ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா-
பரம காருணீகர்
வியாக்கியான சக்ரவர்த்தி
ஸ்ரீ அருளிச் செயல்கள் –
ஸ்ரீ ஸ்தோத்திரங்ககள் -ஸ்தோத்ர ரத்னம் –ஜிதந்தா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகங்கள்
ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோக -ஸ்ரீ விஷ்ணு புராண -ஸ்ரீ ஹரி வம்ச -தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
————–
1-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ததோ தத்ரு ஸூராயாந்தம் இத்யாதி -5 அம்சம் -13அத்யாயம் -43 ஸ்லோகம் –
ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-
2-ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –
3-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –
பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச
4–ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —
ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –
5-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –
ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –
6-ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 –
—————
ஸ்ரீ மத் பாகவதம் 10 ஸ்கந்தம் -முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் போல் 5 அம்சம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்-
ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் —ததோ தத்ரு ஸூராயாந்தம் இத்யாதி -5 அம்சம் -13அத்யாயம் -43 ஸ்லோகம் –
பொறுக்கப் பொறுக்க அநுபவிப்பதற்காக கலந்து பரிமாறிய பிறகு கோபியரை விட்டுப் பிரிந்து விடுகிறான் கண்ணன்
கண்ணனைப் பிரிந்த கோபிகள் நெடும் தூரம் தேடி அவனைக் கண்டபடி சொல்லும் ஸ்லோகம் இது
ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-
தத–கண்ணனைத் தேடிக் காணாமல் திரும்பின பிறகு
ஆயாந்தம் –வருகின்றவனாய்
விகாஸி முக பங்கஜம் –மலர்ந்த திரு முகத் தாமரையை யுடையவனாய்
த்ரை லோக்ய கோப்தாரம் -மூன்று உலகங்களுக்கும் ரக்ஷகனாய்
அக்லிஷ்ட சேஷ்டிதம் –குற்றமற்ற செயல்களை யுடையவனான
கிருஷ்ணம் –கண்ணனை
கோப்யாஸ்-கோபிகள்
தத்ரு ஸூ–கண்டனர்
தத –இவ் விடத்தில் கிருஷ்ணன் போனான் என்று நெடும் தூரம் எல்லாம் சென்று
ப்ரவிஷ்ட காநநம் கிருஷ்ண பதமத்ர ந லஷ்யதே நிவர்த்தத்வம் -5-13-42
கண்ணன் காட்டில் புகுந்து விட்டான்
இங்கு அவனுடைய அடிச் சுவட்டைக் காணோமே -என்றும்
நிவ்ருத்தாஸ் தாஸ் ததோ கோப்யோ நிராஸா கிருஷ்ண தர்ஸந –5-13-42
கண்ணனைக் காண்பதில் ஆசை யற்றவர்களாக அந்த கோபிகள் திரும்பினார்கள் -என்றும்
நிராஸை களான கோபீ ஜனங்கள் மீண்ட அநந்தரம்
இப்படி முடிய நிராஸைகளாய் காணப் பெறாதே விட்டார்களோ என்னில்
நெடும் தூரம் காணப் பெறாதே உறாவுதல் தீரக் கண்டு கொண்டார்கள
இவர்கள் கண்டு கொண்டது அவர் இருந்த இடத்திலே சென்றோ என்னில்
ஆயாந்தம்
பெண்களை நெடும் போதுண்டு நாம் அலைச்சல் படுத்துகிறது
அவர்கள் இத்தனை போது என் படுகிறார்களோ என்னும் த்வரை தோற்ற
கோபீ கபால ஸம்ஸ்லேஷம் அபி கம்ய ஹரேர் புஜவ் புல கோத்கம ஸஸ்யாய ஸ்வேதாம்பு கநதாம் கதவ் –5-13-55-(ஸ்வேதாம்புகணி காஞ்சிதம் -பாடபேதம்)
(சக்ய பஸ்த்த க்ருஷ்ணஸ்ய முகம் அத்யருணே ஷணம்
கஜ யுத்த க்ருதாயாச ஸ்வேதாம்பு கணி காஞ்சிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-5-20-என்னும்படியே- )
ஆயர் சிறுமியரின் கன்னத்தை அணைத்ததினாலே அக் கன்னத்திலுள்ள கூச்செரியும் மயிர்களாகிற பயிர்களுக்கு கண்ணனின் கைகள் வேர்வை நீர் பொழியும் மேகமாயின -என்னும்படியே
குரு வேர் பரம்பித்த முகமும் -குலைந்த பரியட்டமுமாய்க் கொண்டு வாரா நின்றான்
வருகிற இடம் தன்னில் முகத்திலே ஒரு விஷாதம் தோற்ற வந்தானோ என்னில்
விகாஸி முக பங்கஜம்
இவர்களைக் கண்ட அநந்தரம் -இத்தனை போது உங்களை அம்பலமாகப் பண்ணினோம் (அரங்கத்தில் நாட்டியமாடப் பண்ணினோம் )இறே
நம்மைத் தேடிக் காண மாட்டிற்றிலை கோள் -இத்தனையே உங்கள் சக்தி -என்று
தன் வெற்றியும் அவர்களுடைய தோல்வியும் தோற்றும்படி முறுவல் செய்து கொண்டு வந்தானாயிற்று
இப்படி அவன் வந்த இடத்தில் அவர்கள் செய்தது என்
தங்களை அவன் பண்ணின தீ யறத்தாலே முகத்தை மாற வைத்து ப்ரணய கலஹம் பண்ணி இருந்தார்களோ -என்னில்
கோப்யா ப்ரகல்ப வநிதைகள் -ஊடல் கொள்வதற்கு விஷயம் தெரிந்த முதிர்ந்த பெண்கள்- அன்றிக்கே எட்டும் இரண்டும் அறியாத இடைப்பெண்கள் ஆகையாலே
காசிதா லோக்ய கோவிந்த மாயாந்த மதி ஹர்ஷிதா -க்ருஷ்ண க்ருஷ்ணேதி பஹூ ஸ
ப்ராஹ நான்யது தீரயத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-44–(வருகின்ற கோவிந்தனைக் கண்டு மிக யுகந்து ஒருத்தி கிருஷ்ணா கிருஷ்ணா என்று பலகால் சொன்னாள் வேறு ஒன்றுமே சொல்லவில்லை -)என்றும்
தஸ்யைவ ரூபம் த்யா யந்தீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-13-46- (அவன் திரு உருவத்தை தியானித்து இருந்தாள் என்றும்)என்றும் –
நேத்ர ப்ருங்காப்யாம் பௌ தன்முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-45- (ஒருத்தி கண்களாகிற வண்டுகளாலே அவனுடைய முகத் தாமரையைப் பருகினாள் என்றும்
அவன் தூரத்திலே தோற்றும் காட்டில் அறிந்து கொண்டு மேல் விழுந்தார்கள்)-என்றும்
அதுக்கடி என் என்னில்
த்ரை லோக்ய கோப்தாரம்
ரஷ்ய வர்க்கம் கூடு பூரித்துக் கிடக்கிற இத் த்ரை லோக்யத்திலே இந்த நாலு இரண்டு பேரை ரக்ஷித்தால் என் -தவறில் என் -அவனுடைய ரக்ஷகத்வத்துக்குப் பங்கம் வரப் புகுர நின்றதோ
இனி ஸ்வ தந்த்ரனோடு ப்ரணய ரோஷம் கொண்டாடில் மூட்டவிழ்ந்து விடுமத்தனை
என்று மேல் விழுந்தார்கள்
இப்படி ஸ்வ தந்த்ரனாகில் தானிருந்த இடத்தே இவர்கள் அடைய வந்து விழும் படி இருக்க
இருந்த இடத்தே இராதே வருவது என் என்னில்
கிருஷ்ணம்
அவர்களுடைய ஸ்பர்ஸத்தையும் -அவர்களுடைய தாழ்ந்த யுக்திகளையும் ஒழியச் செல்லாமை யுடையவனாகையாலே
(மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –சூரணை-179-)
இப்படித் தங்களை ஒழியச் செல்லாமை யுடையனான பின்பு அவன் தானே வந்து கால் கட்டும் படி இராது ஒழிவான் என் என்னில்
அக்லிஷ்ட சேஷ்டிதம்
ஸ்ம்ருதியாலே
அதாகிறது
இனிச் சிறிது போது தாழ்க்குமாகில் அடியே தொடங்கி
பஹு ஸ்யாம் -சாந்தோக்யம் -6-2-3- நான் பலவாகக் கடவேன் என்று ஸங்கல்பித்து ஸ்த்ரீ ஸ்ருஷ்டி பண்ண வேண்டும்படியாய் விடும் இறே
அப்படிச் செய்யாதே ஓர் அளவிலே மறைந்தானாய் பிசகாதபடி ரஷித்த உபகாரத்துக்காக
விடாய்த்தவன் விக்கிச் சாகாமல் இருப்பதற்காகச் சிறிது சிறிதாக நீரூற்றுவாரைப் போலே இவன் மறைவதும் இவர்களை சாத்மிக்க சாத்மிக்க–பொறுக்கப் பொறுக்க – தன்னை அனுபவிப்பிக்கையாலே உபகாரமாகவே இருக்கும் என்றபடி
——–
இரண்டாவது வியாக்யானம்
ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-
தத
பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தால் அரை க்ஷணம் செல்லாத படியான விடாய் பிறந்த அநந்தரம்
பொறுக்கப் பொறுக்க அநுபவிக்கச் செய்ய வேணும் என்று புரிந்தவன்
இவர்கள் ஸத்தைக்கே மோசம் வரும்படி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டானே
தத
ஸ்வ யத்னத்தாலே அவனைத் தேடிக் காண மாட்டாதே இயங்கி செய்த பின்பு
தேஹாந்தரே
தேசாந்தரே
காலாந்தரே
காணப் பெற்றதோ என்றால்
சுமை தள்ளின அநந்தரம் -ரஷா பரத்தை ஸமர்ப்பித்த -அநந்தரம்
பேற்றிலே தோள் மாறினார்கள்
கண் படைத்த பிரயோஜனம் பெற்றார்கள்
(சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் )
ததோ தத்ருஸூ
யஸ்ய ராமம்-ந பஸ்யேத் —-ஸ நிந்தித–அயோத்ய -17-11)(என்று இறே காணப் பெறாத போது அவன் நிந்திக்கப்பட்டவனாய் அன்றோ இருப்பது
ந சந்த்ருஸே திஷ்ட நிரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்சநைநம் –தைத்ரியம் -இவன் உருவம் கண்ணால் காண்பதற்கு நில்லாது-எவனும் இவனைக் கண்ணால் கண்டவன் அல்லன் -என்றும்
ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாசா நாந்யைர்தேவை -முண்டகம் -கண்ணாலும் வாக்காலும் மற்ற இந்த்ரியங்களாலும் காணப்படாதவன் என்றும்
யத் ததத்ரேஸ்யம் அக்ராஹ்யம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-6–என்றும்-அ நிர்தேச்யம் அரூபஞ்ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-66-என்றும்-இப்படிப்பட்டது என்று காட்ட முடியாததுமாயும் உருவம் அற்றதுமுமாய் இருப்பது பர ப்ருஹ்ம ஸ்வரூபம் என்றும் ‘
கட்கிலி -7-2-3–என்றும்
நிஷேதிக்கிறது ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு இறே-
தானே தன்னைக் கண்ணனாகவும் ராமனாகவும் காட்டக் கண்டவர்களுக்கு அல்லவே
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட -1-2-23-–எவனை இப் பரமாத்மா வரிக்கிறானோ அவனுக்கு இவன் தன் திருமேனியைக் காட்டுகிறான்–என்றும்
மநஸா து விஸூத்தேந -விஷ்ணு தர்மோத்தரம் -275-2- பரிசுத்தமான மனத்தினால் காணலாம்- -என்றும்
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா — -முண்டகம் -ஜகத் காரணமாயுள்ள பரம் பொருளைப் பேர் அறிவாளர்கள் காண்கிறார்கள் என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-விஷ்ணுவுடைய அந்த மேலான ஸ்தாநத்தை நித்ய ஸூரிகள் காண்கிறார்கள் -என்றும்
காண்பன் அவன் கண்களாலே -1–9-9-என்றும்
அவனாலே அவனைக் காணலாம் போது காணலாம் என்று அந்த வேத ஸாஸ்த்ரங்களே கூறின அன்றோ
(கண்ணே உன்னைக் காண -அவராகிய கண்ணாலே காணலாம் அன்றோ–காணுமாறு உண்டு எனில் அருளாய்-அனைத்தையும் தேவகிப்பிராட்டிக்குக் காட்டி அருளினான் அன்றோ)
இப்படிக் காண்கிற இடத்திலே தேஹாவஸா நத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே போயோ என்னில்
ஆயாந்தம்
எதிர் சூழல் புக்கு -2-7-6-கிருஷி பண்ணித் திரிகிறவனை
இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் -திருவாய் -8-5-11-என்கிறபடியே அவ் விடத்திலேயே காணப் பெற்றார்கள்
ஆயாந்தம்
என்கிற வர்த்தமான நிர்த்தேசம் என் -என்னில்
யுகபந் மோக்ஷம் உண்டாகில் இறே எதிர் சூழல் மாறுவது
இஸ் ஸம்ஸாரமாக அவன் கிருபையாக எதிர் சூழல் மாறாது இறே
ஸம்ஸாரமும் அழியாது -அவன் கிருபையும் அழியாதே இறே
ஆகவே என்றுமே வந்தவனையென்று இல்லாமல் வருகிறவனை என்றே இருக்கும் அன்றோ
இப்படிக் கிருஷீ -முயற்சி -செய்வதாலேயே கிருஷ்ணன் என்று பெயர் பெற்றான்
நம்மைக் கொடு வந்து ஸூலபனாக்கிக் காட்சி கொடுத்தோமாகில்
இத்தால் வரும் ப்ரீத் யப்ரீதிகள் தங்களுக்கு அன்றோ -என்று
நிர் விகாரனாய் இருந்தானோ என்னில்
விகாஸீ முக பங்கஜம்
மலர்ந்த முகத் தாமரையை யுடையவனை
விபீஷணனை இலங்கையில் முடி சூட்டிய பின்பே
விஜ்வர -என்றும்
பிரமுமோத ஹ -என்றும்
ஆஸ்ரித கார்யம் தலைக்கட்டினது தன் பேறாக உகந்து
அவ் வுகப்பு தன் திரு முகத்திலே நிழல் எழும்படி இருந்தான் காண்
நின்றவர்கள் தான் ஆர்
திவ்ய ஞாந உபபந் நாஸ்தே -என்றும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் -வஸிஷ்டோ அபி மஹா தேஜோ யே சேமே தபஸிஸ்திதா -என்றும்
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் -என்றும்
பேசப்படுகிற வேதங்களாதல்
வைதிக புருஷர்களாதலோ -என்னில்
கோப்ய
கோக்களையும் கவ்யங்களையும் பர தேவதையாக நினைத்து இருக்குமவர்களாயிற்று
இவர்கள் அதிகாரிகளாக இப்படி ஸூலபனாகைக்கு அடி என் என்னில்
கோப்ய
தங்கள் வருத்தத்தாலே அவனைக் காண இருந்து அவனாலே அவனைப் பெறுவது என்று அறுதியிட்டுப் பின்னையும்
ப்ராப்ய ருசி இருந்தவிடத்தே இருக்க ஒட்டாமையாலே கிருஷ்ண அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி -5-13-26-நானே கண்ணன் அழகாக நடக்கிறேன் பாருங்கள்-என்றும்
துஷ்ட காளிய திஷ்ட அத்ர-5-13-27–துஷ்ட காளிய நாகமே நில் நானே கண்ணன் -என்றும்
அவனுடைய -நடை பேச்சு செயல்கள்-கதி பாஷித சேஷ்டிதங்களைக் கொண்டு கால யாபநம் பண்ணின இதுவே பற்றாஸாக
கோப்ய தத்ருஸூ
ஸதா பஸ் யந்தி ஸூரயா -என்று இமை கொட்டி விழிப்பதும் கூட பகவத் அநுபவ விரோதி என்று நிமிஷ உன் மேஷங்களைத் தவிர்ந்து நித்ய ஸூரிகள் பெறும் பேற்றை இறே-
ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –10-3-1- என்கிறபடியே-
இவன் பசு மேய்க்கப் போந்தான் -ஒரு பகலாகிலும் பிழைக்கும் என்று இருக்கும் இவர்கள் பெறுகிறது
ப்ராப்ய வஸ்துவைப் பேசும் இடமடைய
காரணம் து த்யேய -அதர்வ சிகை –காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது-என்றும்
ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந –ப்ருஹ -6-4-22-எல்லாவற்றையும் வசத்தில் நடத்துமவன் -அனைவருக்கும் ஈஸ்வரன்-என்றும்
க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே -ரஜஸ் என்னும் பிரக்ருதிக்கு மேலே எழுந்து அருளி இருக்கும் உன்னை ஸ்துதிக்கிறேன்-என்றும்
வைகுண்ட து பரே லோகே -ஸ்ரீ வைகுண்டம் என்னும் மேலான உலகில் ஸ்ரீ தேவியோடு கூடிய லோக ஸ்வாமி-என்றும்
திவி திஷ்டத் யேக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -எல்லா உயிர்க்கும் ஆத்மாவானவன் அப்ராக்ருத லோகத்தில் இருக்கும் நாராயணன் ஒருவனே -என்றும்
பேசப்படுகிறவன் கிடீர் இடையருக்கும் இடைச்சிகளுக்கும் இலக்கானவன்
இங்கே ஸந்நிஹிதன் என்றால் இது வஸ்த்வந்தர ஸூசகமாய்த் தோற்றாதோ -இருவரும் வெவ்வேறு ஆனவர்களாகத் தோற்றாதோ என்னில்
த்ரை லோக்ய கோப்தாரம்
இப்படி பரத்வத்தில் எல்லையிலே நிற்கிறவன் கிடீர்
இவனுடைய பரத்வத்தைப் பார்க்கக் கீழே சொன்ன ஸுலப்யம் கூடாதபடியாய் இருந்ததீ என்ன(ப்ரஹ்மமே கிசோர பாவம் கொண்டு பிறந்தான் அன்றோ)
கிருஷ்ணம்
பாரே புராதந கிராம் பார்ஸ்வே சா கோஷ யோஷிதாம் பழ மறையின் அக்கரையில் நிற்கும் வஸ்து ஆய்ச்சிகளின் அண்டையிலே நின்றது -(முந்தானையில் முடிந்து கொள்ளும் படி இருக்கிறானே)என்று வேதங்களுக்கு
நேதி நேதி –இது இப்படிப்பட்டது அன்று இது இப்படிப்பட்டது அன்று -என்றும்
யதோ வாஸோ நிவர்த்தந்தே –தைத்ரியம் -எதனிடம் இருந்து வாக்குகள் திரும்புகின்றனவோ என்றும்
அவிஞ்ஞாதம் விஜாநதாம்–கேந -அளவிட்டு அறிந்தவர்களுக்குப் பரம் பொருள் அறியப்படாதாகிறது -என்றும்
எட்டாதபடியாய் இருக்கும் இவ் வஸ்துவே
இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கால் மேல் கால் ஏறிட இட்டுக் கொள்ளலாம் படியாய் இருக்கும் ப்ராப்ய வஸ்துவுக்கு லக்ஷணம் பரத்வ ஸுலப்யங்கள் இரண்டுமே இறே –
அத்யந்த துர்லபமான வஸ்து இப்படி ஸூலபமாகக் கூடுமோ என்னில்
அக்லிஷ்ட சேஷ்டிதம்
எளிதில் செயல் புரியும் -செயற்கு அரிய செயல்களையும் எளிதில் செய்து முடிப்பவன்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வே -6-8-இவனுடைய சக்தி மேலானதாகவும் பலபடிப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது -என்றும்
ஸர்வ ஸக்திஸ் து பகவான் –விஷ்வக் ஸேந ஸம்ஹிதை -எல்லா சக்தியும் உடைய பகவான் சக்தி அற்றவன் போலே நடக்கிறான் –என்றும்
ஏவம் விதமான அகடிதகடநா ஸாமர்த்யத்தை உடையவன் -செயற்கு அரிய செயற்க்கு அரிய செயல்கள் செய்யும் செயல் திறமையை யுடையவன் -என்கிறது
(பராவரே -உலகில் உள்ள பரர்களை அவரர்களாக்கும் பரத்வம் -பரத்வ ஸுலப்யங்களுக்கு ஸீமா பூமி இவன் அன்றோ)
————————
2-ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –(மதுரையார் மன்னன் –உகந்த திருநாமம்-அயோத்தியை சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழ் -பெருமாளுக்கு மூன்று ஸ்தலங்கள்)
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலே பள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —
அவதாரிகை –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணு யாம தேவா பத்ரம் பஸ்யேமா ஷபிர்யா ஜத்ரா-அஷாபி பத்ரம் பஸ்யேம யஜத்ரா ஸ்திரைர் அங்கைஸ் துஷ்டு வாம்ச-தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு–தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்-பத்திரமான ஒன்றையே பார்க்க வேண்டும்
பகவத் விஷயமே நல்லதும் போக்யமும் பாவனமும் -ஞான பக்தி வைராக்யம் மூன்றுமே வேண்டுமே-இவற்றை விவரித்து அருள்கிறார்
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ஸ்வே-1-12- என்கிறபடியே
சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
அதில் அசித்து –அஜாமேகாம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ஸ்வே -4-5- சிவப்பு வெளுப்பு கறுப்பு என்னும் மூன்று நிறங்களை -குணங்களை -உடையதும் தன்னை ஒத்த பல குழந்தைகளை -மஹான் -அஹங்காரம் பூதங்கள் –முதலானவற்றை உண்டாக்குவதும்
ஒன்றாய் இருப்பதும் -பிறப்பற்றதுமான ப்ரக்ருதிய–என்கிறபடியே
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரஸ்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
விபரீத ஜ்ஞான ஜனகமாய் –(பிறக்கிறது இருக்கிறது பரிணமிக்கிறது வளர்கிறது குறைகிறது அழிகிறது என்னும்)ஷட் வித விகாராஸ் பதமாய் -சதத பரிணாமியாய்-சதத ஷணஷரண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய் -(உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா அலகிலா விளையாட்டுக் கருவியாய்)இருக்கும் –
சித் வஸ்துவைப் பார்த்தால் தேக இந்த்ரியாதி (ஆதி -மனம் பிராணன் அறிவு)விலஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –
ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பர தந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –
இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் (ஈடுபாடு)இன்றிக்கே
பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
பார லௌகிக பல சித்தி ஹேதுவாக –பதிம் விஸ்வஸ்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே
லோகாயத மத அநு சாரிகளாயும்
ஸ்யாதிஸ்தி ஸ்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ஸ்யா ஸ்திதி -ஸ்யான் நாஸ்தி -ஸ்யா தஸ்தி ச நாஸ்தி ச –ஸ்யா தஸ்தி இதி வக்தவ்யம் ச-ஸ்யா நாஸ்தி இதி வக்தவ்யம் ச –
ஸ்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் ச -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும்
கதிமிச்சேஜ் ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூகதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூகத மத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம் பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயண பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சகதிமிச்சேஜ் ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூகதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூகத மத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம் பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயண பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சம்யக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
புண்டரீகாஷ சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு
மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –(முதல் நிர்வாகம் -இது–மோக்ஷ பலனாக இல்லாமல்)
பத்ரம் கர்ணேபி ஸ்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி
1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
தேவர்களே விஜிகீஷா (வெல்லுவதில் விருப்பமான)ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்
பத்ரம் பஸ்யேமா ஷபிர்யா ஜத்ரா-அஷாபி பத்ரம் பஸ்யேம -இங்கே பஸ்யேம என்ற போதே சித்தம் அன்றோ
அஷபி-என்கைக்கு அடி என் என்னில் -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வபாவ ஆக்யாந மாக வுமாம் –
அஷபி -பத்ரம் பச்யேம -ஸ்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்
யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –
ஸ்திரைர் அங்கைஸ் துஷ்டுவாம் ச-
பஸ்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
ஸ்திரைர் அங்கைஸ் துஷ்டுவாம் ச-
ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
க்ரியா சமபிஹாரே யங்-ஆய்-யங்-லு கந்தம் ஆகையாலே ஸ்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –
தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ்ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
விசேம என்னாமல் வ்யசேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –
ஆக -இத்தால் -பத்ரஸ் ஸ்ரவணமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ஸ்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர் தர்க்யமும்பிரதிபாதித்தாயிற்று –
அங்கன் அன்றியிலே –உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு இதினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா –
இங்கு தேவ சப்தம் –தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்ய சப்தத்துக்கு உப லஷணம்-
தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம் ஸ்ருணுயாம்-ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ -திருவாய் -7-5-3-என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்
ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் –
பத்ரம் பஸ்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
இங்கு பத்ர சப்தத்தாலே –சதைக ரூப ரூபாய -என்றும் –ந பூத சங்க சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
தத்ருஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாசிந –என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
பகவத் அனுபவ ரூபம் இறே கண்ணுக்கு இலக்காகுவது
யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
யோ அஹம் அஸ்மி ச சந் யஜே-என்றும் –ச ஸ்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவிஸ் பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாஸமும்(உயிரை அறவில்லை செய்தனன் தோழி என்பதே இங்கு ஹவிஸ் ஸமர்ப்பணம்)
ஏவம் பூதமான நியாஸ வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும்-யஜத்ரா– வும் -ஆச்சார்ய சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது
ஸ்திரிர் அங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யுதாயு –
ஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண விநாசியான தேஹம் போல் அன்றியே
அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
ஹாவு ஹாவு ஹாவு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று- ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக –
தான் அவதீர்ணனான அவ் வவதாரங்களில்
மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒரு புறம் சொல்லவே இருக்கும் –
ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அ நிர்ப் பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்-
ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன் அடிக் கீழ் ஆக்கா நிற்கும்
பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்ய க்ருஹ்ணன் த்ருட வ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்
கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் –ரூபமே தச்ச சதுர் புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
அவதார தசையிலும் ஆஸ்ரித சம்ரஷணத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இறே
அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –
ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ் வவதாரத்திலே இறே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் –திருவாய் -1-3-1- என்றும்
கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
கோவிந்தற்க்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
வார் மணல் குன்றில் புலர நின்ற வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
இப் புடைகளிலே ஆழ்வார்களும் இவ் வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்
ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
சகல ஜகத் காரணத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
சமுத்திர சாயித்வத்தையும்
சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி மதுரா புரீ சங்கதத்வத்தையும்
பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-
ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் -(அரையர் தாளம் எறிந்து அடி பட்ட ஸுலப்யம் இன்றும் காணலாமே )
2- ஏஷ -அனுமாநம் ஆகமம் அர்த்தாபத்தி அநுப லப்தி -யாதிகளான–பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது -(தேவ தத்தன் பருத்து பகலில் உண்ணாமல் -என்றால் இரவில் உண்கிறான் என்பதே அர்த்தாபத்தி)(காணுமோ கண்ண புரம் -என்று காட்டினாள் -ப்ரத்யக்ஷம் )
(பிரான் இருந்தமை காட்டினாள் திருத் தாயார் -இவளோ திவ்ய தேசம் காட்டுகிறாள் -கருவிலே திருவில்லாமல் கண்ணை மூடி செவிக்கும் துர்பாக்கியவாதிகள் -பட்டர் -கண்ணைத் திறந்து பார்க்க வேண்டுமே–கண்டு மேல் அஞ்சலி பண்ண சொல்ல மாட்டாமல் சேஷம் காட்டினாள் )
(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் பயில்கின்றாளால் –வர்த்தமானம் நிகழ் காலம் –என்று என்று -முதலில் தெரியும் போல் -பின்பு தெரிந்து கொள்ள முடியாமல் இருக்குமே -அழகைக் காட்டி ஈர்த்து கொள்வானே–பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் போல் )
(அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் ஸ்ரேஷ்டம் போல் கண்ணபுரம் அர்ச்சா ஸ்தலங்களில் ஸ்ரேஷ்டம்-வட மதுரைப் பிறந்தான் 9 பத்து ஆரம்பம்- இறுதியில் கண்ணபுரம் மங்களா சாசனம்)
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –காணுமோ கண்ணபுரம் காட்டினாள் –அங்கு சங்கை இது தெளிவு -இது அன்றோ இதன் ஏற்றம்
3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன்ந அவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவுமாம் –
4-ஏஷ -அங்கன் அன்றியே –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவுமாம் –
இப்படி சங்குசித வ்ருத்தியாய் இருப்பான் ஒருவனோ என்னில்
1- நாராயண –
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –
2- நாராயண –
ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
3- நாராயண –
சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத் பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
ஏகோ ஹவை நாராயண ஆசீத் ந ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதிவீ -மஹா உபநிஷத் -என்றும்
ஆபூத சம்ப்லவே ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு –பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் –நாராயண – –
நராஜ் ஜாதாநி தத்த்வாநி -பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேதந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –(பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து -கடைத்து -இடந்து உடைத்து)
தா யதாஸ்யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –
6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர்ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர் பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –
வீடுமின் ஊற்றவும் வீடு செய்து உம் உயிர் வீடு யுடையான்
ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத
ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்
7- நாராயண -அங்கன் அன்றியே –அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
8- நாராயண -மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
ஆஸ்ரயண உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
இக் குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –
ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சா ஸஸ் சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆசீத்-என்றும் சொல்லுகிறபடியே
ஹிரண்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரயணீயதையும் போக்யதையும் தோற்றுகிறது-
2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் –இத்தால் பூவும் மணமும் போலே அவிநா பாவம் தோற்றுகிறது –
ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈஸ்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி
3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத் தலைக்கு என்றால் –ஸ்ரீ மான் -இவளும்
இறையும் அகலகில்லேன் -என்று அலர்மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
ஸ்ரீய ஸ்ரீ யம்–என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ஸ்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் –
இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன் –
4- ஸ்ரீ மான் -இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டது படுவார்கள்
ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆஸ்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று
இத்தைப் பற்ற இறே ஆழ்வார்களும் –திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் -திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –
அது எங்கே கண்டோம் என்றால் –
1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இறே
2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –
3- ஷீரார்ணவ நிகேதந -அங்கன் அன்றியே –பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம் -18- என்றும் சொல்லுகிறபடியே
கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –
(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம் ருதோததி:||–ஶ்லோகம் 18 –
நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப் பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரி சுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.)
4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயணத்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-
(பர வ்யூஹ விபவங்கள் –
திருப்பாவையில் முதலிலும் அடுத்து இரண்டாம் பாசுரத்திலும் மேல் மூன்று பாசுரங்களில் போல்
இங்கும்)
ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
1-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏக ஆதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
2- நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
3- நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –
கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
1-ஆகத–கனத்து இருந்த களிறு –என்றும் –தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –
2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸிநீ சார்த்தத்துக்குத் தன் வடிவழகை தூளி தாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-
இப்படி வருகிறது தான் பரம பதத்திலேயோ திருப் பாற் கடலிலேயோ என்னில்(மன்னு வடமதுரை யுகங்கள் தோறும் -வாமனன் -சத்ருக்கனன் முன்பு -துருவன் தபஸ் செய்த திவ்ய தேசம்)
1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரி ஸூபா -என்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இறே-
2- மதுரா புரீம் -தேவாநாம் பூர் அயோத்யா என்கிற தேசம் போலே (தேவர் அல்லால் செல்ல ஒண்ணா)துஷ் ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
சத்ரு மித்ர உதாசீனரான கோடி த்ரயத்துக்கும் ஆஸ்ரயமான தேசம் இறே
3– மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது –
4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
ஜட (ஜல)பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இறே
5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய் தான் -கார்ய ஏக தேசத்திலே ஒதுங்கி வந்தான் –
6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் –ஸூ ப்ரபாதா ச ரஜநீ மதுரா வாச யோஷிதாம் பஸ்யந்த யச்யுத வக்த்ர அப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பன்னுவாரைப் போலே வந்தான் –
7-அங்கன் அன்றியே –அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –
8-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –
ஆக இந்த ஸ்லோகத்தாலே-
வாக்ய த்வயம் போலே உபாயத்வேனவும் உபேயத்வேனவும் ஆஸ்ரயணீயனாய்
ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
கங்கா பதநம் போலே ஆஸ்ரிதர் இருந்த தேசத்திலே தான் வந்து
தன் வடிவு அழகாலும்
நடை அழகாலும்
அஜ்ஞரானவர்களையும் வசீகரித்து சரிதார்த்தராம்படி(ஆஸ்ரிதார்த்தராம்படி )பண்ணிற்று ஆயிற்று –
அங்கன் அன்றியே
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே –பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும் –
அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
வட வரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
கற்றார் சேர் கண்ண புரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும் மதுரா புரீ சப்தார்த்தையும்
பிரதிபாதிக்கையாலே
ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று –
——————-
3-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –
அவதாரிகை –
ஸ்ரோதாக்களுக்கு இப் பிரபந்தம் ஆப்த தமம் என்று
இதிலே புபுத்சை பிறக்கைக்காக
விலஷணனான ஆச்சார்யன் பக்கலிலே
புபுத்ஸூவாய்
அபி ஜாதனான சிஷ்யன் அவசரத்திலே (சரியான காலத்திலேயே என்றபடி)பிரஸ்னம் பண்ணின படியைச் சொல்லுகிறது –
பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச –1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –
பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம் –
முனிவர் தலைவராய் -காலைக் கடன்களை முடித்தவராய் யுள்ள ஸ்ரீ பராசர மகரிஷியை
மைத்ரேய -ப்ரணிபத் யாபிவாத்ய ச –பரிபப்ரச்ச-
ஸ்ரீ மைத்திரேயர் என்னும் ரிஷி வணங்கி -அபிவாதனம் செய்து -நன்றாகக் கேட்டார் –
1-பராசரம்-
சஹோவாச வியாச பாராசர்ய -தை ஆர -1-9-என்று
வேதாச்சார்யனான ஸ்ரீ வேத வியாச பகவானுக்கு இவனோட்டை சம்பந்தத்தாலே
ஆப்தி சொல்ல வேண்டும்படி ஸ்ருதியிலே ஆப்தனாக சித்தனானவனை
2-பராசரம்-
வைதிக பஷத்துக்கு சத்ருக்களான பாஹ்ய குத்ருஷ்டிகளை
பிரமாண தர்க்கங்கள் ஆகிற சரங்களாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம் –
அதவா –
3- பராசரம் –
ஆந்தர சத்ருக்களான ராக த்வேஷாதிகளை சம தமாதிகளாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம்-
முநி வரம் –
பரமாத்ம விஷயத்தில் மனன சீலர் ஆனவர்களில் உத்க்ருஷ்டனானவனை
இத்தால் ஜ்ஞான சம்ருத்தி சொல்லுகிறது –
1-க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம் -என்று
இவ் உபாசனத்துக்கு அங்கமாக சாஸ்திர சோதிதமாய் ஜ்ஞான பூர்வகமான அனுஷ்டானமும் –
அனுஷ்டிதமான சமயத்திலே -2-1-க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம் -என்கையாலே
சத்வோத்தர காலத்திலே என்கை –
இத்தாலே
வசிஷ்டன் அந்ய பரனாய் இருக்க த்ரி சங்கு சென்று கேட்டால் போலே அன்றிக்கே
ஆச்சார்யன் அநந்ய பரனாய் இருக்கிற சமயத்திலே கேட்டான் -என்கை –
பர பஷ பிரதிஷேபம் பண்ணுகிற போது அவசரம் அன்று
உபாசன காலமும் அவசரம் அன்று
ததங்கமான அனுஷ்டான சமயமும் அவசரம் அன்று
ஆகையாலே க்ருத க்ருத்யனாய்த் தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவசரத்தே கேட்டான் என்கை –
3-மைத்ரேய –
யாஜ்ஞ வல்க்ய பகவானை இடங்களிலே பிரஸ்னம் பண்ணிப் போரும் ப்ரஹ்ம விதுஷியான மைத்ரி ஸூதனாகையாலே –
அவசரத்திலே பிரஸ்னம் பண்ணுகை தன்னைத் தோன்றி வந்ததன்று –
தன்னுடைய பிறப்பால் வந்தது -என்கை –
அன்றியிலே
கேகய மித்ரயு பிரளய -பாணிநி ஸூத்ரம் -7-3-2- என்றபடி
இய என்னும் பதம் -நிஷ் பன்னமாகக் கிடக்கிறதாகவுமாம் –
மித்ரயு -என்பவரின் பிள்ளை என்றும் கொள்ளலாம்-
1-பரி பப்ரச்ச-
ஒரு வார்த்தை சொல்லுகை அபேஷிதமான போது கண்ணுக்கு எட்டாதபடி பின்னே இருக்கவும் கடவது அன்று
கண் படும்படி பார்ஸ்வத்திலே இருக்கை சிஷ்யனுக்கு பிராப்தம்
அந்த ஸ்தானத்திலே நின்று கேட்டான் -என்கை –
(தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந—৷৷4.34৷৷
ப்ரணி பாதேந -நன்கு வணங்குவதாலும்
பரி ப்ரஸ்நேந –சூழ்ந்து நின்று கேட்பதாலும்
ஸேவயா.—கைங்கர்யத்திலும்
தத் -அந்த ஆத்ம ஞானத்தை
வித்தி –ஞானிகளிடம் இருந்து அறிவாயாக
தத்த்வ தர்ஸிந—ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த
ஜ்ஞாநிநஸ்-ஞானிகள்
தே -உனக்கு
ஜ்ஞாநம்–ஆத்மாவைப் பற்றிய அறிவை
உபதேக்ஷ்யந்தி -வணங்குதல் முதலானவற்றால் உகந்து உபதேசிப்பார்கள் –
பாதம்-கைகள் கால்கள் தலை ஐந்தும் –
நி பாதம் -அஹங்காரம் அடங்கி -மனாஸ் புத்தி அபிமானம் மூன்றும் -சாஷ்டாங்க நமஸ்காரம்
ப்ர நி பாதாம் -ப்ரணிபாத–இது ஸ்வயம் பிரயோஜனம் -என்ற புத்தி
பரிப்ரஷ்ந-சூழ்ந்து இருந்து கேட்டல் –ஆச்சார மூலம் -சக சிஷ்யர் மூலம் -அனுபவத்தால் -கடாக்ஷத்தால் -புரியும் அளவும் கேட்க -பர்யாப்த்தம் -பரி ப்ரஸ்னம்-பரி சாக்ல்யேந –அனைத்து சங்கைகள் போகும் படி சகலமும்-விஷயங்களை ஆழ்ந்து அறிய அத்தைச் சுற்றி பல கேள்விகளைக் கேட்டு உணர்வதுமாகும்)
2- பரி பப்ரச்ச –
நினைத்த அர்த்தத்திலே ஆச்சார்யன் உதாரனாம்படி பாடே அத்தைக் கேட்கை-
அதாகிறது
யன் மயம் ச ஜகத் ப்ரஹ்மன்-யதைஸ் ச ஏதச் சராசரம்
லீந மாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-5-என்று
சாமான்யத்தில் பிரஸ்னமாய்
விஷ்ணோ சகாஸாத் உத் பூதம் -ஜகத் தத்ரைவ ச ஸ்திதம்
ஸ்திதி சம்யம கர்த்தா அசௌ- ஜகதோ அஸ்ய- ஜகச்ச ஸ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-31-என்று
விசேஷத்திலே உத்தரமாம்படி கேட்டான் -என்கை –
3-பரிபப்ரச்ச –
அன்றியிலே பரி -என்கிறது சாகல்யா வசனமாய்
ஜ்ஞாதவ்யங்களை யடையக் கேட்டான் என்றாகவுமாம் –
ப்ரணிபத்ய-
பதனம் ஆகிறது -சர்வ அவயவங்களும் தரையிலே பொருந்த விழுகை –
நிபதநமாகிறது -ஆந்தரமான அபிமானமும் பக்னமாய் விழுகை
ப்ர ணிபதநாமிகிறது -இது தானே விஹிதம் என்று இருக்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாக இருக்கை –
அபிவாத்ய –
ஸ்வ நாமத்தை ஆவிஷ்கரித்துக் கொண்டு பாதோப சங்க்ரஹனம் பண்ணுகை –
ச —
ஆச்சார்யன் பக்கல் அனுஷ்டிக்கக் கடவ விநயங்களை சமுச்சயிக்கிறது –
———
பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்ய அபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம்
————–
ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்’ என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.
ஏறிய பித்தினொடு – மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு – ஸகல லோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும் – க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில் – பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும் – ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;
“என் பெண்கொடி யேறிய பித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக் கட்டிற்று.
உலகில் பித்துக் கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே;
அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன;
பித்து ஏறின நிலைமையிலும் பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை என்கிறாள்.
பராசர மஹர்ஷி முதலானார் தெளிந்திருந்து என்ன வார்த்தை சொல்லுவார்களோ
அந்த வார்த்தை இவள் சொல்லுகின்றாள் காண்மின்.
பராசரம் முநிவரம் க்ருதபெளர்வாஹ்நிகக்ரியம்இ மைததேய்: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய ச” என்கிறபடியே
வணங்கி வழிபட்டுக் கேள்வி கேட்ட மைத்ரேய பகவானுக்கு, நற்றெளிவு கொண்டிருந்த பராசர பகவான்
விஷ்ணோஸ் ஸகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திகம்.
ஸ்திதி ஸம்யமகர்த்தாஸென ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:.” என்று உபதேசித்த
அரும் பெரும் பொருளை இவள் பித்துக் கொண்டிருக்கிற நிலையிலே அவவீலையாக எடுத்துரைக்கின்றாளாயிற்று.
நன்கு வேதமோதிய அந்தணன் பித்தேறினாலும் வேத வாக்கியங்களையே சொல்லித் திரியுமா போலே
இவளும் வாஸநா பலத்தாலே பகவத் விஷயமல்லது பேசாளென்கை.
நீறு செவ்வேயிடக் காணில் நெடுமாலடியாரென்றோடும் = திருமாலடியார்களுக்கு பஸ்மதாரணம் சாஸ்த்ர நிஷித்தம்
என்னுமிடம் ஆழவாரறியாததன்று;
அப்படியிருக்க இங்கு அருளிச்செய்வதற்குக் கருத்தென்னென்னில்;
“த்ரவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்த்வமாக இடக் காணில் நெடுமாலடியாரென்றோடும்.” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
இதனை அடியொற்றியே மற்ற வியாக்கியானங்களு முள்ளன.
பஸ்மதாரணம் பண்ணினவர்களேயாயினும் அந்த பஸ்மத்தைக் குறுக்கே பூசாதே நெடுக இட்டால்
‘ஊர்த்த்வ புண்ட்ர தாரிகளிவர்கள்’ என்று அவ்வளவுக்காக ப்ரதிபத்தி பண்ணுமென்றபடி.
————————————
4–ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —
அவதாரிகை –
சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–
ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை சார்த்தம் தவத் அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –
ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –
அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –
ஆதௌ –
பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் –என்கிறார் –
பிரமாணம்-
சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
அசம்யக்த்வ ஹேது- ப்ரம விப்ர லம்பாதி (துயக்கு மயக்கு மறப்பு -இத்யாதி)காரண தோஷமும்-
நேதம் இத்யாதி- பாதகப்ரத்யமும் இறே –
காரண அநபேஷமுமாய் -அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –
இப்படி பிரமாணம் ஆகிறது –
இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –
வேதா –
காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
வாசா விரூப நித்யயா-என்றும்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -(v)என்றும் சொல்லுகிறபடியே
அநாதி நிதந அவிச்சின்ன சம்பிரதாயமாய் –
நித்ய நிர்த் தோஷமாய்-
ப்ரம விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான வேதங்கள் –
வேதா –
வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது என்
யோ புத்த்யதே ஸ பரான் போதயதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது
நேதி நேதி -என்றும்
க இத்தா வேத -(ஆண் அல்லன் பெண் அல்லன் இத்யாதி)என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
பிறரை அறிவிக்கும் படி என் என்னில்
ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
ஸ்வரூ பேண குணைச்ச யத்ர அநவதிக அதிசயம் -என்றும்
தவ அநந்த குணஸ் யாபி -என்றும்
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண -என்றும் சொல்லுகிறபடியே
வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே-அபரிச்சின்னம் என்று அறிகை இறே
அபரிச் சின்னத்தைப் பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் பர ஞாபகத்துக்கும் -பிறருக்கு அறிவிக்கும் பொழுதும்-குறை இல்லை –
வேத புருஷன் தானே –வேதாஹா மேதம் புருஷம் –என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
அறிந்தபடி என் -என்னில்
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று அறிந்தேன் என்றான் இறே
வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜநா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே
இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இறே
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-
நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
நேதி நேதி -என்றும் –
அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது அன்றே
இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
வேதா –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவ அதர்வணாநி ஸ -என்கிறபடியே
ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
அநந்தா வை வேதா -என்கிறபடியே
காண்வ மாத்யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –
யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
ஏக சந்திக்தே கார்யே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
ஜ்ஞாநாத் அசந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
பிரமாணாந்தர அவிஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது-
(காம் ஆனாய —கார்யார்த்தம் -பசுவைக் கூட்டி வா
அப்பா இவர் -அம்மா காட்டி அறிவிப்பது -இருக்கும் வஸ்து –பரி நிஷ்பன்ன வஸ்து
ஸாஸ்த்ர யோநித்வாத் –ஸித்த வஸ்துவையும் வேதவாக்யங்கள் சொல்லும்
ப்ரஹ்மத்தை ஆராதனை பண்ணு -கார்யார்த்தமும் உண்டே)
வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
வ்யாப்தி சித்தமாய்
திருஷ்டாந்த கதமான கர்ம வஸ்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிரசங்கிப்பதும் செய்யும்
இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
ந தத் சமஸ் ச அப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
ந த்வத் சமோ அஸ்த் யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே அப்ய பிரதிம ப்ரபாவ -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர்த்தத்யமும் பிரசங்கிக்கும்
ஆகையால் –இவ் விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –
(ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-
பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –
ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –)
ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
ப்ருதஹ்குபாத்தமாய் -சஹ படிதமான ஸ்ம்ருதி யாதி க்ருத்யம் என்ன –
வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தஸ்யமும் –(அர்த்தம் இல்லாமையும்)
இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –(ஒட்டாமையும்
)மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –
ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று(-இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா-இப்படி இப்படி என்று காட்டும் மீமாம்ஸை)
பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –
(வேதமும் ப்ரஹ்மமும் நித்யம்
இப்படி இப்படி என்று அறிய உபகாரம் செய்யும் இவை)
இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –
இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரணமும்
இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –
(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே..
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –அத்தாலே அது முற் பட்டது –)
அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
புராணம் -பரத்வ ஏக பரம் –
நியாயை (பஹு வசன பிரயோகம்)என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷணமாய் இருக்கிறது
இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
வாக்யார்த்த விசாரம் என்ன –
வாக்யாங்கமான பத வர்ண ஸ்வராதி நிர்ணயம் என்ன –
இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –
ஆக இத்தால்
புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிஸ்ரிதா –வேதா ஸ்தாநாநி வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -(4 வேதம் 6 அங்கம் -புராணம் நியாயம் மீமாம்ஸை தர்ம சாஸ்திரம் -ஆக 14-வேத சதுஷ்ட்யத்துக்கு அங்க உப அங்கங்கள் 14 ஆயுர் வேதம் அர்த்த சாஸ்திரம் தனுர் வேதம் காந்தர்வ வேதம்)என்றும்
அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
சீஷாயாம் வர்ண சிஷா –பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சோப்யாம்- சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் -கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
கல்ப அனுஷ்டானம் உக்தம் -ஹ்புசித கமிதயோர் நியாய மீமாம்சையோ ஸ்யாத்-அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா –(18) என்றும் சொல்லுகிறபடியே
அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது-வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-
(சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-
ஹே ரங்க நாத
சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்
வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –
பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –
சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்
கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –
கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது
ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட
நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்
புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்
தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே
தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
விசாரிக்கின்றன -என்றவாறு
பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே
நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-
நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே
ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
வ்யாக்ரணம் -இலக்கணம்
ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது)
ஸேதிஹாசை நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதிர் உபகுருதே -என்று
பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப் ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும் கபளீகரிக்கைக்கு ஈடான
அளவில்லாத மந்த மதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –
ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –
இதிஹாசம் ஆவது –
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்கிறபடி
கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
அவ் வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்மதா தடே -சாரஸ்வதாய தேநாபி மம சாரஸ்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம் -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –
புராணம் ஆவது –
புராபி நவ -என்றாய்
அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –
ந்யாயம் ஆவது
பூர்வ பஷ (யுக்திகளாலே )சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ் கர்ஷித்துக் கொடுக்கை –
ஆக இப்படி
ச அங்கமாயும் ச சிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
பிரமாணம் என்றே சொல்லுகிறது –
அது செய்யும்படி என் –
அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம் நிர்வபேத்-(அக்ரம் நயதேதி அக்னி)என்றும்
வாயவ்யம் ஸ்வேதமாலபேத பூதிகாம -என்றும்
ஐந்தரம் சாரும் நிர்வபேத் பஸூ காம -என்றும் இத்யாதிகளாலே
அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –
த்வத் அக்ரம் நயதேதி அக்னிர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
அவ் விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –
காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -(காக்காய் கறுப்பாக இருப்பதற்கும் -தித்யோதனம் வெளுப்பாக இருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்)என்று
அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம் ஜாயமாநம் விஸ்வம் பிபர்த்தி புவநஸ்ய நாபி -என்றும்
யத் கரோஷி யத் அஸ்நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் ச ஹூதாசநான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
ஏநமேகே வதந்த் யக்நிம் மனு மந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
சமாக்யைக்கு பாதகமான ஸ்ருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
தத் தத் பிரதேச அநுகுணமான அவயவ சக்தியாலே யாதல்(ஸ்ருதி- லிங்க ப்ரகரணாதியான–ஸ்ருதி -அடையாளம் –வாக்யம் -ப்ரகரணம் ஸ்தான பிரமாணம் –சமாக்யை -பேர் – (ஸ்தான பிரமாணம்-உகாரம் -அவதாரணம்-தண்ணீர் உறிஞ்சும் ஸூர்யன் -சம்சாரக்கடல் வற்றும் பரமாத்மா -ஸாஸ்வதம் ப்ரஹ்மம் போல்வன – )அடுத்த அடுத்த பிரமாணங்கள் துர்பலம்)
(அந்தர்யாமி பாவத்தால்)அபர்யவசாந வ்ருத்தியாலே யாதல்(அவனே அவனும் அவனும் அவனும்)
அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –
த்வத் அர்ச்சா விதி முபரி –
உம்முடைய ஆராதன விதியிலே –
யஜ்ஞேன தாநேந தபஸா அநாசகேந -(அநாசகேந-உண்ணாமல் பட்டினி இருந்தும்)என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
தேவருடைய சமாராதநத்தைச் சொல்லுகிறது
நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –
(அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல-ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-1-
(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)
நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை-(போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து) இதோ விமுகராக்கி- நல் வழியே போக்குகைக்கு
தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –
ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
இதுக்கு க்ருத்யம்-
ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –
(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததா ப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் — தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழின் இசை வேதத்தியல்.)
முதல் பழுவிலே தவறி ஏழாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
அனர்த்தகரமான சரீரத்தை விட்டு மோஷத்தைப் பெரு-என்று சொன்னால்
அப சர்ப்பேத் அசௌ கதா மோக்ஷ ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே
(தனம் குழையிடக் காது பெருக்குவாரைப் போலே
மாச உபவாஸிக்குப் போஜன புறப்பூச்சு போலே)
அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ஸ்யேன விதியை உபதேசித்து
அது பலித்து -அந்த வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
அது பலித்து -தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்ன பத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு(விவேகியான அவனுக்கு-தேஹ ஆத்ம விவேகம் ஸ்வர்க்கம் விரும்பிய இவனுக்குத் தானே ஏற்பட்டது)
அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
ப்லவாஹ் யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -(ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம்)என்றும்
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
ஸ்வர்க்கே அபி பாத பீதஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
ஆப்ரஹம புவநாந் லோகோ புநரா வர்த்தி ந -என்றும்
ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன -என்றும் உபதேசித்து –
இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெள்ள இவனை இதிலே மூட்டுகைக்காக
முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –
அழகியது –பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
உத்தர பாகத்துக்கு க்ருத்யம் என் என்னில்
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ் ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ-
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி -என்றும்
கஷாயே கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
அவித்யயா மருத்யும்-என்றும்
தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே
பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதக ஷயனானவனுக்கு
பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது
இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -(கர்ம அனுஷ்டானத்துக்குப் பிறகு கர்ம அனுஷ்டானம் பண்ணினாலேயே)என்றும்
வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதோர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்யம் இத் யுக்தம் பவதி -என்றும்
அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-
(ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-
ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.)
ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -14-
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாண குணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.-கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் )
ஊர்த்வோ பாக –
ஸ்ருதி சிரஸி விதீப்தே (ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே)-என்கிறபடியே
சத்வாரமாக பகவத் ப்ரதி பாதநம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
இவ் வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –
இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை —
ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –
த்வதீஹா –
ஜகத் ரஷண உபயோகியாக
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
பரத்வ ஸூசகமாயும்
சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும் சொல்லுகிறது –
சேஷ்டா தஸ்ய அப்ரேமேயஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித் யுபாதார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –
இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
குண –
குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -(ஸ்வரூபங்களையும் ஸ்வ பாவங்களையும் அறிந்தவன்)முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
ஸ்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள் என்ன
பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –
இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
அபரிமித குண கணனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
இருப்பிடமாதல் –
ஒரு போகமாதல்
பரிகரமாதல் இல்லையோ -என்னில்
விபவ –
சர்வஸ்ய வசீ சர்வசஸ் ஈஸான-என்றும்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மாநாம் ஈசதே தேவ ஏக –என்றும்
திவி திஷ்டத் ஏக-என்றும்
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதி என்ன –
லீலோபகரணமான போக பூமி என்ன
ஆக
உபய விபூதியையும் உடையன் –என்கிறது-
குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –
பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
அன்றியிலே
பரிஜ்ஞாபநம் ஆகிறது –
விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்
இவை அறிவிக்கிற இத்தால் பிரயோஜனம் என் என்னில்
த்வத் பதாப்தௌ-
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வரஜ் ஞாநாத் விசுத்தி பரமா மதா-என்றும்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-
ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
ஆத்மா நாம் அநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சரோ பவதி -என்றும்
இக் குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
சர்வஸ்ய வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே
இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –
அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
மனசா து வி ஸூ ததே ந -என்றும்
ஹ்ருதா மநிஷா மநசாபி க்லுப்த-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
ச விபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –
த்வதாப்தௌ -என்னாதே –
த்வத் பதாப்தௌ -என்கிறது
விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம் –
ஆக
இப்படியால் -ஊர்த்வ பாகமானது
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது
ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
உபாசனம் கண்டிலோமே -என்னில்
உபாசனம் ஆகிறது
த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –
ஆக -இத்தால்-
ந தாஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
வேதே ராமாயனே புண்யே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும் சொல்லுகிறபடியே
சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –
இவ்வர்த்தத்தை –
வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –
(ஏவகாரம் மூன்று இடத்திலும் கொண்டால் அனைத்து அர்த்தங்களும் ஸித்தமாகுமே
அஹம் ஏவ -என்னையே சொல்லும்
வேதைஸ் ஏவ -வேதங்களே சொல்லும்
வேத்ய ஏவ ச -என்னை சொல்லி அன்று நிற்காதே)
சர்வைர் வேதை –
அதீயமானமாயும் -விப்ர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்
அஹமிதி –
சர்வ அந்தர்யாமியாய் –
சர்வ சமாராத்யனாய்
சர்வ பல ப்ரதானவன் -என்கிறார்
ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
ஷத்ரியே யஜேத -என்றும்
ஷத்ரியாதி சப்தங்கள் தஜ் ஜாதி விசிஷ்ட பிண்ட த்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம்மளவிலே பர்வசிக்கக் கடவது -என்கிறார்
வேத்ய
வாசக சப்தமானது வாஸ்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்
பகவன் –
ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம் -என்கிறார்
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –
மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ -என்கிறார்
————-
ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-
ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –
ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே
ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே
உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன
அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்
த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது
வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –
வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –
கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்
உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-
இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–15-15-
ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
———-
ரஹஸ்ய சிகாமணி -தேசிகர்
கௌசிக புராணம் பராசர பட்டர்
நான் கண்டு கொண்ட நல்லதுவே -நம்மாழ்வார்-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் -பெரியாழ்வார்–பூமா தேவி கேட்டு -திருப்பாவையில் அருளிச் செய்தாள்-
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –
அவதாரிகை –
அனுபாவ்ய வஸ்து லாபத்துக்கு நிரபாய உபாயமான
1-ஆஸ்ரயண காலத்தையும் –
2-ஆஸ்ரயண அதிகாரியையும்
3-ஆஸ்ரயண பிரகாரத்தையும்
4-ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தையும்
5-ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது இந்த ஸ்லோக த்வயம் –
ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –
ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்(புத்தியும் உறுதியாக இருக்க வேண்டுமே -)
ஸூஸ்வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ஸ்லேஷ்மம்(கபம்) என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம் ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ(பூத காலம் -பக்தி தைலதாராவதி அவிச்சின்னமாகச் செல்ல வேண்டுமே)
தத் -பிற் காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய் –(அந்திம ஸ்ம்ருதி செய்ய யோக்யதை இல்லாத போது)
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத் பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன் –
ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி தாது சாம்யே ஸ்திதே-என்று -ஆஸ்ரயண காலத்தை -சொல்லுகிறது
யோ நர -என்று -ஆஸ்ரயண அதிகாரியைச் சொல்லுகிறது
ஸ்மர்த்தா -என்று -ஆஸ்ரயண பிரகாரத்தைச் சொல்லுகிறது –
விஸ்வ ரூபஞ்ச மா மஜம்-என்று -ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தைச் சொல்லுகிறது
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்று -ஆஸ்ரயண பலத்தைச் சொல்லுகிறது –
——-
ஸ்திதே மனஸி-மனஸி ஸ்திதே -மனம் நிலை நிற்கையில் –
மனஸ்ஸானது எது –
அதுக்கு அவ ஸ்தானம் ஆவது எது என்னில் –
மனஸ் ஆனது
அநாதி கால பாப வாசனை யாகிற மஹா வாதத்தாலே -புயல் காற்றாலே -ப்ரேரிதமாய்-
தனக்கு ஆவாஸ பூமியான ஹிருதய குகையிலே ஷண காலம் தங்கப் பெறாதே
கண்ட விஷயங்களிலே மண்டி (த் திரியும் தத்துவமே மனஸ்)–
அது நிலை நிற்கையாவது-
திறந்து கிடக்கும் வாசல் தோறும் புகுந்து புறப்படும் நாய் போலே
நினைத்த இடம் எல்லாம் புக்குத் திரியாமல் நிர் விஷயமாகை –
ஆக
இதில் மனஸ்ஸினுடைய விஷய அதீனமான
அந்ய பரத்தை தவிர்ந்தபடி சொல்லுகிறது-
(விஷாயாந்தங்களில் ஆபிமுக்யம் இல்லாத தசை இரண்டாவது -இந்த தசையிலேயே ஆஸ்ரயணம் பண்ண யோக்யதை வந்து விடுமே
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே–விலக்காமையே வேண்டியது
பகவத் விஷயங்களில் ஆபிமுக்யம் உண்டானதாய் -அடுத்த தசை)
அநந்தரம்
சரீர ஆலஸ்ய நிபந்தனமான -(சோம்பல் தூக்கம்)வியாதி காரணமாக –
மனஸ்ஸினுடைய அந்ய பரதா சாந்திக்கு ஹேது சொல்லுகிறது –
ஸூஸ்வதே சரீரே சதி -சரீரே ஸூஸ்வஸதே சதி -சரீரம் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கையில் -என்று
சரீரம் ஸ்வஸ்தமாய் அழகிதான அளவிலே வ்யாதீநாம் ஆகரமாய் இறே சரீரம் இருப்பது
அந்த வியாதிகளில் ஓன்று தலை எடுத்ததாகில்
தஜ் (வியாதி)ஜநிதமான துக்க அநு பாவத்திலே உப ஷீணம் ஆகையாலே
பகவத் விஷயத்துக்கு யோக்யம் ஆக மாட்டாது இறே நெஞ்சு
ஆகையாலே சரீர ஆலஸ்ய நிவ்ருத்தி மனஸ் ஸ்வாஸ் யத்துக்கு ஹேது —
அந்த சரீர ஆலஸ்ய நிவ்ருத்திக்கு ஹேது சொல்லுகிறது –
தாது சாமே ஸ்திதே -என்று
தாதுக்கள் ஆவன –
வாத பித்த ஸ்லேஷ்மங்கள் -அந்த தாதுக்களுக்கு சாம்யம் உண்டாகையாவது –
ஒன்றுக்கு ஓன்று ந்யூந அதிரேகம் அற்று ஒத்திருக்கை –
(கபம் முதல் 33 வருஷம்
பித்தம் 34-66
வாதம் அப்புறம்)
அந்த தாதுக்களினுடைய ந்யூநாதி ரேகங்கள் வியாதி ஹேது
மூன்றினுடைய ப்ரகொபம் மரணம் இறே
ஆகையால் அந்த வியாதி ஹேதுக்கள் தன்னில் ஒத்தவாறே
அவற்றினுடைய நிம்நோன்னதத்தாலே வரும் வியாதி உண்டாகாது –
வியாதி உண்டாகாமையாலே சரீரம் ஸ்வஸ்தமாம்
சரீர ஸ்வாஸ்த்யத்தாலே மனஸ் ஸ்வாஸ்த்யம் பிறக்கும் –
பின்பு மனஸ்ஸூ ஸ்மரண ஷமமாம் –
ஆக
கீழ் இத்தனையாலும் ஸ்மரண ஏகாந்தமான கால விசேஷத்தைச் சொல்லிற்று –
———
அநந்தரம்-
ஸ்மரணாதி காரியைச் சொல்லுகிறது –
யோ நர -என்று
நர சப்தம் -மநுஷ்ய வாஸீ
இதிலே தேவதைகளையும் உப லஷிக்கிறது
இத்தால்
பகவத் சமாஸ்ரயணத்துக்குக் கரண பாடவமே அபேஷிதம் என்றதாயிற்று
வஷ்யமாணமான ஸ்மரணத்துக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் (ஆதி ஆத்ம குணங்கள்)அப்ரயோஜகங்கள் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்-
வ்ருத்த மாகவுமாம் —
கரண பாடவமும்
ருசியுமே வேண்டுவது-
ஸ்மர்த்தா–
ஸ்மரணம் ஆவது ஒரு ஜ்ஞான விசேஷம் –(நினைவில் நெடியோன் -எண்ணிலும் வருமே)
மேல் –
விஸ்வ ரூபம் -என்று சேஷித்வத்தையும்
நயாமி -என்று உபாயத்வத்தையும்
பரமாம் கதிம் -என்று உபேயத்வத்தையும் சொல்லுகையாலே
இம் மூன்றும் இந்த ஸ்மரணத்துக்கு விஷயமாகக் கடவது
ஆக இத்தால் ஆஸ்ரயண பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –
———-
அநந்தரம்
ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்லுகிறது -விஸ்வ ரூபம் -என்கிற பதம் –
விஸ்வத்தையும் தனக்கு ரூபமாக உடையவன் விஸ்வ ரூபி யாகிறான்
இவன் விஸ்வ சரீரியாய் இருக்குமாகில்-உபய கதமான தோஷமும் ஸ்பர்சியாதோ(அசித்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ தோஷங்களும் சித்துக்கு ஸ்வ பாவ தோஷமும் உண்டே)-என்னச் சொல்லுகிறது -அஜம்-(பிறப்பிலி)
ஜனன மரணாதி ஸூந்யம்-
இந்த ஜனனம் சரீர தர்மமான ஷட் பாவ (அஸ்தி ஜாயதே இத்யாதிகள்)விகாரங்களுக்கும்
ஆத்ம தர்மமான அஜ்ஞான துக்காதி களுக்கும் உப லஷணம்-(ஆதி காம க்ரோதி போல்வன)
ச-(உம்மைத் தொகை)
இச் சேதனனுடைய ஹிதாஹித ஜ்ஞான விசேஷத்தையும்
ஜ்ஞான அநு குணமாக கார்யம் தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தியையும் தயையும் கணிசிக்கிறது –
மாம் –
என்னை என்றபடி
அசாதாரண விக்ரஹத்தை அஸ்ம தாதிகள் கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு (ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாம் படி)நிற்கிற சௌலப்யத்தையும்
மானமிலாப் பன்றி (பரஞ்சுடர் உடம்பாய் இருந்தும் அழுக்குப் பதிந்த உடம்பாக அவதரித்து)என்று அத்யந்த நிஹீனமான வராஹ ஜன்மத்திலே
அத்யாபி நிவிஷ்டனாம்படியான சௌசீல்யாதி அதிசயத்தையும் மூதலித்துக் காட்டின படி –
———
அநந்தரம் -தத -இத்யாதி ஸ்லோகத்தாலே –
ஆஸ்ரயித்தவனுக்கு ஈஸ்வரன் உண்டாக்கும் பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது
தத -பின்பு என்றபடி –
இத்தால் ஸ்ம்ருதி யினுடைய நைரந்தர்யத்தைக் (ஸதா அநு ஸ்மரணம் நிரந்தரமாக இருக்கும் தன்மையை)கழிக்கிறது-
தம் –
ஸ்மர்த்தா -என்கிறபடியே –
என்னையே உபாய உபேயமாக அத்யவசித்த அதிகாரியை –
இவனுக்கு பலம் கொடுப்பது எப்போதோ என்னில் -ம்ரியமாணம் –
மரண உன்முகமான சமயத்திலே
து சப்தம் -சாதகனில் காட்டில் இவ் வதிகாரிக்கு வஷ்யமாணமான விசேஷத்தை த்யோதிப்பிக்கிறது
அந்த விசேஷம் என் என்னில்
காஷ்ட பாஷான சந்நிபம் –
ஜ்ஞான சம்சர்க்க ஸூ ந்யமான காஷ்ட பாஷாணங்களோடு ஒத்து இருக்க அமையும் –
சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி கொண்டு உஜ்ஜீவிக்க வேணும் என்று சொல்லா நிற்க
அந்திம ஸ்ம்ருதி ஒழிய உஜ்ஜீவிப்பிக்கக் கடவன் என்கை சாஸ்திர விருத்தம் அன்றோ என்னில்–அதுவும் அப்படியே –
இந்த அம்சம் என்னது (உபாஸகனுக்கு அது பிரபன்னனுக்கு இது)-என்கிறார் –அஹம் ஸ்மராமி -என்று
அபேஷித ஸ்மரணத்துக்குக் கர்த்தா நானே
க்ருஷ்யம்சம் கர்ஷகனுக்கு அன்றோ
(நினைவு தானே அபேக்ஷிதம்
நான் நினைக்கிறேன்
நானே அந்தராத்மா
அவன் நினைவும் என் நினைவாலே தானே
பலமும் என்னது
ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் நானே)
ஸ்மர்த்தா –
இவன் ஒரு கால் ஸ்மரித்தான் ஆகில் -அநவரத பாவனை பண்ணக் கடவன்-
நீ இப்படி மேல் விழுந்து நினைக்கைக்கு இவன் பக்கல் தன்னேற்றம் என் என்னில் -மத்பக்தம் –(மத் காயாக -நம் பாடுவான் என்பதே அவனுக்கும் நிரூபகம்)
எனக்கு நல்லவன் அன்றோ
மத் பக்தம் -என்று ப்ரபன்ன அதிகாரியைச் சொல்லுகிறது –
ஆக என் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியை உடையவன் ஆகையாலே
அவன் காஷ்ட பாஷாண சந்நிபனே யாகிலும் நான் ஸ்மரிப்பன்-
இங்குச் சொல்லுகிற ஸ்மரணம் ஆவது –
இவன் தன் கார்யத்தில் கை வாங்கி நம் பக்கலிலே தன் சர்வ பாரங்களையும் சந்யசித்தான்
ஆன பின்பு இவன் கார்யம் அடைய நமக்கே பரம்
இவன் இன்னம் ஒரு கால் உத் க்ராந்தி க்லேசம் அனுபவித்தல்
யமன் முகத்திலே விழித்தல் -கர்ப்ப குஹையிலே கிடத்தல் -செய்யாதே
இவன் நித்ய கைங்கர்யம் பண்ணி நித்ய ஆனந்தியாக வேணும் என்கிற சங்கல்பம் –
நயாமி பரமாம் கதிம் -என்றது –
பரம ப்ராப்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –
பரமாம் கதிம் நயாமி –
பரமையான கதியைக் கொண்டு ஸ்வீகரிப்பிக்கக் கடவன்
கதியாவது –
கம்யத் இதி கதி -என்கிற வ்யுத்பத்தியிலேயாய் -ப்ராப்யத்தைச் சொல்லுகிறது
அதில் -பரம கதி யாவது –
அதுக்கு அவ் வருகு இல்லாத ப்ராப்யம் –
அதாவது -பரம புருஷார்த்த லஷண மோஷம் –
நாட்டில் புருஷார்த்தமாக வேண்டுவது –
தர்மார்த்த காம மோஷம் -இவை புருஷார்த்தமாகக் காட்டாமையாலே அத்தை வ்யாவர்த்தித்து –
ஸ்வயம் புருஷார்த்தமாய் -ஸ்வ ரசமாய் -நிரதிசயமான பகவத் கைங்கர்யமான பரம ப்ராப்யத்தைச் சொல்லுகிறது –
(எம்மா வீட்டுத் திறமும் செப்போம் –நின் செம் மா பாத பற்பு சென்னியில் -அடியார் குழாங்களுடன் கூடி ஒழிவில் காலம் எல்லாம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யப் பாரித்து -ருசியே வேண்டுவது)
நயாமி –
அந்தப் ப்ராப்யத்தைப் ப்ராபிக்கும் இடத்தில்-
ஆதி வாஹிகர்கள் கையிலே காட்டிக் கொடேன் –
அத்த வாளத் தலையாலே முட்டாக்கு இட்டு நானே கொண்டு போகக் கடவேன் –
லங்கா ஜன பதத்தில் இருந்த பிராட்டியைப் புஷ்பத்தின் மேலே தானே எடுத்து வைத்துக் கொண்டு
போனால் போலே காணும் இவ் வாத்மாவைக் கொண்டு போம்படியும் –
(தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்–91-)
—————————————
திரௌபதி பிரபத்தி ஸித்தாஞ்சனம்
புருஷகார பலம் இல்லையாதலால் சிலர் இது பலிக்க வில்லை என்பர்
இங்கு திரௌபதிக்கு –ஞாதம் மயா வசிஷ்டேந புரா கீதம் -என்று வசிஷ்டரின் ஸ்மரணம் உள்ளதாகையாலும்
மேல்
கஜேந்திர ஸரணாகதி போன்ற இடங்களில் பல ஸித்தியைக் கொண்டு அர்த்த பலத்தாலே புருஷகார புரஸ் ஸரணத்தைக் கற்பித்துக் கொள்வது போல் இங்கும் கற்பித்துக் கொள்ளலாம்
இனி திரௌபதிக்குக் கிடைத்த பலன்கள் யாவை -எப்போது கிடைத்தன
ரக்ஷமாம்–ரஷிக்கையாவது -விரோதியைப் போக்குகையும் அபேக்ஷித்ங்களைக் கொடுக்கையும்
இவளுக்கு வஸ்த்ர வர்த்தகமும் ஸத்ரு சம்ஹாரமும் அபேக்ஷிதங்கள்
திருநாம சங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் ஒரு சிறு அம்சமான கோவிந்த நாமமே புடவையைச் சுரந்து விட்டது
மற்றப் பலன்கள் பின்னர் பெற்றாள்
ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம் –90–44–47-என்று பல கால் அனுசந்தித்து உபாயத்வ புத்தியை விடாமல் இருந்தாள் அன்றோ
உபாயாந்தர ஸம் சர்க்கத்தாலேயே பலன் விளம்பித்து பெற்றாள்
மேலும் நைவ மே பதயஸ் சந்தி ந புத்ரா ந ச பாந்தவா ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது ஸூதந மாம் விப்ரக்ருதாம் ஷுத்ரைர் உபேஷ் த்வம் வி சோகவத்
ந ச மே ஸாம்யதே துக்கம் யத் ப்ராஹ ஸத் ததா –ஆரண்ய –12-128-129-என்றும்
உபாயாந்தர ஸம் சர்க்கம் இவளுக்கு ஏற்பட்டது என்பது தெளிவு
உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி –லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –ஹே ரமா நாத -என்றும் உள்ளதாகையாலும் புருஷகார புர ஸ்மரணம் உண்டு என்றே கொள்ளலாம்-மாதவனை -மார்க்கண்டேயர் -பிராட்டி உடன் கூடிய அவனைப் பற்றச் சொல்லி உபதேசம் -இதற்காகவே சத்யபாமையையும் கூட்டிச் சென்றான்-
மார்க்கண்டேயர் உபதேசப்படி
ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-மீண்டும் ஸரணாகதி செய்து பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-
——-
6-ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –
அவதாரிகை
ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்
பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
த்ரௌபதி யினுடையவும்–
சிந்தயந்தி யினுடையவும் –
தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று –
(பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
திரௌபதி ஸ்வ லஜ்ஜையை விட்டாள்
இவர்களுக்கு விளம்ப பேறு
சிந்தயந்தி அனைத்தையும் துறந்து உடனேயே பேற்றைப் பெற்றாள்)
இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம் –
அதாவது
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –
அப்படியே இறே-
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -பார -சபா -90-42-என்றதும்
இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
அதினாலே பரிபூதையான தான் –
அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1-
என் நான் செய்கேன் -ஸூவ ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
யாரே களை கண் -இதரர் ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
என்னை என் செய்கின்றாய் -இவன் ரக்ஷணத்தில் விஸ்வாஸம் மிகு விளம்பம் பொறுக்காதவள்-சங்கு ஏத்தும் கை -தொழுவிக்கும் கை -முப்படை -சங்க சக்கர கத பாணி
———–
இந்த்ரப்ரஸ்தத்தில் கண்ணன் இல்லை-சால்வனுடன் யுத்தம் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் சரணாகதி
இருந்தாலும் நேராக விளிச்சொற்களால் சரணாகதி
த்வயம் ஸமாசமாக ஆறு பதங்களாகவும் பிரித்து அஷ்ட பதங்களாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ மானே நாராயணனே -தவ -அத்தியாஹரம் செய்து கொண்டு -உன் திருவடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் -எதுவரை ராமச்சந்த்ரனுடைய திருவடிகளில் தலையால் தரிக்காமல் நான் உளனாக மாட்டேன் -பரதன்
லஷ்மணன் -நேராகவே பார்த்து அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
இங்கு கண்ணன் நேராக இல்லாவிட்டாலும் திரௌபதி விளிச்சொற்களாக அமைத்து சரணம் செய்கிறாள்
ஆபத்தில் நினைக்கச் சொல்லி வசிஷ்டர் உபதேசப்படியே நினைவில் மட்டும் இல்லாமல் மஹா விஸ்வாஸத்துடன் கூப்பாடு செய்து சரணம் -சரணம் அடைந்த அடியேனை ரக்ஷிப்பாய் என்ற பிரார்த்தனையுடன் அமைந்த ஸ்லோகம் -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும் –
ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம் –90–44–47-அவன் திருவடிகளைத் தவிர் வேறே எதுவுமே உபாயமாகாதே
வாக்ய பிரபாவம் போல் அன்றி வாசக பிரபாவம் என்றும் அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் என்றும் திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது இது-திருநாம வைபவம் அன்றோ -என்றும்- இருப்பதால்
ஸர்வ தர்ம பரித்யாஜ்யத்தில் திரு நாம சங்கீர்தனமும் அடங்கும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ-
புடவை சுரப்பது மட்டும் இவளது பிரார்த்தனை இல்லையே -மற்றவை கண்ணன் தானே அருளினான்
இவன் செய்தன அனைத்துமே இவள் கூந்தல் முடித்து இவள் மங்கள ஸூத்ரம் தரிக்க வைப்பதற்கே
ருணம் பிரவர்த்த -திரு உள்ளம் பின்னும் புண்பட்டே சென்றான் அவன் –
ராஜன் கூப்பிட்டதால் புண்பட்ட பரதனின் அநிஷ்ட நிவ்ருத்தியை உடனே திருப்பாதுகைகள் மூலம் அருளி பின்னர் 14 வருடங்கள் சென்ற பின்பே சேர்ந்து ஆலிங்கனம் செய்து அருளி பிராப்தி செய்தால் போல் uஇவளுக்கும் விளம்பி பலன்களை அருளினான்
உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி –லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –
மார்க்கண்டேயர் உபதேசப்படி
ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-மீண்டும் ஸரணாகதி செய்யது பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-)
———
த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43 –
சங்க சக்ர கதா பாணே –
கைப்படை யில்லாதனையோ நான் கை கூப்பிற்று –(ஒன்றுக்கு மூன்று திவ்ய ஆயுதங்களைக் கைப்பற்றினவனை அன்றோ நான் கூப்பிட்டது)
த்வாரகா நிலய-
ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –
அச்யுத –
தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
ந ச்யவந்தே யஸ்மாத் இத் யச்யுத –
கோவிந்த–
தன் ஆஸ்ரதரை நோவு பட விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –
புண்டரீகாஷ-
கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
1-கண் 2-இரக்கம் –(தயா வாத்சல்யாதி குணங்களை கோட் சொல்லித்தரும் செந்தாமரைக் கண்ணன் அன்றோ)
ரஷமாம் –
ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –
சரணா கதாம் –
ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –
1-சங்க சக்ர கதா பாணே –
நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –
2-சங்க சக்ர கதா பாணே —
சுவர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை -திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத ரஷணத்துக்கு அன்றோ –
சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தஸ்யாக்ர ஹஸ்தம் ஸ்வயம் ஆருரோஹா -பார -பீஷ்ம -59-58-என்று
(கை கழலா நேமியான் –கருதும் இடம் பொருதும் கை நின்ற சக்கரத்தான்)
நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
நான் கை விரிப்பது என் –
நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ
(தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-)
3- சங்க சக்ர கதா பாணே –
நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
அங்கனம் தொட்ட படி இறே
மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-
அப்படியே கூராராழி வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து
(மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-)
பின்பு இவளுக்காக இறே –
ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயுநா ப்ருசம் ஸூபூர்ண உதர நிஸ் ஸ்ருத த்வநி ஜகத் ஸமாதான வியத் திகீஸ்வரம் ப்ரகம்பயாமாஸ யுகாத்யயே யதா -பாரத த்ரோ -73-58-அச்சுதனுடைய திருமுக வாயுவினால் மிகவும் நிறைந்த உட்புரத்தின் நின்றும் வெளிப்படும் ஒலியையுடைய அந்தப் பாஞ்ச ஜன்யம் பாதாளம் ஆகாயம் திக் பாலர்கள் ஆகிய எல்லாவற்றையும் ஊழிக் காலத்தில் போலே நடுக்கமுறச் செய்தது-என்றும்
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்
கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெரியாழ்வார் -4-1-8- என்று செய்து அருளியதும்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி-(இவள் விரும்பிய ஸரணாகதி பலன்களை கண்ணன் அளித்து அருளினான்)
(பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8-
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8-
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-)
4- சங்க சக்ர கதா பாணே-
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்-திரு விருத்தம் -33-
5- சங்க சக்ர கதா பாணே –
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் -திருவாய் -2-3-10- என்றபடி
இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –
(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-)
இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்
1-த்வாரகா நிலயாச்யுத-
நீ -வண்டுவராபதி மன்னாய் –திருவாய் -5-3-6-
நழுவுதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –
(அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-)
(உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-மா முனிகள் மன்னார்குடி திவ்ய தேசத்துக்குச் சமர்ப்பித்த பாசுரம்)
2-த்வாரகா நிலயாச்யுத-
பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ
அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –
பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்திலே -பெரியாழ்வார் -4-1-6- என்கிறபடியே தேவிமார்களை நழுவ விடாமல் இருக்கையாலேயே அச்யுதனாய் திருத் துவாரகையில் இருப்பவனை அன்றோ கூப்பிடுகிறேன் –
(பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 –பல்லாயிரம்-ஷோடச ஸ்த்ரீ -பதினாறாயிரம் )
ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
ஜக்ராஹ விதிவத் பாணீன் ப்ருதக் கேஹீஷூ தர்மத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-
ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –( ப்ருதக் கேஹீஷூ-தனித் தனியாக வீடுகள் -தனித் தனியாக திவ்ய மங்கள விக்ரஹம் -க்ருஹஸ்த தர்மம் கடைப் பிடித்த வ்ருத்தாந்தம்)
3- த்வாரகா நிலயாச்யுத –
நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
அவர் ஒரு நிலை நின்றது என்பரேல்-
திரை பொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –(இதில் இருந்து திரௌபதி யானவள் தனது ஸரணாகதிக்குப் பலனாக –அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான்-ஸத்ரு ஸம்ஹாரத்தையும் ராஜ்ய ப்ராப்தியையும் விரும்பினாள் என்று புலப்படுகிறது)
(திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –)
4-த்வாரகா நிலயாச்யுத
ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்
5- அச்யுத –
என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
அச்யுதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸம்ஸார பேஷஜம் –என்கிறபடியே (அச்யுதனே நான் உனக்கு அடியேனாகிறேன் என்பதே ஸம்ஸார நோய்க்கு மருத்தாகும்)-என்கிறாள்
மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –
அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தமோ
நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது-
என்னுடைய வஸ்திரம் இடுப்பை விட்டு நெகிழ்வது அவன் ஸ்வ பாவம் நெகிழ்ந்தால் தானே
என்னுடை நெகிழ்ந்தோ உன் பேர் உண்டாவது -(கைவிட்டால் அச்சுதன் பேர் நிலைக்காதே
நாராயணன் பேர் நிலைக்க வேண்டாமோ என்றால் போல் இங்கும்)
(அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-)
(நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-)
6-சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத –
தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
இவளும் இப்படியே பேசுகிறாள்
(அவள் வைகுண்ட நிலையா என்றாள்
இவள் துவாரகா நிலையா என்கிறாள்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகாதோ மதுராம் புரம் தானே)
ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –
பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் -செய்வது என்-
பின்பு –ரதம் ஸ்தாபாய மே அச்யுத –ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
நீ கை கழலா நேமியானாய் இருக்க
என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
பொற் சக்கரத் தரியினை யச்சுதனைப் பற்றுகிறாள் –
(மோக்ஷ ப்ராப்திக்குத் தான் ஸக்ருத் பிரபத்தி
இவள் அபேஷிதம் அரசை அவித்து அரசை அருளுவதே-கோவிந்த நாம சங்கீர்த்தனமே உபாயம் என்று தப்பாக இருந்து பின்பு-பிராயச்சித்தமாக மீண்டும் சரணாகதி செய்கிறாள்)
(இது வரை பரத்வம் -ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டியவை
மேல் ஆஸ்ரித ஸுகர்ய ஆபாத குணங்கள் -ஸுலப்யாதிகள்)
1-கோவிந்த-
அச்யுதன் என்று சொன்ன பின்பும் உதவக் காணாமையாலே அடுத்த படியாக அவனை அரை குலையத் தலை குலைய வருந்தியோடி வரச் செய்வதாய்
இந்த்ரனாலே கோவிந்த பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற அவனுக்கு
முடி சூடின பேரான கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி –பார -உத் -47-39-என்று
அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர் நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –
(உயர் நிலையிலே-ருணம் –ருணம் வ்ருத்தமிவ –ருணம் பிர வ்ருத்தமிவ)
2- கோவிந்த –
நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி–
3- கோவிந்த –
நீ ஆஸ்ரித ரஷணத்தில் தீஷித்து இருக்க
க்ருஷ்ணாஸ்ரய—கிருஷ்ண பல—பார த்ரோண -183-24-என்று இருக்கிற என்னை
கிருபை பண்ணாது ஒழிவது என்
நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் –சங்கு சக்ர கதா பாணி இங்கு-சிறு பேர் அழைத்தனம் –சீறி அருளாதே-பிரமாத -ப்ரணய -அஜானாம் மூன்று காரணங்கள் அர்ஜுனனும் விஸ்வ ரூபம் கண்டதும்)
நாமைதத் தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று
சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதை க்ருதம்-பாப ராசிம் தஹத் யாஸூ தூலராசி மிவ அநல -என்று
சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –
4- கோவிந்த –(கோ –மயிர்முடி குழல்)
நான் குழல் பேணாமல் இருக்க –
நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –
(குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –)
5- கோவிந்த
நீ முடி சூடிவித்திருக்க நான் –
சாஹம் கேசக்ரகம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
என்று சொல்லி –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
குண ஜ்ஞானத்தாலே நிர்ப் பரை யானாள்-
பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்
(இதில் இருந்து திரௌபதி இந்தக் கோவிந்த நாமத்தைக் கூறும் பொழுது உபாய புத்தியைக் கைக் கொள்ள வில்லை என்று புலப்படுகிறது-முன்பு கோவிந்த நாமம் புடவை சுரக்கும் என்று நினைத்தவள்
இப்பொழுது ஆவி காத்து இருக்கவே -ஆற்றாமைப் போக்கவே திரு நாம சங்கீர்தனம்
முழுவதும் உபாய புத்தி வைக்க வில்லை
அபலை போல் சந்தேகத்தில் அலை பாய்ந்து இருக்கிறாள்)
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 -6-
6- கோவிந்த –
ஜகத் ஹிதிதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –
7- த்வாரகா நிலய கோவிந்த –
துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்
(ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-)
8- கோவிந்த –
கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்
(கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-)
9- கோவிந்த –
என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
கண்ணாலே நோக்க அமையாதோ
கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது
விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோநு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-
(த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||ஶ்லோகம் 20 –
ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)
1- புண்டரீகாஷ-
பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்
(பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-)
2- புண்டரீகாஷ-
என்னுடைய ஆபத்துக்கு
அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
நம் அன்றோ அபேஷிதம்-
3- கோவிந்த புண்டரீகாஷ
க்ருஷ்ணம் கமல பத்ராஷம் -என்னக் கடவது இறே-
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி -பார -உத் -91-44(பரபரப்பே தனம்-கோவிந்த)
என்ற அனந்தரம்
பீஷ்ம த்ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –(புண்டரீகாஷ)
4-புண்டரீகாஷ
நான் கண் கலங்கி இருக்க- நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-
5-புண்டரீகாஷ –
நீ கண் யுடையவனாய் இருக்க -நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –
6- புண்டரீகாஷ –
நான் கண் சிவந்து இருக்க
நீ உன் முகத்தன கண்கள் அல்லவே(வாய்) -நாச் -2-5-இருப்பது என் –
(வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-)
7-புண்டரீகாஷ –
அவன் கண் செம்பளித்து இருந்தான்
பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ஸ்வஸ்தா நமுத்தமம் -பார மௌசல-9-34-இத்யாதி
அனுகூல ரஷணத்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் (மண்ணின் பாரம் நீக்கவும் பேற்றை அளிக்கவும்)பரிகரம் ஒன்றே யாயிற்று –
8- புண்டரீகாஷ –
தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்
(பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-)
(பிரபத்தி ஸூர்யன் –
திருநாம சங்கீர்த்தனம்–உபாயாந்தரம் -மேகம் மூட
மீண்டும் பிரபத்தி)
9-புண்டரீகாஷ -அச்யுத –
தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்
10- அச்யுத புண்டரீகாஷ –
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –(கடாஷித்து நழுவ விடாமல் அருளுபவர்)
(வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-)
11- புண்டரீகாஷா –
கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7- என்கிற
சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி –
12-புண்டரீகாஷ-
ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே -என்று
இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-
13-புண்டரீகாஷ –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன -பார -வன -192-51-என்று
இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது
14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ -திருவாய் -3-4-3-என்கிறாள்
(பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-)
16-புண்டரீகாஷ –
பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம் -ஜிதந்தே -8-என்கிறாள்
(அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-
புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –)
ரஷமாம் —
1-ரஷ அபேஷை யுடைய என்னை –
2- அநாதையான என்னை –
3-அபலையான என்னை –
4-ஆஸ்ரிதையான -பலமற்ற -என்னை
4-அநந்ய சரணையான என்னை
ரஷமாம் –
ரஷிக்கை யாவது
விரோதியைப் போக்குகையும் –
அபேஷிதங்களைக் கொடுக்கையும் –
அலமன்னு மடல் சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –பெரிய திரு -2-4-3-
1-சரணாகதாம்-
சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்
ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் மொழி-9-3-9-என்றபடி –
அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்
(தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-–)
2-சரணாகதாம் –
சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்
தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்
சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே
காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்
3-சரணாகதாம் –
ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
அஞ்சேல் என்னாது இருப்பது என்-
மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –(உனக்கு ஒரு சொல் எனக்கு வாழ்வு)
சங்க சக்ர கதா பாணே –சரணாகதாம் –
1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
2-ஆசன்னன் ஆவது –
3-ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாவது –
4-ஆஸ்ரித ரஷணத்திலே தீஷித்து இருக்குமவனது
5-கண் யுடையவனாவது
6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
ஆகையாலே ரஷிக்கக் குறை என் –
(நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–
நம்பியை-என் சொல்லி மறப்பேனோ
தென் குறுங்குடி நின்றவனை -என் சொல்லி மறப்பேனோ
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை-என் சொல்லி மறப்பேனோ
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை என் சொல்லி மறப்பேனோ
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ)
சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் (ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள்)சொல்லி
த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் (ஆஸ்ரித ஸுவ்கர்ய ஆபாத குணங்கள்)சொல்லி
ரஷமாம் -என்கையாலே
அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி
சரணாகதம் -என்கையாலே
உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –
இத்தால்
லஜ்ஜா புரஸ் ஸரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-என்றது ஆயிற்று –
—————————————————————————————–
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம நாதாம் கிம் உபேஷஸே
கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
ஹே நாத ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
கௌரவார்ணவ மக்நாம் மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம் -பார -சபா -90-44/45/46/47-
மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –
வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
அதில் முதல் தடவை வந்த போது
நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத் ப்ராஹசத் ததா -பார -ஆர -12-128/129–
யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்
உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-
மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பார ஆர -192-56–என்ன
ஏவமுக்தாச்ச தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -பார -ஆர -192-57- என்று சரணம் அடைய
ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி –பார -ஆர -192-58-என்று
திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும் தடை நீங்க –
சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-
இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-
நம் பேர் தன் கார்யம் செய்தது இத்தனை போக்கி
நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இறே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-
முமுஷூப்படி -அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
உபாய புத்தி யுடன் திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம் முதலியவற்றைக் கருதியே
திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –
திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
இந்த உபாயாந்தர சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
அதனால் தோஷமாக கொள்ள வில்லை-
வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –
குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
புண்டரீகாஷா -இக் கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
பின்பே கலங்கினாள்-
நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
இதன் பிரபாவம் கிம்புநர் ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .