அவனே உபாயம் என்ற எண்ணமே வேண்டும்
இரக்கம் -உபாயம் -தயை கிருபை ஒன்றே உபாயம் -அத்தாலே அனுபவிப்பது
இச்சை -உபேயம் -அவனே போக்தா -இதுவே தகுதி -ஸ்ரத்தையே -மனம் உடையீர் என்னும் திருநாமம் திண்ணம் நாரணம்
மற்ற உபாயங்கள் ஸ்வரூப விரோதம்
இனிமை –
நஞ்சீயர் வார்த்தை
பிரதான ஹேதுக்கள் இவை
இதர விஷய பரித்யாகம் சொல்லி –
இதர உபாய பரித்யாகம் பிரதான ஹேது சொல்ல ஆரம்பிக்கிறார் –
சூர்ணிகை -115
பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான
அசக்திகள்
அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –
ப்ராபகம் உபாயம் சாதனம் வழி -பர்யாய சப்தங்கள்
ப்ரபாகாந்தரம் -அவனை தவிர
பரித்யஜ்ய -வாசனை உடன் பரித்யாகம்
அதுக்கு பிரதான ஹேது அஞ்ஞானமோ அசக்தியோ இல்லை
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்கிறார்-
அவள் அருள் நினைந்தே அழும் குழவி –
அவனைக் கொண்டே அவனை பெருகை ஸ்வரூபம் –
பிரபத்தி உபாயம் ஒழிந்த உபாயங்கள் ப்ரபாகாந்தரங்கள் -கர்ம ஞான பக்தி யோகம்
அறிகைகுகும் அனுஷ்டிக்கவும் ஞான சக்தி கள் வேண்டுமே
தைல தாரை போலெ இடைவிடாதே த்யானம் செய்ய வேண்டுமே –
அவிச்சின்ன பூர்வக த்யானம் –
அத்யந்த பாரதந்த்ர்யமே முக்கிய ஹேது
இவை யும் -அஞ்ஞானம் அசக்தியும் -ஹேதுக்கள் தான்-
அஞ்ஞானத்தால் பிரபன்னர் அஸ்மாத்தாதிகள்
முன்பு சொல்லி
ஸ்வரூப ஞானம் இருந்தால் இவை வந்தாலும் கொள்ளார்
தன்மை -அத்யந்த பரதந்த்ரம் இட்ட வழக்காய் -அவனே எல்லாமுமாக கொள்வதால்
அரைய முடியும் -ஆனால் கூடாது
சக்தி இருப்பதால் அந்த கார்யம் செய்யலாமா யோசித்து தான் செய்வோம்-
சக்யம் எல்லாம் யோக்கியம் இல்லையே
ஸ்வரூப விருத்தம் என்று விட்டால் மருகல் இன்றி விட வழி
இவையும் உபாயம் தானே என்றால்
சூர்ணிகை -116-
பிரபகாந்தரம்
அஜ்ஞர்க்கு
உபாயம் –
முட்டாளுக்கு உபாயம் –
ஸு ரஷண -ஸு யத்னம் பொருந்தாது என்று அறியாதார்
பிறப்பது -இவன் கையில் இல்லை இறப்பதும் இவன் கையில் இல்லை
நடுவில் உள்ளது மட்டும் உன் கையில் இருப்பதாக ஏன் நினைக்கிறாய்
இதை கூட அறியாத -அஞ்ஞர்
எது நல்லது இல்லை என்பதை அவனே அறிவான்
பிரார்த்தனை கூடாது சம்ப்ரதாய கொள்கை இதனால் தானே-
ஸூ ரஷண ஸூ யத்னம் சகிக்காத ஸ்வரூபம்
உணராதவன்
சூர்ணிகை -117-
ஜ்ஞாநிகளுக்கு
-அபாயம் –
ஞானிகளுக்கு அபாயம் ஆக இருக்கும்
பிரம்மாஸ்திரம் -சணல் கயிறு கட்ட பொறுக்காதே –
சரணாகதி வேறு ஒரு சாதனத்தை பற்றில் அரணா காதே –
அபாயம் -ஸ்வரூப நாசகம் என்பதால்
சூர்ணிகை -118-
அபாயம் ஆயிற்று
ஸ்வரூப நாசகம்
ஆகையாலே-
சூர்ணிகை -119
நெறி காட்டி நீக்குதியோ -என்னா
நின்றது இ றே-
நெறி காட்டி நீக்குதியோ –
நெறி உபாயம்
வேறு -காட்டி -மட்டும் சொல்லாமல்
நீக்குதியோ சப்தம் சொல்லி –
உன்னையே உபாயமாக கொண்டு சேர்ப்பாயா
நெறி காட்டுவதும் நீக்குவதும் பர்யாய சப்தங்கள்
என்ன செய்வதாக நினைத்து இருக்கிறாய்
நின் பால் கரு மா திரு மேனி காட்டி சேர்ப்பாயா
அபாயம் சொல்வதற்கு பிரமாணம் காட்டி அருளி
வேறு உபாயம் காட்டுவதே அகற்றுவதற்கு சமானம்
நீக்குதல் -அசல் ஆக்குகை
நீயே செய்து கொள் கை விடுகிறான் –
சூர்ணிகை -120
வர்த்ததே மே மஹத் பயம் -என்கையாலே
பய ஜநகம்
மா ஸூ ச -என்கையாலே
சோக ஜநகம்
என்னுடையே மனம் வைத்து
பக்தி யோகத்தில்
இருக்க சொல்லி சரம ஸ்லோகம் அடுத்து
கவலைப்படாதே என்பதால் முன்பு கவலைப் பட்டான்
பக்தி யோகம் சொன்ன பின்பு கேட்ட அர்ஜுனன் கவலை கொள்ள
அதற்க்கு இப்படி அருளி செய்தான்
இதனால் மற்ற உபாயங்கள் பயமும் சோகமும் உண்டாக்கும்
சூர்ணிகை -121
இப்படிக் கொள்ளாத போது
ஏதத் பிரவ்ருத்தியில்
பிராயஸ் சித்த விதி
கூடாது
ஐயோ இப்படி செய்தோமே
பிற்பாடு நினைந்து வருந்துவதே பிராயஸ் சித்தம்
நம்மை மறந்த நிலையில் செய்த தப்புக்கு தானே பிராயஸ் சித்தம்
burnol இருப்பதால் நெருப்பில் கை வைக்கலாமா போலே
ப்ரபன்னன் -உபாயாந்தர சம்சர்க்கம் ஏற்பட்டால் பிராயச் ஸித்தம் சொல்லி
இது கூடாது எனபது அறியலாமே
சாஸ்திரமே விதித்து இருக்க
சக்ருதேவ ஒரே தடவை பிரவ்ருத்தி செய்ய வேண்டும்
தென்னாசார்ய சம்ப்ரதாயம்
பஞ்ச சம்ஸ்காரம்
பர ந்யாசம் அடுத்து செய்து கொண்டு
சரம தசையில் பிராய சித்தி பிரபத்தி செய்கிறார்கள்
ஒரு பழத்துக்காக ஒரு தடவை என்பர்
மோஷத்துக்கு முதலில் செய்து
பாபங்களுக்கு ப்ரபத்தி அடுத்து என்பர்
மந்திர ரத்னம் அனுசந்தானம் செய்து கொண்டே
இது மீண்டும் மீண்டும் சரணா கதி இல்லையே
பூர்வ சரணாகதி அநு ஸ்மரணம் தானே
ஸ்ரீ வைஷ்ணவர் வேற யாரை வைதால் கேட்க கூடாதே
த்வயம் சொல்லி பிராயச் சித்தம் செய்யலாம்
உள்ளும் வெளியில் சுத்தி ஏற்பட
புன பிரபத்தி பூர்வம் செய்ததின் ஸ்மரணம் தான்
சூர்ணிகை -122
திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிக்கும் படி
மதி ரா பிந்து மிஸ்ரமான ஸாத கும்ப மய
கும்ப கத தீர்த்த ஸலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம்-
பிரபத்தியில் அஹங்காரம் வராதே
உபாயாந்தரம் அஹங்கார மிஸ்ரம்
கள் கலந்த
பொன் -குடத்தில் கங்கா தீர்த்தம் -வைத்தாலும்
உபயோகம் இல்லை போலே
உபாயாந்தரம் த்யாஜ்யம்
அபியுக்தர் வசனம் கொண்டு தெரிவிக்கிறார்
சர்வஞ்ஞர் -சாஸ்திரம் ஆராய்ந்து -ஆப்த தமர் -என்கிறார் மா முனிகள்
ஆள வந்தார் -திருப் பேரனார் திருமலை நம்பி குமாரர் இவர் என்பர் சிலர்
வியாச உவாச -சொல்லி சமஸ்க்ருத பிரமாணங்கள் சொல்லுவார்
ஆப்த தமர்
அத்யந்த நிஷித்த த்ரவ்யம்
சேரும் வஸ்துவையும் நிஷிதம் ஆக்கும்
அஹங்கார சம்பந்தம் நிஷிதம்
கும்பம் தங்கமயம் -மேல் பூச்சு இல்லாமல் பூரணமாக தங்கம் -பாத்திர சுத்தி சொல்லி
ஆத்மா -நிர்மலம் சுத சுத்தி பகவத அனன்யாரஹ –
பக்தியும் ஏகாந்த –
அஹங்காரம் கலசித்து இருந்தால் குற்றம் வருமே
பணிக்கும் படி -என்று -சேர்த்து கொள்ளுவதையும் மா முனிகள் அருளி-
உபாயாந்தரமே தோஷம் இல்லை என்கிறார்
அஹங்கார கலசி இல்லாமல் இருந்தால் தோஷம் இல்லை -தேசிகன் அர்த்தம் காட்டி அருளி
ஸு யத்னம் என்றாலே அஹங்காரம் வரும் பிள்ளை லோகாச்சார்யர் அருளி –
சூர்ணிகை -123
ரத்னத்துக்குப் பல கறை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –
இன்னமும் இதுக்கு பலத்துக்கு சத்ருசம் இல்லை என்கிறார் –
உபாயமே பலம் கொடுக்காதே
பலம் பெற்று தருவதே உபாயம்
கர்ம ஞான யோகம் மூலம் -அவை அசேதனம்
இவற்றால் த்ருப்தனான அவனே பலம் தருவான்
இவை பலத்துக்கு சமம் இல்லையே
சூர்ணிகை -124-
தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –
பல கறை -கிளிஞ்சல் போலே
இதை வாங்க dollar கொடுப்பது போலே
ராஜ்ஜியம் வாங்க எலுமிச்சம் பழம் கொடுப்பது போலே
பரிபாடல் -ஸ்தோத்ரம்
ராஜ அளவுக்கு செல்வம் கொடுப்பவன்
முத்து கொடுத்து அரிசி -செழு முத்து திரு நாங்கூர் பாசுரம்
யானை சேர நாடு
பாண்டிய நாடு முத்து
சோழ நாடு சோறு உடைத்து
பலத்துக்கு ஈடு இல்லாதது போலே
ஈஸ்வரன் உகப்பே காரணம்
நாம் கொடுக்க அதுகூட இல்லை
தரித்ரனன் நமக்கு ஒன்றும் இல்லையே
யானே நீ என்னுடைமையும் நீயே
சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லையே –
அவன் இடம் இல்லாதவற்றையே கொடுத்து பெற வேண்டும்
நம்முடைய வஸ்துவையே கொடுக்க வேண்டும்
எம்பெருமான் விஷயத்தில் இப்படி ஒன்றும் இல்லையே
அவன் பூரணன்
நாமோ தரித்திரன்
உண்டு நமக்கு விரகு இல்லை
கொள்ளக் குறைவு இல்லாதவன் அவன் -அருளாள பெருமாள் எம்பெருமானார்
சூர்ணிகை -125
அவன் தந்தத்தை கொடுக்கும் இடத்தில்
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம்
அடைவு கெடக் கொடுக்கில் களவு வெளிப்படும்
அடைவிலே கொடுத்தால் உபாயம் இல்லை
கோ தானத்தில் பிதாவுக்கு புத்திரன் தஷிணை கொடுப்பது போலே
ப்ரஹ்ம உபதேச துல்ய சம்பாவனை பிள்ளை பிதாவுக்கு சமர்ப்பித்து போலே –
விசித்ரா தேக சம்பத்தி
அந்நாள் நீ தந்த ஆக்கை
அவன் கொடுத்தவை
சத்யம் கீர்த்தனம் த்யான அர்ச்சனா ஆதிகளால் தத் சேஷம் ஆக்குதல்
ததீயம் என்ற புத்தியால் சமர்ப்பிக்கை
என்னது என்றால் களவு வெளிப்படும்
ராஜ மகேந்திர படியை திருடி சமர்ப்பித்தது -போலே
உபாயாந்தரம் இப்படி சாதனம் ஆகாது என்று நிர்ணயிக்கிறார் –
சூர்ணிகை -126-
பர்த்ரு போகத்தை
வயிறு வளர்க்கைக்கு
உறுப்பாக்குமா போலே
இருவர்க்கும் அவத்யம்-
உபாயாந்தர தோஷம் பிரகரணம்
அவ்வழி ஒழிந்த அனைத்து புன்மையும் பார்த்து வருகிறோம் –
கொடுக்கலாவது ஒன்றும் -இல்லை தரித்திரன் ஆகையாலே
அவன் கொடுத்தான் என்ற நினைவுடன் கொடுத்தால் அது அநுபாயம் ஆகுமே
தன்னது என்று கொடுத்தால் களவு தானே வெளிப்படும் –
பர்த்ரு போகத்தை -அவனை உகப்பிக்கைக்கு என்ற எண்ணம் இன்றி வயிறு வளர்வதற்கு
சாதனம் ஆக நினைப்பது போலே
ஸுயம் பிரயோஜனம் இது –
சாதனம் ஆக்கினால் இருவருக்கும் அவத்யம் -தாழ்வு
பக்தி -அவன் மேல் ஈடுபாடு -வை லஷண்ய அனுபவத்தால் உண்டான ஆசை -ஈடுபாடு
மேலே மேலே இன்னும் அனுபவிக்க பண்ணும் இத்தை மோஷ ஹேதுவாக கொண்டால்
சேஷ பூதன் -சேஷி இருவருக்கும் அவத்யம்
மடி தடவாத சோறு –
பக்தியை உபாயமாக கொள்ள கூடாது
சாதனம் ஆக்கினால் குறை
அதுவும் பலத்தில் சேரும்
சூர்ணிகை -127-
வேதாந்தங்கள் உபாயமாக
விதிக்கிற படி என் -என்னில்-
தேசிகன் -சம்ப்ரதாயம்
வாக்ய யோஜனா பேதமே உண்டு
சித்தாந்தத்தில் பேதம் இல்லை
அதிகாரி நியதம் அனுஷ்டான பேதம் –
அதிகாரி பேதத்தால் ஒருவனுக்கு இது சாதனம்
வேதாந்தங்களில் உபாயமாக விதிக்கிறது எதனால்-
ஹிதம் சொல்ல வந்த சாஸ்திரம் வேதாந்தம்
பக்தி உபாயம்
ஓம் இதி ஆத்மாநாம் த்யானம்
லோகம் உபாசீன
லோகம் த்ரஷ்டவ்ய –
ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதிதாச்யவ்யத போன்ற வாக்கியம் உண்டே
சூர்ணிகை -128-
ஔ ஷத சேவை பனண்ணாதவர்களுக்கு
அபிமத வஸ்துகளிலே
அத்தைக் கலசி யிடுவாரைப் போலே
ஈஸ்வரனைக் கலந்து விதிக்கிற
வித்தனை –
கசப்பானை மருந்தை -வேப்பம் கட்டியை -வெல்லக்கட்டியில் கொடுப்பது போலே –
இவன் நினைத்த வஸ்துவில் -ஸு பிரவ்ருதியே பலம் கொடுக்கும் என்ற நினைவில் உள்ளவனுக்கு –
நம் ஆழ்வார் -நாத முனிகள் நேராக பார்த்து பெற்றார் என்று தப்பாக நிர்ணயம்
செய்து பூதம் தனியனை காரணமாக காட்டி
பூதம் சிரஸ் -எம்பெருமானார் திருவடி அறியாமல்
என்றோ பரமபதம் போனவர் இன்று வந்து கொடுத்தார் என்று நம்ப முடியாமல் –
யோக சக்திகள் இன்று இல்லை என்பதால் தப்பாக பேசி
தர்க்கம் மட்டும் அறிந்து
ப்ரத்யஷம் கூட ஒத்துக் கொள்ள மாட்டான் தர்க்கம் மட்டும் கொண்டவன்
யானை காலடி கண்டு -அனுமானமே பிரத்யஷம்
கிருபை கொண்டு தானே செய்வான் என்றால் அனைவருக்கும் பொதுவானவன்
வேதமே இப்படி பட்ட -அதிகாரிக்கு இத்தை சாதனம் ஆக்கி கொடுக்க
பால புத்ராதிகளுக்கு
தாமசம் இன்றி மருந்து கொடுக்க
சேவிக்க -உபயோகப் படுத்தி என்ற அர்த்தம்
ஔஷத சேவை
ஏறி அருளப் -பண்ணுதல் எழுதுவது
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -அரையர் –
ஸ்ரீ கோஷத்தில் அப்படி தான் ஏறி அருளப் பண்ணி இருக்கிறார்கள் என்பர்
வெல்லக்கட்டி -கலசி இடும் மாத்ராதிகள் போலே
சீக்கிரமாக சம்சார வியாதி தீர்க்கும் நச்சு மா மருந்தை –
நிவ்ருத்தி மார்க்கம்
பிரவ்ருத்தி மார்க்கம் ஸ்ரைத்தை உள்ளாருக்கு -அநாதி வரும் வாசனை
இவரையும் விட மாட்டாமல் -ஈஸ்வரனைக் கலந்து
பலம் கொடுப்பது ஈஸ்வரன் தானே
உபாசனத்துக்குள் ஈஸ்வரனை வைத்து-
மருந்து தானே வியாதியைப் போக்கும் -உபமானம்
உபமேயம் -உபாசனம் அன்றிக்கே தத் மிஸ்ரமான ஈஸ்வரனே சம்சார வியாதியைப் போக்கும்
மருந்தை நேராக உண்டால் சீக்கிரம் போக்கும்
கலந்து கொடுத்தால் வெளி வஸ்து கரைய வேண்டும் அப்புறம் தான் மருந்து வேலை பண்ணும்
அதே போலே நேராக பற்றினால் உடன் பலம்
கிட்டும் -கோரின காலத்தில் பலம் கிட்டும் -திருப்த பிரபன்னர் -ஆர்த்த பிரபன்னர் உடனே பெற்று
உபாசகனுக்கு அப்படி இல்லையே -பிராரப்த கர்மம் அனுபவித்த பின்னரே மோஷம்
மருந்தும் அமுதமும் தானே
பேஷஷம் பிஷக் அவனே
கால விளம்பமும் இதிலே சூசகம்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் விக்ரஹம் உண்டே
வியாசர் பராசரர் வால்மீகி போல்வார் விக்ரஹம் இல்லையே
நுட்பமான விஷயம்
பக்தி யோக நிஷ்டர் இவர்கள்
சித்த சாதனம் ஆழ்வார்களுக்கு
சரீரம் முடிந்த பின்பு மோஷம் உண்டே பிரபத்தி மார்க்கம்
மோஷம் சென்ற பின்பு ஞான விகாசம் உண்டு
விக்ரகம் பிரதிஷ்டை செய்து ஆவாஹனம் செய்தால்
ஒரே சமயம் ஆவிர்பாவம் எத்தனை சரீரத்திலும் ஆகலாம்
தம்மையே ஒக்க அருள் செய்வர்
ஸ்வரூப ஆவிர்பாவம் எம்பெருமானுக்கு
இவர்களுக்கு ஞானத்தால் ஆவிர்பாவம் -இந்த வாசி ஒன்றே உண்டு
ரிஷிகளுக்கு பிராரப்த கர்மம் முடிந்ததா அறியோம் ஸு யத்ன பரராக இருப்பதால்
ஆவிர்பாவம் இருக்காதே –
திருவடிக்கு தனியாக சந்நிதி வைக்கக் கூடாது என்பர்
சிரஞ்சீவியாக இங்கே இருப்பதால்
தனியாக உள்ள ஆஞ்சநேயர் சேவைக்கு போய் பிரசாதம் கொள்ள மாட்டார்கள்
150 வருஷம் முன்பு தேவதாந்தர கோயிலாக இருந்ததாம்
1965 ஸ்வாமி தகப்பனார் ஆனந்த ஹோமம் செய்தாராம்
இன்றும் வட மாலை ஸ்வதந்த்ரம் பிரசாதம் அத்யாப்பைகர்க்கு இல்லையே
நிரந்குச ச்வாதந்த்ரம் கொண்டூ இதை அனுமதிக்கலாம்
சூர்ணிகை -129-
இத்தை ப்ரவர்த்திப்பித்தது
பர ஹிம்ஸையை
நிவர்த்திப்பிக்கைக்காக –
இத்தை உபாசனத்தை இங்கு அர்த்தம்
பர ஹிம்சை -மேலான ஹிம்சை அர்த்தம்
அக்னி சோமம் யாகம் அக்னிசோமேயம் -பசு மிருகம் -கொடுத்து
ஹிம்சை இல்லை -அதுக்கு மோஷம் என்பதால்-
பிராணன் த்யாகம் கூடாதே
யுத்த பூமியில் உண்டே
வீரன் கொண்டாடுவது போலே
மிருகத்துக்கு மோஷம் என்று கொண்டாடுகிறார்கள்
எது காரணம் என்றே
வைத்தியர் அறுவை சிகிச்சை செய்து புகழ் -ஹித புத்தியால் செய்ததால்
இதுவும் உபகாரம் தானே-
இப்படி விதித்தது மேலே கூட்டிப் போக -கீழ் நின்ற நிலையில் இருந்து
ஆசார்ய ஹிருதயம் இதை விவரித்து
த்ரை குணிய அதிகாரிகளுக்கு வேதம் –
ராஜச தாமச சத்வ
சேன விதி அதர்வண வேதம் விரோதியை அழிக்க
இதை சொல்லலாமா
அவனுக்கு நம்பிக்கை கொடுத்து சாஸ்த்ரத்தில் ஈடுபடுத்த
வாயவ்ய போன்ற பல காட்டி
பகவத் பிராப்தி வரை கூட்டி செல்ல-
ஐஸ்வர்யம் கிட்டி இவனுக்கு ஹிம்சை என்பதால் இத்தை பர ஹிம்சை
ஸ்வர்க்காதி பலன்களுக்கு செய்தது
தாயார் அந்த கண் இல்லாத காது கேட்காத -படு கரணர் விட அதிக ப்ரீதி
சாஸ்திரம் அறிவை உள்ளபடி அறியாத
வேதம் -தவறான வழியிலே விட
முடியாமல் குணம் அநு குணமாக புருஷார்த்தங்கள் சாதனங்கள்
கொள் கொம்பிலே ஏற்ற சுள்ளிக் கால் வைப்பது போலே-
தாத்பர்ய அம்சத்தில் மூட்ட தானே
உபாயம் சேனவிதி தொடங்கி உத்தர உத்தர புருஷார்த்தம்
த்யாஜ்யம் –
வாயவ்யம்
உபாதேயம் பகவத் ப்ராப்தி காமனுக்கு பிரபத்தி பரருக்கு
த்யாஜ்யம் உபாதேயம் மாறுமே அதிகாரி பேதத்தால்-
மேல் நிலைக்கு போனவனுக்கு இது த்யாஜ்யம்
நின்ற நின்ற அளவுக்கு ஈடாக
உத்தர உத்தர சாதனங்கள்
உத்தர உத்தர புருஷார்த்தங்கள்
பூர்வ பூர்வ விஹிதன்கள் த்யாஜ்யம் ஆகுமே
பர ஹிம்சை மேலான ஹிம்சை -பர தேவதை போலே
சேனவிதிக்கு மேலான
விஹித ஹிம்சை
சாஸ்த்ரத்தில் விதிக்கப் பட்டதால்
காம்ய கர்மம் சொன்ன படி-
விஹிதமே ஆனாலும்
பகவத் சேஷத்வ ஞானம் -அறிந்து
அக்னி சோமம் -குறித்து செய்வதே ஹிம்சை
அதனால் பர ஹிம்சை எம்பெருமானுக்கு ஆராதனம் என்று நினைவு இன்றி
ஞானிகளுக்கு அபாயம் என்பதால் ஹிம்சை
தர்ம புத்திரன் -ஸ்வர்க்கம் போக -மற்றவர் நரகம் போக
அங்கெ தர்ம தேவதை கூட்டிப் போக
வழி எல்லாம்
கண்ணனே சொன்னாலும் பீதனாய் ஆபாச தர்மம்
மெய் போலே சொல்லி –
உபாயாந்தரம் பாதகமாக தர்ம தேவதை சொன்னது போலே புண்ணியம் முமுஷுக்கு பாவம் ஆனதே
தங்க விலங்கு
பல த்யாகம் வேண்டுமே
நேராக விட்டிலன்
பக்தி யோக நிஷ்டனுக்கு சொன்னது பிரபத்தி நிஷ்டனுக்கு த்யாஜ்யம்
உபாசன விதி
பரந்த படியில் -உபாசனர் விட வேண்டியது காம்ய கர்மத்தை அருளி –
பரந்த ரகசியம் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து-
சூர்ணிகை -130-
இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும்
குறை இல்லை –
விதித்து பின்பு எதனால் நிஷேதிக்க வேண்டும்
பூர்வ விஹித ஹிம்சை –சேன யாகம் தான்
சாஸ்திரம் விதியையும் நிஷேதமும் சொல்லுமே
உபாசனம் தான் பூர்வ விஹித ஹிம்சை போலே ஒருவருக்கு விதி
காம்ய கர்மம் செய்பவனுக்கு நிஷேதம் ஆகும்-
நாஸ்திகருக்கு விதித்து
ஆஸ்திகருக்கு நிஷேதம்
சேன யாகம் –
உபாசனமும் -ஸ்வதந்திர அந்ய சேஷத்வ -நிஷ்டருக்கு விஹிதம்
பாரதந்த்ர்ய ஞானம் பிறந்த பரம சாத்விகர் -நிஷேதம்
சாஸ்திர விச்வாசத்துக்காக விதித்தது-
சூர்ணிகை -131-
அத்தை சாஸ்திர விச்வாசத்துக்காக
விதித்தது
இத்தை ஸ்வரூப விச்வாசத்துக்காக
விதித்தது-
சாஸ்திரம் இல்லை என்று இருக்கும் நாஸ்திகனுக்கு விதித்து
ஆஸ்திக விவேகம் ஊட்ட-
ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்திகள்
இந்த உதர தரிப்பு த்ரை குண்ய விஷயமானவற்றுக்கு பிரகாசகம்
வ்த்சலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு ப்ரத் யௌ ஷதம்
இடுமா போலே எவ் உயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமான இவனும்
ருசிக்கு ஈடாக பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் காட்டும் இ றே
அது தானும்
ஆஸ்திக்ய விவேக
அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி
பாரதந்த்ர்யங்களை
வுண்டாக்கின வழி
சதுர்விதமான
தேக -வர்ண -ஆஸ்ரம -அதிகார -பல -மோஷ -சாதன -கதி -யுகதர்ம -வ்யூஹ -ரூப
க்ரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
ஒஎரிய தீவினில் ஒன்பதாம் கூறும்
மானிடப் பிறவியும்
ஆக்கை நிலையம்
ஈர் இரண்டில் ஒன்றும்
இளைமையும் இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்கு உள்ளே
விக்நம் அர
நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு
அறக் கற்கை அரிது என்று இ றே
வேத சார
உபநிஷத் சார
அநுவாக சாரதம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய்
அன்னமாய்
அமுதம் கொண்டவன்
சாகைகளிலும் ஓதம் போல் கிளர்
நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமுமாக
வெடுத்து
பெரு விசும்பு அருளும்
