Archive for the ‘ஸ்ரீ ராமனின் அருள் அமுதம்’ Category

ஸ்ரீ இராமாயண ஸாரம் -ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள்

July 23, 2025

ஸ்ரீராமாயண உபன்யாஸத் தொடரை பார்த்தஸாரதி பக்த ஸபை சார்பில்
திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் நிகழ்த்திய போது வெளியிடப் பெறற
விழா மலரில் இந்நூல் இடம் பெற்றது.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவசியம் ” அறிய வேண்டிய அர்த்தங்கள் ” என்று
கூறப்பெறும் அர்த்த பஞ்சகத்தை உள்ளத்தில் கொண்டு ஸ்ரீராமாயணத்தை ஆராயும்
ஓர் ஆய்வு நூலாக மீமாம்ஸா நியாயங்களின் உதவி கொண்டு இந்நூலை ஸ்வாமி
இயற்றியுள்ளார்.
மிக்க இறைநிலை மெய்யாம் உயிர்நிலை தக்கநெறி தடையாகி தொக்கியிலும்
ஊழ்வினை வாழ்வு, ஆகிய ஐந்து செம்பொருட்களும்
தூய தமிழ் நடையில் எழுதப்
பெற்றுள்ளது. தற்காலப் போக்கைக் கருத்தில் கொண்டு ஸ்வாமி கால்நூற்றாண்டிற்கு
முன்னமேயே ஸம்ப்ரதாய மணிப்பிரவாள நடையை விட்டு தமிழ் மரபு நடையை
மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாம்.

திருமகள் கொழுநனான பரமபுருஷன், நம்முடைய நன்மையைத் திருவுள்ளம்
பற்றி, திரு அயோத்தியில் திருவவதரித்து, பதினோராயிரம் ஸம்வத்ஸரம் இவ்வுலகில்
எழுந்தருளியிருந்த சரிதம் நாம் நன்கு அறிந்ததேயாகும். அப்பரமபுருஷன் அங்ஙனம்
இராமபிரானாகத் திருவவதாரம் செய்தருளினபோது, அவனை அறிவிக்கும் வேதமானது,
வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாய்த் திருவவதாரம் செய்ததாம். இக்
கருத்தைக் கொண்டுள்ள,” வேத வேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத : ப்ராசேதஸாதா த் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா| “
-என்னும் முதுமொழியை ஊன்றிக் காணுங்கால், ‘இராமபிரானைப் போன்று, அவ் இராமபிரான் திவ்யசரிதமான இராமாயணமும் நமக்கு அன்புடன் ஆதரிக்கத் தக்க திவ்ய சாஸ்திரம்’ என்பது நன்கு புலனாகும். “விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை இவ்வுலகில் நன்கு பாவச் செய்தவரும், பூர்வாசாரியருள் நடுநாயக மணிபோன்று விளங்குபவருமான எம்பெருமானார், திருமலையில் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து, திருமலைநம்பிகள் ஸந்நிதியில் இராமாயண விசேஷார்த்தங்களை (இராமா யணத்தில் கூறப் பெற்றுள்ள சிறந்த பொருள்களைக்) கேட்டருளினார்” என்பதே இவ் இராமாயணத்திற்குள்ள தனிச்சிறப்பை நன்கு தெரிவிக்கின்றதன்றோ?-“இவ்வாறு மிக்க சிறப்புள்ள இராமாயணத்தின் ஸாரப் பொருள், பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோதி, உபாயம் என ஐந்தாம்” என்பதை இந்த ‘இராமாயணஸாரம்’ என்னும் நூல், மிக விரிவும், மிகச் சுருக்கமும் இன்றி விளக்கிக் காட்டி யிருக்கிறது.

திருமாலான பரம புருஷன், தனக்கே உரித்தான திருநாட்டில் திருமகள் மண்மகள்
முதலிய தேவிமாரோடு வீற்றிருந்து, நித்யராலும் முக்தராலும் தொண்டு பூண்டொழுகப்
பெற்றிருப்பவனாம். இங்ஙனம் இருப்பினும்,அப்பரம புருஷன் அத்திருநாட்டிலுள்ளாரைப்
போன்று, இவ்வுலகிலுள்ளாரும் தன்னை அனுபவித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிப் பெருங்
களிப்புற வேண்டியிருக்க. அங்ஙனமின்றி,மாயா சப்தப் பொருளான மூலப்ரைக்குதியில்
அழுந்திக் கிடந்து, அறிவுற்றவராகயிருப்பினும், அறிவற்ற அசேதனப் பொருளோடு
வாசியற இருத்தலைக் கண்டு இரக்கமுற்றனன்.

இவ்வாறு இரக்கமுற்ற எம்பெருமான், இவ்வுலகத்தாரைக் கரையேற்றத் திருவுள்ளம்
பற்றி,

இங்ஙனம் அருளப் பெற்றிருப்பினும், இச் சேதனர் அக்கலைகள் காட்டிய வழியைப் பின்
பற்றாது அவ்வுறுப்புக்களையும் அவ்வுடல்களையும் கொண்டு, ஆற்றைக்கடக்கக் கொடுத்த
புணையைக் கொண்டு அவ்வாற்றைக் கடவாது கடலிடைப் புகுவாரைப் போல், சுவை,ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்னும் விஷயங்களில்உழல்வராயினர்.
இதைக் கண்ட எம்பெருமான், தன் கட்டளை செல்லாத நாட்டில் தானே சென்று,
தன் வழி வருமாறு செய்யும் அரசன் போன்று, இவ்வுலகினில் எண்ணிறந்த அவதாரங்களைச் செய்தருளினான்.
இவ் வவதாரங்களுள்,இராமாவதாரம் மிகமிகச் சிறந்ததாம்.இவ்விராமபிரான், தன் உபதேச மொழிகளாலும், ஒழுக்கங்களாலும் இவ்வுலகத்தவர்க்கு உணர்த்தின நீதிகள் பல. அந்நீதிகளை, பின்னானார்க்கும் உதவ வேண்டும் என்னும் எண்ணத்தினால் நான்முகனார், நூறுகோடி அளவினதான இராமாவதார சரிதத்தைச் செய்து, நாரதர் முதலான தேவஷிரிகளுக்கு உபதேசம் செய்தருளினார்; அந்த நாரதரையே இராமநாமத்தையே ஜபித்துப் போது போக்குபவனாகிய வால்மீகி முனிவனிடம் அனுப்பி, அவ்விராமபிரானுடைய சரிதத்தை அம்முனிவனுக்கு உபதேசம் செய்வித்து, தாமும் காட்சி அளித்து, இராம சரி
தத்தை இயற்றுமாறு கட்டளையிட்டார்.

இங்ஙனம் அருள் பெற்ற அம்முனிவனும் ஸ்ரீராமாயணத்தைச் செய்தனன்.

ஸ்ரீராமாயணச் சிறப்பு

பிள்ளைலோகாசார்யார், ஸ்ரீராமாயணத்தை-இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனக்கொண்டாடி
அருளிச்செய்திருக்கிறார். ஆனால், நாராயணனாகவே போற்றப்பெற்றவர் வ்யாஸர்; இராம
பிரானிடம் சிறந்த பக்தி பெற்றிருப்பவர் வால்மீகி ; அவரிடம் பிறந்தது பாரதம்;-இவரிடம் பிறந்தது இராமசரிதம்;
பாரதம் என்னும் இதிஹாஸத்தை அங்ஙனம் போற்றி அருளிச் செய்யாது, இராம சரிதத்தை ‘ இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனப்போற்றி அருளிச்செய்ததற்குக் காரணம் யாதோ? எனின்,- (நாராயண:கதா மிமாம்) என்று தொடங்கி,வ்யாஸர், நாராயணனின் பரிபூர்ணாவதாரமாய்க், கொண்டாடப்பெறும் கண்ணபிரானுடைய சரிதத்தை, பாரதத்தில் ஒருவாறு வெளியிட்டிருப்பது உண்மையேயாம். ஆயினும்,
(யதா தர்மாதயச் சார்த்தா: முனிவர் யானுகீர்த்திதா !ந ததா வாஸுதேவஸ்ய மஹிமாஹ்
யனுவர்ணித:
)என்று நாரதர் (பாரதத்தைச் செய்து மன மகிழ்ச்சி சிறிதும் இன்றி இருக்கும்) வ்யாஸரை நோக்கிக் கூறுகின்றவாறு, அப்பாரதத்தில், அறம் பொருள் இன்பங்களும், அவற்றின் ஸாதனங்களும் கூறப் பெற்றிருக்கின்றன போன்று, கண்ணபிரானுடைய பெருமை கூறப்பட்டிலது.மேலும், பூசல் பட்டோலை‘ என்று ப்ரஸித்தி ஏற்படுமாறு, யுத்த சரிதத்தையே பெரும்பாலும் வெளியிட நேர்ந்திருக்கிறது; நான்முகனார் புத்திரரான நாரதர், கண்ணபிரானுடைய சரிதத்தைஉபதேசம் செய்ய, பின்பு வ்யாஸர், ஸ்ரீபாகவதத்தைச் செய்ததாக அங்கு சரித்தரம், பாரதத்தைச் செய்திருந்தும், அகக் களிப்பற்றிருந்த வ்யாஸர்,தம் துன்பம் தீருமாறு ஸ்ரீபாகவதத்தைச் செய்தார் என்பதற்கு அவர் திருவாக்கையே சான்றாகக் காண்க :–அஸ்த் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸுலாம் !வாசம் சௌரி தாலாப கங்கயைவ புனீமஹே||”நாரதருக்குத் தந்தையாரான நான்முகனார் பூஜிக்கப்பெறும் பெருமை வால்மீகி முனிவனுக்கு உண்டு, நான்முகனார்,வால் மீகி முனிவனுடைய ஆசிரமத்திற்கு வந்தார்;அம்முனிவனுடைய இராமபக்தியைக் கண்டு மனமகிழ்ச்சியுற்றார்; அம்முனிவனால், இவ்வுலகம் உய்வு பெற விரும்பினார்; அம்முனிவனைப் பூஜிக்க விரும்பி, தம் முன்னே உள்ளதோர்ஆஸனத்தைக் காட்டி, அதில் அமரச் சொன்னார். வால்மீகியும் அவ்வாறே அதில் அமர்ந்தார்” என்னும் வால்மீகி முனிவன் பெருமையைக் கூறும் சரிதம் இங்கே காணத்தக்கது.-வால்மீகயே மஹர்ஷயே ஸந்திதேசாஸனம் தத: ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாத : ஸோப்யுபாவிச தாஸனே !-என்னும் வால்மீகியின் திருவாக்கும் இங்கே அனுபவிக்கத்தக்கது.-மேற்கூறிய சரித்ரங்களை உற்று நோக்குங்கால் அங்கு, பாரதத்தைச் செய்த வ்யாஸருக்கே மனமகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும்,’இங்கு, இராம சரிதத்தைச் செய்த வால்மீகி முனிவனுக்கு அங்ஙனம் குறை கூறுவதற்கு இல்லை’ என்பதும் தெளிவாம்.-மேலும், வேதத்தினால் அறியப்படும் பரம புருஷன், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்த வாறே, அவ்வேதம், அப்பரமன் கல்யாண
குணங்களையும், ஆச்சரியச் செயல்களையும் கூற வால்மீகி முனிவனிடம்  ராமாயணமாக (இராம சரிதமாக) அவதரித்தது’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள,-வேத வேத்யேபரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமா யணாத்மநா ||| என்னும் ஸ்காந்த வசனத்தை அனுபவிக்குங்கால், இவ்விராம சரிதத்தின் வேதத் தன்மையும் நன்கு புலனாம்.
அன்றியும், ஆழ்வான் திருக்குமாரரான பட்டர், ஸஹஸ்ரநாம் பாஷ்யத்தில்-
ஸ்ரீ மத் ராமாயணவன் மஹாபாரதம் சரணம் ) என்று அருளிச் செய்திருக்கிறார். இவ் வாக்கியத்தில், பாரதப் பெருமையைக் கூறும்போது இராமாயணத்தை எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பது காணத் தக்கதாம்.

இவ்வாறு சிறப்புற்றிருக்கும் இராமாயணத்தில் தேறிய ஸாரப்பொருள் பல உண்டு. எம்
பெருமானார், திருமலையில் எழுந்தருளியிருந்து திருமலை நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டருளினார் என்பதே இதற்குத் தக்க சான்றாம்.
(அடைய வேண்டிய பரமாத்மா, (அடைகிறவனாகிய) ஜீவாத்மா, (பரமனை அடைவதன்)
பலம், (அவனை) அடையவொட்டாது தடைசெய்யும்) விரோதி, (அவனை அடைவதற்கான)
உபாயம், என ஸாரப்பொருள் ஐந்து
“ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந ப்ராப்த்யுபாயம்பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதிச வதந்தி ஸகலா வேதா : ஸேதிஹாஸ புராணகா: II என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது இவ்வசனத்தின் கருத்து – ” இதிஹாஸம்,
புராணம் ஆகிய இவற்றோடு கூடிய வேதங்கள் மேற்கூறிய ஐந்து பொருளையும் கூறுகின்றன என்பதாம்.
மேற்கூறிய ஐம்பொருளையும் வேறு வழியாக நாம் அறியலாகாதோ? இதிஹாஸத்தின் உதவியைக் கொண்டுதான் அறிதல் வேண்டுமோ? அவசியமானால், அவ்விதிஹாஸம் தான் எவ்வாறு இயம்புகின்றதோ ?எனின், விரித்துக் கூறுவோம் :
கண்முதலிய வெளி இந்திரியங்களையும் மனமாகிய உள்ளிந்திரியத்தையும் ப்ரத்யக்ஷம்
என்பர். இதனால், பரமாத்மா முதலிய பொருளை அறிய இயலாது. இந்திரியத்தினால்
அறியப்பெறும் இரண்டு பொருள்களுள், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைமையைக் கொண்டு, ஒன்றைக் காணாத இடத்தும் கண்ட ஒன்றினால் காணாத மற்றொன்றை அறிகைக்கு உறுப்பான யுக்தியை அனுமானம் என்று கூறுவர். புகையைக்கண்டு அப்புகையினால் காணாத நெருப்பை ஊஹித்து அறிகிறோம் அல்லவா? இவ்வனுமானமும், மேற் கூறிய ஐம்பொருளையும் அறிதற்குப் பயன்படாது. ஒருவகைக் குற்றமும் இன்றி இருப்பதும், என்றும் உள்ளதுமான வேதத்தினால் தான் அறியலாம். அவ்வேதமும்,தெளிவாக எடுத்து. உரைக்கும் வண்ணத்தில் அமைந் திலது, ஆதலின், இதிஹாஸத்தின் உதவி அவசியமாம். இவ்வுதவி அவசியம் என்னும் இவ் விஷயத்தை வால்மீகி முனிவன் பின் குறிக்கப்பெறும் சலோகத்தினால் வெளியிட்டு இருக்கின் றனன்.
ஸது மேதாவிநெள திருஷ்டவா வேதேஷ பரிநிஷ்டிதெள: 1-வேதோபப்ரும்கணார்த்தாய தாவக்ராஹயத ون-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :” வால்மீகி முனிவன் நான்முகனார் கட்டளையைப் பின்சென்று, இராமாயணத்தைச் செய்தபின், “இவ்விராம சரிதத்தைப் பாட வல்லவன் எவனோ? யான் அறியேன்; எம்பெருமான்! நீயே அவனை எனக்கு அருள வேண்டும். என்று அப்பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தனன். அக்காலத்தில் ‘முனி வேஷம் பூண்ட குசலவர் அம்முனிவன்- திருவடிகளைப் பணிந்து நின்றனர். அம்முனிவனோ, மிகச் சிறந்த புத்தி பெற்றிருப்பவரும், ருக் வேதம் முதலிய நான்கு வேதங்களையும், மற்ற நூல்களையும் நன்கு ஓதி உணர்ந்தவருமான
அக்குசலவர்களைக் கண்டு களித்து, வேதோபப்ரும்ஹணமாகிய இராம சரிதத்தை அவர்
களுக்கு உபதேசம் செய்தனன்”-வேதோப ப்ரும் ஹணம்’ என்பதற்குக் கருத்து யாதோ? எனின், கூறுவோம்: எங்ஙனம் இருபத்து நாலாயிரம் ச்லோகங்கள் கொண்டுள்ள இராமாயணத்தில் சில பகுதிகளை மட்டும் கற்றுணர்ந்தோர்க்கு அந்த இராமாய
ணத்தின் கருத்து அறுதியிட இயலாதோ,அங்ஙனமே, பல கிளைகள் கொண்டுள்ள வேதத்திலும் சில கிளைகளை மட்டும் ஓதி உணர்ந்தோர்க்கு அந்த வேதத்தின் கருத்து அறுதியிட இயலாது. அறிவிலிகளான நாம் வேதம்முழுவதும் ஓதி உணர இயலாது. ஆதலின், மிக நெடுகின காலத்தில் பரமபுருஷனை வணங்கி வழிபட்டு உள்ளத் தூய்மை பெற்றிருக்கும் மஹான்களுக்கே அந்த வேதமும், அதின் உண்மைக் கருத்தும் நன்கு புலனாகும்.-அன்னாரே,அந்த உண்மைக் கருத்தை உள்ளபடி அறுதியிட்டு, அக்கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூலை இயற்றஇயலும். “அன்னாம்ருள் வால்மீகி முனிவனும் ஒருவன்’: ”அங்ஙனம் வேதக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூல்களுள், இராமாயணமும் ஒன்று”என்னில், இவை புகழுரையாமோ? ஆகாதன்றோ? இவற்றால், “வேதக் கருத்தைத்தெளிவாகத் தெரிவிக்கும் நூல் உபப்ரும்ஹணம்’‘ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?–இங்கு”வேதோபப்ரும் ஹணார்த்தாய- வேதோபப்ருமணரூப ஸ்வக்ரந்த படனாயேத்யர்த்த: உபப்ருஹம்ணம் நாம நாநாசாகானுஸாரண நிர்ணீத வேதார்த்த ரதிபதகோ சுரந்த: என்னும் கோவிந்த ராஜீய வ்யாக்யான வாக்யங்களும்
 (உபப்ரும்ஹணம் ச ச்ருதி பிரதிபந் நார்த்த விசதீகரணம் ) என்னும் எம்பெருமானாருடைய திருவாக்கும் அனுபவிக்கத்தக்கவை.
[பதப் பொருளைச் சொல்வது எதுவோ, அது உபப்ரும்ஹணம் என்று சிலர் கூறுவர்.இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரத்தைக் காணப் பெற்றிலோம். மேற் கூறிய ஆதாரங்களுள் அமைந்துள்ள “நிர்ணீதார்த்த பிரதிப்பாத கோக்ரந்த:” ச்ருதி ப்ரதிபந்நார்த்த விசதீகரணம்”-என்னும் வாக்கியங்களைக் காண்க-இனி, வேதத்தில் கூறப்பட்டுள்ள பரமாத்மா முதலிய ஐம்பொருளையும் இராமாயணத் தில் காண்போம்.

வேதாந்தமும் பரமாத்மாவும்

வேதம்,பரமாத்மாவை எங்ஙனம் கூறுகின் றது? என்னில், சிறிது விவரித்துச் செப்புவோம்:
வ்யாஸர், உபநிஷத்துக்களில் அமைந்துள்ள காரண வாக்கியங்களினால் பரமபுருஷனை
நன்கு உணரலாம் என்கிறார்.-கண் முதலிய வெளியிந்திரியங்களால் காணப்பெறும் இப்பிரபஞ்சத்திற்கு எது காரணமோ, அப்பொருளே ‘பரமாத்மா
“(யதோவா இமானி பூதானி ஜாயந் தே தத்ப்ரஹ்ம) என்னும் வாக்கியத்தைக் காண்க.
சங்கை : ஆனால், உபநிஷத்துக்களில் காரண வாக்கியங்கள் பல உண்டு. அவற்றுள்
ஒரு வாக்கியம் போன்று,மற்றொரு வாக்கியம் காரணப் பொருளைக் குறிக்காமல் முரண்பாடு தோன்றக் கூறியிருத்தலை நாம் காணலாம்.
(ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே -)(ஏகோ ஹவை நாராயண ஆஸீத்) என்னும்
வாக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு பொருள் காரணப் பொருளாகக்கூறப் பெற்
றிராமல் அந்த அந்த வாக்கியத்தில் வெவ்வேறு பொருள் (பிரமனும், சிவனும் நாரா
யணனும்) காரணப் பொருளாக முரண்பாடு தோன்றுமாறு குறிக்கப் பெற்றிருப்பது புலப்படுகின்றதன்றோ! இங்ஙனம் இருக்க,ஒன்றே காரணப் பொருள்; அப்பொருள் நாராயணனே என்பதை நாம் அறுதியிடுவது யாங்ஙனம்? என்னும் ஐயம் இங்கு உண்டாகலாம்.

வேத வாக்கியங்களைக் கொண்டு பரமனை அறியுங்கால், இவ்வாறான க்லேசம் உண்டாவது உண்மையே. இங்ஙனம் க்லேசம் பெற்றிருப்போர்க்கு மனத்தெளிவுக்கு இடம்
இல்லை. “வேதம் தெளிவாக எடுத்து உரைக்கும் வண்ணத்தில் அமைந்திலது’ என்று நாம்
முன்னமே கூறியிருந்தோமே அஃது.இப்போது எண்ணத் தகுந்தது. இக்லேசம் தீருவதற்கு
வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரம் ஒரு வழியினால் உதவி புரிகின்றது. வால்மீகி முனி
வன் இயற்றிய இராமாயணமோ, வேறொருவழியினால் உதவி செய்கின்றது. இவற்றுள்
மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியை முதலில் சுருக்கமாகக்காண்போம் :
மீமாம்ஸா சாஸ்திரமாவது – வேத ஆராய்ச்சி செய்யும் நூலாகும். இவ்வாராய்ச்சி முறையை, மேற்கூறிய உபநிஷத்வாக்கியங்களில் பின்வருமாறு நாம் அறியலாம் :
“ஹிரண்ய கர்ப்ப : என்னும் முதல்வாக்கியம், ‘எல்லாம் அழிந்த காலத்து,பிரமன்
இருந்தான்’ என்னும் கருத்தையும், “நஸத்நசாஸத். என்னும் இரண்டாம் வாக்கியம்,
ஸத்தும் அஸத்தும் அக்காலத்தில் இல்லை; சிவன் இருந்தான்” என்னும் கருத்தையும்
“ஏகோ ஹவை நாராயண என்னும் மூன்றாம் வாக்கியம், ‘அச்சமயத்தில் நாராயணன்
இருந்தான்’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளன. ஆனால்,முதல் இரண்டு வாக்கியங்
களில் பிரமன் இருந்தான்; சிவன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது போல், ‘நாரா
யணன் இல்லை’ என்பது தெரிகிறதா? இங்கு இது முக்கியமாய் நோக்கத்தக்கது.
(ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரஹ்மா நேசான 🙂 என்னும் மூன்றாம் வாக்கியத்தில் “நாராயணன் அக்காலத்தில் இருந்தான்” என்பது எங்ஙனம் தெளிவாகத் தெரிகின்றதோ, அங்ஙனமே “அக்காலத்தில் பிரமனும் இல்லை; சிவனும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறல்லவா?-இதனால் என்ன தேறிற்று என்னில், கூறுவோம்; மேற்கூறிய மூன்று வாக்கியங்களுக்கும் முரண்பாடு சிறிதும் இன்றி, கருத்தைக் கொள்வது சிறந்த முறையாகும். முதல் இரண்டு வாக்கியங்களுக்கும் ‘எல்லாம் அழிந்தகாலத்து, பிரமன் மாததிரம் இருந்தான்; அல்லது சிவன் மாத்திரம் இருந்தான்; வேறு ஒரு பொருளும் இல்லை’ என்னும் கருத்தைக் கொண்டால், ஏகோ ஹவை நாராயண ஆஸீத். என்னும் வாக்கியம் சேருமோ? சேராதன்றோ? ‘ஏகோ ஹவை’ என்னும் வாக் கியம் தெளிவாகக் கூறுகின்றவாறு, “எல்லாம் அழிந்த காலத்தில் நாராயணன் மாத்திரம் இருந்தான் மற்றொன்றும் இல்லை” என்னும் கருத்தைக் கொண்டாலோ,முதல் இரண்டு வாக்கியங்களும் பொருந்தும் என்று கூறவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ? ‘ஏனைய பொருள் அழிந்த காலத்து, பிரமனோ சிவனே இருந்ததாகவும், அப்பிரமனும் சிவனும் அழிந்த காலத்தும் அழிவில்லாத நாராயணனே இருந்ததாகவும், முதல் இரண்டு வாக்கியங்களும், மூன்றாம் வாக்கியமும் முறையே அறிவிக்கின்றன என்று கூறும்போது, முரண்பாடு சிறிதும் இல்லையன்றோ? இவ்வாறு ஆராய்ந்து வேதக் கருத்தை அறுதியிடும் நூலே வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரமாம். இந்த சாஸ்திர உதவியைக கொண்டு வேதக் கருத்தை நாம் நன்கு காணலாம்.-ஆயினும், மேதாவிகளுக்கே இது கூடும்.-இராமாயணம் செய்யும் உதவியை இனிக் காண்போம் :

இராமாயணமும் பரமாத்மாவும்
”சக்ரவர்த்தித் திருமகன் ஸீதாபிராட்டி யைத் திருமணம் புரிந்துகொண்டு அப்பிராட்டியுடனும், சுற்றத்தாருடனும், பரிவாரங்களுடனும் திரு அயோத்திக்கு எழுந்தருளும்போது, வழியில், பரசுராமன் வந்து-குறுக்கிட்டு, தன் வில்லை வாங்கி நாணேற்றுமாறு அச்சக்ரவர்த்தித் திருமகனை வேண்டிக்கொண்டனன்” என்பது வரலாறு. பரசுராமன் கையில் இருந்த அவ்வில்லின் பெருமை பின்வருமாறு:

[ததிதம் வைஷ்ணவம் ராம தனு: பரமபாஸ்வரம்!ஸமானஸாரம் காகுத்ஸ்தரௌத்ரேணதனு ஷாத்விதம்
ததாது தேவதாஸ்ஸர்வா : – ருச்சந்தி ஸ்மபிதாமஹம் சிதிகண்டஸ்ய விஷ்ணோச்சபலாபலநிரீக்ஷயா
அபிப்ராயந்து விஞாய தேவதாநாம் பிதாமஹ விரோதம் னயாமாஸ தயோ: ஸத்யவ
தாம்வர:
விரோதே து மஹத்யுத்தம் அபவத்ரோமஹர் சித்திகண்டஸ்ய விஷ்ணோச்ச பரஸ்பரஜி
கீஷிணோ: !|
ததா து ரும்பிதம் சைவம் தனுர்பீம பராக்ரமம் ஹுங்காரேண மஹாதேவ: ஸ்தம்பிதோதத்ரி லோசன:
தேவை ஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸங்கை: ஸசாரணை: யாசிதெள ரசமம் தத்ர ஜக்மது :தெள ஸுரோத் தமெள 
ஜ்ரும்பிதம் தத் தனுர் த்ருஷ்டவா சைவம் விஷ்ணு பராக்ரமை அதிகம் மேனிரேவிஷ்ணும் தேவா : ஸர்கணாஸ் ததா]
இவற்றின் கருத்து – இந்த வில் விஷ்ணுவினுடையது. முன், எம்பெருமானுடைய வராஹாவதாரச் செயலை பிரமனிடம் கேட்டு,அவ்வெம்பெருமானுடைய மேன்மையை
உணர்ந்திருந்த எல்லாத் தேவர்களும், சிவன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்தபின் சிவனுடையவும் விஷ்ணுவினுடையவும் பலாபலத்தைக் காணக் கருதி, யாருடைய வலிமை மிகச் சிறந்தது’ என்று நான்முகனைக் கேட்க அந் நான்முகன், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் விரோதத்தை விளைவிக்க, அவ்விருவரும் கோரமான யுத்தம் செய்ய, அப்போது விஷ்ணுவினுடைய ஹும் என்னும் ஓசையினால் சிவனுடைய வில்லும், சிவனும் பங்கம் அடைய, ‘இனிப் போர் நிகழ வேண்டாம்’ எனத் தேவர்கள் வேண்டிக் கொளள, அவ்விருவரும் சமனம் அடைய. விஷ்ணுவின் விக்கிரமத்தினால், சிவனும் சிவனது வில்லும் பங்கம் பெற்றதைக் கண்கூடாகக் கண்ட முனிவர்களும தேவர்களும் விஷ்ணுவைச் சிறந்த தெய்வமாக அறுதியிட்டனர்” என்பது

மேலும், திருவடி இராவணன் முன்னிலையில் இராம பிரானுடைய மேன்மையைக் கூறுமிடத்துத் தென்படும் வார்த்தை-(ப்ரஹ்மாஸ்வயம்பூ: சதுரானனோவா ருத்ரஸ்
த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா 1 இந்த்ரோ மஹேந் ர : ஸு ரநாயகோவா த்ராதும் நசக்தாயுதி ராமவத்யம் ! ] இதின் கருத்து- “சிறந்த செல்வம் பெற்றிருப்பவனும், வ்ருத்ரன் என்னும் அஸுரனைக் கொன்றொழித்தவனும், முப்பத்து முக்கோடி தேவதைகளைத் துணையாய்க் கொண்டிருப்ப வனுமான இந்திரனும், இந்த இந்திரனுக்கும் மேலானவனும் ப்ரளய காலத்தில் ப்ரஜைகளை அழச் செய்பவனும் காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனும் த்ரிபுராந்தகனுமான சிவனும், இச்சிவனுக்கும் தந்தையானவனும் ஏனையோரைப் போல் பிறவாதவனும் நான்கு முகங்களை உடையவனுமான பிரமனும், தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்காய் வதம் செய்யத்தகுந்தவனைக் காக்க சக்தியற்ற வராம்” என்பது.
மேற்கூறியவாறு, தேவதைகளை (இரக்ஷகராக விளங்குகின்றவரைக் கழித்துப் பேசும்
வார்த்தையில், “நாராயணனும் சக்தியற்றவன் என்று குறிக்கப் பெற்றிலது –இதனால்,
” இராமபிரான் நாராயணனே” என்னும் உண்மை யார்க்கும் கூறாமலேயே நன்கு
விளங்குகின்ற தன்றோ?-அன்றியும், இராமபிரானால் கொலையுண்டு கிடக்கும் இராவணனைக்கண்டு, நெஞ்சழிந்து, புலம்பிப் பேசும் மண்டோதரி, ஒருவாறு
தெளிந்து, அந்த இராமபிரானுடைய மேன் மையைப் பின்வருமாறு பேசியிருக்கிறாள்:
இராமபிரானே! “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம், இனியறிந்தேன் எம் பெருமானுன்னை” என்று பெரியோர் அருளிச் செய்தது போன்று, இத்தனை போதும் உன்னை அறிந்திலேன்; இப்போது அறிந்தேன் என்றாள் மண்டோதரி.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரான்,-“நீ என்னை அறிந்தவாறு எங்ஙனே?” என்ன,
திருநாட்டில் திருவாழி, திருச்சங்கு, திருத்தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும்,
திருமறுவைத் திருமார்பில் சின்னமாகப் பெற் றும், திருமகளோடு என்றும் வாழ்பவனாகிய
திருமால் நீ என்றாள்.
”திருமாலாகிய நாம் திருநாட்டை விட்டிட்டு இவ்வுலகில் வரக்காரணம் யாதோ?”
என்று சக்ரவர்த்தித் திருமகன் திரும்பவும் வினவினான்.எல்லா உலகங்களிலும் உள்ள
எல்லாஉயிர்களுக்கும் நன்மையைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,மானிட வடிவத்துடன்
திருவவதாரம் செய்து, உலகத்திற்கே கண்டகனாகிய இராவணனைக் கொல்ல வந்தாய்;
கொன்றாய் என்றாள் மண்டோதரி. இக்கருத்துக்களை, பின் குறிக்கப்பெறும் மண்டோதரி
வார்த்தையில் காண்க:
(தமஸ : பரமோதாதா சங்கசக்கர கதாதர-ச்ரீவத்ஸவக்ஷாநித்ய அஜய்யச்சா வ
தோத்ருவ:-மானுஷம் வபுராஸ்தாய விஷ்ணுஸ்ஸத்ய பராக்ரம் 1)
இன்னமும், ‘ தேவரீருடைய திரு நாபிக் கமலத்தில் பிரமனாகிய என்னை உண்டாக்கி,
என்னிடம் படைப்புத்தொழிலும் தேவரீரால் வைக்கப் பெற்றுள்ளது’ என்னும் கருத்தைக்
கொண்டுள்ள,-பத்மே திவ்யேஅர்க்க ஸங்காசே நா யாமுத் பாத்ய மாமபி! ப்ராஜாபத்யம் த்வயா கர்ம மயி ஸவம் நிவேசிதம் ||-என்னும் வார்த்தையைக் காணுங்கால்,
நாராயணன் மேன்மையை நாம் நன்கு அறியலாம் அன்றோ? (இராமபிரான் தன்னுடைச்
சோதிக்கு எழுந்தருளும் போது, பிரமன் வார்த்தையாகக் கால் புருஷனால் கூறப்பெற்
றுள்ளது, இது.)முன்னம், . ஹிரண்யகர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே” “நஸத் நசாஸத் சிவ ஏவ கேவல:”ஏகோஹவை நாராயண ஆஸீத்ந ப்ரஹ்மா)நேசான :” என்னும் வாக்கியங்கள், கருத்
தைத் தெளிவாகத் தெரிவிக்கும் வண்ணத்தில் அமைந்தில; மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஆய்ந்து காணும் மேதாவிகளுக்கே கலக்கம் சிறிதும் இன்றி, ஏனைய பொருள்கள் இன்றி இருச்கும்போது, சிவனோ,பிரமனோ இருந்ததாகவும் எல்லாம் அழிந்த காலத்து, நாராயணனே இருந்ததாகவும் அவ்வாக்கியங்களின் தெளிந்த பொருளைக் காணக்கூடும் என்று கூறியிருந்தோமல்லவா?
இப்போது, இராமாயணம்,(மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியைப் போலன்றி)
யார்க்கும் எளிதில் நன்கு விளங்குமாறு,
(I) விஷ்ணு.சிவன் இவ்விருவருக்கும் போர் நடக்கும்போது, விஷ்ணுவினுடைய மேன்மையை முனிவரும் தேவரும் கண் கூடாகக் கண்டனர்; (2) இந்திரனோ, சிவனோ, பிரமனோ ஒன்று சேர்ந்த இம்மூவரோ, இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்கானாரை இரக்ஷிக்கஇயலாதவர் ; (3) இவ்வுலகத்திற்கு நன்மையையும், இராவணனுக்கு அழிவையும் செய்ய வந்த இர க தெய்வமான நாராயணனேஇராமபிரான்; (4) படைப்பவனாகிய பிரமன்
படைப்புத் தொழிலைப் பரம புருஷனாகிய இராமபிரானுடைய அருளாலேயே பெற்றிருப்பவன் ; என்னும் உண்மைக் கருத்துக்களை முறையே, பரசுராமன்,திருவடி மண்டோதரி (பிரமன்) காலபுருஷன் ஆகிய இவர்கள் வாக்கியங்களினால் நன்கு இயம்புகின்றதைக் கண்டோமல்லவா?
மேற்கூறிய உண்மைக் கருத்துக்களை நாம் மனத்தில் கொண்டு “ஹிரண்யகர்ப்பு: “
“நஸத் நசாஸத்” “ஏகோ வை நாராயாண ஆஸீத் நப்ரஹ்மா நேசான: ‘ என்னும் வாக்
கியங்களைக் கண்டால், மந்த மதிகளுக்கும் கலக்கம் சிறிதும் உண்டாகாதன்றோ?
இவ்வாறு நாராயணன் மேன்மையையும், ஏனையோருடைய தாழ்ச்சியையும், ஆங்கு
ஆங்கு பல வாக்கியங்களினால் மிக மிகத்தெளி வாகத் தெரிவித்திருத்தலை ஒருவாறு சுருக்கமாகக் கண்டோ மல்லவா? இனி ஜீவாத்மாவின் உண்மையை உணருவோம்.

வேதாந்தமும் ஜீவனும்

(பதிம் விச்வஸ்ய) என்பது ஒரு வேதாந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இவ்வுலகை உடையவன் எம்பெருமான்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளது. இதனால், (எங்ஙனம், சக்ரவர்த்தித் திருமகன் இராமன்’ என்றால், இராமனுக்குத் தந்தை சக்ரவர்த்தி’ என்பது தேறுகின்றதோ, அங் ஙனமே) இவ்வுலகு எம்பெருமானுக்கு உடைமைப் பொருள்’ என்பது தேறுகின்றதல்லவா?
இவ்வாறு உடைமைப் பொருளாயிருக்கும் தன்மையை சேஷத்வம்’ என்று கூறுவர் ஆன்றோர்.-உடைமைப் பொருளாயிருக்கும் தன்மை’ என்பதைச் சிறிது விவரித்துக் கூறுவாம்: கட்டிப் பொன் ஒருவனுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலைக்காண்கிறோம். அப் பொன், அவன் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும், அவன் விரும்புகின்றவாறு, தான் அனு பவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றதாயும் இருக்கின்றது.இது போன்று,ஜீவனும் எம்பெருமானுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலை ” பதிம் விச்வஸ்ய” என்னும் வாக்கியத்தில் காண்கிறோம். அந்த ஜீவன், எம்பெருமான் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும்,அவ்வெம்பெருமான் விரும்புகின் றவாறு தான் அனுபவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றவனாயும் இருக்கின்றான். இங்கு, “கட்டிப் பொன்
போலே சேஷத்வம்” என்னும் வாக்கியம் காணத் தக்கது.
அன்போடு கூடிய இந்தச் சேஷத்வ நிலையை தாஸ்யம்‘ என்பர். இந்தத் தாஸ்யம் ஜீவ
னுக்கே உரியதொரு சிறப்பாகும்.

(யஸ்யாஸ்மி நதமந்தரேமி) என்னும் மற்றொரு வேத வாக் கியத்தைக் காண்போம். இவ்வாக்கியத்தின் கருத்து- ‘எவனுக்கு நான் தாஸனாக (அடிமையாக) இருக்கின்றேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்’ என்ப தாம் இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள யஸ்யாஸ்மி‘என்னும் பகுதி, ‘பதிம் விச்வஸ்ய என்னும் வாக்கியத்தின் தேறிய பொருளையே குறிக்கின்றது.
‘நதமந்தரேமி’ என்னும் பகுதியின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவாம். ஒருபொருள் ஒரு க்ஷணம் இருந்தால், அவ்வாறுஓரு க்ஷணம் இருத்தலை ‘ஸத்தை’ என்பர்-இரண்டு க்ஷணம் முதல் அந்த அந்தக்காலத்தில் இருத்தலை ‘ஸ்திதி’ என்று கூறுவர். முயறசியை ”ப்ரவ்ருத்தி’ என்று பகருவர். முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி, என்று சொல்லுவர்.
இம்முறையில், ஒவ்வொரு ஜீவனுடைய ஸத்தை, ஸ்த்திதி, பரவ்ருத்தி, நிவ்ருத்தி ஆகிய
இவை பரமபுருஷனுக்கு வயப்பட்டனவாகவே காணப்படுகின்றமையின், ஜீவன் எம்பெரு
மானுக்குப் பரதந்திரன் எனப்படுகிறான்.-எங்ஙனம்,தட்டான் கைப்பட்டுப் பணி செய்யப்படுகின்ற பொன்னானது, அவன் அதனை உருக்கவும், தட்டவும், நீட்டவும்,
ஆக்கவும், அழிக்கவும் முயலுமளவில், அது நெகிழ்வதும் வளைவதும், நீள்வதும், ஆவதும்
அழிவதுமாகி, தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வசமாயிருக்கையின்றி, அவன் வசப்
பட்டிருக்கின்றதோ, அங்ஙனமே, ஜீவனும், தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வச
மின்றி, எம்பெருமான் விரும்புகின்றவாறு, ஆக்கவும், அழிக்கவும் வசப்பட்டிருக்கின்றான்’
என்பதை நாம் அறிதல் வேண்டும் இங்கு,” பணிப்பொன் போலே பாரதந்திரியம்’
என்னும் வாக்கியம் நோக்கத்தக்கது.
இப்பாரதந்திரிய சப்தக் கருத்தை ஊன்றி நோக்கின்.எம்பெருமான் ஸ்வதநதிரன்’
என்பதும் இங்கு நன்கு விளங்குமன்றோ?
பரமபுருஷனைப் பற்றி உள்ள சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டும் சேர்ந்தே யிருக்கு
மாதலின், அவற்றைத் தனித்தனியே பிரித்து அறிந்து கொள்ளுமாறு, கட்டிப் பொன்,
பணிப்பொன் என்னும் இவ்வுதாரணங்கள் காட்டப் பட்டன.
இவற்றால்,எம்பெருமானுக்குச் சிறப்பை விளைக்கைக்கு உறுப்பாய், அவன் விருப்புக்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதற்குத் தகுதி யுடையதாயிருக்கை, ‘சேஷத்வம்’ என்றும்,
அங்ஙனம் உபயோகப்படுவதாயிருக்கை, ‘பாரதந்திரியம்’ என்றும் இவற்றிற்கு உள்ள
வேற்றுமையை நாம் நன்கு அறியலாம்.
இதுகாறும் கூறியவாற்றால், ”பதிம் விச் வஸ்ய., ‘யஸ்யாஸ்மி நதமந்தரேமி “ என்னும் வாக்கியங்களில் எம்பெருமான் ஸ்வாமி(உடையவன்) ‘ஸ்வதந்திரன்’(தனக்கு வசமான தன் ஸத்தை முதலியவற்றைப் பெற்றிருப்பவன்)’ என்னும் கருத்தும்,ஜீவன்,அவ் எம்பெருமானுக்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன்’ என்னும் கருத்தும், அவ
னுக்கும் (பரமனுக்கும்) இவனுக்கும் ( சேதனனுக்கும்) வேற்றுமை உண்டு’ என்னும் கருத்தும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
இனி,  (தத் த்வம் அஸி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தைக் காண்போம். இவ்வாக்கியம், ஆத்மா ஒரு பொருள்தான் உண்டு; ஜீவனுக்கும் பரமனுக்கும் வேற்றுமை யில்லை என்னும் கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இக்கருத்தையும். “ பதிம் விச்வஸ்ய” “யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்னும் வாக்கியங்களின்,மேற்கூறிய கருத்தையும் சேர்த்து நோக்குங்கால், ‘ஜீவனும் பரமனும் ஒரு பொருளா ? அல்லது வேறு வேறு பொருள்களா? ஒன்று எனின். ‘பதிம் விச்வஸ்ய’ என்னும் சுருதி சேராது. வேறு எனின், “தத் த்வம் அஸி’ என்னும் சுருதி சேராது’ என்னும் இக்கலக்கம்)
உண்டாவது இயல்பன்றோ?
இக்கலக்கத்திற்குப் பரிஹாரம் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின் பறறிக் காணுங்கால், பின்வருமாறு அறியத்தக்கது : தத்த்வம் அஸி” என்னும் சுருதியிலுள்ள-தத்’ என்னும் பதம், அறிவு, ஆற்றல் முதலிய திருக்குணங்களோடு கூடிய காரணப்பொருளான பரமனைக் குறிப்பதாகும். ‘த்வம்’ என்னும் பதம் ‘ஸ்வேதகேது ‘ என்னும் ஜீவனைச் சரீரமாய்க் கொண்டுள்ள பரமனைக் குறிக்கும்.-இவ்விருவரும் ஒருவர்’ என்பது இவ்வாக்கியத்
தின் கருத்து.

தத் என்னும் இப்பதம் பரமனைக் குறிக்கும் என்பது உண்மையே. ஆனாலும், இந்த த்வம்
என்னும் பதம், முன்னிலைப் பொருளான ஜீவனை (ச்வேதகேதுவை)க் குறிக்குமேயன்றி,
பரமன் வரையில் செல்லுமோ? செல்லாதன்றோ ? அங்ஙனமாயின்,இஃது அவனை
(ச்வேதகேதுவை)ச் சரீரமாய்க்கொண்டுள்ள  பரமனைக் கூறும் என்று நீங்கள் கூறுவது
எவ்வாறு?’ என்னும் கேள்வி உண்டாகலாம்.
இக் கேள்வியின் பரிஹாரம் – ஜாதியை உணர்த்தும் சொல், ஜாதியை உணர்த்தும் அளவில் நில்லாமல்,எங்ஙனம் அந்த ஜாதிக்கு இருப்பிடமான வடிவத்தையும் உணர்த்துகின்றதோ, (எங்ஙனம். ‘குடம்’ என்னும் சொல்,குடத்தன்மையை உணர்த்தி அவ்வளவில் நில்லாமல், அக்குடத்தன்மைக்கு இருப்பிடமான குடத்தையும் உணர்த்துகின்றதோ-அங்ஙனமே, சரீரத்தை உணர்த்தும் சொல்லும், சரீரத்தை உணர்த்தும் அளவில் நில்லாமல், அச்சரீரத்தைத் தாங்கும் ஆத்மா வரையில் செல்லும்’ என்பது ஒரு முறையாம். இம்முறையை-அபர்யவஸான வருத்தி’ என்று கூறுவர். ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
 (என்பது யஸ்யாத்மாசரீரம் ) என்னும் சுருதியினால் அறியத்தக்கது.-ஜீவன். கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி,அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகந்து போருகின்றமையின், அவனை ஆத்மா என்றும், அப்பிண்டத்தைசரீரம் என்றும் அறிகின்றோம்.
இது போன்றே, பரமாத்மாவும், அறிவுற்ற சித்தும் அறிவற்ற அசித்துமாகிய இப்பிரபஞ்
சத்தைத் தூண்டி, தாங்கி, இப்பிரபஞ்சம் செய்யும் பணியை ஏற்று உகக்கிறானாதலின்,
அப்பரமன் ஆத்மா; இப்பிரபஞ்சம் சரீரம் என்னத் தட்டில்லையன்றோ?(தாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா) என்னும் வாக்கியம், “தத் த்வம் அஸி என்னும் வாக்கியத்தோடு சேர்ந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இப்பிரபஞ்சம் பரமனை ஆத்மாவாக உடையது ; அது உண்மை;-பரமன் ஆத்மா’ என்னும் கருத்தைக் கொண் டுள்ளது .-இவ்வாறு, முதலில், இப்பிரபஞ்சத்திற்கும் பரமனுக்கும் உள்ள சரீரத் தன்மை,ஆத்மா வின் தன்மை இவற்றைக் கூறி, பின்பு, ‘ஸ்வேதகேது’ என்னும் ஜீவனையும், பரமனையும் முறையே த்வம், ‘தத் ‘ என்னும் பதங்களினால் குறித்து, இவ்விருவருக்கும் உள்ள (சரீரத்தன்மை ஆத்மாவின் தன்மை ஆகிய) தொடர்பினால் உண்டான ஒற்றுமையை அந்த ”தத்த்வம் அளி” என்னும் சுருதி அறிவிக்கின்றதாக நாம்கொள்ளுதல் நன்றாம். இப்போது, “தத் த்வம் அளி ” என்னும்
இந்தச்சுருதியிலும், ”பதிம் விச்வஸ் ” “யஸ் யாஸ்மி ந தமந்தரேமி’ என்னும் சுருதிகளில்
போன்று, ஜீவனைப் பரமனுக்குச் சேஷப் பொருளாயும், பரதந்திரப் பொருளாயும்
கண்டோமல்லவா? கண்டவாறு யாதோ?எனின், ‘ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
என்ற போதே,அந்த ஜீவன், எம்பெருமானுக்கு சேஷப் பொருளும், பரதந்திரப்
பொருளுமாம்’ என்பது தெள்ளிதன் விளங்குகின்றதன்றோ?
இம்முறையில், மீமாம்ஸா சாஸ்திரம், முன்னம் கூறிய கலக்கத்திற்குப் பரிஹாரத்தைத்
தெரிவிக்கின்றது. இது போலன்றி, இராமாயணம் எளிதில் உணருமாறு ஜீவனுடைய
உண்மை நிலையை உணர்த்துகின்றது. இவ்வாறு எளிதில் உணர்த்தும் உண்மை நிலையைக் காண்போம்.

இராமாயணமும் ஜீவாத்மாவும்-
‘சக்ரவர்த்தித் திருமகன், ஸீதாபிராட்டி யுடனும், இலக்குமணனுடனும் வனத்திற்கு எழுந்தருளி, சக்ரவர்த்தியும் துஞ்சி, இராச்சியம் அராஜகமாய்க் கிடந்த காலத்து, பரதனை
முடி சூடிக்கொள்ளவேணும் என்று வஸிஷ்டர்) வேண்டிக்கொள்ள, அப்பரதன் அதற்கு இசையாது இருந்தனன்’ என்பது சரித்திர உணமை அங்ஙனம் இசையாது இருக்கும்போது, பரதன் வளிஷ்டரை நோக்கிக் கூறினவார்த்தை பின் வருமாறு :-
(கதம் தசரதா ஜாதோபவேத் ராஜ்யா பஹாரக: ராஜ்யம் சாணம் ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹ )-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :-
இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளிய பின், அப்பரமபுருஷன் பிரிவு பொறாது, என் தந்தையாரான சக்ரவர்த்தி துஞ்சினார். அச் சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த நான், அவ்வி ராமபிரான் துறந்த இராச்சியத்தை எங்ஙனம் ஏற்றுக்கொள்வேன். அங்ஙனம் ஏற்றுக் கொண்டால், சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த பிள்ளை என்று என்னை உலகம் கூறுமோ? கூறாதன்றோ ?
மேலும், என் உண்மை நிலையை உணருங்காலும் இவ்விராச்சியத்தை யான் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், நான் என்னும் இவ்வாத்மாவும், இந்த இராச்சியமும் அப்பிரானுக்கே உரிய பொருள்களாம்.-அப்பிரானுக்கே உரிய இரண்டு உடைமைப் பொருள்களுள், ஒன்று மற்றொன்றை ஆண்டு பரிபாலனம் செய்வது முறையாமோ? ஆகா தன்றோ?
இவ்வுலகில் தன்னைப் பெற்று வளர்த்த தன் தந்தையாரையும்சிறையிலிட்டு வைத்து, தான்
இராச்சியத்தை முறை தவறிப்பெற்று, பரிபாலனம் செய்வது என்பதொன்று உண்டு. இம்முறையைப் பின்பற்றி, என் பாக்கல் இராச்சி யத்தை வைப்பது தகுமோ ? தகாதன்றோ ?
என் இயல்பை உணர்ந்து, காக்கும் தன்மையைக் கூறுவீர்.இராமபிரானுக்கே உரிய இப்பொருள்களுள், ஒன்று மற்றொன்றைஆண்டு பரிபாலனம் செய்யலாம் என்னில்,
என்னைத்தான் இராச்சியம் இரட்சிக்கட்டுமே?-என, ஒருவனுக்கே உரிய பெட்டி, இரத்தினம் ஆகிய இரு பொருள்களுள், ஒன்று காப்பதாயும், மற்றொன்று காக்கப்படுவதாயும் காணப் பெறுகின்றன அல்லவா? இதுபோன்று பரதனாகிய நீ, காப்பவனாகியும் இராச்சியம் காக்கப் படுவதாயும் ஆனாலோ? என்னில்,-மேற்கூறிய இரு பொருள்களுள், ஒன்றான இரத்தினம், உடையோனாகிய அப்புருஷனால் என்றும் தரிக்கத்தக்கதாம். அவ்வாறான அந்த இரத்தினத்தை,அவன் ஒருகால்பெட்டியில் வைத்து, அப்பெட்டியைக் காப்பதாய்க் கரு துங்கால், அது அங்ஙனம் காணப் பெறுகின்றது. அல்லாத போது, அப்பெட்டி அங்ஙனம்
காணப் பெறுகின்றதோ? இல்லையன்றோ? இராமபிரானுக்கே உரிய (இரத்தினமாகிய இராச்சியம் அப்பிரானாலேயே என்றும் தரிக்கத் தக்கதல்லவா? அந்த இராச்சியமாகிய
இரத்தினத்தைத் தரித்துக் காக்கத் தகுதி எனக்கு உண்டோ? இல்லையன்றோ? நான் அப் பெட்டியாய் இருக்கத் தகுமோ? தகாதன்றோ?-என,
இராச்சியத்திற்கு அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால், அதற்கு உன்னைக் காக்க இடமில்லை. அறிவும் ஆற்றலும் உள்ள உனக்கோ, அந்தஇராச்சியத்தைக் காக்கத் தகுதி உண்டு என்னில், என்அறிவும் ஆற்றலும் எம் பெருமானுக்குப் பணி செய்யப் பாங்காயுள்
ளன வன்றி, அந்த எம்பெருமான் உடைமையை அவனுக்கு இல்லை செய்யத் தகுதியுடையனவோ? அங்ஙனமோ தேவரீர் எண்ணியிருக் கிறது?” என்பது இதின் கருத்து-இதனால், ‘பரதன் உண்மைநிலையே ஜீவனுக்குரிய ஓர் உண்மை உயரிய நிலை என்பது தெள்ளிதின் விளங்குகின்றதல்லவா?

இனி, ஸீதா பிராட்டியார் சரிதத்தில் பார தந்தரிய நிலையைக் காண்போம் : ஸீதா பிராட்டியாருக்கு மூன்று பிரிவுகள் உண்டு. தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காக அசோகவனத்தில் தாம் சிறை இருந்தது. முதல் பிரிவு. இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சக்ரவர்த்தித் திருமகன் அப்பிராட்டியாரை காட்டிலே போகவிடப் பிரிந்தது . மறுபடியும் அப்பிராட்டியார் இராமபிரான் முன்னிலையில் வந்திருக்கும் போது, பிரிந்து, பிறநதகத்தில் (பூமியில்) புகுந்து விட்டது மூன்றாம் பிரிவாம். இப்பிரிவுகளுள், இரண்டாம் பிரிவில் பாரதந்தரிய நிலை நன்கு விளங்குகின்றது. இதைச் சிறிது விவரித்துக் கூறுவாம் :
சக்ரவர்த்தித் திருமகனும் ஸீதாபிராட்டியாரும் திரு அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் காலம். திருவயிறு வாய்த்திருத்தலை (கர்ப்பிணியாயிருக்கையை ) சக்ரவர்த்தித் திருமகன் கண்டனன். அவன் அப்பிராட்டியாரை நோக்கி, அறுபதினாயிரம் ஆண்டு மலடு கிடந்த என் தந்தையாரான சக்ரவர்த்தியைப் போன்று வருந்திப் பெறாது, எளிதாகவே எனக்குப் புத்திரப் பேறு கிட்டிற்றே! அவசியம் அனுபவித்தல்லது நிற்க வொண்ணாத ஆசையோடு கூடி இருக்கும் நீ எத்தை விரும்பு கிறாய்? எல்லாவற்றையும் சொல்லாய், உள்ளோடுகிறவை நிழலெழுகிற முகவொளி உடையவளே!-(அபத்யலாபோ வைதேஹி மமாயம் ஸமு பஸ்தித: I கிமிச்சஸி ஸகாமா த்வம்ப்ரூஹி ஸர்வம் வரானனே) என்று அருளிச் செய் தனன்.
இதைச் செவியேற்ற பிராட்டி இராம பிரானை நோக்கி, அருளிச் செய்த வார்த்தை யாவது -(தபோவனானி புண்யானி த்ரஷ்டும் இச்சாமி ராகவ கங்காதீர நிவிஷ்டானி ருஷீணாம்
புண்ய கர்மணாம் பல மூலாசி நாம் வீர பாத மூலேஷு வர்த்திதும் / ஏஷமே பரம: காம :)-என்பதாம்.
இதின் பொருள் ‘இராகவனே ! கிழங்கு, காய்,கனி இவற்றைப் புஜிப்பவரும், ஸத்துவ குணம்பெற்றிருப்பவருமான மஹான்களுடைய திருவடி நிழலில் ஒரு நாளாகிலும் தங்கி, கங்கைக் கரையில் உள்ள தபோவனங்களைக் காண விரும்புகிறேன். இதுவே. எனக் குள்ள மேலான விருப்பம்’ என்பதாம்.
இவ்வார்த்தையைத் திருச்செவி சாற்றியருளின இராமபிரானும், உலக அபவாதத்தைப்
போக்கிக் கொள்ள வேணும் என்னும் திருவுள்ளம் பெற்றிருப்பவனாகையால், அப்பிராட்டி யாரின் விருப்பத்தை நிறைவேற்றுபவன்போல், அவ்வாறே அனுப்பினன். இதுவே இரணடாம் பிரிவாகும்.
இப்பிரிவுக்குப் பயன்- இராமபிரடான், கட்டிலே வைத்த போதோடு காட்டிலே
விட்ட போதோடு வாசியற அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின் சென்று நடக்க வேண்டும்படியான தன் பாரதந்தரிய நிலையைப் பிரகாசப்படுத்துதலேயாம்.
கட்டிலே வைத்தபோதோடு காட்டிலே விட்ட போதோடு வாசியற, அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின்சென்றுநடக்க வேண்டும்படியான நிலை’ என்பதைச் சிறிது விளக்குவோம்.
ஸீதாபிராட்டி அசோக வனத்தில் சிறை இருக்குங்கால், இராவணனாலும், அரக்கியராலும் பட்ட துன்பம் எல்லையற்றதாம். அப் பிராட்டி முன்னிலையில், இராவணன் முறை தவறிக் கூறிய வார்த்தைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று பின்வருமாறு-‘கிளி போன்றவளே! நான் உன்னைக் கொணர்வதற்கு முன்னமே உன் கணவனாகிய இராமன் மாண்டு போனான்; அவன் இறக்குங்கால்,ஹா ஸீதா ! ஹா லக்ஷ்மணா ! என்று கூறியதை நீ காதாரக் கேட்டிருக்கின்றாய் ; அங்ஙனம் இருக்க, இராமனைக் கூடவேணும் என்று நீ கருதுகின்றனையே!  ஈது என்ன பேதமை? நல்விதி என்னை உன் பக்கல் கூட்டி
யிருக்க, அதை அவமதித்து என்னை வெறுப்பது தகுதியோ ‘ இங்கு,
“வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டாற்குஇருத்தி கொல் கிள்ளை நீ !
நாட்டும் கால்நெடு நல் அறத் தின்பயன்
ஊட்டும்காலத்து இகழ்வது உறும்கொலோ–என்னும் கம்பர் வாக்கைக் காண்க.
மக்களுள் ஒருவனாகிய இராவணன் தாயான பிராட்டி முன்னிலையில், கூறும் வார்த்தை
யாமோ? இது. இங்ஙனமே. அரக்கியரும். தத்தமக்குத் தோன்றியவாறு கடிந்து கூறிய
சரிதம் உலகமறிந்ததேயாம். வில்லம்புக்குத் தப்பலாம்; சொல்லம்புக்குத் தப்ப இயலுமோ? இயலா தன்றோ?
“தீயினாற்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு-என்னும் ஆன்றோர் வாக்கு இங்குக் காணத் தக்கது.
இங்ஙனம் இருப்பினும்,முடிந்து பிழையாது, பிராட்டி அசோக வனத்தில் உயிர் தரித்து
இருந்தமைக்குக் காரணம் யாதோ? எனின்,-காரணம் ஒன்று கூறுவாம்.
நம் தலைமகனான இராமன் நம்மிடம் அளவற்ற அன்பு உள்ளவன்;ஜகதேக வீரன்;
விரோதியான இராவணனைக் கொல்வது திண்ணம். கொன்று, நம்மைத் தேடுங்கால்,
ஸீதை முடிந்து பல மாதங்களாயிற்றே? என்றால், தண்ணீர்ப் பந்தலில் வந்து, உருண்டு
உடைந்து கிடக்கும் தண்ணீர்ச்சாலைக் கண்டு தபிக்கும் விடாயனைப் போன்று, அப்
பரமன் கதி என்னாகும்! அப்பரமனுக்காகவே நாம் உயிர் தரித்திருப்பது நம் நிலைமைக்குப்
பொருந்திய கார்யம் அன்றோ?” என்று இருந்ததே அக்காரணமாம்.இங்கு, இராமபிரான் திருவுள்ளக் கருத்தைப் பின்சென்று இருக்கும் பாரதந்தரியநிலையை நாம் நன்கு உணரலாம் அல்லவா?-இக்கருத்தை நாம் மனத்திருத்தி, இரண்டாம் பிரிவையும், அப்பிரிவில் நடந்தசெயலையும் காணுங்கால்,ஓர் ஐயம் எழக்கூடும் அந்த ஐயம் பின்வருமாறு காணத்தக்கது.-இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காக இராமபிரான் பிராட்டியைக் காட்டிலே போகவிடப்பிரிந்தது’ என்று முன்னமேயே கூறியிருந்தோம். இதைக் காணுங்கால், பிராட்டியிடம் இராமபிரானுக்கு அன்பு எள்ளளவும் இல்லை என்று தெரிகிறதன்றோ? அப்பிராட்டியார், தம் உயிரை விரும்பி இருப்பது இராமபிரானுக்காகவே என்ற கருத்து,-(நஹி மே ஜீவிதேநார்த்த :) என்ற அவர் கூற்றால் நன்கு விளங்குகிறதன்றோ ? அசோகவனத்தில் எழுந்தருளியிருக்குங்கால், இரா
வணனாலும் அரக்கியராலும் சொல்லொணாத்துன்பம் பெற்றிருந்தும் இராமபிரானுக்காக
வேயன்றோ உயிர் தரித்திருந்தது? அவன் அவ்வாறு இருக்க, பிராட்டியார் உயிர் துறக்காது
இருந்ததற்குக் காரணம்யாதோ ?-இவ் ஐயத்திற்குப் பரிகாரமாவது– மிகவும்
துயருற்றிருந்த இலக்குமணன், கங்கைக் கரையேறினதும், பிராட்டி ஸன்னிதியில், இராமன்,
காட்டிலே விட்டதிற்குப் பயனாகத் திருவுள்ளம் பற்றின உலக அபவாத பரிஹாரத்தை விண்ணப்பம் செய்தனன். அதைச் செவிமடுத்த அப்பிராட்டி, மிகவும் துன்புற்றுப் புலம்பிப் பேசும்போது, அருளிச்செய்த வார்த்தைகளுள் ஒன்று.
(நகல்வத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம்ஜாஹ்வீ ஜலே
த்யஜேயம் ராகவம் வம்சேப துர்மாபரிஹாஸ்யதி ||–இதன் கருத்து – இலக்கு மணனே! ‘இராம
பிரானைச் சுட்டியிருக்கும் ரகுஸந்தானமானது, அவ் இராமபிரானுடைய திருவம்சத்தில்
இல்லாமல் அழிய வொண்ணாது’ என்று கங்கா ஜலத்தில் இப்போதே உயிரை விடுகைக்குத்
தகுதியுடையவளாக ஆகிறிலேன்’ என்பதாம்.
இக்கருத்தைக் காணுங்கால், இராமபிரானைப்பற்றி உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லை. அப்பிரான் விரும்பிய ஸந்ததியைப்பற்றி அப்பிராட்டியார் அப்பிரிவில் உயிர் தரித்திருந்ததாய்த் தெரிகிறதன்றோ? இதைக்காண்போருக்கு மேற்கூறிய ஐயத்தின் பரி
ஹாரம் நன்கு புலனாம்.-இங்கு, ”ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்கை தேட்டமாகா நிற்கச் செய்தேயும், அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப்
பின் சென்று, தன் ப்ராணனை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் படியான பாரதந்
திரியத்தையிறே ப்ரகாசிப்பித்தது” என்னும் மணவாளமா முனிகள் திருவாக்கு அனுபவிக்
கத்தக்கது.
இத் திருவாக்கில் அமைந்துள்ள “பெருமாள் நினைவைப் பின்சென்று” என்பதற்கு, ‘குசல
வர்களுடைய திருவவதாரத்தில் இராமபிரான் விருப்புற்றிருப்பவனாம்.ஆதலின,இப்போது
நாம் உயிர் தரித்திருப்பது அப்பிரானுக்கு இஷ்டமாம்’ என்னும் எண்ணத்தை, (அபத்
யலாபோவைதேஹி. என்னும் அப்பிரான் திருவாக்கையும், அதின் மூலமான அவன் திரு
வுள்ளக் கருத்தையும் பின்பற்றி)ப் பெற்றிருந்து’ என்பது கருத்தாம்.
இனி, இங்கு அப்பிராட்டியார் குசலவர்கள் திருவவதாரம் செய்த பின், உயிரோடு இருந்ததிற்குக் காரணம் யாதோ?என்னும் வினா சிலருக்கு உண்டாகலாம். இராமபிரானுக்காகவோ, அப்பிரானுடைய ஸந்ததிக்காகவோ, பிராட்டியார் உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லையன்றோ?இவ்வினாவிற்கு விடை பின்வருமாரு – தலைவன், தலைவிக்கு அடையப்பெறும் நன்மையாயும், அந்நன்மையைப் பெறுதற்கு ஏதுவாயும்,-அத்தலைவியினால் உபசரிக்கத் தக்கவனாயும், போற்றத் தகுந்தவனாயும் இருப்பவனாம்.
அதனால், உயிரையோ, அவ்வுயிரிலும் மேற்பட்டது ஒன்றையோ, விட்டாகிலும் தலைவன்
விருப்பத்தைச் செய்ய வேண்டியவளாம் தலைவி
(பதிர்ஹி தைவம் நாரயா : பதிர்பந்து : பதிர் கதி: 1 ப்ராணை ரபி ப்ரயம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: I”பாலயந்தீ ஹரேர் பாவம் பத்னீ பகவ தோஹ்யஹம் ) என்று பிராட்டியாராலேயே அருளிச் செய்யப் பெற்றுளளது
இங்கு, ‘பிறருக்காக உயிர் தரித்திருக்கவேண்டும்; பரதந்திரருக்கு முடிகை தேட்டமானாலும் முடியப்போகாது’ என்னும் உண்மையை உணருதல் வேண்டும் இவ்வுண்மைக் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்: பெருவ்யாதியினால் பீடிக்கப்பட்ட ஒருவன், அப் பீடை தாங்க மாட்டால், தானே உயிரைத் துறந்து விடுகிறான். அவன் அங்ஙனம் முடிகையே அவனுக்குச் சேர, பிழைக்கை எனப் பெறுகின்றது. இவ்வாறு முடிகையே பிழைக்கையானால் பிழைக்கையும் முடிகையாகலா மன்றோ?
ஸீதாப்பிராட்டியார், குசலவர்கள் திருவ வதாரம்செய்த பிறகு, இராமபிரானுடைய
ஸந்ததுக்காக உயிர் தரித்திருக்கவேண்டுவதில்லை என்பதும். அக்காலத்தில் அவருக்கு
முடிகை தேட்டமாயிருந்தது என்பதும் ஒருவாறு உன்மையேயாம். ஆயினும், அப்பிராட்டியார் தம் இயல்புக்கு ஏற்ப, மேற்கூறிய வாறு பிழைக்கை என்னும் முடிகையைப் பெற்றிருந்தவர் என்றே நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு இருத்தற்கும் காரணம் இராமபிரான் திருவுள்ளக் கருத்தேயாம்.
இங்கு, திருவுள்ளக் கருத்து என்பது யாதோ? எனின், கூறுவோம்: “ஸீதா பிராட்டியார் கற்
புடையவர்” என்பது மாத்திரமன்றி, கற்பினுக்கு அணியாகவே விளங்குபவராம். கண்
டனன் கற்பினுக்கு அணியை’ என்னும் திருவடி திருவாக்கையும் இங்கு நாம் காணுதல்
வேண்டும். அப்பிராட்டியாரை, இக் கொடுவுலகம் தன் இயல்புக்கேற்ப, குற்றம் கூறிற்று.
ஆயினும், நாள் செல்ல, நாள் செல்ல இக் கொடுவுலகத்திற்கே, அப்பிராட்டியாரின்,
குற்றம் சிறிதும் இன்றியிருக்கும் சிறப்பு நன்கு விளங்கக் கூடும். அக்காலத்கில் குழந்தைகளுடன் பிராட்டியாரை அழைத்துக் கொள்வதே தமக்கு நன்றாம். ஆதலின், இப்
பொழுது பிராட்டியார் உயிர் துறத்தல் கூடாது. என்பதே அக்கருத்தாம்.
இதற்குத்தக்க பிரமாணம் யாதோ? எனின்,
மூன்றாம் பிரிவைப் பற்றிக் கூறுமிடத்து, வால்மீகி முனிவன். இராமபிரானுடைய ஸன்
னிதியில் வந்து ஒடுங்கி நிற்கும் ஸீதாப்பிரட்டியாரைக் குறித்து,’இவர் குற்றம் சிறிதும்
இன்றி நல்லொழுக்கம் பெற்றிருப்பவர்;-பாவம் சிறிதும் இல்லாதவர் ; இராமபிரானை
யல்லாமல் மற்றொருவரையும் நெஞ்சாலும் நினைத்திலாது, அப்பிரானையே தெய்வமாகப்
பற்றி இருப்பவர்-‘இயம்சுத்தஸமாசாரா அபாபா பதிதே வதா’ என்று கூறியிருத்தலையும்,
இராமபிரானும், “நானும், குற்றம் சிறிதும் இன்றி இருப்பவர் பிராட்டியார் என்பதை அறிவன் (“அபாபேத் யபி ஜானதா ) முனிவனாகிய நீர் சொன்னதுவே போதும்-ஏ தேவம் மஹாபாக யதா வசஸ் தர்மவித்)ஆனாலும், இந்தத் திரளிலே உலகம் நம்புமாறு, தன் சுத்தியை வெளியிட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அருளிச் செய்திருத்தலையும் காணுங்கால், மேற்கூறிய கருத்து,தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
இங்கு, (பிறருக்காக உயிர் தரித்து இருக்க வேண்டும் பரதந்திர ஜன்மத்தில் பிறந்தோருக்கு நினைத்தபோது முடியப்போமோ ?-அங்ஙனம் நினைத்தபோது முடிந்து விட்டால்,
பாரதந்திரியமாகிற செல்வம் நிலை பெற்றிக் குமோ ?) என்னும் கருத்தைக் கொண்டுள்ள
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண் பிறந்ததே என்னும் ஆழ்வார் திருவாக்கையும் காண்க.
இதுகாறும் கூறிய பரதன், ஸீதா பிராட்டியார் இவ்விருவருடைய சரிதங்களை நாம்
மனத்திருத்தி நோக்குங்கால், இராமபிரானுக்கு இராச்சியமும், பரதனும், ஸீதாப்
பிராட்டியும் போன்று, ‘இந்த ஜீவனும், இவனுடைமையாக எண்ணப் பெற்றிக்குமவையும் அப்பிரானுக்கே (நாராயணனுக்கே) உரிய உண்மை உடைமைப் பொருளும் பரதந் திரப்பொருளுமாம்’ என்பது நன்கு விளங்கு கின்றதல்லவா ? இவ்வாறு ஜீவனுடைய
உண்மை நிலையை இராமாயணத்தில் கண்டோ மல்லவா? இனி, உபேயம் எனப்படும் பயனைப் பற்றி ஆராய்வோம்.

—————-

வேதாந்தமும் உபேயமும்

இவ்வுலகிற்கு மீண்டுவருதல் இன்றி, மோக்ஷ உலகத்தைத் தருவதான வழியில் சென்று,  திருநாட்டிலே எம்பெருமானைச் சேர்ந்து, அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன் அனுபவித்து, அவ்வனுபவத்தினால் உண்டான. ஆனந்தம்தூண்ட அவன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதலே, இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மையாம். இவ்வாறான வாழ்வையே உபேயம்’ என்றும், வீடுபேறு‘ என்றும் கூறுவர், ஆன்றோர். இங்கு, ‘பரமனைப் பஜனம் பண்ணுவோர்,
(மோஷ உலகத்திற்குச் செல்லுவோரை முதலிற்கண்டு. உபசரித்து, வழி நடத்தும்
தெய்வமான) அர்ச்சிஸ்ஸை அடைகின்றனர்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள
(தே ர்ச்சி ஷமபி ஸம்பவந்தி)என்னும் வேதாந்த வாக்கியமும்,-பரமனைப் பஜனம் பண்ணுவோன் அப்பரமனையே அடைகின்றான்’ என்னும் பொருள் பெற்றுள்ள
 (ப்ரஹ்மம் விதாப்நோதி பரம்) என்னும் வேதாந்த வாக்கியமும்,
‘மிகவும் இனிய பொருளான பரம புருஷனை அடைந்து, அனுபவித்து இன்பம் துய்க்கின்றான்’ ‘திருநாட்டில் முக்தன் எம்பெருமா னுடன் அவன் திருக்கலியாண குணங்களை அனுபவிக்கின்றான்’ என்றும் அப்பரமபுருஷனுடைய திருமேனியைக் கண்கூடாகக் காண்கின்றனர் நித்யர்’ என்னும் கருத்துக்களை முறையே காட்டும்
 ” (ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாS நந்தீ பவதி) ” (பரமே வ்யோமன் ஸோ ச்னுதே ஸர்வான் காமான் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா(ஸதா பச்யந்தி ஸூரய :) என்னும் வேதாந்த வாக்கியங்களும் காணத் தக்கன.
ஆனால், ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதல் இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை’ என்பதற்குத் தக்க பிரமாணம் யதோ? என்னும் கேள்வி இங்கு உண்டாவது இயல்பேயாம்.
இக்கேள்விக்கு விடை பின்வருமாறு : ஜீவன் கை, கால் முதலிய உறுப்புக்களோடு
கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி, அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின், அந்த ஜீவன் ஆத்மா ; அப்பிண்டம்சரீரம்’ என்பது எங்ஙனமோ, அங்ஙனமே-பரமன் ஜீவனை ஏவி,தாங்கி, அந்த ஜீவன் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின்,
அப்பரமனும் ஆத்மா; அந்த ஜீவனும் சரீரம், என்பதைபும் நாம் உணரலாமல்வலா?
இங்கு, (யஸ்யாத்மா சரிரம்= எவனுக்கு ஜீவன் சரீரமோ) என்னும் வேதாந்த வாக்கியம் பிரமாணமாய்க் காணத்தக்கது இதனால், தேறிய ஸாரப் பொருள் என்? என்னில், இந்தச் சுருதி. ஜீவன் பரமனுக்குச் சரீரமாம்’ என்று கூறிய போதே. இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை பரமனுக்குத் தொண்டு செய்கையேயாம். என்பதையும் கூறிற்றன்றோ?

ஆனால், ‘இவ்வடிமைத் தொழில் உலகப்போக்கில் துன்பம் தருவதாய் இருத்தலினாலும் ‘ஓருவருக்குத் தொண்டு பூண்டொழுகுவது துன்ப மயமானது’ எனச் சாஸ்த்திரங்களில் சொல்லப்படுவதாலும், மனுமுதலியபெரியோர் தொழில்களில் அடிமைத்தொழில், கடைப்பட்டது; துன்பமயமானது’என இயம்பி இருத்தலாலும், அடிமைத்தொழில் துன்பம் தருவதொன்றாம்’ என்பதுதெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
உண்மை இவ்வாறு இருக்க, ‘துன்பம் கலவாத பேரின்பத்தையே அனுபவித்துக்
கொண்டிருக்கும் மோக்ஷ தசையிலும்,ஜீவனுக்கு இவ்வடிமைத் தொழில் உண்டு எனச்
சொல்லப் பெறுகின்றதே, இது பொருந்துமாறு யங்ஙனம்? என்னும் இவ்வினா இங்கு
எழுகின்றது.-இவ்வினாவிற்குவிடை பின்வருமாறு :-
எங்கும் அடிமைத் தொழில் துன்பம் தருவ தாகவே இருக்கும்’ என்பது இல்லை. ‘காளி
தாஸன், தான் உகந்த விலைமகளுக்குத் தண்ணீர் கொண்டு வ து தருதல் முதலிய தொண்டைமிக்க மகிழ்வுடனும், இன்பத்துடனும் செய்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை. அதைப்போன்றே, பரமனுக்குச் செய்யும்தொண்டும் இன்பமாகவே இருக்கும்.
காளிதாஸன், தான் உகந்த விலை மகளின் அழகு முதலிய குணங்களில் ஈடுபட்டு, அவ் வுவப்பினால், அங்குத் தொண்டு புரிந்ததால், அத்தொண்டு இன்பமாக இருந்தது என்ன லாம்.
இங்கு, எம்பெருமானுக்கு அழகு முதலியகுணங்கள் உண்டோ? ‘அவன் நிர்குணன் (குணங்களற்றவன்) என வேதாந்தங்களில் கூறப்பெறுகின்றனனே, அங்ஙனம் குணமற்ற அப்பெருமானிடத்தில் இந்த ஜீவனுடைய நெஞ்சம் ஈடுபடுமோ? ஈடு படாதன்றோ? மனக்
கவர்ச்சி உண்டாகாத இடத்தில் உவப்புக்கொள்ளாத இடத்தில் அடிமைத் தொழில் இன்பமாய்த் தோன்றுவதுதான் எவ்வாறு? எனச் சிலர் கருதக்கூடும்.
எம்பெருமான் நிர்குணன்’ என்னும் வேதாந்த வாக்கியத்திற்கு, குணம் ஒன்றுமே இல்லாதவன்’ என்பது கருத்தன்று; பின்னை-கருத்து யாதோ? எனின், ‘தீயகுணம் சிறிதும்
இல்லாதவன்’ என்பதே கருத்தாம்.
திருக்கலியாண குணங்களும் இல்லாதவன்’என்று பொருள் கொள்ளில், பேரறிவு,
பேராற்றல் முதலிய எண்ணிறந்த திருக்கலியாண குணங்களைப் பெற்றிருப்பவனாம் எம்
பெருமான் ‘ என்னும் கருத்தைக்கொண்டுள்ள (பராஸ்ய சக்தி:) என்பனபோன்ற பல வேதாந்த வாக்கியங்களோடு முரண்பாடுஉண்டாமன்றோ ?
இங்ஙனம், எம்பெருமான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என
வேதாந்த வாக்கியம் இயம்புகின்றமையினாலும், இந்த ஜீவனும்,எம்பெருமான் திருக்
குணங்களில் ஈடுபட்டு, உவந்து, அடிமைத்தொழில் புரிகின்றமையினாலும், இங்கும்
அடிமைத் தொழில் இன்பமாகவே இருக்கும்என்பதில்,தட்டு ஒன்றுமில்லை.
இதுகாறும் கூறியவற்றால், வேதாந்த வாக்கியங்களைக்கொண்டே, ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்வதே வீடுபேறு’ என்பதை உணர்ந்தோமல்லவா ?
(ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும், அவ்வாக்கியத்தில் மேலெழத்தோன்றும் கருத்தையும் காண்போம்.
“ஒருவன் குற்றத்தினால், முத்துச்சிப்பியில்அதன் தன்மையை அறியாது, வெள்ளியின்
தன்மையை அறிகின்றான்; அவ்வறிவு பிரமம் எனப்படும். அந்தப் பிரமம் இருக்கும்போது,
வெள்ளி உண்மைப் பொருளாய்த் தெரிகின்றது. அதனால் அவன் அதை எடுக்கச்
செல்கின்றான். அங்ஙனம் சென்று, எடுத்து,நோக்குங்கால், ‘ இது வெள்ளியன்று, முத்துச்
சிப்பி’என்று சிப்பியின் தன்மை புலனாகின்றது. அப்போது, அம்முத்துச் சிப்பியைத் தவிர,
வெள்ளியோ, அதன் தோற்றமோ இல்லை; சிப்பி மட்டும் தென்படுகின்றது” இது போன்று, ப்ரஹ்மமானது குற்றத்தினால் பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. “தத் த்வம் அஸி-என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒன்று தான் உண்டு’ என்னும் உண்மையை உணரும்போது, இப்பிரபஞ்சமோ இதன்தோற்றமோ ஒன்றுமே இராது. அந்த ப்ரஹ்மம் மட்டும் இருக்கும். அங்ஙனம் அந்த ப்ராஹ்மம் மட்டும் இருக்கையே வீடு பேறாம். இதுவே மேற் கூறிய வாக்கியத்தின் மேலெழத்தோன்றும் கருத்தாம்.
இக்கருத்தையும், முன்னம் கூறிய அடிமைத்தொழிலே வீடு பேறாம்’ என்னும் கருத்தை
யும் ஒன்று சேர்த்துக் காண்போருக்குக் கலக்கம் உண்டாவது இயல்பேயாம்.-இக்கலக்கத்தை மீமாம்ஸா சாஸ்திர முறையைக் கைக்கொண்டு போக்கிக்கொள்ளுங்கால்,
” ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி” என்னும் வாக்கியம், ‘ஆத்மாவினுடைய உண்மையை
உள்ளபடி உணர்பவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்’ என்னும் கருத்தைக் காட்டுவதன்று; பிறகு எக்கருத்தைக் காட்டுகின்றதோ என்னில், ‘மேற்கூறியவாறு உண்மையை உணருவோன், மோஷ தசையில் பரமனோடு மிகவும் ஒற்றுமை பெற்றிருப்பவனாம்’ என்னும் கருத்தையே காட்டுவதாம் ; என்பதுநன்கு புலனாம்.
இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியில் “ப்ரஹ்ம
மாக ஆகிறான்” என்னும் கருத்து காணப் பெறுகின்றது என்பது ஒருவாறு உண்மையே.
இக்கருத்தையே கொள்ளில் ஜீவனுக்கும் பரமனுக்கும் உள்ள வேற்றுமையைப் பலவாறாகக்
கூறும் பல வேதாந்த வாக்கியங்களோடுமுரண்பாடு உண்டாமன்றோ?
முன்னம் சேதனன் அர்ச்சிராதி வழியில் செல்லுதல், திருநாட்டிலே பரமபுருஷனைச்
சேர்தல்,அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அனுபவித்தல், ஆனந்தம் பெறுதல்,அடிமை செய்தல், அப்பரமனை உவப்பித்தல் என்னும் பல நன்மைகளை அறிவிக்கும் பல வாக்கியங்களைக் கண்டோமல்லவோ?-மிகவும் ஒற்றுமையுள்ள இருபொருள்களைஅவ்வொற்றுமை தோன்ற ஒன்றாகவே கூறுதலும் செய்யுள் வழக்கில் உள்ளதொன்றேயாம். தாமரை மலர் போன்றுள்ள கண்ணை அம்மலராகவே கூறுகின்றாரல்லவா? ‘தாவிவையங் கொண்ட தடந்தாமரை என்று.இம்முறையைப் பின்பற்றி, ‘‘ப்ரஹ்மைவபவதி” என்னும் சுருதியில் மேற்கூறியவாறு பொருத்தமான பொருளைக் காண்பதே நன்றாம்.
ஆனால், தலைவன், தொண்டன் இவ்விருவருள் தலைவனுக்குச் சிறப்பும், தொண்டனுக்குத் தாழ்ச்சியும் தென்படுகின்றன. இது போன்று,உண்மையில் தலைவனான எம்பெருமானுக்குச் சிறப்பும் தொண்டனான ஜீவ னுக்குத் தாழ்ச்சியும் உண்டு என்றே கொள்ளுதல் வேண்டும். அங்ஙனமே பிரமாணங்களும் கூறுகின்றன.-உண்மை இவ்வாறு இருக்க, பரமனுக்கும் ஜீவனுக்கும் மிகவும் ஒற்றுமை உண்டு என்று கூறுவது யாங்ஙனம்? எனச் சிலர் கருதக்கூடும்.
ஓர் அரசனுக்கு அவன் புத்திரனைத் தொண்டன் என்றும், அந்த அரசனோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் அவன் புத்திரன் என்றும் காண்கின்றோம். அது போன்றே
இங்கும் ப்ரஹ்மத்திற்கு ஜீவன்தொண்டன் என்றும், அந்த ப்ரஹ்மத்தோடு மிகவும்
ஒற்றுமை பெற்றிருப்பவன் என்றும் கொள்ளக் குறையில்லை நான் இராஜ குமாரன்’ என்
னும் கருத்தைப் பெற்றுள்ள ‘(அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்னும் வாக்கியத்தை இங்குக் காண்க. அரசனுடைய புதல்வன் அரசனன்றோ?
இவ்வாறு உபேயத்தைக் குறிக்கும் வேதாந்த வாக்கியங்களின் கருத்தை மிமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி,கலக்கம் சிறிது மறக் கண்டோம். இனி, இராமாயணத்தில் இவ் உபேயத்தைக் காண்போம் :

இராமாயணமும் உபேயமும்

முதலில். எம்பெருமானுடைய அருளுக்கு இலக்கானவனை எம்பெருமானாகவே சுருதி இயம்புகின்றதே, இதை இராமாயணம் எவ்வாறு தெரிவிக்கின்றதோ, அதை அவ்வாறே அனுபவிப்போம்
திருவடி அசோக வனத்தில் ஸீதாபிராட்டி யாரைத் திருவடிதொழுது நிற்கும் போது, அப்பிராட்டியார் தாம், அத்திருவடியை நோக்கி, இவன் இராமதூதனோ? அல்லனோ?
என ஐயமுற்று, உண்மையை உணரவிரும்பி, இஷ்வாகு குலத்திலே திருவவதாரம் செய்தருளின புருஷோத்தமர்களான இராம இலக்ஷ்மணர்களுக்கும். வானரரான ஸுக்ரீவன் முதலானார்க்கும் தோழமை ஏற்பட்டதற்குக் காரணம் யாதோ? ஏற்பட்டது எவ் வாறோ? என்று வினவியிருப்பது நாம் அறிந்த தேயாம்.

அவ்வினாவிற்குத் திருவடி விடை விடுக்குங்கால், கூறிய வார்த்தை,  “(ராம ஸூக்ரீவயோரைக்யம் தேவ் யேவம் ஸமஜாயத) என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்து, பின்வருமாறு:- ‘புருஷோத்தமனாகிய இராமபிரானோ. மிக மிகப் பெரியோனும், ஒப்பற்ற மேன்மை பெற் றிருப்போனுமாம். குரங்காகிய ஸுக்ரீவனோ மிக மிகச் சிறியோனும், ஒப்பற்ற தாழ்ச்சி பெற்றிருப்போனுமாம். அப்பெருமான் இக் குரங்கைத் தோழமை கொள்வதற்குத் தக்க காரணம் இவன்பால் ஒன்றும் அறிகின்றி லேன், அம்மா!ஆயினும், இராமபிரான் ஸுக்ரீவன் ஆகிய இவ்விருவரும் ஒருவர் என்னலாம் படி, அவ்விருவருக்கும் உள்ள தோழமையைத் தான் அறிகின்றேன்.’-இன்னமும் கேட்டருளாய்: இராமபிரானுடைய தர்ம பத்தினியாகிய தேவரீருக்கு இலக்குமணன் தூது வருதல் முறையாகும்.-அல்லது, உயிர்த்தோழனாகிய ஸுக்ரீவன் அங்ஙனம் தூது வருதல் முறை என்னலாம்.
நானோ, ஸுக்ரீவன் தொண்டர்களுள் மிகவும் கடைப்பட்டவன். இவ்வாறு கடைப்பட்டவனாகிய இத்தொண்டன், தூது வருமாறு அவ்விருவருக்கும் தோழமை ஏற்பட்டுள்ளது என்றால், அத்தோழமை எவ்வாறு உள்ளது என்பதற்கு யான் விடை விடுக்கவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ?இங்கு, “ராம ஸுக்ரீவ யோரைக்யம்”’
என்றிருந்தாலும், அவ்விருவரும் ஒருவரே’ என இயம்புவாரும் உண்டோ? இல்லையன்றோ?
அவ்வாறு இயம்பினால், அதை உலகம் ஏற்குமோ?=சுருங்கச் சொல்லின், இராமபிரானும்
ஸுக்ரீவனும் உண்மையில் வேறு வேறு பொருளாகவே இருப்பவராம். ஆயினும், இன்ப
துன்பங்களை ஸமமாகப் பெற்றிருப்பவராம். அஃதாவது- இராமபிரானுடைய இன்ப துன்பங்களை ஸுக்ரீவனும், ஸுக்ரீவனுடைய இன்ப துன்பங்களை இராமபிரானும் பெற்றிருத்தலாம். இவ்வாறு இவ்விருவருக்கும் மிகவும் ஒற்றுமை இருப்பது பற்றி
இருவரும் ஒருவராகவே போற்றப் பெறுகின்றனர். இது போன்று, வீடுபேற்றைப் பெற்
றிருக்குங்கால், பரமனுக்கும் ஜீவனுக்கும் உண்மையில் வேற்றுமை உண்டு, ஆயினும்,
மிகவும் ஒற்றுமையைப் பற்றி, ஜீவன் ப்ரஹ்ம மாக ஆகிறான், எனப்போற்றப் பெறுகிறான்
என்பது, இங்குத் தெளிவு அன்றே?
இராமாயணம் இவ்வாறு ‘ப்ரஹ்மைவ பவதி‘ என்னும் சுருதியின் கருத்தை, கலக்கம் சிறிது
மின்றி, யாருக்கும் எளிதில் விளங்குமாறு இயம்பியிருத்தலைக் கண்டோமல்லவா?
இனி, இலக்குமணனுடைய சரிதத்தில், ‘எம்பெருமானுக்கு அடிமை செய்து உவப்பிப்பதே
இந்த ஜீவனுக்கு சிறந்த நன்மையாம்’ என்பதைக் காண்போம்:
இராமாயணம் இயம்புகின்றவாறு, இலக்குமணனுக்கே உரிய சீரிய சிறப்புக்களை,-”பசியராயிருப்பார் அட்டசோறும் உண்ணவேணும், அடுகிறசோறும் உண்ணவேணும்
என்னுமாபோலே, காட்டுக்குப் போகிறபோது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு அடிமை செய்யவேணும், எல்லா அடிமையும் செய்யவேணும், ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார்; படை வீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ண மாட்டாதே ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக் குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தை
யும். தரித்தடிமை செய்தார்” என்னும் ஸூத்திரத்தில், பிள்ளை லோகாசார்யர் வெகு அழகாக அருளிச் செய்திருக்கிறார். இந்தஸூத்திரத்தின் கருத்து :-
மிக்க பசியுடையோர் தம் பசியின் மிகுதியினால், ஆக்கின சோறும் ஆக்குகின்ற சோறும்
எல்லாம் தாமே உண்ணவேணும் என்றுஎண்ணுவர் . இவர் போன்று, இலக்குமணனும் இராமபிரானுக்கு எல்லா அடிமைகளும் தானே செய்யவேணும் என்று எண்ணுகின்றானாம். இந்த இலக்குமணன், முளைக்கும் போதே மணத்தோடு முளைக்கும் திருத்துழாய் போன்று, திருவவதாரம் செய்யும்போதே இராமபக்தியோடு அவதரித்தவனாம். ஆதலின், இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளும் போது, அவனுடன் செல்வதாக முயன்றனன்.
அம்முயற்சியைக் கண்ட இராமபிரான், ‘இலக்குமணா! நீ இத்திரு அயோத்தியிலேயே இருப்பாய்’ என்றனன். அப்போது, இலக்குமணன்,(நீரைப் பிரியில் உயிர் தரியாத மீன்நிலை
போன்றுள்ள) அந்த இராமபிரானைப் பிரியில் உயிர் தரியாத தன் நிலையை முன்னிட்டு,
“நாணோடு சேர்ந்த வில்லைத் தாங்கியும். உனக்கு முன்னே சென்றும், ஆங்கு ஆங்கு வழி
காட்டியும், காய், கனி முதலியவற்றைத் தேடிக் கொணர்ந்து உதவியும் இவ்வாறான அடிமையை இராமா ! நான் உனக்குச் செய் வேன் ; என்னை அழைத்துச் செல்வாய்’ என
வேண்டிக் கொண்டனனாம்.-அன்றியும், அப்பெருமானை அந்த இலக்குமணனே, தேவரீருக்குத் தொண்டு செய்யப் பெறாதபோது, நான் உயிர் தரியேன். தேவரீரோ எனில், நிறைவாளராகையாலே தொண்டைக் கொள்ளாவிடினும், உயிர்தாங்கத் தக்கவர். ஆயினும், என்னிடம் அடிமைகொண்டால தேவரீருக்கும் பெருமை உண்டு.-ஸீதாப்பிராட்டியார் தேவரீர் ஆகிய இருவரும் மலைச்சாரலில் விளையாடும் போதும்,-திருக்கண்வளருங் காலத்தும், அங்ஙனம் கண் வளருதலின்றி விழித்திருக்குங்காலும் எல்லா அடிமைகளும் செய்யவேணும். என் விருப்பத்துக்காக இன்றி,தம் விருப்பத்துக்கேற்ப ஏவி, என்னிடம் பணியை திருவுள்ளம் பற்ற வேணும்’ என்றும் விரும்பிப் பெற்றனனாம்.
இன்னமும், தானே சமையல் செய்து தானே உண்ணும் ஒருவன், நாளடைவில் தன்
வயிற்றைப் பெருக்கிக் கொள்வான்; மற்றவனோடு உண்ண இசையான். இவன் போன்று,
இலக்குமணனும். தானே வனத்தில் இராம பிரானும் ஸீதாபிராட்டியுமாகிற சேர்த்தியில், எல்லா அடிமைகளையும் செய்து, அடிமைக் கண் அன்பை பெருக்கிக் கொண்டவன் மற்றும் பரதன் முதலானாரோடு தானும் ஓர் அடிமை செய்ய இசைந்திலன். இவ்விசையாமையே எங்கே கண்டோம்? என்னில்,
இராமபிரான் வனவாஸத்தைச் செய்து, மீண்டு திரு அயோத்திக்கு எழுந்தருளி, முடி
சூடியிருக்கும் போது, ஒரு கையால் திருவெண் கொற்றக்குடையை எடுத்துப்பிடித்தும், மற்றொரு கையால் திருவெண்சாமரத்தைப் பணிமாறியும் இவ்வாறு இரண்டு அடிமையை ஒரு காலத்தில் செய்தனனாம்.
(நச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ ஜலான் மத்ஸ்யாவிவோத்ருதெள தனுராதாய ஸகுணம்.அகரதஸ் தே கமிஷ்யாமி பந்தானமனுதர்சயன், ஆஹரிஷ்யாமி தே-நித்யம் மூலாநி ச பலானி ச | பவாம் ஸ்துஸ்ஹ வைதேஹ்யா கிரிஸானுஷ ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமிஜாக்ரத ஸ்வபதச்ச தே 1 கரியதாமிதி மாம் வத ச த்ரம்ச சாமரம் திவ்யம் திருதவான் லக்ஷ்மணஸ் ததா ) என்னும் இவை காணத்தக்கன
இனி, இங்கு மற்றொரு முக்கியப் பொருளையும் நாம் ஆராய்ந்து அறிதல் இன்றியமை
யாததாம். முன்னம் கூறிய பகுதிகளில்,)’ இராமபிரான், ப்ரஹ்ம சப்தப் பொருளான
நாராயணனே’ என்பது நமக்கு விளங்குகின்றது.ஆயினும், ‘அப்பரமன் திருக்கலியாண
குணமும் இல்லாதவனா? அல்லது தீய குணம் சிறிதும் இன்றி, திருக்கலியாண குணம் நிரம்பி இருக்கப் பெற்றவனா? இராமாயணம் இப் பரமனை இயம்புகின்றது எவ்வாறோ? என்னும் இக்கேள்வி இங்கு ஏற்படுவது இயல்பேயாம்.-இதற்கு விடை பின்வருமாறு-
ஒரு நூலின் உண்மைக் கருத்தைஉணரும் போது,அங்ஙனம் உணர்வதற்கு ஏதுவாயுள்ள
வழி சில உண்டு. அவ்வழியைப் பின்பற்றிக் காணுங்கால், உண்மை நன்கு புலனாகும். இம்
முறையில் ஒரு வழியை இங்குக் காண்போம்.
இராமாயணம், முதலிலும், இடையிலும், இறுதியிலும் எப்பொருளை எவ்வாறு இயம்பு
கின்றதோ, அதை அவ்வாறே அறுதியிடுதல் மேற்கூறிய வழியாகும்.
இராமாயணம் முதன் முதலில் இராமபிரானைக் கூறுகின்றது எவ்வாறோ ? எனின்,
திருக்கலியாண குணமும் இல்லா தவன் என்று கூறவில்லை; ‘தீயகுணம் சிறிதும் இன்றி,
திருக்கலியாண குணமே நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என்றேகூறுகின்றது.
நாரதமுனிவனை நோக்கி, வால்மீகி முனிவன் மிக வணக்கத்துடன், இக்காலத்தில் இவ்வுலகில் சீலம் முதலிய எல்லா நற்குணங்களும் பொருந்தியிருப்பவன் யாவன்? என வினாவ,-யாவும் அறிந்த அந்நாரத முனிவன், இஷ்வாகு குலத்தில் திருவவதாரம் செய்தருளின இராமபிரான், எல்லாத் திருக்கலியாண குணகணங்களும் பொருந்தி யிருக்கப் பெற்றவனாம்;-எங்ஙனம் கடல் தன்னிடத்துள்ள சிறந்த-இரத்தினம் முதலிய பொருளைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருக்கின்றதோ,-அங்ஙனமே இராமபிரான் (உலக நன்மையை உண்டுபண்ணுவதான) தன்னிடத்திலுள்ள
சிறந்த திருவுள்ளக் கருத்துக்களைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருப்பவனாம்;
வீரத்தன்மையில் விஷ்ணு போன்றவன்; பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன்
போன்று காண இனியன் ; காலாக்னி போல்சீற்றமுடையவன்; பொறுமையில் பூமியோடு
ஒத்தவன் ; ஸத்தியத்தில் தரும தேவதையே வடிவெடுத்தது போன்றவன் என்று விடை
கூறினன்.
(கோன்வஸ்மின்ஸாம் ரதம்லோகே குணவான் கச்ச வீர்யவான்) என்னும்வால்மீகி முனிவன் வார்த்தையும்-(வம்சா ப்ரபவ: ராமோ நாம ஜனை: ச்ருத: 1 ஸமுத்ர இவ காம்பீர்யே விஷ்ணுநா ஸத்ரு சோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன: காலாக்னிஸத்ருச: க்ரோதே க்ஷமயா ருதிவீ ஸம: 1 ஸத்யே தர்ம இவாபர:) என்னும் நாரத முனிவன் வார்த்தைகளும் காணத்தக்கன.
இவ்வாறு, வேதாந்தக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வந்த (உபப்ரும்ஹண
மாகிய) இராமாயணம் முதன் முதலிலேயே இராமபிரானுடைய திருக்கலியாண குணங்
களை, ஆசார்யன் சீடனுக்குக் கூறும் முறையில் மிகமிகத் தெளிவாக இயம்பியிருத்தலைக் கண்டோம். இனி, இடையிலும் காண்போம்
அயோத்தியா காண்டம் முதலில் கூறப்பெற்றுள்ள வரலாறு பின்வருமாறு – சக்ரவர்த்தி, ஸபையில் வீற்றிருக்கும் அரசர் முதலானாரை நோக்கி, இது மிகப் பெரிதான இராச்சியம். இதை என் முன்னோரான மன்னர் மிகுந்த மனவூக்கத்துடன் பாதுகாத்து வந்தனர். அவரது வம்சத்தில் பிறந்த நானும், மனுநெறியைப் பின்பற்றி எனது அறிவு ஆற்றல்களுக்கு ஏற்றவாறு இது வரையில் பாதுகாத்து வந்தேன். எனது சரீரம் மிகவும் மூப்படைந்து விட்டது. ஆதலின், இந்த அரசுரிமையை இராமபிரானிடம் வைத்து, வருத்தந் தீர்ந்து, இனிது வாழ
விரும்புகின்றேன். இது பொருத்தமான செயல் என்று நீவீர் எண்ணியிருப்பின், நுங்கருத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன் என்று கூறினன்.
இதைச் செவிமடுத்த அவையிலுள்ள அரசர் முதலானோரனைவரும் அளவற்ற ஆனந்தம்
அடைந்தனர்; மிகமிகப் பெரிய கோஷத்தைச் செய்தனர்; அப்பெரிய கோஷத்தினால் எதிரொலியைக் கிளப்பி அங்குள்ள விமானத்தை அசையச்செய்தனர். இவ்வாறு தம் ஆனந்தத்தை அறிவித்து, இப்போதே இராமபிரான் இராச்சியத்தை ஏற்று, முடிசூடி, பட்டத்து
யானையின் மீது திருவெண்கொற்றக்குடை நிழலில் எழுந்தருளும் சிறப்பைக் கண்டு
களிக்கவேணும் என்றனர்.
இவ்வாறான களிப்பைக் கண்ட தசரத மன்னவன், திரும்பவும் அவ்வரசர் முதலானோரைக் குறித்து, ‘நீவீர் பேரிரைச்சல் செய்து கூறுவதை நோக்குங்கால், இது வரையில் கொடுங்கோல் மன்னனான தசரதன் பாதுகாத்து வந்தான் ; இவன் விலகுவது நலம்;
இனி, செங்கோல் மன்னனான இராமபிரான் இராச்சியத்தை ஏற்று பாதுகாக்கப் போகிறான்; நமக்குஇனி நற்காலம்! என்னும் நுங்கருத்து வெளிப்படுகின் றதே ! இவ்வாறு என்னை வெறுத்துக் கூறுதற்குக் காரணம் யாதோ? எனக்குக் குற்றம் ஏதேனும் உண்டோ?’ என்றனன்.
சக்ரவர்த்தியின் இவ்வார்த்தையைக் கேட்ட அரசர் முதலானோர். ஒரு கருத்துடன், மன்னர்பிரானே! தேவரீருக்குக் குற்றம் உண்டு என்று கூறினர். அக்குற்றம் யாதோ ? என்று
அம்மன்னர்பிரான் கேட்க, (பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே)-எண்ணிறந்த திருக்கலியாண குணக் கூட்டங்களுக்குக் கடலான இராமபிரானைப்
புத்திரனாகப் பெற்றிருப்பதே தேவரீருக்கு உள்ள குற்றம். அதனாலேயே தேவரீரை
வெறுக்கின்றோம் என்றனர்.-இவ்வாறு, இராமாயணத்தின் இடையில் இராமபிரான் திருக்குணங்களைச் சுருக்கமாய்க் கண்டோம். இனி, இறுதியில் காண்போம்.
‘இராமபிரான் பதினான்கு வருடம் வனத்தில் வளித்து, அதினின்றும், மீண்டு திரு
அயோத்திக்கு எழுந்தருளி,முடிசூடி,பதினோராயிரம் ஆண்டு இராச்சியத்தைப் பாதுகாத்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை.-அவன் மன்னர்பிரானாயிருந்து அரசு புரியுங்
கால், மக்களின் மனோநிலைமையைக் கண்கூடாகக் கண்ட வால்மீகி முனிவன், (” ஸர்வம் முதிதமேவாஸீத் ஸர்வோ தர்ம பரோபவத்)மக்களனைவரும் மனமகிழ்ச்சியுடனும், அவரவருக்குரிய தருமங்களில் ஊற்றம் பெற்றிருப்பவருமானார் என்று கூறியிருக்கிறான். இங்ஙனம் அனைவரும் இருப்பதற்கு காரணம் யாதோ? எனின், இந்த இராமபிரானுடைய
திருக்கலியாண குணமேயாம். (ராமோ ராஜ்யமுபாஸித்வ) என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது.-இராமன் தன் தேஜஸ்ஸினால் மக்களைஅடக்கி ஒடுக்கி ஆண்டவனல்லன், தன் திருக் கலியாண குணத்திற்கு ஏற்ப, இனிய நல் வார்த்தைகளைக் கூறி, பின் சென்று,வயப்
படுத்தி, ஆண்டவன் என்கிறான்.
இவ்வாறு இராமாயணத்தில், ‘இராம பிரான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்
கப்பெற்றவன்’ என்பதைக் கண்டோம்.-இலக்குமணன் இராமபிரானுடைய அத்திருக்
குணங்களில் மிகவும் ஈடுபட்டு உவப்புடன் எல்லா அடிமைகளும் செய்தவன்’ என்பதையும், (குணைர்தாஸ்யமுபாகத 🙂 என்னும் அந்த இலக்குமணன் வாக்கி யத்திலேயே நாம் நன்கு காணலாம்.
இங்ஙனம் இராமாயணத்தில் உபேயத்தைக் கண்டோம். இனி ஐம்பொருள்களுள் ஒன்றாகிய விரோதியைக் காண்போம்.

————–

வேதாந்தமும் விரோதியும்

எம்பெருமானை ஜீ வன்அடையாதவாறு எது தடையாய் நிற்கின்றதோ, அது, விரோதி’ எனப்படும். வேதாந்தம் அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவற்றை விரோதியாய் இயம்புகின்றது.-இதைச் சிறிது விவரித்துக் கூறுவோம்:
அஜ்ஞானம், ‘கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டமே ஆத்மா’ என
எண்ணும் எண்ணமும், ‘தான் எம்பெருமானுக்கு உரியவனல்லன்; தனக்காகவே இருப்பவன்’ என எண்ணும் எண்ணமுமாகும். இவ் விரு எண்ணங்களுள், முன்னது, தேஹாத்மாபிமானம்’ என்றும் பின்னது, ‘ஸ்வாதந்திரியாபிமானம்’ என்றும் கூறப் பெறும்.

தேஹாத்மாபிமானத்தைச் சிறிது விளக்கிச்சான்றுடன் கூறுவோம்: ‘இரும்புத் துண்டு, நெருப்பு இவ்விரண்டும் வேறு வேறு பொருள் களாயிருப்பினும், நெருப்பிலிட்டுப் பழுக்கக்
காய்ச்சிய அந்த இரும்புத்துண்டு, நெருப்புத்தொடர்பின் மிகுதியினால் நெருப்பாகவே
எங்ஙனம் தோன்றுகின்றதோ, அங்ஙனமே,-ஆத்மா, சரீரம் இவ்விரண்டும் வேறு வேறு பொருள்களாயிருப்பினும், அந்த ஆத்மாவும், சரீரத்தொடர்பின் மிகுதியினால் சரீரமாகவே தோன்றுகின்றான்’ என்பதை நாம் அறிதல் வேண்டும்.
இவ்வாறு, ‘சரீரமே ஆத்மா’ என எண்ணுங்கால், உண்மை உணர்வு சிறிதும் இல்லை. ஆத லின், (உணர்விண்மையே உறக்கமாதலின்-ஜீவனை உறங்குகின்றவனாகவே (அனாதி மாயயா ஸு ப்த:) என்னும் சுருதி இயம்புகின்றது. ( இந்தச் சுருதியில் மாயா சப்தம் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடு கூடிய பிரக்ருதி )என்னும் அசித்தைக் கூறும் வழியால் சரீரம் என்னும் பொருளைக் குறிக்கின்றது.)உண்டி உடைகளை உவந்து அவற்றைப் பெற ஓடித்திரியுங்காலத்தும், ஜீவனுக்கு இவ்வுறக்கம் உண்டு. அதனால் நன்மை சிறிதும் இல்லை. எப்போது, உறக்கம் போய் உண்மையை உணருகின்றனனோ, அப்போது தான் நன்மை உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளதும், அனாதி மாயயா ஸுப்த: என்னும் வாக்கியத்தோடு தொடர்புற்றதுமான  ” (யதா ஜீவ: ப்ரபுத்யதே) என்னும் சுருதியைக் காணுமவர்க்கு தேஹாத்மாபிமானம்’ தடை என்பது நன்கு புலனாகும்.
இங்ஙனம் தேஹாத்மாபிமானத்தைச் சுருக்கமாய்க்கண்டோம். ஸ்வாதந்திரியாபிமானத்
தையும் இனிக்காண்போம் :
‘ஆத்மா, அறிவுடையவன்’ என்ற போதே,’ஸ்வதந்திரன்’ என்று கூறியதாகக் தேறும்.
எங்ஙனம் என்னில்,-இந்த ஜீவன், முதலில் ஒரு பொருளை உள்ளபடி அறிகிறான்; பின்பு, அப்பொருளின் சீர்மையைப்பற்றி அதை விரும்புகிறான் ; அதன் பிறகு அதை அடைய முயல்கிறான் ;-அதற்கேற்பஏதுவைத் தேடுகிறான்; முடிவில் அதை அடைந்து, இன்பம் பெறுகிறான்
இவற்றை, வடமொழியாளர்,(ஜாநாதி இச்சதி, யததே, கரோதி,அனுபவதி) என்பர்
இவற்றை நோக்குங்கால்,அறிவுடை யனான ஜீவன்,தனக்காக ஒன்றை விரும்பி, முயன்று,
செய்து, இன்பம் துய்ப்பவன்’ என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் இருக்கின்றமையின், ‘இவன் ஸ்வதந்திரன்’ எனப்படுகிறான்.
அஷ்டாக்ஷரத்தில் முதல் பதம் பிரணவம்.-அப்பிரணவம் அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துடையது. அம்மூன்றுனுள், ‘ம்’ என்னும் எழுத்து அறிவுடையனான ஜீவனைக் குறிக்கின்றது.-இவ்வாறு, அறிவுடையவன்’ என்பதை அறிவிக்கும் ‘ம்’ என்னும் அக்ஷரத்தாலும்,-நான் இதை அறிகிறேன்’ என்னும் அனுபத்தாலும், ‘ஜீவன் ஸ்வதந்திரன்’ என்பதை நாம் அறியலாகும். இங்ஙனம் தன்னை ஸ்வதந்திரனாக (தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றில் முயன்று, செய்து, பெற்றுப் புஜிப்பவனாக) அறியுங்காலத்து, உண்மை உணர்வும் பெற்றிறான் ; தன் நிலைக்கேற்ற பயனையும் பெறான்.-இதனால்தான், அஷ்டாஷரத்தில், நடுவில் அமைந்துள்ள’நம:’ என்னும் பதமானது, ம்’ என்னும் அக்ஷரத்தினால் தேறிய ஜீவனுடைய ஸ்வாதந்திரிய நிலையை இல்லை செய்து, பாரதந்திரிய நிலையையே இவனுக்குரிய சீரிய தன்மையாக அறிவிக்கின்றது ‘நம:’ என்பதில், “ம: ந என்று எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டி, ‘எனக்கு நான் இல்லை; எம்பெருமானுக்கே உரியவன்’ என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. அஃது இங்குக் காணத்தக்கது.
”தனக்குப் பாரதந்திரிய நிலையை உண்மையாக உணருங்கால், நன்மை உண்டு; அப்பாரதந்திரிய நிலைக்கு எதிரான ஸ்வாதந்திரிய நிலையை உணருங்கால், நன்மை இல்லை” என்பது அஷ்டாஷர மஹா மந்திரத்தில் தேறிய ஸாரம் பொருளாதலின், ஸ்வாதந்திரியாபிமானம்’ தடை என்பது தெளிவு.
இனி, கருமம் தடை என்பதைக் காண்போம்: புண்ணியமும் பாவமும் கருமம் எனப்படும். இக்கருமம் எம்பெருமானை அடைய வொட்டாது தடுக்கின்றது. ஆதலின்,
விரோதி’ எனப்படுசின்றது.-ஆனால், பொய் கூறுதல் முதலிய பாவம் தடை என்னில், அதை நம் மனம் ஏற்கின்றது போன்று, புண்ணியமும் தடை என்னில், அதை நம் மனம் ஏற்குமோ? ஏற்காதன்றே?-உண்மை இங்ஙனம் இருக்க,புண்ணியத்தைத் தடையாக கூறுவது யாங்ஙனம்? எனச் சிலருக்கு இங்கு ஐயம் எழக்கூடும்.-இதற்குப் பரிஹாரம் பின் வருமாறு
‘புபுஷு, முமுஷு என மானிடரை இருவகையில் வகுத்துக்காணுதல் வேண்டும். இம்மை
மறுமைகளில் இன்பத்தை விரும்புகின்றவன் புபுஷு என்றும், பரம புருஷனை அடைய
விரும்புகின்றவன் முமுஷு என்றும் கூறப்படு கின்றனர். புபுஷு நிலைமைக்கேற்ப இம்மை
மறுமைகளில் ஓரொரு நன்மைக்கு எதுவாய் உள்ளது புண்ணியம் எனப்படும்.உதாரணமாக இவ்வுலகில் பசு, பூமி, புத்திரன், முதலிய நன்மைக்கு ஏதுவாயுள்ள புண்ணியங்களையும்,
மறுமையில் ஸு வர்க்கம் முதலிய நன்மைக்கு எதுவாயுள்ள புண்ணியங்களையும் நாம் காணலாம். இப்புண்ணயங்கள், பரமபுருஷனை விரும்புபவனுக்கு (முமுக்ஷவிற்கு) இம்மை
மறுமைப் பயன்களைக் கொடுத்துத் தடையாயிருக்கின்றமையின்,பாவங்களேயாம்?.
(அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்) என்னும் சுருதி வாக்கியமானது, குதிரை தன் ரோமங்களை விடுவது போன்று, புண்ணிய பாவங்களாகிற கருமத்தை விட்டு, பரமனுடைய
உலகத்தை இந்த ஜீவன் அடைவதாகக் கூறுகின்றமையின், கருமம் தடை எனத் தெரிகிற தன்றோ?(புண்ய பாபே விதூய நிரஞ்ஜன: பரமம் ஸாம்ய முபைதி) என்னும் வாக்கியமும் இங்குக் காணத்தக்கது.-இக்கருத்தாலே பொய்யில் புலவரும் *இருள் சேரிரு வினையுஞ் சேரா’ என்று கூறிச் சென்றனர்.-இதுகாறும், கூறியவாற்றால் கருமம் தடை என்பதைக் கண்டோம். இனி, ப்ரக்ருதி ஸம் பந்தம் விரோதி என்பதைக்காண்போம்
ப்ரக்ருதி ஸம்பந்தம்‘ என்னுமிடத்திலுள்ள”ப்ரக்ருதி’ என்னும் சொல், தேவ சரீரம், மானிட சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம் என்னும் நான்கு வகையிலுள்ள அசித்தைக் குறிக்கும்; ஸம்பந்தம் என்னும் சொல்,அந்த அந்தச் சரீரத்திற்கும் ஆத்மாவுக்கும் உள்ள-தொடர்பைக் குறிக்கும். இத்தொடர்பு, எம்பெருமானைப் பெற்று, பூர்ணமாக அனுபவித்து, அடிமை செய்து, அவனை உவப்பிப்பதற்குத் தடையாயிருக்கின்றது.-இப்பொருள்  (தஸ்ய தாவதேவ சிரம் யாவந்ந விமோ யே அத ஸம்பத்ஸ்யே) என்னும் சுருதியினால் நன்கு விளங்கும். இந்தச்
சுருதியின் கருத்து: “ஸத் என்னும் பரமனைப் பஜனம் செய்பவனுக்குச் சரீரத் தொடர்பு
உள்ளவரையில் விளம்பம் உண்டு; சரீரத் தொடர்பு மறுவலிடாதபடி விட்டதும் பரமனை அடைகின்றான்” என்பதாம்.இதனால்,’சரீரம் தடை’ என்பது வெள்ளிடைமலை.
இவ்வாறு, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதைக் கண்டோம்.
மேற்கூறிய அஜ்ஞானம் முதலியவை போன்று,அஜ்ஞான வாஸனை, கரும வாஸனை,
ருசி ஆகிய இவையும் பரமபுருஷனை அடைய வொட்டாது தடையாயுள்ளனவாம்.
பாம்பு முதலியவற்றைக் காணும் போது, உண்டாகும் அச்சம் முதலியவற்றுக்கு காரணமாயுள்ளது ‘அஜ்ஞான வாஸனை’ என்றும்,-துரும்பு முதலியவற்றைக் கிள்ளுதற்குக் காரணமாயுள்ளது ‘கரும வாஸனை’ என்றும், பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்
களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை ‘ருசி’ என்றும் நாம் அறிதல் வேண்டும்.-இங்ஙனம், அஜ்ஞானம், கருமம்,ப்ரக்ருதி ஸம்பந்தம், அஜ்ஞான வாஸனை,கரும வாஸனை,ருசி இவை பரமனை அடைவதற்குத் தடையாய்க் கண்டோம்.

இனி, சிலருடைய கருத்துக்கிணங்க வேறொருவாறு தடையைக் கூறுவதாகக்  தோன்றும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும் காண்போம்(தத் யதா ஹிரண்யநிதிம் நிஹிதம் அக்ஷேத்ர ஜ்ஞா: உபர்யுபரி ஸஞ்சரந்த: ந விந்தேயு: எவ மேவ இமா: ஸர்வா: ப்ரஜா:
அஹரஹர் கச்சந்த்ய: ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா🙂 என்பதே அவ்வேதாந்த வாக்கியமாம்.-இவ்வாக்கியத்தின் கருத்து : ‘ பூமியின் கீழே உள்ள புதைபொருளை அப்பூமியின் இயல்பை உணராதார், தினந்தோறும் அப்பூமியின்
மேலே செல்பவராயிருந்தும், எங்ஙனம் பெறு கிறாரில்லையோ, அங்ஙனமே, மிகமிகச் சிறந்த பயனும், ஆத்மாவுமான பரமனை உணராதார். எல்லாக்காலத்தும் அவனோடு ஒருவாறு தொடர்புற்றிருந்தும், பெறுகிறாரில்லை. இவர் பொய்யான அஜ்ஞானத்தினால் ஆத்மாவினிடத்தில் நின்றும் இழுக்கப் பெற்றும், மறைக்கப் பெற்றும் இருப்பவரன்றோ?’ என்பதாம்.
இங்கே, பின்குறிக்கப்பெறும் பொருள்முக்கியமாய் அறியத்தக்கதாம் -” முத்துச்சிப்பி
வெள்ளியாய்த்தோன்றுதற்குக் காரணம் குற்றம் என்பது உலகானுபவத்தினால் எங்ஙனம் புலனாகின்றதோ, அங்ஙனமே, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணம்
குற்றம் ‘ என்பதும் பிரமாணத்தினால்(வேதாந்த வாக்கியத்தினால்) புலனாகின்றது.
அக்குற்றம் அவித்யை. அஜ்ஞானம் என்பனபோன்றுள்ள சப்தங்களினால் குறிக்கப் பெறுகின்றதாம். அந்த அஜ்ஞானமும், அதனால் உண்டாம் பிரபஞ்சத்தோற்றமும், பிரபஞ்சமும் பொய்ப்பொருளாம்.
“தத்த்வம் அளி’ என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒருவனே உண்மைப் பொருள்
என்னும் உண்மை உணர்வு உண்டாகும் போது, மேற்கூறிய அஜ்ஞானமும்,அதன்
காரியங்களும், அழிந்து விடுகின்றமையின், அந்த அஜ்ஞானமும் அதன் காரியங்களும்
பொய்ப் பொருள்’ என்பது தெளிவாக விளங்குகின்றது? “இதைத்தான் மேற்
கூறிய வேதாந்த வாக்கியத்திலுள்ள அந்ருதசப்தம் இயம்புகின்றது” என்பதே அறியத்
தக்க அம்முக்கியப் பொருளாம்.
‘அஜ்ஞானமும், அதன் காரியமும் உண்மைஉணர்வினால் போக்கத் தக்கவையாயிருத்
தலின், பொய்ப் பொருள்களாம்’ என்பதும்,-‘அந்த அஜ்ஞானமே, ப்ரஹ்மமாக மாத்திரம்
இருக்கும் இருப்புக்குத் தடை’ என்பதும் இங்குத் தேறிய ஸாரப் பொருள்களாம்.
இக்கருத்தையும், மேற்கூறிய (அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவை
தடை என்னும்) கருத்தையும் வேத வாக்கியங்களிலே காணுமவர்க்குக் கலக்கம் ஏற்படுவது இயல்பேயாம். இக்கலக்கத்திற்கு, மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிக்காணுங்கால் உண்டாம் பரிஹாரம் பின்வருமாறு-
”நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் மருத்துவனைக் கிட்டி, தன் நோய் தீருமாறு
மருந்தைப் பெற விரும்புகின்றான். அம்மருத்துவனும், அவன் நோயை உள்ளபடி
உணர்ந்து, அந்நோய்க்குத் தக்க மருந்தைக்கண்டு, உதவுகின்றான். அங்ஙனம் உதவப்
பெற்ற அந்நோயாளியும், அம்மருந்தை உட் கொள்ள,அவன் நோய் தீருகின்றது. இதை
இங்கு எடுத்து நாம் நோக்குதல் வேண்டும்.-நோக்கின் நோயின் உண்மையை உணர்ந்து,
தக்க மருந்தை உதவுகின்றதும், நோயின் பொய்மையை உணர்ந்து அங்ஙனம் மருந்தை
உதவா தொழிகின்றதும் யார்க்கும் நன்கு விளங்குகின்றன அல்லவா? நோயின் பொய்
மையை உணர்ந்தும், மருந்தை உதவுவார் உண்டோ? இல்லையன்றோ? இதுபோன்று, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணமாயுள்ள குற்றம்\(அஜ்ஞானம்) உண்மையாயிருப்பின், அது தீருவதற்கு, ‘தத் த்வம் அளி” என்னும் சாஸ்திரம், ஆத்மா ஒருவனே உண்டு’ என்னும் உண்மையை உணர்த்தி, உதவி செய்ய இடம் உண்டாம். ‘அஜ்ஞானம் உண்மை இல்லை’ என்னில், ‘சாஸ்திரம் உதவி செய்ய இடம் இல்லை’ என்பதைக் கூறுதலும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ?’அஜ்ஞானமும் உண்மைதான்’ என்று கொள்ளில், ‘ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்; மற்றொன்றும் உண்மையில் இல்லை என்னும் கொள்கைக்கு இடமுண்டோ? இல்லை யன்றோ? (‘அஜ்ஞானமும் உண்மை’ என்று கொள்ளுங்கால், அஜ்ஞானமும் ஆத்மாவும் உண்மைப் பொருள்களாய்த் தேறுகின்றன அல்லவா? ‘ஆத்மாவைத் தவிர ஒன்றும் உண்மையில் இன்று’ என்பது பொருந்துவது எவ்வாறு?)
இதனால் என்ன தேறிற்று? என்னில் ‘ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்கு ஏதுவான
அஜ்ஞானத்தை உண்மையாகவோ, பொய் மையாகவோ ஒத்துக் கொள்வதற்கு இல்லை”
என்னும் கலக்கமே தேறிற்று.-இவற்றை நெஞ்சில் கொண்டு நோக்கு
வார்க்கு, ”தத் யதா …..அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதிக்கு மேற்கூறியவாறு கருத்துரைத்தல் பொருத்தமுடைத்தன்று என்றால், வேறு கருத்து யாதோ? எனின், கூறுவோம்.
ஒருவன் செய்யும் கருமம், பயனில் சிறிதும் விருப்பம் இன்றி,எம்பெருமான் முகமலர்த்திக்
குறுப்பாகவே, செய்யப் பெறுமாயின், அக் கருமம் ருதம்‘ என்றும், இவ்வாறின்றி
இம்மை மறுமைகளில் ஓரொரு பயனை விரும்பிச் செய்யப்படுமாயின், அக்கருமமே
‘அந்ருதம்’ என்றும் கூறப்படும். இம்முறையில், மேற்கூறிய சுருதியில் உள்ள அந்ருத
சப்தம், ஓரொரு பயனை விரும்பிச் செய்யும் கருமத்தையே கூறுகின்றமையினாலும், அக்
கருமம், பரமனை அடைவதற்குத் தடையாயிருத்தலாலும், மேற்கூறியவாறு இங்குக்
கலங்க இடம் இல்லை.
“அச்வ இவ ரோமாணி விதூய பாபம்” என்னும் சுருதி, பாவங்களை விட்டுப் பர
மனைப் பெறுகின்றான்” என்னும் கருத்தையும்,
“ஏதம் ப்ரஹ்ம லோகம் நவிந்தந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதி,பாவமுடை
யார் பரமனைப் பெறுகின்றாரில்லை’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளனவாதலின், இங்கு முரண்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லை?-இல்லையன்றோ? இதனால்,’அந்ருத சப்தம்
பொய்ப் பொருளைக் குறிக்கும்’ என்று கூறும் போது ஏற்படும் இடர்களுக்கும் இங்கு இட
மின்று என்பது யாவருக்கும் புலனாகும்.
இவ்வாறு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிப் பொருள்கொள்வார்க்குக் கலங்க
இடமில்லை என்பதைக் கண்டோம். இனி, இராமாயணத்தில் விரோதியைக் காண்போம்:

இராமாயணமும் விரோதியும்

‘இராமாயணம் விரோதியை, ஒருவாறு மெய்ப்பொருளாகவே உணர்த்துகின்றது
என்பதையும் உபபாதித்துக் காட்டுவோம் :-இது மெய்’ ‘இது பொய்’ என்பதை நாம்
அறுதியிடுவது எவ்வாறோ? எனின், யாரும் எளிதில் உணருமாறு ஓர் அனுபவத்தை
முதலில் எடுத்துக் காட்டுவோம்.-ஒருவன், முதலில் முத்துச் சிப்பியை வெள்ளி என அறிந்து, அதை எடுக்கச் சென்று,பின்பு, இது சிப்பி; வெள்ளியன்று’ என்னும் உண்மையை உணர்ந்து, அதை எடுக்காது விட்டிடுகிறான். அங்கு, ‘வெள்ளி பொய்ப்பொருள்’ என்பது தெளிவு.
வேறொருவன், வெள்ளியையே வெள்ளி என உண்மையை உணர்ந்து, அதை எடுக்கச் சென்று, எடுத்து, அதனாலாம் பயனைப் பெறுகிறான். இங்கு, ‘வெள்ளி மெய்ப் பொருள்
எனபதும் யார்க்கும் நன்கு புலனாம்.
இம்முறையைக் கைக்கொண்டு.இராமாயணம் மெய் பொய்களை அறுதியிடுகின்றது’
என்பதை நாம் அறியலாம்; எங்கே? என்னில், திருவடி, இராமபிரானுடைய திருக்குணம்
சிறிதும் நடையாடாத அசோகவனத்தில் போய்ப்புக்கு, தென்றலும், சிறுதுளியும்
போன்றுள்ள இராம நாமத்தைக் கூறுங்கால், அதைத் திருச்செவி ஏற்ற ஸீதாபிராட்டியார்-முதலில் இந்நிலத்தில் இது பரிமாறுவது ஒன்றல்ல; இது சித்தமோஹத்தால் வந்ததோ? வாதகதியோ? உன் மாதஜவிகாரமோ?ம்ருக திருஷ்ணிகையோ?” என்று ஐயமுறுகிறார். பின்பு ‘இவன் (ஹனுமான்) முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்; இது
கேட்டு, நாம் வேற்றுமை பெற்றிருக்கிறோம்;-ஆனபின்பு, இது மெய்யாம்’ என்று திருவுள்ளம் தெளிந்து இன்புறுகிறார் என்பது வரலாறு.-இவ்வரலாற்றைத் தெரிவிக்கும் வார்த்தை:-(கிம்நு ஸ்யாத் சித்தமோஹோயம் பவேத் வாதகதிஸ்த்வியம் | உன்மாதஜோ விகா
ரோவா ஸ்யாத் இயம் மருக ருஷ்ணிகா | அதவா நாய முன்மாத : மோஹோ யுன்
மாத லக்ஷண: ஸம்புத்யே சாஹமாத்மான மிமம்சாபிவனெளகஸம்) என்பதாம்.
(தலைமகனைப் பிரிந்த தலைமகளுக்கு. தன் தலைமகன் நன்மையைக் கேட்பதில் விருப்பம்
உண்டாவது இயல்பேயாம்; அவ்விருப்பினால் அவனைப் பற்றிய எண்ணமும் இடையீடின்றி
ஏற்படும். அவ்வெண்ணத்தின் ஒருநிலையை சித்தமோஹம் என்பர். ஊணும் உறக்கமும்
இன்றி இருக்கும்போது, வாத பித்த சிலேஷ்மங்களாகிய தாதுக்களுக்குக் கலக்கம் உண்
டாகும்.அக்கலக்கத்தினால் உண்டாகும் காற்றின் ஒரு நிலைக்கு வாதகதி’ என்று பெயர்.
அந்நிலையிலுள்ள பிரமத்தை இங்கு வாதகதி என்று கூறுவர். தலைமகனைப் பிரிந்த தலை மகளுக்கு உள்ள ஒருநிலையை உன்மாதம் என்றுபகருவர். அந்த உன்மாதத்தினால் உண்டாகும் பிரமத்தை உன்மாதஜ விகாரம் என்று செப்புவர். மருகதருஷ்ணிகையாவது ஒன்றை மற்றொன்றாக அறிதலாம். கானலைத் தண்ணீராகக் கருதலாம் ]

இங்கு ஸீதாப்பிராட்டியார், முதலில் திருவடி வார்த்தையைப் பொய்யாக பிரமித்து,
தக்க சான்றுகளினால், ‘இது பொய் அன்று ;மெய்தான்’ என்று அறுதியிட்டிருப்பதை உலகம் நன்கு காணக் கூடுமன்றோ? இது போன்று,(பிரஹ்மம் பிரபஞ்சமாகத் தோன்றுதற்கு காரணமாகிய) ‘அஜ்ஞானமும், பிரபஞ்சத் தோற்றமும், பிரபஞ்சமும் ஆகிய இவை
பொய்ப் பொருள்கள் தாம்’ என்று அறிதியிடு தற்குத் தக்க சான்றுகள் உளவாகில், நாம்
இசையத் தட்டு ஒன்றுமிராது. அங்ஙனம் உலகத்திலும் சாஸ்திரத்திலும் சான்றுகள்
காணக் கிடைக்காதவையே யாம்’ என்பது இங்கு முக்கியமாய் அறியத்தக்கதாம்.
இனி, தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்தரியாபிமானமுமாகிய இவை, பரமனைப்
பெற்று அனுபவித்ததற்கு உண்மையான இடையூறாம்’ என்பதை இராமாயணத்தில்
காண்போம். இங்கு முதலில், பின்வருவது கவனிக்கத் தக்கதாம்:
ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருப்பானாயின், அவன் ஸத்து’ என்றும், அவ்
வறிவு பெறாது இருப்பானாயின், அவன் அஸத்து’ என்றும் வேதாந்தம் அறிவிக்கின்றது
(ஸந்தமேனம்; அஸன்னேவஸபவதி) ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருந்தும், அவ்வறிவுக்கு ஏற்ப அன்பையும் ஆதாரத்தையும் பரமன்பால் செய்யாது இருப்பின், அவனை
ஸத்து என்றோ, அஸத்து என்றோ, மேற்கூறிய சுருதி அறிவித்திலது. ஆயினும், அவனும்
அஸத்தே’ என்றுதான் கூறுதல் வேண்டும்.-அவன் அறிந்தும் அன்பைச் செய்யாது இருக்
கின்றமையின் அவனுக்குக் குற்றம் அதிகமாம்-இதுபோன்று, “ஒருவன் ஜீவனாகிய தன்னை
தேஹமாகவோ, ஸ்வதந்திரனாகவோ உணரவில்லை; தன் உண்மை நிலையை ஒருவாறு
உணர்ந்தவனேயாம். ஆனாலும், அவன் தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்திரியாபிமான முமாகிய குற்றம் பெற்றிருப்பவன் எவ்வாறு சரிதம் பெற்றிருப்பனோ, அங்ஙனம்
சரிதம் பெற்றிருப்பானாயின், பரமனை அனுபவித்து வாழப்பெறாது இழந்து விடுகிறான்”
என்பது ஓர் உயரிய உண்மைப் பொருளாம்.
இவ்வுண்மைப் பொருளை இராமாயணம், சக்ரவர்த்தியின் வரலாற்றில் தெளிவாகத்
தெரிவிக்கின்றது.எங்கே?எங்ஙனம்? என்னில்,
அவ்வரலாற்றை முதலில் கூறுவாம்: “சக்ரவர்த்தி, வஸிஷ்டரைக் குல குருவாகக் பெற்
றிருந்தவர் ; அச்வமேதம், புத்திர காமேஷ்டி முதலியவற்றைச் செய்தவர். ஆதலின், ஆத்மாவின் உண்மை நிலையை உணராதவரல்லர். இங்ஙனம் இருப்பினும், இராமபிரானுக்கு முடி சூடுவதாய் நிச்சயித்து, தன் ப்ரிய மஹிஷியான கைகேயியிடம் சென்று தெரிவிக்க. அப்போது, ‘பரதனுக்கு முடி சூடவே ணும்; இராமன் பதினான்கு வருஷம் வனம் செல்லவேணும்’ என அக்கைகேயி வேண்டிக் கொள்ள சக்ரவர்த்தியும் அவ்வேண்டுதலுக்கு இசைய, இராமபிரான் இலக்குமணனோடும், ஸீதாபிராட்டியோடும் காடு சென்றனன்” என்பது வரலாறாகும்.
இவ்வரலாற்றைக் கூறுமிடத்து, இராமாயணம் சக்ரவர்த்தியைப் பல இடங்களில்
கைகேயியிடம் காமம் பெற்றிருப்பவன்’ என்றே நிந்தித்துக் கூறியிருக்கின்றது. ‘
காமீ கமல பத்ராஷீ முவாச வனிதாமிதம்) என்பதையும், இது போன்றுள்ள வசனங்களையும்
இங்குக்காண்க. ஒருவனுக்கு, ஆதமாவினுடைய உண்மை உணர்வு உள்ளபடி இருக்குமேயானால், பெண்ணாசை சிறிதும் இராது.’காமீ. என்று கூறும் போது, பெண்ணாசை உண்டு என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
தேஹாத்மாபிமானமும் ஸ்வாதந்திரியா பிமானமும் பெற்றிருப்பான் போன்றவன் சரிதமே
யன்றோ? அக்காலத்திலேயே பரம புருஷனான இராமபிரானை அனுபவித்து வாழப்பெறாது
முடிய நேரிட்டதன்றோ? ஆனால், ச க்ரவர்த்தி இராமபிரானைப் பிரிந்து முடிய நேரிட்டதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு; கைகேயிக்கு முன்னமேயே சக்ரவர்த்தி இரண்டு வரங்கள் தருவதாய் வாக்களித்திருந்தத்தினாலும், அதைப் பின் சென்று ஸத்தியத்திற்குக் கட்டுப்பட்டு,இராம பிரானாகிய தருமத்தைத் துறந்து விட்ட தனாலும் அப்பரமனை இழக்க நேரிட்டது. ஸத்திபம்’ என்பது தருமமேயானாலும், இராமபிரா னாகிய மிகமிகச் சிறந்த தருமத்தைக் காணுங்கால், அந்த ஸத்தியம் என்னும் தருமத்தை ஒரு பொருளாய்க் கருதாமல் காற்கடை கொள்ள வேண்டியவன் சக்ரவர்த்தி.அங்ஙனம் அந்த ஸத்தியத்தைக் காற்கடை கொள்ளாது பற்றி, துறக்கத் தகாத அப்பரமனைத் துறந்ததே, இராமனை அனுபவிக்கப் பெறாது இழந்ததற்கு காரணம். [ இராமபிரான் மிக மிகச் சிறந்த தருமம் என்பதை வரும் உபாயத்தைப் பற்றிக் கூறும் பகுதியில் நாம் காணலாம்.] இதை, பிள்ளை லோகாசார்யர் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு” என்று அருளிச் செய்திருக்கிறார்.-உண்மை இவ்வாறு இருப்பினும், கைகேயி பால் உள்ள ஆசையும் இராமபிரானை இழந்த தற்கு காரணம் என்னில், குற்றம் ஒன்றும் வாராது, ‘மற்றதில் பற்றுள்ளவனுக்குப் பரமன் கிடைக்க மாட்டான்; பற்றற்றவனுக்கே பரமனைப் பெறலாம்’ என்பதும் சாஸ்திரத்தில் கூறப்பெற்றுள்ள ஓர் உயர்ந்த உண்மை . இவ்வாறு தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியாபிமானன் இவற்றின் தடைத் தன்மையைக் கண்டோம
இனி, இராமாயணத்தில் கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதையும் காண்போம். இராமபிரான் எம்பெருமான்; ஸீதாபிராட்டி எம்பெருமாட்டி” என்பது உண்மை.-இராமபிரானுக்குப் புண்ணியமும் பாவமும் உண்மையில் இல்லை. இதுபோன்று, ஸீதா பிராட்டியாருக்கும் புண்ணியமும் பாவமும் இல்லை’ என்பதும் உண்மையேயாம். ஆனாலும், ஸீதாபிராட்டியார் ., ஜீவன், இங்ஙனம் இருப்பின் பரமனைப் பிரிய நேரிடும்’ என்பதைத் தம் சரிதத்தில் வெளியிட்டிருக்கிறார்.-இதை முதலில் நாம் இங்கு அறிதல் அவசியமாம்.
“‘இராமபிரான் காட்டிற்கு எழுந்தருளும் போது, ஸீதாபிராட்டியாரின் மென்மையை
யும், காட்டின் வன்மையையும் திருவுள்ளம் பற்றி, அயோத்தியிலேயே தாம் வனவாஸம்
செய்து திரும்பிவரும் வரையில் அப்பிராட்டியாரை இருக்க வேண்டிக் கொள்கிறான். அப் பிராட்டியாரும் அப்பெருமான் பிரிவு பொறாது, தம்மை உடன் அழைத்துச் செல்ல வேணும் என விரும்புகிறார். பலகால் விரும்பியும், இசையாது இருந்த இராமபிரானைக் குறித்து, “என் தந்தையார் என்னை ஆண்மை உடையானொருவனுக்குக் கொடாது, பெண்
ணுக்கே கொடுத்து விட்டார்; ஆனால், “நான் பெண்ணோ? ‘ என்று தேவரீர் எண்ணலாம்.
அகவாயில் பெண்மையும், புறவாயில் ஆண்மையும் பெற்றிருப்பவரன்றோ ? நீவீர். அகவாயிலும் உண்மையில் ஆண்மை பெற்றிருப்பீராயின், இங்ஙனம் என்னை விட்டுச் செல்வதாகக் கூறுவீரோ ? கூற மாட்டீரன்றோ?-(ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்றனள்” என்பது சரித்திர உண்மை.-தம் சரிதத்தினால் உலகுக்கு நன்மை புரிய வந்த பிராட்டியார், புருஷோத்தமனான இராமபிரானைக் குறித்து, இவ்வாறு என் தந்தையார் பெண்ணுக்கே பெண்ணைக் கொடுத்தார் என்று இயம்புவது முறையாமோ? ஆகாதன்றோ? இவ்வாறு கூறியது பகவதபசாரமன்றோ? இது முதலில் இங்குக்குறிக்கொள்ளத் தக்கது.
மேலும், இராமாயணத்திலேயே வேறொரு வரலாறும் இங்குக் காணத்தக்கதாம்:
இராமபிரான் ஸீதா பிராட்டியார்பால் உள்ள அன்பின் மிகுதியினாலே, மாரீசன் என்னும் மாயா மிருகத்தின் பின்னே வெகுதூரம் சென்று, அம்மிருகத்தை அம்பினால் அடித்துக்
கொன்றனன். அந்த சமயம் மாரீசன் மிருகரூபத்தைவிட்டு, தன் சரீரத்தை எடுத்து
உயிர் துறந்தனன் ; அங்ஙனம் உயிர் துறக்குங்கால், இராமபிரானுடைய குரல் போன்றுள்ள
தன் குரலாலே ஹா ஸீதே ! ஹா லக்ஷ்மணா என்று கூறினன். அக் கூற்று பிராட்டியார் திருச்செவியில் பட, அப்போதுஇலக்குமணனை, இப்போதே நீ சென்று இராமபிரானை இரட்சித்தல் வேண்டும்’ என்று அவள் வேண்டிக் கொள்ள, (இராமபிரா னுடைய சிறப்பைஉள்ளபடி உணர்ந்த ) இலக்குமணன், மாரீசன் மாயையைக் கூறி, அவ்வாறு செல்ல இசையாது இருந்தனன். அங்ஙனம் இலக்குமணன் இசையாது இருக்க, பிராட்டியார் அவனை நோக்கி, கடுஞ்சொற்களைக்-(“”அநார்ய, அகருணாரம்ப, நருசம்ஸ, குலபாம்.ஸந.)கூறினார் என்பதே அவ்வரலாறாம்.-இலக்குமணன் இயற்கையிலேயே இராம
பிரானிடம் அளவற்ற அன்பு பெற்றிருப்பவனாம். அவ்வாறு பரமபக்தி பெற்றிருக்கும்
அந்த இலக்குமணனை நோக்கி, கூறத் தகாத(லக்ஷ்மணா ! நீ நிச்சயமாய் என்னை உனதாககிக் கொள்ளக் கருதி,இம் மாதிரி கபட வேஷத்துடன் கானகம் வந்திருக்கின்றாய்
என்று கூறி) மேற்கூறிய கடுஞ் சொற்களைக் கூறியது அப்பிராட்டியாருக்குத் தகுமோ?
தகாதன்றோ ? இவ்வாறு கூறியது பாகவதாபசாரமன்றோ?இதுவும் இரண்டாவதாக இங்கு
காணத்தக்கது.
‘இம்மாதிரி பரமனிடமும்,பாகவதோத்தமனான இலக்குமணனிடமும் பிராட்டியார்
நடந்து கொண்டமையின், இவை காரணமாகப் பரமனைப்பிரிந்து, அசோக வனத்தில்
அரக்கிமார் நடுவில் இருந்து துன்புற வேண்டிற்று’ என்பதை இங்கு நாம் அறிதல்
வேண்டும்-இதை ஸீதாபிராட்டியார் அருளிச் செய்த”(மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி நஸம்சய:) என்னும் வார்த்தையில் நன்கு காணலாம். இவ்வார்த்தையில், இராமபிரான் திறத்தில் செய்த அபராதத்தை’கிஞ்சித்’என்னும் சப்தமும், இலக்குமணன் திறத்தில் செய்த அபராதத்தை மஹத்’ என்னும் சப்தமும் கூறுகின்றன என்று நாம் நன்கு அறியலாம். இவ்வாறு, கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதை பிராட்டியார் சரிதத்தில் ஒருவாறு கண்டோம்.
இனி, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதை இராமாயணத்தில் சில இடங்களில் காட்டுவோம்.
(1) இராமபிரான், ஸீதையுடனும் இலக்குமணனுடனும் சரபங்கருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளும் தருணம். அத்தருணம் இந்திரன் சரபங்கரிடம் வந்து அளவளாவிக்
கொண்டிருந்தான். அந்த இந்திரன், இராம பிரானை அப்போது கண்டு, இந்த இராமன்,
வேறொருவராலும் சிறிதும் செய்ய இயலாத மிகப் பெரியதொருகாரியத்தை (இராவண
வதத்தைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,அவதரித்தவன். அதை அவன் நிறைவேற்றிய பிறகு என்னைப் பார்ப்பது நலம் என்று கூறி, சரபங்கரிடம் விடை பெற்று, இரதம் ஏறி, தன் உலகம் சென்றான். இந்திரன் சென்றதும், இராமபிரான் சரபங்கரிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கினன் ; பின்பு இந்திரன் வந்து போனதைப் பற்றி வினவினான்.
அவ்வினாவுக்கு விடையாக சரபங்கர் கூறிய வார்த்தையை பின்வருமாறு காணலாம்:

(மாமேஷவரதோ ராம ப்ரஹம லோகம் நி ஷதி 1 ஜிதமுக்ரேண தபஸா து ப்ராபம் அக்ரு
தாத்மபி: அஹம் ஞாத்வா நரவ்யாக்ர வர்தமானம் அதூரத |
ப்ரஹ்மலோகம் நகச்சாமி த்வாம் அத்ருஷ வா ப்ரியாதிதிம் த்வயாஹம் புருஷவ்யாக்ர தார்மிகேண மஹாத்மநா! ஸமாகம்ய கமிஷ்யாமி த்ரிதிவம் தேவ ஸேவிதம் )
இதின் கருத்து : ”இராமா ! எல்லோருககும் நன்மையை அளிப்பவனாகிய இந்த இந்திரன்,பிரமனுடைய ஆணையினால் அப்பிரமனது உலகத்திற்கு என்னை அழைத்துக்
கொண்டு போக விரும்புகின்றனன். நான் ஸமீபத்தில் எழுந்தருளியிருக்கும் உன்னை
ஞானக் கண்ணால் கண்டவனாதலின், மிகவும் இனியனாகிய உன்னை வெளிக்கண்களாலும் கண்டு, களிப்புற எண்ணி, (திரும்பி வருதல், அழிதல் முதலிய குற்றங்களோடு கூடிய) பிரமனது உலகத்திற்குச் செல்ல விருப்பம் இன்றி இருக்கின்றேன். மிகமிகச் சிறந்த தர்மம் எனப் போற்றப் பெறும் பரமனாகிய உன் குளிர்ந்த நோக்குக்கு இப்போது இலக்காகிப் பின்பு அநந்தன், கருடன் முதலிய நித்யர் சூழ்ந்திருக்கப் பெற்றுள்ள பரமபதத்தில் உன்னை அடைய விரும்புகின்றேன்” என்பதாம்.
சரபங்கள் இவ்வாறு கூறி, இராமபிரானை நோக்கி, ” இராமா ! நீ சிறிது நேரம் என்னை
நோக்கிக் கொண்டிரு” என விரும்பி, அவ் வெம்பெருமானுடைய முன்னிலையிலேயே
எரிந்து கொண்டிருக்கும் ஹோமாக்னியில் ப்ரஹ்மமேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டு
பாம்பு தோலை உரிப்பது போன்று மானிட சரீரத்தை விட்டு, அர்ச்சிராதி வழியினால்
சென்று, பரம பத்தில் பரமனைப் பெற்று வாழ்வுற்றார்’ என்பது, சரபங்கருடைய சரித்திர உண்மை.
(2) இராமபிரானுடைய, ஸீதாபிராட்டி என்னும் உயரிய உடைமைப் பொருளை முறைதவறி விரும்பி, தனக்கு ஆக்கிக் கொள்ள இராவணன் எடுத்துச் செல்லும் ஸமயம் அதனை அறிந்த ஐடாயு தமக்கு இயன்ற அளவும் இராவணனோடு போர் புரிந்தார். இறுதி|யில் அப்பாபியினால் பிராட்டியைப் பற்றியே உயிர் துறக்க நேர்ந்தது. பரமபுருஷன் தேடிக் கொண்டு வரும்போது, ‘ஆயுஷ்மன்’ என்று அப்பரமனுக்கு மங்களம் பாடினார் ; “இராவ
ணன் உன் உயிரையும் (பிராட்டியையும் ), என் உயிரையும் கொண்டுபோய் விட்டான்” என்
னும் உண்மையையும் உணர்த்தினார். அவருக்குப் பரமன் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தைச்
செய்து,  (கச்ச லோகாநநுத்தமான்) என்கிறபடி விஷ்ணுலோகத்தையும் தந்திருளினான் என்பது ஜடாயுவின் சரித்திர ஸாரம்.
(3) “சபரி என்னும் வேட்டுவச்சி, தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளின இராமபிரானுக்கும் இலக்குமணனுக்கும் அதிகமான அன்புடன் பூஜை செய்தாள்; அப்பெருமானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்கானாள்; அவளும், தன் உடம்பை விட்டு உத்தம கதியைப் பெற்றாள் என்பது சபரியின் வரலாறு.-இங்கு (சஷுஷா தவ ஸும்யேனே பூதாஸ்மிரகுநந்தன பாதமூலம் கமிஷ்யாமி ) என்னும் வார்த்தை நோக்கத்தக்கது.-மேற்கூறிய மூவிடங்களிலும், சரபங்கரும், ஐடாயுவும், சபரியும் ஆகிய இம்மூவரும் இராமபிரானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்காகி, உடம்பை விட்டு அப்பரமன் திருவடிகளைச் சார்ந்ததாகவே தெரிகின்றமையின்,பிறப்பறுக்கலுற்றாற்கு உடம்பும் தடை’ என்பது நன்கு புலனாம். தேஹாத்மா பிமானம் முதலியன பொய்ப்பொருளாகவே இருப்பின், அவற்றின் காரியம் நிகழ்வதற்கு இடமில்லை யன்றோ? இவ்வாறு இராமாயணத்தில் விரோதியின் உண்மையைக் கண்டோம். இனி உபாயத்தைப் பற்றி ஆராய்வோம்.

———————————

வேதாந்தமும் உபாயமும்

வேதாந்தம் ஜீவன் பரமனைப் பெறுதற்கு எதை ஸாதனமாக அறிவிக்கின்றதோ, அது
உபாயம் எனப்படும். அவ்வேதாந்தம் கூறிய உபாயத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :
இப்பிரபஞ்சத்தை அந்த அந்தக் காலத்தில் ஆக்கி, அளித்து, அழிக்கின்றவன் எவனோ,
அவனே பரமாத்மா எனப்படுகின்றான். அப் பரமனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும், உள்ளத்துக் கொண்டு அன்புடன் சிந்திக்கும் சிந்தனை ‘பக்தி’ எனப்படும்.
இப்பக்தி, இச்சேதனன் எம்பெருமானைப் பெற்று வாழ்வதற்குச் சிறந்த ஸாதனமாம்,
இங்கு (காரணந்து த்யேய: ) என்னும் சுருதி வாக்கியம் சான்றாய்க்காணத்தக்கது.
இந்தப் பக்தியை ஒருவன் சாஸ்திரம் கூறியவாறு செய்து தலைக்கட்டுதற்குச் சிறந்த அறி
வும், ஆற்றலும் இன்றியமையாதனவாம்.இச்சிறந்த அறிவும், ஆற்றலும் எவனுக்கு இல்லையோ, அவன், எம்பெருமானை இழக்க வேண்டுவதில்லை; எம்பெருமான் திருவடிகளில் சரணாகதியைச் செய்து, அவனைப் பெற்று வாழலாம்
சிலர், மேற்கூறிய பக்தியைச் செய்து தலைக் கட்டுதற்குத் தக்க அறிவு ஆற்றல்களைப் பெற்
றிருந்தும், பக்தியை ஸாதனம’ என்று எண்ணிச் செய்யாது, தன் நிலைக்கு ஏற்ப பக்தி
யைப் பயனாகவே எண்ணிச் செய்து,கொண்டானையல்லாலறியாக் குலமகள் போன்று,எம்பெருமான் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி, இன்புறுகின்றனர். இவரே மிகச்
சீர்மையுற்றவராவர்.
சரணாகதியாவது: ‘எனக்குச் சிறிதும் நன்மையில்லை; குற்றங்களெல்லாம் உண்டு.
வேறு இரஷகரும் எனக்கு இல்லை’ என்று தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார் முன்னாக எம்பெருமான் திருவடிகளையே ஸாதனமாகப் பற்றுதலாம். இச்சரணாகதிக்கு, (சரணமஹம் ப்ரபத்யே) என்னும் சுருதி வாக்கியம் தக்க பிரமாணமாகும்.
இவ்வாறு, பக்தியையும் சரணாகதியையும் ஜீவன் எம்பெருமானைப் பெறுதற்கு ஸாதனமாக அறிவிக்கும் வாக்கியங்களைக் கண்டோம்
சிலர் ‘ப்ரஹ்மமாக மாத்திரம் இருத்தல் மோஷம்‘ என்றும், அதைப் பெறுதற்கு ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள் என்னும் (சுருதி வாக்கியத்தினால் ஏற்படும்) ஞானம் ஸாதனம்” என்றும் எண்ணுகின்ற (ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வாக்கியத்தையும் ஆதாரமாய்க் காட்டுகின்றனர்.-இதைக் கேட்பவர்க்கு மனம் கலங்கும் என்பது உண்மையே. இக்கலக்கத்திற்கு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஒரு பரிஹாரத்தைச் சுருக்கமாய்க் கூறுவோம் :

ஒருவனுடைய முயற்சி சக்தியினால் (ஆற்றலினால்) எது உண்டாகிறதோ, அதைப் ‘புருஷதந்திரம்‘ என்றும், ஒருவன் முயற்சி சிறிதும்இன்றி இருந்தும், எது பிரமாணத்திலேயே
ஏற்படுகின்றதோ, அதைப் ‘பிரமாண தந்திரம்’ என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.
மேற்கூறிய பரமனைச் சிந்திக்கும் சிந்தனையும், பரமன் திருவடிகளை உபாயமாய்ப் பற்றும் பற்றுதலும், ஒருவன் முயற்சி சக்தியைக் கொண்டு செய்யும் போது உண்டாகின்றமையின், புருஷ தந்திரமாம். சிலர் கூறுகின்ற வாறு தத்த்வம் அஸி‘ என்னும் சுருதியினால்,’ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்’ என்னும் ஞானம் உண்டாகும் போது,முயற்சி சக்தி ( பக்தி ப்ரபத்திகளுக்குப் போன்று வேண்டப்படாமையின் அந்த ஞானம் பிரமாண தந்திரமாம். இவற்றை நாம் மனத்திற் கொண்டு, பின்வருமாறு இங்கு ஆராய்தல் அவசியமாகும்:
சுருதி வாக்கியத்தினால் உண்டாகும், ‘ஆத்மா ஒன்றுதான் உண்மைப்பொருள் என்னும் ஞானம் மட்டும் மோஷஸாதனமா யிருப்பின், புருஷ தந்திரமான பக்தியையோ,
சரணாகதியையோ, அந்தச் சுருதி வாக்கியம் சேதனனைக் குறித்துக் கட்டளையிட இடம்
பெறுமோ? பெறாதன்றோ?
மேலும், ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி என்னும் சுருதியில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியின் உண்மைக் கருத்தையும், “தத் த்வம் அஸி ‘ என்னும் சுருதியின் உண்மைக் கருத்தையும், முறையே-“வேதாந்தமும் உபேயமும்” “வேதாந்தமும் ஜீவனும்” 
என்னும் பகுதிகளில் கூறியுள்ளோம்; கண்டு கொள்வது.
ஆனால், “ப்ரஹ்ம வேத ” என்பதின் கருத்து யாதோ? எனச் சிலர் வினாவக் கூடும். இவ் வினாவிற்கு, ” பரமனைப் பற்றிய சிந்தனையும்-ப்ரஹ்ம ஞானமாதலின், அந்தச் சிந்தனை
என்னும் ஞானம் பெற்றிருப்பானையே ‘ப்ரஹ்ம வேத’ என்னும் சுருதி குறிக்கின்றது’ என்பது விடையாய்க் காணத்தக்கது.-இவ்வாறு மிகச் சுருக்கமாய் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிய பரிஹாரத்தைக் கண்டோம். இனி, வேதாந்தத்தின்முடிந்த பொருளைக் காட்டுவோம்:
இங்கு பின்வருமாறு வேதாந்தத்தின் அம்முடிந்தபொருள் காணத் தக்கது : பரமனைப்
பற்றிச் சிந்திக்கும் சிந்தனை பரமனைப் பெறுதற்குக் காரணம் என்பது ஒருவாறு உண்மையேயாம். ஆனாலும், ‘அப்பரமன் திருவடித் தாமரைகளையே சரணமாகக் கொண்டு,
அவற்றைப் பெறுகின்றது என்பது மிக மிகச் சிறந்த முறையாகும்”; இதற்குப் பல சான்று
கள் உண்டு.
(I) அறிவாளிகளுள் மிகச் சிறந்தவர் ஸ்ரீ பீஷ்மர். அவர் சரதல்பத்தில் கிடந்து தருமபுத்திரருக்குப் பல தருமங்களை உபதேசம் செய்தனர். அங்ஙனம் உபதேசம் பெற்ற
தருமபுத்திரர், அந்த அந்த தருமத்தை உபதேசம் செய்யும் போது, அது அது சிறந்த
தருமமாகத் தெரிகின்றமையின், மிக மிகச் சிறந்த தருமத்தை அறிய வேணும் என்று
கருதி, தம் சாதுரியத்துக்கு ஏற்ப அப்பீஷ் மரை நோக்கி, ‘தேவரீர் மிகவும் விரும்பும்
தருமம் எது?’ என்று வினவினார். அங்ஙனம் வினவப்பெற்ற ஸ்ரீபீஷ்மரும், ‘நாராயணனு
டைய திருநாமங்களைச் சொல்லுதலே மிக மிகச் சிறந்த தருமம்’ என விடை கூறியிருக்
கிறார். (இது விஷ்ணு ஸஹஸ்ர நாமாத்தியா யத்தில் காணக்கிடக்கின்றது.)
இதைநாம் மனத்திருத்தி, (மிகமிகச்சிறந்த பிரமாணம் எனப் போற்றப்பெறும்) வேதத்
தில் கூறப்பெற்றுள்ள தருமங்களுள், அவ் வேதம் மிகவும் விரும்பும் தருமம் எது? என்
பதையே ஆராய்ந்து அறிதல் இங்கு இன்றியமையாததாகும்.அங்ஙனம் ஆழ்ந்து ஆய்ந்து
காணுங்கால், ‘சரணாகதி’ என்னும் தருமத்தையே வேதம் மிக விரும்புகின்றது என்பது விளங்கும்.ஆனால், “ஸ்ரீ பீஷ்மர்தாம் விரும்பும் தருமத்தைத் தெரிவிக்கும்போது, (ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோதி கத மோமத:) என்று எவ்வாறு தெளிவாகத் தெரிவித்திருக்கிறாரோ, அவ்வாறு வேதமும் சரணாகதியை, தான் விரும்பும் தருமமாய்த்தெரிவித்திருக்கிறதோ?” எனச் சிலர் ஐயமுறக்கூடும். இவ் ஐயத்திற்கு இடம் சிறிதும் இல்லை. எவ்வாறு எனின், கூறுவோம்: ஸ்ரீ பீஷ்மர் விரும்பிய தருமம் திருநாம ஸங்கீர்த்தனம் என்பதற்கு, அவருக்கு “ஏஷமே” என்னும் சொல்லை ஆதாரமாய்க் கண்டோம் அங்கு.-இங்கு, வேதபுருஷனுடைய ஆசாரத்தையே ஆதாரமாய்ப் பின்வருமாறுகாணலாம் :
இப்பிரபஞ்சத்திற்குக் காரணனான எம்பெருமான் அன்புடன் சிந்திக்கத் தக்கவன்’
என்று பக்தியைச் சுருதி சொல்லிற்று. அக்காரணனான எம்பெருமானை மோக்ஷத்தில்
விருப்பமுடைய நான் சரணம் பற்றுகிறேன்’ என்று சரணாகதியைத் தன் ஆசாரத்தில்
உள்ளதாய் அறிவிக்கின்றது. இங்கு மேற் கூறிய “காரணந்து த்யேய:” “முமுக்ஷர்வை
சரணமஹம் ப்ரபத்யே” என்னும் சுருதி வாக்கியங்கள் நோக்கத் தக்கன. ஸ்ரீபீஷ்மருடைய
சொல்லிலும், வேத புருஷனுடைய ஆசாரம் பிரபலமன்றோ? இவ்வாறு வேதத்தில் சான்றைக் கண்டோம்; இனி, பரம புருஷனுடைய திருவாக் கிலும் தக்க சான்றைக் காண்போம்
(2) பரம புருஷன் அர்ஜூனனைக் குறித்து அருளிச் செய்த திவ்விய சாஸ்திரம்
பகவத்கீதை ‘ என்பது உலகு உணர்ந்ததேயாம். அக்கீதையில் உள்ள பதினெட்டு அத்தி
யாயங்களிலும், கருமயோகம், ஞானயோகம்,பக்தியோகம் என்னும் தருமங்களைப் பரக்க
அப்பரமன் உபதேசம் செய்திருப்பது அதை அனுபவிப்போர் அறிந்ததேயாகும். (நான்
செய்பவன்’ இக்கருமம் என்னுடையதுஎனக்கு இப்பயன் வேண்டும்’ என்னும் எண்
ணங்களை அறவே ஒழித்து பரமன் திருவுள்ளம் உகக்குமாறு தன் வருணத்திற்கும், ஆசிரமத்திற்கும் ஏற்ற தருமங்களைச் செய்தலே கருமயோகமாம். இவ்வாறு நெடுகின காலத்தில் கரும யோகத்தைச் செய்து, அதனால் சித்த சுத்தி பெற்று, அச் சித்தத்தைக் கொண்டு,ஜீவ னாகிய தன்னைச் சிந்திக்கும் சிந்தனையே ஞானயோகமாம்.)
உண்மை இவ்வாறு இருப்பினும்,அப்பரமபுருஷன், அந்தக் கீதையின் முடிவில் அருளிச
(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ) என்னும் வார்த்தையைக் காணுங்கால்
சரணாகதியே அவன் உகந்த தருமம் எனத் தெரிகின்றது. இதைச் சிறிது விரித்துரைப்
போம்.
பிள்ளைலோகாசார்யர், “தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்தானே, ஸர்வ
தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று’ என்கையாலே, ஸாக்ஷாத் தர்மம் தானே என்
கிறது’ என்று அருளிச் செய்திருக்கிறார்.-இதின் கருத்து : தருமத்தை நிலை நாட்டுதற்கெனவே திருவவதாரம் செய்தருளின கண்ணபிரான், .தன்னால் உபதேசம்
செய்யப் பெற்றவையும்’ ‘ஒருவாறு வீடு பேற் றைத் தருகின்றவையுமான கரும ஞான
பக்திகள் எல்லாவற்றையும் விட்டு, என் ஒரு வனையே பற்று’ என்கையாலே,அவனே,
நேரே பயனைக் கொடுக்கக் கூடிய தருமம்’ என்பதும், ‘மேற்கூறிய கரும ஞான பக்தி
களாகிய யாவும் அங்ஙனம் நேரே பயனைக் கொடுக்கும் தருமங்கள் அல்ல’ என்பதும்
நன்கு விளங்குகின் றனவல்லவா ? என்பதாம்.
அன்றியும், ‘ பக்தி சபலன்’ (ஜீவன் செய்யும் பக்தியில் மிகவும் விருப்புற்றிருப்பவன்)
என்று புகழப்பெறும் பரமபுருஷன் அப்பக்தியைப் பல இடங்களில் பலவாறாகப் பரக்கப்
பேசி, இறுதியில், ‘அதையும் விட்டு,என்னைப் பற்று’ என்று அருளிச் செய்திருக்கின்றமையின். அப்பக்தியிலும் தானாகிய தருமமேதான் உவந்ததாம் என்பதும் இங்கு தெளிவு.-இவ்வாறு, ‘எம்பெருமான் உகந்த தருமம் சரணாகதி” என்பதைக் கண்டோம். இனி, வைதிகரும் மிகவும் ஆதரித்து, ஆசரித்த தருமம் சரணாகதி’ என்பதைக் காட்டுவோம்.
(3) வேதத்தைச் சிறந்த பிரமாணமாகக் கொண்டு, அவ்வேதக் கருத்தையும் உள்ளபடி
உணர்ந்து, அவ்வுணர்வைப் பின் சென்று நடப்போர் யாவரோ,அவரே வைதிகர் எனப்
போற்றப் பெறுகின்றனர். அவ்வைதிகருள்,-மயர்வற மதி நலமருளப்பெற்ற நம்மாழ்வாரே சீர்மை யுற்றவராவர். ‘அவர் மிகமிகச் சிறந்த பக்திபெற்றிருந்தும், தமக்குப் பரமன்
பால்உள்ள அப்பக்தியை அவனைப் பெறுதற்குக்காரணமாய்க் கருதாது,அவன் திரு
வடித்தாமரைகளையே காரணமாய்ப் பற்றியிருந்தவர்’ என்பதும் மிகவும் பிரஸித்தமானது. இவர் போன்று, இவர் திருவடித் தாமரைகளைப் பணிந்துய்ந்தவரான நம்
ஆசார்யர்களும் சரணாகதி தர்மத்தையே விரும்பி யிருந்தனர் என்பதும் தெளிவு.
இவ்வாறு, வேதம், வேத்யன், (வேதத் தின் முக்கியப் பொருளான பரமபுருஷன்)
வைதிகர் ஆகிற இம்மூவரும் மிகவும் விரும்பும் தருமம் சரணாகதி என்பதைக் கண்டோம்.
இச்சரணாகதியையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’ என்பதை இனிக் காண்போம்.

இராமாயணம்-சரணாகதி-சாஸ்திரம்

பரமாத்மா.ஜீவாத்மா, உபேயம், விரோதி, என்னும் (ஐம் பொருளில் சார்ந்த, நான்கு பொருள்களையும் இராமாயணம் தெளிவாகத் தெரிவிக்கின்றவாறு இக்கட்டுரையி
லேயே ஒருவாறு கண்டிருக்கிறோம். ஆயினும், சரணாகதி தருமத்தைவெளியிடுவதில் இராமயணம் நோக்குடைத்தாதலானும், ‘இராமாயணம் சரணாகதி சாஸ்திரம்’ எனப் பிரஸித்தி பெற்றிருப்பதால்,சரணாகதி தருமத்தையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’
என்று கூறு வதிலும் தட்டொன்றும்இல்லை. இப்பகுதியில், சரணாகதி தருமத்தின் உண்மைகளை நாம் அறியலாம்.
எம்பெருமான் முன்னிலையில் தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார்.
முன்னாக எம்பெருமானை ஸாதானமாய்ப் பற்றுதல் சரணாகதி’ என முன்பு கூறியிருந்
தோம். இங்கு சேதனன்பால் உள்ள பற்றுதல், பேற்றுக்கு ஸாதனமா? அல்லது, இச்
சேதனனால் பற்றப் பெறும் எம்பெருமானே ஸாதனமா? என்னும் ஐயம் ஏற்படுவது
இயல்பேயாம்.

பிள்ளைலோகாசார்யர் ‘பற்றப் பெறும் எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனம்; பற்றுதல் ஸாதனமன்று’ என்று அருளிச் செய்திருக்கிறார் ; சேதனன் பாலுள்ள பற்றுதலை
அதிகாரி விசேஷணமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
இங்கு, முதலில், இவ்விரு ஆசார்யர்களுடைய கருத்துக்களையும் தக்க சான்றுகளுடன்
முறையே விரித்துக்கூறி, கருத்து வேற்றுமை யின்மையையும் காட்டி, பின்பு, இராமாயணத்தில் சரணாகதி பேசப் பெற்றிருக்கும் விதம் இன்னது என்பதையும் தெரிவிப்போம்.
தேசிகன், சேதனன் பாலுள்ள பற்றுதல் பக்தி ஸ்தானத்தில் எமபெருமானை ஸாதித்துத்
தருவதென்றும்,அத்தானத்திலுள்ள எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனமென்றும் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
பிள்ளைலோ காசார்யர் திருவுள்ளம் பின்வருமாறு காணத் தக்கது:
“தருமம்” என்னும் சொல்,எது விரும்பும்பயனுக்கு முக்கிய காரணமோ, அதைக்
குறிக்குமாம். பரமபுருஷன் அவர் அவர் விரும்பும் பயனுக்கு முக்கிய காரணனாயிருத்
தலின்,சாஸ்திரம் தர்மம்’ என்னும் சொல்லையிட்டு, அவனைக் குறிக்கின்றது.
 (ராமோ விக்ரஹவாந்தர்ம 🙂 ‘ (க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் ) என்னும் வாக்கியங்களை
நாம் இங்குக் காணுதல் நன்றாம். மேலும் இந்த எம்பெருமான் எனப் பெரும் தருமம்
மிகச் சீர்மை யுற்றதாம். எவ்வாறு? என்னில் கூறுவோம்:
ஏனைய தருமங்களுக்கும்,எம்பெருமான் எனப்படும் தருமத்திற்கும் மிகவும் வேற்றுமை
உண்டு. எவ்வாறு? என்னில், ஏனைய தருமம் எதுவாயிருப்பினும், அது வேறொன்றின் உத
வியை விரும்பியன்றி இராது. எம்பெரு மானோ,அவ்வாறு வேறொன்றின் உதவியை
விரும்பான்’ என்பது மாத்திரமன்று; அவ்வாறு உதவியைப் பொறுப்பானும் அல்லன்.-இங்கு எடுத்துக்காட்டாகப் பின் குறிக்கப்பெறுவது நோக்கத்தக்கது. பரமனைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்பது நாம் அறிந்ததேயாம். இப்பக்தி, தான் உண்டாம்போது
சேதனனுடைய முயற்சியை விரும்புகின்றது;-இச்சேதனன், சாஸ்திரம் கூறுகின்றவாறு
முதலில் இன்னது பக்தி’ என்பதை உணர்ந்து-அங்ஙனம் உணர்ந்தவாறு முயன்று, செய்யும்
போதுதானே உண்டாகின்றது ; முயன்று-செய்யாதபோது உண்டாவதில்லையன்றோ ?
மேலும் இப்பக்தி, பயனைக் கொடுக்கும் போது, அங்ஙனம் கொடுக்கத்தக்க அறிவு
ஆற்றல்களைப் பெற்றிராமையின், பேரறிவு பேராற்றல்களைப் பெற்றிருக்கும் எம்பெரு
மானை உதவியாய் விரும்புகின்றது. இதனால், பக்தி, தான் உண்டாம்போது, சேதனனு
டைய முயற்சியை உதவியாய் விரும்புகின்றது என்பதும், பயனைக் கொடுக்குங்கால், எம்பெரு மானை விரும்புகின்றது’ என்பதும் நன்கு புல னாகும்.
அன்றியும், சித்தம் சுத்தமாய் இராத போது, அச்சித்தம் பரமனைச் சிந்திக்கப்பாங் காயிராது.ஆதலின்,எதைச் செய்தால் சித்தம் சுத்தி பெறுமோ, அதைச் செய்தல்
இன்றியமையாததாகும். இச்சித்த சுத்தியை கரும யோகத்தைச் செய்து பெறலாகும்.
இதைக் காணுங்கால்,பக்தியைச் செய்தற்குச் சித்த சுத்தி இன்றியமையாததாம். சித்த
சுத்தி பெறுதற்கு கரும யோகத்தைச் செய்தல் இன்றியமையாததாம். ஆதலின், ‘பக்தி,
சித்தசுத்தி வழியாகக் கருமயோகத்தை உதவியாய் விரும்புகின்றதாம்’ என்பது நன்கு
விளங்குகின்றது? (சித்த சுத்தியாவது – உள்ளத் தூய்மையாம்)-இன்னமும், இவ்வாறு, பக்திக்கு உதவியாயுள்ள பலவற்றைச் சாஸ்திரங்களில் காணலாம் .
உதவி வேண்டா உபாயம்
எம்பெருமான் என்னும் தருமத்திற்கோ,ஓர் உதவியும் கூறுதற்கு இன்று. நித்தியரனாய் (என்றும் உள்ளவனாய்) இருத்தலின், ‘உண்டாதல். என்பதே இல்லை; பேரறிவும்,
பேராற்றலும் பெற்றிருத்தலின், பயனைக் கொடுக்கும்போது, பிறருதவி வேண்டுவதில்லை; இயற்கையிலேயே மிகவும் தூய்மை பெற்றிருத்தலின், அத்தூய்மை பெற ஒன்றைவேண்டிச் செய்தலுக்கும் இடம் இன்று. இயற்கையில் தூய்மை பெற்றிருப்பவன் என்பது மாத்திரமன்று; தன் தொடர்பினால் பிறருக்கும் தூய்மையை உண்டு பண்ணுவானன்றோ?
எம்பெருமான்.-மேலும், வேறொன்றின் உதவியையும் எம்பெருமான் பொறான்’ என்பதற்குப் பின் வரும் சரிதம் எடுத்துக்காட்டாகக் கூறப்பெற்றுள்ளது: இந்திரஜித்தினுடைய பிரமாஸ்தி
ரத்தினால் கட்டுண்ட திருவடியை இராக்கதர்மேலும், சணல் கயிறுகளால் கட்டியபோது,
அப்பிரமாஸ்திரம் நழுவியதாயும், அங்ஙனம் நழுவியிருந்தும், இராவணனுடைய உண்மைகளை உணர விரும்பி, கட்டுண்டவன் போன்று, அத்திருவடி இருக்க, அவனை அவ் இராக்கதர் இராவணன்பால் இழுத்துச்சென்றனராம்”. என்பதே அச் சரிதமாம். இச் சரிதத்தில், ‘வேறொன்றின் (சணல் கயிறின்) தொடர்பைப் பிரமாஸ்திரம் பொறுத்திலது’ என்பது தெளிவு. இதுபோன்று, எப்பெருமானும் மற்றொன்றின் உதவித் தொடர்பைப்
பொறான்’ என்னும் உண்மை இங்கு உணரத் தக்கதாம். இவ்வாறு, எம்பெருமானுக்கும்
ஏனைய தருமங்களுக்கும் உள்ள வேற்றுமையையும், எம்பெருமானுக்குள்ள சீர்மையையும்
கண்டோம். மேற் கூறியவாறு, ‘எம்பெருமான் வேறு ஒன்றின் உதவியைச் சிறிதும் பொறான்’ என்பதற்குத் தக்க சான்று யாதோ? எனின், கூறுவோம்: சரணாகதியைக் கூறும் சான்றுகள் பலஉண்டு. அவையாவன ; (மாமே வயே ப்ரபத்யேத்) (தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத்)
(த்வமேவ உபாய பூதோ மே பவ)) ” ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பனவாம்.-இச் சான்றுகளுக்கு முறையே, “யாவர் சிலர் என்னையே பற்றுகிறார்களோ, ‘அந்த ஆதி புருஷனையே பற்றக் கடவன்’ நீயே எனக்கு உபாயமாக வேண்டும்’ ‘எனக்கு
உபாயம் தருமிடத்தில் உன் திருவடிகளையே உபாயமாக அளித்தாய்’ என்னும் கருத்துக்கள்
காணத்தக்கன.-மேற்கூறிய சான்றுகளில்,உபாயப் பொரு ளைக் குறிக்கும் சொல்லைச் சேர்ந்தே ‘ஏவ-என்னும் சொற்களைக் காண்கின்றோமல்லவா?
இச்சொற்கள் இங்கு, பிரிநிலைப் பொருள் பெற்றுள்ளனவாம்,அஃதாவது: எம்பெருமான், அவனைப் பெறுதற்கு முக்கிய காரணனாம்; வேறொன்றும் முக்கிய காரணமாகவோ,
துணைக் காரணமாகவோ இல்லை’ என்பதாம்.
இக் கருத்தைக் காணுங்கால், சேதனன் பாலுள்ள பற்றுதல் காரணமன்று : பற்றப்
பெறும் எம்பெருமானே காரணன் என்பது தெளிவாக விளங்குகின்ற தன்றோ?

அதுவும் அவனது அருளே

இன்னமும், “இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல் பேற்றுக்குக் கார
ணமன்று”, என்பதை  (தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்) என்னும் சுருதியினாலும் நாம் நன்கு காணலாம். இந்தச்சுருதியின் கருத்து : ‘எம்பெருமான் உபாயம்’ என்னும் அறிவு அவ் எம்பெருமானுடைய அருளாலேயே பெறுவதொன்றாம் என்பது.-இந்தச் சுருதி, முன்னம் கூறிய “முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” என்னும் வாக்கியத்தோடு சேர்ந்திருக்கின்றமையின்,-‘எம்பெருமான் உபாயம் என்னும் அறிவை எந்த எம்பெருமான் தன் இன்னருளால் மலரச் செய்கின்றானோ, அவ்எம்பெருமானையே, வீடு பேற்றில் விருப்பமுடைய நான் (வேதபுருஷன்) உபாயமாகப் பற்றுகிறேன்’ என்னும் கருத்து இங்குக் காணத்தக்கதாம்.-இக்கருத்தை ஆழ்ந்து ஆராய்ந்து காணுங்கால், முதலில்,எம்பெருமான் இன்னருளுக்கு இலக்காகிய பின்பு, அவ் இன்னருளினால் ‘எம் பெருமான் உபாயம்’ என்னும் அறிவு பெற்று, அதன் பிறகு, அவ்எம்பெருமானைப் பற்ற விரும்பி, பிறகு, எம்பெருமானை உபாயமாகப் பற்றுகிறான்’ என்னும் அடைவு நன்கு புலப்படுகின்றதன்றோ?
எம்பெருமானை உபாயமாகப் பற்றுதற்கு அங்ஙனம் உபாயமாகப் பற்றுதல் வேண்டும்
என்னும் விருப்பம் காரணமாம். அவ்விருப்பம் உண்டாதற்கு, எம்பெருமான் உபாயம்
என்னும் அறிவு ஏதுவாம். அவ்வறிவு பெறு வதற்கு அவ் எம்பெருமான் இன்னருள் இன்றி
யமையாததாம் என்று வேறொரு வழியில் அமைந்துள்ள அடைவும் இங்கு அறியத் தக்கதாகும்.-இக் கருத்தையே நம்மாழ்வாரும், “என்னுணர்வினுள்ளே இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே” என்ற தமது திருவாக்கினால் வெளியிட்டிருக்கிறார்.
இது காறும் கூறியவாற்றால். ”இந்தச் சேதனன் எம்பெருமானைப் பற்றிய பின்பு.
இவன் துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் எவ்வாறு ஏற்படுகின்றதோ, அவ்வாறே, இவை
இரண்டிற்கும் முன்பு இச்சேதனன் பாலுள்ள பற்றுதலும். அவ்வெம்பெருமானாலேயே உண்டாகின்றது” என்னும் முடிந்த உண்மைப் பொருளும் இங்கு நன்கு விளங்குகின்றது.
இங்கு, பின் குறிக்கப் பெறும் எடுத்துக் காட்டும் காணத்தக்கது: தந்தையான ஒரு
வன், தன் புத்திரனுக்கு ‘காயத்ரீ’ என்னும் மந்திரத்தைசாஸ்திர முறைப்படி உதவுகிறான்.
அங்ஙனம் உதவப் பெற்ற அப்புத்திரனும், தன் தந்தையார் தன் கையில் கொடுத்த
தனத்தை, அத் தந்தையாருக்கே தன் நன்றி அறிதலுக்கு ஏற்பத் திரும்பவும் கொடுக் கின்றான்.-இதுபோன்று, எம்பெருமான் கொடுக்க அறிவு, விருப்பம் இவற்றைப் பெற்ற இச்சேதனன், அவ்வெம்பெருமான் கொடுத்த ஆற்றலைக் கொண்டே அவனை உபாயமாகப் பற்றுகின்றான். ஆதலின், அப்பற்று தலுக்கு உபாயத் தன்மை கொள்ளுதற்கு இல்லை யன்றோ ?

அதிகாரி விசேஷணம்
இதுவரையில் கூறியவற்றால், ‘எம்பெருமானைப் பற்றும் பற்றுதல் ஸாதனமன்று;எம்
பெருமானே முக்கிய தருமமாம்’ என்பதை உணர்ந்தோம். ஆனால், இப்பற்றுதல் இச்
சேதனனுக்குப் பேற்றைப் பெறும்போது,உதவுகின்றது எவ்வாறு? எனின், அதிகாரி
விசேஷணமாய் உதவி புரிகின்றது. இதனைச் சிறிது விரித்துக் கூறுவோம்.
சாஸ்திரங்களில், உபாயம், அங்கம், பலம் என்று கூறப் பெற்றிருத்தலை நாம் காணலாம்.
எம்பெருமானைப் பெற்று அவனையும், திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன்
அனுபவித்து, அவ்வனுபவத்தாலாகிய ஆனந்தம் உள்ளடங்காது தூண்ட, அதனால் செய்யும்
அடிமைத் தொழிலே மிகமிகச் சிறந்த பயனாம். இப்பயனைப் பெறுதற்கு எம்பெருமானே உபாயமாம். இவ்வுபாயத்தை (எம்பெருமானை)ஒருவன் பற்றும்போது, ஏனைய தருமங்கள்
எல்லாவற்றையும் விட்டே பற்றுதல் இன்றியமையாததாகும். இ தற்கு “(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய ) என்னும் கண்ணபிரானுடைய திருவாக்கே தக்க சான்றாம்.
“உண்பானொருவன், முதலில் நீராடியே பின்பு உண்ணுதல் வேண்டும் ” ‘ (ஸ்நாத்வா புஞ்ஜீத) என்று எவ்வாறு சாஸ்திரம் கூறுகின்றதோ, அவ்வாறே, கண்ணபிரானும், ‘பரம புருஷனாகிய என்னைப் பற்றுங்கால், ஏனைய தருமங்கள் எல்லாவற்றையும்அறவே விட்டு, என்னைப் பற்று’ என்று அருளிச்செய்திருக்கின்றான். இவ்வாறு ஏனைய தருமங்களை விடுதல் என்பது அங்கமாம்(உதவியாம்).-இச்சேதனன் பாலுள்ள பற்றுதலோ, உபாயமும் அன்று ; அங்கமும் அன்று. ஆனாலும், இச்சேதனன் பற்றினால், மேற்கூறிய பயனைப் பெறலாம். பற்றாவிடில் பயனைப் பெற இயலாது.- இவ்வாறு, இச்சேதனன் பாலுள்ள பற்றுதல், உபயம், அங்கம் இவற்றில் வேறுபட்டதாயும், பயன் உண்டாம்போது வேண்டப் பெறுவதாயும் இருக்கின்றமையின்,இஃது அதிகாரி விசேஷணமாம்.
இங்கு, கண்ணன் அருளிச் செய்த(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா ஸர்வ பாபேப்ய ; மோக்ஷயிஷ்யாமி மாசுச :)என்னும் வார்த்தை காணத் தக்கது.
இவ் வார்த்தையில்,”ஸர்வ தர்மான்பரித்யஜ்ய” என்னுமிடத்து, முற்கூறியவாறு ஏனைய தருமங்களை அறவே விடுதல்’ என்னும் அங்கத்தையும்; ‘மாம்” என்னுமிடத்து, எம்பெருமானாகிற உபாயத்தையும்; ‘ஏகம்’ என்னுமிடத்துஇவன் பாலுள்ள பற்றுதல் உபாய
மன்று; ‘எம்பெருமான் வேறொன்றின் உதவியைப் பொறான்’ என்பதையும், ” வ்ரஜ என் னுமிடத்து, இவன் பற்றும் பற்றுதலையும்,”த்வா” என்னுமிடத்து, பற்றுதலைச் செய்த
சேதனாகிற அதிகாரியைக் கூறும் முகத்தாலே ‘பற்றுதலாகிய அதிகாரி விசேஷணத்தையும்,,ஸர்வபாபேப்யோ மோ யிஷ்யாமி’ என்னுமிடத்து, பரமனை அடைய
ஒட்டாது தடையாயிருக்கும் பாவத்தைப் போக்கி அளித்தலையும் கண்ணன் வெளியிட்டிருப்பது தெளிவு.-மேலும்,
தனக்கடிமைபட்டது தானறியானேலும் மனத்தடைய வைப்ப தாம் மாலை- வனத்திடரை ஏரி யாம் வண்ணமியற்று மிது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று” என்னும் பூதத்தார் பாட்டும் இங்கு அனுபவிக்கத் தக்கதாம். இப்பாட்டில் முன் அடிகள் தெரிவிக்கும் கருத்து : ”இச்சேதனன்,எம்பெருமான் உடையவன்;தான் உடைமைப் பொருள்’ என்னும் உண்மை
உணர்வு பெறாதிருந்தும், பெரியோர் செய்யும் முறையைக் கண்டாகிலும், எம்பெருமானைத்
தன் மனத்திலே கொண்டு விரும்பக் கடவன்”என்பதாம்.-இனிப் பின்னடிகளின் பொருளைக் காண்போம். (இச்சேதனனுக்கு முன்னடிகளில் கூறியவாறு) விருப்பம் மாத்திரம் உண்டானாலும், எம்பெருமான் இவன் விரோதியைப் போக்கி, இவனுக்குத் தன்னைத்தானே தந்தருளுவன். எவ்வாறு? என்னில்,-காடெழுந்து மேடாயிருக்கும் நிலத்தை ஏரியாக வெட்டுகின்றோம். இச்செயல் மழை பெய்தற்குக் காரணமன்று.நாம் ஏரி வெட்டு
கின்றோம் என்பது பற்றியே மழை பெய்யுமா?-அல்ல. இதனால், ‘ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்று’ என்பது உலகறிந்ததேயாம். ஆனால் ஏரி வெட்டுதல் மழை
பெய்தற்குக் காரணமன்றாகில் அங்ஙனம் வெட்டுதல் பயனற்றதுதானே ! என்று எண்ணலாகாது. பரமனுடைய நினைவினால் மழை பெய்யும்போது,அம்மழை நீரை அவ் வனத்திடர் தாங்கிக்’ கொள்ளுமோ? கொள்ளாதன்றோ ? அத்துடரைத் திருத்தி, ஏரியாக
அமைத்து வைப்போமாயின். மழை பெய்யும் போது,அம்மழை நீரை அந்த ஏரி தாங்கித்
தன்பால் வைத்துக் கொள்ளும் என்பதே பின்னடிகளின் பொருளாம்.-இதனால் ‘ஏரி வெட்டுதல், மழை நீர் பழுதுபடாமைக்காகவே யன்றி, மழையைப் பெய்வித்தற்காக வன்று’ என்பது நன்கு தெரிகிறது.-இங்கு, எம்பெருமானை உபாயமாகப் பற்றாதாரை வனத்திடராகவும்,எம்பெருமானை உபாயமாக பற்றும் பற்றுதலை, ஏரியாம் வண்ணம் இயற்றுதலாகவும், சேதனன் பால்உள்ள எம்பெருமான் இயற்கை இன்ன ருளை,ஏரியில் தங்கின மழை நீராகவும் கொள்ளுதல் பொருத்தமாகும்.
இங்குத்தேறிய முடிந்த பொருள் என்ன?எனில், ” சேதனராகிற நாம் செய்யும் நற் செயல்களெல்லாம், எம்பெருமானுடைய இயற்கை இன்னருளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒருவாறு உறுப்பாம் என்பதொழிய, அப்பரமன் அருளை உண்டாக்குதற்கு உடலாகாது”-என்பதே அம்முடிந்த பொருளாம்.
இதனால், “ஏரி வெட்டுதல் போன்று, சேத னன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல்
உபாயமன்று ; ஏரி வெட்டுதல் எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே எம்பெருமானை உபாயமாகப் பற்றுதலும் இன்றியமையாததாம். என்பதை இங்கு ஸாரப் பொருளாய்க் காணலாம். இக்கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு, பிள்ளைலோகாசார்யார்.
ப்ரபத்தியை அதிகாரி விசேஷணம் என்று திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.-இதுகாறும், பிள்ளைலோகாச்சார்யருடைய திருவுள்ளத்தைச் சுருக்கமாய்க் கண்டோம்.

இனி, தேசிகன் திருவுள்ளத்தைக் காண்போம்.
‘எம்பெருமானைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்று முன்னமே கூறியிருந்தோம்.
இப்பக்தியைச் செய்யத் தகுந்த அறிவும் ஆற்றலும் உள்ளவன், இதையே மோக்ஷ ஸாதனமாகச் செய்யக்கடவன். அறிவும் ஆற்றலும் இன்றி இருப்பவனோ, பக்தியைச் செய்யமாட்டாது இருப்பினும், வீடுபேற்றை இழக்கவேண்டியதில்லை; எம்பெருமானை உபாயமாகப் பற்றினால், அந்த எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருவன். அங்ஙனம் வந்து சேர்ந்த எம்பெருமான், (பக்தி ஸ்தலத்தில் பக்தி எங்ஙனம் வீடுபேற்றிற்கு ஸாதனமோ, அங்ஙனமோ மோக்ஷத்திற்கு உபாயம் ஆவான்.-இங்ஙனம், ப்ரபத்தி, எம்பெருமான் வேறொரு உபாயமாகிய பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமேயன்றி, நேராக வீடு பேற்றைப் பெறுதற்கு காரணமன்று; எம்பெருமான தான் அப்பேற்றுக்கு காரணம்.-இவ்வாறு தேசிகன் திருவுள்ளத்தைச் சுருக்கமாய் காணலாம்.
மேற்கூறிய இரு பக்ஷங்களிலும், ப்ரபத்தியை, அதிகாரி விசேஷணமாக ஒருவரும்,
எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமாக மற்றொருவரும் திரு வுள்ளம் பற்றியிருத்தலைக் காண்கின்றோம்-இதை நோக்குங்கால், இவ்விரு ஆசாரியர்களுக்கும் திருவுள்ளத்தில் வேற்றுமை உண்டு’ என்பது தெரிகிறது.-ஆனாலும்.எம்பெருமான் நேரே வீடு பேற்றிற்கு உபாயம் என்பதை  இவ்விரு ஆசார்யர்களும்,  திருவுள்ளக் கருத்து வேற்றுமையின்றி, ஆதரித்திருக்கிறார்கள் என்பது நன்கு இங்கு விளங்குகின்றது.   இந்தத் திருவுள்ளக் கருத்தொற்றுமையே இங்கு முக்கியமாய் அனுபவிக்கத்தக்கது.
இனி, இராமாயணம் சரணாகதி தருமத்தை இயம்புகின்றவாறு சிறிது விரித்துக்
 கூறுவோம்.

இராமாயணமும் சரணாகதியும்

தசரத சக்ரவர்த்தி புத்திரப்பேற்றை விரும்பி, வேள்வி செய்யும் தருணம். அத்தருணத்தில், நான்முகனாரும், ஏனைய தேவதைகளும், மற்றும் மஹரிஷிகளும் அவ்வேள்வியில்,
தம்தம் அவியை (ஹவிஸ்ஸை)ப்பெற விரும்பி, ஒன்று சேர்ந்து வந்திருந்தனர். அங்ஙனம்
வந்திருந்த தேவதைகள் முதலானார் யாவரும், நான்முகனாரை நோக்கி, ஓ பகவானே !
உமது அருள்பெற்று, மிக்க பராக்கிரமம் கொண்ட இராவணன், எங்களனைவரையும்
துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனன். நாங்கள் அவனை அடக்கத் தக்க வன்மையற்றிருக்கின்றோம். ஆதலின் அவனைக் கொல்லுதற்கு ஏற்ற உபாயத்தை நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டனர்.
இவ்வாறு வேண்டுங்காலத்து, சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண், பேரொளி
பெற்றிருப்பவனும், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனும், திரு அரையில் கட்டிய கசசை
யுடையனும், என்றும் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் பரந்திருப்பவனும், இப்பிர
பஞ்சத்திற்கு ஸ்வாமியுமான நாராயணன் வைகுந்தத்தினின்றும் எழுந்தருளினன்.
இங்ஙனம் பரமபுருஷன் எழுந்தருளின வரலாற்றைக் கூறும் வார்த்தை,

(ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யுதி : சங்க சக்ர கதாபாணி : பீதவாஸா ஜகத்பதி 🙂 என்பதாம்.-இவ்வார்த்தையில், சரணாகதி தருமத்தின் உண்மை பலவற்றை நாம் உணரலாகும்.(1 ) தருமம், என்னும் சொல்,எது பயனுக்கு ஸாதனமோ, அதைக் குறிக்கும். எம்பெருமான் அந்தஅந்த நன்மைக்குக் காரணனாயிருக்கின் றமையின், தரும சப்தத்தால் குறிக்கப்பெறுகின்றான். அவன் நித்தியமாயிருப்பவன். ஆதலின், ஏனைய தருமங்களில் ஏதேனும் ஒன்று எங்ஙனம் முயற்சி சக்தியினாலேயே ஏற்படுகின்றதோ, அங்ஙனம் எம்பெருமான் உண்டு பண்ணப்படுமவனல்லன் என்று முன்னமே கூறியிருந்தோம்.
எம்பெருமான் எதிர்நோக்குவது
இதைச் சிலர் காணுங்கால், ‘அவர் அவர்விரும்பிய பயன் அந்த அந்தக் காலத்து, யாதொரு இடையூறுமின்றி, எம்பெருமானாகிய தருமத்தினால் ஏற்படத் தட்டென்? ‘ என்றுகருதக்கூடும். ஆனாலும், இங்ஙனம் கருதஇடம் இல்லை. ஏனெனில்,’எம்பெருமானாகிய தருமம் எல்லாருக்கும் என்றும் உள்ளது’ என்பது ஒருவாறு உண்மையே. ஆனாலும், அந்த எம்பெருமானாகிய தருமம் துன்பம் துடைத்து, இன்பம் அளித்து, இவனை நோக்குங்கால், இவனுடைய வேண்டு தலையும் வேண்டுகின்றது.
(ரக்ஷயா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே) என்னும் பிரமாண வசனம் இங்குக் காணத் தக்கது.
இதனால் “‘இரட்சித்தல் என்னும் தொழிலை இயற்கையாகப் பெற்றிருக்கும் எம்பெருமான், (காக்கப்பெறும்) இச்சேதனனுடைய வேண்டுதலை விரும்பியே இவனை இரட்சிக்கின்றான்” ! என்னும் சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையை நாம் உணரலாகும்.
இவ்வுண்மை, மேற்கூறிய “ஏதஸ்மிந் அந்தரே” என்னும்வார்த்தையில் நன்கு புலனாகின்றது . எவ்வாறு என்னில் ?”எம்பெருமான், ஏனைய தேவதைகளைப் போன்று, தன் அவியைப் பெற்றுப் புசிக்க, வேள்வி நிகழும் நிலத்து எழுந்தருளினான்” என்பது இங்கு உண்மையன்று. அங்ஙனம், அவியைப் பெற்றுப் புசிக்கத் திருவிள்ளமிருப் பின். அவர்களைப் போன்று, அந்நிலத்தில் முன்னமேயே எழுந்தருளியிரானோ? சங்கம், சக்கரம், தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும், திருவரையில் கச்சை கட்டியும் போர் புரிபவன் போன்று எழுந்தருளுதலும் ஏற்படுமோ? பிறகு உண்மை என்ன? எனின், ‘; ஏதஸ் மிந்அந்தரே” என்பதை இங்கு உற்றுநோக்குதல் இன்றியமையாததாகும். இச்சொல்லில் நான்முகனாரை நோக்கி, ‘துன்பம் தீர்ந்து இன்பம் யாம் பெருமாறு நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று தேவதைகள் வேண்டுங்காலத்து, எம்பெருமான் எழுந்தருளினான் என்பது கூறப்பெற்றிருத்தலால், ‘எம்பெருமான் இச்சேதனருடைய வேண்டுதலை விரும்பி இரட்சிக்கின்றான்’ என்பது வெளிப் படை.
”பிரமாஸ்திரம் எங்ஙனம் சணல் கயிற் றின் தொடர்பைப் பொறுக்கின்றதில்லையோ ; அங்ஙனமே, எம்பெருமானும் வேறொன்றின் தொடர்பைப் பொறான்’ என்று முன்னம் கூறியிருந்தீர்கள். இப்போது, ‘இச்சேதனன் வேண்டுதலை எம்பெருமான் எதிர்பார்த்தே இவன் காரியம் செய்கின்றான்’ என்று கூறுகிறீர்கள்.இக்கருத்துக்கள் இரண்டும் பொருந்துமாறு யாங்ஙனம்?” எனச் சிலர் இங்கு வினவக்கூடும்.
ஒருவன், வேறொருவரின் உதவி சிறிதும் இன்றி, சமையலைச் செய்ய வல்லவன்,அவனை
வேறொருவன் தன் வீட்டுச் சடங்கு நிமித்தமாய்ச் சமையல் தொழில் புரியுமாறு வேண்டிக் கொள்கின்றான். அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெற்ற அவனும் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, சமையல் செய்கின்றான்.-இவ்விடத்து, “வேறொருவரின் உதவி சிறி
தும் வேண்டாதவன் இவன் என்று கூறினீர்களே? இவன் சமையல் நிமித்தமாய் வேறொருவன் வேண்டுதலை விரும்பித்தானே,வந்து சமையல் செய்தனன்” என்று முரண்பாடு தோன்ற வினவுவாரும் உண்டோ? இல்லை யன்றோ? இங்குக் கருத்து யாதோ? எனின், சமையல் செய்பவன் சமையலைச்செய்யுங்கால், வேறொருவரின் உதவியைச் சிறிதும் விரும்பி யிருப்பின், அஃது அவன் சிறப்பிற்கு (வேறொருவரின் உதவி சிறிதும்இன்றி சமையலைச் செய்ய வல்லவனாயிருக்கைக்கு ) அழிவை விளைக்கும்.
அஃது இல்லையன்றோ?-இது போன்று,எம்பெருமானாகிய தருமம் இச்சேதனன் காரியம் செய்யும்போது, வேறொன்றின்தொடர்பை வேண்டினால், அத் தருமத்தின் சிறப்பிற்கு அவ்வேண்டுதல் அழிவை விளைக்கத்தான் செய்யும். அங்ஙனம் வேண்டாமையின், முன்னம் கூறிய அச்சிறப் பிற்கு (வேறொன்றின் உதவித்தொடர்பை வேண்டாதவனாயிருக்கைக்கு) யாதொரு குறை கூறுதற்கும் இடம் இல்லையன்றோ
இவ்வாறு, இச்சேதனன் வேண்டுதலை விரும்பி எம்பெருமான் இவன் காரியம் செய்பவன்’ என்னும் உண்மையை உணர்ந்தோம்.-இனி, இவ்வார்த்தையில்,சரணாகதியைப் பற்றிய வேறொரு உண்மையையும் நாம் காணலாகும். அவ்வேறொரு உண்மை யாதோ ?எனின், கூறுதும்.

வேண்டுவது விலக்காமையே

(2) எம்பெருமான் உடையவன்; சித்தும் அசித்தும் உடைமைப் பொருள் என்று முன்னமேயே கூறியிருந்தோம். உடைமைப்பொருள்’ ‘உடையவன்’ என்னும் உண்மைப்பொருள்-இரண்டனுள், உடைமையை நோக்கிக்காக்கும் பொறுப்பு உடையவனுக்கு என்றும் உண்டு. அவ்வுடைமைப் பொருள் அறி வுற்றிருக்கும் ஜீவனாயிருந்தால், அந்த ஜீவனுடைய விலக்காமையைக்கண்டு, உடனே வந்து இரட்சிப்பவன் எம்பெருமான். இவ்வுண்மை
“ஜகத்பதி ” என்னும் சொல்லைஉற்று உணர்ந் தால் நன்கு உணரலாகும். இச்சொல் ‘இப்
பிரபஞ்சத்திற்கு ஸ்வாமி’ என்னும் பொருளைக் காட்டி நிற்கின்றமையின். இப்பிரபஞ்சம்
உடைமைப் பொருள்’ எம்பெருமான் உடையவன்’ என்பது இங்குத் தெளிவன்றோ? இராவணனால் துன்புற்றிருக்கும் தேவதைகள் முதலானாருக்கு உள்ள விலக்காமையைக் கண்டு,உடனே எம்பெருமான் எழுந்தருளினன்’ என்னும் உண்மையை இங்குக்காணலாமல்லவா? மேற்கூறிய உண்மைகளை உணருங்கால், இச்சேதனன், எம்பெருமானாகிய தருமத்தினால் தன் நிலைக்கேற்ற நன்மையை அடையும் போது, ‘சேதனனாகிய இப்பொருள் எம்பெருமான் ஒருவனுக்கே இரட்சிக்கத் தக்கதாம்?-எம்பெருமான் கிட்டிக்காக்கும்போது, அவன் செய்யும் இரட்சணத்தை விலக்காது இருத்தலும் இவனுக்கு இன்றியமையாததாம். என்பன தேறிய பொருள்களாக நன்கு விளங்குகின்றனவல்லவா?

பிராட்டியை முன்னிடுதல்

இனி, இந்த இராமாயணத்திலேயே, ‘இச்சேதனன் எம்பெருமானைச் சரணம் பற்றுங்கால், பெரிய பிராட்டியாரை முன்னிடுதலும் இன்றியமையாததாகும்’ என்னும் ஸாரப்பொருளையும் நாம் காண்போம். இப்பொருளை இராமாயணம் பலவாறாக விரித்துக் கூறியிருக்கின்றது. இதைச் சிறிது விவரிப்போம்.-எம்பெருமானும் பெரிய பிராட்டியாரும்
இச்சேதனனை இரட்சிப்பவராம். எம்பெருமான், இச்சேதனன் துன்பம் தீர்ந்து, இன்பம் பெற்று வாழ்தற்கு முக்கிய காரணனாம். பெரிய பிராட்டியாரோ, இச்சேதனன் எம் பெருமானைச் சரணம் பற்றுங்கால், புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்பவராம்.
புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்கையாவது : இச்சேதனன் எமபெருமானைச் சரணம் பற்றுங்கால், இவன் நெடுகின காலத்தில் அறிந்தும் அறியாமலும் எண்ணிறந்த பாவங்களைச் செய்திருக்கின்றமையினாலும், இவன்,தன் முன்னிலையில் வந்து நிற்குங்கால், பேரறிவாளனாகிய தனக்கு இவனது பாவம் முற்றும் நினைவுக்கு வருவதாலும்,அந்த அந்தப் பாவத்திற்கு ஏற்ப, பயனை அளித்து நல்வழியில் நடத்திப் போருமவனாய்த் தான் இருப்பதாலும்,எம்பெருமான் சீறிச் சிவந்து இச்சேதனனைக் கண்கொண்டு பாரான். அஙஙனம் இருக் குங்கால், இப்பரமனுக்கு, அவனுக்கும் (பரம
னுக்கும் ) இவனுக்கும் (சேதனனுக்கும்) உள்ள தொடர்பை உணர்த்தி, இவன் நிலையை அறி
வித்து,இரக்கத்தையும் இவன் பிழையைப் பொறுக்கும் தன்மையையும் கிளப்பி, இவனைக்
கண்கொண்டு பார்க்கச் செய்து, அப்பரமன் இவனைத் திருவுள்ளமுவந்து அங்கீகரிக்குமாறு
பெரிய பிராட்டியார் உதவி புரிகிறார். இங்ஙனம் உதவிபுரிகையே புருஷகாரமாயிருந்து
உதவி செய்கையாம்.
சரணாகதி தருமத்தைப் பற்றிய இந்த உண்மையை, இராமாயணத்தின் முடிந்த
பொருளாய்ப் பின்வருமாறு பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்:-
அவள் புருஷகரமாக அவனைப்பற்றுவதே பலவ்யாப்தமாவது. இது தான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம். அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்ப்பண்கை அநர்த்தப் பட்டாளிறே. பெருமாளை யொழியப் பிராட்டியைப் பற்றின இராவணனும் அநர்த்தப்பட்டான். இருவரையும் பற்றினாலிறே ஸ்ரீவிபீஷணாழ்வானைப் போலே வாழ லாவது”
இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்:- முதலில்,காகத்தின் வரலாற்றைக் காண்போம். “திருச்சித்திரக் கூடத்தில்,இராமபிரான் ஸீதா பிராட்டியார் மடியில்
திருக்கண் வளருங் காலம். அக்காலத்தில்,இந்திரனுடைய புத்திரனும், கெட்ட எண்ணத்தினால் காகத் தன்மையைப் பெற்றிருப்பவனுமாகிய காகாஸுரன் ஸீதாபிராட்டியாரைக் கிட்டி,- திருமேனியில் புண்ணை உண்டாக்கினான் . அப்பிராட்டியார் துன்பம் பொறாமல், தன் மடியில் கண்வளரும் எம்பெருமானை எழுப்பினார். உணர்ந்தெழுந்து அப்பெருமானும், காகத்தின் பாவச் செயலைக் கண்கூடாகக் கண்டு, பிரமாஸ்திரத்தை அக்காகத்தின் மீது விட்டருளினான். அதுவும், அந்த அஸ்திரத்தினால் துரத்தப்பட்டு. ஓரிடத்தில் ஒன்பது தடவை சென்று இரட்சணத்தை இரந்தும், ஒருவரும் இரங்கவில்லை. அப்போது புகலற்று அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம்
வந்து விழுந்துகிடந்தது. தரையிலே தலையும் பெருமான மடியிலே கால்களுமாய்க் கிடந்தது. அக்காகத்தின் நிலையைக் கண்ட ஸீதா பிராட்டியார் அக்காகத்தை இரட்சிக்குமாறு அப்பரமனை வேண்டிக் கொண்டனர் . அப் பரமனும் அஸ்திரம் பயனற்றதாய் ஆகாமையின், அதனால் அக்காகத்தின் கண்ணை அழித்து, அதற்கு உயிர்ப் பிச்சைக் கொடுத்து, அதனை இரட்சித்தனன்” என்பதே காகத்தின் வரலாறாம்.

(ஸபித்ராச பரித்யக்த: ஸரைச்ச ஸமஹர்ஷிபி த்ரீந்லோகாந்ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம்கத : 1) என்னும் (இராமாயணம்ஸுந்தரகாண்டத்தில் உள்ள) வார்த்தை யிலும்,
சித்திர கூடத்திருப்பச் சிறு காக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலககும் திரிந்தோடி
வித்தகனே ! இராமாவோ ! நின் அபயம்என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்னை அறுத்ததும் ஓரடையாளம்”-என்னும் பெரியாழ்வார் திருவாக்கிலும் காணலாம். இவ்வரலாற்றில் அமைந்துள்ள ஸாரப் பொருளைப் பின் வருமாறு காணலாம் :

ஸீதா பிராட்டியார் திறத்தில் இராவணனும், காகா ஸுரனும் பொறுக்கொணாத்
துன்பத்தை விளைவித்தவர்களாம். ஆனாலும்இராவணனைக்காட்டிலும் காகா ஸுரனுக்குப்
பாவம் அதிகமாம். எங்ஙனம் ? என்னில், இராவணன் அப்பிராட்டியாரை எடுத்துச் சென்று, அசோகவனத்தில் சிறையில் வைத்து, தானும்,ஏகாக்ஷிமுதலான அரக்கிமாரும் பல தடவை சொல்லொணாச் சொற்களைச் சொல்லித் துன்புறுத்தியது ஒருவாறு உண்மையே.
ஆயினும் காகா ஸூரனைப் போன்று,அப்பிரட் டியார் திருமேனியில் புண்னை உண்டாக்க
வில்லை யன்றோ? ஆதலின், காகாஸுரன் பாவம் அதிகமன்றோ?-இக்காகாஸுரன், பிரமாஸ்திரத்தினால் துரத்தப் பெற்று எங்கும் புகலற்று, செய லற்றுப் பரமன் முன்னிலையில் விழுந்து கிடந்தது போன்று, இராவணனும், இராமபிரானுடன் முதலில்போர் புரிந்த போது,அவ் எம்பிரான் பாணங்களால் அடிப்பட்டு, கையில் உள்ள வில்லை விழ விட்டு, இரதத்தில் தனக்குரிய இடத்தையும் விட்டுச் செயலற்றுக் கிடந்ததாய்’ வால்மீகி முனிவன்
வரலாற்றைக் கூறியிருக்கிறான்.-இங்ஙனம் செயலற்றுக் கிடத்தல்’ என்பது,
காகம் இராவணன் இவ்விருவருக்கும் ஒத்தி ருந்தும், இராவணனிலும் காகம் மிக்க பாவம்
பெற்றிருந்தும், இராவணன் இலங்கையுடன் அழிவு பெற்றதற்கும் காகம் (கண்ணழிவு
மாத்திரம் பெற்று) உயிரழிவு பெறாததற்கும் காரணம் யாதோ? எனின் காகத்திற்கு ஸீதா
பிராட்டியார் முன்னிலையும், அதனால், அப் பிராட்டியார் இயற்கை இன்னருளுக்கு இலக்கானதும் உண்டு. ஆதலின், வாழ்வு பெற்றான். இராவணனுக்கோ, அப் பிராட்டியார் முன்னிலையும், அதனாலாம் இயற்கை இன்னருளுக்கு இலக்கா தலும் இல்லை. ஆதலின்
முடிந்தான். இவ்வுண்மை, இராவணன் வரலாற்றோடு காகத்தின் வரலாற்றையும் சேர்த்து உணருங்கால், நன்கு விளங்குகின்றதன்றோ ?-இங்கு,” இவள் ஸந்நிதியாலே காகம்
தலை பெற்றது; அதில்லாமையே இராவணன் முடிந்தான்” என்னும் பிள்ளைலோகாசார்யர்
திருவாக்கும்,இவள் ஸந்நிதியாலே அபரா தத்தைத் தீரக் கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காய் தலையறுப்புண்ணத்தேடின காகம்… தலை பெற்றுப் போய்த்து;-அப்படியிருக்கிற இவள் ஸந்நிதி இல்லாமயையாலே போக்கற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை யொத்திருக்கச் செய்தேயும், காகத்தோபாதி அபராதமுமின்றிக்கே யிருக்க, ராம சரத்துக்கிலக்காய் இராவணன் முடிந்து போனான் என்கை என்னும் மணவாளமாமுனிகள் திரு வாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
இதுகாறும் கூறிய காகாஸுரன் வரலாற்றினால், “மிக்க பாவம் பெற்றிருப்பவனும்,
பிராட்டியாரை முன்னிடும் போது, எம்பெருமா இன்னருளுக்கு இலக்காகி,
நன்மை பெற்று, வாழ்வு பெறலாம்” என்னும் உண்மைக் கருத்து தெள்ளிதின் விளங்கு
கின்றதன்றோ? மேலும், இராவணனும், சூர்ப்பணகையும், விபீஷணனும் ஒரு குடியிலே பிறந்தவர்கள். இராவணன் எம்பெருமானை அறிவிலக்கி, பிராட்டியாரை மாத்திரம் முறைதவறி விரும்பினான். சூர்ப்பணகை பிராட்டியாரைவிட்டு, எம்பெருமானை மட்டும் முறை தவறி விரும்பினாள். பிராட்டியாரை விட்டு என்பது மட்டும் இல்லை; ஏன் பிராட்டியாரை இடையூறாகக் கருதி, விழுங்கவும் முயன்றாள்.-இவ்விருவரும் நன்மையைச் சிறிதும் பெற்றரில்லை. விபீஷணனோ, இராவணன், சூர்ப்பணகை இவ்விருவருடன் பிறந்திருந்தும் இவ் விருவரைப் போன்று, முறை தவறி ஒருவரை விட்டு ஒருவரை மாத்திரம் விரும்பாமல், பிராட்டியார் எம்பெருமான் இருவரையும் முறையுடன் பற்றி, இருவர் சேர்த்திக்கும் முயற்சி மேற் கொண்டதால் இன்றும் வாழ்ந்து போருகின்றானன்றோ? திருவரங்கத்தில் எம்பெருமான் இன்றும் விபீஷணனை நோக்கிக் கிடக்கின்றானன்றோ? இவ்விடத்திலே, தென்திசை இலங்கை நோக்கி” என் னும் தொண்டரடிப்பொடியார் திருவாக்கும், இத் திருவாக்கிற்குப் பொருள் கூறுமிடத்துள்ள ‘‘தென் திசை இலங்கை நோக்கி (முன்புத்தை திக்குகளைக் கடாக்ஷித்தது அவ்வோ தேசங்களின் வெறுமை தீருகைக்காக) இது தம் குறை தீருகைக்காக ; மாதா ப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாபோலே’ என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
மேற்கூறிய இரு திருவாக்குகளிலும், விபீஷணன், இன்றும் எம்பெருமானுடைய இன்னருளுக்கு இலக்காயிருந்து வாழ்ந்து போருகிறான்’ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
இது காறும் கூறியவாற்றால், ‘இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுங்கால், பெரிய
பிராட்டியாரை முன்னிடுதல் இன்றியமையாததாம்’ என்பதை ஒருவாறு கண்டோம்.

இறைவன் திருவுள்ளத்தை பின் சென்று பற்றுதல்

இனி இச்சேதனன் எம்பெருமானை உபாயமாய்ப் பற்றும்போது, இவன் பற்றும்
அப்பற்றுதல் அவ எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்றிருக்கவேண்டும்” என்பதும்
சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையாகும்.-இவ்வுண்மையைப் பரதன் வரலாற்றில் நாம்.
அறியலாகும்.
“கூனியின் கூற்றினால் கலங்கிய கைகேயி,பரதன் முடியையும், இராமபிரான் வன
வாஸத்தையும் சக்ரவர்த்தியிடம் வேண்ட,அச்சக்ரவர்த்தியும் ஸத்தியத்திற்குக் கட்டுப்
பட்டு அளிக்க, இராமபிரானும் வனம் செல்ல,அதனால் சக்ரவர்த்தியும் துஞ்ச, கேகய தேசத்
தினின்றும் அயோத்தி வந்த பரதன் இவ்வரலாறுகளை அறிந்து, சக்ரவர்த்திக்குச் செய்ய
வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து.சித்திரகூடம் சென்று, இராமபிரான் திருவடித்
தாமரைகளை உபாயமாகப்பற்றி,இப்போதே திருவயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக்
கொள்ளுதல் வேண்டும்’ என்று அவ் இராமனை ஆர்த்தியுடன் வேண்டின் இடத்தும், அப்
பிரான் அதற்கு இசையாது இருக்க, அத்தரு ணம் அவன் திருவடி நிலைகளை அருள, அவற்றைப் பெறாப்பேறாகப் பெற்று, திரும்பி நந்திக்ராமம் வந்து, அத்திருவடி நிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அவற்றுக்குப் பரதந்திரனாய் பதினான்கு ஆண்டு பரமபுருஷன் வரவை எதிர்பார்த்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தனன் பரதன்” என்பதே அப்பரதன் வரலாறாம்.
இவ்வரலாற்றைக் காணுங்கால், “இராமபிரான் திருஅயோத்திக்கு எழுந்தருளி முடி
சூடிக்கொள்ளுதல்” பயன் என்பதும், ” அப்பயனுக்கு அவன் திருவடிகளே உபாயம்”
என்பதும் பரதன் எண்ணத்தில் நன்கு விளங்குகின்றன அல்லவா ?
இங்கு வால்மீகி முனிவன்,  (அபிஷஞ்சஸ்வ சாத்) என்றும், (ஏவமுக்த்வா மஹா பாஹு : ஸபாஷ்ப: கைகயீஸுத : Iராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதிவத் புந : II) என்று கூறியிருப்பது காணத்தக்கது.-மேற்கூறிய வார்த்தைகளுள், “அத்யைவ அபிஷஞ்சஸ்வ” என்னும் பகுதியில், “பரதன் விரும்பும் காலத்திலேயே முடி சூடிக்கொள்ளுதல் அப்பரதன் விரும்பிய பயன் ‘ என்பதும்,”ஸபாஷ்ப:” என்பதில், “‘பரதன் ஆர்த்தியுடையவன்’ என்பதும், “ராமஸ்யபாதெள சிரஸா ஜக்ரா ” என்னும் பகுதியில்,”பரதன் இராமபிரானுடைய திருவடிகளை உபாயமாய்ப் பற்றியவன்” என்பதும், “விதிவத் ‘; என்பதில் “அப்பரதன் அங்ஙனம் பற்றும்போது, முறையுடன் பற்றியவன்” என்பதும் நன்கு விளங்குகின்றனவல்லவா ?
இக்கருத்துக்களை மனத் திருத்திக் காணுமவர்க்கு, “பரதன் ஆர்த்தியுடன் முறைப்படிசரணம் பற்றியவன்” என்பது தெளிவு.-(ஆர்த்தியுடன் சரணம் பற்றியவனுக்கு, அப்போதே பயனுண்டாம்’ எனச் சாஸ்திரம் கூறுகின்றது. அவ்வாறு அப்பரதன் பயன் பெற்றனனா? என்னில், பெறவில்லை என்றே வால்மீகி முனிவன் கூறியிருக்கின்றான்.
“(ஸகாமம் அநவாப்யைவ ராம பாதாவுபஸ்ப்ருசன் நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகம
நகாங்யா) என்னும் வால்மீகி முனிவனின் வார்த்தை இங்குக்காணத்தக்கது.
இவ்வார்த்தையில் அமைந்துள்ள “ஸகாமம் அநவாப்யை ” என்னும் பகுதியில், பரதன் இராமபிரானிடம் தான் விரும்பிய பேற்றைப் பெறவில்லை என்பது தெளிவு.
இங்கு, பரதன் முறைப்படி பற்றியிருந்தும், பயனைப் பெறாதற்குக் காரணம் யாதோ? எனின், இதற்கு பரிஹாரமாய் முதலில் சிலர் கூறும் கருத்துக்களை கூறுவோம் :
(1) சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண் எம்பெருமான் எழுந்தருளிய போது,
தேவதைகள் முதலானார், அப்பரம புருஷன் மானிட வடிவத்துடன் திருவவதாரம் செய்து
இராவணனை அழிக்க வேண்டும் என விரும்பி,அவனைச் சரணம் பற்றியிருப்பது சரித்திர
உண்மை. அந்தச் சரணாகதி முதலில் தேவதைகளினால் செய்யப்பெற்றுள்ளது. அத்
தேவதைகள் கோரின பயனை அளிக்கத் திருவுள்ளங்கொண்டு, வனவாஸம் என்னும் வியாஜத்தினால் எழுந்தருளியிருக்கும் தருணத்தில், பரதன் ஆர்த்தியுடன் சரணம் பற்றியிருக்கும் வரலாறும் நாம் அறிந்ததேயாம். இதனால்,’இப்பரதன் செய்தசரணாகதி பின்பு செய்யப் பெற்றுள்ளது’ என்பது தெளிவு. முன்பு செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முதலில் பயனை அருள் செய்து, பின்பு செய்த பரத சரணாகதிக்குப் பின்பு பயனை அருள புரிதல் முறை எனத் திருவுள்ளம் கொண்டு, பரதன் விருப்பத்திற்கு ஏற்ப, அப்போதே இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடிக்கொள்ளவில்லை. இது முதல் பரிஹாரம்.
(2) இராமபிரான் திருவுள்ளம் புண்படுமாறு பரதனுக்குச் சில பாவங்கள் இருக்கக்
கூடும் பயனின்மையைக் கண்கூடாகக் காண்கின்றமையின், அங்ஙனம் சிலபாவங்கள்
இருக்கக்கூடும் என்று ஊஹிக்கலாமல்லவா ? இவ்வாறு கூறுவது இரண்டாம் பரிஹாரம்.
(3) இச்சரணாகதிக்குச் சில அங்கங்கள்(அங்கங்கள் = உதவி செய்யுமவை) உண்டு.பெரியோரை முன்னிடுதல், பெரியபிராட்டியாரை முன்னிடுதல் போல்வன அவ்வங்கங்களாகும். பரதன் பயன் பெறத்தற்குக்காரணம், அவ்வங்கங்களுள், ஏதோ ஓன்றிரண்டு குறைந்திருக்கலாம். இது மூன்றாம் பரிஹாரம்.
( ) இராமபிரான், தந்தை, தாய் இவரைப் பூசித்தல் இன்றியமை யாததாம்’ என்னும் முறையைத் தன் செயலில் நடத்திக்காட்டி நிலைநிறுத்த வந்தவன். ‘தன்தாய்’ என்றும், ‘ வேற்றுத் தாய் ‘ என்றும் வேற்றுமை சிறிது மில்லாதவன். கைகேயி வேற்றுத் தாயாயிருப்பினும், அத்தாய் சொல்லைப்பின்சென்று முடியையும் துறந்த பரமபுருஷனன்றோ? அவன். அப்பெருமான் அவ்வாறு பூசித்தகைகேயியைப் பரதன் பலவகையால் வெறுத்துப்பேசியது அவன் திருவுள்ளத்தை மிகவும் புண்படுத்தியது. ஆதலின், அவன் பரதன் விருப்பத்துக்கேற்ப இரங்கினான் இல்லை
(மாதரம் ரக்ஷ கைகேயீம்) என்னும் இராமபிரான் வார்த்தையும் (பூஜிதா மாமி கா மாதா) என்னும் பரதன் வார்த்தையும் இங்குக் காணத்தக்கன. சித்திர கூடத்தில் திருவடி நிலைகளைக் கொடுத்து அருளுங்கால், இராமபிரான் அருளிச் செய்தது, முதல்
வார்த்துை.பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து மீண்டு நந்தி ராமத்தில் எழுந்தருளியிருக்கும் இராமபிரான் முன்னிலையில் பரதன்சொன்ன வார்த்தை( பூஜிதா மாமி காமாதா” என்பது .) இது நான்காம் பரிஹாரம்.
இவ்வாறு சிலர் கருத்துக்கிணங்க நான்கு பரிஹாரங்களைக் கண்டோம். இப்பரிஹாரங்கள் பொருத்தமுடையன அல்ல என்பதை முறையே காட்டுவோம், இனி
(1) தேவதைகள் சரணாகதியைத் தெரிவிக்கும் இடத்தில் “இராவணன் அழிவை விரும்பிச் சரணம் பற்றியிருக்கிறதாகக் கூறப் பெற்றிருக்கிறதன்றி, காலம் குறிக்கப் பெற்றிலது என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.-அவ்விடத்துள்ள தேவதைகள் வார்த்தை
 (விஷ்ணோ ஸரமே ஜஹி ராவணம்) என்பதாம். பரதன் சரணம் பற்றுங்கால், “அத்யைவ ” (இப்போதே) என்று காலம் குறிக்கப் பெற்றிருக்கின்றது வெளிப்படை. இதனால், என்ன தேறிற்று என்னில் கூறுவோம்.
தேவர்களும், பரதனும் தம் தமக்கு உரிய இராவணன் அழிவு. ‘திரு அயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக் கொள்ளுதல்’ என்னும் பயன்களை ஒரே காலத்தில் பெற விரும்பியிருப்பின்
பயனைப் பற்றிய முரண்பாடு ஏற்படுகின்றமையின்,அம் முரண்பாடு தீருமாறு பரம புருஷனும், முந்திச் செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முந்தியும், பிந்திச் செய்த பரத சரணாகதிக்குப் பிந்தியும் பயனை அளித்தல் நன்றாம்’ என்று திருவுள்ளங்கொண்டு, பரதனுக்கு அக்காலத்திலேயே உதவ இசையவில்லை என்னலாம். தேவர்களும் பரதனும் தம் தமக்குஉரிய பயனை ஒரேகாலத்தில் பெற விரும்பி, பரமனை வேண்டிக் கொண்டதாகக் கூறப்பெற்றிலது.-பரதனாவது, காலத்தைக் குறிக்காது தனக்குரிய பயனைச் சரணம் பற்றி வேண்டிக் கொண்டிருந்தானென்றிருப்பின், பரமன் பரதனுக்கு அக்காலத்திலே அருளாவிடினும், இந்த ஆராய்ச்சிக்கே இடம் ஏற்பட்டிராது.-அப்பரத னே, ‘இப்போதே முடிசூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று காலத்தைக் குறித்தே சரணம் பற்றியிருக்கிறான் அன்றோ? இதனால் பரதன் விருப்பத்திற்கு ஏற்ப அப்போதே, முந்தி முடி சூடி, அப்பரதன்
தாபத்தைந்போக்கி, பிந்தித் தேவதைகள் விரும்பியவாறு, இராவணனை அழிக்க, ஏதோ
ஒன்றை வியாஜமாய்க் கொண்டு, இராம பிரான் வனததிற்கு எழுந்தருளலாமன்றோ ?
ஆதலின், முதல் பரிஹாரம் ஏற்கத் தகுந்த தன்று.(வியாஜம் = போலிக் காரணம்.)
(2) பரதன் திருவவதாரன் உண்மையை உணரின், இராமபிரான் எங் னம் பாவமின்றி
இருப்பவனோ, அங்ஙனமே அப்பரதனும், பாவமின்றி இருத்தலின், அப்பரதனுக்கு இராம
பிரான் திருவுள்ளம் புண்படுமாறு சில பாவங்கள் உண்டு’ கூறுதற்கும் இடம் இன்று.
இதனால், இரண்டாம் பரிஹாரமும் பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவு.
(3) “ராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதி வத்பு :” என்பதில் உள்ள “விதி வத்”
என்னும் சொல்லை நோககின், “எம்பெருமானை உபாயமாய்ப் பற்றுங்கால்,முறை வழுவாது
பற்றியவன் பரதன்” என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? ஆதலின், மூன்றாம்
பரிஹாரத்திற்கும் இடம் இன்று.
(4) நான்காம் பரிஹாரம் இராமாயணத்தில் ஒருவாறு கூறபபெற்றுள்ளது என்பது உண்மையே. ஆயினும் அதைப் பரிஹாரமாய் எடுத்துக் கொள்வதற்கு இல்லை. இதைச்
சிறிது விரித்துக் கூறுவோம்.-‘இராமபிரான் பரமாத்மா, பரதன் ஜீவன்’ என்னும கொளகையை உள்ளத்தில் கொண்டு, பின்வரும உணமை உணரத்தககது.
எம்பெருமான எலலாச்சேதனருக்கும எனறும் தஞ்சமாகிய தந்தையும் தாயுமானவன். இங்ஙனம் தந்தையாயும தாயாயும அவன் இருப்பது கருமத்தினாலன்று. பரமனுக்கும் சேதனனுககும் உளள ஒன்பது வித்த தொடர்பும்என்றும உள்ள தனறோ? இவவாறான
தொடர்பு இலக்குமணனுக்கும் இராமபிரானுக்கும் எஙஙனம் என்றும் உள்ளதோ, அங்ஙனமே பரதனுக்கும் இராமபிரானுக்கும் என்றும் உள்ளதாம். இவவாறான தொடர்பு பரதனுக்கும் கைகேயிக்கும உண்டோ ? இல்லையன்றோ?
இலக்கு மணன், (முடி சூடவைத்த முஹுர்த்தத்திலே, ஜடைசூடி இராமபிரா னைக கானகம்புகச்செயத கைகேயி போன்று, விபரீதச் செயல் உண்மையில் இன்றியிருநதும் )
தசரதனையும ஸுமித்ரா தேவியையும் தஞ்சமாகி தந்தையாயும் தாயாயும் கருதாது,
இராமபிரானையே அங்ஙனம் தந்தையாயும், தாயாயும், மற்றும் எல்லா உறவினராயும் கருதி, அவ் இராமபிரான் பின்னே, அவன் மனம் மகிழுமாறு அடிமை செய்யக் சென்றனனன்றோ? இல்வாறு இலக்குமணன் சென்றதற்குக் காரணம் அவ் இலக்குமணனுக்குள்ள இராம பக்தியன்றோ?-அவ் இலக்குமணன்போன்று, பரதனும்
மிக்க இராமபக்தி பெற்றிருப்பவனன்றோ ? மேற்கூறியவாறு விபரீதச்செயல் உள்ள
கைகேயியினிடம் அப்பரதனுக்கு மனம்பொருந்துமோ ? அவன் தன் தாயை வெறுத்தது சாஸ்திர முறையைக் காணுங்கால்,குற்றமாமோ ?-பரமனிடம் வெறுப்புற்ற தாயை அறவே விட்டிடுவது, சாஸ்திரத்தின் உண்மைக்கருத்து அன்றோ?-இவ்வுண்மைக் கருத்தைக் காணுங்கால்,’நான்காம பரிஹாரமும் பரிஹாரமாகாது’ என்பது தெளிவாம்.
ஆனால், இராமபிரான் “மாதரம் ரக்ஷகைகேயீம் மா ரோஷம் குரு தாம ப்ரதி’
என்று கூறியிருக்கின்றனனே; பரதனும், பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து, திரும்பி
நநதிகராமததில் எழு தருளியிருக்கும் இராம பிரானைக குறிதது, பூஜிதா மாமிகாமாதா “
என்று பகவதபிபராயத்தைப் பின்பற்றி நடந்த தன செயலைக் கூறியிருக்கின்றனனே
என்று சிலர்மறுபடியும மறுததுக கூறலாம்-இப்பரிஹாரத்தை முக்கியமாய் நம்
ஆசார்யர்கள் திருவுளளம் பற்றவில்லை சேதனனுடைய உண்மை நிலையை உணருஙகால்,
கைகேயியை பரதன் வெறுத்தது மேற்கூறியவாறு குற்றமாமோ?
மேலும், இராமாயணத்தில் இப்பகுதியி லேயே இரண்டொரு உண்மைகளையும், கிஷ்கிந்தா காண்டத்தில் ஓர் உண்மையையும் இங்கு எடுத்துக்காட்டுவோம்.
(1) தந்தை ஆசாரியன் இவ்விருவருள், தந்தை சரீரத்தை உண்டுபண்ணி அச்சரீரததை வளர்ப்பவனாம். ஆசாரியனோ,ஞானத்தை உண்டுபண்ணி ஆத்மாவை வளர்ப்பவனாம். இருவரும் உதவியைச் செய்பவரேயாயினும், ஞானத்தை உதவும் ஆசாரியனே மிக்க சிறப்புப் பெற்றவனாம். ” (ஸஹி வித்யாத : தம் ஐநயதி தத் ச்ரேஷ்டம் ஜன்ம கரியாந் ப்ரஹ்மத பிதா ) என்னும் வசனம் காணத்தக்கது,-இங்கு. ஆதலின், ஆசாரியன் ஆணையைப் பின் சென்று நடத்தல் மிகவும் முக்கியமாகும். இவ்வுண்மையை உணர்த்தி, வஸிஷ்டர்,
‘இராமா! உனக்கும் உன் தந்தையாருக்கும் நான் ஆசாரியன் ; ஆதலின், என் சொற்படி
நீ வனவாஸத்தை விட்டிட்டு, இராச்சியத்தை ஏற்று முடி சூடுதல் நன்றாம்” என்று கூறியிருக்கிறார், இராமபிரானை நோக்கி .-மேலும், ஸ்வதந்திரனான பரமனுக்கு
ஆசரித பாதந்திரியமும் உண்டு. அஃது அவனுக்குச்சிறந்த செல்வமாம். ஆச்ரித பாரதந்
திரியமாவது – பரமனாகிய தான், தன்னை அன்புடன் ஆதரித்தோருக்கு, அவர் ஏவிற்றுச்
செய்யும் கையாளாயிருத்தலாம். கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்க்குத் தூதனாயும்
தேரோட்டியாயும் இருந்து இழிதொழில் செய்தனனன்றே ?
வஸிஷ்டர் மேற்கூறிய உண்மையையும்உணர்த்தி, இராமா ! நீ பரமனன்றோ? பரதன்
பக்தி பெற்றிருப்பாரில் சீரியனன்றோ? ஆதலின், அப்பரதன் திறத்தில் பரதந்திரனாய்,
அவன் ஏவிற்றுச் செய்தல் உனககுச் சிறந்தசெல்வமன்றோ? இப்போது, பரதன் வேண்டு
கின்றவாறு, நீ முடியை ஏற்றுக்கொள்ளாதிருப்பின், உனக்குரிய சீரிய செல்வத்தை இழந்தே விடுவாய்’ என்றும் கூறியிருககிறார்.-இவ்வாறு வஸிஷ்டர் இராமபிரானை நோக்கிக் கூறிய உண்மைக் கருத்துக்களைப் பின்வரும் அவ்வஸிஷ்டர் வார்த்தைகளில் நாம்  காணலாம் 🙁ப்ரஞாம் ததாது சாசார்ய: தஸ்மாத் ஸகுரு ருச்யதே II ஸோ S ஹம் தே பிதுராசார்ய: தவ சைவ பரம்தப மம த்வம் வசனம் குர்வந்நாதிவர்த்தேஸ் ஸதாம்கதிம்||
பரதஸ்ய வச : பர்வந்யாசமாநஸ்ய ராகவ ஆத்மாநம் நாதிவர்த்தேஸ் த்வம் ஸத்ய தர்ம
பராக்ரம |1)-இவ்வாறு கூறிய வஸிஷ்டரை நோக்கிஇராமபிரான் அருளிச் செய்த விடையாதோ?எனின், கூறுவோம்.
உலகத்தில், சுவரை வைத்துச் சித்திரம் எழுதுதல்” என்று ஒரு முறை உண்டு. இம்
முறையைத் திருவுள்ளத்தில் கொண்டு, இராமபிரான் பின் வருமாறு விடையை அருளிச்
செய்திருக்கிறான் :-சரீரம் அற்றிருப்பானுக்கு ஞானம் உணடாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவிபுரிதற்கும் இடம் இன்று. சரீரம், பெற்றிருப்பானுக்கே ஞானம் உண்டாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவி புரிதற்கும் இடம் உண்டு. இதனால், சரீரம், சித்திரம் எழுதுதற்குச் சுவர் போன்று,ஞானம் உண்டாதற்கு மிகவும் முக்கியம் எனத்தெரிகின்றதன்றோ?-இவ்வாறு மிகவும் முக்கியமாயுள்ள சரீரத்தை உண்டாக்கி, வளர்ப்பதற்கு, தந்தையாரும், தாயாரும் நோன்புநோற்று,பத்து மாஸம் சுமந்து, பெற்று,பெற்றபினபும், இவனறியாது இருக்கும் சைசவ நிலையில் இவன்
பொருட்டு,படாதனபட்டு இவ்வாறு உதவி புரிகின்றவராதலின், ஆசாரியனிலும் மிக
மேம்பட்டவராவர். ஆசாரியனிலும், தந்தைக்கு ஏற்றமுண்டு; அவ்வாசிரியன் வசனத்திலும், தந்தையார் வசனத்திற்கும் ஏற்றமுண்டு. உண்மை இவ்வாறு இருத்தலின்,
தந்தையார் வசனமே ஆதரிக்கத்தக்கதாம்.-இதுவே, இராமபிரான் விடையாகும்.’ (ஸ ஹிராஜா ஜநயிதா பிதா தசரதோ மம ! ஆஜ்ஞாதம் யந்மயா தஸ்ய ந தந்மித்யா பவிஷ்யதி) என்னும் இராமபிரான்வார்த்தை அனுஸந்திக்கத் தக்கது.
இதைச் சிறிது ஆராய்வோம் : ‘ராமா! ஆச்ரித பாரதந்திரியமாகிய உன் சீரிய செல்வத்தை நீ இழந்துவிடாது பரதன் விருப்பத்தை நிறைவேற்றுவாய் ” என்று வஸிஷ்டர் கூறியதற்கு இராமபிரான் ஒன்றும் விடையறுத்ததாய் இங்குத் தெரியவில்லை.
இராமபிரான் இயம்பியவாறு தாய்தந்தைகளுக்குச் சிறப்பு உண்டு” என்பது ஒருவாறு உண்மையேயாகும். ஆனாலும், “ஆசாரியனிலும் தாய் தந்தைகளுக்கு ஏற்றம்
உண்டு” என்று கொள்ளில், அவர்களிலும் ஆசாரியனுக்குச் சிறப்புக்கூறும் பல சாஸ்திரங்
களோடு முரண்பாடுஉண்டாமன்றே?-மேலும், தாயையும் தந்தையையும் விடச்
சொன்ன சாஸ்திரம் போன்று, ஆசாரியனையும் விடச் சொன்ன சாஸ்திரமும் உண்டோ?)
இல்லையன்றோ? எழுத்தறிவித்தவன் போன்றாரைச் சாஸ்திரம் விடச் சொன்னது உண்மை.
திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசம்செய்தவன் எம்பெருமானிலும் மி க மேம்பட்டவன்”
என்பது சாஸ்திர உண்மைக் கருத்தனறோ?-வஸிஷ்டர், எம்பெருமான் இராமனுக்குத் திரு
அஷ்டாக்ஷரத்தை உபதேசம் செய்த ஆசாரியரன்றோ? இவ்வுலகத்தில், தன் உபதேச மொழிகளினாலும், செயல்களினாலும் அந்த அந்த முறையை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளினவனும்,அங்ஙனமே நிலை நிறுத்தினவனுமான இராமபிரானும், “ஆசாரியன் வசனம் ஆதரிக்கத் தக்கதன்று” ”தந்தையாரின் வசனமே ஆதரிக்கத் தக்கது ‘ என்று அருளிச் செய்வானாயின்,அவ் எம்பெருமானை யார் மறுத்துக்கூற முடியும். ஸ்வதந்திரனை மறுத்துக்கூற இயலுமோ? அவன் திருவுள்ளம் அப்போதே திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடுதற்கு இடம் தரவில்லை என்பதைத் தவிர, வேறு நோக்கு அவன் வார்த்தைக்கு உண்டோ? இல்லையன்றோ?
இக்கருத்து, இப்பகுதியிலேயே உள்ள பரதனின் வேறொரு வரலாற்றைக் காணுங்கால், உறுதிப்படுகின் றமையின், அவ்வரலாற்றையும் எடுத்துரைப்போம் இங்கு :பரதன் தன் வேண்டுகோளுக்கு இராமபிரான் சிறிதும் இரங்கக் காணாமையின்,
“அந்த இராமபிரான் ஆசிரமத்தின் வாசலில், (அவன் திரு அயோத்திக்கு முடிசூட எழுந்தரு
ளும் வரையில்) ஊணின்றி, தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின்மேல் கிடப்போம்” என்று
எண்ணி, ஸுமந்திரனைத் ‘தர்ப்பங்களைக் கொண்டு வா” என்று ஏவினன். இதைக்
கேட்ட ஸுமநதிரன்,பரதன் கூற்று இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராததை
ஒருவாறு உணர்ந்து, அப்பரதன் ஏவினவாறு செய்யாது இருநதனன். அத்தருணம், பர
தனே, தான் எண்ணியவாறு தர்ப்பங்களைப் பரப்பி, அவற்றின்மேல் கிடக்க முயன்றனன்.
இதைக் கண்கூடாகக் கண்ட இராம பிரான், பரதனை நோக்கி அருளிச் செய்த வார்த்தை பின் வருமாறு காணத்தக்கது :
”அப்பா! நான் உடையவன் ; நீ என்உடைமைப் பொருள். இங்ஙனம் உடைமை யாயிருக்கின்ற உன்னை, உடையோனாகிய யான், என் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ள எண்ணினேன். இவ்வாறு விரும்பி உபயோகம் கொள்ளுதல், எனக்குச் செய்யத் தகாத செயலாய் உன் மனத்தில்தோன்றியது போலும் . அங்ஙனம்தோன்றியது மாத்திரம் இன்றி, உடைமைப் பொருளாய் உள்ள நீ, உன் நிலைக்கு உரியதும், உடையோனான என்னைஅடக்கி நல் வழியில் நடக்கச் செய்வதுமாக நீ கருதிய இச்செயலை (இந்த ஆசிரமத் தின் வாசலில் தர்ப்பங்களைப் பரப்பிச் கிடத்தல் என்னும் செயலை ச் செய்து,இதனால், என்பால் உள்ளதும், என் நிலைக்கு ஏலாததாய் நீ எண்ணியிருப்பதுமான செய்யத் தகாத
செயலை (உன்னைஎன் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதல் என்னும் செயலைத் தவிர்க்கப் பார்க்கிறாய் போலும். என்செயல் எனக்கு ஏற்றது’ என்பதை யான் இயம்புதலும் வேண்டுமோ? உன் செயல்உனக்கு ஏற்றதாமோ? “ஏற்றதன்று” என்பதையும் கூறுவேன்.
ப்ராஹ்மணன் ஒருவன் தன் பொருளை”இன்ன தருணம் தரவேண்டும்” என்று தருணத்தைக் குறித்து, கடனாக ஒருவனுக்குக்கொடுக்கின்றான். அங்ஙனம் கடன் வாங்கியவன், கடன்காரனான ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளைக் குறிப்பிட்ட
காலத்துக் கொடுக்காது தவறி இருப்பின், அக்கடன் காரன் வாங்கியவன் வீட்டுவாசலில்,
நீ இப்போது செய்ய விரும்பியது போன்று, தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல் நன்றாம்.
இது ப்ராஹ்மண தருமம். த்திரியனான உனக்குரியதன்று. நீ வேறொரு வருணத்தின்
முறையைப் பின்பற்றியவனாதலின், உனக்குப் பாவம் உண்டாம். அப்பாவம் போமாறு,
“இனி, இவ்வாறான பாவச் செயலை நான் செய்வதில்லை” என்று சபதம் பண்ணி, தண்ணீரைத்தொட்டு, நீ என்னைத்தொடு.ஈதேஅப்பாவச் செயலுக்கு ஏற்ற பரிஹாரச் செயலாம்.(இக்கருத்துக்களைப் பின் குறிக்கப்பெறும் வார்த்தைகளில் காண்க 🙂
(சேஷ்யேபுரஸ்தாத் சாலாயா யாவந்ந ப்ரதியாஸ்யதி) என்பது பரதன் வார்த்தையாம்.
(கிம் மாம் பரத குர்வாணம் தாத ரத்யுப வே யஸ் | ப்ராஹ்மணோஹ்யேக பார்ச்வேந் நராந் ரோத்தும் இஹார் தி 1நதுமூர்த்தாபிஷிக்தா நாம் விதி: ப்ரத்யுப வேச நே I உத்திஷ்ட த்வம் மஹாபாஹோ ! மாம்சஸ்ப்ருச ததோதகம்)(இவ்வாறே பரதனும் பரிஹாரச் செயலைச்
செய்ததாய்ச் சரித்திரம்]-இங்கு உண்மை பின்வருமாறு உணரத் தக்கதாம். இராமபிரான் சக்ரவர்த்தித் திருமகனாக இருக்கின்றமையின், க்ஷத்தி ரியனே ஆவான்.
மேலும், இப்பரம புருஷனுடைய திருவடிநிலைகள் திரு அபிஷேகம் செய்யப் பெற்றிருக்
கின்றமையின், ” இப்பரம புருஷன் மூர்த்தாபிஷிக்த சத்திரியன் ” என்று கூறுதற்குக் தடை
ஒன்றும் இராது அன்றோ?அன்றியும், இந்த இராமபிரான், வானர வெள்ளங்களுடன் கடற்கரை சேர்ந்து, கொந் தளிக்கும் அக்கடலைக் கண்டிருக்கும் காலம். அக்காலத்து, அவ்வாறான கடலைக் கடந்து செல்லத் தக்க உபாயம் யாதோ? என ஆராய்ந்து காணுங்கால், அப்பரம புருஷன்”இக்கடலைக் கடந்து அக்கரை செல்லுதற்கு, கடலரசனை நோக்கி அவன் அருள் புரியுமாறு இக்கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின் மேலே கிடத்தல்,’ அணைகட்டுதல், இக்கடலைத் தண்ணீர் சிறிதும் இன்றி வற்றச் செய்தல், எனப் பல உபாயங்கள் உண்டு. அவற்றுள், கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தலே சிறந்த உபாயமாம்” என்று அருளிச் செய்திருக்கின் றனன்.
(தபஸா ஸேதுபந்தேந ஸாகரோச் சோஷணேந வா ஸர்வதா ஸுஸமர்த்தோஸ்மி ஸாகரஸ்
யாஸ்ய லங்கநே) என்னும் அவ் இராமபிரான் வார்த்தை இங்குக்காணத் தக்கது.
இவ்விடத்து, ‘தபஸா’ என்னும் சொல் நோக்கத் தக்கது. இன்னமும் தர்மாத்மா’ என்று கொண்டாடப் பெறும் விபீஷணனும்,-” இராமபிரான் இவ்வாறு கடலரசனை நோக் கிக்கிடத்தலே நன்றாம்” என்று கூறியிருக்கின்றனன்.-இராமபிரானும், கடலரசனைக் குறித்து, தர்ப்பசயனத்திலே கிடந்தனன் என்பது சரித்திர உண்மை. அபிஷேகமில்லாத பரதனை நோக்கி, ” இது ப்ராஹ்மண தருமம் ; அபிஷே கம் செய்யப்பட்டுள்ள க்ஷத்திரியன் இவ்வாறு செய்தல் தீதாம்” என்று அருளிச் செய்த எம்பெருமான்,மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து கொண்டக்ஷத்திரியனாகிய தான் இவ் வாறு செய்திருத்தல் முறையாமோ? இன்னமும், பரதன், இவ்விராமபிரானுக்குப் பின் பிறந்த தம்பியாதலின், அபிஷேகத்திற்குத் தகுதியற்றவனாம். கேகயதேசத்தினின்றும் திரு அயோத்திக்கு வந்து,
தன் தாயின் வீட்டிலேதன் தந்தையார் சக்ரவர்த்தி உயிர் துறந்ததைக் கேட்டு, பூமியில்
விழுந்து புரண்டு அழும் போது, தன் தாய் கைகேயி ‘ராஐந்” என்று அழைக்க,அவ்வாறு அழைத்ததையே மிகவும் பொறாது இருந்தவனன்றோ?
மேலும், குலகுருவும், தன் குருவான இராம பிரானுக்கும் குருவுமான வஸிஷ்டர் “இவ்
விராச்சியத்தை ஏற்று முடி சூடிக்கொள்’ என்று கூறுங்கால், அவரையும் மிகவும் பூசிக் கத் தக்கவர் என்று பாராது பலவாறாக வெறுத்துப் பேசி, யானும் இராச்சியமும்
இராமபிரானுடைய உடைமைப் பொருளாய் உண்மையில் இருக்க, யான் இவ் இராய்ச்சி
யத்தை ஏற்றுக் கொள்வது எவ்வாறு? என்று பேரோலக்கத்தில் கதறிக் கூறிய மஹான்
அன்றோ?-இன்னும், மேற்கூறியவாறு கூறியது மாத்திரமேயன்றி, ஆர்த்தியே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள அப்பரதன், தாய்மார், மந்திரிமார், வ ஷ்டர், ஜாபாலி முதலிய பெரியோர், யானைகள், குதிரைகள், ஏன் அயோத்தியிலுள்ளார் அனைவரையும் ஒன்று
சேர்த்து, அழைத்துக் கொண்டும், மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி திசை நோக்கித் தொழுது கொண்டும், சித்திரகூடம் சென்றுசேர்ந்து,இராமன் திருவடித் தாமரைகளிலே
வேரற்ற மரம் போன்று விழுந்து கிடந்து,தன் தலையாலே இரந்து, வேண்டிக் கொண்ட
வனன்றோ?-இப்பரதன் உண்மை நிலை இதுவாயிருக்க. இவனுக்குப் பாவந்தான் உண்டோ? இவன் க்ஷத்திரியனானாலும்,மூர்த்தாபிஷிக் க்ஷத்திரியன் என்று கூறுதற்கு இடம் தான் உண்டோ? பாவத்திற்கே இடமில்லாத போது, பரம புருஷன் பரிஹாரத்தைச் செய்யக் கட்டளை யிட்டதுதான் பொருந்துமோ?-ஆனால், பரதன் இராமபிரான் கட்டளையிட்டவாறு பரிஹாரத்தைச் செய்திருக்கின்றனனே? என்று சிலர் வினாவக் கூடும். இராமபிரான் வனம் எழுந்தருளியதற்குத் தன் பாவமே காரணம்” என்று கூறினவனும், உண்மை யில் பாவம் சிறிதுமின்றி இருக்குமவனான பரதன், தன் நிலைக்கு ஏற்ப பரிஹாரத்தைச் செய்தனனேயன்றி, பாவம் இருந்து பரிஹாரம் செய்தான் என்பது உண்மையாமோ
இதுவே மேற்கூறிய வினாவிற்கு விடையாம்.-தன் நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளும்
பரதன் ஸ்வாமியான இராமபிரான் முன், அவ்விராமன் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராத,”தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல்” என்னும் செயலைச் செய்ய முயன்றது தான் முறையாமோ? என்று சிலர்க்கு இங்கு ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்குப் பரிஹாரத்
தைக் கூறுவோம் :-அப்பரதன், எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்று நடக்கும் தன் நிலைக்குச் சேராத செயலை ( தர்ப்பங்களைப் பரப்பி அவற்றில் கிடத்தலைச் செய்ய முயன்றதும் இராமன்பாலுள்ள பக்திப் பெருமையினா லல்லது, வேறு காரணத்தினால் ஏற்பட்ட தாமோ? ஆகாதன்றோ?-நம்மாழ்வார், திருமங்கை மன்னன் போல்வார், எம்பெருமானை அடையப்பெறாத போது, தரித்திருக்க மாட்டாமையின்,
‘அப்பரம புருஷனை முறை தவறியாவது பெறவேணும்’ என்று எண்ணி, மடலெடுத்தல்,தூது விடுதல் முதலிய செயல்களைத் தம் நிலைக்குச் சேராதிருந்தும், செய்யக் கருதிச்
செய்திருக்கிறார்கள். ”இவ்வாறு இவர்கள் கருதிச் செய்தது எங்ஙனம் பக்திப் பெருமை
யினாலேயோ, அங்ஙனமே பரதன் செயலும் பக்திப் பெருமையினாலேயே” என்பதைநாம்
அறியலாகும்.-இதுகாறும் கூறியவாற்றால்,முடிந்த
பொருள் யாதோ? எனின், இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பரதன் செயல் பாங்கா
யில்லை” என்பதே தேறிய முடிந்தபொருளாம்.-ஆனால், மறுபடியும் சிலர், “மாதரம்ரக்ஷ
கைகேயீம்” ”ஆ ஞாதம் யந்மயாதஸ்ய”உத்திஷ்டத்வம்” என்னும் முன்னம் கூறிய
வாக்கியங்களில், இராமபிரான், ‘பரதா!கைகேயியை வெறுப்பது கூடாது’ என்றும்,
‘ஆசாரியனிலும் தந்தையாருக்கு ஏற்றம் உண்டு: ஆதலின் அவர் வசனமே தனக்கு ஆதரிக்கத் தக்கது’ என்றும், ‘பரதா ! நீ பாவம் செய்தவன் ஆதலின், பரிஹாரத்தைச் செய்’
என்றும் வெளிப்படையாக அருளிச் செய்திருக் கின்றமையின்,அங்ஙனம் வெளிப்படையாகக் கூறியவற்றைக் காரணமாய்க் கொள்ளாது, அவற்றைக் கழித்துப் பேசி, இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையையே பரதன் பயன் பெறாததற்குக் காரணமாய்க் கூறுதல் ஏற்கத் தக்கதாமோ? என்று கருதக் கூடும்.
“வெளிப்படைப் பொருளை விட்டிட்டு, உட்கருத்தையே எடுத்துக்கொள்ளுதல் சிறந்த
முறையாம்” என்பதை ஓர் எடுத்துக் காட்டினால் விளக்கிக் காட்டுவோம் :
‘இராமபிரான், ஸுக்ரீவனுடன் தோழமைகொண்டவன்; ஸுக்ரீவன் விருமபியவாறு வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா ராச்சியத்தையும், ருமை என்னும் ஸுக்ரீவன்
மனைவியையும் அந்த ஸுக்ரீவன் பெற்று, முன்புபோல் வாழும்படி உதவி புரிந்தவன்;
அங்ஙனம் உதவி புரியும் போது, ஸுக்ரீவன் நம்புமாறு மழுவேந்திக் கொடுத்துக் காரியம்
செய்தவன்” என்று நம் ஆசாரியர்கள் பரம புருஷனுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து அருளிச் செய்வதுண்டு” அங்ஙனம் வாலியை வதம் செய்யும் போது, அவ்வாலிக்கும் ஸு க்ரீ
வனுக்கும் நடந்த போர் இரண்டு. முதலில் நடந்த போரில், இராமபிரான் வாலியை
அடித்துக் கொல்லாது விட்டிருக்கிறான். அப் போரில், ஸுக்ரீவன் தன்னாலாந்தனையும்
போர் புரிந்தும், இராமபிரான் கூறியபடி அம்பை எய்து வாலியைக் கொல்லாது இருந்தமையின், அடி தாங்கமுடியாமல் முதுகு காட்டி ஓடிவிட்டான் என்பது வரலாறு – (ஈது
இங்கு முதலில் அறியத்தக்கது-இவ்வாறுஓடிவந்த ஸுக்ரீவன், இராமா! நீ ஏன்? கூறியவாறு வாலியை அடிக்கவில்லை என்று வினவினான். இவ்வினாவிற்கு இராமபிரான் விடை யளிக்கும் போது கூறிய வார்த்தை-(ஸுக்ரீவ ச்ரூபதாம் தாத க்ரோதச்ச வ்யபநீயதாம்
காரணம் யேந பாணோயம் நமயா ஸ விஸர்ஜ்ஜித:-அலங்காரேண வேஷேண ப்ரமாணேம்
கதே நச த்வம் ச ஸுக்ரீவ வாலீச ஸத்ருசெள ஸ்த: பரஸ்பரம்||| ஸ்வரேண வர்சஸாசைவ ப்ரேக்ஷித ந விக்ரமேண ச வாக்யைச்ச யக்திம் ச வாநர வாம் நோபலக்ஷயே ததோரஹம் ரூப ஸாத்ருச்யாத் மோஹிதோ வாநரோத்தம நோத்ஸ்ருஜாமி மஹா வேகம் சரம்-என்பதாம்

இவற்றின் வெளிப்படையான பொருள்:
ஸுக்ரீவா ! ஒப்பனையிலும், வடிவ அமைப்பிலும். உயரத்திலும், நடையிலும்,குரலிலும், தேஜஸ்ஸிலும், பார்வையிலும், பராக்ரமத்தி லும்,வாக்கியங்களிலும் நீயும் வாலியும் ஒருவரை ஒருவர் ஒத்திருக்கிறீர்களாகையினால், உங்கள் இருவருள், ‘இன்னவன் வாலி ; இன்னவன் ஸுக்ரீவன்’ என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஸந்தேஹத்தில் நான் பாணத்தை விட்டால், அது ஒருகால் உன்மேல் பட்டு, ஆபத்து நேருமோ என்று அஞ்சி, நான் வாளா இருந்து விட்டேன்” என்பதாம்.
இவ்வெளிப்படைப் பொருளை இங்குக் கொள்ளுதற்குப் பொருத்தம் உண்டா? என்பதுதான் நாம் ஆழ்ந்து கவனிக்கத்தக்க தாம். பேரறிவாளனான இராமபிரான் ஸு க்ரீ வனுக்கும் வாலிக்கும் உள்ள வேற்றுமையை உண்மையில் உணர இயலாதோ? உணர வில்லையோ? அல்பம் அறிவுள்ளவன் கூட ‘அடி படுபவன் ஸுக்ரீவன்; அடிப்பவன் வாலி’ என்பதை எளிதில் அறியக்கூடியதை, என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று இராம பிரான் இயம்புகின்றனனே,இது பொருந் துமோ? இதில், நம் ஆசாரியர்களின் திருவுள்ளக் கருத்தைக் கூறுவோம். இங்கு, முதலில், பின் கூறப்பெறும் உண்மைஉணரத்தக்கதாம்.
பரமபுருஷன், சேதனனை நோக்கி, நீ,என்னி டத்தில் உனக்குள்ள அன்பை என் அன்பர்
பால் என்றும் வைத்திரு; அங்ஙனம் என் அன்பர் பால் அன்பைச் செய்யாது இருப்பின்,
அவர் திறத்தில் அபராதத்தைச் செய்தவனா வாய்; அதனால், உனக்கு மாத்திரம் அழிவு உண்டாம் என்று எண்ணாதே,உன்னோடு தொடர்புற்ற இப்பிரபஞ்சமும் அழிந்துவிடும்’ என்று அருளிச் செய்திருக்கின்றான்- -(யா ப்ரீதி: மயி ஸம்வருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே 1 அவமானகரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் !! )என்னும் பரமபுருஷன் திருவாக்கு அனுபவிக்கத் தக்கது. இங்கு
இதனால், நாம் ஓர் உண்மையை உணர லாம்: ஒரு சேதனன் எம்பெருமானை முறை வழுவாது பற்றியிருப்பினும், தான் கோரின் பயனைப் பெறும்போது, அவன் அடியார் திறத்து அபராதம் சிறிதும் இல்லாது இருத்தல் இன்றியமையாததாகும்.இவ்வாறு அப ராதம் பெற்றிருப்பின், பயனைப் பெற இயலாது. சரணாகதி தருமத்தை நாம் உணரும் போது, ”பரமனடியார் திறத்து அபராதம் சிறிதும் இன்றியிருத்தல், ஒரு முறை என்ப தையும் உணரல் வேண்டும்.-இவ்வுண்மைக் கருத்தை மனத்தில் கொண்டு,ஸு க்ரீவன் வரலாற்றை ஆராய்தல் வேண்டும்! ஸுக்ரீவன் இராமபிரானி டத்து மிக்க அன்புள்ளவன் என்பது மெய்யே. ஆயினும், இலக்குமணனிடம் எங்ஙனம் அன்பு காட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டினா னில்லை : இராமபிரானும் ஸுக்ரீவனும் அக்னி ஸாக்ஷியாய்த் தோழமை கொள்ளுகிறார்கள். அவ்வாறு தோழமை கொண்டபின், ஸுக்ரி வன். இலையும் பூவும் நிரம்பியிருக்கும் ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, பூமியின் மேலே போட்டு, அதின் மேலே இராமபிரானுடன் உட்கார்ந்து கொண்டு,அப்பெருமானிடம் தன் குறை ைப் போக்குமாறு வேண்டிக் கொள்கிறான். இவ்வாறு, ஸுக்ரீவனும் இராம பிரானும் இலையும் பூவும் நிரம்பியிருக்கும் கிளையில் பல ஸமயங்களில் உட்கார்ந்து ஒருவ ருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சரிதம் கூறப் பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு ஸ்மயமாவது, இலக்குமணனை ஸுக்ரீவன் இவ்வாறு ஆஸனம் கொடுத்து உபசரித்ததாய் இராமாயணத்தில் கூறப் பெற்றிலது.-(தத : ஸ ப ணப ளாம் சித்வா சாகாம்
ஸுபுஷ்பிதாம் ஸாலஸ்யாஸ்தீர்ய ஸுக்ரீவ: நிஷஸாத ஸராகவ: II லக்ஷ்மணாயாத ஸம்ஹ்ருஷ்ட:ஹநுமான் பலவகாஷப: சாகாம் சந்தனவர்க்ஷஸ்ய ததெள பரம்
புஷ்பிதாம் II)-என்பனகாணத் தக்கன ) ஸுக்ரீவனுடைய இச்செயலைக் காணுங்கால், இலக்குமணனிடம் அன்பில்லை; அபராதம் உண்டு’ என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ? இச்செயலை இராமபிரான் கண்கூடாகக் கண்டவனாதலின், முதலில் ஸுக்ரீவனும் வாலியும் போர் புரியுங்கால், வாலியை அடிக்க அவன் திருவுள்ளம் இசையாது இருந்தது-பின்பும், ஸுக்ரீவன் தன் செயலை உணர்ந்து, இலக்குமணனிடம் எங்ஙனம் அன்புகாட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டின தாய்க்ாணப் பெற்றிலது . ஆனாலும், தன்னைப் பற்றினாரை அடியாருடைய அபிமானத்திற்குப் பாத்திரமாக்கிக் காரியம் செய்வது என்பது பரமபுருஷனுடைய ஓர் உயரிய முறையாம். இம்முறையைத் திருவுள்ளம் பற்றி, ஸுக்ரீவனுடைய கழுத்தில் இலக்குமணன் திருக்கைகளால் அடையாளமாய்
க புஷ்பி மாலையைப் போடச் செய்யும் முகத்தால், அந்தப் பாகவதோத்தமனுடைய அன்
புக்கு இலக்காக்கி, வாலியை இரண்டாம் போரில் கொன்று, ஸுக்ரீவனுக்கு, அவன்
கோரின பயனை அளித்திருக்கின்றான், இராமபிரான்.-கருதாபி ஞா நசிஹ்நஸ் த்வம் அநயா கஜஸாஹவயா லஷ்மணே ந ஸமுத்பாட்ய யைஷா கண்டே க்ருதா தவ Il
என்னும் வார்த்தை அனுபவிக்கத் தக்கது.

இதுகாறும் கூறிய ஸுக்ரீவன் வரலாற்றில், ஆழ்ந்து, ஆராய்ந்து காணும் போது,
“வெளிப்படையான பொருளில் உண்மை நோக்கு இன்று; உள்ளுரை பொருளிலேயே
உத்தமனுடைய உக்திக்கு நோக்கு உண்டு என்று எங்ஙனம் அறிகின்றோமோ, அங்ஙன மே, பரத சரணாகதிப் பகுதியில் அமைந்துள்ள புருஷோத்தமனுடைய,“மாதரம் ர கை
கேயீம்” ஆஞாதம் யந்மயா தஸ்ய” ” உத் திஷ்ட த்வம்” என்னும் உக்திகளுக்கும்,
”வெளிப்படையான பொருளில் நோக்கு இன்று; உள்ளுறை பொருளிலேயே நோக்கு “
என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.
ஆகவே, பரதன் இராமபிரானை முறை யுடன் பற்றியிருந்தும் அப்பற்றுதல், அந்த
இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையின், பயனற்றதாம் என்பதைக்
கண்டோம். இப்பொருளை தேசிகன் திருவாக் கிலும் அனுபவிப்போம்.-(ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம்ச ப்ரஜாநாம் மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதி ததௌச 1 சிந்தாதீத: ஸம நி ததா பாதுகாகர்யாபிஷேக : துர்விஜ் ஞா நஸ் வஹ்ருதய மஹோ தைவமத்ர ரமாணம்)-என்பதே அத்திருவாக்காம்.
இத்திருவாக்கின் கருத்து : “தசரத சக்ரவர்த்தி, இராமபிரானுக்கு முடி சூட்டி,
இராச்சிய பாரத்தை அப்பரமபுருஷனிடத்தில் வைக்க விரும்பினான். அச்சகரவர்த்தி
கொள்கையை மக்கள் அனைவரும் ஒரு முகமாக விரும்பினார்கள். அச்சக்ரவர்த்தி மஹிஷியான கைகேயி, பரதனுக்கு முடி சூட்டி இராச்சிய பாரத்தை அவனிடம் வைக்க வரம்
கேட்டாள். ஸத்திய வாதியான சக்கரவர்த்தி யும் அங்ஙனம் அளித்தான். ஆனால், சக்ர
வர்த்தி கோரியவாறு இராமபிரானுக்கும்,கைகேயி கோரியவாறு பரதனுக்கும் திரு அபி
ஷேகம் நடைபெறாது . ஒருவரும் ஒரு காலும் எண்ணாதிருக்க, திருவடி நிலைகளுக்குத் திருவபிஷேகம் நன்கு நடந்தது. இதற்குக் காரணம் எம்பெருமானுடைய ஸங்கல்பமேயாம்” என்பதாம்.
இத்திருவாக்கில், இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூட வேண்டும்’ என்னும் பரதன் விருப்பம் சப்தத்தில் தெளிவாய்க்கூறப்பெறாதது ஒருவாறு உண்மையேயானாலும், கூறப் பெற்றிருக்கிறதாகவே கொள்ளுதல் பொருத்தமுடைத்தானதாம். சக்ரவர்த்திக்கும் மக்களுக்கும்) இராமபிரானுடைய திருவபிஷேகம் எங்ஙனம் இஷ்டமோ ; அங்ஙனமே அதுதானே பரதனுக்கும் இஷ்டம் அது தைவமாகிய இராமபிரானுக்குத் திருவுள்ளமில்லாமையால் உண்டாகவில்லை.
இத்திருவாக்கையும், இதின் கருத்தையும்அனுபவிப்போர்க்கு, இராமபிரான் திரு
வுள்ளமில்லை. அதனால், பரதன் கோரியதுநிறைவேறவில்லை’ என்பது நனகு விளங்கு
மன்றோ?
இதுவரையில், கூறிய வற்றால் “எம்பெருமான் சிறந்த தருமம்” என்பதும், “அவ்வெம்
பெருமான் சேதனனுடைய வேண்டுதலையும். இச்சேதனன் தன்னைப் பற்றும்போது.பெரிய
பிராட்டியாரை முன்னிடு தலையும் வேண்டு கின்றனன்” என்பதும், இச்சேதனன் அவ்
எம்பெருமானைப் பற்றும்போது,அப்பற்றுதல் அப்பெருமான் திருவுள்ளத்திற்குப் பாங்கா
யிருக்க வேண்டும்” என்பதும் இராமாயணத்திலேயே ஒருவாறு அறியப் பெற்றுள்ளன
அல்லவா? இனி, இவ்வாறான தருமம் இராமாயணத்தில் நிலை நிறுத்தப் பெற்றிருக்கும் இடத்தைக் காண்போம் :
ஆனால் “தருமம் இருவகைப்படும். இச் சேதனன் முயன்று செய்யும் போது, உண்டா
வது ஒன்று. எப்போதும் உள்ளது மற்றொன்று.எம்பெருமான் என்றும் உள்ளதொரு மிகச்
சிறந்த தருமம்” என்று முன்னமேயே கூறி யிருந்தோம்.

இக்கருத்தை மனத்தில் கொண்டு நோக்குவார்க்கு, “சேதனன் முயன்று செய்யும்
போது, உண்டாகும் தருமம், நாள் செல்லசெல்ல சிறிது அழிவு பெறலாமாதலின்,
அத்தருமத்தை நிலை நிறுத்துதல் என்பதற்குப்பொருள்உண்டு; என்றும் எங்கும் உள்ள எம்
பெருமானாகிய தருமத்தை எம்பெருமான் திருவவதாரம் செய்து, நிலை நிறுத்துவதாவது
என்?” என்னும் ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்கு ஸமாதானத்தை இராமாயணத்தில்
விபீஷண சரணாகதிப் பகுதியில் நன்கு காணலாம். ஆதலின், விபீஷண சரணாகதிப் பகுதி
யில் அமைந்துள்ள வரலாற்றையும், ஸாரப் பொருள்களையும் மிக விரிவின்றி, அனுபவிப்
போம்.
இராமபிரான், கடற்கரையில் வானரவெள்ளங்களுடனும், ஸுக்ரீவன் இலக்கு
மணன் இவர்களுடனும் எழுந்தருளியிருக்கும் தருணம். அத்தருணம், இலங்கையில், இரா
வணன், தனக்கு நன்மையைக் கூறின விபீஷணனைப் பலவாறாக நிந்திக்க, அந்நிந்தனையைப்  பொறாது, அவ்விபீஷணன், கதையைக் கையில் உடையவனாய் நான்கு இராக்கதருடன் ஆகாசத்திலே கிளம்பி, வடகரையை அடைந்து, ஆகாசத்திலேயே தஙகியிருக்க, அதைக் கண்ட எல்லா வானரர்களும், இராவணன் தம்பியாயிருத்தலாலும், இலங்கையின் நின்றும் வந்திருத்தலாலும், இவ்விராக்கதரால், எம்பெருமானுக்கு என்ன தீங்குநேரிடுமோ?’ என்று தம் அன்பு நிலைக்கு ஏற்பஅஞ்சி,அவ்விராக்கதரை அழிக்கக் கருதி, தம் கைகளில் மரங்களையும் மலைச்சிகரங்களையும் வைத்துத் தயாராயிருக்க, அவ்வானரர்களின் அந்நிலையைக் கண்கூடாகக் கண்டிருந்தும், அவர்களின் இராமபக்தியைப் புகழ்ந்து, அவ் வானரர்கள் முன்னாக இராமபிரானைப் பற்றுகையே முறையாம்’ என அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டவாறே, அவ்வானரர்களை வெகு மதிப்புடன் முன்னிட்டு முறை வழுவாது இராமபிரானைப் பற்றியிருக்கின்றான், விபீஷணன்” என்னும் வரலாறு முதலில் இங்கு அறியத்தக்கதாம்.-இவ்வாறு இராமபிரானை விபீஷணன் பற்றுங்கால், அவ்விபீஷணன் கூறிய வார்த்தைகளாவன :

1. ராவணோ நாம் துர்வ்ருத்த : ராக்ஷ ோராக்ஷஸேச்வர : 1 தஸ்யாஹம் அநுஜோ ப்ராதா விபீஷணஇதி சருத : 11
2. தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ச விவசா தீநா ராக்ஷ பிஸ்
ஸூரக்ஷிதா!
3. தமஹம் ஹேதுபி: வாக்யை: விவிதைச்ச ந்யதர்சயம் ஸாது நிர்யாத்யதாம் ஸீதா ராமாயேதி.
4. ஸச ந ப்ரதிஜக்ராஹ உசயமாநம் ஹிதம் ராவண : கால சோதித : 1
வாக்யம் விபரீத இவெளஷதம்பு
5. ஸோஹம் பரு தஸ் தேந தாஸவச் சாவமாநித : த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம்
சரணம் கத: 11
6. ஸர்வாபாலோக சரண்யாய ராகவாய மஹாத்மநநிவேதயத மாம் ப்ரம் விபீஷணம் உபஸ்திதம் 1 )

இவற்றின் கருத்து : (I) (”எம்பெருமானைப் பற்றுவோன், தன் குற்றங்களைக் கூசாது கூறிப்பற்றக் கடவன்’ என்னும் முறையைக் கைக்கொண்ட) விபீஷணன், “இராமபிரானுக்கே உரியவனாய் இருத்தல் இன்றி, எல்லா உலகங்களையும் கதறிக் கூப்பிடுமாறு செய்பவனும், இங்ஙனம் கொடியோன்’ என ப்ரஸித்தி பெற்றிருப்பவனும் கெட்ட நடத்தை உடையவனும்
இராக்கதனும், இராக்கதர் அனைவர்க்கும் ஈச்வரனுமான இராவணனுக்கே உரியவனாயிருந்து, இதுவரையில் தொண்டு செய்து போந்தவன்; அவன் எக் குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தனனோ, அக்குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தவன்; எல்லோரையும் நடுங்கச் செய்பவனாயிருத்தலின் ‘விபீஷணன்’ என்று எங்கும் ப்ரஸித்தி பெற்றிருப்பவன்,-நான்” (சுருங்கச் சொல்லின், இராவணனுக்கு அவனுக்குரிய குற்றங்கள் மாத்திரம் உண்டு; எனக்கு எனக்குரிய குற்றங்களும், அவன் தொடர்பினாலாகிய குற்றங்களும் உண்டு ஆதலின்,என் குற்றம் அதிகம்) என்கிறான்.

(2) மேலும் அவ்விபீஷணன் கூறியதாவது: ”அவ் இராவணன், (திரு அயோத்தியில் இருப்பு சிறை என்னலாம் படி, அனுபவத்திற்கு மிகவும் பாங்கான) ஜனஸ்தானத்தினின்றும், உயிரையும் உடலையும் பிரிப்பது போன்று, ஸீதா பிராட்டியாரையும் இராமபிரானையும் பிரித்து, அவ்இராமபிரானுக்கு உயிரான ஜடாயுவையும் கொன்று, தன் அசோகவனிகையில், அந்த ஸீதா பிராட்டியாரைக் கொணர்ந்து வைத்து, எங்கும் போகவொட்டாது,-அரக்கிமாரைக் காவலாய் வைத்தவன் அங்ஙனம் ஸ்தா பிராட்டியார் திறத்திலும் ஜடாயு பக்கலிலும், அளவிறந்து அபராதத்தைச் செய்தவனாகிய இராவணன் பின் பிறந்தவன், நான்” என்பதாம்.
(3) அன்றியும், அவ்விபீஷணன் செப்பியதாவது : “இர வணா! நீ. இராமபிரானுக்கே உரியவராகிய அந்த ஸ்தா பிராட்டியாரை, அவ் எம்பெருமானிடம் திரும்பவும் கொணர்ந்து போய்ச் சேர்த்துவிடு’ என்றும், ”நான் கூறியவாறு செய்யாவிடின், நீ அழிந்து விடுவாய்” என்றும்,அவனுக்கு அடிக்கடி அறிவித்தேன்'” என்பதாம்.-

(4) இன்னமும் “நோய்வாய்ப் பட்டு, சாகக் கிடக்கிறான் ஒருவன், மருந்தை எங்ஙனம் எடுத்துக் கொள்ள மாட்டானோ,அங்னமே, யமனால் தூண்டப்பட்ட அவ் இராவணன், நான்கூறிய ஹித வசனத்தைச் செவிதாழ்த்தும் கேட்கவில்லை’ என்றும் கூறினான்,-விபீஷணன்.
(5) இன்னும்,விபீஷணன் பகர்ந்ததாவது : “என் ஹித வசனத்தைச் செவி தாழ்த்துக் கேட்கவில்லை ” என்பது மாத்திரமே அன்று. ஹித வசனத்தைக் கூறியதே காரணமாக அவனும். அவனைச் சேர்ந்தாரும் என்னை அவமதித்தனர். ஆதலின், என் மனைவிமாரையும், புத்திரர்களையும், விட்டிட்டுஇராமபிரானைத் தஞ்சமாகப் பற்றினேன், நான்” என்பதாம்.
(6) இவ்வாறு கூறி, பின்னும் அவ்விபீஷணன் வேண்டிக்கொண்டதாவது :
‘வானரர்களே !எம்பெருமான் எந்தச் சேதனனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுகின்றனனோ அந்தச் சேதனனே புண்ணியனாவான்.அவ் எம்பெருமானாகிய இராமபிரான், இவ்விபீஷணனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுவானாயின், இவனுக்கு நன்மை உண்டாம். அந்நன்மைநான் பெற்றேனாக வேண்டும்.-அங்ஙனம் நன்மை பெற்றேனாதற்குச்
செய்ய வேண்டுவது யாதோ? எனின், மிக்க ஆர்த்தியுடன் இலங்கையினின்றும் இங்கு வந்
திருக்கும் இவ்விபீஷணனை இராமபிரானுக்கு அறிவித்தல் வேண்டும். நீங்கள் என் வரவை அறிவிக்குங்கால் ” இராமபிரானுக்கு இவ்விபீஷணன் தொண்டுடனாதல் நன்றாம்” என்னும் எனக்குள்ள இந்த ருசி மாறுவதற்கு முன் வெகு சீக்கிரமாக அறி வித்தல் பயனுற்றதாகும். என்னை அவ்இராமபிரான், திருவுள்ளம் உவந்து ஏற்றுப் பணி கொள்ளுமாறு செய்தல் உங்களுக்குப் பணியாம். அப்பிரான் ஏற்றுப்பணி கொண்டு உவத்தல், அவன் தனக்கு உற்ற தாகும். நீங்கள் இச்சேதனனைப் பரமன் உவந்து ஏற்குமாறு செய்யுமவர்களா யிருக்கின்றமை யின்,அங்ஙனம் செய்யாதபோது, உங்கள் நிலை உங்களைவிட்டு அகன்றொழிந்து விடுமன்றோ? ஆத ன், உங்களுக்கு அழிவுஉண்டாம்.
அப்பெருமான், நீங்கள் என் வரவை அறிவித்த பின்பும், அவன் கூவுதல் வருதல் செய்யாதும், என்னைத்திருவுள்ளம் உவந்து ஏற்று, அடிமை கொள்ளாதும் இருப்பின்,அப்பரமன்
தன் நிலையினின்றும் தவறியவனாவானன்றோ ?
எம்பெருமானிடம் பேரன்பு பெற்றிருக்கும் உங்களையும், அவ் எம்பெருமானையும் உவப்பித்தல், தொண்டனான என் நிலைக்கு ஏற்றதும், இன்றியமையாததுமாம். அங்ஙனம்
உவப்பியாது யான் இருப்பின், அஃது என்நிலைக்கு அழிவை விளைக்குமன்றோ ? உவப்பியாது இருத்தலே அழிவை விளைக்கும் என்னும் போது, உங்களையும், அவ் எம்பெருமானையும் உங்களுக்கும் அவனுக்கும் உரிய அந்த அந்த நிலையில் நின்றும் நழுவச் செய்யும் முகத்தால் அழிப்பேனாயின், என் கதிதான் என்னாகும் ?
ஆதலின், நீங்கள் என் வரவை சீக்கிரம் அறிவிக்கும்போது, உங்களுக்கு நன்மையுண்டு.
அப்பரமன் என்னை ஏற்று அடிமை கொள்ளும் போது, அவனுக்கு நன்மை உண்டு; நான்
உங்கள் ஓலக்கத்தில் ஒருவனாகக் கலந்திருந்து உங்களைப்போல் அடிமை செய்யும்போது.
எனக்கும் நன்மை உண்டு. இவ்வாறு எல்லாரும் நன்மை பெற்றுவாழுமாறு நீங்கள் என்
வரவை அறிவித்தல் நன்றாம் எல்லா உலகங்களையும் காக்கும் பரமனன்றோ? அவ்வெல்ல உலகங்களிலும் யானும் ஒருத்தனன்றோ ? அவ்எம்பெருமான் நீர்மைக்கு ஆகாதாரும் உண்டோ ? இராவணன் தம்பியும் சத்துருவுமான உன்னைஎம்பெருமானிடம் அறிவிக்கையாவது என் ? என்னாதீர்கள். [இவ்வுலகத்திலுள்ளாரனைவரும்.ஒன்றுசேர்ந்து எதிர்த்தாலும் அறப் பெரியோ னாகிய அப்பரமனுக்கு, பொல்லாங்கு சிறிதும் உண்டாதற்கு இடமுண்டோ? சரணம் பற்றினாரைக் காக்கும் குடியில் திருவவதாரம் செய்த மஹாத்மாவன்றோ? அப்பரமன்.அவன் பொருட்டு எல்லோருக்கும் நன்மை உண்டாமாறு அறியுவிங்கோள்” என்பதாம்.-அங்ஙனம் விபீஷணன் அறிவிக்குங்கால் இராமபிரான் பக்கலில் பொங்கும் பரிவு பெற்றிருப்பவனான ஸுக்ரீவன், மேற்கூறிய விபீஷணன் வார்த்தையைக் கேட்டு, மிக்க பரபரப்புடன், அப்பெருமானைக்கிட்டி, ஒரு வார்த்தை
விண்ணப்பம் செய்து கொண்டனன்.
”திரு அயோத்தியை விட்டுப் போந்து அநேக நாளாயிற்றே? ராஜ நீதியை மறந்ததோ? இவ்விடம் இலங்கைக்கு மிகவும் அண்ணியதன்றோ ? இராவணன் அநீதிகள் அறியவில்லையோ? ஒருவன் ‘சரணம்’ என்னும் சொல்லைச் சொல்லும்போது, இவற்றை
மறந்து விடலாமோ?-வத்யதாம் ஏஷ தீவ்ரேணே தண்டேநஸசி வைஸ்ஸஹ | ராவணஸ்ய ருசம்ஸஸ்ய ப்ராதாஹ் யேஷ விபீஷண 1-இவனை கட்டியிட்டு வைத்தல்; மாரீசனைப்
போன்று,வரும் காலத்தில் துன்பம் விளைக்கும்படி தொடுத்த அம்போடே விடுதல் செய்யக்
கடவோமல்லோம். கொன்றே விடுவோம். அங்ஙனம் கொல்லும் போது, முதலிலே தேவரீரை நலிகைக்குக் கூட்டுப்படையாய் வந்த இந் நால்வரையும் தலையறுத்து, இவன்கையிலே கொடுத்துப் பின்பு இவனைக் கொல்லக் கடவோம். இவன் இராவணன் உடன்பிறந்தவனன்றோ ? அவ் இராவணன்,பெற்றதாயையும் தமப்பனையும் சேர இருக்கப்
பொறாதவனன்றோ ? உடலையும் உயிரையும் பிரித்தது போன்று, என்றும் விட்டகலாத
ஸீதாபிராட்டியரையும் எம்பெருமானாகிய தேவரீரையும் கடல் ஒரு புறமும் மலை ஒரு
புறமுமாக்கின பையலுக்கு, இவன் ஓர் அவயவம் என்று சொல்லலாம் படி அண்ணியனன்றோ?” என்பதே அந்த ஸுக்ரீவன் கூறியஅவ்வார்த்தையாம்.

இவ்வார்த்தையைத் திருச் செவியேற்ற இராமபிரான், வானரர்களை நோக்கி, கூறிய
தாவது :வானரர்களே! இவ்விபீஷணன், இராவணன் தம்பியாதலின், இவன் நம்முடன் சேரத்
தகுதியற்றவன்; அங்ஙனம் சேரத் தகுதியற்றமைக்குத் தகுந்ததும், யுக்தியோடு சேர்ந்ததும், எல்லோரும் விரும்பத் தக்கதும் இனியதுமான ஸுக்ரீவன் வார்த்தையை நீங்கள் கேட்டீர்களன்றோ? இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளுமிடத்து, உங்கள் கருத்து யாதோ? கூறுமின்’ என்பதாம்.-இராமபிரானுடையமேற்கூறிய வார்த்தையைக் கேட்ட வானரர்கள் அனைவரும், விபீஷணனை ஏற்றுக் கொள்ளுதல் முறை என்னில், ஸுக்ரீவ மஹாராஜருக்கும் கலக்கம் உண்டாம்; ‘அங்ஙனம் ஏற்றுக் கொள்ளுதல் முறையன்று’ என்னில், இராமபிரானுக்குத்திருவுள்ளம் கலங்கும்; இவ்விருவருக்கும் பரதந்திரமான நாம் ஒன்றும் கூறுதற்கு இல்லை என்று மெளனமாயிருந்தனர்.-அங்ஙனம் மெளனமாயிருக்கும் வானரர்களை நோக்கி, இராமபிரான் அருளிச் செய்த-வார்த்தையாவது 🙁 ஹ்ருதாஹ்யர்த்த க்ருச்ச்ரேஷ யுக்தம் புத்திமதா ஸதா ! ஸமர்த்தேநாபி ஸந்தேஷ்டும் சாச்வதீம் பூதிமிச்சதா ||
என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்துப் பின்வருமாறு :
வானரர்களே! நம்மைச் சரணம் பற்றியிருக்கும் விபீஷணன், தன்னை நாம் ஏற்றுக் கொள்ளாது ஒழியில் பிழையாதாயினாயிருந்தான்; இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளில், உங்கள் மஹாராஜர் பிழையாதாராயிருந்தார். சரணம் பற்றி யவனை ஏற்றுக்கொள்ளுதலும், நம்மிடம் பொங்கும் பரிவுபெற்றிருக்கும் மஹாராஜர் கூறியதைக்
கேட்டு நடத்தலும் நமக்குச் சிறந்த நன்மைகளாகும். சரணம் பற்றி யவனை விட்டிட்டால், இரகு குலத்திலே பிறந்த இராமன் சரணம் பற்றியவனைக் கைவிட்டு விட்டான்’என்பர். மஹாராஜர் கூறியதைச் செய்யாவிடின், ‘தன்னைப் பற்றினாரிடம் பரதந்திரனாயிருக்கும் இராமன் க்ரீவ மஹாராஜர் கூற்றுச் செய்தான் இல்லை’ என்பர்.-இவ்வாறு இரண்டையும் செய்தேயாக வேண்டியிருந்தும், ஒன்றுக் கொன்று முரண்பட்டவைகளாயிருத்தலின், செய்வதா ? அல்லது செய்யமாட்டாது விட்டிடுகின்றதா?என்று தபிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு,’இது செய்யத்தக்கது; இது செய்யத் தகாதது’ என்னும் பகுத்தறிவு பெற்றிருப்பாரும்,
நினைத்ததை நடத்தவல்ல ஆற்றல் பெற்றிருப்பாரும், அழியும் பொருளில் கண்வையாது. அழிவற்ற செல்வத்தைவிரும்புவாரும், நொந்தாரைக் கண்டால் பொறுக்கமாட்டாது, ஐயோ !என்றிருப்பாரும் உத்தமஸ்நேஹிதரும் ஆன நீங்கள், என் தாபம் நீங்குமாறு,ஆராய்ந்து சொல்லுதல் பொருத்தமன்றோ? கூறுமின்.”
மேற்கூறிய வார்த்தையில் அமைந்துள்ள‘சாச்வதீம் பூதிம் இச்சதா” என்னும் பகுதி)
இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கதாம். இப்பகுதியில் விளங்கும் இராமபிரானுடைய திருவுள்ளக் கருத்து வெகு அழகானதாம். அக்கருத்தாவது : ”உங்கள் மஹாராஜர், நம் சரீரத்திற்கு இராவணன் தம்பியான இவ்விபீஷணனால் என்ன தீங்கு நேரிடுமோ? என அஞ்சுகிறார். இச்சரீரம் என்றும் அழியாது இருக்கும் செல்வம் அன்று .சரணம் பற்றியவன்,யவரேனும் ஆகிலுமாம்; அவரை விட்டிடாதுகாக்கும் போது, உண்டாம் புகழுடம்பு ஒருநாளும் அழியமாட்டாதன்றோ? நீங்கள் கூறும் கூற்று, நமக்கு நிலைநின்ற புகழுடம்பு உண்டாமாறு இருத்தல் வேண்டும்” என்பதாம். மேற்கூறிய கருத்துக்களைக் காணுங்கால், ‘என்றும் உள்ள எம்பெருமானாகிய தருமத் திற்கும் ஒருவாறு சலனம் ஏற்படும் இடம்-உண்டு” என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ?
இராமபிரான் விபீஷணனை விட்டிடாது காப்பானாயின், அப்பிரானை விட்டு, தருமத்தின்
தன்மை(பற்றினாருக்கு நன்மையை அளிப்பவனாயிருக்கை) அகன்றொழியாது. ஸுக்ரீவன்
பொங்கும் பரிவினால் மிகக் கலங்கி, “விபீஷணனைக் காக்கல் ஆகாது ; கொன்றே தீரவேண்டும்’ என்று கூறும் கூற்று, தருமமாகிய இராமபிரானையே ஒருவாறு அழிக்கத் தேடு கிறதன்றோ?-இங்கு இராமபிரான், தானாகிய தருமத்தை அழிவுக்கு இடம்கொடாது, நிலைநிறுத்தும் பரிசு யாதோ? எனின், தன்னைப் பற்றி னார்,ஒருகாலும் தன் எண்ணத்தைப் பின்செல்லாது இரார் ; அங்ஙனம் பின் செல்லாது ஒரு ஆச்ரிதன் இருப்பின், அவ்வாச்ரிதனுடைய (தன்னைப் பற்றினவனுடைய) மனக்கலக்கத்தை ஏனைய ஆச்ரிதரால் மாற்றி, அவனைத் தன் வயப்படுத்தி, தன்னைத் தன்னிலையின் நின்றும் நழுவவிடாது, தன்னை நோக்கி அருளுவதே, அவன் தன்னை நிலைநிறுத்தும் பரிசாம். இதுவே, இராமபிரான் திருவவ தாரம் செய்து செய்யும் முக்கியமான தருமஸ்தாபனமாம்.(தருமத்தை நிலை நிறுத்தலாம்.)-இந்த ” ஸுஹ்ருதா ” என்னும்வார்த்தை கூறுகிறவாறு இராமபிரான் வானரர்களை நயமாகக் கேட்க, அவ்வானரர்கள் அனைவரும்தம் கொள்கையை அறிவித்துக் கொள்ளுதல் இயலாதாதலின்,அங்கதன், சரபன்,ஜாம்பவான், மைந்தன் ஹநுமான் இவ் ஐவரும் ஒன்று சேர்ந்து, ஒரு குழாமாயிருந்து, அவ் இராமபிரானுடைய ஸன்னிதியில், அவன் நன்மையையே நினைந்து, வேறிடத்தில் எண்ணத்தை விட்டிட்டு, தன் தனக்குரிய கொள்கையைத் தனித் தனியே விண்ணப்பம் செய்து கொண்டதாய் இங்கு வரலாறு அறியத் தக்கது.-அங்கதன் கூறிய வார்த்தையும்,அதின் கருத்தும் வருமாறு 🙁அர்த்தாநர்த்தெள விந்ச்சித்ய வயவ ஸாயம் பஜேத ஹ குணத : ஸங்க்ரஹம் குர்யாத்
தோஷ தஸ்து விஸர்ஜ்ஜயேத் என்பது அவ்-வார்த்தையாம்.
“இராமபிரான் தன்னைத் தஞ்சமாய்ப் பற்றியிருப்பவனை விட்டிடாதவன். ஸுக்ரீவன் விபீஷணனைக் கொல்ல வேனும் என்று இருப்பவன். இவ்விருவருடைய இவ்விரு
கொள்கைகளுள் ஒன்றை விட்டு ஒன்றைக்கொள்ளும்போது,வீபீஷணனுடைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து காணுதல் அவசியமாகும். அங்ஙனம் ஆராய்ந்து காணும் போது, குற்றமிருப்பின், விபீஷணன் விடத்தக்கவனாம்.-மிக்க குணம் பெற்றவனாயிருப்பின்,விபீஷணன் கொள்ளத்தக்கவனாம்.ஆதலின், விபீஷணனைப் பற்றி ஆராய்தல் மிக முக்கியமானதாம்” என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும்.
இவ்வாறு அங்கதன் கூறிய பின்பு,சரபன் தன் கொள்கையை, “புருஷர்களுள் மிகச்
சிறந்தவ னே ! இவ்விபீஷணனனுடைய, நடத்தை நன்கு நமக்குத் தெரியாதாகை
யால், அதை அறிகைக்கு, முந்துறத்தூதுவிடவேணும்.-க்ஷிப்ரம் அஸ்மிந் நரவ்யாக்ரசார: ப்ரதிவிதீய தாம் ) என்று கூறியிருக்கிறான்.-இங்ஙனம் சரபன் செப்பிய பிறகு,ஜாம்பவான் கூறியதாவது :
” இவ்விபீஷணன் இராவணனிடத்தினின்றும் வந்தவன் என்பது மாத்திரமின்றி வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும், காலத்திலும் வந்தவன். ஆதலின் யோசிக்கத் தக்கவன்(அதேசகாலே ஸம்ப்ராப்த: ஸர்வதா சங்க்ய தாம் அயம்) என்பதாம்.

இப்படி ஜாம்பவான் தன் கொள்கையைக்  கூறிய பிறகு, மைந்தன், ” இவ்விபீஷணனை : 
நம்மோடு சேர்த்துக்கொண்டு, இவன் நன்மை தீமைகளை நன்கறிந்து, அதற்கு ஏற்ப நடந்து
கொள்ளுவது நன்றாம். “(பாவமஸ்யது விஜ்ஞாயதத்வதஸ் த்வம் கரிஷ்யஸி)” என்று கூறினன்.
இந்நால்வரும் இவ்வாறு இயம்பிய பிறகு, திருவடி இந் நால்வருடைய கொள்கைகளையும்
கண்டித்து, தன் கொள்கையை இராமபிரான் ஸன்னிதியில் விண்ணப்பம் செய்து கொண்டி
ருக்கின்றனன். இங்கு இத்திருவடி வார்த்தையும், அவ்வார்த்தையின் கருத்தும் பின் வருமாறு : ஸுக்ரீவனைக் குறித்து, “தலைவ ஒருவரை வெல்லவேண்டும் என்றாவது, ஒருவ
ரிடத்தில் அஸுயையினாாவது, நான் பெரி யன்’ என்னும் எண்ணத்தினாலாவது, ஒரு
பயனை விரும்பி, பக்ஷபாதத்தினாலாவது கூறப் போகிறேனில்லை. இராமபிரானுடைய திருக் குணங்களைக்கண்டு, உண்மையைக் கூறுவேன்” என்றனன், திருவடி.
இவ்வாறு கூறி, அத்திருவடி அங்கதன் கொள்கைக்குக் கூறியிருக்கும் குற்றமாவது:
” இவ்விபீஷணனிடத்தில், குணங்கண்டு ஏற்றுக் கொள்ளுதல்; குற்றங்கண்டு விட்டிடு
தல்’ என்னும் கொள்கை சிறந்ததன்று.ஏனெனில், இவனை நம் காரியத்தில் ஏவினாலல்லது, இவன் நன்மை அறிய இயலாது ; நன்மையை அறியாமல் ஏவ இயலாது. ஆதலின்,
இவனை ஆராய்தல் இயலாததாம்.-(ருதே நியோகாத் ஸாமர்த்யம் அவ போத்தும் ந சக்யதே
ஸஹஸா விநியோகோ ஹி தோஷவாந் ப்ரதிபாதி மா ) என்பதாம்.
பின்பு, சரபன் கொள்கைக்குச் செப்பியிருக்கும் குறையாவது : “இவ்விபீஷணன் எதிரே நிற்கையால், “தூதனை விட்டு, இவன் நன்மை தீமைகளை அறிந்து, அவ்வறிவுக்கு
ஏற்ப நடந்து கொள்ளலாம் ” என்னும் கொள்கையும் சீரியதன்றாம்.-(சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் ஸசிவைஸ்தவ அர்த்தஸ்யா ஸம்பவாத் தத்ர காரணம் நோபபத்யதே )என்பதாம்.
பிறகு, ஜாம்பவான் கொள்கைக்குப் பகர்ந்திருக்கும் புன்மையாவது :
“இவ்விபீஷணன், இராமபிரானிடம் வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும்,காலத்திலும் வந்தவன் ” என்னும் மதமும் பொருத்தமுடைத்தன்று. ஏனெனில், இராவணன் மிக்க தமோகுணம் பெற்றிருப்பவனாம், பிறரைத் துன்புறுத்துகின்றவனாம். ஆதவின், விடத் தக்கவனாம். விபீஷணன் அவனை விடாது இருப்பின், அவன்பாவச்செயலினால்,அவனைப் போன்று, அவனுக்கு உடன்பட்டிருக்கும் இவனும் அழிய நேரிடும்.-இராமபிரானோ, ரஜஸ்ஸும், தமஸ்ஸும் சிறுதுமின்றி, சுத்த ஸத்துவ குணமுடையவனாம். துன்பம் துடைத்து இன்பம் தந்து பிறரை வாழ்விப்பவனாம். ஆதலின், பற்றத்தக்கவனாவன். இவ் இராமபிரானைப் பற்றி இவனருளால், இப்பரமன் திருவடித் தாமரைகளைக் கிட்டி, தொண்டு செய்துவாழ்வுபெறலாம்.
இவ்வாறு இராவணனுக்கும் இராமபிரானுக்கும் உள்ள தீமை நன்மைகளைக் கண்டவனாம் இவ்விபீஷணன். மேலும், இராவணன் கீழ்மையும் இராமபிரான் ஆண்மையும் நன்கு உணர்ந்தவனாம், இவன். ஆகவே உள்ளத் தூய்மையுடன் பரமபுருஷனையே தஞ்சமாய்ப் பற்ற வந்தவன் வரவுக்கு இவ்விடமும் இக் காலமும் தகுந்த இடமும் காலமும் ஆகத் தட்டொன்று மில்லை யன்றோ?-(ஸ ஏஷதேச: காலச்சபவதீ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷகுணாவபி !தெளராத்ம்யம் ராவணே திருஷ்ட்வா விக்ரமம் ச ததா த்வயி
யுக்தம் ஆகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித)-என்பதாம்.
[ஒருவன் கருமயோகத்தைச் செய்கின்றான். அக்கரும யோகமாகிய தருமம், பரிசுத்மான இடத்திலும், காலத்திலும் செய்யப்பெறுமாயின், அதற்கு நன்மையுண்டாம் ;
அதனாலாகிய பயனும் உண்டாகும்.அங்ஙனம் செய்யப் பெறாவிடின், அத்தருமத்திற்கு நன்மையும் பயனும் உண்டாகா.இத்தருமம்போன்று. இடம் காலம் இவற்றினால், எம்பெருமானாகிய தருமத்திற்கு ஏற்படும் நன்மையும் பயனும் கூறுதற்கு சாஸ்திரம் இடம் தரவில்லையன்றோ? இராமபிரானாகிய தருமத்தைத் த ஞ்சமாய்ப் பற்றும் விபீஷணனுக்கு, அங்ஙனம் பற்றுங்கால், ஏதேனும் ஓர் இடமும் ஒரு காலமும் அமையுமாதலின், இன்ன இடம்
இன்ன காலம் என்பது இல்லையன்றோ? இந்த உண்மையைத் திருவடி வாயிலாக வெளியிடுகின்றான், வால்மீகி முனிவன். கருமயோகமாவது – எம்பெருமான் திருவுள்ளம் உகக்குமாறு, தனக்குரிய தருமங்களைச் சாஸ்திரமுறையைப் பின் சென்று செய்கையாம்.)
இவ்வாறு ஜாம்பவான் கொள்கைக்குக் குறை கூறி, மைந்தன் கொள்கைக்கு இழிவைக்
கூறியிருக்கிறான் திருவடி. அவ்விழிவாவது :-”இவ் விபீஷணனை ஒரு காரியத்தில்
தூண்டி, அக்காரியத்தைச் செய்வித்து, அதனால், இவன் கருத்தைத் தெளியலாம்” என்னும் கொள்கையும் சீர்மை உடைத்தன்று.-ஏனெனில், எதிரி தன் காரியத்தில் வல்லவனாயின், தன் எண்ணத்தை வெளியிடாதவாறு, நடந்துகொள்வன் ; ஆதலின், சீக்கிரத்தில் அவன் நினைவு அறிய இயலாது அன்றோ ?-(அசக்யஸ் ஸஹஸா ராஜந்பாவோ வேத்தும் பரஸ்யவை)-என்பதாம்.

இங்ஙனம்,அங்கதன் முதலானார் கொள்கைகளுக்குக் குறைகூறிய தி ருவடி, தன்
கொள்கையையும் நன்கு கூறியிருக்கின்றனன் :
”இந்த விபீஷணன் கூறும்போது, இவன் பால்குற்றங்களைக் குறிக்கும் செயல் ஒன்றும்
காணப் பெற்றிலது : வழியடியுண்டவன்தாய் முகத்திலே விழித்தாற் போன்று, இவன்
முகம் குளிர்ந்தன்றோ? தெரிகிறது; இவன் தீம்பனாகில், இவனுக்கு விரோதத்தைச் செய்ய
முயன்ற இவ்வானர வெள்ளத்தில், அன்பனாய் இவ்வாறு வார்த்தை கூறு தற்கு இடம்
உண்டோ? கூறியிருப்பனோ ? பயம் சிறிதும் இன்றியும் இருப்பனோ ? இவன் குரல் தழு
தழுத்துத் தெரிகின்றதோ? இல்லையன்றோ?-ஒருவனுக்குக் கெட்ட எண்ணம் உண்மையில்
இருப்பின்,அவ்வெண்ணத்தை அவன் மறைக்க முயன்றாலும், அதை, அவன் முகம்
வெளிப்படுத்திவிடுமன்றோ? ஆதலின், இவன் தூய்மை பெற்றிருப்பவனேயாம்.
பிறருக்குச் செய்ய அரிதான இராமபிரானுடைய முயற்சியையும், இராவணனுடைய
கெட்ட சரிதத்தையும் நன்கு கண்டு, தீம்பனான வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா இராச்
சியத்தை ஸுக்ரீவனுக்கு வயமாக்கிக் கொடுத்ததையும் கேட்டு, அவ்வாறே, இராவணனைக்
கொன்று, இலங்கா இராச்சியத்தைத் தனக்கு வயமாக்கிக் கொடுப்பன் என்று திடமாய்
எண்ணி, இவ்விபீஷணன் இங்கு வந்தனன்-என்பது என் எண்ணம். இவன் நிலையை
இவ்வாறுஉண்மையாக உணர்ந்தால் இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாம் . இதுவே, திருவடி கூறிய கூற்றாம்.-இங்கு, திருவடியின் வார்த்தை பின் வருமாறு 🙁உத்யோகம் தவ ஸம்ப்ரேக்ஷ்ய மித்யா வ்ருத்தம்ச ராவணம் | வாலி நம் ச ஹதம் சருத்வா ஸுக்ரீவம்ச
அபிஷேசிதம் || ராஜ்யம் ரார்த்தயமானஸ்து புத்தி பூர்வமிஹாகத : ஏதாவத்து புரஸ்க்ருத்யவித்யதேத் வஸ்ய ஸங்க்ரஹ : ) இங்ஙனம் திருவடி கூறிய வார்த்தையைத்
திருச்செவி சாற்றி, (ஸக்ரீவன் முதலானார்,’சரணம் பற்றிய விபீஷணனை ஏற்றுக் கொள்
ளுதல் கூடாது’ எனக் கூறும்போது ஒருவாறு அழிந்திருந்த ) இராமபிரான் உளனானான் ;
மனக்களிப்பும் பெற்றான் ; தன் கொள்கையையும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றான்.
(அத ராம ப்ரஸந்நாத்மா) என்னும் வால்மீகி முனிவன் வாக்கியமும், ” அத ராம்: = அநந்தரம் பெருமாள் உளரானார்; திருவடி வார்த்தையாலே உளரானார். ப்ரஸந்நாத்மா=தர்மியுண்டான
வாறே தர்மம் உண்டாயிற்று’‘ என்னும் பெரியவாச்சான்பிள்ளை திருவாக்கும் அனுப விக்கத் தக்கவை.

இனி, இராமபிரான் கொள்கையைக்காண்போம்.-இராமபிரான், அங்கதன் முதலானாரை நோக்கி, தன் கொள்கையைக் கூறுதற்கு முன், தன் உத்தமத் தன்மைக்கு ஏற்ப, ‘உங்கள் வார்த்தையை நான் கேட்ட வோபாதி, இவ்விபீஷணனைப்பற்றி,யான் கூறும் வார்த்தையையும் நீங்கள், செவி தாழ்த்துக் கேட்க வேண்டும். என்று இரந்து கொண்டிருக்
கின்றான்.-இவ்வாறு இரந்து, இராமபிரான் கூறிய வார்த்தையாவது (மித்ராபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதம்சந தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம் )என்பதாம்
இராமபிரான். கடற்கரையில் வானரர்கள் திரளிலே அருளிச் செய்த ‘மித்ரபாவேந’
என்னும் இவ்வார்த்தை,கண்ணன் பகவத் கீதையின் இறுதியில் அருளிச் செய்த “ஸர்வ
தர்மாந் “ என்னும் வார்த்தைபோன்று உள்ளதாம்.
கண்ணபிரான், அக்கீதையில், கருமயோகம்,(எம்பெருமான் முக மலர்த்திக்குஉறுப்பாகச் செய்யும் ஜீவனாகிய தனக்குரியதருமம்) ஜ்ஞான யோகம், (உள்ளத் தூய்மை பெற்றிருப்பவன் சிந்திக்கும் ஜீவாத்மாவைப்பற்றிய சிந்தனம்) பக்தி யோகம் (பரமனைப்
பற்றிச்சிந்திக்கும் சிந்தனம்) ஆகிய இவ்வுபாயங்களைப் பரக்கக்கூறி, இறுதியில் இவற்றை
விட்டிட்டு, பரமனாகிய தன்னையே பற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான்.
இராமபிரானும், இங்கு அங்கதன், சரபன் முதலானோர் கூறிய கொள்கைகளைக் கழித்து,
இறுதியில் தனக்கே உரிய சீரிய கொள்கையை முடிந்த பொருளாக அருளிச் செய்திருக்கிறான்.
கண்ணன் செல்வம் இழந்திருக்கும் அர்ஜ்னனைச் செல்வ வானாக்க இறுதியில் ஸர்வ தர்மாந்” என்னும் வார்த்தையை அருளிச் செய்தது போன்று, இராமபிரானும், இலங்
கையை இழந்த விபீஷணனை இலங்கையை உடையவனாக ஆக்க இறுதியில் ‘மித்ரபாவேந என்று அருளிச் செய்திருக்கிறான்.
அங்கு, கண்ணன் ஸேனையின் ந டுவில் அர்ஜ்ஜுனன் சோகம் தீர்வதற்கு அவ்வார்த்
தையை அருளிச் செய்திருக்கிறது போன்று, இங்கும், இராமபிரான் ஸேனையின் நடுவில்
விபீஷணன் சோகம் தீர்வதற்கு இவ்வார்த் தையை அருளிச் செய்திருக்கிறான்.
நம்ஆசாரியர்கள் ‘திருத்தேர்த் தட்டில்வார்த்தை’ ‘கடற்கரை வார்த்தை’ என்னும்,
(கண்ணபிரான் இராமபிரான் இவ்விரு எம்பெருமான்களுடைய) இவ்விரு வார்த்தைகளையும், எல்லாச் சேதனருடைய சேமத்தைவிளைவிக்கும் சீர்மையுடையன வாயிருத்தலினாலும், மேற்கூறியவாறு ஒற்றுமை பெற்றிருக்கின்றமையினாலும், அன்புடன் தாங்களும் ஆதரித்தும், தங்கள் திருவடிகளில் ஸம்பந்தம்
பெற்றிருப்பார்க்கு உபதேசம் செய்தும்போருகிறார்கள்’‘ என்பதையும், “எந்தச் சேதன
னுக்கு ‘இவ்விரு வார்த்தைகளில் நன்கு தொடர்பு ஏற்படுகின்றதோ,அந்தச் சேதனனே. ஸ்ரீ வைஷ்ணவன்’ எனப் புகழப்பெறுகின்றான்” என்பதையும் நாம் இங்கு அறிதல் அவசியமாகும்.
உண்மை இங்ஙனம் ஆனாலும், பெரியவாச்சான்பிள்ளை இராமபிரான் வார்த்தைக்கு
மிக்க ஏற்றத்தைத் திருவுள்ளம் பற்றி அருளிச் செய்திருக்கிறார் :
அங்கு.சரணாகதாத்வஸாயம்’ சொல்லிற்று; இங்கு . ‘சரண்யாத்வாஸாயம்’ சொல்
லுகிறது .அங்கு, ‘சரணாகதனைப் பாபங்களில் நின்றும் விடுவிப்பேன்’ என்கிறது; இங்கு
‘நான் விடேன்’ என்கிறது” என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கு அவசியம் அனு
பவிக்கத் தக்கதாம்.
இத்திருவாக்கின் கருத்தைச் சிறிது விவரித்துக் கூறுவோம் : எம்பெருமானை எவன்
அவனைப் பெறுதற்குக் காரணமாய்ப் பற்றுகின்றனனோ, அவனைச் சரணாகதன் என்பர்
அச்சரணாக தனுக்கு உரிய திடமானஎண்ணத்தை (“எம்பெருமான் இப்பொருளை
ஒருகாலும் விட்டிடான்; காத்தே தீருவன் ‘என்னும் எண்ணத்தை) ‘அத்யவஸாயம்
என்று கூறுவர்.

இந்த எண்ணம், எம்பெருமான் திருவடிகளை உபாயமாய்ப்பற்றி, பேற்றைப்பெறுபவ
னுக்கு இன்றியமையாததாம். இவ்வின்றியமையாமையைப் பின்வருமாறு நாம் அறியலாம்:
ஒருவன், கப்பலை ஏறி, கடலைக் கடந்துதான் விரும்பிய இடத்துக்குச் செல்கிறான்.
அங்ஙனம் கடந்து செல்பவனுக்கு உள்ள(இக்கப்பல் மிக உறுதியானது : இது நம்மை,
கோரின் இடத்திற்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிடும் என்னும் ) எண்ணத்தைக் காண்
கின்றோமல்லவா?-இது போன்று, இந்த ஜீவனும் எம்பெருமானாகிய கப்பலை ஏறி ஸம்ஸாரமாகியபெருங்கடலைக் கடந்து, தான் விரும்பிய பரமபதமாகிய இடத்துக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கின்றமையின், .எம்பெருமானாகியகப்பல் மிகமிக உறுதியானது; இக் கப்பல்நம்மைப் பரமபதத்தில் கொண்டு போய்ச்சேர்த்துவிடும்” என்னும் திடமான எண்ணம்பெற்றிருக்கவேண்டியவனன்றோ?
இங்கு, ”ஒரு சிறாயை விச்வஸித்து,ஆறு மாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும்
ஏற்றிக்கொண்டு, கடலிலே இழியாநின்றான். அவ் வோபாதியாகிலும் வேண்டாவோ பக
வத்விஷயத்தைப் பற்றுவார்களுக்கு‘ என்னும் நம்பிள்ளை திருவாக்கு அனுபவிக்கத்
தக்கது.
இத்திருவாக்கை அனுபவிக்குங்கால்
“எம்பெருமானாகிய கப்பலை ஏறிச் செல்பவ னுக்கு மிகவும் திடமான எண்ணம் வேண்டும்.
அவ் எண்ணம் இந்த ஜீவன் நிலையைக் காணுங்கால், உண்டாவது அரிதாம். ஆனாலும், கருங்கடலைக் கடப்பவன், அங்ஙனம் கடக்கக் கருவியாய் எண்ணியிருக்கும் கப்பலில் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றுள்ள நம்பிக்கையாவது இந்த ஜீவனுக்கு வேண்டுவது அவசியமன்றோ?”‘என்னும் உண்மை நன்கு விளங்குகின்ற தன்றோ?
‘இந்தத் திடமான எண்ணம் பரம புருஷனாகிய என்னைச் சரணம் பற்றியிருப்போனுக்கு
இன்றியமையாததாம்” என்பதை இயம்பியிருக்கிறான்,”ஸர்வ தர்மான்” என்னும்
வார்த்தை வாயிலாகக் கண்ணன்.மேலும், அக்கண்ணபிரான், மேற்கூறிய வார்த்தையிலேயே, இவ்வாறு திடமானஎண்ணம் பெற்றிருக்கும் சேதனனை, என்னை
அடையவொட்டாது தடைசெய்யும் பாவங் களினின்றும் விடுவிப்பேன்’ என்றும் அருளிச்
செய்திருக்கிறான்.
இதுவரையில், சரணாகதாத்யவஸாயம் சொல்லிற்று; சரணாகதனைப் பாவங்களில்
நின்றும் விடுவிப்பேன்‘ என்னும் பகுதியின் கருத்தைக் கண்டோம். இனி, சரண்யாத்ய
வஸாயம்’ என்பதின் கருத்தைக் காண்போம்.
‘சரண்யன்‘ என்பதற்கு, ‘துன்பம் துடைத்து இன்பம் தரும் எம்பெருமான் என்று பொருள். அவ் எம்பெருமானுடைய திடமான எண்ணத்தை (“இந்த ஜீவனை ஒருக்காலும் விட்டிடேன்; காத்தே தீருவேன்” என்னும் எம்பெருமான் எண்ணத்தை) சரண்யாதியவஸாயம்’ என்று கூறுவர்.
இவ் அத்யவஸாயத்தையும் ‘இந்த ஜீவனை எம்பெருமானாகிய நான் விடேன்’ என்று கூறி
யிருத்தலையும், இங்கு இராமபிரான் வார்த்தையில்நாம் நன்கு அறியலாகும்.
ஜீவனுடைய திடமான எண்ணம், எம் பெருமானுடைய திடமான எண்ணம் இவை
இரண்டும், இந்த ஜீவன் பேறு பெறும்போது அவசியமானவை என்றாலும், இவன் எண்ணத்
திலும்,அவன் எண்ணம் மிகமிக முக்கியமானதல்லவா ?
இந்த ஜீ வன், “எம்பெருமான் இப்பொருளை இரட்சியாது விட்டிடான் : இரட்சித்தே தீருவன்” என்னும் திடமான எண்ணம்பெற்றிலனேயானாலும், எம்பெரு மான்,
இந்த ஜீவனை நாம் விட்டிடாது, இரட்சித்தே தீருதல் வேண்டும” என்னும் திடமான எண்ணம் பெற்றிருப்பின், எம்பெருமானுடையஅவ் எண்ணத்தினாலேயே, இவனுக்கு நன்மை
உண்டாவது திண்ணமன்றோ ?

‘இந்த ஜீவன், எம்பெருமான் இப்பொருளை இரட்சித்தே தீருவன்’ என்று திடமாக
எண்ணியிருந்தாலும், எம்பெருமான், ‘இந்தஜீவனை இரட்சித்தே தீரவேண்டும் என்று எண்ணாது இருப்பின், இவன் நன்மை பெற இயலுமோ? இயலாதன்றே? இதுபோன்று
பாவத்தினின்று விடுவிப்பதிலும், எம்பெருமான் இவனை விடாது இருத்தல் மிகவும் முக்கி
யமானதன்றோ ?
இங்கு,”உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தைபிரானே” என்னும்
திருமங்கை மன்னன் திருவாக்கும் அனுபவிக்கத்தக்கதாம் .-உண்மை இவ்வாறு இருத்தலின், கண்ணன் வார்த்தையிலும், இராமபிரான் வார்த்தைக்கு ஏற்றம் உண்டு என்பது தெளிவாம்.
இதுவரையில், “மித்ரபாவேந்” என்னும் இவ்வார்த்தையின் சீர்மையைச் சிறிது கண்டோம். இனி,இவ்வார்த்தையின் கருத்தைச் சுருக்கமாய்க் காண்போம் :
நம்பத் தக்கவன் செயலாலே நம்மை நெருங்கி வந்த இவ்விபீஷணனை ஒரு படியாலும் விடஊஹை கூடச் சிறிதும் நமக்கு இல்லை; இவ்விபீஷணனுக்குக் குற்றம் இருந்தாலும்,இவன் நினைத்த காரியம் பெற்றானா கிறான். இவனை ஏற்றுக் கொள்ளுதல்,பெரியோர்களுக்கு நிந்திக்கத் தக்கதாகாதாம்” என்பது, மேற்கூறிய வார்த்தையின் கருத்தாம்.
இவ்வாறு இராமபிரான் தன் இயல்பை இயம்பியிருந்தும், பொங்கும் பரிவு பெற்றிருந்
துள்ள ஸுக்ரீவன், தெளிவு சிறிதும் இன்றி,-அவ் இராமபிரான் முன்னிலையில் “விபீஷணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் அல்லன்” என்பதைச் சில முறைகளைப் பின் பற்றிக் கூறி
யிருக்கிறான். அக்கூற்றிற்கு இராமபிரான் விடை அளிக்குங்கால். அப்பிரான் திருவாக்கி
லிருந்து அவதரித்ததும், “மித்ரபாவேந என்னும் வார்த்தை போன்று மிகச் சீர்மையுற்றதும், எல்லாச் சேதனருக்கும் நன்மையை உண்டு பண்ணுவதுமான வார்த்தை வருமாறு

(ஸக்ருதேவ ரபந்நாய தவாஸ்மீதிசயாசதே |அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வரதம் மம1
என்பதே அவ்வார்த்தையாம்.-(இவ்வார்த்தையின் கருத்துக் காணும் போது. ஸக்ரீவன் கேள்விகளுக்கு இராமபிரான்விடையளித்திருக்கிறதாய் நாம் காணுதல் நன்றாம்.
ஸுக்ரீவன், இராமபிரானை நே க்கி இராம! நீ புருஷோத்தமன்; உன்னை முறையுடன் உபாயமாய்ப் பற்றியிருப்போனை விட்டிடாது காத்தல் உனக்குரிய தருமமேயாம். சாஸ்திரம், ‘சரணாகதியை ஒருகால் செய்தல் நன்று; பலகால் செய்யலாகாது’ என்று இயம்பியிருக்கின்றது. இவ்விபீஷணனோ, சாஸ்திரம் கூறும் முறையைப் பின்
சரணம் கா: / பவந்தம் சரணம்கத: / பாதயோச்சரணாவேஷநிபபாத ) என்று முக்
கால் சரணம் பற்றியவனன்றோ? ஆதலின், இவன் ஏற்கத் தக்கவனல்லன் எனறு கூறினன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை :
“(ஸக்ருதேவ) இவ்விபீஷணன் முறை வழுவாது ஒருகால் நம்மைப் புற்றியவனே
ஆவான்; எங்ஙனம்? என்னில், இராவணனால் மிகவும் அவமதிக்கப்பட்ட விபீஷணன் நம்மை
நோக்கி, நான்கு இராக்கதருடன்,ஆகாசத் தில் கிளம்பிய போதே, நீங்கள் அவனைச் சத்துருவாய் எண்ணிக் கலங்க, உங்களுக்கு அக்கலக்கம் போக வேண்டும் என்று அவன் எண்ணி,’என்னைச் சத்துருவாய் எண்ணலாகாது நான் இராமனைச் சரணம் பற்ற வந்தனன்”’
என்னும் உண்மையை உங்களுக்கு உணர்த்திய வார்த்தை, “ராகவம் சரணம் கத” என்பது.
உங்கள் வார்த்தையினால், நாமும் கலங்கினோமோ? என்று ஐயம் கொண்டு,நம்மைத்
தெளியப்பண்ணச் சொன்ன வார்த்தை,
பவந்தம் சரணம் கத:” என்பது. உண்மையில் முறை வழுவாது நம்மைச் சரணம் பற்றும் போது உள்ள வார்த்தை“பாதயோச் சரணான்வேஷ நிபபாத ” என்பது. ஆதலின், இவன் ஏற்றுக்கொள்ளத்தக்கவனேயாம். . இதைச்செவி மடுத்த ஸு க்ரீவன், மேலும் வினவியதாவது:-இவ்விபீஷணன் தேவரீரைச் சரணம் பற்றியிருப்பவனல்லன்; ஏன்? எனில் “வதம் செய்யவேண்டும்” என்று எங்கள் கூற்றைக்கேட்டு வெருவி, போகநிற்கிறவனன்றோ?
இவன். ஆதலின்,இவன் ஏற்கத் தக்கவனல்லன்”
இதற்கு இராமபிரான் விடையாவது:‘(ப்ரபந்நாயைவ) நாம் இவ்வாறு இவனை
ஏற்றுக் கொள்ளுதல் முறையோ, முறையன்றோ? எனத் தடுமாறுதல் போன்று இராது.
உறுதியுடன் நம்மைப் பற்றியே இருப்பவன் காண், இவன்”.-இதைச் செவியேற்ற ஸுக்ரீவன், இவ்விபீஷணன்,தேவரீரையே மிகச் சிறந்த நன்மையாய்க் கருதாது, இலங்கையைப் பெற
விரும்பி வந்தவனன்றோ? –த வரீருக்கு த்தொண்டனான திருவடியுமன்றோ? “ராஜ்யம்
ப்ரார்த்தயமாநச்ச” என்று இவ்விபீஷணனுக்குள்ள நிலைமையை (இலங்கையில் விருப்
புற்றிருக்கும் இயல்பை)த் தெளிவாய்க்கூறி,தன் கொள்கையை முன்னம் வெளியிட்டிருக்
கின்றனன். ஆதலின், இவன் ஏற்கத் தகுந்தவனல்லன்’ என்றனன்.
இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை : “( தவாஸ்மீதி ச யாசதே.)திருவடி இராவணன் முன்னிலையில், நம் சிறப்புக்களை கூறுங்கால், அவ் இராவணன்
அவற்றைப் பொறாது, அத்திருவடியைக்கொல்ல, தன் தொண்டர்களுக்குக் கட்டளை
இட்டனன். அந்த ஸமயம் அங்கிருந்த வி ஷணன். தூதனைப் கொல்லலாகாது” என்றுதடுத்தனன். அவ்வாறு தடுத்து, தனக்குச் செய்திருக்கும் நன்மையை உணர்ந்த திருவடி இலங்கையின் அரசுரிமையை விபீஷணனுக்கு அளிக்கவேணுமென்று தான் கருதி “ராஜ்யம் ப்ரார்த்தய மானச்ச “ என்று கூறினனேயன்றி விபீஷணன் அரசுரிகைமயை வேண்டினனோ? இல்லையன்றோ?
மேலும் நம் தம்பியான இலக்குமணன், நம்மைஎங்ஙனம் விரும்பி, நம்மைப் பிரியாது
நம்முடன் நின்று, நமக்கு மனமகிழ்ச்சிஉண்டாகுமாறு நம்மையே மிகச்சிறந்த பயனாகப் பற்றியிருக்கின்றனனோ,அங்ஙனமே இவ்விபீஷணனும், நம்மையே மிகச்சிறந்த பயனாக விரும்பி நமக்கே ஆட்செய்ய வந்தவன் காண். (தவ,ச, அஸ்மி இதி யாசதே என்று பதங்களைக் கூட்டி, ‘ச’ என்னும் சொல்லை,ஏகாரப்பொருளில் கொண்டு நோக்கின், ” இராமபிரானாகிய உனக்கே அடிமையாக இருக்கிறேன் என்று விரும்புகின்றவன் பொருட்டு” என்னும்பொருள் இங்குக் கிடைக்கிறதன்றே?)
இதைக் கேட்ட ஸுக்ரீவரின் மேலும்இராமபிரானை நோக்கி, இராமா! விபீஷண னுடைய சரணாகதி. முறை வழுவியது’ என்னும் என் கூற்றுக்கு நீ விடை கூறினாய் நீ அவனுக்கு அளிக்கும் பயன் தான் யாதோ?என்றனன்.
இதைத் திருச்செவியேற்ற இராமபிரானும், “தேவர் மனிதர். முதலிய எல்லா ஐந்துக்
களினின்றும், பயத்தைப் போக்கி, நன்மையைச் செய்வேன் எனக்கூறி, ! இவ் வுலகிலுள்ளார் அனைவருக்கும்துன்பம் துடைத்து இன்பம் தருதல்,நமக்கே உள்ளதொரு தருமமன்றோ! ஸுக்ரீவ ! இதை நீதலைக்கட்டித் தருதல் நன்றாம்” என்றும் கூறி
யிருக்கின்றனன். (அபயம் ஸர்வ பூதேப்ய; ததாமி ஏகத்வரதம் மம).இவ்வாறு, தன் திடமான ஸங்கல்பத்தை இராமபிரான் வெளிப்படுத்திய இடத்தும் ஸுக்ரீவனுக்குக் கலக்கம் தீர்ந்திலது.அத்தருணம் தன் மிடுக்கையும் அவன் நெஞ்சில் படுமாறு. கலக்கம் தீர்வதற்குக் கூறியிருக்கிறான் 🙁பிசாசாந்தாநவாந்யஷாந் ருதிவ் யாம்சைவ ராக்ஷஸாந் |
அங்குள்யக்ரேணதாந் ஹந்யாம் இச்சன் ஹரிகணேச்வர| ) என்பது, அம்மிடுக்கைக் கூறிய வார்த்தையாம்.
இதின், கருத்து : ‘ ஸுக்ரீவ!பிசாசங்களையும். அஸுரர்களையும் இயக்கர்களையும்,
இப்பூமியிலுள்ள அரக்கர்களையும் இவர்களனைவரையும் அழியச் செய்யுமிடத்து, தம் பலம்
எல்லாம் வேண்டா ; ஆயுதமும் வேண்டா; நம் கைவிரலும வேண்டா; விரல் நுனியே
போரும் . ஆனால். நம் விரோதிகளுடையதிரள் குறி அழியாது இருப்பானேன்? என்னலாம். அருமையாலனறு, செய்யநாம் நினையாமல் இருத்தலே, அங்ஙனம் அத்திரள அழியாது இருததலுக்குக் காரணமாம். உயிர்நிலையிலே நலிந்த இராவணனை நலிய நினைவில்லாமல் இதுகாறும் இருத்தலுக்குக் காரணம்யாதோ? என்று வினவலாம்.இவவிபீஷணனைப் போனறு உயிரோடு தலைவணங்கினால் அவனும் அவனைச் சேர்ந்தோறும் வாழ்நது போகலாமன்றோ? இதுதான அங்ஙனம் இருத்தலுக்குக்காரணம். வாலியை நாம் அடித்துக் கொன்றபோதுதானே கிஷ்கிந்தையின் அரசுரி மையை நீ பெற்றுவானர வெள்ளங்களுக்குஅரசனானது” என்பதாம்.
இங்கு, பின்வருமாறு உண்மை உணரத் தக்கது: எவன் தன் இச்சையினால் இப் பிர
பஞ்சத்தைஆக்கி, அளிதது அழிக்கின்றனனோ,அவனே மிகமிக மேலான தெய்வம்” என்பது
வேதாந்தங்களின் உண்மைக் கருத்தாகும்.-அங்ஙனம் மிகமிக உயர்ந்த தெய்வம் இராம
பிரான என்பதை இவ்வுலகம் உணர்ந்ததேயாம். அந்த இராமபிரானுக்கு, ” இவ் இரா
வணனையும் இலங்கையையும் அழித்தல்” என்பது உண்மையில் ஒரு பொருளோ?
தேவதைகளுடைய வேண்டுகோளுக்குஇணங்கி தன் மேன்மையை, மற்றவர் அறி
யாது இருக்குமாறு, மானிட சரீரம் போன்றுள்ள தன் சரீரத்தினால் மறைத்துக் கொண்டிருக்குமவனும், இராவண வதமான பிறகும்,-பிரமன், சிவன் முதலானோர். இராமா! நீ நாராயணன்’ என்று உண்மையை உணர்ந்து கூறுங்கால், தன்னை மானிடனாகவே கூறிக்
கொண்டவனும், பரதேவதையும் பரமபுருஷ னுமான இராமபிரான், தானாகிய தருமத்தை
நிலைநிறுத்தும் இவ்விடத்து, மித்ர பாவேந் என்னும் வார்த்தை வாயிலாகத் தன் இயல்
பையும், “ஸர்வ தர்மான் ‘ என்னும் வார்த்தை வாயிலாகத் தன் திடமான எண்ணத்தையும் கூறிய அந்த அந்த அளவில் நில்லாது, தன் இச்சையினாலேயே இப் பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழிக்க வல்லவனுக்குஇலங்கையையும் இவ் இராவணனையும் அழித்தல் அருமையாமோ? என்று தனக்கே உரிய தெய்வத் தன்மையையும் வெளிப்படுத்திக்
கூறி, இம் முகத்தால். ‘ஸகரீவனாகிய ஆசரிதனுக்குத் தான் வயப்பட்டிருத்தல்’ என்னும்
தனக்கே உரிய சீர்மையையும் அழியவொட்டாது காத்து தனககுரிய தருமத் தன்மையை
யும் நிலைநிறுத்தி, விபீஷணனையும் வாழ்வித்தஇச்சரிதம் வெகு ஆச்சர்யமானதல்லவா?
இராமபிரான் இவ்வாறு அருளிச் செய்து மேலும் கூறிய வார்த்தை:(ஆநயை நம் ஹரிச்ரேஷ்டதத்தம் அஸ்யா பயம் மயா விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் )என்பதாம்.
இவ்வார்த்தையின் கருத்தையும் முடிந்தபொருளையும் முறையே இங்குக் காண்போம்:
“ஸுக்ரீவனே! தன் வரவை இராகவனாகிய நம்மிடம் தெரிவிக்குமாறு இவ்விபீஷணன், வேண்டிக் கொண்டவனன்றோ? இவன் நெஞ்சாறல் தீர்ந்து நம்மிடம் சேர்ந்தானாவ
தும்.நாம் ஏற்றுக் கொண்டோமாவதும் நீ சென்று அவனை அழைத்து வந்தாலன்றோ?
ஆதலின், அவனை அழைத்து வருதல் வேண்டும். விட வேண்டிய எல்லாவற்றையும் விட்டிட்டு, நம்மைச் சரணம் புகுந்த இவனுக்குநம்மால் பயமின்மையானது அருளப் பெற்றுள்ளது. (இவ்வாறு கூறியதும் விபீஷணனை அழைக்கச் சென்ற ஸுக்ரீவனைக் குறித்து, திரும்பவும் இராமபிரான் கூறியதாவது) விபீஷணனைத் தானே அழைத்து வரும்படி கூறப் பட்டது என்று மீளாதே, இராவணன் தானே யாகிலும் அழைத்துக் கொண்டு வரவேணும், விபீஷணனைக் கைக் கொண்டோமாகில், தன்பக்கல் புண்ணியம் உடையோனை ஏற்றுக்கொண்டோமாவோம்; இவ் விபீஷணனுடன் வந்த இந்நான்கு இராக்கதரும் பிழைத்துப் போருவர் ; வந்தவன் உண்மையில் இராவண னாயிருந்து, அவ் இராவணனை ஏற்றுக் கொண் டாலோ,அப்போதுதான், இராமபிரானாகிய நமக்கு நிறமுண்டாம்; இலங்கையிலுள்ள இராக்கதர் அனைவரும் வாழ்ந்து போருமாறு நோக்கினோமாவோம். நமக்கு வரும் ஏற்றம்முழுவதும் உயிர்த்தோழனான உன்ன தன்றோ?
என்னும், இதுவே மேற்கூறிய வார்த்தையின்உண்மைக் கருத்தாகும்.
இங்கு, ஸுக்ரீவன் இசைந்ததும், இராமபிரான் தானே நேரே விபீஷணனை அழைத்து
ஏற்றுக்கொள்ளாது, ஸுக்ரீவனையிட்டேஅழைத்து வருமாறு ஏவியிருப்பதற்குக் கருதது
யாதோ? எனின், கூறுவோம் :
இராமபிரானுக்கு ‘ஆச்ரிதபாரதந்திரியம்’ என்னும் செல்வம் உண்டு; அதாவது,
தன்னைப் பற்றியவனுக்கு வயப்பட்டிருத்தலாம்” என்று இக்கட்டுரையில் அடிக்கடி கூறி
வருகிறோம் அல்லவா ? தானே விபீஷணனைஅழைத்து ஏற்றுக்கொள்ளும்போது, அச்செல்
வம் இவன் பால் நிலைபெற்றிருக்குமோ ? அழிந்து விடாதோ? ஆதலின், ஸுக்ரீவனை இட்டே அழைத்து ஏற்றுக் கொண்டனன்.-இது நம் ஆசாரியர்களாலே இங்கு ஸமாதானமாய்க்கூறப் பெற்றுள்ளதொரு உண்மைக் கருத்தாம்.
மேலும், விபீஷணன் இராமபிரானிடம் அளவற்ற அன்பு உடையவன். அவ்விபீஷண
னைக் கொல்லவேண்டும்” என்று ஸுக்ரீவன் கூறியது, அவ்வாறு கூறிய ஸுக்ரீவனுக்குப்
பெரிய பாவமன்றோ ? ” தன்னை விட்டிட்டு, தன் அடியார் திறத்தில் அன்பைச் செய்தல்நன்றாம் என்பதும், “அங்ஙனம் அன்புசெய்யாது இருத்தல், பெரிய பாவம்” என்பதும்,
” அப்பாவம் உள்ளவன் மாத்திரமேயன்றி, அவனோடு தொடர்பு பெற்றிருக்கும் இப்பிர பஞ்சமும் அழிந்துவிடும்” என்பதும் பரமபுரு ஷனாலேயே கூறப்பெற்றுள்ள உயரிய உண்
மைக் கருத்துக்கள் அல்லவா?உண்மை இங்ஙனம் இருக்க, ஸுக்ரீவன்,
விபீஷணனைக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருப்பது மிகமிகப் பெரிய பாவமன்றோ?
இராமபிரான, ஆச்ரிதரிடம் மிக்க அன்பு பெற் றிருப்பவனாதலினாலும், ஸு க்ரீவன் அவ் ஆச்ரிதருள் ஒருவனாதலினாலும், அந்த ஸுக்ரீவன்பாவம் தீர்ந்து நன்மை பெறுமாறு திருவுள்ளம்பற்றி, அந்த ஸுக்ரீவனையே அழைததுவர நியமித்தருளினான்’ என்பதும் இங்கு ஓாஉண்மைக் கருத்தாகும்.
இன்னமும், இங்கு அறியவேண்டுவதோர்உண்மை உண்டு: எம்பெருமானை ஜீவன பற்றும் பற்றுதல், “ஸ்வகத ஸ்வீகாரம்” எனப்படும் எம்பெருமான் ஒரு சேதனனைத்
தனக்குக் காக்கத தககவனாய்க கருதி, அவனே இவனை மேல் விழுந்து ஏற்றுக்கொளளுதல் என்பதை ‘பரகத ஸவீகாரம்” என்று பகருவர். இங்கு,முன்னது 
” (முமுக்ஷர்வை சரணமஹம் ப்ரபத்யே)என்னும் வாக்கியமும்,பின்னதுக்கு,
தேநலப்ய = எந்தச் சேதனனை எம்பெருமான்மேல் விழுந்து விருமபுகின்றனனோ, அவனால்
அப்பெருமான் அடையத் தக்கவனாம்) என்னும் வாக்கியமும் தக்க சான்றுகளாம்.
“ஜீவன் எமபெருமானைப் பற்றுமபோது எங்ஙனம் பிராட்டியாரை முன்னிட்டுப் பற்று
கின்றனனோ,அங்ஙனமே, எம்பெருமானும் ஒரு சேதனனை மேல் விழுந்து ஏற்றுக்கொள்
ளும போதும், பிராட்டியாரையோ, அல்லது, பிராட்டியார்ஸதாநத்தில் உள்ள ஒரு பாகவ
தோததமனையோ, முன்னிட்டே ஏற்றுக் கொள்கின்றான் என்பதும் ஒர் உயரிய
உணமையாகும்இம்முறையை, இந்த இராமயணத்தில் பலஇடங்களில் நாம் காணலாகும். எங்கே?என்னில், கூறுதும்.
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டு, ச்ருங்கி பேர புரத்தில் குகனை ஏற்றுக்கொண்
டிருத்தலை, நாம் காணலாம் 🙁குஹேந ஸஹிதோராம 🙂 என்னும் வாக்கியம் இங்குக் காணத்
தக்கது. இல்வாக்கியத்தில், “குஹன் இராமபிரானோடு சேர்ந்தனன்” என்று கூறப் பெற்றிலது; ‘இராமபிரான் குஹன் இருக்குமிடம்எழுந்தருளி அக்குஹனோடு சேர்ந்தனன்”
என்றே கூறப் பெற்றுள்து. இதனால், எம்பெருமான், சேதனனை அவனிருக்குமிடம்
எழுந்தருளி மேல் விழுந்து ஏற்றுக் கொள்கி றான்‘ என்பது தெளிவு.
இங்ஙனம் ஏற்றுக் கொள்ளும் போது,
ஸீதாபிராட்டியாரை முன்னிட்டே ஏற்றுக்கொண்டனன், இராமபிரான்‘ என்பதை
திருமங்கை மன்னன், “மாழை மான் மடநோக்கி” என்னும் வாக்கியத்தினால் அருளிச்
செய்திருக்கிறார்; காணலாம்.
இந்தக் குஹன் சரிதம் போன்றே, இவ்விபீஷணன் சரிதமும் உள்ளது. (விபீஷணே நாசு ஜகாம ஸங்கமம்) என்பது இங்கே வாக்கியம், இவ்வாக்கியத்திலும் இராமபிரான் விபீஷணனோடு சேர்ந்ததாகவே கூறப் பெற்றுள்ளது.
இங்கு ஸீதாபிராட்டியார் ஸ்தாநத்திலுள்ள ஸுக்ரீவனை முன்னிட்டு விபீஷணனை இராம
பிரான் ஏற்றுக் கொண்ட இவ்வுண்மை,
“ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்னும் வார்த் தையில் தெளிவு.
ஆனால் “ஜீவாத்மா எம்பெருமானைப் பற்றும்போது, தான்,குற்றக்கடலாயிருக் கின்றமையின், பிராட்டியாரை முன்னிடுகிறது, அக்குற்றங்களைப் பொறுத்தற்கு என்னலாம்.எம்பெருமான் சேதனனைத் தனக்குத் காக்கத் தக்கவனாகக் கருதி, மேல் விழுந்துஏற்றுக்கொள்ளும் போது பிராட்டியாரையோ, அல்லது அந்த ஸ்தாநத்தில்
உள்ளஒரு பாகவதோத்தமனையோ,முன்னிடுதல், எப்பயனைக் கருதியோ ? இவ் எம்பெரு
மானுக்குக் குற்றம் சிறிதும் இல்லையன்றே?”எனச்சிலர் இங்கு ஐயமுறக்கூடும்.
இதின் பரிஹாரம் :
எம்பெருமானுக்கும் குற்றம் உண்டு; அக்குற்றம் யாதோ? எனில், எம்பெருமானுக்கும்
சேதனனுக்கும் உள்ள தொடர்பு என்றும் உள்ளது ; ஒழிக்க ஒழியாதது. இவ்வாறான
தொடர்பையும், தன்னுடைய நீர்மைக்குணங்களையும் இது வரையில் பாராது, இச்
சேதனன் செய்த குற்றங்களையே கண்டு,இவனை விலக்கி ஸம்ஸாரத்தில் வைத்திருந்
தானாதலின், இப்போது மேல் விழுந்து ஏற்றுக்கொள்பவ னாயிருந்தும், இவ் எம்பெருமானை இச்சேதனன் வெறுத்து விலகக்கூடுமன்றோ ? இவ்வாறு விலகாது இச்சேதனன் தன் வயத்திலே வரவேண்டி எம்பெருமானுக்கும் பிராட்டியாரையோ அவர் ஸ்தாநத்தில் உள்ள வரையோ முன்னிடுதல் இன்றியமையாததாம்.
இங்கு ”இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் என்னுமிடம் அபயப்ர தானத் திலும் காணலாம். இருவர் முன்னிடுகிறதும் தந்தாம் குற்றங்களைச் சமிப்பிக் கைக்காக.
என்னும் பிள்ளைலோகாசார்யர் திருவாக்கு-அனுபவிக்கத் தக்கது.
இவ்வாறு இராமபிரான் விபிஷணனை நேரே ஏற்றுக் கொள்ளாது, ‘ஸு க்ரீவனை அழைத்து வா’ என்று அருளிச் செய்திருப்ப தற்கு, பல உண்மைகளைக் கண்டோம்.
இவ்விடத்து, ஸுக்ரீவன் இராமபிரான்நியமனப்படி அழைத்து வர விபீஷணனும்
வந்து, அவ் இராமனைக்கிட்டி, வணங்கிவாழ்ந்துபோனான் என்பது சரித்திர உண்மை.
இங்கு, எம்பெருமானாகிய தருமம் நிலை நிறுத்தப் பட்டிருத்தலையும் கண்டோமல்லவா?
ஆக, ” திருமகள் கொழுநனான எம்பெருமான், இவ்வுலகில் செய்தருளின திருஅவதாரங்களுள் இராமாவதாரம் மிகச் சிறந்தது”‘என்பதும், அங்ஙனம் அவ் எம்பெருமான்திருவவதாரம் செய்தபோது, அவனைக் கூறும் வேதமும், வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாகத் திரு அவதாரம் செய்திருக் கிறது’ என்பதும், ” அந்த இராமாயணம் மிக்க சிறப்பு பெற்றுள்ளது ” என்பதும், ”வீடு பேற்றை விரும்புகின்றவன் அவசியம் அறிய வேண்டும் பொருள் ஐந்து; அவை பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோ தி, உபாயம் என்பன” என்பதும், “ நாராயணன் பரமாத்மா, ” அப்பரமாத்மாவிற்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன் ஜீவன்’ அப்பரமன் திருவுள்ளம் உ க்குமாறு
அடிமை செய்தலே வீடுபேறு என்னும் உபேயம் அப்பேற்றைஇதுவரையில் இந்த ஜீவன்
அடையப் பெறாது தடை செய்யும் அஜ்ஞானம் முதலியன விரோதி’ ” இவ்விரோ தி
போவதற்குத் தக்க ஸாதனம் பக்திப்ரபத்திகள்’ என்று வேதாந்தம் கூறுகின்றது ” என்பதும், “வேதத்தின் திரு அவதாரமான இராமாயணமும், வேதாந்தம் கூறுகின் றவாறு ஐம்
பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்றது’என்பதும், “ வேதாந்தம் மாத்திரம், தான்மிகச்சிறந்த பிரமாணமாயிருந்தும். இவ்ஐம் பொருளையும் கலக்கம் சிறிதும் இன்றி அறிவிக்க மாட்டாதாதலின், அவ்வேதாந்தம் மீமாம்ஸா சாஸ்திரம், இதிஹாஸமான இரா
மாயணம் இவற்றின் உதவியை விரும்புகின்றது என்பதும் “மீமாம்ஸா சாஸ்திரம்
செய்யும் உதவி சிறந்ததாயிருந்தும், மேதாவி களுக்கே அது பயன்படும்” என்பதும், ” இரா
மாயணம், பெண்ணுக்கும் பேதைக்கும் விளங்குமாறு, நன்கு உதவி புரிகின்றது” என்பதும், இவ் இராமாயணம் மேற்கூறிய ஐம்பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்ற
தாயிருப்பினும், சரணாகதி என்னும் உபா யத்தையே விளக்கிக் கூறுவதில் அது மிக்க
நோக்குடையது என்பதும், “இதனாலேயே சரணாகதி சாஸ்திரம் ‘ என இராமாயணம்
பெயர் பெற்றிருக்கிறது’ என்பதும், ” சரணாகதி தருமத்தைப் பற்றிய பல உண்மைகளை
இராமாயணம் அந்த அந்த இடத்தில் விரிவா கவும்,தெளிவாகவும், அழகாகவும் கூறுகிறது
என்பதும், இக்கட்டுரையின் பலபகுதிகளிலும் அறியக்கிடக்கின்ற ஸாரப் பொருள்கள் என
விளங்குகின்றன அல்லவா? 

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்-யுத்த ஸ்கந்தம்- -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

October 6, 2024

1-2-கடல் தாண்டுதல் பற்றி வானரங்கள்-சொல்வதும் ராம லஷ்மணர் முதலிகளை ரக்ஷிப்பதும்
3-5 விபீஷணன் சரணாகதி
6-7-8-சேது பாலம் நிர்மாணம்
9-22- ராம ராவண யுத்த வர்ணனை
23-27- சீதா ராமன் சேர்த்தி
28-32-அயோத்திக்கு திரும்புதல்
33-37-பட்டாபிஷேகம்

————

த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம்
கம்பீரம் விபுலம் கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –
-1-

த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம் -அச்சம் தரும் அலைகள் மோதும்
கம்பீரம் விபுலம் -கடல்
கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச –குட முனிவர் -அகஸ்தியர் கூட்டி வந்து கடலைத் தாண்டலாமே
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ -இந்தக்கடலையும் குடித்தால் கடலை வற்றலாமே
பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே -காலாலே நடந்து போகலாமே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –வானவர்கள் இவ்வாறு சொல்ல வளர்ந்த புன்னகை

வானரங்களும் வேதம் அறிந்ததை நினைத்து புன்னகை
மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிக்கு குறு முனிவர்
தடைகள் நீக்கும் ஸ்லோகம்

——–

நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி வாம் ரக்ஷணே ஜாக ராமே
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந
-2-

நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி -ராஜகுமாரர்கள்
வாம் ரக்ஷணே ஜாக ராமே -நாங்கள் விழித்து இருந்து ரக்ஷிக்கிறோம்
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே -இivarkalஇவர்கள் தூங்க
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத -நீங்கள் இருவரும் -உறங்கா வில்லியும் நீயும் ரக்ஷித்து
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந -இருந்த புன்னகை-கடற்கரை வெளியை நினைத்து த்யானிக்கவே பேறு கிட்டும் அன்றோ

இலங்கையை அழித்த கூர் அம்பன் அல்லால் இலை துணை
நடமாடும் மதிள் சுவர் போல் ரக்ஷிக்கும் பெருமாள்-

———-

ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே ரஷா ப்ரதீஷே ஸ்திதே
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம்
–3-

ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே -உன்னைத் தேடி விபீஷணன் வர
ரஷா ப்ரதீஷே ஸ்திதே -காக்க ப்ரார்த்தனை
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ -அண்ணனை கை விட்டு வந்தவன்
விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே -நம்பலாமா
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே -இவ்வாறு ஸூக்ரீவன் சொன்னதைக் கேட்டு புன்னகை -தேவர்கள் குணம் கொண்டவன் -இந்திரன் தவம் கலைப்பவன் தானே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம் –ஸூர்யன் -அம்சம் ஸூக்ரீவன் -இதனாலே தான் பக்தனை ஏற்றுக் கொள்ளாமல் -இருக்க பரிந்துரை
எவ்வளவு தடை பண்ணினாலும் ரக்ஷிக்காமல் விட மாட்டேன்
உறுதியின் வெளிப்பாடே புன்னகை

——–

ஸாதூ ராவண ஸோதரோ ரகுபதே தஸ்மாத் ஸ பால்யோ ஹி நஸ்
சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர் வித்யா ஜனிம் யாம் ஸூதே
ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் சாதயேத்
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம்
–4-

ஸாதூ
ராவண ஸோதரோ ரகுபதே
தஸ்மாத் ஸ பால்யோ ஹி
நஸ் சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர்-இவ்வாறு திருவடி சொன்னவாறே
வித்யா ஜனிம் யாம் ஸூதே ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் –தப்பான முறையில் கணக்கு போட்டாலும் விடை சரி யானதே
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் -இதனால் வளரத்த புன்னகை -சரணாகதனை ஏற்க வேண்டும் –

———-

த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ்
ஸூக்ரீவ ஸூர ஸூநு சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம்
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ
-5-

த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் -ஒற்றனாக இருக்கலாம் -கைவிடத் தக்கவனே
தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ் -ராவணன் தம்பி வேறே
ஸூக்ரீவ ஸூர ஸூநு -ஸூர்யனின் மகன் ஸுக்ரீவன் –
சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம் -ராக்ஷஸர்களையும்- வைவஸ்த்தன் யமனும் சூரியனின் மகன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
தனது வீட்டுக்கு வர முரண்பட்டு சொன்னானே
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம் -சிலேடையாக திருவடி சொன்னதைக்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ -கேட்டு வளர்ந்த புன்னகை
யாராக இருந்தாலும் ரஷிப்பான் –
ஆனை காத்து ஆனை வென்று —அத்தானைக் காத்து அத்தானைக் கொன்றான் -பக்தி உடன் இருந்தால் யாரானாலும் கைவிடமாட்டான்-

———-

அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் ப்ரூயா மமேதி த்வயா
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம்–
6-

அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் -கடலைக் கடக்க நல்ல வழி யைச் சொல்லு
ப்ரூயா மமேதி த்வயா -விபீஷணனிடம் கேட்க
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ -உன்னாலே அபயம் அளிக்கப்பட்ட -பட்டாபிஷேகம் பண்ணப்பட்டவன்
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா -கடல் அரசன் இடம் சரண் அடையச் சொல்ல
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம் -கேட்டதும் -சிறு பிள்ளை வார்த்தை -என்று நினைத்து புன்னகை
எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் வைத்யம்-கருணைக் கடல் கருங்கடலை நோக்கி சரண் -தர்ப்ப சயனப் பெருமாள்-

————

கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் —
7-

கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்–சமுத்ர ராஜன் மனைவிகள் கங்கை போன்ற நதிகள் மனைவிகள் -உடன் ஸரணாகதி
கங்கை -பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி -இவன் தாசராதி -கொள்ளுப் பாட்டி ராமனுக்கு கங்கை
திருமாங்கல்யம் பார்வையில் படும்படி முன் நிறுத்தி வந்தான்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத -இவ்வாறு சரண் அடைந்த பின்பு உண்மையான சரணாகதன் யார்
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா–கையில் பானம் அமோகமாக இருக்க -எதிரிகள் யார் என்று கேட்டு –
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் –இப்படி லீலை செய்ததால் வளர்ந்த புன்னகை –
தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்கள் ஆகும்-

த்யக்த்வா ஹார மபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம்
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்
–8-

த்யக்த்வா ஹாரமபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ –ஆகாரம் இல்லாமல் கடலை நோக்கி கருணைக் கடல் கிடக்க
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு -சேது பாலம் பூர்த்தியாக முடிந்தால் தான் உண்ணுவேன் என்றும் சபதமும் செய்தான்
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம் -ஆகையால் அணில் சீக்கிரம் கட்ட வேண்டும் என்று த்வரித்து
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -உடம்பு நோவ நனைத்து மணல் ஒட்டும்படி புரள -கைங்கர்யம் நினைத்து வளர்ந்த புன்னகை
மேஸ்த்ரி வேலை -குரங்குகள் சிற்றாள் வேலை

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-

———

ஸர்ப அஸ்தரஸ் லதநம் ஹிரண்மய வபுஸ் தாத்ருஷனாஸா ததா
பூஷா பன்னக கல்பிதா ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம்
-9-

ஸர்ப அஸ்தரஸ் லதநம் -பார்த்ததும் பாம்புகள் அஞ்சி ஓட
ஹிரண்மய வபுஸ் -பொன்மய திருமேனி
தாத்ருஷனாஸாததா =அசாதாரணம் மூக்கு
பூஷா பன்னக கல்பிதா -நாகாபரணங்கள் சூட்டிக் கொண்டு
ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித –ரேகைகsaamavethamசாமவேத கோஷம் -வேதாத்மா விஹஹேஸ்வர
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் –கைகளில் திருவடி ரேகைகள் பதிந்தவையாய் இருக்க i
த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா –பார்த்ததும்
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம் -நீங்கள் யார் என்று கேட்டதும் -புள்ளரையன் என்று ஒவ்வொரு அடையாளமும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தாலும் –கேட்டாயே -உனக்கே சிரிப்பு வந்ததே -அதே புன்னகை
மானுஷ்ய பாவம் -கட்டுண்டது போல் நடிக்க –
மனத்தெளிவு உண்டாக்கும் ஸ்லோகம்

————–

ஹஸ்தான் விம்சதி முத்தரன் பயமபி ப்ராணே ததத் ஸர்வத
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா ஹித்வா ச சஸ்த்ராண் யபி
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்
த்ருப்தம் தேவ கணம் ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம்
–10-

ஹஸ்தான் விம்சதி முத்தரன்-20 கைகளையும் மேல் தூக்கி -ஆயுதங்கள் இழந்தன
பயமபி ப்ராணே ததத் ஸர்வத-எங்கு பார்த்தும் பயந்து -மேல் தேவர்கள் இகழ்வார்களே
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா –பத்து முகங்களும் -மகுட பங்கம் -சவரம் பண்ணினது போல் ஆகவே -அஹங்காரங்கள் அழிந்து
ஹித்வா ச சஸ்த்ராண் யபி –ஆயுதங்கள் எல்லாம் உடை பட்டன
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ -தேரும் உடைய திரும்பி நடந்தே போனான்
த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்-இந்த நிலையைப் பார்த்து
த்ருப்தம் தேவ கணம் -திருப்தி அடைந்தார்கள்
ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம் -இத்தைப் பார்த்து வளர்ந்த புன்னகை

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்-

ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -நஞ்சீயர்-

———–

பவ்லஸ்த்யம் நனு மத்யமம் த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம்
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம்
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ
–11-

பவ்லஸ்த்யம் நனு மத்யமம் -நடுப்பிள்ளையான கும்ப கர்ணனைப் பார்த்தவாறே
த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம் -முதலிகள் பயந்தவாறே
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் -அரக்கன் அல்ல யந்த்ரமே -robo -தான்
த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம் -இப்படி லஷ்மணன் உறுதியுடன் சொல்ல
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச -கீழே கபந்தன் பிடிக்க பயந்த இளவல் பெருமாள் கலங்க வில்லை -பொங்கும் பரிவால் இளவல் கலங்கினான் அங்கு –
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ–லஷ்மணன் வீரத்தை நினைத்து வளர்ந்த புன்னகை -நல்ல மன உறுதி வளரும்

————

விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து
தத் பாணா வத கர்youயோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம்
–12-

விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர -சூர்யன் கும்பகர்ணன் மயங்கிய சுக்ரீவனைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து விந்திய மலையே நடப்பது போல் இருக்க
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து -தனது மகனுக்கு என்ன நேருமோ என்று பதட்டம் அடைய
தத் பாணா வத கர்ண யோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம் -சுக்ரீவன் மயக்கம் தெளிந்து கும்பகர்ணனுடைய காதுகளைக் கொய்து எடுத்தானாம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம் –இதைப் பார்த்ததும் -த்வாபர யுகத்துக்குப் போனது போல் -இதே போல் ஸூர்யன் மகனாக கர்ணன் பிறப்பான் -அவனை அழிக்கும் பொழுது இதே ஸூர்யன் கர்ணன் கர்ணன் என்று கத்துவான் -அதற்கு முன்னோட்டமாக இப்பொழுது -இத்தை நினைத்து புன்னகை-

————

ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம் ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம்மந்தஸ்மிதம் பாது மாம்
–13-

ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம்-தந்தைyentraஏற்ற மகனாக்கி -காது இல்லாதவனாக்கி – விஸ்ர வஸ்கும்பகர்ணனின் தந்தை
ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா -தங்கைக்கு அண்ணனாக்கி -சூர்பனகைக்கு மூக்கு இல்லை -அதே போல் இவன் மூக்கையும் அறுத்து
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ -இவ்வாறு -சொல்லின் செல்வனான -திருவடி சாதுர்யமாகச் சொல்ல
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –லஷ்மணனையும் பார்த்தபடி வளர்ந்த புன்னகை நம்மை ரக்ஷிக்கட்டும்-

———

ராஜா குப்யதி கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் ரிபோ கிங்கரா
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம்
-14-

ராஜா குப்யதி -ராவணன் கோபமாக உள்ளார்
கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது -நம் மேல் தான் கோபமாக உள்ளார்
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம் -நான் சொன்னதை அப்படியே செய்வீர்களா என்று கோபம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் -இறந்த அரக்கர்களை கடலில் போட்டதுக்காக
சஞ்சீவ கரணி சந்தான காரணி போன்ற -மூலிகை வாசனையால் வானரர்கள் உயிர் எழ
கடலில் போட்டதுக்காக அரக்கர்கள் உயிர் பெற வில்லையே
ரிபோ கிங்கரா -எதிரியான ராவணனுடைய கிங்கரர்கள் இவ்வாறு பேச
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -இத்தை வானர முதலிகள் கேட்டு வளர்ந்த புன்னகை-

———-

மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா
வஹ்யந்தீதி முனீஸ்வரா மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்
-15-

மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா வஹ்யந்தீதி முனீஸ்வரா –தேவ மாயை -நாரதர் சீதையை வர்ணிப்பார் -அத்ப்புத சக்தி
மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா -மயனின் பேரன் இந்திரஜித் -அரக்க மாயை
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச -தேவ மாயையான சீதை நலமாக இருக்க அரக்கர் மாயை அழிந்து –
இத்தால் நடக்கப்போகும் தோல்வியையே காட்டுகிறான்
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -நீயே அந்த தேவன்-அத் புத சக்தி வெல்லப் போவதையே இது காட்டும் – -விபீஷணன் சொல்ல வளர்ந்த புன்னகை-

இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத்
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம்-
16-

இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர -இந்த்ராஸ்த்ரம் கொண்டு -இந்ரஜித்தை வென்ற -மேக நாதன் -இயல் பெயர் இந்திரனை வென்றதால் இந்திரஜித் பெயர்
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத் -ராமானுஜ சித்தாந்தத்தில் உண்டே
வைச்வாதிகரணம் -1-2 -இந்த்ரோயம் பெருமாளையே காட்டும் பதம் -ஆளும் -ஆள்கின்ற திருவரங்க செல்வனார் –
அக்னி ஒளி காட்டி முன்னே அழைத்துச் செல்லும் நாராயணனன்
ஆனந்த கண்ணீர் வரவழைப்பதால் இவனே ருத்ரன்
ப்ருஹஸ்பதி -ஆழ்வார் வாக்கை மீட்டுக் கொடுத்த ஆராவமுதன் –
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய -ஜைமினி இவ்வாறு ஸாஷாத்தாக காட்டும் -என்று அருளிச் செய்தார்
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம் –வால்மீகி இந்த அர்த்தை அருளியதால் -ராமன் பெயரைச் சொல்லி இந்திர அஸ்திரம் இத்தை நினைத்து புன்னகை

எல்லாவற்றிலும் இறைவனைக் காணக்கூடிய உயர்ந்த பக்தி நிலையை அருள்வார்-

———

த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் தேவ ரிபோ அன்வேஷணே
கும்பீ ஸூநுப தோத்தரஸ்யமதுபா சத்தே பலம் தாத்ருசம்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம்
-17-

த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் -கண்டேன் ஸீதையை
தேவ ரிபோ அன்வேஷணே -பார்த்ததும் சொன்ன
கும்பீ ஸூநுப தோத்தரஸ்ய -தெற்கில் இருந்து வந்து
மதுபா சத்தே பலம் தாத்ருசம் -மதுவைப்பருகி ஆலிங்கனமும் பெற்று
தெற்கில் உதித்த ஆழ்வார்கள் அருளிச் செயல்களை அறிந்து பகவத் குண அனுபவம் செய்து ஆலிங்கனம் பெறுகிறார்கள்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே -மாயா ஸீதையை கண்டு ஸீதையே இல்லை என்றார் போல்
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம் -மாயாவாதிகள் ஒன்றுமே இல்லையே -குணம் விபூதி இல்லை -இந்திரஜித் தொடர்பால் ஆவது போல் ப்ரக்ருதி மாயையால் -பிதற்றுகிறார்கள் -வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்-இத்தை நினைத்து வளர்ந்த புன்னகை-

——————-

ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன
ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-
-18-

ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே -சிவனும் நானும் ஸாம்யம் -என்று மூல பலத்தை அழிக்க ஸஹ காரி இல்லாமல் செல்லும் பொழுது சொன்னான்
இது எவ்வாறு என்று பார்வதி சிவனிடம் கேட்க
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம் -திரியோதனன்ன மூடனும் முப்புரம் எரித்த வ்ருத்தாந்தம் சொல்கிறான் -அம்பாக ஸாஷாத் நாராயணனே -சிவனுக்கும் ஆத்மாவாக நாராயணன் -தெளிவாக சொன்னான்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் – சரீர சரீரீ பாவத்தால் ஸாம்யம் சொல்லலாமே -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்-
ஸ்மிதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை

——–

ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே தேவா ந ஸக்ருர் தயாம்
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-
19-

ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே -பிராட்டியைத் தேடி விthavirnthதவித்த பொழுது a
தேவா ந ஸக்ருர் தயாம் -எந்த தேவர்களும் நேராக உதவவில்லையே
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா –பெரிய உடையார் -ஆத்மாவாக உதவினாரே -ஆயுஷ்மன் பல்லாண்டு பாடினார் -இந்தன் முஹூர்த்தம் -கடத்திப் போந்தான்
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம் -இப்பொழுது வெல்லப்போகும் சமயத்தில் மாதலியும் தேரையும் கொடுக்கிறான் இந்த்ரன்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -உலகமே ஜெயிப்பவர் பக்கம் இருப்பதே இயற்கை என்று நினைத்து வளர்ந்த புன்னகை-வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். அவமானம் எல்லாம் வெகுமானமாக மாறும்-

———–

யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம்
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம்-
-20-

யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி -20 கண்களாலும் உனது திரு முகத்தைப் பார்த்து
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம் –இந்த அழகிய திருமுகத்தில் நின்றும் சீதையைப் பிரித்தேனே –
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம் -எனது பத்து தலைகளையும் வெட்டி தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்ளட்டும்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம் -இவ்வாறு நினைத்துக் கொண்டே சிசு பாலனாக அடுத்த ஜென்மத்தில் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டு இருந்தானே-

———

மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர்
மந்தே தரம் மங்கல மாத னோது
–21-

மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய-மந்தாகினி யாகிய கங்கையை தலையில் ஏந்திய சிவன் ஸ்துதிக்கப்படும் ராமன்
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து -மண்டோதரி கணவனான ராவணனுடைய தலையை அறுத்துத் தள்ளிய
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர் -மநு குல திலகமான உனது புன்னகை
மந்தே தரம் மங்கல மாத னோது -உயர்ந்த மங்கள பெருக வைக்கட்டும்-

——-

புத்ரோ விஸ்ர வஸோ அபி மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் நஷ்டம் குலம் பஸ்ய தோ
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே–
22-

புத்ரோ விஸ்ர வஸோ அபி -விஸ்வரஸ் பிள்ளை ராவணன்
மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத -நான் இல்லாத பிராட்டி மேல் காமம் கொண்டு அழிந்தான்
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி -சீதா இல்லாத என்னை மட்டும் ஆசைப்பட்டு காது மூக்கு அறுபட்டாள்
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் -தந்தை முனிவராய் இருந்தாலும் தாயார் குணம் சேர்ந்ததால்
நஷ்டம் குலம் பஸ்ய தோ -குலம் அழிய காரணமானார்கள்
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே -அதே குலத்தில் சிரஞ்சீவியாக விபீஷணன் -இருவரையும் சேர்த்து வைத்ததை நினைத்து -மானஸீகமாகப் பிராட்டியைக் கண்டு புன்னகை-

———-

ஸஜ்ஜா கிம் கிமயம் விலம்ப இதி வா ப்ருச்சா ந காசித் க்ருதா
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம்
–23-

ஸஜ்ஜா கிம் -பிராட்டி உடன் வந்து விட்டாளா
கிமயம் விலம்ப இதி -ஏன் தாமதம்
வா ப்ருச்சா ந காசித் க்ருதா -இப் பொழுது எப்படி இருக்கிறாள்
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம் -இப்படி எல்லாம் கேட்க்காமல் -முன்பு அநித்ர இத்யாதி -தூங்காமல் கதறிக் கொண்டு இருந்த இவரா அவர்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா -இவ்வாறு பலவிதமாக திருவடி மனத்தால் சிந்திக்க
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன் ஆகையாலே
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம் -புன்னகையாலேயே பதில் சொல்லி -மாயாவி -திருவடியும் புரிந்து கொண்டார்
அவன் செயல்களை நமது புத்தியால் அறிந்து கொள்ள முடியாதே–மேல் அக்னி பிரவேசம் பண்ணைச் சொல்லப் போகிறான் -மற்றவர்கள் பழிச் சொல் சொல்ல முடியாமல் செய்த செயல் -தனது மேல் பழி வரும்படி யும் -அக்னி தேவதையும் இவளது புனிதத் தன்மையும் காட்டும் படி செயல் அன்றோ –
அக்னிக்குள் இருந்து வந்த ஸீதையையே அபகரித்து இப்பொழுது மீண்டும் அக்னிக்குள் போக வைக்கிறான்
புன்னகைக்குள்ளே பல அர்த்தங்கள் உள்ளன-

————–

ஸ்ருத்வா மத் பருஷம் சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா நாவாரயத் கோ அபி மாம்
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா
லங்கா தாஹ கதேதி மந்த மவதத் தஸ்மை கிமேதத் ஸ்மிதம்-
-24-

ஸ்ருத்வா மத் பருஷம் -கடும் சொல் பேச
சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ -கேட்டு காதைப் பொத்திக் கொண்டு
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா -அக்னி மூட்டச் சொல்ல இவனும் மூட்ட -பாகவத அபசாரத்துக்கு பலன் -இவன் கையாலே மூட்ட லீலை
நாவாரயத் கோ அபி மாம் –வானர முதலிகளும் ஒன்றும் சொல்லாமல் இருக்க
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா -உங்களுக்கு என்னைப் பார்த்து அவ்வளவு பயமா கேட்க
லங்கா தாஹ கதேதி –இலங்கையை எரித்த வரலாறு -ஒரே குரங்கு பதில்
ஸீதை பண்ணிய ஆசீர்வாதத்தால் திருவடிக்கு குளிர -அசோகவனத்தையும் சுட வில்லை
ஸீதையின் கற்பு அத்தையும் சுடுமே
மந்த மவதத் தஸ்மை கிமேதத்–இத்தைக் கேட்டதும் வளர்ந்த புன்னகை

பகலோனுமே விளக்கு போல் ஆவானே இவன் தேஜஸ்ஸால்

————–

விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே
–25-

விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித -விஷ்ணுவே எங்கள் கார்யம் செய்தாயே
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி -தங்கள் கார்யம் ஆனதே நாட்டியம் -ராமனுக்கு நன்றியும் மங்களா சாசனமும் செய்யாமல் இருக்க
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே-சிவன் மட்டும் சக்ரவர்த்தியை வரவழைத்து பெருமாளை மகிழ்விக்க
ராம நாம சங்கீர்த்தன பலனே இது
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே -என்று நினைத்து வளர்ந்த புன்னகை

பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம்
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம்
கைகேயீ மிதிவாதினம் த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்
–26-

பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா –கைகேயி எது சொன்னாலும் செய்த எனது குணமும் உனக்கும் வந்ததா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம் –மானைப் பிடிக்க சொல்ல நீயும் செல்ல -அனைத்தும் நடக்கும் படி ஆனதே
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம் கைகேயீ மிதிவாதினம் -கைகேயியை நெருப்பில் தள்ளி இருக்க வேண்டும்
த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -செய்யக்கூடாது என்று சொல்லும்படி வளர்ந்த புன்னகை
ராமாயணம் வளர அவள் தானே காரணம் -அவளையும் பரதாழ்வானையும் ஏற்றுக் கொள்ள பிரார்த்தித்தான் அன்றோ -புன்னகை இவற்றைக் காட்டும்
அவள் போல் இவனும் இரண்டு வரங்களைக் கேட்டு பிரிந்த உறவுகளைச் சேர்த்து அருளினான் அன்றோ –

———–

ஸர்வே கிம் கபயோ ல சந்தி கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா
தேவைகம் து வினா ஸமே யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச
கிஷ்கிந்தா நகரே ச குத்ர ஸ கதோ த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே
–27-

ஸர்வே கிம் கபயோ ல சந்தி -எல்லா வானரங்களும் மீண்டும் உயிர் பெற்று வந்தார்களா
கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா தேவைகம் து வினா ஸமே -ஒருவர் மட்டும் வர இல்லை -வசந்தன் என்கிற வானரம் இல்லை
யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச கிஷ்கிந்தா நகரே ச -யமபுரத்திலும் சுவர்க்கத்தில் கிஷ்கிந்தையிலும் இல்லை குத்ர ஸ கதோ -எங்கே போனான்
த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே -ரோபோ வயிற்றுக்குள் உள்ளான் -முன்பே கும்பகர்ணனை ரோபோ என்று விபீஷணன் சொல்லி முதலைகளை போர் புரியச் சொன்னான்
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே -கும்பகர்ணனை கடலில் தள்ளி இருந்தார்கள் -அவன் வயிற்றுக்குள் இருந்து மீட்டு வந்தார்களாம்
ஆனந்த புன்னகை-

————

கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய
புச்சம் நாஸ்தி கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ
–28-

கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா -வானர பெண்கள்
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய -உதார மனம் கொண்ட பிராட்டி -உருவம் நன்றாக இல்லையே
புச்சம் நாஸ்தி -வால் கூட இல்லையே
கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா -ஆகவே உருவம் அழகாய் இல்லையே
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

ருமா -ஸூ க்ரீவன் மனைவியும் சீதாப்பிராட்டியும் பேசிக் கொண்டவை

கந்தவ்யம் த்வரயா ருமே –யதி ந கிம் -வஹ்னவ் பதிஷ் யத் யஹோ
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –இத்யேவ ஸீதா ருமா
ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே-
-29-

கந்தவ்யம் த்வரயா ருமே –சீக்கிரம் போக வேண்டும்
யதி ந கிம் -எதனால் த்வரை
வஹ்னவ் பதிஷ் யத் யஹோ -அவன் நெருப்பில் குதித்து விடுவானே
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது -குதித்தாலும் நீ வெளியே வந்தால் போல் வெளியே வருவான்-ராமன் அருளால்
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –ஆனால் இத்தைக் கேள்விப்பட்டால் ராமன் தானே அக்னியில் குதித்து விடுவானே -யார் ரக்ஷிப்பார்
இத்யேவ ஸீதா ருமா ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே -இவ்வாறு பேசிக் கொண்டதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

———–

பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம்
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம்
-30-

பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா –உணவுகளை வானரர்கள் உண்டு கொண்டு இருக்க
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம் -ஸூர்யன் மகனான சுக்ரீவன் சேப்பங்கிழங்கை கையால் பிடிக்க வழுகிப் போக -ஸுக்ரீவனும் குதிக்க
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே -அதைப் பார்த்து -குரங்குகள் குதிக்க –
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம் -அதைப் பார்த்து வளர்ந்த புன்னகை இங்கும் காட்டி அருளுகிறாய்-

——–

ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம்
–31-

ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ -பிராட்டிக்கு பெருமாளுக்கும் பரதாழ்வானுக்கும் நமஸ்காரம் -திருவடி சொல்ல
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி -வாலில் நெருப்பை சந்திரன் போல் குளிர வைத்து அருளினாளே அதற்காக முதலில் பிராட்டிக்கும்
இவ்வாறு தனியாக சந்திக்க வைத்து அருளி பரத பக்தியைக் கண்டு ஆலிங்கனம் பண்ணும்படி வைத்த பெருமாளுக்கும் நமஸ்காரம் l
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்–ராஜ்யத்தை பாதுகா தேவிக்கு ஸமர்ப்பித்து -ஆராதித்து பாதுகையாகவே ஆனான் அன்றோ அவனுக்கும் நமஸ்காரம்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம் -நந்தி க்ராமத்தில் இவ்வாறு திருவடி சொல்ல பிரயாகையில் இருந்தவாறே அத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பக்தனுக்கு மற்றொரு பக்தனை சந்திப்பது ஆனந்தம்-

———–

பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம்
விபதி பதிதான் லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான்
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம்
-32-

பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை -பக்தியுடன் இருந்து விரதமும் இருந்து திருவாராதனம் நன்றாக நடக்கும் படி செய்து அருளினீர்
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம் -திரு உள்ளம் உகந்தான் -இதற்காகவே ராமனுக்கும் சீதைக்கும் அருள் புரிந்தான்
விபதி பதிதான் -பல விரோதிகளை அழிக்க அருள் புரிந்தான்
லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான் -இலங்கை யுத்தம் நாக பாசம் கருடன் மூலம் அருளி –இந்திரஜித் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட சஞ்சீவ கரணி
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம் -இவ்வாறு சீதாப் பிராட்டி பரதனைப் பார்த்து கொண்டாட வளர்ந்த புன்னகை-ஸ்லோகத்தை சொல்வோருக்கு குலதெய்வ பெருமாளின் அனுக்ரஹம் கிட்டும்-

———

கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ்
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம்
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம்
–33-

கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே -எங்களுக்கும் தாய் -வானர முதலிகளின் மனைவிகள் சொல்ல -மனித வடிவம் எடுக்கச் சொல்ல தலையை வாரி விட்டு
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ் -நாரி வடிவம் வால் தலைக்குப் பின்னால் -கிண்டல் பண்ண
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம் -இவ்வாறு பேசிக் கொள்ள -வெட்கத்துடன் தலை குனிய
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை -இந்த ஸ்லோகத்தை சொல்வோருக்கு, குறைகள்கூட நிறைகளாக மாறும்-

————

குப்ஜே த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிமந்விதம்-
-34-

குப்ஜே
த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா -நீ இங்கே இருக்கக் கூடாது -இன்னும் ஒரு கலஹம் பண்ணக் கூடாது
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்-மாட்டேன் -கண்ணாலே பட்டாபிஷேகம் சேவிக்க எனக்கும் ஆசை இருக்கிறது
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம் -நாக்கில் விஷம் -துணியை அடைத்துக் கொள்கிறேன் -பேசாமல் இருக்கிறேன் -அனுமதி தர வேண்டும் -அவளாலே அவளது வாயைக் காக்க முடியாது என்ற எண்ணம் -யா காவாரானாலும் நா காக்க -இத்யாதி
இரண்டு கண் இரண்டு காது இரண்டு மூக்குத் துவாராம்-ஒரே வேலை இவற்றுக்கு –ஒரே வாய் இரண்டு வேலைகள்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிம–இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

நையக்ரோ தகடேன ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத்
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம்
–35-

நையக்ரோ தகடேன -ஆலமரக் குடத்தால்
ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத் -ராஜ ஸூய யாகம் -பண்ணும் பொழுது
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத -அபிஷேகம் நண்பன் பண்ண வேண்டும்
ஆலமரப்பால் முன்பு கொண்டு வந்து ஜடையைத் தரிக்க வைத்தான் முன்பு
மணிமுடி தரிக்க இப்பொழுது-ஆலமரப்பானையால் அபிஷேகம் -பாக்யம்
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம் -கேட்டு வளர்ந்த புன்னகை
இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்-

——–

புச்சம் சேஷ ஸமாந மஸ்ய ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா
ஸோ அயம் மர்கட ஏவ கே கிரிரதோ ஹஸ்தே மஹானைஷ்யத
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ் நம்ரோ அதி ரம்யோ அது னா
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம்
–யுத்த -36-

புச்சம் சேஷ ஸமாந மஸ்ய -ஆதி சேஷன் போல் வாழ்
ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா -திருமேனி வானத்தையே ஆக்ரமித்து
ஸோ அயம் மர்கட ஏவ -அதே திரு முகம்
கே கிரி ரதோ ஹஸ்தே மஹானைஷ்யத -மருந்து மலையையே கையிலே சுமந்து
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ்
நம்ரோ அதி ரம்யோ அதுனா -சிறிய அழகிய வடிவுடன் அவரே இவர் -மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிகப் பெரியது -பெருமாள் பட்டாபிஷேகம் போது சிறிய வடிவுடன் விநயமே வடிவாக எழுந்து அருளி
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம் –அயோத்யை மக்கள் பேச்சைக் கேட்டு புன்னகை
இந்த ஸ்லோகம் கேட்ட நமக்கும் திருவடி போல் கைங்கர்ய ஸாம்ராஜ்யம் கிட்டும்

————

அக்ரே பாதுகயா தயாப் யதிகயா பார்ஸ்வே அபி பூமீ புவா
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ருத்ரயேணா வ்ருதா
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம்
-யுத்த -37-

அக்ரே பாதுகயா -முன்னே ஸ்ரீ பாதுகா தேவி
தயாப் யதிகயா -கருணையில் பெருமாளை மிக்கு இருப்பவள்
பார்ஸ்வே அபி பூமீ புவா -இடப்புறம் ஸீதாப்பிராட்டி
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்–வாயு புத்ரன் -திருவடி ஆதரத்துடன் திருவடித் தாமரைகளைத் தாங்க
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ரு த்ரயேணா வ்ருதா–மூன்று சகோதரர்களும் சத்ர சாமர கைங்கர்யங்கள் செய்ய
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்–அனைவரும் சூழ்ந்து -எட்டு முனிவர்கள் புனித நீர் வர்ஷிக்க
த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம் -அந்தப் புன்னகையுடன் இங்கே எழுந்து அருள

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமன் -எத்தனை ராமனடி -ஸ்ரீ அயோத்யா ராமன் வந்தார் ஐயா-

June 22, 2024

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்…
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்…
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்…
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்!
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்!
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்…
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்!
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன்… எத்தனை ராமனடி?

வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!

ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!!

ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!

ராமன்… எத்தனை ராமனடி!

————-

1-ரகு ராமன் -தான பிரபு

2-கோசல ராமன்

3-தசரத ராமன்

4-ஸூர்ய ராமன் -ராம திவாகரன் -உள் இருக்கும் அறியாமை போக்கும் -ஸீதா தேவியே ஒளி-அநந்யா ராகவே அஹம் பாஸ்கர -ஸூர்ய வம்சம்

5-சந்த்ர ராமன் -ராமசந்திரன் -16 கலைகள் -16 கல்யாண குணங்கள்

6-பால ராமன் -வஸிஷ்டர் இடம் கற்றவர்

7-ரஷக ராமன் -யாக ரக்ஷணம்-கண்ணை இமை காப்பது போல் -இருவரும் ரக்ஷணம்-

8-பாவந ராமன் -அகல்யை -பூதராக்கிய -காகுத்தன் கழல் துகள் -பட்டு -பதித பாவந ஸீதா ராமன்

9-ஸீதா ராமன்-மாலை போல் அனாயாசன வில்லை எடுத்து –
வில் தானே முறிந்து திருவடி ஸ்பர்சம்

10-கோதண்ட ராமன்

——

11-அயோத்யா ராமன் -பூமா தேவி திருக்கல்யாணம்-ராமனைப் பெற்ற குற்றம் இச்சா மோஹ-இத்யாதி

12-ஸத்ய ராமன்-அரசன் -ரசம் இல்லா மன்னன் இயம்பினன் -நின் பணி மறுப்பனோ -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதே

13-வன வாஸ ராமன்–ஜடா முடி தரித்து -ஆலம் பால் -ஆலமரத்தில் இருந்து குகன் கொடுக்க – -குகன் ஸஹ்யம் -திருச்சேறையில் ஸேவிக்கிறோம்

14- பாதுகா ராமன்-யோக க்ஷேமம் இரண்டையும் அளிக்க-இதுவே ரக்ஷை பாதுகாப்பூ பாதுகாப் பூ

—–

15- வேத ராமன் -தண்ட காரண்ய ரிஷிகளைக் காத்து அருளி

16-மாதுர்ய ராமன் -பாத்ம புராணம் -ரிஷிகள் மயங்கி -ஆலிங்கனம் அனுக்ரஹம் பிரார்த்திக்க -கிருஷ்ணன் கோபிகள் –

17-வல் வில் ராமன் -கர தூஷண நிரசனம் அஸஹாய சூரன்-தோலாத தனி வீரன்

18- முகுந்த ராமன் -ஜடாயு மோக்ஷம்-ஆயுஷ்மன் -பத்ரம் தே -விந்தம் முஹூர்த்தம் -அப்படியே திரும்பி வருவாள்-கச்ச லோகம் அநுத்தம

19-ஸூலப ராமன் -ஸபரி தேடி வந்து -தந்த கனி உகந்து -மோக்ஷம் செல்வதை ஸாக்ஷி -ராமன் மனதுக்கு இனியான் -அர்த்தம் தேடி வருவான் -நம்மூருக்கும் வருபவன்

———-

20 தர்ம ராமன்-வாலி வதம் –

21-காருண்ய ராமன் -சுக்ரீவன் மழைக் காலம் -தாரை -லஷ்மணன் -நன்றி கெட்டவன் சடலத்தை பருந்தும் தீண்டாதே –

—————–

22-ஆத்மா ராமன் -தத்வம் உணர்த்தி -இந்திரியங்கள் -தச -ஸம்ஸாரம் பிறவி பெரும்கடல் அசோக வனம் சரீரம் -முக் குணங்கள் விபீஷணன் ராவணன் கும்பகர்ணன்-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –

23-ஸூந்தர ராமன் -கண்டேன் ஸீதையை -ஆலிங்கனம் செய்து அருளி -தன்னையே தந்த கற்பகம் –ஸூந்தரன் -அஞ்சனா தேவி சாத்திய திருநாமம் -பந்தர் ஹிந்தியில் குரங்குக்கு

—————-

24- தர்ப்ப சயன ராமன் -கரும் கடல் நோக்கி கருணைக் கடல் பள்ளி கொண்ட திருக் கோலம்

25-சேது ராமன் -நளன் விஸ்வ கர்மா தேவ சிற்பியின் திருமகன் -நள சேது -என்றே திரு நாமம் -திருவடி துகள் களைத் திரட்டி -நம் கடல் போன்ற பாபங்களை போக்கி

26-வீர ராமன் -வீர ராகவப் பெருமாள் –

27-கோல வில்லி ராமன் –திரு வெள்ளியங்குடி –கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன்-விஜய ராமன் ஜய ராமன் -விஜய ராகவப்பெருமாள் திரு புட் குழி

28-பட்டாபி ராமன் -ராமனுக்கு இடப்புறம் இதில் -உத்சவர் கல்யாண ராமன் வலது பக்கம் சீதை கும்பகோணம் இரண்டு திருக் கோலமும் சேவிக்கிறோம்

—————-

29- ராஜா ராமன்-அசித்வத் பாரதந்தர்யம் காட்டவே மூன்றாம் பிரிவு-தபோ வனம் ரிஷிகள் மதியம் வேத மந்த்ரம் கேட்டே கர்ப்பவதியாக இருக்க -ராமன் திரு உள்ளபடி இருக்கவே தானே சொல்லி –லவகுசர் ஸ்ரீ ராமாயணம் பாட கேட்க ஆசை கொண்டார் –

30-ஸீதா ராமன்-அனுப்பி வைத்தது ராஜா ராமன் -அழுது கொண்டு இருந்தவன் ஸீதா ராமன் –ஸ்வர்ண விக்ரஹம் வைத்து அஸ்வமேத யாகம்

31- ஸந்தான ராமன் -தனது சரிதை கேட்டான்

32-வைகுண்ட ராமன் -பத்ராசல ராமனுக்கு இந்தத் திரு நாமம் –

———————

ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?-கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.

சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.

மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.

முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.

முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.

அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.

முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.

முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.

ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.

இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.

அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கோயில் கட்டுமானப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முதலில் ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டது. ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது

ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ராம் பத் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், ராமர், அனுமரின் உருவப் படங்கள், சிலைகள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்தார், அவருடைய தாத்தா பிரபாகர்ஜி சோம்புரா, அவரது மகன் ஆஷிஷ் சோம்புராவுடன் இணைந்து சோம்நாத் கோயிலை வடிவமைத்துள்ளார். 79 வயதான கட்டிடக் கலைஞர் 1992 இல் நியமிக்கப்பட்டார். வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நாகரா பாணியில் ராமர் கோயில் கட்டப்படுவதாக சோம்புரா குறிப்பிட்டார். கிழக்கில் உள்ள நுழைவாயில் கோபுர பாணியில் கட்டப்படும், இது தெற்கின் கோயில்களைக் குறிக்கும். கோவிலின் சுவர்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைப்படைப்புகளைக் காண்பிக்கும். வடிவம்: மந்திரின் கருவறை எண்கோண வடிவில் இருக்கும், அதே சமயம் கட்டமைப்பு சுற்றளவு வட்டமாக இருக்கும். தளங்கள்: இந்த மந்திரில் 161 அடி உயரம் கொண்ட ஐந்து குவிமாடங்களும் ஒரு கோபுரமும் இருக்கும். 3-தளங்களைக் கொண்ட கோயிலில் ஒரு மையம் – கர்ப் க்ரிஹா – சூரியக் கதிர்கள் ராம் லல்லாவின் சிலை மீது விழும் வகையில் கட்டப்பட்டிருக்கும். இறைவன். கருவறையைப் போலவே, கிரஹ மண்டபமும் முழுமையாக மூடப்பட்டிருக்கும், அதே சமயம் கீர்த்தனையும் இருக்கும் மண்டபம், நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பிரார்த்தனை மண்டபங்கள் திறந்த பகுதிகளாக இருக்கும். சிலை: சிசு ராமர் சிலை 5 அடி உயரம் மற்றும் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. கோவில் மணி: ராமர் கோவிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணி, இந்தியாவில் மணி உற்பத்திக்கு நன்கு அறியப்பட்ட இடமான எட்டாவிலிருந்து கொண்டு வரப்படுகிறது. 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாய்.

அயோத்தி ராமர் கோவில்: காலவரிசை

1528-1529: முகலாயப் பேரரசர் பாபர் பாபர் மசூதியைக் கட்டினார் 1850கள்: நிலத்தில் வகுப்புவாத வன்முறையின் ஆரம்பம் 1949: மசூதிக்குள் ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது, வகுப்புவாத பதற்றத்தை தீவிரப்படுத்துகிறது 1950: பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்ய அனுமதி கோரி சிலையை வழிபட அனுமதி : UP 1961 சிலையை அகற்றக்கோரி மத்திய வக்ஃப் வாரியம் 1986: இந்து வழிபாட்டாளர்களுக்கான இடத்தை மாவட்ட நீதிமன்றம் திறந்தது 1992: பாபர் மசூதி டிசம்பர் 6, 2010ல் இடிக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்று வழிப் பிரிவினை விதித்தது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா இடையே சர்ச்சைக்குரிய பகுதி 2011: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்சி தடை 2016: சுப்ரமணியன் சுவாமி எஸ்சியில் மனு தாக்கல் செய்தார், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோருகிறார் 2019: அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதை எஸ்சி ஏற்றுக்கொண்டு, முழு உரிமையையும் ஒப்படைக்கிறது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு மற்றும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்று இடமாக வழங்க அரசுக்கு உத்தரவு 2020: பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

———

ழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்களை, ‘திவ்ய க்ஷேத்ரம்’ என்பர். இவை மொத்தம் 108. இவற்றுள் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூலகில் தரிசிக்க இயலாதன. ஏனைய 106 திவ்ய ஸ்தலங்களில் அயோத்தி முக்கியமானது. பலரும் அயோத்தியில் இருக்கும் ராம ஜன்ம பூமிதான் ஆழ்வார்களால் பாடப்பட்டது என நினைப்பர். ஆனால், உண்மையில் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது அம்மாஜி மந்திர். ‘மதறாஸ் மந்திர்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. அயோத்தியில் வசிப்பவர்கள் பலருக்குமே இந்த ஆலயத்தைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. அயோத்திக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் காணவேண்டிய திருத்தலம் இது.

அம்மாஜி மந்திர், நிர்மோச்சன் செள ரஸ்தா அருகில், கொத்வாலி அயோத்தியா காவல் நிலையத்துக்கு எதிர்ப்புற சாலையில் அமைந்துள்ளது. அச்சு அசலாகத் தமிழ்நாட்டு வைணவ ஆலயம் போலவே இது தோற்றம் தருகிறது. மூலவர் ஸ்ரீராமர், தாயார் சீதா தேவி. புஷ்கல விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில்
ஸ்ரீ ராமபிரானின் ஒருபுறம் சீதாபிராட்டியும், இன்னொரு புறம் லட்சுமணரும் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு பரமபத புஷ்கரிணி மற்றும் சரயு நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் என்பவரால் நிறுவப்பட்டது இந்தக் கோயில். இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். வேத இதிகாசங்களில் விற்பன்னராகவும் இருந்தவர். இவர்,
‘ஸ்ரீ சரஸ்வதி பண்டார்’ என்ற ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி, தனது சொத்துக்கள் முழுவதையும் அதற்கே தந்துவிட்டார். அதில் கிடைக்கும் வருவாயிலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அம்மாஜி மந்திர் இருக்கும் இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருந்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கான தனி சன்னிதிகளும் இந்தக் கோயிலில் உண்டு. ஸ்ரீ சடகோபர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

கோயில் அமைந்ததற்கான சுவாரசிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அவர்களின் மனைவி சிங்காரம்மா என்பவரது கனவில் ஸ்ரீராமர் மற்றும் சீதாபிராட்டியாரின் உத்ஸவ விக்ரஹங்கள் தோன்றினவாம். அவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி தலத்தில் அமைந்த ஒரு பாழடைந்த கோயிலில் புதைந்திருப்பதாகக் கனவில் அறியப்பட்டது. அந்தத் தம்பதியினர் உடனே சென்று அங்கே பார்க்க, கனவில் கண்டபடியே கோயிலும் மூர்த்திகளின் திருவுருவங்களும் தென்பட்டிருக்கின்றன.

உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ராமநாதபுரம் மன்னரின் அனுமதியோடு அந்த விக்ரஹங்களை எடுத்து வந்து ஆராதிக்க அயோத்தியில் கோயில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் திருப்பணிகள் முடிவதற்கு முன்னரே பார்த்தசாரதி அய்யங்கார் இறந்து விட, அவரது மனைவியே கோயில் பணிகளை நிறைவு செய்து, நித்ய ஆராதனை சேவைகளையும் உத்ஸவங்களையும் நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது முனைப்பான திருப்பணியால் ஆலயம் உருவானதால், ‘அம்மாஜி மந்திர்’ என்ற பெயரிலேயே இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, இந்த ஆலயத்தை, ‘சேது ராம மந்திர்’ என்று தெரிவிப்பதையும் கவனிக்கலாம்.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கெனவே அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், வேத பாராயண விற்பன்னர்கள் ஆகியோர் திருவல்லிக்கேணியில் இருந்து அயோத்தி செல்கிறார்கள். ஆலயத்தில் தங்கும் வசதிகளும் உண்டு.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வால்மீகி மற்றும் சில ராமாயணங்கள் 

March 19, 2024

கம்பரே ஆதிகவியாகிய வால்மீகியை வணங்கி, வால்மீகியைப் பின்பற்றியே தாம் இராமாயணம் எழுதுவதாகக் கூறியுள்ளார், பாயிரத்தில் –

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

———-

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் 

வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது

கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை.

————

ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

பால காண்டம் மற்றும் உத்தரகாண்டம் இவையிரண்டில் மட்டிலும் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார். இரண்டாம் காண்டம் முதல் ஆறாம் காண்டம் வரை பொதுவிலே தீரம் மிக்க கதாநாயகனாகவும் மனிதனாகவுமே ராமபிரான் காட்டப்படுகிறார். இந்தப் பகுதிகளிலும் சில இடங்களில் ராமபிரான் விஷ்ணுவின் அவதாரமாகக் காட்டப்படுகிறார் என்பது வாஸ்தவம் தான்

—————-

மஹாபாரதத்தில் நான்கு இடங்களில் ராமகதை சொல்லப்படுகிறது

  1. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ராமோபாக்யானம் (ராமகதை)
  2. ஆரண்யக பர்வத்தில் காணப்படும் ஹனுமத் – பீம சம்வாதம் (உரையாடல்)
  3. த்ரோண பர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம் ( பதினாறு ராஜாக்களைப் பற்றிய கதைகள்)
  4. சாந்திபர்வத்தில் காணப்படும் ஷோடசராஜோபாக்யானம்

வனவாசத்தில் இருக்கும் தர்மபுத்ரருக்கு ராமகதை சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் மிகவும் கஷ்டதசையில் இருப்பவர்கள் அது போன்று கஷ்டம் அனுபவித்த வேறு மாந்தர்கள் சுகத்தையும் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என நம்பிக்கை தரும்படிக்காக இந்த சூழ்நிலையில் ராமகதை சொல்லப்படுகிறது. ஆகையால் இங்கு சொல்லப்படும் ராமகதை ராமபட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. ஆயினும் விஷ்ணுவின் அவதாரமாக ராமபிரான் தேவர்கள் துயர்நீக்க அவதரிப்பது சித்தரிக்கப்படுவதும் ராக்ஷஸர்களின் பூர்வ சரித்ரம் சொல்லப்படுவதும் ராமாயண காவ்யத்தின் பாலகாண்டம் மற்றும் உத்தரகாண்டத்தில் சொல்லப்பட்ட பகுதிகளை உள்வாங்கியமையை துலக்குகிறது. இந்த மஹாபாரதமென்னும் இதிஹாசத்தைப் படைத்தவருக்கு, அந்த இதிஹாசம் படைத்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ராமகதை உள்ளது உள்ள படிக்கு விபரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது.

பீம ஹனுமத் சம்வாதத்தில் ஹனுமான் ராமபிரானிடம் ராமகதை புழக்கத்தில் உள்ள வரை ராமபிரான் புவியில் வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக்கொள்வது உத்தரகாண்டத்தில் வரும் நிகழ்வை படம் பிடிக்கிறது.

யாவத்3ராம கதா2வீர ப4வேத் லோகேஷு சத்ருஹன்
தாவஜ்ஜீவேயமித்யேவம் ததாஸ்த்விதி ச ஸோ(s)ப்3ரவீத்
(மஹாபாரதம் – III – 147/37)

யாவத்3ராமகதா2ம்வீர ச்ரோஸ்யே(s)ஹம் ப்ருத்வீதலே
தாவச்சரீரே வத்ஸ்யந்து மம ப்ராணா ந சம்சயா
: (ராமாயணம் – உத்தரகாண்டம் – 39/16) – (கோரக்பூர் பதிப்பின்படி சர்க்கம் ஒத்துப்போகவில்லை)

சாந்திபர்வத்து ஷோடசராஜோபாக்யானம் ராமபிரான் பதினோராயிரம் வருஷம் ஆட்சி புரிந்ததாகச் சொல்கிறது.

த3சவர்ஷஸஹஸ்ராணி த3சவர்ஷசதானி ச
ராஜ்யம் காரிதவான் ராமஸ்ததஸ்து த்ரிதிவம் க3த:
(ம.பா XII – 29-54)

தசவர்ஷஸஹஸ்ராணி தசவர்ஷசதானி ச
ராமோ ராஜ்யமுபாஸீத்வா ப்3ரம்ஹலோகம் க3மிஷ்யதி
( ராமாயணம் – உ.கா – 1/76)

த்ரோணபர்வத்து ஷோடசராஜோபாக்யானத்தில் ராமபிரான் தனது தேசத்தை எட்டு பாகங்களாக விபாகம் செய்து அதனை தன் மகன்களான குச லவர்களுக்கும் தன் தம்பி மார்களுடைய மகன் களிடையேயும் ஒப்படைக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.

இவையாவும் ராமாயண காவ்யத்தில் உத்தர காண்டத்தில் சொல்லப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

——————

ரங்கநாத ராமாயணம்

ரங்கநாத ராமாயணம் என்பது தெலுங்கு மொழியில் கிபி 1300 முதல் கிபி 1310 வரையிலான காலகட்டத்தில் கோனா புத்தா ரெட்டி என்றும் அழைக்கப்படும் கவிஞர் ரங்கநாதரால் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணத்தின் பிரபலமான தழுவலாகும். தெலுங்கில் உள்ள ராமாயணத்தின் நான்கு பதிப்புகளில் இது ராமாயணத்தின் முழு கருப்பொருளையும் உள்ளடக்கியது. ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட அணிலின் கட்டுக்கதையை பெரும்பாலான மக்கள் கேட்டிருப்பார்கள். ரங்கநாத ராமாயணத்தில் தான் இந்தக் கட்டுக்கதை உருவானது. 

ராமரின் வானவர் சேனை இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டும் போது, ​​அவர்களின் முயற்சிக்கு ஒரு அணிலும் தன் பங்களிப்பை அளித்தது. நன்றியின் அடையாளமாக, ராமர் தனது விரல்களால் அதன் முதுகில் மூன்று கோடுகளை வரைந்து அதை ஆசீர்வதித்தார். இந்த பதிப்பு 17,290 வசனங்களைக் கொண்டுள்ளது மற்றும் அறிஞர்கள் மற்றும் பொது மக்களால் போற்றப்படுகிறது.

————-

காகவின் ராமாயணம்

இது அசல் ராமாயணத்தின் பழைய ஜாவானிய கவிதை விளக்கமாகும் மற்றும் ஜாவானிய மக்களால் இந்தோனேசியாவில் கலை வெளிப்பாட்டின் உச்சமாக அறியப்படுகிறது. காகவின் என்பது இந்து சமஸ்கிருத இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட மீட்டர்களைக் கொண்ட ‘காவ்யா’வின் ஜாவானிய பதிப்பாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேடாங் வம்சத்தின் ஆட்சியின் போது இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மூலம் அதன் பிரபலத்தை அளவிட முடியும். அசல் ராமாயணத்தைப் போலல்லாமல், இந்தோனேசியப் பதிப்பில், ஹனுமான் வானரர்களின் ராஜாவாகப் போற்றப்படுகிறார், பாலி அல்லது சுக்ரீவ் அல்ல. 

———————

ரீம்கர்

ரீம்கர் என்பது காவியமான ராமாயணத்தின் கம்போடிய பதிப்பு. ரீம்கர் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் “ராமின் மகிமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ரீம்கர் என்பது கம்போடியாவின் தேசிய காவியம் மற்றும் அதன் பழமையான குறிப்பு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜாதகாவின் கதைகளின் அடிப்படையில் பாறைக் கல்வெட்டுகளின் வடிவத்தில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அசல் ராமாயணத்தைப் போலவே, இது அதே கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றின் கம்போடிய பெயர்களுடன்: ஃபிரே ராமா, நியாங் சேடா மற்றும் க்ராங் ரீப், முறையே ராம், சீதா மற்றும் ராவணனைக் குறிக்கிறது. இது வால்மீகியின் ராமாயணம் போன்ற நீதி மற்றும் விசுவாசத்தின் உலகளாவிய கருப்பொருளைக் கையாள்கிறது. இருப்பினும், ரீம்கரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், ஹனுமான் தனது பயணத்தின் போது சந்திக்கும் தேவதையான சோவன்னா மச்சா போன்ற சில புதிய கதாபாத்திரங்களைச் சேர்ப்பதாகும். 

உலகின் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றான அங்கோர் வாட்டில் ரீம்கரின் காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இந்த முக்கிய கம்போடிய காவியம் அதன் உரை வடிவத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் நடனம்-நாடகம், இசை மற்றும் சிற்பங்கள் போன்ற கலையின் பிற பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளது.

———-

ராமாயணத்தின் பிராந்திய பதிப்புகள்

மேற்கூறிய பதிப்புகளைத் தவிர, இந்தியாவில் காவியமான ராமாயணத்தின் சில முக்கிய பிராந்திய பதிப்புகளும் உள்ளன. கிருட்டிவாசி ராமாயணம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான பெங்காலி பதிப்பு 15 ஆம் நூற்றாண்டில் கிருட்டிபாஸ் ஓஜாவால் இயற்றப்பட்டது. இதேபோல், சப்தகண்ட ராமாயணம் எனப்படும் அசாமிய பதிப்பு 14 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலியால் இயற்றப்பட்டது. கேரளாவில், 12 ஆம் நூற்றாண்டில் சீராமனால் ராமசரிதம் என்றழைக்கப்படும் நீடித்த மலையாளக் கவிதைப் பதிப்பு எழுதப்பட்டது.

 இந்த பதிப்புகளின் உள்ளார்ந்த கதைக்களம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் அதே வேளையில், எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகள் ராமரின் புகழ்பெற்ற கதையை தங்கள் மொழியில் மொழிபெயர்ப்பதை விட, அவர்களின் கலாச்சார சுழற்சியைக் கொடுத்து மறுபரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் தங்கள் தனித்துவமான நுண்ணறிவுகளைச் சேர்த்துள்ளனர், இது இந்த காவியப் படைப்பை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவியது

———-

ஜைன ராமாயணங்கள் :-

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாக டாக்டர் ஜேக்கபி அவர்களுடைய நூலின் வாயிலாகத் தெரிகிறது. மூன்று ஆசிரியர்களின் வெவ்வேறு கதைகளை ஒட்டி இவை சமைக்கப்படதாக ஸ்ரீ ஜேக்கபி கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி, ஸ்ரீ குணபத்ரர் என்ற இருவரின் வெவ்வேறான கதைகள் ஆனாலும் அவையல்லாமல் ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனருடைய வேறான மூன்றாவது கதைகள் ஜின ராமாயணக் கதைகள் .

ஸ்ரீ சங்கதாஸர் மற்றும் ஸ்ரீ ஹரிஸேனர் இருவருடைய ராமாயணக் கதைகள் ஆதிகவி ஸ்ரீ வால்மீகியின் ராமாயணக் கதைகளை பெரும்பாலும் ஒட்டியவை என்றும் மற்ற இருவருடைய கதைகளும் ஆதிகாவ்யமான ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திலிருந்து வேறுபடுவதாகவும் கூறுகிறார். ஸ்ரீ விமலசூரி மற்றும் பிந்தையவர்களது ராமாயணம் ப்ராக்ருதத்திலும் குணபத்ரருடைய ராமாயணம் சம்ஸ்க்ருதத்திலும் இயற்றப்பட்டுள்ளது.

ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. 24 தீர்த்தங்கரர்கள், 12 சக்ர்வர்த்திகள், 9 பலபத்ரர்கள், 9 வாஸுதேவர்கள் மற்றும் 9 ப்ரதிவாஸுதேவர்கள் என்று அறுபத்துமூவர் காலசக்ரத்தில் திரும்பத் திரும்பத் தோன்றி தர்மத்தை நிலைநாட்டுவர் என்பது ஜைனக்கோட்பாடு. வாஸுதேவர்கள் ப்ரதி வாஸுதேவர்களை அழிப்பவர் என்பதும் ஜைனக்கோட்பாடு.

ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். சீதை ராவணனுக்கு மகளாகப் பிறந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளால் ராவணனுக்கு அழிவு என்பதால் ராவணன் பிறந்ததுமே அவளை அப்புறப்படுத்தி விடுகிறான். பின்னாளில் தன் மகள் தான் அவள் என்று அறியாது சீதையைக் கவர்ந்த ராவணனுடன் யுத்தம் நிகழ்கிறது.

ப்ரதி வாஸுதேவனாகிய ராவணன் லக்ஷ்மணன் மீது சக்ராயுதத்தை வீசுகிறான். ஆனால் லஷ்மணன் வாஸுதேவனானதால் அது அவனைத் தாக்கவில்லையாம். வீசப்பட்ட ஆயுதம் அவனைத் தாக்காது அவன் வசமகிறதாம். வாஸுதேவனாகிய லக்ஷ்மணன் தன்னுடைய ஆயுதத்தால் தாக்குவதன் மூலம் அழிக்கப்படவேண்டிய ப்ரதிவாஸுதேவனாகிய ராவணன் அழிக்கப்படுகிறான். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ……..ஜைன சமயம் விதந்தோதும் நற்பண்புகளின் இருப்பிடமாகிய……. பலபத்ரனான ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான்.

மற்ற ஜைன புராணங்களைப் போன்று இந்த ஜின ராமாயணமும் ஒரு ப்ரதி புராணம் ( Anti – Counter – Purana) என்று ஸ்ரீ ராமானுஜன் கருத்துப் பகிர்கிறார். வைதிக சமயத்தில் படைக்கப்பட்ட ராமாயணத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவுக்கு முரணான கருத்துக்களை மறுதலித்துச் சமைக்கப்பட்டது ஜின ராமாயணம் என்று வ்யாசமும் பவுமசரிஅ என்ற நூலின் விவரணைகளும் தெரிவிக்கின்றன.

இதற்கு முந்தையதாகிய ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பகுத்தறிவிற்கு ஒவ்வாததான பற்பல நிகழ்வுகளையும் விவரணைகளையும் உடையதாகவும் அவற்றையெல்லாம் துலக்கி பகுத்தறிவின் பாற்பட்டு சமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ஜைனராமாயணம்.

லங்காபுரியின் மக்கள் நரமாமிசம் உண்ணும் ராக்ஷசர்களாகச் சித்தரிக்கப்படுவதில்லை. அதே போல குரங்கினத்தவர்களாக வானரர்களும் சித்தரிக்கப்படுவதில்லை. இவர்கள் மனிதர்களும் இல்லாது தேவர்களும் இல்லாத வித்யாதரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த ராமாயணத்திலும் கூட விவரிக்கப்படும் சாஹசம் மிகுந்த நிகழ்வுகளின் பாற்பட்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யமான சக்திகளை தம் வசம் உடையவர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். (Courtesy : Dr.Jacobi’s work…….. Chapter 15………Vanaras in reality are a race of Vidyadharas. A class of beings endowed with many supernatural qualities, if not human beings in the correct sense of the term) ஸ்வர்க்கம், நரகம், மறுபிறவி, மோக்ஷம் போன்ற கருத்தாக்கங்கள் இந்த ஜைன ராமாயணத்தில் காணக்கிட்டுகின்றன. பற்பல மொழிகளில் ஆன வைதிக சமய ராமாயணங்களில் விதந்தோதப்படுவதான ஏகபத்னீவ்ரதன் என்ற ராமனுக்கு எதிரான ஒரு கருத்தாக்கமாக ராமனுக்கு 8000 மனைவிகள் இருந்ததாகவும் லக்ஷ்மணனுக்கு 16000 மனைவிகள் இருந்ததாகவும் இவர்களுடையே வம்ச மூத்தவர்களாகிய சகரன் மற்றும் ஹரிஸேனர்களுக்கு தலா 64000 மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

———-

தாய்லாந்து உள்ளிட்ட கிழக்காசிய தேசங்களின் ராமாயணங்கள்:

தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர். தாய்லாந்து தேசத்திய ராமகதை ராமகீன் (Ramakien…….story of rama) என்றும் ராமகீர்த்தி (Ramakirti …… the glory of Rama) என்றும் அழைக்கப்படுகிறது. தாய்லாந்தில் ராமன் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தாய்லாந்தில் விஷ்ணு சிவபெருமானுக்கு அதீனமான தேவனாகக் கருதப்படுகிறார் என்று இந்த வ்யாசம் சொல்லுகிறது.

தாய்லாந்து தேசத்திய ராமகதை கம்பநாட்டாழ்வாரின் ராமாவதாரம் என்ற கதையிலிருந்து கரந்துரையப்படுவதை ராமானுஜன் வ்யாசம் பகிருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்கள். வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் முனிவரான ரிஷ்யச்ருங்கர் கம்பராமாயணத்தில் களைக்கோட்டு முனிவர் என்று குறிப்பிடப்படுகிறார். தாய்லாந்து ராமாயணம் கம்பராமாயாணத்திலிருந்து கரந்துரையப்பட்டதால் அந்த ராமாயணத்தில் இந்த முனிவரின் பெயர் களைக்கோட்டு என்ற பெயரிலேயே காணப்படுவது ஒரு காட்டு. மானுட, ராக்ஷஸ, குரங்கின என்ற படிக்கு ராமகீர்த்தியில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் விவரிக்கப்படுகின்றன என்று வ்யாசம் பகிருகிறது. கதைக்களனைப் பார்க்கையில் ராம ஜனனம் துவங்கி, சீதாராம விவாஹம், வனவாஸம், சீதையை ராவணன் அபகரித்து லங்காபுரிக்கு எடுத்துச் செல்லுவது, ராமராவண யுத்தம், ராமபிரான் அயோத்திக்கு திரும்பி அரசாளுவது, உத்தரராமாயண நிகழ்வுகள் என்று தாய்லாந்திய ராமாயணங்களின் நிகழ்வுப் பட்டியல் நீளுகிறது.

வைதிக சமயத்தைச் சார்ந்த ராமாயணங்கள் விஸ்தாரமாக மனதில் பதியும் வண்ணம் சொல்லும் நிகழ்வுகளாகிய திவ்ய தம்பதிகளின் பிரிவு அதையொட்டிய சம்பவங்கள் பின்னர் அவர்கள் ஒன்றிணைவது என்ற நிகழ்வுகள் தாய்லாந்திய ராமாயணத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களல்ல. மாறாக தாய்லாந்து ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் அதையடுத்து நிகழும் யுத்தம் போன்றவை மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுவதாக வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள், யுத்தத்தில் கையாளப்படும் யுக்திகள் அதில் கையாளப்பட்ட அதிசயத்தக்க யுத்த தளவாடங்கள் போன்றவை தாய்லாந்திய ராமாயணத்தில் வெகு விஸ்தாரமாகச் சொல்லப்படுவதாக ராமானுஜனுடைய வ்யாசம் சொல்லுகிறது. யுத்தத்தைப் பற்றிய விவரணைகள் தாய்லாந்திய ராமாயணத்தில் விஸ்தாராமாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஸ்ரீ சந்தோஷ் தேசாய் அவர்கள் குறிப்பிடுவதை ராமானுஜனின் வ்யாசம் தெரிவிக்கிறது. முற்காலத்திய தாயாலாந்திய சரித்ரம் யுத்தங்களால் வடிக்கப்படும் ஒரு சரித்ரம் என்பது கவனிக்கத் தக்கது. யுத்தங்களுக்கிடையே பிழைத்து வாழ்தல் என்பது அவர்களுடைய அக்கலத்திய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது.

கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ராமரை விட ஹனுமான் என்றும் தாய்லாந்திய ஹனுமான் உறுதியான ப்ரம்மசாரி இல்லையென்றும் பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று ராமானுஜன் வ்யாசம் சொல்லுகிறது. லங்காபுரிவாசிகளின் படுக்கையறைகளுக்குச் சென்று அங்கு துயிலும் தையலார்களைக் கண்ணுறுவதை கம்பநாட்டாழ்வாரோ வால்மீகியோ காட்டும்படிக்கு அல்லாமல் ……… அதார்மிகமாக தாய்லாந்திய ஹனுமான் கருதாதவாறு…….. தாய்லாந்திய ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று வ்யாசம் தெரிவிக்கிறது.

வ்யாசம் சித்தரிக்க முனையும் சில முரண்களைப் பார்க்கையில் தாய்லாந்திய ராமாயணம் அல்லது பல தாய்லாந்திய அரசர்கள் எழுதிய ராமாயணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் பகிரப்படுதல் நன்று என்று படுகிறது.

அவை என்னென்ன?

1. தாய்லாந்திய மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பது ராமனின் கதாபாத்திரம் அல்ல மாறாக ஹனுமனின் கதாபாத்திரம் என்று வ்யாசம் சொல்லுகிறது. தாய்லாந்திய ராமனின் பாத்திரப்படைப்பு வ்யாசத்தில் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அப்படிப்பட்ட ஒரு வெகுஜன மக்கள் திரளின் தலைவனாக சதாப்தங்களாக தாய்லாந்தினை ஆளும் அரசர்களின் பெயர்களில் ஏன் **ஹனுமன்** என்ற விகுதி காணப்படாது **ராம** என்ற விகுதி காணப்படுகிறது என்று சம்சயம் எழுகிறது.

2. ஒரு புறம் தாய்லாந்திய ராமகீர்த்தி மானுட, ராக்ஷஸ மற்றும் குரங்கின என்ற படிக்கு மூன்று கதாபாத்திரங்கள் தாய்லாந்திய ராமாயணத்தில் காணக்கிட்டுவதைக் கவனமாக வகை தொகை சார்ந்து வ்யாசம் பகிருகையில் ஹனுமனை பெண்கள் விரும்பும் மனிதன் (?) (ladies man) என்று வ்யாசம் சுட்ட விழைவதை கவனிக்காது போக முடியவில்லை. இங்கு மனிதன் என்று சொல்லப்படுவதற்கு அர்த்தம் கற்பிக்கலாம் அல்லது சால்ஜாப்பு சொல்லலாம் தான். பின்னிட்டும் ஒரு குரங்கினத்தவன் ladies man என்று சுட்டப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. ஆயினும் ஒரு முழுமையான சித்திரம் தாய்லாந்திய ராமாயணங்களிலிருந்து காய்த்தல் உவத்தல் இல்லாமல் பகிரப்படுவது முறையாகும்.

3. பெயர்களைக் கையாளுதல் என்ற படிக்கு கம்பராமாயணத்திலிருந்து பெரும்பாலும் கரந்துரையப்பட்டது தாய்லாந்திய ராமாயணம் என்று வ்யாசத்தில் ஒரு புறம் பகிரப்படுகையில்……….. கம்பராமாயணம் ராம பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெறுகையில் ……… தாய்லாந்திய ராமாயணம் மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் நிகழ்வுப் பட்டியலை ஒட்டி உத்தரராமாயணத்துடன் நிறைவு பெறுவதையும் கவனிக்காது போக முடியவில்லை. வ்யாசத்தின் சித்தரிப்பினைச் சார்ந்து தாய்லாந்திய ராமாயணம் பெயர்களைக் கையாள்வதில் கம்பநாட்டாழ்வாரைக் கைக்கொள்வதை ஒரு புறம் அவதானிக்கையிலேயே மறுபுறம் நிகழ்வுப் பட்டியலைப் பார்க்கையில் ஆதிகாவ்யமான மரபார்ந்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் அடியொற்றுவது தெளிவாகத் தெரிகிறது. சித்தரிப்பு ஒருவைகயாக இருக்கையில் பகிரப்படும் முடிபுகள் வேறாகக் காணப்படுவது வ்யாசத்தின் சித்தரிப்பு காய்த்தல் உவத்தல் கொண்டதோ என்று சம்சயம் ஒரு புறம் எழுகிறது.

————–

4. கோரக்பூர் கீதாப்ரஸ் என்ற ஸ்தாபனத்தினால் பதிக்கப்பட்ட ஸ்ரீமத் வால்மீகி ராமாயணப் பதிப்பின் ஏழாவது பதிப்பின் பாற்பட்டு ஒவ்வொரு காண்டமும் அதில் காணப்படும் ஸர்க்கங்களின் (அத்யாயம்) எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-

1. பாலகாண்டம் ………………………77
2. அயோத்யாகாண்டம்…………….119
3.ஆரண்யகாண்டம்…………………75
4.கிஷ்கிந்தாகாண்டம்……………..67
5.ஸுந்தரகாண்டம்………………..68
6.யுத்தகாண்டம்…………………….128
7.உத்தரகாண்டம்……………………111  (பிற்சேர்க்கை என்று 2 அதிகப்படி ஸர்க்கங்கள் தனி)

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண யுத்தகாண்டத்து விவரணைகளை முழுதாக வாசிக்கையில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் யுத்த களமும், யுக்திகளும் அதில் உபயோகிக்கப்பட்ட யுத்த தளவாடங்களும் அஸ்த்ர சஸ்த்ரங்களும் வெகு விஸ்தாரமாக ஆதிகவி வால்மீகி முனிவரால் சொல்லப்பட்டிருப்பது துலங்குகிறது. தாய்லாந்திய ராமாயணத்தின் மாறுபாடான கதையம்சமாக வ்யாசம் சுட்டப்படும் கருத்து அப்படி அந்த வாசிப்புக்கேயான ஒரு மாறுபாடான அம்சம் இல்லை என்பது இதன் மூலம் துலங்குகிறது.

இவை மேம்போக்காகத் தோன்றும் சம்சயங்கள் தான். முழுமையான சித்தரிப்பு மற்றும் முழுமையான புரிதல் தாய்லாந்திய ராமாயணத்தை முழுமையாக வாசித்து அறிவதன் மூலம் மட்டிலும் தான் கிட்டும் என்பது திண்ணம்.

தக்ஷிண பாரதத்து நாட்டார் வழக்கியலில் காணப்படும் ராமாயணக் கதைகளில் சில ஆதிகாவ்யத்தை ஒத்தும் சில அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. சில கதைகளில் ஆதிகாவ்யத்துக்கு மாறாக கதாபாத்ரங்கள் தாறுமாறாக சித்தரிக்கப்படுவதும் புலனாகிறது.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –ஸ்ரீ அபூர்வ ராமாயணம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் ––ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள் –

January 22, 2024

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

வைதேஹீ ஸஹிதம் சுரத்ரும தலே ஹைமே மஹா மண்டபே,
மத்யே புஷ்பகமாஸனே மணி மயே வீராஸனே சுஸ்திதம்,

———-

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்-பொன் மானைக் கொல்லல்-சீதா தேவி கடத்தல்–ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு-உரையாடல்-வாலீ அழிவு,-கடல் தாண்டல்-இலங்கை எரிப்பு-பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ஸ்ரீ ராமாயணம்

—————

ஏக ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவ தனுசா க்ருஹீத சீதா ஹஸ்த கரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

—————

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

————

ஒரே சுலோகத்தில் ஸ்ரீ சுந்தரகாண்டம்

யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே

க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ர புஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே

——————

ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
பால காண்டம் –77-சர்க்கங்கள் –2266-ஸ்லோகங்கள்
அயோத்யா காண்டம் –119-சர்க்கங்கள் –4185-ஸ்லோகங்கள்
ஆரண்ய காண்டம் –75-சர்க்கங்கள் –2441-ஸ்லோகங்கள்
கிஷ்கிந்தா காண்டம் –67-சர்க்கங்கள் –2453-ஸ்லோகங்கள்
ஸூ ந்தர காண்டம் –68-சர்க்கங்கள் –2807-ஸ்லோகங்கள்
யுத்த காண்டம் –128-சர்க்கங்கள் –5675-ஸ்லோகங்கள்
உத்தர காண்டம் -111 சர்க்கங்கள் -3373-ஸ்லோகங்கள்
மொத்தம் -645 சர்க்கங்கள் –23200 ஸ்லோகங்கள்

————

ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’
எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ வால்மீகியின் இயற்பெயர் ஸ்ரீ ரத்னாகர்.

ஸ்ரீ திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த ஸ்ரீ வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு
இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து,
ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.

———–

ஸ்ரீ ராம பக்தி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் 
1-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் 
2-ராம பக்தி பட்டாபிஷேகம் 
3-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
4-ஸ்ரீ ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
5-ராம ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
6-பக்தி ஸாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் 
7-ஸாம்ராஜ்ய சாம்ராஜ்யம்பட்டாபிஷேகம்  

ஏழு காண்ட அர்த்தங்களும் இதில் உண்டே

கைங்கர்ய ஸாம்ராஜ்யம் -ராம பக்தி பரதாழ்வான் -குடி கொண்ட கோயி -ராமானுஜர் ஸாம்ராஜ்யம் -அர்ச்சா ஸாம்ராஜ்யம் -மோஷ -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்ய சாம்ராஜ்யம்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது 

ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்-சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன்

ய பிபன்சத்தம் ராம சரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக் கடலை குடித்தும் -போதும் என்று திருப்திஅடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன்

கோயில் இராமானுசன் என்பதற்கு
கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

அடி கண்டு கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

————

ஸ்ரீ அபூர்வ ராமாயணம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

ஸ்ரீ ராமச்சந்திரன் –
கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச்ச வீர்யவான் –என்று தொடங்கி-
16-திருக் குணங்கள்-16-கலைகள் நிறைந்த பூர்ண சந்த்ரன் அன்றோ –
குண பரிவாஹ ஆத்மநாம் ஜென்மநாம் –ஸ்ரீ பராசர பட்டர் – திருக் குணங்களை வெளியிட்டு அருளவே ஸ்ரீ ராமாவதாரம் –

——————

1-கோ குணவான்
கோ குணவான் –
வசீ வதான்ய –குணவான் ருஜு சுசி ஸமஸ்த கல்யாண குண அம்ருதோதி -ஸ்ரீ ஸ்லோக ரத்னம் —
குணவான் -விசேஷ ஸுசீல்ய குணவான் என்றவாறு –
சீல க ஏஷ தவ ஹந்த—அத்ர அவதீர்ய- நநு லோசன கோசரோ பூ — ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -10-
ஆசூரா ப்ரக்ருதிகளுடைய கண்ணுக்கு இலக்கான கட்கிலி அன்றோ -பிறந்தவாறும் -என்று அனுசந்தித்தவாறே மோகிக்கப் பண்ணுமே –
நீராய் நிலனாய் –தாயாய் தந்தையாய் –அனைத்துமாயுள்ளவன் ஸ்ரீ ராமனாக திருவவதாரம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்ம ஸமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம்பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் —
உயிர்த் தோழன் -முன்பே பிடித்த தோழமை –
குகனோடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனோடும் அறுவரானோம் எம்முழையன் பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை — ஸ்ரீ கம்பர்
எந்தை எண்ணாமல் ஸ்ரீ விபீஷண ஆழ்வானது தந்தையாகவே உந்தை –
இவ்வாறு சீல குணம் குகன் சுக்ரீவன் விபீஷணன் இடம் காட்டி அருளி –

மேலே -சபரி இடமும் –நிஷாதாநாம் நேதா கபி குலபதி காபி சபரி -ஸ்ரீ தயா சதகம் –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –
சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜ -என்னும்படியாய் வேடுவிச்சியாய் வைத்தே குரு சுஸ்ரூஷையிலே பழுத்து-ஞானாதிகையாய்
தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன் ஆதார அனுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப் பண்ண
அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் ஸ்ரீ ஸூக்திகள்
சம்யக் -என்பதே நாவுக்கு இனிதாய் இருந்த -என்றவாறு
குகனிடம் நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே -என்று மறுத்த பெருமாள்
இவள் இடம் அர்ச்சிதோஹம் த்வயா பக்த்யா -என்று உகந்து கூறி அவளுடைய சமர்ப்பணையை ஏற்றுக் கொண்டார் –
குரு ஸுஸ்ரூஷையிலே பழுத்த ஞானாதிகை யாகையாலே –
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -இது என்ன நீர்மை -என்று
ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார் ஸ்ரீ தேசிகரும் –

கோயம் குண கதர கோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -என்று
திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பாவையைப் பிரித்த பாவி வஞ்சனாக இருந்தும்
கச்ச அனுஜா நாமி –இன்று போய் நாளை வா என்றதும் இந்த சீல குணத்தைக் காட்டுமே –

சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே வனவாசோ மஹோதய என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ரிஷிகள் பக்கலிலே சென்று தாழ நிற்பது
கிங்கரவ் சமுபஸ்திதவ்-என்பது
ஜென்ம விருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை உகந்த தோழன் நீ -என்பது
இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ தனி த்வயத்தில் –
இவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரை வென்றதம்மா -ஸ்ரீ கம்பர் –

—————————————–

2–க வீர்யவான்
சீலவத்யை நினைத்து நீர்பண்ட மாகும் அவர்கள் இந்த வீர்யத்தை அனுசந்தித்து தரிக்க இத்தை அடுத்து அருளிச் செய்கிறார்
ஜெய ஜெய மஹா வீரன் – ஸ்ரீ ரகுவீர கத்யம்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் அன்றோ
சத்ரோ ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை –யுத்த -106-6-
வீர்யம் -எதிரிகள் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அத்தை கண்டு சிறிதும் அஞ்சாமை –
ஸுர்யம் -எதிரிகளை அனாயாசமாகக் கொன்று முடிக்கும் வல்லமை —
பராக்ரமம் -அப்படி செய்யுமளவில் தனக்கு ஒரு பங்கமும் இன்றிக்கே சகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சார நிற்றல்-
சின்னம் பின்னம் சரைர் தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருசுர் ண ராமம் சீக்ர காரிணம்-என்றும்
தே து ராம சகஸ்ராணி ரணே பஸ்யந்தி ராக்ஷஸா -என்றும்
புன பஸ்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே-என்றும்
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும்தோறும் தித்திப்பான் -என்றும்
வியாபாரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை-
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த வீரம் அன்றோ-அசாஹாய சூரன்
மரணாந்தாநி வைராணி நிவ்ருத்தம் ந பிரயோஜனம் -இவன் ஜீவித்து இருக்கிற நாளிலே
நாம் செய்யும் நன்மையை இவன் விலக்காது ஒழிய வேணும் என்று இத்தனையே பெறப் பார்த்து இருந்தோம் –
அது அந்நாளில் பெற்றிலோம் -நாம் தேடி இருந்த அது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் –
தத் அபிசந்தி விராம மாத்ராத் –அப்ரதிஷேதம் -ஒன்றே வேண்டுவது –
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் சத்யா பராக்ரமம் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ஷட் குணங்கள் -கஸ்தூரி பரிமளம் தான் விகாரப்படாமல்
சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்துவது போலே தானே –
அபி வ்ருஷா பரிம்லாநாஸ் ச புஷ்பாங்குர கோரகா-சேதன அசேதன வாசியற சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்தும் குணமே வீர்யம் –

—————————————————–

3-—க தர்மஞ்ஞ –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–சுந்தர -38–41-
தருமம் அறியாக் குறும்பன் இல்லையே
கருணா காகுத்ஸ்த–
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநுகம்பா ஸ்யாத் அனுக்ரோச அபி -ஏழு பதங்களும் பர்யாயம்
தர்மம் என்பதே கருணை -பர துக்கத் துக்கித்வம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் —
இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்மசரீதவ –
விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-
சரணாகத பரித்ராணமே பெருமாளுடைய தர்மம்
சர்வ அவஸ்த சரத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணைகவ்ரதி தர்மோ விக்ரஹவான் –
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்ய பாலயத் –தேவ்யா காருண்ய ரூபயா —
இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது –
அது இல்லாமையால் ராவணன் முடிந்தான் -தான் செய்யும் பிரவிருத்தியில் இருந்து விலகி நிற்பதே சரணாகதி –

——————————————————

4–க க்ருதஞ்ஞ
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் –
கதஞ்சித் உபகாரணே க்ருதே நைகேந துஷ்யதி நஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா–
லோக நாத புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -பம்பாதீரே ஹநுமதா சங்கதோ வானரேண ஹ என்று
சுக்ரீவன் கட்டளையால் தானே பெருமாள் திருவடி சங்கம் உண்டாயிற்று -அதுக்கு க்ருதஞ்ஞதையாக பெருமாள் –
அதே போலே சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே -என்று தன் இருப்பிடம் தேடி வந்த சிறிய செயலுக்கு
க்ருத்ஞ்ஞதையாக பெருமாள் இஷுவாகு வம்சயராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை-
க்ருதம் ஞானாதி இதி க்ருதஞ்ஞ -அஞ்ஞாத ஸூஹ்ருதம் –
சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற இத்தை ஸூஹ் ருதம் என்று நாம் பேரிடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும்
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -ஆனுஷங்கிக ஸூஹ்ருதம் –ப்ராசங்கிக ஸூஹ் ருதம் –
என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என் அடியார்களை நோக்கினாய் -என் அடியார்களின் விடாய் தீர்த்தாய் –
என் அடியார்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் –
ஆநயைநம் ஹ்ரிஸ்ரேஷ்ட தத்தமஸ்ய அபயம் மயா–
விபீஷனோ வா ஸூக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் -போன்ற இடங்கள் இதுக்கு உதாஹரணம்

—————————————————

5–க சத்ய வாக்ய
உள்ளதை உள்ளபடியே கண்டு சொல்வது சத்யம் என்னாமல்-தான் கண்டபடியே சொல்வது சத்யம் –
கயிற்றை பாம்பு என்று பிரமித்து பாம்பு என்று சொல்வதும் சாத்தியமே -மருள் அடியாக –
தான் கண்டபடியே சொல்வதும் சத்தியமாகாது -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் –
ராமோ த்விர் நாபி பாஷதே –
அன்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யே கதாசன
ஏதத் தே ப்ரதிஜானாமி சத்யே நைவச தே தப -கிஷ்கிந்தா-7-22-/-14-14-
ராமோ விக்ரஹவான் தர்ம –சக்ரவர்த்தி ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி இழந்தான்
அவன் இங்கு இல்லை என்று சொன்ன ததிபாண்டன் தயிர் தாழி க்கும் பேறு பெற்றுக் கொடுத்தான்
சத்யேன லோகான் ஜயதி தீனான் தானேன ராகவ
குரூன் சுச்ருஷ்யா தீரோ தனுஷா யுதி ஸாத்ரவான் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை –

——————————————————–

6–க த்ருட வ்ரத–
விதி தஸ் சஹி தர்மஞ்ஞ –சரணாகத வத்ஸல –
நிஷ்கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தா நாயசசே–அபயப்ரதான சார ஸ்லோகம்
சர்வ அவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷண ஏக வ்ரதீ -தசாவதார ஸ்லோகம்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம்
ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய பிராஹ்மனேப்யோ விசேஷத்தை –ஆரண்ய -10-10-
சத்ருசஞ்ச அனுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மன
ச தர்ம சாரிணீ மே த்வம் ப்ரானேப்யோபி கரீயசி–ஆரண்ய -10–22-
சிபி சக்ரவர்த்தி கதை -இந்திரன் பருந்தாகவும் யமன் புறாவாகவும் -வந்து சோதிக்க
பருந்து சரண் அடைய உடம்பின் தசை அறுத்து கொடுத்து ரக்ஷணம்
கபோத உபாக்யானம்
வ்யாக்ர வானர சம்வாதம் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ தாதாமி ஏதத் விரதம் மம —

———————————————————

7–சாரித்ரேண ச கோ யுக்த
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
இமவ் ஸ்ம முனிசார்தூல-கிங்கரவ் சமூபஸ்திதவ் ஆஞ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவை கிம்
ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச
தம் விநா கைகேயீ புத்ரம் பாரதம் தர்ம சாரினம்-
பரத்வாஜஸ்ய சாஸனாத்
பிதுர்வசன நிர்தேசாத்
விச்வாமித்ரஸ்ய வஸனாத்
அகஸ்ய வஸனாத் சைவ
கர்தவ்யம் தைவமாஹ்நிகம்–வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டர் பெருமாள் -ஆஹ்நிகம் -பஞ்ச மஹா யஞ்ஞாதி அனுஷ்டானங்கள்
ஸ்ரீ கீதாச்சார்யனும் -ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் –வர்த்த ஏவ ச கர்மணி –
வேல்வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
ஸஹ பத்நயா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் –
த்யாயன் நாராயணம் தேவம் –
மைதிலி ரமண வபுஷா ஸ்வேந ஸ்வார்ஹானி ஆராதநாநி அஸி லம்பித
ஏக தார வ்ரதன்

——————————————————–

8–சர்வ பூதேஷு கோ ஹித —
தற்கால இனிமை தான் பிரியம் -பிற்கால நன்மை பயப்பது ஹிதம் –
மேலாய்த் தாய் தந்தையும் இவரே இனி யாவாரே–தஞ்சமாகிய தந்தை தாயோடு தாணுமாய் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் –
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –
கருணா காகுஸ்தன் –
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்தயா கரோதி வை —
கர்மம் அடியாக செய்து மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும்
மாதாவைப் போலே ஹித்பரனாகவே செய்து அருளுகிறார் –

———————————————————————

9–க வித்வான் —
வேத வேதாந்த தத்வஞ்ஞ தனுர்வேதேச நிஷ்டித
சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபாநவான் —
வேதமுரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம்
சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
வித்வான் -சர்வஞ்ஞன் -பகவான் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் –
பச்யதி அசஷூஸ் -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே —
வித்வான் விபச்சித் தோஷஞ்ஞ-துஷ்டனாகையாலே கொள்ள வேணும் -பெருமாள் பக்ஷம்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத கர்ஹிதம் -கைக்கொள்வதற்காக தோஷம் காணும் வித்வான் அன்றோ பெருமாள்
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் வாத்ஸல்ய நிதி அன்றோ –

———————————————————–

10—க சமர்த்த –
இளையவர்கட்க்கு அருளுடையாய் ராகவன் -தம்பி என்றும் இளைத்தவர்கள் என்றுமே சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் அருள்
அங்குல்ய அக்ரேன தான் ஹந்யாம் கிச்சன் ஹரி கணேஸ்வர –
அசமர்த்தம் விஜானாதி மாமயம் மகராலய-கொண்ட சீற்றம் ஓன்று உண்டே கடல் அரசன் மீது –

————————————————–

11–ஏக ப்ரிய தர்சன க –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் அன்றோ
ரமயதி ராம -ரூப உதார குணை -பும்சாத் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி
சந்த்ரகாந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதாரம் செய்வான்
முனிவன் உன்னைப் புக்கு வாயை மறப்பாரைப் போலே
கௌசல்யா ஸூப்ரஜா ராமா-பெற்ற திருவயிற்றுக்குப் பட்டம் கட்டுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
ஒரு நாள் முகத்தில் விழித்தாரை–குகனும் குகப் பரிக்ரங்களும்
தோள் கண்டார் தோளே கண்டார்
வா போகு வா இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ
தருணவ் ரூப சம்பன்னவ்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்
சர்வ பூஷண பூஷார்ஹா
பத்மதள பத்ராக்ஷம் –பத்மதளம் பத்ம பத்ரம் இரண்டையும் ஆழ்வார் அருளிச் செய்தது போலவே
செங்கமலத்தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை திருமேனி அடிகளுக்கே
கிள்ளிக் களைந்தவனே மனத்துக்கு இனியான் போலும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன்
சஷுஷா தவ ஸும் யேன பூதாஸ்மி ரகு நந்தன -பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ

—————————————————–

12–ஆத்மாவான் க —
ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வ பாவே பரமாத்மனி –ஜீவாத்மா தைர்யம் உடல் இயல்பு பரமாத்மா -ஐந்து பொருள்கள்
ஜீவாத்மாக்களை சொத்தாக யுடையவன் -ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையை யுடையவன் –
தேகமுடையன் –ஆத்மாக்களை தேகமாகக் கொண்டவன் –
பிதரம் ரோசயாமாச–ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
கைங்கர்யம் செய்வதே ஜீவனுடைய இயல்பான தன்மை
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹ –உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்த இமையோர் தலைவன்
தேவும் தன்னையும் -திருவாய் -2-7-4-தேவு ஐஸ்வர்யம் -தன்னை -நீரான தன்மை -ஆஸ்ரித பரதந்த்ரம் -பக்த பராதீனன் –
கச்ச லோகான் அநுத்தமான் -என்ற இடம் பரமாத்மாவின் தன்மையை ஸ்பஷ்டமாக்கும் –

————————————–

14–க த்யுதிமான் —
கோ ஜீதக்ரோத-13-குணம் மேலே கஸ்ய பிப்பதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே -16-உடன் விவரிக்கப்படும்
த்யுதி -ஓளி–ராம திவாகரன் அன்றோ -ராம ரத்னம் -மணியே மணி மாணிக்கமே –
அநந்யா ராகவேனா அஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அநந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
நித்ய அநபாயினீ -கிருஷ்ணாஜிநேந சம்வ்ருன்வன் ச்ரியம் வக்ஷஸ் தலஸ் திதாம்
இவளோடு கூடியே வஸ்துவின் உண்மை
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்
திரு இல்லாத்தேவரை தேறேன்மின் தேவு
ஒளியின் ஸ்தானத்தில் திருக்குணங்களையும் கொள்ளலாம் -பரமபதத்தில் விலை செல்லா குணங்களைக் காட்டி அருளவே திருவவதாரங்கள்
பிராட்டியும் குணங்களும் சேர்ந்தே த்யுதி -புருஷகார பலத்தால் ஸ்வா தந்தர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்கும் குணங்கள் அன்றோ –
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த –சிசுக்களை ஈடுபடுத்த வல்ல அழகும் குணமும் -பால பருவம் தொட்டில் பருவம் –

—————————————————-

15–க அநஸூயக–
வாத்சல்யமும் அனசூயையும் பர்யாய சப்தங்கள் –
நற்றங்களைக் குற்றமாகக் கொள்ளும் அஸூயை இல்லாதவன் –
குற்றங்களைக் குற்றமாக கொள்ளும் அவஸ்தைக்கு மேலே நற்றமாக கொள்வதே வாத்சல்யம்
தன்னடியார் திறத்தகத்து இத்யாதி
விபீஷணன் தோஷாவாகனாகையாலே கைக் கொள்ளத்தத்தக்கவன் -பெருமாள் பக்ஷம் -சுக்ரீவ பஷமும் இல்லாமல் மாருதி பஷமும் இல்லாமல் –
மித்ரா பாவேந -தோஷோயத்யபி -குற்றம் குறைகளையே பச்சையாக கொண்டு –
பிறருக்கு யுண்டான பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமையும் அஸூயை –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ -மா முனிகள்
சாஸ்த்ரா உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று குதர்க்கம் செயபவன் அஸூயை யுடையவன் என்றுமாம்
பெருமாள் ஜபாலி சம்வாதம் – அறிவோம் –

———————————————-

13–கோ ஜித க்ரோத /16— கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஜஸ்ய ஸம்யுகே —
கோபத்தை வெல்வதாவது ஸ்வ அதீனமாக்குகை
அம் கண் மா ஞாலம் அஞ்ச
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச –
உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சதைவ பிரிய தர்சன –சோமவத் பிரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத –
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் வதார்த்தம் சர்வ ரக்ஷஸாம் ஜனஸ்தானத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டார்
கோபஸ்ய வசமேயிவான்-இரண்டும் உண்டே பெருமாள் இடம் –

——————————————————-

ஸ்ரீ ராமாயணத்தில் 18 குஹ்ய தம விஷயங்கள்

1-வித்யா ஸர்வாபி -வேத அங்கங்களின் பெருமை
2-பாஹ்ய த்யஜனம் -வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
3-அகில ஸத் தர்மம் நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
4-ஆத்யாத் மிகம் –ஆத்ம விஷய ஞானம் -4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
5- அர்த்த பஞ்சக ஞானம் -காண்டம் தோறும் உண்டே
6–ஸ்ரீ ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
8—கிம் அர்த்த -புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே
9-ஸ்வா பாவிக சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய
10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்
11-தத் அவதி -பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே -சரம பர்வம்
12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
13-விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்-வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே
14-குரோர் கடாக்ஷ மஹிமை
15–ஸ்ரீ ப்ராதான்யம்-ஆச்சார்ய அபிமானம் கிட்டிய உடன் ஸ்ரீ
16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
17- ஸூ வஸிதி
18—ஸத் த்யானமீ கால ஷேபம் உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை

1-வேத அங்கங்களின் பெருமை
அயோத்யா 91-19-சிஷா ஸ்வர ஸமா யுக்தம் பரத்வாஜர் சொல்ல தேவதைகள் வந்து உணவு பரத்தாழ்வான் உடன் வந்த அயோத்யா ஜனங்களுக்கும் சமர்ப்பித்தார்கள் அன்றோ

ஆயதாஷவ் -dual இல்லாமல் பன்மை -நான்கு திருத்தோள்களை ஸேவித்து திருவடி -இலக்கணம்
ஜடாயு -பெருமாள் இடம் -ஆயுஷ்மன் -விந்தோ நாம முஹூர்த்தம் -ராவணான்கொண்டு -காணாமல் போனாய் மாறாமல் அப்படியே கிடைக்கும் -ஜ்யோ திஷம்

2-வேதங்களுக்கு புறம்பான -பேசும் -ஸஹ வாசம் தவிர்க்க வேண்டும்
தசரதனையும் ஒரே இடத்தில் நிந்தை -ஜாபாலி வார்த்தை கேட்டு

புலையற மாகி நின்ற புத்தொடு சமணமெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம்?
தலையறுப்புண்டும் சாகேன் சத்தியம் காண்மின் ஐயா!
சிலையினால் இலங்கை செற்றதேவனே தேவனாவான்.
3- நித்ய வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டியவை
ஐயர் பார்த்து வைத்த திருக் கல்யாணம்
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை -அனுஷ்டித்துக் காட்டிய பெருமாள்
ஒருவருக்கு ஒருத்தி -நல்ல ஒழுக்கம்
அரச தர்மங்கள் -ராமன் பரதன் ஸம்வாதம்
4–ராவணன் மனஸ் -10 இந்திரியங்கள் -திருவடி ஆச்சார்யர் -இலங்கை -பிறவி பெரும் கடல் ஸம்ஸார சாகரம் -அசோக வனம் சரீரம்
ஸத்வ குணம் விபீஷணன் -ரஜோ குணம் கும்பகர்ணன் -தமோ குணம் சூர்ப்பணகை
நல்ல சிஷ்யனைத்தேடி ஆச்சார்யன் -சங்கு சக்கர லாஞ்சனை -செய்து உபதேசித்து பரமாத்மாவிடம் சேர்த்து வைக்கிறார்

5- அர்த்த பஞ்சகம் -காண்டம் தோறும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும்  வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்
  • ஜீவாத்மா (ஆத்மா) ஐவகையினர்:
      • நித்ய ஸூரிகள் – ஸ்ரீ வைகுண்டம் ஆகிய பரமபதத்தில் எப்போதும் வசிக்கும் வைகுண்ட வாசிகள்
      • முக்தாத்மாக்கள் – வைகுண்டம் சென்று சேரும் தளைகள் நீங்கிய ஆத்மாக்கள்
      • பத்தாத்மாக்கள் – உலகியலில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டுழலும் ஆத்மாக்கள்
      • கேவலர்கள் – ஸம்ஸாரத் தளைகளிலிருந்து விடுபட்டு, பகவத் கைங்கர்யமாகிற பெரும் பேற்றில் ஆசையின்றி மிகத் தாழ்ந்ததான ஆத்மானுபவம் எனும் கைவல்ய மோக்ஷம் பெற்ற கேவலர்கள்
      • முமுக்ஷுக்கள் –  ஸம்ஸாரத்தில் இருக்கும், பகவத் கைங்கர்யப் பேற்றினை விரும்பி வேண்டிக் கிடக்கும் ஆத்மாக்கள்.
  • ப்ரஹ்மம், பரமாத்மா, இறைவன். இவனது ஐந்து நிலைகள்:
      • பரத்வம் – பரம பதத்திலுள்ள மிக உயர்ந்த நிலை
      • வ்யூஹம் – க்ஷீராப்தியில் உள்ள ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தாதி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் செய்யும் நிலைகள்
      • விபவம் – ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் (பல)
      • அந்தர்யாமித்வம் – அவனே உள்ளுறையும் பரமனாக ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும்  இருத்தல்
      • அர்ச்சை – எம்பெருமான் கோயில்களிலும், மடங்களிலும், க்ருஹங்களிலும் இருக்கும் நிலை
  • புருஷார்த்தம் – புருஷனால் விரும்பப்படுபவை:
    • தர்மம் – எல்லா ஜீவர்களின் மங்களம் பொருட்டும் செய்யப்படும் கர்மங்கள்
    • அர்த்தம் – சாஸ்த்ரம் விதித்தபடி பொருள் ஈட்டி அதை சாஸ்த்ரோக்தமாகச் செலவிடுவது
    • காமம் – உலக இன்பங்கள் அநுபவித்தல்
    • ஆத்மாநுபவம் – தன்னைத் தானே அனுபவிக்க ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்ட நிலை
    • பகவத் கைங்கர்யம்: இதுவே பரம புருஷார்த்தம். யாவச் சரீர பாதம் (சரீரம் இருக்கும் வரை) இங்கு எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து, சரீரம் வீழ்ந்தபின் பரமபதத்தில் சென்று அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்தல்
  • உபாயம் – வழி –  ஐந்து வகை உண்டு:
    • கர்ம யோகம் – யாகம் (வேள்வி), தானம்(ஈகை), தபஸ் (தவம்) முதலியவற்றால் ஆத்ம ஞாநம் பெறல். இது ஞான யோகத்துக்கு உபாங்கம். உலகியலில் நோக்குள்ளது.
    • ஞான யோகம் – கர்ம யோகத்தால் பெற்ற ஞானத்தை உபயோகித்து ஹ்ருதய சுத்தியோடு பகவானை த்யானித்துத் தன ஹ்ருதயத்தினுள்ளே அவனையே சிந்தித்து எப்போதும் அவனுள் ஆழ்தல். இது கைவல்யத்தில் சேர்க்கும்.
    • பக்தி யோகம் – ஞான யோகத்தின் உதவியோடும் இடையறாத ஈச்வர த்யானத்தாலும் மலங்கள் அறுத்து எம்பெருமானின் உண்மை நிலையை அறிந்து இருத்தல்.
    • ப்ரபத்தி – எல்லாவற்றிலும் எளிதும், இனிமையானதும் எம்பெருமானிடம் சேர்ப்பது. ஒரு முறையே செய்யப்படுவது. பின் செய்வன எல்லாம் இதை நமக்கு நினைவுபடுத்திக் கொள்வதவ்வளவே. கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்ய அசக்தர்க்கும், அவற்றை அனுஷ்டிப்பது ஸ்வரூப விரோதம்/ஸ்வரூப நாசம் என்றிருப்போர்க்கும் எம்பெருமானே யாவும் என்றிருக்கும்  இதுவே நெறி.  இதில் இரு வகை: ஆர்த்த ப்ரபத்தி இனி ஒருக் கணமும் எம்பெருமானை விட்டிருக்கலாகாது என ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பு ஏற்பட்டுத் தவிப்பது; த்ருப்த ப்ரபத்தியாவது ஸம்ஸாரம் கொடிது ஆகிலும் எம்பெருமான் விட்ட வழி என அவன் அருளையே எதிர் நோக்கி பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இருத்தல்.
    • ஆசார்ய அபிமாநம்:- இவ்வொன்றையும் அனுஷ்டிக்க இயலாதோர்க்குக் கருணையே வடிவெடுத்த ஆசார்யன், தம் கை தந்து, பூர்வாசார்யர்கள் காட்டிய நெறியில் சிஷ்யனைப் புருஷகாரம் செய்து மந்த்ரோபதேசம் முதலியவற்றால் வழி நடத்தி, பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொண்டருள்தல். குறிப்பு: இங்கே நாம் எம்பெருமானாரையே நம்மை ஸம்ஸாரத்தில் இருந்து மீட்டெடுத்து உஜ்ஜீவித்து அருளும் உத்தாரக ஆசார்யனாகவும், நம்முடைய ஸமாச்ரயண ஆசார்யனை எம்பெருமானாரிடம் நம்மைச் சேர்க்கும் உபகாரக ஆசார்யனாகவும் எண்ணுவது பொருந்தும். நம் ஸம்ப்ரதாயத்தில் பற்பல ஆசார்யர்கள் எம்பெருமானார் திருவடியே தஞ்சம் என்பதைப் பல இடத்திலும் எடுத்துக் காட்டியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html பார்க்கவும். மணவாள மாமுநிகள் ஆர்த்தி பிரபந்தத்திலே எம்பெருமானாரை ஸர்வவித பந்துவாகக் கொண்ட வடுக நம்பியை உதாஹரித்து இதைக் காட்டியுள்ளார்.
  • விரோதிகள் – உஜ்ஜீவனத்துக்குத் தடைகளாய் வருவன.இவை ஐந்து:
    • ஸ்வரூப விரோதி – சரீரத்தை ஆத்மா என மயங்குதல், எம்பெருமானை விட்டுப் பிறர்க்கும் அடியனாய் இருத்தல்.
    • பரத்வ விரோதி – தேவதாந்தரங்களையும் பெரிதாக எண்ணி அவற்றை எம்பெருமானொடொக்க நினைத்தல், வணங்கல்; அவதாரங்களை மானிடப் பிறப்பாய் மயங்குதல்; அர்ச்சாவதார எம்பெருமானுக்கு முழு சக்தி உண்டென்று நம்பாதிருத்தல்.
    • புருஷார்த்த விரோதி – பகவத் கைங்கர்யம் தவிர இதர விஷயங்களில் பற்றோடு ஏங்கி இருப்பது.
    • உபாய விரோதி – ப்ரபத்தி மிக எளிதாகையால் பேற்றுக்கு உதவ வல்லதன்று எனப் பிற சாதனங்களை உபாயம் என மயங்குதல்.
    • ப்ராப்தி விரோதி – ஆத்மாவின் அபிலாஷையாகிய ஈச்வர ப்ராப்தியை உடனே தடுக்கும் விரோதி நம் சரீரம். இது உள்ளவரை பகவத் ப்ராப்தி நடவாது. மேலும் பாபங்கள், பகவதபசாரம், பாகவதபசாரம், அஸஹ்யாபசாரம்  முதலியவை.

வில் தடை உடைத்து சீதா கல்யாணம் -பால காண்டம் –
பாரத கைங்கர்யம் -கைகேயி வரன்கள் விரோதி -பாதுகை -அடி சூடும் அரசு -உபாயம் சரணாகதி -அயோத்யா ஆணிடம்
ஆரண்ய காட்டும் -ரிஷிகள் -அரக்கர்கள் தடை -சரணாகதி உபாயம் கர தூஷணாதிகள் வதம்
கிஷ்கிந்தா வாலி தடை -சரணாகதி –
ஸூந்தர காண்டம்
யுத்த காண்டம் -ஆச்சார்யர் பரிந்துரை உபாயம் -ராவணன் போல் பாபக்கூட்டங்கள்

6–ரகுபதி பரத்வம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
காகாஸுர வ்ருத்தாந்தம்–வித்தகனே நின் அபயம் -ஜடாயு மோக்ஷம் -ப்ரஹ்மா-ருத்ரன் -இந்த்ரன் -யாராலும் -சர பலம் -மிக்கது

7-பிரபத்தி சரணாகதி சாஸ்திரம் -தொட்ட இடம் தோறும் உண்டே
பால -தேவர் நாராயணன் -விசுவாமித்திரர் இடம் -திரிசங்கு -பரசுராமன் இடம் சக்ரவர்த்தி
அயோத்யா -லஷ்மணன் -பெருமாள் இடம் -பரதன் சரணாகதி
ஆரண்யன் -ரிஷிகள்
கிஷ்கிந்தா சுக்ரீவன்
ஸூ ந்தர -காகாசுரன் -அடையாளமாக பிராட்டி
யுத்த -விபீஷணன் சரணாகதி-கண்டவர் பேச்சைக் கேட்க்காமல் கண்ட திருவடி பேச்சையம் கேட்க்காமல் மித்ர பாவேந –ஸக்ருதேவ –ஏதத் விரதம் மம

8—புருஷார்த்தம் –அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை -அவன் உகப்புக்காகவே கைங்கர்யம்
கைங்கர்ய சாம்ராஜ்யம் இழக்காமல் லஷ்மண லஷ்மி ஸம் பன்னன்

9-சேஷத்வம் பிரதானம் -பர கத அதிசய ஆதேய -பூ பரிமளம்-மணி தேஜஸ் –
திருவடி இடம் -லஷ்மணன் பேசுவது அஹம் அஸ்ய அவரோ ப்ராதா -குணைர் தாஸ்யம் உபாகதா -பெருமாள் பார்வையில் தம்பி -நான் அவருக்குத் தொண்டன்

10-பாரதந்தர்யம் -இஷ்ட விநியோஹ அர்ஹத்வம்–போக்த்ருத்வ சேஷத்வம் போல் அன்றே போக்யத்வ பாரதந்தர்யங்கள்
பரதாழ்வான் -உயர்ந்தவன் -பாதுகா தேவி மிக உயர்ந்தவள்
லஷ்மணன் -25-%-சீதா –50-%-பரதன் -75- %-பட்டாபிஷேகம் செய்து கொள்ளவில்லையே -பாதுகா தேவி -100%-சொன்னது எல்லாம் செய்து இட்ட வழக்காக இருந்ததால் –

11-பக்தியின் எல்லை நிலம் -அடியார் அடியார் அடியோங்களே-சரம பர்வம் -பாகவத பாரதந்தர்யம் -சத்ருக்ந ஆழ்வான்

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

அநக -தோஷம் அற்றவரும்
நித்ய சத்ருக்ந-எப்போதும் எதிரிகளான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருப்பவரும்
சத்ருக்ந -எதிரிகளை மண் உண்ணப் பண்ண வல்லவர் ஆகையாலே சத்ருனன் என்று பெயரிட்டவருமானவர்
ப்ரீதி புரஸ்க்ருத -அன்பினால் முன் உந்தப்பட்டவராய்
ததா -பரதன் சென்ற அப்போதே
மாதுல குலம் -மாமாவின் வீட்டுக்கு
கச்சதா -போகா நிற்கிற
பரதேன -பரதனால்
நீத -அழைத்துச் செல்லப் பட்டார் –

கச்சதா –
போகா நிற்கிற என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே போகிற விடத்தில்
தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாதல்
இங்கே மாதா பிதாக்களை கேள்வி கொள்ளுதல்
பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல்
இவ்வளவும் அன்றிக்கே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போனான் -என்கை-
மாதுல குலம் –
யுதாஜித் அழைத்தது அவனை யாகையாலே போக்கில் உத்தேச்யதையும் அவனுக்கு .
இவனும் அவன் உத்தேச்யனாய் போனான் என்கை –

பரதேன –
சக்ரவர்த்தியும் துஞ்சி
பெருமாளும் ராஜ்யத்தைப் போகட்டுப் போய்
இளைய பெருமாள் அடிமை செய்ய வேணும் என்று தொடர்ந்து போய்
சத்ருந ஆழ்வானும் -ராமனை அல்லாது அறியாத பரதா -நின்னை அல்லது அறியேன் என்று இருக்கும் தசையிலும்
ராஜ்யத்தை பரிக்கக்-தாங்கக் -கடவன் என்று ஆயிற்று ஸ்ரீ வசிஷ்ட பகவான் திரு நாமம் சாத்திற்று –
பரதன் இதி ராஜ்யஸ்ய  பரணாத்-என்றான் இ றே ஸ்ரீ சதா நீகன்-

ததா -அப்போதே
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதம் உண்டானால் பிரித்து முஹூர்த்தம் இட்டுப் போக ப்ராப்தமாய் இருக்க
அவன் போனதுவே முஹூர்த்தமாகப் போனான் -என்கை –
கச்சதா -என்கிறதிலே அர்த்த சித்தம் அன்றோ –
ததா என்றது என் என்னில்
அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -தனக்கே ஒரு பிரயோஜனம் இன்றி சென்றமை சொல்லி –
இங்கு அதுக்கு ஆச்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -தான் ஒருவன் உளன் என்கிற நினைவும் இல்லாமல் –
ஆகையாலே புநருக்தி தோஷம் இல்லை
சேஷத்வ விரோதி இ றே இரண்டும் –

அநக –
பாபம் அற்றவன்
அகம் இல்லாதது இவனுக்கே இ றே
அகம் -உத்தேச்ய விரோதி
இவ்விடத்தில் அகமாவது ராம பக்தி
இத்தைப் பாபம் என்னப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி யாகையாலே புண்யமும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -சாந்தோக்யம் -8-13-1-என்று பாப சப்த வாஸ்யமாய் ஆயிற்று இ றே –
ஆகையால் பரத அநு வ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம சௌந்தர்யத்தில் கால் தழுவும் அதுவும் பாபமாம் அத்தனை இ றே –
ராமோ பிரமாத மம கார்ஷீ -என்று ராம அநு வ்ருத்திக்கு இடைச் சுவராக சொல்லிற்று இ றே ராம சௌந்தர்யத்தை –
பரத அநு வ்ருத்திக்கு இடைச் சுவர் என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே

சத்ருக்ந –
பிள்ளைகள் உடைய சந்நி வேசங்களைப் பார்த்து  திரு நாமம் சாத்துகிற ஸ்ரீ வசிஷ்ட பகவான்
பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே ராமன் -என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே -லஷ்மணன் -என்றும் திரு நாமம் சாத்தினாப் போலே
இவனுடைய சந்நி வேசததைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கையாலே-சத்ருக்னன் -என்று திரு நாமம் சாத்தினான் –

நித்ய சத்ருக்ந –
பாஹ்ய சத்ருக்களைப் போலே அன்றிக்கே ஆந்திர சத்ருக்களான இந்த்ரியங்களை ஜெயித்து இருக்கும் -என்கை –
அவ் விந்த்ரிய ஜெயத்தின் எல்லை எவ்வளவோ என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்கிற ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு ஒண்ணாது ஒழிகை –
அதாகிறது
பெருமாளைப் பற்றும் போதும் -தன உகப்பாலே யாதல் –
அவருடைய வை லஷ்ண்யத்தாலே ஆதல் அன்றிக்கே
தனக்கு உத்தேச்யனான இவன் உகந்த விஷயம் என்று பற்றுகை –

நீத –
அழைத்துச் செல்லப் பட்டான் –
ராஜாக்கள் போகும் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமோபாதி
அவன் கொடுபோகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்டமாய் இருக்கும் இ றே
அது போல் அன்றிக்கே  ஜாதி குணங்களோ பாதி -கடமும் கடத்வமும் போலே -போனான் –

ப்ரீதி புரஸ்க்ருத –
அன்பினால் முன் தள்ளப் பட்டான் –
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தி கர்த்தவ்யம் என்று போனான் அல்லன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-27- என்று போன இளைய பெருமாளைப் போலே போன இடத்தில்
சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ணலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி பிரேரிக்க போனான் –
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே விழுக்காட்டோ பாதி இ றே சித்திப்பது

நீத -என்கையாலே
சேஷத்வத்தில் அசித் கல்பனாய் இருக்கக் கடவன் -படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
அடிமைத்தனத்தில் அசித் சமனாயும் கைங்கர்யம் செய்யும் பொழுது சேதனத்வமும் -பெருமாள் திரு -4-9-
ப்ரீதி புரஸ்க்ருத -என்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சைதன்ய பிரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை-
அநக -என்கையாலே
பாவநத்வத்தாலும்
நித்ய சத்ருக்ந-என்கையாலே
போக்யதையாலும்
அவனையே பற்றினான் -என்னவுமாம் –
அநக நித்ய சத்ருக்ந  -என்கிறதுக்கு பிரயோஜனம்  என் என்னில்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி
அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத படியானை -என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –
இதுவே பிரயோஜனம் ஆனால் பரதனுக்கு பெருமாள் விட சொன்ன மிகை  எல்லாம் பொறுக்கும் இ றே-

12-அகதித்வம் -புகல் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டுமே
விபீஷணன் சொல்படி பெருமாள் -தர்ப்ப சயனம் -கருணைக்கடல் கரும் கடலை நக்கி – சமுத்திர ராஜன் இடம் சரணாகதி –
கைம்முதல் இல்லாமல் இருக்க வேண்டுமே -து பெருமாள் இடம் இல்லையே
என் நான் செய்கேன் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இருக்க வேண்டுமே
பக்தி பாரவசயத்தால் ஆழ்வார்கள் சரணாகதி –என் நான் செய்கேன்
ஆச்சார்யர்கள் ஞாணாதிக்யத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
அஸ்மாதாதிகள் அஞ்ஞானத்தால் ப்ரபன்னர்கள் -என் நான் செய்கேன்
ஒரே தொடர் மூவருக்கும் ஸ்வரத்தால் மட்டுமே மாற்றி –

13- விரக்தி -உலகியல் ப்ராவண்யம் இல்லாமல்–வைராக்யம் மிக்கு இருக்க வேண்டுமே 
நல்ல பதத்தால் -கொண்ட பெண்டிர் –
நித்ரா தேவி -தூக்கம் இல்லாமல் -இருக்க வேண்டும் -14 வருஷம் அருகி வராத
உறங்கா வில்லி -இவனுக்கு
அதே பெயரில் உறங்கா வில்லி தாஸர் ஆச்சார்யர்
அயோத்யா மக்கள் தூக்கத்தால் பெருமாளை இழந்தார்கள்

14-குரோர் கடாக்ஷ மஹிமை
ஏக கண் -ஸஹஸ்ர கண்களும் -மூன்று -அஷ்ட -சேர்ந்து வந்தாலும் ஒப்பாகாதே
சபரி -சாக்ஷியாகவே பெருமாள் -சபரி மோக்ஷ சாக்ஷி பூதா -ரகுவீரா கத்யம்
முனி ஜன பஜன் –முஷித ஹ்ருதய கலுஷம் -ஸ்ரீ முஷ்ணம் -பாபங்கள் நமக்கே திரியாமல் களவு பண்ணுவதே முஷணம்

ஆச்சார்யர் திருவடி அடைந்தார்கள் என்றே சொல்கிறோம்-தானே வைகுந்தம் தரும் -அன்றோ

15–ஸ்ரீ ப்ராதான்யம்
சூர்ப்பணகை -ராவணன் இழக்க –காகாசூரன் விபீஷணன் பேறு -இவள் ஸந்நிதியால்
ரக்ஷணம் -வார்த்தை கைவிட மாட்டேன் -உயிரை விட்டாலும் பிராட்டி ஆதி சேஷனை விட்டாலும்
இத்தைச் சொல்லியே சமாஸ்ரயணம் செய்து வைக்கிறார்கள்
தன்னடியார் –சிதைகு உரைக்குமேல் –ஸ்திரமாக இருக்கிறதா பார்க்கவே -என்னடியார் அது செய்யார் என்பானே

ராமானுஜர் திருமலையில் சீதா ராமன் பிரதிஷ்டை
புனர்பூசம் புறப்பாடு உண்டு

16-நிர் பரத்வம்-மஹா விஸ்வாஸம்
தத் தஸ்ய ஸத்ருசம் பவத்
சொல்லினால் சுடுவேன் -வில்லின் மாசு படக்கூடாதே
ப்ரபன்னன் கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் அத்தனை ராமாநுஜர்

17- ஸூ வஸிதி
குண அனுபவம் பண்ணி -தேசோயம் சர்வ காம துக்
பவத் விஷய வாஸினா -ரிஷிகள் பெருமாள் இடம்
ராமானுஜர் ஆறு கட்டளைகளில் ஓன்று திவ்ய தேசத்தி வஸிக்க வேண்டும்
அன்று சராசரங்களை வைகுந்தத்தில் ஏற்றி –

18-உத்தர க்ருத்யம் -ஸத் த்யானம் -குண சிந்தனை
நிச்சயதார்த்தமான பெண் போல்
சீதா பிராட்டி -கணையாழி பெற்று நம்பி இருந்து சூடா மணி சமப்பித்து பொறுத்து இருந்தது போல்
சங்கு சக்கர லாஞ்சனை பெற்று நிம்மதியாக இருப்போம்

முழு ராமாயணத்திலும் ஒவ்வொரு குஹ்ய ரஹஸ்யம் சொல்லி 18 தடவை ஆவ்ருத்தி திருமலை நம்பி ராமானுஜருக்கு அருளிச் செய்தாராம்

———–

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

———————–

ஸ்ரீ ராம பட்டாபிஷேக சர்க்கம்:-

தத ஸ ப்ரயதோ வ்ருத்தோ வஷிஷ்டோ பராஹ்மனை ஸஹ
ராமம் ரத்னமயே பீடே ஷஹஸீதம் ந்யவேசயத்
வஷிஷ்டம் வாம தேவ ச ஜாபாலிரத காயப
காத்யாயன ஸுயஜஞ்ச கௌதமோ விஜயஸ்ததா
அப்யஷிஞ்சந் நரவ்யாக்ரம் ப்ரசந்த்னேன ஸ்கந்தினா
ஸலிலேன ஸஹஸ்ராஷம் வஸவோ வாஸவம் யதா
ரித்விக்பி ப்ராஹ்மனை பூர்வம் கன்யாபிர் மந்த்ரிபிஸ்ததா
யோதை சைவாப்யஷிஞ்சம்ஸ்தே ,ஸம்ப்ரஹ்ருஷ்டா ஸனைகமை

———-

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகப் பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீராமருக்கு சங்கத் தமிழ் மாலை – ஸ்ரீபாவைப்படி ஸ்ரீராமாயணம்— ஸ்ரீசுஜாதா தேசிகன் அவர்கள் தொகுத்து அருளியது

April 9, 2023

ஸ்ரீ பால காண்டம்

1. உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
உதவ
தேவாதி தேவன் சீர் மல்கும்
அயோத்தியில்
கதிர் மதியமாக
பாரோர் புகழ அவதரித்தான்.
( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )

2. தசரதனிடம்
’யாம் வந்த காரியம் –
தவத்தவரை காக்க
ஆற்றப் படைத்த மகன்
ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க,
தசரதன் அவன்
பூவைப் பூ வண்ணா
என்று மறுக்க
வசிஷ்டர்
இளம் சிங்கம்
ராமரை அனுப்புங்கள் என்று கூற,
ராமனை அனுப்பி வைத்தான் தசரதன்.
3. பொற்றாமரை அடி
கல்லில் பட அகலிகையின் மேல்
சாபம் இழிந்தது.
4. திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
ராமன்   சீதையை நோக்க —
செங்கண் சிறுச் சிறிதே …
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை
நோக்கினாள்.

5. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல,
வில் அரைவில் ஆக, ஜனகரின் புதல்வி சீதை ராமருக்கு
செல்வ பெண்டாட்டி
ஆனாள்.
———-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
6. தசரதன் ராமனுக்கு இளவரசு பட்டத்தை பரிசுரைக்க,
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் இருந்த
தசரதனிடம்
ஒருத்தி ஓர் இரவில்
இரண்டு வரம்
வேண்டுவன கேட்க,
உன்மகன் தான் என்று கேள்விப்பட்டு
ஒருத்தி
வாய் நெகிழ்ந்து துடிக்கத்
தாயைக் குடல் விளக்கம் செய்த
காகுத்தன்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
சீதையுடன்
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று கானகம் செல்ல,
உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
என்று லக்ஷ்மணன் முன் சென்றான்.

7.கறவைகள் பின் செல்லும் கன்றுகள் போல்,
நாடெல்லாம்
பின் சென்றது.

8.’பேய்ப் பெண்ணே!’
என்று அந்த ஒருத்தியைப் பரதன் வசை பாடி, காட்டுக்குச் சென்று ’அண்ணா !
வல்லீர்கள் நீங்களே !துன்பதுக்கு காரணம்
நானே தான் ஆயிடுக என்று
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று என்று கூறி, 
ஆற்றாது வந்து அடி பணிந்து  நிற்க,
செம்பொற் கழலடியை சம்மானமாக’
கொடுத்தனுப்பினார் ராமர்.

9.கள்ளம் தவிர்ந்து
ராமன்
உள்ளம் புகுந்த
குகனை
‘உம்பியும் நீயும்’
என்று சொந்தம் கொண்டாட,
கூடி இருந்து குளிர்ந்தான்.

10.பாதுகா ராணியைக்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்று சீரிய சிங்காசனத்தில்
அமர்த்தினான் பரதன்.
———-
ஸ்ரீ  ஆரண்ய காண்டம்
11. என்றென்றுன் சேவகமே
என்று இருக்கும்
முனிவர்களும் யோகிகளையும்
ராக்ஷசர்களிடமிருந்து
ஆழி போல் மின்னி சீறி அருளினான்.

12. பேய்முலை நஞ்சுண்டு
நற்செல்வன் தங்காய் போல்
வந்த சூர்ப்பணகையின் அகந்தை
அபிமானத்தைப் பங்கமாக்கினார்.

13. போதரிக் கண்ணினாய் (மான் போன்ற கண் உடையவள் )
மாயமானை வேண்டுமெனக் கேட்க, மான்பின் எம்பெருமான் ஓட,
வல்லை உன் கட்டுரைகள்
கேட்ட இளைய பெருமான்
மாற்றமும் தாராமல், வாசல் திறவாதார்
என்று சொல்லி விட்டு சென்றவுடன், சீதையைப்
பொல்லா அரக்கன்
அபகரித்தான்.

14. புள்ளரையன்
ஜடாயுவைப் பார்த்த ராமர்
ஆவாவென்று
அழுது, பின்
ஆராய்ந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று
மோட்சத்தை நல்கினான்.

15. சபரி ராமரைப் பார்த்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
என்று
முழங்கை வழி வாரக்
கொடுத்த நற் பழங்களை ராமர் சுவைத்த பின் ,
‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’
என்று அவள் ஆசாரியன் திருவடியை அடைந்தாள்.
————–
கிஷ்கிந்தா காண்டம்
16. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்த
ராமரைப் பார்த்த அனுமார்
கோது கலம் அடைந்து உய்யுமாறு எண்ணி தன் நேய நிலைக் கதவத்தை திறந்து
அதில் ராமரைப் பிரதிஷ்டை செய்தார்.
17. சீதை
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிக்கக்
கீழே விழுந்த
காசும் பிறப்பும்
சுக்ரீவன் காண்பிக்க ராமர் மனதில் சீதை
பரந்தன காண் ( இடமெங்கும் பரவி யிருந்தது )
என்றென்றும் உன் சேவகமே
என்றார் ராமர்.

18. வாலியை ஒரே அம்பினால் அடிக்க அது
சார்ங்க முதைத்த சரமழை போல்
வீழ்த்தியது.

19. இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
என்று சுக்ரீவனை எழுப்பி,
தென் இலங்கைக் கோமானைச் செற்ற
அரி என்ற பேரரவத்துடன்
வானரங்கள் கைங்கரியம் செய்ய வந்தது.

20. பாலன்ன வண்ணத்து
கணை யாழியை ராமர் அனுமானிடம் கொடுக்க சீதையைத் தேட நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டார்.
————–
ஸ்ரீ சுந்தர காண்டம்

21. ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
என்பதைப் போல அனுமார் கடலைத் தாண்டினார்.

22. ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
தசரதன்
மருமகளே ! திருவே
என்று சீதையைக் கண்ட நாள் அனுமாருக்கு
‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாக’ இருந்தது.

23. ஆழி போல் மின்னிய
கணை யாழியைப் பெற்றுக்கொண்ட சீதை
‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்’
என்பது போல மகிழ்ந்தாள்.

24. ராவணன் அனுமார் வாலை தீயினால்
குடல் விளக்கம் செய்த போது,
இஷ்வாகு குலத்தின்
அணி விளக்கான
சீதையின் அருளால் தீ அனுமானுக்கு குளிர்ந்து, இலங்கையைத் தூசாக்கியது.

25. மாமாயன் மாதவன் வைகுந்தனை
இப்போதே எம்மை காக்க வரச் சொல்லு என்று
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே என்று
எதையும் கொடுக்காமல்,
கிங்கிணி வாய்ச் செய்த
தாமரைப் பூப் போன்ற சூடாமணியைக் கொடுத்து அனுப்ப, அனுமார்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
என்பது போலப் பறந்து, ராமனிடம் சமர்ப்பிக்க
வருத்தமும் தீர்ந்து நாடு புகழும் பரிசாக
அனுமனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
—————-
ஸ்ரீ யுத்த காண்டம்
26. கடல் வழி விடாமல் தடுக்க உலகினில் ராமர்
தோற்றமாய் நின்ற சடர் போல
காட்சி அளிக்க, கடலரசன்
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
என்று சரணாகதி செய்ய, பாலம் கட்டப் பட்டது.

27. பொல்லா அரக்கனை
துறந்து,
ஆற்றாது வந்து உன்னை அடி பணிந்த
என்ற விபீஷணனனை
‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’
என்பது போல
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
என்று அபயம் அளித்தார் ராமர்.

28. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனை
கன்று குணிலா எறிந்தாய் என்பது போல வீழ்த்தி,
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனாக
இந்திரஜித்தை வீழ்த்தி,
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து,
மண்டோதரிக்கு
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையனாகக் காட்சி யளித்தார்.

29. வங்கக்கடல் கடைந்து
பாலம் கட்டி ராவணனை வீழ்த்த
யாம் வந்த காரியத்தை முடித்த ராமரை,
உக்கமும் தட்டொளியும் தந்து
தன் மணாளனை மீண்டும் கைபிடித்த சீதையுடன்
சீதாராம பட்டாபிஷேகம் அயோத்தியில்
நீங்காத செல்வம் நிறைந்து நடை பெற்றது.

30. மனத்துக்கு இனியானை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்யும் பேறு பெற்று
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.
—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமாயணம் பற்றிய முத்துக்கள் முப்பது–தொகுப்பு: ஸ்ரீ எஸ்.கோகுலாச்சாரி

April 8, 2023

முத்துக்கள் முப்பது

பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீராமாயணமும், மகாபாரதமும்.
ஸ்ரீராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.
காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு தான் இராமாயணம்.
ஒரு அட்சரத்திற்கு ஆயிரம் ஸ்லோகங்கள் வீதம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் கொண்டது ஸ்ரீராமாயணம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.
ஆத்மாவை பரமாத்மாவிடம் சரணடையச் செய்துவிட்டால் அதற்குப் பிறகு அவனுக்கு எவ்விதமான துன்பங்களும் கிடையாது.
அந்த ஆத்மாவுக்கு அடைக்கலமாக பெருமானே விளங்குவார் என்பதுதான் வேத நூல்களின் சாரமான கருத்து.
அந்தக் கருத்து எல்லோருக்கும்  புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்ரீராமாயணம் இயற்றப்பட்டது.
ஸ்ரீராமாயணத்தை, ‘‘சரணாகதி சாஸ்திரம்” என்று தான் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

1. தாயிற் சிறந்த கோயில் இல்லை

வேத இதிகாசங்களில் அடிப்படையான கருத்து ‘‘அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம்” என்பதுதான்.
இது இந்திய நாட்டிற்கே உரிய அடிப்படையான விஷயம்.
மாதா, பிதா,  குரு, தெய்வம் என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்,
வடமொழியில் மாத்ரு  தேவோ பவ; பித்ரு தேவோ பவ ;ஆச்சார்ய தேவோ பவ ; என்று வருகிறது.
தைத்ரிய உபநிஷத்தின் உயிர் வாக்கியம் இது.
இந்த தர்மத்தின் முதல் சொல் மாதா தான்  தெய்வம் என்பது.
தாயில் சிறந்த கோயில் இல்லை என்ற வாக்கியத்தின் படி நடந்தவன் ஸ்ரீராமன்.

2. பகவானைப் பெற்றெடுத்த கோசலை

ஸ்ரீராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து,
இந்த புண்ணிய பூமியிலே, சித்திரை மாதம், வளர்பிறை நவமி நன்னாளில் அவதரித்தான்.
எல்லா நற்குணங்களையும் தன்னிடத்திலே பெற்றவள்  கௌசல்யா தேவி.
வேதங்களால் அறிவதற்கு அருமையானவனும், கருமேகம் போன்ற நிறமும் மின்னலைப் போன்ற ஒளியும் படைத்த  பகவானை,
எல்லா உலகங்களும் இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறும்படியாக இந்த உலகத்தில் பெற்றெடுத்தாள் என்று பாடுகிறார்.

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை

3. தெய்வத்தை பயந்த தெய்வம்

இதில் “திறன் கொள் கோசலை” என்கின்ற வார்த்தை மிக முக்கியமானது.
ஒரு குழந்தையைப்  பெற வேண்டுமானால் அதற்கான திடமான ஆரோக் கியமும் பலமும் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும்
ஒரே ஒரு சாதாரண குழந்தையைப்  பெறுவதற்கு இத்தனை திடகாத்திரம் தேவை என்று சொன் னால்,
உலகத்தை எல்லாம் தன்னுடைய உடலாகக்  கொண்ட  எம் பெருமானைப்  பெற்றெடுப்பதற்கு எத்தனை திடகாத்திரம் வேண்டும்.
கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகிய  மூன்று தாய்மார்களில்  இந்த   திடம் கோசலைக்கு இருந்ததால்
பகவான் கோசலையின் மணி வயிற்றை தான் பிறப்பதற்கு ஏற்ற கருவறையாகத் தேர்ந்தெடுத்தார்.
பகவானைப் பெற்றெடுத்த கருவறையாக திருவயிரை உடையவள் என்பதால் தேவர்கள் அனைவரும்
கோசலையை தெய்வத்தை பயந்த தெய்வமாகப் போற்றினர்.

4. முதல்வனைப் பெற்றவள்

குகனிடம் கோசலையை அறிமுகப்படுத்தும் போது பரதன் சொல்வான்.  ‘
‘எல்லாஉலகங்களையும் யார் படைத்தவனோ, அப்படிப்  படைத்தவனையே தன் வயிற்றின் மூலம்
படைத்த பெருமை உடையவள் கோசலை”

சுற்றத் தார், தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான் பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.

5. கோசலை பெயர் சொல்லி ராமனுக்குத் தாலாட்டு

கண்ணனுக்கு தாலாட்டு பாடல் உண்டு.
ஆனால் இராமனுக்கு இல்லையே என்ற குறையைத்  தீர்த்து வைத்தவர் குலசேகர ஆழ்வார்.

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

என்று ராமனின் திருத்தாயாரான கோசலையின் பெருமையைக்  கூறி
திருக் கண்ணபுரம் பதிகத்தின்  தாலாட்டைத் தொடங்குகிறார்.

6. கோசலையின் பெயரோடு சுப்ரபாதம்

தாலாட்டு பாடிய குழந்தையை திரும்பவும் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்ப வேண்டும்.
திருப்பள்ளி எழுச்சிக்கு சுப்ரபாதம் என்று பெயர்
அந்த சுப்ரபாதமும் கோசலையின் பெயரில்தான் தொடங்குகிறது என்பது
கோசலைக்கும்  ராமனுக்கும் உள்ள தாய் மகன்  பிணைப்பை, பக்தி உலகம் எவ்வாறு போற்றுகிறது என்பதைக்  காட்டுகிறது.
திருப்பள்ளி எழுச்சியின் முதல் வார்த்தையே கௌசல்யா சுப்ரஜா என்று தான் ஆரம்பிக்கிறது.

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

இன்றைக்கு பல்வேறு திருக் கோயில்களிலும் சுப்ரபாதங்கள் இசைக்கப் படுகிறது.
அந்த சுப்ரபாதங்களின் முதல் ஸ்லோகம் பெரும்பாலும் இந்த ஸ்லோகமாகவே இருக்கும்.
“இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன்.
ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை (கௌசல்யா) எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.

7. கோசலை ஒரு சிறந்த தாய்

இறைவனே மகனாக அவதரித்தாலும் கூட, தாயின் கடமையாகிய தர்ம உபதேசத்தை செய்து கொண்டே
இருக்க வேண்டும் என்று உலகத் தாய்மார்களுக்கு காட்டியவள் கோசலை.
ராமன் காட்டுக்கு புறப்படும் போது அவள் ஒரு வார்த்தையை சொல்லுகின்றாள்.

யம் பாலயஸி தர்மம் த்வம் திருத்யா சநியமேன ச |
ஸவை ராகவசார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||

“நீ தர்மத்தின் வழியில் நின்று, சத்தியத்தைக்  காப்பதற்காக இந்தக்  காரியத்தை செய்கிறாய்.
மிகுந்த மகிழ்ச்சி. நீ எந்த தர்மத்தை காப்பாற்றுகிறாயோ, அந்த தர்மம் உன்னை காப்பாற்றும்
(தர்மஸ்த்வாம் அபிரக்ஷது) என்று ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றாள்.

பட்டத்தைத் துறந்து, தன்னுடைய மகன் காட்டுக்குச் செல்கின்றானே என்ற வேதனை ஒருபுறம் இருந்தாலும் கூட,
அதனை வெளிக் காட்டாது ஆசீர்வதித்து அனுப்புகின்ற உறுதியான தாயின் கடமைக்கு அடையாளமாக
இங்கே கோசலையைப் பார்க்கிறோம்.

8.எல்லோருக்கும் நல்ல உறவு

ராமாயணத்தில் ராமனை நேசித்த அடுத்த தாய் சுமித்திரை.
ஸு என்றால் நல்ல , மங்கலகரமான என்று பொருள்.
மித்ரா என்றால் உறவு.
ஸு மித்ரா என்றால்  நல்ல உறவு என்று பொருள்.
யாரிடமும் பகைமை பாராட்டாத உயர்ந்த உள்ளம் கொண்டவள்.
கோசலையாவது தன்னுடைய மகன் காட்டுக்குப் போகிறானே என்று கொஞ்சம் தயங்கினாள்.
அந்த தயக்கத்தை அவளுடைய பேச்சிலிருந்து பார்க்கலாம்.
ஆனால் தசரதன் கைகேயிக்கு அளித்த வரங்களின்படி இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் சென்றபோது
எவ்வித சலனமும் இன்றித் தனது மகனான இலக்குமணன் இராமனுடன் கூடச் செல்வதை விரும்பியவள் சுமித்திரை.

9. ராமனிடம் கொண்ட அன்பு

இரண்டு அற்புதமான பாடல்கள்.
ஆகாதது அன்றால் உனக்கு -அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை – என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள்.

அந்தக் காடு தான் உனக்கு அயோத்தி.
ராமனே தசரத மன்னன்.
சீதையே உன்னுடைய தாய்.
இவ்வாறு எண்ணிக் கொண்டு ராமருடன் செல்.
இனி இங்கே ஒரு நொடி நிற்பதும் தாமதிப்பதும் குற்றம் என்று சொல்லி
தன்னுடைய மகனை அனுப்புகிறாள் என்று சொன்னால்
ராமனிடம் சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்பது விளங்கும்.

10. மனதில் தைத்த வாளை அகற்றினான்  

அடுத்த பாடலிலே சொல்வது நம் மனதை உருக்கும். கண்ணீர் வரும்.

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன்பின் செல்; தம்பி
என்னும்படி அன்று, அடியாரினின்ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின், வா; அது அன்றேல்,
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள்.

மகனே, நீ ராமன் பின்னே செல்.
தம்பி என்னும் தகுதியானல்ல. ஒரு அடிமையாய் சொல்.
அவன் அயோத்திக்கு திரும்பி வந்தால் நீயும் அவனுடன் வா.
அப்படி அவன் வரவில்லை என்று சொன்னால் அவனுக்கு முன்னர் நீ இறந்து போ”
இதன் மூலம் ராமனிடத்திலே சுமித்திரை கொண்ட பேரன்பு எத்தகையது என்று தெரியும்.
ராமனும் அத்தகைய அன்பு உடையவன் தான்.
ராமன் காட்டுக்கு போவதை நினைத்து சோர்ந்து சுமித்திரை கீழே விழுகின்ற பொழுது அவளைத் தாங்கி,
அவளுடைய மனதை அரித்து கொண்டிருக்கும் துக்கம் என்னும் வாளை ஆறுதல் கூறி ராமன் அகற்றினான்.

‘‘சோர்வாளை ஓடித் தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்” என்பது கம்ப சித்திரம்.

11. இராமனும் கைகேயியும்

மூன்றாவது தாய் கைகேயி.
அது என்னவோ தெரியவில்லை,
எல்லோருமே கைகேயியை கொடுமைக் காரியாகவே சித்தரிக்கின்றனர்.
கைகேயி இல்லா விட்டால் ராமாயணம் ஏது?.
அவதார நோக்கம் எப்படி நிறைவேறும்?
ராமனை வளர்த்தவள் கைகேயி.
மந்தரை ராமனுக்கு மணி மகுடம் என்று சொன்னவுடன் கோசலையை விட, தசரதனை விட,
மிகவும் சந்தோஷப்பட்டவள் கைகேயி.
தன் மகன் வேறு; கோசலை மகன் வேறு என்ற வேற்றுமை கைகேயிக்கு இல்லை என்பதை
“வேற்றுமை உற்றிலள்” என்று கம்பன் சுட்டிக் காட்டுவார்.
மந்தரை சொன்னதற்காக தன்னுடைய முத்து மாலையைப் பரிசாகத்  தந்தவள் அவள்.

12. ராமன் தான் என் கண்மணி

கைகேயி ராமன் மீது கொண்ட அன்பையும்,
அவனுக்கு மகுடம் என்றவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சியையும்,
வால்மீகியை விடவும், கம்பனை விடவும், ரசித்து ரசித்துச் சொன்னவர் அருணாச்சல கவிராயர்.
தன்னிடம் கோள் சொன்ன மந்தரையிடம்,
‘‘பாமரத்தனமாக ஏன் பேசுகிறாய்?
அவன் தான் பட்டத்துக்கு உரியவன்” என்று எடுத்துச் சொல்லி,
காரணத்தை அடுக்குவாள்.

பாமரமே,  உனக்கு என்னடி பேச்சு?
பழம் நழுவி பாலில் விழுந்தால் போல் ஆச்சு
பரசுராம கர்வம் தீர்த்தவன் ‘‘டி”
அவன் நம்மையெல்லாம் காத்தவன் ‘‘டி”
பட்டம் கட்ட ஏற்ற வன் “டி”
நாலு பேரில் மூத்தவன் ‘‘டி” அவன் தான் என் கண்மணி

என்று தன்னுடைய கண்ணின் மணியாக ராமனைச் சொல்வாள்.

13. அன்று அலர்ந்த செந்தாமரை

பெற்ற தாய் கோசலையை விட, வளர்த்த தாய் கைகேயியிடம் பெரு மதிப்பும் அன்பும் கொண்டிருந்தான்.
கடைசிவரை தன்னை காட்டுக்கு அனுப்பியவள் என்று கைகேயியை வெறுக்கவே இல்லை.
மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயி, ராமனை காட்டுக்கு அனுப்புவதற்காக அழைக்கிறாள் .
தான் சொன்னால் கேட்பானோ மாட்டானோ என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.
அதனால் இது அரச கட்டளை என்று சொல்ல,
ராமன் புரிந்து கொண்டு, சிரித்துக் கொண்டே சொல்லுகின்றான்.

மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.’

தாயின் கட்டளையை ஏற்ற போது அவன் முகம் அன்று அலர்ந்த  செந்தாமரை போல மலர்ந்தது என்று கம்பன் காட்டுவான்.

14. இராமன் முதலில் வணங்கியது யாரை?

வன வாசம் முடிந்து திரும்ப அயோத்திக்கு வந்தவுடன் அவனுடைய மூன்று அன்னையர்களும் நிற்கும் பொழுது
ராமன் முதலில் வணங்கியது கோசலையை அல்ல, கைகேயியைத் தான்.
“கைகையன் தனையை முந்தக் காலூறப் பணிந்து” என்பது கம்பன் பாட்டு.
தன்னுடைய தந்தை கைகேயியின் உறவை ‘‘நீ எனக்கு மனைவியும் அல்ல. பரதன் எனக்கு மகனும் அல்ல’’ என்று
சூளுரைத்து துறந்ததை அறிந்தான் ராமன்,
போர் முடிவில் ஆசி வழங்க வந்த தசரதன் இராமனிடம் ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கும் பொழுது,
இராமன் “தந்தையே, நீ கொடியவள் என்று கைவிட்ட, எனக்கு தெய்வம் போன்ற கைகேயியையும்
அவளுடைய மகனான பரதனை தாயும் தம்பியுமாக நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்”
தீயள்  என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும்
தம்பியும் ஆம் வரம் தருக எனத்  தாழ்ந்தான்” என்பது கம்ப சித்திரம்.

15. மாற்றுத் தாய், ஈற்றுத் தாய், கூற்றுத்தாய்

பெரியாழ்வார் இராமனுடைய மூன்று தாய்மார்களையும் பெயரைச் சொல்லி அழைக்காமல்
மாற்றுத்தாய்,
ஈற்றுத்தாய்,
கூற்றுத்தாய் என்ற மூன்று சொற்களால்
குறிப்பிடும் நயம் அற்புதமானது.

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து  எம்பிரான்! என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற.

இதில் மாற்றுத்தாய் என்பது பெற்ற தாய்க்கு மாறான இராமனை வளர்த்த கைகேயியைக் குறிக்கும்.
ஈற்றுத்தாய் என்பது ஈன்ற தாயான கோசலையைக் குறிக்கும்.
அவள் தானே பெற்றவள்.
மகனே வனம் போகாதே என்று தடுக்கிறாள். அழுகிறாள்.
கூற்றுத் தாய் என்பது சுமித்திரையைக் குறிக்கும்.
அவள் இரண்டு கூறு பாயாசங்களை பெற்று இலக்குவனையும் சத்துருக் கணையும் ஈன்றவள்.
இதை இன்னொரு விதமாகவும் சொல்வார்கள்.
மாற்றுத்தாய் என்பது சுமித்திரையைக்  குறிப்பதாகவும்,
கூற்றுத் தாய் என்பது தசரதனுக்கு எமனாக
அதாவது கூற்றுவனாக வந்த கைகேயியைக்  குறிப்பதாகவும் ஒரு பொருள் உண்டு.

16. சக்கரவர்த்தி திருமகன்

ஒரு தந்தையும் தனயனும் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற தர்ம முறை
தசரதன் ராமன் இருவரிடத்திலும் வெளிப்படும்.
உலகுக்கெல்லாம் தந்தையான பகவான், தனக்கு ஒரு தந்தையைத்  தேர்ந்தெடுக்கும் பொழுது,
இஷ்வாகு  குலத்திலே தசரதனைத் தேர்ந்தெடுத்தான் என்பதிலிருந்து தசரதனின் சிறப்பு தெரியவரும்.
பத்து திசைகளையும் வென்று, நிர்வகித்து, சக்கரவர்த்தி என்கின்ற பெருமையுடன் காத்தவன் தசரதன்.
இராமன் மகனாகப்  பிறந்த பிறகு இராமனை கண் போல் பாதுகாப்பதன் மூலம்,
இந்த உலகத்தைப் பாதுகாக்கலாம் என்று நினைத்தவன்.
வைணவ மரபில் இராமனை அழைக்கும் பொழுது இராமன் என்று அழைக்க மாட்டார்கள்.
சக்கரவர்த்தி திருமகன் என்றுதான் அழைப்பார்கள்.

17. ஏன் கைகேயியிடம் அதிக அன்பு?

தசரதன் தனக்குரிய மூன்று மகிஷிகளில் கைகேயியின் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான்.
அவள் இளைய மனைவி.
குமாரர்களில் இராமன் மீது அதிக அன்பைக் கொண்டிருந்தான்.
குமாரர்களில் இராமன் மூத்தவன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
பரதனைப்  பெற்றெடுத்த கைகேயி, கோசலை பெற்றெடுத்த இராமனிடம் தான் மிக அதிகமான அன்பைக் கொண்டிருந்தாள்.
இராமனை வளர்த்தவள் அவள்.

அதனால் இராமன் பெரும்பாலும் கைகேயின் இல்லத்திலேயே இருப்பான்.
கைகேயியின் இல்லத்தில் இராமன் இருப்பதால் தசரதனும் கைகேயின் இல்லத்தில் இருப்பான்.
தசரதன், கைகேயி பெற்று வளர்த்த மகன்(உனைப்பயந்த கைகேசி) ராமன் என்றே சொல்வதை கவனிக்கலாம்.
இராமன் மீது தன்னைப் போலவே அதிக பாசம் வைத்திருந்த கைகேயின் மீது
இயல்பாகவே தசரதனின் அன்பு அதிகரித்திருந்தது.
அதுவே தசரதனின் முடிவுக்கு காரணமானது.

18. ராமனுக்காக உயிர் துறந்தவன்

வைணவ மரபில் ஞான பாவத்தை விட பிரேம பாவத்தை அதிகம் கொண்டாடுவார்கள்.
பிரேம பாவம் அதிகரிக்கும் பொழுது, வந்திருப்பவன் பரம்பொருள் (மஹாவிஷ்ணு) என்ற நினைவு கூட போய்விடும்.
மகன் என்ற வாஞ்சை தான் மிஞ்சி நிற்கும்.
அதுதான் தசரதனிடம் இருந்தது.
தசரதன் ராமனிடம் ஆழங்கால் பட்டிருந்தான்.
அதனால் ராமனிடம் சேர்ந்திருக்கும் பொழுது அவனுக்கு மகிழ்ச்சி.

ராமனைப் பிரிந்தால்  வருத்தம்.
இன்னும் ஒரு படி மேலே போய் இராமனுடைய பிரிவைத்  தாங்க முடியாமல் தன்னுடைய உயிரையே இழந்தான் தசரதன்.
‘‘இராமன் காடாளப்  போனான்;
தசரதன் வான் ஆளப் போனான்” என்று சொல்வார்கள்.
பெற்று வளர்த்த தாய்மார்களுக்கு இல்லாத அசாதாரணமான   பரிவு தசரதனுக்கு இருந்தது.

19. நன் மகன் ராமன்

குலசேகர ஆழ்வார் இராமனை நன்மகன் என்று அழைக்கிறார்
.‘‘நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே”என்பது பாசுர வரி.
நன்மகன் என்ற சொல்லுக்கு உரை விளக்கம் தந்த ஆசாரியர்கள்,
‘‘ஒரு மகனுக்குரிய எல்லா குணங்களையும் உடையவன். தந்தையின் சொல் கேட்டு நடப்பவன்.  அவனே நன்மகன்”
(புத்ரலக்ஷணங்களைப் பூர்த்தியாகவுடையவன் என்றபடி
தன் சொல் தவறாது நடக்குமவனான மகனென்க.)என்று விளக்கம் அளித்தார்கள்.

20. இராமன் வேறு; என் உயிர் வேறு அல்ல

இராமனை ஒரு கணம் பிரிந்திருந்தாலும் உயிர் தரிக்க மாட்டான் தசரதன்.
அதனால் தான் முதன் முதலில் விசுவாமித்திரன் தன்னோடு காட்டுக்கு
இராமனை அனுப்ப வேண்டும் என்று கேட்ட பொழுது, துடித்தான்.
பார்வை இல்லாத ஒருவன் பார்வை வந்து, உடனடியாக, அந்தக்  கண் பார்வையை பறி கொடுத்தால்
எத்தனை துன்பம் அடைவானோ அத்தனை துன்பத்தை அடைந்ததாக (கண்ணிலான் பெற்றிழந்தான்) கம்பன் காட்டுகின்றார்.

அதைப் போலவே திருமணம் முடிந்து மிதிலையில் இருந்து அயோத்திக்கு திரும்புகின்ற பொழுது
பரசுராமன் சண்டைக்கு வந்து நிற்கின்றார்.
அவரிடத்திலே இராமனுக்காக சரணாகதி புகுகின்றார் தசரதன்.
‘‘சிவனும், பிரமனும், திருமாலும் உன் வீரத்துக்கு ஒரு பொருளாக மாட்டார்கள்.
அப்படி இருக்க அற்ப மானிடர் உனக்கு ஒரு பொருள் அல்லவே.

இந்த இராமனும் எனது பிராணனும் இனி உன் அடைக்கலப்  பொருட்கள்”

சிவனும் அயன்  அரியும் அலர்; சிறு மானுடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான்
‘‘எனது உயிர் வேறு ராமன் வேறு இல்லை.
இரண்டும் ஒன்று தான் ”என்பதை சொல்லாமல் சொல்லுகின்றான் தசரதன்.

21. உடனே இராமனை அழைத்து வா

வால்மீகி ராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் இல்லாத ஒரு அற்புதமான காட்சியை குலசேகர ஆழ்வார் சித்தரிக்கிறார்.
ஸ்ரீராமனை பார்க்காமல் தசரதனால் ஒரு நொடி கூட இருக்க முடியாது.
அரசவைக்குச் சென்றாலும் நினைவெல்லாம் ராமன் மீதுதான் இருக்கும்.
அரசவைக் காரியங்களைக்  கவனிக்கும் பொழுதே ராமன் மீது நினைவு வந்துவிடும்.
உடனே சுமந்திரனை அழைத்து இராமனை அழைத்து வரும்படி கட்டளை யிடுவான்.

அப்பொழுது இராமன் ஓடி வருவான்.
ஓடி வரும் பொழுது அப்படியே வைத்த கண் வாங்காது அவனைப்  பார்த்துக் கொண்டிருப்பான்.
அவன் மடி மீது அமர்ந்து, ‘‘கூப்பிட்டீர்களா, என்ன காரணம்” என்று கேட்டவுடன், ‘
‘ஒன்றும் இல்லை; நீ போகலாம்” என்பான்.
உடனே இராமன் இறங்கி ஓடுவான்.

22. முன்னழகும் பின்னழகும்

கண் மறையும் வரை இராமனைப்  பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு சில நிமிடங்கள் தான். மறுபடியும் இராமனைப்  பார்க்க முடியவில்லை என்கிற தவிப்பு வர,
சுமந்திரனைக் கூப்பிட்டு மறுபடியும் இராமனை அழைத்து வரும் படி கட்டளை இடுவான்.
இப்படி இராமன் வருவதும் போவதும் என அந்த நாளே  போய்விடும்.
இராமன் ஓடி வரும் பொழுது அவனுடைய முன்னழகையும் அவன் திரும்பி ஓடும்பொழுது
அவனுடைய பின்னழகையும் ரசிக்கக் கூடிய  ரசிகனாக தசரதன் இருந்தான்.
அப்படி ரசிப்பதில் தான் அவனுடைய உயிர் இருந்தது என்பதைக் காட்டும் உருக்கமான பாசுரம்.

வா போகு வா இன்னம் வந்தொரு கால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலு மெழில் தோளி தன் பொருட்டா விடையோன் றன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல் வினையேன் மனமுருக்கும் மகனே இன்று
நீ போக என்னெஞ்ச மிரு பிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

இந்தப்  பாசுரத்தின் கடைசி வரியை ஒருமுறை படித்துப்  பாருங்கள்.
‘‘என்னைப் பிரிந்து நீ காட்டுக்கு போகிறாய் என்று கேட்டவுடன்,
என்னுடைய நெஞ்சம் இரண்டு கூறாகப்  பிளந்துப் போயிருக்க வேண்டும்.
அப்படி போகவில்லை என்றால் என் நெஞ்சம் எத்தனை வலிமை?” என்பது போல அமைந்த பாசுரம்.

23. மயங்கி விழுந்த இராமன்

இராமன் தசரதன் மீது கொண்டிருந்த அன்பு, தசரதன் ராமன் மீது கொண்டிருந்த அன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல.
எத்தனைத் துன்பம் வந்தாலும் தந்தையின் சத்தியம் காப்பாற்றப்பட வேண்டும்,
அதுதான் ஒரு தனயனுக்கு தலையாய கடமை என்பதில் உறுதியாக இருந்தவன் இராமன்.
தசரதன் இறந்த பொழுது, ‘‘வாய்மைக்கு இனி யார் உளர் ?”என்று கம்பன் கேட்கின்றான்.
காட்டில் வசிக்கும்போது பரதன் வருகின்றான்.
தன்னுடைய தந்தை தசரதன் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டதும்,
‘‘வெந்த புண்ணில் நுழைந்த வேல் போல, வார்த்தை செவியில் நுழைவதற்கு முன்னாலே,
கண்ணும் மனமும் காற்றாடியை போல் கழன்று விழ, மயங்கி தரையில் விழுந்தான் ராமன்.

இதை இப்படிச்  சொன்னால் சரிதான்.
ஆனால் கம்பன் ஒரு படி மேலே போய், விண் ணுலகத்துக்கு அப்பால் உள்ள பரமபதத்துக்கு  உரியவனான இராமன்,
தசரதனின் மரணத்தைக்  கேட்டு தரையில் விழுந்தான் என்று சொல்வதில் இருந்து,
இராமன் தசரதன் மீது கொண்ட அளவற்ற அன்பு தெரிகிறது.

விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்
கண்ணொடு  மனம் சுழல் கறங்கு போல் ஆய்
மண்ணினை விழுந்தனன் வானின் உம்பரான்

24. பெயர் சூட்டிய குரு

தசரதனுக்கும் இராமனுக்கும் குருவான வசிஷ்டர் பிரம்மனின் புதல்வர்.
புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர்.
பிள்ளை இல்லாத தன்னுடைய குறையை தசரதன் குரு வசிஷ்டரிடம் சொல்லிப் புலம்பிய பொழுது
சாட்சாத் அந்தப்  பெருமானே, தசரதனுக்குப் பிள்ளையாகப்  பிறக்கப் போகின்றான் என்கின்ற தேவ ரகசியத்தை
அறிந்து புத்ர காமேஷ்டி யாகத்தைச் செய்யச் சொல்லுகின்றார் வசிஷ்டர்.
புத்திர காமேஷ்டி யாகம் மூலம் திருமாலே தசரதனுக்குப் பிள்ளையாக அவதரிக்கிறார்.
அப்படி அவதரித்த பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டியவர் வசிஷ்டர்.

கரா மலைய தளர் கைக்கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய்  என அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப் பொருளுக்கே
இராமன் எனப்  பெயர் ஈந்தனன் அன்றே

குரு என்ற நிலையை மீறி, இராமனிடத்திலே ஆழமான அன்பை வைத்திருந்தார் வசிஷ்டர்.
அதைப்போல குலகுரு வசிஷ்டர் என்ன சொன்னாலும் தட்டாமல் நிறைவேற்றும் ஒரு சீடனாக
இராமன் திகழ்ந்தான் என்பதை இராமாயணம் முழுக்கக்  காணலாம்.

25. விஸ்வாமித்திரர்
‘‘நான் அறிவேன்”

இராமாயணத்திலே எம்பெருமானாகிய இராமன் இரண்டு ஆச்சாரியார்களை பெற்றான்.
ஒருவர் வசிஷ்டர் என்று பார்த்தோம்.
அவர் குல குரு.
இன்னொருவர் விசுவாமித்திர மகரிஷி.
விஸ்வம் என்றால் உலகம்.
மித்ரன் என்றால் நண்பன்.
இந்த உலகுக்கு நண்பன் என்கிற பொருள் கொண்ட பெயரை உடையவர் விசுவாமித்திரர்.
விசுவாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஒரு காலத்தில் பகை இருந்தது.

எப்படி கருடனும் பாம்பும் ஒன்றுக்கொன்று பகையாக இருந்தாலும், பகவானிடத்திலே இணைந்து இருக்கிறதோ,
அப்படி வசிஷ்டரும் விசுவாமித்திரரும் இராமருடைய விஷயத்திலே ஒன்றாகவே இணைந்து
செயல் படுவதை இராமாயணத்தில் காணலாம்.
பரம்பொருள் ராமனாக வந்து அவதரித் திருக்கிறான் என்பது வசிஷ்டருக்குத் தெரிந்தாலும்
அவர் ரகசியத்தை  வெளியே சொல்லவில்லை.
ஆனால் விசுவாமித்திரர் சபையில் போட்டு உடைத்து விடுகிறார்.
” தசரதா! நீ சாதாரண பிள்ளை என்று நினைக்கக்கூடிய இராமன் பரம்பொருள் என்பதை நான் அறிவேன்.
வசிஷ்டர் போன்ற ரிஷிகளும் அறிவார்கள்.

அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம்
வசிஷ் டோபி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்திதா:’

இந்த இடத்தில் வால்மீகியின் இந்த  ஸ்லோகத்தை எடுத்து பெரியவாச்சான் பிள்ளை பற்பல அர்த்தங்களை கொட்டித்  தீர்க்கிறார்.

26. பிராட்டி பெருமாளை சேர்த்து வைத்தவர்

பரம்பொருள் இராமனாக வந்து  அவதரித்து விட்டான்.
பிராட்டி சீதையாக அவதரித்து விட்டாள்.
இந்த இருவரையும் சேர்த்து வைக்கக்கூடிய கைங் கரியத்தைச் செய்தவர் விசுவாமித்திரர்.
அது மட்டும் இல்லை
இராமனுக்கு முதன் முதலில் ஸூப்ரபாதம் பாடியவரும் அவர் தான்.
இராமன் விசுவா மித்திரரை   தனது குரு என்கிற நிலையை என்றும் மறந்ததில்லை.
விசுவாமித்திரர் வேள்வியை இராமன் காத்து முடித்தவுடன்.
‘‘இந்த உலகத்தை முழுக்க படைத்து காக்கும் பரம்பொருளான நீ இன்று
என்னுடைய கேள்வியை காப்பாற்றிக்  கொடுத்தாய்” என்று ஒரு வார்த்தையைச் (அவன் பரம்பொருள்) சொல்லிப்  பாராட்டுகிறார்.
”என்ன பணியை நான் செய்ய வேண்டும்?” என்று குருவைக்  கேட்பது சீடனின் கடமை.
அதை இராமன் மிக அழகாகச்  செய்கிறான். ‘
‘குருவே  சொன்ன கடமை நிறைவேறிவிட்டது அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? என்று
கேட்கும் பொழுது விசுவாமித்திரன் இராம அவதாரத்தின் நோக்கத்தை ஸூஷ்மமாக சொல்லிக் காட்டுகின்றார்.
அந்தப் பாடல் இது.

அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர்
விரியும் வார் புனல் மருதம் சூழ்  மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்

‘‘பெரிய காரியம் உள, அவை முடிப்பது பின்னர்
” இராவண வதம் போன்ற பெரிய காரியங்கள் பின்னால் உண்டு.
இப்போதைக்கு மிதிலை போவோம் என்ற வரியில் உள்ள அர்த்தத்தைக் கவனிக்க வேண்டும்.

27. இராமாயணமும் மகாபாரதமும்

இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை ஒரே வரியில் சொல்லிவிடலாம்.
அதை ஒரு திரைப்படப் பாடலிலே கவியரசு கண்ணதாசன் மிக மிக அற்புதமாகச் சொல்லுவார்.
பாகப் பிரிவினை என்ற படத்தில் எழுதப்பட்ட அந்தப் பாடலின் பல்லவி இது.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
வேற்றுமையை  வளர்ப்பதனாலே விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்பதைச்  சொல்ல வந்த காப்பியம் இராமாயணம்.
வேற்றுமையை வளர்த்தால் எப்படி மக்கள் அழிவார்கள் என்பதை குருஷேத்திரப் போர் மூலம் காட்டிய காப்பியம் மகாபாரதம்.
18 அக்குரோணியும் அழிந்து விஞ்சியர்கள் எத்தனை பேர்?
மனித சமூகம் அறிய வேண்டிய செய்தி அல்லவா இந்தியாவின் இரண்டு இதிகாசங்கள் தரும் செய்தி.

28. மூன்று தம்பியர்

இராமனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர்.
லட்சுமணன், பரதன், சத்ருக்கணன்.
பரம்பொருள் இராமனாக அவதரித்தான்.
அவனுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனாய் இருந்து பணி புரியும் இறைத்தொண்டனாக லட்சுமணன் இருந்தான்.
சீதையைப் பிரிந்து பல மாதங்கள் சகித்துக் கொண்டிருந்த இராமன்,
லட்சுமணனைப் பிரிந்த பிறகு, ஒரு நொடியும் தாமதிக்காது தன்னுடைய சோதிக்குத்  திரும்பினான்.
‘‘இமைப்பில நயனன்” (ஒரு நொடியும் தூங்காதவன்) என்று லட்சுமணனை கொண்டாடுவார்கள்.
கைங்கர்ய ஸ்ரீமான் என்றும்,
இளையபெருமாள் என்றும்
லட்சுமணனை வைணவ உலகம் போற்றும்.

இராமனிடத்திலே பரதன்  கொண்ட அன்புக்கு  ஈடாகச் வேறு ஒருவரைச்  சொல்லவே முடியாது.
இராமனுடைய தாய் கோசலை பரதனைப்  பற்றி சொல்லும் பொழுது
‘‘ராமா உன்னை விட மும் மடங்கு நல்லவன்” என்று சொல்வதில் இருந்து
பரதனின் பெருமையைப்  புரிந்து கொள்ளலாம்.
‘‘படியில் குணத்து பரத நம்பி” என்று பரதனின் பெருமையை ஆழ்வார்கள் பாடுவார்கள்.

29. ஒரே பாட்டுக்காரன்

கடைசி தம்பி சத்துருக்கனன்.
பரம பாகவதனான பரதன் கூடவே இருந்தவன்.
பாகவத நிஷ்டை என்று சத்ருக்கனாழ்வாரை வைணவ மரபு போற்றும்.
ராமன் சொன்ன பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது.
இராமன் வருவதில் தாமதம்.
‘‘தம்பி சத்ருக்கனா, நீ இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்.
நான் உயிரை விடப் போகிறேன்” என்று பரதன் கூறினான்.
சத்ருக்கனன் துடித்துப் போனான்.
‘‘இந்த அரசை விட்டு, காட்டை ஆள போனான் ஒருவன். (இராமன்)
அவனுக்குத்  தொண்டு செய்ய அவன் பின்னால் போனான் ஒரு தம்பி (இளைய பெருமாள்).
அண்ணன் வர தாமதம் ஆகி விட்டது என்று உயிரை விடத் துணிந்தான்  ஒரு தம்பி (பரதன்).
இவர்களுக்கு இடையில், இந்த அரசை ஏற்று நடத்த நான் ஒரு தம்பி, நன்றாக இருக்கிறது கதை”

கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; ‘‘போனவன் தான் வரும் அவதி போயிற்று’’ என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா!

30. ஸ்ரீராம நவமியின் நோக்கம் இதுதான்

இராமாயணம் முழுக்க
அன்பு தான்.
அடைக்கலம் தான்.
தொண்டு தான்.
தூய்மை தான்.
வேடனாகிய குகனை தம்பியாக ஏற்றுக் கொண்ட இராமன்
வானரமாகிய சுக்ரீவனையும்,
அரக்கனாகிய வீடணனையும்
சகோதரனாகவே ஏற்றுக் கொள்ளுகின்றான் என்றால்
உலக சகோதரத்தை ஓங்கிச் சொல்லும் உன்னதமான இதிகாசம் இராமாயணம்.
‘‘நடத்தையில் நின்று உயர் நாயகன்”என்று இராமனின் பெருமையை பலத்த குரலில் பேசும் காவியம்
என்பதால்தான் பாரத நாட்டின் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் சிறப்பு பெறாது,
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்த பாரத தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும்
இராமாயணம் போற்றப்படுகிறது.

இராமன் வணங்கப் படுகிறான்.
நம்மாழ்வார் ஒரே வரியிலேயே சொல்லிவிட்டார்.
‘‘கற்பார் இராமபிரானை அல்லால்  மற்றும் கற்பரோ?” என்று பாடினார்.
ஸ்ரீராம நவமி நன்னாள் எப்படிக் கொண்டாடுவது என்றால்,

1. இராமனுடைய குணங்களை நெஞ்சில் ஏற்றி போற்ற வேண்டும்.

2. பரம்பொருளாகிய ஸ்ரீராமனிடம் அடைக்கலம் புகுந்து நம் வாழ்வை ஏற்றிக் கொள்ள  வேண்டும்.

இந்த இரண்டும் தான் முக்கியம் என்பதை உணர்ந்து இந்த ஸ்ரீராம நவமியைக் கொண்டாடுவோம்.

————————–————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–

March 27, 2023

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள
சொற்றொடர்களையை தொகுத்து, ஸ்ரீ ராமாயணமாக அருளிச் செய்துள்ளார்.
இதனைத் தினமும் பாராயணம் செய்தால்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும்,
ஸ்ரீ ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும்.
இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும்,
மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு  அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த ஸ்ரீ யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து
அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார்.
ஸ்ரீ நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீ பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி ஸ்ரீ திருக்கண்ணமங்கை எம்பெருமான் ,
ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஸ்ரீ கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார்.
எனவே அருளிச் செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக ஸ்ரீ கலியன் ஸ்ரீ நம்பிள்ளையாகவும்,
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.
இவருக்குஸ்ரீ வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும்
ஸ்ரீ அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்

4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல்  பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக
அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்தோத்ர க்ரந்தங்கள் –
இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் ,
மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்ரீராமாயணம் –
ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான  சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான
வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில்  எழுதியுள்ளார்.
இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமை மிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக
இவர்  அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.

இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.
அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.
ரஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார்.
பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து
முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.

நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார்.
அதை மனதில்  கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு
மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் 24000 ஸ்லோகங்கள் அடங்கிய
ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக எழுதினார்

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள்
அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்
அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது.
இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும்
அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.
மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின்
பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்
அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால்
அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும்
நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும்
அறிந்து கொள்ளலாம்.
அவைகளில் சில கீழே:

“நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது
அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம்
உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம்
[நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால்
நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால்
அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.

இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது,
உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது
(சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது.
இவையே பாரதந்த்ரியம்”.

மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?
நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா
அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல.
எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.

ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”.
அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து,
அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது
நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது,
பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள்
குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார்.
பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ –
பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும்
அதுவும் நன்மைக்கே’ என்கிறான்.

ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே,
அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.

ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது
வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது
எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச் செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

——-

ஸ்ரீ பால காண்டம்

திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு

ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

————-

 

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு

மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய

குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப

இருநிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மாஓழிந்துதேர்ஒழிந்து

கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து

அங்கங்கள்அழகுமாறி

மான்அமரும்மெல் நோக்கி  வைதேகி இன்துணையா

இளங்கோவும்வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக்

கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு

வியன்கானம் மரத்தின் நீழல்

கல்லணைமேல்கண்துயின்று

சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்

நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு

என்னையும் நீள் வானில்போக்க

என் பெற்றாய்கைகேசீ!

நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்

என்று வான்எறத்

தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து

ஆனை புரவி தேரோடுகாலாள்

அணிகொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன்பரதநம்பிபணியத்

தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்

எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்

திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்

தண்டகாரண்யம் புகுந்து

————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்  வாங்கி
புலர்ந்து  எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு  தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு-(பெருமாள் 10-6)

மராமரங்கள் ஏழும் எய்து

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி

கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

திறல் விளங்கு மாருதியும்

மாயோன் தூது உரைத்தல் செய்ய

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

 

சீராரும் திறல் அனுமன் -3-10-10

மா கடலைக் கடந்தேறி-10-2-6-

மும் மதிள் நீள் -திரு எழு கூற்று இருக்கை

இலங்கை புக்குக்-3-9-10

கடிகாவில்,-10-2-5-

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-3-10-10-

‘நின் அடியேன் விண்ணப்பம்-3-10-1-

கேட்டருளாய்!திரு விருத்தம் 1

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்-10-11-
இலங்கையர் கோன்-8-5-7-

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-10-2-6
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன்-திருமாலை  11

சினம் அழித்து,-8-6-9-

மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக் 6-10-6-

கொடியோன் இலங்கை புகலுற்று-8-6-4-

அலையார் கடற்கரை வீற்றிருந்து–4-1-3

செல்வ வீடணற்கு  நல்லவனாய்(நல்லானாய் )-6-8-5

விரி நீர் இலங்கை அருளிச்-7-6-9-

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,10-7

கொல்லை விலங்கு  பணி செய்ய-8-6-4

மலையதனால் அணை கட்டி-8-8-

மறு கரையை ஏறி-10-7

(வால்மீகி
கும்பகர்ணன் முதலில்
இந்திரஜித் 5 நாள்
இராவணன் 7 நாள்

கம்பராமாயணம் மாறுபாடு உண்டு

இங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-siriya thiru  madal-26

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்-11-4-7-

கும்பனோடு நிகும்பனும் பட 10-2-5

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-10-3-2-

அரக்கர் ஆவி மாள,4-8-5-

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-3-9-5

சிலை வளைத்துச்-8-5-5-

சரமழை பொழிந்து-thiruppaavai -4

(கரம் துணிந்து பாட பேதம் )வென்றி கொண்ட செருக் களத்துக்-6-6-8

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-naanmukan -42

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-poykai -52

மற்றுமுள்ள வானவர்-thiruchchantha viruththam 87

மலர்மழை பொழிந்து-10-9-3

மணி முடி பணித அடியிணை வணங்கக்–periya thirumoli 1-2-6-

கோலத், திரு மா மகளோடு-6-9-3

செல்வ வீடணன்-6-8-5

வானரக் கோனுடன்-3-10-8-

இலகும்-9-7-5-

அணி நெடுந்தேர் ஏறிச்-5-4-9-

சீரணிந்த குகனோடு கூடி-3-10-4-

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-10-1

நன்னீராடிப்-thiru viruththam -21

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் -thiruvaay 8-4-7

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-thiruvaasiriyam -1

சூட்டு நன் மாலைகள் அணிந்து-21

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-2-3-7-

வடிவிணை இல்லாச் -9-2-10-

சங்கு தங்கு முன்கை நங்கை-thiruchchantha- 58

மலர்க் குழலாள் சீதையும் தானும்-3-10-9

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து -thiruppaavain -23

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–4-5-1-

வாழ்வித்தருளினார்.”–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடி மாலை–ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள்–

March 6, 2023

ஸ்ரீ திருவடி மாலை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்‌ சேது சமத்தான மகாவித்துவான்‌ பாஷா கவிசேகரர்‌ ஸ்ரீ  ரா. இராகவையங்கார்‌

மகாவித்துவான்‌ ரா. இராகவையங்கார்‌ மாலையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள வாழ்த்தில்‌,
‘திருவினிய பொய்கை’ . என்று பொய்கையாழ்வார்‌
முதலாக குருகைமகிழ்‌ மாறன்‌ பெரிய சடகோபன்‌” ஆகிய குரவர் தாள்‌ சேர்குவர்‌ அடிமையானே’ என்று
குறித்தல்‌ அவர்‌ தம்‌ அடியார்க்கு அடியனாகும்‌ பத்தி நிலையைக்‌ காட்டும்‌.

திருவடிமாலையில்‌ சிலபாடல்கள்‌ திருமால்‌ திருவடி களைப்‌ போற்றுகின்றன. ௪ட கோபரைச்‌ சில பாடல்கள்‌ து.திக்கின்‌றன. பலபா டல்கள்‌ கிருஷ்ணாவதாரம்‌, இராமாவதாரம்‌, நரசிங்காவ வதாரம்‌ முதலிய அவதாரங்கள்‌ பற்றியவையே= திருவேங்கடம்‌, திருவரங்கம்‌, திருமாவிருஞ
சோலை, – திருப்புல்லாணி: முதலிய திருப்பதிகளில்‌ எழுந்தருளிருள்ள எம்‌ பெருமான்‌ களைப்‌ பற்றியவை பல.
திருமால்‌ அருள்‌ வேண்டும்‌ பாடல்கள்‌, மாயோனிடம்‌ முறையிடும்‌ பாடல்கள்‌ சிற்சில, இவ்வாறு திருவடி மாலை பத்தி ரசம்‌ கனிய அமைந்த இன்னிசைப்‌ பாடல்களாகும்‌.

திருவடிமாலையின்‌ இறுதியில்‌ இராமநாம மகமை உரைக்கும்‌ *சீராமநாமப்‌ பாட்டு என்னும்‌ பகுதி உள்ளது.
கல்லாரும்‌ கற்றாரும்‌ கற்கும்‌ நாமம்‌ கங்‌.கை முதல்‌ தீர்த்த பயன்‌ காட்டு நாமம்‌ வில்லாரும்‌ வீரர்‌ செயம்‌ வேண்டும்‌ நாமம்‌ மெய்ம்மைக்கே பரியாயம்‌ வேண்டும் நாமம்‌ என்று இவ்வாறு இராம நாம மகிமை பேசுதலை இப் பகுதியில்‌ காணலாகும்‌.
இந்தப்‌ பக்திப்‌ பனுவல்‌ மகாவித்துவான்‌ வாழ்  நாளி லேயே 1983ஆம்‌ ஆண்டு முதன்‌ முறையாக வெளிடப்‌ பெற்றது. 66 ஆண்டுகளுக்குப்‌ பின்‌ வெளியாகும்‌ இப்‌ பதிப்பினைத்‌ தமிழார்வலர்கள்‌ பெற்றுப்‌ பயன் பெறுவாார்களாக.

————–

வாழ்த்து
‘திருவினிய பொய்கை கருவினொளிர்‌ பூதன்‌
செகமுழுவ தும்பே யெனவகலு நன் பேய்‌
மருவினிய பாணன்‌ வளர்மழிசை பூரன்‌
மசிழ்புதுவை நாதன்‌ மதுரகவி கோதை
அரசினுயர்‌ கொங்கர்‌ மகிபகுல துங்கள்‌
அடியர் பத தூளி யணி குறைய லாளி
குருகைமகழ்‌ மாறன்‌ பெரியசட கோபன்‌.
குரவரிவர்‌ தாள்சேர்‌ குவரடிமை யானே,

விதியோர்தர வியலாத மு குந்தன் மிசை யன்பின்‌
விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்‌
மதியோர் புகழ்‌ குருகூர் மகிழ்‌ மாறன் சட கோபன்‌
மதுரத் தமி ழமிழ்தைப் பொரு மறையைப் பொழி முகிறாள்‌
துதியோர் குரு வழிபாடு செய்‌ கோளூர் மறை வாணன்‌
றுகடீர் மது ரகவீச னிணைச் செம்பத பதுமங்‌
கதியோர் தரு பூதூரெதி ராசன் பத கஞ்சங்‌
கலை தேர் வர வர யோகிகள்‌ கழலே தொழுவோமே.

நூல்

பொருள் கொடுத்து வசை கேட்கும்‌ புல்லர்க்‌ கேயும்‌
பொறுக்கரிதாய்ச்‌ செலிசுடும்வெம்‌ புன்சொல்‌ பெய்தாற்‌
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு
மம்மானின்‌ திருவுளத்துக்‌ காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந்‌ தெளிய லாகாத்‌
தெய்வங்கள்‌ தெய்வதமாஞ்‌ செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
லிழித்துரையிற்‌ பழித்துரைப்பா னெண்ணினேனே..–1–

மறை யெடுத்துன்‌ குணத்தொன்று வழுத்தப்‌ புக்கு
மனம் வாக்குக்‌ கெட்டாத மகிமைத்‌ தென்றே
யிறையெடுத்துச்‌ சொல மாட்டா தீண்டு மீண்ட
வேற்றமுள போற்றுமுளச்‌ சோதீ யுன்னைத்‌
துறையெடுத்த நெறி தோன்றா நாயேனெய்தச்‌
சொல்லாலே கூவுகின்ற தெல்லாம்‌ பாலர்‌
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
பிதற்றுகின்‌ற தன்மையினும்‌ புன்மைத்‌ தம்மா.–2-

ஏரி தான்‌ மாரியினுக்‌ கேது வாயி
னிருவிழிநோக்‌ கிரவிவரற்‌ கேது வாயிற்‌
சீரிதா நின்னருட்கு நாயேன்‌ செப்புஞ்‌
சிறுசொல்லு மேதுவெனச்‌ சிறக்கு மம்மா
பாரினீ யருள் செய்வாய்‌ செய்யா யானோ
பயன்கருதேன்‌ பருகுபவன்‌ பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
துய்யாமை யேத்தினே னுடைய கோவே.–3-

சொல்லாலே மேலாப்புச்‌ செய்து வானிற்‌
.றிகழ்சோலை மலை மேய தேவ தேவே
சொல்லாலே யுனை வழுத்தத்‌ துணிவ தெல்லாந்‌
துகிலாலே யெரிய விக்கத்‌ துணிவ தாகும்‌
வில்லாலே யாகாய மெய்வ தாகும்‌
விரலாலே வளி யளக்க. மேவ லாகுங்‌
கல்லாலே பெருங்கடனீர்‌ கடத்த லாகுங்‌
காலாலே வானேறக்‌ கற்ப தாமே.–4-

5. அவியாத்‌ தருப்பைவெஞ்‌ சாயக
மாஞ்சிலை யாரணங்காந்‌
தவியாக்‌ கரியர சாகுந்‌
தயிர்க்குடத்‌ தங்குமுத்தி செவியாற்‌ கனவினுந்‌ தெய்வக்‌
கவிகை தெரிந்திலெனைக்‌
கவியாக்கி யாண்ட முழுமுதற்‌று ஓன்மைக்‌ கடவுளுக்கே.

6. ஏழு லோகமும்‌ வாழ வென்று ஓரு
சோழ  மண்டல மீதுதன்‌
னிணையில் காவிரி நடுவி லேயர
வணையிலே வளர்‌ தெய்வதம்‌
மாழை மாதகலாது மின்னென
மார்பிலே யொளி ரருண் முகில்‌
வள மிகுந்தமிழ்‌ மறை மொழிந்துயர்‌
பதின்ம ராடு குணக் கடல்‌
வேழ மென்பதன் வாயினால் வெளி
யாகி வந்த விழுப்பரம்‌
வேத முள்ளன யாவையும் முத
லீறு மோதும்‌ வியன் சுடர்‌
ஊழி யின்னுயிர்‌ முழுதை யுந்தன துதரம்‌ வைத்த தனிப் பொருள்‌
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
தய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக்‌ கிடந்த கருணை வா ரிதியைக்‌
கன் மழை தடுத்த கார்‌ முகிலை
யடன் மிசைத்‌ தேவர்க்‌ கமுது பெய்‌ யாரா
வமுதினை யலர் மகட்‌ கணியை
மடன் மிசைத்‌ தேன் பாய்‌ மாலிருஞ்‌ சோலை
மலை மிசை மரகத மலையை
யுடன் மிசைச்‌ சுழலும்‌ புன் பிறப்‌ பொழிவா
னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம் பழி சூழ்கின்ற யானுன்‌ பதுமபத
மல்லாற்‌ றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம்‌ வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார்‌ பொல்லாரென்‌ றிருகூறு செய்யு நவையுமுண்டே..

9. பிள்ளைப்‌ பருவத்‌ ‘தொரு குழவி
பெரியோர்‌ கையாற்‌ றொழது தொழுது பேணி யவர் தாமுரைத்த மொழி
பிதற்றி யிருக்கும்‌ பெற்றியைப்போ
லுள்ளத்‌ துருகு மன்பர் தொழி
லுதனை நடிக்க“வுவந்துன சீர்‌
உள்ள படி யொன்‌ றுணரும்வலி
யொழிந்த விழிந்த நாயடியேன்‌
எள்ளத்‌ தனையு மிளகாத
விருப்பு மனத்தாற்‌ பொய்ந் நாவா
லீயா திவறுங்‌ கொடுங்கையா
லெண்ணி யியம்பித்‌ தொழலெல்லாங்‌
கொள்ளத்‌ தினையுந்‌ திருவுளத்துக்‌ குறித்த லுளதோ கோகனகக்‌
கோயில்‌ வளர்ந்த கொடி படர்ந்த
கொடைக் கற்‌ பகமே குணக் கடலே.

10. வெருவித்‌ துயர் படு கடலைப்‌ பொரு பிற
வியினிற்‌ சுழல் வரும்‌ வினை தீர
மருவித்‌ தொழு மன மதனைத்‌ தருவதுன்‌
மகிமைத்‌ திருவரு ணெறியாமே
குருவிற்‌ பொலி குல முழுதுக்‌ கொருபதி
குருகைப்‌ பதி வளர்‌ தமிழ் மாறர்‌
பெருவிற்‌ பன மறை யமிழ்தைப்‌ பருகிய
பெருமைப்‌ புயலெனு நெடுமாலே.

17. கத்து கடல் சூழ்‌ புலி
கண்டா கருணன்‌ முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்‌
திறத்துக்‌ குகந்தே யவற்குமவன்‌
சித்த முவத்தல்‌ காரணமாத்‌
தீய தம்பி தனக்குமுயர்‌
முத்தி கொடுத்த திருவருளே
மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்த கண்‌டா கர்‌ணன்‌
பாழி வெள்ளிப்‌ பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப் பெறு மாயமென்‌
நான்முகப் பிர மற்கொரு தந்தையே.

13-. கூவத்தே வீழ்ந்த சிறு குழவியை நம்‌.
றாயெடுக்கக்‌ குதித்தாற்‌ போலப்‌
பாவத்தே மனக் கலம்போய்ப்‌ பவக் கடல் வாய்ப்‌
பட்டாரைப்‌ பரமன்‌ றானே
யாவத்தே யில்லாத பெருவீட்‌.டை.
யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத்‌ தோன்‌ றுவனிம்‌
மெய்யுணர்ந்தோர்‌ வினைதீர்ந்‌ தோரே.

14, காயா மலருங்‌ கருவிளையுங்‌
காருங்‌ கடலுங்‌ கமழுமெழின்‌
மாயா மதுசூ தன முகுந்த
வர மாதவ வாமன வெனவா
யோயா தலற்றி யகங்கரைய
யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்‌
பாயா வழிந்து வினைக் கோடை.
பாற்று நாளு முளதேயோ.

15. மனைவிட்டிலன்‌ மகவிட்டிலன்‌
வலிவிட்டிலன்‌ மாலே
‘தனைவிட்டில னிலம்விட்டிலன்‌
றனம்விட்டில னாசை
‘தினைவிட்டிலன்‌ வினைவிட்டிலன்‌
திருவற்றவ னேனும்‌
உனைவிட்டில னெனின்‌ மற்றவ
னொளி பெற்றவ னாமே.

16. நின்ன தாகுமால்‌ விண்ணு மண்ணொடும்‌
நிலைய தாகிய வீடு மேயெனின்‌
என்ன தாக யாதுள்ளதோ தெரி
கிற்கிலே னுடற்‌ செனன மோடுயிர்‌
உன்ன தாகலானிற்கு நல்குதற்‌
கொன்று மில்லையா னேழை யேனுமென்‌
தன்ன தாக வென்‌ கையி லுள்ளதஞ்‌
சலி நினாதுகை தனிலி லாததே.

17. நெய்யிற்‌ றனியே யெரியாத
நெருப்புத்‌ திரியின்‌ மிசை யதையே
பெய்யிற்‌ சுடர் விட்‌ டொளி கிளரும்‌
பெற்றி யேய்ப்ப மலவுயிரை
மெய்யிற்‌ புகுவித்‌ திரண்டனையு.
மேவிப்‌ பொலியும்‌ விழுச்சுடர்‌ நீ
கையிற்‌ கனி போற்‌ காட்டினல்லாற்‌
காணா தெவர்க்கு மகக் கண்ணே.

18. காமாந்த காரமடுக்‌ காரிகையார்‌ வேட்கைக்‌
கராவாயிற்‌ கண்ணிழந்து கன்‌மனவெங்‌
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா களிறு ஓன்‌
தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்‌
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப்‌ புக்குப்‌
போற்று கரி காத்ததினு மேற்றமிதற்‌ குண்டால்‌
தீமாந்து மெழுகு பொரத்‌ தினமுருகு மன் பர்‌
சிந்தை குடி கொண்டிருலகு முந்தை முழு முதலே.

19. பாபத்தாற்‌ காழ்த்தறிவு
பாழ்த்ததனான்‌ வெளிறியடுங்‌
கோபத்ததாற்‌ சிவப்புற்றுக்‌
கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப் பெய்தி
யழுக்காற்றாற்‌ றடிக்கு மனம்‌
சாபத்தேற்‌ குயிர்ப் பிணியாய்த்‌
தழைப்பது காண்‌ டனி முதலே.

20. பழுவிருக்கத்‌ தோல் வேய்ந்த பாவை நெஞ்சப்‌
பாம்பிருக்கும்‌ பாழ்ங்குடங்கர்‌ பற்பல்‌ கோடிப்‌
புழுவிருக்கப்‌ போர்த்தமலப்‌ பொதியே யைந்து
புலப் பேய்கள்‌ குடியிருக்கும்‌ புக்கில்‌ புண்ணாய்‌
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய்‌ யென்று
குறித்திருக்கப்‌ பெற்றபெருங்‌ குணத்தோர்க்‌ கல்லா
லெழுவிருக்க மொருகணையா ஸனெய்து பத்த
ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

21. பணவாசைப்‌ பேய் கண்‌ டுயில விடா
தெனைப்‌ பாவையராம்‌
பிணவாசைப்‌ பூதங்‌ கனவும்‌
புகுந்து பிடித்துடற்று
முணவாசைக்‌ கூளி யெஞ்‌ ஞான்றுந்‌
தெறுமிவைக்‌ கோய்வுமுண்‌டோ
குணவாசைப்‌ பாநுவைப்‌ போன்றுள
னோங்மென்‌ குலதெய்வமே.

22. பொன்னினைக்கும்‌ புகழ் நினைக்கும்‌
பூமியெலா நினைக்கும்‌
பூணினைக்கு மூணினைச்கும்‌
பூவை மொழி யாரை
மன்னினைக்குந்‌ தன்னினைக்கும்‌ மற்றையர்க்குத்‌ தீது
வர நினைக்கும்‌ பழி மறைக்கும்‌
வழி நினைக்குந்‌ தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
மிருள் புகுத்த வல்ல தெது நினைக்க வென்றாலு
மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
நீநினைத்தல்‌ வேண்டு
நீடொளிய சேடகிரி
நின்ற பெருமாளே.

23-மாட்டாலும்‌ மயக்காலும்‌ மகிழாலும்‌
புகழாலும்‌ வாட் கண்‌ மாதர்‌
கூட்டாலு முணைவாலுங்‌ குடியாக் கொண்
மடியாலுங்‌ கோபத்‌ தாலும்‌
பீட்டாலு மழுக்காற்றுப்‌ பேயாலு
நாயேன் செய்‌ பிழைக ளெல்லாம்‌
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்‌
பாவபெனப்‌ பகர்வ ரெந்தாய்‌.

24-ஏழாலே அளந்திட்ட புன் பிறப்பின் எத் துணைக்கோ வினைவேன் எந்தாய் ே
ஊழாலே ஒரு கோடி உடலாலே யுரையாலே யுடறுங்‌ காமப்‌
பாழாலே கூழாலே பகையாலே பசியாலே பயத்தாற்‌ பாவச்‌
சாழாலே திணிந்த மனக்‌ கல்லாலே படுவல் எலாங்‌ கணிக்கலாமே.

25. சற்றேனு மிரங்கீரோ வெனப் பசித்தார்‌
தழங்குரைமுன்‌ றலைக் கேட்‌ டோர்கைத்‌
துற்றேனு மீவறியாச்‌ சுமடனேன்‌
சுடும்வறுமை தொலையத்‌ தம்மை
விற்றேனு முதவுகொடை வீரர்முன
மென்னாவேன்‌ வியாள மேய
புற்றேனு மொவ்வாவென்‌ புல்லுடலே
புவியினெடும்‌ பொறையா மெத்தாய்‌.

26. அருகிருக்கும்‌ புல்லாணி யமர்ந்திருக்கும்‌
வில்லாளிக்‌ கன்பு பூண்டு
பெருகிருக்கு முறையானே பேசறியே
னந்தணரிற்‌ பிறந்தேன்‌ வாளா
முருகிருக்குங்‌ குழலார்க்கு முனைந்திருக்குங்‌ காமத்தீ மூள நாளும்‌
வெருகிருக்கு மாறிருளை விழைந்திருக்கும்‌
வெய்யனருண்‌ மேவ லுண்டே.

27. அனைபடைத்த வுயிர்க்கெல்லா மயன் படைத்த
‘தில்லை யுட லடியார்க்‌ காக்க
முனை படைத்த வறவாழி முதல்வனடி.
முளரியினை முன்னு மெண்ணந் தினை படைக்க மாட்டாது தீ நரகு
படைப்பார்தாஞ்‌ செய்த முன்னை
வினை படைத்த தல்லாது வேறுண்டோ
மெய்யுணர்ந்து விள்ளுங்‌ காலே.

28-குழலோம்பு மினியவிசைக்‌ குயிலோம்பு
குரன் மடவார்‌ கொடிய காமத்‌
தழலோம்பி யேயபணி தலையோம்பிப்‌
பெற்றவற்ப சார மென்னும்‌
விழலோம்பி யதனானோய்‌ மிக வோம்பி
மெலிவெல்லாம்‌ வீடாண்‌ மாயன்‌
கழலோம்பு மாறறியாக்‌ கசடோம்பி
நின்ற வெய்ய காட்சி யாமே.

29-பாடு பட்டுத்‌ தேறி நிதிப்‌ பரப்பு நாளும்‌
பகை விளைக்கு நிலனும் பெண்‌ பாலார்‌ கொங்கைக்‌
கோடு பட்டுச்‌ சிதைந்த புல வுடம்பும்‌ வாழ் நாள்‌
குறை பட்டுப்‌ போம் வழிக்குத்‌ துணையோ சொல்லாய்‌
காடு பட்டுப்‌ போகாமே காக்குங்‌ கார் போற்‌
கருணை மழை பொழிகின்ற கமலக்‌ கண்ணந்‌
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
திரும்பிறவிக்‌ கடற்பட்ட வேமை நெஞ்சே.

30-எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
இரு நுதலா ரிரண்டு கொங்கைக்‌
கல்லணைத்துக்‌ கண்ட சுகங்‌ கனவலைத்த
கனி சுவைத்த காட்சித்‌ தென்று
வில்லணைத்து நீல முகின்‌ மிளிர் பச்சைப்‌
பாயன் மிசை மேயினாற் போற்‌
புல்லணைக்கட்‌ சாய்ந்தவன் பேர்‌ புகன்‌ மிருப்பார்‌
பேர் புகன்று புகுவர்‌ வீடே

31-மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமை கொளுங்‌
கலையோ துளியுங்‌ கடலா நினைத்துக்‌ கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்‌ற நெஞ்சிற்கியான்‌
விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

32-குடி பிடிக்கு மானப் பேய்‌ குலம் பிடிக்கு
மகங்காரக்‌ கூளி யோடு
செடி.பிடி.க்கும்‌ பேராசைச்‌ செந்நாயு
மனக் குரங்குத்‌ தினமு மென்னை
மடிபிடிக்கும்‌ விடியலும்‌ வழி மறிக்கு
நரக நெறி வகுக்கு மூன்னை
யடி பிடிக்க வொட்டா விவ்‌ வல்லலெலாம்‌
வெல்ல வரு ளரங்கத்‌ தெந்தாய்‌.

33-பாட்டா னளி கண்‌ முரலுமெழிற்‌
பங்கே ருகத்தின்‌ மிசை யமர்ந்து
சூட்டா ரேகினம்‌ பெடைதிளைக்குந்‌
துறை சேர் மல்லி வளதாடி
தாட்டா மரைப்  போதுளப்போதிற்‌
றணவார்‌ பிறவச்‌ சலதி பட
மாட்டார்‌ முடிப்போ தவாவுமுதல்‌
வன்றாட்‌ பிணைந்‌ தெடுத்தலினே.

34-குலை யெடுத்த மரக் கொம்பிற்‌ குதித்துத்‌ தாவும்‌
குரங்கனைத்து நீ முன்னர்க்‌ குறித்த வாறே
மலை யெடுத்து மலை கடந்தும்‌ வாழ்ந்த வென்றன்‌
மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்‌ ந்திருளின்‌ வீழ்த லெல்லாத்‌
தயா வுளத்திழற் குறியாத தன்மை யென்னோ
சி லை யெடுத்த நீல முகில்‌ போற் புல்‌லாணித்‌
திருப்பதியின்‌ மேவி வளர்‌ தேவ தேவே,

35. செகத்துக்க ணவதரிக்குத்‌ தெய்வதச் சீர்‌
கேட்டுரையாச்‌ செவிட்டு மூங்கை
முகத்துக்கண்‌ விழித்திருக்க வகத்துக் கண்‌
குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக் கண்‌ வாழ் வனைத்து மிருங்கான
னீரனைத்தென்‌ றெண்ணா தேபெண்‌
அகத்துக் கண்‌ வந்துழல வாழ் நரக
மமிழப்போ மாதன்‌ யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம் வேட்ட
மயலானே வையத்‌ தென்றுங்‌
கருவேட்ட விடர்க்கடலிற்‌ சரைவே.ட்ட
வுடை கலம்போற்‌ கவிழ்கின்‌ றேற்குச்‌
செரு வேட்ட. தென்னிலங்கை தீ வேட்டஞ்‌
செயம் பொருத செல்வன்‌ கஞ்சத்‌
திருவேட்ட முழு முதல்வன்‌ சீர் வேட்ட
சேவடியே சேம மாமே.

37-ஆற்றைக் கடவா திருஞ்சழிவா
வாழ்த்த விரைவு மடு மரம் போன்
வாற்றைக் கடவா தீ குண முகில்
மாட்‌ட . விரையு மா மிவிடநீ .
றூற்றைக்‌ களைந்து வேர றுக்குத்‌
துகடீ ரருள்வா டருவை கொலோ
சேற்றைக்‌ கழுவ முடையளறு
திளைப்பேற்‌ கொருநாட்‌ டிருமாலே.

38. தெருளாசைப்‌ பட்டறிந்து செங்கண்மால்‌
சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா
லருளாசைப்‌ பட்டிருக்கு மடியார்முன்‌
செடிநாயேனவனிமீது பொருளாசைப்‌ பட்டிவறிப்‌ புன்பழியே
நனி யிட்டிப்‌ பொரு கண்‌ மானார்‌ மருளாசைப்‌ பட்டதனா னிருளாசைப்‌
பட்டெய்த வதிகின்‌ றேனே.

39-கறையடிக்குள்‌ வெதுப்பொழியக்‌ கலுழன்‌ மிசைக்‌
கார் மழைபோற் கடிது போந்த
விறை யடிக்குத்‌ தினை யுருகா விரும்புமன
மெமனெனும்பேர்‌ யார் சொற்‌ றாலும்‌
மறை படிக்கும்‌ பதைபததைக்கும்‌ பல்கோடி
நினை நினைந்து பரிவு கூரு
மறையடிக்கு முடிக்குமிக வழுத்து மரி
யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40-தேக நிலை யாத நிலை செத்தபிண மோதுஞ்‌
செல்வ நிலை யாதபடி சொல்வரிர வாளர்‌
போக நிலை யாமை வலி போமுதுமை கூறும்‌
புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்‌
மோக நிலை யாமைசொல மூடமன முண்டு
முற்று நிலை யாமை மறை கற்றவர்கள்‌ சொல்வார்‌
சோக நிலை யாத நிலை சொல்லி யருள்‌ வாரார்‌
சோலை மலை மேவி வளர்‌ நீல நெடு மாலே.

41-முடியிருக்கு நெடுமாலுக்‌ கடிமைசெய
முயலாத மூடமூர்க்கச்‌
செடியிருக்கு மனக்குரங்கு குடி.யிருக்கு முடையாக்கை சிதையா தேயிப்‌
படியிருக்கு மெனநினைக்கும்‌ பாமரர்க்குச்‌
செத்த பிணம்‌ பறை யாற்‌ சாற்றி
நொடியிருக்கு மெனக் கருதீர்‌ நுமக்குமிது
வழியென்று நுவலு மாலோ.

42. ‘குகை கண்டு தனி யிருந்து குல தெய்வம்‌
வரானாக்காக்‌ குருட்டு நெஞ்சாற்‌
பகைசண்டு சினந்துமுறு பணங்கண்டு
விழைந்தும் விழிப்‌ பான லார்புன்‌
னகை கண்டு மருண்டுமவர்‌ நடங்கண்டு
வியந்‌து மொழி நாள்க ளெல்லாந்‌
தொகை கண்டு துறவார்க்குச்‌ சுடுகாட்டிற்‌
புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறி கேட்டு வாங்கியதை மலைக் கடவுட்‌ கென்று
வதைத்திட்டுக்‌ கொலை படை.த்து வருள் படைத்த வேலன்‌
குறி கேட்டுக்‌ களியாட்டுக்‌ குணக் கூத்து மாடிக்‌
கும்பிட்டுப்‌ பெற்ற பயன்‌ றுன்பத்தின்‌ வேறோ
செறி கேட்டுப்‌ பவக் கடலிற்‌ றிரையிடர்க்கு நொந்து
தீ வினைக்‌ கரா வாயிற்‌ சிக்குவது தீர்ந்து
நெறி கேட்டுப்‌ பெரு வீட்டி னிலைத்தினிது வாழ
நீர் நினைதி ராயினரி பேர் நினைதிர்‌ மாதோ.

44. தீவினைப்‌ பெருக்காற்‌ பொருடனைப்‌ பெருக்கிச்‌
சிறு புகழ்க்‌ கொரு சில விடுவீர்‌
கோவினைத்‌ தொலைத்துச்‌ செருப்பினைக்‌ கொடுக்குங்‌
கொள்கைநுங்‌ கொள்கையே யம்மா
காவினைச்‌ சயித்த கொடையினா லடியர்‌
கருதிய தன்னையு மளிக்குத்‌
தேவினைப்‌ பழிச்சி யாவையுங்‌ கழித்துச்‌
சிறப்பினை யுறப் பெறா தீரே.

45. மா கனக மேருவென நிதியி ௫ந்தென்
மகிழ் பெண்டிர்‌ மக்களொடு வாழ்விருந்தென்‌
றேக நக மெனவிருந்தென்‌ றெளித்த தாலென்‌
செக முழுது மடிமை புகுஞ்‌ செயத்தி னாலென்‌
போக நகராதிபதி யாயி னாலென்‌
பொல்லாத விரணியரா வணர் போன்‌ மாள்வர்‌
கோகனக மலர்ந்தருணீர்‌ கோத்த கொண்டல்‌
கோதண்ட கோளரியைக்‌ கூறா தோரே.

46-திரவியமொன்‌ றுறுமாயிற்‌ றிரைமேற்‌ செல்வர்‌
தீ மலையின்‌ மிசைச் சேர்வர்‌ சீயத்‌ துஞ்சா
‘திரவியல்வெங்‌ கான்சுரம்போ யிளைப்பர்‌ வையத்‌
தினைப்பிளந்து பாதாளத்‌ திடையும்‌ பார்ப்பர்‌
உரவிய கார்‌ வானத்தும்‌ பறப்பர்‌ பூத
மொன்றுக்கு மஞ்சார்த முயிரு மாய்ப்பர்‌
விரவிய விவ்‌ வினையினொரு தினையும்‌ தெய்வ
விழுப் பொருளைப்‌ பெறப்புரிய விழைவோர்‌ யாரே.

47-அன்புருக்கொ ளசோதைத்தாய்க்‌ கெளிய னாகி
யழனுருக்கொள் வஞ்சத்தாய்க்‌ கெமனே யாகித்‌
துன்புருக்கொள் பொரு களிற்றை மாய்த்துத்‌ தாய
தொழு களிற்றைத்‌ துயர்‌.தீர்த்துத்‌ துகடீ ருள்ளத்‌
தின்புருக்கொள்‌ சேடன் மிசை யினிது சாய்தந்தன்‌
றிடருருக்கொள்‌ காளியனை யடர்த்த லானே
வன் புருக்கொள்‌ கொடியார்க்கு மடியா ருக்கு
மன்னிறைவ னருண் முறைமை மதிக்க லாமே.

48-கங்கைக்‌ கரைக்குக்‌ குகப் பெருமான்‌
கருதும்‌ பம்பைக்‌ கரைக்கநுமான்‌
சங்கம்‌ கடலின்‌ பெருங்கரைக்குச்‌
சார்ந்த வொருவீ டணனிவரைப்‌
பங்கத்‌ துறையும்‌ பள்ள நிலம்‌
பாயும்‌ புனல் போற்‌ கலந்த விறை
துங்கத்‌ தினிய திருவருளே
தொலையாப்‌ புணையாந்‌ துயர்க் கடற்கே.

49-ஓலை கட்டித்‌ தூதேகிப்‌ பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த மாலை கட்டிக்‌ கருள் புரிந்‌தான்‌ மண்ணினுற்றார்‌
புண்ணியத்தின்‌ வாழச்‌ சேது
வேலைகட்டி வைத்த பிரான்‌ யருள் கடலிற்‌
குளித்தற்கு விரகி லாமே
சேலை கட்டி விழி வலைக்கொள்்‌ தெரிவையர்கா
தலின்மூழ்குஞ்‌ சிதடன்‌ யானே.

50-பிரமனை முன்‌ படைத்தவற்குப்‌ பெரு மறையைப்‌
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனை முன்‌ றுதிக்கறியாப்‌ பாழ்ம் பிறப்பு
மானிடமாய்ப்‌ பார்க்கப்‌ பட்ட
கரமனைத்துக்‌ கழுகனைத்துக்‌ கழுதனைத்துக்‌
கல்லனைத்துக்‌ கனியு நஞ்சா
மரமனைத்தென்‌ றெண்ணி விடா மதியுடையேற்‌
குவமையிந்த வையத்‌ துண்டே.

51-தனக்கு மே லொருவருள ரென வெறுக்குஞ்‌ _
சழக்குயிரின்‌ மமதையினைச்‌ சாற்றி னுற்றா
ருனக்குமேற்‌ கடவளுள னென்ற போதும்‌
உருத்தவரைக்‌ கொலை சூழு முதற்குச்‌ சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்‌
,தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லை யென வகங்கரிப்பி
னெல்லையினின்‌ றேற்கிறைவ வென்செய்‌ வாயே.

52-முற்றத்‌ துறந்த முனிவரரு முதல்வா நின்பான்‌ முறையிட்டுச்‌
செற்றக்‌ காம மயக்கமெலாந்‌
தீரு மாறு வரங்கிடப்பக்‌ குற்றக்‌ கலமா யுளவடியேன்‌
குறைவேண்‌ டுவது முறையோதான்‌
தெற்றத்‌ தெளிந்த சடகோபர்‌
தெவிட்டா தருந்துந்‌ தெள்ளமுதே.

53-அரனைப்‌ படைக்குந்‌ திசைமுகனை
யலரிற்‌ படைக்குந்‌ திரு நாபி
வரனைப்‌ படைக்கு மனப் பெரியார்‌
மலர்ந்த செழுந் தாமரைப் பதத்துச்‌
சிரனைப்‌ படைக்க மாட்டாத
தேகம்‌ படைக்குந்‌ தீய வினை
மரனைப்‌ படைத்து வளர்க்கின்‌ ற
மதியைப்‌ படை.த்தேற்‌ கருளுளதோ.

54-காலமெலாங்‌ கணிகையரிற்‌ கழித்து மூத்த
காரிகையாள்‌ காந்தனைப்பின காண லுற்றுச்
சீலமெலாஞ்‌ திறந்த குணத்‌ தெரிவை யொப்பச்‌
செய்த பிழை பொறுக்குவென்று செப்பல்‌ போல
வாலமெலாந்‌ திரண்டனையே னந்தோ வாசைக்‌
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வையோ வறியேன்‌ பெற்ற தேவே.

55-கிளை யெலா நச்சுக்‌ கனி பழுத்‌ திருக்குங்‌
கெட்ட தீ மரத்தையும்‌ வித்து
முளையெலாங்‌ கெடுத்துப்‌ புனலெலாம்‌ வீணாய்‌
முடித்து நல்‌ லெருவெலாந்‌ தீத்துக்‌
களையெலாம்‌ விளைக்‌ குங்‌ களரையு மனையேன்‌
காண்பனோ நின்னையு மாயர்‌
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வ நா யகனே.

56.மறப்பினுக்கோ ரறையா குமை யிருட்டுச்‌
சிறையாகு மயற்கூ டாகும்‌
இறப்பினுக்கும்‌ பிறப்பினுக்கும்‌ படியாகும்‌
நரகினுக்கோ ரேணி யாகுந்‌
துறப்பினுக்குப்‌ பகையாகுந்‌ துர்க் குணத்துக்‌
குறவாகுந்‌ துகடீ ரெந்தாய்‌ சிறப்பினுக்குச்‌ செல்லாது செய் சுவராந்‌
தீமனமென்‌ செயத்தத்‌ தாயே.

57-ஓழுக்கினா னீத்த வுயர் முனி வரரு
முள்ளமுக்‌ கறவுனை யுள்வா
ரிமுக்கினா னளறே யெனுங்குடும்‌ பத்தோ
டிரண்டறப்‌ பொருந்தழுக கிருநீர்‌ முழுக்கினாற்‌ போமோ வுன்‌ றிரு வருளின்‌
மூழ்கினா னல்லது வினையைப்‌
புழுக்கினான்‌ முளைக்கா வித்தெனப்‌ புரிந்து
போற்றினார்க்‌ காற்றுமா தவனே.

58-உடலிந்தே யிடரினுக்கொன்‌ றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக்‌ கஞ்சல்‌ போலாங்‌
குடலிருந்த தொடக்கறுத்துக்‌ கோத்த சுற்றக்‌
கொடும்பாசப்‌ பிணிப்பவிழ்த்துக்‌ கொண்ட பெண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி
யகப்பற்றும்‌ புறப்பற்று மனைத்தும்‌ வீட்டி
மடலிருந்த துளவலங்கன்‌ மாயன்‌ நூய
மலரடிக்கீ ழ்ப்‌ புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59-சரிந்த குழ றாங்கிய கண்‌ கரமும்‌ பற்றத்‌
தளர்ந்த வுடை பிடித்த மலர்க்‌ கரமும்‌ விட்டுத்‌
தெரிந்த வுளத்‌ தொளிர்கின்ற தேவே யுன்னைத்‌
தேர்ந்தொருகாற்‌ கூப்புதலைச்‌ செய்யும்‌ போழ்‌தே விரிந்த குணப்‌ பாண்டவர்தம்‌ வென்றி போல
விளங்குதவக்‌ கொடிமான மெய்யே காத்துப்‌
புரித்தபெரும்‌ பாரதமும்‌ போதா தென்று
புலம்பியதுன்‌ றிருவருளின்‌ பொலிவே யம்மா.

60-துட்டவிரா வணனாவாற்‌ சுடுகென்‌ றோதத்‌
துனைந்தெழுந்து புகுந்தன்பாற்‌ றொழுது தீயர்‌ கிட்டவிரா முழு முதலே சரண மென்று
கிளத்திரங்கும்‌ வீடணனைத்‌ கய னென்னப்‌
பட்டவிராக்‌ கதன்றம்பி நம்பாற்‌ கொள்ளப்‌
படாதென்ற கவி வேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி விராவ ணற்கு
முற்ற பய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்‌.

61-பிரமாண்ட கோடியெலாம்‌ பெற்றுக்‌ காக்கும்‌ பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியளனத்து முவரிக்‌ கூலத்‌
துறுகணுனக்‌ கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக்‌ கவிந்து கொண்டு
கடி மதில்போ னின்றிளைப்பாற்‌ கண்க டுஞ்சச்‌
சரமாண்ட வில்லினொடுத்‌ தம்பி யோடுத்‌
தாண்டியவை காத்தவரு டமியேன்‌ றஞ்சம்‌.

62-திசைக்கும்‌ வெப்ப வினைத் துயரைத்தெறு இடத்த வச்ச வரிப் பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித் துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த மூடைச்சவக்‌
தசைக்கு மற்பி னுருக் கொளுத்தருள்‌
தழைத்த பத்த ருடற் புள கத்தொடு
தழற்கணுற்ற வரக்கை நிகர்த்துளன்‌
தனித்து ருக்க முறத்தமி மிற்பொழி
றிசைக்கும்‌ வெற்றி யுருக்கு மிணிக்குயி லெழிற் கை பற்றி யதற்கு வெறுத்தர வெனக் கொ தித்த செருக்க னிடைக் குலத்‌
‘திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்‌
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்‌
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்‌ மனத்தை வைக்க நினைப்ப கொல்‌ கற்றவர்‌
மயக்க மிக்க பவக்கடல்‌ வற்றவே.

63. விது வைத்த தலைச் சிவ னுக்குமலர்‌
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்ற முதுக் குறைவி புனை புத்தமிழ்‌ தத்தமி மிற்குமுடி மது வைத்த விதழ்த் தொடை யற்கு மகிழ்‌
மனம் வைத்து மணத்தைய ஸித்தபுயல்‌
பொது வைத்த நிதிக்கு நிகர்த்தவருள்‌
டொழியத்‌ தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சவனயனே யெனலான
தெய்வதங்கள்‌ திகழ் மந்‌ தாரக்‌
காப்படைத்த விந்தரனே தலையாய
தேவர்நரர்‌ கனக மேரு
தேப்படைத்த பலகாடி யண்டமுதற்‌
பூதமெலாந்‌ திருமால்‌ நாபிப்‌
பூப்படைத்த தென்‌ றவன்பேர்‌ நாப்படைத்த
பயன்கொள்ளப்‌ புகல்வர்‌ மேலோர்‌ .

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலே தொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

66-துருவனுக்குயர்‌ நிலைகொடுத்தன
துருபதைக் கவிழ்‌ துகில் வளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்‌
ஒருவ னுக்கெழில்‌ வளை தரித்தன
வுரைக ரிக்குயர்‌ கதி படைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமை கேளவன்‌
சருவனுக்கிர வொழிய விட்டன
தசமுகற்கடு கணை தொ டுத்தன
சகல ருக்குநல்‌ வரம்விளைப்பன வடி நீழன்‌
மருவெனக்கிக பரம ளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரை யெனத் தரு தரு வெனப்படு புயமாதோ.

67-முறை க டந்து பிறர் ம டந்தை
முலை புணர்ந்த பழுதெலாந்‌
தறை கி டந்து புனல் படிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறை கி டந்த செனனம்‌ விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறை க டந்த வரமு குந்த மனமி ரங்கி யருள்வையே.

68-தானே வழங்க வறியாத
சலவா ரியையுன்‌ றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந்‌ தன்னை நல்கலிலா
வானே வளருங்‌ கற்பக மா
மரத்தை நினக்கொப்‌ புரைப்பதையுங்‌
கோனே நிளையுந்‌ தொறுமெனது
கொடிய மனமுங்‌ குலைவுறுமே.

69.மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்று மயல்‌ மனைகளில்‌
வயிறு பட்ட பசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலி கொண்‌
டூறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கென முன்‌ னாளினி
லுடைமை பட்டு மண முடிய லுற்றதனை
யுணர்வின்‌ வைத்து நிறை தன் மனம்‌
வேறு ட்டிலளு பட்‌ மாகி மற்ழெதையும்‌
விழைத லற்ற வளு மாயினால்‌
மெலியு மத் தெரிவை குணனை மெச்சிவரன்‌
மேவு காலமுள தாகுமால்‌
தூறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர் விலிட்டுமுனை யல்லது
தொழ நி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்ட .முடி மாயனே.

70-தாயிருந்தும்‌ முலையினிற்பால்‌ தழைத்திருந்துந்‌ தரைக் கிடக்குந்‌ தருணந்‌ தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின் முலை மடுக்குந்‌ தாய் போல்‌
நீயிருந்து நின் கணருள்‌ நிறைந்திருந்தும்‌
யானருந்தா நிலை கண்‌ டென்கண்‌.
மேயிருந்து நீயூட்டா வெளின்‌ மெலிவேன்‌
வசையுநினை மேவு மெந்தாய்‌.

71-அனும னுக்கு நளிர்க வென ச்சொலி
யழலின்‌ வெப்ப மகற்றி யளித்தவள்‌
அடல ரக்கர்‌ சிறையை யறுப்பதற்‌
கணுமு யற்சியு முற்றில எற்றென முனும யற்கு முதுமறை சொற்றவன்‌ முழுது யிர்க்கு முலகு படைத்தவன்‌
முதிரி ருட்கொர்‌ பரிதி யளித்தவன்‌
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்‌
தனுவெ வைக்கும்‌ நிறுவி வளர்ப்பவன்‌
தனய ருக்குண்‌ முலையை யமைப்பவன்‌
தழை. பயிர்க்கு மழையை விடுப்பவன்‌
தரணி துக்க மொழிய வுதிப்பவன்‌
இனும னுக்கு கொடிய பவக் கடல்‌
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்‌
எழின்மி குத்த வருளின்‌ முறைப்படி .
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப்‌ புறங்கழுவிப்‌
பொழுதே புசித்துப்‌ புனையர வப்‌
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்‌ புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன்‌ பரமா வுனைத் துதியேன்‌
இற்றை நாளுன்‌ னடி யெண்ணி
யிருப்பேற்‌ கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந்‌ திருவீ டணனுமடத்‌
காகா சுரனுந்‌ துருபதையும்‌
பரியு மிடரா னு ளதநடுங்கிப்‌
பகவ னுனையே பற்றியபோ
துரிய தூய்மை முறை புரிய
வுணர்ந்து .மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன்‌ தனக்கு முளதாமே.

74. பாந்தண்‌ மணிவாய்‌ விடமருத்திப்‌
படரு மழலி னிடைவீழ்த்திப்‌
படையி னறுத்து மலையுருட்டிப்‌
பதைக்க வதைக்கும்‌ படி.புரிந்துந்‌
தேந் தண்‌ டுளவத்‌ தொடைகமழுஞ்‌
செழுந்தாண்‌ மலரி னழுந்துமனந்‌
திறம்பாச்‌ சிறுவன்‌ மொழி காக்கத்‌
திருத் தூ ணுதித்துத்‌ தனைக்குவிக்குங்‌ காந்தண்‌ மெலியும்‌ விரற்கரத்தான்‌
கருத்தோன்‌ றிடங்காண்‌ டலைவேட்டுக்‌
கனக னுரங்கீண்‌ டுடற்றொடக்காற்‌
கரிய குடரு மெடுத்தணிந்து பூந்தண்‌ மாரி சுரருவந்து பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ்‌ சிங்கப்பிரான்‌
புகழே நினைவேற்‌ கிகழ்வுளதோ

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்‌
கினிய வுடலா யிருக்குமுடல்‌
பொல்லா தொருநோ யுறினதனைப்‌
போக்க முயற லுயிர்க்கன்‌ றித்‌
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள்‌ கழற்கே யறத் தீர்ந்த
நல்லார்‌ தமக்குத்‌ தாமுயலார்‌
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான்‌ காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார்‌ தம்மு
ளெம்பிரான்‌ றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ்‌ சிரமேற்‌ றாங்கு
மருமையினாற்‌ பெருமை மிகப்‌ படைத்தாளன்னாள்‌
வெம்பிரா மனம் பழுத்த விழுத்த பத்தி வினையேற்குத்‌ இனையேனு மேவு மேயோ.

77–வாள் பிடித்த கண்ணியர் தம்‌ மயற்பேயின்‌
பேழ்வாயின்‌ மயங்கி வீழ்ந்து
தேள்பிடித்த கரப்பினுருச்‌ சிதைவேற்குச்‌
சேண்முழுதுஞ்‌ சென்று தாஅய
தாள்பிடித்து வழுத்தவிடாக்‌ கோள்பிடித்‌
சழக்குவிதி தணப்ப தெந்த நாள்பிடித்து நண்ணுறுமோ நண்ணாது
நரகிலெனை நாட்டு மேயோ.

78-ஆசையெலாம்‌ புகவல்ல மனமீ காம
னல்வழியிற்‌ செலவுய்க்கு மாக்கை நாவாய்‌
மாசையெலாம்‌ பண்டமெனச்‌ சுமந்தவாவாம்‌
வன்காற்றான்‌ மறுகுபவ வாரி யோடத்‌
தேசையெலா மிழந்ததன்கண்‌ வினையை யீட்டச்‌
சிறுநாய்க னெனநாயேன்‌ செறிந்தேன்‌ கண்டா
ரோசையெலா மிடவெமனாம்‌.பாறை தாக்கி
யுடையும்போ தென்னாவே னுடைய தேவே.

79-தாழியினுக்குமூயர்‌ வீடு கொ டுத்த முதல்‌ தாமரை யுற்ற திரு மா மகளுக் கழகன்‌
வேழ ம ழைக்குமுன மேவிய ளித்தவரன்‌
வேதமு தற்கலைகள்‌ யாவுமு யிர்த்தபரன்‌
ஏழும ரத்தினையு மூடுரு வச்சிலையின்‌
ஏவை விடுத்தபுய லீரடி யைப்பிடியார்‌
ஆழும்‌ வினைப்பிறவி யாகு மிடர்க்கடலில்‌
ஆவி திகைக்கவுழல்‌ வாரிது சத்தியமே,

80-ஒருகூற னுமை கேள்வ னொளிர்நாபி
யுறையாதி மறை வாண னொடு மாதவர்‌
புருகூதன்‌ முதலாய சுரர்யாரு
மறியாத பொருளாய தனிமாமுதல்‌
குருகூரர்‌ பரகாலர்‌ குளிர்கோதை
யதிராசர்‌ வரயோகி குருதாள்களின்‌
முருகூரு நறைவீசு தமிழோத ,
வெனையாள முனமே செய்‌ தவமேதரோ.

81-எய்தாலும்‌ வால்குழைக்கு மிருஞ்சுணங்கன்‌
பெருங்குணனு மில்லே னின்றேன்‌
பெய்தாலுங்‌ கைப்பறாப்‌ பேய்ச்சுரைக்காய்‌
போல்கின்றேன்‌ பெரு நூறம்மேற்‌
செய்தாலு மீவறியாச்‌ செல்வர்கடைக்‌
குழன்றிடர்கொ டீய னேற்கு
வைதாலும்‌ வீடளிக்கு மால் பதத்தை
முடிசூடி வழுத்த லாமே.

82-தூய நீயுயிர்‌, யாவும்‌ வீடு
துலங்கு மாறருள்‌. செய்யினுஞ்‌
சுத்த சத்துவ ருக்க.லாதொரு
துட்ட னேற்கது கிட்டுமோ
தீய ராவண னேனு நம்மொடு
சேர்க வென்ற தினத்திலே
சீல வீடண னன்றி மற்றெவர்‌
தேவ நின்னடி. சூடினார்‌
பாய மாமுகி லேழும்‌ வாழிய
பாரி லேமழை பெய்யினும்‌
பைந்த ருக்குல மல்ல தங்குள
பட்ட தாருத ழைக்குமே
ஆய யாவ முண்ண நல்குறு
மன்ன சாலையு ளாயினும்‌
அறப்ப சித்தவ ரன்றியேவ
ரருந்தி யின்புறு வாரரோ..

83–நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர்‌ நிறை குழைத்தரு வடிய டுத்தவர்‌ நெடு வெ யிற்றுயர்‌ தீர்பபோற்‌:
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்‌
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்‌
கேடில்‌ கொம்பிடை யேந்தினார்‌
வீழ லென்றும்‌ விழாமை யென்றுமிம்‌
மேதி னிக்கண்‌ மிடைந்த
தீ வினை ந ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்‌ –
தாழ லொன்றுமி லாது போயவர்‌
தாள்‌ டைந்தவர்‌ யாவருஞ்‌
சார்கொ டும்பவ நோயொ. ழித்துயர்‌
தணவி லின்படை வாரரோ.

84-‘திலத்தளவும்‌ பிறர்க்குதவாத்‌ தீயமன னாலே
சிதலைதின்‌ ற மதலையெனத்‌ இனமெலிந்து சாய்வேன்‌
சலத்தையடை தொறும்வேதத்‌ தனிக்கடவுள் யுன்னைத்‌
தயாவிலியென்‌ பேனென்றன்‌ சழக்குவினை யென்னேன்‌
நலத்த நெறி நடக்கறியா தடி யிழுக்கி வீழ்ந்து நனி துயரான்‌ முனி வெய்தி நடுங்குகர மோச்‌சத்‌
தலத்தை யறை குற்ற தளர்‌ நடைப் பருவக்‌ குழவி
தன்மதியென்‌ றுன்மதியிற்‌ சாலவழ கிற்றே.

85-தேனும்‌ பாலுங்‌ கன்னலும்போற்‌
றெவிட்டாச்‌ சுவைய தீந்தமிழின்‌
யானும்‌ பாட வல்லனென
ஞாலம்‌ புகழ்த னனிவிருப்போ
வானும்‌ பாரு மளந்தசெந்தா
மரைத்தாள்‌ விருப்போ நீயறிவை
மீனும்‌ பாழி யாமையுமாம்‌
விமலா நின்சீர்‌ விளம்புதற்கே.

86. தழலை நிகர்த்த துயர்ப் பிறவி
தழைக்கு நிலனா யயன்‌ றிருத்து
மழலை மொழிப்பெண்‌ மயிலனையார்‌
மயற்பேய்‌ பிடித்த மனக்குரங்குன்‌
கழலை வழுத்தி யமுது சுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலை வளர்க்கு மாத ரைப் போன்‌
மெலிதல்‌ விதியோ விழுப் பொருளே.

87. விள்ளற்‌ கரிய தொரு வீடும்‌
வேண்டா விறலின்‌ விழுப் பெரியார்‌
கொள்ளக்‌ குறையாப்‌ பெருங்கருணைக்‌
குவாலை முகந்து கொளவளிக்கும்‌
வள்ளல் கடவுள் திருவடிப்பூ மணக்காப் பனுவல் மாலை எலாம்
தள்ளப்‌ படுமா லீமம்சைத்‌
தயங்கு மாலை தனை நிகர்த்த

88-பவத்தைப்‌ புகுவேன்‌ பர மாயான்‌
பாவிற்‌ குழல் போ லுழல்‌வேனோ
தவத்தைப்‌ புகுவார்க்‌ குளதாமுன்‌
றயைதான்‌ றமியேற்‌ கிலதாமே.

89. நீயிருக்குங்‌ கோயிலென.நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்‌
பேயிருக்கும்‌ பாழ் மனையிற்‌ பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக்‌ கச்ச
மாயிருக்குந்‌ இீயவினைத்‌ தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்‌
தாயிருக்கு மாறிருக்குந்‌ தடங்கருணைப்‌
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்‌
முலைக்கண்‌ மோத முரணழிந்து
நித்த மிரங்கும்‌ வகையுடைந்த
நெஞ்சப்‌ புணையே துணையாய்ப் போய்‌
நத்த மிரங்கும்‌ பவக்கடலி. னனிமூழம்‌ குவதொன்‌ றல்லாதுன்‌
சித்த மிரங்கும்‌ படிவேறென்‌
செயவ லேன் யான்‌.தெய்வதமே.

91. தேறா வொருவன்‌ றெங்கிளநீர்‌
செவ்வே நிறைந்த தீங்காயைச்‌
செங்கை வருந்த வசைத்த சைத்துச்‌
சிறிதுந்‌ தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்‌
பேறா யருளுக்‌ குருவான
பெருந்தே வூனப்‌ பேய்விழிக்குப்‌
பிறங்கா வியல்பா னிலையென்‌ று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்‌
நீறாய்‌ நிலத்து விளிவேனை
நெடுமாற்‌ கேநீ யடிமையென
நினைவித்‌ தெடுத்தாண்‌ டதுஞான
நிதி போன்‌ மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல்‌ கொண்டிடர்‌
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்‌ றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்‌
விதந்த துந்தவ றாகுமே கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய ஸிந்திரர்‌
காசி லாதப ராச ராதியர்‌
காண வாசைகொள்‌ சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்‌
மாசு ளேற்கென வேறு பாதம்‌
வகுத்தி லாதென்‌ மாயனே.

93. முழுதுந்‌ தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன்‌ றிருந்த சுனையிற்‌ பழுதின்‌ றிருந்த புனலின் கண்‌ வந்து படர்திங்க ணீழல்‌ படல்போற்‌று
ஓழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

94. வெருடருங்‌ கூற்ற மேற்றவெத்‌ நரகின்‌
விமுமமே கெழுமியும்‌ பல்கா
லுருட.ரும்‌ பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப்‌ பொல்லா
இருடரு ஞாலத்‌ திடராலா முழந்து மிம்மியுங்‌ கழிந்திலா தந்தோ.
தெருடருந்‌ தேவுன்‌ னருளையு மறிக்குந்‌
திறத்‌த்‌ தென்‌ தீவினைத்‌ திரளே.

95. வான் மறந்த காலத்தும்‌ வழங்கு புனற்‌
பேராறு மான நின்னின்‌
றூன்மறந்த யோகியர் தமுளமறந்து
பருகவரு ளொழுகஈ நிற்ப: ,
தான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய்‌ பி
‘தான்மறந்துந்‌ தான் மறவாள் எனல் பொய்யோ
தரைகடந்த சரணத்‌ தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற்‌ றிளைக்கும்‌ போதா
வொருதுளியிற்‌ றுளியெடுத்திங்‌ குரைக்கப்‌ புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர்‌ பயன்கருஇ யில்லை கண்டாய்‌
‘தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்‌
றன்னுடலம்‌ வளர்ப்பதெனச்‌ சற்றுப்‌ பிள்ளை ‘
மனக்கணினைப்‌ பில்லாத வாறு போல்வேன்‌
வரத்தவத்த ரமுதமென மடுக்குந்‌ தேவே.

97. மத்தேறு முதலாகப்‌ படாதனபட்‌
டுயிர்க்கருள வருமாத்‌ தெய்வம்‌
பித்தேறு மகவுக்கும்‌ பெரிதிடருற்‌
றுணவருத்தும்‌ பெற்றாண்‌ மான
தத்தேறு திருக்கரத்தான்‌ ஞாலமெலா நனியூட்டு நன்றி தேறார்‌ செத்தேறு பாடைமரஞ்‌ செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98-நலத்து மருந்தீங்கே நயக்கும் வெந்தீயேனாக
நாட்டமுதமே பெய்த கலத்துளும் கயப்பே சுவைக்குறும் இயல்பேன்
கண்ணநின்‌ கோயிலைச்‌ சூழும்‌
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன்‌ வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோனடித் தா மரை வாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்‌
வெந்தீ மெழுகின்‌ விரைந்துருகக்‌
கையோ தலைமேற்‌ குவித்தொருகாற்‌
கண்ணீர்‌ கலுழக்‌ கண்டறியேன்‌
ஐயோ வவன்ற னருட்பேரா
ற்ருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற்‌ குரிய மனப்பேயார்க்‌
கேவற்‌ றொழில் செய்‌ திளைப்பேனைக்‌
கொள்ளக்‌ கருதிற்‌ -கொடும்பாவக்‌
கோட்டை யகத்தேன்‌ குணமிலென் று
தள்ளக்‌ கருதி னவன்றாளே
சரணம்‌ புகுந்தே னிவையிரண்டால்‌
விள்ளற்‌ கரிய விழுக்கடவுட்‌
கடியே னிடரே விளைத்தேனே.

101. தாய்வ யிற்றிடை வைத்த தார்கரு
தான ருத்தி வளர்த்ததார்‌ தலையி னிற்பொறி யிட்ட தார்நல
தரையி னிற்பெற விட்டதார்‌
பாய்வ யிற்றுயர்‌ போது தாய்முலை
பால்பி லிற்ற விழைத்ததார்‌
பளக றப்பயி றற்கெ னப்பல
பாடை மைப்புவி நட்டதார்‌
நோய்வ யிற்புக லுற்ற காலையி
னொய்தெ டுத்து நிறுத்ததார்‌  நுவலுக்கடை யுதரம்‌ வைத்துயிர்‌
நுதலி யற்பொ டணைத்ததார்‌
நாய்வ யிற்றிகழ்‌ குணமி லேனையும்‌
நன்னெறிச் செல  வுய்த்ததார்‌
நான்மு. கத்தொரு சேய்படைத்தொளிர்‌
நாபி மெய்ப்பொரு ளன்‌ றியே.

102. விழிவழியே தெரிகின்ற பேய்த்தேரை
நீரென்று விழைவுற்‌ நாரும்‌ குழிவழியாய்‌. வழிகுழியாங்‌ குருட்ருநல்‌ லொளியரெனக்‌ குறித்துக்‌ கூறப்‌
பழிவழியே யொழுகியிருட்‌ பாழ்ங்குழியில்‌
வீழ்கிற்பேன்‌ பரமா நிற்கே
வழிவழியா யுளவடியார்‌ மாந்துதிரு
வருட்காசை வைக்க லாமே.

103. பத்திச்‌ சுவையே பழுத்தமனப்‌
பகவ ரமுதப்‌ பழம்பாடல்‌
நத்திச்‌ சுவைதேர்‌. திருச்செவிக்கு
‘நவில்வார்‌ நாவுங்‌ கயக்கும்வெஞ்சொல்‌
வித்திச்‌ சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்துச்‌ சுவைநல்‌ கருட்கடவுண்‌
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப்‌ புரிந்த பெருந்தமிழிற்‌
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப்‌ புரிந்த தெருட்பெரியார்‌
நயந்த கடவுட்‌ பத்திமைதான்‌
கேட்டைப்‌ புரிந்தேற்‌ கணுவேனுங்
இடையா திவைகொண்‌் டுளதெனின்யான்‌
பாட்டைப்‌ புரிந்து படி.றியற்றிப்‌
பாரை மயக்கும்‌ பாதகனே.

105.– செகத்தைப்‌ புரக்கக்‌ கவித்த முடி
இருந்த வெழுதித்‌ தேசெழுதேன்‌
செந்தா மரைக்க ணெழுதியருட்‌
டேனார்‌ வெள்ளந்‌ தெரித்தெழுதேன்‌
முகத்தைப்‌ புதுக்கி யெழுதிமணி
மூறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்‌
மொய்யா ரகல மெழுதிமலர்‌
முதல்வி கோயின்‌ முடித்தெழுதேன்‌.

106. அகட்டைப்‌ புனைய வெழுதியூல
கனைத்து மடங்கு மாறெழுதேன்‌
அணியார்‌ நாபி யெழுதிமறை
வவனார்‌ வரவை யமைத்தெழுதேன்‌
இகத்தைப்‌ பரத்தை யளிககுமடி வயெழுதி யெமைக்காப்‌ பதையெழுதேன்‌
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந்‌ திருந்தேனே

707. தன்னையே தந்தையெனச்‌ சார்ந்தார்க்கோர்‌ தந்‌ தையையும்‌
பின்னையே நல்காப்‌ பெருங்கடவுள்‌–முன்னையே
தன்னையே தந்தையெனச்‌ சாரார்க்‌ கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108, கொலைக்களிற்றிற்‌ கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக்‌ கொடுத்த. விதமே–நிலைத்ததமிழ்ப்‌
பாவைப்‌ பிறர்க்குப்‌ பகர்ந்த பிழை, தீர
நாவைக்‌ கழுவினே னான்‌.

109. கற்ற நயித்துருவ காகுபனி. ராகவன்யான்‌.
சொற்ற தமிழ்க்குச்‌ *சுவைதேறார்‌–உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவுள் அல்லாற்‌*பிற்‌:

*கேள்வியாற்‌. செவிகண்முற்றுந்‌’ தோட்டவருணர்‌
வினுண்ணு மமுதத்தின்‌… சுவையாய்‌ நின்றான்‌” என்பது
கம்பநாடர்‌. . திருவாக்கு… (இராமாவதாரம்‌. ஆரணிய.சவரி பிறப்‌. 7)

——————-

ஸ்ரீ ராமப்பாட்டு

மதியிருக்குஞ்‌ சடைச்சிவனார்‌ மனைவியினுக்‌
குபதேசம்‌ வகுத்துக்‌ கங்கை
நதியிருக்குந்‌ தண்காசி நகர்மரிக்கு
மூயிர்க்கெல்லா நல்கக்‌ கஞ்சப்‌
பொதியிருக்கு மறைமுதல்வன்‌ பொறியழித்து
வீடளிக்கும்‌ பொற்பிற்‌ றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்‌
ராமவென விளம்பு வாயே.

2-தாதையார்‌ நாரதற்குத்‌ தந்த நாமம்‌
தவமுனிவன்‌ வான்மீகி சாற்று நாமம்‌
மேதையார்‌ ஞானியார் தாம்‌ விள்ளு நாமம்‌
விபீடணற்குப்‌ பேறருள மிக்க நாமம்‌
தீதையா ருற்றாலுந்‌ தீர்க்கு நாமம்‌
தேவரெலாஞ்‌ செபிக்கின்ற தெய்வ நாமம்‌
சதையா ருயிர் தளிர்க்கச்‌ செய்க நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

3. குரு வடிவ வசிட்டன் மகிழ்‌ கூர்ந்த நாமம்‌
கோசிகனார்‌ வழிபட்டுக்‌ கொண்ட நாமம்‌
கருவடியிற்‌ புகாநெறியே காட்டு நாமம்‌
கவந்தனொடு விராதனுயிர்‌ களிக்கு நாமம்‌
மருவடிய ரெல்லாரும்‌ வாழ்த்து நாமம்‌
மந்திரங்கட்‌ கரசெனவே வகுத்த நாமம்‌
திருவடிக்கின்‌ னமுதாத்தித்‌ திக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌.செப்பு வாயே.

4. இகத்துக்கும்‌ பரத்துக்கு மேற்ற நாமம்‌
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்‌
மகத்துக்குப்‌ புகல்கின்‌ற மகிமை நாமம்‌
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்‌
முகத்துக்கின்‌ சுவைத்தாக முளைத்த நாமம்‌
மூன்னொரு புள்‌ சிறை முளைக்க மொழிந்த நாமம்‌
செகத்துக்குந்‌ திவியினுக்குஞ்‌ சிறந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* – ராமபத்ரன்‌ விஷயமான “பத்ரங்கர்ணேபி’ என்னுஞ்‌
சுருதியே நாந்தியாதலால்‌ இங்ஙனங்‌ கூறியது.

5. உலகினிலெட்‌. டைந்தினுக்கு ளூயிரா நாமம்‌
உறங்காத வில்வியுளத்‌ துறைந்த நாமம்‌
பலகலைதேர்‌. சரபங்கர்‌ பன்னு நாமம்‌ பாய புகழ்க்‌ கவியரசர்‌ பாடு நாமம்‌
இலகலைவாமழ்‌ வருணன்மகிழ்ந்‌ தேத்து நாமம்‌
இத்திரசித்‌ தனை வதைக்க வெண்ணு நாமம்‌
சிலவிலங்குஞ்‌ செப்பவருள்‌ செய்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.–எட்டு -திருமந்திரம்-அஷ்டாக்ஷரம் ஐந்து சிவ பஞ்சாக்ஷரம்

6. கல்லாருங்‌ கற்றாருங்‌ கற்கு நாமம்‌
* கங்கை முதற்‌ நீர்த்தபலன்‌ காட்டு நாம
வில்லாரும்‌ வீரர் செயம்‌ வேண்டு நாமம்‌
மெய்ம்மைக்கே பரியாய மேய நாமம்‌
சொல்லாருஞ்‌ சொலவேட்குந்‌ தூய நாமம்‌
தோமரக்க ரளத்தச்சந்‌ தோற்று நாமம்‌
செல்லாரு மழையினருள்‌ சிறக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.—*-தீர்த்த ஸ்நாநம் அநந்த கோடி பலதம் ஸ்ரீ ராம நாம அம்ருதம்

7-அரிய குகப்‌ பெருமாளா தரித்த நாமம்‌
ஆயிர நா மப்பயனு மளிக்கு நாமம்‌
பெரியதிரு வடி.பரவும்‌ பெரிய நாமம்‌
பெரும் புண்ணி யப் பயனாப்‌ பிறங்கு நாமம்‌
உரியதந்தை யங்கதனுக்‌ கோது நாமம்‌
ஓன்னாரும்‌ வழுத்துபுக முற்ற நாமம்‌
தெரியவழற்‌ தடவுள் முனந்‌ தெளித்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* “நிற்கின்ற செல்வம்‌ வேண்டி நெறி நின்ற வுயிர்க ளெல்லாங்‌ கற்கின்ற திவன்ற னாமங்‌ கருதுவ திவனைக்‌
சுண்டாய்‌’” என்று அங்கதனுக்‌ குரைப்பது காண்க.

8.–இசையியற்கண்‌ வாயார-வேத்து நாமம்‌
இம்மையே நன்மை தரு மினிய நாமம்‌
தசையறச் சு தீக்கணற்கு நயக்கு நாமம்‌
நமபட.ரு மிறைஞ்சி யகல்‌ நல்ல நாமம்‌
பசையறுத்த பரதனுளம்‌ பதித்த நாமம்‌
பனிமொழியா ளகலிகைநற்‌ பயன்கொ ணாமம்‌
திசையனைத்துந்‌ தொழவுரைத்துத்‌ திருந்து நாமம்‌
ராம நாமமெனச்‌ செப்பு வாயே.–இசைக்கண்ணும்‌ இயற்கண்ணும்‌ என்க.

9. மலய முனி யுலகறிய வழுத்து நாமம்‌
மலரயனே முதற்றேவர்‌ வாழ்த்து நாமம்‌
அலையுமுயிர்க்‌ கெலாமபய மளிக்கு, நாமம்‌
அத்திரி மா முனியறித்த வமுத நாமம்‌
நிலையில் பிறுப்‌ யற வெருவை நினைந்த நாமம்‌
நீண் நகரம் புகுவார் தாம் நினையா நாமம்
சிலைவலவன்‌ சத்துகுக்கன்‌ தேறு தாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

10. எத்திக்கு மெழுமுனிவ ரேத்து நாமம்‌
எவ்வுயிர்க்குஞ்‌ சீவனமா வெண்ணு நாமம்‌
பத்திக்கு மூலமெனப்‌ பன்னு நாமம்‌
பரமசிவ னுமையவட்குப்‌ பகர்ந்த நாமம்‌ முத்திக்கு வித்தாக முன்னு நாமம்‌
முதியவரு மிளையவரு மொழியு நாமம்‌
சித்திக்கு மந்திரமாத்‌ தேர்ந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

17, * தாரணியிற்‌ கலிதெறுவே தாந்த நாமம்‌
சபரிநெடுங்‌ காலமுளஞ்‌ சமைத்த நாமம்‌
பேரணியி னவர்க்குநலம்‌ பேணு நாமம்‌
பிரிய வந சூயை புகழ்‌ பேசு நாமம்‌
ஏரணியுந்‌ திரிசடைக்கு மினிய நாமம்‌
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்‌
சீரணியு முமையவள்முன்‌ றெளிந்த நாமம்‌
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக்‌ கருணாகர மூர்த்திசக்
காரா தனையிதுவா வாதரித்து–நாரானே
சீராம நாமத்‌ திருப்பாட்‌ டிவணுரைத்தான்‌-மாரா கவன் கவிஞர் மன்

வரி சிலை நெடியேபன் பேர் படைத்தவர்க்கு
அடியவர்க்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த எம் பிறவி யாற்றுவக் குணா வீடு -கம்பர்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்–ஸ்ரீ சம்பு ராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்–– பெங்களூரு ஸ்ரீகாந்த். (வலம் இதழில் வெளிவந்த கட்டுரை)

February 24, 2023
ஸ்ரீ வால்மீகி ராமாயணம் 

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | 
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

பதினாறும் பெற்ற பெருவாழ்வு

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | 
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||
சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: | 
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: ||  1.1.3 ||
ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | 
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

நற்குணங்களின் குன்று, 
வீரன், 
கடமையில் கருத்துடையவன், 
நன்றி மறவாதவன், 
உண்மை விளம்பி, 
மனத்திடம் மிக்கோன், 
நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், 
அனைவரின் நலம் விரும்பி, 
கல்வி மிக்கோன், 
திறமை மிக்க தொழிலாளி, 
பழகுதற்கு எளிமையானவன், 
தன்னிலே இன்புற்றோன், 
சீற்றத்தை அடக்கியவன், 
அழகன், 
அழுக்காறு அகன்றோன், 
சீண்டினால் சீறுவோன் 
என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. 
இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், 
இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் 
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, 
அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.

தேவ பாடையின்-தெய்வ மொழி எனப்படுகின்ற வடமொழியில்;
இக்கதை செய்தவர்-இந்த இராம கதையை இயற்றிய; மூவரானவர்
தம்முளும்- வான்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவருள்;
முந்திய நாவினார் உரையின்படி-முதன்மையாராகியவரும் வாக்கிற்
சிறந்தவருமாகிய வான்மீகி முனிவர் சொல்லியபடியே; தமிழ்ப் பாவினால்-தமிழ்ப் பாடல்களால்;
இது நான் உணர்த்திய பண்பு-
இந்த இராமாவதாரத்தை நான் சொல்லிய இயல்பாகும்.

வடமொழியில் இராமபிரான் கதை சொல்லியவர் மூவர்;
அவர்களுள் ஆதிகவி வான்மீகி அருளிய காப்பியத்தின் வழியாலேயே கவிச் சக்கரவர்த்தி
இராமாவதாரக் காப்பியத்தை நடத்துவதாக இச்செய்யுள்
சொல்லுகிறது.
காப்பியக் கதையின் பொது அமைப்பு ஆதிகாவியத்தின்
வழியதே;
எனினும், காப்பியக் கட்டமைப்புச் சீர்மையையும், தமிழ்ப்
பண்பாட்டு மரபையும் கருதிக்
கவிச் சக்கரவர்த்தி பல மாற்றங்கள் செய்துள்ளார் என்பதை மறந்திடுதல் கூடாது.
ஆதிகவி விரிவாக ஓதியதைச் சுருக்கியும், சுருங்கக் கூறியதை விரித்தும், சில
செய்திகளை விடுத்தும்
புதியன சில புகுத்தியும், செய்திகளை இடம்
மாற்றியும் கம்பர் தம் காவியத்தை இயற்றியுள்ளனர் என்பதையும் மனங்கொள்ளவேண்டும்.
(‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
என்பது தொல்காப்பிய விதி,
அசைச் சொல்லாகிய ‘அரோ’ இக்
குறிப்பினை உணர்த்துவதாகக் கொள்ளலாம். ‘அசை’என்பது வெற்றிடம்
நிரப்புவதாக மட்டும் கொள்ளலாகாது.
அசைத்தல், கட்டுதல்;
கவிதை வாசித்துச் சொல்பவனைக் கட்டி நிறுத்திச் சிந்திக்க வைப்பது அசைகளின் பொருண்மையுள் ஒன்று.)

வசிட்டர் இராமபிரானுக்கு வைராக்கிய உபதேசமாகக் கூறிய நூல்
‘யோக வாசிட்டம்’;
அதில் இராம சரிதம் முழுமையாகக்
கூறப்படவில்லை.
போதாயனார் இராம காதை பாடினார் என்பது
செய்தியளவாகவே நிற்கிறது. நூல் கிடைக்கவில்லை.
கம்பர் காலத்தில் பரவியிருந்த வடமொழி இராமாயணங்கள்
வான்மீக இராமாயணம்,
அத்யாத்ம ராமாயணம்,
சம்பு ராமாயணம் என்பனவே என்பர்.
இவற்றையே கம்பர் தம் பாடலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கருதலாம்.
வான்மீகி, வசிட்டர், போதாயனர் என்ற பட்டியலில்
வசிட்டருக்குப் பதிலாக வியாசர் பெயரை இணைத்துரைப்பதும் உண்டு.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது

வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப்போக்கில் மேலும் பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

  • அத்யாத்ம ராமாயணம்
  • வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
  • லகு யோக வசிஸ்டா
  • ஆனந்த ராமாயணம்
  • அகஸ்திய ராமாயணம்
  • அத்புத ராமாயணம்

துளசி தாசரின் ராமசரித மானஸை -இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.

ஜம்மு & கஷ்மீரில் ‘ராமாவதார சரிதை’ இன்னொரு விதமான ராமாயணம் புழங்குகிறது. அது எழுதப்பட்ட காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குஜராத்தில் 17 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் ராமசரிதமானஸை அடியொற்றி துளசி கிருத ராமாயணத்தை பிரேமானந்த ஸ்வாமி எனும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் இயற்றினார்.

மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார். மகாராஷ்டிரத்தில் முன்னதாக 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட
மற்றொரு ராமாயணமும் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில்  மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது

வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட   கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கி

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.

கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன. தவிரவும்.. கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ராமகதையாக கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’.

கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய  ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.

கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட  ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள் போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

மலையாளத்தில் தொடர்ந்து ராமாயண வடிவங்கள் எழுந்தபடியே இருந்தன. 12 ஆம் நூற்றாண்டில் சீராமன் என்னும் கவிஞர் எழுதிய ராமசரிதம் என்னும் பாட்டுவடிவம் மலையாளமாக அப்போதும் உருவாகியிராத அரைத்தமிழில் எழுதப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டில் கண்ணச்ச பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணம் கம்பராமாயணத்தின் நகல்வடிவம்போன்றது.

சம்ஸ்கிருத ராமாயணங்களுக்கு நெருக்கமான ராமாயண வடிவமான ராமாயணம் சம்பு [சம்பு ஓரு செய்யுள்வகை] புனம் நம்பூதிரியால் எழுதப்பட்டது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடையில் 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இது மலையாளமொழி சம்ஸ்கிருதக் கலப்பால் இன்றைய வடிவத்தை அடைவதையும் காட்டுகிறது

கதகளிக்காக கொட்டாரக்கர தம்புரான் இயற்றிய ராமாயண ஆட்டக்கதை என்னும் காவியவடிவம் பெரும்பாலும் உத்தர ராமாயணத்திற்கு நெருக்கமான நாடக உருவாக்கம். ராமாயணத்தின் கதகளி வடிவங்களுக்கான முன்வடிவம். கதகளியில் ராமனைவிட ராவணனே பெரிய கதாபாத்திரம். பதினாறாம் நூற்றாண்டில் இது உருவானது

பதினேழாம் நூற்றாண்டில் அத்யாத்ம ராமாயணம் என அழைக்கப்படும் துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம் எழுந்தது. மலையாளமொழியின் பிதாவாகவும் எழுத்தச்சன் கருதப்படுகிறார். சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தை விட்டு விலகி மக்கள்மொழியில் எழுதப்பட்ட இந்த ராமாயணம் மிகப்புகழ்பெற்றது. இன்றும் கேரளத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப்படுகிறது.

இதுவன்றி கேரளத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டார் ராமாயண வடிவங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது வாய்மொழியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மாப்பிள ராமாயணம். பதினெட்டாம் நூற்றாண்டில் முஸ்லீம் கடற்பயணிகளால் பாடப்பட்டது. அரபுச்சொற்களும் முஸ்லீம் வழக்காறுகளும் கொண்டது இது.

  • கம்போடியாவில் ரீம்கர்
  • தாய்லாந்தில் ராமாகீய்ன்
  • லாவோஸில் பிர லாக் பிர லாம்
  • பர்மாவில் யம ஸாட்டாவ்
  • மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
  • இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
  • பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
  • இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
  • ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
  • ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
  • சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

—————-

ஸ்ரீ சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள் பெரும்பாலும் இயற்றப் பட்டு வந்த நிலையில் போஜராஜன் சம்பு (Champu) என்கிற காவிய அமைப்பில், கவிதையையும் உரைநடையையும் கலந்து வித்தியாசமாக அளித்திருக்கிறார்.

गद्यानुबन्ध रसमिश्रित पद्यसूक्ति:
ह्रुद्या हि वाद्यकलया कलितेव गीति: |
तस्माद्दधातु कविमार्गजुषां सुखाय
चम्पुप्रबन्ध रचनां रसना मदीया || (बालकाण्डम् ३)

க³த்³யானுப³ந்த⁴ ரஸமிஶ்ரித பத்³யஸூக்தி:
ஹ்ருத்³யா ஹி வாத்³யகலயா கலிதேவ கீ³தி: |
தஸ்மாத்³த³தா⁴து கவிமார்க³ஜுஷாம்ʼ ஸுகா²ய
சம்புப்ரப³ந்த⁴ ரசனாம்ʼ ரஸனா மதீ³யா || (பாலகாண்டம் – 3)

வாத்தியங்களும், வாய்ப்பாட்டும் இணைந்து ஒலிக்கும்போது அது கேட்பவர்களுக்கு எத்தனை இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போல கவிதையும் உரைநடையும் கலந்த சம்பு பிரபந்தமாக அமைந்துள்ள என் கவிதை, ரசனை மிகுந்த பெரியோர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கட்டும் என்று கூறுகிறார் கவி.

அவையடக்கம்

பகீரதன் கதை தெரிந்தது தான். தன் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்று அவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய, தேவலோகத்தில் இருந்து கங்கையை கடுந்தவம் இருந்து தருவித்தான் பகீரதன். இன்றோ சாதாரண மனிதர்கள் கூட தன் முன்னோர்களுக்காக, பகீரதப் பிரயத்தனத்தில் சிறு துளி அளவு கூட இன்றி அதே கங்கை நீரை வெகு சுலபமாக எடுத்து தர்ப்பணம் செய்து விடுகிறார்கள். அது அவர்களின் முன்னோர்களுக்கும் நற்கதியை அளித்து விடுகிறது.

அதே போல, வால்மீகி முதலிய மாபெரும் கவிகள் மிகுந்த பிரயாசைப் பட்டு, அனைவரும் ரசித்து அனுபவிக்கும் விதத்தில் தம் வாழ்நாள் சாதனையாக வெளிப்படுத்திய கதையை, சுலபமாக நானும் எடுத்து என் சிறு முயற்சியில் காவியமாகப் படைத்தால் அது நல்லோர்கள் விரும்ப மாட்டார்களா என்ன என்று சாதுர்யமாகக் கேட்கிறார்.

वाल्मीकिगीत रघुपुंगवकीर्तिलेशै:
तृप्तिं करोमि कथमप्य्धुना बुधानाम् |
गङ्गाजलैर्भुवि भगीरथयत्नलब्धै:
किं तर्पणं न विदधाति नर:पितृणां || (बालकाण्डम् ४)

வால்மீகிகீ³த ரகு⁴புங்க³வகீர்திலேஶை:
த்ருʼப்திம்ʼ கரோமி கத²மப்ய்து⁴னா பு³தா⁴னாம் |
க³ங்கா³ஜலைர்பு⁴வி ப⁴கீ³ரத²யத்னலப்³தை⁴:
கிம்ʼ தர்பணம்ʼ ந வித³தா⁴தி நர:பித்ருʼணாம்ʼ || (பாலகாண்டம் – 4)

சம்பு ராமாயணம் வால்மீகியின் கதையமைப்பை அப்படியே தொடர்கிறது. ஆனாலும் போஜனின் கவித்துவம் பல புதிய பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறிப்பிட்டு ஒரு சில அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்ரீராம ஜனனம்

பழைய இலக்கியங்கள் பெண்ணழகை பலவிதங்களில் பாடியிருந்தாலும், தாய்மையுற்றிருக்கும் பெண்ணை வர்ணித்த கவிதைகள் அதிகம் கிடைப்பதில்லை. தசரதனின் பட்டத்தரசிகள் பாயசத்தை அருந்தி கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றார்கள் என்ற அளவில் மற்ற இராமாயணக் காவியங்கள் கடந்து சென்று விடுகின்றன. ஆனால் போஜன் அழகிய கவிதைகளால் தாய்மை அடைந்த அரசியர்களை மேலும் அலங்கரிக்கிறார்.

अपाटवात्केवलमङ्गकानां मनोज्ञकान्तेर्महिषीजनस्य |
शनै: शनै: प्रोज्झितभूषणानि चकाशिरे दौहृदलक्षणानि || (बालकाण्डम् २५)

அபாடவாத்கேவலமங்க³கானாம்ʼ மனோஜ்ஞகாந்தேர்மஹிஷீஜனஸ்ய |
ஶனை: ஶனை: ப்ரோஜ்ஜி²தபூ⁴ஷணானி சகாஶிரே தௌ³ஹ்ருʼத³லக்ஷணானி || (பாலகாண்டம் – 25)

ஒளிபொருந்திய அரசியர்கள் சிற்சில காலத்தில், உடல் மெலிந்து ஆபரணங்கள் கூட அணியமுடியாமல் ஆனது, அவர்களிடம் இரு இதயம் உள்ளதற்கான அடையாளங்கள், தௌஹ்ருத லக்ஷணங்கள் அல்லது த்வி ஹ்ருதய லக்ஷணங்கள் அழகாக மிளிர்ந்தன.
குழந்தையைச் சுமக்கும் கர்ப்பிணிப் பெண்ணை, இரண்டு இதயம் உள்ளவள் (குழந்தையின் இதயம் மற்றும் தாயின் இதயம்) என்று கவிஞர் சமத்காரமாகக் குறிப்பிடுகிறார்.

அஷ்டாங்க ஹ்ருதயம் என்ற ஆயுர்வேத நூல் பின்வருமாறு கூறுகிறது:

मातृजन्यस्य हृदयं मातुश्च हृदयेन यत् |
संबद्धं तेन गर्भिण्या नेष्टं श्रद्धाविमाननं || (अष्टाङ्गहृदयम् )

மாத்ருʼஜன்யஸ்ய ஹ்ருʼத³யம்ʼ மாதுஶ்ச ஹ்ருʼத³யேன யத் |
ஸம்ப³த்³த⁴ம்ʼ தேன க³ர்பி⁴ண்யா நேஷ்டம்ʼ ஶ்ரத்³தா⁴விமானனம்ʼ || (அஷ்டாங்கஹ்ருதயம்)

சாதாரண நாட்களில் ஒரு பெண்ணுக்கு சில உணவு, உடைகள், வாசனைகள் பிடிக்கும். ஆனால் பேறுகாலத்தில் அந்த விருப்பு வெறுப்புகள் பெரிதும் மாறி இருக்கும். முன்பு பிடிக்காதது இப்போது வேண்டும் என்று கேட்பார்கள். இதற்கு காரணம் உள்ளே இருக்கும் இன்னொரு இதயம் தான் என்கிறது ஆயுர் வேத நூல். கவி போஜனுக்கு ஆயுர்வேதம் தெரியும் என்பதால்தான் அந்தக் குறிப்பை இங்கே கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.

அரசியர் மூவரில் கௌசல்யைக்கு கொஞ்சம் சிறப்பு அதிகம். ஏனெனில் அவள் வயிற்றில் தான் கதையின் நாயகன் தோன்றுகிறான். அவன் சாதாரணமானவனல்ல. விஷ்ணுவின் அவதாரம்.

न्यग्रोधपत्रसमतां क्रमश: प्रयातामङ्गीचकार पुनरप्यदरं कृशाङ्गया: |
जीवातवे दशमुखोरगपीडितानां गर्भञ्चलेन वसता प्रथमेन पुंसा || (बालकाण्डम् २७)

ந்யக்³ரோத⁴பத்ரஸமதாம்ʼ க்ரமஶ: ப்ரயாதாமங்கீ³சகார புனரப்யத³ரம்ʼ க்ருʼஶாங்க³யா: |
ஜீவாதவே த³ஶமுகோ²ரக³பீடி³தானாம்ʼ க³ர்ப⁴ஞ்சலேன வஸதா ப்ரத²மேன பும்ʼஸா || (பாலகாண்டம் – 27)

கௌசல்யையின் வயிறு ஆலிலை போல இருக்குமாம். இளமையின் காரணமாக சிறுத்துப் போன இடை, கர்ப்பத்தின் காரணமாக அதன் ஆலிலை வடிவம் வெளித்தெரியுமாறு வளர்ந்ததாம். உலகெங்கும் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிவிட, அப்போது ஆலிலையில் படுத்திருக்கும் குழந்தையாக விஷ்ணு மிதந்து வருவார் என்பது புராணக் கோட்பாடு. அதனை இங்கே கௌசல்யையின் இடையை ஆலிலையாகவும் அதில் சிசுவாகப் படுத்திருக்கும் ராமனே விஷ்ணு என்று அழகாக உருவகப் படுத்துகிறார்.

பெண்களின் இடை சிறுத்து இருப்பது அழகு. பல இடங்களில் காவியங்களில் பெண்களின் இடை இருந்தும் இல்லாதது போல இருப்பதாக உவமைகளுடன் குறிப்பிடுவர். கௌசல்யையும் அப்படித்தான். அவள் கருவுற்ற காலத்தில் இல்லாதிருந்த இடை தன் இருப்பை வெளிப்படுத்துகிறதாம். ஆகாயம் போல சூன்ய பிரதேசமாக இருந்த இடை இன்று விஷ்ணு பதம் ஆகி விட்டது என்கிறார் கவி. ஆகாயத்திற்கு விஷ்ணுபதம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அதைக் சிலேடையாகக் குறிப்பிடுகிறார்.

मध्यं तनुत्वादविभाव्यमानं आकाशमासीद् असितायताक्ष्या: |
गर्भोदये विष्णुपदापदेशात्कार्श्यं विहायापि विहाय एव || (बालकाण्डम् २८)

மத்⁴யம்ʼ தனுத்வாத³விபா⁴வ்யமானம்ʼ ஆகாஶமாஸீத்³ அஸிதாயதாக்ஷ்யா: |
க³ர்போ⁴த³யே விஷ்ணுபதா³பதே³ஶாத்கார்ஶ்யம்ʼ விஹாயாபி விஹாய ஏவ || (பாலகாண்டம் – 28)

முன்பு இவள் வயிறு காணமுடியாத ஆகாசம் போல இருந்தது. இப்போது கர்ப்ப காலத்தில் விஷ்ணுபதமாக ஆகி விட்டது. ராமன் விஷ்ணுவின் அவதாரம், அவன் இருக்கும் இடமாக அவள் வயிறு ஆனது என்று ஒரு அர்த்தத்திலும், ஆகாயம் போல விரிந்து பெரிதானது என்று இன்னொரு அர்த்தத்திலும் அந்த சொல்லை கவிஞர் உபயோகித்திருக்கிறார்.

ஸ்ரீராமனின் வனவாசம்

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள..” நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கைகேயி கூறியதைக் கேட்டும் இராமனின் முகமலர்ச்சியில் ஒரு சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை என்பதை எல்லா இராமசரித கவிஞர்களும் பாடியுள்ளனர். இத்தருணத்தில், போஜனின் இராமன் கீழ்கண்டவாறு பேசுகிறான்:

वनभुवि तनुमात्रत्राणमाज्ञापीतं मे
सफलभुवनभार: स्थापितो वत्समूर्ध्नि |
तदिह सुकरतायामावयोस्तर्कीतायां
मयि पतति गरीयानम्ब ते पक्षपात: || (अयोद्याकाण्डम् २५)

வனபு⁴வி தனுமாத்ரத்ராணமாஜ்ஞாபீதம்ʼ மே
ஸப²லபு⁴வனபா⁴ர: ஸ்தா²பிதோ வத்ஸமூர்த்⁴னி |
ததி³ஹ ஸுகரதாயாமாவயோஸ்தர்கீதாயாம்ʼ
மயி பததி க³ரீயானம்ப³ தே பக்ஷபாத: || (அயோத்யா காண்டம் -25)

அம்மா நீங்கள் சிறிது பாரபட்சம் காட்டி விட்டீர்கள். அனைத்துலகையும் அதனுள் வாழும் மக்களையும் காப்பாற்றும் சுமை பரதனுக்கு, என்னுடைய உடலை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்கிற சுமை எனக்கு என்று, எனக்கு சிறிய வேலையையும் தம்பிக்கு மிகப்பெரிய பாரத்தையும் சுமத்தி விட்டீர்களே என்று கேட்கிறான்.

ராமனிடம் காமம் கொண்ட சூர்ப்பனகை

ஆரண்ய காண்டத்தில், ராம லட்சுமணர்களை சூர்ப்பனகை காணும் காட்சி சுவையாக விவரிக்கப் படுகிறது.

दशरथात्मज युग्म निरीक्षण समाकुल बुद्दिरियं दधौ |
उभयकुल समस्थितशाद्वलभ्रम गतागत खिन्नगवीदशाम् || (आरण्यकाण्डम् १६)

த³ஶரதா²த்மஜ யுக்³ம நிரீக்ஷண ஸமாகுல பு³த்³தி³ரியம்ʼ த³தௌ⁴ |
உப⁴யகுல ஸமஸ்தி²தஶாத்³வலப்⁴ரம க³தாக³த கி²ன்னக³வீத³ஶாம் || (ஆரண்யகாண்டம் – 16)

சூர்ப்பனகை ஒரு பசுவைப் போல இருந்தாள் என்கிறார் கவி. ஒரு ஆற்றுக்கு இரண்டு பக்கமும் நல்ல பசும்புல் இருக்க, எந்த கரையில் மேய்வது என்று திகைத்து உண்ணாமல் இங்கும் அங்கும் பசுவைப்போல, தசரதனின் புதல்வர்கள் இருவரின் அழகிலும் மயங்கி இவரிடமும் அவரிடமும் என்று அலைந்தாளாம் சூர்ப்பனகை.

ராவண குலம் புலஸ்தியர் என்னும் ரிஷியிடம் துவங்குகிறது. புலஸ்தியரோ பிரம்மாவின் பிள்ளை. அப்படி பிரம்ம தேவனிடம் நேரடி சம்பந்தம் இருக்கும் நமக்கு ஏன் இந்த கஷ்டம் என்று பிரம்மனையே நொந்து கொள்கிறாள் அவள்.

लावण्याम्बुनिधे: अमुष्य दयितामेनामिवैनं जनं
कस्मान्नसृजदस्मदन्वय गुरोरुत्पत्तिभू: पद्मभू: |
आस्तां तावदरण्यवासरसिके हा कष्टमस्मिन्निमां
कान्तिं काननचन्द्रिकासमदाशां किं निर्ममे निर्ममे || (आरण्यकाण्डम् २८)

லாவண்யாம்பு³னிதே⁴: அமுஷ்ய த³யிதாமேனாமிவைனம்ʼ ஜனம்ʼ
கஸ்மான்னஸ்ருʼஜத³ஸ்மத³ன்வய கு³ரோருத்பத்திபூ⁴: பத்³மபூ⁴: |
ஆஸ்தாம்ʼ தாவத³ரண்யவாஸரஸிகே ஹா கஷ்டமஸ்மின்னிமாம்ʼ
காந்திம்ʼ கானனசந்த்³ரிகாஸமதா³ஶாம்ʼ கிம்ʼ நிர்மமே நிர்மமே || (ஆரண்யகாண்டம் – 28)

பிரம்மன் நமது குலத்தில் ஆதி முதல்வர். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இந்த சீதையைப் போல அழகு தரவில்லை? சரி அதாவது போகட்டும், இந்த ராம லட்சுமணர்களை சந்திரனைப் போல ஒளியுடையவர்களாக படைத்தும் காட்டில் வாழுமாறு ஏன் விதித்தார்? என்ன கஷ்டம் இது! என்று புலம்புகிறாள்.

புத்திமான் ஹனுமான்

கிஷ்கிந்தா காண்டத்தில் ஹனுமான் முதலில் ராம லட்சுமனர்களைச் சந்தித்து அவர்கள் நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, அண்ணனுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் தம் மன்னன் சுக்ரீவனிடம் அழைத்துச் செல்கிறார். சுக்ரீவனும் ராம லட்சுமணர்களும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொண்டு நண்பர்களான வேளையில் சுக்ரீவன் ஹனுமானின் சாமர்த்தியத்தைப் பற்றி சொல்லுகிறான்.

अयमसुखयदेवं देव! धीमान् हनुमान्
रिपुरिति भवतोऽपि त्रस्तमस्तौजसं माम् |
दवहुतवहधूमस्तोम इत्यम्बुवाहा-
च्चकितमिव मयूरं मारुतो वारिशीत: || (किष्किन्दाकाण्डम् १२)

அயமஸுக²யதே³வம்ʼ தே³வ! தீ⁴மான் ஹனுமான்
ரிபுரிதி ப⁴வதோ(அ)பி த்ரஸ்தமஸ்தௌஜஸம்ʼ மாம் |
த³வஹுதவஹதூ⁴மஸ்தோம இத்யம்பு³வாஹா-
ச்சகிதமிவ மயூரம்ʼ மாருதோ வாரிஶீத: || (கிஷ்கிந்தா காண்டம் 12)

சுக்ரீவன் சொல்லுகிறார், பயத்தில் நான் உங்களைக் கூட விரோதி என்று நினைத்து அஞ்சினேன். அப்போது புத்திசாலியான ஹனுமான் தான் ஆறுதல் அளித்தார். எப்படி என்றால், கறுத்து திரண்டு வரும் மேகத்தை காட்டுத் தீயின் புகை என்று எண்ணி அஞ்சி நடுங்கும் மயிலுக்கு, அந்த மேகம் நெருங்குவதற்கு முன்னால், மழையின் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசி எப்படி அந்த மயிலை ஆனந்தப் படுத்துமோ அப்படி இருந்தது ஹனுமானின் செயல் என்று கூறுகிறார். ஹனுமானும் வாயுவின் சம்பந்தம் உள்ளவர். மாருத என்ற சொல் இங்கே ஆழ்ந்த பொருள் உள்ளதாக ஆகிறது.

சுந்தர காண்டம்

ராம லட்சுமணர்கள் சுக்ரீவனை சந்தித்து, வாலி வதம் முடிந்து, அனுமான் இலங்கைக்கு சீதையைத் தேடியபடி வருகிறார். ராவணனின் அரண்மனை, நகரம் முழுவதும் அனுமான் தேடத் துவங்கும் போது, இரவு நேரம். அந்நேரத்தில் ஒரு காட்சி வருணனை:

आदित्य: कृतकृत्य एष भविता सीतापतेरीदृशं
साहाय्यं विरचय्य कीर्तिमतुलामादित्सुना सूनुना |
इत्यालोच्य तदा किल स्वयमपि ख्यातिं ग्रहीतुं परां
लङ्कायां रघुनाथदूतसरणौ चन्द्रेण दीपायितम् || (सुन्दरकाण्डम् १४)

ஆதி³த்ய: க்ருʼதக்ருʼத்ய ஏஷ ப⁴விதா ஸீதாபதேரீத்³ருʼஶம்ʼ
ஸாஹாய்யம்ʼ விரசய்ய கீர்திமதுலாமாதி³த்ஸுனா ஸூனுனா |
இத்யாலோச்ய ததா³ கில ஸ்வயமபி க்²யாதிம்ʼ க்³ரஹீதும்ʼ பராம்ʼ
லங்காயாம்ʼ ரகு⁴னாத²தூ³தஸரணௌ சந்த்³ரேண தீ³பாயிதம் ||
(ஸுந்த³ரகாண்ட³ம் 14)

சூரியனின் அம்சம் சுக்ரீவன் என்று கருதப் படுகிறது. ராமனுக்கு தன் பிள்ளை சுக்ரீவனைக் கொண்டு உதவி செய்து சூரியன் புகழடைந்தான். இதை ஆலோசித்து, தானே ராமனுக்கு உதவி செய்யும் காரியத்தில் இறங்கி, ராம தூதனான அனுமன் செல்லும் இடமெல்லாம் தன் ஒளிக்கிரணங்களை நிறைத்து வழிகாட்டினான் சந்திரன் என்று கவித்துவமாக குறிப்பிடுகிறார்.

பல இடங்களில் சுற்றித் தேடிவிட்டு அசோக வனத்துக்கு வந்து சீதையைச் சந்திக்கிறார். சீதையைத் தானே தூக்கிச் சென்று ராமனிடம் சேர்த்து விடுகிறேன் என்று அவர் கேட்கும்போது சீதை பலவாறும் நன்றியுடன் மறுத்து பின்னர் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியை ராமனிடம் அடையாளமாகக் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறாள்.

चूडामणिं कपिवरस्य ददौ दशास्य
संत्रासपुञ्जितरुषाग्निदशं कृशाङ्गी |
आदाय तंप्रणतिपूर्वमासौ प्रतस्थे
माणिक्यगर्भवदनोरगतुल्यबाहु: || (सुन्दरकाण्ड ३६)

சூடா³மணிம்ʼ கபிவரஸ்ய த³தௌ³ த³ஶாஸ்ய
ஸந்த்ராஸபுஞ்ஜிதருஷாக்³னித³ஶம்ʼ க்ருʼஶாங்கீ³ |
ஆதா³ய தம்ப்ரணதிபூர்வமாஸௌ ப்ரதஸ்தே²
மாணிக்யக³ர்ப⁴வத³னோரக³துல்யபா³ஹு: || (சுந்தரகாண்டம் 36)

இளைத்த உடலுடன் வலிமை குன்றி இருந்த சீதை, அனுமனிடம் தன் தலையில் அணிந்திருந்த சூடாமணியைக் கொடுத்தாள். அது அவளுக்கு ராவணன் மீது இருந்த கோபத்தீயைப் போல ஒளிர்ந்தது. அதைக் கையில் வாங்கிய அனுமனின் கைகள், ரத்தினம் தாங்கிய நாகப் பாம்பு போல இருந்தது.

அனுமன் திரும்பி வந்து, தன்னுடன் வந்த வானர சேனையுடன் இணைந்து ராமனை சந்தித்து சீதையச் சந்தித்த விவரத்தைச் சொல்லுகிறார்.

अक्लेशसंभूतगतागताभ्यां वितीर्णविस्तीर्ण महार्णवोऽपि |
आनन्दसिन्दौ पृतनासमक्षमक्षस्य हन्ता नितरां ममज्ज || (सुन्दरकाण्डम् ७२)

அக்லேஶஸம்பூ⁴தக³தாக³தாப்⁴யாம்ʼ
விதீர்ணவிஸ்தீர்ண மஹார்ணவோ(அ)பி |
ஆனந்த³ஸிந்தௌ³ ப்ருʼதனாஸமக்ஷமக்ஷஸ்ய
ஹந்தா நிதராம்ʼ மமஜ்ஜ || (சுந்தரகாண்டம் 72)

ஒரு துன்பமும் இல்லாமல் சுலபமாக பெருங்கடலை இருமுறை தாண்டி வந்த அனுமன், இங்கே வானர சேனை ராமலட்சுமணர்கள் மத்தியில் அவர்களின் ஆனந்தக் கடலில் மூழ்கிவிட்டார். அரக்கர்களிடம் போரிட்டது, ராவணனைச் சந்தித்து எச்சரித்தது, சீதையைச் சந்தித்து பேசி தைரியம் சொல்லி, அவள் தந்த சூடாமணியைப் பெற்று வந்தது என்று பல சாதனைகள் செய்து எல்லோருடைய ஆனந்தத்துக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான அனுமன் பேச்சின்றி அவர்கள் அன்பிலும் அங்கீகாரத்திலும் மூழ்கினார் என்று கவி அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுத்த காண்டத்தில் சில கவிதைகள்

சுந்தரகாண்டத்துடன் போஜ ராஜன் எழுதிய சம்புராமாயணம் நின்று விடுகிறது. அந்த சமயம் ஏற்பட்ட போரில் போஜராஜன் வீரமரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் லக்ஷ்மண சூரி என்னும் கவி போஜனின் கவிதை அமைப்பிலேயே யுத்த காண்டத்தையும் எழுதி முழுமை செய்துள்ளார்.

भोजेन तेन रचितामपि पूरयिष्यन्
अल्पीयसापि वचसा कृतिमत्युदराम् |
न व्रीडितोऽहमधुना नवरत्नहार-
सङ्गेन किन्न हृदि धार्यत एव तन्तु: || (युद्धकाण्डम् – २)

போ⁴ஜேன தேன ரசிதாமபி பூரயிஷ்யன்
அல்பீயஸாபி வசஸா க்ருʼதிமத்யுத³ராம் |
ந வ்ரீடி³தோ(அ)ஹமது⁴னா நவரத்னஹார-
ஸங்கே³ன கின்ன ஹ்ருʼதி³ தா⁴ர்யத ஏவ தந்து: || (யுத்த காண்டம் – 2)

ஆரம்பத்தில் பால காண்டத்தில் வால்மீகி முனிவருக்கு போஜன் வணங்கி தன எளிமையை வெளிப்படுத்தியது போலவே இங்கு, லக்ஷ்மண சூரியும் போஜகவியின் மீது தன் மரியாதையை வெளிப்படுத்துகிறார். போஜராஜனால் இயற்றப் பட்ட சம்பு ராமாயணத்தை பூர்த்தி செய்யப் புகுவதில் எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. ஏனெனில் நவரத்தின மாலையை நெஞ்சில் தவழ விட, அதற்கு ஒரு நூல் தேவைப் படுகிறது தானே என்று கூறுகிறார். ஆனால் யுத்த காண்டத்தின் கவிதைகளும் போஜராஜனின் கவிதையின் தரத்துக்கு சற்றும் குறைவில்லாதவை.

சம்பு இராமாயணம் முழுவதுமே கவித்துவமும், சுவையும் மிகுந்த ஒரு படைப்பு. இங்கே ஒரு சில கவிதைகளை மட்டுமே பார்த்தோம். சம்ஸ்க்ருத மொழியை கற்க விரும்போவோருக்கும், பக்தியுடன் படிக்க எண்ணுவோருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆழ்ந்த பொருளை அறிந்து ரசிக்கக் கூடிய வேத சாத்திர விற்பன்னர்களுக்கும் கூட சம்பு ராமாயணம் அள்ள அள்ள குறையாமல் வழங்கும் பொக்கிஷமாகவே இருக்கும்.

———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –