Archive for the ‘ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்’ Category

ஸ்ரீ வார்த்தா மாலா -வார்த்தை -423-

November 6, 2025

பகவத் சன்னதியிலே -அபராதானாம் ஆலய அகிஞ்சன -என்று அனுசந்திப்பான் –
ஆசார்யன் சன்னதியிலே அஜ்ஞ்ஞதையையும் ஆர்த்தியையும் அனுசந்திப்பான் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சன்னதியிலே தன்னுடைய சேஷத்வத்தையும் பாரதந்த்ர்யத்தையும் அனுசந்திப்பான் –
சம்சாரிகள் நடுவே தனக்கு இனிமையையும் பூர்த்தியையும் அனுசந்திப்பான் –

(அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சனன் அநந்ய கதி த்வமேவ உபாய பூதோ மே பவ பிரார்த்தனா மதி மாம் -சரணா கதிரித்யுக்தா -சா -தேவேசமின் பிரயுஜ்யதாம்-அஹிர் புத்தி சம்ஹிதை பிரமாணம்-)

——————

ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –

இவ்வம்சத்தில் ஜென்மத்தையும் அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர் அஸூயா ப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வேத மரியாதைக்கு பஹிர்ப்பூதன்

2-ஷூத்ரஸ் –ஷூத்ரத்வம் அவது-நீச விஷயங்களில் அதி சபலன் –உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து-அதுக்கு மேலே விநாச ஹேதுவான நீச சேவையிலே அதி சபலன்-

3-சலமதிர்-நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது-வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால் அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –

4-அஸூயா ப்ரஸ்வபூ –பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே-பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –

5-க்ருதக்ந –உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை–கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று
மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும் பஹிஷ்க்ருதன் -என்கை-

6-துர்மாநீ –இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும்-சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து-ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –

7-ஸ்மர ப்ரவஸோ –தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக நினைத்து இருக்கிற அளவன்றிக்கே விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும்
பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும் அனர்த்தப் பட்டேன் -என்கை –

8-வஞ்சன பர –காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் – அவ் விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –
சூதனாய்க் கள்வனாகி –திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-

9-ந்ரு ஸ்ம்ஸ –தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே –தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல் க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –

10-பாபிஷ்ட-இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன்
–திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம் தாமை பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே-த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற என்பது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

தவ சரணயோ -கதம் -பரிசரேயம் –துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான்
நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே எங்கனே பரிசர்யை பண்ணுவன்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் – அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை

(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –
நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன் நின்னடி இணையில் பணி செய்வேனே
–62-

சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்
நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்
நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்
பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்
நன்றி கொன்றவனாய்
மஹா பாதகனாய்
அஹங்காரியாய்
காம வசத்தனாய்
வஞ்சகனாய்
குரூரம் உள்ளவனாய்
பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற
நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன் –

——————————

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||-ஶ்லோகம் 62 –

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன், நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-
ஷூத்ர
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-
சலமதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-
அஸூயா ப்ரசவ பூ
தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-
க்ருதக்ன
செய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-
துர்மாநீ
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-
ஸ்மர பரவச
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-
வஞ்சனபர
சூதனாய் கள்வனாகி-திருமாலை-16-
ந்ருசம்ச
கொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-
பாபிஷ்ட
ஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-
கதமஹமித
என் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-
துக்க ஜல தேர பாராது த் ததீர்ண –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-
தவ பரிசரேயம் சரணயோ –
உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

——————————————

1-அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் –5–

கள்வனேன் ஆனேன் –விறகு களவு கண்டவனில்  காட்டில் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கு பாபம்ப்ரசுரமாய் இருக்கும் –சூத்ர தனத்தை அபஹரித்தவனில் காட்டில் ப்ராஹ்மண தனத்தை அபஹரித்தவனுக்குபாபம் விஞ்சி இருக்கும்-த்ரவ்யங்களில் தலையான ஆத்ம வஸ்துவை யாயிற்று அபஹரித்தது-சர்வேஸ்வரன் உடைமையை யாயிற்று என்னது என்று போந்தது –(நம்பினேன் பிறர் நன் பொருள் –என்றவாறு)-பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்-சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்-த்ரவ்யம் குணஸ்ததா கர்ம ஜாதிச் சேதஸ்கதாச்ரய-என்று பதார்த்தம் சொல்லுகிற இடத்தே த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தது-பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது-ஆத்மவஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய் இத்தை உடையவன் சர்வேஸ்வரனாய் இறே இருப்பது –

படிறு செய்து இருப்பேன் –மிடறு தின்றால் சொறிய ஒண்ணாதாற் போலே பஸ்யதோ ஹரனானேன்-நான் தேக ஆத்ம அபிமானம் பண்ணிப் போந்ததுவே அன்றிக்கே
ஈஸ்வர சேஷம் இவ்வாத்ம வஸ்து என்று இருப்பான் ஓர் ஆஸ்திகன் உண்டாகில்
தேகாத்ரிக்தமாய் இருப்பதொரு வஸ்து ஆவது என் -ஈஸ்வரன் ஆவது என் – என்று காண காணப் பறித்தேன்-நன் பொருள்
-விலஷண த்ரவ்யம்-எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் –நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள்-நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும்
பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-அந்யன் ஆகிறான்-கூடி இருக்கச் செய்தேயும் கார்யங்களிலே கூட்டுப் படாதவன் இறே-அதில் சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில் ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார் சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இறே அவன்-இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இறே

நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று-ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வத்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்-சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் – போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்-பிறர் நன் பொருள்-உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்-இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்-அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்-அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ-அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌச்துபத்தை அன்றோ நான் களவு கண்டது-சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும் மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது

கண்டவா திரிதந்தேனேலும் –முன்னடி தோற்றாமையாலே கை வந்தபடி பரிமாறினேன் இத்தனை போக்கி சாஸ்திரங்கள் ஆகாதது என்றத்தை அறிந்தும் மீண்டிலேன்
(கண்டவாறு திரிந்தது -கண்ணால் கண்ட சாம்சாரிக வழி கேட்டவாறு –சாஸ்திரம்- வேதம்-ஸ்ரவணம்-மனனம் – அறிந்து செல்ல வில்லை)-ந்ருபசு –அல்லாதவற்றோடு பரிமாறுமத்தை ஜனனி பக்கலிலும் பரிமாறத் தேடும்-

2-ஷூத்ரஅற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை-இப்படி இருப்பன அநேகம்-சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –இத்தால் பெற்றது ஏது என்ன-அகன்று ஒழிந்தேன்-சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்-உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை-முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.

3-சலமதிநின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட  பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்

4-அஸூயா ப்ரசவ பூதீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-

மனஸா து விசுத்தேன-என்றும்-யேது ஜ்ஞான விசுத்த சேதச -என்றும் மன ஸூத்தியைப் பேற்றுக்கு பரிகரமாக சொல்லக் கடவது இறே அந்த ஸூத்தி எனக்கு இல்லை -என்கிறார் –ஓர் தூய்மை என்றது –காம குரோத லோப த்வேஷாதிகளிலே ஓன்று குறைந்து அதில் ஸூத்தனாகப் பெற்றிலேன் –ஷம்காதாசித்மாக இல்லையாகவும் பெற்றிலேன் –வாயிலோர் இன் சொல் இல்லை-மனஸ் ஸூத்தி இல்லையானாலும் வாயில் பிரிய வசனங்கள் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை -என்கிறார் –ஓர் இன் சொல் ஆவது – இதற்கு முன்பு ஒருவரை குளிர -என் -என்று அறியேன் –குளிர என்றார் திறத்திலும் அனுகூலமாக ஒரு மாற்றமும் சொல்லியும் அறியேன் –நெடுஞ்சொல்லால் மறுத்த நீசனேன் -என்கிறபடியே
அபிமத விஷயங்களை உகக்கும் போது ஸ்ரவணமாய்த்து இருப்பது –

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன்
அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-5-

தாரித்ரத்தாலே நெருக்குண்டு–ஆரேனும் ஆகிலும் எல்லாரும் கூட எனக்கு ஒரு கால் வாயிலே இடுகைக்கு கேட்டு அது தர வேணும் என்று – முனியே -என்பாரைப் போலே கூப்பிடும் ஆயிற்று – துற்றாகிறது ஒரு கால் வாயிலே அள்ளிவிடுமதாயிற்று –இப்படியே தயா நீயமாம்படி சொல்லிக் காலைக் கட்டினவர்களுக்கு –இடுமின் என்றதே வேண்டியதே தான் -மேலே இரக்க என்றது சொல்லிக் காலைக் காட்டியதைக் காட்டுமே)அவர்களுக்கு இல்லையே –என்னும் போது சொல்லும் வார்த்தையில் கொடுமையை அனுசந்தித்து – நாம் இவனை ஓன்று அபேஷித்து வர இவன் இல்லையே என்ற பாசுரத்தைக் கேட்டு இன்னமும் ஜீவிக்க இருக்குமதில் இத்தனை நஞ்சு பெற்றோம் ஆகில் முடிந்தோம் போம் ஆயிற்று என்று கால தத்வம் உள்ளதனையும் அவன் நெஞ்சு புண் பட்டு கிடக்கும்படி சொன்ன கொடுமையை சொல்லுகிறதாயிற்று –அந்தோ – என்கிறார் ஆயிற்று மேல் வருகிற நலிவை அனுசந்தித்து-

5-க்ருதக்னசெய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-

மைந் நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந் நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந் நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந் நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே   யேத்தீர்களே –11-6-1-

மை மாறாதே நின்றால் போலே ஒத்த-அந்தக் கடலிடத்தே-லோகம் ஒன்றும் இன்றிக்கே –விபூதி அழிகின்றது என்று அழியாமல் நோக்குகைக்காக கடைந்து நெய்யிட்ட திரு வாழியை உடையவன் திரு வயிற்றிலே நெடும் காலம் கிடந்தது –அறிகிறிலீர் – பத்து மாசம் சுமந்ததுக்காக -தாய் -என்னா -நின்றீர் கோளே-உபகார ஸ்ம்ருதி கிடக்க-ஸ்வாராத தேவதையைப் பற்ற வேண்டாவோ-உபகார ஸ்ம்ருதியை விடாதே கொள்ளுங்கோள் –

6-துர்மாநீசதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-

சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்

அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

சதிராக வாழா நின்றோம் என்று -இருந்ததே குடியாக -எல்லாரும் தம்மை இப்படி இறே நினைத்து இருப்பது –தங்களை தாங்களே இசைந்து -இயற்றி யுடையனானவன் -நம்மை சதிரன் என்று அங்கே நினைப்பிடு -என்னும் -இவ்வசதஸ்ய ப்ரவ்ருத்திக்கு வேறு சஹகரிப்பார் இல்லாமையால் தாமே மேல் எழுத்து இட்டுக் கொடு வர வேணும் –இனிய பேச்சை யுடையவர்களுடைய –அகவாய் மயிர்க்கத்தியாய் இருக்க பேச்சில் இனிமையாலே வசீகரிப்பர்கள்-இனிய பேச்சை உடையவர்களாய் இருந்துள்ளவர்கள் உடைய-அகவாய் மயிர்க் கத்தியாய் இருக்கச் செய்தேயும் அன்பு கலந்த இனிய வார்த்தைகளாலே வசீகரிக்க வல்லவர்கள்-ஆதலின் –இன் மொழியார் -என்கிறார் – -மதுரமான போகங்களை அவர்களைக் கொண்டு நெருங்க புஜித்தவர்களே போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே மற்று ஓன்று -என்கிறார்-போகிறோம் போகிறோம் என்று இருக்குமே-போகாதே பின்னை வெள்ளாட்டியை இட்டுப் பரிபவிப்பர்கள்-அதற்கும் போகானே பின்னை ஆணை இட்டு எழுப்பிப் பார்ப்பார்கள்-அதற்கும் எழுந்திரான்- பின்னை காலைப் பற்றி இழுப்பார்கள்-இவன் தூணைக் கட்டிக் கொள்ளும்- இப்படியால் அவர்களாலே சிறுமை உறுவர்கள்- பலம் கிடைக்கும் வேளையில் பிறக்கும் சிறுமையை நினைந்து வெறுத்து-அவனை தம் திருவாயால் அருளிச் செய்ய மாட்டாமையால் மற்று ஓன்று -என்கிறார்-

7-ஸ்மர பரவசமாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

காமனுடைய -தர்ச நீயமாய் தப்ப ஒண்ணாத படியாய் கொடிதாய் இருக்கிற
வில்லுக்கு குடிமகனாய்த் திரியும் பாரினாரோடும் கூடுவதில்லை யான்-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தனக்கு ஆட் செய்யுமவன் நான்-

8-வஞ்சனபரசூதனாய் கள்வனாகி-திருமாலை-16-

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே-16-

தம்முடைய பூர்வ விருத்தம் அருளிச் செய்கிறார் –சூதாவது –பஸ்யதோ ஹரத்வம்-களவாவது –பர த்ரவ்யத்தை என்னது என்று இருக்கை –பிரமாண விஷயமான பரத்வத்தை இல்லை என்கை –இனி காஷ்ட அபஹாரம் பண்ணினவனுக்கும் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கும் அபஹாரம் ஒத்து இருக்கும்-த்ரவ்ய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-சண்டாள த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்-வசிஷ்ட த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும் த்ரவ்யம் ஒன்றானாலும் ஸ்வ வான்களுடைய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-இத் த்ரவ்யம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ருஹணீயமான ஆத்ம த்ரவ்யம் உடையவனும் சர்வேஸ்வரன் ஆகையாலே தோஷத்துக்கு அவதி இல்லை என்கை –ஆக –களவாகிறது –ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கை –

சூதாவது-பஸ்யஹோரத்வம் –அதாவது-சத்வர்த்தனாய் இருப்பன் ஒருவன் பர சேஷமாய்க் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு – தர்ம அதர்மங்கள் உண்டு என்று அறிதல் – இவை எல்லாம் பொய் காண் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்ளுகை –

அகவாயில் நினைவு இது வானால் – பின்னை இதுக்கு வர்த்தகராய் இருப்பார் உடன் சஹாவாசம் பண்ணுவது-தூர்தரோடு இசைந்த காலம் – பிராப்தமான சர்வேஸ்வரனை விட்டு அப்ராப்த விஷயங்களிலே அதி பிரவணர் உடன் பொருந்தி போந்த காலம் –இப்படி இருந்த காலத்தை ஸ்மரிக்கையும் கூட அசஹ்யமாய் இருக்கிறது ஆய்த்து இவர்க்கு –இப்படி அனர்த்தப் பட்டு போந்த காலத்துக்கு தொகை இல்லை கிடீர் –ஆத்மாவுக்கு நிலை நின்ற ஸ்வரூபம் ஸ்ரீ வைஷ்ணவ சஹவாசமேயாய் இருக்க அனர்த்த ஹேதுவான ஸ்வ பாவத்தை உடைய வர்களோடு காலத்தை போக்குவதே-பாகவத சஹவாசம் பகவத் விஷயத்தோடு மூட்டி விடுமோபாதி விபரீதர் உடைய சஹவாசம் விஷய பிராவண்யதுடன் மூட்டி விடும் இறே –

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை-ஸ்திரீகள் உடைய
கயல் போலே முக்தமாய் இருந்துள்ள கண்ணாகிற வலையிலே அகப்பட்டு கால் வாங்க மாட்டாத என்னை -ஜாதி மாத்ரமே பற்றாசாக மேல் விழும் அது ஒழிய ஜன்ம வ்ருத்தங்களாதி அறியான் –கண்ணின் உடைய ஆகர்ஷகத்வமே அறியும் அத்தனை – அகவை மயிர்க்கத்தியாய் -இவனை ஒழிய தங்களுக்கு செல்லாமை தோற்றும்படி யாய்த்து பார்ப்பது-கண் என்று பேரால் – வலையின் கார்யமே யாய்த்து பலிப்பது –-இது தானும் மணி வலை இறே-கண்ணுக்குளே மணியும் உண்டு இறே-அத்தைப் பற்றி வலை என்கிறது –
புறம்பு கால் ஒண்ணாதபடி கண்ணைக் காட்டி தான் கிட்டாதே அகல நிற்கும் –அதுக்கடி கிட்டினவன் அபிநிவேசத்தோடே போக உபகரணங்களைக் கொண்டு இழிந்த இவன் தனக்கு ச்நாநீயம் கொண்டு புறப்பட வேண்டும்படி இவன் தண்மை இருப்பது – இவன் தான் அவிவிவேகி ஆகையாலே அகவை ஆராய மாட்டாதே வாய்கரையிலே அழுந்தி நோவு படா நிற்கும் –வலையுள் பட்டு அழுந்துவேனை –மீண்டு கால் வாங்க ஒண்ணாது-அது தன்னில் அனுபாவ்யம் ஓன்று இல்லை-கிடந்தது உழைக்கும் இத்தனை-விஷய பிராவணயத்தால் சித்தித்தது கிலேசமேயாய் விட்டது –

9-ந்ருசம்சகொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-3-

கொன்றேன் –மடி தடவி விட்டிலேன் –அர்த்தம் கொடு வந்தான் ஆகில்-பின் துடர்த்தி யறக் கொன்று பறிக்கும் – வெறும் கையன் ஆகில் -நான் -அவள் பக்கல் என் கொடு போகக் கடவனாக நீ வெறும் கையே வந்தது என்று சொல்லுவன் -கொல்லுவன்-பல்லுயிரை – அனுதாபம் பிறத்தது இல்லை-பிராயச் சித்த அதிகாரமும் இல்லை –அனுதாபம் உண்டாகில் ஓன்று இரண்டு அளவிலே மீளும் இறே –அப்போது இறே பிராயச் சித்த அதிகாரமும் உள்ளது –இப்போது இற்றை குற்றமாக சொல்லுகிற நீர்-அன்று அது செய்வான் என் -என்ன 

குறிக்கோள் ஓன்று இலாமை யினால் – தேஹாத்ரிக்தமாய் இருப்பதோர் ஆத்ம வஸ்து உண்டு –இது செய்யில் நரக அனுபவம் தப்பாது ஒன்றாதல்-அன்றிக்கே-இத்தை உடையான் ஒருவன் உளன்-அவன் சர்வ பூத ஸூஹ்ருத்தாய் இருப்பான் ஒருத்தன்-அவனுக்கு இது அசஹ்யமாய் இருக்கும் என்று புத்தியில் படாமையால் செய்தேன் –அவனைப் பார்த்தல்-
நாம் நின்ற நிலை இது என்று ஆராய்தல் செய்யாமையாலே-ஒரு தலை அறியிலும் பர ஹிம்சை பிரவ்ருத்தியான் இறே –

விஷயார்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ணுகிற நாளில் முன்னடி தோற்றாமையாலே
பர ஹிம்சையைப் பண்ணிப் போந்தீர் ஆகில்-பின்பு த்ரவ்யங்களையும் பெற்று
அபிமத விஷயங்களும் கை புகுந்து நீரும் அவளுமாய் ரசித்து இருக்கிற அளவிலே
தான் ஆர்த்த விஷயத்தில் ஐயோ -என்றீரோ என்ன –காத்திகை புதியதுக்கும் நாம் இட வேணும் என்னுதல்-இவன் ஜீவிக்க வேணும் -என்னுதல்-செருக்காலே -யாதல்-இட்டறியேன் என்பது-அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே –(உரைத்தது இல்லை என்று சொல்லாமல் –உரைத்து அறியேன் என்பதால் இந்த வியாக்யானம்)இனிதாக –ஒருவன் அர்த்தித்து வந்தால் இரப்பாளனாய் வந்தவனுக்கு குறைவறத் தரப் பெற்றிலேன் என்று ஆறுதலாக வார்த்தை சொன்னான் ஆகில் இவன் தான் செய்வது என்-தன் வெறுமையால் அன்றோ தாரா விட்டது -என்று அவனும் ஆறிப் போம் இறே-அங்கன் அன்றிக்கே நாமும் நம் தாரித்ரயமுமாய் பட்டது படாதே இவன் வாயில் வார்த்தை கேட்க்கைக்கு என் செய்ய அபேஷித்தோம் -என்று உள்ளதனையும் நெஞ்சு புண் படும்படி யாயிற்று இல்லை என்பது –

10-பாபிஷ்டஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை–என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக;-நான் முன்புற்றையிற் காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ? முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,
அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்

கதமஹமிதஎன் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்னான் செய்கேன் –உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்-யாரே களை கண் –ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ-என்னை என் செய்கின்றாய்--நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம் மூன்றாலும் இவர்க்குண்டான மனோ பாவத்தை அருளிச்செய்கிறார்-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று; க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி.-இங்கே, “என் நான் செய்கேன்’ என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தி அநுசந்தேயம்-

துக்க ஜலதேர பாராதுத்ததீர்ண -(து:க்க ஜலதே:அபாராதுத்தீர்ணஸ்)
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி-அநேகம் வேல்களை ஒருமுகமாகச் சேர்த்து வைத்தால் போலே-ஓராளும் ஒரு நோக்கும் நேராய்-
அவ்வளவு அல்லாத பரப்பை உடைத்தான கண்கள் இமையோடு இமை பொருந்துகிறன வில்லை -பிரிவாற்றாமையால் உண்டான துக்க சாகரத்திலே ஆழ்ந்து –

தவ பரிசரேயம் சரணயோ –உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே சாஷாத் கரித்து என்றோ நான் உன்னைக் கிட்டுவது எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –இப் பாட்டு ப்ரஹ்மாதிகளை சொல்கிறது என்பாரும் உண்டு -மேலே அவர்களை சொல்லுகையாலே அது உசிதம் அன்று –குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;–நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப்
பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-

10-பாபிஷ்ட-இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –

பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம் தாமை பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-9-

பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே
பாபங்களையே பண்ணி-பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய
பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –மற்றேல் ஓன்று அறியேன் –-ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை-என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக; நான் முன்புற்றையிற் காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ?
முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,-அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-2-

மான் ஏய்ந்து இருக்கிற நோக்கை உடைய –அகவாய் நஞ்சாய் இருக்கச் செய்தேயும்
இவனை ஒழிய செல்லாதாரைப் போலே இருக்க நோக்குமவர்கள் ஆயிற்று –அகவாய் ஆராய்வதற்கு  ஈடான அளவில்லையே இவனுக்கு – கார்ய புத்யா ஆராயா நிற்கச் செய்தேயும் -அநந்ய ப்ரயோஜனைகளாக நோக்குகிறார்களாகக் கொண்டு அதிலே துவக்குண்ணும் -ஆயிற்று –நாண் மடம் அச்சம் என்கிற இவற்றில் மடப்பத்தை உடையாராய் இருப்பர்கள் இறே -அத்தாலே சொல்லுகிறது-சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்துக்கு உள்ளது எல்லாம் தங்களுக்கு உண்டாக நினைத்து இருப்பது-சேதன பேதத்துக்கு எல்லை இல்லை இறே –அவர்களை கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கைக்கு
லோகங்கள் தோறும் பண்ணி வைக்கும் நரகங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே –
அவை எல்லாவற்றுக்கும் நான் ஒருவனே தேவை யறுக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன் –ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேண்டும் –
ஸ்ரீ ராமாயணத்தில் கைகேயியை நீ என்ன நரகத்தில் புகக் கடவை என்று உண்டு -அவ்விடத்தை வாசியா நிற்க நம்பிள்ளை முன்பே ஸ்ருஷ்டமான நரகங்கள் போராது என்கிறதோ -என்ன அழகிதாகச் சொல்லிற்று -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

கானமும் வானரமும் விடுமா இவற்றுக்கும் ஓலக்கம் கொடுக்கிறவனுக்கு நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுக்கை ஏற்றமோ–முடி சூடினவனை தட்டியிலே இருந்த படி சொல்லுகை ஏற்றமோ-திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இறே –-அநாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று.
அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே ஜனனிக்கு ‘தாய்க்கும் -மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் ஜென்மம்;சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்;
ஷூத்ர ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாது காண்’ என்று ஒருவன் சொன்னால்,அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்;
சல மதி -அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது-‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்;
அஸூயா பிரசவபூ-ஹிதம் – நன்மை சொன்னவனுடைய-உத்கர்ஷம் – உயர்வினைப் பொறாதவன்;
க்ருதக்ந -உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்;
துர்மாநீ- அபகாரங்களைச் செய்து போதலேயன்றி -ஹிதம் -நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்;
ஸ்மர பரவச -அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்;
வஞ்சன பர -புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில் நின்றும் அபகரிப்பவன்;
ந்ருசம்ச ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றி யிருப்பவன்;
பாபிஷ்ட்ட- இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக் காரியம் பார்ப்பவன்’பாபத்திலே யாயிற்று ஊன்ற அடியிட்டு இருப்பது என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்-‘இது ஆளவந்தார் அருளிச் செய்ததே யாகிலும், நான் என் வாயால் இப் பாசுரம் சொல்ல மாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன,‘நம் இராமாநுஜனை யுடையை யாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச் செய்தாராம்)ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,-அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதி யில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி-‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

———-

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே-த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற என்பது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –சர்வேஷமேவா  லோகாநாம் பிதர  மாதர  ச மாதவ -என்றும் –உலக்குக்கோர் முத்தைத்  தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே-ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –இருக்குமவன் -என்னவுமாம் –க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இறே

யாளும் எம்பிரானுமாய் – அடிமை கொள்ளக் கடவ என் ஸ்வாமியாய் – உக்தமான ஜ்ஞான கார்யமாகக் கொண்டு – கைங்கர்ய ருசி பிறந்தால் -அடிமை கொள்ளுகைக்கு ஸ்வாமி யுமாய் -என்கை – இவை தான் சர்வவித பந்துவுமாய் இருக்கிற படிக்கு உப லஷணம் –மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ர்த் கதிர் நாராயணா -என்றும் –-எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கா சென்னுடை வாழ் நாள் –என்றும் சொல்லக் கடவது இறே-ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து –ஒன்றுக்கு ஓன்று நெடுவாசிப் பட்டு –இப்படி அசங்யாதமான ஜன்மத்தைத் தவிர்த்து-ஆத்ம ஸ்வரூபம் ஏகமாய் இருக்க -ஒருத்தனுக்கு ஒருத்தன் உடைய ஜன்மம் ப்ராப்யமாயும்-அவன் தனக்கே ஒருவனுடைய ஜன்மம் த்யாஜ்யமாயும் இறே இருப்பது –ஓர் ஓர் ஆகாரத்திலே ஒத்தும் -ஓர் ஓர் ஆகாரத்திலே வைஷம்யப்பட்டும் இருக்கும் ஜன்மங்கள் என்றுமாம் –ஜ்ஞானக ஆகாரதயா -கர்மத்தாலே தேவ  திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபத்தாலே விஷமமாயும் இருக்கை–மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை -என்னக் கடவது இறே-

நம்மை ஆட்கொள்வான் – நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை -நித்ய ஸூரிகளைக்  கொள்ளும் அடிமை கொள்ளுகைக்காக – ஜன்மங்கள் தோறும் உடன்கேடாய் போந்ததாகையாலே திரு உள்ளத்தைக் கூட்டி –நம்மை -என்கிறார் –-முத்தனார் –அஸ்பஷ்ட சம்சார கந்தரானவர்-முத்தர் -என்று ப்ரத்வம்ஸா பாவத்தைச் சொல்லுகிறது அன்று –
தன்னுடைய ஹேய பிரத்யநீகை ஸ்வாபாவிகம் ஆகையாலே ப்ராக பாவத்தைச் சொல்லுகிறது-முகுந்தனார் – முக்தி பூமி ப்ரதானவர் -இத்தால் நித்யர் வ்யாவ்ர்த்தியைச் சொல்லுகிறது-ஆக –இரண்டாலும் -விரோதி நிவ்ர்த்தி ஹேதுவான -ஜ்ஞான சக்தியாதி பூர்த்தியையும் மோஷ ப்ரதத்துவதுக்கு அடியான ஔதார்யத்தையும் -சொல்லிற்று ஆய்த்து

புகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –நம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே – சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி – நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ – ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ – கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க –
துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –ஏழை நெஞ்சமே – பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே – ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்-நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –ஏழையர் -அறிவிலோர்-

முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ சைத்ரரதப்  பர்வம் – 

October 9, 2025

அமானுஷ்ய பிறப்புகள்! – ஆதிபர்வம் பகுதி 167(சைத்ரரதப் பர்வம் – 01)பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது..

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, “குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்”.

ஜனமேஜயன், “ஓ பிராமணரே! ராட்சசன் பகனைக் கொன்ற பிறகு, மனிதர்களில் புலியான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “ஓ மன்னா, ராட்சசன் பகனைக் கொன்ற பிறகும், பாண்டவர்கள் அந்த பிராமணரின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து, வேதம் படிப்பவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர்.(2) சில நாட்களுக்குள், கடும் நோன்புகள் நோற்ற ஒரு பிராமணர் அந்த வீட்டிற்கு வந்து தங்கினார்.(3) அந்த பிராமணர்களில் காளையானவன் விருந்தினர்களை நன்கு உபசரித்து, புதிதாக வந்த பிராமணரையும் தகுதி வாய்ந்த வழிபாடுகள் நடத்தி வரவேற்றுத் தனது இல்லத்தில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்தான்.(4) அப்போது, மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், தங்கள் தாயுடன் அமர்ந்து, புதிய விருந்தினரின் சுவாரசியமான அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.(5)

அந்த பிராமணர் அவர்களிடம் பல்வேறு நாடுகள், புண்ணியம் நிறைந்த இடங்கள், ஆறுகள், மன்னர்களின் பல அற்புதமான மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பற்றியும் விவரித்தார்.(6) இந்த விவரிப்பு முடிந்ததும், ஓ ஜனமேஜயா! அந்த பிராமணர், யக்ஞசேனன் {துருபதன்} மகளான பாஞ்சால இளவரசியின் அற்புதமான சுயம்வரம் குறித்தும்,(7) திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியின் பிறப்புக் குறித்தும், மற்றும் எந்தவிதப் பெண் தொடர்பும் இல்லாமல் துருபதனின் வேள்வியில் பிறந்த கிருஷ்ணையின் (திரௌபதியின்) பிறப்பைக் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.(8) அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், அந்தச் சிறப்புவாய்ந்த ஏகாதிபதியின் இயல்புக்குமிக்கக் கதைகளைக் கேட்டுக் கொண்டனர். பிராமணர் விவரிப்பை முடித்ததும், மேலும் விவரங்களை அறிய விரும்பி, அதைக் கேட்டுத் தங்கள் ஆவலைத் தணித்துக் கொண்டனர்.(9)

பாண்டவர்கள், “ஓ பிராமணரே! துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனின் பிறப்பு வேள்வி நெருப்பிலா நிகழ்ந்தது? வேள்வி மேடையில் கிருஷ்ணையின் இயல்புக்கு மிக்கப் பிறப்பு எப்படி நேர்ந்தது? துருபதனின் மகன் எப்படி எல்லா ஆயுதப் பயிற்சிகளையும் பெரும் வில்லாளியான துரோணரிடம் கற்றான்? ஓ பிராமணரே! துரோணர் மற்றும் துருபதனின் நட்பு, எப்படி? யாருக்காக? என்ன காரணத்திற்காக உடைந்தது?” என்று கேட்டனர்.(10,11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட அந்த மனிதர்களில் காளையான பிராமணர், திரௌபதியின் பிறப்புக் குறித்து அனைத்து விவரங்களையும் விவரித்தார்”.(12)

அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! – ஆதிபர்வம் பகுதி 168-(சைத்ரரதப் பர்வம் – 02)துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்.

பிராமணர், “கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)

பரத்வாஜருக்குப் பிருஷதன் என்ற பாஞ்சால மன்னன் நண்பனாக இருந்தான். துரோணர் பிறந்த நேரத்தில், பிருஷதன் துருபதன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பிருஷதனின் மகனான அந்த க்ஷத்திரியக்காளை {துருபதன்}, தினமும் பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று, துரோணருடன் விளையாடவும், கல்வி கற்கவும் செய்தான்.(7) பிருஷதன் இறந்த பிறகு, துருபதன் அரியணை ஏறினான். அவ்வேளையில் (பெரும் பிராமண வீரரான) ராமன் {பரசுராமன்} (தனது ஓய்வை அறிவித்துக் கானகம் புறப்படும் மாலை வேளையில்) தனது செல்வங்களையெல்லாம் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார் என்பதைத் துரோணர் கேள்விப்பட்டார்.(8) இதைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கானகத்திற்குள் ஓய்வுக்காகப் புகப் போகும் ராமனிடம் {பரசுராமனிடம்} சென்று, “ஓ பிராமணர்களில் சிறந்தவரே, என்னைத் துரோணன் என்று அறிந்து கொள்ளும். நான் உம்மிடம் செல்வத்தை அடைய வந்திருக்கிறேன்” என்றார்.(9) அதற்கு ராமன், “நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பதெல்லாம், எனது இந்த உடலும், எனது ஆயுதங்களும் மட்டும்தான். ஓ அந்தணா, எனது உடலோ, எனது ஆயுதங்களோ, இந்த இரண்டில் ஒன்றை நீ என்னிடம் கேட்கலாம்” என்றார்.(10)

அதற்குத் துரோணர், “ஐயா, உமது ஆயுதங்களை (அதன் மர்மங்களுடன்), அதைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய வழிகளுடன் எனக்குத் தருவீராக” என்று கேட்டார்.(11)

பிராமணர் தொடர்ந்தார், “பிருகு குலத்தில் வந்த ராமன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தனது ஆயுதங்களையெல்லாம் துரோணருக்குக் கொடுத்தார். இதனால், துரோணர் வெற்றிமகுடம் சூடியவராகத் தன்னை நினைத்துக் கொண்டார்.(12) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் ராமனிடம் இருந்து பெற்ற துரோணர், பிரம்மாயுதத்தை அழைத்து மிகவும் மகிழ்ந்து, அதைப் பெற்றதால், அனைத்து மனிதர்களிலும் மேன்மையை அடைந்தார்.(13) அந்தப் பெரும் சக்திவாய்ந்த பரத்வாஜரின் மகன், மன்னன் துருபதனிடம் சென்றார். மனிதர்களில் புலியான அந்த ஏகாதிபதியை அணுகிய அவர், “என்னை உனது நண்பனாக அறிந்து கொள்” என்றார்.(14)

இதைக் கேட்ட துருபதன், “தாழ்ந்த பிறப்பு பிறந்தவன், சுத்தமான உயர்ந்த பிறப்பில் வந்தவனிடம் நண்பனாக இருக்க முடியாது, ரதவீரனல்லாதவன், ரதவீரனின் நண்பனாக முடியாது. அப்படியே மன்னனல்லாதவன், ஒரு மன்னனுக்கு நண்பனாக முடியாது. எனவே, (நமது) முந்தைய நட்பை ஏன் (மீட்க) விரும்புகிறீர்?” என்று சொன்னான்.(15)

பிராமணர் தொடர்ந்தார், “பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட துரோணர், இதனால் பெரும் துன்பத்துக்குள்ளாகி, பாஞ்சால மன்னனை அவமதிக்கச் சரியான சந்தர்ப்பத்தை மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் குருக்களின் (கௌரவர்களின்) தலைநகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றார்.(16) அங்கே பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளை, பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்} கல்வி கற்க சீடர்களாக அனுப்பிவைத்தார்.(17) துரோணருக்கு அனைத்து விதமான செல்வங்களையும் பரிசளித்தார். மன்னன் துருபதனை அவமதிக்க விரும்பிய துரோணர், தனது சீடர்கள் அனைவரையும் கூட்டி, “பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதக்கல்வி கற்ற பிறகு, நான் மனத்தில் நினைத்திருப்பதை எனக்குக் குருதட்சணையாகத் தர வேண்டும்” என்று கேட்டார். அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் குருவிடம், “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(18,19)

அப்போது, நினைத்த குறியை அடித்து, ஆயுதங்களில் திறமையடைந்த பாண்டவர்களிடம், தனது குருதட்சணையைக் கேட்கும் வகையில்,(20) “பிருஷதனின் மகன் துருபதன், சத்திரவதிக்கு {அஹிசத்திரம்} மன்னனாவான். அவனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்து, என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டார்.(21)

பாண்டவர்கள் போரில் துருபதனை வீழ்த்தி, அவனை அவனது அமைச்சர்களுடன் கைதியாக்கித் துரோணரிடம் கொடுத்தனர்.(22) வீழ்ந்த அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, துரோணர், “ஓ மன்னா, நான் உனது நட்பைக் கோருகிறேன்; மன்னனல்லாதவன் மன்னனின் நட்பை நாடத் தகுதியில்லாதவனாகையால்,(23) ஓ யக்ஞசேனா {துருபதா}, நான் உனது நாட்டை நமக்குள் இரண்டாகப் பிரித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறேன். நீ பாகீரதிக்கு (கங்கைக்கு) தெற்கே உள்ள நாட்டை ஆண்டுக் கொள்வாயாக. அதே வேளை வடக்கை நான் ஆண்டுக் கொள்கிறேன்” என்றார்”.(24)

பிராமணர் தொடர்ந்தார், “ஞானமுள்ள பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பாஞ்சால மன்னன், பிராமணர்களில் சிறந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவரிடம் {துரோணரிடம்},(25) “ஓ பரத்வாஜரின் உயர் ஆன்ம மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் நமக்குள் நிலைத்த தெய்வீகமான நட்பை விரும்புகிறேன்” என்றான்.(26)

இப்படி ஒருவருக்கொருவர் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர். பிறகு துரோணரும் பாஞ்சால மன்னனும், அவரவர் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(27) ஆனால் இந்த அவமதிப்பு மன்னனின் மனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதும் அகலவில்லை. இதயத்தில் துன்பம் கொண்ட அந்த மன்னன் தனது நாட்களை அப்படியே போக்கினான்” {என்றார் ஏகச்சக்கர நகரத்தில் பாண்டவர்கள் வசித்திருந்த பிராமணனின் வீட்டிற்கு விருந்தினராக வந்த அந்தப் பிராமணர்}.(28)

திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 169-(சைத்ரரதப் பர்வம் – 03)துரோணரைக் கொல்லும் மகனை அடைய விரும்பிய துருபதன்; யாஜர் உபயாஜர் ஆகியோரைச் சந்தித்த துருபதன்; வேள்வித்தீயில் இருந்து பிறந்த திருஷ்டத்யும்னனும், திரௌபதியும்; திருஷ்டத்யும்னனுக்கும் குருவான துரோணர்..

பிராமணர் தொடர்ந்தார், “அதன்பிறகு மன்னன் துருபதன், இதயத்தில் துயர் கொண்டு, பிராமணர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று, வேள்விச் சடங்குகளை நடத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த பிராமணர்களைத் தேடினான்.(1) “சாதனைகளைச் செய்யக்கூடிய வாரிசு ஒருவனும் எனக்கில்லையே” என்று நினைத்து எப்போதும் துயரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பிள்ளைகள் பெறுவதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தான்.(2) அந்த ஏகாதிபதி பெரும் ஏக்கத்துடன் எப்போதும், “ம்…ம்… ச்சீ… ச்சீ…என்ன பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன். என்ன உறவினர்களைக் கொண்டிருக்கிறேன்” என்று நினைத்துக் கொள்வான். எப்போதும் அந்த ஏகாதிபதி துரோணரைப் பழிவாங்குவதை நினைத்தே நிறுத்தாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.(3) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்களில் சிறந்தவன், கடினமாக முயற்சித்தும், க்ஷத்திரிய பலத்தாலோ, ஆற்றலாலோ, ஒழுக்கத்தாலோ, பயிற்சியாலோ, சாதனைகளாலோ, துரோணரை விஞ்ச ஒரு வழியையும் அடையவில்லை. யமுனை மற்றும் கங்கைக் கரைகளில் திரிந்த அந்த ஏகாதிபதி {துருபதன்}, {கங்கையின் கரையில்} ஒரு பிராமணரின் ஆசிரமத்தை வந்தடைந்தான். அந்த ஆசிரமத்தில் ஸ்நாதகர்[1] அல்லாத எந்த பிராமணரும் இல்லை, )பிரம்மச்சரிய விரதத்தை ஒழுங்காக முடித்தவர்.)கடும் நோன்புகள் நோற்காத எவரும் இல்லை, அறத்தகுதிகளில் உயர்ந்த இடத்தைப் பெறாமல் யாரும் இல்லை.(4-6)

மன்னன் அங்கே யாஜர் மற்றும் உபயாஜர்[2] (இந்த யாஜரும், உபயாஜரும் கன்னிக்குப் பிறந்தவர்கள் என்றும், சூரிய பக்தர்கள் என்றும் பழைய உரை கூறுவதாக கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது.)என்ற கடும் நோன்புகள் நோற்ற பிராமண முனிவர்கள் இருவரைக் கண்டான். அவர்கள் தங்கள் உயிரை முழுக் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திய உயர்ந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.(7) கசியப குலத்தில் உதித்துப் பழம்பெரும் கல்விகளைக் கற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள் அந்த மன்னனுக்கு {துருபதனுக்கு} உதவும் தகுதியுடன் இருந்தார்கள்.(8) அந்த மன்னன் {துருபதன்} பெரும் சிரத்தையுடனும், காரியத்தில் கண்ணாகவும், அந்த அருமையான பிரமாணர்களிடம் பேசத் துவங்கினான். அந்த இருவரில் இளையவர் {உபயாஜர்} சாதனைகளில் முதன்மையுடனும் மேன்மையுடனும் இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த மன்னன் {துருபதன்}, கடும் நோன்புகள் நோற்ற உபயாஜரைத் தனிமையில் சந்தித்து, அனைத்து வகையிலும் விரும்பக்கூடிய பொருட்களைக் கொடுப்பதாகக் கூறினான்.(9,10)

ஒரு நாள் மன்னன் {துருபதன்}, உபயாஜரின் பாதங்களில் பணிந்து அவரிடம் {உபயாஜரிடம்} மனிதர் விரும்பும் அனைத்துப் பொருளையும் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து, இனிமையான வார்த்தைகளில் அந்த பிராமணரை வழிபட்டு, “ஓ உபயாஜரே, ஓ பிராமணரே! நீர் ஒரு (அறம் சார்ந்த) வேள்விச் சடங்கு நடத்தி, துரோணரைக் கொல்லும் பிள்ளை எனக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.(11) அதற்கு நான் பத்தாயிரம் {10000} பசுகளையும்,(12) உமக்கு எவையெல்லாம் ஏற்புடையனவோ அவையெல்லாவற்றையும் தருகிறேன். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உண்மையில் நான் உமக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(13)

இவ்வாறு அம்மன்னனால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர் {உபயாஜர்}, “என்னால் (இது போன்ற சடங்குகளைச் செய்ய) முடியாது” என்றார். ஆனால், துருபதன் அந்த மறுமொழியை முடிவாக எடுத்துக் கொள்ளாமல், மறுபடியும் அந்த பிராமணரைச் {உபயாஜரைச்} சேவித்தான்.(14) ஒரு வருடம் முடிந்ததும், பிராமணர்களின் முதன்மையான அந்த உபயாஜர், அந்த ஏகாதிபதி துருபதனை அழைத்து இனிய ஒலியுடன்,(15) “எனது அண்ணன் (யாஜர்), ஒரு நாள் அடர்ந்த கானகத்தின் ஆழத்தில் உலவிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து கிடந்த ஒரு கனியை எடுத்தார். அதன் சுத்தத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.(16) (அவ்வேளையில்) நான் அவரைத் {யாஜரைத்} தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவரது இந்தத் தகுதியற்ற செயலைக் கண்டேன். நிச்சயமாக அவர் சுத்தமற்ற பொருட்களை ஏற்றுக் கொள்வதில் மனவுறுத்தல் அடைவதில்லை.(17) அப்படி அந்தக் (குறிப்பிட்ட) கனியில் பாவத்தைக் காணாத அவரது இயல்பு, மற்ற காரியங்களில் இவர் {யாஜர்} எப்படிப் பாவங்களைப் பகுத்தறிவார் என்பதில் என்னை யங்கொள்ள வைத்தது.(18) அவர் {யாஜர்} தமது ஆசானின் இல்லத்தில் வாழ்ந்து, கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது, அவர் {யாஜர்} எப்போதும் மனிதர்களின் விருந்தில் (சுத்தமற்ற உணவில்) மீந்தவற்றை {பிச்சை} உண்பார்.(19) அவர் எப்போதும் உணவைப் பற்றியே {உயர்வாகப்} பேசிக் கொண்டிருப்பார். அவர் எதையும் விரும்பாமலில்லை. இதையெல்லாம் சொல்வதன் மூலம், நான் எனது தமையன் உலகப் பொருட்களை அடைவதில் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக.(20) எனவே, ஓ மன்னா, அவரிடம் செல்வாயாக. அவர் உனக்கு ஆன்மிகக் காரியங்களைச் செய்து கொடுப்பார்” என்றார்.

உபயாஜரின் இந்த வார்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன், யாஜர் மீது உயர்ந்த கருத்து இல்லையெனினும், அவரது இல்லத்திற்குச் சென்றான். அங்கே (இன்னும்) மரியாதைக்குரியவராக இருந்த யாஜரை வழிபட்ட துருபதன், “ஓ ஆசானே, எனக்கு ஆன்மக் காரியங்களைச் செய்து கொடுப்பீராக. உமக்கு நான் எண்பதாயிரம் பசுக்களை[3] அளிக்கிறேன்! துரோணரிடம் நான் கொண்டுள்ள பகை எனது இதயத்தை எரிக்கிறது; நீர் என் இதயத்தில் எரியும் நெருப்பை அணைக்க வேண்டும்.(21,22) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவராக இருக்கும் துரோணர், பிரம்ம ஆயுதத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். (வலிமை இழந்த) நட்பினால் உண்டான ஒரு போட்டியில் துரோணர் என்னை வென்றார்.(23) பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மப் பரத்வாஜர் மகன் {துருபதன்}, குரு குலத்தவரின் குருவாவார். இவ்வுலகத்தில் அவரை {துரோணரை} விஞ்ச ஒரு க்ஷத்திரியன் கிடையாது.(24) ஆறு முழு முழம் நீளமுள்ள அவரது {துரோணரது} வில் வல்லமை மிக்கதாக இருக்கிறது. அவரது {துரோணரது} கணைகள் அனைத்து உயிரையும் கொல்லத்தக்கவையாக இருக்கின்றன.(25)

இந்தப் பெரும் வில்லாளி, உயரான்மப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பிராமணராகப் பழக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் க்ஷத்திரிய சக்தியை அழிக்கிறார்.(26) உண்மையில், அவரே {துரோணரே} க்ஷத்திரிய குலத்தை அழிக்கப்போகும் இரண்டாவது ஜமதக்னியைப் போன்றவர். அவரது பயங்கர ஆயுதங்களின் முன்னிலையில் எந்த மனிதனும் அவரை விஞ்சமுடியாது.(27) சுடர் விட்டெரியும் தெளிந்த நெய்யை விடுவது போல, அவர் பிரம்ம பலத்துடன் க்ஷத்திரிய பலத்தையும் இணைத்துப் போர்க்களத்தில் நிற்கும் அனைத்து எதிரிகளையும் எரிக்கிறார்.(28) ஆனால் (உமது) பிரம்ம சக்தி, க்ஷத்திரிய பலத்துடன் கூடிய (துரோணரின்) பிரம்ம சக்தியைவிடப் பெரியது. எனவே, நான் வெறும் க்ஷத்திரிய சக்தியை மட்டும் வைத்திருக்கும் குறைந்தவனாக இருக்கிறேன். பிரம்மஞானத்தில் துரோணரைவிட மேன்மையான உம்மை நான் அடைந்து விட்டதால் எனக்குப் பிரம்ம சக்தியும் சேர்ந்து கிடைக்கும்.(29) ஓ யாஜரே, போரில் வெல்லப்படமுடியாதவனும், துரோணரைக் கொல்லக்கூடியவனுமான ஒரு மகனை நீர் வேள்வியின் மூலம் எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நான் உமக்குப் பத்தாயிரம் {10000} பசுக்களைக்[4] கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னான் {துருபதன்}.(3-4-இந்த இரண்டு இடங்களும் முரண்படுகின்றன. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இவ்விடத்தில் {43]ம் அடிக்குறிப்பு} “பத்து கோடி பசுக்களையும் தர சித்தமாயிருக்கிறேன்” என்றிருக்கிறது. இங்கே கங்குலியின் பதிப்பில் பிழையேற்பட்டிருக்க வேண்டும். இது பத்து கோடியாகவே இருக்க வேண்டும்.)

துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யாஜர், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். யாஜர் ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்வதற்காகப் பல சடங்குகளை மனத்தில் நினைத்துப் பார்த்தார்.(30,31) காரியத்தின் ஆபத்தையும் உணர்ந்த யாஜர், துணைக்காக எதையும் எதிர்பார்க்காத உபயாஜரையும் கேட்டார். பிறகு துரோணரின் அழிவுக்காக ஒரு வேள்வியை நடத்த யாஜர் உறுதியளித்தார்.(32) அப்போது, அந்தப் பெரும் துறவி உபயாஜர், எதன் மூலம் துருபதன் வாரிசை அடைய முடியுமோ, அந்த வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் துருபதனிடம் கேட்டார்.(33) பிறகு அவர் {உபயாஜர்}, “ஓ மன்னா {துருபதா}, நீ விருப்பப்படுவது போல, பெரும் வீரத்துடனும், பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் உமக்கு ஒரு பிள்ளை பிறப்பான்” என்றார்.(34)

பிராமணர் தொடர்ந்தார், “மன்னன் துருபதன், துரோணரைக் கொல்லும் மகனை அடையும் ஆசையால் உந்தப்பட்டுத் தனது வெற்றிக்கான அனைத்துப் பொருட்களையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.(35) (அனைத்தும் முடிந்ததும்) யாஜர், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டதும், துருபதனின் ராணியிடம்,(36) “ஓ ராணி, ஓ பிருஷதனின் மருமகளே! இங்கே வா, ஒரு மகனும் ஒரு மகளும் உனக்காக வந்திருக்கின்றனர்” என்று கட்டளையிட்டார்.(36)

இதைக்கேட்ட ராணி, “ஓ பிராமணரே! எனது வாய், குங்குமப்பூவாலும், மற்ற வாசனைப் பொருட்களாலும் நிறைந்திருக்கிறது. எனது உடலும் நறுமணத்தைத் தாங்கி இருக்கிறது. (நீர் தரும் புனித நெய் எனக்கு வாரிசைத் தரும். ஆனால்) நான் ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்தவளாக இல்லை. எனக்காகச் சிறிது நேரம் காத்திரும். ஓ யாஜரே! அந்த மகிழ்ச்சியான நுகர்வுக்காகக் காத்திருப்பீராக” என்றாள்.(37)

இருப்பினும் யாஜர், “ஓ மங்கையே, நீ வந்தாலும், அல்லது காத்திருந்தாலும், ஏற்கனவே என்னால் படையல் தயாராகிவிட்ட பிறகு, உபயாஜரால் மந்திரங்கள் சொல்லி புனிதமாக்கப்பட்ட பிறகு ஏன் இந்தக் காரியம் நிறைவேறாது? ” என்றார்.(38)

பிராமணர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன யாஜர், வேள்வி நெருப்பில் புனிதமான நெய்யை ஊற்றினார். அப்போது அந்த நெருப்பின் தழல்களிலிருந்து நெருப்பின் பிரகாசத்தோடும், பார்க்கப் பயங்கரமாகவும் ஒரு தெய்வீகப் பிள்ளை எழுந்தான். தலையில் கிரீடத்துடனும், மார்புக் கவசத்துடனும், கையில் வாளுடனும், வில்லும் அம்பும் தாங்கி, அடிக்கடி பெருமுழக்கம் செய்தபடியே அவன் எழுந்தான்.(39,40) பிறந்த உடனேயே அந்தப் பிள்ளையானவன், ஓர் அற்புதமான தேரில் ஏறிச் சிறிது நேரம் பயணம் செய்து வந்தான். இதைக் கண்ட பாஞ்சாலர்கள், “அற்புதம்! அற்புதம்!” என்று கூச்சலிட்டனர்.(41)

மகிழ்ச்சியால் குதித்துக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்களின் பாரத்தைப் பூமியானது, பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போலத் தெரிந்தது. அப்போது வானத்திலிருந்து ஒரு குரல், “இந்த இளவரசன் துரோணரின் அழிவுக்காகப் பிறந்திருக்கிறான். இவன் பாஞ்சாலர்களின் அச்சங்களைப் போக்கி, அவர்களின் புகழைப் பரப்புவான். இவன் மன்னனின் துயரத்தையும் போக்குவான்” என்றது.(42,43)

அதன் பிறகு, வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், பெரும் நற்பேறுடனும், மிகுந்த அழகுடனும் தோன்றினாள். அவளது கண்கள் கறுமையாகவும் தாமரை இதழ்களைப் போன்றும் இருந்தன.(44)

அவளது நிறம் கரியதாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் சுருளாக இருந்தது. நகங்கள் அழகாக மெருகிட்ட தாமிரம் போல மேடாக இருந்தது. அவளது புருவங்கள் அழகாக இருந்தன. மார்பு பருத்திருந்தது. அவளது தொடைகள் {வாழை போல} வழுவழுப்பாக இருந்தன.(45) உண்மையில், அவள் தேவர்களின் மகளைப் போல இருந்தாள். நீலத் தாமரையை {கருநெய்தலைப்} போல இரண்டு மைல்களின் தொலைவுக்கு அவளது உடல் மணம் வீசியது.(46) அவளது அழகு, பூமியில் ஈடு சொல்லாத அளவுக்கு இருந்தது. அவள் தேவலோக மங்கை போல இருப்பதால், தேவனாலோ, தானவனாலோ, யக்ஷனாலோ (திருமணத்திற்காக) விரும்பப்படுவாள்.(47)

அந்த அழகான இடைகொண்ட அந்தப் பெண் பிறந்த போது, ஓர் அரூப ஒலி, “கரிய நிறம் கொண்ட இந்த மங்கை, பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். க்ஷத்திரியர்களின் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள்.(48) இந்தக் கொடியிடையாள், ஒரே நேரத்தில் தேவர்களின் காரியத்தையும் சாதிப்பாள், குருக்களின் {கௌரவர்களின்} அச்சங்களையும் அதிகரிப்பாள்” என்றது.(49)

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் சிங்க முழக்கம் செய்தனர். பூமியானது, மகிழ்ச்சியால் பித்துப்பிடித்திருந்த அவர்களின் பாரத்தைத் தாங்க முடியாததாக இருந்தது.(50)

அந்தப் பிள்ளையையும், பெண்ணையும் கண்ட பிருஷதனின் மருமகள் {துருபதனின் மனைவி}, அவர்களைப் பெற விரும்பி, யாஜரை அணுகி, “என்னைத் தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் தாயாக அறியாதிருக்கட்டும்” என்றாள்.(51) யாஜர், மன்னனுக்கு நன்மை செய்ய விரும்பி, “அப்படியே ஆகட்டும்” என்றார். பின்னர் அங்கிருந்த பிராமணர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைந்து, புதிதாய்ப் பிறந்த இரட்டையர்களுக்குப் பெயர்ச் சூட்டினர்.(52) “மன்னன் துருபதனின் இந்த மகன் அதிகத் தைரியத்துடனும், இயற்கை கவசத்துடனும், ஆயுதங்களுடன் தியம்னனைப் போலப் பிறந்ததால், திருஷ்டத்யும்னன்[5] என்று அழைக்கப்படட்டும் என்றனர்.(53) ( கும்பகோணம் பதிப்பில், “ஸந்தோஷம் நிறைந்த மனத்தோடு கர்வமுள்ளவனாகவும், அதிக கோபமுள்ளவனாகவும் இருப்பதனால் த்ருஷ்டன் என்றும், பராக்கிரமமென்னும் தனமிருப்பதனாலும், கிரீடகுண்டலங்கள் முதலிய தனங்களுடன் பிறந்திருப்பதனாலும் த்யும்னன் என்றும், இந்தத் துருப குமாரன் த்ருஷ்டத்யும்னனென்று பெயருள்ளவனாக இருக்கட்டும்” என்று சொன்னதாக இருக்கிறது.)பிறகு அவர்கள், “இந்தப் பெண் கரிய நிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்” என்றனர்.பிராமணர் தொடர்ந்தார், “இப்படியே துருபதனுக்கு வேள்வியில் அந்த இரட்டையர்கள் பிறந்தனர்.(54) பெரும் துரோணர், துருபதனிடம் இருந்து பாதி நாட்டைத் தான் அடைந்ததற்கு ஈடாக, அந்தப் பாஞ்சால இளவளரசனைத் தனது வசிப்பிடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி கொடுத்தார்.  அந்த உயர் ஆன்ம பரத்வாஜரின் மகன் {துரோணர்}, விதி தவிர்க்க முடியாதது என்று எண்ணி, தனது புகழ் நிலைக்க, இந்தப் பெரும் காரியத்தைச் செய்தார்” {என்றார் அந்தப் பிராமணர்}.(55,56)

பயணப்பட குந்தி ஆயத்தம்! – ஆதிபர்வம் பகுதி 170-(சைத்ரரதப் பர்வம் – 04)ஏகச்சக்கர நகரத்தில் வசிக்கத்தொடங்கி அதிக நாட்கள் ஆனதை யுதிஷ்டிரனிடம் சொன்ன குந்தி; குந்தியின் ஆணைக்கிணங்க பாஞ்சாலம் செல்ல ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்.

வைசம்பாயனர் சொன்னார், “பிராமணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன்கள் {ஆசையெனும்} கணையால் தைக்கப்பட்டவர்கள் போல் இருந்தனர். நிச்சயமாக அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள் தங்கள் மன அமைதியை இழந்திருந்தனர்.(1) சலிப்படைந்தும், கவனக்குறைவுடனும் இருந்த தனது மகன்களைக் கண்ட உண்மையான குந்தி யுதிஷ்டிரனிடம்,(2) “இந்த பிராமணரின் இல்லத்தில் நாம் பல காலத்திற்கு வாழ்ந்துவிட்டோம். இந்த நகரத்தில், பல அழகான இடங்களைக் கண்டும், சிறப்பானவர்களிடம் பிச்சையெடுத்தும் நமது காலத்தை இனிமையாகக் கழித்துவிட்டோம்.(3) நாட்டின் இந்தப் பகுதியில் உள்ள காடுகளையும் அழகிய தோப்புகள் அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டும் கண்டுவிட்டோம்.(4)


ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, நாம் இந்த இடத்திற்கு மிகவும் பழகிவிட்டோம். புதியன எதையும் நாம் இதில் காணவில்லை.(5) ஓ குரு குல வீரர்களே, நீங்கள் இப்போது விரும்பினால் பாஞ்சாலம் செல்லலாம்.  நாம் அந்த நாட்டைக் கண்டதில்லை. அங்கே வாழ்வது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.(6) ஓ எதிரிகளை அழிப்பவர்களே, பாஞ்சாலனின் நாடானது, அதாவது பிராமணர்களுக்குத் தன்னை அர்ப்பாணித்துள்ள யக்ஞ்சேனனின் நாடு, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.(7) ஒரே இடத்தில் வாழ்வது நல்லதல்ல என்பது எனது கருத்து. எனவே, ஓ மகனே, நாம் அங்கே செல்வது நமக்கு நன்மை பயக்குமானால், நாம் அங்குச் செல்லலாமே” என்றாள்.(8)

இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “எங்களுக்கு நன்மை பயப்பதாக இருப்பினும், அல்லதாக இருப்பினும், உனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எங்கள் கடமையாகும். இருப்பினும் எனக்கு இளையவர்கள் அதை விரும்புகின்றனரா என்பது தெரியவில்லை. அதை அறிந்து கொள்வாயாக” என்றான்”.(9)

எனக்குக் கணவனைக் கொடு! – ஆதிபர்வம் பகுதி 171-(சைத்ரரதப் பர்வம் – 05)பாஞ்சாலம் செல்லும் வழியில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; திரௌபதியின் முன்ஜென்ம வரலாற்றைச் சொன்னது…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமசேனன், அர்ஜுனன் மற்றும் இரட்டைர்களிடம் பாஞ்சால பயணத்தைப் பற்றி குந்தி பேசினாள். அவர்களனைவரும், “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(1) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, குந்தி தனது மகன்களுடன் அந்த (தனது வீட்டில் தங்க இடமளித்திருந்த) பிராமணரை வணங்கிவிட்டு, சிறப்புவாய்ந்தவனான துருபதனின் மகிழ்ச்சி நிறைந்த நகரத்தை {காம்பில்யத்தை} நோக்கிப் புறப்பட்டாள்”.(2)

வைசம்பாயனர் சொன்னார், “சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் மாற்றுருவம் கொண்டு பிராமணரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஒரு சமயம், சத்தியவதி மைந்தரான வியாசர், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.(3) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்கள், அவர் வருவதைக் கண்டு, எழுந்திருந்து, வரவேற்பதற்கு எட்டெடுத்து வைத்து, மரியாதையுடன் வணங்கி, அவரெதிரில் அமைதியாகக் கரங்கூப்பி நின்றனர்.(4) இப்படிப் பாண்டவர்களால் வழிபடப்பட்ட அந்த முனிவர் மிகுந்த மனநிறைவையடைந்தார். அவர்களை அமரச் சொல்லி, அவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசி,(5) “எதிரிகளை அழிப்பவர்களே, நீங்கள் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி அறம்சார்ந்த வாழ்வு வாழ்கிறீர்களா? நீங்கள் பிராமணர்களை வழிபடுகிறீர்களா? நீங்கள் தகுதியுடையோருக்கு மரியாதை செலுத்துவதில் பின்தங்கி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்” என்று கேட்ட அந்த முனிவர்,(6) அறம் சார்ந்த பல வார்த்தைகளையும், விரும்பத்தக்க பல தலைப்புகளிலும் பேசி, அவர்களிடம்,(7) “ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில் வாழ்ந்த, ஒரு சிறப்பு வாய்ந்த முனிவருக்கு, ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் மெல்லிடையும், அழகான உதடுகளும், அழகான புருவங்களும், அழகான பெண்ணுக்கு உண்டான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தாள்.(8) அவள் தனது சொந்தச் (கடந்தபிறவிச்) செயல்களின் பலனாக நற்பேறற்றவளாக இருந்தாள். கற்புடையவளாக, அழகானவளாக இருந்தும், அந்த மங்கை ஒரு கணவனை அடைந்தாளில்லை.(9) துக்கமான இதயத்துடன், ஒரு கணவனை அடைய, அவள் துறவு நோன்பைப் பயில ஆரம்பித்தாள். தனது துறவின் மூலம் சங்கரனை (மஹாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(10)

அவர் அவளுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்தச் சிறப்புவாய்ந்த மங்கையிடம், “நீ அருளப்பட்டிரு! விரும்பிய வரத்தைக் கேள்! நீ விரும்பியதைக் கொடுக்க வந்திருக்கும் சங்கரன் நான்!” என்றார்.(11)

தனக்கு நன்மையைப் பெற விரும்பிய அந்த மாது, அந்தத் தலைமைத் தெய்வத்திடம் திரும்பத் திரும்ப, “அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரை எனக்குக் கணவராகக் கொடுப்பாயாக” என்று கேட்டாள்.(12)

அப்போது, பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த ஈசானன் (மஹாதேவன்), “ஓ அருளப்பட்டவளே, பாரத இளவரசர்களில் ஐவரை நீ கணவர்களாக அடைவாய்” என்றான்.(13)

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, வரம் கொடுத்த அந்தக் கடவுளிடம், “ஓ தலைவா {கடவுளே}, உனது கருணையால் நான் ஒரு கணவரை மட்டுமே அடையவே விரும்புகிறேன்” என்றாள்.(14)

அதற்கு அந்தத் தெய்வம் அருமையான வார்த்தைகளால், “ஓ மாதே, ‘எனக்குக் கணவனைக் கொடு’ என்று முழுமையாக ஐந்து முறை நீ கேட்டாய்.(15) எனவே, வேறு பிறவியில் நீ ஐந்து கணவர்களை அடைவாய்” என்றான்.

பாரதக் குலத்தின் இளவரசர்களே! {பாண்டவர்களே} அந்தத் தெய்வீக அழகுடைய மங்கைதான் துருபதனின் பரம்பரையில் பிறந்திருக்கிறாள். பிருஷதனின் குலத்தில் வந்த அந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்களாகிய} உங்கள் அனைவருக்கும் மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(16) எனவே, பலம் வாய்ந்தவர்களே, பாஞ்சாலர்களின் தலைநகர் சென்று அங்கே வாழ்வீராக. அவளை மனைவியாக அடைந்த பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்”.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அருள்நிறைந்த அந்தச் சிறப்பு வாய்ந்த பெரும்பாட்டன். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அந்தப் பெருந்துறவி அவர்களை விட்டகன்று, எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார்”.(18)

அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் – ஆதிபர்வம் பகுதி 172-(சைத்ரரதப் பர்வம் – 06)கங்கைக் கரைக்கு வந்த பாண்டவர்கள்; மனைவியருடன் நீராடிக் கொண்டிருந்த கந்தர்வன்; கந்தர்வனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான மோதல்; கந்தர்வனின் மனைவியுடைய வேண்டுதலாலும், யுதிஷ்டிரனின் ஆணையினாலும் ஏவிய ஆயுதத்தைத் திரும்பப் பெற்ற அர்ஜுனன்; நல்ல புரோஹிதரை அடையும்படி பாண்டவர்களை அறிவுறுத்திய கந்தர்வன்…

வைசம்பாயனர் சொன்னார், “வியாசர் சென்ற பிறகு, அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், வந்த பிராமணரை {வியாசரை} வழியனுப்பிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்கள் தாயைத் {குந்தியைத்} தங்களுக்கு முன்பு விட்டு (பாஞ்சாலம் நோக்கி) முன்னேறிச் சென்றனர்.(1) அந்த எதிரிகளை அழிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய வடக்கு நோக்கி இரவும் பகலுமாகப் பயணித்தனர். புருவத்தில் பிறைக் குறித் தாங்கியிருக்கும் சிவனின் புனிதமான நகரத்தை அடையும்வரை பயணித்தனர்.(2) மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மைந்தர்கள், கங்கையின் கரையை வந்தடைந்தனர். பெரும் தேர் வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கையில் பந்தத்துடன் முன் நடந்து அவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களைப் (காட்டு விலங்குகளிடம் இருந்து) பாதுகாத்துச் சென்றான்.(3) அப்போது, அந்தக் கங்கையின் நீரில் தனிமையான அந்தச் சூழ்நிலையில், செருக்குடன் கூடிய ஒரு கந்தர்வன் தனது மனைவியருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.(4) அந்த ஆற்றை அணுகும் பாண்டவர்களின் பாத அடியோசைகள் அந்தக் கந்தர்வ மன்னனுக்குக் கேட்டது. பாத அடியோசையைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன் மிகுந்த சினம் கொண்டு,(5) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களைக் கண்டான்.

அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் தாயாருடன் {குந்தியுடன்} வருவதைக் கண்டு அவர்களை {பாண்டவர்களை} அணுகித் தனது பயங்கரமான வில்லை வட்டமாக வளைத்து,(6) ” மாலையும் இரவும் சந்திக்கும் சந்திப்பொழுது முழுவதும், முதல் நாற்பது வினாடிகளைத் தவிர்த்து, தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் எங்கும் செல்லக்கூடிய யக்ஷர்களும், கந்தர்வர்களும் மற்றும் ராட்சசர்களும் உலாவுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. மீத நேரமனைத்தும் மனிதன் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(7,8) எனவே, அந்த நேரத்தில், பயனில் பேராசை கொண்ட மனிதர்கள் எங்கள் அருகில் வந்தால், நாங்கள் இருவரும் (யக்ஷ, கந்தர்வர்கள்) ராட்சசர்களும் அந்த முட்டாள்களைக் {மனிதர்களைக்} கொன்றுவிடுவோம்.(9) எனவே, இந்த நேரத்தில் மன்னர்களையே தலைமையாகக் கொண்டு குளங்களை அணுகினாலும் வேதங்களை அறிந்த மனிதர்கள் அவர்களை மெச்சுவதில்லை.(10) தொலைவில் நிற்பீராக. என் அருகே வராதீர்கள். நாங்கள் பாகீரதியின் நீரில் {கங்கையின்} குளித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா?(11) சுயபலத்தில் நம்பிக்கையுள்ள நான் கந்தர்வனான அங்காரபர்ணன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் பெருமையும், செருக்கும் கொண்டவனும் குபேரனின் நண்பனும் ஆவேன்.(12) இஃது எனது புலனாசைகளைத் தணித்துக் கொள்ள நான் விளையாடும் எனது கானகமாகும். கங்கைக்கரையிலுள்ள இக்கானகம் அங்காரபர்ணம் என்ற எனது பெயர் கொண்டதாகும்.(13) இங்கே தேவர்களோ, கபாலிகர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ கூட வரத் துணிவதில்லை. குபேரனின் கிரீடத்தில் உள்ள பிரகாசமான அணிகலனான என்னை அணுகுவதற்கு எப்படி நீங்கள் துணிந்தீர்கள்?” என்று கேட்டான் {அங்காரபர்ணன்}.(14)

கந்தர்வனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “மரமண்டையே {மடையனே} பகலாகட்டும், இரவாகட்டும், சந்திப் பொழுதாகட்டும், சமுத்திரத்திலிருந்தும், இமயத்தின் பகுதிகளிலிருந்தும், இந்த நதியிலிருந்தும் மற்றவர்களை யாரால் தடுக்க முடியும்?(15) ஓ விண்ணதிகாரியே, வயிறு காலியாக இருந்தாலும், நிறைந்திருந்தாலும், அஃது இரவானாலும் பகலானாலும், ஆறுகளில் முதன்மையான இந்தக் கங்கைக்கு வருவதற்கென்று குறிப்பிட்ட நேரமெல்லாம் கிடையாது.(16) அதன் காரணமாகப் பலம் வாய்ந்த நாங்கள், உன்னைத் தொந்தரவு செய்வதை மதிக்க மாட்டோம். தீயவனே, போரில் பலவீனமானவர்களே உன்னை வழிபடுவார்கள்.(17) இமயத்தின் பொன் முகடுகளிலிருந்து வெளிவரும் இந்தக் கங்கை, ஏழு நீரோடைகளாகப்[1] பிரிந்து சமுத்திரத்தின் நீரில் கலக்கிறாள்.(18) (கங்கையின் ஏழு பிரிவுகள் 1. வஸ்வோகஸாரை, 2.நளினீ, 3.பாவனீ, 4.ஸீதை, 5.சக்ஷுஸ், 6.சிந்து, 7.அளகநந்தை ஆகியனவாகும்.)கங்கை, யமுனை, சரஸ்வதி, விதஸ்தை, சரயு, கோமதி மற்றும் கண்டகி ஆகிய இந்த ஏழு நீரோடைகளில் {ஆறுகளில்}(19) நீரெடுத்துக் குடிப்பவர்கள், தங்களது அனைத்துப் பாவங்களையும் துடைத்தெறிகிறார்கள்.ஓ கந்தர்வா, இந்தப் புனிதமான கங்கை, அளகநந்தை என்ற தேவலோகப் பகுதியிலிருந்து பாய்கிறது[2].(20) (கும்பகோணம் பதிப்பில் மேற்கண்ட 18 முதல் 20 வரையிலான சுலோகங்கள், “இமயமலையின் பொற்கொடுமுடியிலிருந்து புறப்பட்ட இந்தக் கங்கை ஏழு பிரிவுகளாக {மேற்கண்ட அடிக்குறிப்பு [1]ல் சொல்லப்பட்டுள்ளவாறு} சென்று சமுத்திரஜலத்தைச் சேர்ந்தது. கங்கை, யமுனை, ப்லக்ஷஜாதை, ஸரஸ்வதீ, ரதஸ்தை, ஸரயு, கோமதி கண்டகி இவற்றின் தீர்த்தத்தையும் அப்படியே (முன் சொன்ன) ஏழு நதிகளின் தீர்த்தத்தையும் பருகுபவர்களிடம் பாவங்கள் தங்குவதில்லை” என்றிருக்கிறது.)அது பித்ருகளின் உலகத்தில், பாவிகளால் கடக்க முடியாத வைதரணீ ஆகிறது என்று கிருஷ்ண துவைபாயனரே {வியாசரே} சொல்லியிருக்கிறார். இந்த நற்பேறளிக்கும் தேவலோக ஆறு {கங்கை}, ஒருவனை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காத்து அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது.  அப்படியிருக்கும் போது எங்களைத் தடுக்க நீ ஏன் விரும்புகிறாய்? உனது இந்தச் செயல் நித்திய அறச்செயலுக்கு இசைவாயில்லை.(21,22) அனைத்து ஆபத்துகளிலிருந்தும் விடுதலை அடைய வந்திருக்கும் எங்களை யாரும் தடுக்க முடியாது. உனது வார்த்தைகளைப் புறக்கணித்துப் பாகீரதியின் {கங்கையின்} இந்தப் புனிதமான நீரைத் தொடாமல் இருப்போமா?” என்றான் {அர்ஜுனன்}.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அங்காரபர்ணன் பெருஞ்சினம் கொண்டு, தனது வில்லை வட்டமாக வளைத்துக் கொடும்பாம்புகளைப் போன்ற அவனது அம்புகளைப் பாண்டவர்கள் மீது ஏவத் தொடங்கினான்.(24) அப்போது, பாண்டுவின் மைந்தனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு கையில் {தோல்} கவசத்துடனும், ஒரு கையில் விளக்கு பந்தத்துடனும் அந்தக் கணைகள் அனைத்தையும் விலக்கி அந்தக் கந்தர்வனிடம்,(25) “ஓ கந்தர்வா, ஆயுதங்களின் நிபணத்துவம் வாய்ந்தவர்களை அச்சுறுத்த எண்ணாதே, அப்படி நீ வீசும் ஆயுதங்கள் நீர்க்குமிழி போல மறைந்து போகும்.(26) ஓ கந்தர்வா, நீ மனிதர்களை விட {ஆற்றலில்} உயர்ந்தவன் என்று நான் கருதுகிறேன். எனவே தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு நான் போரிடுவேன். கபடப் போர் புரிய மாட்டேன்.(27) (நான் உன் மீது இப்போது ஏவப்போகும்) இந்த நெருப்பாலான ஆயுதத்தை, இந்திரனின் மரியாதைக்குரிய குருவான பிருஹஸ்பதி பரத்வாஜருக்குக் கொடுத்தார்,(28) அவரிடம் {பரத்வாஜரிடம்} இருந்து அதை அக்னிவேஸ்யர் {Agnivesya} அடைந்தார். அக்னிவேஸ்யரிடமிருந்தும், பிராமணர்களில் முதன்மையான எனது குரு துரோணர் அடைந்தார். அவர் {துரோணர்} இதை {நெருப்பாலான ஆயுதத்தை} எனக்குக் கொடுத்தார்” என்றான்.(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்}, தனது நெருப்பாலான ஆயுதத்தை அந்தக் கந்தர்வன் மீது ஏவினான். அவ்வாயுதம் அந்தக் கந்தர்வனின் தேரை ஒரு நொடிப்பொழுதில் எரித்தது.(30) அந்த ஆயுதத்தின் வல்லமையால் உணர்விழந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன், அந்த தேரிலிருந்து தலைகீழாக விழுந்தான்.(31) தனஞ்சயன் {அர்ஜுனன்}, மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது தலைமுடியைப் பற்றி, உணர்விழந்து கிடந்த அந்தக் கந்தர்வனைத் தனது சகோதரர்களிடம் இழுத்துச் சென்றான்.(32) இதைக்கண்ட கந்தர்வனின் மனைவியான கும்பீனசி, தனது கணவனை {அங்காரபர்ணனைக்} காக்க விரும்பி, யுதிஷ்டிரனிடம் ஓடி, அவனின் {அங்காரபர்ணனின்} பாதுகாப்பை வேண்டினாள்.(33)

அந்தக் கந்தர்வி {கும்பீனசி}, “ஓ மேன்மைமிக்கவரே, உமது பாதுகாப்பை எனக்கு அருள்வீராக! எனது கணவரை விடுவிப்பீராக! ஓ தலைவா, கும்பீனசி என்ற பெயரைக் கொண்டவளும், இக்கந்தர்வரின் மனைவியுமான நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன்” என்று கேட்டாள்.(34)

(இப்படித் துயருற்ற) அவளைக் {கும்பீனசியை} கண்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம், “ஓ எதிரிகளை அழிப்பவனே, ஓ குழந்தாய், வீரமற்றுப் பெண்ணின் பாதுகாப்பை அடைந்து, புகழை இழந்து, போரில் தோற்றவனை யார்தான் கொல்வார்கள்?” என்று கேட்டான்.(35)

அதற்கு அர்ஜுனன், “ஓ கந்தர்வா, உனது உயிரைப் பெற்றுக்கொண்டு செல்வாயாக. வருந்தாதே. குருக்களின் மன்னர் யுதிஷ்டிரன் உனக்குக் கருணை காட்டச் சொல்லி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.” என்றான்.(36)

அதற்கு அந்தக் கந்தர்வன் {அங்காரபர்ணன்}, “நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். எனவே, நான் எனது அங்காரபர்ணன் (ஒளிரும் வாகனம் என்ற பொருள் கொண்ட) என்ற எனது பெயரைக் கைவிடுகிறேன். ஓ நண்பா, எனது பலம் ஒடுக்கப்பட்ட பிறகு, செருக்குடன் கூடிய பெயரை வைத்திருக்கக்கூடாது.(37) ஓ அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் உன்னை அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கந்தர்வர்கள் மட்டுமே அறிந்த மாய சக்திகளை (மாயத்தை உற்பத்தி செய்யும் நுணுக்கம்) நான் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன்.(38) தோற்றத்தில் வித்தியாசமான அற்புதமான எனது தேர் உனது நெருப்பாயுதத்தால் {ஆக்னேயாஸ்திரத்தால்} எரிக்கப்பட்டது. இதற்கு முன்பு எனது அழகான தேருக்காக அந்தப் பெயரால் அழைக்கப்பட்ட நான் {சித்திரரதன்}, இப்போது எரிந்த அந்தத் தேரின் பெயரையே கொள்ள வேண்டும். (39) மாயையை உற்பத்தி செய்யும் அறிவியலை முன்பு நான் எனது தவத் துறவுகளால் அடைந்தேன். அந்த அறிவியலை நான் எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு இன்று அளிக்கிறேன்.(40) ஒருவன் தனது எதிரியை பலத்தால் வென்ற பிறகு, அந்த எதிரி கேட்கும்போது அவனது உயிரைத் திருப்பித் தருபவன், என்ன நற்பேறுக்குத்தான் தகாதவன்?(41)

இந்த அறிவியலுக்குப் பெயர் சாக்ஷுஷி என்பதாகும். இது மனுவால் {Manu} சோமனுக்கும், சோமனால் விஸ்வாவசுக்கும், இறுதியாக விஸ்வாவசுவால் எனக்கும் உரைக்கப்பட்டது.(42) ஒரு சக்தியும் இல்லாத என்னிடம், எனது குரு {விஸ்வாவசு} மூலமாக வந்தடைந்த அந்த அறிவியல், என்னிடம் வந்ததால் கனியற்றிருக்கிறது. நான் அதன் மூலத்தையும், பரிமாற்றங்களையும் விவரித்தேன். இப்போது அதன் ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக!(43) ஒருவன், (இதன் துணை கொண்டு) அவன் விரும்பியதைப் பார்க்கலாம். அதேபோல் விரும்பியவாறும் (பொதுவாகவும், குறிப்பாகவும்) பார்க்கலாம்.(44) ஒருவன், ஆறுமாதங்கள் ஒற்றைக் காலில் நின்றால் இந்த அறிவியலை அடையலாம். இருப்பினும் நான் உனக்கு இந்த அறிவியலை எந்தக் கடினமான நோன்பும் நோற்காமல் கொடுக்கிறேன்.(45) ஓ மன்னா, இந்த அறிவாலேயே {கந்தர்வர்களாகிய} நாங்கள் மனிதர்களை விட மேன்மையாக இருக்கிறோம். ஆன்மப் பார்வை கொண்டு எதையும் நாங்கள் பார்க்க முடிவதால் நாங்கள் தேவர்களுக்குச் சமமானவர்களாகவும் இருக்கிறோம்.(46)

ஓ மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நான் உனக்கும் உனது சகோதரர்களுக்கும் கந்தர்வர்களின் உலகில் பிறந்த நூறு {100} குதிரைகளைக் கொடுக்க விரும்புகிறேன்.(47) தெய்வீக நிறத்துடன், மனோ வேகம் கொண்ட அக்குதிரைகள் தேவர்களையும் கந்தர்வர்களையும் சுமக்க நியமிக்கப்பட்டிருந்தன. அவை சதையற்று மெலிவாக இருந்தாலும் அவை களைப்படைவதில்லை, எக்காரணம் கொண்டும் துயரடைவதில்லை.(48) பழங்காலத்தில் விருத்திரனைக் கொல்வதற்காகவே வஜ்ராயுதமானது {இடியுடன் கூடிய மின்னலான இந்திரனின் ஆயுதமானது} தேவர்கள் தலைவனால்  உருவாக்கப்பட்டது. ஆனால், அஃது அவன் மீது ஏவப்பட்டபோது, விருத்திராசுரனின் தலைபட்டு அது நூறு துண்டுகளாக உடைந்தது.(49)

அந்தத் துண்டுகளைத் தேவர்கள் மரியாதையுடன் வணங்குகின்றனர். அவை மூவுலகத்திலும், வஜ்ராயுதத்தின் பகுதிகளாக அதன் புகழுக்காக அறியப்படுகிறது.(50) வேள்வித்தீயில் தெளிந்த நெய்யை விடும் பிராமணர்களின் கரங்களும், க்ஷத்திரியர்கள் போர் புரியும் தேர்களும், வைசியர் செய்யும் தானமும், சூத்திரர் செய்யும் தொண்டும் அந்த வஜ்ரத்தின் சிதறிய பாகங்களே.(51) எனவே, க்ஷத்திரியர்களுடைய தேரின் ஒரு பகுதியாகக் குதிரைகள் இருப்பதால், அவை கொல்லத்தக்கவையல்ல என்று நம்பப்படுகிறது. க்ஷத்திரியனின் தேரை அலங்கரிக்கும் குதிரை, வடவனின் வாரிசாகிறது.(52) கந்தர்வர்களின் பகுதியில் பிறந்த இக்குதிரைகள், அதன் முதலாளிகள் விரும்புவது போல எந்நிறத்தையும் எவ்வேகத்தையும் கொள்ளவல்லவையாகும். நான் கொடுக்கும் இந்த எனது குதிரைகள், உங்கள் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றும்” என்றான் {அங்காரபர்ணன்}.(53)

கந்தர்வனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “ஓ கந்தர்வா, ஆபத்துக் காலத்தில் உனது உயிரை அடைந்ததால் நீ இந்த அறிவியலையும், குதிரைகளையும் கொடுப்பதாய் இருந்தால், நான் அவற்றைக் கொடையாகக் கொள்ள மாட்டேன்” என்றான்.(54)

அதற்கு அந்தக் கந்தர்வன், “ஒரு சிறப்பு வாய்ந்த மனிதரைச் சந்திப்பது எப்போதும் மனநிறைவையே உண்டாக்கும். அதுவும் தவிர்த்து நீ எனக்கு என் உயிரை அளித்திருக்கிறாய். உன்னால் மனநிறைவை அடைந்து, நான் இந்த அறிவியலை உனக்குக் கொடுக்கிறேன்.(55) எனினும் அக்கடமை அனைத்தும் ஒரு புறம் சார்ந்ததாக மட்டும் இருக்காது. ஓ பீபத்சு {அர்ஜுனா}, ஓ பாரதக் குலத்தின் காளையே, நான் உனது அற்புதமான தெய்வீக ஆயுதமான நெருப்பாயுதத்தை {அக்னேயாவை} உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்” என்றான்.(56)

அர்ஜுனன், “நான் உனது குதிரைகளை எனது ஆயுதத்துக்கான பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்கிறேன். நமது நட்பு நிலைத்திருக்கட்டும். ஓ நண்பா, மனிதர்களாகிய நாங்கள் கந்தர்வர்கள் முன் அச்சத்துடன் நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சொல்வாயாக.(57) எதிரிகளைத் தண்டிப்பவர்களான நாங்கள் அறம் சார்ந்தவர்கள். வேதமறிந்தவர்கள். ஓ கந்தர்வா, இரவு நேரத்தில் பயணம் செய்யும் எங்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்” என்று கேட்டான்.(58)

அதற்குக் கந்தர்வன், “மனைவிகளற்றவர்கள் நீங்கள் (கல்வி காலம் நிறைந்த பிறகும்), நீங்கள் எந்தக் குறிப்பிட்ட ஆசிரமத்தையும் (வாழ்க்கை முறையையும்) ஏற்றுக் கொள்ள வில்லை {பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு வாழ்க்கைமுறைகள்}. கடைசியாக, நீங்கள் பிராமணரை முன்கொண்டு நடக்கவில்லை. எனவே, பாண்டு மைந்தர்களே, நீங்கள் என்னால் கண்டிக்கப்பட்டீர்கள்.(59) யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், பிசாசங்களும், உரகங்களும், தானவர்களும் குரு குலத்தவரின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். அதில் அறிவும் கொண்டுள்ளனர்.(60)

ஓ வீரர்களே, நாரதரிடமிருந்தும், மற்றத் தெய்வீக முனிவர்களிடமிருந்தும் உங்கள் மூதாதையர்களின் நற்செயல்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.(61) கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த உலகை நான் சுற்றி வரும்போது உனது குலத்தின் பேராற்றலைக் கண்டிருக்கிறேன்.(62) ஓ அர்ஜுனா, மூன்று உலகங்களில் கொண்டிருக்கும் ஆயுத அறிவுக்காவும், வேத அறிவுக்காகவும் புகழப்படும் பரத்வாஜரின் மகனான உனது குருவையும் {துரோணரையும்} நான் அறிவேன்.(63) ஓ குரு குலத்தின் புலியே, ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தனே, நான் தர்மன், வாயு, சக்ரன் {இந்திரன்}, அஸ்வினி இரட்டையர்கள், மற்றும் பாண்டுவாகிய குருகுலத்தை என்றும் நிலைக்க வைத்திருக்கும் ஆறு மூலங்களையும் அறிவேன். இவர்கள் உங்கள் குலத்தைத் தழைக்க வைக்கும் தேவர்களும் மனிதர்களும் ஆவர்.(64) நீங்கள் ஐந்து சகோதரர்களும், கல்வி கற்று, உயர்ந்த ஆன்மா கொண்டு, அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையடைந்த அறம்சார்ந்தவர்கள் என்பதையும்  நான் அறிவேன். உங்கள் நல்ல இதயங்களையும், களங்கமற்ற நடத்தைகளையும் அறிந்தே நான் உங்களைக் கண்டித்தேன்.(65,66)

ஓ குரு குலத்தவனே, பலம் நிறைந்த எந்த மனிதனும் தனது மனைவின் எதிரில் தவறாக நடத்தப்பட்டால் பொறுமையாக இருக்க மாட்டான்.(67) ஓ குந்தியின் மைந்தா {அர்ஜுனா}, குறிப்பாக எங்களில் ஒருவன் {கந்தர்வன்} இருளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, கரத்தின் பலம் அதிகரிக்கும்போது, அதுவும் அவனது மனைவி அவனுடன் இருக்கும்போது பொறுமையாக இருக்க மாட்டான். ஆகவேதான் நான் கோபம் கொண்டேன்.(68) ஓ நோன்பு நோற்பவர்களில் சிறந்தவர்களே, இருப்பினும் நான் உங்களால் போரில் வீழ்த்தப்பட்டேன். நான் ஏன் இந்த இழிந்த நிலையை அடைந்தேன் என்பதைக் குறித்துக் கேட்பீராக.(69) வாழ்க்கை முறைகளில் பிரம்மச்சரியமே உயர்ந்தது. இப்போது நீங்கள் அந்த அந்த முறையிலேயே இருக்கிறீர்கள். அதனால்தான், ஓ பார்த்தா {அர்ஜுனா}, நான் போரில் உங்களால் வீழ்த்தப்பட்டேன்.(70)

ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, மணம்புரிந்த எந்த க்ஷத்திரியன் எங்களுடன் இரவில் போரிட்டாலும், அவன் உயிருடன் தப்பவே முடியாது.(71) ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஒரு பிராமணனால் தூய்மையாக்கப்பட்ட மணம் புரிந்த க்ஷத்திரியன், தனது மாநிலத்தின் புரோகிதரை நன்றாகக் கவனித்துக் கொள்பவன் இரவில் உலவுபவர்களைத் தனது பலத்தால் அழிப்பான்.(72) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, எனவே மனிதர்கள், எப்போதும் கல்விமான்களான புரோகிதர்களைத் தாங்கள் செய்ய விரும்பும் அனைத்து நற்காரியங்களிலும் நியமித்துக்கொள்ள வேண்டும். வேதங்களை அதன் ஆறு கிளைகளுடன் அறிந்து, சுத்தமாகவும், உண்மையாகவும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டு, சுயக்கட்டளை கொண்ட பிராமணன், ஒரு மன்னனுக்குப் புரோகிதனாக இருக்கத் தகுதி வாய்ந்தவன்.(73,74) நீதிகளின் விதிகளை அறிந்த பிராமணனைப் புரோகிதனாக அடைந்த ஓர் ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்.(75)

கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும்.(76) தனது வளமையை விரும்பும் ஒருவன், எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான்.(77) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, பிராமணன் இல்லாத ஒரு மன்னன், தனது ஆற்றலால் நிலத்தையோ, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது.(78) எனவே, ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பிராமணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்வாயாக” என்றான் {சித்ரரதன்}.(79)

சம்வர்ணனும் தபதியும் – ஆதிபர்வம் பகுதி 173-(சைத்ரரதப் பர்வம் – 07)சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி…

அர்ஜுனன், “நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்?” என்று கேட்டான்”.(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான். கந்தர்வன்,(3) “ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன்.(4) தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாகச் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(5) எவன் மொத்த ஆகாயத்தையும் தன்னொளியால் படர்ந்து  ஊடுருவி இருக்கிறானோ அந்த விவஸ்வானுக்கு {சூரியனுக்கு}, தனக்கு இணையான பிரகாசம் கொண்டவளாக தபதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள்.(6) தேவன் விவஸ்வானின் மகளான தபதி, சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது தவத்துறவுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள்.(7) தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை.(8) அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கரிய அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள்.(9) ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.(10)

அவள் வயதுக்கு வந்ததும், அவளுக்குச் சரியான கணவனைக் காண முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷனின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பல்வேறு துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.(12,13) உண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான்.(14) அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்குச் சரியான இணை என்று நினைத்தான்.(15)

ஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தனும், உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்துமான சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வான் முடிவு செய்தான்.(16) சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான்.(17) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பிராமணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள்.(18) நற்பேறு அருளப்பட்டவனான மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} விஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை விஞ்சினான்.(19) ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.(20)

ஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிலா ஆற்றலும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் சாரலில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான்.(21) அவன் மான்களைத் தேடி உலவிக் கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது.(22) அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் சாரலில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி! பெரிய கண்களுடைய ஓர் அழகான மங்கையைக் கண்டான்.(23) அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சிறப்புமிக்க மன்னன், தனியனாகத் தனியாக இருக்கும் அந்த கன்னிகையைப் பார்த்துக் கொண்டே அசைவில்லாமல் நின்றான்.(24) அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளைச் சூரியனின் கதிரில் உருவான வடிவம் என்று நினைத்தான்.(25)

நெருப்புக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்ட அவள், அருளுடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள்.(26) அந்த மலையின் சாரலில் நின்று கொண்டிருந்த அந்தக் கரிய கண் படைத்தவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள்.(27) கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று.(28) அவன், முன்பு கண்டிருந்த பெண்கள் அனைவரையும்  அழகில் குறைவானவர்களாக அறிந்து, தான் அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான்.(29) அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான்.

இவ்வழகைப் படைத்த படைப்பாளியானவன், நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான்.(30,31) இப்படிப் பல்வேறு சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(32) புனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி! அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகளால் துளைக்கப்பட்டுத் தனது மன அமைதியைத் தொலைத்தான்.(33)

ஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டுத் தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவிப் பெண்ணிடம்,(34) “ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, நீ யார், யாருடையவள்? நீ ஏன் இங்கு இருக்கிறாய்? ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய்?(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது!(38) ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்” என்றான்.(39)

மன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(40) அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள்.(41) அம்மன்னன் அனிவை இழந்த ஒருவனைப் போல அந்தத் தாமரை இதழ் கண்களைக் கொண்ட பெண்ணை கானகம் முழுவதும் தேடினான்.(42) ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பித் துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்” {என்றான் சித்திரரதன்}.(43)

சம்வர்ணனிடம் பேசிய தபதி! – ஆதிபர்வம் பகுதி 174(சைத்ரரதப் பர்வம் – 08)மியில் விழுந்த சம்வர்ணனைக் கண்டு அங்கே வந்த தபதி; தபதிக்கும், சம்வர்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

கந்தர்வன் தொடர்ந்தான், “அந்த மங்கை மறைந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {சம்வர்ணன்} காமனால் தாக்குண்டு, உணர்வுகள் இழந்து தரையில் விழுந்தான்.(1) அப்படி அந்த ஏகாதிபதி மயங்கி விழும்போதே, அந்த மங்கை இனிமையான புன்னகையுடனும், அழகான உருண்டு திரண்ட இடுப்புடனும் அவன் முன்பு மறுபடியும் தோன்றி,(2) அந்தக் குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனிடம் இனிமையான குரலில் பேசினாள்.(3) அவள் “எழுவீராக, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, அருளப்பட்டிருப்பீராக; ஓ மன்னர்களில் புலியே, உலகத்தால் கொண்டாடப்படும் உம்மைப் போன்றவர் உணர்வை இழக்கலாகாது” என்றாள்.

அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன்,(4,5) தனது கண்களைத் திறந்து, உருண்டு திரண்ட இடுப்பைக் கொண்ட அந்தப் பெண்ணைக் கண்டான். விரகத் தாபத்தால் எரிந்த அந்த ஏகாதிபதி அந்தக் கருங்கண் மங்கையிடம், தனது பலவீன உணர்ச்சியை வெளிக்கொணரும் வார்த்தைகளில்,(6) “ஓ கருங்கண் கொண்ட அற்புத மாதே! நீ அருளப்பட்டிருப்பாயாக. உன்னைக் கண்டு ஆசைத் தீயில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக. எனது வாழ்க்கை மறைந்து கொண்டிருக்கிறது. ஓ அகன்ற கண்களைக் கொண்டவளே, தாமரையைப் போன்ற மென்மை கொண்ட உன்னைக் கண்டதும், நான் ஒரு நிமிடமும் நிறுத்தப்படாமல், தொடர்ந்து காமனின் கணைகளால் துளைக்கப்பட்டு வருகிறேன். ஓ இனிமையானவளே, மகிழ்ச்சி ததும்பிய மாதே, நான் காமன் எனும் கொடிய விஷப் பாம்பால் கடிக்கப்பட்டிருக்கிறேன்.(7-9)

ஓ சதைப்பற்றுள்ள பெரும் இடையாளே! என்னிடம் கருணை கொள்வாயாக களங்கமற்ற குணம் கொண்ட அழகானவளே, ஓ தாமரை இதழை அல்லது நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, பாடும் கின்னரர்களின் குரல் போன்று இனிமையான குரல் கொண்டவளே, இப்போது எனது வாழ்வு உன்னை நம்பியே இருக்கின்றது! ஓ மருட்சியுடையவளே, நீ இல்லாமல், என்னால் வாழ முடியாது!(10,11) ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடையவளே, காமன் தொடர்ச்சியாக என்னைத் துளைக்கிறான்!(12)

ஓ அகன்ற கண்ணுடையாளே, என்னிடம் கருணை கொள்வாயாக. ஓ கருங்கண் மாதே, என்னைக் கைவிட்டுவிடாதே; ஓ அழகானவளே, உனது அன்பைக் கொடுத்து, என்னை இந்தத் துயரத்திலிருந்து மீட்டெடுப்பாயாக.(13) முதல் பார்வையிலேயே நீ எனது இதயத்தைக் கவர்ந்தாய். எனது மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்கிறது! உன்னைக் கண்ட பிறகு, நான் இன்னொரு பெண்ணின் மீது பார்வையைச் செலுத்த மாட்டேன்.(14) கருணை கொள்வாயாக. நான் உனது சொல்கேட்டுப் பணிந்து நடக்கும் ஓர் அடிமையாவேன்! உனது துதிபாடியுமாவேன்! என்னை ஏற்றுக் கொள்வாயாக!

ஓ அழகிய பெண்ணே, ஓ அகன்ற கண்களைக் கொண்ட கன்னிகையே, நான் உன்னைக் கண்டதும்,(15) காமதேவன் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். அவன் தன் கணைகளால் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறான். ஓ தாமரைக் கண்ணாளே, ஆசைத்தீ என்னுள் எரிந்து கொண்டிருக்கிறது.(16) அந்த நெருப்பை உனது அன்பெனும் நீரால் {காதலால்} அணைத்துவிடுவாயாக. ஓ அழகான மங்கையே, நீ எனதாகி, கொடும் கணைகளுடன் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கும் அடக்க முடியாத காமதேவனை அடக்க வழி ஏற்படுத்துவாயாக.(17,18) ஓ அழகான நிறம் கொண்டவளே, கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ மெல்லிடையாளே, அனைத்து வகைத் திருமணங்களிலும் கந்தர்வ முறையே சிறந்ததெனச் சொல்லப்படுகிறது” என்றான்”.(19)

அந்தக் கந்தர்வன் தொடர்ந்தான், “அந்த ஏகாதிபதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தபதி, “ஓ மன்னா, நான் எனக்கு தலைவியில்லை. நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மங்கையாவேன். நீர் என்னிடம் அன்பு கொண்டிருந்தால், எனது தந்தையிடம் கேட்பீராக.(20) ஓ மன்னா, என்னால் உமது இதயம் களவு போனதாகச் சொல்கிறீர். ஆனால், நீரும், முதல் பார்வையிலேயே எனது இதயத்தைக் களவாடிவிட்டீர்.(21) நான் எனக்கு தலைவியில்லை. பெண்கள் சுதந்திரமற்றவர்கள்; எனவே, ஓ மன்னர்களில் சிறந்தவரே, நான் உம்மை அணுகவில்லை.(22) நீர் உம்மை நம்பி இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருக்கிறீர். புனிதமான குலத்திலும் பிறந்திருக்கிறீர். உம்மைக் கணவராக அடைய இந்த உலகத்தில் உள்ள எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?(23) எனவே, சமயம் வாய்க்கும் போது, எனது தந்தையான ஆதித்தியரிடம் {சூரியனிடம்} வழிபாட்டுடனும், நோன்புடனும், உறுதியுடனும் சேர்த்து எனது கரத்தைக் கேட்பீராக.(24) எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், பிறகு, ஓ மன்னா, நான் உமக்கு எப்போதும் கட்டுப்பட்ட {அடங்கி நடக்கும்} மனைவியாக இருப்பேன்.(25) எனது பெயர் தபதி, நான் சாவித்ரிக்கு இளைய தங்கை, ஓ க்ஷத்திரியர்களில் காளையே, நான் உலகிற்கு ஒளியூட்டும் சூரியனின் மகளாவேன்” என்றாள் {தபதி}.(26)

ஒரு துளி பனிக் கூட வானிலிருந்து விழவில்லை! – ஆதிபர்வம் பகுதி 175-(சைத்ரரதப் பர்வம் – 09)மீண்டும் மறைந்த தபதி; மன்னனிடம் வந்த வசிஷ்டர்; சூரியனிடம் பெண் கேட்ட வசிஷ்டர்; சம்வர்ணனும், தபதியும் திருமணம் செய்து கொண்டது; நாட்டில் பஞ்சமேற்பட்டது; பஞ்சத்தை நீக்கிய வசிஷ்டர்

கந்தர்வன் தொடர்ந்தான், “இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.(1) அவனது அமைச்சர்களும், தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடிக் கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர்.(2) அந்தத் தனிமையான இடத்தில் வானிருந்து விழுந்த வானவில்லைப் போலக் கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது முதல் அமைச்சர் நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனைத் தூக்கினார்.(3-5) வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, மன்னனிடம், “ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!” என்று சொல்லி இனிமையாகப் பேசத் தொடங்கினார்.(6,7)

பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார்.(8) அப்போது அந்த வயது முதிர்ந்தவர், ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்துத் தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார்.(9) மெதுவாகச் சுயநினைவை அடைந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, தனது அமைச்சர் ஒருவரைத் தவிர மற்ற பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான்.(10) அப்படிப் பணியாட்கள் சென்றதும், மன்னன் மலையின் சாரலில் அமர்ந்தான். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட அம்மன்னன், மலைகளில் முதன்மையான அம்மலையில் அமர்ந்து,(11) தூய்மையடைந்து தனது கரங்களைக் குவித்து, முகத்தை உயர்த்திச் சூரியனை வழிபட்டான்.(12)

எதிரிகளைத் தாக்கும் அந்த மன்னன் சம்வர்ணன், முனிவர்களில் சிறந்த தனது தலைமைப் புரோகிதர் வசிஷ்டரையும் நினைத்தான்.(13) அந்த மன்னன் இரவும் பகலுமாகத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் அங்கேயே அமர்ந்து தியானித்தான். பனிரெண்டாவது நாளில் பிராமண முனிவர் வசிஷ்டர் அங்கே வந்தார்.(14) தபதியினால் உணர்விழந்த ஏகாதிபதியின் நிலையைத் தனது ஞானப்பார்வையால் உணர்ந்தார் பெரும் முனிவர்.(15) எப்போதும் நோன்பு நோற்கும் ஏகாதிபதிக்கு நன்மை செய்ய விரும்பிய முனிவர்களில் சிறந்த அறம்சார்ந்தவர் அவனிடம் அனைத்து உறுதிகளையும் அளித்துப் பேசினார்.(16) அச்சிறப்புமிகுந்த முனிவர், ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேலே எழும்பி வானத்தில் பிரகாசத்துடன் இருந்த சூரியனிடம் பேசினார்.(17) ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனை, அந்த பிராமணர் அணுகி, மகிழ்ச்சிகரமாக, “நான் தான் வசிஷ்டன்” என்றார்.(18)

அப்போது, பெரும் சக்தி கொண்ட அந்த விவஸ்வான் {சூரியன்}, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம், “ஓ பெரு முனியே, நீர் வரவேற்கப்படுகிறீர் {உமது வரவு நல்வரவாகட்டும்}, உமது மனத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குச் சொல்வீராக.(19) ஓ பெரும் நற்பேறுபெற்றவரே, நீர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர், நாநலமிக்கவர்களில் முதன்மையானவரே, நீர் எவ்வளவு கடுமையான ஒன்றைக் கேட்டாலும் நான் அதை உமக்கு அளிக்கிறேன்!” என்றான்.(20) இப்படிச் சூரியனால் சொல்லப்பட்ட பெரும் ஆன்மத்தகுதி கொண்ட பெரும் முனிவர், அந்த ஒளிக்கடவுளை வணங்கி,(21) “ஓ விபாவசு, இஃது உனது மகளான தபதி, இவள் சாவித்ரியின் இளைய சகோதரி, நான் இவளை சம்வர்ணனுக்காக உன்னிடம் கேட்கிறேன்! அந்த ஏகாதிபதி பெரும் சாதனைகள் செய்தவன், அறம் தவறாத உயர்ந்த ஆன்மா கொண்டவன். ஓ விண்ணதிகாரியே, சம்வர்ணன் உனது மகளுக்குத் தகுதியுடைய கணவனாக இருப்பான்” என்றார்.(22,23)

முனிவரால் இப்படிச் சொல்லப்பட்ட விபாகரன் {சூரியன்}, தனது மகளைச் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்து, முனிவரை வணங்கி,(24) “சம்வர்ணன் ஏகாதிபதிகளில் சிறந்தவனாவான், நீர் முனிவர்களில் சிறந்தவராவீர், தபதி பெண்களில் சிறந்தவளாவாள். சம்வர்ணனுக்கு அவளை அளிப்பதைத் தவிர, இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?”(25) என்று சொன்ன தேவன் தபனன் {சூரியன்}, களங்கமற்ற தனது மகள் தபதியை சம்வர்ணனுக்கு அளிப்பதற்காகச் சிறப்புமிகுந்த வசிஷ்டரிடம் கொடுத்தான்.(26)

பெரும் முனிவர், மங்கை தபதியை ஏற்றுக் கொண்டு, சூரியனிடம் விடைபெற்றுக் கொண்டு, குருகுலத்தின் காளை {சம்வர்ணன்} அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார்.(27) காதலால் கட்டுண்டு, தபதியிடம் இதயத்தை நிலைக்கச் செய்து இருந்த அம்மன்னன் சம்வர்ணன், வசிஷ்டருடன் வந்து கொண்டிருந்த அந்தத் தேவமங்கையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான்.(28) அழகான புருவங்களைக் கொண்ட அந்தத் தபதி, மேகத்திலிருந்து மின்னல் இறங்குவது போல வானத்திலிருந்து சொர்க்கத்தின் பத்துப் புள்ளிகளையும் கிறங்கடித்தபடி இறங்கி வந்தாள்.(29,30) ஏகாதிபதியின் பனிரெண்டு இரவு நோன்பு முடிந்ததும், புனிதமான ஆன்மா கொண்ட சிறப்பு மிகுந்த முனிவர் வசிஷ்டர் அவனை அணுகினார்.(31) இப்படியே மன்னன் சம்வர்ணன், நல்லதைச் செய்யும் தலைவனான விவஸ்வானை, வசிஷ்டரின் (ஆன்ம சக்தியின்) மூலம் வழிபட்டு ஒரு மனைவியை அடைந்தான்.(32)

மனிதர்களில் காளையான சம்வர்ணன், தேவர்களும், கந்தர்வர்களும் வந்து செல்லும் அந்த மலையின் சாரலில் தபதியின் கரங்களை உரிய சடங்குகளுடன் ஏற்றான்.(33) பிறகு அந்த அரச முனி {சம்வர்ணன்}, வசிஷ்டரின் அனுமதியுடன், தன் மனைவியுடன் அம்மலையில் விளையாட விரும்பினான்.(34)  அவன் தன் வசிஷ்டரையே தன் தலைநகரையும், நாட்டையும், காடுகளையும் ஆளச் செய்தான்.(35) பிறகு அந்த மன்னனிடம் விடைபெற்றுக் கொண்ட வசிஷ்டர் அவனை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பேரில் அம்மன்னன் ஒரு தேவனைப் போல அம்மலையில் விளையாடத் தொடங்கினான்.(36) அம்மன்னன் தன் மனைவியுடன் அம்மலையிலிருந்த காடுகளிலும், தோப்புகளிலும் பனிரெண்டு (நீண்ட) வருடங்கள் விளையாடிக் கொண்டிருந்தான்.(37)

ஓ பாரதக் குலத்தவனே, அந்தப் பனிரெண்டு வருடகாலத்திற்கும், ஆயிரங்கண்களைக் கொண்டவன் அம்மன்னனின் நாட்டிலும், தலைநகரிலும் மழையைப் பொழியவில்லை.(38) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, பஞ்சகாலம் வந்தபோது, செடிகள், தானியங்கள், விலங்குகளுடன் சேர்ந்து மக்களும் மடியத் தொடங்கினர்.(39) அந்தப் பயங்கர (பஞ்ச) காலத்தில், வானிலிருந்து ஒரு துளி பனியும் விழவில்லை. அதன் விளைவாக எந்தத் தானியங்களும் அங்கே விளையவில்லை.(40) அதன்பேரில், பசி அச்சத்தால் பீடிக்கப்பட்ட மக்கள், துயரத்துடன் தங்கள் வீடுகளைவிட்டுவிட்டு அனைத்தத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட அந்நாட்டின் மக்கள் தங்கள் மனைவியரையும், பிள்ளைகளையும் கைவிட்டு, ஒருவரைக் குறித்து ஒருவர் கவலைகொள்ளாதிருந்தனர்.(42) பசியிலும், பிணியிலும் பீடிக்கப்பட்ட மக்கள்  இறந்து போல எலும்புக்கூடுகளைப் போல ஆகினர். அந்நகரமே பிசாசுகள் நிறைந்த யமலோகம் போல இருந்தது.(43) நாடு அந்நிலையில் இருப்பதைக் கண்டவரும், சிறப்புமிக்க முனிவரும், தவசிகளில் சிறந்தவரும், அறமனம் கொண்டவருமான வசிஷ்டர், அத்தீமைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார்.(44) ஓ மன்னா, அவர் பல வருடங்களைத் தன் மனைவியோடு கழித்திருந்த சம்வர்ணனையும், அவனது மனைவியான தபதியையும் அந்நாட்டிற்கும் திரும்ப அழைத்து வந்தார்.(45)

அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் தன் தலை நகரை அடைந்தபோது, பழைய நிலைமைகளை மீண்டன, ஆயிரங்கண் கொண்டவனும், அசுரர்களைக் கொல்பவனுமான தேவன் {இந்திரன்}, அபரிமிதமாக மழையைப் பொழிந்து தானியங்களை வளரச் செய்தான்.(46) இவ்வாறு நல்ல மனம் கொண்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் நிறுவப்பட்டதும் அந்நாடும் நகரமும் மீண்டும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தது.(47) அதன்பிறகு அம்மன்னன் தன் மனைவியான தபதியுடன் சேர்ந்து இந்திரனும் சச்சியையும் பல பனிரெண்டு வருட வேள்வியைச் செய்தான்”.(48)

கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா,  இதுவே பழங்காலத்தில் விவஸ்வானின் மகளான தபதியின் அருளப்பட்ட வரலாறாகும். அவளைக் காரணமாகக் கொண்டே நீ தபதேயன் ஆனாய்.(49) ஓ அர்ஜுனா, மன்னன் சம்வர்ணன், அந்தத் தபதியிடம், குரு என்ற பெயருடைய மகனைப் பெற்றெடுத்தான். தபதியின் குலத்தில் பிறந்ததாலேயே நீ தபதேயேன் என்று அழைக்கப்படுகிறாய்” {என்றான் கந்தர்வன்}”.(50)-

யார் அந்த வசிஷ்டர்? – ஆதிபர்வம் பகுதி 176-சைத்ரரதப் பர்வம் – 10)-வசிஷ்டரின் மகிமையைச் சொன்ன கந்தர்வன்

வைசம்பாயனர் சொன்னார், கந்தர்வனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும் பாரதக் குலத்தில் சிறந்தவனுமான அர்ஜுனன், முழு மதியைப் போல அர்ப்பணிப்பால் நிறைந்து நின்றான்.(1) குருக்களில் சிறந்தவனா அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்}, வசிஷ்டரின் ஆன்ம பலத்தைக் கேட்டு ஆவலால் தூண்டப்பட்டு அந்தக் கந்தர்வனிடம் இவ்வாறு பேசினான்,(2) “வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வாயாக.(3) ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்குப் புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்” என்று கேட்டான்.(4)

அதற்கு அந்தக் கந்தர்வன், “வசிஷ்டர், பிரம்மனின் ஆன்ம மகனும் (மனத்தால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றிக் கொண்டு, அவை {ஆசையும் கோபமும்} அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர். விஷ்வாமித்திரர் செய்த குற்றத்தினால் அவரது கோபம் தூண்டப்பட்டாலும், அந்த உயர் ஆன்ம முனிவர் கௌசிகர்களைக் (மன்னன் விஷ்வாமித்திரரின் இனக்குழுவை {குலத்தை}) கொல்லாதிருந்தார்.(5,6)  தனது மகன்களை இழந்து துயருற்ற போதும், தன்னைச் சக்தியற்றவராகக் கருதிக் கொண்டு, தான் அப்படியில்லையென்றாலும், விஷ்வாமித்திரருக்கு அழிவு உண்டாகும்படி எக்காரியத்தையும் செய்யாமல், சமுத்திரம் கலங்கினாலும் கண்டங்கள் கலங்காததுபோல இருந்தார். வசிஷ்டர் தனது பிள்ளைகளை மரணதேவன் பகுதியில் இருந்து மீட்டு யமனை (யம {தர்ம} நீதியை) மீறிச் செயல்படவில்லை. தன்னையே வெற்றிக் கொண்ட சிறப்பு மிகுந்தவரை அடைந்ததால்தான், இக்ஷவாகுவாலும் மற்ற பெரும் ஏகாதிபதிகளாலும் முழு உலகத்தையும் அடைய முடிந்தது. ஓ குருகுல இளவரசனே {அர்ஜுனா}, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரைப் புரோகிதராக அடைந்ததால்தான், அந்த ஏகாதிபதிகளால் பெரும் வேள்விகளைச் செய்ய முடிந்தது. ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, மறுபிறப்பாளரான அந்த முனிவர், தேவர்களுக்குப் பிருஹஸ்பதி உதவுவது போல, அந்த ஏகாதிபதிகள் வேள்வி செய்யத் துணை புரிந்தார்.(7-11)

எனவே, இதயத்தில் அறம் நிலைத்த, வேதமறிந்த நல்ல பிராமணனைப் புரோகிதனாக உங்களுக்கு நியமித்துக் கொள்வாயாக.(12) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பூமியை வெற்றிக் கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் நல்ல குலத்தில் பிறந்த க்ஷத்திரியன், முதலில் நல்ல புரோகிதரை நியமித்துக் கொள்ள வேண்டும். உலகத்தை வெற்றிகொள்ள நினைப்பவன் எவனோ, அவன் ஒரு பிராமணனைத் தன் முன் கொண்டிருக்க வேண்டும்.(13) எனவே, ஓ அர்ஜுனா, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்து, புலன்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கல்விமானான ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்வாயாக” {என்றான் கந்தர்வன்}”.(14)

விஷ்வாமித்திரரை வீழ்த்திய வசிஷ்டர்! – ஆதிபர்வம் பகுதி 177-சைத்ரரதப் பர்வம் – 11)-வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்ற விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் விருந்தோம்பல்; வசிஷ்டரிடம் அவரது பசுவைக் கேட்ட விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் சக்தி; தவம் செய்து பிராமணரான விஷ்வாமித்திரர்..

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்ட அர்ஜுனன், “ஓ கந்தர்வா, தெய்வீக ஆசிரமங்களில் வசித்த விஷ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகிய இருவருக்குமிடையில் எப்போது பகை ஏற்பட்டது? இதைக்குறித்து எங்களுக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

அதற்குக் கந்தர்வன் மறுமொழியாக, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, வசிஷ்டரின் கதை மூவுலகங்களாலும் புராணமாக மதிக்கப்படுகிறது. நான் அதை முழுமையாக உரைக்கும்போது கேட்டுக் கொள்வாயாக.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே, கன்யாகுப்ஜத்தில், குசிகரின் மகனாகிய உலகப் புகழ் கொண்ட பெரும் மன்னன் காதி என்று ஒருவன் இருந்தான்.(3) அந்த அறம்சார்ந்த காதிக்கு, எதிரிகளை அழிப்பவரான விஷ்வாமித்திரர் என்ற மகன் இருந்தார். அவர் பெரிய படையையும், பல மிருகங்களையும், பல வாகனங்களையும் வைத்திருந்தார்.(4) அடர்ந்த காடுகளின் வழியாக மான் வேட்டைக்காகத் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து விஷ்வாமித்திரர் உலவுவது வழக்கம்.(5)

ஒரு காலத்தில், மன்னர் விஷ்வாமித்திரர் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது, களைப்பாலும், தாகத்தாலும் மிகவும் பலவீனமானார். களைப்படைந்த அந்த ஏகாதிபதி, வசிஷ்டரின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(6) அருளப்பட்டவரும், சிறப்புவாய்ந்தவருமான அம்முனிவர் {வசிஷ்டர்}, மன்னர் விஷ்வாமித்திரர் வருவதைக் கண்டு, அந்த மனிதர்களில் சிறந்தவரை {விஷ்வாமித்திரரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டார்.(7) ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு, முகத்தையும், கால்களையும் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியாவும், வனத்தில் விளையும் கனிகளையும், தெளிந்த நெய்யையும் கொடுத்து வணங்கினார்.(8) அந்தச் சிறப்புவாய்ந்த முனிவரிடம் {வசிஷ்டரிடம்}, விரும்பியதைக் கொடுக்கும் ஒரு பசு {காமதேனு} இருந்தது. அந்தப் பசுவிடம், “இதைக் கொடு” என்று கேட்டதும், அவரிடம் கேட்டதை உடனே கொடுத்துவிடுவாள்.(9)

அவள் கானகத்தில் விளையும் பல பழங்களையும், தானியங்களையும், பாலையும், ஆறு வகை {சுவைகளில்} ரசங்களையும், அமுதத்தைப் போன்ற பல பொருட்களையும் கொடுத்தாள். ஓ அர்ஜுனா, குடிக்கும் வகையிலும், சாப்பிடும் வகையிலும், நக்கிச் சாப்பிடும் வகையிலும், உறிஞ்சிச் சாப்பிடும் வகையிலும் பல பண்டங்களையும், பல்வேறு மதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் கொடுத்தாள். இந்த விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டு, அந்த ஏகாதிபதி பெரிதும் வழிபடப்பட்டார். இதனால், தனது அமைச்சர்களுடனும், சேனைகளுடனும் கூடிய அந்த மன்னர், மிகுந்த மனநிறைவையடைந்தார்.(10-12) ஆறு உயர்ந்த {மேலெழுந்த} உறுப்புகளையும், அழகான விலா மற்றும் தொடைகளையும், ஐந்து அகலமான உறுப்புகளையும், தவளையைப் போன்ற கண்களையும், அழகான உருவத்தையும், பருத்த {பால் சுரக்கும்} மடிகளையும், குற்றமற்ற, நேர்த்தியான உயர்ந்த காதுகளையும், அழகான கொம்புகளையும், நன்றாக வளர்ந்த தலையையும் கழுத்தையும் கொண்டிருந்த அந்தப் பசுவைக் கண்டு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்} மிகவும் வியந்தார்.(13,14)

ஓ இளவரசனே {அர்ஜுனா}, அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்}, அனைத்தையும் கண்டு மனநிறைவை அடைந்து, நந்தினி என்ற அந்தப் பசுவை வெகுவாகப் புகழ்ந்து அந்த முனிவரிடம்,(15) “ஓ பிராமணரே! ஓ பெரும் முனிவரே, பத்தாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டோ, எனது நாட்டைப் பெற்றுக் கொண்டோ, இந்த நந்தினியை எனக்குக் கொடுப்பீராக. {இப்பசுவைக் கொடுத்துவிட்டு} எனது நாட்டை அடைந்து மகிழ்ச்சியடைவீராக” என்றார்.(16)

விஷ்வாமித்திரரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்டர், “ஓ பாவங்களற்றவரே, தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் மற்றும் எனது வேள்விகளின் காரியத்திற்காகவே நான் இந்தப் பசுவை என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். உமது நாட்டையே நீர் கொடுத்தாலும், அதற்கு மாற்றாக நான் நந்தினியைக் கொடுக்க மாட்டேன்” என்றார்.(17)

அதற்கு விஷ்வாமித்திரர், “நானோ க்ஷத்திரியன், நீரோ கல்விக்கும், தவத்திற்கும் உம்மை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணராவீர். ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைதியான பிராமணர்களுக்குப் பெரிதான சக்தி ஏதாவது இருக்குமா?(18) பத்தாயிரம் பசுக்களை நான் உமக்குக் கொடுக்க முன் வரும்போதும், நான் விரும்பியதை நீர் எனக்குக் கொடுக்காவிட்டால், நான் எனது வர்ணத்தின் பழக்கத்தைக் கைவிடாமல், இப்பசுவைப் பலவந்தமாக எடுத்துச் செல்வேன்” என்றார்.(19)

அதற்கு வசிஷ்டர், “நீர் பெரும்பலம் கொண்ட க்ஷத்திரியனும், பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியும் ஆவீர். அதன் உரிமை குறித்துக் கருதாமல், நீர் விரும்பியதை விரைவாகச் செய்வீராக” என்றார்”.(20)

கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படி வசிஷ்டரால் சொல்லப்பட்ட விஷ்வாமித்திரர், ஓ பார்த்தா, அப்போது, அன்னத்தைப் போன்றும், நிலவைப் போன்றும் வெண்ணிறம் கொண்ட அந்தப் பசுவான நந்தினியை கசையால் அடித்து, மேலும் பலவாறாகத் துன்புறுத்திப் பலவந்தமாக இழுக்க முயன்றார். ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்த அப்பாவி நந்தினி, சிறப்புமிகுந்த வசிஷ்டரை அணுகி தனது முகத்தை உயர்த்திப் பாவமாகப் பார்த்தாள்.(21,22) கடுமையாகத் துன்புறுத்தப்பட்டும், அவள் அந்த முனிவரின் ஆசிரமத்தைவிட்டு அகல மறுத்தாள். அவளது துன்பத்தைக் கண்ட வசிஷ்டர்,(23) “ஓ இனிமையானவளே, நீ தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறாய். நான் உனது கதறலைக் கேட்கிறேன். ஆனால், ஓ நந்தினி, விஷ்வாமித்திரர் உன்னைப் பலவந்தமாக இழுத்துச் செல்லும்போது, சதா மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு பிராமணனான நான் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்”.(24)

கந்தர்வன் தொடர்ந்தான், “அப்போது, ஓ பாரதக் குலத்தின் காளையே, விஷ்வாமித்திரரையும், அவரது படைகளின் காட்சியையும் கண்டு பயந்து போன நந்தினி, அந்த முனிவரை {வசிஷ்டரை} இன்னும் அருகில் சென்று அணுகி,(25) “ஓ சிறப்பானவரே, அப்பாவியான என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்? விஷ்வாமித்திரரின் படையினரால் கடுமையாகக் கசைகளால் அடிபடும் என்னைத் தலைவன் இல்லாதவள் {முதலாளி இல்லாதவள்} போலப் பரிதாபகரமாக ஏன் கதறவிடுகிறீர்?” என்று கேட்டாள்.(26)

அழுது கொண்டு, துன்பத்திலிருக்கும் நந்தினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர், தனது பொறுமையை இழக்காமல், தனது மன்னிக்கும் நோன்பிலிருந்தும் விலகாமல்,(27) “ஒரு க்ஷத்திரியனின் பலம் உடலில் இருக்கிறது. ஒரு பிராமணனின் பலம் அவனது மன்னிக்கும் தன்மையிலிருக்கிறது {பொறுமையிலிருக்கிறது}. நான் எனது மன்னிக்கும் தன்மையை விட முடியாத காரணத்தால், ஓ நந்தினி, நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அங்கு செல்வாயாக” என்றார்.(28)

அதற்கு நந்தினி, “ஓ சிறப்பு மிகுந்தவரே, நீர் என்னைக் கைவிடுகிறீரா என்ன? நீர் என்னைக் கைவிடாமல், ஓ பிராமணரே! என்னைப் பலவந்தத்தின் காரணமாக எங்கும் அழைத்துச் செல்ல முடியாது” என்றாள்.(29)

வசிஷ்டர், “ஓ அருளப்பட்டவளே, நான் உன்னைக் கைவிடவில்லை! உன்னால் முடியுமென்றால், நீ இங்கேயே இரு! தடிமனான கயிறுகளால் கட்டப்பட்டு, அதனால் பெரிதும் பலவீனமடைந்து, உனது இளம் கன்று இழுத்துச் செல்லப்படுகிறது! அதோ பார்” என்றார்”.(30)

கந்தர்வன் தொடர்ந்தான், “அப்போது, வசிஷ்டரின் பசு, அவ்வார்த்தையைக் கேட்டு, கழுத்தை மேல்நோக்கி அசைத்துத் தனது தலையை உயர்த்திப் பார்த்துப் பயங்கரமாக மாறியது.(31) தொடர்ந்து அடிக்கப்பட்ட அந்தப் பசு, கோபத்தால் கண்கள் சிவக்க, விஷ்வாமித்திரரின் படைகளை எல்லாப் பக்கங்களிலும் தாக்கிற்று.(32) கசையடியால் துன்புறுத்தப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக் கண்கள் சிவக்க, அவளுக்குக் கோபம் அதிகமாகியது.(33) கோபத்தால் எரிந்த அந்த நந்தினி, மதிய நேரச் சூரியன் போல உக்கிரமாகக் காணப்பட்டாள். அவள் எரியும் நிலக்கரியாலான பெரும் நெருப்பைத் தனது வாலிலிருந்து மழையெனப் பொழிந்தாள்.(34)

சிறிது நேரம் கழித்து, அவளது வாலிலிருந்து, பல்ஹவர்களின் படையை உற்பத்தி செய்தாள். அவளது {பால் கொடுக்கும்} மடியிலிருந்து திராவிடர்கள் மற்றும் சகர்கள் ஆகியோரின் படையை உற்பத்தி செய்தாள். தனது கருப்பையிலிருந்து யவனர்கள் படையையும், சாணத்திலிருந்து சபரர்களையும்,(35) சிறுநீரிலிருந்து காஞ்சிப் படைகளையும், தனது எல்லாப் புறங்களிலிருந்தும் மற்றச் சபரர்களையும், தனது வாயின் உமிழ்நீரிலிருந்து பௌந்தரர்களையும், கிராதர்களையும், மற்ற யவனர்களையும், சின்ஹலர்களையும் {சிங்களர்களா?}, மிலேச்ச குடிகளான, கசர்கள், சிபுகர்கள், சீனர்கள், ஹூனர்கள், கேரளர்கள் மற்றும் பல மிலேச்சப் படைகளையும் உற்பத்தி செய்தாள்.(36,37) பல்வேறு வகை சீருடைகளில் இருந்த அந்த மிலேச்சர்களின் படைகளிடம், அவர்கள் பிறக்கும்போதே பல்வேறு ஆயுதங்களும் உண்டாயிற்று. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண் முன்பே அரங்கேறி, அந்த ஏகாதிபதியின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த மிலேச்சர்களின் படை எவ்வளவு பெரியது என்றால், விஷ்வாமித்திரரின் ஒரு சிப்பாயைத் தாக்க அந்த மிலேச்ச படையிலிருந்து அறுவரோ, எழுவரோ பாய்ந்தனர்.(38,39)

ஆயுதங்களின் அடர்த்தியான மழையால் விஷ்வாமித்திரரின் படை சிதுறுண்டு பல திக்குகளுக்கும் ஓடியது. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண்ணெதிரிலேயே நடைபெற்றது.(40) ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, வசிஷ்டருடைய படையினர் கோபத்தால் உந்தப்பட்டு இருந்தாலும், விஷ்வாமித்திரர் படையினரில் ஒருவரின் உயிரையும் எடுக்கமுடியவில்லை.(41) அந்த ஏகாதிபதியின் படையை நந்தினி சாதாரணமாக ஓட விட்டாள். அந்தப் படை இப்படியே எந்தப் பாதுகாப்பையும் காணாமல் இருபத்தியேழு மைல்களுக்கு ஓடின.(42) விஷ்வாமித்திரர் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, பிராமண சக்தியை உணர்ந்து, க்ஷத்திரிய சக்தியை வெறுத்து, “ச்சீ… ச்சீ… க்ஷத்திரிய சக்தி சிறுமை கொண்டது. பிராமண சக்தியே உண்மையான சக்தி.(43,44) பலத்தையும், பலவீனத்தையும் ஆராய்ந்து, ஆன்மிகமே உண்மையான பலம் என்பதை உணர்ந்தேன்” என்று சொன்னார். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்}, தனது பெரிய நாட்டைக் கைவிட்டு,(45) அனைத்து இன்பங்களுக்கும் தனது முதுகைக் காட்டி {அனைத்து இன்பங்களையும் துறந்து}, தனது மனத்தை தவத்தில் நிலைக்க வைத்தார். தவத்தில் வெற்றிமுடிசூடி, மூவுலகங்களையும் தனது ஆன்ம நோன்புகளின் வெப்பத்தால் எரித்து,(46) அனைத்து உயிர்களையும் அதனால் துன்பத்துக்குள்ளாக்கினார். இப்படியே அந்த விஷ்வாமித்திரர் பிராமணத் தன்மையை அடைந்தார். இறுதியாக, அந்தக் குசிகனின் மைந்தன் {விஷ்வாமித்திரர்}, இந்திரனுடன் சேர்ந்து (தேவலோகத்தில்) சோம பானம் அருந்தினார்” {என்றான் கந்தர்வன்}.(47)

மன்னன் கல்மாஷபாதன்! – ஆதிபர்வம் பகுதி 178-(சைத்ரரதப் பர்வம் – 12)-வசிஷ்டரின் மகன் சக்திரி; கல்மாஷபாதனுக்குச் சாபம் கொடுத்த சக்திரி; வசிஷ்டரின் மகன்களைக் கொன்று தின்ற கல்மாஷபாதன்; பிள்ளைசோகத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற வசிஷ்டர்.

கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, இக்ஷவாகு குலத்தில் பிறந்த கல்மாஷபாதன்[1] என்றொரு மன்னன் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லாத ஆற்றலைக் கொண்டவனாக இருந்தான்.(1) (கல்மாஷபாதனுக்கு ஸௌதாசன் மற்றும் மித்ரஸஹன் என்ற பெயர்களும் இருந்ததாக கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.)ஒரு நாள் அம்மன்னன், வேட்டையாட விரும்பித் தனது தலைநகரைவிட்டுக் கானகத்திற்குச் சென்று பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும் (தனது கணைகளால்) துளைத்தான்.(2) அந்த அடர்ந்த கானகத்தில், மன்னன் பல காண்டாமிருகங்களையும் வீழ்த்தினான். இந்த விளையாட்டில் நெடுநேரம் ஈடுபட்டு மிகவும் களைப்படைந்த அவன், கடைசியாகத் தனது துரத்தலைக் கைவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.(3) சக்தி கொண்ட பெரும் விஷ்வாமித்திரர், சிறிது காலத்திற்கு முன் இந்த ஏகாதிபதியைத் தனது சீடனாக ஏற்க விரும்பினார்.அப்படிப்பட்ட அந்த ஏகாதிபதி! பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து கானகத்தில் முன்னேறி வரும்போது, சிறப்பு மிகுந்த வசிஷ்டரின் மகனான, முனிவர்களில் சிறந்தவர் ஒருவர் அதே வழியில் அவனுக்கு எதிர்ப்பட்டார். போரில் எப்போதும் வெற்றிவாகையே சூடிவந்த அந்த மன்னன், வசிஷ்ட குலத்தை வளரச் செய்யும் சக்திரி என்ற பெயர் கொண்ட வசிஷ்டரின் நூறு மகன்களில் மூத்த மகனைக் கண்டான்.(4-6)

அம்மன்னன் அவரைக் கண்டு, “எங்கள் வழியில் இருந்து விலகி நில்லும்” என்றான். முனிவர் அந்த ஏகாதிபதியிடம் இணக்கமான சமாதானமான முறையில் இனிமையாக,(7) “ஓ மன்னா, இஃது எனது வழி. மன்னர்கள் எப்போதும் பிராமணர்களுக்கு வழி உண்டாக்க வேண்டும் என்பதே அற நெறியின் நிலைத்த விதியாகும். இதுவே தர்மம் மற்றும் கடமைக்கான அனைத்து நீதிகளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது” என்றார்.(8)

இப்படி அந்த இருவரும் மாறிமாறித் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, “விலகி நில்லும், விலகி நில்லும்” என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.(9) தர்மத்தின் வழியைத் தனது வழியாகக் கொண்ட அந்த முனிவரும் வழிகொடுக்கவில்லை. செருக்கும், சினமும் கொண்ட அந்த அரசனும் வழி கொடுக்கவில்லை.(10) இதனால் அந்த முனிவரின் மீது கோபம் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், வழியும் கொடுக்காமல், அவரைக் கசையால் அடித்து ராட்சசன் போல நடந்து கொண்டான்.(11) இப்படி அந்த ஏகாதிபதியால் கசையால் அடிக்கப்பட்ட அந்த வசிஷ்டரின் மகனான {சக்திரி} முனிவர்களில் சிறந்தவர், கோபத்தால் தனது உணர்வை இழந்து, விரைவாக அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனை {கல்மாஷபாதனை},(12) “ஓ மன்னர்களில் இழிந்தவனே, நீ ஒரு துறவியிடம் ராட்சசனைப் போல நடந்து கொண்டதால், இந்நாள் முதல் நீ மனித சதையை உண்டு வாழும் ராட்சசனாக மாறுவாய்.(13) மன்னர்களில் இழிந்தவனே, நீ இந்த மனித உருவம் பாதிக்குமாறு உலகம் முழுவதும் சுற்றித் திரிவாய்” என்று சபித்தார். இப்படிச் சக்திரி என்ற அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்ட முனிவர், மன்னன் கல்மாஷபாதனிடம் பேசினார். (14)

இந்நேரத்தில், அந்த ஏகாதிபதியும், வசிஷ்டரின் மகனும் இருந்த அந்த இடத்திற்கு விஷ்வாமித்திரர் வந்தார். ஏற்கனவே கல்மாஷபாதனைச் சீடனாக ஏற்பதில் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் ஒரு பிணக்கு இருந்தது.(15) ஓ பார்த்தா {அர்ஜுனா}, கடும் விரதங்கள் இருந்த, பெரும் சக்தி கொண்ட விஷ்வாமித்திரர் அவ்விருவரையும் (அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தனது ஆன்மப் பார்வையால் கண்டு) அணுகினார்.(16) ஓ பாரதா {அர்ஜுனா}, விஷ்வாமித்திரர் தனது நன்மையை விரும்பி, அந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அரூபமாக இருந்து நடக்கும் சம்பவங்களைக் கவனித்து வந்தார். அந்தச் சாபம் சொல்லப்பட்டவுடன், அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுக்கு இவர் வசிஷ்டரின் மகன் என்பதும், வசிஷ்டருக்கு இணையான சக்தி கொண்டவர் இவர் என்பதையும் அறிந்து கொண்டான்.(17,18)  சக்திரியால் சபிக்கப்பட்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், அந்த முனிவரைச் சாந்தப்படுத்த எண்ணி அவரிடம் தாழ்மையாக வேண்டத் தொடங்கினான்.(19)

ஓ குருக்களின் தலைவா, விஷ்வாமித்திரர், மன்னனின் மனநிலையை அறிந்து கொண்டு (தான் நினைத்த காரியம் மாறிப் போகுமே என்றெண்ணி) அந்த மன்னனின் உடலில் புகும்படி, ஒரு ராட்சசனை ஏவினார்.(20) கிங்கரன் என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசன், சக்திரியின் சாபத்திற்குக் கட்டுப்பட்டும், விஷ்வாமித்திரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் அந்த ஏகாதிபதியின் உடலில் இறங்கினான்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் ஏகாதிபதி வந்துவிட்டான் என்பதை அறிந்த முனிவர்களில் சிறந்தவரான விஷ்வாமித்திரர், இடத்தை விட்டு அகன்று அங்கிருந்து சென்று விட்டார்.(22) சிறிது நேரம் கழித்து, ஓ பார்த்தா, அந்த ஏகாதிபதி, அந்த ராட்சசனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அவனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்று, தனது உணர்வுகளை இழந்தான்.(23) அந்த நேரத்தில், ஒரு பிராமணர் அம்மன்னனைக் கானகத்தில் கண்டார். மிகுந்த பசியோடு இருந்த அந்த பிராமணர், அந்த மன்னனிடம் இறைச்சியுடன் கூடிய உணவை இரந்து கேட்டார்.(24) நண்பர்களை மகிழ்விக்கும் அரசமுனி கல்மாஷபாதன், பிராமணரிடம், “இங்கேயே இரும், ஓ பிராமணரே, சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்.(25) நான் அப்படி வரும்போது நீர் விரும்பும் உணவை கொடுக்கிறேன்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு ஏகாதிபதி சென்றுவிட்டான்.

ஆனால் பிராமணர் அங்கேயே இருந்தார்.(26) உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னன் சில மணி நேரங்களுக்குத் தன் விருப்பப்படி மகிழ்ச்சியாக உலவிவிட்டுக் கடைசியாகத் தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிட்டான்.(27) நடு இரவில் விழித்த அந்த மன்னன், தான் கொடுத்த உறுதிமொழி நினைவுக்கு வந்தவனாக, தனது சமையற்காரனை அழைத்து,(28) கானகத்தில் தங்கியிருக்கும் பிராமணரிடம் தான் கொடுத்த உறுதியைச் சொல்லி, “அங்கே சென்று அவருக்கு உணவும் இறைச்சியும் கொடுத்து உபசரிப்பாயாக” என்றான்”.(29)

கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படிக் கட்டளையிடப்பட்ட அந்தச் சமையற்காரன் இறைச்சி தேடி வெளியே சென்றான். இறைச்சி கிடைக்காமல் வருத்தப்பட்டு, மன்னனிடம் திரும்பி வந்து, தனது தோல்வியைச் சொன்னான்.(30) ராட்சசனின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஏகாதிபதி! எந்த மனவுறுத்தலும் இல்லாமல் மறுபடியும் மறுபடியும், “மனித இறைச்சியை அவருக்கு உணவாகக் கொடுப்பாயாக” என்றான்.(31)

அதற்கு அந்தச் சமையற்காரனும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, (மன்னனுக்குக் கட்டுப்பட்ட) மரண தண்டனை கொடுப்பவர்களிடம் சென்று மனித இறைச்சியை வாங்கி,(32) அதைக் கழுவி, முறையாகச் சமைத்து, வேக வைத்த அரிசி சோற்றால் அதை மூடி, ஆன்ம நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த பிராமணருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.(33) ஆனால், பிராமணர்களில் சிறந்தவர், தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டும், உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்தும், கோபத்தால் கண்கள் சிவக்க,(34) “மன்னர்களில் இழிந்த இவன் எனக்குப் புனிதமற்ற, உண்ணத் தகுதியற்ற உணவைக் கொடுத்ததால், அந்தப் பாவி, இதே போன்ற உணவை விரும்புபவனாக ஆகட்டும்.(35) சக்திரி சபித்தது போல இவன் மனித இறைச்சியில் விருப்பம் கொண்டு, பாவியாக இந்த உலகம் முழுவதும் சுற்றி, அனைத்து உயிர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பான்” என்று சொன்னார்.(36)

அதற்காரணமாக, அச்சாபம் இரண்டாவது முறையாக அந்த மன்னன் மீது விழுந்து, மிகவும் பலமிக்கச் சாபமாகியது. இதனால், உடனே அந்த மன்னன் ராட்சச மனநிலை கொண்டு, விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான்.(37) சிறிது காலம் கழித்து, ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், தனக்குள் இருக்கும் ராட்சசனால் தனது மொத்த உணர்வுகளையும் இழந்து, தனக்குச் சாபமிட்ட சக்திரியைக் கண்டு,(38) “இந்த இயல்புக்குமிக்கச் சாபத்தை நீர் எனக்கு அளித்தமையால், உம்மைக் கொன்றே நான் மனித இறைச்சியை உண்பதைத் தொடங்கப் போகிறேன்” என்று சொன்னான்.(39) இப்படிச் சொன்ன அந்த மன்னன், ஒரு புலி தனக்குப் பிடித்த இரையை அடித்துத் உண்பது போல உடனடியாக சக்திரியைக் கொன்று தின்றான்.(40)

சக்திரி இப்படிக் கொல்லப்பட்டு உண்ணப்பட்டதைக் கண்ட விசுவாமித்திரர், வசிஷ்டரின் மற்ற மகன்களுக்கு எதிராகவும் அந்த ராட்சசனைத் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தார்.(41) கோபம் கொண்ட சிங்கம், சிறு மிருகங்களை அடித்து உண்பது போல, அந்த ராட்சசன் சக்திரிக்கு இளையவர்களான, சிறப்புவாய்ந்த வசிஷ்டரின் மற்ற மகன்களையும் விழுங்கினான்.(42) தனது மகன்கள் தொடர்ச்சியாக இறந்ததற்குக் காரணம் விஷ்வாமித்திரர்தான் என்பதை அறிந்த வசிஷ்டர், ஒரு பெரும் மலை பூமியைத் தாங்குவது போல, பொறுமையாக அனைத்துத் துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.(43) புத்திசாலிகளில் மனிதர்களில் முதன்மையான அந்த முனிவர்களில் சிறந்தவர், (கோபம் கொண்டு) குசிக இனத்தை {விஷ்வாமித்திரரின் இனம்} அழிக்க எண்ணாமல், தனது உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்தார்.(44) அப்படித் தீர்மானித்த, அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், மேரு மலையின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் அந்தக் கற்பாறைகள் நிறைந்த தரையானது, பஞ்சுப் பொதி போல அவரைத் தாங்கியது.(45)

ஓ பாண்டுவின் மைந்தனே {அர்ஜுனா}, தான் கீழே விழுந்ததனால் இறக்க வில்லை என்பதை அறிந்த அந்தச் சிறப்புமிகுந்தவர், நெருப்பை வளர்த்து, அதற்குள் இறங்கினார்.(46) ஆனால், அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததே தவிர, அவரைப் பொசுக்கவில்லை. ஓ எதிரிகளை அழிப்பவனே, அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு அவருக்குக் குளிர்ச்சியாக இருந்தது.(47) பிறகும் துன்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீளாத அந்தப் பெரும் முனிவர், கடலைக் கண்டு, தனது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு, அதன் நீரில் விழுந்தார்.(48) ஆனால், அலைகள் அவரை விரைவாகக் கரையில் சேர்த்தன. இறுதியாக, கடும் நோன்புகள் நோற்ற அந்த பிராமணர் {வசிஷ்டர்} தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் எவ்வகையிலும் வெற்றிபெறாமல், இதயத்தில் துயர் நிறைந்து, தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்” {என்றான் கந்தர்வன்}.(49)

அஸ்மகன் பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 179-(சைத்ரரதப் பர்வம் – 13)தற்கொலை முயற்சிகள் நிறைவேறாததால் மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிய வசிஷ்டர்; தன் மகனான சக்திரியின் மனைவி அதிருசியந்தி கருவுற்றிருப்பதைக் கண்டு தற்கொலை நினைவை விட்டகன்றது; மருமகளுடன் சென்று கொண்டிருந்த வசிஷ்டரைக் கொல்ல வந்த கல்மாஷபாதன்; கல்மாஷபாதனின் சாபம் தணிந்தது; வசிஷ்டருக்குக் கல்மாஷபாதனின் மனைவியிடம் பிறந்த அஸ்மகன்…

கந்தர்வன் தொடர்ந்தான், “பிள்ளைகள் இல்லாத தனது ஆசிரமத்தைக் கண்ட அந்த முனிவர், மீண்டும் பெரும் துயரம் அடைந்து அந்த இடத்தை விட்டு அகன்றார்.(1) அப்படி அவர் சுற்றித் திரிகையில், ஓ பார்த்தா, மழைக்காலத்தில் பெருகி ஓடிய ஒரு நதி, அதன் கரைகளில் இருந்த கணக்கிலடங்கா மரங்களையும், செடிகளையும் அடித்துச் செல்வதைக் கண்டார்.(2) ஓ குரு குலத்தோனே, இதைக் கண்ட அந்தத் துயரத்திலிருந்த முனிவர், தான் கண்டிப்பாக இதில் மூழ்கிப் போவோம் என்று எண்ணிப் பல கயிறுகளால் தன்னைக் கட்டிக் கொண்டு, தனது துயரத்தை நினைத்து வருந்தி, அந்தப் பெரும் நீரூற்றில் விழுந்தார்.(3,4) ஆனால், ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனா}, அந்த நீரூற்று அவரது கட்டுகளை அறுத்து, அவரைக் கரை ஒதுக்கியது.(5)

அந்த முனிவர் அந்தக் கரையிலிருந்து எழுந்து, தான் கட்டிய கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்தார். ஆர்ப்பாட்டத்தோடு ஓடிய அந்த நீரோட்டம் அவரது கட்டுகளை அறுத்ததால், அம்முனிவர் {வசிஷ்டர்} விபாசை[1] என்று அந்த ஆற்றை அழைத்தார்.(6) (கட்டை அறுத்தது என்ற பொருளைக் கொண்ட சொல்.)அந்த முனிவர் தான் கொண்ட துயரத்தால், ஓர் இடத்தில் தங்க முடியாதவரானார். அவர் மலைகளின் மேலும், நதிகளோடும், தடாகங்களோடும் திரியத் தொடங்கினார்.(7) அப்படிச் சுற்றித் திரிகையில், கொடூரமான முதலைகள் நிறைந்ததும், பயங்கரமானதுமான (இமயத்திலிருக்கும்) ஹைமாவதி என்ற ஆற்றைக் கண்டு அதில் விழுந்தார்.(8) ஆனால் அந்த ஆறு அந்த பிராமணரை, அணையாத நெருப்புக் குவியலாக நினைத்து, நூறு வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியது, அது முதல் அந்த ஆறு சதத்ரு[2] என்று அழைக்கப்படுகிறது.(9)(நூறாக ஓடியது என்ற பொருளைக் கொண்ட சொல்)

காய்ந்த நிலத்தில் தன்னைக் கண்ட அந்த முனிவர், “என்னால் சுயமாக மரணிக்க முடியவில்லை” என்று சொல்லி, மீண்டும் தனது ஆசிரமத்திற்குச் சென்றார்.(10) கணக்கிலடங்கா பல மலைகளையும், நாடுகளையும் கடந்து, தனது ஆசிரமத்திற்குள் மறு பிரவேசம் செய்தார். அப்போது அவரது மருமகளான அதிருசியந்தியும் அவரைத் தொடர்ந்தபடி அங்கு வந்தாள்.(11)

அவள் தன்னை நெருங்கும்போது, அவருக்குப் பின்புறத்திலிருந்து பொருள் நிரம்பிய ஆறு அருளையும் (வேதாங்கங்கள்) {சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவற்றைக்} கொண்டு வேதம் ஓதும் அறிவார்ந்த ஒரு குரலைக் கேட்டார்.(12) அந்த ஒலியைக் கேட்ட அந்த முனிவர், “யார் என்னைத் தொடர்ந்து வருவது?” என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், “நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்” என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், “மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது?” என்று கேட்டார்.(14) அதற்கு அதிருசியந்தி, “நான் எனது கருவறையில், உமது மகன் சக்திரியின் குழந்தையைச் சுமந்து வருகிறேன். அவன் பனிரெண்டு வருடங்களாக அங்கு இருக்கிறான். வேதங்களை உரைப்பதாக நீர் கேட்கும் அந்தக் குரல் அந்த முனிவனுடையதே {குழந்தையினுடையதே}” என்றாள்”.(15)

கந்தர்வன் தொடர்ந்தான், “அவரது மருமகளால் இப்படிச் சொல்லப்பட்ட சிறப்பு மிகுந்த வசிஷ்டர், மிகவும் மகிழ்ந்து, “ஓ, (எனது குலம் தழைக்க) ஒரு குழந்தை இருக்கிறது!” என்று சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.(16) அந்தப் பாவமற்றவர், தனது மருமகளுடன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அப்படி இருக்கையில், ஒரு நாள் ஒரு தனிமையான கானகத்தில் அந்த முனிவர் கல்மாஷபாதனைக் (ராட்சசனைக்) கண்டார்.(17) ஓ பாரதா, கொடிய ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த மன்னன், அம்முனிவரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு எழுந்து, அவரை விழுங்க எண்ணினான்.(18) தீய செயல் புரியும் அந்த ராட்சசனைக் கண்ட அதிருசியந்தி வசிஷ்டரிடம் கவலையும் பயமும் கலந்த குரலில்,(19) “ஓ சிறப்பு மிகுந்தவரே, மரணத்தைப் போன்ற அந்தக் கொடும் ராட்சசன், கையில் தண்டத்துடன் நம்மை நோக்கி வருகிறான்.(20) ஓ சிறப்பு வாய்ந்தவரே, ஓ வேதமறிந்தவரில் முதன்மையானவரே, இவ்வுலகத்தில் உம்மைத் தவிர வேறு எவராலும் இவனை அடக்க முடியாது.(21) ஓ சிறந்தவரே, இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட கொடும்பாவியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும். நிச்சயமாக அந்த ராட்சசன் நம்மை விழுங்கவே இங்கு வருகிறான்” என்றாள்.(22)

இதைக் கேட்ட வசிஷ்டர், “ஓ மகளே, அஞ்சாதே, எந்த ராட்சசனிடமும் அச்சம் தேவையில்லை. உடனடி ஆபத்தை நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இவன் ஒரு ராட்சசனே இல்லை.(23) இவன் பெரும் சக்தி கொண்டவனும், உலகத்தால் கொண்டாடப்பட்டவனுமான கல்மாஷபாதன் என்ற மன்னனாவான். அப்படிப்பட்டவன் இப்படிப் பயங்கரமான மனிதனாக இந்த வனத்தில் வசிக்கிறான்” என்றார்”.(24)

கந்தர்வன் தொடர்ந்தான், “அவன் முன்னேறி வருவதைக் கண்டவரும், பெரும் சக்தி வாய்ந்தவரும், சிறப்பு மிகுந்தவருமான முனிவர் வசிஷ்டர், ஓ பாரதா {அர்ஜுனா} “ஹும்” என்ற தனது தொண்டை ஒலியால் அவனைத் தடுத்தார்.(25) அந்த முனிவர், அவன் மீது புனிதமான நீரைத் தெளித்து, சில மந்திரங்களைச் சொல்லி, அந்த ஏகாதிபதியை அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.(26) வசிஷ்டர் மகனின் {சக்திரியின்} சக்தியால் அந்த ஏகாதிபதி பனிரெண்டு வருட காலமாக, கிரகணத்தின்போது ஒரு கிரகத்தால் {ராகுவால்} பீடிக்கப்படும் சூரியனைப் போல பீடிக்கப்பட்டிருந்தான்.(27) ராட்சசனின் பிடியிலிருந்து விடுபட்ட அந்த ஏகாதிபதி அந்தக் கானகத்தில், மாலைநேரத்தில் மேகங்களுக்குப் பின் இருந்து ஒளிரும் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான்.(28) சுய நினைவை அடைந்த அம்மன்னன், அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் கூப்பிய கரங்களுடன்,(29) “ஓ சிறப்பு வாய்ந்தவரே, நான் சுதாசனின் மகன், உமது சீடன். ஓ முனிவர்களில் சிறந்தவரே, உமது விருப்பம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(30)

வசிஷ்டர், “எனது விருப்பம் ஏற்கனவே ஈடேறிவிட்டது. நீ இப்போதே உனது நாட்டுக்குத் திரும்பி, உனது குடிமக்களை {நல்லபடி} ஆள்வாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனிமேல் பிராமணர்களை அவமதிக்காதே” என்று பதிலுரைத்தார்.(31)

அதற்கு அந்த ஏகாதிபதி! “ஓ சிறந்தவரே, நான் இனிமேல் மேன்மையான பிராமணர்களை அவமதிக்கமாட்டேன். உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இனி எப்போதும் பிராமணர்களை வழிபடுவேன்.(32) ஆனால், ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இக்ஷ்வாகு குலத்திற்கு நான் பட்ட கடனை அடைக்க என்ன வழி?(33) இக்ஷ்வாகு {இட்சவாகு} குலம் தழைப்பதற்காக, அழகும், சாதனைகளும், நன்னடத்தையும் கொண்ட ஒரு மகனை எனக்குக் கொடுப்பீராக” என்றான்”.(34)

கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வசிஷ்டர், “நான் உனக்குக் கொடுக்கிறேன்” என்று அந்தப் பெரும் வில்லாளியான ஏகாதிபதியிடம் சொன்னார்.(35) சில காலம் கழித்து, ஓ மனிதர்களின் இளவரசனே {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதியை அழைத்துக் கொண்டு, இவ்வுலகத்தில் அயோத்தி என்ற பெயரால் அழைக்கப்படும் அவனது தலைநகரத்திற்குச் சென்றார் வசிஷ்டர்.(36) அந்நாட்டுக் குடிமக்கள் குற்றமற்ற அவர்களை வரவேற்று மகிழ்ந்து, தங்கள் தலைவனை {கல்மாஷபாதனை} தேவர்களின் தலைவனைப் போல வரவேற்றனர்.(37) அந்த ஏகாதிபதி, வசிஷ்டருடன், நற்பேறு பெற்ற அந்த நகருக்குள் வெகு காலத்திற்குப் பிறகு நுழைந்தான்.(38) அயோத்தியின் குடிமக்கள், புரோகிதருடன் சேர்ந்து வரும் தங்கள் மன்னனை, மலைகளுக்குப் பின் உதிக்கும் உதயசூரியனைப் போலக் கண்டனர்.(39) அழகில் அனைவரிலும் மேன்மையான அந்த ஏகாதிபதி, இலையுதிர் காலச் சந்திரன், வானத்தை நிறைப்பதைப் போல, முழு அயோத்தியையும் தனது பிரகாசத்தால் நிறைத்தான்.(40)

அந்த அற்புதமான நகரத்தின் தெருக்களிளெல்லாம் நன்றாக நீர் தெளிக்கப்பட்டு, கூட்டிப் பெருக்கப்பட்டு, வரிசையாக அழகான கொடிகள் ஏற்றப்பட்டுச் சுற்றிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதியின் இதயம் மகிழ்ந்தது. ஓ குரு குல இளவரசனே, அந்நகரமே மகிழ்ச்சியில் நிறைந்து, ஆரோக்கியமான குடிமக்களால் நிரம்பி, தேவர்களின் தலைநகரமாம் அமராவதியைப் போல இருந்தது.(41,42) அந்த அரசமுனி தனது தலைநகருக்குள் நுழைந்ததும், அம்மன்னனின் கட்டளையின் பேரில், அரசி வசிஷ்டரை அணுகினாள்.(43) அந்தப் பெரும் முனிவர் அவளிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, உயர்ந்த {தேவர்களின்} விதிப்படி அவளுடன் கலந்தார்[3].(44)(இது தெய்வீகமாகத் தீண்டுதல்; உடலுறவல்ல என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பிடப்படுகிறது.) சிறிது காலத்தில், அந்த அரசி கருவுற்ற பிறகு, அந்த முனிவர் {வசிஷ்டர்}, மன்னனின் மரியாதையான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(45) அந்த அரசி அக்கருவைத் தனது கருவறையில் பல காலங்களுக்குச் சுமந்தும், ஒன்றும் பிறக்கவில்லை என்பதை அறிந்த அவள், தனது வயிற்றைக் கற்துண்டால் {துண்டு கல்லால்} கிழித்தாள்.(46) அப்போது (அவள் கருத்தரித்து) பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்த போது, பௌதன்யம் {பாண்டவ்யம்}[4] என்ற நகரத்தை உருவாக்கிய மனிதர்களில் காளையான அரச முனி அஸ்மகன் அவளுக்கு மகனாகப் பிறந்தான்” {என்றான் கந்தர்வன்}.(மன்மதநாததத்தரின் பதிப்பில் இது பாண்டவ்யம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் போதனம் என்று சொல்லப்படுகிறது.)

பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை! – ஆதிபர்வம் பகுதி 180-(சைத்ரரதப் பர்வம் – 14)வசிஷ்டரின் பேரனாகப் பராசரர் பிறந்தது; தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்டு உலகத்தை அழிக்க நினைத்த பராசரர்; பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை; செழிப்புடன் வாழ்ந்த பிராமணர்கள்; ஏழ்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்; பிராமணர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்த க்ஷத்திரியர்கள்; ஒரு பிராமணப் பெண்ணின் தொடையில் இருந்து பிறந்த ஔர்வரின் பிரகாசத்தால் குருட்டுத் தன்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்..

கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, வசிஷ்டரின் ஆசிரமத்தில் வசித்து வந்த அதிருசியந்தி, சக்திரியின் குலத்தைத் தழைக்க வைக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அந்த மகன் இரண்டாவது சக்திரியைப் போன்றே அனைத்திலும் இருந்தான்.(1) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, அந்த முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர், தானே தமது பேரனின் பிறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளைச் செய்வித்தார்.(2) தற்கொலை எண்ணத்திலிருந்த முனிவர் வசிஷ்டர், குழந்தை இருக்கிறது என்று அறிந்ததும் அதிலிருந்து விலகியதால், பிறந்த அந்தக் குழந்தை பராசரன் {இறந்தவரை உயிர் மீட்பது என்று பொருளாம்} என்று அழைக்கப்பட்டான்.(3) அந்த அறம்சார்ந்த பராசரர், தான் பிறந்த நாளிலிருந்து, வசிஷ்டரையே தனது தந்தையாக அறிந்து, அவரிடம் அப்படியே நடந்து கொண்டார்.(4) ஒரு நாள், ஓ குந்தியின் மகனே, அக்குழந்தை தனது தாய் அதிருசியந்தியின் முன்னிலையில், பிராமண முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரை “தந்தையே” என்று அழைத்தான்.(5)

அதிருசியந்தி, ‘தந்தையே’ என்று தனது மகன் மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் பேசியதைக் கண்டு கண்களில் நீர் நிறைந்து,(6) “ஓ குழந்தாய், இஃது உனது தாத்தா. இவரைத் தந்தை என்று அழைக்காதே. ஓ மகனே, ஒரு கானகத்தில் வைத்து, ராட்சசன் ஒருவனால் உனது தந்தை விழுங்கப்பட்டார்.(7) ஓ அப்பாவியே, நீ பெரும் மதிப்பு வைத்திருக்கும் இவர் உனது தந்தையில்லை. இந்த மதிப்பு மிக்கவர் உனது தந்தையின் தந்தையாவார்” என்றாள்.(8)

தனது தாயால் இப்படிச் சொல்லப்பட்டவரும், உண்மை பேசுபவருமான அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, பெரும் துன்பத்தில் ஆழ்ந்து, விரைவில் கோபமும் அடைந்து, {உலகத்தின்} மொத்தப் படைப்புகளையும் அழிக்கத் தீர்மானித்தார்.(9) ஓ அர்ஜுனா, பிரம்மஞானிகளில் முதன்மையானவரும், மித்ரவருணனின் மகனும், சிறப்பு வாய்ந்த பெரும் துறவியும், நிதர்சன உண்மையை அறிந்தவருமான வசிஷ்டர், உலகத்தை அழிக்க எண்ணம் கொண்டிருக்கும் தமது பேரனிடம், சில விவாதங்களை முன் வைத்து, அத்தீர்மானத்தை அவரது {தமது பேரனின்} மனத்திலிருந்து நீக்கினார்”.(10)

“கந்தர்வன் தொடர்ந்தான், “பிறகு வசிஷ்டர், “கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான்.(11) ஓ குழந்தாய் {பராசரா}, அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(12) அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது.(13) பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர்.(14) பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(15) பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர்.(16) இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.(17)

பிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர்.(18,19) பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்.(20)

அவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.(21) இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.(22) இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள்.(23) இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,(24) அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.

தங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர்.(25) தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்,(26) “ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.(27) ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக” என்றனர்”.(28)

ஔர்வரின் கடுந்தவம்! – ஆதிபர்வம் பகுதி 181-(சைத்ரரதப் பர்வம் – 15)அந்தப் பிராமணப் பெண்ணின் சொல்லைக் கேட்டு ஔர்வரைத் தஞ்சமடைந்த க்ஷத்திரியர்கள்; கண்பார்வையைத் திரும்பப் பெற்ற க்ஷத்திரியர்கள்; உலகத்தை அழிக்க தவம் செய்த ஔர்வரைத் தடுத்த அவருடைய பித்ருக்கள்

வசிஷ்டர் தொடர்ந்தார், “இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், “குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.(1) தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது.(2) குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான்.(3) பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது.(4) பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன.(5) எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்” என்றாள்”.(6)

வசிஷ்டர் தொடர்ந்தார், “அந்த பிராமணப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசர்கள், தொடையில் பிறந்த அக்குழந்தையிடம், “நன்மை செய்வாயாக” என்று வேண்டினர். அக்குழந்தையும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினான்.(7) அந்தப் பிராமண முனிவர்களில் சிறந்தவன், தனது தாயின் தொடையைக் கிழித்துப் பிறந்ததால், இந்த உலகத்தில் ஔர்வன் (தொடையில் பிறந்தவன்) என்று அழைக்கப்பட்டான்[1].(8) (ஊரூஜன் என்றால் தொடையில் பிறந்தவன் என்ற பொருள் என்று கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.)அந்த இளவரசர்கள் தங்கள் பார்வையைப் பெற்றுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பிருகு குலத்தைச் சேர்ந்த முனிவர் ஔர்வர் இவ்வுலகத்தை வெல்ல முடிவு செய்தார்.(9) அந்த பிருகு குலத்தின் கொழுந்து, இறந்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த முழு உலகத்தையே அழிப்பதற்காகக் கடும் தவம் இருந்தார்.(10,11) தனது மூதாதையர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எண்ணிய அந்த முனிவர், தனது கடும் தவத்தால், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் பாதிப்படையச் செய்தார்.(12)

தங்கள் குலத்தைச் சேர்ந்த பிள்ளை என்ன செய்கிறான் என்பதை அறிந்த பித்ருக்கள் {ஔர்வரின் மூதாதையர்கள்} அனைவரும் தங்கள் உலகங்களை விட்டு அந்த முனிவரிடம் வந்து,(13) “ஔர்வா, ஓ மகனே, உனது தவம் கடுமையானதாக இருக்கிறது. உனது சக்தியை நாங்கள் கண்டோம். ஓ மகனே, மூன்று உலகங்களுக்கும் நன்மையைச் செய்யக் கருதி உனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(14) ஓ குழந்தாய், ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்த பிருகுக்கள், கொலைகார க்ஷத்திரியர்களின் கரங்களில் அழிவையடைந்தும் பாரபட்சமின்றி இருந்தது எங்கள் இயலாமையில் அல்ல.(15) ஓ குழந்தாய், நாங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீண்ட வாழ்நாட்களால் களைத்துப் போய், க்ஷத்திரியர்களைக் கருவியாகப் பயன்படுத்தி எங்கள் அழிவை நாங்களே விரும்பினோம்.(16)

பிருகுக்கள் நிலத்துக்கடியில் பதுக்கிய செல்வம் என்பது, க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தூண்டி சச்சரவை உண்டாக்க ஒரு காரணமே ஆகும்.(17) ஓ பிராமணர்களில் சிறந்தவனே, எங்களுக்குத் தேவலோகத்தில் விருப்பம் உண்டானதால், அந்தச் செல்வங்களால் எங்களுக்கு யாது பயன்? தேவலோகத்தின் பொருளாளர் (குபேரன்) எங்களுக்காகப் பெரும் செல்வத்தை வைத்திருக்கிறான்.(18) எங்களை மரணம் வெல்ல முடியாது என்பதை நாங்கள் எப்போது அறிந்தோமோ, அப்போதுதான், ஓ குழந்தாய், நாங்கள் இந்தச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்.(19) தற்கொலை செய்பவர்கள் அருளப்பட்டவர்களின் உலகத்தை அடையவே முடியாது. இதை உணர்ந்த நாங்கள் தற்கொலை எண்ணம் கொள்ளவில்லை.(20) எனவே, எதை நீ செய்ய விரும்புகிறாயோ, அஃது எங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மொத்த உலகத்தையும் அழிக்கும் இந்தப் பாவகரச் செயலிலிருந்து பின்வாங்குவாயாக.(21) ஓ குழந்தாய், க்ஷத்திரியர்களையோ, ஏழு உலகங்களையோ அழிக்காதே. உனது ஆன்ம சக்திக்குக் களங்கத்தை உண்டாக்கும்வகையில் உனக்குள் இருக்கும் இந்தக் கோபத்தைக் கொல்வாயாக” என்றனர் {பித்ருக்கள்}[2].(22)(மஹாபாரதம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்புக் கொண்டது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை கதைகளுக்குள் கதை என்பதைக் இப்போது கவனியுங்கள். நைமிசாரண்யம் என்ற இடத்தில், சௌதி என்பவர் தவசிகள் கூட்டத்திடம் சொல்லும் கதைக்குள்ளே [கதை 1] – வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயனிடம் சொல்லும் மற்றொரு கதைக்குள்ளே [கதை 2]- கந்தர்வன் அர்ஜுனனிடம் சொல்லும் மற்றும் ஒரு கதைக்குள்ளே [கதை 3] – வசிஷ்ட மகரிஷி தனது பேரன் பராசரரிடம் சொல்லும் கதைக்குள் [கதை 4] – பிருகு குல பித்ருக்கள் பிருகு குலத் தோன்றலான ஔர்வன் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட கோபத்தால் இந்த உலகையே அழிக்க முடிவு எடுத்தபோது விவரிக்கப்படும் காட்சியே மேற்காணும் பகுதியாகும் [கதை 5].)

கோபத்தால் உண்டான வடவாமுகாக்னி! – ஆதிபர்வம் பகுதி 182-(சைத்ரரதப் பர்வம் – 16)பித்ருக்களின் சொற்படி ஔர்வர் தமது கோபத்தைப் பெருங்கடலில் விட்டது…

கந்தர்வன் சொன்னான், “வசிஷ்டர் தனது விவரிப்பைத் தொடர்ந்தார், “ஓ குழந்தாய் {பராசரா}, பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஔர்வர், அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினார்.”பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக செய்த தவம் வீணாகப் போகக்கூடாது.(1) யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் எனது தவத்தைச் சாதிக்கவில்லையெனில், காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, எனது கோபமே என்னை எரித்துவிடும்.(2) தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை ஒடுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான்.(3) மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மன்னனால் வெளிப்படுத்தப்படும் கோபத்திற்குத் தகுந்த பயன் இல்லாமல் இல்லை {பயன் இருக்கிறது}. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப் பயன்படுகிறது.(4)

நான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, நமது குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் நமது குலப் பெண்களின் துக்கம் நிறைந்த அழுகையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.(5) பித்ருக்களே, அந்த க்ஷத்திரியப் பாவிகள் பிறக்காத குழந்தைகளையும் சேர்த்து பிருகு குலத்தவரைக் கூட்டமாகக் கொன்றொழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது.(6) பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த நமது குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் அச்சமடைந்து, தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர்.(7) பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள்.(8) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} தண்டிப்பவன் எவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10)

காக்கும் அதிகாரமும், பாவங்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் தண்டிப்பவன் எவனையும் காணவில்லையெனில், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10) காக்கவும், பாவங்களைத் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லையெனில், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11)

மன்னர்களுக்கும், பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம்  இருந்தும்,  வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போட்டு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.(12,13) இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள்.(14) எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(15) ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக.” என்றார் {ஔர்வர்}”.(16)

வசிஷ்டர் தொடர்ந்தார், “அதற்கு அந்தப் பித்ருக்கள், “உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன.(17) சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.(18) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும்.(19) ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்” என்றனர் {பித்ருக்கள்}”.(20)

வசிஷ்டர் தொடர்ந்தார், “ஓ குழந்தாய் {பராசரா}, அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார்.(21) பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.(22)  அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது. ஓ பராசரா, உயர்ந்த உலகங்களில் உள்ள ஞானமுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களை நீ அறிந்தவனாக இருக்கிறாய். எனவே அருளப்பட்டவனே, நீ உலகங்களை அழிக்கக்கூடாது” என்றார் {வசிஷ்டர்}.(23)

பராசரரின் ராட்சச வேள்வி! – ஆதிபர்வம் பகுதி 183-(சைத்ரரதப் பர்வம் – 17)-வசிஷ்டரின் சொல் மதித்து உலகத்தை அழிப்பதைக் கைவிட்ட பராசரர்; ராட்சசர் அழிவுக்கான வேள்வியைச் செய்து பல ராட்சசர்களை அழிப்பது; பிறகு அத்ரி, புலஸ்தியர், புலஹர் கிரது ஆகியோரின் சொல் கேட்டு அவ்வேள்வியை நிறுத்தியது…

கந்தர்வன் தொடர்ந்தான், “சிறப்புமிகுந்த வசிஷ்டரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த பிராமண முனிவர் {பராசரர்} உலகத்தை அழிக்கத் தன்னைத் தூண்டிய கோபத்தை அடக்கிக் கொண்டார்.(1)ஆனால், வேதமறிந்தவர்களில் முதன்மையானவரும், சக்திரியின் மகனும், பெரும் சக்தியைக் கொண்ட முனிவருமான பராசரர், ஒரு பெரும் ராட்சச வேள்வியை நடத்தினார்.(2) (தமது தந்தையான) சக்திரியின் படுகொலையை நினைத்துப் பார்த்த அந்த முனிவர் முதிர்ந்த மற்றும் இளமையான ராட்சசர்களைத் தான் நடத்திய வேள்வியின் மூலமாக எரித்தார்.(3) (தமது பேரனின்) இரண்டாவது உறுதிமொழியில் குறுக்கிடக்கூடாது என்று உறுதியேற்ற வசிஷ்டர், ராட்சசர்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை.(4) பராசர முனிவர் அவ்வேள்வியில் சுடர்விட்டெரியும் மூன்று நெருப்புகளுக்கு எதிரில் நான்காவது நெருப்பாக அமர்ந்திருந்தார்.(5)

அந்தச் சக்திரியின் மைந்தன் {பராசரர்}, மேகத்தை விட்டு வெளியே வரும் சூரியனைப் போல, பெருமளவு தூய்மையாக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்டதும், களங்கமற்றதுமான தனது வேள்வியின் மூலம் முழு வானமண்டலத்தையும் ஒளிமயமாக்கினார்.(6) அப்போது, வசிஷ்டரும், பிற முனிவர்களும், தன்னொளின் மூலமே ஒளிரும் இந்த முனிவரை {பராசரரை} இரண்டாவது சூரியன் போலக் கருதினர்.(7) விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட பெருமுனிவரான அத்ரி, மற்றவர்களால் செய்ய முடியாத மிகக்கடுமையான சாதனையாக அவ்வேள்வியை முடித்து வைக்க எண்ணி, அவ்விடத்திற்கு வந்தார்.(8) ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனனே}, மேலும் ராட்சசர்களைக் காக்க விரும்பிய புலஸ்தியர், புலஹர், பல பெரும் வேள்விகளை நடத்திய கிரது ஆகியோரும் அங்கே வந்தனர்.(9) ஏற்கனவே பல ராட்சசர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்கள், எதிரிகளை ஒடுக்கும் பராசரரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்.(10)

அவர்கள், “ஓ குழந்தாய், இந்த உனது வேள்விக்கு எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறோம். உனது தந்தையின் மரணத்தைப் பற்றி அறியாத அப்பாவி ராட்சசர்களையும் கொன்ற இந்தப் படுகொலையை நினைத்து நீ மகிழ்ச்சி கொள்கிறாயா?(11) இவ்வாறு எந்த உயிரினத்தையும் கொல்வது உனக்குத் தகாது. ஓ குழந்தாய், தவத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கும் பிராமணனின் தொழில் இஃதல்ல.(12) அமைதியே {சாந்தியே} உயர்ந்த அறமாகும். எனவே, ஓ பராசரா, நீ அமைதியை நிலைநிறுத்துவாயாக. ஓ பராசரா, இவ்வளவு உயர்ந்தவனாக இருந்தும், நீ இப்படிப்பட்ட பாவகரக் காரியத்தை எப்படிச் செய்கிறாய்?(13) அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்த சக்திரியை {பராசரரின் தந்தை; வசிஷ்டரின் மூத்த மகன்} மீறி நடப்பது, உனக்குத் தகாது. எந்த உயிரினத்தையும் முற்றாக அழிப்பது உனக்குத் தகாது.(14) ஓ வசிஷ்ட குல வழித்தோன்றலே, உனது தந்தை முன்பு தான் பெற்ற சாபத்தாலேயே அவ்வாறு இறந்தான். சக்திரியின் தனிப்பட்ட பிழையின் காரணமாகவே அவன் வானுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்.(15)

ஓ முனியே, சக்திரியை விழுங்கும் அளவுக்கு எந்த ராட்சசனுக்கும் சக்தி கிடையாது; அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான்.(16) ஓ பராசரா, விஷ்வாமித்திரரும் இக்காரியத்தில் வெறும் கருவியே. சக்திரி, கல்மாஷபாதன் ஆகிய இருவரும் வானுலகத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.(17) சக்திரிக்கு இளையவர்களான, வசிஷ்டரின் மற்ற மகன்களும் தேவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.(18) ஓ குழந்தாய், வசிஷ்ட மைந்தனின் வாரிசே, அப்பாவி ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கிய வேள்வியை நடத்திய நீயும் இது விஷயத்தில் வெறும் கருவியே. குழந்தாய், நீ அருளப்பட்டிருப்பாயாக! இவ்வேள்வியைக் கைவிடுவாயாக. இஃது ஒரு முடிவுக்கு வரட்டும்” என்றனர் {அப்பெரும் முனிவர்கள்}”.(19,20)

கந்தர்வன் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “புலஸ்தியராலும், நுண்ணறிவு கொண்டவரான வசிஷ்டராலும் இப்படிச் சொல்லப்பட்ட சக்திரியின் மைந்தனான, அந்தப் பெரும் பலம்வாய்ந்த முனிவர் {பராசரர்}, அவ்வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(21) ராட்சசர்கள் அழிவுக்காக அவ்வேள்வியில் மூட்டப்பட்ட அந்த நெருப்பை, அம்முனிவர் இமயத்துக்கு வடக்கில் உள்ள பெருங்காட்டில் விட்டார்.(22) அந்த நெருப்பு ராட்சசர்களையும், மரங்களையும், கற்களையும் அனைத்துக் காலங்களிலும் அழித்து வருவதை இன்றும் காணலாம்” {என்றான் கந்தர்வன்}.(23)

பிராமணத்தியின் சாபம்! – ஆதிபர்வம் பகுதி 184-(சைத்ரரதப் பர்வம் – 18)கல்மாஷபாதனின் மனைவியிடம் வசிஷ்டர் ஏன் சேர்ந்தார் என்று அர்ஜுனன் கேட்டது; பிராமணத்தியின் சாபம் குறித்து கந்தர்வன் உரைத்தது…

அர்ஜுனன், “ஓ கந்தர்வா, மன்னன் கல்மாஷபாதன், வேதங்கள் அறிந்த மனிதர்களில் முதன்மையானவரான குரு வசிஷ்டரிடம் செல்லுமாறு, தனது ராணிக்கு {மனைவிக்கு}, எதற்காகக் கட்டளையிட்டான்?(1) அறநெறிகள் அனைத்தும் அறிந்த அந்தச் சிறப்புமிகுந்த பெரும் முனிவர் வசிஷ்டரும், தான் சேரத்தகாத ஒரு பெண்ணை ஏன் சேர்ந்தார்?(2) ஓ நண்பா, வசிஷ்டரின் இச்செயல் பாவச்செயல் ஆகாதா? உன்னிடம் தீர்வைப் பெற நான் கொள்ளும் ஐயங்களைக் களைவதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

அதற்கு அந்தக் கந்தர்வன், “ஓ ஒடுக்கப்படமுடியாத தனஞ்செயா {அர்ஜுனா}, வசிஷ்டர் மற்றும் நண்பர்களைப் பேணி வளர்ப்பவனான கல்மாஷபாதன் ஆகியோரைக் குறித்து நீ கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலுரைக்க்கிறேன் கேட்பாயாக.(4) ஓ பாரதர்களில் சிறந்தவனே, மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிஷ்டரின் சிறப்புமிக்க மைந்தரான சக்திரி இட்ட சாபம் குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.(5) அச்சாபத்தின் வசப்பட்டதால், அந்த எதிரிகளை அழிக்கும் மன்னன் கல்மாஷபாதன், கோபத்தில் கண்கள் சுழலத் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தலைநகரை விட்டு வெளியே சென்றுவிட்டான்.(6) தனது மனைவியுடன் வெளியே சென்ற அவன், தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள், சாபத்தின் ஆளுகையில் இருந்த அம்மன்னன் பலவகைப்பட்ட மான்களும், பல விலங்குகளும், பெரும் மரங்களும், செடிகளும், கொடிகளும், நிறைந்த அக்கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, அவன் மிகவும் பசித்துப் போனான். அந்த ஏகாதிபதி உணவைத் தேடத் தொடங்கினான். பசி வயிற்றைக் கிள்ளக் இறுதியாக, அக்கானகத்தின் ஒரு தனிமையான இடத்தில்,(7-9) ஒரு பிராமணனும் அவனது மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டான். அந்த ஏகாதிபதியைக் கண்ட அந்த ஜோடி அச்சத்தால் தங்கள் ஆசை நிறைவேறாமலேயே ஓடிச் சென்றனர்.(10)

ஓடும் அந்த ஜோடியைக் கண்ட அம்மன்னன், அந்த பிராமணனைப் பலவந்தமாகப் பற்றினான். அப்போது அந்த பிராமணத்தி {பிராமணப் பெண்} அகப்பட்ட தனது கணவனைக் கண்டு அந்த ஏகாதிபதியிடம் {கல்மாஷபாதனிடம்},(11) “சிறந்த நோன்புகளைக் கொண்ட ஓ ஏகாதிபதி, நான் சொல்வதைக் கேட்பாயாக! நீ சூரிய குலத்தில் பிறந்தவன் என்பதும், அறநெறிகளைக் காப்பவன் என்பதும், பெரியோரின் தொண்டுக்கு உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதும் உலகம் அறிந்தவையாகும்.  நீ பாவம் இழைப்பது உனக்குத் தகாது. ஓ ஒடுக்கப்பட முடியாதவனே, {முனிவர்களின்} சாபத்தால் நீ உனது உணர்வுகளை இழந்திருக்கிறாய். (12,13)  இப்போது எனது காலம் கனிந்திருக்கிறது, எனவே, நான் எனது கணவரோடு இணைந்திருந்தேன். எங்கள் உறவில் நான் இன்னும் நிறைவடையவில்லை.(14) எங்களிடம் கருணை கொள்வாயாக. ஓ மன்னர்களில் சிறந்தவனே, எனது கணவரை விடுவிப்பாயாக” என்று கேட்டாள்.(15)

இருப்பினும் அந்த ஏகாதிபதி {கல்மாஷபாதன்} அவ்வார்த்தைகளைக் கேளாமல், விருப்பப்பட்ட உணவை உண்ணும் புலியொன்றைப் போல அந்த பிராமணனை விழுங்கினான்.(16) இக்காட்சியால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கண்ணீர் தரையில் விழுந்து நெருப்பெனத் தகித்து அந்த இடத்தையே எரித்தது.(17) தனது கணவனுக்கு நேர்ந்த பேரிடரால் பெரும் துன்பமடைந்த அந்த பிராமணத்தி கல்மாஷபாதனிடம் கோபத்துடன்,(18) “கொடும் பாவியே, எனது ஆசை நிறைவேறாத சூழ்நிலையில், எனது மூக்கின் அருகிலேயே {முன்னிலையிலேயே} எனக்கு அன்பானவரும், சிறப்புமிக்கவருமான கணவரை நீ விழுங்கியதால், ஓ தீயவனே, உனது மனைவிக்கான காலத்தில் நீ அவளுடன் இணைந்தால், எனது சாபத்தின் சக்தியால் உடனே மரணிப்பாய்.  ஓ பாவியே, மேலும், நீ யாருடைய பிள்ளைகளைத் தின்றாயோ, அந்த முனிவர் வசிஷ்டருடன் கூடி உனது மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். ஓ மன்னர்களில் இழிந்தவனே, அவனே உனது குலத்தைத் தழைக்கச் செய்வான்” என்று சபித்தாள்.(19-21)

அனைத்து நற்குறிகளையும் கொண்டவளும், அங்கீரஸக் குடும்பத்தைச் சேர்ந்தவளுமான அந்தப் பெண், இவ்வாறு அந்த ஏகாதபதியைச் சபித்துவிட்டு, அந்த ஏகாதபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தாள்.(22) ஓ எதிரிகளனைவரையும் தண்டிப்பவனே {அர்ஜுனா}, சிறப்புமிகுந்தவரும், மேன்மையானவருமான அந்த வசிஷ்டர், தனது ஆன்ம சக்தியாலும், தெய்வீகப் பார்வையாலும் இவையாவையும் அறிந்தார்.(23) வெகு காலம் கழித்து, சாபத்திலிருந்து மன்னன் {கல்மாஷபாதன்} விடுபட்டதும், தனது மனைவி மதயந்தியிடம் அவளது காலத்தில் அணுகினான். ஆனால், அந்த மதயந்தி மென்மையாகப் பேசி அவனை அனுப்பிவிட்டாள்.(24) ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த மன்னன், பழைய சாபத்தை நினைத்துப் பார்த்தான். இருப்பினும், தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவன், கடும் அச்சத்துக்குள்ளானான்.(25) பழைய சாபத்தை நினைத்துப் பார்த்து, நடந்த காரியத்திற்காக மிகவும் வருந்தினான். இந்தக் காரணத்திற்காகவே, ஓ மனிதர்களில் சிறந்தவனே, அந்த பிராமணத்தியின் சாபத்தால் பாதிப்படைந்த அந்த ஏகாதிபதி, தனது ராணியிடம் ஒரு மகனைப் பெற வசிஷ்டரை நியமித்தான்” {என்றான் கந்தர்வன்}.(26)

பாண்டவர்களின் புரோகிதரானார் தௌமியர்! – ஆதிபர்வம் பகுதி 185-தகுந்த புரோகிதரை அர்ஜுனன் கேட்க, கந்தர்வன் தௌமியரை நியமிக்கச் சொன்னது; பாண்டவர்கள் உத்கோசகம் சென்று தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்தது; பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்ல உத்தேசித்தது

அர்ஜுனன், “ஓ கந்தர்வா, நீ அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறாய். எனவே, வேதமறிந்த எந்த பிராமணர் எங்களது புரோகிதராக நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்” என்று கேட்டான்.(1)

அதற்குக் கந்தர்வன், “இக்கானகத்தில் உத்கோசகம் எனும் புண்ணியத்தலம் இருக்கிறது. தேவலரின் தம்பியான தௌமியர் அங்கே தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் விருப்பப்பட்டால் அவரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்” என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நடந்த காரியம் அனைத்திலும் மனநிறைவு கொண்ட அர்ஜுனன் பிறகு, தனது அக்னேய அஸ்திரத்தை முறையான சடங்குகளுடன் அந்தக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். அப்போது, அவனிடம் அந்தப் பாண்டவன்,(3) “ஓ கந்தர்வர்களில் சிறந்தவனே, நீ கொடுக்கும் புரவிகள் {குதிரைகள்} தற்சமயத்திற்கு உன்னிடமே இருக்கட்டும். நேரம் வரும்போது, நாங்கள் உன்னிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். நீ அருளப்பட்டிருப்பாயாக” என்றான்.(4) அந்தக் கந்தர்வனும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் மரியாதையைச் செலுத்தி வணங்கி, அந்தப் பாகீரதியின் {கங்கையின்} கரையை விட்டு அகன்று, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(5)

ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் உத்கோசகத்திற்குச் சென்று, அந்தப் புனிதமான ஆசிரமத்திலிருந்த தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்துக் கொண்டனர்.(6) வேதமறிந்தவர்களில் முதன்மையானவரான அந்தத் தௌமியர், அவர்களுக்குக் காட்டுப் பழங்களையும், கிழங்குகளையும் கொடுத்து வரவேற்று, அவர்களின் புரோகிதராவதற்கு ஏற்றுக் கொண்டார்.(7) பாண்டவர்கள், அந்த பிராமணரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, தங்கள் தாயுடன் சேர்ந்து அறுவராகச் சேர்ந்து, தங்கள் ஆட்சியுரிமையையும், தங்கள் நாட்டையும், பாஞ்சால மன்னனின் மகளையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாக நினைத்தனர். அந்தப் பாரதக் குலத்தின் காளைகள், குரு தௌமியரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, வலிமைமிக்க ஒரு காப்பாளரின் கீழ் தாங்கள் இருப்பதாகவே உணர்ந்தனர்.(8,9)

வேதங்களின் உண்மைப் பொருளையும், அறநெறிகளின் விதிகளையும் அறிந்தவரும், உயர்ந்த ஆன்மா கொண்டவருமான அந்தத் தௌமியர், அறம்சார்ந்த பாண்டவர்களுக்கு ஆன்ம குருவாகி, அவர்களைத் தனது ஆன்மச் சீடர்கள் {எஜமானர்கள்} ஆக்கினார்.(10) புத்திக்கூர்மையுள்ளவர்களும், பலம்பொருந்தியவர்களும், தேவர்களைப் போன்றவர்களும், விடாமுயற்சியுடன் கூடிய வீரர்களும், அறம் சார்ந்தோருமான அந்தப் பாண்டவர்களைக் கண்ட தௌமியர், அவர்கள் தங்கள் அறத் தகுதிகளினாலேயே, தங்கள் அரசுரிமையையும், நாட்டையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாகக் கருதினார்.(11) அந்த மனிதர்களின் மன்னர்கள், அந்தப் பிராமணரால் வாழ்த்தப்பட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு, பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(12)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -த்ருதீய பாதம்

March 4, 2024

—————————————————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-3-1-த்யுப்வாத் யதி கரணம்
66-த்யுப்யாத் யாயதநம் ஸ்வ ஸப்தாத் 
–ஆதர்வணே -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ சாந்தரிக்ஷமோதம் மநஸ் ஸஹ பிராணைஸ் ச ஸர்வைஸ் தமேவைகம் ஜாநதாத்மாந மந்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைக்ஷ ஸேது இத்யத்ர –த்யு ப்ருதிவ்யாதாதீநாம் ஆயதநம்-ஆதார பரம புருஷ தமே வைகம் ஜாநதாத்மாநம் இத்யாத்ம ஸப்தாத் -நிருபாதிக ஆத்மத்வம் ஹி பரம புருஷஸ்யைவ –அம்ருதஸ்யைக்ஷ ஸேதுரிதி ததேவ த்ரடயதி –பஹுதா ஜாயமாந இதி பரத்வம் ந நிவாரயதி அஜாயமாநோ பஹுதா விஜாயதே இதி கர்ம பிரஜாயமாநஸ்யைவ ஆஸ்ரித வாத்சல்யாத் சந்ததோ ஜனனம் தஸ்ய ஹி ஸ்ரூயதே –1-

67-முக்தோபஸ்ருப்ய வ்யபதேஸாச் ச –ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் ஸாம்யம் உபைதி –ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷமுபைதி திவ்யம் இதி ச புண்ய பாப விநிர் முக்தாநாம் ப்ராப்ய தயா வ்யபதேஸாச் சாயம் பர –2-

68-ந அநுமாந மதச் சப்தாத் ப்ராண ப்ருச்ச –யதா ந பிரதாநமதச் ஸப்தாத் –ததா ந ப்ராண ப்ருத பீத் யர்த –3-

69-பேத வ்யபதேசாத் –அநீ ஸயா ஸோசதி முஹ்யமாந –ஜூஷ்டம் யதா பஸ்யத் யன்ய மீஸம் இத்யாதி நா ப்ரத்யகாத்மநோ பேதேந வ்யபதேசாச் சாயம் பர –4-

70-ப்ரகரணாத் –அத பரா யயா ததஷரமதி கமயத இத்யாதி பரஸ்ய ஹீதம் ப்ரகரணம் –5-

71-ஸ்தித்யத நாப்யாம் ச –தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்தி அநஸ்நன் நந்யோ அபிசாக ஸீதி இதி ஜீவஸ்ய கர்மபலாதந மபிதாய -அநஸ்நதோ தீப்யமா நஸ்ய ஸ்தித்யபிதா நாச்சாயம் பரமாத்மா- 6-இதி த்யுப்வாத் யதி கரணம் –1–

1-3-2- பூமாதி கரணம்
72-பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்
–ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம் பூமைவ ஸூகம் இத் யுக்த்வா பூம்நஸ் ஸ்வரூபமாஹ யத்ர நான்யத் பஸ்யதி நாந்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ஸ பூமா இதி –யஸ்மின் ஸூகே அநு பூயமாநே தத் வ்யதிரிக்தம் கிமபி ஸூகத்வேந ந பஸ்யதி ந ஸ்ருணோதி ந விஜாநாதி ஸ பூமேத் யுச்யதே அத யாத்ரான் யத் பஸ்யதி அந்யஸ் ஸ்ருணோதி அந்யத் விஜாநாதி ததல்பம் இதி வசநாத் –ததா ச மஹா பாரதே
திவ்யாநி காம சாராணி விமாநாநி சபாஸ் ததா
ஆ க்ரீடா விவிதா ராஜன் பத்மின்யஸ் சாம லோதகா
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந –இதி
ஏஷ து வா அதி வததி

ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேநாதிவததி இதி ப்ரஸ்து தஞ்சாதி வாதித்வம் ஏவமேவ ஸமஞ்ஜஸம் -அதி வாதித்வம் ஹி ஸ்வோபாஸ்ய புருஷார்தாதிக்ய வாதித்வம் -ததல்பம் இத்யல்ப ப்ரதியோகித்வேந பூமா இத்யுக்த பிரகார வைபுல்யாஸ்ரய ஸூக ரூப வாஸீ –அயம் பூம ஸப்த வ்யபதிஷ்ட பரமாத்மா ஸம் ப்ரஸாதாதத் யுபதேஸாத் ஸம் ப்ரஸாத -பிரத்யகாத்மா அத யா ஏஷ ஸம் ப்ரஸாத இத்யாதி ஸ்ருதே -ஏஷ து வா அதி வததி யஸ் சத்யேந இத்யாதி நா ப்ராண ஸப்த நிர் திஷ்டாத் ப்ரத்யகாத்மந ஊர்த்வமர் தாந்தரத்வேநாஸ்யோபதேஸாத் –7-

73-தர்ம உப பத்தேஸ் ச -ஸ்வா பாவிக அம்ருதவ ––ஸ பகவ கஸ்மின் ப்ரதிஷ்டித ஸ்வே மஹிம்நி இத்யாதா வுபதிஷ்டாநாம் ஸ்வ மஹிம ப்ரதிஷ்டித்தடவ -ஸர்வ காரணத்வ ஸர்வாத்மகத்வாதி தர்மாணாம் பரஸ்மின் நேவ உப பத்தேஸ் ச பூமா பர –8-இதி பூமாதி கரணம் –2-

1-3-3-அக்ஷர அதிகரணம்
74-அக்ஷரமம் பராந்த த்ருதே
–ஏதத் வை ததஷரம் கார்கி ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு இத்யாதிநா அபிஹித மக்ஷரம் பரம் ப்ரஹ்ம அக்ஷரம் அம்பராந்த த்ருதே யதூரத்வம் கார்கி திவ இத்யாரப்ய ஸர்வ விகாராதாரதயா நிர் திஷ்ட ஆகாஸ கஸ்மின் நோதஸ் ச ப்ரோதஸ் ச இதி ப்ருஷ்டே ஏதத்வை ததஷரம் இதி நிரதிஷ்டஸ் யாஷரஸ்ய வாயு மதம் பராந்த த்ருத ஸர்வ விகாராதாரோ ஹ்யய மஹாஸ வாயுமதம் பராந்த காரணம் ப்ரதாநம் தத் தாரகம் பரம் ப்ரஹ்ம –9-

75-ஸா ச ப்ரஸாஸ நாத் –ஸா ச அம்பராந்தத்ருதி ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கி –இத்யாதிநா -ப்ரக்ருஷ்டாஜ்ஞயா க்ரியமாணா ஸ்ரூயதே அத இதமக்ஷரம் ப்ரத்யமாத்மா ச ந பவதீத் யர்த –10-

76-அந்ய பாவ வ்யாவிருத்தேஸ் ச -அந்யபாவ –அந்யத்வம் அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு இத்யாதி நா பரமாத்மந அந்யத்வம் ஹ்யஸ்யா ஷரஸ்ய வ்யாவர்தயதி வாக்ய சேஷ -அதஸ் ச பர ஏவ —11-அக்ஷர அதிகரணம் –3-

1-3-4-ஈஷதி கர்ம அதிகரணம்
77-ஈஷதி கர்ம வ்யபதேஸாத் ஸ
–ய புநரேதம் த்ரி மாத்ரேணோமித்ய –நேநைவாக்ஷரேண பரம் புருஷமபித் யாயீத இத்யாரப்ய-ஸ ஏதஸ் மாஜ் ஜீவக நாத் பராத் பரம் புரி சயம் புருஷம் ஈஷத இத்யத்ர -உத்தரத்ர தமோங்காரேணைவாயநே நாந்வேதி இதி வித்வான் யத் தச் சாந்தம் அஜரம் அம்ருதம் அபயம் பரஞ்ச இதி பரம புருஷ அசாதாரண தர்ம வ்யபதேஸாத் யத் தத் கவயோ வேத யந்தே இதி ததீயஸ் தாநஸ்ய ஸூரிபிர் த்ருஸ்யத்வ வ்யபதேஸாச் ச 12-இது ஈஷதி கர்ம அதி கரணம் –4-

1-3-5-தஹர அதி கரணம்
78-தஹர உத்தரேப்ய
–-சாந்தோக்யே அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரா ஹாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் ததன் வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ் ஞாஸி தவ்யம் இத்யத்ர தஹராகாஸ நிர் திஷ்ட பரமாத்மா –உத்தரேப்ய வாக்யகதேப்ய தத் அசாதாரண தர்மேப்ய உத்தரத்ர தஹர ஆகாஸஸ்ய ஸர்வாதார தயா -அதி மஹத் த்வமபிதாய ஏதத் ஸத்யம் ப்ரஹ்மாக்யம் புரம் இதி நிர் திஸ்ய தஸ்மிந் ப்ரஹமாக்யே தஹர ஆகாஸே காமாஸ் ஸமாஹிதா இத் யுக்தே கோ அயம் தஹராகாஸ கே ச காமா –இத்யபேஷாயாம் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா இத்யாரப்ய ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப இத்யந்தேந தஹாராகாஸ ஆத்மா காமாஸ் ச அபஹத பாப்மத்வாதய தத் விசேஷண பூத குணா இதி ஹி ஜ்ஞாபயதி
தஹரோ அஸ்மின் நந்தராகாஸஸ் தஸ்மிந் யதந்த ததன்வேஷ்டவ்யம் இத்யத்ர தஹாராகாஸ தத் அந்தர் வர்தி ச யத் ததுபயம் அன்வேஷ்டவ்யமித் யுக்த மிதி விஞ்ஞாயதே அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந் த்யேதாம்ஸ் ச சத்யான் காமான் இதி ஹி வ்யஜ்யதே –13-

79-கதி ஸப்தாப்யாம் ததாஹி த்ருஷ்டும் லிங்கம் ச –ஏவமேவேமாஸ் ஸர்வா ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி இத்யஹரஹஸ் ஸர்வாஸாம் ப்ரஜாநாம் அஜாநதீநாம் தஹர ஆகாஸோ பரி கத்தி வர்தனம் தஹர ஆகாஸ ஸமாநாதி கரணோ ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சதஹர ஆகாஸ பரம் ப்ரஹ்மேதி ஞாபயதி -ததா ஹ்யன்யத்ர ஸர்வாஸாம் பரமாத்மோ பரிவர்த மாநத்வம் த்ருஷ்டம் தஸ்மிந் லோகாஸ்ஸ்ரிதாஸ் ஸர்வே ததஷரே பரமே ப்ரஜா இத்யாதவ் -ப்ரஹ்ம லோக ஸப்தஸ் சஏஷ ப்ரஹ்ம லோக இத்யாதவ் –அந்யத்ர தர்சன அபாவியாபி இதமேவ பர்யாப்த மஸ்ய பரமாத்மத்வே லிங்கம் யத் தஹராகாஸோபரி ஸர்வஸ்ய வர்தமாநத்வம் ப்ரஹ்ம லோக ஸப்தஸ் ச –14-

80-த்ரு தேஸ் ச மஹிம்நோ அஸ்யாஸ்மிந்நு பலப்தே –அத ய ஆத்மா ஸ சேதுர்வித்ருதி இதி ஜகத் த்ருதே -பரமாத்மநோ ம்ஹிம்நோ அஸ்மின் தஹராகாஸே உப லப்தேஸ் சாயம் பர ஸா ஹி பரமாத்ம மஹிமா ஏஷ ஸேதுர் விதரண இத்யாதி ஸ்ருதே –15-

81-ப்ரசித்தேஸ் ச--ஆகாஸ சப்தஸ்ய யதேஷ ஆகாஸ ஆனந்த இதிபரமாத்மன்யபி ப்ரஸித்தேஸ் சாயம் பர ஸத்ய சங்கல்பத்வாதி குண ப்ருந்தோப ப்ரும்ஹிதா ப்ரஸித்தி பூதாகாஸ பிரஸித்தேர் பலீய ஸீத்யர்த –16-

82-இதர பராமர்ஸாத்ஸ இதி சேந்நா சம்பவாத் –அத ய ஏஷ ஸம் ப்ரஸாதோ இதீ தரஸ்ய ஜீவஸ்ய பரமார்ஸாத்ஸ ப்ரக்ருதாகாஸஸ் இதி சேத் நைதத் உக்த குணாநாம் தத்ரா சம்பவாத் –17-

83-உத்தராச் சேதாவிர் பூதஸ்வரூபஸ் து –உத்தரத்ர ய ஆத்மா அபஹத பாப்மா இதி ஜீவஸ்ய அபஹத பாப்மத்வாதி ஸ்ரவணாந் நா ஸம்பவ –ஜாகரித ஸ்வப்ந ஸூஷுப் யாத்ய வஸ்தாஸூ வர்தமாநத்வாத் ஸ ஹி ஜீவ இதி சேத் நைதத் ஆவீர் பூத ஸ்வரூபஸ்து –கர்ம ஆரப்த சரீர சம்பந்தித் வேந திரோஹித அபஹத பாப்மத் வாதிக பஸ்ஸாத் பரஞ்ஜ்யோதி ரூப ஸம்பத் யாவிர் பூத ஸ்வரூப தத்ர அபஹத பாப்மத்வாதி குணகோ ஜீவ ப்ரதிபாதித தஹாராகாஸஸ்து அதி ரோஹித கல்யாண குண சாகர இதி நாயம் ஜீவ –18-

84-அந்யார்தஸ் ச பராமர்ஸ –அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யத இதி-ஜீவாத்மநோ தஹராகாஸோப ஸம்பத்த்யா ஸ்வரூப ஆவீர் பாவா பாத்தன ரூபம் ஆஹாத்ம்ய ப்ரதிபாத நார்த அத்ர ஜீவ பராமர்ச –19-

85-அல்ப ஸ்ருதேரிதி சேத்ததுக்தம் –அல்ப ஸ்தாநத்வ ஸ்வரூப அல்பத்வ ஸ்ருதேர் நாயம் பரமாத்மேதி சேத் -தத்தரோத்தர முக்தம் நிசாய்யத்வா தேவம் வ்யோமவச்ச இதி –20-

86-அனு க்ருதேஸ் தஸ்ய ச –அநு க்ருதி –தஸ்ய தஹராகாஸஸ்ய பரஞ்ஜ்யோதிஷ அநு கரண ஸ்ரவணாச் ச ஜீவஸ்ய ந ஜீவோ தஹராகாஸ ஸ தத்ர பர் யேதி ஐஷத் க்ரீடன் ரமமாண இத்யாதி ததுப ஸம்பத்த்யா ஸ்வச் சாந்த வ்ருத்தி ரூப தத் அநு காரஸ் ஸ்ரூயதே –21-

87-அபி ஸ்மர்யதே –இதம் ஞானம் உபாஸ்ரித்ய மம சாதரம்யம் ஆகதா –ஸர்கே அபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச இதி —22-இதி தஹராதி கரணம் –5-

1-3-6-ப்ரமாதி கரண பூர்வ பாக
88-ஸப்தாதேவ ப்ரமித
– அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி–ஈஸாநோ பூத பவ்யஸ்ய இத்யாதவ் அங்குஷ்ட ப்ரமித பரமாத்மா ஈஸாநோ பூத பவ்யஸ்ய இதி சர்வேஸ்வரத்வ வாசி ஸப்தா தேவ –23-

89-ஹ்ருத்ய பேஷயா து மனுஷ்யாதி காரத் வாத் –அநவச் சிந்நஸ் யாபி உபாஸக ஹ்ருதயே வ்ரத மாநத்வா பேஷ மங்குஷ்ட ப்ரமிதத்வம் -மனுஷ்யாணாம் ஏவ உபாஸந ஸம்பாவ நயா தத் விக்ஷயத்வாச் ச சாஸ்த்ரஸ்ய மனுஷ்ய ஹ்ருதயாபேக்ஷயேதம் யுக்தம் ஸ்திதம் தாவதுத்தரத்ர ஸமாப யிஷ்யதே –24–இதி ப்ரமித அதி கரண பூர்வ பாக–

1-3-7-தேவாதி கரணம்–
90-ததுபர்யபி பாதராயணஸ் சம்பவாத்
–தத் ப்ரஹ்ம உபாஸநம் உபரி தேவாதிஷ் வப்யஸ்தி அர்த்தித்வ சாமர்த்யா சம்பவாத் –இதி பகவான் பாதராயண மேந –சம்பவஸ் ச பூர்வோபார்ஜிதஜ் ஞாநாவிஸ்மரணாத் மந்த்ரார்த்தவாதேஷு விக்ரஹாதி மத்தயா ஸ்துதி தர்சநாத் ததுப பத்தயே தத் சம்பவே தேஷாமேவ ப்ராமாண்யேந விக்ரஹாதி மத்த்வாச் ச –25-

91-விரோத கர்மணீதி சேந்நா நேக ப்ரதி பத்தேர் தர்சநாத் –விக்ரஹாதி மத்த்வே ஏகஸ்யாநே கத்ர யுகபத்ஸாந் நித்யா யோகாத் கர்மணி விரோத இதி சேந்ந ஸக்திமத்ஸூ ஸுபரி ப்ரப்ருதி ஷு யுகபதநேக சரீர ப்ரதிபத்தி தர்சநாத் –26-

92-ஸப்த இதி சேந் நாத ப்ரபவாத் ப்ரயக்ஷ அநு மாநாப்யாம் –வைதிகே து ஸப்தே விரோத ப்ரஸக்தி தேஹஸ்ய சாவயத்வேநோத் மத்த்வாத் இந்த்ராதி தேவோத் பத்தே ப்ராக் விநாஸா தூர்த்வம் ச வைதிகேந்த்ராதி ஸப்தாநாம் அர்த ஸூந்யத்வம் அநித்யத்வம் வா ஸ்யாத் இதி சேந்ந –அத வைதிகா தேவேந்த்ராதி ஸப்தாதிந்த்ராத் யர்தஸ்ருஷ்டே -நஹீந்த்ராதி ஸப்தா வ்யக்தி வாஸகா அபி து கவாதி ஸப்தவதாக்ருதி வாசிந –பூர்வஸ் மின்னிந்த்ராதவ் விநஷ்டே வைதிகேந்த்ராதி ஸப்தாதேவ ப்ரஹ்மா பூர்வேந்த்ராத் யாக்ருதி விசேஷம் ஸ்ம்ருத்வா ததாகாரம பராமிந்த்ராதிகம் குலாலாதிரிவ கடாதிகம் ஸ்ருஜதீதி ந கஸ்ஸித் விரோத -குத இதமவகம்யதே -ஸ்ருதி வேதேந ரூபே வ்யகரோத் ஸதாஸதீ ப்ரஜாபதி ஸ பூரிதி வ்யாஹரத் ஸ பூமிமஸ்ருஜத இத்யாதி ஸ்ம்ருதிரபி
ஸர்வேஷாம் து ஸ நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக்-வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே –இத்யாதி –27-

93-அத ஏவ ச நித்யத்வம் –யதோ ப்ரஹ்மா வைதிகாச் சப்தா தர்தாந் ஸ்ம்ருத்வா ஸ்ருஜதி அத ஏவ மந்த்ர க்ருதோ வ்ருணீதே விச்வாமித்ரஸ்ய ஸூக்தம் பவதி இதி விச்வாமித்ராதீநாம் மந்த்ராதி க்ருத்த்வே அபி மந்த்ராதி மய வேதஸ்ய நித்யத்வம் திஷ்டதி –அநதீத மந்த்ராதி தர்சந ஸக்தான் பூர்வ விச்வாமித்ராதீந் தத் தத் வைதிக சப்தை ஸ்ம்ருத்வா ததாகாராநபராந் தத் தச் சக்தி யுக்தான் ஸ்ருஜதி ஹி ப்ரஹ்மா நைமித்திக பிரளயானந்தரம்-தே சாநதீத்யைவ தாநேவ மந்த்ராதீந கலிதாந் படந்தி –அதஸ் தேஷாம் மந்த்ராதி க்ருத்த்வம் வேத நித்யத்வம் ச ஸ்திதம் –28-

ப்ராக்ருத பிரலயே து சதுர் முகே வேதாக்ய சப்தே ச விநஷ்டே கதம் வேதஸ்ய நித்யத்வமித்யத ஆஹ

94-ஸமாந நாம ரூபத் வாச்சா வ்ருத்தாவப்ய விரோதோ தர்சநாத்ம் ஸ்ருதேஸ் ச -அத ஏவ ஸ்ருஜ்யாநாம் ஸமாந நாம ரூபத்வாத் பிராகிருத பிரலயா வ்ருத்தாவபி ந விரோத -ஆதி கர்தா பரம புருஷோ ஹி பூர்வ ரூப ஸம்ஸ்தானம் ஜகத் ஸ்ம்ருத்வா ததாகாரமேவ ஜகத் ஸ்ருஜதி வேதாம்ஸ் ச பூர்வாநு பூர்வீ விஸிஷ்டாநாவிஷ் க்ருத்ய சதுர் முகாய ததாதீதி ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாமாதி கர்தா பூர்வ வத் ஸ்ருஜதீத் யவகம்யதே-ஸ்ருதி ஸ்தாவத் ஸூர்யா சந்த்ர மஸவ் தாத்தா யதா பூர்வமகல் பயத் இத்யாதிகா யோ ப்ரஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை இதி ச -ஸ்ம்ருதிரபி
யதர் துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே
த்ருஸ்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதி ஷு -இதி -வேதஸ்ய நித்யத்வம் ச பூர்வ பூர்வோச் சாரண க்ரம விஸிஷ்டஸ் யைவ ஸர்வதோச சார்ய மாணத்வம் ––29-இதி தேவதாதி கரணம் –7-

1-3-8-மத்வதி கரணம்
95-மத்வாதிஷ்வ சம்பவாதநதி காரம் ஜைமிநி
–மது வித்யாதி ஷு வஸ்வாதி தேவாநாமேவ உபாஸ்யதவாதத் ப்ராப்யத்வாச் ச தத்ர வஸ்வா தீநாம் கர்ம கர்த்ரு பாவ விரோதேந உபாஸ்யத்வா சம்பவாத் -வஸூநாம் ஸதாம் வஸூ த்வம் ப்ராப்தமிதி ப்ராப்யத்வா ஸம்ப வாச்ச தத்ர வஸ்வாதீ நாமநதிகாரம் ஜைமிநிர்மேநே –30-

96-ஜ்யோதிஷி பாவாச் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி ராயுர் ஹோபாஸதே அம்ருதம் இதி ஜ்யோதிஷி -பரஸ்மின் ப்ரஹ்மணிதேவாநாம் ஸாதாரண்யேந ப்ராப்தத்வே அபி அதிகார மாத்ர பாவ வசநாத் அந்யத்ர வஸ்வாத் யுபாஸநே அநதிகாரோ ந்யாய ஸித்தோ கம்யதே–31-

97-பாவம் து பாத ராயணோ அஸ்தி ஹி –மது வித்யாதிஷ்வபி வஸ்வாதீ நாமதிகார பாவம் பகவான் பாதராயணோ மன்யதே –அஸ்தி ஹி வஸ்வாதீநாம் ஸதாம் ஸ்வாவஸ்த ப்ரஹ்மண உபாஸ்யத்வ ஸம்பவ கல்பாந்தரே வஸூத் வாதே ப்ராப்யத்வ சம்பாவஸ் ச –ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா ஆதித்யஸ்ய காரணா வஸ்தாம் ப்ரதிபாத்ய ய ஏதா மேவம் ப்ரஹ்மோப நிஷதம் வேத இதி மது வித்யா ப்ரஹ்ம வித்யாத்வமாஹ –அத கார்ய காரணோ பயாவஸ்தம் தத்ரோபாஸ்யம் -கல்பாந்தரே வஸ்வாதித்வ மநு பூய அதிகாராவஸாநே ப்ரஹ்ம ப்ராப்திர்ந விருத்தா –32–இதி மத்வதிகரணம்–8-

1-3-9- அப ஸூத்ராதி கரணம்
98-ஸூகஸ்ய ததநாதர ஸ்ரவணாத் ததாத்ரவணாத் ஸூஸ்யதே ஹி
-ஆஜஹாரமாஸ் ஸூத்ர இத்யாதவ் ப்ரஹ்ம உபதேஸே ஸிஷ்யம் ப்ரதி ஸூத்ரேத்யா மந்த்ரணேந சிஷ்யஸ்ய ப்ரஹ்ம ஞானா ப்ராப்த்யா ஸூ க்சஞ்ஜாதேதி ஸூஸ்யதே –ஸோச நாச் சூத்ர -ந ஜாதி யோகேந குத –ததநாதர ஸ்ரவணாத் ப்ரஹ்ம வித்யா வைகல்யேந ஸ்வாத்மா நம் ப்ரதி ஹம்ஸோக்தாநாதர வாக்ய ஸ்ரவணாத் ததைவாசார்யம் ப்ரதி ஆத்ரவணாத் –ஹி சப்தோ ஹேதவ் –யதஸ் ஸ்ரூத்ரேத்யா மந்த்ரணம் ந ஜாதி யோகேந அதஸ் ஸூத் ரஸ்ய ப்ரஹ்ம உபாஸநாதிகாரோ ந ஸூஸ்யதே –33-

99-ஷத்ரியத்வகதேஸ் ச –ஸூஸ் ரூஷோ ஷத்ரியத்–உபக்ரமே பஹு தாயீ இத்யாதிநா தாந பதித்வ பஹு பக்வாந் நதாயித்வ பஹு கிராமாதி ப்ரதாநை ரஸ்ய ஹி ஷத்ரியத்வம் கம்யதே –34-

100-உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத் —உபரிஷ்டடாச் சாஸ்யாம் வித்யாயாம் ப்ரஹ்மண ஷத்ரியோ ரேவான்வயோ த்ருஸ்யதே -அத ஹ ஸுநகஞ்ச காபேய மபிப்ரதாரிணஞ்ச இத்யாதவ் –
அபி ப்ரதாரீ ஹி சைத்ரதத ஷத்ரிய -அபிப்ரதாரிணஸ் சைத்ர தத்வம் ஷத்ரியத்வம் ச காபேய ஸாஹாச் சர்யால் லிங்காத் அவகம்யதே-
பிரகாரணாந்தரே ஹி காபேய ஸஹஸரிணஸ் சைத்ரத தத்வம் ஷத்ரியத்வஞ்சா வகதம் -ஏதேந வாவ் சைத்ரரதத்வம் ஷத்ரியத்வம் சாவகதம் ஏதேந சைத்ரரதம் காபேயோ அயாஜயந் இதி தஸ்மாச் சைத்ரரதோ நாமைக க்ஷத்ர பதரஜாயதேதி ச க்ஷத்ர பதிர ஜாயத இதி ச அதஸ் சாயம் சிஷ்ய ந சதுர்த –35-

101-ஸம்ஸ்கார பராமர்ஸாத்த பாவாபிலாச் ச –வித்யா உபக்ரமே உப த்வா நேஷ்யே இத் யுப நயன பாரமர்ஸாத் ஸூத்ரஸ்ய தத் அபாவ அபிலாபாச்ச -ந ஸூத்ரஸ்ய ப்ரஹ்ம வித்யாதிகார ந ஸூத்ரே பாதகம் கிம்சித் ந ச ஸம்ஸ்காரம் அர்ஹாதி -இதி ஸம்ஸ்காரோ ஹி நிஷித்யதே –36-

102-தத் அபாவ நிர்தாரணே ச ப்ரவ்ருத்தே –நைதத ப்ராஹ்மணோ விவக்தும் அர்ஹாதி சமிதம் ஸும்யாஹர இதி ஸூதரத்வாபாவ நிஸ்ஸய ஏவோபதேச ப்ரவ்ருத்தேஸ் ச நாதிகார –37-

103-ஸ்ரவணாத்யய நார்த ப்ரதிஷேதாத் -ஸூத்ரஸ்ய ஸ்ரவணாத்யய நாதீதி ஹி நிஷித்யந்தே –
தஸ்மாச் ஸூத்ர சமீபே நாத்யே தவ்யம் இதி –அநுபஸ்ருண்வதோ அத்யயநாதிர் ந ஸம் பவதி –38-

104-ஸ்ம்ருதேஸ் ச -ஸ்மர்யதே ச ஸூத்ரஸ்ய வேத ஸ்ரவணாதவ் தண்ட -அத ஹாஸ்ய வேதம் உபஸ்ருண்வத த்ர்புஜதுப்யாம் ஸ்ரோத்ர ப்ரதி பூரணம் உதாஹரணே ஜிஹ்வாச் சேதோ தாரணே சரீர பேத–39- இதி –அப ஸூத்ர அதி கரணம் –9-

ப்ரமிதாதிகரண சேஷ
ப்ராசங்கிகம் பரி ஸமாப்ய பிராகிருதம் அனுசரதி

105-கம்ப நாத் —அங்குஷ்ட ப்ரமித ப்ரகரண மத்யே –யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நிஸ்ஸ்ருதம் இத்யாதி நா அபிஹிதாங்குஷ்ட ப்ரமித பிராண ஸப்த நிர்திஷ்ட ஜெனித பயாத் வஜ்ராதி வோத்யதாத் அக்நி வாயு ஸூர்ய இந்த்ர ப்ரப்ருதி க்ருத்ஸ்ந ஜகத் கம்பநாத் அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ இதி நிஸ்ஸீயதே –40-

106-ஜ்யோதிர் தர்சநாத் –தத் ப்ரகரணே ந தத்ர ஸூர்யோ பாதி இத்யாரப்ய தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இதி பாஸ் ஸப்தாபி ஹி தஸ்ய அநவதிக அதிசய ஜ்யோதிஷோ தர்ச நாச் ச அங்குஷ்ட ப்ரமித பரம புருஷ –41—இதி ப்ரமித அதி கரண சேஷ

1-3-10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாதி கரணம்
107-ஆகாஸோ அர்த்தாந்தரத்வாதி வ்யபதேஸாத்
–சாந்தோக்யே ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா தத் ப்ரஹ்ம இத்யாதிநா நிர்திஷ்ட ஆகாஸ தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா இதி ப்ரக்ருதாத் ப்ரத்யமாத்மந பரி ஸூத்தாதரதாந்தர பூத பரம புருஷ நாம ரூபயோ நிர்வோட் ருத்வ தத ஸ்பர்ச ரூபார் தாந்தரத்வாம்ருதத்வாதி வ்யபதேஸாத் –42-

தத்வமஸ்யாதிநா ஐக்ய வ்யபதேஸாத் ப்ரத்யகாத்மநோ நார்தாந்தர பூத பரம புருஷ இத்யா சங்க்யாஹ

108-ஸூஷுப்த் யுத் க்ராந்த்யோர் பேதேந –ப்ராஜ்ஜே நாத்மநா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சந வேத நாந்தரம் ப்ராஜ்ஜே நாத்மநா அந் வாரூட இதி
ஸூ ஷுப்த் யுத்க்ராந்யோர் பாஹ்யாந்தர விஷயா நபிஜ்ஞாத் ப்ரத்யகாத்மந ததாநீ மேவ ப்ராஜ்ஞ தயா பேதேந வ்யபதேஸாதர் தாந்தர பூத ஏவ –43-

109-பத்யாதி சப்தேப்ய –பரிஷ் வஞ்ஜகே ப்ராஞ்ஜே ஸ்ரூயமாணேப்ய பத்யாதி சப்தேப்யஸ் சாயம் அர்த்தாந்தர பூத- ஸர்வஸ்யாதி பதிஸ் ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேஸாந இதி ஹ்யுத்தரத்ர ஸ்ரூயதே
ஐக்யோபதேஸோ அபி அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந இத்யநேந ஜீவஸ்ய சரீர பூதஸ் யாத்ம தயா அவஸ்தி தேரிதி ஸ்வய மேவ பரி ஹரிஷ்யதி –44- இதி அர்த்தாந்தர்த்வாதி வியபதேஸ அதி கரணம் –10-

—————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யரால் அருளப்பட்ட தமிழ் பாசுரங்கள்

January 15, 2023

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

சிந்தையினுக்கு எட்டாமே சிறந்த அருளால் எளிது இலகி
விந்தையுறு மெய்ஞ்ஞான விரக்திக் களஞ்சியமாய்
பைந்துளவ பகவான் மீதுறு பக்திக்கு ஆழ் கடலாம்
அந்தணனாம் அந்நாத முனிகள் அடி பணிவேனே

அந்தணன் -அந்தத்தை அணவுவான் -கிட்டுவான் முனிவன்

மனத்தினால் அளவிடக் கூடாததாய்
அறிந்த மட்டில் ஆச்சர்யத்தை விளைவிப்பதாய்
பகவத் கிருபையால் வந்த காரணத்தால் ஸ்ரமம் அற்று இருப்பதாயுமுள்ள விலக்ஷணமான ஞானமும்
அந்த ஞானத்தால் யுண்டாகும் வைராக்கியமும்
ஆகிய இவற்றுக்கு இருப்பிடமானவரும்
திருத்துளஸீ தரிக்கும் பகவான் இடத்தில் உண்டாகும் பக்திக்கு நிலைக்காத ஸமுத்ரம் போன்றவரும்
முனி ஸ்ரேஷ்டருமுமான அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன்

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மதுவை வென்ற நெடிய மாலின் மரை மலர்ப்பதத்தின் கண்
முதிரும் தத்வ ஞான மோக மஹிமை முற்று மோர்ந்துயர்
விதுர நாதனாம் என் நாத முலைகளை வியப்பனே
கதி எனக்கு அவன் கழல்கள் இங்கும் அங்கும் என்றுமே –

விதுரன் -அறிஞன் –வியத்தல் -ஸ்துதித்தல்

மது என்னும் அசுரனை ஸம்ஹரித்த -ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான -திருமாலின்
திருவடித் தாமரைகள் விஷயமாய் முதிர்ந்து இருக்கும் தத்வ ஞானமும் -அதாவது
அத்திருவடிகளே மோக்ஷத்திற்கு உபாய உபேயம் என்னும் ஞானமும்
அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத ஒரு ப்ரேமமுமாகிய இவற்றின் மஹிமையை முற்றும் உணர்ந்தவரும்
மஹா ஞானியாயும் நமக்கு ஸ்வாமியுமான ஸ்ரீ மன் நாத முனிகளை நமஸ்கரிக்கின்றேன்
இவருடைய திருவடிகளே இம்மையிலும் மறுமையிலும்
எக்காலத்தும் எமக்கு கதியாகும்

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

அச்சுதற்கு அளப்பில்லாத பக்தி தத்வ ஞானமாம்
அச்சுதைக் கடல் பெருக்கு எனத் தரைச்சுபுச் சொலான்
மெச்சி மெய்ப்பலன் விளைக்கும் பக்தி யோக கர்த்தனை
நச்சு நான் ஸ்துதிப்பன் இன்று நாதனாம் முனீந்த்ரனே –3-

அச்சுதன் -ஆஸ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாதவன்

ஸர்வேஸ்வரன் விஷயத்தில் அளக்க ஒண்ணாத பக்தி தத்வ ஞானம் ஆகிய அந்த அமுதக் கடலானது
உள்ளடங்காது மேலே பொங்கியது போலே மதுரமான சொற்களால் பரம ப்ரயோஜன ரூபமாயும் பரிபூர்ணமாமாயும் இருக்கிற
பக்தி யோகத்தை அன்பு கூர்ந்து இவ்வுலகத்தில் பிரகாசிக்கும் படி செய்து அருளினவரும்
முனிவர்களுக்கும் ஸ்ரேஷ்டருமாய் -அவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும்
அந்த நாத முனிகளை மறுபடியும் நான் வணங்குகிறேன் –

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

தத்துவத்தின் சித் அசித்தோடு ஈசன் என்னும் தன்மையும்
முக்தி போக சாதனத்து உபாய மார்க்க முழுமையும்
வித்தரித்த மெய்யுரைப் புராண ரத்ன மீது யரும்
சத்துவப் பராசர முனீந்திரன் முன் தாழ்வனே –4-

பராசரன் பர சமயங்களை பிராமண சரங்களால் நிரசித்தவன்

சேதனம் அசேதனம் இவற்றின் ஸ்வரூபங்களையும்
இவ்விரண்டு தத்துவங்களுக்கும் ஸ்வாமியான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்
இம்மூன்றின் தன்மைகளையும் -யாவருக்கும் அனுபாவ்யமான போகங்களையும்
மோக்ஷத்தையும் -இவற்றை அடைவதற்கு உரிய உபாய மார்க்கங்களையும்
முழுமையும் உணர்ந்து பிறர்க்கு விசதமாய் விளங்கச் செய்பவராய்
பொருளை விளக்குவதிலும் ஆத்ம ரக்ஷணத்திலும் ரத்னம் போன்றதான ஸ்ரீ விஷ்ணு புராணத்தைச் செய்து அருளினவரும்
முனி ஸ்ரேஷ்டருமான பராசர முனிவர் முன் வணங்குகின்றேன்

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

என்னிட வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாத் தமரும்
அன்னையும் அத்தன் தானும் ஓர் இனிய வரிவையும் ஆக்கமும் மகவும்
பின்னும் மேலாய பேறுகள் யாவும் யாகும் எம் குலபதியாம் அம்
மன்னு சீர் மகிழ மாலையார் மாறன் அடியிணைத் தலை வணங்குவனே –5-

எம் வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாமல் அமர்ந்து
பிரியத்தைச் செய்வதில் தாய் போன்றவரும்
ஹிதத்தைச் செய்வதில் தந்தை போன்றவரும்
இன்பம் விளைப்பதில் ஒரு அருமையான ஸ்த்ரீ போன்றவரும்
பாதுகாப்பத்தில் புத்ரனைப் போன்றவரும்
எல்லாவற்றையும் சாதிப்பதில் தனம் போன்றவரும்
இவ்விதம் இன்னம் பலவாய் உத்தமமான சம்பத்து போன்றவரும்
எங்கள் குலத்துக்கு பரம ஆச்சார்யராயும்
மகிழ மாலை அணிந்து விளங்குபவருமான அந்த நம்மாழ்வாருடைய
திருவடி இணையைத் தலையால் வணங்குகின்றேன் –

—————–

ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

இலகும் என் சென்னி மீதும் இன் மறை முடியின் மீது
மலகில் என் மனத்தின் இச்சை அகிலமும் நாடும் எங்கள்
குல தனம் குலத்தின் தெய்வங் கோமளக் கமலக் கண்ணன்
மலரும் அம்மரை மலர்த்தாள் மனம் உறப் புகழ்வன் நன்றே –6-

எந்த புண்டரீகாக்ஷனுடைய திருவடி என் சிரஸ்ஸிலும்
வேதாந்தங்களின் மீதும் ஓக்க பிரகாசிக்கின்றதோ
எந்த திருவடியில் என் இச்சையின் வழிகள் யாவும் செவ்வனே சென்று அடைகின்றனவோ
எது என் குலத்துக்குத் தனமாயும் தெய்வமாயும் இருக்கின்றதோ
அந்தத் திருவடியை என் நெஞ்சமார ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்

—————

ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

அன்னவன் மஹிமை வெள்ளத்து திவலையின் அணுவை யேனும்
இன்னது என்றுள்ளது ஒர விறை சிவாதியர்க்கும் ஒண்ணா
மன்னும் மஹிமை பாட மானம் அற்று எத்தனித்த
என்னையும் வணங்குவேன் நான் இந்த ஸாஹஸத் செயற்கே –7-

ஓர்தல் –ஆராய்தல் தெளிதல்

எந்த சர்வேஸ்வரனுடைய குணக்கடலின் சிறு திவலையில் அணு மாத்ரத்தையும் உள்ளபடி அளந்து அறிவதற்கும்
ஞானாதிகனான சிவனாலும் அவனுக்கு உபதேசம் செய்த பிரமனாலும் பிரமனுக்கு சமானமான சனகாதிகளாலும் முடியாதோ
அத்தன்மையானுடைய குணங்களை ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்துதிப்பது என்கிற இந்த
ஸாஹஸத்தைச் செய்ய வெட்கம் இல்லாமல் எத்தனித்த எனக்கு நமஸ்காரம் –

—————–

ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

சக்தி இலனாகிலும் யான் தளர்ச்சி எய்திச் சகிக்க இனித் தரமில்லேன் என்னும் மட்டும்
புத்தி எனக்கு உற்ற அளவும் போற்றி நிற்பன் புகழ் ஆர்ந்து எக்காலத்தும் பொருந்தி ஏத்தும்
தத்துவத்தை யுணர் மறையும் சதுர் முகத்தோன் சங்கரன் ஆதியர்களும் இங்கனமே யன்றோ
ஒத்திடில் ஓர் பெரும் கடலுள் அமிழ்ந்து மூழ்கும் உயர் மலைக்கும் அணுவிற்கும் வாசி யுண்டோ –8-

உள்ளபடியே உன்னை ஸ்தோத்ரம் செய்ய சக்தி இல்லேனாயினும் என் உணர்ச்சியில் தளர்ச்சி யுண்டாகி
இனி என்னால் ஸாத்யம் இல்லை என்னும் மட்டுமாவது என் ஞானத்துக்கு எட்டும் வரையிலுமாவது ஸ்துதி பண்ணுகிறேன்
ஜகத் ப்ரஸித்தமாய் ஆதி காலம் தொட்டு உன்னை ஸ்துதிக்கும் ஸகல தத்துவத்தையும் அறிந்த வேதங்களும்
சதுர் முகன் சங்கரனாதி மற்றவர்களும்
தத்தம் ஞான சக்தி யாதிகள் அளவே யன்றோ ஸ்துதிக்கின்றார்கள் ஸ்துதிக்கின்றார்கள்
ஒரு பெரும் கடலிலே அமிழ்ந்து மூழ்குகின்ற ஒரு பெரிய பர்வதத்துக்கும் ஒரு அணுவிற்கும் என்ன வித்யாஸம் இருக்கிறது –
உள்ளபடி யுன்னை ஸ்துதி செய்ய மாட்டாமையில் வேதம் முதலியவைகளும் எனக்கு யாதொரு வாசியும் இல்லை என்பது கருத்து –

—————–

ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

உன்னையே ஸ்துதிப்ப யெய்தும் யுணர்ச்சியின் தளர்ச்சி யன்றி
நின் அருட்க்கு உரியதாமோ நிறை கவித் திரனும் சீரும்
என்னிட மந்த புத்திக்கு எளிது இளைப்பாதல் பற்றி
நன்னல நயனா விந்த முயற்சிக்கு யுரியனானே –9-

நன்னலம் –அழகு

உன்னை ஸ்துதிப்பதில் இச்சை கொண்டும் -அதற்கு வேண்டிய சக்தி இல்லாமையால் புகழவும் தவிர மாட்டாமையாலே
ஒருவன் படுகிற இளைப்புக்கு இரங்கி நீ அருள் செய்வதே யன்றி ஸ்தோத்ரம் செய்வதற்கு வேண்டிய பூர்ணமான
ஸாமர்த்ய அதிசயங்களைக் கொண்டு நீ அனுக்ரஹிக்கிறது இல்லை –
இங்கனம் இருக்க அல்ப புத்தியேனான எனக்கு ஸ்ரமம் அதிக சுலபத்தில் உண்டாய் விடுகிறது –
ஆகையால் -என் ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டும்படி கடாக்ஷிக்க வல்ல அழகிய திருக்கண்களை யுடையவனே
இந்த ஸ்தோத்ரம் செய்ய வேணும் என்னும் முயற்சிக்கு யுரியவன் நானே யாகின்றேன்
எனக்கு அம்முயற்சி தகுந்துள்ளது –

—————-

ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.

அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

நாத நின் ஸங்கல்பம் இன்றி யுண்டாய் நன்மை யுறும் இருக்கைக்கும் சமர்த்தம் இல்லா
சாதனமாம் இப்புவனங்கட்க்கும் எங்கன் ஸம்பவிக்கும் ப்ரவ்ருத்தி இவ்விதத்தே
ஏது விலாத எல்லா உயிர்களுக்கும் இதம் புரியும் இயற்கையனாம் ப்ரபோ நின் தன்
பாதம் அணி அன்பர்க்கு இவ்வாற் ஸலீயம் படைத்து உள்ளாய் என்பதிலோர் விந்தை என்னே -10-

பிரபோ ஆதியில் நீ ஸங்கல்பித்து கடாக்ஷித்து இரா விட்டால் இப்பதினான்கு உலகங்களும்
உண்டாய் இருப்பதற்கே ப்ரமேயம் இருந்திராது -அப்படி இருக்க அவைகளுக்கு ப்ரவ்ருத்தி எங்கனே யுண்டாகும்
ஏ ஸர்வ சேஷியானவனே பிரமன் முதலிய சகலஜீவன்களுக்கும் கரண களேபரங்களைக் கொடுத்து குறை தீர்த்து அருளிய
ஸ்வ பாவமாய் ஸூஹ்ருத்தான உன் விஷயத்தில் ஸ்துதி பண்ண வல்லராம் படி
உன் அன்பரைச் செய்வதற்காக உனக்கு யுண்டான வாற் ஸலீயம் ஓர் ஆச்சர்யம் ஆகுமோ-

—————-

ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

விந்தையாய் இயற்கையாம் உன் விதப்புறு நாயகத்தை
எந்த மா வைதிகர் தான் பொறுத்திலார் நாரணா நின்
சிந்துவா மஹிமை தன்னில் சிறு துளி யாவர் யன்றோ
நந்தி நான்முகன் வலாரிமுத்தராம் ஏனையோரும் –11-

விதப்பு –அதிசயம் -மிகுதி
வைதிகர் -வேதாந்த ஸாஸ்த்ரம் உணர்ந்தவர்
நந்தி -சிவன்
வலாரி -இந்த்ரன்

நாராயணா -இயற்கையையும் ஆச்சர்யமாயும் உன்னிடத்து அமைந்துள்ள உனது இப்புயர்வு இல்லாத
உபய விபூதி ஸாம்ராஜ்யத்தை -வேதாந்த ஸாரத்தை அறிந்த எவர் தான் பொறுக்க மாட்டார் –
பிரமன் சிவன் இந்திரன் முக்தர் முதலிய இவர்கள் எல்லோரும் கடல் போன்ற உன் மஹிமையில் ஒரு துளியே ஆகின்றார்கள் அன்றோ –

—————

ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

ஆர் திருவுக்கும் திருவாகுபவன் ஆனார் பரம ஸத்வ ஸ்வரூபம் உளனார்
ஆர் மலரும் தாமரையின் கண்ணுடையவன் யாவன் புருஷோத்தமன் எனும் பெயர் உளான்
ஆறுடை ஸ்வரூபம் அதில் ஆயிரத்து ஆயிரம் கோடி பதினாயிரம் அதில்
ஆர் கலையினோர் சிறிய பாகம் அதில் அகில பிரபஞ்சமும் அடங்கி உளதே –12-

திருவுக்கும் திருவாகுபவன் யாவன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் ஒரு சம்பத்தாய் அமைந்துள்ளவன் யாவன்
ஸூத்த ஸத்வ ஸ்வரூபம் யுடையவன் நீ யல்லாமல் வேறே யாவன்
ஸர்வேஸ்வரத்வத்தைக் குறிப்பிக்கும் மலர்ந்த தாமரை போன்ற திருக்கண்களை யுடையவன் வேறு யாவன்
புருஷோத்தமன் என்னும் பெயரை யுடையவன் உன்னிலும் எவன்
சரீர போக்யாதிகளால் அத்யந்தம் வேறு பட்டு இருக்கிற சேதன அசேதன கங்களுடைய வியாபகத்தோடு கூடிய
அகில பிரபஞ்சமும் உன்னை விட மற்று எவனுடைய ஸ்வரூபத்தில்
பலகோடி நூறு ஆயிரங்களின் ஒரு சிறு பங்கில் அடங்கி இருக்கின்றது –

—————–

ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

வேதம் அபகாரம் உறு நாளிலும் குரூர குரு பாதகம் விளை நாளினும்
தீதர அசுரர் செயிட ராதிபல வாப தங்க டீர்த்தருண் மகோத்தம பலன்
போதன் அரனார்க்கு அருள் புரிந்த பரதேவன் எவன் புகலில் யுனை யல்லாது எவன்
பாத மலர் ஆதரவின் பாய் நதி புனல் தன் தலை ஏந்து சிவன் ஏந்து சிவமே –13–

ஆபதம் -ஆபத்து
போதன் -பிரமன்
சிவம் -மங்களம் -நன்மை –

வேதமானது மது கைடபர்களால் அபஹரிக்கப் பட்ட காலத்திலும் –
தனது பிதாவும் குருவுமான பிரமனுடைய தலையைக் கொய்தலால் யுண்டான குரூரமான குரு பாதகம் சிவனுக்கு நேரிட்ட காலத்திலும்
திரிபுர அசுரர் முதலிய அசுரர்களால் யுண்டான பீடையாதி ஆபத்துக்கள் நேரிட்ட காலத்திலும்
அவைகளின் நின்றும் விடுவித்து
தன்னைப் பிரார்த்தித்ததால் லோகத்தில் ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதவியை பிரம ருத்ராதிகளுக்குக் கொடுத்து
அவர்களுக்கு ரக்ஷகனான நீ அன்றி வேறு யார் உள்ளான்
எவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தன் தலை மேல் கொண்டதனால் சிவன் மங்களத்தை அடைந்தான் –

—————–

ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

யார் இறையோன் இறை யுப்பட யண்டம் யடங்கலும் தன் உதரத்து யுடையான்
யார் இத்தலைக்கண் நின்று ஆயினவாகும் அண்டம் அனைத்தும் அளித்து அருள்வான்
யார் அகிலத்தை அளந்து விழுங்கி யுமிழ்ந்தவன் இன்னும் அன்னியனே
யார் பரதந்த்ரம் உற்றுளது அகிலமும் நின் அதலாது இதிலையமுமே –14-

இறையோன் -சிவன்
இறை -பிரமன்
இதலை -கொப்பூழ் –உந்தி

எவனுடைய திரு வயிற்றிலே பிரமன் சிவன் ஆதியரான சகலமும் அடங்கிய இந்தப் பிரபஞ்சம் அடங்கி இருந்தது
இப்பிரபஞ்சமானது வேறு எவனுடைய நாபியில் இருந்து உண்டாயிற்று
இப்பிரபஞ்சத்தை நீ அல்லது எவன் ரக்ஷிக்கின்றான்
உன்னை அல்லால் வேறு எவன் இப்பிரபஞ்சத்தை த்ரிவிக்ரமனாக அளந்து
பிரளய காலத்தில் விழுங்கி மறுபடியும் உமிழ்கின்றவன்
இப்பிரபஞ்சம் உன்னைத் தவிர வேறே எவனுடைய ஸ்வ அதீனத்தில் அடங்கி உள்ளது –
இவைகளைக் குறித்து சந்தேகிக்கவும் கூடுமோ

——————–

ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

உத்தம சீல குணத்தகையால் உருவால் அதி மானுட சரிதைகளால்
சத்துவ சுத்த விபூதியினால் உயர் சாத்து விகத்தினை யுரை மறையால்
தத்துவ மெய்ப்பொருள் யுன்னை யுணர்த்திடு சான்றவர் கொள்ளும் மதங்களினால்
எத்திறன் எனும் உறார் சில தாமஸ இயல்புடையோர் யுனை அறியுமே –15-

உன் உத்தமமான ஸுசீல்ய குணத்தினாலும்
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தினாலும்
அதி மானுஷ சரித்ரங்களினாலும்
அத்யந்தம் ஸ்ரேஷ்டமான சுத்த ஸத்வ யோகத்தினாலும்
ஸாத்விக கல்பத்தில் சொல்லுகிறபடியால் ப்ரபலங்களான ஸாஸ்த்ரங்களினாலும்
ப்ரஸித்தமான தேவதா பாரமார்த்யத்தை அறிந்த பரசாராராதி ஸித்தாந்தங்களினாலும்
உன்னை அறிவதற்கும் கூட ஆஸூர ப்ரப்ருதிகளான சிலருக்கு எவ்வளவேனும் சாத்தியப்படுகிறது இல்லை –

—————

ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

வீத மூன்று அளப்பு விஞ்சி ஒப்புயர் விலா துயர்
நாத மாயையோடு நீ யுன்னாகம் மறைக்கினும்
ஓத யுன்னை அன்றி இல்லன் என்னும் ஓர்தலார் சிலர்
வாதமின்றி என்றும் உள்ள வாறு காண வல்லரே –16-

காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவினாலும் -ஆகிய மூன்று விதங்களினாலும்
இவ்வளவு என்று நிச்சயிக்க முடியாததும் ஒப்பு உயர்வு இல்லாமல் உயர்ந்து இருக்கிற உன் பிரபுத் வத்தை
உன் ஆச்சார்ய சக்தி யோகமாகிற மாயையைக் கொண்டு நீ மறைத்த போதிலும்
உன்னைத்தவிர வேறே ஒரு சேஷியையும் அறியாத மன நிலையை யுடைய சில மகான்கள்
எக்காலத்திலும் அந்தப் பிரபுத்வத்தை உள்ளபடி அறிகின்றார்கள் –

———–

ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

ஆதி யண்டம் யவ்வண்டம் அடங்கிய அகில வத்தும் ஐ இரண்டள வுயர்
மீது சூழும் ஏழு ஆவரணங்களும் விரி குணங்களும் வேற்றுமை அற்றதும்
வேதகத்திய சேதன வர்க்கமும் மேலதான் வைகுண்டமும் நித்தரும்
சோதி யாகு நின் சுந்தர ரூபமும் சொந்தமாம் உன் விபூதிகளாகுமே –16-

வேதகம் -வேறு படுத்தல்

ஆதி காலத்தில் உண்டான அண்டங்களும்
அவ்வண்டங்களில் அடங்கிய அகில வஸ்துக்களும்
பதின் மடங்கு அதிகமான அண்ட ஆவரணங்களும்
ஸத்வாதி குணங்களும்
விகாரப்படாத ப்ரக்ருதியும்
சேதனர்களும்
உயர்ந்த பரமபதமும்
பத்த முக்தர்களிலும் மேலான நித்யர்களும்
ஸூத்த ஸத்வ தேஜஸ்ஸுடன் விளங்கும் உன் திவ்ய மங்கள விக்கிரகமும்
ஆகிய இவை எல்லாம் உனது சேஷ வஸ்துக்கள்

—————

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

மன்னு மிரு வச முகந்து வண்மை வீசி வாய்மையுடன் தூய்மையினை வகித்து அன்பர்க்கே
இன்னமுதாய் ஏனையோருக்கும் சமனாய் என்றும் இளகிய நெஞ்சுடன் அளி கூர்ந்து அவர் தம் வேட்கை
யுன்னி முடித்து அன்னவர் செய் நன்றி நாடி யுகந்து யுதவி யரும் சீல குணவானா நீ
நின்னியல்வாம் கல்யாண குணங்கட்க்கு எல்லா நிகர் அற்ற சுதை யாழி என நின்றாயே –18-

எல்லாவற்றையும் தன் வசமாக்கி நடத்துவதோடு ஆஸ்ரிதர்களுக்குத் தானே வசமாகி நடப்பவனும்
இனிய வசனங்களோடு தன் ஆஸ்ரிதற்குத் தன்னையும் தன்னுடைமையையும் கொடுக்கும் தன்மையை யுடையவனும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அவரது அபராதத்தால் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று தான் வாக்கு அளித்தபடி ரக்ஷிப்பவனும்
நித்ய ஸம்ஸாரிகளை தன் ஸம்பந்தத்தினால் நித்ய ஸூரிகளோடே சேர்க்க வல்ல பரி ஸூத்தன் ஆனவனும்
அவர்கள் அனுபவிக்கத் தக்க போக்யனானவனும்
தன் பெருமையைக் கருதாது தன்னை அடைபவரை சாதி பேதம் பாராட்டாமல் கூடி உறவாடி அவர்களுக்கு சமானமாய் இருப்பவனும்
அவரது பிரிவையும் அவர் படும் துன்பத்தையும் சகியாத இளம் நெஞ்சை யுடையவனும்
கைம்மாறு கருதாமல் அவர்களுக்கு உபகரிக்குமவனும்
அவரது இச்சையை தன் திரு உள்ளத்தில் கொண்டு அதற்குத் தக்கபடி தான் அடைந்து அவர் கார்யத்தைத் தானே அடைபவனும்
அவர்களுக்குத் தான் செய்த பேர் உபகாரத்திற்காக அவர் செய்யும் அல்ப உபகாரத்தையும் பெரிதாக நினைப்பவனுமாகிய நீ
உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள சகல கல்யாண குணங்களுக்கும் இணை இல்லாததான
ஓர் அம்ருத சாகரம் போலே -கரை இல்லாமலும் பரம போக்யமாகவும் ஆகின்றாய் –

——————

ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

கீதம் கிளத்திடும் தேயேசதம் எனும் கிரமத்தில்
போதனின் மென் மேற் புருடர் விதித்து உன் குணம் ஒன்றின்
ஏதமில் எல்லை காணிய விச்சித்து என்றும் உறை
வேத முயற்சி தசையினை யின்னும் விட்டிலதே –19-

வேதத்தில் கூறிய -தே யே சதம் -என்னும் ஒரு கிரமத்தை அனுசந்தித்து உன் அநந்த குணங்களில் ஆனந்த குணமாகிய ஒன்றினுடைய
எல்லையைக் காணும் பொருட்டு வேதங்கள் பிரம்மாவை மனுஷ்ய கோடிகளில் ஒன்றாய் நிறுத்தி அவனுக்கு மேன்மேல்
ப்ரம்மா வரையில் புருஷர்களைக் கற்பித்து அதில் ஒவ்வொருவருடைய ஆனந்த குணமும் நூறு நூறு மடங்கு
அதிகம் எனக் கணக்கிட்டுச் சொல்லியும் கடைசியில் அந்த உன் ஆனந்த குணத்தின் எல்லையைக் காண
மாட்டாமல் இன்றும் காணும் ப்ரயத்னத்தில் நின்றும் மீள வில்லையே –

——————-

ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

உனை யடுப்போர்க்கு உண்டாக்கல் உலகம் எல்லாம் அளித்து ஒழித்தல்
வினை யுறும் ஸம்ஸாரத்தின் விமோசனம் அடைதல் என்னும்
அனையவும் லீலையாகும் அன்னவர் தம் கம்பீர
மனதினை அநுசரிக்கும் மா மறை விதி கண் மாதோ –20-

இவ்வுலகங்களை எல்லாம் உண்டாக்குதல்
ரஷித்தல் -அழித்தல் -முதலான தொழில்களும்
ஸம்ஸார விமோசனம் அடைதல் முதலிய மற்ற சகலமும்
உன் ஆஸ்ரிதர் விஷயத்தில் லீலைகளாக்கி அவர் நிமித்தமாகவே உண்டாய் இருக்கின்றன
வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளும் உன்னை ஆஸ்ரயித்த அநந்ய ப்ரயோஜனருடைய கம்பீரமான மனஸ்ஸை அனுசரிக்கின்றன –

————-

ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

நெஞ்சுடன் வாக்கினை மீறியதாகு நினைப் பணிவேன் பணிவேன்
நெஞ்சுடன் வாக்கு அதினுக்கு இடமாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சும் அநந்த விபூதியனாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சு மஹா தயை வேலையனாகு நினைப் பணிவேன் பணிவேன் –21-

ஞானத்தில் மிக்கோர் ஆயினும் தம்முடைய பிரயத்தனத்தால் அறிய நினைக்கில் –
அவரது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவனான உன்னைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன்
உன் கிருபையால் நீ காட்டி அருள -அந்தக் காரணத்தால் உன்னைக் காண்பவருடைய வாக்கிற்கும் மனதுக்கும்
விஷயமான வுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
அநேகங்களான மகத்தான உபய விபூதியை யுடையனான யுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
வாக்கினுக்கும் மனசுக்கும் விஷயமாகிய பரம தயா சக்கரமான உன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்

—————-

ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

நிலை பெறக் கரும நிடடை நின்றிலேன் ஞானம் இல்லேன்
மலரடி இணையைப் பற்றும் அன்பினை வகித்தேன் அல்லேன்
இலை சரண்யனும் வேறு சாதனமும் ஒன்றும் இல்லேன்
தலைவ நின் பாத மூலம் சரண் எனப் பற்றுவேனே –22-

உன் திருவடிகளை அடைந்து நிலை பெறுவதற்கு அவஸ்யமான கர்ம யோகத்தில் நிஷ்டை யுடையேன் அல்லேன்
ஞான யோகமும் யுடையேன் அல்லேன்
உன் திருவடித் தாமரைகளில் பக்தி யுடையவனும் அல்லேன்
இவைகள் இல்லை என்று அனுதாபம் யுண்டாவதற்கு ஏற்ற ஆத்ம குணம் யுடையேனும் அல்லேன்
ஏ ஸர்வ சரண்யனான ஸ்வாமியே -விரோதி நிவர்த்தக பூர்வகமாக கைங்கர்ய ப்ராப்திக்கு உபாயமாக உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகிறேன் –

——————

ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

பலமுறை யான் இயற்றா பாதக் கணங்கள் தம்முள்
உலகினில் ஒன்றும் இல்லை யுறு பலன் எனை வதைப்ப
நிலை குலைந்து ஏங்கி வேறு கதியிலேனாகி நின் முன்
கலியுடன் முகுந்த வின்றுக் கதறியே கரைகின்றேனே –23-

பலதடவைகளில் என்னால் பண்ணப்படாத மஹா பாதகக் கணங்களுள் ஒன்றேனும் இவ்வுலகின் கண் இல்லை
ஏ முகுந்த அப்பாவங்கள் பக்வ தசையை அடைந்து பலத்தை எனக்கு விளைவிக்க
இதை அனுபவித்து உழன்று நிலை குலைந்து ஏங்கி வேறே கதி ஒன்றும் இலேயேனாய்
உன் முன்பு இப்பொழுது கதறிக் கரைகின்றேன் –

—————-

ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

பவம் என்னும் பரவை தன்னுள் பகவ நீடு ஊழியாகக்
கவலையோடே அழுந்தும் எற்கு ஓர் கரையென யகப்பட்டாய் காண்
உவமையில் யுன் தயைக்கோர் யுத்தமே யுரிமை பூண்ட
வவலமார் இதுவும் உன்னால் அடை தலைப் பெற்றது இன்றே –24-

அநேக ஊழிகளாக ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் கவலையோடு கூடி அழுந்தி
வேறு பரிகாரம் அறியாத எனக்கு ஒரு கரை போலே நீ அகப்பட்டாய்
இது எங்கனம் இருக்க -ஏ ஸ்வாமியே
உன்னுடைய இணை இல்லாத தயைக்கு உத்தம உத்தமமான ஒரு விஷயமாக
இந்த அவல வஸ்துவும் உன்னால் இப்பொழுது அடையப் பெற்றது –

—————–

ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

இதுவரை யான் படாத இடர் எனக்கு இனி ஓன்று உண்டோ
எதையும் நான் சகிப்பன் துக்கம் இயற்கையே எனக்கானால் யுன்
பதமுறச் சரண் அடைந்தோர் பரிபவப் படில் யுன் முன்னர்
அது உனக்கு இணக்கம் அன்றே நாத எவ்விதத்தும் அந்தோ -25-

இதுவரையும் நான் அனுபவியாத சங்கடங்களில் இனி நான் அனுபவிக்கும்படி நேரிடக்கூடிய சங்கடம் ஓன்று யுண்டோ
எதையும் நான் சகிப்பன்
காமியான எனக்கு கர்ம பலமான துக்கங்கள் ஸஹஜமே
ஆனால் ஓன்று யுண்டு -ஏ ஸர்வேஸ்வரனே
உன் முன்பே உன் திருவடிகளிலே சரணம் அடைந்தோர் பரிபவப் பட்டால் அப்பரிபவம் உனக்கு எவ்விதத்திலும் தகுதி அன்று –

—————

ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

என்னை நீ நூக்கினாலும் ஈசனே கமலம் அன்ன
யுன்னடி ஒருக்கணத்து நீத்து நான் உய்ய மாட்டேன்
என்னையே முனிந்து நூக்கின் அவள் முலைப்பால் என்றும்
மன்னியா யடியைப் பற்றா ததை விட மனமுறாதே –26-

ஆஸ்ரித ரக்ஷணத்தையே ஸ்வரூபகமாக உடைய நீ என்னை கிருபை பண்ணாமல் தள்ளிவிட்ட போதிலும்
உன் திருவடிகளை ஒரு க்ஷணமேனும் விட்டு விட்டு உஜ்ஜீவிக்க சமர்த்தன் அல்லேன்
ஏ ஸர்வேஸ்வரனே ஸ்தன்யமே தாரகமாக யுடைய ஒரு சிசுவானது கோபம் கொண்ட தன் மாதாவால் தள்ளப்பட்ட போதிலும்
தன்னை ஆதரித்த காலத்தில் போலே அவளைக் காலைக் கட்டிக் கொள்ளுமே அன்றி அதை விட்டுவிட விரும்பாதது அன்றோ –

—————-

ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

நின்னருள் தன்னால் அமுதினைப் பொழியும் அம்புயத்தாள் களின் நிலையாய்
மன்னிய மனதும் உன்னையே யன்றி மற்றதை நாடல் எங்கனமாம்
தன்னுயிர்க்கு அரிய மதுவினை நிரம்பத் தாமரை கொண்டு அலர்ந்திருப்பப்
பின்னும் உள்ளியினைப் பிரமரம் கண்ணால் நோக்கவும் நோக்கிடாது அன்றோ -27-

உனது தேனே மலர்ந்த திருவடித்தாமரைகளில் உன் நிர்ஹேதுக கிருபையாலே நிலையாகச் செலுத்தப்பட்ட
மனஸ்ஸானது உன்னைத் தவிர வேறு விஷயத்தை எப்படி இச்சிக்கக் கூடும்
தேனை நிரம்பக் கொண்டு தாமரைப் புஷ்பமானது மலர்ந்து இருப்ப தேனையே யுண்டு ஜீவிக்கும் வண்டானது
அதை விட்டு விட்டு நெருங்கிச் செல்லவே ஸ்ரமமாயும் ஸ்ரமப்பட்டு நெருங்கினும் அற்பமான தேனை யுடையதுமான
முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பாராது அன்றோ –

—————

ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

ஒருமுறை யுனது திருவடி இணையை யுன்னியே எப்பொழுதேனும்
இரு கரம் கூப்பி எத்திறத்தவர் தாமேனும் எவ்விதமாயேனும்
புரியும் அஞ்சலி அப்பொழுது இனித்தானே இடர் எல்லாம் மாயமாய்ப் போக்கித்
தரும் அரும் சுபர்கள் சகலமும் என்றும் தான் குறை ஒன்றும் இல்லாதே –28-

ஸர்வ ஸுலபமானதும் -அதி போக்யமானதுமான யுன் திருவடிகளை உத்தேசித்து எப்பொழுதாவது
இச்சை பிறந்த போது -ஜாதியாதி நியமம் இல்லாமல் எவரேனும்
முறை யாவது -நியமமாவது -பல அபேக்ஷையாவது -யாது ஒன்றும் இல்லாமல் எவ்விதமாயாவது
எந்நாளும் செய்ய வேண்டியது இல்லாமல் ஏதோ ஒரு தடவை இரு கரம் கூப்பிச் செய்யும் அஞ்சலியானது
அப்பொழுதே எல்லாப் பாவங்களையும் ஒரு குவியலாகக் களவு போனது போலே சென்ற வழி தெரியா வண்ணம் மாயமாய்ப் போக்கி
இவ்வளவு செய்தும் என்றும் தனக்கு ஒரு குறைவும் இல்லாமல் பிரபத்தி ஞானம் முதலிய ஸகல சம்பத்துக்களையும் விருத்தி பண்ணித் தரும் –

—————–

ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

செந்தழல் இட்டுச் சீறும் பவம் என்னும் காட்டுத் தீயை
முந்தியோர் கணத்து அவித்து முடிவிலா அநந்த மீயும்
சந்தமார் யுனது செந்தாமரை இணைத்தாளின் அன்பாம்
அந்தமா அமுத வாரித் திவலையில் ஓன்று தானே –29-

உன்னுடைய அழகான செந்தாமரைத் திருவடிகளின் மீது வைத்துள்ள கைங்கர்ய உபகரணமான பக்தியாகிற அந்த
அமுதக் கடலின் ஒரு திவலை யானது செந்தழல் இட்டு மேலே கிளம்பிச் சீறி எரிகிற ஸம்ஸாரம் ஆகிற காட்டுத்தீயை ஒரு ஷணத்திலே அவித்து
அத்யுன்னதமான மோக்ஷ அனுபவ ஆனந்தத்தையும் கொடுக்கிறது –

—————-

ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

விண்ணவராதி மண்ணோர் யுலகெலாமே அளந்து
நண்ணு நரார்த்தியாவு நசித்தலே தொழிலாய் நின்றேன்
எண்ணரும் தனமாம் யுன் தன் அம்புயத்தாளை இந்தக்
கண்ணினால் கண்டு நானே களிக்கும் நாள் என்னாளோ — 30-

திரி விக்ரம அவதாரத்தில் ஸர்வ லோகங்களையும் அளந்ததும்
ஆஸ்ரிதர்களுடைய ஸ்ரமங்களைப் போக்குவதில் தாமே மேல் விழுந்து ஸமயம் பார்த்துக் கொண்டு இருப்பதும்
எனக்கு எண்ணுதற்கு அரிதான ஒரு நிதியாயும் உள்ள உன் திருவடித் தாமரைகளை
என் கண்களால் கண்டு நான் களிக்கும் நாள் எந்த நாளோ
எப்போது கண்டு களிக்கப் போகின்றேனோ –

———————

ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

சங்கு சக்கரத்தினோடு ஸரோருகம் த்வஜம் சார்ந்த
வங்குசம் வயிரம் கற்ப தரு முதலாகும் சின்னம்
தங்கு நின் தாமரைத் தாள் விக்ரம என் சிரத்தைப்
பொங்கும் என் மனம் களிப்பப் புனையும் நாள் எந்த நாளோ –31-

எல்லாருடைய சிரஸ்ஸுக்களிலும் உன் திருவடியை அமர்த்தி அருளிய ஏ த்ரி விக்ரமனே
சங்கம் சக்கரம் பத்மம் த்வஜம் அங்குசம் வஜ்ரம் கற்பம் இவை முதலியவற்றின் உபய விபூதி சாம்ராஜ்யத்தை
குறிக்கின்ற திவ்ய ரேகைகளையுடைய உன் திருவடிகள் என் மனம் பொங்கிக் களிக்குமாறு
எப்பொழுது என் சிரஸ்ஸை அலங்கரிக்கப் போகின்றவோ –

—————–

ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

விந்தையுடன் திருவரை யது பூத்தது எனச் சுடர் வீசு பொன் அம்பரமும்
அந்தமுடன் அலர் காயாம்பூ நிற வாசறு மேனியும் யுன்னதமும்
சுந்தர வாழி சுழன்றது எனச் சுழற் ஆழ்ந்திடும் உந்தியும் சிற்றிடையும்
சந்தமுடன் தட மார்வம் விளங்குவதாம் மறு ஓன்று தரிப்பவனாய் –32-

திருவரையே பூத்தது என்று சொல்லும்படி வெகு ஆச்சர்யமாயும் அழகாயும் ப்ரகாசிக்கும் பீதாம்பரத்தையும்
அலர்ந்த காயாம்பூவைப் போன்ற நிர்மலமான திரு மேனியையும்
அழகு என்னும் கடலில் சுழல் யுண்டாக்கியது என்னும் படி அழுத்திச் சுழல் கொண்ட திரு நாபி கமலத்தையும்
சிற்று இடையையும் விசால மார்வில் பொலிவுடன் விளங்குகின்ற ஸ்ரீ வத்ஸம் என்னும் ஒரு மறுவையும் தரித்து உன்னதமாய்ப் ப்ரகாசிப்பவனாய் –

————

ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

பத்த விரோதிகள் பட்டற வேந்து வில் நாணியின் சுவடு படிந்து உளவா
யுத்தம புருட விலக்ஷண முற்று முழந்தளவாய்ச் சுப ஸூசிகையாய்
அத்திருவின் செவி யலர் மலர் உத்பலமும் இழையும் மவிழ் பின்னகமும்
ஒத்தி யுறுத்தியது என்ன ஒளிர் தரு மென்மையில் நான்கு புயத்தவனாய் –33-

ஆஸ்ரித விரோதிகளைக் களையும் பொருட்டு தரித்த சார்ங்கத்தின் நாணினால் யுண்டான தழும்பு படிந்துள்ளவனாய்
உத்தம புருஷ லக்ஷணமாக முழங்கால் வரைக்கும் நீண்டவனாய் பக்தர்களுக்கு மங்கள கரமானவையாய்
அந்த மஹா லஷ்மியினுடைய திருச்செவி மலரான உத்பலமும் கரண ஆபரணங்களும்
அவிழ்ந்து இருக்கும் திருக் குழல் கற்றையும் ஆகிய இவைகள் உறுத்தினது தோற்றும்படி ப்ரகாசிக்கும்
மிருதுவான நான்கு திருத் தோள்களையும் யுடையவனாய்

————-

ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

பருத்து உயர்வான திருப்புய மட்டும் படிந்து இழி குண்டலமும் குழலும்
இருத்தலின் ஓர் எழில் ஏந்து இலங்கும் இடம் புரி போல் ஒளிர் கண்டம் அதும்
தரித்ததுவும் ஓர் அழகோ என நின்மல பூர்ண சந்த்ரனார் ஒளியும்
திருத்துவதா மலர் மரை எழிலும் மிகு திரு முக மண்டல சோதியனாய் –34-

பருத்து உயர்ந்த திருத்தோள்கள் மட்டும் தாழ்ந்து தொங்குகின்ற குண்டலங்களாலும் குழல்களாலும்
பொலிந்து விளங்குகின்ற சங்கம் போன்ற அழகான திருக் கழுத்துடன்
தன் காந்தியினாலே கலைகளால் நிறைந்தும் நிர்மலமுமான பூர்ண சந்திரனுடைய ஒளியும்
அப்போது மலர்ந்த தாமரைப் புஷ்பமும் படைத்துள்ள அழகும்
ஒரு அழகோ எனத் தோற்பிக்கும் பேர் அழகு வாய்ந்த திரு முக மண்டலத்துடன் ஜ்வலித்துப் பிரகாசிக்கும் ஒரு ஜோதி யானவனாய் –

————-

ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

சீரலர் செவ்விய தாமரை போன்ற திருக்கண் இணைகள் அமர்ந்தவனாய்
நேரியதாம் யடியார்க்கு அருள் தோன்ற நெரித்து உளவாம் புருவத்தனனாய்
ஏர் ஆதரத்துடன் இலகு கபோலமும் இன் முறுவல் உயர் நாசிகையும்
காரின் இருண்டு சுருண்டு நுதல் வரைக் கவினுற வீழ் அளகத்தனனாய் –35-

சிறப்புடன் மலர்ந்த செந்தாமரை மலர் போன்ற சுந்தரமான திருக்கண்களை யுடையவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் தன் ஆதரவு எல்லாம் தோற்றும்படி நெறித்து இருக்கும் புருவத்தை யுடையவனாய்
அழகான திரு அதரத்துடன் தாவள்யமான திரு முறுவலுடன் கோமளங்களான கபோலங்களுடனும்
உயர்ந்த திரு நாசிகை யுடனும் -மேகம் போல் இருண்டு நெற்றி வரையில் தாழ்ந்து சுருண்டு இருக்கும் திருக் குழல்களுடன் விளங்குபவனாய்

——————

ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

தேசமரும் திரு முடியனோர் மௌலியும் அங்கத ஆரமும் கண்டிகையும்
காசில் ஒளி தரு கௌத்துவமும் அரை நாணுடன் நூபுரம் முதலியவும்
மாசுகம் ஆர் தனு வாழி வளைக் கதை வாள் முதலாகிய ஆயுதமும்
வாச நறும் துளவத் தழகாம் வன மாலையுடன் விரி தேசனுமாய் –36-

ஜோதி மயமான திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் -தோள் வளைகள் -முத்துத் திருக்கட்டு வடம்
மாசு மறு இன்றிப் ப்ரகாசிக்கும் ரத்ன ஸ்ரேஷ்டமான கௌஸ்துபம்
அரை நூல் பட்டிகை திருச் சிலம்புகள் முதலான திவ்ய ஆபரணங்களால்
திருவாழி திருச்சங்கு வாள் கதாயுதம் சார்ங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களாலும்
வாசனை வீசும் திருத்துழாயாலே அழகு வாய்ந்த வனமாலையாலும் பிரகாசிப்பவனாய் –

—————-

ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

உன் அழகான யுரம் தனை உன் பிரியைக்கு உறை மாளிகையாய் யுதவி
அன்னவனுடன் ஒன்றிய ஆழி யுனக்கு இனிது அமரும் இருப்பிடமாய் அருளி
மன்னும் இவ்வுபய விபூதி யினுள் பவம் ஆர்ந்திடும் அந்த கடாக்ஷம் உறும்
பொன்னை யடை குபு புணரி கடைந்து அணை கட்டி யுகந்து பொலிந்தவனாய் –37-

உன் அழகான திரு மார்பை உன் ப்ரியையான பெரிய பிராட்டியார் உறைவதற்குத் தக்க ஒரு மாளிகையாகக் கொடுத்து
அந்நாள் அவதரித்த ஷீராப்தியை உனக்கு இனிதாக அமரும் இருப்பிடமாய்க் கொண்டு
இவ்வுபாய விபூதியும் கடைக்கண் பார்வையாக-கடாக்ஷம் யுடைய அந்தப் பிராட்டியாரைப் பெறுவதற்காக கடலைக் கடைந்தும்
பின்பு ஒரு கால் திரு அணை கட்டியும் உக்காந்து திகழ்ந்து அருளியவனாய் –

————

ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

நின்னிட சேர்த்தி நிரந்தரமாய்ப் பல வடிவிலும் செவ்வி நிலை பெறினும்
அன்ன வணிக்கு ஓர் அபூர்வமாகிய ஆச்சார்யத்தை விளைப்பவளாய்
தன் நிகரில் வடிவாலும் தகைமையினாலும் விலாஸ விதங்களிலும்
உன் ஒருவருக்கே யுரியவளாகும் உன் நித்ய ஸம்பத்து உறுபவனாய் –38-

ஸர்வ சக்தனான உன்னுடைய எல்லா விக்ரகத்தாலும் ஸர்வ காலத்தும் உன்னால் அனுபவிக்கப் பட்டு இருந்தும்
நித்யம் அபூர்வமான ஆச்சர்யத்தை யுனக்கு யுண்டாக்குபவளாய்
நிகரில்லாத உன் வடிவு அழகாலும் சீலாதி குணங்களாலும் திரு விளையாட்டுக்களினாலும்
பர வ்யூஹ விபவ விபவாதி எல்லா அவஸரங்களிலும் உனக்கே உரியவளாய் விளங்கும் அந்த மஹா லஷ்மியை
உன் நித்ய சம்பத்தாய்க் கொண்டான் இலங்குபவனாய்

—————-

ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

உத்தம ஞான பலன்கள் தமக்கு ஒரு உறைவிடமாக நிலைத்து அவனும்
துத்தி யுடைப் பணம் ஏந்தும் ரத்னம் எங்கும் துலங்கும் ஓர் சோதியுடன்
மத்தி யமாம் உதரத்தை ஓர் அத்புத மாளிகையாக வகிப்பவனும்
பத்தனுமான அநந்தன் அணை மிசை பத்தினியோடு உறைகின்றவனாய் –39-

உத்தமமான ஞான சக்திகளுக்கு ஒரு இருப்பிடமாக நிலை பெற்றவனும் பொறிகளை யுடைய படங்களை ஏந்தும்
தன் சிரோ ரத்னங்களின் காந்தியினால் பிரகாசிக்கின்ற தன் உத்தரத்தின் மத்திய பிரதேசத்தை
ஒரு திவ்ய அந்தப்புரமாக வகிப்பவனும் பரம பக்தனுமான திரு அநந்த ஆழ்வான் மடியிலே பத்தினியாக பெரிய பிராட்டியாரோடு வீற்று இருப்பவனாய் –

—————–

ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

வாஸம் யுனக்கு ஒரு மாளிகையும் உபாதானமும் பள்ளியும் அஞ்சுகமும்
ஆசனமும் மணி பாதுகையும் மழை யாதவர்க்கு அரணாதி பல
பேச அரிதாம் உபச்சார விசித்ர பேத சரீர விதங்களினால்
தேசுறும் சான்றவரால் உசிதப்படி சேஷன் எனப்படுவோன் மிசையே –40-

நீ நிவாஸம் பண்ணுவதற்காக ஒரு திரு மாளிகையாயும்
சயனத்திற்காகப் படுக்கையாயும் தலையணை யாகவும்
ஸிம்மாஸனமாகியும் மரவடியாகவும்
மழை வெயில் இத்யாதிகளை போக்க ஒரு குடையாகவும்
இவை முதலாக இன்னும் அநேக கைங்கர்ய பேதங்களுக்குத் தக்கபடி தன் சரீர பேதங்களினால் உன்னுடைய சேஷத்வத்தை அடைந்து இருப்பதனால்
உசிதப்படி நித்ய ஸூரிகளால் சேஷன் என்று சொல்லப்படும் அந்த திரு வந்த ஆழ்வான் மீது வீற்று இருப்பவனுமாய் –

————-

ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

நண்ணு நினக்கு ஒரு தாசனும் நண்பனும் வாகனமும் மரி யாசனமும்
திண்ணம் உறத் திகழும் கொடியும் விரி சாரமும் ஓர் விதானமுமாய்
எண்ணின் மறை வடிவானவனாய் அடி இணைகள் இறுத்தும் தழும்பு இலகிய
ஒண்ணும் உனக்கு எதிர் நின்று பணிந்திடும் உத்தமன் கலுழன் உகந்தவனாய் –41–

உனக்கு தாஸனும் தோழனும் வாகனமும் ஸிம்ஹாஸனமும் கொடியும் மேற் கட்டியும்
திருவால வட்டமும் ஆகின்றவனும் உன்னுடைய திருவடிகள் நெருங்குவதால் உண்டாகிய
தழும்பின் அடையாளத்தாலே சோபிக்கிறவனும்
வேத ஸ்வரூபியுமான பெரிய திருவடியாலே உன் முன் நிலைக்கண்ணாடி போல் நின்று கொண்டு சேவிக்கப் படுகின்றவனாய் –

————–

ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

நித்தமும் நீ யமுதுண்ட பின் நின்றதை நிகர் இலதாம் ப்ரஸாதம் எனா
பத்தி மகிழ்ந்து அதை யுண்பவனும் நினது ஆணையினால் செக பாரம் எல்லாம்
சித்திரமாய் சிரம் ஏந்தி நடத்து நின் நண்பனுமாம் சேனா பதியின்
வித்தகமாம் பணிவிடைகள் உகந்து அவன் வேண்டியவாறு பணிப்பவனாய் –42–

பிரதி தினமும் அமுது செய்த பிற்பாடு சேஷமாய் நின்றதை பரம உத்தமமான ப்ரஸாதமாக மதித்து மன மகிழ்ச்சியுடன்
அதைப் புஜிப்பவனும் உன் நியமனப்படி ஜகத்தின் -உபய விபூதியின் -பாரத்தை எல்லாம் தன் சிரஸ்ஸில் வஹித்து விசித்ரமாய் நடத்துபவனும் உனக்கு இஷ்டனுமான ஸேனாபதி ஆழ்வான்
செய்யும் பணிவிடைகளை உகந்து அவன் செய்யும் விண்ணப்பத்திற்கு அநு குணமாகவே அவனுக்கு கட்டளைகள் இடுபவனாய் –

—————

ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

துன்ப மலங்கள் அனைத்தையும் நீத்து நின் தூய மலர்த் திருவடி இணையில்
இன்பம் இயற்கையில் ஊட்டுவதாம் பணிவிடைகளில் போக்யம் உற்றவராய்
யன்புடன் இற்கு உபசாரம் இழைத்திட வாயின ஸாதனம் ஏந்தினராய்ப்
பொன் புரை நித்தியர் நின்னை யதோ உசிதம் போற்ற மகிழ்வுடன் பொலிபவனாய் –43-

துன்பத்தைத் தரக்கூடிய -அவித்யை முதலான குற்றங்கள் ஒன்றும் இல்லாதவராய்
மகா பரிசுத்தமாகிய உன் திருவடிகளில் கைங்கர்யங்களையே இயற்கையாக எக்காலத்தும் போக்யமாக எண்ணுபவராய்
பரம ப்ரேமத்துடன் உனக்கு உபசாரம் செய்யும் பொருட்டு அந்தவந்த கைங்கர்ய உப கரணங்களான சத்ர சாமராதிகளைத் தரித்துக் கொண்டு இருப்பவராய் உள்ள அந்த நித்ய ஸூரிகள் உன்னை ஸ்வரூப அனுரூபமாக சேவிக்க அதனால் மன மகிழ்ச்சி கொண்டு பிரகாசிப்பவனாய்

————–

ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

பற்பலவாகும் அபூர்வ பாவ ரசங்கள் பணித்து நிறைப் பதினாறு
கல்பம் அநேகம் அடங்கிய காலம் அதும் கண லேஸம் எனக் கழியப்
பொற்புடன் சாதுரியம் பல பூண்டு விளங்கு விலாஸ வகைகளினால்
அற்புதம் என்று உனது அன்பினள் மெச்சி யணைக்கு மகா புயம் உற்றவனாய் –44-

இதற்கு முன் என்றும் கண்டு அறியாதன போன்று வெகு விதங்களாய் ஸ்ருங்கார உத்ஸஹாதி ரசங்களால் அதிகமாய் விருத்தி அடைந்து இருப்பதால்
பரம்பரார்த்தம் என்னும் கற்பகங்கள் அடங்கிய காலமானது ஒரு க்ஷணம் போலே கழிந்து கொண்டு இருக்க
வெகு சாதுர்யம் பூண்டு அழகாய் அமைந்துள்ள லீலைகளினால் பெரிய பிராட்டியார் அற்புதம் என்று மெச்சி அணைத்துக் கொள்ளும் பெரிய திருத்தோள்களை யுடையவனாய்

—————

ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

நெஞ்சில் நினைக்க அரிதாகிய அற்புத நித்ய யவ்வன நீர்மையனாய்
விஞ்சும் எழில் மயமாய் அமுதக் கடலாய் விமலைக்கும் ஓர் சுப கரனாய்
தஞ்சம் அடைபவர்க்கு ஒரு தாரக போஷக போக்ய சதுரனுமாய்
நஞ்சின் விதத்திலும் நண்பனுமாய் வர நாடுபவர்க்கு ஒரு கற்பகமாய் –45–

மனத்தால் எண்ணுதற்கு அரிதாகி வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுவதான நித்ய யவ்வனத்தை இயற்கையாக யுடையவனாய்
லாவண்யம் நிறைந்து அமுதக்கடல் போன்றவனாய் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் மங்கள கரனாய்
தன்னை அடையும் ஆஸ்ரிதற்கு தாரக போஷக போக்யனாய்
தன் ஆஸ்ரிதர் அனுபவிக்கும் பொருட்டு தன்னையே கொடுக்க ஸாமர்த்யம் யுடையவனாய்
எந்த ஆபத்தில் நின்றும் ரக்ஷிக்க தோழன் போன்றவனாய்
யாசிப்பவர்க்குக் கொடுக்கும் விஷயத்தில் ஒரு கற்பக வ்ருக்ஷம் போன்றவனாய் –

——————-

ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

நின்று நிறை நினையே யனுவர்த்தனம் என்றும் இயற்றி நினை ஒழி மற்று
ஒன்றிலும் இச்சை லேசமும் ஒன்ற விடாமல் ஒழித்து ஒரு நியதம் உடன்
என்றும் உன் நித்ய கைங்கர்யங்களை ஏந்தும் ஓர் சத்துடை வாழ்க்கையனாய்
நன்றென நிற்கு மகிழ்ச்சி விளைப்பதை நானும் வகித்தல் எஞ்ஞான்று கொலோ –46-

இத்யாதி ஸ்வரூப ரூப குண விபவங்களால் நிறைந்த உன்னையே இடைவிடாது என்றும் அனுவர்த்தித்துக் கொண்டு
உன்னைத்தவிர மற்ற விஷயங்களில் மநோ வியாபாரங்களை முற்றவும் தவிர்த்தவனாய்
இந்த ஆத்ம ஸ்வ பாவமுள்ள காலம் அத்தனையும் திடமான மனத்துடன் உனக்கு நித்ய கைங்கர்யங்களையே
செய்து கொண்டு சபலமான சத்தை யுடைய வாழ்க்கை யுள்ளவனாய் உன்னை நான் உகப்பிக்கும் நாள் எப்பொழுது வருமோ –

———————

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.

பத்துடை யோகிகளுக்குள் முதன்மைப்படும் அயன் அரன் ஸநகாதிகளாலும்
எத்துணை எண்ணுதலுக்கு மிகக்கும் வெகு துலை யுறு நின் பணிவிடை தன்னை
நத்துவன் காம விருத்தி யனேனான் நசை யுறு மசுசியன் விநயம் இலாதேன்
உத்தம புருட விலச்சை யொடச்சம் ஒழித்த வெனக்குறு மிழிவசையாமே –46-

ஏ புருஷோத்தம பரம யோகிகளுக்குள் முதன்மை பட்ட பிரமன் சிவன் ஸநகாதியர் முதலானவர்களாலும்
நினைப்பதற்கும் எட்டாத
வெகு தூரத்தில் உள்ள உன்னுடைய கைங்கர்யங்களை சரீர சம்பந்தத்தினால் அபரிசுத்தனனும்
ஆச்சார்ய முகமாக சிஷிக்கப்படாதவனும் காம விருத்தியை யுடையவனுமான நான் அபேக்ஷிக்கத் துணிந்தேன்
இப்படி பயத்தை ஒழித்து வெட்கத்தை விட்டுத் துணிந்த எனக்கு நிந்தையே தகும்

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எண்ணிலா அபராதங்கட்க்கு இருப்பிடமாகி நானே
பண்ணிய வினையின் கோரப் பவக்கடல் நடுவில் வீழ்ந்தே
திண்ணமுற்ற கதியேனாய்ச் சேவடி யடைந்த என்னை
கண்ண நின் கருணை ஒன்றே கொண்டு உகந்து அருளுவாயே –48-

எண்ணுக்கு வராத ஆயிரக்கணக்கான அபராதங்களுக்கு இருப்பிடமாகி
நான் பண்ணிய பாவத்தின் பலனாக விளைந்த கோரமான ஸம்ஸார சாகரத்தின் நடுவில் விழுந்து தடுமாறி
உன்னைத் தவிர வேறு கதி இல்லேனாய் உன்னை உறுதியுடன் சரண் அடைந்த என்னை
அருள் நிறைந்த திருக் கண்களை யுடைய நீ கடாக்ஷித்து
உன் நிர்ஹேதுக கிருபையாலே உன்னுடையவன் என்று அங்கீ கரித்து அருள வேணும்

————–

ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

அடா விவேக மேகப் படலம் எத்திசையும் மூடி
இடை விடாது இடும்பை மாரி பலவிதம் சொரியும் இந்தப்
படு பவ துர்த்தி நத்தில் பதம் ஒழிந்து ஏங்கி நிற்கும்
கடையனைக் கடைக் கணிப்பாய் அச்யுத பகவானேயோ –49-

துர் தினம் -கொடிய தினம் -ஸூர்ய தர்சனம் இல்லாத தினம்

அவி விவேகம் ஆகிற மேகங்கள் எல்லாத் திக்குகளையும் மூடிக் கொண்டு பலவிதமாக இடைவிடாமல்
துக்கங்களை வர்ஷிக்கிற இந்த ஸம்ஸாரம் ஆகிற துற தினத்தில் சரியான வழியின் நின்றும்
நழுவி ஏக்கம் கொண்டு நிற்கும் கடையனான என்னை ஏ பகவானே
ஆஸ்ரிதரை நழுவ விடாதவனே -கடாக்ஷித்து அருள வேண்டும்

—————–

ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

வஞ்சனை அன்று நாத வாய்மையே யான் வழங்கும்
செஞ்சொலில் இவ்விண்ணப்பம் செவியில் நீ முன்னம் ஏற்பாய்
தஞ்சமாய் அடைந்த என்னைத் தயை யுறாது ஒழிகில் அந்தோ
விஞ்சும் உன் தயைக்குத் தக்க விஷயம் மற்று அரியதாமே –50-

ஏ ஸர்வ சேஷியே -அடியேன் செய்யும் இவ்விண்ணப்பம் பொய்யன்று -உண்மையே ‘
இத்தை முன்னம் நீ திருச்செவி சாய்த்து அருள வேணும்
தஞ்சமாக அடைந்த என்னை நீ தயை பண்ணாது ஒழிவாயாயின்
உனக்குத் தயை பண்ணி ரக்ஷிக்கத் தக்க வஸ்து கிடைப்பது துர்லபம்

——————

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

எனக்கும் ஓர் நாதனில்லை நின்னை விட்டு என்னை அன்றி
யுனக்கியல் பாந்தயைக்கும் உரிமை யோர் ஒருவரும் இல்லை
தனித்த நின் தயையினால் எம் இருவர் இனி இவ்விணக்க
மனத்தினில் கொண்டு அருள்வாய் மாதவ கை விடாமே –51-

எனக்கும் உன்னை விட ஒரு நாதனும் இல்லை
இயல்பாக அமைந்து இருக்கும் உன்னுடைய தயைக்கும் என்னை விட உரிமை பூண்டவர் வேறே ஒருவரும் இல்லை
ஆகையால் ஏ மாதவ உன் கிருபையினால் ஏற்பட்டு இருக்கும் இந்த சம்பந்தத்தைத் திரு உள்ளம் கொண்டு
அடியேனைக் கை விடாது ரக்ஷித்து அருள வேண்டும் –

—————–

ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப் பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.

உடன் முதலாய வற்றுள் உற்றதி யாவனேனும்
படிகளின் பல விதத்தில் எவ்வகைப் பட்டனேனும்
திடமுற நினதே என்னும் திண்ணமார் தெரிவால் உன் தன்
அடியினில் சமர்ப்பித்தேன் இவ் வென்னையே இக்கணத்தே –52-

தேஹ இந்திரியாதிகளுக்குள் எந்த ஸ்வரூபத்தை யுடையேனேனும்
அணுத்வ விபுத்வாதி குணங்களினால் எவ்வகைப் பட்டேனேனும் ஆகக் கடவன்
இவற்றைப் பற்றிய ஞானம் இவ்விஷயத்தில் அனாவஸ்யம்
உன்னுடைய சொத்து என்று மட்டில் நிச்சயமாய் என்னால் அறியப்பட்ட இந்த நான் என்னும் வஸ்து
உன் திருவடிகளிலே இக்கணத்திலேயே என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது –

————–

ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

எனது நா என்ப எல்லா மாதவ யேற்று நிற்கும்
உனதலான் மற்று எவர்க்கும் உண்மையில் உரிய தாமோ
தனி முதலாகு நீயே சருவ சேடி எனத் தேர்ந்தே
யினி யுனதடிக்கு எதை நான் இன்புடன் சமர்ப்பிப்பேனே –53-

ஸ்ரீ யபதியே என்னுடைய சகலமும் அவைகளுக்குத் தங்கும் இடமான நானும் ஆகிய எல்லாம் உண்மையில்
ஸர்வ சேஷியான உனக்கே சொந்தம் அல்லால் மற்று எவருக்கு ஆயினிமாமோ
இப்படி சகலமும் உன்னுடையதே எனத் தெளிந்த உணர்ச்சியை யுடைய நான்
முன் செய்த ஆத்ம சமர்ப்பணம் அபராதத்தோடே ஒக்குமாயின் உன் திருவடிகளுக்கு வேறே எதை ஸமர்ப்பிக்கிப் போகின்றேன்

—————–

ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

என்னிடம் எக்காலத்தும் இசைந்து நின் விஷயமாக
மன்னிய யுரிமை நாத வகை யுடன் அறிவித்தால் போல்
]நின்னிடம் அன்றி மற்றோர் நிலையினைப் பற்றாதாகும்
பன்னரும் பக்தி எற்குப் பணித்திடாய் அன்பு கூர்ந்தே –54–

ஏ நாத எக்காலத்தும் என் பக்கலில் இசைந்து நிற்கும் உன் விஷயமான அநந்யார்ஹ சேஷத்வத்தை வகையுடன்
தெரிவித்து இருக்கும் வண்ணமே யுன்னை விட்டு வேறே ஒன்றிலும் போக்யதையைப் பெறாது உன்னிடத்தே யுண்டாகும்
பரம பக்தியை கேவலம் உன்னுடைய கிருபையாலேயே அடியேனுக்கு உண்டு பண்ண வேணும்

—————–

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

உனது கைங்கர்ய இன்பம் ஒன்றையே நாடுவோர் சீர்
மனையினில் கிருமிச் சென்மம் வாய்க்கினும் மகிழ்வன் நானே
நினதொழி மற்றோர் மார்க்க நேடுவார் தன்னிடத்தில்
இனிமையார் எண் கணார் தம் சென்மமும் இச்சியேனே –55-

உன் கைங்கர்யம் ஒன்றிலேயே விருப்பம் கொள்ளும் பாகவதர்களுடைய திரு மாளிகையில் எனக்கு
ஒரு கிருமி புழு ஜென்மம் யுண்டாயினும் அதை நான் மகிழ்ந்து அடைவேன்
அப்படி அன்றி உன் கைங்கர்யங்களை விட்டு மற்ற எந்த மார்க்கத்தை ஏனும் இச்சிப்போருடைய
குடி இருப்பில் ப்ரம்மாவினுடைய சென்மம் கிடைத்த போதிலும் அதில் எனக்கு அபேக்ஷை இல்லை –

—————–

ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

ஒரு முறை யுன் வடிவு அழகின் நோக்கில் யுறும் ஆசையினால் உயர்ந்து சீர்த்த
வரிய சுக போகமுடன் முத்தியையும் அபதார்த்தம் என நினைப்போர்
பிரிவதினால் ஒரு நொடியும் ஆற்றாமை யுனக் கூட்டும் பேற்றை யுற்றோர்
பரம வர பாகவதர் பார்வைக்குப் பாத்திரனா எனைப் பணிப்பாய் –56-

உன் திவ்ய மங்கள விக்ரகத்தை ஒரு முறை சேவிக்க ஆசை கொண்டு அதினால் அருமையான பிரமாதி போகத்தையும்
அதற்கும் மேலான மோக்ஷத்தையும் கூட ஒரு அபதார்த்தமாக நினைக்கின்றவர்களும்
தாம் ஒரு க்ஷணம் பிரிந்தாலும் அப்பிரிவினால் பொறுக்க முடியாத சங்கடத்தை உனக்கே உண்டு பண்ணுபவருமான அந்த பரம பாகவதர்களுடைய கடாக்ஷத்துக்குத் தக்கவனாக அடியேனைச் செய்து அருள வேண்டும் –

—————–

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

உன்னுரிமையாம் பெருமை யிற்கு வெளியுள்ள யுடல் வேண்டிலேன் உயிர் வேண்டிலேன்
பின்னும் எவரும் பெற விரும்பும் சுகமானம் முதலான பிறவும் வேண்டிலேன்
என்னுடைய நாத மது ஸூதன சகிக்ககிலன் இந்நொடியில் இவை களுக்கு எலாம்
மன்னிய விநாஸம் பலவகையில் யுற வேண்டுவன் இனி வசனம் அது வாய்மை யதுவே –57-

ஏ ஸ்வாமியே உன்னுடைய சேஷத்வமாகிய பெருமைக்கு வெளிப்பட்டுள்ள சரீரத்தையும் உயிரையும்
எல்லாரும் அடைவதற்கு ஆசைப்படக் கூடிய ஸுகத்தையும் ஆத்மாவையும் இன்னும் இது போன்ற மற்ற எதையும் நான் வேண்டிலேன் –
ஏ மது ஸூதன இவைகள் ஒன்றையும் நான் சகிக்க வல்லேன் அல்லேன்
இவ்வஸ்துக்கள் யாவும் பல விதங்களால் இந்த க்ஷணத்தில் நாஸம் அடையட்டும்
இப்படி சொல்லும் அடியேனது விண்ணப்பம் சத்தியமானதே –

—————–

ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

ஆதியறத் துன்பமுறு மகத்தாய் நின்று யூன் அருள் அதினாலே யன்றி யகற்ற ஒண்ணா
வேதமுறும் பாவத்திற்கு இடமாய் நின்று ஓர் ஈன நடை யுற்று நரப்பசு போன்றேனும்
மாதவ தயோ ததியே பந்துவே ஓர் வரம்பில்லா வாற் சலியக் கடலே நின் தன்
கோதிலவாம் குண கணங்கள் எண்ணி எண்ணிக் கூசாது இங்கனம் இச்சை கொள்ளுவேனே –58–

அநாதி யாய் துன்பங்களை விளைவித்துக் கொண்டு நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பருத்து நின்று
உன் கிருபை ஒன்றினால் அன்றி மற்று எதினாலும் பரிஹரிக்க முடியாதன வாயுள்ள பாவங்களுக்கு இருப்பிடமாகி
துராசாரம் யுடையவனாய் நர ஜன்மம் எடுத்தும் ஞானம் இல்லா ஒரு பசுவைப் போலே இருந்தேனாயினும்
ஏ மாதவ ஏ தயா சாகரமே ஏ பந்துவே கரை இல்லாத வாத்சல்யக் கடலே உன்னுடைய அநந்த திருக்கல்யாண கூட்டங்களை நினைத்து
நினைத்து அஞ்சாமல் இவ்வண்ணம் பரம புருஷார்த்தத்தில் இச்சை கொள்கின்றேன் –

—————-

ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

இவ்வகையே பேற்றுக்குத் தக்க இச்சை இலேனேனும் உள்ளவன் போல் நடித்து உன் தன்
மெய்யறியாத் தம விரசோ குணங்கள் மேலாய் மிறை யுற்ற கபட மனது யுடையேனாகிப்
பொய் வசனம் கொண்டு துதி புரிந்தேனேனும் பூவளித்தோய் இதையே நீ பொருட்டாய்க் கொண்டு என்
உய்யும் வகை யுணர்ந்திடுமாறு என்னுள்ளத்தை யுன் அருளால் சிஷித்துத் திருத்துவாயே –59-

இம்மாதிரி பேற்றுக்குத் தகுந்த இச்சையை யுடையேன் அல்லேனேனும் உடையவன் போல் நடித்து
ராஜஸ தாமஸ குணங்களால் மூடப்பட்ட நான் என் கபட மனத்துடன் பொய் வசனங்களைக் கொண்டு உன் ஸ்தோத்ரம் புரிந்தேனேனும்
ஏ பூமியை நிர்த்தாரணம் பண்ணினவனே -இதையே ஒரு பற்றாசாகக் கொண்டு என் கபட மனத்தை உன் கிருபையால் நீயே சிஷித்து
நான் உஜ்ஜீவிக்கும் வகையை உணர்ந்திடுமாறு அடிமைத்தனத்துக்கு அனுகூலமாம் படி அதைத் திருத்தி அருள வேணும் –

——————-

ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

அத்தனும் நீ யன்னையும் நீ செகத்திற்கு எல்லாம் அரு மகவும் மித்ரனும் இதனும் நீயே
வித்தகமாம் குரு நீயே கதியும் நீயே வினையேனும் நின்னடிமை கதி வேறு இல்லேன்
உத்தமமாம் உன் பணிகள் பலவும் செய்ய யுரியேனான் உனை அடைக்கலம் புகுந்தேன்
எத்திறனும் இலனாய் யுன் இணக்கம் கொண்டேன் இனி யான் உனக்கே யாம் பாரம் தானே –60-

இவ்வுபய விபூதிகளுக்குள் அடங்கிய எல்லா செகங்களுக்கும் தந்தை நீயே தாய் நீ
அருமையான புத்ரன் நீ -மித்ரன் நீ ஹிதனும் நீ -ஆச்சார்யனும் நீ -அடைய வேண்டிய கதியும் நீயே
அடியேன் உன்னுடைய சேஷ பூதன் -ஊழியன் -உன்னால் போஷிக்கத் தக்கவன்
எத்திறனும் இல்லேனாய் உன்னையே கதியாக அடைந்துள்ளேன்
ஆகையால் என்னை ரக்ஷிக்கும் பாரம் உன்னுடையதே –

—————–

ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

பூ தலம் எங்கும் பரவும் புகழ் பெற்றோராய் புனிதரு நித்ய யோகம் புரிவோர் தாமாய்
கோதில தாய்க் குண புருட தத்துவத்தின் குறிப்பு உணர்ந்து ஜனன முதல் இயற்க்கை கொண்டு
மாதவ நின் மலர் அடி பால் நிலைத்து நின்ற மனமுடையோர் தம் சிறந்த மரபில் தோன்றி
ஏதமுறு இருள் ப்ரக்ருதியில் ஆழ்வேன் எட்டாமே சரணிய மா பாவி நானே –61-

ஜகத் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களாய் மஹா பரி ஸூத்த ஆத்மாக்களாய்
உன்னுடன் நித்ய யோகத்தை அபேக்ஷித்தவர்களாய்
சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ ஸம்பந்தங்களை அறிந்தவர்களாய்
ஜனன காலம் தொடங்கி இயற்கையாவே உன் திருவடிட் தாமரைகளில் நிலைத்து நின்ற மனத்தை யுடையவர்களாய்
விளங்கும் உத்தமர்களுடைய திரு வம்சத்திலே ஜனித்து ஆபாஸமான இருள் நிறைந்துள்ள இந்த ப்ரக்ருதியில்
நீச்ச நிலை யற்று அமிழ்ந்து கிடக்கின்றேன்
மஹா பாவியேன் -ஏ -சரண்யனே –

—————-

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன நின்னடி இணையில் பணி செய்வேனே –62-

சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்
நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்
நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்
பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்
நன்றி கொன்றவனாய்
மஹா பாதகனாய்
அஹங்காரியாய்
காம வசத்தனாய்
வஞ்சகனாய்
குரூரம் உள்ளவனாய்
பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற
நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன் –

—————–

ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

அத்தகைய காகனையும் அன்று அளித்தாய் அடி பணிந்தான் என விரகு திலக ராமா
மொய்த்த பவம் தொறும் பிழையே முடித்து வந்த மூர்க்கன் சிசு பாலனுக்கும் கண்ண அந்நாள்
உத்தமமாம் ஓர் பதவி யுதவினாய் ஒப்பிலாதாம் பொறுமைக்கு ஓர் இலக்கு ஆகாத
எத்தகைய அபராதம் எங்கு தானும் இசைந்துளதோ என் நாத இயம்புவாயே –63-

ஏ ரகூத்தமா -அத்தன்மைத்த மஹா அபராதியான காகாசூரன் கீழே விழ-அவனை சரணாகதி பண்ணினவனாகக் கொண்டு ரக்ஷித்தாய்
ஜென்மம் தோறும் அபராதமே செய்து நின்ற அந்த சிசுபாலனுக்கும் ஏ கண்ணபிரானே ஸாயுஜ்ய பதவியைத் தந்து அருளினை
ஆதலால் உன் க்ஷமா குணத்தால் -ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் போல் இருக்கும் தன்மையினால் முக்தனானவனே
இவ்விதமான உன்னுடைய பொறுமைக்கும் அகப்படாமல் விலக்கான எந்த அபாராதமேனும் எங்காயினும் இருக்கின்றதோ
ஏ நாத அருளிச் செய்வாய் –

————

ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

ஒரு முறை யுனக்கு அடைக்கலம் புகுந்து எனக்கே யான
யுரிமையை யுடையேனாக வேண்டு நான் சபதம் முன்னி
யருளு நின்னருளுக்கு இலக்கா வாகுவன் நாத னினில்
விரதம் என் ஒருவனைத் தான் விலக்கியே ஒழிக்கும் கொலோ –64-

ஏ நாத ஒரு தரம் உனக்கு அடைக்கலம் புகுந்து உனக்கே சேஷபூதன் ஆகின்றேன் என்று பிரார்த்திக்கும் அடியேன்
தென் கடல் கரையில் செய்து அருளிய ப்ரதிஜ்ஜையை நினைத்து உன் கிருபைக்குப் பாத்திரம் ஆகிறேன்
இப்படிப்பட்ட உன் ஸங்கல்பம் அடியேன் ஒருவனை மாத்ரம் விலக்கி ஒழித்து விடுமோ -ஒருக்காலும் ஒழியாது அன்றோ –

—————–

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

இயற்கையில் இசைந்து இலங்கு நின் மலரடியின் பக்தி
வியப்பினுக்கு எல்லையாம் என் வித்தகப் பாட்டனாராம்
நயப்புறும் ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடைக் கணித்து என்
கயப்புறும் காதை நோக்காக் கனிவுடன் அருளுவாயே –65-

இயற்கையினாலேயே யுண்டான உன் திருவடிக்கண் உற்ற பக்தியின் விசேஷத்துக்கு எல்லை போன்றவரும்
ஆத்ம ஞானம் யுடையவரும் -ஜென்மத்தாலும் ஞானத்தாலும் எனக்குப் பாட்டனாருமான
ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடாக்ஷித்து அடியேனுடைய கைப்பு உண்டாக்கும் ஹீன சரித்திரங்களைப் பாராது
அடியேன் அபராதங்களைப் பொறுத்து அன்பு கூர்ந்து அருள வேணும் –

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

July 9, 2022

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————-

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தின் சிறப்பு -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

May 28, 2022

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்-

நாத யாமுன மத்யமாம் –
இந்த குரு பரம்பரையில் ஆதி மத்ய அவசானங்களை அருளிச் செய்கிறவர் ஆகையாலே
நாத யாமுனர்களை மத்யம பதஸ்தராக அருளிச் செய்கிறார் –
நாத முனிகளும் யாமுன முனிகளும் -அவர்கள் தான் பரம ஹம்சர் இறே

நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்றும் -என்று இறே ஆச்சார்யஹிருதயத்தில் அருளிச் செய்தது –
அவனும் அன்னமாய் இ றே அருமறைகளை அருளிச் செய்தது –
ஏவம்விதரான இவர் தான் மதுர கவிகளின் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தானத்தாலே
ஆழ்வார் உடைய –அருள் பெற்ற நாதமுனி யானார் –

அந்த நாதமுனி அருளாலே இறே யமுனைத் துறைவர் அவதரித்து-தர்சனத்தை ஆள வந்தார் ஆனது –
நாதோ பஜஞம் ப்ரவ்ருத்தம் பஹூபி ருபசிதம் யாமு நேய பிரபந்தை -என்னக் கடவது இ றே

அவ்வளவு அன்றிக்கே
விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி -என்று
ஸ்ரீ சேனாபதி ஆழ்வார் அவதாரமாக நம் ஆழ்வாரைச் சொல்லிற்று இறே
ஆளவந்தாருக்கு பிரபத்தி அர்த்த உபதேசம் பண்ணுகைக்கு அடியான உய்யக் கொண்டாரும்
மணக்கால் நம்பியும் இவர்கள் இடையிலே அடைவு படக் கடவராய் இருப்பார்கள்
நாத யாமுன மத்யமாம் -என்று ஆழ்வான் அனுசந்தான க்ரமமாயிற்று இது
இவரை ஒழிந்த மற்றையார் –அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் இ றே அனுசந்திக்கப் போருவது-
உடையவர் தான் குருபரம்பரைக்கு நடுநாயகம் இறே
அவர்தாம் ஆழ்வானுக்கு சதாச்சார்யர் ஆகையால் அஸ்மத்சார்ய பர்யந்தம் என்கிறது –
அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய தயைக சிந்தோ ராமானுஜச்ய -என்னக் கடவது இறே
ராமானுஜாங்க்ரி சரணோ அஸ்மி -என்றும் அனுசந்தித்தார் –
இதிலே யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
அத்தைப் பற்ற யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தார் -என்று
திரு நாராயண புரத்தில் திருவாய்மொழி யாச்சார்யர் அருளிச் செய்தார் –
உடையவரை குரு பங்க்தி ஹார நாயகமாக நடுவே அனுசந்திக்க வேண்டி இருக்க
யதா பாடம் எல்லாம் அனுசந்திக்கிறது –ஆழ்வான் திவ்ய ஸூ க்தி என்னுமது அறிக்கைக்காக —

இதில் ஆச்சார்யா அபிமான யுக்தராய் இவ்வருகிலும் யுண்டான அனைவரும் ஸ்வாச்சார்ய பர்யந்தமாக அனுசந்திக்கும் போது
நாத யாமுனர்களை நடுவாக சொன்னது யதிவரர்க்கும் உப லஷணம் ஆகிறது என்று கண்டு கொள்வது


மந்த்ராணாம் பரமோ மந்த்ர -என்று கொண்டாடப்படும் திருமந்திரம் மந்த்ர ராஜம்
இதன் விவரணம் த்வயம் மந்த்ர ரத்னம்
ராஜா ரத்னத்தை விரும்புவான் -திருமந்திரமும் ஸ்வ அர்த்த ப்ரகாஸனத்தில் மந்த்ர ரத்னத்தை அபேக்ஷிக்கும்
ஸ்ரீ ரெங்கராஜ யதிராஜ சம்வாதம் -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா –
மந்த்ர ரத்ன அநுஸந்தான சந்தத ஸ்புரிதா தரம் -திநசர்யை –
வளம் கொள் மந்திரமும் மெய்ம்மைப் பெரு வார்த்தையும் அருளிச் செய்த வாயாலே -த்வயவக்தா -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ -என்று
இரண்டின் ஏற்றமும் வெளியிடப்பட்டது இறே என்று அருளிச் செயல் ரஹஸ்யத்தில் நாயனார் –
ஏகம் த்வயம் த்ர் யவ யவம் ஸூக லப்ய துர்யம் வ்யக்தார்த்த பஞ்சகம் உபாத்த ஷட் அங்க யோகம்
ஸப்த அர்ணவீ மஹிமவத் விவ்ருதாஷ்ட வர்ணம் ரெங்கே ஸதாம் இஹ ரஸம் நவமம் ப்ரஸூத -தேசிகன்

ஜகதி விததம் மோஹநம் இதம் தமோ யேநா பாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி -வேதார்த்த ஸங்க்ரஹம்

மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸ தாத்தா நிர்ணய திஸ்ர சித்தய
ஆத்ம ஸம்வித கிலாதீ சார தத்வாஸ்ரயா கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹம் ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோ
இத்யமூன் அனுசந்ததே யாதிபதி தம் யாமுநே யம் நம-தேசிகன்

ஆளவந்தார் அருளிச் செய்தவை
ஆகம ப்ராமாண்யம்
புருஷ நிர்ணயம்
ஸித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோகீ
ஸ்தோத்ர ரத்னம் -எனப்படுபவைகள் –

—————

திருப் பாட்டனாரும் திருப் பேரனாரும் திரு அவதரித்தது திரு காட்டு மன்னார்குடி என்னும் திவ்ய ஷேத்ரத்திலே –
திருவடி உத்தராடம்-கடக உத்தராடம் – -சூன்யமான ஆடி மாதத்தை அசூன்யமாக ஆக்கி அருளினார் இவரும் நாச்சியாரும் -திருவாடிப்பூரத்தில் திரு அவதரித்து –
ஆ முதல்வன் இவன் என்று இவரது கடாக்ஷ வீசாணத்தாலேயே எம்பெருமானார் ஜெகதாச்சார்யராக ஆனார் –
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே –
இவரது ஸ்ரீ ஸித்தி த்ரயமே ஸ்ரீ பாஷ்யத்துக்கு மூலம்
இவரது ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹமே ஸ்ரீ கீதா பாஷ்யத்துக்கு மூலம்

பகவத் பரங்களான பூர்வாச்சார்ய ஸ்தோத்ரங்களுக்கு எல்லாம் மூலம் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –
மந்த்ர ரத்னம் போல் இதுவும் புராண ரத்னமும் ஸ்ரேஷ்டங்கள் –

இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரமேயம் -ஆழ்வாருடைய திருவாய் மொழி -த்ராவிட உபநிஷத் –
இதன் ரஹஸ்யம் -பகவத் கைங்கர்யமே மேலான புருஷார்த்தம் -என்னும் அர்த்தம்
இதனை ஆழ்வாருடைய நிர்ஹேதுக கிருபையால் அருளப் பெற்றார் ஸ்ரீ மன் நாதமுனிகள் –
உய்யக்கொண்டார் -மணக்கால் நம்பி -ஆச்சார்ய பரம்பரயா பெற்று ஆளவந்தார் இங்கு அருளிச் செய்கிறார்

அன்றிக்கே
சகல வேதாந்த ஸாரார்த்தங்களான ப்ராப்ய ப்ராபகங்களை அறுதியிட்டு இத்தாலே பிராபகத்தை -உபாயத்தை -அத்யவசித்து

ப்ராப்யத்தை -புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிறார் என்றுமாம் –
ஆழ்வார் திருவாய் மொழி ப்ராப்ய பரம் என்றும் ப்ராப்ய ப்ராபக பரம் என்றும் ஈட்டில் காட்டப்பட்டது போலே

இத்தையும் பலபடிகளாலே நிர்வஹிப்பர்கள் நம் பூர்வர்கள் – –


நம என்று தொடங்கி உபகாரகர்களை வணங்கி
யன் மூர்த்தி என்று தொடங்கும் ஸ்லோகத்திலே –
மே மூர்த்நி பாதி என்று அவனுடைய உபாயத்வத்தையும்
ஸ்ருதி சிரஸ்ஸூ பாதி -என்று அவனுடைய ப்ராப்யத்வத்தையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் இ-
இந்த ஸ்லோகம் இறே கிரந்த ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||-ஶ்லோகம்–6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

————-

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய || -ஶ்லோகம்7-என்று தொடங்கி

பகவத் விஷயத்தை ஸ்தோத்ரம் செய்ய தான் அயோக்யன் என்று நைச்யம் பாவித்து

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் என்கிறபடியே அவரவர் அறிந்தவாறு ஏத்தலாம் என்று அறுதியிட்டு
ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –

———-

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் || -ஶ்லோகம்7-10-என்று தொடங்கி
அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை பரக்க அருளிச் செய்து

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

———-

ந தர்ம நிஷ்டோஸ்மி -என்று உபாயாந்தர தியாக பூர்வமாகச் சரணாகதி செய்கிறார் –

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||-ஶ்லோகம்-22-

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

————

விராஜமாந -என்று தொடங்கி
திவ்ய மங்கள விக்ரஹ
திவ்ய ஆபரண
திவ்ய ஆயுத
திவ்ய மஹிஷீ
நித்ய முக்த விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தையும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும்
அதுவும் பரார்த்தம் என்னும் அத்தையும் வெளியிட்டு
ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார் –

————–

ஆழ்வார் வள வேழுலகு தலை எடுத்து அகலப் பார்த்தது போலவே
இவரும் திக் அசுசிம் என்று அகல நினைத்தார்-

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

ருசியின் மிகுதியால் அகலமாட்டாது நிற்கிறார்
அத்தலையின் பெருமையின் எல்லையைப் பார்த்து அகலுவதும்
அத்தலையின் நீர்மையின் எல்லையைப் பார்த்து அணுகுவதும் உசிதம் இறே
இதுவே வள வேழுலகு-திருவாய் மொழியின் சாரம் –

——————–

கண்கள் சிவந்து -திருவாய் மொழியிலே ஜீவாத்ம ஸ்வரூபம் பகவத் சேஷ பூதம் என்று நிரூபித்து
கரு மாணிக்க மலையிலே -அது அநந்யார்ஹம் என்று நிரூபித்து
நெடுமாற்கு அடிமையிலே பகவத் சேஷத்தளவு அன்று -பாகவத சேஷத்தளவு செல்ல வேணும் என்று அருளிச் செய்தார்
இது இறே சத்ருன ஆழ்வான் படி –

அவ்வோபாதி ஆளவந்தாரும் -தவ தாஸ்ய ஸூக ஏக சங்கி நாம் -என்று ததீய சேஷத்வத்தைப் பிரார்திக்கிறார் –

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

ப்ரஹ்ம ஜென்மமும் இழுக்கு என்பாருக்கு பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இறே

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வேணுமே –
பதிவிரதைக்கு பார்த்தாவினுடைய தேஹாம்சம் உத்தேச்யமான காலத்தில் பாதி வ்ரத்ய பங்கம் இல்லை
அவ்வோபாதி பகவானுக்கு சரீர பூதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கிஞ்சித்கரித்ததால் இவனுக்கு ஸ்வரூப ஹானி இல்லை இறே

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவானுக்கு ஜங்கம ஸ்ரீ விமானங்கள் இறே
நெஞ்சமே நீண் நகராக
எனது உடலே ஒரு மா நொடியும் பிரியான் –என்னா நின்றது இறே

ஆழ்வாரும் -ஊனில் வாழ் உயிரிலே -பகவத் அனுபவத்தைச் செய்து -ஹ்ருஷ்டராய்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பாகவத அனுபவத்தை ஆசைப்பட்டு
நெடுமாற்கு அடிமையிலே -பெற்று பரமானந்த பரிதரானார்
பாகவத அனுபவம் இல்லாத அன்று ஏற்பட்ட பகவத் அனுபவமும் அபூர்ணம் இறே –

ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தையே இதில் அருளிச் செய்கிறார் –

————

ஸ்வ பிதா மஹரான ஸ்ரீ மன் நாதமுனிகள் சம்பந்தத்தை நிர்தேசித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

—————-

ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் அல்ல
பகவத் அனுபவ கைங்கர்யங்களே ஸ்வரூப அனுரூப பலம் என்றும்
கர்ம ஞான பக்திகள் ஸ்வரூப விருத்தங்கள் என்றும்
பகவானே உபாயபூதன் என்றும் ஆழ்வார் அறுதியிட்டார்
ஒரு நாயகம் திருவாய் மொழியில் ஐஸ்வர்ய கைவல்ய ப்ராவண்யம் த்யாஜ்யம் என்று உபதேசித்து
நண்ணாதார் -திருவாய் மொழியிலே
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சற்று இன்பம்
ஒண்டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்று ஸ்வ அனுஷ்டானத்தைக் காட்டி அருளினார்
புருஷார்த்த பல அந்நிய ருசி ஒழிகை இறே நாலாம் பத்தின் ப்ரமேயம்

நோற்ற நோன்பிலேன் இத்யாதியால் கர்ம ஞானாதிகளைக் கழித்து
உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ஸர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றினார் ஆழ்வார்

ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை இறே வெளியிட்டு அருளுகிறார் –
பகவத் கைங்கர்யமே ப்ராப்யமாயினும் தத் பிரதிசம்பந்தி தயா பகவான் ப்ராப்யனாகிறான்
தத் வர்த்தக தயா திரு நாடும் ப்ராப்யம் ஆகிறது
தத் விரோதியான ப்ரக்ருதி சம்பந்தினுடைய நிவ்ருத்தியும் ப்ராப்யம் ஆகிறது
இவை இத்தனையும் கைங்கர்யத்துக்காகவே இறே
இவை கைங்கர்ய உபயோகி இல்லாத போது த்யாஜ்யம் இறே

இது தன்னை
ந தேஹம் -என்கிற ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
ஏறாளும் இறையோனில் ஆழ்வார் நிரூபித்த அர்த்தமே இது இறே –

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

————

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க உயிர் தேருங்கால் என் தனக்கும் வேண்டா என்றபடி
ந ஹி மே ஜீவிதே ந அர்த்தா விநா ராமம் மஹா ரதம் -என்றாள் இறே பிராட்டியும்
ஜீவிதாதிகளால் குறைவின்றி -என்று நாயனார் சங்கலநம் செய்து அருளிச் செய்தார்
ஆகையால் சேஷத்வமே புருஷார்த்தம் என்றதாயிற்று –
லுப்த சதுர்த்தியிலும்
வியக்த சதுர்த்தியிலும் யுக்தங்களான சேஷ தர்ம சேஷ விருத்திகளான நிரூப்ய நிரூபாக பாவம் இறே ஸம்ப்ரதாய ஸித்தம்
குருஷ்வ மாம் அநு சரம் -என்றார் இளையபெருமாள்
நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் இறே
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்கிற இத்தால் ப்ரணவ யுக்த சேஷத்வம் ஜீவாத்ம ஸ்வரூப நிரூபகம் –
த்ருதீய அக்ஷர யுக்த ஞாத்ருத்வத்தில் காட்டில் ஸ்ரேஷ்டம் என்றதாயிற்று –

————-

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரமபுருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதியிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

காட்டுமன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக்கட்டுகிறார்

தனமாயதானே கைகூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் /ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்/ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம் /ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —–

October 2, 2021

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் —

யஸ்ய ப்ரஸாத கலயா
பதிர ஸ்ருனோதி
பங்கு பிரதாவதி
ஜவேந வக்தி ச மூக
அந்த ப்ரபஸ்யதி
ஸூதம் லபதே ச வந்த்யா
தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி

ராமானுஜரை சம்பிரதாயத்துக்கு வரவழைக்க ஆளவந்தார் ஆ முதல்வன் மானசீகமாக கடாக்ஷித்து சரணம்

யஸ்ய ப்ரஸாத கலயா –அருள் வெள்ளத்தால்
பதிர ஸ்ருனோதி -காது கேட்க்காதவன் கேட்ப்பான் –
வேறே சம்ப்ரதாயம் கேட்டு வீணாக்கப் போகாமல் கேட்க வேண்டாதத்தை கேட்பது

பங்கு பிரதாவதி -நொண்டி ஓடுவான் -எங்கும் செல்லாமல் –
(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” என்கிறபடியே -(தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் )
எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.

ஜவேந வக்தி ச மூக -ஊமையும் பேசுகிறான் -நவக்ரந்தங்கள் வெளி வந்தனவே

அந்த ப்ரபஸ்யதி -குருடனும் நன்றாக பார்க்கிறான் -பார்க்க வேண்டாதவற்றை பார்ப்பவன் குருடன்

ஸூதம் லபதே ச வந்த்யா -மலடியும் பிள்ளைகளை பெறுகிறாள் -சிஷ்ய கூட்டங்கள் சேரப் பெற்றார்
12000 ஸ்ரீ வைஷ்ணவர் 700 சந்யாசிகள் கிடைக்கப் பெற்றார்

தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி -தேவாதி ராஜா வரதா சரணம் அடைகிறேன் –

——–

காஞ்சிபுரத்தின் மகிமையை ஆளவந்தார் நன்றாகவே அறிவார். அதாவது,
‘புரீணாமபி ஸர்வாஸாம் ஸ்ரேஷ்ட்டா பாப்ஹரா ஹி ஸா’ என நகரங்கள் அனைத்திலும் சிறந்ததாய்
பாவத்தைப் போக்கடிப்பதாக, புண்ணியத்தை வளரச் செய்வதாக இருக்கிறது காஞ்சிபுரம்.
முக்தி தரும் ஏழு தலங்களுள் ஒன்றானது என்று எண்ணிக்கொண்டே வந்தார்.
ஆனால், யாதவப் பிரகாசரின் பிடிவாத வேதாந்த பாடங்களும், அவரின் துர்நடத்தையும் கண்டு
மிகவும் மன வருத்தம் கொண்டு, கூடவே ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் எண்ணம் கொண்டு
இவ்வாறு சொல்லத் தொடங்கினார்:

‘‘அஸந்த ஏவாத்ர ஹி ஸம்பவந்தி
ஹஸ்திகாயாமிவ ஹவ்யவாஹ:
அத்ரைவ ஸந்தோ யதி ஸம்பவந்தி
தத்ரைவ லாபஸ்ஸர ஸீருஹாணாம்’’

இதன் பொருள்,
‘‘நெருப்புச் சட்டியில் உள்ள நெருப்பு போல, இவ்வுலகில் துஷ்டர்களே உள்ளனர்.
இதிலே நல்லோர்களாகச் சிலர் காணப்படுகின்றனர். இது எப்படி உள்ளதெனில்,
நெருப்புச் சட்டியிலேயே தாமரை புஷ்பங்கள் பூத்தது போலாகும்’’ என்பதாகும்.

பிறகு ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்தார்.
பேரருளாளனை சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, ஸ்ரீஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நோக்கி,
‘‘இவர்களில் அந்த இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்) யார்?’’ என்று கேட்டார்.
திருக்கச்சி நம்பிகள் மிக அழகாக ‘‘அதோ சிவந்து நெடுகி வலியராய் நீண்ட கைகளுடன்
நடுவே வருகிறாரே அவர்தான் ஸ்ரீராமானுஜர்’’ என்று காட்டியருள,
ஸ்ரீஆளவந்தாரும் மானசீகமாக கடாட்சம் செய்து அருளினார்.
தன்னுடைய கம்பீர நயனங்களாலே மீண்டும், மீண்டும் செவ்வரியோடே, மதுரப்பார்வையினால் பார்த்தருளி
‘ஆம் முதல்வன் இவன்’ என்று விசேஷமாக உகந்து கடாட்சித்து அருளினார்.
அதாவது, நம் வைஷ்ணவ தரிசனத்திற்கு ஏற்ற முதல்வன் இவன்தான் என்று கூறினார்.

உடனே ஸ்ரீஆளவந்தார் வேகமாக விரைந்து
மீண்டும் பேரருளாளன் சந்நதிக்கு வந்து நமஸ்
கரித்தார். எல்லா சிஷ்யர்களும் எழுந்தருளி
யிருந்தனர். அப்போது ஸ்லோகம் ஒன்றை உரக்கச் சொன்னார்:

‘‘யஸ்ய ப்ரஸாத கலயா பதிர: ச்ருணோதி பங்கு:
ப்ரதாவதி ஜவேனசவக்தி மூக:று
அந்த: ப்ரபச்யதி ஸுதம் வபதேச
வந்த்யா, தம்தேவமேல வரதம் சணம்
கதோஸ்மிறுறு’’

அதாவது, ‘‘எந்த பேரருளாளனுடைய அனுக்ரஹத்தின் காரணமாக செவிடன் கேட்கும் சக்தியுடையவனாக ஆகிறானோ,
காலில்லாதவன் வேகமாக நடக்க வல்லவனாக ஆகிறானோ, ஊமை பேசவல்லவனாக ஆகிறானோ,
மலடியும் பிள்ளையைப் பெறுகிறாளோ, அந்த தேவப் பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்.”
பிறகு, ‘‘ஒரு விண்ணப்பம்,’’ என்றும் பிரார்த்தனை செய்தார்.
‘‘நம் ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு ஸ்ரீ ராமானுஜரைத் தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.

ஏனெனில், ஒரு அத்வைதியாகக்கூட இல்லாமல் வெறும் பிடிவாதம் பண்ணக்கூடிய வேதாந்தியான
யாதவப் பிரகாசரிடம் படிப்பதும் அவரிடம் மறுப்பு சொல்லி வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதிப்பதும் என்று
இப்படியே காலம் கழிந்தால், ஸ்ரீராமானுஜருடைய அவதார காரியம் என்ன ஆவது என்கிற ஆதங்கத்தில் அவ்வாறு பிரார்த்தித்தார்.
பிறகு, ஸ்ரீஆளவந்தார் தம் முதலிகளுடனும், சிஷ்ய கணங்களுடனும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.

திருக்கச்சி நம்பியிடம் பிரியாவிடை பெற்றபோது, ‘‘அடியேனுக்கு நல்வார்த்தை கூறலாகாதா?’’ என்ற போது,
ஸ்ரீஆளவந்தார் சில நல்ல வார்த்தைகளைக்கூறி சமாதானப்படுத்தி, ஆனந்தக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகளை ஆரத்தழுவி சமாதானம் செய்தார்.
‘‘ஸ்ரீராமானுஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும்,’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இதற்கிடையில் காஞ்சிபுரத்திலேயே ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்த பல்லவ மன்னனின் பெண்ணுக்கு பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.
மிகுந்த கவலையோடு இருந்த பல்லவ மன்னன் பல வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து பார்த்தும் பலனில்லாமல் போயிற்று.
இந்தக் கவலையினால் ராஜ்ய நிர்வாகத்தை சரிவர நடத்த இயலவில்லை.
மேலும், பற்பல மந்திரவாதிகளை அழைத்து வந்து தம் பெண்ணைக் காண்பித்தார்.

அப்படியும் பலனில்லாது போயிற்று. நாளுக்கு நாள் மன்னனுக்கும், ராணிக்கும் கவலை பெருகியபடி இருந்தது.
அவரது கன்னிகையோ நாளுக்குநாள் மெலிந்து கொண்டே வந்தாள். முகம் வெளிறிப்போய்,
எதுவுமே சாப்பிட முடியாது நோயால் பீடிக்கப்பட்டு, எதிலுமே நாட்டமில்லாமல் ‘ஹாய், ஹோய்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இதனாலேயே பல்லவ மகாராணி கல்யாணி கவலைப்பட்டு கவலைப்பட்டு, பரலோகம் சென்றடைந்தாள்.

பல்லவ மன்னனுக்கு எல்லாமே சூன்யமாகப் போனது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் அரசனிடம், யாதவப் பிரகாசரைப் பற்றி கூறி,
அவர் இங்கு எழுந்தருளினால், ராஜகுமாரிக்கு விடிவு கிடைக்கும் என்று உறுதியாக மந்திரிமார்கள் கூற,
அவரை உடனே அழைத்து வருமாறு பல்லவ அரசன் ஆணையிட்டான்.

ஆணையை மேற்கொண்டு யாதவப் பிரகாசர், ஸ்ரீராமானுஜரை அழைத்துக்கொண்டு, தன் சிஷ்யர்கள் புடைசூழ
பல்லவராஜனின் அரசவைக்கு ஏகினார். பல்லவ அரசன் இவரைப் பலவாறு மன்றாடி கேட்டுக் கொண்டு தம் கன்னிகையை சரிசெய்யுமாறு கூறினான்.

உடனே, யாதவப் பிரகாசரும் ஏதோ ஜெபிப்பதுபோல் சில மந்திரங்களைக்கூறி சிறிது தீர்த்தத்தை அவள்மீது தெளிக்க,
யாருக்குமே அடங்காத, ஏன் பதிலேகூட சொல்லாத பிரம்மராட்சஸ் இவருக்கு மட்டுமே பதில் கூறியது.
‘‘நீ ஏன் இங்கு வந்தாய்?’’ என வினவியது.
யாதவப் பிரகாசரோ, தன்னுள் தேங்கிய பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
சற்றே தள்ளி நின்று, ‘‘நீ யார்? ஏன் இவளைப் பிடித்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்ன செய்தால் விட்டு விடுவாய்?’’
என்று பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

‘‘ஹே… யாதவனே, நீ ஜெபிக்கும் மந்திரம் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயோ?’’ என்று கூறி
அவர் ஜெபித்த மந்திரத்தை அப்படியே கூறியது.
‘‘உன் ஜெபத்திற்கும், மந்திரத்திற்கும் நீ தெளித்த ஜலத்திற்கும், இவளை விட்டுவிட்டுப் போவேனோ?
அவ்வளவு சக்தி, உனக்கும், உன் மந்திரத்திற்கும் உன் ஜெபத்திற்கும் கிடையாது,’’ என்று கர்ஜித்தது.
‘‘அட! நான் சொன்ன மந்திரங்களை அப்படியே சொல்கிறாயே! அப்படியானால் நீ உண்மையில் யார்?’’ என்று தவிப்புடன் கேட்டார்.

‘‘இது மட்டுமா? உன்னுடைய முன் ஜென்மமும், என் முன் ஜென்மமும் எனக்குத் தெரியும்,’’ என்றது.
‘‘அப்படியானால், நான் யார்? நீ யார் என்று கூறலாகாதோ?’’
‘‘இதோ பார்! உன் போன ஜென்மத்தில் மதுராந்தகம் என்ற இடத்திலுள்ள ஒரு ஏரிக்கரையிலுள்ள புற்றில்
உடும்பு என்ற ஜந்துவாக நீ இருந்தாய். அப்போது ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருமலை திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும்போது மதுராந்தகம் வந்தடைந்தனர்.

சற்று இளைப்பாற எண்ணி, ஏரியில் நீராடி, பகவத் ஆராதனங்களை முடித்துக் கொண்டு வந்த ஆகாரத்தை உண்டு
ஏரியில் கைகளை அலம்பினார்கள். அந்த நீரை நீங்கள் பருகியதால், அந்தக் கருணையால் இப்போது
வேதாந்தம் பேசும்படியான ஒரு வித்வத்துவ ஜென்மத்தை கிடைக்கப் பெற்றிருக்கிறீர்கள்.
அதன் காரணமாகத்தான் உனக்கு சிஷ்யனாக, இதோ எதிரில் அவதாரமாக நிற்கும் ஸ்ரீ ராமானுஜரையும் பெற்றிருக்கிறாய்.

நான் செய்த தவறு என்னவெனில் என்னுடைய அந்தணப் பிறவியில் வேதத்தை தவறாக உச்சரித்ததும்,
யாகத்தில் மந்திரத்தை தவறாகச் சொன்னதுமே ஆகும். அதனாலேயே இப்படி பிரம்ம ராட்சஸ் ஆனேன்.’’
‘‘நீ சொன்ன வரையில் சந்தோஷம். ஆனால், இந்த ராஜ கன்னிகையை விட்டு விட்டுப் போ,’’ என்று யாதவப் பிரகாசர் கூறினார்.
‘‘நீ சொன்னால், நான் போக வேண்டுமோ? நான் போவேனா என்ன?’’ என்று பிரம்மராட்சஸ் கோரமான குரலில் கர்ஜித்தது.

‘‘சரி, யார் சொன்னால் இவளை விட்டுவிடுவாய்?’’ என்று யாதவப் பிரகாசரும் விடாமல் கேட்டார்.
அப்போது கண்களில் நீர் மல்க பிரம்மராட்சஸ் சாந்தமாகப் பேசத் தொடங்கியது.
‘‘உம்மிடம் பாடம் பயிலும் மாணவரான நித்யஸுரிகளில் ஒருவர், அதோ உள்ளாரே,’’ என்று கூற
‘‘அது யார்?’’ என்று யாதவப் பிரகாசரும் வினவ,
ஸ்ரீ ராமானுஜரைக் காட்டி, ‘‘இவர் என் தலையை, தன் காலால் தீண்டி,
‘‘நு போவுதி’’ என்று கூறினால் அவளை விட்டு விடுகிறேன்,’’ என்று கம்பீரமாகவும், அமைதியாகவும் கூறியது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வாரை (ஸ்ரீராமானுஜரை) நோக்கி பிரம்மராட்சஸ் சொன்னதுபோல் செய்யவும் என்று கூறியவுடன்,
அப்படியே, தன் காலால் அவளைத் தீண்டி, ‘இவளை விட்டுப்போ’ என்று கூறிய மறுகணமே அவளை விட்டு பிரம்மராட்சஸ் நீங்கி,
நீங்கியதற்கு அடையாளமாக, அங்குள்ள மரத்தாலான கம்பத்தின் கணுவை முறித்துவிட்டுச் சென்றது.

யாதவப் பிரகாசரும், அந்த சமயத்தில் ஸ்ரீராமானுஜரை மனதாரப் புகழ்ந்து கொண்டாடி சிஷ்ய கணங்களுடன் தன் மடத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில், அப்படி புகழ்ந்தாரே தவிர, ஸ்ரீராமானுஜர் மேல் இந்த சம்பவத்தால்,
அதிகமான பொறாமையும் கோபமும் யாதவப் பிரகாசருக்கு உண்டாயிற்று.
அதேசமயம், இந்த சம்பவத்திற்குப் பிறகு இளையாழ்வாரின் புகழ் மேலும் ஓங்கியது.

———————–

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்

சித்திரை புனர்வஸு – ஸ்ரீ முதலியாண்டானின் திருநக்ஷத்திரம்

தனியன்
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||

அர்த்தம்:
யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ,
தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.

வைபவச் சுருக்கம்:
ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் (கிபி 1027) பிரபவ வருடத்தில்
பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில்
சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்ரம் வாதூல கோத்ரத்தில்
எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.

எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.

எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால்
எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச்
சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.

எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.

முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.

——–

முக்த ஸ்லோகங்கள்

முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுல தர தாமேத்ய ஸ புந
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஜஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர —

ஸ்ரீ வேத வியாஸர் திருவவதரித்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இயற்றி வேதாந்த பொருளை விளக்கி அருளினார்
அவரே தாமே மீண்டும் ஸ்ரீ நம்மாழ்வாராக திரு அவதரித்து செவிக்கு இனிய செஞ் சொற்களாலே அவற்றை விவரித்து அருளினார்
இந்த உபய வேதாந்தங்களையும் உபபத்திகளாலே ஏக ஸாஸ்த்ரமாக்கி அருளுவதற்காகவே
அவரே மீண்டும் ஸ்ரீ ராமானுஜராக திரு அவதரித்து அருளினார் –

—————–

ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–ஸ்லோகம்–1-

எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத்
திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ,
அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய்,
கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி
அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||–ஸ்லோகம்–2-

ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய்,
வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான்
வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.

ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||–ஸ்லோகம்–3-

ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய்,
ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.

யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்–ஸ்லோகம்–4–

பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ,
ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்

——–

ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்

வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||–ஸ்லோகம்:

மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை
எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு
வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

—–

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் — அருளிச் செய்தவை —

ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வின்யச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் –1-

காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ்,
மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும்,
இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும்,
ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

——

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முக்தஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருசி பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம் –2-

கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும்,
முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும்,
தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும்,
தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே!
உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

————-

கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப் நேஷ்யாமி திவசான் –3-

காவிரிக் கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும்,
மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே!
உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி
மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

————–

கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷோ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்?
அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான
காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்?
ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான
ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

———–

பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் நஹ –5-

பாக்கு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இறே
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

——————————-

ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் –6-

அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம்.
ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

———–

அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி –7–

உண்மையில் உமது அருகில் வாராத ஒரு நாயின் சம்பந்தமான
பொய்யான அபவாதத்தினால் சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன் வெகு சமீபத்திலே வந்த போது
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

————————-

பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய்,
எப்படி குழந்தையை நோக்கி ஓடி வருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க
ஓடி வந்து அருள் செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

———-

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்ஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி —

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- -ஸ்ரீ வேதாந்த தேசிகன் பாஷ்யம்/ -அருள் தரும் ஸ்ரீ ஆரண தேசிகன் —

August 6, 2021

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –

———————–

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

———————–

ஸ்லோகம் -10-
ஸ்தோத்ரம் செய்ய அல்ப சக்தனான தாமே தகுதியானவர் என்று அவனது ஸ்வாபாவிக வாத்சல்யம் வெளிப்பட்டது
அது அவன் இடம் திருப்பத்தில் எவ்விதமும் ஆச்சர்யம் அன்று என்று
ஒரு கைமுதிக நியாயத்தால் இந்த ஸ்லோகத்தில் ஸ்தாபிக்கிறார்
இது முதல் 12 ஸ்லோகங்களால்
நாராயண சப்தார்த்தம் ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் என்று பிரபஞ்சித்திக் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் அவனை நமஸ்கரிக்கிறார் என்பதே ஸ்ரீ தேசிகருடைய அவதாரிகை –

ஹே பிரபு உன்னுடைய சங்கல்பம் இல்லா விடில் விசித்ரமாகப் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும் உண்டாகிறதற்காவது –
ஸத்தை யுடன் கூடி இருக்கிற தற்காவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே அசமர்த்தம் என்றால் ப்ரவ்ருத்தி அதுக்கு எவ்வாறு சம்பவிக்கும்
ஆக இப்படி ஸர்வ ஜந்துக்களும் ஸ்வாபா விக ஸூஹ்ருத்தாகிய உம் இடத்தில் ஆஸ்ரிதவாத்சல்யம் இருப்பது ஆச்சர்யம் அன்று
இவற்றை உண்டாக்கி -ஸத்தயைக் கொடுத்து
போக மோக்ஷம் அடைய கரண களே பரங்க ளையும் கொடுத்த ஸர்வ உபகாரகனுக்கு இல்லாமல்
வேறே யாருக்கு ஆஸ்ரித வாத்சல்யம் சம்பவிக்க முடியும்

நிகில காரணன்–
காரணத்வம் –நியந்த்ருத்வம் -ஸூஹ் ருத்வம் -ஸ்வாமித்வம் -வாத்சல்யம் —
ஐந்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் அவன் ஒருவனே

அவேஷணம் -ஸங்கல்பம் -அநுஹ்ரஹத்தை முன்னிட்டே செய்து அருளுகிறான்
ஞானம் பலம் இத்யாதி ஸ்வாபாவகிம் போல் ரக்ஷணமும் ஸ்வாபாவகிம் தான்
தன் இடம் த்வேஷம் பாரட்டி உள்ளார் இடம் கூட அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்

கட வல்லி -ஜூகுப் ஸை இல்லாமல் அந்தர்யாமி -வாத்சல்யம் அடியாகவே
மழலைச் சொல்லை உகக்கும் தாய் போல் நம் பழிச் சொற்களையும் ஏற்கிறான்

———

ஈஸித்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -இருக்கும் தன்மை விளக்கம் –11-ஸ்லோகத்தால்

ஹே நாராயணா வேதங்களை பிரமாணமாக ஒத்துக்க கொள்பவர்களின் எவர் தான்
ஸ்வ பாவ ஸித்தமாயும் அளவற்ற மகிமையும் உள்ள ஈஸீத்ருத்வத்தை உம்மிடத்தில் ஸஹிக்க மாட்டார்
ப்ரஹ்மாதிகள் முக்தர்கள் அனைவரதும் உமது மஹிமையில் ஒரு திவிலை ஸ்தானீயர்கள் ஆகிறார்கள் அன்றோ என்று அர்த்தம் –

அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்

———-

ஸ்ரீ பிள்ளை அந்தாதி
உன் அருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திரு மந்த்ரம் ஓதும் பொருள் நிலையே
பொன் அருளால் அருளாய் புகழ் தூப்பூல் குல விளக்கே –15-

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டு மறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளக் காதல் இல்லவர் தங்கள் திறத்திலும் தூய்மை எண்ணிக்
களக்காதல் செய்யும் நிலை கடியாய் தூப்புல் காவலனே –16-

——–

வெள்ளப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் அட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியின் இங்கு ஏது ஓன்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே —-அதிகார ஸங்க்ரகம் –56-

——————

பாத்ர பதமாஸ கத விஷ்ணு விமலர் ஷே
வேங்கட மஹீத் ரபதி தீர்த்த திந பூதே
ப்ராதுர பவஜ் ஜகதி தைத்ய ரிபு கண்டா ஹந்த
கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா –ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்லோகம்
திருமணி ஆழ்வாரே ஸ்வாமியாக திரு அவதாரம் என்கிறதே –

——————

வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –

ஸ்வஸ்தி சுக்ல வர்ஷம் கதகலி 4370-கச்சி நகர் அனந்தாச்சார்யார் தோதார அம்மையாருக்கு
வரத வேங்கட பிரசாதமாக ஸ்வப்னத்தில் அருளிய படி
புரட்டாசி -11- ஞாயிற்றுக் கிழமை 11-28-சுக்ல ஏகாதசி -6 நாழி -19 வினாடிக்கு
திருவோணம் நக்ஷத்ரம் கன்யா லக்கினத்தில் திரு அவதாரம் -1268-
பேர் அருளாளனும் திருச்சின்னம் அருளினான்

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூ ர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

—————–

தேசம் எல்லாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றிக்
காசினி மேல் வாதியாரை வென்று அரங்கர் கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா முன்
பூ சுரர் கோன் திருவரங்கத்து அமுதனார் உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்று எட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழலுக்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செல்வர் சடகோபர் -தே மலர்த் தாட்க்கு
உய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுஜனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் –

—————–

ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்
கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பக்ஷிணாம் பதே
ந போக மாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாயா கஸ்யபஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

அம்ருத கலச யுக்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சகல விபூத வந்த்யம் வேத ஸாஸ்த்ரர் அசிந்த்யம்
விவித விமல பஷைர் தூய மாநாண்ட கோளம்
ஸகல விஷவி நாஸம் சிந்த யேத் பக்ஷி ராஜம் –

——–

கருணாகரன் -தயா சதகம்
பயக்ருத் பய நாசன -அபீத ஸ்தவம்
வீர -மஹா வீர வைபவம்
ஸர்வ வாக் ஈஸ்வரேஸ்வர -ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
நைகமாய -தசாவதார ஸ்தோத்ரம்
யோக விதாம் நேத -பகவத் த்யான சோபனம்
ஸ்ரீ மான் -ஸ்ரீ ஸ்துதி
நரஸிம்ஹ வபு—காமாஸிகாஷ்டகம்
அச்யுத -அச்யுத சதகம்
விக்ரம -கருட தண்டகம் –கருட பஞ்சா சத்
வாமன பிராம்சு -தேஹ ளீச ஸ்துதி
வரத -வரதராஜ பஞ்சா ஸத்
ஸவ்ரி -கோபால விம்சதி

—————

வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ் பூதூரோன் மனம் உகப்போன் வாழியே
கஞ்சத் திரு மங்கை உகக்க வந்தோன் வாழியே
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்பான் வாழியே
திருமலை மால் திரு மணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பர கதியைத் தந்து அருள்வோன் வாழியே
தண் தமிழ் தூப்புல் திரு வேங்கடவன் தாள் வாழியே –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —

February 20, 2021

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

—————

ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

—————–

ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

—————–

ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

—————-

ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.
அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

—————-

ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

——————-

ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

—————–

ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

—————–

ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

——————–

ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

—————

ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

———–

ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

—————

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

——————

ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

——————-

ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

————-

ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

—————-

ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

——————

ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

—————-

ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

—————–

ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

—————

ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

—————-

ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

—————

ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

—————–

ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

—————-

ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

———————

ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

—————–

ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

————

ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

————-

ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

————-

ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

——————

ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

—————-

ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

————

ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

—————-

ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

—————–

ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

————-

ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

————–

ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

—————

ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

————–

ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

—————

ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

——————-

ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

———————

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

————–

ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

—————–

ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

——————

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

—————–

ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.

————–

ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

—————–

ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

—————–

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

—————–

ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

—————–

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

—————–

ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

—————-

ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

——————-

ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

—————–

ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

—————-

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

—————–

ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

————

ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

—————–

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – –

November 9, 2020

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவருமான ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஸ்ரீ ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ச்லோகம் 1 – முதல் ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின்
கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர்.
பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

ச்லோகம் 2 – இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின்
மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ச்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல்,
என்னளவும் பெருகி வருகிறது” என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

ச்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஸ்ரீ ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள்
மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தியோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

ச்லோகம் 4 – ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஸ்ரீ ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராணரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான ஸ்ரீ பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

ச்லோகம் 5 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள்,
சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்,
கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத் தலைவரான
ஸ்ரீ நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

ச்லோகம் 6 – திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ”
(ஸ்ரீ ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி,
எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும்
விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
ஸ்ரீ எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
ஸ்ரீ எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஸ்ரீ ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதிஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரதபதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குலதநம் குலதைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்தவிலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

ச்லோகம் 7 – ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று
சொன்னபடி அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதாமஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிமஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவுகூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்க முடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்க் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

ச்லோகம் 8 – யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ”
(நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்) என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான்,
ஸ்ரீ ஆளவந்தாரை “வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்
‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’ (அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று
சொல்லும்படி உற்சாகப்படுத்தினான். இதைக் கேட்ட ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்யஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ்சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

ச்லோகம் 9 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதிக்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்தபுத்தே:
இத்யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜநேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால்,
நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்; எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

ச்லோகம் 10 – எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின்வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட
ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை,
இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார். அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஸ்ரீ ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு
(எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை) ஸ்ரீ எம்பெருமானின் பரத்வத்தை அருளிச்செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நன்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம்
தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை

ச்லோகம் 11 – இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

ஸ்ரீ நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான,
கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லையில்லாத பெருமையை
உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்கமாட்டான்?

ச்லோகம் 12 –இதில், ஸ்ரீ ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச் செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

ச்லோகம் 13 – ஸ்ரீ ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும்
(ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்) பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில்
உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶுபதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வஶிரோத்ருதேந||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத்தன்மையை அடைந்தான்?

ச்லோகம் 14 – ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின்
மூலமாக நிரூபித்து, முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால்
இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது?
இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

ச்லோகம் 15 – இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும், ஸ்ரீ பகவத் கீதை 16.20இல்
“ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று
அவர்கள் இழவுக்கு ஸ்ரீ ஆளவந்தார் வருந்துகிறார். அல்லது –
ஸ்ரீ ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத்தன்மையுடையவர்கள் பார்க்கக்கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஸ்ரீ ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரமபதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

ச்லோகம் 16 –எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய
ஸ்ரீ ஆளவந்தார், அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து,
“எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?” என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

ச்லோகம் 17 – இதில் ஸ்ரீ ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய
ஸர்வேச்வரத்வத்துக்கு உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச்செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள்
5) மூல ப்ரக்ருதி
6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம்
8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்யஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

ச்லோகம் 18 – ஸ்ரீ ஆளவந்தார் முன்பு சரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார். இதில்
“இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேச்வரத்வத்தை அருளிய ஸ்ரீ ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச்செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌசீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

ச்லோகம் 19 – இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல்,
ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

ச்லோகம் 20 – ஸ்ரீ ஆளவந்தார் முன்பு அருளிச்செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின்
பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது – ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் சாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிடமுடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை
கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும்கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

ச்லோகம் 21 –சரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு சரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஸ்ரீ ஆளவந்தார், இங்கே
மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

ச்லோகம் 22 –ஸ்ரீ ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது – முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

ச்லோகம் 23 – எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே,
நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்” என்று சொல்லுவதாக எண்ணி
“நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்ரீ ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

ச்லோகம் 24 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஸ்ரீ ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்ரீ ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும்
எனக்கு நீ கரையைப் போலே வந்தாய்; ஸ்ரீ பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

ச்லோகம் 25 – எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு, நீர்
ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது –
ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்) என்றபடி இருக்கவேண்டாமோ?
எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஸ்ரீ ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்கவில்லை;
உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால் அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப்பெயர்;
அதைப் போக்கிக்கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்ரீ ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பமும் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் ஸ்ரீ திரு முன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது உன்னுடைய பெருமைக்குச் சேராது.

ச்லோகம் 26 – ஸ்ரீ ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கைவிட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அநாதிகத்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே) உண்டான
மஹா விச்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸ்ரீ ஸர்வேச்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமாபோலே.

ச்லோகம் 27 –ஸ்ரீ ஆளவந்தார் “அநந்யகதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது,
ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

ச்லோகம் 28 – ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்)
செய்வது அமையாதோ?” என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச்சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கிவிடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

ச்லோகம் 29 – இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது – 28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பரபக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும்
உக்ரமாக எரியும் காட்டுத்தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

ச்லோகம் 30 – ஸ்ரீ ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
ஸ்ரீ திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஸ்ரீ ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது – ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஸ்ரீ ஆளவந்தார்,
ஸ்ரீ திருவாய்மொழி 6.3.10இல் “கனை கழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஸ்ரீ ஆழ்வார் சொன்னபடி
ஸ்ரீ எம்பெருமானின் திருவடிகளை எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

ச்லோகம் 31 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது,
அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

ஸ்ரீ த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

ச்லோகம் 32 – இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம் தனக்கு
எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஸ்ரீ ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து
கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

ஸ்ரீ எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன் …

ச்லோகம் 33 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
ஸ்ரீ எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ்ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி:||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக்கைகளால் ஒளிவிடுகிறான் ஸ்ரீ எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும்
கரிய நிறத்தில் இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள்
மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன …

ச்லோகம் 34 – திருத்தோள்களை அனுபவித்த பிறகு, ஸ்ரீ எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின்
அழகையும் ஸ்ரீ ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

ஸ்ரீ எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின்
வரை வந்து தொங்குவதாலும், அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும்
அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் …

ச்லோகம் 35 – ஸ்ரீ ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானின் திருமுக மண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

ஸ்ரீ எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும்,
கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும்,
புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் …

ச்லோகம் 36 –ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின்
சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

ஸ்ரீ எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி,
ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை,
சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும்
திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

ச்லோகம் 37 – இனி வரும் இரண்டு ச்லோகங்களில் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீபிராட்டியின் பெருமையையும், ஸ்ரீ ஈச்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும்
பேரன்பையும் அருளிச்செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

ஸ்ரீ எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் ஸ்ரீ பிராட்டியின் பிறப்பிடமான ஸ்ரீ திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்த ஸ்ரீ பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ …

ச்லோகம் 38 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும்,
அவள் ஸ்ரீ எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
ஸ்ரீ திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விச்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், ஸ்ரீ பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

ச்லோகம் 39 – ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ திருவனந்தாழ்வானின் திருமடியில் ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ பிராட்டியும்
கூடியருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஸ்ரீ ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும்
ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் எழுந்தருளியிருக்கும்
திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட ஸ்ரீ திருவனந்தாழானின் திருமேனியில், ஸ்ரீ எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான் …

ச்லோகம் 40 – கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால்,
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானாமசேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் ஸ்ரீ திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஸ்ரீ ஆளவந்தார் இப்படிப்பட்ட ஸ்ரீ ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ ஸ்ரீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய்.
ஸ்ரீ திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக் கொள்ளும் படுக்கையாகவும்,
வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்து கொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக் கொள்ளும் ஆடைகளாகவும்,
அணைத்துக் கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும்,
மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால்
எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் …

ச்லோகம் 41 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரிய திருவடியுடன் (ஸ்ரீ கருடாழ்வார்) கூடியிருப்பதை
அனுபவிக்கிறார். ஸ்ரீ பெரியதிருவடி, ஸ்ரீ எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும்
பழுத்த கனியைப் போன்று ஸ்ரீ எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த ஸ்ரீ கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் …

ச்லோகம் 42 –ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (ஸ்ரீ விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
ஸ்ரீ எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் ஸ்ரீ விஷ்வக்ஸேனரிடம் அளித்துத்
தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

ஸ்ரீ விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்; எல்லோருக்கும் இனியவரான அவர்,
உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக்கூடியவர்.

ச்லோகம் 43 – ஸ்ரீ விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பச்யந்தி ஸூரய:” (ஸ்ரீ நித்யஸூரிகள் எப்பொழுதும்
ஸ்ரீ எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்) என்று சொன்னபடி,
ஸ்ரீ எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார். இவருடைய ப்ரார்த்தனை
ஸ்ரீ திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் ஸ்ரீ நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஸ்ரீ ஆழ்வார் கேட்டப்டி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம்
செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப
உன்னை வணங்கக்கூடிய ஸ்ரீ நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

ச்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல் ஸ்ரீ இளைய பெருமாள்
“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸ்ரீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத் தாழ்வரைகளில் ரமித்திருக்கும் போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநாரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் ஸ்ரீஎம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்;
ஸ்ரீ பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

ச்லோகம் 45 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு
இருப்பிடமான எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

ஸ்ரீ எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் …

ச்லோகம் 46 –ஸ்ரீ ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில் பூர்த்தியை
உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து
என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

ச்லோகம் 47 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஈச்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய
முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து “ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின்
எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால் தீண்டப்படாத
ஸ்ரீ நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
ஸ்ரீ நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

ஸ்ரீ புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால்
ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும்,
வெட்கமும் இல்லாத தன்மையாலும், ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும்
எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.

ச்லோகம் 48 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானிடத்தில் “தேவரீர் என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக
இருக்கும் பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, ஸ்ரீ எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது ஸ்ரீ எம்பெருமானின் எளிமையின் உச்சக்கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ச்லோகம் 49 –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர்,
வேறு உபாயங்களைக் கொண்டோ அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ
அவற்றைப் போக்கிக்கொள்ளாமல், என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஸ்ரீ ஆளவந்தார் “சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

ச்லோகம் 50 – ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால்,
உன்னுடைய கருணைக்கும் என்னைவிட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்ரீ ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்துவிட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

ச்லோகம் 51 – ஸ்ரீ ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள
இந்த ஸம்பந்தம், தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்ரீ ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்ரீ ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

ச்லோகம் 52 – ஸ்ரீ எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்;
உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து, என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து
தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாவகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து
இப்பொழுது உன்னுடைய திருவடித்தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கட்டது.

ச்லோகம் 53 –ஸ்ரீ எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஸ்ரீ ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?”
என்று எண்ணி “நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஸ்ரீ ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருவாய்மொழி 2.3.4இல்
“எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானே! ஸ்ரீ லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும்
நானும் எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

ச்லோகம் 54 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த
ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால்
என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப்போலே, பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி
ஆகியவைகளையும் அளித்து, இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்ரீ ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை
எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும்
அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

ச்லோகம் 55 – ஸ்ரீ ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின்,
பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

ஸ்ரீ எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

ச்லோகம் 56 – ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளிவிடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித்
தங்கள் விசேஷமான கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றை புல்லைப்போல மதிப்பவர்களான
சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

ச்லோகம் 57 – முன் ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் சேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு
அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார். இங்கே சேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கு விஷயங்களில் தனக்கு
இருக்கும் வெறுப்பைச் சொல்லி,ஸ்ரீ எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்ரீ ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்ரீ ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

ச்லோகம் 58 – ஸ்ரீ எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம்
முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க, கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு,
யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!” என்று ஆச்சர்யப்பட,
ஸ்ரீ ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்ரீ ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே!
வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத,
போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய
திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.

ச்லோகம் 59 – ஸ்ரீ எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த ஸ்ரீ எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக்கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தியருள வேண்டும்.

ச்லோகம் 60 – ஸ்ரீ எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஸ்ரீ ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நாம் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாதய ஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்
ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும்
உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும்
ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்
குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –
தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இறே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –

——————–

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

—————

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

—————

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத்
திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
ஸ்க்ருதேவ -என்றது –
சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –

—————-

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்

ஸ்ரீமந் நாத முனிகளுடைய தேக சம்பந்தமும் ஆத்ம சம்பந்தமும்–ஜென்மத்தாலும் -வித்யையாலும் -சம்பந்தம்
முக்கிய ஹேது -அவனாலும் விட ஒண்ணாதது அன்றோ
மத் வ்ருத்தம சிந்தயித்வா-நிக்ரஹத்துக்கு என்னுடைய பாபங்கள் ஹேதுவானாலும்
அனுக்ரஹத்துக்கு இந்த மஹத் சம்பந்தம் உண்டே
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது -என்றுமாம் –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
அப்படியே அனுக்ரஹித்தோம் என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்ய
மநோ ரதம் தலைக் கட்டப் பெற்று ஸ்தோத்ரத்தையும் தலைக் கட்டி அருளுகிறார்

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்