பேர் அருளாலே
சிங்காமை விரித்தது
ஸ்வ ச்வாதந்த்ர்யமே விரோதி என்பவனுக்கு பிரபத்தி –
விச்வாசித்ததுக்கு விதித்தது என்பதால் இதை அனுஷ்டித்தல்
தவறு இல்லையோ என்றால் –
பெரிய அவத்யம் உண்டாகும் என்கிறார்
சாஸ்திர விச்வாசதுக்கு -அபிசார கர்மம் -தொடங்கி உபாசனம் -பர்யந்தமாக –
நம்பிக்கை உண்டாக -படிப்படி வந்து தனது ச்வர்ரோபம் ஆராய்ந்து
ஸ்வரூப விச்வாசதுக்கு பிரபத்தி விதித்து –
அதுவும் இதுவும் ஓன்று இல்லை –
விரோதி அழிக்கவும்
ஐஸ்வர் யத்துக்கோ
ஸ்வர்க்காதி
விதி நிஷேதம் அதிகாரிக்கு தக்க மாறுமே –
அனுஷ்டான பேதம் மட்டுமே உண்டு
பாஷ்யகார பின்பட்டாருக்கு அர்த்த வித்யாசம் இல்லை
அடிப்படையில் சித்தாந்தம் இல்லை -தேசிகன் சாதிக்கிறார் –
18 பேதம் ஸ்லோகம் உண்டே
யோஜனா பேதம் தான் தத்வ பேதம் இல்லை
அனுஷ்டானம் அதிகாரி நியதம் –
அது போலே நாஸ்திகனுக்கு விதித்தது மேல் பட்டவனுக்கு நிஷிதம் ஆகும்
சூர்ணிகை -132-
அது தோல் புரையே போம்
இது மர்ம ஸ்பர்சி-
ஆபத்து என்று பார்த்தால்
பிறர்க்கு தீங்கு விளைத்தல் ஆபத்து அதிகம் போலே தோன்றும் -ஆனால் அப்படி இல்லை என்பதை
அது தோல் புரையே போகும்
சேன விதி போல்வன தோல் புரையே போகும் சரீரத்துடன் போகும்
பக்தி யோகம் ஆத்மா ஸ்பர்சி -மர்ம ஸ்பர்சி
அவளவு க்ரூரம் இல்லை என்றால்
அதிலும் கூட க்ரூரம் இது
தேக ஆத்மா அபிமானி செயல்
விசிஷ்ட வேஷ விரோதியாய் -ஆத்மாவுக்கு விசிஷ்ட வேஷம் சரீரம் –
மேல் எழ போகும்
அஹங்கார கர்ப்பமான இந்த உபாசனம் –
தன்னுடைய இந்த்ரியங்களை தான் அடக்கி
ஆத்மாவை உள்ள படி அறிந்து
நிஷ்கிரிஷ்ட வேஷம் -கைங்கர்யம்
கர்மம் விசிஷ்ட வேஷ விஷயம்
சேஷ பூதன் மட்டும் அறிந்து
உள்ளக்குள் போனவன் பாரதந்த்ர்யமும் அறிகிறான்
பாரதந்த்ர்யம் சேஷத்வத்தை செயலிலே கொண்டு போவது
அவனுக்கு அடிமை என்ற ஞானம் மட்டும் சேஷத்வம்
அத்தை அனுஷ்டான பர்யந்தமாக கொண்டு வருவது
செய் தலை நாற்று போலே அவன் செய்வன செய்து கொள்ள இருப்பது –
தனக்கே யாக எனக் கொள்ளும் ஈதே -எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே-
வேய் மறு தோள் இணை திருவாய்மொழி
பசு மேய்க்க போக கூடாது ஒரு கோபி தடுக்க –
அது வியாஜ்யம் தான் -கோபிகள் கூட போகிறேன் சொல்ல
அந்த கோபி -உனக்கு யார் உடன் கூட இஷ்டமோ
அதை காட்டில் சென்று செய்தால் அசுரர் வந்தால் என்ன செய்வேன்
எங்கள் கண் முகப்பே செய்ய கூடாதா
உகக்கும் நல்லவர் உடன் -உம்தம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
வியக்க -மூன்று அர்த்தம்
உனக்கு வரும் ஆனந்தம் விட எங்களுக்கு அதிகம்
அந்த கோபி விட அதிகம்
என்னுடன் கலக்கும் ஆனந்தம் விட ஆனந்தம் இப்பொழுது
நம்முடன் கலக்காமல் இருந்தாலும் அவன் ஆனந்தம் அடைய அதுவும் நமக்கு ஆனந்தம் உண்டாகும்-
கட்டிப் பொன் போலே சேஷத்வம்
பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்
ஆபரணம் போலே
உருகி ஓடும் பொன்னாகவுமாம்
என்ன வேண்டும் ஆனாலும் செய்து கொள்ளலாமே
சூர்ணிகை -133-
இது தான் கர்ம சாத்தியம்
ஆகையாலே
துஷ்கரமுமாய் இருக்கும் –
துஷ்கரம்
யஞ்ஞாம்
தானம்
தபசு காய கிலேசம்
சர்வ அபேஷை-கடிவாளம் போல பலவும் வேண்டும் அஸ்வமத்-
ஞானம் உண்டாகிறது இப்படி கஷ்டம் பட்டு
ஜன்மான்தார சகஸ்ரேஷு –
பாப ஷயம் பிறந்து ஞானம் உண்டாகி
கிருஷ்ணன் பக்தி உண்டாகும்
கர்ம யோகம் -ஞான யோகம் -பக்தி யோகம் –
ஆரம்ப நிலை -தொடங்கி -இது வரை வந்தது –
திவ்ய தேச வாஸம் முக்கியம் –
பக்தி யோகம்
உடம்பை வருத்தி -தவம் செய்து -பொருப்பிடை நின்றும்
ஐம்புலன் அடக்கி –
உபாயாந்தர தோஷம் விஸ்தாரமாக இது வரை சொல்லி –
115- 133 வரை
ஸ்வரூப விரோதம் சாஸ்திரம் விதித்ததே வேறு அதிகாரிகளுக்கு
மேலே மேலே போவாருக்கு உபாசனமும் த்யாஜ்யம்
சேன விதி விட க்ரூரம்
கஷ்டம் என்பதால் மட்டும் விட வில்லை
ஸ்வரூப விரோதி பிரதான ஹேது
சூர்ணிகை -134-
பிரபத்தி உபாயத்துக்கு
இக்குற்றங்கள்
ஒன்றும் இல்லை –
ஸ்வரூப விரோதம் முதலாக துக்க நிலைகள் அனைத்தும் இல்லை பிரபதிக்கு –
திஷ்கரம் இல்லையே
சூகரம்
அஷ்டாங்க யோகம்
இக்குற்றங்கள் இல்லை என்பதால் வேறு ஒரு குற்றம் உண்டு தோற்றுகிறது
இது உபாயம் என்ற நினைவு ஏற்படுமே அதுவே குற்றம்
தான் உபாயம் அல்லாமல் இருக்கச் செய்தே உபாயமாக நினைக்க வைக்குமே
மின்னின் நிலையிலே மன உயிர் ஆக்கைகள்
மின்னலை விட நிலை இல்லாதது சரீரம் அப்படி இல்லையே என்றால்
தோன்றி மறையாதது என்ற எண்ணம் தோற்றுவிப்பதால்-
குழந்தை காக்க பிச்சை சாவு இல்லாத வீட்டில் எடுக்க சொல்லி உணர்த்திய கதை –
மின்னல் க்ரூரமா சரீரம் க்ரூரமா நிலை இல்லாதது இதனால் தான்
அது போலே பிரபத்தியே உபாயம் என்ற நினைவு
தமவே உபாய பூதோ மே பவ
பிரார்த்தனா மதி எப்படி உபாயம் ஆகும்
கத்தியால் குத்தப்பட்டு இறப்பேன் கதை –
பொயானால் கத்தியால் குத்தி மெய்யானால் தூக்கில் போட
பிரபத்தி சரண வாரணம்
நான் செய்வதால் உபாயம் என்ற எண்ணம் தோற்றுவிக்கும்
எனது உணர்வினுள் நிறுத்தி அதுவும் அவனது இன்னருளே-
சூர்ணிகை -135-
ஆத்ம யாதாம்ய ஜ்ஞான
கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா -என்கிறபடியே
நிவ்ருத்தி சாத்யம்
ஆகையாலே
ஸூ கரமுமாய்
இருக்கும் –
ஆத்மா ஞானம்
ஆத்மா யாதாம்ய ஞானம்
யதாவது அப்படியே இருப்பதை உள்ளபடி உள் புகுந்து ஆராய்ந்து அறியும் ஞானம்
சிதறவே வேண்டா சிந்திப்பே அமையும்
கவனம் சிதைய விட வேண்டாம்
நினைவே போதும்
நிவ்ருத்தி சாத்தியம் –
சுக ரூபமாய் இருக்கும்
திரு மந்த்ரத்தில் மத்யம -பதம் நம-எனக்கு உரியேன் அல்லேன் –
ஸ்வரூபம் அவனுக்கு அடிமை அத்யந்த பாரதந்த்ரம்
நம நம உபயமும் என்னுடையது இல்லை
ஆனந்தமும் எனக்கு இல்லை –
பாரதத்ர்யமான ஸ்வரூபதுக்கு அனுரூபமாய் இருப்பது
சிதறுதல் -வியாபாரம் ஒன்றும் இல்லை
நிவ்ருத்தி சாத்தியம்
பகவத் பிரவ்ருத்தி விரோதி ஸுபிரவர்த்தி -நிவ்ருத்தி -பிரபத்தி
லஜ்ஜையை விட்டாள்-உடன் சாதனம் ஆனது
பிராட்டி பெருமாள் விளையாட
வெளியில் போய் வர –
நோஞ்சான் பலவான் -நாராயணா கதறி
உதவ போக
போவதற்குள் இவனை அறைந்தான் -திரும்பினேன் –
வாசனை உடன் விட வேண்டும்
அங்கு பண்ண வேண்டியதை லவ லேசம் விட்டாலும் தப்பு கர்ம யோகத்தில்
இங்கு லவ லேசம் செய்தாலும் தப்பு
ஸு பிரவருத்தி நிவ்ருத்தி என்பதால் எளிதாகுமே –
அபாயத்வ
பய ஜனகம் போன்றவை
ஸ்வரூப விரோதி சொல்லும் பொழுதே இவை எல்லாம் போகுமே
சித்தோ உபாயம்
அதன் வரணம் மாத்ரமாய் அதி காரி விசெஷணமும்
இவ்வாறு தோஷமும் இதுக்கு இல்லாமல்
சூர்ணிகை -136-
பூர்ண விஷயம்
ஆகையாலே
பெருமைக்கு ஈடாகப்
பச்சை இட ஒண்ணாது-
அவன் சந்தோஷம் அர்த்தமாக
பச்சை இட வேண்டாமா
பூரணன் என்பதால் ஒன்றும் வேண்டியது இல்லை
இட்டு அவன் உகக்க வேண்டியது இல்லை
பெருமைக்கு ஈடாக பச்சை இட ஒண்ணாதே
யோக்யதை பார்த்து சம்பாவனை லோகத்தில் –
அவாப்த சமஸ்த காமன் பரி பூரணன்
உகப்பு விளைக்கும் படி எப்படி
சூர்ணிகை -137
ஆபி முக்ய சூசக
மாத்ரத்திலே சந்தோஷம்
விளையும் –
விமுகனாய் போனவன்
அபிமிக சூசகம் ஒன்றே இவனை உகக்க வைக்கும்
அது காட்டுவது இந்த பிரபத்தி –
கருணைக்கே இருப்பிடம் -பூரணன் -இதை ஒன்றே எதிர்பார்த்து இருக்கிறான்
அவன் பூர்த்தி
அகிஞ்சனனான நாம்
அவனை உகப்பி அணுக போமோ
பூர்த்தி கை வாங்காதே மேல் விழ ஹேது
சூர்ணிகை-138
பூர்த்தி கை வாங்காதே
மேல் விழுகைக்கு
ஹேது வித்தனை –
மீளுகை இன்றிக்கே
இட்டது கொண்டு திருப்தி அடைய வேண்டாதபடி
வஸ்து என்னது பார்க்காமல்
பூர்த்தி
பச்சை இட வில்லை என்று கை விட ஒண்ணாதபடி
நமது கிட்டே வந்தானே
விரும்பி கை கொள்ளுவதற்கு பூர்த்தி ஹேது
சேருகைக்கு உடல் —
பிரமாணம் உண்டோ
சூரனை -139-
பத்ரம் புஷ்பம்
அன்யத் பூர்ணாத்
புரிவதும் புகை பூவே
பத்ரம் புஷ்பம் –தோயம் இல்லை புஷ்பம் ஜலம் ஏதாவது
இன்ன புஷ்பம் சொல்ல வில்லை
இன்ன பழம்
ப்ரீதி உடனே கொடுக்க
ப்ரீதி உடன் கொடுக்கும் எண்ணம் ஒன்றே
உண்ணுகிறான்
தோயம் புஷ்பம் உண்ண முடியுமா என்றால்
தரிக்கலாம் குடிக்கலாம் –
ப்ரீதி கொண்டு விழுங்குகிறான்
ஆர்வம் அப்படி –
அநந்ய பிரயோஜன மனஸ் சுத்தி உடன் பக்தி உடன்
பிரேமத்தால் கலங்கி தடுமாறுவது போலே வ்யாமோகத்தாலே
தடுமாறி இவனும் விழுங்குகிறான்
தோலை உண்டானே -விதுரர் -பக்தி உடன் கொடுத்தது –
அறியாதவன் ஹோமம் மூக்கு பிடிக்க
உனது மூக்கை பிடி
ஒன்றும் அறியாதவன் செய்யும்படி –
வ்யாமோகாத்தல் அடைவு கெட விநியோகம் கொள்ளுகிறான் இவனும் -அஸ்நாமி
அந்யத் பூர்ணா –
சஞ்சயன் இடம் கேட்கிறான் த்ர்தார்ஷ்திரன்
பூர்ண கும்பம் -குசலம் விசாரித்து -காலில் விழுந்தால் மயங்குவான்
வேறு ஒன்றுக்கும் மயங்க மாட்டான்
பொன்னையும் நாட்டையும் கொடுத்து -இழுக்க பார்த்தான் –
நினைவும் செயலும் ஒத்து இல்லாத வஞ்சகன்
உள்ளும் வெளியும் குருடன்
குடிக்கும் குட நீரை வாசலில் வைக்க அமையும்
அதிதி வந்தால் காலை கழுவ –
அர்க்க்யம் பாதம் ஆசமன்யம்-கை கால் வாயை கழுவ –
i see you அவனால் பார்க்க முடியாதே
நெடும் தூரம் வந்தவனுக்கு குசலம் இனிய சொல் போதுமே
கொடுக்க நினைக்கும் நாட்டையும் பொன்னையும் மதியான்
ஆபி முக்ய சூசகம் ஒன்றே போதும் –
பெரிய பேறு அடைய
அலன்க்ருதமான சுயாராதை
பரிவதில் ஈசனைப் பாடி உறுவது சாமகானம் பண்ணி அட்டைவது -உயர்ந்த கைங்கர்யம்
பிரிவகை இன்றி –
நன்னீர் தூவி –
தோயம் கீழே சொல்லி
அசம் க்ருதமான ஜலம் வெறும் நீர் -மட்டும் போதும்
வாசனை த்ரவ்யம் வேண்டாம் –
பிரதிவாத பயங்கர அண்ணன் ஸ்வாமி-
பரிமளம் சேர்க்காமல்
மா முனிகள் வைபவம் கேட்ட படியால் –
ஏதேனும் ஒரு பூவும் புகையும்
சுலப ஆராதனம் சுச்ஸ்பஷ்டமாக ஆழ்வார்
கண்டகாலி புஷ்பம் -பட்டர் நஞ்சீயர் -கையில் குத்துமே –
சூரனை -140-
புல்லைக் காட்டி
அழைத்து
புல்லை இடுவாரைப் போலே
பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –
பலமும் சாதனுமும் ஒன்றே
அதுக்கு உதாரணம்
புல்லைக் காட்டி புல்லை இடுவார்ரைப் போலே
சூர்ணிகை -141
ஆகையால்
சுக ரூபமாய் இருக்கும்
சாப்பாட்டு ராமன் -ருசி பார்த்து வைக்கும் வேலை
வைஷ்ணவம் சொல்லி அதுவே சாதனமும் பலமும் இந்த ஸ்வாமிக்கு-
கூலி வேலை செய்வது போலே இல்லை –
சாமி கழுவி வயிறு கழுவுகிறேன் சொல்லும் கைங்கர்யர் பரர்கள் போலே இன்றி
அஞ்சலி
செய்து
பரம பதம் பெற்று அங்கும் அஞ்சலி
பல்லாண்டு பாடி அதை பெற்று அங்கும் பல்லாண்டு
பிரபத்தியின் காகிய வியாபாரம் அஞ்சலி
மனசமாகவும் நினைக்கலாம் கை இல்லாதவன்
சுக ரூபமாய் இருக்கும் –
இக்குற்றங்கள் இல்லை சொல்லி
தோஷ ராஹித்யம் சொல்லி மேலும்
குணங்கள் சாஹித்யமும் சொல்லி அருளி
பிரபத்தி வைபவம் சொல்லி அருளுகிறார் –
சூர்ணிகை -142-
இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
————————————————————————————————————————————————————————————-
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .