Archive for the ‘கண்ணி நுண் சிறு தாம்பு’ Category

ஸ்ரீ ஆழ்வார்‌ கலித்துறை யந்தாதி என்று வழங்குகிற ஸ்ரீ சடகோபாரந்தாதி–

March 31, 2025

ஆழ்வார்‌ – கடவுளின்‌ நற் குணக் கடலில்‌ முழுகி அமுங்கி யிருப்பவர்
கலித்துறை – கலித்துறை யென்லும்‌ ஒரு வகைப் பாடலினாற்‌ செய்‌யப் பட்ட,
அந்தாதி என்று – ௮ந்தத்தை ஆதியாக வுடைய நூல் என்று
வழங்குகிற – சொல்லுகின்ற,
சடம்‌ – சடம்‌ என்‌னும் வாயுவை,
கோபர்‌ – கோபித்த இறைவரது என்பதாம்‌.

சடகோபரந்தாதி – சடகோபரைப்‌ பற்றிய அந்தாதி யெனவும்‌ சடகோபரது ௮ந்தாதி எனவும்‌ விரிக்கலாம்‌. இவற்றுள்‌, முன்னது இரண்டாம்‌ வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்கத் தொகையும்‌ பின்னது ஆறாம் வேற்றுமைத்‌ தொகையுமாகச் கொள்ளலாம்‌.

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நா வலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.
-சிறப்புப் பாயிரம்-அபியுக்தர் ஒருவர் அருளிச் செய்த தனியன் இது-அடுத்த மூன்று செய்யுள்களும் அப்படியே –

தேவில்‌ – தெய்வங்களில்‌-சிறந்த
திருமாற்கு -திரு மகள் கணவனாகிய மாயோனுக்கு,
தக்க – தகுந்த,
தெய்வக் கவிஞன்‌- தெய்வத் தன்மை யுள்ள கவிபாட வல்லவர்‌,
பாவில்‌ சிறந்த – பாடல்களில் சிறந்த
திருவாய்மொழி – திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை,
பகர்‌-பாடியருளிய,
பண்டிதனே – நல்ல பாண்டித்தியமுடைய நம்மாழ்வாரேயாம்‌;, (௮ப்படிப் போல), நாவில் சிறந்த – அப்படிப் பாடுதற்குரிய நாக்‌கினால் சிறந்த
௮ம் மாறற்கு – அந்த நம்மாழ்வாருக்கு, தக்க – தகுந்த
நல் நா வலவன்‌ – நல்ல கவிஞரானவர்‌, பூவில்‌ – உலகத்தில்‌, -சிறந்த-
ஆழ்‌வான்‌ – பக்தி வெள்ளத்தில்‌ மூழ்குபவராகிய,
கம்ப நாட்டு புலமையன்‌-கம்ப நாடரென்னும்‌ வித்துவானேயாம்‌;

எல்லாத் தேவரிலும்‌ சிறந்த மாயோனுடைய கீர்த்திகளைப்‌ பாடுதலில்‌ வல்லவர்‌ நம்மாழ்வாரேயாம்‌-௮ப்படிப் போல நம்மாழ்வாரைப்‌ பாடுதலில் சிறந்தவர்‌ கம்ப நாட்டாழ்வாரேயாமென்பதாம்‌-மற்றைத்‌ தேவர்களைப் போலாகாமல்‌ உயிர்களிடத்தில்‌ அந்தர் யாமித்‌துவமுடைமையால்‌ தேவிச் சிறந்த திருமாலென்றார்‌. சிவ பிரானிடத்தில்‌ உபதேசம் பெற்று அகத்தியர் எழதிய இலக்கணத்துத்குப்‌ பொருந்திய பாடல்‌களைப்‌ பாடப் பெற்றதனால்‌ தெய்வக்கவி யென்றார்‌. ஏனைய நூல்கள்‌ போலாகாது இருமைப் பயனுந் தருதலால்‌ பாவில் சிறந்த திருவாய் மொழி யென்றார்‌. பண்டிதன்‌ -ஞான பண்டிதருமாம்‌, மாறன்‌ – ஆழ்வார்‌-பிறந்த பொமுது அழுதல்‌, விம்முதல்‌, பால் குடித்தல்‌ முதலிய ஒரு தொழிலுஞ் செய்யாமல்‌ உலகியல்பிற்கு மாறாக இருந்ததினால்‌ மாறன்‌ என்று பெயர் பெற்றார்‌. பூவிற் சிறந்த கம்ப நாட்டு ஆழ்வானெனக் கூட்டலும்‌ அமையும்‌. கம்பநாடு – முதலில்‌ இது வெண்ணெயூர்‌ நாடாக விருந்து பின்‌பு கம்பர் காலத்தில்‌ அவர் பெயரால்‌ மாற்றப் பட்டமையால்‌ கம்பநாடென்றார்‌. பல வேறு வகைப்பட்ட நூலுணர்ச்சிகள் எல்லாம்‌ ஒரு சேரக் கொண்ட பேரறிவுடைமையால்‌ புலமையனென்றார்‌–கவிஞன்‌-ஞ்‌ -பெயரிடை நிலை. திருவாய்மொழி -சிறந்த வாயில் சொல்லாகிய நூல்‌ என்று பொருள் பட்டு ௮டையடுத்த கருவி யாகு பெயராயிற்று-ஏகாராமிரண்டும்‌ தேற்றம்‌.

———

ஆரணத்தின் சிர மீது உறை சோதியை ௮ந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

ஆரணத்தின்‌ – வேதத்தின்‌,
சிரம்‌ மீது – முடிவிடத்‌திலே,
உறை : பொருந்தி யிருக்கின்‌ற,
சோதியை – சோதி வடிவனான மாயோனை,
௮ம்‌ – அழகிய,
தமிழால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌,
பாரணம்‌ செய்தவனை -பாடி மகிழ்ந்தவராகிய,
குருகூரனை – திருக் குருகூரிலவதரித்த
சடகோபரை,
பல்‌ பல ௮ – பலபலவகையாக ,
நாரணன்‌ ஆம்‌ என–இவர்‌ நாராயணனது அமிசமாவாரென்று,
ஏத்தி- துதித்து,
தொழ–வணங்கும் படியாக,
கவி- பாடல்களை,
கொடை – கொடுத்தற்குரிய பொருளாக
நல்கு – கொடுக்கின்ற,
காரணனை – தலைவராகிய,
கம்‌பனை – கம்பரென்னும்‌ புலவரை (யாம்‌,) உள்‌ – எமது மனத்தில்‌,
களிப்பு உற – மகிழ்ச்சி மிகும் படியாக, நினைவாம்‌ – கருதுவோம்‌;

வேதாந்தத்தின்‌ மேல்‌ விளங்குஞ்‌ சோதியாகிய மாயோனைத் துதித்த நம்மாழ்வாரைத் துதித்த கம்பரை யாம்‌ உள்ளங் களிக்கும்படி தியானிப்‌போம் என்பதாம்‌, உபநிஷத்துக்களிலும்‌ உத்தர மீமாம்சை யாகிய ப்ரஹ்ம ஸூத்திரத்திலும்‌-மாயோனைத் தலைவனாகக் கூறுதலால்‌ ஆரணத்தின் சிரமீதுறை என்றார்‌. எல்லாரிலும்‌ மேம்பட்ட சரீர காந்தி யுடைமையால்‌ சோதி யென்றார்‌, செய்யுளிடத்தன்றி உலக நடையில்‌ மாந்தர்‌க்குப்‌ பயன்படாமலும்‌ தமக்கென்று ஓர்‌ இடமில்லாமலும்‌ இலக்கணங்கள் அமையப் பெறாமலுமுள்ள ௮ன்னிய மொழிகளைப் போலாகாமல்‌ ௮வை யெல்லாமுடைமையால்‌ அந் தமிழ் என்றார்‌. திருமாலால்‌ அளிக்கப்படுவன யாவும்‌ தாமே கொடுக்கத் தக்கவராதல் பற்றிப்‌ பல முகத்தாலும்‌ இவர்‌ நாராயணனே யாவார் என்பதைக் கம்பர்‌ குறிப்பித்தமை இங்கு எடுத்துக் காட்டினது காண்க, ஆரணம்‌ – வேதத்திக்குச்‌ சினை யாகுபெயர்‌.
சோதி – உவமை யாகுபெயர்‌. யாம்‌ -தோன்றா எழுவாய்‌, நினைவாம்‌-பயனிலை-

———-

நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித் துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே

வேதம்‌ – வேதங்களின்‌ கருத்துக்களை, (எடுத்து ),
தமிழ்‌ -தமிழ்ப் பாடல்களாக , செய்த—-,
நின் மலனே – குற்றமற்றவரே !,
நம்‌ பெருமாள்‌ – எங்கட்கிறைவனாகிய மாயோன்‌,
விஞ்சிய – மிகுந்த,
ஆதரத்தால்‌ – அன்பினால்‌ (கம்பரை நோக்கி ),
நம்‌ சடகோபனை – நமது சடகோப முனிவரை,
பாடினையோ – நீ பாடித் துதித்தனையோ ??
என்று கேட்ப- என்று கேட்டவடன்‌, கம்பன்‌—-.-,
விரைந்து – விரைவாக,
உரைத்த – பாடிய,
செம்சொல்‌ -௮ழகிய தமிழ் சொற்களாலமைந்த,
௮ந்தாதி- அந்தாதி யென்னும்‌ நூலிலமைந்து கிடக்க ,
நூறு கலித்துறையும்‌ – நூறு கலித் துறைப் பாடல்களும்‌,
தெரியும்‌ வண்ணம்‌ – நான்‌ அறிந்து கொள்ளும் படியாக,
அடியேற்கு – உம்முடைய திருவடிகளில்‌ பற்றுள்ள எனக்கு,
நெஞ்சு-மனத்தினை,
அருள்‌-கொடுத்தருளுவீர்‌;

வேதத்தைத்‌ தமிழிற் செய்தருளிய நம்மாழ்வாரே ! பெருமாள்‌ சடகோபரைப் பாடினையோ வென்று கேட்டலும்‌ கம்பர் பாடிய அந்தாதியைத்‌ தெரிந்து கொள்ளும் வண்ணம்‌ அடியேனுக்கு மனத்தைக்‌ கொடுத்‌தருளுவீர் என்பதாம்‌. வேதம்‌ நான்கு;-இருக்கு , எஜூர்‌, சாமம்‌, அதர்வணம்‌. இந் நான்கின் கருத்தினை அடக்கித் தமிழில்‌ நம்மாழ்வார்‌ செய்த
பிரபந்தங்கள்‌ முற்கூறப்பட்டன., நம் சடகோபனென்றது மாயோன்‌ தான்‌ ஆழ்வார் மீது வைத்துள்ள அன்பின்‌ மிகுதியால்‌ தன்னொடு சேர்த்துக் கூறிய ஆர்வமொழி; இது பற்றியே யாவரும்‌ நம்மாழ்வாரெனக் கொண்டாடுவதுமென்றறிக-அரங்க நாதனுச்கு எல்லா வடியாரிடத்தும்‌ அன்பொத்திருக்கச்‌ சடகோபரை நம் சடகோபனை யென்று
விசேடித்ததும்‌ தம்மைக் கம்பர்‌ பாடி யிருக்கவும்‌ அவற்றால்‌ திருப்தி யுறாமல்‌ சடகோபனைப்‌ பாடினையோ வென்றதும் பற்றி விஞ்சிய ஆதரத்தாலென்றார்‌. பெருமாள்‌ – உயர்‌ திணை யிருபாற்‌ பொதுப் பெயர்‌, கம்பன்‌-சாதிப் பெயர்‌, உரைத்த அந்தாதி யெனக் கூட்டுக –

———–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளம் தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

ஒதரிய- சொல்லு தற்கரிய, (அளவினையுடைய),
வேதம்‌-வேதங்களை,
தமிழ்‌ செய்‌த-தமிழ்ப் பாடல்களாகப்‌ பாடி யருளிய,
மெய்ப்‌ பொருளே – தத்‌துவ ஞான மூர்த்தியே !
நாதன்‌ – தலைவனாக,
அரங்கன் – – திருவரங்கத்தெம்பெருமான்‌, (கம்பரை நோக்கி )
நயந்து – விரும்‌பி,
உரை யென்ன – ‘ சடகோபனைப் பாடு’என்று சொல்ல,
நல்‌ கம்பன்‌.-சிறந்த கம்பரென்னும் புலவர்‌, உன்‌ தன்‌ – உம்முடைய,
பாதம்‌ – திருவடிகளை,
பரவிய – துதித்துப் பாடிய,
பைந்தமிழ்‌ – பசுந்‌ தமிழ்ப் பாடல்‌கள்‌-நூறும்
பரிவுடன்‌ – (யான்‌) அன்போடு
ஒதும்படி – படித்து உய்யும்‌ வண்ணம்‌, எனக்கு—-உள்ளம்‌ தனை – மனத்தினை,
அருள்‌ – திருத்தி யருள வேண்டும்‌,
என்‌ – எனது ,
விண்ணப்பம்‌ – வேண்‌டு கோளானது ,
இது – ஈதொன்றேயாம்‌; –

வேதத்தினைச்‌ தமிழிற்‌ செய்த நம்மாழ்வாரே ! ௮ரங்க நாதன்‌ கட்‌டளையால்‌ கம்பர்‌ உம்மைத் துதித்த இவ் வந்தாதியைப்‌ படிக்கும்படி எனக்குக் கருணை செய்வீராக வென்பதாம்‌, அனந்தாவை வேதா : என்ற படி வேதங்கள்‌ அளவில்லாத பகுதியன ஆதலால்‌ ஓதரிய என்றார்‌-கேட்போருக்கு இன்பத்தையே தருதலால்‌ பாடலென்று கூறாமல்‌
இன்பமென்ற. பொருள் படும்‌ தமிழென்றார்‌-எல்லா வூழிகளிலும்‌ அழியாதிருத்தலால்‌ நாதனென்றார்‌. அப்படி யிருப்பதை அறியா , மனிதரும்‌ ௮றிந்து தர்ஸித்து நன்‌மை யடைய வேண்டி.-ஸ்ரீரங்கத்தில்‌ கோயில்‌ கொண்டெழுந்தருளினமையால்‌ அரங்கனென்றார்‌. எத்தனையோ புலவர்‌ தோன்றியிருந்தும்‌ இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும்‌ புண்ணியத்தை இவ்வொருவரே செய்து வந்தமையால்‌ நற்கம்பனென்‌றார்‌-இளமையர் மழலை செவிக்கு இன்பம் செய்வது போல இதுவும் இன்பந்‌ தருதலின்‌ பைந் தமிழ் என்றார்‌.; பசுமை – இளமை – பாராட்ட நானினியாளல்வவே பசுமென்குழவி” என்றார்‌ பிறரும்‌, கம்பன்‌ – அந்தச் சாதியர்க்குரிய பட்டப் பெயர்‌ – இயற் பெயர்‌ புலப்பட வில்லை ; பெரியோர்களின்‌ இயற் பெயர்களைக் கூற அஞ்சி மரியாதை தோன்‌ற அப் பட்டப்‌ பெயரால் அழைக்கப்படுவது தொன்று தொட்டு வந்த வழக்கம்‌- ‘ஐயரவர்‌கள் பிள்ளையவர்கள்‌, செட்டியாரவர்கள்‌’ என்கின்ற இம் மொழிகள் தமிழில் சிறந்த ஒவ்வொருவரைக் குறித்தல்‌ போல அக் காலத்திலிவரைக்‌ கம்பரெனக் கூறுதலுண்டென்‌றிந்து கொள்க. உரை –ஏவலொருமை-வினைமுற்று -ஆய் விகுதி புணர்ந்து கெட்டது உன்தன்‌, தன்‌- சாரியை-ஓதும்படி – படி ஈற்று வினை யெச்சம்‌.-ஓத அகரம் தொக்கது,

———-

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே
.–தற் சிறப்புப் பாசுரம்

——–

வேதத்தின் முன் செல்க மெய் யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே
.– 1-

தொல்லை – பழமையும்‌,
மூலம்‌ – எல்லாவற்றிற்கும் காரணமும்‌,
பரம்‌ – மேன்மையுமாகிய,
சுடர் – சோதி வடிவனாகிய மாயோன்‌,
வேதத்தின்‌ முன்‌ செல்க – வேதங்களின்‌ ௮ளவைக் கண்டது போவனென்‌றாலும்‌ போவானாக ;
மெய்‌ உணர்ந்தோர்‌ – உண்மை நிலையை அறிந்‌தவராகிய,
விரிஞ்சன்‌ முதலோர்‌ – பிரமா முதலான தேவருடைய,
கோது -குற்றம்‌
அற்ற – நீங்கிய,
ஞானம்‌ – ஞானத்தின்‌,
கொழுந்தின்‌ முன்‌-முடியைக் கடந்து போவனென்றாலும்‌,
செல்க – போவானாக ;
தென்‌-அழகிய,
குருகூர்‌ – குருகூரென்னும்‌ பதியிலவதரித்த,
குணம்‌ கடந்த -முக் குணங்களையுங் கடந்த,
போதம்‌ கடல்‌ – ஞான சாகரமாகிய,
எங்கள்‌ புனிதன்‌- எங்களுக்கு மேலாய்‌ விளங்குகிற நம்மாழ்வாரது,
கவி- பாடல்‌களின்‌,
ஓர்‌ பாதத்தின் முன்‌ – ஒரு அடிக்கு முன்னே,
செல்லுமே-போகும் தகுதி யுடையவனோ ? [எனவே போகானென்பதாம்‌];

திருமால்‌, வேதத்தினெல்லையையும்‌ அறிவுடையவர்‌ ஞான நிலையையையும் கடந்தவனென்றாலும்‌ சடகோபரது பாடலெல்லையைக் கடக்கும்‌ வலியிலனென்பதாம்‌. எனவே திருமாலின்‌ செயலினெல்லையைக் கடந்து ௮ப்பாலும் பரவி நின்றது இவர் பாடலென்க. த்ரை குண்ய விஷயா வேதா : என்றபடி மூன்று குணமுடையோர்க்கும்‌ வேண்டுவன உணர்த்தும்‌ வேதத்தில் பரமாத்துமாவைக் கூறாத பாகமுமிருப்பதால்‌ வேதத்தின்‌ முன்‌ செல்க வென்றும்‌ குணாதிதரான நம்மாழ்வார்‌ பாடலில்‌ அங்ஙனம்‌ ஒரு பாதமுமில்லாமையால்‌ பாதத்தின்‌ முன் செல்லுமே யென்றுங்‌ கூறினா.தவம் முதவியவற்றால் பெற்ற அறிவினை யுடைய பிரம்மா முதலானோர்‌ ஞானத்துக்கும்‌ முதலடியிலேயே மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்ற நம்மாழ்வார்‌ ஞானத்துக்கும்‌ மிகுந்த ஏற்றத் தாழ்வுண்‌டாதலால்‌ விரிஞ்சன்‌ முதலோர்‌ கோதற்ற ஞானக் கொழுந்தின்‌ முன்‌ செல்கவென்றும்‌ பாதத்தின் முன்‌ செல்லுமே யென்றுங்‌ கூறினார்‌, இது மெய் யுணர்ந்தோர்‌ என்‌றதனாலே தவத்தாற் பெற்ற அறிவுடையாரென்‌பது விளங்கும்‌, வேதம்‌ – மங்கலச்‌ சொல்லாதலின்‌ முதவிலெடுத்‌துக் கொண்டார்‌, இது விருத்தப் பொருத்தமாயினும்‌ பெரியோராட்சியிற்‌’குற்றமில்லையென்‌க -. மெய் யுணர்ந்தோர்‌– வியாஸ, அம்பரீஷ, சுக, செளனகாதியரெனினுமாகும்‌.-முதலோரென்‌றதனால்‌ இந்திராதியரையுங்‌ கொள்க – கோதற்ற ஞானம்‌ – ௮மல ஞானம்‌. குணங்கள்‌ தந்த எனப்‌ பிரித்‌துத்‌ திருவாய் மொழியைக் கற்றவர்களுக்கு நற்குணங்களைத்‌ தந்தருளுகின்ற என்றலுமாம்‌.-தென் குருகூர்‌ – தென்றிசைக் கண்ணுள்ளதாகிய குருகூரென்றலுமாகும்‌, எல்லோரிலுஞ்‌ சிறந்தவராதலால்‌ புனிதனென்றார்‌. முன்‌ – இடைச் சொல்‌ ; இடத்தின்மேலது – செல்க -வியங்கோள் வினை முற்று, உணர்ந்தோர்‌ – பெயரெச்சமுற்று, செல்‌லுமே, ஏ-எதிர்மறை, சுடர்‌ – உவமை யாகுபெயர்‌-

————-

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே.
2-

பண்டு- முற்காலத்தில்‌,
சுடர்‌ இரண்டே-சூரியனும்‌ சந்திரனுமாகிய இரண்டு சுடர்களென்றே நிலை யிடப்பட்டன;(இப்பொழுதோவெனில்‌),
எம்‌ பிறப்பை – எமது பிறவியை,
அடர்‌ – போக்கிய,
இரண்டு ஆம்‌ – இரண்டாகிய,
மலர்‌ தாள்‌, உடையான்‌ -தாமரை மலரை யொத்த திருவடிகளை யுடையவரும்‌, குருகைக்கு – குருகூருக்கு,
அரசன்‌ – தலைவரும்‌,
படர்‌ – பரவிய,
இரும்‌ – பெரிய,
கீர்த்தி பிரான்‌ – புகழை யுடையவருமாகிய நம்மாழ்வார்‌ (செய்தருளிய),
திருவாய்மொழி – திருவாய்‌ மொழி யென்னும்‌ பிரபந்தத்தினது ,
பாவொடும்‌ – பாடல்களுடனே(சேர்ந்து )
துகள் தீர்ந்து – குற்றமின்றி,
உலகத்து – உயிர்களிடத்தில்‌,
இரண்டு இடர்‌ஆய்‌ – இரண்டு வகைத் துன்பமாகி ,
வரும்‌ – வந்து பற்றிக்‌ கொள்கின்ற,
பேர்‌ இருள்‌ – பெரிய மயக்கம் பற்றி வருகிற இரு வினையாகிய இருளை,
சீப்பன – போக்குவனவாகி ,
மூன்று ஆயின – மூன்று சுடர்‌களென்று மேம் பட்டு விளங்கலாயின ;

முன்னாளில்‌ சூரியன்‌ சந்திரனென்னும்‌ இரண்டு சுடர்களே உலகத்தை விளக்கி வந்தன ; அவை புற விருளைக் கெடுப்பனவன்றி வேறு செய்யலாவன வின்மையால்‌, உயிர்களின்‌ மனத்திலுள்ள இருளைப் போக்‌க வேண்டிப்‌ பிரானது திருவாய்மொழிப்பாவொடு சேர்ந்து மனத்தெழுகின்ற இருளையும்‌ கெடுத்து முச் சுடராயின வென்பதாம்‌-உலகத்தின்‌
பேரிருளைக்‌ கெடுத்தற்குத்‌ திருவாய்மொழி வேண்டுமானாலும்‌ நம்மாழ்‌வார்‌ திருவடிகளில்‌ அன்பு பூண்ட தமக்கு ௮வர்‌ திருவடிகளே அமையுமென்பது தோன்ற எம் பிறப்பை அடரிரண்டா மலர்த் தாளுடையானென்றார் –பூவோடு நாரும்‌ மணம் பெறுதல் போலத்‌ திருவாய்மொழிப்‌ பாவொடு சுடர் சேர்ந்து மூன்றாயின வென்றார்‌-இனிச் சுடரிரண்டென்பதற்கு இராம கிருஷ்ணர்களென்று பொருள் கொண்டால்‌ அவ் விராமபிரான்‌ சுக்ரீவனை நோக்கி சரணாகதி தருமத்தை யளித்தமையாலும்‌ கண்ணபிரான்‌ அருச்சுனனை நோக்கிக்‌ கீதை யருளிச் செய்தமையாலும்‌ இங்கு-வீடுமின்‌ முற்றவும்‌!” என்று எல்லா வுயிர்களையும்‌ நோக்கி யருளிச் செய்‌தமையாலும்‌ இத் திருவாய்மொழியே ௮வரினும்‌ சிறப்புடைமையாவது அறிக,
வினைகளுள்‌ நல்வினை மீண்டும்‌ பிறவியைத் தருதலால்‌ இரண்டினையும்‌
சேர்த்து இடரென்றூர்‌ ; இருள்‌ என்பதும்‌ இக் கருத்துப் பற்றியேயாம்‌ :
‘* இருள் சேரிரு வினையும்‌”’ என்றார் பிரரும்‌. ஒருவன் செய்யும்‌ நன்மையால்‌ அவனைச்‌ சார்ந்த பலரும்‌ மேம் படுவாராதலால்‌ தாம்‌ ஒருவர் துதித்‌தலினால்‌ தம்மைச் சாரர்த பலர் பிறப்புக்களும்‌ நீங்குதல் பற்றி எம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌. இரண்டே, ஏ- தேற்றம்‌, மலர்த்‌ தாள்‌ – உவமைத் தொகை, குருகை- மரூ௨,-இரும் கீர்த்தி – பண்புத்‌ தொகை,

————

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே
. 3–

குருகூர்‌. -திருக்குருகூர்ப் பதியிலே,
பூ – (ஆழ்வாரது திருவாய்‌) மலரில்‌,
ஒடுக்கும்‌ -அடக்கப் பெற்றிருந்ததான, அமுதம்‌ – அமிர்‌தம் போன்ற,
திரு ஆயிரம்‌ – சிறந்த ஆயிரம்‌ பாடல்களும்‌, போந்தன.-வெளி வந்தவைகள்‌ தாம்‌,
பா-செய்யுட்களின்- இலகணங்களை யெல்லாம்‌,
ஒடுக்கும்‌ – தம்முளடக்கிக் கொண்டு விளங்குவன –
நுண் -நுட்பமாக அறியத் தக்க,
இசை -இராகப் பகுதிகளெல்லாவற்றையும்‌,
ஒடுக்கும்‌—தம்முள் அடக்கிக் கொண்டு விளங்குவன
பலவும்‌ – வேறாகிய பலவற்றையும்‌, பறையும்‌ – மாறுபடக் கூறுகின்‌ற,
நா – புறச் சமயிகளின்‌ நாவினை,
ஓடுக்கும்‌ – அடக்கி விடும்‌ ;
நல்‌ ௮றிவு -நல்ல அறிவினை,
ஒடுக்கும்‌ – தன்னுள்ளடக்கி யிருக்கும்‌ ; மற்றும்‌ – அன்றியும்‌,
நாட்டப்பட்ட – (உலகத்தை) நிலை நிறுத்‌தப் பட்டுள்ள,
தே- -தேவனாகிய திருமால்‌,
ஒடுக்கும்‌ –தன்னுளடக்கிக் கொண்டிருக்கிற,
பரம்‌ – வேறாகிய (மதங்களின்‌),
வாதம்‌ – விவகாரத்‌தினாலாகிய,
செரு- போரை,
ஒடுக்கும்‌ – அடக்கி விடும்‌

பாடல்களினுறுப்பக்கள்‌ பலவற்றையும்‌ நிறையப் பெற்றிருப்பதனால்‌ பாவொடுக்கு மென்றார்‌-சிவபிரான்‌ திருக்கையிலேந்திய வெண்டலையால்‌ பாடப் பெற்ற தேவ கானமாகிய பதினெட்டுப்‌ பண்களின்‌ வழியில்‌ விரிந்த நூற்று மூன்று பகுதிகளையும்‌ பெற்றிருப்பதனால்‌ நுண்ணிசை யொடுக்குமென்றார்‌. நம்மாழ்வார்‌ கொண்ட கொள்கைச்கு மாறாகப்‌ பிதற்று்கின்றவர்‌ நாவினை அடங்கச் செய்தலால்‌ பலவும் பறையும் நா வொடுக்குமென்றார்‌; காலையில்‌ நறுமல ரொன்றக்‌ கட்டிய, மாலையினியல்‌
புரை சமய வாதியர்‌, சூலையின்‌ திருக்கலாற்‌ சொல்லுவோர்க்கெலாம்‌,
வேலையும்‌ திரையும் போல்‌ வேறு பாடிலான்‌ ” என்றபடி எல்லா மதத்தையும்‌ தன்னுளடக்கிக் கொண்டவனாதலால்‌ தேவொடுக்கும்‌ பரவாதமென்றார்‌. இறந்தாரைப் பிழைப்பிக்கும்‌ அமுதம் போலசத் தீவினையிலழிவார்‌ தாம்‌ நினைத்த மாத்திரையில்‌ அவரை அதினின்று நீக்குதலால்‌ இறந்தாரைப்‌ பிழைப்பிக்கும்‌ ௮முதத்தை அத்‌ திருவாய் மொழிக்கு உவமை கூறினார்‌.-இறைவனருளாற்‌ பாடியதன்றி ஆழ்வார்‌ தாமாகப் பாடினரில்லை யென்பது தோன்றப் போந்தன வென்றார்‌; முந்தை ஆயிரம்‌” என்‌ற் பாசுரப்படி, திருவாய் மொழி நித்தியமென்பதும்‌ நித்தியமான வேதத்தைப்‌ பிரமதேவர்‌ வெளியிட்டது போலத்‌ திருவாய்‌ மொழியையும்‌ ஆழ்‌வார்‌ வெளியிட்டனர் என்பதும்‌ இதனால்‌ விளங்கும்‌, ஒடுக்கும் நுண்ணிசை, பறையும் நா , ஒடுக்கும் நல்லறிவு, ஒடுக்கும் மற்று, ஒடுக்கும் மமுதம்‌ –
இவற்றிலுள்ள நகர மகரங்கள்‌ விரித்தல்‌ விகாரம்‌, பூ – உவமை யாகு பெயர்‌-

——–

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே
. 4-

தொல்லை- பழமையாகிய,
எர்‌- அழகிய,
வகுளம்‌ – மகிழம் பூக்கள்‌ தொடுத்த ,
வனம்‌ – குளிர்ந்த,
மாலை : மாலையை யுடைய
எம்‌பெருமான்‌ – எமது தலைவராக,
குருகூர்‌ மன்னன்‌ – குருகூரிலவதரித்‌த நம்மாழ்வாரது ,
வாய்‌ மொழி – திருவாயிலிருந்து வந்த பாடல்கள்
சிலர்க்கு, – சிற் சிலருக்கு,
தனம்‌ ஆம்‌-செல்வப் பொருளாகும்‌;
சிலர்‌க்கு— தவம்‌ ஆம்‌ – தவமே யாகும்‌; சிலர்க்கு–தருமம்‌ நிறை -புண்ணியமிகுந்த, கனம்‌ ஆம்‌ – பெரும் சிறப்புமாகும்‌ ;
சிலர்க்கு- ந அதன்‌-காரணம்‌ ஆம்‌-அப் பெருஞ்‌ சிறப்புக்குக் காரணமுமாகும்‌ ;
சிலர்‌க்கு –;.,ஆரணத்தின்‌ இனமாம்‌ -வேதத்தின்‌ பகுதியாகும்‌;
அதற்கு-அந்த வேதத்தின்‌ பகுதிகள் அனைத்துக்கும்‌,
எல்லையும்‌ – முடிவாய உப நிஷத்துக்களும்‌,
ஆம்‌ – ஆகும்‌;

குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருவாய் மொழி யானது செல்வம்‌ முதலியவற்‌றை வேண்டியவர்க்கு வேண்டிய படியே பயன்படத் தக்க தென்பதாம்‌.-திருவாய் மொழி தமிழ்ப்‌ பிரபந்தமாதலால்‌ அந்தத்‌ தமிழுக்குரிய தெய்‌வம்‌ தான்‌ ௮ந் நூலைப்‌ பாராயணஞ் செய்வார்க்கு வேண்டியதை வேண்டியபடியே கொடுக்குமென்பார்‌ -தனத்தை வேண்டு வார்க்குத்‌ தனமும்‌ தவத்‌தை விரும்பினவர்க்குத் தவமும்‌ பெருமையை விரும்பினவர்க்குப்‌ பெருமையும்‌ அதன்‌ காரண்முமாமென்றார்‌- அத் தெய்வமும்‌ வேறன்று வேதத்தினுள்‌ விளங்குவதென்பதை விளக்குவார்‌ ஆரணமாமென்றும்‌ வேதமும்‌ வேதாந்தமாகாது இது வேதாந்தமுமாகுமென்பார்‌ -அதன்‌ எல்லை யென்றும்‌ ஆரணம்‌ பழமை யுடையதே யென்பார்க்கு இதுவும்‌ பழமையே யெனக்‌ கூறுவாராகித் தொல்லை வாய் மொழி யெனறும் கூறினார்‌-அன்றியும்‌ உலகத்தில்‌ தனம்‌ இம்மையின்பத்திற்கே உரியது ; தவம்‌ -மறுமையின்‌பத்திற்க்கே யுரியது இம்மைக்குப்‌ பயன்படாது ; இத் திருவாய்மொழி அப்படி யன்றி இருமைப் பயனும் தருதலால்‌ தனமென்றும்‌ தவமென்றுங்‌ கூறினார்‌ என்றலுமாம்‌-

—————-

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே
–5-

குளிர்‌ – குளிர்ந்த,
நீர்‌- நீரை யுடைய,
பொருநை -தாமிரபருணி நதியானது ,
பல சுழியாய்‌- பற் பலவாசச்‌ சுழித்து, ஒழுகும்‌ – ஓடுகின்ற,
குருகூர்‌- குருகூர்‌ என்னும் பதியில்‌,
எந்தை- எமது தந்தை போல்வாராகிய -சடகோபர்
தோன்றலின் – அவதரித்தலால்‌,
பலவாயின – பற் பலவாகிய,
மொழி- பாஷைகளுக் கெல்லாம் ,
செப்பம்‌ – ஓழுங்‌கு,
பிறந்தது – உண்டாயிற்று ;
முத்தி- மோஷ வீட்டினை,
எய்தம்‌- ௮டைகின்ற,
வழி: மார்க்கங்கள்‌,
பல ஆய -பலவாயினவை யெல்லாம்‌,
விட்டு – ஒழிந்து, ‘
ஒன்று ஆயது – ஒருவழி யாயிற்று ;
வழுவா – நீங்காத,
நரகம்‌ குழி- நரகக் குழிகள்‌,
பல ஆயின – பல வாயின வெல்லாம்‌,
பாழ்‌ பட்டது – பாழாயிற்று-

குருகூரில்‌ நம்மாழ்வார்‌ ௮வதரித்தலால்‌ பாஷைகளில்‌ ஓழுங்கென்‌பது தோன்றிற்று -முத்தி மார்க்கம்‌ ஒழுங்காயிற்று, நரகு பாழாயிற்‌று என்பதாம்‌. செந்தமிழ் மொழியில்‌ மாறுபட்டுக் கிடந்த துறைகள்‌ பலவும்‌, சடகோபர்‌ திருவாய் மொழியை ஒழுங்கு படுத்தப்‌ பாடி யருளினது நோக்கி அவ் வழியே திருத்தப் பெற்றதனால்‌ செப்பம்‌ பிறந்ததென்றார்‌-வழுவா நரகம்‌.-.தீவினை செய்தாரைத் தப்பாமல்‌ விழுங்கும் நரகம் , அத் திருவாய்மொழியைப்‌ பாராயணஞ்செய்வோரும்‌ அப்படிச் செய்வோர் அருகலிருப்போரும்‌ கேட்போரும்‌ முத்தியையே – அடைதலால்‌ நரகக் குழி பாழ்பட்ட தென்றார்‌.-மொழி யென்பதற்குப்‌ பதமென்ற பொருள்‌ கொண்டு கட படாதி சப்தங்கள்‌. அவ்‌வப் பொருள்களையே யுணர்த்தின வாதலால்‌ மொழி பலவாயின தென்றும்‌ திருவாய் மொழியிலுள்ள எல்‌லாப்‌ பதங்களும்‌ அவ்‌வப் பொருள்களின் நினைவில்‌ நில்லாது எம்பெருமான்‌ வரையிற்‌ சென்றுணர்த்தினமையால்‌ செப்பம்‌ பிறந்தது என்றும் கூறினுமமையும்‌-இவ் வாழ்வாரவதரித்ததன்‌ பின்‌ பலலா யிருந்தன சுழிகளே யன்‌றிப்‌ பிறவில்லை யென்பார்‌ பொருநைச் சுழி பலவாயொழுகுமென்றார்‌. செப்பம்‌-பண்புப் பெயர்‌, ஆய-வினைப் பெயர்‌-

————–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே
. 6-

பல காலும்‌ : பல தரமும்‌,
தம்மில்‌ -தமக்குள்‌,
மூன்று ஆயினவும்‌ – மூன்‌று பகுதியாகி அமைந்தவற்றையும்‌,
நினைந்த—
ஆரணத்‌தின்‌ – வேதத்தினைப் போல, மும்மை – மூன்று கூறுபாடாகிய,
தமிழை -தமிழினில் ஆகிய பாடல்களை, ஈன்றான்‌ – அருளிச் செய்தவரும்‌,
குருகை -குருகூரிலவதரித்த,
பிரான்‌ – பெரியவரும்‌,
எம்பிரான்‌ – எம் தலைவருமாகிய நம்மாழ்வாருடைய,
இசை கவி இவை -பண்ணோடு பாட வல்ல இப்‌ பாடல்கள்‌,
தோன்றா- பலராலும்‌ ௮றியப் படாத உபநிடதம் பொருள்‌-உபநிஷதத்தின்‌ கருத்‌துக்களை,
தோன்‌றல்‌ உற்றார்‌ தமக்கும்‌ – அறியப்‌ பெற்ற பெரியோர்களுக்கும்‌,
சான்று ஆம்‌ – சாட்சியாகி விளங்கும்‌,
என்‌ற போது – என்று சொல்லிய காலத்தில்‌,
மற்று – வேறாகிய (சிறப்பு),
என்‌ -யாது வேண்டும்‌-

ஜீவ ஈஸ்வர ஜகத்தென்று மூன்‌று கூறுபடுத்‌திக் காட்டி யிருப்பதைத் தம்முள்‌ ஆராய்ந்து அதற்குத் தகும் படியாகக் குருகூர்‌ நம்மாழ்வாரால் பாடி யருளிய இப் பாடல்கள்‌ உப நிஷதத்தின்‌ கருத்தை அறிகிற பெரியோர்களுக்கு இடையில்‌ சந்தேகம் நேருமிடத்து இது சாட்சியாயிருக்து-அந்தச்‌ சந்தேகங்களை ஒழிக்குமானால்‌ இதன்‌ சிறப்பினை வேறு என்ன சொல்லுவதென்பதாம்‌. ௮ரிய தத்வ ஞானத்தைப்‌ பெறத் தக்க புண்‌ணிய முடையார்க்கன்‌றிப்‌ பிறர்க்கு வெளிப் படாமையால்‌ தோன்றா வுபநிடசப் பொருளென்றார்‌. தோன்‌றலுற்றார்‌-இங்கு மதுர கவியாரும்‌, நாத முனிகளுமாம்‌; எப்படி யெனில்‌? ஆழ்வாரைக்‌ கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் அருளிச் செய்து வெளிட்டு அருளியவர் மதுரகவி. பிற் பட்டு நாத முனிகள்‌ உண்டாகி இக் கண்ணி நுண்‌ சிறுத் தாம்பு என்ற ப்ரபந்தத்தைப் பலதரம்‌-12000-தடவை ஒதினமையால்‌ முன்பு ஆழ்வார்கள் அருளிச் செய்த அனைத்து பிரபந்தங்களும் ஆழ்வாரது அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம் அருளிச் செய்ய நாத முனிகளின்‌ மனத்தில்‌ தோன்‌ற- இவர்‌ தம் மனத்தில்‌. ‘தோன்றிய படியே அவற்றைத் ஏடுபடுத்தி ஆழ்வார்‌ பெயர்களுடன் வெளியிட்டு அருளினார் -முத் தமிழ்‌-இயற் றமிழ்‌, இசைத் தமிழ்‌, நாடகத் தமிழ்‌ ; இயற்றமிழ்‌ – இலக்கண அமைதியை
யுடைய தமிழ்‌, -இசைத் தமிழ்‌- இராக: அமைதியை யுடைய தமிழ்‌, நாடகத்‌ தமிழ்‌ வெளிப்படை, எம்பிரான்றன்‌, தன்‌-சாரியை,

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே.
7-

கவி- பாடலாகிய,
பா- பரவிய,
௮முதம்‌ – உணவினை,
இசையின்‌ – இராகமாகிய,
கறியொடு- கறி முதலான விஞ்சனத்துடனே,
சண்ணன்‌ – கண்ணபிரான்‌,
உண்ண – உட்கொண்டருளும்படி,
குவிப்‌பான்‌ – சமைத்துச் குவிப்பவரும்‌, குருகை – குருகூரில்‌ அவதரித்த,
பிரான்‌ – பெரியோரும்‌,
சடகோபன்‌ – சடமென்னும் வாயுவை முனிந்து போக்கினவரும்‌,
குமிகொண்கன்‌ -குமரி நாட்டுக்குத் தலைவரும்‌,
புவி -பூமியிலுள்ள,
பாவலர்தம்‌ – வித்துவான்‌களுக்கு,
பிரான்‌ – தலைவருமாகிய நம்மாழ்வார் பாடிய, திருவாய்மொழி– ,
பூ சுரர் தம்‌-நிலத் தேவர்களாகிய பிராமணர்‌ களுடைய,
செவிப்பால்‌ – காதுகளின்‌ வழிகளிலே, நுழைந்து புக்கு-நுழைந்து புகுந்து, உள்ளத்து உள்ளே – மனத்‌தினிடத்திலே, நின்‌று – நிலை பெற்று நின்று,
தித்திக்கும்‌- இனிய சுவையை உண்டாக்கும்‌-

ஆழ்வார்‌, பாடலாகிய சோற்றினையும்‌ இசையாகிய கறி முதலியவற்‌றையும்‌ கண்ண பிரான்‌ உண்ணும்படி சமைத்துக் குவித்த திருவாய் மொழி யென்னுமுணர்வு ௮ந்தணர்‌ செவியின்‌ வழியே நுழைந்து தித்திக்கும் என்பதாம்‌. இப் பாடல் முழுவதம்‌ உருவகப் படுத்தினமையால்‌ முற்றுருவகம்‌. சிவ சச்தியாகிய குமரி யென்னும் தேவியைப்‌ பரசுராமன்‌ ஸ்தாபித்‌திப் பூஜித்தமை பற்றி இந்த இடத்திற்குக் கன்னியா குமரி யென்றும்‌ இது சூழ்ந்த நாட்டிற்குக்‌ குமரி நாடென்றும்‌ பெயராயிற்று-ஆழ்வார் பாடல்‌களையே புலவர்கள்‌ மேற் கோளாகக் கொள்கின்‌றமையால்‌ பாவலர்‌ தம்‌ பிரானென்றார்‌. புளியங்காடி யுண்பவருக்கு ௮முதம் கிடைத்தால் போல வேதாந்த நூலில் கிடந்து மனத்தை வருத்தும்‌ பூசுரரிதனை நோக்கி மகிழ்ந்து ஏற்றலின்‌ ௮வருள்ளத்‌துள்ளே தித்திக்குமென்றார்‌. அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமுமென்‌று இடையர்கள்‌ கண்ணன் உண்ணக் குவித்தாரேனும்‌ ௮ச்சோறு கண்ணனுக்கே யுரியதாயிற்று, இஃது. அது போலன்றிப்‌ பூசுரரும்‌ சுவைத்து மகிழ்வதாயிற்று-

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்திரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணைப் பள்ளியான் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றிச் சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –

—————

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
8-

குருகை – குருகூரிலவதரித்த,
பிரான்‌ – சடகோபர்‌,
சொன்ன——, ஆயிரம்‌- திருவாய் மொழி ஆயிரம் பாடல்களும்‌,
தித்‌திக்கும்‌’- இனிமை செய்கின்‌ற
மூலம்‌ -(சாவாமைக்குக் ) காரணமாயிருக்கின்ற,
‘தெளி அமுதே – தெளிந்த ௮மிர்தமே யாம்‌; (அன்றியும்‌), தெய்‌வம்‌ உண்டு என்பார்‌ – தெய்வங்கள் இருக்கின்‌றன என்று சொல்லுவர்‌களுடைய,
பத்‌திக்கு மூலம்‌ – பக்திக்கும்‌ இதுவே காரணமாகும்‌
பனுவற்க்கும் – வரவாற்‌று முறையில் பாடுகின்ற நூல்களுக்கும்‌, மூலம்‌—-;
பவம்‌-பிறவியை,
அறுப்பார்‌ – போக்கத் துணிந்தவர்கள்‌, முத்திக்கும்‌ – முக்தி யடைவதற்கும்‌–மூலம்‌ முளரி கை – தாமரை மலர் போன்ற கைகளும்
வாள்‌ நகை -ஒளி பொருந்திய பற்களுமுள்ள,
மொய் குழலார்‌ -நெருங்கிய கூந்தலை யுடைய மாதர்களிடத்தாசையை, அத்திக்கும்‌-போக்‌குகைக்கும்‌, மூலம்‌ —;

அமிர்தின் மேற்பட்ட சிறந்த பொருளில்லை யாதலின்‌ அமுதத்தை உவமித்தார்‌. அன்றி ௮மிர்தமோ இதற்கு ஒப்பாவது என்று ஏகாரத்தை எதிர்மறை யாக்கி யுமுரைக்கலாம்‌. ௮ங்ஙனம்‌ ஆக்கவே தேவாமிர்தமானதை பத்திக்கும்‌ பனுவலுக்கும் மூலமாகாது. உடம்பைக் காத்‌து நிற்றலால்‌ முத்திக்கும் மூலமாகாது. ௮ரம்பையரைச் சேரச் செய்தலால்‌ மொய்‌
குழலார்‌ அத்திக்கு மூலமாகாது – அன்றியும்‌ பவம்றுப்பார்ச்கு அழியா முத்தியைக் கொடுக்கின்ற இத் திருவாய் மொழி போல அமிர்தம்‌ அழியா வின்பத்தைத் தர மாட்டாது அமிருதமுண்டவரும்‌ சிற் சில நாளில்‌ இறப்பதுண்டு -எல்லை மூவைந்து நாள்கள் உள வென விமைக்கும் கண்ணு, நல்லெழின்‌ மாலை வாடு நஞ்சுடை யமிர்துண்‌டாரில்‌, பல் பகற்‌
றுய்த்த வின்பம்‌ பழுதெனக்‌ கவல்ப கண்டாய்‌ ” என்பதனாலுமறிக-திருவாய் மொழி ஆயிரத்து நூற்றிரண்டு செய்யுட்களை ஆயிரமென்றது பெரும் பான்மை பற்றியே யாம்‌, அன்றியும்‌ நூறு பதிகத்திலுமுள்ள நூறு கடைக் காப்புச் செய்யுட்களைக் கழிக்க – ஆயிரத்திரண்டேயாமென்௧.

————

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே.
9-

தண்‌ – குளிர்ச்சியான,
அம்‌ – நீர் வளமுடைய,
குருகூர்‌ சேய்‌ – குருகூர்ப் பதியிலே குழந்தை வடிவாக அவதரித்தவரும்‌,
மா -சிறந்த,
இரு மரபும்‌ – (தாய் வழி தந்தை வழியாகிய) இரண்டு வழியும்‌,
செவ்‌வியான்‌ – சிறந்‌த மரபினருமாகிய சடகோபர்‌, செய்த—,
செய்யுட்கள்‌-பாடல்களானவை ,
ஆயிரம் மா மறைச்கும்‌ – சிறந்த ஆயிரமென்‌ற பகுதியுள்ள சாம சாகைகளுக்கெல்லாம்‌,
அலங்காரம்‌ – அழகு செய்வனவாகும்‌ ;
௮ரும்‌ தமிழ்க்கு – அரிய தமிழ்ச்கு,
பாயிரம்‌ – வரலாற்று முறையாகும்‌ ;
நாற் கவிக்கு- நான்கு வகைப் பட்ட கவிகளுக்கு,
படி சந்தம்‌ – ஒப்புக் காண்‌பதற்குரியனவாம்‌
பனுவற்கு எல்லாம்‌-எல்லா வகைப்பட்ட நூல்களுக்‌கும்‌ –
தாய்‌ -தன்னுட் கொண்டு தரும் தாய் போல்வனவுமாம்‌;
இரு நால்‌ திசைக்கும்‌ – எட்டுத் திக்குக்கும்‌,
தனி – ஒப்பற்று விளங்குகிற,
தீபம்‌ – விளக்குமாகும்‌;

குருகூராழ்வாரருளிய பாடல்கள்‌ சாம வேதத்துக்கு அழகு செய்‌வனவாம்‌.-தமிழுக்கு ௮ணிந்து கொண்டு அதற்குரிய பாயிரமாகும்‌ ; கவிகளுக்குப் படிச் சந்தமாம்‌; பனுவலுக்குத் தாயாகும்‌ ;எட்டுத் திக்குக்குக்‌ தீபமாகுமென்பதாம்‌. ஒரு பெண்ணுச்கு அவளைக் காமுகர்‌ விரும்புமாறு அணிகளால்‌ ௮ணியப் படுவன போல பொருள்‌ மறைந்து கிடந்த வேதங்களின் பொருள்களை மேற்கொண்டு யாவரும் விரும்பும்படி அழகு செய்தலால் மறைக்கு ௮லங்காரமென்றார்‌. சிவ பெருமான்‌ முருகக் கடவுள்‌ நிதியின்‌ கிழவன்‌ இந்திரன்‌ முதலாகிய தேவர்களும்‌, வான்மீகியார்‌ கெளதமர்‌ மார்க்கண்டேயனார்‌ ௮கத்தியனார்‌ முதலாகிய முனிவர்களும்‌ ஆராய்ந்த ௮ருமை தோன்ற அரும் தமிழென்றார் – நாற்கவி- ஆசு, மதுரம்‌, சித்திரம்‌, விஸ்தாரம்‌ என்பன-ஒருவன்‌ பாடுக வென்றவுடன்‌ பாடுதல்‌ ஆசு கவியாகும்‌; இனிய சுவைகள்‌ ஒன்பதும் தோன்‌றப் பாடுதல்‌ மதுர கவியாகும்‌.
மாலை மாற்று -சக்கரம் சுழி குளம்‌, ஏக பாத மெழுகூற்‌று இருக்கை நாதை கரப்பே கரந்துறை பாட்டே, தூசுங்‌ கொளவே வாவன்‌ ஞாற்று நாக பந்தம்‌’” முதலாகிய மிறைக் கவிகளைப் பாடுதல்‌ சித்திர கவியாகும்‌.-ஒரு பொருளை மேற் கொண்டு பலவகை வர்ணனைகளையும்‌ அமைத்து விரிவாகப் பாடுதல்‌ விஸ்த்தார கவியாகும்‌. பாயிரம்‌ — தமிழிலின்ன பொருள்கள் உளவென்று திருவாய் மொழியில் காட்டிதாம்‌, தமிழில்‌ இவ் வண்ணம்‌ பாட வேண்டுமென்ற கட்டளைக்கு உதாரணமாகப் பெரியோர் கொள்ள வைத்தலால்‌ படிச் சந்தமென்றார்‌. பனுவல்‌, பலவகைய ; ௮வை ;–அறநூல்‌, பொருள் நூல்‌, காமநூல்‌, வீட்டுநூல்‌ என்பன. இந் நான்கும்‌ திருவாய் மொழியில் பரக்கக் காணலாமாதலால்‌ தாயென்றார்‌, உபய
குலோத்தமரென்றதன் கருத்தாக இரு மா மராபுஞ் செவ்வியானென்றார்‌

குறு முனிவன் முத்தமிழும் -என் குறளும் -நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் –திருவள்ளுவர்

ஐம் பொருளும் நால் பொருளும் முப்பாலில் பெய்து அமைத்த செம்பொருளைத்
தண் குருகூர்ச் சேய் மொழியது என்பர் சிலர் யான் இவ்வுலகில்
தாய் மொழியது என்பேன் தகைந்து
–ஒவ்வையார்

சேய் மொழியோ தாய் மொழியோ செப்பில் இரண்டும் ஓன்று
அவ் வாய் மொழியை யாரும் மறை என்ப
வாய் மொழி போல் ஆய் மொழிகள் சால உள எனினும்
அம் மொழியின் சாய் மொழி என்பேன் யான் தகைந்து
–இடைக்காதர்

————–

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே
. 10-

அருவி – அருவி நீர்கள்‌,
செய்‌ – வயல்களில்‌,
ஓடு – ஓடிப் பாய்கின்ற,
குருகை பிரான்‌ – குருகூரில் வந்த பெரியோரான பராங்குசனை
திருமாலை – சிறந்த மாயோனை,
நங்கள்‌ – நம்முடைய,
கை – கையிலுள்ள,
ஓர்‌ கனி என – ஒரு பழமென்னும்படியாக , காட்டித் தந்தான் -குறித்துக் காட்டிக் கொடுத்தருளினார்‌ (அதனை அறிந்தும்‌), அவன் -௮ந்‌தப் பராங்குசருடைய,
கழற்கே – திருவடிகளிலே,
கமலம்‌ – தாமரை மலர்களை,
பெய்யோம்‌ – பூஜித்து அறியோம்‌
அவன்‌ புகழ்‌ – அவரது கீர்த்தியை
ஏத்தி – துதித்து,
பிதற்றி – பல காலும் சொலலி,
பித்தாய்‌ – பிறர்‌ நம்மை நோக்கிப் பைத்தியரென்று சொல்லும்படியாக, திரியோம்‌-திரிந்து அலைந்திலோம்‌; (அவன்‌) உபகாரத்தின்‌ – அவர்‌ நமக்குச் செய்‌த நன்றியின்‌,
ஆற்றலை – பெருமையை,
என்று அறிதும்‌ – எப்போது அறியப் போகிறோம்‌?
ஐயோ -ஐய ஓ ! என்னே!

திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌ திருமாலைக் காட்டிக் கொடுத்தருளினார்‌; அப்படிப்பட்ட மகோபகாரிக்கு ஒருவிதத்‌ தொண்டும் செய்தறியோம்‌; அவருபகாரத்தின்‌ பெருமையை எப்பொழுது தானறியப் போகிறோமென்பதாம்‌ “கைத்தலத் தாமலகமெனக் கண்டு கொள்‌’”? என்றபடியே நமக்குக் காட்டிக் கொடுத்தும்‌ ‘“வாணார்‌ நுதலார்‌ வலைப்பட்‌ டடியேன்‌ பலவின்‌ கனி யீந்‌தது போல வதன் முன்‌ -என்றும் இன்கனி சுவருமந்தி கடுவனோடிரிய வோட்டி, நன் கனி சிலது உண்ண ’ என்கின்றபடியே அறிவின்மையால்‌’ எம்பெருமான்‌. நமக்குச் செய்யும்‌ பேரருளை யிகழ்ந்து பிறரனுபவிக்கப்‌ பார்த்துக்‌ ‘கைப்பழ மிழந்த மந்தி போல
ஏக்கற்று இருக்கிறோமென்று வெறுத்து ஐயோ வென்று இரங்கிக் கூறினார்‌.
அருவி நீர்‌ வயலில்‌ சென்று பாய்தல் போல்‌’ ஆழ்கார் கருணை அவரைத் துதிப்பவருள்ளத்தில் சென்று பரவுமென்பது தொகை மொழியின்‌ கருத்து –
மற்றும்‌ அருவி நீர்‌ வயல்களை விளையச் செய்வது போல்‌ ஆழ்வார்‌ மாயோனைக் காட்டிப்‌ பக்தியை விளையச் செய்தாரெனினும்‌ பொருந்தும்‌-குருகை – மரூவு . கழற்கு – உருபு மயக்கம்‌.-பெய்யோம்‌, திரியோம்‌-தன்மைப் பன்மை எதிர்மறை வினை முற்று, அறிதும்‌ – தன்மைப்‌ பன்மை எதிர்கால வினை முற்று,

———

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே
. 11-

ஆற்றில்‌ – பொருநை யாற்றில்‌,
பொதிந்த – தங்கி யுள்ள,
மணலின்‌ தொகை -மணவினளவை யொத்த,
மா – சிறந்த,
அரும்‌ மறைகள்‌ வேற்றில்‌ – பலவகைப் பட்ட அரிய வேதங்களில்‌,
பொதிந்த – மறைந்து கிடக் கின்ற,
பொருள்கள்‌ எல்லாம்‌ -எல்லாப் பொருள்களும்‌,
விழும்‌ – (யாவரும்‌) விரும்பத் தக்க ,
மா கமலம்‌ – சிறந்த தாமரைகள்‌,
சேற்றில்‌… பொதி அவிழ்க்கும்‌ – கட்டவிழ்த்து மலரப் பெற்ற,
குருகூரர்‌-குருகூர்ப் பதியிலுள்ள பராங்குசர்‌ செய்தருளிய,
செம்‌ சொல்‌ பதிகம்‌ நூற்றில்‌ – செந் தமிழ்ச் சொற்களாற் செய்த நூறு பதிகங்களிலும்‌, பொதிந்த – நிறைந்துள்ள,
பொருள்‌-பொருள்களில்‌,
ஒரு கூறும்‌-(நூற்றில்‌) ஒரு பகுதி யளவும்‌, நுலல்கில – சொல்லினவில்லை;

பலவாகிய வேதங்களெல்லாம்‌ ஆழ்வார்‌ திருவாய்‌ மொழியிற் கூறியவற்றில் நூறிலொருபங்‌களவும் கூடக்‌ கூறின வில்லை யென்பதாம்‌-அனந்தாவை வேதா: என்றதனால்‌ ஆற்றின்‌ மணலின்‌ தொகை மறைகளென்றார்‌-மிகுதியை விளக்க வேண்டி இப்படியே–நன்னீர்ப்‌ பக்றுளி மணலினும்‌ மலவே’? ”மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்கரிட்ட மணலினும்‌ பலவே’” என்பன முதலாகப்‌ பிற சான்றோர்களும் கூறுதல்‌ காண்க. வேறு ஆவன:–இருக்கு, தைத்திரியம்‌, பெளடிகம்‌, தலவகாரம்‌, ௭சு , சாமம்‌, அதர்வணம்‌ என்பன,-திருமாலும் யீசனும்‌ பின் சென்றும் தூது செலத் துணிந்தும் வளர்த்த தமிழால் புனர்தமையால்‌ செஞ்சொலென்றார்‌. பத்துப் பாடலென்கின்ற நியமனத்தைக் கொண்டமையால்‌ பதிகம் என்றார் -நூற்றில்‌ என்பதனை ஒரு கூறு என் பதனோடும் கூட்‌டிப்‌ பொருள் கொள்ளுதல்‌ சிறப்பு- மாக் கமலம்‌ சேற்றில் பொதியவிழ்க்‌குமெனவே சேற்றில்‌ தாமரை மலர்‌தல் போல தகுதியில்லாத உயிர்‌கள்‌ உலக மயக்கத்‌தில் பட்டு வருந்துவதை யறிந்த ஆழ்வார்‌ மிகுந்த கருணையோடு அவர்களுக்கு அருளிச் செய்வாரென்பதாம்‌

——–

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே.
12-

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி- பாங்கற் கூட்டம்‌,
துறை–அஃது, இவ்விடத்‌து இவ்வியல் தென்றல்

பல – பற்பலவாகிய,
வேதமும்‌ – வேதத்தின்‌ ௧ருத்தை யெல்‌லாம்‌,
செம்‌ தமிழ்‌ சொற்களால்‌ – செவ்விய தமிழ்ச் சொற்களிளாலே,
மொழிந்தான்‌ – பாடி யருளிய பராங்குசர் அவதரித்த,
குருகூர்‌-குருகூர்ப் பதியிலே, (நண்பனே!), பதுமத்து – ஒரு தாமரை மலரிலே,
இதழ்‌-சில இதழ்கள்‌,
இலவே – நிறத்தில்‌ முள்ளிலவ மலரேயாம்‌; உள்‌ – அவ்விதழ்‌களுக்குள்ளே,
முல்லை – முல்லை யரும்புகளும்‌,
உளவே- சில உள்ளனவாம்‌;
௨ள் – அவைகளிலிருந்து ,
இயம்பும்‌ – சொல்லப்படுகின்‌ற,
மொழியும்‌ – வார்த்தைகளும்‌,
சிலவே – சிலவுண்டாம்‌;
அவை – அவ் வார்த்தைகள் தாம்‌,
செழும் தேன்‌ – செழுமையான தேனை, ஓக்கும்‌ – நிகர்க்கும்‌;
(இன்னும்‌ அத் தாமரை மலரிலே), இரண்டு சலம்‌ வேல்களும்‌ – கோபம் செய்வனவாகிய இரண்டு வேலாயுதங்களும்‌,
உளவே-உள்ளனவேயாம்‌;
௮து – ௮ம் மலரையுடைய வடிவம் தான்‌, என்‌ – எனது,
தனி – ஒப்பற்ற,
உயிரே – உயிரே யாகும்‌;
காண்‌ – நீ சென்று அதனைப் பார்‌;

நண்பனே! யான்‌ கருதிய தலைவியினிடம்‌ ஆழ்வார்‌ குருகூர்‌; அவளியல்பு இலவ மலர் போன்ற இதழும்‌ முல்லை யரும்பொத்த பற்களும்‌ தேனொத்த சொற்களும்‌ தாமரை மலர்போன்ற முகமும்‌ வேல் போன்ற கண்களுமாம்‌; ௮ந்தப் பெண்‌ என்னுயிரே யாவளென்பதாம்‌. அவள்‌ எவ்‌விடத்தில் இருக்கிறாள் என்றதற்கு இடம்‌ குருகூரென்றான்‌–இயல் எவ்‌வண்ணமென்பதற்கு இதழ் -இலவென்றான்‌. மொழி பெறாது வருந்‌திய தலைவன்‌ அவள்‌ வறிது நகைத்தலை இயற்கைப்‌ புணர்ச்சியிற்‌ கண்‌டனனாதலின்‌ இதழுள்‌ முல்லை யுளவென்றான்‌. அவள்‌ வழிபாடு மறுத்த பொழுது சில சொற் கூறி யதனைக் கேட்டவனாதலின்‌ சிலவே சொல் என்றான்‌. பிற்பாடு அச் சொல்லைப்‌ பெறாமையால்‌ சில வென்றான் எனினுமாம்‌. அருமையைச்‌ செய்தலால்‌ தேனொக்குமென்றான்‌. தன்‌
மனத்தை ௮வள்‌ வசப்படுத்தலால்‌ முகத்தைத் தாமரை மலர் என்றான் –
அவள்‌ விழிகள்‌ தன் மேற் பாய்ந்து துன்பஞ்செய்தலால்‌ சல வேல்களென்‌றான்‌. ௮வள்‌ இன்றியமையாமையின்‌ என்‌ உயிரென்றான்‌. கைகோள்‌-களவு, கூற்று – தலைவன் கூற்று, கேட்போர்‌ – பாங்கன்‌-இடம்‌-முன்னிலை–காலம்‌ – இறந்த காலம்‌, மெய்ப்பாடு – உவகை , பயன் -பாங்கற்குணர்த்தல்‌. இலவு, முல்லை – மலர்களுக்கு முதலாகு பெயர்‌கள்‌, இயம்பும்‌ மொழியும்‌ – விரித்தல் விகாரம்‌, உள-முதல்‌ விளக்காக இரண்டிடத்தும்‌ கூட்டப்பட்டது.

ஆழ்வாருடைய திரு முக மண்டல திவ்ய ஸுந்தர்யத்தையும் கூரிய ஞான விகாஸத்தையும்
திருவாய் மலரின் செவ்வியையும் அதன் அகத்தே விளங்கும் ஸூத்தமான தந்த பங்க்தியையும் தீம் சொற்களையும் கண்டு ஈடுபட்ட பாகவதர் உசாவியா அன்பர்களுக்கு எடுத்துக் கூறுவதே இதுக்கு ஸ்வா பதேசம் –

———-

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே
. 13

உருக்கும்‌ நெய்யொடு – உருக்குவதற்குரிய வெண்ணெயுடனே,
தயிர்‌- தயிரையும்‌,
திருடி திருடி-ஆயர்பாடியில்‌ எல்லா வீடு களிலும் சென்று திருடி,
உண்டான்‌ – விழுங்கிய கண்ண பிரானது, அடி -திருவடியைசத் தொழுபவராகிய, சடகோபன்‌ – சடகோபனென்னும்‌ பெயருடையவரும்‌,
சந்தோடு – சந்தன மரங்களுடனே,
அயிர்‌ – நுண் மணலையும்‌ கொணர்ந்து, உருக்கும்‌ – கரை யோரங்களில்‌ ஒதுக்கித் தள்ளுகின்ற,
பொருநல்‌ – பொருநை யென்னும் தாமிரபர்ணி நதியை யுடைய,
குருகூர்‌ – குருகூர்ப் பதியிலவதரித்தருளிய,
எந்தை – எந்தந்தை போல்‌வராகிய பராங்குசரது ,
அம் தமிழ்‌ – அழகிய தமிழ்ப் பாடல்கள்‌,. (படிக்‌கும் பொழுது ), உயிர்‌ உருக்கும்‌ – நம்‌ உயிரை உருகச் செய்யும்‌ ;
புக்கு -உள்ளே புகுந்து ,
உணர்வு – அறிவை, உருக்கும்‌:
உடலத்தில்‌ உள்ள – நம் சரீத்திலமைந்துள்ள,
செயிர்‌ – குற்றமே,
உரூ கொண்ட -வடிவமாகக்‌ கொண்டிருக்கிற,
நம்‌ தீங்கு உருக்கும்‌ – நம்முடைய தீ வினைகளெல்லாம்‌ போக்கும்‌;

குருகூர்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியானது உயிரையும் உணர்வையும்‌ செயிரைக் கொண்ட தீங்கையும்‌ போக்குமென்பதாம்‌.படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்‌ உயிரையும்‌ உணர்வையும் தன்‌ வசப் படுத்திக் கொள்ளுதலால்‌ உயிரும் உணர்வும் உருக்கும் என்றார்‌-தீங்கு -காமக் குரோத லோபாதிகள்‌; இவை வேண்டிய அளவு துன்புறுத்தி இம்மைக்குப் பழியும்‌ மறுமைக்கு நரகும் தருதலால்‌ செயிருருக்‌ கொண்ட தீங்கு என்றார்‌. கண்ண பிரான்‌ ஆயர் பாடியில்‌ வீதிகள் தோறும் புகுந்து தயிரையும்‌ வெண்ணெயையும்‌ திருடி யுண்டமை வெளிப் படை- மற்றைய மொழிகள்‌ போலாகாமல்‌ தனக்கு அரசு வீற்றிருத்தற்கு நாடுடைமையும்‌ இலக்கண வரம்புடைமையும்‌ நோக்கி ௮ந்தமிழ் என்றார்‌. பொருநை யெனினும்‌ பொருநலெனினும்‌ பொருந்தும்‌, உடலத்து, ௮த்து – சாரியை-

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே
. 14

ஆர்‌ – சுவை நிரம்பிய,
தமிழ் கவியின்‌ – தமிழ்ப் பாடல்கள்‌போல,
பந்தம்‌- க்ரமமாக,
விழா – உத்சவங்கள்‌,
ஒழுகும்‌ – நடந்தேறி வருகின்ற,
குருகூர் – குருகூர்ப் பதிபில்‌,
வந்த – அவதரித்த,
பண்ணவன்‌ – சிறந்தவரான சடகோபர்‌,
௮ந்தம்‌ இலா – முடிவில்லாத,
மறை ஆயிரத்து – ஸாம வேத சாசை ஆயிரத்திலும்‌,
ஆழ்ந்த – மறைந்து இருக்கிற
அரும் பொருளை – அருமையாகிய விஷயத்தை,
செம்தமிழாக – செவ்விய தமிழ்ப் பாடலாக , திருத்திலனேல்‌-திருத்தமமையப் பாடி யருளா விட்‌டால்‌,
நிலம்தேவர்களும்‌ – பூசுரராகிய பிராமணர்களும்‌,
தம் தம்‌ – அவரவர்கள்‌ கொண்டாடப் படுகிற,
விழாவும்‌ – உற்சவங்கழும்‌,
அழகும்‌ -அவர்களுள்‌ அமைதியும்‌,
என்னாம்‌ – எத் தன்மையவாய்‌ முடியும்‌?

குருகூராழ்வார்‌ வேதத்தைத் திருவாய் மொழியாக வெளிப் படுத்தா விட்டால்‌ பிராமணர்களும்‌, அவர்கள்‌ வேள்வி முதலிய விழாக்களும்‌ ௮ழகும்‌ என்ன பயன்படுமென்பதாம்‌. ‘“பரத்துவாஜோ அத்திரி? என்ற வாக்யத்தின் படி பரத்துவாச முனிக்கு இந்திரன்‌ வேதமாகிய நான்கு மலைகளைச் காட்டி ௮வற்றில்‌ ஒவ்வொரு பிடி யெடுத்துக்‌ கொடுத்தவையே வேதமாக வழங்கப் படுவன என்றிருத்தலால்‌ ௮ந்தமிலா மறை என்றார்‌.
ஆழ்ந்த அரும் பொருளாவது -நாராயணனுக்கே பரத்வம் கூறுதல்‌.இம் மொழியின்‌ சுவை யேற்றம்‌ நோக்கிச்‌ செந் தமிழ் என்றார்‌. ஆகாயத்தில்‌ தேவர்களைப் போலப்‌ பூமியில்‌ பெரும் சிறப்புஉடைமையால்‌ அந்தணர் நிலத் தேவர் என்ற பெயர் பெற்றார்‌ ; பூசுரர் என்பதன்‌ பொருளும் இதுவே. சுவை நிரம்பிய தமிழ்க் கவிகள்‌ படிக்கப் படிக்க இன்பம் தருதலால்‌ பார்க்கும் தோறும் மகிழ்ச்சி தருகின்ற விழாவினுக்கு உவமித்தார்‌. (இதனால்‌ ஆசிரியர்க்‌குள்ள இம் மொழியிடத்தன்பு விளங்குவதாயிர்று.) வைஷ்ணவ மதத்தை நிலை நிறுத்தியவராதலால் பண்ணவனென்றார்‌ – பண்ணவன்‌ – குரு. நிலத் தேவர்ர்களென்னுமுயர்‌ திணையோடு விழாவும்‌ அழகுமென்னும்‌ அஃறிணையைக் கூட்டி மிகுதி பற்றி அஃறிணை முடிபாற் கூறினர்‌- ,

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது–
ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -71-

அறியக் கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

———–

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே
. 15-

இயலோடு – இயல் தமிழோடு,
இசையின்‌ – இசைத் தமிழுமாகிய,
வண்ணம்‌ – அழகிய,
படைக்கு – சேனைக்கு,
தனி – ஒப்பற்ற,
தலை வேந்தன் – தலைமை வாய்ந்த அரசரும்‌,
மலர்‌ உகுத்த – பூக்களிலிருந்து உதிர்க்கப்பட்ட,
சுண்ணம்‌ – மகரந்தங்கள்‌,
படர்‌ – பரவிய,
படப்பை – நீர் நாட்டூராகிய,
குருகூர்‌ வந்த – குருகூரில் அவதரித்த, சொல்‌ கடல்‌ : தமிழ் சொற் கடல்‌ போல்பவருமாகிய பராங்குசர்‌,
மறை-வேதங்கள்‌,
பண்ணப் படுவனவும்‌ – இனிப் புதியனவாகச்‌ செய்யப் படுபவைகளும்‌,
உளவோ என்று -இருக்கின்‌றனவோ வென்று,
பல்லோர்‌ – பல வகைப் பட்டவர்களும் , வண்ணம்‌ பட – தங்கள்‌ மனத்தில்‌ நினைக்கும்படியாக,
சொல்‌ – சொற்கள்‌,
திகழ – விளங்குமாறு,
செய்தான்‌ – பாடி யருளினார் –

குருகூரிலவதரித்த சொற் கடலாகிய நம்மாழ்வார்‌ வேதங்களில் இனிச்‌
செய்யப் படுவனவும்‌ முளவோ வென்று கூறும்படி திருவாய்‌ மொழியைப்‌ பாடி யருளினாரென்பதாம்‌. வேதத்திற்‌ கூறப் படும்‌ பொருள்‌ நிலைமையினும்‌ மேலான பொருளை வெளிப் படுத்தலால்‌ பண்ணப்படுவனவும்‌ உளவோ மறை யென்றார்‌ -இதனை “மிக்க விறை நிலையும் மெய்யா முயிர்‌ நிலையும் , தக்க நெறியு்‌ம் தடையாகித் தொக்கியலு மூழ் வினையும்‌ வாழ் வினையுமோதுங்‌ குருகையர் கோன்‌, யாழினிசை வேதத்‌தியல்‌’” என்பதானாலும் அறிக- கடல்‌ – உவமை யாகு பெயர்‌,

எங்களைப் பணி கொள் என்று அன்றோ தமிழ் சொற்கள் ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்யப் பாரித்தன-சொல் இகழச் செய்தான் -பகவத் விஷயங்களை அருளிச் செய்து
விஷயாந்தரங்களை இகழப் பண்ணி அருளினான் –என்றும் உரைப்பார்-

—————-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே.
16-

களித்தார்‌ – கட்குடியராகிய அசுரர்களுடைய,
குடலை கலக்கும்‌ – குடல்களெல்லாம் கலங்கச் செய்கின்ற,
குளிர் சங்கினான்‌ -குளிர்ச்சி பொருந்திய சங்கத்தை யுடைய மாயோனானவன்‌, கடலைச் கலக்கி – சமுத்திரத்தைக் கடைந்து,
அமுது – அதிலுண்டாகிய அமிருதத்தை , ௮மரர்க்கு – தேவர்களுக்கு,
அளித்தான்‌ – கொடுத்தருளினான்‌ ; (அப்படிப்‌ போல) நடலை- வஞ்சனையாகிய,
பிறப்பு அறுத்து – பிறவியைப் போக்கி ,
என்னையும்‌—, ஆட் கொண்ட -அடிமையாகச் கொண்டருளிய,
நாயகன்‌ – நம்மாழ்வாரானவர்‌,
குறையா – குறைவில்லாத,
மறையின்‌ – வேதங்களின்‌,
திடலைக் கலக்கி – பெரிய திடலாகிய முட்டுக்களை யிடித்தெறிந்து
திருவாய் மொழியெனும்‌ – திருவாய்மொழி யென்று சொல்லப்படுகிற,
தேனை—-தந்தான்‌-தந்தருளினார்‌ –

மாயோன்‌ சமுத்திரத்தைக் கடைந்து தேவர்களுக்கு அமிருதம் கொடுத்தருளினான்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ வேதங்களின்‌ முட்டுப்‌பாடுகளைப்‌ பெயர்த்தெடுத்துத்‌ திருவாய்மொழி பாடி. அடியார்களுக்குக் கொடுத்தருளினார் என்பதாம்‌. தவத்தால்‌ நீங்குவது போலத் தோற்றி மீண்டும் பற்றிக் கொள்ளுதலால்‌ நடலைப் பிறப்பென்றார்‌- தமிழில்‌ ஓப்பாரும் மிக்காரு மில்லாச் சிறப்புடைமையால்‌ நாயகனென்றார்‌… அடியார்க்கு மகிழ்ச்சி செய்தலால்‌ குளிர் சங்கு என்றார்‌. பரத்துவாசனுக்கு இந்திரன்‌ நான்கு வேத மலைகளைக் காட்டி. அவற்றில்‌ “ஒவ்வொரு பிடி யெடுத்துக் கொடுத்து உலகத்தில் பராவச் செய்த பெருமையால்‌ குறையா மறை என்றார்‌- கடலை வேதமாகவும்‌ அமுதத்தைத் தேனாகவும்‌ அமரர்‌ அடியராகவும்‌-சங்கினான்‌ நாயகனாகவும்‌ உவமித்தமை காண்க,-இது எடுத்துகாட்டு உவமை யணி. என்னையும்‌, உம்‌- இழிவு சிறப்பு.

———

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே
. 17–

பிறர்‌ கடை தோறும்‌ – அயலார்‌ வாயில்கள்‌ தோறும்‌,
நாய் போல்‌ நுழைந்து – நாயைப் போல உள்ளே புகுந்து ,
அவர்‌ எச்சில்‌ -அவர்களுடைய எச்சிலை,
நச்சி- விரும்பி,
பேய் போல்‌ – பிசாசைப்‌ போல,
திரியும்‌ – அலைகின்ற,
பிறவியினேனை – பிறப்புடையவனாகிய
என்னை,
பிறவி எனும்‌ – பிறப்பென்கிற,
நோய்‌ – பிணிகள்‌,
போம்‌ மருந்து என்னும்‌ – போகத் தக்க மருந்தென்று சொல்லப் படுகிற,
நுன் -உமது
திருவாய் மொழி- திருவாய்‌ மொழிப்‌ பிரபந்தத்தை,
நோக்குவித்து -யான் பார்க்கும் படி கருணை செய்து,
தாய் போல்‌ – பெற்ற தாயைப் போல,
உதவி செய்தாய்க்கு – உபசாரம் செய்த உமக்கு,
அடியேன்‌ – தொண்டனாகிய நான்‌,
பண்டு – முன்னாளில்‌,
என் சாதித்தது -என்ன உபகாரம்‌ செய்ததுண்டு?

நாய் போல நுழைந்து பேய் போலத்‌ திரியுமென்பால் வன்பு கூர்ந்து நுமது திருவாய் மொழியைப்‌ பார்த்‌துப்‌ பிறப்பறுக்கும்படி உதவி செய்த உமக்கு யான்‌ முன் செய்த நன்றி தான்‌ யாதோ ?என்றதாம்‌, தம்‌ தாழ்ச்சியைக் குறித்துக்‌ கடைப்பட்ட நாயை உவமித்தார்‌.-ஒயாமல்‌ பிரந்து உழலுதலால்‌ மாறாமல்‌ அலைகின்ற பேயை உவமிழத்தார்‌, எச்சில்‌ – எஞ்சியது ; மிச்சமானதென்பதாம்‌ -எஞ்சு பகுதி இல்‌ – பெயர் விகுதி, நோய் போம்‌ மருந்து என்பதில்‌ போம்‌ என்ற காரியப் பொருளாகிய பெயரெச்சம்‌ மருந்து என்னும்‌ காரணப் பெயரைக் கொண்டது. நுன்‌ – பெயர்த் திரி சொல்‌,

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாடி யுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் அளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லும் ஞானக் கடலே –

———–

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்து இருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே.
18–

எம்‌ கோன்‌ – எங்கள்‌ தலைவராகிய நம்மாழ்வாரது,
தமிழ்‌ சொல்‌ என – தமிழ்ப் பிரபந்தம் போல,
உங்கள் வேதம்‌ – உங்களுடைய வேதங்களெல்லாம்‌,
பர தத்துவத்தை – மேலான கடவுளின்‌ நிலைமை இன்ன தென்பதை ,
சாதிக்குமே – உறுதிப் படித்துமோ ?
சமயம்‌ திருக்‌கை – அன்‌னிய மதங்களின்‌ மாறு பாடுகளை,
சேதிக்குமே – அழிக்குமோ ?
ஒன்று சிந்திக்குமே – ஒரு பொருளை ஆராய்ந் தறியுமோ (அப்‌படி அறிந்தாலும்‌),
அதனை – அறிந்த அவ் விஷயத்தை,
தெரிய போதிக்குமே – பிறர்க்குத் தெரியும் படி உணர்த்துமோ?
எங்கும்‌ ஓங்கி – எவ்‌விடத்‌திலும்‌ சிறப்படைந்து
பொது நிற்கும்‌ – பொதுவாய்‌ நிற்கின்ற
மெய்யை – சத்தியத்தையும்‌,
பொய்யை – அதற்கு மாறான அசத்தியத்‌தையும்‌,
சோதிக்குமே – ஆராய்ந்தறியுமோ ?

நம்மாழ்வார்‌ பிரபந்தம் போல உங்கள்‌ வேதம்‌ பரம் பொருள்‌ நிலையை நிறுத்திக் காட்டுமோ ? புற மதங்களின்‌ மாறுபாட்டை அழிக்குமோ ? ஒன்றை ஆராய்ந்தறியுமோ ? தெரிந்தாலும்‌ பிறர்க்குச்‌ சொல்ல முடியுமோ ? மெய்யையும்‌ பொய்யையும்‌ பகுத்தறியுமோ ? இவை யொன்‌றும்‌ செய்ய இயலாது என்பதாம்‌. எல்லார்க்கும்‌ மேலானாரென்பது பற்றிக் கோன்‌ என்றார்‌, உங்கள்‌ என்றது புற மதத்தவரை என்க -,-வேதம்‌ ஆங்காங்கு எல்லாக் கடவுளருக்கும்‌ படிப் படியாகப்‌ பரத்‌துவஞ்‌ சொல்லுதலால்‌ திருவாய்‌ மொழி போல ஓரே கடவுளைக் குறிக்காமை பற்றிச் சாதிக்குமோ வென்று எதிர் மறையாகக் கூறினாரெனினுமாம்‌.-இப் பாடல்களிலுள்ள ஏகாரங்களெல்லாம்‌ வினாவாகச்‌ கூறி யிருப்பினும்‌ எதிர் மறைப் பொருள்‌ படுதல்‌ காண்க-

————–

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே.
19-

குருகூர்‌ – திருக் குருகூரிலுள்ள,
எம்பிரான்‌ – நம்மாழ்‌வார்‌,
சொன்ன – ௮ருளிச் செய்‌த,
மாலையை – பாடலாகிய மாலையை,
சொல்‌ என்கேனோ – இயல்பாகிய தமிழ்ச் சொல்லென்பேனோ ?
முழு வேதம்‌ – எல்லா வேதத்திலுமுள்ள, சுருக்கு என்கெனோ – சுருக்கமான
சாரமென்பேனோ?
எவர்க்கும்‌ – யாவருக்கும்‌,
நெல்‌ என்கெனோ -௨ணவுப் பொருளாகிய நெல்லென்கெனோ?
உண்ணும்‌ – பருகுகின்ற,
நீர்‌ என்கெனோ – நீரென்பேனோ ?
மறை – வேதங்களை,
நேர்‌ நிறுக்கும் -நேரே தராசில்‌ நிறுத்‌தப் பார்ப்பதற்குரிய
கல்‌ என்கெனோ- படிக்‌கல்லென்று சொல்லுவேனோ ?
ஞானம்‌ முதிர்‌ – ஞானமாகிய சுவை முற்றிய,
கனி என்கெனோ – பழமென்பனோ?
புகலவல்‌ என்கெனோ -பல விதமாகச்‌ சொல்லுவதற்கு எனக்கு வலிமை யுண்டென்‌பேனோ,

குருகூர்‌ நம்மாழ்வார்‌ பாடல்களைக்‌ தமிழ்ச் சொல்லென்‌பேனோ ?வேத சாரமென்பேனோ?உணவுப் பொருளென்பேனோ? நீரென்பேனோ? படிக்கல்லென்‌பேனோ ? பழமென்‌பேனோ? பலவிதமாகச்‌ சொல்‌ல வல்லமை யுண்டென்‌பேனோ ? என்ன சொல்லுவேனென்பதாம்‌. ஒன்‌றோடொன்று அந்தாதியான தொடர்புடைமையால்‌ மாலை யென்றார்‌-இது தமிழ்ச் சொல்லென்பார்க்கு இதுவே வேதச் சுவையைத் திரட்டிச்‌ சுருக்க வைத்திருத்தலால்‌ சொல்லென்‌பெனோ சுருக்கென்‌பெனோ என்‌று ஐயத்தாற்‌ கூறினார்‌. திருவாய்‌ மொழியின்‌ பொருளாலுலகு நன்மை பெறுவதை நோக்கி உள்ளரிசியாலுலகு பிழைத்தற்குரிய நெல்லை உவமித்‌தார்‌ -ஏனைய வெளிப்படை-பலபடியாக விகல்பித்துச் சொல்லும் படி அன்றோ ஆழ்வாரது பிரபாவம் –

———-

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே
. 20-

பொருள்‌-அகப் பொருள்‌.
திணை– பாலை,
கிளவி-கற்பொடு புணர்ந்த கௌவை.
துறை–கலந்துடன்‌ வருவோர்‌ புலம்பல்‌ தேற்றல்

மாலை – பூ மாலை யணிந்த,
குழலியும்‌ – கூந்தலை யுடைய உன்‌ மகளும்‌,
வில்லியும்‌ – கையில்‌ வில்லை யுடைய அவள் தலைவனும்
மாறனை – நம்மாழ்வாரை,
வாழ்த்தலர்‌ – துதியாதவர்கள்‌,
போம்‌ – செல்‌லத் தகுந்த,
பாலை கடம்‌ – பாலை நிலத்‌து வழியை, பகலே கடந்து ஏகி -இன்றைப்‌ பகலிலேயே தாண்டிச்‌ சென்று,
மருதத்துப் பணை- மருத நிலத்து வயல்களில்‌,
கரும்பின்‌ஆலை – விளைந்துள்ள கரும்புகளை ஆட்டுகிற ஆலைகளில்‌,
நரேல்‌ என்னும்‌ ஓசையை – நரேலென்று ஒலிக்கிற ஒலியைக் கேட்டு,
அம் பொன் சாலை – அழகிய பொலிவு பெற்ற வீடுகளில்‌ வளர்க்கிற,
கிளி – கிளிகள்‌,
௮ஞ்சி – பயந்து ,
உறங்கா – தூங்காத,
திரு நாட்டு இடம்‌ – சிறந்த எமது நாட்டினிடத்தை,
சார்வர்கள்‌ – அடைவார்கள்‌;

உன்‌ புதல்வியும்‌ ௮வள்‌ கணவனும்‌ நம்மாழ்வாரைத்‌ துதியாதவர்‌ போகின்ற கொடும் பாலை வழியைசத் தாண்டி இனித்‌ தமது நாட்டை யடைவார் களென்பதாம்‌-செவிலியைத்‌ தேற்றுபவராதலின்‌ அவள்‌ வருத்த மின்றிச்‌ சென்றாளென்பது தோன்ற மாலைக் குழலி யென்றார்‌; எனவே இடை வெயிலில்‌ தலைவியும்‌ தலைவனும்‌ உகந்து அலா் சூட்டி உள் மகிழ்ந்து இருக்து -புறப்பட்ட பிறகு இவர்கள்‌ கண்டாரென்றறிக-எதிர்த்து வந்த சிங்கத்தைக் கொன்று அவளுக்கு ௮ச்ச முண்‌டாகாதபடி வில்லின்‌ நாணேற்றிக் கையிலேந்திச்‌ செல்கின்‌றமையால் வில்லி யென்றார்‌,கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறாமையால்‌ அகப் பொருளாயிற்று,-போக்கெல்லாம்‌ பாலை” ஆதலால்‌ திணை – பாலை. தலைவி கற்பு நிலை தவறாமல்‌ ஒருவனைக்‌ கைக் கொண்டபடியே சென்றதால் எழுந்த பழிச்‌ சொல்லாதலால்‌ கற்பொடு புணர்ந்த கெளயை யாயிற்று, தேடிச்‌ சென்ற செவிலியை எதிர்‌ வந்தோர்‌ கூறித் தேற்றுதல்‌ துறைக் கருத்து,-கைகோள்‌ – களவு, கூற்று . கண்டோர் கூற்று, கேட்போர்‌ – செவிலி, இடம்‌ – முன்னிலை, காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – பெருமிதம்‌, பயன்‌ – செவிலியை மீள வுரைத்தல்‌, ஆதலால்‌ நீ மீள்வாயாக என்ற சொல் எஞ்சி நின்றது –

திருவடி இணைகளை தமது சென்னியில் பொருத்தி அந்த ப்ரணாமத்தால் அவனை வஸீ கரித்து தம்மைப் போன்ற அடியார்கள் இடரைத் தீர்த்து ரக்ஷணத்துக்காக ஸ்ரீ கோதண்டம் எப்போதும் திருக்கையில் ஏந்தி உள்ள எம்பெருமானை தர்சித்து அவரைப்பிரிந்து தரிக்க மாட்டாதவராய் அவரைப்பின் தொடர்ந்து ஸம்ஸாரத்தை தத்வ ஞானத்தால் கடந்து நிரதிசய அந்தமில் பேரின்பம் தரும் ஸ்ரீ வைகுண்டம் அடைவார் என்று இவரது வை லக்ஷண்யம் கண்ட உலகத்தார் அவர் பக்கலில் பரிவையுடைய ஞானியருக்குக் கூறுவதே இதற்க்கு ஸ்வா பதேசம் –

———-

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே.
21–

பொருள்‌–அது,
திணை -குறிஞ்சி ,
கிளவி–வரைவு கடாதல்‌.
துறை–நெறி யருமை கூறி வரவு விலக்கல்‌,

குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரது , திரு ஆணை -சிறந்த ஆஜ்ஜை -(கட்டளை) கொண்டுள்ள,
மலையவனே – பொதியில்‌ மலை யிலிருக்கிற தலைவனே !
சாரல்‌-மலைச்சார்பாகிய,
குறிஞ்சி தழுவம்‌ -குறிஞ்சி நிலம் தழுவப் பட்ட,
பொழில்‌ – சோலையிலே,
தளிர் மெல்‌ அடி -தளிர் போன்ற மெல்லிய அடிகளையும்‌,
தண்‌ – குளிர்ந்த,
குறிஞ்சி மூரல்‌ நகை-குறிஞ்சி அரும்பு போன்ற பற்களையுமுடைய தலைவியினது
முகம்‌ நோக்கற்கு-முகத்தைப் பார்ப்பதற்கு, நீ—-, முடுகும்‌-விரைசந்து வருகிற,
சூரல்‌ – பிரப்பங்காடுகள்‌ நெருங்கிய,
குறிஞ்சி நெறி – மலை வழியை,
நினை தோறும்‌ – நினைக்கும் பொழுதெல்லாம்‌,
துணுக்கெனும்‌ ஆல்‌ – அவள் துணுக்கென்று நடுங்குவளாதலால்‌,
வாரல்‌ – நீ வாராது நீங்குவாய்‌.

நம்மாழ்வார்‌ ஆஜ்ஜையைச்‌ சிரத்தால்‌ வகிக்கும்‌ பொதியிவின்‌ தலைவனே ! சோலையில்‌ தலைவியானவள்‌ அவள்‌ முகத்தைப் பார்த்து மகிழ்தலுக்கு நீ விரைந்து வருகிற மலை வழியை நினைக்கும் தோறும்‌ துணுக்கென்று நடுங்குவளாதலால்‌ நீ வாராதொழிவாய்‌ -என்பதாம்‌. எனவே தலைவன்‌ ஆற்றாதானாயினான் ; பின்பு ஒரு வழியாக ஆற்றுவானாம்‌ எப்படியோ வெனில்‌, ‘ பிரான் திரு வாணையை உடையவனே ” என்றமையால்‌ அவ் வாணையை உடையார்க்கு ஊறுபாடுகள்‌ வாரா வென்று தோழி அறிந்திருந்தும்
என்னை வர வேண்டாமென்று கூறியது வேறு ஓன்றினை நினைத்தன்றோ? ௮து தானும்‌ நான்‌ அவளை மணஞ்செய்து கொள்ள வேண்டியே என்று மன வுறுதி கொண்டு மறு நாள்‌ மணஞ்‌ செய்யப்‌ புகுவானாம்‌, இங்கனம்‌ கூறுதல்‌ தலைவனை நன்கு மதியாமையான வழுவாயினும்‌ இருவரும்‌ மணஞ்செய்து கொள்ள வேண்டிச்‌ கூறும்‌ அன்பின்‌ மிகுதியால்‌ வழுவமைதி யாயிற்று, இப்படி யன்றித்‌ தலைவனை வர வேண்டாமென்று பிரான் மேல்‌ ஆணை யிட்டு மறித்தாளென்‌று உரைப்‌பின்‌ ஆணை யிட்டு மறித்ததனால்‌ தலைவன்‌ வாராதே யொழியவும்‌ அதனால்‌ தலைவி யிறந்து படவுஞ்‌ செய்தவளாம்‌. அங்ஙனஞ்‌ செய்யவே “ நாணவும் நடுங்கவும் நாடாள்‌ தோழி ” என்னுஞ்‌ சூத்திரத்துக்கு விரோதமாம்‌ ; ஆதலால்‌ இவ் விஷயங்களை கல்வி யறிவுடையோர்‌ ஆராய்ந்து அறிவாராக.’
தளிர் மெல்லடித் தண் மூரற் குறிஞ்சி நகை -௮ன்மொழித்‌ தொகை பன் மொழித் தொடர்‌, குறிஞ்சி மூரல்‌-மூரல்‌-அரும்புக்கு உமையாகு பெயர்‌, ** முல்லை, யாழ் கடற்றானை வேந்தே ! அணியெயி றீன்‌ற தன்றே’-என்ற சிந்தாமாணிச்‌ செய்யுளுரையை நோக்குக-துணுக்கெனல்‌ – ௮ச்‌சக் குறிப்பு, கைகோள்‌-களவு, கூற்று – தோழி கூற்று, கேட்போன்‌ -தலைவன்‌, இடம்‌ – முன்னிலை, காலம்‌- எதிர்காலம்‌,-மெய்ப்பாடு- அச்சத்தைச்‌ சார்ந்த பெருமிதம்‌, பயன்‌- வரைவு கடாதல்‌,

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே.
22-

மலை- பொதியில்‌ மலையிலுள்ள,
ஆரமும்‌ – சந்தன மரமும்‌,
கடல்‌ ஆரமும்‌ – கடலிலுள்ள முத்துக்களும்‌, பல்‌ மா மணி குயின்‌ற -பலவாகிய சிறந்த ரத்னங்களால் இழைத்த
விலை ஆரமும்‌ – விலை பெற்ற மாலைகளும்‌,
விரவும்‌ – பொருந்தி யிருக்கிற,
திரு நாடனை – சிறந்த பாண்டி நாட்டிலுள்ளவராகிய,
வேலை – சமுத்திரத்தை,
கட்ட சிலை – அம்பு விட்‌டெரித்த கோதண்டமென்னும்‌ வில்லை யுடைய,
ஆர்‌ – அரிய,
௮முதின்‌-அருமருந்தன்ன இராம பிரானுடைய,
அடி – திருவடிகளில்‌ பற்றுள்ள,
சடகோபனை – நம்மாழ்வாரை,
சென்று இறைஞ்சும்‌ – போய்‌ வணக்குகின்ற,
தலையார்‌ – தலையை யுடையவர்‌,
௭வர் !-யாவரோ, அவரே.
எம்மை – எங்களை,
ஆளும்‌ – ஆண்டு கொள்ளுகின்ற, தபோதனர்‌-தவமாகிய செல்வத்தை யுடையவராவர்‌ ;

மூவகை ஆரங்களும்‌ பொருந்திய பாண்டி நாட்டிலுள்ளவரும்‌ இராம பிரானடித் தொண்டருமாகிய நம்மாழ்வாரை வணங்குபவர் யாவரோ அவரே எங்களுக்குத்‌ தலைவராவாரென்பதாம்‌, விலை யாரம்‌ இந்திரன்‌ கொடுத்த மாலையுமுடைய பாண்டி நாடென்றாகலுமொன்று ; அதற்கு “ கோவா மலையாரங்‌ கோத்த சடலாரம்‌. தேவர் கோன்‌ பொன்னாரம்‌ தென்னர் கோன்‌ மார்பினவே:? என்ற சிலப்பதிகாரத்தையும்‌ நோக்குக” இராமாமிருதமென்னும்‌ பெயருடைமையால்‌ அமுதென்றார்‌; அன்றி மனத்திற்‌ கொண்டாரை நிலை பெற வாழ்வித்தலாற்‌ கூறினார் என்றலுமாம்
வேலை சுட்டது :–இராமாவதாரத்தில்‌ இராம பிரான்‌ . தென்‌ கடலருகு வந்து இலங்கைக்குச்‌ செல்ல வழி வேண்டி வருணனை அழைத்‌தலும்‌ ௮வன்‌ வாராமையால்‌ சினங்கொண்டு ௮க்னியாஸ்திரத்தைப்‌ பிரயோகித்துக்‌ கடலை வற்றச் சுட்டு வருணன்‌ வந்து அடைக்கலம்‌ புகக்‌ காத்தருளினார் என்பதாம்‌. அமுது -உவமை யாகு பெயர்‌. குயின்ற-குயில்‌ – பகுதி, ௮வரே , ஏ- பிரிநிலை ,

தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே- தலையை யுடைய அவரே எம்மை அடிமை கொள்ளும் தவச் செல்வர் ஆவார்-ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வார்
கற்றார் பரவும் ராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை
நின்று ஆளும் பெரியவரே -ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தை ஒட்டியே இப் பாசுரம் –

———–

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே.
23-

போந்து – எங்கள்‌ விமானத்தில் வந்து,
ஏறுக என்று-ஏறிக் கொள்ளுக வென்று,
இமையோர்‌ – தேவர்கள்‌,
புகலினும்‌ -சொன்‌னாலும்‌,
பூ – அழகிய,
தொழுவின்‌ – கொட்டிலினிடத்துள்ள,
வேந்து -தலைமை பெற்ற,
ஏறு – ஏழு காளை மாடுகளை,
அடர்த்தவன்‌ – அடக்கிய கண்ண பிரானது ,
வீடே பெறினும்‌ – பரம பதத்தை யடையப்‌ பெற்றாலும்
எழில்‌ குருகூர்‌ – அழகிய குருகூர்ப் பதியில்‌,
நாம் தேறிய – நாங்கள்‌ தெளிவடையச் செய்த,
அறிவன்‌ – பேரறிவாளராகிய நம்மாழ்வாரருளிச்‌ செய்த, திருவாய்மொழி —,
நாளும்‌ – தினமும்‌,
நல்கும்‌- கொடுக்கின்ற,
தீம்‌ தேறல்‌ – இனிய தேன் போன்ற சுவையை,
உண்டு உழலும்‌ – பருகி உலாவுகின்‌ற , சித்தியே-ஓப்பற்ற பயனே,
வந்து…-சித்திக்கும்‌-நான்‌ பெறும்படி எனக்குக் கை கூடா நிற்கும்‌;

என்னைத் தேவர் வந்து அழைத்தாலும் நான் பரம பதம் அடைந்தாலும் குருகூர்‌ நம்மாழ்வாரருளிச் செய்த திருவாய் மொழியின்‌ இனிய சுவையை உண்டு மகிழும் சித்தியே எனக்குக்‌ கை கூடி யிருக்கும்‌ என்பதாம்‌-இது ௮ப்பிரபந்தத்தின்‌ சுவை மிகுதியைத் துதித்தவாறு, ஆராயுங்காலத்‌திலே தெளிவடைந்த மகிழ்ச்சியால்‌ நாம்‌ என்று தன்மைப் பன்மையாற்‌ கூறினார்‌…படிக்கும் தோறுஞ்‌ சுவை தருதலால்‌ நாளும்‌ நல்குமென்றார்‌-ஏனைய பயன் போலாகாமல்‌ மேம் பட்டமையால்‌ சித்தி யென்றார்‌, ஏறு -விலங்கின் ஆண் பாற்‌ பெயர்‌ ; இங்குக் காளைக்காயிந்று, வீடே,-ஏ-தேற்‌றம்‌, தேறல்‌ – கள்ளின்‌ தெளிவுமாம்‌ ;௮தற்கேற்ப உண்டு உழலுமென்றதனால்‌ இத ஏக தேச வுருவக வணி. கண்ணன்‌ ஏறடர்த்தது: — நம்பினைப் பிராட்டியாரை மணஞ்செய்விக்க வேண்டி ௮வள்‌ தந்தை யானவன்‌ அசுர விவாகமாக நியமித்துத்‌ தன் தொழுவிலுள்ள கொழுத்த ஏழு காளைகளைப்‌ பிடித்‌துக் கட்டுபவனுச்கு என்‌ மகளைக்‌ கொடுப்பேனென்றதை யறிந்த கண்ண பிரான்‌ அங்ஙனமே அவற்றை யடக்கி ௮வளை மணம் புரிந்து கொண்டானென்பதாம்‌.

———-

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே.
24-

சடகோபன் – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
மொழித் தொகை – பாடல்களின்‌ தொகுதியானது ,
சித்தர்க்கும்‌- எண் வகைச்‌ சித்தி யுடையவர்க்கும்‌,
வேதச் சிரம்‌ – வேதத்தின்‌ தலையாகிய வேதாந்தத்தை,
தெரிந்தோர்கட்கும்‌ – அறிர்தவர்களுக்கும்‌, செய்‌ தவர்க்கும்‌ – தவத்தைச் செய்பவர்க்கும்‌,
சுத்தர்க்கும்‌-பரி சுத்தமுடையவர்க்கும்‌, மற்றைத் துறை- வேறு மார்க்கங்களிலிருந்து ,
துறந்தோர்கட்கும்‌ – எல்லாப் பற்றும் விட்ட துறவிகளுக்கும்‌,
தொண்டு செய்யும்‌ – கடவளுக்கு அடிமை செய்கின்‌ற,
பத்தர்க்கும்‌ – அடியார்களுக்கும்‌,
ஞானப் பகவர்க்குமே அன்றி- ஞானமிகுத்த பெரியோர்களுக்குமே யல்லாமல்‌,
பண்டு – முன்னாளில்‌ சென்‌ற,
முத்தர்க்கும்‌- முத்தி பெற்றவர்களுக்கும்‌, இன்‌ ௮முதம்‌- இனிய ௮மிருதமேயாம்‌;

நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ சித்தர்‌ முதலாகிய எல்லார்க்கும்‌ இனிய அமிருதமாகவே யிருக்குமென்பதாம்‌, சித்தி எட்டாவன: —அணிமா,மகிமா, தெரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம்‌, ஈசத்துவம்‌, வசித்துவம் -என்பன. சுத்தர்‌- மனத்திற்‌ பரி சுத்தமுடையவர்‌. பகவர்‌ – வீரம்‌ கீர்த்தி வைராக்கியம்‌ இவற்றில்‌ மிக்கவர்‌, முத்தி யடைந்தவர்‌-பரம பதத்தில் தேவராயிருந்து இதனைக் கேட்டு மகிழ்வாராதலில்‌ அவர்க்கும்‌ இன்‌னமுதமென்றார்‌.-வேதாந்தமான உபநிஷத்துக்களை ஆராய்பவர்‌ அதனிலும்‌ இதன்‌ கருத்துத்‌ தெளிவாய்‌ விளங்குதலால்‌ அவர்க்கும்‌ அமுதென்றார்‌. இதிலுள்ள உம்மைகள்‌ எண்ணுப் பொருளன. பகவர்க்குமே, ஏ – பிரிநிலை,

———-

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே
. 25-

தொகை உள ஆய -சேர்க்கப் பட்டுள்ளனவாகிய,
பனுவற்கு எல்லாம்‌ -சாஸ்‌திரங்களிலெல்லாம்‌,
துறை தோறும்‌ – ஒவ்வொரு பகுதிகள் தோறும்‌,
தொட்டால்‌ – உற்று நோக்கினால்‌,
பகை உளவாம்‌ -ஒன்றற்கொன்று விரோதமுள்ளனவாம்‌ ;
மற்றும்‌ – மீட்டும்‌,
பற்றுளவாம்‌-தொடர்சி யுள்ளனவாகும்‌ :
பழ நால் மறையின்‌ – பழமையகிய நான்கு
வேதங்களின்‌,
வகை உளவாகிய- பகுதி யுள்ளனவாகிய,
வாது உளவாம்‌ -விரோதங்களுமுள்ளனவாகும்‌; (அப்படியன்றி,) குருகூர்‌ -திருக்குருகூரிலவதரித்த,
எம்பிரான்‌ தன்‌ – எங்களிறைவனாராகிய நம்மாழ்வாருடைய,
விழு தமிழ்க்கு-சிறந்த தமிழ்ப் பாடல்களில்‌,
வந்த வந்த இடத்து – பார்த்த பார்த்த இடங்களிலெல்லாம்‌,
ஏ- சிறந்த,
மிகை உளவாம்‌ -மேம் பாடுகள்‌ உள்ளனவாகின்றன ;

எல்லாச் சமய நூல்களிலும்‌ உற்று நோக்குமிடத்து ஒவ்வொன்றிலும்‌ முன்னுக்குப் பின்‌ விரோதமாகக் கூறுவன வுள்ளன ; ௮ப்படி யன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வார் பாடல்களில்‌ பார்க்குமிடம் தோறும்‌ சிறந்த மேம்பாடான பொருள்கள் அமைந்துள்ளன வென்‌பதாம்‌-நான்மறையின் வாது – வேதவிரோதம்‌; அஃதாவது, வேதத்திற் கூறும் பொருளுக்கு விரோதமாகக் கூறுவது-வந்த இடம்‌ -வந்திடம்‌ ;பெயரெச்ச விகுதி தொக்கது.
‘* ஏ பெற்றாகும்‌ ‘? என்றதனால்‌ ஏ என்னும்‌ ஓரெழுத்தொரு மொழி உரிச்‌ சொல்லாயமைந்த விடத்துப்‌ பெருமையை யுணர்த்தும்‌,

———

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே
26-

௮ரு வினைகாள்‌ -நீங்குவதற் கரிய வினைகளே!
இள நாகு சங்கம்‌- மிக்க இளைய சங்கங்களில்‌,
கொழு – உழுகின்ற கொழுவானது ,
பாய்‌ -பாயப் பெற்ற,
மருதம் சுலாம்‌- மருத நிலங்கள் சூழ்ந்துள்ள, குருகூர் ,
எம்‌ குலம்‌ – எம் போல்வாராகிய தொண்டர்‌ கூட்டங்களுக்‌கு,
கொழுந்து – கொழுந்து போல்வாராகிய,
ஒருவன்‌ – ஒப்பற்ற நம்மாழ்‌வார்‌,
உம்மை – உங்களை,
அப் புறத்தே – எங்கள் இடத்தில்‌ நெருங்க ஓட்‌டாமல்‌ அப்பால்‌,
இழுப்பான்‌ -இழுத்தெறிய வேண்டி, வந்து
இன்று – இப் பொழுது,
நின்றான்‌ – எம்‌ உள்ளத்தில்‌ எழுந்தருளி யிருக்கிறார்‌; (ஆதலால்‌,)
மெய் உற வந்து – மெய்யாகவே எங்களைக் கிட்டி வந்து,
அழுப்பாது – அப்பாமல்‌,
ஓழிமின்‌ – நீங்கி விடுங்கள்‌ ;
இனி – இனி மேல்‌,
எம்மை-எங்களை,
பிறவித் துயர்‌ – பிறவியாகிய துன்பத்தில்‌, விழுப்பார்‌ யார்‌ – தள்ளுபவர் யாவர்‌ இருக்கிறார்கள்‌ –

வினைகளே ! குருகூரிலவதரித்த ஒப்பற்ற நம்மாழ்வார்‌ உங்களை நீக்க வேண்டி எம்முள்ளத் தெழுந்தருளி யிருக்கிறார்‌-ஆதலால்‌ கிட்ட நெருங்காதீர்‌ ; ; இனி எம்மைப்‌ பிறவிபில்‌ தள்ளுபவர்‌ யாவர்‌ இருக்கிறார்கள்‌? என்பதாம்‌-ஆழ்வார்‌ மனத்திலிருப்பதைக் காட்டி அச்சுறுத்தி வினைகளை யொழித்து விட்டால்‌ இனிப்‌ பிறவியில்‌ புகாதிருத்தல்‌ நிச்சயமென்று கொண்டு விழுப்பார் யாரென்றார்‌. ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகின்ற கொழுவானது வயிற்றில் குதித்துத் தள்ளுதல் போல, அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்றழிக்குமென்பது தொகை மொழியின் கருத்து, இளநாகு- மீமிசைச் சொல்‌. கொழுந்து உவமை யாகு பெயர்‌ -ஆயர் குலக் கொழுந்து ?’ என்றார் பிறரும்‌. கொழு- கலப்‌பைப் படை வாள்‌ நுணியில் தைக்கும் இரும்பு.

பெற்றம் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்று இல்லை கண்டீர் நடமின் -என்றும்

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம் மேல் வினை -என்றும்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் —
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு -என்றும்

இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் ஆறு வினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -என்றும்
உள்ள அருளிச் செயல்கள் இங்கே அனுசந்தேயம் –

———

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே.
27-

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை –பெருந்துணை
துறை–மாலை பெறாமல்‌ வருந்தித் தலைமகளேங்கியது அறிந்த பாங்கி புலம்பல் –

கொழுந்தோடு – கொழுந்துகளும்‌, இலையும்‌, முகையும்‌- அரும்புகளும்‌, எல்லாம்‌ – மற்றுள்ள மலர் காய்களும்‌, கொய்யும்‌ கொய்‌ மகிழ்‌ கீழ்‌ – மிகக் கொய்யும் படியாகிய மகிழ மரத்தின்‌ கீழ்ச் சென்று,
விழுந்து ஓடுவது -அங்கே காற்றால் விழுவது ஓடுவதாகிய
ஓர்‌ சருகும்‌ பெறாள்‌ -ஒரு சருகேனும் பெற்றாளில்லை;
விறல்‌- வலிமை யுடைய,
மாறன்‌ என்றால்‌ – நம்மாழ்வாரென்று அயலர் கூறினால்‌,
அழும்‌ – அழுகின்றனள்‌;
தோள் தளரும்‌- சோள் தளர்ச்சி யடைவாள்‌;
மனம்‌ உருகும்‌-மனம் கரைவாள்‌ ;
குருகூர்‌ அறையில்‌ -குருகூரென்று சொன்னால்‌,
எழுந்து ஆடவும்‌- தான்‌ எழுந்‌து ஒடிச் சென்று அவ்வூரை யடையவும்‌,
இ-இந்த,
இளங்கொடிக்கு – இளமையான கொடி போன்ற பெண்ணுக்கு,
கருத்து உண்டு- நினைவு உண்டாயிருக்கிறது ;
கெட்டேன்‌ – நான் யாது செய்கேன்‌-கெட்டேன்‌ !

நம்மாழ்வாரைச் சேர விரும்பிய இப் பெண்‌ ௮வர்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடியே அவர்மகிழ மாலையை வர விடுக்காமையால்‌ ௮ம்‌ மலரையாவது அணைத்துக் கொண்டு காமத்தைக் கழிக்கலாமென்று அம்‌ மரத்தடியிற் சென்றாலோ எல்லாம் கொய்யக் கூடிய அதன் சருகும்‌ பெற்‌றாளில்லை-௮வர் பெயரைச் சொன்னால்‌ அழுகின்றாள்‌ ;தளர்கின்றாள்‌ ;உருகுகின்றாள்‌ ; குருகூரென்றால்‌ அவட்கு ௮ங்கு ஓடவுங் கருத்துண்டு-ஆ ஆ ! கெட்டேன்‌ ! என்றாள்‌ என்பதாம்‌. காமத் தீக்கு ஆற்றாளென்பது தோன்ற இளங்கொடி யென்றார்‌. இவள்‌ இன்னும் காமத்தால்‌ மிக வருந்திப் புலம்புவள் போலுமென்பார்‌ எல்லாம் கொய்யக் கூடிய மகிழின்‌ சருகும்‌ பெற்றாளில்லை யென்றார்‌. ஆற்றாமை மிகுதியினால்‌ ௮ழுமென்றார்‌, அணைத்து மகிழ்வது தோளாதலால்‌ ௮து பெறாமை ஹேதுவாகத் தோள்‌ தளருமென்றார்‌, மனத்தை அவர் பால்‌ விடுத்தமையால்‌ உருகுமென்றார்‌. யாமிங்‌கு இருத்தலால் எழுந்தோடவில்லை கருத்து மட்டுமுண்டு என்‌றார்‌. தோழியாற் செய்யும் உபசாரமனைத்துஞ்‌ செய்தும்‌ பயன் படாமையால்‌ கெட்டேனென்றாள்‌. தோழி செய்யுமுபசாரமாவது மலரணையலும்‌ சந்திரகாந்தச்‌ சிலையிலும்‌ படுச்கச் செய்தல்‌ -கொங்கைகளில்‌ தளிர்களையும்‌ சந்தனத்தையும்‌ பிறவற்றையும்‌ அப்புதல்‌; பன்னீர் தூவுதல்‌ முதலியவாம்‌, இது கிளவித் தலைவனது இயற் பெயரைக் கூறினமையால்‌ ௮கப் பொருளாகாமல்‌ அகப் புறப் பொருளாயிற்று-கை யற்றுப் புலம்புதலால்‌ கந்தருவத்தின் வழுவிய பெருந் திணை யாயிற்‌று. தலைவன்‌ வருவதற்கு அடையாளமாக முன்னாடி மாலையை வர விடுக்க வில்லையே யென்று வருந்திய தலைவியின்‌ வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பது துறையின் கருத்து.

தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
-என்றும்
சீரார் இதழ் பொழில் மாலிருஞ்சோலையில் செல்வர் செங்கண் போரார் தாள் புனை தழை தொடுத்த நாரார் இதாகில் பிழைப்பு அரிதாம் எங்கள் நன்னுதற்கே –என்றும்
உள்ள அருளிச் செயல்கள் அனுசந்தேயம் –

கம்ப நாட்டாழ்வார் ஆழ்வார் திருவடிகளில் சேர்ந்து இருக்கப் பெறாது வருந்தும் நிலையில்
அவருடன் நேராகவாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் யாதாயினும் ஒன்றை
அவருடைய பிரசாதமாகப் பெற்று ஆறி இருக்கக் கருதி வேண்டுதலையும் அங்கனம் ஒன்றும் அவருக்கு கிடைத்திடாமையும் ஆழ்வாருடைய திரு நாமத்தைச் சொல்லும் போது எல்லாம் பக்தி பரவசராய் அழுது உடல் சோர்ந்து மனம் தளர்தலையும் அவரது திவ்ய தேசத்துக்கு விரைந்து செல்ல விரும்புதலையும் அன்பர்கள் பாராட்டி இனி இவருக்கு என்னாகுமோ என்று இரங்கிக் கூறுதல் இதற்கு ஸ்வாப தேசம் –

———-

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே
. 28-

ஆரணத்தின் படி-வேதத்தைப் போல, -நான்‌கு பகுதியாக,
எடுத்துக் கொண்ட – தமிழில்‌ எடுத்‌துக் கொண்டு கூறிய,
மாறன்‌ என்‌றால்‌ – நம்மாழ்வார்‌ என்று யார் சொன்னாலும்‌,
பதுமக் கரங்கள்‌ – தாமரைப் பூப் போன்ற கைகளை,
முடி யெடுத்துக் கொண்ட – தலையில்‌ அஞ்‌சலி செய்து கொண்ட,
அந்தணர் – எல்லா வுயிர்களிடத்தும்‌ ௮ன்பு பொருந்திய மேலோர்களுடைய,
தாள்‌ – பாதங்கள்‌,
என் முடி என – எனது தலையிற்‌ சூடப் படுவன வென்று,
கொடி. எடுத்துக் கொண்டு நின்றேன்‌ -விருதுக் கொடி பிடித்‌துக் கொண்டு நிற்கின்றேன்‌ ; (அதலால்‌),
இனி -இனி மேல்‌,
கொடுங்கூற்றினுக்கு – கொடிய யமனுக்கு,
ஓர்‌ அடி எடுத்‌துக் சொண்டு – ஒரு காலை எடுத்துக் கொண்டு,
என்பால்‌ வரலாகும் கொல்‌-என்னிடத்தில்‌ வருதல்‌ கூடுமோ? |கூடாதென்பதாம்‌]

நம்மாழ்வாரென்று யார்‌ கூறினும்‌ ௮ன்பினால்‌ அஞ்சலி செய்கின்‌ற கருணை யாளர்களுடைய திருவடிகளே என் முடியிற்‌ சூடுவன வென்று விருதாக நான் கொண்டிருக்கின்‌றமையால்‌ கூற்றுவன்‌ அஞ்சாமல்‌ என்னிடத்து அடி யெடுத்‌து வைக்கக் கூடுமோ ? கூடாதென்பதாம்‌-நான்கு பிரபந்தங்களைச்‌ செய்தமையின்‌ ஆரணத்தின் படி யென்‌றார்‌. கரங்கள்‌ முடி யெடுத்‌துக் கொண்ட வென்றது அன்பு மேலீட்டினால்‌ என்க, ௮ந்தணர்‌ -௮ழகிய தண்மை யுடையார்‌ என்றதே பொருத்தமுடையது. ௮ந்தணர்‌. வைஷ்ணவப் பிராமணரென்றால்‌ குறைபாடு என்‌னை யெனின்‌ அதில்‌ தோன்றிய சிலர்‌ பொருளாசை மேலீட்டினால்‌ பிறர்‌ நூல்‌ உரை முதலியவரற்றை இகழ்ந்து கூறி நரகமே குடியாகக் கொள்ளுத லால்‌ முற்கூறிய அழகிய தண்மை யுடையார் என்பதே உரை யென்க ,

———-

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே.
29–

இராவணன்‌ தன்‌ – இராவணனுடைய,
பொன் முடியால்‌ -பொன்னாகிய கிரீடமணிந்த தலைகளைக் கொண்டு,
கடல் தூர்த்த – சமுத்‌திரத்தைகத் தூரச் செய்த,
வில்லான்‌ – கோதண்டமென்னும்‌ வில்லை
யுடையவனுடைய,
அவன்‌ – அந்த இராம பிரானுடைய,
இணை தாள்‌ கீழ்‌ -இரண்டு திழுவடிகளிலும்‌,
பொருநை துறைவன்‌ – தாமிரபருணை யாற்‌றம் கரையி லவதரித்த நம்மாழ்வார்‌,
தன்‌ முடியால்‌ – தம் தலையால்‌ வணங்கி ,
எ பொருளும்‌ – எல்லாப் பொருள்களையும்‌,
தழீஇ – ஒரு சேரச்‌ கொண்டு,
சொல்‌ முடியால்‌ – சிறந்த சொற்களாலமைந்த,
அமுதம்‌ -அமிர்தம் போன்ற,
ஆயிரம்‌ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
சூட்டினன்‌ -பாடிச் சேர்ப்பித்தனர்‌; (அவ் வாழ்வாரைத் துதிக்கின்ற), எனக்கு—-.
என்‌ முடியாது – என்ன காரிய முடிய மாட்டாது?
யாதே அரியது – எது தான்‌ அரியதாகும்‌? [எல்லாம்‌ முடியும்‌-௮ரிதொன்றுமில்லை யென்பதாம்‌]

இராவணனைக் கொன்ற இராம பிரான்‌ திருவடிகளில்‌ நம்மாழ்வார்‌ ஆயிரம் பாடல்‌ பாடிச் சூட்டினார்‌;-அவரடியனாகிய எனக்கு முடியாத காரியம் தான்‌ யாது? ௮ரியது தான்‌ யாது? [ஒன்று மில்லை] என்பதாம்‌, இராவணன்‌ -இலங்கைக் கிறையவன்‌ ; ஸ்ரீ கைலாஸ மலையைப்‌ பெயர்த்து அதன் கீழ்‌ ௮கப் பட்டுக் கொண்டு ஒயாமற்‌ கதறினமையால்‌ இப் பெயர் பெற்றனன்‌ ; இராவணம்‌ -அழுகை, ௮வன்‌ தன்‌ தலைகள்‌ வெட்டுண்டால்‌ மீள முளைக்கும் படி பிரமனிடத்தில்‌ வரம் பெற்றான்‌-பின்பு இராம பிரான்‌ போரில்‌ ௮வன் தலைகளை வெட்டிக்‌ கடலிற்‌ குவித்தனன்‌ ; வெட்ட வெட்ட முளைத்தமையால்‌ மார்பிலோரம்பெய்து ௮வனைக் கொன்றனன்‌. எப் பொருளும்‌ – முதல் கடவுளாகிய மாயோன்‌ நிலையும்‌, அக் கடவுளை யடையும்‌ நெறியும்‌, அடைதற்குரிய உயிர்களினிலையும்‌, அடைதலாற் பெறும்‌ பேறும்‌ பிறவுமாம்‌, எனக்கு – இடை நிலைத்‌ தீவகம்‌. தழீஇ – சொல்லிசை யளபெடை, ௮முதக் கவி -உவமைத் தொகை,-

——–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே
. 30–

சூட்டில்‌ – செற் போரில்‌,
குருகு – நாரை முதலிய பறவை,
உறங்கும்‌ – தூங்குகின்ற,
குருகூர்‌ – திருக் குருகூரையும்‌, தொழுதேன்‌-வணங்கினேன்‌ ;
வழுதி நாட்டில்‌ – பாண்டி நாட்டில்‌,
பிறந்தவர்க்கு-பிறந்தவராகிய இறைவனிடத்தில்‌ ௮ன்புடையவருக்கு,
ஆளும்‌ செய்தேன்‌ – அடிமையுமாயினேன்‌ ;
(ஆதலால்‌), மறை – வேதமான,
மெய்‌ எனில்‌, உண்மையா யிருக்குமானால்‌, என்னை- -,
நல்வினை ஆம்‌ நாட்டில்‌ -நல்ல தவஞ் செய்தலால்‌ மேன்மை யுற்ற நாட்டில்‌, புகுதவிட்டு – ,
உய்யக் கொள்‌ – பிழைக்கும்படி ௮ருள் செய்கின்‌ற ,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கழல்‌ – பாதங்களை,
பற்றி போய்‌ – புணையாகக் கொண்டு சென்று,
வீட்டில்‌ புகுதற்கும்‌- மோட்சத்தை அடைதற்கும்‌,
குறை உண்டே – தடை யுண்டோ ? (இல்லை யென்றதாம்‌;)

யான்‌ அழ்வார்‌ அவதரித்த குருகூரை வணங்கினேன்‌ ; பாண்டி நாட்டிலுள்ள கடவள் பாலன்புடையவர்களுக்கும்‌ அடிமையாயினேன்‌ ; வேதம்‌ உண்மையா யிருக்குமானால்‌ நல் தவத்தில்‌ என்னை விட்டு ஆழ்வார்‌ பாதங்களே புணை யாகக் கொண்டு மோட்சத்திற்குச்‌ செல்லத் தடை யுண்‌டோ? என்பதாம்‌. தாம்‌ கவலை யற்று மோட்சதிற்குச் சென்று வசிக்கலா
மென்பதை உள்ளடக்கிப்‌ போரில்‌ நாரை கவலை யின்றி யுறங்கும் என்று உவமையால்‌ விளக்கினார்‌, இங்கனமே நாடுகளைச்‌ சிறப்பித்தல் பண்டை வழக்கு; * பொய்கை சாரை போரிற்‌ சேக்கும்‌ ” என்றார்‌ ஐங்குறு நூற்றிலும்‌. குருகு உறங்கும் குருகூர்‌ எனச் சொல்‌ நயம் தோன்றக் கூறியது காண்க ,-வழுதி – கொடை யுடையானுக்கும்‌ பெயராதலால்‌ வீடு வேண்டின்‌ மறாமல்‌ கொடுப்பாரென்று கொண்டு அப் பெயராற்‌ கூ.றினார்‌. ஆளும்‌, புகுதற்கும்‌ – உம்மைகள்‌ இறந்தது தழுவிய எச்சப் பொருளன, உண்டே-ஏ. எதிர்மறை,

—————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே
. 31-

உறு வினையை – மிக்க தீவினைகளை,
கொய்யும்‌ – வெட்டி யழிக்கின்‌ற,
மெய்‌ – சத்தியமாகிய,
வாள் வலவன்‌ – வாள் யுத்தத்தில்‌ வல்‌லவரும்‌,
குருகைக்கு – குருகூர்க்கு,
அரசன்‌ – இறைவரும்‌,
புலமை செய்யும்‌ – தம்மை யடைந்தவர்களுக்கு உபதேசித்தருளுகின்‌ற,
ஐயன்‌ தனக்கே – தலைவருமாகிய நம்மாழ்வாருக்கே ,
தனி-ஒப்பற்ற,
தாள்‌-திருவடிகளுக்கு,
அன்பு செய்த பின்‌ – தான்‌ பக்தி செய்யத் தொடங்கிய பிற்பாடு,
மெய்யும்‌ – சத்துவப் பொருளெல்லாம்‌,
மெய்‌ ஆயது – உண்மையாக விளங்கிற்று;
பொய்யும்‌ – பொய்ப் பொருளும்‌,
பொய்‌ ஆயது – பொய்ப்‌ பொருளென்று தோன்ற விளங்கிற்று;
வேறு படுத்து – இங்கனம்‌ வேறாகப்‌ பகுத்‌துக் காட்டி,
உய்யும்‌ – பிழைப்பதற்குரிய,
மெய்‌ ஆய – உண்மையாகிய,
உபாயம்‌ -தந்திரமும்‌,
வந்து உற்றது – வந்து பொருந்திற்று,

நான்‌ நம்மாழ்வாருக்குத்‌ தொண்டு செய்யத்‌ தொடங்கிய பின்‌பு தான்‌ தத்‌துவ ஞானம்‌ உண்மையாக வெளிப்பட்டது ;அஞ்ஞானமும்‌ நீங்கிற்று ; இங்கனம்‌ பகுத்தறிந்து பிழைத்தற்குரிய தந்திரமும்‌ வந்து பொருந்தித்றென்பதாம்‌-உண்மை நிலை தெரியாமல்‌ அஞ்ஞானம்‌ மூடப்‌ பெற்றிருந்து பிறகு தெளிவடைந்ததனால்‌ மெய்யும்‌ மெய்யாயது என்‌றார்‌. ௮து மெய்யாதலும்‌ ௮தற்கு மறுதலையாகிய பொய்யும்‌ பொய்யாகிய தென்பது தானே இயையினும்‌ மகிழ்ச்சி மிகுதியால்‌ அதனையும்‌ உடன்‌ கூறினர்‌, பொய்ப் பொருள்‌ – தார புத்திர தனாதி ஏஷணாத் திரயங்கள்‌-பிழைத்தல்‌ -பரம பதத்தை நாடும்‌ வழி
கொய்தற்கேற்ப வினையைப்‌ பகை யென்னாமையால்‌ இது ஏக தேச வுருவக வணி. எல்லாரிலும் மேலானவனாதலால்‌ ஐயனென்றார்‌.

———-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே.
32–

திருமாலை – திரு மகள் கணவனாகிய மாயோனை,
செய்யன்‌(என) – சிவந்த நிறமுடையவனென்றும்‌,
கரியன்‌ என – கரிய நிறமுடையவனென்றும்‌,
தெரிந்து உணர – ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதற்கு,
வையம்‌ – உலகத்‌ துயிர்கள்‌,
கரி ௮ல்ல – பொருந்திய சாட்சியாக மாட்‌
டாவாம்‌;
மறை- வேதங்களும்‌,
மாட்டா – அறிய வல்லன அல்ல ;
(ஆதலால்‌), மதுரம்‌- இனிமை யாகிய, குருகூர்‌ – திருக் குருகூரில்‌ ௮வதரித்தருளிய,
ஐயன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அல்லலேல்‌ – பாடல்‌கள்‌ அல்லா விட்டால்‌,
பிறவிக் கடல்‌ – பிறப்பாகிய சமுத்திரத்தில்‌,
ஆழ்‌வது அல்லால்‌ -அமுங்குவது ௮ல்லாமல்‌,
இ உயிர்களுக்கு – இந்த உயிர்‌களுக்கு, உய்யும் வகை – ஈடேறும்‌வழி,
ஒன்றும்‌ – ஒன்‌றினையும்‌,
யான்‌ -நான்‌,
கண்டிலேன்‌ -பார்த்தேனில்லை ;

மாயோன்‌ சிவந்த வடிவனோ கறுத்த வடிவனோ வென்று அறிவதற்கு உலகத்தாராலுமில்லை ; வேதங்களாலுமில்லை; ஆதலால்‌ உயிர்கள்‌ நம்‌மாழ்வார்‌ பாடலில்லாவிட்டால்‌ பிறவிக் கடலில்‌ அழுந்துவதே யல்‌லாமல்‌ அவ் வுயிர்கள்‌ ஈடேறும்‌ வழியை யான்‌ பார்த்தேனில்லை என்‌பதாம்‌. செய்யன்‌,கரியன்‌– சிவப்போ கறுப்போ என்னும்‌ உலக வழக்கை நோக்கிச்‌ கூறியவாம்‌. வையம்‌–இடவாகுபெயர்‌, தமிழ்க்‌ குருகூர்‌ என்பார்‌ – அதன்‌ மறு பெயராகிய மதரமென்னும்‌ மொழியாற்‌ கூறினார்‌. எல்லாருக்கும்‌ மேலாவான்‌ என்பது பற்றி ஐயன்‌ என்றார்‌. ஒரு நாளும்‌ முடிவு பெறாமையும்‌ கடத்த வருமையும்‌ நோக்கிப்‌ பிறவியைக் கடலென்றார்‌,

———–

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.
33–

உயிர்த் தாரையில்‌ – உயிர் செல்லுன்ற வழியிலே,
புக்கு”-சென்று,
உறு – பொருந்துகின்ற,
ஒரு- ஒப்பில்லாத,
குறும்பு ஆம்‌ மூன்றனையும்‌ – காமம்‌ வெகுளி மயக்கமாகிய முக் குற்றங்களையும்‌,
செயிர்த்தார்‌ – கடிந்து விலக்கியவராகிய, குருகை வந்தார்‌-குரூகூரிலவதரித்த நம்மாழ்வாரது,
திருவாய்‌ மொழி -திருவாய் மொழி யென்னும்‌ பிரபந்தத்தினை,
செப்பல்‌ உற்றால்‌ – சொல்லத் தொடங்கினால்‌,
எங்கள்‌ அந்தணர்க்கு-தத்துவ நூல்‌ ஆராய்ச்சி யுடைய எங்கள் பெரியோர்களுக்கு,
மயிர்த்‌ தாரைகள்‌ பொடிக்கும்‌ – சரீரத்திலுள்ள்‌ மயிரொழுங்குகளெல்‌லாம்‌ சிலிர்க்கும்‌ ;
கண்கள்‌-கண்களில்‌,
நீர்‌ மல்கும்‌ – ஆனந்தக் கண்ணீர்‌ பெருகும்‌ ;
மா மறையுள்‌-சிறந்த வேதத்தின்‌ பொருள்களுள்‌,
அயிர்த்தார்‌-சந்தேகித்த வர்களுக்கு அயிர்த்த பொருள்‌ – சந்தேகித்த அர்த்தங்களெல்லாம்‌,
வெளியாம்‌ – நன்றாக விளங்கும்‌ ;

முக் குற்றமும் போக்கிய குருகூர் நம்மாழ்வார்‌ அருளிச் செய்த திருவாய் மொழியைச்‌ சொல்லத் தொடங்கினால்‌ அதனைக்‌ கேட்கும்‌ சத்துவ ஆராய்ச்சி யுடையவர்களுக்கு எல்லாம்‌ மயிர்‌ புளகிக்கும்‌ ; கண்ணீர்‌ வடி.யும்‌; ௮ன்றி வேதப் பொருளில்‌ சந்தேக முற்றவர்களுக்கு அந்தச்‌ சந்தேகமும்‌ நிவர்த்தியாகும்‌ என்பதாம்‌. என்றும்‌ நீங்கா இயல்பினவாதலால்‌ உயிர்த் தாரையிற்‌ பொருந்திய முக்குறும்பென்றார்‌. அவை தம்‌மை யடையாதபடி இருந்தமையால்‌ செயிர்த்தார்‌ என்றார்‌, மயிர்‌ புளகித்தலும்‌ கண்ணீர் விடுதலும்‌ பக்தியினால்‌ தோன்றிய புற மெய்ப்பாடு,-வேதாந்தத்தில்‌ பொருந்தி யிருத்தலால்‌ தத்வ ஆராய்ச்சி யுடையாரை அந்தணர் என்றார்‌,-உபநிடதப்பொருளை அறிந்து மகிழ்பவர்‌ ௮ந்தணராதலால்‌ ௮வ்வுபநிடதங்களிலும்‌ இது சிறந்ததாகக் கண்டு மயிர் புளகிக்‌கும்‌, கண்ணீர் மல்கும்‌ என்றுரைப்பினும்‌ அமையும்‌,

———-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.
34–

சுடர் தோய்‌ – சூரியனும்‌ சக்திரனுமாகிய இரண்டு சுடர்களும்‌ தவழப் பெற்ற, சந்தனம் சோலை – சந்தன மரச் சோலைகள்‌ சூழ்ந்த,
குருகை – திருக் குருகூரில்‌,
பிரான்‌ – நம்மாழ்வார்‌,
வந்து சந்தித்தது –
வந்து ௮வதரித்ததானது ,
அந்தணர்க்கோ – பிராமணர்களுக்காகவோ,
நல்‌ அரும்‌ தவர்க்கோ – நல்ல அரிய தவத்தைச் செய்கின்‌றவர்களுக்காகவோ, : அன்றி – அல்லாமல்‌,
யோகியராய்‌ வந்தவர்க்கோ – யோகம்‌
செய்பவராகி அவதரித் தவர்களுக்காகவோ,
மறவாதியர்க்கோ – மாறு பட்‌ட சமயங்களிலிருந்து வாதஞ் செய்கிறவர்களுக்காகவோ,
மகாம்‌ குழை சேர்‌ – காதிலணிந்த மகர குண்டலம் தாழப் பெற்ற,
சந்தரம் தோளனுக்கோ – ௮ழகிய தோள்களை யுடைய இறைவனுக்காகவோ, அவன் தொண்‌டர்கட்கோ-அவனுடையஅடியார் கட்காகவோ; (அறியோம்‌);

குருகூரில் நம்மாழ்வார் அவதரித்து அருளியது அந்தணர் முதலானவர்களுக்காகவோ என்பதாம் -வேதக் கடலில் புகுந்து நெறி தெரியாது மயங்காமல் அந்நெறியைத் தெரிவித்தலின் அந்தணர்க்கோ என்றார் -முதல் கடவுளை அறியாது பிற தெய்வங்களை விரும்பித் தவத்தில் உழல்வாரைத் தெளிவித்தலால் அரும் தவர்க்கோ என்றார் -யோகத்தால் அரிதின் அறியும் உண்மைப் பொருளைத் திருவாய் மொழியைக் கொண்டு எளிதில் உணரச் செய்ததினால் யோகியராய் வந்தவர்க்கோ என்றார் -புற மதஸ்தரை அடக்குதால் மற வாதியர்கோ என்றார் -மகரக்குழை -முதலை வடிவாகச் செய்த காதணி -சந்தனச் சோலை மிகவும் குளிர்ச்சி யுடைமையால் ஆழ்வார் பாடலும் அத்தன்மையது என்பதைக் குறிப்பால் உணர்த்திமை காண்க-ஓகாரங்கள் ஐயப் பொருளன-

இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்-எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே
. 35–

சந்தியும்‌ – பதப் புணர்ச்சி யிலக்கணமும்‌,
சந்தி – அப்படிப்‌ புணர்கின்ற,
பதமும்‌- சொல்லிலக்கணமும்‌,
அவை தம்மிலே -அந்தச் சொற்களால்‌,.
தழைக்கும்‌ – அடுக்கப்பட்டுப் பெருகுகின்‌ற,
பந்தியும் -வரிசையான செய்யுளிலக்கணமும்‌,
பல்‌ அலங்காரம்‌ பொருளும்‌- பல வகைப் பட்ட அணி யிலக்கணப் பகுதிகளும்‌, பயிலுகிற்பீர்‌ – ‘கற்றறிகின்ற புலவர்களே ! (இவற்றால்‌’ முத்தி மார்க்கத்தை யறிய மாட்டீர்‌);
தென்குருகூர்‌- அழகிய திருச்குருகூரை,
சிந்தியும்‌ – நினையுங்கள்‌ ;
தேவரை – ௮தில் அவதரித்த நம்மாழ்வாரை
தொழுது – கை குவித்து, .
ஆள்‌ செய்யும்‌ -அவருக்கு அடிமை செய்யுங்கள்‌
வந்தியும்‌ – நமஸ்கரியுங்கள்‌ –
வந்திப்பவரை-அப்படி வணங்குபவரை யாவது,
வணங்கும் -நீங்கள் வணங்குங்கள்‌)
வகை – முக்தி மார்க்கத்தை
அறிவீர் -அறிந்து கொள்வீர்கள்

பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே -அவ்விலக்கணங்களால் முக்தி மார்க்கம் அறிய மாட்டீர் -குருகூரை மனத்தினால் நினையுங்கோள் -நம்மாழ்வாரை அஞ்சலி செய்து அவருக்கு அடிமை செய்யுங்கோள் -வணங்குங்கோள் -வணங்குவோரை வணங்குங்கோள்-நீங்கள் முக்தி மார்க்கத்தை அறிவீர்கள் என்பதாம் -அலங்காரப் பொருளும் என்றதுக்கு உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணமும் உண்டு என்றும் உரைப்பினும் அமையும் -பூ சுரராலும் வணங்கப் பெறுவதால் தேவர் என்றால் -அவர் அவதரித்த ஊராதலால் அழகிய குருகூர் என்றார் -நெடும்தூரத்தில் இருப்பவர் வருவதற்கு இசையாமலும் இருக்கக்கூடும் என்பதால் அங்கிருந்தே நினையுங்கோள் என்றார் -அவ்வூர் ஏனைய முக்தி நகரங்கள் போல் அல்லாமல் இருப்பதால் சிந்திக்கவே முக்தி தரும் என்பது துணிவு -ஆட் செய்யக் கிட்டாவிடினும் அடியாரைத் தரிசித்த இடத்தே அவற்றைத் வணங்குங்கோள் என்றார் -மற்ற நான்கைக் கூறிவிட்டதனால் உப லக்ஷணத்தால் பொருளையும் கூட்டி பஞ்ச லக்ஷணம் என்றுமாம் -வந்தியும் முதலிய உம்மைத் தொகை புதியன புகுதலால் ஏவலுக்கு வந்தமை அறிக-

———-

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே
. 36–

பொருள்‌–அகப் புறப்‌ பொருள்‌.
திணை-கந்தருவத்தின்‌ வழவிய பெருந் திணை,
கிளவி–அறத்தொடு நிற்றல்‌,
துறை -பாங்கி செவிலியர்க்கு அறத்தோடு நிற்றல்

நீங்கள்‌-தேவரை – தெய்வத்தை,
ஏறிய- ஆவேசமாகப்‌ பெற்ற
மூது அறிவாட்டியை – முதிர்ந்த அறிவை யுடையளான கட்டுவிக்கியை
சீர்‌ அழித்தீர்‌ – நிலை குலையச்‌ செய்தீர்கள்‌
பூ வரை – மலர்கள்‌ மட்டும்‌,
ஏறிய – சூட்டப் பெற்ற,
கோதை -கூந்தலை யுடைய தலைவியது ,
உள்ளம்‌ – மனத்தில்‌,
புகுந்தார்‌ – புகுந்து வருத்துகின்றவர்‌,
எவர்‌ என்று – எவர் தாமென்று,
ஏ- பெருமை மிக்க ,
வரை ஏறி-நம்‌ குறிச்சியில்‌ வந்து,
மொழிகின்ற போது – சொல்லுகின்ற காலத்தில்‌,
இறைவர்‌ – தலைவராகிய,
மூவரையோ – திரி மூர்த்திகளையோ ?
குரு கூரரையோ – அன்றிக்‌ குருகூர்‌ நம்மாழ்வாரையோ?
கூறிற்று -சொல்லியது
முந்து உற- முன்னதாக,
சொல்லும்‌ – சொல்லுங்கள்‌ ;

நீங்கள்‌ கட்டு விச்சியாகிய மூதறிவாட்டியின்‌ பெருமையைக்‌ கெடுத்து விட்டீர்கள்‌; நம்‌ தலைவியின்‌ மனத்திற்‌ புகுந்தார்‌ யாரெண்று வினாவுகின்‌ற பொழுது மூவர் புகுந்தாரென்றோ அல்லது குருகூர்‌ ஆழ்‌வார்‌ புகுந்தா ரென்றோ ௮வள்‌ கூறியது. அதனைச்‌ சொல்லுவீ ரென்பதாமாம்‌, கட்டு- ஒருவிதக் குறி : ; முறத்தில்‌ நெல்‌ மூதலியவற்றை வைத்து
அக்‌ கடவுளைப் பரவி அந்த நெல்லில்‌ ஒரு பிடியள வெடுத்துத்‌ தனியே வைத்து இந் நெல்‌ ஒற்றைப் பட்டால்‌ தெய்வத் தானாயிற்றென்றும்‌ இரட்டைப் பட்டால்‌ பிற நோய்‌ முதலிய வென்றும்‌ கூறுவதோர்‌ குறி யென்‌று சில நூல்களால்‌ தெரிகின்றது.-இக் குறி, கட்டு வைத்தல்‌, கழங்கு பார்த்தல்‌, கன்னமெடுத்தல்‌ எனப்‌ பலவகைப் படும்‌. கட்டு வைத்து
உரைப்பவள்‌ கட்டுவிச்சி -, அறிவுடைய மூதிர்ந்தவளாதலால்‌ மூதறிவாட்டி யென்றாள்‌. இவளுக்கு நோய்‌ வந்த மூலமறிந்து கூறாமல்‌ மாறாகக் கொண்டு குறி பார்க்கத்‌ தொடங்கியதனால் அவளைச்‌ சீர் அழித்தீர் என்றாள்‌-தெய்வத்தால்‌ தீண்டப்‌ பெற்றிலளென்பது தோன்றப்‌ பூவரை யேறிய கோதை யென்றாள்‌. தெய்வம் தீண்டப்‌ பெற்றால்‌ பூவைச் ரூடு மறிவு பெறாளென்று இங்கனம் கூறினளாம்‌. தலைவன்‌ பிரிந்ததனால்‌ வருந்திய மனத்தினளாய்‌ ௮ணி முதலிய அணிபப் பெறாமல்‌ பூ மட்டுஞ்சூடிய கோதை யெனினுமாம்‌. திரிமூர்த்திகளிலும்‌ மேலாக ஆழ்வாரை இவள்‌ மனங்கொண்டிருப்பதனால்‌ மூவரில்‌ யாரேனும்‌ இவள்‌ உள்ளம்‌ புகுந்தாருண்டோ என்று நகை யாடிக்‌ கூறினாள்‌. நம்மாழ்வாரையே இவள்‌ கருதி இருக்கிறாள் என்பதைக்‌ கொள்ஞங்களென்பாள்‌ அவரை ஈற்றில் கூறி முடித்தாள்‌. தலைவனது இயர்பெயர்‌ கூறுதல்‌ அகப் பொருள்‌ கந்தருவ வழக்க மில்லாமையால்‌ பின்னர்‌ நான்கும்‌ பெருந்திணை பெறுமே ? என்ற சிறப்புடைய பெருந் திணை யன்றிக்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணை யாயிற்று- அறத்தொடு நிற்றல்‌ – தலைவி தரும வழி தவறவில்லை யென்‌றதை நிலை நிறுத்துதல்‌, தலைவியின்‌ அபிப்பிராயத்தை யறிந்த தோழி தாய்மார்க் கறிவித்தல்‌ துறையின்‌ கருத்து. முதுமை யென்னும்‌ பண்புப்‌ பெயர்‌ ஈறு போய்‌ ஆதி நீண்டது. ஆட்டி – பெண்‌ பாற் பெயர்‌, “அன்ன பிறவு மவற்றொடு சிவணி, மன்னிய வினைய நிமித்த மென்ப” (தொல்‌ -பொரு – 287) என்ற சூத்திர வுரையில்‌ கைக் கிளைக்கும்‌ பெருந்‌ திணைக்கும்‌ மெய்ப்பாடு வரை யறை யின்றி வேண்டியவாறு வரப் பெறுமென்றதனால்‌ இதற்கு ஒன்றனை நிலையிட்டு உரைக்க வில்லை. பயனுமப்படியே கொள்க.

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

————

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.
37–

துறவாதவர்க்கும்‌ -இல்லறத்தி லிருப்பவர்க்கும்‌,
துறந்தவர்க்கும்‌ – துறவறத்தி லிருப்பவர்க்கும்‌,
சொல்லவே – சொல்லும் பொழுதிலேயே, சுரக்கும்‌ – கருணை யாகிய பாலைச் சுரக்கின்ற,
அறம்‌ – தரும வடிவமாகிய,
ஓ ஆயிரம்‌ ஆ அவை – ஒரு ஆயிரம்‌ பசுக்கள்‌,
இங்கு நிற்க – இவ் விடத்திருக்கையில்‌,
அந்தோ – ஐயோ !
சிலர் போய்‌ – சிலர் சென்று,
மறம்‌ வாதியர்‌ – மாறுபட்ட வாதங்களைச சொல்லுகின்ற புறச் சமயிசள்‌,
சொன்ன – சொல்லிய,
ஆசு – குற்றத்தை,
அகம்‌ ஆம்‌ -தன்‌னிடத்தில் கொண்ட நூல்களாகிய
மலடு ஆவைப்பற்றி – மலட்டுப் பசுக்களைப்‌ பிடித்துக் சொண்டு,
கறவா – கறந்து,
கிடப்பர்‌ – உழலுவார்‌ ;
அங்கு – அந்தப் பசுவினிடத்தில் ,
தங்கள்‌ கை வலிப்பே – அவர்கள்‌ கை
வருந்துவதானது ,
என்‌ பெறவோ -வேறு யாது பயனைப்‌ பெறுவதற்காகவோ?

யாவர்க்கும்‌ சொல்லின அளவிலே பயனைத் தருகின்ற காமதேனுவை யொத்த திருவாய்மொழி ஆயிரம்‌ பாடல்களுமிருக்க அவற்றை விட்‌டுப்‌ புறச் சமயிகள்‌ சொன்ன மலட்டுப் பசக்கள் போன்ற ‘நூல்களில் சென்று பயன் கருதி வருந்துவார்‌ அதனால்‌ தங்கள்‌ கை வருந்துவது வேறு யாது பயனைக்‌ கருதியோ !? ஒன்றுமில்லை யென்பதாம்‌. துறவாதவர்க்கு இருமைப் பயனையும்‌, துறந்தவர்க்கு மறுமைப் பயனையும்‌ தன்‌னை நினைத்தவுடனே கொடுத்தலாலும்‌ மற்றும்‌ வேண்டியவர்க்கு வேண்டிய படியே காம தேனுவைப் போலக் கொடுத்தலாலும்‌ திருவாய்மொழியைக் காமதேனுவாக உருவகப் படுத்திக்‌ கூறினார்‌. புறச் சமையத்தார்‌ நூல்கள்‌ மலட்டுப் பசுவைப் போலப்‌ பயன் கொடாதொழிவதன்றித்‌ தம்‌மைப்‌ படித்தவர்க்கு நரகத்கையும்‌ கொடுப்பதால்‌ குற்றம்‌ பொருந்திய மலட்டுப் பசு வென்றார்‌-மற வாதியரென்ற பன்மைப் பெயராற்‌ கூறினமையால்‌ ஆசுகளை அகத்‌திற் கொண்ட பல நூல்களே யென்பது வெள்ளிடை மலை போல
விளங்கிக் கிடக்க இதனை நன்கு ஓராமல்‌ எல்லாச் சமயத்தாராலும் புகழும்‌
-மாணிக்க வாசகர்‌ திருவாசக மென்று ஒன்றனைச் சட்டிக்‌ கூறி எரி வாய்‌ நரகிற்கு
ஆளாகின்றாரும் சிலர் உளர்‌. ஆ அவை, ௮வை- பகுதிப் பொருள்‌ விகுதி. ௮ந்தோ – இரக்கக் குறிப்பிடைச் சொல்‌ ; : தனித் தமிழ்‌ மொழி- அந்தீற்றோவும்‌”என்றதனா லறிக , ஆசகம்‌- அன்மொழித் தொகை ,-இப் பாடல்‌ உருவகவணி..

குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
. 38–

பொருள் –புறப் பொருள்‌.
திணை – பெருந் திணை
கிளவி : இரு பாலில்‌ பெண்பாமல் கூற்று,
துறை–தலைவி மடலூரத் தோழி சாற்றுதல் .

குருகூர்‌ என்னும்‌ ஆறு ௮றியா – குருகூரென்றும் சொல்லு வதற்கும் தெரியாத,
பைதலை-எந் தலை மகளை,
கோகு – தன்‌ தோள்களை ,
தட்டிட்டு-தட்டிக் கொண்டு,
ஏட்‌டில்‌- பனை மடலாலகிய குதிரையில்‌,
ஏற்றிய-ஏறும்படி செய்த,
பண்பனை-இயல்புடைய தலைவனை, (குறித்‌து ),
கை – கைகளை,
தலை பெய்து – தலைக்கு மேல்‌ தூக்கி , அரும்‌ பூசல்‌ இட்டு-பேரிரைச்சலிட்டு,
கவியால்‌ – செய்யுட்களால்‌,
உலகை – உலகத்திலுள்‌ள் உயிர்களை,
உய்தலைச் செய்ததும்‌ – ஈடேறும்படி. செய்ததும் ,
பொய்‌ என்றுமோ – பொய்யென்று சொல்லுவோமோ ?
சென்று-அந்தக் குருகூர் புகுந்து,
அவ் வூர்‌ அறிய – அவ்வூரார் அறியும் படி,–
வைது அலைத்து– துன்பப் படுத்தி,
ஏசுதுமோ – இகழ்வோமோ ?[யாது செய்வோம்‌?.]

குருகூர் என்றும் சொல்லவும் கற்றறியா எமது தலை மகளை இப்படி மடலூரும்படி செய்த நம்மாழ்வாரைச் சென்று பெரும் பூசலிட்டு நுமது பாடலாலுகத்தை வாழ்வித்தது பொய்யென்போமா ? அவ்வூரார்‌ அறியும்படி வைது அலையச் செய்து ஏசுமோமா?யாது செய்வோமென்பதாம்‌-தலைவி பால்‌ அண்பு மிகுதியால்‌ பெண் பாலை ஆண் பாலாகப்‌ பைதல் என்றாள் – ஆண் மகனில்‌ சிறுவனுக்கும்‌ துன்பத்திற்கும்‌ பெயர்‌,
‘பைத்தலை யாவெனக் கனன்று பைதலை, யித்தனை போது கொண்டிருப்ப தோவெனா ” இங்கு ஹனுமானைப்‌ பைதலென்‌றதும் , “பைதல வாகிப்‌ பசக்குவ மன்னோ… கண்‌! இங்குத்‌ துன்பத்துக்கும்‌ ஆயிபனமையுமறிக -ஆண்பாற்‌ குழந்தைகளைப் பிள்ளை யென்பதால் -கிளிப்பிள்ளை யென்னும்‌ வழக்குப் பற்றிக்‌ கிளிப் பைதல் என்றார் -ஆழ்வாரும்‌, கோகு தட்டுதல் – தோள் தட்டுதல்‌; கோகு கட்டிட்டு என்று பாடமோதி கோகு உகட்டிட்டு என்று பதம்‌ பிரித்தார்‌ பூர்வாச்சார்யர்- எனின்‌ அதுவும்‌ ஏட்டுப் பிரதியில்‌ தட்டென்பது கட்டென்று ப்‌றழ இருந்திருக்கக் கண்டு அங்கனமே வைத்து உரை யெழுதி யிருக்கலாமன்‌ றி உகட்டென்‌று வேறு ஓரு நூலிலும் காணப் படாப் பதம்‌ இவர்களுக்குத்‌ தோன்றிப்‌ பொருள் பட்டமை யிறும்‌பூதென்க.-பனை மடற் குதிரை- பனங்கருக்குக்களை வெட்டி. ஒரு குதிரை போலக் கட்டி அதன்‌ மேல் ஏறி நின்று இளையாரைக் கொண்டு. அப்பெண்‌ணிருக்கும் தெருவழியே மூன்று நாள்‌ வரையில் இழுக்கச் செய்து அந் நாட்களுக்குள்‌ ௮ப் பெண்ணைக் கொடா விட்டால்‌ நாலா நாள்‌ மலை மேலேறி விழுந்திருப்பது – ஆண்பால்‌ மடற் கூற்று, பெண் பால்‌ மடலேறுவதற்கு விதியில்லாமையால்‌ பொருந்தாதாயினும் பிற் காலத்தார்‌ இங்கனம் எழுதுதலால்‌ இது புறத் திணையில்‌ அடக்கலாயிற்று,

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே-கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து – அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே – ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே
. 39–

மகிழ் மாறன்‌ – மகிழ மாலை யணிந்த நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
செய்யுள்‌ – பாடல்களை,
௭ண்ணும்‌-தியானிக்கின்ற,
தகைமைக்கு-தகுதிக்கு ,
உரிய – ஏற்ற,
மெய்‌ – உண்மையான,
யோகியர்‌ – யோக சாதனை யுள்ளவர்களுடைய,
ஞானம்‌ என்னும்‌ கண்ணும்‌- அறிவாகிய மனக் கண்ணும்‌,
மனமும்‌ – உள்ளமும்‌,
செவியும்‌- காதுகளும்‌,
தவஞ்செய்த-தவஞ்செய்‌தன :
காலத்திலே, பண்ணும்‌–குறிஞ்சிப் பண்‌ முதலிய இராகங்களும் –
தமிழும் -தமிழ் மொழியும்‌, தவம் செய்தன
பழ நால் மறையும் -பழைமையான நான்கு வேதங்களும்
மண்ணும் -பூ வுலகும்
விசும்பும்‌ – விண்ணுலகும்‌, தவம் செய்தன-

நம்மாழ்வார்‌ பாடி யருளிய பாடல்களைத்‌ தியானித்தற்குரிய யோகியர்களுடைய ஞானக் கண்‌ணும்‌ மனமும்‌ செவியும் தவஞ்செய்‌தன -காலத்திலே பண்களும் தமிழ் மொழியும்‌ மறையும்‌ மண்‌ணும்‌ விண்‌ணும்‌ தவம் செய்தன வென்‌ தாம்‌.-எனவே யோகியர்‌ இவர்‌ பாடல்களையே கருதுவார்கள் எனவும்‌ இப் பாடல்களுக்கு பண்கள்‌ இன்றியமையாதான எனவும்‌,-தமிழுக்கு இந்நூல் ஒரு ஏற்றமுடையது எனவும்‌, நான்‌கு மறையுமென்றதனால்‌ நான்கு வேதங்களின் சாரமே யிவர்‌ நூல்கள் எனவும் , மண்ணும்‌ விசும்புமென்‌றதனால்‌ இருமைப் பயனும்‌ இந்நூல் அளிக்கும் எனவும்‌ கூறினாராயிற்று, பண்‌ – முற் கூறப் பட்டது, மண்‌, விசும்பு-இட வாகு பெயர்கள்‌,

————-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே
. 40–

கடை நாள்‌ – உலகமொடுங்கும்‌ ஊழிக் காலத்தில்‌,
ஆலத்திலே – ஆலிலையிலே,
துயின்றோர்‌ – பள்ளி கொண்டருளிய வாசு தேவர்‌,
கொண்ட. – தாம்‌ எடுத்துக் கொண்ட, ஐயிரண்டாய்‌ அமைந்த -பத்தாக எண்ணப்பட்ட,
கோலத்திலே – வழிவங்களிலே,
முளைத்து – தோன்றி,
கொமுந்து ஓடி – மேலோங்கி வளர்ந்து குணம்‌ கடந்த – மிக்குணங்‌களுக்கும்‌ அப்பாற் பட்டு நின்ற,
மூலத்திலே செல்ல – காரணப் பொருளிடத்திலே செல்‌லும்படி ,,
மூட்டிய ஞானத்து – மெய்ஞானத்தை எமக்குத்‌ தந்தருளிய,
எம்‌ மூர்த்தியை – நம்மாழ்வாரை,
குருகூர்‌- அவர்‌ அவதரித்த திருக் குருகூரில்‌,
காலத்திலே புக்கு – உரிய காலத்திலே புகுந்து,
கைக்கொள்மின்‌ – தரிசித்து நற் பயனைக்‌ கைப் பற்றுங்கள்‌ ;

ஆலிலையில் பள்ளி கொண்ட மாயோனது தசாவதாரங்களில்‌ யீடுபட்டுக்‌ காரணப் பொருளாகிய அவ் வாஸூ தேவனிடத்துச்‌ செல்லும் படியான மெய்ஞ் ஞானத்தை நமக்குத் தந்தருளிய நம்மாழ்வாரை உரிய காலத்திலே சென்று வணங்கிப்‌ பிழையுங்கள்‌ என்பதாம்‌, எல்லாம்‌ அழிந்து முடிவிலும்‌ நிலை பெற்று விளங்குவதால் கடை நாள்‌ ஆலத்திலே துயின்‌றோர் என்றார் -பத்து அவதாரங்களும் கர்மவசம் அல்லாமல் தன்னிச்சையால் எடுத்தமையால் கொண்ட என்றார் -தனக்கு என ஓருபொருளைவிரும்பிலராதலால்‌ கொண்மினோ என்றார்‌. உலகெலாமொடுங்கும் கற்ப காலத்தில்‌ அவற்றை அழியாதபடி மாயோனானவன்‌ தனது திருவயிற்றில் அடக்கி ஆதி சேடன்‌ வடிவான ஆலிலையில்‌ யோக நித்திரை செய்தருளுவன் என்பராதலால்‌ கடைநாள்‌ ஆலத்திலே துயின்றோர் என்றார்‌. ஆலத்தில்‌, அத்து – சாரியை,

————-

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே
. 41–

முழு ஏழ்‌ உலகை – ஏழுலகம் முழுவதினையும்‌,
முழுகுகின்ற – படிகின்ற,
தீர்த்‌தத்தினை – பரிசுத்தரன கடவுள்‌நிலையையும்‌,
செய்ய – செவ்விய,
வேதத்தினை – வேதங்களையும்‌,
திருமால்‌ பெருமை – சிறந்த மாயோன்‌ பெருமையை,
பார்த்தற்கு – அருச்சுனனுக்கு,
அருளிய – சொல்லி யருளிய,
பாரதத்தை – கீதை யடங்கிய மகா பாரதத்தையும்‌,
பணித்‌தானும்‌ – வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌,
நின்‌ற- நிலை பெற்ற,
வார்த்தை – திருவாய்‌ மொழியை யுடைய, குருகைப் பிரானும்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரும்‌, ஆகிய அவ் விருவருமே,
௮ம் மறைப்பொருள்‌-, அந்தப் மறைவா யுள்ள உண்மைப் பொருளை,
கண்டார்‌ – அறிந்தவராவார்கள்‌,

உயிர் நிலை, உலக நிலை, கடவுள் நிலை, என்னும்‌ மூவகை நிலைமைகளையும்‌ நான்கு வேதங்களையும்‌ ஐந்தாம் வேதமாகிய மகா பாரதத்தையும் வெளி யிட்டருளிய வியாஸ முனிவரும்‌ நிலை பெற்ற திருவாய்மொழியைப் பாடி யருளிய நம்மாழ்வாரும்‌ ஆகிய இவ் விருவருமே அந்த மறைவாயுள்ள உண்‌மைப் பொருளை யறிந்தவராவார்கள் என்பதாம்‌. மூவகை நிலையை வேதாந்த ஸூத்திரத்தால்‌ வெளியிட்டமை வெளிப்படை-வேதாந்த ஸூத்திரங்கள் அடங்கிய உதர மீமாம்சையும்‌ வேதமும் பாரதமும் கூறும் பொருள் எல்லாமே இந்தத் திருவாய்மொழி கூறுமெனவும்‌ அந்த வியாஸ முனி போல இந்த ஆழ்வார்‌ மகோபசாரியா யுலகத்துக்கு நன்மை செய்தவரெனவுங்‌ கொள்ளக் கிடந்தமை காண்க,

———

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே
. 42–

பொருள் –அகப் பொருள்‌.
திணை – பாலை.
கிளவி.-பொருள் வயிற் பிறிவு.
துறை–நெஞ்சோடு மறுத்தல்

(நெஞ்சமே!) குருகூர்‌ புனிதன்‌ -திருக் குருகூரிலவதரித்‌த பரிசுத்தரான நம்மாழ்வாருடைய,
அருளை – கருணையை,
சுமந்தவள்‌ -அடைந்தவளாகிய தலைவியின்‌,
கண்ணின்‌ கடை திறந்து – கடைக் கண்‌ணைத் திறந்து கொண்டு,
ஆறு பட்டு – ஒரு ஆறாகி ,
வெளி பரந்து – வெளியிற் பரவி,
குருளை சுமந்து – காட்டில்‌ விலங்கின்‌ குட்டிகளை அடித்துக் கொண்டு,
ஒட்டரும்‌ – ஓடி வருகின்‌ற,
கொள்ளை வெள்ளம்‌ – மிகுதியான கண்ணீர்‌ வெள்ளமானது ,
உருளை – சக்கரங்களை யுடைய,
மணி சுடர்‌ – இரத்தினங்கள்‌ பிரகாசிக்சின்ற,
தேரை – என்னுடைய தேரை ,
வந்து உதைக்கின்றதே -வந்து தடுக்கின்றதே;
அந்தோ. ஐயோ!
பொருளை… சுவை என்று -சிறப்புடையதென்று கொண்டு,
எங்கே போவது – எப்படி நான் போகலாகும்‌?

நெஞ்சமே நம்மாழ்வார்‌ அருள் பெற்ற நம் தலைவியின்‌ கடைக் கண்‌ணில்‌ நின்‌று வடிகின்ற கண்ணீர்‌ வெள்ளமானது நாம் போகும்‌ வழியில்‌ குறுக்கே வந்து தடுக்கின்றதே! ஐயோ ! நாம்‌ எப்படிப் பொருள்‌ சம்பாதிக்கப் போவது என்பதாம்‌.-குருகூர்ப் புனிதன்‌ அருளைச் சுமந்தவள்‌ கண்ணீர் வெள்ளமானதால்‌ அதற்குத் தப்பி எப்படிப் போவதென்று நெஞ்சத்தோடு கூறிச்‌ செல வழுங்கினான்‌- பிரிவாதலால் பாலை யாயிற்று, தாயத்தால் செய்தது தேவரும்‌ பிதிரரும் இன்புறார்‌? என்பது விதியாதலால்‌ தானே பொருள்‌ சம்பாதித்து அதனால்‌ அறம் செய்ய வேண்டி வேற்று நாடுகளை வென்று அவ் வரசரால் இடுகிற கப்பங்களைப் பெற்று வருதற்குப்‌ போனமையால்‌ பொருள் வயிர் பிரிவென்று பெயராயிற்று, மெய்ப்பாடு–அசைவு பற்றிய பெருமிதம்‌, பயன்‌ நெஞ்சொடு கூறி யாற்றுதல்‌, ஓட்டரும் – ஓட்‌டம் தருமென்பதன்‌ விகாரம்‌.

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் – ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே
. 43–

பொருள் -அகப் பொருள்
திணை குறிஞ்சி.
கிளவி-இருவரும் உளம் அழிய அவன் வரவு உணர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மாறன்‌ – நம்மாழ்வார்‌ அவதரித்த,
குருகை -திருக்குருகூரில்‌,
வஞ்சி – இம்மாதின்‌, கொங்கைகள்‌-.—-.,
வந்து – தோன்றி,
அடி கொண்டன – மார்பில்‌ அடி பரந்து பெருத்தன ;
செம்தடித்து அன்ன – செவ்விய மின்னல் போன்ற,
மருங்கிற்கு- இடைக்கு,
நிற்‌கும்‌ – நிலை நிற்கக் கூடிய,
சிக்கனவு உண்டோ – அக் கொங்கைகளைத்‌ தாங்கும்
வவிமை யுண்டோ ? (இல்லை) ;
என்றால்‌ – கொங்கைப்‌ பெருமனும்‌ இடையின்‌ துவட்சியும்‌ இப்படி யென்றால்‌,
கொந்து – பூங்கொத்‌துக்கள்‌,
அடிக் கொண்ட – சூடப் பெற்ற,
குழலும்‌ – தலை மயிரும்‌,
கலையும்‌- இடையிற் கட்டிய சேலையும்‌,
குலைந்து – நிலை குலைந்து,
அலைய -சோர,
பந்து அடிக்கும் தொறும்‌ – இவள் பந்தடிக்கும் போதெல்லாம்‌,
நெஞ்சம்‌ – என் மனமானது,
பறை அடிக்கின்றது – துடிக்கின்றது

ஆழ்வார்‌. குருகூரில்‌ இம் மாதின்‌ கொங்கைகள்‌ பருக்கின்றன ;இடைக்கு அவற்றைத்‌ தாங்கும்‌ வலிமை யுண்டோ -(இல்லை 😉 இந் நிலைமையில்‌ இவள்‌ குழல் குலைந்து கலைய அலையப் பந்தடிக்கும் போதெல்லாம்‌ என்‌மனந் துடிக்கின்‌றதே யென்பதாம்‌.–இதில் கூறிய படியே : அடிக் கொண் டகுலவுக்‌ கொங்கை’* என்றார்‌ இராமாயணத்திலும்‌. மார்பிடமெலாம் கவர்ந்து வட்டமிட்டு அடி யிட்டு நாளுக்கு நாள்‌ மேல் வளர்தலால்‌ அடிக்‌ கொண்டன வென்றான்‌, வஞ்சி – ஒரு கொடி ; கொடி போன்ற இடை யுடையாளாதலால்‌ அப் பாரத்தை இடை தாங்காதென்னுங் குறிப்பால்‌ வஞ்சி யென்றான்‌. பின்னும்‌ ஆடுதல் நோக்கி ஆற்றாமையால்‌ உண்டோ சிக்கன வென்று வெளிப்படக் கூறினான்‌. பந்தாடுமிடத்திற்‌ புகுந்த தலை மகன்‌ தலைவி பந்தடிப்பதை நோக்கிக்‌ கூறினதாகத்‌ துறை கூறினமையில்‌ இது கிளவியில் அடங்க வில்லை யெனினும்‌ ஒன்றனுள்‌ அடக்க வேண்‌டி யிருத்‌தலால்‌ இருவருமுளவழி யவன் வர வுணர்‌தலின்‌ பாற் படுத்தலாம்‌, மெய்ப்‌பாடு- உவகை, பயன்‌-தலைமகளைச் சார்தல்‌.

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே.
44–

கனவு ஆயினவும்‌- சொற்பன அவஸ்த்தையின்‌ பகுதிகளையும்‌,
துரியமும்‌ ஆயயையும்‌ – துரியாவஸ்தை முதலியவைகளையும்‌,
கடந்து -தாண்டி,
மனம்‌ வாசகங்களை -மநோ வாக்குகளையும்‌,
வீசிய- கடந்த,
மாறனை – மாறனென்னும்‌ பெயருடையவரும்‌,
மா மறையை- சிறந்த வேதங்களை, வினவாது உணர்ந்த- பிறர் பால்‌ ஒதாமல்‌ உணர்ந்த,
விரகனை -௮றிவுடையோரும்‌,
வெவ்வினையை – கொடிய தீச் செயல்களெல்லாம்‌,
தொலைத்த – போக்கிய,
சினம்‌- கோபத்தை யுடைய,
வாரணத்‌தை -யானை போன்றவரும்‌, குருகைக்கு அரசனை – திருக் குருகூர்க்குத்‌
தலைவருமாகிய நம்மாழ்வாரை,
சேர்ந்தனம்‌ – யாம்‌ சரணமாக அடைந்தோம்‌;

கனவு துரியம்‌ முதலிய ஐந்து ௮வஸ்தைகளையும்‌ தாண்டி எம் மனோ வாக்குக்கு எட்டாத மாறனென்பவரும்‌ ௮ரசனுமாகய நம்மாழ்வாரை நாம்‌ சரணமாக வடைந்தோம்‌ என்பதாம்‌-ஆயினவும்‌ என்பதனால்‌ கனவின்‌ முன்னுள்ள ஜாக்கிரத அவஸ்தையும்‌ பின்னுள்ள சுழுத்திய அவஸ்தையும் கொள்ளப் படும்‌, ஆயவையும்‌ என்பதனால்‌ துரியாதீத அவஸ்‌தையும்‌ கொள்க. அதன்‌ உட்‌ பகுதி பலவாதலால்‌ ஆயவை என்று பன்‌மையாற்‌ கூறினார்‌ ; எனவே ௮வத்தை ஐந்து என்றவாறாம்‌! அவையாவன:– ஜாக்கிரதம் , சொற்பனம்‌, சுழுத்தி, துரியம்‌, துரியாதீதம்‌ என்பன-இவற்றின்‌ பொருள்‌ முறையே விழித்திருத்தல்‌, கனா நிலை , அயர்ந்து தூங்குதல் -உயிர் ஒடுங்கி சமாதி யிருத்தல் கடவுளொடு கலத்தல்‌, என்‌பனவாம்‌. மனத்தால்‌ எண்ணுதற்கும்‌ வாயினால் சொல்லுதவற்கும்‌ எட்‌டாத நிலைமை யாராதலால்‌ மன வாசகங்களை வீசிய மாறனென்றார்‌,-“மயர்வற மதி நலம்‌’ அருளப்‌ பெற்றவராதலால்‌ வினவாது உணர்ந்த விரகனென்றார்‌. சடமென்னும் வாயுவைக் கோபித்தவராதலால்‌ வினை தொலைத்த சின வாராணமென்றார்‌. இது ஒரு பொருள் மேல்‌ பல பெயர்‌ வந்து சோரந்தனமென்ற ஒரு வினையைக் கொண்டது-. யாம்‌-தோன்‌றா எழுவாய்‌,

———-

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே
. 45–

அவ் வரியினுக்கு – அந்த மாயோனுக்கு,
வேதம்‌- வேதங்களால்‌,
செப்பும்‌- சொல்லப்படுகிற,
பேர்‌ ஆயிரம்‌ – திருப் பெயர்கள்‌ ஆயிரங்களாம்‌;
திண்‌ – வலிய,
பெரும்‌ புயம்‌ – பெரிய தோள்களும்‌, ஆயிரம்‌-ஆயிரங்களாம்‌;
துளவம்‌ பெய்‌- திருத் துழாய வைத்துத்‌ தொடுத்த,
தார்‌- மாலை,
ஆர்‌ – பொருந்திய,
முடி – திரு முடிகள்‌,
ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌; (அப்படி யெல்லாம்‌ ஆயிரமாயமைந்தன போல,) குருகூர் – திருக் குருகூரிலவதரித்த ,
சடகோபன்‌ – நம்மாழ்வார்‌,
சொன்ன – சொல்லியருளிய,
ஆரா – தெவிட்டாத,
அமுதம் கவி- அமிர்தம்‌ போன்ற பாடல்‌கள்‌, ஆயிரம்‌ – ஆயிரங்களாம்‌ : (ஆதலால்‌;) பெருஞ்‌ செல்வர்க்கு – பெரிய அனுபோகப்‌ பொருளுடையார்க்கு,
சேராதன உளவோ – அடையப்‌ பெறாதேவைகளும் உண்டோ? -எல்லாம்‌ அடையும்‌ -என்றவாறு –

மாயோனுக்குத் திருப் பெயர்கள்‌ ஆயிரம்‌ ; தோள்களுமாயிரம்‌ ;முடிகளும்‌ ஆயிரம்‌ ; அப்படிப் போல நம்மாழ்வார்‌ பாடல்களுமாயிரம்‌ ;ஆதலால்‌ பெருஞ்‌ செல்வரை யடையப்‌ பெறாதவை யுமுண்டோ ?? எல்‌லாம்‌ அடையுமென்பதாம்‌, உலக குருவாகிய ஸ்ரீ சங்கராசாரியருரை
செய்தருளிய ஏற்ற முடைமையால்‌ ஸகஸ்ரநாமமென்னு நூலைக்‌ கூற வந்தவர் அதன்‌ தயிழ்‌ மொழியாகிய பேராயிரமென்றார்‌, புயமாயிரம்‌, முடியாயிரம்‌- இவற்றிலுள்ள ஆயிரங்கள்‌ மிகுதிப்‌ பொருளன-திண்‌ பெரும்‌ புயம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌. இதன்‌ முதலடி. வேற்றுப்‌ பொருள் வைப்பணி –

———–

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே
. 46–

பொருள் – அகப்! புறப்‌ பொருள்‌. ்‌
திணை-நெய்தல்‌.
கிளவி -தூதில் பிரிவு.
துறை—காமக்‌ கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழிலி பாங்கி தளர்தல் .

முரி – வளைந்த,
வளை- சங்கு பெற்ற, –முத்தும்‌,
சினையும்‌ – அன்னப் பறவை ஈன்ற முட்டையும்‌,
மயங்க – வேறுபாடு தோன்றாமல்‌ கலந்திருக்க (அவற்றை யீன்ற),
வரி வளையும்‌ – கோடுகளுடைய சங்கும்‌,
அன்னமும்‌: அன்னப்‌ பறயையும்‌,
முறை செறுத்து – முறையே கோபிக்க,
தம்மிலே – தங்களுக்குள்ளே,
வழக்கு ஆட – விவகாரம்‌ பேச, (அப்பொழுது), வலம்புரி வளை – வலம் புரிச்‌ சங்கானது ,
ஊடு – அவ்விரண்டின்‌ நடுவிலே சென்று,
அறுக்கும்‌- அந்த வழக்கைத்‌ தீர்த்து விடுகிற,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த,
எம்‌ பூர்வலன் -எம்‌ இறைவன்‌,
அரி- வண்டுகள்‌,
வளை- வளைந்து மொய்க்கப்‌ பெற்ற,
பொன்‌ -பொன்‌ போன்ற,
மகிழ்‌ – தமது மகிழம்பூ மாலையை,
அந்தி வந்து – மாலைக்‌ காலத்தில்‌ வந்து, ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த தணிர் ஆபரண்களை யுடைய தலைவிக்கு,
ஈயும் கொல்‌ – கொடுத்தருளுவானோ ?

குருகூரிலிருக்கும்‌ எம்‌ தலைவன்‌ ௮ந்திச்‌ காலத்தில்‌ வந்து எம்‌ தலைவிக்குத்‌ தன்‌ மகிழ மாலை அளிப்பானோ என்பதாம்‌.-முத்தும்‌ சினையும்‌ வேற்றுமை தெரியாமல்‌ ஒரு தன்மையா யிருக்கக்‌ கண்டு மாறுபாடாய்‌ ஒன்‌றனை ஒன்று எனது எனது என்று முத்தைப்‌ பெற்ற சங்கும் சினையைப்‌ பெற்ற அன்னமும்‌ வாது கூறலும்‌ இடையிலே வலம்புரி சென்று
விலக்கி விடும்‌ நாடெனவே இரண்டு அரசர்‌ தம்முள்‌ மாறுபட்டுப்‌ போர்‌ தொடங்க எத்தனித்த பொழுது இடையில்‌ இத் தலைவன்‌ இருவரையும்‌ சமாதானப் படுத்த வேண்டித்‌ தூதிற்குக்‌ சென்றானென்பதை உள்ளுறை யுவமையாற்‌ கூறியது காண்க, ”ஓதலுர்‌ தூதும் உயர்ந்தோர்‌ மேன *என்‌றமையால்‌ அரசர்க்குத்‌ தூது போகலுரித் தென்க.–தூதில் பிரிவு கற்பிற்‌ குரியதனால்‌ தலைவி மாலை வேண்டாளென்பது தெளிவாகும்‌; ஆகவே இங்குக்‌ காமக் கிழத்தியே மாலை வேண்டற்‌ குரியவளாவாள்‌,கிளவித் தலைவன்‌ மாலையைச்‌ சுட்டிக்‌ கூறினமையாலிது அகப் புறமாயிற்று,-இரங்குதலால்‌ திணை – நெய்தலாயிற்று, காமக் கிழத்தியாவாள்‌ – சேரிப் பரத்தையின்‌ மசளாகித்‌ தலைவனைத்‌ தானும் மணந்துகொண்டு வேறு ஓருவரையும்‌ விரும்பா நிலையி லிருப்பவளென்க

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே-அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்-அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்-ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி-அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

———–

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே.
47–

பொருள் -அகப் பொருள்
திணை – நெய்தல்‌.
கிளவி -ஒரு வழித் தணத்தல்
துறை –சென்றொன்‌ நீடலில் , காம மிக்க கழிபடர்‌ கிளவி ,

எம்‌- எம்முடைய,
உறு- மிக்க ,
துரை பிறவி- விரைந்து பற்றுகிற பிறவிகளை,
துடைத்து – போக்கி ,
ஆட் கொண்ட – என்னை அடிமையாகக் கொண்ட,
தொண்டர் பிரான் – அன்பர்களின்‌ தலைவரான நம்‌மாழ்வார்க் குரிய,
துறை நீர்‌ பொருநை -துறைகள் பொருந்திய நீரையுடைய தாமிரபருணி யாற்றின்‌,
கரை துடைக்கும்‌ – கரையை மோதுகின்ற,
கடலே- சமுத்திரமே!
புரைதுடைத்து – எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப்போக்கி ,
பெரும் பொய்யும்‌ துடைத்து – தாம் சொல்‌லும்‌ வார்த்தைகளில்‌ பொய்யில்லாத படி போக்கி,
பிறர் புகலும்‌- அயலார்‌ கூறுகின்ற,
உரை துடைத்து – பழிச் சொல்லுகளுக்கும்‌ இடங்கொடாமல் போக்கி ,
௮ங்கு- புன்னை மரச் சோலையாகிய அவ் விடத்தில்‌,
உள்ள -யாம் கட்டியுள்ள,
ஊசல்‌ – அறுந்து போனகொடி ஊஞ்சலை,
துடைத்த -மீட்டும் கட்டி. அதிலுள்ள வருத்தத்தைப் போக்கின,
அன்பர்‌ – எம்‌ தலைவருடைய.
கால் சுவடு – சேர்க்கால் சென்‌ற வழியை, துடையேல்‌ – அழித்து விடாதே கொள்‌;

கடலே! எம் தலைவர் வந்து சென்ற தேர்க் காலின்‌ சுவட்டைத் துடைக்‌காதே என்பதாம்‌–கைக்கிளையில்‌ தலைவனை நோக்கியவுடன்‌ தனக்குண்‌டாகிய காமத் துன்பத்தைத் தரிக்கினமையால்‌ புரை துடைத்தென்றாள்‌-கடல் தெய்வச்தைக் காட்டி உன்னைப் பிரியேன்‌ என்று சத்தியஞ் செய்ததினால் தான் வேறு கருதாதபடி மெய்யென்பாள்‌ பொய்யுந் துடைத்தென்றாள்‌-பிரிந்தால்‌ தலைவிக்கு வேறு பாடுண்டாகுமே- அதனைப்‌ பிறர் கண்‌டால்‌ பழிப்புக்கு இடமாகுமே யென்று பிரியாதிருந்தமை தோன்றப்‌ பிறர் புகலமுரை துடைத்தென்றாள்‌. ஊசல்‌ -அடும்பு முதலிய கொடிகளை ஒன்றாகத் திரித்து மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிட்டு அதிலே ஊஞ்சலாடுதல்‌ இக் காலத்திலுமுளது – இரங்கலால் நெய்தற்றிணை யாயிற்று,-தலைவியைப் புணர்ந்த பின்‌ தலைவன்‌ யாதேனும்‌ ஒரு காரியத்தின்‌ மேற் பிரிகின்றது ஒரு வழித் தணத்தலாம்‌-அங்கனம் பிரிந்த தலைவன்‌ குறித்த நாளில்‌ வாராமல்‌ தாமதித்ததனால்‌ தலைவி கடலை நோக்கிப்‌ புலம்புவது துறையின்‌ கருத்து – இது போல நேர்ந்த நம் காதலர்‌ நேமி நெடும் திண்டேர்‌,ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்‌ ‘என்றார் பிறரும்‌-கை கோள்‌ – களவு,-கூற்று- தலைவி கூற்று, காலம்‌ -எதிர் காலம்‌, மெய்ப்‌பாடு- அழுகை. பயன்‌ – -கடலொடு புலம்பி யாற்றுதல்‌.

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி-

———-

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே
. 48–

பொருள் — அகப் பொருள்
திணை – நெய்தல்‌
கிளவி -ஒரு சார் பகற் பகுதி
துறை–பாங்கிபுலம்பல்

நங்காய்‌- பெண்ணே !
படர்‌ – துன்பத்தைச் செய்கின்‌ற
௮ந்தி – மாலை வேளையாகிய இப்பொழுது,
வானம்‌ – ஆகாயமெங்கும்‌,
இருள்கின்‌றதே – இருள் மூடுகின்‌றதே ; இரண்டு கவடு இற – தலையில்‌
கவையாயுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும்‌ ஒடியும் படியாக,
கட்டிய -கட்டி யிருக்ற,
பாசத்தளை – அன்பாகிப சங்கிலிகளை, கண்பரிந்து-அறுத்தெறிந்து,
தொடர்‌ – தன்னைத் தொடர்ந்த,
ஆசை களிற்றை-ஆசையாகிய யானையை, சுவடு இறக்க – ௮டிச் சுவடு தெரியாமல்‌ ஓடிப்‌ போம்படி,
தொடர்ந்து – பின் தொடர்ந்து வெருட்டி, சங்கம்‌ – தமிழ்ச் சங்கமாகிய
குவடு இற – மலையானது சிதறும்படி,
குத்திய – குத்திப் பெயர்த்த,
மாறப் பெயர்‌ -மாறனென்னும் பெயருடைய,
கொலை யானை -கொலை செய்ய வல்ல யானையானது, (இன்று),
இவள் திறத்து- இவள்‌ நிமித்‌தமாக, ஒன்றும்‌- வருமோ?

நங்கையே ! அந்தி வானமிருண்டு விட்டதே ; சுற்றத்தாரிடத் தெழுகின்ற ௮ன்பாகிய சங்கிலியை அறுத்தெறிந்து தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை அடி தெரியாமலோடிப் போம்படி வெருட்டி சங்‌கமாகிய மலையைக் குத்திப் பெயர்த்த மாறனாகிய கொலை யானை இவள் நிமித்தமாக இன்று வருமோ? என்பதாம்‌. பேருணவைக் கொள்கின்ற யானை போல பெரும் பொருளைப் பற்ற விரும்புவதனால்‌ ஆசையை யானையாக உருவகப் படுத்கினார்‌, இரண்டு கவடு இற -உட் பகை புறப் பகை யாகிய இரண்டு வஞ்சனையும்‌ அழிபட எனவுமாம்‌, சுற்றத்தை நீங்காமல்‌ பிணித் தலால்‌ அன்பைத் தளை யென்றார்‌. சினந்து மலையை முட்டிப் பெயர்த்தல்‌ யானைக்கியல் பாதலால்‌ ஆழ்வார்‌ பாடல்‌ – சிறு சங்கத்தவரை வென்றமை தோன்ற அதனை மலையாகக் கூறினார்‌. அன்னியமான பொய்ச் சமயங்களை அழித்தலினால்‌ ஆழ்வாரைக்‌ கொலை யானையாகக் கூறினார்‌ -எனவே இத் துறை முழுதும்‌ உருவகமாகச்‌ கூறினமையால்‌ முற்றுருவகமாயிற்று,-இரங்கலால்‌ திணை நெய்தலாயிற்று,இருவரையும்‌ மணஞ்செய்விக்க எண்‌ணிய தோழி அவ் விருவரையும்‌ குறியிடத்துச் சேர்ப்பியாமல்‌ தந்திரஞ் செய்தலால்‌ தலைவன் புலந்து அப்பால்‌ போதலும்‌ மற்றையோர் கூற்று நிகழ்‌தலின்‌ ஒரு சார் பகற் குறியாயிற்று.

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்-சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

————-

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே
. 49–

இரவி அது தான்‌ – குரியனானது.
பொருள்‌ ஆய்‌ பரந்த -காணும்‌ பொருளாகி,
பொது நிற்றலின்‌ – பொதுவாய்‌ நிற்றலினால்‌,
இருள்‌ ஆய்‌ பரந்த – இருள்‌ மிகுத்துப்‌ பரவிய,
உலகங்களை – உலகங்களை யெல்லாம்‌,
விளக்கும்‌ – அவ விருளைப்‌ போக்கி விளங்கச்‌ செய்யும்‌ ;
அது போல்‌ – ௮தனைப் போல,
மருளாய்‌ – மனமயங்கும்படி,
பரந்த – பரவிய,
மயக்கம்‌- மாயையினது ,
துயக்கு அற்ற – துன்பம்‌ நீங்கப் பெற்ற
கோன்‌ மாறன்‌ – எங்கள்‌ தலைவரும்‌ மாறனென்னும்‌ பெயருடைய வருமாகிய நம்மாழ்வாருடைய,
அருளால்‌ – கருணையினால்‌,
சமயம்‌ எல்லாம்‌- எல்லாச் சமயமும்‌,
பரன்‌ உண்டு என்று – தங்களுக்கு நாராயணனே முதற் கடவுளாக உளனென்று,
அறிவு உற்றது – அறிந்து கொண்டது.

சூரியன்‌ தான்‌ பொதுவாய்‌ நின்று உலகத்தின்‌ இருளைப் போக்கிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌; அதே போல நம்மாழ்வார்‌ கருணை யானது எல்லாச்‌ சமயத்தவர் களிடத்திலுமுள்ள அஞ்ஞானத்தை நீக்கி மெய்ப்‌ பொருளைத் தெரிவித்தலால்‌ எல்லாரும்‌ நாராயணனே முதல் கடவுளாக உளன் என்றும் அறிந்து கொள்ளலாயிற் றென்பதாம்‌. எல்விதத்தாலும்‌ நீங்குதில௫மை நோக்கி மருளாய்ப்‌ பரந்த மயக்கென்றார்‌. பிறந்த பொழுதே பற்றின்றி நின்றமையால்‌ துயக்கற்ற மாறனென்றார்‌. விளக்கும்‌-மிகவும்‌- விரித்தல்‌ விகாரம்‌. அது – பகுதிப்‌ பொருள்‌ விகுதி, தான்‌-சாரியை, மற்று -அசை நிலை. எல்லாம்‌- தொகுதி யொருமை யாதலின்‌ ஒருமை முடிபு கொண்டது,–வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

———-

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே
. 50–

மற்றை- வேத சம்பந்த மில்லாத,
ஆகம வாதியரை – ஆகம நூல்களைக் கொண்டு வாதம்‌ புரிவோரை,
செறிவேன்‌ என – யான்‌ அடைவேனென்று, ஒன்று – இவ்விஷயத்தினை
சிந்தை செய்யாது – கருதாமல்‌,
செய்தாரை இல்லா-ஒருவராலும்‌ செய்யப்படாத,
நெறி .-நல்ல வழி கூறுகின்ற,
வேதம்‌ – வேதத்தில்‌,
நின்ற- பொருந்தியுள்ள,
நிலை – தத்துவ நிலைகளை,
உணர்ந்தோன்‌ – ௮றிந்தவரான நம்மாழ்வார் அவதரித்த,
குரு கூர்‌ நிலத்தை – திருக்குருகூரென்னும்‌ திவ்விய தேசத்‌தை,
பிறிவேன்‌ எனவும்‌ – நான்‌ பிரிந்து போவேனென்றும்‌,
எண்ணாது-நினையாமல்‌,
என்னை— ௮ வீடு பெறுத்தினை -மோக்ஷத்தைப்‌ பெறச்‌ செய்தனை யாதலால்‌,
௮றிவே- எனது அறிவே !
உனை – உன்னை,
தொழுதேன்‌ – வணங்குகின்றேன்‌ ;

ஆகம வாதியரை நான்‌ சேர்வேனென்று நினையாமலும்‌ ஆழ்வார்‌ குருகூரைப்‌ பிரிவேனென்‌று எண்ணாமலும்‌ எனக்கு மோஷம் அடையச்‌ செய்தனை யாதலால்‌ ௮றிவே ! உனைத்‌ தொழுதே னென்பதாம்‌, மற்றை யாகம மென்றதனால்‌ அங்கம் , பூர்வம்‌, பகுசுருதி’ என்கின்‌ற சைனாகம் முதலியவற்றை என்க . வேதம்‌ அனாதி யாதவால்‌ செய்தாரையில்லா மறை யென்றார்‌, நின்ற நிலை- நாராயணனுக்‌கே பரத்வம் கூறிய நிலை. பிறிவேன்‌, பிறி- பகுதி,

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல் இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

———

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே
. 51–

குறும்பு ஆக்கிய -பெரியோரால்‌ இவை குற்றமென்று நீக்கப் பட்ட,
முப்பகை தவிர்த்து – காமம்‌ வெகுளி மயக்கம்‌’ என்னும்‌ மூன்று உட் பகைகளைப் போக்கி,
ஆண்ட – அடிமை கொண்ட
குருகை மன்‌ -திருக் குருகூர்த் தலைவராகிய நம்மாழ்வார்‌,
பிறர் பால்‌ – அன்னியரிடத்‌தில்‌,
வெறும் பா கிளத்தி- பயனற்ற பாடல்கள் பாடி,
மெலிகின்ற என்னை – தளர்கின்றேனும்‌,
வினை – வினையானது.
கொடு போய்‌ – கொண்டு சென்று,
எறும்பு ஆக்கிய -எறும்பளவாகச் சிறுமைப் படுத்திய,
தமியேனை – தனிமையேனுமாகிய என்னை,
அமரர்க்கும்‌ – தேவர்களுக்‌கும்‌,
ஏற விட்டான்‌ -மேலாகச் செய்தருளிவிட்டார்‌ ; (ஆதாலால்‌), பெறும்‌ பாக்கியம்‌ உள்ள போதும்‌ -ஒருவர் பெறக்கூடிய செல்லமுள்ள காலத்தில்‌,
பிழைப்பும்‌ – அதற்கு ஒரு கெடுதியும்‌, உண்டே-உண்டாமோ? [இல்லை.].

குருகூர்‌ நம்மாழ்வார்‌ மெலிகின்றேனும்‌ தமியேனுமாகிய என்னை அமரரிலு மேலாகச் செய்து விட்டாராதலால்‌ ஒருவர்‌ பெறக் கூடிய செல்‌வமுள்ள காலத்‌தில்‌ அதற்கொரு கெடுதியமுண்டாமோ?இல்லை யென்பதாம்‌. பிறரைப் பாடி இம்மைப் பயன் சிறிது பெற்றாலும்‌ மறுமைக்குப்‌ பயன் படாமையால் வெறும் பா என்றார்‌. எறும்பு – சிறுமைப் பொருள் உணர்த்தற்குக் கூறினார்‌. தீ வினையில்‌ தனக்கு ஒத்தவரில்லை யென்பார்‌.
தமியேனென்றார்‌. அமரர்‌ – அமிருத முண்டு சரவாமலிருக்கப் பெற்றதனால்‌ அமரெனப் பட்டார்‌. காமம்‌ -வேறொரு பொருளின் மேல் செல்லும்‌ பற்றுள்ளம்‌, வெகுளி-கோபம்‌, மயக்கம்‌- ஒன்றனை வேறொன்றாகக்‌ க௫துதல்‌.-ஆளுகைக் குரியோர் அரசர் என்பது தோன்ற ஆண்ட மன்னென்‌றார்‌. போது -பொழுது என்பதன் மரூ௨. உண்டே, ஏ- எதிர்மறைப்‌ பொருள் பட நின்றது -கொடு -கொண்டென்பதன் தொகுத்தல் விகாரம்‌-அமரர்க்கும்‌ – ஜந்தனுருபு மயக்கம்‌; எல்லைப் பொருளது, மன்‌ -எழுவாய்‌,”விட்டான்‌ – பயனிலை, இதன்‌ முதலடி. வேற்றுப் பொருள் வைப்பணி,

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

——–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே.
52–

எம்மை- எங்களை,
உள்ளும்‌ சுற்றும்‌ – உள்ளேயும் சுற்றிக் கொண்டிருக்கிற,
கூர்‌ – மிக்க.
இருவினையும்‌ – நல்வினை தீவினையாகிய விரண்டும்‌,
௮றுத்து- போக்கி ,
இற பார்க்கும்‌- அவைகளழியும் படியாகப்‌.
பார்கின்‌ற,
இயற்கை- இயற்கையானது
குருகூர் நகர்‌- -திருக் குருகூரென்னும் பதியில்‌,
எம் பிரான்‌ – எழுந்தருளி யிருக்கிற தலைவரான ‘ நம்மாழ்‌வார்க்கு,
அடியாரொடு- தொண்டருடன்‌,
கூடி – சேர்ந்து
இன்புற்று -மகிழ்ந்து
ஒரு கூரையில்‌ — ஒரே விட்டினுள், உறைவார்க்கும்‌ – வசிக்கின்‌ எங்களுக்கும்‌,
உண்டு- உண்டாகும்‌) (அப்படீப்பட்ட இயற்கையானது ),
அவ் வூர்‌ அருகூர்‌- இந்த அடியாரிருக்கிற ஊருக்கு அருகிலுள்ள ஊரிலிருப்‌பார்கும்‌,
அருகுஇல்‌ – அவர் விட்டின்‌ சமீபத்திலுள்ள,
அயல் அயலார்க்கும் – – அயல் விட்டுக்கயல் வீட்டிலுள்ளவர்‌க்கும்‌,
அரியத்ன்று -அரியதொரு காரியமில்லை ;

எம்மைச் சூழ்ந்துள்ள இரு வினைப் பற்றை யொழிக்கு மியல்பானது நம்மாழ்வாரின் அடியவரோடு வாழ்கின்‌ற வெமக்குண்டு ;அவ் வியல்பானது அவ் வூருக்கு அயலூர்‌ அவ் வீட்டுக்கு அயல் வீடு இவற்றிலிருப்பவர்களுக்‌கும்‌ அரியதொரு காரியமில்லை என்பதாம்‌. உண்டே, ஏ-தேற்றம்‌. உள்‌ளும்‌, உம்‌- இறந்த தழுவிய வெச்சம்‌, இறப்பு ஆர்க்கும்‌ என்று பிரித்‌து
இரத்தலைச் செய்யும்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌, அவ் வூர்‌ – அடியாரிருக்கும்‌ ஊரென்பதே பொருந்திய வுரை,

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்-

——————–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே
. 53–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை ,
துறை–மாலையால்‌ வந்த வருத்த முரைத்தல்‌.

அன்றாத- பகைமை கொள்ளாத, அன்றிலையும்‌ – அன்றிப் பறவைகளையும்‌,
அன்றுவித்து – பகைமை யாக்கி,
என்னை–அன்னையுடன்‌ – தாயோடு, பின்றாத வண்ணம்‌ எல்லாம்‌ -மாறுபடாத வகை யெல்‌லாம்‌,
பின்றுவித்து – மாறுபடச் செய்து, பிறைக்கொழுந்தை -இளமையாகிய சந்திரனை,
ஒன்றாத வண்ணம்‌ – என் மனத்தோடு பொருந்தாதபடி,
உபாயம்‌ இயற்றியது – தந்திரஞ்செய்தது , (யாதோம வெனில்‌?)
ஊழ் வினையை-பழ வினைத் தொடர்சியை,
வென்றான்‌- நீக்கினவராகிய,
குருகைப் பிரான்‌ -திருக் குருகூர் நம்மாழ்வாருடைய,
மகிழே௮ன்‌றி-மகிழ மலர் மாலையே அல்லாமல்‌,
வேறில்லை – வேறு ஓன்று மிப்படிச் செய்ய
வில்லை ;

தலைவனைப்‌ பிரிந்த தலைவிக்கு அன்‌றில் கத்தற வோசை செவியிற்‌ பட்டால்‌ விரகத்தை யதிகப்படுத்து மென்பது பற்றி அன்றிலை விரோதப்‌ படுத்தி என்றார்‌. தலைவனைப் பிரிந்திருக்கும் பொழுது உள்ளம்‌ தலைவனிடத்தே செல்லுமாதலால்‌ அப்பொழுது அருகிலிருந்த தாய்‌ கேட்பதற்குத் தக்க விடை கொடாமை பற்றி அன்னையுடன்‌ விரோதப் படுத்தி என்றார்‌. பிரிந்தார்க்கு நிலவு வருத்தத்தைச் செய்யுமாதலால்‌ அதனையும்‌ விரோதித்து என்றார்‌. ௮ன்றுதல்‌ – விரோதித்தல்‌; ௮ன்றுவித்‌து , வி -பிற வினை விகுதி, வென்றான் – வினைப் பெயர்‌, மகிழே, ஏ-தேற்றம்‌,-அன்றி. எதிர்மறை வினை யெசசம்‌. வேறு இல்லை – குறிப்பு முற்றுக்கள்‌.

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே
. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு எறே – செவ்விய தமிழ் பயின்‌ற வித்‌துவான்களுள்‌ சிங்கம் போன்றவரே –
யெதிகளுக்கு-முற்றத்‌ துறந்த முனிவர்களுக்கெல்லாம்‌,
இன்‌ – இனிமையாகிய,
அமுதே – அமிர்தம் போன்றவரே ! எறிநீர்‌-௮லை வீசுகின்‌ற நீர்ப் பெருக்கை யுடைய,
பொருநை யாறே-தாமிர பருணி நதியானது ,
தொடர்‌ – தொடர்ந்து வரப் பெற்ற,
குருகூர்‌ -திருக் குருகூரிலுள்ள,
மறையோர்‌ – அந்தணர்கள்‌,
பெற்ற- ௮டையப்‌ பெற்ற,
ஆணிப் பொன்னே -மாற்றறியும் பொன் போன்‌றவரே !
‘இவன்‌-இந்தக் கம்பன்‌,
நமக்கு வேறே -நமக்கு ௮ன்னியனானவனே,
அன்‌புடை- அன்பு பொருந்திய,
மெய்யடியானென்று -உண்மையான அடியவனென்‌று
உள்ளம் தேறேன்‌ -நான் மனத்தில் தெளிய மாட்டேன்‌.’
எனல்‌ – என்‌று தள்ளாதொழிக;
௮து தேறத் தகும்‌- ௮து நம்ப வேண்டிய காரியமாகும்

ஏறே! ௮முதே ! குருகூர்ப் பொன்னே ! இவன் வேறானவனென்‌றும்‌ இவனைத் தெளிய மாட்டேனென்றும்‌ சொல்லா தருள்செய்க, அது நம்ப வேண்டிய காரியமாகுமென்பதாம்‌. எல்லாரிலும்‌ சிறந்தமை பற்றி ஏறென்றார்‌; அழியா வாழ்க்கை கொடுத்தல் பற்றி அமுதென்றார்‌ ; பிறர்‌ கவியின்‌ ஏற்றத் தாழ்வுகளை அறிதற்க்குத் தக்க பாடல்கள்‌ செய்தமையால்‌ வேறு பொன்னை யறியு மாற்றுப் பொன் என்றார்‌. இம் மூன்றும்‌ உவமை யாகு பெயர்‌, எனல்‌ – எதிர் மறை அல்லீற்று வியங்கோல் – தகும்‌ – இது தொழிற் பெயராய்த் தேற்றப்‌ பொருள் பட்டு நிற்கும் சொல்-

——

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே
. 55–

பெரும்‌ – பெரிய,
தண்‌ – நீர் வளமிக்க ,
குருகூர்‌ – திருக் குருகூரி லவதரித் தருளிய,
தென்‌ – சென் திசைக் கண்ண தாகிய,
ஐ- அழகிய,
உரைக்கும்‌ – தமிழ் மொழிக்கும்‌,
இயற்கும்‌ – ௮தன் பகுதியாகிய இலக்கணத்திற்கும்‌,
இசைக்கும்‌ – இசைத் தமிழ்க்கும்‌,
சிகா மணியே -சிரோ ரத்தினம்‌ போன்றவரே!
பொன்னை –உரைப்பது -உரைத்து மாற்றுப் பார்ப்பது,
௮ – அந்த, பொன்னொடு அன்றே – பொன்‌
னுடனே யல்லவோ ? (பார்ப்பது ),
புலமைக்கு – கல்வி யறிவிற்கு,
உயர்‌-உயர்ரந்த,
நாற் காவியும்‌-ஆசு மதுர சித்திர வித்தாரக கவிஞர்களையும்‌,
பின்னை-கடைசித்தரத்தில்‌,
உரைக்கப் பெறுவது அல்லால்‌ – சொல்லத் தக்கதே யல்லாமல்‌,
உன்னை உரைத்து – முதலில்‌ உம்மைக் கூறி,
உரைத்தற்கு-உமக்கு ஒப்பாக உரைப்பதற்கு,
ஒருவர்‌ – வேறொருவர்‌,
உளரோ -இருக்கிறார்களோ ?

குருகூர்ச் சிகா மணியே 1! பொன்னை மாற்றுப் பார்ப்பதென்றால்‌ பொன்னோ டன்றோ வுரைத்துப் பார்ப்பது; அதுபோல உம்முடைய பெருமையை அறிவதென்றால்‌ உம்மோடொத்த ஒருவரைக் காட்டி யன்றோ அறிய வேண்டும்‌ அப்படி யார் இருக்கிறார்கள்‌ ? ஒருவருமில்லையே யென்பதாம்‌. நாற்கவி -திரு மங்கை யாழ்வாருமாம்‌, புலமை- பல வேறு வகைப்பட்ட நாலுணர்ச்சி களெல்லாம்‌ ஒருங்கே கொண்ட பேரறி வுடமை, ஏனைய மொழிகளைப் போலாகாமல்‌ சிறந்த பொருளிலக்கணத்தைத் தன்னிடதில்‌ கொண்டிருத்தலால்‌ ஐயுரை யென்றார்‌, ஆழ்வார்‌ பிரபந்தத்தில்‌ இலக்கண அமைதி மிக்கிருத்தலாலும்‌ அப் பிரபந்தம்‌ பண்‌ணோடு’ பாட அமைந்திருத்தலாலும்‌ அவ் விடயங்களைச் கொண்டு இயற்‌கும்‌ இசைக்கும்‌ சிகாமணி யென்றார்‌,-இதன் முதலடி. எடுத்துக் காட்டு வமையணி,

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்-குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி-

———

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே.
56–

மறம்‌ – பல்வரிக் கூத்தில்‌ ஒன்று ; ௮து தான்‌ மறவரின்‌ மகளை விரும்‌பி விட்ட ௮ரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவரியல்பு தோன்றக் கூறுவன, வரிக் கூத்து – நாடகத் தமிழ்‌ நூல்களிற்‌ காண்க,-பல்‌ வரிக்‌ கூத்திற்‌ சில வுறுப்புச்கள்‌ கலம்பக முதலியவற்றிற்‌ காணலாம்‌.

சுருதிப் பொருளை – வேத ப்பொருள்களை,
தமிழால்‌ – தமிழ்ப்‌ பாடல்களால்‌,
பணித்தான்‌ – பாடி யருளினவரும்‌,
எம்‌ – எம்முடைய,
வினையை – தீய வினைகளை, :
துணித்தான்‌ – போக்கின வருமாகிய,
குருகைப் பிரான்‌ – குருகூர்‌ நம்மாழ்வாரின்‌,
பணி அன்றெனில்‌ – கட்டளை யில்லை யென்றால்‌, (எம்‌ பெண்ணை விரும்பிய), மணித்தார்‌ – இரத்தின மாலைகளணிந்த, ௮ரசன்‌ தன்‌-௮ந்த அரசனது,
ஒலையை- திருமுகத்தை,
தூதுவன்‌ – அதனைக் கொணர்ந்த தூதுவனது ,
வாய்‌ வழியே திணித்து -வாயில் வைத்து நன்றாக அடைத்து ,
ஆசு – ‘பெண்ணைக் சொடு’ என்ற
குற்றமெல்லாம்‌,
அழிய – நீங்கும்படி,
தலையை – அத் தூதுவன்‌ தலையை,
சிதைமின்‌ – வெட்டி யெறியுங்கள்‌ ;
எம் பாவையை – எமது பாவை போல்‌வாளாகிய பெண்ணை,
கொள்ளும்‌ கொள்ளும்‌- நன்றாகச்‌ கொள்வானே போலும்‌

வாயைத் திறந்திருந்தால்‌ – பேரிரைச்சலிடு வானாதலின்‌ முதலில்‌ வாயை அடையுங்களென்றதாம்‌. ஆழ்வாருக்கு அடிமை யென்‌றறிந் திருந்தும்‌ பெண் கேட்க வந்தது குற்றமாதலின்‌ ஆசென்றதாம்‌; ** மாதரைக் கொன்றுளார் களுளரென வரினும்‌ வந்த, தூதரைசக் கொன்றுளார்கள்‌ யாவரே தொல்லை நல்லோய்‌” என்‌றபடி தூதரைக் கொல்லலாகாதே யெனின்‌ அது அறப் போர்க்கே யன்றி மறப் போர்க்கில்லாமையால்‌ வதைக்க அமையுமென்க . கொள்ளும்‌ கொள்ளும்‌ – வெகுளி பற்‌றி வந்த அடுக்கு, பாலை -உவமை யாகு பெயர்‌ : இது கொல்லி மலையில்‌ தேவரும்‌ முனிவருஞ்சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்‌திய ௮சுரரை மயக்க வேண்டித்‌ தேவ தச்சனால்‌ யந்திரத்தோடு செய்து வைத்திருந்ததொரு பெண் வடிவம்‌ ; இது அவ் வசுரரைக் கண்டால்‌ சிரித்‌து மயக்கிக் கொல்லுவது –

————

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே.
57–

திருவாய்மொழி பழத்தை -திருவாய்மொழி யென்னுஞ்‌ சுவை யுள்ள கனி போன்றதும்‌, பசுங்கற்பகத்தின்‌ – பசுமையாகிய கற்பக மரத்தினது,
பூவை – மலர் போன்றதும்‌,
பொருகடல்‌ – மோதுன்ற கடலில்‌ நின்றும்‌,
போதா – வாராத,
அமுதை – அமுதம் போன்றதும்‌,
பாவை-பாடலாகியுமுள்ள,
பொருள்‌ – நால் வகைப்பொருளையும்‌,
சுரக்கும்‌ – ஊற்று மாறாதே பெய்வதாகிய,
கோவை பணித்த – காம தேனுவை யொத்த,
எம்‌ கோவை – எங்களிறைவராகிய நம்மாழ்வாரை,
அல்லா -விரும்பாத,
என்னை–குற்றம்‌ சுண்டு -முன்னமே பாடாத குற்‌றத்தை யறிந்து,
மற்றை நா வலர்‌ –இனி வேறுள்ள புலவர்கள்‌,
என்‌ -எனது,
நாவை– நாக்கினை, –
பறிப்பினும்‌ – பிடங்கினாலும்‌,
நல்லர் அன்றோ – நல்லவரல்லரோ ? [நல்லவரே.]

திருவாய் மொழி பாடி யருளிய நம்மாழ்வாரை விரும்பாத என்னை ௮வரை முன்னமே படாதிருந்த குற்றத்திற்காக மற்றை நாவலர்‌ எனது நாக்கைப் பிடுங்கி விட்டாலும்‌ அது நல்லதே யாகுமென்பதாம்‌, எங்கும்‌ பரவி நிற்பதென்னும்‌ பொருளும் தோன்றப் பா வென்றார்‌, சுவை யறிவார்க்குச்‌ சுவை மிக்கிருத்தலினால்‌ பழமென்றார்‌. கேட்கக் குளிர்ந்திருத்‌தலின்‌ கற்பக மலரைக் கூறினார்‌. கடலில் தோன்றிய அமுதம்‌ எடுக்கக்‌ குறைந்தும்‌ உண்டதானால் எச்சிற் பட்டுமிருத்தலால்‌ போதாரவமுதென்றார்‌. நால் வகைப் பொருள்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு-நாவினால்‌ வருணித்துச்‌ சொல்லுஞ்‌ சொல்லில்‌ வல்லவராதலின்‌ நாவலர் எனப்பட்‌டார்‌, நல்லதன்றோ எனற பாடங்கொள்ளுதல்‌ நேர்‌. அன்றோ , ஓ – எதிர் மறை; இரண்டெதிர் மறை ஒரு உடன் பாட்டை யுணர்த்தியது,-இது ஒரு பொருள் மேல் பல பெயர் ஓடுக்கி வந்து முடிக்குஞ்சொல்‌ ஓன்றனைக் கொண்டது.-

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது – நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

——-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே
. 58–

நாவல்‌ ௮ம்‌ தீவில்‌ – அழகிய ஜம்புத்தீவில்‌,
கவிகள்‌ எல்‌லாம்‌ – பிறர் பாடிய பாடல்களெல்லாம்‌,
சில நாள்‌ கழிய – சில நாட்கள்‌ சென்ற பின்‌, பூ- மலர்‌,
வலம்‌ – மணம் முதலிய வன்மைகள்‌,
தீவது போல்வ அல்லால்‌ – கெட்டழித்தல்‌ போல்வன வாகிக்‌ கெடுமே யல்லாமல்‌,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ அவதரித்த,
புலவன்‌ – புலவரும்‌,
தீங்கு -உயிர்களின்‌ குற்றங்களை,
கேவலம்‌ – முழுவதும்‌,
அறுப்பான்‌ – ஒழிப்பவருமாகிய நம்மாழ்வாருடைய,
கவி போல்‌ – திருவாய்மொழிப்‌ பாடல்களைப் போல,
எங்கும் போய்‌ – எவ்விடத்‌தும் பரவி, கெழுமா – விளங்காதன வாகும்‌;
கூவல்‌ – கிணற்றிலுள்ள,
அம்தீம்புனலும்‌ – அழகிய இனிய நீரானதும்‌,
வெள்ளம்‌ – பெரு வெள்ளத்தை ,
கோள்‌ இழைத்துக் கொள்‌ளுமே – தாழ்மைப் படுத்தி மேற் கொள்ளுமோ ? [கொள்ளாது.]

உலகத்தில்‌ பிறர் பாடல்கள்‌ சிலகாலத்தில்‌ கெட்டழிந்து போகுமே யல்லாமல்‌ நம்மாழ்வார்‌ பாடல்கள் போல எங்கும்‌ போய்ப் பரவாவாம்‌ ;கிணற்று நீர்‌ பெரு வெள்ளத்தைகத் தாழ்மைப் படுத்‌த இயையுமோ -இயைதாதென்பதாம்‌, பூ.-மலர்ந்த வுடன்‌ மணம்‌ வீசிப் பின்‌ பூ இல்லாமற்‌ போவது போலப்‌ பிறர் கவிகள்‌ பாடும் பொழுது வெகு சிறப்புப் போலத்‌ தோன்றி பின்பு பயன்படாதெனக்‌ கொள்க,. நாவலம்‌, அம் -சாரியையுமாம்‌, தீவது -தொழிற் பெயர்‌, அறுப்பான்‌ -வினைப் பெயர்‌,கெழுமா. – எதிர் மறைப் பலவின் பால் முற்று, கொள்ளுமே, ஏ – எதிர் மறைப் பொருளில்‌ வந்தது , இதன் கடை யடி எடுத்துக் காட்டு உவமை யணி

கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே
. 59–

இழைத்தார்‌ – செய்தவர்‌,
ஒருவரும்‌ இல்‌லா-வேறு யாரு மில்லாத,
மறைகளை -வேதத்தின்‌ பொருள்களை,
இன் தமிழால்‌ – இனிய தமிழ்‌ மொழியினாலே,
குழைத்தார்‌ – செய்தருளியவரும்‌,
குமரித் துறைவர்‌ – கன்னியா குமரி யென்னும்‌ தீர்த்தத்தை யுடையவருமாகிய,
குருகையில்‌ – குருகூரில்‌,
கூட்டம்‌ கொண்டார்‌ – அடியார்‌ கூட்டத்தோடு எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌,
வானின்‌ – பரம பதத்தினது .
வரம்பிடை நின்று – எல்லையினுள்ளிருந்து, மழைத்து – மேகத்தினது தன்மை,
ஆர- நிரம்பிய,
தடம்‌-பெரிய, கைகளால்‌—-,
என்‌னை அழைத்தார்‌-என்னை வா வென்றழைத்தார்‌ ; (அங்கனம்‌ அழைத்தன்றி),
அறிவும்‌ தந்தார்‌ – அங்கே செல்வதற்கு வேண்டிய அறிலையும்‌ கொடுத்தார்‌ ; (ஆதலால்‌ யான்‌),
அங்கும்‌ போய்‌ – அவ்விடத்துஞ்‌ சென்று,
அவர்க்கு – அந்த ஆழ்வாருக்கு,
ஆட்‌ செய்வன்‌-அடிமைத்‌ தொழில்‌ செய்வேன்‌ ;

வேதப்‌ பொருளைத்‌ தமிழில்‌ விரித்துரைத்த குமரித் துறைவராகிய குருகூர்‌ நம்மாழ்வார்‌ பரமபதத்தில் இருந்து தடக் கைகளால்‌ என்னை வா வென்று அழைத்தாராதலால்‌ நான்‌ அங்கும்‌ போய்‌ அவர்க்கு அடிமை செய்வேனென்பதாம்‌.-இழைத்தாரொருவரு மில்லா மறை யெனவே வேதம்‌ கடவளாலமைக்கப் பெற்ற தென்பதாம்‌. அளவிலாத இலக்கண
இன்பமுடைமையின்‌ இன்‌ தமிழென்றார்‌. கைமாறு கருதா அருள்‌ செய்‌யுங்‌ கைகளாதலால்‌ மேகத்தின்‌ தன்மை வென்றார்‌, அங்கும்‌, உம்‌.இங்குத் துதித்த தன்றியும்‌ என இறந்தது தழுவிய வெச்சப்‌ பொருளது,

——–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே.
60–

தண்‌ – குளிர்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌ எழுந் தருளி யிருக்கிற,
செய்ய – சிவந்த
நாள்‌ பூ-௮ன்று பூத்த மகிழ மலர்களாலாகிய,
தொடை – மாலைகளை யுடைய,
மாறன்‌ என்பேன்‌ – நம்மாழ்வாரென்‌று கூறினேன்‌ ;
ஆள்‌ – அவர்க்கு ௮டிமையாக,
செய்யல்‌ ஆவது எல்லாம்‌ – என்னாற்‌ செய்யக் கடவதெல்லாம்‌ செய்து.
அடி அடைந்தேன்‌ – அவர்‌ திருவடிகளை யடைந்தேன்‌ ;
அது அன்றி- அதுவல்லாமல்‌,
செய்‌ய தாமரை தாள்‌ – செந்தாமரை போன்ற அவர்‌ திருவடிகளை,
என்தலை ஏற்றனன்‌ – என்‌ தலையில்‌ சூடிக் கொண்டேன்‌ ;
இனி – இனிமேல்‌,
நாள்‌ குறித்து – என்‌ வாழ் நாளை உத்தேசித்து,
என்‌ தன்‌ ஆர்‌ உயிர்‌ – எனது அரிய உயிரை,
கூற்றினுக்கு – யமனால்‌,
கோள்‌ செய்யலாவது – குற்றப் படுத்தற்காவது ,
உண்டே – உண்டாகுமோ? [உண்டாகாது];

யான்‌ குருகூரில்‌ நம்மாழ்வாரைத்‌ தியானித்து அடிமைத்‌ தொழில்‌ செய்து ௮வரடியை யடைந்து ௮ப் பாதங்களைச்‌ சிரத்திலணிந்து கொண்‌டேன்‌ ; இனி யமன்‌ என்னுயிரைக் கோளிழைக்க இயலுமோ வென்பதாம்‌. தாளாகிய தாமரை யென்று நேரினும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. அவரே தெய்வமென உறுதியாகக் கொண்டிருத்தலால்‌ ஆட்‌ செய்யலாலவது
எல்லாஞ்‌ செய்தேன் என்றார்‌. அன்றி-எதிர் மறைக் குறிப்பு வினையெச்சம்‌, உண்டே,-ஏ- எதிர்மறைப்‌ பொருள்‌ தோன்றி நின்றது,

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-

———-

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே.
61–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை–பெருந்திணை
துறை–மாலை பெறாமல் வருந்துவ துரைத்தல்

கூறப்படா- ஒருவராலுஞ்‌ சொல்லப்படாத,
மறையின்‌ பொருள்‌ – வேதத்தின்‌ பொருள்களை,
கூறி- தமிழ்ப் பாடல்களால்‌ வெளிப் படுத்தி, குவலையத்தோர்‌ – உலகத்தவராலே,
மாறப் படா – நீக்கப்‌படாத,
வினை . தீவினைகளை,
மாற்றிய – போக்கி யருளிய,
மாறன்‌ – நம்‌மாழ்வருடைய,
மகிழ்‌ அலங்கல்‌ – மகிழ மலர்‌ மாலையானது ,
நாறப் படா நின்றபோத- மணம் வீசுகின்‌ற காலத்தில்‌,
அன்றில்‌ நஞ்சம்‌௮து -௮ன்‌றிலினுடைய விடத்தை யொத்த ஓசையானது,
அமுதாகும்‌- அமுதாக விருக்கும்‌;
மன்றல்‌ நாறும்‌ – மணம்‌ வீசுகின்ற,
தண்‌ தென்றலை – குளிர்ந்த தென்றல்‌ காற்றினையும்‌,
தேரப் படாது -நம்புவதற்கு இடமில்லை; கெட்‌டேன்‌ – இனி யான்‌ வாழ மாட்டேன்‌ ;

கூறப் படா மறை- மக்களால் கூறப் படாத வேதமென்க-இந்த வேளையில்‌ ௮ன்றிலோசை நஞ்சு போலிருத்தலால்‌ ஓசையை நஞ்‌சென்றார்‌-தீண்டப்‌ பெற்ற வுடன்‌ தலைக்கேறும்‌ விடம் போல அன்றிலோசை கேட்டவுடன்‌ விரகம் தலைக்கேறுதலால்‌ நஞ்சமென்றலுமாகும்‌.
கெட்டேன்‌ -இனி யான்‌ உண்ணா லும்‌ உண்ணேன் வாழலும்‌ வாழேன்‌ ” என்பதை யடக்கு ‘பசி யட நிற்றல்‌” என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது – வேறு மெய்ப்பாடு கூறினும்‌ அமையுமேல் கொள்க-

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

——-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே
. 62–

தென்‌ தலை தோன்றும்‌ – இவ் வுலகத்தின்‌ தெற்குத் திசையிலே உண்டாகிய,
உபநிடதத்தை – உபநிடதப்‌ பொருளாயும்‌,
என்‌ தீ வினையை – என்‌ தீவினைகளை,
நின்று-நிலை கொண்டு,
அலைத்து-போக்கி ,
ஓன்றும்‌- பொருந்திய,
நியாய நெறியை-நியாய மார்க்க முடையதாயும்‌,
நிறை – எல்லா வளங்களும்‌ நிறைந் துள்ள, குருகூர்‌ – திருக் குருகூரில் எழுந்தருளிய,
மன்‌ தலை- நம்மாழ்கார்‌ வாக்கில்‌,
தோன்றும்‌ – உண்டாகுகின்ற,
மதுரம்‌ கவியை- சொற் சுவை பொருட் சுவை யுடைய திருவாய்‌மொழிப் பாடல்களை,
மனத்துள்‌ – தங்கள்‌ மனத்திலே,
வைப்பார்‌- வைத்‌துக் கொண்டிருப்பவர்களே,
என்‌ தலை- என்னுடைய சிரத்தின்‌ மேலே,
தோன்றும்‌ – விளங்கிய திருவடிகளை யுடைய,
எம்பிரான்கள்‌ – எமது தலைவ ராவார்கள்‌;( அவர்களே),என்‌ நாவுக்கு-என்னுடைய நாவினால்‌ துதிப்பதற்கு, உரியவர்‌ – தக்கவராவார்‌ )

திருக் குருகூர்‌ நம்மாழ்கார்‌ பாடி யருளிய, திருவாய் மொழிப் பாடல்களை மனத்துள்‌ வைப்பவரே என்னால்‌ வணங்குவதற்கும்‌ துதிப்பதற்‌கும்‌ உரியவராவார்‌ என்பதாம்‌, தத்‌துவப்‌ பொருளை உள்ளடக்கிக் கொண்டமையின்‌ உபநிடச மென்றார்‌. தருக்க நியாயத்தால்‌ பரத்துவ நிர்‌ணயஞ்‌ செய்தலால்‌ நியாய நெறி யென்றார்‌.-வேதம் போலாகாது எல்‌லாச் சாதியாரும்‌ படித்த்துச் சுவை காணும் தன்மையினால்‌ மதுரகவி என்‌றார் -ஒன்று – ஒன்று, வென நீட்டல்‌ விகாரம்‌ பெற்றது. பிரான்‌ – என்னும்‌ னகர ஈறே யுடைமையின்‌ (கள்‌’ என்ற விகுதி பெற்றது.

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே
. 63–

பிறர்‌ – அயலாருடைய,
புல்‌ கவி- புன்மையாகிய பாடல்‌கள்‌,
உரிக்கின்ற – இதழ் இதழ்களாகப்‌ பகுக்கப் படுகின்‌ற ,
கோடலின்‌ -வெண் காந்தள்‌ மலரினின்றும்‌,
உந்து – வீசுகின்ற,
கந்தம்‌ என – மணத்தைப் போல,
ஒன்றும்‌ இன்றி- சொல்‌ பொருள்‌ அணி முதலிய யாதொன்றுமில்லாமல்‌,
விரிக்குந் தொறும்‌ – பதங்களைப்‌ பிரித்தப்‌ பார்க்‌கும்‌ போதெல்லாம்‌,
வெறும்‌ பாழாய் விடும்‌- வீணே பயனற்றதாய்ப்‌ போய் விடும்‌;
மெய்‌ – கடவளின்‌ உண்மை நிலையை, தெரிக்கின்ற – யாவர்க்கும் தெரியச்‌ சொல்லுகின்ற,
கோ – இறைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாருடைய,
தெய்வக்கவி- தெய்வத் தன்மையுள்ள பாடல்‌கள்‌,
புவியில்‌ – பூமியில்‌,
தோண்ட – பறிக்கப்‌ பறிக்க,
சுரத்தலின்‌ -தண்ணீரூறுதலால்‌,
நுண் மணல்‌ – மிகச் சிறியனவாகிய மணல்களை,
சுரிக்‌கின்ற – சுற்றிலுமுடையதாய் இருக்கின்ற
ஊற்று-மணலூற்றினை,
ஓக்‌கும்‌- ஒத்திருக்கும்‌;

பிறர்கள்‌ பாடும்‌ பாடல்களெல்லாம்‌ மணமில்லாத கார்த்திகைப்‌ பூவை ஒத்திருக்கும்‌; நம்மாழ்வார்‌ பாடல்கள்‌ ஆராயும் தோறுஞ்‌ சுவை ஊருதலால்‌ தோண்டுந் தோறுஞ்‌ சுரக்கின்ற மணலூற்றினை யொத்திருக்கு மென்பதாம்‌. காந்தள்‌ – கார்த்திகை. இது கார்த்திகை மாதத்தில்‌ மலர்தலால்‌ இப் பெயர்‌ பெற்றதென்பர்‌ ; கார்த்திகை மலர்‌ பார்‌வைக்கு அழகாயிருத்தல்‌ போலப்‌ பிறர் கவி படிப்பதற்கு ஓசை முதவியவை குறையாதிருப்பினும்‌ ௮க்‌ கார்த்திகை மலர்‌ நறுமண மில்லாதது போல அப்‌ பிறர்‌ கவியும்‌ சொற் சுவை பொருட் சுவை நிரம்பாமையால்‌ பயன ற்றதாய்‌ விடுமென்றார்‌, கந்தம் மென, மகரம்‌ – விரித்தல்‌ விகாரம்‌ பெற்றது. தொறும்‌ இங்குத்‌ தொழிற்‌ பயில்வுப்‌ பொருளைத்‌ தந்தது. பாழாய் விடும்‌, விடு-துணிவுப் பொருள்‌ விகுதி, சுரத்தலின்‌ – மூன்றாம்‌ வேற்றுமை ஏதுப் பொருள்‌,

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊரும் அறிவு-

——–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே.
64–

திரக்கும் -முத்துக்கள் தெறித்து விழப் பெற்ற
கழை -கரும்புகளின்
நெடும்‌ தாளில்‌ – நீண்ட தூறுகளிலே, தொடுத்த – கட்டின,
செம்‌ தேன்‌ – சிவந்த சேனடைகளானவை, (பக்கத்திலுள்ள குளங்‌களிலிருக்கின்ற,) கயல்‌ குதிப்ப- கெண்டை மீன்கள்‌ துள்ளி மோதி விழுதலாலே,
உடைந்து – உடை.பட்டு,
பரக்கும்‌ – தேன்‌ பரவுகின்ற
பழன வயல்‌ – மிக்க வயல்கள்‌ சூழ்ந்த,
குருகூர்‌ – நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌,
வளம்‌ – மகிமைகளை,
பாடுமின்‌ -பாடுங்கள்‌ ;(அப்படிப்‌ பாடினீர்களாயின்‌),
திருவும்‌ சுரக்கும்‌ -செல்வமும்‌ பெருகும்‌ ;
வறுமையும்‌ தீரும்‌ – தரித்திரமும்‌ நீங்கும் ;
இரு வினை – நல் வினை தீ வினை யாகிய இரண்டும்‌,
தொடக்கு விட்டு – தொடர்ச்சி நீங்கி ,
கரக்கும்‌- மறைந்து போகும்‌;
மேன்மையும்‌ காணும்‌ – மேலாகிய பரம பத தரிசனமுமாகும்‌,

ஐனங்களே ! நம்மாழ்வாரவதரித்த திருக் குருகூரின்‌ மகிமையைப்‌ பாடுங்கள்‌ ; செல்வமுண்டாகும்‌ -வறுமை நீங்கும்‌; இருவினைப் பற்றொழியும்‌; மேன்மை யுண்டாகு மென்பதாம்‌. திரக்குதல்‌ – தெறித்து விழுதல்‌. கயல்‌ குதித்தலால்‌ தேன்‌ உடைந்து வயல்களிற்‌ பாவுதல்‌ போலக் குருகூர்‌ மகிமையைக் கூறுதலால்‌ நம்மாழ்வாரின்‌ கருணை உங்களுக்கு நிரம்ப உண்டாகிப்‌ பரவும்‌ என்பது தொகை மொழியின்‌ கருத்தெனக் கொள்க. திரு முதலிய வற்றுள்ள உம்மைகள்‌ எண்ணுப்‌ பொருளன,. குதிப்ப- காரணப்‌ பொருளில்‌ வந்த செயவெனெச்‌ச வாய்பாடு, பழன வயல்‌ – இருபெயரொட்டு,

———-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே
. 65–

பாடும்‌ – எப் பக்கங்களிலும்‌,
கறங்கும்‌ சிறை – சுழலுகின்‌ற சிறகுகளை யுடைய,
வண்டு – வண்டுகள்‌,
பாட -சப்த்தித்து நெருங்குதலால்‌,
பை தாள்‌ – பசுமையான தண்டுகளை யுடைய,
குவளை தோடும்‌ -நெய்‌தல்‌ மலரின்‌ இதழ்களும் (அவ் வண்டுகள்‌ வந்து மோதலுக்கு ஆற்றாமல் )
கறங்கும் – சுழலுகின்‌ற
குருகை – திருக் குருகூரிலுள்ள,
பிரான்‌ – மிக்க உபகாரமுடையவராய்‌,
இ -இந்த –
சுழல்‌ பிறவியோடும்‌ – சுழன்று வருகிற பிறப்பினுடன்‌,
கறங்கு அன்ன- காற்றாடி யொத்த,
வாழ்க்கையை -சரீர வாழ்லை,
நீக்கி – போக்கி விட்டு,
உணர்வு உதவி- நல்லறிவு தந்து ,
வீடும்‌ – பரம பதத்தையும்‌,
திறந்து தந்தானை – கதவு திறந்து தந்தருளினவரை,
எ நான்றும்‌ – எந்த நாளும் ,
விடகிலம்‌- யாம்‌ கை விட மாட்‌டோம்‌);

குருகூரிலவதரித்த மக்களின்‌ நிலை யற்ற வாழ்வைப்‌ போக்கி மோட்ச பதத்தினைத்‌ திறந்து தந்தருளிய நம்மாழ்வாரை நாம்‌ எந் நாளும்‌ விட மாட்டோம்‌ என்பதாம்‌. வண்டு பாடி நெருங்கக் கண்ட குவளை மலர்‌ சுழலாறு ஏற்றுக் கொள்ளுதல்‌ போல நம்மாழ்வார் பாடல்களை ௮ன்‌போடு யாவர்‌ பாடுகிறார்களோ ௮வர்களைப்‌ பரம பதமானது தட்டாமல்‌ ஏற்றுக் கொள்ளுமென்பது தொகை மொழியின்‌ கருத் தென்க-சிலர்‌ இதனையே உள்ளுறை யுவமை என்பர்‌, குருகை- மருஉ மொழி, பிற வி, வாழ்க்கை – தொழிற்பெயர்கள்‌,-தந்தான்‌ – வினைப் பெயர்‌, விடகிலம்‌, ௮, கு – சாரியைகள்‌, இல்‌ – எதிர் மறை இடை நிலை-

———–

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.
66–

பொருள் –அகப் புறப் பொருள் ,
திணை -பெருந்திணை
துறை– வேலமர்‌ கண்ணி மாலை யம்‌ பொழுது கண்டு ஏங்கிய தறிந்த பாங்கி புலம்பல்‌.

வெம்‌ – கொடிய,
விடம்‌ -நஞ்சு போன்ற ,
அந்தகாரம்‌ பாலில்‌- இருட்டை யுடைய இராக் காலமாகிய பகுதியிலே, மெல்லியலுக்கு- மென்மையான சாயலை யுடைய எம்‌ தலைவிக்கு,
இடர்‌ வந்ததென்று- காமத்‌ துன்பஞ்‌ செய்கின்ற சந்திரன்‌ உதித்து வந்ததென்று,
இரங்கி -கருணை கூர்ந்து,
பராங்குசர்‌-நம்மாழ்வார்‌,
புணர்ந்திலர்‌-வந்து புணர்ந் தாரில்லை ; [இந்த வேளையில்‌], இன்று- இ அந்தி- இந்த மாலைக் காலமானது ,
வந்து பட – வந்‌து நீங்குதலும்‌,
௮ந்த காரம்‌ பெரும்‌ புகை – -பெரிய புகை போன்ற இருட்டானது
ஒடி – எங்குஞ்‌ சென்று,
பரக்கின்றது -பரவுகின்றது ; (இப்படி வந்த இருட்டானது ), இன்‌ உயிரை-எம்‌ தலைவியின் இனிய உயிரை ,
அட வந்த -கொல்லுவதற்கு வந்த
காலன்‌ கொலோ -யமன்‌ தானோ ? அறியேன் -யானறிந்திலேன்‌ ;

கொடிய இருள்‌ பரவிய இரவில்‌ என் தலைவிக்கித் துன்பமுண்டாயிற்றே யென்று இரங்கிப்‌ பராங்குசர் வந்து புணர்ந்தாரில்லை; இம் மாலைப்‌ பொழுதில்‌ இருள்‌ பரவா நின்றது தான்‌ உயிரைக் கொண்டு போகிற யமனோ? அறியேனென்பதாம்‌. விடம்‌ -இருளுக்கு நிறத்தாலுவமை. இடர்‌ -சந்திரனுக்கு ஆகு பெயர்‌, ஆல்‌ – அசை, காலன்‌ கொல்‌ – ‘இடைச் சொற்றொடர்‌ ) கொல்‌ – அசை நிலை யிடைச்சொல்‌.-ஓ – ஐயப் பொருளில்‌ வந்த இடைச் சொல்‌, மாலைப்‌ பொழுதின்‌ பின்‌ இருளைப்‌ பார்த்தலும்‌ தலைவி விரகங்கொண்டு சோகமுறக் கண்ட தோழி இருளை மேலிட்டு விடமாகா க் கூறினள்‌, வெம்மையை இடர்‌ என்பதனோடு கூட்டுக ., இன்னும்‌ தலைவர்‌ வந்திலாமையில்‌ இருள்‌ பரவுவதைக்‌ காலனோ வென்றாள்‌, பாரங்குசர்‌ – அயல்‌ மதங்களாகிய யானைகளை அடக்குகின்ற அங்குசம்‌ போவ்பவர்‌, இங்கும்‌ துன்பஞ்‌ செய்யுங்‌ காமனை யடக்குபவர் என்று எண்ணிப்‌ பராங்குசர் என்றாள்‌. காமன்‌ கொடுமைக்கு ஆற்றாளென்பது தோன்ற மெல்லியல் என்றாள் -தலைவியின்‌ துன்பத்தைக் கண்டு பொறாளாய்‌ வெளிப் படையாகப்‌ புணர்ந்‌திலர் என்று கூறினாள்‌. கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறினமையால்‌ அகப் புறமாயிற்று, காமத்தை யாருமறியக் கூறிப் புலம்பினமையால்‌ நான்கு மணம்‌ பெற்ற பெருந் திணை யாகாமல்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந்திணை யாயிற்று , பராங்குசர்‌ – தீர்க்க சந்தி, மெல்லியல்‌ – பண்புத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த ௮ன்மொழி,

——–

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே.
67–

பொருள் –அகப் பொருள்
திணை -பாலைத் திணை
கிளவி – உடன் போக்கு : உட் பகுதி -தேற்றல்‌.
துறை–(தலைவிக்குத் தலைவன்‌) தன்பதி யணுமை சாற்றல்‌,

சுரவாத – அறிவுடையோர்க் கன்‌றிப்‌ பிறருக்குப்‌ பொருள்‌’ வெளிப் படாதனவகிய, சுருதி பசுக்கள்‌ அவற்றை – வேதங்களாகிய அந்தப் பசுக்களை,
சுரப்பித்‌து – எல்லாருக்கும்‌ பொருள்‌ தோன்றச் செய்து ,
அவை -அந்த நாற் பகுதியாகிய பிரபந்தங்களும்‌,
சொரியும்‌ -கொடுக்கின்ற,
பொருள் பால்‌ – பொருளாகிய பாலை,
கரவாது – மறைக்‌காமல்‌,
உதவிய – கொடுத் தருளிய,
மாறன்‌ – நம்மாழ்வாருடைய,
கவி அனையாய்‌ – பாடல்களை யொத்த பெண்ணே !
இனி – இனி மேல்‌,
இப் புறம்‌ – இந்தப் பாலை நிலத்தின்‌ எல்லை யானது,
ஓர்‌ சரம் வாதம்‌- ஓர்‌ அம்பு வீழ்ச்சி யளவு தான்‌ ;
அப்புறம்‌-இதற்கு அப்பால்‌,
௮ தடம்பணை -அந்தக் குருகூரின்‌ எல்லை யுளகப்பட்ட அகன்ற வயல்களேயாம்‌;
காண்‌ – நீபார்‌;
ஆதலால்‌, பரவாது – உன்‌ மனத்தை அலைய விடாமல்‌,
கேட்டு- யான் சொல்லுகின்ற இதனைக் கேட்டு,
இனி – இப்பொழுது முதல்‌,
பைய – மெல்ல,
நட – நடப்பாயாக;

தலைவியை இருளிடை அழைத்து உடன் கொண்டு போகின்ற தலைமகன்‌ தன்‌ ஊர்‌ அருகில் இருப்பதனைக்‌ காட்டித்‌ தெரிவித்தனனென்‌க -, இணை – பாலை, கைகோள்‌ – களவு, கூற்று – தலைவன்‌கூற்று, கேட்‌போர்‌ – தலைவி இடம்‌ – முன்னிலை, காலம்‌ – ௭திர் காலம் , எச்சம்‌ -நீ என்பது எஞ்சி நின்றது,-மெய்ப்பாடு – உவகை. பயன்‌ – தலைவியைத் தேற்றல்‌. வேதத்தைப்‌ பசுவாகவும்‌ அதன் பொருளைப்‌ பாலாகவும்‌ அதனைச்‌ சுரப்பிக்கச் செய்தனரென உருவகஞ் செய்தமையின்‌ இதுஉருவக வணி. பெண்களிற்‌ சிறந்தமையின்‌ – எல்லாக் கவிகளுள்‌ளும் சிறந்த மாறன்‌ கவியோடு உவமித்தான்‌. இன்னம்‌ எவ்வளவு தூரமுளதோ வென்று கவலை கொண்டதனை அறிந்தனனாதலின்‌ பரவாது கேட்டு என்றான்‌. நெறி முழுதும்‌ இவ் வண்ணமேயாமெனக்‌ கொண்டு விரைந்து செல்லாதவாறு அப்பால்‌ தடம் பணை யுள்ளதனால்‌ பைய நட வென்றான்‌, இடையிலெதிர்த்த சிங்கம்‌ முதலியவற்றை ௮வன்‌ அம்பாலெய்‌ததனைத் தலைவி யறிந்துள்ளாளாதலின்‌ ௮வள்‌ அறிந்த அம்பின்‌ வீழ்ச்சியைக் குறித்துக் காட்டிச் சார வாதமென்றான்‌, ஆங்கே தடம் பணை ௮ருகில் இருக்கிறதாகக் கொண்டு காண்‌ என்றான்‌. அப்பால்‌ ஊர் போய்ச்‌ சேரும்‌ வரையில்‌ அந்தப் மருத நிலமே யென்பது தோன்றத் தடம் பணை யென்றான்‌.தடம்பணை -உரிச் சொற்றொடர்‌,

புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

———–

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே.
68–

பொருள் –அகப் புறப்பொருள்‌,
திணை–பெருந் திணை ,
துறை – பாகொத்த சொல்லி பைந்தொடை பெறாமல் மேகத்தைத் தூது போக விடுதல்‌

பனி – விடாமல்‌ மழை பெய்வதை ,
தோய்ந்திடும்‌ – மேற்‌ கொண்டுள்ள,
மேகங்களே – ஆகாயத்திற்‌ செல்கின்ற மேகங்களே!
தண்‌ பொருநை – சூளிர்ந்த தாமிரபர்ணி நதி சூழப் பெற்ற,
தடம்பணை -அகன்ற வயல்களை யுடைய,
குருகூரர்‌ – திருக் குருகூர்‌ நம்மாழ்வார்‌,
(தமது ), தகை – பெருமை யுடைய,
வகுளம்‌ வடம்‌- மதிழமலர் மாலையை,
பணை – பருத்த,
கொங்கையில்‌ – என்‌ கொங்கைகளில்‌, வைக்‌கின்‌றிலர்‌ –
ஓற்ற வைத்தருளுகின்றாரில்லை ;
(அதனையன்றி), மற்றை மாலை யெல்‌
லாம்‌ – பிற மாலைகளெல்லாவற்றையும்‌,
உடம்பு அணைக்குந் தொறும்‌ –
என்‌ உடம்பில்‌ சேர்த்து ஒற்றிக் கொள்ளும்‌ பொழுதெல்லாம்‌,
வெந்து – என்னுடம்பிலுள்ள சாமாக்கினியால்‌ வெந்து போய்‌,
உகும்‌ – உதிர்ந்து விடும்‌ ;
(௮ந்தக் காமத்தீயும்‌.) ஐந்து வெம்‌ பாம்பு -கொடிய ஐந்து பாம்புகள்‌, (ஒரு சேரச் கூடி ஒரே உடம்பில்‌ ஓரிடத்திலேயே கடித்து ),
உமிழ்ந்த – கடிவாயில்‌ கக்கின,
விடம்‌ – விடங்களானவை,
பணைக் கொண்டனவே -அதிகரித்தாற் போல்வனவேயாம்‌;

மேகங்களே ! குருகூராழ்வார்‌ தம்‌ வகுள மாலையை என்‌ கொங்கைகளில்‌ வைத்தருளு கின்றாரில்லை ; அதனை யன்றித் தோழியர்‌ கொண்டு வந்து சூட்டு கின்‌ற பிற மாலைகள்‌ காமாக்கினியால்‌ கருகி உதிர்வன ; ஒரு பாம்பு கடித்தாலே பிழைப்பரிது ; அந்தக்‌ காமாக்கினி ஐந்து பாம்பு கடித்த நஞ்சு பரக்கின்றால் போல்வன; இவ் விஷயத்தை ஆழ்வாருக்கு அறிவிப்பீராக வென்றாளென்பதாம்‌.-அகன்ற நீர் பாய் வயல்களும்‌ குளிர்ந்த
பொருநை யுமுடையவாதலால்‌ அவர்‌ மாலையும்‌ குளிர்ச்சியைச்‌ செய்யு மென்றாள்‌, உயிர்க்கு நன்மை செய்தலால்‌ தகை வகுளமென்றாள்‌,-பனி – குளிர்ச்சியுமாம்‌. நீங்கள்‌ மிருந்த குளிர்ச்சியான கருணை யுடையீ ராதலால்‌ பெண்ணென்றால் பேயும் இரங்கும் இயல்பன்றோ அதனால்‌ என்பாற்‌ கருணை யுடையீராகிச் சென்று அவர்க்கு அறிவிப்பீர்‌ என்பதனை யடக்கிப்‌ பனி தோய்ந்திடு மேகங்களே யென்ருள்‌. நீங்கள்‌ இங்கே
பொழிவதனால்‌ பயனில்லை அவருடைய மலையிலேறி மழை பொழியத்‌ தொடங்கினால்‌ அவர்‌ நம்மைக் கண்டவடன்‌ விரக மேலீட்‌டினால்‌ தாமே என்னிடம்‌ வந்தணைவார் எனக் கொண்டு மேகத்தை நோக்கிக் கூறினா ளென்றலுமாம்‌. ஐந்து பாம்பு – காமனம்பைக் குறித்ததுமாம்‌,

பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

———

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே
. 69–

பொருள் —அகப்பொருள் ,
திணை – முல்லை,
கிளவி- வரைவிடை வைத்துப்‌ பொருள் வயிற்‌ பிரிதல்‌,
துறை–தலைவன்‌, மேகம் தன்னொடும் சோகம் கொண்டவன்‌ சொல்லல்‌,

மேகத்தை – மேகமே! உங்களை,
ஆற்றில் கண்டேன்‌ என்‌று-வழியிலே கண்டு மார்க்கத்தைச் சொன்னேனென்று,
எண்ணாது – நினைக்‌காமல்‌, (நீங்கள்‌),
குருகூர்‌ மெய்யன்‌ -குருகூரிலுள்ள சத்‌துவ ருபியாகிய
நம்மாழ்வார் செய்தருளிய, பாகத்தை – செம்பாகமாகிய திருவாய்மொழியை,
ஆர்றும்‌ – ஒத்திருக்கின்‌ற,
சொல்லாளை – சொல்லை யுடைய என்‌ தலைவியை,
கண்‌ நீரின்‌ துளி பரந்த – கண்ணினின்று உண்டாகிய நீர்த் துளி மிக்குள்ள,
மோகத்தை – என்பாலெழுந்தா காம விரகத்தை,
ஆற்றிக்‌ கொண்டே – ஆற்றுவித்துக் கொண்டே,
கண்ட மாற்றம்‌ – என்னை நீங்கள்‌ வருகிற வழியிற் பார்த்ததான வார்‌த்தையை,
மொழிந்து -சொல்லி
சிந்தை -அவள் மனத்திலுண்டாகிய, சோகத்தை – சோர்வை,
ஆற்றிக் கொண்டே- சாந்தப் படுத்திக் கொண்டு
பிற்பாடு, தூளிதூவ – மழை பெய்ய, தொடங்‌குக-ஆரம்பிப்பீர்களாக ;

மேலோரை முன்னிலை மொழியாற்‌ கூறுதலினும்‌ படர்க்கை மொழியாற்‌ கூறுதல்‌ சிறப்புடைமை நோக்கி மேகமே!உங்களை என்று குறித்‌துக் கூறாமல்‌ படர்க்கைப் பெயரை யமைத்துக் கூறி நீங்களி ருக்குமிடம்‌ வந்து வழி மொழிந்து வேண்டுதலியல்பு – அங்ஙனமின்றி வழியிலே உங்களைப்‌ பார்த்து விட்டமையால்‌ இதனை நும்‌ வீட்டில் வந்து கேட்டுக்‌ கொண்டமையாகக் கருதுக வென்பது தோன்ற ஆற்றிர் கண்டேன்‌ என்று எண்ணாது என்று உபசாரம்‌ கூறினான்‌-ஏனைய மாதர்கள் போல்வாளல்‌லள்‌ என்பது தோன்றத்‌ திருவாய் மொழியோடு உவமித்ரான்‌, உங்களுக்கு ௮வள்‌ மறு மொழி கூறத் தொடங்கினால்‌ அவள் சொல்வே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்பதனால்‌ சொல்லாளென்றான்‌. அவளைக் கண்டவுடன்‌ என்னை நீங்கள் பார்த்ததாகக் கூறினால்‌ உடனே அதிக மகிழ்ச்சி கொண்டு ஆவென்றலும்‌ ஏத முண்டாகுமோ வென்‌றஞ்சி முதலில்‌ மோகத்தை யாற்றிச்‌ சிறிது சிறியதாக என்னை வழியில் கண்டது உண்டென்று சொல்லுக வென்றான்‌, சொல்லிய வுடன்‌ சென்று விட்டால்‌ சோகமடைவளாதலால்‌ மீட்டும்‌ ௮வள்‌ மனத்திலுள்ள சோர்வை நீக்கிக் கொண்‌டென்றான்‌, பெரு மழை பெய்யத் தொடங்‌கினால்‌ குளிரில்‌ வருந்துவளாதலின்‌ சிறிது துளிகளைத் தூவுக வென்றான்‌. யான்‌ விரைவில் வந்து விடுவேனென்பது தோன்றத் தொடங்குக வென்றான்‌, திணை-முல்லை, கை கோள்‌-
களவு, கூற்று – தலைவன்‌ கூற்‌று. கேட்போர்‌ மேகத்தோடு கூறுவானாய்க்‌ கூறியது , இடம்‌ -முன்னிலை. காலம்‌ – எதிர் காலம்‌. எச்சம்‌- யான்‌ விரைவில்‌ வருவேனென்பது எஞ்சி நின்றது -. மெய்ப்பாடு -அலலம்‌. பயன்‌-மேகத்தோடு கூறிச் சிறிதாற்றுதல்‌, பொருள் கோள்‌-யாற்றுகீர்‌. மேகத்தை –இடவழுவமைதி,. எண்ணாது, – எதிர் மறை வினை யெச்சம்‌, பாகம்‌ -சுவையை யுடைய திருவாய்மொழிக்குப் பண்பாகுபெயர்‌. கண்ணீரின்‌ துளி-பிரிவாற்றாமை யென்னும்‌ மெய்ப்பாடு தோன்ற நின்றது,

மேகங்களை பாகவதர்களாக சொல்லத் தட்டில்லையே-ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

———

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே
. 70–

இது மதங்கி கூத்து-ஒருகூத்தாடிச்சி ஆடத் தொடங்கும் பொழுது ஒருவன்‌ சபையோரை நோக்கிக் கூறியது -. இதுவும்‌ முற்கூறிய பல்வரிக்‌ கூத்திலொன்று,

சபையீர் -சபையிலுள்ளவர்களே!
சொல்லுகின்‌றேன்‌ -இப்‌பொழுது உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகின்றேன்‌ அதனைக் கேளுங்கள்‌,
மதங்க – பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி,
நடம் தொடங்குகின்றாள்‌-கூத்தாட எத்தனிக்கின்றாள்‌ ;
குருகூர்த் தொழா – திருக் குருகூரிலே எழுந்தருளிய நம்மாழ்வாரைத் தொழுது, மடங்குன்றாள்‌ – திரையினுள்‌ளேயே திரும்பிப் போகின்‌றாள்‌ ;
மண்டலம் சுற்றி – (அத்திரை யிடத்துள்‌ இருந்தாபடியே), மண்டலமாகச் சூழவந்து
ஆடுகின்றாள்‌-கூத்தாடுகின்றாள்
மதங்கி விடங்கு கண்டு -இந்த மதங்கியி னழகைக் கண்டால்‌,
பிழைப்‌பார்‌ ஆர் – இங்கே பிழைப்பவர் யாரிருக்கிறார்கள்‌ ?
இந்தப் படங்கு விண்‌டால்‌ – இந்தத் திரையை நீக்கி விட்டாலோ,
பின்னை – பிற்பாடு,
உம்‌ பதி களுக்கு – உங்களூர்களுக்கு,
போக ஒண்ணாது – போக முடியாது ; (ஆதலால் ) விரைந்து ஏகும்‌- சீக்கிரமாக ௮ப்பால் போய் விடுங்கள்‌ :

சபையிலிருப்பவர்களே ! உங்களுக்கு ஒரு விஷயம்‌ சொல்லுகேன்‌ கேளுங்கள்‌, பாடல் வல்ல இக் கூத்தாடிச்சி குருகூராழ்வாரை வணங்கிக்‌ கூத்தாடத் தொடங்குகிறாள்‌, இவளழகு கண்டால்‌ எல்லாரும்‌ மோகித்து வீழ்ந்து இறப்பார் -ஆதலால்‌ இப்பொழுதே விரைந்து உம்மூர்க்குப் போங்களென்பதாம்‌. பின்னை – இடைச் சொற் றிரிபு, எண்ணாது – ஒன்றாதென்‌பதன்‌ மரூஉ.

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு-

———–

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே
. 71–

பொதியம்‌ – பொதிய மலையானது ,
தரும்‌ – கொடுக்கின்ற
அமுதம்‌ – நீர்ப் பெருக்கை யுடைய,
நதி – தாமிரபருணியாற்றருகிலுள்ள,
அம் -அழகிய,
குருகூர்‌ – திருக் குருகூரிலவதரித்த, –
எந்தை -எங்கள் இறைவரான ஆழ்வார்‌, பூசுரர்க்கு – பிராமணர்களுக்கு,
தமிழ் பதியம்‌ என்ன – தமிழில்‌ பதிகங்களென்‌னும் படியாகவும்‌,
நான்மறை என்ன – நான்கு வேதங்களென்பனவாகவும்‌,
இ பார்‌ – இந்த உலகத்தை
புரக்கும் – தன்‌ குளிர்ச்சியால்‌ காக்கின்ற,
மதி- சந்திரனை யொத்த,
அந்தமில்‌ – முடிவில்லாத,
ஒளி – பிரசாசத்தை யுடைய,
மாலைகள்‌ என்ன – மாலைகளென்‌னும் படியாகவும்‌,
மறை – வேதத்தை யொத்த,
தமிழின்‌ -தமிழ் மொழியில்‌,
௮தியம்‌ தரும்‌ – மிகுதியான பெருமையைத்‌ தருகின்ற,
ஆயிரம்‌’ கவி- ஆயிரம்‌ பாடல்களை,
செய்து – பாடி,
அளித்தான்‌– கொடுத்தருளினார்‌ ;

குருகூராழ்வார்‌ பிராமணர்களுக்குத் தமிழெனவும்‌, நான் மறை யென்னவும்‌ மாலை ளென்னவும்‌ ஆயிரம் பாடல்கள் பாடிச்‌ கொடுத்தருளினாரென்பதாம்‌.-பொதிய மலையில்‌ அகத்தியரிடத்தில்‌ பிறந்த தமிழிலக்கணம்‌ உலகத்தை வாழ்விப்பது போல தாமிரபருணி நதி பொதிய மலையில் சோன்றித்‌ தென்னாட்டை வாழ்விக்கும்‌ சிறப்புத் தோன்ற பொதியந் தரு நதி என்றார்‌.-பூசுரர்‌ – பூயியிலுண்டாகிய தேவரெனவே அந்தணர்க்காயிற்று, நம்மாழ்வார்‌ பிரபந்தம்‌ நான்‌கும்‌ நான்கு வேதங்‌கள்‌ போல்‌ கூறப்படுதலால்‌ நான்மறை என்றார்‌. பதிகம்‌ – பத்துப் பாடல்களை யுடைமையின்‌ பதிகமெனப் பட்டது, நினைக்கவும்‌, கூறவும்‌ குளிர்ச்சியைத் தருதலின்‌ மதியை யுவமித்தார்‌. ஒன்றோடொன்று தொடர்புடைமையின்‌ மாலைகளென்றார்‌. பதிகம்‌, அதிசம்‌ என்பன எதுகை நோக்கி, பதியம்‌, .அதியம்‌ என்றாயின. வேதப்‌ பொருளைக்‌ கண்டு மகிழ்பவர் அந்தணராதலால்‌ அவரே யிதன் பெருமையை யறிய வல்லவரென்று பூசுரர்க்கு அளித்தார்‌ என்க,

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்-

—————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே
. 72–

பரவும்‌ – எல்லாராலும்‌ துதிக்கப் படுகின்‌ற , குருகூர்‌ -திருக் குருகூரில்‌,
வந்த – அவதரித்த,
கற்பகம்‌ – கற்பகத் தருவை யொத்த நம்மாழ்வார்‌,
பொய்ச் சமயப்‌ புலவர்க்கு – பொய்யாகக் கூறப்படுகிற(லோகாயிதம்‌ பெளத்தமென்னும்‌) புறச் சமயங்களிலுள்ள வித்வான்‌களுக்‌கும்‌,
பூட்சி கண்டீர்‌ -மேற்கொள்ளத் தகுவாரென்று தெரிந்து கொள்ளுங்‌கள்‌;
மற்றை – அவர்களை யல்லாத,
மாயத்து -வஞ்சனையை யுடைய,
அருகர்க்கு – சயினர்களுக்கு,
போக்கு – அவர்கள்‌ மாறு பாட்டைப்‌ போக்குவதாகிய,
வல்வாய்‌ – உறுதியான வாயை யுடைய, வாட்சி கண்டீர்‌ – வாள்‌ போல்வதென்று தெரிந்த கொள்ளுங்கள்‌ :
மன்‌ – நிலை பெற்ற,
உயிர்‌கட்கு – ஜீவ ராசிகளுக்கெல்லாம்‌,
ஆட்சி கண்டீர்‌ – நிலையான பொருளாவாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌ ;
தொண்டர்க்கு – திருமாலின்‌ அடி.யவர்களுக்கு,
ஆனந்த வாரி கண்டீர்‌ – பேரின்பக்‌ கடல் போல்வாரென்று தெரிந்து கொள்ளுங்கள்‌
அறிவை – நம்முடைய அறிவுக்கு,
காட்சி கண்‌டீர்‌ – காண்பதற்குரிய பொருளாவார் என்று தெரிந்து கொள்ளுங்கள்‌,

குருகூரில் அவதரிதத கற்பகம் போன்ற நம்மாழ்வாரானவர்‌ பொய்‌யான சமயத்தருமேற்‌ கொள்ளத் தகுவார்‌ ;அருகர்க்கு வாள் போன்றவராவார்‌ ; மன்னுயிர்களை ஆளும் தன்மையராவர்‌ : தொண்டர்க்கு ஆனந்தக் கடலாவார்‌ ; அறிவுக்குரிய காட்சிப் பொருளாவாரென்பதாம்‌.-பிரத்தியஷப் பிரமாணம்‌ ஒன்றே யுடைய லோகாயிதரும்‌ காட்சி,அனுமானமாகிய இரண்டு பிரமாணங்களுடைய பெளத்தரும்‌ ஆழ்வார்‌ திருவாய் மொழியின்‌ கருத்தை மறுத்தற்கு இயலாதவராதலின்‌ அவராற்‌
பூணப்படுவாரென்றார்‌. வஞ்சனை யுடைய ஜைனர்‌ முற்கூறிய இரண்டினோடு ஆகமம்‌, அருத்தாபத்தி ஆகிய இரண்டனையுங்கூட்டி நான்கு பிரமாணங்களைக் கொண்டு எதிர்த்தும்‌ ஆழ்லார்‌ நூல்‌ அதன்‌ மேற் பட்டுள்ள பிரமாணங்களைக் கொண்டுள்ளதாதலின்‌ இதனை வெல்ல முடியாமையால்‌ அந்த அருகருக்கு வாள் போல்வர் என்றார்‌. தேவர்களுக்கு வேண்டுவன அளிக்கும் தருவைப் போல உலகத்தின்‌ மன்னுயிர்களுக்கு வேண்டியவற்றைத்‌ தரலிற்‌ கற்பகமென்றும்‌ அங்கனம் தருதலின் ஒன்றாகிய பேரின்பக் கடலைத்‌ தொண்டர்க்கே கொடுப்பரென்றும்‌ இங்கனம் இருந்தும்‌ மனத்தால்‌ நினைத்த மாத்திரத்தில் தர்சனம் கொடுத்தலில் காட்சி என்றும் கூறினார் -கற்பகம்‌ -உவமை யாகு பெயர்‌-

————-

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே.
73–

எம்மை – எங்களை,
விற்றும்- விலைக்‌கு விற்கவும்‌,
விலை கொள்ளவும்‌ – அந்த விலைப் பொருளைத் தாம்‌ பெற்றுக் கொள்ளவும்‌, உரியான்‌ உரியவரகிய,
மாறன்‌ – நம்மாழ்வார்‌ பாடி யருளிய,
கவி வெள்‌ளத்தை – பாடலாகிய பிரவாகத்தை,
யாம்‌ – நாம்‌,
நிதம்‌ – தினந்தோறும் ,
கற்றும்‌ – மூலத்தைக் கற்கக் கடவோம்‌; (௮ப்படிக் கற்ற பிற்பாடு),
செவிஉற கேட்டும்‌ – அதன் பொருளைக் காதில் நன்றாகக்‌ கேட்கக் கடவோம்‌ ; பருகி – குடித்து, களித்தும்‌ – மகிழ்வோம்‌ ; முற்றும்‌ – அந்தப்‌ பிரபந்த முழுவதும்‌, உள்ளே -எம் மனத்தினுள்ளே, ௨க – விழும்படி.,-பெய்தும்‌ – ஊற்றிக் கொள்வோம்‌ ; மூழ்கி – அந்த வெள்ளத்தில்‌ அழுங்க,-குடைதும்‌ – ஸ்நாநஞ் செய்வோம்‌ ; முகந்து கொடு – அள்ளி முகந்து எடுத்‌துக் கொண்டு,
நில உற – நிலை பெற்ற இடங்களிலே,
நிற்றும்‌ – நிற்போம்‌;
நீந்துதம்‌ – நிலை கொள்ளாத இடங்களில்‌ நீந்திச் செல்வோம்‌;

ஆழ்வார்‌ பாடலாகிய வெள்ளத்தைப் பற்றி வாயினாற் பேசுவோம்‌ ;பிறர் பாற்‌ கேட்போம்‌ ; உண்டு மகிழ்வோம்‌ ; எடுத்து உள்ளே ஊற்றிக் கொள்வோம்‌ ; அதில்‌ ஸ்நாநஞ் செய்வோம்‌ ; நிலை கொண்ட இடத்தில்‌ நிற்போம்‌; நிலை கொள்ளாத விடத்தில்‌ நீந்துவோம்‌ என்பதாம்‌, பருகும் போதெல்லாம்‌ தெவிட்டாது தித்தித்தலால் களித்துமென்றார்‌. முழுதுங்‌ கொள்ளுதற்கு எம்‌ அறிவாகிய கொள்கலம் பற்றாதாயினும்‌ வலிந்துஊற்றிக் கொள்வோமென்றார்‌. ஓயாமற்‌ பருக வேண்டியதனால்‌ முகந்துகொடு நிற்றுமென்றார்‌, யாம்‌ அவர்க்கு அடிமையாய் விட்டபடியால்‌ அவர்‌ என்னை விற்கவும்‌ பொருளைப் பெறவுமுரியரென்றார்‌. விற்றல்‌-அடியார்க்கு அடியனாகச் செய்தல்‌.விலை கொள்ளுதல்‌ – அவ்வடியாரையும்‌ தம்மடியாராக்குதல்‌, மாறன்‌ – ஆழ்வார்‌ திருப் பெயர்களுளொன்று.-கற்றும்‌ முதலியவை – தன்மைப்‌ பன்மை எதிர் கால வினை முற்று, திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கேற்ப முமுவதும்‌ உருவகஞ்‌ செய்தமையால்‌ இது முற்று உருவக அணி’.

———–

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே.
74–

பொருள் -அகப்பொருள்
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத் தலைப்பாடு,
துறை–கண்ணயந்‌துரைத்தல்‌.

கவிக்கு – செந்தமிழ்ப் பாடல்கள்‌ பாடுவதற்கு,
அரசன் -தலைவராகிய (நம்மாழ்வார் அவ தரித்த )
தெள்‌ – தெளிந்த,
அம்‌ – நீர்‌,
பரந்த – பரவிய,
வயல்‌ – கயல்கள் சூழ்ந்த,
குருகூர்‌ – திருக் குருகூரிலிருக்கிற ,
கொம்பின்‌ – அந்தப் பெண்ணினது ,
செம் முகத்து – சிவந்த முகத்தினிடத்தில்‌,
எம்‌ உள்ளம்‌ – எமது மனமானது ,
பரந் தனவயோ -இரண்டாகப்‌ பரவி இருக்கின்றனவோ
கமலத்து – தாமரை மலரில்‌,
வெள்ளம்‌ – பிரவாகமான கடல்கள்‌ தாம்‌,
பரந்தனவோ – பரவி யிருக்கின்‌றனவோ ? அன்றி- அல்லாமல்‌,
வெள்மதி மேல்‌ – வெண்மையாகிய சந்திரன்‌ மேலே யுள்ள,
முயல்‌ நீக்கி- களங்கமாகிய முயலை நீக்கி, கள்‌ளம்‌ – களவாகிய தொழிலொன்று தான்‌, பரந்தனவோ – இரண்டு வடிவாகி விளங்கு கின்றனவோ ?
கண்களோ – கண்கள் தாமோ ?
ஒன்றும்‌ ஒர்கிலோம்‌- ஒன்றாகத்‌ துணிந்து சொல்ல யாம்‌ ௮றிந்தோமில்லை.

ஆழ்வார்‌ குருகூரில்‌ எம்‌ தலைவியின்‌ முகத்திலுள்ளன கமலத்தில்‌ வெள்ளம்‌ பரந்தனவோ ? சந்தின் மேற்‌ களவுத் தொழில் தான்‌ பரந்னவோ? அல்லது என்‌ மனந்தான்‌ ௮ங்கனம்‌ பரந்தனவோ ? கண்கள்‌ தாமோ? ஒன்றும்‌ அறிந்தோமில்லை யென்பதாம்‌,-தலைவியைக் கண்ட பொழுது அவளுறுப்புக்கள் சில மலர்கள்‌ போலத்‌ தலைவனுக்குத்‌ தோன்றியதற்கு ஏற்ப இங்குக் கொம்பு என்றான் – கொம்பு-மலர் நிறைந்த கொம்பு, காம மயக்கத்சாலிருண்ட தன்‌ மனத்தை அவளுடைய இருண்டு விழியாகக்‌ கூறியது பண்பு பற்றி யென்க , இவன்‌ நெஞ்சம் அவள் விழியால்‌ தாக்கப்பட்டு அவ்விழி களிலே அடங்கிக் கிடந்ததனால் தன் மனமே அல்வடிவினது என்றான்‌.,அங்கனம்‌ கொண்ட மயலுச்கு எல்லை காணாமல்‌ ஆழ்ந்ததனால்‌ கரையிலாக் கடலே பரந்தனவோ என்றான்‌; இப்படியே கடலினும் பெரிய கண்கள் என்றார் இராமாயணத்திலும்‌, கொம்பு -உவமை யாகு பெயர்‌. வெள்ளம்‌, கள்ளம்‌, உள்‌ளம்‌ – பால் பகா அக்றினைப் பெயர்களாதலால்‌ பன்மை முடிபு கொண்டன.இத்துறை முற்றும்‌ ஐயவுவமை. குறிஞ்சிக்குரிய கருப்பொருளொன்று மில்லாமையால்‌ உரிப் பொருளைக் கொண்டு குறிஞ்சி யென்‌று கூ.றலாயிற்று,-இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்சசி துணிந்த தலை மகன்‌ மற்றை நாள்‌ முன்‌ கொடுத்த தெய்வம்‌ இன்னுங்‌ கொடுக்குமென்று அவ்விடஞ் செல்லுதல்‌. கை கோள்‌ – களவு, கூற்று -தலைவன்‌ கூற்று, மெய்ப்பாடு – பெருமிதம்‌ ; உவகையுமாம்‌. பயன்‌ -கண் சிறப்புரைத்தல்‌ ஹேதுவாகத் தலைவியைச் சார்தல்‌.

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது-தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது-நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்-இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் – இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால் வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார்

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே
. 75–

ஓரும் – ஆராய்‌ந்து அறிகின்ற
தகைமைக்கு – உயர்ந்த தன்‌மைக்கு,
உரியாரும்‌ – தகுந்தவர்களும்‌;
ஓங்கிய -உயர்ந்த,
ஞானியரும்‌ -ஞானமுடையவர்களும்‌,
சாரும்‌ – அடையப் பெற்ற,
தனி. ஒப்பற்ற,
தலைவன் – தலைவராகிய,
சடகோபன்‌ – சடகோபனென்‌னும் பெயருடைய நம்மாழ்வாரவதரித்த,
தட பதிக்கு – விசாலமான திருக் குருகூருக்கு,
வாரும்‌- வரக் கடவீர்கள்‌ ;
உமக்கு -உங்களுக்கு
ஒர்உறுதி – ஒரு உறுதிப்‌ பாட்டை,
சொன்னேன்‌ – இப்பொழுது சொல்லுகிறேன்‌; (அப்படி. வருவீரேல்‌,)
நும்‌- உங்களுடைய,
மயக்கம்‌ எல்லாம்‌ -விபரீதமுழுவதும்‌,
தீரும்‌: -நீங்கி விடும்‌ ;
திருக்கு அறும்‌ – மாறுபாடுகள் நீங்கி விடும்‌
தீங்கு -தீவினைகள் எல்லாம்‌,
அறும்‌ – நீங்கும்‌;
சிந்தை -உங்கள் மனமும்
செவ்வே நிற்கும் -கோணாமல் ஒரு தன்மையாக நிலை நிற்கும்

நீங்கள் ஆழ்வார் குருகூருக்கு வாருங்கள்‌ ; உங்களுக்கு ஓர் உறுதி சொல்லுகின்றேன்‌ ; உங்கள்‌ மயக்கம்‌ நீங்கும்‌ ; திருக்கு நீங்கும்‌; மனம்‌ ஒழுங்குபடும்‌ ; தீங்கறுமென் பதாம்‌. ஒர்தல்‌ – கடவுளியல்பை யறிதல்‌, ஓங்கிய ஞானம்‌ – கடவுளை அறியும் அறிவு – மயக்கம்‌ – ஒன்றை மற்றொன்றாகக்‌ கருதும் விபரிதம்‌: என்றது எங்கும் வியாபித்து இருப்பவன் நாராயணனென்‌பதை மறந்து மற்றத் தெய்வங்க௭ வியாபித்திருப்பதாகக் கருதுதல்‌, திருக்கு – மாறுபாடு, அதாவது கடவுளும்‌ அவர் போல்வாரும்‌ நியமித்த வழிக்கு விரோதமாக நிற்றல்‌, இவைகள் ஓழியவே மனம்‌ ஓரு, தன்மையாகவே நின்று கடவுளைத் துதித்துப் பரம பதத்தை அடைதல்‌ கூடிமென்பதாம்‌,-இவை யனைத்தும்‌ திருக் குருகூரை யடைந்த மாத்திரையே பெறலாகுமென்றதனால்‌ இது அப் பதியின்‌ சிறப்புக் கூறப்பட்டது, வாரும்‌ என்பதற்கு நீங்கள் என்பதை தோன்றா எமுவாயாக்கிக் கொள்க,சொன்னேன்‌-தெளிவினால்‌ வந்த கால வழு வமைதி,

———

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே.
76–

பொருள் —அகப் பொருள் .
திணை -மருதம்
கிளவி –பராத்தையிற் பிரிவு.
துறை–காமக் கிழத்தி மைந்தனை யெடுத்தல்‌.

அறு வகையாய் -ஆறு வகைப்பட்ட சமயமும்
சமய நூல்களும் ஐ வகைத்தாம்‌-ஐந்து வகைப் பட்டதாகிய,
புலனும்‌ உறுவகையால்‌-தன் மாத்திரைகளும்‌ கூடி யுள்ளவகையினால்,
சொன்ன – சொல்லிய,
ஓட்‌டம்‌எல்லாம்‌ – நீண்ட பொருள் விரிவு முழுவதும்‌,
ஒழிவித்து – போக்கி,
ஒருங்ககே – ஒரு சேர,
பெறு வகை ஆறு என – அடையும்படியான வழுி இது வென்று,
செய்த – பிரபந்த ரூபமாகச் செய்து காட்டி யருளிய,
பிரான்‌ -தலைவரும்‌,
குருகூர்‌ பிறந்த – குருகூரிலே அவதரித்‌தருளிய,
சிறு வகையார்‌ – சிறிய மனித வடிவினருமாகிய,
அவரை – அந்த நம்மாழ்வாரை,
தொழுதோம்‌ – யாம்‌ வணங்கினோம்(ஆதலால்‌) எம்மை
தீண்டுக- தொடுவாயாக;

சமய நூல்களில்‌ கூறிய மாறுபாடுகளை யெல்லாம்‌ போக்கி நல்வழி இதுவே யெனப்‌ பிரபந்த ரூபமாகக்‌ காட்டி யருளிய திருக் குருகூர்‌ நம்‌மாழ்வாரை யாம்‌ தொழுதோமாதலால்‌ மைந்தனே ! எம்மைத் தொடுவாயாக வென்பதாம்‌, பஞ்ச, தன் மாத்திரை: சுவை, ஒளி, ஊறு! ஒசை, நாற்றம்‌ எனபன, இவற்றாற் சொல்லிய ஓட்டம்‌ – அவ்வச்‌ சமய நால்களில்‌ கூறிய தத்துவ சாத்திரங்களாம்‌ ; எனவே அவற்றை யொழித்து நான்கு வேதங்களின்‌ பொருள்களாகிய கிருவாய்மொழி முதலிய நான்கு பிரபந்தங்களையும்‌ நிலையிட்டருளியபடி என்பதாம்‌, ஆய சமயம்‌ – இடைச்‌ சொற்றொடர்‌. ஒழிவித்து, வி- பிற வினை விகுதி. குரு கூர்ப்பிறந்த – எழாம்‌ வேற்றுமைத் தொகை.
தலைவன்‌ பரத்தையிற்‌ பிரிவில்‌ தலைவியின்‌ மைந்தன்‌ தெருவில்‌ விளையாடும் பொழுது அங்கு வந்த காமக் கிழத்தி தான்‌ தூய்மை யுடையவளென்று கூறி ௮ப் புதல்வனைத் தன் பாலழைத்தது இத் துறையின் கருத்து. தலைவன்‌ பரத்தையிற் பிரிதலும்‌ தலைவிக்கு ஊடல் தோன்றுதலின்‌ உரிப் பொருளால்‌ மருதமாயிற்று , மெய்ப்பாடு பெருமிதம்‌. பயன்‌-காமக் கிழத்தி மகிழ்தல்‌. கை கோள்‌ – கற்பு, கூற்று – காமக் கிழத்தி கூற்று,

சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும் ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே
. 77–

அணி நீர்‌ -அழகிய பொருநை யாற்று நீர் பரந்த,
தமிழ்‌ -தமிழ் வளம் பொருந்திய,
திரு – அழகிய,
பாண்டி நாட்டு- தன் பாண்டி நாட்டிலே, உருக் காட்டிய – வடிவமெடுத்தருளின, பாவகற்கு – பரி சுத்தரான நம்மாழ்வாருக்கு,
அன்பனாய்‌ – தொண்டு செய்பவனாய் ,
ஆண்டில்‌ -அவ்விடத்‌தில்‌,
வீனையேன்‌ -தீ வினை யுடையவனாகிய நான்‌,
இவ் வெறும்‌ பிறவி – இப் பயனற்ற பிறப்பில்‌,
பிறந்த அக் காலத்திலே – பிறந்த அப்‌பொழுதே தானே.
தீண்டி- பரிசித்து .
திருவடியைப் பற்றிக் கொண்டு -ஆழ்வார்‌ திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, சிந்தித்ததை – மனத்தில் நினைத்ததனை, வேண்டிக் கொளப்‌ பெற்றிலேன்‌ – பிரார்த்தித்து அடையப்‌ பெற்றேன் இல்லை ;

நான்‌ பிறந்த பொழுதே நம்மாழ்வாருக்‌ கன்புடையோனாய்‌ அவர்‌ திருவடியைப் பற்றிக் கொண்டு நினைத்ததைப்‌ பிரார்த்தித்துப்‌ பெற்றுக்‌ கொண்டேனில்லை என்பதாம்‌. மற்றை நாட்டைக் காட்டிலும்‌ சிறப்புடைமை தோன்றம்‌ தமிழ்த் திருநாடு என்றார்‌.-பாவகன்‌ – அக்னி. அவனைப்‌ போலப் பரிசுத்த முடைமையால்‌ ஆழ்வாரை அவ்வாறு கூறினார்‌. இம்மைப்‌ பயனைத் தேடி உழலுதலால்‌ வெறும் பிறவி என்றார்‌. சிந்தித்தது – வீட்‌டின்பம்‌, பாவகன்‌- உவமை யாகு பெயர்‌, வெறம் பிறவி-பண்புத் தொகை நிலைத் தொடர்‌, சிந்தித்தது – வினைப்பெயர்‌,

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே-தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்-வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே – சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்-இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே
. 78–

பாவகத்தால்‌ – அம்சத்தினால்‌,
தன்‌ – மாயோனானவன் தன்னுடைய,
திருஅவதாரம்‌ – சிறந்த அவதாரங்கள்‌, பதினொன்று என்‌று -பதினொன்றாகுமென்று,
இ பூவகச்தார்‌ – இந்த வுலகத்திலுள்ளவர்‌கள்‌,
அறியாத வண்ணம்‌ -அறிந்து கொள்ளாதபடி
தனையே புகழ்ந்து – தன்னைத் தானே கொண்டாடி,
நா ௮கத்தால்‌-தந் நாவினிடமாக,
ஆயிரம்‌ கவி பாடி -ஆயிரம் பாடல்கள் பாடி,
நடித்து- வேறாயுள்ளவரைப்‌ போலக் காட்டி, அளித்த -கொடுத்தருளிய,
கோ அகத்தாற்கு அன்றி-பரம பத நிலைமையை யுடையவராகிய நம்மாழ் வாருக்கே யல்லாமல்‌.
புறத்தார்‌-அன்னியர்களுக்கு,
செய்‌ – செய்கின்ற
குற்றேவல்கள் -சிறிய ஊழியங்கள்
என் –என்ன பயன் தரும்

நம்மாழ்வார் மாயோன் அம்சமாகப் பிறந்து அந்த மாயோனைத் துதித்தலால் தன்னையே புகழ்ந்து கொண்டவராய்‌ ஆயிரம் பாடல்கள் பாடி யருளினார்‌-௮ப்படிப் பட்டவர்ச்குத் தொண்டு செய்யாமல்‌ பிறருக்குச் செய்‌யும்‌ ஊழியத்தாலடைவன யாவை யென்பதாம்‌,-ஆழ்வார் திருமாலின்‌ அம்சமென்று கூறப்படுதலால்‌ அந்த மாயோனவதாரம்‌ பத்தன்றிப் பதினொன்றென்‌றார்‌. அக் காரணத்தால்‌ இவர்‌ மாயோனைப் புகழ்ந்ததும் தம்மைப் புகழ்ந்ததாயிற்று, நடித்தல்‌- மாயோன்‌ வேறு தாம் வேறு என்று உலகத்தாருக்குத் தோன்ற நடித்தல்‌-. பூ ௮கம்‌ -பூமியாகிய இடம்‌; இருபெயரொட்டு, தன்னையே, ஏ -பிரி நிலை, கோவகத்தான்‌ – மேலாகிய இடத்தை யுடையவன்‌, புறத்தார்ச் செய்‌- வேற்றுமைத் தொகை –

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்-

தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து-யானாய்த் தன்னைத் தான் பாடி–நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்–திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே–அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்–சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்–வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்–கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

———

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே
79–

குருகைப்‌ பிரான்‌ – திருக் குருகூரிலுள்ள இறைவராகிய,
எம்‌ பிரான்‌ தன்‌ – எங்கள்‌ நம்மாழ்வாருடைய,
இயல்‌ இசைக்கு – இலக்கணமும்‌ பண்ணும்‌ அமைந்த திவ்யப்‌ பிரபந்தங்களாலே. (யான்‌) குற்றேவலும்‌ செய்து – சிறிய வேலைகளும் செய்து ,
மெய் கண்டு – அப்பிரபந்தங்களின்‌ தத்துவார்த்தத்தைத் தெரிந்து கொண்டு,
கை கொண்டு கும்பிட்டு – எனது கைகளாலஞ்சலி செய்து.
அன்பு பெற்றேன்‌ – அவருடைய கருணையை யடையப் பெற்றேன் ;
என்‌ போல்‌- என்னைப் போல,
எவர்‌ – யாவர் தாம்‌,
பேறு பெற்றார்‌ – பயனடைந்து இருக்கிறார்கள்‌ ? (ஒருவருமில்லை என்றதாம்‌),
பின்னையே பிறந்து – பிற்பட்டு உண்டாகி,
வெற்று ஏவலில் நின்ற – பயனற்ற பணி விடைகளில்‌ நிலை நிற்கின்ற ,
பொய்‌ அன்பர்‌ தாங்களும்‌ – பொய்யாகிய வழிகளில் சென்று அன்பு செய்கின்றவர்களும்‌,
மெய்‌ – தத்துவ ஞானத்தை ,
உணர்ந்தார்‌ – அறிந்து கொண்‌டார்கள்‌ ; எறறு – இது எத்தன்மைத்தான வியப்புடையது

யான்‌ ஆழ்வார்‌ பிரபந்தத்தை ஆரியருக்கு ஏவல்‌ முதலியவற்றைச்‌ செய்து படித்து ௨ண்மைப் பொருளறிந்து அவர் அருள் பெற்றேன் – என்‌னைப் போல் பெற்றவர் யார்‌? ஆழ்வார்க்குப்‌ பிற் பட்ட பலர்களும்‌ இந்தப்‌ பிரபந்தத்தினால் தத்துவ ஞானம்‌ பெற்றார்கள்‌, ஈதென்ன வியப்பு ?என்பதாம்‌. இயல்‌, இசை – சினை யாகு பெயர்‌.-ஏவலும்‌, உம்‌. இறந்தது தழுவிய எச்சம்‌. எற்றே , எல்‌ – தே எனப் பிரித்து ஒளி பொருந்திய தெய்வமாகிய பிரானென்று கூட்டினும்‌ அமையும்‌. கைகொண்டு, கொடை-மூன்றாம் வேற்றுமைச்‌ சொல்லருபு, எற்று – குறிப்பு முற்று,

———

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–
80–

பொருள் –அகப் புறப் பொருள்‌,
திணை -கைக்கிளை
துறை–காட்சி; ஆண் பாற் கூறறு,

இயலை – இலக்கணங்களை,
தொடுத்து – திருவாய்மொழியி்‌ல் புகுத்தி,
இன்‌ இசையை- இனிய இராகங்களை.
புணர்த்து-கூட்டி,
எம்மை–, இ. இந்தா ,
பிறவி மயலை. – பிறப்பினால் உண்டாகிய மயக்கத்தை ,
துடைத்த – போக்கின,
பிரான்‌ – நம்மாழ்வாரவதரித்தருளிய,
குருகூர்‌ – திருக் குருகூரில்‌,
மதியைக் கொணர்ந்து- சந்திரனைப் பிடித்து வந்து ,
முயலை – அதிலுள்ள களங்கத்தை, துடைத்து – போக்கி , (அதனிடத்தில்‌),
தனுவைப் பதித்து – இரண்டு விற்களை அமைத்து ,
முத்தங் குயிற்றி – முத்துக்களைப்‌ பதித்து,
கயலை – இண்டு கயல் மீன்களை,
கிடத்தி- வைத்து,
சாளரத்தூடு – சன்னல்களுள்ளே வந்து,
கதவு இட்‌டதே கொல்‌ – கதவு தாழ் போடப் பட்டதோ ?

இலக்கண அமைதியும்‌ இசை அமைதியுமுள்ள பிர்பந்தஞ் செய்தருளின ஆழ்வாரது குருகூரில்‌ சந்திரனிடத்தில்‌ களங்கம் போக்கி விட்‌டும்‌ முத்தும்‌ மீனும்‌ அமைத்து பலகணியினூடு வைத்துக் கதவிடப் பட்‌டதோ வென்றான்‌ என்பதாம்‌.-எல்லா இலக்கணங்களுக்கும்‌ இலக்கியமாகக் கொள்ளுதலால்‌ இயலைத் தொடுத்தென்றார்‌ – இசையோடு கூறப்படுவதனால் இசையைப்‌ புணர்த்தென்றார்‌. படித்தலால்‌ பிறப்பின்‌
மயக்கம்‌ நீங்குதல் பற்றி மயலைத் துடைத்தென்றார்‌. களங்கம் துடைத்த
மதி – முகத்துக்கு உவமை. தனு-புருவத்துக்கும்‌, முத்துக்கள்‌. – பற்களுக்கும்‌; கயல்கள்‌ – கண்களுக்கும்‌ உவமை யாதலால்‌ இவை யனைத்தும்‌ உவமை யாகு பெயர்கள்‌. கொணர்ந்து , கொணா – பகுதி, கொல்லென்‌னும்‌ ஐய இடைச் சொல்‌ பிரித்துக் கூட்டிப் பொருள்‌ கொள்ளப்பட்டது -கைக் கிளை – ஒரு மருங்கு பற்றிய அன்பு; அதாவது ஒரு தலைக் காமம்‌;ஒப்பாரு மிக்காரு மில்லாத்‌ தலைவன்‌ வேட்டை மேலீட்டினால் சென்று ஒரு தலைவியை நோக்கி மயங்கிய சிறப்புடைக்‌ கைக்கிளை யன்றி அடியோர்‌
பாங்கினும்‌?? என்ற விதிப்படி யமைந்த அடியவன்‌ தலை மகனாய்த்‌ தெருவில் செல்பவன்‌ சாளரத்துள் ஓருத்தியைக் கண்டு இருவரும் மயங்கியவழித் தலைவன்‌ கூறியது, மெய்ப்பாடு -மருட்கை, பயன்‌ – வியப்பினாலுள்ள மகிழ்தல்-

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே.
81–

கேணியிலும்‌ – கிணறுகளிலும்‌,
பட்டத்திலும்‌ – பட்டக்‌ கால்களிலும்‌,
பைந்தடத்திலும்‌ – பசிய குளங்களிலும்‌,
ஓடை – நீரோடைகள்‌ சூழ்ந்த,
பழனத்திலும்‌ – பள்ளமாகிய வயல்களிலும்‌,
குட்டத்திலும்‌ – ஆழமான குட்டைகளிலும்‌,
கயல்பாய்‌ – கயல் மீன்‌ பாய்ந்து குதிக்கின்ற,
குருகூரர்‌ – குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய,
குணங்களுக்கு – நல்லொழுக்கம்‌ அமைந்த குணங்களைக் கண்டு,
இருப்பின்‌ கிட்டத்திலும்‌ வலியாரும்‌-இரும்புகளுருக்குகின்‌ற உருக்குக் கிட்டானைக்‌ காட்டிலும்‌ வலிய நெஞ்சுடையவரும்‌,
இட்டத்திலும்‌ _ கருத்துக்களைச்‌ சொல்லுமிடத்திலும்‌,
தம்தம்‌ உள்ளத்திலும்‌ – தங்கள்‌ தங்கள்‌ மனத்திலும்‌,
எண்ணிலும்‌ – நினைப்பினும்‌,
உருகுவர்‌ – கரைவார்கள்‌ ;

குருகூராழ்வாருடைய நல்லொழுக்கமமைந்த குணங்களைக் கண்டு கடின செஞ்சுடையவரும்‌ மனமுருகு வாரென்பதாம்‌, பட்டம்‌ – தண்‌ணீர்ப் பெருக்கும் காலத்‌தில் மட்டும்‌ ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்‌. நீர் வளத்‌தால்‌ மேடும்‌ பள்ளமான வயல்களிலும்‌ கிணறு குள முதலியவற்றிலும்‌ ஏற்றத் தாழ்வின்றி மீன்கள்‌ பாய்தல் போல ஆழ்வாரின்‌ குண விசேஷத்‌தால்‌ அறிந்தோர்‌ அறியாதோர் கொடிய நெஞ்சர்‌ முதலிய யாவரும்‌ உருகுவாரென்று தொகை மொழியாற்‌ கொள்க , இரும்பு – வன்றொடராயிற்‌
று. ஓடையாகிய பழனம்‌ என்றாக்கி இரு பெயரொட்டென்றலுமாம்‌’-இதற்கு நீண்ட வயலென்று பொருள் கொள்க -குட்டம்‌ – பண்பாகு பெயர்‌.

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்-இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்-இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை-கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –-ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

————————–

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெரும்‌- பெரிய,
தண்‌ – குளிர்ந்த,
வகுளம்‌ மணம்‌ – மகிழ மலரின்‌ மணமானது ,
வேண்டும்‌ – விரும்பி யுறைகின்ற,
தண் தெரியல்‌ – குளிர்ந்த மாலை யுடைய,
பெருமான்‌ – நம்மாழ்வாரருளிச் செய்த,
செய்யுள்‌ – பாடல்களாகிய,
மா மணியின்‌ – சிறந்த இரத்தினங்களுடைய,
கணம்‌ -,கூட்டத்தை ,
வேண்டும்‌ என்று – கற்க வேண்டுமென்று,
அறிவாரை – அன்போடு படித்து அறிந்தவரை ,
கண்டால்‌ – தரிசித்தால்‌,
குணம்‌வேண்டுமே – அவர்களுக்கு நற் குணங்கள்‌ வேண்டுமோ? (வேண்டாம்‌)
நல்‌ குலம் வேண்டுமே – நல்ல குலமாயிருக்க வேண்டுமோ ? (வேண்டாம்‌)
௮ குலத்து ஒழுக்காம்‌ – அந்தக் குலத்‌துக்குரிய நடையாகிய, –
பிணம்‌-பயனற்ற பிணம் போல்‌வதும்‌. வேண்டுமே – வேண்டுமோ ? (வேண்‌
டாம்‌)
செல்வம்‌ பேய்‌ – பொருளாகிய பிசாசும்‌, வேண்டுமே – வேண்‌டுமோ ? வேண்டாம்‌
ஆதலால்‌, சென்று -உடனே அருகிற் சென்று,
கை தொழும்‌ – கை கூப்பி வணங்குங்கள்‌

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழிப்‌ பிரபந்தத்தை அன்‌போடு படிப்பவரைக் கண்டால்‌ ௮வருடைய குணம்‌ குலம்‌ நடை பொருள்‌ யாவும்‌ பார்க்க வேண்டியதில்லை உடனே சென்று வணங்குங்கள்‌ -என்பதாம்‌. குணம்‌ – அன்பு. பொருள்‌, அடக்கம்‌ முதலியன. குலம்‌ – ௮ந்தணர்‌ முதலிய உயர்குலம்‌, நடை – அவர்கள்‌ தர்கள்‌ மதத்துக் ஏற்பக் கட்டியதானால்‌ பிணமென்றிகழ்ந்தார்‌. பேய்‌ – தான்‌ பிடித்தவரைத்‌ தன்‌ வசமாக்குதல்‌ போலப்‌ பொருளும்‌ விருமபினாரை வசமாக்குதலால் பேயென்றார்‌. மணிக்கு மேற் சிறந்த பொருள்‌ தோற்றத்தி லில்லை யாதலால்‌ மணியை உவமித்தார் -வேண்டுமே என்பவன வற்றிலுள்ள ஏகாரங்கள்‌ எதிர் மறைப் பொருளன.-செல்வப் பேய்‌ – இருபெயரொட்டு, பெருந் தண் வகுளம்‌- பண்புத் தொகை ; பன் மொழித் தொடர்‌:

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு-

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–
83-

தொழும்பு ஆக்கிய – என்னை அடிமையாகக் கொண்ட,
வினை – தீ வினை மிக்க,
தொல்லை – பண்டைக் காலம் தொட்டுள்ள,
பிறவி-பிறப்பாகிய, (கடலிலுள்ள), சுழியிடை நின்று – தண்ணீரின்‌ சுழலிருந்து
எழும்‌ – வெளியில்‌ வரும்படியாகிய, பாக்கியம்‌ – செல்வம்‌,
உடைத்து ஆக்கவும்‌ – எனக்கு உடையதாக்கவும்‌,
தென்‌ – அழகிய,
இயலோடு இசைந்து – இலக்கணத்துடனே பொருந்தி,
கெழும்‌ – விளங்‌கிய,
பா – பிரபந்தப் பாடல்களில்‌,
கெழுமிய – பொருந்திய,
கீர்த்தியை -கடவுளின்‌ குண விசேடங்களை,
நாளும்‌ கிளத்தி- தினந்தோறும்‌ சொல்‌லிச் சொல்லி,
என்‌ நா – எனது நாக்கில்‌,
தழும்பு ஆக்கவும்‌ – தழும்பு ஏறச் செய்யவும்‌, வல்ல கோ – வலியரான இறைவர்‌,
தயா பரன்‌ – கருணை யுடையவரான, சடகோபன்‌ – நம்மாழ்வாரேயாம்‌ ;

பிறவிப் பெருங் கடற்‌ சுழியில் அமுங்கிப்‌ போகாமல் எழுந்து மீண்டு வருந்‌ திறமை யுடையதாக்கவும்‌ திவ்வியப்‌ பிரபந்தங்களில் உள்ள கடவுளின்‌ மகிமையைத் தினந்தோறும்‌ கூறி எனது நாக்கில் தழும்பேறச்‌ செய்யவும் தகுதி யுள்ளவர்‌ நம்மாழ்வாரே யென்பதாம்‌. தீ வினை தான் செல்லும்‌ வழியே என்னை இழுத்தலால்‌ தோழும்பாக்கிய வினை யென்‌றார்‌. மாறாமல்‌ தொடர்ந்து வருதலால்‌ தொல்லைப் பிறவி யென்றார்‌.
இது பற்றியே தொல்லை நம்‌ பிறவி யெண்ணிற்‌றொடு கடல்‌ மணலுமாற்றா” என்றார்‌ திருத் தக்க தேவரும்‌, அதில்‌ நின்று மீண்ட வரருமையாதலால்‌ சுழி யென்றார்‌. ஏனை மொழி களுக்குச் சிறப்புடை யிலக்கணம்‌ அமையாமை நோக்கி அரிய பெரிய தெய்வத் தமிழுக்கு உரிய இலக்கணத்துக்குத் தென்னியல் என்றார் -தொல்லை – பண்புப் பெயர்‌, உடைத்து –
குறிப்பு முற்றெச்சம்‌. வல்ல – குறிப்புப் பெயர் எச்சம்‌, கோ ௭ன்னும்‌ எழுவாய்‌ ஆம்‌ என்னும்‌ ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது –

தயா பரன் -பரம தயாளு-முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே-செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று-அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

——–

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே
.–84-

பொருள் -அகப் புறப் பொருள் .
திணை -பெருந்திணை
கிளவி -௮றத்தொடு நிற்றல்‌,
துறை– செவிலி நற்றாயத் தறத்தோடு நிற்றல்-நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

நங்காய்‌ – அன்னையே !
பரந்து – பரவி,
அலைக்கும்‌ – அலை மோதுகின்ற, பொருநை – தாமிரபர்ணி நதி சூழ்ந்த, குருகூர்‌ என்‌னில்‌ – திருக் குருகூர் என்று யாரேனும் கூறினால்‌,
உன்‌ மகள்‌ – உன்‌ புதல்வி,
கண் பனி மல்கும்‌ – கண்களில்‌ நீர்‌ பெருக்குவாள்‌ ;
கரம்‌ – கைகளை,
தலை கொள்ளும்‌ – தலையிற்‌ குவித்துக் கொள்ளுவாள்‌ :
கருத்து உள்‌ளும்‌ – மனத்தில்‌ தியானிக்கின்றாள்
(கருத்து ) உருகும் – மனம்‌ உருகுகின்றாள்
கவியால்‌ – பாடல்களால்‌,
உலகை – இந்தத்‌ தமிழ் நாட்டினை,
புரந்து – பாதுகாத்து,
அலைக்கும்‌ வினை – உயிர்களை வருத்துகின்ற தீ வினைகளை,
தீர்த்தான்‌ – நீக்கிய நம்மாழ்வார்‌.
புனை – ௮ணிந்து கொள்‌ளுகின்ற,
மகிழ்‌ பூவும்‌ ௮ன்றி- மகிழ மலரைச் சூடிக் கொள்ள விரும்புவதும் அல்லாமல்‌,
மரம்‌ தலைக் கொள்ளவும்‌ – ௮ந்த மகிழ மரத்தை அணைத்து மேற் கொள்ளவும்‌,
போதும்‌ – செல்லுகின்றனள் -இப்படி
யன்றி உன் மகள்‌ கருத்து இது என்று வருவித்து முடிப்பினுமையும்‌.

நங்காய்‌ உன்‌ மகள்‌ குருகூர் என்றவுடன்‌ கண்ணீர்‌ வடிக்கிறாள்‌ -கை கூப்புவாள்‌ ; கருத்தில்‌ நினைக்கிறாள்‌ மனம் கரைகிறாள்‌ ; அவ்வாழ்வார் சூடுகிற பூவை சூடிக் கொள்வதுமன்றி அந்த மகிழ மரத்தை அணைத்துக் கொள்ளவும்‌ செல்கிறாள்‌ என்பதாம்‌. நங்கை – எல்லாக்‌
குணங்களும்‌ நிறைந்தவள்‌. இதன்‌ ஆண்பால்‌ – நம்பி. கிளவித் தலைவன்‌ பெயர் கூறலின்‌ அகப்புறமாயிறறு, புறமெனவே அதன்‌ பகுதியாகிய பெருந் திணையாம்‌. தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ சரீர வேறு பாட்டை யறிந்து இது தெய்வத்தினால் ஆயி்ற்று என்று அத் தெய்வத்துக்குச்‌ சிறப்புச்‌ செய்யப் புகுந்த பொழுது அதனை அறிந்த தலைவி அஞ்சித்‌ தோழியிடத்‌துத்‌ தன்‌ காம நிலையைக் கூறத்‌ தோழியாலறிந்த செவிலி யானவள்‌ பெற்ற தாய்க்கு நிகழ்ந்தமை வெளியிடுதல்‌ கிளவியின்‌ துறையாகும்‌-கண் பனி மல்குமெனவே அன்பும்‌ தலைக் கொள்ளுமெனவே ஆர்வமும்‌ உள்ளுமெனவே கூடற்குறிப்பும்‌ உருகுமெனவே இன்பத்தின்‌ மகிழ்ச்சியும் மரம் தலைக் கொள்ளப் போதுமெனவே பிறரைக் கூற ஏதம் பயத்தலையும் குறிப்பிட்டமை யறிக-

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி-ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

———–

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே
. 85–

பொருள்‌–அகப் பொருள்‌
திணை – உரிப் பொருளால் பாலை.
கிளவி -உடன்போக்கு ,
துறை – பாங்கி தலைவனை உடன் படுத்தல் .

(ஐயனே !) கருத்தில்‌ – உமது மனத்திலே,
கருணை வைத்‌து – அன்பு பாராட்டி,
இவளொடு – இத் தலைவியைக் கைக் கொண்டு,
ஏகும்‌ – செல்லக் கடவீர்‌ ;
இதுவும்‌ – இப்படி நீர் கைக் கொள்ளுதலும்‌,
கலை மறையோர்‌ – கல்வியில் சிறந்த அந்தணர்கள்‌,
திருத்திற்று – ஒழுங்கு பட அமைத்ததாகிய,
ஒரு மணம்‌ – எண் வகை மணத்து ளொன்றாகிய காந்தருவமேயாம்‌ ;
தினம்‌ மயல் தீரும்‌ – இதனால்‌ காள்தோறும்‌ உங்களுக்குண்டாகிய காம மயக்கமும்‌ நீங்கும்‌;
நீரில்‌ – தண்ணீரருகில்‌,
நிறை – முளைத்து நிறைந்துள்ள,
முருத்தின்‌ – வெண்மையான அடிக்‌ குருத்துக்களை யுடைய,
செருந்து – நெட்டிக் கோரைகளுச்கு,
அயலே -பக்கத்திலுள்ள,
கரும்பின்‌ – கரும்புகளைடைய,
குருத்தில்‌ – குருத்துக்‌களில்‌,
முயல்‌ – முயற்கூடாகிய சந்திரன் போல, பிரசம்‌ வைக்கும்‌ -தேனடைகள்‌ வைக்கின்‌ற,
குருகூர்‌ – அவ்வாழ்வார் அவரித்த திருக் குருகூரை
சென்று – போய்‌,
கூடுமின்‌ – அடையுங்கள்‌ ;

ஐயனே ! இவளைக் கைக் கொண்டு செல்வீராக; இப்படிச் செல்வதும் கந்தர்வ மணத்தின் பாற்படும்‌ ; உங்களுக் குண்டாகிய காம மயக்கமும் தீரும்‌; ஆதலால்‌ நீங்கள்‌ திருக் குருகரைப் போயடையுங்கள்‌ என்பதாம்‌, நீரில்‌ முளைத்த மெட்டிக் கோரையோடு தோன்றி விளங்கிய கரும்பில்‌ தேனடை வைப்பது போல இந்தக் குடும்பத்‌தில்‌ இருக்கிற தன்‌
னிற் சிறந்து விளங்கிய தலைவி யிடத்து அன்பு வைப்பீர்‌ என்று உள்ளுறை யுவமம் கொள்க , இதனுள்‌ நீர் தலைவியின்‌ குடியாகவும்‌ தோழி நெட்டிச்‌கோரை யாகவும்‌ தலைவி கரும்பாகவும்‌ தலைவனது அன்பு தேனடையாகவும்‌ உவமித்தமை காண்க. இவை முழுவதும்‌ முதாலொடு முதல் வந்த மெய் யுவமம்‌,-எண் வகை மணமான :– பிரமம்‌, பிராசாபத்தியம்‌,ஆரிடம்‌. தெய்வம்‌, காந்தருவம்‌, அசுரம்‌, இராக்கதம்‌, பைசாசம்‌ என்‌பன, தேனனடையைச் சந்திரனாக வுவமித்தல்‌ பண்டை வழக்கு, : அவனுந் தான்‌, ஏனலிதணச்‌ தடிற் புகை யுண்டி யங்கும் , வானூர்‌ மதியம்‌ வரை சேரினவ்வரைத்‌, தேனினிறாலென வேணி யிழைத்திருச்கும் கானக நாடன்‌ மகன்‌ ‘என்பதினாலுமறிக , தலைவன்‌ தலைவி சுரத்தில்‌ செல்லுதலால்‌ திணை -பாலை யாயிற்று , தலைவனுடன்‌ தலைவி செல்லுதலால்‌ உடன்போக்காயிற்று, இத் துறை- * போக்கும்‌ வரைவும்‌ மனைவிக்கட்‌
டோன்றும்‌ ” (தொல்‌ – பொரு – 225) என்ற வழுவமைதிக்கு மாறாகத்‌ தோழி கூற்றாற் கூறியது : ஒன்‌றித் தோன்றும்‌ தோழி மேன ”(தொல்‌ – பொரு – 19..) என்பதனாற்‌ கொள்க,

கரும்பினிடைத்தேறல் -கலியன்-சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய மயலும் தீருமே –

————-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே
. 86–

கூட்டங்கள்‌ தோறும்‌- தாம்தாம்‌ கூடுமிடங்களிலெல்‌லாம்‌,
குருகை பிரான்‌ – திருக் குருகூரிலவதரித்த நம்மாழ்வாருடைய
குணம்‌ -சிறந்த குணங்களை,
கூறும்‌ – சொல்லிப் புகழ்கின்ற,
அன்பர்‌ ஈட்‌டங்கள்‌ தோறும்‌ – அடியார்களின் கூட்டங்களிலெல்லாம்‌,
இருக்கப்‌ பெற்றோம்‌ – கூடி யிருக்கலாயினேம்‌;
இருந்து – அப்படிக் கூடியிருந்த,
எம்முடைய… நாட்டங்கள்‌ தோறும்‌ -இரண்டு கண்களிலும்‌,
புனல்‌ வந்து- கண்ணீர் பெருகி,
நாலப்‌ பெற்றோம்‌- வடியப் பெற்றோம்‌ ;
(ஆதலால்‌) இனி மேல்‌, வீட்டு- பரமபதத்தில்‌,
எங்கள்‌ தோழர்க்கு என்றே (உள்ளவர்கள்‌) தங்கள் நண்பர்‌களுக்கு வேண்டுமென்று அமைத்தலால்‌,
பெரும்‌ போகம்‌- பேரின்ப நலமானது, விளைகின்றது -(யாம் போகு முன்‌) உண்டா யிருக்கிறது –

கூடும் போதெல்லாம்‌ குருகூர்‌ நம்மாழ்வார்‌ குணங்களைப் புகழுகிற அடியார் கூட்டத்திற்‌ சேர்ந்து இருக்கப் பெற்றோம் – இருந்து அன்பினால்‌ கண்ணீர் பெருகப் பெற்றோம்‌ ; இனி மேல்‌ பரம பதத்திற்கு யாம் வருகிறோ மென்‌ றறிந்து அங்குள்ளார்‌ அமைத்தலால்‌ அங்கே எமக்குப்‌ பெரும்‌ போகம் விளைந்து கொண்டிருக்கிறது என்பதாம்‌. குணம்‌-பிறரை வாழ்‌விக்கக் கருதிய குணம்‌. கண்ணீர் வடிதல்‌ – அன்பு மிகுதி பற்றி, ஆழ்வாரைத்‌ துதித்தலால்‌ பிறவிப் பிணி நீங்குதலும்‌ பரம பதத்திலுள்ளார்‌ தங்கள்‌ நண்‌பரென்று அமைத்தலும்‌ பேரின்பம்‌ பெறுதலும்‌ இதனால் கூறப் பட்டது.அளவையில் இன்‌பம் தருதலால்‌ பெரும் போகமென்றார்‌. தோறும்‌- தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச் சொல்‌,

————-

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே
. 87–

பொருள்‌. அகப் பொருள் .
திணை -குறிஞ்சி
கிளவி –வரைவுழடூக்கம்‌.
துறை–தினையோடு வெறுத்து வரைவு கடாதல்

கிளை- தோன்றுதலை யுடைய,
பிறவி தளை – பிறப்பாகிய பந்தத்தை,
ஆசு அழிய – விரைவில் கெடும்படியாக,
தடுத்து- போக்கி,
தென்‌ – தெற்கே செல்லுகிற,
பாலை வழி – பாலை நில வழியை,
தடுத்து -நீக்கி விட்டு,
களை – தீ வினைகளை,
ஆசு அற – அடியோடொழிய,
தடுத்து ஆண்டான்‌ -நீக்கி என்னை ஆண்டருளிய நம்மாழ்வாரது ,
குருகையில்‌ -குருகூரில்‌,
கார்‌ புனமே -பெரிய தினைக் கொல்லையே !
என் வினை.- என்‌னுடைய தீ வினையே, தினையின்‌ -தினைப் பயிர்களாக,
இளையா – முளைத்து,
கிளர -நன்றாக,
விளைகின்‌றது – முற்றிப் போகின்‌றது ; விளயாதொழிய…இப்படி முற்றாமல்‌ கதிர் பறிந்த படியே யிருக்க,
மருந்தும்‌ உண்டே – ஏதேனும்‌ மருந்தும் இருக்கிறதோ ? |(சொல்லுவாயாக,]

ஆண்டானது குருகூரிலுள்ள தினைக் கொல்லையே! எனது தீவினை தான்‌ உங்களிடத்தில்‌ தினைப் பயிராக முளைத்துக் கதிர் முற்றிப் போகிறது ; அப்படி முற்றாதிருக்க மருந்துமுண்டோ? உண்டாயிற்‌ சொல்லிக் காணா யென்பதாம்‌. திவ்வியப் பிரபந்தத்தைப் படித்தால்‌ யமனுக்குத் தப்பலாமென்பார்‌ தென் பாலை வழி தடுத்தென்றார்‌-பாலை வழி- நீருநிழலுமற்ற கொடிய வழி,-தினை முற்றினமையால்‌ தலைவியின் தமர்‌ அத் தினையைக்‌ கொய்து கொண்டு தங்களையும்‌ வீட்டிற்கு அழைதுப் போவார்‌ ; முற்றா திருப்பின்‌ தாங்கள்‌ அங்கே புனத்தைக் காத்திருச்கலாமென்பது பற்றி விளையாதொழிய மருந்துமுண்டோ வென்றாள்‌, இங்ஙனம்‌ பிரியச் செய்வது தீ வினையே யாதலால்‌ ௮துவே தினை வடிவமாகியும்‌ வந்து வருத்திற்று என்றாள்‌. கை கோள்‌ – களவு, கேட்போர்‌ – தலை மகன்‌ சிறைப்புறத்தானாக தினைப் புனத்தை நோக்கிச் சொல்லுவாளாய்‌ச் சொல்லியது, இடம்‌ -முன்னிலை, காலம்‌- இறந்த காலம்‌. மெய்ப்பாடு – அழுகை. பயன்‌ – பகற்‌ குறி விலக்கல்‌. ஒழிய, ஓழி-துணிவுப் பொருள் விகுதி. உண்டே, ஏ – வினா,-களையா – உடன்பாட்டு வினை யெச்சம்‌, ஆல்‌ – அசை, இளையாம்‌. ஆம்‌ -சாரியை, கருப் பொருளாகிய தினையைக் கூறுதலால்‌ திணை குறிஞ்சி யாயிற்று, களவில் புணர்ந்து ஓழுகினால்‌ புறத்தார்க்குக் தெரியுமே யென்றும்‌-அப்படித் தெரிந்ததனால்‌ தலைவனுக்கு ஊாறு நிகழமே யென்றும்‌ அஞ்சிப்‌ பல வழியாலும்‌ களவுப் புணர்ச்சி புணராதபடி விலக்கிக் கலியாணஞ் செய்‌யும்படி. முயற்சிப்பதால்‌ கிளவி வரைவு முடுக்கமாயிற்று, வரைவு – கலியாணம்‌. இங்கனம்‌ நாளும் தனியிடத்தில்‌ தலைவியைச் சேருதற்குச்‌ தகுதியான இத் தினைக் கொல்லையிலுள்ள தினையும்‌ கொய்யப் பட்டால்‌ தலைவியை வீட்டுக்கழைத்துப் போய் விடுவார்களே -இனிக் களவில் வராதபடி மண முடித்தால்‌ நலமாகுமே யென்று குறிப்பிற் கூறுதலால்‌ துறை – தினையொடு வெறுத்து வரைவு கடாதலாயிற்று,

நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

———-

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே
. 88–

பொருளும்‌, திணையம்‌ அவை. கினவி–பகற்குறியிடையீடு,
துறை–நெடுந்தகை, வறுங்கள நாடி மறுகல்‌.

வழுவா- நீங்காத ,
நரகத்து இனம்‌- நரகத்தின் தொகுதியை,
பாழ்படுத்த- அன்பர்களுக்கில்லாமலழித்த,
பிரான்‌ – தலைவரும்‌,
இன்னா – துன்பத்தைச் செய்கின்‌ற
கலியின்‌ சினம்‌ – கலியின்‌ கோபத்தை ,
பாழ்படுத்த – பாழாகச் செய்ய,
நின்றான் – அவதரித்த வருமாகிய,
சடகோபன்‌ -நம்மாழ்வாரது,
குன்று – மலையில்‌,
சூழ்கின்ற . சூழ்ந்து விளைந்த,
செந் தினையே – செவ்விய தினையே! புனம்‌ பாழ்‌ படுத்து – கதிர்‌ கொய்தலால்‌ கொல்லையைப் பாழாக்கி ,
புகழ் பாழ்படுத்தது அல்லால்‌ -உனக்குண்டாக்கிய கீர்த்தியையும் பாழாக்கினதல்லாமல்‌,
புகுந்து – என்‌னிடத்துச் சார்ந்து ,
என் மனம்‌ – எனது மனத்தையும்‌, பாழ்படத்தனை -பாழாக்கினை ;
வாழ்தி- நீ வாழ்வாயாக; ௮ன்று, ஏ அசைகள்‌.-வாழ்தி ௮ன்றே -இவ்வளவு கொடுமை செய்த நீ வாழ்வாயல்லவோ ?-எனிலும்‌ ௮மையும்‌-

நம்மாழ்வார் மலையிற்‌ சூழ்ந்த விளைந்துள்ள தினையே ! புனத்தைப்‌
பாழாக்கிப்‌ புகழைக் கெடுத்துக் கொண்டதன்றி என்‌ மனத்தையும் பாழாக்கினை -இப்படிப்பட்ட நீ வாழ்வாயாக என்பதாம்‌-முற்றுதலால்‌ குறவர்‌ கொய்து கொண்டு போனது நிமித்தமாகப்‌ புனம் பாழ்படுத்து என்றான்‌, ௮ப் புனத்துக்கு அணியாக விளங்கிய தலைவியை இல் வயிற் செறித்ததற்கு ஏதுப்பட்டதனால்‌ பனம் பாழ்படுத்து என்றானெனிலனுமாம்‌. தானும்‌ தலைவியும் கூடுதற்கு இடம் தந்ததனால்‌ பெற்ற பயன்‌ இழந்தமையாற் புகழ் பாழ்படுத்த என்றான்‌. மெய்ப்பாடு -அழுகை , பயன்‌ – ஆற்றாமை நீங்குதல்‌. பகலில்‌ தலைவியைத் தனியிற் சேர்தற்குத் தகுதியாயிருந்த இடம்‌ பாழாய்ப் போய்த்‌ தலைவியைச் சேர வழி யில்லாமையால்‌ கிளவி-பகற் குறியிடை யீடாயிற்று,-தலைவியை வீட்டுக் கழைத்துப் போன பின்‌ தலைவன்‌ அவளிருந்த தினைக் கொல்லைக்குப் போய்‌ அங்குத் தலைவியைக் காணாமையால்‌ ௮வ் விடத்தைக் கண்டு வருந்துதல்‌ துறையின்‌ கருத்து,

தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை-

————

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே.
89–

பொருள் –அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந் திணை
துறை–மை யுறு கண்ணி கை யற வெய்தக்‌ கண்ட தோழி யுட் கொண்டு புலம்புதல்

தினை ஓன்‌றிய – தினயினளவு பொருந்திய,
குற்றம்‌- பிழையும்‌,
அற்று – இல்லாமல்‌,
உணர்ந்தோர்‌ – ஞான நிலை யுணர்ந்தருளிய ஆழ்‌வாரது,
மகிழின்‌ திறத்தின்‌ – மகிழ மலர் மாலை நிமித்தமாக ,
மனை ஓன்றிய-வீட்டில்‌ வருந்தி யிருக்கிற,
கொடியாள்‌ – கொடி போன்‌ற இடையை யுடைய எங்கள்‌ தலைவி,
துயின்றாலும்‌ -தான் புலம்புவதின்‌று சிறிது நித்திரை செய்தாலும்‌, (தூங்க வொட்டாமல்‌),
தன்‌—-. வாய் அடங்கா – வாய்‌ ஓயாமல்‌,
வினை ஒன்றிய – கத்துதல் பொருந்திய,
அன்‌றிலுக்கு – அன்றில் பறவைக்கு,
இடம் காட்ட – இருக்குமிடம் கொடுக்க,
விரி தலைய – விரிந்த தலையை யுடைய,
பனை அன்றியும்‌ – பனை மரமல்லாமலும்‌,
தமியேற்கு -தனியான எனக்கு,
பழம் பகை – பழமையாகிய பகை மை,
உளதோ -வேறு என்று ஓன்றுண்டோ?

நம்மாழ்வார்‌ மகிழ மாலை வேண்டி நங்கள் தலைவி வருந்திச் சிறிது பொழுது தூங்கினாலும் தூங்க வொட்டாமல்‌ கத்துகிற அன்‌றித் பறவைக்கு இருக்கும் இடங் கொடுக்க விரிந்த தலையை யுடைய பனை மரமல்லாமலும்‌ எனக்கு வேறு பழம் பகை யொன்று உண்டோ-இல்லை யென்பதாம்‌. எந்‌தத் தேவரைக் குறிப்பினுங் காம முதலியன இல்லாதாரிலராதலின்‌ அவரினும் சிறந்தவரென்பது தோன்‌றத் தினை யொன்றிய குற்ற மற்றென்றார்‌.-அன்றிற் பறவை பனை மரத்திலேயே யிருப்பது பற்றி அதல்லாமல்‌ வேறு ஓரு பகை தனக்கில்லை யென்றாள்‌. ௮ன்றில் ஆண் பெண் பிரியாததொரு பறவை; அது ஒன்றனை ஒன்று புணர்ச்சி நிமித்தமாகவே யழைக்கும்‌ ) அங்‌கனம்‌ அழைக்கும் போது பிரிந்தவர்க்குக் காம மயக்கம்‌ அதிகரிக்குமென்‌பது பற்றி இங்கனம் கூறுதல்‌ வழக்கம்‌, இது கிளவித் தலைவன்‌ பெயர்‌ கூறுதலால்‌. அகப் புறமும்‌ கந்தருவத்தின்‌ வழுவிய பெருந் திணையுமாயிற்று-தலைவி வருந்துதலை நோக்கிய தோழி தனக்குப் பகை யாயிற்றென்றது (தாயத்தினடையா ”’ (தொல்‌ -பொ 221). என்ற விதி பற்றி யென்க , வாயடங்கா வினை -கத்துதல் -காட்ட என்னும் எச்சம் விரி என்னும் வினைப் பகுதி கொண்டது-ஓ எதிர் மறை-

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே
. 90–

பொருள் –அகப் பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக்‌ கலங்கல்‌.
துறை–கண்படை பெறாது கங்குல் நோதல்‌

பகையாய்‌ வருகின்ற- தமக்கு உட்பகையாகி வருகிற,
மூன்றையும்‌ – காமம்‌ வெகுளி மயக்க மென்னும்‌ முக் குற்றங்களையும்‌,
வேரினொடும்‌ – வேரோடும்‌,
பறித்து – பிடுங்கி எறிந்து
வகையாய்‌ – அதன்‌ பகுதியாய்‌,
வருவன – வருகின்ற,
யாவையும்‌ – ஆகாமிய சஞ்சித பிராரப்த கருமங்களெல்லாவற்றையும்‌,
மாற்றி- போக்கி
இ- இந்த,
வையம்‌ உய்ய – உலகத்தினுயிர்கள்‌ பிழைக்கும் படியாக,
தொகை – நூறு நூறாகத்‌ தொகுக்கப்பட்ட,
ஆயிரங்‌ கவி – ஆயிரம்‌ பாடல்களை,
சொன்‌னோன்‌ – சொன்னவரரகிய நம்மாழ்வாரது ,
பெயர்‌ சொல்ல – திருப் பெயரைத்
தியானிக்க வேண்டி,
சூழ்‌ பனியின்‌ புகை – புகை போலப்‌ பனி
பரந்து குழ்ந்திருக்க,
ஆம்‌ இரு ள்‌ – குளிர்சியோடு கூடிய இருட்டானது,
பின்னை – பிற்பாடு,
எந் நாள்‌ – எப்பொழுது,
கழிய புகுகின்றது -நீங்கப் போகின்றது ?

நம்மாழ்வாரைத்‌ தியானிக்க வேண்டிப்‌ புகை போலப்‌ பனி சூழ்ந்த இருட்டானது எப்பொழுது நீங்கப்‌ போகின்றதென்பதாம்‌.-காமம்‌ -பிற பொருளிச்‌ செல்லுகிற பற்றுள்ளம்‌. வெகுளி – சினம்‌. மயக்கம்‌ -நல்லது தீயதென்றறியா மயக்கம்‌. இவை நீ ங்கவே மனம்‌ தூய்மையாகு மென்பர்‌,-இவற்றின்‌ வகையாவது இவை காரணமாக வருகின்றவைகளை யென்க , ஆகாமியம்‌ – இனி வரப் போகும்‌ வினை,சஞ்சிதம்‌ -இது வரை சேர்த்து வைத்திருக்கும் வினை. பிராரரப்தம்‌ – அவற்றுள் பயன்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வினைகள்-தலைவியை -இயற்கைப்‌ புணர்ச்சிப்‌ பின் பிரிந்த தலை மகன்‌ இரவு மீட்டிப்பத்‌ துயிலப்‌ பெறாமல் அந்த இரவினைக் கடிந்து கூறுதல்‌ இத் துறையாகும்‌ இருளைக் கூறினமையால்‌, திணை – குறிஞ்சி, கைகோள்‌ – களவு.-கூற்று-தலைவன்‌ கூற்று, கேட்போர்‌ – இல்லை. இடம்‌ – தன்மை. காலம்‌ -நிகழ் காலம்‌. மெய்ப்பாடு – இளிவரல்‌. பயன்‌ -தன்‌ ஆற்றாமை நீங்குதல்‌. மூன்று- தொகைக் குறிப்பு. வையம்‌- இடவாகுபெயர்‌. பின்‌னை – இடைச்சொல் திரிபு

இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

————-

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே.
91–

பொருள்‌–௮கப் பொருள்‌,
திணை –உரிப் பொருளால் நெய்தல்‌.
கிளவி -வரைவு கடாதல்‌
துறை -தலைவன் சிறைப் புறத்தானாகத் தோழி செப்புதல்

இருள்‌ புகுகின்‌றது – இருட்டானது வந்து கம்பிக் கொள்‌கின்றது
வண்ணம்‌ – இவளுடைய நல்ல நிறமும்‌,
போகின்றது -மாறுபடுகின்றது
பூவை இந்தத் தலைவியின்து
கண்‌ – கண்ணிலிருந்து,
நீர்‌ உகுகின்றது – நீரானது வடிகின்றது
என்று- என்பதாகக்‌ கருதி,
உயிர்‌ – என்னுடைய உயிரானது,
ஓய்கின்றது – சோர்வை யடைகின்‌றது ;
உலகு ஏழும்‌ – ஏழுலகங்களும்‌,
உய்ய – பிழைக்கும்படி,
தொகுகின்ற – பத்துப்‌ பத்துப்‌ பாடல்களாகச்‌ சேர்க்கப்‌ படுகின்ற,
ஆயிரம்‌ -ஆயிரம்‌ பாடல்களும்‌,
சொன்னோன்‌ – அருளிச்‌ செய்தவாரகிய நம்மாழ்‌வாரவதரித்த,
குருகை- திருக் குருகூருக்குரிய,
சொல்லால்‌ – கீர்த்தியால்‌,
விளங்கத் தகுகின்றனர்‌ – விளங்கத்‌ தக்க வராகிய,
மேல்‌ மேலும்‌ – மேலும்‌ மேலும்‌ ௮திகமாக, காதல்‌ தரும்‌ அவர்‌ – ஆசையைத் தருகின்ற தலைவர்‌,
அல்லர்‌ – தகுதி யுடையார் அல்லர்‌ ;

இருள்‌ வருகின்றது ; தலைவியின்‌ மாமை நிறம்‌ மாறுகின்றது ;இவள்‌ கண்ணீர்‌ வடிகின்றது ; இவற்றைப்‌ பார்த்து என்னுயிர்‌ சோர்வடைகின்றது ; இவளுக்கு இங்கனம்‌ காதலைக்‌ கொடுக்கின்றவர்‌ நம்‌மாழ்வாரது திருக் குருகூருக்குரிய கீர்த்தியினால்‌ விளங்கத் தக்கவரல்‌லர்‌ என்பதாம்‌. முந்திய நாள்‌ வரையிலும்‌ இரவில்‌ துன்புற்றவளாதலின்‌ இன்றைத் தினமும்‌ இரவு வந்தால் என் செய்வளோ வென்று அஞ்சிப் புகுகின்றது இருள்‌ என்றாள்‌. மாமை – மாந் தளிரின்‌ தன்மை, சிறிது சிறிதாக உயிரின்‌ வலிமை ஒடுங்குதலால் ஒய்கின்ற தென்று நிகழ் காலத்தாற்‌ கூறினள்‌. மெய்ப்பாடு -அழுகை, பயன்‌ – வரைவு கடாதல்‌. இரங்குதலால் திணை – நெய்தலாயிற்று, தலைவன்‌ ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள்‌ போலத் தலைவியின்‌ துன்பத்தைச்‌ சொல்லுதலின்‌ தலைவன்‌ கேட்டு வரைவானாதலின்‌ கிளவி- வரைவு கடாதல் யாயிற்று, துறை யும் அதுவே யாகும்‌-

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்-

———–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே
. 92–

இருமையும்‌ தீர்ந்த பிரான்‌ – யான்‌ எனது என்னும்‌ செருக்கு நீங்கிய தலைவராகிய,
சடகோபன்‌ தன்‌ – நம்மாழ்வாரது,
இன்‌௮ருள்‌ – இனிய கருணை யானது,
தருமமும்‌ – அறமும்‌,
காமமும்‌ – இன்பமும்‌,
தாவில்‌ அரும்‌ பொருளும்‌ – கெடாத அரிய செல்வமும்‌,
தணவாக் கருமம்‌ ஆகிய – நீங்காத செய்கை யுடையதாகிய,
காரணமும்‌ – காரணமாகிய வீடும்
கண்டு – செய்து,
அவக் காரணத்தின்‌ – பயனற்ற காரணங்களின்‌,
பெருமையும்‌ – பெருமைகளும்‌,
மாயப்‌ பிணக்கும்‌ – வஞ்சனைவுடைய மாறு பாடுகளும்‌,
தவிர்ந்து – நீங்கும் படியாக,
உறு பேதம்‌ செய்‌யும்‌ – மிக்க வேறு பாட்டைச் செய்யும்‌; உம்‌ – பிரித்துக் கூட்‌டப்பட்டது.,

நம்மாழ்வாருடைய கருணையானது தரும அர்த்த காம மோட்ச மென்னும்‌ நான்கும் தந்து பயனற்ற காரணங்களின்‌ பெருமையும்‌ பிணக்‌கும் நீங்கும்படியான நல்ல வேறு பாடுகளைச்‌ செய்யுமென்பதாம்‌. செய்யுளாதலால்‌ காமம்‌ பொருள்‌ என முன் பின்‌ மாற்றி வைத்தார்‌. தருமமும்‌,காமமும்‌ பொருளால் செய்யப்படுதலின்‌ அரும் பொருளென்றார்‌.
அறத்தால்‌ சேர்ப்பதே பொருளாமாதலால்‌ வருத்தமில்லாத என்றார்‌. பயனற்ற தொழிலின்‌ மூலங்களின்‌ பெருமையும்‌ பிணக்கும்‌ நீங்க எனவே நல்ல நெறியில்‌ சேர்க்கு மென்பது தானே பெறப்பட்டது. தவிர்ந்து என்பதனைத் தவிர எனத் திரித்திக் கொள்க. யானென தென்னுஞ்‌ செருக்கறுப்பான்‌ வானோர்க்‌, குயர்ந்த வுலகம்‌ புகும்‌” என்பதற்கு ஆழ்‌வாரே சாட்சி யெனக் கொண்டு இருமையும் தீர்ந்த பிரானென்றார் –

இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே-

———-

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே.
93–

பொருள்‌–அகப் புறப் பொருள்‌.
திணை -பெருந்திணை
துறை–இரவுறு துயர மிகுளை கூறல்‌.

இயலோடு – இலக்கணத்துடன்‌,
இசையின் பொருளில்‌ -இராகப்‌ பொருளிலும்‌,
சிறந்த —-அலங்கார வல்லியில்‌ – அலங்காரங்கள் அமையப் பெற்ற கொடி போலவும்‌,
போக்கு இல்‌ – நீங்காத,
உள்‌ளம்‌ – மனத்தால்‌,
தெருளில்‌ – ஆராயுமிடத்து,
கரும்பு ஓக்கும்‌ – கரும்‌பை ஓத்த,
ஆயிரம்‌ பர – ஆயிரம்‌ பாடல்களாலாகிய (திருவாய்மொழியை),
பண்டு – முன்னாளில்‌,
செய்தவர்‌ – செய்தருளிய நம்மாழ்வார்‌,
௮௫ளில்‌ – கருணையால்‌,
சில மகிழ்‌ – சிலவாகிய மகிழ மலர்‌ மாலையை,
ஆயிழைக்கு – ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய நமது தலைவிக்கு,
ஈவர்‌ கொல்‌ – கொடுத்தருளுவாரோ ?
அந்தி வந்த இருளில்‌ – மாலையில்‌ வந்த இருளைக் காட்டிலும்‌,
பிறிது துயரும்‌ உண்டோ -துன்பம் செய்ய வல்லது வேறு ஓன்றுண்டோ

முன்னம்‌ திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வார்‌ தமது மகிழ மலர்‌ மாலையை நம்‌ தலைவிக்காக் கொடுப்பரோ ? நேற்று இராத்திரி பட்‌ட துன்பத்திற்‌ கெல்லை யில்லை யாதலால்‌ அவ் விருளைக் காட்டிலும்‌ துன்பம் செய்வது வேறு ஓன்றுண்டோ ? என்பதாம்‌. தொடர்ச்சி பெறப்‌ பாடினமையால்‌ அலங்காரம்‌ அமைந்த கொடி யென்றார்‌. மனத்தால்‌
ஆராயும் தோறும்‌ சுவை மிகுதலால்‌ கரும்பொக்குமென்றார்‌. ஆயிழை – வினைத் தொகைப்‌ புறத்துப்‌ பிறந்த அன்மொழித் தொகை, துயரைச்‌ செய்கின்ற இருளைத்‌ துயர் என்றது குறிப்பு மொழி.

———–

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே.
94–

(உலகத்தின்‌ உயிர்கள்‌ தம் பிறப்புக்களை), படர்‌ – ஓடுகின்‌ற,
நீரின்‌ இட்ட – தண்ணீரிலெழுதப்பட்ட,
நவம்‌-புதிய,
ரேகை – எழுத்‌தை,
உட் கொள்ள – மனத்திற் கொள்ள,
செய்‌தாது ௮ல்லால்‌ – செய்ததே யல்லாமல்‌,
பவம்‌ – பிறப்பாகிய,
ரேகையில்‌ – வழியில்‌,
தம்‌ பணி-தங்கள்‌ தொழிலை,
கொள்ளுமோ- கொள்வனவோ ? (கொள்ள மாட்டா ஆதலால்‌),
நம்பி- மாயோன் அம்சமாகிய,
மாறனைப் போல்‌ – நம்மாழ்வாரைப்‌ போல,
மோஷ மாலை- மோட்ச மாலையாகிய,
திருவாயிரம்‌ – ஆயிரம் பாடலாலாகிய திருவாய் மொழியை,
இசைப்பவர்‌ – பாட வல்லவர்‌,
எவரே -யாவரிருக்கிறார்கள்‌ ?(ஒருவருமில்லை அதனால்‌,)
அயற்கும்‌ – பிரம தேவருக்கும்‌,
அரற்கும்‌ – சிவ பிரானுக்கும்‌,
அல்லா அமரர்க்கும்‌ – மற்றுமுள்ள தேவர்க்கும்‌,
எல்லாம்‌ – முழுவதும்‌,
அவரே – ௮ந்த மாயோனே சிறந்தவர் ஆவார்‌;

உலகத்திலுயிர்கள்‌ இத் திருவாய் மொழியைப் படித்‌துத் தம் பிறவியைநீர் மேலெழுத்தாக செய்து விடடனவன்‌றிப் பிறப்பிடத்தில்‌ நாடினவில்‌லை -ஆதலால்‌ மாயோன் வடிவமாகிய நம்மாழ்வாரைப் போல மோட்ச மாலை பாடினவர்‌ யாவருளர்‌? அதனால்‌ அந்த மாயோனே யாவர்க்கும் தலைவரென்பதாம்‌. நம்பி -எல்லாக் குணங்களும்‌ நிறைந்தவன்‌. மோட்ச மாலை – திருவாய் மொழிக்கு ஒரு பெயர்‌.

————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே.
95–

மெய்யன்‌ – உண்மை ஞான மறிந்தவரும்‌,
குருகைப்‌ பிரான்‌ -திருக் குருகூரிலவதரித்தவரும்‌,
எம்மை – எங்களை,
இன்னம்‌-மறுபடியும்‌,
ஒரு பவம்‌ செய்கை – ஒரு பிறப்பில் தோன்றுவதை,
மாற்றிய – போக்கிய
பண்டிதன்‌ – பாண்டித்திய முடையவருமாகிய நம்மாழ்‌வாரது,
வள்‌ – வளம் பொருந்திய,
தமிழ்ப்‌ பாவும்‌ உண்டு – தமிழ்ப் பாடல்களு முள்ளன
௮வம்‌ செய்கை மாற்ற- பயனற்ற செய்கையை மாற்று வதற்கு
செவி உண்டு – காதுகள்‌ உள்ளன ;
நா உண்டு – படிப்பதற்கு நாக்கு உண்டு ;
அறிவும்‌ உண்டு – அவற்றின்‌ பயனை அறிவதற்கு அறிவுமுண்டு ; (இங்கனம் இருக்கையில்‌),
தம்மை ஒறுத்து – தங்களை வருத்திக்‌
கொண்டு,
தவம்‌ செய்வதும்‌ – தவங்களைச் செய்வதும்‌,
தழல்‌ – அக்னி முகமாக,
வேள்வி முடிப்பதும்‌ -யாகங்களைச் செய்வதும்‌,
எவன்‌ செய்‌யும்‌ – என்ன பிரயோஜனத்தைத் தரும்‌

நம்மாழ்வாருடைய பிரபந்தங்களும்‌ அவற்றை ஆசிரியர் முகமாகக்‌கேட்க நமக்குச்‌ செவிகளும்‌, படிப்பதற்கு நாவும்‌, பயனறிவதற்குப் புத்‌தியும்‌ உள்ளனவாயிருக்க அந்தப்‌ பிரபந்தங்களை ஆராய்ந்தடையும்‌ பயனைக் காட்டிலும்‌ தம்மை வருத்‌தித் தவங்களும்‌ யாகங்களும்‌ செய்வதனால்‌ என்ன பயன்‌ என்பதாம்‌,-உண்மையாகப் பயன்படும்‌ நூலைச்‌ செய்ததனால்‌ மெய்யனென்றார்‌. அவரைத் தியானித்ததனால்‌ தாமடைந்த பயனை
உலகத்தாருக்குக் காட்ட வேண்டி பவம் செய்கை மாற்றியவென்றார்‌.பிறிதொரு மொழிக்கு இவ்வளவு வளப்ப மில்லாமையால்‌ வண்டமிழென்‌றார்‌. எவன்‌ – குறிப்பு வினா வினை. மெய்யன்‌ – குறிப்பு முற்றுப் பெயரெச்சம்‌, உண்டு, என்பன – குறிப்பு முற்று,

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன் தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்-

———

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே
. 96–

பொருள்‌–அகப் பொருள்‌,
திணை -நெய்தல் ,
கிளவி–இடந்தலைப்பாடு ,
துறை–புகழ்தல் .

உண்டாட்டு – மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள்‌ மூன்‌றனையும்‌,
இயலும்‌ -செய்தருளிய,
திருமால்‌ – திருமகள்‌ கொழுநனாகிய மாயோனுடைய,
உருவை – அவதாரங்களை,
உயர்த்து – உயர்வு செய்து,
உலகை – உலகத்தை,
தொண்டு ஆட்டிய – அடிமையாகச் செய்து கொள்ள,
வந்து தோன்றிய – அவதரித்த,
தோன்றல்‌ – நம்மாழ்வாரது,
குருகூர்‌ துறை-குருகூரெல்லை யிலுள்ள கடல்‌ துறை யிடத்து
நண்டு ஆட்‌டிய நங்கை – நண்டுகளைப் பிடித்து விளையாடுகிற தலைவி யினுடைய,
நாட்டங்களால்‌ – குறிப்புக்களால்‌,
இந்த நாட்டை யெல்லாம்‌ – இந்தஉலக முழுவதையும்‌,
திண்டாட்டிய – வருந்தச் செய்த,
கண்கள் போல்‌ -கண்களைப் போல,
கயல்‌- கயல்‌ மீன்கள்‌,
தீங்கு செய்யுமோ – தீமைகள்‌ செய்யுமோ ? [செய்யாவாம்‌.]

திருமாலின்‌ ௮வதார வடிவங்களை யுயர்த்திக் கூறி உலகத்தை அடிமையாகக் கொள்ள அவதரித்த நம்மாழ்வாரது குருகூர்க் கடல்துறைவாய்‌ தலைவியின்‌ குறிப்புக்களால்‌ இவ்வுலகை வருத்திய கண்களைப் போலக்‌ கயல்‌ மீன்கள்‌ தீங்கு செய்யுமோ? செய்யாவென்பதாம்‌.-திருக் கூத்துக்கள்‌ மூன்றாவன :– அல்லியம்‌, மல்‌, குடம்‌; அல்லியம்‌ – குவலையாபீடத்தின்‌ தந்தத்தை முறித்த பொழுது ஆடியது ;இயம்‌ அல்லாதது-வாத்தியமில்லாமல்‌ யாடியது அல்வியமாம்‌. மல்லாடல்‌ – ஆங்கு மல்லரைக் கொன்று ஆடியது -குடம்‌ – வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால்‌ அவனது சோணித புரத்தின் தெருவில்‌ கையில்‌ குடமேந்தி ஆடியது, இவற்றின்‌ விரிவைச்‌ சுத்தானந்தப்‌ பிரகாச முதலிய வற்றிற் காண்க ;இவை புறக் கூத்தின்‌ பகுதி களாம்‌. கைகோள்‌ – களவு. கூற்று-தலைவன் கூற்று, கிளவி- முற் கூறப்பட்டது. கருப் பொருளால்‌ திணை நெய்தலாயிற்று, இடந் தலைப் பாட்டில் புணர்ந்த தலை மகன்‌ புணர்ச்சிக்குப்‌ பின்னும்‌ தனக்கு அவளிடத்திலுண்டாகிய அன்பின்‌ மிகுதியால்‌ புகழ்ந்தானென்பது துறையின்‌ கருத்து, மெய்ப்பாடு – உவகை. பயன்‌-புகழ்‌தல்‌,

ஞான விசேஷங்களையே திருக் கண்கள் என்பர்

———–

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே
. 97–

பொருள்‌ -அகப் புறப் பொருள் ,
திணை- பெருந்திணை ,
துறை–மாலை பெறாது வருந்திய தலைவி
காதல்‌ கைம் மிக்குக்‌ கையற வுரைத்தல்

இந்த, நுண் பிறவி – அற்பப்‌ பிறப்பாகிய,
மாயைக்‌ கிழியை – மாயா ரூபமான படத்தை,
இழித்து—எம்மை – எங்களை
வாங்கிட – தம்முடைய பாதங்களில்‌ சேர்த்துக் கொள்ள,
வல்லவர்‌- வல்‌லவராகிய நம்மாழ்வார்‌,
தீயை- நெருப்பை,
கிழித்து – துண்டாகக்‌ கிழித்தெடுத்து,
ஒரு திங்கள்‌ கொழுந்தென – ஒரு இளஞ்‌ சந்திரனாக,
செய்ததல்லால்‌ – செய்ததமன்றி,
அன்றில்‌ பனை… அன்றில்‌ பட்சிகள்‌
இருக்கின்ற பனை மரத்தை ,
பேயை கிழித்தென – பேயை இரண்டாகக் கிழித்தாற்போல்‌,
பிளவார்‌ – இரு பிளவாகச்‌ செய்தாரில்லை ; உளவாம்‌ நோயை – அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயை,
இழிக்கும்‌-போக்கும் படியாகிய,
வகுளம்‌ – மகிழ மாலையை,
நல்கார்‌ – கொடுத்தாரில்லை

இந்தப்‌ பிறவியைப் போக்கி நம்மை யடிமை கொள்ளத் தக்க நம்மாழ்‌வார்‌ நெருப்பைத்‌ திங்களாகச் செய்து விடுத்ததுமன்றி அன்‌ றிலிருக்கும்‌ பனையைப் பிளக்காமலும்‌, அவர்‌ நிமித்தமாக வுண்டாகிய காம நோயைப்‌ போக்கத் தக்க மகிழ மாலையுங்‌ கொடுத்தாரில்லை என்பதாம்‌-காமநோய்‌ கொண்டார்க்கு நிலவு வெயில் போலச் சுடுதலால்‌ திங்களைத்‌ தீ யென்றார்‌. ஒன்றனை யொன்று புணர்ச்சிக்கு அழைக்கும்‌ ஓசை காமமுடையார்க்குத்‌
துன்பத்தைச்‌ செய்தலால்‌ அவ் வன்‌றிவிருக்கும்‌ பனை மரங்களை பிளந்திலர்‌ என்றாள்‌. பேய்க்குப்‌ பனையை யுவமித்தல்‌–கரு நெடும் பனங்காடு முழுமையும்‌ காலும்‌ கையுமுடையன போல்வன ” என்ற கலிங்கத்‌துப் பரணிச்‌ செய்யுளாலறிக, மெய்ப்பாடு – அழுகை. பயன் – ஆற்றாமை நீங்குதல்

——–

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே.
98–

பொருளும்‌, திணையும்‌, துறையும்‌ அவை.

அம்புலி – சந்திரனைப் போன்ற,
முகம்‌ வாயில்‌ – முகத்தின்‌ வாயிலுள்ள,
கரும்பின்‌ – கரும்பு போன்ற திவ்வியப்‌ பிரபந்தங்களால்‌,
மறு பிறப்பை – உயிர்களுக்குண்டாகிய பிறப்புக்களை,
சொல்‌ – சொல்ல வல்ல,
அம்‌ புலி- அழகிய புலி போன்ற நம்மாழ்வார்‌,
ஓர்‌ வகுளம்‌ கொடார்‌ – ஒப்பற்ற மகிழ மாலையைத் தந்தாரில்லை ;
இங்கு-இவ் விடத்தில்‌,
தாய்‌ என்ற – தாயென்று சொல்லப் படுகிற, ஓர்‌ இல்லம்‌ புலி – ஒரு வீட்டுப் புலியானது ,
கொடும்‌ கோகு தட்டி – வளைந்த தோள்‌களைத் தட்டிக் கொண்டு,
சல்லம்‌ புவி இட்டு – முள்ளம் பன்றி போலொத்‌து ,
எதிரிடப் பாய்வது உண்டு – நேரே வந்து என் மேற்றாவி விழுவது முண்டு ; (இது போதாமல்‌),
மீள – மறுபடியும்‌,
அம்புலி எழுகின்றது -சந்திரனாகத் தோன்றுகின்ற -உம்‌- அசை நிலை

தம்முடைய வாயிலுள்ள திவ்ய ப்ரபந்தத்தால்‌ ஐநங்களின்‌ மறு பிறப்பைப்‌ போக்குபவராகிய நம்மாழ்வார்‌ தாம்‌ இங்கு வருவதற்கு அடையாளமாக மாலை கொடுத்தாரில்லை ; தாய்‌ வீட்டிலுள்ள புவி போலப்‌ பாய்ந்து என்னை வருத்துகின்றாள்‌ ; இது போதாமல்‌ சந்த்ரனும்‌ உதயமாய் விட்டது – இனி மேல்‌ நான்‌ உயிர் பிழைப்பது எவ்விதமென்றாள்‌ என்பதாம்‌.-கரும்பு- உவமை யாகு பெயர்‌,-இரணடாமடியில்‌ புலி-உவமை யாகு பெயர்‌, மூன்றாமடியில்‌ புல்லி என்பது தொக்கு, தாயின்‌ கொடுஞ்சொல்‌ முட் போல தைத்தலால்‌ ௮வளை முட் பன்றியின்‌ தன்‌மையைக்‌ கொண்டென்றாள்‌. புலி போலக்‌ கறுவு கொண்டு பாய்தலால்‌ புலியை உவமித்தார்‌, இது உவமைக்கு உவமையின்‌ பாற் பட்டு வழுவாகாதவாறு எப்படி யென்றால்‌ தாயாகிய புலியானது முட் பன்றியின்‌ தன்மை யடைந்து என்றதனாலே உவமைக்கு உவமை யாகாமை வெளிப்படை. மெய்ப்பாடும்‌ பயனும்‌ அவை. இதில் புலி யென்று ஒரு சொல்லே யடுக்கி வந்தமையால்‌ சொற் பொருள் பின் வரு நிலை யணி- தாயைப்‌ புலி யென்றதற்கேற்பப்‌ பாய்கின்‌ற தென்‌றதனால்‌ உருவகவணி,-விரகங்கொண்டு, கலங்க விழுதலால்‌ தாய் புலி போலப்‌ பாய்கின்றாள் எனவும்‌, ௮வள்‌ வார்த்தை முள்ளம் பன்றியின்‌ முட்போலத் தைக்கின்ற தெனவும்‌, சந்திரனது நிலவைக் கண்டு விரகம்‌ ௮திகரித்தலால்‌ ௮துவும் தோன்‌றிற்று எனவும்‌ வருந்திக் கூறினாளாயிற்று-

சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே
. 99–

புகழ் மெய்ப்‌ புலவோர்‌ – புகழுடைய உண்மையான கல்‌விமான்கள்‌,
தொழுது இயல்‌ – வணங்கி நடக்கப் பெற்ற,
நாயகன்‌ -தலைவரும்‌,
ஒதும்‌ – சொல்லப் பெற்ற,
கனல்‌ தறை – யாச நெறிகள்‌ மிக்க
நீர்ப் பொருநை – நீரை யடைய தாமிர பரணி சூழ்ந்த,
வழுதி நல்‌ நாடன்‌ – நல்ல பாண்டி நாட்டிலவதரித்த நம்மாழ்வாருடைய,
திருவாய்‌ மொழி எம்‌. மனத்தன – எம் மனத்திலே யுள்ளன; (ஆதலால்‌).
எழுதிய நாளும் – பிரமன்‌ எமக்கு எழுதி வைத்தால் ஆயுளும்‌,
வினையும்‌-பழ வினைத் தொடர்ச்சியும்‌, தொகுத்து – சேர வைத்து,
எம்மை – எங்களை,
இப்‌ பிறவி- இந்தப் பிறப்பாகிய,
புழுதியில்‌ நாற்று இட்டு – புழுதிக் காவில்‌ மாற்று விதைத்துப்‌ பயிராக்கி ,
வைப்பரிது – வைக்க முடியாததாகும்‌.

புலவோரால்‌ வணங்கப் படுபவராகிய நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழி எம் மனத்திடத்தன வாதலால்‌ பிரம தேவர்‌ எமக்கு ஒரு ஆயுளைக் கற்பித்து அதற்கேற்பப்‌ பழ வினைகளும் சேர்த்துப்‌ புழுதியில்‌ நாற்றுப் பாவினது போல் இந்தப் பிறவியைச்‌ செய்ய முடியாது என்பதாம்‌. இம்மையி லனுபவிப்ப தெல்லாம்‌. பழ வினைத் தொடர்ச்சி யாதலால் -வினை -பழ வினை யென்க -நாற்று இட்டு நெற் பயன்‌ கொள்ளுதல் போல இப் பிறப்பால்‌ இன்னும்‌ வினையைச்‌ சேர்க்கச் செய்ய முடியாதென்று கொள்க-வழுதி-கொடை வள்ளலுக்கும்‌ பெயராதலால்‌ பரோபகாரி யாகிய ஆழ்வாரை வழுதி நன்னாடனென்றார்‌. வைப்ப – அகரம் தொக்கது -ஆல்‌ அசை-துறையை இடைநிலைத் தீபகமாக்கி பின்னும்‌
கூட்டி நீர்த் துறை யென்றும்‌ கொள்ளலாம்‌.

ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே-

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள்
. 100–

மனையும்‌ – மனைவியும்‌, பெருஞ்செல்வமும்‌ – மிக்க பொருளும்‌,
மக்களும்‌ – புத்திராதிகளும்‌,
மற்றை வாழ்வும்‌ – மற்றுமுள்ள வாழ்வுகளும்‌,
தம்மை நினையும்‌ பதம்‌ என – வேண்டாதபடி தம்மையே தியானித் திருத்தலே நல்லதென,
நின்றபிரான்‌ – நிலையிட்ட தலைவராகிய,
குருகூர்‌ நிமலன்‌ – திருக் குருகூரில்‌ அவதரித் தருளிய குற்றமற்ற நம்‌மாழ்வார்‌,
புனையும்‌ – பாடி யருளிய,
தமிழ்க் கவியால்‌ – தமிழ்ப் பாடல்களால்‌, இருள்‌ நீங்கு – அஞ்ஞான இருள்‌ நீங்கிப் போய்‌,
பொருள்‌ விளங்‌கி – மெய்ப் பொருளான ஞானம்‌ தோன்றப் பெற்று,
வினையும்‌ – இரு வினைகளும்‌,
திரிவு உற்றன – அழிவடைந்தன ;
வேதங்கள்‌ குற்றம் நீங்கின – பொருள் விளங்காக் குற்றங்களெல்லாம்‌ நீங்கலாயின.

தார புத்திர தனாதி எஷணாத் திரயங்களும்‌ மற்றுமுள்ள வாழ்வுகளும்‌: தம்மைத்‌ தியானிக்கும்‌ பதமாக நின்ற நம்மாழ்வார்‌ தமிழ்ப் பாடல்களால்‌, அஞ்ஞானம் நீங்கி நன்‌ ஞானம்‌ பெற்று வினைகளும்‌ அழிந்தன-வேதங்களும் குற்றமற்று விளங்கின வென்பதாம்‌. தம்மை நினைத்‌தவர்கள்‌ எஷணாதிகளாலும்‌ பிற வாழ்‌வினாலும் அடையும்‌ மகிழ்ச்சியிலும்‌ மிகுத்துத் தம்மைத் தியானித்தலே மேற் கொள்ளுதலால்‌ தம்மை நினையும்‌ பதமென நின்ற வென்றார்‌. மற்றை வாழ்வு – சுற்றத்தார்‌ சேர்க்கை , எண்‌ வகைப் போகம்‌ தசாங்க முதலியனவுமாம்‌,

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

————

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

முன் – முன்னாளில்‌,
மாறனை – நம்மாழ்வாரை,
மதுர கவிப் பெருமாள்‌ – மதுர கவி யாழ்வார்‌,
சென்று – அடைந்த ,
தென்‌ தமிழ்‌ தொடையால் – அழகிய தமிழ்ப் பாடலால்‌,
பதிகம்‌ ஒன்றே உரைத்து .
கண்ணி நுண்‌ சிறுத்தாம்பென்ற ஒரு பதிகம் பாடி,
அவன்‌ – அந்த மாயோனுடைய
பொன்‌ ௮டி -சிறந்த திருவடிகளை,
உற்று நின்றான்‌ என்றே-அடைந்து நிலை பெற்று வாழ்கின்‌றனர் என்பதாக எண்ணி
மன்று புகழும்‌-உலகம் எல்லாம்‌ புகழ் கின்ற
திரு வழுந்தூர் வள்ளல்‌ – திரு வழுந்தூரில் உலகுய்ய வந்த கம்ப நாடர்‌,
பதிகம்‌ – ஒரு பதிகம் போல,
பதிகம்‌ ௮து ஆக – பத்‌துப் பதிகமாக,
இசைத்தனன்‌ – பாடி யருளினார்‌ ;

முன்னாளில்‌ நம்மாழ்வாரை மதுர கவிப்‌ பெருமாள்‌ அடைந்து ஒரு பதிகம் பாடிப்‌ பரமபத முற்றாரென்று இந் நாளில்‌ கம்ப நாடர்‌ ௮வ்வொரு பதிகம் போலப்‌ பத்துப் பதிகம்‌ பாடி யருளினார் என்பசாம்‌. மன்று-சபையுமாம் -கம்பன் பிறந்த ஊர்‌ காவேரி தங்குமூர்‌, கும்ப முனி சாபங்‌ குலைந்த வூர்‌ ~ செம்பத்மத் தாதகத்து நான்முகனும் தந்தையும் காணா நான் மறையை யோதுவித்து வாழுமழுந்தூர்‌.” என்‌றதனால்‌ கம்பர்‌ திரு வழுந்தூரில் பிறந்தமை யறிக. தென் தமிழ்‌ நாடு என்னாளும் உய்ய இராமாயணம்‌ பாடிக் கொடுத்த பெருங் கொடையாளி யாதலால்‌ வள்ளலென்றார்‌, மதுர கவியார்‌ – நம்மாழ்வாரைத்‌ துதித்து முத்தி பெற்றவர்‌. பதிகம்‌ – பத்‌துப் பாடல்கள்‌ சேர்ந்துள்ள தென்ற ஒரு தொகைக் குறிப்புச் சொல்‌.
மன்றே, சென்றே ஏ- ௮சை நிலைகள்‌. ஒன்ற, ஏ- எண்‌, என்றே-ஏ தேற்றம்‌. பதிகமது, ௮து – பகுதிப் பொருள்‌ விகுதி,

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

சோழ நாட்டில்‌ மூவலூர்‌ ஆதித்தன் புதல்வரும்‌ திருவழுந்தூரிற்‌ பிறந்து உவச்சனெடுத்து வளர்க்க வளர்ந்தவருமாகிய இக் கம்பர்‌ கதிரா மங்கலத்தின்‌ கீழ்ப் பாதியாகிய வெண்ணெயூர் சடையப் பிள்ளை யிடத்து நட்புடையவராகி அவரால்‌ ஆதரிக்கப் பெற்று இதின்‌ வடபாலுள்ள தரணி என்னும் ஊரைத்‌ தமக்கு முற்றூட்டாக (முழுவனுபவமாக) ப்பெற்று அங்கு வசித்து வரு நாளில்‌ இவரது கவி பாடும் திறமை யறிந்த அரசர்‌ முதலாயினோர்‌ வட மொழி இராமாயணத்தைத்‌ தமிழில்‌ மொழி பெயர்க்கும்‌ படி கேட்க அப்படியே மொழி பெயர்த்துப்‌ பால காண்ட முதல்‌ யுத்தகாண்டம்‌ வரையிலுள்ள ஆறு காண்டங்களையும்‌ தமிழில்‌ செய்யுள் நடை யாகப் பாடி்‌ அரங்கேத்தத் தொடங்குகையில்‌ பலரும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ ௮ரங்க நாதன்‌ சன்னிதியில்‌ அரங்கேற்றுதல்‌ தகுதியாகுமென அப்படியே திருவரங்கம் சென்று அங்குள்ள கல்வி யறிவுடைய பலருக்குத் தெரிவித்து அரங்கேற்ற எத்தனித்திருக்கும் பொழுதில் ஒரு நாள்‌ இவரது கனவில்‌ அரங்கராதன் தோன்றி -நம் சடகோபனைப் பாடினயோ ?” என்று கூறி மறைந்தருளினார்‌. உடனே அஞ்சி நம்மாழ்வார்‌ மீது இந்தஅந்தாதியைப் பாடி அங்கு கூடிய அவைக் களத்தில்‌ இதனை முதலில்‌ அரங்கேற்றிப் பின்பு இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பதாம் –
இவர்‌ காளிதேவியாருச்கு அடிமை செய்பவராதலின்‌ இராமாயணம்‌ பாடும் பொழுது காளிதேவியாரைப்‌ பந்தம் பிடிக்கச் சொல்லியவெண்பா :–
ஒற்றியூர்‌ காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன்‌ மெய்ச் சரிதை- பற்றியே
நந்தா தெழுது தற்கு நல்லிரவில்‌ மாணாக்கர்‌
பிந்தாமற்‌ பந்தம்‌ பிடி,

இக் கம்பரது இயற்பெயரின்னதென்று விளங்க வில்லை ; உவச்சரில்‌ மேளம் கொட்டுகிற பகுதியாருக்குக்‌ கம்பர் என்ற பட்டப் பெயருள்ளதென்று கல் வெட்டுக்களால்‌ தெரிகிறதனால்‌ இவரும்‌ அப் பகுதியாரென்‌று ஊூ்கிக்கப் படுகிறார்‌, இவரிருந்த நாட்டுக்கு வெண்ணெயூர் நாடென்ற பெயருளதா யிருந்தது – இவரின்‌ பெருமையை யறிந்த அரசாங்கத்தார்‌’அந்நாட்டினை இவர் பெயரால்‌ மாற்றி விட்டதனால்‌ கம்ப நாடென்று பெயராயிற்று, இங்கனமே முதலில்‌ நித்த வினோத வளநாடென்ற ஒன்றனைப்‌ பின்பு அருண் மொழித் தேவர்‌ வள நாடென்று பெயரிட்டமையும்‌ ௮றிக,
இன்னும்‌ இவர் சரித்திரம் ஆராய்சியில் இருப்பதால் பின்பு வெளியிடப்‌ படும்
இவர் காலம் -இற்றைக்கு ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்டது
இவற்றுடன் இருந்த புலவர்கள்‌ ஓட்டக் கூத்தர்‌, நேமிநாதர்‌, பேராசிரியர் ஒவ்வையார் புகழேந்தி முதலானோர்
இவர் செய்த நூல்கள்
கம்ப இராமாயணம்
சடகோபர் அந்தாதி
ஏர் எழுபது

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு -சகல வியாக்யான பிரமாணத் திரட்டு–

February 1, 2025

ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித |
பக்திஶ்ச நியதா வீர பாவோ நன்யத்ர கச்சதி ||

ஸ்வாமியே தேவரீர் இடத்திலே எனக்கு மேலான அன்பானது எப்போதும் நிலை நிற்கிறது -வீரரே -உம்மிடத்தில் பக்தியும் நித்தியமாய் இரா நின்றது -என் நினைவு ஸ்ரீ வைகுண்ட நாதன் இடத்திலும் செல்லுகின்றதில்லை –

——-

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

என்னுடைய வம்சத்தவர்களுக்கு எப்போதும் தாய் தந்தையரும் மாதரும் மக்களும் பெரும் செல்வமும் மற்றுமுள்ள எல்லாமுமே எந்த ஆழ்வாருடைய திருவடி இணையேயோ -நமக்கு முதல்வரும் குலபதியுமான அவருடைய மகிழ மலராலே அலங்கரிக்கப் பட்டதும் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையும் யுடையதுமான அந்தத்திருவடி இணையைத் தலையால் வணங்குகிறேன் –

———-

ஸ து மேதாவினவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ராஹ்மண அர்த்தாயா தவா க்ராஹயத ப்ரபு –
பால-4-6-

அந்த வால்மீகி பகவான் மேதாவிகளாய் -வேதங்களில் தேர்ந்தவர்களான அவர்களைக் கண்டு -வேதத்தை விவரிப்பதற்காக அவர்களைச் சேர்த்துக் கொண்டார் –

———

ஸ ஜகாம வனம் வீர ப்ரதிஜ்ஞா மநு பாலயன்
பிதுர் வசன நிர்தேசாத் கைகேய்யா ப்ரிய காரணாத்
–பால -1-24-

வீரரான அந்தப் ராமர் ப்ரதிஜ்ஜையைப் பரிபாலித்துக் கொண்டு பிதாவினுடைய ஆஜ்ஜையாலும் கைகேயிக்குப் பிரியமாய் இருக்கையாலும் வனத்துக்குச் சென்றார் –

———————

அகஸ்த்ய வசநாச ச ஏவ ஜக்ராஹ இந்த்ரம் ஸராஸநம்
கட் கஞ்ச பரம ப்ரீதஸ் தூணீ சாஷய ஸாயகவ்–
5-

அகஸ்தியருடைய நியமனத்தின் பேரில் ராமபிரான் இந்திரனுடைய வில்லையும் கத்தியையும் குறையாத அம்புகளையும் யுடைய இரு தூணிகளையும் ஏற்றுக் கொண்டான்-

————

ததஸ் ஸூக்ரீவ வஸனாத் தத்வா வாலிந மாஹவே
ஸூக்ரீவம் ஏவ தத் ராஜ்யே ராகவ ப்ரத்யபாதயத்
–6-

அதற்குப் பின் ஸூக்ரீவன் சொன்னதற்கு இணங்கி வாலியைச் சண்டையில் கொன்று ஸூக்ரீவனையே அவனுடைய ராஜ்யத்திலே நிலை நிறுத்தினான் –

————-

தர்ஸ யாமாஸ சாத்மானம் ஸமுத்ர சரிராம் பதி
ஸமுத்ர வஸனாத் ச ஏவ களம் சேதும் ஆகாரயத் —
7-

நதிகளின் பதியான கடல் அரசன் ராமபிரான் முன் தோன்றினான் -அக்கடல் அரசன் சொன்னபடி நளனைக் கொண்டு அணை கட்டுவித்தான் ராமன் –

————

குருஷ்வ மாம் அநு சரம் வை தர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்தோ அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த ப்ரகல்பதே
-அயோத்யா -31-24—8-

அடியேனைக் கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும் -இதில் தவறு ஒன்றுமே இல்லை -இதனால் நான்முகன் தன்யனாவேன் -உம்முடைய காரியமும் நடை பெறும் –

———-

பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதச் ச தே
–பால–31-25-

நீர் வைதேஹியுடன் கூட மலைத் தாழ்வாரையில் விளையாடுவீர் -அடியேன் நீர் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் –

—————-

ராஜ்யம் ச தவ ரஷேயம் யஹம் வேலே வ சாகரம்
ப்ரதிஜா நாமி தே வீர மாபூவம் வீர லோக பாக் –
அயோத்யா -23-27-

வீரனே கடலுக்கு கரைப்போலே உள்ள நான் உம்முடைய அரசையும் ரஷிக்கக் கடவேன் -அப்படிச் செய்ய வில்லையாகில் உம் ராஜ்யத்திலே வாழக் கடவேன் அல்லேன் -வீரரான தசரதன் சென்ற உலகிற்குச் செல்லக் கடவேன் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறேன் –

————-

தம் மத்த மாதங்க விலாஸகாமீ கச்சந்த மவ்யக்ரமநா மஹாத்மா
ஸ லஷ்மணோ ராகவன் இஷ்ட சேஷ்டா ரரஷ தர்மேணே பலேந ச ஏவ
-கிஷ்கிந்தா -1-128-

மதம்கொண்ட யானையினுடையது போன்ற நடையை யுடையவனும் -ராம பிரானைத் தவிர வேறு ஒன்றில் ஈடுபடாத மனத்தை யுடையவனும் -மஹா புருஷனும் -ராம கைங்கர்யத்தை இனிதாகக் கொண்டவனுமான லஷ்மண தனக்கும் முன் செல்லும் ராமபிரானை தர்மத்தாலும் பலத்தாலும் ரக்ஷித்தான் –

——–

கச்சதா மாதுல குலம் பரதேந ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–அயோ -1-1-

பாபமற்றவனும் -நித்ய சத்ருவான இந்திரியங்களையும் ஜெயித்தவனும் -அன்பினால் தூண்டப் பட்டவனுமான சத்ருக்நன் மாமன் வீட்டுக்குச் செல்லும் பரதனால் அழைத்துச் செல்லப்பட்டான் –

———

பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் –சாகுந்தலம் -7-

ராஜ்யத்தைப் பரித்து-தாங்கி -நின்றதாலே பரதன் எனப்படுகிறான் –

———

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –மங்களமான -3-1-3-

பரம புருஷனை சாஷாத் கரித்தவுடன் ப்ரஹ்ம ஞானியானவன் புண்ய பாபங்களை விட்டு -ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்றவனாய் -மேலான ஸாம்யத்தை அடைகிறான் –

———-

ரூப ஒவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் –அயோ -3-29-

வடிவழகு -வண்மை -குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்ணையும் நெஞ்சையும் அபஹரிக்கும் ராமனை –

———-

மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –
கீதை -10-9-

என்னிடம் நிறைந்த மனத்தை யுடையவர்களாய் -என்னிடமே தங்கள் உயிரை வைத்தவர்களாய் -என்னுடைய குணங்களை ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய் -என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் -சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள் –

—————

த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவ அர்ஜுன
நிர்த்வந்த்வோ நித்ய சத்வஸ்தோ நிர்யோக ஷேம ஆத்மவாந்
–2-45-

அர்ஜுனா முக்குணங்களில் ஒற்றொன்றை அதிகமாக யுடைய புருஷர்களுக்காக ஏற்பட்டது வேதங்கள் -நீ ஒன்றோடு ஓன்று கலந்த முக்குணங்கள் அற்றவனாய் -ஸத்வ குணத்தையே பெருக்கிக் கொள்வாயாக – ஸூக துக்காதிகளாகிற சாம்சாரிக ஸ்வ பாபங்கள் அற்றவனாய் -எப்போதும் சத்வத்திலேயே நிலை நிற்பவனாய் -இல்லாத புறப் பொருளை அடைவது -இருப்பவற்றை ரக்ஷிப்பது என்னும் இரண்டுமே இல்லாதவனாய் -உட்ப்பொருளான ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபாடு யுடையவனாக ஆவாயாக –

———–

ப்ராஜா பத்யம் க்ருஹஸ்தாநம் ப்ரஹ்மம் ஸந்யாஸிநாம் ஸ்ம்ருதம்
யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷி காரிணாம்
ஏகாந்திநா ஸதா ப்ரஹ்ம அத்யாயிநோ யோகிநோ ஹியே
தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஸ்யந்தி ஸூரய
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-37-38-

இல்லற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரஜாபதி லோகமும்
துறவற தர்மத்தை அனுஷ்ட்டிப்பாருக்கு பிரமனின் உலகமும்
தன் ஆத்மாவில் இனிமை காணும் கைவல்ய நிஷ்டனுக்கு அழியாத கைவல்ய ஸ்தாநமும்
எப்போதும் ப்ரஹ்மத்தைத் தியானிக்கும் ஏகாந்திகளான யோகிகளுக்கு நித்ய ஸூரிகள் எப்போதும் அனுபவிக்கும் மேலான பரமபதமாகிற ஸ்தானமும்
அடையத் தக்கதாகிறது-

———-

த்ரயோ குணாஸ் த்ரை குண்யம் ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
ஸத்வ ரஜஸ் தமஸ் ப்ரசுரா புருஷா த்ரை குண்ய சப்தேக உச்யந்தே
தத் விஷயா வேதா
-ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-45-

ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற முக்குணங்களும் த்ரை குண்யம் என்றும் சொல்லப் படுகின்றன -அம் முக் குணங்களை அதிகமாக கொண்ட புருஷர்கள் த்ரை குண்யர் எனப்படுகின்றனர் -அவர்களுக்காக இருப்பவை வேதங்கள் –

————–

கோ தர்ம ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத –
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்ம அதிக தமோ மத
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச் சேந்நர ஸதா
–ஸஹஸ்ர நாம அத்யாயம்

எல்லா அறங்களினுள்ளும் எந்த அறம் மிகச் சிறந்தது என்று தேவரீர் நினைக்கிறீர்
மனிதன் பக்தியோடு தாமரைக் கண்ணனை ஸ்துதிகளால் எப்போதும் அர்ச்சிப்பதாகிய இதுவே எல்லா அறங்களினுள்ளும் மேலான அறம் என்றும் என் நினைவு –

———-

மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ –ஸூந்தர –35-11-

உலகத்தின் வரம்புகளைச் செய்பவனும் செய்விப்பவனும் ராமபிரானே –

————

ஸ ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன
ஸீதாம் உவாஸா தியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் –
-அயோத்–31-2-

ரகுகுலத்தை உகப்பிப்பவனும் -மிகுந்த கீர்த்தியையும் யுடையனான அந்த லஷ்மண தமையனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும் ஆஸ்ரித ஸம் ரக்ஷணமான விரதத்தை யுடைய ராகவனையும் பார்த்துச் சொன்னான் –

———–

நதஸ் ஸிரஸி க்ருத்வா து பாதுகே பரதஸ் ததா
ஆருரோஹ ரதம் ஹ்ருஷ்ட சத்ருக்நேந ஸமந்வித
–அயோத்–113-1-

பிறகு சத்ருக்நனோடு கூடிய பரதன் தனது தலையிலே ராம பாதுகைகளை வைத்துக் கொண்டு மிக உகந்தவனாய் அப்போதே தேரில் ஏறினான் –

—————–

புஷ்யே ஜாதஸ்து பரதோ மீந லக்நே ப்ரஸந்நத்
ஸார்ப்பே ஜாதவ் ச ஸுவ் மித்ரீ குலீரே அப்யுதிதே ரவவ்
–பால –20-13-

தெளிந்த அறிவையுடைய பரதன் மீன லக்னத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் பிறந்தான்
சுமித்ரையின் புத்ரர்களான லஷ்மண சத்ருக்நர்கள் கடக லக்னத்தில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தனர்-

—————

அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்
சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுஸ்ய
தூத்வா ஸரீர மக்ருதம் க்ருதாத்மா
ப்ரஹ்ம லோகம் அபி ஸம்பவா மீத்யபி சம்பவா மீதி
–சாந்தோக்யம் –8-13-1-

குதிரை மயிர்களை உதிர்த்து போலே பாபத்தை விட்டு ராஹுவின் வாயிலிருந்து நீண்ட சந்திரன் போல் சரீரத்தை விட்டு நித்தியமான பகவல் லோகத்தை க்ருதார்த்தனாய் இருந்து கொண்டு அடையக் கடவேன்-

———

ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய ஸ்வ அனுக்ரஹஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மா கார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –
அயோத்–40-5-

குழந்தாய் நீ வம்சத்தில் வசிப்பதற்காகவே ஸ்ருஷ்டிக்கப்பட்டு இருக்கிறாய் -உன்னுடைய ஸூஹ்ருத்தான ராமனிடம் மிகவும் அன்பு பூண்டவனாய் இருக்கிறாய் -உனது தமையனான ராமன் நடந்து செல்லுகையில் -அந்த நடை அலகிலா ஈடுபட்டு -அவனை ரக்ஷிப்பதில் கவனமில்லாமல் இருந்து விடாதே –

————

ஜக்ராஹ பரதோ ரஸ்மீன் சத்ருக்நச் சத்ரமாததே
லஷ்மணோ வ்யஜனம் தஸ்ய மூர்த்தினி சம்பர்ய வீஜயேத்
-யுத்த -131-28

ராமபிரானுடைய தெற்குதிரையின் கடிவாளங்களை பரதன் பிடித்துக் கொண்டான் -சத்ருக்கனன் ராமனுக்கு குடை பிடித்தான் -அந்த ராமபிரானுடைய திருமுடியில் லஷ்மணன் விசிறியால் வீசினான் –

————-

ராமம் ஏவ அநு சிந்தையன்

ராமனையே நினைத்துக் கொண்டு

————

ஸ்வ தந்த்ர கர்த்தா -அஷ்டாத்யாயீ -1-4-54-

ஒரு செயலில் ஸ்வா தந்தர்யம் உள்ளவனாகக் கருதப்படுபவனே கர்த்தாவாவான்-

————-

கதாந் வஹம் சமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
-ஆரண்ய -16-40-

ரகுகுலக் குழந்தாய் -மஹாத்மாவான பரதனுடனும் வீரனான சத்ருக்நனோடும் உன்னோடும் என்றும் தான் கூடி வாழப் போகிறேன் –

————-

ததஸ்ய த்ரிவிதஸ்யா அபி துக்க ஜாதஸ்ய வை மம
கரப்ப ஜென்ம ஜராத்யேஷு ஸ்தாநேஷு ப்ரபவிஷ்யத
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவ ஏக லஷணா
பேஷஜம் பகவத் ப்ராப்திர் ஏகாந்தாத் யந்திகீ மதா-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-58-59-

கரப்பம் பிறப்பு கிழத்தனம் முதலிய அவஸ்தைகளில் உழலும் என்னுடைய ஆத்யாத்மீக ஆதிதைவீக ஆதிபவ்திக ரூபமான தாப த்ரய துக்க ஸமூஹத்துக்கு
தனக்கும் மேலில்லாத ஆனந்தரூபமான ஸூகமாய் இருக்கையை லக்ஷணமாக உடையதும் துக்கமற்றதும் முடிவற்றதுமான பகவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப் படுகிறது –

———–

தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ந கர்தவ்ய பண்டிதைர் நரை
தத் ப்ராப்தி ஹேதுர் ஞானஞ்ச கர்ம சோக்தம் மஹாமுநே
–6-5-60-

மஹா முனிவரே -கீழ்க் கூறிய காரணத்தாலேயே அந்த பகவானை அடைய அறிவாளிகளான மனிதர்களால் முயற்ச்சி செய்யப்பட வேண்டும் -அவனை அடைவதற்கு ஞானமும் கர்மமும் உபாயங்களாகச் சொல்லப் படுகின்றன –

———

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண —ஸூபால-16-

நாராயணன் தாயாகவும் தந்தையாகவும் தன்னுடன் பிறந்தவனாகவும் தங்கும் இடமாகவும் மோக்ஷ உபாயனாகவும் நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையப்படு மவனாகவும் இருப்பவன் –

————-

யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா ஸ்நிக்தேந பந்துநா
ஸ ஸ பாபா த்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம்
–சாகுந்தலம் -6-23-

குடிகள் எந்த எந்த அன்பு மிக்க உறவினரை இழக்கின்றனரோ -ஸ்திரீக்குப் பதியாய் இருக்கும் அந்தப் உறவைத் தவிர அந்தப் அந்தப் உறவினராக துஷயந்தனே இருப்பானோ என்றும் கோஷிக்கப் படட்டும் –

———–

கதிர் பர்த்தா ப்ரபுஸ் சாஷீ நிவாஸ சரணம் ஸூஹ்ருத்
ப்ரபவ பிரளய ஸ்தாநம் நிதானம் பீஜம் அவ்யயம்
–கீதை -9-18-

அசையும் இடமும் -தாங்கி நிற்பவனும் -நியமிப்பவனும் -அனைத்தையும் நேரே காண்பவனும் -இருப்பிடமும் -உபாயமும் நண்பனும் -ஒவ்வொருவருக்கும் உத்பத்திக்கும் -அழிவுக்கும் ஸ்தானமாய் இருப்பவனும் -உத்பத்திக்கும் பிரளயத்துக்கும் விஷயமாகும் வஸ்துக்களும் அழியாத காரணமும் நானே –

————-

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ
–தைத்ரியம் சீஷா –11-2-

அகில ஜன மாதாவான பிராட்டியையும் -அழிவற்ற தந்தையான அச்சுதனையும் -அறியாதன அறிவித்த ஆச்சார்யனையும் விருந்தாகும் பெரும் தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

——–

உபாயே க்ருஹ ரஷித்ரோச் சப்தஸ் சரணம் இத்யயம்
வர்த்ததே ஸாம் ப்ரதம் சைஷ உபாயார்த்த ஏக வாசக
–அஹிர்புத்ந்ய சம்ஹிதை -37-29-

சரணம் என்னும் இவ்வார்த்தை உபாயம் வீடு காப்பாற்றுபவன் என்னும் அர்த்தங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது -இப்போது இது உபாயம் என்னும் அர்த்தத்தையே சொல்லுவதாய் இருக்கிறது –

———–

அதிதிர் யத்ர பக்நாஸோ க்ருஹாத் ப்ரதி நிவர்த்ததே
ஸ தஸ்மை துஷ்க்ருதம் தத்வா புண்யமாதாய கச்சதி
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-9-15-3-11-66-

யாதொரு வீட்டின் நின்றும் விருந்தாளி விருப்பம் நிறைவேறப் பெறாதவனாய்த் திரும்புகின்றானோ அந்தப் விருந்தாளி வீட்டுக்காரனுக்குத் தன் பாபத்தைக் கொடுத்து அவனுடைய புண்ணியத்தை எடுத்துக் கொண்டு செல்கிறான் –

—————

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரவ்
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா ப்ரகாஸந்தே மஹாத்மந
–ஸ்வே –6-23-

எவனுக்குப் பரமபுருஷனிடம் மேலான பக்தி உள்ளதோ -பரமனிடன் போல் ஆச்சார்யனிடமும் மேலான பக்தி உளதோ அப்படிப்பட்ட மஹாத்மாவுக்குச் சொல்லப்பட்டால் தான் இந்த அர்த்தங்கள் புலப்படும் –

————-

அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே —
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-

அசேதனத்தைப் போல் அல்லாமல் விகாரம் அற்றவனாகவும் -ஸம்ஸாரி சேதனனைப் போல் அல்லாமல் அசத்தி இல்லாதவனாகவும் -முக்தாத்மாவைப் போல் அல்லாமல் நித்ய சுத்தனாகவும் -நித்ய ஸூரிகளை போல் அல்லாமல் தனக்கும் மேல் ஒருவன் அற்றவனாகவும்-எப்போதும் ஒருபப்பட்டு இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாவும் -ஸர்வ வ்யாபியாகவும் -எல்லாவற்றையும் ஜெயிப்பவனுமாயுள்ள பகவானுக்கு நமஸ்காரங்கள் –

———

ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞபதிர் குணேச ஸம்ஸார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது —ஸ்வே -6-16-

ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஸ்வாமியாய் -குணங்கள் நிறைந்தவனாய் -ஸம்ஸாரம் விடுபதற்கும் நிலை நிற்பதற்கும் கட்டுவதற்கும் காரணமாய் இருப்பவன் பரமாத்மாவே –

——–

இத் யுக்த்வாத நிஜம் கர்ம ஸ சகார குடும்பிநீ —ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-15-

துறு துறுக்கைத்தனம் யுள்ளவனே உன்னால் முடியுமானால் இப்போது போ என்று குடும்பினியான அவள் வீட்டு வேலைகளைச் செய்யலுற்றாள் –

—————–

ஸ கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே –
சாந்தோக்யம் -1-15-1-

அந்தப் முமுஷுவானவன் ஆயுள் முடியும் வரையில் இப்படி வாழ்ந்து ஆயுள் முடிந்த பின் ப்ரஹ்மத்தின் உழகைப் அடைகிறான் -இங்கு திரும்பி வருவதே இல்லை –

———-

ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் பிரியம் பவதி
ஆத்மநஸ்து காமாய ஸர்வம் பிரியம் பவதி
–ப்ருஹதா -6-5-6-

எல்லாப் பொருள்களில் விருப்பத்திற்காக எல்லாமே இனியவை ஆகின்றன அல்ல -ஆத்மாவின் விருப்பதற்க்கே எல்லாமே இனியவை யாகின்றன –

———

ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி கோ ஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவ நந்தயாதி
–தைத்-ஆனந்த -7-

ரஸ-ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்தப் பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்த இந்த ஜீவன் ஆனந்தத்தை உடையவனாகிறான் -பிரகாசிப்பவனும் -ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸூகத்தையோ மோக்ஷ ஸூகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –

——-

வைகுண்ட சரணாம்போஜ ஸ்மரண அம்ருத ஸேவிக–

ஸ்ரீ வைகுந்தனின் திருவடித் தாமரை இணையின் நினைவாகிற அம்ருதத்தைப் பருகுமவர்கள் –

———

கச்சதாம் தூரமத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம்
பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –

நெடுவழி நடப்பவர்களும் தாஹத்தால் மயங்கிய நெஞ்சை யுடையவர்களுமான அவர்களுக்குத் தாமரைக் கண்ணனின் திருநாம சங்கீர்த்தனம் கட்டுச் சோறாகும் –

———

வாஸூ தேவோ அஸி பூர்ண

ஞாநாதி குணங்கள் ஆறும் நிறைந்த பர வாஸூ தேவனாய் இருக்கிறாய் –

———-

க்ருஷிர் பூ வாசக சப்தோ ணச்ச நிர்வ்ருதி வாசக
விஷ்ணுஸ் தத் பாவ யோகாச்ச க்ருஷ்ண இதயபீதியதே

கிருஷி சப்தம் கிருஷி விஷயமான பூமியைச் சொல்லும் சொல் -ஆனந்தத்துக்கு விளைநிலமாய் இருக்கும் அத் தன்மையை உடையவனாகையாலே விஷ்ணுவானவர் கிருஷ்ணன் என்றும் சொல்லப் படுகிறார் –

————

பக்தி க்ராஹ்யோ ஹி கேசவ

பக்திக்குக் கட்டுப்பட்டவன் கேசவன்

——–

அபங்குர பக்திபவ்ய

அசையாத பக்திக்கே வசப்படுமவன்

——-

பக்த்யா மாம் அபி ஜாநாதி யாவாந் யஸ்ஸாஸ்மி தத்த்வத
ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே தத் அநந்தரம்
–18-55-

ஸ்வரூப ஸ்வ பாவங்களில் நான் எவனோ -குண விபூதிகளில் நான் எவ்வளவு பட்டவனோ -அப்படிப்பட்ட என்னை பக்தியினால் உள்ளபடி அறிகிறான் -என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பின் பக்தியினாலேயே என்னுள் நுழைகிறான் –

————-

பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-
11-54-

அர்ஜுனா எதிரிகளை அழிப்பவனே -ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம்மாதிரியான நான் உண்மையாக அறிவதற்கும் பார்ப்பதற்கும் நுழைவதற்கும் தக்கவன் –

—————

புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்–
8-2-

பார்த்தனே யாவன் ஒருவனுக்குள் ஸகல பூதங்களும் உள்ளனவோ -எவனால் இது எல்லாம் வியாபிக்கப் பட்டதோ அந்தப் பரம புருஷன் வேற்றிடம் செல்லாத பக்தியினாலேயே அடையத் தக்கவன்-

———–

நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||
–கட வல்லி –1-2-23-

இந்தப்‌ பரமாத்மாவானவர்‌ -பக்தி யற்ற ஸ்ரவணம் மனனம் த்யானத்தாலும் அடையற் பாலரன்‌று; இந்தப்‌ பரமானத்மாவானவர்‌ எவனை விரும்பி வரிக் கின்றாரோ, அவனாலேயே அடையப்படுகின்றார்‌; அவனுக்கு இந்தப்‌ பரமாத்மாவானவர்‌ தமது ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டிகின்றார்‌-

———-

அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –பரத்வாஜ ஸம்ஹிதை

வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும் அஞ்சலி மேலான அடையாளமாய் இருக்கிறது –

————

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்த்ரேண அஞ்சலிம் பக்த்வா லஷ்மணஸ்ய ப்ரஸாத நாத் -கிஷ்கிந்தா
-32-17-

ராமனிடம் அபராதம் செய்த உனக்கு கைகூப்பி லஷ்மணனை உகப்பித்தைத் தவிர வேறு ப்ராயச்சித்தத்தை நான் காண்கிறேன் அல்லேன் –

———-

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத –கிஷ்கிந்தா -4-12-

நான் இவர் நினைவால் இவருக்குத் தம்பி -உண்மையில் இவருடைய குணங்களால் அடிமைப்பட்டவன் –

————-

பஞ்ச சக்தி மயே திவ்ய ஸூத்த ஸத்வே ஸூக ஆகரே த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே பகவான் ஹரி –

பஞ்ச சக்திமயமாய் -அப்ராக்ருதமாய் -ஸூத்த ஸத்வ குண மயமாய் -ஸூகத்திற்கு இருப்பிடமான பரமபதத்தில் ஈஸ்வரான பிராட்டியாரோடே கூட பரம புருஷனாய் ஞாநாதி பூர்ணனான இந்த ஹரி நித்ய முக்தர்களுக்கு அநு பாவ்யனாய் இருக்கிறான் –

———–

அசித் அவிசேஷிதான் பிரளய ஸீமநி ஸம்ஸாத கரண களேபரைர் கடயிதும் தயமாந மநா
வரத நிஜேச் சயைவ பரவா நகரோ ப்ரக்ருதிம் மஹத் அபிமான பூத கரணா வலி கோரகிணீம்
–ரெங்கராஜ ஸ்தவம் -2-41-

வரம் தரும் பெருமானே -பிரளய காலத்தில் அசேதனத்தைக் காட்டிலும் வாசி யற்றவராய் உழலுகின்ற ஜீவராசிகளை இந்த்ரியங்களோடும் சரீரங்களோடும் சேர்க்கத் திரு உள்ளம் இரங்கியவனாய் -தனது சங்கல்ப வசப்பட்டவனாய் -மூலப்பிரக்ருதியை மஹான் அஹங்காரம் பஞ்சபூதங்கள் இந்திரியங்கள் ஆகிய இவற்றில் வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி பண்ணினாய் –

———–

விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வரஸ்ய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
–விஷ்ணு தத்வம் -6-

ப்ராஹ்மணரே கை கால் முதலியவைகளுடன் கூடியதும் விசித்திரமான தேஹமாகிற இச்செல்வம் சர்வேஸ்வரனுக்கு சமர்ப்பித்தற்காக ஆதிகாலத்திலே செய்யப்பட்டு இருக்கிறது –

—————

ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–
-ரெங்க ராஜ ஸ்தவம்-2-1-

கருணைக் கடலான எம்பெருமான் அஞ்ஞானமாகிற இருளை நீக்கிக் கொள்ளவும் -நன்மை தீமைகளை ஆராய்வதற்கும் -இருட்டைப் போக்கடிப்பதற்கும் -உள்ளவற்றையும் இல்லாதவற்றையும் ஆராய்ந்து அறிவதற்கும் சாதனமான விலக்கைப் போன்ற வேதத்தைக் கொடுத்தான் -பாக்கியவான்கள் அந்தத் திருவிளக்கைக் கொண்டு அந்த சர்வேஸ்வரனைக் கண்டு அனுபவிக்கிறார்கள் -சில சபலர்கள் அந்தப் விளக்கிலேயே வீட்டில் பூச்சியைப் போலே விழுந்து மடிகிறார்கள் –

———

உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம்யுதா

எப்படி துளஸீ உலகில் வாசனையுடன் கூடவே உண்டாகிறதோ

—————

நாஹம் புருஷ காரேண ந சாப்யந்யேந ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சையா வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன

நான் புருஷகாரத்தாலேயே அல்லது வேறொரு காரணத்தாலோ அல்லாமல் எனது விருப்பத்தாலேயே ஒரு சேதனனை ஒரு போது கடாஷிக்கிறேன் –

———

பால ஆஷோட சாப்தாத்து மகபாவம் கமிஷ்யசி

குழந்தையான நம்மாழவார் பதினாறு வயது வரையில் ஊமையாகவே இருப்பார்-

———–

அவ்யுச்சிந்நாஸ் ததஸ் த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்த ஸம்யமா

உலகை ஆக்கல் அளித்தால் அழித்தல் என்னும் இந்த நியமங்கள் இடைவிடாமல் ஏற்படுவன-

————

1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும்
தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர்
இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-

பக்திர் அஷ்ட விதா ஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே
ஸ விப்ரேந்த்ரோ முனி ஸ்ரீமான் ஸ யதி ஸ ச பண்டித
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்
–காருடம் –219-6-10-

என் பக்தர்களிடம் வாத்சல்யம் -என்னை ஆராதனம் செய்வதை ஆமோதித்தல் -தானே என்னைப் பூஜித்தல் -எனது விஷயத்தில் ஆடம்பரம் அற்று இருத்தல் –எனது கதைகளைக் கேட்பதில் அன்பு -எனது கதைகளைக் கேட்க்கும் போது குரல் தழ தழத்தும் கண்ணீர் மல்கி உடம்பு மயிர்க்கூச்சு எறிந்தும் இருக்கை -எப்போதும் என்னையே நினைத்து இருக்கை -என்னிடம் வேறு ப்ரயோஜனத்தைக் கேளாது இருக்கை

இப்படி எட்டுவிதமான பக்தி யானது எந்த மிலேச்சனிடம் காணப்படுகிறதோ அவனே ப்ராஹ்மண ஸ்ரேஷ்டன் -அவனே முனிவன் -அவனே தனவான் -அவனே பண்டிதன் -அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கலாம் – அவனிடமிருந்து ஞானம் உபதேசம் பெறலாம் -அவன் என்னைப்போலவே பூஜிக்கத் தக்கவன் –

————-

உதாரஸ் ஸர்வ ஏவைத ஞாநீத் வாத்மைவ மே மதம் –7-18-

இவர்கள் எல்லோரும் உதாரமானவர்களே -ஞானியோ எனக்கே ஆத்மா –தாரகன் -என்று எனது ஸித்தாந்தம் –

————–

ததோ அகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா
தேவகீ பூர்வ ஸந்த்யாம் ஆவிர்பூதம் மஹாத்மநா-
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1-

மஹாத்மாவாகிற அச்யுத ஸூர்யன் அனைத்தும் உலகமாகிற தாமரை மலருவதற்காக தேவகியாகிற கீழைத்திக்கில் தோன்றினான் –

————–

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸ சங்கு சக்ர
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய
-பரங்குச அஷ்டகம்

இருளைப் போக்கும் ஸூரியனுடைய ஆயிரம் கிரணங்களைப் போலே எவருடைய ஆயிரம் திருவாய் மொழிப் பாசுரங்களும் மனிதர்களின் அகவிருளைப் போக்குகின்றனவோ
ஸூர்ய மண்டலத்தைப் போலே நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடியவனாய் இவரிடத்தில் வஸிக்கிறானோ
வேதத்தில் காணும் ஸூர்ய மண்டலத்தை வணங்குவது போல் எவருடைய பிறப்பிடமான குருகூரை -குருகூர் சடகோபன் முதலிய பாசுரங்களில் காதில் கேட்ட மாத்திரத்தில் அந்தணர்கள் வணங்குகின்றனரோ அப்படிப்பட்ட வகுள பரணரான நம்மாழ்வாராகிய ஸூர்யனுக்கு நமஸ்காரம் –

—————

தேவம் இவா ஆச்சார்யம் உபாஸீத –ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம்

பரமாத்மாவைப் போலவே ஆச்சார்யனையும் உபாஸிக்கக் கடவன் –

——–

குரு ரேவ பர ப்ரஹ்ம குரு ரேவ பரா கதி
குரு ரேவ பரா வித்யா குரு ரேவ பரம் தனம்
குரு ரேவ பர காமோ குரு ரேவ பரா யணம்
யஸ்மாத் தத் உபதேஷ்ட அசவ் தஸ்மாத் குரு தரோ குரு
–சாத்வித ஸம்ஹிதை

குருவே மேலான ப்ரஹ்மம் -குருவே மேலான அறம் -குருவே மேலான கல்வி -குருவே மேலான பொருள் -குருவே மேலான இன்பம் -குருவே மேலான ப்ராப்யம் -அப் பரம் பொருளையே உபதேசிப்பதால் குரு அவனிலும் உயர்ந்தவன் –

———

ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாஷாத் சர ரூபி ந சம்சய

ஆச்சார்யனே நேரில் நடமாடும் பரம புருஷன் -இதில் ஐயமில்லை –

———

ஏஷ வை பகவான் ஸாஷாத் ப்ரதாந புருஷேஸ்வர —

ப்ரக்ருதி புருஷர்களுக்கு ஈசனான ஸாஷாத் பரமபுருஷன் இவ்வாச்சார்யனே –

———–

யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்

யோகியர் தலைவராலே தேடப்படும் பரம்பொருளை இவ்வாச்சார்யனை இவ்வுலகம் மனிதனாக நினைக்கிறது –

———-

ஸாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மார்த்ய மயீம் தநும்
மக்ந அநுத் தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா ஸம்ஸார பய பீருணா
-ஜ்யாக்ய ஸம்ஹிதை -சாண்டில்ய வசனம்

ஸாஷாத் பரமபுருஷனே தனது கருணையினாலேயே ஆச்சார்யனாகிற மனித உருவை எடுத்துக் கொண்டு –சாஸ்த்ரங்கள் ஆகிற கைகளால் ஸம்ஸாரக்கடலில் முழுகி இருக்கும் உலகங்களைக் கைதூக்கி விடுகிறான் -ஆகையால் சம்சாரக்கடலைக் கண்டு பயந்தவன் குருவிடம் பக்தி செய்ய வேண்டும் –

———

த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச –

ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்-த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
கலியுகத்தில் நம்மாழ்வாராய் சூத்ர வர்ணத்திலே தேவனே தோன்றுகிறான் –

க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா –

கொடிய கலியுகம் வந்தடைந்து நாஸ்திகர்களால் உலகம் கலங்கி இருக்கையில் சர்வேஸ்வரனுடைய ஓர் அம்ச அவதாரமாய் -வேதங்களுடைய உண்மைப் பொருளை நன்கு உணர்ந்த தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு நல்லோர் தலைவரான ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார்

———-

கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -திருக்குருகூர் மஹாத்ம்யம்

பாவிகள் விஞ்சி நிற்கும் கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் அடியார்களிடம் வாத்சல்யத்தாலே பக்த ரூபேண வந்து அவதரிப்பான்

கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -ஸ்ரீ மத் பாகவதம் -11-38-39-40-

நாராயணனையே பரம ப்ராப்யமாகக் கொண்ட ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து-தாமிரபரணி க்ருதமாலா பாலாறு பெரும் புகழ் பெற்ற காவேரி மேற்கு நோக்கிப் பாயும் பிரதீசி -மஹா நதி -போன்ற நதீ விசேஷங்களிலே -ஜல பானம் பண்ணுபவர்களுக்கு நாராயணனிடத்திலே தடையற்ற பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகிறது – பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே இவரே ப்ரபந்ந ஜன கூடஸ்தர் என்றதாயிற்று –

த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –திருக்குருகூர் மஹாத்ம்யம்

பிரமனின் இந்த இரண்டாவது பரார்த்தத்தில் சிறந்ததான முதல் தினத்தில் நடக்கும் வைவஸ்வத மன்மந்த்ரத்தில் இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் காளியின் தொடக்கத்தில் வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை கடக லக்னத்தில் பவுர்ணமி திதியில் மிக மங்களகரமான விசாக நக்ஷத்திரத்தில் காஸ்யப ப்ரஜாபதியான மறுபிறப்பான காரிக்குப் பிள்ளையான வேதம் தமிழ் செய்வதற்காக சடகோபர் என்னும் பக்தனாக நானே ஆவேன் –

———

தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி

தாமிரபரணியின் வடகரையில் குற்றமற்ற ஷேத்ரத்தில் பிறப்பார்

——-

நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம்

தூக்கமில்லாத திருவனந்த ஆழ்வானே -நீ சென்று திருக்குருகூரில் திருப்புளி ஆழ்வாராக எல்லாமே விருப்பங்களையும் எல்லோருக்கும் எப்போதும் அளிப்பாயாக – தேவதேவனான பரமம் சடகோபன் முனிவராகி எல்லாமே மனிதரையும் காப்பாற்றுவார் -இங்கு எல்லாமே வேதங்களும் தமிழ் பாஷையாகி அங்கங்கள் உப ப்ரஹ்மணங்களோடே கூடிய தேவதேவனான மாதவனைத் தெளிவாகத் தெரிவிக்கும் –

———–

அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ-

பெருமை பெற்ற பாண்டிய தேசத்திலே தாமிரபரணி நதிக்கரையில் மங்களகரமான திருக் குருகூர் உள்ளது -அங்கே பரம புருஷன் நேரே காணப் பட்டான் அன்றோ –

——–

ஸ்ரீ தரா யாதி குரவே

ஆதி குருவான ஸ்ரீதரனுக்கு

———

ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணா மஸாவஸா விதி ஆபகவத்த -ரஹஸ்யம் நாய ப்ராஹ்மணம்

ஸ்ரீ லஷ்மீ நாதனிடம் தொடங்கி இவர் இவர் என்றும் ஒருவர் விடாமல் ஆச்சார்யர்களுடைய அந்த குரு பரம்பரை அறியத் தக்கது –

———-

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய து துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபந அர்த்தாயா ஸம்பவாமி யுகே யுகே –
-4-8-

சாதுக்களை ரக்ஷிக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும் வைதிக தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் யுகம் தோறும் பிறக்கிறேன் –

———–

விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ்
யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரக பாதிநவ் –
-ப்ரஹ்மாண்ட புராணம்

விஷ்ணுவின் அர்ச்சாவதாரங்களில் உலகம் என்னும் நினைவும் ஆச்சார்யனிடத்தில் மனிதன் என்னும் நினைவும் கொலுமவர்கள் இருவரும் நரகத்தில் விழுவார்கள் –

———–

அநந்த பாரம் பஹு வேதி தவ்யம் அல்பச்ச காலோ பஹுவச்ச விக்நா
யத் சார பூதம் தத் உபாஸி தவ்யம் ஹம்ஸோ யதா ஷீர மிவாம்பு மிஸ்ரம்
-உத்தர கீதை –3-1-

கரை காண ஒண்ணாத பல ஸாஸ்த்ரங்கள் அறியத்தக்கவை -காலமோ மிகக்குறைவு -இடையூறுகளோ பல -பாலுடன் கலந்த நீரில் பாலைப்பிரிக்கும் ஹம்சம் போல் சாஸ்திரங்களிலும் சாரமானவற்றை சேதனன் எடுத்துக் கொள்ள வேண்டியது –

———-

அஸாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரதாரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே ரத்நாகர இவ அம்ருதம்

ஸாஸ்திரங்களிலும் சாரமற்றதாயும் -குறைந்த சாரமுள்ளதையும் -அதைக்குறிக்கும் அதிக சாரமுள்ளதையும் விடவேண்டியது -எல்லாவற்றையும் காட்டிலும் மிக அதிக சாரமுள்ளதையே கடலில் அமுதத்தைப் போலே ஆதரிக்க வேண்டியது –

———

த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேந் முதா
உபாய உபேய பாவேந் தமேவ சரணம் வ்ரஜேத்
–ஸாத்விக சம்ஹிதை

ஆச்சர்யனை சிஷ்யன் த்யானிக்கத் கடவன் -ஜபிக்கக் கடவன் -பக்தியோடு வணங்கக் கடவன் -பஜனம் செய்யக் கடவன் -உகப்புடன் அர்ச்சிக்கக் கடவன் -அவனையே உபாயமாகவும் ப்ராப்யமாகவும் நினைத்து சரணம் அடையக் கடவன் –

——-

ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் –சாண்டில்ய ஸ்ம்ருதி

அச்சுதனைப் பற்றினாருக்கு மோக்ஷ சித்தி உண்டோ இல்லையோ என்பதைக் ஸந்தேஹம் உண்டு -அவனுடைய பக்தர்களின் கைங்கர்யங்களில் ஈடுபட்டவர்களுக்கு மோக்ஷ ஸித்தியில் ஐயம் இல்லை –

———-

குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து

ஆச்சார்யன் உருவில் இருக்கும் பகவானேயான புருஷோத்தமன் உபாயமாய் இருக்கும் தானாகிற இடத்திலே ஸம்ஸாரிகளை ஸம்ஸாரத்திலிருந்து தாண்டுவிக்கிறான் –

———-

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-

இந்தப் பரமாத்மாவுக்கு பல தரப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் -ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்று அறியப் படுகிறது –

——–

மநஸ் பூர்வோ வாக் உத்தர –தைத்-ஸம் -7-5-3-

முதலில் மனஸ்ஸும் அடுத்தபடியாக வாக் இந்த்ரியமும் ப்ரவர்த்திக்கின்றன –

———-

ப்ரத்யஷே குரவே ஸ்துத்யா பரோஷே மித்ர பாந்தவா
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச ந கதாசந புத்ரகா

ஆச்சார்யர்கள் நேரே ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நண்பர்களும் உறவினரும் கண் காணாமல் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -அவர்கள் செய்ய வேண்டிய கார்யங்கள் முடிந்த பின்பு நமக்குக் கீழ் இருப்பவர்களும் வேலைக்காரர்களும் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -நம் பிள்ளைகள் ஓரு போதும் நம்மால் ஸ்துதிக்கத் தக்கவர் அல்லர் –

———-

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம்
||-57

ஸ்ரீ ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்ரீ ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

——–

தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷

என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும் பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் – என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்

———–

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||–2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————-

அவஸேநாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பாதகை
புமாந் விமுச்யதே ஸத்ய ஸிம்ஹ த்ரஸ்தைர் வ்ருகைர் இவ-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-19-

தன் வசத்தில் இல்லாத போதும் எந்த பகவானுடைய திருநாமங்களைக் கீர்த்தித்த அளவிலே சிம்ஹத்தைக் கொண்டு பயந்த ஓநாய் களிடமிருந்து விடுபடுவது போல் மனிதன் உடனே விடுபடுகிறானோ –

——

ஸ த்வாஸக்த மதி க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரதை
ந விவேதாத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்ய ஆஹ்லாத ஸூஸ்திதா —
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-39-

மஹா நாகங்களினால் கடிக்கப்படு பவனும் கிருஷ்ணனிடத்தில் பக்தியைச் செலுத்துமவனுமான அந்தப் ப்ரஹ்லாதன் பகவானை நினைக்கையால் உண்டான ஆனந்தினால் நிலை நின்றவனாய் தன்னுடைய உடம்பை அறியவில்லை –

———

அஹம் அஸ்ய அபராதாநாம் அவயோ அகிஞ்சநோ அகதி
த்வமே உபாய பூதோ மே பவதி பரார்த்தநா மதி
சரணாகதிர் இத் யுக்தா ஸ தேவே அஸ்மின் ப்ரயுஜ்யதாம்
-அஹிர் புத்ன்ய ஸம்ஹிதை -37-30-

நான் குற்றங்களுக்கு இருப்பிடமாய் இருக்கின்றேன் -ஓர் உபாயமும் அற்றவனாய் இருக்கின்றேன் -உன்னை ஒழிய வேறு கதி இல்லாதவனாய் இருக்கின்றேன் -நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக -என்று பிரார்த்திக்கும் புத்தியே சரணாகதி எனப்படுகிறது -அது இந்தப்பாகவான் விஷயத்தில் செய்யப்படட்டும் –

———-

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–
22-

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை; என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான், உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

———-

அநந்ய தேவத்வம் இயம் ஷமா ச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருத்னேஷ்விவ மானுஷாணாம்

ராமபிரானைத் தவிர வேறு தெய்வம் அறியாது இருக்கை -இந்தப்பொறுமை -வெறும்தரையிலே படுக்கை -அறம் வழுவாது இருக்கை -பதிவ்ரதைத் தன்மை ஆகிய என்னுடைய குணங்கள் எல்லாமே செய்நன்றி கொன்ற மனிதர்க்குச் செய்தது போல் வீணாயின –

————-

ப்ராப்த ராஜஸ்ய ராமஸ்ய வால்மீகீர் பகவான் ரிஷி
சகார சரிரம் க்ருத்ஸ்னம் விசித்திர பதம் ஆத்மவான்
–பால -1-4-

ஞாநாதி குணங்கள் நிறைந்தவரும் நெஞ்சை அடக்கியவருமான வால்மீகி மகரிஷி ராஜ்யத்தை அடைந்த ராமபிரானுடைய சரித்திரத்தை முழுவதையும் விசித்ர பதங்களுடைய காவியமாக இயற்றினார்

————-

ஏதத் ஸாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத-தைத் ப்ருகு –10-6-

முக்தாத்மா பரமாத்மாவை அடைந்து இந்த சாமத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறான் -பரமாத்மாவுக்கு அன்னமாய் இருப்பவன் -அன்னமாய் இருப்பவன்-அன்னமாய் இருப்பவன்-நான் பரமாத்மாவின் ப்ரீதி யாகிற அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் -அன்னைத்தைப் புஜிப்பவன் –

——–

பாணவ் க்ருஹீத்வா விதுரம் ஸாத்யகிஞ்ச மஹா யஸா
ஜ்யோதீம்ஷ் யாதித்ய வத் ராஜன் குருந் ப்ரச்சாதயன் ஸ்ரீயா
–உத் –94-45-

பெரும் கீர்த்தி யுள்ள கண்ணன் விதுரனையும் சாத்யகியையும் கையிலே பிடித்துக் கொண்டு ஸூர்யன் மற்ற ஜ்யோதிகளை மழுங்கச் செய்வது போல் கௌரவர்களைத் தன் தேஜஸ்ஸாலே மழுங்கச் செய்து கொண்டு வந்தார் –

———

தருணவ் ரூப ஸம் பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ்
புண்டரீக விசாலாக்ஷவ் சீர க்ருஷ்ணாஜிநாம் பரவ்
–ஆரண்ய-19-14-

ராம லஷ்மணர்கள் வாலிபரானவர்கள் -அழகு நிறைந்தவர்கள் -ஸுகுமார்யத்தை யுடையவர்கள் -அதிகமான பலமுள்ளவர்கள் -தாமரை போன்ற அகன்று கண்களை யுடையவர்கள் -மரவுரியையும் மான் தோலையும் உடுத்தவர்கள் –

————

தேஷாம் ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ஸ ச மம ப்ரிய –
-7-17-

என்னுடன் எப்போதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டவனும் -என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞாநீ அந்த நால்வருள் மிகச்சிறந்தவன் -நான் ஞானிக்கு மிகவும் பிரியன் அன்றோ -அப்படியே அவனும் எனக்கும் பிரியமானவன் –

———-

மம மத் பக்த பக்தேஷு ப்ரீதிர் அப் யதிகா பவேத்
தஸ்மான் மத் பக்த பக்தாச்ச பூஜாநீய விசேஷத-
-ஆச்வ பர்வம் –116-23-

எனது பக்தனிடம் பக்தி உள்ளவர்கள் இடத்தில் எனக்கு அதிகமான அன்பு உண்டு -ஆகையால் எனது பக்த்தனிடம் பக்தியுள்ள அவர்களும் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவர்களே –

——–

ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே –
-ஜிதந்தா –1-5-

உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காக இருக்காதே -ஸ்வ தந்த்ரனான அது ஆஸ்ரிதர்களுக்குப் பரதந்த்ரமாக வன்றோ நீ ஆக்கி உள்ளாய் -திவ்ய மங்கள விக்ரஹமும் உனக்காக இராது -திவ்ய ஆயுதங்களும் உனக்காக இராதே -இருப்பிடம் ஸ்ரீ வைகுண்டமும் அப்படியே உனக்காக இராதே -இவை எல்லாமே உனது அடியார்களுக்காகவே கொண்டு உள்ளாய் – பக்தர்களுடைய உடைமையான நீ இப்படி ஆஸ்ரித பரதந்த்ரமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையவனாக இருந்த போதிலும் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட சர்வாதிகனாக இருக்கும் தன்மையுடன் விளங்குகிறாய் –

———–

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா
தேநைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
-சாண்டில்ய ஸ்ம்ருதி -1-15-

மிருகமா மனிதனோ பஷியோ எவராய் இருந்தாலும் ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவனைப் பற்றி நின்றார்களாகில் அத்தாலேயே அவர்கள் விஷ்ணுவினுடைய அந்தப் உயர்ந்த ஸ்தானத்தை அடைகின்றனர் –

————–

பூர்வ பாஷீ ப்ரஸன்ன ஆத்மா

முதலில் பேசுபவனாய் தெளிந்த மனத்தனனாய் இருப்பவன் –

———

விமல மதிரமத்ஸரஸ் ப்ரசாந்தஸ் ஸூசி சரிதோ அகில ஸத்வ மித்ர பூத
ப்ரியஹித வசநோ அஸ்தமாந மாயோ வசதி ஸதா ஹ்ருதி தஸ்ய வஸூ தேவ
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-24-

அழுக்கற்ற புத்தியை யுடையவனாய் -மாற்சரியம் அற்றவனாய் -மிகுதியான அடக்கத்தை யுடையனாய் -பரிசுத்தமான ஒழுக்கத்தை யுடையவனாய் -அனைத்து உயிர்க்கும் நண்பனாய் -இனியதும் நல்லதுமான வார்த்தை யுடையவனாய் – ப்ரக்ருதி சம்பந்தம் மறையப் பெறுகிறவனாய் உள்ளவனுடைய ஹ்ருதயத்தில் எப்போதும் வாஸூ தேவன் வஸிக்கிறான் –

——–

த்ரவந்தி தைத்யா பிரணமந்தி தேவதா நச்யந்தி ரஷாம்ஸ்ய பயாந்தி சாரய
யத் கீர்த்தநாத் ஸோத்புத ரூப கேஸரீ மமாஸ்து மங்கள்ய விவ்ருத்தயே ஹரி
–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-28-

எந்தப் புருஷனைக் கீர்த்தனம் செய்வதால் அசுரர்கள் ஓடுகின்றனரோ -தேவர்கள் வணங்குகின்றனரோ -ராக்ஷஸர்கள் அழிகின்றனரோ -எதிரிகள் புறமுதுகு காட்டுகின்றனரோ -அற்புத ரூபமுள்ள அந்தப் நரஸிம்ஹனான ஹரி என் மங்களமாவதன் பொருட்டு ஆகட்டும் –

——-

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபிர் த்ரீன் லோகான் சாம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத-ஸூந்தர –38-33-

அந்தக் காகாசூரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான்-

———

ஸர்வேஷாம் ஏவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்சத்வம் ஏநம் சரணம் சரண்யம் புருஷ ரிஷப
-ஆசா பர்வம் -192-56-

புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லா உலகங்களுக்கும் தந்தையாயும் தாயுமாயும் ஸ்ரீ லஷ்மீ நாதனே -சரணம் அடையத் தக்க இவனை சரணம் அடையுங்கள்-

——–

பிதாஹம் அஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ
வேத்யம் பவித்ரம் ஓங்கார ருக் சாம யஜுர் ஏவ ச
–9-7-

இந்த உலகிற்குத் தாயும் தந்தையும் தாதாவும் பாட்டனும் வேதத்தில் அறியப்படுவதும் பரிசுத்தப்படுத்துவதும் ப்ரணவமும் ருக் யஜுர் சாம ரூபமான வேதமும் நானே –

—————

பாஹு நாம் ஜென்மநாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லபன்-
-7-19-

பல புண்ய ஜென்மங்களுக்குப் பின்னர் ஞானியானவன் வாஸூ தேவனே எனக்கு எல்லாம் என்று என்னை உபாஸிக்கிறான் -அப்படிப்பட்ட மஹா புருஷன் மிகவும் துர்லபன் –

————

அபி சேத் ஸூ துராசாரோ பஜதே மாம் அந்ய பாக்
சாதுரேவ ஸ மந்தவ்ய சம்யக் வ்யவஸிதோ ஹி ஸ
–9-30–

மிக அதிகமான துர் நடத்தையை யுடையவனாயினும் வேறு ஒன்றிலுமே ஈடுபடாமல் என்னிடம் எவன் பக்தி செலுத்துகிறானோ -அவன் மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனாகவே எண்ணத் தக்கவன் -ஏன் எனில் நல்ல உறுதி பூண்டவன் அவன் அன்றோ –

———

மநஸா அநிஷ்ட சிந்தனம்

மனதினால் பிறருக்குத் தீமை நினைப்பது –

———–

அபகாரிஷ் வபி ஸதா சாதுஸ் சாத்வேவ வர்த்ததே —

அபகாரிகள் இடத்தும் நல்லோன் எப்போதும் நல்வனாகவே இருக்கிறான் –

———

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருணம் ஆர்யேந ந கச்சின் ந அபராத்யதி
–யுத்த -116-44-

வனரா -பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தக்கவர்களாய் இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேணும் -அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே-

———–

மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-

உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –

———-

மயி த்வேஷா அநு பந்தோ அபூத் ஸம் ஸ்துதா யுத்யதே தவ
மத் பிதுஸ் தத் க்ருதம் பாபம் தேவ தஸ்ய ப்ரணஸ்யது
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-21-

உன்னை ஸ்துப்பதில் ஈடுபட்ட என்னிடத்தில் உண்டான த்வேஷத்தாலே என் தந்தைக்கு ஏற்பட்ட பாபம் போகட்டும் –

———–

பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேதமாயான் நாஸ்த்ய க்ருத க்ருதேந
தத் விஞ்ஞாந அர்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
–முண்டக -1-2-12-

அங்கங்களோடு கூடிய வேதங்களை அத்யயனம் செய்த எவன் ஒருவன் கர்மத்தால் அடையப்பெறும் உலகங்களை ஆராய்ச்சி செய்து பார்த்து-நித்ய புருஷன் அநித்யமான கர்மத்தால் அடையப்பெற மாட்டான் – என்ற வருத்தத்தை அடைகிறான் -அவன் அப் புருஷனை அறிவதற்காக ஸமித்தைக் கையிலே கொண்டவனாய் -வேதாந்தம் அறிந்தவனும் -ப்ரஹ்ம சாஷாத்காரம் பெற்றவனுமான ஆச்சார்யனையே அடையக் கடவன் –

————–

ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹ நஞ்ச
வேதைச் ச சர்வைர் அஹமேவ வேத்யோ வேதாந்தத் க்ருத் வேத விதேவ சாஹம்
–15-15-

எல்லாருடைய ஹ்ருதயத்திலும் நான் அமர்ந்து இருக்கிறேன் –என்னிடமிருந்து ஞானமும் மறதியும் உண்டாகின்றன -எல்லா வேதங்களிலும் அறியப்படுபவன் நானே -வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களைக் கொடுப்பவனும் -வேதங்களை அறிபவனும் நானே –

————-

ஹதோ அஸ்மி யதி மாமேவம் பகவான் அபி மன்யதே –அயோத்யா -90-15-

பரத்வாஜரே தேவரீரும் என்னை இப்படி நினைத்தீரானால் நான் கொல்லப்பட்டவனே ஆவேன் –

———–

அப்யேஷ மாம் கம்ஸ பரிக்ரஹேண தோஷ ஆஸ்பதீ பூதம தோஷ துஷ்டம்
கர்த்தாவ மாநோ பஹதம் திகஸ்து தஜ் ஜென்ம யத் ஸாது பஹிஷ் க்ருதம் ஸ்யாத்
—ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-17-31-

கம்சனோடு ஸம்பந்தத்தினால் தோஷத்துக்கு இருப்பிடமான என்னையும் தோஷம் இல்லாதவனாம் படி செய்வானா அந்தக் கமலக் கண்ணன் –நல்லோரால் தள்ளப்பட்டதும் அவமானத்தால் அடிக்கப்பட்டதுமான அந்தப் ஜன்மத்தைச் சுடு –

————-

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||–
56

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.-

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ – யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ-யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்

–———-

குருர் பிதா குருர் மாதா

குருவும் தந்தையும் குருவே தாயுமாவார்

———–

யோ அந்யதா சந்தமாத்மாநம் அந்யாதா பிரதிபத்யதே
கிம் தேந ந க்ருதம் பாடம் சோரேணாத்ம அப ஹாரிணா
–உத் யோக பர்வம் -42-35-

பகவானுடைய உடைமையாய் இருக்கும் ஆத்மாவை எவன் ஒருவன் தனக்கு சொந்தமாக நினைக்கிறானோ -ஆத்மாவை அபஹரிப்பவனான அந்தத் திருடனால் செய்யப்படாத பாபம் ஏது —

———–

அநந்ய சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விச்வாஸ பூர்வகம்
தத் ஏக உபாயதா யாச்ஞா பிரபத்தி ஸரணாகதி —
விஷ்வக் சேந ஸம்ஹிதை

தன்னுடைய இஷ்டம் வேறு ஒன்றால் ஆகாத போது மஹா விச்வாஸத்தை முன்னிட்டு கொண்டு அவன் ஒருவனையே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பதே பிரபத்தி -அதுவே ஸரணாகதி –

————

த்ரவ்யம் குணஸ் ததா கர்ம ஜாதிச் சேதஸ் தத் ஆஸ்ரய

த்ரவ்யம் குணம் தர்மம் ஜாதி மணம் அதற்கு ஆஸ்ரயமான ஆத்மா –

————

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

சாஸ்திரங்களில் -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி இருக்கையாலே
ஷர புருஷன் எனப்படும் பத்த ஜீவனும் -அழியும் இயல்வு இல்லாமையால் அஷரன் எனப்படும் முக்த ஜீவனும்-ஆகிற இரண்டு வகையான இப்புருஷர்களே பிரசித்தி பெற்றவர்கள் –

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

வேதத்தில் பிரசித்தமாக சொல்லப்பட்ட அசித் பத்த முக்தன்-இவர்களில் வேறுபட்டவன் என்று நிர்தேசம்  ப்ராதான்யம் -புருஷோத்தமன் -பரமாத்மா என்று நிர்தேசம் -உத்தமத்வம் மட்டும் ஸ்தாபிக்காமல் அந்நியமானவன் என்றே ஸ்தாபிக்க வந்தது

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

நான் யாதொரு காரணத்தால் -ஷர புருஷனைக் கடந்து நிற்கிறேனோ -அக்ஷர புருஷனான
முக்தனைக் காட்டிலும் மேலானவனாயும் இருக்கிறேனோ -அக்காரணத்தினாலேயே
ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

——

த்ரவ்யாணி நவ தே விது

ஆத்மா தொடங்கி த்ரவ்யங்கள் ஒன்பது என்பது வைசேஷிகர்களின் முடிவு-

—–

த்ருண காஷ்ட அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்வர்ண ரத்ந அபஹாரே அபி தாவாநேவ பவேத் கதம்
கதர்யஸ்வ அப ஹாரேணே யோ தோஷ பரிகீர்த்தித
ஸ்ரோத்ரியஸ்வ அப ஹாரேபி தாவாநேவ பவேத் கதம்
ஆத்ம வஸ்து யதோ அநர்க்கம் ஆத்மே ஸஸ்து பர புமான்
தஸ்மா தஸ்ய அப ஹரேண தோஷஸ் யாந்தோ ந வித்யதே

புல் கட்டை ஆகியவைகளை அபஹரிப்பதால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே தங்கம் ரத்னம் ஆகியவற்றை அபஹரிப்பதால் உண்டாகுமோ -நீசனுடைய சொத்தை திருடுவதனால் யாதொரு தோஷம் உண்டாவதாகச் சொல்லப்படுகிறதோ -அதே தோஷமே வேதம் அறிந்த ப்ராஹ்மணனின் சொத்தைத் திருடுவதாலும் உண்டாவதாக சொல்ல முடியுமோ -ஆத்மவஸ்து விலை மதிக்க ஒண்ணாதது -ஆத்மாவை உடையவனோ பரம புருஷன் -ஆகையால் இதைத் திருடும் போது தோஷத்துக்கு எல்லையில்லை –

———-

சத்யஞ்ச அநிருத்தஞ்ச சத்யமபவத் –தைத்–6-3-

விகாரம் அற்றதாகையாலே -ஸத்யம் -உள்ளது -எனப்படும் ஆத்மாவாகவும் -விகாரம் உள்ளதாகையாலே -அநிருத்தம் -இல்லாதது -எனப்படும் அசித் யாகவதாகவும் -விகாரம் அற்றதாயே வாக ப்ரஹ்மம் இருக்கிறது –

நாஸதோ வித்யதே பாவோ ந அபாவோ வித்யதே ஸத
உபயோர் அபி த்ருஷ்டோந்தஸ் த்வநயோஸ் தத்வ தர்சிபிர்
–2-16-

இல்லாதாதான தேஹம் உள்ளதாகாது -உள்ளதான ஆத்மாவுக்கு இன்மை இல்லை -தத்வ ஞானிகளால் இவ் விரண்டுக்கும் இவ் விதமாக முடிவு காணப் படுகிறது –

———

பஞ்ச பூதாத்மகம வஸ்து

ஐந்து பூதங்களான பொருள் தேஹம்

———-

ஷரம் த்வ வித்யா ஹ்யம்ருதம் து வித்யா வித்யாவித்யே ஈஸதே அஸ்து ஸோ அந்ய –ஸ்வே -5-1-

அழியும் அசித் வஸ்து அவித்யை எனப்படுகிறது -அழியாத ஆத்மா வித்யை எனப்படுகிறது -வித்யையும் அவித்யையும் எவன் நியமிக்கிறானோ அவன் அவர்களிலும் வேறுபட்டவன் –

———-

ஆத்மா நமஸ்ய ஜகதோ நிரலேபம குணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி
—ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-68-

பிராகிருத குணங்களும் அழுக்குகளும் அற்றவனாய் இவ்வுலகில் வியாபித்து இருக்கும் ஜீவனை பகவான் ஹரி யானவள் கௌஸ்துப மணி ரூபத்தில் தரிக்கிறார் –

————-

அகாரார்த்தாயைவ ஸ்வம் அஹமத மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாம் அயநமிதி நாராயண பதம் |
யமா ஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு
அவஸ்தாஸ்வாவி:ஸ்யு: மம ஸஹஜ கைங்கர்ய விதய: |
|-3-

அகாரப்பொருளான அச்யுதனுக்கே நான் உடைமை -எனக்கு உரியேன் அல்லேன் -அழிவற்றவர்கள் ஆகையால் நரர்கள் எனப்படுமவர்களுக்கு அயனமாய் இருக்கிறபடியால் நாராயண பதம் எவனைச் சொல்லுகிறதோ -அவனுக்கு எல்லாக் காலமும் -எல்லா இடத்திலும் -எல்லா அவஸ்தைகளிலும் ஏன் கைங்கர்யங்கள் ஆவிர்பவிக்கக் கடவன் –

———

அ இதி ப்ரஹ்ம

அ எனப்படுவது ப்ரஹ்மம்

————

பர த்ரவ்யேஷ் வபித்யாநம்

பிறர் பொருளில் ஆசை வைப்பது

———–

ந ஜாது காம காமாநாம் உப போகநே ஸாம்யதி
ஹவிஷா க்ருஷ்ண வர்த்தமேவ பூய ஏவாபி வர்த்ததே
-ஸ்ரீ விஷ்ணு புராணம்

காமிகளுடைய காமம் அனுபவிப்பதாலேயே ஒரு போதும் சாந்தி அடைவதில்லை -ஹவிஸ்ஸாலே வளரும் அக்னி போல் மறுபடியும் வளர்கின்றது –

———–

அநாதிர் பகவான் காலோ நாந்தோ அஸ்ய த்விஜ வித்யதே —ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-2-26-

ப்ராஹ்மணரே பெருமை பொருந்தியதான காலம் அநாதியானது -இதற்கு முடிவும் கிடையாது-

———-

அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மநா
ஸ்வயைவ பிரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை
தத்ர கத்வா புநர் லோகம் ஆயந்தி பாரத
—-பாரதம் –ஆர -136-18-23–

மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்தப் ஸ்தானம் ஸூர்யனிடமும் அக்னியிடமும் உள்ள ஒளியை விஞ்சியது -அரசனே அது தன்னுடைய ஒளியாலே தேவர்களாலும் அசுரர்களாலும் காண அரிது -பரத வம்சத்தில் உதித்தவனே -அங்குபோய் மறுபடியும் இவ்வுலகிற்குத் திரும்புவதில்லை –

———

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச
–18-66-

பல சாதனமான எல்லாத் தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னையே ஒருவனையே சரணமாக அடை -நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் -துக்கிக்காதே –

———-

ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாம் உஷித்வா ஸாஸ்வதீ ஸமா
ஸூஸீ நாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோ அபி ஜாயதே —

புண்ணியம் செய்தோரின் உலகை அடைந்து நெடும் காலம் வாழ்ந்து பரிசுத்தி உடையவர்களும் செலவமுடையவர்களுமான பெரியோர்களின் வீட்டில் யோகத்தில் இருந்து நழுவியவன் பிறக்கிறான் –

————

ஸமாதி பங்கஸ் தஸ்யாஸீத் தன்ம மத்வா த்ருதாத்மந
சந்த்யக்த ராஜ்ய போகர்த்தி ஸ்வ ஜநஸ் யாபி பூபதே
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-29-

அரசனே மானிடம் அஹங்காரம் கொண்ட மனத்தையுடைய அவருக்கு ராஜ்ஜியம் பெரும் செல்வம் உறவினர் ஆகிய அனைத்தையுமே விட்டவராய் இருந்த போதிலும் சமாதிக்கு இடையூறு ஏற்படுகிறது –

———-

பஹவோ துர் லபாச்சைவ யே த்வயா கீர்த்திதா குணா
முநே வஷ்யாம் யஹம் புத்தவா தைர் யுக்த ஸ்ரூயதாம் நர
-பால -1-7-

முனிவரே உம்மால் கீர்த்திக்கப்பட்ட குணங்கள் கிடைத்தற்கு அரியதாகவும் பலவுமாயும் இருக்கும் -நான் தெளிந்து நின்றும் சொல்லுகிறேன் -அந்த குணங்களோடு கூடிய மனிதரைப் பற்றிக் கேட்ப்பாயாக –

——–

ஆராப்யதே ந கலு விக்ந பயேந நீசை -ஆரப்ய விக்ந விஹதா விரமந்தி மத்யா
விக்நை புந புநரபி பிரதி ஹன்ய மாநா பிராப்தம் உத்தம குண ந பரி த்யஐந்தி
–நீதி சதகம் –72-

தாழ்ந்த குணத்தவர்கள் இடையூறுக்குப் பயந்து காரியத்தை ஆரம்பிப்பதே இல்லை -ஆரம்பித்த பின் இடையூறு வந்து தடுத்தால் காரியத்தின் நின்றும் பின் வாங்குகிறார்கள் மத்யமான குணத்தை யுடையவர்கள் -பல இடையூறுகளால் மறுபடியும் மறுபடியும் தடுக்கப்பட்டாலும் தொடங்கிய காரியத்தை உயர் குணத்தோர் கைவிடுவதே இல்லை –

———-

யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சநேதி —
தைத் -ஆ–9-1-

எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ -அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிபவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

———

தஸ்ய புத்ரா தாயம் உபயந்தி ஸூஹ்ருதஸ் ஸாது கிருத்யம் த்விஷந்த பாப கிருத்யாம்–சாட்யாயன சாகை

மோக்ஷம் அடையும் அம் மனிதனின் சொத்தைப் பிள்ளைகள் அடைகின்றனர் -புனியத்தை அனுகூலர்கள் அடைகின்றனர் -பாபத்தை எதிரிகள் அடைகின்றனர்-

———–

போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி
-5-29-

யஜ்ஞங்களையும் தவங்களையும் புஜிப்பவனும் -எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரனும் -எல்லா ஜீவ ராசிகளுக்கும் நண்பனான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –

————

குரும் ப்ரகாஸயேந் நித்யம்

குருவை எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் –

———-

ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது ஸூதந
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக
-சாந்தி பர்வம் -358-73–

பிறந்து கொண்டு இருக்கும் போதே எந்தப் புருஷன் மது ஸூதனனைப் பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவன் என்று அறியத் தக்கவன் -அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன் –

———-

முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்ச வேத த்வீப வாஸிநாம்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந
-சாந்திபர்வம் -344-15-

ஸ்வேத த்வீப வாஸிகளுக்கு எது லக்ஷணமோ அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும் -அதாவது எப்போதும் அஞ்சலி செய்து கொண்டே இருப்பார்கள் -அதனால் ஆனந்திப்பார்கள் -வாயால் நம என்றே சொல்லும் தன்மை யுடையவர்களாய் இருப்பார்கள் –

————–

ஸா ஹி ஸ்ரீர் அம்ருதா ஸதாம்

நல்லோர்களுக்கு வேதமே அழியாச் செல்வமாகும்

———–

சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநாம் உக்த்வான் ரிஷி
தத்ர சர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டநி ததோத்தரம்
–பால -1-2-

வால்மீகி ருஷி 24000 ஸ்லோகமாகவும் -500 சர்க்கமாகவும் -ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் கூடியதாக ஸ்ரீ இராமாயணம் அருளிச் செய்துள்ளார் –

————-

பாட்யே கேயே ச மதுரம் ப்ராமணைஸ் த்ரி ப்ரன்விதம் –பால -4-8-

ஸ்ரீ இராமாயணம் மூன்றுவிதமான அளவுகளுடன் கூடியதாய் படிக்கும் போதும் பாடும் போதும் இனியதாய் இருக்கிறது-

———

ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ

பரமபுருஷன் எல்லா நறு மணங்களையும் யுடையவன் -எல்லா நற் சுவைகளையும் யுடையவன்

———-

ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்த் வாந்தீ பவதி கோ ஹ்யே வான்யாத் க ப்ராண்யாத்
யதேஷ ஆகாஸோ ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷ ஹ்யே வாநந்தயாதி
-சாந்தோ -3-14-2-

ரஸ -ஆனந்த ஸ்வரூபன் அன்றோ அந்த பரம புருஷன் -ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து -இந்த ஜீவன் -ஆனந்தத்தை யுடையவன் ஆகிறான் -பிரகாசிப்பவனும் ஆனந்த ஸ்வரூபனுமான இப்பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள சுகத்தையோ மோக்ஷ சுகத்தையோ அடைய முடியும் -ஆகையால் இவனே ஜீவனை ஆனந்திப்பிக்கிறான் –

————-

தத்தேது வ்யபதேசாச்ச–1-1-15-

ஜீவனின் ஆனந்தத்துக்கு காரணமாகப் பராமனைச் சொல்லுகையாலே பரமன் ஜீவனிலும் வேறானவனே –

———

அம்ருதஸ்ய ஹி தாதாரம் தாமஸ பாரம் தர்சயதி ஸநத்குமார –

மோக்ஷம் அளிப்பவனும் ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான பரமனை சனத்குமாரர் காண்பிப்பார் –

————-

ஸோ அஹம் தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ஸ்துதவ் ந ச
சாமார்த்யவாந் க்ருபா மாத்ரமநோ வ்ருத்தி ப்ரஸீதி மே
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-70-

தலைவர்களுக்கும் தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் தலைவனே -இப்படிப்பட்ட நான் உன்னுடைய ஸ்துதியிலும் அர்ச்சனம் முதலியவற்றிலும் சாமர்த்தியம் உடையவன் அல்லேன் -அருள் கூர்ந்த திரு உள்ளத்துடன் கூடியவனாய் எனக்குத் தயை புரிய வேண்டும் –

———-

துர்ப்போதா வைதிகா சப்தா

வேதத்திலுள்ள சொற்கள் பொருள் உணர அரியவை

—-

த்வம் ஹி ருத்ர மஹா பாஹோ மோஹ சாஸ்த்ராணி காரய
தர்சயித்வா ஆல்பம் ஆயாஸம் பலம் சீக்ரம் ப்ரதர்சய
-வராஹ புராணம் -10-36-

நீண்ட கையையுடைய ருத்ரனே நீ மயக்கம் ஆகம சாஸ்திரங்களை இயற்றுவாயாக -சிறுது சிரமத்தின் பேரிலேயே விரைவில் பலத்தைக் காண்பாயாக –

————-

ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸூரைச் ச ஸ மஹரிஷிபி
த்ரீன் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ தம் நிபததிம் பூமவ் சரண்ய சரணாகதம்
வாதார் ஹமபி காகுத்ஸத கிருபயா பர்யபாலயத்
–ஸூந்தர –38-34-35

அந்தக்காகாசுரன் தந்தையாலும் தாயாலும் மஹரிஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்டவனாய் மூன்று உலகங்களையும் சுற்றித்திரிந்து அந்த ராமனையே சரணம் அடைந்தான் -சரணம் அடைந்தவனும் பூமியில் விழுந்தவனுமான அவனைக் கொல்லத் தக்கவனாகவே இருந்தானே யாகிலும் சரணம் அடையத் தக்கவனாகிய ஸ்ரீ ராம பிரான் தன் அருளாலே காப்பாற்றி அருளினான்-

————–

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தைவதம் கேஸவாத் பரம்
-நாரதீய புராணம் -18-33-

உண்மை உண்மை முக்காலும் உண்மை என்று கைதூக்கிக் கொண்டு சொல்லுகிறேன்-வேதத்தில் உயர்ந்த ஸாஸ்த்ரம் இல்லை -கேசவனில் உயர்ந்த தெய்வம் இல்லை –

——————

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷

போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷

பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் – காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் – சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள் ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய் ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –அவிபஸ்சித் -புல்லறிவாளர்கள் என்று பெயர் கொடுக்கிறான் புஷ்பிதாம் வாசம்-பூப் போல் மலர்ந்து -கொண்டாட வில்லை -பூ மாத்திரமே -காய்க்காது பழுக்காது -ராமானுஜ பாஷ்யம் –

———

த்ரைவித்யா மாம் ஸோமபா பூத பாபா–யஜ்ஞை ரிஷ்ட்வா ஸ்வர்க்கதிம் ப்ரார்தயந்தே–
தே புண்ய மாஸாத்ய ஸுரேந்த்ர லோகம்–அஸ்நந்தி திவ்யாந் திவி தேவ போகாந்—৷৷9.20৷৷

தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விஸாலம் –க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விஸந்தி.–
ஏவம் த்ரயீ தர்ம மநுப்ரபந்நா–கதாகதம் காமகாமா லபந்தே—৷৷9.21৷৷

வேதாந்தத்தில் இல்லாமல் மூன்று வேதங்களில் பூர்வ பாகத்தில் சொல்லப்பட்ட தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களாய் –
இந்த்ராதிகளைக் குறித்துச் செய்யப்பட யாகங்களின் சேஷமான சோமா ரசத்தை பருகுகின்றவர்களாய் –
ஸ்வர்க்கம் முதலானவற்றை அடையத் தடையாக இருக்கும் பாபங்களில் இருந்து நீங்கப் பெற்றவர்களாய் –
இந்த்ராதிகளை மாத்திரம் குறித்த யஜ்ஞங்களாலே -அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் இருக்கும்
என்னைக் குறித்தே உண்மையில் யாகம் செய்து -இந்த்ராதிகள் இடம் ஸ்வர்க்கத்தை வேண்டுகிறார்கள் –
அவர்கள் இவ்வுலகத் துன்பங்கள் இல்லாத தேவேந்திர லோகத்தை அடைந்து அங்குள்ள பல இடங்களில்
இவ்வுலக அனுபவங்களைக் காட்டிலும் சிறந்த தேவர்களுடைய போகங்களை அனுபவிக்கிறார்கள் –
அவர்கள் பரந்ததான அந்த ஸ்வர்க்கத்தில் உள்ள போகங்களை அனுபவித்து -அந்த அனுபவத்துக்கு காரணமான
புண்யம் அழிந்த அளவில் மறுபடியும் மனித உலகிற்கு வருகிறார்கள் –
இவ்வண்ணமாக வேதாந்த ஞானம் இல்லாமல் மூன்று வேதங்களின் பூர்வ பாகத்தில் சொன்ன யாகம் முதலிய
தர்மங்களை அனுஷ்டிப்பவர்களாய் -அவற்றில் சொன்ன விரும்பப்படும் ஸ்வர்க்காதிகளிலேயே விருப்பம் உடையவர்களாய் –
அல்பமும் அஸ்த்ரமுமான ஸ்வர்க்காதிகளையே அடைந்து மறுபடியும் மறுபடியும் திரும்பி வருகிறார்கள் –

————–

ப்ரஹ்ம விதாப்நோதி பரம் –தைத்ரியம்

ப்ரஹ்மத்தை அறிந்தவன் மேலான பலனை அடைகிறான்

——–

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹி தேவம் ஆத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே –ஸ்வேதாஸ் -6-18-

எவன் பிரமனை முன் படைத்தானோ -எவன் பேதங்களையும் அவனுக்கு உபதேசித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தமது விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரம புருஷனை மோக்ஷம் அடைய விரும்பும் அடியேன் சரணம் அடைகிறேன்-

———–

ப்ரஹ்மணாநாம் தனம் வேத

அந்தணர் மாடு -அருமறையே அந்தணருக்குச் செல்வமாகும்

————-

யோ தத்யாத் பகவத் ஞானம் குர்யாத் வா தர்ம தர்சனம்
க்ருத்ஸ்நாம் வா ப்ருத்வீம் தத்யான் ந தத்துல்யம் கதஞ்சன
-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –70-78-

பார்வதி ஞானம் அளித்து அவனை அடைய உபாயம் அருளுபவனுக்கு பூமி முழுவதையுமே கொடுத்தாலும் அவன் அளித்ததற்கு ஒப்பு ஆகாதே-

————–

மித்ர பவ்யிகம் கர்த்தும் ராம ஸ்தானம் ப்ரீப் ஸதா
வதம் ச அநிச்சிதா கோரம் த்வயா அசவ் புருஷன் ரிஷப–யுத்த -21-19-

ராவணா நீ உனது குடியிருப்பை விரும்பினாயாகில் -கோரமான வதத்தை விரும்பாது இருந்தாயாகில் இந்த புருஷ ஸ்ரேஷ்டரான ராமபிரானை நண்பனாகக் கொள்ளத் தக்கது –

———–

யோ மா ததாதி ஸ இதேவ மாவா -தைத்ரி -பிருகு -10-6-

எவன் எனக்குப் பரமணி அளிக்கிறானோ அவனே எனக்கு ரக்ஷகன்-

————

தர்ம அர்த்தவ் யத்ர ந ஸ்யாதாம் ஸுஸ்ரூஷா வா ததாவிதா
தத்ர வித்யா ந வப்தவ்யா சுபம் பீஜமிவோஷரே –மனு ஸ்ம்ருதி -2-112-

அறமும் பொருளும் எந்த சீடனிடம் இல்லையோ -அப்படியே ஸுஸ்ரூஷையும் எவனிடம் இல்லையோ -நல்ல விதையை களர் நிலத்தில் விதைக்கக் கூடாதது போல் அவனிடம் வித்யையை விதைக்கக் கூடாது –

————–

அர்த்ததோ தர்மதஸ் ஸுஸ்ரூஷரத்யாப்ய-

பொருளை அளிப்பவனும் அறத்தை அளிப்பவனும் ஸுஸ்ரூஷை யுள்ளவனுமான சீடனே அத்யயனம் செய்யத்தக்கவன் –

———-

கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம்
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—
৷৷2.7৷৷

மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக

—————-

ஸ்ரூயதாம் பரமார்த்தோ வை தைதேயா தநு ஜாத்மஜா
ந சாந்யதைதக் மந்தவ்யம் நாத்ர லோபாதி காரணம் —

அசுர புத்ரர்களே என்னிடமிருந்து இவ் உண்மைப் பொருளை கேளுங்கோள் -இதை வேறு விதமாக எண்ணலாகாது –இவ் விக்ஷயத்தில் ஆசை முதலியவை காரணம் அல்ல-

—————

ந அகிஞ்சித் குர்வத சேஷத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-55-

கைங்கர்யம் செய்யாதவனுக்கு சேஷத்வம் இல்லை

———–

ஸா பேஷா இவ சேஷ்டத

அபேக்ஷை உள்ளவன் போல் அர்ச்சாவதாரத்தில் நடக்கிறான்

———-

ஸகே ராகவ தர்மஜ்ஞ ரிபூணாம் அபி வத்ஸல
அப்யனுஜ்ஞாதும் இச்சாமி கமிஷ்யாமி யதாக்தம்
-யுத்த –50-56-

நண்பரே ரகு குலத்தில் உதித்தவரே தர்மத்தை அறிந்தவரே சத்ருக்களுக்கும் வாத்சல்யத்தை யுடையவரே -விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் -வந்தவாறே போய் விடுகிறேன் –

————

தேவாநாம் தாநவாஞ்ச சாமான்யம் அதி தைவதம்
ஸர்வதா சரண த்வந்த்வம் வரஜாமி சரணம் தவ –
-ஜிதந்தா -2-

பக்தியுடைய தேவர்களுக்கும் பக்தியில்லாத அசுரர்களுக்கும் எப்போதும் பொதுவாகப் பற்றத்தக்க தேவதையாய் இருக்கும் உனது திருவடி இணையை உபாயமாக நிச்சயிக்கிறேன்-

உதாராஸ் ஸர்வ ஏவைத ஞாநீ த்வாத்மைவ மே மதம் -7-13-

இவர்கள் அனைவருமே உதாரர்கள் -ஞானியோ என்றால் எனக்கு தாயகம் -ஆத்மா -என்பதே எனது ஸித்தாந்தம்

———-

த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷத் அன்னம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஜஸே ராஜன் மம பிராணா ஹி பாண்டவா
-உத்யோக பர்வம் –74-27-

த்வேஷிப்பவன் அன்னம் புஜிக்கத்தக்கது அன்று-த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -பாண்டவர்கள் எனக்கு பிராணன் அன்றோ –

————

ஆச்சார்யவான் புருஷோ வேத

ஆச்சார்யனை யுடைய புருஷனே உண்மையை அறிகிறான்

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||-
-10-

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால், இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு. எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை-

————–

சீலாதி குண ஸம் பந்ந ஸர்வ லோக ஏக வத்ஸல

சீலம் முதலிய கல்யாண குணங்களை யுடையவன் -எல்லா உலகுக்கும் வாத்சல்யம் யுடைய ஒருவனாய் இருப்பவன் –

————

விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யது ஜீவிதம் இச்சஸி –
-ஸூந்தர –21-20-

ராவணா -ஸ்ரீ ராமபிரான் தர்மத்தை அறிந்தவராகவும் -சரணம் அடைந்தவர்களிடம் வாத்சல்யம் யுடையவர் என்றும் ப்ரஸித்தமானவர் -நீ உயிர் வாழ விரும்புவாயானால் அவரிடம் நட்பு காட்ட வேண்டும் –

————

மித்ர பாவேந ஸம் பிராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
–தத்தம் -18-3-

நண்பனாகிய பாவத்தோடு நெருங்கின இந்த விபீஷணனை ஒருபோதும் கைவிட மாட்டேன் -அவனிடம் தோஷம் இருந்தாலும் இருக்கட்டுமே -நல்லோர்களுக்கு இவனை ஸ்வீ கரிப்பது நிந்திக்கத் தக்கது அல்ல –

———–

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா
-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ-தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே-ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே-ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

————

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ
: ||–58-

கருணைக் கடலான ஸ்ரீ ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே!
வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத,
போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய
திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.

————

ஆஸ்ரித வாத்சல்ய ஏக மஹோ ததே —ஸ்ரீ ரெங்ககத்யம்

அடியார்களிடம் வாத்சல்யக்கடலாய் இருப்பவனே

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புத்தூர் கிருஷ்ண ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு-ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –அவதாரிகை —

January 26, 2025

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஸர்வ ஸ்வாமியான ஸர்வேஸ்வரன் –
பஞ்ச சக்திமயே திவ்யே ஸூத்த ஸத்வே ஸூக ஆகாரே -என்றும்
த்ரிபாத் விபூதவ் பகவான் ஈஸ்வர்யா பரமேஸ்வர -நித்ய முக்த ஏக போக்யோ அசவ் மோததே ஸததம் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
பஞ்ச உபநிஷன் மயமாய் -ஸூத்த ஸத்வாத்மகமாய் -நிரதிசய ஆனந்த மயமான -த்ரிபாத் விபூதியிலே
நித்ய நிர்மல ஞானதி குணகராய் -ஸ்வச் சந்த அநு வ்ருத்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதரான நித்ய ஸூரிகளாலே அநவ்ரத பரிச்சர்யமாண சரண நளின யுகளராய் -நித்ய முக்தரையும் ஸ்வ அனுபவத்தாலே ஆனந்திப்பித்துக் கொண்டு தானம் நிரதிசய ஆனந்த யுக்தனாய்ப் போரா நிற்க-

லீலா விபூதியில் உள்ளார் அவர்களோபாதி தன்னை அனுபவிக்க ப்ராப்தி யுண்டாய் இருக்க-அத்தை இழந்து இருக்கிறபடியைக் கண்டு வியாகுல அந்தக்கரணனாய் -இவர்களை உஜ்ஜீவிப்பிக்கையில் யுண்டான நசையாலே அசித் அவிஸேஷிதராய் -அத ஏவ போக மோக்ஷ சூன்யராய்க் கிடக்கிற தசையிலே
கரண களேபரைர் கடயிதும் தயமான மநா –என்கிறபடியே
தயை குடிகொண்ட திரு உள்ளத்தை யுடையனாய்
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயண உபகரணமாக
விசித்ரா தேஹ ஸம்பத்தி -இத்யாதிப்படியே
கரண களேபரங்களைக் கொடுத்து
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் யுண்டாக்கி
ஞான கார்யமான த்யாஜ்ய உபாதேய விவேக பரிகரமாக
மாநம் பிரதீப மிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
வேதங்களை ப்ரமாணமாகப் ப்ரவர்த்திப்பித்து

அநந்தரம் மன்வாதிகளுக்கு அந்தர்யாமியாய் நின்று சேதனருடைய விஸிஷ்ட விஷயமான ஸாஸ்த்ரத்தை வெளியிட்டு அருள
அந்த ஸாஸ்த்ர அப்யாஸம் அநேக யோக்யதா ஸா பேஷமாய் -சிரகால ஸாத்யமாய் இருக்கையாலே துஷ்கரமாம் இருக்கும்படியைத் திரு உள்ளம் பற்றி-தாத்ருஸ யோக்யதா நிரபேஷத்வாதிகளாலே ஸூ கரமாய் -சேதன நிஷ்க்ருஷ்ட வேஷ விஷயமான திரு அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யையை ஸ்வயமேவ ப்ரகாசிப்பித்த அளவிலும் கார்யகர மாகாமையாலே
ஓலைப் புறத்தே செல்லாத ராஜ்யத்தை எடுத்துவிட்டுச் செலுத்திக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
நாமே சென்று ஸம்ஸாரிகளைத் திருத்தக் கடவோம் -என்று ராம கிருஷ்ணாதி அவதார முகத்தாலே இவர்கள் இருக்கிற இடத்திலே தானே வந்து திருத்தப் பார்த்த இடத்திலும் ஒருவரும் திருந்தக் காணாமையாலே
விஜாதீயரான நம்மால் ஒருபடியாலும் திருத்த ஒண்ணாதபடியாய் இருந்தது
இனி இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப் போலே
சஜாதீயரைக் கொண்டு கார்யம் கொள்ளவேண்டும் என்றும் அறுதியிட்டுத் தன்னுடைய நிர்ஹேதுக ப்ரஸாதத்துக்கு இலக்கான ஆழ்வார்களை அவதரிப்பித்தான்

அவர்களாகிறார் -சர்வேஸ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவராகையாலே ஸகல ஸம்ஸார சேதனரும் த்யாஜ்ய உபாதேய விபாகம் பண்ணி உஜ்ஜீவிக்கும் படிக்கு உடலாக ஸர்வாதிகாரமான திராவிட ரூப பிரபந்தங்களை அருளிச் செய்து ஜகத்தை வாழ்வித்தார் சிலராயிற்று –

இதில் முதலாழ்வார்கள் வ்யாஸாதி பரம ரிஷிகளில் வ்யாவ்ருத்தர்களே யாகிலும் லௌகிக ஞானமும் கலசி கிராம ஏக ராத்ரமாகத் திரிந்தார்கள் என்பது ஓன்று உண்டு –
திருமழிசைப்பிரான் முதலான ஆழ்வார்கள் சிறிது காலம் லௌகிக ஞானம் மேலிட்டுக் காலாந்தரத்திலே பகவன் நிர்ஹேதுக ப்ரஸாதத்துக்கு இலக்கானார்கள் என்பது ஓன்று உண்டு

அக்குறைகள் ஒன்றுமே இன்றிக்கே -நம்மாழ்வார்
உத்பத்யதே யதா லோகே துளஸீ கந்த ஸம் யுதா –என்கிறபடியே
திருத்துழாய் மணத்தோடே அங்குரிக்குமா போலே
கேவலம் ஸ்வச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசந –என்கிறபடியே
பகவந் நிர்ஹேதுக ப்ரஸாதத்தாலே கர்ப்பே அபி ஷிக்தராய் லௌகிக ஞான பூர்வகமான ப்ரவ்ருத்தி லேசமும் இன்றியே
பால ஆஷோட ஸாப் தாத்து மூக பாவம் கமிஷ்யதி –என்கிறபடியே
திருவவதாரம் தொடங்கி பதினாறு திரு நக்ஷத்ரத்து அளவும் -ஸ்தந்யாதிகளும் இன்றிக்கே வாக்ய வ்யவஹாராதிகளும் இன்றியே
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் –என்கிறபடியே
தாரக போஷக போக்யங்கள் எல்லாமே எம்பெருமானேயாய் -தத் குண அனுபவமே ஸம் வர்த்தகமாக வளர்ந்து போந்தார் ஒருவராய்த்து –

இவர் ப்ரபாவத்தை நரூபிக்கும் போது பிராட்டிமாரிலும் நித்ய ஸூரிகளிலும் உபய விபூதியிலும் வ்யாவ்ருத்தராய் இருப்பர் -எங்கனே என்னில்
பின்னை கொல் நில மா மகள் கொல் திருமகள் கொல் -என்று ஓரோர் ஆகாரத்தாலே அவர்களோடு ஓக்க விகல்பிக்கலாம் படி மூவர் படியையுமாய் இருக்கிற இதற்கும் மேலே
பிறந்திட்டாள் -என்று அந்யாத்ருஸமான வேறுபாட்டை யுடையளான இவள் ஒருத்தி இங்கனே பிறப்பதே
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் -என்று ஈடுபடும்படிக்கு உடலான ஏற்றத்தையும் யுடையராய்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம் –என்கிறபடியே
ஸ்தாந விகல்பத்தாலும் உபய விபூதியிலும் அடங்காத தன்மையாய் இருப்பர் –

யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
மாறுளதோ இம்மண்ணின் மிசையே -என்றும்
முக்தகண்டமாக உபய விபூதியிலும் தம்மோடு ஒப்பார் ஒருவரும் இல்லை -என்றார் இறே
இவ்வாழ்வாருக்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரத்திலும் இல்லை -நித்ய விபூதியிலும் இல்லை -தம்படி தாமும் அறியார் -ஸம்ஸாரிகளும் அறியார் -ஈஸ்வரனும் அறியான் –
ஒரு ஸாதனத்தைச் சமைய அனுஷ்டித்து இதனாலே நமக்கு இப்படி ஒரு வீறுடைமை வரும் -என்று இருக்க வந்தது அல்லாமையாலே தாமும் அறியார் -இவரைப்போலே சகல இதர விலக்ஷணராய் இருப்பாரை ஸம்ஸார மண்டலத்திலே காணாமையாலே சம்சாரிகளும் அறியார் –
தன்னுடைய ஞான சக்த்யாதி குணங்கள்
அவ்யுச்சிந் நாஸ் ததஸ்த்வேதே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்த ஸம்யமா-என்கிறபடியே
அநுஸ் யூதமான ஸ்ருஷ்ட்டி பரம்பரையில் ஒரு வ்யக்தியிலே யாகிலும் இப்படிப்பலிக்கக் காணாமையாலே ஈஸ்வரனும் அறியான்
விண்ணுளாரிலும் சீரியர் –என்கிறபடியே நித்யர்களிலும் வ்யாவ்ருத்தரராய் இருக்கும் அளவன்றிக்கே புருஷோத்தமனான சர்வேஸ்வரனுடனும் ஒப்புச் சொல்லலாம் படியான வைபவம் இறே இவரது –

ஸ ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்றும்
ஞாநீ த்வாத்மைவ மே மதம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் தானே ஞாநாதிக்யத்தை இட்டு ஒரோ வ்யக்திகளைத் தன்னோடு ஓக்கவும் தனக்குத் தாரகமாகவும் சொன்னபடி கண்டால் இவர் விஷயத்தில் சொல்ல வேண்டா விறே
இன்னமும் புவியும் இரு விசும்பும் நின் இத்யாதி
உபய விபூதியும் நின் சங்கல்பத்திலே கிடக்கிறது -ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரிய த்வாரா புகுந்து விச்சேதம் இன்றிக்கே என்னுடைய ஹ்ருதயத்திலே உளனாக நின்றாய் -இப்படியான பின்பு விபூதியை யுடைய நீயோ விபூதிமானை யுடைய நானோ பெரியவன் என்றும் அறிவார் இல்லை -அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்துக் காணாய் என்றுஉபய விபூதியில் யுக்தனுடனே மறு தலைக்கும் படியாக வைபவத்தை யுடையராய்
தெய்வத்தின் இனமோர் அனையீர்களாய் -என்று ஒருவரே இருவர் இன்றிக்கே நித்ய ஸூரிகள் எல்லோரும் கூடினாலும் தமக்கு ஒரோ வகைக்கு ஒப்பாம்படியான பெருமையைக் யுடையராய் இருப்பர்

இப்படி ஸகல இதர வ்யாவ்ருத்தராய் -ஸர்வ பிரகார விலக்ஷணரான இவ்வாழ்வார் அவதரித்தது ஸம்ஸாரி சேதனர் பண்ணின ஸூஹ்ருத பலமாய்த்து
ததோகில ஜகத் பத்ம போதாயாச்யுத பாநுநா தேவகீ பூர்வா சந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -என்று
சர்வேஸ்வரன் அவதரித்தால் போலே யாய்த்து இவ்வாழ்வார் அவதரித்தது -அவதார கார்ய பேதத்தாலே அச்யுத பானுவினுடைய ஆவிர்பாவத்திலும் வகுள பூஷண பாஸ்கர உதயம் வ்யாவ்ருத்தமாகும்
யத் கோ ஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் நாராயணோ வாஸதி யத்ர ஸ சங்க சக்ர -யந் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய-என்று
அச்யுத பானுக்கு விகஸியாத ஹ்ருத் பத்மங்களும் விகஸித்து ஆதித்ய அநி வார்யமாய் உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரமும் நீங்கினதும் வகுள பூஷண பாஸ்கர உதயமான பின்பு இறே

இப்படி அஞ்ஞான தமோ நிவர்த்தகராய் -ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே –என்கிறபடியே எல்லோரும் தம்மைப் போலவே பகவத் ஏக பரராம்பாடி அவதரித்த இவ்வாழ்வார் விஷயத்திலே தேவு மற்றறியேன் -என்று
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்களை
அறுதியிட்டு தத் ஏக நிஷ்டராய்ப் போருமவராய்த்து ஸ்ரீ மதுரகவியாழ்வார்

இப்படி இவர் ததீய சேஷத்வமே உத்தேச்யம் என்று அறுதியிடுகைக்கு வந்த வழி தான் ஏது என்னில்
நம்மாழ்வாரை பொய் நின்ற ஞானமும் தொடங்கி அவாவற்று வீடு பெற்ற -அளவும் செல்ல அனுபவித்த இடத்திலே அவர் தமக்கு உத்தேச்யமாகத் திருவாய் மொழியில்
பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்கு அடிமை -யிலே
புருஷார்த்த காஷ்டையாகத் ததீய சேஷத்வத்தையே அறுதியிடுகையாலே
ஸ்வ ஆச்சார்ய ருசி பரிக்ருஹிதமான அர்த்தமே தமக்கு உத்தேச்யம் என்று நினைத்து ததீய அக்ரேஸரான இவ்வாழ்வாரையே தேவு மற்று அறியேன் என்று பற்றுகிறார்

ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே ஸாத்விகருக்குப் பரிக்ராஹ்யம் என்னும் இடமும் மஹாபாரத சாரமான சஹஸ்ர நாம அத்தியாயத்தில் சொல்லிற்று இறே -ஸ்ரீ பீஷ்மர் பக்கலிலே ஸகல அர்த்தங்களையும் குறைவறக்கேட்ட தர்மபுத்ரன் இவன் தனக்கு உத்தேச்யமாக ஸ்வீ கரித்து தத்வ ஹிதங்களே தனக்கு உத்தேச்யம் என்று நினைத்து
கோ தர்மஸ் ஸர்வ தர்மாணாம் பவத பரமோ மத -என்று கேட்க
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோதிகதமோ மத -என்று தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசத்தான் இறே

த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலேயே எம்பெருமானே ஆஸ்ரயணீய தைவம் என்று நீங்கள் பற்றுகிறது என்ன-அஃது ஒன்றும் அன்று எம்பெருமானார் காழிச்சால் மூலையில் தேவதையை ஆஸ்ரயித்தார் யாகில் அதுவே எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக் கடவது -என்றாள் -அந்த நியாயத்தாலே ஆழ்வார் தமக்குத் தஞ்சமாக நினைத்திருந்த ததீய சேஷத்வத்தையே விரும்பித் தமக்குப் புருஷார்த்தமாக அத்ய-வசிக்கிறார்-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கல் அனுஷ்டான சேஷமாகக் காணப்பட்டது –
வேத உப ப்ரும்ஹணார்த்தாயா தாவ க்ராஹயத ப்ரபு -என்று வேத உப ப்ரும்ஹண அர்த்தமாக ப்ரவ்ருத்தமான ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் தர்ம ஸம் ஸ்தாபன அர்த்தமாக அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
கர்த்தா காரயிதா ச ஸ –என்கிறபடியே அனுஷ்ட்டிப்பிக்கைக்காக -ஒருவன் சொன்னதை ஒருவன் செய்யக்கடவன் -என்கிற முறை நேராக அழிந்து கிடைக்கையாலே பித்ரு வசன பரிபாலனாதி களாலே ஸாமான்ய தர்மத்தை அனுஷ்ட்டித்தார் பெருமாள் –
பிதுர் வசன நிர்தேசாத்
அகஸ்திய வஸனாத்
ஸூக்ரீவ வஸனாத் –என்று இறே இவருடைய அனுஷ்டானம் –

சேஷ பூதன் நிருபாதிக சேஷியைக் குறித்து கிஞ்சித் கரித்துத் தான் உளனாகக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இறே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

இப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா என்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -இங்கு மாதா பிதாக்களைக் கேள்வி கொள்ளுதல் பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்-செய்யும் அளவு
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் -என்றான் இறே சதாநீகன்
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
கச்சதா என்றதிலே அர்த்த ஸித்தம் அன்றோ-ததா என்கிறது என் என்னில் அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -இங்கு அதுக்கு ஆஸ்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்கிறது -ஆகவே புனர் யுக்தி தோஷம் இல்லை -சேஷத்வ விரோதிகள் அன்றோ இரண்டுமே –
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இறே-அகமாவது உத்தேச்ய விரோதி -இவ்விடத்தில் ராமபக்தி -அல்லாதார்க்கு ராமபக்தியும் கலசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாபம் என்னப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -என்று பாப சப்த வாஸ்யம் -ஆகையாலே பரத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம சவுந்தர்யத்தில் இழிந்து ராம பக்தியில் கால் தாழுமதுவும் பாபமாம் இத்தனை –ராமே பிரமாதம் மா கார்ஷி புத்ர பிராதரி கச்சதி -என்று ராம அனுவ்ருத்திக்கும் இடைச்சுவராகச் சொல்லிற்று இறே
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ லஷ்மணன் என்றும் ராஜ்யத்தைப் பாரமாக நினைப்பவனாகையாலே பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன் உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் பரிசு மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இறே இருப்பது
நீத-என்கையாலே சேஷத்வத்தில் அசித் கல்பனாய் போந்தான்
ப்ரீதி புரஸ்க்ருத என்கையாலே ஸ்வரூப அனுரூபமான விருத்தியலே சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று இறே அபியுக்தர் வார்த்தை
அநக -நித்ய சத்ருக்ந-என்று பாவனத்வ போக்யதையாலும் அவனையே பற்றினான் என்றுமாம்
இவற்றுக்குப் பிரயோஜனம் என்ன என்னில்
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இறே
-இப்படி இவனைப் போல் இருப்பார் ஒருவர் ஸ்ரீ மதுர கவிகள்
இனி ததீயர் உத்தேச்யர் என்னும் இடத்தில் -முதல் அடியில் அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே பகவத் விஷயத்திலே மூட்டியும்
இவன் பகவத் விஷயத்திலே அவகாஹித்து குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத படியானால் போத யந்த பரஸ்பரம் என்கிறபடியே
போது போக்குகைக்கு உசாத் துணையாயும்
பிராப்தி தசையில் வந்தால் யத்ர பூர்வே சாத்யாஸ் சந்நிதேவா -என்கிறபடியே சாத்திய விருத்தி ரூபத்தாலும் புருஷகார பாவத்தாலும் உத்தேச்யராவார்கள்
இப்படி சர்வ அவஸ்தையிலும் ததீயரே உத்தேச்யர் என்று அத்யவசித்து தமக்கு ஸ்ரீ வைஷ்ணவ விஷயீ காரத்துக்கு முன்னர் அஞ்ஞாத ஞாபன முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபகாரகரான ஆழ்வார் தம்மையே பற்றுகிறார் –

இப்படி இவர் பரமாச்சார்யரான ஆழ்வார் விஷயத்தில் -தேவு மற்று அறியேன் -என்று தேவதா பிரதிபத்தியைப் பண்ணுகைக்கு அடி என் என்னில்
தேவ மிவ ஆச்சார்யம் உபாஸீத -என்றும்
ஆச்சார்யோ தேவோ பவ -என்றும்
ஆச்சார்யர் விஷயத்தில் தேவதா பிரதிபத்தி பண்ணச்சொல்லி வேதாந்தம் விதிக்கையாலும்
குருர் ஏவ பர ப்ரஹ்ம
ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாச் சர ரூபி ந சம்சய
ஏஷ வை பகவான் ஸாஷாத் பிரதான புருஷேஸ்வர
யோகீஸ்வரைர் விம்ருக் யாங்க்ரிம் லோகோயம் மநுதே நரம்
சாஷாந் நாராயணோ தேவ க்ருத்வா மரத்தய மயீம் தநும் -மக்நாந் உத்தரதே லோகான் காருண்யாஸ் ஸாஸ்த்ர பாணிநா
இது முதலான ப்ரமாணங்களிலே சர்வேஸ்வரன் தானே ஆச்சார்யனாய் வந்து அவதரித்து ஸம்ஸார ஆர்ணவ மக்நரான ஸம்ஸாரி சேதனரை கேவலம் தன் கிருபையாலே சாஸ்த்ரார்த்தங்களை உபதேசித்து உத்தரிப்பிக்கும் என்று முக்த கண்டமாகச் சொல்லுகையாலும்

க்ருதே அத்ரி ஸூநுர்ப் பகவான் த்ரேதாயாம் ரகு நந்தன -த்வாபரே நந்த ஸூநுச்ச கலவ் தேவ பராங்குச -என்று
ஈஸ்வரன் தானே க்ருத யுகத்திலே ப்ராஹ்மண உத்தமரான அத்ரி பகவானுக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்ரேதா யுகத்தில் ஷத்ரியனான தசரத சக்கரவர்த்திக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
த்வாபர யுகத்தில் கோ ரக்ஷணாதி தர்மத்தை யுடைய சாஷாத் வைஸ்யரான ஸ்ரீ நந்தகோபருக்குப் புத்ரனாய் தத்தாத்ரேயனாய் அவதரித்தால் போலவும்
க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகைஸ் கலு ஷீக்ருதே -விஷ்ணோர் அம்ச ஸம் பூதோ வேத வேதார்த்த தத்வ வித் -ஸ்தோத்ரம் வேதமயம் கர்த்தும் த்ராவீட்யா நிஜபாஷயா -ஜனிஷ்யதி ஸதாம் ஸ்ரேஷ்டோ லோகாநாம் ஹித காம்யயா -என்று
நாஸ்திக ஜநாக்ராந்தமான கலியுகத்தில் சர்வேஸ்வரனுடைய அம்ச அவதாரமாய் -தத்வ வித அக்ரேஸராய் லோக ஹிதார்த்தமாக திராவிட பாஷையாலே வேதாந்த அர்த்தங்களைப் பிரபந்த்தீகரிக்கைக்கு ஸ்ரீ சடகோபர் என்கிற திருநாமத்தை யுடையராய் ஒருவர் திருவவதரிக்கப் போகிறார் என்றும்

கலவ் புந பாபரதா அபி பூதே ஸ உத்பவத் ஆஸ்ரித வத்சலத்வாத் -பக்தாத்மநா விஸ்வ ஜநாந் ஸூ கோப்தும் விச்வாதிகோ விஸ்வமயோ ஹி விஷ்ணு -என்று
கலியுகத்திலும் ஸர்வ ஜன ஸம் ரக்ஷணார்த்தமாக சர்வாதிகனான சர்வேஸ்வரன் பக்த ரூபேண வந்து அவதரிப்பான் என்று சொல்லுகையாலும்

கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா க்வசித் க்வசிந் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிஸ-தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ -யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஸ்வர -தேஷாம் நாராயணே பக்திர்ப் பூயஸீ நிருபத்ரவா -என்று
ஞானாதிகரான சத்துக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களாலே பிரகாசிப்பித்து
அந்த நதீ விசேஷங்களிலே ஜல பானம் பண்ணுபவர்களுக்கு பக்தி அதிசயிக்கும்படியைச் சொல்லுகையிலே பிரதமத்திலே தாம்ர பர்ணீ நதீ யத்ர-என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தைச் சொல்லுகையாலே
த்வதீயே பரார்த்தேஸ்மிந் திநே த்வாத்யேத சத்தமே –மந் வந்த்ரே வர்த்தமாநே த்விஷ்டா விம்ஸே சதுர் யுகே -கலே ராதவ்மாஸி ராதே காவ்ய வாரே குளீரகே -பவர்ணமாஸ்யாம் விசாகாக்யே தாரே மஹதி ஸோபநே -ப்ரஜாபதேர் ஜென்ம யோகீ சடகோப இதி ஸ்ம்ருத-மத் பக்தோஹம் பவிஷ்யாமி நேதும் த்ராவிடதாம் ஸ்ருதீ –என்றும்
தாம்ர பர்ணி யுத்தரே தடே தாந்த்ர க்ஷேத்ரே ஜெனிஷ்யதி என்றும்
நிர் நித்ர தீந்த்ரிணீ ஸ த்வம் கத்வாத்ர புஜகாதிப -ஸர்வ அபிலாஷாந்த் ஸர்வேஷாம் நித்யமேவ ப்ரதாஸ்யதி -சடகோப முனீந்திர த்வம் ஸம் ப்ராப்ய த்ரிதஸேஸ்வர –தாம்ரபர்ணீ தடம் ப்ராப்ய ரஷிஷ்யத் யகிலான் ஜனான் -அத்ர வேதாஸ் சமஸ்தாச்ச த்ராவிடத்வம் உபாகத–வேதயிஷ்யந்தி தேவேசம் ஸகலா அபி மாதவம் -என்றும்
அஸ்தி பாண்டிய மஹா தேசே குருகா நகரீ ஸூபா -தாமிரபர்ணீ நதீ தீரே சாஷாத் த்ருஷ்டோ ஹ்யதோஷஜ -என்றும் சொல்லுகிறபடியே
அந்த நதீ தீரத்திலே -நல்லார் நவில் குருகூரில் -யுக வர்ண கிரமத்திலே -அவதரித்த சர்வேஸ்வரன் தானே
குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் –என்கிறபடியே
ஸப்த புருஷம் பகவத் ஏக பரராம்படியரான காரியார் இடத்திலே வந்து அவதரித்து -காரி மாறன் சடகோபன் என்று பரம ஆப்த தமரான தாமே அருளிச்செய்யும் படி ப்ரக்யாத ப்ரபாவராகையாலே
இவ்வாழ்வாரே ஸகல ஜன ஜீவாதுவாய் -சர்வோத்தரகமான பகவத் அவதாரமே என்று அறுதியிட்டு அவரே பர தேவதை என்று ஸ்ரீ மதுர கவிகள் பற்றினார் யாயிற்று –

அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆச்சார்யத்வ பிரதிபத்தி பண்ணினார் ஆழ்வார்
இவர் ஆச்சார்ய விஷயத்தில் பகவத் பிரதிபத்தி பண்ணுகிறார் தேவு மற்றறியேன் -என்று –
ஈஸ்வர ஆச்சார்யத்வங்களாகிற தர்ம த்வயங்களும் கார்ய பேதத்தாலே வ்யக்தி த்வய சாதாரணமாய்க் காண்கையாலே இருவர் பக்கலிலும் இரண்டு பிரதிபத்தியும் நடக்கக் குறையில்லை
ஸ்ரீதர ஆதி குரவே -என்று ஸ்ரீயப்பதியான ஈஸ்வரன் தானே பிரதம ஆச்சார்யனாய்
ஸ ச ஆச்சார்ய வம்ஸோ ஜேய ஆச்சார்யாணாமஸாவஸா வித்யா பகவத்த –என்கிறபடியே
குரு பரம்பரையும் ஞாதவ்யமாகையாலே தத் பரம்பரா ப்ரவர்த்தாகத்வமும் ஸ்வ நிஷ்டமாகையாலே சரம ஆச்சார்யத்வமும் தன்னை ஒழிய அனுபபன்னமாகையாலே ஆச்சார்ய அவதாரமும் ஈஸ்வர க்ருத்யமாம் அத்தனை –

சம்பவாமி யுகே யுகே -என்று வாயோலை செய்தது ஆச்சார்ய அவதாரத்தை ஒழிய அன்று இரே -ஆகையாலே நம்மாழ்வார் பகவத் அவதார விசேஷமாகையாலே அவர் விஷயத்தில்
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்களை
அறுதியிட்டு ஸ்ரீ மதுரகவிகளும் தத் ஏக நிஷ்டராகக் குறையில்லை

இப்படி ஸ்ரீ மதுரகவி யாழ்வார் பர தேவதையாக பிரதிபத்தி பண்ணின ஆழ்வார் விஷயத்திலே பிரதம பர்வமான ஈஸ்வரன் தானே சரம பர்வமான ஆழ்வாராய் வந்து அவதரித்தார் என்றும் உத்தேச்யத்வ பிரதிபத்தி பண்ணாதே ஸஜாதீயத்வ பிரதிபத்தி பண்ணினவர்கள் யாவதாத்ம பாவி ரௌரவாதி நரகத்தில் அழுந்துவர்கள் அத்தனை –
விஷ்ணோர் அர்ச்சாவதாரேஷு லோஹ பாவம் கரோதி யஸ் -யோ குரவ் மனுஷம் பாவம் உபவ் நரகபாதி நவ் -என்று
ஆச்சார்ய விஷயத்திலே மனுஷ்யத்வ பிரதிபத்தி பண்ணினவனுக்கு நரக பதனமே பலமாக ஸாஸ்த்ரம் சொல்லா நின்றது இறே
நம்மாழ்வார் பகவத் அவதார விசேஷம் பிரதிபத்தி தான் ஆஸ்ரித அக்ரேஸராய் பிரமாண பரதந்த்ரராய் இருக்கும் சில பாக்யாதிகர்க்கு நெஞ்சிலே ஊற்று மாறாமல் எப்போதும் நிலை நிற்கும்-யத் ஸார பூதம் தத் உபாஸி தவ்யம் -என்றும்
பஜேத் ஸார தமம் ஸாஸ்த்ரம் -என்றும்
சொல்லுகிறபடியே ஸகல சாஸ்த்ரா ஸாரார்த்தமாய்
ஸ்ரீ மதுரகவிகள் நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாச்சார்யர்களாலே உபதேச பரம்பரா ப்ராப்தமாய் –ஆத்மாவைப் நேரே வகுத்த விஷயமாய் -ஸ்வா தந்தர்யாதிகள் கலசாதே எப்போதும் காருண்ய ஏக விஷயமாய் -அதி ஸூலபமாய் -மோக்ஷ ஏக ஹேதுவாய் இருந்துள்ள சரம பர்வமான நம்மாழ்வாரையே
உபாய உபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் –என்கிறபடியே
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் பற்றி நிர்ப்பரராய் இருக்குமவர்களுக்குப் பேற்றிலே கண்ணழிவு இல்லை-ஸித்திர்ப்பவதி வா நேதி ஸம்சய அச்யுதஸேநாவிம் -ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்மநாம் -என்று
பிரதம பர்வமான ஈஸ்வரனைப் பற்றினவர்களுக்குப் பேற்றிலே சம்சயமுண்டு -சரம பர்வமான ஆச்சார்யனைப் பற்றினவர்களுக்குப் பேற்றிலே கண்ணழிவு இல்லை என்னா நின்றது இறே
குரு மூர்த்தயா ஸ்திதஸ் சாஷாத் பகவான் புருஷோத்தம-உத்தாரயதி ஸம்சாராத் தத் உபாய ப்லவேந து -என்று
அவதார விசேஷமான ஆச்சார்யனே ஸம்ஸார உத்தாரகன் என்று சாஸ்த்ரா ஸங்க்ரஹ தாத்பர்யமாகையாலே
பரம ஆச்சார்யரான நம்மாழ்வாரே ஸம்ஸார உத்தாரகர் என்னும் அர்த்தம் ஸூ வ்யக்தம் –

மற்றை யாழ்வார்கள் இவருக்கு கரணவத் பரதந்த்ராகையாலே ஏதத் அந்தர்பூதராம் அத்தனை -இவ்வாழ்வார் தாமீ அர்ச்சாவதார சமாதியாலே பூர்வமேவ கிலங்களான ஸர்வ பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குத் திருவாய் மலர்ந்து தாமே அருளிச் செய்கையாலே இதர பிரபந்த வக்தாக்களான ஆழ்வார்கள் இவருக்கு அநந்யார்ஹராய் அவயவ பூதராகக் குறையில்லை -இப்படி ஸகல இதர விலக்ஷணராய் பரமாச்சார்யரான நம்மாழ்வாரே சாஷாத் பகவத் அவதாரமே என்றும்
அவர் திருவடிகளே உபாயம் என்றும்
அவர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தமாகவும்
அவருடைய முக உல்லாசமே பரம ப்ரயோஜனமாகவும்
அவர் எழுந்து அருளி இருக்கிற இடமே ப்ராப்ய பூமியாகவும்
அவருடைய விக்ரஹ அனுபவமே உண்ணும் சோற்றில் படியே தாரகாதிகளாகவும்
பிரதிபத்தி பண்ணி விஸ்வஸித்து இருக்கும்
சரம அதிகாரி சேகரராய்த்து ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் –

இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இரே -எங்கனே என்னில்
அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்

அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்
அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னாடி மெய்மையே -என்றார்
அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –
அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்
அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்
அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றால் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்
அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –
அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்
அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –
அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –
அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்
அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –
அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்
அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்
அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –
அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –
அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்
அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –
அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –
அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் -அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –

இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து
தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்
அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்
ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –
அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –
இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்
ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்
தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்
பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –
இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய்
தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்
இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –
இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

—————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் பொன்னடி மேவுவோம் மெய்மையே-ஸ்ரீ வகுள மாலை–1937-May-June-

September 12, 2024

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவோமே

ஸாது
சந்திம் இச்சந்தி சாதவ -அன்பு பெருகும் சந்தியில் -நல்லன்பர் சாதுக்களாவார்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -இவன் அவனது திருநாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி செய்யும் நிலமே சடகோபர் தத்வம்
சடகோபன் பொன்னடி மேவினாரே சத்துக்கள் ஆவார்
ஸ்ரீ பாதுகை பெற்று மீண்ட பரதாழ்வானை பரத்வாஜர் -பேறு பெற்றீரோ -பரனை ஒன்றினீரோ -பரத்வாஜர் உசாவுகிறார்
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமான் –ஸ்ரீ வால்மீகி பகவான் புகழ்ந்தார்

ப்ரபந்ந ஐந கூடஸ்தர்
ஆத்யஸ்தன குல பதேர்
குல தனம்
குல தைவதம்
-என்று ஆர்ய ஜனங்கள் புகழ்ந்து போற்றுவதுக்கு மூலம் இவர் ஸ்ரீ ஸூக்தியே –

விண்ணுளார் போற்றித் தொழும் ஸ்ரீ வைகுந்தக் கோனுடைய திருப் பாதுகைக்கு ஸ்ரீ சட கோபன் என்று அன்றோ திரு நாமம் –
நிதி-பரன் என்பது பிரதம பர்வம் -சடகோபன் என்பது சரம பர்வம் –

தன் திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனை -அபய ப்ரதான ஸாரம்

ஸ்ரீ சடகோபன் நிற்கும் பாத பீடத்தளவும் சென்று -பரமபத ஸோபநம்

வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
மந்திரம் கொள் மறை முனிவன் -காயத்ரி கண்ட -ருஷி விஸ்வத்துக்கு மித்ரர்
அதன் பொருளை விரித்து அருளியவர் வால்மீகி கவி 24 அக்ஷரங்கள் கொண்ட -காயத்ரியை விளக்கும் ஸ்ரீ ராமாயணமும் 24 ஸ்லோகங்கள் கொண்டது
ஸரணாகதி ஸாஸ்த்ரமும் அதுவே
ஸரணாகதி தர்மத்தை விளக்கும் மறைகளுக்கு எல்லாம் காயத்ரியே தாய்
அத்தாய் மந்த்ரம் கண்ட இவரே ரிஷி
அதன் அர்த்தம் விரித்து அருளிய இவரே கவி
காயத்ரியே விஸ்வ ஜநநீ
பக்தைர் பாகவத சஹா என்றது ஆழ்வார் ஆச்சார்யர்களையே

மறைச்சிரம் மருவும் ஆன்antrumஅன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறனை அமிழ்தின் இணையடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழு மூதுவர் உலகு வாழ
நிறை யரித் திருவாய் ஓது நிதி எனும் நிலை விரித்தனமே

———

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழ் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும்.இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர் புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.

மகிழம் பூ

இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர்.

இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.

சங்க காலம்

குறிஞ்சி நிலத்து மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று வகுளம்[6]வையை ஆற்றங்கரையில் பூத்திருந்த மலர்களைப் பட்டியலிடும் பாடல் ஒன்று வகுளம் பூவையும் கூறுகிறது.சிலப்பதிகாரம் என்னும் நூலிலும் இந்த வையைக்கரை மலர்ப்பட்டியலில் வகுளம் பூ உள்ளது.காவிரிப்பூம்பட்டினத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களிலும் வகுளம் ஒன்று.

திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல் இதனை மலைநிலத்தில் புதர் புதராகப் பூக்கும் பூ என்று குறிப்பிடுகிறது.

  • வகுளம் என்பது தலையில் சூடிக்கொள்ளும் ‘உச்சிப்பூ’ என்னும் அணிகலன். இதனைச் ‘சிந்தாமணி’ எனவும் கூறுவர். பாடினிக்குப் பரிசாக சங்ககால மன்னர்கள் வழங்கிய ‘அழல் அவிர் தாமரை’யை இதனோடு ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்.தலை உச்சியில் அணிந்த இந்த அணிகலன் இக்காலத்தில் நெற்றிச்சுட்டியாக மாறியுள்ளது.

இந்தப் பூவின் சிறிய உருவம் பற்றியும், மிகுந்த மணம் பற்றியும் நீதி நூல்கள் பாடிய ஔவையார் குறிப்பிட்டுள்ளார்.

பேரிலேயே-மகிழ்”ச்சி தரும் “மகிழ”ம்பூ

பண்ணும் தமிழும் தவம் செய்தன!  பழ நான் மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன! மகிழ்மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தமை செய்த காலத்திலே! – என்று மாறனை மகிழம்பூ மாறனாகவே கம்பன் பாடுகிறான்!

மகிழம்பூவுக்கு வடமொழியில் வகுளம்-ன்னு பேரு! வகுள மாலை!
வகுளாபரணன் (வகுள+ஆபரணன்)  என்று நம் மாறனுக்கு இன்னொரு பெயர்!

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி
ஸர்வம் யதேவ நியமேந மதந் வயாநாம்
ஆத் யஸ்ய ந:குலபதேர் “வகுளா பிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்னா!

திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர் என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!”

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?

நாமம் பராங்குசனோ, நாரணனோ? – தாமம்

துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?

உளவோ பெருமான் உனக்கு?

கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற – நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம். 

மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அதிகார சங்கிரகம் –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

September 7, 2024

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————-

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவு ஒக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே யாவதரிக்கும் ஆயன் நிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–2-

சுவாமி தேசிகர் இப்பாசுரங்களை வகைப்படுத்தி அருளியது போல இன்பத்தில்,இறைஞ்சுதலில், இசையும் பேற்றில்,இகழாத பல்லுறவில், இராகமாற்றில், தன் பற்றில், வினை விலக்கில், தகவோக்கத்தில், தத்துவத்தை உணர்த்துதலில், இவைகளோடு மேற்சொன்ன அனைத்தையும் நமக்குள் உட்புகுத்தி நம்மை தகுதிப் படுத்திய தன்மை குறித்துப் பாடுகிறார் மதுரகவிகள்.

அர்த்த பஞ்சகம் எனப்படும் (1)ஆன்மாவின் இயல்பு (2)ஆண்டவனின் இயல்பு (3)ஆன்மா அடையும் பயன் (4)அப்பயனை அடைவதற்கான வழி (5)அப்பயனை அடையப் பகையாய் உள்ளவை …

இது போன்ற, தான் அறிந்த, உணர்ந்த அறிய விஷயங்களை, மனித குலத்தின் மீதான தன் கரிசனத்தால், அவர்களுக்கு உபதேசிக்க நினைத்தார் நம்மாழ்வார்..

ஒரு சில ஆசிரியர்கள் பலகாலம் மாணவர்களை அலைக்கழித்தே போதிப்பார்கள்..

இராமனுஜரை திருக்கோட்டியூர் நம்பி எனும் ஆச்சார்யன் 18 முறை நடையாய் நடக்க விட்டுத்தான் திருமந்திரத்தை அருளினார்…யாருக்கும் சொல்லக்கூடாது எனும் நிபந்தனையோடு…ஆனால் இராமனுஜரோ தன் பொருட்டான கவலை இன்றி பிறர் பொருட்டான நன்மை கருதி கோபுரம் ஏறி, திரு எட்டெழுத்து மந்திரத்தைக் கூவினார்..

தாயான சீதைக்கும் , மகனான பிரஹலாதனுக்கும். தம்பியான விபீஷணனுக்கும், இவருக்கும் [நம்மாழ்வார் ], இவரடி பணிந்தாருக்கும்[இராமானுஜர் ] மட்டுமே இவ்வாறான, மற்றவர் மீது கருணை கொள்வதே தனக்கான பெரும்பேறாகக் கருதி, தாங்களே மனமுவந்து உதவும் குணம் உள்ளதாக பெரியோர்கள் கூறுவர்.

திருக்குறள்…

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு.

….. கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள், கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர் என்கிறது…

பிறருக்கு உபதேசிப்பதால் தனக்கு யாதொரு பயனும் இல்லை என்றாலும், அதற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுத்தாலும், அறிவு மட்டுமன்றி அதை செயல்படுத்தும் திறனும் கொண்டவர் நம்மாழ்வார்.

குயில்கள் யாருக்காகவும் எதற்காகவும் தன் கூவுதலைக் கைவிடுவதில்லை.அது எப்போதும் போல அதிகாலையில் [ 3.45 am ] தன் விருப்பம் போல் எதிர் பலன் நோக்காமல் செயல்படுகிறது.

அவ்வாறான குயில்களால் ஆரவாரம் செய்யும் சோலைகளையுடைய திருநகரியிலே எழுந்தருளியிருக்கும் என் ஆழ்வாரே..

உம்முடைய சிறந்த திருவடிகளின்பால் பற்று கொள்ளவே முயற்சி செய்கின்றேன்…

என்று உருகுகிறார் மதுரகவிகள்..

திருவாய்மொழி கல்லாரை இருகால் மாடுகளாக்கி,

தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே …

….என்று முக்கூடற்பள்ளு சொல்கிறது.

பராங்குச தாசர் மதுரகவிகளைத் தியானித்துக்கொண்டு ’இன்பத்தில்’ என்ற வார்த்தையைக் கூறி முதல் பாசுரத்தை இனிய ராகத்துடன் பாடினார். 

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – 1

நாதமுனிகள்  பாடலை ஆழ்ந்து அனுபவித்தார்.  யசோதைப் பிராட்டி, உடம்பில் உறுத்தும்படி பல முடிகளுடன்,  நீளம் போதாமல் அந்தச் சிறிய தாம்புக் கயிற்றால் கண்ணன்  தன்னைக் கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட அந்த மாயக் காட்சியை மனக் கண்ணில் கண்டார். ஆனந்தக் கண்ணீர் பெருகி இந்த இன்பத்தின் சுவை என்னது ? அறுசுவை அடிசிலா ? நெய் சுவை தேறலா ? கனியின் சுவையா ? பாலின் சுவையா ? என் ஆரா அமுதமே ! பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் தருகிறது.  இந்த அமுது ஊறும் இன்பத்தைத் தரும் தென் குருகூர் நம்பியின் நாமம் மேலும் என் நாவுக்கு இன்பமாக இருக்கிறது ! கண்ணீர் அருவியாகப் பெருகி ஆனந்த ரூபமான அனுபவித்தார். 

பராங்குச தாசர் ‘இறைஞ்சுதலில்’ என்ற வார்த்தையைக் கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார். 

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே – 2

குருகூர் நம்பி, சடகோபன் என்ற திருப்பெயர்களைப் பல தடவை துதித்துப் பார்த்த போது அமுது ஊறும் என் நாவுக்கே எனது போல இன்பச் சுவையை உணர்ந்தார்.  புகல் ஒன்று இல்லாத தனக்குக் குருகூர் சடகோபனைச் சரணம் அடைந்தால்,  பெருமாளின் அடிக்கீழ் அமர்ந்து புகும் பேற்றைப் பெற்றேனே! என்று எண்ணிப் பூரிப்படைந்தார். மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே, தேவு மற்றறியேன் குருகூர் நம்பியே தஞ்சம் என்று சரணம் அடைந்து உள்ளம் உருகினார். 

பராங்குச தாசர் ‘இசையும் பேற்றில்’(1) என்ற வார்த்தையைக் கூறிவிட்டு அந்தாதியின் அடுத்த பாடலை பாடினார். 

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. 3

வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற பேறு அதனால் தேவபிரானுடையக் கரிய கோலத் திருவுருவம் காண்கிறேன். இனி ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்து உற்றேன் உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது ? இனி குருகூர் சடகோபனுக்கே தான் அடியேன் என்று உளமார ஏற்றுக்கொண்டு கைகூப்பி நின்றார். 

’இகழாத பல்லுறவில்’ என்ற வார்த்தையை உச்சரித்துவிட்டு பராங்குச தாசர் நான்காம் பாடலைப் பாடினார். 

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான்  சடகோபன் என் நம்பியே.  4

என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து அத்தா! சடகோபன் குணம் நிறைந்த என் தலைவராக ஏற்றுக்கொண்டேன். என்னை விட்டு நீங்காத பலவிதச் சம்பந்தம் பெற்றேன் என்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். 

பராங்குச தாசர் ‘இராகம் மாற்றில்’(2) என்று கூறிவிட்டு, அடுத்த பாசுரத்தை இசையுடன் பாடினார். 

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே. 5

நாதமுனிகளுக்கு அந்தப் பாடல் இன்ப வெள்ளமாக உள்ளே சென்றபோது அவர் உள்ளத்தில் ஒரு தெளிவு பிறந்தது.  ‘சாமர்த்தியம் பெற்றேன் !’ என்று கூறி.  கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பங்களான தகாத விஷயங்களில் பற்றுதலை ஒழித்து,  திருகுருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே! என்றார்.  

’தன் பற்று’ என்று கூறிவிட்டு,  பராங்குச தாசர் ஆறாம் பாடலைப் பாடினார்.  

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே. 6

நாதமுனிகளின் உள்ளத்தில் சடகோபனே எங்கும் பரவியிருந்தார். குருகூர் சடகோபன் அன்புடன் நாதமுனிகளைப் பற்றியிருக்கப் பூரிப்புடன் ‘இன்று முதல் ஏழேழு பிறவியிலும் என் ஆசாரியனான குருகூர் சடகோபன் புகழ் பாடுவேன்!  அதற்கு அருள் செய்தவரும் அவரே. என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப் இன்தமிழில் என் நாமுதல் புகுந்து என் வாய்மூலம் பாட வைத்து எக்காலத்திலும் இகழ்ச்சி இன்றி ஆதரவு செய்வார்!’ என்றார் தீர்மானமாக. 

பராங்குச தாஸர் நாதமுகளை வணங்கி ‘வினை விளக்குதல்’ என்ற சொல்லைக் கூறிவிட்டு, ஏழாம் பாடலைப் பாடினார். 

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே.  7

’காரியார் புதல்வரான மாறன் தானாகவே என்னைப் அன்புடன் பற்றியதால் தீவினைகள் தீர வழி செய்தார்! உலக மக்கள் பலருக்கு இந்த விஷயம் சென்று சேர வேண்டும் அல்லவா ? அதனால் திசை எட்டும் அறியும்படி புகழ்ந்து பேசப் போகிறேன்!’ என்றார். 

பராங்குச தாசர் ‘தகவு ஒக்கம்’(3) என்று கூறி அடுத்த பாசுரத்தைப் பாடினார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.   8

பெருமாளின் கருணை  அபிவிருத்தியை கொண்டாடும்படி அடியார்கள் இன்புறக் குருகூர் சடகோபன் வேதத்தின் பொருளை இனிய தமிழில் அருளினார். இந்தப் பூவுலகில் இந்த அருள் ஒன்று மட்டுமே மிகவும் பெரியது. வேதத்தின் சாரமான கண்ணனின் கீதை, அதன் சாரமாக அமைந்த குருகூர் நம்பியின் ஆயிரம் பாடல்கள் கிடைக்க வேண்டும் என்று சடகோபனைத் தியானித்து அருளாழி அம்மானை வேண்டிக்கொண்டார். 

’தத்துவத்தை உணர்த்துதல்’ என்று கூறிய பராங்குச தாசர் அடுத்த பாசுரத்தைப் பாடினார். 

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.   9

சடகோபனுக்கே அடிமை செய்து, அவர் திருவடிகளின் மீது ஏற்பட்ட பக்தியின் பயனாக வேதத்தின் உண்மைப் பொருள்களை அறிந்துகொண்டு நெஞ்சுள் நிலை நிறுத்தி அவனுடைய உணர்வு கொண்டுணர்ந்தே இருந்த மதுரகவிகள் போல அடியேனுக்கும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

’தன்மையாக்கில்’ என்ற வார்த்தைக்குப் பிறகுப் பத்தாவது பாசுரத்தைப் பாடினார். 

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே.  10

திருத்துவதால் எந்தப் பயன் இல்லாத போதிலும், திருத்தி ஆட்கொண்டு தன்னைப் போல் ஆக்குகிறார் பெருமாள்.  இதுவே அவருடைய சுபாவம். அந்தச் சுபாவத்தையே நமக்கும் சடகோபன் அருளுகிறார் என்று நாதமுனிகள் மனம் முழுவதும் குருகூர் சடகோபனின் திருவடிகளைத் தியானித்தார். அந்தச் சமயம் பராங்குச தாசர் கடைசி பாசுரம் 

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன்  தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.   11

என்று பாடி முடிக்க நாதமுனிகள் ஆனந்தக் கண்ணீர் மல்கப் பராங்குச தாசர் பிள்ளையின் திருவடி தொழுது பராங்குச தாசரே மதுரகவிகள் என்ற பெயருக்கு ஏற்றார் போலப் பத்துப் பாசுரங்களும் அதன் உட்பொருளையும் உங்களால் உபதேசம் பெற்றது என் பாக்கியம் என்று மேற்கூறிய பத்து வார்த்தைகளையும் நாதமுனிகள் வரிசையாகக் கூறினார். (4)

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் 

என்று கூறிவிட்டு மேலும் 

அன்பர்க்கே அவதாிக்கு மாயன் நிற்க
அரு மறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே.. 

என்று கூறினார்(5) . நாதமுனிகள் கூறிய இந்தச் செய்யுளின் பொருள் பற்றி அறிந்துகொள்ள,(9) உலக வாழ்கையில் பொருள்களின் மீது நாம் எப்படிப் பற்று வைத்துள்ளோம் என்று அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

இந்த உலகில் ஒருவன் ஏதோ ஒரு பொருளின் மீது பற்று வைத்து நாளடைவில் அப்பற்று பெருகி அளவற்றதாக மாறினால் அப்பற்று அப்பொருளுடன் நின்றுவிடாமல், அதனோடு சம்பந்தம் பெற்ற எல்லாப் பொருள்களிலும் படர்ந்து பெருகிச் செல்லும் என்பதை நாம் அனுபவத்தால் அறியலாம்.  இதே போல் பெருமாள் மீது உள்ள அளவு கடந்த பற்றின் வெளிப்பாடே நான் அவரின் பாதுகைகளை ஆதரத்துடன் தலையில் வைத்துக்கொள்வதும், அவர் சூடிக் களைந்த மாலைகளை நாம் சூட்டிக்கொள்வதும், அவர் நீராட்டிய தீர்த்தத்தைப் பருகுவதும், அவர் காலடி பட்ட பிருந்தாவனம் போன்ற இடங்களில் அம்மண்ணை எடுத்துப் பூசிக்கொள்வதும் இதற்குக் காரணம். எப்படி பெருமாள் சம்பந்தம் பெற்ற பாதுகைகள், மாலைகள், தீர்த்தம் முதலியவற்றை அன்புடன் ஏற்றுக்கொள்கிறோமோ அதே போலத் தான் பகவானின் சம்பந்தம் பெற்ற ஆசாரியர்களும், அடியார்களும். 

மதுரகவிகள் தாம் வாழ்ந்த காலத்திலேயே கண்ணன் இப்பூமியிலே அன்பர்களுக்கு அருள் புரிய மாயனாக இருந்தான். ஆனால் அவரிடம் ஈடுபடாமல் மதுரகவிகள் குருகூர் நம்பியையே(6)  தேடிக்கொண்டு அவரையே கதியாகப் பற்றித் தன் குருபக்தியை வெளிப்படுத்தி, அவர் சம்பந்தப்பட்ட பெருமாளைப் பற்றினார். 

மேற்கொண்டு நாம் இந்தக் கதையில் பயணிக்கச்  சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற இரண்டு வார்த்தைகளை நாம் நேயர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. பரம்பொருளான நாராயணனைச் சாஸ்திரம் பரபிரம்மம் என்று கூறும், சம்பிரதாயம் பெருமாள் என்று கூறும். எல்லா ஜீவன்களும் பெருமாளைப் பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறும் ,சம்பிரதாயம் ஆசாரியனைப் பற்ற வேண்டும் என்று கூறும். சாஸ்திரம் பகவான் எல்லா ஜீவராசிகளிடமும் பாரபட்சம் காண்பிக்க மாட்டான் என்று கூறும், ஆசாரியனையும், அடியார்களையும்(7) பற்றியவனிடத்தில் பெருமாளுக்கு அபிமானம் அதிகம் என்கிறது நம் வைணவ சம்பிரதாயம். 

நாதமுனிகள் பராகுச தாசரை பார்த்து “பெருமாள் அடியவர்களிடத்தே தனிப்பட்ட அன்பு காட்டக் காத்துக்கொண்டு இருக்க, தென்குருகூர் நம்பியான சடகோபன் இப்பகவானுக்கு அடிமைப்பட்ட பாகவதர்களிடத்தே பக்தி கொண்டார். 

சத்ருக்னன் பரதனையே பற்றி ராம சௌந்தரியத்தை ஜயித்தது போல் மதுரகவியார் தேவுமற்றியேன் என்று சடகோபனைத் தவிர வேறு தெய்வத்தை அறிய மாட்டேன் என்று இருந்தார்.  ஆசாரியனை அடைதல் என்ற சம்பிரதாய மதுரகவிகள் வம்சத்தில் தோன்றிய உங்களுடைய அடியவனாக அடியேனை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்க வேண்டும்” என்று வேண்டி நின்றார்.

“நாதமுனிகளே! சடகோபனின் பாசுரங்களை மீட்டுத் தரப்போகும் உங்களுக்கே நாங்கள் அடியவர்கள்.  நிச்சயம் உங்களுக்கு மதுரகவிகள், சடகோபன் அருள் பூரணமாக உண்டு. தாங்கள் தேடி வந்த பாசுரங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடியேனும் எங்கள் வசமும், இந்தப் பூவுலகமும் காத்துக்கொண்டு இருக்கிறது. சென்று வாருங்கள்!” என்று வணங்கி விடைகொடுத்து அனுப்பினார். 

சடகோபனின் அடியார் மதுரவியாரின் வம்சத்து அடியார் சம்பந்தம்  பெற்ற பின் பெருமாளின் பரிபூரண அருள் நாதமுனிகளுக்குக் கிடைக்காமல் போகுமா ?  அடியார் சம்பந்தத்துடன் சிறுத்தாம்பு என்ற சாவியுடன் புறப்பட்டார் நாதமுனிகள். 

—————-

ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”

* குருப்யஸ்தத் குருப்யஸ்ய நமோவாக மதீமகே |
வ்ருணீமகே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ ||

அர்த்தம் —— அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

* பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
வையமெலாம் மறை விளங்க வாள் வேலேந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே– ——————அதிகார ஸங்க்ரஹம்——-

அர்த்தம்– பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மிக்க குளிர்ச்சியான
தாமிரவருணி நதிக்கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குருகேசன் )
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தூய உள்ளமுடைய
குலசேகர ஆழ்வார், நம்முடைய திருப்பாணாழ்வார் , தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமழிசையில் வந்து அவதரித்த, திருமழிசைப் பிரான், உலகம் எங்கும்
வேதங்களின் ஒலி ,சப்தம் விளங்க—வாள் ஆயுதமும், வில் ஆயுதமும்
ஏந்திய திருமங்கை மன்னன் –ஆகிய ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய (அருளிய )
இனிமையான பாசுரங்களை நாம் நன்கு தெளிந்து ஓதி, அத்யயனம் செய்து,
எளிதில் பொருள் தெரிந்து கொள்ள இயலாத வேதங்கள், உபநிஷத்துக்கள் –
இவைகளின் உண்மையான பொருள்களைத் தெரியாத இடங்களில், தெளிந்து(குழப்பமே இல்லாமல், தெளிவாக ) அறிந்தோம்

செய்ய தமிழ்மாலைகள்
1.பொய்கை ஆழ்வார்—–முதல் திருவந்தாதி ——————————–100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் ——–2ம் திருவந்தாதி——————-————————–100 பாசுரங்கள்
3. பேயாழ்வார் ———-3ம் திருவந்தாதி ———————————————100 பாசுரங்கள்
4. ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்–ருக் வேத ஸாரம் —————– 100 பாசுரங்கள்
—-திருவாசிரியம் –யஜுர் வேத ஸாரம் ———- 7 பாசுரங்கள்
—பெரிய திருவந்தாதி –அதர்வண வேத ஸாரம்– 87 பாசுரங்கள்
—திருவாய்மொழி——ஸாமவேத ஸாரம் ———- 1102 பாசுரங்கள்
5. பெரியாழ்வார் —-பெரியாழ்வார் திருமொழி —————————– 473 பாசுரங்கள்
6. குலசேகரப் பெருமாள்—பெருமாள் திருமொழி ————————– 105 பாசுரங்கள்
7. திருப்பாணாழ்வார் ——அமலனாதிபிரான் ——————————— 10 பாசுரங்கள்
8. தொண்டரடிப் பொடி ஆழ்வார் ————திருமாலை —————————45 பாசுரங்கள்
———–திருப்பள்ளியெழுச்சி ——— 10 பாசுரங்கள்
9. திருமழிசை ஆழ்வார் ——————நான்முகன் திருவந்தாதி ———- 96 பாசுரங்கள்
————திருச்சந்த விருத்தம்———————— 120 பாசுரங்கள்
10. திருமங்கை மன்னன் ——————பெரிய திருமொழி ———————-1084 பாசுரங்கள்
——- திருக்குறுந்தாண்டகம் ———————- 20 பாசுரங்கள்
————திருநெடுந்தாண்டகம் ————————- 30 பாசுரங்கள்
—————திருவெழுகூற்றிருக்கை ————– 1 பாசுரம்
————–சிறிய திருமடல் —————————– 40 பாசுரங்கள்
————–பெரிய திருமடல்———————-——– 78 பாசுரங்கள்
ஆக ———————————————————————————– 3,708 பாசுரங்கள் இந்தச் செய்யத் தமிழ் மாலைகள் 3708 பாசுரங்களை,
அர்த்தங்கள் நன்கு புரியும்படி பாராயணம் (படித்து/சொல்லி ) செய்து, வேதங்களும் ,உபநிஷத்துக்களும் சொல்லும்
கடினமான அர்த்தங்களை ,நன்கு தெளிந்தோம் —என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்

* இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராக மாற்றில் தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மை யாக்கில் அன்பர்க்கே அவதரிக்கு மாயனிற்க
அரு மறைகள் தமிழ்ச்செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே .

அர்த்தம்—- ஆயன்—-அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் —பக்தர்களுக்காகவே அவதாரம் செய்பவன்
கண்ணன் , நிற்க—–ஸ்ரீ க்ருஷ்ணன் தயாராக இருக்க —– எதற்கு—-? தனது பக்தர்கள்ளுக்கு ஆனந்த ரூபமான அனுபவத்தைக் கொடுக்க
சரணம் என்று இறைஞ்சுபவரைக் காக்க புருஷார்த்தத்தை உணர்த்த இகழ்ச்சியே இல்லாத பலவித ஸம்பந்தத்தை உணர்த்த ,
உலக விஷயங்களில் வைத்துள்ள பற்றுதலை–அதாவது, தகாத விஷயங்களில் பற்றை அழிக்க, தன் விஷயத்தில் பற்றுதலை உண்டாக்க
பாபங்களை ஒழிக்க கருணையை வெளிப்படுத்த. தத்துவ விளக்கங்களைச் சொல்ல
தன்னுடைய சுபாவத்தை அருள —ஆகியஇந்தப் 10 விஷயங்களுக்காகத் தயாராக இருந்தான்.
ஆனாலும், அவரை ஏறெடுத்தும் பாராமல், குற்றமில்லாக் கவியான மதுரகவி ஆழ்வார் , அறிவதற்கு மிகக் கடினமான
வேதங்களின் பொருளைத் தமிழில் அருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளையே சரணமாகப் பற்றினார்.

இவர் துன்பற்ற மதுரகவி (குற்றமில்லா மதுரகவி )
இவருக்குத் தோன்றிய வழி— இதுவே தொல்வழி —தொன்மையான வழி/ பழமையான வழி — என்றும்,
நல்வழி–ஸம்ஸார பந்தத்திலிருந்து வெளியே வர மிக நல்ல வழி என்றும் நமக்கு காண்பித்தார் .
யாருக்கு—? எது தொன்மையான வழி என்று துணிந்து வருவார்க்கும், ஸம்ஸாரம் என்கிற காட்டிலிருந்து
விடுதலை பெறத் துணிந்தவர்கட்கும் நாயகன் கிருஷ்ணன் ,அருளுவதற்குத் தயாராக இருந்தாலும்,
மதுரகவிகள் நம்மாழ்வாரான ஆசார்யன் திருவடிகளைச் சரணம் என்று வந்து அடைந்தார்– இதை அனுஷ்டித்து நமக்கு காண்பித்தார்.

மதுரகவி ஆழ்வார் அருளியது—கண்ணிநுண் சிறுத்தாம்பு–10 பாசுரங்கள். இந்தப் 10 பாசுரங்களின் பொருளை,
இந்த ஒரே பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இப்படிப் 10 விஷயங்களாலே ஸ்ரீ நம்மாழ்வார் , பகவானைச் சரணடைந்தார்.
மதுரகவிகளோ, ஆசார்யனை—ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடைந்தார். மோக்ஷத்துக்கு உபாயம் ஆசார்யனே —ஆசார்ய பரம்பரையை அநுசந்திக்க வேணும்

பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் | ஆசார்ய வத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
என்று ஆசார்யவத்தையே ஸர்வருக்கும் மோக்ஷ காரணமென்று அறுதியிட்டார்கள் .
முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானானளவுஞ் செல்ல அநுசந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.

வ்யாக்யானம் :—–
ஸ்ம்ருதி சொல்கிறது—பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் |
ஆசார்ய வத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால் தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது

க்ஷத்ர பந்து சரிதம் :—- ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் சொல்லப்படுகிறது ——–
க்ஷத்ர பந்து ஒரு அரசன்–எப்போதும் பாபச் செயல்களையே செய்துவந்தான்.
அதனால் ராஜ்யத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்து வந்தான்.
பிறரைத் துன்புறுத்தி ,ஜீவ ஹிம்ஸை செய்வதே வழக்கமாக இருந்தது. ஒருநாள், நட்ட நடுப்பகல் உச்சி வெய்யிலில்,
வழி தவறி வந்த முனிவரைப் பார்த்து, இரங்கினான். தண்ணீர் தாகத்தால் தவித்த அவர், தண்ணீர் அருந்த அருகில் உள்ள
குளத்தில் இறங்கும் போது அதில் விழுந்துவிட, க்ஷத்ரபந்து அவரைக் காப்பாற்றி,
அவரது பசிக்குத் தாமரைக் கிழங்குகளைக் கொடுத்து, உபசரித்தான். முனிவர் , அவனது வ்ருத்தாந்தத்தைக் கேட்க,
அவன் தனது பாப கார்யங்களை எல்லாம் சொல்லித் திருந்தவும் இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்ல,
அந்த முனிவர், ”கோவிந்தா, கோவிந்தா” என்றாவது சொல்லிக் கொண்டிரு என்று புத்திமதி சொன்னார்.
க்ஷத்ர பந்துவும், அப்படியே சொல்லக் சொல்ல, பாபச் செயல்களை ஒழித்து, மோக்ஷத்துக்கான உபாயத்தைச் செய்து மோக்ஷம் அடைந்தான்.

உபதேச பரம்பரையில் உள்ளது——-
க்ஷத்ர பந்து ஒரு கெட்ட அரசன். கெட்ட நடத்தை உடையவன். உறவினர்கள்,அரசனைக் காட்டில் தள்ளி விட்டார்கள்.
அங்கும் கெட்ட வழியில் முனிவர்களைத் துன்புறுத்தினான். ஒரு நாள், அந்த வழியில் நாரதர் வந்தார்.அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
அவர், ”ஹே —அரசனே–உன்குடும்பத்தாரைக் காப்பாற்ற, நிறைய பாபச் செயல்களை செய்கிறாய் ;
இதில் ஒரு பங்கையாவது உன் குடும்பத்தார் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வார்களா — என்று கேட்டு வா ” என்று சொல்லி அனுப்பினார்.
நாரதரின் தர்சனத்தால் ,சிறிதளவு ஞானம் உண்டான க்ஷத்ர பந்து, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்த அரசன், ”எல்லோரும் மறுக்கிறார்கள்; நிறையப் பாபங்களைச் செய்திருக்கிறேன்; என்னைக் காத்தருள்க —என்று நாரதரை வேண்ட,
அவர், அவனுக்கு மோக்ஷ உபாயங்களை உபதேசித்து, அவன் மோக்ஷம் அடையுமாறு செய்தார்.

புண்டரீகனின் சரிதம் :— ஸ்ரீ பாத்மோத்தர புராணம் சொல்கிறது—— இவன் ப்ராம்மணன் —பெரிய செல்வந்தன். வேதாத்யானம் செய்தவன்.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தவன். புண்ய தீர்த்தங்களில் நீராடியவன். பக்தி யோகத்தில் இழிந்தும்,
பகவானின் அருள் கிட்டவில்லை.ஒரு சமயம் நாரதரைத் தரிசிக்க, அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்து, நல்வழிகாட்ட,
இந்த பிராம்மணன் , அஷ்டாக்ஷர மந்த்ர ஜபத்தால், பகவானின் அருளை பெற்று மோக்ஷம் அடைந்தான்.இப்படியாக,
ஆசார்யன் அருளினால்தான் மோக்ஷம் சித்திக்கும் என்று தெளிந்தது.மோக்ஷம் அடையத் தீராத ஆசை உடையவன்,
தனது ஆசார்ய பரம்பரையை ,பகவான் வரையிலும் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனே முதல் ஆசார்யன்
தம் இமம் ஸர்வ ஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் என்றும்,
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : என்றும் ,
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ என்றும், குருரஸி கதிச்ச ஸி ஜகதாம் என்றும் , சொல்லுகிறபடியே
ஸர்வ லோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் —-
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும்
2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகத விஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹித ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ,
3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளை யிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,
4.க்ருஷ்ண த்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற
வ்யாஸாதிகளை அனு ப்ரவேசித்து மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,
5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,
6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு முதலிப்பித்தும்
7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச என்கிறபடியே
அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்
8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ர ஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும்
அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்
9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ சாட்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்
10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் .

இத்தைக் கணிசித்து :
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம்–
எம்பெருமானே , எல்லா உலகங்களுக்கும் முதல் ஆசார்யன் –பரமாசார்யன் என்பதை பல உதாரணங்களிலிருந்து உணரலாம்.

தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் (மஹாபாரதம்–ஸபா பர்வம்) எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும்,
முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் ,
பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
( ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் .
வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : —-விஷ்ணு புராணம் (5–1–14) எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன்,
எனக்கும் குரு —ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் சொல்கிறது—–தனக்கென்று ,எந்த ஆசார்யனும் இல்லாத , பரமாசார்யன் –நாராயணன்.
(இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே ).
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ —–நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி,
க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம் குருரஸி கதிச்ச ஸி ஜகதாம்—-

ஸ்தோத்ர ரத்னம் (60 ) பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
ஸ்தோத்ர ரத்னம் (60 ) முழு ச்லோகம்
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் –ஒன்பதுவிதமான உறவுகள் பகவான் நாம் 1.பரமாத்மா ஜீவாத்மா 2.யஜமானன் கிங்கரர்கள் –வேலையாட்கள் 3.பிதா புத்ரன் /புத்ரி 4.ஆசார்யன் சிஷ்யன்
5.பதி பத்னி 6.போக்தா –அனுபவிப்பவன் போக்யம் –அனுபவிக்கப்படும் பொருள் 7.ரக்ஷிப்பவன் ரக்ஷிக்கப்படுபவர்
8.நியமிப்பவன் நியமிக்கப்படுபவன் 9.சேஷீ சேஷன் –சேஷபூதன் இப்படிப்பட்ட எல்லா லோகங்களுக்கும் பரமாசார்யனான எம்பெருமான்,

நமக்குச் செய்த உபாயங்களை, ஸ்வாமி தேசிகன் இப்போது சொல்கிறார்.
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும்
இவன் முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் —-

வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவுக்குத் தொடக்கத்திலே வேதங்களைக் கொடுத்தான், ,காணாமல் போன வேதங்களைக் கண்டுபிடிப்பதாக வாக்குக் கொடுத்து,
அப்படியே கண்டுபிடித்து, வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, அவன் மூலமாகவே , வேத சாஸ்த்ர ஞானத்தை உலகத்தாருக்கு வழங்கியும்,

2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : (பாரதம்–சாந்தி பர்வம் )என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹித  ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ——,
வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர்கள் ,—இவர்கள்–தானாகவே ஞானிகள், நிவ்ருத்தி தர்மத்தில் இழிபவர்கள்—–
இவர்கள் மூலமாக நன்மைகளைச் செய்தும்,

3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளை யிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,

வ்யாக்யானம் —- மற்றும், நாரதர், பராசரர், சுகப்ரம்மம் , சௌனகரிஷி இன்னும் பல மஹரிஷிகள் மூலமாக,
அத்யாத்ம ஸம்ப்ரதாயமான ஜீவாத்மா –பரமாத்ம விஷயமான உபதேச க்ரமம் அழியாதபடி செய்தும்,

4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து
மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,

வ்யாக்யானம் —–
.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ
பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? (விஷ்ணு புராணம் ) க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும்
வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே , மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் (மஹாபாரதம் —ஆதிபர்வம் )
மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும் போது, பீஷ்மர், கைகளைக் கூப்பிய வண்ணம் பேசினார்.
பகவான் நாராயணன், வ்யாஸாதி மஹரிஷிகளிடம் அநுபிரவேசித்து, சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்ம ஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும்,

5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,

வ்யாக்யானம்—- பகவான் நாராயணனே, ஹம்ஸ , மத்ஸ்ய ,ஹயக்ரீவ,நரநாராயண, கீதாசார்ய க்ருஷ்ண அவதாரங்கள் எடுத்து,
தத்வங்களையும்,ஹிதத்தையும், புருஷார்த்தத்தையும் ப்ரகாசமாக எடுத்துச் சொல்லியும்——

ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—–
இவர்கள், தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்ம யோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.
பகவான் மிகவும் கருணையுடன் ஹம்ஸ ரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவ பர—சரீர ஆத்ம பாவ ரூபத்தை உபதேசித்தார்.

மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும்.
உலகங்கள் யாவும் ,கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,
அப்போது, அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்த போது,
அவர், ஜல தர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து,
அவராலேயே, கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய் சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி, ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து,
வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்

ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது—
ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில் தங்கத் தூள்கள் ஒட்டுவதுபோல,
மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளி கொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழி காணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும், அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித் தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் ) அபஹரித்துக் கொண்டு
பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்து வைத்தனர். ப்ரஹ்மா பதறினான்; நான்கு வேதங்களின் உதவி இல்லாமல்,
ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான், பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து,
பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப, இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது,
ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார்.
அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட, பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.

நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார் இவரால்,
தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க, அப்ஸரஸ்களை அனுப்ப,
நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல, இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் .

கீதாசார்யன் —– குருக்ஷேத்ர யுத்தத்தில், அர்ஜுனனுக்கு, பகவான் அருளிய உபதேசங்கள்—18 அத்தியாயங்கள்– பகவத் கீதை
என்கிற மிக உயர்ந்த, தத்வ விளக்கம்–இதனாலும் பகவான் ஆசார்யன்

6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு மூதலிப்பித்தும்

வ்யாக்யானம்——– தான் அருளிய எல்லாவற்றையும், பீஷ்மர் முதலான ஞானிகள் மூலமாக வெளியில் பரவச் செய்தான்

7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச
என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்

வ்யாக்யானம்–விளக்கம்–
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் —-மஹாபாரதம்—சாந்தி பர்வம்– பகவான் நாராயணனே,
பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.

8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை
ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்

வ்யாக்யானம்—விளக்கம்–
பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத —-விஷ்ணு தர்மம் சொல்கிறது—
கலியுகத்தில் அந்தந்த ஜீவன்களுக்குள் புகுந்து, அச்யுதன், தனக்கு விருப்பமானத்தைச் செய்கிறான், என்பதற்கு ஏற்ப,
பராங்குச (நம்மாழ்வார் முதலாக ), பரகால ( திருமங்கை ஆழ்வார்) என்கிற பத்து அவதாரங்களை எடுத்தான்.
இப்படி, பகவான் செய்த உபகாரம் என்ன ? மேகங்கள், சமுத்ரத்திலிருந்து, நீரை உறிஞ்சி எடுத்து, அந்த நீரை,
எல்லா ஜீவன்களுக்கும் மழையாகப் பொழியுமாப்போலே ,வேதங்களின் சாரத்தை எல்லாம் எடுத்து, எல்லோருக்கும் எளிதில் புரியும்படி,
நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகத் தமிழில் அளித்தான்.

9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ ஸாக்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ் சாஸ்த்ர பாணினா ஏ என்றும்

வ்யாக்யானம்—–விளக்கம் — இப்படியாகத் தான் ஸங்கல்பித்த –ஏற்படுத்திய நல்ல பாதைக்கு, நாராயணனை, மற்ற பரிவார தெய்வங்களோடுச் சமமாக நினைப்பவர்கள்,வேத நெறிப் படையாக வாழ்க்கையை வாழாத- பாஷாண்டிகள்,நாராயணனைத் தாழ்வாக எண்ணுபவர்கள், —
இவர்களைப்போல் உள்ளவர்களால், இடைஞ்சல்–தடங்கல் ஏற்படாதிருக்க, பகவான் செய்தது என்னவெனில் ?
ஏ சாக்ஷாத் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான்
உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ ——— (ஜயாக்ய ஸம்ஹிதை )
நாராயணன், மனுஷ்ய சரீரத்தை எடுத்து, ஸம்ஸாரத்தில் மூழ்கி இருக்கிற ஜீவாத்மாக்களை, சாஸ்த்ரம் என்கிற
கையினால், கருணையுடன், தானே , கரையேற்றுகிறான்.

10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :

வ்யாக்யானம்—-விளக்கம் —– ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில்கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே ————பெரியாழ்வார் திருமொழி
அவன் பகவான், நாராயணன்—பீதாம்பரதாரி—என்னுள்ளே வந்தான்—எப்படி ? பிரமகுருவாக வந்தான் —வந்து ஹ்ருதயத்திலே புகுந்தான்—
புகுந்தவன் , என் சிரஸ்ஸில் திருவடியை வைத்து , அது அழியாத அடையாளமாக ஆயிற்று— என்று இப்படி விவரிக்கிறார்—
பகவான், ஆசார்ய ரூபமாக வந்து, ப்ரஹ்மோபதேசம் செய்கிறானாம்.
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம் —விளக்கம் ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது—-
இந்தக் கலியுகத்தில், நாராயணனையே உபாயமாகவும் உபேயமாகவும்
கொண்ட விஷ்ணு பக்தர்கள், தமிழ் பேசும் பிரதேசத்தில் ,தாமிரவருணி, வைகை,பாலாறு, காவேரி, மேற்கே கடலில் கலக்கும் மகாநதி (பெரியாறு )
இந்த நதிகளின் கரைகளில் பிறப்பார்கள். ஸ்ரீ உடையவர் வரை ஆசார்ய பரம்பரை இவ்வாசார்யர்களில் ,
ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள் . இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார்.
இவருக்கு ஸ்ரீ மதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாய பரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும்
யோக தசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் .
நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான் . ஈச்வரப்பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகம ப்ராமாண்யமும் புருஷ நிர்ணயமும் , ஆத்ம ஸித்தி–ஈச்வர ஸித்தி –ஸம்வித் ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும் ,
கீதார்த்த ஸங்க்ரஹமும் ,சதுச்லோகியுமாக எட்டு.
ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான் . என்னாச்சான் பிள்ளைகள் நால்வர்.
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்.பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண்பிள்ளைகள் இருவர்.

வ்யாக்யானம்—-விளக்கம்—- கலியுகத்தில் ,நதிதீரங்களில் ,ஆசார்யர்கள் ,அவதரிப்பார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னதை ,மேற்கோள் காட்டியவர்,
இப்போது ஆசார்யர்களைப் பற்றிக் கூறுகிறார்.
முதலில் ஸ்ரீமந் நாதமுனிகள் . இவர் ஈச்வரமுனியின் குமாரர். இவர், ந்யாயதத்வம், யோகரஹஸ்யம் என்கிற இரண்டு பொக்கிஷ க்ரந்தங்களை அருளினார்.
இவருக்கு, மதுரகவி ஆழ்வாரின் உபதேச பரம்பரையும், திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, யோகத்தில் இழிந்ததால்,
நேரிடையாகவே ஸ்ரீ நம்மாழ்வாரை ,ஆசார்யனாகப் பெரும் பாக்யத்தைப் பெற்றார்.
நாதமுனிகள் குமாரர் ஈச்வர பட்டாழ்வான். இவருடைய பிள்ளை ஆளவந்தார்.
ஸ்ரீ ஆளவந்தார் அருளியவை–ஆகமப்ரமாண்யம்,புருஷ நிர்ணயம், ஆத்ம ஸித்தி ,ஈச்வர ஸித்தி ,ஸம்வித் ஸித்தி ,
கீதார்த்த ஸங்க்ரஹம் , ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி –ஆகிய எட்டு.
பிள்ளை , சொட்டை நம்பி. சொட்டை நம்பியின் பிள்ளை எண்ணாச்சான்.இவரது பிள்ளைகள் நால்வர்.
அதில் ஒருவரான பிள்ளையப்பரின் குமாரர் தோழப்பர். இவருக்கு இரண்டு பெண்கள்.

நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள்,உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான்
வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் என்பர் .

உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர்.
அவர்களாகிறார், மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை.

மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர் .அவர்களாகிறார், ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்
திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி

வ்யாக்யானம்—விளக்கம்—
ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் என்றால், அவரது திருவடிகளைப் பற்றிய சிஷ்யர்கள் என்று பொருள்.
நாதமுனிகளை ஆச்ரயித்தவர்கள்–உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,
நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான் , வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் ஆகிய எண்மர்

உய்யக்கொண்டாரை ஆச்ரயித்தவர்கள்—-மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை ஆகிய ஐவர்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவர்கள்—-ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் ,
சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி ஆகிய ஐவர்

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர் .அவர்களாகிறார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான், சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் ,
தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர்

வ்யாக்யானம்—-விளக்கம்– நாதமுனிகள் திருப்பேரரான ஆளவந்தாரை -ஆச்ரயித்தவர்கள்—-பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி,
திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான்,சிறியாண்டான் ,
திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் ,
மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர் .

பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார், எம்பெருமானார், மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி

வ்யாக்யானம்—-விளக்கம்–
பெரியநம்பிகளை ஆச்ரயித்தவர்கள்—-எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பிகள் ஆகிய அறுவர் .
எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ரகஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்.
திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்.
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும், அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார்.
திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத் ராமாயணம் கேட்டருளினார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும் , வேதார்த்த ஸங்க்ரஹமும் , ஸ்ரீ கீதாபாஷ்யமும்
சிறிய கத்யமும், பெரிய கத்யமும் ஸ்ரீ வைகுண்ட கத்யமும் ,நித்யமும் ஆக ஒன்பது.
இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளை, தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது

வ்யாக்யானம்—–விளக்கம் —
எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரஹஸ்யார்த்தங்களையும் ,
திருமாலையாண்டானிடத்திலே திருவாய்மொழிஅர்த்தங்களையும்,கற்றார்.
ஆளவந்தாராழ்வார் பக்கலில் திருவாய்மொழியும் , ஸ்தோத்ர ரத்னம், அருளிச் செயலும், கற்றார்.
திருமலை நம்பிகளிடம் , ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்டார்.
இவர் அருளிய க்ரந்தங்கள் —— ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம் , வேதார்த்த ஸங்க்ரஹம் , கீதா பாஷ்யம்,
ஸ்ரீரங்க கத்யம் ( சிறிய கத்யம் ), ஸரணாகதி கத்யம் ( பெரிய கத்யம் ), ஸ்ரீவைகுண்ட கத்யம்,நித்யம் ஆக ஒன்பது க்ரந்தங்கள் .
எம்பெருமானாரின் சிஷ்யர்களை, அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்துகொள்ளவேண்டும்.

ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்றார்கள்
குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதவும் ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு பக்தியில் தாரதம்யத்தாலேயிறே .
பகவத் விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும்
என்னுமிடம் கட —ஜாபாலாதி ச்ருதிகளிலும்
ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம் .
இங்ஙனல்லார்க்கு இப்படி ஞான ஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞானதாரதம்யத்தாலே கண்டுகொள்வது.
மிகவும் குணாதிகரனான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு நிஷ்ட்டை குலையாது என்னுமிடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம் .
பெற்றது குணமாக உபதேசித்தால் , சிஷ்ய பாபம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம் ,
வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை மறந்து , தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு
ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது.
இப்படி, அப்ரகாசப்ரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்கிற பலங்களை
ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை,
இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை.
ஆகையால், சர்வாவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும் மகாரத்னகர்ப்பமான மாணிக்கச் செப்புப்போலே
இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற
சிஷ்யகுணபூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே , மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம் .
இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம் ஸாமான்யமாகவுமாம் மந்த்ர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரகஸ்யங்களுக்கும் ப்ரதர்சனபரம் .
தான் இந்த ரகஸ்யங்களை அநுஸந்திக்கும்போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதிபலப்ராப்தம் .
இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம் , ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்

வ்யாக்யானம்——விளக்கம்—- சேஷ ஸம்ஹிதை கூறுகிறது.
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ புத்திசாலியானவன் ,
தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம் போலப் பாதுகாக்க வேண்டும்.
இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும்.
ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும், குருவிடம் அவன் வைத்துள்ள
அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோ அதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும்
ஆசார்யபக்தி பரிவாஹத்தால் ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது. சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.
ஜாபாலை என்கிற ஸ்திரீயின் குமாரன்–ஸத்யகாமன் . இவன், ப்ரஹ்மவித்யைக் கற்க ஆசார்யரை அணுகினான்
ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து, இவனுக்கு, உபதேசித்தார்.
ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை.

ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால்
அந்தத் தகுதியில்லா சிஷ்யன் செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன.
இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து, ப்ரஹ்மா
அவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார்.
இதன் பலன் அவருக்கு, பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின.
பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார். பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.

ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,
போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர்மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்; சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு,
ஆசார்யன் உபதேசிக்கலாகாது; சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .

ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——கௌதம தர்ம ஸுத்ரம் -சொல்கிறது-
பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்து விட்டால்,அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்க வேண்டும்.

என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன் அமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

வ்யாக்யானம் —விளக்கம்
இந்த ஆத்மா, எம்பெருமானுக்கு ”சேஷன்” என்கிற ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாவைக் காப்பாற்றிய என் ஆசார்யனை
சரணம் என்று அடைந்து, அவரது ஆசார்யர்களை வரிசைக் க்ரமமாக நமஸ்கரித்து, பின்பு கருணையுடன்
ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த வள்ளலான ஸ்ரீ பாஷ்யகாரர் , பெரியநம்பி ஆசார்யன், ஆளவந்தாராகிய ஆசார்யன் ,
மணக்கால்நம்பி என்கிற ஆசார்யன், ப்ரபத்தி மார்க்கத்தை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார்,
அவரது ஆசார்யன் நாதமுனிகள், அவரது ஆசார்யன் சடகோபன் என்கிற ஸ்ரீ நம்மாழ்வார், பிறகு ஸ்ரீ விஷ்வக் ஸேனர் ,
இனிமையான அமுதம் போன்ற பெரியபிராட்டியார், இவர்களை முற்பட நமஸ்கரித்து,
எம்பெருமானின் திருவடிகளை அடைகின்றேன்

ஏதே மஹ்யம் அபோட மன்மத ஸார உன்மாதாய நாதாதய : த்ரய்யந்த ப்ரதிநந்தனீய விவித உதந்தா : ஸ்வதந்தாமிஹ |
ஸ்ரத்தாதவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா : ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவீ வைதேஸிகா தேஸிகா : ||

வ்யாக்யானம்—விளக்கம்
வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் .

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ— க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந — ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||

வ்யாக்யானம்—-விளக்கம் ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை,அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் ,
திசைகள் தோறும் உள்ள வெற்றித் தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது.அந்தத் தூண்களில் உள்ள கொடிகள்,
மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப் போலே விரட்டித் தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல்மார்க்க தர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது.

ஆரணநூல் வழிச்செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்த பிரான் என்றநகீர்த்தி
இராமாநுசமுனி இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே

வ்யாக்யானம்—-விளக்கம் வேதங்களின்உட்கருத்தை விளக்கும் நூல் ”ப்ரஹ்மஸுத்ரம் ”.
அது கூறும் உண்மையான வழியை ,தவறான வாதங்களை சொல்லிப் பலரும் அழித்தபோது,
அவற்றையெல்லாம்,வாழைத் தோப்பை நாசம் செய்யும் ஒப்பற்ற யானையைப் போல , உபகாரகர் ,
உலகுக்கு பொருத்தமான அலங்காரமான சிறந்த புகழை உடைய இராமாநுச முனி என்னும் ஸ்ரீ பாஷ்யகாரர்
இனிமையான தன்னுடைய ஸ்ரீ ஸூக்திகளால் சாய்த்தார்.ஸ்ரீ பாஷ்யகாரரின் இன்சொற்களிலும்
அவரது சிறந்த குணங்களிலும் எங்கள் மனம் முழுதும் ஈடுபட்டுள்ளது .
இனி நாங்கள், வேறு சாஸ்த்ரங்களையும்கர்மாக்களையும் ,தீயச் செயல்களையும் மனதால்கூட நினைக்கமாட்டோம் .

நீளவந்தின்று விதிவகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம்பொன்றி விழுந்துழலாது
ஆள வந்தாரென வென்று அருள்தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோம் இனி அல்வழக்கே

வ்யாக்யானம்—-விளக்கம்
நாம், நீண்ட நெடுங்காலமாக சம்ஸாரப் பிடியில் சிக்கி இருக்கிறோம்.இந்தப் பிறவிக்குப் பிறகும் கர்மவினையின் காரணமாக ,
வேறொருப் பிறவியை எடுத்து அல்லல்படாமல், நம்மைக்காக்க ,ஆளவந்தார் அவதரித்தார்.
அவர் எதிர்வாதம் செய்பவர்களை வென்று, கருணை புரிந்தார் , அத்தகு கல்யாண குணங்களை உடைய ஆளவந்தாருக்குத் தாஸரான நாம்,
இனிமேலும் ஸத்தில்லாத –அஸத்தான சாஸ்த்ரங்களைப் படிக்கமாட்டோம் .

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த
வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே

வ்யாக்யானம்—விளக்கம் திருச்ச்சின்னம் வாத்யம்போலும் ,வலம்புரிச் சங்குபோலும் நல்ல பக்திமான்களான
கீழையகத்தாழ்வான் ,மேலையகத்தாழ்வான் ஆகிய இரண்டு சிஷ்யர்களுக்கு, தாள வித்யையைச் சொல்லிக்கொடுத்து,
தமிழ்வேதமெனப் போற்றப்படும் திவ்யப்ரபந்தத்தின் இனிமையான கானத்தையும் உபதேசித்து,
மஹா உதாரகுணவள்ளலும் யோகமார்க்கத்தை உலகில் பரவச் செய்தவருமான ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளைத் தினமும் ஸேவித்து வாழ்வோம் .

நான்கு வகையான இந்தப்பூமியில் நமக்குச் சமமானவர் யார் உள்ளார்கள் ? எவருமில்லை !

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே–
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழுது -இவரே மேட்டு அழகிய சிங்கராகப் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானுக்குத் தீர்த்த பரிவட்டம் பிரசாத்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து –நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!–அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருப்பவன் இவன் ஒருவனே
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

இது முதலில் வெண்ணையூர் நாடாக இருந்தது பின்பு கம்பர் பெயரால் கம்ப நாடு ஆயிற்று என்பர்

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு -மீண்டும் மீண்டும் திருப்தி அடையும் வரை படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

நம் சடகோபனைப் பாடினையோ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ண
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே 

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே  அடியிலே காட்டி அருளினார் அன்றோ

மெய்யுணர்ந்தோர் -தவத்தால் பெற்ற அறிவுடையரான வ்யாஸ அம்பரீஷ ஸூக ஸுகனாதி –
முதலோர் இந்த்ராதிகள்

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விளக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கும் நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

குருகூர்ப் பூ –திருக்குருகூர்ப்பதியிலே ஆழ்வாரது திரு வாய் மலரிலே
பா ஒடுக்கும் -செய்யுள் இலக்கணங்களை எல்லாம் அடக்கி இருக்கும்
நா -புறச்சமயிகளின் நாவை

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு காரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்

கனமாம்-பெரும் சிறப்பாகும்
தனம் -இம்மைப் பயனுக்கும்
தவம் =மறுமைப் பயனுக்கும்
திருவாயமொழி இரண்டுக்கும் என்றபடி

ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

வாட்டமில் வனமாலை மார்வனை –

பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக் கடலிலே ஆடுவதே யாகும்

மொழி -பதம் என்று கொண்டு -கடப்படாதி சர்வ ஸப்த வாஸ்யன் ஒருவனே என்றுமாம்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

தோன்றல் உற்றார்–மதுரகவி ஆழ்வார் நாதமுனிகள் போல்வார்

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

கவிப் பா அமுதம் -பாடலாகிய பரவிய –
பாடல் சோறு -இசை கறி அமுது -சேர்த்து குவிப்பான் -சமைத்துக் குவிப்பவரும்
குமரி கொண்கன்-குமரி நாட்டுத் தலைவருமான
புவிப் பாவல-பூமியில் உள்ள வித்வான்களுக்கு
செவிப் பால்–காதுகளின் வழியே

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே.
தித்திக்கும் -இனிமையான
மூலத் தெளி யமுதே -காரணமான தெளிந்த அமுதேயாகும்-சாவா மருந்தான அமிர்தமும் இதுக்கு ஒப்பு அல்ல என்று எதிர்மறை ஏவகாரம் -உடம்பைப் பூண் கட்டிக் கொடுக்கும் அது பக்திக்கும் பனுவலுக்கும் முக்திக்ம்கு மூலமாகாதே
யுண்டு தெய்வ மென்பார்–தெய்வம் உண்டு என்பார் -ஆஸ்திகர்
பத்திக்கு மூலம் -பக்திக்கும் இதுவே காரணம்
பனுவற்கு மூலம் -வரலாற்று முறையில் பாடும் நூல்களுக்கும் மூலமாகும்
பவம் அறுப்பார் முத்திக்கு மூலம்—பிறவியைப் போக்கத் துணிந்தவர்கள் மோக்ஷம் அடைவதற்கும்
முளரிக்கை –தாமரை போன்ற கைகளும்
வாணகை –வாள் நகை -ஒளி பொருந்தின பற்களும் கொண்ட
மொய் குழலார்-நெருங்கிய கூந்தலையுடைய மாதர்கள் இடத்து ஆசையை
அத்திக்கு மூலம் -போக்குகைக்கும் மூலம்

அத்தி -கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

மறைக்கும் அலங்காரம்-சாமவேதத்துக்கு பூஷணம்
மறைந்து கிடந்த பொருள்களை அனைவரும் அறியும்படி செய்து அருளியதால் பூஷணமாகும்
பனுவல் -ஆகமம் –பனுவலின் வகைகள் -அற நூல் பொருள் நூல் காம நூல் வீட்டு நாள் போல்வன
இவை நான்குமே திருவாயமொழியில் பரக்கத் காண்பதால் தாய் என்கிறார்

கவி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ

இரு நாற் றிசைக்குத் தனித் தீபம் -இரு நான்கு எட்டுத் திக்குகளுக்கும் தீபம் -எண் திசையும் அறியும்படி இயம்பிப் பரப்பினார் அன்றோ மதுரகவியாழ்வார்

ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-படிச் சந்தம்-ஒப்புக் காண்பதற்கு உரியனவாம்

இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் -ஞானம் அனுஷ்டானங்கள் இரண்டிலும் ஸ்ரேஷ்டர்

இரு மா மரபும் செவ்வியான்-தாய் தந்தையர் இரண்டு வழியும் தொண்டர் குலமாகிய செவ்வி என்றுமாம்

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவிக் குருகை–வயல்களில் அருவி நீர் ஓடிப் பாய்கின்ற குருகூர்

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

கைத் தலத்து அமலகம் எனக் கண்டு கொள் -என்று
கையில் கனி என்னைக் கண்ணனைக் காட்டித் தந்தார் அன்றோ

ஆழ்வாரை முக்கரணங்களால் ஸ்துதிப்பவர் உள்ளத்திலே அவரது கருணா ப்ரவாஹம் பரவும் அன்றோ
மாயோனைக் கையில் கையில் கனி என்னும் படிக் காட்டித் தந்து பக்திப் பயிரை விளைவிக்கும்-

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழு மாக் கமலம்
சேற்றில் பொதி யவிழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப் பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்விழு -யாவராலும் விரும்பத்தக்க –மா -பெரிய –கமலம் -தாமரை ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்-

பொருள் -அகப்பொருள் –
திணை -உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –பாங்கற் கூட்டம்
துறை -இயல் தென்றல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

பல வேதமும்
தமிழ்ச் செஞ் சொற்களால்
மொழிந்தான்
குரு கூர்–குருகூர் பதியிலே
நண்பனே
பதுமத்து-தாமரை மலரிலே
இதழ் -சில இதழ்கள்
இலவே –நிறத்தில் முள்ளிலவ மலரேயாம்
உள் -அந்த இதழ்களுக்கு உள்ளே
முல்லை உளவே -முல்லை அரும்புகளும் சில உள்ளன
யுள் ளியம்பும் மொழியும் சிலவே-அவைகளில் இருந்து சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் சில வுண்டாம்
அவை செழுந் தேனொக்குமே
இன்னும் அத் தாமரை மலரிலே
இரண்டு சல வேல்களும்–அந்தப் பெண் எனது உயிர் ஆவாள்
காண்-நீ சென்று அதனைப் பார்
தன்னை வசப்படுத்திய அவள் முகம் தாமரை –
அவள் விழிகள் சல வேல்கள்

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத் துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

சந்தோடு அயிர் உருக்கும் பொருநல்–சந்தன மரங்களுடன் நுண் மணலையும் கொணர்ந்து கரை ஓரங்களில் ஒதுக்கித்த தள்ளும் தாமிரபரணி

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

அந்தம் இலா மறை–அநந்தாவோ வேதா -பரத்வாஜோ அத்திரி –மூன்று மலைகளைக் காட்டிக் கைப்பிடி என்ற விருத்தாந்தம்

நிலத்தேவர் –பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவுள் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

கடலை வேதமாகவும் -அமுதத்தைத் தேனாகவும் -அமரர் அடியாராகவும்- சங்கினான் நாயகனாகவும்- உவமித்த படி
இது எடுத்துக் காட்டு உவமை அணி யாகும்

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –-பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –சமயத் திருக்கை–புற மதங்களின் மாறுபாடுகளை
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
முதிர் ஞானக் கனி-ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -கற்போடு புணர்ந்த கௌவை
துறை -கலந்து உடன் வருவோர் புலம்பல் தேற்றல்

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து-அடைந்தவர் பெரும் பேற்றை -அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

மாலைக் குழலி–உகந்து அலர் சூட்டி உள் மகிழ்ந்து இருந்து புறப்பட்ட பின்பு இவர்கள் கண்டதால் இந்தப் பத பிரயோகம்
வில்லியும்-கோதண்ட பாணியான தலைவனும் -எதிரே வந்த சிம்ஹத்தைக் கொன்று அவள் அச்சம் போகும்படி வில்லில் நாண் ஏற்றிச் சென்றபடி
இது கண்டவர் கூற்று
கேட்பவள் -செவிலித்தாயார்
இடம் -முன்னிலை
காலம் -நிகழ் காலம்
மெய்ப்பாடு -பெருமிதம்
பயன் -செவிலியை மீள உரைத்தல் -ஆதலால் நீ மீள்வாயாக-என்பது எஞ்சி நின்றது –

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித் தாய் தாயாருக்குச் சொல்வது

————

பொருள் -அகப்பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -வரைவு கடாதல்
துறை -நெறி அருமை கூறி வரவு விலக்கல்

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை

மூரல் குறிஞ்சி நகை–குறிஞ்சி அரும்பு போன்ற பற்களை யுடைய தலையினது -மூரல் எறும்புக்கு ஆகு பெயர்
முடுகும் -விரைந்து வருகிற
சூரல் குறிஞ்சி நெறி-பிரப்பங்காடுகள் நெருங்கிய மலை வழியை
வாரல்–நீ வாராது நீங்குவாய்

கூற்று -தோழி கூற்று
கேட்போன் -தலைவன்
இடம் -முன்னிலை
காலம் -எதிர்காலம்
மெய்ப்பாடு -அச்சம் சார்ந்த பெருமிதம்
பயன் -வரைவு கடாதல்

இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —

மலையில் சந்தன மரமும் -கடலில் முத்துக்களும் -நிலத்தில் சிறந்த இரத்தனங்களும் -மூவகை ஹாரங்கள் பொருந்திய பாண்டிய நாடு
விலை யாரமும்-என்று இந்திரன் கொடுத்த மாலையையும் உடைய பாண்டிய நாடு
கோவா மலையாரம் கோத்த கடலாரம் தேவர் கோன் பொன்னாரம் தென்னவர் கோன் மரபினமே -சிலப்பதிகாரம்
வேலை சுட்ட சிலையார்–சமுத்திர ராஜனை சாபமானம் கொண்டு அச்ச மூட்டிய சக்ரவர்த்தி திருமகன்
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்-நாம் -தெளிவு அடைந்த மகிழ்ச்சியால் தன்மைப் பன்மை
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாடித் திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

பகவர்க்குமே–பிரிநிலை ஏவகாரம் —பகவர் -வீரம் கீர்த்தி வைராக்யம் இவற்றில் சிறந்தவர்

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பனுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

தொகை உளவாய பனுவற் கெல்லாம்–சேர்க்கப் பட்டுள்ளவன வாகிய சாஸ்திரங்களில் எல்லாம்
தொட்டால்–உற்று நோக்கினால்
பகை யுளவாம்-பரஸ்பர விரோதம் உள்ளனவாம்
வாது உளவாம் -விரோதங்களும் உள்ளனவாகும்
விழுத் தமிழ்க்கே–சிறந்த தமிழ் பாடல்களில்
வந்த வந்திடத்தே மிகை யுளவாம்–பார்த்த பார்த்த இடங்களில் எல்லாம் மேம்பாடுகளே உள்ளவை யாகின்றன –

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே –26-

மெய் உற வந்து அழுப்பாது ஒழிமின்–மெய்யாகவே எங்களை வந்து கிட்டி அப்பால் நீங்கி விடுங்கள்
ஊர்ந்து வருகிற சங்குகளை உழுது வருகிற கொழுவானது –கொழு -கலப்பைப் படை வாள் நுனியில் தைக்கும் இரும்பு
வயிற்றில் குத்தித் தள்ளுவது போல்
அடர்ந்து வரும் வினைகளை ஆழ்வார் கருணை சென்று அழிக்கும் என்பது தொகை மொழியின் கருத்து
இள நாகு –மீமிசைச்சொல்
கொழுந்து –உவமை ஆகு பெயர் –ஆயர் குலக் கொழுந்து அன்றோ

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம்  இல்லை –இனி எமக்கு ஏது பிறவித் துயர்

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்தித் தலை மகள் ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

முகையு மெல்லாம்–அரும்புகளும் மற்றுள்ள மலர்க் காய்களும்
கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்–மிகக் கொய்யும்படியாக மகிழ மரத்தின் கீழ் சென்று
குருகூர் அறையில்–குருகூர் என்று யாரேனும் சொன்னால்
கருத் துண்டு–நினைவு யுண்டாய் இருக்கிறது
இளங் கொடிக்கே–காமத்துக்கு ஆற்றாதவள்
கெட்டேன்–தோழி செய்யும் உபசாரங்கள் எதுவுமே இவள் ஆற்றாமையைக் குறைக்க பயன் பெறவில்லையே

தோழி செய்யும் உபசாரமாவது —
மலர் அணையிலும் சந்திரகாந்தச் சிலையிலும் படுக்கச் செய்தலும்
கொங்கைகளிலே தளிர்களையும் சந்தனத்தையும் பிறவற்றையும் அப்புதலும்
பன்னீர் தூவுதல் போன்றவை

இதில் கிளைவித் தலைவனது இயல் பெயரைக் கூறினமையால் அகப் பொருள் ஆகாமல் அகப் புறப் பொருள் ஆகிறது
கையற்றுப் புலம்புதலால் கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை யாயிற்று

தலைவன் வருவதற்கு அடையாளமாக முன்னால் மாலையை வர விடுக்க வில்லையே என்று வருந்திய
தலைவியின் வருத்தம் கண்ட தோழி புலம்பினாள் என்பதே துறையின் கருத்து –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

முடி எடுத்துக் கொண்ட –பக்தி மேலிட்டு தலையிலே அஞ்சலி செய்து கொண்ட-
அந்தணர்–அழகிய தண்மை யுடைய எல்லா உயிர்களிடமும் அன்பு பொருந்திய மேலோர்களுடைய
ஆரணத்தின் படி எடுத்துக் கொண்ட மாறன்–நான்கு வேதங்களையும் நான்கு திவ்ய ப்ரபந்தங்களாக தமிழ் செய்த மாறன் என்றபடி

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ்நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்

வில்லன் -கோதண்ட பாணியான சக்ரவர்த்தி திருமகன்
அவன் தாள் இணைக் கீழ்–தன் முடியால்–அவனது திருவடித் தாமரைகளைத் தலையாலே வணங்கி

எப் பொருளும்-முதல் கடவுளாகிய மாயோன் நிலையும் -அவனை அடையும் நெறியும் -அடைவதற்கு உரிய உயிர்களின் நிலையும்
அடைவதற்கு உண்டாகும் விரோதிகள் நிலையும் -அடைவதால் வரும் பேறும்

திருச் சங்கணித்துறைக்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. –30–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர்-நெற் போரில் நாரை முதலிய பறவைகள் உறங்கும்
தாம் கவலை அற்று அந்தமில் பேர் இன்பம் பெற்று நித்ய வாஸம் செய்யப் போவதற்கு இந்த உவமை
வழுதி நாட்டில்–பாண்டிய நாட்டில் -கொடை யுடையவனுக்கும் பெயர் -தவறால் மோக்ஷ இன்பம் அளிப்பவர் என்பதால் இப் பெயரால் குறிக்கிறார்
ஆளும் புகுதற்கும் -உம்மைத் தொகைகள் -இறந்து தழுவிய எச்சப் பொருள்கள்

பாரதந்தர்ய ஞான சித்தியை –காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய்யும் ஐயன்  தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. -31-

புலமை செய்யும் ஐயன்–தன்னை அடைந்தவர்களுக்கு உபதேஸித்து அருளும் தலைவர்-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஐயன் -எல்லாரிலும் மேலானவன் என்றபடி –
மெய்யும் மெய்யாது –தத்வத் பொருள்கள் எல்லாம் உண்மையாக விளங்கிற்று
பொய்யும் பொய்யாது –தார புத்ர தனாதி ஏஷணாத் த்ரவ்யங்களான -பொய்ப் பொருள்களும் பொய்யாகவே யாதாத்ம்யமாகவே விளங்கிற்று
வேறு படுத்து–இங்கனம் வேறுபடுத்தி பகுத்துக் காட்டி
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது–பிழைப்பதற்கு உரிய –பரம பதத்தை நாடும் வெளியாகிய -உண்மையான தந்திரமும் வந்து பொருந்திற்று
கொய்தற்கு ஏற்ப வினையைப் பகை என்னாமையால் இது ஏக தேச உருவக அணி

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிரசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் -உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக் குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

பல் அலங்காரப் பொருளும்-பலவகைப்பட்ட அணி இலக்கணப் பகுதிகளும் –உவமை முதலிய அணியியல் பொருந்திய பொருள் இலக்கணம் என்றுமாம்
தேவரையே–பூ ஸூரர்களாலும் வணங்கப்படுபவர் அன்றோ
சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்-பஞ்ச லக்ஷணங்களும் படித்து உழல்கின்ற புலவர்களே
திவ்ய தேசத்தை மட்டுமே சிந்திக்க முக்தியே ஸித்திக்குமே
ஆட் செய்யக் கிட்டா விடுனும் ஆழ்வாரது அடியார்களைத் தரிசித்த மாத்திரத்தாலேயே முக்தி ஸித்துக்குமே

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -கந்தருவத்தின் நழுவிய பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை பாங்கி செவிலி யர்க்கு அறத்தொடு நிற்றல்

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
ஏ வரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

ஏ வரை ஏறி மொழிகின்ற போது –பெருமை மிக்க நம் குறிச்சியில் வந்து சொல்லுகிற காலத்தில்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் –விஸ்லேஷத்தால் அணிகள் அணியாமல் மலர்கள் மட்டும் சூடப் பெற்ற கூந்தலை யுடைய தலைவியது மனத்தில் -இத்தால்
தெய்வத்தால் தீண்டப் பெற்றவள் அல்லள் -தெய்வம் தீண்டினால் பூவைச் சூடும் அறிவு பெறாள் அன்றோ

தலைவியின் அபிப்ராயம் அறிந்த தோழி தாய்மாற்கு அறிவித்தல் துரையின் கருத்து

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

புறச் சமயத்தார் நூல்கள் மலட்டுப் பசு போல் பயன் கூடாதது மட்டும் அன்றி படித்தவர்களுக்கு நரகத்தையும் கொடுக்கும் –
இப் பாடல் உருவக அணி

————-

பொருள் -புறப் பொருள்
திணை -பெரும் திணை
கிளவி -இரு பாலில் பெண்பால் கூற்று
துறை -தலைவி மடலூரத் தோழி சாற்றுதல்

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

குருகூர் என்னும் ஆறு அறியாப் பைதலைக் –குருகூர் என்று சொல்வதற்கும் தெரியாத என் தலை மகளை
கோகு உகட்டிட்டு –தன் தோள்களைத் தட்டிக் கொண்டு
ஏட்டில் -பனை மடலாகிய குதிரையில்
ஏற்றிய பண்பனையே–ஏறும்படி செய்த இயல்புடைய தலைவனை -நம்மாழ்வாரை
பைதல் –ஆண்பால் சிறுவனுக்கும் துன்பத்துக்கு பெயர் -தலைவி பால் அன்பு மிகுதியால் பெண் பாலை ஆண்பாலாக பைதல் என்கிறாள்

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தன
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

இத்தால் பண்ணும் இன்றியமையாதது என்றும் காட்டப்படுகிறது

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று

மூர்த்தத்தினை–உயிர் நிலையினையும்
பாரதத்தைப் பணித்தானும்–கீதை அடங்கிய மஹா பாரதத்தை வெளியிட்டு அருளிய -வ்யாஸ பகவானும்
உயிர் நிலை உலக நிலை ப்ரஹ்ம நிலை ஆகிய தத்வ த்ரயங்களையும் ப்ரஹ்ம ஸூத்ர முகேந வெளியிட்டு அருளிய வியாஸ பகவானும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற திருவாய் மொழியை யுடைய
வேதம் மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அனைத்தும் வெளியிட்ட பொருள்களை வியக்தமாக வெளியிட்டு அருளிய ஆழ்வார்
மஹா உபகாரகராய் உலகுக்கு நன்மை செய்து அருளியவர் என்றதாயிற்று –

நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பரி சுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

———–

பொருள் -அகப்பொருள்
திணை –பாலை
கிளவி -பொருள் வயிற் பிரிவு
துறை -நெஞ்சோடு மறுத்தல்

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

நெஞ்சமே
குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள்–தலைவியின்
கண்ணின் கடை திறந்து–கடைக் கண்ணைத் திறந்து கொண்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
வெளி பரந்து -வெளியில் பரவி
குருளைச் சுமந்து –காட்டில் விலங்கின் குட்டிகளை அடித்துக் கொண்டு
ஓட் டரும் –ஓடி வருகின்ற -ஓட்டம் தரும் என்பதின் விகாரம் –
கொள்ளை வெள்ளம்–மிகுதியான கண்ணீர் வெள்ளமானது
உருளைச் –சக்கரங்களை யுடைய
சுடர் மணித் தேரை -இரத்தினங்கள் பிரகாசிக்கின்ற என்னுடைய தேரை
வந்து உதைக்கின்றதே–வந்து தடுக்கின்றதே
அந்தோ –ஐயோ
பொருளைச் சுவை யென்று –பொருளை சிறப்புடையது என்று கொண்டு
போவ தெங்கே –எப்படி நான் போகலாகும்

ஆழ்வார் அருளை சுமந்தவளாது கண்ணீர் வெள்ளம் தடுக்க
அதற்குத் தப்பி நாம் எவ்வாறு பொருளை சன்பாதிக்கப் போவோம் என்று
நெஞ்சோடு கூறி செல்வது தவிர்த்தான்

பிரிவாதலால் பாலை யாயிற்று
மெய்ப்பாடு -அசைவு பற்றி பெருமிதம்
பயன் -நெஞ்சோடு கூறி ஆற்றுதல்

———

பொருள் -அகப்பொருள்
திணை -குறிஞ்சி
கிளவி -இருவருமுள வழி யவள் வரவு ஊர்தல்
துறை -ஆடிடம் புகுதல்

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-இம்மாதின்

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் –தோன்றி மார்பில் அடி பரந்து பெருத்தன
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் –செவ்விய மின்னல் போன்ற இடைக்கு நிலை நிற்கக்கூடிய
சிக்கனவு உண்டோ -அக் கொங்கைகளைத் தாங்கும் வலிமை யுண்டோ -இல்லை என்றவாறு
என்றால்-கொங்கைப் பெருமனும் இடையின் துவட்சியும் இப்படி என்றால்

கொந்து அடிக் கொண்ட குழலும் -பூம் கொத்துக்கள் சூடப்பெற்ற தலை மயிரும்
கலையும் -இடையில் கட்டிய சேலையும்
குலைந்தலைய–நிலை குலைந்து சொர
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது -இவள் பந்து அடிக்கும் போதெல்லாம் என் மனம் துடிக்கின்றது

மெய்ப்பாடு -உவகை
பயன் -தலை மகளைச் சார்தல்

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை-சடவாயுவைக் கோபித்தவர் அன்றோ

கன வாயினவும்கனவு ஸ்வப்ன தசையையும் ஆயினவும் -என்று முன்பும் பின்பும் உள்ள அவஸ்தைகளையும்
ஆயவையும் -துர்யாதீதி அவஸ்தைகளையும் -இவற்றின் உட்பகுதிகள் பலவாதலால் பன்மைப் பத பிரயோகம்
வீசிய -கடந்த
வினவா துணர்ந்த விரகன் -மயர்வற மதிநலம் அருள பெற்றவர் அன்றோ

துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -தூதில் பிரிவு
துறை –காமக் கிழத்தி காதல் நிலை கண்டு தாமக் குழலி பாங்கி தளர்தல்

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் –வளைந்த சங்கு பெற்ற முத்தும்
சினையும் –அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க -வேறுபாடு தோன்றாமல் கலந்து இருக்க
அவற்றை ஈன்ற
வரி வளையும் –கோடுகளையுடைய சங்கும்
அன்னமும் -அன்னப் பறவையும்
முறை செறுத்து –முறையே கோபித்து
தம்மிலே –தங்களுக்குள்ளே
வழக்காட –விவகாரம் பேச
அப்பொழுது
வலம் புரிவளை –வலம் புரிச் சங்கானது
யூடறுக்கும் -அவ்விரண்டின் நடுவிலே சென்று அந்த வழக்கைத் தீர்த்து விடுகிற
குருகூர் எம் புரவலனே-எமது இறைவனான ஆழ்வார்
அரிவளை -வண்டுகள் வளைத்து மொய்க்கப் பெற்ற
பொன் மகிழ் -பொன் போன்ற தமது மகிழம்பூ மாலையை
ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து–மாலைக் காலத்தில் வந்து ஆராய்ந்து அணிந்த ஆபரணங்களை யுடைய தலைவிக்குக் கொடுத்து அருளுவாரோ

இரங்குதலால் திணை நெய்தல் ஆயிற்று

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம் புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –

இச் சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –

ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –

சிப்பி உலகோர் –அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

பொருள் -அகப்பொருள்
திணை -நெய்தல்
கிளவி –ஒரு வழித் தணத்தல்
துறை -சென்றோன் நீடலிக் காமம் மிக்க கழி படர் கிளவி

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கரை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

எம் முறு பிறவித் துரை –எம்முடைய மிக்க விரைந்து போற்றுகிற பிறவிகளை
துடைத்து ஆட் கொண்ட தொண்டர் பிரான்–போக்கி அடிமை கொண்டு அருளிய அடியார் ஜன கூடஸ்தரான ஆழ்வாருக்கு உரிய
துறை நீர்ப் பொருநை கரை துடைக்கும் கடலே –கரையை மோதுகின்ற ஸமுத்ரமே
புரை துடைத்துப் –எனக்குள்ள காமமாகிய துன்பத்தைப் போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் –தாம் சொல்லும் வார்த்தைகளில் பொய்யில்லாதபடி போக்கி
பிறர் புகலும்-அயலார் கூறுகின்ற
உரை துடைத்து -பழிச் சொற்களுக்கும் இடம் இல்லாதபடி போக்கி
அங்குள்ள –புன்னை மரச் சோலையாகிய அவ்விடத்திலே யாம் கட்டியுள்ள
வூசல் –அறுந்து போன கொடி ஊஞ்சலை
துடைத்த-மீண்டும் கட்டி அதில் உள்ள வருத்தத்தைப் போக்கினை
துடையேல் அன்பர் கால் சுவடே.-தேர்க்கால் சென்ற வழியை அளித்து விடாதே கொள்

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக் கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

இரங்குதலால் -நெய்தல் திணை யாயிற்று
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் –

—————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -நெய்தல்
கிளவி -ஒரு சார் பகற்ப குறி
துறை –பாங்கி புலம்பல்

செவிலித் தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்
படர் அந்தி வானம் இருள்கின்றதே
இரண்டு கவடிறக் –தலையில் கதையாய் யுள்ள இரண்டு கட்டுத் தறிகளையும் ஓடியும்படியாக
உட்பகை புறப்பகை யாகிய இரண்டு வஞ்சனையும் அழி பட என்னவுமாம் –
கட்டிய பாசத் தளைக்–கட்டி இருக்கும் அன்பாகிய சங்கிலிகளை
கண் பரிந்து–அறுத்து எறிந்து
தொடர் ஆசைக் களிற்றைத் -தன்னைத் தொடர்ந்த ஆசையாகிய யானையை
சுவடிறக்கத்–அடிச்சுவடு தெரியாமல் ஓடிப்போம் படி
தொடர்ந்து -பின் தொடர்ந்து வெருட்டி
சங்கக் குவடிறக் –தமிழ்ச் சங்கமாகிய மலையானது சிதறும்படி
குத்திய –குத்திப் பெயர்த்த
மாறப் பெயர்க் –மாறன் என்னும் பெயருடைய
கொலை யானை –கொலை செய்ய வல்ல யானையானது -பொய்ச்சமயங்களை அழித்ததனால் கொலை யானை
இங்கு முற்று உருவகம்
இன்று
இவடிறத்து ஒன்றும் -இவள் நிமித்தமாக வருமோ

இரங்குதலால் -திணை -நெய்தலாகும்

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
வரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப் புலவர்களை வென்று ஆட் கொண்டாரே

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து ––நான்முகன் -81-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளைப் போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பிறர் பால் வெறும் பாக் கிளத்தி மெலிகின்ற என்னை -அந்நியர் இடத்தில் பயன் அற்ற பாடல்களை பாடி தளர்கின்றேனும்
இம்மைப்பயன் பெறவே இவை ஆகவே வெறும் பா அன்றோ இவை
அமரர்க்கும் ஏற விட்டான்–தேவர்களுக்கும் மேலாகச் செய்து அருளி விட்டார்
ஆகையால்
பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே–ஒருவர் பெறக்கூடிய செல்வம் உள்ள காலத்தில் -அதற்கு ஒரு கெடுதியும் உண்டாகுமோ
ஆகாது என்றபடி
இந்த முதல் அடி வேற்றுப் பொருள் வைப்பு அணி

காமம் வெகுளி மயக்கம் –முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

யுள்ளும் சுற்றும் இருகூர் வினையும் அறுத்து-உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கிற மிகுந்த புண்ய பாப ரூபமாகிய இரண்டையும் போக்கி
இறப் பார்க்கும் இயற்கை–அவைகள் அழியும்படி யாகப் பார்க்கின்ற இயற்கையானது

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலையால் வந்த வருத்தம் உரைத்தல்

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து–பகைமை கொள்ளாத அன்றில் பிறையையும் பகைமை ஆக்கி

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

நித்ய விபூதியைக் கொடுக்கும் என்பதால்-இன்னமுதே
ஏறே-இன்னமுதே-ஆணிப் பொன்னே -இம் மூன்றும் உவமை ஆகு பெயர்
தகும்–இது தொழில் பெயராய்த் தேற்றப் பொருள் பட்டு நிற்கும் சொல்

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை(ஐ) யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

தென்னை(ஐ) யுரைக்கும் –தென் திசைக்கண்ண தாகிய அழகிய தமிழ் மொழிக்கும் –
ஐ உரை -சிறந்த பொருள் இலக்கணத்தைத் தன்னிடத்தில் கொண்டு இருத்தலால் -ஐ உரை -என்கிறார்
இயற்கும் –அதன் பக்தியாகிய இலக்கணத்துக்கும்
இசைக்கும் –இசைத் தமிழுக்கும்
சிகாமணியே -ஸிரோ ரத்னம் போன்றவரே

இதில் முதல் அடி எடுத்துக்காட்டு உவமை அணி

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மறம் -பல் வரிக்கூத்தில் ஓன்று
மறவரின் மகளை விரும்பி விட்ட அரசனது தூதனை நோக்கிக் கடிந்து மறவர் இயல்பு தோன்றக் கூறுவது

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

ஆசு -ஆழ்வாருக்கு அடிமை என்று அறிந்தும் பெண் கேட்க வந்த குற்றத்தை ஆசு என்கிறார்
கொள்ளும் கொள்ளும் -வெகுளி பற்றி வந்த அடுக்கு
பாவை -உவமை ஆகு பெயர்
இது கொல்லி மலையில் தேவரும் முனிவரும் சேர்ந்து உறையும் காலத்து அங்கு வந்து துன்புறுத்தும் அசுரரை மயக்க
வேண்டித் தேவ தச்சனால் யந்திரத்தோடு செய்து வைத்து இருந்த ஒரு பெண் வடிவம்
இது அசுரரைக் கண்டால் சிரித்து மயக்கிக் கொல்லும்

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பாவைத்-எங்கும் பரவி நிற்கும் பொருள் தோன்ற –பா –என்கிறார்
போதா அமுதை-கடலில் இருந்து வந்த உப்புச் சாற்றில் வியாவ்ருத்தி -கொள்ளக் கொள்ளக் கோதிலா இன்னமுதம் அன்றோ

கோவைப் பணித்த எம் கோவை–காம தேனுவை ஒத்த எங்கள் ஸ்வாமியாக ஆழ்வார்

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

இதன் கடையடி எடுத்துக்காட்டு உவமை அணி

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குகப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே--இங்கு ஸ்துதித்தது அன்றியும் என்று இறந்தது தழுவிய எச்சப் பொருளது

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -மாலை பெறாமல் வருந்துவது உரைத்தல்

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் என்பதை யடக்கி பசியட நிற்றல் என்ற மெய்ப்பாடு தோன்றி நின்றது

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -நம்மாழ்வார் வாக்கில் வந்த உபநிஷத்துக்களின் ஆழ்ந்த பொருள்கள்

நியாயம் நெறியை–தர்க்க நிர்ணயத்தாலும் பரத்வ நிர்ணயம் செய்து அருளியவர் அன்றோ
மதுரகவியை-இனிமையான திவ்ய பிரபந்தங்கள் -வேதம் போல் இல்லாமல் சர்வாதிகாரம்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம்பிரான்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

கோடல்–வெண் காந்தள் -கார்த்திகை மாதத்தில் பூக்கும் மணம் இல்லாத பூ
இதே போல் பிறர் கவிகளும் சொல் சுவை பொருள் சுவை இல்லாமல் பயன் அற்றதாய் விடும்

தெய்வக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட –வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

கெண்டை மீன்கள் துள்ளி தேன் கூட்டு உடைந்து வயல்களில் தேன் பெருகுவது போல்
குருகூர் மஹிமையைக் கூறுவதால் நம்மாழ்வார் கருணையாகிய தேன் வெள்ளப் ப்ரவாஹம்
உங்களுக்கு நிரம்ப உண்டாகிப் பரவும் என்பது தொகை மொழியின் கருத்து

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

கறங்கன்ன வாழ்க்கையை-காற்றாடி போன்ற பிறவிச் சூழலை

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
1-ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
2-பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
3-ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
4-வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை -பெரும் திணை
துறை -வேலமர் கண்ணி மாலை யம் பொழுது கண்டு ஏங்கியது அறிந்த பாங்கி புலம்பல்

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார வெம் பாலிற் –கொடிய நஞ்சு போன்ற இருட்டையுடைய இராக்காலமாகிய பகுதியிலே
வெம்மையை மெல்லியலுக்கு இடர் என்பதுடன் கூட்டிப்பொருள்
மெல்லியல் -காமன் கொடுமைக்கு ஆற்றாதாள்
பராங்குசர் -துன்பம் செய்யும் காமனை அடக்க வல்லார் என்றவாறு

—————

பொருள் -அகப் பொருள்
திணை –பாலைத் திணை
கிளவி –உடன் போக்கு -உட்பகுதி -தேற்றல்
துறை -தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுகினமை சாற்றல்

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் -பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

இது உருவக அணி

இடையில் எதிர்த்த சிம்மம் போன்றவற்றை அம்பால் எறிந்ததனை தலைவி அறிந்தவள் ஆகையால்
அம்பின் வீழ்ச்சியைக் குறித்து சரவாதம் என்கிறான்
தடம் பணை அருகில் இருப்பதாகக் கொண்டு இனி மருத நிலமே என்கிறான்

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை –பா கொத்த சொல்லி பைந்தொடை பெறாள் -மேகத்தைத் தூது போக விடுத்தல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

பனி தோய்ந்திடு மேகங்களே–விடாமல் மழை பெய்வதை மேற்கொண்டுள்ள ஆகாசத்தில் செல்லும் மேகங்களே
பனி -குளிர்ச்சியுமாம்
எனது ஆற்றாமையை ஆழ்வாருக்கு அறிவிப்பீர்
நீங்கள் இங்கே பொழிவதனால் பயனில்லை
அவருடைய மலையில் ஏறி மழை பெய்யத் தொடங்கினால் அவர் நும்மைக் கண்ட வுடன் விரஹ மேலீட்டால் தாமே என்னிடம் வந்து அணைவார்

விரஹ தாபத்தால் மேகக் கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக் களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் –அகப் பொருள்
திணை –முல்லை
கிளவி -வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்
துறை -தலைவன் மேகம் தன்னொடும் சோகம் கொண்டு அவன் சொல்லல்

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –வழியிலே கண்டு வார்த்தை சொன்னேன் என்று நினைக்காமல்
நீங்கள்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை –திருவாய் மொழியை-பாகம் -சுவையை யுடைய திருவாய் மொழிக்குப் பண்பு ஆகு பெயர்
ஆற்றும் சொல்லாளைக் -ஒத்து இருக்கும் சொல்லை யுடைய எனது தலைவியை-அவள் சொற்களைக் கேட்டாலே உங்களுக்கு பெரும் பேறு கிட்டுமே
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை -கண்ணில் நின்று உண்டாக்கிய நீர்த்துளி மிக்குள்ள என் பால் எழுந்த காம விரஹத்தை
ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே -அவள் மனதில் உண்டாக்கிய சோர்வை சாந்தப் படுத்திக் கொண்டு பிற்பாடு
துளித் தூவத் தொடங்குகவே–மழை பெய்ய ஆரம்பிப்பீர்களாக -பெரியதாக மழை பெய்வீர்களாகில் அவளுக்கு குளிரத் தொடங்கும் –

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி– ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம்

பொதியம் தருநதி–பொதிகை மலையில் அகஸ்தியர் இடம் இருந்து பிறந்த தமிழ் இலக்கணம் உலகை வாழ்விப்பது போல்
தாமிரபரணி நதியும் பொதிகை மலையில் இருந்து பிறந்து வாழ்விக்கிறது
பூ ஸுரர் -வேதப்பொருளைக் கண்டு மகிழ்பவர் அந்தணர் ஆதலால் அவரே தனது பெருமையை அறிய வல்லவர் என்றவாறு

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

ஓயாமல் பருக வேண்டியதனால் முகந்து கொடு நிற்றும் என்கிறார்
விற்றல் -அடியாருக்கு அடியாராக்கி அருளுதல்
விலை கொள்ளுதல் -அவ்வடியாரையும் தம் அடியார் ஆக்குதல்
திருவாய் மொழியை வெள்ளமாக்கி அதற்கு ஏற்ப முழுவதும் உருவகம் செய்தலால் முற்று உருவக அணி

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம்

————–

பொருள் –அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் குறிஞ்சி
கிளவி –இடத்தலைப்பாடு
துறை -கண் நயந்து உரைத்தல்

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

தலையின் அவயவங்கள் மலர் போல் தோன்றுவதால் -மலர் நிறைந்த கொம்பு என்கிறான்
கடலினும் பெரிய கண்கள் -கம்ப ராமாயணத்தில் உண்டே
இத்துறை முழுவதும் ஐய உவமை
மெய்ப்பாடு -பெருமிதம் -உவகையுமாம்
பயன் -கண் சிறப்பு உரைத்தல் ஹேதுவாக தலைவியைச் சார்தல்

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

திருக்கு அறும் –மாறுபாடுகள் நீங்கி விடும்
வாரும் என்பதற்கு நீங்கள் என்பதைத் தோன்றா எழுவாயாக்கிக் கொள்ள வேண்டும்
சொன்னேன் -தெளிவினால் வந்த கால வழு வமைதி

————–

பொருள் –அகப் பொருள்
திணை –மருதம்
கிளவி –பரத்தையில் பிரிவு
துறை –காமக்கிழத்தி மைந்தனை எடுத்தல்

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

கூற்று -காமக் கிழத்தி கூற்று
பயன் -காமக் கிழத்தி மகிழ்தல்

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்துபாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால்–அம்சத்தினால்
கோவகத்தாற் கன்றி—-மேலான இடத்தை யுடையவர் -நித்ய ஸூரியான ஆழ்வாருக்கு அல்லாமல்

ஆழ்வார் 11 அவதாரம் –தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

இயலிசைக்கே–இலக்கணமும் பண்ணும் அமைந்த திவ்ய ப்ரபந்தங்களாலே —இயல் இசை -சினை ஆகுபெயர் –
மெய் கண்டு–ஆசிரியருக்கு கைங்கர்யங்கள் செய்து அவர் மூலம் திவ்ய ப்ரபந்தங்களில் தத்வ அர்த்தங்களையும் யதாவாகத் தெரிந்து கொண்டு

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –கைக்கிளை
துறை -காட்சி ஆண்பால் கூற்று

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

தனுவைப் பதித்து –இரண்டு விற்களை அமைத்து
முத்தங்குயிற்றி–முத்துக்களை பதித்து
கயலைக் கிடத்தி–இரண்டு கயல் மீன்களை வைத்து

களங்கம் துடைத்த மதி– முகத்துக்கும்
தனு -புருவத்துக்கும்
முத்துக்கள் -பற்களுக்கும்
கயல்கள் -கண்களுக்கும்
உவமை யாதலால் இவை அனைத்தும் உவமை ஆகு பெயர்கள்

பயன் -வியப்பினால் உள்ள மகிழ்ச்சி

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்–இரும்புகள் உருக்குகின்ற உருக்குக் கிட்டானைக் காட்டிலும் வலிய நெஞ்சு உடையவரும்
ஓடைப் பழனத்திலும்–ஓடையாகிய பழனம் என்று கொண்டு இரு பெயர் ஒட்டு -நீண்ட வயல் என்ற பொருள் என்றுமாம்
இட்டத்திலும்–கருத்துக்களைச் சொல்லும் இடத்திலும்
பட்டத்திலும்-பட்டக் கால்களிலும் -தண்ணீர் பெருகும் காலத்தில் மட்டுமே ஏறிப் பாய்கிற மேட்டு நிலம்
ஏற்றத் தாழ்வு இல்லாமல் மீன்கள் பாய்தல் போல் ஆழ்வார் குண விசேஷத்தால் அறிந்தவரும் அறியாதவரும் கொடிய நெஞ்சுடையவரும் உருகுவார்கள் அன்றோ

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வலிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –பெரிய குளிர்ந்த மகிழ மலரின் மணம் விரும்பி உறைகின்ற
தண் தெரியல் பெருமான் –குளிர்ந்த மாலையுடைய ஆழ்வாரது
செய்யுள் மா மணியின் கணம் –பாடல்களாகிய இரத்தினைக் கூட்டத்தை
வேண்டும் என்றறிவாரைக் –கற்க வேண்டும் என்று அன்புடன் படித்து அறிந்தவரை
கண்டால் –தர்சித்தால்
குணம் வேண்டுமே –அவர்களுக்கு நற் குணங்கள் வேண்டுமோ -வேண்டாமே
நற் குலம் வேண்டுமே -நல்ல குலமாக இருக்க வேண்டுமோ -வேண்டாமே
யக்குலத் தொழுக் காம்-அக் குலத்துக்கு உரிய நடையாகிய
பிணம் வேண்டுமே –பயன் அற்ற பிணம் போல்வதும் வேண்டுமோ -வேண்டாமே
செல்வப் பேய் வேண்டுமே -பொருளாகிய பிசாசுசம் வேண்டுமோ வேண்டாமே
ஆதலால்
சென்று கைத் தொழுமே–உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கள்
திருவாய் மொழியை அன்புடன் படிப்பவர்களைக் கண்டால் அவர்கள் குளம் இத்யாதிகளை பார்க்காமல் உடனே சென்று வணங்குங்கல்

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

கோ என்னும் எழுவாய் ஆம் என்னும் ஆக்கத்தைக் கொண்டு முடிந்தது

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
கிளவி –அறத்தொடு நிற்றல்
துறை –செவிலி நல் தாயத்து அறத்தொடு நிற்றல்

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

இப்படி அன்றி -உன் மக்கள் கருத்து இது -என்று வருவித்து முடிக்கவுமாம்

————-

பொருள் -அகப் பொருள்
திணை -உரிப்பொருளாற் பாலை
கிளவி –உடன் போக்கு
துறை -பாங்கி தலைவனை உடன் படுத்தல்

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற் கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

ஒரு மணம்–பிரமம் -பிராசாபத்தியம் -ஆரிடம் -தெய்வம் –
காந்தர்வம் -அசுரம் இராக்கதம் பைசாசம் போன்ற
எட்டு வகை திருமணங்களில் இது காந்தர்வ மணம் ஆகும்-இவளைக் கைக் கொண்டு செல்வீராக

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த –கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பொருள் -அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி –வரைவு முடுக்கம்
துறை –தினையொடு வெறுத்து வரைவு கடாதல்

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப் புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் கார்ப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி-கார்ப் புனமே–பெரிய தினைக் கொல்லையே
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனம் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு புனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மையுறு கண்ணி கையற வெய்தக் கண்ட தோழி யுட்க்கொண்டு புலம்புதல்

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய –பனை -மிகப் பெரிய-கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –குறிஞ்சி
கிளவி -பிரிவுழிக் கலங்கல்
துறை -கண் படை பெறாது கங்குல் நோதல்

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

மூன்றையும் வேரினோடும் பறித்து–காமம் வெகுளி மயக்கம் -முக்குறும்பையும் ச வாசனமாகப் போக்கி அருளி
வகையாய் வருவன யாவையும் மாற்றி--ஆகாமிய சஞ்சித பிராரப்த கர்மங்கள் எல்லாவற்றையும் போக்கி அருளி

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத் த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் –பிள்ளை அந்தாதி –

————

பொருள் -அகப் பொருள்
திணை –உரிப்பொருளால் நெய்தல்
கிளவி –வரைவு கடாதல்
துறை –தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி செப்புதல்

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

தலைவன் ஒரு புறமாக வரும் பொழுது அறியாதவள் பொல்லாத தலைவியின் விஸ்லேஷ விரஹ தாபத்தைத்
தோழி சொல்லுவதால் தலைவன் கேட்டு விரைந்து வருவான் ஆதலால் வரைவு கடாதல் கிளவியும் துறையும் ஆயிற்று

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

இருமையும் தீர்ந்த பிரான்--யானே என் தனதே என்று இருந்த அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளிய ஆழ்வார்
தாவில் அரும் பொருள் –கெடாத அரிய செல்வமான பரம புருஷார்த்தம்
யான் எனது என்னும் செருக்கு அறுந்தாலே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுவோமே

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

பொருள் –அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -இரவு உறு துயர இகுளைக் கூறல்

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு ஒக்கும்–கரும்பு போல் இனியது என்னாமல்-ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

ஆயிழை –வினைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
துயரைச் செய்கின்ற இருளைத் துயர் என்றது குறிப்பு மொழி

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

மோக்க மாலை–மோக்ஷ மாலை -திருவாய் மொழிக்கு திருநாமம் சாத்தி அருளுகிறார்

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காதாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

பொருள் –அகப் பொருள்
திணை –நெய்தல்
கிளவி –இடந்தலைப்பாடு
துறை -புகழ்தல்

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும்–மகிழ்ச்சி கொண்டு திருக் கூத்துக்கள் மூன்றினையும் செய்து அருளிய
அல்லியம் –மல் –குடம் -என்னும் மூன்று திருக் கூத்துக்கள்
அல்லியம் -குவலயாபீடத்தின் தந்தங்களை முறித்த பொழுது ஆடிய கூத்து
மல் ஆடல் -மல்லர்களை முடித்து ஆடியது
குடம் -வாணாசுரனை வென்ற மகிழ்ச்சியால் தெருவில் குடக் கூத்து ஆடியது
இவை மூன்றும் புறக் கூத்துக்கள் –

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் சேனராக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பொருள் -அகப் புறப் பொருள்
திணை –பெரும் திணை
துறை -மாலை பெறாது வருந்திய தலைவி காதல் கைம்மிக்கு கையற யுரைத்தல்

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

காம நோய் கொண்டாருக்கு நிலவு வெயில் போல் சுடுமாதலால் தீ என்கிறார்
பேய்க்கு பனை மரத்தை உவமித்தார்
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் யுடையன போல்வன -கலிங்கத்துப் பரணி
மெய்ப்பாடு -அழுகை
பயன் -ஆற்றாமை நீங்குதல்

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது-பொருளும் திணையும் துறையும் கீழ் பாசுரம் போலவே –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு தட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

கொடுங்கோகு தட்டி -வளைந்த தோள்களைத் தட்டிக் கொண்டு
சல்லம் புலி யிட்டு -முள்ளம்பன்றி போல் ஒத்து

தாயைப் புலி என்று அதற்கு ஏற்பப் பாய்கின்றது என்றதனால் உருவக அணி
விரஹம் கொண்டு கலங்கி விழுதலால் தாய் புலி போல் பாய்கின்றாள் எனவும்
அவள் வார்த்தை முள்ளம்பன்றி யுடைய முள் போல் தைக்கின்றது எனவும்
சந்திரனது நிலவைக் கண்டு அதுவும் விரஹத்தை அதிகரித்தலால் அதுவும் தோன்றிற்று என்று வருந்திக் கூறுகிறாள் –

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

நாற்று இட்டு நெல் பயன் கொள்ளுவது போல்
திருவாய் மொழி எனது மனத்தில் இருப்பதால் இப் பிறப்பால் இன்னும் வினைகளைச் சேர்க்க முடியாதே

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே-மற்றை வாழ்வு -சுற்றத்தார் சேர்க்கை -எண் வகைப் போகம் தசாங்கம் போல்வன
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் –முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப் பிரபந்தம் என்றபடி

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்ப முனி சாபம் குலைந்தவூர் -செம் பதுமத்து
தாதகத்து நான் முகனும் தந்தையும் காணா நான் மறையை
ஓதுவித்து வாழும் அழுந்தூர்

இவர் காளி தேவிக்கு அடிமை செய்தவர் ஆதலால் அவளையே பந்தம் பிடிக்கச் சொல்லி கம்ப ராமாயணம் இயற்றினார்
ஒற்றியூர் காக்க யுறைகின்ற காளியே
வெற்றியூர் காகுத்தன் மெய்ச்சரிதை பற்றியே
நந்தன எழுதுதற்கு நல்லிரவில் மாணாக்கர்
பிந்தாமல் பந்தம் பிடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-91-100- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

பருகின்றது இருள் -இருட்டோ வந்து நிறைகின்றது
போகின்றது வண்ணம் பூவை -இவளது நல்ல நிறமோ நீங்குகின்றதே
கண்ணீர் உருகின்றது -கண்ண நீரும் பெருகுகின்றதே
தென்று உயிர் ஓய்கின்றதால்-இக் காரணங்களால் எனது உயிர் சோர்வடைகின்றது
மேன் மேலும் காதல் தருமவரே–அபிநிவேசத்தை வளர்த்து அருளும் அவரே
உலகு ஏழுமுய்யத் தொகுகின்ற ஆயிரம் சொன்னோன்–தொண்டர்க்கு அமுதால அருளிச் செய்த ஆழ்வார்
குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் -கீர்த்தியால் விளங்கத் தக்கவர் அல்லர்

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்

———

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளும் -தர்மம் அர்த்தம் காமம்
தணவாக் கருமமும் ஆகிய -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
காரணம் கண்ட அக் காரணத்தின்–அந்த பர ப்ரஹ்மம் போலவே
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்து–அனைத்திலும் பெரிய மஹா மாயை என்னும்
பிரகிருதி சம்பந்தமும் அதனால் வரும் மாறுபாடும் இல்லாமல்
உறு பேதம் செய்யம் இருமையும் தீர்ந்த –இருவித கர்மங்களையும் தொடரப் பெறாத
பிரான் சட கோபன் தன் இன்னருளே.–ஆழ்வாரது பரம காருண்யமே காரணம் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே

———–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

இயலோடு இசையின் பொருளில் சிறந்த -இயல் தமிழ் பொருள் அமைதியிலும் இசைத்தமிழ் பொருள் அமைதியிலும் சிறப்புற்ற
குருகையர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
அலங்கார வல்லியின் -அலங்காரங்கள் அமைந்த பூங்கொடி போலும் படி
கடவல்லி ப்ரஹ்ம வல்லி ஆனந்த வல்லி போல் அலங்கார வல்லி
போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. –நம்மாழ்வார்
ஆயிழைக்கு —ஆழ்வார் திரு உள்ளம் மகிழும்படி ஆத்ம குணம் நிறைந்த தலை மகளுக்கு –
அருளில் சில மகிழா ஈவர் கொல் -கருணையால் மகிழம் பூவைத் தந்து அருளுவாரோ –
அந்தி வந்த இருளில் பிறிது துயரும் உண்டோ -மாலைப் பொழுதில் இருள் போல் வேறே ஓன்று உண்டோ -இல்லை என்றபடி –

———-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்-ப்ரஹ்மாதிகளுக்கும் மற்ற தேவர்களுக்கும்
பவரே கை யுற்று என் -பிறப்பு வகை நேர்ந்து என்ன பயன்
படர் நீரின் இட்ட நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் -நீரில் மேல் எடுத்திய புது எழுத்துக்கள் போல்
நிலை இல்லாத பிரபஞ்ச விஷயங்களை மனம் கொள்ளும்படி செய்தது அல்லால்
பணி கொள்ளுமோ -நித்ய கைங்கர்யம் செய்தலைப் பெறுமோ
அவர் எவரே -அவர்களில் எவர் தாம்
நம்பி மாறனைப் போல் திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே-நம்மாழ்வார் போல்
மோக்ஷ ஸாஸ்த்ரம் அருளிச் செய்தவர் யாரும் இல்லையே –

———-

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

தம்மை ஒறுத்து-தங்களை வருத்தி
தவம் செய்வதும்
தழல் வேள்வி முடிப்பதும்
எவன் செய்யும் -இது நல்ல பயனைக் கொடுக்கும்
அவம் செய்கை மாற்றச்–கொடிய கர்மங்களை ஒழிக்க
மெய்யன் குருகைப் பிரான் -உண்மைப் பொருளை உண்மையாக அறிந்த ஆழ்வார்
எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் -இனி சம்சாரத்தில் இருக்க ஒட்டாமல் இருக்க
வண் தமிழ்ப் பாவம் உண்டே-திவ்ய ப்ரபந்தகளும் இருக்கின்றனவே
செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. –காதுகளும் நாக்கும் அர்த்த பஞ்சகம் அறிய அறிவும் உண்டே –

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு
மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்

———-

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல் –

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும் திருமால் –திரு விளையாடல்களை யுடைய ஸ்ரீ யபதி யுடைய –
அலகிலா விளையாட்டுடைய தலைவருடைய
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
உருவை -திவ்ய மங்கள விக்ரஹங்களை
உயர்த்து-மோக்ஷ சாதனம் என்று வெளியிட்டு அருளி
உலகைத் தொண்டாட்டிய -கைங்கர்யங்களிலே உலகோரை மூட்ட
வந்து தோன்றிய தோன்றல் -திரு அவதரித்த ஆழ்வார்
துறைக் குருகூர்-திருச்சங்கு அணித் துறையிலே
நண்டாட்டிய நங்கை -திருக்கை வளையல்களை ஓசை எழுப்பி வரும் இவளது
நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம் திண்டாட்டிய கண்கள் போல் -திருக்கண்கள் போல் –
ஞான விசேஷங்களையே திருக்கண்கள் என்பரே
செய்யுமோ கயல் தீங்குகளே.-கயல் மீன்கள் வருந்தச் செய்ய வல்லவே –

———-

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

இந்த நுண் பிறவி-இந்த எளிய பிறப்பாகிய
மாயைக் கிழியைக்-மாயா ரூபமான ஆடை எமது உயிரைப் போர்த்து உள்ளதை
கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே–திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வல்ல ஆழ்வார்
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்-நெருப்பைப் பிளந்து ஒரு பிறைச்சந்திரனாக செய்தது அல்லாமல்
அன்றில் பனை-அன்றில் பறவைக்கு இடம் கொடுக்கும் பனை மரத்தை
பேயைக் கிழித்தென பிளவார்-பேயைக் கிழிப்பது போல் பிளந்தார் இல்லையே
உளவாம் நோயைக் கிழிக்கும் வகுளம் நல்கார் -பிரேம நோயைப் போக்கும் மகிழம் பூ மாலையையும் தர மாட்டார்

——–

இதுவும் அது –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

அம் புலி முக -நீரில் பொருந்திய தாமரை திரு முகத்தில் உள்ள
வாயில் கரும்பின் -திருவாய் மொழியாகிய அம்ருதம் கொண்டு
வல் மறு பிறப்பைக்-விரைவிலே மறு பிறப்பை ஒழித்திட்ட
அம்புலி -அழகிய ஸிம்ஹம் போன்ற ஆழ்வார்
யோர் வகுளம் கொடார்- அத்விதீயமான மகிழம் பூ கொடுக்க மாட்டார்
கொடுங்கோகு உகட்டிச்-கொடுமையான முறை கேடு தலைக்கு ஏறி -அக்கிரமம் விஞ்சி
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது –முள்ளம் பன்றி போல் எதிர்த்துப் பாய்வதாகிய
தாயென்றிங்கோர் இல்லம் புலியும்-வீட்டுப்புலியும்
இங்கு உண்டு -இவ்விடத்தில் என்னை வருத்திக் கொண்டு உள்ளது
இதற்கும் மேல்
கொல்லம் புலி மீள எழுகின்றதே–வானத்திலும் ஓர் அம்புலி என்னை வறுத்த மீள தோன்றுகிறது
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

புகழ் மெய்ப் புலவோர்-தத்வ ஞானிகள்
தொழுதியல் –வணங்கி அடியார்களாகி
நாயகன் -தலைவன் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் –அக்னி கார்யம் விடாத நீர் வளம் மிக்க
திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வார் அருளிச் செய்த
திருவாய் மொழி எம் மனத்தனவே.–திருவாய் மொழியை மனத்திலே நிலை கொண்டு
ஆதலால்
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் -பிரமன் எழுதிய ஆயுஸ்ஸூ காலமும்
அநாதி கால கர்மங்களும் அடியேனை பிறவிச் சூழலில் சிக்க வைக்க மாட்டாவே
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

———

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-81-90- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

கேணியிலும்-கிணறுகளிலும்
பட்டத்திலும்-பெருக்குக் காலத்தில் நீர் ஏறிப் பாயும் பட்டக் கால்களிலும்
பைந் தடத்திலும் -பசுமையான தடாகங்களிலும்
ஓடைப் பழனத்திலும்-நீரோடை சூழ்ந்த வயல்களிலும்
குட்டத்திலும் -ஆழமான குட்டை களிலும்
கயல் பாய் -நீர் வளத்தால் கயல் மீன்கள் பாய்ந்து குதிக்கப் பெற்ற
குரு கூரர் குணங்களுக்கே. -நம்மாழ்வாருடைய கல்யாண குணங்களுக்காகவே
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்பு உருக்கிய உருக்குக் கிட்டத்தை விட வலிய கல் நெஞ்சு உடையவரும்
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் உருகுவர் -தம் தம்முடைய மனம் புத்தி சித்தம் என்னும்
அகக் கரணங்களில் கரைவார்கள் –

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை

கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –

ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே
வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

———

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –மகிழ மலர்களின் வாசனை -அனைவராலும் விரும்பப்படுகிற
தண் தெரியல் பெருமான் செய்யுள் –ஆழ்வாரது திவ்ய பிரபங்தங்கள் ஆகிய
மா மணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் -ரத்னக் கூட்டங்களை தமக்கு இன்றியமையாதவை என்று அறிந்து ஓதி உணர்பவர்களை
கண்டால் சென்று கைத் தொழுமே–நீங்கள் எங்கே கண்டாலும்-உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கோள்

தொழும் -பன்மை ஏவல்
குணம் வேண்டுமே -நல்ல குணங்கள் வேண்டுமோ
நற் குலம் வேண்டுமே -நல்ல குலங்களில் பிறக்க வேண்டுமோ
யக்குலத் தொழுக் காம் பிணம் வேண்டுமே -அதுக்குத் தக்க ஆசாரமாகிய பிணம் வேண்டுமோ
செல்வப் பேய் வேண்டுமே -செல்வப் பொருளாகிய பேய் வேண்டுமோ
ஒன்றுமே வேண்டாம் என்றவாறு

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-

தொழும் பாக்கிய -உயிரைத் தனக்கு அடிமையாகச் செய்த
வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று -அநாதியான -பிறவிச் சூழல் நடுவில் இருந்து
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் –மீண்டு உய்யும் படியான அத்ருஷ்டத்தை யுடையதாம் படி செய்யவும்
தென்னிய லோடிசைந்து கெழும் பாக்–அழகிய இலக்கணங்களோடே கூடிய திவ்யப் ப்ரபந்தங்களிலே
கெழுமிய கீர்த்தியை -எம்பெருமானுடைய புகழை
நாளும் கிளத்தி யென் நாத் தழும்பாக் கவும் -நாளும் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏறும்படி செய்யவும்
வல்ல கோ சட கோபன் தயா பரனே-திறமை கொண்ட ஸ்வாமி -கருணையே வடிவானவர்

தயா பரன் -பரம தயாளு
முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

—————-

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-

நங்காய்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் –யாரேனும் தலைவனது ஊர்ப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே
நின் மகள்
கண் பனிக்கும்-கண்ணீர் பெருக்குகின்றாள்
கரம் தலைக் கொள்ளும் -கைகளைக் கூப்பித் தொழுகிறாள்
உள்ளும் உருகும் -மனமும் கரைந்து நீராகுகிறாள்
கவியால் உலகைப் புரந்து –திவ்ய ப்ரபந்தங்களால் உலகை ரக்ஷித்து
அலைக்கும் வினை தீர்த்தான் -கருமங்களைப் போக்கி அருளும் தலைமகனது
புனை மகிழ் பூவுமன்றி– மகிழ மலர்களை சூடிக் கொள்ளுவது மட்டும் அல்லாமல்
மரந்தலைக் கொள்ளவும் போது -மகிழ மரத்தைச் சார்ந்து அத்தையும் தலை மேல் கொள்ளச் செல்கிறாள்
உன் மகள் கருத்தே.

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி
ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

—————

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

கருத்தில் கருணை வைத்து -திரு உள்ளத்தில் பேர் அன்பு கொண்டு
ஏகும் இவளோடு-இம்மங்கை யுடன் செல்லக் கடவீர்
இதுவும் -இவ்வாறு இவளைக் கைப் பற்றுவதும்
கலை மறையோர் திருத்திற்று ஒரு மணம் -ஸாஸ்த்ரம் வல்லவர் அமைத்த விவாஹங்களில் ஒரு வகை
அன்றியும்
தீரும் தின மயல் -நாள் தோறும் இருவருக்கும் உள்ள மயக்கமும் நீர் இவளைக் கொண்டு போக நீங்கி விடுமே
நீரின் நிறை-நீர் வளத்தால் நீர் அருகில் முளைத்து நிறைந்துள்ள
முருத்தின் செருந்து -வெண்மையாக அடிக் குருத்துக்கள் உடைய செருந்தி கோரைகள்
அயலே கரும்பின் குருத்தில் -அருகில் உள்ள கரும்பின் குருத்துக்களில்
முயல் பிரசம் வைக்கும் -முயல் கூடான சந்த்ர மண்டலம் போல் தேன் கூடு கட்டப் பெற்ற
குருகூர் சென்று கூடுமினே–இவளை அழைத்துக் கொண்டு போவீராக —

கரும்பினிடைத்தேறல் -கலியன்

சாஸ்திரம் அஷ்ட வித மணங்களைச் சொல்லும்
ப்ராமம் -பிரஜா பத்த்யம் -ஆர்ஷம் -தேவம் -காந்தர்வம் -ஆசுரம் ராஷாஸம் -பைசாஸம்

சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய முயலும் தீருமே –

———-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

கூட்டங்கள் தோறும் -தாம் கூடும் பொழுது எல்லாம்
குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்-ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே கூறும் அடியார்கள்
ஈட்டங்கள் தோறும் -கூட்டங்களில் எல்லாம்
இருக்கப் பெற்றேம் -கூடி இருக்கப் பெற்றோம்
இருந்து -இவ்வாறு அடியார் கூட்டங்களில் கூடி இருந்து
எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் -ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்றோம்
இனி மேல்-இவ்வாறு ஆன பின்பு
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே -பரமபதத்தில் எங்களை சார்ந்தவர்களுக்கு
பெரும் போகம் விளைகின்றதே–பேர் இன்பம் நலம் நிகழா நின்றது –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ –

————

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

கிளையாம் பிறவித்-மேலே மேலே தொடரும் பிறவி சூழலில்
தளை யாசழியத் -பந்தமாகிய குற்றம் போகும்படி
தடுத்துத் -போக்கி
தென் பாலை வழி தடுத்துக் – தெற்குத் திக்கில் -பாலை நில வழியையும் தவிர்த்து
களை ஆசறத் தடுத்து -களைகளை முற்றும் போக்கி
ஆண்டான் குருகையின் காப் புனமே.–ஆழ்வாருடைய திருக்குருகூரைச் சேர்ந்த தினை புலமே
தினையின் கிளையாக் கிளர விளைகின்றதால் -தினைப் பயிர்கள் மிகைத்து வளர்ந்து கதிர் முற்றிப் போகின்றதே
விளையா தொழிய மருந்தும் உண்டே -இப்படி முற்றாமல் கதிர் பரிந்தபடியே இருக்க ஏதேனும் மருந்து உண்டோ
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

————–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல்

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

வழுவா நரகத் தினம் பாழ் படுத்த –நரபலி அடியார்களுக்கு இல்லாத படி செய்து அருளும்
பிரான் சட கோபன் இன்னாக் கலியின் சினம் பாழ் படுத்த நின்றான்–உபகாரகர் -காளி கோலாகலம் அடக்கி அருளிய ஆழ்வார்
குன்று சூழ்கின்ற செந்தினையே.-பொதிகை மலை சார்ந்து விளைந்த சிவந்த தினையே
புனல் பாழ் படுத்துப் -கதிர் கொய்து விட்டதால் -கொல்லையைப் பாழாக்கி
புகழ் பாழ் படுத்தல்லால் -உனது கீர்த்தியையும் பாழாக்கி
அத்தோடு நில்லாமல்
புகுந்தென் மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே -எனது மனத்தையும் சார்ந்து பாழாக்கினாயே -வாழி
கம்பத்து அந்தரங்கம் சிவந்த தினை-
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் — தன்னை நிஷேதித்த கொடியவளான திருத்தாயார் உறங்கினாலும்
தன் வாய் அடங்கா வினை ஒன்றிய அன்றிலுக்கு –அன்றில் பறவைக்கு
இடம் காட்ட விரிதலைய பனை யன்றியும் உளதோ -தங்க இடம் கொடுத்த விரிந்த தலையை யுடைய பனை மரமும்
தமியேற்குப் -தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் எனக்கு
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்-ஆழ்வாரின் மேல் உள்ள காதலால்
பழம் பகையே–வேறே பழைய பகை இல்லையே

———

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து-காமம் கோபம் மயக்கம் மூன்றையும் அடியோடு ஒழித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி -இதன் மூலம் வரும் கர்மங்கள் பிறவிகளை இவற்றை தமக்கும் உலகோருக்கும் போக்கி அருளி
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாமியம்-என்று வகை வகையாக வருமே இவற்றின் அடியாகவே
இவ் வையமுய்யத் தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் –ஆழ்வாரது திரு நாமம் சொல்லவே
சூழ் பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே.–அஞ்ஞானம் இருள் சவாசனமாகப் போகும் நாளும் என்று வருமோ
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-71-80- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 4, 2021

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பொதியம் தரு -பொதிய மலையால் கொடுக்கப் பட்ட -அதிலிருந்து தோன்றும்
நதி யங் குருகூர் எந்தை -ஆழ்வாரது திவ்ய ஸூக்திகளை
பூசுரர்க்கே
பதியந் தமிழ் என்ன –மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்
நான்மறை என்ன –ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்
இப் பார் புரக்கும் மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன –ப்ரயோஜனாந்த பரர்கள் உலோகோரை
நல்வழிப்படுத்திப் பாதுகாக்கவும் வரம்பில்லா ஞானமாகிய ஒளியை வெளிப்படுத்தும் ஆரங்கள் என்று சொல்லும்படியாகவும்
மறை தமிழின் அதியம் தரும் கவி ஆயிரம் செய்து –வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்
பூ சுரருக்கு அளித் தானமுதம்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்

பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அருந்த நிறைப்பதற்கு அன்றோ அமுதமாய் அருளினான்

———

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

குருகூர் வந்த கற்பகமே.
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் -ப்ரசன்ன புத்தர் மாயாவதி போன்ற மதஸ்தர் வாத வித்வான்களுக்கு பூட்டு போன்றும்
பொய்ச் சமயம் மித்யா வாதம் மாயா வாதம்
போக்கு வல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு -சமணர்களுக்கு மாறுபாட்டை போக்கும்
கூர் வாயை யுடைய வாட்சி-மரத்தைச் சீவும் – கருவியாகவும்
அது மரக் கோணலைத் தீர்ப்பது போல் இது மனக் கோணலைத் தீர்க்கும்
வாள் என்று கொண்டு சி பகுதிப் பொருள் விகுதி என்றுமாம்
மன் உயிர் கட்கு ஆட்சி கண்டீர் -உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு அழிவற்ற பொருளாகவும்
ஜீவாத்மாக்கள் நித்யம் என்பதால் மன்னுயிர்
ஜீவ ராசிகளை ஆளுபவர் என்றுமாம்
தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் -அடியவர்களுக்குப் பேரின்பப் பெருக்காகவும்
அறிவைக் காட்சி கண்டீர் -அவர்கள் அறிவுக்கு காணத்தக்க பொருளாகவும்
ஞான ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்தை விசத தமமாக அறிந்தவர் என்றுமாம்
பரவும்
ஆகவே பரவும் -வணங்கி புகழ்ந்து வழி படுங்கோள் என்று உபதேசிக்கிறார்

———

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

எம்மை விற்றும் விலை கொள்ளவும் உரியான்-எங்களை விற்கவும் வாங்கவும் உரியவர் —
ஆழ்வாருக்கு அத்யந்த பரதந்த்ரராய்
விலை கொள்ளுதல் -விலைக்கு கொள்ளுதல்
மாறன் கவி வெள்ளத்தையே.–ஆழ்வாரது அருளிச் செயல் பிரவாஹத்தை
யாம் நிதம்–யாம் நாள் தோறும்
கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் -ஓதியும் பிறர் ஒதக் காதில் நன்றாகக் கேட்டும் குடித்து மகிழ்வோம்
உள்ளே முற்றும் உகப்பெய்தும் -அகத்திலே அவ்வெள்ளம் முழுவதும் விழும்படி ஊற்றிக் கொள்வோம்
மறந்து விடாமல் மனதிலே நிரம்பப் பதிந்து வைத்துக் கொள்ளுதல்
மூழ்கிக் குடைதும் -அவ்வெள்ளத்திலே அமிழ்ந்து நீராடுவோம்
முகந்து கொடு நிற்றும் நிலையுற -அப்பெருக்கை மொண்டு எடுத்துக் கொண்டு நிலை பெற நிற்போம்
அப்பொருளை பாராட்டி தாம் உபயோகிக்குமாறு தேக்கிக் கொள்ளுதல்
நீந்துதும் -அவ்வெள்ளத்தில் நீந்துவோம் -அவற்றில் ஈடுபடுதல்

———–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல் –

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

இவை
வெள்ளம் பரந்தனவோ கமலத்து -செந்தாமரை மேல் பிரவாகம் பரவியதாமோ
அன்றி வெண் மதி மேல் முயல் நீக்கி கள்ளம் பரந்தனவோ -சந்திரனின் களங்கத்தை நீக்கி களவுத் தொழில் பரம்பியதாமோ
கருமை நிறத்தை களவு என்பது கவிகள் மரபு
கவிக் கரசன் தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் -பூம் கொம்பு போன்ற இந்த மங்கையுடைய
ஆழ்வார் திரு நா வீறு உடைய பிரான் என்பதால் கவிக்கு அரசன் என்கிறார்
செம் முகத்து எம் உள்ளம் பரந்தனவோ -சிவந்த திரு முகத்திலு திரு உள்ளம் பரவியது
கண்களோ -கண்களே தாமோ -உபமானங்கள் உபமேயத்து அளவு போதாமையாலே அவை தம்மையே சொல்லிற்று
ஒன்றும் ஓர்கிலமே.-ஒன்றையும் துணிவாக அறிகின்றிலோமே

ஐய உவமை அணி
திரு உள்ளம் காம மயக்கத்தால் இருந்து அன்றோ போனது
தலைவன் நெஞ்சோடு கூறிக்கொண்டது
நலம் பாராட்டு துறை
கண் அழகு -ஞான வைலக்ஷண்யம்
இவருக்கு பேர் அறிவு ஆழ்வாரது சங்கல்பத்தாலே
இதயக் கமலத்திலே எழுந்து பொங்கும் ஞான வெள்ளத்தை -வெள்ளம் பரந்தனவோ கமலத்து என்கிறார் –
இந்த தெளிந்த ஸூத்த ஞானம் பரமாத்மாவின் திரு உள்ளத்தையும் வசீகரிக்குமே -ஆகையால்
வெண் மதி மேல் முயல் நீக்கிக் கள்ளம் பரந்தனவோ -என்கிறார் –

—————-

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

ஓரும் தகைமைக்கு உரியாரும் -தத்வப் பொருளை ஆராயும் தன்மைக்கு உரியவர்களும்
ஓங்கிய ஞானியரும்-அங்கனம் ஆராய்ந்து தெளிந்து உயர்ந்த ஞானத்தைப் பெற்றவர்களும்
கேள்வி -ஞானம் அனுஷ்டானங்கள்
விமர்சம் -ப்ரமாணங்களைக் கொண்டு தெளிய ஆராய்தல்
இவை இரண்டையும் முதலில் சொல்லி அவர்களிலும் மேம்பட்ட ஓங்கிய ஞானியரை –
பாவனை -இடையறாமல் சிந்தித்தல் -உடையாரை அடுத்து சொன்னவாறு

சாரும் தனித் தலைவன் சட கோபன் -சரணம் அடையப்பெற்ற ஒப்பற்ற ஆழ்வார் திரு அவதார ஸ்தலமான
தடம் பதிக்கே வாரும் -வாருங்கோள்
அங்கே வருவீர்களானால்
உமக்கொரு உறுதி சொன்னேன் -கேட்டு உய்வீராக
மயக்கமெல்லாம் தீரும் -விபரீத ஞானம் எல்லாம் போகுமே
திருக்கு அறும் —செருக்கு வஞ்சகம் போன்ற மாறுபாடு நீங்குமே
சிந்தை செவ்வே நிற்கும் -மனம் கோணாமல் நல் வழியில் நிலை நிற்கும்
தீங்கு அறுமே-தீ வினைகள் எல்லாம் தொலையுமே –

திவ்ய தேச மஹிமையை அறிவித்தவாறு

———–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகையாய சமயமும் –ஆறு வகையான சமய நூல்களும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே-ஒருங்கே ஒழிவித்து -தம் தமக்குத் தோன்றியபடி
பொருள் விரிவு முழுவதையும் ஒரு சேர போக்கி
பெறு வகை ஆறெனச் செய்த –முக்தி பெரும்படியான வழி இது என்று திவ்ய பிரபந்தகள் அருளிச் செய்த
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய்
பிரான் குருகூர்ப் பிறந்த சிறு வகையார் அவரைத் தொழுதோம் -மூர்த்தி சிறுத்தும் கீர்த்தி பெருத்தும் –
சிறு மா மானிசராய்த் தோன்றி நம்மை ஆண்டு அருளிய ஆழ்வாரை வணங்கினோம்
ஐவகைத் தாம்புலனும் எம்மைத் தீண்டுகவே.–மெய் வாய் கண் மூக்கு செவி -ஐம் பொறிகளாலும் உண்டாகும்
ஸ்பர்ச ரஸ ரூபம் கந்தம் ஸப்தம் போன்ற ஐந்து வகைப் புலன்களும் எம்மைச் சார்வனவாக –
அவற்றைக் குறித்து அஞ்ச வேண்டாமே

சடகோபர் எம்மைத் தீண்டுகை என்று தலைமகள் பிரணய ரோஷம் அடைந்து
நீங்கப் பெற்றதாகவும் இதற்குப் பொருள் சொல்வர்

சிறு மா மானிடராய் ஆழ்வார் அடியார்களையும் சொன்னவாறு
வழுதி நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தேன்-என்றாரே –

————–

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

வினையேன் இவ் வெறும் பிறவி ஆண்டில் பிறந்த அக் காலத்திலே –பயன் அற்ற இந்தப் பிறவியாக
அவ்விடத்தில் பிறந்த அக்காலத்திலேயே
அன்பனாய் அணி நீர்ப் பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே–ஆழ்வாருக்கே பக்தனாகி
உருக் காட்டுதல் -ரூபத்தைத் தோன்றுவித்தல் -இச்சா வடிவம் எடுத்து ஆவிர்பவித்தல்
பாவகற்கே-பரிசுத்தராக்குபவர் -ஜ்யோதி ஸ்வரூபமான ஆழ்வாருக்கு

மதுர கவி ஆழ்வார் இந்த தேஜஸ்ஸூ பார்த்தே இவரை வந்து சேர்ந்தார் அன்றோ
ஆதலால் அவருக்கு பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே-என்பது பொருந்துமே
தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் -அடையப் பெற்றேன் அல்லேன்

பழுதே பல பகலும் போக்கினேன் -அஞ்சி அழுகிறார்
வேண்டிய அனைத்தையும் தர வல்லவர் ஆழ்வார் என்பதாலேயே –
சிந்தித்ததையே வேண்டிக் கொளப் பெற்றிலேன் -என்கிறார்
இங்கு சிந்தித்தது முக்தியையே இவருக்கு –

————–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

பாவகத்தால் -தனது தோற்றத்தைக் கண்டு அதனால்
தனது தூய்மை செய்து அருளும் தன்மையால்-பாவனத்வத்தால் – என்றுமாம்
தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப் பூவகத்தார் அறியாத வண்ணம் –திருமாலது பதினொன்றாவதாகிய
திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி

வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

தன்னையே புகழந்து நாவகத்தால் கவி ஆயிரம் பாடி -தன்னையே தான் ஸ்துதித்து -திருவாய் மொழி அருளிச் செயலை அருளிச் செய்து
தானே யான் என்பானாகத் தன்னைத் தன்காண் துதித்து
யானாய்த் தன்னைத் தான் பாடி
நாராயணா அடியேன் நாடும் தமிழ் வேத பாராயணா சடகோபா -பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
திருப்புளிய மரம் ஆதி சேஷன் அம்சம் தானே
அத்ரி ஜமதக்கினி -ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில்
சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும்
வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும்
கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –

நடித்து -வேறான ஒருவரைப் போலவே தம்மைக் காட்டி அருளி
கும்பிடு நட்டமிட்டு ஆடி -அந்தக் கூத்தாடி என்றுமாம் –
அளித்த-திவ்ய பிரபந்தங்கள் மூலம் லோகத்தாரை ரஷித்து அருளி

கோவகத்தாற் கன்றி -திருமாலாகிய ஆழ்வாருக்கே குற்றேவல் செய்யாமல்
கோ அகம் -மேலான இடம் -ஸ்ரீ வைகுண்டம்
கோபகம் -ரக்ஷிப்பவர் என்றுமாம்
என் புறத்தார் செய் குற்றேவல்களே-அந்நியர்களுக்கு செய்யும் கிஞ்சித்காரம் ஒரு நல் பயனையும் அளிக்க மாட்டாவே –
தேவதாந்த்ர பஜனத்தால் என்ன பலன் என்றவாறு

————

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே 79–

குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே-பண் அமைதியோடு கூடிய இயல் தமிழ் அருளிச் செயல்களினால்
பண்ணார் பாடல் இன் கவிகள் அன்றோ -குருகையர் கோன் யாழினிசை வேதத்தியல் அன்றோ –
யான்
மெய் கண்டு-தத்வார்த்தங்களும் உணர்ந்து
கை கொண்டு கும்பிட்டு -கைகளால் வணங்கி
குற்றேவலும் செய்தும் -கைங்கர்யமும் செய்து
அன்பு பெற்றேன் –ஆழ்வாரது கருணையையும் பெற்றேன்
என் போல் எவர் பேறு பெற்றார் -இப் பேறு என்னைப் போல் பெற்றார் யாருமே இல்லை என்னும் படி அன்றோ இப் பேறு
இது அன்றி
பின்னையே பிறந்து-ஆழ்வார் திரு அவதாரத்துக்குப் பின்பு பிறந்து
வெற்றேவலின் நின்ற -தேவதாந்த்ர கைங்கர்யங்கள் செய்து
பொய்யன்பர் தாங்களும் -திரிபு உணர்வுடைய தொண்டர்களும்
மெய் யுணர்ந்தார் எற்றே -ஆழ்வார் அருளிச் செயல்களால் தத்வ ஞானம் பெற்றார்கள் -அறிந்து கொண்டார்களே என்ன வியப்பு –

————

தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக்காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

இன்னிசையைப் புணர்த்து-இனிமையான பண் இசைகளை அமைத்து
இயலைத் தொடுத்து -இயல் தமிழ் பாசுரங்களைப் பாடி
எம்மை யிப் பிறவி மயலைத் துடைத்த –எமது இந்தப் பிறப்பு துன்பங்களைப் போக்கி அருளிய
பிரான் -உபகாரகராகிய நம்மாழ்வாருடைய
குருகூர் –திருக் குருகூரிலே
மதியைக் கொணர்ந்து-சந்த்ர மண்டலத்தைக் கொண்டு வந்து
முயலைத் துடைத்துத் -அதன் நடுவில் உள்ள முயல் என்னும் களங்கத்தைப்[போக்கி
தனுவைப் பதித்து -அதில் இரண்டு விற்களைப் பதிய வைத்து
வில் போலே வளைந்து ஆடவர் நெஞ்சு உறுதியைப் போக்கும் ஆற்றலுடைய புருவங்களின் சிறப்பைக் கூறியவாறு
முத்தங்குயிற்றிக்-முத்துக்களை பதித்து -வெண்மையான பற்களை சொன்னவாறு
கயலைக் கிடத்திக் கொள் -இரண்டு கயல் மீன்களையும் வைத்து –பிறழுகிற கண்களை சொன்னவாறு
சாளரத்தூடு கதவிட்டதே.-பலகணியுனுள்ளே-அச் சந்த்ர மண்டலத்தை நிறுத்தி -புறத்தே கதவு அமைக்கப் பட்டதோ
இத் தோற்றம் எனத் தோன்றா எழுவாய் வருவித்து முடித்துக் கொள்ள வேண்டும் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-61-70- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 24, 2021

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

கூறப் படா மறையின் பொருள் கூறிக் -தெளியா மறை நிலங்களை தெளியும்படி அருளிச் செய்து
குவலயத்தோர் மாறப் படா வினை மாற்றிய -பண்டை வல் வினை பாற்றி அருளிச் செய்து
மாறன் மகிழலங்கல் நாறப் படா நின்ற போது –மகிழம்பூ மணம் வீசப்பெறும் காலத்தில்
அமுது ஆகும் -தென்றல் காற்று அமுதம் போல் இருக்கும்
அதன்றி நஞ்சம் தேறப் படாது –அம்மணம் பெறாத போது விஷம் போலே கொடுமையாக இருக்குமே
கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே–ஆகவே தென்றல் காற்றை நம்பப் போகாதே

கெட்டேன் -மிக்க இரக்கத்தால் கூறும் வார்த்தை
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -பெரியாழ்வார்
தென்றலும் தீயினும் கொடி தாம் -கலியன்

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

———–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை -தெண் திசை உண்டாக்கிய உபநிஷத்தும்
என் தீ வினையை நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை –எனது கர்மங்களைப் பாற்றி அருளி
பொருந்திய நீதி மார்க்கம் யுடையதுமாய்
நிறை குருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை –எல்லா வளங்களும் நிறைந்த திருக்குருகூரில் அவதரித்த
ஆழ்வார் பக்கல் உண்டான சொல்லிலும் பொருளிலும் இனிய பாசுரங்களை
அலைத்து நின்று என்றுமாம் –
மனத்துள் வைப்பார்-ஓதி உணர்ந்து தம் மனதில் வைத்துக் கொள்பவர்கள்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் -என் சென்னியில் வைத்து விளங்கும் என் தலைவராவார்
என் நாவுக் குரியவரே.-என்னால் ஸ்துதிக்கப் படுமவரும் அவரே

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –
ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

பிறர் புன் கவி -மற்றவரின் புல்லிய பாடல்கள்
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என –உரிக்கப்படுகின்ற வெண் காந்தளின் பெரிய கிழங்கு போல்
காந்தம் -கிழங்கு
ஒன்றுமின்றி விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் –வகுத்து நோக்க நோக்க சாரம் ஒன்றும் இல்லாமல்
மிகவும் பயன் அற்றவையாய் போய் விடும்
மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வார்
தன் தெய்வக் கவி -யுடைய திவ்ய ப்ரபந்தங்களோ
தோண்டச் சுரத்தலினே–ஆழ்ந்து நோக்க நோக்க மென்மேலும் நற்பொருள் இடையறாது வெளிப்படுதலால்
புவியில் சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் -நுண்ணிய மணல் பாங்கில் நீரூற்றைப் போன்று இருக்கும் –

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊரும் அறிவு

————–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

திரக்கும் -உறுதி பெற்ற -நன்கு வளர்ந்து முதிர்ந்த –ஸ்திரம் -வடமொழி
கழை நெடுந் தாளில் -நீண்ட கருப்பந்தண்டிலே
கழை-மூங்கில் என்றுமாம் -மருத நிலா வருணனைக்குச் சேராது
தொடுத்த செந் தேன் -கட்டிய சிவந்த தேனையுடைய கூடுகள்
கயல் குதிப்ப உடைந்து-கயல் மீன்கள் துள்ளி விழும் போது அவை படுதலால் உடைபட்ட
பரக்கும் –தேன் பரவிப் பாயப் பெற்ற
பழன வயல் குருகூர் –கழனி களை யுடைய மருத நிலம் சூழ்ந்த ஆழ்வார் திரு நகரி யுடைய
வளம் படுமினே-மஹிமையை கவி பாடி ஸ்துதியுங்கோள் –
அங்கனம் பாடினீராகில் உங்களுக்கு
சுரக்கும் திருவும் -கைங்கர்ய ஸ்ரீ வளரும்
வறுமையும் தீரும் –தரித்திரம் நீங்கும் -சம்சாரம் தொலையும்
தொடக்கு விட்டுக் கரக்கும் இருவினை –புண்ய பாப இரு வினைகளும் தொடர்ச்சி நீங்கி
இருந்த இடம் தெரியாதபடி அழிந்து விடும் –
தொடக்கு –கட்டு -பந்தம்
மேன்மையும் காணும்–எல்லா மேன்மைகளை உண்டாகும் –

———–

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

இச் சுழல் பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை –காற்றாடி போன்று கர்மங்களால் உண்டாகும் பிறவிச் சூழலை
நீக்கி யுணர்வுதவி-அடியார்களுக்கு போக்கி அருளி நல் ஞானத்தையும் அருளி
வீடும் திறந்து தந்தானை –ஸ்ரீ வைகுண்டமும் கொடுத்து அருளி
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் -வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு
பாடும் -பக்கம் முழுவதும் என்றுமாம் –
பைந் தாள் குவளை யோடும் கறங்கும் -பசுமையான நாளத்தை யுடைய குவளைகளின் இதழ்களும் சுழலப் பெற்ற
குருகைப் பிரான் எந்நான்றும் விடகிலமே.–திருக் குருகையில் திரு அவதாரம் செய்து அருளிய ஆழ்வாரை விட்டுப் பிரிய மாட்டோம்

——-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார –கருமையாலும் கொடுமையாலும் விஷம் போன்ற இருளை யுடைய
வெம் பாலிற் -கொடிய இரவாகிய காலப்பகுதியில்
பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்று இரங்கிப் புணர்ந்திலர் –மனம் இரங்கி வந்து கூடினார் அல்லர்
இன்று இவ் வந்தி வந்து பட –மாலைப்பொழுதாகிய பெரும் தீயும் வந்து சேர
அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.–இருளாகிய பெரும் புகை எங்கும் பரவி
இன்னுயிரை அட வந்த காலன் கொலோ அறியேன்

——————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல்

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சுருதிப் பசுக்கள் சுரவா தவற்றைச் சுரப்பித்து-வேதப்பொருளாகிய பாலை எளிதில் சுரக்கும்படி செய்து
அவை சொரியும் பொருள் பால் –தத்வப் பொருளாகிய பாலை
கரவாது உதவிய மாறன் –லோபம் செய்யாதே திவ்ய பிரபந்தங்கள் மூலம் அனைவருக்கும் கொடுத்து அருளிய ஆழ்வாருடைய
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் அன்றோ
கவி அனையாய் – ஆழ்வாருடைய திவ்ய பாசுரங்களை ஒத்த சிறப்பையும் இனிமையும் யுடைய மங்கையே
இனி இப்புறம் ஓர் சர வாதம் -இனி எனது ஊருக்கு இப்பால் செல்ல வேண்டிய இடம் ஓர் அம்பு வீழ்ச்சி அளவு தான்
சர பாதம் -சர வாதம் என்று விகாரப்பட்டுள்ளது-சர பாத ஸ்தானம் -எய்த அம்பு விழும் தூரம்
அப்புறம் அ தட பணையே காண் –அதற்கு அப்பால் முன்பு நான் சொல்லி இருக்கிற எனது ஊரின் எல்லை யாகிய மருத நிலமே காண்
ஆகவே
இனி பரவாது கேட்டு பைய நட -விரைவு கொள்ளாமல் நான் சொல்லும் வார்த்தையை கேட்டுக் கொண்டு மெல்ல நடப்பாய்
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –
சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

——————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

தடம் பணைத் –அகன்ற வயல்களை யுடையதும்
தண் -நீர் வளத்தால் குளிர்ச்சியானதும்
பொருநைக் குருகூரர் –ஆழ்வாருடைய
தகை வகுள வடம் –அழகிய மகிழம் பூ மாலையை
எவ்வகைத் தாபத்தையும் தணிக்க வல்ல வகுள மாலை அன்றோ
பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் –பாங்கிமார் கொணர்ந்து பருத்த எனது கொங்கைகளிலே வைக்கின்றார் இல்லை
மற்றை மாலை யெல்லாம் உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் –மற்ற மாலைகள் அனைத்தும்
விரஹ தாபத்தால் வெந்து பொடியாய் உதிர்ந்து விடும்
இந்நிலையில்
பனி தோய்ந்திடு மேகங்களே–நீர்த்துளி நிறைந்த மேகங்களோ
ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த விடம் பணைக் கொண்டனவே -கொடிய ஐந்து பாம்புகள் ஒருங்கே உமிழ்ந்த விஷங்கள் போலெ திரண்டனவே
கொடிய ஐந்தலை நாகம் என்றுமாம் –
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே
ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –மேகங்கள் ஆகிய உங்களை இடை வழியிலே கண்டு
செய்தி கூறினேன் என்று இதனை ஒரு இழிவாக நீங்கள் நினையாமல்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வாரது
மிக இனிய சொற்களை யுடைய என் காதலியை
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே –விஞ்சியுள்ள மோஹத்தை தணிவித்துக் கொண்டே
நீங்கள் சமீபிப்பவர்களாய்
கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே –நீங்கள் வருகிற வழியில் நான்
மீண்டு வருவதைக் கண்ட செய்தியைச் சொல்லி அவளது விரஹ வேதனையை சாந்தப்படுத்திக் கொண்டே
துளித் தூவத் தொடங்குகவே.-மழைத் துளி பெய்யத் தொடங்குவீர்களாக
மேகங்களை பாகவதர்களாக சொல்லாத தட்டில்லையே
ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

——————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

சவையீர்–சபையில் உள்ளவர்களே
சொல்லு கின்றேன்-நான் உங்களுக்கு ஒரு உறுதி சொல்கின்றேன் -கேளுங்கள்
மதங்கி–ஆடல் பாடல் வல்ல ஓர் இள மங்கை
நடம் தொடங்கு கின்றாள்–கூத்தாடத் தொடங்குகின்றாள்
குருகூரர் தொழா மடங்கு கின்றாள் –ஆழ்வாரை தொடக்கத்திலே தொழுது திரைக்குள்ளே திரும்பிச் செல்லுகின்றாள்
மண்டலம் சுற்றி யாடுகின்றாள் -மண்டலமாக அங்கேயே இருந்து சுழன்று கூத்தாடுகின்றாள்
விடங்கு கண்டார் பிழைப்பார் -இந்த மதங்கியின் அழகைக் கண்டு காதல் நோயால் மரண வேதனைப்படாது
பிழைப்பவர் எவர் -எவரும் இல்லை என்றபடி
இந்த படங்கு விண்டால் உம் பதிகளுக்கே பின்னைப் போக ஒண்ணாது –இந்தத் திரையை வாங்கி விட்டால் –
அவளது அழகைக் கண்டு மோஹித்து விழாமல் உங்கள் ஊருக்குப் போக முடியாதே
ஆதலால்
விரைந்து ஏகும் -யாத்திரை வாங்குவதற்கு முன்னே அப்பால் போய் விடுங்கோள் –

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு
பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்