திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன 3அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே.

    பொ – ரை : ஒத்தவர்களும் உயர்ந்தவர்களும் இல்லாத மிகப்பெரிய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனே! அவ்வப் பொருள்கட்குத் தக்க நிலைகளை உடையவனாகி வந்து அவதரித்தவனே! சுவாமியே! என்னுடைய உயிராகி, என்னைப் பெற்ற அந்தத் தாயாகித் தந்தையுமாகி, அறியாதனவற்றை எல்லாம் அறியச் செய்து நீ செய்த காரியங்களை அடியேன் அறியேன்.

    வி-கு : ‘அத்தா! தாயாகித் தந்தையாகி அறிவித்து நீ செய்தன அடியேன் அறியேன்,’ என்க. ‘இலையாய மாயா’ என்க, அறியாதன, செய்தன – வினையாலணையும் பெயர்கள்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேரவிட்டது நெஞ்சு அன்றோ?’ என்று, இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு, ‘நீர் அடி

அறியாதே, வழிப்போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார், ‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ? நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

    1எம்பார், திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த அளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த 2முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்; எம்பார், ‘அங்ஙன் அன்றுகாண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 3‘இசைவித்து’ என்கிறபடி, அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன்காண் பிரதம குரு’ என்று அருளிச்செய்தார்.

    ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா – 4‘பரம்பொருளுக்கு ஒத்தவனும் காணப்படுவது இல்லை; மிக்கவனும் காணப்படுவது இல்லை,’ என்கிறபடியே, ஒத்தவனும் மிக்கவனும் இல்லாதவனாய் இருப்பான். திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு 5தாரித்திரியம் உண்டு என்று அருளிச்செய்வார்,எம்பார், ‘என்னை அப்படி அங்கீகரித்த நீதான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ?’ என்பார், ‘ஒத்தார் மிக்காரை இலையாய’ என்கிறார். ‘இவ்வாச்சரியந்தான் என்னே!’ ‘மா மாயா’ என்கிறார். எப்பொருட்கும் ஒத்தாய – ஒத்தாரும் மிக்காரும் இலையாய நீயே, இதர சாதீயனாய் வந்து அவதரித்தாய்; அவையாவன, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்னும் பெயரோடும், இந்திரனுக்குத் தம்பியாகவும், இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும், விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும், நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.

1‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின், செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு. ‘ஆயின் எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்.

    ‘‘இப்படி அவதரித்துச் செய்தது என்?’ எனின், உயிராய் – இவ்வாத்துமாதான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கூடியவனாய் இருக்கை. இனி, ‘உயிராய்’ என்பதற்குத் ‘தாரகனாய்’ எனலுமாம். என்னைப் பெற்ற அத்தாயாய் – பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று இவன் பிரியத்தையே நடத்தக் கூடிய தாயாய். 4மற்றைத் தாயர்களை நீங்குதற்குப் ‘பெற்ற தாய்’ என்கிறார். தந்தையாய் – இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்து பெற்ற தாயும் இட்டு வைத்தற்கு ஒரு பை மாத்திரமாம் படி, இவன் தோன்றுவதற்குக் காரணனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாகி. தான், தனக்குத் தேடிக் கொள்ளும் நன்மையும், 5தான் உளனாய பின்னரே செய்துகொள்ள வேண்டுதலின், ‘உயிராய்’ என்றதனைச் சார, தாய் தந்தையர்களை அருளிச்செய்கிறார். அவ்வளவே அன்றி, அறியாதன அறிவித்து –

1ஆசாரியனாய் இருந்துவிரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து 2‘தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார். ‘ஆயின், இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள். 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது உபநிடதம். 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது தமிழ் மறை.

    அத்தா – மஹோபகாரகன் ஆனவனே! இவ்வுபகாரங்களை உடையவனாகையாலே செய்தான் என்கிறார். நீ செய்தன அடியேன் அறியேன்-ஸ்வாமியான நீ, அடியவனான என் பக்கல் செய்த உபகாரங்களை அடியேன் அறியேனே. ஒன்று இரண்டு ஆகில் அன்றே ‘இன்னது’ என்னலாவது? ஆகையாலே, ‘நீ செய்தன’ என்னுமித்தனை. செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ? அனுபவித்துக் 7குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ என்கிறார். 

7. குமிழிநீர் உண்கை -‘தண்ணீருக்குள் இருக்கிற மணலைத் தொடுகின்றவாறு

  தண்ணீருக்குள் புக்குக் கீழே இறங்குதல். நீரிலே குமிழி புறப்படுதல்’ என்பது பொருள்.

இதில் எம்பெருமானை கொண்டாடுகிறார் –
நெஞ்சை கொண்டாடி முதலில்
எம்பார் அருளி செய்த வார்த்தை
சம்வாதம் -பிரதம குரு யார் -முதலிகளில் சிலர் ஆச்சார்யர் அன்றோ
சிலர் அழைத்து கொண்டு சேர விட்ட ஸ்ரீ வைஷ்ணவர்
அவன் இவனை அழைத்தாலும் இவன் அல்லேன் என்னாமல் இசைவித்த சர்வேஸ்வரனே பிரதம குரு
இசைவித்து என்னை உன் தாளினை கீழ் இருத்தும் அம்மானே
அக வாயில் இருந்து -உள்ளே இருந்து –
இதனால் நெஞ்சை கொண்டாட புக்கவாறே -நெஞ்சு வழி போவாரை கொண்டாடுகிறீரே
உள்ளுவார் உள்ளத்தில் எல்க்லாம் உடன் இருந்து அறுதி
என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனை கொண்டாட நெஞ்சு சொல்ல –
ஒத்தர் மிக்காரை இலையாய மா மாயன்
ஒத்தே ஏப் போருல்க்சளுக்கும் உயிர் ராய்
என்னை பெற்ற தாயாய் தந்தையை
அறியாய அறிவித்தன அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே
என்னை விஷயீ கரித்த நீ தான் குறைவாளனாக இருந்தாயா
ஒத்தார் மிக்கார் இலையாய
ஸ்ரீ ய பத்தி
தன்னால் கழிக்க ஒண்ணாமல் இருக்கும் தாரித்ர்யம் உண்டு
சமம்மேம்பட்டவர் இல்லாமை -உண்டே
ந சத் சமஸ்த அப்யகதிச்ய த்ர்ருஷ்ட்யதே -வேதம் தமிழ் செய்த மாறன்
மாயா –
நீயே இதர சஜாதீயனாக அவதரித்தாய்
எப் பொருள் க்கும்
பிரம ருத்ரர் நடுவில்
இந்த அனுஜனுபெந்த்ரன் வாமன
அதிதி காச்யபர் பெற்றோர்
ராம கிருஷ்ண மனுஷ்யர்
திர்யக் -மகா வராக -மான்கள் -ஓட -அங்கு இங்கு மெய்ப்பாடு -ஜந்துக்களின் கந்தமும் கொண்டான்
குட்டையான மா மரங்கள் –நெட்டையாக இருந்தால் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற முடியாதே
தாழ விடுவதற்காக சௌலப்யம்
ஒத்தார் மிக்கார் இலையாய இவன் இப்படி
மேன்மையோடு வரில் கிட்ட ஒண்ணாது –  அகல்வார்கள்
தாழ வந்தால் காற்கடை கொண்டு அலட்சியமாக
அதனாளந்த அந்த ஜாதிக்கு சமமாக சஜாதீயன்
அதிலும் பரத்வம் குறையாமல் -அவதரிக்கிறான்
இஷ்வாகு வம்ச யது வம்ச ஜனிகி -அதி மானுஷ ஸ்தவம் –
ப்ரமேச்ய மத்திய -அர்க்க பந்தவ் -சூர்யன் -பன்னிரண்டு ஆதித்யன் -துவாதச ஆதித்யன் -விஷ்ணு
அதிதி பிள்ளை -ஹந்த -பரஸ்ய தாம்னி -சிறப்பை கொடுக்கும் அனைத்தும்
உயிர் ராய் -தனக்கு பார்க்கும் ஹிதம் -தாரகனாய் இருக்கிறான் –
தான் உண்டாகிலிரே தான் ஹிதம் சிருஷ்டிக்கும் -நோன்பு நோற்று சரீரத்தை சுமந்து பெற்று பிரியம் நடத்த கடவ
தந்தையாய் இட்டு வைக்கும் பை போல்தே -உண்டாக்கினவன்
சரீரம் ஏவ மாதா பிதா
ஞான விகாசம் ஆச்சார்யர் துவிஜன்மா -நாம் -பிரம உபதேசம் ஆனதும் –
முட்டை குஞ்சு போல் –
ஞான ஜன்மம் உண்மையான பிறவி –
சகி வித்யா -வித்யை கொடுக்கிறவனே
ஸ்ரேஷ்ட ஜன்மம் கொடுக்கும் ஆசார்யர்
பஞ்ச சம்ஸ்காரம்-நேரே ஆசார்யர் –
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை யான்
நெறி எல்லாம் எடுத்து உரைத்த
ஏதத் விரதம் மம -மித்ர பாவேனே
மாம் ஏகம்  சரணம் விரஜ
அத்தா சுவாமி உடையவன் ஆகையாலே இவ் உபகாரங்கள் செய்தான்
சுக்ருத் கதி எல்லாம் நாராயணன்
மற்றை யார் யாவாரும் நீ பெரிய திருவந்தாதி
நீ செய்தன -ஓன்று இரண்டு ஆகில் இறே இன்னது என்னலாம்
சேஷ பூதன்
அடியேன் அறியேன்
உபகரித்த நீ சொல்ல லாமோ என்னவோ
சொல்லி முடிக்க முடியாது
அனுபவத்தில் குமிழ் நீர் -முழுக்க முழுகி தான் அனுபவிக்க முடியும் –
வாய் விட்டு சொல்ல முடியாது

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading