீராய் நிலனே -ஜகதாகாரமாய் –

கரந்தும் –
இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச் செய்தே
“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான் இல்லை” -“யம் ஆத்மா ந வேத”-என்பது, பிருஹதாரண்யக உப.-என்கிறபடியே,
இவற்றுக்குத் தோன்றாத படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும்.

தோன்றியும் –
காண வாராய் -திருவாய். 8. 5 : 2.-என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி
இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும்.
(ஹார்த்தமாய் கரந்தும் அவதரித்து தோன்றியும்)

நின்றும் –
நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். அவ்விடங்களிலே,

கைதவங்கள் செய்தும் –
வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும்.
அதாவது, அவதரித்து நிற்கச் செய்தே தன் படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும்
தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி.
(ஆஸ்ரிதர்களுக்கு விஸ்வரூபம் -சதுர் புஜங்களைக் காட்டி அருளையும் )

விண்ணோர் சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்-
‘பிரமன் முதலாயினோர்’ தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்கும்படி திரு விண்ணகரிலே நிற்கிற உபகாரகன்

வரம் கொள் பாதம் அல்லால் –
எத்தனையேனும் தண்ணியாரும் கிட்டலாம்படியான சிறப்புப் பொருந்திய திருவடிகள் அல்லது.-
வர -சிறந்த –

யாவர்க்கும் வன் சரண் இல்லை –
எத்தனையேனும் கிழார் கிழார்க்கும் வலிய புகல் இல்லை.
அவனை ஒழிந்த சரண்யர் அனைவரும் இவனைக் கொண்டு முழுகும் பேர்.
இவனைக் கொண்டு கரை ஏறுதற்குத் தக்க வலிய புகல் அவன் திருவடிகள் அல்லது இல்லை.
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்குமத்தனை.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-6-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-6-

மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

நிகில லோக தத் அந்தர் வர்த்தி ப்ரீதி அப்ரீதி லஷ்மீ அலஷ்மீ கீர்த்தி அகீர்த்தி ப்ரக்ருதி கல்யாண ஹேய சகல பதார்த்த
அந்தராத்ம பூதனாய் – கல்யாண பதார்த்த அந்தர்வர்த்திதையாலே யாதொருபடி தோஷம் தட்டாதே இருக்கும் அப்படியே
ஹேய பதார்த்த அந்தரவர்த்திதையாலும் நிர்த்தோஷனாய் இருக்கும்
அது எங்கனே அறிந்த படி என்னில் –
ஸமஸ்த ஹேயாஸ் பதமான என்னுடைய நெஞ்சிலே புகுந்து வைத்து ஒரு தோஷமும் தட்டாதே
நிரதிசய தீப்தி யுக்தனாய் இருக்கையாலே -என்கிறார் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-6-

மூ வுலகங்களுமாய்  அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய் -அவ்வளவு அன்றிக்கே மற்றும் விலக்ஷணமான விபூதியை உடையனாய் –
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப்-ஸ்ரீயும் அஸ்ரீயுமாய்
புகழாய்ப் பழியாய்த்-கீழ் சொன்ன இரண்டையும் உடையவர்களுக்கு வரும் இரண்டையும் சொல்லுகிறது
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்-அயர்வறும் அமரர்களும் வந்து தொழும் படியான திரு விண்ணகர் -எம்பெருமான் மேல் விழ செய்தே-தாம் அல்லேன் என்று இருந்த இருப்பை நினைத்து பாவியேன் என்கிறார் –

————

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-6-

அநந்தரம் விலக்ஷண அவிலக்ஷண பதார்த்தங்களை விபூதியாக யுடைய சர்வேஸ்வரன்
ஆஸ்ரித பவ்யத்தையால் வந்த உஜ்ஜ்வல்யத்தை யுடையவன் என்கிறார்

மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்–ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ குணத்ரயாத்மகத் வாதிகளால்
அவிலக்ஷணமான த்ரை லோக்யமும் -தத் பிரதிபட நித்ய விபூதி யுக்தனுமாய் -அப்படி விலக்ஷண அவிலக்ஷணாத்மக ராக த்வேஷங்களுமாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்–ப்ரீதி ஹேதுவான ஸ்ரீ லஷ்மியையும் அப்ரீதி ஹேதுவான ஜ்யேஷ்டையையுமாய்
தத் தத் கார்யமான புகழையையும் பழியையும் பிரகாரமாக யுடையனாய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-இந்த விபூதி யோகத்தால் வந்த நீர்மையை அநு பவிக்கைக்காக
ஸூரிகள் பொருந்தி தொழா நிற்கிற திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரன்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–தான் மேல் விழுந்து வரிலும் வைமுக்யம் பண்ணும் பாபத்தை யுடையேனான
என் நெஞ்சிலே நித்ய வாசம் பண்ணா நின்று கொண்டு அத்தாலே நிரதிசய உஜ்ஜ்வல்யத்தை யுடையனானான் –

———

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-6-

நான் அல்லேன் என்ன செய்தே  தன்னுடைய குண சேஷ்டிதங்களை காட்டி மறக்க ஒண்ணாத படி என்னோடே கலந்து அத்தாலே க்ருதார்த்தனாய் அத் உஜ்ஜவலனாய் இருக்கிறவன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கண்டீர் என்கிறார் –

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய்
க்ருதகம்-அக்ருதகம் – க்ருதாக்ருதகம் -இவற்றைச் சொல்லி அல்லனாய் என்கையாலே -இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்ய விபூதியை யுடையவனாய்
உகப்பாய் முனிவாய்-ராக த்வேஷங்களாய்
பூவிலவாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச்
நித்ய சூரிகள் நித்ய விபூதி போலே பொருந்தி தொழும் -ப்ரஹ்மாதிகள் வரை நாற்றம் பொறுக்க மாட்டாத தேசத்திலே -திரு விண்ணகரின் நீர்மையை அனுபவிக்க நித்ய ஸூ ரிகள்படுகாடு கிடக்கிற படி
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-திரு விண்ணகரிலே நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் -நித்ய ஸூ ரிகள் மேல் விழ இருக்கிறவன் தான் மேல் விழ -அல்லேன் என்று இருக்கிற படியை நினைத்து பாவியேன் என்கிறார்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே.–-போகு நம்பீ என்று சொல்லிற்று என் நெஞ்சை விட மாட்டாதவனைக் கிடீர் -நித்ய ஸூ ரிகளோடு கலந்ததில் காட்டில் கிடீர் என்னைப் பெற்ற பின்பு பிறந்த புகர்-நின்று இலங்கு முடியினாய் -என்றது இ றே-

——

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-6-

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-

விலஷண அவிலஷண பதார்த்தங்கள் -விபூதியாக உடைய சர்வேஸ்வரன் -ஆஸ்ரிதற்கு
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்-ஸ்ருஜ்யத்வ -கர்ம வஸ்யத்வ -குண த்ரயாத்மகத்வ பெருமை இல்லாத
தத் பிரதிபட நித்ய விபூதி ராக த்வேஷங்கள்-குணம் இங்கு கீழே த்ரவ்யம்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்-ஸ்ரீ லஷ்மி -சேஷ்டை சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து –
தத் தத் கார்யமான புகழுமாய் பழியுமாய் -பிரகாரம்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-இந்த விபூதி யோகம் -நீர்மையை அனுபவிக்க
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.-மின்னிடை மடவாரில் விலகிய பாவி -சேர்ந்ததால் வந்த ஔஜ்வல்யம்

மூன்று உலகங்களை யுடையனாயும் அல்லாத பரமபதத்தை யுடையனாகியும், மகிழ்ச்சியாகியும் சீற்றமாகியும், தாமரைப் பூவில் வசிக்கின்ற
திருமகளாகியும் மூதேவியாகியும், புகழாகியும் பழிப்பாகியும், தேவர்கள் மனம் மகிழ்ந்து தொழுகின்ற திரு விண்ணகர் என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளி யிருக்கின்ற உபகாரகன், பாவியேனாகிய என்னுடைய மனத்தின் கண்ணே நித்திய வாசம் செய்கின்ற மேலான ஒளி யுருவன் ஆவான்.
ஆய், சேர்ந்த பிரான் உறைகின்ற பரஞ்சுடர் என்க. தவ்வை – தமக்கை; மூதேவி.

‘நான் அல்லேன்’ என்னச் செய்தே தன் குணங்களையும் செயல்களையும் காட்டி மறக்க ஒண்ணாதபடி கலந்து அதனாலே
பேரொளிப் பிழம்பா யிருக்கிறவன் திரு விண்ணகரிலே நின்றருளின சர்வேஸ்வரன் கண்டீர் என்கிறார்.

மூன்று உலகங்களுமாய் –
மூன்று உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
கிருதகம் அகிருதகம் கிருதாகிருதகம் என்னும் மூன்று வகைப்பட்ட உலகங்களுமாய் என்னுதல்.

க்ருதகம் -அவாந்தர பிரளயம் -அழிந்து -கீழ் ஏழு லோகங்கள் மேல் மூன்று லோகங்கள்

மேல் உள்ள மக -க்ருதக்ருதகம் -ஆள் இல்லை -லோகம் இருக்கும் –
அவாந்தர பிரளயத்தில் மேல் லோகம் போவார்கள் -க்ருஹங்களுக்கு ஸ்வரூப நாசம் இல்லையே

ஜன தப சத்யம் -மூன்று லோகங்கள்-அக்ருதகம் –

அல்லனாய் –
அல்லாத மேலே யுள்ள உலகங்கட்கும் நிர்வாஹகனாய்.
அன்றிக்கே,
இந்த உலகங்களைச் சொல்லி ‘அல்லனாய்’ என்கையாலே,
இவ்வளவு அன்றிக்கே அசாதாரணமான நித்திய விபூதியையுடையவன் என்னுதல்.

உகப்பாய் முனிவாய் –
மகிழ்ச்சியும் முனிவுமாய்.

பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய் –
திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.
தவ்வை – திருமகள் அல்லாதவள்.

புகழாய்ப் பழியாய் –
திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,
தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.

தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் –
இந்திரன் முதலான தேவர்கள் இங்குள்ளாரால் கொடுக்கப்படுகின்ற ஹவிஸ்ஸினைக் கொள்ளும் போது
மூன்று யோஜனை தூரம் அவ்வருகே நின்று முகத்தைத் திரிய வைத்து வாங்கி வாந்தி பண்ணியாயிற்றுப் போவது;
அப்படி இருக்கிறவர்களுடைய வாசனையும் பொறுக்க மாட்டாத நித்திய ஸூரிகள்,
திருவிண்ணகர் பூமியிலே ஆகையாலே இங்கே வந்து பொருந்தி வசிப்பர்கள்.
அப்படிப்பட்ட திரு விண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

பாவியேன்-
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே அவன் மேல் விழத் தாம் இறாய்த்த படியை நினைத்துப் ‘பாவியேன்’ என்கிறார்.
நித்திய ஸூரிகள் தன் பக்கலிலே வந்து மேல் விழ, அதனைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து
மேல் விழா நிற்கக் கண்டீர் நான் ‘அல்லேன்’ என்றது.

மனத்தே உறைகின்ற-
இப்போது, நித்திய ஸூரிகளும் அந்த இருப்பும் கிடக்கக் கண்டீர் என் நெஞ்சிலே புகுந்து நித்திய வாசம் செய்யா நின்றான்.

பரஞ் சுடரே –
தனக்குப் புறம்பே உண்டான வசிக்கும் இடங்கள் கிடக்க, என் நெஞ்சிலே புகுந்து நின்றது
எனக்குக் காரியம் செய்தானாய் இருக்கை யன்றிக்கே ‘தன் பேறு’ என்று தோற்றும்படி பேர் ஒளியன் ஆனான். என்றது,
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘இவரை இழக்கிறோமோ?’ என்று வந்த உறாவுதல் தீர,
இவரைப் பெற்ற பின்பு அதனாலே
“நின்றிலங்கு முடியினாய்!” –திருவாய். 6. 2 : 8.-என்கிறபடியே வடிவிலே பிறந்த வேறுபாடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-6-3-5-

April 30, 2024

ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-5-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

ஆர்ஜவ அநார்ஜவ சித நீல ஸத்ய அஸத்ய யவ்வன வார்பக நவத்வ அநவத்வாதி ரூபனான எம்பெருமான்
ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்த நிகில ஐந்து பரி பூர்ணமான ஸர்வ லோகங்களுக்கும் ரக்ஷகன் -என்கிறார் –

——

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-5-

கைதவம்  செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

சிறியார் பெரியார் என்னாதே-எல்லார்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என்கிறார் –
ப்ரஹ்மாதி பீபீலிகா அந்தமான சகல ஜந்துக்களும் அவனாக்கின சோலை -எல்லாரையும் ஓக்க ஸ்தாவரமாக பேசுகையாலே தந்தாமுடைய சகல நிர்வாஹத்வமும் பகவத் அதீனம் என்று கருத்து-

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-5-

அநந்தரம் உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ரூப ஸமஸ்தவாஸ்து பிரகாரகனான சர்வேஸ்வரனுக்கு
சகல ஜகத்தும் லீலா உத்யானம் என்கிறார் –

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்-அபக்ருஷ்டமான கௌடில்யமும் உத்க்ருஷ்டமான ஆர்ஜவமும் –
தத் தத் சத்ருசமான கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்-அப்படி உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ரூப ஸத்ய அஸத்யங்கள்-
யவ்வன வார்த்தகங்கள் -அபி நவத்வ ஜீர்ணதைகளுமாய்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-தொழில் படச் செய்யப்பட திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வேஸ்வரன்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–வைத்த லீலா உத்யானம் கிடிகோள் -ப்ரஹ்மாத்யுத்க்ருஷ்ட தேவதைகளை யுடைய மூவுலகும்

——

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-5-

சிறியார் பெரியார் என்னாதே சர்வர்க்கும் ரக்ஷகன் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார் –

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.–6-3-5-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
கிரித்திரிமம்–ஆர்ஜவம் –கறுப்பும் வெளுப்பும் –
மெய்பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
சத்யம் -அசத்தியம் -பால்ய-வர்த்தகம் -அத்யாதனமும் புராதனமும் –
செய்த திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புதிதாக செய்தாப் போலே -தொழிலை யுடைத்தாய் திண்ணிதான மதிள்-பெய்த காவு கண்டீர் -பெருந்தேவுடை மூவுலகே.-
ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான ஜந்துக்கள் அவனாக்கின சோலை – மூவுலகே.-மேலும் கீழும் நடுவும் –பெய்த காவு-உண்டாக்கின சோலை -சர்வரையும் ஸ்தாவரமாக சொல்லுகையாலே -சர்வருடைய ரக்ஷணமும் பகவத் அதீனம் என்கை -மின்னிடை மடவாரிலே -பொருந்தோம் என்றதுவும் ஸ்வ அதீனம் அன்று என்கை –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-5-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-

பிரகாரம் -சகல ஜகத்தும் லீலா உத்த்யானம் தோட்டம்
கை தவம் செம்மை கருமை வெளுமையுமாய்-தாழ்ந்த உத்க்ருஷ்ட -அதன் நிறமும் –
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்-சத்ய அசத்திய -யுவான -அபி நவம் -புதியவை ஜீரணம் பழைமை
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்-நித்ய வாசம்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.-ப்ரஹ்மாதி உயர்ந்த தெய்வங்கள் உள்ள லோகங்களும் பெரிய தோட்டம் -லீலைக்காக

வஞ்சனையும் நேர்மையுமாகி, கருமையும் வெண்மையுமாகி, மெய்யும் பொய்யுமாகி, இளமையும் முதுமையுமாகி, புதுமையும் பழமையுமாகி,
செய்யப்பட்ட திண்ணிய மதிள்களாற் சூழப்பட்ட திரு விண்ணகரம் என்னும் திவ்விய தேசத்தில் நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான் வைத்து வளர்க்கின்ற சோலை காண்மின்; பெரிய தெய்வங்களை யுடைய இந்த மூன்று உலகங்களும்.
பெருந் தேவுடை மூவுலகு, ஆய், சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் என்க. கா – சோலை.

சிறியார் பெரியார் என்னாதே எல்லார்க்கும் ரக்ஷகன் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் என்கிறார்.

கைதவம் செம்மை –
வஞ்சனை நேர்மைகள்.

கருமை வெளுமை –
கருப்பு வெளுப்பு.

மெய் பொய் –
உண்மை இன்மை.

இளமை முதுமை –
இளமை கிழத்தனம்.

புதுமை பழமை –
புதுமையும் பழமையும்.
அத்ய தனமும் புராதனமும்

செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
காலம் செல்லச் செய்தேயும் இப்பொழுது செய்தாற் போலே இருக்கிற தொழிலின் புதுமையைச் சொல்லுகிறது.

பெய்த காவு கண்டீர் –
வைத்து ஆக்கின சோலை கண்டீர்.

பெரும் தேவுடை மூஉலகே –
ஈஸ்வர அபிமானிகளான தேவர்களையுடைத்தான மூன்று உலகங்களும்.

இத்தால், என் சொல்லியவாறோ? எனின்,
சோலையானது தனக்கு வேண்டும் பாதுகாவலை அறிவிக்கமாட்டாது அன்றோ;
நின்ற இடத்தே நின்று வாடிக் காட்டுகையும்,
பின்னர், வைத்து ஆக்கினவனே அதற்கு வேண்டும் காவலைச் செய்ய வேண்டுகையும்
முதலாயினவற்றை யுடைத்தாயிருக்கையாய் இருக்குமன்றோ.

அப்படியே, நியமிக்கின்றவர்கள் நியமிக்கப்படுகின்ற பொருள்கள் என்னும் வேற்றுமை அற எல்லாம்
அவன் புத்தியதீனமாக இருப்பதனைத் தெரிவித்தபடி.

அம்ருதம் பிந்து கடாஷம் முன்பு நஷ்டம் வாடிக் காட்டும் -சதுஸ்லோஹி
மின்னிடை மடவாரில் பொருந்தோம்-சேர மாட்டேன்- என்றதும் அவன் அதீனம்-

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –