Archive for the ‘தனி ஸ்லோக வியாக்யானம்’ Category

ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்- -ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்-ஸ்ரீ ராம மங்கள -ஶ்லோகங்கள் ஸ்ரீ மா முனிகள் —

October 14, 2024

ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்

ஸ்ரீ விஷ்ணு தியானம்

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யயாயேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே

வெண்மையான வஸ்திரங்களை அணிந்தவரும்,
சந்திரனைப் போன்றவரும், நான்கு திருக் கரங்கள் கொண்டவரும்,
மலர்ந்த திரு முகம் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவை, நான் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க தியானம் செய்கிறேன்.

——-

ஸ்ரீ வால்மீகி தியானம்

கூஜந்தம் ராம ராம இதி மதுரம் மதுர அக்ஷரம்
ஆரூஹ்ய கவிதா ஶாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

கவிதை என்னும் மரத்தின் கிளைகளில் ஏறி
அமர்ந்து, “ராமா ராமா” என்ற இனிமையான சொற்களை
எப்போதும் அழகாகக் கூவியபடி உள்ள வால்மீகி என்னும்
குயிலை நான் வணங்குகிறேன்.

வால்மீகே முநி ஸிம்ஹஸ்ய கவிதா வந சாரிண:
ஶ்ருண்வந் ராம கதா நாதம் கோந யாதி பராம் கதிம்

கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள
சிங்கத்தைப் போன்ற வால்மீகி முனிவருடைய (அல்லது
முனிவர்களில் சிங்கம் போன்று, கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள வால்மீகி முனிவருடைய) இராமனுடைய
கதையைக் கேட்கும் எந்த மனிதன் தான் உயர்ந்த கதியை அடைய மாட்டான்

——–

ஸ்ரீ ஹனுமான் தியானம்

கோஷ்பதீ க்ருத வாராஶிம் மஶகீ க்ருத ராக்ஷஸம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அநிலாத்மஜம்

ஸமுத்திரத்தை, மாட்டுக் குளம்பால் உண்டான பள்ளத்தில் உள்ள நீர் போன்று கடந்தவரும், ராக்ஷஸர்களைக் கொசுவைப் போன்று நசுக்கியவரும், இராமாயணம் என்னும் உயர்ந்த மாலையில் இரத்தினம் போன்று விளங்குபவரும் ஆகிய வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.-

அஞ்ஜநா நந்தநம் வீரம் ஜாநகீ ஶோக நாஶனம்
கபீஶம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

அஞ்ஜனையின் புத்திரரும், வீரரும், ஜானகியின் சோகத்தை அழித்தவரும், அக்ஷ குமாரனைக் கொன்றவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும் ஆகிய உயர்ந்த வானரரை வணங்குகிறேன்.

ய: பிபந் ஸததம் ராம சரித அம்ருத ஸாகரம்
அத்ருப்த: தம் முநி வந்தே ப்ராசேதஸம் அகல்மஷம்

யார் ஒருவர், இராமனுடைய சரிதம் என்னும்
அமிர்தக் கடலை எப்போதும் பருகியபடி இருந்தாலும், மன நிறைவு அடைய வில்லையோ, வருணனுடைய புத்திரரும், களங்கம் அற்றவரும் ஆகிய அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.

மநோ ஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராம தூதம் ஶிரஸா நமாமி

மனதின் வேகம் போன்ற வேகம் கொண்டவரும்,
வாயுவிற்கு நிகரான வேகம் உள்ளவரும், இந்த்ரியங்களை
வென்றவரும், புத்தி உள்ளவர்களில் சிறந்தவரும், வாயுவின் புத்திரரும், வானரர்களுடைய தலைவர்களில் முக்கியமானவரும், ஸ்ரீராமனின் தூதனும் ஆகிய ஹனுமானை நான் எனது தலையால் வணங்குகிறேன்.

உல்லங்க்ய ஸிந்தோ : ஸலிலம் ஸலீலம்
ய: ஶோக வஹ்நிம் ஜனகாத் மஜாயா:
ஆதாய தேநைவ ததாஹ லங்காம் நமாமி
தம் ப்ராஞ்ஜலி: ஆஞ்ஜநேயம்

யார் ஒருவர், ஸமுத்திரத்தின் நீரை ஒரு
விளையாட்டாகவே தாண்டி, ஜனகருடைய புதல்வியின் சோகம் என்னும் அக்னியை எடுத்துக் கொண்டு, அந்த அக்னி மூலமாலவே இலங்கையை எரித்தாரோ, அந்த ஹனுமானை நான் கைகள் குவித்து வணங்குகிறேன்.

ஆஞ்ஜநேயம் அதிபாடலாநநம்
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாஸிநம்
பாவயாமி பவமாந நந்தனம்

அஞ்ஜனையின் புதல்வரும், மிகவும் சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஸ்வர்ணம் போன்ற அழகான திருமேனியைக் கொண்டவரும், பாரிஜாத மரத்தின் அடியில் வசிப்பவரும் ஆகிய வாயுவின் புத்திரனை நான் மனதால் தியானிக்கிறேன்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ர தத்ர
க்ருதம் ஹஸ்தக அஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசநம் மாருதிம்
நமத ராக்ஷஸ அந்தகம்

எந்த இடங்களில் இராமனுடைய புகழானது கூறப்படுகிறதோ, அந்த இடங்களில் குவித்த கைகளுடனும், ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களுடன் உள்ளாரோ-
ராக்ஷஸர்களுக்குக் காலனாக உள்ள அந்த வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.

ஸர்வ அரிஷ்ட நிவாரகம் ஸுப கரம்
பிங்காக்ஷம் அக்ஷாபஹம்
ஸீதா அந்வேஷண தத் பரம் கபி வரம்
கோடி இந்து ஸூர்ய ப்ரபம்

லங்கா த்வீப பயங்கரம் ஸகல வதம்
ஸுக்ரீவ ஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவ விநுதம்
காகுஸ்த்த தூதம் பஜே

அனைத்து விதமான துன்பங்களையும் முற்றிலும் விலக்கி, நன்மைகளை நல்குபவரும், மஞ்சள் நிறமான கண்கள் கொண்டவரும், வானரர்களில் உயர்ந்தவரும், ஸீதையைத் தேடிச் சென்றவரும், கோடி சந்திர சூரியன்களின் ஒளியைக் கொண்டவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும், ராக்ஷஸர்கள் அனைவரையும் கொன்றவரும், ஸுக்ரீவனால்
கௌரவிக்கப் பட்டவரும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களாலும் போற்றப் படுபவரும் ஆகிய இராம தூதனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ இராமாயண தியானம்

ய: கர்ணணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிபத் யர்த்ததாத்
வால்மீகே: வதந அரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது
ஜந்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த ஸ உபத்ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமாந்
விஷ்ணோ: பதம் ஶாஶ்வதம்

வால்மீகியின் தாமரை போன்ற முகத்திலிருந்து வெளிப்படும் இராமாயணம் என்னும் மதுவை, குவித்த கரங்களுடன் பருகுபவர்கள், “பிறப்பு, நோய், வயோதிகம், மரணம்” என்பதான ஸம்ஸாரம் மூலம் உண்டாகவல்ல உபத்திரவங்கள் நீங்கப் பெற்று, எப்போதும் உள்ளதான விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறார்கள்.

வால்மீகி கிரி ஸம்பூத ராம ஸாகர காமிநீ
புநாது புவநம் புண்யா ராமாயணம் மஹாநதி

வால்மீகி என்ற மலையிலிருந்து உண்டானதும், இராமன் என்ற ஸமுத்திரத்தை அடைந்ததும், புண்ணியமானதும் ஆகிய இராமாயணம் என்ற பெரிய நதியானது, இந்த உலகத்தைத் தூய்மை செய்யட்டும்.

ஶ்லோக ஸார ஸமாகீர்ணம் ஸர்க கல்லோல ஸங்குலம்
காண்ட க்ராஹ மஹாமீனம் வந்ததே ராமாயண அர்ணவம்

ஸ்லோகங்களுடைய ஸாரமாக உள்ள நீரால் நிரம்பியதும், ஸர்க்கங்கள் என்னும் அலைகள் சேர்ந்திருப்பதும், காண்டங்கள் என்னும் முதலைகள் மற்றும் பெரிய மீன்கள் உள்ளதும் ஆகிய இராமாயணம் என்னும் ஸமுத்திரத்தை நான் வணங்குகிறேன்.

வேதத்தால் மட்டுமே அறியப் படக் கூடிய பரம புருஷன், தசரதருடைய புத்திரனாக அவதரித்தால்,வேதமானது வால்மீகியிடமிருந்து நேரடியாக இராமாயணம்
என்னும் ரூபத்தில் உண்டானது.

தத் உபகத ஸமாஸ ஸந்தி யோகம் ஸம
மதுரோ பநதார்த்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முநி ப்ரணீதம் தஶ ஶிரஸஶ்ச
வதம் நிஶாமயத்வம்

நன்கு அமைந்துள்ள சொற்களின் சேர்க்கை (ஸமாஸம்) மற்றும் பிரிவு (ஸந்தி) ஆகியவற்றைக் கொண்டதும், ஒரே போன்று இனிமையான அர்த்தம் கொண்ட சொற்கள் நிறைந்த வாக்கியங்களால் கட்டப்பட்டதும், இராவணனுடைய வதம் குறித்துக் கூறுவதும், வால்மீகியால் செய்யப் பட்டதும் ஆகிய இராமனுடைய சரிதத்தைக் கேளுங்கள்.

ஸ்ரீ இராம தியானம்
ஸ்ரீராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுல அந்வய ரத்னதீபம்
ஆஜாநுபாஹும் அரவிந்த தலாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

ஸீதையின் நாதனும், தசரதருடைய புத்திரரும், அளவிட இயலாத தேஜஸ் கொண்டவரும், ரகு வம்சத்தில் வந்தவர்களுக்கு இரத்தின தீபம் போன்றவரும், தாமரை இதழ் போன்ற திருக்்கண்களைக் கொண்டவரும், ராக்ஷஸர்களுக்கு அழிவாக உள்ளவரும் ஆகிய இராமனை நமஸ்கரிக்கிறேன்.

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

வைதேஹீ ஸஹிதம் ஸுர த்ரும
தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸுதே தத்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் : பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

கற்பக மரத்தின் கீழே, சிவந்த ஸுவர்ணத்தால் செய்யப் பட்ட பெரிய மண்டபத்தில், புஷ்பக விமானத்தின் நடுவில், இரத்தின மயமான ஸிம்ஹாஸனத்தில், பத்ர பீடத்தில்,
வைதேகியுடன் நன்கு வீற்றுள்ளவரும்; தனக்கு முன்பாக வாயுவின் புத்திரர் உயர்ந் தத்வத்தைக் குறித்து வாசிக்க,
அதனை முனிவர்களுக்காக பொருள் விளக்கம் அளிப்பவரும்; பரதன் முதலானவர்களால் சூழப்பட்டவரும்; கறுமையான திருமேனியைக் கொண்டவரும் ஆகிய இராமனை நான்
வணங்குகிறேன்.

வாமே பூமி ஸுதா புரஶ்ச ஹனுமான்
பஶ்சாத் ஸுமித்ராஸுத:
ஶத்ருக்நோ பரதஶ் ச பார்ஶ்வ தளயோ:
வாய்வாதி கோணேஷு ச
ஸுக்ரீவஶ்ச விபீஷணஶ்ச யுவராட்
தாரா ஸுதோ ஜாம்பவாந்
மத்யே நீல ஸரோஜா கோமளருசிம்
ராமம் பஜே ஶ்யாமளம்

(பட்டாபிஷேக திருக் கோலம்)
இடது பக்கத்தில் பூமியின் புதல்வியாகிய ஸீதை,
முன் புறத்தில் ஹனுமான்,
பின் புறத்தில் ஸுமித்ரரையின் புதல்வனாகிய லஷஷ்மணன்,
வலப் பக்கம் மற்றும் இடப் பக்கத்தில் சத்ருக்நனும் பரதனும்,
நான்கு பக்கங்களிலும் வாயு முதலான திக் பாலர்கள் போன்று ஸுக்ரீவன், விபீஷணன், இளவரசனாகிய அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோர் சூழ்ந்திருக்க, நடுவில் தாமரை மலரின் மென்மையுடன் அமர்ந்திருக்கும், கருமையான நிறம் கொண்ட இராமனை வணங்குகிறேன்.

நம: அஸ்து ராமாய ஸ லக்ஷஷ்மணாய தேவ்யை
ச தஸ்யை ஜநகாத் மஜாயை
நம: அஸ்து ருத்ர இந்த்ர யம அநிலேப்யோ
நம: அஸ்து சந்த்ர அர்க மருத் கணேப்ய:

(ஹனுமான் கூறுதல்)
லஷ்மணனுடன் கூடிய இராமனுக்கு எனது நமஸ்காரம். ஜனகருடைய புத்திரியான ஸீதைக்கு எனது நமஸ்காரம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு ஆகியோருக்கு எனது நமஸ்காரம்.
சந்திரன், சூரியன், மருத் கணங்களுக்கு எனது நமஸ்காரம்.

பாராயணத்துக்குப் பின் அநுஸந்திக்கும் த்யான ஸ்லோகங்கள்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேண மஹீம் மஹீஶா:
கோ ப்ராஹ்மணேப்யோ ஶுபமஸ்து
நித்யம் லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து

தனது நாட்டு மக்களை, நீதியின் வழியில், நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மன்னனுக்கு, மிக்க நன்மைகள் உண்டாகட்டும். பசுக்களும், அந்தணர்களும், மற்ற அனைவரும்
எப்போதும் இன்பமாக வாழ்வார்களாக. அனைத்து லோகங்களும் சுகமாக வாழட்டும்.

காலே வர்ஷது பர்ஜந்ய: ப்ருதிவீ ஸஸ்ய ஶாலிநீ
தேஶ: அயம் க்ஷோப ரஹிதா ஸஜ்ஜநா: ஸந்து நிர்பயா:

மழையானது சரியான காலங்களில் (சரியான அளவில்) பொழிய வேண்டும். பூமியானது பயிர்களால் நிறைந்து இருக்கட்டும். நாடானது சச்சரவு இன்றி இருக்கட்டும். ஸாதுக்கள் அச்சம் இன்றி இருக்கட்டும்.

அபுத்ர: புத்ரிண: ஸந்து புத்ரிண: ஸந்து பௌத்ரிண:
அதநா: ஸதநா: ஸந்து ஜீவந்து ஶரதாம் ஶதம்

குழந்தை அற்றவர்களுக்கு குழந்தை பிறக்கட்டும்.
குழந்தைகள் உள்ளவர்களுக்குப் பேரக் குழந்தைகள் பிறக்கட்டும்.
தனம் இல்லாதவர்களுக்குத் தனம் உண்டாகட்டும். நூறு ஆண்டு காலம் வாழட்டும்.

சரிதம் ரகுநாதஸ்ய ஶத கோடி ப்ரவிஸ்தரம்
ஏக ஏகம் அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாஶநம்

இராம சரிதமானது, நூறு கோடி (சொற்களுக்கும் மேலாக) விரிவாக உள்ளதாகும். அதில் ஏதேனும் ஒரு எழுத்து மட்டுமே மிகவும் கொடிய பாபத்தையும் கூட அழிக்க வல்லதாகும்.

ஶ்ருண்வந் ராமாயணம் பக்த்யயா ய: பதம் பதம் ஏவ வா
ஸ யாதி ப்ரஹ்மண: ஸ்தானம் ப்ரஹ்மண பூஜ்யதே ஸதா

யார் ஒருவன் இராமாயணத்தை பக்தியுடன் கேட்கிறானோ அல்லது அதில் உள்ள ஒரு சொல்லையாவது பக்தியுடன் கேட்கிறானோ, அவனை நான்முகன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று, எப்போதும் பூஜிக்கிறான்.

ராமாய ராமபத்ராய ராமச் சந்த்ரராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:

இராமன் என்றும், ராம பத்ரன் என்றும், ராம சந்த்ரன் என்றும், ரகு நாதன் என்றும் அழைக்கப்படும் ஸீதையின் நாதனுக்கு, வேதங்களில் கூறப்படுபவனுக்கு எனது நமஸ்காரங்கள்.

யத் மங்களம் ஸஹஸ்ர அக்ஷே ஸர்வ தேவ நமஸ்க்ருதே
வ்ருத்ர நாஶே ஸம பவத் தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
வ்ருத்ரன் என்னும் ராக்ஷஸன் அழிக்கப் பட்ட போது, அனைத்து தேவர்களாலும்
வணங்கப் பட்டவனும், ஆயிரம் கண்கள் கொண்டவனும் ஆகிய இந்திரனுக்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

யத் மங்களம் ஸுபர்ணஸ் ய விநாத அகல்பயத் புரா
அம்ருதம் ப்ரரார்த்த மாநஸ்ய தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
முன்பு, அமிர்தத்தைத் தேடிச் சென்ற கருடனுக்கு, அவனுடைய தாயான வினதை எத்தகைய மங்களத்தை உண்டாக்கினாளோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

அம்ருத உத்பாதநே தைத்யயாந் க்நதோ வஜ்ர தரஸ்ய யத்
அதிதி: மங்களம் ப்ராதாத் தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
திருப்பாற் கடலில் அமிர்தம் உண்டான போது, அஸுரர்களை அழித்த இந்த்ரனுக்கு, அவனுடைய தாயான அதிதியானவள் எத்தகைய மங்களத்தை
உண்டாக்கினாளோ, அததகைய மங்்களம் உனக்கும் உண்டாகட்டும்.

த்ரீந் விக்ரமாந் ப்ரக்ரமத: விஷ்ணோ: அமித தேஜஸ:
யத் ஆஸீத் மங்களம் ராம தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
இராமா! மூன்று காலடிகளை வைப்புகள் மூலம் (மூன்று லோகங்களை) அளந்தவரும், அளவற்ற தேஜஸ் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவிற்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

ருதவ: ஸாகரா த்வீபா வேதா லோகா திஶ: ச தே
மங்களாநி மஹா பாஹோ திஶந்து தவ ஸர்வதா

அந்த ருதுக்கள், ஸமுத்ரங்கள், தீவுகள், வேதங்கள், லோகங்கள், திசைகள் ஆகிய அனைத்து உனக்கு எங்கும் மங்களங்கள் அளிக்கட்டும்.

ஸ்ரீராமசந்த்ர: ஶ்ரித பாரிஜாத: ஸமஸ்த
கல்யாண குண அபிராம:
ஸீதா முக அம்போருஹ ஸஞ்சரீக:
நிரந்தரம் மங்களம் ஆதநோது

தனது அடியார்களுக்கு வேண்டியதை அளிக்கும் பாரிஜாதமாக ஸ்ரீராமசந்திரன் உள்ளார். அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டு, அனைவரையும் கவர்கிறார். ஸீதை முகம் என்னும் தாமரையில் ஸஞ்சரிக்கும் வண்டாக உள்ளார்.-இப்படிப்பட்ட அவர் எப்போதும் மங்களங்களை அளிக்கட்டும்.

காயேந வாசா மந: இந்த்ரியை: வா
புத்தி ஆத்மாநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத் யத் ஸகலம் பரஸ்மை
நாராயணா இதி ஸமர்ப்பயாமி

எனது சரீரம், சொல், மனம், இந்த்ரியங்கள், புத்தி,ஆத்மா, இயல்பான குணம் ஆகியவற்றால் எவை எவைகளைச் செய்கிறேனோ, அவை அனைத்தையும் பரம புருஷனாகிய நாராயணனுக்கே ஸமர்ப்பணம் செய்கிறேன்.

குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட ஶர மண்டிதம்
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல தைவதம்

(இதனை நான்கிலிருந்து பன்னிரண்டு முறைகள் ஜபிக்க வேண்டும்)
என்னுடைய குல தெய்வமாக உள்ளவர், கோதண்டம் என்னும் வில் மற்றும் அம்புகளால் அலங்கரிக்கப்பட்ட இராமனே ஆவார். எனது இஷ்டமான தெய்வமாக உள்ளவர்,
இக்ஷ்வாகு குலத்தின் தெய்வமாக உள்ள இராமனே ஆவார்.

————-

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

—————————–————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோகங்கள் வ்யாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்–

August 2, 2024

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா-

பரம காருணீகர்
வியாக்கியான சக்ரவர்த்தி
ஸ்ரீ அருளிச் செயல்கள் –
ஸ்ரீ ஸ்தோத்திரங்ககள் -ஸ்தோத்ர ரத்னம் –ஜிதந்தா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகங்கள்
ஸ்ரீ பாரதாதி தனி ஸ்லோக வியாக்கியானங்கள்
ஸ்ரீ வராஹ சரம ஸ்லோக -ஸ்ரீ விஷ்ணு புராண -ஸ்ரீ ஹரி வம்ச -தனி ஸ்லோக வியாக்கியானங்கள்

————–

1-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ததோ தத்ரு ஸூராயாந்தம் இத்யாதி -5 அம்சம் -13அத்யாயம் -43 ஸ்லோகம் –

ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம்
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-

2-ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

3-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச

4–ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

5-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

6-ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – –

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

—————

ஸ்ரீ மத் பாகவதம் 10 ஸ்கந்தம் -முழுவதுமே ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் போல் 5 அம்சம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்-

ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் —ததோ தத்ரு ஸூராயாந்தம் இத்யாதி -5 அம்சம் -13அத்யாயம் -43 ஸ்லோகம் –

பொறுக்கப் பொறுக்க அநுபவிப்பதற்காக கலந்து பரிமாறிய பிறகு கோபியரை விட்டுப் பிரிந்து விடுகிறான் கண்ணன்
கண்ணனைப் பிரிந்த கோபிகள் நெடும் தூரம் தேடி அவனைக் கண்டபடி சொல்லும் ஸ்லோகம் இது

ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம்
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-

தத–கண்ணனைத் தேடிக் காணாமல் திரும்பின பிறகு
ஆயாந்தம் –வருகின்றவனாய்
விகாஸி முக பங்கஜம் –மலர்ந்த திரு முகத் தாமரையை யுடையவனாய்
த்ரை லோக்ய கோப்தாரம் -மூன்று உலகங்களுக்கும் ரக்ஷகனாய்
அக்லிஷ்ட சேஷ்டிதம் –குற்றமற்ற செயல்களை யுடையவனான
கிருஷ்ணம் –கண்ணனை
கோப்யாஸ்-கோபிகள்
தத்ரு ஸூ–கண்டனர்

தத –இவ் விடத்தில் கிருஷ்ணன் போனான் என்று நெடும் தூரம் எல்லாம் சென்று
ப்ரவிஷ்ட காநநம் கிருஷ்ண பதமத்ர ந லஷ்யதே நிவர்த்தத்வம் -5-13-42
கண்ணன் காட்டில் புகுந்து விட்டான்
இங்கு அவனுடைய அடிச் சுவட்டைக் காணோமே -என்றும்

நிவ்ருத்தாஸ் தாஸ் ததோ கோப்யோ நிராஸா கிருஷ்ண தர்ஸந –5-13-42
கண்ணனைக் காண்பதில் ஆசை யற்றவர்களாக அந்த கோபிகள் திரும்பினார்கள் -என்றும்
நிராஸை களான கோபீ ஜனங்கள் மீண்ட அநந்தரம்
இப்படி முடிய நிராஸைகளாய் காணப் பெறாதே விட்டார்களோ என்னில்

நெடும் தூரம் காணப் பெறாதே உறாவுதல் தீரக் கண்டு கொண்டார்கள

இவர்கள் கண்டு கொண்டது அவர் இருந்த இடத்திலே சென்றோ என்னில்
ஆயாந்தம்
பெண்களை நெடும் போதுண்டு நாம் அலைச்சல் படுத்துகிறது
அவர்கள் இத்தனை போது என் படுகிறார்களோ என்னும் த்வரை தோற்ற
கோபீ கபால ஸம்ஸ்லேஷம் அபி கம்ய ஹரேர் புஜவ் புல கோத்கம ஸஸ்யாய ஸ்வேதாம்பு கநதாம் கதவ் –5-13-55-(ஸ்வேதாம்புகணி காஞ்சிதம் -பாடபேதம்)

(சக்ய பஸ்த்த க்ருஷ்ணஸ்ய முகம் அத்யருணே   ஷணம்
கஜ யுத்த க்ருதாயாச  ஸ்வேதாம்பு கணி காஞ்சிதம்
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-5-20-என்னும்படியே- )
ஆயர் சிறுமியரின் கன்னத்தை அணைத்ததினாலே அக் கன்னத்திலுள்ள கூச்செரியும் மயிர்களாகிற பயிர்களுக்கு கண்ணனின் கைகள் வேர்வை நீர் பொழியும் மேகமாயின -என்னும்படியே
குரு வேர் பரம்பித்த முகமும் -குலைந்த பரியட்டமுமாய்க் கொண்டு வாரா நின்றான்

வருகிற இடம் தன்னில் முகத்திலே ஒரு விஷாதம் தோற்ற வந்தானோ என்னில்
விகாஸி முக பங்கஜம்
இவர்களைக் கண்ட அநந்தரம் -இத்தனை போது உங்களை அம்பலமாகப் பண்ணினோம் (அரங்கத்தில் நாட்டியமாடப் பண்ணினோம் )இறே
நம்மைத் தேடிக் காண மாட்டிற்றிலை கோள் -இத்தனையே உங்கள் சக்தி -என்று
தன் வெற்றியும் அவர்களுடைய தோல்வியும் தோற்றும்படி முறுவல் செய்து கொண்டு வந்தானாயிற்று

இப்படி அவன் வந்த இடத்தில் அவர்கள் செய்தது என்
தங்களை அவன் பண்ணின தீ யறத்தாலே முகத்தை மாற வைத்து ப்ரணய கலஹம் பண்ணி இருந்தார்களோ -என்னில்

கோப்யா ப்ரகல்ப வநிதைகள் -ஊடல் கொள்வதற்கு விஷயம் தெரிந்த முதிர்ந்த பெண்கள்- அன்றிக்கே எட்டும் இரண்டும் அறியாத இடைப்பெண்கள் ஆகையாலே

காசிதா லோக்ய கோவிந்த மாயாந்த மதி ஹர்ஷிதா -க்ருஷ்ண க்ருஷ்ணேதி பஹூ ஸ
ப்ராஹ நான்யது தீரயத் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-44–(வருகின்ற கோவிந்தனைக் கண்டு மிக யுகந்து ஒருத்தி கிருஷ்ணா கிருஷ்ணா என்று பலகால் சொன்னாள் வேறு ஒன்றுமே சொல்லவில்லை -)என்றும்

தஸ்யைவ ரூபம் த்யா யந்தீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-13-46- (அவன் திரு உருவத்தை தியானித்து இருந்தாள் என்றும்)என்றும் –

நேத்ர ப்ருங்காப்யாம் பௌ தன்முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-45- (ஒருத்தி கண்களாகிற வண்டுகளாலே அவனுடைய முகத் தாமரையைப் பருகினாள் என்றும்
அவன் தூரத்திலே தோற்றும் காட்டில் அறிந்து கொண்டு மேல் விழுந்தார்கள்)-என்றும்

அதுக்கடி என் என்னில்
த்ரை லோக்ய கோப்தாரம்
ரஷ்ய வர்க்கம் கூடு பூரித்துக் கிடக்கிற இத் த்ரை லோக்யத்திலே இந்த நாலு இரண்டு பேரை ரக்ஷித்தால் என் -தவறில் என் -அவனுடைய ரக்ஷகத்வத்துக்குப் பங்கம் வரப் புகுர நின்றதோ
இனி ஸ்வ தந்த்ரனோடு ப்ரணய ரோஷம் கொண்டாடில் மூட்டவிழ்ந்து விடுமத்தனை
என்று மேல் விழுந்தார்கள்

இப்படி ஸ்வ தந்த்ரனாகில் தானிருந்த இடத்தே இவர்கள் அடைய வந்து விழும் படி இருக்க
இருந்த இடத்தே இராதே வருவது என் என்னில்
கிருஷ்ணம்
அவர்களுடைய ஸ்பர்ஸத்தையும் -அவர்களுடைய தாழ்ந்த யுக்திகளையும் ஒழியச் செல்லாமை யுடையவனாகையாலே

(மஹாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –சூரணை-179-)

இப்படித் தங்களை ஒழியச் செல்லாமை யுடையனான பின்பு அவன் தானே வந்து கால் கட்டும் படி இராது ஒழிவான் என் என்னில்
அக்லிஷ்ட சேஷ்டிதம்
ஸ்ம்ருதியாலே
அதாகிறது
இனிச் சிறிது போது தாழ்க்குமாகில் அடியே தொடங்கி
பஹு ஸ்யாம் -சாந்தோக்யம் -6-2-3- நான் பலவாகக் கடவேன் என்று ஸங்கல்பித்து ஸ்த்ரீ ஸ்ருஷ்டி பண்ண வேண்டும்படியாய் விடும் இறே
அப்படிச் செய்யாதே ஓர் அளவிலே மறைந்தானாய் பிசகாதபடி ரஷித்த உபகாரத்துக்காக

விடாய்த்தவன் விக்கிச் சாகாமல் இருப்பதற்காகச் சிறிது சிறிதாக நீரூற்றுவாரைப் போலே இவன் மறைவதும் இவர்களை சாத்மிக்க சாத்மிக்க–பொறுக்கப் பொறுக்க – தன்னை அனுபவிப்பிக்கையாலே உபகாரமாகவே இருக்கும் என்றபடி

——–

இரண்டாவது வியாக்யானம்

ததோ தத்ரு ஸூராயாந்தம் விகாஸி முக பங்கஜம்கோப்யாஸ் த்ரை லோக்ய கோப்தாரம் கிருஷ்ணம் அக்லிஷ்ட சேஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5 வது அம்சம் -13-43-
தத

பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தால் அரை க்ஷணம் செல்லாத படியான விடாய் பிறந்த அநந்தரம்
பொறுக்கப் பொறுக்க அநுபவிக்கச் செய்ய வேணும் என்று புரிந்தவன்
இவர்கள் ஸத்தைக்கே மோசம் வரும்படி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டானே

தத
ஸ்வ யத்னத்தாலே அவனைத் தேடிக் காண மாட்டாதே இயங்கி செய்த பின்பு
தேஹாந்தரே
தேசாந்தரே
காலாந்தரே
காணப் பெற்றதோ என்றால்
சுமை தள்ளின அநந்தரம் -ரஷா பரத்தை ஸமர்ப்பித்த -அநந்தரம்
பேற்றிலே தோள் மாறினார்கள்
கண் படைத்த பிரயோஜனம் பெற்றார்கள்

(சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் )

ததோ தத்ருஸூ
யஸ்ய ராமம்-ந பஸ்யேத் —-ஸ நிந்தித
–அயோத்ய -17-11)(என்று இறே காணப் பெறாத போது அவன் நிந்திக்கப்பட்டவனாய் அன்றோ இருப்பது
ந சந்த்ருஸே திஷ்ட நிரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்சநைநம் –தைத்ரியம் -இவன் உருவம் கண்ணால் காண்பதற்கு நில்லாது-எவனும் இவனைக் கண்ணால் கண்டவன் அல்லன் -என்றும்
ந சஷுஷா க்ருஹ்யதே நாபி வாசா நாந்யைர்தேவை -முண்டகம் -கண்ணாலும் வாக்காலும் மற்ற இந்த்ரியங்களாலும் காணப்படாதவன் என்றும்
யத் ததத்ரேஸ்யம் அக்ராஹ்யம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-6–என்றும்-அ நிர்தேச்யம் அரூபஞ்ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-66-என்றும்-இப்படிப்பட்டது என்று காட்ட முடியாததுமாயும் உருவம் அற்றதுமுமாய் இருப்பது பர ப்ருஹ்ம ஸ்வரூபம் என்றும் ‘
கட்கிலி -7-2-3–என்றும்
நிஷேதிக்கிறது ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு இறே-
தானே தன்னைக் கண்ணனாகவும் ராமனாகவும் காட்டக் கண்டவர்களுக்கு அல்லவே

தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட -1-2-23-எவனை இப் பரமாத்மா வரிக்கிறானோ அவனுக்கு இவன் தன் திருமேனியைக் காட்டுகிறான்என்றும்
மநஸா து விஸூத்தேந
-விஷ்ணு தர்மோத்தரம் -275-2- பரிசுத்தமான மனத்தினால் காணலாம்- -என்றும்
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா — -முண்டகம் -ஜகத் காரணமாயுள்ள பரம் பொருளைப் பேர் அறிவாளர்கள் காண்கிறார்கள் என்றும்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-விஷ்ணுவுடைய அந்த மேலான ஸ்தாநத்தை நித்ய ஸூரிகள் காண்கிறார்கள் -என்றும்
காண்பன் அவன் கண்களாலே -1–9-9-என்றும்
அவனாலே அவனைக் காணலாம் போது காணலாம் என்று அந்த வேத ஸாஸ்த்ரங்களே கூறின அன்றோ

(கண்ணே உன்னைக் காண -அவராகிய கண்ணாலே காணலாம் அன்றோ–காணுமாறு உண்டு எனில் அருளாய்-அனைத்தையும் தேவகிப்பிராட்டிக்குக் காட்டி அருளினான் அன்றோ)

இப்படிக் காண்கிற இடத்திலே தேஹாவஸா நத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே போயோ என்னில்
ஆயாந்தம்
எதிர் சூழல் புக்கு -2-7-6-கிருஷி பண்ணித் திரிகிறவனை
இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் -திருவாய் -8-5-11-என்கிறபடியே அவ் விடத்திலேயே காணப் பெற்றார்கள்

ஆயாந்தம்
என்கிற வர்த்தமான நிர்த்தேசம் என் -என்னில்
யுகபந் மோக்ஷம் உண்டாகில் இறே எதிர் சூழல் மாறுவது
இஸ் ஸம்ஸாரமாக அவன் கிருபையாக எதிர் சூழல் மாறாது இறே
ஸம்ஸாரமும் அழியாது -அவன் கிருபையும் அழியாதே இறே
ஆகவே என்றுமே வந்தவனையென்று இல்லாமல் வருகிறவனை என்றே இருக்கும் அன்றோ
இப்படிக் கிருஷீ -முயற்சி -செய்வதாலேயே கிருஷ்ணன் என்று பெயர் பெற்றான்

நம்மைக் கொடு வந்து ஸூலபனாக்கிக் காட்சி கொடுத்தோமாகில்
இத்தால் வரும் ப்ரீத் யப்ரீதிகள் தங்களுக்கு அன்றோ -என்று
நிர் விகாரனாய் இருந்தானோ என்னில்
விகாஸீ முக பங்கஜம்
மலர்ந்த முகத் தாமரையை யுடையவனை
விபீஷணனை இலங்கையில் முடி சூட்டிய பின்பே
விஜ்வர -என்றும்
பிரமுமோத ஹ -என்றும்
ஆஸ்ரித கார்யம் தலைக்கட்டினது தன் பேறாக உகந்து
அவ் வுகப்பு தன் திரு முகத்திலே நிழல் எழும்படி இருந்தான் காண்

நின்றவர்கள் தான் ஆர்
திவ்ய ஞாந உபபந் நாஸ்தே -என்றும்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் -வஸிஷ்டோ அபி மஹா தேஜோ யே சேமே தபஸிஸ்திதா -என்றும்
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் -என்றும்
பேசப்படுகிற வேதங்களாதல்
வைதிக புருஷர்களாதலோ -என்னில்
கோப்ய
கோக்களையும் கவ்யங்களையும் பர தேவதையாக நினைத்து இருக்குமவர்களாயிற்று

இவர்கள் அதிகாரிகளாக இப்படி ஸூலபனாகைக்கு அடி என் என்னில்
கோப்ய
தங்கள் வருத்தத்தாலே அவனைக் காண இருந்து அவனாலே அவனைப் பெறுவது என்று அறுதியிட்டுப் பின்னையும்
ப்ராப்ய ருசி இருந்தவிடத்தே இருக்க ஒட்டாமையாலே கிருஷ்ண அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி -5-13-26-நானே கண்ணன் அழகாக நடக்கிறேன் பாருங்கள்-என்றும்
துஷ்ட காளிய திஷ்ட அத்ர-5-13-27–துஷ்ட காளிய நாகமே நில் நானே கண்ணன் -என்றும்
அவனுடைய -நடை பேச்சு செயல்கள்-கதி பாஷித சேஷ்டிதங்களைக் கொண்டு கால யாபநம் பண்ணின இதுவே பற்றாஸாக

கோப்ய தத்ருஸூ
ஸதா பஸ் யந்தி ஸூரயா
-என்று இமை கொட்டி விழிப்பதும் கூட பகவத் அநுபவ விரோதி என்று நிமிஷ உன் மேஷங்களைத் தவிர்ந்து நித்ய ஸூரிகள் பெறும் பேற்றை இறே-

ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –10-3-1- என்கிறபடியே-
இவன் பசு மேய்க்கப் போந்தான் -ஒரு பகலாகிலும் பிழைக்கும் என்று இருக்கும் இவர்கள் பெறுகிறது

ப்ராப்ய வஸ்துவைப் பேசும் இடமடைய
காரணம் து த்யேய -அதர்வ சிகை –காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது-என்றும்
ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந –ப்ருஹ -6-4-22-எல்லாவற்றையும் வசத்தில் நடத்துமவன் -அனைவருக்கும் ஈஸ்வரன்-என்றும்
க்ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே -ரஜஸ் என்னும் பிரக்ருதிக்கு மேலே எழுந்து அருளி இருக்கும் உன்னை ஸ்துதிக்கிறேன்-என்றும்
வைகுண்ட து பரே லோகே -ஸ்ரீ வைகுண்டம் என்னும் மேலான உலகில் ஸ்ரீ தேவியோடு கூடிய லோக ஸ்வாமி-என்றும்

திவி திஷ்டத் யேக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -எல்லா உயிர்க்கும் ஆத்மாவானவன் அப்ராக்ருத லோகத்தில் இருக்கும் நாராயணன் ஒருவனே -என்றும்
பேசப்படுகிறவன் கிடீர் இடையருக்கும் இடைச்சிகளுக்கும் இலக்கானவன்

இங்கே ஸந்நிஹிதன் என்றால் இது வஸ்த்வந்தர ஸூசகமாய்த் தோற்றாதோ -இருவரும் வெவ்வேறு ஆனவர்களாகத் தோற்றாதோ என்னில்
த்ரை லோக்ய கோப்தாரம்
இப்படி பரத்வத்தில் எல்லையிலே நிற்கிறவன் கிடீர்
இவனுடைய பரத்வத்தைப் பார்க்கக் கீழே சொன்ன ஸுலப்யம் கூடாதபடியாய் இருந்ததீ என்ன(ப்ரஹ்மமே கிசோர பாவம் கொண்டு பிறந்தான் அன்றோ)
கிருஷ்ணம்
பாரே புராதந கிராம் பார்ஸ்வே சா கோஷ யோஷிதாம் பழ மறையின் அக்கரையில் நிற்கும் வஸ்து ஆய்ச்சிகளின் அண்டையிலே நின்றது -(முந்தானையில் முடிந்து கொள்ளும் படி இருக்கிறானே)என்று வேதங்களுக்கு
நேதி நேதி –இது இப்படிப்பட்டது அன்று இது இப்படிப்பட்டது அன்று -என்றும்
யதோ வாஸோ நிவர்த்தந்தே –தைத்ரியம் -எதனிடம் இருந்து வாக்குகள் திரும்புகின்றனவோ என்றும்
அவிஞ்ஞாதம் விஜாநதாம்–கேந -அளவிட்டு அறிந்தவர்களுக்குப் பரம் பொருள் அறியப்படாதாகிறது -என்றும்
எட்டாதபடியாய் இருக்கும் இவ் வஸ்துவே
இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கால் மேல் கால் ஏறிட இட்டுக் கொள்ளலாம் படியாய் இருக்கும் ப்ராப்ய வஸ்துவுக்கு லக்ஷணம் பரத்வ ஸுலப்யங்கள் இரண்டுமே இறே –

அத்யந்த துர்லபமான வஸ்து இப்படி ஸூலபமாகக் கூடுமோ என்னில்
அக்லிஷ்ட சேஷ்டிதம்
எளிதில் செயல் புரியும் -செயற்கு அரிய செயல்களையும் எளிதில் செய்து முடிப்பவன்
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வே -6-8-இவனுடைய சக்தி மேலானதாகவும் பலபடிப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது -என்றும்
ஸர்வ ஸக்திஸ் து பகவான் –விஷ்வக் ஸேந ஸம்ஹிதை -எல்லா சக்தியும் உடைய பகவான் சக்தி அற்றவன் போலே நடக்கிறான் –என்றும்
ஏவம் விதமான அகடிதகடநா ஸாமர்த்யத்தை உடையவன் -செயற்கு அரிய செயற்க்கு அரிய செயல்கள் செய்யும் செயல் திறமையை யுடையவன் -என்கிறது

(பராவரே -உலகில் உள்ள பரர்களை அவரர்களாக்கும் பரத்வம் -பரத்வ ஸுலப்யங்களுக்கு ஸீமா பூமி இவன் அன்றோ)

————————

2-ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –(மதுரையார் மன்னன் –உகந்த திருநாமம்-அயோத்தியை சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழ் -பெருமாளுக்கு மூன்று ஸ்தலங்கள்)

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலே பள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —

அவதாரிகை –
பத்ரம்  கர்ணேபி ஸ்ருணு யாம தேவா பத்ரம் பஸ்யேமா ஷபிர்யா ஜத்ரா-அஷாபி பத்ரம் பஸ்யேம யஜத்ரா ஸ்திரைர்  அங்கைஸ் துஷ்டு வாம்ச-தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு–தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்-பத்திரமான ஒன்றையே பார்க்க வேண்டும்
பகவத் விஷயமே நல்லதும் போக்யமும் பாவனமும் -ஞான பக்தி வைராக்யம் மூன்றுமே வேண்டுமே-இவற்றை விவரித்து அருள்கிறார்

போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ஸ்வே-1-12- என்கிறபடியே
சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித்  அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –

அதில் அசித்து –அஜாமேகாம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ஸ்வே -4-5- சிவப்பு வெளுப்பு கறுப்பு என்னும் மூன்று நிறங்களை -குணங்களை -உடையதும் தன்னை ஒத்த பல குழந்தைகளை -மஹான் -அஹங்காரம் பூதங்கள் –முதலானவற்றை உண்டாக்குவதும்
ஒன்றாய் இருப்பதும் -பிறப்பற்றதுமான ப்ரக்ருதிய–என்கிறபடியே
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரஸ்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
விபரீத ஜ்ஞான ஜனகமாய் –(பிறக்கிறது இருக்கிறது பரிணமிக்கிறது வளர்கிறது குறைகிறது அழிகிறது என்னும்)ஷட் வித விகாராஸ் பதமாய் -சதத பரிணாமியாய்-சதத ஷணஷரண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய்  -(உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா அலகிலா விளையாட்டுக் கருவியாய்)இருக்கும் –

சித் வஸ்துவைப்   பார்த்தால் தேக இந்த்ரியாதி (ஆதி -மனம் பிராணன் அறிவு)விலஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –

ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பர தந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –

இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் (ஈடுபாடு)இன்றிக்கே
பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
பார லௌகிக பல சித்தி ஹேதுவாக –பதிம் விஸ்வஸ்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே

லோகாயத மத அநு சாரிகளாயும்
ஸ்யாதிஸ்தி ஸ்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ஸ்யா ஸ்திதி -ஸ்யான் நாஸ்தி -ஸ்யா தஸ்தி ச நாஸ்தி ச –ஸ்யா தஸ்தி இதி வக்தவ்யம் ச-ஸ்யா நாஸ்தி இதி வக்தவ்யம் ச –
ஸ்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் ச -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும் 

கதிமிச்சேஜ் ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூகதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூகத மத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயண பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சகதிமிச்சேஜ் ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூகதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூகத மத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயண பரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சம்யக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
புண்டரீகாஷ சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு

மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –(முதல் நிர்வாகம் -இது–மோக்ஷ பலனாக இல்லாமல்)
பத்ரம்  கர்ணேபி ஸ்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி

1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
தேவர்களே விஜிகீஷா (வெல்லுவதில் விருப்பமான)ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்

பத்ரம் பஸ்யேமா ஷபிர்யா ஜத்ரா-அஷாபி பத்ரம் பஸ்யேம -இங்கே பஸ்யேம என்ற போதே சித்தம் அன்றோ
அஷபி-என்கைக்கு அடி என் என்னில்  -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வபாவ ஆக்யாந மாக வுமாம் –
அஷபி -பத்ரம் பச்யேம -ஸ்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்

யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –

ஸ்திரைர்  அங்கைஸ் துஷ்டுவாம் ச-
பஸ்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
ஸ்திரைர்  அங்கைஸ் துஷ்டுவாம் ச-
ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
க்ரியா சமபிஹாரே யங்-ஆய்-யங்-லு  கந்தம் ஆகையாலே ஸ்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –

தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ்ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
விசேம என்னாமல்  வ்யசேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –

ஆக -இத்தால் -பத்ரஸ் ஸ்ரவணமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ஸ்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர் தர்க்யமும்பிரதிபாதித்தாயிற்று –

அங்கன் அன்றியிலே –உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு இதினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா
இங்கு தேவ சப்தம் –தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்ய சப்தத்துக்கு உப லஷணம்-
தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம்  ஸ்ருணுயாம்-ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ
-திருவாய் -7-5-3-என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்

ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் –

பத்ரம் பஸ்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
இங்கு பத்ர சப்தத்தாலே –சதைக ரூப ரூபாய -என்றும் –ந பூத சங்க  சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
ரூபௌதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
தத்ருஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாசிந –என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
பகவத் அனுபவ ரூபம் இறே கண்ணுக்கு இலக்காகுவது

யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
யோ அஹம் அஸ்மி ச சந் யஜே-என்றும் –ச ஸ்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவிஸ் பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாஸமும்(உயிரை அறவில்லை செய்தனன் தோழி என்பதே இங்கு ஹவிஸ் ஸமர்ப்பணம்)
ஏவம் பூதமான நியாஸ வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும்-யஜத்ரா– வும் -ஆச்சார்ய சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது

ஸ்திரிர் அங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யுதாயு –
ஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே
-என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண விநாசியான தேஹம் போல் அன்றியே
அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
ஹாவு ஹாவு ஹாவு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று- ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக –

தான் அவதீர்ணனான அவ் வவதாரங்களில்
மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒரு புறம் சொல்லவே இருக்கும் –
ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அ நிர்ப் பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்-
ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன் அடிக் கீழ் ஆக்கா நிற்கும்
பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்ய க்ருஹ்ணன் த்ருட வ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்

கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் –ரூபமே தச்ச சதுர் புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
அவதார தசையிலும் ஆஸ்ரித சம்ரஷணத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இறே

அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி  தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –

ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ் வவதாரத்திலே இறே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் –திருவாய் -1-3-1- என்றும்
கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
கோவிந்தற்க்கோர் குற்றேவல்  இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
வார் மணல் குன்றில் புலர நின்ற வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
இப் புடைகளிலே ஆழ்வார்களும் இவ் வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்

ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
சகல ஜகத் காரணத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
சமுத்திர சாயித்வத்தையும்
சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி  மதுரா புரீ சங்கதத்வத்தையும்
பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-

ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் -(அரையர் தாளம் எறிந்து அடி பட்ட ஸுலப்யம் இன்றும் காணலாமே )
2- ஏஷ -அனுமாநம் ஆகமம் அர்த்தாபத்தி அநுப லப்தி -யாதிகளான–பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது -(தேவ தத்தன் பருத்து பகலில் உண்ணாமல் -என்றால் இரவில் உண்கிறான் என்பதே அர்த்தாபத்தி)(காணுமோ கண்ண புரம் -என்று காட்டினாள் -ப்ரத்யக்ஷம் )

(பிரான் இருந்தமை காட்டினாள் திருத் தாயார் -இவளோ திவ்ய தேசம் காட்டுகிறாள் -கருவிலே திருவில்லாமல் கண்ணை மூடி செவிக்கும் துர்பாக்கியவாதிகள் -பட்டர் -கண்ணைத் திறந்து பார்க்க வேண்டுமே–கண்டு மேல் அஞ்சலி பண்ண சொல்ல மாட்டாமல் சேஷம் காட்டினாள் )

(பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் பயில்கின்றாளால் –வர்த்தமானம் நிகழ் காலம் –என்று என்று -முதலில் தெரியும் போல் -பின்பு தெரிந்து கொள்ள முடியாமல் இருக்குமே -அழகைக் காட்டி ஈர்த்து கொள்வானே–பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் போல் )

(அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் ஸ்ரேஷ்டம் போல் கண்ணபுரம் அர்ச்சா ஸ்தலங்களில் ஸ்ரேஷ்டம்-வட மதுரைப் பிறந்தான் 9 பத்து ஆரம்பம்- இறுதியில் கண்ணபுரம் மங்களா சாசனம்)

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –காணுமோ கண்ணபுரம் காட்டினாள் –அங்கு சங்கை இது தெளிவு -இது அன்றோ இதன் ஏற்றம்

3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன்ந அவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவுமாம் –
4-ஏஷ -அங்கன் அன்றியே –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவுமாம் –

இப்படி  சங்குசித வ்ருத்தியாய் இருப்பான் ஒருவனோ என்னில்
1- நாராயண –
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
–என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –
2- நாராயண –
ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
3- நாராயண
சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத் பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
ஏகோ ஹவை நாராயண ஆசீத்  ந ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதிவீ -மஹா உபநிஷத் -என்றும்
ஆபூத சம்ப்லவே    ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு –பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் –நாராயண – –
நராஜ் ஜாதாநி தத்த்வாநி
-பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேதந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –(பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து -கடைத்து -இடந்து உடைத்து)
தா யதாஸ்யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –
6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர்ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர் பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –

வீடுமின் ஊற்றவும் வீடு செய்து உம் உயிர் வீடு யுடையான்

ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத

ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

7- நாராயண -அங்கன் அன்றியே –அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
8- நாராயண -மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
ஆஸ்ரயண  உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
இக் குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம்
தோற்றுகிறது –

ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சா ஸஸ் சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆசீத்-என்றும் சொல்லுகிறபடியே
ஹிரண்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரயணீயதையும் போக்யதையும் தோற்றுகிறது-
2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் –இத்தால் பூவும் மணமும் போலே அவிநா பாவம் தோற்றுகிறது –
ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈஸ்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி
3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத் தலைக்கு என்றால் –ஸ்ரீ மான் -இவளும்
இறையும் அகலகில்லேன் -என்று அலர்மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
ஸ்ரீய ஸ்ரீ யம்–என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ஸ்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் –
இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன் –
4- ஸ்ரீ மான் -இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டது படுவார்கள்

ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆஸ்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று

இத்தைப் பற்ற இறே ஆழ்வார்களும் –திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் -திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –

அது எங்கே கண்டோம் என்றால் –
1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இறே
2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –
3- ஷீரார்ணவ நிகேதந -அங்கன் அன்றியே –பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம்  -18- என்றும் சொல்லுகிறபடியே
கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –

(வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம் ருதோததி:||–ஶ்லோகம் 18 –

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப் பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரி சுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.)


4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயணத்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-

(பர வ்யூஹ விபவங்கள் –
திருப்பாவையில் முதலிலும் அடுத்து இரண்டாம் பாசுரத்திலும் மேல் மூன்று பாசுரங்களில் போல்
இங்கும்)

ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
1-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏக ஆதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
2- நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
3- நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –

கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
1-ஆகதகனத்து இருந்த களிறு –என்றும் –தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –
2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸிநீ சார்த்தத்துக்குத் தன் வடிவழகை தூளி தாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-

இப்படி வருகிறது தான் பரம பதத்திலேயோ திருப் பாற் கடலிலேயோ என்னில்(மன்னு வடமதுரை யுகங்கள் தோறும் -வாமனன் -சத்ருக்கனன் முன்பு -துருவன் தபஸ் செய்த திவ்ய தேசம்)
1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரி ஸூபா -என்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இறே-
2- மதுரா புரீம் -தேவாநாம் பூர் அயோத்யா என்கிற தேசம் போலே (தேவர் அல்லால் செல்ல ஒண்ணா)துஷ் ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
சத்ரு மித்ர உதாசீனரான  கோடி த்ரயத்துக்கும் ஆஸ்ரயமான தேசம் இறே
3– மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது –
4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி
ஜட (ஜல)பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இறே
5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய்  தான் -கார்ய ஏக தேசத்திலே ஒதுங்கி வந்தான் –
6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் –ஸூ ப்ரபாதா ச ரஜநீ மதுரா வாச யோஷிதாம் பஸ்யந்த யச்யுத வக்த்ர அப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பன்னுவாரைப் போலே வந்தான் –
7-அங்கன் அன்றியே –அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –

8-நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி
புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –

ஆக இந்த ஸ்லோகத்தாலே-
வாக்ய த்வயம் போலே உபாயத்வேனவும் உபேயத்வேனவும் ஆஸ்ரயணீயனாய்
ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
கங்கா பதநம் போலே ஆஸ்ரிதர் இருந்த தேசத்திலே தான் வந்து
தன் வடிவு அழகாலும்
நடை அழகாலும்
அஜ்ஞரானவர்களையும் வசீகரித்து சரிதார்த்தராம்படி(ஆஸ்ரிதார்த்தராம்படி )பண்ணிற்று ஆயிற்று –

அங்கன் அன்றியே
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே –பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும்
அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
வட வரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யாம் என்று பேசினாள் -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
கற்றார் சேர் கண்ண புரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும் மதுரா புரீ சப்தார்த்தையும்
பிரதிபாதிக்கையாலே

ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று

——————-

3-ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

அவதாரிகை
ஸ்ரோதாக்களுக்கு இப் பிரபந்தம் ஆப்த தமம் என்று
இதிலே புபுத்சை பிறக்கைக்காக
விலஷணனான ஆச்சார்யன் பக்கலிலே
புபுத்ஸூவாய்
அபி ஜாதனான சிஷ்யன் அவசரத்திலே (சரியான காலத்திலேயே என்றபடி)பிரஸ்னம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச
–1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்   –
முனிவர் தலைவராய் -காலைக் கடன்களை முடித்தவராய் யுள்ள ஸ்ரீ பராசர மகரிஷியை

மைத்ரேய -ப்ரணிபத் யாபிவாத்ய ச –பரிபப்ரச்ச-
ஸ்ரீ மைத்திரேயர் என்னும்  ரிஷி வணங்கி -அபிவாதனம் செய்து -நன்றாகக் கேட்டார் –

1-பராசரம்-
சஹோவாச வியாச பாராசர்ய
-தை ஆர -1-9-என்று
வேதாச்சார்யனான ஸ்ரீ வேத வியாச பகவானுக்கு இவனோட்டை சம்பந்தத்தாலே
ஆப்தி சொல்ல வேண்டும்படி ஸ்ருதியிலே ஆப்தனாக சித்தனானவனை
2-பராசரம்-
வைதிக பஷத்துக்கு சத்ருக்களான பாஹ்ய குத்ருஷ்டிகளை
பிரமாண தர்க்கங்கள் ஆகிற சரங்களாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம் –
அதவா –
3- பராசரம் –
ஆந்தர சத்ருக்களான ராக த்வேஷாதிகளை சம தமாதிகளாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம்-

முநி வரம் –
பரமாத்ம விஷயத்தில்  மனன சீலர் ஆனவர்களில் உத்க்ருஷ்டனானவனை
இத்தால் ஜ்ஞான சம்ருத்தி சொல்லுகிறது –

1-க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்   -என்று
இவ் உபாசனத்துக்கு அங்கமாக சாஸ்திர சோதிதமாய் ஜ்ஞான பூர்வகமான அனுஷ்டானமும் –
அனுஷ்டிதமான சமயத்திலே -2-1-க்ருத பௌர்வர்ணஹிக க்ரியம்  -என்கையாலே
சத்வோத்தர காலத்திலே என்கை –

இத்தாலே
வசிஷ்டன் அந்ய பரனாய் இருக்க த்ரி சங்கு சென்று கேட்டால் போலே அன்றிக்கே
ஆச்சார்யன் அநந்ய பரனாய் இருக்கிற சமயத்திலே கேட்டான் -என்கை –

பர பஷ பிரதிஷேபம் பண்ணுகிற போது அவசரம் அன்று
உபாசன காலமும் அவசரம் அன்று
ததங்கமான அனுஷ்டான சமயமும் அவசரம் அன்று
ஆகையாலே க்ருத க்ருத்யனாய்த் தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவசரத்தே கேட்டான் என்கை –

3-மைத்ரேய –
யாஜ்ஞ வல்க்ய பகவானை  இடங்களிலே பிரஸ்னம் பண்ணிப் போரும் ப்ரஹ்ம விதுஷியான மைத்ரி ஸூதனாகையாலே –
அவசரத்திலே பிரஸ்னம் பண்ணுகை தன்னைத் தோன்றி வந்ததன்று –
தன்னுடைய பிறப்பால் வந்தது -என்கை –

அன்றியிலே
கேகய மித்ரயு பிரளய -பாணிநி ஸூத்ரம் -7-3-2- என்றபடி
இய என்னும் பதம் -நிஷ் பன்னமாகக் கிடக்கிறதாகவுமாம்   –
மித்ரயு -என்பவரின் பிள்ளை என்றும் கொள்ளலாம்-

1-பரி பப்ரச்ச-
ஒரு வார்த்தை சொல்லுகை அபேஷிதமான போது கண்ணுக்கு எட்டாதபடி பின்னே இருக்கவும் கடவது அன்று
கண் படும்படி பார்ஸ்வத்திலே இருக்கை சிஷ்யனுக்கு பிராப்தம்
அந்த ஸ்தானத்திலே நின்று கேட்டான் -என்கை –

(தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந
—৷৷4.34৷৷

ப்ரணி பாதேந -நன்கு வணங்குவதாலும்
பரி ப்ரஸ்நேந –சூழ்ந்து நின்று கேட்பதாலும்
ஸேவயா.—கைங்கர்யத்திலும்
தத் -அந்த ஆத்ம ஞானத்தை
வித்தி –ஞானிகளிடம் இருந்து அறிவாயாக
தத்த்வ தர்ஸிந—ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த
ஜ்ஞாநிநஸ்-ஞானிகள்
தே -உனக்கு
ஜ்ஞாநம்–ஆத்மாவைப் பற்றிய அறிவை
உபதேக்ஷ்யந்தி -வணங்குதல் முதலானவற்றால் உகந்து உபதேசிப்பார்கள் –

பாதம்-கைகள் கால்கள் தலை ஐந்தும் –
நி பாதம் -அஹங்காரம் அடங்கி -மனாஸ் புத்தி அபிமானம் மூன்றும் -சாஷ்டாங்க நமஸ்காரம்
ப்ர நி பாதாம் -ப்ரணிபாத–இது ஸ்வயம் பிரயோஜனம் -என்ற புத்தி

பரிப்ரஷ்ந-சூழ்ந்து இருந்து கேட்டல் –ஆச்சார மூலம் -சக சிஷ்யர் மூலம் -அனுபவத்தால் -கடாக்ஷத்தால் -புரியும் அளவும் கேட்க -பர்யாப்த்தம் -பரி ப்ரஸ்னம்-பரி சாக்ல்யேந –அனைத்து சங்கைகள் போகும் படி சகலமும்-விஷயங்களை ஆழ்ந்து அறிய அத்தைச் சுற்றி பல கேள்விகளைக் கேட்டு உணர்வதுமாகும்)
2- பரி பப்ரச்ச –
நினைத்த அர்த்தத்திலே ஆச்சார்யன் உதாரனாம்படி பாடே அத்தைக் கேட்கை-
அதாகிறது
யன் மயம் ச ஜகத் ப்ரஹ்மன்-யதைஸ் ச ஏதச்  சராசரம்
லீந மாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-5-என்று
சாமான்யத்தில் பிரஸ்னமாய்
விஷ்ணோ சகாஸாத் உத் பூதம் -ஜகத் தத்ரைவ ச ஸ்திதம்
ஸ்திதி சம்யம கர்த்தா அசௌ- ஜகதோ அஸ்ய- ஜகச்ச ஸ-
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-31-என்று
விசேஷத்திலே உத்தரமாம்படி கேட்டான் -என்கை –
3-பரிபப்ரச்ச –
அன்றியிலே பரி -என்கிறது சாகல்யா வசனமாய்
ஜ்ஞாதவ்யங்களை யடையக் கேட்டான் என்றாகவுமாம் –

ப்ரணிபத்ய-
பதனம் ஆகிறது -சர்வ அவயவங்களும் தரையிலே பொருந்த விழுகை –
நிபதநமாகிறது -ஆந்தரமான அபிமானமும் பக்னமாய் விழுகை
ப்ர ணிபதநாமிகிறது -இது தானே விஹிதம் என்று இருக்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாக இருக்கை –

அபிவாத்ய –
ஸ்வ நாமத்தை ஆவிஷ்கரித்துக் கொண்டு பாதோப சங்க்ரஹனம் பண்ணுகை –

ச —
ஆச்சார்யன் பக்கல் அனுஷ்டிக்கக் கடவ விநயங்களை சமுச்சயிக்கிறது –

———

பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்ய அபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம்

————–

ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்’ என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.

ஏறிய பித்தினொடு – மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு – ஸகல லோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும் – க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில் – பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும் – ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;

“என் பெண்கொடி யேறிய பித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக் கட்டிற்று.
உலகில் பித்துக் கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே;
அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன;

பித்து ஏறின நிலைமையிலும் பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை என்கிறாள்.
பராசர மஹர்ஷி முதலானார் தெளிந்திருந்து என்ன வார்த்தை சொல்லுவார்களோ
அந்த வார்த்தை இவள் சொல்லுகின்றாள் காண்மின்.

பராசரம் முநிவரம் க்ருதபெளர்வாஹ்நிகக்ரியம்இ மைததேய்: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய ச” என்கிறபடியே
வணங்கி வழிபட்டுக் கேள்வி கேட்ட மைத்ரேய பகவானுக்கு, நற்றெளிவு கொண்டிருந்த பராசர பகவான்
விஷ்ணோஸ் ஸகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திகம்.
ஸ்திதி ஸம்யமகர்த்தாஸென ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:
.” என்று உபதேசித்த
அரும் பெரும் பொருளை இவள் பித்துக் கொண்டிருக்கிற நிலையிலே அவவீலையாக எடுத்துரைக்கின்றாளாயிற்று.

நன்கு வேதமோதிய அந்தணன் பித்தேறினாலும் வேத வாக்கியங்களையே சொல்லித் திரியுமா போலே
இவளும் வாஸநா பலத்தாலே பகவத் விஷயமல்லது பேசாளென்கை
.

நீறு செவ்வேயிடக் காணில் நெடுமாலடியாரென்றோடும் = திருமாலடியார்களுக்கு பஸ்மதாரணம் சாஸ்த்ர நிஷித்தம்
என்னுமிடம் ஆழவாரறியாததன்று;
அப்படியிருக்க இங்கு அருளிச்செய்வதற்குக் கருத்தென்னென்னில்;
“த்ரவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்த்வமாக இடக் காணில் நெடுமாலடியாரென்றோடும்.” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
இதனை அடியொற்றியே மற்ற வியாக்கியானங்களு முள்ளன.
பஸ்மதாரணம் பண்ணினவர்களேயாயினும் அந்த பஸ்மத்தைக் குறுக்கே பூசாதே நெடுக இட்டால்
‘ஊர்த்த்வ புண்ட்ர தாரிகளிவர்கள்’ என்று அவ்வளவுக்காக ப்ரதிபத்தி பண்ணுமென்றபடி.

————————————

4–ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் –ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

அவதாரிகை –
சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவத் அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்களோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –

ஆதௌ –
பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் –என்கிறார் –

பிரமாணம்-
சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
அசம்யக்த்வ ஹேது- ப்ரம விப்ர லம்பாதி (துயக்கு மயக்கு மறப்பு -இத்யாதி)காரண தோஷமும்-
நேதம் இத்யாதி- பாதகப்ரத்யமும் இறே  –
காரண அநபேஷமுமாய் -அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –

இப்படி பிரமாணம் ஆகிறது –
இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –

வேதா  –
காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
வாசா விரூப நித்யயா-என்றும்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -(v)என்றும் சொல்லுகிறபடியே
அநாதி நிதந அவிச்சின்ன சம்பிரதாயமாய் –
நித்ய நிர்த் தோஷமாய்-
ப்ரம  விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான  வேதங்கள் –

வேதா –
வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது என்
யோ புத்த்யதே ஸ பரான் போதயதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது

நேதி நேதி -என்றும்
க இத்தா வேத -(ஆண் அல்லன் பெண் அல்லன் இத்யாதி)என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
பிறரை அறிவிக்கும் படி என் என்னில்

ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
ஸ்வரூ பேண குணைச்ச யத்ர அநவதிக அதிசயம் -என்றும்
தவ அநந்த குணஸ் யாபி -என்றும்
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண  குண கண -என்றும் சொல்லுகிறபடியே
வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே-அபரிச்சின்னம்  என்று அறிகை இறே

அபரிச் சின்னத்தைப்  பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் பர ஞாபகத்துக்கும் -பிறருக்கு அறிவிக்கும் பொழுதும்-குறை இல்லை –
வேத புருஷன் தானே –வேதாஹா மேதம் புருஷம் –என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
அறிந்தபடி என் -என்னில்
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று அறிந்தேன் என்றான் இறே

வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜநா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே

இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இறே

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம்
 அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
நேதி நேதி -என்றும் –
அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது
அன்றே

இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
வேதா –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவ அதர்வணாநி ஸ
-என்கிறபடியே
ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
அநந்தா வை வேதா -என்கிறபடியே
காண்வ மாத்யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –

யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
ஏக சந்திக்தே கார்யே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
ஜ்ஞாநாத் அசந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
பிரமாணாந்தர அவிஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது-

(காம் ஆனாய —கார்யார்த்தம் -பசுவைக் கூட்டி வா
அப்பா இவர் -அம்மா காட்டி அறிவிப்பது -இருக்கும் வஸ்து –பரி நிஷ்பன்ன வஸ்து
ஸாஸ்த்ர யோநித்வாத் –ஸித்த வஸ்துவையும் வேதவாக்யங்கள் சொல்லும்
ப்ரஹ்மத்தை ஆராதனை பண்ணு -கார்யார்த்தமும் உண்டே)

வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
வ்யாப்தி சித்தமாய்
திருஷ்டாந்த   கதமான கர்ம வஸ்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிரசங்கிப்பதும் செய்யும்

இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
ந தத் சமஸ் ச அப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
ந த்வத் சமோ அஸ்த் யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே  அப்ய பிரதிம ப்ரபாவ -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர்த்தத்யமும் பிரசங்கிக்கும்
ஆகையால் –இவ் விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –

(ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –)

ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
ப்ருதஹ்குபாத்தமாய் -சஹ படிதமான ஸ்ம்ருதி யாதி   க்ருத்யம் என்ன –
வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தஸ்யமும் –(அர்த்தம் இல்லாமையும்)
இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –(ஒட்டாமையும்
)மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –

ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று(-இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா-இப்படி இப்படி என்று காட்டும் மீமாம்ஸை)
பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –

(வேதமும் ப்ரஹ்மமும் நித்யம்
இப்படி இப்படி என்று அறிய உபகாரம் செய்யும் இவை)

இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –

இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரணமும்
இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –

(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே..
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –அத்தாலே அது முற் பட்டது
–)

அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
புராணம் -பரத்வ ஏக பரம் –

நியாயை (பஹு வசன பிரயோகம்)என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷணமாய் இருக்கிறது

இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
வாக்யார்த்த விசாரம் என்ன –
வாக்யாங்கமான பத வர்ண ஸ்வராதி நிர்ணயம் என்ன –
இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –

ஆக இத்தால்
புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிஸ்ரிதா –வேதா ஸ்தாநாநி  வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -(4 வேதம் 6 அங்கம் -புராணம் நியாயம் மீமாம்ஸை தர்ம சாஸ்திரம் -ஆக 14-வேத சதுஷ்ட்யத்துக்கு அங்க உப அங்கங்கள் 14 ஆயுர் வேதம் அர்த்த சாஸ்திரம் தனுர் வேதம் காந்தர்வ வேதம்)என்றும்
அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
சீஷாயாம் வர்ண சிஷா –பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சோப்யாம்- சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் -கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
கல்ப அனுஷ்டானம் உக்தம் -ஹ்புசித கமிதயோர் நியாய மீமாம்சையோ ஸ்யாத்-அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா
–(18) என்றும் சொல்லுகிறபடியே
அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது-வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-

(சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா
–18-

ஹே ரங்க நாத

சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்

வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –

பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –

சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்

கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –

கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட

நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்

அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்

புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்

தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே

தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –
விசாரிக்கின்றன -என்றவாறு

பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே

நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
வ்யாக்ரணம் -இலக்கணம்
ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது)

ஸேதிஹாசை  நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதிர் உபகுருதே -என்று
பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப் ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும்  கபளீகரிக்கைக்கு ஈடான
அளவில்லாத மந்த மதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –

ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை  அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –

இதிஹாசம் ஆவது –
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை
-என்கிறபடி
கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
அவ் வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்மதா தடே -சாரஸ்வதாய தேநாபி மம சாரஸ்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம்  -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –

புராணம் ஆவது –
புராபி நவ
-என்றாய்
அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –

ந்யாயம் ஆவது
பூர்வ பஷ (யுக்திகளாலே )சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ் கர்ஷித்துக் கொடுக்கை –

ஆக இப்படி
ச அங்கமாயும் ச சிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
பிரமாணம் என்றே சொல்லுகிறது –

அது செய்யும்படி என் –
அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம்  நிர்வபேத்-(அக்ரம் நயதேதி அக்னி)என்றும்
வாயவ்யம் ஸ்வேதமாலபேத பூதிகாம -என்றும்
ஐந்தரம் சாரும் நிர்வபேத் பஸூ காம -என்றும் இத்யாதிகளாலே
அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –

த்வத் அக்ரம் நயதேதி அக்னிர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
அவ் விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -(காக்காய் கறுப்பாக இருப்பதற்கும் -தித்யோதனம் வெளுப்பாக இருப்பதற்க்கும் என்ன சம்பந்தம்)என்று
அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்

இஷ்டா பூர்த்தம்  பஹூதா ஜாதம் ஜாயமாநம் விஸ்வம் பிபர்த்தி புவநஸ்ய நாபி -என்றும்
யத் கரோஷி யத் அஸ்நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் ச ஹூதாசநான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
ஏநமேகே வதந்த் யக்நிம் மனு மந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
சமாக்யைக்கு பாதகமான ஸ்ருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
தத் தத் பிரதேச அநுகுணமான  அவயவ சக்தியாலே யாதல்(ஸ்ருதி- லிங்க ப்ரகரணாதியான–ஸ்ருதி -அடையாளம் –வாக்யம் -ப்ரகரணம் ஸ்தான பிரமாணம் –சமாக்யை -பேர் – (ஸ்தான பிரமாணம்-உகாரம் -அவதாரணம்-தண்ணீர் உறிஞ்சும் ஸூர்யன் -சம்சாரக்கடல் வற்றும் பரமாத்மா -ஸாஸ்வதம் ப்ரஹ்மம் போல்வன – )அடுத்த அடுத்த பிரமாணங்கள் துர்பலம்)
(அந்தர்யாமி பாவத்தால்)அபர்யவசாந வ்ருத்தியாலே யாதல்(அவனே அவனும் அவனும் அவனும்)
அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –

த்வத் அர்ச்சா விதி முபரி
உம்முடைய ஆராதன விதியிலே –
யஜ்ஞேன தாநேந தபஸா அநாசகேந -(அநாசகேந-உண்ணாமல் பட்டினி இருந்தும்)என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
தேவருடைய சமாராதநத்தைச் சொல்லுகிறது
நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –

(அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய -தத் பிராப்தி பல
-ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-1-

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னிட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத் யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை-(போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து) இதோ விமுகராக்கி- நல் வழியே போக்குகைக்கு
தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –

ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
இதுக்கு க்ருத்யம்-
ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்

முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –

(ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ்ச ப்ரத்யகாத்மந:
ப்ராப்தி உபாயம் பலம் ப்ராப்தே: ததா ப்ராதிவிரோதிச
வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா:
முநயச்ச மஹாத்மாநோ வேதவேதார்த்த வேதிந:

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் — தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழின் இசை வேதத்தியல்.)

முதல் பழுவிலே தவறி ஏழாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
அனர்த்தகரமான சரீரத்தை  விட்டு மோஷத்தைப் பெரு-என்று சொன்னால்
அப சர்ப்பேத் அசௌ கதா மோக்ஷ ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே

(தனம் குழையிடக் காது பெருக்குவாரைப் போலே
மாச உபவாஸிக்குப் போஜன புறப்பூச்சு போலே)

அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ஸ்யேன விதியை உபதேசித்து
அது பலித்து -அந்த வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
அது பலித்து -தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்ன பத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு
(விவேகியான அவனுக்கு-தேஹ ஆத்ம விவேகம் ஸ்வர்க்கம் விரும்பிய இவனுக்குத் தானே ஏற்பட்டது)

அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
ப்லவாஹ் யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -(ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம்)என்றும்
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
ஸ்வர்க்கே அபி பாத பீதஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
ஆப்ரஹம புவநாந் லோகோ  புநரா வர்த்தி ந -என்றும்
ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன -என்றும் உபதேசித்து –

இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெள்ள இவனை இதிலே மூட்டுகைக்காக
முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –

அழகியது –பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
உத்தர பாகத்துக்கு க்ருத்யம்   என்
என்னில்

ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ் ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ-
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி
-என்றும்
கஷாயே கர்மபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
அவித்யயா மருத்யும்-என்றும்
தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண  பாபாநாம் கிருஷ்ணே  பக்தி பிரஜாயதே
-என்றும் சொல்லுகிறபடியே
பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதக ஷயனானவனுக்கு
பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது

இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -(கர்ம அனுஷ்டானத்துக்குப் பிறகு கர்ம அனுஷ்டானம் பண்ணினாலேயே)என்றும்
வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதோர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்யம் இத் யுக்தம் பவதி -என்றும்
அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-

(ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே
— ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.)

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா
–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -14-

பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாண குணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.-கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் )

ஊர்த்வோ பாக –
ஸ்ருதி சிரஸி விதீப்தே
(ப்ரஹ்மணீ ஸ்ரீ நிவாஸே)-என்கிறபடியே
சத்வாரமாக பகவத் ப்ரதி பாதநம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
இவ் வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –

இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –

த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை —
ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –

த்வதீஹா –
ஜகத் ரஷண உபயோகியாக
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
பரத்வ ஸூசகமாயும்
சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும்
சொல்லுகிறது –

சேஷ்டா தஸ்ய அப்ரேமேயஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித் யுபாதார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –

இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
குண
குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -(ஸ்வரூபங்களையும் ஸ்வ பாவங்களையும் அறிந்தவன்)முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
ஸ்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்  என்ன
பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –

இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
அபரிமித குண கணனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
இருப்பிடமாதல் –
ஒரு போகமாதல்
பரிகரமாதல் இல்லையோ -என்னில்

விபவ –
சர்வஸ்ய வசீ சர்வசஸ் ஈஸான
-என்றும்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மாநாம் ஈசதே தேவ ஏக –என்றும்
திவி திஷ்டத் ஏக-என்றும்
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதி என்ன
லீலோபகரணமான போக பூமி என்ன
ஆக
உபய விபூதியையும் உடையன் –என்கிறது-

குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –

பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
அன்றியிலே
பரிஜ்ஞாபநம் ஆகிறது –
விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்

இவை அறிவிக்கிற  இத்தால் பிரயோஜனம் என் என்னில்
த்வத் பதாப்தௌ-
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வரஜ் ஞாநாத்  விசுத்தி பரமா மதா-என்றும்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-

ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
ஆத்மா நாம் அநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காம சரோ பவதி -என்றும்
இக் குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
சர்வஸ்ய   வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே

இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –

அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
மனசா து வி ஸூ ததே ந -என்றும்
ஹ்ருதா மநிஷா  மநசாபி க்லுப்த-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
ச விபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –

த்வதாப்தௌ -என்னாதே –
த்வத் பதாப்தௌ -என்கிறது
விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம்

ஆக
இப்படியால் -ஊர்த்வ பாகமானது
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது

ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
உபாசனம் கண்டிலோமே -என்னில்
உபாசனம் ஆகிறது
த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –

ஆக -இத்தால்-
ந தாஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
வேதே ராமாயனே புண்யே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும் சொல்லுகிறபடியே
சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –

இவ்வர்த்தத்தை –
வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –

(ஏவகாரம் மூன்று இடத்திலும் கொண்டால் அனைத்து அர்த்தங்களும் ஸித்தமாகுமே
அஹம் ஏவ -என்னையே சொல்லும்
வேதைஸ் ஏவ -வேதங்களே சொல்லும்
வேத்ய ஏவ ச -என்னை சொல்லி அன்று நிற்காதே)

சர்வைர் வேதை
அதீயமானமாயும் -விப்ர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்

அஹமிதி –
சர்வ அந்தர்யாமியாய் –
சர்வ சமாராத்யனாய்
சர்வ பல ப்ரதானவன்
-என்கிறார்

ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
ஷத்ரியே யஜேத -என்றும்
ஷத்ரியாதி சப்தங்கள் தஜ் ஜாதி விசிஷ்ட  பிண்ட த்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம்மளவிலே பர்வசிக்கக் கடவது
-என்கிறார்

வேத்ய
வாசக சப்தமானது வாஸ்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்

பகவன்
ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம்
-என்கிறார்

ஸ்வேந ச  வ்யாஸ கர்த்த
மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ
-என்கிறார்

————-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த
–19-

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –

வேதா -வேதங்களானவை-

பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –

ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்

ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்

ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட

உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –

பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி

த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்

பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-

ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்

த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –

த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்

பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –

பகவன்-எம்பெருமானே

சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே

ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே

உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன

அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்

த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –

கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்

உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-

இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்
–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

———-

ரஹஸ்ய சிகாமணி -தேசிகர்
கௌசிக புராணம் பராசர பட்டர்
நான் கண்டு கொண்ட நல்லதுவே -நம்மாழ்வார்-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் -பெரியாழ்வார்–பூமா தேவி கேட்டு -திருப்பாவையில் அருளிச் செய்தாள்-

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் –

அவதாரிகை –
அனுபாவ்ய வஸ்து  லாபத்துக்கு நிரபாய உபாயமான
1-ஆஸ்ரயண காலத்தையும் –
2-ஆஸ்ரயண அதிகாரியையும்
3-ஆஸ்ரயண பிரகாரத்தையும்
4-ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தையும்
5-ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது இந்த ஸ்லோக த்வயம் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்

ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்(புத்தியும் உறுதியாக இருக்க வேண்டுமே -)
ஸூஸ்வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ஸ்லேஷ்மம்(கபம்) என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச  அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம்  ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ(பூத காலம் -பக்தி தைலதாராவதி அவிச்சின்னமாகச் செல்ல வேண்டுமே)
தத் -பிற் காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய்  –(அந்திம ஸ்ம்ருதி செய்ய யோக்யதை இல்லாத போது)
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத் பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி  -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி தாது சாம்யே ஸ்திதே-என்று -ஆஸ்ரயண காலத்தை -சொல்லுகிறது

யோ நர -என்று -ஆஸ்ரயண அதிகாரியைச் சொல்லுகிறது

ஸ்மர்த்தா -என்று -ஆஸ்ரயண பிரகாரத்தைச் சொல்லுகிறது –

விஸ்வ ரூபஞ்ச மா மஜம்-என்று -ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தைச் சொல்லுகிறது

ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-
அஹம் ஸ்மராமி மத்பக்தம்  நயாமி பரமாம் கதிம்
-என்று -ஆஸ்ரயண பலத்தைச் சொல்லுகிறது –

——-

ஸ்திதே மனஸி-மனஸி ஸ்திதே -மனம் நிலை நிற்கையில் –
மனஸ்ஸானது எது –
அதுக்கு அவ ஸ்தானம்   ஆவது எது என்னில் –

மனஸ் ஆனது
அநாதி கால பாப  வாசனை யாகிற மஹா வாதத்தாலே -புயல் காற்றாலே -ப்ரேரிதமாய்-
தனக்கு ஆவாஸ பூமியான ஹிருதய குகையிலே ஷண காலம் தங்கப் பெறாதே
கண்ட விஷயங்களிலே மண்டி (த் திரியும் தத்துவமே மனஸ்)–

அது நிலை நிற்கையாவது-
திறந்து கிடக்கும் வாசல் தோறும் புகுந்து புறப்படும் நாய் போலே
நினைத்த இடம் எல்லாம் புக்குத் திரியாமல்  நிர் விஷயமாகை –

ஆக
இதில் மனஸ்ஸினுடைய விஷய அதீனமான
அந்ய பரத்தை தவிர்ந்தபடி சொல்லுகிறது-

(விஷாயாந்தங்களில் ஆபிமுக்யம் இல்லாத தசை இரண்டாவது -இந்த தசையிலேயே ஆஸ்ரயணம் பண்ண யோக்யதை வந்து விடுமே
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே–விலக்காமையே வேண்டியது
பகவத் விஷயங்களில் ஆபிமுக்யம் உண்டானதாய் -அடுத்த தசை)

அநந்தரம்
சரீர ஆலஸ்ய நிபந்தனமான -(சோம்பல் தூக்கம்)வியாதி காரணமாக –
மனஸ்ஸினுடைய அந்ய  பரதா சாந்திக்கு ஹேது  சொல்லுகிறது –

ஸூஸ்வதே சரீரே சதி -சரீரே ஸூஸ்வஸதே சதி -சரீரம் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கையில் -என்று
சரீரம் ஸ்வஸ்தமாய் அழகிதான அளவிலே  வ்யாதீநாம் ஆகரமாய் இறே சரீரம் இருப்பது
அந்த வியாதிகளில் ஓன்று தலை  எடுத்ததாகில்
தஜ் (வியாதி)ஜநிதமான துக்க அநு பாவத்திலே உப ஷீணம் ஆகையாலே
பகவத் விஷயத்துக்கு யோக்யம் ஆக மாட்டாது இறே நெஞ்சு
ஆகையாலே சரீர ஆலஸ்ய நிவ்ருத்தி மனஸ் ஸ்வாஸ் யத்துக்கு ஹேது

அந்த சரீர ஆலஸ்ய நிவ்ருத்திக்கு ஹேது சொல்லுகிறது –
தாது சாமே ஸ்திதே
-என்று

தாதுக்கள் ஆவன –
வாத பித்த ஸ்லேஷ்மங்கள்
-அந்த தாதுக்களுக்கு சாம்யம் உண்டாகையாவது –
ஒன்றுக்கு ஓன்று ந்யூந அதிரேகம் அற்று ஒத்திருக்கை –

(கபம் முதல் 33 வருஷம்
பித்தம் 34-66
வாதம் அப்புறம்)

அந்த தாதுக்களினுடைய ந்யூநாதி ரேகங்கள் வியாதி ஹேது
மூன்றினுடைய ப்ரகொபம் மரணம் இறே

ஆகையால் அந்த வியாதி ஹேதுக்கள் தன்னில் ஒத்தவாறே
அவற்றினுடைய நிம்நோன்னதத்தாலே வரும் வியாதி உண்டாகாது –
வியாதி உண்டாகாமையாலே சரீரம் ஸ்வஸ்தமாம்
சரீர ஸ்வாஸ்த்யத்தாலே மனஸ் ஸ்வாஸ்த்யம் பிறக்கும் –
பின்பு மனஸ்ஸூ ஸ்மரண ஷமமாம் –

ஆக
கீழ் இத்தனையாலும் ஸ்மரண ஏகாந்தமான கால விசேஷத்தைச்  சொல்லிற்று –

———

அநந்தரம்-
ஸ்மரணாதி  காரியைச் சொல்லுகிறது –
யோ நர -என்று

நர சப்தம் -மநுஷ்ய வாஸீ
இதிலே தேவதைகளையும் உப லஷிக்கிறது

இத்தால்
பகவத் சமாஸ்ரயணத்துக்குக் கரண பாடவமே அபேஷிதம் என்றதாயிற்று
வஷ்யமாணமான ஸ்மரணத்துக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் (
ஆதி ஆத்ம குணங்கள்)அப்ரயோஜகங்கள் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்-
வ்ருத்த மாகவுமாம் —
கரண பாடவமும்
ருசியுமே வேண்டுவது-

ஸ்மர்த்தா
ஸ்மரணம் ஆவது ஒரு ஜ்ஞான விசேஷம் –(நினைவில் நெடியோன் -எண்ணிலும் வருமே)

மேல் –
விஸ்வ ரூபம் -என்று சேஷித்வத்தையும்
நயாமி -என்று உபாயத்வத்தையும்
பரமாம் கதிம் -என்று உபேயத்வத்தையும் சொல்லுகையாலே
இம் மூன்றும் இந்த ஸ்மரணத்துக்கு விஷயமாகக் கடவது

ஆக இத்தால் ஆஸ்ரயண பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

———-

அநந்தரம்
ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்லுகிறது -விஸ்வ ரூபம் -என்கிற பதம் –
விஸ்வத்தையும் தனக்கு ரூபமாக உடையவன் விஸ்வ ரூபி யாகிறான்

இவன் விஸ்வ சரீரியாய் இருக்குமாகில்-உபய கதமான தோஷமும் ஸ்பர்சியாதோ(அசித்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ தோஷங்களும் சித்துக்கு ஸ்வ பாவ தோஷமும் உண்டே)-என்னச் சொல்லுகிறது -அஜம்-(பிறப்பிலி)
ஜனன மரணாதி ஸூந்யம்-

இந்த ஜனனம் சரீர தர்மமான ஷட் பாவ (அஸ்தி ஜாயதே இத்யாதிகள்)விகாரங்களுக்கும்
ஆத்ம தர்மமான அஜ்ஞான துக்காதி களுக்கும் உப லஷணம்-
(ஆதி காம க்ரோதி போல்வன)

ச-(உம்மைத் தொகை)
இச் சேதனனுடைய ஹிதாஹித ஜ்ஞான விசேஷத்தையும்
ஜ்ஞான அநு குணமாக கார்யம் தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தியையும் தயையும் கணிசிக்கிறது –

மாம் –
என்னை என்றபடி

அசாதாரண விக்ரஹத்தை அஸ்ம தாதிகள் கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு (ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாம் படி)நிற்கிற சௌலப்யத்தையும்
மானமிலாப் பன்றி (
பரஞ்சுடர் உடம்பாய் இருந்தும் அழுக்குப் பதிந்த உடம்பாக அவதரித்து)என்று அத்யந்த நிஹீனமான வராஹ ஜன்மத்திலே
அத்யாபி நிவிஷ்டனாம்படியான சௌசீல்யாதி அதிசயத்தையும் மூதலித்துக் காட்டின படி –

———

அநந்தரம் -தத -இத்யாதி ஸ்லோகத்தாலே –
ஆஸ்ரயித்தவனுக்கு ஈஸ்வரன் உண்டாக்கும் பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது

தத -பின்பு என்றபடி –
இத்தால் ஸ்ம்ருதி யினுடைய நைரந்தர்யத்தைக் (
ஸதா அநு ஸ்மரணம் நிரந்தரமாக இருக்கும் தன்மையை)கழிக்கிறது-

தம் –
ஸ்மர்த்தா -என்கிறபடியே –
என்னையே உபாய உபேயமாக அத்யவசித்த அதிகாரியை –

இவனுக்கு பலம் கொடுப்பது எப்போதோ என்னில் -ம்ரியமாணம் –
மரண உன்முகமான சமயத்திலே

து சப்தம் -சாதகனில் காட்டில் இவ் வதிகாரிக்கு வஷ்யமாணமான விசேஷத்தை த்யோதிப்பிக்கிறது

அந்த விசேஷம் என் என்னில்
காஷ்ட பாஷான சந்நிபம் –
ஜ்ஞான சம்சர்க்க ஸூ ந்யமான காஷ்ட பாஷாணங்களோடு ஒத்து இருக்க அமையும் –

சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி கொண்டு உஜ்ஜீவிக்க வேணும் என்று சொல்லா நிற்க
அந்திம ஸ்ம்ருதி ஒழிய உஜ்ஜீவிப்பிக்கக் கடவன் என்கை  சாஸ்திர விருத்தம் அன்றோ என்னில்
–அதுவும் அப்படியே –
இந்த அம்சம் என்னது (உபாஸகனுக்கு அது பிரபன்னனுக்கு இது)-என்கிறார் –அஹம் ஸ்மராமி -என்று
அபேஷித ஸ்மரணத்துக்குக் கர்த்தா நானே
க்ருஷ்யம்சம் கர்ஷகனுக்கு அன்றோ

(நினைவு தானே அபேக்ஷிதம்
நான் நினைக்கிறேன்
நானே அந்தராத்மா
அவன் நினைவும் என் நினைவாலே தானே
பலமும் என்னது
ப்ராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் நானே)

ஸ்மர்த்தா –
இவன் ஒரு கால் ஸ்மரித்தான் ஆகில் -அநவரத பாவனை பண்ணக் கடவன்-

நீ இப்படி மேல் விழுந்து நினைக்கைக்கு இவன் பக்கல் தன்னேற்றம் என் என்னில் -மத்பக்தம் –(மத் காயாக -நம் பாடுவான் என்பதே அவனுக்கும் நிரூபகம்)
எனக்கு நல்லவன் அன்றோ
மத் பக்தம் -என்று ப்ரபன்ன அதிகாரியைச் சொல்லுகிறது –

ஆக என் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியை உடையவன் ஆகையாலே
அவன் காஷ்ட பாஷாண சந்நிபனே யாகிலும் நான் ஸ்மரிப்பன்-

இங்குச் சொல்லுகிற ஸ்மரணம் ஆவது –
இவன் தன் கார்யத்தில் கை வாங்கி நம் பக்கலிலே தன் சர்வ பாரங்களையும் சந்யசித்தான்
ஆன பின்பு இவன் கார்யம் அடைய நமக்கே பரம்
இவன் இன்னம் ஒரு கால் உத் க்ராந்தி க்லேசம் அனுபவித்தல்
யமன் முகத்திலே விழித்தல் -கர்ப்ப குஹையிலே கிடத்தல் -செய்யாதே
இவன் நித்ய கைங்கர்யம் பண்ணி நித்ய ஆனந்தியாக வேணும் என்கிற சங்கல்பம் –

நயாமி பரமாம் கதிம் -என்றது –
பரம ப்ராப்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –

பரமாம் கதிம் நயாமி –
பரமையான கதியைக் கொண்டு ஸ்வீகரிப்பிக்கக் கடவன்

கதியாவது –
கம்யத் இதி கதி -என்கிற வ்யுத்பத்தியிலேயாய் -ப்ராப்யத்தைச் சொல்லுகிறது

அதில் -பரம கதி யாவது –
அதுக்கு அவ் வருகு இல்லாத ப்ராப்யம் –
அதாவது -பரம புருஷார்த்த லஷண மோஷம் –

நாட்டில் புருஷார்த்தமாக வேண்டுவது –
தர்மார்த்த காம மோஷம் -இவை புருஷார்த்தமாகக் காட்டாமையாலே அத்தை வ்யாவர்த்தித்து –
ஸ்வயம் புருஷார்த்தமாய் -ஸ்வ ரசமாய் -நிரதிசயமான பகவத் கைங்கர்யமான பரம ப்ராப்யத்தைச் சொல்லுகிறது –

(எம்மா வீட்டுத் திறமும் செப்போம் –நின் செம் மா பாத பற்பு சென்னியில் -அடியார் குழாங்களுடன் கூடி ஒழிவில் காலம் எல்லாம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யப் பாரித்து -ருசியே வேண்டுவது)

நயாமி –
அந்தப் ப்ராப்யத்தைப் ப்ராபிக்கும் இடத்தில்-
ஆதி வாஹிகர்கள் கையிலே காட்டிக் கொடேன் –
அத்த வாளத் தலையாலே முட்டாக்கு இட்டு நானே கொண்டு போகக் கடவேன் –
லங்கா ஜன பதத்தில் இருந்த பிராட்டியைப் புஷ்பத்தின் மேலே தானே எடுத்து வைத்துக் கொண்டு
போனால் போலே காணும் இவ் வாத்மாவைக் கொண்டு போம்படியும் –

(தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்–91-)

—————————————

திரௌபதி பிரபத்தி ஸித்தாஞ்சனம்

புருஷகார பலம் இல்லையாதலால் சிலர் இது பலிக்க வில்லை என்பர்
இங்கு திரௌபதிக்கு –ஞாதம் மயா வசிஷ்டேந புரா கீதம் -என்று வசிஷ்டரின் ஸ்மரணம் உள்ளதாகையாலும்
மேல்
கஜேந்திர ஸரணாகதி போன்ற இடங்களில் பல ஸித்தியைக் கொண்டு அர்த்த பலத்தாலே புருஷகார புரஸ் ஸரணத்தைக் கற்பித்துக் கொள்வது போல் இங்கும் கற்பித்துக் கொள்ளலாம்

இனி திரௌபதிக்குக் கிடைத்த பலன்கள் யாவை -எப்போது கிடைத்தன
ரக்ஷமாம்–ரஷிக்கையாவது -விரோதியைப் போக்குகையும் அபேக்ஷித்ங்களைக் கொடுக்கையும்
இவளுக்கு வஸ்த்ர வர்த்தகமும் ஸத்ரு சம்ஹாரமும் அபேக்ஷிதங்கள்

திருநாம சங்கீர்த்தனமும் ப்ரபத்தியின் ஒரு சிறு அம்சமான கோவிந்த நாமமே புடவையைச் சுரந்து விட்டது
மற்றப் பலன்கள் பின்னர் பெற்றாள்

ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம்
–90–44–47-என்று பல கால் அனுசந்தித்து உபாயத்வ புத்தியை விடாமல் இருந்தாள் அன்றோ
உபாயாந்தர ஸம் சர்க்கத்தாலேயே பலன் விளம்பித்து பெற்றாள்

மேலும் நைவ மே பதயஸ் சந்தி ந புத்ரா ந ச பாந்தவா ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது ஸூதந மாம் விப்ரக்ருதாம் ஷுத்ரைர் உபேஷ் த்வம் வி சோகவத்
ந ச மே ஸாம்யதே துக்கம் யத் ப்ராஹ ஸத் ததா
–ஆரண்ய –12-128-129-என்றும்
உபாயாந்தர ஸம் சர்க்கம் இவளுக்கு ஏற்பட்டது என்பது தெளிவு

உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி
–லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –ஹே ரமா நாத -என்றும் உள்ளதாகையாலும் புருஷகார புர ஸ்மரணம் உண்டு என்றே கொள்ளலாம்-மாதவனை -மார்க்கண்டேயர் -பிராட்டி உடன் கூடிய அவனைப் பற்றச் சொல்லி உபதேசம் -இதற்காகவே சத்யபாமையையும் கூட்டிச் சென்றான்-
மார்க்கண்டேயர் உபதேசப்படி
ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-
மீண்டும் ஸரணாகதி செய்து பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-

——-

6-ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

அவதாரிகை
ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்

பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
த்ரௌபதி யினுடையவும்–
சிந்தயந்தி யினுடையவும் –

தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
சிந்தயந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று

(பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
திரௌபதி ஸ்வ லஜ்ஜையை விட்டாள்
இவர்களுக்கு விளம்ப பேறு
சிந்தயந்தி அனைத்தையும் துறந்து உடனேயே பேற்றைப் பெற்றாள்)

இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம்
அதாவது
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

அப்படியே இறே-
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி
-பார -சபா -90-42-என்றதும்

இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
அதினாலே பரிபூதையான தான் –
அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்–2-1-1-

என் நான் செய்கேன் -ஸூவ ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
யாரே களை கண் -இதரர் ரக்ஷணத்தில் கைவைக்காதவள்
என்னை என் செய்கின்றாய் -இவன் ரக்ஷணத்தில் விஸ்வாஸம் மிகு விளம்பம் பொறுக்காதவள்-சங்கு ஏத்தும் கை -தொழுவிக்கும் கை -முப்படை -சங்க சக்கர கத பாணி

———–

இந்த்ரப்ரஸ்தத்தில் கண்ணன் இல்லை-சால்வனுடன் யுத்தம் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் சரணாகதி
இருந்தாலும் நேராக விளிச்சொற்களால் சரணாகதி
த்வயம் ஸமாசமாக ஆறு பதங்களாகவும் பிரித்து அஷ்ட பதங்களாகவும் கொள்ளலாமே
ஸ்ரீ மானே நாராயணனே -தவ -அத்தியாஹரம் செய்து கொண்டு -உன் திருவடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் -எதுவரை ராமச்சந்த்ரனுடைய திருவடிகளில் தலையால் தரிக்காமல் நான் உளனாக மாட்டேன் -பரதன்
லஷ்மணன் -நேராகவே பார்த்து அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
இங்கு கண்ணன் நேராக இல்லாவிட்டாலும் திரௌபதி விளிச்சொற்களாக அமைத்து சரணம் செய்கிறாள்
ஆபத்தில் நினைக்கச் சொல்லி வசிஷ்டர் உபதேசப்படியே நினைவில் மட்டும் இல்லாமல் மஹா விஸ்வாஸத்துடன் கூப்பாடு செய்து சரணம் -சரணம் அடைந்த அடியேனை ரக்ஷிப்பாய் என்ற பிரார்த்தனையுடன் அமைந்த ஸ்லோகம் -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சேர்ந்தே இருக்க வேண்டும் –

ஸபா பர்வத்தில் சரணாகதி கட்டத்தில் –சங்க சக்ர கதா பாணே ஸரணாகதி ஸ்லோகத்தைச் சொன்ன பின்பு
ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாஸி யாதவ நந்தந
இமாம் அவஸ்தாம் ஸம் ப்ராப்தாம் அநாதாம் கிம்
உபேக்ஷஸே கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கவ்ரவை பரிபூதாம் மாம் கிம் நா ஜாநாஸி கேஸவ
ஹே நாத ஹே ரமாநாத வ்ரஜ நாதார்த்தி நாஸந
கவ்ரவர்ணவ மக்நாம் மாமுத்தரஸ்வ ஜநார்தந
கிருஷ்ண மஹா யோகின் விஸ்வாத்மன் விஸ்வ பாவந
ப்ரபந்நாம் கோவிந்த குருமத்யே அவ ஸீததீம்
–90–44–47-அவன் திருவடிகளைத் தவிர் வேறே எதுவுமே உபாயமாகாதே
வாக்ய பிரபாவம் போல் அன்றி வாசக பிரபாவம் என்றும் அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் என்றும் திரௌபதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது இது-திருநாம வைபவம் அன்றோ -என்றும்- இருப்பதால்
ஸர்வ தர்ம பரித்யாஜ்யத்தில் திரு நாம சங்கீர்தனமும் அடங்கும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ-

புடவை சுரப்பது மட்டும் இவளது பிரார்த்தனை இல்லையே -மற்றவை கண்ணன் தானே அருளினான்
இவன் செய்தன அனைத்துமே இவள் கூந்தல் முடித்து இவள் மங்கள ஸூத்ரம் தரிக்க வைப்பதற்கே
ருணம் பிரவர்த்த -திரு உள்ளம் பின்னும் புண்பட்டே சென்றான் அவன் –
ராஜன் கூப்பிட்டதால் புண்பட்ட பரதனின் அநிஷ்ட நிவ்ருத்தியை உடனே திருப்பாதுகைகள் மூலம் அருளி பின்னர் 14 வருடங்கள் சென்ற பின்பே சேர்ந்து ஆலிங்கனம் செய்து அருளி பிராப்தி செய்தால் போல் uஇவளுக்கும் விளம்பி பலன்களை அருளினான்

உபாய அபாய ஸம் யோகே நிஷ்டயா ஹீயதே அநயா
அபாய ஸம் ப்லவே ஸத்யஸ் ப்ராயச்சித்தம் ஸமாஸரேத்
ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத்
உபாயாநாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யேவ மேவ ஹி
–லஷ்மீ தந்த்ரம் –17-92-93-94-என்று
உபாயாந்தரமாவது விஹிதத்தை அனுஷ்டியாமையும் நிஷித்தத்தை அனுஷ்டிக்கையும்
மற்ற உபாயங்களில் உபாய புத்தி வைத்தால் பிராயச்சித்தமாக மீண்டும் ஸரணாகதி செய்ய வேண்டும் –
மார்க்கண்டேயர் உபதேசப்படி
ஏவம் யுக்தாச்ச பார்த்தா யமவ் ச புருஷர்ஷபவ்
திரௌபத்யா சஹிதா ஸர்வே நமஸ் ஸக்ருர் ஜநார்த்தனம்-
மீண்டும் ஸரணாகதி செய்யது பலன்களைப் பெற்றாள் என்பது தெளிவு-)

———

த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

சங்க சக்ர கதா பாணே  –
கைப்படை யில்லாதனையோ நான் கை கூப்பிற்று –(ஒன்றுக்கு மூன்று திவ்ய ஆயுதங்களைக் கைப்பற்றினவனை அன்றோ நான் கூப்பிட்டது)

த்வாரகா நிலய-
ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –

அச்யுத
தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
ந ச்யவந்தே யஸ்மாத் இத் யச்யுத –

கோவிந்த
தன் ஆஸ்ரதரை நோவு பட  விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –

புண்டரீகாஷ-
கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
1-கண் 2-இரக்கம் –(தயா வாத்சல்யாதி குணங்களை கோட் சொல்லித்தரும் செந்தாமரைக் கண்ணன் அன்றோ)

ரஷமாம் –
ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –

சரணா கதாம் –
ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –

1-சங்க சக்ர கதா பாணே –
நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –

2-சங்க சக்ர கதா பாணே —
சுவர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
-திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத  ரஷணத்துக்கு அன்றோ –

சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தஸ்யாக்ர ஹஸ்தம் ஸ்வயம் ஆருரோஹா
-பார -பீஷ்ம -59-58-என்று

(கை கழலா நேமியான் –கருதும் இடம் பொருதும் கை நின்ற சக்கரத்தான்)

நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
நான் கை விரிப்பது என் –

நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ

(தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8-

பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6-

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7-)

3- சங்க சக்ர கதா பாணே –
நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
அங்கனம் தொட்ட படி இறே

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-

அப்படியே கூராராழி  வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து

(மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-)

பின்பு இவளுக்காக இறே –
ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயுநா ப்ருசம் ஸூபூர்ண உதர நிஸ் ஸ்ருத த்வநி ஜகத் ஸமாதான வியத் திகீஸ்வரம் ப்ரகம்பயாமாஸ யுகாத்யயே யதா -பாரத த்ரோ -73-58-அச்சுதனுடைய திருமுக வாயுவினால் மிகவும் நிறைந்த உட்புரத்தின் நின்றும் வெளிப்படும் ஒலியையுடைய அந்தப் பாஞ்ச ஜன்யம் பாதாளம் ஆகாயம் திக் பாலர்கள் ஆகிய எல்லாவற்றையும் ஊழிக் காலத்தில் போலே நடுக்கமுறச் செய்தது-என்றும்

ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்

கழல் மன்னர் கலங்கச் சங்கம்  வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்

ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெரியாழ்வார் -4-1-8- என்று  செய்து அருளியதும்

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி-(இவள் விரும்பிய ஸரணாகதி பலன்களை கண்ணன் அளித்து அருளினான்)

(பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே  –6-7-8-

நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழி லுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்–4-1-8-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-)

4- சங்க சக்ர கதா பாணே-
அருளார்  திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்
-திரு விருத்தம் -33-

5- சங்க சக்ர கதா பாணே –
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான்
-திருவாய் -2-3-10- என்றபடி
இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –

(களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-)

இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்

1-த்வாரகா நிலயாச்யுத-
நீ -வண்டுவராபதி மன்னாய் –
திருவாய் -5-3-6-
நழுவுதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –

(அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-)

(உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்!
ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-மா முனிகள் மன்னார்குடி திவ்ய தேசத்துக்குச் சமர்ப்பித்த பாசுரம்)

2-த்வாரகா நிலயாச்யுத-
பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ

அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –

பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்திலே -பெரியாழ்வார் -4-1-6- என்கிறபடியே தேவிமார்களை நழுவ விடாமல் இருக்கையாலேயே அச்யுதனாய் திருத் துவாரகையில் இருப்பவனை அன்றோ கூப்பிடுகிறேன் –

(பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் 
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை  
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 –பல்லாயிரம்-ஷோடச ஸ்த்ரீ -பதினாறாயிரம் )

ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
ஜக்ராஹ விதிவத்  பாணீன் ப்ருதக் கேஹீஷூ தர்மத –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-

ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –( ப்ருதக் கேஹீஷூ-தனித் தனியாக வீடுகள் -தனித் தனியாக திவ்ய மங்கள விக்ரஹம் -க்ருஹஸ்த தர்மம் கடைப் பிடித்த வ்ருத்தாந்தம்)

3- த்வாரகா நிலயாச்யுத –
நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
அவர் ஒரு நிலை நின்றது என்பரேல்-
திரை பொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தமன்
-பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –(இதில் இருந்து திரௌபதி யானவள் தனது ஸரணாகதிக்குப் பலனாக –அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான்-ஸத்ரு ஸம்ஹாரத்தையும் ராஜ்ய ப்ராப்தியையும் விரும்பினாள் என்று புலப்படுகிறது)

(திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –)

4-த்வாரகா நிலயாச்யுத
ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்

5- அச்யுத –
என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
அச்யுதாஹம் தவாஸ்மீதி ஸைவ ஸம்ஸார பேஷஜம் –என்கிறபடியே (அச்யுதனே நான் உனக்கு அடியேனாகிறேன் என்பதே ஸம்ஸார நோய்க்கு மருத்தாகும்)-என்கிறாள்

மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –

அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தமோ
நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது-
என்னுடைய வஸ்திரம் இடுப்பை விட்டு நெகிழ்வது அவன் ஸ்வ பாவம் நெகிழ்ந்தால் தானே
என்னுடை நெகிழ்ந்தோ உன் பேர் உண்டாவது
-(கைவிட்டால் அச்சுதன் பேர் நிலைக்காதே
நாராயணன் பேர் நிலைக்க வேண்டாமோ என்றால் போல் இங்கும்)

(அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-)

(நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-)

6-சங்க சக்ர கதா பாணே த்வாரகா  நிலயாச்யுத –
தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர
-யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
இவளும் இப்படியே பேசுகிறாள்

(அவள் வைகுண்ட நிலையா என்றாள்
இவள் துவாரகா நிலையா என்கிறாள்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகாதோ மதுராம் புரம் தானே)

ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –

பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் -செய்வது என்-

பின்பு –ரதம் ஸ்தாபாய மே அச்யுத –ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
நீ கை கழலா நேமியானாய் இருக்க
என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
பொற் சக்கரத் தரியினை யச்சுதனைப் பற்றுகிறாள் –

(மோக்ஷ ப்ராப்திக்குத் தான் ஸக்ருத் பிரபத்தி
இவள் அபேஷிதம் அரசை அவித்து அரசை அருளுவதே-கோவிந்த நாம சங்கீர்த்தனமே உபாயம் என்று தப்பாக இருந்து பின்பு-பிராயச்சித்தமாக மீண்டும் சரணாகதி செய்கிறாள்)

(இது வரை பரத்வம் -ஆஸ்ரித கார்யம் செய்ய வேண்டியவை
மேல் ஆஸ்ரித ஸுகர்ய ஆபாத குணங்கள் -ஸுலப்யாதிகள்)

1-கோவிந்த-
அச்யுதன் என்று சொன்ன பின்பும் உதவக் காணாமையாலே அடுத்த படியாக அவனை அரை குலையத் தலை குலைய வருந்தியோடி வரச் செய்வதாய்
இந்த்ரனாலே கோவிந்த பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற அவனுக்கு
முடி சூடின பேரான கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி –
பார -உத் -47-39-என்று
அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர் நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –

(உயர் நிலையிலே-ருணம் –ருணம் வ்ருத்தமிவ –ருணம் பிர வ்ருத்தமிவ)

2- கோவிந்த –
நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி

3- கோவிந்த –
நீ ஆஸ்ரித ரஷணத்தில் தீஷித்து இருக்க
க்ருஷ்ணாஸ்ரய—கிருஷ்ண பல—பார த்ரோண
-183-24-என்று இருக்கிற என்னை
கிருபை பண்ணாது ஒழிவது என்

நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் –சங்கு சக்ர கதா பாணி இங்கு-சிறு பேர் அழைத்தனம் –சீறி அருளாதே-பிரமாத -ப்ரணய -அஜானாம் மூன்று காரணங்கள் அர்ஜுனனும் விஸ்வ ரூபம் கண்டதும்)
நாமைதத் தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று

சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதை க்ருதம்-பாப ராசிம் தஹத் யாஸூ தூலராசி மிவ அநல -என்று
சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –

4- கோவிந்த –(கோ –மயிர்முடி குழல்)
நான் குழல் பேணாமல் இருக்க –
நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –

(குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன் விட்டு சித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகி சாதி கோட்டியில் கொள்ளப் படுவாரே -3-6-11 – –)

5- கோவிந்த
நீ முடி சூடிவித்திருக்க நான் –
சாஹம் கேசக்ரகம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
என்று சொல்லி –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
குண ஜ்ஞானத்தாலே நிர்ப் பரை யானாள்-
பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்

(இதில் இருந்து திரௌபதி இந்தக் கோவிந்த நாமத்தைக் கூறும் பொழுது உபாய புத்தியைக் கைக் கொள்ள வில்லை என்று புலப்படுகிறது-முன்பு கோவிந்த நாமம் புடவை சுரக்கும் என்று நினைத்தவள்
இப்பொழுது ஆவி காத்து இருக்கவே -ஆற்றாமைப் போக்கவே திரு நாம சங்கீர்தனம்
முழுவதும் உபாய புத்தி வைக்க வில்லை
அபலை போல் சந்தேகத்தில் அலை பாய்ந்து இருக்கிறாள்)

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே – 4-9 -6-

6- கோவிந்த –
ஜகத் ஹிதிதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –

7- த்வாரகா நிலய கோவிந்த –
துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்

(ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-)

8- கோவிந்த –
கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்

(கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-)

9- கோவிந்த –
என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
கண்ணாலே நோக்க அமையாதோ
கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது

விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோநு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-

(த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:
||ஶ்லோகம் 20 –

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)

1- புண்டரீகாஷ-
பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்

(பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்

தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-)

2- புண்டரீகாஷ-
என்னுடைய ஆபத்துக்கு
அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
நம் அன்றோ அபேஷிதம்-

3- கோவிந்த புண்டரீகாஷ
க்ருஷ்ணம் கமல பத்ராஷம்
-என்னக் கடவது இறே-
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி
-பார -உத் -91-44(பரபரப்பே தனம்-கோவிந்த)
என்ற அனந்தரம்
பீஷ்ம த்ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –(புண்டரீகாஷ)

4-புண்டரீகாஷ
நான் கண் கலங்கி இருக்க- நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-

5-புண்டரீகாஷ –
நீ கண் யுடையவனாய் இருக்க -நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –

6- புண்டரீகாஷ –
நான் கண் சிவந்து இருக்க
நீ உன் முகத்தன கண்கள் அல்லவே(வாய்) -நாச் -2-5-இருப்பது என்

(வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-)

7-புண்டரீகாஷ –
அவன் கண் செம்பளித்து இருந்தான்
பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ஸ்வஸ்தா நமுத்தமம்
-பார மௌசல-9-34-இத்யாதி
அனுகூல ரஷணத்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் (மண்ணின் பாரம் நீக்கவும் பேற்றை அளிக்கவும்)பரிகரம் ஒன்றே யாயிற்று –

8- புண்டரீகாஷ –
தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்

(பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-)

(பிரபத்தி ஸூர்யன் –
திருநாம சங்கீர்த்தனம்–உபாயாந்தரம் -மேகம் மூட
மீண்டும் பிரபத்தி)

9-புண்டரீகாஷ -அச்யுத –
தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்

10- அச்யுத புண்டரீகாஷ –
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –(கடாஷித்து நழுவ விடாமல் அருளுபவர்)

(வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-)

11- புண்டரீகாஷா –
கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-
சாந்தோக்யம் -1-7- என்கிற
சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி  –

12-புண்டரீகாஷ-
ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே
-என்று
இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே –35-

13-புண்டரீகாஷ –
ச  ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன
-பார -வன -192-51-என்று
இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது

14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ
-திருவாய்  -3-4-3-என்கிறாள்

(பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-)

16-புண்டரீகாஷ –
பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம்
-ஜிதந்தே -8-என்கிறாள்

(அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம்
—8-

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –)

ரஷமாம் —
1-ரஷ அபேஷை யுடைய என்னை –
2- அநாதையான என்னை –
3-அபலையான என்னை –
4-ஆஸ்ரிதையான -பலமற்ற -என்னை
4-அநந்ய சரணையான என்னை

ரஷமாம் –
ரஷிக்கை யாவது
விரோதியைப் போக்குகையும் –
அபேஷிதங்களைக் கொடுக்கையும் –

அலமன்னு மடல்  சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே
–பெரிய திரு -2-4-3-

1-சரணாகதாம்-
சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்

ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் மொழி-9-3-9-என்றபடி –
அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்

(தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப்
 பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-–)

2-சரணாகதாம் –
சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்

தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்

சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே

காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்

3-சரணாகதாம் –
ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
அஞ்சேல் என்னாது இருப்பது என்-
மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –(உனக்கு ஒரு சொல் எனக்கு வாழ்வு)

சங்க  சக்ர கதா பாணே –சரணாகதாம் –
1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
2-ஆசன்னன் ஆவது –
3-ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாவது –
4-ஆஸ்ரித ரஷணத்திலே தீஷித்து இருக்குமவனது
5-கண் யுடையவனாவது
6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
ஆகையாலே ரஷிக்கக் குறை என் –

(நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

நம்பியை-என் சொல்லி மறப்பேனோ
தென் குறுங்குடி நின்றவனை -என் சொல்லி மறப்பேனோ
அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை-என் சொல்லி மறப்பேனோ
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை என் சொல்லி மறப்பேனோ
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ)

சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் (ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள்)சொல்லி

த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் (ஆஸ்ரித ஸுவ்கர்ய ஆபாத குணங்கள்)சொல்லி

ரஷமாம் -என்கையாலே
அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி

சரணாகதம் -என்கையாலே
உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

இத்தால்
லஜ்ஜா புரஸ் ஸரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
சித்த உபாய ஸ்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-
என்றது ஆயிற்று –

—————————————————————————————–

ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம  நாதாம் கிம் உபேஷஸே
கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
ஹே நாத  ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
கௌரவார்ணவ மக்நாம்  மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம்
-பார -சபா -90-44/45/46/47-

மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –

வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
அதில் முதல் தடவை வந்த போது
நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா  ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத்  ப்ராஹசத் ததா
-பார -ஆர -12-128/129–
யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்

உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-
ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-

மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்

சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா
-பார ஆர -192-56–என்ன

ஏவமுக்தாச்ச  தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம்
-பார -ஆர -192-57- என்று சரணம் அடைய

ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி –
பார -ஆர -192-58-என்று

திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும்  தடை நீங்க –
சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-

இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-

நம் பேர் தன் கார்யம் செய்தது இத்தனை போக்கி
நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இறே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-

முமுஷூப்படி -அவன் தூரஸ்தன்  ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி  வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
உபாய புத்தி யுடன்  திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம்  முதலியவற்றைக் கருதியே
திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –

திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –

கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
இந்த உபாயாந்தர   சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
அதனால் தோஷமாக கொள்ள வில்லை-

வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –

குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
புண்டரீகாஷா -இக் கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
பின்பே  கலங்கினாள்-
நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
இதன் பிரபாவம் கிம்புநர் ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீயுத்த காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 27, 2024

அஹம் ச ரகு வம்சச்ச லஷ்மணச்ச மஹா பல
வைதேஹ்யா தர்சநே நாத்ய தர்மத பரி ரக்ஷிதா
–1-12-

திருவாய்மொழி – -6-8–1-நல் நலம் –
அஹம்ச-‘கண நேரமும் சீதையைப் பிரிந்து பிழைத்திருக்க மாட்டேன்’ என்னும் யானும்,
ரகு வம்ச: ச – என்னை ஒழிய ஜீவியாதபடி இருக்கிற பிள்ளை பரதனும்,
மஹா பல: லக்ஷ்மணஸ்ச – இருவர்க்கும் உஜ்ஜீனனத்திற்கு ஹேதுவான பிள்ளை இலக்குமணனும்,
வைதேஹ்யா: – இவை எல்லாம் தகும் என்கைக்காக,
தர்மத: பரிரக்ஷிதா: – நீ செய்ததற்கு ஒரு பிரதி உபகாரம் செய்யலாமோ?
வெறும் அறவனாகையாலே செய்தாயத்தனை;”
‘உனக்கு என் செய்தேன்’ என்று காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் உழைக்கும்படி
(உழைக்கும்படி – தடுமாறும்படி)அன்றோ நீ செய்தது என்றார் பெருமாள்.

“அஹம்ச ரகு வம்ஸ: ச லக்ஷ்மணஸ்ச மஹா பல:
வைதேஹ்யா தர்ஸநேந அத்ய தர்மத: பரி ரக்ஷிதா:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 1 : 11. இது,
திருவடியைப் பார்த்துப் பெருமாள் கூறியது.

—————-

ஏஷ ஸர்வ ஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத
மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந
-1-14-

உடனே உண்பன் நான் என்று –பெரிய திருமொழி-5-8-2-
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )

ஒண் பொருள் –
சீரிய அர்த்தம்

திருவாய்மொழி – -4-1-5-ஏஷ : – தாம் அனுபவித்துத் தமக்கு ரசித்தது என்று பிறர்க்குக் கொடுப்பாரைப் போலே; இச்சா க்ருஹீதாபிமதோருதேஹ’:
(விஷ்ணு புரா. 6. 5 : 84.) என்னக் கடவதிறே. ‘இச்சா க்ருஹீதம்’ என்கையாலே, கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;
‘அபிமதம்’என்கையாலே, தனக்கும் போக்கியம் என்று தோற்றுகிறது;
சர்வ ஸ்வபூத : –இது ஒழிய மற்றொன்றைக் கொடுத்தாலும் இது கொடாததால் வரும் குறை கிடக்குமே? திருமேனியைக் கொடுக்கவே
எல்லாம் கொடுத்ததாமிறே; சர்வ அபாஸ்ரயமாயன்றோ திருமேனிதான் இருப்பது!
மற்றுக் கொடுக்குமதிலும் இதுக்கு உண்டான வியாவிருத்தி தோற்றி இருக்கிறது
பரிஷ்வங்கோ ஹநூமத : – அமிருதாசிக்குப் புல்லையிட ஒண்ணாதே!பிறந்தது குரங்கு ஜாதி -நம்மை சேவிக்க அன்றோ பிறந்தான் –
ஸ்ரீ வைகுண்டம் -புல் ஸ்தானம் –
ஸ்நேஹோமே பரம : – (உத்தரராமாயணம்) – என்று இவ்வுடம்பை விரும்பினவனுக்கு இத்தையே கொடுக்கவேணுமே.
மயா காலமிமம் பிராப்ய தத்த: ‘இவன் ஒன்று கொள்வான் ஒருவன் அல்லன்; நாம் இவனுக்கு ஒன்று கொடுக்கப் பெறுவதுகாண்,’ என்று
குறைபட்டிருந்தவர், இவன் விலக்காததொரு சமயம் பெற்று இப்படிக் கொடுத்துக்கொண்டு நின்றார்.
தஸ்ய மஹாத்மந : – ஒரு படி கொடுத்தாராய் ஒன்று செய்த இத்தனை போக்கி,
இரண்டு உடம்பு கொடுத்தவனுக்கு ஓர் உடம்பு தரம் அன்றிறே.
வேணி உத்க்ரதனத்திலே பிராட்டி ஒருப்பட்ட அன்று அவளை உளள் ஆக்கினான்;
‘அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே’ (ஸ்ரீராமா. யுத்.) என்ற பெருமாளை மீட்டு அவரை உளராக்கி இப்படி இவர்க்கு இரண்டு உடம்பு
கொடுத்தானிறே அவன். அவன் பல படி உபகரிக்கையாலே இவர் ஒருபடி உபகரித்தார்,’ என்பது.

—-

நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா
ஏததேவாநுசோசாமி வயோஸ் யாஹ்யதி வர்த்ததே
–5-5-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-3-4-மங்கை நல்லாய் தொழுதும்  எழு –
ஓம் காண்-
உன் பருவம் நோக்கி அழகிதாக உண்டாகை இறே-கடுகப் புறப்படாய்-என்கிறாள் –

தன்னுடைய பருவம் அழியா நின்ற நின்ற பின்பு
நீ பருவம் நோக்குகிறோம் என்று இருக்கிற இத்தால் பிரயோஜனம் என் –
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே-என்றார் இறே
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா எததேவா நு ஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்திலே வர்த்தியா நின்றாள் -என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
இனி வலிய ரஷசாலே பிரிவும் பிறந்தது –
இனி எங்கனே நாம் சாதிக்கும் படி –என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது கடக்க இருந்தாள் ஆகில் கடலை அணை செய்து நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு கொடுத்து பொகடத் தீருகிறது அக்கார்யம்
நான் இது ஒழிந்த அல்லாத வற்றுக்கும்  வெறேன்
இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது
அது ஏது என் என்னில்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே  –
இவை போல காலம் என் அம்பால் மீள விடலாவது ஓன்று அன்று இறே
அணைக்கு கிழக்கு பட்ட நீரை மீட்கப் போகாது இறே –

திருவாய்மொழி – -2-1-10-புத்த்வா காலம் அதீதஞ்ச முமோஹா பரமாதுர-என்னுமா போலே முன்புள்ள காலம் இழந்த தாகிலும் இனி மேலுள்ள காலம் இவ் வஸ்துவைக் கை விடாது ஒழிய வேணும்-
போன காலத்தை மீட்க ஒண்ணாது என்றதுக்கு சோகிக்கிறார்-இனியாவது எம்மை சோரேல்
ந மே துக்கம் ப்ரியா தூரே -என்னுடைய பிரியை யானவள் தூரத்தில் இருக்கிறாள் என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன்
அது ஒரு பயணம் எடுத்து விடத் தீரும்
ந மே துக்கம் ஹ்ருதேதி வா -வலிய ரஷச்சாலே பிரிவு வந்தது என்று அதுக்கு சோகிக்கிறேன் அல்லேன் -அது அவன் தலையை அறுக்கத் தீரும்
ஏத தேவா நு சோசாமி-இது ஒன்றுமே எனக்கு சோக நிமித்தம் –பின் நின்ற காதல் –கழிய மிக்கோர் காதல் –
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே -போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாது இறே

—————-

வாஹி வாத யத காந்தா தம் த்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருச
த்வயி மே காத்ர ஸம் ஸ்பர்ச சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம
–5-6-

திருவாய்மொழி….6-8-3-தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ –“வாஹிவாத – பார்க்கப் படாமையாலே நீ பெற்ற பேறு என்?
த்வயி மே, காத்ர ஸம்ஸ்பர்ஸ:-நம்முடைய கரணங்களுக்குப் பரிசம் உன் பக்கலிலே ஆயிற்றே.
நமக்குத் தொட்டாரைத் தொட்டாயிற்றே.
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:-காணுதலோடு ஒத்ததன்றோ எனக்கு ஸ்பரிசமும்” -அற்றது பொருந்தும்படி
வார்த்தை சொல்ல வல்ல வாயைக் கொண்டு.
த்ரௌபதி வார்த்தையால் இற்று விழுந்த மாம்பழம் கொம்பிலே ஒட்டிக் கொண்டதே போலே –
“காணப்பட்டாள் சீதை” “த்ருஷ்டா ஸீதா” என்பது, ஸ்ரீராமா. சுந். 65 : 10.
என்றாற்போலே. என்னையும் மதுபானம் பண்ணுவித்து நீங்களும் மதுபானம் பண்ணுங்கோள்.
நிர்பயம் -காற்று காண முடியாதே -வாயு பகவான் போலே இல்லை -உன் மூலம் சீதையை அணைக்கப் பெற்றேனே
சந்த்ரனை -உன்னைக் கண்டால் போலே -சொல்ல வேண்டுமே -காற்றை பார்த்து கண்டாரை கண்டால் போலே –
சந்தரன் தாரகம் போலே உன் ஸ்பர்சம் தாரகம் -ஸ்பர்சம் போலே தர்சனம் –வாயுவைத் திருஷ்டாந்தம் ஆக்கி -என்றுமாம் 

———–

உத்ப பாத கதா பாணிச் சதுர்ப்பிஸ் ஸஹ ராக்ஷஸை–16-17-

திருவாய்மொழி – -4-9-கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம்
அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.
ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் –
அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்
இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று
அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது 

————

தீப்த பாவக சாங்காசை சிதை காஞ்சன பூஷணை
நத்வா மிச்சாம்யஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் சரை
–16-24-

ஸ்ரீ பெரிய திருமொழி-2-8-2-ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-

தீ வாய் வாளி –திருவாய்–6-10-4-
பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது;
படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை.
ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்து கொண்டு செல்லா நிற்கும்.
குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது. -குணம் -நாண்- சாடு -குண ஹீனம் -கிருபா ஹீனம் –
“தீப்த பாவக ஸங்காஸை: – படும் போது நெருப்பைப் போன்றிருக்கும்படி.

“தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22.
இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

ஸிதை: பட்டமை தெரியாதே தொளை உருவி அவ்வருகே விழக் காணுமித்தனை.
காஞ்சந பூஷணை: – இவற்றுக்கு இருவகைப்பட்ட ஆகாரம் உண்டாயிருக்கிறபடி.
“சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது”பெரிய திருமொழி, 7. 3 : 4.– என்கிறபடியே,
அநுகூலர்க்கு அகப்படுகைக்கும் அதுதானேயாயிருக்கிறபடி.
நத்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம் ஸரை: – இவ் வழகுக்கு இலக்காய் வாழ்ந்து போகலாயிருக்க,
எதிரிட்டு முடிந்துபோக நான் இச்சிக்கிறிலேன்.
நீ எண்ணி இருக்கிறது நான் அறிகிறிலேன் அன்றோ.
இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது;
அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே,
தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

வாளி மழை பொழிந்த சிலையா –
“அம்பு மழையைப் பெய்தாரன்றோ”
“ஸரவர்ஷம் வவர்ஷ ஹ”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 18.
என்கிறபடியே, பாட்டம் பாட்டமாகப் பெய்தபடி.

————–

மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –18-3-

ஸ்ரீ திரு விருத்தம் -42-மித்ர பாவேன-
அவன் பக்கலில் பாவமே அமையும் –
அவனை விடில் என்னை இழக்கும் அத்தனை இறே-
அவன் பக்கல் கிடையாதது ஒன்றை வேணும் என்றால் துராராதானம் இத்தனை இறே –
இவன் பக்கல் பெற்றது கொள்ளும் இத்தனை இறே –
இவனால் செய்ய முடியாதது ஒன்றைச் சொல்லுகை யாவது கை விட நினைத்து சொல்லிற்றாம் இத்தனை இறே –

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

திருவாய்மொழி – -5-1-1-“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே
எம்பார், ‘சர்வ ஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை
அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.

இப்போது கிருபா பரதந்திரனாய் இருந்தானே யாகிலும், சர்வஜ்ஞன் சர்வசக்தி அலனோ, அபராதங்கட்குத் தகுதியாக அவற்றின்
காரியங்களும் பிறவாவோ?-என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “மித்ரபாவேந” என்று தொடங்கி.
மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்.” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:3.
இந்தச் சுலோகத்தில் உள்ள “தோஷோ யத்யபி” என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும்,
“கதஞ்சந நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ -என்றும் அருளிச்செய்கிறார்.

———

ஸூஹ்ருதோ வா பவத் விதா –18-15-

திருவிருத்தம் -56–ஸூஹ்ருதோ வா பவத் விதா –நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரியாகி அவனிலும் நம்மை அந்தரங்கராக்கி கார்யம் கொள்ளும் தனை ஸுஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார்-

————

பிசாசாந் தானவான் யஷான் பிருதிவ்யாம் சைவ ராக்ஷஸான்
அங்குல்ய அக்ரேண தான் ஹன்யாம் இச்சன் ஹரி கணேஸ்வர
–18-23-

திருப்பல்லாண்டு -1-கால க்ர்த பரிணாமம் உள்ள தேசத்தில் இருக்கிறவருக்கு அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக்காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
பண்ணச் சொல்ல வேணுமோ –
இப்படி மாறி மாறி பயத்தை விளைத்து -காலத்தை பெருக்கி -இதுவே தமக்கு யாத்ரையாக
செல்லப் புக்கவாறே -அவன் -இவருடைய பயத்தை பரிஹரிக்க வேணும் -என்று பார்த்து -புலி கிடந்த தூற்றுக்கு அஞ்சிக் காவல் தேடுவாரைப் போலே நீர் நமக்கு அஞ்சக் கடவீரோ -மல்ல வர்க்கத்தை நிரசித்த தோள் இருக்கிறபடி பாரீர் -என்று தோள் வலியைக் காட்டினான்-
ராவணா நுஜனைக் குறித்து மஹாராஜருக்கு பிறந்த பயத்தை போக்குகைகாக தன் மிடுக்கைக் காட்ட-அவர் பயம் சமிக்கக் காண்கையாலே -இவ் விஷயத்திலும் பலிக்கும் -என்று மிடுக்கைக் காட்ட
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்து -மஹாராஜர் பயத்தை தீர்த்த படி என் என்னில் –
பிசாஸான் தாநவான் யஷான் -கள்ளர் பள்ளிகள் வலையர் -என்னுமா போலே
ஹிம்சிகருடைய அவாந்தாபிதை இருக்கிறபடி -ப்ருதிவ் யாஞ சைவ ராஷசான் -இலங்கையில்
உள்ள ராஷசர் அளவு அன்றிக்கே பஞ்சாசத்கோடி விச்தீர்னையான பூமியில் உள்ள
ராஷசர் எல்லாம் எதிரிகள் ஆனாலும் -அங்குல்ய கரேண தாந ஹன்யாம் -ஆக
சத்ரு வர்க்கங்கள் எல்லாம் ஒரு கலத்திலே உண்டு எதிரிட்டாலும் இவற்றின் உடைய
நிரசனத்துக்கு அஸ்த்ர சஸ்த்ரங்கள் வேணுமோ -ஷூத்ர கிருமிகளை நிரசிக்குமோ பாதி
அங்குல்யக்ரத்தாலே நிரசிக்க வல்லோம் காணும் என்கிறார்
ஆனால் நம்மை நலிந்த பிரதிபஷம் நசியாதே கிடக்கிறது என் என்னில் -அழிப்போம் -என்னும்
இச்சை இல்லாமை -இச்சை உண்டானால் அழிக்கையில் அருமை இல்லை -அது தனக்கு அடி என் என்னில்
உயிரோடே தலை சாய்க்குமாகில் அழிக்கிறது என் -என்னும் இரக்கத்தாலே –
இவ்வார்த்தை ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேது வாய்த்தது-

————

கிம் புநர்மத் விதோ ஜநா –18-25-

திருவாய்மொழி – -6-8-6-“ஓ வானரங்களுக்குத் தலைவனான ஸூக்கிரீவனே! அந்தப் புறாவானது தன் மனைவியை அபஹரித்தவனைத்
தன்னைக் கொடுத்துக் காத்தது; என்னைப் போன்றவர்கள் சரணாகதி செய்கிறவனைக் கைக் கொள்ள வேணும்
என்பது சொல்லவும் வேணுமோ?”-கபோதன வியாக்யானம் –

“ஸஹிதம் ப்ரதிஜந்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதம்
கபோதோ வானரச்ரேஷ்ட கிம்புந: மத்விதோ ஜந:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 25.

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந் தடைந்த பேதை
வேடனுக் குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டிப்
பாடுறு பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம் புள்
வீடு பெற் றுயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்றோ.-என்பது, கம்பராமாயணம், விபீடணனடைக். 112.

என்ற இடத்தில் சொல்லுவது ஒரு வார்த்தை உண்டு.
அது, அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன,
‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது.
இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை:
‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது;
இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒரு குறை இல்லை என்கிறது’ என்பது.
பெருமாளை புண்படுத்தியது யாவது -விபீஷண சரணாகதி உக்தி அநந்தரம் உடன் கொள்ளாமல் வார்த்தைகளைச் சொல்லி
கால விளம்பம் -புறா இது எல்லாம் செய்ய வில்லையே -பிராணான் பரித்யஜ்ய -புறா செய்ய –
மேலே செய்ய வழி இல்லையே என்ற புண் என்றுமாம் –
சரண்யன் புறாவாலே பல சித்தி வேடனுக்கு –சரண்யன் குணத்தாலே தான் பலிக்கும் என்றவாறு –

—————

ஆர்த்தோ வா யதிவா திருப்த ப்ரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா
–18-23-

ஸ்ரீ திரு விருத்தம் -42–ஆர்த்தோ வா யதி வா த்ருப்த –
ராகவம் சரணம் கத –
என்ற உக்தி திரு  செவி பட்ட போதே
இவன் நெஞ்சில் தளர்த்தியை திரு உள்ளம் பற்றினார் பெருமாள் –

உக்தியே இவன் பக்கல் உள்ளது –
நினைவு வேறு ஒரு படி -என்று அறிந்த முதலிகள் –
ராம பக்தியால்-
நினைவு ஒன்றாய் செயல் ஒன்றாய் இருக்கிறவன்
வத்யன் -என்றே இருந்தார்கள் –

(அரும்பதம்
சரணாகதி ஸ்லோகம்
காற்றுத்தானும் வேண்டாவாயிற்று தனது காலின் மேன்மை
அவன் ஸுஹார்த்தம் எதுவுமே வெண்டாதே
ஆபி முக்கிய ஸூ சகமான ஆர்த்த ப்ரபத்தியும் வேண்டா
மானஸ பிரபத்தியும் வேண்டா
மித்ரா பாவேந உண்டே
ஆனால் ஆர்த்த பிரபத்தியோ திருப்த பிரபத்தியோ
சரணம் சொன்ன எதிரியாகவோ -பரேஷாவாக – இருக்கட்டும் -துல்ய விகல்பமாக உள்ளதே
ஆர்த்தியாலோ த்ருப்தியாலோ கொடுப்பவன் இல்லையே
பிரபத்தியால் கொடுக்கிறான் என்றபடி
அதிகாரி வேண்டுமே
புருஷனையும் புருஷகாரத்தையும் நோக்கும்
தன்னைப் பார்த்தே கொடுக்கிறான்
இத்தையே மேல் வியாக்யானம் விளக்கும் )

ஆர்த்தன் ஆகையாவது –
இத் தலையை பெறில் ஜீவித்தும்
பெறா விடில் முடியும் படி யுமாய் இருக்கை– 

த்ருப்தன் ஆகையாவது –
நெஞ்சு இன்றிக்கே இருக்கச் செய்தே
நம்முடைய அனுகூல பாஷணங்களை
பிறர் அனுகரிக்குமா போலே
நெஞ்சு இன்றிக்கே இருக்க செருக்காலே சொல்லுகை –

(நாம் திரு நாமங்களைச் சொல்ல -அவற்றை ஆபேஷித்து
கண்ணன் கள்வன் -என்று சொல்லுமவரும் உண்டே
இருவரும் அநு காரத்தோடே சொல்லுகிறார்கள் போல்
திருப்த ப்ரபன்னன் -வாய் வார்த்தையாகச் சொல்லி
ஆர்த்த ப்ரபன்னன்
நாமும் புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
ஆழ்வாரைப் போலே சொல்லுவது
நெஞ்சு இன்றிக்கே சொல்வது போல் )

(அவனுக்கு உடன் பேறு
இவனுக்கு சரீர அவசானத்தில் பேறு
பலம் வேறுபாடு உண்டே என்னில்
இவன் பெறுவதற்குத் தயாராக இல்லை
ஆகவே பலத்தில் வேறுபாடு இல்லையே
கோவிந்த ஸ்வாமி அனுபவம் பார்த்தோம்
18 நாடான் பெரும் கூட்டம் உண்டே )

ஆர்த்தன் ஆகவுமாம் த்ருப்தன் ஆகவுமாம்-
ஆர்த்யோபாதி த்ருப்திக்கும் பல ஐக்க்யம் உண்டாம் படி
எங்கனே எனில்
இவனைப் பார்க்கும் அன்று இது விசாரிக்க வேணுமே –
சரண்யனுக்கு வேண்டுவது சொல்லுகிறது இறே இதில் –

ஆர்த்தியோபாதி த்ருப்தியும் இதுக்கு பரிகராம்படி (சாதனமாம்) எங்கனே எனில் –
ஆர்த்தி பரிகரமான இடத்தில் –
இதுவும் பல வியாப்தமாகக் கண்டு போருகிறது –
ஆகையாலே
ஆகிஞ்சன்யமே ஆயிற்று அதுக்கு பரிகாரம் –

த்ருப்தனுக்கு –
இதுக்கு பரிகரமான ஆர்த்தியும் கூட இல்லையாய் இருந்தது
இனி நாமே ஆகாதே உள்ளோம் -என்று அதுக்கும்
அவன் இரங்கும் என்று பரிகரமாக தட்டில்லை –

(விபீஷணன் சரணாகதி பெருமாள் திரு உள்ளம் படி ஆர்த்த பிரபத்தி
முதலிகள் திரு உள்ளம் படி திருப்த பிரபத்தி
ஆர்த்தி உள்ள சாதனம் உள்ளவருக்குக் கொடுக்க
அது கூட இல்லாமல் இருந்தால் கொடுப்பத்துக்குச் சொல்ல வேண்டுமே
நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என்பவரைத் தானே பூர்ண கடாக்ஷம் பண்ணி
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இருந்து மேல் விழுந்து கொள்ளுவானே
இரக்கமே பரிகரம் என்றதாயிற்று -)

பரேஷாம் கத அரி –
சத்ருக்களில் வைத்து கொண்டு சரணாகதனான சத்ரு –
அதாவது –
உக்தி மாத்ரமேயாய் கார்யத்தில் சாத்ரவமே முடிய நடவா நிற்கை –
அன்றிக்கே –
கொன்றேன் பல்லுயிரை -அன்றே வந்து அடைந்தேன் -பெரிய திரு மொழி -1-9-3-
என்னுமா போலே கொன்ற கறை கழுவாதே -வந்து புகுருகை –
(கொத்தின ரத்தத்துடன் வந்த காகாசூரனை -பரமா கிருபையா -கொண்டு ரஷித்தானே )

ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய –
அவர்கள் பக்கலிலே வாசி உண்டாலும் -ரஷிக்கும் இடத்தில் இருவரையும் ஒக்க
பிராணன்களை அழிய மாறி ரஷிக்க படும் –

ப்ராணாநபி பரித்யஜ்ய -என்னாது ஒழிந்தது –
அவன் செய்ததுக்கு பிராணனை அழிய மாறி
ரஷிக்கும் அதுவும் போராது என்று நினைத்து இருந்த படியால் –

(பிராணனை விட்டாவது ரக்ஷிக்க வேண்டாம் என்று இல்லாமல்
பிராணனை விட்டே ரக்ஷிக்க வேண்டும்
இதுவும் அவன் சரணம் என்ற சொன்னதுக்குப் போராது என்று எண்ணு மவன் அன்றோ –
கபோத உபாக்யானம் -புறா கதை -அறிவோமே )

க்ருதாத்மன-
இவனுடைய ரஷணத்துக்கு செய்தது ஓன்று அன்று –
தன்னுடைய ஸ்வரூப சித்திக்காக –
(க்ருதாத்மன திருத்தப்பட்ட மனசை யுடையவன்
ராகவ வம்சம் -தர்மம் தெரிந்தவன் ராகவன் ஆனபடியால் )

திருவாய்மொழி – -6-2-“ஆர்த்தோ வா யதிவா திருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்;
“ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:
அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷி தவ்ய: க்ருதாத்மநா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 28.
(கண்டு மகரிஷி வசனம் -சுக்ரீவனுக்கு பெருமாள் )

ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்’ என்றது முதல்,
‘இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி’ என்றது முடிய,
“ஆர்த்தோவா” என்ற சுலோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார்.
சுலோகத்திலுள்ள “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’ என்று தொடங்கி.

திருப்தனாவான்,
சம்சார தோஷ ஞானமும் பகவத் வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை
முன்னாகக் கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு, இனி வரும் பிறவியினைப் பொறுக்காதவனாய்,
இப் பிறவி முடியுமளவும் ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே’ என்று,
அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,
சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹி நிந்தா நியாயத்தாலே
எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச் செய்வர்.

அன்றிக்கே,
நாம் திரு நாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறு போலே செருக்காலே சொல்லவுமாம்.
இங்ஙனம் விகல்பிப்பான் என்? ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது?
மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிற இடம் பிரசித்தம் அன்றே? என்னில்,
இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;
சரண்யனுடைய லக்ஷணம் சொல்லுகிறது. இவனுடைய ஆர்த்தி தானும் உபாயத்தில் சேராதே யன்றே;
ஆன பின்பு, அவனோடு இவனோடு வாசி இல்லை.

அன்றிக்கே,
தன் நிலை அறிந்து, ‘நமக்கு ஒரு கைம் முதல் இல்லையாய் இருந்தது’ என்று
தன் குறையை அறிவிக்கவும் மாட்டாதபடி யாயிருந்தான்; ஆன பின்பு, இவனுக்கு நாமே யன்றோ உளோம் என்று
திரு வுள்ளம் இவன் பக்கல் ஊன்றி யிருக்கும்.
பரேஷாம் சரணாகத: அரி:-
பகைவர்களில் வைத்துக் கொண்டு சரணம் அடைந்தவனான பகைவனாயிற்று இவன். அது என்? என்னில்
‘சரணம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகையாலே, ‘சரணாகதன்’ என்னவுமாய், அகவாயில் இல்லாமையாலே
‘பகைவன்’ என்னவுமாயிருக்கை.
அன்றிக்கே,
முன்பு செய்தனவற்றிற்கு அநுதாபம் இல்லாமையாலும், இப்போது ‘சரணம்’ என்கிற சொல்லைச் சொல்லுகையாலும்,
இரண்டும் சொல்லலாயிருக்கை.
அன்றிக்கே,
கொன்றேன். . .அன்றே வந்தடைந்தேன்’ என்னுமாறுபோலே என்னுதல்.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க் கினிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா!
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.-, பெரிய திருமொழி, 1. 9 : 3. என்றது,

“பரேஷாம் அரிஸ்ஸந் ஸரணாகத:” என்று கூட்டி, பிறர்க்கும் பகைவனாய்க் கொண்டு
பிராயச்சித்தம் முதலியன செய்யாது சரணம் அடைந்தவன் என்று வேறும் ஒரு கருத்து அருளிச் செய்தபடி.
உதிரக் கை கழுவாமல் உடனே வந்து அடைந்தேன் என்பது பொருள்.
பிராணாந் பரித்யஜ்ய – பிராணன்களை ஒரு தலையாக விட்டு.
‘பிராணா நபி-பிராணன்களையும்’ என்ன வேண்டாவோ? என்னில், அவன் சொன்ன சொலவுக்கு இது
ஒன்றும் போராமையாலே அது வேண்டாவாயிற்று.
பிராணனையும் விட்டாவது சொல்லாமல் -சரணம் சொல்லே உயர்ந்தது —
பிராணனை விட என்பதால் பிராணான் பரித்யஜ்ய என்கிறார் –
ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா-திருந்திய மனத்தை யுடையவனா யிருக்குமவனால் இத்தனையும் செய்யப்படும். என்றது,
அறிவுடையார்க்கு இத்தனையும் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றபடி.
இது வன்றோ அவன் படி.

———–

யதிவா ராவண ஸ்வயம் –18-19-

திருவாய்மொழி – -10-2-2-ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா-
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –அது உள்ளது இராவணனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே-
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே-நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே-

———–

ராகவேணாபயே தத்தே ஸன்னதோ ராவண அநுஜ–19-1-

திருவாய்மொழி – -8-7-1-இராகவன் அபயத்தைக் கொடுத்த அளவிலே இராவணன் தம்பியான விபீஷணன் வணங்கினான் -என்றபடியே
ராகவேண அபயம் தத்தே ஸன்னத-(நன்று வணங்கினான்)  ராவணானுஜ விபீஷண மகா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயன் -யுத்தம் -1901-
இராவணன் பின் பிறந்த நாம் இரகு குலத்தில் உள்ளார்க்கு ஆளாக புக நின்றோமே -என்று இருந்தவன்
பெருமாள் பாடு நின்றும் அருள்பாடிட்டு வந்தவாறே-என்னையே இப்படி கைக் கொண்டு அருளுவது –
அவன் பின் பிறந்த தண்மை எங்கே போயிற்று -என்று
வேர் அற்ற மரம் போலே கூட வந்த நால்வரோடும் திருவடிகளிலே வந்து தரைப் பட்டாப் போலே-

———–

ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி –19-321-

திரு விருத்தம் -42-இதொரு கடல் இடை சுவராய் கடவா நின்றது –
இத்தை கடந்து அவ்வருகு பட்டோமாம் விரகென்-என்று
பெருமாள் முதலிகள் அடைய கேட்க –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
1-தான் அணித்தாக கை கண்ட உபாயம் ஆகையாலும் –
2-சர்வ ஹிதங்களுக்கும் சாதனம் சரணா கதி -என்று அத்யவசித்து இருக்கையாலும் –
3-பல வியாப்தி இதுக்கு உள்ளது ஆகையாலும் –
பெருமாளுக்கு இந்தக் கடலை சரணம் புக அடுக்கும் -என்றான் –

சமுத்ரம் –
பெரியவர்களை வசீகரிக்கும் உபாயம் இது அல்லதில்லை –

ராகவோ ராஜா –
ஒரு குடிப் பிறப்பும் இன்றிக்கே
அளவுடையாரும் அன்றிக்கே இருப்பாருக்கும் இது பலிக்கும் ஆனால்
இவை உடையாருக்கு சொல்லவும் வேணுமோ ?

சரணம் கந்து மர்கதி –
வசிஷ்ட சிஷ்யர் பக்கலில் இது பலிக்கக் கண்ட படியாலே
அறிவில்லாத கடலின்  பக்கலிலும் அது பலிக்கும் என்று இருக்கிறான் –

(அதிகாரி நியமம் இல்லை
கால தேச பிரகார நியதி களும் இல்லை
கேவல விஷய நியதி மட்டும் உள்ளது என்பதை மறந்து பேசினான் )

சாதேவேச்மின் பிரயுஜ்யதாம் –
எருது கெடுத்தாருக்கும் ஏழே கடுக்காய்
(குழந்தை பெறுவதுக்கும் ஏழே கடுக்காய் ) -என்று

(அஹம் அஸ்ய அபராத ஆலய -அகிஞ்சனன் அகதி
த்வமே உபாய பூதா பிரார்த்தனா மதி சரணாகதி
சாதேவேச்மின் பிரயுஜ்யதாம்
சா தேவ தேவனான ஸ்ரீ மானாகிற அவன் இடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும் )

————-

தத சாகர வேலாயாம் தர்ப்பாநாஸ்தீர்ய ராகவ
அஞ்ஜலிம் பிராங்முக க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோ ததே
பாஹும் புஜக போகாப முபதாயாரி ஸூதந
–21-1-

திருவாய்மொழி – -6-9-3-கிடந்தும் –
“பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலைக்கு அணையாகக் கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள்
கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு சமுத்திரத்திற்கு நேர் முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;

“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம்
ஈட்டிலே உள்ளதே -பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்-

திருவாய்மொழி – -2-8-7-கிடந்து –
1-திருப் பாற் கடலிலே கிடந்தபடி யாதல் –
2-அஞ்சலிம் க்ருத்வா –பிரதிசிச்யே -என்னும்படியாகக் கடல் கரையிலே சாய்ந்தபடி யாதல்
பஹூம் புஜக போகாபம் -திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்தால் போலே யாயிற்று திருக்கையை மடித்து சாய்ந்தால் இருக்கும்படி
படுக்கை எல்லாம் திரு வநந்த ஆழ்வான் அம்சம்
அரி ஸூதன-கிடந்த கிடக்கையிலே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை
பிரதிச்யே மஹா ததே -ஒரு கடலோடு ஒரு கடல் ஸ்பரசித்துச் சாய்ந்தால் போலே இருக்கை –கிடந்ததோர் கிடந்த அழகிலே-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றாயோ காகுத்தா -இங்கே மல்லணை —

———

ஷமயா ஹி ஸமா யுக்தம் மா மயம் மகராலய
அஸமர்த்தம் விஜாநாதி திக் க்ஷமா மீத்ருசே ஜநே
–21-21-

திருவாய்மொழி – -6-10-அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்க வேணும்;
சரணம் புகா, பலித்தது இல்லை என்னா,அஸமர்த்தம் விஜாநாதி-என்பார் ஆகாது-
“இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது
“க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.
(மகராலய:-மீன் குட்டை -அஸமர்த்தம் விஜாநாதி-சாமர்த்தியம் இல்லை என்று எண்ணின் கடலை இப்படி சொல்லி )

சரண்யன் ஸ்வரூபம் -உலகம் உண்ட பெருவாயா -குணாதிகன்-இடம் பண்ண வேண்டும் –
அதிகாரி ஸ்வரூபம் –குல தொல் அடியேன் –கார்யகரத்துக்கு இரண்டும் இங்கே உண்டே
குண ஹானி இடம் பண்ணி அனர்த்த ஹேது -சமுத்திர ராஜன் -பெருமாள் -பலராமன் -சக்கரவர்த்தி -இடம் பார்த்தோமே
சிபி புறா –கபோதம் -வேடன் -பலிக்க கண்டோமே -என்னில் -கிம் புனர் நியாய சித்தம் –“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப் போகிறேன்; வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்”
“சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு,
மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ.-
பஞ்ச பூதங்களில் ஒன்று போனால் என்ன நான்கையும் வைத்து காரியம் கொள்ளுகிறேன்

“க்ஷமயாஹி ஸமாயுக்தம் – ‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று
இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்;
இங்கே வருணனை வழி வேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டா நின்றார்;
வருண தேவன் கால் கை பிடிப்பது –வில் -வில் காலைப் பிடிக்கை -கை விரல் சரம் பிடிக்கை –
இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் வானர முதலிகள்.‘இவன் வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி,
வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப் போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். –

கைகேயி அசமர்த்தனாக நினைக்க வில்லை –சமர்த்தன் சொன்னாலே சரணாகதன் லக்ஷணம் போகுமே –
அபலை ஆகையால் ராஜ்யம் விரும்பினாள் ஆகையால் க்ஷமை பண்ணி வந்தோம் –
க்ஷமை கால் காட்டியதால் மூன்று நாள் பொறுத்து இருந்தார் பெருமாள் -முதலில் சமர்த்தன் என்று நினைக்க வில்லை
அப்புறம் தான் தெரிந்தது அசமர்த்தன் என்று எண்ணி இருப்பதை அறிந்து க்ஷமையுடைய கால் கட்டை அவிழ்த்து விட்டார் –

மாம் என்கிற நாம் தாஸன் சொன்னதும் சரணாகதி பலிக்கும் –
பெருமாள் தாஸன் சொல்லி பின்பு மாம் சொல்லியதும் பலிக்க வில்லையே

“மாம் – ‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார்.
‘பிறர் கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு அன்று’ என்று இருக்கிறது இல்லை;- ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை.
அயம் – மஹோததி என்னும் பெருமையை நினைத்திரா நின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது இல்லை.
மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக் காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன் படு குட்டமாக அறிகிறது இல்லை.
அஸமர்த்தம் விஜாநாதி – செவ்வை கெடப் பரிமாறினாரையும் ஒக்கவிட்டுக் காரியம் கொள்ள வல்லோம் என்று அறிகிறது இல்லை.
இவ்வளவில் செய்ய அடுப்பது என்? என்னில்,
திக்க்ஷமாம் – இப்போது பொறையை வேண்டோம்.
விநியோகமுள்ள இடத்தே அன்றோ காரியம் கொள்ளுவது?
கோபத்தைப் போன்று, காரிய காலத்தே அழைத்துக் காரியம் கொள்ளப் பார்த்தோம்.
அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறை கொண்டு காரியம் கொள்ள வேண்டாவோ?
என்னில், ஈத்ருஸே ஜநே – அதனால் பெற்றது என்? அது இங்கு ஜீவிக்கிறது இல்லை.
இதுக்கு இங்குள்ளாருடைய சம்பந்தமே பலியா நின்றதே. -கரைக்கு அந்தப் பக்கம் உள்ள இராவணன் படி –

————

ராம லஷ்மண குப்தா ஸா ஸூக்ரீவேண ச வாஹிநீ
பபூவ துர்த்தர்க்ஷ தரா ஸர்வைரபி ஸூரா ஸூரை
–25-32-

திருவாய்மொழி – -6-9-3-காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற் போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கை வாங்கினேன், (ஸ்வ ரக்ஷணம் தவிர்ந்தேன் )
இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக் கொள்.

“இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.

கடற்கரையிலே விட்ட போது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப் போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனை பேரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ;
உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
(ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்யவம் இல்லாத போது தானே அவன் ரக்ஷித்து அருளுவான் –
முதலிகள் பரிவாலே நோக்கிக் கொண்டு இருந்தார்கள் -பக்தி பாரவஸ்யத்தால் பரிந்து –
பொங்கும் பரிவாலே -தட்டு மாறிக் கிடந்ததே )

—————–

ஸ்ரீ மதா ராஜ ராஜேந லங்காயாம் அபிஷேசித -27-2-

பெரிய திருமொழி-4-6-3–ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே 
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-

ஸ்ரீ மதா
உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது

ராஜ ராஜேன
உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –

லங்காயாம்  அபிஷேசித –
இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்
அவன் பரிகரமாய் இருந்து வைத்து
அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே
இப்படி சொல்லுகைக்கு அடி
அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே
இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ  -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே-

————–

அத ஹரி வர நாத ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிசி சரபதி மாஜவ் யோஜயித்வா ஸ்ரமேண
ககந மதி விலாஸம் லங்கயித்வார்க்க ஸூநு
ஹரி வர கண மத்யே ராம பார்ஸ்வம் ஜகாம
–40-29-

திருவாய்மொழி – -7-4-1–பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே;
‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திரு முன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று
பொறாமையாலே-பொறுக்காத படியாக – மேல் விழுந்தார் அன்றோ?

அத ஹரி வர நாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸி சர பதிம் ஆஜௌ யோஜ யித்வா ஸ்ரமேண,
ககந மதி விஸாலம் லங்கயித்வா அர்க்க ஸூநு:
ஹரிவர கண மத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

‘அத ஹரி வர நாத:-தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ?
ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – இவர்களோடு கூடி நின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது,
தூசித் தலையில் ஓர் ஏற்றம் செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார்.
பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம் தலையிலே ஏறிட்டுக் கொண்டார்.
நிசி சர பதிம் – அத் தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ?
‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி.
ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி.
யோஜ யித்வா ஸ்ரமேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார்.
ககந மதி விசாலம் லங்கயித்வா – பரப்பை யுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார்.
அர்க்க ஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார்.
பிறப்புக்கு ஈடாகச் செய்தார். தன் நிலம் அன்றோ? சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப் போம் போது தெரியாது அன்றோ?
ஹரி வர கண மத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார்.
ராம பார்ஸ்வம் ஜகாம – ‘தூசித் தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப் பெறுவர்?’
என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

திருவாய்மொழி – -10-6-8-அதஹரி வர நாத –
ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே
பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே
இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்று
பெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32-
திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-
வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-
ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத –
ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது
தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்
பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –
ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-
பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –
நிசிசர பதிம் –
களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி
தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –
ஆஜௌ –
அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –
யோஜயித்வா ஸ்ரமேண-
அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –
ககன மதி விசாலம் லங்கயித்வா –
நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –
அர்க்க ஸூந-
அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –
உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –
ராம பார்ச்வம் ஜகாம-
பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே
நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார்
பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து
திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-
கொழு மணி முடிகள் தோறும் கொண்டன குழுவின் கூட்டம்
அழுதயர் வுறுகின்றான் தன் அடித்தலம் அதனில் சூட்டித்
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ள யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே -கம்பர் வுயுத் மகுட பங்கம் படலம் -27-

—————

த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம –41-4-

திருவாய்மொழி – –1-2-6-முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே
பிராட்டிக்காக கிஞ்சித் அவதி பட்டாய் இதற்கு நிமித்த பூதையான அவளிலும் பிரிய-பிரிய தர -பிரிய தம -இளைய பெருமாள் பரத -சத்ருக்னன்
-இவர்களுக்கு ஜீவனமான என் திரு மேனியும் வேண்டேன் -என்றாரே பெருமாள்
கிஞ்சித் கொஞ்சம் ஆபத்து வந்து இருந்தால் -வாயால் சொல்ல முடியாமல் -சீதை விடுவேன் சொல்லும் வாயால் –

திருவாய்மொழி – -4-5-8-இன்பனை –
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.
இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே,
‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது
பெருமாள் அவரைப் பார்த்து, ‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது,
‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி.-‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ?
கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார்.
‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னா நின்றதே அன்றோ?
நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில்,
நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?
இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார்,
‘நீர்மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
பரிகரம் இருக்க அரசனா முன்னால் போவது என்றாரே பெருமாள் –
தாமே இவனுக்கு பரிகரம் என்ற நினைவால் அர்ஜுனனுக்கு இவன் தான் முன்னே இன்று பார்த்த சாரதி பெயர் வாங்கிக் கொண்டார் –
அன்று ஈன்ற கன்றின் மேல் உள்ள வாத்சல்ய அதிசயம் –
இச் சுலோகப்பொருளோடு,
‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின் நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்; பின்னை என்?
இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்;
‘இவன் புகுராவிடில் நாம் உளோம் ஆகோம்,’ என்கிறார் பெருமாள்;
‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க,
‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது,
‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்;
‘ராகவம் சரணம் கத:’-(சுக்ரீவம் நாதம் இச்சதி -வார்த்தைக்கு இந்த அர்த்தம் என்றபடி ) என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி
‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ
‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே!
இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக் கொள்ள வேண்டிற்று?

———–

சாகா ம்ருகா ராவண சாயகார்த்தா ஜக்முச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம்

திருவாய்மொழி – -7-1-ஸாகா ம்ருகா – பூசலிலே புக்கு அங்கு உண்டான பழக்கம் இன்றிக்கே இருக்கை.
பணையோடு பணை தத்தித் திரியுமவை அன்றோ? ராவண ஸாயகார்த்தா; –
‘தேவத்யமாநா: பதிதாக்ரய வீரா: நாநத்யமா நாபய ஸல்ய வித்தா:
ஸாகாம்ருகா ராவண ஸாய கார்த்தா: ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 59 : 45.
‘வாநரா:’ என்னாமல், ‘ஸாகா ம்ருகா:’ என்று விசேடித்ததற்கு பாவம் அருளிச் செய்கிறார்,

திசைப் பாலகர்களையுங்கூட அச்சமுறுத்தி வளர்ந்தவன் கையில் அம்புகள்.
ஜக்மு: ஸரண்யம் ஸரணம் ஸ்மராமம் – தங்களுடைய ஆபத்தை அறிந்து போக்கக் கூடியவனையும் பார்த்துப் பற்றினார்கள்.
‘அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட வானரங்களுடைய பெரிய கூட்டமானது,
பாதுகாக்கின்றவனும் சக்கரவர்த்தி திருமகனுமான பெருமாளைச் சரணமாக அடைந்தது,’ என்கிறபடியே,
‘ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே,
இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார்.

———–

சத்ரூணாம் அப்ரகம்ப்யோபி லகுத்வமகமத் கபே -59-118-

திருவாய்மொழி-1-3-1-சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று –வஸ்து ஸ்வபாவம் இருக்கும் படி யாயிற்று இது –

————-

ஸ்மரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர–60-3-

பெரிய திருமொழி-8-1-1-சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா  நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

சிலை –
ஒன்றை இட்டு விசேஷிக்க வேண்டாதே
தன்னையே சொல்ல  அமைந்து இருக்கிற ஸ்ரீ சார்ங்கம் –

—————-

சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜ நீயஸ்ய விக்ரமை
பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ்த்வயா –1
06-6-

பெரிய திருமொழி-2-8-2-வெந்திறல் இத்யாதி -வெவ்விய திறல் உண்டு -பர அபிந சாமர்த்தியம் -அத்தை உடையரான வீரர்கள்
தாங்கள் மடல் எடுக்கும்படியான ஆண் பிள்ளைத் தனம் உடையவர் சக்கரவர்த்தி திருமகனார் –

ராவணன் வார்த்தை
சத்ரோ–பிரக்யாத வீரஸ்ய-ரஞ்ச நீயஸ்ய விக்ரமை-
சத்ரோ –
கெடுவாய் என்னுடைய சத்ருவை ஆர் என்று நினைத்து தேரை மீட்டுக் கொடு போந்தாய்
பிரக்யாத வீரஸ்ய-
எதிரிகளான நம் படை வீட்டிலும் பிரசித்தமாய் அன்றோ
அவருடைய ஆண் பிள்ளைத் தனம் இருப்பது –
நீ கேட்டு அறியாயோ
அது ஏறிப் பாயாத மேடு இல்லை காண்
ரஞ்ச நீயஸ்ய விக்ரமை
கண்டு பராக்ரம் மிக்க ஒண்ணாதபடி அளவற எதிரி முடிகினால்
அது நிலமாக்கிக் கொண்டு பராமிக்கும்படியை படியைப் பார்த்தால்
காந்தனை விரும்புமா போலே எதிரிகளுக்கு விரும்ப வேண்டும்படி காண் அவரது ஆண் பிள்ளைத் தனம் இருப்பது-

————–

உத்திஷ்ட உத்திஷ்ட கிம் ஸேஷே ப்ராப்தே பரிபவே நம
அத்ய வை நிர்ப்பயா லங்காம் ப்ரவிஷ்டாஸ் ஸூர்ய ரஸ்மய
–114-82-

பெரிய திருமொழி-1-2-2-(ராவணன் பட்டுக் கிடக்க மண்டோதரி-அருளிச் செய்த ஸ்லோஹார்த்தம்-)
ஆதித்ய கிரணங்கள் உள் புகுந்து சஞ்சரியா நின்றன கிடாய் –
இதுக்கு முன்பு இல்லாத ஓன்று இப்பொழுது உண்டாயிற்று கிடாய்-
முன்பு நெல் உலர்த்த வேண்டுவது சஞ்சரித்து போம் இத்தனை யாயிற்று ராவண பயத்தாலே –
இப்போது நிர்பயமாய்க் கொண்டு உலாவா நின்றன –

————

மரணாந்தாநி வைராணி நிர்வ்ருத்தம் ந ப்ரயோஜநம்
க்ரியதா மஸ்ய ஸம்ஸ்கார மமாப்யேஷ யாததவ –
114-101-

திருவாய்மொழி – -2-7-சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

———

நிப்ருதஸ் பிரணத் ப்ரஹ்வ–116-

திருவாய்மொழி – -2-7-2-நிப்ருதஸ் -ஒரு அவயவத்திலே எல்லா அவயவங்களை அடங்கும்படி இருக்கை
பிரணத் -வேறு சிலர் எடுக்க வேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை
ப்ரஹ்வ–இப்படிக்கிடந்தோம் என்னுமது நெஞ்சில் நடையாடாது இருக்கை

———–

தாஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயா மீஹ தூர்பலா –116–41-

திருவாய்மொழி – -5-4-5-என்னை ஆராய்வார் ஆர் –
“பிராப்தவ்யம் து தஸா யோகம் மயா ஏதத் இதி நிஸ்சிதம்
தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ தூர்பலா”-என்பது, ஸ்ரீராமா. யுத். 116 : 40.
“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கிறேன்” என்கிறபடியே,
திருவடி சென்று அரக்கியர்களை நலியப் புக, இவர்கள் இராவணன் சோறுண்டு வாழ்ந்து பரதந்திரப் பட்டவர்களாகையாலே
என்னை நலிந்தார்களாகில், தங்களாலே வந்தது ஒன்று அன்றாகில்,
அது தனக்கு நாமும் ‘பொறுத்தோம்’ என்று நேர்த்தரவு கொடுத்த பின்பு இனி இவர்களை நலிகிறது என்? என்ன
‘இராவணனும் பட்டானாகில் நம்மைப் பல நாட்கள் நலிந்து போந்த இப் பெண் பையல்களை
இப்போது பொறுக்க வேண்டுகிறது என்?’ என்ன,
“துர்பலா – ‘சிலர் நம்மை நலிந்தார்கள்’ என்று நாம் அவர்களை நலியப் புக்கால், அப்போதே அவர்கள்
கண் குழிவு காண மாட்டாதார் பின்பு செய்வது என் பொறுக்காமல்.”
இராவணனும் பட்டு, பெருமாளும் வெற்றியினை யுடையரான பின்பு, இனி இது ஒழிய வேறு ஒரு தௌர்பல்யம் இல்லையே அன்றோ.
ஆக, இப்படித் தன்னை நலிந்த அரக்கியர்களையும், நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் என்று
“தத:ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்து: விஜய ஹர்ஷிதா
அவோசத் யதி தத் தத்யம் பவேயம் ஸரணம் ஹி வ:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 58 : 90.
“உங்களை நான் காப்பாற்றுகிறேன்” என்னக் கூடிய அவள், இப்போது, தன்னை ஆராய்வார் தேட்டமாய்,
ஆர் என்னை ஆராய்வார்’ என்கிறாளே அன்றோ-

திருவாய்மொழி – -6-10-10-“பலம் இல்லாத நான் இங்கு இராவணனுடைய வேலைக்காரிகளுடைய குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுகிறேன்” என்றாளே அன்றோ.
என்றது, திருவடி, ‘அரக்கியர்களை என்கையில் காட்டித் தர வேணும்’ என்ன,
‘பிறர் கண்குழிவு காணப்பொறாத துர்ப்பலை காண் நான்’ என்றாள் அன்றோ என்றபடி.
ஈண்டு, “தாஸீநாம் ராவணஸ்ய அஹம் மர்ஷயாமி இஹ துர்பலா”-என்பது, ஸ்ரீரா. யுத். 116 : 40.
“துர்ப்பலை” என்றது, இராவணன் பட்டானாகில், பெருமாளும் வெற்றியோடே நின்றாராகில்,
திருவடி வந்து முன்னே நின்றானாகில், வேறு ஒரு வலி இல்லாத தன்மை இல்லையாதலின்,
பிறர் நோவு காண மாட்டாமையாகிற துர்ப்பலத்தையே குறித்தபடி. துர்ப்பலம் – வலி இன்மை.

————-

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருணமார்யேண ந கச்சின் ந அபராத்யதி —
116-45-

பாபாநாம் வா ஸுபாநாம் வா-
இவர்கள் நீ நினைத்திருக்கிறபடியே பாவத்தைச் செய்தவர்கள் ஆகவுமாம்.
நான் நினைத்திருக்கிறபடியே நல்வினையைச் செய்தவர்கள் ஆகவும் அதுதானே அன்றோ உத்தேசியம்;
“அவனுக்குக் குற்றமிருந்தாலும் இருக்கட்டும்; நல்லோர்களுக்கு இது பழிக்கத்தக்கது அன்று” என்றாற்போலே.
“தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 3.

இன்று வந்தான் என்றுண்டோ எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தானென் றுண்டோ புகலது கூறுகின்றான்
தொன்றுவந்தன்பு பேணும் துணைவனு மவனே பின்னைப்
பின்றுமென் றாலும் நம்பாற் புகழன்றிப் பிறிதுண் டாமோ.-என்றார் கம்பநாட்டாழ்வார்.

அழுக்குடையவன் அன்றோ குளிக்கத் தகுதியுடையவன்; அவர்கள் பாபத்தைச் செய்தவர்களாகில் அன்றோ
நாம் முகம் கொடுக்கவேண்டுவது.
நல்வினையராகில் உன் வால் வேணுமோ? அவர்கள் புண்ணியங்களே அவர்களுக்குக் கை கொடுக்குமே;
கோ தானம் பசுவின் வாலைப் பிடித்து தாங்களே தாண்டுவார்களே –
கைம் முதல் இல்லாதார்க்கு அன்றோ நாம் கைம்முதல் ஆகவேண்டுவது’ என்றாள்.

வதார்ஹாணாம் –
தண்டிக்க வேண்டியவர்களைத் தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்மசாஸ்திரம்
தேவரைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்ன,
‘சரண் அடைந்தவர்கள் யாவரேயாயினும் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்’ என்கிற விசேஷ சாஸ்திரம்
உன்னைத் தொற்றிக் கிழித்துப் பொகடக் கடவதோ? என்கிறாள்.
“ஸரணம்” என்று வந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தோஷவானேயாகிலும்
“நத்யஜேயம் – விடமாட்டேன்” என்று பெருமாள் கடற்கரையிற் சொன்ன வார்த்தை கடல் ஓசையாகக் கடவதோ? என்கிறாள்.

பிலவங்கம-
பின்னையும் இவன் புத்தியைத் திரியவிடாமையினாலே ஹரி! ஹரி! என்கிறாள்.
அன்றிக்கே,
வசிஷ்டர் முதலாயினோர் இருந்து ஆலோசனை சொல்லும் குடியான இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்தாய் இல்லை;
யோகியான ஜனகன் குலத்தில் பிறந்தாய் இல்லை;
காட்டிலே பணையோடு பணை தத்தித் திரியும் ஜாதியிலே அன்றோ பிறந்தது;
அங்ஙன் ஒத்தார்க்குச் சரணாகதியினுடைய தன்மை தெரியாதன்றோ என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
நச்சினத்தை நச்சும் சாதியானமை கண்டோமே என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
அன்றிக்கே,
அரசருமாய் மூலையடியே நடக்கவுரியருமாயிருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்;
நீ வானரசாதி யாயிருந்து வைத்து இங்ஙன் கோபிக்கக் கடவையோ? என்பாள் ‘பிலவங்கம’ என்கிறாள் என்னுதல்.
‘வாநரோத்தம’ என்றவள் தானே அன்றோ ஹரி! ஹரி! என்கிறாள்.

கார்யம் கருணம் –
இவர்கள் புண்ணிய பாவங்கள் கிடக்க; இப்போது ஓடுகிற தயைசெய்யத் தகுந்த தன்மையைப் பாராய். என்றது,
உன் கையிலே அகப்பட்டு ‘நாம் என்படக் கடவோம்’ என்று தியங்குகிறபடி பாராய் என்றபடி.
இவர்களுக்கு இரக்ஷகர் வேறு இலரே. இப்போது இவ்வளவில் நாம் இரங்கவேணுங் காண்.

ஆர்யேண –
இவையெல்லாம் இப்போது நான் கற்பிக்க வேண்டும் படியாவதே உனக்கு!
ஆர்யேண – ஐந்திர வியாகரண பண்டிதன் என்கிறது பொய்யோ?
அவற்றையும் எல்லாம் கற்றுக் கேட்டிருக்கச் செய்தேயும், இப்போது இராம கோஷ்டியில் பழக்கம் பின்னாட்டின படியே யன்றோ.
அக் கோஷ்டியிற் பழக்கமன்றோ நீ இங்ஙன் சொல்ல வல்லையாயிற்று.
“நான் போந்த பின்பு அக் கோஷ்டி இங்ஙனே நீர் அற்றதே அன்றோ” என்று கருத்து.

ந கஸ்சித் ந அபராத்யதி-
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார்!
திரை நீக்கிக் கடல் ஆடப்போமோ?
நற்குரிரையாகப் பாவித்திருக்கிற பெருமாள் தாம் குற்றவாளர் அல்லரோ!
நான் தான் குற்றவாட்டி அல்லேனோ?
நீ தான் குற்றவாளன் அல்லையோ?

பெருமாள் குற்றவாளரானபடி எங்ஙனே? என்னில், தாம் காடேறப் போந்தார்:
அவர் பின்னே மடல் ஊர்வாரைப் போலே இளையபெருமாளும் போந்தார்;
தம்மோடே ஏகாந்தமாக இன்பம் அநுபவிக்க வேண்டுமென்று இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்;
என்னைப் பிரிந்து பத்து மாதங்கள் இருந்தார்;
தாம் வாராவிட்டால் தம்மது ஓர் அம்பு இசங்க மாட்டாமை இல்லை அன்றோ இவ்வழி;
இத்தனை நாள் பிரிந்திருக்க வல்லவரான போதே பெருமாள் பக்கலிலே யன்றோ குற்றம்?

பாரதந்திரியத்திற்குத் தகுதியாகப் பேசாது இராமல், அது தன்னைச் சொன்ன என் பக்கல் தன்றோ குற்றம்?
இனி, நாயகன் சொன்ன காரியம் செய்த அடியாரைத் தண்டிக்கப் பார்த்த அன்று,
பெருமாள் அருளிச் செய்த காரியம் செய்யப் போந்த உன்னை முற்படத் தண்டித்துக் கொண்டன்றோ

இராவணன் சொன்ன காரியங்களைச் செய்த இவர்களைத் தண்டிப்பது? ஆகையால், நீ அன்றோ குற்றவாளன்!

‘எல்லாப்படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி போக வேண்டி இருந்த அன்றைக்கு நீ உண்டு’ என்றிருந்தேன்;
நீயும் இங்ஙனேயானால் அபராதம் செய்தார்க்குப் புகு வாசல் உண்டோ?’ என்கிறாள்.

—————–

தீபோ நேத்ரா துரஸ்யேவ ப்ரதி கூலாஸி மே த்ருடம் –118-17-

திருவாய் -2-3-7- இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும்படி -நேத்ர தோஷத்தால் வந்தது போக்கி தீப தோஷத்தால் வந்தது அன்று -என்று

சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யார்த்தீ சேத் ஸ்வயம் பவேத்
ப்ரசாஸ்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் அகிலாம் ரகு நந்தன
–128-16-

திருவிருத்தம் -51-ஐயர் நியமிக்க ஆச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் ராஜ்யத்தைத் தனக்கே கொடுத்துப் போரச் செய்தேயும் நம்மைப் பின் தொடர்ந்து வந்து சொன்ன நாள் எல்லை கடந்தால் பின்னை ஒரு க்ஷணம் நான் தாழ்க்கில் தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சில் படுத்திப் போந்தான் -இன்று நாம் சென்று கிட்டினால் பதினாலு ஆண்டு பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே நீ முடி சூடு என்றால் -அல்லேன் என்னாதே அத்தை இசையப் பெறுவது காண் –ஐயர் நம்மை முடி சூட்டப் பாரித்து பெறாதே ஒழிந்த இழவு நாம் பிள்ளையை முடி சூட்டிக் கண்டு தீரப் பெறுவது காண்
சநைர் ஜகாம ஸாபேஷா -என்கிறதை ஸாவேஷா -என்று திருத்தி கீழ் விழியால் பார்த்துப் போனார் என்று பொருள் சொன்ன படியைப் பட்டர் கேட்டருளி -அது வேண்டா காண் -கிடந்த பாடம் தனக்கே பொருள் சொல்லலாம் காண் -என்று இவ் உப கரணங்களைக் கொண்டு நாம் பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் -என்னும் அபேக்ஷை யோடே போனார் என்கிறது காண் என்று அருளிச் செய்தார்-

———-

ந ஹி தே ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம்
பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை தர்ம வத்ஸலம் –
128-16-

திருவாய் -9-2-2-ந ஹி தே இத்யாதி -அருகே இருக்கச் செய்தேயும் இவனைச் சூழ இருக்கிற பவ்ரரானவர்கள் இவனை அநுபவிக்கையில் நசை அற்றார்கள் -அதுக்கடி என் என்னில்
ராஜ புத்ரம் தம் காஷாயம் பர தாரிணம் பரி போக்தும் வ்யவஸ்யந்தி பவ்ராவை –பெருமாள் பேர நின்ற அநந்தரம் முடிந்தவன் மகன் அன்றோ -இவனோ தான் நமக்குத் தொங்கப் புகு கிறான் என்று இருந்தார்கள்
தர்ம வத்ஸலம் -இதுக்கும் அவனோடு ஒக்கும் -தர்மத்துக்காகத் தன்னை அழிய மாறினான் இறே அவன்-

—————–

ததோ ஹர்ஷ ஸமுத்பூதோ நிஸ்வநோ திவமஸ் ப்ருஸத்
ஸ்த்ரீ பால யுவ வ்ருத்தாநாம் ராமோயமதி கீர்த்திதே
–130-31-

திருவாய் -3-7-3-தம் தாம் கற்பு அழியும் வார்த்தை சொன்னால் -என்று இருக்கும் ஸ்த்ரீகள் -முதலிலே வார்த்தை சொல்ல அறியாத பாலர்கள் –வாய் விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள் -கரண பாடவம் இல்லாத வ்ருத்தர்கள் -இவர்கள் அத்தனை பேரும் வாய் விட்டு ஏத்தும் படி யாயிற்று பெருமாள் அழகு-

————-

ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமிநி –131-80-

திருப் பல்லாண்டு –8-இந்த்ரன் வரக் காட்டிய ஹாரத்தைப் பெருமாள் வாங்கிப் பார்த்து அருளிப் பிராட்டிக்குக் கொடுக்கிற போது அத்தை வாங்கு கிறவள் பெருமாளை ஒரு கண்ணாலும் திரு வடியை ஒரு கண்ணாலும் பார்த்து வாங்கினாள்
ப்ரேஷிதஜ் ஞாஸ்து கோசலா -என்று பார்வையில் கருத்து அறியுமவர் யாகையாலே அவனுக்கு கொடுக்க லாகாதோ என்று அருளினார்
ஸூபகே-அடியார் ஏற்றம் அறிந்து கொண்டாடுகைக்கு ஈடான ஸுபாக்யம் உள்ளது உனக்கே யன்றோ என்ன -உம்முடைய திரு உள்ளத்தாலே யன்றோ நான் கொடுக்கிறது என்று பிராட்டி அருளிச் செய்ய நான் முற் பாடனாகப் பெறாமையாலே உன்னுடைய உகப்பின் கார்யத்தைக் கொடுக்க லாகாதோ -என்றார்-

————-

ராமோ ராமோ ராம இதி ப்ரஜா நாம் அபவந் கதா
ராம பூதம் ஜகத் பூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –
-131-101-

அழகிய மணவாளப் பெருமாள் நாய னார் வியாக்யானம் -அமலனாதி பிரான்-2- -ராமோ ராமோ ராம இதி –பாதம் தலைக் கட்டுகையாலே மீளுகிறது அத்தனை என்று இறே நிர்வஹிப்பது
இத் த்ரை வித்யத்துக்குப் பொருள் -1-ரூப ஒவ்தார்ய குணங்களை வென்ற வடிவு அழகும் -2-ரூப ஒவ்தார்ய குணை -என்கிற படியே -அத்தை அனுபவிக்கக் கொடுக்கையும் -3- கொடா நின்றால் இறு மாப்பு அற்று இருக்கையும்
பும்ஸாம் தாருண்யமச -என் கிற படியே ஸ்த்ரீ பும்ஸ விபாகம் அற ப்ரவணராம் ஆகாரம் உண்டாய் இருக்கையாலே வீத ராகரைச் சொல்கிறது –
ப்ராப்த விஷய ப்ராவண்யம் இறே ஜிதேந்த்ரியத்வம் ஆவது
ப்ரஜா நாம் அபவந் –மாதா பிதாக்களுக்கு அன்று -வஸிஸ்டாதிகளுக்கு அன்று -ஜநி தர்மாக்களுக்கு
கதா –லோக யாத்ரை களுக்கு உறுப்பாம் வார்த்தை களும் பெருமாளைப் பற்றி அல்லாது இராது
ராம பூதம் ஜகத் பூத் –ஜகத்தடைய ராம அத்வைதம் ஆய்த்து -ஐததாத்ம்யமிதம் ஸர்வம் –என்கிற பொது அல்ல
ராம பூதம் என்று ராம அத்வைதம் ஆய்த்து -ப்ரஹ்ம அத்வைதத்தை வ்யா வர்த்திக்கிறது
பெருமாள் சுண்டு வில் கொண்டு லீலா ரஸம் அனுபவிக்கிற காலத்திலேயோ என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –தஹ பச என்கிற காலத்தில்

திருவாய் -7-3-1-ராமோ ராமோ ராம இதி –சோறு சோறு சோறு என்பாரைப் போலே
ப்ரஜா நாம் அபவந் கதா-மநி தர்மாக்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே
ராம பூதம் ஜகத் பூத் –நாடு அடங்க ராம அத்வைதம் ஆன படி
நித்ய விபூதியில் பரி மாறக் கடவது இங்கே பரி மாறுகைக்கு ஹேது என் என்னில்
ராமே ராஜ்யம் ப்ரசாஸதி –நாடு அடங்கலும் தம் தாமுடைய கர்ம பலம் புஜிக்கப் பெற்றார்கள் இல்லை –ராம பாக்யமே அனுபவித்து விட்டது-

————

ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திச் ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி
–உத்தர காண்டம் -1-

அமலனாதி பிரான் -பிரவேஸம் —
ஸ்நேஹோ மே பரமோ -என் தன் அளவன்றால் யானுடைய அன்பு
ராஜன் த்வயி -இது தானும் என்னால் வந்த தன்று -அதுவும் அவனது இன்னருளே
நித்யம் ப்ரதிஷ்டித -இன்று அன்றாகில் மற்ற ஒரு போது கொடு போகிறோம் என்ன
அங்கன் செய்யுமது அன்று -தர்மியைப் பற்றி வருகையாலே
நின்னலால் இலேன் காண் –என்னுமாப் போலே
பக்திச் ச நியதா -ஸ்நேஹம் ஆவது என் -பக்தி ஆவது என் என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து வ்யதிரேகத்தில் முடிந்த நிலை ஸ்நேஹம்
பக்தி யாவது நில் என்ன குருஷ்வ என்னும் படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை
வீர -தன்னைத் தோற்ப்பித்த துறை
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா இங்கு வெல்ல முடியாது
தானும் வீர னாகையாலே தோற் ப்பித்த துறையைப் பிடித்துப் பேசுகிறான்
பாவோ நாந்யத்ர கச்சதி -என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அந்யத்ர -என்கிறது மற்று யாரானும் உண்டு என்பார் என்னுமாப் போலே கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் தனக்கு அஸஹ்யமாய் இருக்கிற படி

திருவாய் -7-5-1-ஸ்நேஹ: மே பரம:-
எழுந்தருளுகிற போது ‘என் வழியே போந்தாலோ?’ என்ன,
‘அவ்வளவு அன்று காணும் எனக்குச் சிநேகம்’, என்கிறான்.
‘என்றன் அளவு அன்றால் யானுடைய அன்பு’-(இரண்டாம் 100 )என்றும்,
‘உயிரின் பரமன்றிப் பெருகுமால் வேட்கையும்’–(9-6-1-) என்றும் சொல்லுமாறு போலே

ராஜந் த்வயி-
இது தானும் என்னால் வந்தது அன்று.-‘ரஞ்ஜயதீதி ராஜா’ ஆகையாலே.

நித்யம் ப்ரிதிஷ்டித; –
‘இப்போது ஒண்ணாதாகில், மற்றொரு போது கொள்ளுகிறோம்’, என்றால், அது செய்ய ஒண்ணாது,
தர்மியைப் பற்றிக் கிடப்பது ஒன்று ஆகையாலே .

பக்திஸ்ச நியதா –
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து பிரிவில் முடிந்த சக்கரவர்த்தியின் நிலை சினேகம்;
பத்தியாவது, ‘நில்’ என்ன, ‘குருஷ்வ – கொள்க’ என்னும் படியாய், முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை.

வீர –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்னா, இங்கும் வெல்ல முடியாது.
தானும் அவன் ஆகையாலே ( நீயும் வீரன் நானும் வீரன் )தோற்பித்த துறையைப் பிடித்துச் சொல்லுகிறான்,

பாவோ ந அந்யத்ர கச்சதி –
என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சினை மீட்கப் போகாது,
‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி’ திருவாய். 1. 7 : 8.என்னுமாறு போலே.
‘சர்வ சக்தியான அவனாலும் மீட்கப் போகாது,’ என்கை.

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணோவே’ என்னுமாறு போலே, ‘அந்யத்ர ந கச்சதி’ என்கிறது.

‘அந்யத்ர’ என்கிறது,
போகிற இடத்தின் பேரும் சொல்லுகை பொறாதபடி;

‘மற்று ஆரானும் உண்டு என்பார்’( திரு மடல் ) என்னமாறு போலே,
இவரும், ‘மற்றுங் கற்பரோ?’ என்கிறார்.-

—————

ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷோ ந ராஞ்ஜோ ந ச ராகவஸ்யா
வந ப்ரவேஸே ரகு நந்தனஸ்ய மத் பாபமே வாத்ர நிமித்த மாஸீத் –
அயோத்யா காண்ட ஸ்லோகம் -இப்போது இந்த ஸ்லோகம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை

ஓர் பழி –திரு நெடும் தாண்டகம் -12-
அத்விதீயமான பழி –

(இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள்.
பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞான விபாக கார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று
உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.)

(‘என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற் போலே பிறர் சொல்லும் படியாகவும்
‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாருமில்லை‘ என்றாற் போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும்
மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி,
பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள்.)

ஏ பாவமே
இவள் குறையும் அன்று
அவன் குறையும் அன்று
நான் பண்ணின பாபமே இதுக்கு ஹேது என்கிறாள் –

ந மந்தராயா -இத்யாதி –
இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதை மந்தரை என்று நினையா -அவளுடைய தோஷம் அன்று
அவள் வார்த்தை கேட்ட கைகேயி தோஷம் என்று நினைத்தான்

ந ச மாதுரஸ்ய-இவளுடைய தோஷமும் அன்று –
இவள் வார்த்தையைக் கேட்ட சக்கரவர்த்தி தோஷம் என்று நினைத்தான் –

தோஷோ ந ராஜ்ஞா-ராஜாவுக்கு ஒரு தோஷம் இல்லை
அவன் வார்த்தை கேட்டு -தமக்கு வகுத்த அபிஷேகத்தை பொகட்டு காட்டிலே போன அவர் குற்றமே இத்தனை –

ந ச ராகவஸ்ய -அவருக்குத் தான் குற்றம் என்
அவர் அபிஷிக்தராய் அனுகூல வ்ருத்தி பண்ண கடவனாய் இருக்க
அதுக்கல்லாத என் பாபமே இவ் வனர்த்ததுக்கு எல்லாம் ஹேது பூதம் –

வனப்ரவேச ரகு நந்தனஸ்ய -இக்குடி வாழப் பிறந்த செல்வப் பிள்ளை
வனவாசம் பண்ணுகைக்கு நிமித்தம் என் பாபமே யாம் இத்தனை –
கூனி சொன்னது கைகேயி கேட்க வேண்டா
அவள் சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டா
அவன் சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டா

கூனி சொன்னது கேட்க வேண்டாது ஒழிகிறது-அடியாத்தி யாகையாலே
கைகேயி சொன்னது சக்கரவர்த்திக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில்
ஸ்திரீ புத்திர வாத்சல்யத்தாலே சொன்ன வார்த்தையை
பர்த்தாவுக்கு கேட்க வேணுமோ –

சக்கரவர்த்தி சொன்னது பெருமாளுக்கு கேட்க வேண்டாது ஒழிகிறது என் என்னில் –
தர்ம ஆபாசத்தை ஆலம்பனம் ஆக்கிக் கொண்டு
ஸ்திரீ பாரதந்த்ர்யத்தாலே பிரமித்து சொன்ன வார்த்தையை பெருமாளுக்கு கேட்க வேணுமோ
தம்முடைய அந்ய வ்யதிரேகங்களில் நான் படும் பாடு அறிவர் தாம் ராஜ்ய ப்ராப்தர் என்னும் இடம் அறிவர்
ஆன பின்பு அவனைக் கட்டி இட்டு வைத்து ராஜ்யத்தை ஆளத் தட்டேன் –
அவன் சொன்ன வசனத்தை அநாதரித்து -ராஜ்யத்தை ஆண்டார் ஆகில்
தம்முடைய வ்யதிரேகத்தில் நான் முடியாத படி ரஷித்தார் ஆகில் ஆயத்தே
ஆகையால் என் பாபமே இதுக்கு நிமித்தம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான் —

(நானே தான் ஆயிடுக
இல்லாத குற்றத்தை இருப்பதாக ஏறிட்டுச் சொன்னாலும் இல்லை செய்யாதே இருப்பதாக இசைவதே
நாம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்)

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 25, 2024

அவ்யக்த ரேகாமிவ சந்த்ர ரேகாம் பாம் ஸூப்ரதிக்தாமிவ ஹேம ரேகாம்
ஷதப்ரரூடாமிவ பாண ரேகாம் வாயு ப்ரபந்நாமிவ மேகரேகாம்
–5-26-

நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

———

பபூவ புத்திஸ்து ஹரீஸ் வரஸ்ய யதீத்ருசீ ராகவ தர்ம பத்நீ
இமா யதா ராக்ஷஸ ராஜ பார்யா ஸூஜாதமஸ்யேதி ஹி ஸாது புத்தே
–9-13-

ஏர் கொள் இலங்கையை –2-9-10-
தர்ச நீயமாய் கட்டுடைத்தான இலங்கையை –அஹோ வீர்ய மகோ தைர்யம் -என்று திருவடி மதிக்கும் படியான இலங்கையை
பபூவ புத்திஸ்து ஹரீச்வரஸ்ய -ராவணனும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை கண்டவாறே -தானும் ஒரு சமுதாயத்துக்குக்
கடவனாகையாலே -இங்கனே இருப்பதொரு புத்தி பிறந்தது –திருவடி மதித்த ஐஸ்வர்யம் அன்றோ –
யதீத்ருசீ இத்யாதி -பையல் தானும் ஸ்த்ரீகளுமாய் இருக்கும் இருப்பை -பெருமாளும் பிராட்டியுமாய் இருக்க சம்மதித்தான் ஆகில்
இந்த ஐஸ்வர்யம் குலையாது இருக்கலாயிற்றுக் கிடீர்
இமா யதா ராஷச ராஜ பார்யாஸ் ஸூ ஜாத மஸ் யேதி ஹி சாது புத்தே –சத்ருக்களுக்கும் நன்மை வேணும் என்று இருக்கும் புத்தியை உடையவனுக்கு –

————-

பைங்காம ந அலங்காரம் வி பங்காமிவ பத்மிநீம் –15-20-

திருவாய்மொழி – -2-1-6-நைவாய வெம்மே போல் –
1–நைவை யுடைய எங்களைப் போலே -என்னுதல் -நைவு வாய -நைவுக்கு இடமாய் –
2–நைவு தான் ஒரு வடிவு கொண்டால் போலே என்னுதல் —நைவு ஆய -என்றபடி -கிருஷ்ண த்ருஷ்ணாவால் ஏற்பட நைவு –
வெம்மே-எங்களை -கீழ் சொன்ன நாரை –அன்றில் –வானம் அனைத்தையும் சேர்த்து
ச பங்காம் –பூமியில் நின்றும் தோற்றின போது போலே இருந்தாள்–அசோகா வனத்தில் அழுக்கு-
அநலங்காராம் -அத்தால் அழித்து ஒப்பிக்கும் அவர் அசந்நிதியாலே ஒப்பனை யழிந்து இருந்தாள்-
விபத்மாமிவ பத்மிநீம் –பெருமாள் வந்தாலும் இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது என்னும்படி முதலிலே
தாமரை குடி போன -குடி பெயர்ந்த -பொய்கை போலே இருந்தாள்-
விரீடிதாம் பரிம்லானாம் -தபஸ்வினீம்
அவ்யக்தலேகாமிவ சந்திர லேகாம் -சுந்தர -15-21–போய்த் தேய்ந்தற்ற படிக்கும் வைவர்ண்யத்துக்கும் நிதர்சனமாகச் சொல்லுகிறது
பாம்ஸூ பிரதிக்தாமிவ ஹேமலேகாம் -நற்சரக்குக்கு வந்த அழுக்கு என்று தோற்ற இருந்தாள்
ஷதப்ரூடாமிவ பாணலேகாம்-அம்புவாய் உள்ளே கிடக்க புறம்புவாய் சமாதானம் பண்ணினால் போலே -அகவாயில் இழவு பெரிது என்று தோற்ற இருந்தாள்
வாயுப்ரபக் நாமிவ மேகலேகாம் -பெரும் காற்றாலே சிதற அடியுண்ட மேகசகலம் போலே இருந்தாள்
சகலம் -சின்ன பகுதி -மேக சிதறுகள் –மின்னல் என்றுமாம் –சூறாவளிக் காற்று ராவணன் -/மேகம் பெரு/மின்னல் சீதா/ என்றவாறு –
வதததாம் வரன் -பேச்சாளிகளில் சிறந்தராமன் –

————

துஷ் கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யதநயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந துக்கே நாவ ஸீததி —
15-32-

திருவாய்மொழி – —வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
துன்பம் பின்பு இன்பம் என்று குகனை நம்ப வைத்து பிரிந்தீர் -பிரிந்த பின்பு சேர இவள் இருக்க வேண்டுமே -மடவரல் –
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார் -வெளித் தோற்றத்தில் அழகன் –
ராமன் -இப்படிப்பட்ட தசையிலும் ரமியப்பண்ணும்-தானும் ஆனந்தப்பட்டு -வாயு குமாரன் திருப்தி பட்டர் -தமப்பன் பண்ணின உபாகாரத்தை ஸ்மரிப்பித்து
-பிராணன் இவளுக்கு இருக்கும் படி செய்த உபகாரம்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
சோகம் என்னும் அக்னி சுடாதே சொல்ல வில்லையே -விரஹ அக்னி யால் முடிந்து இருக்க வேண்டாமோ -தாசோஹம் சொல்ல வைத்த கடாஷம்
பிரபு –ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -பரதந்த்ரன் அல்லனே –
பெண் பிறந்தார் தானே முடிந்து பிழைக்க முடியாது –போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது –ஆயதனம் -வாசஸ் ஸ்தானம்
தேஹம் -வளரும் -சரீரம் தேயும் -பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்-பவன சம்பவ த்ருஷ்ட்வா -வாயு குமாரன் திருப்தி -நல்ல வேளை இவள் உடம்பில் இருந்து பிரியாமல் இருந்ததால் -வாயுவை -உபகாரகன் என்கிறார்-

———

ஏவம் ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட பவந ஸம்பவ
ஜகாம மனஸா ராமம் ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –15-53-

திருவாய்மொழி -2-4-2-ஜீயர் அரும்பதம்-

இப்படி நிந்தித்தவன் தானே அநந்தரத்தில் கொண்டாடத் தொடங்கினான்
ஏவம் -க்ஷண கால விஸ்லேஷ அயோக்கியமான வஸ்துவாக
ஹ்ருஷ்டோ ராமம் மனஸா ஜகாம-இப்படி அவளைப் பிரிந்த பெருமாள் ப்ராணனைத் தரித்து இருந்தது நம்முடைய பாக்ய பலம் இறே என்று ஹ்ருஷ்டானானான் -என்றபடி
ராமம் -இப்படிப்பட்ட திசையிலும் நம்மை நோக்கி வைத்து நம்முடைய மனஸ்ஸை ரஞ்ஜிப்பிப்பதே என்று புத்தி பண்ணினான் என்றபடி
பவந ஸம்பவ-தம்முடைய தம்மப்பன் பண்ணின உபகாரத்தை ஸ்மரித்தான் ஆயிற்று
ப்ராண வாயு முகேந விடாமல் இருந்தவன் இறே உபகாரகன்
ஸீதாம் ததா த்ருஷ்ட்வா ப்ரஸஸம்ஸ ச தம் ப்ரபும் –இப்படி இவன் தரித்து இருந்ததற்கு நிபந்தநம் பிரபுத்த்வம் இறே என்று பிரபுத்வத்தைக் கொண்டாடத் தொடங்கினான்
தம் -பிரபுத்வத்தின் பெருமை இருந்தபடி என்றான் என்றதாயிற்று-

————–

த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் ஸீதாயா நாப்னுயாத் கலாம் -16-14-

ஈடு -6-2-6-மூன்று லோகத்தையும் அத்தோடு விஸ்வ ஸப்த வாஸ்யனானவன் தன்னையும் கூட ஒரு தட்டாக்கினால் பிராட்டியினுடைய ஒரு கலா மாத்ரத்துக்கு இடை நிற்க மாட்டாது-

——

ஸர்வான் போகான் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் கருதா
அசிந்தயித்வா துக்கானி ப்ரவிஷ்டா நிர்ஜனம் வநம்
-16-19-

பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

————

நைஷா பஸ்யதி ராக்ஷஸ்யோ நேமாந் புஷ்ப பலத்ருமாந்
ஏகஸ்த்த ஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநு பஸ்யதி —
16-25-

ஈடு -5-5-5-ராக்ஷஸீ தர்சனத்தோடு புஷ்ப பலத்ரும தர்சனத்தோடு வாசி அற்று இருக்குமது காணும் இவளுக்கு-அருகு இருந்தவர்களையும் பாராளாயிற்று-

———

இமாம ஸீத கேஸாந்தம் சத பத்ர நிபேஷணாம்
ஸூகார்ஹாம் துக்கிதாம் த்ருஷ்ட்வா மமாபி வ்யதிதம் மந –
16-23-

திருவாய் -5-9-1-வைகலும் வினையேன் மெலிய –-“இமாம் அஸித கேஸாந்தாம்-
மை வண்ண நறுங்குஞ்சியை யுடையவர்க்கும் பேணத் தகும் குழலையுடையவள் காண்.
இங்கே திருநெடுந்தாண்டகம் 21-ஆம் திருப்பாசுரம் அதுசந்தேயம்
ஸத பத்ர நிபேக்ஷணாம் –
ராம கமலா பத் ராக்ஷ -‘கமலக் கண்ணன்’ என்கிற கண்களாலே கண்டு கொண்டிருக்கத் தக்க கருங் கண்களை யுடையவள் காண்.
ஸுகார்ஹாம்-
அவர் மடியிலே இருக்கத் தகுமவள்.
துக்கிதாம் த்ருஷ்ட்வா-
இந்த இருப்பு இருக்கத் தகாதவளைக் கண்டு.
மமாபி வ்யதிதம் மந:-
இன்ப துன்பங்களுக்கு அழியாத என்னுடைய நெஞ்சுங்கூட வருந்திற்றுக் காண்.”
இப்படியே காணும் இவளுக்கும் இருக்கிறபடி.-

———-

ஹிம ஹதநலி நீவ நஷ்ட சோபா வ்யஸன பரம்பரயாதி பீட்யமாந
ஸஹ சார ஹிதேவ சக்ர வாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தஸாம் ப்ரபந்நாம் –16-30-

திருவாய்மொழி – -6-2-

பிரிவாகிற புதுக்கோமுற்றவன்-புது அரசன் – வந்து முதன்மை கொண்டாடுமதில்,
முகம் பழகின துன்பமே அமையும்’ என்று
ஆற்றாமை தோற்ற இருந்தாள். எங்ஙனே இருந்தாளோ? என்னில்,
‘ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா –

“ஹிம ஹத நளிநீவ நஷ்ட ஸோபா வ்யஸந பரம்பரயா அதி பீட்ய மாநா
ஸஹ சர ரஹி தேவ சக்ர வாகீ ஜநக ஸுதா கிருபணாம் தஸாம் ப்ரபந்நா”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 30.
பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த் துரும்பு அறக் கலந்து போந்த இவளுக்கு வந்தேறியான பிரிவு அன்றோ;
அதனாலே அழகு அழிந்திருந்தாள்.
வ்யஸந பரம்பரயா –
பிரிவினைப் போன்று கலவியும் வந்து கழியப் பெற்றதில்லை.
அதி பீட்ய மாநா-
இடத்தின் அளவல்லாத படியாயிருக்கை.
ஸஹ சர ரஹிதேவ சக்ர வாகீ-
வருமளவும் உணர்ந்து பொறுக்க மாட்டாதிருக்கை. அவற்றின்படி அங்ஙனே அன்றோ;
ஜனக ஸுதா –
‘இவை வரும்’ என்று வளரப் பெற்றது இல்லை.
க்ருபணாம் தஸாம் ப்ரபந்நா –
மேலே கூறியவை ஒன்றும் ஒப்பாக மாட்டாது; சில சொல்லப்பட்டவாம் இத்தனை.

இவளும் அப்படியே ‘முகம் பழகின ஆற்றாமையோடே இருந்து முடிய அமையும்;
இனி அவன் வரவு நமக்கு வேண்டா’ என்று இருக்கிறாள்.-

———–

தஹந்தீமிவ நிஸ்வாஸைர் வ்ருஷான் பல்லவ தாரிண –17-29-

திரு நெடும் தாண்டகம் -12- திருவடி லௌகிக அக்னியால் ஊரைச் சுட்டான் -இவள் விரஹஅக்னியால் அசோக வநிகையைச் சுட்டாள்

திருவாய் -7-2-2–நெடு மூச்சாலே தன் பகை அறுக்கப் பாரா நின்றாள் -பல்லவ தாரிகளாய் இருக்கை அப்போது இவளுக்குப் பகை இறே -ஒருபடிப் பட்டு நின்று நலிகிற படி இறே அவை -ராக்ஷஸிகள் உறங்கும் போதும் உண்டு இறே உருவ இப்படியே நிற்கிற வித்தனை அவை-

—————–

மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –
-21-19-

மித்ரம் ஓவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசவ் புருஷர்க்ஷப –21-19-
பெருமாள் திருமொழி -5-5–அன்று கண்டால் போல் கையும் வில்லுமாய் நிற்பர் -அவனுக்கு அச்சத்தாலே -தமக்கு உருவு வெளிப்பாட்டாலே – முன்னே நிற்பர்
தீரக் கழிய அபராதம் செய்த எனக்கு அவர் கிருபை பண்ணுவாரோ என்று அவனுக்கு நினைவாக்க கொண்டு -புருஷர்க்ஷப –நீ அநுகூலனாய் ஓரடி வர நின்றால் அத்தையே நினைத்து நீ பண்ணின அபராதம் எல்லாம் புத்தி பண்ணுவரோ -அவர் புருஷோத்தமர் காண்-

திருவாய்மொழி – -3-6-

பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
இராவணன் பிராட்டிபக்கல் ‘பெற்றதாய்’ என்ற நினைவு இன்றிக்கே திருமுன்பே நின்று சிலவற்றைப் பிதற்றப் புக்கவாறே
‘ஸ்ரீராமபிரான் யானையைப் போல எண்ணப்படுகிறார்; நீ மிகச் சிறிய முயலைப் போல எண்ணப் படுகிறாய்,’ என்று வெறுத்து வைத்து
பின்னையும் ‘ஐயோ! இவன் நினைவு இருந்தபடி என்? இவனுக்கு ஒரு நல்வார்த்தை சொல்லுவார் இன்றிக்கே ஒழிவதே!’ என்று
இரக்கங்கொண்டு ‘நீ ஸ்ரீராமபிரானோடு தோழமை கொள்,’என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று,
இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

ஸ்ரீராமா சுந். 21 : 19.- இந்தச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
மித்ரம் ஒளபயிகம் கர்த்தும் ராம :-
‘பெருமாளைச் சரணம் புகு’ என்றால் அப்பையல் அதனைத் தனக்கு எளி வரவாக நினைத்திருக்குமே? அதற்காகத் ‘தோழமை கொள்’ என்கிறாள்.
தங்களைச் சரணம் புக்காரைத் தங்களிற் காட்டில் குறைய நினைத்திருப்பதில்லையே இவர்கள்;
‘மித்ரபாவேந’ என்றும்,‘மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ என்றுமிறே இருவர் படியும்.-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -முதலிலே சொன்னது பிராட்டியே –
இவள் துவம்சிக்கும் ராவணனை பார்த்து -சொல்ல -சரணாகதி என்று சொல்லாதவன்
-பெருமாள் -சரண் அடைந்த விபீஷணன் இடம் -ஊருக்கு பந்தல் போட சொன்ன வார்த்தை
ஸ்தாநம் பரீப்ஸதா
– வழியடிப்பார்க்கும் தரையிலே கால் பாவி நின்று வழியடிக்கவேணுமே? உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டியிருந்ததேயாகிலும் அவரைப் பற்ற
வேணுங்காண்.-கிளை மேலே இருந்து மரத்தை அடியிலே வெட்டுவது போலே உள்ளேயே —
எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ்விருப்பு இருப்பதில் பட்டுப் போக அமையும் என்றிருந்தாயோ?
வதஞ்சாநிச்சதா கோரம் –
அப்படி உன்னை நற்கொலைப்பட விடுவரோ? உன்னை வைத்து உன் முன்னே உன் சந்தான கூட்டத்தைக் கொன்று பின்னை உன்னைச்
சித்திரவதை பண்ணுகையாகிற இவ்வதத்தை இச்சித்திலையே யாகிலும் அவரைப் பற்ற வேணுங்காண்.
த்வயா –
உன் நிலை இருந்தபடியால் விசேடித்து உனக்கு அவரைப் பற்றவேணும்.
அசௌ-
உருவெளிப்பட்டாலே முன்னிலையாயிருக்குமிறே இவளுக்கு;
அவனுக்கும் தானே மாயாமிருகத்தின் பின்னே போகிற போது கண்ட காட்சியாலே அச்சத்தாலே எப்போதும் முன்னிலையாயிருப்பரிறே.
புருஷர்ஷப:-
‘நான் பண்ணின அபராதத்துக்கு என்னை அவர் கைக்கொள்ளுவாரோ?’ என்றிருக்க வேண்டா; இவற்றை ஒன்றாக நினைத்திரார்காண்;
அவர் புருஷோத்தமர்காண்.
அசௌ புருஷர்ஷப: ராம: த்வயா மித்ரம் கர்த்தும் ஒளபயிகம்.

திருவாய்மொழி – -8-1-1-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி –
எவன் குற்றம் செய்யாதவன் -என்பாரும் அருகே இருக்க நான் வருந்த வேண்டிய காரணம் ஏன் –
பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20

ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-

எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்-

—–

க்யாத ப்ராஞ்ஞா க்ருதஞ்ஞ ச ஸ அநு க்ரோசச்ச ராகவ
ஸத் வ்ருத்தோ நிர் அநு க்ரோஸஸ் சங்கே மத் பாக்ய ஸம் ஷயாத்
-26-13-

திருவாய்மொழி – -8-1-ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ-

——-

பக்ஷி ச சாகா நிலய ப்ரஹ்ருஷ்ட புநஸ் புநஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸூஸ் வாகதாம் வாச முதீரயாந புநஸ் புநஸ் சோதயதீவ ஹ்ருஷ்ட
-27-51-

திருவாய்மொழி – -6-2-1-அவன் வரவுக்குச் சூசகமான நன்னிமித்தங்கள் பல உளவாயிருந்தன:
“பக்ஷீச – பறவையானது சிறகினை விரித்தது.
ஸாகா நிலய: – உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையை யுடைத்தான பணையிலே இருந்தது.
மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி.

“பக்ஷீச ஸாகா நிலய: ப்ரஹ்ருஷ்ட: புன:புனஸ் சோத்தம ஸாந்த்வ வாதீ
ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந: புன:புன: சோத யதீவ ஹ்ருஷ்ட:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

ப்ரஹ்ருஷ்ட: –
அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது.
புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ –
மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே,
ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: –
இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப் பட்டது என்று சொல்லுமாறு போலே இருந்தது.
புந:புந: சோத யதீவ-
வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறு போலே இருந்தது.
உலகு அளந்தான் வரப் போகிறார் போலே கூவிற்றே
ஹ்ருஷ்ட: –
வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது.

ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”
“ததா கதாம் தாம் வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியா ஜுஷ்டமிவ உபஜீவிந:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.
“ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”-என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.
என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக் கடவதாகப் பெற்றுடையனான
வால்மீகி முனிவருக்கும் பாசுரமிட்டுச் சொல்ல ஒண்ணாதபடி இருக்கிறபடி.

தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

————-

ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூமித்ரே ஹா ராம மாத ஸஹ மே ஜநந்யா
ஏஷா விபத்யாம்யஹ மல்ப பாக்யா மஹார்ணவே நேளரிவ மூட வாதா –
-28-8-

திரு நெடும் தாண்டகம் –16- ஹா ராம -என்று போக்கிய வஸ்துவை நினையா ஹா லஷ்மணா என்று புஜிப்பாரை நினையா ஹா ஸூ மித்ரே என்று நிமித்த பூதரை நினையாக் கூப்பிட்டாள் இறே-

———-

அநந்ய தைவத்வம் இயம் ஷமாச பூமவ் ச சய்யா நியமச்ச தர்மே
பதி வ்ரதாத்வம் விபலம் மமேதம் க்ருதம் க்ருதக்நேஷ்விவ மானுஷாணாம்

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –4-6-10-

வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி

‘அநந்ய தைவத்வம் –
‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம் உண்டு, அது காப்பாற்றுகிறது,’ என்று நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா –
என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கைநீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரிய பெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன். (ஸஹ பதன்யா விசாலாக்ஷி நாராயணன் உபகமனத் )
இயம்க்ஷமாச –
இராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் இராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும்
பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன்சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌச ஸய்யா –
‘இத் தரைக்கிடை கிடந்ததும் தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘அவருடைய மடியில் இருப்பு
ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ் தர்மமே –
‘காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது,
‘பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே! எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால்
உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று இராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் –
‘சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
‘எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் –
தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –
‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும் உண்டே அன்றோ மனிதத் தன்மை?
அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
‘தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் –
‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

————

விஷஸ்ய தாதா நஹி மேஸ்தி கஸ்ஸித் ஸஸ்த்ரஸ் யவா வேஸ்மநி ராக்ஷஸ்ய –28-16-

திருவாய்மொழி – -5-4-

எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க,
அவை தாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே
ஒருப் பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்க வேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;

“விஷஸ்ய தாதா-
இத்தனை நற்சரக்குத் தரும் உதாரர் இவ்வூரில் கிடைப்பாரோ?
மே-
கிடைத்தால் தான் எனக்கு இது சம்பவிக்குமோ?
சஸ்த்ரஸ்ய வா-
விஷம் போன்று சிறிது போது நின்று கொல்லுமதன்றியே கடுக முடிக்கும் ஆயுதத்தைத் தான் தருவார் உண்டோ?
வேஸ்மதி ராக்ஷஸஸ்ய-
பிரித்து வைத்து உயிர்க் கொலையாக நலிகிறவனுடைய ஊரிலே, நற் கொலைக்குச் சாதனமானதைத் தான் தருவார் உண்டோ?”

“ஸா ஜீவிதம் க்ஷிப்ரம் த்யஜேயம் விஷேண ஸஸ்த்ரேண ஸிதேநவாபி விஷஸ்யதாதா நஹிமே அஸ்தி கஸ்சித்
சஸ்த்ரஸ்யவா வேஸ்மநி ராக்ஷஸஸ்ய” என்பது, ஸ்ரீராமா. சுந். 28 : 25.

வி்ஷஸ்ய தாதா –
விஷத்தையாவது கொடுப்பவர். ‘கிடைத்தால் தான்எனக்கு இது சம்பவிக்குமோ’ என்றது, உதாரர் இருந்தாலும் பாபியான
எனக்குத் தரமாட்டார் என்றபடி. அன்றி, எனக்குப் பலியாது என்னுதல்.
சஸ்த்ரஸ்ய வா –
ஆயுதத்தை யாவது.
வேஸ்மநி ராக்ஷஸஸ்ய-
இராக்ஷசனுடைய வீட்டில்.
இப்படி முடிகை தேட்டமாம்பாடி இருக்கிற அளவிலே, ‘நாம் சர்வ ரக்ஷகராகையாலே எல்லாருடைய ரக்ஷணத்துக்குமாகத்
திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தோம், உம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவராய் இருந்தோம்;
கிராமப் பிராப்தி பற்றாமை பதறுகிறீரித்தனை’ என்கிற இதனை நினைப்பிக்க;
அவன் சர்வ ரக்ஷகனாகில், நம்முடைய ரக்ஷணத்திலே மிக்க முயற்சி யுள்ளவனாகில்,
கிரமப் பிராப்தி பற்றாமல் பதறுகிறோமித்தனை,
நம் அம்சத்தால் உள்ள ரக்ஷணம் நமக்குச் சித்தியாதோ என்று அவன் குண ஞானத்தாலே தரித்தாராகச் செல்லுகிறது இத் திருவாய்மொழி.

————-

நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –28-17-

பெரிய திருமொழி -3-6-1–எரிகிற நெருப்பைச் சென்று கிட்டுவாரைப் போலே -ஓங்கிப் பரப்பு அடங்கலும் புஷ்பிதமாய்க் கிடக்கை
ஆஸ ஸாத –தன் ஜீவனத்தில் நைராஸ்யம் விளைந்தமை தோற்றி இருக்கிறது

நாச்சியார் திருமொழி -9-5- நகோத்தமம் புஷ்பிதம் ஆஸ ஸாத –ஆற்றாமை கரை புரண்டால் தீப்பாய ஒருப்படுமா போலே
நேமாந் புஷ்ப பலத்ருமாந் -என்னும்படி இறே இவளுக்கு இருக்கிறது –

————

ததா கதாம்தாம் வ்யதி தாம நிந்திதாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீ நமாநஸாம்
ஸூபாம் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நாம் ஸ்ரியா ஜுஷ்டம் இவ உப ஜீவிந
-29-1-

திருவாய்மொழி – -6-2-ததா கதாம் – “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச – இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்”தாம்-தர்மிக்கு மேற்பட அவ்வருகு ஒன்று இன்றிக்கே இருக்கை.
வ்யதிதாம் – முற்கூறியவை எல்லாம் இயற்கையாய், வியசனமுள்ளது மேலே என்று தோற்றும்படியாயிருந்தாள்.
‘ஸமா த்வாதஸ தத்ராஹம்-ஸ்ரீராமா. சுந். 33 : 17.-என்று பன்னிரன்டு ஆண்டு கலந்து பிரிந்த இவளுக்கு
அது ஒன்றும் தோற்றாதே துக்கத்தை இட்டு நிரூபிக்க வேண்டும்படியா யிருந்தாள்.’
அநிந்திதாம்-
அத் தலையைப் பிரிந்தால் இருக்கக் கடவபடியே இருந்தாள். இப்படி இராத அன்று பழிக்கத்தக்கவள் ஆவளே,
வ்யபேத ஹர்ஷாம்-
‘உவகை குடிபுகுந்து போயிற்று’ என்று தெரியாதாய் இருக்கை.
பரிதீந மாநஸாம்-
உவகை வந்தாலும் தங்கும் இடமும் இன்றிக்கே இருக்கை.
ஸுபாம் –
மண் தின்று வந்த நகடு போல் அன்றே குணாதிக விஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி;
கடலேறி வடிந்தாற் போலே இருக்கிற அவ் விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கை.
பெருமாளை பிரிந்து வெளுத்து இருப்பது உத்தேச்யம் என்பதால் ஸூபாம் –
ஸுபாநி நிமித்தாநி பேஜிரே-
நிமித்தங்களானவை இத்தலைக்கு நன்மை சொல்லித் தாம் தாம் சொரூபம் பெற்றன. என்றது,
சாக்ஷாத் லக்ஷ்மிக்குக் கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்றன என்றபடி.
என்போலே என்னில்,
நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:-
அர்த்திகளாயிருப்பார் உதாரர் பக்கலிலே சென்று தங்கள் தங்கள்
பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே. இப்படியா யிருந்தன நிமித்தங்களின் அளவு.

———–

ஸா திர்யகூர்த்வஞ்ச ததாப்யதஸ்தாத் நிரீக்ஷ மாணா தமசிந்த்ய புத்திம்
ததர்ச பிங்காதிபதேர மாத்யம் வாதாத்மஜம் ஸூர்ய மிவோதயஸ்தம் –
-31-19-

திருவாய்மொழி – -2-4-1-எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே-
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வதந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –

————-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம்
புண்டரீக பலாசாப்யாம் விப்ர கீர்ண மிவோ தகம்
–33-4-

திருவாய்மொழி – -2-4-1-கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
முடியானேயில் கரணங்கள் அவையாக -பையரவணைப் பள்ளியினாய் –சஷூர் ஸ்ரவக -கட்செவி –
மல்கி –மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது– ஆர்குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு-

———–

ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ரு ஸைன்ய ப்ரதாபிந –33-16-

திருவாய்மொழி – -5-3–6-வாசு தேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப்பிறப்பு.
“ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”
என்பது ஸ்ரீராமா. சுந். 33 : 15, 16. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே, பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது
‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும். “எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ?
பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

————-

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
புஞ்ஞாநா மானுஷாந் போகான் ஸர்வ காம ஸம்ருத்திநீ
–33-18-

திருவாய்மொழி – -7-3–பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.-

அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

——————

ப்ரா கேவது மஹா பாக ஸுமித்ரிர் மித்ர நந்தன
பூர்வஜஸ் யாநு யாத்ரார்த்தே த்ரும சீரை ரலங்க்ருத –
-33-29-

முயற்றி சுமந்து–பெரிய திருவந்தாதி -1-
அடிமை செய்கையில் ஒருப்பட்டு

ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்

ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )

மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்

ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்

மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்

பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )

————–

ஸ்வப்நேபி யத்யஹம் வீரம் ராகவம் ஸஹ லஷ்மணம்
பஸ்யேயம் யதி ஜீவேயம் ஸ்வப்நோபி மம மத்சரீ –
-34-21-

நாச்சியார் -6-1- பிரவேசம்–பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது –
அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –

ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ச்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து
முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –

தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே
சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இறே

————-

ராம கமல பத்ராஷ ஸர்வ சத்த்வ மநோ ஹர
ரூப தாக்ஷிண்ய ஸம் பன்ன ப்ரஸூதோ ஜனகாத்மஜே
-35-8-

தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்–திருவாய்மொழி – -2-2-5-
ரஷகத்வம் இல்லையானாலும் தர்ச நீயமாய் குளிர்ந்து இருக்கிற திருக் கண்களை உடையனாய்
அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே -மிக்க தேஜசை உடையான்
திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்றதே
ராம -சர்வாங்க ஸூந்தரராய் இருக்கை –ராமயதீ ராமயா –
கமல பத்ராஷ -அதிலே ஒரு சுழி யாயிற்று அமிழ்ந்து வார்க்கு வேண்டுவது
அக் கண் அழகுக்கு எல்லை என்-என்னில் சர்வ சத்த்வ மநோஹரே -திர்யக் சஜாதீயனாய் -பணையோடு பணை-தத்தித் திரிகிற
என் நெஞ்சினையும் அபஹரித்தான் அன்றோ -கைமுதிக நியாயம் –
ரூப தாஷிண்ய சம்பன்ன பிரஸூத-தேக குணங்களாலும் ஆத்ம குணங்களாலும் குறையற்றது தான் ஔத்பத்திகமாய் இருக்கும்
ஜனகாத்மஜே –அற விஞ்சச் சொன்னாய் -இனி இங்கன் சொல்லலாவார் உண்டோ இல்லையோ –என்று பிராட்டிக்கு கருத்தாக
-ஜனகாத்மஜே –சுந்தர -35-8–பின்னை உம்மைச் சொல்லலாம் -நீரும் உண்டு
இப்படிப்பட்ட அவர் அழகை நீர் ஒருத்தியே சொல்லலாம் -நீர் அவனுக்கு ஏற்ற அழகு என்றுமாம் –

—————–

ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லஷ்மணே நேரிதம் வச
ததா ஸீந் நிஷ்ப்ரபோத்யர்த்தம் ராஹு க்ரஸ்த இவாம் சுமான் –
-35-36-

திருவாய்மொழி – -5-3-1-பெருமாளும் பிராட்டியுமான இருப்பிலே பிரிவு விளைந்தது’ என்று இளைய பெருமாள் மஹாராஜர்க்கு அறிவிக்க,
அவ்வார்த்தை செவியிலே படப்பட, பெருமாள் திருமேனியில் வை வர்ண்யம் இவர் உடம்பிலே மாறிற்றாயிற்று;
“ஸ ஸ்ருத்வா வாநரேந்த்ரஸ்து லக்ஷ்மணேந ஈரிதம்வச :ததாஸீத் நிஷ்பிரப:
அத்யர்த்தம் ராகு க்ரஸ்த இவ அம்சுமான்” – ஸ்ரீராமா. சுந். 35 : 36-
(ஸூர்ய புத்ரன்-ஸூ க்ரீவன் / இந்திரன் புத்ரன் வாலி /ராகு பிடிக்க பிடிக்க மாறுவது போலே -)
“அத்யர்த்தம் நிஷ்பிரப :- இழந்திருந்த தன்மை வாசா மகோசரம்” பிராட்டியைப் பிரிகையில் உண்டான ஆற்றாமை அன்றோ
பெருமாளுக்கு உள்ளது, பெருமாளுடைய ஆற்றாமையைக் காண்கையாலும்,
பிராட்டியும் பெருமாளுமாகச் சேர இருக்கக் காணப் பெறாமையாலும் மஹாராஜர்க்கு அவ்வள வன்றிக்கே, மிக்கிருக்குமே அன்றோ
‘அர்த்தம்’ என்ற சொல் பொருளை உணர்த்தும் சொல்லாயிற்று.
அதி அர்த்தமாவது, சொற்களைக் கடந்தது. என்றது, வாசா மகோசரம் என்றபடி.

———-

ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ் யேவம் சமஜாயத –35-52-

திருவாய்மொழி – -5-9-5–

நல் நலம் தோழிமீர்காள்-
நலமாவது,
இவள் பக்கல் இவர்களுக்கு உண்டான அன்பு.
நன்னலமாவது,
தங்கள் காரியம் தலைக் கட்டிக் கொள்ளுகை யன்றிக்கே இருக்கை.
ஆன பின்பு, ‘தாய்மார்கள் பழி சொல்லுவர்கள்’ என்று அஞ்சி என் வழியே உங்களுக்கு ஒழுகாதிருக்கப் போமோ.

(ராமர் தன்னலம் பாராமல் சுக்ரீவன் நலம் -பார்த்தார் சுக்ரீவனும் தன்னலம் பாராமல் பெருமாள் நலம் பார்த்தார்
அதே போல் நீங்களும் தாய் நலம் பாராமல் என் நலம் பார்க்க வேண்டாமோ என்னும் நினைவால் இந்த திருஷ்டாந்தம் )

“குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சேர்க்கை எப்படி தோழிமார்களுக்கும் இவளுக்கும் உண்டான ஸ்நேகத்துக்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘-இருவரும் பிறர் நலம் விரும்பி அன்றோ நண்பர்கள் ஆனார்கள்
“வாநராணாம் நராணாம் ச கதம் ஆஸீத் ஸமாகம:”- என்பது, ஸ்ரீராமா. சுந். 35 : 2.-உண்டாயிற்று?” என்றது,
குருகுலத்தில் வாசம் செய்யாத விலங்குகளுக்கும் வசிஷ்ட சிஷ்யர்களான இராஜ புத்திரர்களுக்கும்
இது ஒரு சேர்த்தி உண்டானபடி எங்ஙனே;
சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அலரோ குரு குல வாசத்திற்குத் தக்கவர்; என்ன,
மேல் இதற்குக் காரணம் சொல்லுகிறான்.

“இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் இந்த விதமாகச் சிநேகமானது உண்டாயிற்று;”
“ராம சுக்ரீவயோ: ஐக்யம் தேவி ஏவம் ஸமஜாயத” — ஸ்ரீராமா. சுந். 35 : 32.-என்றது, நிர்ஹேதுகத்வம் என்றபடி.
தங்களையும் அறியாதே எங்களையும் –இஷ்வாகு குலக் கொழுந்து -குரங்கு ஜாதி – அறியாதே
இங்ஙனே விழுந்து கொடு -ஐக்யம்-நிற்கக் கண்டோமித்தனை.

அதாவது,
1-இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து கொண்டு நின்று நோக்கக் கூடிய அந்தப்புரக் காரியத்துக்கு
அடியேன் வரும்படி யன்றோ அவர்கள்-சங்கதரான படி – ஒருங்கு சேர்ந்தபடி.
2-இளைய பெருமாள் அடிமையில் தப்பி நின்ற அளவுக்கும்-மாரீசன் வ்ருத்தாந்தம்- திருவடியைக் கொண்டு
இழையிட வேண்டும்படியாக அன்றோ அவர் நிலவரானபடி;
இளைய பெருமாள் பேர நிற்கை யன்றோ பிரிய வேண்டிற்று.
3-தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள். ஐச்வரியம் அவனுக்குக் காடு படும்படியன்றோ பார்த்தது.
“ஏவம் ஸமஜாயத –

“ஏவம் ஸமஜாயத – இந்த விதமாக உண்டாயிற்று” என்றதற்கு, மூன்று வகையாகப் பாவம் அருளிச் செய்கிறார். அவற்றுள்,
முதலது,
‘தங்களையும்’ என்றது முதல் ‘ஒருங்கு சேர்ந்தபடி’ என்றது முடிய. என்றது, அந்தப்புரக் காரியத்திற்கு அடியேன்
வரும்படியன்றோ அவர்கள் சேர்ந்தது என்று கருத்து. ‘தங்களையும்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
தங்கள் பெருமையையும் எங்கள் சிறுமையையும் பாராமல் நினைவின்றிக்கே சேர விழுந்தது என்பது.
இரண்டாவது பாவத்தை அருளிச் செய்கிறார்
‘இளைய பெருமாள் அடிமையில்’ என்று தொடங்கி. என்றது,
தம்பியான இளைய பெருமாளுடைய அபராதத்தையும் நான் பொறுப்பிக்கும்படி என்பது கருத்து. நிலவர்-அந்த ரங்கர்,
இளையபெருமாள் அடிமையில் தப்ப நின்றாரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘இளையபெருமாள் பேர நிற்கை’ என்று தொடங்கி.
மூன்றாவது கருத்தை அருளிச் செய்கிறார்
‘தங்கள் அளவிலும்’ என்று தொடங்கி. ‘தங்கள் அளவிலும் பெருக்கப் பார்த்தார்கள்’ என்றது,
தங்களுடைய ஐஸ்வர்யத்தைக் காட்டிலும், அதிகமான ஜஸ்வர்யத்தை யுடையராகும்படி பார்த்தார்கள் என்றபடி.
மேல் வாக்யத்தை விவரணம் செய்கிறார் ‘ஐச்வரியம்’ என்று தொடங்கி. ‘காடுபடும்படி’ என்றது, நிறைவுற்றதாம்படி என்னுதல்;
காட்டுக்கெல்லாம் தலைவனாகும்படி என்னுதல்.
இவ்வாறு உண்டாயிற்று”-
இப்படியன்றோ நட்பு இருப்பது; இவர்களும் தோழிமார்கள் அன்றோ.

———–

க்ருஹீத்வா ப்ரேஷமாணா ஸ பர்த்துர் கர வி பூஷணம்
பர்த்தாரமிவ ஸம் ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத்
–36-4-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-

வீணை முலை மேல் தாங்கித் –
வீணையை ஸ்பர்சித்த வாறே -காந்தனானவன் சம்ஸ்லேஷ தசையில்
தன்னுடைய போக்யதையும் இவளுடைய போக்யதையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படியை சாஷாத் கரித்து
அதுக்கு ஆஸ்ரயமான தோளை சாஷாத் கரித்து –
அதுக்கு ஆஸ்ரயமான வடிவை சாஷாத் கரித்து
அவனை சம்ஸ்லேஷ தசையிலே தன் மார்பிலே ஏறிட்டு கொள்ளுமா போலே
வீணையை மார்பிலே ஏறிட்டுக் கொண்டாள் –

இவ் வீணையை அவனாக நினைக்கக் கூடுமோ -என்னில் –
க்ர்ஹீத் த்வா ப்ரேஷமாணா ச பர்த்தும் கர விபூஷணம்
பர்த்தாரம் இவ சம்பிராப்தா ஜானகி முதிதாபவத் -என்று
பிராட்டி பெருமாளை பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே அனுபவித்தாள் இறே –

(“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர்த்து; கர விபூஷணம் – பர்த்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்“
(ஸ்ரீராமாயணம், ஸுந்தரகாண்டம் 3-4.) என்னும் கணக்கிலேயாருற்று இதுவும்.
திருவடி தந்த திருவாழி மோதிரத்தைக் கை நீட்டி வாங்கிக் கண்ட ஸ்ரீராமபிரானையே கண்டதாக மகிழ்ந்தது போல.)

க்ர்ஹீத்வா –
தேசாந்தரம் போன பந்துக்களைக் கண்டால் போல் மேல் விழுந்தாள் –

ப்ரேஷமாணா –
வைத்த கண் மாறாதே பார்த்துக் கொண்டு இருந்தாள் –

ஸா
இவன் வரவை ராவணன் வரவாக சங்கித்தவள் கிடீர் இப்படி மேல் விழுந்தாள் -என்கிறான் –

பர்த்தும் கர விபூஷணம் –
அடியில் தன்னைக் கைப் பிடிக்கும் போது தன் கையில் உறுத்தின மோதிரத்தை

அங்கன் அன்றியே
தானும் அவரும் சம்ஸ்லேஷித்த போது போகத்தின் மிகுதியாலே
ப்ரணய ரோஷம் தலை எடுத்து ஒருவரை ஒருவர் முகம் பாராதே யூடி இருப்பார்கள் –
அப்போது இருவரையும் சேர்த்து வைத்த மோதிரம் -என்னுதல் –

அதாவது
அப்போது நேர் முகம் பார்க்கையும் வார்த்தை சொல்லுகையும் இருவருக்கும் அபேஷிதமாக இருக்கும் –
வேறு சேர்ப்பார் இல்லையாகையே கையில் திரு வாழி மோதிரத்தை கழற்றி
பெருமாள் தரையிலே விழ விடுவர் –
அப்போது தான் அம் மோதிரத்தை விழ விட்டீர் காணும் என்னும் வார்த்தையை உண்டாக்கின
மோதிரம் ஆகையாலே கடகமான மோதிரம் –என்கிறது –

பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா –
திரு வாழி மோதிரத்தைக் கண்டவாறே பெருமாள் கையை நினைத்தாள்
அதுக்கு ஆஸ்ரயமான தோளையும்
அதுக்கு ஆஸ்ரயமான வடிவையும் -நினைத்தாள் –
சந்நிதியில் அவரைத் தழுவிக் கொள்ளுமா போலே திரு வாழி மோதிரத்தைக் கொண்டாள்

பர்த்தாரம் இவ –
அவள் பெருமாளாகவே தழுவிக் கொண்டாள் –
இவன் பர்த்தாவைப் போலே என்கிறான் –

ஜாநகீ முதிதா பவத் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் உகவா நின்றாள் –
உதர்க்கத்தில் என்னாய் விழப் போகிறதோ என்று பீதன் ஆகிறான் ரிஷி
தாங்கி வைத்தது -என்னாதே -தாங்கி -என்கிறது –
சம்போக தசையில்
அபூர்வ வத் விஸ்மய மாததா நயா- என்கிறபடி
தன் போக்யதையாலே குமிழ் நீர் உண்டு தளர்ந்த தசையிலே
அவனைத் தன் கையாலே எடுத்து
அணைத்துக் கொள்ளும்படி ஸ்மரதி விஷயமாக அவனை நினைத்து
வீணையை எடுத்து முலையில் தாங்கின படி –

(ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-ஶ்லோகம் 38 –

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.)

திருவாய்மொழி – -6-2-இருட்டு அறைகளிலே தடவிக் கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும்
கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே,
பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக் கொண்டான்.

எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி
கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய்,
பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே
முற்படக் கண் வைக்க மாட்டாதே இருந்தாள்;
“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.
‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாற வைக்க அரிதாம்படி இருந்தாள்.
ஸா – ப்ரேக்ஷமாணா – “பஸ்ய தேவி – தேவியே! பார்க்க்”
“வாநரோஹம் மஹாபாகே தூதோ ராமஸ்ய தீமத:
ராம நாமாங்கிதம் சேதம் பஸ்யதேவி அங்குளீயகம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36. 2.
என்று கொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படி இருந்தவள் தானே,
கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ண வேண்டும்படியாய் இருந்தாள்.
பர்த்து: கர விபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தின படியை நினைத்தாள்.
கர விபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும்.
பர்த்தாரம் இவ-இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்;
அந் நினைவுதான், தான் இக் கரையில் ஆளாகவும், அவர் அக் கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிறதாகவும் அறிந்திலள்;
ஒரு படுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்;
பார்த்தாராம் ஏவ என்னாமல் இவ அவனைப் -போலே இல்லை அவனையே என்றவாறு
ஒரு சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள்.
“இவ” என்கிறான் இருடி, உலக மாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என் படக் கடவள் என்று.
ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள்.
முதிதா பவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவை பெற்ற பின்பு.
சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது.
வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்திய விபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை.
அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக் கடவது.

(வீணை தரித்த பர கால நாயகி திருத்தாயார் பாடும் இப்படியே தான்-)

————-

தத ஸா ஹ்ரீமதி பாலா பர்த்துஸ் ஸந்தேஸ ஹர்ஷிதா
பரி துஷ்டா விஸாலாஷீ ப்ரியம் க்ருத்வா ப்ராஸம்ஸத மஹா கபிம்
–36-6-

ஸ்ரீ பெரிய திருமொழி-3-6-1-ததஸ்தா
திருவடி ராம விருத்தாந்தம் சொல்ல கேட்ட அநந்தரம் உளள் ஆனாள் –
திதிர்மிணி தர்மாஸ் சிந்த்யந்தே -இதி யாயேன
சத்தை உண்டாக உண்டாக மது உண்டாயிற்று
பாலா –
ஹர்ஷம் பொறுக்க ஒண்ணாதவள் ஆயிற்று
பர்த்து சந்தேச ஹர்ஷிதா –
ரஷகரான ராம விருத்தாந்தம் கேட்டு ஹ்ருஷ்டை யானாள் –
பரி துஷ்டா –
அந்த ஹர்ஷம் புற வெள்ளம் இட்டபடி
விசாலாஷீ ப்ரா சம்சத –
ஏத்தத் துடங்கினாள்
மஹா கபிம்-
கடலை வற்ற இறைக்கக் கோலுருவாரைப் போலே-

————-

குசலீ யதி காகுத்ஸ்த்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நி ரிவோத்தித
–36-13-

இவர் வரவிட்ட ஆளின் முன்பேயும்,
“ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று
புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ
“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

காகுத்ஸ்த:-
பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது;
‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனை யல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ?
கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி –
‘நீர்ப் பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ?
கடலில் நீரே நெய்யாக எரிக்க வல்ல அம்பை யுடையவரன்றோ. –
அம்பு இல்லாததால் வரமால் இல்லை அன்பு இல்லையே உன் தலைவருக்கு –
ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரே யன்றோ; –
பூமியை சமுத்ரம் பேணி இருக்க வைத்தாரே –
இராஜாக்களுக்குப் பூமியும் பெண் போலே யன்றோ;
(ஏக பத்னி விரதம் அல்லவோ என்னில் ஷத்ரியருக்கு ராஜ்ய பரிபாலனம் கர்தவ்யம் அன்றோ )ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண் சிவக்குமளவுமாகாதே என்றும்
“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தை விட்டவரும், என்னையும் கால் நடையாகக் காட்டில்
அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே,
பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனை யன்றோ என்றும்
தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

————–

ந சாஸ்ய மாதா ந பிதா ந சாந்யா ஸ்நேஹாத் விசிஷ்டோஸ்தி மயா ஸமோவா
தாவத் த்வஹம் தூத ஜிஜீவிஷேயம் யாவத் ப்ரவ்ருத்திம் ஸ்ருணுயாம் ப்ரியஸ்ய
–36-30-

திருவாய்மொழி – -5-4-3–“நசாஸ்ய மாதா” – பிராட்டி திருவடியைக் கண்ட பின்னர், பெருமாள் பக்கல் பிரணய ரோஷத்தாலே
‘இவன் அவர் வர விட்ட ஆள்’ என்று சீறிச் சில வார்த்தைகள் அருளிச் செய்ய,
‘தேவரீர் எழுந்தருளி இருந்த இடம் அறியாமல் இருந்தாரித்தனை அல்லது அன்பின் திறத்தில் ஊற்றம் போராமையோ,
அறிந்த பின்பு இனித் தாழ்த்தாராகி லன்றோ குற்றமாவது’ என்று,
அந்தச் சிவிட்கு ஆறும்படி சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து,
பின்னையுந்தான், ‘அவரைப் பிரிந்து பத்து மாதங்கள் ஆயினவே, இவ்வளவும் முடிந்து போகாமல்
தரித்திருந்த தன்றோ தேவரும்’ என்பது
தனக்குக் கருத்து என்னுமிடம் தோற்ற இருந்தான் திருவடி;
அதுவோ உனக்கு நினைவு! வாராய், நாட்டார்க்கு, மாதா என்றும் பிதா என்றும் உடன் பிறந்தார் என்றும் பந்துக்கள் என்றும்
பல தலையாக இருக்கையாலே அன்பானது எங்கும் பாலி பாய்ந்திருக்கும்;
பெருமாள் அங்ஙன் அன்றிக்கே, எல்லார் பக்கல் செய்யும் அன்பையும் என் பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே,
எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்;
தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏற வரக் கொண்டு தண்ணீர்ச் சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று,
அவர் இப்படி வரக் கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று,
அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்; அவரைக் கண்ட பிற்றை நாள்-அநாதரித்து உபேஷித்தான் என்று அறிந்த பின்பு –
நான் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது என்றாளே அன்றோ.
“தூத” – முன்பு, “வாநர” என்பது போன்று சொல்லிப் போந்தவள்,
இப்போது அவர் பக்கல் உண்டான சிவிட்கு இவ்வளவும் ஏறிப் பாய்ந்து,
அவர் வரவிட வந்தவன் அன்றோ நீயும் என்றாளே அன்றோ–அவர் சம்பந்தம் சொல்லி தூத என்கிறாள்

வல் வினையேன் பெண் பிறந்தே மாயும் வகை அறியேன் –பீஷ்மன் முதலானோர்களாக வேணுமாகாதே:
ஞானமுடையவர்களாதல் ஸ்வதந்திரர்களாதல் செய்ய வேணும்.
அறிவிலிகளான பெண் பிறந்தார்க்கு நினைத்தபடி முடியப் போமோ.

———-

இதீவ தேவீ வசனம் மஹார்த்தம் தம் வாநரேந்த்ரம் மதுரார்த்த முக்த்வா
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வஸோபிராமம் ராமார்த்த யுக்தம் விரராம ராமா
–36-31-

“இதீவ-மேலே நெடும் போது சில பாசுரமிட்டுச் சொல்லிக் கொடு போந்தான்;
பிரணய தாரையில் ஓடுமது இருடிகளாயிருப்பார்க்கு நிலம் அன்றே? இப் புடைகளிலே என்கிறான்
தேவீ – வல்லபைகளுடைய பரிமாற்றம் கடக்க நிற்பார்க்குத் தெரியாதே அன்றோ.
வசனம் மஹார்த்தம் – கடக்க நிற்பார்க்கே அன்று; தேசிகரானவர் தங்களுக்கும் தெரியாதிருக்கை.
தம் வாநரேந்திரம் – இவனோடு ஒக்கக் கடவார் ஒருவரும் இலர்.
சேஷத்துவத்திற்கு முடி சூட்டப் பட்டார் மஹாராஜரே யாகிலும், பாரதந்திரியத்தின் எல்லையிலே நின்றான் இவன் என்கை.
இவ் வளவிலே இவள் முகம் பார்த்து வார்த்தை சொல்லப் பெற்றிலர் அன்றோ அவர்.
மதுரார்த்தம் – நிலம் அன்று என்னாக் கை வாங்க ஒண்ணாதபடி இருக்கை.
உக்த்வா – அவனும் அவன் உடையவர்களும் வாழும்படி வார்த்தை சொன்னாள்.
ஸ்ரோதும் புநஸ் தஸ்ய வசோபிராமம் – ‘அழிந்தாரை ஆக்க வல்லன்’ என்னுமிடம் கண்டாள்;
தான் அழித்த தலை உண்டாம்படி வார்த்தை சொல்ல வல்லமை கேட்க வேணும் என்று இருந்தாள்.
நிர்த்தயர் ஸ்வார்த்தர் -வார்த்தை சொல்லி அழித்தது -அவை இல்லாமை வார்த்தை சொல்லுவான் என்று
எதிர்பார்த்து இருந்தது போலே இங்கும் பராங்குச நாயகி -நிர்தோஷராம் படி வார்த்தை சொல்லுகை –
ராமார்த்தயுக்தம் – இராமபிரானாகிற பிரயோஜனத்தோடு கூடியது;- தன் காரியம் செய்து தலைக்கட்ட வல்லான் ஒருத்தன்.
விரராம – நெடும்போது தான் வார்த்தை சொல்லுகையினாலும், ஸ்வாமி வார்த்தை சொல்லும் போது
மேலிட்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையினாலும் பேசாதே இருந்து அவனுக்கு இடம் கொடுத்தாள்.
ராமா – இவ்விட்டு நீட்டுகை ஒழிய வார்த்தை சொல்லாதே இருக்கிற போதை அழகை
அவர் தாம் காணப் பெற்றிலோம்,” இவனும் அடர்த்து வார்த்தை சொன்னான்.
இவ் விட்டு நீட்டுகை ஒழிய-இவள் வார்த்தை நேராக பெருமாள் கேட்காமல் திருவடி மூலம் தானே கேட்கப் பெற்றார்-

————–

நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே ராம கமல லோசநே –36-33-

திருவாய்மொழி – -10-8-9-நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-
பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே-
தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று-
எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி –
அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே-
உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-
அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10-
கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –
அவரை அறியாமையும் இல்லை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —
அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்
பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-

———-

ந மாம்ஸம் ராகவோ புங்க்தே –36-41-

உண்ணாது உறங்காது –11-7-நாச்சியார்-உண்ணாது-
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்கிறபடியே
பார்த்து பரிந்தூட்டுமவள் போனால் -இனி யார் அவரைப் பரிந்தூட்ட –
மா மலர் மங்கை மணம் உண்டு இருந்தான் இறே
அவள் போனால் இவனுக்கு ஊண் இல்லை இறே –

உறங்காது –
அநித்ரஸ் சததம் ராம -என்கிறபடியே –
கண் உறக்கம் அற்று ஊண் உறக்கம் அற்று-

——

அ நித்ரஸ் ஸததம் ராம ஸூப் தோபிஸ நரோத்தம
ஸீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்த்யதே
–36-44-

இன வேல் நெடும் கண்கள் –நாச்சியார்-5-4-
அநித்ரஸ் சத்தம் ராம -என்று அவன் படக் கடவ பாட்டைக் கிடீர் நான் படுகிறது
இக் கண்ணுக்கு இலக்கானார் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து
ராம அநித்ர
செல்வப் பிள்ளைகளாய் இருப்பார் பாதிப் போது நித்ரை யோடு யாய்த்து போது போக்குவது
இப்படி இருக்க நித்ரை இல்லை யாய்த்து

சிறிது போது உறங்கி சிறிது போது உணர்ந்து தான் இருப்பாரோ என்னில் –
சத்தம் அநித்ரஸ் ஸூ ப்தோஅபி ச –ஆனால் இது என்சொல்லிற்று ஆகிறது எனில் –
உணர்ந்து இருக்கச் செய்தே உணர்த்தி அற்று இருக்கும் படியைச் சொல்லிற்று யாயிற்று
பராகார்த்த அனுசந்தான பாவம் இருந்தபடி

நரோத்தம -அபிமத விஷயத்தை பிரிந்தால்
இப்படி அநித்ரையாலே நோவு படுக்கை காணும் புருஷோத்த மத்வம்-ஆவது-ந சே தேன விநா நித்ரம் லபதே புருஷோத்தமே -பால -19-29-

திருவாய்மொழி – -2-4-5–இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -செல்வம் -சம்பத் –சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து –ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –

ராமயதிதி ராம -ஸுவ வியதிரக்தரை ஆனந்திப்பிக்க -தான் தூங்கி ஆனந்தம் -அடைய விரோதம் -சிநேகத்துக்கு கொத்தை -தூங்குகிறார் –
வியத்திரிக்த பதார்த்தங்களில் கண் வைக்காமல் பிராட்டியையே நினைத்து இருப்பார் –சததம்  அனித்ர -எப்போதும் தூக்கம் இல்லாமல் –
கால விசேஷ நிர்த்தேசம் இல்லை -தூக்கமே தெரியாது என்பதால் –சததம்  –இப்பொழுது தூங்காமல் இருப்பதால் -நித்ரா அயோக்யதா –
காலை சந்த்யாவந்தனம் பண்ண வில்லை -காலையில் பண்ண வில்லை -என்பதே அர்த்தம் போலே
மகா ராஜர் இளைய பெருமாள் இடம் பிராட்டி நிமித்தமாக உசாவி -விசாரித்து துக்கம் மிக்கு மயங்கி தூங்கி -என்றவாறு
காதல் இன்மை என்பதும் இல்லையே –

நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –

————

ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப –38-24-

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –-திருவாய்மொழி – -5-8-1…-

பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள்
என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,

வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’ என்று தொடங்கும் வாக்கியம்.

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார்.
‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை.

————

கஸ் க்ரீடதி ஸரோஷேண பஞ்ச வக்த்ரேண போகிநா –38-26-

மணியே மணி மாணிக்கமே மது சூதாபணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

பரஞ்சோதி  —
பூ வலரும் போதை விகாசம் போலே
வார்த்தை அருளிச் செய்யும் போது-
திருமேனியில் பிறக்கும் செவ்வி காண வாயிற்று ஆசைப் படுகிறது –

கக்ரீடாதி -(ககா க்ரீடேதி -காகாஸூர வ்ருத்தாந்த ஸூந்த்ர -ஸ்லோகம் )
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரத்தாலே
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு -நான் இருந்தேனே -என்கிற போதை
சீற்றம் தோற்றி யாயிற்று வார்த்தை அருளிச் செய்யும் போது இருப்பது

கக்ரீடாதி –
தோற்ற அரவிலே முடிக்க வல்ல தொரு மகா சர்ப்பம்
உறங்குகிறவற்றை எழுப்பி
அத்தோடு போது போக்கி பிழைக்கப் புகுகிறவன் தான் ஆர் –

சா ரோஷேண-
அதுக்கு ஆற்றல் உண்டாக பெற்றிடம் ஜீவிப்பார் உடைய பாக்யத்தாலே யாயிற்று –

பஞ்ச வக்த்ரேண
ஐந்தலை நாகம்

போகி நா –
அது எல்லாம் வேணுமோ
வடிவைக் காண அமையாதோ முடிகைக்கு –

ப்ரக்ருதயா தர்ம சீலரானவாறே இப்படிச் சொல்லுகிறார் –
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –
(ஆஸ்ரித பக்ஷ பாதி
ஆஸ்ரித விரோதிகள் இடம் கோபித்த இடம்
தர்ம சீலன் -ராமனுக்கும் பலிக்கும் -விபீஷணன் எண்ணம் )

———-

ஸ பித்ராஸ பரித்யக்த ஸூரைச் ச ஸ மஹர்ஷிபி
த்ரீந் லோகான் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத —
38-33-

ஸ்ரீ அமலனாதி பிரான்-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-

வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –

திருவாய்மொழி – -3-7-8–ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –

இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகன்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –

இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –

ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்

ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ரு சம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –

தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –

சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-

லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-

‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிகளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும்
நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ என்பது ஸ்ரீராமாயணம்.
‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன்.
ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி.
ஸ்வச்தமான தசையில் நானே அறிவித்து வைத்தால் -ச பித்ராச -நோக்குமா போலே தான் தனக்கு உதவாத தசையிலும் உதவுவானே –
ஈஸ்வரன் -நாம் நமக்கும் ஆகாத அன்றும் -தஞ்சமாவான் தானே யாவான்
பெருமாள் பக்கம் அபராதத்தால் தமப்பன் கை விட்டான்
ச காரத்தாலே தாயும் கை விட்டாள்-
பற்றும் பொது அவள் முன்னாக பற்றும் -கை விடும் பொழுது அவன் விட்ட பின்பே இவள் விடுவாள்
வாத்சல்யம் உரைத்த இடத்திலே முந்துற விழுவது -அவள் காலிலே முந்துற விழுந்தான் –
அவள் சசிதேவி -தாயார்-மை எழுதி ஒப்பனை -த்வேஷித்தால் -விலகி -இவனும் குட நீர் வழித்து நின்றான் -நன்றாக விட்டான் பரித்யாகம் –
ஸூரைஸ்ஸ -தேவர்களும் -சஜாதீயர்களும் கை விட்டார்கள் -ச மகரிஷிபி -ஜீவ காருண்யம் உள்ளவர்களும் -கை விட்டார்கள் –
ஆன்ரு சம்சயத்துக்கு விஷய விவிஸ்தை உண்டே –
திரீன் லோகன் -திறந்து கிடக்கும் வாசல் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் -ஒன்பதின் கால்
புகப்புக தள்ளிக் கதவை அடைத்து
தமேவ சரணம் கத -பிரம்மாஸ்திரம் ஏவின -அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் அருள் நினைந்தே -அழும் குழவி அது போலே –
நம்பன் -விச்வச நீயன் -சர்வேஸ்வரன் -எல்லா அவச்தைகளிலும் இவனே –

திருவாய்மொழி – -9-1-மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மா-தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்-விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் –

————–

ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ஸ்த்த க்ருபயா பரிபாலயத்
-38-34-

திருவாய்மொழி – -2-7-6-வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே-

குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7–‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர்,
தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை,
நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்;
அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலே காணும்,
இவன் பூமியிலே விழுந்தது.
சரண்ய :-
ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர்.
சரணாகதம் –
கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை.
வதார்ஹமபி –
பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும்,
காகுத்ஸ்த : –
குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். ‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில்,
கிருபயா பரிபாலயது –
‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர்
ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்;
அதற்கு மேலே கிருபையும் விளைந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்?
ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
(பெருமானுக்கு கிருபை விளையும் பூமி -பூமி பிராட்டி -சீதையால் – கிருபை விளைந்தது
எடுத்த கார்யம் செயல் முடிக்காமல் அன்றோ கிருபை தடுத்தது இங்கு )

———-

ஆந்ரு சம்ஸயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருதா –38-41-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்-9-3-4-

நமக்கே பணித்த –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ்த்வத்த ஏவ மயா ஸ்ருத  –
கலக்கிற போதை சொல்லிற்று ஒரு வார்த்தை உண்டு
அதாகிறது –
சிலரோடு சிலர் கலந்து பிரிந்தால்
பின்னை அவர்கள் படும் வியசனம்  கண்டால்
நான் பொறுக்க மாட்டேன் காண்-
இது காண் என் பிரகிருதி  இருக்கும்படி -என்று கொண்டு சொல்லி வைத்தான் ஆயிற்று

பிரிந்து இவள் நோவு படுகிற போது-இது வன்றோ இவன் சொன்னது -என்று கொண்டு
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணி தரிக்கைக்காக
இது தான் ஓர் ஆளின் வாயில் இட்டு நீட்டுகை இன்றிக்கே
அவர் தம் வாயாலே சொல்ல
நான் என் செவியாலே கேட்டேன் -என்கிறாள் –

பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

கருளக் கொடியுடைய –
ஆர்த்த ரஷணத்துக்கு த்வஜம் கட்டி இருக்கிறவன்

புண்ணியன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுத்தர -38-21-

நீரும் நானுமாய் ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவாய் இருக்கச் செய்தே –
சம்ஸ்லேஷ தசையிலே -தர்மங்களில்
நீர் விரும்பி இருப்பது என் என்று கேட்டேன் -பிறர் நோவு படப் பொறுக்க மாட்டேன் –
பிறர் நோவு படப் பொறுக்க மாட்டாத இதுவே காண் நாம் வெளிறு கழிந்த தமமாக நினைத்து இருப்பது என்று அருளிச் செய்தீர்

த்வத்த ஏவ மயா ஸ்ருத –
இது தான் உம்முடைய ஆளான திருவடி வாயிலே இட்டு நீட்டுகை அன்றிக்கே
உம்முடைய வாயாலே அருளிச் செய்ய நான் செவியாலே கேட்டேன்
இது தான் பிறர் மேலே ஏறிட்டு நீர் நம்மைப் பிரிந்து நோவு பட விட்டீர் ஓம் காண் -என்று சொன்னார் ஆனார் அவர்
பிரிந்து நோவு பட விட்டு இருந்தான் என்னுமத்தைப் பற்ற அத்தைச் சொல்லுகிறாள் யாய்த்து இவள்

புண்ணியனை வரக் கூவாய்
பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –

————–

கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூஷுவேயம் மனஸ்விநீ
தம் மமார்த்தே ஸூகம் ப்ருச்ச சிரஸா ச அபி வாதய –
-33-56-

நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.திருவாய்மொழி – -5-3–7-

ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.

இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே,
அஹம் சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.

மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே
நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும்
ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே, ‘உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான்
ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்; அவர் நினைவு தப்பலாமோ?
அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும், சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும்
போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு; நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று
அவர் என்னைக் குறித்துச் சொல்லி விட்டார்; நானும் அப்படியே செய்து போரா நிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவு பட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச –
எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ; ஆன பின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கை யன்றோ இனி
எங்களுக்கு உள்ளது; ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-
நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேடித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.-சகாரம் உம்மைத் தொகைக்கு தாத்பர்யம் அருளிச் செய்கிறார் —
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்ய வேணுமே அன்றோ;
ஆன பின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக
அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச் செய்தாள்.”-இது தான் ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,
அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
மேலே, திருவடி வந்த போது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய
மாறும்படி குளிர அவன் வார்த்தை சொல்ல,
பின்பு திருவுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து, பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க
அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் –

———–

ஜீவந்தீம் மாம் யதா ராம ஸம் பாவயதி கீர்த்திமாந்
தத் ததா ஹனுமன் வாஸ்ய வாஸா தர்மம் அவாப்நுஹி
–39-10-

திருவாய்மொழி – -6-8-பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே.
கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய
நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம் புகழை நோக்கிக் கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ;
அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

—————

சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்தந
மாம் நயேத் யதி காகுத்ஸ்த்த தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் —
39-40-

திருவாய்மொழி – -5-4–7-இவ் வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலை வேறுபாடு, -த்ருட விஸ்வாசம் –
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பர புரார்த்தந: மாம் நயேத் யதி காகுஸ்த்த:
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வா லங்காம் –
திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள் பக்கல் இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன,
இராக்ஷசர்கள் நெருங்கி யிருக்கிற இதனை இராம சரம் நிறைவுற்றதாக்கிக் காண் நாம் போவது,
வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ?
பர புரார்த்தந:-
அவரோடே பகை கொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படை வீடு உண்டோ?
மாம் நயேத் யதி –
நயாமி பரமாம் கதிம்-மேல் கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ?
காகுஸ்த்த :-
இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ?
தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
அவர்க்குத் தகுதியாக வுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக
அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல்,
ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில் வலிக்கு வசையாம் காண்;
அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்;-வம்சம் -மூங்கில் –வில் -காகுஸ்தன் -சாடு – -வம்சி புல்லாங்குழல் –
அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ?
இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடு ஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத்
தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள்.

அல்லன் மாக்கள் இலங்கை யதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற் சுடுவேன் அது தூயவன் வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.

அன்றியும் பிறிதுள்ள தொன் றாரியன் வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.

வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்! ஏறு சேவகன் மேனி யல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் எனக் கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள்

எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக் கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு
அஞ்சினபடியாலே அன்றோ
‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது.

————

யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரைஸ் சோகாபி கர்சிதை
ஸம்ஸ்ப்ருசேயம் ஸகாமாஹம் ததா குரு தயாம் மயி —
40-3-

எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -திருவிருத்தம்-54 –

யதாதம் புருஷவ்யாக்ரம் (ஸூந் த்தர 40) -பருவம் கழிந்தது இறே
இனி இவர்க்கு சொல்லித்தான் செய்தேன் என்று இருக்க வேண்டா
நினைத்த போதே நினைத்தது எல்லாம் செய்து தலைக் கட்ட வல்ல  வாண் புலி –

காத்ரை –
கண்டாய் இறே
ஒரு நீர் சாவியை யாய்  இவை உறாவிக் கிடக்கிற படி
சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி -விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- 
வேறு ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி இவரை அனுபவிக்க இருக்கை அன்றிக்கே-
விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண  வேணும்

(பசித்த போதே உண்ண வேண்டும்
இந்த சரீரத்தோடு கூட்டிப்போக சொன்னதால் தானே அழகர்
ஆழ்வார் திருமேனியுடன் கூட்டிச் செல்ல விரைந்தான்
ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் )

சகாமாஹம்-
அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும்
அளவு அல்லேன் நான் –

(விருப்பம் நிறைவேறியவளாவேன் என்கிறாள்
பெருமாளோ -தர்மம் ஒன்றையே ஹேதுவாக எண்ணுவார்
பிரணயித்தவம் அடியாகச் செய்ய மாட்டாரே
ஐயர் சொல்லவே மணம்
அரும்பதம் விளக்கம்
ஆள் வர விட்டாரே -ஆசையுடன் தானே அனுப்பினார் -இங்கு என்னில்
அயோத்யையில் -கூட வருவேன் என்ற பிராட்டிக்கு
ஆண் உடை உடுத்த பெண் -சொல்ல வைக்க –
உனக்கு முன் நடப்பேன் கல்லையும் முல்லையும் எடுப்பேன் சொன்னதும்
நல்லது என்றார் அத்தனையே
ஆசைக் கணவன் வார்த்தை இல்லை
ஸ்திரமாக அழைக்க வில்லை அன்றோ
அதுக்கு மேலே
தன்னுடைய அம்பு நடையாடாத இடமாய் இருக்க இத்தனை நாள் ராக்ஷஸி கையில் நோவு பட வைத்தார்
இப்பொழுது தூது சுக்ரீவர் தர்ம காரியத்தால் தான் -என்றவாறு )

ததா குரு தயாம் மயி –
அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே –
இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்

(கிருபைக்கே இருப்பிடமான பிராட்டி திருவடியின் கிருபையை இரக்கிறாளே
அவன் நிரங்குச ஸ்வா தந்த்ரன்
திருவடி தானே ஆச்சார்யன்
வராஹ பெருமாள் பெருமாள் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் -வார்த்தை -சொல் -பேச்சு நம்பி உள்ளேன்
அவை கார்யகரம் ஆகா விட்டாலும் பெரியாழ்வார் சம்பந்தம் வீணாகாதே
அவர் சக்தியில் குறை இல்லை
மத் பாபமே நிமித்தம்
கிஞ்சித் மஹ பாபம் பண்ணினவள் அன்றோ
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -)

எம்மை சேர்விக்கும் வண்டுகளே –
என்னை அங்கே சேர விடுகையே நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ -நீங்கள் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை
அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

கார்யே கர்மணி நிர் திஷ்டே யோ பஹுந் யபி சாதயேத்
பூர்வ கார்யா விரோதேந ஸ கார்யம் கர்த்தும் அர்ஹதி
–41-5-

விடுத்த திசைக் கருமம் திருத்தி –திருப்பல்லாண்டு -9-
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –
கார்யே கர்மணி நிர்த்ஷ்டேயோப ஹூந்ய பிசாதயேத்
பூர்வ கார்யா விரோதே ந ஸ கார்யம் கர்த்துமர்ஹதி -என்கிற திருவடி இ றே அவன் ஆகிறான்
பிராட்டி இருந்த இடம் அறிந்து வா -என்று விட –
இருந்த இடமும் அறிந்து -அவன் பலம் இருந்தபடி என் -என்று பெருமாள் கேட்டருளினால்
அறிந்திலேன் என்ன ஒண்ணாது -என்று அத்தலையிலே பல பரிஷையும் பண்ணி
ஊரில் அரணையும் தலை அழித்து -மூலையடியே போம் படி பண்ணி வந்தான் இறே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ கிஷ்கிந்தா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ஸ தாம் புஷ்கரிணீம் கத்வா பத்ம உத்பல ஜஷா குலம்
ராமஸ் சவ்மி த்ரி ஸஹிதோ விலலாபா குலேந்த்ரிய
-1-1-

இலக்குமணனோடு இருந்த ஸ்ரீ ராமன் -என்று-
அவர் தாம் நோவு பட்டு கூப்பிடுகிற போது ஒரு தம்பியார் ஆகிலும் கூட உண்டு நோவு படுகைக்கு
அங்கனம் ஒரு துணை இல்லை எனக்கு -என்பாள் -தமியம் -என்கிறாள்
ஸ –
பிராட்டியை பிரிந்து நடுவே கபந்தன் கையிலே அகப்பட்டு-நோவு பட்டு நிற்கிற நிலையை சொல்லுகிறது –
தாம்-
இப் பிரிவும் ஆற்றாமையும் அழிக்க வற்றாயிற்று
புஷ்கரிணீம் –
பரப்பு மாறப் பூத்த பொய்கைகளும் -சோலைகளுமாய்-நீர் விளையாட்டுக்குத் தகுதியான தேசமாயிற்று -என்றது –
பிரிந்து தனி இருப்பார்க்கு கண் கொண்டு காணப் போகாது -என்றபடி –
காத்வா –
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே-கூற்றுவனுடைய வாயிலே புகுவாரைப் போலே-வந்து கிட்டிக் கொடு நின்றார்
கூற்றுவனாகிற புடை தான் யாது -என்னில் –
பத்ம உத்பல ஜஷாகுலாம் –
பிராட்டியினுடைய முகத்துக்கும்-கண்களுக்கும் போலியானவற்றை உடைத்தாய் இருந்தது –

உயர் தாமரை செங்கழுநீர் மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் –5-9-7-என்னக் கடவது அன்றோ –
ராம –
பிறர் கூப்பீடு தவிர்த்துப் போந்தவர் ஆயிற்று
ராமயதீதி ராம –சௌமித்ரி சஹித –
அரச நீதிகளை சொல்லிக் கொண்டும்-தனது வலிமையை கூறிக் கொண்டும்-அந்த ஸ்ரீ ராமனைக் காப்பாற்றினார் -என்கிறபடியே-
தம் மத்த மதாங்க விலாசகாமீ கச்சந்தம்-அவ்யக்ரமனாமகாத்மா

ஸ லஷ்மனோ ராகவம் அப்ரமத்த ராஷ-தர்தமன பலேனச ஏவ -கிஷ்கிந்தா -1-126-
ஏதேனும் அளவிலும் கூட இருந்து நோக்கிக் கொண்டு போந்தவரும் முன்னாக-ஆறு இழியுமவன் தெப்பம் முன்னாக இழியுமாறு போலே
விலலாப ஆகுலேந்த்ரிய –
பல இலக்கணங்கள் உடன் ஆயிற்று கூப்பிட்டது

——-

மயூரஸய வநே தூநம் ரக்ஷஸா ந ஹ்ருதா ப்ரியா
தஸ்மாந் ந்ருத்யதி ரம்யேஷு வநேஷு ஸஹ காந்தயா –1
-40-

தூ விரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே-3-6-1–மயூரஸ்ய நேநூநம் ரஷா பஹ்ருதா ப்ரியா –
இந்த மயில்கள் இருந்த இடத்தில் வந்திலனோ அப்பையல்-என்கிறார் –
இருவரை இருப்பார் எல்லாரையும் –
தனி யாக்கினான் என்றே யாயிற்று இருப்பது –

கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ-10-3-1-கலந்து –
இவ்வளவில் நான் சேர்வது பெண் கொலை என்று அறிந்து மீள்கின்றன இல்லை-
ஆனாலும் சேர்ந்த சேர்க்கையால் வந்த உவகைக்கு போக்கு வீடாக நடனம் செய்யா நின்றன-
என்று கண் கூடாக கண்டு வைத்து -அவை என்னும் போது முகத்தை மாற வைத்து சொல்கிறாள்-என்பது தோற்றுகிறதே அன்றோ-
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-
மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-
மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –
ரஷசா நஹ்ருதா ப்ரியா –
நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –

———-

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்ச்வாஸ இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர
-1-71-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–1—பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு   மேற்பட
ஆழ விழியுமது   அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத  –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –

———-

பத்ம ஸுகந்திக வஹம் சிவம் சோக விநாஸநம்
தன்யா லஷ்மண ஸேவந்தே பம்போ பவந மாருதம் –
-1-105-

ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–8-2-
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ

பம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக் காலாலே துகை உண்ணக் கடவேனோ

பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –
சிவம்
 -இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –
சோக விநாசனம்
 -நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இறே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே –
அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்-

ஈடு -1-4-7–பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது
அரி மிதியான -வண்டு காலால் மிதிக்கப்பட்ட -என்றுமாம்
-சிவம் கலப்பற்று பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
தாய்த் தலை தென்றல் -பிரதமம் ஸ்லாக்கியமான தென்றல் –
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது -பிராணனை போக்கி -நல்லது பண்ணும்படி –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே -பாடபாக்னி -கடலுக்குள் வெப்பமான அக்னி போலே –

சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு ஸூதநே –3-9-
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்-8-1-1-சிலை –
சக்ர சாப நிபே சாபே க்ருஹீத்வா சத்ரு நாசநே -என்று
(சக்ர இந்திரன் வர்ஜம் பிடித்து தானே இருப்பானே ஆகவே இந்திர தனுஸ் )
எங்களைத் தோற்பிக்கும் பரிகரமாய் இருந்தது –
இந்திர தனுஸ் போலே எங்களுக்கு தர்ச நீயமுமாய் –
எங்களுக்கு சத்ருவான வாலியை நிரசிக்கைக்கு பரிகரமுமாய் -இருந்தது
அனுகூலருக்கு வைத்த கண் வாங்காதே கண்டு கொண்டே இருக்கும் படியையும்
பிரதி கூலர் பிடித்த பிடியிலே மண் உண்ணும் படியுமாயும் இருக்கும் –

அதன்றிக்கே
சாபே –
வில் வலிக்கும் படியை நினைத்தால்
ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே-என்னும்படியாய் இருக்கும்
அழகுக்கு உறுப்பாய் இருக்கும் அனுகூலர்க்கு –
ஸ்மரன் ராகவ பாணா நாம் –
பெருமாள் திரு நாமத்தால் எழுத்து வெட்டின அஷரங்களையும்
திருச் சரங்களின் உடைய சந்நிவேசத்தையும் ஸ்ம்ரியா நின்று கொண்டு –

விவ்யதே –
அவர் ஒரு கால் முன்னே நின்று போகச் செய்தேயும்
எப்போதும் ஒக்க முன்னே நிற்கக் கண்டாப் போலே வ்யதித்தான் —

ராஷேச்வர விவ்யதே –
இவர் ஆண்ட பரிகரம் அடங்கலும் வினைக்கு உடலாய் ஆயிற்று இல்லை –
எடுத்து எடுத்து குலைக்கிற போது சுளைப்பிடாம் -கம்பளி -இட்டு
அமுக்குகைக்கு உடலாம் இத்தனை –

வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து-1-2-1-

வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும்
அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-
(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் போலே )

சத்ரு நாசனே -என்கிறது கிடக்க –
சக்ர சாப நிபே -என்கிறதை அனுபவிக்கிறார்
உகப்பாரோடு உகவதாரோடு வாசி யற இரண்டு திறத்தாரையும் அழிக்கும் ஆயிற்று –

சக்ர சாப நிபே -இத்யாதி
இந்திர தனுஸ் போலே அனுகூலருக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க
வேண்டும்படி தர்சநீயமாக இருக்கும் –

க்ருஹீத்வா -வில் பிடித்த பிடியிலே பிரதிகூலர் முடிந்து போம் படியுமாய் இருக்கும் –
அநுகூலரை அழகாலே அழியச் செய்யும் —
பிரதி கூலரை அம்பாலே அழியச் செய்யும் –

————-

ஆயதாச்ச ஸூ வ்ருத்தாச்ச பாஹவ பரி கோபமா
ஸர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா
-3-15-

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று-திரு விருத்தம் -44-

நிறம் இத்யாதி –
இவனை பற்றித் தான் நிறம் பெரும் படி யான ஒப்பனையும் —

ஆயதா –
திருவடி வந்த கார்யத்தை மறந்து கவி பாடத் தொடங்கினான் –
வந்த கார்யம் முடிந்தது என்று அறிந்தானாகத்  தோள்களைக் கண்ட போதே –

ஆயதா ஆஜான பாஹூ —
திரு முழம்  தாள் அளவும் நீண்டு பின்னையும் முடியாது இருக்கை –

பாஹவ-ராமஸ்ய தஷிணோ  பாஹூ-என்கிறபடியே
(பாஹவ-பஹு வசனம் -நான்கு தோள்கள் )

சர்வ பூஷண பூஷார்ஹா –
அழகு இழந்து கிடக்கிற ஆபரணங்களை அலங்கரியாது ஒழிகிறது என் –

கிமர்தம் ந விபூஷிதா –
இவ் ஆபரணங்களின் எழிலை கழற்றி இட்டு வைக்கிறது என் –

(திருத் தோள்களில் சாத்தினால் தானே ஆபரணங்களுக்கு அழகு
கலன் அணியாது -அங்கங்கள் அழகு மாறி -குலசேகரப் பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் அன்றோ )

————

நாந் ருக் வேதவிநீ தஸ்ய நா யஜுர் வேத தாரிண
நா ஸாம வேத விதுஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் –3-29-

பெரிய திருமொழி-8-1-

என்கின்றாளால்–
தலைமகளுக்கு திவ்ய ஆயுதங்கள் ஆகர்ஷகமாய் இருக்குமா போல் ஆயிற்று
இவளுக்கும் இருக்கிறபடி –
இவள் சொல்லுகிறது தன்னையே தானும் சொல்லச் செய்தே இவள் சொல்லக்
கேட்டால் போலே இருக்கிறது இல்லை யாயிற்று திருத் தாயாருக்கு –

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்ட அர்த்த பிரகாசமான ருக்வேதம் சிஷிதனானவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது –
நா யஜூர் வேத தாரிணா –
யஜூர் வேத பாட தாரணம் தான் அரிது -கவலை பாயாமல் சொல்ல வல்லவன்
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது –
(நா சாம வேத விதூஷா -கான விசேஷம் அறிவது அரிது )
சக்யமேவம் பரபாஷிதும் –
இத்தை எல்லாவற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லலாமோ -என்றார் இறே பெருமாள் –
(அவிஸ்ருதம் -வாக் மீ ஸ்ரீ மான் -சொல்லின் செல்வன்
மஞ்சு பாஷித ராகவன் ம்ருது பாஷித ராகவன் கொண்டாடும் படி அன்றோ
ஆயிரம் நாக்கு கொண்ட இள வலையும் பார்த்துப் பேசச் சொல்ல வேண்டும் படி அன்றோ
இவர்கள் சொல்லும் அவிடும் ஸ்ருதியாகுமே )

———–

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -4-11-

ஈடு -1-1-1- இளைய பெருமாளை நீர் இவருக்கு என்ன ஆவீர் என்ன -பெருமாள் ஒருபடி நினைத்து இருப்பர் -நானும் ஒருபடி நினைத்து இருப்பன் -என்றார்
அவர் நினைத்து இருக்கும்படி என் -நீர் நினைத்து இருக்கும்படி என் என்ன
அவர் தன் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனாய் இருப்பன் என்றார் இறே –

———–

லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி –4-18-

எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –
எப்பொருட்கும் நின்று –
ஒரு குரங்கு -வேடுவிச்சி இடைச்சி இவர்களுக்கும் ஸூ லபனாய் நின்று-
ஸூக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19—
ஸூக்ரீவம் நாதம் இச்சதி
 –கிஷ்கிந்தா 4-18- என்கிறபடியே-
தாம் சொல்லுகை அன்றிக்கே அருகே நின்றாரும் கூட சொல்லலாம் படி தம்மை அமைத்து வைக்கை-

லோக நாத புரா பூத்வா –
லோக நாதனான இது மகா ராஜர் பக்கலில் பார தந்த்ர்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின படி
இப் பார தந்த்ர்யம் குணம் ஆகைக்கு வேண்டும் ஸ்வா தந்த்ர்யமே யாய்த்து உள்ளது-
எளியவன் தாழ நின்றால் அது குணம் ஆகாது இறே

இச்சதி –
எல்லாரும் தம்தாமுக்கு இல்லாததை ஆசைப்படும் அத்தனை இறே
அநாதன் இறே இவன்
இடைச்சிக்கு கட்டவும் அடிக்கவுமாம் படி நின்றும்
வேடுவிச்சிக்கு கிட்டி அசாதாரணர் பண்ணும் பரிசர்யைகள் பண்ணலாம் படி நின்றும் போரும்படியும்

ஒரு நாள் எம்பெருமானார் பரத்வமே பிடித்து சௌலப்யத்து அளவும் செல்ல உபபாதித்து அருள –
அத்தைக் கேட்டு எம்பார்
கண்ணும் கண்ணநீருமாய் வித்தராய் இருக்க
அவரைப் பார்த்தருளி அவனுடைய சௌலப்யத்தை சொன்னவாறே நாட்டார் –
இத்தனை எளியவனோ -என்று கை விட்டுப் போனார்கள் –
பாக்ய ஹானியாலே –அறப் பெரியவன் இப்படி எளியவன் ஆவதே -என்று நெருங்குகைக்கு
உடலாய்த்து உமக்கு ஒருவர்க்கும் –
 என்று அருளிச் செய்து அருளினாராம்

———

நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்நா நாம் பரா கதி
ஆர்த்தா நாம் ஸம்ஸ்ரயஸ் ஸைவ யஸஸ்ஸைக பாஜநம்
–15-19-

திருவிருத்தம்-58-

திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –( பெரியாழ்வார் )
ஆஸ்ரித ரஷகனுமாய் –
ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –

நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )

நிவாச வ்ருஷ ஸாதூநாம்-
வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்-
அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-
கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன

அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன –

பெருமாள்-என்றாள் –

ஆனால் அவர் பின்னை நமக்கு அபாஸ்ர்யம் ஆக மாட்டாரோ-என்ன –
சொல்லுகிறாள்

நிவாச வ்ருஷ ஸாதூநாம் –
இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –
பூவாயும்
பழமாயும் 
நிழலாயும்-
தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும்
தன் கீழே இருந்து தன்னை அழியச்  செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் –
இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு –
(வாஸம் மட்டும் அல்லவே
நிவாஸம் அன்றோ என்பதுக்கு வியாக்யானம்
கல்லடி பட்டாலும் பழத்தைக் கொடுக்கும் )

நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ –
செய்தது நமக்கு நிழலாக ஒதுங்கத் தட்டு என் -என்ன –

ஆபன்நாநாம் –
ஒதுங்கோம் என்னாமை போராது காண் –  
ஆபன் நராகவும் வேணும் காண் –

நான் தான் ஆபன்னன் அன்றோ –
உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –

ஆர்த்தா நாம் –
ஆபன் நராக இருக்கவே அமையாது காண் –
ஆபத்தை இசையவும் வேணும் காண் –
நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன –

இவர் அவனுக்கே புகலாய்–புகவாய் நின்றாகில் நமக்கு
இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன

யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்-
இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –

நாலு வகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே
அவர்களை சொல்லுகிற  இதில்  ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க
இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் –
வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே –
கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே –

ஏக பக்திர் விசிஷ்யதே -என்கிற ஞானியை சொல்கிறதாய்-
முந்துற சம்சாரத்தில் நொந்து –  
பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-
அநந்தரம்
பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    –
இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உப லஷணமாய் இருக்கிறது –

(நிவாச வ்ருஷ ஸாதூநாம் ஆபன்நாநாம் ஆர்த்தா நாம் யசஸ் சஸ்ஸ ஏக பாஜனம்—-இத்யாதி (தாரை வார்த்தை )
இதிலும் அதிகாரி பேதங்களுக்கு பலம் சொல்லிற்றே
ஞானி சாதுக்களுக்கு நிவாஸ மாகவும்
ஆபன்னானாம் கைவல்ய பரர்
ஆர்த்தா நாம் -இழந்த ஐஸ்வர்யம் -பிரஷ்ட ஐஸ்வர்யா காமர் இருவரையும் சொன்னபடி
அனைவருக்கும் -பராம் கதி )

————-

அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுர் ஊர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்த்துஸ் சைவ அநுஜம் ஸுபா –19-26

திருவாய்மொழி – -5-10–6-நின்ற வாறும் –
இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராம பிரானையும் இளைய பெருமாளையும் தன்
கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்”
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ் சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும்,
அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற
மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், –
ஸுபா-நல்ல மனமுடையவளானாள் அவர் பக்கல் சாங்கத்தாலே.
சாங்கத்தாலே. -பக்ஷபாதம் என்றும் வில்லும் என்றும் சாடு-
இனித் தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து முடிந்து போவாரைப் போலே
கொடிய தன்மையனானவாறே முடிந்து போனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள்.
அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.
(வல்லசுரர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித்தடம் அன்றோ -)

நின்றும் –6-9-3-
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.

———————

நிஸ் ஸ்வநம் சக்ர வாகாணாம் நிசம்ய ஸஹ சாரி ணாம்
புண்டரீக பலா சாஷீ கதம் ஏஷா பவிஷ்யதி
–30-10-

திரு விருத்தம் -51-

அழைக்கின்றதே –
கார்யப்பாட்டால் கூப்பிடா நின்றது –
வழிப்பறிக்காரர் அழைக்குமா போலே –

ஒரு சர்வ சக்தி தன் தோள் வலியாலே உலக்கையை விடு நகம்-கட்டி தன் பக்கல் உள்ளது கொண்டு அன்று
அங்கு ஒரு குரல் கூப்பிட மாட்டிற்று இல்லை –
அபலை என்று பற்றி நலியத் தொடங்கிற்று

(இப்படி ஓசை படுத்தின இடத்துக்கு மேல்
பிரிவில் சக்ரவாக பக்ஷி ஓசை நலிந்ததே
பூர்வ அவஸ்தை சீதா பிராட்டிக்கு )

நிச்வசஞ் சக்ரவாகாநாம்  –
பிரிவிலே ஆகையாலே அவற்றின் பேச்சு அசஹ்யமான  படி–

சஹ சாரணாம்-
பூர்வ அவஸ்தையில் அவற்றைப் போலே அக்தே தாமும்-

புண்டரீக விசாலாட்ஷி-
வேல் போலே அவற்றின் சப்தம் -செவி வழியே குளிக்கப் புக்கவாறே
வெளுக்க விழித்த-விழி இருந்தபடி –

கதேமேஷா பவிஷ்யதி –
என்ன துன்பம் பட்டாளோ-

—————-

க்ருத அபராதஸ்ய ஹி தே நான்யத் பஸ்யாம் யஹம் க்ஷமம்
அந்தரேண அஞ்ஜலிம் பத்வா லஷ்மணஸ்ய ப்ரஸாதநாத் –
-32-17-

திருவாய்மொழி – -1-1-5-அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் -நாண் ஒலி -கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே-

———–

ஸா ப்ரஸ் கலந்தீ மத விஹ்வாஷீ ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம ஸூத்ரா
ஸ லக்ஷணா லஷ்மண ஸந்நிதானம் ஜகாம தாரா நமிதாங்க யஷ்டி -33-38-

மென்னடைய அன்னங்காள்–திருவாய் ஈடு-1-4-3-
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தேற்றமாய் வந்து திற -தேராமல் வந்து திறந்த தாரை போலே இல்லாமல் -அங்கே வியாக்யானம்
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கல்வியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும்
-இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –-சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –-மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –

—–

கிம் கோப மூலம் மனுஜேந்த்ர புத்ர கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே –33-41-

திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
ஓதி நாமம் குளித்து –உச்சிதன்னால் –பாதம் நாளும் பணிவோம் –உபாய புத்தியாக -திருப்புல்லாணி —
ஈஸ்வர பிரவ்ருத்தி விரோதி ஸுவ பிரவ்ருத்தி –
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள்
-என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே –
உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே -காமம் கோபம் ஒரே தாய் வயிற்று பிள்ளைகள் -விஸ்வாமித்ரர் கதை -தாரை –
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு- ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
பதிகத்துக்கு நிதானம் அபராத சஹத்வம் தானே

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ ஆரண்ய காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 22, 2024

ரூப ஸம்ஹநநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ருசுர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வந வாஸிந —
1-12-

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே–திரு விருத்தம் -43-

(தண்டகாரண்ய ரிஷிகள் பெருமாளின் மான் தோல் மரவுரியை அனுபவித்த ஸ்லோகம்
ஆடவர்கள் பெண்மையை அளாவும் தோளினாய் )

சொவ்குமார்யம் –
பிராட்டியும் இளைய பெருமாளும் அடுத்து பார்க்கவும் பொராது இருக்கை –
(மையாள் கரும் கண்ணி செய்யாள் -பார்க்கவே சிவக்கும் படியான ஸுகுமார்யம் )

ஸூவேஷதாம் –
தாபச வேஷம் இருந்தபடி –

தத்ருசிர்  விஸ்மிதாகாரா –
விஸ்மித அந்தகரனராய் கொண்டு கண்டார்கள்-

ராமஸ்ய வன வாஸின –
அயோத்யா வாசிகளுக்கு கிடையாதது கிடீர் –
நெடும் காலம் சரகு இலை தின்று கிடந்த பலம் பெற்றார்கள் என்கிறான் ருஷி –

நித்யராலும் பரிச்சேதித்து அறிய முடியாத
அவயவ சோபையையும்
திருமேனியின் எழிலையும்
அவனது நிர்ஹேதுக கிருபையால் உள்ளபடி அறிந்து அனுபவித்தேன் என்கிறார் –

ஈடு -8-1-2-ரூப சம்ஹனனம் -திருமேனியை
லஷ்மீம் -சமுதாய சோபையை
சௌகுமார்யம்
அனுகூலருக்கும் அடுத்துப் பார்க்க பொறாது இருக்கை-
ஸு வேஷதாம் -தாபத வேடம்
தத்ரூஸூ விஸ்மித ஆகார -ஆச்சர்யத்தோடு கூடிய அந்தக் கரணங்களை உடையவர்களாயக் கொண்டு கண்டார்கள் –
யார்தாம் என்னில்
வனவாசிநாம்–ராமஸ்ய ஆரண்ய காண்டம் -1-13
படை வீட்டில் உள்ளார் காணப் பெறாததை
சருகு இல்லை தின்று தூற்றிலே கிடந்தவர்கள் பெற்றார்கள் –

——

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாஸிந -1-19-

ஈடு -3-5-2-தண் கடல் வட்டத்துள்ளார் – ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக் காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’ என்பதுஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று.-

ஆர்த்த ரஷணம் -தண்ட காரணிய -ஆர்தர்
வாசிகள் என்பதே காரணம் -தபசுக்காக இல்லை –
தபசே ரஷிக்க -விஷயத்திலே கண் வட்டத்திலே இருக்க –
சுபிரயத்ன பரர் அன்று -கண் அழிவு வரலாமே அப்படி இருந்தால்
காக்க வல்ல  எல்லைக்கு புறம்பாய் இல்லையே

தண்டனை கொடுக்க வேறு தேசம் கடத்த முடியாதே பகவானால்
ராஜாவால் முடியுமே -பெரியவன் தான் பண்டிதன் வார்த்தை  –
புறம்பு சொல்ல முடியுமானால் சொல்லிக் காண் -ரிஷிகள் வார்த்தை-

———

ரஷிதவ்யாஸ் த்வயா சஸ்வத் கர்ப்ப பூதாஸ் தபோதநா –1-20-

ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–1-

காடுறைந்தான் –
ரிஷிகள் உடைய ரஷணத்துக்காக காட்டிலே வர்த்தித்தான் காண் –
ரஷிதவ்யாஸ் த்வயா சச்வத் கர்ப பூதாஸ் தபோ தநா-
எங்களுடைய ரஷணம்-உமக்குத் தவிர ஒண்ணாது –
உமக்குத் தலையோட்டில் பொறி –
( தலையோட்டில் பொறி –தலை எழுத்து -திருவடி எழுத்து அன்றோ -)
உங்கள் தபஸ்ஸும் ப்ரபாபவமும் கிடக்க நான் ரஷிக்க வேண்டுகிறது என் –  என்ன

கர்ப்ப பூதா
எங்களுக்கு கைம் முதல் உண்டானாலும் ரஷணத்தில் பிராப்தி இல்லை காணும் –
(சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையே )
ராஜ மகிஷியானவள் சக்தி உண்டு என்னா அவகாதம் பன்னாள் இறே
ஜனனி தானே கைச்சதும் புளித்ததும்   தவிர்ந்து நோக்கும் இத்தனை அன்றோ –
இவ் வாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்ந்தாலும் உம்மைக் குறித்து நித்ய ஸ்தநந்தமாய் காணும் இருப்பது –
இப்படிச் சொன்ன மாற்றத்துக்கு
ஒரு மாற்றம் இல்லாமை இறே
பிரசீதந்து -என்றது –
(ஆமோதித்தார் -பெண் வெட்கப்பட்டால் போல் பட்டார்
அதுக்கு ரிஷிகள் வார்த்தை மேல் )

————

ப்ரஸீ தந்து பவந்தோ மே ஹ்ரீ ரேஷா ஹி மம துலா
யதீத்ருசைரஹம் விப்ரை ருபஸ்த்தேயை ருபஸ்த்தித
-10-9-

காடுறைந்தான்-ஸ்ரீ பெரிய திருமொழி-11-5–பூர்ணரராய் இருக்கிற நீங்கள் குறைவாளர் அளவில் இரங்கும் அத்தனை அன்றோ –
நாங்களும் பிறர் கையில் நோவு பட்டு நிற்கையாலே குறைவாளர் அன்றோ என்ன-

உங்களுக்கு நோவு வந்தது உங்களால் அன்றே
நோவு பட்ட உங்கள் அளவு அல்ல
நோவுக்கு ஹேது பூதரான நம்முடைய லஜ்ஜை –
யதீத்ருசைர் அஹம்  விப்ரை  –
ஈத்ருசமான விலஷண புத்தியை உடையவர்களாலே

(ஈத்ருசமான- இப்படிப்பட்ட சிறப்பான புத்தி உடையவர்கள் -அப்படிப்பட்ட சொல்லாமல் –
சீதாப்பிராட்டியைப் பார்த்து சொன்ன வார்த்தை
ஸீதா விஷயம் சொல்லி -இத்தை விளக்குகிறார் மேல் )

நெருப்பை குளிருக -என்ற வாயைக் கொண்டு
ராவணனை -நஷ்டாவாய் -என்று சொல்ல மாட்டாமை யன்று இறே இருந்தது –
நம்முடைய ரஷணத்தில் நமக்குப் பிராப்தி இல்லை
தத் தஸ்ய -என்று இருந்தவளைப் போலே இறே இவர்களும் சிலர் –

நோவு பட்டால் அங்கே வந்து அவர்கள் குறை தீர்க்க ரஷணத்துக்கு ஸ்வரூபமாய் இருக்க
நோவு படுவுதிகளும் நீங்களே யாய்
பட்ட குறை அறிவிப்பிகோளும் நீங்களே யாம் படி
நாம் பிற்பாடார் ஆனோம் எனபது யாதொன்று –

————

ஏவ முக்தஸ்து ராமேண லஷ்மண ஸம்யத் அஞ்சலி
ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்த்தம் இதம் வசனம் அப்ரவீத் –15-6-
பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்த்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத –15-7-

‘ஈடு -2-9–நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் – பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க ஒண்ணாதவள் – சந்நிதியிலே. காகுத்ஸ்தம – பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் – இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான் இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி – உம்முடைய அஸ்மிதை போல அல்ல-

———-

இஹ வத்ஸ்யாமி ஸுமித்ரே சார்த்த மேதேந பக்ஷிணா –15-18-

ஈடு -9-4-6-

இலக்குமணா இவ்விடம் புண்யத்தைக் கொடுக்கக் கூடியது
பரிசுத்தமானது

மிருகங்களோடும் பறவைகளோடும் கூடியது
இந்த ஜடாயு பறவை உடன் நான் வசிக்கப் போகிறேன்
என்றும் அருளிச் செய்தார் அன்றோ பெருமாள் -என்றது
ஐயர் கண் வட்டத்திலே வசிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம்
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் செய்ய வேண்டுகையாலே அது செய்யப் பெற்றிலோம்
இனி இவர் சிறகின் கீழே யாகிலும் வசிக்கப் பாரா நின்றோம் -என்கிறார் -என்கிறபடி-

ஈடு -10-8-6–இன்று வந்து- இருப்பேன் என்று -ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

———

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம் வ்ருத்தஸ் பிதா மம –15-28-

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணைப் பள்ளி கொள் பரமா வென்று-ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-6-

நல் அரவணை –
அத் தலைக்கே உறுப்பாய் இருக்கை –
சேஷ பூதனுக்கு நன்மை யாவது-எனக்கு என்னுமது அன்றிக்கே
சேஷிக்கே உறுப்பாய் இருக்கை இறே-(பிரபலதர விரோதி – நமஸ் அர்த்தம்)

பாவஞ்ஞேந  -க்ருதஞ்ஞேந -தர்மஞ்ஞேந -லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம-

பாவஞ்ஞேந  –
க்ரியதாம் -என்று சொல்லுகிறவர் இறே இளைய பெருமாள்
இப்படி செய்ய வல்ல நீர் நம்மை கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையை சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இறே –

பாவஞ்ஞேந  –
அல்லாதவை சொன்னாலும் தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள் சமைக்கும்படி 
இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இறே
நெஞ்சாலே நினைக்கும் இத்தனை இறே –
இந் நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஞ்ஞேந –
அதுவே அன்றிக்கே செய்து போம்படி அறிந்து செய்தார்-
நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே இவர் என் நினைந்து இருக்கிறாரோ –
என்று நினைவை ஆராய்ந்தும் –
இவருக்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவராயிற்று-

தர்மஞ்ஞேந –
நினைவு அறிந்தாலும் -செய்து போருமிடம் அறிந்தாலும் –
தானும் ராஜ புத்திரன் ஆன பின்பு எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ –
என்று இருக்குமவனுக்கு இது செய்ய ஒண்ணாது இறே –
அங்கன் அன்றிக்கே
அத் தலையில் தாதர்யதமே நமக்கு ஸ்வரூபமான பின்பு
அத் தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு -வகுத்தது என்று
அத் தலைக்கு செய்யுமத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-

லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந ஸம்வ்ருத்தே பிதா மம
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வன்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே என்கிறார்

புத்ரே
புத் என்று ஒரு நரக விசேஷமாய் -அதில் புகாதபடி நோக்கும் என்றாயிற்று
புத்திரன் என்று பேராகிறது
ஐயருக்கு நம்முடைய அபிமத ஸித்தி இன்றிக்கே ஒழிகை தனக்கு மேற்பட நிரயம் இல்லை இறே
அவருக்கு அது வராதபடி நோக்குகிறீர் நீர் இறே
(ஸ்ரீ ராம கைங்கர்யம் சிறிது குறைந்தாலும் ஸ்ரீ சக்கரவர்த்திக்கு அதுவே நரகம் –
அத்தைப் போக்கி அருளினார் அன்றோ ஸ்ரீ இளைய பெருமாள் )

தர்மாத்மா –
சக்ரவர்த்தி ப்ரஸ்துதன் ஆனவாறே -நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் தாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன வன்றும் நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்று
தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே

மம –
இருவருக்கும் பிதா ஆவது ஒத்து இருக்கச் செய்தே -மம -என்கிறார் ஆயிற்று –
அவர் நமக்கு செய்யுமவை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்
நீர் இழந்தார் ஆகில் இத்தனை இறே-

அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிற இடத்தில் சேஷி உடைய வியாபாரமும்
புகாதாகில் -சர்வம்-என்ன ஒண்ணாது இறே-
(ஸ்ரீ சக்ரவர்த்தி பிதா காட்டும் ஆசை அன்பும் பரிவும் சர்வத்துக்குள்ளும் அடங்கும் )

ஈடு -5-4-8-கைவந்த சக்கரத்து-5இந்தத் துன்பத்தைப் போக்குவதற்குச் சாதனம் இல்லாமல்தான் இருக்கிறானோ? 6அழையாதிருக்கச் செய்தேயும் நினைவறிந்து கையிலே வந்திருக்கும்திருவாழியையுடையவன். கருத்து அறிந்து காரியம் செய்யும் சாதனத்தையுடையவன் என்றபடி. 1“பாவஜ்ஞேந – இளைய பெருமாள் பர்ணசாலை சமைக்கும்போது, இருடிகளுக்கு ஓலக்கம் கொடுத்திருக்குமிடம் செய்யும்படியும், அக்நிசாலை சமைக்குமிடமும், இவையேயன்றோ பெருமாள் அருளிச்செய்தது; பிராட்டியும் தாமும் ஏகாந்தமாக இருப்பதற்குரிய இடத்தைச் சமைக்கும்படியை இவருடன் தாம் அருளிச்செய்யாரே, அவை முழுதும் கருத்து அறிந்து செய்தாராயிற்று. 2அவர் தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசினால், இவரும் செவி கண்ணாகக் கேட்டுச் சமைப்பாரித்தனை. கிருதஜ்ஞேந – 3வருந்தி இவர் நினைவைப் பின்சென்ற மாத்திரம் அன்றிக்கே, அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்று பிள்ளை பெற்ற சக்கரவர்த்தி, பெருமாளுக்குப் பொருந்துமிடம் பார்த்து மாளிகை சமைத்து முன்பு செய்து போந்த கட்டளைகள் அறிந்து, அப்படியே செய்தாராயிற்று. தர்மஜ்ஞேந-இதுதான் ‘தம்பியாய் இருந்து இப்படிச் செய்தார்’ என்று குணமாகை அன்றிக்கே, இது செய்யத்தக்கது’ என்று செய்தார். என்றது, உஜ்ஜீவனத்திற்குக் காரணமாகச் செய்ய வேண்டிய தர்மம் இது’ என்று செய்தார் என்றபடி. த்வயா புத்ரேண-போன ஐயர்க்கு நரகத்தைப் போக்குதற்குரிய புத்திரர் நீரே ஆவீர். என்றது, 1‘நாம் உள்ளதனையும் இவருடைய ரக்ஷணம் இப்படிச் செல்லுகிறது, நமக்குப் பின்னர் இவர்க்கு ரக்ஷகர் யார்? என் செய்யக் கடவது’ என்று இதுவே ஆயிற்று ஐயர்க்கு எப்போதும் நெஞ்சாறல்; ஐயர் செய்யுமவற்றை நீர் செய்கையாலே அவர்க்குத் துக்கத்தைப் போக்கினவர் நீரே அன்றோ. தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே! ந ஸம்விருத்த: பிதா மம – நாம் ஐயரை இழந்தோம் அல்லோம், நீர் இழந்தீரானீரித்தனை அன்றோ.”

——————–

அத்யந்த ஸூக ஸம் வ்ருத்தஸ் ஸூ குமார ஸூ கோஸிதஸ்
கதம் ந்வ பர ராத்ரேஷு ஸரயூம் அவகாஹதே —
16-30-

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்-ஸ்ரீ திரு விருத்தம் -24-ஸோபி வேலாமிமாஂ நூநமபிஷேகார்தமுத்யதஃ.
வரிதஃ ப்ரகரிதிபிர்நித்யஂ ப்ரயாதி ஸரயூஂ நதீம்৷
৷3.16.29৷৷

வ்ருதா பிரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் –ஆரண்ய காண்டம் -16-29–
ப்ரக்ருதி வர்கத்தாலே-சூழப் பட்டு போன படி….
பெருமாளைப் பிரிந்து ,மித்ர வர்க்கம் சேவிக்கப் ,போகிறானோ என்னில்-
கால் நடை கொடாமையாலே தாங்கிக் கொண்டு போன படி-

அத்யந்தஸுகஸஂவரித்தஸ்ஸுகுமாரஸ்ஸுகோசிதஃ.
கதஂ ந்வபரராத்ரேஷு ஸரயூமவகாஹதே৷৷3.16.30৷৷

அத்யந்த ஸூக சம்விருத்த ஸூகுமார ஸூ கோஜித –ஆரண்ய காண்டம் -16-30-
சக்கரவர்த்தி அறுபத்தினாராயிரம் சம்வச்தரம் மலடு-நின்று பெற்றவன் ஆகையாலே ,
அவன் கொண்டாடின ஸூகம் இறே இவனுடைய ஸூகம்
உம்முடைய கண்ணாலே பார்க்கவும் பொறாத  சொவ்குமார்யம்
உம்மோடு கலவிக்கு உசிதன் அத்தனை அல்லது பிரிவுக்கு சிதன் அன்று இறே

கதந்னு-
தன் படியே என்று நினைக்கிறார் பிரிவு இல்லாமையாலே தமக்கு நீர் குளிருகிற படியாலே-
சுடும் என்று அறியாதே குளிரும் என்று அஞ்சுகிறார்

(ராஜ்ஜியம் போகங்களைத் துறந்து தபஸ் கோலத்தில் உயிர் வாழ மட்டும் உண்டு தரையிலே தூங்கினான்
குளிர்ந்த நீரில் எவ்வாறு குளிப்பான் என்று இளைய பெருமாள் சொல்ல
கூடி இருப்பதால் இவ்வாறு
இவன் தாபத்தால் சரயுவே சுடுமே
தசரதன் கொண்டாடும் ஸுகுமாரம் பெருமாளுக்கு
பெருமாளே கொண்டாடும் ஸூகுமாரன் பரதனுக்கு )

அபர ராத்ரேஷு —
அகாலத்திலே போவான் என் என்னில் ,
புதிசாக வைதவ்யம் (விதவை )வந்தவர்கள் ,ஆள் கிளம்புவதற்கு முன்னே
மனிதர் முகத்தில் விழியாமல் போமா போலே
கைகேயி மகன் என்றும்,
இவனாலே இப்படி புகுந்தது என்றும்
சொல்லும் அதற்க்கு அஞ்சி

சரயூம் அவகானே –
நீரிலே முழுகினால் தடவி எடுக்க வேண்டும் படி-
(நீர் எல்லாமே உறிஞ்சி போக -கீழே போவான் )

தர்மஜ்ஞ ஸ்ஸத்யவாதீ ச ஹ்ரீநிஷேதோ ஜிதேந்த்ரியஃ৷৷3.16.31৷৷
ப்ரியாபிபாஷீ மதுரோ தீர்கபாஹுரரிந்தமஃ.
ஸந்த்யஜ்ய விவிதாந்போகாநார்யஂ ஸர்வாத்மநா ஷ்ரிதஃ৷৷3.16.32৷৷

நோய் வந்தவன் நடந்ததுக்கு பிரமாணம் இந்த ஸ்லோகங்கள்

———-

நதேம்பா மத்யமா தாத கர்ஹி தவ்யா கதஞ்சன
தாமேவேஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு –
-16-37-

ஈடு -9-1-4–வருணித்து என்னே
உபகாரம் செய்வார்களுக்கு அபகாரம் செய்வார் படியை நினைந்து வெறுத்து –
வருணித்து என்னே -என்கிறார்
இளைய பெருமாள் கைகேயின் தன்மையை நினைந்து
தன் கார்யத்தில் நோக்கு உள்ளவளும் -எப்போதும் கொடிய தன்மை உடையவளும்
கோபம் உள்ளவளும் -தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டு இருப்பவளுமான என் தாயான கைகேயி -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் சொன்னால் போலே –
ஆத்மகாமா சதாசண்டீ க்ரோதனா ப்ராஞ்ஞா மானி நீ
அரோகாசாபி மே மாதா கைகேயி கிம் உவாச ச -அயோத்யா -71-10
வாராய் பிள்ளாய் நீ தான் இவை எல்லாம் சொல்லுகிறது நடுவில் ஆய்ச்சியையே
அப்பா உன்னுடைய நடுத் தாயாரான கைகேயி யானவள்
எவ்விதத்திலும் நிந்திக்க தக்கவள் அல்லள்-என்கிறபடியே –
ந தேம்பா மத்ய மாதாத கர்ஹிதவ்யா கதஞ்சன
தாமேவ இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய கதாம் குரு -ஆரண்ய -16-37-
ஒருபடியாலும் நீ அவளை இவ்வார்த்தை சொல்லக் கடவை அல்லை
தாமேவ –
வேண்டுமாகில் கை கண்ட மருந்தைச் செய்யப் பாராய்
இஷ்வாகு நாதஸ்ய பரதச்ய –
ஐயரோ போகட்டு முடிந்து போனார்
நாம் போகட்டு போக்க இராச்சியத்தை இக்குடியின் மரியாதை
குலையாதபடியாக நோக்கிக் கொண்டு
கிடந்த பிள்ளை பரதன் அன்றோ இக்குடிக்கு நாதன் –
பரதச்ய கதாம் குரு –
நாக்கிலே நீர் வரும்படியான வார்த்தை சொல்லப் பாராய் -என்றார் பெருமாள் –

———-

கதான் வஹம் ஸமேஷ்யாமி பரதேந மஹாத்மநா
சத்ருக்நேந ச வீரேண த்வயாஸ ரகு நந்தன –16-40-

ஈடு -2-4-1-ஸ்ரீ பரதாழ்வானோடும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானோடும் கூடப்பெறாத கிழிக்குறையால் கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோற்றிற்று இல்லை இறே

————–

விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித–17-24-

ஈடு -5-3-4-விபீஷணஸ் து தர்மாத்மா -இவன் இக் குடியில் உள்ளார் படி அல்லன் -இவனுக்கு வாசியுண்டு
அந்த வாசி தன்னைச் சொல்லுகிறது -தர்மாத்மா-என்று
மறக்குடி அறம் செய்யக் கெடும் என்னக் கடவது இறே
ந து ராக்ஷஸ சேஷ்டித–ஜாதி மாத்ரமே இவன் பக்கலில் ஜீவிக்கலாவது –

————

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிக்ஷஸ்வஜே –30-31-

திரு நெடும் தாண்டகம்–21–-தம் த்ரஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம் பபூவ ஹ்ர்ஷ்ட
வைதேஹி பர்த்தாரம் பரிஷஸ்வஜே
 -என்னக்  கடவது இறே –

ராஷச வேட்டையாடின பெருமாள் உடைய யுத்தாஸ்ரம பரிக்லின்னமான திருமேனியிலே
ராஷச சரவராத வ்ரணரோபமான திவா ஔஷதமான காட ஆலிங்கனத்தை பண்ணி சத்தை பெற்றால் என்கிறது –
தம் -1–ராஷச பூயிஷ்டமான தேசத்திலே உன்னைக் கொடு போக அஞ்சுவேன் என்கிற த்வரை –

தம் –
2-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று பிராட்டியாலே ஆண்கள் முன்பாகவே உண்ட அன்று தொடங்கி திரு உள்ளத்திலே கறுவி இருந்து
பதினாலாயிரம் ராஷசரையும் ஆழி மூழையாக தரித்து ரத்த வெள்ளத்தே மிதக்க விட்டு
பிராட்டியை பிடித்துக் கொண்டு சேவகத்தை மூதலித்துக் காட்டி அருளினவரை –

தம் –
3-ஆதித்ய இவ தேஜஸ்வீ -(ஸூந்தர) இத்யாதியாலே வீரப் பாட்டுக்கு சிறு விரல் முடக்கும்படி அவதீர்ணர் ஆனவரை –

தம் –
4-படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும்படி யான சௌகுமார்யத்தை உடையவரை – –

தம் –
5-உகப்பாலே அடுத்துப் பார்க்கில் ராகமான தேஜஸ்ஸூ குலையும்படியான திருமேனியை உடையவரை –

தம் –
6-வீர ஸ்ரீ பரிணயமான மணக் கோலத்தோடு தர்ச நீயமான சௌகுமாராதி அதிசயத்தை உடையவரை –

தம் –
7-ரிஷிகளுக்கு பண்ணின பிரதிஞ்ஞை கடலோசை யாகாத படி
அது செய்து தலைக் கட்டுகையாலே பூர்ண மநோரதர் ஆனவரை

சத்ரு ஹந்தாரம் –
ரத்ன கசிதமான பொன்னரி மாலை போலே சத்ரு சர வ்ராத வ்ர்ணாங்கிதமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவரை –

த்ர்ஷ்ட்வா –
ஆதபாச அபி பூதர் உடைய சீதள தடாகப் பிரவேசம் போலே ராஷச சர நிகராபி பூதமான திருமேனியை
தன் பூர்ண கடாஷமாகிற ஹிமா ஜலத்தாலே வழிய வார்த்து –

சத்ரு ஹந்தாரம் –
பிரதிபஷ நிரசனத்தால் வந்த புகருடைமை
சர்வ பூத ஸூஹ்ருத்தான சர்வேஸ்வரனுக்கு பிரதி பஷம் உண்டோ என்னில்
பத்தர் – இத்யாதி பிரக்ரியையாலே ஆஸ்ரித விரோதிகளே தனக்கு விரோதிகளாம் இத்தனை -இறே

(ஞானி ஆத்மைமேவ மேதம் -மம பிராணா ஹி பாண்டவ-பத்தராவிப்பெருமாள் )
(பெரும் புறக் கடலை யடல் எற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-)

மஹர்ஷீனாம் ஸூ காவஹம் –
1-யுத்த ப்ராரம்பம் தொடங்கி –கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மகர்ஷிகள் உடைய பயம் தீர சத்ருக்களை கட்டடங்க கொன்று விட்டு அவர்களுக்கு ஸூகவஹராய் உள்ளவரை –

மஹர்ஷீனாம் ஸூகாவஹம்–
2-தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு சுகத்தை பண்ணி தாமுடைய சத்திக்கு ஆபாதகமானவரை –

பபூவ-சத்தை பெற்றாள் –மாலையும் மணமும் போலே -அத்யந்த ஸூகுமாரமான விக்ரஹத்தையும் ஸ்வ பாவத்தையும் உடையராய் இருக்கிற பெருமாள் கடினமான காத்ரங்களையும் ஸ்வ பாவங்களையும் உடைய முரட்டு ராஷசரோடு யுத்தம் பிராரம்பித்த போதே தொடங்கி
பிரேம அதிசயத்தாலே சத்தை மாண்டு கிடந்த பிராட்டி
திருமேனியிலே ஒரு தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –

ஹ்ர்ஷ்டா
தர்மி உண்டானால் தர்மம் பிறக்கக் கடவது இறே
ராம சௌந்த்ர்யத்தை முழுக்கக் கண்டு திரு உள்ளத்தில் இருந்த களிப்பு புற வெள்ளம் இட்டபடி –

வைதேஹீ –
1-ஐயர் வயிற்றிலே பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இறே –

வைதேஹீ –
2-இக் குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே –

வைதேஹீ-
3-இந் நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு இவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் கிடையாதே –
அவ் வில்லோட்டை சௌப்ராத்ரம் இல்லையாகில் வீர்ய சுல்கமான இவ்வாகாரம் கூடாதே –

வைதேஹீ –
4-தனுர்ப் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இற்றை நாள் ஆகாரம் கண்டால் என் படுகிறாரோ –

வைதேஹீ
5-ரூப ஓவ்தார்ய குணைஹி பும்ஸாம் தர்ஷ்டி சித்த அபஹாரிணாம் -என்கிறபடியே(பும்ஸாம்-ஆண்களையும் )
சர்வ லோக ஆகர்ஷகமான இந் நிலையை -ஐயரை ஒழிய நான் காண்பதே -என்று பித்ர் ஸ்ம்ர்த்தி பண்ணுகிறாள் –

பார்த்தாராம்
பாணி க்ரஹண வேளை தொடங்கி -பதித்தவ பிரதிபத்தி பண்ணிப் போந்தேன் –
இப்போது இறே தாத்வர்த்தம் ஜீவித்தது –

பரி ஷஸ்வஜே –
சஸ்வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
ரி ஷஸ்வஜே -1–பூரணமாக தழுவினாள்-
பரி ஷஸ்வஜே -2–பர்யாப்தமாக தழுவினாள் –
பரி ஷஸ்வஜே –3-திருமேனியில் தழும்பு மாறும் அளவும் தழுவினாள் –
பரி ஷஸ்வஜே -4–சர வ்ரணங்களால் வந்த தழும்பு மாறும் அளவும் திரு முலைத் தடங்களால் வேது கொண்டாள் –
தான் கைக் கண்ட மருந்து இறே -சர வர்ணங்களுக்கு ஆலிங்கனம்
ஔஷதமாம் இடத்தில் -ஜந்துடன் ஞானவான்களுடன்  வாசி இல்லை இறே –
(மன்மதன் )அந்தரங்கன் உள்ளூற எய்த புண்ணுக்கு மருந்தான இது தோல் புரையே எய்த புண்ணுக்கும்
மருந்தாக சொல்ல வேணுமோ என்று இருந்தாள் –

ஒரு கொடியாகில் கொள் கொம்பை தழுவி அல்லாது நில்லாது இறே -(போது அமர் செல்வக் கொழுந்து )

பார்த்தாராம் பரிஷஸ்வஜே –
5-நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்தவ ஆகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால்
தத் ஆதாரமாகப் படர்ந்து அத்தை மூடி அக் கொள் கொம்பை சிறப்பித்து கொண்டால் அல்லது
கொடிக்கு ஸ்வ பாவம் இல்லை இறே -(தர்ம ஸ்லோகம் பெண் கணவன் உடன் கூடி நின்றே உயிர் வாழ வேண்டுமே)

தம் -என்கிற பதம் -பெருமாள் உடைய சர்வாதாரத்தைக் காட்டுகிறது –
த்ர்ஷ்ட்வா -என்கிற பதத்தாலே –
பெருமாள் உடைய ஆகாரங்களை எல்லாம் நேராக காண வல்லாள் பிராட்டி -என்கிறது –

சத்ரு ஹந்தாராம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம் -என்கிறவற்றால்
தன்னோடு குடல் துவக்குண்டான சேதனருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
பண்ணின போது அல்லது அவரைக் காண கண் இல்லை -என்கிறது –
பபூவ -என்கிற இத்தால் -அவரைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது –
ஹ்ர்ஷ்ட -என்கிற இத்தால் -தர்மி உண்டானவாறே தர்மம் குடி புகுந்தது என்கிறது –
வைதேஹீ -என்கிற பதத்தால் ஹேது பூதர் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தி சொல்கிறது –
பர்த்தாராம் -என்று –பிதுர்த் தச குண மாதா கௌரவேண  -என்று
புத்திர ரஷணத்திலே உகப்பாலே புருஷகாரத்வம் சொல்லுகிறது –
பரிஷஸ்வஜே -என்று ஆஸ்ரித ரஷணத்தால் வந்த உகப்புக்கு போக்கு வீடு ஆலிங்கனமாய்
அது தான் பரம பிரயோஜனம் என்கிறது –

இத்தால் வீர பத்னி அகப்பட்ட வீரக் கோலம் சொல்லிற்று –

ஈடு -3-5-4–வம்புஅவிழ் கோதை பொருட்டா மால்விடை ஏழும் அடர்த்த செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் -பிராட்டி பெருமாளை அணைத்தது போன்று நப்பின்னைப்பிராட்டி அணைக்க நின்றபடி’ என்றவாறு.-தந் திருஷ்ட்வா – பிரணயதாரையில் ரசிகத்வமேயாயிற்று முன்பு கண்டு
போந்தது, ‘அந்தப் போகத்துக்கு விரோதிகளானவற்றைப் போக்க வல்லர்’
என்று கண்டது இன்றாயிற்று. வேட்டைக்குப் போனால், ‘இன்ன
துஷ்டமிருகத்தைக் கொன்றார்; இன்ன ராக்ஷசனைக் கொன்றார்,’ என்று
கூடப்போனவர்கள் சொல்லக் கேட்குமத்தனை முன்பு; அவ்வளவன்றிக்கே,
கண்ணாலே கண்டது இன்றாயிற்று. ஸத்ருஹந்தாரம் – தம் திருமேனியில் ஒரு
வாட்டம் வாராமே எதிரிகளே நோவுபடும்படியாக. அம்போடே வெட்டோடே
போகாமே எதிரிகளை முதல் அற மாய்த்து வந்தவரை. மஹர்ஷீணாம்
சுகாவஹம் – பார்யை பக்கல் முகம் பெறுகைக்குப் பிரஜையை
எடுத்துக்கொண்டு போவாரைப்போலே, இருடிகட்கு விரோதிகளான
ராக்ஷசரைக் கொன்று பிராட்டியை அணைக்கைக்கு அது பச்சையாக வந்தார்.
பபூவ – ராக்ஷசருடைய குரூரத் தன்மையையும் பெருமாள்
சௌகுமார்யத்தையும் அநுசந்தித்து, ‘என் புகுகிறதோ!’ என்று ‘சத்தையில்லை’
என்னும்படியிருந்தவள், வெற்றியோடே கண்டு உளளானாள், ஹ்ருஷ்டா –
தர்மியுண்டானால் தர்மங்களும் உண்டாமிறே. வைதேஹீ – ‘வீரவாசியறியும்
குடியிலே பிறந்தவள்’ என்னுதல்; அன்றிக்கே, ‘ஒரு வில்லை முரிக்க
என்னைக் கொடுத்த எங்கள் ஐயர், தனியே நின்று பதினாலாயிரம்
ராக்ஷசரைக் கொன்ற வீரவாசியைக் கண்டாராகில், என்படுவரோ!’ என்று
அவரை நினைத்தாளாகவுமாம். பர்த்தாரம் – ‘ஐயர் நீர் வார்த்துக்
கொடுத்தவர்’ என்று விரும்பிப் போந்தாள் முன்பு: இப்போதாயிற்று
‘ஆண்பிள்ளை’ என்று அணைத்தது; ‘ஆண் வடிவாக இருக்கின்ற பெண்’
என்றவளேயன்றோ முன்பு? பரிஷஸ்வஜே – யுத்தவடு உள்ள இடமெங்கும்
திருமுலைத் தடத்தாலே வேது கொண்டாள். அப்படியே. நப்பின்னைப்
பிராட்டி அணைக்க நின்றபடி. பிராட்டி – சீதாபிராட்டி. பெருமாள் –
ஸ்ரீராமபிரான்.

————

தவ் வநாநி கிரீம் சைவ ஸரி தச்ச ஸராம்ஸி ச
நிகிலேந விசின்வாநவ் ஸீதாம் தசரதாத் மஜவ் —
61-21-

ஈடு -2-1-4-ஸீதாம் –தேடிக் கண்டிலோம் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்று
தசரதாத் மஜவ் –தேடப்பிறந்தவர்கள் அல்லர்

—————

அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா சிலா தலே பூர்வம் உபோவிஷ்டா
காந்த ஸ்மிதா லஷ்மண ஜாத ஹாஸா த்வாமாஹ ஸீதா பஹு வாக்ய ஜாதம் –
63-12-

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடே அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-7-

களங்கனி முறுவல்
பிள்ளாய் -ஆர் வாய் வெருவ கடவத்தை
ஆர் வாய் வெருவுகிறார்
சீதேதி சாருததீம் -யென்று அவன் இறே வாய் வெருவுவான்-

எதிர் தலையை தோற்பித்தோம் ஆக வேணும் யென்று
இருக்கிறவர்களாய்-விலஷணமாய்-பக்வமாய்
தோற்றினது போலே யாயிற்று -முறுவல் இருப்பது

அஸ்மி-அஸ்மின் -மயா தார்த்தம்-உதார சீலா-சிலாதலே பூர்வம்- ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா-
உபோபவிஷ்டா-காந்த ஸ்மிதா -த்வாமாஹா-பீதா பஹு வாக்ய ஜாதம்

அஸ்மி –
முன்பு தாமும் பிராட்டியுமும் ஜல க்ரீடாதிகள் பண்ணி
ரம்யமாய் பரிமாறிற்று ஓர் இடத்தில்
பிராட்டியைப் பிரிந்து தாமும்  இளைய பெருமாளுமாய்
தேடிக் கொடு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து
அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய்  இருக்கிற இடத்திலே காண்
அன்று நாம் எடுப்பு எடுத்தது –

மயா தார்த்தம் -ப்ரணய தாரையிலே தம்மைத் தாம் சால மதித்து இறே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோபாதியாக கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்த்தமாக பரிமாறின
படியும் காண் –

உதார சீலா -படை வீட்டில் இருந்த நாள்
மாமனார் மாமியாருக்கு கூசி
சிறிது படி விடுவாரோபாதி அளவு பட வாயிற்று போகம் செல்லுவது –
இப்போது அவ்வளவு இன்றிகே ஏகாந்தமான ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வதானம் பண்ணிக் கொண்டு
இருந்தால் ஆயிற்று –

சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகறதோர் இடத்தில்
சிலா தலமாய் இளைத்த இடத்திலே அதிலே ஏறுவதாக பெருமாள்
முற்கோலிக் கணிசிக்க

ப்ரேஷித ஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலும் ஒரு
சம்பந்தம் உண்டு இறே இவளுக்கு –
அத்தை இவருடைய இங்கிதாதிகளைக் கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேண்டும் யென்று பார்த்து
பெருமாள் ஏறுவதாக கணிசித்த துறையை
அடைத்துக் கொண்டு இருந்தாள்-

உபோபவிஷ்டா
அப்படியேயாய் இருக்கும் இறே எங்கும் –

காந்த ஸ்மிதா –
வெறும் புறத்திலே தாமே துவக்க வல்லவள்
முறுவலைச் சேர்த்தாப் போலே ஆயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே அப்போது பிறந்த வெற்றியாலே
ஜாத ஹாசை யானாள் யாயிற்று

த்வாமாஹா-
இதுக்கு முன்பு துடங்கின கார்யத்தில்
தலைக் கட்டாதே மீளுமது  இல்லை இறே பெருமாள் –
இது ஒன்றும் தலைக் கட்டப் பெற்றது இல்லை –
அத்தாலே லஜ்ஜித்து கவிழ தலை இட்டார் பெருமாள் –
அவரை விடா இவரைப் போரப் பொலிய கொண்டாடுகிற இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியார் -நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இறே –
நீங்கள் வலிய வல்ல ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வ்யாபரிக்குமவர்கள்
நாங்கள் வீடு விட்டு புறப்பட்டு அறியோம்

————

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம்

புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்

அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –

யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –

சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )

புரவே மே சாரு ததீம நிந்திதாம் திசந்தி ஸீதாம் யதி நாத்ய மைதிலீம்
ஸதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் ஸ சைலம் பரிவர்த்த யாமஹம் —


உங்களுக்கு நினைத்த வகைகள் எல்லாம் தலைக் கட்டலாம் இறே
உங்கள் தமையனார் வென்றார் இறே -யென்று
பஹூ முகமாகக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

இப்படி பெருமாள் புலம்பினத்தை அறிவோம் இவள் அன்றோ புலம்புகிறாள்-

———–

ராஜ்யாத் ப்ரம்சோ வநேவாஸஸ் ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம் –
-67-25-

பரமபதத்தில் துக்கம் கலவாத இன்பமேயாக இருக்குமாறு போலே, இதுவும் எல்லை இல்லாத துக்கமேயாய் இருக்குமாயிற்று.  2‘இராச்சியத்தினின்று  நீங்கியதும், வனத்தில் வாசம் செய்கிறதும், சீதை காணாமற் போனதும், பெரியவுடையார் ( ஜடாயு ) மரணமடைந்ததும் ஆகிய இப்படிப்பட்ட என் துக்கங்கள் நெருப்பையுங்கூட

எரித்துவிடும் என்றாரேயன்றோ பெருமாள்? 1இவர்கள் படுகிற துக்கத்தைக் கண்டு தன் கிருபையாலே அவன் எடுக்கக் கைநீட்டின இடத்திலே படுகிற பாடே அன்றோ இது?

திரு அபிஷேகம் பண்ண நாளிட்ட வாறே -ராஜ்ஜியம் எனக்கு வேணும் என்றார்கள் சிலர் -அத்தை இழந்தால் படைவீட்டில் இருக்கப் பெற்றதாகிலும் இறே
என் மகன் ராஜ்யம் பண்ண வேண்டா -பிக்ஷை புக்காகிலும் என் கண் வட்டத்திலே இருக்க அமையும் என்றார் இறே கௌஸல்யை யார்
ஸீதா நஷ்டா –பிராட்டியும் தாமுமாய் ஏகாந்தமாக புஜிக்கலாம் என்று போர இருவரும் இரண்டு இடத்திலேயாம் படி விழுந்தது –
ஹதோ த்விஜ–பிராட்டிக்குத் தனி இடத்திலே உதவப்புக்க பெரிய யுடையாரையும் இழந்தது
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்தஹேதபி பாவகம்

ராஜ்ய நாசம் -ராம சந்தரன் -இரவில் பிரகாசிக்கும் படி -அன்று அலர்ந்த தாமரையை ஒத்ததே -என்றாரே –ராஜ்யோ நாஸோ பகர்ஷயதி வந வாஸோ மஹோதய -என்றும் சொல்லிப் போந்தவற்றை- இங்கு அனர்த்தமாக சொல்வான் என்
ஆஸ்ரித சம்ச்லேஷம் -ரிஷிகள் கூட -இருக்க அன்றோ புகுந்தது–
புருஷகாரம் -இழந்த நிலை -ஜடாயு இழந்தார்- அதனால் வருத்தம் தோன்ற வார்த்தை –

நிர்தஹேதபி பாவகம்–பிரியாத இளைய பெருமாளையும் பிரிக்கவும் வற்றாய் இறே இந்தத் துக்கங்கள் இருப்பது

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ அயோத்யா காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்-

May 20, 2024

கச்சதா மாதுல குலம் பரதேந தத அநக
சத்ருக்நோ நித்ய அயோத்யாநீதஸ் ப்ரீதி புரஸ் க்ருத
–21-1-

இது தான் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருன ஆழ்வான் பக்கலிலே காணலாம்
வேதோப ப்ரும்ஹணார்த்தாய தவாக்ராஹ்யத பிரபு -என்கிறபடியே வேத உபப்ரும்ஹணார்த்தமாகப் பிறந்த
ஸ்ரீ ராமாயணத்தில் தர்ம சம்ஸ்தாபநார்த்தமாக அவதரிக்கையாலே ஸ்ரீ இராமாயண புருஷர்கள் நால்வரும் நாலு தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்கள் –
ஒருவன் சொல்லிற்று ஒருவன் செய்யக் கடவன் -என்கிற தர்மம் நேராகா அழிந்து கிடக்கையாலே
பித்ரு வசன பரிபால நாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் பெருமாள்
பிதுர் வசன நிர்த்தேசாதீ -என்றும் -அகஸ்த்யவசநாத் -என்றும் ஸூ க்ரீவ வசநாத் என்றும் சமுத்திர வசநாத்-என்று இ றே இவருடைய அனுஷ்டானங்கள்
சேஷ பூதன் சேஷியைக் குறித்து கிஞ்சித்கரிக்கக் கடவன் -என்கிற விசேஷ தர்மத்தை அநுஷ்டித்தார் இளைய பெருமாள்
குருஷ்வமாம நுசரம் -என்றும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றும் இ றே இவருடைய அனுஷ்டானம் –

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

அப்படி இருக்கிற இவனை யல்லது அறியாதே இருக்கையாலே பகவச் சேஷத்வ காஷ்டியான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்
கச்சதா மாதுல குலம் பரதேன ததா நக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரஸ்க்ருத
கச்சதா
கச்சதா டேன்கிற வர்த்தமான நிர்தேசத்தாலே தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாயாதல் -பூர்வ ஷணத்தில் போகுகைக்கு நினைவு யுண்டாயாதல்
இன்றியே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே போனான் என்கை –
மாதுல குலம்
யுதாஜித்து அழைத்து வந்ததும் அவனை யாகையாலே போக்கிலும் உத்தேச்யம் அவனுக்கு
இவனுக்கு அவன் பின்னே போகை உத்தேச்யமாய்ப் போனான் என்கை
பரதேன –
பரத இதி ராஜ்யச்ய பரணாத் -என்கிறபடியே சக்ர வர்த்தியும் துஞ்சி பெருமாளும் ராஜ்யத்தைப் பொகட்டுப் போய்
இளைய பெருமாளும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்று போய்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் தன்னை அல்லது அறியேன் என்று இருக்கிற் தசையிலே ராஜ்யத்தை வஹித்துக் கொண்டு இருந்தான் -என்கை
தத-
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதமும் உண்டாய் இருந்தால் முஹூர்த்தம் இட்டுப் போகப் பிராப்தமாய் இருக்க
அவன் போனதுவே தனக்கு முஹூர்த்தமாகப் போனான் என்கை-
அநக
அநம் இல்லாதது இவனுக்கு இ றே-அல்லாதார்க்கு ராமபக்தியும் கலாசி இருக்கையாலே பாபமிச்ற ஜீவனம் என்கிறது
ராமபக்தியைப் பாப்பம் எண்ணப் போமோ வென்னில் பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி ஆகையாலே புண்யமும்
புண்ய பாபே விதூய என்று கொண்டு பாப சப்த வாச்யமாகா நின்றது -ஆகையாலே பாத அனுவ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு
விரோதி யாகையாலே ராம பக்தியும் பாபமாம் இத்தனை –
சத்ருக்ன
பிள்ளைகளை உடைய சந்நிவேசன்களைப் பார்த்து திரு நாமம் சாத்துக்கிற வசிஷ்ட பகவான் பெருமாள் கண்டாரை
அழகாலே துவக்க வல்லார் என்று தோற்றி இருக்கையாலே ராமன் என்றும்
இளைய பெருமாளுக்குக் கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே ஸ்ரீ பரதாழ்வான் என்றும் திரு நாமம் சாத்தி
இவனுடைய சந்நிவேசத்தைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கக் காண்கையாலே சத்ருக்னன் என்று திருநாமம் சாத்தினான் –
நித்ய சத்ருக்ன –
பாஹ்ய சத்ருக்களை யன்றிக்கே ஆந்தர சத்ருவான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருக்கும் என்கை –
இந்த்ரிய ஜெயத்துக்கு எல்லை எங்கனம் என்னில் பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரீணம் -என்கிற ராம சௌந்தர்யத்திலும் துவக்கு ஒண்ணாது இருக்கை-
அதாவது பெருமாளைப் பற்றும் போதும் தன உகப்பால் அன்றியே அவன் உகந்த விஷயம் என்று பற்றுகை
நீத
ராஜாக்கள் போம் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமா போலே அவன் கொண்டு போகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்ட்டமாய் இருக்கும் -அது போல் அன்றியே ஜாதி குணங்களோ பாதி போனான்
ப்ரீதி புரச்க்ருத
தமையன் பின்னே தம்பி போகக் கடவன் என்கிற முறையால் போனான் அல்லன் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
இளைய பெருமாளைப் போலே எல்லா வடிமைகளும் போனவிடத்தில் செய்யலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி ப்ரேரிதனாய் போனான்
படை வீட்டில் இருந்தால் பரத அனுவ்ருத்தி ஒருவர்க்கு இட்ட சோற்றை பகிர்ந்து உண்பாரோ பாதி ஒகஹரியாய் இ றே இருப்பது
பாஷ்யகாரர் –அநக –நித்ய சத்ருக்ன -என்ற இதுக்கு ப்ரமேயமாகச் சொற்கட்டிலே
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரதழ்வானை யல்லது அறியாதபடி யானான் என்று அருளிச் செய்வர்
இதுவே பிரயோஜனமானால் சொல்லும் மிகை எல்லாம் பொறுக்கும் இ றே
அ நக -நித்ய சத்ருக்ன -என்று பாவனத்வத்தாலும் போக்யதையாலும் அவனைப் பற்றினான் என்னவுமாம்

இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே

இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்

பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-

பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி  தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்

திருவாய் மொழி-3-9- ஈடு பிரவேசம்–கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர்.
கண்ணி நுண் சிறுத் தாம்பு -இந்த ஸ்லோகம் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் பார்த்தோம் -இங்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் –
இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம்
ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’-
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்
’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்;
‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்;
‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
பெருமாள், ‘பிதா சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப் பின்பற்றக் கடவன்
என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ – செய்’ என்று நிர்ப்பந்திக்கக் கடவர்அல்லர்;
‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை
அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.
பல்லவிதம் -பகவத் கைங்கர்யம் -புஷ்பிதம் -பாகவத கைங்கர்யம் -பலிதம் -ஆச்சார்ய கைங்கர்யம் –

அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம்.
‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: –
அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ – மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்;
அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின்,
யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா – போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை;
பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை.
‘பரதேந –
பரதனால்’ – பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க,
ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது
‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் – பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’
‘ததா – அப்படியே’ –
தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம்.
அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான்.
‘அநக: –
பாபம் அற்றவன்’ – அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது,
இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின்,
‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது
என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது.
-கிருஷ்ண பக்தி பாபம் – வல்வினையேன் போனேன் குடக் கூத்து ஆடுவதை கான
‘ஆயின், இது உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ?
‘சத்ருக்ந:’ –
பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன்.
‘நித்ய சத்ருக்ந:’
புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட் பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது,
‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் –
ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி.
அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில்,
அநக: என்னும் இதனால், பரிசுத் தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது;
‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது.
‘நீத: – அழைத்துச் செல்லப்பட்டான்’ – ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது
‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே?
தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி புரஸ்க்ருத: – தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று;
‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்;
ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, ‘அஹம் சர்வம் கரிஷ்யாமி –
நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று,
இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத் தள்ளப் போனான்.

எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார்.
இது காரணமான பின்பு, சொன்ன மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ?
‘அநந்யா – இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால்
இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

அமிர்தம் ஒத்த பாயாசம் கொடுத்து பிறந்த சத்ருக்னன் அன்றோ -பெருமாள் கைங்கர்யத்துக்கு இளைய பெருமாளும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்
இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறரில்லை: பிறர்க்கு நல்கக்
கற்றா யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’-(கம்ப அயோத்:நகர்நீங்கு. 136)
‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால் ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச் சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’-கம்பர்
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’ஸ்ரீ குகப்பெருமாள்.
எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும் அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’-கௌசல்யா தேவியார்.

———-

ஸஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
அர்த்திதோ மாநுஷ லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந –
-1-7-

பாரின் மேலாய் –திரு நெடும் தாண்டகம் -9-
ஆசூர ராஷசராலே குடி இருப்பு இழந்து சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர
ராம கிருஷ்ணாதி  ரூபத்தாலே தன்னை அழிய மாறி வந்து ரஷித்த படியைச் சொல்கிறது –

(வேண்டித் தேவர் இரக்க இத்யாதி -ஸாஷாத் நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுராம் புரீம் -மனிசர்க்காகப் படாதன பட்டு)

ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞ்ஞே விஷ்ணுஸ் சனாதன –
தச் சப்தம் பிரக்ருத பராமர்ச்சி இறே –
பபூவ குண வத்தர -என்று இறே கீழ் சொல்லிற்று –
அப்படிப் பட்ட குணாதிகன் ஆகையால்
பிறந்தான் -என்கிறார்
அநந்ய பிரயோஜனர்க்காக பிறக்கை குணம் அன்று இறே –

ஹி-சப்தம் – ஹேதுவிலே
தேவை -வந்து பிறந்தது –
திருவடி திரு வநந்த ஆழ்வான் அர்த்திக்கவோ –
பிரயோஜனாந்த பரராய் ஈஸ்வரோஹம் என்று இருக்கிற துர்மானிகள் அர்த்தித்த கார்யம் செய்யக் கிடீர்
கார்யம் கொண்ட சமனந்தரம் எதிர் அம்பு கோக்குமவர்கள் இறே –

உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி –
தன்னுடைய செருக்காலே லோகத்தை அடைய அழித்துக் கொண்டு திரியும் ராவண நிரசன அர்த்தமாக
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்க
அர்த்திக்கிறவர்கள் பிரயோஜனாந்த பரராய் இருக்க
அவர்களை அழியச் செய்கைக்காக கிடீர் பிறந்தது –

அர்த்தித
இது இவர்கள் பண்ணின தபஸ் ஸூ –

மானுஷே லோக
தேவதைகளும் அகப்பட கீழ் நோக்கி முகம் காட்டாத தேசத்திலே கிடீர் வந்து பிறக்கிறது

ஜஜ்ஞ்ஞே –
நாட்டார் பத்து மாசம் கர்ப்ப வாஸம் பண்ணுவார் ஆகில்
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாஸம் பண்ணிக் கிடீர் பிறக்கிறது –

விஷ்ணு –
வ்யாபக வஸ்து கிடீர் வ்யாப்ய ஏக தேசதத்துக்கு சேஷமாய் பிறந்தது

சனாதன
நித்ய வஸ்து கிடீர் பிறந்தான் என்னும்படி
ஒருத்தனுக்கு புத்ரனே வந்து பிறந்தது

இப்படி
பிரயோஜனாந்த பரருக்கும் அகப்பட தன்னை அழிய மாறி கார்யம் செய்கிறவன் கிடீர்
அநந்ய பிரயோஜனான எனக்கு முகம் காட்டாது ஒழிகிறான் -என்கிறார் –

(குண பூர்ணன் -பிரயோஜனாந்தர பரர்களுக்கு -ராவணாதிகளை நிரசிக்க -ஆர்த்தித்த மாத்ரம்
தேவர்களும் கால் வைக்க கூசும் -12 மாதங்கள் கர்ப்ப வாசம்
எங்கும் நிறைந்தவன் இங்கு பாரின் மேல் -ஆஸ்ரித பரதந்த்ரனாக –
இப்படி எட்டு விஷயங்கள் இந்த ஸ்லோகத்தில் -அப்படிப்பட்டவன் எனக்கு முகம் காட்டாமல் ஒழிவதே-பரமபதம் வ்யூஹம் விபவம் சொல்லி மேல் அர்ச்சை )

நாட்டிற் பிறந்து படாதன பட்டு –திருவாய் மொழி -7-5-2-

‘ஸஹிதேவை: உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி;
அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு: ஸநாதந;’-என்பது, ஸ்ரீராமா அயோத். 1 : 7

5ஸ:-ஜஞே ஹி – ‘கர்மங் காரணமான பிறவி இல்லை’ என்று பிரமாண பிரசித்தனானவன் கண்டீர் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்கட்கும் இவ்வருகாய் வந்து பிறந்தான்’ என்றபடி. ‘இப்படிப் பிறப்பதற்குக் காரணம் என்?’ என்னில்,

‘அர்த்தித:’ என்கிறது, அவர்கள் இரந்ததற்காக என்றபடி. 1இரப்புதான் இச்சையும் பிறப்பிக்குமே அன்றோ? 2‘இச்சையாலே மேற்கொள்ளப்பட்டது’ அன்றோ?

‘இச்சா க்ருஹீத அபிமதோருதேஹ;
ஸம்ஸாதிக அஸேஷ ஜகத்தித: ய;’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84.

தேவை:- 3தங்கள் காரியத்துக்காக இரந்து பிறக்கச் செய்து காரியம் தலைக்காட்டினவாறே எதிரிட்டு ‘ஈஸ்வரோஹம்’ என்று இருப்பார்க்ககாக் கண்டீர், ‘நீள் நகர் நீள் எரி வைத்தருளாய்’  திருவிருத். 92.என்பார்கள். என்றது, ‘இலங்கையை சுட்டுத் தரவேணும்,’ என்பர்கள் என்றபடி. உதீர்ணஸ்ய ராவணஸ்ய – 4அச்சத்தை உண்டாக்குகின்றவனான பையல், தானே வரபலத்தாலே அழியச் செய்யவேண்டும்படி விஞ்சினவாறு. வத அர்த்திபி:-5தாங்கள் பட்டி நலிவாலே திருவுள்ளத்துக்குப் பொருந்தாதனவற்றையும் விண்ணப்பம் செய்தார்கள். 6‘ஒருவனை அழியச் செய்ய ஒரு நாடாகப் பிழைக்குமாதில் ஆகாதோ?’ என்று அழியச்செய்தானைத்தனை. அர்த்தித:- 1தன்னுடையச் சோதிக்கு எழுந்தருளுந்தனையும் திருவுள்ளத்திற்பட்டக் கிடந்து இதுவே.அர்த்தித:– 2உபாசித்தவர் அல்லர்.

மாநுஷே லோகே விஷ்ணு: ஸநாதந;- 3‘உண்டு பண்ணப்பட்ட தேவர்கள், மனித வாசனைக்கு வாந்தி பண்ணிப் பூமியில் இழிய அருவருத்து, ஒன்றரை யோசனைக்கு அவ்வருகே தின்று ஹவிஸ்ஸினைக் கொள்ளுவார்கள்; அவர்கள் மனிதத் தானத்திலேயாம்படியான பொருள்கண்டீர் இங்கே வந்து பிறந்தது,’ என்கிறார். மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் அன்றோ?திருவாய். 8. 1 : 5.- ஜஜ்ஞே– 4தோன்றிய மாத்திரமன்று; நாட்டார் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் அனுபவிக்கில் பன்னிரண்டு மாதங்கள் அன்றோ இவன் அனுபவித்தது?’ பின்னர்ப் பன்னிரண்டாவது மாதமான சித்தரை மாதத்தில்’ என்பது ஸ்ரீராமாயணம்.  ‘ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ’-என்பது, ஸ்ரீராமா. பால. 18 : 10.

5‘நான் உன்னுடைய உதரத்தினின்றும் உண்டானேன்’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம்.‘ஜாதோஹம் யத்தவோதராத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3 : 14.

————

குணைர் தசரத உபம –1-9-குணங்களில் தசரதருக்கு ஒப்பாவான்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர்–நாச்சியார்-9-3-நஞ்சீயர் ஸூந்தர பாண்டிய தேவரைக் கண்டிரா நிற்கச் செய்தே –
குணைர் தசரத உபம
 -அயோத்யா -1-9-என்கிற இடத்துக்கு
பிறந்து படைத்த குணங்களும் ஸ்வா பாவிக குணங்களும் எல்லாம் கூடினாலும் -மார் -அரை -மாட்டே யாய்-
சக்கரவர்த்தி திருமகன் -என்னப் போரும் அத்தனை என்று அருளிச் செய்ய
அத்தைக் கேட்டு –
பரம புருஷனுக்கு ஒருவன் வயிற்றில் பிறந்து ஓர் ஏற்றம் உண்டாக வேணுமோ
அவன் பிறக்கை யாலே அக்குடி தனக்கும் ஏற்றமாம் அத்தனை அன்றோ என்றானாம்
நாம் போன சமாதி இவன் அறிந்திலன் என்று பார்த்து –
அது எல்லாம் கிடக்க பரம புருஷன் என்னும் படி என் தான் என்றாராம்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் -யுத்த -120-11–என்று
அருளிச் செய்த பெருமாள் திரு உள்ளத்தின் படி தசரத உபம -என்று
உபமானத்தைக் காட்டிலும் உபமேயம் மட்டமாய் இருக்கும் என்பதை ஒட்டி அருளிச் செய்த படி

சௌசீல்யம் அன்றிக்கே பரம புருஷத்வம் உண்டோ
தசரதன் பிள்ளை யானதால் நற்குணங்கள் பெற்றார்
பிராட்டியாலும் நிறம் பெற்றார் பெருமாள்

பெரிய திருமொழி -10-4-1—பரம புருஷனுக்கு ஓர் இடத்தே பிறந்து ஒரு குணம் தேட வேண்டுமோ -என்றார்
சுந்தர பாண்டிய தேவர் –
நாம் ஓடுகிற நரம்பு இவன் அறிந்திலன் -என்றத்தை விட்டு
(ஸுசீல்யம் சொல்ல வந்ததை அறியாமல் இருந்தானே
ஆத்மாநாம் மானுஷ்ய மன்யம் என்னுமவன் அன்றோ )
பரம புருஷன் என்ற போதை அழகு இருந்தபடி என் -என்றாராம்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே அந்வயம் இல்லாதார்
பகவத் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் அர்த்தவாதம் என்று இருப்பார்கள் –
அது உடையவர்கள் பகவத் பிரபாவத்துக்கு அவதி இல்லாமையாலே
சொன்னவை  சில சொன்ன அத்தனை –
சொல்லாததுவே பெரிது -என்று இருப்பார்கள் –
சத்யே நாதி வததி-இறே  –
(பகவத் விஷயத்தில் அதி வாதம் பண்ணுபவனே சிறப்பானவன் )

அபியாதா ப்ரஹர்த்தாச ஸேநாநய விசாரத –1-29

யுத்தத்தில் தானாக எதிர்த்துச் செல்பவன் -எதிரிகளைக் கொல்லுபவன் -ஸேனையை நடத்துவதில் ஸமர்த்தன்

காயும் கடும்சிலை என்காகுத்தன் வாரானால்
மாயும்வகை அறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே.-5-4-3-
தானே எடுத்துவிட்டுச் சென்று பொருமவர் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் “அபியாதா” என்று.

“அபியாதா பிரஹர்தா ச ஸோநாநய விஸாரத:”-என்பது, ஸ்ரீராமா. அயோத், 1 : 29.

“அபியாதா – முன் செல்பவர்” – பகைவர்கள் வரப் பொர இருக்கை அன்றிக்கே, எடுத்துவிட்டுப் பொருகையும் தமக்கே பணியாயிருக்கும். “பிரஹர்த்தாச-அடிப்பவர்” – தூசித்தலையில் நின்று, ‘முதல் வெட்டு யாரது’ என்றால், அதில் முற்பாடும் தம்மதாயிருக்கும். “சேநாநய விசாரத:-சேனையை நடத்துவதில் சமர்த்தர்”-தாம் போகாமல், தூசியும் அணியும் பேரணியுமாக வகுத்துவிட்டால், ஒருசேர நின்று பொருவித்தாற் போலே வென்று மீளும்படி படை கோக்க வல்லவர்.

——–

த்ரை லோக்யம் அபி நாதேந யேந ஸ்யாந் நாதவ்த் தரம் –2-13-

மூன்று உலகும் எந்த ராமன் நாதனாக இருந்தால் மிகவும் நாதனை யுடையதாக இருக்குமோ

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை–8-4-10-

அமர்ந்த நாதனை –
உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை
எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி
மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்
பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –—————

பஹவோ நிருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –2-26-

அரசனே உங்கள் பிள்ளை ராமனுக்கு அநேக கல்யாண குணங்கள் உள்ளன-

திருவாய் -7-6- ஈடு பிரவேசம்–பஹவோ ந்ருப’ – சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி, ‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, ‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி, ‘நான்  இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, 3‘கிழவா! போகாய்’ என்ன, கிழவா போகாய்’ என்றது

‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’-(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .) என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.

நாம் ஒருப்பட்ட காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து, ‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து, ‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால், ‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்: அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய, படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

1‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே,

‘‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’-என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது, 2‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி. 3‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே,

‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு

போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது, ‘இவ்வடித்தில் குணம்’ என்றாயிற்றுப் புறம்பு விலைபோவது; இப்படிப்பட்டவனுடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிடுகிறார். 

திருவாய் -9-6- ஈடு பிரவேசம்-

குணங்கள் பல ஈடுபடுத்தும் -என்பதற்கு பிரமாணங்கள் மேலே காட்டி அருளுகிறார்
தே தம் ஊசு மகாத்மானாம் பௌர ஜானபதை சஹ
பகவோ ந்ருப கல்யாணா குணா புத்ரஷ்ய சந்தி தே -அயோத்யா -2-26-
சக்கரவர்த்தி பெருமாளுக்கு திருமுடி சூட வேண்டும் என்று கோலி-
நாம் அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை கிளற இப்படி வருந்தி அடிப்படுதின
இராச்சியத்தை
இனிதரு சிறியவன் தலையில் வைத்தால் இது பொறுக்குமோ
என்று பார்த்து
இதை நாட்டோடு சேர விசாரித்து செய்வோம் என்று அரசர்கள் கூட்டத்தை கூட்டின இடத்து
சநிக்தோ நுநாத சஞ்ஜஞ்ஞே நேத்ர ஹர்ஷ சமீரித
ஜனௌ கோத்குஷ்ட சந்நாதோ விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா -2-18-
மக்கள் ஆரவாரித்த ஆரவாரமானது அரண்மனையை கிடு கிடுக்கச் செய்தது -என்கிறபடியே
சகரவர்த்தி மாளிகையை அளித்து செய்யும்படி ஆரவாரிக்க அதனைக் கேட்டு
நாம் நினைத்த கார்யம் பலித்தது -ஆயினும் இவர்கள் நினைவை இவர்கள் வாயால் சொல்லக் கேட்டால் ஆகாதோ என்று நினைத்து –
கதம் நு மயி தர்மேன பிருதிவீம் அனுசாசதி
பவந்தோ த்ருஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மாஜம் –அயோத்யா -2-25-
வாரீர் கோள் -நான் அற நெறியில் தேசத்தை ஆண்டு வரும் போது இளவரசனைப் பார்க்க வேண்டும் என்று
எவ்வாறு விரும்புகிறீர்கள் -என்கிறபடியே
அறுபதினாயிரம் ஆண்டு சிறியது பெரியதை நலியாதபடியாக
பூமிப் பரப்பை அடைய நோக்கிக் கொண்டு
இதம் சரீரம் க்ருத்ச்னச்ய லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்டரஷ்ய ஆத்பத்ரஷ்ய சாயாயாம் சரிதம் மா -அயோத்யா -2-7-
எல்லா உலகங்கட்கும் நன்மையைச் செய்கிற என்னால் இந்த உடல் வெண் கொற்றக் குடையின் நிழலில்
கிலம் ஆக்கப் பட்டது -என்கிறபடியே
முத்தின் குடை நிழலிலே திரிந்து -எனக்கு என்று ஒரு சுகம் கோலாதே
உங்களைப் பாதுகாக்கும் தர்மத்தையே செய்து கொண்டு போந்தேன்-
நான் ஒரு வார்த்தை கேட்ட இடத்து –
இப்போது நீ இருக்கச் செய்ய வேண்டாமோ
செய்ய வேண்டிய காலத்தில் செய்து கொள்ளுகிறோம் -என்னுதல்
அன்றியே
கார்யம் ஆகில் செய்ய லாகாதோ -என்று வார்த்தை சொல்லுதல் அன்றிக்கே –

ஜ்ஞான விஞ்ஞான சம்பன்ன நிதசே நிரத பிது
தாதுநாமிவ சைலேந்த்ரோ குணாநாம் ஆக்ரோ மகான் – கிஷ்கிந்தா -13-20-தாரை வாலி இடம் பேசியது
படுகுலை அடித்தவனை தப்ப ஒரு அறவன் கீழே ஒதுங்க நினைப்பாரைப் போலே
என்னை விட்டு என் மகனே அமையும் என்று நீங்கள் விரும்புகைக்கு நான்
உங்களுக்கு செய்த தீங்கு என் என்ன –
நீ எங்களுக்கு செய்த தீங்கு ஒன்றும் இல்லை
உன் மகனுடைய குண அபராதங்கள் கான் இதற்கு அடி –
நீ நோக்கிக் கொண்டு போந்த படிகளில் ஒரு குறை இல்லை
குணவானாய் இருப்பான் ஒரு புத்ரினைப் பெற்று நாட்டினை படுகுலை அடித்தாய் கான் –
பஹவ -உன் அளவு அன்று காண்-காக்கும் தர்மத்தில் அவர்க்கு உண்டான பாரிப்பு
விராஜயன் ராஜ ஸூதா ராஜமார்க்கம் நரை வ்ருதம்
ஹ்ருதயானி ஆமமந்தேவ ஜனச்ய குண வத்தையா -அயோத்யா -26-2-
பொன் முதலிய தாதுக்கள் இமய மலையைப் போன்று
சௌலப்யம் முதலிய குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருப்பவன் -என்கிறபடியே
நாட்டிலே சிலரை குணம் இல்லாதவர் என்று பழித்தும்
சிலரை குணவான்கள் என்று கொண்டாடுகிறதும்
இன்ன ஆகாரத்தின் பொன் -என்று விலை பெறுமா போலே
இன்னார் இடத்திலே இருக்கிற குணம் -என்று ஆயிற்று புறம்பு விலை போவது
சிறந்த குணம் உள்ளவர் ஆகையாலே மக்களின் மனத்தினைக் கடைந்தவர் போல் ஆனார் -எனபது ஸ்ரீ ராமாயணம் –

———-

ப்ரிய வாதீ ச பூதா நாம் ஸத்ய வாதீ ச ராகவா -2-33-

ராமன் பிராணிகளுக்கு பிரியமானதை பேசுவான் -உண்மையானதை பேசுவான்

திருவாய் -7-1-ப்ரியவாதீ ச –பெருமாள் ஒன்றை அருளிச் செய்தால் அது செவிப்படாது ஒழியில் செய்யலாவது இல்லை -செவிப்பதில் இனியதாய் அன்றி இராது
யாருக்குத் தான் என்னில்
பூதா நாம் -சத்தா யோகி ஸகல பதார்த்தங்களுக்கும் -அஸத் வ்யாவ்ருத்தி மாத்ரமே வேண்டுவது –
அப்போது பிரியமாய் விபாகத்தில் வேறு ஒன்றைப் பலிக்குமோ என்னில்
ஸத்ய வாதீ ச -அருளிச் செய்யுமது தான் பூத ஹிதமாய் அன்றி இராது என்கிறது
ஒரு யுக்தியே இரண்டுமாகா நின்றாள் அல்லாததுக்குச் சொல்ல வேண்டா விறே

————

வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவம் துக்கித –2-41-

மனிதர்களின் வ்யாசனங்களால் மிகவும் துக்கித்தவனாக ராமன் ஆகிறான்

வண் தீங்கவி செய்குந்தன் தன்னை எந் நாள்சிந்தித்து ஆர்வனோ?-7-9-7-வண் தீம் கவி செய் குந்தன் – வளவியனவாய் இனியனவாய் இருந்துள்ள கவிகளைப் பாடி, அது தனைத் தன் பேறாக நினைத்திருக்கும் தூய்மையையுடையவன். என்றது, 3‘துயர் அறு சுடர் அடி’ என்பது போன்று, இவரைக்கொண்டு கவி பாடின பின்பு தன் துயர் தீர்ந்தானாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4இவர் துயர் போன பின்பு, தனக்கு ஒரு துயர் உண்டாய் அது போனாற்போலே நினைத்து இராநின்றானாயிற்று. 5சரீரத்துக்கு வந்த வியாதி அனுபவிப்பான் சரீரி அன்றோ? ‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் -திவ்விய அந்தப் புரத்திலுள்ளர்க்காதல் திருத்தாய்மார்க்காதல் ஒரு துன்பம் வந்தாலோ துக்கத்தையுடையவராவது? என்றால், மநுஷ்யாணாம் ப்ருஸம் துக்கிதோ பவதி – துக்கத்தையுடையவனான அளவன்றிக்கே, யானை அளறுப்பட்டாற்போலே நோவுபடுவார் ஆயிற்று,

‘வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருஸம் பவதி துக்கித:
உத்ஸவேஷூ ச ஸர்வேஷூ பிதேவ பரிதுஷ்யதி’-என்பது, ஸ்ரீ ராமா. அயோத். 2 : 40.

இன்று ஒரு படியாய், பிற்றை நாள் ஒரு படியாய், பின்னர் ஆறிப் போம் இவர்களுக்கு; இவர்கள் துக்கத்தில் நாள்தோறும் புதியராய் இருப்பர் ஆதலின். ‘துக்கிதோ பவதி’ என்கிறது. 1‘வியஸநம் இவனதானால் துக்கமும் இவனதாகவேண்டி இருக்க, இவர் துக்கத்தையுடையர் ஆதற்குக் காரணம் என்?’ என்னில், ‘இவன் படுகிற கிலேசம் இவன் காவற்சோர்வால் வந்தது ஒன்று அன்றே, நம் காவற்சோர்வாலே வந்தது ஒன்று அன்றோ?’ என்று காவலர் ஆகையாலே நாள்தோறும் புதியராய் இருப்பர் என்க.

இது எனக்கு மிகவும் நாணமாய் இருக்கின்றது; நீங்கள் என் குற்றத்தைப் பொறுக்க வேண்டும்,’ என்னுமவர் அன்றோ?

‘ப்ரஸீதந்து பவந்த: மே ஹ்ரீ: ஏஷாஹி ம்ம அதுலா
யத் ஈத்ருஸை: அஹம் விப்ரை: உபஸ்த்தேயை: உபஸ்தித:’-என்பது, ஸ்ரீ ராமா. ஆரண். 10 : 10.

————–

சைத்ர ஸ்ரீ மான் அயம் மாச புண்ய புஷ்பித காநந –3-4-

திருப்பாவை -1-சைத்த்ரச் ச்ரீமா நயம் மாஹ -என்று-
ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-சைதர–

அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுகககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாச –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ்சர்வ லோகாநாம்த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்
பாவனமாயும்
போக்யமுமாயும் இருக்கை-

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –

———-

ரூப ஒவ்தார்ய குணைர் பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம் –3-28-

முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.
-5-3-6-

“ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை. “குணம்” என்றது, கொள்ளுகிறவனைக்காட்டிலும் தாம் தாழநின்று கொடுக்கும் சீலத்தை. தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ; அதற்காகத் தாழநின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது. “பும்சாம்” – 2அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி. அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றாற்போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும் ஈடுபடுத்த வல்லன என்னவுமாம். “திருஷ்டி சித்தாபஹாரிணம்”-3கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின்செல்லுமத்தனை நெஞ்சு. தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ –

———–

ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -6-1-என்றபடி. 

ஆராஅமுதே – 5-8-1-1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.

———

ஜ்ஞாதி தாஸீ யதோ ஜாதா –7-1

இதனால், ‘நிலமிதியே இராம பத்தியை விளைக்கும்’ என்கை. ‘இந்தத் தேசமானது விரும்பினவற்றை எல்லாம் தரக் கூடியத்’ என்கிறபடியே அன்றோ? 1கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ?

நற்பால் அயோத்தியில் – 7-5-1-நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் – இடம்.

‘பவித்ரம் பரமம்
புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.

    ‘மானத்து வண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.’என்பது, திருவரங்கத்தந்தாதி.

‘ஜ்ஞாதி தாஸீயதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா
ப்ரஸாதம் சுந்த்ர ஸங்நாஸம் ஆருரோஹ யத்ருச்சாயா’என்பது, ஸ்ரீராமா. அயோத். 7 : 1

‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது.2‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ? 

——

அஹம் புநர் தேவ குமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யன் அபி தர்சநேந பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ
-12-106-

இவருக்கும் அவ்வல்லவியோ என்று சிறியாத்தான் கேட்க -தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி ரிஷி கரி பூசுகிறான் என்றார் –
அலங்க்ருதம் -அத்தாலும் வெறும் புறம் கிடீர் ஒரு போலி சொல்லலாவது -ஒப்பித்தால் ஒக்கச் சொல்வார் இல்லை
தம் ஸூதம் -இவனுக்கு இரண்டு படியும் உத்தேச்யமாய் இருக்கிற படி
ஆவ்ரஜந்தம்–புஷ்பம் அலரும் போது எங்கும் ஓக்க பிறக்கும் விகாஸம் போலே -அதுவும் வண்டை நோக்கி இறே–ஐவரும் போக்தாக்களைக் குறித்து இறே
நந்தாமி பஸ்யன் அபி –கண்டபடியே இருக்கச் செய்தே காணாது கண்டது போலே யாயிற்று நாள் தோறும் நாள் தோறும் க்ஷணம் தோறும் க்ஷணம் தோறும் உகக்கும் படி –
தர்சநேந –அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா -காட்சியே அமையும் -கரை புரண்டு அனுபவம் உள்ள இடத்திலே போலே காணும் பிரயோஜனம்-ஸதா பஸ்யந்தி இறே
பவாமி த்ருஷ்ட்வாஸ புநர் யுவேவ –அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் வயசைப் புக்கு வ்ருத்தனான சக்ரவர்த்தி பெருமாளைக் கண்ட பின்பு பெருமாளுக்கும் தனக்கும் வாஸி தெரியாதபடி யானான்
காளையைப் பயந்த காளை என்னுமா போலே -தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலவே ஆக்கி உஜ்ஜீவிப்புக்கும் விஷயம் போலே காணும்
யுவேவ வஸூதேவ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் -என்னும்படி யானாரே இறே வஸூ தேவரும்

தத்ர காஷாயிணோ வ்ருத்தான் வேத்ர பாணீந் ஸ்வலங்க்ருதான்
ததர்ச விஷ்டிதான் த்வாரி ஸ்த்ரயத்யஷான் ஸூ ஸமாஹிதான்
–16-3-

சூடுமலர் குழலீர்” -5-9-3-அவன்தான் வந்தாலும் இவளுக்கு முன்னே விரும்புவது இவள் சம்பந்தமுடையார்களை அன்றோ. “தத்ர காஷாயிந:– அங்குக் காவி உடையணிந்தவர்களை;” தங்கள் தங்களைப் பேணுமவர்கள் அல்லாமையாலே அழுக்குச் சட்டையும் தாங்களுமாயன்றோ இருப்பது.

ஒரு சம்வாதம் காட்டுவதற்காக, மேலே கூறியதனை அநுவதிக்கிறார்
‘அவன்தான்’ என்று தொடங்கி. சொல்லப்போகும் அர்த்தத்திற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘தத்ர’ என்று தொடங்கி.

தத்ர காஷாயிந: வ்ருத்தாந் வேத்ரபாணீந் ஸ்வலங்க்ருதாந்
ததர்ஸ விஷ்டிதாந் த்வாரி ஸ்த்ர்யத்யக்ஷாந் ஸு ஸமாஹிதாந்”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 16 : 3.

இந்தச் சுலோகத்தில் “ஸு அலங்கிருதாந்” என்பதுவே இங்கு வேண்டுவது.
“ஸு அலங்கிருதாந்” என்றதிலுள்ள “ஸு ” என்ற பதத்துக்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பெருமாளுடையவும்’ என்று தொடங்கி.

“விருத்தாந் – முதிர்த்தவர்களை;” தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும். “ஸுஅலங்க்ருதாந் – தங்களை அலங்கரித்தவர்களை;” பேணாத பரிவட்டங்களையுடையராய் விருத்தருமாய் இருந்தார்களாகில் இவர்களுக்கு அலங்காரமாவது என்? என்னில், பெருமாள் சக்கரவர்த்தி மாளிகையிலே போய்த் திருமஞ்சனம் ஆடி அமுது செய்து மீண்டு திவ்ய அந்தப்புரத்துக்கு எழுந்தருளும்போது, சக்கரவர்த்தியைப் போன்று, பழையராகையாலும் தங்கள் பரிவாலுமாக இவரை மடியிலே வைத்து அணைத்து உச்சியை மோந்துவிடுவர்கள்; அதனாலே, குங்குமக் குழம்பும் கோயிற்சாந்துமாக இருப்பர்கள். பெருமாளுடையவும் பிராட்டியுடையவும் ஒப்பனை போலன்று இவர்கள் ஒப்பனை. அப்படியே இவர்களும் ‘சூடுமலர் குழலீர்” என்னும்படியாயிருக்கிறபடி.

————–

பதி ஸம்மாநிதா ஸீதா பர்த்தாரம் அஸி தேஷிணா
ஆத் வாரம் அநுவவ்ராஜ மங்கலான் யபிதத்யுஷீ —
16-2-

புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே -திரு விருத்தம் –24–

பதி சம்மாநிதா சீதா -அயோத்யா காண்டம் -16-21–
பெருமாள் சக்கரவர்த்தி பாடு சுமந்த்ரன் அழைக்க
எழுந்து அருளுகிற பொழுது ,
தொடர்ந்து-பின்னே புறப்பட்ட பிராட்டிக்கு
திரு தோளிலே மாலையை வாங்கி இட்டு ,
நாம் வரும் அளவும் விருத்த கீர்த்தனம் பண்ணி இரு என்று பழையவர்கள் நிர்வாகம் —
மாலையை இட்டு திரு அடிகளைப் பிடித்துக் கொண்டு எழுந்து அருளினார்-என்று பட்டர்..

(சூடிக்களைந்த மாலையையா தருவது என்று அபராத ஷாமணம் பண்ணிப்போந்தான் என்றபடி )

அஸி  தேஷணா –
இவர் தோளில் மாலை  இட்டதுக்கு
இவள் கண்ணாலே மாலை இட்ட படி-

(அரும்பூதம்
பதி பார்யைக்கு ஸம்மானம் பண்ண வேண்டுமோ
வஸ்திர பூஷணம் இவளுக்கு வேண்டாமே ஜனகராஜன் திருமகள்
தம்மைக்குறித்து பாரதந்தர்யம் காட்டவோ எண்ணில்
ஐயர் பார்த்து பண்ணிய கல்யாணம்
இனி உசிதம் என் என்னில்
தனக்கு அபிமதமான மாலை இவளுக்கு தாரகம் என்று
அபராத ஷாமணமும் பண்ணிப் போந்தான் என்று பட்டர் )

—-

தீஷிதம் விரத ஸம் பந்நம் வராஜி நதரம் சுஸிம்
குரங்கச் ஸ்ருங்க பாணிஞ்ச பஸ்யந்தீ த்வா பஜாம் யஹம்
–16-28-

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே-14-2-

முடை நாற்றம் அனுபவிக்க வேணும் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –

தீஷிதம் –
திரு மேனியிலே பூசின வெண்ணெயும்
போர்த்த உறுப்புத் தோலும்
யஜமான வேஷம் தோற்றும்படியாக இருக்கும் படி

வ்ரத சம்பன்னம் –
ரிஷி சொன்ன வளவன்றிக்கே –
அவன் ஒரு பட்டினி விடச் சொல்லுமாகில் இரண்டு பட்டினி விடுவர்

வராஜி ந்தரம் –
நல்ல பரியட்டங்கள் சாத்துமது அன்றிக்கே
வராஜி நதரராய் மான் தோலை அறிந்து -இருப்பார்

ஸூசிம்
ஒருவரையும் ஸ்பர்சிக்காலாகாது
பிராட்டி ஒருத்தியையும் செய்யலாவது இல்லை இறே -என்றால்
அவர் தன்னை ஸ்பர்சிக்கிலும்-அடுத்தடுத்து முழுகா நிற்பார்

தீஷிதம் வ்ரத சம்பன்னம் வராஜி ந்தரம் ஸூசிம் -குரங்க ஸ்ருங்க பாணிம் ச
பஸ்யந்தீ த்வாம் பஜாம்யஹம் -அயோத்யா -16-23-
(மான் கொம்பு வைத்து உடம்பை சொரிந்து கொள்ள கையால் பண்ண கூடாதே )

இதற்கு எதிர் தட்டு இறே –
கறையினார் துவருடுக்கை -கடையாவின் கழி கோல் கைச் சறையினார் தளிர் நிறத்தால் குறைவிலமே–திருவாய் -4-8-4-
அவன் விரும்பாத ப்ரஹ்மசாரி நிறத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
இப்படியே குணுங்கு நாற்றமாய்த்து இவள் உகப்பது –

பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும்  காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக

இன்பத்துக்காகத் துதிக்கிறாள் காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?-நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?    

———

யச்ச ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ஸ வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே —
17-14-

வாடினேன் வாடி வருந்தினேன்-1-1-1-

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து- -ராமம் என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை
காணாது இருக்கிறான் யாவன் ஒருவன் -எத்தைனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்
இது தப்பினாலும் –
தப்பாதது தப்பினால் வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
பெருமாள் கடாஷம் தப்பாது இறே
யஞ்ச ராமோ ந பஸ்யதி -எத்தனையேனும் சிறியாரும் இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆகாதார் இல்லை –
யெம் -எத்தைனையேனும் சிறியவன் என்கிறது
எத்தனையேனும் சிறியார் இறே இவன் கண் பார்வைக்கு இலக்கு ஆவர்

யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -1-3-4-

ப்ரஹ்மாதிகள் ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்

எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும்
பெருமாளுடைய ஒரு நாளைப் புறப்பாடு காணான் ஆகில் அவன் பெரியன் அல்லன்

எத்தைனையேனும் சிறியான் ஆகிலும் அவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை
தப்புகிறான் யாவன் ஒருவன் அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் படான்
எண்ணப் படாமையிலே எண்ணப் படும்
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் படும்
இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் துடக்க மானவர் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ் சவ சேல்லோகே -லோகே நிந்தித -இவனை நிந்திக்க உரியர் அல்லாதார் இல்லை

விஷய பிரவணன் ஆனவன் -இப்போது பழியாய் மேல் நரகமாய் இருக்கச் செய்தே தான்
நல்லது செய்கிறோம் என்று இறே இருப்பது –
அப்படித்தான் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே -தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும் –

திருக் கைத்தலம் இழந்தவன் -இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம் கர்ப்பூரமும்
எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல் ஆயிற்று -என்று இருக்கும் இறே –
(இராப்பத்து ஏழாம் நாள் ஆழ்வாருக்குக் கைத்தலம் சேவை
திருக் கார்த்திகை அன்றும் கைத்தலம் சேவை)
ஒரு நாள் புறப்பாடு இழந்தார் வார்த்தை இதுவானால் -அநாதி காலம் இழந்தவருக்கு
வாடினேன் -என்று அல்லது வார்த்தை இல்லை இறே

வாடினேன் -என்கிற இது தான்
எவ் வஸ்த்தையைப் பற்றிச் சொல்லுகிற வார்த்தை –
விஷய ப்ரவணராய் போந்த போது அவற்றை அநுபவித்து களித்து போருகையாலே வாட்டம் இல்லை
பகவத் விஷயத்தில் கை வைத்த பின்பு தானே வாட்டம் இல்லை –
ஸ்வரூப ஞானம் பிறந்து பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்த போதை வார்த்தை –
(ஞானம் பிறந்து பிராப்தி பெற உள்ள இடைப்பட்ட காலத்தில் தானே வாடினேன் என்போம்)
ப்ராப்தி சமயத்தில் இறே பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரியாது ஒழிவது –
நோ பஜனம் ஸ்மரன் -என்னும் அளவில் வந்தது இல்லை இறே
ஞான லாப வேளையாகையாலே பூர்வ வ்ருத்தாந்தம் தான் இவருக்கு பிரத்யஷம் போலே இறே தோற்றுகிறது

வாடி என்கிற
இவ் அனுபாஷணம் இரண்டு இடத்திலும் பொருள் பெற்று கிடக்கிறது –
அநாதி காலம் இவ் இழவு ப்ரவ்ருத்தமாய் போந்தது  என்றும்
மேலே ஒரு அநர்த்தத்தை விளைத்தது என்றும் தோற்றுகிறது –
(வாடினேன் வாடி -தொடர்கிறது என்றும் வாடி வருந்தினேன்-அனர்த்தம் – என்றும் இரண்டு இடத்திலும் அன்வயம் – )

————–

ந நூநம் மயி கைகேயி கிஞ்சிதாசம்ஸஸே குணம்
யத் ராஜாநம் அவோசஸ் த்வம் மமேஸ்வரதரா ஸதீ
-19-24-

சிற்றவை பணியால் முடி துறந்தானை-2-3-1-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

——

ராஜ்யஞ்ச தவ ரஷேயம் அஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜாநாமி தே வீர மா பூவம் வீர லோக பாக்
—-23-28-

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத்தாம்பு வியாக்யானம்-அவதாரிகை 

ராஜ்யஞ்ச தவ ரஷே பமஹம் வேலேவ சாகரம் பிரதிஜா நாமி தேவீர மாபூவம் வீர லோக பாக் -என்று
ராஜ்யஞ்ச தவ ரஷேபம்
ராஷ தர்மேண பாலேன-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன்
எனக்கு தார்த்த்யம் ஸ்வரூபம் ஆகையாலும் உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
மஹம் வேலேவ சாகரம் –
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும் கரையை அதிகரிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் ஏன்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும்
பிரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்
தேவீர –
ஒரு கோழை முன்னேயோ பிரதிஜ்ஞை பண்ணுகிறது
பிரதிஜ்ஞை பண்ணினால் அதைத் தலைக்கட்டித் தரவல்ல ஆண்பிள்ளைத் தனம் உடைய உம்முடைய திரு முன்பே யன்றோ
மாபூவம்
இப்படி செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியில் வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன்
வீர லோக பாக்
உம்மை முடி சூடி அனுபவிக்கப் பாரித்து அது பெறாதே போன சக்கரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் என்கிறபடியே நிர்பந்தித்து
அடிமை செய்கை அன்றிக்கே சேஷி யுகந்த அடிமை செய்யக் கடவது என்னும் இடத்தை அனுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான் –

————-

ஈர்ஷ்யா ரோஷவ் பஹீஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம்
நய மாம் வீர விஸ் ரப்த பாபம் மயி நவித்யதே
-27-8-

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே-பெரிய திருவந்தாதி–9-
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

ஈடு பிரவேசம் -6-2-

வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்

தர்மாபதேஸாத் த்யஜ்த: ச ராஜ்யம்
மாம் ச அபி அரண்யம் நயத: பதாதிம்”-  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 29.

இப்புடைகளிலே சொன்னவை பலவே யன்றோ.

———————

கிந்த் வாமந்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜா மாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –3
0-3-

அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2–பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே

நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை  சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே   –

திருவாய் ஈடு ப்ரவேஸம்-

இப்படிப் பிரணயரோஷத்தாலே ஊடின பேர் உளரோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘மிக்க அன்பினால்’ என்று தொடங்கி.

“ப்ரணயாச்ச அபிமாநாச்ச பரிசிக்ஷேப ராகவம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 2. எடுத்த சுலோகத்திற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘அவரோடு உண்டான’ என்று தொடங்கி. வேண்டப்பாடு
– பெருமை. பலகாலம் பழகினவன் விட்டுப் போகப் புக்கால்
கோபமாமேயன்றோ. மேலும், ஒரேபொருள் என்னலாம்படி கலந்தவன்
விட்டுப் போகப் புக்கால் கோபமாமேயன்றோ. ஆதலால், பலகாலம்
பழகுதலும், கலவியும் மேலிட்டு வார்த்தை சொல்லுகைக்குக் காரணங்களாம்
என்க. தனக்குப் பரதந்திரராயிருந்தவர் விட்டுப் போகப் புக்கால் கோபமாம்
ஆதலாலும், ‘என்னுடையவரன்றோ என்கிற வேண்டப்பாடும்’ மேலிட்டு
வார்த்தை சொல்லுகைக்குக் காரணமாகும் என்க. மேலிட்டு வார்த்தை
சொல்லுகையாவது, வீரனானவனை வீரன் அல்லாதவனாக்கி வார்த்தை
சொல்லுதல்.

என் சொன்னாள்? என்னில், 2‘வாரீர்! ஒருவனுக்கு ஆற்றா ஒருத்தி உண்டோ? என் ஒருத்தியையும் நோக்க மாட்டாமையே வைத்துப் போகப் புகுகிறது! இதுதன்னை எங்கள் ஐயர் கேட்டால் போரவெறுப்பர்;’ “ஒருபெண்பெண்டாட்டி ஆண் உடை உடுத்து என்மகளைக் கைப்பிடித்துக் கொண்டுபோன இத்தனையாகாதே என்று இராமே கடுகக் கொண்டு போகப் பாரும்.”‘ஒரு பெண் பெண்டாட்டி’ என்று தொடங்கிச்
சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்.

“கிம்த்வாம் அந்யத வைதேஹ: பிதாமே மிதிலாதிப:
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்திரியம் புருஷவிக்ரஹம்”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 30 : 3.

3“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்கிருத்ய – பிறர் உயர்த்தி கண்டால் பொறுக்கவேண்டாவோ? நான் ‘உம்மோடு கூடப்போர’ என்றுறப்பட்டு நாலடி இட்டால், எனக்கு அதனால் வரும் ஏற்றம் கண்டு பொறுக்கமாட்டாமையால் உண்டான கோபம் பொறாமை இவற்றைப் பொகடும்.

“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்
நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான். 2பிரணயிகள் கோஷ்டியில் இங்ஙனே காணும் பரிமாற்றம். காதலிக்கு உண்டான தன்னேற்றம் தன்ன தாயிருக்க வேண்டாவோ? நய மாம் வீர – 3என்னை அறியாதது போன்று உம்மையும் அறிந்திலீராகில், நான் சொல்லக் கேளும். உமக்கு ஒரு குறையும் இல்லைகாணும்; என்னைக் கொடு போகப் பாரும். விஸ்ரப்த: – தங்கள் தங்களை அறியாவிட்டால் ஆப்தர்வாயிலே கேட்டு அறியவேண்டும் காணும். பாபம் மயி ந வித்யதே – 4பொகடும்; இங்ஙன் அன்றாகில், நீர் என்னை இங்கே நிறுத்திப் போனால், நீர் மீண்டு வருந்தனையும் தரித்திருக்கைக்கு வேண்டும் காரணம்எனக்குஇல்லைகாணும்.” 1இப்படியே யன்றோ பிரணயரோஷம் தலைஎடுத்தால் இருக்கும்படி.

2இவ்வளவேயோ? இன்னம், இவர்தாம் இலக்காகச் சொன்னவையன்றோ இவை! இவர் வரவிட்ட ஆளின்முன்பேயும், “ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்த பெருமாள், க்ஷேமத்துடன் இருந்தால் கோபத்தால் பிரளய காலத் தீயினைப் போன்று புறப்பட்டவராய், கடலை மேகலா பரணமாகவுடைய பூமியை ஏன் கொளுத்தவில்லை” என்னுமவள் அன்றோ“குஸலீயதி காகுத்ஸ்த: கிம்நு ஸாகரமேகலாம்
மஹீம் தஹதி கோபேந யுகாந்தாக்நிரிவ உத்தித:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 14.

3காகுத்ஸ்த:- பரிபவம் பொறாத குடியிலேயன்றோ தாம் பிறந்தது; ‘பிறர்க்கு வந்தவை போக்குமத்தனையல்லது, தமக்கு வந்தனவற்றைப் போக்கலாகாது’ என்று இருக்கிறாரோ? கிம் நு ஸாகர மேகலாம் மஹீம் தஹதி – ‘நீர்ப்பண்டத்திற்கு ஓர் அம்பும் கடினப் பொருளுக்கு ஓர் அம்பும் வேண்டும்’ என்று இருக்கிறாரோ? கடலில் நீரே நெய்யாக எரிக்கவல்ல அம்பையுடையவரன்றோ. 4ஒக்கக் கைப்பிடித்தவளாகிலும் பரிவட்டம் பேணியிருக்கும்படி வைத்தாரேயன்றோ; இராஜாக்களுக்குப் பூமியும் பெண்போலேயன்றோ; ஈசுவரர்கள் படைத்தபடி கிடப்பது இவர் கண்சிவக்குமளவுமாகாதே என்றும்,“பித்ரு வசன பரிபாலநம் என்கிற வியாஜத்தாலே ராஜ்யத்தைவிட்டவரும், என்னையும் கால்நடையாகக் காட்டில் அழைத்து வந்தவருமான எந்த ஸ்ரீராமபிரானுக்கு” என்கிறபடியே, பித்ருவசன பரிபாலனம் செய்யப் போந்தாரோ? என்னை நலிகைக்காகப் போந்தாரத்தனையன்றோ என்றும்-

————

யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ
–30-18-

நலம்என நினைமின் நரகுஅழுந் தாதே;
நிலம்முனம் இடந்தான் நீடுஉறை கோயில்
–2-10-7-காட்டில் போமது துக்கம்; படை வீட்டிலே இருப்பது சுகம்’ என்று அருளிச்செய்தார் பெருமாள்; அங்ஙனம் அன்று, சுக துக்கங்கள் வடிவந்தோறும் முடிவு செய்யப்பட்டதாய்க்காணும் இருப்பது; 1‘உம்மோடு கூடிய யாதொரு வாசம் உண்டோ, அது சுகமாகிறது; உம்மை ஒழியப் படை வீட்டில் இருக்கும் இருப்புத் துக்கமாகிறது; இதிஜாநந் – தந்தாமுக்கு இல்லாதவை பிறர் பக்கலிலே கற்று அறிய வேணுங்காணும்; பராம் பிரீதிம் – உம்மைப்போல் நிறுத்து அல்லகாணும் என்னுடைய பிரீதி இருப்பது?’ என்று கூறினார் இளையபெருமாள்.

    ‘நன்று; நம்மில் உனக்குப் பிரீதி மிக்கது எனச்சொன்னாய்; அதற்கு நம்மைச் சொல்லுகிறது என்?’ என்ன, ‘கச்ச ராமமயாஸஹ. ‘என்னோடு கூடிப் புறப்படும்’ என்றும், 2‘அக்ரதஸ்தே கமிஷ்யாமி – நான் புறப்பட்டபடியே, என்னை முன்னே போக விட்டுப் பின்னே வரப்பாரும்,’ என்றும் கூறுகிறார் மேல். ‘ஆயின், பிராட்டிமார்க்கு அன்றோ பிரிவு நரகமாகத் தோற்றும்? ஆடவரான இவர்க்கு அப்படித் தோற்றுமோ?’ எனின், 3‘இராகவரே! உம்மாலே பிரிந்திருக்கப் பெற்ற பிராட்டி இலள் ஆவள்; நானும் அவ்வாறே; பிழைத்திருப்போமேயாயின், தண்ணீரினின்றும் எடுக்கப்பட்ட மீன் போல ஒரு முகூர்த்த காலமே உய்ந்திருப்போம்’ என்றார் அன்றே இளையபெருமாள்?

———

ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வாபி லோகாநாம் காமயே நத்வ யாவிநா
-31-5-

ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-பெரிய திருவந்தாதி -79-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )

அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –

ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே

ஈடு மஹா ப்ரவேஸம் -வானவர் நாடு என்கிற பரமபதம் -ஆத்ம லாபம் -லோகா நாம் ஐஸ்வர்யம் இவை அனைத்தும் மக்குப் புறம்பாய் வருமன்று வேண்டேன்-

குருஷ்வ மாம் அநு சரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே –31-24-

திருவாய் -2-9-ப்ரவேஸம்-ஸ்ரீராமபிரான் ‘நில்’ என்ன, 1‘குருஷ்வ – செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்; 2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச் சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான் இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே, ‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச் சொல்லுகைக்குத்தக்கவனாம்படி இருக்கை அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின் செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் – பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால், பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப் பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர் எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக் காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :- பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: – 2நாம் நம் சொரூபத்தை அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத் தரவற்றாயிற்று-

————

ஸ்ருஷ்டஸ்த்வம் வந வாஸாய ஸ்வநுரக்தஸ் ஸூஹ்ருஜ் ஜநே
ராமே ப்ரமாதம் மாகார்ஷீ புத்ர ப்ராதரி கச்சதி –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10—ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகிதர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –3-9-9- 2வாய் வந்தபடி சொல்ல வல்லார் இவரே ஆவர். அவன் தன்னைஏத்துகைக்குத் தந்த வாயைக்கொண்டு புல்லரைக் கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன்; 1‘நான் பிறரைக் கவி பாடினால் என்னைப் படைத்ததனால் ஆய பயனை அவன் பெற்றானாம்படி என்? படைப்பிற்குப் பயன் பகவானை அடைதலேயோ?’ எனின், 2தன்னை உத்தேசித்தே அன்றோ படைப்பு? 3‘புத்திரனே! அழகாலே துவக்க வல்ல ஸ்ரீ ராமபிரானிடத்தில் மிக்க பற்றுதலையுடைய நீ, காட்டில் வசிக்கும்பொருட்டே உண்டுபண்ணப்பட்டாய்;உடன் பிறந்தவனான ஸ்ரீ ராமபிரான் சீதையோடு போகும்போது குறிக்கோள் இல்லாமல் இராதே,’ என்றாள் தேவி சுமித்திரை.

 ‘ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாஸாய
– ‘ஐயரையும் ஆச்சியையும் அநுவர்த்தித்துப் பெருமாள் காடேற
எழுந்தருளா நின்றார்; நானும் அவரை அநுவர்த்தித்துப் போகிறேன்,’
என்று இளைய பெருமாள் அறிவிக்க, ‘உமக்கு முடி வேணும் என்று
அபேக்ஷை உண்டாகில், முடி சூடுகைக்கு யோக்கியனாயிருப்பான் ஒருவன்
வேணும்’ என்றதற்கு ஈடாக நோன்பு நோலேனோ? அவரை
அநுவர்த்திக்கைக்காக அன்றோ நான் உம்மைப் பெற்றது? ஸூஹ்ருஜ்ஜநே
ராமே – ஸ்வநுரக்த: – உபதேச நிரபேக்ஷமாகப் பெருமாள் திருவடிகளுக்கு
நீரே பரிவரிறே; நான் இன்று இருந்து சொல்ல வேண்டுவது ஒன்று
உண்டோ? அடிமையில் உண்டான ருசி செவி கண்ணாகக் கண்டு அடிமை
செய்யுமவரிறே. அன்றிக்கே, ஸ்வநுரக்த: ஸூஹ்ருஜ்ஜநே – ‘கருமுகை
மாலையை வெயிலிலே இட்டாற்போலே, பெருமாள்தம் சௌகுமார்யம்
பாராதே பித்ரநுவர்த்தநம் பண்ணிக் காட்டிலே போகாநின்றார்; என்
புகுகிறதோ!’ என்று வயிறு எரிந்திருக்கின்ற ஸூஹ்ருஜ்ஜநங்களுக்கு
நல்லீரிறே. ‘ஸூஹ்ருஜ்ஜனம்’ என்றது, திருத்தாயார் தொடக்கமான படை
வீட்டில் உள்ளாரை. ‘அவர்களுக்கு வேர்ப்பற்றான இவரை நோக்கித்
தாரீர்’ என்றுமாம். ராமே – நடக்கை மிகையாம்படி, வெறுமனே
இருந்தாலும் ஆகர்ஷ்கமான வடிவழகையுடையவர், ராமே ப்ரமாதம்
மாகார்ஷீ: – ‘பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த்த:’ (ஸ்ரீராமா. பாலா. 18 : 27.)
என்று, அவதார காலமே தொடங்கி அந்வயத்தில் தரித்து வியதிரேகத்தில்
தரியாதவர்க்கு இன்றாக ஒரு பிரமாதம் புகுருகைக்கு ஒரு சங்கை
இல்லையிறே; சம்பாவிதமானது ஒன்றைச் சொல்லுகிறாளாக வேணுமே.
பிராதரி கச்சதி – அவர் உம்முடைய முன்னே நடப்பர் கிடீர்; அவ்வழகிலே
கண்வைத்து, நீர் அதிகரித்ததற்குச் சோர்வு பிறவாதபடி குறிக்கொள்ளும்.
அக்ரத: ப்ரயயௌ – (ஸ்ரீராமா. ஆர. 11 : 1.) நடைச் சக்ரவத்துப்
பிடிக்கலாம்படி. ‘ஆடல் பாடல்’ இத்யாதி.’ இப்பாசுரம், பெரியாழ்வார்
திருமொழி, 3. 6 : 4.

————

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –
40-9-

நான்முகன் -47–ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –

———

யேது ராமஸ்ய ஸூஹ்ருத ஸர்வே தே மூட சேதஸ
சோக பாரேண சாக்ராந்தா சயனம் நஜ ஹுஸ் ததா

நாச்சியார் திருமொழி -3-1-யேது -சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் -ஸ்ரீ கௌசல்யார் மங்களா ஸாஸனம் பண்ணி விட்டார் -அவ்வளவு அன்றிக்கே பத்தன்பதாம் பாஷையாயத்து தோழன்மார் படி
ராமஸ்ய ஸூஹ்ருத -தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உடப்புக்கவர்கள் இறே தோழன்மார் ஆகிறார் -தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மை எண்ணிப் போந்தவர்கள் படு குலைப்பட்டார்கள் என்கிறது
ஸர்வே தே -ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே
மூட சேதஸ–ஸூஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்திருந்து காலைக்கட்டி மீளாது ஒழிவான் என் எனில் -அறிவு கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் சிறப்பு இல்லாத போதும் செய்யப் போகாது இறே
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தா -மலை அமுக்கினால் போல் சோகம் அமுக்கா நிற்கச் செய்வது என்
சயனம் நஜ ஹுஸ் ததா -படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்களாகில் மீட்டுக் கொடு புகுந்த வாசி அன்றோ -தந்தாமே படுக்கையில் கிடந்து போந்தவர்கள் இறே

———-

புத்ர த்வய விஹீ நம் தத் ஸ்நுக்ஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ர மிவாம்பரம்
–42-30-

ஈடு -6-7- ப்ரவேஸம்-க்ஷுத்ரவிஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார். 2‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள்.-

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான். ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி

புத்ரத்வயலிஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.

3குழைசரக்கு அறுத்துக்கொண்டு போனபடி. அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது. 5“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ளபடியேயாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள்கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

———

ராமம் மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ
–42-34-

என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17-
நரஹாவகமான விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த
என் கண்கள் கிடீர்
இவ் விஷயத்தைக் கண்டு களிக்கின்றன

இணை –
களிப்புக்கு ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி வேறு
உபமானம் இல்லை-

முக்தர் சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் களிப்பும்
இக் கண்ணாலே இப்படி களிக்கிற இதுக்கு சத்ர்சம் அன்று –
கரணாதிபனான என்னை ஒழிய -தானே களியா நின்றன –

இந்த்ரியங்கள் ஞான பிரசரத்வாரம் என்கிற அந்நிலை குலைந்து
சேதன சமாதியாலே தானே களியா நின்றன –

ராமம் மே அநுகதா த்ருஷ்டி –

கர்த்தாவை ஒழியவே கரணங்களுக்கே
அந்வய வ்யதிரேகங்களிலே சோக ஹர்ஷங்கள் உண்டாம்படி இறே
விஷய ஸ்வபாவம் இருப்பது –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்--நாச்சியார்-10-7-
கண் உடையவர்களுக்கு நல்ல காட்சி இறே

ராமம் மே அனுகதா திருஷ்டி அந்யாபி ந நிவர்த்ததே-ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
சாது மா பாணி நா ச்ப்ருச
—அயோத்யா -42-43-
கடல் கொண்ட வஸ்து இனி மீளப் புகுகிறதோ
மே –
அக்கடலில் இலியாது இருக்க மாட்டாதார்க்கு ஏறப் போமோ
அந்யாபி ந நிவர்த்ததே –
அவரைக் காணப் பெறா விட்டால் அவரைப் பெற்ற சௌபாக்யம் உடைய உன்னைக் காண்கைக்கு
நல்ல காலம் இறே -இவ்வளவிலும் மீளுகிறது இல்லை
ந த்வா பஸ்யாமி கௌசல்யே-
பெருமாள் முகத்தில் விழிக்கப் பெறாதே –
கைகேயி முகத்திலே விழித்ததால் வந்த தாபம் எல்லாம் ஆறும் படி உன்னைக் காண வேணும் என்று
ஆசைப் படா நின்றேன் -அது செய்யப் பெறுகிறிலேன்-
சாது மா பாணி நா ச்ப்ருச-
இந்த்ரியங்கள் தான் நித்ய அதீந்த்ர்ய வஸ்துக்கள் ஆகையாலே கார்யகல்ப்யம் இறே –
ரூப க்ரஹண அபாவத்தாலே சஷூர் இந்த்ரியம் குடி போய்த்தது என்று இருந்தேன்
த்வக் இந்திரியம் கிடந்ததோ இல்லையோ என்று ஸ்பர்சித்து பார்க்க வல்லையோ
சாது ச்ப்ருச –
கைகேயியோடே க்ருத சங்கேதனாய் பெருமாளை காடேறப் போக விட்டான் -அவர் கை கழியப் போனார் -இனி மீளார்
என்று அறிந்தவாறே பொய்யே கூத்தடிக்கிறான் என்று இராதே
இவனுக்கு இது சம்சர்க்கத்தாலே வந்தது -ஐயோ என் செய்வான் பாவி அகப்பட்டான் -என்னும்
நெஞ்சோடும் கூட என்னை ஸ்பர்சிக்க வல்லையே
நானோர் முதலிலேன் –
அவன் கூட இருந்தால் போலே காணும் இவளுக்கு கண் உள்ளது -விஷயத்தை உண்டாக்கினால் பிரயோஜனம் இல்லை
கண் உண்டாய்க் காண வேணுமே —
சஷூர் தேவா நாம் -உத்தமர்த்த்யா நாம் —
என்னக் கடவது இறே –
கண்ணாவான் விண்ணோர் க்கும் மண்ணோர்க்கும் அவனே –

பவள வண்ணா எங்குற்றாய் –திருநெடும் தாண்டகம்–17
வடிவின் போக்யதையை அனுசந்தித்து கண்ணான் சுழலை இட்டு
முன்னாடி தோற்றாமையாலே –எங்குற்றாய் -என்கிறார் –

(பவளம் போல் விரும்பத் தகுந்த்தான வடிவு படைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று;
கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது.
இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையே யென்று சிலர் நினைக்கக் கூடுமேலும்
இங்ஙனே பொருள் கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;-
பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86)
“கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-
பண்டைத் தவளவண்ணா கார்வண்ணா சாம வண்ணா! கச்சிப், பவள வண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால்
கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது;
பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர் திருவடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆப்த தமருமான
அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம் )

ராமம் மே அநுகதா த்ர்ஷ்டி ரத்யாபிந நிவர்த்ததே
நத்வா பஸ்யாமி கௌசல்யே சதுமா பாணினா ஸ்பர்ச –

மே த்ர்ஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய கண்ணானது அபிராமதையைப் பற்றி பெருமாள் பின்னே போய்த்து –
ஆஸ்ரயத்தை விட்டு விஷயத்தின் பின்னே போய்த்து
பிறந்தகத்தில் சம்பந்தம் விஷயம் பெரும் அளவே காணும்

மே த்ர்ஷ்டி
என்று கண்ணைக் கொண்டாடுகிறான் –
நான் விஸ்லேஷத்தாலே தளர்ந்து தரைப் பட்டுக் கிடந்தேன்
கண் கூடப் போகப் பற்றது இறே –
கர்த்தாவாய் இராதே கரணமாக பெற்றிலேன் என்கிறான்

(கண்ணுக்கு உரியவனாக இல்லாமல் பார்க்கும் கண்ணாகவே இருந்து பேறு பெறாது இழந்தேனே)

அத்யாபிந நிவர்த்ததே –
இவ்வளவும் மீண்டது இல்லை –
உன்னுடைய தர்சனத்தாலே ஆஸ்வசிப்பிக்க யோக்யதை உண்டான தசையிலும் மீண்டது இல்லை –

நத்வா பஸ்யாமி –
ஆஸ்ரயமான நீர் இங்கே இருக்க
கண் அவர் பின்னே போகை யாவது என்னில்
காரணத்தைக் கொண்டு கார்யத்தை கற்ப்பித்தேன் -என்கிறான்
வந்து நிற்கிற உன்னைக் காணப் பெற்றிலேனே -அத்தாலே சொல்லுகிறேன் -என்கிறான்

நித்ய அனுமேயமாய் இறே இந்த்ரியங்கள் இருப்பது –
பதார்த்த தர்ஸனத்தாலே இந்த்ரியங்கள் உண்டு என்று அறிகையும்
அவை தோற்றாத போது இல்லை என்று அறிகையுமாய் இறே இருப்பது –

கௌசல்யே
கைகேயியாய் இட்டு காணாது ஒழிகிறேன் அன்றே

சதுமா பாணி நா ஸ்பர்ச –
என்னுடைய அதிக்ரமத்தை நினையாதே
துர்கதியைப் பார்த்து ஐயோ என்று இரங்கி
உன் கையால் என்னை ஸ்பர்சி என்கிறான்

அபிஷேகத்தைப் பாரித்து
காப்பைக் கட்டி வந்து ஏறப் போக விட்டேன் என்று பாராமல்
அவனைப் பிரிந்து முடியும்படியாய் விட்டதே என்று இரங்கி
ஸ்பர்சியாய் -என்கிறான்

கண்ணானது அவன் பின்னே போய்த்து
த்வக் இந்த்ரியம் போய்த்தோ இல்லையோ என்று அறியும்படி
உன் கையாலே தடவிப் பாராய் என்கிறான் -என்று
அருளிச் செய்வர் பட்டர் –

என்று தடவும் என் கைகள்–திருவாய் மொழி-3-8-3-கடல் கொண்ட பொருள் மீளுமோ? அறுபதினாயிரம் ஆண்டுமலடு நின்று பட்டினி விட்ட என் கண்கள் மீளுமோ? நல்லது கண்டு கால் தாழ்ந்தத்தை இனி நம்மது என்று வழக்குப் பேசினால் பசை உண்டோ? தன்னைக் கொண்டு காரியம் கொள்ள வேண்டும் இன்றைக்கும் உதவுகிறது இல்லை; அவரைக் காணாவிட்டால், அவரைப் பெற்ற சௌபாக்யமுடைய உன்னைக் கண்டு தரிக்க வேண்டும் இவ்வளவிலும் மீளுகிறது இல்லை,’ என்றான் தசரத சக்கரவர்த்தி.

‘ராமம் மேநுகதா த்ருஷ்டி: அத்யாபி நநிவர்ததே
ந த்வா பஸ்யாமி கௌஸல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ.’

‘என்னுடைய பார்வையானது ஸ்ரீராமனைப் பின் சென்றது, இப்போதும்
திரும்பவில்லை; கௌஸல்யே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை; என்னைக்
கையினால் நன்றாகத் தொடு,’ என்பது. ‘கடல் கொண்ட வஸ்து மீளுமோ?’
என்பது, ‘ராமம்’ என்ற சொல்லிற்கு பாவம், ‘அறுபதினாயிரம்’ என்றது
முதல் ‘பசையுண்டோ?’ என்றது முடிய, ‘மே’ என்ற சொல்லிற்கு பாவம்.
பசை – பிரயோஜனம். ‘தன்னைக்கொண்டு’ என்ற இடத்தில் ‘தன்னை’
என்றது கண்களை.

————–

கதம் தாசரதவ் பூமவ் சயாநே ஸஹ ஸீதயா
சக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸூகாநி வா
-51-9-

திருவிருத்தம் -30–நிசாம் அதிஷ்டத் பரிதோச்ய கேவலாம்  –என்று பெருமாள்
ஸ்ரீ குகப் பெருமாள் பரிசரத்தே கண் வளர்ந்து அருளுகிற இடத்தில்
ஜங்கமான மதிள் போல் கையும் வில்லுமாய் இளைய பெருமாள் திரிகிற படியை கண்டு
ஸ்ரீ குகப் பெருமாள் —
இயந்தாத ஸூகாசய்ய தவதர்தம் உகல்பிதா -என்று
உமக்கு தகுதி ஆகும் படி பெருமாள் திரு அடிகளிலே தளிராலே  படுக்கை படுத்து கண் வளரீர் என்ன —

கதந் தாசரதவ் பூமவ் சயானே–என்று
அறுபதினாயிரம் சம்வச்த்ரம் மலடு நின்று பெற்ற பிள்ளை சுகுமாரமான வடிவை கொண்டு ,
தரைக் கிடை கிடக்க கண் உறங்குமோ ?

சயானே சஹா சீதாயா –
இவர் வசிஷ்டர் சிஷ்யர் ஆகையாலே இக் கிடை கிடக்கவும் பொறுக்கும்-
படி நடந்து புறப்பட்டு அறியாத செல்வ பெண் பிள்ளை தரை கிடப்பதே

சக்யா நித்ரா மயா லப்தும்  —
என் கண் தன்னில்-நித்தரை குடி புகுதரு தில்லை காணும் –

ஈடு -5-9-4—

பெருமாளும் இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீகுகப்பெருமாள் இளையபெருமாளைப் பார்த்து, ‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்; நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்; ‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன, ‘தாசரதி சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’

இளையபெருமாள் காத்த பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பெருமாளும்’ என்று
தொடங்கி.

“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே ஸஹ ஸீதயா
ஸக்யா நித்ரா மயா லப்தும் ஜீவிதம் வா ஸு காநி வா”

என்பது, ஸ்ரீராமா. அயோத். 9. குகப்பெருமாளைப் பார்த்து இளைய பெருமாள் கூறியது.

வாரீர், மஹாராஜனானசக்ரவர்த்தி அறுபதினாயிரம் ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக்கிடை கிடக்க எனக்குக் கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர். அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம் உண்டாய்  அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே இருக்கிறேன்-

————

ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹமபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத் த்ருதவ்
–53-31-

நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்—பெரிய திருமொழி-4-9-1-

ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண  காலம்
ஜலான்   மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே

அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-

அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து  ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )

ஈடு ப்ரவேஸம்
உம்மை ஒழிந்த அன்று பிராட்டியும் இல்லை -அடியேனும் இல்லை -ஜீவித்தோமோ முஹூர்த்தம் -என் போலே என்றால் -ஜலாத் உத்த்ருதமான மத்ஸ்யம் நீர் நசை அறும் அளவும் ஜீவிக்குமா போலே நீர் நிறுத்திப் போகிறோம் என்கிற வார்த்தை உம்முடைய திரு உள்ளத்தில் உண்டு என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவிப்பது என்றார் இறே -அத்தலையால் நினைவால் இறே இத்தலை ஜீவிப்பது
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் -என்கிறபடி அவன் நினைவு இல்லாத வென்று இவையும் இல்லை இறே

தாந யஜ்ஞ விவாஹேஷு ஸமாஜேஷு மஹத் ஸூ ச
ந த்ரஷ்யாம புநர் ஜாது தார்மிகம் ராம மந்தரா –
5-13-

வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் –6-1-2- இவற்றின் அறிவுகேடு 6பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோவரமாட்டாதே நிற்கிறது. 1“தாந யஜ்ஞ-தானங்கள் செய்யுமிடத்தே எழுந்தருளியிருப்பாராயிற்று;

“தாந யஜ்ஞ விவாஹேஷூ ஸமாஜேஷூ மஹத்ஸூச
ந த்ரக்ஷ்யாம: புநர்ஜாது தார்மிகம் ராமமந்தரா”-  என்பது, ஸ்ரீராமா. அயோத்.

தேசத்திலே காலத்திலே பிராப்த விஷயங்களிலே இடுவிக்கைக்காக யாகங்களிலே எழுந்தருளியிருப்பாராயிற்று. நியாயமாக ஈட்டிய பொருள்கொண்டு செய்விக்கைக்காகவும், சடங்குகளில் தப்பினவை உண்டாகில் அவற்றை எடுத்துக் கொடுக்கைக்காகவும். விவாஹேஷூ-இரண்டு தலையையும் பொருந்தவிட்டு, பொருந்தாதார்க்கு வேண்டுவன செய்து, ஹோமம் பண்ணுவித்துத் தலைக்கட்டிக் கொடுக்கைக்காக, விவாகம் செய்யுமிடங்களில் எழுந்தருளியிருப்பர். ஸமாஜேஷூ மஹத்ஸூச – 2தீர்க்கசத்திரங்களிலேயாதல், உத்ஸவங்களிலேயாதல். ச – 3யாவன் ஒருவன் ஓர் இடத்தே அத்ருஷ்ட காரியங்கள் செய்யும் அங்கே இருப்பர் என்கிறது. ந த்ரக்ஷ்யாம: புனர்ஜாது – அவரை அவ்வவ்விடங்களிலே இருக்கக் காண்கின்றிலோம். தார்மிகம் ராம மந்தரா – என் தான்? இவர் இவ்விடங்களிலே இருப்பது என்? என்னில், தர்மங்களிலே வருகிற ஐயங்களை அறுத்துக்கொடுக்கைக்கும், அவை தப்பாதே அநுஷ்டிப்பிக்கைக்குமாக. இப்படியேயன்றோ அவன்படிகள்.

——

மம த்வச் வா நிவ்ருத்தஸ்ய ந பிராவர்த்தந்த வர்த்தமநி
உஷ்ண மஸ்ரு விமுஞ்சந்தோ ராமே ஸம் ப்ரஸ்திதே வநம்
-59-7-

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-
பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது –
வழியே போய் வழி வந்து ஏக தார வ்ரதனாய் இருக்கும் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

மம து அஸ்வா நிவ்ருதச்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மநி–அயோத்யா -69-1-
அஸ்வம் ஹ்ருதயம் அறிக்கைக்கு ஸூமந்தரன் -தன்னைத் தான் மதித்த படியால் –மம -என்கிறான்
து -இற்றைக்கு முன்பின் இன்றிக்கே இன்றைக்கே உள்ளதொரு விசேஷமாய்த்து இது
அஸ்வா –என் கருத்திலே நடந்து போனவை
நிவ்ருதச்ய -பெருமாளை எழுந்து அருளிவித்து கொடு போகிற போது போய்த்தின
ந ப்ராவர்த்தந்த வர்த்மநி– வழி செய்து கிடக்கிற பெரு வழியை விட்டு காடு பாயத் தொடங்கிற்றன

—————-

குஹேந சார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸாந் பஹுந்
ஆசயா யதி மாம் ராம புநஸ் ஸப்தாபயேதிதி
-59-7-

ஈடு ப்ரவேஸம் -3-8–ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே, ‘பலநாள்’ என்னாநின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி. 2‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க. ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும் அன்றோ? என்று அருளிச்செய்தாராம். ‘மேகக்குழாங்காள்! காட்டேன்மின் நும்முரு; என் உயிர்க்கு அது காலன்,’ என்றார் அன்றோ?

—————

விஷயே தே மஹாராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ஸ புஷ்ப அங்குர கோரகா –59-8-
உபதப்தோ தகா நத்ய பல்வலாநி ஸராம்ஸிச
பரி சுஷ்க பலாசாநி வநாந் யுபவநாநி ச
-59-9-

ஈடு 2-1-1-ஆறுகளோடு சிறு குழி களோடு பெரும் குழி களோடு வாசியற கரை யருகும் சென்று கிட்ட ஒண்ணாத படி விரஹ அக்னியால் கொதித்தது இறே
சிறு காட்டோடு பெரும் காட்டோடு வாசியற விரஹ அக்னி கொளுத்திற்று

ஈடு 6-1-10-“உபதப்தோதகாநத்ய: – மிகுந்த கொதிப்பை யடைந்தன நதிகள்”. ‘தாபார்த்தனுக்கு நீரிலே விழுந்தால் தாபம் ஆறும்’ என்னும் -இவ் வாசனையைக் கொண்டு, ‘இராமனைப் பிரிந்த பிரிவிற்கும் இது பரிஹாரமாமோ’ என்று தண்ணீரிலே விழுவதாகக் கொண்டு செல்ல, கரையிலுங்கூடக் கிட்ட அரிதாயிருந்தது. 3நிலைநீர்கள்தாம் குளிரவற்றோ என்று பார்த்தார்கள், அவையும் அப்படியே இருந்தன. “பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம்.

ஈடு -7-5-1—ஸ்ரீ பரதாழ்வானைக் கண்டு சேதநர் எல்லாரும் கண்ணநீர் விழவிட்டு நிற்கக் கழுத்தளவு நீரிலே நிற்கிற மரங்கள் அன்றோ வாடிநின்றனஉப தப்தஉதகா நத்ய: – நீரோடு, அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி. உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய் இருக்கை. பல்வலாநி ஸராம்ஸிச – இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை, ‘வனம் என்ன உபவனம் என்ன’ என்பது போலே.

———–

அதோ து கிம் துக்க தரம் ஸோஹமிஷ்வாகு நந்தனம்
இமாம் அவஸ்தாம் ஆபந்நோ நேஹ பஸ்யாமி ராகவம்
–59-30-

ஈடு -6-7-6-

இன்று எனக்கு உதவாது அகன்ற – 2பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும், இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே! 3“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?” “அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம்  இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.

என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி. எனக்கு உதவாது – சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி

ஈடு -9-7-9-இந்நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை
இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது
எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி
ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –
தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு
இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி –

———-

கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வநம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம் ஸ்ரிதா
–60-20-

ஒருதரம் தலையை வணக்கியவர் விஷயத்தில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து பார்த்தால் வணக்கத்தின் மேன்மை வெளியாகும். “ஏபிச்சஸசிவைஸ்ஸார்த்தம் சிரஸா யாசிதோ மயா, ப்ராது:சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்துமரர்ஹஸி” என்று தலையால் யாசித்த பரதாழ்வான் விஷயத்தில் பெருமாள் எப்படி உளங்கனிந்திருந்தார் என்பது இராவண வதத்திற்குப் பிறகு விபீஷணனுக்கு பெருமாள் அருளிச் செய்யும் பாசுரத்தால் வெளியாகிறது. “சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்று வாடுகிறான் எம்பெருமான். பரதன் தலையால் வணங்கி யாசித்த விஷயத்தை (வார்த்தையை) நான் தலைக்கட்டவில்லையே என்று துக்கித்து அவனைக் காணப் பதைக்கிறான் பிரபு. பெருமாள் திருவுள்ள மறிந்த பிராட்டியும் திருவடியை (ஹனுமனை) நோக்கி “சிரஸா சாபிவாதய” (எனக்காக அவனை நீ தலையால் வணங்கு) என்று வேண்டுகிறாள். தலை தாழ்த்து இருகை கூப்பாத தமது பாழ்த்த விதியை மீறி “தலையில் வணங்கவுமாங் கொலோ”(நமக்கு வணங்கும் நாட்களும் வாய்க்குமோ) என்று பாடுகிறார் நம்மாழ்வார்.

பலர் கண்ண நீர் கண்டால் மீளாரோ என்னுமதைப் பற்ற வினை செய்யப் போவாரைப் போலே ஆனை குதிரைகளைத் திரட்டிக் கொடு போனான் ஆயிற்று –
பிரிவாற்றாமைக்குத் தன்னில் குறைந்தார் ஒருவரும் இல்லையாயிற்று பரிகரத்தில்
நான் தலையால் இரந்த காரியத்தையும் மறுப்பாரோ
சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா” என்றார் இறே அவனும் –
அவனும் தனக்கு அடுக்கும்படி செய்தான் -நாமும் நமக்கு அடுக்கும்படி செய்தோம் என்றார் இறே
அவன் தலையால் இரந்த காரியத்தை மறுத்துப் போந்தோம் என்று இறே அவர் திரு உள்ளம் புண் பட்டது
ப்ராதா ஸ்வ மூர்த்திராத்மந -என்கிறபடியே அவர் தம் திரு மேனியாக யன்றோ என்னை நினைத்து இருப்பது

—–

நந்தந்யுத ஆதித்யே நந்தந்த்யஸ்த மிதே ரவவ்
ஆத்மநோ நாவபுத்த்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்
-105-24-

பெரிய திருமொழி -6-2-5–நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-

————

பதி ஸம்யோக ஸூலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தா மப்ய பகமத் தீநோ வித்த நாசா திவாதந
–118-34-

ஒரு கொள் கொம்பிலே கொண்டு போய்ச் சேர்த்து நோக்கில் நோக்கலாய், இல்லையாகில் கிடையாதபடியான பருவமாய் இராநின்றது; இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று எங்கள் தந்தையார் கவலைக் கடலில் மூழ்கினவர் ஆனார்,’ என்றாள் பிராட்டி.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண ஸூவ்ரபம் -ஸ்ரீ பால காண்ட ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

May 18, 2024

முநே வஹ்யாம் அஹம் புத்த்வா –7- வால்மீகி முனிவரே நான் அறிந்து சொல்லுவேன்

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –சிறிய திருமடல் -21-

பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இறே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் என்றான் இறே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரஸ்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இறே –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே-

வாக்மீ ஸ்ரீ மான் –9-

பெருமாள் திருவடியைப் பற்றி –
நன்றாகக் பேசும் திறமை யுள்ளவன் –
பேசும் பொழுது விலக்ஷணமான ஸோபை யுள்ளவன் –

நாவுடையாய்–திருப்பாவை -14-
ந ரிக்வேத விநீ தஸ்ய ந யஜுர்வேத தாரிண -என்றும்
நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் -என்றும்
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்றும்
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –

(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )

நாவுடையாய்-
வாக் மாதுர்யமுடையவரே
நீர் அஹ்ருதமாய் சொல்லிலும்
பேச்சின் இனிமையைப் பார்த்தால்
ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –

மணி வண்ணன் –வாய் நேரந்தான் –திருப்பாவை -16-
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
பூ அலர்ந்தால் போல் வார்த்தை சொல்லுகிற போதை ஓஷ்டஸ்ப்புரணம் -என்னவுமாம்

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்–சேஷ பூதரான எங்களுக்கு
நிரவதிக கிருபை பண்ணி
உஜ்ஜவலமான திருப்பவளத்தை சாந்த்வ வாதம் பண்ணி
உனக்கு அசாதாரணமான தாமரை போலே இருக்கிற திருக் கண்களாலே பூர்ணமாகப் பார்த்து அருள வேணும் –

சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -ய அநந்த ப்ருதிவீம் தத்தே சேகர ஸ்திதி சமஸ்திதாம்-ச அவதீர்ண ஜகத்யர்த்தே மாம் அக்ரூர இதி வஷ்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-12-என்கிறபடியே- என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –

————-

ஸர்வதா அபி கதஸ் ஸத்பிஸ் ஸமுத்ர இவ ஸிந்துபி —15-

ஸ்ரீ ராமன் -கடல் நதிகளால் அடையப்படுவது போல் -சாதுக்களால் எப்போதும் தாமாக வந்து அடையப்படுபவன்

நல்லார் நவில் –திரு விருத்தம் -100-
லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –

ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் )
சர்வதாபி கதஸ் சத்பி
பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே –
பர சம்ருத்யை ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –
சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –
பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –
நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

குஹேந ஸஹிதோ ராமோ லஷ்மணேந ச ஸீதயா –28-

ஸ்ரீ ராமன் கானோடும் லஷ்மணனோடும் சீதையோடும் கூடினான்

ஈட்டில்-ஆடியாடி -பிரவேசம் –கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

———-

ரம்ய மாவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய –30-

பெருமாள் பிராட்டி இலக்குவன் மூவரும் -அழகிய க்ருஹத்தை -பர்ணசாலையைக் கட்டி -காட்டில் -களிக்கின்றவராய் இருந்தனர்-

ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க
தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது –2-8-1–அணைவது புணர்வது –
பொதுவான சப்தங்கள் -அணைந்தான் என்று அவனுக்கு பிரதான்யம் –அவன் ஏற்றான் என்று
இவனுக்கு பிரதான்யம் இல்லாமல் அணைவது -இருவருக்கும் பொது -ஆனந்தம் சமம் -மூவருக்கும் என்று காட்டி அருள –
ரம்ய மாவசதம் க்ருத்வா –அறுபதினாராயிரம் மலடு நின்ற
சக்கரவர்த்தி தன் ஆதரத்துக்கு போம்படி சமைத்த மாளிகைகளிலும் திரு உள்ளத்துக்கு பொருந்தி அழகியதாய் இருந்தது காட்டிலே
இளைய பெருமாள் சமைத்த ஆஸ்ரமம் ஆயிற்று
த்ரயகா ரமமாணா-நாயகரான பெருமாள் ரசம் அல்லவே பிராட்டி யுடையது
பிராட்டிக்கு பிறக்கும் ரசம் அல்லவே பெருமாளது
அப்படியே அச் சேர்த்தி கண்டு உகக்குமவர் இறே இளைய பெருமாள்
வெத்தலை பாக்கு இளைய பெருமாள் சேகரித்து பட்ட ஹர்ஷம் -மடித்துக் கொடுத்த ஹர்ஷம் பிராட்டிக்கு -போட்டு அனுபவித்த ஹர்ஷம் பெருமாளுக்கு
வநே -படை வீடர் காட்டிலே ரமித்தார்கள் என்று தோற்றாதே-காடர் காட்டிலே வர்த்தித்தால் போலே பொருந்தி இருந்த படியாகச் சொல்லிற்று யாயிற்று
சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –-நாச்சியார் திருமொழி-14-1-
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

———

நந்தி க்ராமே கரோத் ராஜ்யம் ராமா கமந காங்க்ஷயா –37-

பரதன் -ராமனது வரவில் விருப்பத்தால் நந்திக்ராமம் என்னும் இடத்தில் ராஜ்யத்தை நடத்தினான்-

ஆடியாடி யகம் கரைந்து –2-4-1-முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே –

ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை
பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்

—-

பம்பா தீரே ஹநுமதா சங்கதோ வாநரேண ஹ –56-

ராமன் பம்பை என்னும் தாமரைப் பொய்கையின் கரையில் ஹநுமானுடன் கூடினான்

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!–6-1-1–வந்து –
“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே,
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”- என்பது, ஸ்ரீராமா. கிஷ்கந்த 1 : 8.
ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி -நீங்களே வந்து –
திருவடியை இளைய பெருமாளை இட்டு பெருமாள் அழைத்தால் போலே இல்லாமல் நீங்களே வந்து
வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற் போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே
திருவடி வந்து முகங்காட்டினபடி.

ஹநூமதா-
தளர்ந்து, –“ஆவாரார் துணை” -திருவாய். 5. 1 : 9.-என்று தடுமாறுகிற சமயத்திலே,
வெற்றித் தழும்பு சுமந்த ஆண் பிள்ளையோடே கூடப் பெற்றது என்கிறது.
வாநரேண-
சந்நியாசி வேடம் கொண்டு வந்து பிரிவை விளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே,
செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக் கொள்ளுகிறோம்,
சத்தை நோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான்.

———-

ததோ வாநர ராஜேந –59-

ஸ்நேஹமான பிறகு குரங்குகளுக்கு அரசனால் -ஸூக்ரீவனால் -வாலிக்கும் தனக்கும் ஏற்பட்ட விரோதம் முதலியன ராமனுக்குத் தெரிவிக்கப்பட்டன

சங்கரையா –நாச்சியார்-7-7-
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன
 -என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –

க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத்
 –
இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்

வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –

—————-

தேந நாதேந மஹதா நிர் ஜகாம ஹரீஸ்வர
அநு மான்ய ததா தாராம் ஸூக்ரீவேண ஸமா கதா
–66-

பெரிய அந்த ஸப்தம் நிமித்தமாக வானர ராஜனான வாலி அந்தப்புரத்தில் இருந்து வெளிக் கிளம்பினான் -அப்போது தாரை என்னும் தனது பத்நியை -நல்ல வார்த்தை சொல்லி சம்மதிக்கச் செய்து ஸூ க்ரீவனுடன் யுத்தம் செய்வதற்காக வந்து சேர்ந்தான்
ததா தாராம் அநு மான்ய நிர் ஜகாம -என்று அந்வயம்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்-10-1–எங்குற்றான்-
தேன நாதேன ந மஹதா நிர்ஜகாம ஹரீச்வர -பால -1-68-
மஹா ராஜருடைய மிடற்று ஓசையின் தசைப்பைக் கேட்டு முன்பு போலே கோழைத் தனமாய் இருந்ததில்லை
ஓரடி இவனுக்கு உண்டாக வேணும் நமக்கு இரை போருமாகில் பார்ப்போம் -என்று புறப்பட்டான் இறே

அப்படியே இவற்றினுடைய உத்தியோகம் இருந்த படியையும் பாதகத்வம் இருந்தபடியும் கண்டோமுக்கு
இவற்றின் அளவல்ல -அவன் பின்னே வந்து நின்றான் -என்று எங்குற்றான் -என்கிறாள்

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் –பெரிய திருமொழி-9-5-8-

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்

நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படுவான் என் என்னில்

ஹரீஸ்வர
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே

வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே
-திருவிருத்தம் -51 –

வேரித் துழாய் துணையா
நறு நாற்றத்தை உடைய திருத் துழாயை தனக்கு கூட்டுப் படையாகக் கொண்டு –
அங்கு நின்றும் இலை யமுது கொண்டு வந்து காணும் நலிகிறது –
(இலை அமுது -சாடு -வெற்றிலை -இலை திருத்துழாய் அமுது )
சக்கரவர்த்தி  திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

தேன நாதேன மஹதா
மஹதா –
மகாராஜர் மிடற்றில் தசைப்புக்கு உரம் உண்டு என்று தோற்றும்படி இருக்கை –

நிர்ஜகாம –
புறப்பட்டான் –

ஹரீஸ்வர
பண்டு சிலர் அறை கூவ இருந்து அறியாதவன் –

அநுமான்ய-
ஆண்களோடு கலக்க வேண்டாவோ என்றான் –

ததா-
சர்வ ஸ்வஹரணம் பண்ணினாலும் புறப்பட ஒண்ணாத அவஸ்த்தை -(அணைத்த தசையில் )
பர்த்தாரம் பரிஷஸ்யஜேக்கு -ஆசைப் பட்டு இருக்குமே அவள்

(சுக்ரீவேந ஸமாஹிதா
சுக்ரீவன் அறை கூவப் போனானே வாலி )

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
-10-6-5-

நரகத்தை நகு நெஞ்சே
பரமபதம் கிட்டிற்று என்னா-கடுக கால் வாங்கிப் போகப் பாராதே காண் –
பல நாள்கள் நம்மைக் குடி மக்கள் ஆக்கி எளிவரவு படுத்தின-இவ் உலக வாழ்க்கையை புரிந்து-பார்த்து சிரித்து போரு காண் –
உன்னை வென்றோம் அன்றோ -என்று புரிந்து பார்த்து சிரித்து போரு-
பிள்ளை அழகிய பெருமாள் அரையர் -கிரந்தியைப் பார்த்து -கட்டியை பார்த்து-
திருவரங்க நாதன் திருமாலை திருப் பரிவட்டம் முதலானவை வரவிட்டு அருள-
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே -என்று-கிரந்தியைப் பார்த்து சிரித்து சொன்ன வார்த்தையை நினைப்பது –

அண்டை கொண்ட பலம் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68-
என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ
முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும்
ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –
பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும்
உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-
இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்
இங்கு மற்றை நரகம் -8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-

————

அபி ஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
–83-

க்ருதார்த்தனாக பெருமாள் தாபம் நீங்கி ஸந்தோஷித்தான்

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!-
6-2-10-

நின்று இலங்கு முடியினாய் –
இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச் சுமையாய்க் காணும் கிடந்தது;
இப்போதாயிற்று நற்றரித்து ஒளி விடத் தொடங்கிற்று.
இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே.
முன்பே முடி சூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது.
இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும்,
காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது;
இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும்
மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது.

“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து,
அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.
அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
க்ருத க்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-
என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.
ஸ்ரீ பரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று
உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது;
ஒரு படி அத்தலைச் சுமையைக் கழித்துப் போந்தோம்; இதுவும் ஒரு தலைச் சுமையாகின் செய்வது என்?’ என்று.
இக்ஷ்வாகு குலத்தார்க்குப் பணியன்றோ முடிக்கு இறாய்க்கை.

குகனொடும் ஐவரானேம் முன்பு; பின் குன்று சூழ் வான்ம கனொடும் அறுவரானேம்; எம் முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னோடும் எழுவ ரானேம்; புகலருங் கானந் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
நடுவினிப் பகர்வ தென்னே நாயக! நாயி னேனை உடனுதித் தவர்களோடும் ஒருவனென் றுரையா நின்றாய்
அடிமையிற் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் தொடுகழற் செம்பொன் மௌலி
சென்னியிற் சூட்டிக் கொண்டான்.-என்பன அநுசந்தேயம்.-அடிக்கு இறாயாதிருக்கையும் முடிக்கு இறாய்க்கையுமன்றோ சொரூபம்.-

———

ராமஸ் ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புநர் அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக –87-

பெருமாள் பிராட்டியுடன் மீண்டும் ஸிம்ஹாசனத்தில் இருந்து அருள -ஜனங்கள் ஹேஹத்தில் மயிர்க்கூச்சலும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் அடைந்தனர்

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
-7-10-1-

‘இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே
, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ?

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந் ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக:
துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’-என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89. 2
ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக,
அச் சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக,
அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே
இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பர்களாயிற்று.

—————–

ந ச அக்நி ஜம் பயம் கிஞ்சித் ந அப்ஸூ ஜந்தவ–90-

நெருப்பினால் ஏற்படும் பீதி கொஞ்சம் கூட இல்லை -பிராணிகள் ஜலத்தில் மூழ்கிப் போகிறதும் இல்லை

வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’
-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:– கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

——-

ஸ சாபி ராம பரிஷத் கத சநை புபூக்ஷயா சக்த மந பபூவஹ –4-36-

அந்த ராமனும் மெதுவாக சபையை அடைந்து கொடவிருந்து அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் குசலவர்கள் காநத்தைக் கேட்பதில் மனப்பற்றுள்ளவனாய் இருந்தான்-

வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து,
அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது.
இது, இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி;

அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை
அடைந்தவனாய்க் குச லவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான்
தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை: புபூஷயா ஸக்த மநா பபூவ”
-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.
என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்” என்பது ஸ்ரீராமாயணம். என்றது,
பெரு மதிப்பராய்ப் பாட்டுக்களை அறிந்து கொண்டாடுகைக்குப் போரும்படி பேரறிவாளரான
புலவர்களும் தாமுமாகப் பேரோலக்கம் இருந்து, பிள்ளைகளைப் பாட விட்டுத் தாம் சிம்மாசனத்திலே இருந்தார்;
இவர்கள் தாழ இருக்கத் தாம் உயர இருந்த இடம் தமக்கு விருப்பம் இல்லாமையாலே சிம்மாசனத்தினின்றும் மெள்ள இழிந்து,
தெரியாதபடி இவர்கள் நடுவே புகுந்திருந்தார். -அது என்? என்னில்,
இராஜா எழுந்திருந்தால் ஓலக்கம் எழும் அன்றோ, தாம் எழுந்தவாறே ஓலக்கம் எழும் எனக் கருதி,
மெள்ளப் புகுந்திருந்தார் என்றபடி. -இங்ஙன் வேண்டுவான் என்? என்னில்,
“அநுபுபூஷயா – அநுபவிக்கும் இச்சையால்” என்னுதல்,
“பவிது மிச்சயா – தாம் உளராவதற்கு இச்சையாலே” என்னுதல். என்றது,
‘இவர்களோடே கூடி இருந்து அநுபவிக்கைக்காக’ என்னுதல். ‘தாம் உளராகைக்காக’ என்னுதல் என்றபடி.-

———

த்ரஷ்டும் சக்யம் அயோத்யாயாம் ந வித்வான் ந ச நாஸ்திக
ஸர்வே நராச்ச நார்யச்ச தர்ம ஸீலாஸ் ஸூ ஸம்யதா
–6-8-

அயோத்யையில் படிப்பில்லாதவன் காணப்பட முடியாது -நாஸ்திகனும் காணப்பட முடியாது -அனைவரும் தர்ம ஸ்வ பாவமுடையவர்கள் -இந்த்ரிய ஜெயமுடையவர்கள் –

கலை இலங்கு மொழியாளர்–பெரிய திருமொழி-8-1-1-

நெடுநாள் பெற்று வளர்த்த என்னோட்டை சம்பந்தம் அற்று
அவ் ஊரில்   சம்பந்தம் தோற்றி இரா நின்றது இவள் வார்த்தை இருக்கிறபடி –

த்ருஷ்டும் சக்யம் அயோத்யாயாம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராஸ்ஸ நார்ய்ச்ச தர்ம சீலாஸ் ஸூ சம்யதா-
பால காண்டம் –
அறுபதினாராயிரம் ஆண்டு  வன்னியம் அறுத்து   நன்மைகளை உண்டாக்கிப் போந்த சக்கரவர்த்திக்கும்
இரண்டு பொருள் உண்டாக்க போச்சுதில்லை –
ஒரு அவித்வானை யாதல்
வைதிக அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல் உண்டாக்கப் போச்சுதில்லை –
(கள்வர் இலாமை இத்யாதி -கம்பர் )

அப் படை வீட்டில் உள்ளார் -ராஜ புத்ரர்கள்  ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ
என்று இருக்குமவர்கள் அல்லர் –
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நித நம்யாமோ மகாப்ரச்த்தா நமேவவா
ராமேண ரஹிதா நாஞ்சகிமர்த்தம் ஜீவிதம் ஹின
-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை  வீட்டில் இருப்பது இல்லை
விழுந்த இடமே சுடுகாடாக போக அமையும் என்று இருப்பார்கள் புருஷர்கள் –

ஸ்திரீகளும் –
ராமமேவா அநுகச்சதத்வம ஸ்ருதிம் வாபி கச்சத – என்று
பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க அழைத்த பர்த்தாக்கள் 
முகம் பிளக்கத் தள்ளிக் கதவு அடைத்துக் கொள்ளுவார்கள் –

தர்ம சீலா
ராம அனுவர்த்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இறே
ஸூ சம்யதா -ஸுவ பிரயோஜனத்தில் நெஞ்சு செலுத்தாதவர்கள் யாயிற்று
அப்படி இருக்குமவர்கள் யாயிற்று இவ் ஊரில் உள்ளாறும் –

——-

லஷ்மணோ லஷ்மி ஸம்பந்ந –பால காண்டம் -18-31-

சம்பத்தோடு கூடிய லஷ்மணன் வெளியில் உள்ள ராமனின் உயிர் போன்றவன் –

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை
 –4-4-8-

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான்
-என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

——-

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
-73-33-

மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே –

————-

ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹுந் ருதூந்
மநஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித
-77-32-

திருவாய் மொழி -23- ஈடு பிரவேசம்-ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் மனச்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -பால -77-27-
அந்த ராமனோ என்னில் -72 ருதுக்கள் -12 வருஷங்கள் -பிராட்டி திரு உள்ளத்தில் சேர்ந்தாரே -தகப்பனார்கள் பார்த்து திருமணம் செய்ததால் -பித்ரு ஹ்ருதயா –ஐயரை கேட்டே பின்பே திருக் கல்யாணம் –
பங்குனி உத்தரத்தில் திருக் கல்யாணம் -ஒன்றாக கலந்தார்களே -ஜானகி மைதிலி வைதேகி சீதா-இயல் பெயர் –
ராமஸ்து -பெருமாளும் பிராட்டியும் ஏக தத்வம் என்னலாம் படி கலந்த கலவியைச் சொல்லுகிறது
பித்ரு சுச்ரூஷண பரரானார் -தர்மங்களை பிரவர்த்திப்பித்தார் தேவதா சாமாராதநம் பண்ணினார் -என்றாயிற்று சொல்லிக் கொண்டு போந்தது
இப்படிப் போந்த இவர் இப்போது வாத்ச்யாயனம் கற்றுக் காம தந்த்ரமேயோ நடத்திப் போந்தது -என்னும் படி வேறு பட்டார்
சீதயா சார்த்தம் -பரமபதத்திலே செவ்வியோடு வந்தவளும் பிற்பாடையாம்படி போகஸ் ரோதஸ் ஸிலே முற்பாடரானார்
விஜஹார -இப்படி பரிகாரச் செய்தேயும் போகோபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர் – போக உபத்காதம் -தொடக்க நிலை தாண்ட வில்லையே –
பஹூன் ருதூன் –நஹூன் சம்வத்சரான் என்னாது ஒழிந்தது -அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த போக உபகரணங்களை
கொண்டு புஜித்தார் என்று தோற்றுகைக்காக
மனச்வீ -சம்ச்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டு பரிமாறினார்
தத்கதஸ் -தஸ்யாம்-கத ஜாதி குணங்கள் த்ரவ்யத்துக்கு பிரகாரமாய் பிரிக்க ஒண்ணாதபடியாய் இருக்குமா போலே
பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி
தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித்த -இவர் உயர்த்தியை அறிந்து இருப்பாள் ஒருத்தி யாகையாலே -அப்பெரியவன் இப்படி
தாழ விடுவதே -என்று அச்செயலிலே தன் நெஞ்சு துவக்கப்பட்டு –அது அது -என்று கிடக்குமாயிற்று –
அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவி தான் –
கடல் பள்ளியில் நீங்கி –அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி மனம் மாறிற்று -இப்பொழுது தான் அவர் அவர் மனஸ் அவர் இடம் வந்தது –

விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்–6-1-9-விடிவை-விடிவுகள் தோறும்.
பகலும் இரவுமாய்க் காணும் அவ்வூர் செல்லுகிறது என்பாள் ‘விடிவை சங்கு ஒலிக்கும் திருவண் வண்டூர்’ என்கிறாள்.
(இங்கோ நீள் இரவாய் அன்றோ நீண்டு உள்ளது சங்கு ஒலிக்க பிரஸ்துதமே இல்லையே இங்கு )
ருதூந் பஹூந் – பல ருதுக்களை” என்கிறபடியே, காலம் கூறிட்டு அவ்வக் காலத்துக்கு அடைத்த
உபகரணங்களைக் கொண்டு காணும் அவன் அநுபவிக்கிறது;
“ராமஸ்து ஸீதயா ஸார்தம் விஜஹார பஹூந் ருதூந்
மநஸ்வீ தத் கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:”
-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 26.
இல்லையாகில் “ருதுக்களை” என்ன வேண்டாவன்றோ, “வத்ஸராந் – வருடங்களை” என்ன அமையுமன்றோ,

‘ராம: –
ஸ்ரீபரசுராமாழ்வானைச் செருக்கு வாட்டிப் படை வீட்டிலே வந்து புகுந்து சக்கரவர்த்தியையும்
மஹரிஷிகளையும் பின் பற்றித் தர்மத்தையே மிகுதியாக நடத்திப் போந்தவர்.

து –
தமப்பனுக்குச் செய்ய வேண்டிய குற்றவேல் முதலியவைகளைச் செய்து பின்பு பிராட்டியுடைய ரச தாரையிலே இழிந்த பின்பு,

‘ராமஸ்து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹூந் ருதூந் மநஸ்வீ தத் கத: தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’-என்பது, ஸ்ரீராமா. பால. 77 : 25.

‘இதற்கு முன்பெல்லாம் வாத்ஸ்யாயநம் கற்றுக் காம தந்திரமே நடத்திப் போந்தாரித்தானையோ!’ என்னும்படி வேறுபட்டார். என்றது,
‘முன்பு போருகிற நாளில் ‘இவர் இதற்கு முன்பு காம ரசம் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி போந்த இவர்,
இப்போது ‘இதற்கு முன்பு தருமத்தின் உண்மையைப் புதியது உண்டு அறியாரோ?’ என்னும்படி வேறுபட்டார்,’ என்றபடி.

ஸீதயா ஸார்த்தம் – அயோநிஜையாய்ப் பரம பதத்தில் தானும் அவனுமாய் இருந்து கலந்த போதைச் செவ்வியில்
ஒன்றும் குறையாமல் இருந்தவள் அன்றோ பிராட்டி? இப்படி இருக்கச் செய்தேயும், தம்மை அழிய மாறி மற்றைச் சாதியினரோடு
ஒத்தவராக அவதரித்தாரே யாகிலும், போகத்தில் வந்தால் அவளுங்கூடப் பிரதானம் அற்றவளாம்படி அதில் தலை நின்றார்.

‘அதற்கு அடி என்?’ என்னில், இராச புத்திரரான ரசிகத் தன்மையால் வந்த ஏற்றத்தாலே.
விஜஹார – (அனுபவ பூவ என்னாமல் விளையாட்டு )பாரிப்பே ஒழியப் போகத்தில் இழியப் பெற்றிலர்; தொடக்கத்துக்கே பணி போந்ததித்தனை. என்றது,
‘உபோத்காதத்துக்கே காலம் போந்ததித்தனை’ என்றபடி.
பஹூ ந்ருதூந் – ‘ஸமா த்வாதஸ தத்ராஹம’ என்கிறபடியே.

‘ஸமா த்வாதஸ தத்ராஹம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 17.
‘நான் அங்குப் பன்னிரண்டு வருடங்கள் முடிய’ என்பது இதற்குப் பொருள். இது, பிராட்டியின் வார்த்தை.

பன்னிரண்டு ஆண்டு ஒரு படிப்பட அனுபவிக்கச்செய்தேயும், ‘ருது’ சப்தத்தாலே சொல்லுகிறான் ஆயிற்று,
அவ்வவ காலங்களுக்கு அடைத்த மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு கால அவயவங்கள் தோறும்
அனுபவித்துப் போந்தமை தோற்ற. என்றது,
‘குளிர் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும் வெயில் காலத்துக்கு அடைத்தவை கொண்டு பரிமாறியும்
அனுபவித்தமை தோற்றச் சொல்லுகிறான்’ என்றபடி.

(வசந்த ருது – சித்திரை, வைகாசி – இளவேனிற்கலம்
கிரீஸ்ம ருது – ஆனி, ஆடி – முதுவேனிற்காலம்
வருஷ ருது – ஆவணி, புரட்டாசி – கார்காலம்
சரத் ருது – ஐப்பசி, கார்த்திகை – குளிர்காலம்
ஹேமந்த ருது – மார்கழி, தை – முன்பனி
சசி ருது – மாசி, பங்குனி – பின்பனி)

மநஸ்வீ –
பிரணய தாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம்
யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று.

தத் கத:
திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;
‘நான் பெருமாளோடே கூடியே இருப்பவள்’ என்றும், ‘சீதை என்னோடு கூடியே உள்ளவளன்றோ?’ என்றுமன்றோ

அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16. இராவணனைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19. இது,
இராவண வதத்தின் பின் வந்து கூடிய பிரமன் முதலிய தேவர்களைப் பார்த்து ஸ்ரீராமபிரான் கூறியது.-இருவர் வார்த்தைகளும்?

தஸ்யா நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித: –
இதில் இழிவதற்கு முன்பு இவரை அறிந்திருக்குமவளாகையாலே,
‘அப்படிப் பெரியவர் இப்போது என் பக்கலிலே தாழ நிற்பதே இப்படி இது ஒரு நீர்மையே!’ என்று
எப்போதும் இந்த நினைவே செல்லுகை -அநு சந்தானமே யாத்திரையாக -ஆகையாலே, வேறு ஒன்றும் நெஞ்சிற்படாதே அவள்.
தன்னைத் தம் பக்கலிலே பொகடும்படி ஆனார்.

தத் கத – என்கையாலே,
இவர் தம்மை அவள் பக்கலிலே ஓக்கினபடி-பரதந்தரமாக- சொல்லிற்று

‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’ என்கையாலே.
அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி பரதந்தரமாக-சொல்லுகிறது.

இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான்
ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறு போலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு ஆதனூர்

March 23, 2024

மூலவர் -ஆண்டளக்கும் ஐயன் -/ புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -அழகிய மணவாளன் -ஸ்ரீ ரெங்கம் போலவே –
தாயார் -ஸ்ரீ ரங்க நாயகி –பார்க்கவி என்றும் திரு நாமம்
விமானம் -ப்ரணவாரா விமானம்
தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரிணி
ஸ்தல வ்ருக்ஷம்–பாடலை வ்ருக்ஷம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார் –

அரங்கன் கழியனுடன் விளையாடிய வரலாறு ஓலைப்பாடி -ஓலையில் கணக்கு எழுதிவைத்த இடம் – விஜயமங்கலம் வெற்றி நடை போட்ட ஸ்தவம் -திரும்பூர் திரும்பிப் பார்த்த இடம் -மாஞ்சேரி மாஞ்சு போனாராம் -அந்த ஸ்தவம் -மரக்கால் கைவைத்துக்கொடுத்த ஸ்தலம் வைகாவூர் -மரக்காலுடன் சயனம் ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -என்னை மனம் கவர்ந்த ஈசனை -வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -காமதேனு உடன் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் கர்ப்ப க்ருஹத்துக்குள்ளேயே எழுந்து அருளி சேவை சாதிக்கும் திவ்ய தேசம் இதுவே

ஆ -பசு -காம தேனு -இந்த ஷேத்ரத்தில் தவம் பெற்று சிறந்த கதி பெற்றதால் -ஆதனூர் -பெயர்
திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய கடனுக்கு இப்பெருமாள் செல்வம் அளந்து கொடுத்து
கணக்கும் எழுதிய படியால் -மரக்கால் ஓலைச் சுவடி யுடன் எழுந்து அருளி இருக்கிறார் –
மண்ணை அளந்து கொள்ளக் கொடுக்க -சரியாக வேலை செய்தால் தங்கமாக தெரியும் -இல்லை என்றால் மண்ணாக தெரியும்
கணக்கும் வைக்க எழுத்து கோல்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -அரசனாக ஆண்டு அன்னம் அளக்கும் -அளிக்கும் -ரக்ஷகன் –
பெருமாள் தலைக்குக் கீழ் ஒரு மரக்கால் படியை வைத்து இருக்கிறார்
அக்னி பகவானுக்கும் தன் சாபம் தீராத தவம் புரிந்த க்ஷேத்ரம் -கொள்ளிடம் காவேரி நடுவில் சேவை இங்கும் –
இந்திரனும் ஸ்ரீ மஹா லஷ்மி மாலையை மரியாதை குறைவுடன் நடத்திய சாபம்–துர்வாசர் பிருகு சாபம் -இரண்டும் சொல்வர்
இங்கே தவம் இருந்து தாயாரின் அருளை பெற்று தீர பெற்றான் –
ஸ்வாமி மலையில் இருந்து 3 கி மி தூரம் –

மூலவர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ அழகிய மணவாளன்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி, ஸ்ரீ பார்கவி, ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி, ஸ்ரீ கமல வாசினி
தீர்த்தம் ஸ்ரீ சூர்ய புஷ்கரணி
விமானம் ஸ்ரீ பிரணவ விமானம்
மண்டலம் சோழநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ கும்பகோணம்
நாமாவளி ஸ்ரீ ரங்கநாயகீ ஸமேத ஸ்ரீ ஆண்டளக்குமையன் ஸ்வாமிநே நமஹ

—————

அன்னவனை ஆதனூராண்டாளக்கு மையனை நென்னலை யின்றினை நாளையை நீர்மலை மேல் –பெரிய திருமடல் – 130-

என்னை மனங்கவர்ந்த ஈசனை – வானவர்தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”– பெரிய திருமடல் 126 – 129

இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது.
இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.

ஆவாகிய காமதேனு மகாவிஷ்ணுவிடம் சரணடைய வேண்டுமென்று இத்திருத்தலத்தில் தவமிருந்து அது சித்தித்தது. காமதேனு தவமிருந்ததால்
ஆ+தன்+ஊர் ஆதனூராயிற்று. இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா
ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.

இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக்
கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டுமன்றி அவனையும்
பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.

எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக கருதப்படுகிறது.

ஆதிரங்கேச்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம்
ப்ருகு, அக்னி, காமதேனுப்யோ தத்தாபீதம் தயாந்திரம்
விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் ஸு ர்ய
புஷ்கர்னி திரே சேஷஸ்யோபரி ஸாயிநம்-

மூலவர்-ஆண்டளுக்கும் ஐயன், தலையின் கீழ் மரக்காலும் இடது கரத்தில் ஓலை எழுத்தாணியுடன், கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட திருக்கோலம்.
தாயார்- பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.
உற்சவர்– அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)
விமானம்– ப்ரணவ விமானம்
வ்ருட்சம்– புன்னை, பாடலி
தீர்த்தம்– சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்–காமதேனு, ப்ருகுமுனிவர், அக்னி பகவான், திருமங்கையாழ்வார்.

இத்தலத்தில் காமதேனுவுக்கும், காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு.

ஸ்ரீரங்கத்திற்கு இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் ஓடுதல் போன்று இத்தலத்திற்கும் 2 கல் தொலைவில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும்
ஓடுகிறது.–ஒரு காலத்தில் திருவரங்கம்போன்று இங்கும் 7 மதில்கள் இருந்ததாகவும் பிற்காலத்தே காலவெள்ளத்தே அழிந்துபட்டது என்றும் அறிய முடிகிறது.திருவரங்கம் கர்ப்பகிருகத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு தங்கத் தூண்களை மணத்தூன் என்றும் சொல்வார்கள். இதேபோன்று ஆதனூரிலும் எம் பெருமானின் கர்ப்பகிருஹத்திற்குள் இத்தூண்கள் உண்டு

மிகச் சிறப்புற்று விளங்கிய இக்கோவிலின் பழைய அமைப்பு பூமிக்கு அடியில் புதைந்துவிட அச்சமயம்-காஷ்மீர் தேசத்து ராஜாவின் புதல்விக்கு (பேய்) பிர்ம்மராட்சஸு பிடித்து, எவ்வளவு பாடுபட்டும் அதைத் தீர்க்க முடியாது அம்மன்னன் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கனவில் தோன்றிய இப்பெருமான் இக் கோவிலை செப்பனிடுமாறு தெரிவிக்க, அவன் பரிவாரங்களுடன் வந்து தங்கி
இப்போதுள்ள மாதிரியை ஒத்துக்கட்டி முடிக்க அவன் மகளைப் பிடித்திருந்த  பிர்ம்மராட்சஸு ம் ஒழிந்தது

திருமுழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது ஐதீஹம்.
என்னை மனங்கவர்ந்த ஈசனையென்று திருமங்கை தனது
மங்களாசாசனத்தை இப்பெருமானுக்காக ஆரம்பிக்கிறார்.
என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமுழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட
முழிக்களத்து வளத்தின் என்பதை இவர்-மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசித்தார்.
மூழிக்களத்தின் வளமாவது – ஸம்பத்து- இங்கு ஆண்டளக்கும் ஐயன் என்பதே  ஸம்பத்திற்கு அடையாளமன்றோ
மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்

திருமங்கையாழ்வார் அரங்கநாதனுக்கு திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது சமயங்கையில் இருந்த பொருள் எல்லாம் தீர்ந்துவிட
கைங்கர்யத்திற்குப் பணம் இல்லையே என்று பெருமானிடம் வேண்ட-கொள்ளிடக்கரைக்குவா பணந்தருகிறேன் என்று சொல்ல
அவ்விதமே வந்து நிற்க, எம்பெருமான் தலைப்பாகை அணிந்து கையில் ஒரு எழுத்தாணி, மரக்கால் சகிதிமாய் ஒரு வணிகரைப் போன்று வர,
இவரைக் கண்ட திருமங்கை, யாரென்று வினவ, அதற்கு அந்த வணிகர் உம்பொருட்டே என்னை ஸ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளனே அனுப்பிவைத்தான் என்று சொல்ல,
சரி, அப்படியானால் சுவாமி, காலியான மரக்காலுடன்
வந்திருக்கிறீர்களே என்று கேட்க, அதற்கந்த வணிகர் இந்த மரக்காலைக் கையில் எடுத்து
வேண்டிய பொருளை மனதில் தியானித்து எம்பெருமானே சரண் என்று 3 தடவை சொன்னால் அப்பொருள் சித்திக்கும் என்று சொன்னார்.

அப்படியானால் இங்குள்ளவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். இந்த மணலை அளந்து போடும் என்று கூறினார்.
அதற்குச் சரியென்று ஒப்புக் கொண்ட வணிகர் ஒரு நிபந்தனை விதித்தார். அவர்களின் கூலிக்காக இந்த மணலை நான் அளந்து போடுகிறேன். உண்மையாக உழைத்தோருக்கு பொன்னாகவும் சோம்பலுடன் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவே காட்சி தரும்
என்று கூறி அளந்து போட பெரும் பாலானோர்க்கு மணலாகவே தெரிய, இவன் மந்திரவாதி என்று பலர் அடிக்கவர,
வணிகர் மெல்ல நகர, திருமங்கை
பின்தொடர, இவருக்கு காட்சியளிக்க நினைத்த எம்பெருமான் மிகவிரைவாகச் செல்ல
திருமங்கை தமது குதிரையிலேறி பின் தொடர்ந்தார்.

இவ்விதம் ஓடிவந்து திருமங்கைக்கு காட்சி கொடுத்து மரக்கால், ஓலை, எழுத்தாணியோடு ஆதனூரில் புகுந்து கொண்டதாக ஐதீகம்.
அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும்
கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப் பார்த்த ஊர் திரும்பூர் எனவும்,
திருமங்கையாழ்வார் விரட்டிக்கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர்(மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும்,
மரக்காலுக்குள் கை வைத்த ஊர்-வைகாவூர், என்றும்-புகுந்தது பூங்குடி என்றும்,-அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர்.

இத்தலத்தின் கோபுரத்தில் மஹாவிஷ்ணு சிலை உள்ளது. “ஒங்காரோ பகவான் விஷ்ணு” என்ற ப்ரமாணத்தின் பேரில் ப்ரணவ விமானத்தில் வாசுதேவன்
உள்ளான். இவன் திருவடி தெரிந்துவிட்டால் இந்த யுகமானது (கலியுகம்) முடிந்து பிரளயம் உண்டாகும். இந்தச் சிலை வளர்ந்து வருவதாக ஒரு ஐதீகம்.
இப்போது முழங்கால்வரை தெரிகிறது. இச்சிலை வளர்ந்து வருவதாக இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீஇராமபிரான் இங்கே வந்து எனது சகாயான் இங்கு வந்தாரா என்றுகேட்டுத் தனது திருவடியை வைத்துவிட்டுச் சென்றதாகவும், வரலாறு. இந்த
அஞ்சநேயருக்கு “வீரசுதர்சன ஆஞ்சநேயர்” என்பது பெயர். ஸ்ரீராமன் திருவடியும், ஸ்ரீஆஞ்சநேயரும் இப்போது இங்கு உளர். சிறந்த
வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் இந்த ஆஞ்சநேயர்.

இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது என்னார் அமலன்
ஆதனூர் எந்தை அடியார் –9-

அமலன்
ஆதனூர் எந்தை
அடியார் —பக்தர்கள் -இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் –
மடவார் மயக்கின் மயங்கார்
கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்-ஸ்வர்க்க லோகமும் விரும்பார்
நான் எனது என்னார் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் அருளுகிறார் –
காமதேனுக்கு பிரத்யஷம் -என்பதால் திரு ஆதனூர் -திரு நாமம் –

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் செய்து அருளிய -ஶ்ரீ ராமாயண தனி ஶ்லோகங்களின் தொகுப்பு —

January 17, 2024

ஶ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்கிற மஹாசார்யர், ஆழ்வார்கள் எழுதிய திவ்ய ப்ரபந்தங்களுக்கு
அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் விளக்கவுரை எழுதியுள்ளார். ‘திருவாய்மொழியைக் காத்த குணவாளர்’ என்றும்,
‘திருவாய்மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்கவல்ல குரு’ எ ன்றும்
இவரைச் சிறப்பித்துச் சொல்கிறார் மணவாள மாமுனிகள் என்னும் ஆசார்யர்.
அபயப்ரதராஜர், வியாக்கியானச் சக்கரவர்த்தி என்றெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் இவர்,
நான்கு திசைகளிலும் நான்கு ஸிம்ஹாஸனம் பெற்றவர் என்று போற்றப்படுகிறார்.

இப்படிச் சொல்லப்படுகிற நான்கு ஸிம்ஹாஸனங்கள் யாவை?
1-நாலாயிர திவ்யப்ரபந்தங்களுக்கு இவர் அருளிச்செய்த வியாக்கியானங்கள் முதல் ஸிம்ஹாஸனமாகும்.
மற்றவை முறையே:2- ஶ்ரீராமாயணம், பாரதம் முதலியவற்றின் தேர்ந்த ஶ்லோகங்களின் வியாக்கியானங்கள்,
3-ரஹஸ்யக்ரந்தங்களின் வியாக்கியானம்,
4-ஆளவந்தார், எம்பெருமானார் போன்ற ஆசார்யர்கள் எழுதிய க்ரந்தங்களின் வியாக்கியானங்கள் ஆகும்.

ஶ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையிலே நடுநாயகமாக விளங்குகின்ற ஶ்ரீராமாநுஜர்
தமது ஐந்து ஆசார்யர்களிடமிருந்து திவ்யப்ரபந்தங்கள், ஶ்ரீராமாயணார்த்தங்கள், ரஹஸ்யார்த்தங்கள்,
ஸ்தோத்ரார்த்தங்கள் முதலையவற்றைக் கேட்டு அறிந்துகொண்டார்.
ஆயினும் சீழ்ச்சொன்ன இந்த க்ரந்தங்கள் நம் போல்வார் எளிதில் கற்றுத் தெளிய வியாக்கியானங்களாக தம் பெருங்கருணையினால்
வெளியிட்டருளிய பெரியவாச்சான் பிள்ளையைப் ‘பரமகாருணிகர்’ என்றும் ‘அபாரகருணாஸாகரர்’ என்றும்  கொண்டாடுகிறார்கள்.
பேதை பாமரர்களும் ஶ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தின் பொருள்களை உணரும்படி பற்பல நூல்களை இயற்றி
இவர் உதவியதுபோலே வேறு எந்த ஆசார்யருமே செய்ததில்லை என்பதை எவரேனும் மறுப்பரோ?

திருமடந்தை மண்மடந்தை இருபாலுந்திகழ, நலமந்தமில்லதோர் நாட்டில் என்று தொடங்கி
ஶ்ரீராமாயணம் பாசுரப்படி அருளிச்செய்த இவர், ஶ்ரீராமாயணத்தில் ஆழங்கால் பட்டு அருளிச்செய்த
க்ரந்தங்களினுள் ஶ்ரீராமாயண தனிஶ்லோகீ என்பது தனிப்பெரும்பெருமை பெற்று விளங்குகிறது.
ஶ்ருதிகள், இதிஹாஸ புராணங்கள், தர்ம ஶாஸ்த்ரங்கள், காவியநாடக அலங்கார க்ரந்தங்கள், மீமாம்ஸா
முதலான ஶாஸ்த்ர க்ரந்தங்கள் முதலியவற்றிலிருந்து பற்பல விஷயங்களை எடுத்தெழுதியும்,
ப்ரமாணங்களை மேற்கோளாகக் காட்டியும் ஶ்ரீராமாயண ஶ்லோகங்களை விவரித்துத் தந்திருக்கிறார்.

ஶ்ரீராமாயணத்தில் மொத்தம் 24,000 ஶ்லோகங்கள் உள்ளன.
இவற்றுள், தனிஶ்லோகீ வியாக்கியானத்திற்கு இவர் எடுத்துக்கொண்டவை மொத்தம் 159 மட்டுமே.
பால காண்டத்தில் 6,
அயோத்யா காண்டத்தில் 14,
ஆரண்ய காண்டத்தில் 4,
கிஷ்கிந்தா காண்டத்தில் 4,
ஸுந்தர காண்டத்தில் 10,
யுத்த காண்டத்தில் 121;
ஆக மொத்தம் 159.
ஶ்ரீராமாயணம் ஒரு ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்பதால், யுத்த காண்டத்திலிருந்து  121 ஶ்லோகங்களை எடுத்துக் காட்டியருளியுள்ளார்.

———–

பால காண்டத்தில் 6,

அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி–பால – 19-14–

ஊந  ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந ந யுத்த யோக்யதாமஸ்ய பஸ்யாமி சஹ ராஷசை–பால -20-2-

த்ரஷ்டும் சக்யமயோத்யாயம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராச்ச நார்யச்ச தர்ம சீலாஸ் ஸூ சமயதா  –பால -6-8-

கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –23-2-

இயம் ஸீதா மம  ஸூதா சஹதர்ம சரீதவ
ப்ரதீச்ச சை நாம பத்ரம் தே பாணிம க்ருஷ்ணீஷ்வ பாணிநா –17-26-

————

அயோத்யா காண்டத்தில் 14,

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

இச்சா மோஹி மஹா பாஹூம்  ரகுவீரம் மஹா பலம் கஜேந  மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யவாதீ ச ராகவ பஹூ ஸ்ருதா நாம வ்ருத்தா நாம் ப்ராஹ்மணா நாம் உபாஸிதா–அயோத்யா -2-33-

ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யவாதீ ச ராகவ பஹூ ஸ்ருதா நாம வ்ருத்தா நாம் ப்ராஹ்மணா நாம் உபாஸிதா–அயோத்யா -2-33-

யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி நிந்திதஸ்  ஸ வசேஸ் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –அயோத்யா -17-14-

ராஜ்யஞ்ச தவ ரஷேயமஹம் வேலேவ சாகரம் ப்ரதிஜா நாமி தி வீர மா பூவம் வீர லோகபாக் –அயோத்யா -23-29-

கிம் த்வா மன்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –அயோத்யா -30-3-

ஸ ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்–அயோத்யா -31-2-

பவாம்ஸ்து ஸ ஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச்ச தே -அயோத்யா -31-25-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம் அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூ கம் -அயோத்யா -40-8-

யே து ராமஸ்ய ஸூஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச சோக பாரேண சாக்ராந்தாச் சயனம் ந ஐ ஹூஸ் ததா –அயோத்யா -41-20-

ராமம்  மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே ந த்வா பஸ்யாமி கௌசல்யே  ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ-அயோத்யா -42-34-

ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-அயோத்யா -53-31-

விஷயே தே மஹாராஜ ராமவ்யசந கர்சிதா அபி வருஷா பரிமலா நாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா-அயோத்யா -59-4-

ஆசசஷே அத சத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மந பரதாயா ப்ரமேயாய குஹோ கஹ ந கோசர -அயோத்யா -86-1-

ஸூபகச் சித்ரகூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி யஸ்மின் வஸதி காகுத்ஸ்த குபேர இவ நந்த நே –அயோத்யா -91-12-

—————–

ஆரண்ய காண்டத்தில் 4,

பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந  தர்மஜ்ஞேந  ஸ லஷ்மண த்வயா புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம–ஆரண்ய -16-29-

தருணௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14-

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம்  ஸூகாவஹம் பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஆரண்ய -30-39-

அஸ்மின் மயா சார்த்த முதார  ஸீலா-சிலாதலே பூர்வமுபோப விஷ்டா காந்தஸ்மிதா லஷ்மண ஜாதஹாசா த்வாமாஹா ஸீ தா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய -63-12-

————-

கிஷ்கிந்தா காண்டத்தில் 4,

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர –கிஷ்கிந்தா -1-71-

பத்ம சௌகந்தி கவஹம் சிவம் சோக விநாசநம் தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ   பவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115-

நாந் ருக்வேத விநீதஸ்ய நாயஜூர்வேத தாரிண நா சாமவேத விதுஷ சக்யமேவம் ப்ரபாஷிதும் –கிஷ்கிந்தா -3-28-

த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-ஜிதேந்த்ரியச்ச உத்தமதார்மிகச்ச – அஷய்ய கீர்த்திச்ச -விசஷணச்ச -ஷிதி ஷமாவான் -ஷத ஜோபமாஷ-கிஷ்கிந்தா -24-31-

————-

ஸுந்தர காண்டத்தில் 10,

துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யத நயா ப்ரபு தாரயத் யாத்மநோ தேஹம் ந சோகே நா வசீததி-சுந்தர -15-23-

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய ச தீ மத நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே -சுந்தர -16-4-

ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா வ்யசந பரம்பரயாதி பீட்யமாநா சஹ சரரஹி தேவ சக்ரவாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தசாம் பிரபன்னா –சுந்தர -16-30-

த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந  -சுந்தர -21-3-

இஹ சந்தோ  ந வா ஸந்தி  ஸதோ வா நா நுவர்த்தஸே ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா வதம் சா நிச்சதா கோரம் த்வயாசௌ புருஷரஷப –சுந்தர – 21-19-

சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் நிரீஷமாணா  தம சிந்த்ய புத்திம ததர்ச பிங்காதி   பதேர மாத்யம் வாதாத் மஜம் ஸூர்யமிவோத யஸ்தம் –சுந்தர -31-19-

—————-

யுத்த காண்டத்தில் 121;

ந மே துக்கம்   ப்ரியா தூரே ந மே துக்கம் ஹ்ருதேதி வா ஏததேவா நுஸோசாமி வயோ அஸ்யா ஹ்யதிவர்த்ததே –5-5-

ஸூநிவிஷ்டம் ஹிதம் வாக்ய முக்த வந்தம் விபீஷணம் அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் ராவண கால சோதித -யுத்த -16-1-

இத்யுக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ ஆஜ காம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மண -யுத்த -17-1-

தம் மேரு சிகராகாரம் தீப்தாமிவ சதஹ்ரதாம் கக நச்தம் மஹீஸ் தாஸ் தே தத் ருஸூர் வாநராதிபா -யுத்த -17-2-

தம் ஆத்ம பஞ்சமம் த்ருஷ்ட்வா ஸூ க்ரீவோ வாநராதிப  வாநரைஸ் சஹ துர்த்தர்ஷஸ் சிந்தயாமாச புத்தி மான் -யுத்த -17-3-

சிந்தயித்வா முஹூர்த்தந்து வாநராம் ஸ்தாநுவாச ஹ ஹநூமத ப்ரமுகான் சர்வாநிதம் வசனமுத்தமம் -யுத்த -17-4-

ஏஷ சர்வாயுதோ பேதஸ் சதுர்ப்பிஸ் சஹ ராஷசை ராஷசோ அப்யேதி பச்யத் வமஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்த -17-5-

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா சர்வே தே வாநரோத்தமா சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச இதம் வசனமப் ருவன் –யுத்த -17-6-

சீக்ரம் வ்யாதிச  நோ ராஜன் வதாயைஷாம் துராத்மா நாம் நிப தந்து ஹதா யாவத் தரண்யா மலப தேஜஸ–யுத்த -17-7-

தேஷாம் சம்பாஷமாணா நாமான் யோந்யம் ஸ விபீஷண உத்தரம் தீரம் ஆசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத –யுத்த -17-8-

உவாசஸ மகாப்ராஜ்ஞ ஸ்வரேண மஹதா மஹான் ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய கச்த ஏவ விபீஷண -யுத்த -17-9-

ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷசோ ராஷ சேஸ்வர தஸ்யா ஹமநுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -யுத்த -17-10-

தோ ஸீதா ஜனஸ்தாநாத் த்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ஸ விவஸா தீ நா ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா –யுத்த -17-11-

தமஹம் ஹேதுபிர் வாக்யைர் விவிதைஸ் ஸ ந்யதர்சயம் சாது நிர்யாத்யதாம் ஸீதா ராமயேதி புந புந -யுத்த -17-12-

ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ ராவண கால சோதித உச்யமாநம்  ஹிதம் வாக்கியம் விபரீத இவௌஷதம்-யுத்த -17-13-

ஸோ அஹம் பருஷித ஸ்தேந தாஸ வச்சாவ மா நித த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ  தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத –யுத்த -17-14-

நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம் சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே  -யுத்த -17-15-

ஏதத்து வசனம் ஸ்ருத்வா ஸூ க்ரீவோ லகு விக்ரம லஷ்மணஸ்ய அக்ரதோ ராமம் சம்ரப்த மித மப்ரவீத் –யுத்த -17-16-

மந்த்ரே வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிது மர்ஹசி வா நராணாஞ்ச பத்ரம் தே பரே ஷாஞ்ச பரந்தப -யுத்த -17-18-

அந்தர்த்தா நகதா   ஹ்யதே ராஷசா காம ரூபிண ஸூ ராச்ச நிக்ருதி ஜ்ஞாச்ச தேஷு ஜாது ந விஸ்வ சேத்-யுத்த -17-19-

ப்ரணிதீ ராஷசேந்த்ரஸ்ய ராவணஸ்ய பவேதயம் அநு பிரவிஸ்ய சோஸ் மா ஸூபேதம குர்யான் ந சம்சய -யுத்த -17-20-

அதவா ஸ்வயமே வைஷ சித்ரமா சாத்ய புத்தி மான் அநு பிரவிச்ய விஸ்வஸ்தே கதாசித் ப்ரஹ ரேதபி -யுத்த -17-21-

மித்ரா டவீப லஞ்சைவ மௌ லம் ப்ருத்யபலம் ததா சர்வ மேதத் பலம் க்ராஹ்யம் வர்ஜயித்வா த்விஷத் பலம் -யுத்த -17-22-

ப்ரக்ருதயா ராஷசோ ஹ்யேஷா ப்ராதாஸ் மித்ரஸ்ய வை விபோ ஆக தஸ்ச ரிபோ பஷாத் கதமஸ் மிம்ஸ்ச விஸ்வசேத்  -யுத்த -17-23-

ராவணேந ப்ரணிஹிதம் தமவேஹி நிஸாசரம் தஸ்யா அஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -யுத்த -17-24-

ராஷசோ ஜிஹ்மயா புத்த்யாசந்திஷ்டோ அயம்  உபஸ்தித ப்ரஹர்த்தும் மாயயா சந்நோ   விஸ்வச்தே த்வயி ஸாநக -யுத்த -17-25-

ப்ரவிஷ்ட சத்ரு சைந்யம் ஹி ப்ராப்த சத்ருர தர்க்கித நிஹந்யா தந்தரம் லப்த்வா உலூகா நிவ வாய்ஸ-யுத்த -17-26-

வத்யாதாமேஷ தீவ்ரேண தண்டே ந ஸ சிவை சஹ ராவணஸ்ய நருஸம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண-யுத்த -17-27-

ஏவமுக்த்வா து தம் ராமம் சம்ரப்தோ வாஹி நீ பதி வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌ நமுபாகமத  –யுத்த –17-28-

ஸூ க்ரீவஸ்ய து தத்வாக்யம்  ஸ்ருத்வா ராமோ மஹா பல சமீபாஸ்தா நுவா சேதம் ஹநுமத் ப்ரமுகான் ஹரீன் –யுத்த -17-29-

யதுக்தம் கபி ராஜேன ராவணா வரஜம்பிரதி வாக்யம் ஹேது மதர்த்யம் ச பவத் பிரதி தச்சருதம்  -யுத்த -17-30-

ஸூஹ்ருதாஹி அர்த்த க்ருச்ச்ரேஷூ யுக்தம் புத்திமதா சதா சமர்த்தே நாபி சந்தேஷ்டும் சாஸ்வதீம் பூதி மிச்சதா –யுத்த -17-31-

இத்யேவம் பரிப்ருஷ்டாஸ்தே ஸ்வம் ஸ்வம் மதமதந்த்ரிதா சோபசாரம் ததா ராமமூசுர் ஹிதசி கீர்ஷவ –யுத்த -17-32-

அஜ்ஞாதம்  நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ ஆத்மானம் பூஜயன் ராம ப்ருச்சச்ய ஸமான்  ஸூ ஹ்ருத்தம் -யுத்த -17-33-

த்வம் ஹி சத்யவ்ரத   ஸூரோ  தார்மிகோ  த்ருட விக்ரம பரீஷ்யகாரீ ஸ்ம்ருதி மான் நிஸ் ருஷ்டாத்மா  ஸூ ஹ்ருத் ஸூ -யுத்த -17-34-

தஸ்மாத் ஏகைஸஸ் தாவத் பருவந்து சசிவாஸ் தவ ஹேதுதோ மதி சம்பன்னாஸ் சமர்த்தாஸ் ஸ புனஸ் ததா -யுத்த -17-35-

இத்யுக்தே ராகவாய அத  மதிமாநங்கதோ அக்ரத விபீஷண பரீஷார்த்தம் உவாச வசனம் ஹரி –யுத்த -17-36-

சத்ரோ சகாசாத் சம்ப்ராப்த சர்வதா சங்க்ய ஏவ ஹி விஸ்வாச யோக்ய சஹஸா ந  கர்தவ்யோ விபீஷண -யுத்த -17-37-

சாதயித்வா ஆத்மபாவம் ஹி சரந்தி சட புத்தய ப்ரஹரந்தி ஸ ரந்ரேஷூ ஸோ அனர்த்தஸ் தத்க்ருதோ பவேத் -யுத்த -17-38-

அர்த்தா நர்த்தௌ விநிஸ்சித்ய வ்யவசாயம் பஜேத ஹி குணத சங்க்ரஹம் குர்யாத் தோஷ தஸ்து விசர்ஜயேத்–யுத்த -17-39-

யதி தோஷோ மஹாம்ஸ் தஸ்மின் த்யஜ்யதாம விசங்கித குணான் வாபி பஹூன் ஜ்ஞாத்வா சங்க்ரஹ க்ரியதாம் ந்ருப -யுத்த -17-40-

சரபஸ் த்வத நிச்சித்ய சாத்யம் வசனம் அப்ரவீத் ஷிப்ரம் அஸ்மின் நரவ்யாக்ர சார பிரதிவிதீயதாம் –யுத்த 17-41-

ப்ரணிதாய ஹி சாரேண யதாவத்  ஸூஷ்ம புத்தி நா பரீஷ்ய ச தத கார்யோ யதா ந்யாயம் பரிக்ரஹ –யுத்த -17-42-

ஜாம்பவாம் ஸ் த்வத சம்ப்ரேஷ்ய சாஸ்த்ர  புத்த்யா விசஷண வாக்கியம் விஜ்ஞாபயாமாஸ குணவத் தோஷ வர்ஜிதம் -யுத்த -17-43-

பத்தவைராச்ச பாபாச்ச ராஷசேந்த்ராத் விபீஷண அதேச கால சம்ப்ராப்த சர்வதா சங்க்யதா மயம்–யுத்த -17-44-

ததோ மைந்தஸ்து சம்ப்ரேஷ்ய நயாபநய கோவித வாக்கியம் வசன சம்பன்னோ பபாஷே ஹேதுமத்தரம்–யுத்த-17-45-

வசனம் நாம் தஸ்யஷ ராவணஸ்ய விபீஷண ப்ருச்யதாம் மது  ரேணாயம் சனைர் நர பதீஸ்வர -யுத்த -17-46-

பாவமஸ்ய து விஜ்ஞாய தத்தவ தஸ் த்வம் கரிஷ்யசி யதி துஷ்டோ ந துஷ்டோ வா புத்தி பூர்வம் நரர்ஷப –யுத்த -17-47-

அத சம்ஸ்கார சம்பன்நோ ஹநுமான் சசிவோத்தம உவாச வசனம் ஸ் லஷ்ணமர்த்தவம் மதுரம் லகு –யுத்த -17-48-

பவந்தம் மதி ஸ்ரேஷ்டம் சமர்த்தம் வததாம் வரம் அதிசாயயிதும் சகதோ ப்ருஹஸ்பதிரபி ப்ருவன்-யுத்த -17-49-

ந வாதான்நாபி சங்கர்ஷான்நாதி க்யான்ந ச காமத வஷ்யாமி வசனம் ராஜன் யதார்த்தம் ராம கௌரவாத்–யுத்த -17-50-

அர்த்தா அநர்த்த நிமித்தம் ஹி யதுக்தம் சசிவைஸ் தவ தத்ர தோஷம் பிரபச்யாமி க்ரியா ந ஹ்யுபபத் யதே -யுத்த -17-51-

ருதே நியோகாத் சாமர்த்யமவ போத்தும் ந சக்யதே சஹஸா விநியோகோ ஹி தோஷவான் பிரதிபாதிமா –யுத்த -17-52-

சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் சசிவைஸ் தவ அர்த்தஸ்யா  சம்பவாத் தாத்ரா காரணம் நோபாபத்யதே –யுத்த -17-53-

அதேசகாலே சம்ப்ராப்த இத்யயம்யத் விபீஷண விவஷா சாத்ர மேஸ்தீயம் தாம் நிபோத யதாமதி –யுத்த -17-54-

ஸ ஏஷ தேச காலஸ்ச பவதீஹ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி -யுத்த -17-55-

தௌராத்ம்யம் ராவணே த்ருஷ்ட்வா விக்கிரமம் ஸ ததா தவயி யுக்தமாகமநம் தஸ்ய ஸத்ருஸம் தஸ்ய புத்தித –யுத்த -17-56-

அஜ்ஞாதரூபை புருஷைஸ் ஸ ராஜன் ப்ருச்ச்யதாமிதி யதுக்தம் தத்ர மே ப்ரெஷா காசிதஸ்தி சமீஷிதா –யுத்த -17-57-

ப்ருச்சய மாநோ விசங்கேத சஹஸா புத்திமான் வச தத்ர மித்ரம் ப்ரதூஷ்யேத மித்யா ப்ரஷ்டு ஸூ காகதம் –யுத்த -17-58-

அசக்ய சஹஸா ராஜன் பாவோ வேத்தும் பரஸ்ய வை அந்த ஸ்வ பாவைர் கீதைஸ் தைர் நை புண்யம் பஸ்யதோ ப்ருசம்  -யுத்த -17-59-

ந த்வஸ்ய ப்ருவதோ ஜாது லஷ்யதே துஷ்டபாவதா பிரஸன்னம் வதனம் சாபி தஸ்மான்மே நாஸ்தி சம்சய -யுத்த -17-60-

அசங்கிதமதி ஸ்வஸ்தோ நஸட பரிஸர்ப்பதி ந சாஸ்ய துஷ்ட வாகஸ்தி தாஸ்மான் நாஸ் தீஹ சம்சய –யுத்த -17-61

ஆகாரஸ் சாத்யமாநோ அபி ந சக்யோ விநி கூஹிதும் பலாத்தி விவ்ருணோத்யேவ   பாவ மந்தர்க்கதம் நருணாம் -17-62-

தேச காலோபபன்னம் ச கார்யம்  கார்யவிதாம் வர சபலம் குரு தே ஷிப்ரம் பிரயோகேணாபி சம்ஹிதம் -17-63-

உத்யோகம் தவ சம்ப்ரேஷ்ய மித்யாவ்ருத்தம் ச ராவணம் வாலி நஞ்ச ஹதம் ச்ருத்வா ஸூ க்ரீவம் சாபி ஷேசிதம் -17-64

ராஜ்யம் ப்ரார்த்தயமா நஸ்து புத்தி பூர்வமிஹா கத ஏதாவத்து புரஸ் க்ருத்ய வித்யதே த்வச்ய சங்க்ரஹ –17-65-

யதா சக்தி  மயோக்தம் து ராஷஸஸ் யார்ஜவம்  ப்ரதி பிரமாணம் த்வம் ஹி சர்வஸ்ய ஸ்ருத்வா புத்தி மதாம் வர 17-66-

அத ராம பிரசன்நாத்மா ஸ்ருத்வா வாயு ஸூ தஸ்ய ஹ ப்ரத்ய பாஷத துர்த்தர்ஷ ஸ்ருதவாநாத்மநி ஸ்திதம் -18-1-

மமாபி து விவஷாஸ்தி காசித் பிரதி விபீஷணம்  ஸ்ருத மிச்சாமி தத் சர்வம் பவத்பி ஸ்ரேயசி ஸ்திதை- 18-2-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் -யுத்த -18-3-

ஸூ க்ரீவஸ் த்வத தத் வாக்யம் ஆபாஷ்ய ச விம்ருஸ்ய ச தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவ -யுத்த -18-4-

ஸூ துஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர ஈத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராதரம் ய பரித்யஜேத் கோ நாம ஸ பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் -யுத்த -18-5-

வாநராதிபதேர் வாக்யம் ஸ்ருத்வா சர்வாநுதீஷ்ய ச ஈஷது தஸ்மயமா நஸ்து லஷ்மணம் புண்ய லஷணம் இதி ஹோவாச காகுத்ஸ்தோ வாக்யம் சத்ய பராக்ரம -யுத்த -18-6/7-

அநதீத்ய ச சாஸ்த்ராணி வ்ருத்தான் அநுபசேவ்ய ச ந சக்யம் ஈத்ருசம் வக்தும் யதுவாச ஹரீஸ்வர–18-8-

அஸ்தி ஸூஷ்மதரம் கிஞ்சித் யதத்ர ப்ரதிபாதி மே ப்ரத்யஷம் லௌகிகம் வாபி வித்யதே சர்வ ராஜஸூ  -18-9-

அமித்ராஸ் தத் குலீநாஸ்ச ப்ராதிதேஸ் யாஸ்ச கீர்த்திதா வ்யச நேஷூ ப்ரஹர்த்தாரஸ் தஸ்மாத யமிஹா கத –18-10-

அபாபாஸ் தத் குலீ நாச்ச மாநயந்தி ஸவகான் ஹிதான் ஏஷ ப்ராயோ நரேந்த்ராணாம் சங்க நீயஸ்து சோபந –யுத்த -18-11-

யஸ்து தோஷஸ் த்வயா ப்ரோக்தோ ஹ்யாதா நே அரிபலஸ்ய ச தத்ர தே கீர்த்தயிஷ்யாமி யதா சாஸ்த்ரமிதம் ச்ருணு–18-12-

ந வயம் தத் குலீ நாஸ்ச ராஜ்ய  காங்ஷீ ச ராஷஸ பண்டிதா ஹி பவிஷ்யந்தி தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண–18-13-

அவ்யாக்ராஸச பிரதுஷ்டாஸ்தே ந பவிஷ்யந்தி சங்கதா ப்ராணா தஸ்ச மஹா நேஷஸ்  ததோ அஸ்ய பயமாகதம் இதி பேதம் கமிஷ்யந்தி  தஸ்மாத் க்ராஹ்யோ விபீஷண –18-14/15-

ந சர்வே பிராதரஸ் தாத பவந்தி பரதோபமா மத்விதா வா பிது புத்ரா ஸூ ஹ்ருதோ வா பவத்விதா -18-16-

ஏவமுக்தஸ்து ராமேண ஸூ க்ரீவ சஹ லஷ்மண உத்தாய ஏதம் மஹா ப்ராஜ்ஞ ப்ரணதோ வாக்யம் அப்ரவீத்  –18-17-

ராவணேந  ப்ரணிஹிதம் தம வேஹி நிசாசரம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே ஷமம் ஷமவதாம் வர -18-18-

ராஷஸோ ஜிஹ்மயா புத்த்யா சந்திஷ்டோ அயம் இஹா கத ப்ரஹர்த்தும் த்வயி விஸ்வஸ்தே  ப்ரச்சநநோ மயி சா நக லஷ்மணே வா மஹா பாஹோ ஸ  வத்ய ஸசிவை ஸஹ –18-19-

ஏவமுக்த்வா ரகு ஸ்ரேஷ்டம் ஸூ க்ரீவோ வாஹிநீபதி வாக்யஜ்ஞோ வாக்ய குசலம் ததோ மௌநமுபாகமத் –18-20-

ஸூக்ரீவஸ்ய து தத்வாக்யம் ராம ஸ்ருத்வா விம்ருஸ்ய ச தத ஸூ பதரம் வாக்யமுவாச ஹரி புங்கவம் -யுத்த -18-21-

ஸூதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமேஷ ரஜநீசர ஸூ ஷ்மம ப்யஹிதம் கர்த்தும் மமாசக்த கதஞ்சன –18-22-

பிசாசான் தாநவான் யஷான் ப்ருதிவ்யாஞ்சைவ ராஷசான் அங்குள் யக்ரேண தான் ஹன்யாமிச்சன்  ஹரி கணேஸ்வர –18-23-

ஸ்ரூயதே ஹி கபோதேந சத்ரு சரணமாகத அர்ச்சி தஸ்ச யதா ந்யாயம் ஸ்வஸ்ச மாம் சைர் நிமிந்த்ரித –18-24-

ஸ ஹி தம் பிரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தார மாகதம் கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத விதோ ஜன –18-25-

ருஷே கண்வஸ்ய புத்ரேண கண்டு நா பரமர்ஷிணா ஸ்ருணு காதாம்   புரா கீதாம் தர்மிஷ்டாம் சத்யவாதி நா –18-26-

பத்தாஞ்ஜலிபுடம் தீநம் யாசந்தம் சரணாகதம் ந ஹந்யாதா ந்ருசம்ஸ் யார்த்தமபி சத்ரும் பரந்தப–18-27-

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த பரேஷாம் சரணாகத அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –18-28-

ஸ சேத் பாத்வா காமாத்வா மோஹாத்வாபி   ந ரஷதி ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத்பாவம் லோக கர்ஹிதம் –18-29-

விநஷ்ட பஸ்யதஸ்தஸ்ய ரஷிண சரணாகத ஆதாய ஸூ க்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித -18-30-

அஸ்வர்க்யம் அயஸஸ்யம் பலவீர்ய விநாசனம் -18-31-

கரிஷ்யாமி யதார்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம் தர்மிஷ்டம் ஸ யசஸ்யம் ஸ ஸ்வர்க்யம் ஸ்யாத்து பலோதயே -18-32-

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-

ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ் யாபயம் மயா விபீஷணோ வா ஸூ க்ரீவ யதி வா ராவண ஸ்வயம் –18-34-

ராமஸ்ய து வச  ஸ்ருதவா ஸூக்ரீவ ப்லவகேஸ்வர பிரத்யபாஷத காகுத்ஸ்தம் சௌஹார்த்தே நாபி சோதித–18-35-

மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம் அநுமாநாச்ச பாவச்ச சர்வத ஸூ பரீஷித   –18-37-

தஸ்மாத் ஷிப்ரம் சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது ராகவ விபீஷணோ மகா ப்ராஜ்ஞ சகித்வஞ்சாப் யுபைது ந–18-38-

ததஸ்து ஸூக்ரீவவசோ நிசம்ய தத் ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர விபீஷணேநாஸூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர  18-39-

ராகவேண அபயே தத்தே  சந்நதோ ராவணாநுஜ விபீஷணோ மகாப்ராஜ்ஞோ பூமிம் சமவலோகயன் காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ பக்தைரநுசரை சஹ -19-1-

ஸ து ராமஸ்ய தர்மாத்மா நிபபாத விபீஷண பாதயோ சரணான் வேஷீ  சதுர்ப்பி சஹ ராஷஸை–19-2-

அநுஜோ ராவணஸ் யாஹம் தேந சாஸ்ம்யவமாநித பவந்தம் சர்வ பூதா நாம் சரண்யம் சரணம் கத –19-4–

பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த நாநி ச பவத்கதம்  மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை –19-5-

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத் வசஸா சாந்த்வயித்வைநம் லோசநாப்யாம் பிபந்நிவ–19-6-

ஆக்யாஹி மம தத்த்வேந ராஷஸாநாம் பலாபலம்–19-7-

ராஷஸா நாம் வதே சாஹ்யம் லங்கா யாஸ்ச பிரதர்ஷணே கரிஷ்யாமி யதாப்ராணம் பிரவேஷ்யாமி   ச வாஹிநீம் –19-23-

சாபமாநய சௌமித்ரே ஸராம்ஸ் சாஸீ விஷோபமான் ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா –21-22- –

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்–114-14

தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ- -114-15

மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை- -114-16

சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி– -114-17–

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

————–

உத்தர காண்டம்

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித பக்திஸ்ஸ நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி –உத்தர -40-16-

—————-
ஆக மொத்தம் 159.
ஶ்ரீராமாயணம் ஒரு ஶரணாகதி ஶாஸ்த்ரம் என்பதால், யுத்த காண்டத்திலிருந்து  121 ஶ்லோகங்களை எடுத்துக் காட்டியருளியுள்ளார்.

—————————————

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .