Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ தத்வ த்ரய சுகளம்-

June 20, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சுளகம்‌ என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று அர்த்தமாகும்‌.. -அசேதநம்‌ - சேதநன்‌ - ஈச்வரன்‌ என்னும்‌ தத்துவங்களைப்‌ பற்றிய  விஷயங்களை உள்ளங்கையில்‌ வைத்தாற்‌ போல்‌ எளிதில்‌  காட்டுவதால்‌ இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர்‌ வந்தது -
ஸ்ரீ மந்‌ நாராயணன்‌ திருவடிகளே சேதநர்க்கு உபாயமாகனும்‌ -அதனால்‌ வரும்‌ பலனாகவும்‌ ஆகும்‌. இவ்வெண்ணத்துடன்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்ற வேண்டுமானால்‌ முதலில்‌ மூன்று தத்துவங்களைப்‌ பற்றிய உண்மைகளை விரிவாய்‌ அறிய வேண்டும்‌. இவற்றை அறிந்தால்‌ மட்டுமே சில விபரீத ஜ்ஞாநங்கள்‌ ஒழியும்‌. அவையாவன - (1) சரீரத்திலும்‌ ஆத்மா வேறு பட்டிருக்கும்‌ உண்மையை அறியாமல்‌ சரீரத்தையே ஆத்மாவராகக்‌ கருதுதல்‌. (2) எம்பெருமானுக்கு அடிமையாக இருக்கும்‌ ஆத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல்‌. மூன்று தத்துவங்களையும்‌ நன்கு அறிந்தால் தான்‌ இந்த விபரீத எண்ணங்களெல்லாம்‌ ஒழியும்‌.

அசேதந வஸ்து மூவகைப்படும்‌. (1) த்ரிகுணம்‌ (2 காலம்‌ -(3) சுத்த ஸத்துவம்‌. இந்த மூன்றுக்கும்‌ அறிவு கிடையாது. ஆதலால்‌ அசேதநமாகும்‌.
தர்மபூதஜ்ஞாநத்தின்‌ நிலை -இங்கு ஒரு கேள்வி - ஜீவனிடம்‌ உள்ள அறிவைத்‌ தர்ம
பூதஜஞாநம்‌ என்று கூறுகின்றோமே! அதற்கும்‌ அறிவு இல்லையே! அறிவுக்கு ஒர்‌ அறிவு ஏது? ஆதலின்‌ அதுவும்‌ ஒர்‌ அசேதந வஸ்துவாய்‌ உள்ளதே! இந்த மூன்றைப்‌ போல்‌ அதையும்‌ அசேதந வஸ்துவில்‌ சேர்த்து நான்காகக்‌ கூற வேண்டாமா? என்று

அசேதநங்களை விளக்குவதன்‌ பயன

இந்த மூன்றை மட்டும்‌ பிரித்து விளக்குவதன்‌ காரணத்தை ஆராய்வோம்‌. திரிகுணம்‌ என்னும்‌ ப்ரக்ருதியைப்‌ பற்றி விளக்கினால்‌ இருபத்தைந்தாவது தத்துவமாகிய ஜீவனைப்‌ பற்றி விளக்கமாய்‌ அறியமுடியும்‌. அந்த ப்ரக்ருகியின்‌ மாறுபாடாகிய
சரீரத்தினும்‌ ஜீவனுக்கு வேறுபாடு தெரியவேண்டுமன்றோ!
இவ்வாறே காலத்தைப்‌ பற்றிய விளக்கம்‌ தெரிந்தால்தான்‌ இம்மைச்‌ செல்வம்‌ நெடுங்காலம்‌ நிலைக்கக்கூடியதன்று என்ற விவேகம்‌ ஏற்படும்‌. மேலும்‌ இந்தக்‌ காலத்திற்குக்‌ கட்டுப்படாத பரமபதத்தில்‌ ஆசை உண்டாகும்‌. மேலும்‌ அந்த அந்தக்‌ காலத்தில்‌ செய்ய வேண்டிய காரியங்களை உரிய காலத்தில்‌ செம்வதற்கு எண்ணம்‌
கொள்ளவும்‌ காலத்தைப்‌ பற்றிய விளக்க அறிவு பயன்படும்‌. இங்ஙனமே சுத்த ஸததுவததைப்‌ பற்றிய விரிவான அறிவு உபாயமும்‌ பலனுமாய்‌ நிற்கும்‌ எம்பெருமானுடைய திருமேனி முதலியன சுத்த ஸத்துவ மயமாயிருப்பதை நன்கு அறியப்‌ பயன்படும்‌. இந்த மூன்று அசேதநங்களின்‌ விளக்க அறிவு பயன்படுமளவுக்குத்‌ தர்மயூதஜ்ஞாநத்தின்‌ விளக்கம்‌ பயன்படாதாகையாலும்‌ அதை இந்த மூன்று அசேதநங்களுடன்‌ சேர்க்கவில்லை.
ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌! என்னும்‌ மூன்று  குணங்களுக்கும்‌ இருப்பிடமான ப்ரக்ருதி, தரிகுணம்‌ என வழங்கும்‌.  இந்த ப்ரக்ருதி சேதநர்களுக்குப்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைக்‌ காட்டாமல்‌ மறைக்கின்றது. இன்னும்‌ பல தீங்குகளையும்‌ விளைவிக்கின்றது. -ஸத்துவம்‌ - இது உயர்ந்த குணம்‌. இது சேதநருக்கு 
வஸ்துக்களின்‌ உண்மையான நிலையைக்‌ காட்டும்‌. மனிதன்‌ ஸுகம்‌ பெறுதற்கும்‌ காரணமாகும்‌. இந்தக்‌ குணம்‌ சிலருக்கு . மிகவும்‌ அதிகமாகி விட்டால்‌ மோக்ஷத்துக்குச்‌ சாதனமான” செயலைச்‌ செய்யத்‌ தூண்டி உதவி புரியும்‌-ரஜஸ்‌ என்பது நடுத்தரமான ஒரு குணம்‌. இது சேதநருக்கு ஆசை - துன்பம்‌ - விபரீத ஜ்ஞாநம்‌ முதலியவற்றை உண்டாக்கும்‌. தமஸ்‌ என்பது இழிவான குணம்‌.
இது மனிதருக்குக்‌ கவனமில்லாமை - சோம்பல்‌ - உறக்கம்‌ - அஞ்ஞாநம்‌ முதலியவற்றைத்‌ தரும்‌.இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ ஏற்றக்‌ குறைவின்றி
ஸமமான அளவுக்கு இருக்கும்‌ ஸமயமே மஹாப்ரளயமாகும்‌. ஸ்வதந்தரனான எம்பெருமான்‌ ஸங்கல்‌.்பித்தால்தான்‌ இம்மூன்று குணங்களும்‌ ஸமமான அளவுக்குச்‌ சேரும்‌. எப்பொழுது அவன்‌ ஸங்கல்பிப்பான்‌ என்பதைச்‌ சாஸ்தரம்‌ கூறியுள்ளது. அந்த
ஸங்கலபத்துக்கு அவனே காலத்தைக்‌ குறிப்பிட்டுக்‌ கொள்வான்‌.இவ்வாறே இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ சில ஸமயத்தில்‌ ஒன்றுக்கொன்று ஏற்றக்‌ குறைவாய்‌ இருக்கும்‌. இந்த ப்ரக்ருதி அப்பொழுதுதான்‌ மஹாந்‌ அஹங்காரம்‌ முதலிய
மாறுபாடுகளை அடைகின்றது. அப்பொழுது தான்‌ உலகில்‌ ஸ்ருஷ்டி (படைப்பு) ஏற்படுகின்றது. நம்‌ சரீரத்தில்‌ வாதம்‌ - பித்தம்‌ - கபம்‌ என்ற தாதுக்களில்‌ ஒன்று குறைவதும்‌ மற்றொன்று கூடுவதுமாய்‌ இருக்கவில்லையா? அவ்வாறே ப்ரக்ருதியில்‌ இம்மூன்று குணங்களுள்‌ ஒன்று ஏறுவதும்‌ மற்றொன்று இறங்குவதுமாய்‌ இருப்பதுண்டு. அப்பொழுதுதான்‌ ப்ரக்ருதி பல வஸ்துக்களாய்‌ மாறுபாட்டை யடைகின்றது. இவ்வாறு குணங்களில்‌ ஏற்படும்‌ ஏற்றச்‌ சுருக்கங்களுக்கு அளவேயில்லை.

முற்கூறிய மூன்று குணங்களும்‌ ஸமமான நிலையில்‌ இருக்கப்‌ யெற்ற வஸ்துவே மூல ப்ரக்ருதி என வழங்குகின்றது. இந்த மூலபரக்ருதிக்கு அறிவு கிடையாது; அழிவு கிடையாது; பிறர்‌ பயனுக்காகவே ஏற்பட்டது. எப்பொழுதும்‌ மாறுபாடு அடைந்து
கொண்டேயிருப்பது. ஸ்ரீவைகுண்டம்‌ தவிர மற்ற இடங்களில்‌ இது இல்லாத இடம்‌ இல்லையென்னலாம்படி எங்கும்‌ பரவியுள்ளது. இந்த ப்ரக்ருதி மிவும்‌ ஸூக்ஷமமான சில மாறுபாட்டை அடையும்போது அதற்குத தமஸ்‌ முதலிய சில பெயர்ப்‌
பிரிவுகளைச்‌ சுருதி சொல்லுகின்றது.

இந்த ப்ரக்ருதி பல்வேறு வஸ்துக்களாய்‌ மாறு படும்போது வயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. ஒரே வகையான மாறுபாட்டை அடையும்போது அவயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. இந்த ப்ரக்ருதி மாறுபடும்‌ நிலையில்‌ வயக்தமெனப்‌ பெயர்‌ கொண்டு மஹாந்‌ முதல்‌ ப்ருதிவீ வரை உள்ள இருபத்துமூன்று தத்துவமாக மாறும்‌.
பரக்குதியின்‌ முழுப்‌ பகுதியும்‌ இப்படி இருபத்து மூன்று தத்துவங்களாக மாறுவதில்லை. அதில்‌ ஒரு பகுதியே இப்படி மாறுகின்றது. மற்ற பகுதி மாறாமல்‌ அப்படியே இருந்து கொண்டிருக்கும்‌. ப்ரக்ருதியில்‌ மற்ற வஸ்துக்களாக மாறுபடும்‌ பகுதி கடலில்‌ அலைகளையுடைய பகுதி போன்றதாகும்‌. மாறுபடாமல்‌
அப்படியே நிற்கும்‌ பகுதி கடலில்‌ அலையேயில்லாத இடம்‌ போன்றதாகும்‌. இப்படி மஹாத்‌ முதலிய மாறுபாட்டை அடையாமல்‌ அப்படியே நிற்கும்‌ ப்ரக்ருதியின்‌ பகுதியிலும்‌ கூட ப்ரளய நிலையில்யோல்‌ மிகவும்‌ ஸு்க்ஷூமமாய்‌ நமக்குப்‌
புலப்படாதனவாய்‌ ஒரே வகையான மாறுபாடுகள்‌ இருந்து கொண்டேயிருக்கும்‌.

இப்படி பரக்குதியில்‌ ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று குணங்களின்‌ ஏற்றச்‌ சுருக்கங்களால்‌ ஏற்படும்‌ மாறு பாடுகளில்‌ முதல்‌ மாறுபாடு மஹாந்‌ என்பது. ஜீவனுக்கு நிச்சயவடிவமான ஞானத்தை மநஸ்ஸுதான்‌ உண்டாக்குகின்றது.
அப்பொழுது இந்த மஹாந்‌ மனத்துக்குத்‌ துணையாயிருக்கும்‌. ஆதலால்‌ இநத மஹாந்‌ புத்தி என்று வழங்கப்பெறும்‌. இந்த மஹானும்‌ தன்னிடம்‌ உள்ள குணத்தைக்‌ கொண்டு மூன்று வகைப்படும்‌. மஹானில்‌ ஸத்துவகுணம்‌ அதிகமாயிருந்தால்‌
ஸாத்துவிக மஹாந்‌ என்றும்‌, ரஜோ குணம்‌ மிகுந்திருந்தால்‌ ராஜஸ மஹாந்‌ என்றும்‌, தமோ குணம்‌ அதிகமாயின்‌ தாமஸ மஹாந்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.
இந்த மஹானிலிருந்து பிறக்கும்‌ தத்துவம்‌ அஹங்காரம்‌ என்பது. இதன்‌ செயல்‌ வருமாறு - ஜீவனிலும்‌ வேறுபட்ட சரீரத்தையே ஆத்மாவாக நினைத்து அதில்‌ நான்‌ என்ற எண்ணத்தை மனம்‌ உண்டாக்குகின்றது. அப்பொழுது மனத்துக்கு இந்த அஹங்காரம்‌ துணை புரிகின்றது. அதனாலேயே இதற்கு அஹங்காரம்‌ என்ற பெயர்‌ வந்தது. இந்த அஹங்காரமும்‌ தனக்குக்‌ காரணமான மஹான்‌ போலேஸாத்துவிகம்‌ - ராஜஸம்‌ - தாமஸம்‌ என்று குணங்களின்‌ மிகுதி குறைவுகளைக்‌ கொண்டு
மூவகைப்படும்‌. இவற்றுள்‌ ஸாத்தவிக அஹங்காரத்தினின்று இந்திரியங்கள்‌ பிறக்கின்றன. தாமஸ அஹங்காரத்தினின்று பின்‌ தரும்‌ விளக்கத்தின்படி பூதங்கள்‌ பிறக்கின்றன. இந்த இரண்டு அஹங்காரங்களும்‌ தத்தம்‌ காரியங்களைப்‌ பிறப்பிக்கும்போது ராஜஸ அஹங்காரம்‌ இவ்விரண்டுக்கும்‌ தூண்டித்‌ துணை புரியும்‌

ஸாத்துவிக அஹங்காரத்தினின்று பதினொன்று. இந்திரியங்களும்‌ பிறக்கின்றன. இந்த்ரியங்கள்‌ உள்‌  இந்திரியங்களென்றும்‌ புற இந்திரியங்களென்றும்‌ இருவகைப்படும்‌. -உள்‌ இந்திரியமென்பது மனம்தான்‌. இந்த மனம்‌ 
ஸம்ஸாரலோகத்தில்‌ உள்ள சேதநர்கள்‌ ஒன்றைச்‌ செய்ய ஸங்கல்பிப்பதற்கும்‌ ஒன்றை நினைத்தற்கும்‌ மற்றும்‌ சில எண்ணங்கள்‌ உண்டாவதற்கும்‌ காரணமாயிருக்கும்‌. வெளி இந்திரியங்கள்‌ தத்தம்‌ செயலைச்‌ செய்ய இந்த மனம்‌ துணையாய்‌ நிற்கும்‌. உலகில்‌ மனிதனுக்கு நிச்சயமான எண்ணம்‌ உண்டாகின்றதன்றோ! அந்த எண்ணத்துக்கு மனம்தான்‌ காரணமாகின்றது. அப்பொழுது மனம்‌ புத்தி என்று பெயரால்‌ வழங்கும்‌. மனிதன்‌ ஒன்றை வேறொன்றாகத்‌ தவறிக்‌ கருதுகின்றான்‌. அதற்கும்‌ மனம்‌ தானே காரணம்‌! அந்த நிலையில்‌ மனம்‌ அஹங்காரம்‌ என்ற பெயர்‌ பெறுகின்றது. மனிதன்‌ ஒரு விஷயத்தைப்‌ பற்றி ஆலோசிக்னெறான்‌. இந்த ஆலோசனைக்கும்‌ மனமே காரணம்‌. இந்த நிலையில்‌ மனம்‌ சிததம்‌ என்று
அழைக்கப்பெறும்‌.


ஜஞாநேந்திரியங்கள்‌ ஐந்தும்‌ தத்தும்‌ செயலைப்‌ புரியும்‌ போது அவற்றின்‌ சக்தியை ஐந்து பூதங்களும்‌ வளர்த்துப்‌ போஷிக்கின்றன. காதுக்கு ஆகாய மம்‌. ஸ்பரிசேந்திரியத்துக்கு வாயுவும்‌, கண்ணுக்குத்‌ தேஜஸ்ஸும்‌. நாவுக்கு ஜலமும்‌, மூக்குக்குப்‌ பூமியும்‌ துணைநின்று அவ்விந்திரியங்களின்‌ சக்தியை வளர்க்கின்றன. இவ்வாறே உள்ளிந்திரியமாகிய மனத்துக்குப்‌ பூமி என்னும்‌ பூதம்‌ போஷகமாயுள்ளது. ப்ராண வாயுவை ஜலம்‌ போஷிக்கிறது. வாக்குக்குத்‌ தேஜஸ்‌ போஷகமாகும்‌.

மஹாந்‌ என்ற தத்துவம்‌ தொடங்கி ப்ருதிவி வரையில்‌ உள்ள எம்பெருமானது படைப்பு ஸமஷ்டி ஸ்ருஷ்டியெனப்படும்‌. இந்த மஹான்‌ முதலிய தததுவங்களின்‌ பகுதிகளைக்‌ கொண்டு செய்யப்படும்‌ படைப்பு வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌.

சுத்த ஸத்துவத்தின்‌ உருவத்தைப்‌ பற்றிச்‌ சில கருத்துவேற்றுமைகள்‌ உண்டு.
அவையாவன - சிலர்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்தை ப்ரக்ருதியையும்‌ காலத்தையும்‌ போல ஜடம்‌ என்கின்றனர்‌. அதாவது - தானே பரகாசிக்காமல்‌ வேறொன்றால்‌ புலப்படுத்த வேண்டியதாயுள்ள தென்கின்றனர்‌. சிலர்‌ சுத்த ஸத்துவத்தை ஸ்வயம்‌
ப்ரகாசமென்கின்றனர்‌. அதாவது - இதைக்‌ காண்பதற்குச்‌ சாதனமாய்‌ வேறொன்றும்‌ வேண்டியதில்லையென்றும்‌ தானே ப்ரகாசிததுக்‌ கொண்டிருக்குமென்றும்‌ கூறுகின்றனர்‌. தர்மபூதஜ்ஞாநம்‌, ஜீவாத்மா, அவனுடைய தர்மபூதஜ்ஞானம்‌, சுத்த ஸத்த்வம்‌ ஆகிய இவையெல்லாம்‌ ஸ்வயம்ப்ரகாசம்‌ என்று தேறுகின்றது. ஆத்மா *நான்” என்று எப்பொழுதும்‌ தோன்றிக்‌ கொண்டேயிருப்பதால்‌ இதை அறிய வேறு ஞானம்‌ வேண்டியதில்லை. ஆதலால்‌ _ஆதிமா ஸ்வயம்ப்ரகாசம்‌. ஆத்மாவிடம்‌ உள்ள ஞானம்‌ தர்மபூதஜ்ஞாநமெனப்படும்‌. இந்த ஞானம்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌
வேண்டாதபடி தானே ப்ரகாசிப்பதால்‌ இதுவும்‌ ஸ்வயம்ப்ர காசம்‌ என்னப்படுகின்றது. இவ்வாறே சுத்த ஸத்துவமும்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே ப்ரகாசிக்னெறது. ஆதலின்‌ இதுவும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌. ஆக ஆத்மாக்களும்‌ தர்மபூத ஜ்ஞாநமும்‌ சுத்த ஸத்த்வமும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌ என்ற முறையில்‌ ஒற்றுமையுடையன.

ஆயினும்‌ ஆத்மாவையும்‌ தர்மபூதஜ்ஞாநத்தையும்‌ காட்டிலும்‌ சுத்த ஸத்துவத்துக்குச்‌ சல வேற்றுமைகளும்‌ உண்டு. இந்த வேறுபாடுகள்‌ சாஸ்த்ரங்களால்‌ நிச்சயிக்கப்‌ பட்டனவாகும்‌. உதரஹரணமாம்‌ - ஆத்மாவுக்கு மாறுபாடு கிடையாது. சுத்த : ஸத்துவம்‌ வேறொரு வஸ்துவாய்‌ மாறுபாட்டை அடைவது. தர்ம பூதஜ்ஞாதம்‌ மற்றொரு
வஸ்துவைக்‌ காட்ட வல்லது. சுத்த ஸத்துவம்‌ தன்னை மட்டும்‌ காட்‌ டுமேயன்றி மற்றொரு வஸ்துவைக்‌ காட்ட வல்லதன்று. இப்படி சிற்சில வேற்றுமைகளையும்‌ சாஸ்தரமே வரையறுத்துள்ளது -ஆத்மா, தான் புலப்படுமேயன்றி மற்ற வஸ்துவைக்‌ காட்டாது. தர்‌மபூதஜ்ஞாநமோ தானே புலப்படுவதுடன்‌ மற்ற வஸ்துவையும்‌ காட்ட வல்லது.
ஆத்மா தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பயனைத்‌ -தானே பெறும்‌. தர்மபூத ஜ்ஞாநம்‌ தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பலனைத்‌ தான்‌ அடைய முடியாது. அசேதநம்தானே! ஆத்மாவுக்குச்‌ சுருக்கமோ மலர்ச்சியோ கிடையாது. தர்மபூதஜ்ஞாநம்‌ சுருங்குவதும்‌ மலருவதும்‌ உண்டு. இந்த வேற்றுமைகளையும்‌ சாஸ்தரம்‌ , வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ ஏற்றுக்‌ கொண்டேயாக வேண்டியிருக்கன்றதன்றோ! இவ்வாறே இந்த இரண்டிலும்‌ காட்டிலும்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்திற்குக்‌ ழ்க்‌ கூறியவாறு லை வேற்றுமைகளையும்‌ முன் கூறிய ப்ரமாணங்களை ஒத்த ப்ரமாணங்கள்‌ வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ இசைந்தேயாக வேண்டும்‌. -
சுத்த -ஸத்துவத்தின்‌ தன்மைகள்‌ நமக்கு மிகவும்‌ அநுகூலமாயிருப்பதால்‌ “சுத்த ஸத்துவத்தை ஆநந்தமயம்‌' என்றும்‌ கூறுவர்‌. இது எம்பெருமானுடைய ஞானம்‌ - சக்தி - பலம்‌: ஐச்வர்யம்‌. --வீர்யம்‌ - தேஜஸ்‌ ஆகிய ஆறு குணங்களும்‌! நமக்குப்‌ புலப்படும்படி செய்வதால்‌ ஷாட்குணயமயம்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.

வாத்மாவைப்‌ பற்றிய விளக்கத்தை ஸ்ரீ ஆளவந்தார்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸித்தித்ரயத்தில்‌ ஆத்மஸித்து என்ற பகுதியில்‌ "தேஹேந்தரிம: என்று தொடங்கும்‌ சுலோகத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌ -தேறஹேந்த்ரிய மந: ப்ராணூ.ப்யோ 2ந்யோ 2நந்யாஸாததந: நித்யோ வ்யாபீ ப்ரதிக்ஷேத்ரமாத்மா பிந்ந: ஸ்வதஸ்ஸு-இதற்குச்‌ சுருக்கமான பொருள்‌ வருமாறு - ஜீவாத்மா, சரீரம்‌ - இந்தரியம்‌ - மநஸ்‌ - ப்ராண வாயு - தர்மபூதஜ்ஞாநம்‌ இவற்றிற காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. தானே ப்ரகாரிப்பவன்‌. அழிவற்றவன; எந்த அசேதநத்திலும்‌ உள்ளே புகவல்லவன்‌. சரீரம்தோறும்‌
வேறுபட்டவன்‌. இயற்கையில்‌ ஸுகஸ்வரூபனும்‌ ஸாகத்தைப்‌ பெறத்‌ தகுதி யுடையவனுமா யிருப்பவன்‌.

எம்பெருமானுக்கு இரண்டு வகைப்பட்ட தன்மைகள்‌ உண்டு. (1) ஸ்வரூப நிரூபக தர்மங்கள்‌ (2) நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள்‌.-ஸ்வரூப நிரூபகங்களாவன - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை எந்தத்‌ தன்மைகளையுடையதாகக்‌ கூறியே விளக்கினாலன்றி அந்த வஸ்துவை அறிய முடியாதோ அந்தத்‌ தன்மைகள்‌ எம்பெருமானுக்கு (1) ஸத்யத்வம்‌ (2) ஜ்ஞாநத்வம்‌ (3) அநந்தத்தவம்‌ (4) ஆநந்தத்வம்‌ (5) அமலத்வம்‌ என்னும்‌ ஐந்து தன்மைகளும்‌ ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள்‌. எம்பெருமானைப்‌ பற்றி அறிய முற்படும் யோது இந்தத்‌ தன்மைகளை அறிந்தே இவற்றுடன்‌ கூடியவனாக அவனை உணர வேண்டும்‌. இந்த ஐந்தையும்‌ சேர்க்காமல்‌ அவன்‌ ஸ்வரூபத்தை மட்டும்‌ அறியமுடியாது.
(1) ஸத்யத்வம்‌ - எப்பொழுதும்‌ மாறுபடாது ஒரே நிலையில்‌ நிற்றல்‌.
(2) ஜ்ஞாநதவம்‌ - எப்பொழுதும்‌ குறைவுபடாத ஞான வடிவனாயிருக்கும்‌ தன்மை.
(3) அநந்தத்வம்‌ - *இங்கு தான்‌ இருக்கின்றான்‌? என்று தேசததாலும்‌, இப்பொழுது தான்‌ இருக்கின்றான்‌? என்று காலத்தாலும்‌ இந்த வஸ்துவின்‌ அந்தர்யாமியாகத் தான்‌ இருக்கின்றான்‌, என்று வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதபடி எவ்விடத்திலும்‌ எக்காலத்திலும்‌ எந்த வஸ்துவையும்‌ சரீரமாகக்‌ கொண்டு நிற்கும்‌ தன்மை.
4) ஆநந்ததவம்‌ - ஆநந்த ஸ்வரூபனாய்‌ நிற்றல்‌-(5) அமலத்வம்‌ - தோஷங்களில்லாத தன்மை

நிரூபிதஸ்வரூபவிசேஷணம்‌ - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை விளக்கிய பின்‌ அதன்‌ பெருமை புலப்.படுவதற்குப்‌ புகழ்ந்து பேசும்‌ குணங்கள்‌. முற்கூறிய ஐந்து குணங்களு டனேயே எம்பெருமானை விளக்கிய பின்‌ அவன்‌ பெருமையை அதிவதற்காக அவனிடம்‌ உள்ள ஜ்ஞாநம்‌ - சக்தி முதலிய குணங்களும்‌ இவற்றின்‌ உட்பிரிவுகளான ஸெளசீல்யம்‌ (மிக மேம்பட்டவன்‌ தாழ்ந்தவர்களோடு இடையீடின்றிக்‌ கலந்து பழகும்‌ தன்மை) முதலிய தன்மைகளும்‌ கூறப்‌ படுகின்றன. இவையெல்லாம்‌ நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாகும்‌. இக்குணங்களின்‌ இலக்கணங்களையும்‌ இவை பயன்படும்‌ முறை முதலியவற்றையும்‌ விரிவாக அறிய வேண்டுமானால்‌ சாஸ்த்ரங்களின்‌ உதவியை நாடிக்‌ கொள்க.
ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில்‌ முப்பத்தொன்ப; விபவரூபங்களுக்கும்‌ பெயர்கள்‌ கொடுக்கப் பட்டுள்ளன அவையாவன - (1) பத்மநாபன்‌ (2) ஸநத்குமாரன்‌ (8) தருவ 
(௧) அநந்தன்‌ (5) சக்த்யாத்மா (6) மதுஸூதநன்‌ (7) கபில (8) விச்வரூபன்‌ (9) விஹங்கமன்‌ (10) க்ரோடாதம (12) படபாவக்த்ரன்‌ (12) தர்மன்‌ (74) ஹயக்ரீவன்‌ (14) ஹம்ஸ (15) மத்ஸ்யம்‌ (16) கூர்மம்‌ (17) அம்ருநாூாஹரணன்‌ (18) வராஹ
(19) ந்ருஸிம்ஹன்‌ (20) ராஹுஜித (21) காலநேமிக்நன்‌ (22) பா ஜாதஹரன்‌ (23) தத்தாத்ரேயன்‌ (24) வடபத்ரசாயி (25) வாமன (26) த்ரிவிக்ரமன்‌ (27) நரநாராயணர்‌ (28) ஹரி (29) நாரத (30) ப்ருது (31) வ்ருஷபன்‌ (22) தந்வந்தரி (83) வ்யாஸ
(34) பாதாளசயநன்‌ (35) பரசுராமன்‌ (36) ராமன்‌ (67) பலராம (38) க்ருஷ்ணன்‌ (39) கல்கி என்பன.

எம்பெருமானுடைய அவதாரங்களைப்பற்றிய ஆறு ரஹஸ்யங்கள்‌ உண்டு. அவையாவன (3) எம்பெருமானுடைய அவதாரம்‌ ஒவ்வொன்றும்‌ இந்த்ரஜாலம்‌ போலன்றி உண்மையாயிருத்தல்‌ (2) அவதாரதசையிலும்‌ எம்பெருமானுக்கு
இயற்கையாயுள்ள தன்மைகளை விடாதிருக்கப்‌ பெறுதல்‌ (3) அவ தாரத்திலும்‌ உள்ள அவன்‌ திருமேனி! ரஜஸ்‌ - தமஸ்ஸுக்களின்‌ ஸ்ம்பந்தமேயில்லாது சுத்தஸத்துவமயமாகவேயிருத்தல்‌ (4) அவன்‌ இக்கர்மபூமியில்‌ அவதரிப்பதற்குக்‌ கர்மம்‌ முதலியவனவன்றின்‌ தன்‌ ஸங்கல்பமே காரணமாயிருத்தல்‌ (5) பூமியில்‌ தர்மம்‌ குறைந்து அதர்மம்‌ தலையெடுக்கும்யபேோது அவதரிக்கும்‌ தன்மை (6) ஸாதுக்களை ரக்ஷிப்பதே அவதாரத்திற்குப்‌ பலனாயிருத்தல்‌ என்பன.

எம்பெருமானுடைய எட்டு நிலைகள்‌ -(1) கர்த்தா (2) ப்ரேரகன்‌ (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பலப்ரதன்‌ (7) பலி (8) உதாஸீநன்‌ என்று அந்த அந்த நிலைகளில்‌ பெயர்‌ யெறுகின்றான்‌.-கர்த்தா - வஸ்துவினுள்‌ புகுந்து படைப்பு
முதலியவற்றைச்‌ செய்பவன்‌. -ப்ரேரகன்‌ - ஜீவனுக்கு அறிவைக்‌ கொடுத்து ஒரு
செயலைச்‌ செய்யுமாறு ஏவுபவன்‌.-அநுமந்தா - சேதநன்‌ செயலைச்‌ செய்யும்போது
அதைச்‌ செய்விப்பவன்‌.-ஸஹகாரி - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌
யெரும்பகுதியை ஏற்றுத்‌ துணை செய்பவன்‌. -ஸாக்ஷி-சேதனன்‌ செய்யும்‌ செயலை நேரில்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌.- பலப்ரதன்‌ - சேதநன்‌ செயல்களுக்குப்‌ பலனை
அளிப்பவன்‌.-பலி - அச்செயலின்‌ பலனை முக்கியமாய்ப்‌ யெறுமவன்‌-உதாஸீநன்‌ - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ விசேஷமான தொடர்பற்று ப்‌ பொதுக்‌ காரணமாக இருப்‌பவன்‌.

—————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீதத்த்வ நவநீதம்-

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் நாலாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது.

[போக்த்ராதி விபாகம்-போக்த்ரு நிரூபணம்-போக்ய நிரூபணம் -த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம் -ப்ரேரித்ருநிரூபணம்-ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம்.

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்*-பயிரில்
களைபோல் அசுரரைக் காய்ந்தான்தன் கையில்
வளைபோல் * எம் ஆசிரியர் வாக்கு.

நம் பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்தி,ஜீவாத்மாக்களும் அவை களின் சரீரங்களும் தனக்குச் சரீரமாயிருக்கும்படி தான் சேஷியாய் ஸர்வோத்க்ருஷ்டனாய் நின்று, திருவாய்ப்பாடியில் தயிர் வெண்ணெய் முதலியவைகளை இந்தப் பூமியுடன், (இது மற்ற எல்லா லோகங்களுக்கும் உபலக்ஷணம்), அமுதுசெய்தவனாய், பயிரில் களையைப் போலே அஸுரர்களைக் கொன்றவனாகிய பகவானுடைய திருக்கையில் கடகத் (சங்கத்)தைப் போலே (அவற்றைத் தரிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் த்ருப்தியை உண்டு பண்ணுகிறாப் போலே இருக்கிறது,

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ஹஸ்த ஆபரணம் போல் அன்றோ நம் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள்

போக்த்ராதிவிபாகம் –ஸம்ஸ்க்ருத த்ராவிடருதி ஸ்மருதி இதிஹாஸ புராணங்களில் சொல்லுகிற தத்த்வ ஜ்ஞாந பூர்வகமாக மோக்ஷோபாயாநுஷ்ட்டாநம் வேண்டு(மா)கை
யாலே, முமுக்ஷவுக்கு விசேஷித்தறிய வேண்டும் சித் அசித் ஈஸ்வர தத்த்வங்களை போக்தா என்றும், போக்யம் என்றும், ப்ரேரிதா என்றும் உபநிஷத்துச் சொல்லிற்று.

போக்தாவா கையாவது-போகத்தையுடையனாகை. இது-ஸர்வேஸ்வரனுக்கும் பொதுவாயிருக்க, அவனை ப்ரேரிதா என்று பிரியச் சொல்லுகையாலே ஸர்வ ப்ரேரகத்வ மின்றிக்கே பராதீந போகனான ஜீவனை இங்கு போக்தா என்கிறது.

தேகாத்மா பிரமமும் ஸ்வ ஸ்வா தந்த்ர பிரமமும்-அந்நிய சேஷத்வ பிரமமும் – போக்க வேண்டுமே-ஜீவனுடைய போக்த்ருத்வம் -பரி பூர்ண நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் சங்கல்பம் அடியாகவே –ஆகவே நியாந்தா ப்ரேரிதா -சர்வேஸ்வரன்

(அதிஷ்ட்டாநம் ததா கர்த்தா -கீதை -18-14 கரணம் ச ப்ருதக் விதம் | விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் ‘ என்று மேல் . (மனிதன் சரீரம் வாக்கு மனது இவைகளினால் எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ,அந்தக் கர்மத்திற்கு) சரீரம்,அப்படியே ஜீவாத்மா (வெவ்வேறாக இருக்கிற இந்த்ரியங்கள், அநேக விதமாயிருக்கிற வேறான வ்யாபாரத்தை யுடைய ப்ராண வாயு, இந்த விஷயத்தில் ஐந்தாவதாகிய பரமாத்மா,இவை ஐந்தும் காரணங்கள்.) என்கிற இடத்தில் கர்த்ரு பதம் பராதீந கர்த்தாவைச் சொல்லுகிறது. சித் அசித் ஈஸ்வரர்கள் என்னும் போது சித் சப்தமும் பராதீந சேதந விஷயம்.

( இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா -வைகுண்ட ஸ்தவம்-36. நித்யம் ப்ரியாஸ்தவ து கேசந தேஹி நித்யா: ‘ என்று மேல். உம்முடைய ஸங்கல்பத்தினாலேயே எல்லா
வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் உண்டாகிறது. ( எவை சில உமக்கு எப்பொழுதும் இஷ்டங்களோ அவை நித்யங்கள் என்னப்படுகின்றன.)இத்யாதிகளிற் படியே ஜீவனுடைய ஜ்ஞாநாநந்த ஸ்வரூபாதிகளும் பராதீநங்களாயிறே இருப்பது. இஜ்ஜீவ வர்க்கத்தில் பீஜாங்குர க்ரமத்தாலே அநாதியான அபராத ப்ரவாஹமடியாக முடிவில் பெரும் பாழான சிறைக்கூடத்திலே முப்பிரியான ஸத்வாதி குணங்களாலே கட்டுண்டு கழல விரகற்றுக் கிடக்கிறவர்கள் பத்தர்கள். இவர்களிலே மோக்ஷ ஸாஸ்த்ரங்களிற் சொல்லுகிறதொரு விரகாலே-(மோக்ஷயிஷ்யாமி) என்னும்படி முனிவு தீர்ந்து நித்யரோடொக்க முகப்பே கூவிப் பணி கொள்ளப் பெற்றவர்கள் முக்தர்கள். நித்ய பகவதனுபவத்தாலே நித்ய கைங்கர்ய பரரான சேஷ சேஷாஸநாதிகள் நித்யர்கள்.

போக்யநிரூபணம் –போக்யம் என்பது அநுபாவ்யம் என்றபடி. இது ஜீவேஸ்வரர்களுக்கும் பொதுவாகையாலே பூர்வாபரபதங்களிற் சொன்ன போக்த்ருத்வமும் நியந்த்ருத்வமும்
இல்லாத விஷயத்தை இங்கு’போக்யம் என்கிறது. இத்தை அசித்து என்றது ஜ்ஞாந ரஹிதம் என்றபடி. அசேதநத்வம் கேவல குணங்களுக்கும் தர்மபூத ஜ்ஞாநத்திற்கும் பொதுவாகிலும் இங்கு த்ரிவித அசேதனம் என்று பூர்வர்கள் நிரூபித்தவை த்ரிகுணமும் காலமும் ஸூத்த ஸத்த்வமும் என்கிற த்ரவ்ய விசேஷங்கள்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது-பரிமித ஸுகத்திற்கும் துக்கத்திற்கும் மோஹத்திற்கும் விசேஷ காரணங்களான ஸத்த்வ ரஜஸ் தமஸ்ஸுக்களாகிற குணங்களுக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம். இது கேவல ப்ரக்ருதி என்றும், ப்ரக்ருதி விக்ருதி | என்றும், கேவல விக்ருதி என்றும் மூன்று வகையாய் இருபத்து நாலு தத்த்வ ரூபமாயிருக்கும். இவற்றில் ஸ்வபாவத்தாலும் பஞ்சீகரணாதிகளாலும் தேஸ கால பேதத்தாலே உண்டாம் விக்ருதிகளுக்கு எல்லை யில்லை.-மகான் அஹங்காரம் தன்மாத்திரைகள் -ஆகிய ஏழும் பிரகிருதி விக்ருதிகள்
பஞ்ச பூதங்களும் கர்ம ஞான பஞ்ச இந்திரியங்களும் மனஸ் ஆகிய இவை -16-கேவல விக்ருதிகள்-இவற்றில் ஸ்வ பாவத்தாலும் பஞ்சீ கரணாதிகளாலும் தேச கால பேதத்தாலே யுண்டாம் விக்ருதிகளுக்கு எல்லையில்லை –

கால நிரூபணம்–காலமாவது ஜடத்வ விபுத்வங்களை யுடைத்தாய் பால வ்ருத்தாதி வ்யவஸ்த்தைகளுக்கு விசேஷ காரணமான த்ரவ்யம். இது எப்போதும் அவ்வோ வஸ்துக்களுடைய பூத பவிஷ்யத் வர்த்தமாந வ்யபதேங்களுக்கும் தன் அவச்சேதங்களாலே நியாமகமாயிருக்கும். இதற்கு ஸத்த்வாதி குண த்ரயமின்றிக்கே இருக்க உபாதி விஸேஷங்களாலே ஸீத காலம் உஷ்ண காலம் என்னுமா போலே ஸாத்த்விக ராஜஸ தாஸாதி கால விபாகம் உண்டாகிறது. ப்ரஹ்ம திவஸம் முதலாக மனுஷ்ய திவஸ பர்யந்தமாக எங்கும் இது கண்டு கொள்வது. ஸூத்த ஸத்த்வத்தில் இப்படிப்பட்ட கால விபாகமின்றிக்கே பூர்வாபராதி விபாக மாத்ரமே யாயிருக்கும்.

சுத்தஸத்த்வ நிரூபணம்-சுத்த சத்வமாவது -ரஜஸ் தமஸ்ஸூக்கள் இன்றிக்கே -பிராகிருத சத்வ -விலக்ஷண சத்வத்துக்கு ஆஸ்ரயமான த்ரவ்யம்-இது ச பரிகாரனான ஸ்ரீ யபதிக்கு போக்ய-போக உபகரண -போக ஸ்தான ரூபமாய்க் கொண்டு அனந்த ஆச்சர்யமாய் ஹிரண்ய கர்ப்பாதி ஸ்தலங்கள் எல்லாம் நரகமாய்த் தோற்றும்படியான
ஆனுகூல்ய ப்ரகர்ஷத்தாலே பரமபத சப்த வாஸ்யமாய் இருக்கும்

ப்ரேரித்ருநிரூபணம்--இப்படி மூன்று வகையான சேதநாசேதநங்களுடைய ஸ்வரூப ஸ்த்திதி ப்ரவருத்திகள் மூன்றும் தானிட்ட வழக்காம்படி நிற்கிற ஸ்ரிய:பதியை ப்ரேரிதா என்கிறது. இவன் மூன்று ஸம்பந்த நியமத்தாலே ஸர்வ ஸரீரியாய்,மூன்று வ்யாபார விஸேஷங்களாலே ஸர்வ கார்யங்களுக்கும் ஸர்வ காரணமாய், மூன்று காலத்திலும் ஏகரூப ஸ்வரூப ரூபங்களை யுடையவனாய், மூன்று ஸ்த்தாநத்திலே நித்ய வாஸத்தை யுடையவனாய், மூன்று வகையான அர்ச்சாவதாரத்தை யுடையவனாய், மூன்று யுகத்திலே விஸேஷித்து ப்ரகாலிக்குமவனாய்,மூன்று குண யுகத்தாலும் த்ரியுகனாய், மூன்று வ்யூஹங்களாலே மூவிரண்டு ப்ரகாரங்களைப் பண்ணுமவனாய், மூன்று புருஷார்த்தங்களுக்கும் மூலமாய், மூன்று ப்ரமாணங்களாலும் ப்ரதி ஷேதமில்லாதவனாய், மூன்று மாத்திரையான ஒற்றை எழுத்திற்கு முக்க்யார்த்தமாய், மூன்று ரஹஸ்யங்களில் ஸிக்ஷையாலே விஸேஷித்தறியப்படும்.

ப்ரஹ்ம த்ரைவித்ய நிரூபணம் –-ப்ரஹ்மத்தற்கு உபநிஷத்துக்களிற் சொன்ன த்ரைவித்யம் போகத்ரு(த்வ) விஸிஷ்ட ரூபத்தாலும், போக்ய(த்) விஸிஷ்ட ரூபத்தாலும், ப்ரோகத்வ விஸிஷ்ட ரூபத்தாலும் உபபந்நம். தன்னையும் ப்ரேரிதாவையும் பிரிய-அறிந்து பற்றினவனுக்கு அவன் ப்ரஸாதத்தாலே மோக்ஷம் என்று இங்கே ஓதுகிறது. இப்படியே பஞ்சதஸாத் யாயாதிகளிற்படியே பராவர தத்த்வ விவேகம் பிறந்தால் (த்யேயோ நாராயணஸ் ஸதா- நரஸிம்ஹ புராணம்-18-34 நாராயணன் எப்பொழுதும் த்யானிக்கத் தக்கவன்,) என்றும்,ஸ்மர்த்தவ்ய:ஸததம் விஷ்ணு:- பாரதம்- விஷ்ணு எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கவன். )என்றும்,துஞ்சும்போதும் விடாது தொடர்-திருவாய்-1-10-4-என்றும் சொல்லுகிற ஸதா நுஸந்தாநம் கருத்ய பேஷமுடையவனுக்கு உபாயோபகார விதி(தை)யாலேவந்த போகம். க்ருதக்ருத்யனுக்கும் கைங்கர்யோபகார விதி(தையாலே வந்த போகம்] போக்யனாய் நித்ய ஸ்ரீயான ஸேஷி ஸமாதிக தரித்ரனானாற்போலே
போகமும் நிஸ் ஸமாப்யதிகமாம்.

அலையற்ற ஆரமுதக் கடல் அக்கடலுண்ட முகில் *
விலையற்ற நன்மணி வெற்பு வெயில் நிலவோங்குபகல்*
துலையொத்தன என்பர் தூய்மறைசூடும் துழாய்முடியாற்கு
இலையொத்தன அவன் பாதம் பணிந்தவர்க்கு எண்ணுதற்கே.

அலையில்லாத பூர்ணமான அம்ருதத்தையுடைய ஸமுத்திரம், அந்த அம்ருத ஸமுத்திரத்தை முழுதும் குடித்த மேகம், விலையில்லாததான உத்தம ரத்நமயமான மலை, வெயிலினாலும் நிலவினாலும் ப்ரகாசிக்கும் மத்தியான்னம் இவைகள் பரிசுத்தமான வேதங்களினாலே சிரஸ்ஸினால் சூடப்படுகிற துழாய் மாலையைக் கிரீடத்தில் தரித்துக் கொண்டிருக்கிற பகவானுக்கு ஸமமாயிருந்தன, அன்றிக்கே தூக்கிப் பார்ப்பதில் அதாவது நிறையில் ஸத்ருச்யமாயிருந்தன என்று ( பூர்வாசார்யர்கள்) சொல்லுவர்கள், அவனுடைய திருவடிகளை ஆச்ரயித்த பாகவதர்களுக்கு இவைகள் ஸமானம் என எண்ணுதற்கே ஸத்ருசமான வஸ்துக்கள் இல்லை

ஸத் ஸம்ப்ரதாய தத்நஸ் ஸமுத்த்ருதம் வேங்கடேரே ந |
தத்த்வநவநீதமேதத் தநுதே நவநீதநர்த்தகப்ரீதிம் |11

ஸத்ஸம்ப்ரதாயத்தில் உபதேச க்ரமமாக வந்த அர்த்தங்களாகிற தயிரிலிருந்து வேங்கடேசன் என்கிற திருநாமத்தை யுடைய ஆசார்யனால் எடுக்கப்பட்ட இந்தத் தத்த்வ நவநீதம் என்கிற க்ரந்தமானது நவநீதத்திற்காக (க்கோபர்களுடைய க்ருஹங்களில்) நர்த்தநம் பண்ணின பகவானுக்கு ப்ரீதியைச் செய்கிறது.

வரத விரசய த்வம் வாரிதாபேபஷதோஷாம்
புநருபசித புண்யாம் பூஷிதாம் புண்யகோட்யா |
ஸிதமுதித மநோபி: தாவகை: நித்ய ஸேவ்யாம்
ஹதரிபு ஜநயோகாம் ஹஸ்திதாம்நஸ் ஸம்ருத்திம் [1

ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில் அர்ச்சாரூபம் கொண்டிருக்கும் வரதனே! போக்கடிக்கப்பட்ட எல்லாத் தோஷங்களையுடையதாயும், மேன்மேலும் வருத்திசெய்யப்பட்ட புண்யத்தையுடையதாயும், புண்யகோடி விமானத்தினால் அலங்கரிக்கப்பட்ட தாயும், பரிசுத்தமாயும், ஸந்தோஷத்தோடு கூடியதாயுமிருக்கிறமனத்தையுடைய உம்முடைய பக்தர்களினால் எப்பொழுதும் ஸேவிக்கத் தகுந்ததாயுமிருக்கிற ஹஸ்திகிரியினுடைய ஸம்பத்தைப் போக்கடிக்கப்பட்ட சத்ரு ஜனங்களுடைய ஸம்பந்தத்தையுடையதாக நீர் செய்துகொள்ளும்,

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்திரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீதத்த்வநவநீதம் முற்றிற்று.

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்த்வ பதவீ

June 19, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

——————-

அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் இரண்டாவது. இது காஞ்சீபுரத்தில் அருளிச் செய்யப்பட்டது.

உபோத்காதம்- பர தத்த்வ நிரூபணம்-சேதநநிரூபணம்–அசேதந நிரூபணம் த்ரிகுண நிரூபணம்-கால நிரூபணம்-சுத்த ஸத்த்வ நிரூபணம்- தர்மபூத ஜ்ஞாந நிரூபணம் – முக்தி அடையும் ப்ரகாரம்.

ப்ரஸாதாத் தோரிகேந்த்ராணாம் பராவரவிபாகவித்
ப்ரப ந: பரமாத்மாநம் ப்ராப்கோதி பரமம் பதம் I

ஆசார்யர்களினுடைய அநுக்ரஹத்தினால் பர தத்த்வம் அவர தத்த்வம், அதாவது உயர்ந்த வஸ்து தாழ்ந்த வஸ்து, இவைகளின் பிரிவைத் தெரிந்து கொண்டவனாய் உயர்ந்த தத்த்வமாகிய சரிய:பதியினிடம் ப்ரபத்தி செய்தவன் பரமபதத்தை அடை கிறான்.

உபோத்காதம்-ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே பராவர தத்த்வ ஜ்ஞாநம் பிறந்து(தவன்) ஸர்வேஸ்வரன் திருவடிகளை உபாய உபேயங்களாகப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும்.

பர தத்த்வ நிரூபணம் -பரதத்த்வமாவது-ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாய் சேஷியுமான ஸ்ரிய:பதி இவன் ஸ்வத:ஸர்வஜ்ஞனாய், ஸர்வக்தியாய், பரம காருணிகனாய், ஸர்வ ஸரண்யனாய், பரமோதாரனாய், மோக்ஷ ப்ரதனாய்,-முக்த ப்ராப்யனாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார பாஸ்ரய (திவ்ய மங்கௗ) விக்ரஹ விஷ்டனாயிருக்கும்.

இவனை ஒழிந்தவை அவர தத்த்வம். இது சேத மென்றும்,-அசேதநமென்றும் இரண்டு வகையாயிருககும்.

சேதந நிரூபணம் -சேதநமான அவர தத்த்வம் பரிச்சிநமான அஹமர்த்தம்)-இதற்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் பராயத்தங்களாயிருக்கும். இது பத்த முக்த
நித்ய ரூபத்தாலே த்ரிவிதம். பத்தராவார்-ஸம்ஸரிக்குமவர்கள்.-முக்தராவார் – ஸம்ஸாரம் கழிந்தவர்கள். நித்யராவார்-ஒரு காலத்திலும் ஸம்ஸாரமில்லாத நித்யஸூரிகள்.

அசேதந நிரூபணம் -அசேதநமாவது அறிவில்லாத வஸ்து. அசேதந த்ரவ்யம் த்ரிகுணம் என்றும், காலம் என்றும், த்தஸத்த்வம் என்றும், தர்மபூத ஜ்ஞாநம் என்றும் சதுர் விதமாயிருக்கும்.

த்ரிகுண நிரூபணம் -த்ரிகுணமாவது ஸத்த்வாதி குணத்ரயாஸ்ரயமான த்ரவ்யம். இது ப்ரக்ருதி விக்ருதி விபாகத்தாலே இருபத்து நாலு வகையாய் பகவல்லீலார்த்தமாக
க்ஷேத்ரஜ்ஞருக்குக் கார்ய கரணாதி ரூபேண பரிணமித்து பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளைப் பண்ணும்.

காலநிரூபணம்-காலமாவது-க்ஷணாதி விபாகத்தையுடைத்தாய் ஸர்வ கர்த்தாவான ஈஸ்வரனாலே ஸஹ காரியாக ஸ்வீக்ருதமாயிருக்கும் த்ரவ்யம்,

சுத்தஸத்த்வ நிரூபணம் –சுத்தஸத்த்வமாவது- ர ஜ ஸ் தமஸ்ஸுக்களின்றிக்கே
ஸத்த்வ குணாஸ்ரயமான த்ரவ்யம்.-இது ஈஸ்வரனுக்கும் நித்யருக்கும் முக்தருக்கும் விக்ரஹாதி ரூபேண விசித்ர (போக்ய)மாயிருக்கும்.

தர்மபூதஜ்ஞாந நிரூபணம் -தர்மபூத ஜ்ஞாநமாவது-பராவராத்மாககளுக்கு ஸ்வாத்மாவையும், ஸ்வ வ்யதிரிக்த வஸ்துக்களையும் ப்ரகாசிப்பிக்கவற்றான ஜ்ஞாநம். இந்த ஜ்ஞாநத்தாலே ஆத்மாக்களுக்கு ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போகத்ருத்வங்கள் உண்டாகின்றன.

முக்தி அடையும் ப்ரகாரம் -பத்தருக்கு நிஷித்த காம்ய கர்த்ருத்வம் ஸம்ஸார ஹேது,
தத்த்வஜ்ஞாநமூல நிவ்ருத்தி தர்ம கர்த்ருத்வம் மோக்ஷ ஹேது.
பத்தன் முன்பு பண்ணின பந்தகங்களுக்கெல்லாம் தன் அதிகாராநுகுணமாக ப்ரபத்த்யாதி
ப்ராயசித்தம் பண்ணி, மேல் அபராதம் பண்ணாதே ப்ராரப்த கர்மத்தையும் ஒரு வழியாலே கழித்து முக்தனாம்.

முத்திக்கு அருள்சூட மூன்றைத் தெளிமுன்னம்
இத்திக்கால் ஏற்கும் இதம்.

ோக்ஷத்திற்குக் காரணமாகிய பகவானுடைய க்ருபையை சிரஸா வஹிக்க முதலில் சித், அசித் , ஈச்வரன் என்கிற மூன்று தத்த்வங்களையும் அவைகளின் அஸாதாரண தர்மங்களுடன் நன்றாகத் தெரிந்துகொள், இந்த வழியாக உபாயம் அநுரூபமாக உண்டாகும்.

இப்படி கவிதார்க்கிக ஸிம்ஹமும் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரரும் வேதாந்தாசார்யருமான ஸ்ரீமத்வேங்கடநாதரால் அருளிச்செய்யப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுள் ஸ்ரீ தத்த்வ பதவீ முற்றிற்று.

————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த அத்யாத்ம சிந்தா –ஜீவாத்மா -பரமாத்மா விசாரணை –

April 3, 2025

ஸ்ரீ ப்ரஹ்ம தேசம் -மன்னார் கோயிலில் 1242-ஆனி -ஸ்வாதி -நக்ஷத்திரத்தில் திருவவதரித்தார் -இயல் பெயர் வரதராஜர் -ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் -விருது பெற்றவர் -சொட்டை மணவாள முனி என்ற விருதும் பெற்றதாக ஸ்ரீ கீதை வெண்பா இறுதிப் பாசுரம் மூலமும் அறிகிறோம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் இறுதிக் காலத்தில் அவதரித்து -அவரை ஆஸ்ரயித்து -அவரது திருக் குமாரரான நாயனார் ஆச்சார்யன் பிள்ளையிடம் ஸம்ப்ரதாய சாஸ்திரங்கள் கற்றவர் –

கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரத்து எம்பெருமான்களே -அழகிய மணவாளன் நாயனாராகவும் -திருமலையப்பன் தேசிகராகவும் வரதராஜ பிள்ளை லோகாச்சார்யராகவும் -திருநாராயணத்த்து எம்பெருமான் அழகிய மணவாள ஜீயராகவும் திருவவதாரம் என்பர்

பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளைப் பற்றுவது என்றும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததையே இவர் அருளிச் செய்த தத்வ தீப கிரந்தத்தில் ஸ்ரீ மத் சரணவ் -சேர்த்து திருவோடு கூடிய நாராயணன் திருவடிகளை -என்றபொருள் அருளிச் செய்துள்ளார் –நாராயணனுடைய ஸ்ரீ சம்பந்தமுடைய திருவடிகளை உபாயமாகப் பற்ற -என்று இவர் நிர்வாகம் -ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் –இரண்டிலும் பன்மை பிரயோகம் –

இவரது 32 வயதில் பெரியவாச்சான் கைக் கொண்டு முதலில் உபதேசம் -உலக்கைக் கொழுந்து துளிர்க்காதது போல் உனக்கும் ஞானம் வராது என்ற கேலிப்பேச்சு –

முசல கில சயம் -உலக்கை துளிர்க்குமோ -கேலி செய்ய -பெரிய ஆச்சார்யன் கிருபையால் அனைத்து ஸம்ப்ரதாய அர்த்தங்களையும் கற்று அதே பெயரில் கிரந்தமும் சாதித்து அருளி உள்ளார் –

அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||
–ஆச்சார்ய வந்தனம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

இவர் அருளிச் செய்தவை
தத்வ தீபம்
தத்வ நிரூபணம்
தத்வ ஸங்க்ரஹம்
தத்வ பூஷணம்
ஞான ஆர்ணவம்
சாரீரிகக் கண்டியம்
அத்யாத்ம சிந்தை
சதுஸ்லோகீ
கீதா சாரம்
தீப பிரகாசிகை
நரஸிம்ஹ அஷ்டகம்
திரு விருத்த ஸ்வாபதேச வியாக்யானம்
பன்னீராயிரப்படி
இருபத்து நாலாயிரப்படி பிரமாணத் திரட்டு
ரஹஸ்ய த்ரய விவரணம்
ரஹஸ்ய மணி மாலை
தமிழ்க் கனி பிரபந்தம்
பகவத் கீதை வெண்பா

இவர் 108 திரு நக்ஷத்திரங்கள் இங்கு இருந்தது 1350 திரு நாட்டை அலங்கரித்தார்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காகத்
தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம்

———–

தனியன் ஸ்லோகங்கள் -2-
அவதாரிகை ஸ்லோகங்கள் -6-
தத்வ ஞான விளக்கம் -ஸ்லோகங்கள் -1-24-
ரஹஸ்ய த்ரய விவரணம் -அஷ்டாக்ஷரீ -விவரணத் தொடக்கம் -ஸ்லோகம் -25-
பிரணவ ஸப்தார்த்தம் -ஸ்லோகம் -26-
மகாரார்த்தம் -ஸ்லோகம் -27-
நமஸ் பதார்த்தம் -ஸ்லோகம் -28-29-
நாராயண ஸப்தார்த்தம்-ஸ்லோகம் -30-34-
த்வய -ரத்ன மந்த்ரம் -விவரணம்-ஸ்லோகம் -35-46-
கீதா சரம ஸ்லோக விவரணம் -ஸ்லோகம் -47-56-
பகவான் உகந்த உபாயம் ஸரணாகதியே -ஸ்லோகம் -57-66-
ப்ராக்ருத சரீரத்தில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஸ்லோகம் -67-69-
அர்ச்சிராதி மார்க்கம் நிரூபணம் -ஸ்லோகம் -70-72-
ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேண்டுதல் -ஸ்லோகம் -73-74-
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற வேண்டுதல் -ஸ்லோகம் -75-
அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் ரூப திருமேனி பெற பிரார்த்தனை -ஸ்லோகம் -76-81-
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா-வர்ணனம் -ஸ்லோகம் -82-122

——————

அஸ்மத் வித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்

நம்மைப் போன்ற அஞ்ஞர்களைக் காத்து அருளவே ஸ்நேக பாவ திரு உள்ளம் கொண்ட வாதி கேஸரி என்ற விருது பெற்ற ஸூந்தர ஜாமாத்ரு முனியை வணங்குகின்றேன்

ஸிம்ஹம் பூவைப்பூ வண்ணா -ஆண் ஸிம்ஹம் பெண் ஸிம்ஹம் குழந்தை -பாதுகா தேவி பரதனைக் கூட்டிப் போனது-இவரும் நரஸிம்ஹம் போல் ஸ்வாதி திருநக்ஷத்ரத்தில் திருவவதாரம் –

ஸூந்தர ஜாமாத்ர முநே ப்ரபத்யே சரணாம்புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்நஸ் ஜந்து ஸம்ஸார போதகம்

பிறவிக் கடலில் நன்கு அழுந்தி இருக்கும் சேதனர்களை அக்கரைப் படுத்தும் ஓட்டமாக இருக்கும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரை வணங்குகின்றேன்

ஸ்வாதி ஜாதம் கிருஷ்ண பதாஸ்ரிதம் வாதி கேஸரிம் வந்தே சவும்ய ஜாமாத்ரு யோகிநம்

அத்யாத்ம சிந்தா-ஸ்லோக ரூப-மூல கிரந்தம்
அத்யாத்ம சிந்தாமணி -அதற்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்

அத்யாத்ம சிந்தா-சப்த -ஏழாம் வேற்றுமை -ஆத்மா விஷயமான விசாரம் -இதுவே அதி -பத பிரயோகம் –ஆத்மாவை விஷயமாகக் கொண்டவற்றைப் பற்றிய விசாரம் -என்றபடி -ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் -அத்யாத்ம சிந்தாமணி வியாக்யானம் இவரே சாதித்து அருளி உள்ளார்

———-

நமோ அஸ்த் வஸ்மத் குருப்யஸ் ஸ்யாத் தத் குருப்யஸ் ததா நம
பரமேப்யோ குருப்யச்ச நிகிலேப்யோ நமோ நம
-1-

அடியேனுடைய ஆச்சார்யர் பொருட்டு ப்ரணாமங்கள் ஆகுக -அவ்வாறே அவர் தம் ஆச்சார்யர்கள் பொருட்டு ப்ரணாமங்கள்-பரம ஆச்சார்யர்களான அனைவருக்கும் மறுபடியும் மறுபடியும் ப்ரணாமங்கள்-ஸ்வாமி ராமானுஜர் அருளிச் செய்த நித்ய கிரந்தப்படியே –குரு பரம்பரயா பரம குரும் பக வந்தம் ப்ரணம்ய -படியே -நிகிலேப்ய -என்று அனைவருக்கும் தனித் தனியே நமஸ்காரம் சொன்னபடி யாயிற்று -நம நம –பக்தியின் மிகுதியைத் தெரிவித்தபடி

(நித்யம் விததாமி -அத்யாத்ம சிந்தாமணி -ப்ரகாசப்படுத்த-ஆத்ம தத்வ ப்ரகாசகம் -முதல் பிரயோஜனம் -யாதாத்ம்ய தத்வம் அறிந்து மகிழ்வோம் -ஹ்ருதய அபீஷ்டம் -இரண்டாவது பிரயோஜனம் -பாவ பிரதம் -ஆத்ம பர்த்தா ஸ்வரூப ஆகாங்க்ஷை -அழகிய மணவாளப் பெருமானுடைய ஸ்வரூப பிரகாசப் படுத்துவது மூன்றாம் விஷயம் -)

(மந்த்ரத்திலும் மந்த்ரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர ப்ரதானரான ஆச்சார்யர் பக்கலிலும் ப்ரேமம் கனக்க இருக்க வேண்டுமே -ஆகையால் அஸ்மத் குருப்யோ தொடங்கி ஸ்ரீ லஷ்மீ நாதன் வரையிலும் அனுசந்தானம் -மேல் –)

(அசவ் அசவ் –போந்தார் போந்து எண்ணிக் கொள் -ஒவ்வொருவரையும் அனுசந்திக்க இயலாமையால் பொதுவான முதலில் அருளிச் செய்து -மேல் பிரசித்தரான அனைவருக்கும் நமஸ்காரங்கள்)

நமோ ராமானுஜா யேதம் பூர்ணாய மஹதே நம
யாமுநாய முநீந்த்ராய நமஸ் ஸர்வார்த்த வேதிநே —
2-

ஸ்வாமி ராமானுஜருக்கு -பெரிய நம்பிகளுக்கும் -ஸர்வஞ்ஞரான யதிகட்க்கு இறைவனான யாமுனாச்சார்யருக்கும் நமஸ்காரங்கள்(மனனம் -சம்பிரதாயத்துக்கு ராமானுஜரை கொண்டு வரவும் ஸ்ரீ பாஷ்யம் பிரகாசப் படுத்தவும் மனனம் செய்த முனி

நமோ அஸ்து ராம மிஸ்ராய புண்டரீக த்ருசே நம
நாதாய முநயே நித்யம் நம பரம யோகிநீ –3-

ராமமிஸ்ரர் -புண்டரீகாக்ஷர் -நல்ல யோக ஞானமுடைய ஸ்ரீ மந் நாதமுனிகளுக்கு நித்யம் நமஸ்காரங்கள்(மணக்கால் நம்பி ராம மிஸ்ரர் -நான்காவது ராமர் -உய்யக்கொண்டார் -புண்டரீகாக்ஷர் -ரங்க நாத முனி -நாதமுனி -நம்மாழ்வாரை யோகத்தாலேயே சாஷாத்கரித்தவர் -)

ஆத்யாய குல நாதாய நமோ அஸ்து சட வைரிணே
நம சேநாதி பதயே ஞான யாதாம்ய வேதிநே —
4-

ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாருக்கு அவருக்கு தத்வ யதாத்ம்ய ஞான உபதேசம் செய்து அருளிய விஷ்வக் சேனருக்கும் நமஸ்காரங்கள்(சட வாயு -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்த ஆழ்வார் -வைரி -விரோதி -பராங்குசர் -புறம்பாய் உள்ளவரை ஹிம்ஸித்து -அங்குசம் இட்டு தடுத்த பராங்குசர் -பாதத்தின் முன் செல்ல மாட்டான் பரன் கூட -)(ஸூத்ரவதி சமேதராய் திரு மாலிருஞ் சோலையில் விஷ்வக் சேனர் சேவை உண்டு )

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-4-அடி ஒட்டி அருளிச் செய்த ஸ்லோகம்

ஸ்ரீயை ஸ்ரீச அநபாயிந்யை ஜகன் மாத்ரே நமோ நம
ஸ்ரீ தராயாதி குரவே நமோ பூயோ நமோ நம –5-

(ஸ்ரீயை நமோ நம
ஸ்ரீச அநபாயிந்யை நமோ நம
ஜகன் மாத்ரே நமோ நம
கட்டிலையையும் தொட்டிலையும் விடாமல்
)

அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் -உலகுக்கு எல்லாமே தாயார் நாராயண க்ஷண காலமும் பிரியாமல் -அகலகில்லேன் இறையும் -என்று இருக்கும் பெரிய பிராட்டியாருக்கும் முதல் ஆச்சார்யரான பெரிய பெருமாளுக்கும் மறு படியும் மறுபடியும் பலமுறை நமஸ்காரங்கள்-வாத்சல்யம் -தோஷ தர்சித்வம் என்றும் தோஷ போக்யத்வம் என்றும் உண்டே – இதுவரை ஐந்து ஸ்லோகங்கள் –அஸ்மத் குருப்யோ நம -என்று ஆரம்பித்து ஆரோஹண கிரமத்தில் குரு பரம்பரை அனுசந்தானமாயிற்று –முதல் ஸ்லோகத்தில் –ஆ பகவத்த –-பகவான் வரை என்றும் பகவான் முதற்கொண்டும் என்றும் கொள்ளலாம்

இத்தம் ஸம் சிந்த்ய மநசா ஸூபாம் குரு பரம்பராம்
அத் யாத்ம விஷயாம் சிந்தாம் கரோம் யாத்ம விஸூத்தயே
–6-

இவ்விதமான பவித்ரமான ஆச்சார்ய பரம் பரையை மனத்தில் நினைத்துக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்காக ஆத்ம ஸ்வரூபத்தை குறித்து விமர்சனம் செய்து அத்யாத்ம சிந்தா என்ற இந்த க்ரந்தத்தைப் பணிக்கிறேன்

ஆஸீர் நமஸ் க்ரியா வஸ்து நிர்தேசோ வாபி தந் முகம் -என்றபடி இங்கு ஸூபாம் அடைமொழி-விஸூத்தயே-என்றதால் தேஹ இந்திரிய பிராண விலஷண ஆத்மா –சேஷத்வ -ஞாத்ருத்வ -அணுத்துவ முதலான தர்மங்களைக் வெளிப்படுத்தும் கிரந்தம் என்பதை ஸூசிப்பித்து அருளியவாறு –

(ரஹஸ்ய த்ரய தத்வ த்ரய ஞானம் அளித்ததால் ஸூபாம்)

(இத் யதி தைவம் அத ஆத்மா-இதுவரை தெய்வம் பற்றியது -மேல் ஆத்மாவைப் பற்றியது – உபநிஷத் சொல்லும் -அதே போல் இங்கும் ஆத்மாவைப் பற்றிய விசாரம் என்றும் ஆத்ம ஸ்வரூபன் சொல்லும் ரஹஸ்ய த்ரய விவரணம் என்றும் கொள்ளலாம் -)

———-

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-

நனு-ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று தேஹத்திலே அஹம் புத்தி வ்யவஹாரம் காண்கையாலே
அஹம் அர்த்த பூதனான ஆத்மா தேஹம் தானாம் அத்தனை –
இந்த அஹம் புத்தி வ்யவஹாரங்களுக்கு தேஹாதிரிக்தன் விஷயம் என்ன ஒண்ணாது –
அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே –
கட படாதிகளைப் போலே பார்த்திவமான சரீரத்துக்குச் சைதன்யம் கூடாதே என்னில் மத சக்தி போலே
பரிணாம விசேஷத்தாலே கூடும் இறே-ஸ்ரீ தத்வ சேகரம் -ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம்

தத் கண்டனம் –
அது அனுபபன்னம் —

தேஹம் அநேக அவயவ சங்காத் மகம் என்னும் இடம் சித்தம் -அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் உண்டாகில்-அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும் -அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும் –அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் -கூடாது –ஒரு அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில் அது விச்சின்னம் ஆனால் அவயவாந்தரம் அது அனுபவித்ததை அவயாந்தரத்திலே ஸ்மரிக்கக் கூடாது –பின்பு அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதா புத்தி வ்யவஹாரப்ங்களும் தவிர வேணும் –சர்வ சரீர வியாபியான ஸூக துக்க அனுபவமும் கூடாது –

அவயவ சங்காதாத்மகம் அன்று சரீரம் -அயவவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –உபலம்ப அனுபபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே –கிஞ்ச -பாலதே ஹோ அஹம் மந்த ஜ்ஞான –யுவதே ஹோ அஹம் பஹூ ஜ்ஞான மம சரீரம் –என்று சரீர அஹம் அர்த்தங்களில் பிறக்கிற பேத பிரதிபத்தியும் பேத வ்யவஹாரமும் கூடாது – மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதகம் இல்லாமையாலே – அன்றிக்கே அஹம் புத்திக்கு சரீரமே விஷயம் என்று கொண்டாலும் ஸ்ருதியாலும் ஸ்ருத் யர்த்தா பத்தி களாலும் தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரிய விஷயங்களையும் அறிகையாலே — இப்படி கொள்ளாத போது யாவன் ஒருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் – அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் என்கிற பிரதிசந்தானமும் கூடாது – சஷூஸ்ஸே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும் – ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பத்திரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்-இப்படி மற்ற இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

அந்த கரணமும் ஆத்மாவாக மாட்டாது — ஸ்மர்த்தாவினுடைய ஸ்மாரணாதி கார்யங்களுக்கு கரணமாகக் கல்பிதங்கள் ஆகையாலே –இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது -ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே –கரணமும் தானே என்ன ஒண்ணாது -விருத்தமாகையாலே –வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணம் ஆகில் அது இல்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது-ஆந்தர கரணம் ஆகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேர் இட்டாதாய் விடும் –ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்த்ரியார்த்த சம்பந்தம் உண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும் –ஆகையால் மனஸ்ஸூம் ஆத்மாவாக மாட்டாது –பிராணங்களும் ஆத்மாவாக மாட்டாது –சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம் –

ஜ்ஞானமும் ஆத்மாவாக மாட்டாது -எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது -என்று ஷணிகமுமாய்- ஆத்ம தர்மமுமாய்த் தோற்றுகையாலே- ஸ்திரனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்னும் இடம் நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் – என்கிற பிரத்யபிஜ்ஞையாலே சித்தம்

ஞானம் இருப்பதாலும் பரிமாணம் விகாரம் இருப்பதாலும் இரண்டுமே வெவ்வேறு தத்வங்கள் என்றும் கொண்டால் தானே பொருந்தும்

ஆச்சார்யனால் தத்வ த்ரய ஞானம் அறிதல்

ஆத்மா ந தேவோ ந நரோ ந திர்யக் ஸ்தாவரோ ந ச
ந தேஹோ ந இந்த்ரியைவ மந ப்ராணோ ந நாபி தீ –
-1-

ஆத்மா தேவஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -மானுட ஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -பசு பறவை முதலான திர்யக் ஜாதிக்கும் சேர்ந்தவன் இல்லை -சரீரமும் ஆத்மா இல்லை -பிராணனும் கூட ஆத்மா இல்லை -ஞானமும் கூட ஆத்மா இல்லை –

சரீரம் எடுத்துக் கொண்டே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு-ஆத்மா -பிறப்பிலி- நித்யம் சாஸ்த்வத புராணம்- -இருந்தாலும் தேஹ சம்பந்தம் கொண்டு ப்ரவ்ருத்தி -முக்குண மயமான தேஹத்தால் -தூண்டப்பட்டு செயல்பட்டு -கர்மங்களைத் தொலைத்து –ஸூஷ்ம சரீரம் கொண்டே அர்ச்சிராதி கதியில் சென்று விரஜையில் நீராடி அனைத்தையுமே கழித்து-ஸூத்த ஆத்மா -முக்தனாகிறான்

தேஹமே ஆத்மா சாருவாக -லோகாயுத மதம் -கண்டதே காட்சி -கொண்டதே கோலம் –நேஹ நாநா அஸ்தி –ஆண் அல்லன் -ஸ்ருதியும் ஆழ்வாரும் -இல்லை என்பதை சொல்லியவாறு

ந ஜடோ ந விகாரீ ச ஜ்ஞான மாத்ராத்மகோ ந ச
ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாஸ ஸ்யாதேக ரூப ஸ்வரூப்பாக் –
-2-

ஆத்மா ஜட ஸ்வரூபம் -செயலற்ற தன்மை -இல்லை -மாறுபாடுகளை அடைவதும் இல்லை -ஞானம் ஒன்றையே ஸ்வரூபமாக உடையவன் இல்லை -தனக்குத் தானே சுயமாகப் பிரகாசிப்பவன் -எப்போதும் ஒரே விதமான ஸ்வரூபன் உடையவனாய் இருப்பவன் –

விஞ்ஞானம் -ஞானம் முழுவதாக இருப்பதால் ஆத்மாவை ஞானம் என்றும்
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கிருஷ்ண பக்தியே வடிவெடுத்துள்ளார் என்பது போல் -விஞ்ஞாதா என்றும் சொல்லுவோம் –

ஞாதாவுமாகக் கூட இருக்கும் ஆத்மா என்றபடி -தனக்குப் பிரகாசப்பட்டும் -மற்ற ஒன்றின் உதவின இல்லாமல் தானே ஒளி விட்டுக்கொண்டு பிரகாசிப்பார் -அஜடம் -ஸ்வயம் பிரகாசம்-பராக் அர்த்தம்-பிறருக்குத் தோற்றுவித்து -அசேதனப் பொருள்கள் -ப்ரத்யக் அர்த்தம் -தங்களுக்குத் தோற்றுவது -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இவ்வாறு – ஷட் பாவ விகாரம் -அஸ்தி ஜாயதே இத்யாதி பரிணாமங்கள் மாறுதல் – கருவில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாற்றம் அடைதல், தளர்ச்சி அடைதல், மரணம் என ஆறு நிலைகளுக்கு உட்பட்டது என்பதை குறிக்கும் அசேதனங்களுக்கே உண்டு

தர்மி ஞானம் -அஹம் சப்த கோசரம் -எங்கும் உப்பாகவே உப்புக்கட்டிப் போல் எங்கும் ஞான மயம்-கட்டடங்க ஞான ஆனந்த மயம் -இது மாறாது – -தர்ம ஞானம் இதம் என்று பொருள்களை அறிந்து கொள்வது -இது கர்மம் அடியாக மாறும்

விளக்கு ஒளி ஜ்வாலை ஒளி போல் இரண்டுமே உண்டே -ஓன்று ஒன்றை ஆஸ்ரயிக்கும் – -த்ரவ்யம் -குணம் -ஜாதி -க்ரியா -மூன்றும் சேர்ந்து இருக்கும் -கிரியாவான் குணவான்-என்கிறோம் அன்றோ – குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் -த்ரவ்யம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் –குணத்தை குணம் ஆஸ்ரயிக்காதே -த்ரவ்யம் போக்குவரத்து -கமனக்கிரியா -இருக்கும் ஆஸ்ரயிக்கும் படியாயும் இருக்கும் -ஆத்மா த்ரவ்யம் தான் -ஞான மயமாக இருப்பதால் குணம் என்றும் சொல்வதால் -ஞானம் இதை ஆஸ்ரயித்ததும் இருக்கலாம் –

அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –சூர்ணிகை -8
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –9- உணர்ந்தவன் ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –10- நித்யமாகை யாவது எப்போதும் யுண்டாகை –11- எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம் –12-அணுவான படி என் என்னில் – ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –14- அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –15-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –16-ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக வேண்டாவோ -என்கிறசங்கையிலே அருளிச் செய்கிறார் –17- அவ்யக்தம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை-வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –18-

அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று நினைக்க ஒண்ணாது
இருக்கை – சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே–19-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை – அதாவது –
விஞ்ஞான மய-என்றும் விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை – சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –20-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–21-
இப்படி இருக்கையாலே சஸ்த்ரம் அக்னி ஜலம் வாதம் ஆதபம் தொடக்க மானவற்றால் சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் – தஹித்தல் நனைத்தல் சோஷிப்பித்தல் செய்கைக்கு அயோக்யமாய் இருக்கும் -22-ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –23-அது ஸ்ருதி விருத்தம் –-24-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –25-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை – ஏக தத்வ வாதம் நிரசனம் –26-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாத்ரம் ஆகில் –27-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –28-
ஜ்ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-29-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே-30-சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை-31-ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்-என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும் குலையும்-32-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –33
குண க்ருதம்-34-
சமசர்க்க கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்-35-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்-36-
ஜ்ஞானத்தை ஒழியவும் தன்னை அறிகையாலும் ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமாய் இருக்கையாலும் -சொல்லிற்று-37-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —38-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன் சத்தை இல்லையாம்படி இருக்கை –39
சேஷமாகை யாவது சந்தன குஸூம-புஷ்பம் தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை- 40-

சேதநோப் யாப்தி சீலச் ச சித் ஆனந்தாத் மகஸ் ததா
அஹமர்த்த ப்ரதி க்ஷேத்ரம் பிந்நோ அணுர் நித்ய நிர்மல–3-

ஆத்மா சைதன்யம் என்கிற ஞானம் குணத்தை உடையவன் -அந்த ஞானம் பரவுதல் மூலமாக உடல் முழுவதும் பரந்து இருக்கும் தன்மை உடையவன் -மேலும் ஞானம் ஆனந்தம் ஆகியவற்றை ஸ்வரூபமாக உடையவன் -நான் என்ற சொல்லாலே அறியப் படுபவன் -ஒவ்வொரு சரீரத்திலும் இயங்கும் ஆத்மா வேறுபட்டவன் -அணு அளவு உடையவன் -எப்போதும் குற்றமற்று இருப்பவன் –

(சேதனம் -ஞானமுடையவன் -சித் -ஞானமயத்வம் -இரண்டையும் சொன்னவாறு-அனுகூல ஞானமே ஆனந்தமாகும்-வ்யாப்தி சீலம் -தேகம் எங்கும் பரந்து–தர்ம பூத ஞானத்தால் ஸ்வ பாவத்தால் சரீரம் முழுவதும் வியாப்தி-அநந்த கோடி சரீரத்துக்குள்ளே பிறவி தோறும் கர்மத்தால் வியாப்தி உண்டு ஆத்மாவுக்கு -ஸ்வரூப வியாப்தி ப்ரஹ்மத்துக்கு-ஏகாத்ம வாதம் நிரஸனம் -ப்ரதிஷேத்ர பின்னம் -இதம் சரீரம் கௌந்தேய –க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞ-இதி ஞானாதி -13 அத்யாயம் -சரீர ஆத்ம பேதம்-ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -ஜீவ ஈஸ்வர பேதம் -மூன்றுமே உண்டே-நித்யோ நித்யாநாம் சேதனாஸ் சேதனாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமன் [ஸ்வேது 6.13] )

ததா ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ நிஜ தர்மக
பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா (ஸ்வ) ஸ்வத–4-

மேலும் அறியும் தன்மை -ஜ்ஞாத்ருத்வம் -செயல்படுத்தம் தன்மை – கர்த்ருத்வம்-அனுபவிக்கும் தன்மை -போக்த்ருத்வம் -என்ற இயல்பான – நிஜ தர்மக -தர்மங்கள் உடையவன் -இயல்பாக உறுதியாய் இருப்பவனான பரமாத்மாவுக்கே அடியவனாம் தன்மை -பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா ஸ்வ ஸ்வத-என்ற தர்மமும் உடையவன் –

(அநந்யார்ஹ சேஷத்வம் -கோவிந்தா உனக்கே நாம் ஆட்ச் செய்வோம்-பரகத அதிசய ஆதேயத்வம்- தனியாக -நிலை நின்ற ஆந்தர ஸ்வ பாவம்-உள் இதழ் -கீழ் மூன்றும் வெளி இதழ்–இது சத்தா ப்ரயுக்தம் -ஒழிக்க ஒழியாத தன்மை சேஷத்வம்-ஸர்வதா ஸ்வத இயற்கையாகவே இருக்கும் தன்மை -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -அதுவும் அவனது இன்னருளே —-மற்ற மூன்றும் பராயத்வம் -அவன் அதீனம் –சேஷத்வ ஞானமே அறிவாளி -கைங்கர்யங்களே கர்த்ருத்வம் -அவன் நன்மை அனுபவிக்க -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் -)

(ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ர அர்த்தவத்வாத் -பொருள் உள்ளவாக வேண்டுமே -ப்ரக்ருதி தூண்டப்பட்டு செயல்படுகிறான் -அஹங்கார விமூடாத்மா -அழுக்கு இருப்பதால் தானே சரீரம் என்றும் நினைப்பவன் -அவனால் நியமிக்கப்பட்டு முக்குண வஸ்யதையால் -உபாதியால் கர்த்தா-கர்மமும் கைங்கர்யத்தில் புகும் அன்றோ- -நிரீஸ்வர சாங்க்யன் -ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் -நொண்டி குருடன் சேர்ந்து நடக்கலாம் -)

ஏவம் ஸாமாந்யதஸ் ஸித்தி நிஜா கார்யுதோ அப்யஹம்
அநாதேர் குண மாயாயா பலேநைவ திரோஹித –5

இப்படி எல்லா ஜீவர்களுக்கும் இயல்பாக தர்மங்களைக் தன்மைகளாக முக்குணம் உள்ளடங்கப் பெற்ற மூல ப்ரக்ருதியின் ப்ரபாவத்தால் சூழப்பட்ட தன்மைகளைக் உடையவனானேன்

(கடி மா மலர்ப்பாவையோடு ஸாம்யம் -ஷட் குணங்களில் -சாமான்யதஸ் -பொதுவாக -ஸூத்த ஆத்மா -மாயா -பிரக்ருதியால் -முக்குண -பாதிப்பால் -கர்மங்கள் அடிப்படையில் சரீரம் ஏற்றுக் கொண்டு உழல்கிறோம் அன்றோ -)

அப்ரகாச நிஜாகாரோ நித்ய மாந்த்ய முபேயிவாந்
அபதே கர்ம பாசேந க்ருஷ்யமாணோ நிராசய-6

வெளியில் தெரியாத என்னுடைய இயல்பாக தர்மம் உடையவனாய் செயலாற்ற தன்மையை எப்போதும் உடையவனாய் புண்ய பாபம் வடிவில் உள்ள கர்மம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வழி யல்ல வழியிலே இழுக்கப்பட்டவனாய் வேறு ஆதாரம் அற்றவனாய் இருக்கிறேன் –

(அவித்யா- கர்மா- வாசனா- ஜென்ம-சுழல் -மறந்தேன் உன்னை முன்னமே- -பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஆத்மாவை வெய்யிலே வைத்து தேகத்தை நிழலிலே வைக்க -மந்த்ர உபதேசம் பெற்று திருமங்கை ஆழ்வார் ஆனார் அன்றோ -யானே என்னை அறியகிலாதே – யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ என்னுடைமையும் நீயே –அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்றேன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்-)

அஜாநந் நநு கூலஞ்ச ப்ரதிகூலம் ததாத்மந
அந்யதா தத்துவாரோப்ய ராக த்வேஷவ் ப்ரவர்த்தயன் –7-

அப்படியே தனக்குத் தகுந்தவையும் தகாதவையும் எவையோ என்ற பாகுபாடு தெரியாதவனாய் பயன் அளிக்குமவையைப் பயனற்றதாகவும் பயனற்றவையை பயனளிக்க நல்லதாகவும் எண்ணி அவ்வவற்றின் மேல் விருப்பும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டவனானேன் –

(அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய், ப்ரபந்நம் – சரணமடைந்தவனான, பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து, ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.)

(அவிவேக கநாந்த திங்முகே பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத: ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஶ்லோகம் 49 –
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

அக்ருத்ய கரணாதாவப் யத்யாந்தோத் பட வ்ருத்திக
மத்த ப்ரமத்தோந் மத்தாநாம் வர்த்தே ஸத்ருச சேஷ்டித–8-

செய்யத் தகாத வேலைகளைச் செய்வது முதலான பாபங்களும் கூட முழுமையாக தடங்கலற்று இழியுமவனாய் மதம் பிடித்தவன் அசட்டையாக இருப்பவன் -பைத்தியம் பிடித்தவன் என்ற இந்த மூன்று வகைப்பட்ட வர்களின் நடவடிக்கை போலே நடப்பவனாய் இருக்கிறேன் –

(மத்தன்-துஷ்ட ஆகாரத்தால் -பிரமத்தன் -வாதம் பித்தம் கபம் இவற்றால் -உன்மத்தன் -பைத்தியம் -மூவரும் போல் தேஹாத்ம அபிமானத்தால் நானே செய்கிறேன் -நர வபு -பசு பிராயர் -வாநரம் போல் -அவித்யா கர்மா -காரணம் -வாசனை ருசி கார்யம் -பலம் ஜென்மம் -ஆத்மா படும் பாடு –)

கர்ப்ப ஜன்மாத்ய வஸ்தாஸூ துக்க மத்யதுஸ் ஸஹம்
ந கிஞ்சித் கணயந் நித்ய சராம் இந்திரிய கோசர –9-

கர்ப்பத்தில் இருப்பு -அதிலிருந்து வெளி வருதல் முதலான நிலைமைகளிலே மிக்க தாங்க இயலாத கஷ்டத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்போதும் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டவனாகத் திரிகிறேன்

(கர்ப்பம் ஜென்மம் -சைஸவம் பால்யம் யவ்வனம்-பேதை பாலகன் அதாகும் பிணி பசி -மூப்பு -துன்பம் -அவஸ்தைகள்-வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதை பா லகன தாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)

ஏவம் விஷய த்ருஷ்ணாயா வசகஸ்ய ஜரா மம
தத் போகே கரணாநாம் ச ஸுவ் தில்யம் குருதே ப்ருசம்
–10-

இவ்வாறு பொருள்களின் மீது உண்டான ஆசைக்கு அடிமையான என் கீழத்தனம் அந்த சுகங்களை அனுபவிப்பதில் இந்திரியங்களுக்கு மேலோங்கிய இயலாமையைக் கொடுக்கிறது –

(கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-)

ததா து த்ருஷ்ணா மஹாத்ம்யாத் கரணா நாம பாடவாத்
போகாலாப ஸமுத் பூத சோகோ அபி பவதி துவம் –11-

அந்தக் கிழத்தன்மையில் போகத்தின் மேல் ஆசை பெருகுவதாலும் இந்த்ரியங்களில் சக்தி குறைவதாலும் ஆசைப்பட்ட அனுபவம் கிடையாமையாலே பொங்கி வரும் துக்கமும் தவறாமல் ஏற்படும் –

ததா புத்ர களத்ராதி பந்து வர்க்காவ மாநஜம்
துக்கம் துஸ் ஸஹ மேவாபி ஸஹந்நஸ்த்ரா ப்ரதிக்ரிய–12-

அந்த சமயத்தில் பிள்ளைகள் மனைவி முதலானவர்கள் தேஹ ஸம்பந்தம் உடையவர்களால் அவமதிக்கப் பட்டதனால் உண்டான தாங்கமுடியாத மிகுந்த கஷ்டம் இருப்பினும் அதற்க்காகப் பழி தீர்த்துக் கொள்ள முடியாத அவமானமாகிற துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இருந்தேன் –

ஆதித்யாதி பிரத்யர்த்தம் பீடிதோ மூட சேதன
அர்த்தாதிஷு ததாநீ மப்யபி வ்ருத்த ஸ்ப்ருஹோ அபவம் –13-

மன வருத்தத்தினாலும் சரீரத்தில் வந்த நோய்கள் காரணமாகவும் மிகவும் கஷ்டப் பட்டவனாய் இருந்த சமயத்திலும் செல்வம் முதலான சம்பத்துக்களின் மீது மிகுதியான ஆசை உடையவனாய் இருந்தேன்

(ஆதி -மனப்பீடை -வியாதி -சரீரகத பீடை
சுகுமார் தனுர் கர்ப்ப வாஸத்தில் இருக்கும் பொழுது -பஹு மல-அவள் உடலில் -சூழப்பட்டு -நீர்க்குடத்தால் மூடப்பட்டு துன்பப்படுகிறான் -அவள் உண்ணும் உணவில் சூடு குளிர் -இவற்றால் சுகுமார் உடல் கஷ்டப்படும் அன்றோ -முன் ஜென்மத்தில் பட்ட துன்பங்கள் எல்லாமே கர்ப்பத்தில் இருக்கும் பொழுது நினைவில் வருமாம்-கர்ப்ப காலத்திலும் சரணாகதி செய்து பேறு அடையலாம் -கால தேச நியதி இல்லையே -ஆனால் துர்லபம் -வாய்ப்பு குறைவு தானே -சட வாயு -தூதி மாருதி வீசும் -கர்ப்ப ஸ்ரீ மான்கள் வெகு சிலரே —)

தாபத்ரயங்கள் –ஆத்யாதிகம் இரண்டு வகை -சரீர கதம் -மானஸம் –ஆத்யாத்மீகம் -காமம் க்ரோதம் பயம் கோபம் அசூயை அவமானம் மாத்சர்யம் பொறாமை-போல்வன -முக் குண வசத்தில் இவை விருப்பு வெறுப்பு – ஆதி தெய்விகம் -வெப்பம் குளிர் பூகம்பம் போல்வன -கர்மபலன்களை அனுபவித்தே தீர வேண்டும் -தொலைக்க அவன் காத்துக் கொண்டுள்ளான் -புரியாமல் தவிக்கிறோம் -பலன்களைக் கொடுத்து கர்மங்களைத் தொலைத்து பேறு –மூடன் -இவை சரீர சம்பந்தத்தால் வந்தவை என்றும் அறியாமல் உழல்கிறோம்

தாத்ரும் பந்த்து வியோகேஷு தாத்ருந மஹதா வ்ருத
கால சேஷம் நயாம் யத்ர கர்ம பந்த வசாநுக
–14-

அந்த உறவினர்களில் யாராவது இறந்த போது மிகவும் கஷ்டத்தோடு கூடியவனாய் இந்த உலகில் கர்ம ஸம்பந்தத்துக்கு வசப்பட்டு எஞ்சிய வாழ்க்கையைக் கடக்கின்றேன் –

(வாழ்வு எல்லாமே கால சேஷம் -கர்ப்ப வாசமே பிரதானம் -சடகோபர் போல் சடவாயுவை கோபித்துக் கொண்டு பேறு அடையாலாம் அன்றோ)

அத தேஹா வஸாநே ச துக்க முத்க்ராந்தி ஸம்பவம்
க்ரூச்ச்ரேண தேஹாந் நிஸ்க்ராந்தி யம கிங்கர தர்சன
ம் –15-

பிறகு இந்த சரீர ஸம்பந்தம் அறுத்துக் கொண்டு இதிலிருந்து வெளிக் கிளம்புகையால் உண்டான துன்பத்தைப் மிகப் பெரிய துன்பமாக சரீரத்தில் இருந்து வெளியேறுதல் யம தூதர்களைக் காணுதல் ஆகிய இவற்றை நினைத்து வருந்துகிறேன்

(ஜீவாத்மாவுக்கு சதுர் கதி –கர்மங்களைத் தொலைத்தது -பகவத் ப்ராப்தி-புண்யம் தொலைக்க -ஸ்வர்க்கம் -பாபம் தொலைக்க -நரகம் -மீண்டும் புண்ய பாப மிஸ்ரம் தொலைக்க -ஸம்ஸாரம் -)

(ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-)

(சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-)

(வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள்  மிழற்ற 
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த 
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற 
மாயொருபக்க  நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –)

யாதநா தேஹ ஸம்பந்தம் யாம்யபாசைச் ச கர்ஷணம்
உக்ர மார்க்க கதி கிலேசம் யமஸ்ய புரதஸ் ஸ்திதிம் —
16-

தந் நியோக ஸமாயாதா யாதநாச் ச ஸஹஸ ச
ஸ்ருத்வா ஸ்ம்ருத்வா ச தூயே அஹம் தத் பிரவேச பயாகுல
–17-

நரக வேதனைகளை அனுபவிப்பதன் பொருட்டு ப்ராப்தமாயுள்ள நுண்ணிய சரீர ஸம்பந்தத்தை யம தூதர்கள் கட்டி இழுத்துச் செல்லுகையையும் பயங்கரமான வழியில் செல்லும்போது உண்டாகும் துன்பத்தையும் யமனை எதிரிலே நிற்பவனாகக் காண்கையையும் -அவன் தன் கட்டளையால் நிகழக் கூடிய ஆயிரக் கணக்கான தண்டனைகளைக் கேட்டும் நினைத்தும் அப்படிப்பட்ட நரகத்தில் புகக்கூடும் என்ற பயத்தைப் அடைந்தவனாய் அடியேன் துன்பமடைகிறேன் –

(ஜரா -மூப்பினால் தளர்ந்து -ஜர்ஜரம் -தேகம் சிதிலம் அடைந்து -தூர ப்ரநஷ்ட்ட நயனம் -கரணங்கள் மரண உன்முக -புத்ர தார-அவமானங்கள் ஸ்ம்ருதிக்கு வர -ஆகாரம் இறங்காமல் -எண்ண அலைகளால் துன்பம் -)

(கேசவ-கிலேச நாஸன
காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே-1-)

புநச் ச கர்ப்ப ஜென்மாதி பிரவேசம் கர்ம நிர்மிதம்
முஹுர் வி சிந்த்ய மச்சித்தம் கம்பதே ஜல சந்த்ரவத்
–18-

மேலும் பழ வினைகளின் பயனால் அடுத்த பிறவிக்காக மற்றொரு கருவறையில் புகுகை எனப்படும் மறு ஜென்மத்தை திரும்பத் திரும்ப நினைத்து என் மனம் நீரில் தெரியும் சந்திர பிம்பத்தின் அசைவுக்கு ஒப்பான நடுக்கம் கொள்கிறது –

ஏவம் மாம் பவ சக்ரே அஸ்மந் பிரமந்தம் பாஹு துக்கிதம்
க்ருபயா கேவலம் ஸ்ரீ மந் ரக்ஷ நாத கடாஷித–19-

லஷ்மீ பதியான ஓ ஸ்வாமியே இந்த மாதிரி இந்த ஸம்ஸார மாகிற சக்ரத்தில் சளைக்காமல் திரிந்து பல துக்கங்களைப் பெறுகின்ற என்னை ஒரு காரணமின்றி இயற்கையான க்ருபையோடு உனது கடைக்கண் பாவையாலே காக்க வேணும் –

(நம்மிடம் ஒன்றுமே எதிர்பார்க்காமல் -எனது உணர்வில் நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே)

அஹ முத்பத்தி வேளாயாம் த்வத் கடாஷாதி வீக்ஷித
சத்த் வோத்ரே கேண ஸம்பந்ந ஸத் கத்யா காங்க்ஷ யாந்வித–20-

நான் பிறக்கும் சமயத்தில் உம்முடைய சீரான கடாஷித்தால் பார்க்கப் பட்டவனாய்-ஸத்வ குணம் வளர்ந்தவனாய் -மோக்ஷம் என்று சொல்லப்படும் உத்தம கதியைப் பெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவன் ஆனேன் –

(ஜாயமானந்தி புருஷம் இத்யாதி -மாக வைகுந்தம் நண்ண எனது மனம் ஏகம் எண்ண வேண்டும் -)

பாஹ்யேஷு விமுகோ நித்யம் வைதிகே அபிமுகஸ் ததா
ஸத்பிஸ் ஸஹைவ நிவஸந் ஸத் கதா ஸ்ரவணே ரதஸ் –21-

எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் மற்ற மதத்தில் முழுமையாக ஆர்வம் அற்று -அவ்வாறே வேதத்தினால் அறிவிக்கப் பட்ட எம்பெருமான் திறத்து ஆர்வமுற்ற தத்வ ஞானம் பெற்ற ஸத் புருஷர்களோடு கூடியிருப்பவனாய் பகவத் பாகவதர்களுடைய சரித்ரங்களைக் கேட்பதில் ஊக்கம் கொண்டவன் ஆனேன் –

சதாசார்ய உபசத்தவ் ச ஸாபிலாஷஸ் த்வாத்மகம்
தத்துவ ஞான நிதிம் தத்வ நிஷ்டம் ஸத் குண சாகரம் –22-

உத்தமமான ஆசார்யனை அடைவதில் விருப்பமுடைய நான் பகவத் ஸ்வரூபமாய் பரதத்வ ஞானத்துக்கு இருப்பிடமாய் அந்தப் பரமனிடத்தில் ஆழ்ந்து அபிநிவேசத்தை யுடையராய் நற்குணக் கடலாகத் திகழ்கின்ற ஆசார்யனை வணங்குகிறேன்

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி
ப்ரணிபாதந நமஸ்கார ப்ரிய வாக் பிச்ச தோஷயன் –23-

உத்தம சிஷ்யர்களுக்குப் புகலிடமாகவும் கருணை பொருந்தி இருக்கிற அந்தப் ஆசார்யரை ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட முறையில் விநயத்துடன் கூடியவனாய் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுமவனாய் மென்மையான பேச்சால் சந்தோஷப்படுமவராக -(ஆக்கினேன் நான் 21- ஸ்லோகத்தில் உள்ள அஹம் சொல்லுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும் -)

த்வத் ப்ரஸாத வஸேநைவ தத் அங்கீகார லாபவான்
ததுக்த தத்வ யதாத்ம்ய ஞான அம்ருத ஸூ ஸம்புத–24-

உனது அனுக்ரஹ விசேஷத்தினாலேயே ஆசார்யர்கள் என்னையே அங்கீ கரித்தல் என்னும் பயனைப் பெற்றவனாய் அந்த ஆச்சார்யர்கள் தெரிவித்த சித்து அசித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்துவங்களின் உண்மைப் பொருளை அறியம்படியான அமுதத்தைப் பெற்று முழுமை பெற்றவன் ஆனேன் –

(மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு. உள்ளீடான வஸ்துவிலும். மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால். கார்யகரமாவது.)

(ஆச்சார்யர் சர ரூபி –உலாவும் பெருமாள் -அனைவரும் சேர்ந்து குருவையும் புத்திரனையும் பத்நிகளை வணங்க வேண்டும் -ஸ்வ தந்திரனைப் பற்றினாள் சங்கை வரும் -மனித சரீரம் எடுத்து மேலே தூக்க அவதாரம் -ஸாஸ்த்ர பாணியாக –குருவே பராம் கதி ப்ரஹ்ம தானம் ஸ்தானம் பாராயணம் -அறிய வேண்டுமவரும் அவரே -அமுதூறும் என்னாவுக்கே -பசுர் பக்ஷி மனுஷ்ய வா -வைஷ்ணவ ஸம்ஸ்ரயா –அசுரர்களும் தங்கள் குருவான சுக்ராச்சாயரைப் பற்றி பல பேறு பெற்றார்கள் அன்றோ –கு அந்த காரம் -ரு தந் நிரோகத-ஆச்சார்யர் வேத சம்பன்னன் விஷ்ணு பக்தர் -மந்த்ரஞ்ஞா -அறிந்து ஞானம் பெற்று -மேல் பக்தி பக்தஸ்ய-மேல் கைங்கர்யம் – ஸதா மந்தாரஸ்ய -ஆஸ்ரயித்து உறுதியுடன் இருப்பவர் -ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயம் -ஸ்திர நெஞ்சம் கொண்டவர் -ப்ரஹ்ம நிஷ்டம் -அந்தக்காலத்துக்குத் தக்க சாஸ்த்ர உபதேசம் -க்ருத யுகம் வேறே கலியுகம் வேறே -டம்பம் அஸூயை இல்லாதவர் -ஆத்ம குணங்கள் நிறைந்தவர் -விஷயாந்தர வைராக்யம் கொண்டு –தீர்க்க கால பந்து -அத்ர பரத்ர ஸாயி )-

(ஆச்சார்யருடைய திரு மேனி த்யானம் ஒன்றே போதும் –பின்பழகராம் பெருமாள் ஜீயர்-பெரும் திவத்திலும் அன்பு அற்று – -ஆன வடிமை -ஒவ்ஷதை சேவை -நம்பிள்ளை திருமுதுகு சேவிக்கவே -ஆலவட்டம் அருளி நடப்பதே புருஷார்த்தம்)

——-

ரஹஸ்ய மந்த்ர த்ரய ஸாரம் -திரு மந்த்ரம் -அஷ்டாக்ஷரீ -விவரணம்

அர்த்த ரஹஸ்ய த்ரிய தய கோசரம் லப்த வாநஹம்
கேவலம் க்ருபயா மாம் து நயதஸ்தே ப்ரஸாதத-
-25-

இயற்க்கை இன்னருளால் மட்டுமே என்னையே உய்விக்க வேண்டும் என்று எண்ணி உன்னுடைய அனுக்ரஹத்தினால் அஷ்டாக்ஷரீ த்வய சரம ஸ்லோகம் என்னும் படியான மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிற பொருளை அடியேன் பெற்றேன்

(பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)

(ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
)

(உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே)

(த்ரிதயம் – மந்த்ர ரஹஸ்யம்-திருமந்திரம் ப்ராப்ய ப்ரதானம் -ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம் -ஆத்மாவாலே பேறு -விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் -ப்ராபக பிரதானம் –ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம் -ஈஸ்வரனாலேயே பேறு அனுஷ்டான பிரதானம் -அனுசந்தான ரஹஸ்யம் –மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-பிராட்டியாராலே பேறு -)

பிரணவ ஸப்தார்த்தம்
காரணம் ரக்ஷகம் ஸ்ரீசம் சேஷிணம் த்வாம் விசிந்தயன்
த்வ தர்தமித ரேஷாம் ச சேஷிணாம் விநிவர்த்த நாத்
–26-

உன்னையே எல்லாமே உலகுக்கும் காரணமாக காப்பவனாக திருமகள் நாயகனாக உணர்வது உன் பொருட்டே எஞ்சிய அதிகாரிகள் எனப்படுமவர்களையும் எனக்குத் தலைவர்கள் அல்ல என்று தள்ளி வைப்பதனால் உன்னையே தலைவனாக எண்ணி உள்ளேன் –

(ஸர்வார்த்தம் -ஸர்வ பல பிரதத்வம் –குலம் தரும் இத்யாதி -ஸாயுஜ்யம் -பிரகர்ஷமாக ஸ்தோத்ரம் -பிரணவம் –அகாரம் சகல வாசக காரணம் -உபாதான நிமித்த சஹகாரி காரணம் அவனே -ஆதி பகவன் முதற்றே உலகு -காரணமான அவனே ரக்ஷகன் -நயி பலான ஸாமர்த்யம் –காக்கும் இயல்பினன் கண்ணன் -அவள் மார்பில் நின்று பிரியாதாப் போல் -ஸ்ரீபதி –இதனால் சேஷியாக அறிவோம் -தாதர்த சதுர்த்தி -அநந்யார்ஹ சேஷி –காரணந்து த்யேய–ததர்த்த உன் பொருட்டு ஆன பின்பு -இதரர்கள் சேஷிகள் அல்ல என்று தள்ளியும் விட வேண்டும் அன்றோ –
ஒன்றென, பலவென, அறிய அரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் எனும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து, உள்ளி நும் இரு பசையறுத்து,
நன்று என நலம் செய்வது, அவனிடை நண்ணினம் நாமே
!)

மகாரார்த்தம்
அநந்யார்ஹம் ஸ்வதோ நித்யம் ப்ரக்ருதியாதி விலக்ஷணம்
பஞ்ச விம்சம் சிதா நந்த ஸ்வரூப குண ஸம்யுதம்
–27-

இயல்பாகவே மற்றை எவர்க்கும் அடியவனாக இருக்க இயலாதவனாய் எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் ப்ரக்ருதி தொடக்கமான இருபத்து நான்கு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டவனாய்-இருபத்து ஐந்தாம் தத்வமாய்த் திகழ்கின்றவனாய் -ஞான ஆனந்தங்களைத் தம் ஸ்வரூப குணங்களாகக் கொண்டவனாய் உள்ளேன் (இவ்வர்த்தங்களை மேல் உள்ள ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக -)

(மதி ஹர்ஷ மன ஞாநே மந அவ போதனே மூன்று தாதுக்களும் ஞான ஆனந்த ஸ்வரூபம் -தர்ம தர்மி ஞானங்கள் இரண்டையும் காட்டும்)

நமஸ் ஸப்தார்த்தம்
அஹமர்த்த மணும் நித்யம் ஆத்ம வர்க்கம் நிரூப்ய ச
தஞ்ச ஸ்வ அநர்ஹதா ஸித்தே அஹம்தா மமதா உஞ்சிதம் –
-28-

நான் என்ற பதத்தால் அறியப் படுமவனாய் மிகச் சிறியதான –அணு -பரிமாணம் உடையவனாய்- எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் -ஜீவாத்ம வர்க்கத்தைக் குறித்து விவரமாக அறிந்து கொண்டு -இயல்பாக ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் இருக்கும் காரணத்தினால் -அந்த ஆத்மாவை (-அஹம்தா மமதா உஞ்சிதம் –) -நான் -என்ற ஸ்வா தந்த்ர பாவனையும் எனது என்ற மமகார பாவனையும் அற்றவன் என்று அறிந்து கொண்டேன் -(இவ் வர்த்தங்களை இனி வரும் ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக-)

(பக்தாஞ்சலி -வணக்கம் -நம -என்றும் -அகண்ட நமஸ் -சகண்ட நமஸ் -பிரித்த நமஸ் -நான் எனக்கு அல்லேன் -நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து –அஹந்தா – கீழ் உகாரம் பிறருக்குத் அல்லேன் -இங்கு நான் எனக்கும் அல்லேன்)

ஸ்வ ரக்ஷணேப் யஸ்வ தந்த்ரம் த்வத் ரக்ஷ யத்வ நிரூபிதும்
விஜ்ஞாயா த்வதுபாயத்வாத் அநந்ய சரணஸ் ததா –29-

தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்வதிலும் ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் உன்னால் காக்கப்பட வேண்டியவனாய்த் திகழ்கின்றேன் என்பதை அறிந்து நீயே உபாயமாதலால் மற்றவர்க்கும் அடிமையாகாமை எவ்வாறோ அவ்வாறே மற்றவரைச் சரணமாகவும் அடையாதவன் ஆனேன் –

(பெருமாளுக்கு ஊணைப் பரிப்பது போல் நானே நம்மை ரக்ஷிப்பது -கழுத்துக் கட்டி போல் -விலைப்பாலைப் போல் -அவன் ரக்ஷணம் முலைப் பாலைப் போல் -கடற்கரையில் பெருமாள் வில்லும் கையுமாய் முதலிகளை ரஷித்து அருளிய விருத்தாந்தம் -அகாரத்தால் அவன் ரக்ஷகன் என்பது நிரூபகம் -நமஸ்ஸில் நாம் ரஷ்ய வர்க்கம் என்று நிரூபகம்-)

(சம்பந்த உபாய உணர்த்தி -தாய் தோழி தலைமகள்-பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -பேற்றுக்குத் த்வரிக்கையும் உண்டே – -உபாயம் க்ருஹம் ரக்ஷணம் -ஸாதனம் மார்க்கம் -ஆறு எனக்கு நீயே என்று தந்து ஒழிந்தாய் -ஸித்த உபாயம் –களை கண் மற்றிலேன் -என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் -ஆத்ம ரக்ஷணம் -மோக்ஷ பிரதம் -உஜ்ஜீவனம் இதுவே)

நாராயண ஸப்தார்த்தம்
நித்ய நிஸ் ஸீம நிஸ் ஸங்க்ய விபூதிநாம் உபாஸ்ரயம்
தத் அந்தர்யாமிணம் தேவம் நாதம் நாராயணம் ப்ரதி –30-

நித்தியமாய் -எல்லையற்றதாய் -கணக்கற்றதாய் -விளங்கும் எல்லாமே பதார்த்தங்களுக்கும் ஆதாரமானவனாய் -அவ்வவ் பதார்த்தங்களுக்குள் புகுந்து நியமிப்பவனாய் அப்பதார்த்தங்களின் தோஷங்கள் தனக்குத் ததாதி பிரகாசிப்பவனாய் நாயகனுமாய் நாராயணனைக் குறித்து –(கைங்கர்யம் செய்ய எண்ணுகிறேன் -யென்பதை 31 ஸ்லோகத்தோடு கொண்டு கூட்டுக )

(தன்னுள் அனைத்துலகும் நிற்க -ஆதாரம் நெறிமையால் தான் அவற்றுள் நிற்க -அந்தர்யாமி வாத்சல்யம் நியமனம்-தேவம் -விளையாட்டாக பிரகாசமாய் உள்ளவன் –அழுக்கு உடம்புக்குள் இருந்தாலும் -பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு உடம்பாய் -விருத்த விபூதிகத்வம் -நாரணன் -முழு ஏழு உலகுக்கும் நாதன் -வேத மயன் -வண் புகழ் நாரணன் -வாழ் புகழ் நாரணன்-)

(ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -தாங்குவது ஸங்கல்ப ஏக தேசத்திலே –நான் எல்லாப் பொருள்களுக்கும் இருந்தாலும் நானே ஆதாரம் -பஸ்ய மே யோக ஐஸ்வர்யம் -கீதையில் -)

(பஹிர் வியாப்தி -ஆதாரம் -அந்தர் வியாப்தி -நியமனம் -சரீராத்மா பாவம் -அகடிகடநா ஸாமர்த்யம்)

நித்யம் ஸர்வத்ர நிகிலா வஸ்தம் நிரவசேஷதஸ்
ப்ரீதி காரித கைங்கர்யம் நிரதம் சிந்தயாம் யஹம் –31-

எல்லாக் காலத்திலும் கைக் கொள்ளத் தக்கதாய் இடப்பாகு பாடின்றி எல்லா இடங்களிலும் செய்யத் தக்கதாய் எல்லாமே நிலையிலும் செய்யத் தக்கதாய் ஒன்றுமே விடாமல் அனைத்தும் விதமுமாய் -மகிழ்ச்சி மேலீட்டால் செய்யும் கைங்கர்யத்தை இடைவிடாமல் அடியேன் செய்ய வேண்டி சிந்திக்கிறேன் –

(ஆய -பிரார்த்த நாயாம் சதுர்த்தி -ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பொரு சிறைப்புள் உகந்து ஏறி -ப்ரகர்ஷயிஷ்யாமி -)

(நிரதம்-நித்ய பிரார்த்தனை -இங்கு -உனது தாமரைக் கண்களால் நோக்காய் -அங்கும் அண்டர் -பிரியாமலேயே இருந்தாலும் தண்ணீர் தண்ணீர் என்று சொல்லும்படியான விலக்ஷணம் உண்டே இவனிடம் – பிரார்த்தனை -சிந்தனை -மாநாஸம் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -கைங்கர்யத்தில் நேராக –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்-3-3–அவரிடம் பிரார்த்தனை இதில் இல்லை -அது 6-10-10-கைங்கர்ய பிரார்த்தனை -ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம் மா வீட்டில் – அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -இதில் இருந்தாலும் பிரார்த்தனை -3-3-எம்மா வீட்டில் எம்மா வீடு -2-9-4-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -ஞப்தி ஞானம் –முக்தி பிரார்த்தனை -அப்புறம் விருத்தி -கைங்கர்யம் செய்வது-)

இத்தம் சேதன சாமான்ய ரூப அந்தர் பாவத ஸ்வத
ஸ்வாத்ம நேப் யநு சந்தானம் ததைவ விததாம் யஹம் –32-

இவ்விதமாகத் தெரிவிக்கப் பட்டுள்ள எல்லாமே ஜீவன் ராசிகளுடைய ஸ்வரூபத்தில் அடியேனும் அடங்கி யுள்ளமையால் சுயமாகவே அதே பிரகாரத்தில் அடியேன் செய்ய வேண்டிய மந்த்ரார்த்த அனுசந்தானத்தையும் செய்து வருகிறேன் –

அகாரார்த்தோ அர்த்த பூதோ அஹம் அநந்யார்ஹோசித பர
ஸ்வார்த்ததா ரஹிதோ நித்யம் அநந்ய சரணஸ் ததா —
33-

அகாரார்த்த வாஸ்யனான விஷ்ணுவுக்கு உரியதான கைங்கர்யம் செய்யும் அடியேன் மற்றவர்களுக்கு அல்லாது அவனுக்கே ஆட் செய்பவனாய் -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவனாய் -தன்னலம் அற்றவனாய் -எப்போதும் அவ்வாறு வேறு காப்பாளர்கள் அற்றவனாய் -நாராயணனுக்கே அடியவன் ஆவேன் -(இவ்வர்த்தம் கீழ் ஸ்லோகார்த்தத்துடன் கொண்டு கூட்ட வேண்டும் )

நாராயணாய நாதாய கிங்கரஸ் ஸ்யாம் நிரந்தரம்
இதி மந்த்ரம் ஸ்வ யாதாத்ம்ய பரமே வ அநுஸந்ததே –34-

தலைவனான நாராயணனே எப்பொழுதும் அடிமையாய் இருப்பன் என்னும்படியான இப்பொருள் அஷ்டாக்ஷரீ மந்த்ரத்தை ஜீவாத்ம ஸ்வரூப நிர்ணயம் செய்வதாக எண்ணுகிறேன் –

(தேரோட்டி-அவன் முன்பே இருந்தாலும் – -ஓங்காரம்-அகாரம் முன் இருந்தாலும் -உபதேசம் மகாரத்துக்கு -ஆத்ம பரமான உபதேசம் தானே –ஸ்யாம் –இருக்கக் கடவேன்-)

(அநந்யார்ஹ சேஷத்வமும் அநந்ய போக்யத்வமும் -அநந்ய உபாயத்வமம் காட்டி அருளியவாறு -உபேயத்வமுமே பிரதானம் -கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம் -உபாயமாகக் கொள்ளும் பொழுது -அங்கும் த்ரிவித பக்திகளும் பிரார்த்தித்துப் பெற வேண்டும் -கத்யத்தில் பார்க்கிறோம் -பக்தி யாரம்ப விரோதி போய் பக்தி செய்து -மேலே மேலே வளர்த்துக் கொள்கிறோம் -எல்லாமே அவனது இன்னருளாலேயே -அங்கும் சேர்ந்து இருந்தால் தான் ஸூகம் -இல்லையேல் துக்கம் -பிரியாமல் இருக்கக் கூடாதே என்ற படபடத்த எண்ணமே பர பக்தி -அகலகில்லேன் இறையும் என்று அவளுமே இருக்க நாம் இருப்பதைச் சொல்ல வேண்டாமே -கர்மாதீனம் அல்ல -விஷய வைலக்ஷண்யம் -தர்சனம் கிட்டிய பின்பும் சாமானாகாரம் -ராமனாகவும் நரஸிம்மனாகவும் அங்கும் மாநஸமாக ஸேவிக்கலாமே -)

த்வய மந்த்ர -மந்த்ர ரத்ன விவரணம்
ஸ்ரீ மந் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே -ஸ்ரீ மதே நாராயணாய நம
சித்தம் பிரகாசித ஸ்வாத்ம யதாத்ம்ய ஸ்வ உசிதம் அஹம்
வ்ருத்திம் ப்ரவ்ருத்திம் நிச்சிதய த்வயேந விததாமி தாம் –35-

இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்ட ஆத்மாவின் உண்மை ஸ்வரூபமுடைய நான் என்னுடைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தகுந்ததான அனுஷ்டானத்தையும் வாழ்வாதாரத்தையும் த்வய மந்திரத்தால் நிர்ணயித்து அந்தப் சரணாகதியைப் பின்பற்றுவேன் –

(ந வேதாந்தாத் ஸாஸ்த்ரம் –த்வய மந்த்ரம் ரத்னம் -ஆரோக்கியத்துக்கு ஸத்வ குணம் –இதம் பூர்ணம் இத்யாதி வாக்கியம் நடுவிலே –அர்ச்சையில் சரணாகதி -குண பூர்ணம் இங்கு தானே –என்பதும் இதனாலேயே –சர்வம் பூர்ணம் ஸஹோம் -குணங்கள் உடைய ஸ்ரீ மன் நாராயணனைப் பற்றி குணங்களுடைய மிதுனத்தில் கைங்கர்யம்-திருமந்த்ரத்தால் ஸ்வரூபம் அறிந்த பின்பு -ஆத்ம யாத்ரைக்கும் தேஹ யாத்ரைக்கும் –வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -கற்க கசடற -ஞானம் -கற்ற பின்பு நிற்க அதற்குத் தக -வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -உசிதமான வற்றையே கடைப் பிடிக்கிறேன் என்றபடி –)

(அநந்யார்ஹ சேஷத்வம் -ஞானம் -பிரணவம் -பெற்ற பின்பு -அநந்ய உபாயத்வம் -அவனைப் பற்றி -நமஸ் –அநந்ய போக்யத்வம் -அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -நாராயணாய நமஸ் வ்ருத்தி பூர்வ வாக்கியம் -நாராயணாய வ்ருத்தி -உத்தர வாக்கியம் -)

த்வாம் ஸ்ரிதா நிகிலைஸ் ஸேவ்யா ஸ்ரிய கடக பாவத
ஸமாஸ்ரித்ய தயா நித்ய யுக்தம் வாத்சல்ய சாகரம் —
36-

(எம்பெருமானே -எப்போதும் உன்னையே ஆஸ்ரயித்து இருப்பவளாய் –
அனைவராலும் ஆஸ்ரயிக்கத் தகுந்தவளான ஸ்ரீ மஹா லஹமியை புருஷகார ரூபமாகப் பற்றி –
அவளுடன் நித்யம் கலந்து இருப்பவனாய் –
வாத்சல்ய குணக்கடலாய் -தோஷ போக்யத்வம் -)

ஸ்வாமிநம் சீல ஜலதிம் ஸூலபம் ஸூகமம் ததா
ஸர்வஞ்ஞம் ஸக்தி ஸம்பந்தம் ஆப்த காமஞ்ச சேஷிணம் –37-

உலகுக்கு நாயகனாய் ஸ்வாமித்வம் –
சீல குண பூர்ணனாய் -ஸுசீல்யம் –
எளிதாக-துன்பப்படாமல் –
அறியக் கூடியவனாய் -ஸுலப்யம் –
எளிதாகப் பற்றக் கூடியவனாய் -ஸூக மத்வம் –
அவ்வாறே எல்லாமே அறிந்தவனாய் -ஸர்வஞ்ஞத்வம் –
பலவிதமான சக்திகள் உடையவனாய் -ஸர்வ சக்தித்வம் –
விரும்பும் பயன்களை அனைத்தையுமே பெறத் தக்கவனாய் -ஆப்த காமத்வம் –
அடியவர்களின் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்பவனாய் -ஸர்வ சேஷித்வம் -)

(1-நிகரில் புகழாய் என்று வாத்சல்யத்தைச் சொன்னபடி; (2). உலகம் மூன்று உடையாய் என்று ஸ்வாமித்துவத்தைச் சொன்னபடி: (3) என்னை யாள்வானே என்று சௌசீல்யத்தைச் சொன்னபடி; (4) நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே என்று சௌலப்பியத்தைச் சொன்னபடி.ஆக இந்த நான்கு குணங்களும் ஆச்ரயண சௌகர்யாபாதகங்களாகையாலே இவை இங்கு வரிசையாக அநுசந்திக்கப் படுகின்றன.)

காரணம் கருணா பூர்ணம் அசேஷ பல தாயகம்
த்வாம் விநிச்சித்ய நிர்தோஷ நித்ய மங்கள ரூபிணம்
–38-

(அனைத்துக்கும் காரணமாய் -ஸர்வ காரணத்வம்
நிரம்பிய கருணை என்னும் குணத்தால் அனைத்தும் பயன்களையும் கொடுப்பவனான -பல தாயகத்வம்
நிரம்பிய உன்னை
தோஷங்கள் தட்டாது அனைவருக்கும் புகலிடமாக இருப்பவனாக நிச்சயித்து

(-நிர்த்தோஷ நித்ய மங்கள-கல்யாண குணங்களைச் சொல்லி -உபய லிங்க-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக குண )

சரணவ் தவ ஸர்வாத்ம ஸாதாரண ஸூபாஸ்ரயவ்
அநிஷ்ட விநிவ்ருத்யர்த்தம் இஷ்ட ப்ராப்யர்த்த மேவ ச
–39-

எல்லாமும் ஆத்மாக்களுக்கும் பொதுவான மங்களகரமான உன் திருவடிகளை(பொது நின்ற பொன்னம் கழல்கள் அன்றோ ) எல்லாத் துன்பங்களும் விளக்குவதன் பொருட்டு -அநிஷ்ட நிவ்ருத்தி –
விரும்பிய மோக்ஷம் அடைவதற்காக -இஷ்ட ப்ராப்தி-
உன்னையே உபாயமாக என்னவனாய்)

உபாய பாவாத் சரணம் ப்ரபத்யே அத்யாவசாயவான்
இயம் ப்ரபத்திர் விஸ்வாஸ பூர்வக ப்ரார்த்தநா மதி –40-

(உன்னையே உபாயமாக என்ன்னவனாய்
த்ருடமான விஸ்வாஸத்தை உடையவனாய்
சரணமாகப் பற்றுகிறேன்
நிலையான விஸ்வாஸத்தோடு விரும்பியதைப் பெறும்படியான அறிவே இந்த சரணாகதி யாகும்)

தஸ்மான் மமாபி முக்யார்த்தம் ப்ரபத்திரிய மித்யத
த்வமே வோபாய பூதஸ் ஸந் பாஹி மாம் கருணாகர –41-

ஓ ஸ்வாமி இவ்வாறு செய்யப்பட்ட சரணாகதி அடியேன் உனக்கும் முகம் கோணாமல் நடப்பவன் என்பதைத் தெரிவிப்பதற்கே -ஆகையால் இவ்வாறு கூறப்பட்டதையே கொண்டு நீயே ஸாஷாத் ரக்ஷகனாய் கருணைக் கடலாய் என்னைக் காத்து அருள்வாய் –

(ஷேம க்ருஷிகன் -ஒட்டி வந்து தனி நெஞ்சை வஞ்சித்து இருக்க- -இசைவித்து அடியேனை அத்வேஷம் மாற்றி ஆபிமுக்யம் பண்ண வைத்து அருளியதால் -இத்தை அறிவிப்பதே சரணாகதி -)

ஸர்வ அதிசயத் ஆகார ஸ்வரூப குண ஸம்பதா
ஸ்ரியா நித்யம் ஸஹ ஸீநம் தேவ தேவம் ஜகத் பதிம் –42-

எல்லாரைக் காட்டிலும் மேன்மையான ஞானம் ஆனந்தம் முதலானவற்றால் நிரம்பிய ஸ்வரூபம் மற்றும் சவுந்தர்யம் காருண்யம் வாத்சல்யம் முதலான குணங்கள் நிரம்பிய பிராட்டியாருடன் வீற்று இருந்து -தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான

(உத்தர வாக்யார்த்தம்-ஸ்ரீ மதே நாராயணாய நம -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி-ஸஹ சீதயா -மிதுனத்தில் கைங்கர்யம் -ப்ராப்யம் மிதுனம் -ஸ்வாமித்வம் இங்கும் உண்டு -கீழே ஸ்வாமித்வம் -கைவிடமாட்டார் -உபாயமாக்கப் பற்றலாம்-ஸ்வாமி சொத்து -இங்கு -இங்கு ஸ்வாமித்வம் -கைங்கர்யம் உகந்து கொள்ளும் ஸ்வாமி-ஸ்வாமி -தாஸ்யம் இங்கு-மனிசர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் )

பவந்த மநு பூயாஹம் ஆஹ்லாத பரி ப்ரும்ஹித
நித்யம் ஸர்வா த்ரிகம் ஸர்வ அவஸ்த்தம் ஸர்வ விதம் ததா –43-

தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான உன்னைக் கண்டு அனுபவித்து அடியேன் ஆனந்தம் அடைந்தவனாய் -எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும்

ஐஸ்வர்ய கைவல் யோத் தீர்ணம் த்வத் ஆனந்தாத் விலக்ஷணம்
லஷ்மீ போகாத் விஸிஷ்டம் ச கைங்கர்ய ஸூகமாப் நுயாம் –44-

எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும் பலதரப்பட்ட ஐஸ்வர்ய கைவல்ய அனுபவங்களை விஞ்சியதாய் உனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறானதாய் திருமகளுக்குக் கிட்டும் ஆனந்தத்தைக் காட்டிலும் சிறந்ததாய் இருக்கும் கைங்கர்ய ஸூகத்தை அடைவேனாக –
பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் -ஐஸ்வர்யம் கைவல்ய த்யாஜ்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை -விலக்ஷணம் -இது தானே -அத்திரு அவனைப் பற்றும் -இத்திரு இருவரைப் பற்றும்-அத்திரு திருமார்பினைப் பற்றும் இத்திரு திருவடியையே பற்றும் –

தத்ர ஸ்வார்த்தத்வ ஸம் பூதம் அஹம் தாமம தோஜ்ஜிதம்
ப்ரதி பந்தம் அஸேஷேண விநிவர்த்தய மாதவ –
-45-

ஓ மாதவ ஸ்வார்த்த புத்தியுடன் கூடிய அஹங்காரம் மமகாரங்களின் ஸம்பந்தம் அற்றதான உன் கைங்கர்யத்துக்குத் தடையான கெட்ட நோக்கை முழுவதுமாக நீக்குக –

(கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -பிரபல தர விரோதியும் போக வேண்டுமே -மற்றை நம் காமங்கள் மாற்று -படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே –தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே)

இத்தம் த்வயார்த்தம் ஸம் சித்ய பூர்ண பிரபதநாத் மகம்
தத்ர த்வதாராவ்ல் பண்யம் ஜாநே ஸ்லோக விதாநத–46-

இவ்வாறாக முழுமையாக சரணாகதியைத் தெரிவிப்பதான த்வய மந்திரத்தின் பொருளைப் பாவித்து அந்த சரணாகதி விஷயத்திலேயே உனக்கும் மிகுந்த ஆதரபுத்தி உள்ளது என்று நீயே சரம ஸ்லோகத்தில் அறுதியிடுவதைத் தெரிந்து கொண்டேன் –

——-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச —
ஸ்ரீ கீதா சரம ஸ்லோக விவரணம்

(தியாகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் ஸ்வீகாரம் செய்வது நம் கர்தவ்யம் -மேல் அவன் கர்தவ்யம் -பாபங்கள் தன்னடையே போம் -சோகப்படாதே -இதுவும் விதி -)

(மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்

நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.)

அபீஷ்ட உபாய ரூபேண ஸாத்யாநாம் சிர காலத
ஸ்வ கர்ம ஞான பக்தீ நாம் ஸ்வரூப பரி சோதநாத் –47-

விரும்பிய மோக்ஷ உபாயத்துக்கு சாதனமாக பண்டைக் காலத்தில் இருந்து கைக் கொள்ளப் பட்ட கர்ம ஞானம் பக்தி யோகங்களின் இயல்பைத் பரிசீலித்த போது –

ஸ்வ விளம்ப அஷமத்வேன ஸ்வாகிஞ்சன்ய விரோதத
ஸ்வ அனுபாயத்வ நிஷ்கர்ஷாத் ஸர்வ ஸம்த்யஜ்ய தூரத –
-48-

தான் -ஒரு ஜீவாத்மா -கால தாமதத்தைப் பொறுக்க மாட்டாமையாலும் -தன்னால் அவற்றைக் கடைப் பிடிக்க ஆற்றல் இல்லாமையாலும் பரதந்த்ரனான தனக்கும் இவைகள் உபாயம் அல்ல என்று நிச்சயித்துக் கொண்டதாலும் மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி

த்யாகம் ஸ்வீகார வித்யங்கம் விநிசிசத்ய ச மாம் தத
தட் ஸாரத்யே ஸ்தி தத்வேன ஸூ சீலம் பக்த வத்சலம் –
-49-

மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி இவ்வாறு உபாயாந்தரங்கள் விடுவதை சரணாகதியைப் பற்றுவதற்குப் பூர்வ அங்கமாக -தகுதி உடையதாக -எண்ணி பின்பு -உனக்குத் தேரோட்டியாய் இந்ததனால் சீலமும் வாத்சல்யம் உள்ளவன் என்றும்

(நிவ்ருத்தி ரூபமாய் இருப்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது-அனைத்தையுமே விட்டே ஸாஷாத் தர்மமாகப் பற்ற வேண்டும்-ஸ்நாத்வா புஞ்சீத போல் இது -புக்த்வா -விளக்கு அணைந்த பின்பும் ஒருவேளை சாப்பிட்டால் சாந்த்ராயண பிராயச்சித்தம் செய்ய வேண்டும் -என்பது போல் அல்ல )

அநந்ய அபேக்ஷ ரூபத்வாத் அத்விதீயம் அநுத்தமம்
அநிஷ்ட த்வம்ஸ நேதஷம் உபாயம் பரிசிந்தயன்
-50-

மற்றுமோர் எவருடைய உதவியையும் எதிர்பாராத ஒரே சாதனமாக என்றும் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் என்றும் பாபங்களைப் போக்குவதில் ஸமர்த்தன் என்றும் திகழ்கிற என்னை

(அபின்ன நிமித்த காரணம் பர ப்ரஹ்மம் ஒருவனே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –சத் ஏவ-ஸோம்ய ஏக மேவ அத்விதீயம்-வேதாந்தத்தில் இவ்வாறு அத்விதீயம் -உபாய உபேயமும் அவனே ரஹஸ்ய த்ரயத்தில் -)

மநோ வாக் காய சம்பன்ன கதித்ரய கோசரம்
வ்ரஜநம் ஸர்வ பாவேந குரு விஸ்வாஸ பூர்வகம்
–51-

என்னை ஸாஷாத் ஸாதனமாகப் பற்றி சிந்தை சொல் செயல்களால் கிடைக்கப் பெற்ற மூன்று விதமான பற்றுதல்களை குறிக்கும் சரணாகதியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் முழுமையாக கடைப் பிடிப்பாயாக –

(ஸர்வ பாவேந -உபாய ப்ராப்ய ப்ராபக பாவனைகள்-தாரக போஷக போக்யம் எல்லாமே அவனே-ப்ரார்த்தனா மதி சரணாகதி -புத்தி பூர்வகமாக செய்ய வேண்டுமே-கத்யர்த்தா புத்த்யர்த்தம் -அவன் கொடுத்த மூன்றாலும் மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்வது நல்லது )

அஹம் ஸ்வாதீந ஸர்வாத்ம பந்த மோக்ஷ விதிக்ரம
ஸார்வஞ்ஞ ஸர்வ சக்தித்வ பூர்த்தி ப்ராப்தி தயோததி —
52-

என் வசத்தில் இருக்கும் எல்லாமே ஜீவராசிகளுடைய கருமத்துக்கு வசப்படுதல் விடுவித்தல் என்ற தொழிலை யுடையவனாய் ஸர்வஞ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் உடையவனாய் குறைவற்றவனாய் எல்லோருடனும் நித்ய சம்பந்தம் உடையவனாய் கருணை யுடையவனாய்

(கர்மாதீனமாக பந்தம் அளிப்பதும் ரூபாதீனமாக மோக்ஷம் அளிப்பதும் அவனே)

மயி நிஷிப்ய கர்தவ்யம் தத்ர நிர்பர முஜ்ஜ்வலம்
த்வாம் ப்ரபத்தி க்ரியா முத்ரா முத்ரிதம் மத் பராயணம் –
-53-

இது போன்ற கல்யாணக் குணக்கடலான என்னை –
காப்பாற்றும் பொறுப்பை என்னிடத்தில் வைத்துக் இனி அவ் விஷயத்தில் சிந்தை அற்றவனாய் -ஐயம் தீர்ந்து சந்தோஷத்துடன் சரணாகதியைக் குறிப்பிடும் அஞ்சலி முத்திரையுடன் என்னையே பரம ப்ராப்யமான எண்ணின நீ

(பகவானுக்கு அபய முத்ரா முத்ரிதம் -நமக்கு அஞ்சலி முத்ரா முத்ரிதம்-ஸக்ருதேவ -தவாஸ்மி -உனக்கு உரியேனான என்னை-கைவிடாமல் அடியார்க்கு ஆட்க்கொண்டு அருளுவதே பாராயணம் )

பூர்வ உத்தர ஆராப்தா கௌக விபாகேன விசேஷிதாத்
நிரஸ்த சங்க்யாத் துர் மோசாத் நிகிலாத் பாப சஞ்சயாத்
-54-

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்னுமா போலே செய்த பிழைகளும் இனிச் செய்யப் போகுமவையும் -தற்போது பயனை அனுபவிக்குமவையுமாக வகை செய்யப்பட்ட எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து

(அக ஒக-பாபக் கூட்டங்கள் –ஸர்வ பாபேப்யோ-பூர்வ -ப்ராரப்தம் -ஆரப்தம் அநாரப்தம் இரண்டு வகைகள் –வர்த்தமான சரீர ஆரப்தம் -சரீராந்தர ஆரப்தம் -இவை பூர்வாகங்கள்–ஆர்த்த ப்ரபன்னனுக்கு மட்டுமே இந்த சரீர ஆராப்த கர்மங்களையும் போக்கி உடனே பேற்றை அளித்து அருளுகிறவன் -ப்ராப்தி ரோதகம்-பேற்றுக்குத் தடைகள் -உபாயாந்தர நிஷ்டனுக்கு பல பல சரீரங்கள் கழித்தே போக்கி -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீராவஸானத்தில் பேற்றை அளித்து அருளுகிறான் –பிரகிருதி சம்பந்தம் வாசாநா ருசிகளால் உத்தராகங்கள்-ஒன்றுமே செய்யாதவன் உத்தமன் -பண்ணி பச்சாதாபம் செய்து பிராய்சசித்தம் செய்பவன் மத்யமான் -அதமன் இவை இல்லாதவன் -லகுதண்டம் இவனுக்கு உண்டாம் -சரணாகதி செய்யாதவனுக்கு குரு தண்டனை உண்டாம் -)

முக்தமேவ கரிஷ்யாமி ஸங்கல்பா தேவ மாமகாத்
கதம் லபேதா வஸ்தானம் தமஸ் சமுதிதே ரவவ் –55

எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து வீண் போகாத என் சங்கபத்தனால் விடுவித்து அருளுவேன் -கதிரவன் குண திசைச் சிகரம் வந்தடைந்த பின்பு இருள் எப்படிப் நிலைத்திருக்கும் –

(புண்ய பாப ஈஸ்வர ப்ரீதி கோப-இவை அத்ருஷ்டம் -நாம் அறியாமல் -சங்கல்ப லேசத்தாலேயே போக்கி அருளுகிறான் -ஏவ -நீயும் வேண்டாமே நான்முகன் வேண்டாமே -தன்னடையே போகுமே)

தஸ்மாத் உபாய சாத்யத்வ துஷ் கரத்வ விசேஷத
பல ஸித்தேர் விலம்பாச் ச ந சோகம் கர்த்தும் அர்ஹஸி –56

ஆகையால் கர்ம ஞானனாய் முதலான உபாயங்களைப் பற்றுமதால் மட்டுமே மோக்ஷம் என்றோ அவைகளை முழுமையாக நான் கடைப்பிடிக்க முடியவில்லையே என்றோ பயனாகிய மோக்ஷம் காலதாமதமாக எப்போது கிடைக்குமோ என்றோ நீ வருந்தத் தக்கது அன்று-

(ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய் உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே)

பகவான் விரும்பிய உபாயம் சரணாகதியே

இத்தம் பார்த்தம் சமுத்திஸ்ய விதாநாத் சரம உதிதாத்
பவதோ பஹு மந்தவ்யாம் ப்ரபத்திம் அநு சந்ததே —
57-

இவ்வாறாக அர்ஜுனனைக் குறித்து சரம ஸ்லோகத்தில் அறுதியிடப்பட்ட பிரபத்தி எனப்படும் சரணாகதியை நீயே விதித்தமையால் உனக்கும் அதுவே அபிமதமான விஷயம் என்று எண்ணி இருக்கிறேன் –

(மந்த்ர ரஹஸ்யம் வேத-ஸாஸ்த்ர ருசி- பரிக்ருஹீதம் -ஞானத்தில் பேறு -மந்த்ர ரத்னம் த்வயம் பிராட்டியாலே பேறு -ஆச்சார்ய ருசி- ரிக்ருஹீதம் -சரம ஸ்லோகம் -அவனாலே பேறு -ஈஸ்வர ருசி-பரிக்ருஹீதம்-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க -ஸ்வ தந்த்ர பிரபத்தி ரஹஸ்ய த்ரயார்த்தம் -)

(ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |
பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
||-4-
உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.
ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.)

ஏதா வந்தம் ஸதா த்யானம் இத்தம் மாம் க்ருபயா நயன்
சேஷாத்வலேச நயனம் க்ருபயா குரு மாதவ
-58-

இவ்வாறு சம்சாரம் என்னும் கொடிய காட்டில் வழி திகைத்துத் தவிர்த்து உனது கருணைக்கடல் நல் வழி அடையச் செய்த ஓ திரு மா மகள் கேள்வனே -எஞ்சிய தூரமும் அந்த நல்ல வழியிலேயே நடக்குமாறு அருளாய்

(எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-)

த்வத் ஸ்வரூப குணாகார விபூதியில் விஷயாம் மதிம்
விஸதீ க்ருத்ய தாமேவ பக்தி ரூபாம் குருஷ்வ மே –59-

ஞான ஆனந்தங்களுடன் கூடிய உன் ஆத்ம ஸ்வரூபன் -அவ்வாத்மாவுக்கே உரித்தான ஞான பல ஐஸ்வர்யம் தயா வாத்சல்யம் முதலான குணங்கள் திருமேனிக்கு உண்டான சவுந்தர்யம் முதலான குணங்கள் திவ்ய மங்கள விக்ரஹம் அத்திருமேனியாய் விளங்குகிற நித்ய லீலா விபூதிகள்-இவை அனைத்தையுமே குறிக்கும் ஞானமும் தெளிவாகப் பெற்று அன்புடன் கூடிய கைங்கர்ய ரூபமான அந்த ஞானத்தையே அடியேனுக்கு த்ருடமாக அளித்தருள வேணும்

(விஸதீ க்ருத்ய-ஞானம் -விஞ்ஞானம் -அறிந்து அறிந்து தேறித் தேறி -யாதாத்ம்ய -)

பரபக்திம் பரஞ்ஞானம் பரமாம் பக்தி ஸம் பதம்
ஆவிஷ்குரு மமாத்யர்த்தம் ஆத்ம தர்மத்வ யோகத–60-

பரபக்தி பரஞ்ஞானம் மேலான பரமபக்தி ஆகிய இவை எனது ஆத்மாவுக்கு உரித்தான தர்மங்களாகையாலே அஞ்ஞானத்தாலே மறைக்கப்பட்டு இருக்கும் அவைகளை எனக்கு வெளிப்படையாக சாஷாத்காரித்து அருள வேணும் –

(சேஷத்வமாகவும் பாரதந்தர்யமும்-உள்ளிதழ் -வெளிப்பட்டு அவன் ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் -பரபக்தி பரஞானம் பரமபக்தி அடியாகவே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரிக கைங்கர்யம் -)

பூர்வாகம் உத்தராகம் ச சமாராப்த மகம் ததா
த்வத் ப்ராப்திரோதகம் க்ருத்ஸ்னம் நிச்சேஷம் பரிஹாரய–61-

முன்பு செய்யப்பட்டு இனிமேல் பயன் அனுபவிக்கும்படியான பாபங்கள் -இப் பிறவியில் இனி மேல் வரும் பாபங்கள் அவ்வாறே தற்போது பயன்களை அனுபவிக்கத் தொடங்கியதாக பாபங்கள் -உன்னை அடைவதற்குத் தடையான இருக்கும் இது போன்று எல்லாமே பாபங்களில் கூட்டங்களை அவற்றின் ருசி வாசனைகள் இல்லாததாய் நீக்கி அருள வேணும் –

(த்வத் ப்ராப்தி ரோதகம் -அடைய தசைகள் -அதிகாரிகள் தோறும் மாறுபடும் அன்றோ -ஆர்த்த ப்ரபன்னனுக்கு அனைத்துமே போக்கி உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு அருளுகிறான் -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீர அவசானத்தில் பேறு –உபாசகனனுக்கு சரீராந்தர அவசானத்தில் பேறு -)

சரீரே தார புத்ராதவ் தந ஷேத்ராதிகே ததா
சங்கம் துர் மோசமதிகம் ஸஹ ஸைவ விநாசய –62-

பாபச் செயல்களுக்குப் புகலிடமான இந்த ஸரீரத்திலும் மனைவி மக்களிடத்திலும் அவ்வாறே செல்வம் வீடு முதலானவற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாததான த்ருடமான மமகார ரூபமான பாசத்தை தாமதமின்றி அகற்றி அருள வேணும் –

(ஸக்ருத் ஏவ-சடக்கென -கூரத்தாழ்வான் நிர்வாகம்)

த்வத் குண அனுபாவாஸ்வாத ரஸிகேஷு மஹாத்மஸூ
த்வதீயேஷு பரம் ப்ரேம த்வமேவ பரிவர்த்தய –63-

உனது கல்யாண குணங்களை அனுபவிப்பதாக அமுத பானத்தை ரசித்து ருசித்தவர்களான உன் பக்தர்களான பெரியோர்கள் இடத்தில் மிகுந்த அநுராகத்தை அடியேனுக்கு வளரும்படி அருள வேணும் –

த்வயார்த்த கத வாக் சித்தம் தாயைஸ் த்ரிபிரநா குலம்
யாவச் சரீர பாதம் மாம் குருஷ்வ த்வம் த்வதந்திகே –64-

த்வய மந்திரப் பொருளில் எனது மனமும் வாக்கும் ஊன்றி இருப்பதால் ஆத்யாத்மிகம் ஆதிபவ்திகம் ஆதி தெய்விகம் என்கிற மூன்று வகைப்பட்ட துன்பங்களால் தாக்கப் படாதவனாக என்னையே இந்தச் சரீரம் போமளவும் உனக்குக் கிட்டி இருக்குமாறு அருள வேணும்
ஆத்யாத்மிகம்-உடலைப் பற்றி வருகிற கர்ப்பவாசம் போல்வன
ஆதி பவ்திகம் -பஞ்ச பூதங்களால் உண்டாகும் குளிர்ச்சி வெப்பம் முதலியன
ஆதிதைவிகம் -தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை போல்வன

யோ அசவ் த்வயைவ தத்தோமே வ்யவஸாயோ மஹோதய
குருஷ்வ நிச்சல மமும் யாவது ப்ராப்த்யனு வர்தினம் –65-

எம்பெருமானே ரக்ஷகன் என்னும்படியான நன்மை பயக்கக் கூடிய விஸ்வாஸமானது உன்னாலேயே எனக்கு அருளப்பட்டது -அந்த திருட விஸ்வாஸம் நிலை யற்றுப் போகாமல் உன்னை அடையும் வரை தொடரும் படியாக செய்தருள வேணும் –

ததோ தேஹா வஸாநே ச த்யக்த ஸர்வேதர ஸ்ப்ருஹ
த்வாமேவ ப்ரதிபுத்தஸ் ஸந் பஸ்யேயம் பகவந் நஹம் –66-

ஸ்வாமி மேல் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட அந்த திருட விஸ்வாஸத்துடன் இந்த சரீரம் நீங்கும் தருணத்தில் அனைத்தும் ஆசைகளும் துறந்தவனாய் நான் தத்வ ஞானத்தைத் தெளிவாகப் பெற்றவனாய் உன்னையே காணப் பெறலாவேன்

(கத்ய த்ரயத்தில் இவற்றையே ஸ்வாமிகள் படிப் படியாக வேண்டிக் கொண்டு அருளுகிறார்-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -மூன்றும் -ஆழ்வார் -இங்கும் கத்யத்ரயத்திலும் பொல்லா ஒழுக்கும் பொய் நின்ற ஞானமும் அழுக்கு உடம்பும் -என்ற வரிசைகள்-உபதேச அனுஷ்டான க்ரமங்கள் மாறி இருக்குமே )

(தேஹ இந்திரிய ஸூஷ்ம ரூப இந்திரிய ரூபமான ப்ரக்ருதி போக்கி அருள மேல் பிரார்த்தனை -)

பிராகிருத சரீரத்திருந்து என்னை வெளியேற்றுமாறு பிரார்த்தனை –

அவ்யக்த புத்த்யஹங்கார ஞான கர்ம அக்ஷ மாநஸை
ஸதந் மாத்ர மஹா பூதை பரிகல்பித மாதித–67-

மூலப்ப்ரக்ருதி மஹத் தத்வம் ஸாத்விக ராஜஸ தாமஸ அஹங்காரங்கள் ஞான கர்ம இந்திரியங்கள் மனஸ் தன்மாத்திரைகள் எனப்படும் பூத ஸூஷ்மங்கள் கூடியதான பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட

(அத்யாவசாய ஜனகம் மஹத் தத்வம் புத்தி உறுதி எடுக்கும் -சாத்விக அஹங்காரத்தில் இருந்தது 11 இந்திரியங்கள் -தாமச அகங்காரத்தை பூதாதி என்பர் -இவற்றில் இருந்து தன்மாத்ரை -அது மாத்ரம் -குணங்கல் மட்டுமே -பூதங்களாக விரிவடையாமல் இருக்கும் -ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் உதவும் -பிறவிகள் தோறும் ஸூஷ்ம இந்திரியங்கள் பதிவுடன் இருக்குமே -)

சர்மாஸ் ருங்மாம்ஸமே தோஸ்தி மஜ்ஜா சுக்லாதி ஸம் யுக்தம்
ததா மூத்ர புருஷாதி பூர்ணம் நித்ய ஜூகுப் ஸிதம் –68-

பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட தோல் ரத்தம் சதை தசை எலும்பு எலும்புகளில் உள்ளிருக்கும் மஜ்ஜை வீர்யம் ஆகியவற்றோடு கூடினதாய் மற்றும் மல மூத்ரங்களான அழுக்குகளைக் கொண்டதாய் எப்போதும் சகிக்க முடியாததான

இதம் சரீரம் துக்கைக நிதானம் பரிஹார்ய ச
நாட்யா சதாதிசாயிந்யா மாம் நிர் கமய தேஹத–69-

அனைத்து இன்னல்களுக்கும் காரணமான இச்சரீரத்தில் இருந்து எனக்கு விடுதலை அழித்து 101 வது நாடி -மூர்த்தந்ய நாடி -மூலமாக இச் சரீரத்தில் இருந்து என்னை வெளியேறச் செய்து அருள வேண்டுகிறேன் –

சரீர தோஷங்கள் அறிந்தால் தானே ஆத்ம பரமாத்ம வைலக்ஷண்யம் உணர்ந்து -சரீரம் இருக்கவே கர்மங்களைச் சேர்க்கிறோம் – பகவத் திருமேனியை உணர்ந்து இவற்றில் ஆசையை விட்டு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யங்களை ஏவிப்பணி கொள்ளப் பிரார்த்தித்து பெற்று அவனை ஆனந்திப்பித்து நாமம் ஆனந்தம் பெறுவோம்(மோக்ஷ மார்க்கம் -ஸ்வர்க்க நரக மீண்டும் ஸம்ஸார -ஆகிய நாலுக்கும் தேகத்தில் இருந்து வெளியே புறப்படும் ஆத்மா -சம்சார சாகரத்தில் துக்கப்பட்டு -சுகத்துடன் தொடங்கினாலும் துக்கத்துடன் முடியும் -பரப்ரஹ்ம அனுபவம் ஒன்றே தான் துக்கமே கலசாத இன்பம் -அவற்றை முன்னோட்டமாக இங்கேயே காட்டி அருளி -அதில் பிராவண்யம் அடைய வைக்க அருளி -அபவர்க்க ரசம் அறிந்து இருந்தாலும் ஸம்ஸார துக்கம் பட்டே உணர்கிறோம் -வாக் மனஸ் -எல்லா இந்த்ரியங்களுடன் கூடிய பிராணன் -தேஜஸ் -ஐந்துக்கும் உபலக்ஷணம் -ஆத்மாவுடன் ஸூஷ்மமாகவே சேரும் -ஏவமேவம் -பரமாத்மாவுடன் சேர்கிறான் -ஸூஷ்ம சரீரத்துடன் சென்று விரஜையில் குளித்து -ருசி வாசனைகள் கழித்து – பேறு — இந்த பேரின்பம் ஆசை யுடையவன் இருக்கும் இடமே திவ்ய க்ஷேத்ரம் -ஞானிகள் அத்யந்த ப்ரிய தமர் -அவனும் ஆசைப்படுவான் -வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் -நயாமி பரமாம் கதிம் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -)

சரம ஸ்லோக விவரணம் முற்றிற்று

———

அர்ச்சிராதி மார்க்க நிரூபணம்

வஹ்ந்யஹச் சுக்ல பஷோ தகய நாப்தாநிலாஸ்ரயாத்
மார்க்காத் தவ்ஸ் ஸத் க்ருதோ கத்வா பித்வா ஸூர் யஸ்ய மண்டலம் —
70-

வஹ்நி எனப்படும் அர்ச்சிர் லோகம் பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் வாயு ஆகிய பிரதேசங்களை உடையதான அர்ச்சிராதி மார்க்கத்தில் அந்தந்த பிரதேசங்களின் அதிபதிகளால் பூஜிக்கப் படுமவனாய் -அவ்வழியாக ஸூர்ய மண்டலத்தை அடைந்து

சந்திர வித்யுஜ்ஜலே சேந்த்ர ப்ரஜாபதி ஸூபூஜிதா
அண்ட மாவ்ருதி பேதாம்ச் ச வ்யதிவத்ர்ய தசோத் தராந் –7
1-

சந்திரன் வித்யுல்லோக அதிபதியான வருணன் இந்திரன் நான்முகன் இவர்களால் அவ்வவ் உலகங்களில் பூஜிக்கப்படுமவனாய் ப்ரஹ்மாண்டத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக பல்வேறு ஆவரணங்களைக் கடந்து

(ஆதி வாஹிகர் -கூட்டிப்போய் -அமானவன் -வித்யுல்லோக அபிமானியே இவன் என்பர் -ஸமஸ்த கார்ய காரணங்களைக் கடந்து -அபுனராவ்ருத்தி மோக்ஷம் அடைகிறான் -)

அத ஸம்க்யா விஹீநம் தத் அவ்யக்த மதி வர்த்தயன்
விரஜா மம்ருதா காராம் மாம் ப்ராப்ய மஹா நதீம் —
72-

கீழே எண்ணற்ற பரிமாணங்களை யுடைய அந்த மூல ப்ரக்ருதி முழுவதையும் கடந்தவனாய் அழிவற்ற ஸ்வரூபத்தை யுடையதான அல்லது இனிமையான நீரையுடைய விரஜை என்னும் மஹா நதி அருகில் என்னை அடையும்படியாகச் செய்து அருள வேணும் –

(அவாந்தர பிரளயம் -கீழ் ஏழு லோகங்களும் மேல் மூன்றும் அழியும் -அர்ச்சிராதி -12 லோகங்களைத் தாண்டி -சில உபநிஷத்துக்கள் சிலவற்றை விட்டுச் சொல்லும் -அனைத்துக்கும் ஒருங்க விட்டு -சர்வ வேதாந்த சாகை நியாயம் – சத்ய லோகம் தாண்டி -ஆமோத பிரமோத சம்மோத ஸாந்தானிக லோகங்களைத் தாண்டி -விரஜை நீராடி -பேற்றை அடைகிறோம் -தெளி விசும்பு திரு மாடு -மாக வைகுந்தம் -அபராஜிதா -அயோத்யா -பர்யாயம்-தமஸ பரமோ தாதா -ஸாஸ்வத -த்ருவ -அயர்வரும் அம்பரங்கள் அதிபதி-நிறை கதிரோன் கீண்டு புக்கு -ஆராவமுதம் அங்கு எய்தி -)

(முக்தாத்மா ஸ்வரூப ஆவிர்பாவம் -இதுவே இயற்கை –சமத்துவம் -இங்கே பரமாத்மாவின் சரீரம் என்றும் உணர்வது -கர்மங்கள் கழிந்து -மாணிக்கத்தின் சேற்றைக் கழுவி இயற்கையான ஒளி பிரகாசிப்பது போல் -கிணறு வெட்ட வெட்ட கீழ் உள்ள நீர் போல் -ஹேய குண த்வம்சமான பின்பு இருக்கும் கல்யாண குணங்கள் பிராகாசிக்கும் -)

—–

ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேணும் என்னும் பிரார்த்தனை

க்ருத்வா ஸூஷ்ம சரீரஸ்ய சிர சக்தஸ்ய தூநநம்
தஸ்மாத்ராஹு விநிர் முக்த சந்திர ஸந்நிப முஜ்ஜ்வலம்
–73-

அநாதியாக தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களால் வடிவு கொண்ட ஸூஷ்ம சரீரத்தின் தொடர்பு அறுக்கப்பட்ட காரணத்தைக் கிரஹண சமயத்தில் ராஹுவால் விடுவிக்கப்பட்ட சந்திரனுக்கு ஒப்பான காந்தியை யுடையனாய்

தாம் நதீம் மநஸா தீத்ய வைத்யுதே நாநு கச்சதா
அமாந வேந ஸஹிதம் மாம் விபூதிம் பராந்நய–74-

அந்தப் விரஜா நதியை ஸங்கல்ப மாத்ரத்தால் கடந்து பின்தொடர்ந்து வருகிற வித்யுன் மண்டல அபிமானியான திவ்ய புருஷனுடன்-அமானவன் -இருக்கும் என்னை ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் திவ்ய தாமத்தில் சேர்க்க வேண்டுகிறேன் –

(மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் )

(இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி)

(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே-பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே
ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:-அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே-தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யேதி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந,ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *)

——

ஸ்வரூப ஆவிர்பாவம் -இயல்பான குணங்கள் -தோன்றும்படி அருளிச் செய்ய பிரார்த்தனை

தத்ர ஸ்வாபாவிக ஆகாராந் அவ போதிகாந் குணாந்
அநந்தாந பரிச்சின்னாந் அசங்க்யாந்மே ப்ரகாசய
–75-

அந்தப் பரம பதத்தில் எனக்கு இயல்பாக இருக்கக் கூடியதாய் அழிவில்லாதவையாய் அளவுபட்டு இல்லாததாய் கணக்கற்றவையான ஞானம் முதலான கல்யாண குணங்கள் தோன்றுமாறு செய்து அருள வேண்டுகிறேன்(அத்ர -இவ்வுலக இருப்பு தாண்டி தத்ர-அங்கு) –

(சாமீப்யம் சாலோக்யம் சாரூப்யம் சாயுஜ்யம் ஸாம்யாபத்தி)

—–

பஞ்ச உபநிஷத் மயமான உருவத்தை அருள பிரார்த்தனை

ததஸ்த்வ ப்ராக்ருதம் திவ்யம் ஸூத்த ஸத்வ ப்ரகாசகம்
பஞ்ச உபநிஷத் ஆகார விக்ரஹம் ஸூ மநோ ஹரம் —
76-

இனி ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு இருப்பிடமாய் ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் நித்யம் பிரகாசிப்பதாய் -ஸத்வ குணத்தை மட்டுமே வளர்ப்பிக்கவல்ல -மிகவும் அழகுடன் திகழ்வதான பஞ்ச உபநிஷத் எனப்படும் பஞ்ச சக்தி மயமான திவ்யமான திருமேனியை எனக்குக் கொடுத்தருளி உனது உத்தமமான பரிமளம் வீசும் ஒளியை பிரவேசிப்பித்து

ப்ராப்பய திவ்யா மோதந்தே பரம் தேஜ ப்ரவேஸ்ய ச
ஸ்வ ஸ்வரூபாதி நிஷ்பத்த்யா லப்த ஸாம்யம் ச மாம் குரு –
-77-

எனக்கு இயல்பாக எட்டு குணங்களை மறுபடியும் தோற்றுவித்து என்னை உன்னுடன் முழுமையாக ஒத்திருக்கும் தன்மையை உடையனாய்ச் செய்து அருள வேண்டும்
அஷ்ட குணங்கள் அபஹத பாப்மாதி -கர்மங்களுக்கு வசப்படாமை-விஜரக -மூப்பின்மை -வருத்தமின்மை -பசியின்மை -தாக்கமின்மை -ஸத்ய காம -பொய்த்து உரிய அழிவற்ற வஸ்துக்களை யுடைமை -ஸத்ய ஸங்கல்ப-நினைத்ததை முடிக்க வல்லமை -பாபமற்றவன் (அபஹத பாப்மா) கிழத்தன்மை இல்லாதவன் (விஜரக) இறப்பில்லாதவன் (விமிருத்யுகு) சோகமில்லாதவன் (விசோகக) (விஜிகத்சக) பசி தாகமற்றவன் (அபிபாசக) நித்திய பொருள்களின் மேல் ஆசை கொண்டவன் (சத்ய காமக) (சத்ய சங்கல்பக) முதலிய எட்டு 

ததச் சைரம் மதீ யாக்யே தடா கேச்வத்த மூலத
திவ்ய அப்சரோ கணை பஞ்ச சதா சங்க்யா ஸமன்விதை –7
8-

மாலா சூர்ண அஞ்சன ஷவ்ம பூஷா ஹஸ்தை ரூபஸ் திதம்
ப்ரஹ்ம அலங்கார ரூபேண சாதரம் சமலங்க்ருதம் –79-

பிறகு ஜரம்மதஹ்ரத-என்னும் பொய்கைக் கரையில் அமைந்துள்ள அஸ்வத் மரத்தின் நிழலிலே (நாளை என்பதே இல்லை -அனைத்தும் ஒன்றே -அஸ்வத் மரம் -)நூற்றுக்கணக்கான பூ மாலைகள் நறுமணம் கமழும் சூர்ணங்கள் சந்தனம் முதலான த்ரவ்யங்கள் பட்டாடைகள் மற்றுமோர் பல்வேறு ரத்ன ஆபரணங்களை கையிலே ஏந்தியவர்களாய் (பரவரா குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் )ஒளி மிக சவுந்தர்யத்தை யுடைய அப்ஸரஸ்ஸுக்களின் திரளால் சேவை செய்யப்படடவனாய்

(அரசமரத்தடியில் பரகாலனுக்கு திருமந்திர உபதேசம் -மகிழ மரத்தடியில் தீர்க்க சரணாகதி த்வயார்த்தம் பராங்குசருக்கு அருளியது போல்)

அப்யுத்தா நார்த்த மாயதை திவ்ய ஜாநபதைஸ் ஸூரை
சங்க சஸ் ஸம வேதைச் ச ஸத் க்ருதம் ஸம்பமாகுலை
–80-

ஸம்ஸார நிரயாதேவம் உத்தாப்ய கருணா நிதே
த்வம் மாம் கமய தேவேச தத் விஷ்ணோ பரமம் பதம் –81-

எதிர் கோட் வரவேற்பதற்காக திரள் திரளாக பரமபதத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்த நித்ய ஸூரிகளால் ஆச்சார்ய பாவித்துடன் சத்கரிக்கப் படுமவனான என்னையே -ஸம்ஸாரம் என்னும் நரகத்திலிருந்து இவ்வாறு கரையேற்றிய ஓ கருணைக்கடலே தேவர்களுக்கும் தேவனே -ஓ நாராயணா அந்த பரமபதத்தில் நீயே சேர்த்து அருள வேணும் –

(திருவல்லவாழ் கோனாரை அடியேன் அடி சூடுவது எந்நாளே –த்வாம் மாம் –ஸ்ரீ வைகுண்டே பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் பக்தைஸ் பாகவத ஸஹ -மேல் வர்ணனை-அயோத்யா அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ விஷ்ணோ பரமபதம் -பர்யாயம் )

—–

ஸ்ரீ வைகுண்ட புரம் -ஸ்ரீ அயோத்யா நகர வர்ணனை

ததஸ் ஸூரி ஜநைஸ் ஸர்வை வைகுண்ட புர வாஸிபிர்
ராஜ மார்க்க கதம் லாஜ புஷ்ப வ்ருஷ்ட்யாதி தோஷிதம் –82-

பிறகு வைகுண்ட வாசிகளான அனைத்து நித்ய ஸூரிகளால் தான்யங்கள் புஷ்பங்கள் தூவப்பட்டு மகிழ்விக்கப் பட்டவனாய் ப்ரதானமான ராஜவீதியிலே நுழைந்தவனாய்

(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)

த்ருஷ்ட்வா ப்ரணம்ய சோத்தாய வைகுண்ட த்வார கோபுரம்
அந்த ப்ரவிஷ்டம் பஸ் யந்தம் தாம திவ்ய மிதஸ் தத–83-

வைகுண்ட நகரத்தின் சிறந்த முகத்வார கோபுரங்களைக் கண்டு தொழுது எழுந்து நகரத்துள் நுழைந்தவனாய் -ஜ்வலிக்கின்ற மாளிகைகளை அங்குமிங்கும் கண்டவனாய் -உனது சேஷபூதனான என்னை-

அத மண்டப ரத்னம் தத் ஆனந்த பரிபூரிதம்
மஹா வகாசம் மாணிக்ய ஸ்தம்ப ஸாஹஸ்ர சோபிதம் –84-

அதற்கு மேல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் மிக்க விசாலமானதாய் ஆயிரக் கணக்கான மாணிக்கக் கம்பங்கள் பொருந்தி பிரகாசிக்கிறதாய் அந்த உத்தமமான மண்டலத்தில்

ஆரோப்ய ஸூரி பரிஷதந்தர்பாவ மஹா தயம்
கமய த்வம் த்வதீயம் மாம் க்ருத்த க்ருத்யஸ் ஸூகீ பவந் –85-

அந்த உத்தமமான மண்டலத்தில் ஏற்றி வைத்துக் செய்ய வேண்டியத்தைச் செய்து முடித்தவன் போல் மகிழும் நீ நித்ய ஸூரிகளின் திரளில் சேரும் சிறந்த அதிஷ்டத்தை அடியேனுக்கு அளித்தருள வேண்டும் –

(அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை பாரித்தது கிட்டியதே-அடியார் மூலமும் அவனைப் பற்றி அவன் மூலம் அடியார் குழாங்களுடன் சேர்ந்து அனுபவிப்போம் -ஆதியும் அந்தமும் ஒன்றே -செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யர்-ததா ராம விஜ்வர பிரமோத ஹா-தேவரீர் கிருஷி அடியேனிடம் பலிக்க வேண்டும்-)

தத்ர சாதார சக்த்யாதி க்ரமேண பரிகல்பிதே
தர்மாத்யை ஸூரிபிஸ் தத் தத் பாத காத்ர மயாத்மகை –86-

அந்த மணி மயமான மண்டபத்தில் ஆதார சக்தி சித் சக்தி சதாசிவ சக்தி என்னும் முறையில் மூன்று சக்திகளுடன் கூடிய அந்தந்த பீடங்களின் -ஆசனங்களின் -கால்களாகவும் மற்றும் வேறு பாகங்களாகவும் பரிணமித்த

(கூர்ம பீடம் -கூர்மாசனம் -அதுக்கு மேல் தர்மாதி பீடம் -தர்ம ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் -பாதங்கள் -உடலாக அதர்மம் அஞ்ஞானம் அவைராக்யம் -அனஸ்வர்யம் -வ்ருத்த விபூதிமான்)

நிர்மிதே நிர்மலே பீடே நாநா ரத்ன சமன்விதே
ஸூபாஸ் தரண ஸம் யுக்தே ஸூந்தரே அதி மநோ ஹரே –
-87-

தர்ம ஞான முதலான பேர் கொண்ட எண்மரான -தர்ம -ஞான -வைராக்ய -ஐஸ்வர்ய-அதர்ம -அஞ்ஞான -அவைராக்ய -அனைஸ்வர்யம்-அதிஷ்டான தேவதைகளால் நிர்மிக்கப்பட்ட நிர்மலமான பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் மேல் பவித்ரமான கம்பளத்துடன் கூடியதாய் அழகாயத் தோற்றுவதாய் மனம் கவருவதாய்

விகசத்தன ஸாஹஸ புண்டரீ காஸ்த்ரு தோத்தரே
தத் கர்ணி கோபரி தலே தப்த சாமீ கரோஜ்வலே —
88-

அநந்த போகி பர்யங்கே விமலே விஸ்த்ரு தோச்ர்ச்சிதே
பணா ஸஹஸ்ர மாணிக்ய ப்ரபா சித்ர விதாநகே –
-89-

ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண் தாமரை மலர்வது போல் சுட்டுரைத்த நன் பொன் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிற அந்த தாமரையின் நடுவிலே இருந்து கர்ணிகா எனப்படும் பசுமையான மஞ்சள் நிறத்தில் மிளிரும் மலரின் மொட்டுக்களை யுடைய அப்பழுக்கு அற்றதாய் பரந்து விரிந்ததாய் -மேன்மையான ஆயிரம் பணங்களில் உள்ள ஒளி வீச்சை விதானமாக வுடைய ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)

ஆஸீநம் அகிலஸ் யாஸ்ய ஸ்வாமிந்யா ஜகதஸ் ஸ்வயம்
தேவ்யா த்வதந பாயிந்யா ஸ்ரியா பூம்யா ச நீளயா –
-90-

ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே இவ்வுலகம் அனைத்துக்கும் பட்ட மஹிஷியாய் உன்னை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரியாதே இருக்கும்படியான பூஜிக்கத்தக்க திருமகளோடே வீற்று இருப்பவனாய் -பூமி நீளா தேவிமார்களுடன் உடன் இருப்பவனாய் —

ஸமேதம் ஸச்சிதாநந்தம் சாந்தோதித தசாத்மகம்
ஸந் மங்கள குணா வாஸம் ஸதைகாகார விக்ரஹம் –91-

சாந்தோதிதம் என்கிற அலையற்ற கடல் போன்ற ஸ்வரூபம் உடையவனாய் -ஞான ஆனந்தம் முதலான அனைத்தும் நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவனாய் -எப்பொழுதும் ஒரே விதமான -வளர்வது தேய்வது முதலான பரிணாமங்கள் இல்லாத -திவ்ய திருமேனியை உடையவனாய் –

(நித்யோதித ஸ்வரூப த்யானம் -சாந்தோதித குண த்யானம்)

லாவண்ய காந்தி மதிம யவ்வநாதி குணோ ததிம்
விஸ்வாதி ராஜ்ய பிசுந கிரீட சிகரோ மகுடோ ச்ச்ரிதம் —
92-

லாவண்யம் எனப்படும் சமுதாய சோபையும் மென்மை மற்றும் இளமை முதலான குணங்களுக்குக் கடல் போன்றவனாய் -அனைத்து உலகங்களுக்கும் இவனே ஸார்வ பவ்மன் என்பதைக் குறிக்கும் கிரீடத்தின் முன் பகுதியை உடையவனாய்

ஸூஸ் நிக்த நீல குடிலை ரலகைர் லலிதாளிகம்
ஸூகி பக்த லலாடாப்திம் ஊர்த்வ புண்ட்ரேண ஸேதுநா
–93-

நிகுநிகுவான தோற்றத்துடன் கறுத்து சுருண்டு வளைந்து நெளிந்து அசைந்தாடும் முடியுடன் கூடி ஒரு நீண்ட பாலம் போன்ற ஊர்த்வ புண்ட்ரத்தால் இரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்ட கடல் போன்ற விசாலமான நெற்றியை உடையவனாய்

(கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-)

ஆகர்ண பாக விஸ்ராம்த புண்டரீ காருணேஷணம்
ருஜு நாஸா முகாதாத நிஜாஸ் யாமோத ஸம்பதம் –94

காதுகள் வரை நீண்ட செந்தாமரை போன்ற அப்பெரியவாய திருக்கண்களை உடையவனாய் -வளைவு சுழி வற்று நீண்ட மூக்கின் நுனியால் தாமரையாய் அலர்ந்த திருமுக மண்டலத்தின் நறுமணத்தை நுகர்பவனாய்

(ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-)

அம்ஸா வலம்பி ரத்நாட்ய கர்ணிகா மகரச்சவிம்
நிரஸ்த நிஸ்த ஸ்து லாபிக்ய தந்த மந்த ஸ்மித உஜ்ஜ்வலம்
–95-

தோள் அளவும் நீண்டு மகர குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்ட கர்ண பாசங்களை உடையவனாய் -முத்துக்களின் ஒளியை விஞ்சிய பல் வரிசையிலிருந்து வெளியேறும் குளிர்ச்சி மிகு வெண்மையான புன்னகையை உடையவனாய்

(கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகுவிலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியானஒருவன் அடியே னுள்ளானே.)

ஸூகந்தி கோமல ஸ்வாது ப்ரவால சத்ருசாதரம்
பிரபுல்ல கண்ட பலகம் கர்ண பூர்வ பரிஷ்க்ருதம் –
-96-

நறுமணத்துடன் திகழ்வதாய் மென்மை இனிமைகளைக் கொண்டதாய் பவளம் போன்ற சிவந்து அதரங்களை உடையவனாய் -மலர்ந்த புஷ்பங்கள் போன்ற விசாலமான கன்னங்களை உடையவனாய் -கர்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனாய்

(வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-)

பத்ம சந்த்ர அம்ருத சர ப்ரஸ்பர்த்தி முக மண்டலம்
ப்ரூஷோபா லோகிதாலாபை புவனாஹ்லாத காரிணம்
–97-

தாமரை சந்த்ரன் அமுதப்பொய்கை ஆகியவற்றைப் போல் அழகு மிக்கதாக திருமுக மண்டலத்தை உடையவனாய் -திருக்கண்களின் சைகைகளாலும் பார்வைகளாலும் பேச்சாலும் பார்க்குமவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவனாய்

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-)

க்ரைவேய பூஷா விலஸத் கம்பு க்ரீவா விராஜிதம்
உன்னதாம் சமுதாரோர ஸ்புரச்ச்ரீ வத்ஸ கௌஸ்துபம் —
98-

சங்கு போன்ற கழுத்தில் மணிமாலையால் அலங்கரிக்கப் பட்டவனாய் -உயர்ந்த தோள்களை உடையவனாய் -விசால வக்ஷஸ்தலத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ வத்ஸம் எனப்படுவம் திரு மறுவும் கௌஸ்துப மணியும் யுடையவனாய்

(மல்லாண்ட திருத்தோள்கள் -ஸூந்தர தோளுடையான் -மந்த்ர கடைந்தால் -பிராட்டி ஆலிங்கணத்தால் -அலங்காரத்தால் -விகாசமாகி தோன்றும் – -திருமறு மார்பன் -மண்டோதரி ஸ்ரீ வத்ஸ -நித்ய ஸ்ரீ இரண்டையும் -பிராட்டிக்கு அந்தப்புரமாக திருமறு -புருடன் மணிவரமாக இத்யாதி -)

உதார பீவரோ தக்ர தீர்க்க பாஹு சதுஷ்ட்யம்
ஹார கேயூர கடகைர் அங்குளீ யைச்ச சோபிதம் —
99-

பருத்து விரிந்து நீண்ட நான்கு தோள்களை உடையவனாய் -தங்கத்தாலான ஆபரணங்களாலும் தோள் வளைகளாலும் கரங்களில் அணியும் கங்கணங்களாலும் விரல்களில் அணியும் மோதிரங்களாலும் ஒளி வீசுமவனாய்

(ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் -சர்வ பூஷண பூஷிதாயா -திருவடி -ஐயப்பாடு அறுக்கவும் ஆதரவு பெருக்கவும் அழகு -)

புஜத்வய த்ருதோதக்ர சங்க சக்ர விபாஸிநம்
ஜாநு ப்ரசாரித புஜம் பர்யங்க ந்யஸ்த பாஹுகம் –100-

திண் தோள் மணி வண்ணா என்னும்படியான இரண்டு தோள்களில் சங்கு சக்கரங்களுடன் திகழ்பவனாய் -ஒரு புஜத்தைப் படுக்கையின் மேல் வைத்துக் கொண்டு முழங்கால் அளவும் நீண்ட புஜங்கள் உடையவனாய்

தநு மத்யம் ஜகத்ரஷா நிபத்வ உதர பந்தனம்
நதநாபி ஹ்ருதோத் பூத விதி ஸூதி க்ருஹ அம்புஜம் –101-

மெல்லிய இடையை உடையவனாய் -உலகுக்கு அரணாக இருக்கும் பொருட்டு கட்டப்பட்ட அரை நாண் உடையவனாய் –சதுர் முகனான பிரமனுக்குப் பிறந்த அகம் எனக் குறிப்பிடலாம் படியான ஆழ்ந்த நாபீ கமலத்தை உடையவனாய்

(ரக்ஷண தீக்ஷை -கங்கணமும் -அரை நாண் கயிறும் உதரபந்தமும் -உபநயனத்திலும் கல்யாணத்திலும் தர்ம அனுஷ்டானத்துக்கு கங்கணமும் வயிற்றில் கட்டும் உண்டே நமக்கும்-மௌஞ்சி தாரணம் இடுப்பில் கட்டுவர்)

கடீ நிபத்வ காம்சீகம் கனக உஜ்ஜ்வல வாஸஸம்
ரம்பேப ஹஸ்த கரப காந்தி ஸுவ்ர்யக்ஷ மோருகம் –10
2-

தங்கம் போல் மிளிர்கிற பீதாம்பரத்தை உடையவனாய் -வாழை மரத்தினுடையதும் யானையின் துதிக்கையினுடையதும் உள்ளங்கையின் வெளிப் பாகத்தினுடையதும் சன்னிவேச சோபையை விஞ்சி அழகாயத் திகழும் தொடைகளை உடையவனாய்

ககுத்மத் ககுதாகார ஜாநு த்விதய சோபிதம்
மநோஜ்ஞ ஜங்காத் விதயம் மஹார்ஹ மணி நூபுரம் –103-

எருதைப் போன்றதான –முழங்கால்களை உடையவனாய் –அழகான இரு கணைக் கால்களை உடையவனாய் -விலை மதிப்பற்றதான உயர்ந்த ரத்நங்கள் பதித்த சிலம்புகளை உடையவனாய்

சாரதாம்போஜ சத்ருச சரண த்வந்த்வ ஸூந்தரம்
சரண்யம் ஸர்வ பூதானாம் சதுர்வர்க்க பலப்ரதம் –104-

இளவேனில் காலத்தில் மலர்ந்த தாமரையை போன்ற இரு பாதங்களை உடையவனாய் -(இவ்வாறு திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -91 ஸ்லோகம் தொடங்கி -இது வரை -பற்றிலார் பற்ற நின்றான் -அசரண்ய சரண்யன்-இதுவரை திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -மேல் கல்யாண குண வர்ணனை)-எல்லாப் பிராணிகளையும் காக்கும் தொழிலை யுடையனாய் -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை அளிப்பவனாய்

அபவ்ருஷேய வாசஸாம் அபூமிம் பக்த வத்சலம்
துஷ்ப்ராபம் விதி ருத்ராதயை ஸூப்ரபாம் பக்தி சாலிபிர் –105-

வேத வாக்யங்களுக்கு எட்டாத சீர்மை யுடையவனாய் -பக்த வத்சலனாய் -பிரமன் சிவன் ஆகியோரால் கிட்ட முடியாதவனாய் -களங்கமற்ற பக்தி பாவம் கொண்ட பக்தர்களால் எளிதில் கிட்டுமவனாய்

(பத்துடை அடியவர்க்கு எளியவனாய் பிறருக்குத் அரிய வித்தகனாய்)

சங்க சக்ர கதா கட்க ஸார்ங்காத்யைர் ஆயுதோத்தமை
பரிதம் புருஷகாரரஸ்தான த்ராண தத்பரை–106-

ஆபத்துக்கு இடமில்லாத போதிலும் எம்பெருமானைக் காப்பதில் ஊக்கமுடையவர்களான வீர புருஷர்களாய்த் தோன்றும் கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் -என்ற திவ்ய ஆயுதங்களால் எல்லாப் பக்கங்களிலும் கைங்கர்யங்கள் செய்யப் பட்டவனாய்

(ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவம் -ப்ரஹ்மத்தை ஒன்றாகி லயம் என்னும் அல்லல் எல்லாமே ஒழித்தான் -ப்ரஹ்மணா ஸஹ -கூடச் சேர்ந்து கல்யாண குண அனுபவம் -ப்ரஹ்மம் ஏவம் அல்ல ப்ரஹ்மம் இஹ பவதி)

(பல அத்யாயம் -நான்காவது அத்யாயம் -முதல் இரண்டு பாதங்களால்-வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்-கூறப் படுகின்றன
பின் இரண்டு பாதங்களால்-உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும் ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன –
சஞ்சித கர்மம் அநாரப்தம் -சேமிக்கப்பட்டதில் பலன் கொடுக்க ஆரம்பிக்காமல் -இவை தொலைக்கப்பட்டு -பிராரப்த கர்மங்கள் உபாசநா – வித்யா மஹாத்ம்யத்தால் தொலைத்துக் கொள்ள வேண்டும் –
492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-
இதுவரை பலன் அளிக்கத் தொடங்கா புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –
சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-
து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே
ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –
அவதார ரஹஸ்யம் அறிந்த உபாசகனுக்கும் அந்தப் பிறவியிலே மோக்ஷம் -அந்திம ஸ்ம்ருதி இவனுக்கும் வேண்டும் – ஜன்மாந்தர கர்மங்கள் தேக மன வியாதிகள் மூலமும் கழிக்கிறான் -)

(லயம் -காரணப்பொருள்கள் காரியப்பொருள்களில் சேர்வது -இந்திரியங்கள் மனசிலும் -மனஸ் ப்ராணனிலும் ஸம்ஸ்லேஷம் இவையும் லயம் -அ விபாக ரூபம் -பிராகிருத லயம் போல் அல்லவே இவை -ஜீவாத்மா பரமாதவிடம் சேர்வது ஐக்யம் அல்லவே -ஸ்வாமி தாஸ்ய பாவனை எப்பொழுதும் இருக்குமே -பிரிந்து தனித்து இருக்கத் தகுதி இல்லை என்று உணர்கிறான் அங்கு தானே -இங்கும் அப்படியே இருந்தாலும் பிரக்ருதியால் மறைக்கப்பட்டு மயங்குகிறான் –நியத பிரகாரம் -சரீரம் அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகாவே இருக்கும் – கர்மாதீனமாக தேஹ சம்ச்லேஷமும் விஸ்லேஷமும் செய்வதால் ஜீவனுக்கும் காரணம் பரமாத்மாவே -மம சாதரம்யம் -ஞான ஆனந்தங்களில் சாம்யம் -கூடி அனுபவம் -ஸஹ ஸ்ருதி -ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்ம ஏவ அல்ல இஹ -அவனைப்போல் ஆகிறான் -சாதரம்ய ஸாம்ய ஸஹ ஸ்ருதிகளை பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும் –
511-அவிபாகோ வசநாத் —4-2-15-
பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்
இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –
அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –
யானே நீ என்னுடைமையும் நீயே -அறிந்த ஆழ்வாருக்கு சூழ் விசும்பில் அந்தப் பேற்றையும் காட்டி அருளி உபதேசிக்க அருளினான் அன்றோ –

அநந்த விஹகாதீச ஸேநேசாத்யைச் ச ஸேவிதம்
கஜாநநாத்யைச் சண்டாத்யை குமுதாத்யைஸ் த்தைவ ச –107-

அனந்த கருட விஷ்வக் சேனர் முதலானோர்களாலும் கைங்கர்யங்கள் செய்யப் பெற்றவனாய் -வேழ முகத்துச் சேவகர்களாலும் அவ்வாறு சண்ட ப்ரசண்ட குமுதாஷர் முதலானோர்களாலும்

(தெற்கு வாசல் –பத்ரன் -ஸூபத்ரன்
வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –
மேற்கு வாசல் -ஜெயன் விஜயன்
கிழக்கு வாசல் -சண்டன் -ப்ர சண்டன்-)

அந்யை பரிஜனைர் நித்யை முக்தைர் போக பராயணை
பரங்குசாத்யைர் பக்தைரப்யா சார்யைஸ் ஸமுபஸ்திதம் –108-

பகவத் கைங்கர்யமே பிரதானமாக யுடைய முக்த புருஷர்களாலும் -நம்மாழ்வார் தொடக்கமான அனைத்து ஆழ்வார்களாலும் ராமாநுஜர் முதலான ஆச்சார்யர்களாலும் மிகுந்த ஆதார அதிசயத்தாலே ஆராதிக்கப் படுமவனாய்

அவாப்த காமம் லோகாநாம் அகிலா நாம தீஸ்வரம்
ஆத்ம அனுபவ ஜாநந்தம் அவாகீ நமநாதரம் –109-

எண்ணிய அனைத்து போகங்களையும் அனுபவிக்கச் செய்பவனாய் -எல்லா உலகங்களுக்கும் நாயகனாய் -தனது சீர்மையை எண்ணி தானே களிப்படைபவனாய் -தன் மிடுக்கின் காரணமாய் எவருக்கும் அடங்காதவனாய் -எவரோடும் உரையாடாதவனாய் –

(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி
தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று
ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று
ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்
ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்
ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு
பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு
ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்
ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥
ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்
ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே
ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி
ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி
அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி
அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥
பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்
லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥)

பவந்தம் தத்ர த்ரஷ்ட்வா ச ப்ரணம்ய பவதா ஸ்வயம்
அங்கம் ஆரோபித ப்ரேம்ணா புஜைர் ஆலிங்கிதஸ் ததா –110

இவ்வாறு குறிப்பிட்ட ஏற்றங்களை யுடைய உன்னை -அந்த பரமபதத்தில் கண்டு -தொழுது -உன்னாலேயே சுயமாய் அன்புடன் உன் தொடை மேல் உட்கார வைக்கப்பட்டவனாய் -அவ்வாறே தோள்களை ஆரத்தழுவப் பட்டவனாய்

(கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் -இன்னும் என் செய்வன் என்று ஒருத்தி -மறப்பனோ என் மணியை -மறப்பேன் என்றும் செந்தாமரைக் கண்ணுடன் மறப்பற என்னுள் மன்னினான் தன்னை -மறப்பனோ -)

ஆக்ராதோ மூர்த்திநஸ் ஸ்நேஹம் ஆர்த்ரா லோகாபி வீக்ஷித
ஸ்ருணுயாம் ஸாந்த்வ வாக்யாநி ஸ்ரோத்ரு கர்ண அம்ருதாநி தே –111-

ஸ்நேஹ பாவத்தால் உச்சி நுகரப்பட்டவனாய் குளிர்ந்த கடாக்ஷத்துக்கு இலக்கானவனாய் -கேட்க்குமவர் செவிகளுக்கு அம்ருதம் ஊற்றினால் போல் நீ சொல்லும் தோற்றரவு வார்த்தைகளை எப்பொழுது கேட்கப் பெறுவேனோ அல்லவா-

(கோஸி -கேட்டு -அறிவித்து அருளிய நீ -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அப்ருதக் ஸித்த பிரகாரம்-கீழ் மா ஸூச இப்பொழுது குருஷ்வ -ஏவிப்பணி கொண்டு அருள வேண்டும் -)

தத ப்ரணம்ய புரத பார்ஸ்வ யோஸ்த்வாம் து ப்ருஷ்டத
பக்தி ரூப ப்ரபோதேன பஸ்யந் ஸஹ விபூதிபி
–112-

ஸர்வத்ர ப்ரஸ்ருதாஹ்லாத ஹடாத் காரேண காரித சோதித
த்வரமாணஸ் ஸதா குர்யாம் கைங்கர்யாண் யகிலாந் யஹம் –113-

இனி மேல் உன்னை நேரிலும் இரு பக்கங்களிலும் பின்புறமும் ப்ரதக்ஷிணமாக வந்து தொழுது பக்தியான திவ்ய ஞான ப்ரபாவத்தினால் அனைத்தும் செல்வங்களுடன் கண்டு கொண்டு எங்கும் பொங்கி வரும் களிப்பின் தாக்கத்தினால் தூண்டப் பட்டவனாய் எப்போதும் த்வரை உடையவனாய் அனைத்து விதமான கைங்கர்யங்களையும் அடியேன் செய்யப் பெறுவேன்

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.)

(பக்தி ரூபாபன்ன ஞானம் -அனைத்து செல்வங்களுடன் கூடிய அவனைப் பார்த்து சேவிக்கப் பெற்றவனாய்முன்னிலும் பின் அழகு பெருமாள் -)

ஏகதா தசதா சைவ சததாத ஸஹஸ்ரதா
அநந்ததா ஸ்வ சங்கல்பாத் ஆத்ம கிங்கர விக்ரஹ–11
4-

ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய்

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லப் பெற்றேன் -உற்றேன் -உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -திருவடிகளே சாதனமும் பிராப்பியமும் -ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய் -)

(தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது
சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –
4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-
அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே)

யதா திவ்யேஷு லோகேஷு ததா த்வத் தயயா ஸ்ருத
இமாந் லோகாந் காம போக காம ரூப்ய நுஸஞ்சரன்
–115-

உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய்

இமாந் லோகாந் காமாந் நீ காம ரூப்ய அநு சஞ்சரன்
ஸோஸ்னுதே சேர்வான் காமாந் ஸஹ

ஸர்வதா தூர வித்வஸ்த துக்க லேஸல வாம்சக
குண அனுபவஜ ப்ரீத்யா குர்யாம் தாஸ்யமசேஷத–116-

ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய் -உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய் -அணு மாத்திரமும் துன்பம் அற்றவனாய் -எப்போதும் உன் ஒவ்வொரு குணத்தையும் ப்ரத்யக்ஷமாய் அனுபவித்ததனால் உண்டாகும் இன்பத்தின் மிகுதியால் பல்வேறு கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

யதா சேஷம் ச கருடம் ஸூமித்ரா தநயம் ததா
குருஷ்வ மாம் அநு சரம் தயயைவ தயா நிதே –117-

கருணைக் கடலே ஆதிசேஷனான திருவனந்த ஆழ்வானையும் வைநதேயனான பெரிய திருவடியையும் ஸூமித்ரையின் புதல்வனான லஷ்மணனையும் எவ்விதமாக ஆட்க்கொண்டு அடிமை கொண்டாயோ அவ்விதமே பின்பற்றும் அடியேனையும் உனது கருணையால் ஆட்க்கொண்டு அடிமை கொள்ள வேண்டும் -(ஸூமித்ரா தனய-கைங்கர்யத்துக்காகவே பெற்றவள் பெயர் உத்தேச்யம் அன்றோ-முகப்பே கூவிப் பணி கொள்வாய் -கூவுதல் வருதல் செய்து -குருஷ்வ மாம் அநு சரம் – -)

ஆத்ம அந்தராத்ம ரூபேண ஸ்திதம் ச அனுபவன் ஸதா
பவந்தம் அநுவரத்தேய ஸ்வச் சந்த அனுகதாத்மக –118-

எவனிடமிருந்து பிரிக்க ஒண்ணாத என் அந்தராத்மாவாய் நிலை பெற்று இருக்கும் உன்னைக் தர்சித்துக் கொண்டு ஸங்கல்ப அனுசாரமாய் விரும்பிய சரீரங்களைப் பெற்றவனாய் உன்னைப் பின் பற்றினவனாய் அடியேன் இருக்க வேண்டும் –

(பேரேன் என்றும் என்னெஞ்சு நிறையப் புகுந்தான் திருப்பேர் நகரான்)

பஸ்யந் நமந் ஸமுத்திஷ்டன் ப்ரவ்ருத்த ப்ரணயோ பவந்
ஸ்துவந் ந்ருத்யந் ப்ரமோதேந பவேயம் பவதந்திகே –119-

உன்னையே தர்சித்துக் கொண்டும் தொழுது எழுந்தவனாய் உன் மேல் அன்பின் மிகுதியை வளர்த்துக் கொண்டும் ஸ்துதித்துக் கொண்டும் மகிழ்ச்சியுடன் கும்பீடு நாட்டமிட்டாடிக் கொண்டும் உனது சந்நிதியிலேயே இருப்பேனாக –

யாவதாத்ம மஹம் ஹர்ஷாத் ஸாம காயன் ஸஹாமரை
ஆஸிஷீய ஸ்ரீயா ஸார்த்தம் பவந்தம் அபி நிர் விசந் –120-

இவ்வாத்மா உள்ளத்தையும் அடியேன் மகிழ்ச்சியுடன் அமரர்களான நித்ய ஸூரிகளுடன் சேர்ந்து ஸாமகாநம் பண்ணிக் கொண்டு திருமகளோடு இனிது அமர்ந்து இருக்கும் உன்னை ஸேவித்துக் கொண்டே இருப்பேனாக –

(இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-)

(தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-)

இத்தம் த்வத் சந்நிதவ் வாசமுக்தாம் மம தயா நிதே
ஸத்யாம் குருஷ்வ தயயா ததா தத் ப்ரதிபாதநாத் –121-

கருணைக் கடலே இவ்வளவிலே இந்த கிரந்தத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உனது திருவடித் தாமரைகளில் அடியேன் விண்ணப்பித்தத்தை உனது கருணையால் அறுதியிடப்பட்ட பயன்களை அருளி மெய்ப்பிக்க வேணும் –

(எங்கனே சொல்லிலிலும் இன்பம் பயக்கும் அன்றோ -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே)

சவும்ய ஜாமாத்ரு முநிநா ஸம்யக் த்ருஷ்டாமி மாம் ஸதா
சிந்தாமத் யாத்ம விஷயாம் பரிசின்வந் பவேத் ஸூகீ –122-

அழகிய மணவாளச் சீயர் என்ற பெயருடைய இந்த கிரந்த கர்த்தாவினா செம்மையாக ஸாஸ்திரங்களில் கூறப்பட்டு ரீதியில் தெளிவாக உள்வாங்கிக் கொண்ட தன்னுடைய ஆத்மாவின் விசாரங்கள் அனைத்தையுமே எப்பொழுதும் அநுஸந்திக்குமவன் எல்லையில்லா ஆனந்தம் பெருகவானாக –

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீவாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ தத்வ நிரூபணம்”

April 7, 2024

ஸுந்தர ஜாமாத்ரு முநே: ப்ரபத்யே சரணாம்புஜம்|
ஸம்ஸாரார்ணவ ஸம் மக்ந ஜந்து சந்தார போதகம்||-
தனியன்

ஸம்ஸாரக் கடலில் அமிழ்ந்த ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸரணடைகிறேன்.

உவமானம் சொல்லி உபமேயம் பின்-அல்லது மாற்றியும் சொல்லுவது உண்டே
சரணாம்புஜம் -புருஷ வ்யாக்ர -திருவடித்தாமரை
பவ அடவி -ஸம்ஸாரம்
ஐந்து -ஜெனியையுடைய-திருநாவாய் -முகுந்தன் -நாவாய் முகுந்தன்

———–

1242-திருவவதரித்து 1350 வரை 108 ஸம்வத்ஸரம் –இருந்தவர்
நாயனார் ஆச்சான் பிள்ளை ஸச் சிஷ்யர்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் —
———45-

தம் பெரிய போதம் உடன் -தமது பெரிய ஞானத்தினால் -ஆசார்ய க்ருபாதீனமான போதம் அன்றிக்கே -ஸ்வ தந்த்ரமான போதம் -என்றபடி
ஏதமில் -குற்றமற்றதான –
பிரதி பதார்த்த ரூபமான வியாக்யானம் -எளிய உரை -என்பதால் பின்போரும் அன்போடு கற்று அறிந்து பேசுகைக்காக-என்கிறார்

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில
———-47-

மன்னார் கோயில் -ஜென்ம ஸ்தானம்– குலசேகரப் பெருமாள் திருவரசு

சிஷ்யர்கள் :  யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம், த்ராவிடோபநிஷத்  சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை, ரஹஸ்ய த்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம், பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ஸ்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.

————————–

அஸ்மத் ஹித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்
-க்ரந்த கர்த்ரு தனியன்

அஸ்மத் ஹித பரித்ராண-அன்பு பெருகி –
வாதி கேஸரி-வாதிகளில் ஸிம்ஹம்

இவர் அருளிய நூல்களில் ஒன்றான “தத்வ நிரூபணம்” என்னும் க்ரந்தத்தின் முதல் ஸ்லோகம் மற்றும் அர்த்தம்:

ஆஸீர் வாதம் -நமஸ்காரம் -வஸ்து நிர்தேசம் -மங்களா ஸாஸனம்

அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||
–ஆச்சார்ய வந்தனம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

மாந மேய மயம் ஸர்வம் மதம் யஸ்மிந் நவஸ்திதம்
ஸமஸ்த ஜகதா தாரம் தந் நமாமி ஸ்ரீ யபதிம்

பிரமாணம் ப்ரமேயம் இவற்றுக்குள் அனைத்தும் சேரும்
ப்ரஹ்மத்திடமே நிலை நிற்கும்
மதம் -ஞானம்
அவரே ஜகத்துக்கு ஆதாரம்
அந்த ஸ்ரீயப்பதியை வணங்குகிறேன்

பகவந்தம் யதி வரம் ப்ரணிபத்ய குரூநபி
தத் ப்ரஸாதாத் கரிஷ்யேஹம் ஸம்யக் தத்வ நிரூபணம்
–மங்களா சரணம்

பிரணிபத்ய குருக்களுக்கும் சேர்த்து
கரிஷ்யே -செய்யப்போகிறேன்-தத்துவங்களை உண்மையாக நிரூபிக்கப் போகிறேன் என்றும் கிரந்த திருநாமம் என்றும் கொள்ளலாம்

ஸ்ருதப்பிரகாசர் -13 மங்கள ஸ்லோகங்கள் பாடி விக்னங்களை போக்க வேண்டுகிறார்

————–

அதிகாரம் 1 – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
அதிகாரம் 2 – ஸ்ருஷ்டி – காரணத்வம்
அதிகாரம் 3 – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
அதிகாரம் 4- நரக நிரூபணம்
அதிகாரம் 5 – ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
அதிகாரம் 6 – கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
அதிகாரம் 7 – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்

—————

விஷய ஸூசி கா
பிரதம அதிகாரம்– – ப்ரமாணம் – வேதம் இதிஹாஸம் புராணம்
1- மங்களா ஸாஸனம்
2- பிராமண நிரூபணம்
3-ப்ரத்யஷாதி நிருபணம்
4-வேதஸ்ய பூர்வ உத்தர பாக த்வய ஆத்மதத்வ கதநம்
5-தஸ்ய பரமாத்ம ப்ரதிபாதிகத்வ கதநம்
6- உபமாநாதி பஞ்சகஸ்ய ப்ரத்யக்ஷ அநுமானாக மேஷு அந்தர்பூதகத்வ கதநம்

7- வேத அங்காத்மக சிஷாதி ஸ்வரூப நிரூபணம்
8-பூர்வ உத்தர மீமாம்ஸயோர் ஐக ஸாஸ்த்ர கதநம்
9-ஸ்ம்ருதே இதிஹாஸ புராணயோஸ் ச பூர்வ உத்தர பாக உப ப்ருஹ்மணத்வ கதநம்
10- புராண லக்ஷண நிரூபணம்
11-இதிஹாஸ நிரூபணம்
12-புராண அபேக்ஷய இதிஹாஸஸ்ய பிரா பல்ய கதநம்

13- அஷ்டாதஸ வித்யா ஸ்வரூப நிரூபணம்
14-புராணஸ்ய ஸாத்விகத்வாதி நிரூபணம்
15- அஷ்டாதஸ புராணஸ்ய ருத்ர பரத்வ சங்கா பூர்வக நாராயண பரத்வ ஸமர்த்தநம்
16-வேதஸ்ய நித்யத்வ ஸமர்த்தநம்
17- ஸாங்க்யாதி தந்த்ரஸ் யாபி பரமாத்ம ப்ரதிபதிகத்வ கதநம்
18-ஸாங்க்ய யோக பாஸூபத மத நிரூபணம்

19- பாஞ்ச ராத்ரஸ்ய ப்ராமண தமத்வ ஸமர்தநம்
20- ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபணம்
21-தஸ்ய காரணத்வ நிரூபணம்

லோகத்தில் பரீஷகரானார் ப்ரமாணத்தாலே ப்ரமேயத்தை நிஸ்ஸயிக்கக் கடவர் களாய் இருப்பார்கள்
ப்ரமாணமாவது யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்
ஆகையால் ஸம்யக் அநுபவ ஸாதனம் பிரமாணம் என்று சொல்லுகிற நையாயிகாதிகளைப் போலே கரண பிரமாணம் சொல்லுகை அன்றியே ஞானப் பிரமாணம் சொல்லுகை ஸித்தாந்திகளுக்கு அபிமதமாய் இருக்கும்

பிரமாணம் கருவி ப்ரமேயம் -அறிவால் இது என்று காட்டும்-யதா வஸ்தித அர்த்த அநு ரூபமாய் இருக்கும்-உண்மை நிலையைக் காட்டும்-

பிரமாணம் தான்
1-ப்ரத்யக்ஷம் என்றும்
2- அநு மானம் என்றும்
3- ஆகமம் என்றும்
4-உபமானம் என்றும்
5-அர்த்தா பத்தி என்றும்
6-அபாவம் என்றும்
7-ஸம்பவம் என்றும்
8- ஐதிஹ்யம் என்றும் -எட்டு வகையாகச் சொல்லுவார்கள்

ப்ரத்யக்ஷ மேகம் ஸார்வாகா —
கணாத ஸூகதவ் புந அநுமாநாஞ்ச –தச்சாஹு

சாங்க்யாஸ் சப்தஞ்ச தே அபி
நியாய ஏக தேஸி நோப்யேவம் உபமா நஞ்ச கேசந
அர்த்தா பத்த்யா ஸஹைதாநி ஸத்வார்யாஹ ப்ரபாகர
அபாவ ஷஷ்டாந் யேதாநி பாட்டா வேதாந்திநஸ் ததா
ஸம்பவ ஐதிஹ்ய யுக்தாநி தாநி பவ்ராணிகா ஜகு

இதில் ஸார்வாகர் -(லோகாயகர்-)ப்ரத்யக்ஷம் ஒன்றுமே பிரமாணம் என்பர்
வைசேஷிகரும் புத்தர்களும் அத்தோடே அனுமானத்தையும் கூட்டிக் கொண்டு இரண்டு பிரமாணங்கள் என்பர்கள்
நையாயிகரில் பூஷண மதத்தில் உள்ளோர் அவற்றோடு ஆகமத்தையும் கூட்டிக் கொண்டு மூன்று பிரமாணங்கள் என்பர்
உதயந மதித்தில் உள்ளோர் (
புது நியாய சாஸ்த்ரா ப்ரவர்த்தகர்)அதோடு உபமானத்தையும் கூட்டிக் கொண்டு நான்கு பிராமணர்கள் என்பர்
பிரபாகரர் அவற்றோடு அர்த்தா புத்தியையும் கூட்டி ஐந்து பிரமாணங்கள் என்பர்
பாட்டர் அவற்றோடு அபாவத்தையம் கூட்டி ஆறு பிரமாணங்கள் என்பர்
ஐதி ஹாசிகர் அவற்றோடு சம்பவத்தையும் ஐதிஹ்யத்தையும் கூட்டிக் கொண்டு எட்டு பிரமாணங்கள் என்பர்

நிச்சயிக்கப்பட்ட ஹேது அனுமானம்
தேவதத்தன் பருத்து இருக்கிறான் -பகலில் உண்ணவில்லை -இரவில் உண்ணுகிறான் -ஹேது மாறலாம் -இதுவே அர்த்தா பத்தி-

இன்மை காணாமை -அபாவம் -தனி பிரமாணமாக கொள்ளுவார் சிலர்-அனுப லப்தி -இல்லை நான் காணாமையாலே-

ஐதிஹ்ய -வாழ்வும் வாக்கும் -தனி பிரமாணம் -முன்னோர் மொழிந்த முறை செவி வழி

1-இவற்றில் ப்ரத்யக்ஷமாவது –இந்திரியங்களுக்கு அர்த்தங்களோடு உண்டான சன்னிகர் க்ஷத்தாலே அபரோஷமாகப் பிறக்கும் ஞானம்(அக்ஷம் கண்ணைச் சொன்னது அனைத்து புலன்களுக்கும் உப லக்ஷணம்)
2- அநுமானமாவது -வியாப்தமான லிங்க பார்மர்சத்தாலே வியாபகமான ஸாத்ய விஷயக ஞானம்
அதாவது தூம அக்னிகாதிகளுடைய நித்ய ஸஹ சார்யத்தை மஹாந ஸாதிகளிலே கண்டவன் பர்வத கதமான தூம தர்சனத்தாலே அக்னி உண்டு என்று அறுதியிடுகை

லிங்கம் அடையாளம்
பெரியது வியாபகம்
நெருப்பு இருக்கும் இடத்தில் புகை இருக்கும் தேவை இல்லையே -மின்சாரம் -புகை இல்லையே
புகை குறைவு -நெருப்பு அதிகம்

3-ஆகமமாவது -ஆப்த உபதேஸம் -அதாவது வேத வைதிக வசனங்கள்)வேத நூல் ஓதுவது உண்மை-ஆப்த -நம்பத்தக்க -அபவ்ருஷேயம்)
4- உபமானமாவது –ஸத்ருஸ வஸ்து தர்சனத்தில் பூர்வ த்ருஷ்ட்ய ஸாத்ருஸ்ய ஞானம் -அதாவது
முன்பு கோவைக் கண்டவன் பின்பு கவயத்தைக் கண்டால் கோ ஸத்ருசம் கவயம் என்று பிறக்கிற ஸாத்ருஸ்ய புத்தி
5-அர்த்தா பத்தியாவது -அநுப பத்யமான அர்த்தத்தைக் கண்டால் அதுக்கு உப பாதகமான அர்த்தாந்தரத்தைக் கல்பிக்கை -அதாவது
ஜீவிக்கிற புருஷனை க்ருஹத்தில் காணாது ஒழிந்தால் புறம்பே போனானாகக் கல்பிக்கிற ஞானம்
6- அபாவமாவது -ஒன்றினுடைய இல்லாமையை ஸாதித்துக் கொடுக்கிற ஞானம் -அதாவது
இந்த பூ தலத்தில் கடம் முதலானவை இல்லை என்று பிறக்கிற ஞானம் முதலானவை
7- ஸம்பவமாவது -ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் கூடும் என்று பிறக்கும் அறிவு
8-ஐதிஹ்யமாவது -லோக ப்ரஸித்தமான வார்த்தையைக் கொண்டு அர்த்த நிஸ்ஸயம் பண்ணுகை

இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும் அனுமானத்தையும் ஆகமத்தையும் -இம்மூன்றை வைதிகர் பிரமாணமாக பரிக்ரஹிக்கிற அளவில்
ஆப்த உபதேஸ ரூபமான ஆகமத்தை அபவ்ருஷேய மாகையாலே பிரம விப்ர லம்பாதி (
ஐயம் திரிபு)தோஷ ரஹித நித்ய பிரமாமாகையாலே
ஆப்த உபதேஸம் என்று வேதத்தையும்
தந் மூலமான முநி வசநாதிகளையும் சொன்னார்கள்
(ஆர்ஷம் தர்ம உபதேசம் -வேதத்தை மூலமாகக் கொண்ட முனி வசனங்கள்)

இவை ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாம் இடத்தில்
பவ்த்தாதிகளைப் போலே ப்ரமாண்யம்–
(அ
பிராமண்யம் இதி -ஸ்வா பாவிகமாய் )அப்ராமாண்யம் -(ப்ராமாண்யம்) -குண க்ருதமாயும் –
நையாயிதிகளுக்குப் போலே அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் – ப்ராமாண்யம் குண க்ருதமாயும் இருக்கை

யன்றியே ஸர்வ ப்ரகாரத்திலும் ப்ராமாண்யம் ஸ்வதஸ் ஸித்தமாய் அப்ராமாண்யம் தோஷ க்ருதமாய் இருக்கும்-

இயற்கையில் பொய் அறிவு -புத்தர்
வேதாந்திகள் இயற்க்கையில் நல் அறிவு-தோஷங்களால் பொய்யாகிறது

இப்படி ஸ்வ ஸித்த ப்ரமாணங்களான இம் மூன்றிலும்
ப்ரத்யக்ஷ அனுமானங்கள் இந்த்ரிய க்ரஹண யோக்யங்களில் பிரமாணங்களாய் இருக்கும்
அதீந்த்ரிய அர்த்தத்தில் பிரமாணம் அறிவது -வேதம் ஒன்றுமே
இது தான் தனக்கு ப்ரகாரங்களான -உபகரணங்களான -ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ந்யாய மீமாம்ஸைகளோடே கூடி ஸ விபூதிகனான ஸர்வேஸ்வரனுடைய வைபவத்தைப் ப்ரதிபாதிக்கையிலே தத் பரமாய் இருக்கும்

அதில் கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாகம்
பகவத் ஆராதன விதியிலே தத் பரமாய் இருக்கும்
ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாகம்
பகவானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அறிவித்து அவனை பிராபிக்கையில் தத் பரமாய் இருக்கும்
ஆகையால் -வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய 15-15–என்று பகவா
ன் தானே அருளிச் செய்த படியே க்ருத்ஸ்ன வேதமும் ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும்

இந்த ப்ரத்யக்ஷ அநுமான ஆகமங்கள் மூன்றிலும் –
அல்லாத ஐந்து பிரமாணங்களை அந்தர் பவிக்கும்
அதில் உபமானமும் அர்த்தா பத்தியும் ஸம்பவமும் வ்யாப்தி ஸஹ க்ருதமாகையாலே அனுமானத்திலே ஸம்பவிக்கும்
ஐதிஹ்யம் ஸப்த ஜன்யமாகையாலே ஆகமத்த்திலே அந்தர் பவிக்கும்
அபாவம் -பாவாந்தர பர்யவசாயி யாகையாலே யதா யோகம் ப்ரத்யாஷிகள் மூன்றிலும் அந்தர் பவிக்கும்-

இப்படி ஸ்வத ஸித்த பிரமாண பாவத்தை யுடையவையாய் -ருக் யஜுஸ் ஸாம அதர்வண ரூப சாதுர் வித்யத்தை யுடைய வேதங்களுக்கு
1-சிஷா
2-வியாகரணம்
3-நிருக்தம்
4-ஸந்தோ விஸிதி
5-கல்ப ஸூத்ரம்
6-ஜ்யோதிஸ் ஸாஸ்த்ரம் -(ஆபஸ் தம்ப தர்மே -2)- அங்கங்கள் ஆறாய் இருக்கும்

1- அதில் சிஷையாவது -வர்ண ஸ்வர மாத்ராதி நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
2- வியாகரணமாவது -ப்ரக்ருதி ப்ரத்யயாதி முகத்தாலே அர்த்தாபி தாயகமான பதங்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
3- நிருக்தமாவது -அக்ஷர ஸாம்ய மாத்ரத்தாலே பதங்களில் அர்த்தத்தை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
4-சந்தோ விசிதியாவது –காயத்ரீ உஷ்ணிக் அநுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹநீ பங்க்தி ஜகததீ -சர்வரீ இதி ஸர்வத்ர பா என்கிற ஸப்தஸ் சந்தஸ்ஸூக்களை நிரூபிக்கும் ஸாஸ்த்ரம்
(பாதத்தில் 6 எழுத்துக்கள் தொடங்கி)
5-கல்ப ஸூத்ரமாவது -வேதார்த்த அனுஷ்டான பிரகார நிரூபணம் பண்ணும் ஸாஸ்த்ரம்
6-ஜ்யோதிஷமாவது -அத்யயன அனுஷ்டானங்களுடைய கால நியமம் பண்ணும் ஸாஸ்த்ரம்

(சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா
–உத்தர சதகம்-18-

ஹே ரங்க நாத

சீஷாயாம் –சீஷா என்கிற வேத அங்கத்தில்

வர்ண சிஷா –அக்ஷரங்கள் உச்சாரண க்ரமாதிகள் சிஷை செய்யப்பட்டுள்ளது –

பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்–வியாகரணம் நிருத்தி என்கிற வேதங்களில் பாதங்களின்
ப்ரக்ருதி ப்ரத்யய விபாகம் அர்த்த சிஷை முதலானது செய்யப்படுகிறது –

சந்தஸ் சந்தஸ்திதவ் –சந்தஸ் ஸ்யாத்–சாஸ்திரத்தில் காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டுப் த்ருஷ்டுப் பிருஹதி பங்க்தி ஜெகதீ
முதலான சப்த சந்தஸ்ஸூக்கள் சொல்லப்பட்டதாய் இருக்கும்

கமயதி சமயம் ஜ்யவ்திஷம் -ஜ்யோதிஷ சாஸ்திரமானது வைதிக கர்மங்களின் அனுஷ்டானத்துக்கு உரிய காலத்தை தெரிவிக்கின்றது –

கல்பே அனுஷ்டானம் யுக்தம் –கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

ஹி உசிதகமிதயோ –வைதிக சித்தாந்தத்துக்கு அநு குணமாக நயிப்பிக்கப் பட்ட

நியாய மீமாம்சயோ ஸ்யாத்-நியாய மீமாம்சைகளிலும்

அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷு –புராண ஸ்ம்ருதிகளிலும் அர்த்த விவேசனம் உண்டாகும்

புராண சப்தம் இதிஹாசங்களுக்கும் உப லக்ஷணம்

தர்ம சாஸ்திரம் பூர்வ கர்ம பாக உப ப்ரும்ஹமணமாயும்
இதிஹாச புராணங்கள் உத்தர ப்ரஹ்ம பாக உப ப்ரும்ஹணமாயும் இருக்குமே

தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா-கீழ் சொன்னவற்றால் அநு சரிக்கப் பட்ட வேதங்கள் தேவரீரை தேடுகின்றன –விசாரிக்கின்றன -என்றவாறு-பேச முயலுமே ஒழிய பேசி முடிக்க வல்லவை அன்றே

நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் அன்றோ -பெரிய திருமொழி —-

நாடி என்-தன் உள்ளம் கொண் நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே)

ஸீஷா–அக்ஷரங்கள் உச்சரிப்பு போன்றவை
வ்யாக்ரணம் -இலக்கணம்
ந்ருக்தி -அர்த்த பிரயோகம்
சந்தஸ் -காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி ஜெகதீ -சப்தம்
ஜ்யோதிஷம் -அனுஷ்டான கால நிர்ணயம்
கல்பம் -அனுஷ்டான விதி முறைகள்
நியாயம் மீமாம்சை புராணங்கள் ஸ்ம்ருதி –இவை போன்ற அங்கங்கள் கூடிய அங்கி யான வேதம்
உன்னையே தேடியபடி இருக்கும்
வேதங்கள் உப ப்ரும்ஹணங்களான இதிஹாச புராணங்கள் -நியாய மீமாம்சைகளை அனைத்தும்
தேவரீரையே விசாரித்து நிஷ்கர்ஷிக்கிறது

—————-

சந்த பாதவ் ஸப்த ஸாஸ்த்ரம் ச வக்த்ரம் கல்ப பாணிர் ஜ்யோதிஷம் சஷுஷீ ச -சிஷா கிராணம் ஸ்ரோத்ரமேதத் நிருக்தம் வேதஸ் யாங்காந் யாஹுரேதாநி ஷட் ச -என்று
அவயவ ரூபங்களாகவும் நிரூபிப்பர்கள்

இப்படி ஸ அங்கமான வேதங்களினுடைய அர்த்த தவ்சித்யத்தை பிரமாணாதி நிரூபணங்களாலும் தர்க்க மர்யாதையாலும் ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் நியாய ஸாஸ்த்ரம்(ஆர்ஷம் தர்ம உபதேசம் -கண்டு -எழுதி -நியாய வேத சாஸ்திரம் அவிரோதமாக இருப்பதே தர்மம்)

மீமாம்ஸை யாவது -வேத வேதாந்த அர்த்தங்களுடைய அர்த்த கமஹத்வத்துக்கு உபயுக்தமாக பூர்வ பக்ஷ ஸித்தாந்த ரூபேண உண்டான விசாரம்
இது தான் பூர்வ மீமாம்ஸை -உத்தர மீமாம்ஸை என்கிற பேதேந ப்ரஸித்தமாகையாலும்
கர்ம ப்ரஹ்ம ரூபேண ப்ரதிபாத் யர்த்த பேதத்தாலும் ஜைமிநீயம் பாதாராயணீயம் என்கிற கர்த்ரு பேதத்தாலும்
ஸாஸ்த்ர பேதம் உண்டு என்கிற சங்கைக்கு விஷயமாய் இருந்ததே யாகிலும் நிரூபணீயமான வேதம் உபநிஷத் விசிஷ்டமாகையாலே ஏகமாகையாலும்
ரத கோபுராதி நிர்மாணத்தில் போலே கர்த்ரு பேதம் அப்ரயோஜனகமாகையாலும்
ஸூ மந்தம் ஜைமிநீம் பவ்வம் (பைலர்
)ஸூகஞ்சைவ ஸ்வ மாத்மஜம் -வேதாநத்யாபயாமாஸ –மோக்ஷ -341-19-என்கிற இத்யாதி வசனத்தாலே ஜைமினி ஸ்ரீ வேத வ்யாஸ பகவானுக்கு நேரே சிஷ்யனாகையாலும்
த்வீபே பதரி காமத்யே பாதராயணம் அச்யுதம் -பராசராத் சத்யவதீ

(ஸர்வ கர்ம ஆராதனாய்
சர்வ தேவ அந்தர்யாமியாய்
ஸர்வ பல பிரதானனாய் ப்ரஹ்மம் இருக்கும்
20 அத்தியாயங்கள்
ரஹஸ்ய த்ரய அக்ஷரங்களும் 20
யதிராஜ விம்சதி -20 ஸ்லோகங்கள் இதனாலே)

புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும்

புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்நதே ஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும் உபாஸன ரூபமான கார்யத்திலே அதி

புத்ர லேபே பரந்தபம் -ஆதி பர்வம் என்று பாராசார்யன் பாதராயணனாகையாலும்
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி -ப்ருஹதா -6-4-22- என்று ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்ம அபேக்ஷை உண்டாகையாலும்
கார்யார்த்த வ்யுத்பத்தியோபாதி –அத்ராஸ்தே நிதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32–முதலான வாக்யங்களிலே புருஷார்த்த பூதமான ஸித்தார்த்தத்திலும் வ்யுத்பத்தி உண்டாகையாலும்
கார்ய ரூபம் வேதார்த்தமானாலும் துக்க அஸம்பின்ந தேஸ விசேஷ ஸ்வர்க்காதிகள் போலேவும் ராத்ரி சத்ர ப்ரதிஷ்டாதிகள் போலவும்

(கார்ய அர்த்தம் -விதி வாக்கியமும் பல வாக்கியமும்
ஜ்யோதிஷட ஹோமம் செய்து சுவர்க்கம்-இரண்டையும்
ராத்ரீ சத்ர விதி வாக்கியம் உண்டு பலம் இல்லையே
வேறே இடத்தில் பிரதிஷ்டா பலம் கொண்டு கூட்டிக்கொள்ளுவது போல்)

உபாஸன ரூபமான கார்யத்திலே அதிக்ருத்தனான புருஷனுக்கு பலமான ப்ரஹ்ம ஸ்வரூப ரூப குண விபவாதிகள் ஸ்வ அர்த்தங்களில் வேதாந்த வாக்கியங்கள் ப்ரமாணமாகையாலும்

ஸம்ஹித மேதத் சாரீரகம் ஜைமிநீ யேந ஷோடஸ லக்ஷணேந இது ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி -போதாயன வ்ருத்திகார வசனம் உண்டாகையாலும்(ஸூத்ர -விருத்தி -பாஷ்யம் -மூன்றும் வ்யாஸர் போதாயனர் பாஷ்யகாரர்)
மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-இத்யாரப்ய -அநா வ்ருத்தி ஸப்தாத் அநா வ்ருத்தி ஸப்தாத் -இத்யேதத் அந்தம் சங்கதி விசேஷண விஸிஷ்ட க்ரமம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் வசனம் உண்டாகையாலும் ஏக ஸாஸ்த்ரமாய் இருக்கும்

அதில் ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரதஸ் இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்த அர்த்த ப்ரகாஸ் யதே வாயு புராணம் பூர்வ -4-10–என்கிறபடியே ஆசார்ய வ்யவஹார பிராயச்சித்த ரூப ப்ரதிபாதகமான தர்ம ஸாஸ்த்ரம் -கர்ம ப்ரதிபாதகமான பூர்வ பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது-இதிஹாச புராணங்கள் -ப்ரஹ்ம ப்ரதிபாதகமான உத்தர பாக அர்த்த உப ப்ருஹ்மணம் பண்ணுகிறது
தர்ம சாஸ்திரங்களும் இதிஹாச புராணங்களும் வேதத்தினுடைய அர்த்தத்துக்கு வைஸத்ய ஹேதுவாய்க் கொண்டு உப ப்ருஹ்மணங்களாய் இருக்கும்

அதில் புராணமாவது
சர்க்கஞ்ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச வம்ச அநு சரிதம் சேதி புராணம் பஞ்ச லக்ஷணம் -வாயு புராணம் -என்று
ஸ்ருஷ்ட்டிகளும்
ஸம்ஹாரங்களும்
வம்ஸங்களும்
மன்வந்தரங்களும்
வம்ஸ அநு சரிதங்களும்
ஆகிற பஞ்ச லக்ஷணத்தை யுடைத்தாய் இருக்கிற
ப்ரஹ்ம பாத்ம வைஷ்ணவம் முதலான கிரந்த ராஸி

பஞ்ச லக்ஷண லஷிதமான புராணங்கள் அல்ப புராணம் என்றும் தச லக்ஷண லக்ஷிதமானவைகள் மஹா புராணம் என்றும் சிலர் சொல்லுவார்கள்
அப்படியே பாகவதத்தில் 12 வது சர்க்கத்தில் 7-8-9–ஸ்லோகங்களில்–சர்க்கோஸ்யாத வி சர்க்கஸ் ச வ்ருத்தி ரஷாந்தராணி -வம்சோ வம்ச அநு சரிதம் ஸம்ஸ்தா ஹேதுர் உபாஸ்ரய தசபிர் லக்ஷணைர் யுக்தம் புராணம் தத் விதோ விது-கேஸித் பஞ்ச விதம் ப்ரஹ்மன் மஹத் அல்ப வ்யவஸ்தயா -என்று சொல்லப்பட்டது

இந்த வசனத்துக்கு விரோதம் வாராமல் கொள்ளவும்

1-சர்க்கோஸ்யாத
2-வி சர்க்கஸ் ச
3-வ்ருத்தி -ஜீவ ஸாதனம்
4-ரஷா
5-அந்தராணி -மன்வந்தரம் -14 மன்வந்தரம் 1000 சதுர்யுகம் ஒரு கல்பம் -நாம் 7 வது மன்வந்தரத்தில் உள்ளோம் -மனு தேவர் மனு புத்திரர்கள் ஸப்த ரிஷிகள் மாறாமல் இருப்பார்கள்
6-வம்சோ
7-வம்ச அநு சரிதம்
8-ஸம்ஸ்தா -பிரளயம்
9-ஹேதுர் -கர்மகாரணம்
10-அபாஸ்ரய -ஆதாரம்


இதிஹாஸமாவது -இந்த லக்ஷண நியம அபேக்ஷை இன்றியே ஸ்ரீ ராமாயணம் மஹா பாரதம் ஸ்ரீ விஷ்ணு தர்மாதியான கிரந்த ராஸி

இவற்றில் புராண நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா -வேதா ஸ்தாநாநி வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்த்த ஸ -மனு என்று தர்ம வித்யா ஸ்தானங்கள் பதினாலாக மனுவும் சொன்னான் –

(வேதங்கள் நாலு
அங்கங்கள் 6
உப அங்கங்கள் 4 என்றும் 8 என்றும் சொல்வர்
அங்க உப அங்கங்கள் -14
வேத சதுஷ்ட்யத்துக்கு-நம்மாழ்வாரது நான்கும் -பரகாலரது ஆறும் -மற்ற எட்டு ஆழ்வார்களது அருளிச் செயல்களும்

நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.
வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.
இவையே நான்கு உபவேதங்கள்-
ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்
அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்
தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்
காந்தர்வ வேதம்– நுண்கலைகள்


இவ்விடத்தில் வித்யா ஸ்தானமாக புராணம் ஒன்றுமே பரிகணிதமாயிருக்க இதிஹாஸத்தையும் கூட்டுவான் என் என்னில்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ருஹ்மயேத் -பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மா மாயம் ப்ரதர்ஷ்யதி -ஆதி பர்வம் -1-2-3-
வேதத்துக்கு ப்ரதாரணமாவது தத் அபி ப்ரேத விபரீத அர்த்த வர்ணநமே என்று வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பரிக்ருஹீத மாகையாலும்
இதிஹாஸ புராணம் -ப்ருஹ உப -6-1-2-
இதிஹாஸன் புராணாநி இதி -என்று
ஸ்ருதியிலும் ஸஹ படிதமாகையாலும்
இதிஹாஸ புராணம் பஞ்சமம் -சாந்தோக்யம் -7-1-1- என்று அல்ப அஸ்த்ரம் அன்றி இருக்க அப்யரஹிதமாகையாலே பூர்வ ப்ரயுக்தமான இதிஹாசத்துக்கு புராணாத் வை லக்ஷண்யம் உண்டாகையாலும்(
அத்தாலே அது முற்பட்டது)
இந்த புராண ஸப்தம் இதிஹாஸத்துக்கும் உப லக்ஷணமாகக் கடவது

அங்காநி வேதாஸ் ஸத்வார மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்யாஹ் யேதாஸ் சதுர்தச -விஷ்ணு புராணம் -3-6-27-என்று
எண்ணப்பட்ட இந்த பதினாலு வித்யைகளோடே
ஆயுர்வேதா தநுர் வேதோ வேதோ காந்தர்வ ஏவ ச அர்த்த ஸாஸ்த்ரம் இதி ஹ்யேதா வித்யாஹ் யஷ்டா தச ஸ்ம்ருதா -விஷ்ணு புராணம் -3-6-28- என்று
சரீர ஸ்திதி ஹேதுவான ஆயுர் வேதமும்
ஸத்ரு நிவாரண அர்த்தமான தனுர் வேதமும்
போக உபயுக்தமான காந்தர்வ வேதமும்
ஸம்பத் அர்த்தமான அர்த்த ஸாஸ்த்ரமுமான நாலு உப வேதமும்
சத்வாரமாக உப யுக்தமாகையாலே பதினெட்டு வித்யை என்று சொல்லப்பட்டது இறே
ஆயுர் வேதோ
வைத்ய ஸாஸ்த்ரம் காந்தர்வோ கீதி சாஸநம் -அர்த்த ஸாஸ்த்ரம் தண்ட நீதி தநுர் வேதோ அஸ்த்ர சாஸநம் -ஸத்வார உப வேதாஸ்தே இதி வைஜயந்தீ

இந்தப் புராணங்கள் தான் -யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா –தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே–மாத்ஸ்ய புராணம் -289–15-என்று
ஸர்வ புராணத்துக்கும் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மாவாய் -அவனுக்கு யாதொரு கல்பத்திலே குண த்ரயத்தில் யாதொரு குணம் விஞ்சி இருக்கும் அந்தக் குண அனுபவ குண தேவதையினுடைய மஹாத்ம்யத்தை அந்த புராணங்களிலே சொல்லக் கடவனாகையாலே
அக்நேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்தியதே ராஜஸேஷு ச மஹாத்ம்யம் அதிகம் ஹரே(
ப்ரஹ்மணோ விது) -தேஷ்வேவ யோக ஸம் ஸித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் -சங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே -மாத்ஸ்ய புராணம் -289-என்று தாமஸ கல்பங்களிலே புராணங்களாலே அக்னி சிவர்களுடைய மஹாதம் யத்தையும் ராஜஸ கல்பங்களில் புராணங்களாலே ப்ரஹ்மா தன்னுடைய மஹாத்ம்யத்தையும் -ஸாத்விக கல்பங்களிலே புராணங்களாலே ஸர்வேஸ்வரனான ஹரியினுடைய மஹாத்ம்யத்தையும் -ஸங்கீர்ண கல்பங்களிலே ஸரஸ்வதியினுடையவும் பித்ருக்களினுடைய மஹாத்ம்யத்தையும் சொல்லக் கடவனாய் இருக்கும்

இதில் ஸாத்விக புராண ஏக நிஷ்டரானவர்கள் யோக முகத்தாலே ஞானத்தைப் பெற்று பர கதியைப் பெறுவார்கள் என்று சொல்லுகையாலே பகவத் பிரதி பாதகங்களான ஸாத்விக புராணங்களே ப்ராமாண்யத்தில் ப்ரக்ருஷ்டங்களாய் இருக்கும் -ஆனால் இதர தேவதா ப்ரதிபாதகங்களான ராஜஸ தாமஸ ஸங்கீர்ண புராணங்கள் அப்ரமாணம் இத்தனையோ என்னில் -அவற்றிலும் பகவத் உத்கர்ஷ ப்ரதிபாதகத்வம் விசிஷ்டமாகையாலே (பொதுவாகையாலே)தன் நிபந்தமான ஸாத்விக்யம் உண்டான அம்சத்தில் யதா ஞான சாதகத்வம் அடியான ப்ராமாண்யத்தில் குறை யில்லை-

அஷ்டா தஸ புராணேஷு தசபிர் கத்யதே சிவ -என்று பதினெட்டு புராணத்திலும் பத்து புராணத்தாலே சிவன் சொல்லப்படுகிறான் என்று உண்டாய் இருக்க -ஸகல புராணங்களும் பகவத் ப்ரதி பாதகங்கள் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டா தச புராணாநி புராணாஜ்ஞா ப்ரசக்ஷதே -1-ப்ராஹ்மம் 2-பாத்மம் 3-வைஷ்ணவஞ்ச 4-சைவம் 5-பாகவதம் ததா -ததாந்யம் 6-நாரதீயஞ்ச 7-மார்க்கண்டே யஞ்ச ஸப்த தமம்–ஆக்நேய மஷ்ட மஞ்சைவ பவிஷ்யந் நவமம் ஸ்ம்ருதம் -தசமாம் ப்ரஹ்ம கை -வை -வர்த்தம் 11-லைங்க மேகா தசம் ஸ்ம்ருதம் -12-வராஹம் த்வாதஸஞ்ச 13-சைவ ஸ்காந்தம் ஸாத்ர த்ரயோதஸம் -சதுர்த ஸம் வாமநஞ்ச கௌர்மம் பஞ்சத ஸம் ததா –மாத்ஸ்யஞ்ச காருடஞ்சைவ பிரஹ்மாண்டஞ்ச தத பரம் சர்க்கஸ் ச ப்ரதி சர்க்கஸ் ச வம்சோ மன்வந்தராணி ச -ஸர்வேஷ் வேதேஷு கத்யந்தே வம்ஸ அநு சரிதஞ்ச யத் யதேதத் தவ மைத்ரேய புராணம் கத்யதே மயா ஏதத் வைஷ்ணவ ஸம்ஜ்ஞம் வை பாத்மஸ்ய சமனந்தரம் சர்க்கே ச ப்ரதி சர்க்கே ச வம்ஸ மன்வந்த்ராதி ஷு கத்யதே பகவான் விஷ்ணு அஸேஷேஷ்வேவ சத்தம -என்று
ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே புராணங்கள் பதினெட்டையும் அநுக்ரமித்து இப் புராணங்கள் எல்லாவற்றிலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப்படுகிறான் என்று சொல்லுகையாலும்

ஏவமேவ புராணேஷு தச ஸ்வஷ்டஸூ நான்யதா -என்று பதினெட்டு புராணத்திலும் பகவானே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாத்யன் அல்லது தத்வாந்தரம் அன்று என்று புராணாந்தர வசனம் உண்டாய் இருக்கையாலும் இனி ஸர்வ புராணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாத்யன்
தேவதாந்த்ர உத் கர்ஷம் சொல்லுகிற இடம் பகவான் நிஸ்ருஷ்ட காரண புருஷத்வாதி (
ஆதி ஸம்ஹார புருஷன்)பத பிராப்தி உடையராகையாலே தத் விபூதி நிபந்தமான உத்கர்ஷ ப்ரதிபாதனத்திலே தாத்பர்யமாகக் கடவது

1-புராணாதிகளிலே (ஆதி ஸ்ம்ருதி போல்வன)ஸர்வ ஜகத்தினுடைய யுகபத் (ஒரே சமயத்திலே)ஸம்ஹாரதிகளைச் சொல்லுகையாலும்–2- ஆகாச விசேஷ குணமான சப்தத்துக்கும் ஸ்வ ஆஸ்ரயமான ஆகாஸத்தோடே ஸம்ஹாரம் உண்டாகையாலும் (தன் மாத்திரை பூத ஸூஷ்மம் தத்வம் -சப்தாதி குணங்கள் வேறே -24 தத்துவங்களில் இவை இல்லையே)3-வர்ணாத்மகமான சப்தத்துக்கு புருஷனுடைய தால்வாதி (தாலு -தாடை)வ்யாபார ஜன்யத்வம் உண்டாகையாலே கர்த்ரபேஷை உண்டாகையால் புருஷ புத்த் யன்வய மூலத்வம் ஸம்பாவிதமாகையாலும் -4-இதா நீ மிவ ஸர்வத்ர த்ருஷ்டாந்தாதி கமிஷ்யதே -என்கிற மீமாம்ஸக மர்யாதையாலே வேதத்துக்கு அவிச்சின்ன பாட ஸம் ப்ரதாயம் அசம்பாவித மாகையாலே (குரு முக உச்சாரண அநு உச்சாரண அத்யயனம்
(வேத அத்யயனம் குரு பூர்வகம் )அக்ஷர ராசி கிரஹணம்ஸம்பாவிதம் இல்லையே) வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்கள் கூடும்படி எங்கனே என்னில் -ஸப்த நித்யத்வம் கொள்ளுகிற பக்ஷத்திலும் அத்யேத்ரு புருஷா அவிச்சேத நிபந்தமான பாட ஸம்ப்ரதாய விச்சித்தி இறே நித்யத்வாதிகளுக்கு மூலமாயிற்று –

அது ஸகல ஸம்ஹார அவஸ்தையிலும் குறையில்லை -அதாவது ஸூப்த ப்ரபுத்தரான உபாத்யாயாதிகள் பூர்வ உச்சாரண க்ரமத்தை ஸ்மரித்து சிஷ்யாதிகளை அத்யயனம் பண்ணுவிக்குமா போலே -ஸம்ஹ்ருதி சமயங்களிலே ஸர்வேஸ்வரன் இந்த வேத சந்தர்ப்பத்தைத் (ஆனு பூர்வியை வரிசைக் கிரமத்தை)தன் திரு உள்ளத்திலே ஸம்ஸ்கார விசேஷத்திலே இட்டு வைத்து ஸ்ருஷ்ட்டி காலத்திலே இந்த வேத ஸப்தங்களாலே ஸ்மரிக்கப்பட்ட நாம ரூபங்களை ஸ்ருஷ்ட மான அவ்வோ அர்த்தங்களிலே வ்யாகரித்து -வ்யாபரித்து -(பிரித்து வைத்து)உறங்கி உணர்ந்த பிரஜைகளை பிதா ஓதி வைக்குமா போலே ப்ரஹ்ம ப்ரமுகரான ஸர்வ ப்ராணிகளையும் யோக்யதா அநு கூலமாக அத்யயனம் பண்ணுவித்து அவ்வவருடைய ஹிதங்களையும் சாஸித்துக் கொண்டு போருகையாலே அஸ்மர்யமாண (நினைவிலே வராததான)கர்த்ருத்வாதி நிபந்தநமான வேத ப்ராமாண்யம் வ்யவஸ்திதம் என்றதாயிற்று(தேவதாதிகரணம் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தவை ஒற்றியே இங்கு)

வாஸா விரூப நித்யயா -என்று ஸந்தர்ப்ப விசேஷண ரூபத்தாலே வாக்கு நித்யையாய் இருக்கும் என்று ஸ்ருதி தன்னிலும் சொல்லிற்று(சப்தம் நித்யம் அல்ல ஆனு பூர்வி நித்யம் என்றதாயிற்று)
ஏததேவ ச வேதாநாம் அபவ்ருஷேயத்வம் நித்யத்வஞ்ச -யத் பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார விஸேஷேண தமேவ க்ரம விஸேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யமாணத்வம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -என்று பாஷ்யகாரரும் வேதத்தினுடைய அபவ்ருஷேயத்வ நித்யத்வங்களை ஸம்ஸ்கார ரூபமான ஸந்தர்ப்ப நித்யதா நிபந்தனமாக அருளிச் செய்தார் இறே
இப்படி புருஷ புத்தி மூலத்வாதி தோஷம் இல்லாமையாலே நித்தியமான வேத ராஸி ஸ்வத ஏவ ஸூத்ருட ப்ரமாணம் என்றதாயிற்று
(சுடர் மிகு ஸ்ருதியுள் உளன்)

இப்படி ஸ அங்க உப அங்கமான ஸகல வேதங்களும் ஸர்வேஸ்வரனையே ஏக கண்டமாக ப்ரதிபாதிக்கும் அளவில் சாங்க்ய யோக பாஸூபத -பாஞ்ச ராத்ர ரூப தந்த்ர விசேஷங்கள் ஸ்வ அர்த்தத்தில் ப்ரமாணமாகிற படி என் என்னில்
1-சாங்க்யம் 2-யோக 3-பஞ்ச ராத்ரம் 4-வேதா 5-பாஸூ பதம் ததா -கிமேதான் யேக நிஷ்டாநி ப்ருதங் நிஷ்டாநி வா முநே -மோஷ -350-1- என்று மஹா பாரதத்தில் நிஷ்டா நிர்ணயாத் யாயத்திலே பஞ்ச ஸித்தாந்த நிர்ணயத்திலே -ஸாங்க்யாதி பஞ்ச ஸித்தாந்தங்களும் ஏக தத்வ ப்ரதிபாதகங்களோ – ப்ருதக் தத்வ ப்ரதிபாதகங்களோ -என்று ப்ரஸ்னம் பண்ண
பஹவோ ஹி யதா மார்க்கா வி சந்தி ஏகம் மஹா புரம் -தத் ஞாநாதி ஸர்வாணி பிரவிசந்தி தமீஸ்வரம் -பாரத வசனமாக -நாரஸிம்ஹ புராணம் -ச 64-68-என்று
பல வழியும் ஒரு படை வீட்டிலே புகுருமாப் போலே ஸர்வ ஞானங்களும் ஸர்வ நியாந்தாவான ஸர்வேஸ்வரனையே ப்ரதிபாதியா நிற்கும் என்று உத்தரம் சொல்லுகையாலே ஸர்வ ஸித்தாந்தங்களும் ஸர்வேஸ்வரனையே பிரதிபாதிக்கக் கடவது
(ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு-வ்யாபனாத் தாரணாத் ஸ்வாமித்வாத் இத்யாதி புருஷோத்தமன் ஒருவனே)

அதிலே வேதமானது கர்த்ராத்ய பாவத்தாலே நிர்த் தோஷமாய்க் கொண்டு பகவத் ப்ரதி பாதனத்திலே ப்ரபல பிரமாமாகையாலே அல்லாத நாலு ஸித்தாந்தங்களும் தன் மூலங்களாய்க் கொண்டு ப்ரமாணங்களாகக் கடவன-
அதில் சாங்க்ய -யோக -பாஸூ பாதிகள் வேத விருத்த அம்சம் ஒழிய ப்ரமாணங்களாகக் கடவன-அதாவது
1-சாங்க்யன் ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரனுடைய ஸகல இதர வ்யாவ்ருத்தமாய் வேதாந்த வேத்யமான ஸ்வரூபத்தை இசையாதே பஞ்ச விம்சதி தத்வ மாத்ரத்த்லேயே பர்யவசித்து அந்த பஞ்ச விம்சதி புருஷனை உதா ஸீனனாகவும் சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-1-

பிரதானம் புருஷன் -இரண்டையும் -செம்பருத்திப்பூ ஸ்படிக்கல் இரண்டும் அருகில் -இருக்க அசித்தின் தன்மை ஏறிட்டு –
குருடன் நொண்டி -சேர்ந்து -வழி சொல்ல நடக்க -கர்த்ருத்வம் ஒருவன் இடம் ஞாத்ருத்வம் ஒருவனிடம் -உலகம் நடக்கும் –
விவேக ஞானத்தால் மோக்ஷம்
நிரீஸ்வர சாங்க்யன் -ஸ்ரீ பாஷ்யத்தில்
கபிலர் –
தேவபூதி கடைசிப்பிள்ளை -தாயாருக்கு உபதேசம் -பக்தி ஈஸ்வரன் எல்லாம் சொல்லுவார்
சேஸ்வர சாங்க்ய மதம்

ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-

அனுமானம் -பிரதானமானது
ந -ஜகத் காரணம் அல்ல
ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
உபாதான காரணத்வம் கூடாது என்று
ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது

2-யோகி யானவன் யோக ஸாஸ்த்ரத்தில் ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம் யோக ஜன்யமாய்க் கொண்டு ப்ரதி பலநம் போலே ஓவ்பாதிகமாம் ஒழிய ஸ்வ பாவிகம் அல்ல என்று சொன்னான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1-3-

இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –-ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-

வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –

ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே

ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –

3- பாஸூ பதன் பிச்சையுண்ணி எம்பெருமான் என்னுமாப் போலே சாப உப ஹதனான ருத்ரனை பரமேஸ்வரனாக ப்ரமித்தான் -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-

இவர்கள் மூவருக்கும் இந்த வேத விருத்த அம்சங்கள் ஒழிய -1-தத்வ க்ரம உத்பத்தி கதநத்திலும் -2-யோக ஸ்வரூப ப்ரதிபாத நத்திலும் -3-யோக பிரகார உப பாத நத்திலும் -4-உபாஸ்ய உபாஸக பாவாதி ப்ரதிபாதனத்திலும் விரோதம் இல்லாமையாலே அந்த அந்த அம்சங்களில் இந்தத் தந்திரங்கள் ப்ரமாணங்களாகக் குறையில்லை

ஆனால் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும்
வாஸூ தேவாத் ஸங்கர்ஷணோ நாம ஜீவோ ஜாயதே (
சங்கர்ஷணன் இடம் இருந்து பிரத்யும்ன என்னும் மனஸ் பிறக்கிறான்-என்று மேலும் சொல்லும்)-ப்ரஹ்ம ஸம்ஹிதா -என்று வேதாந்த விருத்தமான ஜீவ உத்பத்தியாதிகளைச் சொல்லுகையாலே அதிலும் தந்த்ர சாமான்யத்தாலே வேத விருத்த அம்சம் உண்டாய் இருந்ததே என்னில் -ப்ரஹ்ம ஸூத்ர -2-2-39-40- அங்கே ஜீவ அதிஷ்டாத்ரு ரூபமான ஸங்கர்ஷண வ்யூஹத்தினுடைய உத்பத்தி சொல்லுகிறது –
ஆகையாலே ஜீவ உத்பத்திக்கு ப்ரஸங்கம் இல்லாமையாலும்
இதம் மஹ உபநிஷதம் ஸர்வ வேத ஸமந்விதம் -சாந்தி பர்வ -340-111-என்று ஸகல வேத அநு கூலத்வம் இந்த பாஞ்சராத்ர வசனத்திலே ஸித்தமாகையாலும்
பகவான் தான் பர வ்யூஹ விபவாதிகளுடைய யாதாத்ம்யத்தை ஸ ப்ரகாரமாக ஸாத்விகாதிகளிலே -ஸாத்விக ஸம்ஹிதைகளிலே -அருளிச் செய்கையாலும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸனமும் ப்ரமாணமாகக் கடவது(ஒன்றும் இடாமல் எல்லாம் -சகல எல்லாம் விட இதுக்கு முழுமை உண்டே) -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-2-41-42-

(2-2-எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்

ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

———

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிரமாண தர்மம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-

இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து

ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்

இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

————–

இங்கன் அன்றிக்கே
சாங்க்யாதிகளுக்கும் ஸ்வ அர்த்தத்தில் க்ருத்ஸ ப்ரமாணமாம் கொள்ளத் தேடில் ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ ப்ரசங்க இதி சேத் ந அந்நிய ஸ்ம்ருத் யநவகாஸ தோஷ பிரசங்காத் –ப்ரஹ்ம ஸூத்ர -2-1-1-என்கிற அதிகரணத்திலே -ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளுக்கு ப்ராமாண்யம் கொள்ளுமளவில் ஜகத்துக்கு ப்ரஹ்ம உபாதாந காரத்வம் சொல்லுகிற மன்வாதி ஸகல ஸ்ம்ருதிகளுக்கு அநவகாசமாகிற தோஷம் வரும் என்று வேதாந்த ஸூத்ரத்திலே உப பாதிக்கையாலும்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய -யாஸ் ச காஸ் ச குத்ருஷ்டய -ஸர்வாஸ்தா நிஷ்பலா ப்ரேத்ய நமோ நிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா -மநு -12-95- என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸ்ம்ருதிகள் தமஸ் கார்யமான அஞ்ஞாந வர்த்தகைகள் ஆகையாலே நிஷ் பிரயோஜனங்களாய்க் கொண்டு ஸம்ஸார வார்த்திகைகளாம் -என்று மநு வசனம் உண்டாகையாலும் சாங்க்யாதிகளுக்கு ப்ராமாண்யம் கவாசித்தகமாய் ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்துக்கு ப்ராமாண்யம் சார்வத்ரிகம் என்றதாயிற்று

(ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1–ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-

முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று மின்
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும் இன்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –

ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –

அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்

ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லா விட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்

இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –

ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-

வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து)

ஆகையால் ஸ அங்க உப ப்ரும்ஹண ஸர்வ தந்த்ர ஸஹிதமான ஸமஸ்த வேதங்களும் ஸகல விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய ஸமாப் யதிக ரஹிதமான வைபவத்தையே ஸம்யக் ப்ரதி பாதனம் பண்ணுகின்றன என்றதாயிற்று(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்)

இதி தத்துவ நிரூபணே பிரமாண நிரூபணம் நாம பிரதம அதிகாரம் ஸம் பூர்ணம்

————–

த்விதீயதிகாரம்– – ஸ்ருஷ்டி – காரணத்வம்
1-தஸ்ய திரிவித காரணத்வ நிரூபணம்
2- தஸ்ய உபாதாந காரணத்வ நிரூபணம்
3-ஸ்ருஷ்டி த்வைவித்ய கதநம்
4- சமஷ்டி ஸ்ருஷ்டி நிரூபணம்
5-அவ்யக்த நிர்ணயம்
6-மஹத் தத்துவ நிர்ணயம்
7-தத்ர ஸாத்விக புத்தி நிரூபணம்
8-தத்ர ராஜஸ புத்தி நிரூபணம்
9-தத்ர தாமஸ புத்தி நிரூபணம்
10-மஹத் தத்தவாத அகங்கார உத்பத்தி கதநம்
11-வைகாரிக அஹங்காராத் ஏகாதஸ இந்த்ரிய உத்பத்தி கதநம்
12- ஏகாதஸ இந்த்ரியாணாம் பூதாதே உத்பத்தி கத ந வசநாநாம் அந்நிய பரத்வ கதநம்
13-ஞான இந்திரிய பரிகணநா
14-கர்ம இந்திரிய பரிகணநா
15- மனஸ-ஞான கர்ம இந்த்ரிய உபய ஸஹ காரித்வ கதநம்
16-இந்த்ரியாணாம் அணுத்துவ சமர்த்தனம்
17-பூதாதேஸ் தன்மாத்ராத் யுத்ப்பத்தி கதநம்
18- பரமாத்மந பூத உத்பத்தி கதந வசநாநாம் தாத்பர்ய கதநம்
19-தன்மாத்ராதே ராகாஸாத் யுத் பத்தி க்ரம நிரூபணம்
20- பஞ்சீ கரண பிரகார கதநம்
21-அண்ட ஸ்ருஷ்டி பிரகார நிரூபணம்
22-சதுர்முக ஸ்ருஷ்டி கதநம்

———-

இப்படி வேத வேத்யமாய் -ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான பரதத்வம் ஓன்று -அதுவே முமுஷுக்களுக்கு ஞாதவ்யம் -அதுக்கு ஞாபகமான லக்ஷணங்கள் ஏதென்னில்
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த் யபி -ஸம் விஸந்தி – தத் விஜிஜ்ஞாஸஸ்வ -தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு -1-1-என்று(
வர்ணன் பிள்ளை பிருகு -அவனுக்கு உபதேசம்)
ஜகஜ் ஜென்ம ஸ்திதி லயங்கள் வேதாந்தங்களிலே யுக்தம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்ம ஸூத்ரம் 1-1-1- என்று ப்ரஹ்ம ஞானத்தை விதித்த வேதாந்த ஸூத்ரம் அந்த ப்ரஹ்மதுக்கு லக்ஷணமாக –
ஜந்மாத் யஸ்ய -1-1-2- என்கிற ஸூத்ரத்தாலே ஜகத்தினுடைய ஜன்ம ஸ்தேம லயங்களை ஸூசிப்பித்ததே இறே

ஜகத்துக்கு ப்ரஹ்மத்தின் பக்கல் உண்டான ஜென்ம ஸ்தேம லயங்களாவன உத்பத்தி ஸ்திதி விநாஸங்கள்

அதிலே ப்ரஹ்மத்துக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வமாவது
கடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான காரத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ -என்னில் -அப்படி அன்று –
லோகாதி கார்ய உத்பத்தியில்
உபாதாநம் என்றும்
நிமித்தம் என்றும்
ஸஹ காரி என்றும்
காரணங்கள் மூன்று
அதில் உபாதாந காரணமாவது -கார்ய ஸ்வரூபத்திலே அந்தர் பவிக்கும் படி யாதொரு வஸ்துவினுடைய ஸ்வரூபத்தை உபாதாநம் பண்ணி (
பரிணாமத்தை உண்டாக்கி)காரியத்தை உத்பாதிக்கிறான் -அது உபாதாந காரணம் -அதாவது
கடமான கார்யத்திலே ம்ருத்தான காரண ரூபத்தை ஸ்வீ கரித்து அத்தை உண்டாக்கினாப் போலே
நிமித்த காரணமாவது -அந்த உபாதாந ஸ்வரூபமான ம்ருத்தை குலாலன் விகரிக்குமா போலே கார்யா காரேண விகரிக்குமது
ஸஹ காரி காரணமாவது -குலாலன் ம்ருத்தாலே கடத்தை உத்பாதிக்குமளவில் தண்ட சக்ராதிகளைப் போலே கார்ய உத்பத்திக்கு உபகரணமாமவை
இவை மூன்றும் லோகத்தில் ஒன்றினுடைய சக்தி ஒன்றுக்கு இல்லை -(
இயத்தா ராஹித்யம்)
ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாம் அளவில் இவை மூன்றும் தானேயாய் இருக்கும் என்று ஸ்ருதி சொல்லிற்று

சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்-பரிணாமம் அடையலாம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்த காரணம்–பஹு ஸ்யாம் ப்ரஜாயேய
ஞான சக்த்யாதி விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி காரணம்-வேர் முதல் வித்தாய்

அதாவது -கிம்ஸ்வித் வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் -யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு -( நிஷ்ட தஷு-என்கிற இடத்தில் (ஆற்றல் உடன் படைக்கப்பட்டவை)பஹு வசனம் விவஷிதமன்று -ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் திவஞ்ச ப்ருதி வீஞ்ச -என்று த்யாவா ப்ருத்வியாதிகளுக்கு ஏக கர்த்ருகத்வ ஸ்ரவணத்தாலே கர்த்ரு பஹுத்வம் ஸம்பவியாமையால் இப்படியே ஸ்ருத ப்ரகாஸி காச்சார்யர் அருளிச் செய்தது -1-4-25-)
மநீஷிணோ மனஸா ப்ருச்ச தேது தத் யதத் யுதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் அஷ் -2-8-7-8–என்று
லோக த்ருஷ்டி மர்யாதையாலே நிமித்த உபாதாநாதிகளை பின்னமாக பிரதிபத்தி பண்ணி யாதொரு வஸ்து புவனங்களைத் தரித்துக் கொண்டு நின்று நிமித்தத்தைச் சொல்லி
யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு -என்று யாதொன்றாலே த்யாவா ப்ருத்விகளை வகுத்தார்கள் -அந்த வனம் எதுவென்றும் அந்த வ்ருக்ஷம் எதென்றும் உபாதானத்தையும் ததிதர உபகரணத்தையும் பிரித்து ப்ரஸ்னம் பண்ணி
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்டதஷு மநீஷிணோ மனஸா விப்ரவீ மிவ –ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவநாநி தாரயன் -யஜுர் -2-8-9-8-என்று
அதிஷ்டிக்கும் நிமித்த காரணமும் உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று த்ரிவித காரணமும் ப்ரஹ்மமாகச் சொல்லிற்று-

(சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25–வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே-நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-)

(கிம்ஸ்வித் -இத்யாதி –
அத்ர ஸாயநாசார்ய பாஷ்யம் -லோகே ஹி க்ருஹம் சிகீர்ஷு புமான் வனம் கத்வா –தத்ர கஞ்சித் வ்ருக்ஷம் சித்வா ததீயை காஷ்டை -க்ருஹம் நிர்மிமீதே –தத் த்ருஷ்டாந்தேன அத்ராபி (
இன்புறும் இவ்விளையாட்டுடை விமலன் -தன்னை தனது பயனுக்காக உருவாக்கினான்)-யத யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதிவீ -த்யு லோக பூ லோகவ் நிஷ்டதஷு- தக்ஷணேந நிர்மிதார -நிர்மிதவந்த தாத்ருசம் வனம் கிம்ஸ்வித் பவேத் கஸ் ச தாத்ருஸ ஸ வ்ருக்ஷ ஆஸீத்- ஹே மநீஷிண -புத்தி மந்த -மனஸா -ஸ்வ கீயேந விசார்ய- ததித மரத்த த்வயம் ஆசார்ய ஸமீபே ப்ருச்சத மிஞ்ச -யத் காரண பூதம் வஸ்து புவநாநி -ஸர்வாந் லோகான் ஸ்வாத்மநி தாராயன் அத்யதிஷ்டத் -நியமன கரோத் -ததிது ததபி ப்ருச்சத யதுக்தம் மநீஷிணாம் ப்ரஸ்ன த்ரயம் (காடு எது வனம் எது)தஸ்ய ஆச்சார்ய உத்தரம் ப்ரூதே -யஸ்மாத் வந ஜன்யாத் வ்ருஷாத் த்யாவா ப்ருதி வ்யவ் நிர்மிமீதே (தாங்குவது யார்)தத் வந ஸ்தாநீயம் வ்ருக்ஷ ஸ்தா நீயம் ப்ரஹ்ம ஏவ -தஸ்ய ஸர்வ சக்தித்வாத் -யஸ்ய உத்பாத் யஸ்ய சா சாமக்ர் யபேஷிதா ஸா ஸர்வா தஸ்மிந் வித்யதே ததேவ ப்ரஹ்ம ஸர்வாணி புவநாநி அஸ்மின் தாரயதி நியமயதி ச ஹே மநீஷிண ஆசார்யோஹம் மனஸா நிச்சித வ -யுஷ்மத்ப்யம் விப்ரவீமி விவிதம் உத்தரம் ப்ரவீமி இதி )

(அபூர்வ அர்த்த ப்ரதிபாதனமே வேதம் -யதார்த்த கதனம் வேதம் -அனைத்துக்குள்ளும் ப்ரஹ்மம் -அனைத்தையும் ஸ்ருஷ்டித்து தரித்து நியமித்து -ஸ்வாமித்வம் ப்ரஹ்மமே -வேதம் கொண்டே அறிகிறோம்-ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் -ஒன்றை அறிந்தால் அனைத்துமே அறிந்ததாகுமே-ஒன்றை அறிந்தால் -ப்ரஹ்மத்தை அறிந்தால் -அது சத்தாகவே இருந்தது -ஒன்றாகவே இருந்தது -இரண்டாவது அற்றதாகவே இருந்தது-ஸஹ காரி அற்றதாக இருந்தது -ஒன்றாகவே இருந்ததுஉபாதானமும் ப்ரஹ்மமே -இதன் காரியமே ஸகலமும்
அசத்தைக் காரணமாக் கொண்டது ஜகத்து இல்லையே-பஞ்ச ஸ்தவம் -சத்- -ஆத்மா-ஞானமுடையது -ப்ரஹ்மம் -பெரியது -யவன் அவன் -விவரித்து -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-தத்வம் ஆத்மா ஜ்யோதிஸ் -பரம் ஒவ்வொன்றுக்கும் நாராயணனே )

இந்த அர்த்தம் -ஸதேவ ஸோம்யேத மக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் –6-2-1- என்று காரண வாக்யத்தில் ஜகத்து ஏகமாகக் கொண்டு லயிக்கும்படி உபாதான ஸச் ஸப்த வாஸ்ய வஸ்து -அத்விதீயம் என்று சொல்லுகையாலே அதிஷ்டாந்தர்த்தைக் கழித்து நிமித்த உபாதாநாதிகள் எல்லாம் ஏக பூத வஸ்து என்றும் சொல்லப்பட்டது

அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதாநத்வ ரூப உபய லிங்க விஸிஷ்ட நித்ய பரி ஸூத்த ஸ்வ பாவ பர ப்ரஹ்மம்
ஜடத்வ துக்கித்வ யுக்தமான சித் அசித் மக பிரபஞ்சத்துக்கு உபாதாநமாம் படி எங்கனே என்னில்
நிர்தோஷ ப்ரமாணமான வேதாந்த பாகத்தில் காரண வாக்யங்களாலே சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய உபாதானாதி பாவத்துக்கு அந்யதா ஸித்தி இல்லாமையாலே ப்ரமாண அனுக்ராஹகமான உபபத்தி விசேஷங்களாலே இவ் வர்த்தத்தை வேதாந்த வித்துக்கள் நிஷ்கர்ஷியா நின்றார்கள் –
எங்கனே என்னில்

ப்ருதிவ் யப்ஸூ லீயதே -ஸூபா உபநிஷத் -என்று துடங்கி தத்துவ க்ரமத்திலே லயத்தைச் சொல்லி – மஹான் அவ்யக்தே லீயதே -அவ்யக்தம் அக்ஷரே லீயதே -அக்ஷரம் (விபக்த)தமஸ் லீயதே -தமஸ் பரே தேவ ஏகீ பவதி -என்று
மஹத் தத்துவத்துக்கு லய ஸ்தானமான அவ்யக்தம் தன்னுடைய ஸூஷ்ம தஸா ரூபமான அக்ஷர தமோ அவஸ்தமாய்க் கொண்டு பர தேவதை பக்கலிலே ஏகீ
பவிக்கும் என்கையாலே

(அவ்யக்தம் அக்ஷரம் விபக்த தமஸ் அவிபக்த தமஸ் -நான்கும்-பிரகிருதியின் நான்கு அவஸ்தைகள்-விதை-தண்ணீர் பருத்து வெடித்து –முளை விட்டு மேல் -வருவது போல்-மெழுகு தங்கத் துகள்கள் ஒட்டிக் கொண்டு இருப்பது போல் ஜீவ சமஷ்டிகள் ஒட்டிக்கொண்டு இருக்கும் பிரகிருதி அக்ஷரம்–குணங்கள் சமமாக இருப்பது அவ்யக்தம் –ஸூஷ்ம பரிணாமங்கள் இவை -ஸ்தூல பரிணாமங்கள் மேல் மஹான்-குண வைஷம்யம் மஹானில் -அஹங்காரம் -ஸூஷ்மம் -கண்ணுக்குப் புலப்பாடாதது -விபுவாக இருந்தாலும்
ப்ரஹ்மம் பிரகிருதி – -காலம் இவை அனைத்துமே விபு ஸூஷ்மம்
ஏகீ பவதி ஒன்றாக -ஒன்றி விடும் -ஒன்றாம் என்னும் இவ் வல்லல் எல்லாம் ஒழித்தான் ராமானுஜன்-ஜீவ த்வாரா அதிஷ்டானம் -நேராக அதிஷ்டானம் இரண்டு வகை அசித்க்குள் உண்டே-)

சித் அதிஷ்டித்தமான அவ்யக்தினுடைய ஸூஷ்ம அவஸ்தை அக்ஷரமாய் -அக்ஷரத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையை தமஸ்ஸாகாச் சொல்லுகையாலே புஷபத்தினுடைய முகுள கோரகத்ய வஸ்தைகள் போலே தத்வாந்தரம் இன்றியிலே ஒன்றினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே மஹாதாதிகளோ பாதி நாம ரூப விபாகத்துக்கு அர்ஹமில்லாத ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை தமஸ் ஸப்தத்தாலே சொல்லி அதுக்கு பரமாத்மாவின் பக்கல் ஏக பாவம் சொல்லுகையாலே காரண பூத பர ப்ரஹ்மதுக்கு ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டத்வம் அவர்ஜனீயம்
ஆகையிறே –
ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தாவ்யக்த ஸ்வ ரூபிணீ -புருஷஸ் சாப்யு பாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39-என்று

சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பரமாத்மாவின் பக்கலிலே லயத்தைச் சொல்லிற்று –
இப்படி ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மத்தை இதிலே ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் -சாந்தோ -6-2-1- என்று முதலான வாக்கியங்கள் ஜகத் காரணமாகச் சொல்லுகிறன
இப்படி இவைகளுக்கு லய ஸ்தானமாகையாலே ப்ரஹ்மம் ஜகத் உபாதான காரணம் என்றதாயிற்று

இந்த ப்ரஹ்மம் ஜகத் உபாதாநமாம் இடத்து
நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் -ஸ்வே -6-18-
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தைத்த -1-1-என்று
விகாராதி ரஹிதமாக ஸ்ருதி ஸித்தமான ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதோ என்னில்
ஸூஷ்ம சித் அசித் மிஸ்ரமான பர ப்ரஹ்மம் ஸ்தூல சித் அசித் மிஸ்ரமான ஜகதாகாரத்தை உடைத்தாமளவில் ஸ்வரூபத்துக்கு பரிணாமம் வாராதபடி ஜகத்துக்கு உபாதாநமாய் பரிணமிக்கக் குறையில்லை-

அதாவது –
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய அசித் அம்சத்திலே ஸ்வரூப பரிணாமம்
சித் அம்சத்திலே ஞானமாகிற ஸ்வ பாவத்திலே சங்கோச விகாஸ ரூப பரிணாமமுமாய் -சித் அம்சத்துக்கு ஸ்வரூப பரிணாமம் இன்றியிலே ஒழிகிறவோ பாதி –
உபய நியந்தாவான ப்ரஹ்ம அம்சத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டிலும் பரிணாமம் இன்றியிலே பஹு ஸ்யாம் -சாந்தோ -6-2-3–என்கிற தாதாத்மிக ஸங்கல்ப ரூப பரிணாமமே யாகையாலே சித் அசித்துக்களோ பாதி ஸ்வரூப விகாரம் ஸ்வ பாவ விகாஸ சங்கோசாதிகளாகிற தோஷ ரூப பரிணாமம் இன்றியே கர்த்ருத்வ லக்ஷணாதி ஸித்தமான ஸத்ய சங்கல்பாதிகளும் நியந்த்ருத்வ ஸித்தமான ஞான சக்த்யாதி குண உத்கர்ஷமுமாகிற வைலக்ஷண்ய அதிசயம் பிரகாசிகையாலே விகாரத்துக்கும் கல்யாண குண யோகத்துக்கும் ஒரு குறை இல்லை
இப்படி உபாதானமான பர ப்ரஹ்மம் தானே தன்னுடைய ஸத்ய சங்கல்பத்வாதிகளாலும் ஞான சக்த்யாதி குண யோகத்தாலும் ஸ்வ சரீர பூத சித் அசித்துக்களை அதிஷ்டித்து கார்ய ரூபமான அவஸ்தாந்தரா பத்தியைப் பண்ணுவிக்கையாலே நிமித்த காரணமாய் இருக்கும்
தன்னுடைய ஸர்வ ஸக்தி யோகத்தாலே இதர நிரபேஷமாக காரியத்தை உத்பாதிக்கையாலே ஸஹ கார்யாந்தர ஸா பேஷமுமாய் இராது
ஆகையால் ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மம் என்றதாயிற்று

இப்படி ப்ரஹ்மாத்மகமான ஸூஷ்ம சித் அசித்துக்கள் ஸ்தூலமான ஜகதாகாரமாய்க் கொண்டு ஸ்ருஷ்டமாமளவில்
சமஷ்டி என்றும்
வ்யஷ்டி என்றும்
ஸ்ருஷ்டி த்விவிதமாய் இருக்கும்
அதில் சமஷ்டியாவது -பிரம உத்பத்தி பர்யந்தமான ஆத்ய ஸ்ருஷ்டி
வ்யஷ்டி ஸ்ருஷ்டி யாவது – அண்டாந்தர வர்த்தியான லோக லௌகிக ஸ்ருஷ்டி-

அதில் சமஷ்டி ஸ்ருஷ்டியில் -ஆஸீதி தம் தமோ பூதம் அப்ரஜ்ஞாதம் லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்த மிவ ஸர்வத-மநு -1-5- என்று ஞான சூன்யமாய் விபாக லக்ஷண ரஹிதமாய் -விசார யோக்யம் இன்றியிலே விசேஷ ஞான விஷயம் இல்லாதபடி ஸூப்தமாய்க் கொண்டு அவிசேஷிதமாய் தமோ வஸ்தமாய்க் கொண்டு தன் பக்கலிலே ஏகீ பவித்த இந்த ஜகத்தை –
ப்ராது ராஸீத் தமோ நுத -மநு -1-6- என்று ஸ்வரூபாத் விபக்தமாம்படி ப்ரேரித்து ஸ்ருஷ்டி யுன்முகனாய் தமஸ்ஸை அக்ஷரமாக்கி -அக்ஷரத்தை அவ்யக்தமாக்கும்
இவ் வக்ஷர தமஸ் ஸுக்கள் அவ்யக்தத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தைகள் ஆகையாலே தத்வாந்தரம் அல்ல என்று முன்பே சொல்லப்பட்டது-

இந்த அவ்யக்த்தமாவது -த்ரி குணம் தஜ் ஜகத் யோநி அநாதி பிர்பவாப்யயம் -ஸ்ரீ விஷ்ணு புராண -2-21-1- என்கிறபடியே
ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயத்தை ஸ்வ பாவமாக உடைத்தாய் மஹதாதி சமஷ்டி வ்யஷ்டி ரூப ஜகத்துக்குக் காரணமாய் உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்தியமாய்
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா –கீதா -7-13- என்கிறபடியே பகவானுக்கு லீலோ பகரணமாய் -ஸ்வ ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு துரத்யயமாய் பகவானுக்கு ப்ரகார தயா சேஷமாய் -சதத பரிணாமியாய் இருக்கும்
ஆக விறே -விகார ஜநநீம் அஜ்ஞாம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம் -மாந்த்ரீக உபநிஷத் -3–என்றும்
(அவ்யக்தம் மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் ஆகிய அஷ்ட)அசேதநா பரார்த்தா ச நித்யா சதத விக்ரியா -பரம ஸம்ஹிதா -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகள் இதினுடைய ஸ்வபாவங்களை பஹு ஸ ப்ரதிபாதித்தது-

இதனுடைய விகாரமாவது –
ஸூஷ்ம ரூபமாய் ஸ்தூல ரூபமாய் இருந்துள்ள த்வி விதமான ஸ்வரூப பரிணாமம்
அதில் ஸூஷ்ம பரிணாமம் நாம ரூப விபாக நிர்தேச அநர்ஹமாய் இருக்கும்
ஸ்தூல பரிணாமம் மஹதாதியான கார்யமாகையாலே நாம ரூப விபாக நிர்தேச அர்ஹமாய் இருக்கும்
இந்த மஹதாதி பரிணாமியாய் ஜகத் உத்பத்திக்கு உபயுக்தமாய் அறுவது ஸூஷ்ம பரிணாமம்
இந்த அவ்யக்தத்துக்கு ஸ்வரூப ப்ரயுக்தமான ஆகார விசேஷம் இத்தனை இறே
பரிணாமமாவது ஸூஷ்ம தசையோடு ஸ்தூல தசையோடு வாசியற உண்டான பூர்வ அவஸ்தா பரித்யாக பூர்வகமான அவஸ்தாந்தர ப்ராப்தி
அது ஸ்தூல தசையிலே வந்தவாறே கார்யம் என்று சொல்லப்படும்
அவஸ்தாந்தரா பத்தி ரேவ ஹி கார்யதா ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-என்று இறே ஸ்ரீ பாஷ்யகார வசனம்
அந்த அவ்யக்தம் குண ஸாம்யம் அநுத் ரிக்தம் ந்யூ நஞ்ச மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-34- என்று காரண தசையிலே ஸத்வ ரஜஸ் தமோ ரூபமான குண த்ரயங்களாகிற ஸ்வ பாவங்களுக்கு ஒன்றுக்கு ஓன்று ந்யூநாதி ரேகங்கள் உண்டாதல் -க்ருத்ஸ் உத்ரேகம் உண்டாதல் செய்யாதே சம ஸ்வ பாவமாய் இருக்கும் –

குண ஸாம்யாத் ததஸ் தஸ்மாத் ஷேத்ரஞ்ஞாதிஷ்டி தான்மு நே -குண வ்யஞ்ஜன ஸம் பூதி சர்க்க காலே த்விஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -1-2-33- என்று
இப்படி குண ஸாம்யமுடைத்தாய் ஷேத்ரஞ்ஞானான பத்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும் வ்யக்த குணோந்மேஷ ஹேதுவாகையாலே குண வ்யஞ்ஜனம் என்று பேரான மஹத் தத்வம் உத்பன்னமாம்
அந்த மஹத் தத்வம் -ஸாத்விகோ ராஜஸஸ் ச ஏவ தாமஸஸ் ச த்ரிதா மஹாந் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-2- என்று ப்ரகாஸ ப்ரவ்ருத்தி மோஹோன்நேயமான சத்வ ரஜஸ் தமோ ரூப குணான்வயத்தாலே
சாத்த்விகம் (ப்ரகாஸ
)ராஜஸம் (ப்ரவ்ருத்தி)தாமஸம் (மோஹ)என்று மூன்று வகையாய் இருக்கும் –

1-இதில் ஸாத்விக புத்தியாவது -ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்யாகார்யே பயாபயே –பந்த மோக்ஷஞ்ச யா வேத்தி புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ —கீதா 18-30- என்று
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளினுடையவும் கார்யா கார்யங்களினுடையவும் பயாபயங்களினுடையவும் பந்த மோஷங்களினுடையவும் யதாவத் வ்யவசாயம் -என்றும்

2- ராஜஸ புத்தியாவது -யயா தர்ம மதர்மஞ்ச கார்யஞ்சா கார்யமேவ ச -அயதாவத் ப்ரஜாநாதி புத்திஸ் ஸா பார்த்த ராஜஸீ –18-31-என்று
தர்மாதர்மங்களையும் கார்யா கார்யங்களையும் அந்யதாவாக அறுதியிடுகை என்றும்

3-தாமஸ புத்தியாவது -அதர்மம் தர்மமிதி யா மன்யதே தமஸா வ்ருதா ஸர்வார்த்தான் விபரீதாம்ஸ் ச புத்திஸ் ஸா பார்த்த தாமஸீ -18-32–என்று
அதர்மத்தைத் தர்மமாகவும் தர்மத்தை அதர்மமாகவும் -இப்படி ஸர்வார்த்தங்க ளையும் விபரீதங்களாகவும் நிஸ்ஸயிக்கை என்றும் கீதாச்சார்யன் கீத உபநிஷத்திலே புத்தி த்ரை வித்யத்தை அருளிச் செய்தான் இறே

இப்படி புத்தி லக்ஷணமான மஹானை ஸ்வ காரணமான ப்ரதான தத்த்வம் ஆவரிக்கும் -அங்குர உத்பாதகமான பீஜத்தை அதனுடைய த்வக்கு -தோல் -ஆவரித்து இருக்குமா போலே -அவ்யக்தத்தாலே ஆவ்ருத்தமான மஹத் தத்துவத்தில் நின்றும் அபிமான கார்ய உன்னேயமான அஹங்காரம் உத்பன்னமாம் –
இவ் வஹங்காரம் அபிமான ஹேதுவாகையாவது -தேஹாத்ம அபிமாநாதிகளான அதஸ் மிம்ஸ் தத் புத்தியை ஜநிப்பிக்கை
இவ் வஹங்காரம் தான் வைகாரிகஸ் தேஜஸஸ் ச பூதாதிஸ் சைவ தாமஸ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-35- என்று ஸாத்விக ராஜஸ தாமஸ ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும்
தைஜஸம் என்றும்
பூதாதி என்றும்
மூன்று வகையாய் இருக்கும்
ஏவம் விதமான அஹங்காரத்தை ஸ்வ காரணமான மஹத் தத்வம் ஆவரித்து இருக்கும்
குண க்ருதமான த்ரை வித்யத்தை யுடைத்தான மஹத் தத்துவத்தால் உண்டான ஆவரணம் இறே அஹங்கார த்ரை வித்யத்துக்கு ஹேது

இதில் வைகாரிகமாவது -ஸாத்விக -அஹங்காரமாகையாலே இதில் நின்றும் சத்த்வ கார்யமான லகுத்தவ ப்ரகாஸகாத்வங்களை உடைத்தான இந்த்ரியங்கள் உத்பன்னமாம்
ஸாத்விக அஹங்காரத்தில் நின்றும் –இத்யாதி கபாட –
இந்த்ரியங்களை -தைஜஸாநி இந்த்ரியாண்யாஹு தேவா வைகாரிகா தச –ஏகாதஸம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-49- என்று வைகாரிக -தேவாதிஷ்டிதங்களாகையாலே தேவ ஸப்த இந்த்ரி யங்கள் பதினொன்றும் தைஜஸமான ராஜஸ அஹங்கார கார்யமோ -வைகாரிகமான ஸாத்விக அஹங்கார கார்யமோ என்று மத பேதத்தாலே விகல்பித்து வைகாரிக கார்யங்கள் என்று ஸ்வ ஸித்தாந்தத்தாலே ஸ்ரீ பராசர பகவான் நிஸ்ஸயிக்கையாலே இந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்கார கார்யங்களாகையாலே நையாயிக மர்யாதையாலே பூத விசேஷ பரிணாமங்களும் அல்ல என்னும் இடம் ஸம் பிரதிபன்னம்

இவ் விந்த்ரியங்களுக்கு இதிஹாஸத்திலே பூத சர்க்கம் சொல்லுகிற இடம் -பாரதம் சாந்தி -291-10-11-பூதங்களால் உண்டான ஆப்யாயந மாத்ரத்தைப் பற்ற இந்த்ரியங்கள் தான் ஞான இந்த்ரியங்கள் என்றும் கர்ம இந்த்ரியங்கள் என்றும் இரண்டு
1- அதில் ஞான இந்த்ரியங்களாவன -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்கள் ஆகிற விஷய பஞ்சகத்தையும் ப்ரதி நியாமாய்க் கொண்டு க்ரஹிக்கிற ஸ்ரோத்ர -த்வக் -சஷு ர் -ஜிஹ்வா -கிராணங்கள் என்கிற ஐந்தும்
2-கர்ம இந்த்ரியங்களாவன -வசன -தான -கமன -மூத்ர -புரீஷ நிஸ் சரண ஹேதுவான வாக் -பாணி -பாத -பாயூ பஸ்தங்கள் என்கிற ஐந்தும் -ஸப்தாதி பஞ்சகத்தையம் அடைவே ஒட்டி யிருக்கும் –

ஸ்ரோத்ர க்ராஹ்யமான ஸப்த விஷயமாயும் -த்வக் இந்த்ரிய க்ராஹ்யமான ஸ்பர்ச விஷயமாயும் -சஷுர் க்ராஹ்யமான ரூபத்தில் ப்ரவ்ருதஹி ஹேதுவாயும் -ரஸநா விஷய ரஸாஸ்ரயமான ஜலத்தினுடைய நிஸ் சரண ஹேதுவாயும் -க்ராண விஷய கந்த ஆஸ்ரய பிருதிவி யம்சமான அந்நாதிகளில் ருஜீஷோத்ஸர்ஜ்ந ஹேதுவாயும் இருக்கும்

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-

பூநிலாய ஐந்துமாய் -பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
புனல் கண் நின்ற நான்குமாய்-நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
தீநிலாய மூன்றுமாய் -தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
சிறந்த கால் இரண்டுமாய்-சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள
சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்
மீநிலாய தொன்றுமாகி -ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மையாய்-பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய்
நீநிலாய வண்ண –கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும்
நின்னை –சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும்
யார் நினைக்க வல்லீரே –ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர்

மனஸ் ஸூ உபய ஸஹ காரியாகையாலே ஞான இந்த்ரியமுமாய் கர்ம இந்த்ரியமுமாயும் இருக்கும் -உபயாத் மகம் மந -என்று இறே சொல்லுவது –
இந்திரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வ்யஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்

தேஷாம் து அவயவான் ஸூஷ்மான் ஷண்ணாம் அப்யமிதவ் ஜஸாம் -சன்னிவேஸ்ய ஆத்ம மாத்ரா ஸூ ஸர்வ பூதாநி நிர்மமே –மநு -1-16-என்று அணுக்களாகையாலே ஸூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்ம மாத்ரைகளிலே (தன் மாத்ரைகளிலே)பிரவேசிப்பித்து ஸர்வ பூதங்களையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டித்தான் என்று மனு வசனம் உண்டாகையாலே –

இதில் ஸூஷ்மான் -என்கையாலே -அணவஸ் ச -ப்ரஹ்ம ஸூத் -2-4-6- என்கிற ஸூத்ர மர்யாதையாலே இந்த்ரியங்கள் அணு என்றும்
அவயவான் -என்கையாலே இந்த்ரியங்கள் தோறும் வ்யக்தி பாஹுள்யம் உண்டு என்றும்
ஆத்ம மாத்ரைகளிலே கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத் ஸம்ஹாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத் க்ராம தீஸ்வர –க்ருஹீத் வைதாநி ஸம்யாதி வாயுர் கந்தாநி வாசயாத்–கீதை -15-8- என்கிறபடியே சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போதும் இந்த்ரியங்களைக் கிரஹித்து கொண்டு போம் என்று தோற்றுகிறது
ஷண்ணாம் -என்றும் மனஷ் ஷஷ்டாநி என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை -இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே
(ருசி வாசனைகளை இவையே கொண்டு செல்லும்)

(ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6--இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –என்று பூர்வபக்ஷம்–அத்தை நிரசிக்கிறார்-அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –)

இனி பூதாதி ஸப்த வாஸ்யமான தாமஸ அஹங்காரத்தனின்றும் தன் மாத்ரா பஞ்சகமும் -தத் விசேஷமான ஆகாசாதி பூதங்களும் உத்பன்னமாம்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -ஆகாஸாத் வாயுர் -வாயோர் அக்னி -அக்னேர் ஆப அத்ப்ய பிருதிவீ -தைத்த ஆனந்த -1-2- என்று
பரமாத்மாவின் பக்கல் நின்றும் ஆகாசாதி பூதங்கள் க்ரமேண உத்பன்னமாம் என்று ஸ்ருதி சொல்லா நிற்க -தாமஸ அஹங்காரத்தினின்றும் பஞ்ச தன்மாத்திரைகளும் பூதங்களும் உத்பன்னலாம் என்று சொல்லுகிறபடி எங்கனே என்னில்
அஷ்டவ் ப்ரக்ருதய ஷோடஸ விகாரா -என்று அவ்யக்த மஹத் அஹங்காரங்களும் தன் மாத்ராதி பஞ்சகமும் காரணமாகவும் இந்த்ரியங்கள் பதினொன்றும் பூத பஞ்சகங்களும் கார்யங்களாகவும் ஸ்ருதி சொல்லுகையாலும்
மூல ப்ரக்ருதிர் அவி க்ருதிர் மஹதாத்யா ப்ரக்ருதி விக்ருதயஸ் ஸப்த -ஷோடஸ கஸ் ச விகாரோ ந ப்ரக்ருதிர் ந விக்ருதி புருஷ -சாங்க்ய கௌமு -3-என்று சாங்க்யன் தத்வ விபாகம் சொல்லுகிற இடத்தில் மூல ப்ரக்ருதி ஒன்றின் கார்யாமன்றியிலே தான் எல்லாவற்றுக்கும் காரணமாய் இருக்கையாலே ப்ரக்ருதி என்றும் மஹதாதி சப்தகமும் ப்ரக்ருதி காரியமாய் ஒன்றுக்கு ஓன்று காரணமாயும் கார்யமாயும் உண்டாய் இருக்கையாலே ப்ரக்ருதி விக்ருதிகளாய் இருக்கும் என்றும்
புருஷன் ஒன்றுக்கு காரணமாய் இருத்தல் காரியமாய் இருத்தல் செய்யாமையாலே ப்ரக்ருதியும் அல்லன் விக்ருதியும் அல்லன் என்று சொல்லுகையாலும் இங்கு தன்மாத்ர உத்பத்தி ஒழிய பூத உத்பத்தி கூடாமையாலும் பூதங்களுக்கு தன் மாத்ரா பூர்வகத்வமும் அவற்றுக்கு அஹங்கார கார்யத்வமும் கொள்ள வேணும் இறே
ஆனால் பரமாத்மாவின் பக்கல் நின்றும் பூதங்கள் உத்பன்னமாம் என்று சொல்லுகிற ஸ்ருதிக்கு தாத்பர்யம் என் என்னில் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமாய் ஸச் ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே ஸகல ஜகத்துக்கும் உபாதானமாகையாலே ப்ரக்ருத்யாதி தத் தத் அவஸ்தா வஸ்திதனான பரமாத்மாவின் பக்கல் நின்றும் தன் மாத்ரா ஸஹிதமான பூத உத்பத்தியைச் சொல்லுகையிலே ஸ்ருதிக்கு தாத்பர்யமாகக் கடவது-

ஆகை யிறே -ததைஷத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி -சாந்தோ -6-2-3- என்று சாந்தோக்யத்திலே காரண வஸ்துவினுடைய ஈக்ஷண அந்வயத்தைச் சொல்லுகிற இடத்தில் -தத் தேஜஸ் ஐக்ஷத -சாந்தோக் -6-2-2-4- என்றும் தா ஆப ஐஷந்த -6-3-2- என்றும் ததன்நமைக்ஷத -என்றும் தேஜோ பன்னங்களான பூதங்களுக்கு (தேஜஸ் அப்பு அன்னம்)ஈஷண அந்வயம் சொல்லிற்று -அநு ப்ரவேஸம் அடியாக தத் தச் சரீர விஸிஷ்டனான பரமாத்ம அந்வய முகத்தாலே இறே -அல்லது அசேதனங்களான இவற்றுக்கு ஸங்கல்ப ரூப ஞானம் ஸம் பாவிதம் அல்ல -ஆகையிறே
ஹந்தாஹமி மாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்மந அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று இந்த அசித் தத்வங்களினுடைய நாம ரூப ஸித்தி அநு ப்ரவேஸ நிபந்தந மேயாகச் சொல்லிற்று
இங்குச் சொன்ன தேஜோ பன்ன மாத்ரங்கள் ஸ்ருத் யந்திரத்தில் சொன்ன ஆகாஸ வாயுக்களுக்கும் அவ் யக்த மஹத் அஹங்காராதிகளுக்கும் உப லக்ஷணம்

தச குணித உத்தரம் ஆவரண ஸப்தகம் -ஒன்றுக்கு ஓன்று தச மடங்கு -ஏழு ஆவரணங்கள் -ஸப்த ஆவரணங்கள்-இமையோர் வாழும் தனி முட்டை -ஷீராப்தி ஆறாவது –

ஏவம் பூதமான தாமஸ அங்காரத்தின் நின்றும் ஆகாசத்தினுடைய ஸூஷ்ம அவஸ்தையான ஸப்த தன் மாத்ரை பிறக்கும்
தஸ்மிம்ஸ் தஸ்மிம்ஸ் து தன் மாத்ரம் தேந தன் மாத்ரதா ஸ்ம்ருதா –தன் மாத்ராண் யவிசேஷாணி அவிசேஷாஸ் ததோ ஹி தே ந சாந்தா நாபி கோராஸ்தே ந மூடாஸ் சா விஸேஷிண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-84-85- என்று அவ்வோ பூத விசேஷங்களினுடைய அவ்யக்தா விசேஷ குணோந் மேஷமான ஸூஷ்ம ஆகாஸத்துக்கு தன் மாத்ரம் என்று பெயர்

தன் மாத்ராண் ய விசேஷாணி என்று இவற்றுக்கு ஸ்தூல அவஸ்தா பூதங்களான பூதங்களைப் போலே சாந்தத்வாதி விசேஷம் தோற்றாமையாலே இவற்றை அவிசேஷங்கள் என்று சொல்லக் கடவது
இந்த ஸப்த தன் மாத்திரத்தில் நின்றும் இதினுடைய ஸ்தூல அவஸ்தையாய் வ்யக்த ஸப்த குணகமான ஆகாஸம் உத்பன்னமாம் -இந்த ஸப்த தன்மாத்ரையும் ஆகாஸத்தையும் பூதாதியான தாமஸ அஹங்காரம் ஆவரிக்கும் -இப்படி தாமஸ அஹங்கார ஆவ்ருதமான ஸ்தூல ஆகாஸ ஸஹ க்ருதமாய்க் கொண்டு விக்ருதமான ஸப்த தன் மாத்ரையில் நின்றும் ஸ்பர்ச தன்மாத்ரை உத்பன்னமாம் -இதில் நின்றும் ஸ்பர்ச குணமான வாயுவானது பிறக்கும் -இந்த ஸ்பர்ச தன்மாத்ரையும் வாயுவையும் ஸ்வ காரணமான ஸப்த தன்மாத்திரை ஆவரிக்கும் -ஸப்த தன் மாத்ராத்தாலே
ஆவ்ருதமான வாயு ஸஹ க்ருதமாய் விகரித்த ஸ்பர்ச தன் மாத்திரத்தில் நின்றும் ரூப தன் மாத்ரம் உத்பன்னமாம் -இதில் நின்றும் ரூப குணமான தேஜஸ்ஸூ பிறக்கும் –வாயோர் அக்னி -தைத்த -1-2- என்று தேஜோ விசேஷத்தை ஸ்ருதி சொல்லிற்றே யாகிலும் தேஜஸ் ஸாமான்யத்துக்கும் உப லக்ஷணமாகவே கடவது -இந்த ரூப தன் மாத்ரையும் தேஜஸ்ஸையும் ஸ்வ காரணமான ஸ்பர்ச தன் மாத்திரை ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் தேஜஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரூப தன் மாத்ரையில் நின்றும் ரஸ தன் மாத்ரை பிறக்கும் -அதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் -இந்த ரஸ தன் மாத்ரையும் ஜலத்தையும் ஸ்வ காரணமான ரூப தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் -இத்தாலே ஆவ்ருதமாய் அம்பஸ் ஸஹ க்ருதமாய்க் கொண்டு விகரித்த ரஸ தன் மாத்திரத்தில் நின்றும் கந்த தன் மாத்ரம் உத்பன்னமாம் -அதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வி பிறக்கும் -அந்த கந்த தன் மாத்ரையும் ப்ருதிவியையும் ஸ்வ காரணமான ரஸ தன் மாத்ரம் ஆவரித்து இருக்கும் –
இப்படி உத்தர உத்தர தன் மாத்திரைகளுக்கு பூர்வ பூர்வ தன் மாத்ர ஆவ்ருதத்வமும் பூர்வ பூர்வ பூத ஸஹ காரத்வமும் சொல்லுகிற இது
ஆத்யாத் யஸ்ய குணாநேதான் ஆப்நோதி ச பரஸ்பர -மநு -1-20- என்று உத்தர உத்தர பூத குணங்களிலும் பூர்வ பூர்வ பூத குணங்கள் அநு வர்த்திக்கைக்காக

ஆகையால் ஆகாஸத்துக்கு ஸப்தம் ஒன்றுமே குணமாய்
வாயுவுக்கு ஸப்த ஸ்பர்சங்கள் இரண்டும் குணமாய்
தேஜஸ் ஸுக்கு ஸப்த ஸ்பர்ச ரூபங்கள் மூன்றும் குணமாய்
ஜலத்துக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரசங்கள் நான்கும் குணமாய்
ப்ருதிவிக்கு ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ காந்தங்கள் ஐந்தும் குணமாய்ச் சொல்லப்பட்டது ஆய்த்து

ஆகாஸம் ஸப்த மாத்ரந்து ஸ்பர்ச மாத்ரம் சாமாவிசத் -ரூபம் ததைவ விசத ஸப்த ஸ்பர்ச குணா வுபவ் –ஸப்த ஸ்பர்சஞ்ச ரூபஞ்ச ரஸ மாத்ரம் சாமாவிசத் தஸ்மாச் சதுர் குணாஹ் யாபோ -விசேஷாஸ் சேந்த்ரிய க்ரஹா -விஜ்ஜே யாஸ்து ரஸாத் மிகா –லிங்க -90-43-44-என்கிற புராணாந்தர வசனத்தாலும்
தேப்யஸ் தன்மாத்ரேப் யோ யதா சங்க்யமேகே த்வி த்ரி சது பஞ்சப்யோ பூதான் யாகாஸ நில நல ஸலிலாவ நிரூபாணி பஞ்ச ஜாயந்தே -என்று இதில் அதி க்ருதனான சாங்க்ய வாசஸ்பதி வசனத்தாலும் பூர்வ பூர்வ தன் மாத்ரா ஆவ்ருதத்வம் அவஸ்யம் கொள்ள வேணும்

இப்படி உப பன்னங்களான மஹதாதி விசேஷாந்தமான பதார்த்தங்கள் அண்டமாகப் பரிணமிக்கும் அளவில் பரஸ்பர சங்கங்களானால் அல்லது அண்ட உத் பாதகங்கள் ஆக மாட்டாது
நாநா வீர்யா ப்ருதக் பூதா ததஸ்தே ஸம் ஹிதம் விநா நா ஸக்நுவந் பிரஜா-ஸ்ரஷ்டும் அஸமாகம்ய க்ருத்ஸ்ந ஸ -ஸமேத யாந்யோந்ய ஸம் யோகம் பரஸ்பர சமாஸ்ரயா -ஏக சங்காத லஷ்யாஸ் ச ஸம் ப்ராப்யைக்ய மஸேக்ஷத — மஹ தாத்யா விசேஷாந்தாஹ் யண்ட முத்பாத யந்திதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-52-53-54-என்கிறபடியே
சாந்தத்வ -கோரத்வ -மூடத்வங்களாலே நாநா சக்தி யுக்தங்களாய் ப்ருதக் பூதங்களாய் இருக்கிற இம் மஹதாதி பதார்த்தங்களை பரஸ்பர ஸம்ஹதி யாவது ஏது என்னில்
ஆகாஸாதி பூதங்களுக்கு புராணங்களிலே ஏவம் ஜாதேஷு பூதாநி ப்ரத்யேகம் ஸ்யுர்த் விதா தத –சதுர்த்தா பின்னமேகைகம் அர்த்த மர்த்தம் ததா ஸ்திதம் வ்யோம் நோர்த்தா பாகாஸ் ஸத்வாரோ வாயு தேஜஸ் பயோ புவாம் –அர்த்தாநி யாநி வாயோஸ் து வ்யோம தேஜஸ் பயோ புவாம் -என்று துடங்கி விபஜித்து பஞ்சீ கரணம் சொல்லப்பட்டது -அதாவது
ஆகாசாதி பூதங்கள் ஐந்தினையும் தனித் தனியே இரண்டு கூறாக்கி -அவற்றிலே ஒரு கூறை நாலு கூறாக்கி -அந்தக் கூறுகளை பூதாந்தரங்கள் நாலிலும் விபக்தர்த்தங்களிலே கூட்டி -ஸர்வ பூதங்களிலும் ஸர்வ பூதங்களும் உண்டாம்படி பண்ணுகை
இப்படி பஞ்சீ க்ருதமானாலும் அவிபக்தங்களான அர்த்தங்கள் ப்ரதானங்களாய் நிற்கையாலே ஆகாசாதி பூத பேத வ்யவஹாரத்துக்குக் குறையில்லை
இப் பஞ்சீ க்ருத பூதங்களோடே கூட மஹத் அஹங்காரங்களும் ண்ட உத்பாதகங்களாகச் சொல்லுகையாலே அவற்றினுடைய ஸம்மேளந ஸித்திக்காக சப்தீ கரணம் என்றும் சொல்லுவார்கள் –

(அனைத்து நதிகளும் கங்கையில் கலந்த பின்பும் கங்கை என்ற பெயரிலே ஓடும் -அதே போல் இவை அவற்றின் பெயராலே வ்யவஹாரம் பண்ணக் குறையில்லையே)

ஆனால் தாஸாம் த்ரி வ்ருதம் த்ரி வ்ருதம் ஏகைகாம் கரவாணி –சாந்தோ -6-3-3- என்று சாந்தோக்யத்திலே த்ரி வ்ருத் கரணத்தைச் சொல்லுவான் என் என்னில்
அங்கு தேஜோ அப ந்ந தத்வ த்ரய மாத்ர உத்பத்தியைச் சொல்லிற்று ஆகையாலே அவ்வளவிலே பர்யவசித்தது -ஸ்ருத் யந்தர ஸித்தமான பூதாந்தர உத்பத்தியிலும் ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே இங்கும் ஸித்தம் என்று கொள்ள வேணும் -ஆகையாலே தேஜோ ஆபந்ந ஸ்ருஷ்டி தத்வாந்தரங்களுக்கும் உப லக்ஷணமானாப் போலே த்ரி வ்ருத்த கரண கதனமும் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம் என்றதாயிற்று

அண்டத்துக்குள்ளே மஹதாதி காரியங்களும் காண்கையாலே மஹதாதி பதார்த்தங்கள் எல்லாவற்றுக்கும் ஸம் மேளனம் அவர்ஜநீயம் -ஆகையாலே பூதேப்யோண்டம் மஹா புத்தே ப்ருஹத் ததுதகே ஸயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-55-என்று
பூதங்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் -அது உதகத்திலே கிடக்கும் –
அப ஏவ ஸ ஸர்ஜாதவ் தாஸூ வீர்யமபாஸ்ருஜத்–ததண்ட மபவத்தை மம் ஸஹஸ்ராம் ஸூ ஸம ப்ரபம் –மனு -1-8 என்று
அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பன்னமாம் என்று மனு பகவான் சொன்னவிடம் பூதாந்தரத்துக்கும் உப லக்ஷணம் -அதாவது
பூர்வ பூதங்களோடே ஸம் ஸ்ருஷ்டமாய் பிருத்வியும் தன் அகவாயிலே லீனையாகக் கிடக்கிற ஜல தத்துவத்தில் நின்றும் அண்டம் உத்பன்னமாய் அதிலே கிடக்கும் என்று -என்றபடி

இந்த அண்டம் க்ரமேண பரிணமிக்குமோ -ஏக காலத்திலே பரிணமிக்குமோ என்னில் -ஒரோருப்படையாக -இட்டு அகமெடுக்குமா போலே க்ரமேண பரிணமிக்கை யன்றியே -தத் க்ரமேண விவ்ருத்தம் ஸத் ஜல புத் புத வத் சமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2–55- என்று நீர்க் குமிழி போலே ஏக காலத்திலே உத்பன்னமாம்

இப்படி அண்டம் உத்பன்னமாம் போது -அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்ய யுதாநி ச -ஈத்ருஸா நாம் ததா தத்ர கோடி கோடி சதாநி ச – ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27- என்று புராணங்களிலே பரஸ்பர ஸத்ருசமாய்க் கொண்டு அஸங்கயாதமான அண்டங்கள் –
ஏக காலே அபி ஸ்ருஜ்யந்தே ஸம் ஹ்ரூயந்தே ச பூர்வ வத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-17- என்கிற படியே க்ரமத்தாலே தனித் தனியே உத்பத்தி விநாசங்கள் உண்டாகை யன்றியே யுகபதேவ ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை உடையவையாய் இருக்கும்

இவ் வண்டத்துக்குள்வாயிலே பரிணதங்களான ஆகாசாதி பூதங்களை அதிஷ்டித்து (14)லோகங்களை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் தேவாதி சதுர்வித பூத விபாகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகவும் கர்ம வஸ்ய ஸமஸ்த சேதன ஆஸ்ரய சரீரனாகையாலே பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவானவன்(ஆதார ஆதேய பாவம் மட்டுமே
அப்ருதக் ஸித்த விசேஷணம் பரமாத்மா ஒருவன் இடமே
மூன்று லோகம் அழியும் பொழுது கீழ் 7 லோகங்களும் இந்த மூன்று லோகங்களும் நான்முகன் இடம் ஆஸ்ரயம் என்றவாறு)தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதா மஹ -மநு -1-9- என்கிறபடியே ஜகத் உத்பாதகரான ப்ரஜாதி ப்ரப்ருதிகளுக்கும் உத்பாதாகனாகையாலே பிதா மஹ ஸப்த வாச்யனாயக் கொண்டு வ்யஷ்டி ஸ்ருஷ்டி யர்த்தமாக பகவத் ஸங்கல்பத்தாலே உத்பன்னனாம்

இப்படி அண்ட உத்பன்னனான ப்ரஹ்மாவுக்கு பத்ம ஜத்வாதி சொல்லுகிற பிரமாணங்கள் ஆத்ய ஸ்ருஷ்டிகளில் உத்பத்தி பேத விவேக தையாலே யாகக் கடவது
இந்த ப்ரஹ்ம உத்பத்தி பர்யந்தையான மஹதாதி சமஷ்டி ஸ்ருஷ்டி ஸத்ய ஸங்கல்பனான ஸர்வேஸ்வரனுடைய பஹு ஸ்யாம் -சாந்தோ -6-3-2- என்கிற அவ்யவ ஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
ப்ரஹ்மோ பஞ்ஞமான வ்யஷ்டி ஸ்ருஷ்டி தத் அந்தர்யாமியான பரமாத்மாவினுடைய வ்யவஹித ஸங்கல்பத்தாலே யாகக் கடவது
ஆகை யாலே –
தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11
ப்ரஹ்மணோ அஸ் ருஜத் ப்ரபு
மாம் த்வம் பூர்வம் அஜீஜந -உத்தர காண்டம் -104-4
என்று பகவத் ஸ்ருஷ்டனாக பிரமாணங்கள் சொல்லுகின்றன இறே

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
–3–

இதி தத்துவ நிரூபணே சமஷ்டி ஸ்ருஷ்ட்டி நிரூபணம் நாம த்விதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –

———————

த்ருதீய அதிகாரம்- – 14 லோகங்கள் – 7 த்வீபங்கள்
1-சதுர் தச புவந நிர்ணயம் -ஸப்த பாதாள நிரூபணம்
2-அநந்தஸ்ய பாதாளாதி தாரகத்வ கதநம்
3-தஸ்மாத் காலாக்நி ருத்ர உத்பத்தி கதநம்
4-பூ மண்டல ஸ்வரூப கதநம்
5- பூ மண்டல உபரி வர்த்தமாந மேரு ஸ்தான நிரூபணம்
6-மேரோ பார்ஸ்வஸ்த வர்ஷ பர்வத நாமாதி கதநம்
7-பாரத வர்ஷாதி நிரூபணம்
8- பாரத வர்ஷ ஸ்ரேஷ்டதாக கதநம்
9-பாரத வர்ஷ நவ பேதக கதநம்
10-ப்லஷ த்வீப வர்ண நம்
11-ஸால் மலித்வீப வர்ணநம்
12-குஸ த்வீப வர்ணநம்
13-கிரௌஞ்ச த்வீப வர்ணநம்
14-ஸாக த்வீப வர்ணநம்
15-புஷ்கர த்வீப வர்ணநம்
16-பஞ்சாஸத் கோடி பூ மண்டல நிர்ணயம்
17-யோஜநாதி சங்க்யா நிரூபணம்

இப்படி உத்பன்னரான ப்ரஹ்மாதி சேதனர்க்கு அந்தர்யாமியாய் ஹ்ருதயத்திலே நின்று ஸங்கல்ப ரூப ஞாநிதிகளை ஜநிப்பித்து ஸ்ருஷ்ட்யாதிகளிலே பிரவர்த்திகைக்கையாலே ஸர்வ ப்ரவ்ருத்திக்கும் ஹேது ஸர்வேஸ்வரனே என்னக் குறையில்லை
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநம் அபோ ஹநஞ்ச –கீதா -15-15- என்று
ஸகலருக்கும் சரீரியாய்க் கொண்டு ஸர்வ காரியங்களுக்கும் ப்ரவரத்தகன் தானேயாக அருளிச் செய்தான் இறே

இவ் வண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் ஏது என்னில்
பத்தாத்மாக்களுடைய கர்மம் அடியாக போக்ய போக உபகரண போக ஸ்தானமாம் படி அண்டத்தை பரிணமிப்பிக்கை -அதாவது
தஸ்மிந் அண்டே ஸ பகவான் உஷித்வா பரி வத்ஸரம் -ஸ்வயமேவ ஆத்மநோ த்யாநாத் ததண்ட மகரோத் த்விதா –தாப்யாம் ஸ சகலாப் யாஞ்ச திவம் பூமிஞ்ச நிர்மமே -மத்யே வ்யோம திஸஸ் ஸ ஷ்டாவ் அபாம் ஸ்தாநஞ்ச ஸாஸ்வதம் -மநு -1- என்று
மநுவும் அண்டாந்தர் வர்த்தியான லோக விபாகத்தையும் ஆகாஸம் அஷ்ட திக்குகள் ஸமுத்ரங்கள் இவற்றினுடைய விபாகத்தையும் ஸ்ரஷ்டாவான பகவான் ஸ்ருஷ்ட்டித்தான் என்றான் இறே-

பவ்வ நீருடை ஆடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் ஏதும் தோளா அண்டம் திருமுடியா நின்றான் பக்கல் செல்ல கிற்பீர் –திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே

1-இவற்றில் போக்ய அநு ரூபமான ஸூக துக்க அநுபவத்துக்கு விஷயமாகையாலே போக்யம் என்பது சப்தாதிகளை
2-இவ்வநுப ரூப ஞானங்களுக்கு உபகரணமாகையாலே போக உபகரணம் என்பது இந்த்ரி யாதிகளை
3-இந்த போகத்துக்கு அதிகரணங்கள் ஆகையாலே போக ஸ்தாநங்கள் என்கிறது தேவாதி ஸரீரங்களையும் -சதுர் தச புவனங்களையும்

இஸ் சரீர விஸிஷ்ட பத்தாத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமான சதுர் தச புவனங்களாவன
பூமிக்குக் கீழ் அண்ட கபாலத்துக்கு மேலாக 83 100 50000 யோஜனை உயர்த்தி யுடைத்தான கர்ப்போதகத்தின் மேலே
ஸப்ததிஸ் து ஸஹஸ்ராணாம் த்விஜ உச்சாராயோ அபி கத்யதே -தச ஸாஹஸ்ர மேகைகம் பாதாளம் முநி சத்தம –
அதலம் விதலஞ்சைவ நிதவஞ்ச கபஸ்திமத் மஹாக்யம் ஸூதலம் சாக்ர்யம் பாதலாஞ்சாபி ஸப்தமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-என்கிறபடியே
ஓரொன்று தனித்தனியே 16000 யோஜனத்தளவு உயர்த்தியையும் பரப்பையும் உடைத்தாய்
தைத்ய தாநவ பந்நக ஸூ பர்ணாதிகள் வர்த்திக்கும் தேசமாய்
ஸிதா க்ருஷ்ண ருணா பீதா சர்க்கராஸ் ஸை காஞ்சநா -பூமயோ யத்ர மைத்ரேய வர ப்ரஸாத ஸோபிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5-3-என்கிறபடியே
ஸூத்த வர்ணங்களாயும் -க்ருஷ்ண வர்ணங்களாயும் அருண வர்ணங்களாயும் பீத வர்ணங்களாயும் வாலுகா மயமான (
கூழாங்கல்)சர்க்கரா ரூபங்களாயும் ஸைல ரூபமாயும் ஸூவர்ண மயமாயும் இருக்கிற ஸ்தல விசேஷங்களை உடையவையாய் விலக்ஷணமான மாளிகைகளாலேயும் ப்ரஸாத தோரணங்களாலேயும் அலங்க்ருதமாய்
ஸ்வர்க்காதிகளிலும் காட்டில் நிரதிசய போக்யமாய்
1- அதலம் என்றும்
2- விதலம் என்றும்
3- நிதலம் என்றும்
4-கபஸ்தி மத் -என்றும் சொல்லப்பட்ட தலாதலம் என்றும்
5-மஹாதலம் என்றும்
6- ஸூ தலம் என்றும்
7-பாதாலம் என்றும்
பேரை யுடைத்தான அதோலங்கள் ஏழாய் இருக்கும்

இந்த ஸப்த பாதாலங்களுக்குக் கீழே -30 000 யோஜனை அளவில்
பாதாலாநாம் அதஸ் சாஸ்தே விஷ்ணோர்யா தாமஸீ தநு -சேஷாக்யா தத் குணாந் வக்தும் ந ஸக்தா தைத்ய தாநவா யோ அநந்த பட்யதே ஸித்தை தேவ தேவர்ஷி பூஜித யஸ் ஸஹஸ்ர ஸிரா வ்யக்த ஸ்வஸ்திகா மல பூஷண -பணா மணி ஸஹஸ்ரேண யஸ் ஸ வித்யோதயன் திச —-ஸ பிப்ரத் ஸேகரீ பூதம் அஸேக்ஷம் ஷிதி மண்டலம் –ஆஸ்தே பாதால மூலஸ்த –ஸேஷோ அசேஷா ஸூரார்ச்சித –ஸ்ரீ விஷ்ணு புரா -2-5–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்
பாதாளே ப்யோப் யத ஸ்தாத் த்வாத்ரிம் ஸத் ஸஹஸ்ர யோஜநோ -(32000-)அநந்த -பாகவதம் -5 ஸ்கந்தம் -இவ் வாக்யம் ஸ்ரீ மத் பாகவதத்தில் காணவில்லை
தஸ்ய மூல தேஸே த்ரிம்ஸத் யோஜந ஸாஹஸ்ராந்தர ஆஸ்தே யா வை கலா பகவத தாமஸீ சமாக்யாதா நந்த – என்று 5-24-1- இருக்கின்றன
பாதாளாநாம் –இதி பூர்வோ தாஹ்ருதஸ் லோக வ்யாக்யானத்திலும் தஸ்ய இத்யாதி வாக்யத்தையே ஸ்ரீ விஷ்ணு சித்தரும் எடுத்து அருளினது –
இவ் வாக்கியத்தில் அதிக சங்க்யா தோஷமும் காண்கிறது -சரியானபடி கண்டு கொள்க என்று ஸ்ரீ பாகவதத்தில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனுடைய தாமஸ மூர்த்தியாய் அநந்த ஸப்த வாஸ்யனான சேஷனானவன் தன் ஆயிரம் பணாங்களாலும் பாதாள ஸஹிதமான அசேஷ பூதளத்தையும் ஒரு புஷ்ப மாலையைத் தரிக்குமா போலே அநாயாசேன தரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும்
கல்பாந்தே யஸ்ய வக்தேரேப்யோ விஷாநல ஸிகோஜ்வல – சங்கர்ஷணாத் மகனான காலாக்நி ருத்ரனானவன் த்ரைலோக்ய ஸம்ஹார அர்த்தமாக இந்த மஹா ஷேத்ரனுடைய முகத்தில் நின்றுமிறே உத்பன்னனாய் ஜகத்தை ஸம் ஹரிப்பது –

இது வரை கீழே உள்ள லோகங்களை விவரித்தார்
இப் பாதாளங்களுக்கு மேலே 70000 யோஜனம் அகலத்தை யுடைத்தாய் ஸப்த த்வீப சாகர பர்வதாதி விஸிஷ்டமாய் பாதாசாரிகளான மனுஷ்யாதிகள் வர்த்திக்கும் தேசமாய் பத்மகாரமான பூ மண்டலம் இருக்கும்
யத் தத்தி கர்ணிகா மூலம் இதி ஸத் ஸம் ப்ரகீர்த்திதம் -தத் யோஜந ஸஹஸ்ராணாம் ஸப்த தீநாமத ஸ்ம்ருதம் -இதி வாயு புராண யுக்தே
இந்த பூ பத்மத்துக்கு கர்ணிகை போல் கனக மயமான மஹா மேரு பர்வதமாய் இருக்கும் – இம்மேரு பூமிக்கு மேலே 84000 யோஜநம் உயர்த்திய யுடைத்தாய் -பூமிக்கு உள்ளே 16000 புதைந்து ஆக ஒரு லக்ஷம் யோஜனமாய் நிற்கும் -முப்பத்து ஈராயிரம் யோஜனை பரப்பை யுடைத்தாய் 16000 யோஜனை அடிப்பரப்பை யுடைத்தாய் அச்சு வெல்லத்தை அடி மேல் பண்ணினாப் போலே சதுரஸ்ரமுமாய் இருக்கும் -இம்மேருவுக்கு தெற்கே நிஷதம் என்றும் ஹேம கூடம் என்றும் ஹிமவான் என்றும் மூன்று வர்ஷ பர்வதமாய் இருக்கும் –
மேருவுக்குக் கிழக்கே மால்யமான் என்றும் தெற்கே கந்த மாதநம் என்றும் வர்ஷ பர்வதங்களாய் இருக்கும் –
அதற்குத் தெற்குக் கடை எல்லை பாரத வர்ஷம் –
அதுக்கு அநந்தரம் கிம் புருஷ வர்ஷம்
அதற்கு அநந்தரம் ஹரி வர்ஷம்
மத்யமான மேருவைச் சூழ இலா வ்ருத வர்ஷம்
மேருவுக்கு வடக்கே இலா வ்ருதத்தை அண்டை கொண்டு ரம்ய வர்ஷம்
அதுக்கு அநந்தரம் ஹிரண்மய வர்ஷம்
அதுக்கு அநந்தரம் கடை எல்லை உத்தர குரு வர்ஷம்
மேருவுக்குக் கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேது மூல வர்ஷம்
என்று ஒன்பது வர்ஷமாய்
ஜம்பூ த்வீப ப்ருதிவீ நவ கண்ட மாய் இருக்கும் –
இவற்றிலே இலா வ்ருதம் பத்ராஸ்வம் கேது மூலம் ஒழிந்த ஆறு வருஷமும் ஓரொன்றும் ஒன்பதினாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் இருக்கும் –

மத்யமான இலா வ்ருதம் மேருவைச் சூழ நாலு திக்கும் 9000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் மேரு ஸ்தானத்தோடே ஆயாம விஸ்தாரம் 34000 யோஜனையாய் சதுரஸ்ரமுமாய் இருக்கும் –
கிழக்கு பத்ராஸ்ரவமும் மேற்கு கேது மூலமும் கீழ் மேல் முப்பத்தீராயிரம் யோஜனை நீளமாய் இருக்கும்
பத்ராஸமம் கேது மூலமுமான வர்ஷங்களில் வர்ஷ பர்வதமான மால்யவானும் கந்த மாதநமும் ஆயிரமாயிரம் யோஜனை உயர்த்தியையும் நீளத்தையும் உடைத்தாய் இருக்கும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் 34000 யோஜனை நீளத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
இதில் முதல் சொன்ன வர்ஷ பர்வதங்களின் நடுவாக மஹா மேருவை அணைந்த ஹேம கூடமும் ஸ்வேத பர்வதமும் 90000 –90000- யோஜனை நீளத்தை யுடையவையாய் இருக்கும்
இவ்வாறு வர்ஷ பர்வதங்களும் தனித்தனியே 2000 யோஜனை உயர்த்தியையும் பரப்பையும் யுடையவைகளாய் இருக்கும் –
இந்த மஹா மேருவில் நான்கு எல்லைகளிலும் 16000–16000-யோஜனை உயர்த்தியை யுடைத்தாய் இருக்கும்
பூர்வே து மந்தரஸ் தஸ்ய தஷிணே கந்த மாதந –விபுல பஸ்சிமே பார்ஸ்வே ஸூ பார்ஸ்வஸ் சோத்தரே ஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புரா -3-2-18- என்கிறபடியே
மந்த்ர பர்வதம் கிழக்காய் -கந்த மாதநம் தெற்காய் -விபுலம் மேற்காய் ஸூ பார்ஸ்வம் வடக்காய் இருக்கும்
இவை கீலம் போலே மஹா மேருவை எல்லை யறாமல் பற்றி நிற்கையாலே விஷ்கம்பங்கள் (
தடுப்புக்களாய்)என்று மேரோ தாரகா கீலா விஷ்கம்பா –பேராய் இருக்கும்
இந்த பர்வதங்களின் மேலெ 1500 யோஜநம் உயர்த்திய யுடையவைகளாய்-அம் மலைத் தலைகளுக்குக் கோடித்த தண்டு போலே அலங்கார ரூபங்களாய் இருப்பனவான நாலு வ்ருக்ஷங்களாய் இருக்கும்
அவைகளில் கிழக்குத் திக்கிலது கதம்பம் -தெற்கு திக்கிலது ஜம்பு -மேற்கு திக்கிலது அரசு -வடக்குத் திக்கிலது ஆலை
இவைகளில் கிழக்கில் கதம்பையாவது ஸஹஸ்ரா லம்ப ஸாகா நிசயங்களாலும் மஹா ஸ்கந்தங்களாலும் உப ஸோபிதமாய் மஹா கும்ப ப்ரமாணங்களாய் விகசித கேஸரங்களாய் -ஸர்வ கால ஜங்களாய் -மஹா கந்தங்களான புஷ்ப வாஸனையாலே 1000 யோஜநம் பரிமிளிதமாய் பத்ராஸ்வ தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்

தெற்குத் திக்கிலான ஜம்பு வ்ருக்ஷமானது மஹாஸாகோப ஸோபிதமாய் ஸதா புஷ்ப் பலா கீர்ணமாய் ம்ருது ஸ்வாதுக்களாய் மஹா கஜ ப்ரமாணமான பழங்கள் மலைத் தலையில் விழுந்து உடைத்து சாறாய் ஆறாய் ஜம்பூ நதீ என்று பேராய மேருவைச் சூழ ப்ரவஹியா நிற்கும்
அதின் ரஸத்தை பாநம் பண்ணுகிற அத் தேச வாசிகளுக்கு -நஸ்வேதோ நச தவ் கந்த்யம் ந ஜரா நேந்த்ரியக்ஷய -என்றும்
வேர்ப்பும் -வியர்வையும் -தவ்ர் கந்த்யமும் ஜரையும் இந்த்ரிய க்ஷயமும் உண்டாகாது
அந்த ரசத்தாலே அந்தக் கரையில் ம்ருத்து ஸூத்த ஜாம்பூநதம் என்கிற பொன்னாய் ஸித்தாதிகளுக்கு பூஷணமாகா நிற்கும்
இந்த ஜம்பு வானது ஜம்பூ த்வீ பத்தினுடைய நாமத்துக்கு ஹேதுவாம் படி ப்ரதாநமாய் இருக்கும் –

மேற்கு திக்கிலான வ்ருக்ஷமானது -மஹாச்ச் ராய மஹாஸ்கந்தங்களை யுடைத்தாய் ஸர்வ காலீந மஹா கும்ப பிரமாண பலவத்தாய் கேது மூல தேசத்துக்கு கேது வ்ருஷமாய் இருக்கும்
உத்தர திக்கில் வட வ்ருஷமும் விபுலோச்ச் ராய ஸ்கந்தோப ஸோபிதமாய் ப்ரவாள ஸத்ருஸ மஹா கும்ப பிரமாண பலங்களை யுடைத்தாய் உத்தர குரு தேசத்துக்கு கேது வ்ருக்ஷமாய் இருக்கும்

இந்த விஷ்கம்ப பர்வதங்கள் நாலுக்கும் புறம்பே -பூர்வம் சைத்ரரதம் நாம தக்ஷிணம் கந்த மாதநம் -வைப்பராஜம் பஸ்சிமே தத்வ துத்தரே நந்தநம் வநம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-25- என்கிறபடியே
கிழக்கே சைத்ரரதம் என்றும் -தெற்கே கந்த மாதநம் என்றும் மேற்கே வைப்ராஜம் என்றும் வடக்கே நந்த நவநம் என்றும் நாலு வனமாய் இருக்கும்
அதுக்குப் புறம்பாக -அருணோ தந்து பூர்வேண தஷிணே மாநஸம் ஸ்திதம் -சிதோதம் பஸ்சிமே மேரோ -மஹா பத்ரம் ததோத்தரே –லிங்க புரா -பு பூ 49-38- என்கிறபடியே
கிழக்கிலது அருணோதம் என்றும் தெற்கே மாநஸ ஸரஸ் என்றும் மேற்கே ஸிதோதம் என்றும் -வடக்கே மஹா பத்ரம் என்றும் நாலு சரஸ்ஸாய் இருக்கும்
அருணோத ஸர பூர்வம் தக்ஷிணம் மாநஸம் ஸ்ம்ருதம் -ஸிதோதம் பஸ்சிம ஸரோ மஹா பத்ரம் ததோத்தரம் – என்று லிங்க வாராஹாதி புராண பாடம் –

இதுக்குப் புறம்பே சிதாந்த குமுதஸ் சைவ கர வீரா சலோத்தம மஹா நிலோத குஞ்ஜாஸ் ச மாஷாக்யஸ் சாச லோத்தம -வீருங்கோ மணி ஸ்ருங்கஸ் ச ஸ பிந்துர் மந்தரஸ் ததா வேணுமாம் ச ஸ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வதா -லிங்க பு பூ -43-42-43–
சிதாம்பஸ் ச குமுத் யாம்ஸ் ச குரரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்க ப்ரமுகா மேரோ பூர்வத கேஸராஸவா இதி -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-27-
பாட சிதாந்தஸ் ச குரண்டஸ் ச குரரஸ் சாசலோத்தம விகாரோ மணி சைலஸ் ச வ்ருஷ வாம்ஸ் சாச லோத்தம – மஹா நீலோத ருசக ஸ பிந்துர் தர்து ரஸ் ததா -வேணுமாம்ஸ் ச ஸூ மேகஸ் ச நிஷதோ தேவ பர்வத -இதி லிங்க பாட -49-1-
சிதாந்தஸ் ச குமத்வாம்ஸ் ச குவரீ மால்யவாம்ஸ் ததா -வை கங்கோமணி ஸைலஸ் ச ருக்ஷவாம்ஸ் சாச லோத்தம —-ஸ பிந்துர் மந்தரஸ் ததா -இதி கௌர்ம புராண பாட -பூ -44-
சிதாந் தஞ்ச குமுஜ் ஐஸ் ச ஸூ வீரஸ் சா ச லோத்தம -வி கங்கோ மணி ஸீலஸ் ச வ்ருஷபஸ் சா ச லோத்தம –இதி வாயு புராண பாட -பூ -36-18-
அந்யத்ராபி பஹு தா பாடாந்தர முப லப்யதே நாம பேத மத்ரேண கோ அபி ந விரோத இதி பாதி ஏவம் அந்யத்ர அபி த்ரஷ்டவயம் -என்கிறபடியே
சிதாந்தம் முதலான இப் பர்வதங்கள் மேருவுக்குக் கிழக்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும்

மானஸ சரஸ்ஸுக்குப் புறம்பே -ஸைலஸ் த்ரி ஸிரஸஸ் சைவ சிகரஸ் சா ச லோத்தம கபிங்கஸ் ச பதங்கஸ் ச ருசகஸ் சைவ ஸாநுமாந் -தாம் ராபஸ் ச விசாலஸ் ச ததா ஸ்வேதோதரோ கிரி -ஸூ மூலோ வஸூ தாரஸ் ச ரத்ந தாரஸ் ச பர்வத -ஏக ஸ்ருங்கோ மஹா மூ ஸூலோ கஜஸைல பிஸாசக –பஞ்ச ஸைலஸ் ச கைலாஸோ ஹிமவாம்ஸ் சா ச லோத்தம –லிங்க புரா -49-46-47-48-வாயு ச பூ 36-22-24- என்கிறவை தெற்கே கேஸர பர்வதங்களாய் இருக்கும் –

ஸிதோ தத்துக்குப் புறம்பே கபில பிங்க லோ பத்ர ஸூரஸஸ் ச மஹா சல குமுதோ மது மாம்ஸ் சைவ அஞ்ஜநோ மகுடஸ் ததா -க்ருஷ்ணஸ் ச பாண்டரஸ் சைவ ஸஹஸ்ர சிகரஸ் ததா -பாரிஜாதஸ்ய சைலேந்திர ஸ்ரீ ஸ்ருங்கஸ் சா ச லோத்தம –லிங்க புரா பூ 49-50-51- என்கிற கேஸரபர்வதங்கள் மேருவுக்கு மேற்காய் இருக்கும்

மஹா பத்ரத்துக்குப் புறம்பே -சங்க கூடோ மஹா சைலோ வ்ருஷ போஹம் ஸ பர்வத நாகஸ் ச கபிலஸ் சைவ இந்த்ர சைலஸ் ச ஸா நுமாந் -நீல கண்டக ஸ்ருங்கஸ் ச சதசிருங்கஸ் ச பர்வத புஷ்கரோ மேக சைலஸ் ச விரஜஸ் சா ச லோத்தம -ஜாருதிஸ் ச த்ரி ஸ்ருங்கஸ் ச இத்யேத உத்தராஸ் ஸ்ம்ருதா -லிங்க புரா -49-54-55- என்கிற கேஸர பர்வதங்கள் மேருவுக்கு வடக்காய் இருக்கும் –

இவற்றில் நிஷதாதிகள் வர்ஷ பர்வதங்களாகச் செய்தேயும் கேஸரங்களிலும் அந்தர் பவிக்கும்-இவ்வர்ஷ பர்வதங்கள் அவ்வோ வர்ஷ பர்வதங்களுக்கு எல்லைகளாய் இருக்கும் -இதில் கிழக்கில் மால்யவானும் -மேற்கில் கந்த மாதனமுமாகிற வர்ஷ பர்வதங்கள் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை உடைத்தாய் இருக்கும்
பத்ராஸ்வமும் பாரதமும் கேது மூலமும் உத்தர குருவும் மர்யாதா சைலங்களுக்குப் புறம்பான இந்நாலு வர்க்ஷ பர்வதங்களும் பூ பத்மத்துக்கு சதுர் தளங்களாய் இருக்கும் மர்யாதா சைலங்களாவன -கீழை திக்கில் பத்ராஸ் வத்துக்கு மர்யாதைகளான வர்ஷ பர்வதமான மால்யவானோபாதி ஜடரமும் தேவ கூடமும் ஆநீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளத்தை யுடைத்தாய் இருக்கும் -தெற்குத் திக்கில் கந்த மாதநமும் கைலாசமும் ஹிமவானோபாதி இரண்டு கடலுக்கு நடுவு கீழை எல்லை இரண்டு கடலையும் தட்டி-தாண்டி – 80000 யோஜநம் நீளமாய் இருக்கும் -மேலை திக்கில் நிஷதமும் பாரியாத்ரமும் வர்ஷ பர்வதமான கந்த மாத நத்தோபாதி ஆ நீல நிஷதங்களுக்கு நடுவு தென் வடக்கிலுள்ள நீளமாய் இருக்கும் -இதில் கிழக்கு மேற்கு தென் வடக்கு நீளமான பர்வதங்கள் 34000 யோஜனமாய் இருக்கும் வடக்குத் திக்கில் மர்யாத சைலங்களான த்ரி ஸ்ருங்கமும் ஜாருதியும் கீழை மேலை இரண்டு கடலுக்கு நடுவு ஸ்ருங்க வானோடொத்த 80000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் தட்டி தாண்டி இருக்கும்

பத்ராஸ் வத்துக்கு கேது வ்ருக்ஷமான கதம்பத்தடியிலே ஹயக்ரீவ ரூபியாயும் -பாரத வருஷத்துக்கு கேது வ்ருஷகமான ஜம்புவின் அடியிலே கூர்ம ரூபியாயும் -கேது மூலத்துக்கு கேது வ்ருக்ஷமான பிப்பலத்தடியில் வராஹ ரூபமாகவும் உத்தர குருவுக்கு கேது வ்ருக்ஷமான ந்யக்ரோதத் தடியிலே மத்ஸ்ய ரூபமாயும் ஸர்வேஸ்வரன் ஸமாராதனம் கொண்டருளும் -அல்லாத வர்ஷங்களில் தத் தத் அநு ரூபமான ஸமஸ்த ரூபங்களாலும் ஸமாராதானம் கொண்டு அருளும்

ஏவம் பூதமான பூ பத்மத்துக்கு கர்ணிகாகாரமான மஹா மேருவின் தலையிலே 14000 யோஜநம் பரப்பை யுடைத்தாய் ப்ரஹ்மாவினுடைய படை வீடாய் இருக்கும் -இதுக்கு எட்டுத் திக்கிலும் லோக பாலகராய் இந்த்ராதிகளான எண்மருக்கும் படை வீடாய் இருக்கும் -இதில் ப்ரஹ்மாவின் படை வீட்டைச் சூழ திரி விக்ரமன் திருவடி விளக்கின தீர்த்தமான கங்கை விழுந்து நாலு திக்கிலும்
சிதை என்றும்
அலக நந்தை என்றும்
சஷு என்றும்
பத்ரை என்றும்
நாலு ஸ்ரோதஸ்ஸாய் ப்ரவஹிக்கும்

அதில் கீழைத் திக்கில் -சிதை மலைத் தலைகளால் ஆகாசத்தில் கிளம்பி பத்ராஸ் வத்திலே சென்று கடலிலே பிரவேசிக்கும்
தெற்கில் அலக நந்தை முன்னே த்ருவ பதத்தில் சென்று த்ரை லோக்யத்திலும் வந்து ஊர்தவே மந்தாகிநீ -என்றும் அதோ போகவதீ என்றும் -காம் கதேதி கங்கா என்றும் சொல்லப்பட்டு ப்ரவாஹ த்ரயத்தை யுடைத்தாய் த்ரிபதகையாய் ப்ரவஹித்து பூ லோகத்தில் ப்ரவாஹம் ருத்ரன் தலையிலே விழுந்து ஏழு வகையாய் ப்ரவஹித்து கீழே சகர புத்ரர்களையும் உத்தரிப்பித்துக் கடலிலே பிரவேசிக்கும்
மேலை திக்கில் சஷு வானது பர்வத சிகரங்களாலே கேது மூலத்தில் சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்
வடக்கில் பத்ரையானது பர்வதங்களாலே உத்தர குருவிலே சென்று ஸமுத்ரத்திலே பிரவேசிக்கும்

இம் மஹா மேருவுக்குக் கீழை திக்கிலே கேஸர பர்வதங்களான சிதாந்த குமுத பர்வதங்களின் நடுவே 300 யோஜநம் நீளமாய் 100 யோஜனை அகலமான தொரு த்ரோணி சரச மல பா நயமான ஸ்ரீ ஸரஸ்ஸாய் இருக்கும் – அது த்ரோண பாத்ர (சிவம் த்ரோணம் அளவுகோல்கள்)ப்ரமாணமான புண்டரீக ஷண்டங்களாலும் ஹம்ஸ காரண்ட வாதி பக்ஷி சங்கங்களாலும் விளங்கா நின்று கொண்டு ஸரோ மத்யத்திலே சத ஸஹஸ்ர தள பத்ம வந மத்யே கோடி தள யுக்த ஸ்வர்ண பங்கஜ கர்ணிகார் கூடையாய் ஸாஷாத் லஷ்மி இரா நிற்கும் -அந்த பில்வ வனம் 100 யோஜனை விஸ்தீர்ணமாய் 100 காதம் நீளமாய் ஸாகா ஸஹஸ்ர கலிதார்த்த க்ரோஸ பிரமாண (1 க்ரோசம் 2 மைல்)மஹா வ்ருஷ க்ஷண்ட மஹா கும்ப பிரமாண ஸூகந்தி ஸ்வாது பலவத்தாய் ஸ்ரீ வனம் என்று சொல்லப்படும் -அங்கேயே ஸ்ரீ யானவள் ஸித்த சங்க நிஷேவிதையாய் இருக்கும்

பின்னையும் வைகங்க மணி சைலாந்தரத்திலே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி ஸத ஆயாம யுக்த த்ரோணி விமல பங்கஜ (வெண் தாமரை)வன ஸோபிதமாய் இருக்கும் -தத் தீரத்தில் அதி மாத்ர ப்ரமாணமான ஸதா புஷ்ப பலவத்தாய் மஹாஸ் கந்தோப ஸோபி தார்த்த க்ரோஸோச் ச வ்ருஷ ஷண்டங்களின் நடுவே கஸ்யபனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்

பின்னையும் மஹா நீல குமுஜ்ஜ சைலாந்தரே பத்ம ஷண்டோப ஸோபிதமாய் ஸூக நதீ என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலும் பஞ்சா ஸத் யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதார்த்த க்ரோஸோச் சதாள வனமாய் இருக்கும் -ஐராவத தேவ சைலாந்தரே வ்ருஷ வீருத வர்ஜிதமாய் பாத மாத்ர பிரமாண ஸவிலா வ்ருதமாய் ஸஹஸ்ர யோஜந ஆயாம சத யோஜந விஸ்திருதைக சிலாதல பூமி -ஐராவத கஜஸ்ய க்ரீடா சிலாதலமாய் இருக்கும் –

மேருவுக்குத் தெற்கே கேஸர பர்வதங்களான த்ரிஸர பதங்க யோர் மத்யே –ஸிஸிர பதங்க -என்று வாயு பு பூ -38-2-வராஹ பு 80-1–ப்ரசன்னா ஸ்வாது சலிலமாய் பஹு தகம் -பஹுதகா நத்யோ வஹந்தி -என்று வராஹ பு -80-3-என்கிற நதீ ப்ரவஹிக்கும் –தத் தீரத்திலேகோஸத்திலே -தத் தீரத்திலே சத யோஜந ஆயாம த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதமாய் -எண்டு பாடம் காண்கிறது –வாராஹாதி புராணங்களில் சத யோஜந விஸ்த்ருதம் என்றே இருக்கிறது
சத் யோஜந விஸ்த்ருதமாய் ப்ருது ஷே போச்ச யவ்தும்பரா வனம் –ப்ருது ஷேபோச்ச சிகரை –இதி வாயு புராண -38-3- அநு சாரேண த்ருத இஷுஷேப- என்று வராஹாதி பு -80-1-
சர்வர்த்துஜ ப்ரவாள ஸத்ருச மஹா கும்ப பிரமாண பலோப ஸோபிதமாய் கர்த்தம ப்ரஜாபதிக்கு ஆஸ்ரமாய் இருக்கும் –
தாம்ராப பதங்க சைல யோரந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத ஆயாம யுக்தமாய் பால ஸூர்ய சங்காச ரக்தோத் பல ஸோபிதமாய் மஹத் ஸரஸ்ஸாய் இருக்கும் -அந்த ஸரோ மத்யே சத யோஜந உந்நதமாய் த்ரிம் ஸத் யோஜநம் விஸ்தீர்ணமாய் இருபத்தொரு கிரி சிகரத்திலே ரத்ன பிரகார தோரணோல் லசிதமான வித்யாதர புரமாய் இருக்கும்-

விசாகாசல ஸ்வேத பர்வத யோரந்தரே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோஜந ஆயாமமான ஸரஸ் தீரத்திலே மஹதாம்ர வனம் (மாந்தோட்டம்)-கநக சங்காஸாதி ஸூ கந்த மஹா கும்ப மாத்ர பலோப ஸோபிதமாய் இருக்கும் –
ஸூமுலாச லேந்த்ர வஸூதாரயோர் மத்யே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் பஞ்சாஸத் யோனாயாதமாய் வில்வஸ்தவி என்கிற வனம் இருக்கும் என்று இப்படியும் ஒரு வாக்யம் இங்கிருக்க வேணும் என்று ஸூமுலஸ்யாச லேந்த் ரஸ்ய வஸூ தாரஸ்ய சாந்தரே த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணே பஞ்சாஸத் யோஜநாயதே -வில் வஸ்தலீ நாம -என்று வராஹ புராணத்திலும் -அது -80-வாயு புராணத்திலும் -பூ 38-23- இருக்கையாலே தோற்றுகிறது
வஸூ தார ரத்நதாரயோர் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணமாய் -வராஹ புராணத்தில் அது -80- வஸூதார ரத்ந தாராயோர் மத்யே விம்சத் யோஐந விஸ்தீர்ணம் என்று பாடம் காண்கிறது -வாயு புராணாதிகளில் -பூ 38-27-த்ரிம் ஸத் யோஜனை என்றே பாதாம் – சத யோஜநா யாமமான ஸூ காந்தி கிம் ஸூக வனமாய் இருக்கும் -ஸார்வ காலீ ந ஸூ கந்த கிம் ஸூக வந புஷ்ப ஆமோதம் சத யோஜநம் வாஸியா நிற்கும் -அதிலே ஆதித்யனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும்
இவ்விடத்தில் பஞ்ச கூடஸ்ய கைலாஸஸ்ய சாந்தரே ஸஹஸ்ர யோஜநா யாமம் விஸ்தீர்ணம் சத யோஜநம் ஹம்ஸ பாண்டூரம் ஷூத்ர ஸத் வைர நாத் ருஷ்யம் ஸ்வர்க்க ஸோபாந மிவ பூ மண்டலம் –

அத பஸ்சிமதி க்பாகே —-ஸூ பார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே சமந்தாத் யோஜந சதமேகம் பவ்ம சிலாதலம் நித்யதப்தம் துஸ் ஸ்பர்சம் -என்கிற வாராஹ புராண -அது 80- ப்ரகரண வாக்ய அநு சாரேண -சில வாக்யங்கள் வேணும் – தாள கோசங்களில் இல்லை -ஆகையால் புராண அநு சாரேண வாக்யங்களைச் சேர்த்துக் கொண்டு அநு சந்திக்கவும் –

மேருவுக்கு மேற்கே கேஸர பர்வதங்களான ஸூபார்ஸ்வ ஸிகி சைலயோர் மத்யே ஆயாம விஸ்தாரம் சத யோஜநம் வஹ்நி சந்தப்தஸ்தலம் துஸ் ஸ்பர்சமாய் இருக்கும் -தன் மத்யே த்ரிம்ஸத் யோஜந விஸ்தீர்ணம் வஹ்நி மண்டலமாய் இருக்கும் -அதிலே லோக க்ஷய காரியான ஸம்வர்த்தக அக்னி இந்தநம் இல்லாதே ஜ்வலியா நிற்கும்

அநந்தரம் குமுதாஞ்ஜந யோர் மத்யே புண்ய ஹ்ரதம் என்கிற ஸரஸ்ஸாய் இருக்கும் -தத் தீரத்திலே ஸதா பலித பீத வர்ண மஹா பலாவ்ருத மாதுளங்க வனம் தச யோஜந விஸ்தீர்ணமாய் இருக்கும்
மாதுளங்க ஸ்தலீ தத்ர ஹ்யா யாமா தச யோஜநா -என்று வாயு புராணே -பூ 38-42- வாராஹேது -அது-80- அந்தரே ச சைல வரயோ குமுதாஞ்ஜந யோஸ் சத யோஜந விஸ்தீர்ணா மாதுலங்க கஸ்தலீ ஸர்வ ஸத்வா நாம கம்யா பீத வர்ணை பலைராவ்ருதா ஸாஸ்தலீ ஸோபதே -தத்ர ச புண்யோ ஹ்ரதஸ் ஸித்தை ருபேத ப்ருஹஸ் பதேஸ் தத் வனம் -இதை பாடம்
அதிலே ப்ருஹஸ்பதிக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

பிஞ்சரம் கௌர சைலேந்தரே -அநேக சத யோஜந ஆயாம விஸ்த்ருத மஹாத் ரோணி ஸரஸ்ஸாய் இருக்கும் –பிஞ்சர கௌர யோரந்தரே ஸரோத்ரோண்யோ ஹ்யநேக சத யோஜநா யாதா –இதி வாராஹே -அது -80-
பங்கஜ க்ஷண்ட சம்யுக்தமானவதிலே விஷ்ண்வாயதந மாய் இருக்கும்

க்ருஷ்ண பாண்டர ஸைலாந்தரத்திலே வ்ருஷ வீருத் விவர் ஜிதமாய் த்ரிம்சத் யோஜந விஸ்தீர்ணமாய் நவத்யாதமான நிஷ் கம்பா தீர்க்கிகையாய் இருக்கும் -அதிலே பஞ்ச யோஜந விஸ்தீர்ணமான ந்யக்ரோதம் ஸரோ மத்யே நிற்கும் -க்ருஷ்ண பாண்டு ராயோரபி த்ரிம் ஸத் யோஜந விஸ்தீர்ணம் நவத் யாயத யோஜநம் –இதி வாயு பு பூ 38-49-ஸூக்ல பாண்டு ராயோரபி இதி வாராஹபு -அது -80-அவ் வ்ருக்ஷத்தில் சந்த்ர ப்ரபனாய் ஸஹஸ்ர வதநன் என்கிற எம்பெருமான் யஷாதிகளாலே ஆராதிக்கப்படும்

தஸ் யாஸ் ச மத்யே பஞ்ச யோஜந ப்ரமாணோ ந்யக்ரோதோ வ்ருஷ தஸ்மிம் ஸ் சந்த்ர ஸேக ரோமா பதிர் நீல வாஸாஸ் ச தேவோ நிவஸதி யஷாதி பிரீட்யமாந -இதி வாராஹே -அது 80- வாயு புராணே ச மத்யே தஸ்யாஸ் ச பத்மின்யா பஞ்ச யோஜந மண்டல -ந்யக்ரோதோ விபுலஸ் கந்தோ ஹ்யநேகாரோஹ மண்டித -தத்ர சந்த்ர ப்ரப ஸ்ரீ மான் பூர்ண சந்த்ர நிபாநந ஸஹஸ்ர வதநோ தேவோ நீல வாஸாஸ் ஸூராரிஹா பத்ம மால்ய தரஸ் தல்யாம் மஹா பாகோ அபராஜித-இஜ்யதே யக்ஷ கந்தர்வை வித்யாதர கணைஸ் ததா தஸ்மிந் ஆயதநே ஸாஷாத் அநாதி நிதநோ ஹரி -பத்மோ பஹாரைர் விவிதை இஜ்யதே ஸித்த சாரணை -இதி -பூ 38-55-58–

ஸஹஸ்ர சிகர குமுதாந்தரத்திலே பஞ்சாஸத் யோஜந விஸ்த்ருதமாய் -இஷுஷே போச்சமான மது ஸ்ரவ பலோப ஸோபிதமான வனம் –பஞ்சாஸத் யோஜந ஆயாமம் விம்சத் யோஜந விஸ்த்ருதம் இஷுஷே போச்ச சிகரம் இதி வாராஹே –80- ததா ஸஹஸ்ர சிகர குமுதஸ் யாந்தரேண ச பஞ்சாஸத் யோஜநா யாமம் த்ரிம் ஸத் யோஜந விஸ்த்ருதம் –இஷு ஷே போச்ச சிகரம் –இதி வாயு பு பூ 38-60–சந்திரனுக்கு ஆஸ்ரமமாய் இருக்கும் –

சந்த்ரஸ்ய மஹா நாஸ்ரம –இதி வாராஹே ஸூக்ரஸ்ய இதி வாயு பு-மேருவுக்கு வடக்கே கேஸர பர்வதங்களான சங்க கூட நிஷதங்களுக்கு நடுவே புருஸ் தலம் –புருஷஸ்தலீ இதி வாராஹே புருஷஸ்தலீ இதி வாயு பு – என்று பேரை யுடைத்தாய் அநேக யோஜந விஸ்த் ருதமாய் அத் யுச்சராய வ்ருஷ ஷண்டங்களை யுடைத்தாய் மஹோத்ரிக்த கஜங்களை யுடைத்தாய் இருக்கும் -கபிஞ்ஜல நாக சைல யோந்தரே சத யோஜந விஸ்தீர்ணமாய் த்வி சத யோஜநா யாதமாய் ஸ்வாது பல ஸம் புஷ்டத்ராஷா கர் ஜுர வனமாய் இருக்கும்

புஷ்க்ரமேக சைல யோரந்தரே சத யோஜனா யதமாய் ஷஷ்டி யோஜந விஸ்த்ருதமாய் தரு குல்ம லதாஹீநமாய் பாணி தல ப்ரக்யமான சிலா தலமாய்
இருக்கும் -அதனுடைய நாலு பார்ஸ்வத்திலும் மஹா விஸ்த்ருதமான நாலு சரஸ்ஸும் நாலு வனமுமாய் இருக்கும்

கேஸர மர்யாதவர்ஷ பர்வதங்களின் மேலே அஷ்ட வித தேவ ஜாதிகளுக்கும் படை வீடு களாய் இருக்கும் -இந்த பாரதம் ஒழிந்த எட்டு வர்ஷமும் பவ்மமான ஸ்வர்க்கங்கள் என்னலாம் படி போக பூமியாய் பாப காரிகளுக்கு ப்ரவேஸ யோக்யம் இன்றிக்கே அதி ஸயித ஸூக கரங்களாய் அநு பவிதாக்களான புருஷர்கள் 16000-பன்னீராயிரம் வயஸ்ஸுக்களில் இருந்து அநுபவிக்கலாம் படி ம்ருத்யு பயமற்று இருக்கும்
இவ் வர்ஷங்கள் தனித் தனியே ஸப்த குல பர்வதங்களும் நதிகளும் தேச விபாகங்களும் யுண்டாய் இருக்கும்

அப்படி யன்றி இந்த பாரத வர்ஷம் கர்ம பூமியாய்- ஸ்வர்க்க மோக்ஷ பலன்களுக்கு சாதன அநுஷ்டானம் பண்ணுகைக்கு ஸ்தலமுமாய் -நிஷித்த அநுஷ்டானங்களாலே நரக ப்ரவேசத்துக்கும் திர்யக் யோநி ஜாதிகளுக்கும் ஹேதுவாய் -அதிசயித புண்ய ஆர்ஜிதத்துக்கும் ஹேதுவான ஸ்தலமாகையாலே தேவாதிகளும் ஆசைப்படும் படி நிரதிசய வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கும் –

அத்ர ஜன்ம சஹஸ்ராணாம் ஸஹஸ்ரை ரபி சத்தம -கதா சில் லபதே ஐந்து மாநுஷ்யம் புண்ய சஞ்சயாத் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-23- என்று ஆயிரம் கோடி ஜென்மம் புண்யத்தைத் திரட்டினால் இந்த தேசத்திலே ஒருக்கால் மநுஷ்யனாய்ப் பிறக்கப் பெறும் என்னும் படியாயும் -காயந்தி தேவாகில கீதகாநி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே ஸ்வர்க்காப வர்க்காஸ் பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷா ஸூரத்வாத் கர்மாண்ய ஸங்கல்பித தத் பலாநி சந்யஸ்ய விஷ்ணவ் பரமாத்ம ரூபே அவாபியதாம் கர்ம மஹீம நந்தே தஸ்மிந் லயம் யே த்வமலா ப்ரயாந்தி -ஜாநீம நைதத் க்வ தே மநுஷ்யா யே பாரதே நேந்த்ரிய விப்ர ஹீநா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-24-26- என்று
ஸ்வர்க்க வாசிகளான தேவர்களும் ஸ்வர்க்க மோஷங்கள் இரண்டையும் அடைகைக்கு மார்க்க பூதமான பாரத பூ பாகத்திலே தேவத்வத்தை விட்டுப் போய்ப் பிறக்கிறவர்கள் தன்யர் என்றும் –அந்த பாரதமாகிற கர்ம பூமியைப் பெற்று பல ஸங்கல்பங்களை ஒழிந்த கர்மங்களை பரமாத்மாவான விஷ்ணுவின் பக்கலிலே ஸமர்ப்பித்து நிர்மலனாய் அபரிச்சின்னனானவன் பக்கலிலே யாவர் சிலர் ஏகீ பாவத்தை அடைகிறார்கள் -அவர்கள் தன்யர் என்றும்- இந்த ஸ்வர்க்க ப்ரதமான கர்மம் லயித்து அவ் வளவிலே அவ் விடத்திலே தேஹ ஸம்பந்தத்தை நாம் அடைகிறோம் என்று இருக்கிலோமே -பாரத வர்ஷத்திலே ஜிதேந்தியராய்க் கொண்டு இருக்கிறார்கள் யாவர் சிலர் -அந்த மநுஷ்யர் தன்யர் இறே -என்றும் -அவர்கள் அங்கிருந்து பாடும்படியாயும் இறே இத் தேசத்தில் வைபவம் இருப்பது

இந்த பாரத வர்ஷம் நவ பேதமாய் இருக்கும் -அவையாவன –
1-இந்த்ர த்வீபம்
2-கஸேரு
3-தாம்ர பர்ணம்
4- கபஸ்தி மாந்
5- நாக த்வீபம்
6-சவும்யம்
7-கந்தர்வம்
8-வாருணம்
9- பாரதங்கள்
இவற்றில் பாரதம் ஒழிந்த எட்டும் கடலுக்கு உள்ளாய் தென் வடல் ஆயிரமாயிரம் யோஜனமாக பாரதம் கூட்டி சாகராந்தரிதங்களான த்வீபங்கள் ஒன்பதாய் இருக்கும் -இந்த பாரத வர்ஷம் -மஹேந்த்ரோ மலயஸ் ஸஹ்ய ஸூக்திமாந் ருஷ பர்வத விந்த்யஸ் ச பாரியாத் ரஸ்ச சப்தாத்ர குல பர்வதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-3-3- என்று மஹேந்த்ரம் முதலான ஏழு குல பர்வதத்தை யுடைத்தாய் இருக்கும்

அவைகளில் கங்கா -ஸிந்து – ஸரஸ்வதீ சதத்ரூ சந்த்ர பாகை முதலான ஆறுகள் ஹிமவத் பர்வதத்திலே பிறந்தன–வேகவதி முதலானவை ஸூக்திமாந் பர்வதத்திலே பிறந்தன -நர்மதை ஸூரஸை முதலானவை ருக்ஷ பர்வதத்திலே பிறந்தன
நர்மதா ஸூர ஸாத்யாஸ் ச நத்யோ விந்த்ய விநிர் கதா தாபீ பயோஷ்ணீ நிர் விந்த்யா ப்ரமுகா ருஷ ஸம்பவா என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -2-3-11-இருக்கையாலே அப்படியே இவ்விடத்திலும் பாடம் கொள்ள வேண்டும் –
தாபீ பயோஷ்ணீ முதலான ஆறுகள் விந்த்ய பர்வதத்தில் பிறந்தன கோதாவரீ பீமரதி முதலான நதிகள் ஸஹ்ய பர்வதத்திலே பிறந்தன -க்ருத மாலை தாம்ர பர்ணீ துடைக்கமான ஆறுகள் மலய பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -த்ரி ஸாமை ருஷி கூல்யை முதலான ஆறுகள் மஹேந்த்ர பர்வதத்திலே பிறந்தன -ருஷீகா குமாரை முதலான நதிகள் ஸ்ரீ ஸூக்திமத் பர்வதத்திலே பிறந்தன

இந்த பாரத வர்ஷத்திலே க்ருத -த்ரோதா -த்வாபர -கலி யுகங்களாகிற யுக பேதத்தால் யுண்டான வேறுபாடு உள்ளது -போக பூமி யாகையாலே அல்லாத எட்டு வர்ஷங்களுக்கு இவையில்லை -நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைய இந்த ஐம்பூ த்வீ பத்தை நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தாய் வலயா காரமான லவண ஸமுத்ரம் ஆவரித்து இருக்கும் -இப்படி ஜம்பூ ப்லஷாஸ் ஸால் மலிஸ் ச குஸ கிரௌஞ்சவ்வ ததைவ ச -சாகஸ் ச புஷ்கரஸ் சேதி ஸப்த த்வீபா ப்ரகீர்த்திதா -கா பு பூ -45-4- என்று காருட புராணத்திலும்
ஜம்பூ ப்லஷா ஹ்வயவ் த்வீபவ் ஸால்ம விஸ் சாபரோ த்விஜ -குமஸ் ததா க்ரவஞ்ச ஸாக புஷ்கரஸ் சைவ சப்தம -ஸ்ரீ விஷ்ணு புரா -2-5- என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் சொல்லப்பட்ட ஸப்த த்வீ பங்களையும் -ஏதே த்வீபாஸ் ஸமுத்ரைஸ் து ஸப்த ஸப்தபி ராவ்ருதா -லவணே ஷுஸாரா சர்ப்பிர் ததி துக்த ஜலைஸ் சமம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-2-6- என்று சொல்லுகிறபடியே த்வீப சமங்களான லவணாதி ஸமுத்ரங்களும் ஸப்த த்வீ பங்களையும் ஆவரித்து இருக்கும் -அதில் ஜம்பூ த்வீபா வரணமான லவண சமுத்திரத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ப்லஷ த்வீ பம் ஆவரித்து இருக்கும் –

அந்த ப்லக்ஷ த்வீபமும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே
1-சாந்தா பயம் என்றும்
2-ஸஸிரம் என்றும்
3-ஸூ கதம் -ஸூமுகோதயம் என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
4-ஆனந்தம் என்றும்
5-சிவம் என்றும்
6-ஷேமகம் என்றும்
7-த்ருவம் என்றும் ஏழு வர்ஷமாய் இருக்கும் –
இவற்றில்
1- கோமேதம் என்றும்
2-சந்த்ரம் என்றும்
3- நார்த்தம் என்றும்
4- துந்துபி என்றும்
5- ஸோ மகம் என்றும்
6- ஸூநாவம் -ஸூமநா -இதை புராணம் -என்றும்
7-வைப்ராஜம் என்றும் ஏழு வர்ஷ பர்வதமாய் இருக்கும்
இப்பவாதங்களிலே பிறந்து சமுத்ர காமிநிகளான நதிகள்
1-அநு தப்தை-என்றும்
2- ஸிகி என்றும்
3- விபாயை என்றும்
4- த்ரிதிவை என்றும்
5-க்லமை என்றும்
6-அம்ருதை என்றும்
7- ஸூக்ருதை என்றும் பாப ஹரைகளான இவைகள் ஏழும் இருக்கும்

இவ் வேழு வர்ஷத்திலும்–யுக பேத வ்யவஸ்தைகள் இல்லை -ஸர்வ காலமும் த்ரேதா யுக ஸமானமாய் இருக்கும் -இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்களுக்கு ஆர்யர்கள் குரர்கள் விதேஸ்யர்கள் -விதம் ஸத்துக்கள் பாவிகள் என்று பேராய் இருக்கும் -இவர்களுக்கு யுக பேதங்களாலே வரும் ஹ்ராஸ வ்ருத்த் யவஸ்தைகளும் இல்லை

இந்த ப்லக்ஷ த்வீபம் தொடங்கி ஸாக த்வீபம் ஈறாக ஐந்து த்வீ பத்திலும் மனுஷ்யர் நோயற்று 5000 வயஸ்ஸு புகுருவர்கள் -வர்ணாஸ்ரம அநு ரூபமான தர்மங்களும் அவிகலமாக நடக்கும் -ஜம்பூ த்வீ பத்தில் ஜம்புவோ பாதி பிரமாணத்தை யுடைத்தாய் இருந்த ப்லக்ஷ த்வீ பத்தினுடைய மத்யத்திலே நிற்கும் -இந்த த்வீ பத்தில் ஸோம ரூபியான ஸர்வேஸ்வரன் அந்த ப்ராஹ்மணாதி களாலே ஆராதிக்கப்படா நிற்கும் -இந்த ப்லக்ஷ த்வீ பத்தை இரண்டு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான இஷுரஸாத் மகமான ஸமுத்ரம் ஆவரித்த இருக்கும்

இந்த இஷுர சாத்மகமான ஸமுத்ரத்தை இதிலிரட்டு நாலு நூறாயிரம் பரப்பை உடைத்தான் ஸால் மலி த்வீ பம் ஆவரித்து இருக்கும் -அதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-ஸ்வேதம்
2-ஹரிதம் என்றும்
3-ஜீமுதம் என்றும்
4-ரோஹிதம் என்றும்
5-வைத்யுதம் என்றும்
6- மாநஸம் என்றும்
7- ஸூப்ரபம் என்றும் பெரி யுடையவையாய் இருக்கும்
இவற்றில் வர்ஷ பர்வதங்கள் ரத்ந உத்பத்தி ஸ்தா நமாய்க் கொண்டு
1-குமுதம்
2-உன்னரம்
3-பலாஹகம்
4- மஹவ்க்ஷதி ஸ்தானமான த்ரோணம் என்றும்
5- கங்கம் என்றும்
6- மஹிதம் என்றும்
7- ககுத்மாந் என்றும் ஏழுமாய் இருக்கும்

இவற்றில் ஆறுகளும்
1- யோநி என்றும்
2- தோயை என்றும்
3-வித்ருஷணை என்றும்
4- சந்த்ரை -என்றும்
5-ஸூக்லை என்றும்
6-விமோசநி என்றும்
7- நிவ்ருத்தி என்றும் ஏழாய் இருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -கபிலர்கள் என்றும்
அருணர் என்றும் பீதர் என்றும் கிருஷ்ணர் என்றும் பேராய் வாயு சரீரியான பகவானை அங்கே ஆராதிப்பர்கள்
இந்த ஸால் மலி த்வீ பம் என்கிற பேருக்கு ஹேதுவான ஸால் மலமாகிற வ்ருக்ஷம் முன்பு சொன்ன ஜம்பு ப்லஷங்களோ பாதி த்வீப நிர்வாஹக மாயிருக்கும் -இந்த ஸால் மலி த்வீ பம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான மதுர சாத்மகமான ஸமுத்ரத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும்

இந்தக் கடல் இதிலிரட்டியான எட்டு நூறாயிரம் யோஜநம் குஸ த்வீ பத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்
இதுவும் நிர்வாஹக ராஜ பேதத்தாலே ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன –
1-உத்பிதம் என்றும்
2-வேணுமான் -என்றும்
3-ஸ்வைரதம் -என்றும்
4- லம்ப நம் என்றும்
5-த்ருதி என்றும்
6-ப்ரபாகரம் என்றும்
7-கபிலம் என்றும் பேராய் இருக்கும்
இதில் வர்ஷாசலங்கள்
1-வித்ருமம் என்றும்
2-ஹேம சைலம் என்றும்
3-த்யுதிமான் என்றும்
4-புஷ்பவான் -என்றும்
5-குஸேஸயம் என்றும்
6-ஹரி என்றும்
7-மந்த்ரம் என்றும் ஏழாய் இருக்கும்
இதில் பிறந்த ஆறுகளும்
1-தூதபாபை என்றும்
2-சிவை என்றும்
3-பவித்ரை என்றும்
4-ஸூ மதி என்றும்
5-வித்யுதை என்றும்
6-அம்பை என்றும்
7-மஹீ என்றும் ஏழாய் இருக்கும்
இதை ப்ராஹ்மண-ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -தமிநர் என்றும் ஸூஷ்மிணர் என்றும் சைஹர் என்றும் மந்தேஹர் என்றும் பேராய் ப்ரஹ்ம ரூபியான ஸர்வேஸ்வரனை அந்த த்வீ பத்திலே தந்தாமுடைய கர்மா விதி பாரதந்ர்ய ரூபமான அதிகார ரஷார்த்தமாக ஆராதியா நிற்பர்கள் -இந்த குஸத்வீ பத்தினுடைய பேருக்கு நிர்வாஹகமான குசஸ்தம்பம் அந்தத்த்வீப மத்யத்திலே நிற்கும் -இந்த குசத்வீபாம் அத்தோபாதி பரப்பை யுடைத்தான நெய்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்

இந்த நெய்க் கடல் -இதிலிரட்டியான பதினாறு நூறாயிரம் பரப்பை யுடைத்தான கிரௌஞ்ச த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் – இதுவும் முன்பு போலே -ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-குஸலம் என்றும்
2-மநுகம் என்றும்
3-உஷ்ணம் என்றும்
4-ஸீவரம் என்றும்
5-அந்தகாரகம் என்றும்
6-முனி என்றும்
7-துந்துபி என்றும் பேராய் இருக்கும்
இதில் வர்ஷ பர்வதங்கள்
1-கிரௌஞ்சம் என்றும்
2-வாமனம் என்றும்
3-அந்த காரகம் என்றும்
4-ப்ரகாஸ கரமான ரத்ன சைலம் என்றும்
5-திவாவ்ருத் என்றும்
6-புண்டரீகவான் என்றும்
7-துந்துபி என்றும் ஏழாய் இருக்கும் –
இவற்றில் ஆறுகளும்
1-கௌரி என்றும்
2-குமுத்வதி என்றும்
3-ஸந்த்யை என்றும்
4-ராத்ரி என்றும்
5-மனோஜவை என்றும்
6-க்யாதி என்றும்
7-புண்டரீகை என்றும் ஏழாய் இருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் -புஷ்கரர் என்றும் புஷ் கலர் என்றும் தன்யர் என்றும் திஷ்யர் என்றும் பேராய் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரனை யாகாதி கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள்
இந்த கிரௌஞ்ச த்வீ பாம் என்கிற பேருக்கு நிர்வாஹம் இதில் ப்ரதமமான வர்ஷ பர்வதமாயுள்ள கிரௌஞ்ச பர்வதம் தானேயாய் இருக்கும் -இந்த கிரௌஞ்ச த்வீ பாம் இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தயிர்க் கடலாலே ஆவ்ருத்தமாய் இருக்கும்

இந்தத் தயிர்க் கடல் இதிலிரடித்த 32 நூறாயிரம் யோஜனம் பரப்பை யுடைத்தான ஸாக த்வீ பத்தாலே ஆவ்ருதமாய் இருக்கும் -இதுவும் ஏழு வர்ஷமாய் இருக்கும் -அவையாவன
1-ஜலதம் என்றும்
2-குமாரம் என்றும்
3-ஸூ குமாரம் என்றும்
4-மரீ சகம் என்றும்
5-குஸூ மோதம் என்றும்
6-ஸம்மோதம் என்றும்
7- மஹா த்ருமம் என்றும் ஏழாயிருக்கும்
இதில் வர்ஷ பர்வதங்கள் -கிழக்கே
1-உதயகிரி என்றும்
2-ஜலதார கிரி என்றும்
3-ரைவதகம் என்றும்
4-ஸ்யாமம் என்றும்
5-அம்போகிரியான அஸ்த கிரி என்றும்
6-ஆம்பி கேயம் என்றும்
7-ரம்யம் என்றும் ஏழாயிருக்கும்
இவற்றில் ஆறுகள்
1-ஸூ குமாரி என்றும்
2-குமாரி என்றும்
3-நளினி என்றும்
4-வேணுகை என்றும்
5-இஷுமதி என்றும்
6- தேனுகை என்றும்
7-கபஸ்தி என்றும் ஏழாயிருக்கும்
இதில் ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ரர்கள் வங்கர் என்றும் மா கதர் என்றும் மாநஸர் என்றும் மந்தகர் என்றும் பேராய்
ஸூர்ய ரூபியான ஸர்வேஸ்வரனைத் தம் தம்முடைய வர்ண அநுரூப கர்மங்களாலே ஆராதியா நிற்பர்கள் – இவ்வர்ஷங்களிலே ஸ்வர்க்கத்திலும் புண்ய வசத்தாலே போந்த புருஷர்கள் பரஸ்பரம் ராக த்வேஷாதிகள் அற்று இந்த புண்ய நதிகளுடைய ஜலத்தை விநியோகம் செய்து கொண்டு நித்ய ஸூகி களாய் வர்த்திப்பார்கள்
இந்த சாக த்வீ பத்தினுடைய பேர்க்கு நிர்வாஹகமான சாக ஸ்தம்பமாகிற மஹா வ்ருக்ஷம் அந்த த்வீப மத்யே நிற்கும் -இந்த த்வீ பங்கள் ஆறிலும் யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஜம்பூ த்வீ பம் தொடங்கி ஒன்றுக்கு ஒன்று இரட்டியான த்வீ பங்களோ பாதி பர்வதங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்த நீளத்தையும் அகலத்தையும் உயர்த்தியையும் யுடைத்தாய் இரண்டு சமுத்ரங்களையும் பற்றி இருக்கும் -அதாவது

இரண்டு ஸமுத்ரத்துக்குள் நடுவு ஜம்பூ த்வீ பத்துக்கு ப்ரதாநங்களாய்க் கொண்டு நூறாயிரம் யோஜநம் கீழை மேலை நீளமும் இரண்டாயிரம் யோஜநம் உயர்த்தியையும் -அவ்வளவு பரப்பை யுமுடைத்தான நீல நிஷதங்களில் காட்டில் ப்லக்ஷ த்வீ பத்தில் வர்ஷ பர்வதங்கள் லவணேஷு ஸமுத்ரங்களுக்கு நடுவு இரண்டு நூறாயிரம் யோஜநா யாமத்தை யுடைத்தாய் இரண்டு கடலையும் பற்றி நாலாயிரம் யோஜநம் உயர்த்தி யையும் அவ்வளவு விஸ் தாரத்தையும் யுடைத்தாய் இருக்கும்

இப்படி ஜம்பு ப்லக்ஷ மால் மலி குச கிரௌஞ்ச சாக பர்யந்தமாக யுண்டான வர்ஷ பர்வதங்கள் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று -இந்த சாக த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான ஷீராப்தி ஆவரித்து இருக்கும்
இந்த ஸாக த்வீ பத்துக்குள் அந்தர் பூதம் ஸ்வேத த்வீபம் -ஸாக த்வீபம் ஸமா வ்ருத்ய ஷீரோத சாகரஸ் ஸ்தித –ஸ்வேத த்வீபஸ் ச தந் மத்யே நாராயண பராயணா -என்று துடங்கி கூர்ம புராணத்தில் பூர்வ பாகத்தில் 48 வது அத்யாயத்தில் விஸ்தரேண ஸ்வேத த்வீப வர்ணநமும் தத்ரஸ்த புருஷர்களுடைய ரூபாதி வர்ணநமும் அவ் விடத்தில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரியா ஸார்த்தம் ஸ்ரீ மன் நாராயணனுடைய ஸ்வரூபாதி வர்ணநமும் சொல்லப் பட்டது இறே-

இந்த ஷீரார்ண வத்தை இதில் இரட்டித்து அறுபத்து நாலு நூறாயிரம் பரப்பை யுடைத்தான புஷ்கர த்வீ பம் ஆவரித்து இருக்கும் -இந்த புஷ்கர த்வீபம் நிர்வாஹக ராஜ பேதத்தாலே –
1- மஹா பீதம் என்றும்
2-தாடகீ ஸம்ஜ்ஞம் என்றும் -இரண்டு வர்ஷமாய் இருக்கும் –
இரண்டுக்கும் நடுவே மாநஸோத் தரம் என்று பேராய் 50000 யோஜநம் உயர்த்தியை யும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய்க் கொண்டு மதிள் இட்டால் போலே மண்டலமாகார மானதொரு வர்ஷ பர்வதமாய் இருக்கும் -இதில் மஹா பீத மலை புறம்பில் வலயமாய் இருக்கும் -தாடகீ உள்ளில் வவலயமா யிருக்கும் -இவற்றில் வர்த்திக்கிற புருஷர்கள் 16000 வயஸ் ஸு புகுருவர்கள் -ஆதி வ்யாதி களும் ராக த்வேஷாதி களும் அற்று இருப்பர்கள் -ஸர்வரும் உத் க்ருஷ்ட ராகையாலே அதம உத்தம விபாகம் இல்லை-ஸத்யம் ஒழிய நடவாமையாலே ஸத்யாந்ருத விபாகம் இல்லை -அவ் விடத்தில் பர்வதங்களும் நதிகளும் அபேக்ஷிதங்கள் இல்லை-

அவ் விடத்தில் மனுஷ்யர்கள் தேவர்களோடு ஒத்த வடிவை யுடையவர் களாய் இருப்பர்கள் -பவ்மமான ஸ்வர்க்கமாய்க் கொண்டு போக பூமியாய் இருக்கையாலே வர்ணாஸ்ரம ஆசார அபேக்ஷையும் பல சாதந தர்மார்ஜந அபேக்ஷை யும் அற்று யுத்தமமான தேசமாய் இருக்கும் இந்த புஷ் கரத்திலே ப்ரஹ்மா வுக்கு ஸ்தானமாய் புஷ்கரம் என்று பேராய் இருபத்தொரு ஆலயத்திலே பதினாயிரம் தளமாய் இருபத்தொரு தாமரைப் பூவின் மேலே ப்ரஹ்மா தேவா ஸூரராலே ஆராதிதனாய் இருக்கும் அந்த புஷ்கரம் இந்த த்வீ பத்தினுடைய பேருக்கு ஹேதுவாய் இருக்கும் -இந்த புஷ்கர த்வீ பத்தை இத்தோடு ஒத்த பரப்பை யுடைத்தான தண்ணீர்க் கடல் ஆவரித்து இருக்கும்

இப்படி ஸப்த த்வீப ப்ரமாணமான ஸப்த ஸமுத்ரங்களும் ஒன்றுக்கு ஓன்று இரட்டித்து இருக்கும் என்றதாயிற்று –இந்த ஸமுத்ர ஜலங்களுக்கு சந்த்ர உதய அஸ்தமிதங்களில் வ்ருத்தி ஷயங்களாய் இருக்கும் -இப்படி ஸப்த த்வீப ஸமுத்ர ஸஹிதமான பூ மண்டலம் மேரு மத்யமாக இரு பக்கமும் (வடக்கும் தெற்கும் சேர்ந்து)ஐந்து கோடி ஏழு நூறாயிரம் யோஜநம் ஆயாம விஸ்தாரங்களை யுடைத்தாய் இருக்கும் -இது மநுஷ்யாதி ஜனங்களுக்கு ஆவாஸ யோக்யமான பூ மண்டல பரிணாமம் இதுக்குப் புறம்பே மநுஷ்யாதி ஸஞ்சார யோக்யம் இன்றியிலே லோகாலோக பர்வதத்தளவும் கண்ணாடிப் புறம் போலே நிர்மலமாய் ஸ்வர்ண மயமாய் முன்பு சொன்ன பூ மண்டலத்துக்கு இரட்டியாய்- பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜநம் பரப்பை யுடைத்தான ஸ்தல விசேஷத்தாலே ஆவ்ருத்தமாய் இருக்கும் -இத்தைப் பதினாயிரம் யோஜநம் உயர்த்தியையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தான லோகாலோக பர்வதம் ஆவரித்து இருக்கும் -இதில் மஹா மேருவைத் தொடங்கி சக்ர வாளாத்ரி முடிவாகப் பன்னிரண்டரை கோடி பதினேழு நூறாயிரத்து அறு பதினாயிரம் அளவாய் இருக்கும் –

எங்கனே என்னில் -முன்பு லோக பரிமாணாகச் சொன்ன ஐந்து கோடி ஏழு நூறாயிரத்தில் மத்யமான மேருவுக்கு ஒரு பக்கம் இரண்டரை கோடி மூன்று நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமும் -இதுக்குப் புறம்பான ஜன ஸூந்ய தர்ப்பண தேஸம் பத்து கோடி பதினாலு நூறாயிரம் யோஜனமும் சக்ர வாளாத்ரி பதினாயிரம் யோஜனமுமாய் பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் யோஜனமுமாய் இருக்கும் என்றதாயிற்று -இந்த சக்ர வாளத்ரிக்கு அப்பால் அண்ட கடாஹ பர்யந்தமாகப் பதினேழு நூறாயிரத்து அறுபதினாயிரம் குறைந்த பன்னிரண்டரை கோடி யோஜனமுமாய் இருக்கும்

ஆக மஹா மேருவுக்கு ஒரு பக்கம் 25 கோடியாய் மற்ற பக்கமும் இப்படியாகையாலே ஆயாம விஸ்தாரங்கள் பஞ்சாஸத் கோடியாய் பூ பரி மண்டலம் -இதில் மும் மடங்கான 150 கோடி யோஜனம் ஆயாம விஸ்தாரமாய் இருக்கும் -இத்தை வராஹ புராணத்திலே பூ மண்டலந்து சத கோடி விஸ்தாரம் ச ண்ட கடாஹம் என்று மஹா மேருவைச் சூழ பஞ்சாஸத் கோடியாய் பூ மண்டலம் அடைய சத கோடி விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது

இப்படியே -ஸ்கந்த புராணத்தில் சிவ ரஹஸ்யத்திலும் விஸ்தரேண சொல்லப்பட்டது -கோடி த்வயம் த்ரி பஞ்சாஸத் லஷாணி ச தத பரம் -பஞ்சாஸச் ச ஸஹஸ்ராணி ஸப்த த்வீபாஸ் ஸ ஸாகரா –ததோ ஹிரண் மயீ பூமி தச கோட்யோ வராநநே தேவா நாம் க்ரீட நார்த்தாய லோகாலோகஸ் தத பரம் பர்வதோ வலயகாரோ யோஜநாயுத விஸ்த்ருத –தஸ்மாத் பாஹ்யம் தமோ கோரம் துஷ் ப்ரேஷம் ஜீவ வர்ஜிதம் -பஞ்ச த்ரிம் ஸத் ஸ்ம்ருதா கோட்யோ லஷாண்யே கோந விம்சதி ஸத்வாரிம் ஸத் ஸஹஸ்ராணி யோஜநாநாம் வராந நே -ஸப்த சாகர மாநம் து கர்த்தோதஸ் ததனந்தரம் -கோடி யோஜந மா யாநந்து கடாஹஸ் ஸம் வ்யவஸ்தித -என்று சொல்லுகையாலே

மேருவுக்கு ஒரு பக்கம் ஐம்பது கோடியாய்- மற்ற பக்கமும் அப்படியே ஆகையாலே -ஆக சத கோடி விஸ்தாரமாகச் சொல்லுகிற பக்ஷம் ஸாஸ்த்ரீயமான மாநாங்குளாதிகளைப் பற்ற லௌகிக மாநாங்குளம் அர்த்தாம்சமாகையாலேயும் ஹஸ்தமாகிற தச்ச முழத்தில் அவிதஸ்தி யாகிற லௌகிக ஹஸ்தம் அர்த்தாத்சமாய் அதில் இரட்டிப்பாலே சொல்லிற்றாம் இத்தனை
ஸாஸ்த்ரீ யாங்குள சித்தைர் யோஜனை பஞ்சாஸத் கோட்ய ஏவ லௌகிகாங்குளி ஸித்த யோஜனை சத கோட்யஸ்ஸ்யு –இதி ஸ்ரீ விஷ்ணு சித்தீய அநு ஸாரேண அவிரோதேந நேதவ்ய இத் யபிப்ராய —
பஞ்சஸாத் கோடியே ஸர்வத்ர அவிருத்தமாகக் கடவது -இதில் சக்ர வாளாத்ரிக்கு அவ் வருகு தாமஸ பூதங்கள் வர்த்திக்கும் தேசமாய் கோராந்த காரமுமாய் கர்த்தோத முமாய் இருக்கும் -அதுக்கு அவ் வருகு மஹா புருஷ ஸ்தானமாய் அண்ட கடாஹத்துக்கு நடுவே எங்கும் ஒக்கக் கீழ் மேல் எங்கும் சூழ்ந்து வைகுண்டாக்ய மஹா லோகங்களாய் இருக்கும்

இப்படி ஸ்ரீ பாகவதத்திலும் -10-8-9- வைதிக புத்ர ஆநயன வ்ருத்தாந்தம் -பார்க்கவும் –
ஹரி வம்சம் மூன்று ஸ்லோகத்திலும் வைதிக புத்ர ஆநயன ப்ரஸ்தாவத்திலே இந்த பகவஸ்லோகங்கள் வர்ணிக்கப் பட்டன
ஹரி வம்சே விஷ்ணு பர்வணி -115–11-12-13-ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்டவா நஸி- அஹம் ஸ பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸனாதனம் -ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்தா வ்யக்தா ச பாரத -தாம் ப்ரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரத சத்தம –ஸா சாங்க்யா நாம் கதி பார்த்த யோகி நாஞ்ச தத் பரம் பரமம் ப்ரஹ்ம ஸர்வம் விபஜதே ஜகத் — கோடி யோஜந மாநந்து கடாஹ ஸம் வ்யவஸ்தித -என்று அண்ட கடாஹம் ஒரு கோடி யோஜநம் அடிப்பத்தை (
அகலத்தை தடிமனை)உடைத்ததாகச் சொல்லப்பட்டது

இப்படி அண்ட கடாஹத்துக்கு நடுவுள்ள பூ விஸ்தாரம் பஞ்சாஸத் கோடியானவோபாதி ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவுள்ள உயர்த்தியும் பஞ்சாஸத் கோடியாய் இருக்கும் –

யோஜனமாவது –
ஜால காந்த ப்ரவிஷ்டே அர்க்க ரஸ்மவ் த்ருஸ்யாத்ருசாஸநை –ஏதே அணவ இதி க்யாதாஸ்த -ஏவ பரமாணவ -தேப்ய பரதரம் நாஸ்தி பரமாணு கதஞ்சன -ஏஷாம் அஷ்ட குணோ ரேணுபிஸ் -ச அஷ்டபி பரைஸ் ரோமாக்ர இதி நிர் திஷ்டம் லிக்யா லோம பிர் அஷ்டபி -லிக்ய அஷ்ட குணிதா யூகா- யூகாஷ்ட குணிதா யவா -யவாஷ்ட குணிதம் யத் தன்மாநாங்குளம் உதா ஹ்ருதம் -ஸ்வஸ்ய தக்ஷிண ஹஸ்தஸ்ய மத்யமாங்குளி பர்வணா மத்யமேந மிதம் யத் தன்மாத்ராங்குள மிதி ஸ்ம்ருதம் ஹஸ்தோங்குளி விம்ஸத்யா சதுரஞ்சி தயா சதுஷ் கரோ தண்ட -தண்டா நாம் பஞ்ச சதம் கோஸம் ச த்வி குணம் அர்த்த கவ்யூதம் -தத் த்வி குணம் கவ்யூதம் த்வி குணம் யோஜநம் வித்யாத் -என்று சொல்லுகிறபடியே

ஜாலக ரந்தரத்திலே ஆதித்ய கிரணங்களிலே தோற்றுகிற த்ரச ரேணுகளுக்கு அணு என்று பேராய -அந்த பரமாணுக்கள் எட்டுக் கொண்டது ரேணுவாய் -ரேணு எட்டுக் கொண்டது மயிர் நுனியாய் -ரோமாக்ரம் எட்டுக் கொண்டது ஈராய் -ஈரு எட்டுக் கொண்டது பேனாய் -பேன் எட்டுக் கொண்டது நெல்லாய் -நெல் எட்டுக் கொண்டது மானாங்குளமாய் -மா நாங்குளம் இருபத்து நாலு கொண்டது ஹஸ்தம் என்று சொல்லப்பட்ட தச்ச முழமாய் – ஹஸ்தம் நாலு கொண்டது கோலாய் -கோல் 500 கொண்டது கோஸமாய் -கோஸம் இரண்டு கொண்டது அரத்த கவ்யோதியாய் -அது இரட்டித்தது கவ்யூதியாய்-கவ் யூதி இரட்டித்தது யோஜனம் என்கிற மாநாங்குள மர்யாதையாலும் புருஷனுடைய தக்ஷிண ஹஸ்தத்தில் மத்யமாங்குளி மத்யம பர்வத்தாலே பரிமிதமான மாத்ராங்குள மர்யாதையாலும் ஹஸ்த விதஸ்தி பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று அர்த்தாம்சமாய் இருக்கையாலும் பஞ்சாஸத் கோடி விஸ்தீர்ணை யான பூமியை சத கோடி ப்ரமாணை என்கிற வாராஹாதி வசனங்களுக்கு விரோதம் இல்லை

இதி தத்வ நிரூபணே ஸாதாரண பூ மண்டல நிரூபணம் நாம த்ருதீய அதிகாரம் ஸம் பூர்ணம் –———

சதுர்த்தாதிகாரம்— நரக நிரூபணம்
1- நரக நிரூபணம்
2-நரக ஸ்தாந நாமாதி நிரூபணம்
3-பிராயஸ் ஸித்த நிரூபணம்
4-அந்தரிக்ஷ லோகாதி நிரூபணம்
5-ஆதித்ய சந்த்ர நக்ஷத்ர புத ஸூக்ர அங்காரக ப்ருஹஸ்பதி ஸநி ஸப்த ரிஷி த்ருவாதி பத நிரூபணம்
6-பூர் புவஸ் ஸூவ ராதி லோக நிர்ணயம்
7-ஸத்ய லோக அந்தர்கத சதுர் முக ஸிவ விஷ்ணு லோக நிரூபணம்
8-அக்ருதக க்ருதக க்ருதாக்ருதக ஸப்தார்த்த நிரூபணம்

இப்படி புண்ய பாப அர்ஜநாதி களுக்கு யோக்யமான பூ மண்டல நிரூபணம் பண்ணிற்றாய் அநந்தரம் இவற்றினுடைய பல போக ஸ்தானம் நிரூபிக்க ப்படுகிறது -அது போக்தாவான சேதனனுக்கு வைராக்ய ஹேதுவாகையாலே முதல் பாப பல ரூபமான நரகங்கள் நிரூபிக்கப் படுகின்றன

இந்த நரகங்களுக்கு ஸ்தானம் -அந்தராள ஏவ த்ரி ஜகத்தியஸ் (க்ருதக -அக்ருதக -க்ருதக்ருதக என்று மூன்றும் -10-1-3-இவற்றுக்கு உள்ள)ச திசி தஷிணஸ் யாம் அதஸ்தாத் பூ மேருபரிஷ்டாச் ச அண்ட ஜலாஸ்யஸ்ய –பாகவதம் -5-26-5- என்று ஸ்ரீ பாகவதத்திலேயும்
ததஸ்து நரகா விப்ரா புவோதஸ் ஸலிஸ்ய ச பாபிநோ யேஷு பஸ்யந்தே தான் ஸ்ருணுஷ்வ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் -கீழே அண்ட கடாஹத்தின் மேலான கர்ப்போதக ரூபமான ஜலாசயத்தின் மேலான பாதாளத்திலே நரக ஸ்தானங்களாய் இருக்கும் –

அவையாவன -ரௌரவஸ் ஸூகரோ ரோதஸ்தாலோ விஸஸநஸ் ததா மஹா ஜ்வாலஸ் தப்த கும்போ லவண உத விலோஹித ருதி ராம்போ வைதரணி க்ரிமிஸ க்ரிமி போஜன -அஸி பத்ர வனம் கிருஷ்ணோ லாலாபஷஸ் ச தாருண ததா பூத வஹ பாபோ- வஹ்நி ஜ்வாலோ ஹ்யதஸ் ஸிரா -சந்தம் ஸ க்ருஷ்ண ஸூத்ரஸ் ச தமஸ் சா வீசி ரேவ ச ஸ்வ போஜனஸ் சா ப்ரதிஷ்டோ ஹ்யவீசிஸ் ச ததா பர இத்யேவ மாதயஸ் சாந்யே நரகா ப்ரு ஸதாருணா யமஸ்ய விஷயே கோராஸ் சஸ்த்ர க்நி பய தாயிந பதந்தி யேஷு புருஷா பாப கர்ம ரதாஸ்துயே –ஸ்ரீ விஷ்ணு புரா -2-6- என்று விஷ்ணு புராணத்திலும்
பூ மேரதஸ்தி தோ கோர உஷ்ணாத்மா ரௌரவோ மஹான் ஸூதாரணஸ் து ஸீதாத்மா தஸ்யாதஸ்தாத் தமஸ் ஸ்ம்ருத நிக்ருந்தந க்ருஷ்ண ஸூத்ரோ மோஹஸ் சாப்யதிதாருண அகோரஸ்து வத ப்ரோக்தோ நவ ஸ்தாநோ ப்ரதிஷ்டித -ஏகீ பூத சரீரஸ் ச விவேச் யோ அவீசிரேவ ச ஸூ கோரோ தாருணோ ரோத மஹா ரௌரவ ஏவ ச –வாயு உ 39-175-176- என்று வாயவ்யத்திலும் சொல்லுகிறபடியே நரகங்கள் அசங்க்யாதங்களாய் இருக்கும் –

பாகவதம் -5-26-தத்ர ஹைகே நரகா நேக விம்சதிம் கண யந்தி என்று தொடங்கி அஷ்டா விம்சதி நரக நாமாதிகளை விஸ்தாரமாகக் காணலாம்
இவற்றில் ரௌரவம் என்று பேராய் பரிதாப ரூபமான நரகத்திலே ஸாக்ஷி அறிந்து சொல்லாது இருக்குமவனும்- அந்யதாகச் சொல்லுமவனும் -கூழை ஸாக்ஷியும் தர்மாதி க்ருதனாய் வைத்து அஸம்யக் பாஷணம் பண்ணுமவனும் -பக்ஷ பாதியும் -அஸத்யவாதியும் ப்ரவேசிப்பார்கள்
கூட ஸாஷீ ததா ஸம்யக் பக்ஷ பாதேந யோ வதேத் -யஸ் சான்ய தந்ருதம் வக்தி ஸ நரோ யாதி ரௌரவம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-7-இத்யாதி ஸ்லோகங்களைப் பற்றியே மேலில் வாக்யங்கள் என்று கண்டு கொள்க –

இந்த ரௌரவ ஸூகரங்களாகிற நரகங்கள் ருருவும் ஸூ கரமுமாகிற மான் பன்றிகளைக் கொல்லும் ப்ரகாரத்திலே பீடிக்கை என்று ஸ்ரீ பாகவதத்திலே சொல்லப்பட்டது -5-26-11-
ப்ரூண ஹாவும் புர ஹந்தாவும் கோக்நனும் உச்ச்வாஸ நிரோதகனும் குழியைக் கல்லில் புதைக்கை யாகிற ரோதம் என்கிற க்ரூர நரகத்தை அடைவர்கள் -இதில் ப்ரூண ஹாவாகிறான் -கர்ப்ப வாஸம் பண்ணினவனாதல் -விஸிஷ்ட ப்ராஹ்மண ஹந்தாவாதல் -அதாவது -உப நீத மாத்ரோ ப்ரஹ்ம சாரீ வேதாநாம் கிஞ்சித் அதீத்ய ப்ராஹ்மண -ஏகாம் ஸாகாம் அதீத்ய ஸ்ரோத்ரிய -அங்காத் யாயீ ஹ்யநூசாந- கல்பாத் யாயீ ருஷி கல்ப -ஸூத்ர ப்ரவச நாத் யாயீ ப்ரூண –சதுர் வேத தரோ ருஷி -அத ஊர்த்வம் தேவா -என்று போதாயந பகவான் சொன்னபடியே
ப்ரூணனாகிறான்-சூத்ர ப்ரவசந த் யாயியான விஸிஷ்ட ப்ராஹ்மணன் -ஸூராபனும் ப்ரஹ்ம ஹந்தாவும் ஸூவர்ணத்தை ஷோடஸ மாஷத்தளவு (
16 உளுந்து அளவு)அபஹரித்தவனும் -குருதல்பகனும்-இவர்களோடு ஓக்க ஒரு ஸம்வத்ஸரம் வசித்தவனும் ஸூkara நரகத்திலே விழுவர்கள்

ராஜாவையும் வைஸ்யர்களையும் கொன்றவனும் குரு தல்பகனும் தாலமாகிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது மஹா ப்ரமாணமான பனை மரத்திலே ஏறவிட்டுத் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-10–ஸாத்வியான ஸ்திரீயை விற்றவனும் சிரைக் கூறு செய்யுமவனும் குதிரை விற்குமவனும் பக்த பரித்யாகியும் ஸ்வ ஸாகாமியும் ராஜ பட ஹந்தாவும் தப்த கும்பத்திலே விழுவர்கள் -அதாவது காய்ந்த எண்ணெய்க் குடத்திலே புகட்டு எரிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-1-

குருக்களை அவமதி பண்ணினவனும் வேதத்தை தூஷித்தவனும் -வேதத்தைக் கூலிக்கு விற்பவனும் மாதுளை ஸ்த்ரீ கமநம் பண்ணினவனும் லவணம் என்கிற நரகத்திலே விழுவர்கள் -அதாவது அக்னி மையமாக எரிகிற உப்பு மண்ணிலே புரட்டு சுடுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-12-13-

ஸதாசாரங்களாலே ஸித்தமான மர்யாதா தூஷகனும் -தேவ ப்ராஹ்மண குரு பித்ருக்கள் பக்கலிலே த்வேஷம் பண்ணினவனும் க்ரிமி பஷ்யத்திலே விழுவர்கள் -அதாவது ஸூ தீஷ்ண தம்ஷ்ட்ராஸ்ய ஜலூகாதி க்ரீமி கீடம் கடித்து அந்த தாமிரஸ்ர கூபத்திலே சுழற்றித் தள்ளுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-15-
பித்ரு வேத ஸூரரைப் புறம்பிட்டு பஞ்ச மஹா யஜ்ஞ பராங்முகனாய் முதலிலே தனக்கு என்னாக்கி உண்கிறவன் லாலாபக்ஷத்திலே விழுவார் -அதாவது காறி யுமிழ் எச்சிலை பஷிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-16- –
சிலுக்கோலான அம்புமுத் கரங்கள் பண்ணுமவனும் வாள் சொட்டை தொடக்கமான ஆயுதங்கள் பண்ணுமவனும் விசசனத்திலே விழுவர்கள் -அதாவது எரி எழக் காய்ந்து ஷுரப்ரங்களான ஆயுத கூபத்தில் விழுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-17-

அசத்தான பதார்த்தங்களை பரிக்ரஹித்தவர்கள் அதோ முகத்திலே விழுவர்கள் -அதாவது -தப்த்த ஸ்ருங்க லயா பத்தராய் அதோ முகோர்த்வ பாதராய் ஜ்வாலா ஸூராப கூபத்திலே நலிவு படுகை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-18–

சாஹஸியும் தனித்து ம்ருஷ்டான்ந யஜனம் பண்ணுமவனும் -அரக்கு மாம்ஸ ஷீர மத்வாதி ரஸ த்ரவ்யங்களையும் எள்ளுப் பூ விற்குமவனும் ப்ரயவஹத்திலே விழுவர்கள் -அதாவது கோர துர்க் கந்தா வஹமான சீயாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-20-

அல்லுப் பொரி விற்று யதேஷ்டமாகப் பானையோடே உண்ணுமவனும் -விஷத்தை இடுமவனும்- ராஜ காமியாம் படிக் கோள் சொல்லுமவனும்- ஸ்த்ரீ முகத்தாலே ஜீவித்தல் பர்வமன்றி இருக்க அபர்வத்திலே கார்யம் செய்யுமவனும்- பர்வத்திலே நிஷித்தமான தைல ஸ்த்ரீ மாம்ஸாதி ஸேவை பண்ணுமவனும் -அகங்களை நெருப்பு வைத்துச் சுடுமவனும் மித்ர வஞ்சகனும் பக்ஷி நிமித்தம் சொல்லுமவனும் பக்ஷி பிடித்து விற்று ஜீவிக்குமவனும் ஸ்ரம யாஜகனான ஷடங்கியும் இவர்கள் ருதி ராம்பத்திலே விழுவர்கள் -அதாவது பூய ஸோணித ஸம் பூர்ண அக்னி ஜ்வாலா ரூப கூபம் –ஸ்ரீ விஷ்ணு புரா 2-6-22-

தேன் கூண்டைக் கலக்குமவனும் க்ராமத்துக்குக் கேடு செய்யுமவனும் வைதரணியை அடைவர்கள் -அதாவது -அக்னி மயமான நெய்யாறு -ஸ்ரீ விஷ்ணு புரா -2-26-24-
தனத்தாலும் யவ்வனத்தாலும் மத்தராய் க்ராமஸீ மாதிகளை பேதித்தவர்களும் அஸூத்தரும் இந்த்ர ஜாலாதிகள் காட்டி ஜீவித்தல் ஸடராய் ஜீவித்தல் செய்யுமவர்களும் க்ருஷ்ணம் என்கிற நரகத்திலே விழுவார்கள்-அதாவது அக்னி மயமான கறுத்த இரும்பு முளைகளாலே செறிந்த தரையிலே நடக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-25-

கிடாய் வளர்ப்பாரும் ம்ருகம் பிடிப்பாரும் வ்ருஷச் சேதகரும் ப்ரஹ்மசாரியாய் இருந்து பகல் உறங்கி ஸ்வப்ன இந்த்ரிய பதனம் பிறந்தவனுக்கு ஸ்வ போஜனத்திலே விழுவர்கள் -அதாவது நாயாலே இழுப்புண்டு கடியுண்டு க்லேசிக்கை -ஸ்ரீ விஷ்ணு புரா-2-6-29-

பர ஸ்த்ரீ கமனம் பண்ணுவாரும் அகம்யாகமநம் பண்ணுவாரும் எரி எழுகிற செம்பினாலே இயன்ற பாவையைக் கட்டி ஆலிங்கனம் பண்ணுவர்கள் –

இப்படி அபஷ்ய பக்ஷணம் -அபோஜ்ய போஜனம் -அபேய பாநம் -அயாஜ்ய யாஜனம் அஸத் பரிக்ரஹம் -பர தாரா அபி கமநம்- நீச பாபிஷ்ட ஸேவை -பர த்ர வ்யாபஹாரம் -ப்ராணி ஹிம்ஸை முதலானவை என்று காயிகமாகச் சொல்லுகிறவையும் –இவ்விடத்திற்கு அனுகுணமான வசனங்கள் -மநு ஸ்ம்ருதியில் -12-7- காண்க –
பாருஷ்யம் அன்ருதம் பை ஸூந்யம் -அசம்பத்த ப்ரலாபம் -விவாதம்- ஸ்ருதி விக்ரயம் -பராப வாதம் முதலானவை -மனு-12-6- என்று வாசகமாகச் சொல்லுகிறவையும்
பரோபதாபநம்- பராபி த்ரோஹம்- க்ரோதம்- காமம் -லோபம் -மோகம் -மதம் -மாத்சர்யம் அஹங்காரம் விததாபி நிவேசம்-மநு -12-5- என்று மாநஸமாகச் சொல்லுகிறவையும் தொடக்கமான த்ரிவித கரண தோஷங்களை ஆராய்ந்து யாத்ருச சரீரே யதவஸ்தா வஸ்திதானாய்ச் செய்கிறான் -தாத்ருஸ சரீர தத்வஸ்தா ரூபமாய் தஹந சேதன பேத நாதிகளிலும் விடாதே யாம்ய யாதனைகளை அனுபவிக்கைக்குக் உடலாக ஸூத்ருடமாய் இருபத்தொரு ஸரீரத்தை பரிக்ரஹிப்பித்து நரக யாதனைப் படுத்தும் -மநு- யாதிரு ஸேநது பாவேந யத் யத் கர்ம நிஷேவதே தாத்ருஸேந சரீரேண தத் தத் பலமுபாஸ் நுதே -12-18-

இத் தோஷங்களினுடைய யாதனை எங்கனே என்னில் -இவனை ஈர வளாலே அறுத்து உவடி தரையிலே புரட்டி ஜம்பீர ரஸ மய வாபியிலே அழுத்தி அக்னி மயமான தைலத் ரோணியிலே பொகட்டு எரித்தும் தீக்ஷண பர ஸூவினாலே சந்தி பந்தங்களிலே சேதிக்கப் பட்டு காகோலுக கங்க க்ருத் ரங்களுக்கும் பேய்க்கும் நாய்க்கும் சதை பறியுண்டு க்லேசிப்பித்தும் -அதுக்கும் மேலே அஸி பத்ரவனமாகிற வஜ்ர மய ஸிதாக்ரதாரா யுக்த -இலைக் கள்ளிக் காட்டிலே பட்ட விடமெங்கும் கண்டிக்கும் படி விட்டு எறிந்து கவணிலே வைத்து எறிந்தும் அத் யுச்சராய பர்வத சிகரத்திலும் ஸர்வ அவயவங்களும் சூர்ணித்தமாம் படி தலை கீழாய்த் தள்ளியும்
காஞ்ச காறாலும் -வறுத்த மணலிலும் இட்டுப் புரட்டுவது சந்தப்த கும்பத்திலே அறுத்துண்டு மூடி மஹா ஜ்வாலாக்னியாலே பசிப்பது-இப்படிக் கட்டுமது வெட்டுமது நெருக்குண்பது தள்ளுண்பதான நாநா வித நரகங்களிலே யாதனைப் படுவர்கள் -இந்நரகங்கள் தேஷாம் சங்க்யா ந வித்யதே -என்கிறபடியே அசங்க்யா தங்களாய் இருக்கும் -இனி மஹா பாதகங்களைப் பண்ணின புருஷர்களை இங்குச் சொன்னவை முதலாகக் கொண்டு அல்லாத வற்றிலும் பர்யாயேண ப்ரவேசித்து யாதனைப் படுவர்கள்

இப்படி வாங் மன காயங்களாலே வர்ணாஸ்ரம விருத்தமான துஷ் கர்மங்களைப் பண்ணி நரகத்திலே நின்று யாதனைப் படுவர்கள் -ஸ்வர்க்கத்திலே இருக்கும் தேவர்களை அந் நிலையிலே கண்டு தங்கள் துக்கத்துக்கு மிகவும் கிலேசியா நிற்பர்கள் -அந்த தேவர்களும் அதோ முகராய் கிலேசிக்கிற நரகங்களைக் கண்டு நாமும் புண்ய ஷயத்திலே இந்நரகங்களிலே வீழில் செய்வது என் -என்று -ஸ்வர்க்கோபி பாத பீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி –ஸ்ரீ விஷ்ணு புரா -6-5-50-அஸந்தோக்ஷஸ் ச பவதி த்ருஷ்ட்வா தீப்தம் பரஸ்ஸ்ரியம் -என்கிறபடியே அங்கிருந்து பண்ணுகிற ஸூக அனுபவமும் நெஞ்சில் படாதே உண்டது உருக்காட்டாதே கிலேசியா நிற்பர்கள் –

பஹுன் வர்ஷ சதான் கோரான் நரகான் ப்ராப்ய தத் ஷயாத் சம்சாரான் ப்ரதிபத்யந்தே மஹா பாதகி நஸ்த்விமான் -மநு -12-54- என்கிறபடியே ஒவ்வொரு க்ஷணங்களிலே பண்ணின பாபங்களுக்கு பலமாக அநேகமாயிரம் ஸம்வத்சரங்கள் அதி கோரமான நரகங்களிலே ஐயோ என்பாரும் அன்றியே தனியே கிடந்து உழைந்து இந் நரகங்களிலே புக்த சேஷமான கர்மங்களை அநுபவிக்கைக்காக அங்கே அவ்வோ யோநி விசேஷங்களிலே வந்து பிறக்கும்படியும் இப்படிப் பிறக்கும் போது வாசிகை பசி ம்ருகதாம் மாநஸை அந்த்ய ஜாதிதாம் -சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -மநு -12-9- என்று வாசிகாபராதத்துக்கு பக்ஷி ம்ருகங்களாயும் மானஸா பராதத்துக்கு சண்டால மாதங்கனாயும் காயிகத்துக்கு வ்ருஷ குல்ம லதாதிகளாயும் பிறக்கும்படியும் எந்த கரணம் கொண்டு அபராதம் பண்ணினான் அந்தக் கரணத்தை குண்டிதமாக்கி விடும்

அதில்ப்ரஹ்மஹத்யா பலமாக -ஸ்வ ஸூகர கரோஷ்ட்ராணாம் கோஜாவி ம்ருக பக்ஷிணாம் -சண்டால புல்க ஸாநாம் து ப்ரஹ்மஹா யோநி ம்ருச்சதி -மனு -12-55- என்று நாய் பன்றி
கழுதை ஒட்டகம் வஸூ ஆடு செம்பிலிமான் பக்ஷி சண்டாலர் தொடக்கமான யோனிகளிலே -க்ரமஸோ யாந்தி லோகேஸ்மின் -12-53- என்று அடைவே பிறக்கும் படியாகவும் –

க்ரிமி கீட பதங்காநாம் விட் புஜாம் சைவ பக்ஷிணாம் ஹிம்ஸ்ரா நாஞ்சைவ சத்வாநாம் ஸூராபோ ப்ராஹ்மணோ வ்ரஜேத் -12-56- என்று ஸூரா பாந பலமாக கிருமி கீட பதங்கா மேத்ய புக்கான பக்ஷிகள் மற்றும் ஹிம்ஸா செல்லமான பதார்த்தங்கள் தொடக்கமான யோனிகளிலே ஒரு தடவை பிறக்கை இன்றிக்கே மடித்து மடித்துப் பிறக்கும்படியும்

லூதாஹி சரடா நாம் ச திரஸ் சாம் ச அம்பு சாரிணாம் ஹிம்ஸ்ராணாம் ச பிஸாசாநாம் ஸ்தேயோ விப்ரஸ் ஸஹஸ்ரஸ -12-57-என்று பர த்ரவ்ய அபஹாரத்துக்கு பலமாக சிலந்தி பாம்பு ஹிம்ஸா சீல ஐந்து ஜலசர ஜந்துக்கள் பர பார்த்தகமான பேய்கள் தொடக்கமான யோனிகளிலே நாலு பத்து பர்யாயம் பிறகும் அளவன்றியிலே நாலாயிரம் பர்யாயம் மடித்து மடித்துப் பிறக்கும் படியும் –

த்ருண குல்ம லதா நாஞ்ச க்ரவ்யாதாம் தம்ஷ்ட்ரிணாம் அபி க்ரூர கர்ம ரதா நாஞ்ச சதாசோ குருதாபக -என்று குரு தல்பாகமான பாபத்துக்கு பலமாகப் புல்லு தூறு கொடி காயும் மாம்ஸாசிகளான ஸ்வாநாதி யோனிகளிலும் க்ரூர கர்மரதமான மனுஷ்ய யோனிகளிலும் பிறந்து சத ஸஹஸ்ர வாரம் கிலேசிக்கும் படியாகவும் –

ஸம் யோகம் பதிதைர் கத்வா பரஸ் யைவ ச யோஷிதாம் அபவ்ருத்யாபி விப்ரஸ்வம் பவந்தி ப்ரஹ்ம ராக்ஷஸா -12-60-என்று பதித ஸம் சர்க்க தோஷத்தாலே ப்ரஹ்ம ராக்ஷஸ யோனியிலே மடித்து மடித்துப் பிறக்கும்படியாகவும்

இப்படி -இந்த்ரியாணாம் ப்ரசங்கேந தர்மஸ்யாஸேவ மேந ச பாபாஸ் ஸம் யாந்தி ஸம்சாராந வித்வாம்ஸோ நராதமா -மனு 12-52-என்றும்
ஸ்வேப்ய ஸ்வேப்யஸ் து கர்மப்ய ஸ்யுத வர்ணா ஹ்யநாபதி பாபாஸ் ஸம் ஸ்துத்ய ஸம் ஸாராத் பரே ததாம் யாந்தி தஸ்யுஷு -12-70-என்றும்
யத்வா தத்வா பர த்ரவ்ய மப ஹ்ருதய பலான் நர அவஸ்யம் யாதி திர்யக்த்வம் ஜக்த்வா சைவாஹுதம் ஹவிஸ் -மனு -12–68-என்று
விஷயாதி பிரசங்கத்தாலும் தர்ம அனுஷ்டானத்தில் உபேக்ஷையாலும் ஆபத்தன்றியிலே இருக்க ஸ்வ தர்ம அனுஷ்டான பிரஸ் யுதியாலும் அந்த பாப அநு ரூபமாக ப்ராயச் சித்தங்களில் பராங்முகனாகையாலும் பாப யோனிகளிலே பிறந்து -அனந்த்ரம் பேய்களாக பிறந்து பின்னையும் சோரர்களாய் பிறப்பார்கள்

ஸ்த்ரி பார்யாஸ் த்வ முப யாந்தி தா -மனு -12-69- என்று ஸ்த்ரீகளாய் ஸுர்யாதி பாபத்தைப் பண்ணினவர்கள் ஸ்வ ஸூகராதி யோனிகளிலே பிறந்தவர்களுக்கு பார்யைகளாய்ப் பிறக்கும் படிகளையும் ஆராய்ந்து பிறந்த பிறந்த ஜென்மங்கள் தோறும் பிரிய வஸ்து வியோகத்தாலும் அப்ரிய வஸ்து சங்கத்தாலும் ஜரா பீடையாலும் வியாதி பீடையாலும் கிலேசிக்கும் படியும் -தோஷ த்ரய உத்ரேகத்தாலும் விகாரமான ரோக ஸஹஸ்ரத்தாலும் யம கிங்கரனுடைய பீடையாலும் புத்ராதி பரித்யாக ஹேதுவான புத்தி கிலேசங்களாலும் நிரவதிக துக்கங்களை அநுபவித்தது கிலேசிப்பார்கள்

நமனும் முற் கலனும் பேச நரகில் நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்து வீழ்ந் தளிய மாந்தர்
கவலை யுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.-12

காவலிற் புலனை வைத்துக் கலி தனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.-1-

இப்படி ஜகத்திலே சேதனர் கர்ம தாரதம்யம் அடியாக -ஸ்தாவரா க்ரிமி யோப் ஜாஸ்ச பக்ஷிண பசவோ நரா -தார்மிகா த்ரிதஸா தத்வத் மோக்ஷிணஸ் ச யதாக்ரமம் ஸஹஸ்ர பாக ப்ரதம த்விதீய அநு க்ரமாஸ் ததா -ஸர்வேப்யேதே மஹா பாக யாவன் முக்திம் ஸமாஸ்ரயா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-34-35-என்றும்
பூதாநாம் ப்ராணிந ஸ்ரேஷ்டா பராணிநாம் புத்தி ஜீவிந புத்தி மத் ஸூ நரா ஷ்ரேஷ்டா நரேஷு ப்ராஹ்மணாஸ் ஸ்ம்ருதா ப்ராஹ்மணே ஷு ச வித்வாம்ஸோ வித்வத் ஸூ க்ருத புத்தய க்ருத புத்தி ஷு கர்த்தார கர்த்ரு ஷு ப்ரஹ்ம வாதி ந ப்ரஹ்ம வித்ப்ய பரம் பூதம் ந கிஞ்சி திஹ வித்யதே -மனு -1-96-97- என்று
ஒன்றுக்கு ஓன்று ஸூஹ்ருத தாரதம்யத்தாலே பூர்வ பூர்வ ஜென்மங்களுக்கு உத்தர உத்தர ஜென்ம லாபம் துர் லபமாகையாலும் அந்த பூர்வ ஜென்ம ஸஹஸ்ர ஏக தேசத்திலே என்னலாம் படி ஸங்கோசித்துப் போருகையாலே முமுஷுத்வம் அத்யந்தம் துர் லபமாய் இருக்கும் –

இப்படி இருக்கிற ஆத்மாக்கள் அஸங்க்யாத ராகையாலே ஸ்வர்க்கத்தோடு நரகத்தோடு வாசி இல்லை -போக்தாக்களான ஆத்மாக் களுடைய ஆனந்தத் யத்துக்கு -ஆகை யிறே -யாவந்தோ ஜந்த வஸ் ஸ்வர்க்கே தாவந்தோ நரகௌகஸ -ஸ்ரீ விஹனு புரா 2-6-36- என்று சொல்லிற்று

இந்த பாபம் அடியான நரக பிரவேசம் பிராயச்சித்தம் பண்ணாத விமுகனுக்கு இறே -பிராயச்சித்தம் பண்ணினவனுக்கு நரகத்திலே ப்ரவேசிக்க வேண்டுவது இல்லை -அப்படியே பாபங்கள் தாரதம்யத்தை நிரூபித்து தாதாத்மிக பிராயச்சித்த விசேஷங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் இறே –

பாபே குரூணி குரூணி ஸ்வல்பாந் யல்பே ச தத் வித -ப்ராயச்சித்தாநி மைத்ரேய ஜகுஸ் ஸ்வாயம்பு வாதய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-38- என்று குருவான பாப விஷயமாக குரு ப்ராயச்சித்தங்களையும் அல்ப பாபத்துக்கு அல்ப பிராயச் சித்தங்களையும் மன்வாதிகள் விதித்தார்கள் -அதாவது 1-புத்தி பூர்வகமாக 2-மஹா பாதகாதிகளைப் 3-பலகாலுமாய் வர்த்தித்த குரு பாதகத்திலே அவ்யவஹித கர்த்தாவினுடைய ப்ராணாந்தி காதியான ப்ராயச்சித்தங்கள் விதிக்கப் பட்டது –

அல்ப பாபமாவது -1-ஸக்ருத் க்ருதமாதல் -2-அஞ்ஞான க்ருதமாதல் 3-ப்ரகாசி தமாதல் அ4-நுமதி மாத்ரமாதல் தொடக்கமானவை -தத் விஷயமான அல்ப பிராயச்சித்த மாவது -ரஹஸ்ய ப்ராயச்சித்தம் –

அவ் விடத்திலே அஞ்ஞான க்ருதமான ப்ரஹ்ம ஹத்த்யாதி மஹா பாதகத்தில் (தசரதன் ரிஷி குமாரன் மேல் தெரியாமல் அம்பு விட்டது போல்)பிராயச்சித்தம் த்வாதஸ வார்ஷிகம் புத்தி பூர்வகத்தில் இரட்டி -அத்யந்தா வ்ருத்தியில் அதில் இரட்டி -இது சாஷாத்கார்த்தாவுக்கு

அனுக்ராஹகனுக்கும் இதில் ஓன்று முக்கால் -ப்ரயோஜகனுக்குப் பாதி -அனுமந்தாவுக்குக் காலே அரைக்கால் -ப்ரோத்ஸா ஹகனுக்குக் கால் -புத்தி பூவாக மஹா பாதகத்துக்குச் சொன்ன த்வாதஸ வார்ஷிகம் கர்த்தாவினுடைய ஸூத்த் யர்த்தம் -அதாவது கர்ம யோக்யத்வ ஸம் வியவஹார யோக்யத்வ காரணமல்லது நிரய நிவ்ருத்தகம் -நிவர்த்தகம் -அன்று –

புத்தி பூர்வ க்ருத்தங்களுக்கு ஸ்ம்ருதியில் சொன்ன ப்ராணாந்திக ப்ராயச்சித்தம் வ்யாவஹார யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -புத்தி பூர்வகத்தில் இரட்டித்த த்வாதஸ வார்ஷிகமும் வ்யவஹார்ய கரத்வமாம் இத்தனை -நரக நிவர்த்தகம் அன்று

யஸ் ஸக்ருத் பாபம் குர்யாத் ஹ்ரியதே தத்தபோ பரம் –என்று சுருதி சொன்ன படியே பாப ப்ரவ்ருத்தி ஸஜாதீய பாபாந்தர ப்ரவ்ருத்தியிலும் மூட்டும்படியாய் இருக்கும் -அதாவது கர்மத்துக்கு விஸஜாதீய கர்ம யோக்யதா கரத்வமும் ஸஜாதீய கர்ம ப்ரவர்த்தகத்வமும் தத் அநுரூப பல ப்ரவர்த்தகத்வமும் என்று ஸக்தி த்ரயாத்வமும் உண்டு -அதில் பாவத்துக்கு விசஜாதீயமான புண்ய கரணத்துக்கு அயோக்யனாக்குகையும் அநிஷ்ட பல ப்ரதத்வமும் -ஸஜாதீய பாபாந்தரத்திலே ப்ரவர்த்திப்பிக்கையும் ஸ்வ பாவமாகையாலே ப்ராயச்சித்தங்கள் வை மூன்று சக்தியையும் கழிக்க மாட்டாது

அதில் சிலவை விஜாதீயமான புண்ய கரண யோக்யதையைப் பிறப்பித்து ஸூத்தனாக்கும் -பிராணாந்த காதிகளான சில ப்ராயச்சித்தம் புண்ய கரண யோக்யதையை உண்டாக்கி நரகத்தையும் கழிப்பிக்கும் -பாபாந்தர ருசி ஜனகமான வாஸனா ரூப ஸக்தி விசேஷத்தைப் போக்க வல்லதொரு பிராயச்சித்தம் இல்லை இறே –

அது உள்ளது க்ருஷ்ண விஷயம் ஒன்றுக்குமே இறே -எங்கனே என்னில் -ஸூத்திர் பவதி ஸம் ஸ்ம்ருத்ய ஸ்நாதோ பவதி தர்சநாத் -ப்ரணிபாதேந ஸூத்தாத்மா த்ரய க்ருஷ்ணே மஹா குணா -என்று இறே மஹ ரிஷிகள் ஸ்மரித்தது-அதாவது -ஸ்மரண மாத்ரத்தாலே புண்ய கர்ம யோக்யதா ரூபையான ஸூத்தி பிறக்கும் – கண்ணிட்டு விக்ரஹத்தைக் கண்ட அளவே பர லோபம் பிறவாத ஸ்தாநம் உண்டாம் -திருவடிகளில் ப்ரணாமத்தாலே பாப வாஸனா நாஸம் பிறக்கும்படி அந்தக்கரண ஸூத்தி உண்டாம் என்று பகவத் விக்ரஹத்துக்கு இந்த மஹா குணம் மூன்றும் சொல்லப்பட்டது –

ஆகையால் -ப்ராயச்சித்தாநி அசேஷாணி தப கரமாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-39- என்று ஸ்ரீ பராசர பகவானும் குருகுல பூத ஸமஸ்த ப்ராயச்சித்தங்களும் ஒரு தட்டும் -தத் ப்ரதிநிதியான கிருஷ்ண அநு ஸ்மரணத்தை உத்க்ருஷ்டமாகவும் சொல்லிற்று –

இவ் விடத்தில் அநு ஸ்மரணமாவது-அநுர் நிஹீநார்த்தே -என்று சேஷத்வ அனுரூபமான அநு ஸ்மரணம் -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர என்று தாஸ்யத்தை ஸ்மர்த்தவ்யமாக விதித்தது இறே -இவ் விடத்தில் கிருஷ்ண ஸப்தம் -க்ருஷிர் பூ வாசகஸ் ஸப்தோ ணஸ் ச நிர்வ்ருதி வாசக -விஷ்ணுஸ் தத் பாவ யோகஸ் ச கிருஷ்ண இத்யபி விஸ்ருத -உத்யோக -69-5- என்று ஆனந்த ரூபத்துக்கு வாசகமாக நிர்வசிக்கப் படுகையாலே நிரதிசய ஆனந்த ஸ்வரூபனான கிருஷ்ணனைச் சொல்லுகிறது

ஸக்ருத் ஸ்ம்ருதோ அபி கோவிந்தோ ந்ரூணாம் ஜன்மஸ தார்ஜிதம் -பாப ராஸிம் மஹத் யாஸூ தூல ராஸி மிவாநல -என்று ஒருக்கால் ஸ்மரித்த மாத்ரத்திலே அநேக ஜென்ம ஆர்ஜித பாப ராஸி பஞ்சுப்பொரி போலே சுடும்
யதேஷீகா தூல மக்நவ் ப்ரோதம் ப்ரதூயதே ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே -சாந்தோ -5-24-3- என்று நெருப்பிலிட்ட பஞ்சு போலே பகவத் த்யான பனுடைய ஸர்வ பாபங்களும் வெந்து போம் என்கிற பிரகாரத்தை ஸ்ருதியும் சொல்லிற்று இறே

இப்படி அதி மஹத்தாயும் அல்பங்களுமாயும் உள்ள ஸமஸ்த பாபங்களுக்கு அஞ்சி அநு தப்தனாய் தந் நிவர்த்தக ப்ராயச்சித்தங்களிலே அபிமுகனான வனுக்கு பாபாநாம் ஆனந்தயத்தாலே- ப்ராயச்சித்தங்களும் அசங்க்யா தங்களாகையாலே ஜென்ம சத ஸஹஸ்ரங்கள் கூடினாலும் பிராயச்சித்த அனுஷ்டானத்தாலே பாப நிவர்த்தகம் அஸக்யமாகையாலே இந்த ஸமஸ்த பாபங்களையும் ஸக்ருத் அநுஷ்டே யமாய் இருபத்தொரு ப்ராயச்சித்தத்தாலே போக்கிக் கொள்ளப் போகிறோமோ என்னும்படி பாகம் பிறந்தவனுக்கு விஹிதமானது இறே ஸ்ரீ கிருஷ்ண விஷயமான ஸக்ருத் ஸ்மரணம் –

எங்கனே என்னில் -க்ருதே பாபே அநுதாபோ வை யஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பிராயச்சித்தம் து தஸ்யைகம் ஹரிஸம் ஸ்மரணம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-40- என்று பாப பயத்தால் பிறந்த அனுதாபத்தை அனுவர்த்தித்து பகவத் ஸ்மரணத்தையும் விதிக்கிற அளவில் ஏகம் என்று ஸக்ருத் கரணத்தையும் ஸம் ஸ்மரணம் என்று -ஸம் இத்யேகீ பாவே -என்கிறபடியே சரீராத்மா நிபந்தமான அப்ருதக் பாவ ஸ்மரணத்தையும் விதித்தது இறே –

இந்த ஸக்ருத் ஸ்மரணம் கேவலம் பாப க்ஷய அர்த்தமே யன்று-ஸ்வ அபி லஷித ஸமஸ்த புருஷார்த்த ப்ரதமமாய் இருக்கும் – ஆகை யிறே ப்ரஹ்லாதனும் -ஆயாஸ -ஸ்மரணே கோஸ்ய- ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -பாப க்ஷய ச பவதி -ஸ்மரதாம் தமஹர்நிகம் –ஸ்ரீ விஷ்ணு புரா -1-17-78- என்று உபதேசித்தது -அதாவது ஸ்மரண அநந்தரம் சோபனமான புருஷார்த்தகத்தை ஸர்வ காலமும் கூடா நிற்கும் -பிரதிபந்தகமான பாபம் ஸ்மரணத்தினுடைய ஆவர்த்தன மாத்திரத்திலே ஆதித்ய ஸந்நிதியில் அந்தகாரம் நசிக்குமா போலே ஸ்வயமேவ நஸியா நிற்கும் –இதுக்கு தேச கால அதிகாரி நியதியும் இல்லை என்றபடி –
ஆகையிறே -ப்ராதர்நிஸி ததா ஸந்த்யா மத்யாஹ் நாதி ஷு ஸம் ஸ்மரந் நாராயணன் அவாப்நோதி ஸத்ய பாப ஷயான் நர-ஸ்ரீ விஷ்ணு புரா –2-6-41- என்று ஸ்ரீ பராசர பகவானும் சொன்னார் இறே
இந்த ஸ்மரணம் ஸர்வ பல ப்ரதமே யாகிலும் முமுஷுவுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் அளவில் ஸ்வர்க்க பிராப்தியும் ப்ராப்ய பிரதிபந்தகமாம் படி ஸ்வயமேவ ரஸியா நிற்கும்

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

விஷ்ணு ஸம் ஸ்மரணாத் ஷீண ஸமஸ்த க்லேச சஞ்சய -முக்திம் ப்ரயாதி ஸ்வர்க்காப்தி தஸ்யந்தராய மைத்ரேய தேவேந்த்ரத்வாதிகம் பலம் -ஸ்ரீ விஸ்ணு புரா -2-6–42-43-என்று ஸ்மர்தவ்ய விஷய ஸ்வாரஸ்ய ப்ரீதி நிபந்தமான ஜப அர்ச்சநாதி கைங்கர்ய விசேஷங்களிலே அத்யர்த்த ப்ரியத்வத்தாலே இந்த்ராதி பத்யமும் அந்தராயம் என்று சொல்லப்பட்டது –

இந்த ஸ்மரணம் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்டப் ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்குமளவில் அநிச்சயா க்ருதமாகிலும் வஸ்து சாமர்த்யத்தாலே அவ்யபி சரிதமாய் இருக்கும் –
ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத -அநிச்சயாபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவக -ப்ருஹந் நார –11-99- என்று இச்சை இன்றியே ஸ்பர்சித்தாலும் அக்னி சுடுமா போலே ப்ரத் விஷ்டமான –(இவ் விடத்தில் சில வாக்கியங்கள் நஷ்டமானதாகக் காண்கிறன -அவை கோசாந்தரத்தில் காண்க) — நெஞ்சாலே நினைத்த ஸிஸூ பாலனுக்கு பலிக்கக் கண்டது இறே -இந்த ஸ்மரணம் கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் –

அவஸே நாபி யந் நாம்நி கீர்த்திதே ஸர்வ பதாகை -புமான் விமுச்யதே ஸத்யஸ் ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகைரிவ -ஸ்ரீ விஷ்ணு புரா -6–8-19
க்வ நாக ப்ருஷ்ட கமநம் புநரா வ்ருத்தி லக்ஷணம் க்வ ஜபோ வாஸூ தேவேதி முக்தி பீஜ மநுத்தமம்-ஸ்ரீ விஷ்ணு புரா -2-6-44-
ஸாங்கேத்யம் பாரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலந மேவ வா வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷாக ஹரம் வித்து -பாகவதம் -6-2–13-அஜோமில வ்யாக்யானம்
ஹத்யாயுதம் பாந ஸஹஸ்ர முக்ரம் குர்வங்க நாகோடி நிஷேவணஞ்ச ஸ்தேயாந்ய சங்க்யாநி ஹரே ப்ரியேண கோவிந்த நாம்நா நிஹதாநி ஸத்ய –
சக்ராயுதஸ்ய நாமாநி ஸதா ஸர்வத்ர கீர்த்தயேத் நா சவ்சம் கீர்த்தநே தஸ்ய ஸ பவித்ர கரோ யத –பாத்மோத்தர
பத்த பரிகரஸ் தேந மோஷாய கமநம் ப்ரதி ஸக்ருத் உச்சரிதம் யேந ஹரிரித் யஷர த்வயம் -காருட பூ 114-3-
நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வஸ வர்த்திநீ -ததா அபி நரகே கோரே பதந்தீஹ கிமத் புதம் –காருட -பூ 220-9

நாவாயில் உண்டே*  ‘நமோ நாரணா’ என்று,*
ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* – மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்*  வகைஉண்டே,*  என்ஒருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்


ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ் ச பீதா கோரேஷு ச வ்யாதி ஷு வர்த்தமாநா -சங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்தது காஸ் ஸூகிநோ பவந்தி
ஏதாவதால மகா நிர் ஹரணாய பும்ஸாம் ஸங்கீர்த்த நம் பகவதோ குண கர்மநாம்நாம் –ஆக்ருஸ்ய புத்ரம் அகவான் யத ஜாமிளோபி நாராயணேதி ம்ரியமாண உபைதி முக்திம்
கதவான் பரமம் பதம் தத –பதம் யத் என்றும் -இயாய முக்திம் என்றும் பாதாம் – -என்றும்
இது முதலான பிரமாண சதங்களாலே

பகவன் நாம ஸங்கீர்த்தனமும் ஸகல அநிஷ்ட சாந்தி பூர்வகமாக ஸர்வ அதிசயித புருஷார்த்த ப்ரதமாகச் சொல்லப்பட்டது இறே -இப்படி க்ருத ப்ராயச்சித்தனாகையாலே ஷீண பாபனானவனுக்கு ஸ்வ அனுஷ்டித புண்ய தாரதம்ய அநு ரூபமாக அநு பாவ்யங்களாய் இறே ஊர்த்வ லோகங்கள் இருப்பது –
இவ்விடம் தொடங்கி மேல் வாக்யங்களுக்கு அநு குணமாக ஸ்ரீ விஷ்ணு புராண -2-7- வசனங்களைக் கண்டு கொள்வது

இதில் கீழ் யுக்தமான பூ மண்டலத்துக்கு மேலே ஆதித்ய பதத்தளவும் நூறாயிரம் யோஜநம் உயர்த்தியாய் ஸித்த கந்தர்வாதிகள் ஸஞ்சரிக்கும் தேசமான அந்தரிக்ஷ லோகமாய் இருக்கும்
யாவத் பிரமாணா ப்ருதிவீ விஸ்தார பரி மண்டலாத் நபஸ் தாவத் பிரமாணம் வை வ்யாப்தம் மண்டலாதோ த்விஜ-ஸ்ரீ விஷ்ணு புரா -2-9-4- என்று அந்தரிக்ஷ லோகமும் பூமியோ பாதி விஸ்தாரத்தையும் சுற்றுடைமையையும் யுடைத்தாய் இருக்கும்

அந்த ஆதித்ய மண்டலத்துக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே சந்த்ர பதமாய் இருக்கும் -அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே நக்ஷத்ர பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே புதனுடைய பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸூக்ர -வெள்ளி
பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே அங்காரக -செவ்வாய்
பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ப்ருஹஸ்பதி பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே இரு நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸநி பதமாய் இருக்கும்
அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஸப்த ரிஷி மண்டலமாய் இருக்கும்
அதுக்கு மேலே நூறாயிரம் யோஜனத்தளவிலே ஜ்யோதிஸ் சக்ர கூடஸ்தமான த்ருவ பதமாய் இருக்கும்
ஆக பூமி அந்தரிக்ஷ ஸ்வர்க்கங்கள் மூன்றினுடைய உயர்த்தி சொல்லப்பட்டது –

அதில் பாதாசாரிகள் வர்த்திக்கும் தேசம் பூ லோகம்
பூமிக்கும் ஆதித்யனுக்கும் நடுவு புவர் லோகம்
ஆதித்யனுக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாலு நூறாயிரம் யோஜநம் உயர்த்தியை யுடைத்தாய் ஸாதிகாரர்களான க்ரஹ நக்ஷத்ராதிகள் வர்த்திக்கும் தேசமான ஸ்வர்க்க லோகமாய் இருக்கும்

இதுக்கும் மேலே -த்ருவ பத்துக்கும் மேலே – ஒரு கோடி யோஜனம் உயர்த்தியை யுடைத்தாய் -விநிவ்ருத்தாதி காராஸ்து மஹர் லோக நிவாஸிந –சைவ புராணே என்று நிவ்ருத்தி அதிகாரராய் அதிகார அபேக்ஷையை யுடையராய் கல்பாந்த ஸ்தாயிகளான இந்த்ராதிகள் வர்த்திக்கும் தேஸமாயுள்ள மஹர் லோகமாய் இருக்கும் –

அதுக்கும் மேலே இரண்டு கோடி யோஜநம் உயர்த்தியாய் ப்ரஹ்ம புத்ரர்களாகிற ஸநகாதி பரம யோகிகள் வர்த்திக்கும் தேசமான ஜனர் லோகமாய் இருக்கும் –

அதுக்கும் மேலே அதில் நாலு மடங்காம் படி எட்டு கோடி யோஜனம் உயர்தியான -உயர்த்தியை யுடைத்தாய் வைராஜாக்யரான ப்ரஜாபதிகள் வர்த்திக்கும் தேசமான தபோ லோகமாய் இருக்கும் – என்று தத்வ த்ரய வ்யாக்யான அநு ரோதேந பாடம் இருந்தால் நலம்
இது விஷ்ணு புராண ஸ்லோகத்துக்கும் -2-7-14-சேரும் –
தபோ லோகம் ஓங்காராதி பரம ரிஷிகள் வர்த்திக்கும் தேசமாய் இருக்கும் –

அதுக்கும் மேலே அதில் ஆறு மடங்காய் நாற்பத்தெட்டு கோடி உயர்த்தியை யுடைய ஸத்ய லோகமாய் இருக்கும்
இப்படி இத்யாதி வாக்ய அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -2-7-14-காண்க –
இப்படி ஸ்வர்க்க பர்யந்தமாக ஏக கோடியுமாய் கீழ் மேல் மஹர் லோகம் தொடங்கி ஐம்பத்து ஒன்பது கோடியாய் அறுபது கோடி உச்சாராயம் என்பாரும்- ஊர்த்வாத கடாஹங்களுக்கு நடுவு அண்ட உச்ச்சராயம் ஐம்பது கோடியாய் -ஸூர் யாண்ட கோலயோர் மத்யே கோட் யஸ்ஸ்யு பஞ்ச விம்சதி -சைவ புராணே -என்கையாலே ஸூர்ய மண்டலத்துக்குக் கீழே 25 கோடியும் மேல் 25 கோடியுமாக 50 கோடியாய் இருக்கும் என்பாருமாய் இருக்கும் –அப்போது ஸூர்ய பதத்துக்கு மேலே த்ருவ பதம் ஈறாகப் பதினாறு லக்ஷமும் மஹர் லோகம் ஒரு கோடியும் ஜனர் லோகம் இரண்டு கோடியும் தபோ லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 8 கோடியும் சத்ய லோகம் ஜனர் லோகத்துக்கு நாலு மடங்காய் 12 கோடியும் இந்த ஸத்ய லோகத்துக்கு மேற்பட நாலு லக்ஷம் குறைந்த இரண்டு கோடி அண்ட கடாஹ ஊர்த்தளவாக இருக்கும்

இனி ஸூர்யனுக்குக் கீழ் அண்டாத கடாஹத்து அளவும் அந்தரிக்ஷ லோகம் பூ லோகம் ஸப்த பாதாளங்கள் அநந்த ஸ்தானம் கார்ப்போதகம் அளவாகச் சொன்ன ஸங்க்யைகளை நீக்கி உள்மானம் என்று அவிரோதேந கொள்ளக் கடவது -இப்படி உத் ஸேதத்தை யுடைத்தான -இவ்விடத்திற்கு அனுகுணமாக -2-9-15–ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் காண்க –

சதுர் தச புவனத்திலும் ஊர்த்வ லோகமான ஸத்ய லோகத்திலே -தேஷாமேஷாம் கேசந ப்ரஹ்ம லோகா ருத்ரஸ் யான்யே சந்தி தத்ரைவ லோகா விஷ்ணோ ரன்யே சந்தி லோகா விஸாலாஸ் தாம் ஸ்தான் லோகாம்ஸ் தாநு பாஸ்ய வ்ரஜந்தி -என்று அம்ச பேதத்தாலே சில ப்ரஹ்ம லோகங்களாய் -சில சிவ லோகங்களாய் -சில விஷ்ணு லோகங்களாய் -அவ் வவரை உபாஸித்தவர்களுக்கு ப்ராப்யங்களாய் இருக்கும் –

இந்த சத்ய லோக வர்த்திகள் -வேதாந்த விஞ்ஞாந ஸூநிஸ் சிதார்த்தா ஸந்யாஸ யோகாத் யதயஸ் ஸூத்த ஸத்வா – தே ப்ரஹ்ம லோகே து பராந்த காலே பராம்ருதாத் பரி முச்யந்தி ஸர்வே -தைத்த ஆனந்த -6-10-22- என்றும்
ப்ரஹ்மணா ஸஹ தே ஸர்வே ஸம் ப்ராப்தே ப்ரதி சஞ்சரே -பரஸ் யாந்தே க்ருதாத்மாந பிரவிசந்தி பரம் பதம் -கூர்ம பு பூ 12-269- என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறபடியே பரமான ஸம்ஹார காலம் வந்தவாறே ப்ரஹ்மாவோடே கூடி மோக்ஷத்தை பிராபிப்பர்கள்

ஆப்ரஹ்ம புவநால் லோகா புநரா வ்ருத்தி நோர்ஜூந -கீதை -8-16- என்று ப்ரஹ்ம லோகத்திலே போனவர்களுடைய ஆவ்ருத்தி வசனம் -ப்ராஹ்மம் ஸந்யாஸி நாம் ஸ்ம்ருதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-6-37- இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ணாஸ்ரமாதி தர்ம சர்யையாலே ப்ரஹ்ம லோக பிராப்தி பண்ணின அவித்வத் விஷயம் யோகாதி சயத்தாலே பிராபித்த வித்வத் விஷயம் அன்று என்று கொள்ள வேணும்

இந்த லோகங்களில் -ஜனஸ் தபஸ் ஸத்யம் என்று சொல்லப்பட்ட ஊர்த்வ லோகங்கள் மூன்றும் ஆதி ஸ்ருஷ்டி தொடங்கி ப்ரஹ்மாவினுடைய ஆயுரவஸாநத்தளவும் நிற்கையாலே நடுவு அழிவு வந்து ஸ்ருஷ்டிக்க வேண்டாமையாலே அக்ருதகம் என்று பேராய் இருக்கும் -இதுக்கு அநு குணம் -ஸ்ரீ விஷ்ணு புரா -7-7-19-21-ல் காணலாம்

கீழ் பூம் யந்தரிக்ஷ ஸ்வர்க்க ரூபமான த்ரை லோக்யமும் (இந்த மூன்றும் கீழ் உள்ள ஏழும்)ப்ரஹ்மாவினுடைய அஹரவஸா நத்திலே ஸம் ஹ்ருதமாயும் கல்பாதிகளிலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டும் இப்படி ப்ரஹ்மாவினுடைய திநே திநே ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்கள் உண்டாகையாலே க்ருதகம் என்று பேராய் இருக்கும் –

நடுவில் மஹர் லோகமானது த்ரை லோக்ய ஸம்ஹாரத்தில் -யாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந –பாடாந்தரம் கோஸாந்தரங்களில் காண்க -த்ரி லோக்யாம் தஹ்யமா நாயாம் கஸ்த்யா சங்கர்ஷணாக்னிநா யாந்த் யூஷ்மணா மஹா லோகாத் ஜனம் ப்ருக்வா தயோர்த்திதா -என்கிற ஸூக வசனத்தில் இவ் வர்த்தம் காண்க -என்கிறபடியே தாபாதிகள் பொறுக்க மாட்டாதே மஹர் லோகத்தார் குடி வாங்கி ஜனர் லோகத்தே குடி புகுருகையாலே லோகம் ஸூன்யமாய் கல்பாதிகள் தோறும் குடி புகுருகையாலே க்ருதா க்ருதங்களுக்கு நடுவு என்றிட்டு க்ருதாக்ருதம் என்று பேராய் இருக்கும் –

இந்த த்ரை லோக்யம் இஜ்யா ரூபமான கர்ம அநுஷ்டான ஸ்தானமுமாய் இஜ்யா பல போக ஸ்தானமுமாய் இருக்கும்
அல்லாத லோகங்கள் யோக ஜனித் புண்யாதிஸயத்தினுடைய பல போகத்துக்கு ஸ்தானங்களாய் இருக்கும்

இதி தத்வ நிரூபநீ போக பூமி நிரூபணம் நாம சதுர்த்த அதிகாரம் ஸம் பூர்ணம் –

——-

பஞ்சம அதிகாரம்— ஸம்ஹாரம் – 12 ஆதித்யர்கள்
1-ஸம்ஹார நிரூபணம்
2-நித்ய நைமித்திக ப்ராக்ருதாத் யந்திக ப்ரளய ஸ்வரூப நிரூபணம்
3-ஸம்ஹார ப்ரகார நிரூபணம்
4-சதுர் முக க்ருத பத்தாத்ம ஸ்ருஷ்டி நிரூபணம்
5-அணிமாத் யஷ்ட ஐஸ்வர ஸ்வரூப நிரூபணம்
6-த்வாதஸாதித்ய நாம நிரூபணம்
7-ஆதித்யாதி ஸப்த கண நாம க்ருத்ய நிரூபணம்
8- த்வாதஸ மாஸேஷு த்வாதஸாதித்யாதி ஸப்த கண பரி ப்ரமண நிரூபணம்
9-ஆதித்ய மண்டலாதிஷ்டித புருஷ அந்தர்யாமி -ஸ்ரீ மன் நாராயண ஸ்வரூப நிரூபணம்

——–

ஸம்ஹாரம் இருக்கும் படி எங்கனே என்னில்
1-நித்யம் என்றும்
2-நைமித்திகம் என்றும்
3-ப்ராக்ருதம் என்றும்
4-ஆத்யந்திகம் என்றும் நாலு வகைப்பட்டு இருக்கும்
ஸம்ஹாரப் ப்ரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-3-4-

அதில் 1-நித்யமாவது -உத்பன்ன சேதனருக்கு யமாதிகளால் வருகிற சரீர வியோகம்
2-நைமித்தகமாவது – ப்ரஹ்மாவினுடைய ராத்ரிகள் தோறும் உண்டாகிற த்ரை லோக்ய விநாஸம்
3- ப்ராக்ருதமாவது -ப்ரஹ்மாவினுடைய ஆயுர் அவஸா நத்திலே ப்ரக்ருதி பர்யந்தமாக உண்டாகும் விநாஸம்
4-ஆத்யந்திகமாவது -உத்பன்னமான அவித்யாதிகளோடே கூட புனர் உத்பத்தி வாராதபடி உண்டாகும் சரீர விநாஸம்

இதில் பிரகிருதி நாஸ பர்யந்தமான ஸம்ஹாரம் ப்ராக்ருத ஸம்ஹாரமாகையால் -அது கீழ்ச் சொன்ன உத்பத்தி கிரமத்துக்கு உடலாகையாலே அறிய வேணும் –
அப்யவ பூர்விகையாய் இறே ஸ்ருஷ்டி இருப்பது –
இதில் முதல் நைமித்திக ஸம்ஹார க்ரமத்திலே நூறு வர்ஷம் அநா வருஷ்டியாய்க் கிடக்கும்
அனந்தரம் ருத்ர ரூபியான ஸர்வேஸ்வரன் -1-ஸூஷும்நோ 2-ஹரி கேஸஸ் ச 3-விஸ்வ கர்மா ததைவ ச 4-விஸ்வஸ்ய 5-ஸாஸ்வதா 6-ஸம்யத் வஸூரர் வாக்வ 7-வஸூஸ் ததா –கூர்ம பு பூ 42-3- என்று சொல்லுகிற ஸூஷும் நாதிகளான ஆதித்ய கிரணங்கள் ஏழிலும் பிரவேசித்து நின்று- பூமியிலும் ப்ராணிகளுடைய சரீரங்களிலும் உண்டான நீர்ப் பசையை அறுக்கும் -இப்படி லோகத்திலே துவட்டித்த நீர் கனத்தாலே அதிசயித்த தேஜஸ்ஸை யுடைத்தான இந்த ஏழு ஆதித்ய கிரணங்களிலும்
1-ஆரோகன் என்றும்
2-ப்ராஜன் என்றும்
3-படரன் என்றும்
4-பதங்கன் என்றும்
5- ஸ்வ வர்ணன் என்றும்
6- ஜ்யோதிஷ்மான் என்றும்
7-விபாஸன் என்றும்
ஆரோகோப்ராஜ படர பதங்க ஸ்வ வர்ணரோ ஜ்யோதி ஷீமான் விபாஸ -இதி ஸப்த ஸூர்யோ இதி ஸ்ருதே –யஜுஸ் ஆ -1-7-1-என்கிற பேர்களை யுடைத்ததாய்க் கொண்டு ஏழு ஆதித்யர்களாய் பரிணமிக்கும்
அவ் வேழும் இவ் வேழு லோகங்களையும் காறு காலில் பொறி கூறுபட்டது படுத்தித் தீயப் பண்ணும் –
இப்படித் தீய்கையாலே லோகத்தில் உண்டான மலைகளும் சுண்ணாம்புக் கல் போலே வெந்து நீராய் -நீறாய் -(பஸ்மமாய்
-) வ்ருஷ குல்மாதிகளும் வெந்து சாம்பலாய் பூ மண்டலம் அடைய ஒரு துரும்பு காண ஒண்ணாத படி ஆமை முதுகு போலே கிடக்கும்

இப்படி இவ் வாதித்யர்களாலே இந்த லோகத்தில் நெய்ப்பு நீர்ப் பசையும் அற்றவளவிலே ஈஸ்வரன் காலாக்கினி ருத்ர ரூபத்தைத் தரித்துக் கொண்டு பாதாள கதனான அநந்தன் முகத்திலும் குதித்து வைக்கோல் போரை அடியே தொடங்கிச் சுட்டுக் கொண்டு ஏறுமா போலே பாதாளம் தொடங்கி லோகங்களை அடைவிலே சுட்டுக் கொண்டு எரித்த அநந்தரம் முக நிஸ் வாசத்தாலே புஷ்கலா வர்த்தங்களான மேகங்களை ஸ்ருஷ்டிக்கும் -அம் மேகங்கள் ஆகாஸம் அடைய இடமடையும் படி மின்னலும் இடியுமாய் நூறு வர்ஷம் வர்ஷிக்கும் -அவ் வர்ஷ ஜலத்தால் எரிகிற நெருப்பும் அவிந்து லோகமடைய வெள்ளம் கோக்கும் -அநந்தரம் இப்படி வர்ஷிக்கிற மேகங்கள் அடையப் பாரிப் பரந்து போம்படி பகவன் முக நிஸ் வாசமாகிற காற்று நூறு வர்ஷம் ப்ரஹ்மாண்ட மடையக் குலுங்கும்படி அடிக்கும் -ஆன பின்பு நிரம்பி நிற்கிற ஜல தத்வம் அண்டாந்தர வர்த்தியான பூமியினுடைய பூமித்வ வ்யவஸ்தாபகமான கந்த குணத்தை க்ரஸிக்கும் -அக் கந்தையான பூமி ஜல தத்வமாயே விடும் –(குடம் உடைய மண் ஆகுமா போல் காரியப் பொருள் காரணப் பொருளாகவே ஆகி விடுமா போல்)

அந்த ஜலத்தினுடைய ரஸாத் மகமான குணத்தை தேஜஸ்ஸு க்ரஸிக்கும் -அந்த ரஸமான ஜலம் தேஜஸ்ஸாயே விடும் -அந்த தேஜஸ்ஸினுடைய ரூப குணத்தை வாயு க்ரஸிக்கும் பின்பு அந்த தேஜஸ்ஸு வாயுவாயே விடும் -வாயு குணமான ஸ்பர்சத்தை ஆகாசம் க்ரஸிக்கும் -பின்பு அந்த வாயு ஆகாசமாயே விடும் -ஆகாஸ குணமான ஸப்தத்தை பூதாதி க்ரஸிக்கும் -பின்பும் ஆகாஸமும் இந்த்ரியங்களும் ஒருக்காலே அஹங்காரத்திலே லயிக்கும் -அஹங்காரம் மஹானிலே லயிக்கும்

உர்வீ மஹாம்ஸ் ச ஜகத ப்ராந்தே அந்தர் பாஹ்யதஸ் ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-29- என்று அண்டத்துக்கு உள் வாயோடு புற வாயோடு வாசியற ஒரு ப்ராந்தத்திலே ப்ருதிவியும் ஒரு ப்ராந்தத்திலே மஹானும் என்று சொல்லுகையாலே -இதற்கு அநு குணமாக -6-4-29- விஷ்ணு சித்தீயத்திலே காண்க
உள் வாயில் ப்ரதம கோடியானபிருத்வி தொடங்கி சரம கோடியான மஹான் அளவும் செல்ல இவ் வண்டமான கார்யம் இப்படி அழிந்து ஆவரண ஜலமே சேஷித்து நிற்கும்

இஜ் ஜலம் தொடக்கமான ஆறு ஆரணமும் ஒன்றிலே ஓன்று லயித்து ப்ரக்ருதியே சேஷிக்கும் -அந்த ப்ரக்ருதி தானும் புருஷ சமஷ்டி யாத்மகமான அக்ஷர அவஸ்தையை பஜித்து- தத் அவஸ்தமான ப்ரக்ருதியும் புருஷனும் -ஆஸீதிதம் தமோ பூதம் அப்ரஞ்ஞாதம லக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஜ்ஜேயம் ப்ரஸூப்தமிவ ஸர்வத–மநு -1-5- என்கிறபடியே அநிர்த் தாரணீயமாகச் சொல்லப் படுகிற ஒரு அவஸ்தையை அடைந்து -ப்ரக்ருதிர்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வ ரூபிணீ புருஷஸ் சாப் யுபாவேதவ் லீயதே பரமாத்மநி -ஸ்ரீ விஷ்ணு புரா -6-4-39- என்கிறபடியே தமோ வஸ்தரான ப்ரதான புருஷர்கள் இருவரும் பரமாத்மாவின் பக்கலிலே விபாக நர்ஹ தஸா பத்தி லக்ஷண லயத்தை அடைந்து கிடப்பர்கள்-இப்படி பரமாத்மாவையே அடைந்து ப்ரக்ருதி புருஷாதி சகல விகல்ப ஸூன்யமாய்க் கொண்டு பரார்த்த காலம் கிடக்கும் -இது பிராகிருத ஸம்ஹார ப்ரகாரம்

இப்படி பகவாதாத்மகனான ப்ரஹ்மாவாலே ஸ்ருஷ்டமான லோகங்களில் கர்ம பல பேத ஸ்தானமாக நாநா வித சரீர பரிக்ரஹரம் பண்ணி உத் பன்னரான பத்தாத்மாக்களுடைய ஸ்ருஷ்டி ப்ரகாரம் நிரூபிக்கப் படுகிறது–ஸ்ருஷ்டி பிரகாரம் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5- காண்க –

அதில் ஸ்ருஷ்டியிலே உபக்ரமித்த ப்ரஹ்மாவுக்கு அபுத்தி பூர்வக -விஷேத்யாந ரஹித -தமஸ் ப்ரசுரமாய் குல் மதியான (புதர் தொடக்கமான)சர்க்கம் முந்துற உண்டாயிற்று -இது தான் 1-தமஸ்ஸு 2-மோஹம் 3-மஹா மோஹம் 4-தாமிஸ்ரம் 5-அந்த தாமிஸ்ரம் என்று பஞ்ச ப்ரகாரமான அவித்யா ரூபமாய் இருக்கும் –

வ்ருஷாதிகளுக்கு ஸப்தாதி பாஹ்ய ப்ரகாஸமும் ஸூக துக்காத் யந்த ப்ரகாசமுமாகிற ப்ரக்ருஷ்ட விஞ்ஞாநம் இன்றியே ஜலாத் யாதாநம் ஷத பங்க ஸம் ரோஹணம் -தோஹதாதி ஸம் பர்க்கங்களுக்கு வேண்டுமதுவே யாம்படி இருக்கும் -மஹீருஹாதி களுக்கு கிஞ்சித் ஞாத்ருத்வம் இறே உள்ளது -ஆகை யிறே -அந்தஸ் ஸம்ஜ்ஞா பவந்த்யேதே ஸூக துக்க ஸமன்விதா -என்று சொல்லப்பட்டது -இதற்குச் சொன்ன பஞ்ச ப்ரகாரத்வம் ஆவது -வ்ருக்ஷம் -குல்மம் – லதை வீருத் த்ருணம் என்று அஞ்சு வகையாய் இருக்கும் –
வ்ருக்ஷமாவது -உள் காள் புண்டான மரங்கள்
குல்மமாவது -தூறுகள்
லதையாவது -கொடிகள்
வீருத்தாவது -பற்றமான பூண்டுகள்
த்ருணமாவது -உள் ஈரம் இல்லாதவைகள்
இந்த வ்ருஷாதி சர்க்கம் திர்யக் ஸ்ருஷ்ட்யாதி களுக்கு முன்பாகையாலே முக்ய சர்க்கம் என்று சொல்லப்படும்
அபுத்தி பூர்வகம் என்றும் சொல்லப் படுகையாலே ப்ரஹ்மாவினுடைய ஸ்ரஷ்டத்வம் பகவத் ஸங்கல்ப அதீனம் என்றும் இந்த சர்க்கத்தினுடைய தமஸ் பிராஸுர்யத்துக்கு இதுவே ஹேது என்றும் தோன்றுகிறது –

இந்த தமோ மோஹாதிகள் அஞ்ஞாந பேதமாய் பத்த சேதனர் எல்லாருக்கும் உண்டாய் இருக்கும் -எங்கனே என்னில்
1- ப்ரக்ருதி மஹத் அஹங்கார மாத்ரா பஞ்ச காத்மகமான அஷ்ட பேத கர்ப்பமாய் இருந்துள்ள அநாத்மாவில் ஆத்ம புத்தி தமஸ்ஸு
2-அணிமாத்ய ஐஸ்வர்ய லாபத்தில் மமத்வம் மோஹம்
3-திவ்ய மானுஷ பேதத்தாலே தஸதா பின்னமான ஸப் தாதிகளில் ராகம் -மஹா மோஹம்
4- இந்த அஷ்ட ஐஸ்வர்ய தச விஷயங்களுக்கு பரரால் விரோதம் வந்தால் பிறக்கும் க்ரோதம் -தாமிஸ்ரம்
5- இவற்றினுடைய போகத்தில் நடுவே விநாஸம் வருகிறதோ என்கிற பயம் -அந்த தாமிஸ்ரம்
இவை யதார்த்த ஞான விரோதிகள் –

இவை ஐந்தையும் -அவித்யை -அஸ்மிதை -ராகம் -த்வேஷம் -அபி நிவேசம் -என்று சொல்லப்பட்ட கிலேச பஞ்சகமாகவும் சொல்லுவார்கள்
யோக ஸூத்ர காரர்கள் சொல்லுவார்கள் என்றபடி – அவித்யாஸ்மிதா ராக த்வேஷாபி நிவேசா பஞ்ச கிலேசா இதி ஸூத்ரம் –

இந்த பஞ்ச பர்வையான 1-அவித்யையில் தமஸ்ஸு எட்டு வகையும் 2-மோஹம் எட்டு வகையும் 3-மஹா மோஹம் பத்து வகையும் 4-தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் 5-அந்த தாமிஸ்ரம் பதினெட்டு வகையும் -ஆக ஐம்பத்து இரண்டு பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் -என்று சாங்க்யத்திலே சொல்லப்பட்டது

அணிமாத் யஷ்ட ஐஸ்வர்யமாவன -அணிமா மஹிமா சைவ கரிமா லகிமா ததா ஈஸத் வஞ்ச வஸித் வஞ்ச பிராப்தி ப்ராகாம்ய மேவ ச -லிங்க பு பூ -88-9- என்கிறபடியே யோக பலமாய்க் கொண்டு முமுஷுவுக்கு மோக்ஷ ப்ரதிபந்தகமாய் வரும் ஐஸ்வர்ய விசேஷங்கள்

இதில் 1-அணிமா வாவது -அத்யந்தம் அணுவான பதார்த்தங்களை உள்ளே யுள்ள அடங்க வல்லனாம்படி தன் சரீரத்தைச் சிறுக்குகை
2- மஹிமா வாவது – சதுர்த் தச புவனங்களையும் வியாபிக்கும் படி தன் சரீரத்தைப் பெருக்குகை
3- கரிமா வாவது புவநோத்தரண க்ஷமமான அதிசய சக்திகளாலும் சலிக்க ஒண்ணாத கனத்தை உடையனாகை
4-லகிமா வாவது -நிலா வெய்யில் தொடக்கமான ஸ்வச்ச பதார்த்தங்களும் தன்னைத் தரிக்கும் படி கன சரீரத்தை நொய்த்தாக்குகை
5-ஈஸத்வமாவது -அப்ரதிஹதமான ஸ்வச் சந்த ப்ரவ்ருத்தியை உடையனாகை
6-வஸித்வமாவது -ஜனன மரணாதி களும் ஸ்வ அதீனமாகை
7-பிராப்தி யாவது அதீத நாகத தூரஸ்தமான விஷயங்களையும் ப்ரத்யஷித்து பிராபிக்கை
8-ப்ராகாம்ய மாவது -யத்ர காம வஸா யித்வமாகையாலே தன் அபிமத விஷயங்கள் துர்லபங்களே யாகிலும் தான் நினைத்த படியே பர காய ப்ரவேசத்தாலே யாதல் -சாயாநு ப்ரவேசத்தாலே யாதல் -தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தாலே அதிஷ்டித்து அநு பவிக்கை
லிங்க புரா பூ 88-10-
இந்த தமோ மோஹாதி பேத பஞ்சகம் நக -ஸ்தாவர சர்க்கத்தில் (
நக -மலை)வந்தால் வ்ருஷாதியான வஸ்து பேதத்துக்கு ஸூசகமாய் இருக்கும்

இந்த நக சர்க்கம் கர்மாதிகாரத்தை உடைத்தல்லாமையாலே சம்சார ப்ரவ்ருத்திக்கு யோக்யமல்ல என்று நினைத்து பின்னையும் சர்க்காந்தரத்தில் வந்தால் உபக்ரமித்த ஸ்ரஷ்டாவானவன் த்யானம் பண்ணின அளவிலே பஸ்வாதியான திர்யக் ஸரோதஸ் ஸானது உத் பன்னமாயிற்று – திர்யக்க்காக ஸஞ்சரிக்கையாலே திர்யக் ஸ்ரோதஸ் என்று பேராகிறது –
அந்த பஸ்வாதிகள் தமஸ் ப்ரசுரங்களாய் -அத்தாலே ஸம்யக் அநுபவ ஞானம் இன்றியிலே இருக்கச் செய்தே ஸம்யக் ஞான அபிமானிகளாய் அவிவேகிகளாய் ஸாஸ்த்ர வஸ்யம் இல்லாமையாலே மாத்ருகமநாதி துர் மார்க்க ப்ரவ்ருத்தங்களாய் ஸூக துக்காத் யநுபவத்தாலே அந்த ப்ரகாஸ யுக்தங்களாய்
அஹங்க்ருதா அஹம் மாநா -ஸ்ரீ விஷ்ணு புரா -1-5-11- என்று கர்விதங்களுமாய் -தேஹாத்ம அபிமானிகளுமாய் ஸ்வ பர ஸ்வரூப ஞானம் இல்லாதபடி ஆவ்ருத சித்தங்களுமாய் -அஷ்டா விம்சத்வதத்தை யுடையவையாய் இருக்கும்

அஷ்டா விம்சத் வதமாவது
ஏகாதஸ இந்த்ரிய வதா மதா-இந்த பங்க்திக்கு அனுகுணமாக ஸ்ரீ விஷ்ணு சித்தீயத்தில் -1-5-11- காண்க – வாயு புராணத்திலும் பூ -6-42-சொல்லுகிறபடியே
இந்த்ரிய வைகல்யம் பதினொன்றும்
அம்பாதி துஷ்டிகள் ஒன்பதும்
தாரகாதி ஸித்திகள் எட்டும்
ஆக அஷ்டா விம்சத் வதம் என்று சொல்லப்படும்

இவற்றில் இந்த்ரிய வைகல்யமாவது -பதிரத்வமும் -த்வக் தோஷமும் -ஆந்த்யமும் வைரஸ்யமும் -நாஸாத்வம்ஸமம் ஞான இந்த்ரிய வைகல்யம்
மூகத்வமும்- குணித்வமும் -பங்குத்வமும்- க்லீபத்வமும் -யூதா வர்த்தத்வமும் கர்ம இந்த்ரிய வைகல்யம்
ஜடத்வம் மநோ வைகல்யம்
அம்பாதி நவ துஷ்டிகளுக்கும் தாரகாத் யஷ்ட ஸித்திகளுக்கும் வைகல்யம் புத்தி வதம் என்று பேராய் பதினேழு படியாய் இருக்கும் -இது திர்யக்குகளுக்கும் மனுஷ்யாதிகளுக்கும் பிரதான்யமாய் இருக்கும்
இதில் நவ துஷ்டிகளாவது -அம்பை ஸலிலை ஆபை வ்ருஷ்டி ஸூதாரை ஸூபாரை ஸூநேத்ரை மாரீசிகை யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்

அதில் அஷ்ட வித ப்ரக்ருதி பரிணாம விசேஷத்தாலே -சித்த லயத்தில் நீண்டும் முக்தனாகா நின்றேன்- த்யானத்தாலே என்ன பிரயோஜனம் என்கிற துஷ்டிக்கு அம்பை என்று பெயர்
ஸன்யாஸ வேஷோபாதாந மாத்ரத்தாலே க்ருதார்த்தனாகா நின்றேன் என்கிற துஷ்டிக்கு ஸலிலை என்று பேர்
காலாந்தரத்திலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு ஆபை என்று பேர்
பாக்ய வசத்தாலே ஸித்திக்கிறது என்கிற துஷ்டிக்கு வ்ருஷ்டி என்று பேர்
இவை நாலும் ஆத்யாத்மிகங்களாய்க் கொண்டு 1-ப்ரக்ருதி 2-உபாதானம் 3-காலம் 4-பாக்யம் என்கிற காம்யாந்தரங்களை யுடையவையாய் இருக்கும்

அர்த்தத்தினுடைய ஆர்ஜனத்திலும் -ரக்ஷணத்திலும் -ஷயத்திலும் கிலேச தர்சனத்தாலே மீண்டு இருக்கிற துஷ்டிகளுக்கு ஸூதாரை –ஸூபாரை ஸூநேத்ரை என்று பேர்களாய் இருக்கும்
ஸப்தாதி விஷய போகத்தில் திருப்தி பிறவாதே தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு மாரீசிகை என்று பேர்
விஷய போகத்தில் திருஷ்ணை கழியாது ஒழிந்தால் பாபாதி தோஷத்தைக் கண்டு மீண்ட துஷ்டிக்கு யுத்தமாம்பை என்று பேராய் இருக்கும்

அஷ்ட ஸித்திகளில் அநு பதிஷ்டமான அர்த்தத்தைப் பற்ற புத்தியால் உண்டான ஊஹம் ஸ்தாராக்யையான ஸித்தி –ப்ராசங்கிக்கமான ஸப்த ஸ்ரவணத்தாலே யாதல்- லோக யாத்ரா தர்சனத்தாலே யாதல் -அர்த்த ஞானம் பிறக்கை ஸூதாராக்யையான ஸித்தி –
குரு உபதேசத்தாலே எதிலும் அதிகமான அர்த்த ஞானம் பிறக்கை தாராயந்த்யாக்யையான ஸித்தி
ஆத்யாத்மிக ஆதி பவ்திக ஆதி தைவீக ரூப தாப த்ரய ஜய லாபத்தாலே மூன்று வகைப்பட்ட மோத -பிரமுதித மோதமாநாக்யைகளான ஸித்திகள்

இவ் விடத்தில் ஆத்யாத்மிக தாபத்துக்கு ஆயுர் வேதத்தாலே ஜயம்
ஆதி பவ்திகத்துக்கு லௌகிகங்களான தத் தத் அநு ரூப உபாய விஷயங்களாலே ஜெயம்
ஆதி தைவிகமான சீதோஷ்ண வாதாதிகளுக்கு ப்ரதிஸ்ர யாச்சாத ந சய்யா கௌதுக மங்களா சரணாதிகளாலே ஜயம்
ஆதி தைவிகஸ்ய ப்ரதிஸ்ர யோசிச்சாந ப்ரதிஷ்டாதாந சய்யா கௌதுக மங்களா சரணாதி நா ஜய –இதிஹி -1-5-11- விஷ்ணு சித்தீய வாக்யம்

மித்ர யோக வசத்தாலே -அர்த்த ஸித்தி உண்டாகை அதிக மாக்யையான ஸித்தி
வித்வத்த பஸ்விஜந ஸூஸ் ரூஷையாலே லப்யையான அர்த்த ஸித்தி ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்தி

ஆக தாராக்யை-ஸூ தாராக்யை-தார யந்த்யாக்யை -மோதாக்யை -பிரமுதி தாக்யை -மோதமாநாக்யை -அதிகமாக்யை -ஸதா ப்ரமுதி தாக்யையான ஸித்திகள் எட்டும்
அம்பாதி நவ துஷ்டியும்
புத்தி விபர்யாஸ ஜனிதங்களாய்க் கொண்டு புத்தி வதாத்மிகங்களான இவை பதினேழும்
இந்த்ரிய சக்திகள் பதினொன்றும்
மோஷாந்தராயங்களாக சாங்க்யத்திலே சொல்லப்பட்டது

ஏகாதஸ இந்த்ரிய வதாஸ் ஸஹ புத்தி வதைர ஸக்தி ருத்திஷ்டா -ஸப்த தச தாது புத்தேர் விபர்ய யாத் துஷ்டி ஸித்தீ நாம்
ஆத்யாத்மிகாஸ் ச தஸ்ர -ப்ரக்ருத் யுபாதாந கால பாக்யாக்யா–பாஹ்யா விஷயோ பரமா பஞ்ச நவ துஷ்டயோர் அபி ஹிதா -யூஹஸ் சப்தா அத்யயனம் துக்க விகாதாஸ் த்ரயஸ் ஸூஹ்ருத் பிராப்தி -தாநஞ்ச ஸித்தய அஷ்டவ் ஸித்தே பூர்வோங்குஸஸ்த்ரி வித -என்று ஸித்தே மோக்ஷஸ்ய -அங்குஸ அந்தராய த்ரிவித விபர்யாய ஸக்தி துஷ்டிரிதி

இப்படி அஷ்டா விம்சத் வதாத்மகமான திர்யக் சர்க்கம் ஸ்ருஷ்ட்யாதி ஜகத் ப்ரவ்ருத்தி ஹேது அல்லாமையாலே பின்னையும் ஸ்ருஷ்ட் யுன்முகனான ப்ரஹ்மாவினுடைய த்யான ரூப ஸங்கல்பத்தாலே யூர்த்வ ஸ்ரோதஸ் ஸப்த வாஸ்யமான தேவ சர்க்கம் உண்டாயிற்று
அநிமிஷ த்ருக்களாய் ஊர்த்வ ஸஞ்சார யுக்த ராகையாலே ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்கள் என்கிறது –
அந்த தேவர்களாகிறார் -ஸத்வ உத்ரிக்தராய் ஸூக ப்ரீதி பஹுளராய் -உள்ளோடு புறம்போடு வாசியற ஞாநாதி ரோதநம் இன்றியே ஸர்வதா ஸந்துஷ்ட சித்தராய் இருப்பார்கள் -அவர்களும் ஜகத் ப்ரவ்ருத்தி நிரபேஷராய் இருக்கையாலே கீழ்ச் சொன்ன முக்யமான நக சர்க்கம் (
ஸ்தாவர ஸ்ருஷ்டி)திர்யக் சர்க்கங்களோடு வாசியற அஸாதகமாக நினைத்து குண த்ரய விசிஷ்டராகையாலே ப்ரகாஸ ப்ரவ்ருத்தியாதி சீலரான மநுஷ்யர்களை ஸ்ருஷ்ட்டித்தான் -இந்த மனுஷ்ய சர்க்கம் -தேவ சர்க்கத்துக்குக் கீழாய் இருக்கையாலே அர்வாக்ஸ் ரோதஸ் என்று பேராய் இருக்கும் –

இப்படி ஸ்தாவ ராதிகளான நாலு ஸ்ருஷ்டிகளும் அந்விதங்களாய்க் கொண்டு கீழ்ச் சொன்ன ஸக்தி வதாதிகளான அநுக்ரஹ ஸ்ருஷ்டிகளோடே கூடி இருக்கும் –
1-மஹதாதி ஸ்ருஷ்டியும் 2-தன் மாத்ராதி பூத ஸ்ருஷ்டியும் -3-இந்த்ரிய ஸ்ருஷ்டியும் என்று ப்ராக்ருத ஸ்ருஷ்டி மூன்றாய்– (
ப்ரக்ருதி ஸ்ருஷ்ட்டியையும் சேர்த்து நான்காய்)ஸ்தாவராதிகளான நாலாயிருந்த அநுக்ரஹம் கூடி எட்டு ஸ்ருஷ்டிகளாய் இருக்கும் –

இது தான் அஷ்டம அநுக்ரஹஸ் சர்க்க ஸ சதுர்தா வ்யவஸ்தித -விபர்யயேண அசக்த்யா ச ஸித்தயா துஷ்ட்யா ததைவ ச -ஸ்தாவரேஷு விபர்யாசாத் திர்யக்யோ நிஷ்வ ஸக்தித -ஸித்த்யாத்மநா மனுஷ்யேஷு துஷ்ட்யா தேவேஷு க்ருத்ஸ் ந ஸ -என்று வாயவ்யத்திலே சொல்லுகிறபடியே ஸ்தாவர ஜாதியில் இந்த இந்த்ரியாதிகளுடைய ஸ்வரூப விபர்யாசத்தாலும் -திர்யக் ஜாதியில் ஸக்தி குண்ட நத்தாலும் -மநுஷ்ய ஜாதியில் ஸித்தி ரூபத்தாலும் -தேவ ஜாதியில் துஷ்டி ரூபத்தாலும் தத் தத் ஸ்வ பாவ அநுக்ரஹ ரூபம் என்றதாயிற்று

ஊர்த்வ ஸ்ரோதஸ் ஸுக்களான தேவர்கள் ஆகிறார் -ஸநகாதி பரம யோகிகளும் நவ ப்ரஹ்மாக்களும் முதலானாரும் -இன்னமும் ஊர்த்வ லோக வாசிகளான தேவ வர்க்கங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களாகிறார் –ஏகாதஸ ருத்ரர்களும்- (திருநாம்கூர் 11 திவ்ய தேசங்களும் இந்த 11 ருத்ரர்களுக்கு)த்வாதஸ ஆதித்யர்களும் (துவாதச ஆதித்ய சீலம் பிருந்தாவனத்தில் உண்டு -பிரச்சந்தன தீர்த்தம் வியாவை தீர்த்த குளமும் உண்டு)-அஷ்ட வஸூக்களும் அஸ்விநீ தேவதைகளும்(குதிரைமுக வைத்தியர்கள் -இந்திரன் பிரஜாபதி இருவரும் என்றும் பிரமாணம்) என்று சொல்லப்பட்டு இருக்கிற த்ரயஸ் த்ரிம்ஸத் கோடி நிர்வாஹகமான தேவதா வர்க்கங்கள்
ஏதே த்ரயஸ்ரிம் சத்தேவா இதி – கதமேந த்ரயஸ் த்ரிம் ஸதித் யஷ்டவ் வஸவ ஏகாதஸ ருத்ரா த்வாதஸாதித்யா த ஏக த்ரிம் ஸத் இந்த்ரஸ் சைவ பதிஸ் ச த்ரயஸ் த்ரிம்ஸா விதி –இதி ப்ருஹதாரண்யக ஸ்ருதி -5-9-2-

இவர்களில் த்வாதஸ ஆதித்யர்கள் ஆகிறார் -தாதார்யமா ச மித்ரஸ் ச வருணஸ் ச இந்த்ர ஏவ ச -விவஸ்வாம்ஸ் த்வத பூஷா ச பர்ஜன்யஸ் சாம்ஸ ஏவ ச -பகஸ் த்வஷ்டா ச விஷ்ணுஸ் ச ஆதித்யா த்வாதஸ ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புரா -1-15-131-
ஸர்வ புராணங்களிலும் பாட வ்யத்யாஸம் காண்கிறது என்று செல்லப்பட்டவர்கள்
ஸ ரதோ அதிஷ்டிதோ தேவை ராதித்யை ருஷிபிஸ் ததா -கந்தர் வைரப் ஸரோபிஸ் ச க்ராமணீ ஸர்வ ராக்ஷசை –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-2- என்கிறபடியே
தந்தாமை அநு வர்த்திப்பார் ஆதித்யர்கள் -ஸப்த ரிஷிகள் -கந்தர்வர்கள் -அப்சரஸ் ஸுக்கள் -யக்ஷர்கள் -சர்ப்பங்கள் -ராக்ஷசர்களாகிற ஏழு வர்க்கத்தோடு கூடி அம்மண்டலத்துக்கு வாசஸ் ஸ்தானமான ரதத்திலே இருப்பார்கள்

இவர்களில் -புலஸ்த்ய புலஹஸ் சாத்ரி வஸிஷ்டோ அதாங்கிரா ப்ருகு கௌதமஸ் ச பரத்வாஜ காஸ்யப க்ருதுரேவ ச ஜமதக்நி கௌசிகஸ் ச முநயோ ப்ரஹ்ம வாதிந ஸ்துவந்தி தேவம் விவிதை சந்தோபிஸ் தே யதாக்ரமம் –கூர்ம பு பூ -4-1-5- என்று பன்னிரண்டு ருஷிகளும் வேதாத்யயந பரராய்க் கொண்டு ஸ்துதிப்பார்கள்

தும்புரு நாரதோ ஹாஹா ஹுஹுர் விச்வா வஸூஸ் ததா -உக்ரேஸேநோ வஸூ ருசிர் விச்வாவ ஸூரதாபர -சித்ரஸேநஸ் ததோர்ணாயுர்த்ரு தராஷ்ட்ரோ த்விஜோத்தமா ஸூர்ய வர்ச்சா த்வாத ஸைதே கந்தர்வா காயதாம் வரா –கூர்ம பு பூ -41-12-13- என்று
பன்னிரண்டு கந்தர்வர்களும் காந பரராய் இருப்பார்கள்

க்ருதஸ்தலாஸ் ஸரோவர்யா ததான்யா புஞ்ஜிகஸ்தலா மேனகா ஸஹ ஜன்யா ச ப்ரம்லோசாபி த்விஜோத்தமா அநும்லோ ச க்ருதாசீ ச விச்வாசீ சோர்வஸீ ததா -அன்யா ச பூர்வ சித்திஸ் ஸ்யாத் அன்யா சைவ திலோத் தமா -கூர் பு பூ 41-14-15- என்று
சொல்லப்பட்ட அப்சரஸ் ஸுக்களும் ந்ருத்த பரராய் இருப்பார்கள்

ரதஜிச் ச ரதவ்ஜாஸ் ச க்ராமணீஸ் ச ரதஸ்வந -சித்ரஸ் ஸ்ரோதா பூரணஸ் ச ஸூஷேணஸ் ஸேந ஜித் ததா -தார்ஷ்யஸ் சாரிஷ்ட நேமிஸ் ச ருதஜித் ஸத்ய ஜித்ததா -கூர்ம பு பூ 41-6- என்கிற பன்னிரண்டு யக்ஷர்களும் குதிரை பிடித்து ஸேவிப்பர்கள்

வாஸூகி கச்ச வீரஸ் ச தக்ஷக ஸர்ப்ப புங்கவ ஏலா பத்ரஸ் சங்க பால ததைராவத ஸம்ஜ்ஞக தனஞ்சயோ மஹா பத்மஸ் ததா கார்க்கோடகோ த்விஜ -கம்ப லோஸ்வ தரஸ் சைவ வஹந்த்யேநம் யதா க்ரமம் -கூர்ம பு பூ 41-10-11- என்று
பன்னிரண்டு நாகங்களும் தேரை நடத்துவார்கள்

அத ஹேதி ப்ரஹேதிஸ் ச பவ்ருஷேயோ வதஸ் ததா சர்ப்போ வ்யாக்ரஸ் ததா பஞ்ச வாதோ வித்யுத் திவாகர -ப்ரஹ்மோ பேதஸ் ச விப் ரேந்திர யஜ்ஜோ பேதஸ் ச ராஷஸா –கூர்ம -பு பூ 41–42- என்கிற பன்னிரண்டு ராக்ஷஸர்களை அநு சரராய் இருப்பார்கள்

இப்படி ஆதித்யாதி ஸப்த கணங்களும் சைத்ராதியான பன்னிரண்டு மாஸங்கள் தோறும் மாறி மாறி பர்யாயேண நிர்வஹித்துப் போருவார்கள்

(ஆட்டுமுக நக்ஷத்ர மண்டலம் மேஷ ராசி-இதுவே ஸூர்யன் மேஷ ராசியில் நுழைகிறான் என்கிறது-சித்திரை மது மாஸம் -வைகாசி மாதவ மாதம்-கேசவ மார்கழி -தாமோதர மாசம் கார்த்திகை -வடக்கில் சொல்வர்)

அதில் -தாதா க்ருதஸ் தலா சைவ புலஸ்த்யோ வாஸூகிஸ் ததா ரத ப்ருத் க்ராமணீர் ஹேதிஸ் தும்புருஸ் சைவ சப்தம ஏதே வஸந்தி வை சைத்ரே மது மாஸே ஸதைவ ஹி –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-3- என்கிறபடியே
தாதா என்கிற ஆதித்யனும் க்ருதஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் புலஸ்த்யன் என்கிற ரிஷியும் வாஸூகி என்கிற சர்ப்பமும் ரதப்ருத் என்கிற யக்ஷனும் ஹேதி என்கிற ராக்ஷஸனும் தும்புரு என்கிற கந்தர்வனும் ஆகிற ஏழு பேரும் சைத்ரமாகிற மது மாஸத்தில் எப்போதும் வசிப்பர்கள்

மதுஸ் ச மாதவஸ் ச வா சந்திகா வ்ருதூ -ஸூக்ரஸ் ச ஸூதிஸ் ச க்ரைஷ்மா வ்ருதூ- நபஸ் ச தபஸ் யஸ்ய ஸைஸி ராவ்ருதூ என்கிற ஸ்ருதியை -யஜுர் -4-4-11-29- உட்க்கொண்டு மது மாஸம் இத்யாதி

அர்யமா புலஹஸ் சைவ ரதவ்ஜா புஞ்ஜிகஸ் தலா ப்ரஹேதி கச்ச வீரஸ் ச நாரதஸ் ச ரதே ரவே -மாதவே நிவசந்த்யேன –ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-5- என்கிறபடியே
அர்யமா என்கிற ஆதித்யனும் புலஹன் என்கிற ருஷியும் ரதவ்ஜா என்கிற யக்ஷனும் புஞ்ஜிகஸ் தலை என்கிற அப்சரஸ்ஸும் ப்ரஹேதி என்கிற ராக்ஷஸனும் கச்ச வீரன் என்கிற சர்ப்பமும் நாரதன் என்கிற கந்தர்வனும் ஆகிய எழுவரும் வைகாஸி மாசமாகிற மாதவ மாஸத்திலே வசிப்பர்கள்

மித்ரோத்ரிஸ் தக்ஷகோ ரக்ஷ பவ்ருஷேயோ அத மேநகா ஹாஹாரதஸ்வ நஸ் சைவ மைத்ரே யைதே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-7- என்கிறபடியே
மித்ரன் என்கிற ஆதித்யனும் அத்ரி என்கிற ருஷியும் தக்ஷகன் என்கிற சர்ப்பமும் பவ்ருஷேயன் என்கிற ராக்ஷஸனும் மேநகை என்கிற அப்சரஸும் ஹாஹா என்கிற கந்தர்வனும் ரதஸ்வநன் என்கிற யஷனுமாகிற எழுவரும் ஆனி என்கிற ஸூசி மாஸத்திலே வஸிப்பர்கள்

வ்ருணோ வஸிஷ்டோ ரம்பா ச ஸஹ ஜன்யா ஹுஹுவத ரதசித்ரஸ் ததாஸ் வாஸோ வஸந்த் யாஷாட ஸம்ஜ்ஞகே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-8- என்கிறபடியே
வருணன் என்கிற ஆதித்யனும் வஸிஷ்டன் என்கிற ருஷியும் ஸஹ ஜன்யை என்கிற ரம்பையாகிற அப்சரஸ்ஸும் ஹுஹு என்கிற கந்தர்வனும் வதன் என்கிற ராக்ஷஸனும் அஸ் வாஸன் என்கிற சர்ப்பமும் ஆகிற எழுவரும் ஆடியாகிற ஸூக்ர மாஸத்திலே வசிப்பார்கள்

இந்த்ரோ விஸ்வாவஸூஸ் ஸ்ரோதா ஏலா புத்ரஸ் ததாங்கிரா ப்ரம்லோசா ச நபஸ்யதே ஸர்ப்பஸ் சார்க்கே வஸந்தி வை -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-9- என்கிறபடியே
இந்த்ரன் என்கிற ஆதித்யனும் விஸ்வா வஸூ என்கிற கந்தர்வனும் ஸ்ரோதா என்கிற யக்ஷனும் ஏலா புத்ரன் என்கிற சர்ப்பமும் அங்கிரா என்கிற ருஷியும் ப்ரம் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சர்ப்பன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் ஆவணியாகிற நபோ மாஸத்திலே வசிப்பார்கள்

விவஸ்வாநுக்ரஸே நஸ் ச ப்ருகு ராபூரணஸ் ததா -அநும் லோசா சங்க பாலோ வ்யாக்ரோ பாத்ர பதே ததா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-1-10- என்கிறபடியே
விவஸ்வான் என்கிற ஆதித்யனும் உக்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் ப்ருகு என்கிற ருஷியும் ஆபூரணன் என்கிற யக்ஷனும் அநும் லோசை என்கிற அப்சரஸ்ஸும் சங்க பாலன் என்கிற சர்ப்பமும் வ்யாக்ரன் என்கிற ராக்ஷஸனுமாகிற எழுவரும் புரட்டாசி யாகிற நபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்

பூஷா வஸூ ருசிர் வாதோ கௌதமோ அத தனஞ்ஜய ஸூ ஷேணஸ் ச க்ருதாஸீ ச வஸந்த் யாஸ்வ யுஜேரதே-ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-11-என்கிறபடியே
பூஷா என்கிற ஆதித்யனும் -வஸூ ருசி என்கிற கந்தர்வனும் வாதன் என்கிற ராக்ஷஸனும் கௌதமன் என்கிற ருஷியும் தனஞ்சயன் என்கிற சர்ப்பமும் ஸூஷேணன் என்கிற யக்ஷனும் க்ருதாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் ஐப்பசி மாசமாகிற இஷ மாஸத்தில் வசிப்பர்கள்

விஸ்வா வஸூர் பரத்வாஜ பர் ஜன்யை ராவதவ் ததா விஸ்வாஸீ ஸேநஜிச் சாப கார்த்திகே ச தி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-12-என்கிறபடியே
விஸ்வா வஸூ என்கிற ஆதித்யனும் -பர்ஜன்யன் என்கிற கந்தர்வனும் ஆபன் என்கிற ராக்ஷஸனும் பரத்வாஜன் என்கிற ருஷியும் இராவதன் என்கிற சர்ப்பமும் ஸேநஜித் என்கிற யக்ஷனும் விஸ்வாசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் கார்த்திகை மாசமாகிற ஊர்ஜத்திலே வசிப்பர்கள்

அம்ச காஸ்யப தார்ஷ் யாஸ்து மஹா பத்மஸ் ததோர் வஸீ சித்ரஸே
நஸ் ததா வித்யுந் மார்க்க ஷீர்ஷாதி காரிண -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-13-என்கிறபடியே
அம்சன் என்கிற ஆதித்யனும் -சித்ர ஸேநன் என்கிற கந்தர்வனும் வித்யுத் என்கிற ராக்ஷஸனும் காஸ்யபன் என்கிற ருஷியும் மஹா பத்மன் என்கிற சர்ப்பமும் தார்ஷ்யன் என்கிற யக்ஷனும் ஊர்வசி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மார்கழி மாசமாகிற ஸஹோ மாஸத்திலே வசிப்பர்கள்

க்ரதுர் பகஸ் ததோர்ணா யுஸ் பூர்ஜ கார்க்கோடகஸ் ததா அரிஷ்ட நேமிஸ் சைவான்யா பூர்வ சித்திர் வராப்ஸரா பவ்ஷ்மாஸே வஸந்த்யேதே ஸப்த
பாஸ்கர மண்டலே ஷ்ய -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-14-என்கிறபடியே
பகன் என்கிற ஆதித்யனும் -ஊர்ணாயு என்கிற கந்தர்வனும் ஸ்பூர்ஜன் என்கிற ராக்ஷஸனும் க்ரது என்கிற ருஷியும் கார்க்கோடகன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் பூர்வ ஸித்தி என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் தை மாசமாகிற
பவ்ஷ்ய மாஸத்திலே –ஸஹஸ்ய மாஸத்திலே இதி பாரதம் – வசிப்பர்கள்

(குரு புஷ்ய உத்சவம் -பூசம் பரதனுக்கு நக்ஷத்ரம் -ராமானுர் திவ்ய மங்கள விக்ரஹ பிரதிஷடை)

த்வஷ்டா ச ஜமதக்நிஸ் ச கம்ப லஸ் ச திலோத்தமா ப்ரஹ்மோபேதோத ரதஜித் த்ருதராஷ்ட் ரஸ் ச சப்தம மாக மாஸே வஸந்த்யேதே ஸப்த மைத்ரேய பாஸ்கரே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-16-என்கிறபடியே
த்வஷ்டா என்கிற ஆதித்யனும் –த்ருதராஷ்ட்ரன் என்கிற கந்தர்வனும் ப்ரஹ்மோ பேதன் என்கிற ராக்ஷஸனும் ஜமதக்நி என்கிற ருஷியும் கம்பளன் என்கிற சர்ப்பமும் அரிஷ்ட நேமி என்கிற யக்ஷனும் திலோத்தமை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் மாசி மாசமாகிற
தபோ மாஸத்திலே வசிப்பர்கள்

விஷ்ணுரஸ்வதரோ ரம்பா ஸூர்ய வர்ச்சாஸ் ச ஸத்யஜித் விச்வா மித்ரஸ் ததா ரஷோ யஜ் ஜோ பேதோ மஹா முநே -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-18–என்கிறபடியே
விஷ்ணு என்கிற ஆதித்யனும் –ஸூர்ய வர்ச்சஸ் என்கிற கந்தர்வனும் யஜ்ஜோ பேதன் என்கிற ராக்ஷஸனும் விஸ்வாமித்ரன் என்கிற ருஷியும் அஸ்வதரன் என்கிற சர்ப்பமும் ஸத்ய ஜித் என்கிற யக்ஷனும் ரம்பை என்கிற அப்சரஸ்ஸும் ஆகிய எழுவரும் பங்குனி மாசமாகிற தபஸ்ய மாஸத்திலே வசிப்பர்கள்

மாஸேஷ்வேதேஷு மைத்ரேய வஸந்த்யேதே த்ரி ஸப்தகா ஸவிதுர் மண்டலே ப்ரஹ்மன் விஷ்ணு சக்த்யுப ப்ரும்ஹிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -2-10-19–என்கிறபடியே
இம் மாஸங்கள் தோறும் இவ் வாதித்யாதி ஸப்த கணங்களும் பகவச் சக்தியாலே உப ப்ரும்ஹிதராய்க் கொண்டு த்ரயீ மயமாய் பகவச் சக்தி மயமாயுள்ள ஆதித்ய மண்டலத்தை ஆஸ்ரயித்து இருப்பர்கள் -அதில் ஆதித்யன் மண்டலாதி பதியாய்க் கொண்டு ப்ரதானனாய் இருப்பன்
அல்லாதார் அவனை அநு சரித்து இருப்பர்கள் -அவ் வாதித்யனுடைய ஹ்ருதயத்திலே உபாஸ்யனாய்க் கொண்டு
வித்யா சஹாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் ஸநாதநம் கபிலம் ப்ராஹூ ராசார்யாஸ் சாங்க்யயோக விசக்ஷநா -மோ -347-69–352-30- என்று
செய்யாளான வித்யா ஸப்த வாஸ்யையான லஷ்மியோடே கூடி ஹிரண்மய விக்ரஹ விஸிஷ்டனாய் மத்யஸ்த நீல தோயத வித் யுல்லேகா பாஸ்வர காந்தியாலும் அத்தை முட்டாக்கிடுகிற லோஹித வர்ண ஸூதர்ஸந காந்தியாலும் காபிலச் சாயமாய் இருக்கையாலே கபிலன் என்று சொல்லப்பட்ட என்னை ஆதித்ய மண்டல மத்யஸ்தனாக சாங்க்ய யோக வித்தமர்கள் சொல்லுவார்கள் என்று பகவத் வசனம் உண்டாகையாலே ஸூர்ய அந்தராத்மாவாய் ஸ்ரீய பதி எழுந்து அருளி இருக்கும்

இதி தத்த்வ நிரூபணே தேவாதி நிரூபணம் நாம பஞ்சம அதிகாரம் ஸம் பூர்ணம் –

———-

ஷஷ்டாதிகாரம்–கால ஸ்வரூபம் – ஸப்த ருஷிகள்
1-ஆதித்ய ரத பரிமணாதி நிரூபணம்
2-ஸம்வத்ஸர பரிவத்ராதி நிரூபணம்
3-சாந்த்ரஸாவந ஸுவ்ர நக்ஷத்ர ரூப சதுர்வித ஸம்வத்ஸர பேத நிரூபணம்
4- ஸோம ரத நிரூபணம்
5-புத ரத நிரூபணம்
6-ஸூக்ர ரத நிரூபணம்
7-பவ்ம ரத நிரூபணம்
8-ப்ருஹஸ்பதி ரத நிரூபணம்
9-ஸநி ரத நிரூபணம்
10-ராஹு ரத நிரூபணம்
11-கேது ரத நிரூபணம்
12-ஆதித்யாதீ நாம் ஸஞ்சார நிரூபணம்
13-சாதுர் வர்ண்ய க்ரம ஸ்ருஷ்ட்யாதி நிரூபணம்
14-ப்ராஹ்மணாதி க்ருத்ய நிரூபணம்
15- கால ஸ்வரூப நிரூபணம்
16-ஸப்த ரிஷி -அஷ்ட வஸூ -ஏகாதஸ ருத்ர -சதுர் தச மநு -சதுர் தச இந்த்ர திக் பாலகாநாம் நாம நிரூபணம்
17-யுகாதி ஸித்தி நிரூபணம்
18-யுகாதி தர்ம நிரூபணம்
19-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ரூப த்ரிவித காரணத்வமபி பரமாத்மந இத்யர்த்த நிரூபணம்

———

ஏவம் பூதனான மண்டல வியாப்தமான ரதாம்சம் ஒன்பதினாயிரம் யோஜனமாய்
கந்தர்வாதி பரிவாராதிஷ்டிதமான அம்சம் ஆயிரம் யோஜனமாய்
ஆயாம விஸ்தாரங்கள் பதினாயிரம் யோஜனம் நீளத்தையும் அவ்வளவு பரப்பையும் யுடைத்தாய் ருக்கும் என்று புராணங்களிலே
யோஜநாநாம் ஸஹஸ்ராணி பாஸ்கரஸ்ய ரதோநவ -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-2- என்றும்
தச யோஜந ஸாஹஸ்ரோ விஸ்தாரயாமதோ ரத -வாயு பு பூ -5-5- என்றும் சொல்லப்பட்டது இறே

ஏற் கால் -18 நாழிகை பகல் 12 நாழிகை இரவு –சித்திரை மாதம்-மாற்றி அடுத்த ஆறு மாசங்களில்

இத் தேரினுடைய ஈஷா தண்டமான பாரானாது -ஈஷா தாண்டஸ் ததை வாஸ்ய த்வி குணோ முநி சத்தம என்று
இதில் இரட்டிப்பாய் 20000 யோஜனமாய் இருக்கும்
இது எல்லாம் தேஜோ மயமாகையாலே தூரத்திலே மண்டல ஆகாரமாய்த் தோன்றும்
இத் தேரினுடைய அச்சு ஒன்றைக் கோடி எழு நூறாயிரத்து ஐம்பதினாயிரம் யோஜனமாய்
மேரு தொடங்கி மாநஸோரத்தத்தளவும் நீளத்தை யுடைத்தாய் மகாஷம் என்று பேராய் -பூமிக்கு மேல் 84000 யோஜனமான மஹா மேருவுக்கு மேலே 16000 யோஜனத்தளவும் ஒரு தலைப்பும் மற்றைத் தலைப்பு புஷ்கரத்வீப மத்யத்திலே 50000 யோஜனம் உயர்த்தியை யுடைத்தான மாநஸோத்தர ஸைலத்துக்கு மேலே 50000 யோஜனத்து அளவிலேயாய் அத் தலையிலே கால சக்ர மயமான வேக சக்ரம் கோப்புண்டு இரண்டு தலையும் வாயு பாச பத்தமாய் மேல் த்ருவன் பக்கலிலே துவக்குண்டு இருக்கும்
ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-3- ல் இவ்
வினிடத்துக்கு அநு குணமாகக் காண்க
இதனுடைய ஹ்ரஸ் வாஷமமும் யுகமும் தனித் தனியே 45000 யோஜநம் நீளத்தை யுடைத்தாய் த்ருவ கதமான வாயு பாஸங்களிலே இரண்டு தலையும் பத்தங்களாய் இருக்கும்

இவ் வாதித்யனுக்கு இடமான யுகத்திலே
காயத்ரி
ப்ருஹதி
உஷ்ணிக்
ஜகதி
த்ரிஷ்டுப்
அனுஷ்டுப்
பங்க்தி -என்கிற ஸப்த சந்தஸ்ஸுக்களும் பச்சைக் குதிரைகள் ஏழாய்க் கொண்டு ரதத்தை வஹிக்கும்
(புரவி ஏழு ஒரு காலுடைய தேர்)ஸப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம் -யஜோர் ஆற -3-11- ருக்வேத -2-3-14-1-22-164-2-என்னக் கடவது இறே
ஆகில் ஏகோ அஸ்வோ வஹதி ஸப்த நாம – அதர்வ வேத -2-3-14–என்கிற ஸ்ருதியோடே விரோதியாதோ என்னில்
வேத ரூபமான ஹரி ரதஸ்வம் ஸப்த ஸந்தோ மயமான ஏழு ரூபத்தையும் ரூப அநு குணமான ஏழு பேரை யுடைத்தாய் ரதத்தை வஹிக்கும் என்று வஸ்து ஐக்யத்தைச் சொல்லிற்று இங்கு
ஸப்த யுஞ்ஜந்தி என்கிற ஸ்ருதி வ்யக்தி பின்னத்தைச் சொல்லிற்று -ஆகையால் விரோதம் இல்லை

(வடக்கு ராசி ஆறு
தெற்கு ராசி ஆறு
பூ மத்திய ரேகையில் இருந்து கடக்க ரேகை வரை வடக்கே செல்வதும்
மகர ரேகை வரை தெற்கே செல்வதும் உண்டு
12 ராசி -27 நக்ஷத்திரங்கள் -ஒரு ராசிக்கு இரண்டேகால் நக்ஷத்திரங்கள்-கால பேதம் -உஜ்ஜயின் திரும்பும் இடத்தில் -அங்கு இருந்து தான் விக்ரமாதித்யன் இருந்து –கடகரேகை – ஜ்யோதிஷம் கணித்தார்-)

இந்த மஹா ரதத்த்திலே -ஆதித்யனுடைய தக்ஷிண உத்தராயண கதிக்கு உறுப்பாக நூற்று எண்பத்து மூன்று ரேகையாய் அதுக்கு மேலே ஹ்ரஸ்வாக்ஷ பத்தமான ரதமாய்
அது வாயு பாஸ பத்தமாய்க் கொண்டு த்ருவ கதமாகையாலே மேருவுக்கு ஆஸந்நமாம்படி த்ருவன் ஆகர்ஷிக்கும்
தஷிணாயநத்தில் விப்ரக்ருஷ்ட மாம்படி பாஸத்தை நெகிழ விடும் -அதில் தை மாஸம் ப்ரதம திநம் தொடங்கி மாசி பங்குனி மூன்று மாஸமும் நித்யம் ஒரு வீதியாக வடக்கே போய்
சித்திரை மாஸம் ப்ரதம தினத்திலே வைஷு வதீ யாகிற வீதியிலே சென்று
மேலும் நித்யம் ஒரு வீதியாகச் சித்திரை வைகாசி ஆனி அளவும் வடக்கே போய்
ஆடி முதலாக தக்ஷிண யநத்திலும் ஆடி ஆவணி புரட்டாசி அளவும் நடந்து
ஐப்பசியிலும் விஷு வாகிற மத்ய வீதியிலே
வந்து மார்கழி மாச முடிவாக தக்ஷிண காஷ்டையிலே நடக்கும்
இப்படி மஹா மேருவை ப்ரதக்ஷிணம் வருமளவில் உத்தராயணத்தில் ப்ரதம தின ஸம்பந்தமாய் இருக்கும் -தஷிணாயநத்தில் தூரத்வ அநு ரூபமாக ஸீக்ர கதியாய் இருக்கும்

இப்படி வருகிற ஆதித்யனுக்கு தேச பேதேந வருகிற தர்சன அதர்சனங்கள் ஒழிய உதய அஸ்தமயங்கள் ஒருக்காலும் இல்லை –அதாவது
மேருவுக்குக் கிழக்கே -மத்யாஹ்நமாம் அளவில் தெற்குத்தைக்கு உதயமாம் – (
ஜப்பான் போன்ற இடம் மேருவுக்கு கிழக்கே-நாம் இருப்பது மேருவுக்கு தெற்கு)தெற்குத்திக்கு மத்யாஹ்நமாம் அளவில் கிழக்குத்தைக்கு அஸ்தனமாம் -மேற்குத்தைக்கு உதயமாய் தெற்குத்தைக்கு அஸ்தமயமாம் அளவில் கிழக்குத்தைக்கு அர்த்த ராத்ரியாம் -மேற்குத்தைக்கு மத்யாஹ்நமாம் –
இப்படி திக்குகள் எல்லாவற்றிலும் கண்டு கொள்வது –

இந்த ரதத்தில் மஹாஷத்தில் கோப்புண்ட ஏக சக்ரம் கால சக்ரமான படி என் என்னில்
த்ரி நாபி மதி சஞ்சாரே ஷண்ணேமிந் யக்ஷயாத்மகே -ஸம்வத்ஸரமயே க்ருத்ஸ்னம் கால சக்ரே ப்ரதிஷ்டிதம் -ஸ்ரீ விஷ்ணு புரா -2-8-4- என்கிறபடியே
சாதுர்மாஸ்ய த்ரயாத்மகமான –(இங்குத்தைக்குத் தகுதியான அர்த்தங்களை -2-8-4-ஸ்ரீ விஷ்ணு ஸித்தீயத்திலே காண்க )-நாபியை உடைத்தாய்
ஸம்வத்ஸரம் –
பரி வத்ஸரம் –
இதா வத்ஸரம் –
அநு வத்ஸரம் –
இத் வத்ஸரம் என்று சொல்லப்பட்ட ஐந்து வத்ஸரத்தையும் அரங்களாக யுடைத்தாய்
வஸந்த
க்ரீஷ்ம
வர்ஷ
ஸரத்
ஹேமந்த
ஸிஸி ரங்களாகிற ஷட் ருதுக்களையும் ஆறு நேமியாக யுடைத்தாய்
ப்ரவாஹ பரி வ்ருத்தியாலே அக்ஷய ரூபமாய் இருக்கிற கால சக்ரத்திலே ஸர்வமும் ப்ரதிஷ்டித மாகையாலே இந்த சக்ராத்மாவும் உபாஸ்யம் என்றபடி

இந்த பஞ்ச விதமான வத்சரங்களாவன -யதா மாகஸ்ய ஸூக் வஸ்ய ப்ரதி பச்சோத்தரா யணம் -ஸஹோயம் ஸ்ரவிஷ்டாபிஸ் ஸோமார்க்கவ் பிரதிபத்யத -ப்ரதமஸ் ஸோக்நி தைவத்யோ நாம்நா ஸம்வத்ஸரஸ் ஸ்ம்ருத -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் -)என்று
யாதொரு போது மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ப்ரதமை ஸ்ரவிஷ்டா நக்ஷத்ரங்களோடே கூடி நிற்கும் –
சந்த்ர ஆதித்ய ஸமவாயம் உண்டாகிறது -அது முதலான அக்னி தைவத்யமான ஸம்வத்சரம் என்று பேராய் இருக்கும்
(முதல் 12 ஆண்டுகள்)
யதா மாகஸ்யஸூக்லஸ்ய த்ரயோதஸ் யாமுதக்ரவி –யுக்தே சந்த்ரமஸா ரௌத்ரே வாஸநம் ப்ரதிபத்யதே -த்வீ தீய்யஸ் ஸோ அர்க்கதை வத்ய(த்விதீய ஸோமதைவத்ய -இதி விஷ்ணு சித்தீயே -2-8-72- பாடோ த்ருஸ்யதே )ப்ரோச்யதே பரிவத்ஸர -(வ்ருத்த கர்க்க ஸ்ம்ருதவ் ) என்று
யாதொரு போது மாக மாஸத்தில் த்ரயோதசியிலே திருவாதிரை சந்த்ர மாவோடே கூடின அளவிலே ஆதித்யன் அவ்விடத்தை அடையும் – அது ஆத்யதைவமான த்விதீயமான பரிவத்சரம் என்று பேராய் இருக்கும்

ஸூக்லே -க்ருஷ்ணே இதி ச பார -மாகஸ்ய தஸமீம் வாஸ வாதவ் திவாகரே சந்த்ராத்ருதீயம் ஸம் பிராஹு ரிதா வத்சரகம் புதா -( வ்ரு கா )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் தசமியிலே ஆதித்யன் அவ்விடத்திலேயாம் –
அது கூடுங்கால் சந்த்ர தைவத்யமாய் த்ருதீயமான இதா வத்சரமாகச் சொல்லா நின்றார்கள் –
ஸப்தமீ மாக ஸூக் லஸ்ய வாஸ வாதவ் திவாகரே சதுர்த்த மிந்த்ரதைவத்யம் தமாஹுரநு வத்ஸரம் -(வ்ரு க )மாக மாஸத்தில் ஸூக்ல பக்ஷத்தில் ஸப்தமியிலே ஆதித்யன் -அவ்விடம் முதலானதிலே கூடி யுள்ள விதத்தில் இந்த்ரதைவத்யமாய் சதுர்த்தமான அநு வத்ஸரம் என்று சொல்லா நின்றார்கள்
யத் யுத்தராயணம் க்ருஷ்ணே சதுர்த்யாம் ஸ்ரவஸோ பவேத்- இத்வத்ஸரஸ் ஸ விஜ்ஜேய பஞ்சமோ ம்ருத் யுதைவத -மாக மாஸத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் சதுர்த்தியில் ஆதித்யன் ஸ்ர விஷ்டாதி நக்ஷத்ரங்களிலே நிற்கிறான் -அது ம்ருத்யு தைவத்யமாய் பஞ்சமமான இத் வத்சரமாக அறியப்படும் –

இப்படி பஞ்சவிதமான இவ்வத்சரங்கள் –
சாந்த்ரம் என்றும்
ஸாவநம் என்றும்
ஸவ்ரம் என்றும்
நாஷத்ரம் என்றும் சதுர் விதமாயும் இருக்கும்
தர்ஸாத் தர்ஸஸ் சாந்த்ரஸ் த்ரிம் ஸத் திவஸஸ்து ஸாவநோ மாச ஸுவ்ரோர்க் கராஸி போகான் நாஷத்ரஸ் சேந்து மண்டலாத் கதித -என்கிறபடியே
அமாவாஸ்யை தொடங்கி மேல் அமாவாஸ்யை அளவும் செல்ல ஸாந்த்ர மாஸம்(
27 நாள் கணக்கு-இதனால் அதிக மாசம் மூன்று வருஷங்களுக்கு ஒரு தடவை வைப்பார்கள்)
முப்பது நாள் ஸாவந மாஸம்
ஆதித்யனுடைய ராஸி போகம் ஸுவ்ர மாஸம்
அஸ்வின்யாதி ரேவத் யந்தமான சந்த்ர பரிவ்ருத்தி நாஷத்ரமான மாஸம்
ஏவம் விதமான பரிகணிதங்களாலே பரிகணி தங்களான வத்ஸரம் அஞ்சு படியாகச் சென்றால் ஏக காலத்திலே ஏகோத் யோகத்திலே முடியும் காலத்துக்கு யுக விபாகம் என்று பேராய் இருக்கும்

(இவ்வாறு ஐந்து பன்னிரண்டு ஸம்வத்சரங்கள் சேர்ந்து அறுபது ஸம்வத்சரங்களாய் மீண்டும் மீண்டும் வரும் என்றதாயிற்று)

ஸோமனுடைய ரதம் -மூன்று சக்ர யுக்தமாய் -குதிரைகள் வெளுத்து குந்தா பங்களாய் வாரி கர்ப்ப ஸமுத் பவங்களாய் -பத்தாய் இரண்டருகும் பூண்டு த்ருவனை ஆதாரமாக உடையவையாய் இருக்கும் -ஸ்ரீ விஷ்ணு பு -2-12-
இந்த சந்திரனுக்கு க்ஷய வ்ருத்திகளில் வந்தால் பூர்வ பக்ஷத்தில் பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் ஆதித்யனால் சங்க்ருஹீதமாய் அம்ருதமயமான பதினாலு களையும் -தேவர்கள் -ப்ரதமாம் பிபதே வஹ்நிர்த்விதீயாம் பிபதே ரவி -என்கிற அடைவிலே புஜிப்பார்கள்
அவசிஷ்டமான ஏக கலையோடே ஆதித்யனைக் கிட்டி அமை என்கிற ரஸ்மியிலே வசிக்கையாலே அமாவாஸ்யை என்று பேராகிறது
அமாவாஸ்யையில் ஆஹா ராத்ரத்திலே சந்திரன் பூர்வம் அப்பிலே ப்ரவேசித்து அநந்தரம் வீருத் ப்ரமுகமான வ்ருஷாதிகளிலே ப்ரவேசித்து -பின்னை ஆதித்யனைக் கிட்டுகையாலே அமாவாஸ்யையில் வ்ருஷாதிகளுடைய சேத நாதிகள் பண்ணும் இடத்தில் ப்ரஹ்ம ஹத்யா சமம் என்று சொல்லப்பட்டது –

புதனுடைய தேர் -வாய் வக்னி ஸம் பூதமாய் பொற் குன்று நிறத்தை யுடைய எட்டுக் குதிரையோடே கூடி இருக்கும்

ஸூக்ரனுடைய தேர் -பூ சம்பவங்களாய் இருக்கிற வெளுத்த நிறத்தை யுடைய எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்

செவ்வாயினுடைய தேர் -அக்னி சம்பவங்களாய் சிவந்த குதிரைகள் எட்டுக்களோடே கூடி இருக்கும்

காஞ்சன மயமான வெளுப்பு நிறத்தை உடைத்தான எட்டுக் குதிரைகளை யுடைத்தான தேரிலே ப்ருஹஸ்பதி இருக்கும்

ஆகாஸ சம்பவங்களாய் கிருஷ்ண வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடின தேரிலே ஸநை சரன் மெள்ள நடவா நிற்கும்

ராஹுவினுடைய தேர் கறுத்த குதிரை எட்டு பூண்டு நடவா நிற்கும்

கேதுவினுடைய தேர் சித்ர வர்ணங்களான எட்டுக் குதிரைகளோடே கூடி இருக்கும்

கிரஹண காலத்திலே ராஹு வானவன் தான் நிற்கிற த்ருதீய ஸ்தானத்திலும் கீழே போந்து ப்ரதிபத் பர்வ சந்நிதியிலே தூ சரமான சந்த்ராதித்யர்களை பூசாயை யாகிற தமஸ்ஸாலே உப ப்ரும்ஹிதனாய் திரோதானம் பண்ணும்
இது கேதுவுக்கும் ஒக்கும் இறே

இவர்களில் ஆதித்யனும் புதனும் ஸூக்ரனும் மேற்கே ராசியை ஒரு மாஸத்திலே சஞ்சரிப்பர்கள்
சந்த்ரன் இரண்டே கால் நாளிலே ஸஞ்சரிக்கும் –
செவ்வாய் ஒன்றரை மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
ப்ருஹஸ்பதி ஒரு வத்சரத்திலே ஸஞ்சரிக்கும்
ஸநைஸ் சரன் இரண்டரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
ராஹு ஒன்றரை வத்சரத்தில் ஸஞ்சரிக்கும்
கேது இருபது மாஸத்திலே ஸஞ்சரிக்கும்
இவர்கள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் ஸப்தம ராஸியிலே இருப்பர்கள்

இந்த கிரஹங்கள் எல்லாம் ப்ரத்யங் முகமாய்க் கொண்டு மேருவை ப்ரதக்ஷிணமாய் வரச் செய்தே ராஸி போகத்தில் ப்ராங்முகராய்க் கொண்டு பிற் காலித்து புஜியா நிற்பர்கள் –
ஆகையால் நக்ஷத்ர மண்டலத்துக்கு ப்ரத்யக் கதி ஒழிய ப்ராக் கதி ஒருக்காலும் இல்லை
இப்படி ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரமான ஜ்யோதிர் மண்டலம் எல்லாம் தனித் தனியே வாயுபாஸ பத்தங்களாய்க் கொண்டு ஸிம்ஸூமார ப்ரஜாபதி புச்சஸ்திதனான த்ருவனை ஆதாரமாக யுடைத்தாய் பரி ப்ரமியா நிற்கும்
அந்த ஸிம்ஸூமார ப்ரஜாபதிக்கு ஆதாரம் -த்யவ்ஸ் ஸ சந்த்ரார்க்க நக்ஷத்ரா கம் திஸோ பூர் மஹோததி –வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந -பாரத ஆநு -149-121- என்று வாஸூ தேவஸ்ய வீர்யேண -என்கையாலே ஸங்கல்ப ரூப ஞாந விஸிஷ்டனான தத் அந்தர்யாமியான நாராயணானேயாய் இருக்கும் –

இந்த வாயு பாஸங்கள் -மேகங்களும் அர்க்கனும் இந்திரனும் நக்ஷத்ரங்களும் க்ரஹங்களும் ஸப்த ரிஷிகளும் த்ருவனுமாகிற ஏழு ஆஸ்ரயத்தையும் பற்றி
ஆவஹ ப்ரவஹஸ் சைவ ததைவ அநுவஹ பர -ஸம்வஹோ விவஹஸ் சைவ ததூர்த்வம் ஸ்யாத் பரோவஹ -ததா பரிவஹஸ் சோர்த்வம் வாயோர்வை ஸப்த நேமய -கூர்ம பு பூ -40-6- என்கிறபடியே
ஆவஹம் -என்றும்
ப்ரவஹம் என்றும்
அநு வஹம் என்றும்
ஸம் வஹம் என்றும்
விவஹம் என்றும்
பரோ வஹம் என்றும்
பரி வஹம் என்றும் வாயு நேமிகள் ஏழு வகையாய் இருக்கும்
இவை தன்னாலே பத்தங்களான ஸப்த பதார்த்தங்களுக்கும் ஆதார பூதனான த்ருவனுக்கும் ஆதாரமான ஸிம்ஸு மாரனுக்கும் ஆதார பூதன் நாரங்களுக்கு எல்லாம் அயநமான நாராயணனே என்றதாயிற்று

ஏவம் பூதரான தேவர்களை ஆராதித்து வர்ஷாதி ஸித்தியாலே ஸஸ்ய ஸம்ருத்தியைப் பெற்று யஜ்ஞாதி கர்மங்களைப் பண்ணுகைக்கு உறுப்பாக
ஸஹ யஜ்ஞ ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோ வாச ப்ரஜாபதி -அநேந ப்ரஸவிஷ்யத்வம் ஏஷாவோஸ் த்விஷ்ட காம துக் தேவான் பாவ யதாநேந தே தேவா பாவயந்து வ -பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரமவாப்ஸ்யத –கீதை -3- என்றும்
அஃனவ் ப்ராஸ்தாஹுதிஸ் ஸம்யகாதித்ய முபதிஷ்டதே – ஆதித்யாஜ் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர் அன்னம் தத ப்ரஜா –ப்ரஹ்ம பு -29-4- என்றும் சொல்லுகிறபடியே
யஜ்ஞாத் யாராதிதரான ஆதித்யாதி தேவர்களாலே வ்ருஷ்டி ஸஸ்ய ப்ரஜா வ்ருத்திகளானவை ப்ரதிபாதிக்கப்படா நின்றது இறே
ஆகையால் -சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ -கீதை -4-13- என்கிறபடியே
யஜ்ஞாத் யநுஷ்டான நிஷ்பத்தி பிறக்கைக்காக சாதுர் வர்ண் யமானது ஸர்வ ஸ்ரஷ்டாவான ஸர்வேஸ்வரனாலே முக பாஹுருபாத ஜாதரான ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய ஸூத்ர விபாகத்தாலே ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது

(முகம் ப்ராஹ்மணர்
தோள்கள் க்ஷத்ரியர்
கைகள் வைஸ்யர்
திருவடி ஸூத்ரர்
)

ப்ராஹ்மணர் ஆகிறார் –
அத்யயனம்
அத்யாபநம்
யஜநம்
யாஜநம்
தானம்
ப்ரதி க்ரஹம் -என்கிற ஷட் கர்மத்துக்கும் கடவராய்
தபோ தமஸ் ஸமஸ் சவ்சம் ஷாந்திர் ஆர்ஜவமேவச ஞான விஞ்ஞாநம் ஆஸ்திக்யம் ப்ராஹ்மம் கர்ம ஸ்வபாவஜம்
என்கிற ஸ்வபாவஜ கர்ம நிரதராய் இருப்பர்கள்
(ஆறு தொழில் அந்தணர்)

ஷத்ரியர் ஆகிறார்
அத்யயன
யஜன
தானங்கள் ஆகிற த்ரி கர்மத்துக்கும் கடவராய்
ப்ரஜா பாலந தத் பரராய்
சவ்ர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம் யுத்தே சாப்யபலாயநம் தாநமீஸ்வர பாவஸ் ச ஷாத்ரம் கர்ம ஸ்வ பாவஜம் –கீதை -18-42-43- என்கிற
ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்

வைஸ்யர் ஆகிறார்
அத்யயநாதி கர்ம த்ரயத்துக்கும் அதிகாரிகளாய்
க்ருஷி கோ ரக்ஷ வாணிஜ் யங்களாகிற ஸ்வ பாவஜ கர்ம நிரதர்களாய் இருப்பார்கள்

ஸூத்ரராகிறார்
இந்த வர்ண த்ரய ஸூஸ்ருஷை பண்ணுகையே ஸ்வா பாவிக கர்மமாக யுடையராய் இருப்பார்கள்

இவர்கள் வர்ணாஸ்ரம அநு ரூபமான கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் இடத்தில் -காலேஹ்நி கர்ம சோஸ்யதே -என்கிறபடியே கர்ம அனுஷ்டானம் காலாதீனம் ஆகையால் -கால ஸ்வரூபம் நிரூபணீயம் –
காலமாவது -அநாதிர் பகவான் காலோ நாந்தோஸ்ய த்விஜ வித்யதே -அவிச்சிந்நாஸ் ததஸ்த்வேதே சர்க்க ஸ்தித் யந்த ஸம்யாமா –தைத்த-நா -6-1-8-என்கிறபடியே
ஸர்வேஸ்வரனுடைய ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு பரிகர பூதமாய்
உத்பத்தி விநாஸ ரஹிதமாகையாலே நித்யமாய்
கலா முஹுர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ -விஷ்ணு பு -1-2-26- இத்யாதி ஸ்ருதி மர்யாதையாலே
கலா முஹுர்த்தாதி மயமான அவயவ விபாகத்தை யுடைத்தாய் இருபதொரு அசித் விசேஷமாய் இருக்கும்

அதில் –காஷ்டா பஞ்சத ஸாக்யாதா -நிமேஷா முநி சத்தம காஷ்டா த்ரிம் ஸத் கலாத்ரிம்ஸத் கலா மவ்ஹுர்த்திகோ விதி -தாவத் ஸங்க்யைர் அஹோ ராத்ரம் முஹுர்த்தைர் மாநுஷம் ஸ்ம்ருதம் – அஹோ ராத்ராணி தாவந்தி மாஸ பக்ஷ த்வயாத்மக -தைஷ் ஷட்பிர் அயனம் வர்ஷம் த்வே அயநே தஷிணோத்தரே அயனம் தக்ஷிணம் ராத்ரி -தேவாநாம் உத்தரம் திநம் – திவ்யைர் வர்ஷ ஸஹஸ்ரைஸ் து க்ருத த்ரேதாதி ஸம்ஜ்ஞகம் -சதுர் யுகம் த்வாதஸபி ஸ்தத் விபாகம் நிபோதமே -ஸத்வாரி த்ரீணி த்வே ஸைகம் க்ருதாதி ஷு யதாக்ரமம் திவ்யாப்தாநாம் ஸஹஸ்ராணி யுகேஷ்வாஹு புராவித -தத் ப்ரமாணைஸ் சதைஸ் சந்த்யா பூர்வா தத்ராபிதீயதே -ஸந்த்யாம் ஸஸ்சாபி தத் துல்யோ யுக ஸ்யா நந்தரோ ஹி ஸ -ஸந்த்யா ஸந்த்யாம் ஸயோரந்தர்ய காலோ முநி சத்தம
யுகாக் யஸ்ஸது விஜ்ஜேய க்ருதத்ரேதாதி ஸம்ஜ்ஜித -க்ருதம் த்ரேதா த்வாபரஸ் ச கலிஸ் சேதி சதுர்யுகம் ப்ரோச்யதே தத் ஸஹஸ்ரஞ்ச ப்ரஹ்மணோ திவஸம் முநே ப்ரஹ்மணோ திவஸே ப்ரஹ்மன் மந வஸ்து சதுர் தச -பவந்தி பரிணாமஞ்ச தேஷாம் கால க்ருதம் ஸ்ருணு – ஸப்தர்க்ஷயஸ் ஸூராஸ் சக்ரோ மநுஸ் தத் ஸூநவோ ந்ருபா –ஏக காலே ஹி ஸ்ருஜ்யந்தே ஸம்ஹ்ரி யந்தே ச பூர்வவத் சதுர் யுகாணாம் சங்க்யாதா ஸாதிகாஹ்யேக ஸப்ததி –மந்வந்தரம் மநோ கால ஸூராதீ நாஞ்ச சத்தம -அஷ்டவ் சத ஸஹஸ்ராணி திவ்யயா சங்க்யா ஸ்ம்ருதம் -த்விபஞ்சா ஸத் ததான்யாநி சஹஸ்ராண்யதிகாநி து -த்ரிம் ஸத் கோட் யஸ்து ஸம் பூர்ணாஸ் சங்க்யாதாஸ் சங்க்யயா த்விஜ -ஸப்த ஷஷ்ட்டிஸ் ததான்யாநி நியுதாநி மஹாமுநே -விம்சதிஸ் ச ஸஹஸ்ராணி காலோயமதிகம் விநா மந்வந்த்ரஸ்ய சங்க்யேயாம் மானுஷை வத்ஸரை த்விஜ -சதுர்தச குணோஹ்யேஷா காலோ ப்ராஹ்மஹ ஸ்ம்ருதம் ப்ராஹ்மோ நைமித்திகோ நாம தஸ்யாந்தே ப்ரதி சஞ்சர -ததா ஹி தஹ்யதே ஸர்வம் த்ரை லோக்யம் பூர் புவாதி கம் ஜநம் ப்ரயாந்தி தாபார்த்தா மஹர் லோக நிவாஸிந -ஏகார்ணவே து த்ரை லோக்யே ப்ரஹ்மா நாராயணாத்மக போகி ஸய்யாக தஸ்ஸேதே த்ரை லோக்ய க்ராஸ ப்ரும்ஹி -ஜனஸ்தைர்யோகி பிர் தேவஸ் சிந்த்யமாநோப்ஜ சம்பவ -தத் பிரமணாம் ஹி தாம் ராத்ரிம் ததந்தே ஸ்ருஜதே புந -ஏவஞ்ச ப்ரஹ்மணோ வர்ஷம் ஏவம் வர்ஷ சதம் து தத் -சதம் ஹி தஸ்ய வர்ஷாணாம் பரமாயுர் மஹாத்மந -ஸ்ரீ விஷ்ணு பு -1-3- என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

பதினைந்து நிமேஷம் கொண்டது காஷ்டையாய்
முப்பது காஷ்டை கொண்டது கலையாய்
முப்பது கலை கொண்டது முஹூர்த்தமாய்
முப்பது முஹூர்த்தம் கொண்டது மானுஷ்யமான அஹோ ராத்ரமாய்
முப்பது அஹோ ராத்ரம் கொண்டது பக்ஷ த்வயாத்மகமான மாஸமாய்
ஆறு மாஸம் கொண்டது அயனமாய்
தக்ஷிண உத்தரமான அயனம் இரண்டு கொண்டது வர்ஷமாய்

இந்த தஷிணாயனம் தேவர்களுக்கு ராத்ரியாய்
உத்தராயணம் பகலாய்
ஸம்வத்ஸரம் தேவர்களுக்கு நாளாய் இருக்கும்
இப்படி முந்நூற்று அறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வத்சரமாய்
தேவ வத்சரம் பன்னீராயிரம் கொண்டது க்ருத த்ரேதா த்வாபர கலி யுகம் என்று சொல்லப்பட்ட சதுர் யுகமாய் இருக்கும்

இதில் நாலாயிரம் தேவ ஸம்வத்ஸரம் க்ருத யுகமாய் இருக்கும்
மூவாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்ரேத யுகமாய் இருக்கும்
இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரம் த்வாபர யுகமாய் இருக்கும்
ஆயிரம் தேவ வத்ஸரம் கலியுகமாய் இருக்கும்

நிற்கிற இரண்டாயிரம் தேவ ஸம்வத்ஸரமும் -க்ருத த்ரேதாதி கணக்கிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமாயும் பிரியும்
இதில் க்ருத யுகத்திலே பூர்வ உத்தரங்களிலே ஸந்த்யையும் சந்த்ய அம்சமுமாயும் தேவ ஸம்வத்ஸரம் நானூறு நானூறு கழியும்
த்ரேதையில் பூர்வ உத்தரங்களில் முந்நூறு முந்நூறு கழியும்
த்வாபரத்தில் பூர்வ உத்தரங்களில் இருநூறு இரு நூறு கழியும் கலி யுகத்தில் பூர்வ உத்தரங்களில் நூறு நூறு கழியும்

இப்படி விபக்தமான சதுர் யுகங்கள் ஆயிரம் ப்ரஹ்மாவினுடைய ஒரு பகலாய் இருக்கும்
இந்த ஒரு பகலிலே பதினாலு மந்வந்தரமாய் –
மந்வந்தரம் தோறும் –
ஸப்த ரிஷிகள்
அஷ்ட வஸூக்கள்
ஏகாதஸ ருத்ரர்கள்
த்வாதஸ ஆதித்யர்கள்
அஸ்வின தேவதைகள் என்கிற த்ரயஸ்த்ரிம்ஸமும்(முப்பத்து மூவரும்
)
சதுர் தச மநுக்கள்
சதுர்தச இந்த்ராதி திக் பாலரும்
கல்பாதியிலே ஸ்ருஷ்டருமாய்
கல்பாந்தே ஸம் ஹ்ருதருமாய்க் கொண்டு போருவர்கள்

இவர்களில் ஸப்த ரிஷிகள் ஆகிறார்
அத்ரி
ப்ருகு
வஸிஷ்ட
அகஸ்த்ய
அங்கிரச
கௌதம
பரத்வாஜர் என்று சொல்லப் பட்டவர்கள்
ஒவ்வொரு மந்வந்தரத்தில் ஸப்த ரிஷிகள் பேதிப்பர்கள் என்று அறியவும்
இவை ஸ்ரீ விஷ்ணு பு -3-1-ல் காணலாம்

அஷ்ட வஸூக்கள் ஆகிறார்
ஆபோ
த்ருவன்
ஸோமன்
தரன்
அநிலன்
அநலன்
ப்ரத் யூஷன்
ப்ரபாஸன்–என்று செல்லப்பட்டவர்கள்

ஏகாதஸ ருத்ரர்கள் ஆகிறார்
ஹரன்
பஹு ரூபன்
த்ர்யம்பகன்
அபராஜிதன் வ்ருஷாகபி
சம்பு
கபர்தீ
ரைவதன்
ம்ருக வ்யாதன்
சர்வன்
கபாலீ -என்று செல்லப்பட்டவர்கள்
ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ர்யம்ப கஸ் ச அபராஜித வ்ருஷாகபிஸ் ச சம்புஸ் ச கபர்தீ ரைவதஸ் ததா ம்ருக வ்யாதஸ் ச ஸர்வஸ் ச கபாலீ ச மஹா முநே ஏகாதஸைதே கதிதா ருத்ராஸ் த்ரி புவநேஸ்வரா –இதி ஸ்ரீ விஷ்ணு புராணே பாட
வ்ருஷாகபி சங்கரஸ் ச இதை ப்ராமாணத் திரட்டில் –1-5-3- –
பாரதம் புராணாந்தரங்களில் நாம பேதம் காண்கிறன
மாத்ஸ்யத்தில் -அ -5- அஜைக பாதஹிர் புத்ன்ய -விரூபாஷோ அத ரைவத ஹரஸ் ச பஹு ரூபஸ் ச த்ரயம்பகஸ் ச ஸூரேஸ்வர -சாவித்ரஸ் ச ஜயந்தஸ் ச பிநாகீ ச அபராஜித ஏதே ருத்ராஸ் ஸமாக்யாதா ஏகாதஸ கணேஸ்வரா -என்று காண்கிறன
கல்ப பேதேந நாம பேத பரன்களாக இவைகளைக் கண்டு கொள்வது
ஸ்ரீ விஷ்ணு பு-3-1-ல் காண்க

த்வாதஸ ஆதித்யர்கள் கீழே சொல்லப்பட்டது

இனிப் பதினாலு மனுக்கள் ஆகிறார்
ஸ்வயம்புவன்
ஸ்வாரோ சிஷன்
உத்தமன்
தாபசன் -தாமஸன் என்று புராணத்தில் பாடம்
ரைவதன்
சாஷுஸன்
வைவஸ்வதன்
ஸாவர்ணிகன்
தஷஸா வர்ணிகள்
ப்ரஹ்ம சா வர்ணிகள்
தர்ம ஸா வர்ணிகன்
ருத்ர ஸா வர்ணிகன்
ரோசமாநன்
பவ்மன் என்று செல்லப்பட்டவர்கள்

சதுர்தச இந்த்ரராகிறார்
ஸஸீ பதி
விபஸ்சித்
ஸூசாந்தி
ஸிபி
விபு
மநோஜவ
புரந்தர
விரோசந ஸூதபலி
மஹா வீர்ய
சாந்தி
வைவ்ருஷா
ருதுதாமா
திவஸ்பதி
ஸூசி -என்று செல்லப்பட்டவர்கள்

திக் பாலகர்கள் ப்ரஸித்தம் இறே
இந்த்ர அக்னி
யம நைர்ருத
வருண வாயு
குபேர ஈஸாந-என்று செல்லப்பட்டவர்கள் திக் பாலர்கள் என்று அறியவும்

ஒரு மந்வந்தரம் எழுபத்து ஒன்றே சிலவான சதுர் யுகமாய் இருக்கும் -1000 வகுத்தல் 14
அது தேவ ஸம்வத்ஸரம் என்று நூறாயிரத்து ஐம்பத்து ரீராயிரமாய் இருக்கும்
இது மானுஷ ஸம்வத்சரத்தில் முப்பது கோடியே அறுபத்து ஏழாயிரமும் இருபதினாயிரமும் அதிக அம்சம் இருபதினாயிரமுமாக முப்பது கோடியும் லக்ஷத்து ஏழாயிரமுமாய் இருக்கும்
இது ஒரு மந்வந்தரமாய் இருக்கும்
இப்படி பர்யாயமான மன்வந்தரம் பதினாலு ப்ரஹ்மாவுக்கு ஒரு பகலாய் –
அவ் வஹர் அவசாநத்திலே பூர் புவஸ் ஸூவ என்கிற த்ரி ஜகத் ப்ரளயமாய் இருக்கும்
பின்னை சதுர் யுக ஸஹஸ்ர ஆவ்ருத்தி காலம் அளவாக ராத்ரியாய்
ததந்தே ஸ்ருஷ்டியாய் இருக்கும்
இப்படியான அஹோ ராத்ரத்தாலே ப்ரஹ்மாவுக்கு பரம ஆயுஸ்ஸு வர்ஷ சதமாய் இருக்கும்

இப்படிச் சொன்ன சதுர் யுகங்களில் வைத்துக் கொண்டு க்ருத யுகத்திலே
க்ருதே து மிதுன உத்பத்தி ஸித்திஸ் சாபி ரஸோல்லஸா ஸக்ருத் வ்ருஷ்டி மயீ சான்யா க்ரஹ வ்ருஷாத் மிகா பரா பஸ்சாத் ஸங்கல்ப ஸித்திஸ் ச கல்ப வ்ருஷாத்மிகா பரா –
ப்ரகாம வ்ருஷ்டிஸ் சாக்ருஷ்ட பஸ்ய ஸித்திஸ் ததாஷ்டமீ -லிங்க பு -பூ 39-14-15—கௌர்மே ச பூ 28-21-22-முத்ரித புராணே கோஸே து கிஞ்சித் அந்யதா பட்யதே –என்கிறபடியே
ரஸோல்லாஸாதி யான -எல்லாக் கோசங்களிலும் ரஸோல்லாஸாதி -என்று தொடங்கிக் காண்கிறது ஸ்லோக பாட அநு குணமாகக் காணவில்லை
அஷ்ட ஸித்தியும் ஸ்வத ஏவ ஸம்பவியா நிற்கும்

அதில் ரஸோல்லாஸை யாவது
யோக அப்யாஸத்தாலே தன்னுடைய மூர்த்தாவில் சந்த்ர மண்டலம் உருகி ஒழுகின அம்ருதத்தாலே திருப்தி பிறந்து தாஹாதிகள் அற்று இருக்கை

மிதுன உத்பத்தி யாவது
ஸ்த்ரீ நிரபேஷமாக ஸூகம் பிறக்கை

ஸக்ருத் வ்ருஷ்டி மயியாவது
ஒருக்கால் வர்ஷிக்க ஸஸ்யங்கள் உண்டாகை

க்ரஹ வ்ருஷாத்மிகை யாவது
தன்னுடைய இச்சையால் க்ரஹத்தில் வருஷங்கள் உண்டாகை

ஸங்கல்ப ஸித்தி யாவது
தான் நினைத்த போதே அபிமதம் ஸித்திக்கை

கல்ப வ்ருஷாத்மிகை யாவது
பரத்வாஜனைப் போலே நினைத்தது எல்லாம் உண்டாகை
ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டத்தில் காண்கிறோம்

ப்ரகாம வ்ருஷ்டியாவது
வேண்டும் அளவிலே கநக்க வர்ஷிக்கை

அக்ருஷ்ட பஸ்ய ஸித்தியாவது
க்ருஷி பண்ணாமல் விளைகை

இப்படி அயத்ன லப்யங்களான இந்த ஸித்திகள் யுகாந்தரங்களில் ஸ்வ யத்னத்தாலே ஸாதித்துக் கொள்ளப்படும்
இதில் -த்யாயன் க்ருதே யஜன் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரேர்ச்சயன் -யதாப்னோதி ததாப்னோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு பு -6-2-17 என்று
யுகாந்தரங்களில் யாகாதிகளாலே லபிக்கும் பலத்தை கலி யுகத்தில் ஸங்கீர்த்தன மாத்ரத்தாலே லபிக்கும்

இப்படி நிஜமான மாநத்தாலே பரிகணிதமான த்வி பரார்த்த கால வர்த்தியான சதுர் முகனை சரீரமாகக் கொண்டு ஸ்ருஷ்டியைப் ப்ரவர்த்திப்பித்தும்
ஸ்வேந ரூபேண ரக்ஷணத்தைப் பண்ணியும்
ருத்ர ரூபியாய் ஸம்ஹரித்தும்
ஸகல ஜகத்தையும் ஸர்வேஸ்வரன் தானே லீலைக ப்ரயோஜனமாய்க் கொண்டு நிர்வஹிக்கும் என்னும் இடம்
அப்ரமேயா அநியோஜ்யஸ் ச யத்ர காம கமோ வஸீ மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ-சபா பர் -61-31-
அப்ரமேயத்வம் -பரிபூர்ணத்வம் -அநியோஜயத்வம்-அநிதர சேதன ப்ரேர் யத்வம் -யத்ர காமகம இத்யநேந வாயூதகாதி ப்ரேரணாதீநா அபுத்தி பூர்வகஸ் பந்தாதி சேஷ்டாவ்யாவ்ருத்தி -ஸ்வேச்சா க்ருத ப்ரவ்ருத்தி விகாத வ்யுதா ஸோ வா –ஸ்வா தீந லீலோப கரணத்வம்
வஸீ ஸப்தார்த்த –விஸ்வம் –வஸம் -யஸ்ய ஸ வஸீ —
இந்த்ரிய பராதீன சேஷ்டா வ்யாவ்ருத்த் யர்த்தோ வா வஸீ ஸப்த -பாலக த்ருஷ்டாந்தேந -லீலாயா -ப்ரயோஜனாந்தர நைர பேஷ்யம் -அபி ப்ரேதம்
அநேந ராஜ்ஞாம் பண பந்த பூர்வக த்யூதாதி வ்யாவ்ருத்தி கார்ய வர்க்க பேஷயா பகவன் மஹிம்நோ விபுல தரத்வம் -க்ரீட நகை -இத்யேநேந பலிதம்
இத்யஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ வர்ணித ஸ்ருத ப்ரகாசிகாயாம் மங்கள ஸ்லோக வ்யாக்யாந வஸரே
ஸ்ருஷ்டி ஸ்தித் யந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் -ஸ ஸம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு பு -1-2-66–அஸ்ய ஸ்லோகஸ்ய அர்த்தோ பாஷ்ய காரேண வேதார்த்த ஸங்க்ரஹே வர்ணித தத்ர த்ரஷ்டவ்ய-என்று இத்யாதியாலே சொல்லப்பட்டது இறே

ஆனால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு தஷாதிகளை கர்த்தாக்களாகச் சொல்லுவான் என் என்னில்
ப்ரஹ்மா தஷாதய காலஸ் ததைவ கில ஜந்தவ -விபூதயோ ஹரே ரேதா ஜகதஸ் ஸ்ருஷ்டி ஹேதவ -விஷ்ணுர் மன்வாதய -கால ஸர்வ பூதாநி ச த்விஜ -ஸ்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய -ருத்ர காலாந்த காத் யாஸ் ச ஸமஸ்தாஸ் சைவ ஜந்தவ சதுர்தா பிரளயாயைதா ஜநார்த்தன விபூதய –ஸ்ரீ விஷ்ணு பு -1-22- என்கிற படியே
பகவத் விபூதித்வேந ஸ்ருஷ்ட் யாத் யன்வயமாகக் கடவது
இவ் விடத்தில் விஷ்ணுத்வமாவது
ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாம் அஹம் –ஸ்ரீ கீதை 10-31- என்கிற இடத்தில் போலே அவதார ரூபேண விபூதியாக விவஷிதம்

இதி தத்வ நிரூபணே வர்ண நிரூபணம் நாம ஷஷ்ட்டி அதிகாரம் ஸம் பூர்ணம்

———–

ஸப்தம அதிகாரம் – ஶ்ரீமந் நாராயணன் பரதைவம்
1-நியந்த்ருத்வ நிரூபணம்
2-ஈஸ்வரா நங்கீகாரே தோஷ நிரூபணம்
3-காரண வாக்யஸ்த ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் விசேஷ ஸப்த பர்யவஸாந நிரூபணம்
4-இந்த்ர அக்னி யாதித்ய சந்த்ர வைஸ்ரவண யம வருண வாயு ப்ரப்ருதி தேவதா ஸமூஹஸ்ய காரணத்வாத் யஸம்பவ நிரூபணம்
5- ருத்ர ஜகத் காரணத்வ மத நிரூபணம் -ருத்ரஸ்ய ஸ்வே தாஸ்வர உப நிஷத் ப்ரதிபாத்யத்வம்
6-தஸ்ய சாந்தோக்ய தஹர வித்யா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
7-தஸ்ய ப்ருஹதாரண்யக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
8-தஸ்ய அதர்வண ஸிகா ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
10- தஸ்ய தைத்ரீய ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
11- தஸ்ய அதர்வ ஸிர உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
12- சதுர்முக காரணத்வ மத நிரூபணம்
13- தஸ்ய அம்பஸ்யநுவாக ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
14- தஸ்ய முக்த ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
15-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸப்தவத் ஸிவாதி ஸப்தாநாம் ஸாதாரணத்வ ஸமர்த்தநம்
16- ருத்ரஸ்ய ஜன்யத்வ ப்ரதிபாதநம்
17-நாராயண பரத்வ சமர்த்தந ஆரம்ப
18-ஸத் ப்ரஹ்மாத்மாதி ஸாமான்ய ஸப்தாநாம் நாராயண ஸப்த பர்யவஸாந சமர்த்தனம்
19-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் இதி வாக்யார்த்த விசார
20-நாராயணஸ்ய மோக்ஷ ப்ரதத்வாதி நிரூபணம்
21-தஸ்ய நாராயண உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
22-தஸ்ய மஹா உபநிஷத் ப்ரதிபாத்யத்வ நிரூபணம்
23-தஸ்ய ஸ்வேதாஸ்வதர உப நிஷத் கடித சிவ ஸப்த வாஸ்யத்வ ஸமர்த்தனம்
24- சதுர்முக ருத்ரயோ நாராயண ஜன்யத்வ ஸம்ஹார்யத்வாதி நிரூபண முகேந காரணத்வாபாவ ஸமர்த்தனம்
25-காரண வாக்ய கடித ஹிரண்ய கர்ப்பாதி ஸப்த நாமபி பரமாத்ம பரத்வ ஸமர்த்தனம்
26-ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்ததாக்ரே இத்யஸ்ய பரமாத்ம பரதயா அர்த்த வர்ணனம்
27-அம்பஸ்யபாரே -இத்யனுவாகஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
28-புருஷ ஸூக்தஸ்ய நாராயண பரத்வ ஸமர்த்தனம்
29-தாதா யதா பூர்வம் -என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
30-ப்ரஜாபதேஸ் ஸபாம் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
31-தத் ஸ்வயம் பூர் பகவான் என்கிற ஸ்ருதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
32-நாராயண அநு வாக ப்ரதிபாத்ய நிரூபணம்
33-நாராயண பரம் இத்யாதியில் சொல்லும் பஞ்சமீ ஸமா ஸகண்டநம்
34-த்ருஷ்டாந்த ப்ரதர்சன பூர்வகம் நியாய விரோத ப்ரதர்சன பூர்வகஞ்ச தத் வாக்யார்த்த நிரூபணம்
35-த்ருஷ்டாந்தரங்களைக் கொண்டு பூர்வ யுக்த சமர்தன பூர்வக நிகமனம்
36-ஸ்வேதாஸ்வ தரஸ்த -ததோ யதுத்தரதரம் இத்யாதி வாக்ய கத சங்கா நிராகரணம்
37-உபக்ரமாதி கரண நியாய நிரூபணமும் தத் ஸமன்வயமும்
38-பூர்வ யுக்த -ததோ யதுத்தர தரம் இத்யாதி வாக்யத்தில் சங்காந்தரமும் தத் சமதானமம்
39-தத்ரைவ ஹேத்வந்தரங்கள்
40-தத் ப்ரகரணகத-ஸர்வாநநஸிரோக்ரீவ -இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
41-அத யதிதமஸ்மிந் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
42-யுக்த அர்த்தத்தில் வாக்யகார ஸம்வாதம்
43-துல்ய ந்யாயாத் -தஹ்ரம் விபாப்மம் இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
44-யத் வேதாதவ் இத்யாதி ஸ்ருத்யர்த்த வர்ணனம்
45- காரணந்து த்யேய =இத்யாதிக்கு நாராயண பரத்வ ஸமர்த்தனம்
46-பரமே வ்யோமன் -என்கிற இடத்தில் பரம வ்யோம ஸப்தத்துக்கு பரமபத வாசகத்வாபாவ நிராகரணம்
47-அஹமேவ ப்ரதம மாஸம் -இத்யாதி ஸ்ருதிக்கு பாவமும் அதுக்கு த்ருஷ்டாந்தங்களும்
48-இதுக்கு ஸூத்ரகார ஸம்வாதம்
49-இதுக்கு மஹா பாரதத்தில் ஸம்வாதம்
50-அதர்வ ஸிரோத்வி தீய கண்டஸ்த -யோவை ருத்ர -இத்யாதிக்கு ருத்ர பரத்வாபாவோப பாதநம்
51- அதர்வ ஸிரோத்ருதீய சதுர்த்த கண்டஸ்த -ஸ ஓங்காரோ ய ஓங்கார -இத்யாதிக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
52-அதர்வ ஸிரோ பஞ்சம கண்டத்துக்கு பகவத் பரத்வ ப்ரதிபாதநம்
53-இதுக்கு த்ருஷ்டாந்தம்
54-ததுக்த பஸ்மஸ்பர்ஸ விதிக்கு பாஸூ பத விரத மாத்ரார்த் தத்வம்
55-விஸ்வாதி கோ ருத்ரோ மஹர்ஷி -இத்யாதிக்குத் தாத்பர்யம்
56-ஸ்ரீ ருத்ராதிகளுக்கு ருத்ர ஐஸ்வர்ய பரத்வாபாவ ஸமர்த்தனம்
57-ஏக ஏவ ருத்ர -இத்யாதிக்கு தாத்பர்யம்
58-ஸ்ருத் யந்தரங்களில் யுக்த ந்யாயாதிதேஸம்
59-ஸ்ருத் அநுஸாரி புராணங்களை ப்ராமாண்யமும் தத் இதரங்களுக்கு அப்ராமாண்யமும்
60-நாராயண பர புராணாதிகளுக்கு ஸாத்விகத்வாத் ப்ராமாண்யமும் -தத் இத்தரங்களுக்கு தத் அபாவாத் அப்ராமாண்யமும்
61-வக்தவ்ய அம்ஸாநுக்தியால் வந்த ந்யூனதைக்கு பரிஹாரம்
62-ப்ரபந்தார்த்த நிகமனம்

————

ஏவம் பூதமான சேதன அசேதன பிரபஞ்சத்துக்கு நியந்தாவாக
க்ஷரம் ப்ரதானம் -அம்ருத அக்ஷரம் ஹர
– (அபஹரித்து உண்ணும் ஜீவாத்மா) ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ் -1-10–
ஹர –ஜீவ -அம்ருத அக்ஷரம் ஹர இதி -போக்தா நிர் திஸ்யதே –ப்ரதாநம் ஆத்மநோ போக்யத்வேந ஹரதீதி ஹர -இதி ஸ்ரீ பாஷ்யம் -1-1-1-
தேவ ஏக -அத்விதீயோ நாராயண –திவ்யோ தேவ ஏகோ நாராயண -இதி ஸுபாலிக ஸ்ருதே
ப்ரதான க்ஷேத்ரஜ்ஞ பதிர் குணேஸ -ஸ்வேதா -6–16-

குணேஸ -குணா -ஸத்வ ரஜஸ் தமாம்ஸி
தேஷாம் -ஈஸ -நியந்தா இத்யர்த்த -என்று வேதாந்தங்களிலே ப்ரதிபாதிக்கப் பட்டு
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம்-தைத்த -6-11-3
பதித்வம் -சேஷித்வம் -சேஷித்வம் பதித்வம் -இதி கீதா பாஷ்யம் -3-30-
பா -ரக்ஷண -இதி தாதோர் நிஷ் பந்நத்வாத் பதி ஸப்தோ -ரஷா -வாஸீ -நது சேஷி வாஸீ – இதி ந வாஸ்யம் -சேஷிணி ரூடத்வாத்
(ப்ரஸித்த ரூடி அர்த்தம்)அந்யதா கமேர் டோ இதி டோ ப்ரத்ய யாந்த -கமி தாதோர் நிஷ் பந் நத்வாத் கோ ஸப் தஸ்ய மானுஷ்யாதி வாசகத்வ ப்ரசங்க -கதி மத்ஸூ ஸர்வேஷு ப்ரயோக அபாவாத் -அத பதி ஸப்த சேஷிணி ரூட இதி -என்று விஸ்வத்துக்குப் பதியாகவும்

(பதி ரக்ஷணமா சேஷியா -விசாரம் -திருப்பல்லாண்டு -வயசான தந்தைக்கு பிள்ளை ரக்ஷணமாய் இருந்தாலும் சேஷி ஆகமாட்டான் அன்றோ)

ஆத்மேஸ்வரம் -தைத் -6-11-3- என்று தனக்குத் தானே ஈஸ்வரனாகவும்
ந தஸ்ய ஈஸே கஸ்ஸன-தைத்த -6-1-10-என்று-அவனுக்கு நியாந்தாக்களாய் இருப்பார் ஒருவரும் இல்லையாகவும்
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே –ஸ்வேதா -6-8- என்று-அவனுக்கு ஓத்தாரும் இல்லை மிக்காரும் இல்லையாகவும்
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -)
ஸ காரணம் கரணாதிப அதிபோ ந சாஸ்ய கஸ்சிஜ் ந ஜநித ச அதிப –ஸ்வே -6-9-
கரணாநாம் -ஸ்ரோத்ராதீ மாம் அதி பா ஜீவா தேஷாமதிப ஸர்வோ பாஸ்யத்வ ஸர்வ சேஷித்வ மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வ விஸிஷ்ட நாராயண இத்யர்த்த -என்று
ஸமஸ்த வஸ்துக்களினுடைய உத்பத்திக்குக் காரணமுமாகவும்
கரணாதிப ஸப்த வாஸ்யனான ஷேத்ரஞ்ஞனுக்கு அதிபனாகவும் -தனக்கு ஜனகரும் -அதிகரும் இல்லையாகவும்
தம் ஈஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம்- தம் தேவதாநாம் பரமம் ச தைவதம் -பதிம் பதீநாம் -பரமம் பரஸ்தாத்- விதமா தேவம் புவநேஸ மீட்யம்–ஸ்வேதா -6-7-
மஹேஸ்வர ஸப்த வாஸ்யத்வம் நாராயணஸ் யைவேதி வஹ்யதே -என்று
நியாந்தாக்களுக்கு எல்லாம் பரம உபாஸ்யனாகவும் -சேஷிக்களுக்கு எல்லாம் பரம சேஷியாகவும் -உப நிஷத்துக்களிலே ஓதப்பட்டு ஸர்வ லோக நியந்தாவான ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன்

அவன் இவ் வசித் ஸம் ஸ்ருஷ்டரான பத்த சேதனருக்கு பந்த நிவ்ருத்த் யர்த்தமாக ஞாதவ்யனாகையாலே அவனுடைய யாதாத்ம்யமும் நிரூபணீயம்(பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் அறிய வேண்டுமே)

(ஸ்வேதாஸ்வர உபநிஷத் வாக்யங்கள் பிறரையும் பரனாகச் சொல்லும் படி அமைந்துள்ளதால்-வேதார்த்த ஸங்க்ரஹத்தில் அவற்றை எடுத்து விளக்கி உள்ளார் -அதே போல் இங்கு இவரும் இவற்றை எடுத்து விளக்குகிறார்)

ஏவம் பூதனாய் இருப்பானோர் ஈஸ்வரனைக் கொள்ளாத போது -இந்த ஷேத்ரஞ்ஞனானவன் இப்படி ஸூக துக்க அநுபவம் பண்ணக் கூடாது –எங்கனே என்னில்
நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமான் -ஸ்வேதா -6-13- கட -2-5-13- என்று
நித்யராய்
சைதன்ய குணகராய்
அசங்கயாதரான ஆத்மாக்களுக்கு–நித்யனாய் -சைதன்ய குணகனாய் -அத்விதீயனாய் இருப்பான் ஒருவன் அபிமதங்களைக் கொடா நிற்கும் என்று சொல்லுகையாலும் -துக்காத் யநுபவத்தில் வந்தால் அவற்றுக்கு ஹேதுவான அவித்யா கர்ம தேஹாதிகள் அசேதனங்களாகையாலே சேதன அதிஷ்டாநம் இல்லாத போது -புருஷா அநதிஷ்டிதமான வாஸ்யாதி கரணங்கள் ரத நிர்மாணத்துக்கு ஷமம் அல்லாதவோபாதி -அநுபவிப்பிக்க மாட்டாது -அநு பவிக்கிற சேதனன் தான் ஸூக அனுபவ ஸ்ரத்தை உண்டாகிலும் தன் மூலமான ஹேதுக்களை அறிந்து அதிஷ்டிக்க வேண்டும் –அதுக்கு யோக்யதையை உடையனாக இரான்
சேதனர்கள் தந்தாமுடைய கர்மாதிகளையும் அறியாது இருக்கப் பிறருடைய கர்மாதிகளையும் அறிந்து அதிஷ்டிக்கைக்கு யோக்யர் அல்லர்
ஆகையால் இவர்களுடைய கர்மாதிகளையும் அறிகைக்கு ஸர்வஞ்ஞனுமாய் -அறிந்தபடியே அதிஷ்டிப்பித்து அனுபவிப்பைக்கு ஸர்வ சக்தனுமாய் -இச் சேதனனுடைய விதி நிஷேத (அநுஷ்டான
நுஷ்டான)அநு வர்த்தந திவர்த்தநங்களில் அநுக்ரஹ நிக்ரஹங்களைப் பண்ணும்படி நியாந்தாவுமாய் –
தத் தத் ஆகார புண்ய பாப கர்மங்களுக்கு பலமான ஸூக துக்கங்களைக் கொடுக்கைக்குக் கீழ்ச் சொன்ன அசேதன ஜாதீயனும் இன்றியே உபய விலக்ஷணனாய் இருப்பானோர் ஈஸ்வரன் உண்டு என்று கொள்ள வேணும்

ஆகை இறே -போக்தா போக்யம் ப்ரேரிதா ரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோதம் த்ரி விதம் ஸர்வ மேதத் –ஸ்வே -1-12- என்று
போக்த்ரு போக்ய ப்ரேரயித்ரு ரூபமான சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயாத்மகமாக ஜகத்தை உபநிஷத் பாகத்திலே ஓதப்பட்டது

இந்த நியந்த்ருத்வ விஸிஷ்டமான ப்ரஹ்மத்தை -காரணம் து த்யேய – அதர்வஸிகோப -என்று ஜகத் காரண தயா ஜிஜ்ஞாஸ்யமாக உப நிஷத்திலே ஒதுகையாலே
காரண வாக்யங்களில் ஸத் ப்ரஹ்மாத் மாதி ஸப்தங்களாலே சொல்லப்பட்ட வஸ்து இது விறே என்று நிஸ்ஸயிக்கப் படும்
எங்கனே எனில்

(ப்ரஹ்ம ஸத் ஆத்மா -பொதுவான சொற்கள்
என் மூல காரணம் -ஸ்ருஷ்டி ப்ரகரணம்
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் ப்ரதிஜ்ஜை
சத்தாகவும் பெரியதாகவும் -ஆத்மா சேதனமாகவும் இருக்க வேண்டுமே
கூரத்தாழ்வான் பஞ்ச ஸ்தவத்திலும் இவற்றைக் காட்ட அருளுகிறார்)


சாந்தோக்யத்திலே -ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -6-2-1- என்று
பிருஹத் அப்ருஹத் சாதாரணமான ஸச் சப்தத்தாலே சொல்லப்பட்ட காரண வஸ்துவானது
வாஜஸ நேயத்திலே -ப்ரஹ்ம வா இதமே வாக்ர ஆஸீத் -ப்ரு -3-4-9- என்று ப்ருஹத்த்வைகாந்தமான ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப்பட்டது
அவ் விடத்திலே ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாயத்தாலே காரண வாக்யங்கள் எல்லாவற்றுக்கும் ஏக விஷயத்வம் வேண்டுகையாலே பஸூ மால பேத – சதபத ப்ரா -6-1-2-14-13- என்று சாமான்யமான பஸூ ஸப்தம் -சாகோ வா மந்த்ர வர்ணாத்-என்கிற ஸூத்ரத்தில் விசேஷ உபஸ்தாபகமான சாக பஸூ விலே பர்ய வசிக்குமாப் போலே இங்கும் ஸாமான்யமான ஸச் ஸப்த வாஸ்யம் என்று நிஸ்ஸயிக்கப் படுகிறது
ஏகம் வா ஸம்யோக ரூப சோதநாக்யா விசேஷாத் -என்று பூர்வ மீமாம்ஸை யில் -2-4-9- சொன்ன சாகாந்தர அதிகரண ந்யாயத்தாலே என்றபடி
ப்ரதீயதே யத் தத் ப்ரத்யயம் ப்ரதீயமாநம் இத் யர்த்த –ஸர்வ ஸாகா ஸூ ப்ரத்யயம் ஸர்வ ஸாகா ப்ரத்யயம் -தத்ர த்ருஷ்டோ ந்யாய ஸர்வ ஸாகா ப்ரத்யய ந்யாய என்று விக்ரஹம் கண்டு கொள்வது –

(அஞ்ஞானம் அறிவிக்கும் வேதம் மீண்டும் மீண்டும் சொல்வதால் வேறே வேறே கர்மங்களை சொல்லுகின்றனவா அல்லது வேறே வேறே பலன்களை சொன்னவையாஅல்லது வேறே வேறு அதிகாரிகளுக்குச் சொன்னவையா-ஒரே குணம் சத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் இருப்பதாக பொதுத் தன்மை
சமாக்யா சோதனா பொது போல் இங்கும்-ஆகவே ஒருவரையே சொன்னதாக)

இந்த ப்ரஹ்ம ஸப்தம் தான் -மம யோநிர் மஹத் ப்ரஹ்மா -கீதை -14-3- என்றும் தத் ஞானம் ப்ரஹ்ம ஸம்ஜிதம் -என்றும்
சித் அசித் ஸாதாரணமாகையாலே -ஐத ரேயத்திலே ஆத்மா வா இதமேக ஏவ க்ர ஆஸீத் நான்யத் கிஞ்சந மிஷத் -ஐதரேய -1-1-1-என்று சேதநைக அசாதாரணமான ஆத்ம ஸப்தத்தாலே விசேஷித்தது

இந்த ஆத்மாக்களில் ஜகத் காரண பூதர் ஆர் என்று விசேஷா காங்ஷையிலே –
அந்த விசேஷமாவது –ஸர்வம் ததிந்த்ர தேவஸே –ஸாம -2-1-4-2—விஸ்வஸ் மாதிந்த்ர உத்தர இத்யாதிகளாலே சர்வோத்தரனாய்ச் சொல்லப்படுகிற இந்த்ரனோ
=

தமக்நேந்த்ரே வ்ருஷபஸ் ஸதாமஸி த்வம் விஷ்ணுருரு காயோ நமஸ்ய-த்வம் ப்ரஹ்மா ரயிவித் ப்ரஹ்மணஸ் பதே த்வம் விதத்தாஸ் ஸச ஸே புரந்த்ரிய -என்றும்
த்வம் அக்நே ருத்ரோ அஸூரோ மஹோதிவ -யஜுர் காடகே -2-2-என்றும்
இத்யாதிகளிலே ஸர்வாத்மகனாய்ச் சொல்லப்படுகிற அக்னியோ

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி -யஜுர் ஸம் -1-5-24
சித்ரந் தேவாநாம் உதகாதநீ கஞ்சா ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே ராப்ராத் யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்து ஷஸ்ச -யஜுர் 1-4-43
ஹம்ஸஸ் ஸூசிஷத் -யஜுர் -4-2-1-5-இத்யாதிகளிலே உபாஸ்யனாக ஓதப்படுகிற ஆதித்யனோ

ஸோம பவதே ஜனிதா மதீநாம் ஜனிதா திவோ ஜனிதா ப்ருதிவ்யா ஜனிதா அக்னேர் ஜனிதா ஸூர்யஸ்ய ஜனிதா இந்த்ரஸ்ய ஜனிதோத விஷ்ணோ -சாம -6-1-4-5
ஏவமாதிகளிலே ஸர்வ உத்பாதகனாய்ச் சொல்லப்படுகிற சந்திரனோ-

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே நமோ வயம் வைஸ்ரவணாய ததாது யஜுர் ஆர -1-21-
இத்யாதிகளிலே ஸர்வ பல பிரதனாகச் சொல்லப்படுகிற வைஸ்வரணோ-

யோஸ்ய க்ருஷ்ட்ய ஜகத பார்த்தி வஸ்ய ஏக இத்வசீயமம் பங்க்யஸ்ரவோ காயயோ ராஜாந பரோத்த்ய யமம் காய பங்க்யஸ்ரவோ யோ ராஜாந் அபரோத்த்ய-யஜுர் -ஆ -6-5-12-1-2-3-
இத்யாதிகளில் உத்க்ருஷ்டனாக ஓதப்படுகிற யமனோ-

இமம் மே வருண ஸ்ருதீ ஹவமத்யாச ம்ருடய த்வாமவஸ்யு ராசகே தத் வாயாமி ப்ரஹ்மணா வந்த மாநஸ் ததா ஸாஸ்தே யஜமானோ ஹவிர்பிரஹேட மானோ வருணே ஹபோத் யுரு ஸம் ஸமான ஆயுர் ப்ரமோஷீ -யஜுர்
இத்யாதிகளில் ஆராத்யனாகச் சொல்லப்படுகிற வருணனோ

இன்னமும் பிரதேசாந்தங்களிலே உத்க்ருஷ்டராக ஓதப்படுகிற வாயு முதலான தேவதா விசேஷங்களோ என்னில்

அவர்களாக மாட்டார்கள் -எங்கனே என்னில்
ப்ரஹ்மாவினுடைய பக்கலிலே மந்வந்தரம் தோறும் பதினாலு பர்யாயம் பதங்கள் இட்டு மாறும்படியாய்-அவ்வோ காலங்களிலே ஸ்ருஷ்டி சம்ஹாரங்களுக்கு கர்மீ பவிப்பாருமாய்
பீஷாஸ் மாத் வாத பவதி -பீஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத் அக்னிஸ் சேந்த்ரஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம -தைத்ரம் -என்று
தங்களை ஒழிந்தானோர் ஈஸ்வரனுடைய ஆஜ்ஜைக்கு அஞ்சி வர்த்திப்பாருமாய் -அவனை ஆராதித்து பதம் பெற்றாருமாய் -சாஸ்திரத்தினுடைய அநு வர்த்த நத்திலும் புண்ய பாபங்களைப் பெற்று- தத் தத் பலமான ஸூக துக்கங்களை அநுபவிப்பாருமாய் -பரிச்சின்ன விபூதிகராய்ச சொல்லிப் போருகையாலே
இப்படி அஸ்மாதாதிகளோ பாதி ஸர்வ சாதாரணமான ஸ்வ பாவங்களை உடைய –
இந்த்ர -யம -வருண -குபேராதிகள் ஈஸ்வரத்வ சங்கைக்குக் கூட அர்ஹர் அல்லர்

ருத்ர ஜகத் காரணத்வ வாத ஆரம்ப
இப்படி ஸ்வேதாஸ்வர உபநிஷத்திலே -யதா தமஸ் தந் ந திவா ந ராத்ரிர் ந ஸந் ந ச அஸச் சிவா ஏவ கேவல -என்றும்-தத் அக்ஷரம் தத் ஸவிதுர் வரேண்யம் ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -4-18- என்கிற இத்தாலே
அந்தக் காரண விசேஷம் சிவன் என்று புத்தி பண்ணப்படா நின்றது
ஸத் ப்ரஹமாத்மாதி சாமான்ய சப்தங்களுக்கு விசேஷ ஸப்த ஸா பேஷத்வம் உண்டாகையாலே ஸர்வ நிஷேத பூர்வக அவதாரண கடித சிவ ஸப்தத்திலே அவைகள் பர்யவசிக்கின்றன (சிவா ஏவ கேவல
)-இதி தேஷாம் அபிப்ராய

(நம் பூர்வர்கள் இவ்வாறு பூர்வ பக்ஷ விளக்கம் அருளிச் செய்தபின்பே ஸித்தாந்த நிர்ணயம் பண்ணி அருள்வார்கள்)

அங்கன் அன்றியே -ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -என்று மஹா உப நிஷத்திலே சொல்லப்பட்ட நாராயணன் அந்த விசேஷமானாலோ என்னில்
இவ் வுப நிஷத் வாக்யம் -ஹவை -என்கிற ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அனுவாத ரூபமாய் இருக்கையாலே
(அனுவாத வாக்கியம் என்றாலே முன்பு புரோ விதி வாக்கியம் உண்டாய் இருக்க வேண்டும் அன்றோ-இந்த வாதத்தால் ஆஹாஸ ப்ராண ஸப்தம் காரணமாக மாட்டாது என்று நிர்த்தேசித்ததை த்ருஷ்டாந்தமாகக் காட்டுகிறார்) ஸ்வயம் விசேக்ஷ உபஸ்தாபநம் பண்ண மாட்டாது -எங்கனே என்னில்

சாந்தோக்யத்தில் -ஸர்வாணி ஹ வா இமாநி பூதான் யாகாஸா தேவ ஸமுத்பத் யந்தே -1-9-1-
ஸர்வாணி ஹ வா இமாநி பூதாநி ப்ராண மேவ பி ஸம் விசந்தி பிராண மப்யுஜ்ஜி ஹதே –1-11-5- என்று(
ஸ்ருஷ்டிக்கப்படுவதையும் லயிக்கும் படியையும் காட்ட இரண்டு பிரமாணங்கள்)
இவ் வாக்கியங்கள் இரண்டுக்கும் -ஹவை -என்கிற ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே யாதொருபடி அநு வாதத்வம் உண்டாயிற்று
ஆஹாஸஸ் தல் லிங்காத் -அத ஏவ ப்ராண -ப்ரஹ்ம ஸூத் 1-2-23-24-என்கிற அதிகரணங்களிலே
ஸர்வாணி ஹ வா என்கிற வாக்யத்துக்கு அநு வாதத்வம் ஸ்தாபிக்கப் பட்டதாகையாலே அநு வாதத்வம் உண்டாயிற்று -இத் யுக்தம்

அப்படியே இங்கும் ப்ரஸித்த வன் நிர் தேசத்தாலே அநு வாதமாகையாலே ஆகாஸ ப்ராண ஸப்தங்களோ பாதி நாராயண ஸப்தமும் அநுவாத லிங்க ரஹிதமான- ஏவ காராத் யுபாதாந லிங்க விஸிஷ்டமாயுள்ள -சிவ பரமாக ப்ராப்தம் ஆகையால் ருத்ரனே ஜகத் காரணம் என்று நிச்சயிக்கப் படுகிறது-
ஆகையாலே மோக்ஷ ப்ரதத்வமும் அவனுக்கே என்று அர்த்த சித்தம்
(ஜகத் காரணம் யாரோ அவனுக்கே மோக்ஷ பிரதத்வம் -அனுமானத்தால் அர்த்த சித்தம்)

எங்கனே என்னில்
யதோ வா இமாநி பூதாநி -தைத்ரியம் – இத்யாதியாலே
1-ஜகத் காரண பூதனும் -2-முமுஷு உபாஸ்யனும் -3-மோக்ஷ ப்ரதனும் -என்று சொல்லப்படுகையாலே
இன்னமும் ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் ஸ்வேதாஸ்வர உப நிஷத்திலே நேரே சொல்லப்படா நின்றது
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் (இந்த மஹானை நான் அறிகிறேன்)ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -தமேவ விதித்வாதி ம்ருத்யுமேதி நான்ய பந்தா வித்யதேயநாய –யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கிஞ்சித் -வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் ததோ யதுத்தர தரம் ததரூபமநா மயம் -ய ஏதத் விதுரம்ரு தாஸ்தே பவந்தி- அதே தரே துக்க மேவாநு யந்தி -ஸர்வாநந ஸிரோக்ரீவ ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச பகவான் -தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ –ஸ்வேதா -3- என்று
வ்யாபகனான பரம புருஷனில் காட்டில் உத்தரமாய் இருபத்தொரு தத்வத்தைச் சொல்லி -அதினுடைய ஞான அஞ்ஞானங்களாலே மோக்ஷ ஸம்ஹாரங்களாகவும் சொல்லி -அத் தத்வம் ஸர்வ வ்யாபியான ஸிவன் என்று நிகமித்தது

அப்படியே சாந்தோக்ய தஹர வித்யையிலும் -அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர அஸ்மிந் நந்தர ஆகாஸஸ் தஸ்மிந் யதந்தஸ் தத் அந்வேஷ்டவ் யந் தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று இத்தாலே
ஹ்ருதய புண்டரீக மத்ய வர்த்தியான ஆகாஸ ஸப்த வாஸ்யமாக ஒரு வஸ்துவை நிர்தேசித்து -அதுக்குள்ளே இருக்கிற வஸ்து முமுஷுக்களுக்கு அன்வேஷ்டவ்யம் என்று சொல்லப்படா நின்றது

இவ் விடத்தில் ஆகாஸ ஸப்தம் -தத் ப்ரகரண உப ஸம்ஹாரத்திலே -ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யத் அந்தரா தத் ப்ரஹ்ம -8-14-1- என்று
நாம ரூப நிர்வோட்ருத்வ ஸ்ருதியாலே புருஷ ஸூக்தத்திலே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -என்று
நாம ரூப நிர் வாஹகனாகச் சொல்லப்பட்ட பரம புருஷனுக்கு வாசகமாகையாலே அந்த ஆகாஸ ஸப்த வாஸ்யனான பரம புருஷனுக்கு அந்தர் வர்த்தியாய் இருபத்தொரு வஸ்து முமுஷுக்களுக்கு உபாஸ்யம் என்று இவ் வாக்கியத்திலே தோன்றா நின்றது

தைத்ய தஹர வித்யையிலே -தஹ்ரம் விபாப்மம் வர வேஸ்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்ய ஸம்ஸ்தம் –தத்ராபி தஹ்ரம் ககநம் விசோகஸ் தஸ்மிந் யதன்தஸ்தது பாஸி தவ்யம்- யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தோ- வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ்ச மஹேஸ்வர -6-10- என்று
சாந்தோக்ய வாக்கியத்தில் போலே ஹ்ருதய அந்தர் வர்த்தியாயும் உபாஸ்ய ஆதாரமாகவும் ஆகாஸ ஸப்த பர்யாயமான ககந ஸப்தத்தாலே பரம புருஷனை நிர்தேசித்து ததாதேயமாய் இருபத்தொரு வஸ்துவை உபாஸ்யமாகச் சொல்லி -அந்த விஷயம் -யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர என்று மஹேஸ்வரனாக நிஷ்கர்ஷிக்கப் படா நின்றது –

அப்படியே ப்ருஹதாரண்யகத்தில் -யஸ் ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாசஸ் -தஸ்மிஞ் சேதே ஸர்வஸ்ய வஸீ– ஸர்வஸ் யேஸாந -6-4-22- என்று ஹ்ருதய மத்யஸ்தமாக ஆகாஸ ஸப்தத்தாலே சாந்தோக்யத்தில் போலே பரம புருஷனைச் சொல்லி- தத் அந்தர் வர்த்தியாக ஈஸாநன் ப்ரதிபாதிக்கப் படா நின்றான்

அப்படியே அதர்வ சிகையிலே -காரணந்து த்யேய ஸர்வ ஐஸ்வர்ய ஸம்பன்னஸ் ஸர்வேஸ்வர சம்பு ராகாஸ மத்யே த்யேய -என்று ஹ்ருதய மத்யஸ்தமான ஆகாஸ வர்த்தியாகக் கொண்டு உபாஸ்யமான வஸ்துவை சம்பு ஸப்தத்தாலே விசேஷித்து -சிவ ஏகோ த்யேய -சிவங்கரஸ் ஸர்வம் அந்யத் பரித்யஜ்ய -என்று அந்த ஷம்புவை சிவ ஸப்தத்தாலே நிகமியா நின்றது

அப்படியே தைத்ரியத்திலும் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -ஸோஸ்நுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி –1-1-2- என்று
குஹா ஸப்த நிர் திஷ்டமான ஹ்ருதய அந்தர் வர்த்தியாய் -உபாஸ்யமான ப்ரஹ்மத்துக்கு ஆதாரமுமாக -ப்ரஸித்த ஆகாஸ வ்யாவர்த்தகமான- பர ஸப்த விசேஷிதமாய் இருக்கிற வ்யோம ஸப்தத்தாலே புருஷோத்தமனைச் சொல்லி -அவன் பக்கலிலே இருக்கிற ப்ரஹ்ம ஸப்த வாஸ்யமான உபாஸ்ய வஸ்து -முன்பு சொன்ன அநேக ஸ்ருதிகளோடு உண்டான ஐகார்த் யத்தாலே சிவன் என்று அறுதி இடப்படா நின்றது
காமாத் யதிகரணத்தில் ஸர்வே வேதாந்த படித தஹர வித்யை களுக்கு ஐக்யம் சொல்லி இருக்கையாலே ஸர்வ ஸ்ருதிகளுக்கு ஐகார்த்யம் ஸித்தம் என்று கருத்து

ஆகையாலே நாராயணனுக்கு பரனாய் தத் அந்தர் வார்த்தியான உபாஸ்யன் சிவனே என்னும் இடம் ஸர்வ ஸ்ருதிகளிலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது என்னும் இடம் நிஸ்ஸயிக்கப் பட்டதாகிறது

இப்படியே அதர்வ சிரஸ்ஸில் ப்ரதம கண்டத்திலே -தேவா ஹ வை ஸ்வர்க்கம் லோக மகமந் -தே தேவா ருத்ரம் அப்ருச்சன்–கோபவா நிதி ஸோ அப்ரவீத் -அஹமேக ப்ரதம மாஸம் -வர்த்தாமி ச பவிஷ்யாமி ச -நான்ய கஸ்ஸின் மத்தோ வ்யதிரிக்த -என்று
முதலான வாக்யத்தாலே தேவர்களாலே ப்ருஷ்டனான ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தைப் பரக்கச் சொன்னான்

அநந்தரம் தேவர்கள் அத்தை எடுத்து ருத்ரனை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்று தொடங்கி
ததோ தேவா ருத்ரம் நாபஸ்யன் தே தேவா ருத்ரம் த்யாயந்தி -ததோ தேவா ஊர்த்வ பாஹவ ஸ்துந் வந்தி என்கிற ஸ்ருதி அர்த்த அநு வாதம்

த்விதீய கண்டத்திலே -யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா -தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச விஷ்ணுஸ் தஸ்மை வை நமோ நம -யோ வை ருத்ரஸ் ஸ பகவான் யஸ்ச மஹேஸ்வரஸ் தஸ்மை வை நமோ நம –
யோ வை ருத்ரஸ்ய பகவான் யஸ்ச ப்ரஹ்மா பூர் புவஸ் ஸூவஸ் தஸ்மை வை நமோ நம -இதி பாரதம் -என்று முதலான
வாக்யத்தாலே ருத்ரனுடைய ஸர்வ ஐஸ்வர்யமானது ஸூ வ்யக்தமாகச் சொல்லப்பட்டது

த்ருதீய சதுர்த்த கண்டங்களிலே -ஸ ஏகோ ருத்ரஸ்ய ஈஸாந ஸ பகவான் ஸ மஹேஸ்வர ஸ மஹாதேவ -இதி தத் அசாதாரணாநேக நாம நிர்தேச தந் நிர்வசன முகத்தாலே ருத்ரனுடைய ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கப் படுகிறது

த்ருதீயேதி –இவ் விடத்தில் அதர்வ சிரஸ்ஸை ஐந்து கண்டமாகவே திரு வுள்ளம் பற்றி இருக்கிறதாகத் தோற்றுகிறது -தத்வ சேகர- ஸ்ருத ப்ரகாசிக -அதர்வ ஸிகா விலாஸாதிகளில் ஆறு கண்டமாகத் திருவுள்ளம் பற்றி வ்யாக்யானம் பண்ணி இருக்கிறார்கள்
அநேக தத்வ நிரூபண கோசங்களில் ஐந்து கண்டமாகவே தோற்றுகையால் பரிஷ்கரிக்க சாமர்த்தியம் உடையோமாகிறிலோம்

தேவா ஹ வை –தொடங்கி ஸ்வேந தேஜசா பர்யந்தம் பிரதம கண்டம்
ததோ தேவா ஆரப்ய –யச்ச ஸத்யம் தஸ்மை நமோ நம -இத்யந்தம் த்விதீய கண்டம்
ஓமாதவ் மத்யே -தொடங்கி பாதோய உத்தர –பர்யந்தம் த்ருதீய கண்டம்
ஸ ஓங்கார -தொடங்கி -மஹா தேவ -பர்யந்தம் சதுர்த்த கண்டம்
ததேகஸ்மாதுச்யதே –தொடங்கி – தஸ்மா துச்யதே மஹா தேவ – பர்யந்தம் பஞ்சம கண்டம்
ததே தத் ருத்ர சரிதம் தொடங்கி ஸத்ய மித் யுப நிஷத் -இத்யந்தம் ஷஷ்ட கண்டம்
இவ்வர்த்தம் ஸர்வ வ்யாக்யாநாதி கரண -1-4-29- ஸ்ருத பிரகாசிகையில் ஸ்பஷ்டம்
அஸ்மதீய தத்வ சேகரப்படிப் பணியில் விசதமாகக் காண்க

அப்படியே பஞ்சம கண்டத்திலே -ததேதத் ருத்ர சரிதம் -ஏஷோ ஹ தேவ ப்ரதி ஸோநு ஸர்வா –பூர்வோ ஹி ஜாதஸ் ஸ உ கர்ப்பே அந்த -ஸ ஏவ ஜாதஸ்ஸ ஐநிஷ்யமாண -ப்ரத்யஞ்ஜ நாஸ்திஷ்டதி விஸ்வதோமுக —ததேதத் உபாஸி தவ்யம் -என்று தொடங்கி
வாலாக்ர மாத்ரம் ஹ்ருதயஸ்ய மத்யே விஸ் வந்தேவம் ஜாத வேதம் வரேண்யம்-தாமத்மஸ்தம் யேநு பஸ்யந்தி தீராஸ் -தேஷாம் சாந்திஸ் ஸாஸ்வதீ நேதரேஷாம் என்று
ஹ்ருதய மத்ய வர்த்தியான ருத்ரனுடைய உபாஸனத்தை மோக்ஷ பலமாகச் சொல்லி –
வ்ரதம் ஏதத் பாஸு பதம் -என்று தொடங்கி
அக்னிரித்யாதி நா பஸ்மம் க்ருஹீத்வா விம்ருஜ் யங்காநி ஸம்ஸ் ப்ருஸேத் –தஸ்மாத் வ்ரதமேதத் பாஸு பதம் -ப ஸு பாஸ விமோஷாயா – என்றதும் அங்கமாக சமந்த்ரகமான ஸர்வாங்க பஸ்ம ஸ்பர்ஸ லக்ஷணமான பாஸு பத வ்ரதமும் சொல்லப்பட்டது இறே

இப்படி ருத்ரனுடைய சர்வஸ்மாத் பரத்வம் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சத ப்ரஸித்தமாயுள்ள விடத்தில் பவ்ருஷேய வசஸ் ஸுக்களான புராணாதிகள் தத் அநு குணமாக நயிப்பிக்க வேண்டுகையாலே அந்த ஸ்ருதிகளோடே அநு குணங்களான இதிஹாஸ புராணாதிகள் ப்ரமாணங்களாய் -அத்தை உப ப்ரும் ஹிக்கின்றவாகக் கடவன-
அல்லாத ப்ராபத்யாதி ஸ்ம்ருதிகளும்- ஸ்ரீ விஷ்ணு புராணாதி புராணங்களும்- ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதத்தாலே- விரோதேத் வநபேஷம் ஸ்யாத் –பூ மீ -1-3-3-
விருதே த்வ நபேஷம் ஸ்யாத் அஸதிஹ் யநுமாநம் – ப்ரத்யக்ஷ ஸ்ருதி விருத்தம் ஸ்ம்ருதி வசனமநபேஷ்யம் – அநாதரணீயம் -ஸ்ம்ருதேரபி ஸ்ருதி மூலத்வ அநு மாநாத் ஆதரணீயத்வம் இத்யத்ராஹ –அஸ்தி ஹ்யநுமாநமிதி அசதி -ப்ரத்யக்ஷ ஸ்ருதி விரோதே ஹி ஸ்ம்ருதி மூல ஸ்ருத் யநுமாநம் இத்யர்த்த –இதை ஸ்ருத பிரகாசிகாயாம் -2-1-1-அஸ்யார்த்த உக்த -என்கிற நியாயத்தாலே அநாதரணீ யங்களாகக் கடவன-

மனுவும் -யா வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாஸ்ச காஸ்ச குத்ருஷ்டய –தாஸ் ஸர்வா நிஷ் பலா -ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா –மநு -1-2-95- என்று
வேத விருத்த ஸ்ம்ருதியாதிகள் த்யாஜ்யமாகச் சொன்னான் இறே –


ஆகையால் சிவனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று ஸோப ப்ரும்ஹண ஸ்ருதி சத ஸித்தம் என்றதாயிற்று –

————-

சதுர் முக காரணத்வ வாத ஆரம்ப
இவ் விடத்திலே சதுர் முகனான ஹிரண்ய கர்ப்பனே ஸர்வ ஸ்மாத் பரன் என்று சிலர் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினார்கள் எங்கனே என்னில்
காரண வாக்ய கதங்களான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம -ஸப்தங்கள் சாதாரண ஸப்தங்களாகையாலே -சேதன விசேஷ பர்யவஸாநத்தை அபேக்ஷித்தால்
ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்–ருக் 8ம் அஷ்டகம் 7 அத்யாயம் -வர்க்க –10 ம் மண்டலம் -10 அநு –121 சூத்ரே 1ம் வாக்கியம் -என்று
துல்ய ப்ரகரணஸ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்தாலே சொல்லப்பட்ட சதுர்முகனாகிற விசேஷத்திலே பர்யவஸியா நின்றது

அப்படியே -அம்பஸ் ய பாரே -தைத்த -6-1-1- என்கிற அநுவாகத்திலே -யஸ்மின் நிதம் சஞ்ச விசைதி ஸர்வம் –யத ப்ரஸூதா ஜகத ப்ரஸூதீ –ந தஸ்யேஸே கஸ்ஸன– தஸ்ய நாம மஹத் யஸ — ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்ச நைநம் –ஹ்ருதா மநீஷா மநஸாபி க்லுப்தோ ய ஏநம் விதுரம்ரு தாஸ்தே பவந்தி –தைத்த -6-1-2-4-10-11- என்று ஜகத் காரணமாகவும் மோக்ஷ ப்ரதனாகவும் ஒரு புருஷனைச் சொல்லி பின்பு
அத்ப்யஸ் ஸம் பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் –தைத்த -6-1-12- என்று
முன்பு சொன்ன வாக்யத்தோடே ஏக வாக்கியமாக -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகத்தையும்
ஹிரண்ய கர்ப்பஸ் ஸம வர்த்த தாக்ரே -என்கிற எட்டு ருக்கையும் உதா ஹரித்துக் கூட்டுகையாலே ஜகத் காரண பூதனாய் -அநந்ய ஈஸ்வரனாய் -மோக்ஷ ப்ரதனாக முன்பு சொல்லப்பட்ட புருஷன் ஹிரண்ய கர்ப்பன் என்று ஸ்பஷ்டமாயிற்று

ஆகில் -அத்ப்யஸ் ஸம் பூத -என்கிற அநுவாகமும் -பூர்வ உக்தத்தோடு ஏக வாக்யமாகையாலே -ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் –என்கிற ஸ்ரீ யபதித்வ லிங்கம் முன்பு சொன்ன புருஷன் நாராயணன் என்று காட்டாதோ என்னில் -(ஸ்ருதி சொல்லே -அடுத்து லிங்கம்-அடையாளம் சொல் இல்லாமல் – -வாக்கியம் -பிரகரணம் -ஸ்தானம் -சமாக்கியம் -ஆறு படிகள் -முதலில் சொன்னதே பிரபலம்-கையால் எடுத்து ஆஹுதி கொடு -கரண்டியால் எடுத்து -கத்தியால் எடுத்து -மூன்றும் -அன்னம் நெய் வஸ்து சாமர்த்தியம் -சொல் இல்லாத இடத்தில் கொள்ளலாம்) லிங்கத்தில் காட்டில் ஸ்ருதி ப்ரபலை யாகையாலே ஸ்ரீயபதித்வ லிங்கத்தில் காட்டில் ஹிரண்ய கர்ப்ப ஸப்த ரூடையான ஸ்ருதி தானே விசேஷத்தை நிரபேஷமாகக் காட்டவற்று
ஏக பத ஸாமர்த்யம் ஸ்ருதி வஸ்து ஸாமர்த்யம் லிங்கம் -என்று இறே மீமாம்சகர் நிஷ்கர்ஷித்தது
ஸூர்யா சந்த்ர மஸவ் தாதா யதா பூர்வம் அகல்பயத் -தைத் -6-1- என்று ஜகத் ஸ்ரஷ்டாவை ஹிரண்ய கர்ப்ப பர்யாயமான தாத்ரு ஸப்தத்தாலே சொல்லிற்று இறே

ப்ரஜாபதி ப்ரஜா அஸ்ருஜத -தைத்த ப்ரா -1-4-2- என்று முதலான காரண விஷய ஸ்ருதிகளும் ப்ரஜாபதியையே காரணமாகி சொல்லா நின்றன

ப்ரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1-என்று சாந்தோக்ய -தஹர வித்யையிலே பிராஜா பத்ய ஸ்தாநத்தை முக்த ப்ராப்யமாகச் சொல்லிற்று இறே

ஸத் -ப்ரஹ்ம -ஆத்ம ஸப்தங்கள்
சிவ சம்பு மஹேஸ்வராதி ஸப்த வாஸ்யமான வஸ்து விசேஷத்திலே பர்யவசிக்கும் என்று முன்பே சொல்லப்பட்டது அன்றோ -என்னில்
அது சொன்னாலும் விஷயமாக மாட்டாது – எங்கனே என்னில்
ஸத் ப்ரஹ்ம ஆத்ம ஸப்தங்களோ பாதி ஸிவாதி சப்தங்களும் சாதாரணங்கள் ஆகையாலே
அப்படி ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சாதாரணம் அல்ல

ஸிவாதி ஸப்தம் சாதாரணமான படி எங்கனே என்னில்
சிவமஸ்து ஸர்வ ஜகதாம்(
உலகு எங்கும் மங்களம் ஏற்படட்டும்) -என்றும்
ஸிவா நஸ் சந்து பந்தாந —
சிவம் கர்மாஸ்து என்றும்
சிவா ருதவஸ் சந்து -என்றும்
சிவா நஸ் சந்தமா பவ -அதர்வ 7-17-68-என்றும்
சிவஸ் சிவா நாம சிவோ அஸிவா நாம் -உத்யோக பர் -42-6- என்றும்
யோவஸ் சிவ தமோ ரஸ -தைத் -6- என்றும்
லோக வேதங்களிலே ஸூத்தி மங்கள்யா குண யோகத்தால் அநேக வஸ்துக்களிலே சிவ சப்தம் ப்ரயோகிக்கக் காணப் படா நின்றது –

இப்படி சம்பு ஸப்தமும் –சம்புஸ் ஸ்வயம்பூர் த்ருஹிண -என்று ப்ரஹ்மாவின் விஷயமாகவும் காணப்படா நின்றது(காம க்ரோதங்களையும் துஷ்டர்களை அழிப்பதால்)

மஹேஸ்வர ஸப்தமும் மஹான் ஈஸ்வர என்கிற அவயவ ஸக்தியாலே ராஜாதிகளிலேயும் பிரயோகிக்கப் படா நின்றது

இனி ருத்ர ஸப்தமும் -ருத்ரோ வா ஏஷ யதக்னி-யஜுக்கே அஷ் -2-3-
வீரான்மா நோ ருத்ர பம்மிதோவதீ ஹவிஷ் மந்தோ நமஸா விதேம தே -யஜுர் ஸம் -4-5-10-23- என்று க்ரவ்ர்யாதி குண யோகத்தாலே அக்னி யாதிகளிலும் பிரயோகம் காணப்படா நின்றது

இப்படி ஹிரண்ய கர்ப்ப சப்தத்துக்கு சதுர்முகனை ஒழிய வேறு ஒருவர் இடத்தில் காணப்பட்டது இல்லை
அப்போது இறே ஸிவாதி ஸப்தங்களோ பாதி ஸாதாரணம் என்னாலாவது

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் – கட உப -1-1-1- இத்யாதி வாக்கியங்கள் ப்ரஸித்த வந் நிர்தேசத்தாலே அநுவாதமாகையாலே விசேஷ உப ஸ்தாபகம் அன்று என்று முன்பே சொல்லப்பட்டது

ஆகையாலே -ப்ருகுடீ குடிலாத் தஸ்ய லலாடாத் க்ரோத தீ பி தாத் ஸமுத் பன்னஸ் ததா ருத்ர –மத்யாஹ் நார்க்க சம ப்ரப –
அர்த்த நாரீ தர வபு ப்ரஸண்டோதி சரிரவான் -ஸ்ரீ விஷ்ணு பு -1-7-12 என்கிறபடியே
அர்த்த நாரீதர சரீரியான ருத்ரனுக்கும் உத்பாதகனான ஹிரண்ய கர்ப்பமே முமுஷு உபாஸ்யமான பர ப்ரஹ்மம் என்று வேதாந்தங்கள் ப்ரதிபாதிக்கின்றன என்னும் இடம் ஸித்தம்

புராணங்களும் ப்ரஹ்ம பரத்வ ப்ரதி பாதக ஸ்ருதிகளை உப ப்ரும்ஹிக்கிறவையே பிரமாணங்கள் –அல்லாதவை ஸ்ருதி விரோதத்தாலே உபேஷணீ யங்கள்
ஆகை இறே மநுவும் ததஸ் ஸ்வயம் பூர் பகவான் -11-6- என்று ஸ்வயம்பு சப்ததத்தாலே ஜகத் காரணத்தைச் சொல்லிற்று
ஸ்வயம்பு ஸப்தம் -சதுர்முகனுக்கு பர்யாய பதம் என்னும் இடம் ப்ரஸித்தம்

ஆகையாலே சதுர்முகனே பர ப்ரஹ்மமாக ஸ உப ப்ரும்ஹணமான வேதாந்தத்தில் ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்னும் இடம் ப்ரஸித்தம் என்றதாயிற்று –

——————-

அத ஸித்தாந்த ஸ்தாபநம்-இவ் விடத்தில் பரிஹாரமான ஸித்தாந்தம்
நாராயண ஸப்த வாஸ்யமான வஸ்துவே பர ப்ரஹ்மமாகக் கடவது
காரண வாக்கியங்களில் இவனையே காரணமாகச் சொல்லுகையாலும்
மோக்ஷ பிரகரணங்களில் இவனையே மோக்ஷ பிரதனாகவும் முக்த ப்ராப்யனாகவும் சொல்லுகையாலும்
எங்கனே என்னில்

காரண வாக்கியங்களில் சாதாரணமான -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மாதி ஸப்தங்கள் விசேஷ பர்யவஸாந ஆகாங்ஷங்களாய்க் கொண்டு
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்யாவா ப்ருதிவீ ந நக்ஷத்ராணி ந ஆபோ ந அக்னிர் ந சோமோ ந ஸூர்ய- ஸ ஏகாகீ ந ரமேத- தஸ்ய த்யாநாந்தஸ் தஸ்ய -ஏகா கந்யா (கந்யா-மநஸ் –ப்ரகாசகத்வாத் –கந தீப்தவ் இதி தாது -இதி ஸ்ருத ப்ர-4-4-17) தச இந்த்ரியாணி —-ஜாயந்தே –மஹா உப -1-1-1 இத்யாரப்ய
அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -தா இமா ஆபாச தத் தேஜோ ஹிரண்மய மண்டலபவத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜயதே –1-2-1-
அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸா த்யாயீத –தஸ்ய தயாநாந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோபதத் -ஸ்வேதாத் புத்புதம பவத் புத் புதாத் த்ர்யஷ ஸூல பாணி புருஷோ ஜாயதே -1-3-1- என்று
முதலான மஹா உபநிஷத்தாலே காட்டப்பட்ட நாராயணனாகிற விசேஷத்திலே பர்யவசியா நின்றன –

இந்த வாக்யம் அநுவாத ரூபம் என்று முன்பே சொல்லப்பட்டதன்றோ என்னில் -அப்படி யன்று -பின்னை எங்கனே என்னில்
ஸாஸ்த்ரமானது அப்ராப்த ப்ராபகமாய் இருக்கும்
-(அறியாதது அறிவித்த அத்தா போல்)அதாவது இவ் விடத்தில் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் பிரமாணாந்தரங்களால்(பிரத்யஷத்தாலும் அனுமானத்தாலும்) ப்ராப்தம் அன்று -ஆகாஸ ப்ராணாதி களோபாதி ப்ரஸித்த வந் நிர்தேசம் அன்று –ப்ரஸித்த வந் நிர்தேசம் அநுவாத ஸூசகமன்றோ என்னில்
ஸர்வாணி ஹா வா இமாநி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத் யந்தே –சாந்தோ -1-9-1-என்கிற இடத்தில் ஹ வை என்கிற ப்ரஸித்த வந் நிர்தேச மாத்ரம் -அநுவாத ஸூசகம் அன்று
யதாக் நேயோஷ்டாகபால -யஜுர் -2-5-2-
உபரி ஹி தேவேப்யோ தாரயதி-என்று முதலான வாக்யங்களிலும் -அப்போது அனுவாதத்வம் ப்ரசங்கிக்கும் –
(ஸமித் -கரண்டி எங்கே பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஸ்ருதி-திருஷ்ட அக்னி ஹோத்த்ரம் -சரீரமே சாதனம் இவர்களுக்கு -பிரதிபத்தி கர்மா
சமித்தை கரண்டிக்கு கீழே வைத்து செல்ல வேணும்
தேவர்களுக்கு மேலே அன்றோ -ஹி -சமித்தைப் பிடிக்கிறான்
விதி வாக்யமே இது தான் -அனுவாதம் அல்லவே)

அவ் விடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் – வசநாநி த் வபூர்வத்வாத் –பூ மீ -3-5-21-என்றும்
விதிஸ் து தாரணே அபூர்வத்வாத் –பூ மீ -3-4-15- என்றும் பூர்வ மீமாம்ஸா ஸூத்ரங்களாலே விதித்வம் ஸமர்த்திக்கையாலே ஸித்தம்

ஸர்வாணி ஹ வா -இத்யாதி வாக்யங்களால் ஆகாஸ ப்ராணங்களுக்கு ப்ரமாணாந்தரங்களாலே -கார்யத்வ -ஹேயத்வங்கள் ஸம் பிரதிபன்னங்கள் ஆகையாலே இவற்றுக்கு
பரம காரணத்வம் -ப்ராப்யத்வம் -தத் அநு குண கல்யாண குண யோகத்வம் இவற்றினுடைய ப்ரதிபாதனம் கூடாமையாலே -உபக்ரமத்திலே லோக கதியாக ப்ரதீதமான பரத்வமே -ஆகாஸ ப்ராணங்களாக பரத்வ விஸிஷ்ட லிங்கங்களாகையாலே -தத் தச் ஸப்த வாஸ்யங்களாக -சாரீரக மீமாம்ஸா ஸூத்ரங்களாலே -11-22-23-அநுவாதமாக ப்ரதிபாதிக்கப் பட்டதாயிற்று
ப்ரஸித்த வந் நிர்தேசத்வம் அநுவாதத்துக்கு ஹேதுவாகச் சொல்லப் பட்டது என்றதாயிற்று

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -மஹா -1-1-1- என்கிற மஹா உப நிஷத்தில் -நாராயணனையே பரம காரணனாகச் சொல்லி -தத் வ்யதிரிக்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஸம் ப்ரதிபந்தங்களான கார்யாந்தரங்களோ பாதி நாராயணனாலே ஸ்ருஜ்யராகவும் -ஸம்ஹார்யராகவும் சொல்லுகையாலே -வேறு ஒரு வஸ்து காரணமாக விதிக்கப் படுகிறது என்கிற ப்ரசங்கமே இல்லை
ப்ரஹ்மா விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே -அதர்வசிகா என்கிற இடத்தில் விஷ்ணு உத்பத்தி கார்யத்வா பாதகம் அன்று –
உபேந்த்ர – ராம – கிருஷ்ணாத் அவதாரங்களோபாதி ஜகத் ரக்ஷண அர்த்தமாக ப்ரஹ்ம ஈஸ மத்ய கதமான அவதார விசேஷமாக பிரமாண ஸித்தம்
ஆகையால் இவ் வாக்யத்துக்கு அப்ரமாணத்வம் இல்லை என்று இந்த வாக்யத்தில் சொல்லுகிற விசேஷமான நாராயணன் பக்கலிலே ஸதாதி ஸப்தங்களுக்கு பர்யவஸாநம் யுக்தம்
இந்த வாக்யம் அநுவாதமானாலும் அநுவாத லிங்க ரஹிதமாக நாராயணத்வத்தைச் சொல்லுகிற ஸ்ருதி அர்த்தத்தை அநுவதிக்கக் குறையில்லை

அதில் ஸூபால உப நிஷத்திலலே
கிம் ததாஸீத் நைவேஹா மிஞ்ச நாக்ர ஆஸீத் -அமூல மநாதாரா இமா ப்ரஜா- ப்ரஜாயந்தே திவ்யோ தேவ ஏகோ நாராயண என்றும்
புருஷ ஸூக்தத்திலும்
தஸ்மாத் விராட ஜாயத – விராஜோ அதி பூருஷ -என்றும்
இத்யாதியாலே நாராயண காரணத்வத்தைச் சொல்லி
கட வல்ல்யாதிகளும் அவனுடைய மோக்ஷ பிரதத்வத்தையும் சொல்லுகையாலே
ஜகத் காரணத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்கும் –

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -தைத் -1-1-
அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -ததோ வை சத ஜாயத ததாத்மாநம் ஸ்வய மகுருத – தஸ்மாத் தத் ஸூஹ்ருதம் உச்யத இதி -யத்வை தத் ஸூஹ்ருதம் ரஸோ வை ஸ ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி –தைத் -7-1-
இத்யாதி வாக்யங்களிலே ஜகத் காரணமே இறே -மோக்ஷ ப்ரதமாகவும் -முக்த ப்ராப்யமாகவும் ப்ரதிபாதிக்கப் படுகிறது

ஆகையாலே மஹா உபநிஷத் வாக்கியம் அநுவாதமாம் இடத்திலும் -தேவதாந்தர காரணத்வத்தை அநுவதிக்கிற பிரசங்கமே இல்லை
ப்ரஸித்த வந் நிர்தேசம் உண்டானாலும் -அபூர்வ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கும் இடத்தில் அனுவாதத்வம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப்பட்டது

இப்படி நாராயண உபநிஷத்திலும்
அத புருஷோ ஹ வை நாராயணோ அகாமயத- ப்ரஜாஸ் ஸ்ருஜேயமிதி -அதாப ஸ சர்ஜ —நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே –நாராயணாத் ருத்ரோ ஜாயதே –நாராயணாத் இந்த்ரோ ஜாயதே- நாராயணாத் ப்ரஜா ப்ரஜாயந்தே –நாராயணாத் த்வாதஸ ஆதித்யா ஏகாதஸ ருத்ரா வஸவ ப்ரஜாபத யஸ்ச ஸர்வே தேவாஸ் ஸமுத் பத்யந்தே -ஸர்வே லோகாஸ் ஸர்வாணி ச பூதாநி நாராயணா தேவ ஸமுத்பத்யந்தே -நாராயணே ப்ரலீ யந்தே -என்று நாராயணனையே ஸர்வ காரணமாகவும் சொல்லிற்று

மஹா உப நிஷத்திலும்
ஸர்வஸ் யாயதநம் ஹரிம் -என்று தொடங்கி
யந் நாபி பத்மாத் அபவந் மஹாத்மா ப்ரஜாபதிர் விஸ்வஸ்ருக் விஸ்வ ரூப -தமேவ விதித்வா அதி ம்ருத்யுமேதி நாந்ய பந்தா வித்யதே அயநாய -என்று
ஸகல ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் காரணமாக- நாராயண பர்யாய பதமான ஹரி ஸப்தத்தாலே நாராயணனைச் சொல்லுகையாலே- காரண வாக்யங்கள் எல்லா வற்றிலும் நாராயணனே பரனாக ப்ரதிபாதிக்கப் படுகிறான் என்றதாயிற்று

ஆகையாலே -ந சத் ந அசத் சாச் சிவ ஏவ கேவல -ஸ்வே -4-18- என்கிற இடத்தில் சிவ ஸப்தம் அர்வாசீந சிவனுக்கு வாசகம் அன்றியிலே– ஸூத்த மங்கள்ய குண யுக்தமான அநேக அர்த்தங்களிலும் ப்ரயோகம் காண்கையாலே- பவித்ராணாம் பவித்ரனாய் -மங்களா நாம் மங்களனான – ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -தைத் -6-11-3- என்று நாராயண அநுவாகத்திலே சொன்ன ஸாஸ்வத சிவனான நாராயணனுக்கே வாசகமாம் இத்தனை-
இப்படி நாராயண சப்தத்துக்கு வ்யக்த்யந்தரத்தில் ப்ரயோகம் கண்டது இல்லை இறே-
இப்படி பஹு உப நிஷத்திலும் -பஹு ஸ அப்யஸ்யமாந நாராயண ஸப்த வாஸ்யனே -பரம காரண தயா நிர்ணீதனாகையாலே -க்வாசித் கதமாய் வ்யக்த்யந்த்ர ப்ரயோகத்தாலே ஸாவகாஸமான சிவ ஸப்தம் நாராயண வாசகமாகை யாலே யுக்தம் என்றதாயிற்று

இன்னமும் ஆகாஸ பிராணாதி களோபாதி
ந ப்ரஹ்மா நேஸாந -மஹா உப -1-1-
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே- நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண உப-1
த்ர்யக்ஷ ஸூல பாணி -புருஷோ ஜாயதே -மஹா உப -1-3-
யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேஷ ந்ரும்ண
இத்யாதிகளிலே ஸ்ருஷ்டி ஸம்ஹார கர்ம பாவத்தையும்
அஸ்ய தேவஸ்ய மீடுஷோ வயோ விஷ்ணோர் அக்ஷஸ்ய அவப்ருதே ஹவிர்பிர் விதேஹி ருத்ரோ ருத்ரியம் மஹத்வம் -என்று பஹ்வ்ருச ஸ்ருதியிலே ருத்ரனுக்கு பகவத் ஸமாராதநத்தாலே ஸ்வ மஹிம ப்ராப்தியையும் சொல்லுகையாலே அர்வாசீந சிவனுக்கு பரம காரணத்வம் அநுப பன்னம் என்றதாயிற்று-

இப்படியே காரண வாக்ய கதமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தமும் சதுர்முகனை பரம காரணமாக ப்ரதிபாதிக்க மாட்டாது -எங்கனே என்னில்
கார்யதயா ஸம் பிரதி பன்னனான ஹிரண்ய கர்ப்பனுக்கு பரம காரணத்வம் கூடாமையாலே
தா இமே ஆபஸ் தத் தேஜோ ஹிரண்ய மய மண்டமபவத் தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ ஜாயத -மஹா உப -1-2-
ஆப ஏவ ஸ சர்ஜா தவ் தாஸு வீர்யமபாஸ்ருஜத் -ததண்டம பவத் ஹைமம் ஸஹஸ்ராம்ஸு சம ப்ரபம் -தஸ்மிந் ஜஜ்ஜெ ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதாமஹ -மநு -1-8-9- என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி களிலே சொல்லுகிறபடியே
ஹிரண்ய மஸ்ய கர்ப்போ பூத் -லிங்க பு -பூ 70-106—வாயு பு பூ 5-42- என்கிற
வ்யுத்பத்தி ப்ரகாசத்தாலே ஹிரண்மயமான அண்டம் இவனுக்கு உத்பத்தி ஸ்தானம் என்று தோன்றுகையாலே இவனுடைய கார்யத்வம் ஸித்தம் என்றதாயிற்று-

ஸ பிரஜாபதி ரேக புஷ்கரபர்ணே ஸமபவத்-ந்ரு தாபா வீரயோப -பூ 1-1-ப்ருஹ்ஜ்ஜா பால் யுப -1-1-
விராஜோ அதி புருஷ -ருக் வேத -8-4-17-10-7
ப்ரஹ்மாணம ஸ்ருஜத் ப்ரபு
மாம் த்வம் பூர்வமஜீ ஜந – உத்தர ரா -104-4-
தத் விஸ் ருஷ்டஸ் ஸ புருஷ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -மநு -1-11-என்று
முதலான ப்ரமாணங்களும் சதுர் முகனுடைய கார்யத்வ ப்ரதிபாதகங்களாய் இருக்கும்

ஆகையால் -ஹிரண்ய கர்ப்பஸ் சமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் -யஜுர் – ஸம் -4-2-34-என்கிற
வாக்யத்துக்குப் பொருள் – ஹிரண்ய கர்ப்பன் ஸ்வ கார்யமான ஸ்ருஷ்டிக்கு பூர்வ பாவியாய் -ஸ்வ ஸ்ருஷ்டங்களான பூதங்களுக்கு பதியுமாய் இருக்கும் என்றதாயிற்று-ஜாத பதிர் ஆஸீத் என்கையாலே இவனுடைய பதித்வம் ப்ரதமஜத்வ ரூப நிபந்தன மாகையாலே ஒவ்பாதிகம் என்று தோற்றுகிறது

(பிரஜாபதி -முதலில் பிறந்தவன் என்பதால் பெற்ற பெயர்)

ஆகையாலே இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் பரம காரண விஷயமான போது -ஹித ரமணீய கர்ப்பத்வாத் ஹிரண்ய கர்ப்ப -என்று உபாய உபேய மான ஸ்வரூபத்தை யுடையவன் என்கிற அவயவ ஸக்தியாலே யாதல் – ஹிரண்ய கர்ப்ப சரீரியான பரமாத்மாவின் பக்கல் பர்யவசான வ்ருத்தியாலே யாதல் – ஸர்வ காரண பூதனான நாராயணனுக்கே வாசகமாகக் கடவது

அம்பஸ்ய பாரே புவனஸ்ய மத்யே நாகஸ்ய ப்ருஷ்டே(கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும்) -என்கிற அநுவாகத்தில் –
யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி –
ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷாததி-என்று
ஸமுத்ர ஸாயித்வ-வித்யுத் வர்ண புருஷத்வங்களாகிற லிங்கங்களாலே- நாராயண ஸப்த வாஸ்யனான பரம புருஷனைச் சொல்லி
ந தஸ்யேஸே கஸ்சந தஸ்ய நாம மஹத் யஸ –ய ஏவம் விதுரம்ருதாஸ்தே பவந்தி -என்று
இவனுக்கே அநந்ய ஈஸ்வரத்வத்தையும் -மோக்ஷ ப்ரதத்வத்தையும் சொல்லி
அத்ப்யஸ் சம்பூதோ ஹிரண்ய கர்ப்ப இத்யஷ்டவ் -என்று
பூர்வ உக்தத்தோடு ஏக வாக்கியமாக
ஹிரண்ய கர்ப்ப -இத்யாதி ருகஷ்ட கத்தையும் உதா ஹரித்துச் சொல்லுகிற வாக்யமானது இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு நாராயண பரத்வத்தை அடைவிப்பியா நின்றது –

இன்னமும் இந்த ஹிரண்ய கர்ப்ப வாக்யத்தோடே
அத்ப்யஸ் ஸம்பூத -என்கிற அநுவாகத்துக்கும் ஏக வாக்யத்வம் உண்டாகையாலே
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் -என்று அங்குச் சொல்லுகிற ஸ்ரீயபதித்வத்தாலும்
புருஷ ஸூக்த ப்ரகரணத்தவத்தாலும்
நாராயண விஷயத்வம் நிஸ்சிதமாகையால் இந்த ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் நாராயண பரம் என்று அறியப்படும்
ஸ்ரவ்தமான ஹிரண்ய கர்ப்ப ஸப்தம் லிங்கமான ஸ்ரீ ய பதித்வத்தில் காட்டில் ப்ரபலமாய்க் கொன்டு சதுர் முக வாசகம் என்கிற விடம் அநுப பன்னம்
காரண விஷய ஹிரண்ய கர்ப்ப ஸப்தத்துக்கு கார்ய பூத சதுர் முக பரத்வம் கூடாமையாலே ஸ்ருதி அசித்தை யாகையாலும்
(பொய்யாகி விடுமே )- ஏக பத ஸாமர்த்ய ரூபமான ப்ராமாண்யம் -அக்னிநா சிஞ்சேத் (அக்னியாலே நனை -காரணத்தைச் சொல்லி கார்யம் தண்ணீரால் நனை-தேவ லோக பசுக்கள் தலை கீழ் நடக்கும் அர்த்த வாதம் அங்கு )-இத்யாதி வாக்கியங்களில் போலே அநுப பன்ன அர்த்தங்களில் ஸம்பவியாமையாலும்- ஸ்ருதிக்கு ப்ராபல்யம் சொல்ல ஒண்ணாது –

புருஷ ஸூக்தம் நாராயண பரம் என்னுமிடம் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட
ஸஹஸ்ர ஸீர்க்ஷ –விஸ்வாக்ஷ –புருஷ இத்யாதி லக்ஷணமான புருஷ ஸூக்தாதி லஷிதமான –நாராயண அநு வாகாதி — என்று பாடமாகில் நலம் -தாள கோசங்களில் புருஷ ஸூக்தாதி -என்றே காண்கிறது
1-ப்ரத்யபிஜ் ஞாநத்தாலே ஸித்தம் என்று லிங்க பூயஸ்த்வாத் -3-3-44- என்கிற வேதாந்த அதி கரணத்திலே ப்ரஸித்தம் இறே

2-அதர்வண வேதத்தில் அஷ்டாதஸ மஹா சாந்தி ப்ரகரணத்திலே — வைஷ்ணவ்யாம் புருஷ ஸூக்த மீதம் -என்று
வைஷ்ணவியான மஹா சாந்தியிலே புருஷ ஸூக்தத்தை விநியோகிக்கையாலே இதினுடைய விஷ்ணு விஷயத்வம் ப்ரதீத மாயிற்று
3-இந்த வாக்யத்துக்கு உத்தர நாராயண அநு வாகத்திலே சொல்லப்பட்ட லஷ்மீ பதித்வ லிங்கத்தாலும்
4-புருஷஸ்ய ஹரே ஸூக்தம் -என்கிற ஸ்ம்ருதி வசனத்தாலும்
5-கல்ப ஸூத்ரங்களிலும் புருஷம் நாராயணம் -என்று (புருஷ இத் யுபஹிதாம் புருஷேண நாராயணனை யஜமான உப திஷ்டதே –ஸஹஸ்ர சீர்ஷா புருஷ இதி புருஷேண நாராயணேந பராஞ்சோநு ஸம் சந்தி -இதி போதாயந ஆபஸ்தம்ப கல்ப ஸூத்ரே ) என்று
இரண்டு அநுவாகத்தையும் சொல்லுகையாலும் நாராயண பரம் என்னும் இடம் நிஸ்ஸயம்

உக்த ந்யாயத்தாலே -தாதா யதா பூர்வ மகல்பயத் -தைத்த -6-1- என்கிற இடத்தில் தாத்ரு ஸப்தம் பரம காரணத்வத்தில் பகவத் விஷயமாகவும்
அவாந்தர காரணத்வத்தில் சதுர் முக விஷயமாயும் இருக்கும்
பிரஜாபதி ஸப்தமும் அப்படியே
பிரஜா பதேஸ் ஸபாம் வேஸ்ம ப்ரபத்யே -சாந்தோக் -8-14-1- என்று
முக்த ப்ராப்யத்வம் சொல்லுகிற விடம் சதுர் முக பரமன்று –
கட வல்லி நாராயண அநுவாகம் தொடக்கமான அநேக உப நிஷத்துக்களிலே நாராயணனையே முக்த ப்ராப்யனாகச் சொல்லுகையாலும்
பகவத் பர தயா நிர்ணீ தவ்யமான தஹர வித்யாகதமான இந்த வாக்யத்துக்கு தத் பரதை யுக்தமாகையாலும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -4-3-14-ப்ரஹ்ம ஸூத் -என்று
சதுர்முகனுடைய முக்த ப்ராப்யத்வம் வேதாந்த விருத்தமாகையாலும்
இந்த ப்ரஜாபதி ஸப்தம் அவயவ ஸக்தியாலே ஸர்வ சேஷியான நாராயணனையே சொல்லுகிறதாகக் கடவது-

தத ஸ்வயம் பூர் பகவான் -மநு -1-6- என்கிற இடத்தில் ஸ்வயம்பு ஸப்தம் நாராயண பரமாகக் கடவது
அநந்தரத்தில் -தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயணஸ் ஸ்ம்ருத -மநு -1-10- என்று அவனை நாராயணனாகச் சொல்லி
தத் விஸ்ருஷ்டஸ் ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே -என்று அவனாலே ஸ்ருஷ்டனாக ப்ரஹ்மாவைச் சொல்லுகையாலே
நாராயணனே பரம காரண பூதன் -சதுர் முகன் அல்லன் -என்றதாயிற்று

நாராயண அநுவாகமானது – ஸஹஸ்ர ஸீர்க்ஷம் தேவம் -6-11-1- என்று தொடங்கி –
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர பரம ஸ்வராட் -6-11-1-என்று முடிவாக ஸர்வ சாகைகளிலும் பரத்வ ப்ரதிபாதகமாக ப்ரஸித்தமான தேவ -சம்பு -அக்ஷர -ப்ரபு -பதி -சிவ -அச்யுத -ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு-ப்ரஜாபதி -ஸ்வயம் பூ -விஸ்வாத்ம -பரம் ப்ரஹ்ம -பர தத்வ -பரஞ்ஜ்யோதி -பரமாத்ம – ப்ரப்ருதிகளான ஸப்தங்களாலே நியாய நிரபேஷமாக நாராயண ஸாமாநாதி கரண்யத்தாலே கண்டோக்தி பண்ணி -பரத்வேந சங்க நீயரான பிரம்மா ஸிவர்களுக்கு தத் விபூதித் வத்தையும் சொல்லி நிகமித்தது

இப்படி ஸர்வ வேதாந்த நிகமன பூமியான இந்த அநுவாகம் உபாஸந விசேஷ விதி பரமாத்ரமும் அன்று – ப்ரக்ருதமான தஹர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பர மாத்ரமும் அன்று -ஸர்வ பர வித்யோபாஸ்ய விசேஷ நிர்ணய பரம் என்று வேதாந்தத்திலே –(ப்ரஹ்ம ஸூத் -3-3-44–சாரீரிக மீமாம்ஸாயாம் லிங்க பூயஸ்த்வாதி கரணே யமர்த்தஸ் ஸமர்த்தித )– நிர்ணயிக்கப் பட்டது-

நாராயண பரம் ப்ரஹ்ம –நாராயண பரோ ஜ்யோதி –தைத் -6-11-4-3- என்கிற இடத்தில் பஞ்சமீ ஸமாஸ சங்கையாலே (நாராயணனைக் காட்டிலும் என்ற சங்கை)நாராயணாத் பரமாய் இருபத்தொரு வஸ்து என்று சொல்லுகிற விடம் அயுக்தம்
1-தத்வம் நாராயண பர -இத்யாதிகளிலே வ்யஸ்தமான ப்ரயோகம் காண்கையாலும்
2-அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித —
ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்தர –இத்யாதிகளிலே நாராயணனே ஸர்வ ஸ்மாத் பரன் -அல்லாதார் அவனுக்கு விபூதி பூதர் என்று தோற்றுகையாலும்
இவ் விடத்தில் ப்ரதமா விபக்தி -ஸூபாம் ஸூலுக் -பாணிநி ஸூ -7-11-39-இத்யாதி ஸூத்ரத்தாலே
( லுப்த்தை என்கிற விபாக நிர்தேசத்தாலே இந்த ஸம்சயத்தை நிவர்த்திப்பித்து ஸமாஸத்திலும் அப்படியாய்க் கிடக்கிறதாகக் கடவது ) லுப்த்தையாய்க் கிடக்கிறதாகக் கடவது-

மஹா உப நிஷத்திலும் -நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பாரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர -என்று வ்யக்தமாகக் கிடக்கிறது –
நிஷாத ஸ்தபதி ந்யாயத்தாலே பஞ்சமீ ஸமாஸத்தில் காட்டில் ஸாமாநாதி கரண்ய ஸமாஸம் யுக்தம்

(நிஷாத ஸ்த பதீதி –ஸ்த பதிர் நிஷாதஸ் ஸ்யாத் ஸப்த ஸாமர்த்யாத் –இதி ஸூத்ரம் பூர்வ மீமாம்ஸா ஷஷ்டாத்யாய கதம் -6-1-51–ஏதயா நிஷாத ஸ்த பதிம் யாஜயேத் -இதி ஸ்ருதி தஸ்ய விஷய தத்ர நிஷாதாநாம் ஸ்தபதிரிதி விக்ரஹேண -நிஷாத அபின்ன ஸ்தபதி ப்ரதீயதே வா-சம்பந்தி ஸ்தபதி ப்ரதீயதே வா -இதி ஸம்ஸய ஷஷ்டீ தத் புருஷாஸ்ரயணே ஸ்த பதேஸ் சமர்த்தத்வாத் -வித்வத்வாத் -அக்னி மத்வாச்ச யஜ்ஞாத் யநுஷ்டானம் யுஜ்யத இதி பூர்வ பக்ஷ -ஸித்தாந்தஸ்து -ததாஸதி ஸ்ருதி கத நிஷாத பதஸ்ய லக்ஷணா பத்த்யா கர்ம தாரய பக்ஷ ஏவ ஆஸ்ரயணீய -இதி தாத்ருஸ ந்யாயேத் யர்த்த )

(நிஷாத ஸ்த பதீதி -நிஷாதர்களுக்குத் தலைவன் என்றும் நிஷாதரனாகவும் தலைவனாகவும் என்றும்
ராஜ சேவகன் -ராஜா சேவகன் -ராஜாவினுடைய சேவகன்-இருவரும் வேறுபட்டவர் அல்லர் அபேத அந்வயம்-
தத் புருஷ ஸமாஸம் -ராஜா என்பதற்கு ராஜாவினுடையவனான -லக்ஷணையால் கொள்கிறோம்
நேர் பொருள் சொல்ல முடியாமல் லக்ஷணையால் சொல்கிறோம்)

ஆகையாலே இந்த அநுவாகத்தில் ஸர்வ வேதாந்தங்களிலும் 1-முமுஷுபாஸ்ய மாகவும் -2-முக்த ப்ராப்யமாகவும்- 3-ஜகத் காரணமாகவும்- 4-ஜகத் அந்தராத்மாவாகவும் ப்ரஸித்தமாய் -ஸத் -ப்ரஹ்ம -ஆத்மதத்வம் ஜ்யோதி-ஆதி ஸாமான்ய ஸப்தத்தாலே நிர் திஷ்டமான வஸ்துவை தத் ப்ரத்யபிஜ் ஞாபகமான அவ்வோ ஸப்தங்களாலே அநுவதித்து அந்த வஸ்துவுக்கு நாராயணத்வம் விதிக்கப்படுகிறது என்றதாயிற்று –

ஜூஹ்வா ஜூஹோதி என்று ஹோம சாதனதயா விஹிதமான ஜூஹு வுக்கு(மரப் பாத்திரம் -யாக அங்கம்) -யஸ்ய பர்ண மயீ ஜூஹுர் பவதி (அப் பாத்திரம் இலையாகவே இருக்கும்)-என்று ஜூஹு ஸப்தத்தாலே அநு வதித்து பர்ண மயத்வ விதாநம் பண்ணினாப் போலே

இப்படி மைத்ராயணீய உப நிஷத்திலும்
தத் ஸவிதுர் வரேண்யம் த்ருவம் அசலம் அம்ருதம் விஷ்ணு ஸம்ஜ்ஞம் ஸர்வ ஆதாரம் தாம -என்று
த்ருவத்வ -அசலத்வ -அம்ருதத்வ -ஸர்வாதாரத்வ விசிஷ்டமாக ஸர்வ வேதாந்த வேத்யமான பர ப்ரஹ்மம் விஷ்ணு ஸம்ஜ்ஞமாக விசேஷிக்கப் பட்டது

கட வல்ல் யாதி யிலும் -ஸர்வே வேதா யத் பதமாம நந்தி -என்று தொடங்கி
தத்தே பதம் ஸங்க்ரஹேண ப்ரவீமி -என்று சொல்லி
ஸோத் வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் –கட -1-3-9- என்று
ஸர்வ வேதாந்த ப்ரதிபாத்யமாய் -முக்த ப்ராப்யமான வஸ்து வைஷ்ணவமான பதம் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டது

ஆகையால் நாராயணனே மோக்ஷ ப்ரதனும் -முக்த ப்ராப்யனும் -பர தத்வமும் என்று ஸர்வ வேதாந்த ஸித்தம் என்றதாயிற்று-

இனி ஸ்வேதாஸ்வதர உப நிஷத்திலே -ததோ யதுத்தர தரம் –3-10-என்று தொடங்கி ருத்ரனுக்கு நாராயணாத் பரத்வம் சொல்லுகிறது என்கிற விடம் அநுப பன்னம்- உப க்ரமத்தோடு சேராமையாலே
உபக்ரமத்தில் -வேதாஹம் ஏதம் புருஷம் மஹாந்தம் என்று மஹா புருஷனைச் சொல்லி –தமேவ விதித்வா அதி ம்ருத்யு மேதி நான்ய பந்தா வித்யதே அயநாய -என்று
தத் வேதநமே மோக்ஷ ஹேது -வேறு ஓன்று அன்று -என்கிற அர்த்தத்தினுடைய ப்ரதிஜ்ஜை பண்ணப்பட்டது
அநந்தரம் அத்தை உப பாதிக்கைக்காக -யஸ்மாத் பரம் நா பரமாஸ்தி கிஞ்சித் -யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்ஸித் -வ்ருஷ இவ ஸ்தப்தோதி விதிஷ்டத் யேக- தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -ஸ்வேதாஸ் –3-9- என்று
யாவன் ஒருவனில் காட்டில் வேறு பரமாய் இருபத்தொரு வஸ்துவில்லை – மஹத் தரமாய் இருபத்தொரு வஸ்து இல்லை
நிஸ் தரங்க ர்ணவோபமனான பரமபத நிலயனாலே இந்த விஸ்வம் வ்யாப்தமாய் இருக்கும் என்று கொண்டு-nஸர்வ ஸ்மாத் பரனான பரம புருஷனைச் சொல்லி
ததோ யதுத்தர தரம் என்று அவனில் காட்டில் உத்க்ருஷ்டமாய் இருபத்தொரு வஸ்து உண்டு என்கை உபக்ரமத்தோடு சேராது

ஸேயம் ஸ்ருதி பரமாத்ம பர தயா பார்க்கவஸ் ஸ்ம்ருத்யாதிஷு மஹர்ஷிபி ருப ப்ரும்ஹிதா -ததாஹி -யஸ்மாத் பர தரம் நாஸ்தி புருஷாத் பரமேஷ்டிந- ந ஜ்யா யோஸ்தி ந சாணீயா ஸ து நாராயணோ ஹரி -யேநேதா மகிலம் பூர்ணம் புருஷேண மஹவ்ஜசா -ஸ து நாராயணோ தேவ -இதீயம் வைதிகீ ஸ்ருதி இதி அத்ர வக்தவ்யம் ஸர்வமபி தத்வ ஸேகரடிப் பண்யாம் ப்ரபஞ்சிதம் தத்ர த்ரஷ்டவ்யமிதி உபக்ரம அநு குணமாக உப ஸம் ஹாரம் -என்று சொல்லுகை உபக்ரமாதி கரண ஸித்தம்

(ததோ யதுத்தர தரம்-ஆகையால் என்றும் அதை விட என்றும் -இரண்டு
அத்தைக் காட்டிலும் மிக உயர்ந்தது என்றும் அதனால் மிக உயர்ந்ததாக -என்றும் கொள்ளலாமே)

(நின் புகழில் வைக்கும் சிந்தையிலும் இனிதோ நீ அருளும் வைகுந்தம் என்னும் வான்-
கல்யாண குணங்களே அவனைக் காட்டிலும் அம்ருத மாயம்
குணங்கள் மூலம் உபாசனம் ஸ்வரூப உபாசனத்தை விட உயர்ந்தது என்றதாயிற்று)


(உபக்ரமாதி கரணமிதி -பூர்வ மீமாம்ஸா த்ருதீயாத்யாய ப்ரதமாதி கரணம் -3-3-1-கைஸ்சித் வேத தர்மதாதி கரணம் இத்யபி பட்யதே–தததிகரணே ஹி -ப்ரஜாபதிர் வா இதமக்ர ஆஸீத் -ஸ தபோதப்யதா–தஸ்மாத் தபஸ் தேபா நாத் த்ரயோ வேதா அஜாயந்த -அக்நிர் வாயுர் ஆதித்யஸ்தே தபோதப்யந்த -தேப் யஸ்தேபா நேபியஸ் த்ரயோ வேதா (தேவா பாட பேதம் சிறக்கும்)அஜா எந்த அக்னே ருக் வேதோ -வாயோர் யஜுர் வேத- ஆதித்யாத் சாம வேத இத் யுபக்ரம்ய ஸ்ரூயதே –தஸ்மா துச்சை ருசா க்ரியதே உபாம்ஸு யஜுஷா உச்சைஸ் ஸாம்நா இதி அத்ர ஸம்ஸய –(அநுபூத விரோதம் –பொருந்தாதது இன்னும் உருவாக வில்லை -உப ஸம்ஹாரத்தில் விரோதம் வந்தால் -உபக்ரமத்துக்குத் தக்கபடி மேல் கொண்டு அர்த்த சொல்லலாம்
வேறே சாகைகளுக்கு விரோதம் வாராமல் இருந்தால் அப்படிக் கொள்ளலாம்
இந்த்ரன் மாம் உபாஸ்வ உபக்ரமத்தில்
மேல் பர ப்ரஹ்ம லக்ஷணம் சொல்லி அவனை உபாஸிக்கச் சொல்லும் பொழுது
உபக்ரமத்தில் மாம் -என்னை அந்தராத்மாவாகக் கொண்ட நாராயணன் அர்த்தம் கொள்ளுகிறோம் -அன்றோ
இங்கு ருக்கை சொல்லும் போது உச்ச சுவரத்தாலும் யஜுஸ் முனு முனு குரலிலும் சாமத்தை மீண்டும் உச்ச ஸ்வரம்
அபிக்கு வேத சப்தம் இல்லாமல் –
ருக் யஜுர் சாம மந்த்ரம் என்று கொள்ள வேண்டுமா
ருக் வேதத்தை -யஜுர்வ்தாத்தை சாம வேதத்தைச் சொல்ல வேண்டுமே சங்கை
ருக் வேதத்தில் மூன்று மந்திரங்களும் உண்டே -)தத்ர கிம் உச்சைஷ்ட் வாதய ருகாதி தர்மா உத வேத தர்மா இதி -உபக்ரமே வேத ஸப்த ஸ்ரவணாத்-உப ஸம்ஹாரே ச ருகாதி ஸப்த ஸ்ரவணாத்-வேத சப்தஸ்ய ஹி மந்த்ர ப்ராஹ்மண சமுதாயத்வா வச்சிந்நே ஸக்தி (வேதம் ரூக்கின் சமுதாயத்தைச் சொல்லும்)-ந து ஏகை கஸ்மின் மந்த்ர வாக்யே- ப்ராஹ்மண வாக்யே வா -ததா ஸதி மந்த்ராதி ரூப ஏக த்வி -த்ரி வாக்ய -அத்யயநேபி – வேதாநதீத்ய வேதவ் வா வேதம் வாபி யதாக்ரமம் -இதி ஸாஸ்த்ராநுஷ்டாந பிரசங்காத் –பாத வ்யவஸ்தாவத் மந்த்ரத்வா வச்சிந்நே ருக் சப்தஸ்ய மந்த்ரத்வ ஸமாநாதி கரண கீதித்வா வச்சிந்நே ஸாம சப்தஸ்ய ருக் ஸாம பின்ன மந்த்ரத்வாவச்சிந்நே ச யஜுஸ் சப்தஸ்ய ஸக்தி –-(ருக் ஸப்தம் -பாதம் ஒரே மாதிரி எழுத்து -கட்டளை இருக்கும்
ஸாம சப்தம் -யஜுர் ஸப்தம் -இதுக்கு இந்த கட்டளைகள் இருக்காது)தேஷாம் ம்ருக் யத்ரார்த்த வஸேந பாத வ்யவஸ்தா –கீதுஷு ஸாமாக்யா ஸேஷி யஜுஸ் ஸப்த –இத்யாதி ஸூத்ர த்ரயேண ததா வ்யவஸ்தாபநாத் -அத்ர உபக்ரம உப ஸம்ஹார யோர் விரோதாத் த்வயோ ரவிரோதே வர்ணநீயே உப ஸம்ஹாரஸ்ய விதித்வேன் ப்ரபலத்வாத் தத் அநு ரோதேந உபக்ரமஸ்தவேத பதஸ்யாபி ததேகதே ஸ ருகாதி மந்த்ர பரத்வம் இதி பூர்வ பக்ஷே –உபக்ரமஸ் யாநுத் பூத விரோதித்வேந ப்ரபலத்வாத் உபக்ரமகத வேத பதாநுஸாரேந உப சம்ஹாரஸ் ருகாதி பதா நாமேவ ருக் வேதாதவ் லக்ஷணேதி ஸித்தாந்திதம் ஏதத் அதி கரணார்த்தம் ஸங்க்ரஹேண பிரதிபாதயாத்தி
எங்கனே என்னில்
(லக்ஷனையால் ருக் மந்த்ரம் சொல்லாமல் வேதத்தைச் சொல்லுகிறது என்றே கொள்ள வேண்டு இது ஸித்தாந்தம்)

உபக்ரமாதி கரணத்தில் உப ஸம்ஹாரத்தில் காட்டில் உபக்ரமம் ப்ரபலமாகச் சொல்லப்பட்டது இறே -எங்கனே என்னில்
உச்சை ருசா க்ரியதே -உச்சைஸ் ஸாம்நா உபாம்ஸூ யஜுஷா -என்று
உச்சைஷ்ட் வாதியானது ருகாதியான மந்த்ர மாத்ரத்துக்குத் தர்மமோ -தத் தன் மந்த்ர பிராயமான வேத தர்மமோ என்று சம்சயித்து- மந்திரத்துக்கு வாசகமான ருகாதி ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே மந்த்ர தர்மத்வத்தைச் சொல்லி -உபக்ரம வேத ஸப்தம் -வேதயதீதி வேத -என்கிற வ்யுத்பத்தியால் அநுஷ்டே யார்த்த ப்ரகாசகமாய்க் கொண்டு மந்த்ர பரமாகக் கடவது –
வேத ஸப்த ஸ்வாரஸ்யத்தாலே வேத தர்மமாகச் சொல்லில் ருகாதி பதங்களுக்கு லாஷணிகத்வம் ப்ரசங்கிக்கும்

ஆகையாலே–உச்சைஷ்ட்வாதி மந்த்ர மாத்ர தர்மம் என்று பூர்வ பக்ஷமாக -மந்த்ர ப்ராஹ்மண ஸமுதாய ரூபமான வேத தர்மத்வமே உச்சைஷ்ட்வாதிகளுக்கு உபக்ரம ஸ்வாரஸ் யத்தாலே யுக்தம் -எங்கனே என்னில்
உபக்ரமமானது அநுத் பூத விரோதியாகையாலே சரம பாவியான உப சம்ஹாரத்தில் காட்டில் பலவான் -யாதொருபடி அக்னியின் அனுஷ்ணத்வ ப்ரதிபாதகமான அநு மானத்தில் காட்டில் அக்னியினுடைய ஒவ்ஷ்ண்ய க்ராஹியான ப்ரத்யக்ஷம் பலவத்து -யாதொரு படி அநுத் பூத விரோதியான ஸ்ருத் யாதிகளில் பூர்வ பூர்வங்கள் உத்தர உத்தரங்களில் காட்டில் பிரபலங்கள்
(ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தாந ஸமாக்யாநாம் சமவாயே பாரதவ்ர் பல்யம் அர்த்த விப்ரகர்ஷாத் -இதி பூர்வ மீமாம்ஸா ஸூத்ரே -3-3-14- அயமர்த்தோ த்ரஷ்டவ்ய)
அப்படியே பலவானான உபக்ரமத்தினுடைய ஸ்வாரஸ்ய அநு குணமாக துர் பலமான உப ஸம்ஹாரத்தினுடைய பாக்தத்வம் யுக்தம் -என்று கொண்டு உச்சைஷ்ட் வாதிகள் வேத தர்மங்கள் என்று ஸித்தாந்திக்கப் பட்டது

ஆகையால் உபக்ரம விரோதம் உண்டாகையாலே
ததோ யதுத் தர தரம் -என்கிற உப ஸம்ஹார வாக்யமானது உபக்ரம கதனான பரம புருஷனை ஒழிய வஸ்த்வந்தரத்தை ப்ரதிபாதிக்க மாட்டாது
கோபலீ வர்த்த ந்யாயத்தாலே ஸாமான்ய ஸப்தத்துக்கு விசேஷ ஸந்நிதியில் அர்த்த ஸங்கோசம் உண்டாகையாலே (
கோ ஆநய பலி ஆநய -பெண் மாடு காளை மாவு இரண்டுக்கும் கோ -பின் சொல்லியதால் பெண் மாட்டையே குறிக்கும் -அர்த்த சங்கோசம் உளது கோ -இல்லாதது பலீ சப்தம்)இவ் விடத்தில்
ததோ யதுத் தர தரம் —தஸ்மாத் ஸர்வ கத தஸ் ஸிவ –ஸ்வேதாஸ் -3-11- என்கிற விசேஷ ஸந்நிதியில்
நான்ய பந்தா வித்யதே அயனாய யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -ஸ்வேதாஸ் -3-9- என்று ஸர்வ விஷயமாகத் தோற்றுகிற ஸாமான்யத்துக்கு- அர்த்த ஸங்கோசம் பிறந்து -பரம புருஷனைக் காட்டில் வ்யதிரிக்தனைச் சொன்னாலோ என்னில்
அது கூடாது –
பதாந்தரத்தினுடைய வையர்த்த பரிஹார அர்த்தமாக பதாந்தரத்துக்கு அர்த்த சங்கோசம் கொள்ள வேண்டா
ததோ யதுத் தர தரம் என்கிறதுக்கு வையர்த்ய ப்ரசங்கமும் இல்லை -கீழ் ப்ரதிஜ்ஞாதமான அர்த்தத்தை தத என்று ஸ ஹேதுகமாக நிகமிக்கையாலே
(ஆகையால் -ஹேதுக்களைச் சொல்லி கல்யாண குணங்களையே உபாஸிக்கச் சொல்லிற்று என்று சித்தாந்தம்)

இன்னமும் -ஸர்வ கத ஸிவ என்று சொல்லி
மஹாந் ப்ரபுர்வை புருஷஸ் ஸத்வஸ்யைக்ஷ ப்ரவர்த்தக -ஸ்வே -3-12- என்று மோக்ஷ உப யோகியான ஸத்வத்துக்கு ப்ரவர்த்தகமான மஹா புருஷனை ப்ரத்யபிஜ்ஜை பண்ணி வைக்கிறது
(ஏஷ சாராய சப்தம் முன்பு சொன்ன சிவ -சப்தத்தைக் குறிக்கும்
அது -என்று சொல்லி ஒன்றைக் காட்டி-அவரோ நீர் –அவர் ஸ்ம்ருதி
நீர் ப்ரத்யக்ஷம்
அவரோ நீர் ப்ரத்யபிஜ்ஜை)

இன்னமும் -அதயோ ஹ வை கலு வாஸ்ய ராஜ ஸாம்ஸ்ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ப்ரஹ்மா -அதயோ ஹ வை கலு வாஸ்ய ஸாத்விகாம்ஸஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் விஷ்ணு -அதயோ ஹ வை கலு வாஸ்ய தாமஸ ஆம்ஸ் ஸோசவ் ப்ரஹ்மசாரிணோ யோயம் ருத்ர -4 வது ப்ரபாடக கண்டம் –என்று மைத்ராயணீய உப நிஷத்திலும்
ஸத்வ ப்ரவர்த்தகம் விஷ்ணும் – ஸர்வ பூத குஹாஸயம் என்று ஸ்ம்ருதியிலும் விஷ்ணுவுக்கு ஸத்வ ப்ரவர்த்தகத்வம் ஓதப்படா நின்றது

இவ் விடத்தில்
ஸர்வாநந ஸிரோ க்ரீவஸ் -ஸர்வ பூத குஹாஸய –ஸர்வ வ்யாபீ ச -பகவான் தஸ்மாத் ஸர்வ கதஸ் ஸிவ -ஸ்வே -3-11 என்கிற சப்தங்கள்
புருஷ ஸூக்த நாராயண அநு வாக்கங்களில் பரம புருஷனுக்கு அசாதாரணமான- ஸஹஸ்ர ஸீர்ஷத்வ –ஸர்வ அந்தராத்மத்வ – ஸர்வ வ்யாபித்வ -ஸாஸ்வத ஸூத்தி மாங்கள்யாதி குண யோகங்களை ப்ரத்யபிஜ்ஜை பண்ணா நின்றது
ஆகையால் இந்த ப்ரகரணத்திலும் ஸர்வேஸ்வரனே ப்ரதிபாதிக்கப் படுகிறான் -என்றதாயிற்று-
(அந்தராத்மா =உருவத்துடன் -அந்தர்யாமீ -நியமிப்பவன்-ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் -நாராராயணனே)

இன்னமும் -சாந்தோக்ய தஹர வித்யையிலே –
அத யதித மஸ்மிந் ப்ரஹ்ம புரே –8-1-1- இத்யாதியாலே நாம ரூப நிர்வோட் ருத்வ விசேஷிதமான ஆகாஸ ஸப்தத்தாலே பரம புருஷனைச் சொல்லி
தஸ்மிந் யதந்த –8-1-2- என்று
தத் அந்தர் வர்த்தியானதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லப்படுகிறது என்றதுவும்
அஸ்ரோத்ரியனுடைய ஆசா மாத்ர விலஸிதம் –
(ஸாஸ்த்ரம் தெரியாதவன் ஆசைக்காகப் பேசுவது போல்)

அந்த ஸ்ருதி தானே இத்தை ப்ரஸந பூர்வகமாக பரிஹரிக்கையாலே
தஹரோஸ்மிந் நந்தர ஆகாஸஸ் -தஸ்மிந் யத் அந்தஸ் -ததன்வேஷ்டவ்யம் -தத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-1- என்று சொல்லி
கிம் ததத்ர வித்யதே யதன் வேஷ் டவ்யம் -யத்வாவ விஜிஜ்ஞாஸி தவ்யம் -8-1-2-என்று சோத்யம் பண்ணி
தத் பரிஜிஹீர் ஷையாலே
யாவான்வாய மாகாஸஸ் தாவாநேஷோந்தர் ஹ்ருதய ஆகாஸ உபே அஸ்மின் த்யாவா ப்ருதிவீ அந்தரேவ ஸமாஹிதே -உபாவக்நிஸ் ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம ஸாவுபவ் -வித்யுந் நக்ஷத்ராணி -யச்சாந்யே ஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் ததஸ்மிந் ஸமாஹிதம்—–நாஸ்ய ஜரயை தஜ் ஜீர்யதி -ந வதே நாஸ்ய-ஹந்யதே ஏதத் ஸத்யம் ப்ரஹ்ம புரம் -சாந்தோக் -8–1-3-5- என்று கொண்டு ப்ராக்ருதமான தஹர ஆகாஸத்துக்கு அதி மஹத்த்வ ஸர்வ ஆதாரதவாதியைச் சொல்லி
அஸ்மின் காமாஸ் ஸமாஹிதா -8-1-5- என்று
தத் அந்தர் வர்த்திகளாய்க் கொண்டு உபாஸ்யங்களாகச் சொல்லப்பட்டவை காமங்கள் (காமங்கள் -கல்யாண குணங்கள்
)என்று பரிக்ரஹித்து
மேல் ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விஸோகோ விஜிகத்ஸோ அபிபாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப –8-1-5- என்று
தகர ஆகாஸ நிர் திஷ்ட பரமாத்மா -தத் அந்தர் வர்த்தியாய் இருக்கிறது
காம் யந்த இதி காமா -(
விரும்பப் படுபவையே குணங்கள் காமங்கள்)என்று கல்யாண குணங்களாய்
அபஹத பாப்மத்வாதியான குண அஷ்டகம் என்று சொல்லி
ய இஹாத்மா நமநுவித்ய வ்ரஜந்த்யே தாம்ஸ்ச சத்யான் காமாம்ஸ் தேஷாம் ஸர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி –8-1-6–என்று
ஏதத் குண அஷ்டக விஸிஷ்டனான பரமாத்மாவினுடைய உபாஸனமும்- தத் பலமும் சொல்லப்பட்டது

இது வாக்ய காரராலேயும்
தஸ்மிந் யத் அந்தரிதி காம வ்யபதேஸ -என்று சொல்லப்படுகையாலே
தஸ்மிந் யத் அந்த -என்றது
கல்யாண குண ஜாதம் என்றதாயிற்று

தைத்ரீயத்திலே
தஹ்ரம் விபாப்மம் -6-10-23- இத்யாதியாலே
பரம புருஷாந்தர வர்த்தியாய் இருபதொரு தத்வாந்தரத்துக்கு உபாஸ்யத்வம் சொல்லி
அதினுடைய விசேஷ ஜிஜ்ஞாஸை உண்டாய் உள்ள வளவில்
ய பரஸ் ஸ மஹேஸ்வர -6-10–24- என்று
விசேஷ நிர்ணயம் பண்ணப்படுகிறது என்றதும் இத்தாலே ப்ரத்யுக்தம்

(ஸர்வ வேதாந்த படித தஹர வித்யாயா ஐக்யம் சாரீரக மீமாம்ஸா யாம்
காமாதீ தரத்ர தத்ர சாயதநாதிப்ய -3-3-38- இத்யஸ்மிந் நதி கரணே ஸமர்த்திதம் –
ததபி ப்ரேத்ய –இத்தாலே ப்ரத்யுக்தம் இத்யுக்தம் )

யத் வேதாதவ் ஸ்வர ப்ரோக்தா -வேதாந்ததே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய- ய பரஸ்ச மஹேஸ்வர -6-10-24 -என்றது
வேதத்துக்கு முதலாக யாதொரு ப்ரணவ ரூப ஸ்வரூபமானது சொல்லப்பட்டது -அது வேதாந்தத்திலும் உத் கீத ப்ரகரணங்களிலே சொல்லப்பட்டது
அந்த ஸ்வரத்தினுடைய முதலில் எல்லா வாசகங்களுக்கும் ப்ரக்ருதி பூதமான ஆகாரத்துக்கு வாஸ்யனானவன் யாவன் ஒருவன் அவன் மஹேஸ்வரன்
அகாரோ விஷ்ணு வாசக –
அ இதி ப்ரஹ்ம -ருக் வேத ஆர
அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதம அபிதாநம்
அக்ஷராணாம் அகாரோஸ்மி -கீதா -10-என்று
அகார வாஸ்யனான நாராயணனே மஹேஸ்வர ஸப்த வாஸ்யன் என்றதாயிற்று

(அஸ்யா ஸ்ருதே பாத்மோத்தரே-அ -226-ஸ்ரீமன் நாராயண பரத்வேந உப ப்ரும்ஹிதத்வாத் ததபி ப்ரேத்ய–(அகார வாஸ்யனான –என்றதாயிற்று –இத்யநுக்ருஹீதம்)

ததாஹி பார்வதீம் ப்ரதி ஸர்வஜ்ஜோ ருத்ர –
யோ வேதாதவ் —ஸ மஹேஸ்வர -யோஸா வகார வாஸ்யோவை விஷ்ணுர் நாராயணோ ஹரி -ஸ ஏவ புருஷோ நித்ய பரமாத்மா மஹேஸ்வர -தஸ்யாம்ஸ பூதம் ஐஸ்வர்யம் யஸ்மின் கஸ்மின் ஹி வர்த்ததே -தஸ்மிந் ஈஸ்வர ஸப்தாதி ப்ரோச்யதே முநிபிஸ் ததா–நிருபாதீஸ் வரத்வம் து வாஸூ தேவ ப்ரதிஷ்டிதம் -ஆத்மேஸ்வர இதி ப்ரோக்தோ வேதவாதைஸ் ஸநாதநை –தஸ்மான் மஹேஸ்வரத்வம் து வாஸூ தேவே ப்ரதிஷ்டிதம்-அசவ் த்ரிபாத் விபூதேஸ் து லீலாயா அபி சேஸ்வர விபூதி த்வயம் ஐஸ்வர்யம்- தஸ்யைவ சகலாத்மந ஸ்ரீ பூ நீளா பதிர்யோசவ் ஈஸ்வரஸ் ஸ உதாஹ்ருத–தஸ்மான் மஹேஸ்வரத் வந்து வாஸூதேவே ப்ரதிஷ்டிதம்-இதி )
மஹேஸ்வர ஸப்தமும் அவயவ வ்யுத்பத்தியாலே ராஜாதிகளிலும் ப்ரஸித்தம் என்று முன்பே சொன்னோம்

அதர்வ சிகையிலே
காரணம் து த்யேய –இத்யாதியாலே
பரம புருஷ அந்தர் வர்த்தியாய் -சம்பு ஸிவாதி நாமகனான ருத்ரனுக்கு உபாஸ்யத்வம் தோன்றுகிறது என்றதுவும் யுக்த ரீதியாலே நிரஸ்தம்

இந்த ஆகாஸ ஸப்தம் ஹ்ருதய ஆகாஸ வாஸி யாகையாலே பரம புருஷ பரமாக மாட்டாமையாலும் -தத் அந்தர் வர்த்திக்கு காரணத்வாதியான பகவத் ஸாதாரண குணங்களைக் கொள்ளுகையாலும்-
சம்பு ஸிவாதி ஸப்தங்களுக்கு ருத்ரனை ஒழியவும் லோக வேதங்களிலே ப்ரஸித்தி உண்டாகையாலும்
விஸ்வாக்ஷம் விஸ்வ ஸம்புவம் –ஸாஸ்வதம் சிவம் அச் யுதம் –தைத்-6-11-1-3 என்று
நாராயணன் பக்கலிலும் பிரயோகம் காண்கையாலும் இவ் விடத்தில் நாராயணனே த்யேயன் என்றதாயிற்று

இன்னமும்
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –அதர்வ ஸிகா -என்கிற இடமும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -ஸ்வே -6-18-
ஸ ப்ரஜாபதிரேக புஷ்கர பர்ணே சம பவத் – ந்ருஸிம்ஹதாபபூ 1-1
யன் நாபி பத்மாத் பவன் மஹாத்மா ப்ரஜாபதி
தத்ர ப்ரஹ்மா சதுர் முகோ அஜாயதே -மஹா உப -1-2-
யதோ ஜஜ்ஞ உக்ரஸ் த்வேக்ஷ ந்ரும்ண
அதவா இதம் தர்ஹி ப்ரஜாபதவ் ஹர ஆஸீத்
த்ர்யக்ஷ ஸூல பாணி புருஷ ஜாயதே -மஹா உப -1-3-
விரூபாஷாய -ப்ரஹ்மண புத்ராய- ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
தத் விஸ்ருஷ்டஸ் -ஸ புருஷ லோகே ப்ரஹமேதி கீர்த்யதே –தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதாமஹ -மனு-1-11-9-
ருத்ர சர்க்கம் ப்ரவஹ்யாமி -ஸ்ரீ விஷ்ணு பு -1-8-2-
ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் ப்ரஸாத க்ரோதஜவ் ஹரே –ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்டி ஸம்ஹார காரகவ் -மோக்ஷ பர் -389-18
க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம் –ஆவான் தவாங்கே ஸம் பூதவ் தஸ்மாத் கேஸவ நாமவான் -ஹரி வம்சே –131-48
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத் அந்தர் வ்யவஸ்திதா -ப்ராணிந கர்ம ஜெனித ஸம்ஸார வச வர்த்தி ந -வி த 104-23-இத்யாதிகளாலே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு கர்ம நிமித்த ஸ்ருஜ்யத்வ லக்ஷணையான உத்பத்தி ப்ரஸித்தியாலும்

ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந -யஜுர் தாய் ப்ரா -3-6–1-3
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -முண்டக -3

இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-84
ஸம்பவாமி யுகே யுகே –ஜன்ம கர்ம ச மே திவ்யம் -ஏவம் யோ வேத்தி தத்வத -ஸ்ரீ கீதை -4-என்று
ஜகத் உபகார அர்த்தமாக பரம புருஷனுக்கு இச்சா ஜென்மம் உண்டாகையாலும்
(பல பிறப்பால் ஒளி வரும் ஜென்மம் இவனுக்கே)

ஸாஷான் நாராயணோ தேவ ஸர்வ பூதேஸ்வரேஸ்வர –ரஷார்த்தம் ஸர்வ லோகாநாம் விஷ்ணுத்வம் உப ஜிக்மிவான் -உத்தர ராமாயணே -என்கையாலும்
உபேந்திர ராம கிருஷ்ணாத் யவதாரங்கள் போலே ப்ரஹ்ம ருத்ர மத்ய வர்த்தியான விஷ்ணுத்வம் உண்டாகையாலும் யுக்தம் –

இவ் விடத்தில் த்யேயத்துக்கு விரோதமான வாக்யத்திலே இது சொன்னது -த்யேயத்வ உப யோகி ஸுலப்ய ப்ரதர்சந அர்த்தமாகையாலே

இன்னமும்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் -தைத்ரி -ஆ -1-1- என்கிற இடத்தில்
பரம வ்யோம ஸப்தம் பரம பதத்தைக் காட்டுகிறதன்று என்கிற இடம் அசாரம்
(பரமபதத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்ட நாதனை விட-தனது ஹிருதய வ்யோமம் -அடியார் உள்ளமே அவனுக்கு பரம வ்யோமம் –இங்கேயே இருந்து அனுபவித்து ஆனந்தம் -ஆனால் இது அசாரம் -1000 தூண்கள் உள்ள ஆயிரம் கால் மண்டபத்துக்குள் இத்யாதிகள்-)


ராஜாநாவநபி த்ருஹவ் த்ருவே ஸதஸ் யுத்தமே ஸஹஸ்ரஸ் தூணே ஆஸாதே -என்றும்
சாமான்ய பி யுக்தே தூரே -அந்தே த்ருவே பதே தஸ்தது ஜாக ரூகே -என்றும்
ததஷரே பரமே வ்யோமன் -தைத் -6-1-2-
யோ அஸ்யாத் யக்ஷ பரமே வ்யோமன் -யஜுர் அஷ் -2-8-2-
நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் தைத் -6-1-1-
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்ரஹ்ம நிஷ் கலம் – தச் சுக்லம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்ம வைத்தோ விது -முண்டக -32-9–என்றும்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந –ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை – பாரதம் அர -163-19-என்றும்
ஏகாந்தி நஸ் ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகி நோ ஹி யே -தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் -யத்வை பஸ்யந்தி ஸூரய –ஸ்ரீ விஷ்ணு பு -1-6-39-என்றும்
அண்ட கோஸாத் ஸாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்தி தோஹம் பரமே வ்யோம்நீ அப்ராக்ருத சரீரவான் -என்றும்
இப்படி பஹு ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண சத ப்ரமாணத்தாலே ஸித்த பர லோகத்தைச் சொல்லுகிறதாகையாலே-

இன்னமும் அதர்வ சிரஸ்ஸிலே பிரதம கண்டத்தில் ருத்ரன் தன்னுடைய ஸர்வ ஐஸ்வர்யத்தை கோஷித்ததும்
ஸோந்தரா தந்தரம் ப்ராவிஸத் –அதர்வ -1–என்கிற வாக்யத்தாலே
பரமாத்மா அநு ப்ரவேசத்தாலே என்றதாயிற்று -எங்கனே என்னில்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் ப்ரதர்தந வித்யையிலே –
ப்ரதர்த நோ ஹ வை தைவோதா ஸிரிந்த்ரஸ்ய ப்ரியம் தாமோபஜகாம -3-1- என்று கொண்டு
த்வமேவ மே வரம் வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மன்யஸே –3-1- என்று
மோக்ஷ உபாயத்தை ப்ரஸ்னம் பண்ணின ப்ரதர்சனனுக்கு
மாமேவ விஜாநீஹி –ப்ராணோஸ்மி- ப்ரஞ்ஞாத்மா- தம் மாம் ஆயுர் அம்ருதமித்
யுபாஸ்வ –3-1-2- என்று
இந்த்ரன் தன் அந்தராத்மாவினுடைய உபாஸநம் மோக்ஷ சாதனம் என்று உபதேஸித்தான்-

இன்னமும் -ஸ்ருத்யந்தரத்திலே
தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாம தேவ ப்ரதி பேதே –அஹம் மநு ரபவம் -ஸூர்யஸ் ச
-அஹம் கஷீவாந் ருஷி ரஸ்மி விப்ர -இத்யாதியாலே
ப்ரஹ்மத்துக்கு ஸர்வ அந்தராத்மத்தையையும்-ஸர்வ ஸப்தங்களுக்கும் தத் பர்யவஸாயி த்வத்தையும் சொல்லி
யஸ் யாத்மா ஸரீரம் –யஸ்ய ப்ருதிவீ சரீரம்–ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும்
ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –என்று தொடங்கி
அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூப வ்யாகரவாணி -என்றும்
ஸோகாமயத பஹுஸ்யாம் –என்று தொடங்கி தத் அநு ப்ரவஸ்ய ஸச் ச த்யச்சா பவத் –ப்ரும்ஹ உப -3-4-10- இத்யாதி
ஸ்ருதி ஸித்தமான ஸமாதியாலே ஸாஷாத் கரித்த வாம தேவன் -அஹம் -ஸப்தத்தாலே தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவைச் சொல்லி
தத் ஸாமா நாதி கரண்யத்தாலே மனுஷ்யாதிகளையும் வ்யபதேஸித்தான் இறே
(ஐக்யம் -அனைவருக்குள்ளும் ப்ரஹ்மமே சொல்வதில் அல் வழக்கு ஒன்றும் இல்லை -ஏக -நாராயணன் -ஒருவன்
அங்கு சென்று அவனுடன் ஒன்றும் என்று சொல்லும் அல்லலை ஒழித்தான் ராமானுஜன்)


ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானும்
ஸர்வ கத்வாத் -அநந்தஸ்ய ஸ ஏவாஹ மவஸ்தி த –மத்தஸ் ஸர்வம் அஹம் சர்வம் மயி ஸர்வம் ஸநாதநே –ஸ்ரீ விஷ்ணு பு -1-19–85-என்றான் இறே

இது எல்லாம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யா து உபதேஸோ வாம தேவ வத் -ப்ரஹ்ம ஸூ -1-1-30- என்று ஸூத்ர காரராலே நிர்ணயிக்கப் பட்டது இறே

(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்)

ஸ்ரீ மஹா பாரதத்திலும்
விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவ்ஸ்ய மி தேஜஸ –தஸ்மாத் தநுர் ஜ்யா ஸம் ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர -என்றும்
பின்னும் அந்த மஹா பாரதத்திலே ப்ரஹ்ம ருத்ர ஸம்வாதத்திலே
த்வாந்தராத்மா -மம ச யே ச ந்யே தேஹி ஸம்ஜ்ஞக –ஸர்வேஷாம் ஸாஷி பூதோசவ் ந க்ராஹ்ய கேநசித் க்வசித் – மோக்ஷ -352-4 என்றும் சொல்லுகிற ப்ரமாணங்களாலே விஷ்ணுவுக்கு ருத்ராந்தராத்மத்வம் ஸூ ப்ரஸித்தம்

இனி த்விதீய கண்டத்தில்
யோவை ருத்ரஸ் ஸ பகவான் -இத்யாதி வசனமும் ருத்ர வாக்ய அநு வாதமாகையாலும்
தத்ர பூஜ்ய பதார்த்த உக்தி பரிபாஷா ஸமன்வித –சப்தோயம் நோபசாரேண ஹ்யன்யத்ர ஹ்யுப சாரத –ஸ்ரீ விஷ்ணு பு -6-5-77 -என்று
பரம புருஷ அசாதாரணமான பகவச் ஸப்தத்தாலும் ருத்ர ஐஸ்வர்ய பரம் அன்று என்று ஸித்தம்-

மூன்று நாலாம் கண்டங்களிலும்
ஸ ஓங்காராய ஓங்காரஸ் ஸ ப்ரணவோ யஸ் ப்ரணவ -என்று
ஓங்காராதி மஹா தேவ அந்தமான் ப்ரணவ நாம நிர்தேச தந் நிர்வசன பரதையாலும்
இவ் வாக்கியத்திலும் பகவத் ஸப்த ஸாமாநாதி கரண்யத்தாலும்
பகவத் பரத்வமே யுக்தம்
(பிரகர்ஷமாக இத்தால் ஸ்துதிக்கப்படுகிறவன் அகார வாஸ்யனான -ஸ்த்வயம் ஸ்துதி இரண்டுமே பிரணவம்)

பஞ்சம கண்டத்தில் ருத்ர உபாஸநம் மோக்ஷ சாதந தயா ஸித்தம் என்றது யுக்த ரீதியாலே
மோக்ஷம் இச்சேத் ஜநார்த்தநாத் – மாத்ஸ்யபு -67-41 என்ற பகவத் உபா ஸநம் என்று அவஸேயம்
(நிச்சயிக்கப் பட வேண்டும் -மார்கண்டேனயனும் கரியே
ஆரோக்யம் பாஸ்கரன் ஞானம் ருத்ரன் –இங்கு ருத்ரன் -நாராயண உபாசனமே)


சாந்தோக்ய மது வித்யையிலே
அசவ் வா ஆதிதியோ தேவ மது –3-1-1- இத்யாதியாலே
வஸ்வாதி தேவதைகளுக்கு போக்யனான ஆதித்யனுடைய உபாஸநம் மோக்ஷ சாதநம் என்று விதித்தது -அந்த ஆதித்யனுக்கு அந்தர் யாமியான பரமாத்ம உபாஸந பரம் என்று
மத்வாதிஷ்வ ஸம்பவாத் –ப்ரஹ்ம ஸூத் -1-3-31 என்கிற அதிகரணத்திலே யாதொருபடி நிர்ணீதம் ஆயிற்று -இங்கும் அப்படியேயாகக் குறையில்லை
(வஸூ ருத்ர ஆதித்யர்களைக் குறித்து உபாஸனம் -அவர்களுக்கும் மது உபாஸனம் விதிக்கிறதே-அந்தராத்மா உபாசனமே)

இன்னமும் இவ் விடத்திலே உபாஸந அங்கமாகச் சொன்ன பஸ்ம ஸ்பர்ச விதியும் ஸர்வ உபாஸந விஷயமன்று –பாஸூபத விரத அங்கம் என்று சொன்னபடி
சவ்த்ராமணீ சேஷமான ஸூ ராக்ரஹத்துக்கு ஸர்வ க்ரது விஷயத்வம் இல்லாதப் போலே-
(ஸூத்ராமா -இந்திரனுக்கு இந்தப்பெயர் -மூன்று கும்ப கள்ளும் மூன்று கும்ப பாலும் -கண்டு வருவது அங்கு அங்கம்)

அணோர் அணீயான் -தைத்து -6- என்கிற அநு வாகத்தில்
யோ வை தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷி -ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத ஜாயாமாநம் ஸ நோ தேவ ஸூபயா ஸ்ம்ருத்யோ ஸம்யு நக்து -என்றது
ஈஸ்வராத் ஞானம் இச்சேத் -என்கையாலே
பகவத் உபாஸந உப யோகியான உபகாரகத்வம் சொல்லிற்று

மஹா பாரதத்தில் உமா மஹேஸ்வர ஸம்வாதத்திலே
உபாஸ்யோயம் ஸதா விப்ரா உபாயோஸ்மின் ஹரேஸ் ஸ்ம்ருதவ் -ஹரி வம்ச -133-18- என்கையாலே
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாயமாநம் -தைத் -6-என்றதுவும்
ருஷி யாகையாலே யோக ப்ரபாவத்தாலே ஹிரண்ய கர்ப்பனுடைய ஜந்ம -தர்சித்வம் – ஞாந கோசரம் அல்லது -சஷுர் கோசரம் அன்று -ஹிரண்ய கர்ப்பாத் ப்ராகவ ஸ்திதி இவனுக்கு இல்லை இறே-

(தந்தை பிறப்பைப் பார்த்தவன் –மோக்ஷ பிரதன் நல்ல எண்ணம் -ஞானம் வளர்ப்பவன் -ருத்ரன் -பஸ்யதே-மனக்கண்ணால் தியானத்தால் பார்த்தவன்

ஸ்ரீ ருத்ராதிகளும் ருத்ர ஐஸ்வர்ய பரமன்று – ஜகத் காரணத்வ -மோக்ஷ ப்ரதத்வாதிகளான ஸர்வேஸ்வரனுடைய அசாதாரண தர்மத்தாலும் -அக்னி சயனத்திலே அர்த்தாந்தர பரமாக விநியோகிக்கையாலும் -பூர்வ யுக்தமான அநந்ய பரங்களான அநேக ஸ்ருதி விரோதம் வருகையாலும்
இத்தால் பஞ்ச ப்ரஹ்மாதி மந்த்ரங்களுக்கும் ருத்ர வைபவ பரத்வம் இல்லை

(தண்டிலம் ஹோம குண்டம் -வேறே வேறே வடிவில் வைப்பார்கள்
செங்கற்களைக் கொண்டு கட்டும் பொழுது ருத்ரம் வாசிக்கச் சொல்லி
யாகம் சபலமாக வேறே வித அர்த்தங்கள் சொல்லுவார்கள்)

(பஞ்ச ப்ரஹ்மாக்ய மந்த்ரமாவது
சத்யோ ஜாதம் -இத்யாரப்ய-ஸதா ஸிவோம் -இத்யந்தமான ஸ்ருதிகள்
நாராயண அநுவாக ஸமாக்ய அந்தர் கதத்வத்தாலே நாராயண பரத்வம் இதுக்கு ஸித்தம் என்று விஸ்தரேண தத்வ சேகர அடிப்பணியில் -குறிப்பில்
சொல்லப்பட்டது
ஸ்காந்த புராணத்தில் நிர்வாண கண்டத்தில் ராம கீதையில் இந்த ஸ்ருதியை பரமாத்ம விஷய மாகவும் உப ப்ரும்ஹித் தார்கள்
ப்ரவ்ருத்திஸ் ச ப்ரதிஷ்டா ச வித்யா சாந்திஸ் ததோத்தமா சாந்த்யதீதா பரா ஸூஷ்மா ஸமாநா சோந்மநா ததா –ஸீதா விலஸிதம் ஸர்வம் நாநாகாரேண த்ருஸ்யதே -ததாநுக்ர ஹர சக்த்யாவ- த்வதை க்ய லப்யதே –ஸத்யோஜாத ப்ரவ்ருத்தேஸ் த்வம் ஈஷ்டே நக்ஷத்ர ரஷக (சந்திரன்
)வாமதேவ ப்ரதிஷ்டாய வாஸநாதருமாஸ்ரித -வித்யாநா மப்ய கோராஸ் த்வம் தேஜஸாம் நிதிரக்ஷய –ப்ரணாந்தத் புருஷஸ் சாந்தைஸ் தத் ராஸாம் யாத்ர வாஹக ஈசாநஸ் சாந்த்ய தீதாயா வ்யாபகோ வ்யோம விக்ரஹ -விஷ்ணுஸ் ச ஸமநா யாந்த்வம் உந்மநாயாம் நிரஞ்ஜந )
ஸர்வோவை ருத்ர -தைத் -நா -6-என்றதும்
ப்ராஹ்மணோ வை ஸர்வா தேவதா என்றும்
ஆபோ வா இதம் சர்வம் என்றும்
இத்யாதி போலே ஆகக் கடவது-

ஏக ஏவ ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -ஸ்வே -3-2- என்றும்
யஜ்ஞ அம்சமான பாக்த்வ -பரத்வ -பரம் -பரத்வ பரமன்று
ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் ஸ இந்த்ரஸ் ஸ அக்ஷர பரமஸ்வராட் -என்கிறவிடம்
யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய ய பத்ம பூ –(புநஸ் த்ரை லோக்யதாத் ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூஸ்ரும -இதிஹாஸ சமுச்சயே -114-8-என்றும்
மஹா தேவஸ் ஸர்வ மேதே மஹாத்மா ஹுத்வ த்மாநம் தேவ தேவோ பபூவ –ராஜதர்ம -20-12-
இத்யாதிகளாலே ஸ்ருஜ்யத்வ -ஸ்ரஷ்ட் ருத்வ -அர்ச்ச கத்வ -அர்ச் யத்வாதி பேதம் தத் அந்தர் வர்த்தித்வ நிபந்தனம் என்றதாயிற்று
ஏவம் விதங்களான ஸ்ருத் யந்தரங்களும் யுக்த ரீதியாலே நிர்வாஹ்யங்கள்
ஆகையாலே ஸகல வேதாந்தங்களும் நாராயணனையே ஸர்வ ஸ்மாத் பரனாக ப்ரதிபாதிக்கிறான் -ப்ரஹ்ம ருத்ரர்களை அன்று என்று ஸித்தம்

ஆகையால் இப்படி ப்ரத்யக்ஷ ஸ்ருதி சதங்களினாலே நாராயணனுக்கே பரத்வம் தோற்றுகையாலே -பவ்ரு ஷேயங்களான புராண இதிஹாஸாதி களுக்கும் தத் அநுரோதேந ப்ராமாண்யம் உண்டாகையாலே -தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ரீ விஷ்ணு புராணாதிகளும் உபாதேயங்கள் -ததிதரங்கள் அநு பாதேயங்கள் இறே
கிஞ்ச
நாராயண பரங்களான புராண இதிஹாஸாதிகளுக்கு ஸத்வ மூலத்வாத் ப்ராமாண்யம் உண்டு
தத் அந்யங்களான புராண விசேஷ வசனங்களுக்கு ரஜஸ் தமஸ் ஸங்கீர்ண தயா அப்ராமாண்யம் ஸித்தம் இறே
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டம் ச யாஸ்ச அன்யா தேவதாஸ் ஸ்ம்ருதா -ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –(தஸ்மாத் இதி ச பாடோ த்ருஸ்யதே –மோக்ஷ தர்மம் -350-36 என்று இத்யாதி பிரமாண சதங்கள் எல்லாம் (ராமானுஜர் சாதித்து அருளிய
)வேதார்த்த ஸங்க்ரஹ -(ஆளவந்தார் சாதித்து அருளிய மஹா)புருஷ நிர்ண யாதி ப்ரபந்தங்களிலே ஸூ வ்யக்த மாகக் கண்டு கொள்வது

ஆகையாலே ஸ்ரீ மன் நாராயணனே
ஜகத் காரண பூதன்
ஸர்வ ஸ்மாத் பரண்
முமுஷு உபாஸ்யன்
மோக்ஷ ப்ரதன்
முக்த ப்ராப்யன் -என்று ஸித்தமாய் நின்றது

இதி தத்வ நிரூபணே பரதத்வ நிர்ணயோ நாம சப்தம அதிகாரம் ஸம் பூர்ணம்

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த் ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தேவம் கேஸவாத் பரம்

ஸ்ரீ தத்வ நிரூபண பிரபந்தம் ஸமாப்தம்

—————————————————————-

27 தத்துவங்களின் வ்யஷ்டி ஸ்ருஷ்டி
மூலப்ரக்ருதி -அவ்யக்தம் -ப்ரதாநம் -முக்குணங்கள் வெளிப்படாத நிலை –
மஹான் -முக்குணங்கள் வெளிப்படும் நிலை
அஹங்காரம்-வெளிப்பட்ட முக்குணங்கள் பயன்படும் நிலை
ஸாத்விக அஹங்காரம் -வைகாரிகம்
ராஜஸ அஹங்காரம் -தைஜஸம்
தாமஸ அஹங்காரம் -பூதாதி
ஸாத்விக அஹங்காரத்தில் இருந்து வாக் பாணி பாதம் பாயு உபஸ்தம் ஆகிற கர்ம -ப்ரவ்ருத்தி -இந்தியர்களும்
செவி தோல் கண் நாவு நாசி மனம் ஆகிற ஞான இந்திரியங்களும் உண்டாகின்றன
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தம் ஆகிற பஞ்ச தன்மாத்திரங்களும்–அவை மூலமாக ஆகாஸம் வாயு தேயு அப்பு ப்ருத்வீ -அதாவது விண் கால் தீ நீர் நிலம் ஆகிற பஞ்ச பூதங்களும் உண்டாகின்றன
ராஜஸ அஹங்காரம் இவை இரண்டுக்கும் உதவி செய்கிறது

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ:  “சாரீரக பரிபாஷா” என்னும் ஸ்ரீ: யதீந்த்ர மத தீபிகை–

February 6, 2024

ஸ்ரீ:யதீந்த்ரமத தீபிகை என்னும் இந்த க்ரந்தமானது ஸ்ரீ:சோளஸிம்ஹபுரம் மஹாசார்யர் என்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யரால் அருளப்பட்டது. இதில் விசாரிக்கப்பட்டுள்ள விஷயங்களே பகவத் ஸ்ரீ:இராமானுச ஸித்தாந்தம் என்று சொல்லப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் முக்கிய விஷயங்கள் ஆகும்.

இந்நூலில் மொத்தம் 10 அவதாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அபிநவ தசாவதாரமோ என்று வியக்கும்படி இக் க்ரந்தம் 10 அவதாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அவதாரத்தில், பதார்த்தங்களின் பிரிவைக் காட்டி விட்டு பின் ப்ரத்யக்ஷப் ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. இரண்டாவது அவதாரத்தில் அனுமானம் விசாரிக்கப்படுகிறது. மூன்றாவது அவதாரத்தில் சப்தம் விசாரிக்கப்படுகிறது. இப்படி ப்ரமாணங்கள் விளக்கப்பட்ட பின், ப்ரமேயங்கள் விளக்கப்படுகின்றன. நான்காவது அவதாரத்தில் ப்ரக்ருதியும், ஐந்தாவது அவதாரத்தில் காலமும் விளக்கப்படுகின்றன. ஆறாவது, ஏழாவது அவதாரங்களில் முறையே நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் விளக்கப்படுகின்றன. எட்டாவது அவதாரத்தில் ஆத்மாவாகிற ஜீவன் விசாரிக்கப்படுகிறது. ஒன்பதாவது அவதாரத்தில் ஈச்வர தத்வம் விளக்கப்பட்டுள்ளது. 10வது அவதாரம் அத்ரவ்ய தத்வத்தினை விளக்குகிறது.

இந்நூலினை இவ்வாசிரியர் தாமே “சாரீரக பரிபாஷா” என்று அருளியுள்ளார். 

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் -1-
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்
–2-

ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸ்ரீநிவாஸாசார்யர் தாம் தொடங்கிய க்ரந்தம் நிர்விக்னமாக நிறைவு பெறுவதற்கும், பின்புள்ளார் அனுஸந்திப்பதற்கும் முதலில் இஷ்ட தேவதா நமஸ்காரமாக ச்லோகம் அருளிச்செய்கிறார்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பனான ஸ்ரீநிவாஸனையும், ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் கச்சி தேவப்பெருமாளையும், கடிகாத்ரி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநரஸிம்ஹனான அக்காரக்கனியையும், கீதாசாரியனான கண்ணன் எம்பெருமானையும், ஸித்தாந்த ஸ்தாபகரான எம்பெருமானாரையும், ஸ்வப்னத்தில் ஸேவை ஸாதித்தருளிய மஹாசார்யரையும் அடியேன் வணங்குகிறேன்.

  • இந்த ஸ்வாமிக்கு அவர்தம் ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி ஸ்வப்னத்தில் ஸேவை ஸாத்திதருளி இக்க்ரந்தம் அருள நியமித்தார் என்பது ப்ரஸித்தம்.
  • ஸ்வாமி திருமலையில் நெடுநாட்கள் கைங்கர்யம் செய்ததால் முதலில் ஸ்ரீவேங்கடாசல நாயகனான ஸ்ரீநிவாஸன் என்று தொடங்கினார் என்னவுமாம்
  • ஸ்ரீநிவாஸன் எனத்தொடங்கி எம்பெருமானார் நடுவாக தமது ஆசார்யரான மஹாசர்யர் பர்யந்தமாக அருளியதால் இந்த ச்லோகம் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்…. அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் என்று குருபரம்பராநுஸந்தானமும் அருளிச் செய்தாராயிற்று.
    • தண்ணார் வேங்கடம் – குளிர்மிக்கு இருந்துள்ள திருமலை. ரக்ஷகனுக்கு ரக்ஷ்ய வர்க்கம் பெறாமையால் வரும் தாபத்தையும், இங்குள்ளார்க்கு ரக்ஷகனைப் பெறாமையால் வரும் தாபத்தையும் தீர்க்கவற்றாய் இருக்கை. (தி. வா. மொழி 1-8-3)
    • வட வேங்கடம் – உபயவிபூதிக்கும் நடுவான (திரு. நெடு – 16)
    • சீரார் திருவேங்கடமே – நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்கும் ஒக்கமுகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையாய் ஏற்றம் உண்டிறே திருமலைக்கு – (சி. திருமடல்)
    • வேங்கடவன் – அர்ச்சாவதாரத்துக்குப் பொற்கால் பொலிய விட்ட இடம். (அமலனாதிபிரான் – 1 நாயனார் வ்யா) – இத்யாதி ஏற்றம் பெற்றதிறே திருமல(க்ருஷ்ணேந ஸஹ யதி ராஜம்) என்பது இன்சுவை மிக்கது.
    • க்ருஷ்ணன் கீதாசாரியன், கீதை அருளியவன். ஸ்வாமி அதற்கு செம்மைப் பொருள் பாரினில் தெரிய வ்யாக்யானம் அருளியவர்.
    • அவன் பலராமானுஜன். இவர் இராமானுசர்.
    • அவன் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான். இவர் மேதினி (பூமி) நம் சுமை ஆறும் எனத் துயர்விட்டு விளங்க (பூமாதேவி நல்லவர்களைத் தாங்குவது எளிது. தீயவர்களை சுமப்பது மிகவும் சுமையாகக் கருதுபவள். எம்பெருமானார் திருவவதரித்ததால் அனைவரும் திருந்தி விட்டதால் தம் சுமை நீங்கியது என ஆறி இருந்தாள். அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே – நாரணற்காயினரே) திருவவதரித்தார்.
    • க்ருஷ்ணனின் மாமாவான கம்ஸன் ஸாரதியாய் தேரோட்டினான்; க்ருஷ்ணனும் பார்த்தஸாரதியாய் தேரோட்டினான் – ஸ்வாமியின் மாதுலரான பெரிய திருமலை நம்பி திருவேங்கடமுடையானுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்தார் – ஸ்வாமியும் சாலைக்கிணற்றிலிருந்து தீர்த்த கைங்கர்யம் செய்தார்.
    • அவன் – கருந்தெய்வம், இருளன்ன மாமேனி கொண்டவன்; ஸ்வாமி – [உத்யத்திநேசநிபமுல்லஸதூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே] (உதிக்கும் ஸூரியனை ஒத்ததும் திருமண்காப்பு துலங்குவதுமான தேவரீர் திருமேனி) என்றபடி உதிக்கும் ஸூரியனை ஒத்த திருமேனியை உடையவர்
    • யதீச்வரம் ப்ரண்ம்யாஹம் வேதாந்தார்யம் மஹாகுரும் |
      கரோமி பாலபோதார்த்தம் யதீந்த்ரமத தீபிகாம் || 2
    • யதிகளுக்கெல்லாம் தலைவரான எம்பெருமானாரையும், வேதாந்தாசாரியரையும், தமது ஆசாரியரான மஹாசாரியரையும் வணங்கி, பாலர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு  யதீந்த்ர மத தீபிகை என்னும் இந்த க்ரந்தத்தை இயற்றுகிறேன்.
    • இதனால் இந்த க்ரந்தத்தில் அருளும் அர்த்தம் குரு பரம்பராப்ராப்தமானது என்பதைக் காட்டியருளினாராயிற்று.
    • யதீந்த்ரர் என்றால் யதிகளுக்கு அரசர் என்றர்த்தம். இத் திருநாமம் கச்சி தேவப்பெருமாளால் ஸ்வாமிக்கு ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரிக்கும் பொழுது அனுக்ரஹிக்கப்பட்டது. பெரிய திருமொழித் தனியனிலும் எம்பெருமானாரை “தவராசா” என்றது காண்க.
    • பாலர்கள் என்றால் தத்வத்தை அறிந்து கொள்வதில் ஆசையுள்ளவர்கள் என்றபடி. மீமாம்ஸா பரிபாஷா முதலான க்ரந்தங்களிலும் பாலர்கள் என்பது இவ்வர்த்ததில் ப்ரயோகப்படுத்தியிருப்பது காண்க
    • ஸ்ரீமந் நாராயண ஏவ சிதசித் விசிஷ்டாத்வைதம் தத்வம், பக்தி ப்ரபத்திப்யாம் ப்ரஸன்ன ஸ ஏவ உபாய: இதி வேதாந்த வாக்யை: ப்ரதிபாதயதாம் வ்யாஸ போதாயன குஹதேவ பாருசி ப்ரஹ்மநந்தி ட்ரமிடாசார்ய ஸ்ரீபராங்குச நாத யாமுன முனி யதீச்வர ப்ரப்ருதீநாம் மதாநுஸாரேண பால போதனார்த்தம் வேதாந்த அநுஸாரிணி யதீந்த்ர மத தீபிகாக்யா சாரீரக பரிபாஷா மஹாசார்ய க்ருபாவலம்பினா மயா யதா மதி ஸங்க்ரஹேண ப்ரகாச்யதே || 3 ||
    • க்ரந்தத்தின் ஆதியில், மங்களாசாஸனம், நமஸ்காரக்ரியா ஆகியவை தவிர அக்க்ரந்தத்தில் தெரிவிக்கப்படும் விஷயத்தையும் அறிவிப்பது சாஸ்த்ரக்ரமம். ஆகையாலே முதலில் ஸித்தாந்தத்தை ஸங்க்ரஹிக்கிறார் –
    • அறிவுள்ள சேதனர் எனப்படும் சித், அறிவற்றவையான அசித் இவையிரண்டையும் தனக்கு, பிரிக்க முடியாத விசேஷணங்களாக, ப்ரகாரமாக உடையவனான பெரிய பிராட்டியாருடன் கூடியவனான நாராயணன் ஒருவனே தத்வம். இதனையே பரமாசாரியாரன ஸ்வாமி நம்பிள்ளை ஈட்டில் “நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று. அவையாவன – சித்தும், அசித்தும், ஈச்வரனும். ப்ரகார ப்ரகாரிகள் ஐக்யத்தாலே ஒன்றென்னலாய், ஸ்வரூப பேதத்தாலே பலவென்னலாயிருக்கும்.” என்றருளினார். ப்ரகாரம் என்றால் பிரிக்க முடியாத விசேஷணம் என்றபடி.  “குண்டலங்களை அணிந்த புருஷர் வருகிறார்” – என்ற வாக்கியத்தில் குண்டலங்கள் விசேஷணமாக இருந்தாலும் அதனை விசேஷ்யமான புருஷனிடமிருந்து பிரித்துவிடலாம். ஆனால் *அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்தித:* என்று உள்ளும் புறமும் ஒக்க வ்யாபித்திருக்கும் நாராயணனுக்கு, சித் அசித் ஆகிய இரண்டும் பிரிக்க முடியாத விசேஷணங்களாகின்றன. எனவே அவை ப்ரகாரங்கள் ஆகின்றன. இதையே அப்ருதக்ஸித்த விசேஷணம் என்று அழைப்பர்.
    • இதனையே திருமழிசைப் பிரான் * உலகு நின்னொடொன்றி நிற்க * என்றார். இங்கு ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையினுடைய வ்யாக்யானம்.” ஜகத்து உனக்கு சரீரமாகையாலே உன்னைப் பிரியாதே நிற்க ” அதாவது ப்ரபஞ்சம் முழுவதும் சரீரியான உன்னோடு சரீரமாய் அணைந்து நிற்க என்றபடி.
    • தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்திருசுடருமாய இறை (சுடர் விடும் அக்னியும் பெரிய குலபர்வதங்களும் எட்டுத் திக்குக்களும் அண்டத்தினுள்ள சந்த்ர சூர்யர்களும் தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்) என்றார் மஹதாஹ்வயரான பேயாழ்வார். தானே என்ற ஏகாரத்தினால் இப்படி இருப்பவன் ஒருவனே – வேறுயவனுமில்லை என்றருளினாராயிற்று
    • ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:
    • வநாநி விஷ்ணுர் கிரயோ திசச்ச |
    • நத்ய: ஸமுத்ராச்ச ஸ ஏவ ஸர்வம்
    • யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய || (ஸ்ரீ வி.பு – 12-12-38)
    • ஸ்ரீ பராசர பகவானும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே “அந்தணர் தலைவரே! (மைத்ரேயரே!) சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷ்ணுவே; வானங்களும் விஷ்ணுவே; வனங்களும், மலைகளும், திசைகளும் , நதிகளும், ஸமுத்ரங்களும் விஷ்ணுவே; நிலையானதாகையால் உள்ளதெனப்படும் சேதனமும், நிலையற்றதாகையாலே இல்லதெனப்படும் அசேதனமும் ஆகிய எல்லாம் அவனே” என்று ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாய், தான் ப்ரகாரியாய், தன்க்கு ஒரு ப்ரகார்யந்தரமன்றிக்கே இருக்கக்கடவன் ஸர்வேஸ்வரன் என்பதனை அருளினார்.
    • (த்வயோர்பாவத் த்விதா – த்விதம்; த்விதைவ த்வைதம்; நாஸ்தி த்வைத யஸ்மின், ததத்வைதம்; சிதசிதோர்ப்ருதக்ஸித்தவிசேஷணத்வேந ப்ரஹ்மண்யண்தர்பூதத்வாத் விசிஷ்டம் ஏகமேவ தத்த்வம் இத்யர்த்த🙂 இரண்டாகப் பாவிப்பது த்விதம் – இரண்டு என்பது த்வைதம் – இரண்டாவது இல்லை என்பது அத்வைதம் – சித் அசித் ஆகியவற்றைத் தனக்கு சரீரமாகக் கொண்ட வஸ்துவான ப்ரஹ்மத்தைப் போன்று இரண்டாவது வஸ்து இல்லை என்பது விசிஷ்டாத்வைதம்.
    • இப்படி இருக்கும் பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனே பக்தி, ப்ரபத்தி எனும் இரண்டில் ஒன்றினால் அகமகிழ்ந்து, தானே உபாயமாகிறான். உபாயமாகிறான் என்றது மோக்ஷம் அளிக்கிறான் என்றபடி. இப்படி மோக்ஷம் அளிக்கும் வல்லமை ஸ்ரீமந்நாராயணனுக்கே உண்டு. ஆழ்வார் தாமும் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிவிக்க நாலு திருவாய்மொழிகளை அருளிச் செய்தார் (உயர், திண், அணை, ஒன்று என்று ஆசார்ய ஹ்ருதயத்தில் அவை காட்டப்பட்டுள்ளது காண்க). அவற்றுள் அணைவது அரவணை மேல் என்னும் திருவாய்மொழியில் மோக்ஷப்ரதத்வம் என்னும் குணத்தையே ஆழ்வார் காட்டியருளினார். ஸ்ரீமத் வரவரமுனிகளும் இத்திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி அருளிச்செய்யுமிடத்து, இது தன்னையே குணந்தனையே என்றருளினார்.
    • ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதான தேசவிஷேஷமான பரமபதத்தில் இருக்கும் அவ்வெம்பெருமானே மோக்ஷத்தில் அடையப் பெரும் பொருளாகிறான். இது அப்ராக்ருதம் என்றதினால், இந்த தேசம், அங்கு கிடைக்கும் பலன் ஆகியவை அழியாதது என்ற அர்த்தம் கிடைத்தாயிற்று. ப்ராக்ருதம் – ப்ரக்ருதி ஸம்பந்தமுடையது; அப்ராக்ருதம் – அது இல்லாதது. இத்தால் ப்ரக்ருதி மண்டலம் போல ஸத்த்வ, ரஜஸ், தமோ குணங்கள் சேர்ந்தது இல்லாமல் சுத்த ஸத்வமாய் உள்ளது என்றதாயிற்று. * சோதி விண் * என்றபடி. ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யானம் – ஸூ 79 இது விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • ஆக இவ்வளவினால் தத்வ, ஹித, புருஷார்த்தங்களை அருளினாராயிற்று. தத்வம் -> சிதசித் விசிஷ்ட ப்ரஹ்மம்; ஹிதம் -> எம்பெருமானின் அருள்; புருஷார்த்தம் -> ஸ்ரீவைகுண்டத்தில் அவனைக் கிட்டி அங்கு பெறும் வாழ்வு.
    • இதனால் எம்பெருமானே உபாயம்; அவனே உபேயம் என்பதனை தெரிவித்தருளினாராயிற்று. புல்லைக் காட்டி அழைத்து புல்லை இடுவாரைப் போலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை என்கிற ஸ்ரீவசன பூஷண ஸ்ரீஸுக்தி இங்கு நினைக்கத் தக்கது.
    • இது தன்னையே வேதாந்த வாக்யங்கள் ப்ரதிபாதிக்கின்றன. மேலும் ஆசாரியர்களும் இது தன்னையே கைக் கொண்டார்கள். அவ்வாசார்ய பரம்பரையை அனுஸந்திக்கிறார்.
    • இவர்கள் அனைவருமே மேலே கூறிய மதத்தையே ஆசரித்திருக்கிறார்கள். அவர்களுடைய மதத்தை அனுஸரித்து “யதீந்த்ர மத தீபிகை” என்னும் சாரீரக பரிபாஷையானது என் ஆசாரியரான ஸ்வாமியின் க்ருபையால் சிறுவர்களுக்கு ஞானம் உண்டாவதற்காக செய்யப்படுகிறது. ஸ்ரீ பாஷ்யத்திற்கு சாரீரக மீமாம்ஸா பாஷ்யம் என்றே பெயர். ஸமஸ்த சேதனாசேதனங்களும் எம்பெருமானுக்கு சரீரம்; எம்பெருமான் சரீரி – சாரீரனைப் பற்றிக் கூறும் சாஸ்த்ரம் ஆகையாலே இது சாரீரகம். (யஸ்ய ப்ருதிவீ சரீரம்) என்றாம்பித்து (யஸ்யாத்மா சரீரம்) என அனைத்தையும் ப்ரஹ்மத்திற்கு சரீரமாக ஸ்ருதி சொன்னது.
    • நம்மாழ்வாரைக் குறிப்பிடும் பொழுது மட்டும் “ஸ்ரீ” சேர்க்கப்பட்டது காண்க. ருஷிகளில் காட்டிலும் இவருக்கு உண்டான ஏற்றம் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டப்பட்டுள்ளது இங்கு ஸ்மரிக்கத் தக்கது.
    • (வேதாந்த வாக்யை:) என்ற பஹுவசனத்தினால் (பன்மையினால்), சிலரைப் போன்று, ஒன்று இரண்டு வாக்யங்களை முக்யமாகக் கொண்டு ஸித்தாந்தம் செய்வதில்லை. வேதத்தில் உள்ள வாக்யங்கள் அனைத்தையும் கொண்டு தான் ஸித்தாந்தம்  செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டியருளினார் ஆயிற்று. ஸ்வாமி எம்பெருமானாரும் தம்முடைய வேதார்த்த ஸங்க்ரஹத்தில், இதே ரீதியில் வேதாந்த வாக்ய ஜாதம் (வேதாந்த வாக்யங்களின் கூட்டங்கள்) என்றார்.
    • வ்யாஸரை இவரது ஆசார்யரான ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமியும் தமது பாராசர்ய விஜயத்தில்
    • வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||
    • என்னும் ஶ்லோகத்தினால் கொண்டாடியிருப்பது குறிக்கத்தக்கது. அதாவது “வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான்.” என்றபடி.
    • ———————
    • ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ராமாண ப்ரமேய பேதேன த்விதா பிந்நம் ॥ 4
    • இனி க்ரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் வஸ்துக்களின் பிரிவினைக் காட்டி விட்டு பின் ஒவ்வொன்றாக எடுத்து விளக்க உள்ளார். அனைத்து வஸ்துக்களயும் ப்ரமாணம், ப்ரமேயம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
    • ப்ரமாணாணி த்ரீண்யேவ | ப்ரமேயம் த்விவிதம், த்ரவ்யத்ரவ்யபேதாத் ॥ 5
    • ப்ரமாணம் – உள்ளதை உள்ளபடி அறிய உதவுவது; ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது. ப்ரமாணங்கள் மொத்தம் மூன்று – 1) ப்ரத்யக்ஷம், 2) அனுமானம், 3) ஶப்தம். ப்ரமேயத்தை மொத்தம் இரண்டாகப் பிரிக்கலாம். 1) த்ரவ்யம் – மாறும் நிலைகளையுடைய பொருள்; 2) அத்ரவ்யம் – த்ரவ்யங்களின் நிறம், சுவை முதலிய தன்மைகள்.
    • அழகிய மணவாளச் சீயரும் தம்முடைய தத்வ நிரூபணத்தில் “இவற்றில் ப்ரத்யக்ஷத்தையும், அநுமாநத்தையும், ஆகமத்தையும் இம்மூன்றையும் வைதிகர் ப்ரமாணமாக பர்க்ரஹிக்கிறவளவிலே…” என்றருளிச் செய்தது இங்கு குறிக்கொள்ளத்தக்கது..
    • ப்ரமேயம் – ப்ரமாணத்தால் அறியப்படுவது என்று ஸாதாரணமாகச் சொன்னாலும், முமுக்ஷுக்களுக்கு சிதசித் விலக்ஷணான பரமாத்மாவே ப்ரமேயம் என்பது அறியத் தக்கது.
      • கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ – ஈடு ஸ்ரீ ஸூக்தி – இவ்விஷயத்தையொழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடலல்ல என்றிருக்கிறார். தத்ஜ்ஞாநமதோந்யதுக்தம் என்றானிறே. பகவல்லாபத்துக்குஉடலான ஜ்ஞாநம் ஜ்ஞாநமாகிறது; அல்லாதது அஜ்ஞாநமென்னக்கடவதிறே
      • ஸர்வம் -வஸ்து –பிரமாணம் ப்ரமேயம் -என்ற இரண்டு
      • பிரமாணம் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -சப்தம் -என்ற மூன்றும்
      • ப்ரமேயம்-த்ரவ்யம் அத்ரவ்யம் என்ற இரண்டும்
      • த்ரவ்யம் த்விவிதம் ஜடமஜடம் சேதி ॥ 6
      • த்ரவ்யத்தை ஜடம், அஜடம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஜடமாவது – வேறொரு ஜ்ஞானத்தால் மட்டுமே தோன்றக்கூடியது; அஜடமாவது – தானாகவே ப்ரகாஶிப்பது.
      • ஜடம் ச த்விவிதம், ப்ரக்ருதி காலச்சேதி । ப்ரக்ருதிச் சதுர்விம்ஶதி தத்வாத்மிகா । காலஸ்து உபாதி பேதேந த்ரிவித: ॥7
      • ஜடத்தின் பிரிவுகள் இரண்டு – ப்ரக்ருதி மற்றும் காலம். ப்ரக்ருதி – 24 தத்வங்களாவது; சூரியனுடைய உபாதி பேதத்தால் காலம் மூன்று – 1) பூத (இறந்த காலம்), 2) பவிஷ்ய (வருங்காலம்); 3) வர்த்தமான (நிகழ் காலம்) காலங்கள்.
      • அஜடம் து த்விவிதம், பராக் ப்ரத்யக் சேதி। பராகபி த்விவிதா-நித்ய விபூதி:, தர்ம பூத ஞானம் சேதி। ப்ரத்யகபி த்விவிதா: – ஜீவேஶ்வர பேதாத்॥ 8
      • அஜடம் இருவகைப்படும் – 1) ப்ரத்யக் மற்றும் 2) பராக். ப்ரத்யக் – தன்னைப் பற்றிய ஜ்ஞானம் தனக்கு வருமாறு உள்ள பொருள். பராக் – தன்னப் பற்றின ஜ்ஞானம் மற்றொன்றிற்கே வருமாறு உள்ள பொருள் (ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அஜடப் பொருள்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வரும்)
      • நித்ய விபூதியும் தர்மபூத ஞானமும் பராக் –
      • ஜீவனும் பரமாத்மாவும் ப்ரத்யக்
      • ஜீவ: த்ரிவித: பத்த முக்த நித்ய பேதாத் ॥  9
      • ஜீவர்கள் மொத்தம் மூன்று வகை – பத்தர், முக்தர், நித்யர்.
      • பத்தர்க்கும் பரமபதத்திலிருக்கும் நித்யர்க்கும், முக்தர்க்கும் உள்ள படியினை ஸ்ரீ லோகதேசிகனான பிள்ளை லோகாசார்யர், அஷ்டாதச க்ரந்தங்களில் ஒன்றான அர்ச்சிராதியில் கீழ்க்கண்டவாறு அருளியுள்ளார்.
      • (அர்ச்சிராதி மூலம்) நித்யர் மற்றும் முக்தர், ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப (திருவாய் 4-9-10) என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடைய அபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள்.  லீலாவிபூதியிலுள்ளார் அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய் “நம இத்யேவ வாதிந:” என்கிறதுக்கு எதிராக, “ந நமேயம்”, “ஈஶ்வரோஹம்” என்கிறபடியே, மனையடைவே, “யானேயென்றனதே” என்று,
      • ஒண்டொடியாள் – அழகிய வளைகளை உடையவள்; கழலாத வளைகளை உடையவள் – அகலகில்லேன் இறையும் என இருப்பவளிறே; சங்கு தங்கு முன்கை நங்கையிறே; சீரார் வளை (திருப்பாவை – 6000 படி ஸ்ரீ ஸூக்தி) – வளைக்குச் சீர்மையாவது – கையில் நின்றும் கழலாதொழிகை. விஶ்லேஷவ்யஸநம் அநுபவியாத வளை. சங்குதங்குமுன்கை – ஒண் டொடியாள் திருமகள் திருமகளும் – பெரிய பிராட்டியாரும்; நீயுமே – எம்பெருமானுமே;  செங்கோல் – செம்மையான கோல்/ஆட்சி; ஏகாதபத்ரமாக –வேறு ஒருவனுடைய தலையீடு இல்லாமல்/ ஒரு குடைக்குக் கீழே; அபிமானம் – எம்பெருமானால் தன்னுடையவன் (மதீயர்கள்) என்று நினைக்கப்படுதல்;  சந்தாநுவர்த்திகளன்றிக்கே– எம்பெருமான் திருவுள்ளம் அறிந்து கைங்கர்யம் செய்பவர்களாய் இருக்கை தவிர்ந்து; ஸங்கல்பாநுவிதாயிகளாய் – ஸங்கல்பத்தைப் பின்செல்லுபவர்களாய்; நம இத்யேவ வாதிந: – இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வாயால் எப்போதும் நம: என்று சொல்லிக் கொண்டும் (நித்யர் மற்றும் முக்தர் படி)ந நமேயம் – ஒருவனையும் வணங்க மாட்டேன் (இராவணன் சொன்னது); ஈஶ்வரோஹம் – நானே ஈஶ்வரன் [பகவத் கீதை]; (லீலா விபூதியிலுள்ளார் படி);  மனை யடைவே – ஸம்ஸாரம் முழுவதும்; யானே யென்றனதே – அஹம்/மம, நான்/எனது என்றிருக்கும் இருப்பு
      • (மூலம்) அவர்கள் “பணியா அமரர்” (திருவாய் 8-3-6) யிருக்கும் இருப்புக்கெதிராக “மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து” (திருவாய் 4-10-7)
      • பணியா அமரர் – ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்காதே;
      • (மூலம்) “மிக்கார் வேத விமலர்” (திருவாய் 2-9-8) என்கிறபடியே, அவர்களைப்போலே “பெருமக்களாய்” (திருவாய் 3-7-4) இராதே “சிறியார் சிவப்பட்டார்” (நான். திரு 6) என்கிறபடியே சிறியாராய்
      • மிக்கார் – பகவதனுபவத்திலே எல்லாரைக் காட்டிலும் விசேஷமாண ஸ்வபாவம் உடையவர்களாய்; மலம் – அழுக்கு; விமலர் –தோஷமில்லாதவர்கள் வேத விமலர் –  வேதத்திலே விமலராய் சொல்லப்பட்டவர்கள்; சிறியார் – அல்ப்பர், சிறியார் – ஸ்வத:ப்ரமாணமான வேதத்தை விட்டு ஆகமத்தைக் கொண்டவர்கள் தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பர் என்னக்கடவதிறே.
      • (மூலம்)  “அயர்வறும் அமரர்கள்” (திருவாய் 1-1-1) என்கிறபடியே அவர்களைப்போலே திவ்ய ஜ்ஞாநோபபந்நராயிராதே அறிவிலா மனிசராய் (திருமாலை 13), ஒளிக் கொண்ட சோதிக்கெதிராக (திருவாய் 2-3-10) அழுக்குடம்பை (திருவிருத்தம் 1) பரிக்ரஹித்து,
      • அயர்வு – மறதி முதலானவைகள்; திவ்யஜ்ஞாநோபபந்நராயிராதே – திவ்யமான ஜ்ஞானம் உடையவராய் இராதே; ஒளிக்கொண்டசோதி – ரஜோகுணம் தமோகுணம் கலசாதே ஸுத்தசத்வ திவ்ய மங்கள விக்ரஹம்;
      • (மூலம்)  விபந்யவ: விண்ணோர் பரவுந்தலைமகன் (திருவாய் 2-6-3) என்றதுக்கெதிராக உலகில் கண்டவா தொண்டரைப் பாடி (பெரிய திருமொ 1-1-7),
      • விபந்யவ: – விசேஷமாக எம்பெருமானைத் துதிப்பவர்கள்; விண்ணோர் பரவுந்தலைமகன்  – நித்ய ஸூரிகளால் துதிக்கப் படுபவன்; உலகில் கண்டவா தொண்டரைப் பாடி – கண்ட ஆ – தன்னை ஸ்தோத்திரம் பண்ண இச்சை உடையவர்களை பாடி, திருவாய்மொழி ஈட்டில் ஒரு அற்புதமான கதை த்ருஷ்டாந்தமாக இவ் வர்த்ததிற்கு எடுக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கது
      • (மூலம்) உனக்கே நாமாட்செய்வோம் (திருப்பாவை 29) என்கிறபடியே அவனுக்காட் செய்யாதே மாரனார் வரிவெஞ்சிலைக்காட்செய்து (பெரு திரு 3-3)தொண்டுபூண்டமுதமுண்ணாதே (திருமாலை 5) பாவையர் வாயமுதமுண்டு (பெரிய திருமொ 1-3-5),
      • உனக்கே நாமாட்செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாயிருக்கிற இருப்பைத் தவிர்ந்து “தனக்கேயாக” என்னுமா போலே கொள்ள வேணும் (திருப்பாவை 6000படி ஸ்ரீ ஸுக்தி); மாறன் – மன்மதன்;
      • (மூலம்) ஸ ஏகதா பவதி என்கிறதுக்கெதிராக குலந்தானெத்தனையும் பிறந்து (பெரிய திருமொ 1-9-4), உருவார் சக்கரஞ்சங்கு சுமந்திங்கவனோடு ஒருபாடு உழலாதே (திருவாய் 8-3-7) ஆக்கையின் வழியுழன்று (திருவாய் 3-2-1),
      • ஸ ஏகதா பவதி – பரமபதம் செல்லும் முக்தாத்மா எம்பெருமான் ஸங்கல்பத்தாலே சரீரங்களை கொள்கிறான் – ஏனெனில் எம்பெருமானை ஒரு சரீரத்தால் அனுபவித்து முடிக்க முடியாமையாலே. பரம பதத்தில் இருப்பவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதற்காக சரீரம் கொள்கிறார்கள்; ஸம்ஸாரத்தில் உள்ளார் கர்மமடியாக பல சரீரங்களை எடுக்கிறார்கள் என்பது தாத்பர்யம்; உருவார் – அழகான; ஒருபாடு – ஒரு பக்கம்; அவனுடைய திருவாயுதங்களைச் சுமந்து கொண்டு அவனோடு போகாதே; ஆக்கை – உடம்பு; ஆக்கையின் வழியுழன்று  – சரீரத்தைக் கொடுத்து எம்பெருமானை அடை என்றால், சரீரம் செல்லும் வழி சென்று
      • (மூலம்) ஏதத் வ்ரதம் மம என்கிறவனுடைய வ்ரதத்துக்கெதிராக யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை (திருவிருத்தம் – 95) ஏறிட்டுக் கொண்டு, அவர்தருங் கலவியே கருதி ஓடினேன் (பெரிய திருமொ 1-1-1) என்கிறபடியே அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் (திரு நெடு – 6) எட்டாதபடி கைகழியவோடி, அற்பசாரங்களவை சுவைத்தகன்று (திருவாய் 3-2-6) போரக் கடவராயிருப்பர்கள்.
      • ஏதத் வ்ரதம் மம – ஒருக்காலே சரணம் அடைந்தார்க்கும் எல்லாராலும் வரக்கூடிய பயங்களைப் போக்குகிறேன் என்னும் பெருமாளின் வ்ரதம்; யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை – ஏதேனும் பற்றிக் கொண்டு நாம் எம்பெருமானை விட்டு நீங்கும் வ்ரதம்; ஏறிட்டுக் கொண்டு – இத்தால் இது (யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை) வந்தேறி என்றபடி – நானும் உனக்குப் பழவடியேன் என்பதே ஜீவாத்மாவின் உண்மையான நிலை; அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் – ஆச்ரிதர்கள் போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாத நீண்ட நெடுங்கைகள்; எட்டாதபடி கை கழிய வோடி – அதற்கும் தப்பி; அற்பசாரம் – சப்தாதி விஷயங்கள்
      • பத்தோபி த்விவித: – புபுக்ஷுமுமுக்ஷுபேதாத்॥ 10
      • பத்தர் இருவகைப்படுவர் – புபுக்ஷு, முமுக்ஷு
      • புபுக்ஷுபி த்விவித: – அர்த்தகாமபரோ தர்மபரச்சேதி | தர்மபரோ த்விவித:- தேவதாந்தரபரோ பகவத்பரஶ்சேதி|| 11
      • புபுக்ஷுக்கள் இருவகை – அர்த்தபரர் மற்றும் தர்மபரர். தர்மபரர்கள் இருவகைப்படுவர் – தேவதாந்தரபரர் மற்றும் பகவத்பரர்கள்.
    • முமுக்ஷுபி த்விவித: – கைவல்யபரோ மோக்ஷபரச்சேதி | மோக்ஷபரோ த்விவித: – பக்த: ப்ரபந்நச்சேதி | ப்ரபந்நச்ச த்விவித: – ஏகாந்தீ பரமைகாந்தி சேதி | பரமைகாந்தீ த்விவித: – த்ருப்தார்தபேதாத் ॥12
    • முமுக்ஷுக்கள் இரண்டு வகைப்படுவர் – கைவல்யபரர் மற்றும் மோக்ஷபரர்கள்; மோக்ஷபரர்கள் பக்தர்கள் மற்றும் ப்ரபந்நர்கள் என்று இரண்டு வகைப்படுவர்கள். ப்ரபந்நர்கள் மறுபடியும் ஏகாந்தீ, பரமைகாந்தீ என இரண்டு வகைப்படுவர்கள். பரமைகாந்தீ த்ருப்தன் ஆர்த்தன் என இரண்டு வகைப்படுவர்.
    • மோக்ஷத்தில் இச்சையுடையவர்கள் முமுக்ஷுக்கள். மோக்ஷம் என்றால் பரமானந்தம் என்று நிகண்டு. அதாவது ப்ரஹ்மானுபவம்.
    • த்ருப்தன் – சரீரம் விடும்பொழுது மோக்ஷம் கிடைக்கட்டும் என ஆறி இருப்பவன்; ஆர்த்தன் – சரணாகதி செய்தயுடன் மோக்ஷம் வேண்டுபவன்
    • ஈஶ்வர: பஞ்சதா – பரவ்யூஹவிபவாந்தர்யாம்யர்சாவதாரபேதாத் | பர ஏகதா | வ்யூஹச்சதுர்தா – வாஸுதேவஸங்கர்ஷணப்ரத்யும்னாநிருத்தபேதாத் | கேசவாதி வ்யூஹாந்தரமத்ரைவாந்தர்பவதி | மத்ஸ்யாதயோ விபவா: புந: அநந்தா: | அந்தர்யாமி ப்ரதிஶரீரமவஸ்தித: | அர்சாவதாரஸ்து ஸ்ரீரங்கவேங்கடாத்ரிஹஸ்திகிரியாதவாத்ரி கடிகாசலாதிஷு ஸகலமனுஜநயநவிஷயதாம் கதோ மூர்த்திவிசேஷ: || 23
    • ஈஶ்வரன் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று ஐந்து ப்ரகாரமாக இருக்கிறான். பரமபத நாதனான பகவான் ஸ்ரீமந் நாராயணன் என்கிற ரூபம் ஒன்றுதான். * ஆதியஞ்சோதிவுரு * . இவ்வுருவில் இருந்தே மற்ற ரூபங்கள் தோன்றுவதினால் பரம் என்னப்பட்டது. வ்யூஹ ருபங்கள் – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்று நான்கு. மத்ஸ்யம், கூர்மம் முதலான ரூபங்கள் விபவங்கள். அவை கணக்கற்றவை. அந்தர்யாமி நிலையாவது ஒவ்வொரு உடம்பிலும் அவர்கள் உபாஸிக்கும்படி அவர்கள் ஹ்ருதயத்தில், கட்டை விரல் அளவுள்ளதாய் இருக்கும் ரூபம். அர்ச்சாவதாரமாவது, ஸ்ரீரங்கம், திருவேங்கடம், முதலான திவ்யதேசங்களில் அனைவர் கண்களுக்கும் விஷயமாம்படி இருக்கும் நிலை.
    • தத்வத்ரயம் – 182, ஸ்ரீமத் வரவரமுனிகள் வ்யாக்யானம் இவ்வர்த்தம் அழகாக விளக்கப்பட்டுள்ளது காண்க.
    • விபவங்கள் அநந்தம் என்னுமிடம் தத்வத்ரயம் – 189வது சூர்ணிகையில் ” பரிகணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அநந்தமாய் ” என்ற வ்யாக்யான ஸ்ரீஸூக்தி கொண்டு நோக்க வேண்டியது.
    • அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வெல்லும் அவன் இவன் என்று பரமபதத்தில் இருக்கும் பெருமானே அர்ச்சாவதாரமாக உள்ளான் என்று கொண்டு அர்ச்சாவதாரமே முக்கியமாகக் கொண்டனர் நம் ஆசார்யர்கள். மற்றைய நிலைகளைக் காட்டிலும் இதன் ஏற்றம் * தமருகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்கும் இடத்திலே எல்லாம் பூர்ணம் * என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையின் வ்யாக்யானத்தில் கண்டு கொள்வது.
    • இங்ஙனே த்ரவ்யம் பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும்,
    • சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டவன் என்பதினால் ஒன்று என்றும்,
    • ஆத்மா, அநாத்மா (ஆத்மா அல்லாதது – ஜீவனையும், ஈஶ்வரனையும் தவிர அனைத்தும்) என்ற பேதத்தால் இரண்டு என்றும்,
    • * போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா * என்ற ச்ருதியை அனுஸரித்து சித், அசித், ஈச்வரன் என மூன்றாகவும்,
      • இங்கு ” போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா என்று போக்த்ரு சப்தத்தாலும், போக்ய சப்தத்தாலும், ப்ரேரயித்ரு சப்தத்தாலும் சிதசிதீச்வர தத்வங்கள் மூன்றையுமிரே சொல்லுகிறது” என்னும் ஸ்ரீமத் வரவரமுனிகளின் தத்வத்ரய வ்யாக்யான ஸ்ரீஸுக்தி ஸ்மரிக்கத்தக்கது.
    • ப்ரக்ருதி, காலம், நித்யவிபூதி, தர்மபூதஜ்ஞானம், ஜீவன், ஈச்வரன் என ஆறாகவும் கொள்ளலாம்.
    • அத்ரவ்யம் து ஸத்வரஜஸ்தமச்ஶப்தஸ்பர்சரூபரஸகந்தஸம்யோகஶக்திபேதாத்தசதைவ || 24
    • அத்ரவ்யம் ஶப்தம், ஸ்பர்ஶம், ரூபம், ரஸம், கந்தம், ஸத்வம், ரஜஸ், தமஸ், ஸம்யோகம், ஶக்தி என 10 பிரிவுகளைக் கொண்டது.
    • —————–
    • ஏவமுத்தேச க்ரமேந பரீக்ஷா க்ரியதே |
    • இனி நிர்ணயித்த க்ரமத்திலேயே வஸ்துக்களைப் பற்றின லக்ஷணம் உரைக்கப்பட்டு அவை பரீக்ஷிக்கப் படுகின்றன. சாஸ்த்ர க்ரந்த விசாரங்கள் இந்த ரீதியிலே அமையும். முதலில் வஸ்துக்களை வரிசைப்படுத்தி, பின்பு அவற்றின் லக்ஷணமுரைத்து, அந்த லக்ஷணங்களை ஆராய்வது இந்த ரீதியிலேயே இருக்கும்.
    • இது தன்னை பெரிய ஜீயரும் தத்வத்ரய வ்யாக்யானத்தில் “உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை என்று மூன்று வகைப்பட்டிறே தத்வ நிர்ணயக்ரமம் இருப்பது” என்றருளிச் செய்தார்
    • தத்ர ப்ரமாகரணம் ப்ரமாணம் | ப்ரமாணம் லக்ஷ்யம் | ப்ரமாகரணம் லக்ஷணம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமா || ப்ரமா லக்ஷ்யம் | யதாவஸ்தித வ்யவஹாரானுகுண ஞானத்வம் லக்ஷணம் | ஞானம் ப்ரமேத்யுக்தே ஶுத்திகாயாம் “இதம் ரஜதம்” இதி ஞானேSதிவ்யாப்தி: | அத உக்தம் வ்யவஹாரானுகுணம் ஞானமிதி | ஏவமபி தத்ரைவாதிவ்யாப்தி: ப்ராந்தி தஶாயாமிதம் ரஜதமிதி வ்யவஹ்ரியமாணத்வாத் | அத உக்தம் யதாவஸ்திதேதி |
    • ப்ரமாணம் விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு லக்ஷணம் – லக்ஷ்யம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவ் வஸ்துவின் லக்ஷணமாகும். அந்த லக்ஷணத்தால் அறிந்துகொள்வது லக்ஷ்யமாகும். இனி ப்ரமாணம் லக்ஷ்யமாமிடத்தில் – ப்ரமாகரணம் அதன் லக்ஷணம் ஆகும். அதாவது ப்ரமைக்கு கரணமாயிருப்பது. ப்ரமா லக்ஷ்யமாமிடத்தில் – ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்குக் (வ்யவஹரிப்பதற்கு) காரணமான அறிவு (அ) ஞானம் என்பது அதன் லக்ஷணம் ஆகும்.  ப்ரமைக்கு ஏன் ஞானம் என்று லக்ஷணம் உரைக்ககூடாது என்னில் – அப்படிக் கொண்டால் சுத்தி என்று சொல்லப்படும் முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுவதும் ப்ரமை என்றாகிவிடும். இது அதி வ்யாப்தி எனும் தோஷமாகும். அதைத் தவிர்ப்பதற்காகவே ப்ரமைக்கு ஒரு வஸ்துவை உள்ளபடி பேசுவதற்கு (வ்யவஹரிப்பதற்க்கு) காரணமான அறிவு என்று லக்ஷணம் உரைக்கப்பட்டது.
    • லக்ஷணம், அதி வ்யாப்தி, முத்துச் சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று தோன்றுகிற ஞானம் இவை அனைத்தும் மேலே விளக்கப்படவுள்ளன.
    • யதாவஸ்தித பதேன ஸம்சய அந்யதா விபரீத ஞான வ்யாவ்ருத்தி: | தர்மிக்ரஹணே மிதோ விருத்த அநேக விசேஷ ஸ்புரண ஸம்சய: | யதா ஊர்த்வதாவிசிஷ்டே ஸ்தாணூர்வா புருஷோ வேதி ஞானம் | அந்யதாஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா கர்த்ருத்வேன பாஸமானே ஆத்மநி குயுத்பி: கர்த்ருத்வஸ்ய ப்ராந்தத்வோபபாதனம் | விபரீத ஞானம் நாம தர்மவிபர்யாஸ: | யதா வஸ்துனோ வஸ்த்வநந்தர ஞானம் |
    • உள்ளதை உள்ளபடி வழங்குதல் என்றதினால் ஸம்சய ஞானம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் ஆகியவைகள் தள்ளப்பட்டன.
    • ஸம்சயம் என்றால் என் என்னில் – தர்மியை (தர்மி – பூ; தர்மம் – அதனுடைய  மணம்/நிறம்) க்ரஹிக்கும் பொழுது ஒரே சமயத்தில் விருத்தமான (ஒன்றுக்கொன்று விரோதமான) பல தர்மங்கள் (விசேஷணங்கள்) தோன்றுவது ஸம்சயம் ஆகும். உதாரணத்திற்கு நாம் இருட்டில் தூரத்தில் ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அது கை, கால்கள் கொண்ட மனிதன் போன்று தெரிகிறது. அதே சமயத்தில் அது கிளைகள் கொண்ட மரம் போன்றும் தோன்றுகிறது. இது தன்னையே ஸ்தாணுர் வா புருஷோ வ (மரமா அல்லது மனிதனா) என்று உரைப்பர்கள். ஒரே வஸ்துவினிடத்தில் மரத்தினுடைய விசேஷணங்களும், மனுஷ்யத்வமும் தோன்றுவதால் – இது ஸம்சயம் ஆகும்.
    • அந்யதா ஞானமாவது – தர்மியை க்ரஹிக்கும் விஷயத்தில் மாறாட்டம். ஒரு வஸ்துவினுடைய தர்மத்தை மாறாகக் க்ரஹிப்பது. கர்த்ருத்வம் எனப்படும் செயல்படும் தன்மையாவது ஆத்மாவின் (ஆத்மா – தர்மி; கர்த்ருத்வம் – தர்மம்) தர்மம் அன்று என்று தர்ம விஷயத்தில் மாறுபாடகக் கொள்வது அந்யதாஞானமாகும்.  இப்படி கர்த்ருத்வமாவது ஆத்மாவிற்கு கிடையாது என்று கொள்வது ஸாங்க்யர்கள் பக்ஷமாகும். அவர்கள் அதை ப்ரக்ருதிக்கேயுள்ளது என்கிறார்கள். அவர்களை நிரஸிக்கிறார். அப்படிக் கொண்டால் சேதனனைக் குறித்துக் கட்டளையிடும் வேத வாக்யங்கள் பயனற்றவையாகி விடும்.
    • இதன் விரிவினை தத்வத்ரய சூர்ணிகைகள் 31, 32 மற்றும் ஸ்ரீமத் வரவரமுநிகளின் வ்யாக்யானம் கொண்டு மேலும் அறிந்து கொள்ளலாம்.
    • விபரீத ஞானமாவது – தர்மியையே மாறாடி க்ரஹிக்கை. ஒரு வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது அந்த வஸ்துவையே தவறாகக் க்ரஹிக்கை. உதாரணமாக சுக்திகையை (சிப்பியை) ரஜதமென்று (வெள்ளியென்று) க்ரஹிக்கை, அல்லது தேஹத்தை ஆத்மா என்று கொள்ளுகை.
    • “அந்யதாஞானமாவது தேவதாந்தர சேஷமென்றிருக்கை. விபரீதஞானமாவது ஸ்வதந்த்ரமாகவும், ஸ்வபோக்யமாகவும் நினைத்திருக்கிற கேவலனைடைய ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்.” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் (1-1-1 மயர்வற),
    • “சேஷத்வஸயைவ ஆத்மந ஸ்வரூபநிரூபகத்வாத் ததவிஹாய ஸ்வதந்த்ரத்வேநாநுஸந்தாநம் தர்மிவிபர்யாஸ இத்யபிப்ராயேணாஹ, விபரீதஞானமாவது யத்வா நிரதிசய போக்யத்தை பராபிக்கவேணுமென்று அபேக்ஷித்து, அந்த போக்யந்தான் ஏதென்று நிரூபித்து போக்யந்தானே என்று நிச்சயிக்கையினாலே கேவலன் போக்யத்திலே ஸ்வபேதாத்யவஸாயம் பண்ணுகிறான் அது தர்மயாரோபரூப விபரீதஜ்ஞாநமென்று திருவுள்ளம்.” என்று அதன் அரும்பத ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது.
      • ஆத்மாவினுடைய தர்மமான பகவானுக்கு மட்டும் அடிமைப்பட்டு இருத்தல் என்பதை மாறாக தேவதாந்தரங்களுக்கு சேஷமாக நினைப்பதால் அது அந்யதாஞானம்.
      • கேவலனான கைவல்யார்த்தி பரம புருஷார்த்தத்தை நிச்சயிக்கும் பொழுது அதைத் தவறாக பகவானை அனுபவிக்காமல் தன்னைத் தானே அனுபவிப்பதாகிற சிற்றின்பமாகக் நிச்சயிப்பதால் அது விபரீத ஞானமாகும்.
    • அந்யதாஞானம் மற்றும் விபரீத ஞானம் இரண்டையும் சேர்த்து விபர்யயம் என்று சொல்வதுண்டு.
    • “*துயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் *ஸ்தாணூர்வா புருஷோவா* என்கிறபடியே க்ராஹ்யவஸ்துவை இன்னதென்று நிச்சயிக்கமாட்டாத ஸம்சயமும், *மயக்கு* என்கிற சப்தத்தால் சொல்லப்படும் ரஜ்ஜூ சுக்த்யாதிவிஷய ஸர்ப்பரூப்யாதி புத்திபோலே அதஸ்மிந் தத்புத்தியகிற விபர்யமும்” – என்கிற ஸ்ரீமத்வரவரமுனிகளின் ஆசார்ய ஹ்ருதய (ஸூ – 98) வ்யாக்யான ஸ்ரீஸூக்தியும் நினைக்கத்தக்கது
    • லக்ஷணஸ்ய த்ரீணி தூஷணாநி ஸந்தி, அவ்யாப்திரதிவ்யாப்திரஸம்பவம் | லக்ஷயைகதேசே லக்ஷணஸ்யாவர்தனமவ்யாப்தி | லக்ஷாயதந்யத்ர வர்த்தமானத்வமதிவ்யாப்தி: | லக்ஷ்யே க்வாப்யவரதமனஸம்பவ | யதா ஜீவோ குணத்ரயவச்ய இத்யுக்தே அவ்யாப்தி:, ஞாநகுணக இத்யுக்தே அதிவ்யாப்தி:, சக்ஷுர்விஷயோ ஜீவ இத்யுக்தேSஸம்பவ ஏவ | அத்ரோக்ததூஷணத்ரயாபாவாத் ப்ரமாண லக்ஷணம் ஸுஸ்தம் |
    • லக்ஷணம் என்றால் ஓரு வஸ்துவினிடத்திலேயே இருப்பதாய், அவ்வஸ்துவை மற்ற வஸ்துக்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுவது என்று முன்பு உரைக்கப்பட்டது. ஒரு வஸ்துவிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது, அந்த லக்ஷணத்திற்கு மூன்று விதமான தூஷணங்கள் (குற்றங்கள்) ஸம்பவிக்கலாம். அவை அவ்யாப்தி, அதிவ்யாப்தி மற்றும் அஸம்பவம் ஆகும்.
    • உதாரணத்திற்கு பசு மாட்டிற்கு லக்ஷணம் உரைக்கும் பொழுது வெள்ளை நிறமுடையது பசுமாடு என்று லக்ஷணம் உரைத்தால், மற்ற நிறமுடைய பசுக்கள் விடுபடும். இது அவ்யாப்தியாகும்.
    • கொம்புடையது மாடு என்று கொண்டால், ஆட்டிற்கும் கொம்பு இருப்பதால் அது அதிவ்யாப்தி ஆகும். அந்த லக்ஷணம் ஆட்டையும் சேர்த்துக் கொள்ளும்.
    • இரண்டு கால்கள் உள்ளது பசு மாடு என்றால், அது மாட்டையே குறிக்காததாகையால் அது அஸம்பவம் ஆகும்.
    • மூலத்தில் குறிப்பிட்டுள்ள உதாரணமாவது – ஜீவர்கள் முக்தர்கள், நித்யர்கள் மற்றும் பக்தர்கள் என் மூவகைப்படுவர்கள். ஜீவர்களுக்கு லக்ஷணம் சொல்லும் பொழுது – குணத்ரயவச்யர்கள் ஜீவர்கள் என்று கொண்டால் அது முக்தர்கள் மற்றும் நித்யர்களைக் குறிக்காது – ஆகையினால் அது அவ்யாப்தி ஆகும். ஞானத்தையுடையவன் என்று லக்ஷணம் சொன்னால் அது ஈச்வரனையும் குறிக்கும் ஆதலால், அது அதிவ்யாப்தி ஆகும். கண்ணால் பார்க்கப்படுபவன் ஜீவன் என்று சொன்னால் அது அஸம்பவம். ஒரு ஜீவனையும் கண்ணால் பார்க்க முடியாது.
    • இங்கு “இப்போது இவர்களுக்கு லக்ஷணம் – சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம்.” என்கிற தத்வத்ரய சூர்ணிகையும் (61),
      • “சேஷத்வமாத்ரத்தை சொல்லில் அசித்வ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், ஜ்ஞாத்ருத்வமாத்ரத்தை சொல்லில் ஈச்வரவ்யாவ்ருத்தி ஸித்தியாமையாலும், சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வமே லக்ஷணம் என்கிறார்” என்கிற அதன் வ்யாக்யான ஸ்ரீஸுக்தியும் நினைக்கத்தக்கது.
    • இம்மூன்று தோஷங்களும் இல்லாதது லக்ஷணமாகும். ப்ரமைக்கு சொன்ன லக்ஷணமாவது இந்த மூன்று தோஷங்களும் இல்லாமல் உள்ளது.
    • ஸாதகதமம் கரணம் | அதிசயித ஸாதகம் ஸாதகதமம் | யஸ்மிந் ஸத்யவிலம்பேந ஞானமுத்பத்யதே தததிசயிதமித்யுச்யதே |
    • கரணம் என்பது ஸாதகதமம் ஆகும். அதாவது மிகுந்த உபகாரத்தைச் செய்வது. இவ்விடத்தில் ப்ரமை உண்டாவதற்கு தாமதமில்லாமல் மிகுந்த உபகாரத்தைச் செய்வது என்று கொள்ளல் வேண்டும். அதாவது ப்ரமா எனப்படும் உள்ளதை உள்ளபடி வழங்குதல் எனும் ஞானம் விரைவாக உண்டாவதற்கு உபகாரத்தைச் செய்வது.
    • இத்தால், ப்ரமாணம் என்பதன் லக்ஷணத்தை (ப்ரமா கரணம்) விரிவாக அருளிச் செய்தாராயிற்று.
    • ———-
    • தானி ப்ரமாணானி ப்ரத்யக்ஷானுமானஶப்தாக்யானி த்ரீண்யேவ | தத்ர ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷம் | அனுமானாதிவ்யாவ்ருத்த்யர்த்தம் ஸாக்ஷாத்காரிதி | துஷ்டேந்த்ரியவ்யாவ்ருத்த்யர்த்தம் ப்ரமேதி |
    • இப்படி விளக்கப்பட்ட ப்ரமாணமானது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – அவை (1) ப்ரத்யக்ஷம், (2) அநுமானம், (3) ஶப்தம். அவைகளில் நேராய் (ஸாக்ஷத்தாய்) வஸ்துவை அறிவதற்குக் காரணமாயிருப்பது ப்ரத்யக்ஷமாகும். ஸாக்ஷாத்காரி என்னும் சொல்லினால் அநுமானம், ஶப்தம் ஆகிய ப்ரமாணங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தோஷமுள்ள இந்த்ரியங்களால் வருவதை ப்ரமாணம் என்று கொள்ளாமல் இருக்க லக்ஷணத்தில், ப்ரமை எனும் சொல் சேர்ந்திருக்கிறது.
    • அநுமானம், ஶப்தம் ஆகியவற்றின் விளக்கம், லக்ஷணம் ஆகியவை மேலே அவதாரங்களில் வரப் போகின்றன. இப்போதைக்கு ஸாக்ஷத்தாய் (நேராய்) வஸ்துவை அறிவது ப்ரத்யக்ஷத்தால் என்று கொள்வது.
    • துஷ்ட இந்த்ரியத்திற்கு எடுத்துக்காட்டு காமாலை நோய் வந்தவனின் கண்கள். அதைக் கொண்டு பார்த்தால் வெண்சங்கும் மஞ்சளாகத் தெரியும். அதனை ப்ரமை விலக்குகிறது.
    • ப்ரமையின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டது.
    • தச்ச ப்ரத்யக்ஷம் த்விவிதம் – ஸவிகல்பகநிர்விகல்பகபேதாத் | நிர்விகல்பகம் நாம குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டப்ரதமபிண்டக்ரஹணம் | ஸவிகல்பகம் து ஸப்ரத்யவர்ஷம் குணஸம்ஸ்தானாதிவிஶிஷ்டத்விதீயாதிபிண்டக்ரஹணம் | உபயமப்யேதத் விஶிஷ்டவிஷயமேவ | அவிஶிஷ்டக்ராஹிண: ஞானஸ்யானுபலம்பாத் அனுபபத்தேச்ச |
    • இந்த ப்ரத்யக்ஷ ஞானமானது இரண்டு வகை.
    • நிர்விகல்பகம்
    • ஸவிகல்பகம்.
    • நிர்விகல்பகமாவது ஒரு வஸ்துவை முதன் முதலில் அறிவது. அப்போதும் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம். ஸவிகல்பகமாவது அதே வகுப்பைச் சேர்ந்த வஸ்துவை பின்னர் அறியும் பொழுது உண்டாகும் ஞானமாகும். இப்போதும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  இப்படி இரண்டாவதாக அறிவதினால் (ஸவிகல்பக ஞானத்தால்) முதலில் அறியப்பட்ட வஸ்து நினைவில் வந்து, சில அமைப்புக்கள் இந்த வஸ்துவின் வகுப்பிற்கே பொது என்னும் ஞானம் உண்டாகிறது.
    • உதாரணமாக முதன் முதலில் ஒரு பசுமாட்டைப் பார்க்கிறோம். அப்போது நமக்கு பசுவின் ஸம்ஸ்தானம் – அமைப்புகள், தெரிந்து அவற்றைக் க்ரஹித்துக் கொள்கிறோம். இப்பொழுது எல்லாப் பசுக்களுக்கும் இந்த அமைப்புக்கள் இருக்கும் என்பதை அறியமாட்டோம். இது நிர்விகல்பகம் ஆகும்.
    • பின்பு சிறிது காலம் கழித்து வேறு ஒரு பசுமாட்டைப் பார்க்கும் பொழுது, கோத்வம் முதலிய விசேஷணங்கள் மற்றும் ஸம்ஸ்தானங்கள் பசு வகுப்பிற்கே பொதுவானவைகள் என்று அறிந்து கொள்கிறோம்.
    • இவ்விருவகையிலும் வஸ்துவின் ஆகாரத்துடனும், குணங்களுடனும் கூடவே அதை அறிகிறோம்.  விசேஷணங்கள் இல்லாமல் வஸ்துவின் ஞானம் மட்டும் உண்டாகாது. விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது.
    • இது தன்னை (விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்பதே முடியாது) பாஷ்யகாரர்  [கேனசித்விசேஷேண இதமித்தமிதி ஹி ஸர்வா ப்ரதீதிரூபஜாயதே] (ஸ்ரீ பாஷ்யம் 1-1-1) என்றருளிச்செய்தார். அதாவது எல்லா ஜ்ஞாநமும், ஏதாவது விசேஷத்தையிட்டு ‘இது இப்படியானது’ என்றுதானே உண்டாகிறது.
    • அத்வைதிகள், நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது என்கிறார்கள். நிர்விகல்பகம் என்பதை விகல்பம் அற்றது என்று கொண்டு, ப்ரஹ்மம் ஒன்றே இருக்கிறது. வேறு இல்லை அது தன்னைக் க்ரஹிக்கிறோம் என்கிறார்கள்.
    • – பலவாகக் கல்பிக்கப்படுவது
    • இது கிடையாது, நிர்விகல்பகம் என்றால் ஏதாவது விசேஷணங்களை விட்டுவிட்டு க்ரஹிப்பதே அன்றி, விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது அன்று. ஒருவனை நிர்தனன்/தரித்ரன் என்று சொன்னால் மிகவும் குறைவாக பணம் உள்ளவன் என்று ஆகுமே அன்றி, பணமே இல்லாதவன் என்று ஆகாது.
    • வைசேஷிகர்களும் நிர்விகல்பகம் என்பது வஸ்துவை மாத்திரம் விசேஷணங்கள் இல்லாமல் க்ரஹிப்பது, ஸவிகல்பகமாவது – விசேஷணம், விசேஷ்யம், அவைகளின் ஸம்பந்தம் ஆகிய மூன்றும் தோன்றும் ஜ்ஞாநம் என்கிறார்கள்.
    • இதற்கு உதாரணமாகக் குழந்தைகள் இப்படித் தான் க்ரஹிப்பார்கள் என்கிறார்கள்.
    • ஆனல் அதுவும் சரியன்று, பாலர்களும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள். ஒரு குழந்தை விளையாடும் பொம்மையை எடுத்துக் கொண்டு வேறு ஒன்றைக் கொடுத்தால் அது ஏற்பதில்லை. எனவே குழந்தைகளும் கூட முதலில் விசேஷணங்களுடனே க்ரஹிக்கிறார்கள்.
    • க்ரஹணப்ரகாரஸ்து – ஆத்மா மனஸா ஸம்யுஜ்யதே | மன இந்த்ரியேந, இந்த்ரியமர்தேந | இந்த்ரியாணாம் ப்ராப்யகாரித்வநியமாத் | அத: கடாதிரூபார்தஸ்ய சக்ஷுரூபேந்த்ரியஸ்ய ச ஸன்னிகர்ஷே ஸதி அயம் கட: இதி சாக்ஷுஷஞானம் ஜாயதே | ஏவம் ஸ்பார்சந ப்ரத்யக்ஷாதயோபி | த்ரவ்யக்ரஹணே ஸம்யோக: ஸம்பந்த: | த்ரவ்யகதரூபாதிக்ரஹணே ஸமவாயானங்கீகாராதி ஸம்யுக்தாஶ்ரயணம் ஸம்பந்த: ||
    • ப்ரத்யக்ஷ ஜ்ஞாநமாவது கண் முதலான இந்த்ரியங்களால் உண்டாவது என்று விளக்கப்பட்டது. இப்பொழுது அவை க்ரஹிப்படும் ப்ரகாரம் விளக்கப்படுகிறது. முதலில் ஆத்மா மனதோடு சேருகிறது, மனம் இந்த்ரியத்தோடு சேருகிறது, இந்த்ரியம் கடம் முதலான வஸ்துக்களோடு சேருகிறது. இப்படி ஐந்து விதமான ப்ரத்யக்ஷ ஜ்ஞாநங்கள் உண்டாகின்றன, கண், மெய், நாக்கு, செவி, மூக்கு என்ற ஐந்து இந்த்ரியங்கள் வாயிலாக அவை உண்டாகின்றன.
    • இதனால் தான் மனம் ஒன்றாவிட்டால் இந்த்ரியங்கள் அதன் வேலையைச் செய்தாலும் நம்மால் க்ரஹிக்க இயலவில்லை. இதனை அனுபவத்திலேயே உணரலாம். நாம் மனம் செலுத்தாவிட்டால், எதிரில் நடந்து வரும் நமக்குத் தெரிந்த நபரையே அறியாமல் சென்று விடுவோம்.
    • இப்படி ஒரு த்ரவ்யத்தை அறியும் பொழுது அதற்கும் இந்த்ரியத்திற்கும் ஸம்பந்தம் ஸம்யோகம். அந்த த்ரவ்யத்தை ஆச்ரயித்திருக்கும் ரூபம் முதலான குணங்கள் அறியும் பொழுது அந்த ஸம்பந்தம் – ஸம்யுக்தாஶ்ரயணம்.
    • வைசேஷிகர்கள் ரூபம் முதலான குணங்கள் ஸமவாயம் என்பதினால் சேர்ந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். எம்பெருமானார் தரிசனத்தில் ஸமவாயம் அங்கீகரிக்கப் படவில்லையாதலால், அது ஸம்யுக்தாஶ்ரயணம் ஆகிறது.
    • ஸமவாயம் என்பது ஒரு ஸம்பந்தம் – அதை ஒரு பொருளானது, அதன் ஆதாரத்தை விட்டுப் பிரியாமல் இருந்தால் அந்த தொடர்பு ஸமவாயம் என்பது வைசேஷிகர்களின் கொள்கை. இதிலுள்ள குறைகள்/தோஷங்கள் ஸ்ரீ பாஷ்யத்தில் மஹத்தீகாதிகரணத்தில் காட்டப்பட்டுள்ளது.
    • ——–
    • நிர்விகல்பகஸவிகல்பகபின்னம் ப்ரத்யக்ஷம் த்விவிதம், அர்வாசீனமநர்வாசீனம் சேதி | அர்வாசீனம் புனர்த்விவிதம், இந்திரியஸாபேக்ஷம் ததநபேக்ஷம் சேதி | ததநபேக்ஷம் த்விவிதம் – ஸ்வயம்ஸித்தம்திவ்யம் சேதி | ஸ்வயம்ஸித்தம்-யோகஜந்யம், திவ்யம் பகவத்ப்ரஸாதஜந்யம் அநர்வாசீனம் து, இந்த்ரியாநபேக்ஷம் நித்யமுக்தேஶ்வரஞானம் | அநர்வாசீனம் ப்ரஸங்காதுக்தம் | ஏவ ஸாக்ஷாத்காரிப்ரமாகரணம் ப்ரத்யக்ஷமிதி ஸித்தம் |
    • நிர்விகல்பகம், ஸ்விகல்பகம் என இரண்டு வகையான ப்ரத்யக்ஷமானது – (1) தாழ்ந்தது, (2) உயர்ந்தது என இரண்டு வகைப்படும்.
    • தாழ்ந்தது என்பது இந்த்ரியத்தைக் கொண்டு உண்டாவது, இந்த்ரியம் இல்லாமல் உண்டாவது என்று இருவகைப்படும். இந்த்ரியமில்லாமல் உண்டாவது என்பதும் தானே உண்டாவது (ஸ்வத ஸித்தம்), திவ்யம் (எம்பெருமானால் உண்டாவது) என்றும் இருவகைப்படும். தானே உண்டாவது – யோகத்தினால் உண்டாவது. திவ்யம் ஆவது எம்பெருமானின் அனுக்ரஹத்தினால் உண்டாவது.
    • யோகிகளின் ப்ரத்யக்ஷமாவது (ஸ்வத ஸித்தமாவது) – யோகாப்யாஸத்தாலோ, அல்லது தபஸினாலோ உண்டாகிறது. ஆகையினாலே இவர்களால் வேறு லோகத்தில் நடப்பவை ப்ரத்யக்ஷமாகப் பார்க்கப்படுகிறது.
    • திவ்யம் என்பது தேவனால் அளிக்கப்படுவது. தேவன் என்பது எம்பெருமானே. திவ் க்ரீடாதௌ என்கிற தாது ஸித்தமான அர்த்தம் எம்பெருமானையே குறிக்கும். இதுவே “மயர்வற மதிநலம் அருளுவது” (திருவாய் 1-1-1). பகவத் கீதையிலே இது தன்னையே [திவ்யம் ததாமி தே சக்ஷு:] (11-8) என்றருளினான்.
    • இங்கு ஸ்வாமி எம்பெருமானார் வ்யாக்யானம் – [தவ திவ்யம் – அப்ராக்ருதம் மத்தர்சனஸாதனம் சக்ஷுர்ததாமி] என்பது நினைக்கத்தக்கது.
    • அநர்வாசீநமாவது இந்த்ரியங்களின் உதவியில்லாமல் வரும் அறிவு. இது பகவானுக்கும், நித்யர்களுக்கும், முக்தர்களுக்கும் உள்ளது. இது ப்ரஸங்காத் சொல்லப்பட்டது.
    • உபநிஷதானது [அபாநிபாதோ ஜவனோ க்ருஹீதா பச்யத்யசக்ஷு: ஸ ச்ருநோத்யகர்ண:] என்றது. அதாவது எம்பெருமானுக்கு ஒரு பொருளை எடுப்பதற்குக் கைகள் தேவையில்லை. கண்கள் பார்ப்பதற்கு அவசியமில்லை. அவனது திருவருளால், முக்தியடைந்தார்க்கும் இது கலங்காப்பெருநகரம் என்னும் பரமபதம் அடைந்தவுடன் இது ஸம்பவிக்கிறது.
    • ஸ்வாமி கூரத்தாழ்வான் தம்முடைய வரதராஜஸ்தவத்தில் 24-வது ஶ்லோகத்தில் இந்த விபூதியிலே பேரருளாளப் பெருமாளை இவ்விதம் அவனது திருவருளால் இந்த்ரியங்களின் அடைவுகெட அனுபவிக்க ஆசைப்பட்டதும் இந்த ரீதியிலே – முக்தி தசையில் அனுபவிக்கப் படுவதை இங்கு அனுபவிக்க ஆசைப்பட்டார்
    • நநு யதாவஸ்திதவ்யவஹாரானுகுணம் ஞானம் ப்ரமேதி உக்தம் | ஏவம் ச ஸ்ம்ருதேரபி யதாவஸ்தித வ்யவஹாராணுகுணஞாநத்வேன ப்ராமாண்யாத் ஸ்ம்ருதேரபி ப்ரமாணத்வேன பரிகணனாத் த்ரீந்யேவ ப்ரமாணானி இதி கதம் ப்ரதிபாத்யதே இதி சேத்; உச்யதே – ஸ்ம்ருதே: ப்ராமாண்யாங்கீகாரேSபி ஸம்ஸ்காரஸாபேக்ஷத்வாத், தஸ்ய ப்ரத்யக்ஷமூலத்வாத் மூலபூதப்ரத்யக்ஷேSந்தர்பாவ: இதி ந ப்ருதக்ப்ரமாணத்வகல்பனம் | அத: த்ரீண்யேவேதி ஸம்பவதி ||
    • இப்பொழுது ஸ்ம்ருதி என்பது தனி ப்ரமாணம் அல்லவா? என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு முன்பு ஸ்ம்ருதி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஸ்ம்ருதியாவது ஒரு வஸ்துவை முன் அனுபவித்ததால் எழும் ஜ்ஞானம் ஆகும். அதாவது முன் அறிந்ததை மறுபடியும் நினைத்துக் கொள்வது.
    • இப்பொழுது மூலம் விளக்கப்படுகிறது. – ஒரு வஸ்துவை உள்ளது உள்ளபடி அறிவது ப்ரமா என்று சொல்லப்பட்டது. அப்படிக் கொண்டால் ஸ்ம்ருதியும் ஒரு ப்ரமாணமாகும். அப்படி இருக்கும் பொழுது, ப்ரமாணங்கள் மூன்று தான் என்று சொல்வது எப்படி என்று கேட்டால்?
    • பதில் சொல்கிறோம். ஸ்ம்ருதியை ப்ரமாணம் என்று அங்கீகரிப்பதற்குக் காரணம் ஸம்ஸ்காரம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் ப்ரத்யக்ஷத்தாலே உண்டாகிறது. எனவே ஸ்ம்ருதியை தனி ப்ரமாணமாகக் கொள்ள வேண்டியது இல்லை – அது ப்ரத்யக்ஷத்திலேயே அடங்கி விடுகிறது.
    • ஸம்ஸ்காரம் என்பது கீழே விளக்கப்படுகிறது.
    • ஸ்ம்ருதிர்நாம பூர்வானுபவஜன்யஸம்ஸ்காரமாத்ரஜன்ய ஞானம் | தத்ர சோத்புத்த: ஸம்ஸ்காரோ ஹேது: | ததுத்போதச்ச “ஸத்ருஷ-அத்ருஷ்ட – சிந்த்யாத்யா:” இத்யுக்தப்ரகாரேண க்வசித் ஸத்ருஷதர்ஷநாத் பவதி, க்வசித் அத்ருஷ்டாத், க்வசிச்சிந்தயா | ஆதிஶப்தேந ஸாஹசர்யஸ்யாபி க்ரஹநாத்தேனாபி ச பவதி | ஸாத்ருஶ்யஜா யதா – தேவதத்தயஞ்தத்தயோ: ஸத்ருஶயோர்தேவதத்ததர்ஷன யஞ்தத்தஸ்ம்ருதி: | த்விதீயா யதா – யாத்ருச்சிக காலான்தரானுபூத ஸ்ரீரங்காதி திவ்யதேஶஸ்ம்ருதி: | த்ருதீயா யதா சிந்த்யமானே ஸ்ரீவேங்கடேஸஸ்ய கமனீயதிவ்யமங்கலவிக்ரஹஸ்ம்ருதி: | சதுர்தீ து – ஸஹசரிதயோர்தேவதத்தயஞதத்தயோர்மத்யே அந்யதரதர்ஷநேன ததந்யதரஸ்ம்ருதி: | ஸம்யகனுபூதஸ்ய ஸர்வஸ்ய ஸ்ம்ருதிவிஷயத்வநியம: | க்வசித் காலதைர்த்யாத் வ்யாத்யாதினா வா ஸம்ஸ்காரஸ்ய ப்ரமோஷாத் ஸ்ம்ருத்யபாவ: |
    • ஸ்ம்ருதி என்பது முன் அநுபவத்தினால் உண்டான ஸம்ஸ்காரத்தினால் மட்டும் உண்டாகும் ஜ்ஞானம். இதற்கு ஸம்ஸ்காரம் தான் முக்கிய காரணம் ஆகும். அந்த ஸம்ஸ்காரம் வருவதற்கு காரணங்கள்
    • ஒற்றுமை,
    • அத்ருஷ்டம்,
    • சிந்தை
    • சில சமயங்களில் முன்பு பார்க்கப்பட்ட வஸ்துவிற்கும், இப்பொழுது பார்க்கப்படுகிற வஸ்துவிற்கும் இருக்கும் ஒற்றுமையினாலும், சில சமயங்களில் அத்ருஷ்டத்தாலும், சில சமயங்களில் சிந்தையினாலும் உண்டாகிறது. “ஆதி” ஶப்தத்தால் ஸாஹசர்யம் சொல்லப்பட்டது. இவற்றுக்கு உதாரணங்கள்
    • (1) ஒருவருக்கொருவர் ஒப்பாக உள்ள தேவதத்த யஜ்ஞதத்தர்களுள் தேவதத்தனைப் பார்க்கும் பொழுது, வரும் யஜ்ஞதத்தனின் நினைவு.
    • (2) யாத்ருச்சிகமாக வேறு காலத்தில் அநுபவித்த ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேஶங்களின் நினைவு,
    • (3) சிந்திக்கும் பொழுது தோற்றும் ஸ்ரீவேங்கடேசனுடைய ரம்யமான திருமேனியின் நினைவு.
    • (4) எப்பொழுதும் சேர்ந்தே பார்க்கப்பட்ட தேவதத்தன், யஜ்ஞதத்தன் ஆகியவர்களில், தேவதத்தனைப் பார்க்கும் பொழுது வரும் யஜ்ஞதத்தனின் நினைவு. இதற்கும் (1) வித்யாஸம் உள்ளது. முதலாவது ஆகார ஒற்றுமை (உருவ ஒற்றுமை) யினால் உணர்த்தப்படுவது. இங்கு யானையையும் அதன் பாகனையும் சேர்த்தே பார்த்த ஒருவனுக்கு, யானையைக் கண்டவுடன் வரும் பாகனின் நினைவு.
    • நன்றாய் அநுபவிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நினைவுக்கு வராமல் இருக்காது. ஆனால் நீண்ட காலமாவதாலும், வ்யாதி முதலியவைகளாலும் ஸம்ஸ்காரம் மழுங்கிப் போவதால் நினைவுக்கு வருவதில்லை.
    • யதா ஸ்ம்ருதே: ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ஏவம் “ஸோSயம் தேவதத்த: ” இதி ப்ரத்யபிஜ்ஞா அபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: ||
    • எப்படி ஸ்ம்ருதியானது ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறதோ, அப்படியே “இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன், முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தன் தான்” என்னும் ப்ரத்யபிஜ்ஞாவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது.
    • இந்த ப்ரத்யபிஜ்ஞா என்பது நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானம், ஸ்ம்ருதி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. எல்லாவற்றிற்கும் ஆகாரம் பொதுவானது என்றறிவது ஸவிகல்பக ஞானம். ஸ்ம்ருதியின் ஸம்ஸ்கார காரணங்கள் (நான்கு) கீழே விளக்கப்பட்டன. ப்ரத்யபிஜ்ஞா என்பது முன்னொரு காலத்தில் வேறிடத்தில் பார்க்கப்பட்ட தேவத்தத்தனே, இந்தக் காலத்தில் இங்கு பார்க்கப்பட்ட தேவத்தத்தன் என்னும் ஞானம்.
    • அஸ்மந்மதே அபாவஸ்ய பாவந்தர ரூபத்வாத்தஸ்யாபி ப்ரத்யக்ஷேSந்தர்பாவ: | கடப்ராகபாவோ நாம ம்ருதேவ | கடத்வம்ஸச்ச கபாலமேவ | ப்ராய: புருஷேநாநெண பவிதவ்யமித்யேதத் ஊஹ: | ஸம்ஸய உக்த: || தயோரபி ப்ரத்யக்ஷே அந்தர்பாவ: | புண்யபுருஷநிஷ்டா ப்ரதிபாபி ப்ரத்யக்ஷேSந்தர்கதா ||
    • பரம வைதிக மதமான எம்பெருமானார் தரிசனத்தில், அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தமாகக் கொள்ளப்படவில்லை. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. வைசேஷிகர்களான தார்க்கிகர்கள் அபாவம் என்பது ஒரு தனி பதார்த்தம் என்றும், அது ப்ராகபாவம் (இல்லாமை), ப்ரத்வம்ஸாவாம் (த்வம்ஸமாகை) என்றும் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு குடம் செய்வதன் முன்பு அது காணப்படாது – அது ப்ராகபாவம்; அது உருவாகி உடைந்த பின்பும் அது காணப்படாது – அது ப்ரத்வம்ஸாவாம் என்கிறார்கள்.
    • இது கல்பிப்பதே – ப்ராகபாவம் – மண்கட்டி (குடம் ஆவதன் முன்); ப்ரத்வம்ஸாவாம் – கபாலங்கள்.
    • அதே போன்று ஊஹமும் (ஒரு வஸ்துவில் கால்/கை அசைவதால் அவன் மனிதனே என்பது) ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ஸம்ஸயம் என்பது கீழே விளக்கப்பட்டது. அதுவும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது.
    • புண்ணியம் புரிந்த ஒரு புருஷனிடத்தில் இருக்கிற ப்ரதிபையும் ப்ரத்யக்ஷத்தில் அடங்கி விடுகிறது. ப்ரதிபையாவது ஒரு மலை, நதி ஆகியவைகளைக் கண்டால் மேன்மேலும் அதைப் பற்றித் தோன்றும் ஞானம்.
    • ————
    • “யதார்தம் ஸர்வவிஜ்ஞானமிதி வேதவிதாம் மதம்” இத்யுக்தத்வாத் ப்ரமாதி ப்ரத்யக்ஷஞானம் யதார்தமேவ, அக்யாதி – ஆத்மக்யாதி – அநிர்வசனீயக்யாதி – அன்யதாக்யாதி வாதினோ நிரஸ்ய ஸத்க்யாதி பக்ஷஸ்வீகாராத் | ஸத்க்யாதிர்நாம ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தர்ஹி ப்ரமத்வம் கதமிதி சேத், விஷயவ்யவஹாரபாதாத் ப்ரம: | ததுபபாதயாம: – பஞ்சீகரணப்ரக்ரியா ப்ருதிவ்யாதிஷு ஸர்வத்ர ஸர்வபூதானாம் வித்யமானத்வாத், அத ஏவ ஶுக்திகாயாம் ரஜதாம்ஶஸ்ய வித்யமானத்வாத் ஞானவிஷயஸ்ய ஸத்யத்வம் | தத்ர ரஜதாம்ஶஸ்ய ஸ்வல்பத்வாத்து ந வ்யவஹார இதி தஞ்ஞானம் ப்ரம: | ஶுக்தயம்ஸபூயஸ்த்வஞானாத் ப்ரமநிவ்ர்த்தி: |
    • இதுவரையில் ப்ரத்யக்ஷத்தின் லக்ஷணம் மற்றும் அவற்றின் பிரிவுகள் ஆகியவற்றை விசாரித்துவிட்டு, இப்பொழுது ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தால் அறியப்படுபவற்றின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறார். ஸர்வவிஜ்ஞானம் – அனைத்து ஞானங்களும்; யதார்த்தம் – யதார்த்தமே – வஸ்துக்களை உள்ளபடி காட்டுகின்றன; இதி வேதவிதாம் மதம் – என்று வேதம் அறிந்தவர்களுடைய, ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் ஆகியோருடைய மதம் – என்று ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் அருளியுள்ளார்.
    • ஸ்ரீமந்நாதமுனிகள் தம்முடைய ந்யாய தத்வத்தில் – [ஷஷ்டீம் சேயம் க்யாதியதார்த்தக்யாதி] என்றருளியுள்ளார்.  அதாவது (1) அஸத்க்யாதி, (2) ஆத்மக்யாதி, (3) அநிர்வசநீயக்யாதி, (4) அந்யதாக்யாதி, (5) அக்யாதி என்று 5 விதமான க்யாதிகள் இல்லாமல் ஆறாவதான யதார்த்தக்யாதி என்பதே நம் ஆசார்யர்களால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.
    • குறிப்பு – இப்போது சில விஷயங்கள் அறிந்து கொள்வது, மேல் விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அவசியம் ஆகிறது.
    • ஶுக்தி எனப்படும் முத்துச் சிப்பியை சில சமயம் தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது – அது வெள்ளி போன்று தோன்றுகிறது. பின்பு நெருங்கிச் சென்று அதை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளியன்று என்று ப்ரமம் நீங்கி விடுகிறது. இதை பலவாறாகப் பல மதங்களிலே கொண்டுள்ளார்கள்.
    • (1) அஸத்க்யாதி,
    • இது மாத்யாமிகனுடைய மதம் சார்ந்தது. ஜ்ஞானமும் ஆகட்டும், வெளியிருக்கிற வஸ்துக்களாகட்டும் ஒன்றும் இல்லை – சூந்யம் தான் உள்ளது. அஸத் தோன்றுவதால் இது அஸத்க்யாதி என்னப்பட்டது.
    • (2) ஆத்மக்யாதி
    • இது பௌத்தர்களுடையதாகும் (யோகாசாரர்களுடையது). ஆத்மாவான ஞானம் ஒன்று தானிருக்கிறது. இது வஸ்துவை க்ரஹிக்கும் பொழுது, வஸ்துக்கள் இல்லை. ஜ்ஞானம் தான் இவைகள். ஜ்ஞானம் இல்லாத பொழுது இவை தோன்றவில்லையே! ஆகவே ஜ்ஞானமே ப்ராந்தியால் விஷயமாகத் தோன்றுகிறது என்பது இவர்கள் கொள்கை.
    • (3) அநிர்வசநீயக்யாதி,
    • இது அத்வைதிகளின் பக்ஷம். முத்துச்சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியானது ப்ரத்யக்ஷமாய் இல்லை. கடையில் இருக்கும் வெள்ளி ப்ரத்யக்ஷமாகத் தோன்றாது. இது தன்னை ஸ்ம்ருதி என்றும் சொல்ல முடியாது. எனவே சிப்பியில் வெள்ளி தோன்றும் பொழுது, அது எல்லாராலும் கடையில் காணப்படும் வெள்ளியினைக் காட்டிலும் அவித்யையின் மஹிமையால் வேறொரு வெள்ளி உண்டாகிறது. இது இப்படி என்று சொல்ல முடியாதாகையாலே இது அநிர்வசநீயம் என்னப்பட்டது. இது ப்ரஹ்ம வ்யதிரிக்தமான பதார்த்தம் (ப்ரஹ்மத்தைத் தவிர்த்த வேறு பதார்த்தம்) ஆகையாலே இதை ஸத் என்றும் சொல்லமுடியாது (அவர்கள் கொள்கைப்படி ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம்), தோன்றுவதால் அதை அஸத் என்றும் சொல்லமுடியாது
    • (4) அந்யதாக்யாதி,
    • இது தார்க்கிகர்களின் மதம் ஆகும். ஆபரணம் செய்வதற்கு உபயோகப்படும் வெள்ளியானது தோஷத்தாலே சிப்பியிலே தோன்றுகிறது. சிப்பியானது அந்யத்தாக (வேறாக) தோன்றுவதால் இது அந்யதாக்யாதி
    • (5) அக்யாதி
    • மீமாம்ஸகர்கள் மதம் அக்யாதி வாதத்தினை கொண்டுள்ளது. சிப்பியினைப் பார்த்து வெள்ளி என்று ப்ரமிக்கும் பொழுது,
    • இதம் (இது) என்றும் ரஜதம் என்றும் இரண்டு ஜ்ஞானங்கள்
    • இது என்பது ப்ரத்யக்ஷம் – கண்ணால் காண்பது.
    • ரஜதம் என்பது ஸ்ம்ருதி அல்லது ஸ்மரணம்.
    • இவை இரண்டின் பேதத்தை அறியாமையே ப்ரமம் (சிப்பியை வெள்ளி என்று எண்ணுவது).
    • இந்த பேத க்ரஹணம் இல்லாமையே அக்யாதி.
    • க்யாதி: பேத க்ரஹ: – க்யாதி (ஜ்ஞானம்) என்பது பேத க்ரஹணம்.
    • ததபாவ: – அக்யாதி – அது இல்லாமை அக்யாதி.
    • இவற்றுள் முதலாவதான அஸத்க்யாதிக்கு நிரதிஷ்டான க்யாதி என்றும் பெயர். அவர்கள் பக்ஷத்தில் தோன்றும் அனைத்தும் அஸத்.
    • ஆத்மக்யாதியும் நிலை நிற்காது. ஜ்ஞானமும் விஷயமும் சேர்ந்தே தோன்றுகிறது. அப்படித் தோன்றினாலும் அவை வெவ்வேறே! ஜ்ஞானமாவது வஸ்துவை க்ரஹிக்கிறது. “अहम् घटम् जानामि” என்பதால் நான் கடத்தை அறிகிறேன் என்னும்பொழுது, அறியக்கூடிய ஜ்ஞானமும் அறியப்பட்ட கடமும் ஒன்றாக ஆகமுடியாது.
    • அநிர்வசநீயமும் ஸத்தா அஸத்தா என்று கேட்டால் அதுவும் நிற்காது. அநிர்வசநீயம் என்பது எப்படி அறியப்படுகிறது? இன்னதென்று சொல்ல முடியுமா என்று கேட்டால் – ஆம் என்று விடையளிப்பார்களாயின், அது அநிர்வசநீயமே அன்று. இல்லை என்றால் – அஸத்தான ஒன்றைக் கொண்டு நிர்வாஹம் செய்ய முடியாதாகையாலே, அதுவும் தள்ளுண்டதாகும்.
    • எனவே மீமாம்ஸகர்களுடைய விளக்கத்தையோ அல்லது தார்க்கிகர்களின் விளக்கத்தையோ கொண்டு தான் மேல் விவரிக்க வேண்டும். இதில் அக்யாதி எனப்படும் மீமாம்ஸகர்களின் கொள்கையானது அனுபவத்திற்க்கும், நமது மதத்திற்க்கும் ஒத்து வருகிறது.
    • யதார்த்தக்யாதி
    • இனி நாம் நம் ஆசார்யர்கள் கொண்ட யதார்த்தக்யாதி எனப்படும் ஸத்க்யாதியினைப் பார்க்கலாம்.
    • தூரத்தில் இருந்து சிப்பியினைப் பார்க்கும் பொழுது, வெள்ளியினுடைய அம்சமான பளபளப்பு தோன்றுகிறது.
    • சிப்பியில் இந்த அம்சம் தோன்றுவதன் காரணம் பஞ்சீகரணம் ஆகும். (பஞ்சீகரணம் மேலே விளக்கப்படுகிறது).
    • இதனால் இது வெள்ளி என்று நினைத்து அதை ஒருவன் எடுத்துக் கொள்ள எத்தனிக்கிறான்.
    • அருகில் பார்த்ததும், அது சிப்பி (வெள்ளியின் அம்சம் குறைவானது) என்பது தெரிந்து கொள்கிறான்.
    • இதில் அனைத்து ஜ்ஞானமும் உண்மையே. பின்பு ஏன் சிப்பியினை வெள்ளி என்று கொள்வதில்லை என்றால் – அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் வ்யவஹாரம் பாதிக்கப்படுகிறது.
    • பஞ்சீகரணம்
    • பஞ்சீகரணமாவது ப்ருத்வியாதி ஐந்து பூதங்களிலும் மற்ற நான்கு பூதங்களை 50% சேர்ப்பது. உதாரணத்திற்கு ஆகாசம் என்னும் பூதத்தில் ஆகாசம் 50 சதவிகிதமும், மற்றைய பூதங்கள் (அக்னி, வாயு, நீர், ப்ருதிவீ) சேர்ந்து 50% உள்ளன. ஒவ்வொரு பூதத்தில் நின்றும் 1/8 பங்கு பிற பூதங்களில் உள்ளன. இந்த பஞ்சீகரணம் ஸ்ருஷ்டிக்கு அவசியமாகிறது.
    • இங்குக் கீழே ஆகாசம் காட்டப்பட்டுள்ளது. இது போன்றே பிற பூதங்களையும் கொள்ள வேண்டியது.
    • இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகள் தத்வத்ரயம் – 116 சூர்ணிகையில் ” ஆகாசாதி பூதங்களைந்தையும் தனிதனியே இரண்டு கூறுகளாக்கி, அவற்றிலே ஒரு கூறை நாலு கூறுகளாக்கி, அந்தக் கூறுகளை பூதாந்தரங்களிலே கூட்டி, ஸர்வ பூதங்களிலும் ஸர்வமுண்டாம்படி பண்ணுகை.” என்றருளியுள்ளது நோக்கத் தக்கது.
    • இனி மூலத்தில் உள்ளபடி விளக்கப்படுகிறது.
    • ஸத்க்யாதி என்றால் ஜ்ஞானத்தின் ஸத்யத்வம். ஜ்ஞானம் ஸத்யம் என்றால், ப்ரமம் எப்படி உண்டாகிறது என்னில், ப்ரமமானது வ்யவஹாரத்தைப் பாதிப்பது. அதாவது சிப்பியில் சிறிதளவு பார்த்திபாம்சம் இருப்பதனால், அதை வெள்ளி என்று பார்க்கும் ஜ்ஞானம் ஸத்யமாய் இருந்தாலும், அதில் வெள்ளியின் அம்சம் குறைவாக இருப்பதினால் அதை வெள்ளி என்று வ்யவஹரிப்பதை (அதைக் கடையில் கொடுத்து ஆபரணம் ஆக்க முடியாது) பாதிக்கிறது.
    • பஞ்சீகரணப் ப்ரக்ரியையினாலே ஸர்வ பூதங்களிலும் மற்ற பூதங்கள் அம்சம் சிறிதளவு கலந்து இருப்பதினால் சிப்பி, வெள்ளி போன்று தோற்றம் அளிக்கிறது. அந்த ரஜதாம்சம் ஸ்வல்பம் என்று அறியாமல் இருப்பது ப்ரமம். அதை அறிவது ப்ரம நிவ்ருத்தி ஆகும்.
    • ஸ்வப்நாதிஞானம் து ஸத்யமேவ | தத்தத்புருஷானுபாவ்யதயா தத்தத்காலாவஸானாந் ரதாதீந் பரமபுருஷ: ஸ்ரூஜதீதி ஹி ஶ்ருத்யா அவகம்யதே |
    • இனி சிப்பியில் வெள்ளி தோன்றுவது போல இருக்கும் வேறு சிலவற்றை நிர்வஹித்தருளுகிறார். ஸ்வப்நத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களும் உண்மையே. அந்த அந்த புருஷர்களின் புண்யபாபங்களுக்கு ஏற்ப, எம்பெருமான், அவன் மட்டும் அனுபவிக்குமாறு அவற்றை ஸ்ருஷ்டிப்பதாலே.
    • ஸ்வப்ன காலத்தில் ரதங்களோ, குதிரைகளோ, பாதைகளோ இல்லை, அந்த சமயம் ரதங்களையும், குதிரைகளையும், பாதைகளையும் (ஸவப்னம் அனுபவிப்பவன் மட்டும் பார்க்கும் படி ஈஶ்வரன் ஸ்ருஷ்டிக்கிறான் – அவனல்லவோ ஸர்வ கர்த்தா – என்னும் ப்ருஹதாரண்ய உபநிஷத்தை திருவுள்ளத்தில் கொண்டு ஶ்ருத்யா அவகம்யதே என்றார்.
    • பீதஶ்ஶங்க இத்யாதௌ நயநவர்திபித்தத்ரவ்யஸம்பின்னா நாயனரச்மயஶ்ஶங்காதிபி: ஸம்யுஜ்யன்தே: | தத்ர பித்தகதபீதிமாபிபூதச்ஶங்ககதஶுக்லிமா ந க்ருஹ்யதே | அத: ஸுவர்ணானுலிப்தச்ஶங்கவத் “பீதஶ்ஶங்க:” இதி ப்ரதீயதே | ஸுக்ஷ்மத்வாத் பீதிமா ஸ்வநயநநிஷ்க்ராந்ததயா ஸ்வேநைவ க்ருஹ்யதே, நத்வன்யை: |
    • வெண்மையான ஶங்கம் மஞ்சளாகத் தோற்றுவது இந்த்ரியத்தின் தோஷத்தாலே. கண்ணில் இருக்கும் பித்தத்துடன் கலந்த சக்ஷுரிந்த்ரியத்தின் கிரணங்கள் க்ரஹிப்பதால் அவனுக்கு மாத்திரம் வர்ணம் மஞ்சளாகத் தெரிகிறது.
    • ஜபாகுஸுமஸமீபவர்திஸ்படிகமநிரபி ரக்த இதி க்ருஹ்யதே | தத்ஞானம் ஸத்யமேவ |
    • செவ்வரத்தம்பூவின் பக்கத்திலுள்ள ஸ்படிகம் சிவப்பாக அறியப்படுவதும் ப்ரமை தான். பூவிலுள்ள சிவப்பு வர்ணம் ஸ்படிகத்தின் வெண்மையை மறைத்துவிடுகிறது
    • மரீசிகாயாம் ஜலஞானமபி பஞ்சீகரணப்ரக்ரியயா பூர்வோக்தவதுபபத்யதே | பஞ்சீகரணப்ரக்ரியா து உத்தரத்ர வக்ஷ்யதே |
    • கானல் நீர் தோற்றுவதும் முன்பு சொன்ன பஞ்சீகரணத்தாலே. பஞ்சீகரண ப்ரக்ரியை முன்பு விளக்கப்பட்டது.
    • திக்ப்ரமோபி ததைவ. திஷி திகந்தரஸ்ய வித்யமானத்வாத் அவச்சேதக-மன்தரேன திகிதி த்ரவ்யான்தரானங்கீகாராச்ச |
    • ஒரு திக்கை வேறு திக்காக எண்ணுவதும் அப்படியே. திக்கு என்பது வஸ்துவின் இடத்தைப் பொறுத்து மாறுவதாலும்.
    • அலாதசக்ராதௌ து ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹநாத்தத்தத்தேஸஸம்யுக்த தத்தத்வஸ்துந ஏவ சக்ராகாரேந க்ரஹணம் | ததபி ஸத்யமேவ |
    • ஒரு கொள்ளிக்கட்டையை வேகமாகச் சுற்றும் பொழுது இடைவெளி தோன்றாமல் அது சக்ரமாகத் தோன்றுகிறது. அதனாலே ஒரு சக்ரமாகப் பார்க்கப்பட்டதும் உண்மையில் இருப்பது தான்.
    • தர்பணாதிஷு நிஜமுகாதிப்ரதீதிரபி யதார்தா | தர்பணாதிப்ரதிஹதகதயோ நாயநரஷ்மயோ தர்பணாதி க்ரஹநபூர்வகம் நிஜமுகாதி க்ருஹ்ணன்தி | தத்ராப்யதி ஶைக்ஹ்ர்யாதன்தராலாக்ரஹணாத்ததா ப்ரதீதி: |
    • கண்ணாடி முதலியவற்றில் தெரியும் முகமும் ஸத்யமே. கண்ணாடியில் பட்டு கண்ணில் இருந்து வரும் கிரணங்கள் திரும்பி வருகின்றன. முதலில் கண்ணாடியைப் பார்த்துப் பின் முகத்தைப் பார்க்கின்றன. இவை அனைத்தும் வேகமாக நடப்பதால் நம்மால் பிரித்து உணர முடியவில்லை. எனவே கண்ணாடியில் முகம் இருப்பது போன்று தோன்றுகிறது.
    • த்விசந்த்ரஞானதாவபி அங்குல்யவஷ்டம்ப திமிராதிபிர்நயனதேஜோகதிபேதாத் ஸாமக்ரீத்வயமந்யோந்யநிரபேக்ஷம் த்விசந்த்ரக்ரஹநஹேதுர்பவதி | ஸாமக்ரீத்வயம் பாரமார்திகம் | தேன த்விசந்த்ரஞானம் பவதி | அதஸ்ஸர்வம் ஞானம் ஸத்யம் ஸவிசேஷவிஷயம் ச; நிர்விஶேஷவஸ்துநோSக்ரஹணாத் ||
    • கண்ணில் விரலை வைத்துப் பார்த்தால் சந்த்ரன் இரண்டாகத் தெரிவது – கண்ணில் இருந்து புறப்படும் கிரணங்கள் இரண்டாகப் பிரிந்து தனித்தனியே போய் சந்த்ரனுடன் ஸம்பந்தப்படுகின்றன. ஆகையால் சந்த்ரன் இரண்டாகத் தெரிகிறது.
    • ஆகையால் எல்லா ஜ்ஞானங்களும் ஸத்யமாகவும், விசேஷணங்களுடன் கூடியே தான் இருக்கும் என்பது காட்டப்பட்டது. நிர்விசேஷ க்ரஹணம் என்பது ஸம்பவிக்காது.
    • ஏவம் பூதம் ப்ரத்யக்ஷம் ப்ரதமதோ பேதமேவ க்ருஹ்ணாதி | பேத இதி வ்யவஹாரே து ப்ரதியோக்யபேக்ஷா, ந து ஸ்வரூபே | தேநாவஸ்தான்யோந்யாஶ்ரயதோஷோSபி நாஸ்தி | உபர்யுபரி த்வபேக்ஷா அநவஸ்தா | பரஸ்பராபேக்ஷா அந்யோந்யாஶ்ரய: ||
    • வஸ்துக்களை க்ரஹிக்கும் பொழுது விஶேஷணங்களுடன் சேர்ந்தே க்ரஹிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. இந்த விஶேஷணம் அந்த வஸ்துவின் தர்மமாகவே இருக்கிறது. இதனை நையாயிகர்கள், அந்த வஸ்துவின் ஜாதியைக் காட்டிலும் வேறான பேதமாகக் கொண்டார்கள். உதாரணத்திற்கு ஒரு பசு மாட்டினை பார்க்கும் பொழுது அதன் ஜாதியான கோத்வம் (பசுவாயிருக்கும் தன்மை) என்பது விஶேஷணம். இதனை அவர்கள் வேறு பேதம் என்று கொள்கிறார்கள். அப்படிக் கொண்டால் அந்யோந்யாஶ்ரயணம், அநவஸ்தா என்கிற தோஷங்கள் வரும். எனவே அது கூடாது.
    • அந்யோந்யாஶ்ரயணம் – பசுமாட்டையும், வேறு ஒரு விலங்கு – ஆட்டினையும் எடுத்துக் கொள்வோம். இப்பொழுது அந்த விஶேஷணம் பேதம் என்று கொண்டால், அது ஆட்டில் இருந்து வேறுபட்டது என்று தெரிய ஆட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். ஆட்டின் விஶேஷணம் அறிய, அது மாட்டின் விஶேஷணத்தில் இருந்து வேறுபட்டது என்று அறிய மாட்டின் விஶேஷணம் அறிய வேண்டும். இப்பொழுது அறிந்து கொள்ள ஆரம்பித்ததே மாட்டின் விஶேஷணத்தைத் தான்!
    • அநவஸ்தா – ஆட்டின் விஶேஷணம் மாட்டைக் காட்டில் வேறாகில், அது மாட்டின் விஶேஷணத்தை காட்டிலும் வேறு என்றறிவதற்கு ஒரு பேதத்தையும், அதை மாட்டில் இருந்து வேறுபடுத்திக் காட ஒரு பேதத்தையும் கொள்ள வேண்டும். இது முடிவே இல்லாமல் போகும்
    • நநு தஶதத்வமஸி இத்யேததபி ப்ரத்யக்ஷம் கிம் நஸ்யாதிதி சேந்ந; த்வமிதேதஸ்ய ப்ரத்யக்ஷத்வேSபி தஶமோSஹமித்யேதஸ்ய வாக்யஜன்யத்வாத் | யதி தஶமோஹமித்யேதஸ்ய ப்ரத்யக்ஷவிஷயத்வம் தர்ஹி தர்மவாம்ஸ்த்வமித்யேத்ஸ்யாபி ப்ரத்யக்ஷத்வம் ஸ்யாத் | அங்கீகாரேSதிப்ரஸங்காத் | அத ஏவ தத்வமஸி இதி வாக்யஸ்ய நாபரோக்ஷஞானஜனகத்வம் ||
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்று கூறும் அத்வைதிகள் பக்ஷத்தினைக் கண்டிக்கிறார். தன்னை மறந்த 10 மூடர்கள் கதை எனப்படும் – அதாவது ஒரு ஆற்றினை பத்துப் பேர் கடக்கிறார்கள். ஆற்றினை கடந்த பின்பு அனைவரும் கடந்து விட்டோமா என்று பார்ப்பதற்க்காக அனைவரையும் எண்ணுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை எண்ணாமல் மற்ற 9 பேர்களை எண்ணி, ஒருவனைக் காணவில்லை என்று துக்கிக்கும் பொழுது – ஒரு அறிவாளி அதனைப் பார்த்து – நீ தான் அந்த பத்தாவது நபர் என்று அறிவுரை கூறியவுடன். நாம் பத்துப் பேர்கள் என்கிற ஜ்ஞானம் வந்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
    • அதுபோன்று தன்னையொழிந்த பதார்த்தங்கள் அனைத்தும் மித்யை என்று தெரியாத ப்ரஹ்மமானது, ஒரு ஆசாரியன் “தத்வமஸி” என்று உபதேசம் பெற்றவுடன் அந்த மித்யை நீங்கி, மோக்ஷம் அடைகிறான் எனவும், தத்வமஸி என்னும் வாக்ய ஜன்ய ஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் என்றும் கூறுகிறார்கள்.
    • வாக்ய ஜன்ய ஜ்ஞானம் என்றுமே ப்ரத்யக்ஷம் ஆக முடியாது. அப்படிக் கொண்டால் ப்ரமாணத்தின் வரைமுறையே போய்விடும். தனது வருங்காலத்தை தெரிந்து கொள்வதில் ஆசையுடைய ஒருவன் ஒரு ஜோஸ்யனிடம் சென்று பார்க்கிறான். அந்த ஜோஸ்யன் அவனை நோக்கி “நீ தர்மவானாக இருக்கிறாய்” என்றால் – இவர்கள் கொள்கைப்படி – தர்மவான் என்பது ப்ரத்யக்ஷம் ஆகிவிடும்!
    • ஏதேந ப்ரத்யக்ஷப்ரமாகரணம் ப்ரத்யக்ஷப்ரமாணம் | ப்ரமா சாத்மசைதன்யமேவ, சைதன்யம் ச த்ரிவிதம் – அந்த:கரணாவச்சிந்ந சைதன்யம், வ்ருத்த்யவச்சிந்ந சைதன்யம், விஷயாவச்சிந்ந சைதன்யம் சேதி | யதா த்ரயாணாமைக்யம் தா ஸாக்ஷாத்கார: | ஸோSபி நிர்விஶேஷவிஷய ஏவ, அபேதமேவ க்ருஹ்ணாதி-இத்யாதி குத்ருஷ்டிகல்பநா நிரஸ்தா | நிர்விகல்பகம் நாம ஜாத்யாதியோஜனாஹீனம் வஸ்துமாத்ராவகாஹி கிஞ்சிதிதமிதி ஞானமிதி நையாயிகாநாம் மதமபி நிரஸ்தம் |
    • இனி அத்வைதிகள், ப்ரமையாவது ஆத்மசைதந்யமாகும். அதுவும் மூன்று வகைப்படும்.
    • 1) அந்த:கரணத்தோடு சேர்ந்த சைதந்யம்,
    • 2) செயல்படும் சைதந்யம்,
    • 3) விஷயத்தோடு சேர்ந்த சைதந்யம்
    • எப்போது இந்த மூன்றும் ஒன்று சேருகின்றதோ, அப்போது ஸாக்ஷாத்காரம் உண்டாகிறது. அவ்வறிவும் பேதமின்மையே காட்டுகிறது. அதற்கு விஷயம் நிர்விஶேஷ ஜ்ஞானமாத்திரமான ப்ரஹ்மமேயாகும். என்பது அவர்கள் பக்ஷமாகும்.  இவையனைத்தும் ப்ரமாணத்திற்கு விருத்தமாகயாலே பொருந்தாது.
    • இவ்விடத்தில், ப்ரமாண விருத்தம் என்றதற்கு
    • [இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோSநுவிதீயதே – ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி]-2-67) விஷயங்களில் ஈடுபடும் இந்த்ரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி செய்யப்படுகிறதோ, அந்த மனம்  (சைதந்ய திரிவிதமோ அந்த:கரணமோ இங்கு அருளவில்லை என்பது )- என்கிற பகவத் கீதா வாக்யமும்,
    • ஸ்ரீ பாஷ்ய ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் மஹா ஸித்தாந்தத்தில் ஸ்வாமி பாஷ்யகாரர் ஸ்ரீஸுக்திகளையும்
    • திருவுள்ளம் பற்றி ப்ரமாணத்திற்கு விருத்தம் என்று அருளுகிறார்.
    • ஆத்மா வஸ்துக்களை க்ரஹிக்கிற விதம் கீழேயே அருளப்பட்டது.
    • இனி நையாகிகர்கள் (தார்க்கிகர்கள்) பக்ஷம் விலக்கப்படுகிறது. அவர்கள் பக்ஷத்தில் “நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் என்பது ஜாதி (ஜாதி என்றால் பசு மாடுகள் அனைத்தும் ஒரு ஜாதி, ஆடுகள் அனைத்தும் ஒரு ஜாதி என்பன போன்று) முதலான விசேஷணங்கள் இல்லாமல் வஸ்து மாத்திரத்தைத் தெரிவிக்கிறது” என்பதாகும். அதுவும் தள்ளப்பட்டது. நிர்விகல்பக/ஸவிகல்பக ஞானங்கள் கீழே விளக்கப்பட்டது காண்க.
    • நநு “காணாதம் பானிணீயஞ்ச ஸர்வஸாஸ்த்ரோபகாரத்வகம்” இத்யுக்த்வாத் கதம் கௌதமமதநிராஸ இதி சேத்; உச்யதே – நாஸ்மாபி: கார்த்ஸ்ன்யேனாஸ்ய மதஸ்ய நிராஸ: க்ரியதே, யாவதிஹ யுக்தியுக்தம், தாவத் ஸ்வீக்ரீயதே; பரகல்பிததடாகோபஜீவனவத் | ந கலு தடாகஸ்த: பங்கோSபி ஸ்வீக்ரீயதே | அத: பரமாணுகாரணத்வம், வேதபௌருஷேயத்வம், ஈஶ்வரானுமானிகத்வம், ஜீவவிபுத்வம், ஸாமான்யவிசேஷஸமாவாயானாம் பதார்தத்வேன ஸ்வீகார:, உபமானாதே: ப்ரமாணாத்வகல்பனம், ஸங்க்யாபரிமாநப்ருதக்த்வ பரத்வாபரத்வகுருத்வத்ரவத்வாதீனாம் ப்ருதக்குணத்வ கல்பனம், திஶோSபி த்ரவ்யத்வகல்பனம் இத்யாதிஸூத்ரகாராதிவிருத்தா ப்ரக்ரியா நாஸ்மாBஹி: ஸ்வீக்ரியதே | அவிருத்தானி ஸ்வீக்ரியந்தே இதி விரோத: |
    • காணாதரால் ப்ரவர்த்திப்பிக்கப்பட்ட தர்க்கமும், பாணினியை முதல்வராகக் கொண்ட வையாகரண மதமும் எல்லா ஶாஸ்த்ரங்களுக்கும் உபகாரம் செய்கின்றன என்று சொல்லி இருக்க – அம் மதங்களைத் தள்ளலாமா என்று கேள்வியை அனுவாதம் (அனுமதித்து) செய்து, அதற்கு உத்தரம் அருளுகிறார்.
    • வேதவிருத்தமான விஷயங்கள் அம்மதங்களில் இருப்பதினால் வைதிகர்கள் அம்மதங்களைக் கொள்ளமாட்டார்கள். அவைகளாவன,
    • ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம் என்று பொருட்களைக் கற்பிப்பது,
    • ஸங்க்யை, பரிமாணம், ப்ருதக்த்வம், பரத்வம், அபரத்வம், குருத்வம், த்ரவத்வம் – என்ற ஏழும் தனிக்குணங்கள்
    • வேதம் பரமபுருஷனால் செய்யப்பட்டது
    • பரமாணுக்கள் ஜகத் காரணம் என்பது
    • ஜீவனை விபு என்பது
    • உபமானம் முதலானவற்றை தனிப் ப்ரமாணம் என்பது
    • திக்கை தனி த்ரவ்யமாகக் கொள்வது
    • முதலான கொள்கைகளால் வேத விருத்தமானவற்றை ஆதரிப்பதால், வைதிகர்கள் அவற்றைக் கைக்கொள்ளார்கள். குளத்தில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தக்கதாயிருந்தாலும், அதில் உள்ள சேறு உபயோகப்படாதாப் போலே, அவர்கள் மதத்தில் உள்ள வேத விருத்தமில்லாதவற்றைக் கைகொள்ளலாம் என்பதே “ஸர்வஶாஸ்த்ரோபகாரகம்” என்பதின் விஷயமாகும்.
    • —–
    • ஆக இந்த முதல் அவதாரத்தால், ஸித்தாந்த ஸங்க்ரஹத்தை முதலில் சொல்லி, பின்பு, உத்தேச, லக்ஷண, பரீக்ஷா க்ரமத்தில் உத்தேசிக்கப்பட்ட பதார்த்தங்களின் பிரிவினைக் காட்டி, அதன் பின்பு முதலில் ப்ரத்யக்ஷத்தை விசாரிக்க ஆரம்பித்து, ப்ரமாணத்தின் லக்ஷணத்தைச் சொல்லி, ஸம்சய அந்யதா விபரீத ஜ்ஞானங்களை விவரித்து, லக்ஷணத்தின் தோஷங்களைக் காண்பித்து, அத்தோஷங்கள் கீழ்ச் சொன்ன லக்ஷணத்தில் இல்லை என்பது விளக்கியருளி, நிர்விகல்பகம் – ஸவிகல்பகம் ஆகியவற்றை விளக்கி, நிர்விகல்பகம் வஸ்து மாத்ரம் க்ரஹிப்பது அன்று என்று விளக்கியருளி, ப்ரத்யக்ஷ ஜ்ஞானம் உண்டாகும் விதத்தினைக் காட்டி, நிர்விகல்பக ஜ்ஞானத்தின் பிரிவுகள் காட்டியருளி, ஸ்ம்ருதி, ப்ரத்யபிஞை ஆகியவைகள் தனிப் ப்ரமாணம் அன்று – அவைகள் ப்ரத்யக்ஷத்தில் அடங்கிவிடுகிறது என்பதையும் காட்டி அபாவத்தின் அநங்கீகாரத்தையும் காட்டி, ஜ்ஞானங்கள் அனைத்தும் உண்மையே என்கிற ஸத்க்யாதி பக்ஷத்தைக் விளக்கியருளி, அதன் காரணத்தையும் காட்டி, வாக்யஜன்ய ஞானம் ப்ரத்யக்ஷம் அன்று என்பதையும் விளக்கியருளி, காணாதம் எனப்படும் ந்யாய மதம் முதலானவற்றை ஏற்காத காரணங்களையும் அருளிச் செய்து இந்த ப்ரத்யக்ஷ அவதாரத்தைத் தலைக்கட்டியருளுகிறார்.
    • முதல் அவதாரம் முற்றிற்று.
    • ————————-
    • ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    • ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    • ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    • ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸித்தி த்ரயம் -ஸ்ரீ ஸம்வித் ஸித்தி –ஸ்ரீ ஆத்ம ஸித்தி –ஸ்ரீ ஈஸ்வர ஸித்தி —

May 4, 2023

ஸ்ரீ வைஷணவ மரபில் ( சம்பிரதாயம் ); ஸ்ரீ நாதமுனி (Ca.823-951?), ஸ்ரீ யமுனாச்சார்யா (917-1042), மற்றும் ஸ்ரீ ராமானுஜர் (1017 முதல் 1137) ஆகியோர் முனித்ரயம் – என்று மிகவும் மதிக்கப்படுகிறார்கள் .

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ லக்ஷ்மி நாத சம ஆரம்பம்
நாத-யமுனா மத்யம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தம்
வந்தே குரு-பரம் பரம்

ஸ்ரீ யமுனாச்சார்யார் ஸ்ரீ நாதமுனியின் பேரன் என்று வர்ணிக்கப்படுகிறார்;
மற்றும், ஈஸ்வர பட்டா ஆழ்வான் மற்றும் ரங்கநாயகியின் மகனாக . அதில் கூறப்பட்டுள்ளது;
பன்னிரெண்டு வயது சிறுவனாக இருந்தபோதும், யமுனாச்சார்யார் கற்றறிந்தவனாகவும், புலமை வாய்ந்தவனாகவும், மிகுந்த பேச்சாற்றல் மிக்கவனாகவும் இருந்தார் .
அவரது காலத்தில் ஒரு மதிப்புமிக்க மற்றும் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விவாதத்தில்,
பிரகாசமான இளம் யமுனாச்சார்யார் , பாண்டிய அரச சபையின் அகங்காரமான ஆக்கியாழ்வானை தோற்கடித்தார்,
அனைத்து விவாதக்காரர்களுக்கும் ( பிரதி-வாதி-பயங்கரா ) பயங்கரமாக பயந்தார் .

மேலும், மிகவும் அஞ்சப்படும் எதிரியை வென்றதற்காக, நன்றியுள்ள சோழ ராணி (ஒருவேளை பராந்தக I 907 – 955 கிபி ராணியா?)
ஸ்ரீ யமுனாச்சார்யார்க்கு ஆளவந்தார் என்ற பட்டத்தை வழங்கினார் (மீட்பவர் அல்லது மீட்புக்கு வந்தவர்);
மேலும், மன்னரின் எல்லைக்குள் கணிசமான நிலத்தின் மீது அவருக்கு உரிமையும் வழங்கப்பட்டது.
இவ்வாறு, இளமைப் பருவத்தில் இருந்தபோதே, ஸ்ரீ யமுனா, ஐசுவரியத்தைத் தவிர, பெரும் சிறப்பை அடைந்தார்;
மற்றும், அவரது அறிவுத்திறன் மற்றும் விவாதத் திறமைக்கு புகழ்.
அதன்பிறகு, ஆரம்பத்தில், இளம் யமுனா, ஒரு குறுகிய காலத்திற்கு, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தினார் ;

அவர் பரம்பரையாக பெற்ற ஞானத்தின் மரபை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்.
மணக்கால்-நம்பி என்றும் அழைக்கப்படும் ராம மிஸ்ரரின் செல்வாக்கு, அறிஞரான புண்டரிகாக்ஷாவின்
(அவரே ஸ்ரீ நாதமுனியின் சீடர்களில் முதன்மையானவர்) தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர், இளம் யமுனாச்சார்யாரை எழுப்பியது;
அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த வழிகெட்ட வாழ்க்கையின் பயனற்ற தன்மையை அவருக்கு உணர்த்தியது.
அந்த இளைஞனிடம் புத்திசாலித்தனமாகப் பேசியவர் ராம மிஸ்ரர்; அவரது முதன்மையான பரம்பரை பற்றிய விழிப்புணர்வை அவருக்குள் தூண்டியது;
அவரது ஆன்மீக கடமைகளை அங்கீகரிக்க அவரைத் தூண்டியது;
மேலும், இறுதியில் அவரை நல்லொழுக்கத்தின் பாதையில் செல்ல வழி வகுத்தது .
ராம மிஸ்ரர் இளம் யமுனாச்சார்யாரின் ஆசிரியரானார்;
மேலும், வேத நூல்கள், மீமாம்சம் மற்றும் திவ்ய பிரபந்தம் போன்ற பிற நூல்களையும் கற்பித்தார் .

அதன்பிறகு; ராம மிஸ்ரர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது தாத்தாவின் வழிபாட்டுத் தலத்தை ஸ்ரீ யமுனாச்சார்யார் இடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகு, ஸ்ரீ யமுனாச்சார்யார் சன்யாசியாகி , புனித நகரமான ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்;
மேலும், தனது வாழ்நாள் முழுவதையும் வைணவ நம்பிக்கையின் பிரச்சாரத்திற்காக அர்ப்பணித்தார்;
மேலும், அவர் தனது ஆசிரியர் ராம மிஸ்ரர் மற்றும் அவரது பரம குரு ஸ்ரீ நாதமுனி ஆகியோரிடமிருந்து பெற்ற ஆன்மீக ஞானத்தைப் பரப்பினார் .

விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–8-

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

அவரது தாத்தா ஸ்ரீ நாதமுனி மற்றும் அவரது புகழ்பெற்ற வாரிசு ஸ்ரீ ராமானுஜரைப் போலவே,
ஸ்ரீ யமுனாச்சார்யாரும் சுமார் 120 ஆண்டுகள் மிகவும் பழுத்த முதுமை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீ யமுனாச்சார்யார் எட்டு மதிப்பு மிக்க படைப்புகளை எழுதியதாகக் கூறப்படுகிறது:
ஆத்மா-சித்தி ;
ஈஸ்வர-சித்தி ;
சம்வித்-சித்தி;
கீதார்த்த-ஸங்க்ரஹம் ;
புருஷ -நிர்ணய;
ஸ்தோத்ர-ரத்னம் ;
சதுஸ்-ஸ்லோகி;
மற்றும், ஆகம-பிரமாண்யம் .

—————-

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

———-

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப் படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்த மயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்ன மய, ப்ராண மய மனோ மயங்களுக்கு அவ் வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாந மயன் என்று காட்டியது.

ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம் பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மை நிலை பகவத் குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

————

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்ய ஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலை நாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்ம மீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலை நாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாத போது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வ கர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பல ப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
கருமமும் கரும பலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

————–

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.

மேலும் பரம் பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றிச் சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி –பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் —
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக — அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி –
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம ஸூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————-

ஈஸ்வர ஸித்தி
வேதைக சமைதி கம்யன்
அனுமானத்தால் மட்டும் சாதிக்க முடியாதே -ஸாஸ்த்ர யோநித்வாத் -1-1-3-

அநு மானிகி மாப்யாத்மா சித்திம் அஸ்ரத்தா தான ஸ்ரவ்தி மேவதம் ஸ்ரோத் ரியா சங்கிரந்தே

நனு ச கேவல தர்க பல தயம் யதி சிக்ஷ தயிஷ பதம் ஈஸ்வர
பவேது நம தத சதி துஷநம் ஸ்ருதி ஸிரஸ் ப்ரமிதோ ஹி மஹேஸ்வர –ஆகம ப்ரமாண்யம்

வேர் முதல் வித்து -இவனே த்ரிவித ஸர்வ காரணம்

————-

ஸம் வித் ஸித்தி

சதேவ சவும்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மன்
தத் ஸத்யம் ஸ ஆத்மா தத் த்வம் ஆஸீ ஸ்வேத கேதோ

நிர் விசேஷ நிர் தர்மக ஸம் வித் மாயா அவித்யா ஏக ஜீவ வாதம்
பேத ஸ்ருதிகள்
அபேத ஸ்ருதிகள்
கடக ஸ்ருதிகள்

ஸமான அதிக ராஹித்யன்
அகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை ஏக ஸ்தானம்
உபய லிங்க உபய விபூதி விஸிஷ்டன்

ஐத தாத்மியம் இதம் ஸர்வம் தத் ஸத்யம்
பிரகார பிரகாரீ பாவம்
சரீராத்ம பாவம்

ஸப்த வித அனுபபத்தி

ஸ்ரீ பாஷ்யம்—சப்த வித அனுபபத்தி -மகா பூர்வ பஷம்– மகா சித்தாந்தம்

அவித்யா -வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -நாம்
6 வித அர்த்தம் negative உண்டே
அப்ராஹ்மானம் கூட்ட வா
விதித்வா -ஞானம்
தமேவ -மிருதயம் தாண்டி மோஷம் அடைகிறான்
தமேவ வித்வான் அம்ருத ஏக பவதி நானன்ய பவதி
பக்தி ரூபானன்னா ஞானம்
ஞானம் யோகம் ஒன்றாலே மோஷம் அத்வைதிகள்
ஞான யோகம் நிராகாரமான
உபாசனம் இல்லையே அத்வைதிக்கு
ஒன்றே தான் உண்டு
ஏது அக்ஷரம் அநிர்தேஸ்யம் அவியக்தம் பர்யுபாஸதே
ஸர்வத்ரகம் அசிந்தியம் கூடஸ்தம் அசரம் துருவம்
ஸநியம்ய இந்திரிய கிராமம் ஸர்வத்ர சமபுத்தேர்
தே பிராபனுவந்தி மாமேவ ஸர்வபூத ஹிதே ரதா :கீதை 12 யோகம் -ஞான யோகம்
அவயகதம் உபாசனம் கிலேசம் சரமம் உண்டாகும்
துக்கத்தில் போய் முடியும்
பக்தி மார்க்கம் சொல்லி அருளுகிறான்

மர்கட கிசோர நியாயம்-குரங்கு குட்டி தானே அம்மாவைக் கட்டி கொண்டு தன ரஷணம் தனக்கு
மார்ஜுவர கிசோர நியாயம் -தானே கவ்வி கொண்டு போகும் பூனை
ஞானம் பக்தி மார்க்கம்
குழந்தை தாய் கை பிடிப்பதற்கும் தாய் குழந்தை பிடித்து போவதற்கும்
அவதாரணம்
பக்தி ரேவா முக்தி உபாயம் –
அவித்யா வித்யா பின்னம் வித்யா சத்ருசம் -கர்மம் தானே
ஞான கர்ம சமுச்சய வாதம் -நான்குவித பசங்கள் உண்டு
அங்க அங்கி பாவம் நம் சித்தாந்தம்
ஞானம் அங்கி
கர்மம் அங்கம் –

அத்வைதிகள் –
அவித்யை எனபது-கொண்டே சம்ப்ரதாயம்
அடித்தளம்
சாதகம் செய்ய -சாத்தியம் இல்லையே
ஆத்மா யாதாம்ய வித்யை அநாதாரிகம்
ஏழு அனுபபத்தி காட்டி -அருளி
அனுர்வசநீயம் -நிர்வசனம் நிர்வசநீயம் அவித்யை எப்படி பட்டது சொல்ல முடியாது
பர ப்ரஹ்மா அவித்யையால் ஜீவாத்மாவாக என்பதால்
அபூர்வமான பர ப்ரஹ்மம்
நாம ரூபம்
அநேன ஜீவனே – ஜீவாத்மா மூலமாக -சாதுர்முகன் மூலம் நாம ரூபம் வாயகரவாணி
காலம் –
எல்லா வஸ்துவும் வசநீயம் நீயமானம்

1-ஆஸ்ரய அனுபபத்தி முதல் அனுபபத்தி
நேதி நேதி மார்க்கம் நிராகாரா உபாசனம்-ஆழந்த சிந்தனை-கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் அறிய
உபநிஷத் சொல்வது எல்லாம் சகுண வித்யை தான்
உபாசனம் சொன்னாலே குணம் ஆகாரம் வேண்டுமே –

ஈசா வாச உபநிஷத் வித்யா அவித்யா
கர்மம் அர்த்தம் அங்கும்
ஈஸ்வர சர்வ பூதானம் ஈசான சீலன் நாராயண சங்கரர் அருளி –
நாராயண சப்தம் கொண்டே

ஸ்ரீ விஷ்ணு புராணம் 1-19-41-முக்கிய ஸ்லோகம்
ககனமான அர்த்தம்
கீதை ஷணம் தோறும்வேலை செய்து கொண்டே
சூஷ்ப்ப்தி அவஸ்தையிலும் அஹம் அர்த்தம் உண்டே
ஜாக்ரதை சொபன துரியா அவஸ்தை
கர்மம் -ஆகர்ஷக ரூபமான கர்மம்
பந்தத்துக்கு காரணமாக இல்லாமல் காயிக வாசக மானச –
மோஷத்துக்கு காரணமாக இருக்க வேண்டும்
வித்யை அது போலே
வித்யை விகாசம் -சிந்தம் –
உப லஷணம்-
ஆயாசாகா -கர்மம் -சரமம் தாபம் பந்தம்
வித்யை பேர் லௌகிக அறிவு
சரியான கர்மம் வித்யை ததேவ கர்மா
ச ஏவ வித்யா முக்திக்கு காரணமானது தான் –

பந்தங்கள் மோஷங்கள்
அவித்யை காரணத்தால் சம்சாரதுக்குள் படும் ப்ரஹ்மம்
அநாதி அவித்யை
நிர்விசேஷ சுயம் பிராகசம் ப்ரஹ்மம் இரண்டும் பிரதான அம்சம்
தீபம் போலே தன்னையே காட்டிக் கொடுக்கும் போலே
ஈச ஈச்தவ்யாது அநேக வித
ஈசிதவ்யம் -நம்முடையது
ஈசித -சுவாமி
ஸும் ஸ்வாமி பாவம்
தோஷத்தால் விகல்பங்கள் உண்டாகிறது
தோஷச்த ஸ்வரூப திரோதான -பிரகாசிக்க முடியாமல் பண்ண -அவித்யா தோஷம்
அது மட்டும் இல்லை –
விவித விச்சேத்ரா விச்சேபம் -கடம் படம் போலே காட்ட –
அநாதி
பிரதம பிரவ்ருத்தி -ஸ்வா தந்த்ர்யம்
கரமண அநாதித்வா
ந வித்யதே –ஆதி என்றுமாம் -ஆரம்பம் தெரியாததுஎன்றும் ஆதி இல்லாதது –
சத் அசத் அநிர்வசனீய
ஹிரன்ய நிதி -அமிர்தேன
நித்ரா –
பரமாத்மா சம்யோகம் தான் நித்ரா
நாடி புரீதம் நாடிக்குள் மனஸ்
சைதன்யமயம் பரமாத்மா
பிராணிகள் எல்லாம் இப்படி
யதா ஹிரன்ய நிதிம் அஷர-ப்ரஞ்ஞாகா -தெரியாமல்
புதையல் கீழே -இருப்பது அறியாமல் -வீட்டை விற்று
உபரி உபரி சஞ்சரி ன் விந்தைதான் நிறை நிறை
அது போலே அஹர் அஹர் ப்ரஹ்ம கச்சந்தி ன் வின்தடி
எதானால் தோஷம் -ஏவமேவ
அமிர்தம் ன் பிரத்யஊடக வார்த்தை எடுத்து தோஷம்
சுஷ்ப்தி அவஸ்தை சொல்ல வந்த பிரகரணம்
சதச் அநிர்வசநீயா அநாதி அவதியை

சத் -இருக்கும் வஸ்து
அசத் வஸ்து -சச ஸ்ருங்கம் முயல் கொம்பு ஆகாச தாமரை சிங்க தும்பிக்கை போல்வன -சம்பூரணமான அசத் வஸ்து
பிரபஞ்சம் எல்லாம் சத் அசத் வஸ்துக்களாக இருக்கும்
இரண்டும் உள்ள வஸ்துவோ
இரண்டுமாக இல்லாத வஸ்து உண்டோ
அத்வைதிகள்
இருக்கலாம் -illution
கயிறு பார்த்து பாம்பு சொல்வது
புல் குச்சி -கரடி
சர்வதா அசத்தாக இருந்தால் சரபம் போலே எப்படி தோன்றும்
கரடி போலே நினைக்க வில்லை
சத் தானே சர்ப்பம் –
சர்வதா அசத்தாக இருந்து இருந்தால் தோன்றி இருக்காதே
பாம்பு தான் என்று நினைத்து பயந்து இருக்க
கயிறு தான் காட்டிய பின்பு
புரிந்து
முன்னாள் பாம்பு புரிதது பொய்
பாதக -பெயர் கொடுத்து
பூர்வ ஞானம் பாதிகம்
சர்ப்பம் அசத்
சர்ப்பம் இத்தால் சத் அசத் இரண்டு ஆகாரமும் வந்ததே
சதித் ந பாத்யேதே
அசத்த்யேத தோன்றியே இருக்காதே
சதசதே அதனால் அநீவசநீயம் -define பண்ண முடியாதது
1/o =infinity அநிர்வசனீயம்
infinity /infinity -infinity அநிர்வசனீயம் போலே
அவித்யை அது போலே
அசத் -சொல்ல முடியாது
ஜீவாத்மாவாகவும் மற்ற அசித் வஸ்துகளாகவும் பார்ப்பதால்
சத் சொல்லலாமோ -உண்மையால் இல்லை
சதேவ சமய ஏக மேவ அத்விதீயம் ப்ரஹ்மா
ஒரே வஸ்து
ஒற்றே இருந்தது
இரண்டாவது இல்லை சொல்லி
விதி முகென நிஷேத முகென

சதசத அநிர்வசநீயத்வம் அநாதி
நிர்வசன யோக்யதை இல்லையாமையால்
பிராந்த பாதம் இரண்டும் இருப்பதால் சத்
ஸ்ருதி விரோதம் வருவதால் அசதி சொல்ல முடியாதே
இரண்டு கோடியிலும் இருப்பதால்
இரண்டு கோடியிலும் சேராமல் இருப்பதால்
ஏழு வித அனுபபத்தி காட்டி
ஆஸ்ரய அநுபவத்தி பிரதம
அவித்யை எங்கு இருக்கு -முதல் கேள்வி –
அப்யுகம -இருந்து என்று வைத்து கொண்டால்
கௌதம மக ரிஷி காட்டி
வாத க்ரம-படி
ப்ரஹ்ம வசத்துக்கு ஆஸ்ரயம் எங்கே அவர்கள் கேட்டால் ஸ்ரீ பாஷ்யம் அர்த்தம் உண்டே
அவித்யை ஜீவாத்வாவிலீ பரமாத்வாவிலா
விகந்தி பூஷணம்
ஜீவாத்மாவே இல்லையே உங்கள் பஷத்தில் இருக்க முடியாதே
பரமாத்மாவில்
சூரியன் இடம் அந்தகாரம் இருக்குமா
சுயம் பிரகாச வஸ்து நீங்களே சொல்லி
அங்கும் இருக்கும் முடியாதே
தத் அயுத்தம்-
தத்ச்ய சுயம் பிரகாச ஞான ஸ்வரூபம் என்று சொல்வதால்
நித்யத்வம்
அநித்யத்வம் ஆகாசம் காலம்
புஸ்தகம் உத்பத்தி வினாசகம்
ஒரே வஸ்துவில் இரண்டும் சேர முடியாதே
ஏகத்வம் பகுத்வம் இருக்க
பரஸ்பர விருத்தம்
அவித்யை உபாதியால் எனபது முடியாது
ஆஸ்ரய அனுபபத்தி உண்டே

கவிதார்த்த சக்கரவர்த்தி -ஸ்ரீ பாஷ்யம் கண்டனம்
கவிதார்த்த சிம்ஹம் தேசிகன்
தூஷணி அருளி பதில் கொடுக்க
சத பூஷணி எழுத வைத்தார் காஞ்சிபெரிய ஸ்வாமி
பரமார்த்த பூஷணி உத்தமர் ஸ்வாமி
பாஸ்கரர் உபாதி சத்யம் சொல்லி த்விதீயம் ஸ்ருதி வசனம் தப்பாகுமே

பாமதி பிரஸ்தானம்
விவரண பிரஸ்தானம் அத்வைதி இரண்டு பஷம்
பரகால ஸ்வாமி ஆராய்ந்து இத்தைக் காட்டி அருளி –
திரோதான உபபத்தி -இரண்டாவது
மறைவது –
அந்தர்தானம் -ஒரு சப்தம் உண்டு -அது வேற
பிரகாச ஏக ரூபம் ப்ரஹ்மன்-முதலில்
யாருக்கு
பார்க்கிறவன் பார்க்கப் படுபவன் இரண்டு இல்லையே அவர்கள் பஷம்

2-அடுத்து அவித்யை ஏற்பட்டு -அநிர்வசனீயம்
மறைத்து –
பூர்ண அந்தகாரமா -தோராயமாக காட்டி
அடுத்து -இதனால் -திரோதானம்
அந்த திரோதானம் போன பின்பு
பந்தமும் மோஷமும் ப்ரஹ்மத்துக்கு
பந்தத்துக்கு காரணம் அவித்யை
மோஷத்துக்கு காரணம் வித்யை –
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மிதியை
மறைத்தது
ஹிரன்ய மயமான பாத்ரத்தால் ஆவிர்வதம் சத்யம் அபிஹிதம் ஈசானா உபநிஷத்
ஜீவாத்மா -அந்தர்ஹிதம் பரமாத்மா சொல்ல வந்தது
எள்ளுக்குள் யென்னெய் போலே
கரந்தநெய் தயிரில் போலே
சர்வம் வியாபி
ஷீரே-
பாலில் நெய் -காய்ச்சி கொஞ்சம் ஆரி -உறை குத்தி -ஏடு எடுத்து கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்
த்யானம் -கடைவது போலே
தேவம் பச்யேது
அல்லோக்கம் அகாரத்துக்கு லோபம்
விஹிதம் -ஒரே அர்த்தம்
நிகூடவது -as if hidden
திரோதானம் என்ன –
மூடி வைத்தா -முதல்
தீபம் விநாசம் -பிரகாச உத்பத்தி பிரதிபந்தம்
தீபத்தையே அழித்து
இரண்டும் சரிப்படாதே
வித்யமானச விநாசகம் இருக்க முடியாதே
நித்ய சுத்த பிரகாச்த்வ ஸ்வரூபம் சொன்ன பின்பு –
மறைக்க -முடியாதே பிரகாசம் எப்பொழுதும் உண்டே
பிரகாசம் குணமா –
தீபம் திருஷ்டாந்தம் சொன்னால் தேப்பம் வேற பிரகாசம் வேற
பத்ரம் வைத்து மூடி
தீபமே அணைந்து
தீபம் வேற பிரகாசம் வேற குணா குணி பாவம் வருமே
இரண்டு இல்லையே உங்கள் பஷத்தில்
அபசித்தாந்தம் -self goal போலே

கிஞ்ச –
ந்னு-
அத –
major objection
தூஷநாந்தரம் -ஓன்று சொல்லி பின்பு அடுத்து சொல்ல
இதி வததா-இப்படி சொல்லிய உன்னால்
பிரகாச ஏக ஸ்வரூபம் அவித்யய்யால் திரோதிகம்
ஸ்வரூப நாசம் ஆனது போலே ஆகுமே
பிரகாச திரோதானம்
உத்பத்தி பிரதிபந்தி
விநாசன
ஞான ஏக ஸ்வரூபம் ப்ரஹ்மம் அவித்யையால் மறைய முடியாதே

பூஷணம் போலே அத்வைதிகள் சப்த அனுபபத்தி சொல்வார்கள்
பூஷணம் ஏவ தூஷணம் இல்லை
ராமாயணம் -சீதை ராவணனுக்கு உபதேசம் சுந்தர காண்டம்
உனது மனைவி தொக்கி போனால்
சு தர்ம ரஷணம் -இது எங்கள் தர்மம் என்பான்
நீ தோஷம் சொன்னது எல்லாம் குணம் தான் என்பான்
துர்கடத்வம் எல்லாம் பூஷணம் தான் என்பார்கள் –
கண்டன கண்ட காவியம்
சதா தூஷணி 68 வாதம் தேசிகன்
வாத ஜல்ப விகண்டா வாதம் -தத்வம் அறிய
ஜல்பம் உளறுவது

விதண்டா -சுய பஷ ஸ்தாபனம் உத்தேச்யம் இல்லை
ப்ரஹ்மம் சத்யம் நிராகரணம் செய்தால் ப்ரஹ்மம் மிதியை வருமே
கதையாம் அதிகாராம் நாஸ்தி
வாதம் பண்ண மாட்டேன் -சொன்னால் insult
அவமானம் –

சங்கராச்சாரியாருக்குப் பிறகு வந்த பாஸ்கர, யாதவபிரகாசர் பக்ஷங்கள் தவிற ,
மிஸ்ரருடைய பாமதி பிரஸ்தானம் , பிரகாஸாத்மா வினுடைய பஞ்சபாதிகா விவிரண பிரஸ்தானம் முறையே
ஜீவாக்ஞான வாதம், பிரஹ்மக்ஞான வாதம் என அனுபபத்திப் பரிகாரம் செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்களும், பகவத் ராமானுஜருடைய இந்த சப்தவித அனுப்பபத்திகளுக்கு யுக்தா யுக்தமாக பதில் சொல்ல வில்லை.
அவர்களுக்குப் பிறகு வந்த ஸ்ரீஹர்ஷா என்கிற கவி ”கண்டன கண்ட காவியம் ” என்கிற தன்னுடைய கிரந்தத்தில்
பகவத் ராமானுஜருடைய யுக்திகளை விதண்டா வாத முறையில் எதிர்க்க, அவைகளுக்கு ஸ்வாமி தேசிகன்,
”ஸததூஷணி” என்கிற கிரந்த முகேண தக்க பதில் அளித்து விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை புனருத்தரித்தார்.

2. திரோதான அனுப்பபத்தி :
ஸ்வயம் பிரகாசமான பிரஹ்மம் அவித்யையின் பரிணாமத்தால் திரோதானத்தை அடைகிறது .
பரம் பிரஹ்மைவ அக்ஞம் பிரம பரிகதம் ஸம்ஸர்கி என்று பந்த மோக்ஷம் இரண்டும் பிஹ்மத்துக்காய் –
அகண்டைஸ்ச நித்ய முக்த ஸ்வரூபம் நித்ய பிரகாசமான பிரஹ்மத்துக்கு வித்யமானஸ்ய விநாசம் என்பது ஏற்புடைத்தல்லவே?
தீபம் போலே பிரஹ்மம் , திரையிட்டாப் போலே அதன் ஒளி மழுங்கிவிடுகிறது என்றால்,
பிரஹ்மத்துக்கு பிரகாசம் அப்படியே இருக்க, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் ஒளி குன்றித் தோற்றம்
அளிப்பது போல வைத்துக் கொண்டால் பிரஹ்மம் வேறு, பார்க்கிறவர் வேறு
அதாவது விளக்கு வேறு ஒளி வேறு என்றாகி அத்வைதம் நிற்காது.
திரோதானத்தால் பிரஹ்மத்தினுடைய ஸ்வப்பிரகாச தர்மம் மறைகிறது என்று வைத்துக் கொண்டால் , பிரஹ்ம ஸ்வரூபம் நாசமடைகிறது என்றாகும்.
சூரியனில் இருட்டு சேராதாகையாலே, தாங்கள் சொன்னதை தாங்களே பொய்ததாகிற, அப -சித்தாந்த தோஷம் வரும் ?

அகடித கடனா படீயத்வா: அவித்யாயேவ துர்கடத்வம் பூஷ்ணமேவா நது தூஷணம். – என்று அத்வைதிகள்
இந்த சப்தவித அனுப்பபத்திகளை குறை எனக்கொள்ளாமல் தங்கள் ஸித்தாந்தத்தின் பெருமையாக,
”அவித்யா ” அப்படியானதொரு அநிர்வசனீய ”பிரஹ்மைவ அக்ஞம் ” என்று ஆமோதிக்கின்றனர்.

அசோக வனத்தில் சிறை இருந்தவளான சீதை, ராவணனுக்கு தன்னை ராமனிடத்தில் சமர்ப்பித்துவிடு என்று உபதேசிக்கிற வேளையில்,
‘ஹே! ராவணா உன்னுடைய மனைவியை வேறு யாரேனும் கவர்ந்து சென்று விட்டால் உன்மனம் எப்படி பாடுபடும்,
அதை நினைத்து , என்னை ராமனிடத்தில் சமர்பிப்பாய் ‘ என்று சொல்ல அதற்கு
இராவணன் பிறர் மனைவியை பெண்டாடுவது ராக்ஷச தர்மமாய் குணமாகும் அன்றி குற்றமாகாது என
தன் தூஷணத்தை பூஷணமாக கொண்டாடினாப்போல உள்ளது அத்வைதிகளுடைய இந்த விமர்சன ஸ்வீகாரம்.

3-ஸ்வரூப அனுப பத்தி மூன்றாவது – ஸ்வரூபம் –இயற்க்கை தன்மை-ரூபம் –நிறம் -ரூப்யம்
அவயவ அர்த்தம் இல்லை –இருந்தால் நித்யமா அநித்தியமா விகல்பம் செய்து வாதம்
சத்யமான யதார்த்தமான வஸ்துவா-அசத்தியமான அயார்த்தமான வஸ்துவா
சத்யம் என்றால் இரண்டாவது வஸ்து வருமே-அசத்தியம் என்றால் அத்தால் பிரமை ஏற்படுமா
அசத்தியம் என்றால் ப்ரஹ்மமும் அசத்தியம் ஆகுமே
பாவ ரூபம் அவித்யை -அனுமானம் பிரமாணம் வைத்து
கயிறு பாம்பு -இருட்டில் -வளைந்த ரூபம் இந்த காரணங்கள் நிஜமா பொய்யா –
கயிறு சத்யம் தானே -வளைவு சத்யம் -நேராக இருந்தால் பிரமை ஏற்பட்டு இருக்காதே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி வாக்கியம்
சிரோ வாக்கியம்-நிர்விஷய நிராசாயா சு பிரகாச anu பூதயா ஞானமே பிரம்ஹம்
அனந்தாச்ரயம்-அனந்த விஷயம் ஆத்மாநாம் -சம்சாரம் அனுபவிக்க தன்னை தானே
பரமார்த்த -சத்யம் -அபரமார்த்தாமா -அசாத்தியமா
பிரமாதாவா -த்ரஷ்டா -பார்க்கக் கூடியவன்
தர்ஷ்யம் -பிரமேயம்
த்ரீஷியம் -பிரமாணம்
அத்வைதம் – -பிரமை -இரண்டு அம்சம் –
ஜகத் சர்ப்பம் ஸ்தானம் -கயிறு ப்ரஹ்மம் ஸ்தானம்
சாதிஷ்டான ப்ரஹ்மம் அத்வைதி
-அதிஷ்டானமான ப்ரஹ்மம் மிதியை சூன்ய வாதம் -மாத்யமிக பாஷம் -புத்தர் போலே
வைதிக சித்தாந்தம் ஆகாதே
சத் அசத் சதசத் ந அசதசத விலஷணம்-சூன்யம் மாத்மிகர்

அவித்யையினுடைய ஸ்வரூபம் என்ன என்பது கேள்வி? ஸ்வரூபம் என்றால் = nature. ரூபம் என்றால் colour or form.
abstract ஆன விஷயத்துக்கு ஸ்வரூபம் உண்டா என்றால் கிடையாது. இங்கு அவித்யைக்கு ரூடி அர்த்தம் என்ன?
அப்படியான ஒரு வஸ்து உண்டா? இல்லையா? என்பதே கேள்வி?

அப்படியொரு வஸ்து இருக்கிறது என்று வைத்துக் கொண்டு , அது உண்மையா? பொய்யா? என்று வாதிப்பது விகல்பம்.
இருக்கிறது என்றால், கூடாத விஷயங்கள் (அனுப்பபத்தி) இவை.
இல்லை என்றால் கூடாத விஷயங்கள் இவை என்று இரண்டுமே சித்திதால், அப்படியொரு நித்யாநித்ய வஸ்துயில்லை என்பதே உண்மை.
அவித்யா யதார்த்தம் என்றால் துவைதம் சித்திக்கும். அயதார்த்தம் என்றால் அது எப்படி பிராஹ்மத்தைப் பீடிக்கும் ? என்பது அடுத்த கேள்வி?
அது ஊகத்தால் பெறப்படுகிறது என்கின்றனர். ஊகமாவது அனுமானம் .
உ.ம்.-பர்வதோ வந்நிமான் , தூமத்வாத் என்பது ஒரு அனுமான நிர்தேசம்.
இங்கு
பர்வதம் – பக்ஷம்.
வந்நி – சாத்தியம் .
தூமம் – ஹேது .
பர்வத: வந்நி அபாவவான் , பாஷாணத்வாத் – என்று பிரதிவாதி.
வாதம் என்றால் வாதி, பிரதிவாதி இடையில் மத்யஸ்தன் என்ற நடுவர் உண்டு.
முதலில் ”சமய பந்தம்” என்று சில Axioms பொதுவாக நிர்ணயிக்கப் படும் .
அதற்கு உடன்பட்டு இருவரும் வாதத்தைச் செய்ய வேண்டும். இதற்கு ஸத் பிரதிவாதம் என்று பெயர்.
அப்படி ஒப்புக்கொள்ள வில்லையானால் அவர்கள் மேலும் வாதம் செய்ய முடியாமல் கதா-அநதிகாரி என்று வாதத்தில் இருந்து விலக்கப் படுவர்.

4-நான்காவது அநிர்வசனீயதவ அனுபபத்தி
5-ஐந்தாவது பிரமாண அனுபபத்தி -அனுமானம் -ஸ்ருதி வாக்யங்கள்
பிரமாண அனுபபத்தி பெரிய அனுபபத்தி
க்யாதி வாதம் -பல விஷயங்கள் theory of ஏற்றோர்
இப்படி பட்ட வஸ்து ஸ்பஷ்டமாக காட்ட முடியாது -அநீர்வசநீயத்வம்

அநிர்வசனீயம் அவித்யா என்பதை
a . யுக்தியைக் கொண்டும்,
b . அனுமானத்தாலும்,
c . ஸ்ருதி, ஸ்மிருதி, இதிஹாச வசனங்களாலும்-அத்வைதிகள் நிரூபிக்க பார்க்க, அதன் அனுப்பபத்தியை மேலும் பார்ப்போம்.

பிற மதத்தவர் காட்டும் பிரமாணங்களின் எண்ணிக்கை 8. அவை :

a. பிரத்யக்ஷம். – புலனறிவு. மானஸம் சேர 6 வகை.
b. அனுமானம் – ஊகம் . தெரிந்தலிருந்து தெரியாததை அறிவது- inference.
c. உபமானம் – உவமை. ஒரு சம்பவத்தில் இருந்து இன்னொரு சம்பவத்தை d. ஒப்புவமிப்பது.
d. ஸப்த – உபதேச ./ யதா திருஷ்ட, யதார்த்த ஆப்த வசனம்.
e. அர்த்தாபத்தி – பீனோ தேவதத்தா திவா நபுங்க்தே – ராத்திரி போகி. இரவில் பூஜிப்பான் என்று ஊகித்தறிவது – deduction.
f. அநுபலபத்தி – இருந்ததில்லை
g. ஸம்பவம் – Possibility
h. ஐதிஹ்யம் – சதே பஞ்சாசம் நியாயம் / அக்ஞாத வக்திருகம் – செவி வழி.

நமக்கு 3 பிரமாணங்களே சம்மதம்.

ஸதஸத் அநிர்வசனீயம் அநாத் யவித்யா., என்பதற்கு,
பகவத் ராமானுஜர் பல அனுப்பபத்திகளை காட்டின பிறகு , அநிர்வசனீயம் என்றில்லாமல் ”பாவ” ஸப்தத்தாலே காட்ட முயன்றனர்.

பதார்த்தா : த்விதா : பாவ: அபாவ: சேத்.
பாவ: என்றால் அஸ்தித்வ வஸ்து (+ve entity ).
அபாவ : என்றால் நாஸ்தி வஸ்து ( -ve entity ).

அவித்யா என்பது பாவ: Positive entity .
பிராஹ்மத்துக்கு அவித்யையால் ஜீவ பாவத்தை அடைந்து ஸம்ஸரிக்கிறது .
தன்னுடையதேயான வித்தையால் மோக்ஷ பிராப்தி அடைகிறது. அதாவது பிரஹ்மத்துக்கே பந்தம். பிரஹ்மத்துக்கே மோக்ஷம்.
ஜீவ பாவம் கல்பிதம் என்பது அத்வைதிகள் சொல்வது.

ஸுத்த புத்த முக்த ஸ்வரூபம் பிரஹ்ம என்ற போது புத்த என்ற வித்யைக்கு எதிர்த்தட்டான
அவித்யா (ந+வித்யா) எப்படி பிரஹ்மத்தோடு சேர்ந்திருக்கும்?

ஆலோக: = வெளிச்சம்.–ந ஆலோக: = இருட்டு.-என்பது போல் அல்ல .

அவித்யா வித்யா விரோதி அல்ல . வித்யா பின்னம் . வித்யா சதுர்சம். நவித்யா- அன்யது கிஞ்சிது வித்யையைப் போன்றது. வேறுபட்டது.
உ.ம். அபிராஹ்மண: அதுவும் ஒரு பாவ வஸ்து. வித்யைப்போலே இன்னொரு positive entity.
ஆகையால் இரண்டும் பிரஹ்மத்திடத்தில் ஒருசேர இருக்க தட்டில்லை.
விஷயம் – விஷயீ.
ஒரு புத்தகத்தைப் பார்த்து, ”இது புத்தகம்” என்று தெரிந்து கொள்கிறபோது, ”புத்தகம்” விஷயம்.
இது புத்தகம் என்று ஏற்பட்ட ”அறிவு” விஷயீ என்றாகும்.
உறங்கி விழித்தவன் ”நான் சுகமாக தூங்கினேன், (என்ன நடந்தது என்று) ஒன்றுமே தெரிய வில்லை ” என்று சொன்னானேயாகில் ”
ஞான அபாவம்” இருந்ததாக உணர்த்துகிறான்.

ஞான அபாவத்துக்கு பிரதியோகி = ஞானம்

உ.ம். கஜாபாவத்துக்கு பிரதியோகி = கஜம்.
அஸ்வாபாவத்துக்கு பிரதியோகி = அஸ்வம். .

கஜாபாவத்தை குறிப்பிட வேண்டுமாயின், கஜத்தை ஒருமுறையேனும் பார்த்தவனாக இருக்க வேண்டும் .
கஜாபாவ பிரதி கஜ காரணம். அது இல்லாதவனுக்கு அபாவ க்ஞானமே ஏற்படாது. இதை ஒரு Thumb rule ஆக சொல்லப் போனால்
அபாவ க்ஞானம் பிரதி பிரதியோகி காரணம் – என்ற இத்தை
மேல்சொன்ன தூங்கி விழித்தவனுடைய உதாரணத்தில் பொருத்தி பார்க்கையில் ,
ஞானா-க்ஞானம் ” இல்லாமல் ”க்ஞான-அபாவம்” உண்டாகாது என்று தேறுகிறது.
தூங்கி விழித்தவன் ”ஒன்றும் தெரியவில்லை ” என்று நினைவு கூறுவது (பிரத்யபிக்ஞா) அஞானமாக வைத்துக்கொண்டால் ,
அது ஞான விரோதியான ஞான-அபாவம் இல்லை . அதுவும் ஞானத்தைப் போன்ற இன்னொரு வஸ்து .

அந்த வகையில், எப்படி தூங்கிவிழித்தவனிடத்தில் ”ஞானம் ” , ”அஞானம் ” இரண்டும் ஒருசேர இருந்ததாக
ஒப்புக்கொள்கிறோமோ அதுபோல , ”வித்யா ” , ”அவித்யா ” இரண்டும் ”ஸகபாவி” யாக இருட்டு,
வெளிச்சம் போல் அல்லாமல். புத்தகம், பேனா – லேகனி, அலேகனி போலே பிரஹ்மத்திடத்தில் இருக்க அமையும்.
எந்த தோஷமும் இல்லை..

அவித்யா என்பது ஸதஸத் அநிர்வசனீயம் தான். பாவ ரூபமான வஸ்து வானபடியாலே பிரஹ்மத்திலே இருக்கலாம் என்று
பிரத்யக்ஷ பிரமாண த்தைக் கொண்டு அத்வைதிகள் சமர்த்திக் கின்றனர்.

அவித்யா தோஷமா? இல்லையா ?
தோஷமானால், அது பிரஹ்மத்திட்டத்தில் இருக்க வழி இல்லை. காரணம்,
பிரஹ்மம் நிரவத்யம், நிரஞ்சனம் என்று சுருதிகள் கோஷிக்கின்றன அத்வைதிகள் படி அந்த பிரஹ்மம் ஸுத்த புத்த நித்ய தத்வம்.

தோஷமில்லையாகில், அது எப்படி பிரஹ்மத்தை வஸ்து ஜாதங்களாக பிரமிக்கச் செய்யும்? ஸம்சரிக்கச் செய்யும்?
அத்துவால் வியாகாத தோஷம் (Self contradition) வாராதோ?

ஸுஷுப்தி (sub-Conscious state) அல்லது உறக்கம் மற்றும் மூர்ச்சா அவஸ்தையில் (un-Conscious state)
பாஹ்ய வஸ்து க்ஞான உணர்த்தி இல்லையே ஒழிய ( Dharma bhootha Jnanam goes dormant and not absent),
”அஹமர்த்த” (நான் என்கிற உணர்வு) ஞானம் ஸ்வ பிரகாசமாதலால் தூக்கம், மூர்ச்சை வேளையிலும் நிலைத்தே இருக்கும்.
This ” I ” is not Ego – அஹங்காரம். இல்லை.

அத்வைதிகள் தர்மிபூத ஞானத்தை ஒப்புக் கொள்கின்றனர். தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்வ தில்லை.
தார்க்கிகளாகிற நையாயிகன் தர்மிப்பூத ஞானத்தை ஒப்புக் கொளவதில்லை. தர்மபூத ஞானத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.
விசிஷ்டாத்வைத்த சித்தாந்தத்தில் இரண்டுமே ஒப்புக் கொள்ளப் படுகின்றன.
மற்ற சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட இந்த நிலைப்பாட்டால், ஸர்வ தந்திர ஸ்வதந்திர சித்தாந்தமாகிறது.

அவித்யா – ஞான அபாவமா? (absence of Jnana) ஞான விகல்பமா? (different from Jnana) ஞான விரோதியா? (or opposed to jnana).
எப்படியானாலும் அவித்யா பாவ ரூபா: என்பது மேலே பலபடியாக நிராகாரணம் செய்யப் பட்டது.

கியாதி வாதம் :

அக்கியாதி – மீமாம்சகன்.
அன்யதா கியாதி – தார்கிகன் .
(அக்கியாதி ஸம்ஹரித ) யாதார்த்த கியாதி – பகவத் ராமானுஜர்.
அஸத் கியாதி – பௌத்தன்.
அநிர்வசனீய கியாதி – சங்கரர்./ ஜைனர்.

பாம்பை பழுதென்று நினைகை அயதார்த்த கியாதி.
இல்லாததை இருப்பதாக புரிகை (அ ) இருப்பதை இல்லாதாக புரிகை அயதார்த்த ஞானம்.

வசிஷ்ட புத்திம் பிரதி விசேஷண ஞானம் காரணம்..
உ.ம்.
குண்டலி தேவதத்த :
குண்டலத்தை அணிந்தவன் குண்டலி.
தேவதத்தன் குண்டலத்தை அணிந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டுமானால்,
குண்டலத்தைப் பற்றிய ஞானம் நமக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும்.
குண்டலம் விசேஷணம்.
கோ என்றால் கௌ-த்வ விசிஷ்ட: கோ: அதுபோல
ரஜ்ஜுத்வ க்ஞானம் இல்லாமல் ரஜ்ஜு தோற்றது.
ஸர்பத்துவ க்ஞானம் இல்லாமல் சர்ப்பம் தோற்றது.
ரஜ்ஜுவில் ஸர்பத்துவ க்ஞானம் ஏற்பட்ட வேண்டுமானால் , அதற்கு காரணம் அங்குள்ள ரஜ்ஜுத்வம் தோற்றாதது ஒன்று. அது அக்கியாதி.
ஸர்பத்துவம் தோற்றினது அன்யதா கியாதி .-அந்யதாகியாதிக்கு காரணம் அக்கியாதி.

ப்ரமா ஸத்கியாதி. ப்ரமா அக்கியாதி ( அயதார்த்தம்) ஸம்ஹரித யாதார்த்த கியாதி (க்ஞானம்). உ.ம். கானல் நீர்.
”யதார்த்தம் ஸர்வ விஜ்ஞானம் இதி வேதவிதாம் மதம்” – என்கிற வேதாந்த அனுமதியும் இதற்கு உண்டு
என்பதை பகவத் ராமானுஜர் இவ்விடத்தில் காட்டுகிறார்.
இனி அனுமான பிரமாண முகேண உத்பாதனம் .

எல்லாம் மிதியை சொல்லுகிற வார்த்தை மித்யையா சத்தியமா
நான் சொல்லுகிற வார்த்தை பொய் என்பதும் பொய்யாம்னால் –
வாய் திறந்தால் அத்வைதம் போகும் சொல்லும் சொல்பவனும் உண்டே

சந்தாயவதன வேளையில்
சிகை பூணல் தாகம் அத்வைதிகள்
சஞாசா ஆஸ்ரமம் பண்ணக் கூடாது சாஸ்திரம்
புதர்
சங்கரர் ஆச்சார்யர் கோவிந்த பாதர் -அவர் குரு
குட பாதர் பௌத்தர் அவர்
அவதூத சன்யாச கிராமம்
நான்கு ஆஸ்ரமம் தாண்டினது
சிகை பூணல் விதிக்க தர்மம்
ஏக தண்டமும் அப்படி
சாஸ்திர விருத்தம்
ராவணன் -த்ரி தண்ட தாரி தான்

வர்ண ஆஸ்ரமம் உள் பட்ட சன்யாசம் -சிகை -பூணல் உண்டு நமக்கு
மோஷம் கிடைத்தாயிற்று -அதனால் வேண்டாம் என்று அவர்கள்
கடாகாசம் -கடம் உடைந்து கடாகாசம் மகாசம் லயம் ஆனபின்பு
உதாரணம் காட்ட
சரீரம் போகத்தான் காத்து இருக்க –
அவித்யா பாவ ரூபம் பிரமாணம்
பிரத்யஷம்
அனுமானம் -காட்டி சொல்ல
அத்தை நிரசனம் செய்து அருளுகிறார் –
தமஸ் -பாவ ரூபமான வஸ்து நாம் சொல்கிறோம்
அவித்யை பாவ ரூபம் இதுக்கும் நிறைய வாசி உண்டு நல்குரவும் -புண்ணியம் பாபம்-விருத்த ஸ்வபாவம் –
அவித்யா எனபது -வித்யா பின்னம் சத்ருசம் அதனால் – கர்மம் நாம் சொல்கிறோம்

5- அநிர்வசனானுப்பபத்தி :
அவித்யா அநிர்வசனீயா – அது இன்ன தன்மை என்று காட்ட முடியாது என்பதை ஒப்புக் கொள்ளமுடியாது. காரணம்
உலகில் பெயர், உருவம் இல்லாத பொருள் என்று எதுவும் கிடையாது. இவையே பதார்த்தம் எனப்படுவது.
பதம் + அர்த்தம். யானை என்று சொன்னால், தந்தம், தும்பிக்கையுடைய விலங்கைப் பற்றி நம் மனதில் ஒரு சித்திரம் அல்லது பிம்பம் ஏற்படுகிறது.
அந்த பிம்பத்துக்கு ”பிரதீதி ” என்று பெயர். இந்த பிரதீதியைக் குறிக்கும் சப்தம் வார்த்தை ஆகிறது.

ஸர்வாஹி பிரதீதிஹி ஸதஸகாரா – யதார்த்தமாய் வரும் ஞானம் யாவுமே சத்தியம். – பகவத் ராமானுஜர்.

பிரத்யய ஸர்வா மித்யா, பிரத்யது ஸ்வாப்பந பிரத்யயாது – ஸ்வப்பனத்தில் ஏற்படும் ஞானம் பொய் போலே எல்லா ஞானமும் அசத்தியம்.
காரணம் ஸ்வப்னத்தில் வஸ்து இல்லாமல், வரும் ஞானம் அயதார்த்தம் . கட : பட: குட்யம் , குசூலம் (அத்யஸ்தம் ) என்று ஏற்படுகிற (அத்யாஸ) ஞானமும் பொய், பிரஹ்மத்துக்கு பிரமத்தால் ஏற்படும் க்ஞானம் அதுவாகையாலே. பிரஹ்ம (அதிஷ்டான) க்ஞானம் பிறந்தவாறே ,
கட : பட: என்பது மறைந்து , பிரஹ்மம் ஒன்றே புலப்படும்.- சங்கர பகவத் பாதர்.

த்வனி சப்தம் — கடலோசை, பக்ஷி கூவல் இவைகளுக்கு பொருள் இல்லை.
வர்ண சப்தம் – ஏதாவது ஒரு பொருளை குறித்தே வரும். புத்தகம், பேனா நாஸ்தி (இல்லை) என்றால்,
இப்போது, இங்கு இல்லை என்பது பொருள். அப்படிப்பட்ட பொருள்களே உலகத்தில் இல்லை என்பது கிடையாது. அப்படியான பொருள் அனைத்தும் ”சது” .

முயல்கொப்பு, ஆகாசத் தாமரை, சிம்ஹசுண்டம் (சிங்கத்தின் துதிக்கை) என்பான எக்காலத்திலும், எங்கேயும் இல்லை என்பதுதான் பொருள்.
அவை ”அசது ”. இவை இரண்டைத் தவிற ”சதசது ” என்கிற மூன்றாவது பொருள் ”அவித்யா ” என்று அத்வைதிகள் சொல்லக் காரணம் . உ.ம். பாம்பு-கயிறு.

கயிறு , வேறு எதுவுமாகத் தோற்றால், பாம்பு என்று தோற்ற வேண்டுமானால், பாம்பு ”ஸது ” ஆகிறது
”அஸத் ”சேத் ந பாஸயதி. நாயம் சர்ப்ப இதி , கிந்து ரஜ்ஜு எவ ” – பாம்பு இல்லை, கயிறுதான் என்று புரியும் போது அது ”அசது ” ஆகிறது.
”ஸத் ” சேத் ந பாத்யதா ” . அதனால் ”அவித்யா ” ஸத் போல தோற்றி, அஸத் என மறைகிறது .
இதுவா அதுவா என்று சொல்ல முடியவில்லை ஆகையாலே அநிர்வசனீயம் என்பது அத்வைதிகள் வாதம்.

சதசத் என்றோ சதசத் விலக்ஷணம் என்றோ ஒன்று இருப்பதாக சாஸ்திர பிரமாணம் கிடையாது.
அப்படி இருப்பதாக ஒத்துக்க கொண்டால் எது எதுவாக வானாலும் ஆகலாம்- என்றாகி சாஸ்திர வரம்பற்றுப் போகும்.
2 + 2 = 4 என்பது கணிதம். ஏன் 5 ஆகாது? என் 3 ஆகக்கூடாது என்றால், அந்த வாதம் அர்த்தமற்றது அன்றோ?

சூத்ரம்-வார்திக்யம்-பாஷ்யம் இவை 3ம் சாஸ்த்திர பிரக்கிரியை .
நியாய சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – கௌதம மஹரிஷி.
வார்திக்யம் – உத்தியோகர மஹரிஷி .
பாஷ்யம் – வாத்ஸாயனர் .
மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு
சூத்திரம் – ஜைமினி.
வார்திக்யம் – குமாரித பட்டர். (சிஷ்யர்-பிரபாகர குரு)
பாஷ்யம் – ஷபர ஸ்வாமி

பிரபாகரர் ஞானம் சு பிரகாசம்
குமாரின பட்டர் -பாட்டர் மதம் –
குரு துரோகம் பௌத்தர்
உமி -அக்னியில் உட்கார்ந்து
வேதனையால் பாபம் போக்கிக் கொண்டார்
சங்கரர் வாதம் -செய்ய சொல்ல –
சிஷ்யர் வாதம் பண்ணுவார்
தோற்று சிஷ்யர் ஆனார் சங்கரர் இடம் என்பர்
பஜ கோவிந்தம் போன்றவை சங்கரர் பண்ணவே இல்லை
நாராயண சப்தம் கீதா பாஷ்யம்
ஈஸ்வர சீலன் நாரார்யணன்
பிரமை உண்டு
எல்லா ஞானமும் யதார்த்தம் இல்லை
எல்லா ஞானமும் பிரமாணம் இல்லை
சர்வ பிரமாணமும் அபிரமாணமும் இல்லை
மாணா அமாண வ்யவஸ்தை வேண்டும்

பிரபாகரர்
குமார பட்டர் -பிரபாகர் குரு
இங்கும் சொல்ல வில்லை அங்கும் சொல்ல வில்லை -அதனால் அனுக்தம் புனர யுக்தம் எப்படி தெரிய வில்லை
கதைகள்
ராஜா -சரஸ் -தண்ணீர் இறைக்க
மோதகம் கொண்டு வா
மா உதகைகி தா தண்ணீரை அடிக்காதே சொன்னேன்
சமஸ்க்ருதம் கற்று வா
பிரகரணம் அறிந்து அர்த்தம்
அத்ரா புனர யுக்தம் து சப்தம் தாத்ரா அபி நா யுக்தம் அதனால் புநரா உக்தம்
அபி சப்தத்தாலும் து சப்தத்தாலு
பிரபாகர் வேத வித் –பிராபாகர மதம்
க்யாதி வாதம் –
கௌரவ பூர்வகமாக ராமானுஜர் –
தர்சன பிரஸ்தானம் –
ஸூ தரம் -வாக்கியம் -பாஷ்யம் -மூன்றும் இருக்க வேண்டும்
கௌதம உத்தியோகத வாத்சாயனர் பாஷ்யம் நியாய சாஸ்திரம்
ஜைமினி சபராசா
குமாரயா பட்டெர்
யதார்த்தம் சர்வ விஞ்ஞானம் -முக்கியமான விஷயம் –

விபுத்வம் ஆகாரத்வம் மட்டும் இல்லை
நிராகாரத்வமும் உண்டு
சாகாரம் எனபது நிராகாரத்வ நிஷேதம் இல்லை
உருவமும் அருவமும் ஆனான் –

ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் –
அறிந்த பின் ஆசை வந்து அடைய பிரயத்னம் செய்கிறோம் –
சர்வம் ஞானம்
பிரத்யக -சப்தம் அத்வைதிகள் -இது பேனா போன்ற ஞானம்
சர்வோ மித்யா
சொபன ஞானம் போலே -நல்லதும் கேட்டதும் விசித்ரமாகவும் இருக்குமே –மித்யை தானே இது
ராமானுஜர் -இதுவும் சத்யம்
அதிகரணம் -தனியாக
ஜீவாத்மா கர்த்தா இல்லை
நமக்கு வேண்டிய சொபனம் காண வில்லை
பரமாத்மா தான் கர்த்தா
ஸூ சகமாக காட்ட -நடக்கப் போவதை
நான்கு அவாந்தர அவஸ்தை உண்டு நான்கிலும்
சொபனம் துரிய சுஷூப்தி ஜாக்ரதை

புஷ்பக விஷயம் ஞானம்
ஞானம் ப்ரஹ்ம ஞானமே
சமுத்ரம் நீர் பாத்ரம் கொண்டு வந்தது போலே
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானம்
விருத்தி ஞானம்
இந்த ரூபமாக இருக்கக் கூடிய ஞானம் அத்வைதிகள்-

அனுமானம் பிரயோகம் -பர்வதம் -பஷம்- சாத்தியம் -புகை -ஏக சம்பந்த ஞானம் -ஹேது -வாக்கியம் -உதாரண வாக்கியம் –
பஷ்யம் -சாத்தியம் -ஹேது -மூன்றும் உண்டே
சப்த பிரமாணம் வேதம் -முன்னோர் மொழிந்த முறைகளே பிரமாணம்
-சாஸ்திர ப்ரத்யஷ விரோதி -வேதமே பிரதானம் –
அஹம் ஸ்தூல -நான் -ஆத்மா தான் -ஆத்மா ச்தூலத்வம் இல்லை -வேதம் மூலம் அறிகிறோம் –
ஜ்வாலை-விளக்கு ஏற்றி பின் வேலை செய்து -அதே ஜ்வாலை இல்லை சாயம் காலம்
திரி எண்ணெய் குறையும் -ஜ்வாலைக்கு பிரத்யஷ பேதம் -என்னுடைய சரீரம் -ஆத்மா வேற சரீரம் வேற
ராமன் உடைய புத்தகம் போலே
ஸ்வம் ஸ்வாமி சம்பந்தம் –
அத்வைதி சங்கரர் பின் ஜீவாத்மா பரமாத்மா வாதம் -இரண்டாக பிரிந்து –
ஸ்வ அவலோக கல்பிதம் இல்லை -பஞ்ச பாதிகா விவரணம் கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் –
பரமாத்மாவிடம் அவித்யை -சொல்லி
மாயை வேற அவித்யை வேற என்பர்
பிரமாண அனுபபத்தி பார்த்தோம் முன்பு

ஆறாவது அனுபபத்தி –
நிவர்த்தகார அனுபபத்தி
சரீரம் -போன பின்பு -ஒன்றாகி
அவஸ்தை மூன்று
பிரதிபாதிகம் total  illusion முதல்
வ்யவாரிக்க -இப்பொழுது இருப்பது போலே  -அடுத்து
பாரமார்த்திக -அவஸ்தை
சத்தா -existing
சத்யம் reality  –
வாக்யார்த்த ஞானம் அஹம் பிரம்மாஸ்மி -நிவர்த்தாக ஞானம் -சத்வமசி இத்யாதி வாக்கியம்
போக்கக் கூடிய ஞானம் கடபடாதி விஷயமான ஞானம்
நிவர்த்தக ஞானம் சத்தியமா மித்யையா-தோஷம் –

அனவஸ்தா தோஷம் -நிவர்த்தக ஞானம் போக்க ஞானம் –
கடக பீஜம் -நீரை சுத்தியாக்கி தானும் கரைந்து போகும் –
காட்டு தீ காட்டியும் அழித்து தானும் அழிந்து போவது போலே தானும் நிவர்த்தகம் ஆகும் -என்பர் அத்வைதிகள்
நிர்விசேஷ   சின் மாத்ர பிரமஸ்-பரமாத்மா என்பர்
ஸ்ருதி உபநிஷத் வாக்கியம் கொண்டும் -வேதாகமேதம்
மஹதோ   மஹதா
ஆதித்ய வர்ணம்
தமசஸ் பரஸ்தாத்
ப்ரஹ்ம ஏவம்
பல ஸ்ருதி வாக்யங்கள் –
logic கொண்டும் சுவாமி நிராகரிக்கிறார்

பட்டர் கோஷ்டியில் சாதாரண ஞானம் கொண்டவரை வித்வான் விட கொண்டாடி பேசி -சிஷ்
மீமாம்ஸா -விசாரம் பண்ணி -புரியும் அதிகாரிகளுக்கு -ஸ்ரீ பாஷ்யம் -அதிகாரி –
சின்மாத்திர -ராமோ விக்ரஹவான் தர்ம -நிர்விசேஷம்-ப்ரஹ்மம்-
அவாந்தர ஆஷேபம் -அனவஸ்தா தோஷம் -பார்த்தோம்
வாக்யார்த்த ஞானம் –
வேதாஹமேதம் -அவன் ஒருவனே புருஷன் -நாம் ஸ்திரீ ப்ராயர்-

சோதக வாக்கியம்
சத்யம் ஞானம் அநந்தம்
அசத் வ்யாவர்த்தம் -நாம் அசத் –
ஞான ஆஸ்ரய
ஸ்வரூப நிரூபக தர்மம் -unique -அசாதாராணமான-
நிரூபித ஸ்வரூப விசேஷணம்-
தேகம் -சரீரம் –
வளருவது -தேகம்
தேய்வது சரீரம் –
புண்ய பாபம் அனுபவிக்க தேவ மனுஷ்யாதி –
சரீர அவசானே மோஷம் -நம் சம்ப்ரதாயம் -அம்ருத இஹ பவதி -மோஷம் போன்ற நிலை
ஜீவன் முக்தி -அத்வைதிகள் –

பந்தம் -போக மோஷம்
பந்தம் மித்யை-நிவ்ருத்தி ஆவது எப்படி
யோனி எடுக்கும் சில ஆத்மாக்கள்
பிறந்தவன் இறப்பான் ஜாதஸ்ய …மிருத்யு –
தவன் ஜன்ம -மிருதச்ய-இறந்தவன் பிறப்பான் –
ஞானி அம்ருதத்வா –
நித்யா நித்யானாம் சேதன அசேதனனாம் ஏகோ  பகுனாம்  யோ விததாயி  காம -அநேக ஜீவாத்மா -மித்யை இல்லை

நிவ்ருத்தி அனுபபத்தி சாரம்  ஸ்வ நாச -மரக்கிளையில் இருந்து கொண்டே வெட்டுமா போலே அத்வைதிகள் வாதம்
நான் பொய் அஹம் ப்ரஹ்மாசி-
காளிதாசர் -கதை -ராஜ குமாரி -அத்வைதி  மடாதிபதிகளும் பூஜா செய்து –
ஆத்மயாத்ம்ய ஞானம் பெற்று -ஆஸ்ரம வர்ண கர்ம யோகம் செய்து -ப்ரஹ்ம ஞானம் பெற்று -மோஷம் அடைவோம்

பீடிகா -அவதாரிகை –
அதா தோ  ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –
லகு -பூர்வ பஷம் -சித்தாந்தம் -சாதான ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
மகா-பூர்வ  பஷம் – சித்தாந்தம் -பல ஸ்வரூபம் நிஷ்கர்ஷம்
தஸ்மாத் -அநாத கர்ம பிரவாக ரூப -அஞ்ஞான ஞான மூலத்வாத் -பந்தம் ஏற்பட்டது அஞ்ஞானத்தால் –
அது நிவர்த்தகம் ஆக கர்ம வர்ண அனுகுணமான ஆத்ம யாதாம்ய புத்தி விசேஷம் சம்ஸ்க்ருதம் -கார்யாந்தர யோக்யதா கர்த்தும்
சம்ஸ்காரம் -க்ரமப்படி செய்து –
ஜீவா பரமாத்மா யாதாம்ய ஞானம் பூர்வகமாக -ஆராதானம் ரூபம் –
ஆன்மிகம் -பகவத் கைங்கர்ய ரூபம்
அஹரஹராக அனுஷ்டானம் விடாமல் நித்யம் -பரம புருஷாராதனம் என்கிற நினைவுடன் –
சுருதி ஸ்ம்ருதி மம ஆஞ்ஞை -ப்ரீதி கோபம் புண்யம் பாபம்
கேவல கர்மம் அல்ப அஸ்திரம் பலம்
அநந்தம் ஸ்திரம் பலம் கிடைக்க பரம புருஷாராதனம் வேதம்
உபாசான ஆத்மக ஞானம் த்வாரேன கிட்டும்
கர்ம ஸ்வரூப ஞானம் முதல் படி

பூர்வ பூர்வ பதார்த்தானாம் –உத்தர உத்தர -பிச்சைக்காரன் கனவு -மாவு உதைத்து
கேவல ஆகார -ஞானம் இல்லாமல்-கர்மா
சந்த்யாவந்தனம் அத்வைதிகள் சன்யாசிகள் விட –
ஆபாத பிரதிபத்தி
அத -கர்ம விசாரம் பின்பு
அதோ -ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் –
அதிகரண க்ரமம் முன்பே பார்த்தோம்

————-

ஸம் வித் ஸித்தியில் மறைந்த சில பகுதிகள் ஸ்ருத ப்ரகாசிகாவில் உள்ளவற்றை
வேதாந்த தேசிகன் ஸ்வாமிகளும் காட்டி அருளுகிறார்

1- யாதவ ப்ரகாஸ மன தீ கதாசித வதித்ஸ்ததே
கடதவிவ தத்ரபி கல்பனியம் ப்ரகாசகம் |–

ஸ்வயம் ப்ரகாஸம் இல்லாமல் வேறே ஒன்றை அண்டி இருந்தால் அதுவும் வேறே ஒன்றை அண்டி இருக்க வேண்டி வரும்

2-கதோ யமிதி விஜ்ஞநே கட மாத்ரம் ப்ரகாஸதே
ந விட்டிரிதி யுஷ்மகம் கோஷ்திஷு நனு குஷ்யதே |–

பொருள்களைப் பார்த்து அறியும் ஞானத்தில் -பொருட்கள் மட்டும் முதலில் தங்களைக் காட்டும் பின்பு அறிவு வருகிறது -அத்வைதிகள்

3-அதித நகதே கர்தே கதம் ப்ரகத்ய ஸம்பவ
ந ஹி தர்மின் வஸத் யேவ தர்ம ஸம்பவம் ருச்சதே |–

4-ததேவ பஸ்யதம் ஸர்வ ஸூந்யத் வத் பிப்யதம் சதம்
கதிஸ் ஸ்வயம் ப்ரகாஸத் வத்ர்தே நந்யோ பலப்யதே |–

தத்வ ஹித புருஷார்த்தங்களை விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் படியே நிர்வஹித்து அருளுகிறார்

பிரகார பிரகாரீ பாவமும் சரீர ஆத்ம பாவமும் நம் ஸித்தாந்த பிரதிதந்தர -அசாதாரண -கொள்கை

ப்ரக்ருதி புருஷ கால வ்யக்த முக்த யதச்ச
மநுவிதிதா தாதி நித்யம் நித்ய சித்தைர் அநேகை

ஸ்வாதீந த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் புருஷ விசேஷ மிஸ்வர

ஆத்ம பரமாத்மநோ சம்பந்தேபி —-நநத்வே ஸத்யேவ
அபேதோ நாம அந்வய அம்ச அம்சி பாவ லல்ர்ஷணா ஸமவய
சேஷ சேஷித்வ ஸ்வரூப பரதந்த்ர லக்ஷண ஸ்வ ஸ்வாமி பாவ
ப்ருத்ய ஸ்வாமி லக்ஷண இதி

தத ததாத்ம்ய சம்பந்தே ஸ்ருதி ப்ரத்யக்ஷ மூலகே
நிர் தோஷ பவ்ருஷேய ச ஸ்ருதி யர்த்தம் ஆதராத் –ஸம் வித் ஸித்தி-இத்தையே ஸ்தோத்ர ரத்னத்திலும் அருளிச் செய்கிறார் –

எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம்–60-

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

இதிஸ்தி வேதவாக் அந தன் முலக்தகமை ரபி ப்ரஹ்ம ஆத்மநத்ம லபோ ஸ்யாம் ப்ரபஞ்சஸ் அசித் சின் மய –ஸம் வித் ஸித்தி

உபய பரிகர்மித ஸ்வந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய –ஹிதம் -தத் சாதனோபி

பரம புருஷார்த்த பூதே ப்ரஹ்ம ப்ரபத்தி லக்ஷண மோஷே
தத் குணஸ் அனுபவ ஜெனித நிரதிசய ஸூக சமுன்மேஷ

ப்ரஹ்மிநந்த ஹ்ருதந்தஸ்தோ முக்தாத்மா ஸூக மேததே -ஸம் வித் ஸித்தி

நாதோபஜ்நம் ப்ரவ்ருத்தம் பஹுபிர் உபசிதம் யாமுநேய பிரபந்த்தை –ஸ்த்ரேதும் ஸம் யக் யதீந்த்ர –தத்வ முக்த கலாபம்

—————-

Analytical, Outline of the Three Siddhis Page

ATMA-SIDDHI
Mangala sloka _
Conflicting .views concerning the finite self
Conflicting views regarding the pramanasby’which the finite self is established

Conflicting views ;regarding the Supreme Self

Diversity of views regarding the manifestations of the Supreme Self
Conflicting views concerning how‘ the Supreme Self is known“
Varying views regarding the nature of moksa
Conflicting views regarding the means to moksa
The special features of this treatise
Determination of the nature of the individual self
The pfirvapaksa or prima facie view that body is the soul on the
evidence of perception. The case for the identity of- soul and body
The purvapaksin’s criticism of the position that the body- is not the self
The attempt to show that the body could at- once be the subject and, the object of knowledge –

Summing up of dehatma vada position with reasons.
The refutation of the doctrine of the identitv of body and soul
Ahampratyaya (the c0gnition “I” or self-consciousness) does not
involve knowledge of bodily organs; hence the self is distinctfrom the body
Even cognitions like ‘I am stout’ establish a self distinct from the body

Identity of body with soul illusory
Yogic perception vouches for the separateness of soul and body
Arguments in support of the view that body and soul are distinct entities

The Sankhya arguments against the claim that perception establishes identity of body and soul
Refutation of the Carvaka critic’psim’of arguments that the body and soul are different
The illustration that intoxicating quality arises from the mixture of non-intoxicants not apposite

Example of redness produced by chewing not apposite
The illustration of parti-coloured cloth unhelpful to the Carvaka 15
Being distinct from the other qualities of the body, consciousness is not an attribute of the body
Additional reasons in support of the view that the body is not the soul [7

Argument based on negative concomitance indefensible
,, The view that the senses are the soul
,, The refutation of this view 13
The doctrine that manas is the soul 19
The refutation of this doctrine H
Refutation of the Naiyayika proof for the existence of manas 20
Refutation of the argument that manas is the non—inherent cause of pleasure, pain and the like 21
Untenability of the view that atma gunas such as pleasure arise only
in conjunction with some substance other than itself and that

it is manas ,,
Even if conjunction with such a substance were necessary it does not follow that it must be with manas 22
Manas is no other than buddhi 24
Manas is not the soul

..
The theory that prana is the soul 25
Refutation of this theory ”
The theory that consciousness is the soul ’

26–The Bhatta view that consciousness is insentient

There is no such thing as jnatata: hence consciousness is self-luminous

27–Additional arguments to show that consciousness is self-luminous

28 The contention that consciousness is itself the soul as there is economy of thought
The contention that the cognition ‘I know’ will not prove the existence of a soul distinct from knowledge ,,
The contention that like the knower. the known also is unreal

29-The refutation of the Buddhistic doctrine that consciousness is the soul

30–Impossibility of explaining recognition even on the admission that the self is a stream of consciousness

30–To obviate this difficulty the veiled Buddhist contends that
consciousness is unborn, changeless and devoid of distinctions

31 Refutation of the Advaitic view

33–This is opposed to experience
It cannot be maintained that consciousness does not grasp its own prior non-existence

34–The contention that there are no pramanas to establish antecedent non-existence is refuted

35–Consciousnees is not eternal

36–The contention that consciousness cannot be proved by anything other than consciousness is disproved
The contention that if consciousness becomes the object of another consciousness it would cease to be consciousness is met

37–The assertion that if consciousness is without an origin it could have no changes is refuted

39–The contention that if consciousness is unborn it cannot have differentiation is refuted

The contention that consciousness is quality-less stands self-refuted 40
Even on the view of the veiled Buddhists recognition would be
inexplicable 42
Refutation of the view that jnatrtva is the result of super-imposition 43
The contention that jnatrtva resides in ahamkara 44
This is opposed to every-day experience
Indefensibility of the position that pratyaktva belongs to ahamkara 45
The untenablility of the view that akamkara appears as knower
either on account of reflection or contact with consciousness
The contention that ahamkara appears as knower because it
manifests consciousness as residing in itself 45
The refutation of the preceding view
None of the three alternative ways in which ahamkara could be said
to manifest consciousnessis tenable 47
None of these possible modes of the third alternative is tenable

It cannot be maintained that the manifesting entity should
manifest the object as residing within itself.
Refutation of the’contention of Suresvara that in deep sleep there
is no consCiousness of 1′
Analysis of your statement establishes just the opposite of what
you intend to prove
The reflection “I was not even aware of my self” does not mean
the absence of .l’ but- something else.
The statement in question‘undoubtedly points to the existence of
the “I” and its manifestation

The “I” (ahamartha) persists in the state of release
On the’strength of the sacred text relating to liberation and
endeavour of souls for securing moksa the existence of “I”
(aham’ariha) is proved
Refutation of the view that the I is an objective element

(i. e. it is jada)
Even in the state of release the self shines to itself as I’
The consciousness of “I” is natural and not due to occasional factors
Ahamkarawhich refers to the body and which is a product of
matter—is the result of delusion and has to be diSpelled
It1s only where the self appears as “I “— I am deva—-‘I am
‘rnan’ the possibility of ajnana arises
The unsoundness of the argument that consciousness itself18 the
soul as it is insentient
The argument that on account of the invariable concomitance of
the knowledge of ‘l’ and consciousness they are identical is unsound
Even the contention that since one and the same consciousness
presents the invariable concomitance ofknown. knower and
knowledge they are identical is refuted.
;The contention that knower and known are one on the ground of ”
invariable concomitance even as different flames are considered
‘one on account of similarity
The example of different terms appearing as identical is not helpful
Refutation of the contention that there is no object that does not manifest itself.

Scriptural support for the existence of a soul distinct from consciousness
The Pramana by which the existence of the jiva is established
(a) The Nyaya view
After proving in general terms that consciousness being a guna
must have a substrate it is shown by a process of elimination
that it must be a spec:fic entity namely, atma
Refutation of the Nyaya view
Argument from pure negative concomitance fares no better
(b) The Sankhya view
The Sankhya mode of proof stands discredited for the same reasons
Refutation of the Sankhya arguments

The impossibility of a conscious and changeless entity being the
victim of illusions ‘
The refutation of the argument that the vrttis of the antahkarana
are superposed on the purusa
The existence of the soul established by iruti and srutyarthapatti
(c) The Mimamsa view
Refutation of this view
The Bhatta view
Refutation of the view .
Untenability of the suggestion that jnana is the objects of mental perception

Enquiry into the nature of sukha, duhkha etc
The Bhatta view again
The Prabhakara reply thereto
The Bhatta rejoinder
The Prabhakara position clarified while refuting the Bhatta view
The Prabhakara view that in deep sleep and moksa there is no
self—consciousness
Refutation of the prabhakara view and proof that the soul
is self—luminous
The Prabhakara centention that jnana is not self-luminous
Even if prana is self-luminous, the soul does not depend on prana for its apprehension
The soul is self-luminous
The proof that the soul has consciousness as its eternal and. essential nature

The pfirvapaksa.that consciousness isnoneternal and that there areno grounds to prove that it is eternal 89
The Opponentcalling’.1111 questionthe siddhantin’s position ‘90
Refutation of the view that the atma (dharmin) and consciousness
(dharma)are one ’91
Refutationcef view; that. consciousness is all—pervasive 92
Untenability of the view thatthe soulhas a twofold knowledge

(i) eternal and (ii) non-eternal 93

The illustration of the remembrance that there was noelephant
at the tank—bund in the morning cited to prove the existence of consciousness in deep sleep is unhelpful
Nor13 the remembrance on waking, ‘I slept well’ helpful in proving that there is zself-awareness in deep sleep 95
§Ihe contention that the self depends on jnana for its manifestation
and that jnana is non-eternal ’96

(The proof that dharma bhuta-jnana is eternal

though magmas.eternal ithas atma for its support 97
Refutation of the view that the conjunction of consciousness with object is prana
In respect of the self the analogy ofthe relation of cause and effect does not hold 93
The contention that since dharma bhuta jnana is dependent on occasional factors it cannot be eternal 99

The reply to the foregoing
Refutation of the view that as cognitions are limited by time they are non-eternal 101

fictivities of consciousness altoether of a different nature from

activities such as locomotion and cooking 102

The illustration of the body not apposite
In deep sleep there are no.:activitics of consciousness(dharma bhuta jnana) 104
The experiences of the soul in deep sleep need not all be remembered
Refutationof thecontention that if dharma-bhuta-jnana is eternal, it would do away with the distinction between bound
and released asouls 105

Refutation of the view that nidra is a mode of action accounting
for the experience of pleasure or pain on waking
The conclusion that nidra is no vrtti will not contradict the yoga sutra _
Granting nidra is a vrtti, from that reason itself it follows that
consciousness is an essential nature of the self

The self-luminoussoul-the substrate of prana-is eternal
The soul being the substrate of prana is svayamprakasa
Determination of the significance of the term prakasa and of the
nature of its relation to the soul
The contention that the self18 the object of knowledge and not
svayam prakasa
The contention that atma is the seat of prakasa inferred from prakatya

Refutation of that view
Nyaya refutation of the Prabhakara and Bhatta views and the

contention that relation ofjnana and its visaya is through sense contact 113
The Nyaya argument that with the disappearance of jnana,
prakatya disappears is untenable because with the disappearance
of the efficient cause. the eflect need not disappear

That the disappearance of the nimitta karana need not
necessarily lead to the disappearance of the effect is illustrated
with the instance of two-ness and the like
Untenability of the argument that numbers commencing from 2
do not last as long as objects last
Cognition of duality and the like is not constant, since it
depends on desire to enumerate
Consciousness illumines objects thrOugh contact with them by means of sense contact

Jnana is of limited nature
Fallacious to consider what is devoid of touch unlimited
Objects. past and future could come into contact ,with,
consciousness as what existed or what is yet to be

The non-apprehension of intervening space explained 119
The objection that consciousness as a quality cannot leave its

substrate and proceed elsewhere answered 120

The prabhakara view of sabda refuted
The Prabhakara view that object is manifested without the

relation of consciousness 122

The prabhakara view refuted

The objections to the concept of adiiratva answered 124
Deciding on the nature of the knowledge relation as samyoga 125
The examples of sukha etc adduced by the purvapaksin not apposite 126
Definition of Sarira (body) according to the siddhantin 127
The significance of dhih occurring in the sruti texts cited above 128
References to origination of knowledge, its loss. doubt, certainty
and the like explained 130

Though the soul is self—luminous, there is need of scripture to

make its nature clearly known 132

Inquiry into the duration of the soul : The soul is eternal
Pfirvapaksa: The Buddhist view that the soul is momentary

ISWARA SIDDHI

The Mimamsaka view
Laukikapratyaksa cannot prove the existence of God
Nor could yoga pratyaksa prove the existence of God
Impossible even for the senses that have acquired supernomal
powers through drugs, charms, austerities and yogic concentration
to establish the existence of God 137
The Nyaya arguments for the existence of God ,,
Yogic concentration even of the end stage incapable of proving God 138
No pramana other than perception is competent either to prove

the existence of God ,,
The Mimfimsaka critcism of the Naiyayika view 140
The argument proves what is already proven 141
The Mimamsaka objection that since the earth, the ocean etc,,

cannot be made, they can not be said to have a cause.
Your argument would only establish the reverse of what you seek
to prove i.e it would not prove an omniscient Lord but only a
finite indiVidual
The possibility of the precisely opposite conclusion i.e. that the
world is not created
The argument that the nimitta karana need not know the
upadana karana and hence one who is not omniscient could be cause
The Mimamsaka concludes his argument
The Naiyayika reply to the Mimamsaka contention
Meeting the charge that there is no vyapti
The nature of adhisthana defined
The jiva cannot be the nimittakarana of the world
The untenability of the contention that the argument only
establishes attributes opposed to omniscience etc.
What is needed for creation is controlling activity and not the body

Activity can be initiated without the instrument
of the body i.e. mere sankalpa suffices
No need to entertain any doubt on the ground that in the case in
point many of the characteristics differ from those found in the
illustrative example
Adducing special illustrations to strengthen the conclusion that
the divine creator is vastly different from the human agent
Other arguments to establish the existence of Isvara
SAMVIT SIDDHI
Enquiry into the significance of the text
“Brahman exists, one only without a second”
‘Advitiya’ cannot be taken as a tatpurusa compound
Nor can it be taken as a bahuvrihi compound
The significance of the expression Advitiya (the view of the Visistadvaitin)

Other sruti texts in support of the siddhantin’s view
Refutation of the view that the world is illusory
The untenability of the view that the world is at once sat and asat
Inquiry into the significance of the text tat tvam asi

The view that consciousness is the cause of the world is untenable
The pfirvapaksin trying to justify the above contention with
examples

The contention that consciousness is eternal
The contention that consciousness is devoid of attributes

Detailed examination of the advaitic‘ position-consciousessis manifold ,,
Consciousness cannot be eternal, all—pervasive and unitary
Untenability of the contention that there is nothing apart from
consciousness
The contention that avidya is the cause of the world and that it
is difficult to define it as different and non-different
What is the significance of the negative particle in avidya ?
What does the term vidya occurring in vidya mean 2
Ksrayanupapatti-avidya cannot dwell in jiva
Nor is Brahman the substrate of avidya

There is no escape from anyonyasraya dfisana by stating that
vidya is an avastu (unreality)

Avidya cannot be avastu (unreal)
Is avidya single or manifold; is the bound soul which is its
substrate unitary or manifold ?

Avidya cannot be single
The contention that Suka and others attained mukti is not true
Refutation of the above contention
The contention that moksa is an eternally existent state; it has only
to be rendered manifest through dhyana etc.
The unintelligility of the notion abhivyakti (manifestation)
Avidya cannot be an obstacle to Brahma jnana
Refutation of the view that there is only a single soul
The untenability of the view that there is a plurality‘of jivas,
each having its own avidya
Being endowed with qualities like self-luminosity and unity.
consciousness cannot be said to be without a second (advitiya)
The untenability of the contention that these are not qualities
but refer to the absence of certain features
It cannot be contended that the world is distinct from sat and asat

The refutation of th: view that pratyaksa cann)t perceive difference 177
Is the mithyatva of the world real or unreal? Either alternative goes
against the advaitic position.In the very act of denying dharmas, the ground on which the denial
is made shows Brahman to be endowed with dharma. 180
Refutation of the contention that the invariable concomitanoe of
knowledge and the known eetablishes their – identity. 180

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சித்தி த்ரய உட்ப்பொருள் -ஸ்ரீ திரு நாங்கூர் உ வே அண்ணங்கராச்சார்யர் ஸ்வாமிகள் —

March 13, 2023

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ஸ்லோகம்-
மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸஸ் ததா நிர்ணய
திஸ் ரஸ் சித்தய ஆத்ம ஸம் வித கிலாதீ ஸாந தத்வாஸ்ரய
கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹ ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூந்
யத் க்ரந்த அநு சந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும

ஆகம ப்ராமாண்யம்
மஹா புருஷ நிர்ணயம்
ஆத்ம ஈஸ்வர ஸம் வித் ஸித்திகள்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோஹீ
ஸ்தோத்ர ரத்னம்
ஆகிய கிரந்தங்கள் எந்த ஆச்சார்யரால் அருளிச் செய்யப்பட்டதாக ஸ்ரீ பாஷ்ய காரர் அனுசந்திக்கிறாரோ
பரமாச்சார்யராக விளங்கும் அந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்துதிக்கிறோம்

இதில் மஹா புருஷ நிர்ணயம் கிடைக்க வில்லை
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச் செய்துள்ள நியாய தத்வம் யோக ரஹஸ்யம் இவையும் இப்போது கிடைக்கப் பெற வில்லை
ஆகம ப்ராமாண்யம் பகவத் சாஸ்திரமான பாஞ்சராத்ர ப்ராமாண்யத்தைப் பஹு முகமாக நிலை நாட்டுகிறது
வேதம் போலவே ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் பிரபல பிரமாணம் என்று பரமாச்சாரியார் மூதலித்துப் பேசுகிறார்

ஸ்ரீ பாஷ்யகாரர் உத்பத்ய சம்பவாதிகரணத்தில் -2-2-8- இதை அடி ஒற்றியே
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம ப்ராமாண்யத்தை ஸ்ரீ வியாஸ சித்தாந்தமாக நிர்ணயித்து அருளுகிறார்
கீதார்த்த ஸங்க்ரஹத்தைத் தழுவியே மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருளை தெரியப் பாரினில் சொன்னார் (இராமானுச நூற்று -68-)
சதுஸ் ஸ்லோஹீ ஸ்தோத்ர ரத்தினங்களை அடி ஒற்றியே கத்யங்களையும் அருளிச் செய்தார்

சித்தி த்ரயத்தை அடியாகக் கொண்டே மஹா ஸித்தாந்த அர்த்த விசேஷங்களை அருளிச் செய்துள்ளார்

ஸித்தி -என்பது தத்வ நிர்ணயத்தைக் குறிக்கும்
ஜீவாத்மா பரமாத்மா பிராமண ஞானம் -இவற்றின் யாதாத்ம ஞானம் -நிர்ணயித்துத்
தருவதால் ஆத்ம ஸித்தி -ஈஸ்வர ஸித்தி -ஸம் வித் ஸித்தி

இதில் ஸம் வித் ஸித்தி ஸ்லோஹ ரூபம்
மற்ற இரண்டும் கத்ய ரூபங்கள்

பிராமண நிஷ்கர்ஷம்-ஸம் வித் சித்தியிலும்
ப்ரமேய நிஷ்கர்ஷம்-மற்ற இரண்டிலும்

வேதமே ப்ரமாணமாகக் கொள்ளும் பரம வைதிகராய் இருந்தாலும்
குதர்க்க வாசி நிரஸனத்துக்கு ஸத் தர்க்கங்களைக் கொண்டே ஸித்தாந்த நிர்ணயம் செய்து அருளுகிறார் –

————-

விருத்த மதயோ அநேகாஸ் சந்தயாத்மா பரமாத்மநோ
அதஸ் தத் பரி ஸூத்தயர்த்தம் ஆத்ம சித்திர் வித்யதே

ஆத்ம பரமாத்மாக்களுடைய தத்வ ஞானம் முக்திக்கு இன்றியமையாத ஸாதனம் என்று
வேதாந்தமும் வேதாந்தம் அறிந்த சான்றோர்களின் நூல்களும் பறை சாற்றுகின்றன
இவ்விரு ஞானத்திலும் புறவாதிகளுடைய துர்வாதங்களை நிரஸித்து தத்துவத்தை உள்ளபடி அறிந்து
உஜ்ஜீவிக்கவே ஆத்ம ஸித்தி செய்யப்படுகிறது என்கிறார் ஆளவந்தார் –

நான் நான் என்று எப்போதும் தனக்குத் தான் தோன்றும் ஆத்ம விஷயத்தில்
தேஹமே ஜீவன் என்றும்
புலன்கள் ஜீவன் என்றும்
மனனே ஜீவன் என்றும்
பிராணனே ஜீவன் என்றும்
புத்தியே ஜீவன் என்றும்
சொல்லும் புற வாதங்களைக் கண்டித்து

ஜீவாத்மா இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும்
ஞான ஆஸ்ரயமாய்
நித்தியமாய்
அணுவாய்
அநேகமாய் இருக்கிறது
இப்படி இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்று
பரமாத்வுக்கே சேஷமாய் -பரதந்த்ரமாய் -சரீரமாய் இருக்கும்
என்று ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் ஆத்ம ஸித்தியில்

தேஹ இந்திரிய மந ப்ராண தீப்யோ அந்யோ அநந்ய சாதந
நித்யோ வ்யாபீ ப்ரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னஸ் ஸ்வதஸ் ஸூகீ –என்கிற ஸ்லோகத்தால் ஆத்மாவின் யாதாத்ம்ய ஸ்வரூபத்தைச் சொல்லி
மேலே யுக்திகளாலே விளக்கி அருளுகிறார்

இங்கு வ்யாபீ -எல்லா அசேதனப் பொருள்களிலும் இருக்கத் தக்கவன் -அணுவைப் போன்று ஸூஷ்மன் என்று பொருள் உரைத்தார் பாஷ்யகாரர்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -1-1-10-ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டி அருளிச் செய்தபடி
ஜீவாத்மா ஸ்வரூபத்தால் வ்யாபியாக இருப்பவன் என்று பிரமிக்க வேண்டாவே

தைத்ரியம்-அன்ன மய ப்ராண மய மநோ மயங்களுக்கு அவ்வருகே
சரீரம் பிராணன் மனம் இவற்றுக் காட்டிலும் வேறுபட்டு
விஞ்ஞான மய -என்று
வேத புருஷன் ஆத்மாவின் வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறான்

சென்று சென்று பரம் பரமாய்–8-8-5-
என் ஊனில் உயிரில் உணர்வில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே –8-8-4-என்று ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டியே
ஆளவந்தார் ஆத்ம சித்தியில் நிலை நாட்டி அருளுகிறார்

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப் பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

மாயாவாதிகள் அறிவே ப்ரஹ்மம்-அவித்யையால் நாநா விதப்பொருள்களாகத் தோன்றுகிறது – என்பர்
நான் அறிகிறேன் என்கிற லோக வழக்குக்கு புறம்பாகுமே
ஞானான் யே வாயம் புருஷ என்றும்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்றும்
அறிவுள்ளவர்களாகவே வேதமும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சொல்வதால்
மாயாவாதம் நிரஸனம்
ஜீவனும் ப்ரஹ்மமும் ஓன்று என்பதும் பொருந்தாது
ஜீவன் கர்ம வஸ்யன் -ப்ரஹ்மம் ஸம்ஸார ஸம்பந்தம் அற்றவன்

ஜீவனின் நிலை நின்ற ஆகாரத்தை ஸ்வதஸ் ஸூகீ என்கிறார்
பகவத் குண அனுபவத்தைப் பண்ணி
உகந்து பணி செய்து களித்து இருப்பதே ஆத்மாவின் உண்மையான நிலை
ஸம்ஸார ஸூக துக்கங்கள் கர்மம் அடியாகவே வருபவை
பகவானை சரண் அடைந்து அவன் அனுக்ரஹத்தினால் கர்ம சம்பந்தம் அறப்பெற்றால்
ஸ்வதஸ் ஸூகீ நிலை ஸாஸ்வதமாகப் பெறப் பெறுவானே

யஞ்ஞ மூர்த்தி வாதம் -17 நாள் இரவில் தேவப் பெருமாள் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்வப்னத்தில்
ஆளவந்தார் அருளிச் செய்த ஆத்ம ஸித்தி அர்த்தங்களை -மாயாவாத நிரசனங்களை -பிரஸாதித்து அருள
தெளிந்து எழுந்து ஸந்துஷ்டாராக வாத சதஸ்ஸுக்கு எழுந்து அருள
அவரும் இவர் திருவடிகளிலே சரண் அடைய –
அருளாளப் பெருமாள் எம்பருமானார் திருநாமம் சாற்றப்பெற்று
ஸ்ரீ பாஷ்யகாரருடன் நம் தரிசனத்தை நிர்வகித்துப் போந்தார் அன்றோ

இவற்றால் ஆளவந்தாருடையா ஸ்ரீ ஸூக்திகளின் வீறுடைமை நன்கு விளங்கும் –

—————-

ஈஸ்வர ஸித்தியின் உள் பொருள்

வேதத்தை பிரமாணமாக ஒத்துக் கொண்டும்
வேத வேத்யனான பரம புருஷனை ஒத்துக் கொள்ளாமல்
யகாதி கர்மங்கள் அபூர்வத்தை உண்டு பண்ணி
அதன் வழியாக ஸ்வர்க்காதி பலன்களைப் பெறுகிறார்கள் என்று நிரீஸ்வர வாதம் செய்யும் கர்ம மீமாம்ஸகர்களை நிரஸித்து
பிரளய காலத்தில் அழிந்து கிடந்த எல்லா லோகங்களையும் மறுபடியும் ஸ்ருஷ்டி காலத்தில்
படைத்துக் காத்து அருளும் சர்வேஸ்வரனை ஒருவன் உளன் என்று ஸ்ருதி கூறா நிற்கச் செய்தே
நிரீஸ்வர வாதம் பண்ணும் இவர்களை ஆஸ்திக நாஸ்திகர்கள் என்கிறார்

மேலும்
எவனுடைய திரு ஆராதனமாக யாகாதிகள் ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ
யாகாதிகளால் ஆராதிக்கப்பட்ட எவனுடைய அனுக்ரஹத்தினாலே பலத்தை அவர்கள் அடைகின்றனரோ
அந்தப் பரமன் இல்லாத போது கர்மமும் கர்ம பலனும் ஸித்திக்காது -என்கிறார்

மேலும்
அழிந்து

கிடந்த வஸ்துவுக்கு நாம ரூபங்கள் உண்டாவதற்கு ஒரு விதாதா வேணும்
ஆகவே
ஜகத் ஸ்ருஷ்டவாய்
ஸர்வ கர்ம ஸமாராதனாய்
ஸர்வ பல ப்ரதனான
பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியாலே அவஸ்யம் அங்கீ கரித்தே யாக வேண்டும்
என்று யுக்திகளாலே நிரூபித்து
கருமமும் கர்ம பலனுமாகிய காரணன் தன்னை -என்று
ஆழ்வார் பேணின காரணமான பரம் பொருளை
ஈஸ்வர ஸித்தியிலே நிலை நாட்டி அருளுகிறார் பரமாச்சாரியார்

இதன் இறுதியில்
ஏக ப்ரதான புருஷம் விவாதாத் யாஸிதம் ஜகத்
சேதன அசேதநாத் மத்வாத் ஏக ராஜகதே ஸவத் –என்னும் ஸ்லோகத்தில்
உபய விபூதியிலும் உள்ள ஜீவ ராசிகளும்
அதிகாரி வர்க்கமான வானவர்களும்
ராஜாதி ராஜனான ஸ்ரீ மன் நாராயணனுடைய செங்கோலின் கீழ் இடரின்றி வாழ்கின்றனர்
என்னும் வேதாந்த ஸித்தாந்தத்தை ராஜ ராஷ்ட்ர த்ருஷ்டாந்தத்தாலே விளக்குகிறார்
வேதைக வேத்யன் பரம புருஷன் -என்பதே இவர் திரு உள்ளம்
ஆயினும் வேதார்த்த நிர்ணய ஸஹ காரியான தர்க்கங்களையே ஈஸ்வர ஸித்தியில் முக்யமாகக் காட்டி அருளுகிறார் –

——————

ஸம்வித் ஸித்தியில்
முக்கியமாக கேவல அத்வைத வாதத்தை நிரஸனம் பண்ணி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்துகிறார்
சத்தான -உளதான பொருள் ஒன்றே-அநேகம் இல்லை என்னும் வாதத்தையும்
ஞானம் -அறிவு -ஒன்றே உளது -ஜேயமும் -அறியப்படும் பொருளும் -ஞாதாவும் அறிகிறவனும் -இல்லை -என்னும் வாதத்தையும் கண்டித்து
சித் அசித் ஈஸ்வரன் என்ற தத்வ த்ரயம் -உண்மைப் பொருள்கள் மூன்றுமே உண்டு என்றும்
அப்படியே ஞானம் -ஜேயம் -ஞாதா -மூன்றும் உள்ளது என்றும் நிரூபிக்கிறார் –

மேலும்
ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -5-2-1- ஸ்ருதி வசனத்துக்கு
பரம் பொருளுக்கு குணம் ரூபம் ஐஸ்வர்யம் ஒன்றும் இல்லை என்னும் அபத்தப் பொருளை அத்வைதிகள் உரைத்தனர்
அத்தைத் தகர்த்து
பரம்பொருளான எம்பெருமானுக்கு
நற் குணங்களும்
திவ்ய ரூபங்களும்
வைபவங்களும்
பல பல உண்டு என்று நிரூபிக்கிறார் –

ஸத்யம் ஞானம் அநந்தம் -தைத்ரியம் ஆந -1-2-
விகாரம் அற்று இருப்பதால் ஸத்யமாயும்
ஞானமாகவும்
அளவற்றதாய் இருப்பதால் அநந்தமாயும் –இருக்கும் ப்ரஹ்மம்

பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல கிரியா ச -ஸூவே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் –
ஸ்ருஷ்டித்தல் போன்ற பல செயல்களும் உண்டு என்று அறியப்படுகிறது

கந்தர்வ அப்சரஸஸ் ஸித்தாஸ் சகின்நர மஹோ ரகா
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே
கந்தர்வர்களும் அப்சரஸ் ஸுக்களும் கின்னர்களுடன் மஹா நாகங்களுடன் கூடிய சித்தர்களும்
இவனுடைய குணங்களின் எல்லையை அடைவது இல்லை
ஆகையால் இவன் அநந்தன் என்று சொல்லப்படுகிறான்

இத்யாதி பிராமண வசனங்களால்
எம்பெருமான் எல்லையில்லா நற் குணங்களையும் வைபவங்களை யுடையவன் என்று விளங்குகிறது
இவனே ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
பிரதானனன் -என்கிற பொருளையே
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி சொல்கிறது

ஏக முக்யாந்ய கேவலா -என்கிற கோசத்தின் படி ப்ரதானன் -என்பதே ஏக பதார்த்தம்

மேலும்
சோழ மன்னன் ஒருவனே அத்விதீயனாக இப்போதும் உளன் -என்பதற்கு எப்படி
அவனே எல்லா மன்னர்களுக்கும் தலைவன்
அவனுக்கு சமானமாகவும் -அவனைக்காட்டிலும் உயர்ந்தவனாக இப்போதும் மற்றொரு மன்னன் இல்லை போல்
இங்கும் கொள்வது என்று மூதலித்துக் காட்டி அருளுகிறார்

யதா சோழ ந்ரூப ஸம் ராட் அத்விதீயோ அத்ய பூதலே
இதி தத் துல்ய ந்ருபதி –நிவாரண பரம் வசஸ்
ந து தத் ப்ருத்ய தத் புத்ர களத்ராதி நிஷேதகம்
ததா சுரா முர நர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட கோடயஸ்
க்லேச கர்ம விபாகாத்யை ரஸ ப்ருஷ்டஸ்யாகி லே ஸிதுஸ்
ஞாநாதி ஷாட் குண்ய நிதேர சிந்த்ய விபவஸ்ய தா
விஷ்ணோர் விபூதி மஹிம ஸமுத்ரத் ரப்ஸ விப்ருஷஸ் –என்னும் ஸ்லோகங்களால்
அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களும் அதற்கு உட்பட்ட ஸகல தேவாதி சேதனர்களும்
எம்பெருமானுடைய விபூதியில் அடங்கியவை

ஸ்வ தந்திரமான மற்றொரு வஸ்து இல்லை -என்று நிரூபித்து
ப்ரஹ்மாத்ம நாத்மலாபோயம் ப்ரபஞ்சஸ் சித சின்மயஸ்
இதி பிரமீயதே ப்ராஹ்மீ விபூதிர் ந நிஷித்யதே -என்று
அத்விதீய ஸ்ருதியினால் புருஷோத்தமனுடைய விபூதிக்கு ஒருவிதமான இடரும் இல்லை என்று காட்டி அருளுகிறார்

இவ்வண்ணம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை
ஸம்வித் ஸித்தியில் நிலை நாட்டி அருளுகிறார் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

இத்யாதியான ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளை உட்க் கொண்டு
ஏக மேவ அத்விதீயம் -ஸ்ருதி
வசனத்துக்குப் பொருத்தமான பொருளை விளக்கி அருள்கிறார் பரமாச்சாரியார் –

———————————————–—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது–1-ஆத்ம சித்தி –

November 30, 2021

ஸ்ரீ நாதமுனிகளால் பிரவர்த்தனம் -ஸ்ரீ ஆளவந்தாரால் போஷணம் -ஸ்ரீ ராமானுஜரால் வர்த்திக்கப்பட்ட விசிஷ்டாத்வைதம்

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மாநத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீசாநத் தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ எம்பெருமான் சித்தாந்தம் ஆகிய பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு கீழே உள்ள பலவும் பிரமாணமாக உள்ளன –
அவை யாவன –ஆகம ப்ராமண்யம் -மஹா புருஷ நிர்ணயம் -ஆத்ம சித்தி -சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி ஆகிய சித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -சதுஸ் ஸ்லோஹீ -ஸ்தோத்ர ரத்னம் ஆகிய எட்டும்
இவை அனைத்தையும் யாதிபதியான எம்பெருமானார் எந்த ஆளவந்தாரது அஷ்ட கிரந்தங்கள் என்று
நித்ய அனுசந்தானம் செய்தாரோ அந்த யாமுனாச்சார்யரை ஸ்தோத்ரம் செய்கிறோம்

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் -உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஆத்ம ஸித்தி – ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)
நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-
இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –

————

ஸித்தி த்ரயம்: ஸித்தி என்பது தத்வ நிர்ணயம். இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில்,
ஸித்தி என்ற பெயருள்ள இஷ்ட ஸித்தி, நைஷ்கர்ம்ய ஸித்தி மற்றும் ப்ரம்ம ஸித்தி போன்ற பல நூல்கள் தோன்றியிருந்தன.
ஒரு பொருளை ஆழ்ந்து ஆராய்ந்து காணும் முடிவு ஸித்தாந்தம் அல்லது ஸித்தி என்பதாகும்.

இந்த முறையில் ஸ்ரீ ஆளவந்தாரும் தமக்கு முன்பு தோன்றிய இஷ்ட ஸித்தி முதலிய நூல்களின் முடிவுகளை கண்டித்து
விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டியுள்ளார்.

இந்த நூல் ஆத்ம ஸித்தி, ஈஸ்வர ஸித்தி, ஸம்வித் ஸித்தி என்று மூன்று பகுதிகளைக் கொண்டு
ஜீவாத்மா, பரமாத்மா, பகுத்தறிவதற்குரிய ப்ரமாண ஞானம் ஆகிய மூன்று தத்வங்களை தெளிவாக விளக்குகிறது.

ஸித்தி த்ரயம் – ஆத்ம ஸித்தி

ஆத்ம ஸித்தியில் ஆத்ம ஸ்வரூபம் ஆராயப்பட்டு சித்தாந்தப் படுத்தப்படுகிறது.
ஆத்ம விஷயத்தில் தேஹமே ஜீவன், புலன்களே ஜீவன், மனமே ஜீவன், பிராணனே ஜீவன், புத்தியே ஜீவன் என்று
கூறுகிறவர்களின் வாதங்களைக் கண்டித்து, ஜீவாத்மாவின் தன்மை இவற்றைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும்.

ஆத்மா சரீரம், இந்திரியம், மனது, பிராணன், புத்தி இவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாய், நித்யமாய், அணுவாய்,
ஸ்வயம் ப்ரகாசமுமாய், ஆனந்தமயமாய் அநேகமாயும், பரமாத்மாவுக்குச் சரீரமாய், பரதந்திரமாய்,
சேஷமாயிருக்கிறது என்று அறுதியிட்டுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார்.

தைத்ரிய உபநிஷத்தில் அன்னமய, ப்ராணமய மனோமயங்களுக்கு அவ்வருகே சரீரம், ப்ராணன், மனம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டுள்ள ஜீவாத்மாவை அறிவு நிறைந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உணர்வற்ற பொருள்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு உண்டான வேறுபாட்டினை வேதம் விஜ்ஞாநமயன் என்று காட்டியது.
ப்ரபந்நஜனகூடஸ்தரான நம்மாழ்வாரும்
“சென்று சென்று பரம்பரமாய்” என்னூனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே
என்று ஆத்மாவின் நிலையை உணர்த்துகிறார்.

ஸம்ஸார துக்கங்கள் அநாதி காலமாகச் செய்த கர்மத்தின் பயனாய் வந்தேறியுள்ளது.
பகவானை சரணமடைந்து அவனுடைய கருணைப் பெருக்கினால் கர்ம பந்தம் நீங்கி,
எம்பெருமானுக்கு தொண்டு செய்து உகப்பிக்கும் நிலை ஏற்படும்.
ஜீவாத்மாவின் உண்மைநிலை பகவத்குண அனுபவத்தைப் பண்ணி, உகந்து பணி செய்து களித்திருப்பதே ஆகும்.

ஸித்தி த்ரயம் – ஈஸ்வர ஸித்தி
ஈஸ்வர ஸித்தியில் அகில உலகின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் இறைவனுக்கு உட்பட்டதே
என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிவுருத்த எல்லாம் அறிந்தவனும், எல்லாம் வல்லவனும்,
ஸத்யஸங்கல்பனுமான இறைவன் ஒருவன் உளன் என்பதை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகிறது.

வேதத்தை ப்ரமாணமாக ஏற்றுக் கொண்டு, ஆனால் வேத வேத்யனான பரமபுருஷனை ஒத்துக் கொள்ளாமல்,
யாகம் முதலிய கர்மங்களே ஸ்வர்கம் முதலிய பயனைக் கொடுக்கின்றது. ஆகையால் உலகிற்குக் காரணமாய்,
கர்ம பலன்களைக் கொடுக்கும் இறைவனால் ஒரு பயனுமில்லை என்று கூறும் கர்மமீமாம்சகர் கூறும் கூற்றைத் தவிர்த்து,
ப்ரளயத்தில் அழுந்திக் கிடந்த அகில உலகையும் ஸ்ருஷ்டி காலத்தில் மறுபடியும் படைத்து காத்தருளும்
ஸர்வேஸ்வரன் ஒருவன் உளன் என்று நிலைநாட்டுகிறார்.

மேலும் எவனுடைய ஆராதனங்களான யாகம் முதலியவை ஸாஸ்த்ரத்தினால் விதிக்கப் படுகின்றனவோ,
அவை எம்பெருமானுடைய அருளாலேயே பயனை கொடுக்கின்றன. அந்தப் பரமன் இல்லாதபோது, கர்மமும் கர்ம பலமும் சித்திக்காது.

எனவே ஜகத் ச்ரஷ்டாவாய் (உலகைப் படைப்பவனாய்), ஸர்வகர்ம ஸமாராத்யனாய் (அனைத்து கர்மாக்களாலே வழிபடப்படுபவனாய்),
ஸர்வ பலப்ரதனான (அவற்றிற்கு பயனும் அளிப்பவனான) பரம புருஷனை ஸாஸ்த்ரம் காட்டும் வழியிலே
அங்கீகரித்தே(ஏற்றுக்கொள்ள) வேண்டும் என்று பலபடிகளாலே நிரூபித்து,
“கருமமும் கருமபலனுமாகிய காரணன் தன்னை” என்ற நம்மாழ்வாரின்
ஸகல வித்யா சர்வஸ்வம் என்று போற்றுதற்குரிய திருவாய்மொழியைக் கொண்டு பரம்பொருளை ஈஸ்வர ஸித்தியில் அறுதியிடுகிறார்.

ஸித்தி த்ரயம் – ஸம்வித் ஸித்தி
ஸம்வித் ஸித்தியில் அத்வைத வாதமும் மாயா வாதமும் கண்டிக்கப்படுகிறது. உளதான பொருள் ஒன்று தான்.
அநேகமில்லை என்று கூறும் வாதத்தையும், ஜ்ஞானம் ஒன்றே உள்ளது;
அறியப்படும் பொருளும், அறிகிறவனும் வேறில்லை என்று கூறுபவர்களுடைய வாதத்தையும் கண்டித்து;
அறிவு, அறியப்படும் பொருள், அறிகின்றவன் என்ற மூன்றும் உள்ளன.
இப்படியே சித், அசித், ஈஸ்வரன் என்ற மூன்று தத்வங்களும் உள்ளன என்பதை நிரூபிக்கிறார் பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார்.
மேலும் பரம்பொருளுக்கு குணம், ரூபம், ஐஸ்வர்யம், ஆகிய ஒன்றுமில்லை என்ற அத்வைதிகள் கூற்றைத் தகர்த்து
எம்பெருமானுக்கு நற்குணங்களும், திவ்ய ரூபங்களும், வைபவங்களும் பல பல உண்டு.
கணக்கில்லாத நற்குணங்களுக்கு இருப்பிடமாக எம்பெருமான் போற்றப்படுகிறான்.
ஆதலால் எம்பெருமான் ஒருவனே ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய், தானே அனைவருக்கும் பிரதானனாயிருக்கிறான்
என்பதை அறுதியிட்டு நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் கொள்கைகளை நிலைநாட்டியுள்ளார் நம் ஸ்வாமி.

“ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்ம” என்ற வாக்கியம் அத்வைதக் கொள்கைக்கு முக்கியமானது.
இதற்கு ப்ரஹ்மம் தவிர வேறேதும் உண்மையில் இல்லை என்பதே அத்வைதிகள் கூறும் பொருள்.

ஸ்ரீ ஆளவந்தாரின் விவரணம் பின்வருமாறு:
நாம் ப்ரத்யக்ஷமாகக் காணும் காரியப் பொருள்கள் யாவும் உண்மை.
“பரம்பொருள் ஒன்றே” என்பதால் உலகம் பொய் என்றாகாது. உண்மையாக உள்ள பரம்பொருளையும்,
இல்லாததான உலகத்தையும் ஒரு பொருளாகக் கூறமுடியாது.

இப்படிச் சொன்னால் (பொய்யான உலகில்) இல்லாத உலகில் உள்ள பரம்பொருளும் இல்லாததாகும்.
எனவே பரம்பொருள் ஒன்றே! இரண்டல்ல” என்று பொருள் கொள்ளவேணுமே ஒழிய உலகில்லை
(உலகு பொய் என்று பொருள் கொள்ள முடியாது ) என்பது ஸ்ரீ ஆளவந்தார் கூற்று.
ஆக அத்விதீயன் என்றால் பரம்பொருளைப் போன்ற மற்றொருவர் கிடையாது என்பதே ஆகும்.
உலகும், மக்களும், தேவர்களும் எம்பெருமானுடைய செல்வத்தில் அடங்கியவையே ஆகும்.
ஆக எம்பெருமானே புருஷோத்தமன் ஆவான் என்று தெளிவாகக் காட்டுகிறார் நம் ஸ்வாமி.

இதே போன்று தத் த்வம் அஸி என்ற வாக்கியத்திற்கு பொருள் கூறும் அத்வைதிகள்
ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒரே பொருள் என்பதாகும்.
இதற்கு நம் ஸ்வாமி அறிவுக் களஞ்சியமான பரம்பொருளையும், குறுகிய ஞானமுடையனாய்
சம்சாரியாய் துக்கப்படுபவனான ஜீவாத்மாவோடு ஒன்று படுத்திப் பேசுவது
ஒளியையும், இருளையும் ஒன்று என்பது போல் ஆகிவிடும் என்கிறார்.

——

ஸ்ரீ சித்தி த்ரயம் -ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தது
வேதார்த்தம் ஸ்தாபிக்க -சத் சித்தாந்தம் -வைதிக தர்மம் –
சித்தி -ஞானம் -1-ஆத்ம 2-சம்வித் -3-ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
பிரமாணம் -பிரமாதா -பிரமேயம் -மூன்றும்
அசேதனம் பற்றியும் ஞானி பற்றியும் சர்வஞ்ஞான் பற்றியும்-இப்படி மூன்றும்
மாதா -பிரமாதா -ஆத்மா
மேயம் பிரமேயம் ஈஸ்வரன்
ஏற்படும் ஞானம் பிரமேதி -தர்ம பூத ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் உக்திகளைக் கொண்டு -பரமார்த்தம் ஸ்தாபிக்க முடியாதே –
சாஸ்த்ர யுத்தம் எளிமை –4-ஸ்தோத்ர ரத்னம் –5-சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ த்வயார்த்தம் -ஸ்ரீ பெருமை தனியாக
6-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்
7-மஹா புருஷ நிர்ணயம்
8-ஆகம பிராமண்யம்
ஆக எட்டு நூல்கள் அருளிச் செய்துள்ளார் – முதலில் அருளிச் செய்த கிரந்தங்கள் இவை

கை விளக்காகக் கொண்டே ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீ ஸூ க்திகள்–
உத்தமூர் வீர ராகவாச்சார்யர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
திரு நாங்கூர் ஸ்வாமிகள் வியாக்யானம் உண்டே
கத்யமும் ஸ்லோகமும் இவற்றில் உண்டே –
ஸ்ரீ உடையவர் ஒன்பது கிரந்தங்கள்
ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் -அஹம் -ஆத்மதத்வம் –
ஆத்ம சித்தி சம்வித் சித்தி கொண்டு நிர்ணயம்
சித்தி -ஞானம் -ஆத்ம சம்வித் -ஈஸ்வர சித்தி விஷய உண்மை யதார்த்த ஞானம்
சம்வித் என்றாலும் ஞானம்
சம்வித் -தர்மபூத ஞானத்தை குறிக்கும் -உத்பத்தி நாசம் கூடி இருக்கும் –
ஆத்மாவே ஞானம் -உத்பத்தி விநாசம் இல்லையே

ஞானம் ஏற்படும் சாதனம் -ஞான த்ரயம்
பிரஸ்தாபனம் -ஸ்ரீ பெரும்புதூர் ஆஸூரி ராமானுஜாச்சார்யார் -பல முகேன உபாய-
ஆயுள் நெய் -தலையிலே ப்ராப்யம் ஏற்றி சொல்வது –
சித்தி த்ரயம் நூலே ஞான த்ரயம் வருவது நிச்சயம் -சடக்கென தடங்கல் இல்லாமல் கிடைப்பதால் -உபச்சாரமாக சொல்வது
சாதனத்தில் பல விபதேசம்-
பல அபேதம் முகேன -சாதனத்தை சாத்தியம் -விளம்பம் இல்லாமல் -விட்டுப் போகாமல் -நிச்சயமாக ஏற்படுத்தும்
ஆத்மதத்வம் இவை கொண்டே நிர்ணயம் மஹா சித்தாந்தத்தில்
ஈஸ்வர சித்தி கொண்டே -சாஸ்த்ர யோனித்வ அதிகரணம் –
ஆகம ப்ராமாண்யம் -அடி ஒற்றி ப்ரஹ்ம மீமாம்ச அந்தக்கதை -பாஞ்சராத்ர ஆகமம் பரம பிராமணியம்
கீதார்த்த ஸங்க்ரஹம் கொண்டே ஸ்ரீ கீதா பாஷ்யம்
வேதார்த்த ஸங்க்ரஹம் தீபம் சாரம் இவை -மஹா புருஷ நிர்ணயம் கொண்டே-சாதித்தார்
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ் ஸ்லோகி கொண்டே கத்ய த்ரயம்
ஆ முதல்வன் -நிர்ஹேதுக கடாக்ஷம்
ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் -திரு அவதாரம் -74-ரூபங்கள் ஸ்ரீ நரசிம்மர் -மதகுகளை -74-வைதிக சம்ப்ரதாயம் காட்டிக் கொடுத்த கோயில் –

823-ஸ்ரீ மந் நாதமுனிகள் திரு அவதாரம்/ யமுனைத்துறைவன் பெயர் சாத்த -ஈஸ்வர முனிகள் திருத்தந்தை
ஆக்கி ஆழ்வான்-மஹா பாஷ்ய பட்டர் இடம் சிஷ்யர் -பிரதிவாதி வாரணம் பிரகட ஆடோபம் – விபாசனம் ஷம-
ஆ சைலாத் ஹிமாசலம் தொடங்கி -உப கண்டாதி மலை தாழ்வாரை வரை -அத்ரி கன்யா சரண கீதாலயா
கொழுந்து போன்ற திருவடி ஸ்பரிசத்தால் -பாக்யம் பெற்ற தாழ்வாரை –
ஆ ரஷோணீதா சீதா முக கமலம் சமுல்லாசாத ஹேது -சேது வரை –மாத்ருஸ அ ந்யா -என்னை ப் போலே கிடையாது தேடலாம்
அவதாம்சம் -ராக்குடி -கிழக்கு பர்வதம் சூர்யன் -அஸ்தமாத்ரிக்கு சந்திரன் -தேடினாலும் மீமாம்ச சாஸ்த்ரா யுக்ம –
அவற்றிலே புத்தி செலுத்தி நம்மைப் போலே -ஆளவந்தார் பேர் பெற்றார்
மணக்கால் நம்பி -தூது வளைக்கீரை கொடுத்து –கா பிஷா -போட வந்தேன் -கீதா பிரமாணம் பிரமேயம் காட்டி –
பெரிய பெருமாளை காட்டச் சொல்லி
ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்த பிரகாசம் -விமானம் பிராணாவாகாரம் —
சேவித்து மற்றவை விட்டார் -சந்யாச ஆஸ்ரமம் -கஜேந்திர தாசர் காட்டிக் கொடுக்க ஆ முதல்வன் கடாக்ஷித்து -விட்டு
தேவப்பெருமாள் -சரணாகதி –
ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம் கொண்டே ராமானுஜர் -பெரிய நம்பி உடன் வர -சரம திருமேனி சேவித்து திரும்ப
மதுராந்தகம் மகிழமரம் அடியில் சமாஸ்ரயணம்
நாஸ்திகர் –
அநாதி நிதன அவிச்சின்ன -பாட சம்ப்ரதாயம்-ஸூத பிராமண பூதம்- -வேத ஸாஸ்த்ர யுக்த அர்த்தேஷு நாஸ்தி என்பவன்

வேறே வேறே வித நாஸ்திகர்களை ஒரே சப்தத்தால் விளக்கி
சரீரம் தாண்டி வேறே பிறவி என்பது இல்லை -இஹ லோகம் பர லோகம் -கர்மங்களால் கட்டுப்படுத்தலாம் –
சாரு வாகர் -கண்ணாலே பார்ப்பதே உண்மை -அயம் லோக -நாஸ்தி பர /
புத்தன் -க்ஷணிகம் -ஸூந்யா -க்ஷணிக விஞ்ஞான சைதன்யம் பிரவாஹா ரூபேண அனுவர்த்திக்கும் -சைதன்யம் –
ஞானம் ஞாதா ஜே யம் மூன்றும் ஒன்றே அறிவு அறியப்படும் பொருள் அறியுமாவான் சேர்ந்தே -மூன்று இல்லை
நையாயிகன்-வேதம் பிரமாணம் ஒத்துக் கொண்டு -பாஷாண கல்பம் ஆத்மா அடைந்தாள் மோக்ஷம் -அசேஷ விசேஷ குண இல்லாமல் –
சைதன்யம் மாத்திரம் ஞானமே ஆத்மா -அடுத்து -யுக்தியால் வாதங்கள் –
அநிஷ்டம் போனது கல் இஷ்ட பிராப்தி ஆனந்தம் இல்லையே -புருஷார்த்தம் இல்லையே
சங்கர பாஸ்கர யாதவர் மூன்று குத்ருஷ்டிகள் –
பர ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் -வேதார்த்த ஸங்க்ரஹம் மங்கள ஸ்லோகம் இரண்டாவது -விஜயதே யமுனா முனி
தமஸா ஹார்த்தும் -சத் அசத் விவேகம் அறிய காருணிகோ ஈஸா ப்ரதீவம் ததாதி பட்டர் -ரெங்கராஜா ஸ்தவம்
சரபம் சலபமாகி வீட்டில் பூச்சி போலே கூரத்தாழ்வான்
ஆத்ம பரமாத்மா சம்வித் பிரமாணம் கொண்டு ப்ரதிஷ்டிதம் யுக்தி கொண்டே பாஹ்ய நிரசனம் -பிரதானம் -பரமாச்சாரியார் கையாண்டார்
உன் ஸ்திதி என் ஆதீனம் -பிரமாணம் கொண்டே ப்ரமேயம் -திரை விலக்கி சேவை சாதித்தான் திருவேங்கடமுடையான்
-நியாய சாஸ்திரம் -சத்காரியவாதிகள் –
பிரதிபக்ஷ -நிரசன பூர்வக ஆத்மதத்வ நிர்ணயம் -வேத ஸாஸ்த்ர அனுகூல தர்க்கங்கள் கொண்டே –
தேகாதி விலக்ஷணம் -அஜடம் -நித்யம் ஞானானந்த குணகம் -பர ப்ரஹ்ம குண அனுபவ தாஸ்யைக ரசம்
பர ப்ரஹ்ம சேஷ பூதர் -முக்தி பிரசாதத்தால் பெற்ற ஆத்மதத்வம் –
ஆத்மசித்தி கடைசியில் -இது -நாம் அறிந்தவை –
த்வைதம் -சரீராத்மா பாவம் இல்லாமல் சேஷ சேஷி கைங்கர்யம் எல்லாம் உண்டே என்பர்
ஈஸ்வர சித்தி -நிரீஸ்வர வாதி -நிரசித்து -த்ரையந்த வேத பிரமாணம் கொண்டே ஸ்தாபித்தார்
சம்வித் சித்தி -மாத்ரு-பிரமாத மேய -ப்ரமேயம் -பிரமித்தி ஞானம் -பிரமிதி ரூபம் -ப்ரமேயத்தை தத்வம் ஸ்தாபிக்க
பரமார்த்ததக ஸ்வரூப பேதம் இம்மூன்றுக்கும் -தர்மபூத ஞானம் -சங்கோச விகாசம் அடையும் -அர்ஹமாய் இருக்கும் –
இவை இல்லாமல் பரமாத்மா -உபநிஷத்தால் -சச்சிதானந்த ரூபம் ஸ்ரீ மான் புருஷோத்தமன் -உபநிஷத்தால் சொல்லப்படுபவர்
மாயாவதி இத்யாதிகளுடைய கற்பனைகளை தகர்த்து –
யத் பத த்யானம் அசேஷ கல்மஷன்கள் அழிக்கப் பட்டு அஹம் அவஸ்துவாய் இருக்க -பொருளாக்கின யாமுனாச்சார்யரை வணங்குவேன்

ஸ்ரீ மங்களா சரண வஸ்து நிர்தேசங்கள் இரண்டு ஸ்லோகங்கள் உண்டு
பிரகிருதி புருஷ கால வ்யக்த முக்த
பிரகிருதி அவ்யக்தம் -மாறி வ்யக்தம்
புருஷ சப்தம் தனியாக -பத்த ஜீவர்கள் —
யத் இச்சாம் அனுவிததி நித்யம் -சங்கல்பத்தை பின் தொடர்ந்து
நித்தியமாக பின் தொடர்ந்து செல்லும்
இது வரை லீலா விபூதி
நித்யம் நித்ய சித்தர் அநேகர்- எப்போதும் தொடரப்பட்டு
ஸூ பரிசரண போகை-கைங்கர்ய ரசம் யாத்திரை
ஸ்ரீ மதி-ஸ்ரீ யபதி இடத்தில் பிரியமான பிரியம் காட்டப்படுபவர் -பூருஷ பரம புருஷன் பரஸ்மின் -ஒரே வேற்றுமை –
மம பக்தி பூமா -பவது
அகில ப்ரஹ்மணி –ஸ்ரீ நிவாஸே-பரஸ்மின் -பக்தி ரூபா அங்கும் இப்படியே

பிரகிருதி -மாயாந்து பிரகிருதி வித்தி -அவ்யக்தம் -தத் கார்யாணி-வ்யக்தம் -காரியம் –
ப்ரக்ருதி பிராகிருத பரிணாமம் -ஹேது- காலம் தூண்ட -நடக்கும்
தத் பத்த-புருஷ -மூன்றையும் வசப்படுத்தி வைக்கும் காலம் -காலத்தாலும் வ்யக்த்ததாலும் பந்தம் -சரீரத்தாலும் காலத்தாலும்
முக்த -பகவத் உபாசனை பிரபாவாத் -பாவ பந்தனாத் -கர்மா -முக்தா -நிர்முக்தா விநிர்முக்தா -திரும்பி வராத அளவுக்கு –
ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் சங்கல்பம் பின் தொடர்ந்து
சைதன்யம் இல்லாமல் பிரக்ருதியும் வ்யக்தியும் எப்படி -என்றால்
ஞானம் இருந்தால் தடுப்போம் -அவை கேட்க்காதே-லீலா ரசம் -அலகிலா விளையாட்டுடையார் -லீலே-ஏவம் லீலா விபூதி யோகம்
நித்ய விபூதி யோகம் -கூடி இருத்தல் யோகம் -நித்யம் மத்திய மணி நியாயம் –
ஸ்ரீ யபதி ஸ்ரீ வைகுண்டம் -நித்ய கைங்கர்யம் ரசம் -அனுபவ ஜெனீத ப்ரீதி காரித்த அசேஷ சேஷ வ்ருத்தி –
அகாத போகம் அநந்தம் -அனந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் -நிரதிசய ப்ரீதி –
ஸ்ரீ வல்லபன் புருஷோத்தமன் -பர ப்ரஹ்மணி -பக்தி -கடல் ஏற்படுத்த வேண்டும்
ஸ்ரேயஸ்-ஸ்ரீயப்பதியிடம் பக்தி ரேவ -பக்தியை பிரார்த்திதுப் பெற்றால் தானே வைகுந்தம் தரும் – பாரம்யம்-இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
அன்பை உள்ளடக்கிக் கொண்ட உபாசனம் பக்தி -அவிச்சின்ன பூர்ண பகவத் அனுபவ கர்ப்ப சேவா கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –
ஸூவ அபிமதம் பிரகாரணார்த்தம்-முதல் ஸ்லோகமே ஸங்க்ரஹம் –
அசேதன சேதன பரமாத்மா பேதங்கள் உண்மை -தத்வத்ரயம் -பாரம்யம் ஸ்ரீ மந் நாராயணனே –
சர்வ சேதன அசேதனங்கள் விபூதியாய் இருக்கும் -சார்ந்தே விட்டுப் பிரியாமல் -உபாசனமே அபவர்க்க ஹேது –
திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தம்

விருத்த மதம் அநந்தம்
ஆத்ம சித்தி விரித்து இவற்றை நிரசித்து–ஆத்ம பரமாத்மா விஷயங்களில் முரண்பாடுகள் -பரிசோதனம் பண்ணி –
நாநா விப்ரபுத்தி -முமுஷுக்கு தானே இவற்றின் யாதாம்ய ஞானம் வேண்டும் –
தோஷ நிரசனம்-சாஸ்திரமும் உக்திகளையும் கொண்டு -தர்க்கம் -கவி தார்க்கிக–ஸ்ரீ தேசிகர்-
நியாய மீமாம்ச வ்யாக்ரண சாஸ்திரங்களில் அவகாஹித்து தத்வ நிர்ணயம் –
பர அவர ஆத்மா -இரண்டையும் யாதாவாக ஸ்தாபித்து -பர பாஷ ப்ரதிஷேப பூர்வகமாக -நிர்ணயம் சாஷாத் நோக்கம் –
ஆத்மாவை பற்றியே சொல்ல வந்தது -பரமாத்வாவுக்கு சேஷி என்று சொல்ல வேண்டுமே –
தர்ம பூத ஞானம் -ஈஸ்வர -இரண்டையும் அடுத்து அருளிச் செய்து –
ஞானத்தால் அறிந்து அவனையே பற்றி அவன் இடமே கைங்கர்யம்- ஸ்ரேயஸ் அடைய

-285-வருஷம் கழித்து பஞ்சாங்கம் மாறும் –அயனாம்சம் -2160-ராசி மாறும் —
பங்குனி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு ஆகும் -2545-வருஷங்கள் கழித்து

அனுபந்தி சதுஷ்ட்யம் -விஷயம் -ஆத்மாவைப்பற்றி /பிரயோஜனம் -ஆத்ம விஷய யாதாம்யா ஞானம் /
சம்பந்தம் பிரதிபாத்ய பிரதிபாதக / அதிகாரி விஞ்ஞாஸூ இந்த நாலும்
முக்கிய க்ருத்யம் -தர்க்கம் சொல்வது -சாஸ்திரங்களை அனுகூலமான தர்க்கம் -சுருதி நியாயம் இரண்டுக்கும் விருத்தமாக இருப்பதை போக்கி -/
ஸ்தாபனம் -அனுமானம் கொண்டு –
இரண்டாவது ஸ்லோகம்

மேலே கத்யம் –
வேதாந்த வாக்ய கூட்டங்கள் பர அபர ஞானமே -அபவர்க்கத்துக்கு மோக்ஷத்துக்கு சாதனம் –
சர்வ சமயேஷு இத்தை ஒத்துக் கொள்ளப்பட்டது -நின் கண் வேட்க்கை எழுவிக்கவே-
ப்ருதக் ஆத்மாநாம் ப்ரேரிதாநாம் -மத்வ – அம்ருதத்வம் -அறிந்தவன் மோக்ஷம்
சோகமான சம்சார சாகரம் தாண்ட -ஆத்ம ஞானம் வேண்டும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -நன்கு அறிந்தவன் அவனை அடைகிறான் –
சோகம் சரீரகதம் -வேறே அறிந்தால் சோகம் போகுமே
வேதாந்த வாக்ய கூட்டங்கள் இப்படி சொல்லி இருக்க
சங்கை இருந்தால் தானே யுக்தி -நியாயம் பிரவ்ருத்தம் ஆகும் –
வேற தரிசனங்கள் -அவைதிக தரிசனங்கள் -வேதம் ஒத்துக் கொண்டாலும் ப்ரஹ்மம் ஒத்துக்கொள்ளாதவர் மீமாம்சகர் போல்வார் -அபூர்வம் கல்பித்து –
ஆந்திர அஞ்ஞானம் மலத்தை ஒழித்து -தத்வ ஞானம் சுத்தமாக தெளிவாக கொடுக்க -தர்சனம்
சாங்க்யர் வைசேஷிக -இத்யாதி –
சாருவாக்கர் புத்தர் ஜைனர் மூவரும் அவைதீகர்
மீமாம்ஸகர் -பூர்வ உத்தர -பட்ட பிரபாகர் -வைசேஷிகன் -மூவரும் வைதிகர் –
தேகமே ஆத்மா -கண்டதே கோலம் -சாருவாகர்-முதல் -சாரு வாக் -அழகாகப் பேசுவார் -ப்ரத்யக்ஷமே எல்லாம்
இந்த்ரியங்களே ஆத்மா -மனமே ஆத்மா -பிராணனே ஆத்மா –
போத மாத்திரம் -ஸுகத்தர்கள் -ஜீவாத்மா ஞானமாக தான் ஞாதாவாக இல்லை -ஞானம் உடையவர் இல்லை
ஞாதா பாவம் ஏறிடப்பட்டு-ஞாத்ருத்வம் அத்யர்த்தம் -ஞானம் ஒன்றே உண்மை
அநஹங்காரம்-அஹம் சொல்லுக்கு கோசாரமாக மாட்டார் -இத்தையே சொல்லுகிறது -அஹம் புத்தி சப்த அவிஷயம்
அஹம் -அந்தக்கரணம் இவர்கள் மதம்
ஞானத்தை ஞாதா என்று வாசனையால் சொல்லுகிறார் என்பர்

அடுத்தவர் -அஹம் -ஆத்மா என்பர் -ஆகந்துகம் -வரும் போகும் -பாஷாண கல்பம் மோக்ஷம் –
தேக இந்திரிய மந ஞானம் விலக்ஷணன் -அசாதாரணமான குணாகாரம் -என்பர் -சாஸ்திரம் அறிந்தவர் இவர் –
ஆகாசாத்வதி அசித் தானே பிரகாசிக்காது என்பர் -ஸ்வஸ்மை-ஸ்வயம் பிரகாசிக்கும் இரண்டும் உண்டே நம் சம்ப்ரதாயம்
இவர்கள் ஜடப்பொருள் போலே என்பர் -தார்க்கிகள் இவர்கள் -கணாத-கௌதம மதம் –

சாங்க்யர் -செம்பருத்தி பூ படிக்கல் -இயற்க்கை இல்லாமல் சன்னிதானம் ஏறிட்டு -பிரகிருதி ஆத்மா -வெளுப்பு –
சோக துக்கங்கள் இவர் மேலே ஏறிட்டு -மனஸ் பாலம் – வேறே வேறே ஞானம் வந்தால் இவை வாராது என்பர் –
இதுவே மோக்ஷம் -கபிலர் மதம்
உபாதி சன்னிதானம் உபாதானம் உபாதான விசேஷ ஆபாதக-தன்மை ஏறிடப்பட்டு பாதிக்கப்பட்டும் -செம்பருத்தி பூ ஸ்படிக மணி த்ருஷ்டாந்தம்
பிரகிருதி கார்ய சரீரம் -மனம் அந்தக்கரணம் உபாதி -ஆத்மாவில் ஏறிடப்பட்டு -நிர்பாதம் தோற்றும் -ராக த்வேஷ சோக துக்காதிகள்-
தோற்றம் மறைவு இல்லாத ஸ்வரூப பிரகாசம் -ஸ்வஸ்மை பிரகாசம் ஸ்வயம் பிரகாசம் – இரண்டும் -உண்டே –
மனம் வேலை இழந்த நேரம் இருந்தாலும் தான் அவருக்குத் தோற்றும் -தர்மி ஞானம் தனக்கு பிரகாசம் ஸ்வஸ்மை பிரகாசம்-
ஸ்ரீ வைகுண்டம் -அசித் -இருந்தாலும் ஸ்வயம் பிரகாசம் –

மீமாம்சகர் -ஞான ஆனந்த ஸ்வ பாவம் -வடிவம் -சித்தாந்தி போலே -போத விசேஷம் -ஆஸ்ரய ஆனுகூல்ய ஞானமே ஆனந்தமும் ஸூ கமும் –
பிரதிகூல்ய ஞானம் துக்கம் -பேரிடப்பட்டு உள்ளது –
சம்சாரித்வ ஸூகம் துக்கம் -கர்மா உபாதி

பிரமாணங்கள் -அனுமானம் -சமாதிகம்யம் -தார்க்கிக்கரும் -ஸுத்ராந்திக புத்த பக்ஷம் –
மாத்யத்மீகன்-சர்வம் சூன்யம் -உண்மையான புத்த மதம் -யோகாச்சாரன் அடுத்து -ஞானம் உண்டு –
ஞானத்துக்கு விஷயம் இல்லை -அடுத்து
ஸுத்ராநதிக்க பக்ஷம் -ஞானம் உள்ளது -விஷயமும் உண்டு -அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் –
அடுத்து வைபாஷிகன் -ஞானம் உள்ளது விஷயம் உண்டு பிரத்யக்ஷம் பிரமாணம்-இப்படி நால்வரும்
தார்கிகர் -நீல பீத-வர்ணம் -ஞானம் -அஹம் விஞ்ஞானம் சாலம்பனம் விஞ்ஞானத்வாத் -நான் என்கிற அறிவுக்கு பற்றுக்கொம்பு –
ஆகவே ஆத்மா இருக்க வேண்டும் -அனுமானித்து
இதம் -இது சொல்ல ஆலம்பனம் வேண்டாமே –
விலக்ஷண ஆத்மா பரமாத்மா அனுமானித்து தெரிந்து கொள்ளலாம் -என்பர்
ஆகமத்தால் -அறியலாம் -வேதத்தால் -சாஸ்திரீய கம்யம் -பூத சங்காதம் ஏற்பட்டாலே பரார்த்தம் -பரன் ஆத்மாவுக்காக –
பட்டார்-தார்க்கிகர் பக்ஷம் -மானஸ ப்ரத்யக்ஷம் -நான் -எனக்கு என்னைப் பற்றி தெரியும் -நான் பிரகாசிக்கிறது எனக்கு –
அஹம் சப்த கோசாரம் அந்த அந்த ஆத்மாவுக்கு -மானஸ ப்ரத்யக்ஷ வேதம் –
பிரபாகர் -பக்ஷம் -குடம் -அறிவது -அயம் கட-இது குடம் -பிரமேயம் குடம் -பிரமாணம் -பிரமாதா இல்லை -மானம் மேயம் தான் ஒளி விடும்
கடம் அஹம் ஜானாமி -அறிகிறேன் -பிரமிதி உண்டே இதில் –
பாட்டர் அஹம் கடம் முதலில் அப்புறம் அஹம் கடம் ஜானாமி இப்படி இரண்டு படிக்கட்டுக்கள் என்பர்

சகல விஷய வித்தி -க்ராஹதயா ஏவ -கிரகிக்கும் இருந்தால் தானே கிரகிக்கப்படும் –
அடுத்து சாங்க்யர் -ஞான ஸ்வரூபம் -பிறப்பு இறப்பு இல்லாமல் ஸ்வயம் ஜோதி
ஸ்வம் பாவம்- சோ பாவ- தன் பாவம் ஸ்வபாவம் -தானே ஒளி -இதர அநதீனம்-
வேதாந்தி -ஆகமம் -அனுமானம் -மானஸ ப்ரத்யக்ஷம் மூன்றுக்கும் இடம் உண்டு
ஆத்மா வார்த்தை வியவகாரம்-நான் கையால் எடுத்தேன்-சங்கை -நான் எடுத்தேன் -நான் வேறே அஹம் வேற –
கீதா படித்து அறிந்து -ஸ்திரப்பட -என்ன அளவு -தெரியாதே -ப்ரத்யக்ஷம் இல்லை -அணு சாஸ்திரம் சொல்ல -நம்பி –
அடுத்து நித்யம் என்று அறிந்து –
தனக்கு தோன்றி -சாஸ்திரம் மூலம் உறுதி -தர்க்கம் யுக்தி மூலம் ஸ்திரப்படுத்தி -மனம் புத்தி ஆத்மாவை –
விளக்கினை விதியினால் காண -ப்ரத்யக் விஷயம் -த்யானம் -யோகஜம் –
வ்யவகாரிகம் ஆகம வேத்யம் யுக்தி யோகஜம் நான்கும் –
ப்ரத்யக்ஷமாக மட்டும் இல்லை -இப்போது இல்லை இங்கே இல்லை -அப்போது அங்கே -அறிந்து செய்ய வேண்டியது
சேஷபூதன் என்று அறிந்த பயன் பகவத் ஏக சரண்யம் -பகவத் ஏக போக்யம் என்று அறிந்து -சரணம்
ச சொன்ன உடன் கூட்டிக் கொண்டு பிரத்யக்ஷம்
சாம்யாபத்தி-அடைந்து -இப்படி ஐந்து நிலைகள் -தோன்றியதை தகவல் உடன் அறிந்து ஸ்திரப்படுத்தி –
ஸ்வ இதர விலக்ஷணன் -விசத-ஆகமம் விசததரம்-அனுமானத்தால் – விசததமம் -உபாசனம் மூலம்
அபரோஷம்-நித்யம் அணு ஞாத்ருத்வம் ஆகமத்தால் -அறிந்து -க்ருஹீதோயம் முக்த –
சங்கை இல்லாமல் நேராக அனுபவம் அங்கே

தார்க்கிகர் ஆத்மா விபு -பரம மஹான் என்பர் -இவரைப் போலே ஸ்வரூபத்தால் வியாப்தி -நையாயிகன்
வேதாந்தி அணு பரிமாணம் -வாலாக்ரா சத பாகம் சததா –வியாப்தி தர்மபூத ஞானம் –
உடம்பில் எல்லா அவயவ வலியும் உணரலாம் -சைதன்ய மாத்திரம் வியாப்தி
ஜைனர் -தேகம் அளவு-சரீர பரிமாணம் -நிர்விகாரத்வம் பாதிக்கும்
சாங்க்யர் மனஸ் அளவு-அந்தகாரணத்தால் அளவுபடுத்துகிறது உபாதியால்

ஞானத்து அளவு வியாபகத்வம் -ஸுவ்பரி -50 -சரீரத்து அளவும் வியாப்தி -ஒரே ஆத்மாதான் -அங்கும் –
யோகத்தால் பல சரீரங்களுக்கும் வியாப்தி -ஸ்வ பாவத்தால் வியாப்தி -தர்ம பூத ஞானத்தால் வியாப்தி
ஸ்வரூபத்தால் வியாப்தி நையாயிகர்
ததா ஷணிக-புத்தன் -க்ஷணிக விஞ்ஞானம் -ஞானம் உண்டு என்றாலும் க்ஷணம் தோறும் மாறும்
சாருவாகர் சரீரத்தில் சூடு இருக்கும்வரை இருக்கும் ஆத்மா -யாவது சரீரத் உஷமா
பிராகிருத பிரளயம்–மொத்தமும் அழிந்து – -ப்ரஹ்மதேவர் ப்ரஹ்ம தத்த-வரை
ஆ மோக்ஷம் -வரை ஆத்மாவுக்கு காலம் ஓவ்டுலோமி-சொல்வார்
கூடஸ்த்தர் -நிர்விகாரம் -கொல்லம்பட்டறை இருப்பது த்ருஷ்டாந்தம் -ஆத்மா நிர்விகாரம் நித்யம் -சித்தாந்தி நையாயிகர்
எல்லா சரீரத்தில் ஒன்றே என்பர் சிலர் -ப்ரீத்தி க்ஷேத்ரம் நாநா பூத சித்தாந்தி -சரீரம் தோறும் உண்டே
ஏக ஜீவ வாதம் -மாயாவாதியில் ஒரு சாரார் –
ச -அணுகாத சமுச்சயம் -இன்னும் பல மதி விகற்ப்புக்கள் உண்டே

இதே போலே பரமாத்மா -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -ஆதி காரணம் ஒருவனை
சாருவாகர் புத்தர் ஜைனர் -இல்லை -என்பார்
பூர்வ பக்ஷிகளுக்கும் மதிப்பு கொடுத்து அவமதியாமல் கேசித் அந்யா என்று சப்த பிரயோகம்
ஒத்துக்கொள்பவர்களும் –
அத்வைதி ஒரு சாரார் -அஸ்தமனம் இல்லாமல்-வேறுபாடு இல்லாமல் -மிதி -பிரமித்தி மேயம் மானம் மாதா இவற்றுள்ளும்
ஈஸ்வர ஈஸித்வய -மான -பேத விகற்பம் -கற்பனை என்பர் –
ஞான மாத்ர ரசமாக இருப்பர்-ஆகாசாதிகளும் கற்பனை -அவனும் கற்பனை -அநாதி அவித்யா -உபாதியால் -தோற்றப்பட்ட
உப தர்சித-வியாதி பேதம் -ஆகாசாதிகள் வேறுபாடு போலே -ஞான ஐஸ்வர்யாதி மஹிமை விகல்பயாதி –
ஆத்மா என்பதை உண்மை -ஆத்மா ஜீவாத்மா என்றால் பரமாத்மா சொல்ல வேண்டி இருக்குமே
இரண்டும் ஏறிடப்படுகிறது-என்பர் –
முத்துச்சிப்பி வெள்ளி பிரமித்து போலே -அவித்யையின் ஆதிக்யத்தால் -ஈசன் ஈஸித்வய
ஏதோக்த ஸ்வரூபம் -அவித்யா -மூலம் காம க்ரோதம் தோன்ற ஜீவன் -செல்லப்படுகிறார் -மாயை தொடர்பால் பரன் –
தத் குணசாரதயா-ப்ரஹ்மாதி ஸ்தாவரம் -வேறுபாடு இல்லாத ஒன்றுக்கு -ப்ரகல்பிதம் விவித ஜீவ பேதம்-
ஸ்வா தீந விவித விசித்திர -விவர்த்த ஸ்வபாவம் மாயையால் -பரன்
ஹிரண்யகர்ப்ப ப்ரவர்த்தகன் யோகமதம்-மரபு அணுக்கள் கூட்டம் -அறிவின் பேதம் –
மரம் ஜங்கமம்-மகரந்த சேர்க்கை குரங்கு சிங்கம் யானை மனுஷ்யன் பிரம்மன் -விஞ்ஞானிகள் கொள்கை
ப்ரக்ருதி பிராகிருதம் -அசேதன அம்சமே அறிவு -என்பர் -தனித்து மனம் ஒத்துக்க கொள்ள மாட்டார்கள்
பிராகிருத ப்ரக்ருஷ்ட சத்வம் -அதிகமான சத்வம் உள்ள பகுதி ஆத்மா என்பர் -உபாதான நிமித்த ஸ்வ தந்த்ர பிரகிருதி என்பர்
நாம் ஸ்வ தந்த்ர ஈஸ்வரன் பிரகிருதி கொண்டு
பரிணாம விஷய மாத்திரமே ஈஸ்வரன் என்று பெயர் என்பர் -ஸ்வ தந்த்ர இல்லையானால் ஆட்டிப் படைக்க பரமாத்மா இருக்க வேண்டுமே –
நித்ய உத்ரிக்த்த சத்வ பகுதி -ப்ரக்ருஷ்ட சத்வ -அதனால் சம்பாதிக்கப்பட்ட ஈஸ்வர பெயர் -என்பர் –

நியாய வைசேஷியர் –
சாங்க்ய யோக கபிலர் ஹிரண்யகர்ப்பர்
பூர்வ உத்தர மீமாம்சை
ஸ்வ தந்த்ர பிரகிருதி -பிரதானம் -சத்வ குணம் உயர்ந்த பகுதி ஆத்மாவாகி -என்பர் ஆத்மா பேரில் ஏறிட படுகிறான்
ஈஸ்வரன் உள்ளார் இல்லார் -ஆத்மாவை தவிர்ந்த இல்லையா -அஞ்ஞானம் -உபாதி -பல வாதங்கள்
பரிணாம வாதி -யாதவ பிரகாசர் பக்ஷம் -கடல் -நுரை -நீர் குமிழி அலைகள் -பேதங்கள் -எதனுடன் சேராமல் –
கடலில் வேறுபட்டவை இல்லை -பரிணாமம் போலே ஆத்மாவே பரிணாமம் -ஜடம் ஜீவ ஈஸ்வர ரூபமாய் -ஆகும் என்பர்
ஞானம் உள்ள ஆத்மா -கடல் -நுரையா அலையா நீர் குமிழியா நீரா -பிரித்து பார்க்க முடியாதது போலே –
பரிணாம வாதம் யாதவ பிரகாசர் வாதம் -ஜடம் ஆத்மா பரமாத்மா மூன்றும் உண்டு என்பவர் இடரும்

அடுத்து -அ பரிணாம வாதி
பிரதி பிம்பம் -வாதிகள் -ஆத்மாவே உள்ளது -மாயையால் பிரதிபலிக்கிறது -ஈஸ்வரன் என்று தோற்றி –
அந்தக்கரணத்தில் பிரதிபலித்து ஆத்மா -ஆத்மா உள்ளது -பரமாத்மா ஜீவாத்மா பேதம் இல்லை என்பர் –
இரண்டு பிரதிபம்பங்களே இவை
ஸூ மாயா -விசித்திர அந்தக்கரணம் -இரண்டிலும் பிரதிபலித்து
விசித்திரம் -வேறே வேரேகா காட்டும் -ஒரு சமயம் அனுகூலமாகவும் ஒரு சமயம் பிரதிகூலமாயும் இருக்குமே
ஆகவே விசித்திரம் என்கிறார் –

சித்தாந்தி -அன்யே து -இதற்கும் இந்த சப்தம் -ஸ்வ ஆதீன த்ரிவித-சேதன –
பத்த முக்த நித்ய -மூன்றும் -அசேதன -சுத்த சத்வ மிஸ்ர தத்வ காலம் -அபிமானி தேவதைகளுக்கு
குண சம்சர்கம் உண்டு என்பதால் நல்ல காலம் இத்யாதி
ஞாத்ருத்வம் இல்லாமையான நித்ய விபூதி பிரகிருதி காலம் மூன்றும் அசேதன த்ரயம்
ஞாத்துருத்வம் உள்ள பத்த முக்த நித்ய மூன்றும் சேதன த்ரயம்
ஞானம் உடைமையால் வேறுபாடு -ஞான ஸ்வரூபத்தால் வேறு பாடு இல்லை
புஸ்தகம் -ஞானமும் ஞானம் உடைமையும் இல்லை
நித்ய விபூதி -ஞான மாத்திரம் ஞானம் உடைமை இல்லை
ஆத்மா ஞானமும் ஞானம் உடைமையும் உண்டே
இவற்றின் ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஈஸ்வர அதீனம்
ஸ்வா பாவிக-இயற்கையான -நிரவதிக எல்லை அற்ற -அதிசய மேன்மை -ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் –
சகல கல்யாண குண ஆர்ணவம் -புருஷ விசேஷம் -சர்வேஸ்வரன் -இத்தகையவர் என்று சொல்லி –

ஸ்வரூப ஸ்வாபாவ சங்கைகளை கீழே பார்த்தோம் -இனி யார் -மத பேதங்கள்
ஹரி ஹர விரிஞ்சு பாஸ்கராதி -தத் தத் மூர்த்தி பரித்யாக -த்ரி மூர்த்தி வாதிகளும் உண்டு -த்ரய தேவா துல்யா-
மூர்த்தி விசேஷ விஷயம் -திருமேனி -பற்றியும் வாதங்கள் –
நித்யத்வ -அநித்ய -ரூபம் -இங்கு -ஸ்வரூபம் ஏற்றுக் கொண்டாலும் -பாதிக்கத்தவ பஞ்ச பூதங்களால் என்றும்
பிராகிருத அப்ராக்ருத -ஸ்வாரத்த பரார்த்தம் என்றும் -பக்தானாம் ப்ரகாஸதே-இப்படி விசாரங்கள்

பரிஜன பத்னிகள்-விசாரம் -ஸ்தான விசேஷ விசாரம் -இப்படி பலவும் உண்டே

பிரமாணம் -வேதம் மட்டுமே -/ ஆகம -அனுமானம் இரண்டையும் என்பாரும் உண்ட –
வேதம் கொண்டு அறிந்து அனுமானம் கொண்டு உறுதிப்படுத்தி த்யானம் -மானஸ சாஷாத்காரம்-
பிரேம பூர்வக -விசிஷ்ட ப்ரத்யக்ஷ சமானா காரம் –
ஆத்மா பரமாத்மா சம்பந்தத்திலும் பல வாதங்கள்
அநாதி அவித்யா உபாதியால் பேதமாக தோற்றம் -சங்கரர் -ஈசன் ஈஸித்வய தொடர்பு -கயிறு பாம்பு –
ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவும் மாற்றி தோற்றும் தன்மை -அவித்யை -பேதத்துக்கு இடம் கொடுக்கும் –
அபேதம் உண்மை -ஏக தத்துவமே பரமார்த்தம் –
பரமார்த்தம் -ஜகாத் பத்தி இரண்டையும் நாம் சொல்வதால் -ஒருவனே ஜகாத்தும் உண்மை –
சரீரமாக உண்மை -பிரகாரமாக உண்மை –
ஒருவன் -நிகர் அற்றவன் -ஏக சப்தம் -நம் சம்ப்ரதாயம் -..

இரண்டு தத்வ வாதிகள் –
நான் பிம்பம் இரண்டும் தெரியும் -தத்வம் ஓன்று -இரண்டாவது இல்லை – –
வ்யதிரேகம் உண்டு -பிரதிபிம்பம் இருப்பதால் –நேராகவும் சேவித்து கண்ணாடி சேவையும் சேவிக்கிறோமே –
ப்ரதிபிம்ப வாதிகள் -இரண்டு என்று சொல்ல இடம் கொடுக்கிறதே –

பாஸ்கர பக்ஷம் -ஸ்வஸ்தி ஐக்கியம் -உபாதியால் பேதம் பேத அபேத வாதம் -இயற்க்கை அபேதம் –
உபாதியால் பேதம் -ஸ்வரூபத்தால் அபேதம் என்றவாறு

நாநாதவம் யாதவ பிரகாசர்-வேறே வேறே தத்வங்கள் -அபேதமும் உண்டு -வேறு படாமையும் உண்டு –
அம்சம் அம்சி பாவம் -உடல் -கை கால் பல உண்டே -அதே போலே –
சித்தாந்தி -பரதந்த்ரா லக்ஷணை-நாநா சம்பந்த -ஜீவ பர சம்பந்தம் -பிதா -சேஷி -ஸ்வாமி -சேவக சேவகி இத்யாதி நவவித சம்பந்தம்
அப்ருதக் சித்த விசேஷணம் -சமவாயம் -வைசேஷிகர் சொல்வது இல்லை –
பரகத அதிசய ஆதேயன இச்சையா -சேஷத்வ லக்ஷணம்

ப்ராப்தியிலும் வாதங்கள் உண்டே -மரணம் -இயற்க்கை எய்தினார் பாஞ்ச பவ்திகம் -பரமபதித்தார் -ஸ்தானம் –
இறைவன் அடி சேர்ந்தார் -கைங்கர்ய -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -ஆசார்யர் திருவடி அத்ரபரத்ர
சாருவாகர் -சர்வ சூன்யம் -ஆத்ம ஸ்வரூப அழிந்து மோக்ஷம் –
அவித்யா அஸ்மயத்தி லக்ஷணம் யோகாசாரம் அத்வைதிகள் -ஐக்கியம் –
நியாய வைசேஷகர் -ஞானம் ப்ரதயத்னம் போன்ற குணங்கள் போனால் மோக்ஷம்
சாங்க்யம் கைவல்யம் மோக்ஷம் –
சத் பாவ ப்ரஹ்ம பாவ சா தர்ம லக்ஷணம்-அத்வைதிகள் -ஒரு சிறு பகுதி நமக்கு அஷ்ட குண சாதரம்யம்
சாந்தி தேஜஸ் இவனுக்கும் வருமே
முகில் வண்ணனுக்கு நிழல் – பாட வல்லார்-சாயை போலே அணுக்கர்களே -இது வேறே
மீமாம்சகர் -ஸ்வரூப ஆவிர்பாவம் -நம் போலே -ஸ்வேந ரூபேண -இவர்கள் ஈஸ்வரனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் –
ஸ்வரூப ஆவிர்பாவமே மோக்ஷம்
சத் குண அனுபவ ஜனித–நிரதிசய ஸூக சம் உன்மேஷ -தூண்டப்பட்ட ஏகாந்திக ஆத்யந்திக-ப்ரஹ்மமே விஷயம்
இடைவிடாமல் -அவிச்சின்னத்வம் – -கிங்கரத்வ லக்ஷணம் -மோக்ஷம் -மேலைத்தொண்டு உகந்து –

சாதனம் -இதிலும் பல வகை
கர்ம யோகம் -ஞான யோகம் லப்யத -அன்யதர அநுக்ரஹீத அன்யதர -அங்கம் அங்கி மாறுபடும் -தரம் இரண்டில் ஓன்று –
கர்ம ஞான யோகங்களில் ஓன்று அங்கி ஓன்று அங்கம்
உபய லப்யம் -ஞான கர்ம சமுச்சயம் -அவித்யா வித்யாஞ்ச -அவித்யா ம்ருத்யம் -கர்மத்தால் சம்சாரம் தாண்டி வித்யையால் மோக்ஷம்
பக்தி யோகமே -ஞான கர்ம அங்கங்கள் -உபய பரிகர்மித்த ஸ்வாந்தம் மனஸ் -சம்ஸ்காரம் இவற்றால் –

பக்ஷங்களில் பலாபலன்கள் அறியாமல் சங்கை -குழம்பி இருக்க –
யாவது- ஆத்மா பரமாத்மா ஸ்வரூபம் சம்பந்தம் பிராப்தி சாதனம் -நிர்ணயத்துக்கு பிரமாணம் கொண்டு –
இவற்றைத் தெளிவு படுத்தவே இந்த பிரபந்தம் –

ப்ரஹ்ம மீமாம்ஸா இவற்றை விளக்க வந்தவை -இந்த கிரந்தம் மூலம் இவற்றை விளக்கி பரியாப்தி பிறவாமல்
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய மநோ ரதித்து பின்பு ஸ்ரீ பாஷ்யகாரர் அத்தை நிறைவேற்றி அருளினார்

பகவத் பாதராயணர் -ப்ரஹ்ம சூத்ர காரர்
விவரணம் -வாக்ய காரர் த்ரவிடாச்சார்யார் -விருத்தி காரர்
போதாயனர் குறிப்பு உரை
பரிமித கம்பீர பாஷாணம் –
ஸ்ரீ வத் சாங்க மிஸ்ரர் -இன்னும் விரித்து -இவர் கூரத்தாழ்வான் இல்லை
பார்த்திரு ப்ரபஞ்சர் -பார்த்திரு மிஸ்ர சங்கரர் போன்றவர் எழுதி -ஸ்புடமாகவும் அஸ்புடமாகவும்
தெளிந்து தெளிவு இல்லாமலும் -அந்யதா ப்ரதிபாதகமாய் -மதாந்தரம்-
பிரகரண கிரந்தம் -இது -ஆத்ம சித்தி -யதாவத்தாக காட்டி அருள -ப்ரதிஜ்ஜை –
ப்ரஹ்ம சூத்ரத்துக்கு -ஒரு பகுதி சாரம் பிரகரண கிரந்தம்-என்றபடி

ஸாஸ்த்ர ஏக தேச அர்த்தம் –ஒரு பகுதி மட்டுமே -ப்ரதிபாதனம் -சாஸ்த்ரார்த்த முழுவதும் அரிய உபயோகப்படும் –
பிரதமம் -ஆத்ம தத்வம் இப்படிப்பட்டது -என்று -சித்தாந்தம் -வேதாந்த தாத்பர்யம்
ஸ்வரூபம் –1-தேக இந்திரிய மன பிராணன் தீ -புத்தி -ஐந்தையும் விட அந்நிய
புத்தி ஞானம் -விஷய பிரகாசனம் -தர்ம பூத ஞானம் வேறே தர்மி வேறே -ஆத்மாவே ஞானம் -ஞான ஸ்வரூபம்
2-அநந்ய சாதனா —ஸ்வயம் பிரகாசம் -3-உத்பத்தி விநாசம் இல்லாதது -4-வியாபி -தேகங்கள் தோறும் புகுர சக்தி உண்டே –
அணு மாத்ரம் -அவன் சர்வ வியாபகம் –
5-பிரதி க்ஷேத்ரம் ஆத்மா பின்னம்-வேறே வேறே -6-ஸ்வ தஸ் ஸூகி –எப்போதும் அனுகூல புத்தி இயற்க்கை –
ஸ்வா பாவிக ஆனந்தத்வம் –துக்கித்தவம் உபாதி அடியாகவே
கர்மத்தால் ஜென்மத்தால் முக்குண சேர்க்கையால் துக்கம் -இப்படி ஆறு பெருமைகள்

நான் என்கிற உணர்வுக்கு உடலே விஷயம் என்பர் -அதிகரணம் ஸ்தானம் இருப்பிடம் -ஸமான -அதிகரணம்
நான் என்றால் அறிவாளி அன்றோ உடம்பில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்ந்து நாக்கு சிவப்பு ஆகும்- அவயவ சேர்க்கையால் வந்த ஞானம்
அது போனால் முக்தி என்பர் –
உபசார வார்த்தை -போரில் புலி -புலி போன்ற வீரம் மட்டும் அந்வயம் -சாஷாத் –
நாம் அஹம் தேக விஷயத்தில் உபசாரம் -ஆத்மாவில் பர்யவாசிக்கும் சொல்ல
சாஷாத்தாகவே சொல்லலாம் முக்கிய வ்ருத்தி முடியாவிட்டால் தானே பர்யவசான வ்ருத்தி என்பர் -ப்ரத்யக்ஷமாக தேகம் குறிக்கும்
நான் -தேக அவயவங்களை குறிக்க வில்லையே -நான் பேசுகிறேன் -ஏக தேசம் தானே –
கிரியைக்கு உள்ள அவயவத்தையே தானே குறிக்கும்-அவயவி யான தேகத்தை குறிக்காதே -என்று ஆக்ஷேபிக்க –
உடலைப் பற்றிய அறிவு அம்சங்களைப் பற்றி இருக்க வேண்டாமே -நான் அறிகிறேன் மனசால் தானே என்னும் போது
அவயவங்களை கிரஹிக்க வேண்டாமே என்பான் -இந்திரியங்களுக்கு புலப்படாத பரம அணுக்கள் சேர்ந்து –
சேர்ந்த பின்பு -அவயவி பிரத்யஷிக்கிறோம்-
வாயு ஸ்பரிசத்தால் -வந்ததை அறிகிறோம் -ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
நான் ஆத்மாவை குறிப்பதாக சொன்னால் ததீய குணங்களை க்ரஹிப்பது இல்லையே
ரூபம் கந்தம் ரசம் விசேஷ குணம் –காரணங்கள் சேர்ந்து கார்யம் -காரண பூர்வகமாக இருக்கும் நியாயம்
ஞானம் சரீரத்துக்கு விசேஷ குணம் என்பர் -காரணத்தில் இல்லையே என்று ஆக்ஷேபிக்க -அனுமானத்தை ப்ரத்யக்ஷம் வெல்லும் என்பர் –
பரம அணு தோறும் ஞானம் உண்டு என்பார் ஆகில் சரீரத்தில் பல சேதனர்கள் உண்டாக வேணுமே -என்றும் ஆக்ஷேபிக்க -ப்ரத்யக்ஷ பாதிதம்-
விருப்பம் -தேகம் பண்பு -இந்திரியங்களுக்கு உண்டு -அசைதன்யம் கடாதிகள்-இவற்றுக்கு இல்லையே –
புடவை வேறே உடம்பு வேற -இடுப்பு உறுத்த வேறே நூல் புடவை உடுத்தி கொள்கிறோம் –
அத்யந்த வ்யாவர்த்தம் சரீரத்துக்கு சைத்தன்யம் பொருந்தும் என்பர்
தேகத்துக்கு ஞானம் அழகாக பொருந்தும் -என்பர் –
தேகம் ஏவ ஆத்மா -ப்ரத்யக்ஷமாக தெரிகிறதே -சாருவாக வாதம் -நான் அறிகிறேன் -அஹம் ஜானாமி -எத்தை அறிகிறீர் –
பருத்தவன் என்று -உயரம் சிகப்பு எங்கே இருக்கு -கண்ணுக்கு உடம்பு தானே படுகிறது -தேகத்தின் பண்புகள் –
ஆகவே நான் சொல்வது சரீரத்தை குறிக்கும் என்பர்
அஹம் சப்த கோசாரம் ஆத்மா வேதாந்தம் -அஹங்கார கோசாரம் தேகம் -ஸ்தூலோஹம் இதி தர்சநாத் –
வேறே சொல்வீர்கள் ஆகில் பிரத்யக்ஷ விரோதம் என்பர்
சேர்க்கை விசேஷத்தால் தேகத்தில் சைதன்யம் தோன்றும் -வெத்தலை பாக்கு -சிகப்பு உதாரணம்
சம்யோகம் -மட்டும் இல்லை -வாயில் மெல்லுதல் – உஷ்ணம் வர சிகப்பாக என்று ஆக்ஷேபிக்க –

துணி சித்ரம் வர்ணம் -த்ருஷ்டாந்தம் -நூலில் இல்லாத ஹம்சம் சித்திரத்தில் பார்க்கிறோம் –
மயில் கண் நூலில் இல்லா விட்டாலும் பார்க்கிறோம் –
ஆகவே காரண பூர்வகம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை -விசேஷ குணம் சேர்க்கையில் பார்க்கிறோம் –
அதே போலே தேகத்துக்கு ஞானம் இருக்கலாம் என்பர் –
விசேஷ குண காடின்யம் -பனிக்கட்டியில் -ஜல பிந்துவில் இல்லையே -காரண பூர்வகம் இல்லையே –
அடர்த்தியாக சேர்ந்ததால் வந்த தண்மை -சம்யோக விசேஷம் என்று சொல்ல
அறிவுக்கு இலக்காக உள்ள தேகம் அறிவுக்கு இருப்பிடமாக எப்படி -தேகம் அறிகிறது -தேகத்தை அறிகிறோம் -விரோதி வருமே என்றால்
கர்மாவாகவும் கர்த்தாவாகவும் –
ஆத்மா பக்ஷத்தில் இதே ஆஷேபம் வருமே என்பர்
ஞாத்ருத்வம் -மனம் கர்த்தா -தர்மி ஞானம் நான் -தன்னை உணர்ந்து –
பிருத்வி வாயு தேஜஸ் நீர் -ஆகாசம் இல்லா நான்கும் சேர்ந்து ஞானம் வரும் -கள்ளுக்கு மயக்கம் –
அதன் காரண பொருள்களில் இல்லையே -என்பர் சாருவாகர்
தேகம் விழுந்தால் மோக்ஷம் -தனித்து இல்லை

நான்கு -ஆகாசம் தவிர -மற்ற கூட்டரவே சரீரம் -சைதன்யம் ஞானம் வரலாம்–பிருத்வி அப்பு தேஜஸ் வாயு –
இவற்றில் ஞானம் இல்லா விட்டாலும் –
பனை கள்ளில் மயக்கும் சக்தி இருப்பது போலே -பூர்வ பக்ஷம் -சாருவாக லோகாயுத மதம்

மேலே சித்தாந்தம்
பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு விரோதம் –
அஹம் இதன்காரவ் -நான் இது சொல்லுகிறோம் -தேகம் ஆத்மா அல்லவே -அஹம் வேறே இதம் வேறே –
ஒரு பொருளில் இரண்டுக்கும் இருக்காதே -நான் உயரமானவர் -அஹம் தத்வம் வேறே இதம் வேறே அன்றோ
பிரத்யக் அர்த்தம் அஹம் -பராக் அர்த்தம் இதம் அன்றோ
என்னுடைய கை சொல்கிறோம்
இதம் -என்னும் சொல்லால் கிரஹிப்பத்து கை வீடு போலே -சரீரத்தை ஆத்மா இடம் பிரித்தே அறிய வேண்டும் –
ஸ்வ ஆத்ம கோஸரா -தானாகிய ஆத்மாவை பொருளாகக் கொண்டது அஹம் சொல்
ஸ்வ அந்யா கோசரத்வம் இதம் –
ஒரே விஷயத்தில் அஹம் இதம் இரண்டும் பொருந்தாதே –
இதம் சரீரம் கௌந்தேய -கிருஷ்ணன் மட்டும் இல்லை -நாமும் இதே பிரயோகம் செய்கிறோம்
இத்தை மேலும் விளக்குகிறார் –

நான் அறிகிறேன் -அஹம் ஞானாமி -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –
இது குடம் என்னும் அறிவுக்கு இருப்பிடம் ஆத்மா -விஷயம் குடம் –
ஞானத்துக்கு ஆஸ்ரயம் வேறே விஷயம் வேறே -ஆத்மா சரீரம் வேறே தானே இதே போலே
ப்ரத்யக் விருத்தி தன்னைப்பற்றிய அறிவு -இதங்கார கோசாரம் சரீரம் –பராக் —
அகங்கார கோசாரம் ஆத்மா -நிஷ்க்ருஷ்டமேவ -பிரித்தே அறிய வேண்டும்
சேமுஷி -ஞானம் -அறிவு வேறே அறிபவன் வேறே –

ஒரே விஷயத்தில் தன்மை மாறினால் -பிதாவே புத்திரனாக –அகார பேதம் ரூப பேதம் போலே
அஹம் இதம் ஒரே வ்யக்தியிலே -சொன்னால் என்ன என்றால் இது ப்ரத்யக்ஷ விரோதம் ஆகுமே –
சாருவாகன் இடம் வாதம் ஸாஸ்த்ரம் கொண்டு சொல்லமுடியாதே -அவன் அத்தை ஒத்து கொள்வது இல்லையே –
ப்ரத்யக்ஷம் கொண்டே சாதிக்கிறார்
தேவதத்தன் -தண்டம் -அஹம் தண்டி -தண்டம் பிடித்து கொண்டு இருப்பவன் -நான் கோலைக் கொண்டவர்

மனசைக் கொண்டே ஆத்மாவை அறிகிறோம் -கண்களுக்கு விஷயம் இல்லை –
நியமித பஹிர் இந்திரிய வ்ருத்தி -வெளிப்புலன்களையும் அடக்கி மனசையும் அடக்கி –
ஆத்மாவை அறியும் பொழுதே -உடம்பு தெரியாதே -அவயவ கிரஹணம் இல்லையே -ஸ்தூலமாக இருந்தாலும் –
நீ சொல்வது போலே ஒன்றாக இருந்தால் இது தெரியுமே

இதுக்கு ஆஷேபம் -நையாயிகர் பரம அணு -த்வய அணு–இப்படி மூன்று -த்ரய அணுகம் -இத்தையே ஜகத் காரணம் என்பர் –
த்ரய அணுகம் கிரஹிக்கிறோம் -அவயவம் த்வ அணுகமோ பரம அணுவோ கண்ணில் படவில்லையே –
அசேதனங்களுக்குள் சின்னதாக த்ரய அணுகம்
ஜன்னலை திறக்க -சூர்ய கிரணங்கள் -மூலம் கண்ணுக்கு தெரியும் த்ரய அணுகம் -ப்ரத்யக்ஷ யோக்ய அவயவம் -இதுவே

வெளி இந்த்ரியங்களால் கிரஹிக்கப்படும் அவயவி -அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹிக்கப் படும்
மனசால் நான் என்னும் சரீரத்தை அறியும் பொழுது அவயவங்கள் உடன் அறிய வேண்டும் -என்பர் பூர்வ பஷி
வ்யாப்தியை குறைக்க பிரமாணம் இல்லையே –
மனசால் கிரஹிக்கப்படும் வஸ்து வெளிப்புலன்களால் கிரஹிக்கப்படும் வஸ்து இரண்டும் இருக்க வேண்டுமே –
மனசுக்கு வெளி இந்திரியங்கள் உதவியால் மட்டுமே கிரகிக்க முடியும் -எல்லாமே அது தான் –
விசேஷணம் வேண்டாமே -நீ சொல்வதும் அங்கே போய் முடியுமே –
ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு -ஸ்பர்சத்தால் மட்டுமே அறிகிறோம் -வாயுவுக்கு அவயம் இல்லையே –
கடம் படம் -இவற்றில் அவயவங்கள் உண்டே

ஸ்தூலோஹம் -நான் பருத்தவன்–சரீரத்தின் குணத்தை ஆத்மாவிடம் சொல்லுகிறோம் –
ஸ்தூலமான சரீரத்தை ஏற்றுக் கொண்ட நான் என்று சொல்ல வில்லையே
இப்படி சொல்லும் பொழுதும் சரீரத்துக்குள்ளே அஹம் ஆகாரம் -வஸ்து தானே அஹம் கோசாரம் –
தேகத்தை அஹம் என்ற சொல் சொல்லாதே –
ஸ்தூலம் பால்யம் இவை ஆத்மா பர்யந்தம் பர்யவசிக்கும் -எனவே தேகமும் ஆத்மாவும் ஓன்று என்பார்
ஓன்று இல்லை -இரண்டு தத்துவங்களே அப்ருதக் சித்தம் என்பதால் –விட்டுப்பிரியாமல் -பர்யவசான வ்ருத்தி -அன்றோ இது –
உபசாரத்துக்காகவா முக்கியமாகவா –அதுக்குள்ளும் பரமாத்மா -இது தனி விசாரம் –

மமேதம் க்ருஹம் -பேத ப்ரதிபாதம் உண்டே -வ்யவஹாரத்திலும் காணப்படுகிறதே
என்னுடைய ஆத்மா சொல்லக்கூடாதே -சொன்னால் -நானாகிய ஆத்மா என்பதையே சொல்கிறோம் –
நடு மதியத்தில் இருக்கிறோம் சொல்வது போலே -அப்ரதானம் -உபசார வார்த்தை என்றபடி
என்னுடைய தேகம் -வ்யவஹாரம் -நானே தேகம் சாருவாகர் பக்ஷம் -உபசாரமாக சொல்வதாக கொண்டால் என்ன என்று ஆஷேபம் –
ப்ரத்யக்ஷ விரோதி ஆகுமே சிலா புத்ரேக சரீரம் அதாவது -பொம்மையின் சரீரம் –சொல்லும் பொழுது
பொம்மை ஒரு வஸ்து சரீரம் வஸ்து இரண்டு இல்லையே -இதம் அர்த்தமே பொம்மையும் சரிரமும்
மம அயம் ஆத்மா -என்னுடைய இந்த ஆத்மா –உபசார வார்த்தை -உபய பஷத்திலும் உபசார பிரயோக சம்மதம்
என்னுடைய ஆத்மா -அஹம் சப்தம் என் -மம -வந்த பின்பு மீண்டும் ஆத்மா -உபசார
என்னுடைய தேகம் -என் -என்றால் தேகம் -அஹம் சப்த கோசாரம் தேகம் ஆகுமே –
நீ இதம் சப்தம் தானே தேகம் என்றாய் -இது வரை -ஆகவே நீ உபசாரமாகக் கொள்ள முடியாதே -என்று சமாதானம் –
நான் உயரமானவர் -தேகம் உயரம் -லக்ஷணையால் தேகத்துக்கு உள்ளே இருக்கும் ஆத்மாவையே நான் குறிக்கும் என்றவாறு

இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது அவி விவேகிகள் -ஒன்றாக பார்ப்பது -எதற்க்காக என்றால் –
அபேத பிரமம் -பிராந்தி -வேறுபாட்டை கிரஹிக்க முடியாமல் –
பாஹ்ய விஷயம் -பரஸ்பர வ்ருத்தம் ரூபம் -பரிமாணம் -சங்க்யா எண்ணிக்கை-சந்நிவேசம் ஆகாரம் –
வேறுபாடு -கிரஹிக்கிறோம் -வ்யதிரேகம் புற விஷயங்களில்
ஆனால் ஆத்மாவில் -ஆத்மாக்களுக்குள் வாசி இல்லை –
சாத்ருசம்-வெள்ளி முத்துச் சிப்பி -பாம்பு கயிறு -பிரமிக்க சில ஒற்றுமைகள் இருக்க வேண்டுமே
ஆத்மா -தேகம் இரண்டுக்கும் பொது தன்மைகள் ஒன்றுமே இல்லையே –
இரண்டும் வேறே வேறே இல்லை வஸ்து ஒன்றே என்பான் பூர்வ பஷி
இதுக்கு சமாதானம்

இச்சைக்கு தகுந்த வியாபாரம் -நான் அங்கே போக நினைக்க -தேகம் -முயன்று -இச்சா சங்கல்பம் —
இரண்டும் ஆத்மா இடம் -பிரயத்தனம் -தேகத்திடம் –
இச்சா அனுவியாதி-அதன் வழி செல்லும் தொடர்பு உண்டே -பொதுத்தன்மை -சாத்ருசம் உண்டே –
இதுவே அபேத பிரமத்துக்கு காரணம் –

பிரனீஹித மனஸ்- யோகிகள் வாசியை நன்றாக அறிகிறார்கள் -அஹம் -அவயவம் இல்லாததாக -ஆத்மாவையையும்
இதம் -அவயவம் கூடி -ஸ்தூலம் தேகம் -வேறு பட்டதாக ப்ரத்யக்ஷத்தாலே காண்கிறார்கள் –

அனுமானம் -மேல் -நான் அறிகிறேன் -அறிவுக்கு -உடம்புக்கு இல்லை -வேறு பட்ட ஒன்றுக்கே -விஷயம்
அப்ரகாசமான தத் அவயவ ப்ரதிபாத்யத்வாத் –
எந்த அறிவு சரீரத்தை கிரஹிக்கறதோ அது அவயவங்கள் உடன் சேர்த்தே கிரஹித்து அறியும்
நான் அறிகிறேன் -வேறு பட்ட ஆத்மாவை இலக்காக கொண்டதே ஆகும் –
அறிவுக்கு அவயவங்கள் பிரகாசிக்காதே –
யாது ஒரு அறிவு சரீரத்தின் அவயவங்களை இலக்காகாமல் உருவாகிறது அது ஆத்மாவுக்கே -இது முதல் அனுமானம்

சரீரம் அஹம் -என்பதுக்கு இலக்காகாது -இது என்று கிரஹிக்கிறபடியால் -இது கடம் -இது சரீரம் –
அஹம் சொல்லுக்கு பொருளை ஆகாதே -இரண்டாவது அனுமானம்

மூன்றாவது அனுமானம் -பாஹ்ய இந்திரியங்களுக்கு புலப்பட்டால் -சரீரம் -அவயவங்கள் உடன் கூடி இருப்பதால்
சப்தத்துக்கு சப்த ஸ்வரம் -இத்யாதிகள் உண்டே –
கடம் முதலானவை கண்ணால் கிரஹிக்கிறோம் -அவயவம் அற்ற ஆத்மா -கண்ணால் கிரஹிக்கப்படாதது –

எம்மா வீட்டில் எம்மா வீடு –
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
தேஹே கதம் ஆத்ம -பரார்த்தம் தேஹே

அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்–பிறருக்காக இருப்பதே இல்லை -ஸ்வ தந்த்ரன் -தனக்காகவே இருக்கும் -எல்லா பொருள்களும்
சரீரம் பிறருக்காகவே இருக்கும் -ஆத்மா மொத்தம் தனக்காகவே இருக்கும் –
அவயவங்கள் உடன் கூடி இருந்தால் பிறருக்காக இருக்கும்

ஸர்வஸ்ய பாஹ்ய ஆத்யந்த்ர போக்யம்-சப்த ஸூக -இரண்டும் ஆத்மாவின் பொருட்டே –
ஆத்மா அநன்யார்த்தம் -ஸர்வஸ்ய சேஷி -தனக்காகவே –
சரீரம் பிறர்க்காகவே ஏன் என்றால் கூட்டரவாக இருப்பதால் –
படுக்கை -ரத்தம் -நாற்காலி -அவயவங்கள் உடன் -பிறர்க்காகவே -பிறர் யார் -ஆத்மா
அவன் சரீரம் தானே ரதத்தில் -இருக்குமே -பிறர் சரீரமாக அவயவத்துடன் இருந்தாலும் என்பான் பூர்வ பஷி –
யாது ஓன்று மற்ற ஒன்றை தன் உபயோகத்துக்காக கொள்ளுமோ அதுவும் சேர்த்தி பொருள்
ஆத்மா சேர்த்தி பொருளை உபயோகமாக கொள்ளுவதால் அதுவும் சேர்த்தி பொருள் -அவயவங்கள் உடன் கூடியது என்பான் பூர்வ பஷி
அப்பொழுது ஆத்மாவும் பிறருக்காக இருக்கும் -பிரத்யக்ஷ விரோதம் பிறக்கும்
இது அறிந்து தானே சேஷி -அஹம் போகி- நானே எல்லாம் யானே என் தனதே என்று இருக்குமே —
ஆழ்வார் அத்தை சொன்னது பூர்வ பக்ஷம்
அபரார்த்தம் ஸ்வம் ஆத்மாநாம்
ஆத்மாநாம் அந்யத்-மேலே ஈஸ்வர சித்தியில் விளக்கம் கிட்டும் –

ஆத்மா கார்ய பொருளே இல்லையே -உருவாவதே இல்லை -அவயவமே இல்லை
கார்ய குண பூர்வகமாக இல்லையே -தேகத்துக்கு ஞானம் வாதம் எடுபடாதே –
கல்லில் மத சக்தி -காரண பொருள்களில் இல்லாவிட்டாலும் காரண பொருளில் இருக்கலாமே
வெத்தலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து மென்னால் சிகப்பு வருகிறதே –
கூட்டுறவு-சங்காதம்- -தனக்கே -தேகம் பிறருக்கே யாக இருக்கும் –
ரதம் கட்டில்-சரீரத்துக்காக உள்ளதை பார்க்கிறோம் -பிறரும் குற்றவாகவே இருக்க வேண்டும் – இது வரை பார்த்தோம் –

பரார்த்தம் –சங்காதம் -அநவஸ்தா நிலை வரும்
போக்தா வேறே போக உபகரணம் வேறே பிரித்து சமாதானம் -அனுபவிப்பவர் அன்றோ
ஆத்மா பிறருக்காகவே இல்லை சங்காதமும் இல்லையே
சங்காதம் என்று கொண்டால் வேறு ஒருவருக்காக இருக்க வேண்டும் –அதற்கும் அந்த சட்டம் வருமே –
த்ருஷ்டாந்தகத்தில் உள்ள எல்லாம் தார்ஷ்டாந்தகத்தில் வர வேண்டாமே -பக்ஷம் ஹேது ஸாத்யம்
மலை புகை நெருப்பு போலே-அனுமானம்
த்ருஷ்டாந்த த்ருஷ்ட தர்மம் மாத்திரமே கொள்ள வேண்டும் -இல்லா விட்டால் அனுமானம் வராதே

ப்ரத்யக்ஷத்தால் பேதம் -சரீர ஆத்மா -தெளிவாக இல்லா விட்டாலும் அனுமானத்தால் அறியலாம் என்பான்
தத் அசம்பாவித -ஞான அசம்பாவித சரீரே
சரீரே அபுஷ்டஸ்வேதே பேதஸ்ய-தஸ்ய அசம்பவாத் –
தஸ்மிந் அசம்பவாத்-சரீரத்தில் ஞானம் ஏற்படாதே எதனால் என்றால் —
தத் குணாந்தர -சரீர குணாந்தர வைதர்மயாதபி –பருமன் இளமை போன்றவை ஞானம் போல இல்லவே –
ஞானம் சரீரத்துக்கு குணம் ஆகாதே –
ஞானம் இருந்தால் சுகம் துக்கம் -இந்த சத்தர்மம் ஆத்மாவுக்குத்தானே
தேகம் தவிர்ந்த சங்காதம் பரார்த்தம்
தேகம் ஆகிற சங்காதம் பரார்த்தமாக இருக்காது தனக்காக இருக்கும் -பூர்வ பக்ஷி-
இப்படி இருந்தால் ஞானம் தேகத்துக்கு சொல்லலாமே என்பர்
ஆனால் தேகத்தின் மற்ற குணங்களுடன் பொருந்தாதே -என்று சித்தாந்தம்
சரீரத்தில் ஞானம் உதிக்கவே அவகாசம் இல்லையே -யோக்யதையே இல்லையே
இத்தை காரிகை -ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

காரண குண பூர்வகம் விசேஷ குணம் –அவயவத்தில் இருப்பது அவயவியில் ஏற்படும்- நூலில் உள்ள நிறம் புடவையில் –
விசேஷ குணம் -16-சாமான்ய குணம் -8-ஆக மொத்தம் -24-
கார்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் இருந்தால் காரண குண பூர்வகத்வம்
சாமான்ய குணத்துக்கு வேண்டாம்
சரீரத்துக்கு ஞானம் சொன்னாய் ஆனால் -காரண குண பூர்வகம் இல்லையே –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி –ஹேதுக
தந்து -நூல் -படம் -சமவாயி காரணம் -உபாதான காரணம் நாம் சொல்வது போலே

சமவேத குணம் சேர்ந்து இருக்கும் குணம் நூலில் -இதுவே துணியில் இருக்கும் ரூபத்துக்கு காரணம் அசமவேத குணம் ஆகும் –
சமவாயி -அசமவாயி -நூலில் சேர்க்கை -சமவாயி காரணம் –
ஸூ சஜாதீய ஸூ ஆஸ்ரய சமவாயி சமவேத குண அசமவாயிக ஹேதுவாக கொண்டு – -நூலில் வாசனை -துணியில் ரூபம் –
ரூபத்துக்கு வாசனை காரணம் இல்லையே -இத்தையே சஜாதீயம் -வி சஜாதீயம் -என்கிறது
இதே போலே சரீரம் -ஞானம் -சரீரத்தில் உள்ள குணங்கள் ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே –
சிகப்பு கருப்பு நீளம் இவை ஞானத்துக்கு சஜாதீயம் இல்லையே
சாமான்ய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் நியாய சாஸ்திரம் -கொண்டே சாதிக்கிறார்

சாருவாகர் -ஆகாசம் ஒத்து கொள்ளவில்லை -நாம் அதுவும் த்ரவ்யம் -சூர்ய சந்த்ரராதிகள் இங்கே இருப்பதால்
கள்-த்ருஷ்டாந்தம் -சொல்வது பொருந்தாது –
சக்தி விசேஷ குணமே அல்லவே
சாமான்ய குணம் -தானே
ரூபம் கந்த ஸ்பர்ச ரசம் சிநேகம் சம்பசிதிகோ த்ரவ்யம் புத்தி -சுகம் துக்கம் இச்சா ப்ரயத்னம் -பாவனா -16-விசேஷ குணங்கள்
சங்க்யா பரிமாணம் பரத்வம் அபரத்வம் குருத்வம் -8-குணங்கள்
மீமாம்சகர் சக்தி -சர்வ த்ரயேஷு–கார்யம் செய்வதை கொண்டு ஊகிக்க படும் —
கார்யதவே உண்டாகும் ஒரு புலனால் அறியப்படும் ஞானம் விசேஷ குணம்
சக்தியை விசேஷ குணம் சொன்னால் என்ன என்பன்–காரண குண பூர்வகம் ஆகும் –
த்ரவ்யங்களை கலந்து த்ரவ்யத்திலே மத சக்தி உண்டாகும் என்று சொல்லலாம் என்று சமாதானம்
அணுவில் மத சக்தி வரும் என்றவாறு –
வெத்தலை பாக்குக்கும் இதே கதை -தாம்பூல ராகத்துக்கும் சிகப்புக்கும் இதே வாதம் –
இதே போலே தனித்தனி அவயவங்களுக்கும் ஞானம் இருக்கு -என்றால் பொருந்தாது –
ஒரே சரீரத்தில் பல ஞானவான்கள் சேர்ந்து ஒரு கார்யம் செய்ய முடியாதே –
அங்கி அங்க பாவமே போகுமே –
சித்ர ரூபம் பல வண்ணங்களின் சேர்க்கை -நூலில் பல வண்ணங்களின் சேர்க்கை இருந்தால் தானே முடியும் –
நாநா வண்ணம் –அந்த துணியானது பல வண்ணங்களாலான நூல்களால் ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால்
என்ன பொருந்தாமை வரும் –
அகாரண குண பூர்வகம் -ஒவ் வொரு நூலிலும் பலவண்ணங்கள் காணா விட்டாலும் –

சரீர குணங்கள் பிரத்யக்ஷமாக அறியும்படி இருக்கும் -ஆனால் ஞானம் அளவை அறிய முடியாதே —
ஞானம் சரீரத்தின் குணமாக இருக்க முடியாது என்றவாறு -ஸாத்யம் -இதுவே –
கிஞ்ச
தேகம் ஆத்மா அல்ல -குடம் போல்வன போலே
உத்பத்தி -உருவாகிறதே -இது போலே ஆத்மா இல்லையே
பிறர் பயனுக்காக –வேதாந்தத்தில் ஆத்மா தனக்காக
அவயவ சேர்க்கை –
ரூபமாதி குணம் உண்டே –
பூதத்வாத் பஞ்ச பூதங்கள் சேர்க்கை

ஸச் சித்ரத்வாத் -ஓட்டை நவ த்வார பட்டணம் -ஆத்மாவில் இல்லை
அதேகித்வாத் -இவர் தேகம் -தேஹி இல்லையே -சாருவாகரும் தேகம் என்றே சொல்லுவான்
தேகமாக
ம்ருத தேகத்வாத் -இறந்து போன உடல் போலே ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே
தேக ஆத்மா வாத நிரசன பிரகரணம் -முடிந்து இந்திரியம்

இந்திரியம் -ஸ்தூலம் இல்லை -அவயவங்கள் உடன் கூடியது இல்லையே -இத்தையே ஆத்மா
இதம் -சப்தம் அர்த்தம் –பாஹ்ய இந்திரிய க்ராஹ்யம் -வெளி புலன்களுக்கு விஷயம் -வேறே அஹம் சப்த அர்த்தம் –
உள் புலன் மனஸ்ஸூ க்கு தானே விஷயம்
அதீந்த்ரியம் -இந்திரியங்கள் -அதிஷ்டான தேசம் இந்திரியங்களால் கிரகிக்க முடியும் -மாம்ச பிண்டம் சஷுர் கோளகம் –
குணங்கள் -ரூபம் ரசம் இத்யாதிகளை இல்லையே -உத்பூத குணங்களாக இருக்காது -பிருத்வியில் காந்தம் நன்றாக தெரியும்
சப்தம் ரூபம் -ஸூ ஷ்மங்களில் தெளிவாக வெளிப்படாமல் இருக்கும்
இந்திரிய ஸூஷ்மம் தானே –மூக்கு நுனியில் தான் இருக்கு –
ஒன்றின் வியாபாரம் -பலன் -முயன்றவர் இடம் -அத்யயனம் பண்ணினவன் இடமே -யத் வியாபார பலம் யதி தத் தன்னிஷ்டம் –
அர்த்த சன்னிகர்ஷம் -நேர் ஆதி தொடர்பு ஞானத்தின் மூலமாக -ஞானம் த்ரவ்யம் குணம் இரண்டு ஆகாரம் -நம் சம்பிரதாயத்தில்
தண்டம் -சக்கரம் -உண்டான குடம் தண்டத்திடம் இல்லையே -த்ரவ்யத்துக்கு இந்த சட்டம் இல்லை
குளித்தால் சரீர சுத்தி புக்கியம் -த்ரவ்யம் இல்லை –
ஞானம் -சாருவாகனுக்கு த்ரவ்யம் இல்லையே
தண்டம் வைத்து குடத்தை உடைத்தால் -அபாயம் தண்டத்தில் இல்லையே -சூரணமாக இருப்பதில் குடத்தில் இல்லாமை இருக்குமே –
பிறப்பது என்றாலே போகுமே -ஸ்ரீ கீதை –
குடம் -அபாயம் -சூர்ணத்தின் அவஸ்தையில் தொடக்கம் -கட்டத்தில் சூர்ணத்தின் அழிவு -இப்படித்தானே
த்ரவ்யத்தில் அபாவத்திலும் பொருந்தாதே –
ஞானம் அபாயம் இல்லை -த்ரவ்ய பின்னம் தானே ஆகவே பொருந்தும் என்பான்
த்ரஷ்டா சஷூஸ் பார்ப்பவர் கண் -கர்த்தா -ஞாதா -ஞானம் குணம் ஆகும் -ஆப்த வாக்கியம் சத்யதபா முனிவர் வார்த்தை
மேலே சமாதானம் -தது ந –சொல்லி மேலே விளக்குகிறார்

விகல்பம்–ஒவ் ஒரு இந்திரியம் தனி தனி ஆத்மாவா -ஐந்தும் சேர்ந்து ஒரே ஆத்மாவா –
ப்ரத்யேகம் -என்றால் -ப்ரதிஸந்தானம் -ஒவ் ஒன்றும் ஆத்மா -கண்ணால் பார்த்த நான்
பழம் கொடுத்தேன் சொல்ல முடியாதே -அவர் வேறே இவர் வேறே -பொருந்தாதே –
எதை நான் பார்த்தேனோ அதை நான் தொடுகிறேன் சொல்ல முடியாதே
சேர்ந்தே ஆத்மா என்றாலும் -பொருந்தாதே -ஒரு இந்திரியம் இல்லாமல் வாழ முடியாதே -பிரத்யக்ஷ விரோதம் வரும் –
கண் போனால் முன்பு பார்த்தவர் நினைவு வரக் கூடாதே கண்ணுக்கு ஞானம் என்றால் –
வியாபார பலன் வாதமும் தப்பு -சாஸ்த்ரத்தால் வெட்டினால் பாபம்–த்ரவ்யம் இல்லை -அபாயமும் இல்லை –
உன் சட்டம் செல்லுபடி ஆகுமே – கத்திக்கு போகாமல் ஆத்மாவுக்கு அன்றோ
ஆப்த வசனம் -அவர் சொன்னது -இந்திரனும் ஸ்ரீ மந் நாராயணன் பேச உபநிஷத் கதை –
வராஹம் வேடன் வேஷன் -போட்டு வர -ரிஷிகள் -இருக்கு இல்லை சொல்ல முடியாமல் -யா பச்யதி ந ப்ரூயதே
-கண் பார்த்தது அது பேசாதே -பேசுவது பார்க்க வில்லை -வேடனே கண்ணு பேசுமா வாக்கு காணுமோ –
த்ரஷ்டா கண் தானே -என்ற இடம் -அனிதா வேறு பயனுக்காக சொன்னது -சரணாகாத பரித்ராயணத்துக்காக சொன்னது –
இந்திரியங்கள் ஆத்மா அல்ல -என்று நிரூபணம் –

மனமே ஆத்மா -அடுத்து
முன்பு சொன்ன தோஷங்கள் வராதே -உத்ப்பூதம் ஸ்தூலம் –
பலவா ஒன்றா வம்பு இங்கு இல்லையே –
வெறும் கருவி தானே -ஆத்மா தானே கர்த்தா -ஆத்மாவின் தர்மா தானே கர்த்ருத்வம் –
இந்திரியங்களின் தலைவர் மனஸ் -தெரிகிறது லோகத்தில் -பிரதி சந்தானம் குறை வராதே –
ஞானம் பதிவது மனசில் -ஞான ஆஸ்ரயம் -தரிசன அனுசந்தான ஆதாரம் -பார்ப்பதும் நினைவும் -இங்கே தானே –
ஒரு இந்திரியம் போனாலும் வாழலாம் -அந்த குறையும் இங்கு இல்லையே –

தத் அபி ந -முதல் ந -அப்புறம் தத் ந
மனம் கர்த்தா அல்ல -கரணமான படியால் -கண்ணைப் போலே சிந்திக்கும் கருவி
எனவே ஞானம் இல்லை -ஞானத்துக்கு இருப்பிடம் வேறே கருவி வேறே அன்றோ
பாஹ்ய ஆந்திர சகல விஷய சம்வேதன ஞானம் அறிவிக்கும் கருவி தானே மனஸ்ஸூ
பாஹ்ய இந்திரிய அதன் அதன் விஷயம் -தொடர்பு -யுகபத் ஒரே காலத்தில் -அனைத்து ஸ்ருஷ்ட்டி போலே –
யுகபாத் ஏவ சர்வ விஷயமும் தோன்றாதே -எதனுடைய உதவி இல்லாத போது வஸ்து பிரகாசிக்காதோ –மனஸ் தானே க்ரஹிக்க வேண்டும் –
ஸூகம் போன்றவை -இவற்றுக்கும் கருவி வேணும் -கிரியை -என்றாலே கரணமும் கர்த்தாவும் வேணுமே -ஆத்மாவும் மனசும் வேண்டுமே –
ஞான கருவியே மனஸ்ஸூ -கர்த்தா அல்ல என்றதாயிற்று -ஞான ஆஸ்ரயம் ஆகாதே
கர்த்தா என்றாலே ஸ்வதந்த்ரர் -கருவி மற்றவர் விருப்பம் படிதானே

மேலே ஸ்வா தந்தர்யம் விளக்கம் –விருப்பம் தகுந்த-கார்யம் செய்யும் கருவி கொண்டு -அடைய
தன இடத்தில் உள்ள இச்சையால் செயல்படுவது ஸ்வ தந்தர்யம் –
பர அதிஷ்டானம் பிறர் நியமனத்தால் -செய்யும் மனஸ் -ஆத்மாவாகாதே -பரஸ்பர விருத்தம்-
மனம் ஆத்மா அவருக்கு கரணம் என்றால் -கர்த்தா கரணம் வேறே வேறே ஒத்துகே கொண்டாலே –
உன் சித்தாந்தம் பலிக்காதே -பேரிலே தான் வாதம் —
ஏவ கண்களால் ரூபம் -சுகாதிகளை மனசாலே க்ரஹிக்கிறார் ஆத்மா
லோக வியாபாரத்துக்கு ஒத்து போகாதே -மனம் கரணமே பரதந்த்ரமே ஞானம் இல்லை ஆத்மா இல்லை
அஹம் சப்த கோசாரம் ஆகாதே –
மன ஆத்மவாத கண்டன பிரகாரணம் முற்றிற்று

மேலே மனஸ் என்ன என்று விவரிக்கிறார்
சம்பிரதாயம் பகவான் இடம் மட்டுமே ஸ்வா தந்தர்யமும் தானே ஏறிட்டுகே கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
வேறு ஒரு வியக்தியில் இரண்டும் இல்லையே –

அதிஷ்டானம் -நியமனம் என்றபடி இருக்கிறது மட்டும் இல்லை —ஒரே ஆத்மா தான் நியமிப்பான் -சரீரத்துக்குள் பல உண்டே —
தேகம் மனம் இந்திரியம் -மூன்றும் கர்மத்துக்கு அனுஷ்டானம் -கர்ம சாபேஷத்தால் ஈஸ்வரன் நியமிக்கிறார் –
மன வைத்தியர் -கண் வைத்தியர் போலே -அனைவரும் மனோ வியாதிக்கு ஆள்பட்டு இருப்பதால் –
கண்ணுக்கு உபகரணம் கண்ணாடி –கண்ணே கரணம் தானே -மனசுக்கு என்ன பண்ணலாம் –
மற்ற கரணங்களுக்கு மனஸ் சஹகாரி வேண்டும் —

விஷயங்களை இந்திரியங்களை கிரகிக்க -மனஸ் இந்திரியம் விட வலிமை –
புத்தி விவேக ஞானம் அத்தை விட வலிமை -அதிருஷ்ட ரூபமான அனுக்ரஹம் -த்யான ரூபமான கர்மம் –
சத்வம் வளர்ப்பதே மனசுக்கு உப கரணம் –
சத்வ குணம் –கர்மம் பண்ண -ஞான யோகம் -பகவத் பிரீதி வந்து -மனஸ் வியாதி போகும் –
மனஸ் சமாதானம் கோயில் சேவை -வளர்க்க வளர்க்க -ஆகார சுத்தி -சத்வ சுத்தி -துர்குணங்கள் போக்க –
காமம் போக்க வைராக்யம் கோபம் போக்க பணிவிடை செய்து -இதுவே மாற்று மருந்து –
மனசுக்கு பிரகரணம் கண் காது இத்யாதி -மன நோய் மருத்துவர் தூங்க வைப்பர் இதன் அடிப்படையில் –
நித்ய அனுஷ்டானம் நித்ய ஆராதனம் -நோய் முதல் நாடி தீர்ப்பது -அதுவே அத்தை அறிவது கஷ்டம் தானே குழம்புகிறோம்
ஆந்திர ஞான கரணம் –உள் இந்திரியம் -உள் அறிவு புலன் -த்ரவ்யம் –
யுகபத் ஞான-ஒரே காலத்தில் ஏற்படாதே -கண் காது -சுவைப்பதும் கேட்பதும் பார்ப்பதும் ஒரே அளவிலே பதிவாகாதே –
புலன் உடன் தொடர்பு கொண்டு மனஸ் கிரகிக்கிறது -அதுவே மனசுக்கு லிங்கம் அடையாளம் –
ஞானம் -அறிவு -ஸ்மரணம் -நினைவு -சம்ஸ்காரம் -மனப்பதிவு -விஷய சுகம் ஏக காலத்தில் –
பதித்தது அனைத்தும் ஏக காலத்தில் நினைவுக்கு வர வில்லையே –
யுகபத் ஞானம் -வேறே
யுகபத் ஸ்மரணம் –பண்பு பதிவுகள் –நினைவும் மனசும் ஒன்றா வேறே வேறாயா -அவன் கேள்வி –
கொஞ்சம் கொஞ்சம் எப்போதோ எப்போதோ நினைவுக்கு வருகிறதே –
பதிக்கப்பட்ட வரிசையில் நினைவு வருகிறதா -இல்லையா –
மனசை ஒருமைப்படுத்தினாலும் நினைவு வரிசைகளை மாற்ற முடியாதே –
அனுபவித்த சகல விஷய நினைவுகளும் ஒரே காலத்திலேயே வராதே –
சுக துக்க ரூப கர்மங்கள் –அதிருஷ்டம் –வாயிலாக என்று கொள்ளலாமா -என்றால் –
ஆத்ம ஸ்வ பாவமே க்ரமமாகவே ஞானம் கொடுக்கும் -இப்படி இரண்டு விகல்பம்
இரண்டும் ஒத்து வராது –

துணி -சமவாயி தந்து -அசமவாயி நூலுக்கும் நூலுக்கும் சேர்க்கை -நிமித்தம் -உண்டை பாவி -நையாயிகர் இந்த மூன்று காரணங்கள்
சுக துக்கம் ஏற்படும் -சுக ஞானம் துக்க ஞானம் -இதுக்கு -சமவாயி காரணம் -ஆத்மா -நிமித்தம் –
வெளி விஷயங்கள் -அதிருஷ்டம் -அசமவாயி -சமவாயி உடன் தொடர்பு-சம்யோகத்துக்கு ஓன்று வேண்டுமே அது மனஸ்
மனம் த்ரவ்யம் சித்திக்கும் என்பான் –அது பொருந்தாது -தார்க்கீகன் -மனஸ் ஒன்பதாவது தத்வம்
சுக -துக்க -பூர்வ கால ஜென்ம ஞானம் இருக்க வேண்டுமே அபிமத அநபிமத விஷய தொடர்பு ஞானம்-நெருப்பு -உஷ்ணம் அறிந்து தொட்டால் சுடும் –
இந்த ஞானத்துக்கு இருப்பிடம் ஆத்மாவில் -இதனால் சம்யோகம் -இதுவே அசமவாயி காரணம் -மனஸ் வேண்டாமே –
விஷய ஞானத்துக்கு அசமவாயி -அதுக்கு அசமவாயி -இப்படி மேலே மேலே எவ்வளவு கேட்டாலும் மனஸ் வேண்டாம் என்பான் –
விஷயத்துடன் தொடர்பு உள்ள வெளிப்புலன் அதன் உடன் தொடர்பு கொண்ட -ஆத்மா–அது தான் அசமவாயி –
வெளிப்புலன் தொடர்பு -சப்தாதிகள் இந்திரிய தொடர்பு –
மனசை ஒத்து கொள்ளாதவன் அன்றோ –
இந்திய பொருள் சம்பந்தத்துக்கு அசமவாயி இந்திரிய கிரியா செயல்பாடு
அதுக்கு இந்திரிய ஆத்ம சம்பந்தம் –
அதுக்கு அதிருஷ்டம் கர்மமும்
அதுக்கு பிரயத்னம் அசமவாயி
அதுக்கு கர்தவ்யதா ஞானம் –

சுக துக்கம் அனுபவிக்க த்ரவ்யாந்தரம் -மனசை கல்பிக்க வேண்டாமே -என்பன் பூர்வ பக்ஷி –
நித்ய த்ரவ்யம் -விசேஷ குணம் –த்ரவ்யாந்தர சம்யோகம் தேவை –
மாங்காய் -நாலு நாள் கழித்து மாம்பழம் -பார்த்திப -பிருதிவியின் -பரம அணு –
தேஜஸ் சம்பந்தம் பட்டு கட்டியாக இருந்தது மெலிதாக -சுவையும் மாறி-பச்சை மஞ்சள் – –
அனுமானித்து சம்பந்தம் -தேஜஸ் சம்பந்தம் உணர்கிறோம்
ஆத்மா -சுக துக்கம் -விசேஷ குணம் -இதுக்கு மனஸ் -என்று சொல்லப் போனால் இதுக்கும் வேண்டாமே என்பான்
இஷ்டம் கிடைத்தது தெரிந்தால் சுகம் -அநிஷ்டம் கிடைத்தது தெரிந்தால் துக்கம் -பிராப்தியும் அறிவும் வேணுமே–
இத்தை அசமவாயியாக கொள்ளலாமே என்பான் -மாங்காய் மாம்பழம் நேராக பார்த்து அறிகிறோம் –
பிரத்யக்ஷமாக சம்பந்தம் தெரியாமல் அனுமானிக்கிறோம்
இங்கு அது வேண்டாமே என்பான்
துணி -தந்து -சமவாயி காரணம் -நூலுக்குள் சம்பந்தம் அசமவாயி -தறி உண்டை பாவு நிமித்தம் –
இங்கு காரணம் கிடைப்பதால் அனுமானிக்க வேண்டாமே என்பான் -பூர்வ பக்ஷி

வ்யாப்தியில் தப்பு இல்லையே -நித்ய த்ரவ்யத்தில் விசேஷ குணம் கிடைக்க த்ரவ்யாந்தர சம்பந்தம் வேணும் –
என்கிற வ்யாப்தியில் குற்றம் இல்லையே –
த்ரவ்யாந்தரம் இருக்க ஒத்துக் கொண்டால் மனசை கல்பிக்கலாமே –
த்ரவ்யாந்தம் ஒத்துக் கொண்டு –அக்னி -சரீரம் தொடர்பால் -மாறுதல் -ஸ்பர்சத்துடன் கூடிய த்ரவ்யந்தரம் -பவ்திகமாகவும் இருக்க வேண்டும் –
மனசை தொட முடியாதே –
ஸ்பர்ச வைத்த த்ரவ்யாந்தரம் -ஆத்மா தேகம் சொல்லலாமே -மனஸ் கண்ணுக்கு தெரியாதே -தேகம் காணலாம்
தேகத்துக்கு தானே சுகம் துக்கம் -அவயவங்களுடன் இருப்பதால் –
கண்ணுக்கு ஸூஷ்மமும் பாஹ்ய குழகமும் உண்டே -மனசுக்கு வலிக்காதே
மனஸ் பவ்திக்கமா இல்லையா விசாரம்
பஞ்ச பூதங்களை விட வேறுபட்டதா இல்லையா –
அனுமானத்தால் வேறுபட்டது என்று சாதிக்கலாம் -மனஸ் சேர்ந்தால் தானே-சப்தம் -ஆகாச குணம் -கிரஹிக்கும்–
ஆகாசம் பிரதானமாக கொண்ட காது -மற்ற ஒன்றை கிரகிக்காதே
ஆகாசாத் வாயு -கண் அக்னி -ஜாலம் -நாக்கு -பிருத்வி மூக்கு -கிரஹித்து அவ் இந்திரியம் அதில் இருந்து உருவானது –
பவ்திக்க இந்திரியம் தனக்கு உள்ளதை தான் கிரகிக்க வேண்டும் வேறே ஒன்றை கிரகிக்கக் கூடாதே
பூதாந்த்ர குணம் கிரகிக்கக் கூடாதே -ஆகவே மனஸ் அபவ்திகம்
நாக்கை போலே இருக்க கண் இல்லை -இது போன்று ஐந்தும் இல்லை -மனம் -ஐந்தையும் கிரகிப்பதால் –
சரீரம் போலே பாஞ்ச பவ்திகம்-என்னலாமே-எண்ணில் —
காது -ஆகாசம் மட்டும் இல்லை பஞ்சீ கரணம் -மற்ற நான்கும் தொட்டு கொண்டு இருக்குமே
மனம் அன்ன மயம் சோம்ய–வேதம் -உபாதானமாக கொண்டது என்று சொல்ல வில்லை -தத் ஆதீன வ்ருத்தி -என்றவாறு –
அன்னத்தால் போஷிக்கப்பட்டுள்ளது என்றவாறு –
ஆபோ மயப்பிராணன் -பிராணன் தண்ணீர் மயம் சொல்வது போஷிப்பதால் -அதனால் ஆக்கப்பட்டது இல்லை
மோக்ஷ தசையில் மனஸ் உண்டு
மனசான் யேதான் காமான் காம ரூபியான் சஞ்சரன் –சாந்தோக்யம் –அபவர்க்க தசையில் மன அநுவிருத்தி –
அப்ராக்ருத மண்டலம் அன்றோ -ஆகவே பிராகிருதம் இல்லை –
மனமே திவ்யமான கண் -சுருதி -அது போலே இங்கும் என்பான்
பரமாத்மாவுக்கு மனசால் சங்கல்பித்தது என்கிறதே எனவே பவ்திகமாக இருக்க முடியாதே என்பான்
நீ சொன்னதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன் –
த்ரவ்யாந்தரம் கல்பிக்காமல் -பவ்திகமே
புத்தியே மனஸ் -நல்ல புத்தி உடையவன் மனசே
புத்தி -ஞானம் -மனஸ் கரணம் -என்று வாதிப்பான்
நிலை வேறுபாடு -கலக்கமான மனஸ் -தெளிந்த மனஸ் -சந்தோஷிக்கும் மனஸ் சொல்கிறோம் –
புத்தி அகங்காரத்தை சொல்கிறது என்பான் -பூர்வ பஷி
உச்யதே –ஆத்மா மனமா இல்லையா என்று தானே பேச வந்தோம் –
புத்தியே மனமாக இருந்தாலும் -சேதனத்வம் ஞாத்ருத்வம் இல்லையே -புத்தி என்றாலும் ஞாத்ருத்வம் வராதே –
ஆத்மா மனஸ் இல்லை என்று நிகமித்தார்

அடுத்து -பிராணன் -தான் ஆத்மா என்பான் -ஜீவன் பிராணன் கூடிய சரீரத்தை சொல்கிறோம்
உத்க்ரந்தி -லோகாந்த்ர கமனம் -நகர ஸ்பர்சம் வேணுமே புது சட்டம் -வாயுவுக்கு ஸ்பர்சம் உண்டே –
ஆத்மா கிலாபத்தை சுருதி சொல்லுமே –
பிராணன் உடன் இருந்தால் தானே ஜீவதி-என்றும் -இல்லா விட்டால் ஆத்மா இல்லை என்றும் சொல்கிறோமே –
இது சரி இல்லை
வாயுவான படியால் பொருந்தாது -சைதன்யம் இல்லையே வாயுவுக்கு -வெளியில் உள்ள வாயு போலவே உள்ளே இருக்கும் பிராணனும்
நிர் வியாபாரம் -தூங்கும் பொழுதும் – ஆத்மா தூங்கும் பொழுதும் பிராணன் வேலை பார்த்து -வ்ருத்தி உண்டே
உண்டது ஜெரிப்பதும் பிராணன் -சப்த தாதுக்கள் -ரத்தம் இத்யாதி -இதனாலே -வைவரானாக்னி ஜடாராக்கினி —
நாலு வித அன்னம் தளிகை பண்ணுகிறேன் – முழுங்குவது போன்றவை -பிராணாயாமம் முக்கியம் –
வாதம் பித்தம் கபம் மூன்றும் சமமாக ஆக்குவதே ஆயுர்வேத வைத்தியம்
உண்டதும் பருகினதும் பரிமாணம் –பிராணன் வேலை செய்வதால் –
சுவாசம் -வெளி மூச்சு நடப்பது ப்ரத்யக்ஷம் அன்றோ தூங்கும் பொழுதும்
கோஷ்ட்ய மாருதம் -பிராணன் -அபான சமாயுக்த –
தண்ணீராலே நன்றாக எறியும் வாயு வயிற்றுக்குள்ளே –
கடலுள் பாடவாகினி உண்டே -அதே போலே –
பஞ்ச வ்ருத்தி பிராணன் -வேலைக்கு தக்க பெயர் -ஒரே வாயு -கண்டம் முகம் மூக்கு -உள்ளே சென்று –
வெளியில் வந்து பூரகம் ரேசகம் கும்பகம் நிறுத்துவது –
தோலால் தொட்டுப்பார்க்கலாம் -ரேஸிகத்தை வெளியில் வரும் காற்றை தொடலாமே -கடத்தை போலே -ஆகையால் -ஆத்மா இல்லையே –
தேக ஆத்ம ஒன்றே நிரசன வாதமே இதுக்கும் உண்டே தனியாக நிரசிக்க வேண்டாமே
பிரயாணம் -ஸ்பர்சம் -சொன்னாயே -கதி ஆகதி-ஆத்மா அணு வாக இருக்கும் -ஸ்பர்சம் இல்லாமலும் இருக்கும்
பிரயத்தனம் -கர்ம-இவற்றால் தூண்டப்பட்ட -மனசை போலே உதக்ராந்தி-மனஸ் ஸூஷ்மம் இருந்தாலும்
ஸ்பர்சம் இல்லாமல் இருந்தாலும் மனசு செல்வதை பார்க்கிறோமே
ஸ்தூலமாக இருந்தால் தாள் கதி க்கு ஸ்பர்சம் வேண்டும் –
ஆத்மாவுடைய பரிமாணம் மேலே விரிவாக சொல்லுவேன் –
இதி பிராண ஆத்மா ஒன்றே வாத நிரசனம்

அடுத்து சம்பவித்தே ஞானம் -புத்த மதம் நிராசனம் -அயம் கட-உத்பத்தி விநாசத்துடன் கூடிய ஞானத்தை சொல்கிறான் –
தர்ம ஞானத்தை சொல்கிறான் -தர்மி ஞானத்தை இல்லை
பாட்டன் மீமாம்சகர் அனுமானித்தே ஞானம் இருப்பதை அறியலாம்
அஜடத்வாத்–ஸ்வயம் பிரகாசம் -தானே விளங்கும் –மற்று ஒன்றினால் பிரகாசம் ஜடம் –
விளக்கும் ஜடம் -ஞானத்தை பயன்படுத்தியே விளக்கு என்று அறிகிறோம் -தேஜஸ்ஸை சொல்லவில்லை –
வ்யவஹார ஹேதுவை பிரகாசம் என்கிறோம் இங்கு
ஆத்ம ஞானம் தானே பிரகாசிக்கும் -பரமாத்மா -ஸ்ரீ வைகுண்டம் ஞானம் இவையும் ஸ்வயம் பிரகாசம்
புத்தர் ஞானமே ஆத்மா அது க்ஷணிகம்
அத்வைதி ஞானமே ஆத்மா நித்யம்
ஆத்மா அஜாதம் ஸ்வயம் பிரகாசம் சுருதி சொல்லும் -சம்வித்தும் அப்படியே -ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஒன்றே
மடப்பள்ளி போலே புகை இருந்தால் நெருப்பு -அன்வயம்
ஆத்மா போலே வேறு அஜாதம் இருந்தால் தானே சொல்ல முடியும்
அன்வய வ்யாப்தி சொல்ல முடியாதே
எங்கு எங்கு நெருப்பு இல்லையோ அங்கு அங்கு புகை இல்லை
யத்ர யத்ர அநாத்மத்வம் தத்ர தத்ர ஜடத்வம்
யத்ர யத்ர அஜடத்வம் அங்கு அங்கு ஆத்மத்வம் -சொல்ல முடியாதே
இதுக்கு த்ருஷ்டாந்தம் -கடத்தைப் போலே-
ஞானம் ஸ்வயம் பிரகாசம் -அசித் ஸ்ரீ வைகுண்டம் போலே
ஜீவனும் பரமாத்மாவும் ஸ்வயம் பிரகாசமும் சித்தும் –
ஞானத்துக்கு அஜடத்வம் சத்தையாலே பிரகாசிக்கும் -பிரத்யக்ஷம் –
சம்வித் இருக்கும் பொழுது விளங்க வில்லை என்பது இல்லையே -சதி சம்வித் –

அதுக்கு -பட்டார் மீமாம்சகர் -ஆபேஷம் -அனுமானம் -ஞானமே அனுமானித்தே அறிவோம் என்போம் –
நீலக் குடத்தை பார்த்து –நீலம் என்றும் குடம் என்றும் விஷய மாத்திரம் -அநீதம் அதீத ரூபம் –
அறிகிறோம் ஞானம் என்று ஓன்று தனியாக இல்லையே
அனுமானித்தே ஞானம் என்று அறிகிறோம்
இது குடம் -குடம் அறியப்பட்டது -குடத்தில் ஒரு தன்மை அறியப்பட்டது தன்மை வைத்து அறிவு வந்ததாக அனுமானம் –
ஸ்வரூப சத்தையால் இல்லை -இந்திரியம் -அர்த்த சன்னிகர்ஷம் வந்தாலே கிட்டும்
கண் குடத்தை -பார்த்தது என்ற ஞானம் வரவில்லை —
ப்ரத்யக்ஷம் — இந்த்ரியமும் பொருளை தொடர்பு வந்ததும் ஞானம்
அனுமானத்தின் அப்படி இல்லை -எங்கு எங்கு புகை அங்கு நெருப்பு -ஞானமும் வேணும் த்ருஷ்டாந்தமும் வேணும்
இருந்தால் தானே நெருப்பை அனுமானிக்கலாம்
எங்கு எங்கு எல்லாம் அறியப்பட்ட தன்மை உள்ளதோ -என்று பார்த்த குடத்தில் தன்மை ஏறிட்டு –
அதனால் ஞானம் அனுமானித்து அறிகிறோம்
குடத்தில் அதிசயம் -இந்த அறியப்பட்ட தன்மை -ஞாததா – ஆகந்துக பிரகாசத்தால் தரிசனத்தால் -பிரத்யக்ஷம் –
சம்வித் ஆத்மா இல்லை -இவரும் நம்மைப்போல் –
இரண்டு பக்ஷமும் தப்பு –பிரத்யக்ஷத்தாலே -ஸ்தாபித்து -ஞானம் உடையவன் தான் ஆத்மா ஞானம் ஆத்மா இல்லை –
இது தர்ம ஞானத்தை பற்றி -தர்மியும் தர்மமும் வேறே வேறே தானே
நன்றாக பார்க்கிறவர் -ஞானத்தை தவிர்ந்து ஞதாதா பார்ப்பவர் யாரும் இல்லையே -அர்த்த தர்மம் -ஞதாதா
ரூபம் தான் பார்க்கிறோம் -ஞதாதா உடன் இருந்ததை யாரும் பிரத்யக்ஷமாக காண முடியாதே
ஞானத்தைக் கொண்டே சகல வியாபாரமும் பொருந்தும் ஞத்தாவை கற்பிக்க வேண்டாமே
இது குடம் -ஆத்மாவுக்கு ஞானம் -ஞாதா ஞானம் ஜேயம் மூன்றும்
வித்தி -விதித்திரு ஞாதா பிரதிபாத சூன்யம் -இது குடம் -என்பதில் ஞானமும் இல்லை ஞாதாவும் இல்லையே –
இது குடம் என்றாலே நான் குடம் இருப்பதை பார்க்கிறேன் என்பதே தான்
வேறே வேறே பிரயோகம்
இது குடம் எனக்கு தெரியுமா தெரியாதா தெரியவில்லை யாரும் சொல்ல மாட்டார்
தசரதன் ராமன் தந்தை -தசரதன் இடம் ஞாததா ஏற்பட்டு அறியவில்லை
கல்கி இது போலே -விஷய கிரஹணம் -அனுமானிக்க முடியாதே –
ஞானத்தால் வியவகாரம்- வாக்கால் பேசுவோம் -மாற்றி சொல்ல முடியாதே
என்னால் நினைக்கப்பட்டது வாக் வியாபாரம் -பூர்வகம் -ஞானம் -இருக்க வேண்டும் –
முன்பு வேடு பறி உத்சவம் பார்த்ததை-ஸ்ம்ருதி -அப்புறம் வாக்கால் சொல்லுகிறோம் –
அன்யோன்ய ஆஸ்ரம தப்பு வரும் -வெட்கம் இல்லாதவன் தான் நான் வியவஹாரம் செய்வதால் ஞானம் அனுமானிப்பான் –

பிரகட புத்தர் -அனைத்தும் சூன்யம் –
அத்வைதி மறைந்த புத்தர் –
ஞானம் அனுமானித்து அறிகிறோம் என்கிற மீமாம்சகர் பக்ஷம் –
இதில் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் வரும் என்பதை பார்த்தோம்
மீமாம்ச பக்ஷம் நிரசித்த பின்பு மாற்று இருவரையும் நிரசிக்க வேண்டும் ஞானமே ஆத்மா -ஞாதா ஜேயமும் பொய் என்பர் –
இது குடம் -விஷயம் மட்டும் -அறிவாளியை பற்றும் அறிவையும் பற்றியும் இல்லை
நான் குடத்தை அறிகிறேன் -மூன்றும் உண்டே
பேதம் பிராந்தி மயக்கம் -என்பர் –

புத்தன் சொன்ன ஹேதுவை அத்வைதி -முன் முன் க்ஷணிக ஞானம் —
தண்டம் -தண்டி -தண்டி பிள்ளை -க்ஷணிக விஞ்ஞானம் -ஒரு வினாடி ஞானம் அப்புறம் இருக்காது –
ஆத்மாவே ஞானம் என்றால் ஆத்மா வேறே வேறேயா -நேற்று மண்டபத்தை பார்த்த நான்
இன்று அங்கு இருந்து உண்கிறேன் –நேற்று மண்டபம் எல்லாம் பொய்
இத்தை அத்வைதி கண்டனம் –

ஸ்வயம் பிரகாசம் -ஞானம் -அஜடம்-வேறு ஒன்றின் உதவி வேண்டாம் -ஆத்மாவும் ஸ்வயம் பிரகாசம் –
எந்த வஸ்துவின் தொடர்பால் -அர்த்தாந்தரே வேறு பொருளில் வியாவஹாரமோ தர்மம் வேறுபாடு ஏற்பட்டால்
அது அந்த பொருளில் ஸ்வரூபமாகவே இருக்கும் –
வெள்ளைப்பசு -பார்க்க -கண்ணால் வெள்ளையை கிரகிக்க வெள்ளையே காரணம் -பசுவை கிரகிக்க வெள்ளை வேணும் –
வெண்மைக்கு -வேறு ஒன்றின் உதவி இல்லாமல் பிரகாசிப்பதால் ஸ்வயம் பிரகாசம் என்று சொல்லலாமே என்பர் –
அஸ்தி -சொல்ல சத்தா இருப்பே காரணம் -இது தான் வியவஹாரம்
சத்தா அஸ்தி இருப்பு இருக்கு -அந்த இருப்பு எப்படி சத்தத்தையே காரணம் -அது தான் ஸ்வரூபம்

பூமி இருக்கு -சொல்ல இருப்பு காரணம் -இருப்புக்கு அதுவே காரணம் -நிறத்தினால் -இத்தையே ரூபத்தினால் -என்பர் –
தொடர்பால் கண்ணால் பார்க்கிறோம்
குடம் பிரகாசிக்க -அறிவு வர -அதற்கு வேறு ஒன்றின் தேவை இல்லை –
ஆகவே அறிவு ஸ்வயம் பிரகாசம் -ஆகவே ஆத்மா என்பர்
ஞானம் இருந்து ஞாதா -தனியாக கல்பிக்காமல் –ஞானமே இல்லை என்றால் ஞானம் ஞாதா இரண்டையும் சொல்ல வேண்டாமே –
ப்ரத்யக்ஷ விரோதம் வரும் -நான் அறிகிறேன் சொல்லுகிறோம்-அறிவு வேறே நான் வேறே அன்றோ -ஞானத்துக்கு ஆஸ்ரயம் தானே ஆத்மா
சத்யம் -உண்மை -/ பிரத்யக்ஷம் -விகல்பம் உடன் உள்ள -ப்ரத்யக்ஷம் -நிர்விகல்பிக்க பிரத்யம் -இரண்டு வகை –
பேதத்துடன் பார்ப்பது பிரமத்துக்கு மூலம் –
வஸ்து மாத்திரம் -வஸ்து இருந்தால் தான் கண்ணாடி நீலம் இத்யாதி உண்டே -ஏற்றி சொல்கிறோம்
வஸ்துவை கிரஹித்து மற்றவற்றை அதிலே ஏத்தி –
நான் அறிகிறேன் சொல்வதே பொய் -ச விகல்பிக்க ரத்யக்ஷம்
நான் அறிவு என்பதே நிர்விகல்பிக்க ப்ரத்யக்ஷம் என்பன்

ஞாதாவே ஞானம் -ஒன்றாகவே கிரகிக்கப்படும் -ஸஹ-/ ஒன்றை விட்டுப் பிரியாமல் இருக்கும் -ஸஹ உபலம்பம் –
ஞாதா சொல்லும் பொழுது ஞானத்துடன் தானே –
குடம் அறிவு இருந்தால் தான் குடம் அறிபவர் சொல்ல முடியும் -எனவே ஒன்றே தான் என்பன் -ஸஹ உபலம்ப நியாயம்
அப்ரகாச ஆத்மா என்று ஓன்று இல்லையே -அடுத்த காரணம் –பேத ஞானத்தை பிரமாணமாக கொண்டாலும் –
தெரிய வருவதால் ஞானமே தானே –
இரண்டாலும் ஞானமே ஆத்மா என்பான் –
ஜடமாக உள்ள அஹம் அர்த்தம் சித்திக்காதே -ஸம்வித்தை விட வேறு பட்ட ஆத்மாவை அறியவே முடியாதே

க்ராஹ விகல்பம் இல்லை
க்ராஹ்ய விகல்பம் -விஷயத்தை தனியாக சொல்லாமல் -கட ஞானம் -ஞானத்துடன் சேர்ந்தே விஷயம்
பிரகாச யோகமே ஞானம் –
வாசனையால் -புத்த வாதம் -முன் முன் தப்பாக அறிந்த அறிவு –
சமானந்தர ஞானம் முன் அடுத்து மாறி மாறி வருமே -தண்டம் -தண்டி இத்யாதி –
பொய் நின்ற ஞானம் -சதத பரிணாமம் ஆழ்வார்-விகாரத்தைப் பற்றி -இவனோ க்ஷணிகம் –
அநாதி அவித்யாதி வசப்பட்டு பேதம் -அத்வைதி பக்ஷம்
அந்த அவித்யாவும் பொய்யான -என்பர் அத்வைதி -வேறே ஒன்றையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

பிரமத்துடன் பார்ப்பார்வர்கள் தான் க்ராஹ்ய க்ராஹக ஞான வாசி அறிவார்கள்
மூன்றிலும் வேறுபாடு இல்லை -தோற்றமே –
ஜகத் ஜநநீ-அவித்யை -அதனாலே தோற்றும் -சுத்தமான ஞானம் சின் மாத்திரமே ப்ரஹ்மம் -பிரபஞ்சம் மித்யை –
சுத்தம் நித்யம் பரமார்த்தம் -பிரபஞ்சத்துக்கு உபாதானமாக சொன்னால் சம்சாரத்தில் இருந்து மோக்ஷம் எப்படி –
ஒரே ஆத்மா தானே அவர்கள் பக்ஷம் -மாயா ஏவ ஜநநீ -என்பர்
பிரகட பிரசன்ன புத்தர்கள் இருவர் வாதங்கள் இவை

அத்வைதி -மற்ற பிரகட புத்த வாத கண்டனம் அடுத்து -க்ஷணிகம் -பிரதி விஷயம் வேறே வேறே ஞானம் –
படம் கடம் -முன் பார்த்தவர் இன்று பார்க்கிறவர் எப்படி வரும் -அவரே இவர் -அதுவே இது சொல்ல முடியாதே

அதே நான் அதே பொருளை இன்று வேறு ஒரு நாளில் பார்க்கிறேன் -பொருந்தாதே என்னில் –
நிராலம்பன –ஞானத்துக்கு ஆலம்பனம் விஷயமே இல்லை – நேற்று நன்றான பசுவைப் பார்த்தேன் –
இன்று சோர்ந்த பசுவைப் பார்க்கிறேன்
நேற்று ஞானத்துக்கு விஷயம் இல்லை
நேற்று இன்று கிடையாது
ஞானம் மட்டுமே -மற்ற அனைத்தும் மித்யா
கற்பனையே என்பான்

ப்ரத்யக்ஷம் விரோதம் வரும் -நிராலம்பனம்-எல்லா ஞானமும் விஷயம் அற்றவை என்றால் –
இந்த வார்த்தை யாலே வரும் ஞானத்துக்கு விஷயம் உண்டா இல்லையா
கேள்வியால் ஸ்ரீ ஆளவந்தார் நிரசனம் எளிதாக செய்தார்
பூர்வ மீமாம்சை –1-1- உத்தர மீமாம்சை -2-2-
தர்க்க பாதத்திலும் நியாய தத்வம் நாத முனிகள் இவற்றை காட்டி உள்ளார் -அங்கு கண்டு கொள்க

க்ஷணிக ஞானமே ஆத்மா -பிரகட புத்தன்
அநித்யமான ஞானம் உடையவன் ஆத்மா -இரண்டாம் பக்ஷம் -அனுபவம் ஸ்மரணம் இருப்பதால் –
நித்தியமான ஞானமே ஆத்மா -அத்வைதி
தர்ம பூத ஞானம் அழியும் அநித்தியம் -ஞானம் வேறே ஆத்மா வேறே -சித்தாந்தம்
ஞான சந்தானம் -வினாடிக்கு வினாடி ஏற்படும் ஞான புள்ளி -பல புள்ளிகள் -வரிசையே ஆத்மா –
தொடர் சங்கிலி ஞானமே ஆத்மா -ஞானம் உடையவர் இல்லை -இது புத்தவாதம் –
பிரவாகமாக நித்யம் -அதனால் ஸ்மரணம்-என்பன்–தீப த்ருஷ்டாந்தம்
இப்படி சாதிப்பாய் ஆகில் -அது முடியாது -ஏன் என்றால் – தீபம் -பார்ப்பவன் ஒருவன் -ஒன்றாக தெரிவது சாத்ருசம்-அதுவே இது –
இங்கு பார்க்கிற ஆத்மாவே மாறினால் எப்படி -போன நிமிஷ ஞானம் வேறே ஆத்மா வேறே உனது பக்ஷம் படி –
க்ஷண விஞ்ஞானம் -சந்தானம் -சந்தானி புள்ளி -கோக்க வேண்டும் -அவயவம் சமுதாயம் –இரண்டா ஒன்றா -கேள்வி –
சந்தானி சந்தானம் -ஞானம் ஞானத்து ஆஸ்ரயம் இரண்டு வருமே -ஞானமே ஆத்மா பக்ஷம் பழிக்காதே
ஒன்றானால் -ஸ்மரணம் வராதே –
நிலையாக நின்றால் தானே நினைக்க முடியும் -அனுசந்தாயி நிலைக்கவராக இருக்க வேண்டுமே –
அனுபவிதா-அனுசந்தாதா -வேறே வேறே வ்யக்தி -உன் மதத்தில் –தெரியவே வாய்ப்பு இல்லை –
சாத்ருசம் வந்தால் தானே பிரமம் வரும் -வந்து போகும் சந்தான ஆஸ்ரயம் -ஞான தொடர்ச்சி இருப்பிடம்
என்றால் ஞானம் வேறே ஆத்மா வேறே -என்றதாகுமே -க்ஷணிக வாத நிரசனம்

அடுத்து -ஞானம் நித்யம் -அத்வைதி -அதுவே ஆத்மா -பரமாத்மா -ஞானம் -ப்ராக் அபாவம் –
முன்னால் இருக்கும் நிலை இல்லாதபடியால் –
ப்ரத்வம்சா அபாவம் -இருந்தது இப்பொழுது இல்லை -பானை துவம்சம்
அத்யந்த அபாயம் -ஆகாச தாமரை -முயல் கொம்பு போல்வன
ஞானம் அநித்தியம் என்பது சித்திக்காது -தானே பிரகாசிக்கிறபடியால் -தானே தோன்றுகிறபடியால்
ஞானத்துக்கு ப்ராபக பாவம் இல்லை -இன்மை பாவம் -தன்னால பிறராலோ கிரகிக்க முடியாதே –
இன்மை கிரகிக்க இன்மை இருக்க வேண்டுமே -இருப்பதால் இன்மை அபாயம் இல்லையே -க்ராஹ்யம் இல்லை ஆகுமே
நான் இல்லாத போது கிரகிக்கலாமா என்றால் யார் கிரகிப்பார் -க்ராஹகம் இல்லை –
இன்னும் ஒருவர் கிரகிக்கிறார் என்றால் ஜடமாகுமே -தனது அபாவம் வேறு ஒருவரால் கிரகிக்க முடியாதே-
இன்னொருவர் ஞானம் நமது பாஷையில் -அத்வைதி இன்னும் ஒரு ஞானத்துக்கு விஷயம் என்பார் –

ப்ராபக பாவம் இல்லை உத்பத்தி இல்லை ஆகவே நித்யம்
மேலே -உத்பத்தி இல்லை என்றாலே மற்ற ஐந்து விகாரங்களை இல்லையே –
ஜென்மம் இல்லா விட்டால் அஸ்தி பரிணமதே இத்யாதிகளும் வராவே –
நாநாத்வமும் தள்ளப்பட்டது -கட ஞானம் வெள்ளை ஞானம் —
யத்ர அஸ்தித்வம் முதலான பாவ விகாரங்கள் உண்டோ அங்கு தானே உத்பத்தி உண்டு
எங்கு உத்பத்தி இல்லையோ அங்கு இவை இல்லையே
பலவாக உள்ள தன்மை இருந்தால் உத்பத்தி இருக்க வேண்டுமே

ஞானத்து விஷயம் ஆனால் -ரூபம் நிறம் -அது ஞானத்தின் தர்மம் ஆகாதே –
யத்ர யத்ர ஞான விஷயத்வம் -தத்ர தத்ர சமவித்து தர்மம் ஆகாதே
அதே போலே -விகாரம் -பேதங்கள் -இவை ஞானத்துக்கு விஷயம் தானே -ஞானத்துக்கு தர்மம் ஆகாதே –
ஞானத்துக்கு பேதமோ விகாரமோ இல்லை -சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் இல்லை
சஜாதீயம் -வேறே வேறே மரங்கள் -ஒரே ஜாதி
விஜாதீயம் -மலை -மரம் –
ஸூ கத பேதம் -மரத்தில் உள்ள கிளை இலை பழம்
மூன்று பேதங்களும் உண்டு சம்ப்ரதாயம்
ஞானம் உடைமை -ஆத்மா பரமாத்மா -பேதம் உண்டே
விஜாதீயம் -ப்ரக்ருதி -பரமாத்மா
ஸூகத -திருமேனியும் குணங்களும் உண்டே
நலம் உடையவன் –ஸூகத
அயர்வரும் அமரர்கள் அதிபதி -சஜாதீய
மயர்வற மதி நலம் -விஜாதீய –
மூன்றுமே முதலிலே காட்டி அருளினார்
அத்வைதி -மூன்று பேதங்களும் இல்லை -தவிர்ந்து வேறே இல்லை நிர்விசேஷ சின் மாத்திரம் ப்ரஹ்மம்
உத்பத்திமத்வம் நிவ்ருத்தி யானால் வியாப்தமான நாநாத்வமும் சித்திக்கும்
விபாகம் இருந்தால் பிறப்பிலியாக இருக்க முடியாதே
யாருமே கிரகிக்கா விடில் வஸ்துவே இல்லையாகும்

ஞானம் உண்டு -ஞானத்துக்கு தர்மம் இல்லை -என்பர் அத்வைதி –
நிகில பேத விகல்ப–நீர் தர்ம -பிரகாச மாத்ரமாய் இருப்பதாய் -பிரகாசத்தை உடையது இல்லை –
தத்தாக இருக்கும் தத்வமாக இருக்காது
கூடஸ்த-விகாரம் அற்ற – நித்தியமான – சம்வித் ஞானமே ஆத்மா -அதுவே பரமாத்மா -அத்வைதி –
வேதாந்தத்தின் கருத்து என்கிறார் -வேதாந்த சப்தம் சொல்லாது -தாத்பர்யம் என்பர் –
ஞானாந்த கோசாரம் -அறியப்படுவதாக இருக்க முடியாதே -வேறு ஒரு ஞானத்துக்கு விஷயம் ஆகாதே –
வேதாந்தம் நினைக்கும் பேதம் -புரிந்தால் அத்வைதி ஞானம் -ப்ரஹ்மம் சத்யம் -ஜகத் மித்யா -என்பர்

எந்த சம்பவித்தானது -உண்டாகாதோ -அஜத்வம் -வேறு ஒரு ஞானத்தால் அறியப்படாத அமய -அநந்தம் -அழியாததாய் -விநாச ரஹித்யம் –

சம்வித் -அஜா-பிறக்காதது அமேயர் வேறு ஒன்றால் அறிய முடியாதது -ஆத்மா இதி -வேதாந்த வாக்ய தாத்பர்யம் இதுவே –
ஞானம் மாத்திரம் -நிர் விசேஷம் –
வேறு ஒன்றைக் கல்பிக்க வேண்டாம் –
ஞானம் -கொண்டே பிரமாணம் அறிகிறோம் -கடம் படம் பிரமேயம் -லௌகிகத்தில்-
இந்திரிய ஜன்ய ஞானம் பலம் -கட ஞானம் பலம் -பராக் அர்த்தம் –
வேதாந்தத்தில் இதுவே-ஞானமே – ப்ரமேயம் என்பர் – வேதாந்தம் பிரமாணம் –
அமேயா-என்பது -கருத்தால் -சப்தம் சொன்னதாக சொன்னால் பிரமாணம் ப்ரமேயம் இரண்டையும் ஒத்துக் கொள்ள வேண்டுமே –
நிர்விசேஷ -நித்ய விஞ்ஞானமே ஆத்மா -அத்வைதிகள் -புத்தன் க்ஷணிக விஞ்ஞானமே ஆத்மா என்பான் –

ஞாதா இல்லை ஜேயம் இல்லை ஞானம் மாத்திரமே – கடம் அஹம் பார்க்கிறேன் -சொல்ல மாட்டார்கள் -மூன்றையும் சொல்லாமல்
ஞானம் மாத்திரம் உண்மை -மற்ற இரண்டும் மீதியை -ஞானமே ஆத்மா -நிர்விசேஷ சீன மாத்திரமே ஞானம்
அஹம் -ஞானம் உடையவன்
அஹம் -அந்தக்கரண -ஞானத்துக்கு கோசாரம் -அவித்யையால் கடம் இத்யாதி பிரதிபலிக்கிறது –
அந்தக்கரணமும் கடம் இவை எல்லாம் மித்யை பொய்–அவித்யை பட்ட சிதறல் மறைந்து -அதுவே முக்தி -பலவாக தோற்றம் சம்சாரம் –
ப்ரத்யக்ஷத்துக்கு தேவையான இந்திரியம் -இவற்றுக்கு அதீனப்பட்டு மனஸ் -கண்ணுக்கு ஆட்பட்டு காண்கிறது உண்மை இல்லை –
பிரதிபலிப்பது போலே -இவை -அவித்யை காரணம் -மனம் -உபாதி -கண்ணாடி போலே -அனைத்தும் மித்யை

ஆத்மாவை அறிந்தவர் -அலௌகீகம் அவைதிக தர்சனம் -என்பர் உனது அத்வைதத்தை
சம்வித் -தர்மம் பிரசித்தம் -தர்மி இல்லையே –
எப்படி இருக்கும் -ஆச்ரயித்து இருக்கும் ஆத்மாவுக்கு -தானாகவே பிரகாசிக்கிப்பித்துக் கொண்டே இருக்கும் –
ஞான -அவனது -அனுபூதி பர்யாய சொற்கள் -கர்மா -படம் கடம்-பலத்தை நறுக்கினேன் -படத்தை பார்த்தேன்
இரண்டாம் வேற்றுமை உள்ளது கர்மா -முதல் வேற்றுமை கர்த்தா
தர்மம் வேறே தர்மி வேறே –
சர்வ பிராண -உயிர் உள்ள அனைவரும் இப்படியே சொல்வர் -சர்வ பூத ராசியும் -அனுபவம் இப்படியே இருக்கும் –
நான் இதை அறிகிறேன் -ஞானம் ஏற்படும் இருக்கும் அழியும் -நித்யம் இல்லை நீ சொன்னபடி
உத்பத்தி கண்ணுக்கு தெரியுமே -சுகம் துக்கம் வரும் போகும் அதே போலே ஞானமும் -ப்ரத்யக்ஷ சித்தம் –
தூங்கும் பொழுது ஞானம் இல்லை -பின்பு ஸ்மரிக்கிறோமே -அநித்தியம் வரும் போகும் -ஆத்மா நித்யம் -எப்படி இரண்டும் ஒன்றாகும்

மரணம் -நரக வேதனை -கர்ப்ப விசனம் -மூன்றாலும் மறக்கலாம் -பழைய ஜென்ம வாசனை இல்லையே –
யாவது அனுபூதி எல்லாம் ஸ்மரிக்க–சம்ஸ்காரம் -மனப்பதிவு -இந்த மூன்றாலும் விச்சேதம் -ஆகும் –
அத்வைதி தூங்கும் பொழுதும் ஞானம் உண்டு ஆனால் மறக்கிறோம் என்பான் -இது சரி இல்லை –
முன் சொன்ன மூன்றாலும் தான் மறக்கிறோம் -ஆகவே தூங்கும் பொழுது ஞானம் இல்லை -அனுபவம் இல்லை –

ஞானம் -விஷயம் -அந்தக்கரணம் தொடர்பு வந்தால் தான் சம்ஸ்காரம் ஏற்படும் –
தூங்கும் பொழுது விஷயமும் அந்தக்கரணமும் இல்லை அதனால் சம்ஸ்காரம் இல்லை –
ஞானம் இருந்தாலும் ஸ்மரிக்க முடியவில்லை என்பான் –
விஷயம் இல்லை -அந்தக்கரணம் நாசம் அதனால் நினைவு வரவில்லை என்பான்
இது பொருந்தாது –
ஞானம் இருந்தாலே பிரகாசமாக தானே இருக்கும் -ஸ்வயம் பிரகாசம் தானே
நீ சொல்வது சரி இல்லை -ஸ்வயம் பிரகாசம் வேறு ஒன்றை எதிர்பார்க்காதே –
மூன்று சேர்க்கை -தனி தனி ஸம்ஸ்காரத்தை ஏற்படுத்தும் -ஞானம் ஜேயம் ஞாதா –
கடம் அஹம் அறிகிறேன் த்ரிதயம் -பார்த்த பார்த்த அம்சம் தனித்தனியே சம்ஸ்காரம் -ஏற்படுத்து ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
அஹம் சொல்லுக்கு மனம் என்று சொல்லி அது இல்லை என்கிறாயே
நான் தூங்கும் பொழுது வைத்த மாத்திரை தூங்கி எழுந்த பின் இல்லை என்றால்
நான் -முன்பும் தூங்கும் பொழுதும் அப்புறமும் இருப்பதால் -நான் நித்யம் -இதுவே அஹம் அர்த்தம்

கட பட ஞானம் அநித்யமாகவே இருக்கட்டும் -வேறு ஒரு ஞானம் நித்யம் அதை ஆத்மா என்கிறேன் என்பான் –
நிர் விஷய நிராசரயமாய் -விஷயம் இல்லாமல் -கர்மா கர்த்தா இரண்டும் இல்லாமல் -சம்வித் -ஞானம் என்பதே இல்லையே –
ப்ரத்யக்ஷத்தில் இல்லை என்றால் அனுமானிக்கலாம் என்றால் -முடியாது –
சப்தார்த்தம்–பிதா என்றாலே புத்ரன் இருக்கும் சம்பந்தி எதிர்பார்க்கும்
ஞானம் சொன்னால் -கர்மா கர்த்தா தேடும் எத்தை பற்றி யாருடையது வருமே
இல்லாமல் பிரயோகம் இல்லையே –
ஞா தாது பிரயோகப்படுத்தினால் இரண்டும் கூடவே இருக்க வேண்டுமே –
சம்வித் ஞானம் பிரகாசம் அனுபூதி சப்தங்கள் சம்பந்தத்தை எதிர்பார்த்தே இருக்கும்
சதம்வந்தி சப்தம் தானே இது –

தர்மி ஞானம் -தர்ம ஞானம் -தானே விளங்கும் தனக்கு விளங்கும் -ஸ்வரூப ஞானம் -எல்லாத்தையும் விளக்கும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா வராது -கர்மா மட்டும் இருக்கலாம் -ஞானத்துக்கு விஷயம் உண்டு –
ஆஸ்ரயம் இல்லை -ஆனால் விஷயம் ஆத்மா -நான் நான் என்று ஆத்மா தானே விஷயம்
நான் சொல்லும் பொழுதே ஏகத்துவம் -நாங்கள் இல்லை நான் ஒருவன் தோன்றும் –
அடுத்து நான் எனக்கு அனுகூலமானவன் என்றும் தோன்றும் -வேண்டியவன்
அடுத்து நான் வெளியில் இல்லை உள்ளே -பாராக்த்வம் இல்லை -இப்படி மூன்றும் உண்டே

ஆஸ்ரயம் இல்லாமல் இருந்தாலும் விஷயம் இருக்குமே -இரண்டும் ஞானம் -ஒன்றுக்கு ஆஸ்ரயம் இல்லை -இரண்டா
கோ சப்தம் மாடு பூமி வாக்கு மூன்றையும் குறிக்கும் -வாக்கு சொல்லும்பொழுது நான்கு கால்கள் இருக்க வேண்டாமே
அதே போலே ஞானம் இரண்டு பிரயோகத்தில் இந்த இரண்டும்
தர்மி ஞானத்துக்கு கர்த்தா இல்லை கர்மா உண்டு
தர்ம ஞானத்துக்கு இரண்டும் உண்டு என்பதில் விருத்தம் இல்லையே -சம்பந்தி –அசம்பந்தி -இரண்டும் இந்த தர்ம தர்மி ஞானங்கள் –
ஞானம் நித்தியமாக இருந்தால் அதுக்கு சம்ஸ்காரம் ஏற்படுத்தி ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆக வேண்டுமே

நான் குடத்தை பார்த்தேன் -கர்த்தா நான் ஆத்மா -ச கர்ம -சேர்ந்தே ஞானம் இருக்கும் –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–

October 31, 2021

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

யதீந்திர மத தீபிகா :

ஸர்வம் வஸ்து ஜாதம் .
அவை ஜடம் + அஜடம் எனவாய்
பிரகிருதி, காலம் 2ம் ஜட வஸ்து.
நித்ய விபூதி, தர்மபூத ஞானம், ஜீவன், ஈஸ்வரன் இவை 4ம் அஜட வஸ்து ஆகும்.

இந்த அஜட வஸ்த்துக்கள் 4ல் முதல் இரண்டும், அதாவது நித்ய விபூதி, தர்மபூத ஞானம் 2ம் பிரத்யக் என்றும்,
ஜீவனும் ஈஸ்வரனும் பராக் என்றும்,

ஜடம், அஜடம், இரண்டும் திரவ்யத்திலும் ,
ஸத்வம், ராஜஸம், தாமஸம் ஆகிய முக்குணங்களும் அதிரவ்யங்களுமாய்
கீழ் கண்ட Chart மூலம் அறியலாம்.

வஸ்து பிரமாணம் (3) ; பிரத்யக்ஷம் + அனுமானம் + சப்தம்.
பிரமேயம் (7)
|
அதிரவியம் -; ஸத்வம் + ஸப்த + ஸம்யோகம்
| ரஜஸ் ஸ்பர்ச சக்தி
| தமஸ் ரூப
| ரஸ
| கந்தம்
திரவ்யம்
|
அஜடம் + ஜடம் ; பிரகிருதி (24) + காலம் (3)
|
பிரத்யக் + பராக் -; நித்ய விபூதி + தர்ம பூத க்ஞானம்
| தர்மி பூத க்ஞானம்
|
ஜீவன் + ஈஸ்வரன் ; பர +
| வியூக (4) +
| விபவ ; ஆவேசம் + அம்சம் + பூர்ணாவதாரம் | அந்தர்யாமி +
| அர்சை (106 +ஆழ்-ஆசா-அபிமான-அந்திம
| ஸ்தலங்கள்)
நித்யன்
முக்தன்
பத்தன்
|
புபுக்ஷு -; அர்த்தகாம பரன் + தர்ம பரன்
| |
| தேவதாந்த்ர பரன் + பகவத் பரன்
முமுக்ஷு
|
பரம மோக்ஷர்த்தி + கைவல்யார்த்தி
|
பிரபன்னன் + பக்தன்
|
பரமைகாந்தி + ஏகாந்தி
|
ஆர்த்தன் + திருப்தன்

—————–

ஜட வஸ்துவில் ஒன்றான பிரக்ருதி 23 தத்வங்களாய் பார்க்கப் படுகின்றன. அவை:
மூல பிரகிருதி. மஹான், (சாத்விக + ராஜச + தாமச ) அஹங்காரம் – 3
ஆகாசம், வாயு, அக்நி , ஜலம், பிருதிவி ஆகிற – 5
ஞான இந்திரியம் – சப்த, ஸ்பர்ச, ரூப ரச கந்தம் – 5
கர்மேந்திரியம் – காது , தோல், கண், நாக்கு, மூக்கு – 5
பஞ்ச தன்மாத்ரைகள் . சக்ஷுர், கிரண, ஷோத்ரிய, பாயு, உபஸ்தங்கள் – 5
இவற்றுக்குமேல் மனசு 24 வது தத்வம் . ஆத்மா 25. பரமாத்மா 26 வது தத்வம் என்றும் அறியவும்.

————–

பிரத்யக் + பராக்
என வஸ்துக்கள் ஐந்திரியமாகவும்; அதீந்த்ரிய மாகவும் காணக் கிடைக்கின்றன.

பிரமா ; உள்ளதை உள்ளபடி அறிகை பிரமா .
பிரமாணம்; பிரமா கரணத்வம் பிரமாணம். அதிசயித்த ஞானத்தை கால விளம்பம் இன்றி சாதித்துக் கொடுப்பது பிரமாணம்.

பிரமா -; ஞானம் ; லக்ஷியம்.
பிரமாணம் -; கருவி ; லக்ஷணம்.
பிரமேயம் ; பிரத்யக்ஷ, அனுமான, ஸப்த பிரமாணங்களால் அறியப் படுமவை பிரமேயம்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டு நேராக உள்ளதை உள்ளபடி அறிய ஹேதுவாக இருப்பது பிரத்யக்ஷம்.

ஸவிகல்ப ஸாக்ஷத்காரம் ; இரண்டு, அதற்கு மேற்படவும் குணங்களை கிரஹிப்பது .
நிர்விகல்ப ஸாக்ஷத்காரம் ; பிரதம பிண்ட கிரஹணம் – விசேஷணங்களை சமூகமாக முதல் முறையாக அறிதல்.
சம்யோகம் -; இந்திரிய திரவ்ய சம்பந்தம் ஸம்யோகம்
சம்யுக்த சம்யோகம் -; திரவிய ஆஸ்ரய குணத்தை அறிகை .உ.ம். வர்ண கலாபமான மண் குடத்தின் வர்ணம் இன்னது என்று அறிகை.

நம்முடைய ஞானம் இந்திரிய ஸம்யோகத்தால் உண்டாவது -; அர்வாசீனம்.
ரிஷிகளுடைய ஞானம் யோக ஸம்யோகத்தால் உண்டாவது. -; அநர்வாசீனம் – ஸ்வயம் சித்தம்.
ஆழ்வார்களுடைய ஞானம் பகவத் அனுக்கிரஹ ஸம்யோகத்தால் உண்டாவது. – மயர்வற மதி நலமான பகவத் பிரசாதம்..

ஸம்ஸ்காரம் -; பிரத்யக்ஷத்தால் ஏற்படும் ஞானம்.
ஸ்மிருதி – பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார ஜன்ய ஞானம் ஸ்மிருதி.(நினவுப் பதிவு).
ஊகம் , சம்சயம், பிரதிபா, பிரமம் இவை அனைத்தும் பிரயக்ஷத்துள் அடக்கம்.
சம்ஸயம் -; இதுவா, அதுவா என்பது – ஸ்தம்போவா புருஷோவா என்கிற சந்தேகம்.
விபர்யயம் -; அன்யதா ஞானம் + விபரீத ஞானம் வஸ்து, குணம் இவைகளை மாறாடி நினைகை .
பிரமம் ; பாம்பை பழுதென நினைப்பிடுகை பிரமம்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் – காணலாக ஜீவனை காணும்படியானவன் ஜீவன் என்னல்.
ஸக்கியாதி -; உண்மை அறிவு. இந்த உண்மை அறிவால் அறியப்படும் அனைத்தும் உண்மை / சத்யம்.
அ+கியாதி =; சுக்தியை வெள்ளி என்று பார்க்கும் போது பிரத்யக்ஷத்தில் கிளிஞ்சல் இருந்தாலும்
அதன் பளபளப்பினால் வெள்ளியின் நினைவு வருகிறது.
இங்கே பிரயக்ஷமும், ஸ்ம்ருதியும் இருக்கின்றன. சுக்திக்கும் வெள்ளிக்கும் உள்ள பேதத்தை உணர முடியாத
அறியாமையோடு கூடிய ஞானம் அக்யாதி /அன்யதா கியாதி என்கிறான் மீமாம்ஸகன்.

ஆத்மாவின் ஞானம் ஒன்று தான் எங்கும் இருப்பது. அதற்கு விஷயமாக வெளிப் பொருள் எதுவுமில்லை.
சுக்தியானாலும், வெள்ளியானாலும் பார்க்கப்பதுவது ஞானம் தான் என்கிறான் யோகாசாரன் (பௌத்தன்). இது ஆத்மகியாதி.

சுக்த்தியில் வெள்ளி உண்டாகி பிறகு போய் விடுகிறது.
இப்படி வெள்ளி என்கிற ஞானம் உண்டாகி மறைவது அநிர்வநீயக்யாதி என்கிறான் அத்வைதி..

விசேஷணம் -; சிறப்பம்சம் , ஒன்றிலிருந்து மற்றதை வியாரவர்த்திக்கை / கழித்து வேறுபடுத்தல் பிரயோஜனம்.
உ.ம். கடம் என்றால் படத்வ பின்னம்.

சங்க : பீத : என்பது மருள் (அக்ஞானம்=குணத்தை மாறாடி நினைத்தல் ) – பார்ப்பவன் குறையே ஒழிய பொருளில் குறை இல்லை..
முத்துச் சிப்பியை வெள்ளி என்று அறிதல் மயர்வு (அன்யதா ஞானம்=வஸ்துவை மாறாடி நினைத்தல் ) பயன் பாட்டின் குறை.
மாறாக , தெருள் = பிரமா – வியவஹார பூர்த்தியோடு கூடிய ஞானம்.

——–

வேதாந்தம் ; விசேஷ ஸாஸ்த்ரம் .

வியாகரணம்
தர்க்கம்
மீமாம்சை இவை -; சாமான்ய ஸாஸ்த்ரம் .

உத்திஷ்ட ; எழு – Arise
ஜாக்ரத ; விழித்துக் கொள் – Awake and
பிராப்பியவரான் நிபோதித -; முயற்சி செய் – Stop not till the Goal is reached.
என்று ஞான ஸந்தர்சன கார்யம் விவேகம்.
ஐந்த்ரியத்தை பிரத்யக்ஷ த்தாலும், அனுமானத்தாலும் சாதிக்கலாம்.
அதீந்திரியமான பகவத் தத்வத்தை சப்த பிரமாணத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
பிரத்யக்ஷ அனுமானங்கள் ஐந்திரிக சாதன மாகையாலே.

———————————-

இது இப்படி, இது ஆனபடியாலே .
இது இப்படி இல்லை; இது இல்லாத படியாலே .
என்று யூகிப்பது அனுமானம்.

அனுமிதி -; பிரமிதி -; ஞானம் .
அனுமானம் -; கருவி (பிரமாணம்). ஆக அனுமிதிக்கு கரணம் அனுமானம். அப்படிப்பட்ட அனுமானம் பலிக்க :
ஹேது வியாப்தியால் இருக்க வேண்டும்.
பக்ஷத்தில் ஹேது தர்மம் இருக்க வேண்டும்.
ஸபக்ஷத்தில் கண்டிருக்க வேண்டும்.
ஹேது வியாவர்த்திக்கக் கூடாது.
ஹேது பிரத்யக்ஷத்தில் பாதிக்கப் பட கூடாது.
பிரதி பக்ஷம் இருக்கக் கூடாது.

வியாப்தி -; எங்கெல்லாம் புகை இருக்கிறதோ அங்கு நெருப்பு உண்டு என்று பொதுப்படுத்திக் கூறுவது வியாப்தி..
வியாபகம் -; ஆதிக்யம் உடையது. – அதிக இடத்தில் அதிக காலத்தில் இருக்கும்.
புகை இருக்குமிடம் எல்லாம் நெருப்பு உண்டு. ஆகையால் நெருப்பு வியாபகம். உ.ம். மடைப்பள்ளி. பூஜை அறை etc
வியாப்பியம் -; நியூனதையோடே கூடி இருக்கும். – குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் இருப்பது.
நெருப்பு இருக்கும் இடமெல்லாம் புகை இருப்பதில்லை. ஆகையால் புகை வியாபியம். உ.ம். அயப்பிண்டம்.
சாகசர்யம் -; இது இருந்தால் அது உண்டு . புகை (வியாப்பியம்) இருந்தால் நெருப்பு (வியாபகம்) உண்டு
என்கிற நியத சாகசர்யம் என்பது -; நியத சாமான்யாதிகரண்யம்

பர்வதோ வன்னிமான், தூமத்வாத்.

இதில்
பர்வதம் – பக்ஷம். வன்னிமான் – சாத்யம் . தூமத்வாத் – ஹேது .
சாத்தியம் எதிலே சாதிக்கப் படுகிறதோ அது பக்ஷம்.
நெருப்பு மலையில் சாதிக்கப் படுவதால், மலை = பக்ஷம்.
எதை சாதிக்கிறோமோ அது சாத்தியம் .
மலையில் நெருப்பை சாதிப்பதால், நெருப்பு = சாத்தியம்.
எதனால் (எந்த காரணத்தைக் கொண்டு) சாதிக்கிறோமோ, அது ஹேது = லிங்கம் = சாதனம்.
புகையைக் கொண்டு மலையில் நெருப்பை சாதிப்பதால், புகை = ஹேது .

சபக்ஷம் -; எங்கெல்லாம் புகை இருந்ததோ அங்கெல்லாம் நெருப்பு இருந்ததாகக் காண்கிறோம்.. உ.ம். மலை, அடுப்பு, ஊதுவத்தி etc .
விபக்ஷம் -; நெருப்பாகிற வியாபகம் சேராத இடம் உ.ம். குளம்.
லிங்க பராமர்சம் ; புகை என்கிற அடையாளம் (ஹேது ) மலை என்கிற பக்ஷத்தில் இருப்பதாக காண்பது.

ஈர விறகு என்றால் புகையும்

1. அன்வய வியாப்தி . 2. வியதிரேக வியாப்தி. 3. அன்வய வியதிரேகி 4. பாவ வியாப்தி. 5. அபாவ வியாப்தி என ஐந்து வகை.

அன்வய வியதிரேகி -; அந்வயம், வியதிரேகம் இரண்டிலும் சொல்லலாம்.
கேவல அன்வயி -; அன்வயத்தில் மட்டுமே சொல்லலாம். உ.ம். பிரம்மத்தை வார்த்தையால் சொல்லத் தகும், வஸ்த்துவாய் இருக்கையாலே..
இதுக்கு விபக்ஷம் சொல்ல முடியாதாகையால் இது கேவல அன்வயி யாகும், அவஸ்து என்ற ஒன்று இல்லையாதலால்.

அவியாபதி -; உ. ம். வெளிய பசு என்றால் வேறு நிற பசுக்கள் உண்டாகையால் ;
அதிவியாப்தி -; உ.ம். கொம்புள்ள பசு என்றால், கொம்புள்ள வேறு மிருகங்களும் உண்டாகையால்.
அசம்பவம் -; கூடாத அடையாளம் உ.ம். காணலா ஜீவனை காணும் படியான ஜீவன் என்னால்.

இனி உ.ம். பார்க்கலாம் :
ஜீவன் முக்குணத்தன், என்றால், நித்ய முக்தர்கள் பக்கல் அவியாப்தி
ஜீவன் ஞான குணகன் என்றால்,, பரமாத்மாவும் ஞான குணகன் ஆகையால் அதிவியாப்தி .
சக்ஷுர் விஷயம் ஜீவன் என்றால், கூடாத அடையாளம் ஆதலால் அசம்பவம்..

இதில் இன்னது இருக்கிற படியாலே இப்படி இருக்க வேண்டும், இதை போலே .
எங்கெல்லாம் புகை உண்டோ, அங்கு நெருப்பு இருக்கிறது, சமையல் அறை அடுப்பு போலே.
இந்த மலை புகை உடைத்தது,.
ஆகையாலே , இந்த மலை நெருப்பை உடைத்ததாய் இருக்கிறது,–என்பதையே
பர்வதோ வந்நிமான், தூமத்வாத் என அனுமானிக்கிறோம்.

ஆக அனுமானிக்க 5 அங்கங்கள் வேண்டும். :அவை
1-பக்ஷம் – மலை.
2-ஹேது – புகை.
3-சாத்யம் – நெருப்பு.
4-ஸபக்ஷம் – சமையலறை.
5-விபிக்ஷம் – குளம்.

————

உபமானம் – வியாப்திக்கு சம்பந்தப் பட்ட மற்றுமோர் இடம் – பூஜை அறை .
அன்வய வியாப்தி -; புகை இருக்கும் இடத்தல் நெருப்பு இருக்கும்
வியதிரேக வியாப்தி ; நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது.
இதில் புகை – ஹேது , நெருப்பு சாத்தியம். ஆக சாத்தியம் இல்லையேல் ஹேது இருக்காது.
அனுமானம் துஷ்ட மாகாத போது ஏற்படும் ஞானம் ஸாது .

அனுமான பிரக்ரியை -;

1. பிரதிக்ஞா – பக்ஷத்தில் ஸாத்யம் இருப்பதாக அறிவது.
2. ஸத் ஹேது – ஹேதுவை காண்பது.
3. உதாரணம் – எங்கெல்லாம் புகை இருக்குமோ, அங்கே நெருப்பு இருக்கும், மடைப் பள்ளி போலே .
4. உபமானம் – மடப் பள்ளியில் புகை-நெருப்பு சம்பந்தத்தை , மலையில் உள்ள புகையோடு ஒப்பிட்டு மலையில் நெருப்பு இருக்க வேண்டும் என யூகிப்பது.
5. நிகமனம் – ஆக, இம்மலை நெருப்போடு கூடியது (அன்வயம்)
அதவா இம்மலை நெருப்பின்மை யோடு கூடியது அல்ல (வியதிரேகம்) என முடிப்பது.
தூம சதுர்ச தூசி மண்டலம் ஹேதுவாபாச மாகக் கடவது.

நையாயிகன் – 1 -; 5 அவஸ்யா பேக்ஷிதம் .
மீமாம்சகன் – 1 -; 3 மட்டும்.
பௌத்தன் – 2ம் 4லும் .
விசிஷ்டாத்வைதி – அநியமம்

துஷ்ட அனுமானம் :

1. அசித்தம் -;
a . ஸ்வரூப அசித்தம் – ஜீவன் அநித்யன், கண்ணால் பார்க்கப் படும் குடத்தைப் போலே .
b .ஆஸ்ரய அசித்தம் – ஆகாசத் தாமரை போலே .
c . வியாப்தி அசித்தம் – எது எது உள்ளதோ அது அநித்தியம் என்பதில்,
உதாரணம் காட்டப் படவில்லை யாதலால், உதாரண ராஹித்யத்தால் அசித்தி .

2. விருத்தம் -; பிரகிருதி நித்யா, கிருதகிருத்தவாத் , காலவது ..
உலகம் அழிவில்லாதது, படைக்கப் பட்டதால், கால தத்வத்தைப் போலே .
படைக்கப்படுமவை யாவும் அழியக் கூடியவை ஆகையாலே , நித்யம் என்று சாதிப்பது விருத்த அனுமானம்.

3. அனைகாந்திகம் (வியபிசாரம்) -; ஹேதுவும், சாத்தியமும் சேருமிடம் ஏகாந்தம். உ.ம். புகை+நெருப்பு கூடிய மலை .
சேராத இடம் தோஷம் (அ ) வியபிசாரம்.உ.ம். புகை இல்லாத நெருப்பு பழுக்கக் காச்சின இரும்பு.

a . ஹேது – பக்ஷம், ஸபக்ஷம், விபக்ஷம் 3லும் இருந்தால், அது சாதாரண ஹேது.
உ.ம். ஸப்தம் அழிவற்றது, அறியப் படுவதால், ஆத்மாவைப் போலே .
”அழிவற்றது” என்கிற ஹேது , ஸப்தத்தில் (பக்ஷத்தில்) உள்ளது. ச பக்ஷமாகிற ஆத்மாவுக்குப் பொருந்தும் .
ஆனால் உதாரணத்துக்காக எடுத்துக் கொண்ட விபக்ஷமான கடத்துக்குப் பொருந்தாது,
கடம் அழியக் கூடியது ஆகையாலே . அனுமானமும் தோஷமாய் முடியும்.

b . ஹேது – பக்ஷத்தில் இருந்து, சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லாது போனால், அது அசாதாரண ஹேது .
உ.ம். பூமி அழிவற்றது, கந்தவது பிருதிவி. ”அழிவற்றது” என்கிற ஹேது பக்ஷத்தில் மட்டும் இருந்து,
மற்ற இரண்டில், சபக்ஷம், விபக்ஷம் இரண்டிலும் இல்லையாய்ப் போவது.

4. பிரகரண சமம் (ஸத் பிரதி பக்ஷம்) ;
உ. ம். பகவான் நித்யம், அநித்ய தர்மம் இல்லாத படியால்.
இதில் ஹேது ”நித்யம்”.
பகவான் அநித்தியம், நித்ய தர்மம் இல்லாதபடியால்.
இதில் வரும் ” அநித்தியம்” பூர்வ வாக்யத்துக்கு ஹேத்வந்தரம் எதிர்மறை ஹேத்வபாவமாகையால், ஏற்படும் அனுமானம் தோஷதுஷ்ட்டம்.

5. காலாத்யபாவம் -;
உ.ம். நெருப்பு உஷ்ணமில்லாதது, வஸ்துவாய் இருக்கிறபடியாலே , ஜலத்தைப் போலே .
பிரத்யக்ஷத்தில் நெருப்பு உஷ்ணமானது. ஆகையால், சாத்தியம் பக்ஷத்தில் இல்லாத போது அபாவம்.

—————

தர்க்கம் -;

a நிஸ்சய வாதம். – தர்க்க அனுகிருஹீத பிரமாண பூர்வக தத்வ அவதாரணம்.
பிரமாணங்களின் உதவி கொண்டு உண்மைப் பொருளை நிரூபித்தல் .
வாதி பிரதிவாதி பக்கல் சாராமல் , பக்ஷபாத மில்லாமல் செய்யப்படுமது.
b ஜல்பம் – ஜன்னி வந்தாப் போலே சொன்னதை விடாமல் மீண்டும் மீண்டும் பேசி வாதடுவது.
c விதண்டா – தன் பக்ஷ ஸ்தாபனத்தை விட்டு, எதிரி பக்ஷ தவற்றையே பேசுவது.
d சலம் – எதிரி பக்ஷம் நினைப்பிடாததை ஆரோபித்து மடக்கி பேசுவது..
e ஜாதி – ஸ்வ பக்ஷ விரோதமாய் நிக்ரஹத்தில் முடியும் வாதம் ஜாதிஹி.
f நிக்ரஹ ஸ்தானம் – பராஜாய ஸ்தானம் . தவறான உத்தரத்தால், தன் பக்ஷம் தோற்றுப்போ போவது.
இவை 6ம் அனுமானத்துக்குள்ளும் பிரத்யக்ஷயத்துக்குள் அந்தர்கதம் .

—————-

ஸப்த பிரமாணம் —

பிரத்யக்ஷம் அனுமானத்தால் பாதிக்கப் படலாம். அதே போல் அனுமானம் பிரத்யக்ஷத்தால் பாதிக்கப்படலாம்.
ஆனால் சப்த பிரமாணங்களில் ஒன்றான வேதம் ஸவ்த சித்தம்.
அதீந்ரியமான பிரம்மத்தை அறிய சப்த பிரமாணமாகிற வேதம் ஒன்றே வழி. அது கால ஆராய்ச்சிக்கு உட்படாதது. அநாதியானது.
ஒரு புருஷனால் சொல்லப் பட்டது அல்லதாய் அபௌருஷேயம். அபூர்வார்த்த பிரதிபாதனே ஸதி சத்ய வாதத்துவம் தெரியாத
புதிய அர்த்தங்களைத் தருவதோடு சத்யமான வற்றையே பேசும்.

பிரத்யக்ஷத்துள் ஒன்றான ஸ்ரோத்ர ஐந்திரிய கரண சப்தம் வார்த்தை அளவிலானது.
வேதமாகிய பிரமாணத்துக்கு கரணம் (கருவி) சப்தம் அது சப்த்தத் தால் குறிப்பிடப் படும் பொருள் வரையிலுமாக உணர்த்த வல்லது.

வேதம் ஆப்த வசனம் என்பது நையாயிக பக்ஷம். சத்ய வசனமாகிலும் ஆப்தன், புருஷனாலே சொல்லப்பட்டது என்றால்
அபௌருஷேயத்வம் சித்திக்காது.ஆகவே அநாப்பதனாலே சொல்லப் படாதது என்று
வியதிரேகத்திலே கொள்வோமேயானால், அதுவே சாதுவான பக்ஷம். இராமானுஜ சம்மதம் .

அநாப்தனாலே சொல்லப்படாத வாக்கியத்தாலே ஏற்படும் அர்த்த ஞானம் , சப்த பிரமாணம் எனப்படும்.

காரணத்வ, பாதகத்வங்கள் இதுக்கு இல்லை.. வேத பிரமாணத்துக்கு பகவானும் காரணமில்லை..
அவனும் முன்னிருந்தபடி புத்தி செய்து படைப்பு காலத்தில், பிரமனுக்கு உபதேசித்தானாகில் இதுக்கு காரணத்வ தோஷம் இல்லை.

”பசுவை அழைத்து வா .கட்டு” என்ற வாக்கியத்தின் படி இன்னது பசு என்கிற காரிய-காரணத்வ சம்பந்தத்தால்
ஏற்படும் அறிவு ப்ரஹ்மத்தின் விஷயத்தில் உதவாது. காரணம் ப்ரஹ்மம் சித்த வஸ்து ஒழிய காரிய வஸ்து அல்லவே.
ஆக சப்த வாக்கிய பிரமாணம் ப்ரஹ்மத்தை சொல்லாது என்பது பூர்வ பக்ஷம் .

இதுக்கு பிரதிபக்ஷம் என்ன வென்றால் – ஒரு தாய் தன் குழந்தைக்கு இன்னார் தந்தை என்று காட்டும் போது
வாயால் ”அப்பா” என்று சொல்லி ஜாடை செய்யும் போது குழந்தை புரிந்து கொள்கிறது.
இவ்விடத்தில் வருதல் , காட்டுதல் போல காரிய விவகாரம் இல்லை ஆகிலும் குழந்தைக்கு இன்னார் தான்
தந்தை என்கிற அறிவு சித்த வஸ்துவைக் காட்டி சப்த சூசனையால் சாதிக்கப் படுவதால்,
ப்ரஹ்மத்தின் விஷயத்திலும் காரியபரதையாகிற அபேக்ஷை இல்லை.

”ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதிதாஸ்யவ்ய: என்கிற உபாசன காரிய பரதை ப்ரஹ்மத்தின் விஷயத்திலும்
சொல்லலா மாகையாலே , ப்ரஹ்மம் சித்த வஸ்து வானாலும் சப்த பிரமாணம் கொண்டு அப்பியகம வாதம்,
அனப்பியகம வாதம் இரண்டாலும் – எதிராளி சொல்வதை ஏற்றுக் கொண்டோ அல்லது நிராகரித்தோ பிரஹ்மத்தை சாதிக்கலாம்.

பில்லி சூன்யம் சேன யாகாதி அபிச்சாரி கர்மங்கள் அடங்கிய வேத பாகம் பிராமணம் ஆகுமோ என்னில் ,
திருஷ்ட பலத்தைக் காட்டி, அதிருஷ்ட பலமாகிற மோக்ஷத்தில் மூட்டுகிற படியால் வேதம் முழுவதுமாக பிரமாணம் ஆகும்.
திரைகுண்யா விஷயா வேதா: என்பதால் தாமச பிரகிருதிக்கு உண்டான வேத பாகம் சாத்விகருக்கு
அன்வயமில்லை ஆனாலும், அவைகளின் பிராமாண்யதைக்கு குறை இல்லை.

பூர்வ பாகம் கர்ம மீமாம்ஸா – உத்தர பாகம் ப்ரஹ்ம மீமாம்ஸா
கர்ம பாகம் தேவதா ஆராதன விதிகளையும்
ப்ரஹ்ம பாகம் ஆராத்ய தேவதா பிரகாரமும் சொல்லும்.

மந்த்ர அனுஷ்டான விதி பாகம் கர்ம காண்டம். அதில் சொல்லப் பட்ட செயலில் தூண்டி அதில்
உத்தியோகிக்க வேண்டி போற்றிப் பேசும் கொண்டாட்டம் அர்த்த வாதம் – ஹிதைஷி வாக்கியம் விதி.எனப்படும்.

விதி வாக்கியங்கள் அபூர்வம், , பரசங்கியா , நியமம் என மூன்றாய் நித்ய, நைமித்யக, காம்ய கர்மங்கள் என பிரிந்து இருக்கும்.

விரீன் புரோக்ஷய என்கிற விதி வாக்கியம் அபூர்வ விதி. யாக திரவ்யமான நெல்லை ஹவிஸாக பயன்படுத்தும் முன்
புரோக்ஷிப்பாய் என்கிற இந்த விதி நூதனமாக சொல்லப் படுவதால் இது அபூர்வம்.

இரண்டு விதமான செயலில் ஒன்றை முதலில் செய் என்று ஆணை இடுவது ப்ரசங்கியா விதி.

பலவழிகளில் செய்யப்படுமதை ”குரும் அபிகமநாத்’
என்று ஞனத்தை சம்பாதிக்கிற விஷயத்தில் படித்து தெரிந்து கொள்வது , ஆசாரியனை அடைந்து தெரிந்து கொள்வது
என்கிற பல வழிகள் இருக்க, ”குருவை” அடைவாய் என்று உபதேசிப்பது நியமம்.

சந்தியாவந்தனாதி விதிகள் நித்ய விதி.
ஒரு காரணத்தைப் பற்ற வருகிற விதி நைமித்திகம். உ.ம்.கிரஹண தர்ப்பணம்.
ஜோதிஷ்ட்டேன காம்ய கார்ய அபிஸந்தி விதி காம்ய. விதியாகும்.

சந்தா – அனுஷ்டுபு (32 எழுத்து) , த்ரிஷ்டுப்பு (44 எழுத்து) என சந்தஸில் உள்ள எழுத்து, பாத கணக்கு பற்றியது.

கல்பம் – எழுத்து விதி சௌதா ஸ்மார்த்த விதிகளாகக் கடவது.

ஸிக்ஷஆ – ஸ்வரம் சம்பந்தப் பட்டது.

நிரூக்தம் – அபூர்வ அர்த்த வார்த்தைகள் சம்பந்தப் பட்டது.

ஜோதிஷம் – – கால நிர்ணய வானவியல் சாஸ்திரம் ஆகக் கடவது.

வியாகரணம் – இலக்கண சாஸ்திரம்.இவை 6ம் வேதாங்கங்கள் .

மனு, யாக்ஞய வல்கிய , போதாயன, ஆஸ்பலதாயர் இவை போல ஸ்மிருதிகளும் வேதாங்கம் ஆகும் .
பிரம்மா, கபிலர் இவர்கள் இயற்றிய யோக சாஸ்திரம், தள்ளத்தக்கது , அவை வேத விரோதமாம்போது.

ஸ்மிருதிகள் போலே இதிஹாச புராணங்களும் வேதத்துக்கு அவை உப பிராம்மணங்கள் ஆகும்.
ஸ்மிருதிகள் கர்ம பாகத்துக்கு அங்கமானால் , இதிஹாச புராணங்கள் உபநிஷத் பாகத்தின் அங்கமாகும்.

புராணங்கள் வகை 18. அவையுள் சாத்விக புராணங்கள் 6ம் , வேத அனுரோத ராஜஸ., தாமஸ புராண பாகங்களும் பிரமாணம்.
மற்ற பாகங்கள் தள்ளத்தக்கன. பாசுபத ஆகமமும் அப்படியே.

வைகானஸ சாஸ்திரம் போலே பாஞ்ச்ராத்ர ஆகமம் முழுவதும் பகவானாலே வேதத்ததை அனுசரித்து சொல்லப் பட்ட படியால் அதுவும் பிரமாணமே .

வைத்திய சாஸ்திரம் (ஆயுர்வேதம்) , சில்ப சாஸ்திரம் (Temple architecture ) , காந்தர்வம் (Musicology ),
பரதம் (நிருத்யம்), தத்வ, உபாய புருஷார்த்தம் சம்பந்தப் பட்ட பாகங்கள் ஆய கலைகள் 64லிலும் பிரமாணமே

(a)ஆக்காங்க்ஷ (b) யோக்கியதை (c) சந்நிதி ஆகிற 3ம் இருக்கிற லௌகிக கிரந்தங்களும் பிரமாணமாகும் .

சடகோபமுனி .சாதித்த திராவிட வேதம் 4ம் , அதற்கு அங்கமான ஏனைய ஆழ்வார்கள் பிரபந்தங் களும் பிராமண தரம் .
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லை என்பது ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி .

பகவத் ராமானுஜர் சாதித்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள், ஏனைய ஆச்சார்யர் களுடைய ஸ்ரீ ஸூக்திகள் அனைத்தும் பிராமண தமம்

மொத்தத்தில் உண்மை அறிவை போதிக்கும் எந்த வாக்கியமும் பிரமாணம் தான்.

அதில் வேத வாக்கியம் வைதிகம். லோக வியவகார வாக்கியம் லௌகீகம் .

முக்கிய விருத்தி – சிங்கம் என்ற சொல் மிருக ராஜனை குறிப்பது முக்கிய விருத்தி

அபிதா விருத்தி – யோகம் – ரூடி என இரண்டு வகை காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்பதே அவை. உ.ம். பாசகன் = .
பச + ஆக என்கிற சேர்க்கையால் (யோகம்) சமையல் காரன் என்ற பொருளில் வருவது.

பங்கஜம் – பங்க + ஜ என்று சேற்றில் எழ செந்தாமரையாக தாமரை மலரைக் குறிப்பது ரூடியர்த்தம் .
குமுத மலரும் ஆம்பலும் சேற்றிலே மலர்ந்தாலும் தாமரையை அது உணர்த்துவதாக அறிவது லோக வழக்கம் கொண்டு.

முக்கியார்த்தத்தை சொல்ல முடியாத போது அருகாமையான லக்ஷணையாலே குறிப்பது கௌணார்த்தம் .
இது தமிழில் ஆகு பெயர் எனப்படுவது. கங்காயாம் கோச : என்றால் கங்கைக் கரையிலுள்ள தான குடிசையை குறிக்கும் .
உலகம் என்றால் உலகத்திலுள்ள மக்களைக் குறிப்பது போலே.

புஷ்பம் என்றால் அது பழம், பறவை, என்பதான இதர பொருள்களில் இருந்து வேறுபடுகிறது.
நீலோத்பலம் என்றால் செந்தாமரையில் இருந்து வேறுபடுகிறது. ஆக உலகத்தில் எந்தப் பொருளும் ,
விசேஷண விசிஷ்டமாய் விசேஷ்யத்தைக் குறிக்கும் – நிர்விசேஷணமாய் எந்த வஸ்துவும் இருத்தல் ஆகாது என்று தேறுகிறது .

மேலும் வஸ்துக்களைக் குறிக்கும் எந்த சொல்லும் அது அந்த வஸ்துவைத் தாங்கும் ஆத்மா மூலமாக
அந்தராத்மா வான நாராயணன் வரை பர்யவசிக்கும் (சென்று குறிக்கும்) காரணம் ,
பிரம்மா, ருத்ரன்,இந்திரன், அக்நி ஆகிய சேதனர்கள் , பிரகிருதி, காலம், ஆகாசம், பிராணன் ஆகிய
அசேதன வஸ்து விசிஷ்டமான ப்ரஹ்மம் அவனாகையாலே.
இத்தால் , சர்வ சப்த வாச்யார்த்தம் நாராயணன் என்பது வேதாந்த விழுப் பொருள்.

பிரமேயம் – பிரகர்ஷேண மேயம் – நன்கு அறியப்படுவது பிரமேயம்.
பிரமா + இயம் = எது எப்படிப் பட்டது என்று அறிவது பிரமேயம்
எதைக் கொண்டு அறிகிறோமோ அது பிரமாணம் .

யார் அறிகிறாரோ அவர் பிரமாதா.

இவை

திரவ்யம் + அதிரவ்யம் என்று இரண்டாய் ,
அதில்
திரவ்யம் : உபாதான (அவஸ்தா விசேஷம்) பேதம் திரவ்யம் .
பிரக்ருதி (அ) லீலா விபூதி – சரீரம் தொடங்கி மூலப் ப்ரக்ருதியினின்றும் படைக்கப் பட்ட பிராக்ருதங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
கர்ம , சாமான்ய, விசேஷ, ஸமவாய அபாவங்கள் – ஆகிய நையாயிக பக்ஷ 5ம் – திரவ்யத்தோடே அடங்கும்.
மேல், கீழ், சுருங்கல்,விரித்தல் , சலித்தல் ஆகிய நிலை = அவஸ்தை கர்ம.

சலநாத்மகம் கர்மா என்று ஒன்றை 5ஆக விரித்துக் கூறுகை கௌரவம் என்கிற குற்றத்துக்கு உள்ளாகும்.
லாகவம் =சுருங்க உரைத்தல்; கௌரவம் =பரக்கப் பேசுதல் .
இந்த சலனமும் ஸம்யோகத்தோடே சேர்த்து படிக்கலாம்.
கடத்வ படத்வ ஜாதி விசேஷம் இதை அதிலிருந்து வேறு படுத்த போதுமானதாக இருக்க சாமான்யம் என்கிற ஒன்று அவசியம் இல்லை.
ஒன்றை நிரூபிக்க இன்னொன்றை புதிது புதிதாக கல்பித்தலாகிற அநவாஸ்தான தோஷம் ஸமவாயத்துக்கு உண்டு. ஆக அதுவும் விலக்கு.

இனி அபாவம் – பிராக் அபாவும், பிரத்வம்ஸா அபாவும், அன்யோன்யா அபாவம் ,
அத்யந்த அபாவமாவது முன்.பின்,ஒன்றினோடு இன்னொன்று ,
எப்போதுமான ”கடத்தில் மறொன்றின் இன்மை ” படத்தில் இன்னொன்றின் இன்மை”
ஸ்வதசித்தம் . தனித்து அபாவாத்தின் அவசியம் இல்லை.

குடம் இன்மை என்கிற நிலை குடத்தை செய்வதற்கு முன் ,(மண் என்கிற நிலை ), அந்த
குடம் உடைந்த பின் (ஓட்டு சில்லு அல்லது சூர்ணம் என்கிற நிலை)
குடத்தின் இடத்தில் இன்னொன்று இருக்கும் பக்ஷத்திலும் (அன்யோன்யா அபாவம்)
குடம் இருந்ததே இல்லை என்கிற அத்யந்த அபாமாகிற 4 ஆக நையாயிகன் பிரித்து திரவ்யங்கள் மொத்தம் 7 என்று கணக்கிடுகிறான்.
இந்த 4ம் பூதல ஸ்வபாவமாய், பிரத்யக்ஷத்தில் அடங்கும் என்பது வைதிகர் – ராமானுஜ பக்ஷம் .

இனி திரவ்யம் என்பது வெவ்வேறு (உபாதானங்களாய்) தசா விசேஷங்களாய், குண ஆஸ்ரயமாய் இருக்கும்.

மஞ்சள் குடம் என்றால் மஞ்சள் வர்ணத்தோடு கூடிய குடம் என்றும் மண்ணாய் இருந்த தன்மை போய்
கடமான தன்மையில் மஞ்சள் பூச்சு ஆசிரயணீயம்.

பிரக்ருதி , காலம் ஆகிற ஜட வஸ்து இரண்டும் ஸ்வயம் பிரகாசம் இல்லாதது.
நித்ய விபூதி , தர்மபூத ஞானம் , ஜீவன் , ஈஸ்வரன் ஆகிற அஜட வஸ்து 4லும் ஸ்வயம் பிரகாசிதம் .
இவை 6ம் திரவ்யம் – முக்குணங்கள் அதிரவ்யம் என்றும் அறியவும்.

– – – – — – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – –

பகவானுக்கு சரீரமாக இருக்கிற பிரக்ருதியை மூலப் பொருளாக கொண்டு
அத்வாரக + ஸத்வாரக ஸ்ருஷ்டி
சமஷ்டி + வியஷ்டி ஸ்ருஷ்டி
என்பவை சிருஷ்டிப் பிரகாரம்.

வைகாரிக + தைஜஸ + பூதாதி ; ஸாத்விக , ராஜஸ, தாமச அகங்காரங்களின் வேறு பெயர்கள்.

சாத்விகா அஹங்காரம் -; 11 இந்திரியங்கள்.
மனசு -; (நிச்சிதா) புத்தி -; அஹங்காரம் = மனசின் வேறு நிலைகள்.
ஞானேந்ரியம் + 5 தன்மாத்ரங்கள் (= சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தம் ) + பஞ்ச பூதம்.
கர்மேந்த்ரியம் ; வாக், பாணி, பாத, மல, ஜல உபஸ்தங்கள்.
ஞானேந்ரியம் சாத்விக அஹங்கார பரிணாமம்.
கர்மேந்த்ரியம் தாமஸ அஹங்கார பரிணாமம்.
சாத்விக தாமஸ அஹங்கார பரிணாம சககாரி ராஜச அகங்காரம்.

குறிப்பு: ஒருவன் மறித்து விட்டால் பயணமாகும் ஆத்மாவோடு , கர்ம வினைகளும், இந்திரிய ஸூக்ஷ்மங்களும் எடுத்து செல்லப்படும்.
கர்ம வினைகளுக்குச் சேர கிடைக்கிற சரீரத்துக்கு அதனதன் பயன்பாட்டுக்கு அவைகள் ஆட்படும்.
இது பிராகிருத பிரளயம் வரை அழிவதில்லை. பிரம்மா வுடைய காலம் முடிந்து, பிராகிருத பிரளயத்தில்,
பஞ்சபூதங்கள் மஹான்-பிரக்ருதியில் லயம் அடையும் போது மட்டுமே இந்த இந்திரிய ஸூக்ஷ்மங்கள் முடிவுக்கு வரும்.
அந்த நிலையிலும் தொலையாதது கர்ம பயன்.

ஒருவேளை அந்த ஆத்மாவுக்கு மோக்ஷம் கிட்டினால் , அப்ராக்ருத தேசமான அங்கு பிரகிருதி பிராக்ருதமான
இந்திரிய ஸூக்ஷ்மங்கள் புகுற வழியில்லை. விரஜைக்கு இப்பால் அவைகள் விடப்பட்டு , பிரளயத்தோடே நசியும்.
அல்லது அதன் குறைபாடு உள்ள ஆத்மாவுக்கு உபயோகி ஆகலாம்.

பாலை உறையவிட்டு தயிராக்கும் போது , பாலாகிற தன்மை போய் தயிர் என்றாவதாகிற கால அளவைக்கு
இடைப்பட்ட நிலை போன்றதானது , தாமஸ அஹங்காரம் பஞ்ச பூதங்களாக மாறுவதற்கு முன்னான (அவ்யவஹித தசை)
பஞ்சதன் மாத்ரங்களாகிற நிலை எனலாம்..

ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து உருவாவது ஆகாசம். அதாவது தாமஸ அஹங்காரம் ஆகாசமாக மாறுவதற்கு
இடைப்பட்ட நிலையிலுள்ள திரவ்யம் ஸப்த தன்மாத்ரம். அடுத்து வாயு, அக்நி , அப்பு, பிருதிவி இவர்களுக்குரிய
ஸ்பர்ச, ரூப ரஸ , கந்த தன்மாத்ராங்கள் படைக்கப் படுகின்றன.

ஆகாசத்துக்கு ஒலியின் குணம் மட்டும் உண்டு. அடுத்து வரும் வாயுவிற்கு ஸப்தம் , ஸ்பர்சம் இரண்டின் குணங்கள் உண்டு.
அக்கினியில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் முக்குணங்கள்; ; தண்ணீரில் ஸப்தம் , ஸ்பர்சம் ரூபம் ரசம் ஆகிய 4ம் ;
பூமியில் கந்தம் சேர 5ன் குணங்களும் உண்டு.

ஆகாசத்தை தொடு உணர்ச்சியால் உணர முடியாது. அதாவது தொட்டு உணர முடியாது.
சூரியன், சந்திரன், உலகம், உலகில் உள்ள எல்லாவிதமான பொருள்களுக்கும் இடம் கொடுப்பதாய் ஆகாசம் இருக்கும்.
ஆகாசம் உண்டாவதில்லை, நித்யம் என்கிற சிலர் வாதமும் தவறு,
ஏனென்றால் ஸப்த தன்மாத்திரத்தில் இருந்து ஆகாசம் உருவாகிறது என்று இங்கு படிக்கப்படுவதால்.

ஆகாசத்துக்கு ஒலி மட்டும் குணம் என்றால் அது நீல நிறமான அக்கினியின் குணத்தில் ஒன்றான
ரூபத்தைக் கூட்டிக் கொண்டு காண்பது ஏன்?
இதற்கு விடை ஒவ்வொன்றின் தன்மை மற்ற பூதங்களில் பஞ்சீகரண முறையில் பகிரப் படுவதுதான் காரணம்.

ஆகாசம்,காற்று நெருப்பு ஆபப் பிருத்வி கால திக்கு ஆத்மா மனசு என வைசேஷிகர்கள் திரவ்யங்களை 9ஆக பிரிக்கின்றனர் .
அது தேவை இல்லை என்பது வைதிக பக்ஷம். திஸ ஸ்ரோத்ராத் என்கிற விடத்தில் திசைகள் படைக்கப் படுகின்றன என்று கொள்ளாமல் ,
திசையில் உள்ள லோகங்கள் படைக்கப் படுகின்றன என்றே பொருள் கொள்ள வேண்டும். ஆக திக்கு என்ற பதார்த்தம் கிடையாது. .

ஆகாசம் படைக்கப் பட்ட பிறகு, ஸ்பர்ச தன்மாத்திரத்தில் இருந்து உருவாவது வாயு. இது தொடு உணர்ச்சியால் அறியப்படுவதாய் ,
உஷ்ணம் குளிர்த்தி ரூபம் இல்லாதது. காற்று சப்த, ஸ்பர்ச இந்த்ரியங்களுக்குப் புலப்படுவது.
பிராண (ஹ்ருதய ஸ்தானம்), அபான (பிருஷ்ட பாகம்), வியான (சரீரம் முழுவதும்), உதான (கண்டம்) ,
சமான (நாபி தேசத்தில் ) வர்த்திக்கும் பஞ்ச பிராண சக்தி மனிதன், விலங்கு போன்ற ஜங்கம (mobile life form)
ஜீவராசிகளில் பூர்ணமாய், ஸ்தாவர வர்கங்களில் ஸ்வல்பமாயும் உபகாரமாகிறது.

ரூப தன்மாதரத்தைக் கொண்டு உருவாவது தேஜஸ் . இது அக்நி சூரியன் போன்ற பதார்த்தங்களில் இருந்து ,
தொட்டால் சுடுவதுமாய், ஒளியோடே கூடியது. ஜாடராக்நி யாய் வைச்வாநரன் என்ற பெயரில் பிராணிகளின் வயிற்றில்
ஆகாரத்தை ஜெரிக்கச் செய்கிறது. வெளிச்ச ரூபத்தில் நம்முடைய சக்ஷுர் இந்த்ரியத்துக்கு பதார்த்தங்களைக் கண்டு
அறிய உதவவும் செய்கிறது. பகல் குருடு ஆந்தை இதுக்கு விதிவிலக்கு. இதை 4ஆக பிரிக்கலாம்..

பௌமம் -; எண்ணை விறகு போன்ற பூமியில் கிடைக்கும் பொருள் கொண்டு எரிவது .
திவ்யம் -; சூரியன், மின்னல் இவை பிரகாசிப்பது ஜலத்தைக் கொண்டு.
உதரியம் ; ஜாடராக்நி இதற்கு இந்தநம் தண்ணீரும், பௌமமும்.
ஆகரஜம் -; தங்கம், வைரம் போன்ற சுரங்க கனிமங்கள் – நிரிந்தனம்
.
தங்கம், வைரம் இவைகளில் ஒளஷ்ணியம் இல்லையே என்றால் அவைகளில்
பிருதிவி அம்சம் அதிகமாய் தேஜஸ் அம்சம் அல்பமாய் இருப்பதே காரணம்.

ஞானம் ஆத்மாவுக்கு குணம். அதுபோல் ஒளி தீபத்துக்கு குணம். இதில் ஞானம், ஆத்மா, ஒளி
இவை மூன்றும் திரவ்ய கோஷ்டியிலும் சேரும் குண கோஷ்டியிலும் சேரும்.

திரவ்யம் இடத்தை அடைக்கும். குணம் இடத்தை அடைக்காது. ஆத்மா, ஒளி (தேஜஸ்) இரண்டும் திரவியம் ஆனாலும் ,
இடத்தை அடைக்காது குணங்களைப் போலே . ஒலி ,உணர்வு, உருவம் இவை மூன்றும், தேஜசின் குணங்கள்.

ரஸ தன்மாத்திரத்தில் இருந்து உண்டாவது ஜலம். குளிர்த்தி, சுவை, வாசனை அற்ற தன்மை நீரினுடையது.
கடல்,ஆறு கிணறு என பலவாக ஆஸ்ரயணத்துக்குச் சேர நிறம் மணம் பெற்றாலும் உண்மையில் அவை இல்லாதது.

அடுத்து, கந்த தன்மாத்திரத்தில் இருந்து உருவவாது பிருதிவீ . கந்தம் , அஉஷ்ண சீத ரஹித ஸ்பர்ஸ யோக்யதா லக்ஷணம் பிருத்வி.
மண் கல் கட்டி என்று இருப்பதோடு உணவு, மூலிகை விளையவும் உதவுவது பூமி. மற்ற பூதங்களுடன் சேர்ந்து பக்குவப் படும் போது
நிறம், மணம் ரூபம் மாறக் கூடியது. பொருள்களையும் தாங்குவதாய் நிறம் மணம் உரு ஒலி ஒளி என்று 5ன் குணமும் இதில் உண்டு.

தமஸ் (அ ) இருட்டு என்பது ஒளியின்மை என்பது சிலர் வாதம். அது தவறு. தமஸ் பூமியின் ஒருபகுதி, அது கருநீலமாக இருக்கிறபடியால்.

படைக்கப் பட்ட 5 பூதங்கள் பஞ்சிகரண முறையில் கலப்படம் செய்யப்பட்டு சரீரமானது உருவாகிறது.
உருவான சரீரத்தில் – தங்க தோட்டில் வைரம் பதிப்பது போல் – இந்திரியம், மனசு இவை பதிக்கப்பட்டு
அவை அந்தந்த சரீரத்தை ஆக்ரமிக்கின்றன.

சரீரத்துக்கு லக்ஷணம் : ஜீவாத்மாவால்
1. ஆதேயத்வம் – தாங்கப் படுமது.
2. விதேயத்வம் – ஏவப்படுமது.
3. சேஷத்வம் – ஜீவாத்மாவுக்கு சொத்தாய்
4. அப்பிரதத் சித்தமாய் – பிரிக்க முடியாததான திரவியம் சரீரம். (அ )

ஈஸ்வரனும் அவனுடைய ஞானம் நீங்கலாக உள்ள அனைத்துமே சரீர சப்த வாச்யம்.. இதை
நித்யம் Vs அநித்தியம் என பிரிக்கலாம்.
பகவானுக்கு சரீரமாக உள்ள அனைத்தும் நித்யம்.
பிரக்ருதி காலம் ஜீவாத்மாக்கள், பகவத் திவ்ய மங்கள விக்ரகம் இவை அனைத்தும் அவனுக்குச் சரீரமான படியாலே நித்யம்.

நித்யஸூரிகள் கர்மத்தால் பிறவாதவர்கள். மற்றவை
கர்மத்தால் பிறப்பன Vs கர்மத்தால் அல்லாது பிறப்பவை இவை இரண்டும் அநித்தியம் .
மஹான், அஹங்காரம் இத்யாதி , இச்சா கிருஹீத நித்ய, முக்தர்களுடைய பார்த்திவ சரீரம் அநித்யஸ்ய அகர்ம கிருதம்.
சங்கல்ப வர்ஜித கர்ம கிருதம் Vs சங்கல்பத்வேன கர்மகிருதம்

நாமும் சௌபரியும் (ஆபாச அனுபவத்துக்கு 50 சரீரம்?

மரம், செடி. கொடி புதர் ; ஸ்தாவரம்
தேவ, மனுஷ்ய, திர்யகு , நாரகி ; ஜங்கமம்
இவை அனைத்தும் கர்மாதீனமாய்ப் பிறப்பன.

உத்பிஜ்ஜ (விதை வெடித்து) ஸ்வேதஜ (வியர்வை யிலிருந்து) அண்டஜ (முட்டையிலிருந்து)
ஜராயு (கர்பப் பையிலிருந்து) பிறப்பவை என மேலும் 4 வகையாக சரீரத்தைப் பிரிக்கலாம்.

சீதை, ஆண்டாள் முதலாழ்வார்கள் அயோநிஜர்களாய் பிறந்த இன்னோரு வகுப்பும் உண்டு.

இப்படி ஸ்ருஷ்டியானது , பனை ஓலையிலிருந்து காது ஓலை பிறந்தாப் போலே – ஒன்றின் கார்யம் மற்றொன்றின் காரணமாய் –
பகவத் சங்கல்பத்தாலே பரிணமிப்பதே ஒழிய எதுவும் புதிதாக உற்பத்தி ஆவதில்லை.

முன்னது பின்னத்துக்குக் காரணம் என்றால் பிரஹ்ம காரணத்வ வாதம் தொலையாது? என்னில் அப்படி அன்று!

மண் குடமாம்போது , களி மண் என்ற ஆகாரம் போய் வாயும் வயிறுமான குடம் என்ற ஆகாரம் வந்ததே ஒழிய .
இதில் அவஸ்தா பேதம் தவிற உபாதான பேதம் உண்டோ? இல்லை.

அதுபோலவே பிரகிருதி மஹானாகவும், மஹான் சாத்விக தாமஸ அகங்காரத்தின் வழி 21 தத்துவங்களாக பிரிவது காரண பிரஹ்மம் -;
காரிய பிரஹ்மம் ஆவது அவனுடைய சரீரத்துக்குண்டான அவஸ்தா பேதமே ஒழிய இரண்டுக்கும் சேர
அவனுடய உபாதான காரணத்வத்துக்கு நசிவில்லை, எப்படி மண்ணானது குடமானபோதும் அதை மண்குடமாகவே வியவகரிப்பது போலே.

பிரஹ்மமே பலவற்றின் காரிய காரணமாக ஆவது அவனுடய சங்கல்ப மாத்திரத்தாலேயே என்பதால்,
சிருஷ்டிக்கு நிமித்த , சககாரி காரணமும் அவனே.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

பிரக்ருதி பரமாத்மா ஜீவாத்மா இரண்டுக்குமாக போக போகஸ்தான போகோப கரணமாக இருப்பது .
சக்கரை பொங்கல் – போகம் , உபகரணம் – தொன்னை. போகஸ்தானம் – கோயில் .

கண் மூக்கு நாக்கு செவி தோலிவை போகோபகரணம். பார்த்தல் நுகர்தல் சுவைத்தல் கேட்டல் உணர்தல் இவை போகம். .
அங்கண் மா ஞாலம் போக ஸ்தானம். அதாவது அண்டமும் அண்டத்துகுள்ளீடான இந்த பிரபஞ்மும்.

ஆக இந்த அண்டமானது திரவ்யமாய் இருக்கும். பிராகிருதமாய் இருக்கும். பஞ்சீகிருத பஞ்ச பூதத்தால் ஆக்கப் பட்டிருக்கும்.
விளாம்பழ வடிவில் இருக்கும் அதில் ஒரு பத்மத்தின் வடிவில் இருப்பது பூமி.
பூமியின் நடுவில் தலைகீழாய் குத்திய ஆணிபோல் இருப்பது மேரு மலை.
அதன் தெற்கு பகுதியில் இருப்பது பாரத, ஹரி, கிம்புருஷ வர்ஷங்கள். ரம்யகம், ஹிரண்யக, குரு வர்ஷங்கள் வடக்கிலும் அமையப் பெற்றுள்ளன.
பார்தஸ்வம் கிழக்கிலும், கேதுமால வர்ஷம் மேற்கிலும் அமைந்துள்ளன. மத்தியில் இளா வருஷம் சேர ஆக மொத்தம் ஒன்பது வர்ஷங்கள்.

இந்த ஜம்பூ த்வீபம் ஒரு லக்ஷம் யோஜனை விஸ்தீர்ணம் கொன்டது.
இதை சுற்றி வளைத்து இருப்பது உப்புக்கடல். அடுத்து
பிலக்க்ஷ தீபம். கடல் கரும்புச் சாறு. விஸ்தீர்ணம் இரண்டு லக்ஷம் யோஜனை. மூன்றாவது
சால்மலித் த்வீபம். கள்ளுக் கடல். விஸ்தீர்ணம் நான்கு லக்ஷம் யோஜனை. .
குசத்வீபம் – நெய்கடல் – 800000 யோஜனை.
கிரௌஞ்ச த்வீபம். – தயிர்க்கடல் – 1600000 யோஜனை
சாக த்வீபம் – பாற்கடல் – 3200000 யோஜனை
புஷ்கர த்வீபம் – மானலோத்ர பர்வதம் – ஸுத்த தீர்த்தம் – 6400000 யோஜனை.
ஸ்வர்ண பூமி – லோகாலோகம்
கர்த்தம் (ஒருவித ஜலம்)
அண்ட ஓடு.
பெருவெளி.
இப்படி ஒன்றை அடுத்து ஒன்றாக கோள வடிவில் ஒரு விளாம்பழம் போல் அமைந்திருப்பது இந்த அண்டகடாகம் .

– – – – – – – – – – – – – – –

தமஶ்**
ஸத்ய லோகம்
தபோ லோகம்
மஹர் லோகம்
ஸுவர் லோகம்
புவர்லோகம்
||
த்ருவ பதம்
ஸப்த ரிஷி மன்டலம்
சனி
வியாழன்
செவ்வாய்
வெள்ளி
புதன்
நக்ஷத்ரங்கள்
சந்திரன்
ஸூரியன்
||
புவர்லோகம்
||பூமி||
அதள
விதள
ஸுதள
தலாதள
மஹாதள
ரஸாதள
பாதளம்
நரகம் (பாப பூமி)
தமஸ்**
கர்த்தம்
அண்ட ஓடு
பெருவெளி.
தமசிலிருன்து தமஸ் ஐம்பது கோடி யோஜனை விஸ்தீர்ண்யம்.

– – – – – – – – – — – – – – –

திரவ்யம் -; சேதனம்(2) அசேதனம் (4)
சேதனத்தில் அடங்கும் திரவ்யம் இரண்டு ஈஸ்வரனும் ஜீவனும்.
அசேதனத்தில் அடங்கும் திரவ்யம் பிரக்ருதி, காலம், ஸுத்த ஸத்வமாகிற நித்ய விபூதி, தர்ம பூத ஞானம் ஆகியவை.

இதில் அஜடமான சேதனனும், ஈஸ்வரனும் ஶ்வயம் பிரகாஸமாய்,
பிரத்யக் என்று, தீபத்தைப் போலே தன்னைக் காட்டி , பிரவற்றையும் காட்டித் தரும்.
இதையே ஶ்வயம் பிரகாஸிதம், ஶ்வஶ்மை பிரகாஸிதம் என்று சொல்லுவர்.

அசேதன திரவ்யமான பிரக்ருதி, காலம் இரண்டும் தானாகவும், தனக்காகவும் பிரகாசிக்காது.
அஶ்வயம் பிரகாசிதம், ஜடமான படியாலே.

நித்ய விபூதியும், தர்ம பூத ஞானமும் அசேதன, அஜட திரவ்யம் பராக் என்று அழைக்கப்பட்டு தானே பிரகாஸிக்கும், தனக்கு பிரகாஸிக்காது .

– – – – – – – – – – – – – –

இனி கால தத்வத்தைப் பார்ப்போம் :

இது ஒரு ஜடப்பொருள். முக்குணத்துக்கு அப்பாற்பட்டது
ஶ்வஶ்மை பிரகாஸத்வம், ஸ்வயம் பிரகாஸத்வம் இல்லாதது.
இது அகண்ட காலம் ஸகண்ட காலம் என நித்யாநித்யமாய் இரண்டு.
அகண்ட காலம் ஶகண்ட காலத்துக்கு உபாதானமாய் இருக்கும்.
அகண்ட காலம் நித்யம். ஶகண்ட காலம் கார்யமாய், ஸதத பரிணாமியாய் அநித்யம்.

அகண்டகாலம் – பூத, பவத், பவிஷ்யத் காலம் என்றும், யுகபத (ஒரே ஸமயம்);
க்ஷிப்ர (ஸீக்ர/விரைவானதாய்); சிராதி என்று (நீண்டதாயும்) இருக்குமது.

ஶகண்ட காலம் – விநாடி, நிமிடம், மணி, நாள், வாரம், பக்ஷம், ருது, அயனம், ஶம்வத்சரம்
என்று மாறிமாறி சுழலுமது. இவை மநுஷ்ய மாண நேரம்.

பித்ருக்கள் நேரம் :
மநுஷ்ய மாதம் அவர்களுக்கு 1 நாள். வளர் பிறை – பகல். தேய்பிறை – இரவு. அம்மாவாசை மதியம்.

தேவர்கள் நேரம் :
மநுஷ்யர்களின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள்.
உத்தராயணம் – பகல்.
தக்ஷ்ணாயனம் – இரவு.
தேவ வருஷம் 12000 = ஒரு சதுர் யுகம். அதில்

கிருத யுகம் 4000 யுக சந்தி 800(700) தர்மம் 1 கால்.
திரேதா யுகம் 3000 – 600(500) – 3/4.
த்வாபர யுகம் – 2000 – 400(500) – 1/2.
கலி யுகம் – 1000 – 200(300) – 1/4.

தேவமாண 1000 சதுர் யுகம் பிரம்மாவுக்கு பகல்.
இந்த 1000 சதுர் யுகத்தில், 71 சதுர் யுகம் என்கிற விகிதத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள், சப்த ரிஷிக்கள் வந்து போவார்கள்.
பிரம்மாவுடைய ஆயுசு 2000 சதுர்யுகம் x 30 x 365

பிரளயம் :

௧. நித்ய பிரளயம் – சரீர வியோகம் (அ) மரணத்தில் ஏற்படுவது.

௨. நைமித்யிக பிரளயம் – பிரம்மாவுக்கு பகல் முடிந்தால் பூ, புவ, ஸுவர் லோகங்கள் அழியும் .
பிரம்மாவின் ஆயுட்காலதில் நடுநடுவே ஏற்படுவதால், இது அவாந்தர பிரளயம் என்றும் – கிருதம் என்றும் அழைக்கப்படும்..
இந்த சமயத்தில், மஹர்லோக வாசிகள் குடிபெயர்ந்து ஜனர்லோகத்தில் இருப்பர்.
அதாவது பிரம்மாவுடைய இரவுக்காலத்தில், முதல் மூன்று லோகங்கள் அழிய, மற்ற நான்கு உலகங்களும் அழிவதில்லை.
மறுபடியும் பிரம்மவுக்கு பகல்போது ஆகும் போது, அழிந்த மூன்று உலகங்களும் படைக்கப்பதும்.
ஆகவே இந்த மூன்று உலகங்களும், கிருதம் என்றும், மஹர் லோகம் – கிருதகிருத்யம் (அழியாதது ஆனால் வசிப்பார் அற்றது) என்றும்,
அதன்மேல் உள்ள சத்ய, தபோ, ஜநைர் லோகங்கள், அழிவதில்லை யாதலால், அகிருதம் என்றும் அழைக்கப் படுகின்றன.

௩. பிராகிருத பிரளயம் :

பிரம்மவினுடைய ஆயுஸு முடியும் போது 14 உலகங்களும் அழிந்து, ப்ருத்வி நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும்,
காற்று அண்ட வெளியிலும், இப்படி பஞ்ச பூதங்களும் கலந்த ஆகாஸம் அஹங்காரம், மஹாந் பிரகிருதி என்று
எம்பெருமான் திருமேனியிலும் லீநமடையும்.

அப்படி அவைகள் அநாதியாய் ஸூக்ஷ்ம தசையில் ஒன்றிக் கிடக்க, காலத்தால் உணர்த்தப் பட்டு,
பிராட்டி அனுஞையோடே மீண்டும் உண்டாவது தான் படைப்பு.
இப்படியான யோகபத்யம் அநுகிரஹ கார்யம் என்பது பிரசித்தி.

ஆக லீலா விபூதி காலாதீனம். பகவானும் இங்கு காலத்துக்கு கட்டுப் பட்டே கார்யம் செய்கிறான்.

நித்ய விபூதியில் காலம் உண்டு ஆனால் அதன் ஆட்சி இல்லை. ”நவைகால தத்ர பிரபுஹு” என்கிற பிர்சித்தியோடே,
ஒன்றின் அடுத்து ஒன்று என்கிற கிரமம்தான் உண்டு. அந்த ஒவொன்றும் எத்தனை காலம் என்பது கிடையாது,
பகவாக்ஞா ஸீமிதமானது என்றே சொல்ல வேண்டும்.
நித்யவிபூதியில் காலம் ஷடிந்திரிய கிராஹ்யமாய், ஆறு இந்திரியங்களாலும் அறியத்தக்கதாயிருக்கும்..

௪. அத்யந்திக பிரளயம் – ஜீவன் முக்தி அடைவதாகும்.

1, 4 ஜீவாத்மா சம்பந்தப் பட்டது.
2, 3 லோகங்கள் சம்பந்தப் பட்டது.

– – – – – – – – – – – – –

நித்ய விபூதி / வைகுந்தம் :

திரவ்யமாய், பராக் கோஷ்டியில் அன்வயிப்பதாய், அஜடமாய் இருக்கும்.
ஶ்வயம் பிரகாசம், ஶ்வஶ்மை பிரகாசத்வத் தோடு கூடியது. அதாவது பிறர்க்கு ஒளிவிடும்.
தனக்கு ஒளிவிடாது. ஸுத்த சத்வமாய், மிஶ்ர தத்வம் கலசாதது. தூமணி துவளில் மாமணி விளக்கம் இங்கு நோக்கத்தக்கது.

மேல் பக்க வாட்டங்களில் அசீமிதமாய், கீழ்வாட்டில் லீலாவிபூதியால் சீமிதமானது.
ஆனாலும் முக்குணத்தால் ஆன ப்ரக்ருதி தத்வதினிற்றும் தனித்து, ஸுத்த சத்வமயமானது.
அசேதனம். ஆனந்தாவஹம். பஞ்ச உபனிஷத் மய- பூத தத்வத்தாலும், பஞ்ச சக்தி- இந்திரிய விசேஷங்களாலும் ஆன
சரீரங்களோடு கோடிய நித்ய, முக்த ஜீவாத்மாக்களுக்கு இடம்.

அங்கு போகம் – பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம்.
போகோபகரணம் – சந்தன, புஷ்ப, குசுமாதிகள். (லீலாவிபூதிபோல் இந்த்ரியங்கள் அன்று).
போகஸ்தானம் – கோபுர, பிராகார, விமான, மண்டபம் இத்யாதிகள்.

நித்ய, முக்தர்கள் பரிகிரஹிக்கிற சரீரம், ஸுத்த சத்வமயமாய், ஈஶ்வர சங்கல்ப்பத்தாலே அமைவது. கர்மத்தால் அன்று.
பகவத், வியூக, விபவ, அர்சா திருமேனியும் அப்ராகிருதம்தான். வேறு சிலர் அவன் அர்சா திருமேனியை
பிராகிருதம் என்று சொனாலும் அதுவும் அப்ராகிருத ஆவிர்பாகம் என்றே நம் சித்தாந்தம்.

சிலர் அவனுக்கு சரீர்மே இல்லை என்று வாதிக்க, நித்ய முக்த்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கைகாக
பரமபதத்தில் அவன் ஒரு அபிராகிருத சரீரத்தோடே இருத்தல் அவஸ்யம்.

நித்ய முக்தர்கள் அசரீரியாக, ஆத்ம வடிவமாகவே இருந்து அனுபவிக்கலாமே என்றால்,
திருவாராதன, உற்சவ கைங்கர்யங்களைச் சமர்ப்பிக்க, அவர்களுக்கும் கரண களேபரங்கள் அவஶய்மாகின்றன.

ஞான பல ஐஶ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் பகவத் சரீரத்தாலே பிரகாஸிதம். மேலும்
நித்ய, நிரவத்ய, நிரதிசய, ஔஜல்ய , ஸௌகந்த, ஸௌகுமார்ய, லாவண்ய, யவ்வன, மார்த்வ, ஆர்ஜவ குண ஸம்பன்னன்.
அவனுடைய திருமேனி இப்படியாக அபிராகிருதம் – ஹேய குண பிரதிபடம்.

அவர் ஆத்மாவாலும், ஸ்வரூபத்தாலும் விபு – வியாபிக்கக் கூடிய சக்தி சாமர்த்தியம் உடையவர்.
இதற்கு கண்ணனெம் பெருமான் குருக்ஷேத்ரத்தில் காட்டிய, விராட் ஶ்வரூபமே சாக்ஷி.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

ஸ்வயம் பிரகாசம் :
ஆத்மா ஞானதால் ஆனது. ஞானவான். ஞான குணகனும் கூட. மற்றப் பொருள்களை தன் ஞானம் கொண்டு அறிவதோடு
தனக்கு ஞானம் உண்டு என்பதும் அறிபவர். இதையே தனக்கு பிரகாசிப்பவர். தானே பிரகாசிப்பவர் என்கிறது.
ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய விபூதி ஸ்வயம் பிரகாஸம். ஆனால் ஶ்வஸ்மை பிரகாஸிதம் இல்லை.
முக்குணத்தால் ஆன லீலா விபூதியில் எம்பெருமான் அவதரிக்கும் போதும் , அர்ச்சா திருமேனியோடு இருக்கும் போதும்
ஸுத்த ஸத்வ மயமாமன திவ்யமங்கள விக்ரகத்தோடே எழுந்தருளுவதால், லீலா விபூதியிலும் ஸுத்த ஸத்வதுக்கு அவகாசம் உண்டு.

ஶ்ரீ விஶ்ணுபுராண அஸ்த்ரபூஷணா அத்யாயத்தின்படி லீலா விபூதியில் காண்கிற ஒவ்வொன்றுக்கும்
எம்பெருமான் திருமேனியில் பிரதிநித்வம் (ஸர்வ அபாஸ்ரயத்வம்) உண்டு.
கௌஸ்துபம்=ஜீவாத்மா.
ஶ்ரீவத்ஸம் என்கிற திருமார்பில் மரு = பிரக்ருதி.
கதை = மஹான்
சங்கு= ஶாத்விக அஹங்காரம்.
சார்ங்கம்=ராஜஸ அஹங்காரம்.
கட்கம்=ஞானம்.
கட்கத்தின் உறை=அஞானம்.
சக்ரம்=மனசு.
அம்ராதூளியில் உள்ள 10 அம்பு=ஞாநேந்திரியம், கர்மேந்திரியம்.
வைஜயந்தி,வனமாலா =பூத ஸூக்ஷ்மங்களும், பஞ்ச பூதமும்.

ஆமோத, பிரமோத, ஸம்மோத, வைகுந்தம் என்று நித்ய விபூதியில் அடைகிற ஆனந்தத்தின் நான்கு நிலைகள் தான் அவை.
அதாவது பார்த்துக் களிப்பது. பார்த்ததை அடைந்து ஆனந்திப்பது. அடைந்ததை அநுபவித்து இன்புருவது.
கிடைத்த ஆனந்தத்தை தக்க வைத்து சிரகாலம் அநுபவிப்பது என்கிற நாலு நிலைக்கு நித்ய விபூதியில் உண்டான நான்கு விபாகங்கள்.

திரிபாத் விபூதி, பரமபதம், பரமவியோமம், பரமாகாச, அம்ருத, நாத, அப்ராக்ருத, ஆனந்த, வைகுண்ட, அயோத்யா
என்று பரம பதமான நித்யவிபூதிக்கு பர்யாய சப்தங்கள்.
அப்படிபட்ட தேசத்தில் இருகிற ஊர் வைகுந்தம். அது 12 மதில்களால் சூழப்பெற்றது.
அங்கு ஆனந்த மண்டபம் என்கிற கோயிலில் 1000 கால் மண்டபத்தில், திரு மாமணி மண்டபம் என்கிற திரு ஓலக்க சபை உண்டு.
அதில் ஆயிரம்தலை பணாமண்டலம் கொண்ட ஸேஷபீடம் –
அதில் (தர்மம், அதர்மம்-ஞானம், அஞானம்-வைராகியம், அவைராகியம்-ஐஸ்வர்யம், அநைஸ்வர்யம் என்கிற எட்டு கால்களை) உடைய தர்மாதி பீடம்.
அஷ்டதள தாமரை மலர்போல ஆசனம், சத்ர, சாமர, ஆலவட்ட கைங்கர்ய பரர்கள் சூழ
வீரா சனத்தில் தேதீப்யமான திவ்யமங்கள விக்ர்ஹதோடே நம்பெருமாள் சேவை சாதிகும் படியான தேசம் நித்ய விபூதி.

—————–

இனி தர்மபூத ஞானம் விவரிக்கப்படுகிறது:
ஜீவ-பர தர்மமாய் (குணமாக) இருகிற ஞானம், தர்ம பூத ஞானம். பரமாத்மாவுக்கு அது பூர்ணமாக விகஸித்திருக்கும்.
ஜீவாத்மாகளுக்கு அது கர்மத்தால் மழுங்கி இருக்கும். பரம பதத்தில் கர்மா இல்லையாய், விகஸித்தபடி காணலாம்.
ஸ்வந்திரன் என்கிற ஞான ஸங்கோசம் போய், சேஷ பூதன் என்கிற விகசித ஞானம் பெறுகை.
புத்தி (அ) தர்மபூத ஞானம் – ஸ்வயம் பிரகாசம். ஸ்வஸ்மை பிரகாசிதம் இல்லையாய் பராக் என்றும், அசேதனமாயும் இருப்பது.
ஸூர்யனுக்கு பிரகாசம் போலே, விளக்குக்கு ஒளி போலே, ஆத்மாவுக்கு ஞானம்.
அணுவான ஆத்மாவுக்கு குணமான ஞானம் விபுத்வத்தோடே கூடியது.
அதாவது ஆத்மா ஓரிடத்தில் இருக்க, சரீரம் முழுவதுமாய் வியாபிப்பது. அதுக்குண்டான, தர்மபூத ஞானம்.

பரமாத்மாவோ என்னில் அவன் ஸ்வரூபத்தாலும் விபு. அவருடைய ஞானமாகிற குணத்தாலும் விபு.
தனக்குத் தானே ஒளிவிடும் ஜீவாத்மா. தனக்குத் தானே ஒளிவிடுவார் பரமாத்மா.
தானே ஒளிவிடும் தனக்கு ஒளிவிடாது ஞானம். தானும் ஒளிவிடாது, தனக்கும் ஒளிவிடாது ஜடப்பொருள்கள்.
ஞானத்தைக் கொண்டு மற்ற பொருள்களை ஆத்மா கிரகிக்கிறது.
ஆக பொருள்கள் ஞானத்துக்கு விஷயம். ஞானமே விஷயமாம்போது, விஷயி ஆகிறது.

இந்த தர்மபூத ஞானம் பகவானுக்கும், நித்ய ஸூரிகளுக்கும் எங்குமே எப்போதுமே விபுவாயிருக்கும்.
பத்தர்கள் விஷயத்தில் இது மூடப்பட்டு குறைய பிரஸரிக்கும். முக்தர்களுக்கு இது மறைவு வெளிப்பட்டு, நித்யர்களுக்குப் போலே ஒளிவிடும்.
பிறந்திறவாத ஆத்மாவை பிறந்தார், இறந்தார் என்னுமாபோலே, ஞான உத்பந்நம், நஷ்ட்டம் என்கிற வியவகாரம்,
அது கர்மத்தால் சங்குசிமாவதும், கர்மம் தொலைந்தால் விகசிப்பதுமான நிலையைக் குறிக்கும்.
எதைப்பற்றிய ஞானம், யாருக்கு ஞானம் என்பதைக் கொண்டு கர்மக-ஞானம் கருத்ருக-ஞானம் என்று ஞான விபாகம்.

இது விளக்கு என்று புரிதலாகிற ஞானம் உண்டாகும்போது, விளக்கு கர்மா, அறிபவர் கர்த்தா.
தீபம் அஹம் ஞானாமி அன்ற வாக்கியத்தில், தீபம் ஞானத்துக்கு விஷயம். அஹம் ஞானத்துக்கு ஆஶ்ரயம்.
இத்தால் ஞானம் ஸகர்மக-ஸகர்த்ருக மாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தேறுகிறது.
வேகம், நுண்மை, லகு இத்தோடு தான் இருக்கும் போது, பிரகாசியாமல் இருக்காது ஞானம் என்பது.
ஞன பிரஸர த்வாரம் இந்திரியம். இந்திரிய நிஸ்ருஜ்ய ஞானம் என்பது விஷயத்துக்கும் (பொருள்கள்) இந்திரியத் துக்குமான இரு-வழி பாலம்.
அதாவது – ஆத்மாவிலிருந்து புறப்படும் ஞானம் மனம் மொழி காயங்கள் ஆகிற இந்திரியங்கள் வழியாக
பொருட்களைக் கிரஹித்து மீண்டு புத்திக்கு விஷய மாக்குகை.
ஆக ஞனத்துக்கு கமனம், பாம்பின் உடல் குண்டலத்தைப் போல் – சுருங்கி விரிவது ஞானம்.

ஞானம் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருப்பதால் ”குணம்” என்றும், சுருங்கல் விரிதல், கமனம் ஆகிய மாறுதலுக்கு உட்பட்டுவதாய்,
அக்ஞானம், ஞான சங்கோசம், ஞான விகாசம் என்கிற நிலையை அடைவதாலும் ”திரவ்யம்” என்று கூறலாம்.
விளக்கு போலே தன்னைக் காட்டி பிறவற்றைக் காட்டும், தான் ஆஸ்ரயித்து இருக்கிற ஆத்மாவுக்கு மட்டிலும்,
ஏனெனில் அந்தந்த ஆத்மாவுக்கான ஞானம் அதனதன் இந்திரிய சன்நிகர்ஷத்தாலே ஏற்படுமே அன்றி
ஒருவருடைய ஞானம் மற்றவருக்கு ஒளிர வழியில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை பற்றிய ஞானம் தனக்கு போல் இன்னொருவருக்கும் ஏற்பட வழி உண்டாகையால்,
அதை அநுமானத்தல் அறியலாம் அன்றி தன்னுடைய ஞானம் அவர் அளவாக பிரஸரிப்பதாகிற பிரத்யக்ஷ பிரமாணத்தை கொண்டு இல்லை எனலாம்.
ஞானம் ஸ்வத ஏவ பிரமாணம்-எந்த ஞானமும் உண்மை ஞானம் என்பது ராமனுஜ சம்பிர தாயத்தின் அடிப்படைக் கொள்கை.
இது விளக்கு என்ற அறிவுக்கு சஜாதீயமான இன்னொரு விளக்கு தேவை இல்லை.
விஜாதீயமான கர்தாவும், கார்யத்தையும் மட்டுமே எதிர்பார்க்கும். ஆக அது ஸ்வயம் பிரகாசம்.

ஞானம் க்ஷணிகம் (பௌத்தன்), த்ரிக்ஷணிகதம் (நையாயிகன்), ஞான குணகன் ஆதமா என்னாமல் ஞானமே ஆத்மா (அத்வைத மதம்),
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிக்கிற ப்ராதிபாஸ ஞானம் (மாயா வாதம்)அனைத்தும் மேற்சொன்னவைகளால் நிரஸிக்கப் பட்டன.
ஒரு விஷயத்தைப் பற்றி பலமுறை ஏற்படுகிற ஞானம் வெவ்வேறு அல்ல ஒரே ஞானம் தான்.
தமோ குண சன்னிதியால் மயக்கம், தூக்கம் இவை எற்பட்டு ஞானம் மூடப்படலாமே ஒழிய அது ஞான அபாவம் என்று சொல்லு வதற்கில்லை.
எதை போலே என்றால் , யவ்வன பருவத்தை பாலய பருவம் மூடினால் போலே, கௌமாரம் நீங்கி யுவா ஆனவாரே ஸுக்லம் பிரஸரிப்பது போலே இது.

மதி, பிரக்ஞா, ஸம்விது, தீ, மணீஷா, ஸேமுஷி, மேதா, புத்தி என்பது தர்மபூத ஞானத்துக்குண்டான ஒரு பொருள் பல சொல்.
சுக, துக்க, இச்சா, துவேஷ பிரேமம் அனைத்தும் ஞான விபாகமே. அனுகூல ஞானம் சுகம். பிரதிகூல ஞானம் துக்கம்.
இப்படி ஸில பல உபாதியால் வேறுப்டுகிற ஞானம் இவை அறிவின் வேறு வேறு நிலைகள்.
நினைவு கூறுதலாவது முன் நிகழ்ந்த ஒன்றை, பார்த்த, கேட்ட ஸம்பவம், பொருள் அல்லது மனிதரை ஞாபகப் படுத்திக் கொள்வது.
இது இரண்டு வகையில் ஏற்படலாம். அதே சம்பவம் மீண்டும் நிகழ மறு நினைவு ஏற்படலாம்.
இதை ஸ்மரணை என்பர். அல்லது ஒன்றின் நினைவு இன்னொன்றின் எண்ணத்தை மீட்க்கலாம்.
இதுக்கு பிரத்யபிக்ஞா என்று பெயர். அப்படியான அறிவின் மாறுபாடுகளே சுக, துக்காதிகள்.

——————————————————————————–

சேமுஷி பக்தி ரூபா – ஜ்ஞானம் கலந்த நலம் – மதி நலம் என்ற இவை முதிர்ந்த பகவத் பத்தியை குறிக்கும்.
இந்த பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் மோஷோபாயம். இந்த ஜ்ஞானம் ஜீவனுக்கும்,ஈஸ்வரனுக்கு குணமாய் இருப்பதால்
அதை தர்ம பூத ஜ்ஞானம் என்கிறோம்.

இந்த தர்மபூத ஜ்ஞானம் திரவியமாய் , அசேதனமாய், அஜடமாய் இருப்பது. வெறுமனே ஜ்ஞானம் பக்தியாகி விடாது,
ஏனென்றால் கர்மத்தால் அது மூடப்பட்டுள்ளது, வெட்டி எடுக்கப்பட்ட வைரம் போலே.
அதன் ஒளியை கூட்ட பட்டை தீட்டுவது போல், அதை நன்றாக
(1) ஆச்சார்ய உபதேசங்களாலும்
(2) உபதேச உசித அநுஷ்டானத்தாலும் பரிஷ்கரிக்கப்பட வேண்டும்.
ஆத்மா வா அரே ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: திர்ஷ்டவ்ய: நிதித்யாஸி தவ்ய : என பரிபக்வமாக வேண்டும்.

காமம் (விருப்பம்) சங்கல்பம் (உறுதி) சிரத்தை (ஈடுபாடு),விசிக்கிச்ஸா (அறிந்து கொள்ளும் ஆசை)
திருதி (தைர்யம்) ஹ்ரீஹி ( வெட்கம் ) தீஹி (புத்தி) பீஹி (பயம்)
இவை அனைத்தும் ஜ்ஞானத்தின் வெளிப்பாடுகளே. இவை மனதின் வெளிப்பாடு என்று சாஸ்த்ர வசனம் இருக்கிறதே,
மனம் ஜடப் பொருளாயிற்றே ? அஜடமான ஜ்ஞானத்தின் வெளிப்பாடு என்று எப்படிச் சொல்லலாம்? என்று கேட்டால்.
அவை ஜ்ஞான காரியமாக இருக்க, மனக் காரியம் என்றது உபசார வழக்காகக் கொள்ள வேண்டும்,
ஜ்ஞானம், மன சாகாய மின்றி நடவாதாகையால்.

பிரத்யக்ஷம், அனுமிதி, சாஸ்திர (ஆகம) ஜ்ஞானம், ஸ்மிருதி, சம்ஸயம் (இதுவா அதுவா என்று தடுமாறுகிற அறிவு),
விபர்யயம் (இதுதான் என்று தவறாக முடிவு பண்ணுகிற அறிவு), மயக்கம் (வஸ்துவை மறாடி நினைக்கை)
விவேகம் (பகுத்து அறிதல்), வ்யவசாயம் (துணிவு), மோஹம் (கிறக்கம்) ராகம், த்வேஷம், மதம் (செறுக்கு )
மாத்சர்யம், தைர்யம், சாபல்யம், டம்பம் (தர்ம காரியத்தை படாடோபத்துக்குச் செய்வது),
லோபம், க்ரோதம், தர்ப்பம் (செருக்கு) ஸ்தம்பித்தவம் (திகைப்பு) துரோகம், அபிமானம், நிர்வேதம் (மன வெறுப்பு) ஆனந்தம் ,
நல்ல அறிவு, தீய அறிவு, அன்பு, திருப்தி, சாந்தி, கீர்த்தி, வைராக்கியம், மன அழுத்தம், இன்பம், நட்பு, கருணை, இச்சை,
மென்மை, பொருமை , வெறுப்பு,, பாவனை,பேராசை, துராசை ,சர்ச்சை, சக்தி,பக்தி, பிரபத்தி இவை முதலான ஆத்மாவின் குணங்கள்.

ஜ்ஞான, சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் வாத்சல்ய, காருண்ய இத்யாதி பகவத் குணங்கள்.
அவருடைய ஜ்ஞானம் இறந்த காலம் நிகழ் காலம், வருங்காலம் அனைத்தும், பிரத்யக்ஷத்தில் காண்பது போல் அறிபவர்.
மநுஷ்யர்களுக்கு இறந்த காலத்தில் சிலவும், நிகழ் காலமும் வியக்தம்.
ரிஷி, முனிகளுக்கு இறந்த காலமும், வரும் காலமும் ஸ்புரிக்குமே ஒழிய, கண்முன் நடப்பதுபோல் தோன்றாது .
ஆனால் பகவானுக்கு அவைகள் பிரத்யக்ஷத்தில் பார்ப்பதுபோல் ஒளிவிடக்கூடியது.

சக்தி அகடித கடனா சாமர்த்தியம்.
பலம் ஜகத் தாரண சாமர்த்தியம்.
ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் .
வீர்யம் அவிகாரத்வம் .தன்னுடன் சேர்ந்தவைகள் மாற்றம் அடைந்தாலும், தான் மாறுதல் இல்லாத.
தேஜஸ் பராபிவன சாமர்த்தியம்.
சௌசீல்யம் – நீரந்தரேண சம்ஸ்லேஷம்
வாத்சல்யம் – குற்றத்தையே குணமாக பார்த்தல்.
மார்த்தவம் – அடியார்கள் பிரிவை சகியாதவன்.
ஆர்ஜவம் – ஒன்றே நினைத்து ஒன்றே பேசி ஒன்றே செய்வது.
சௌஹார்த்தம் – தனக்கு இழுக்கான செயலானாலும், பிறர் ரக்ஷணத்தில் முனைப்பு.
சாம்யம் – ஆஸ்ருதர்களிடத்தில் உயர்வு தாழ்வு பாராதவன். யதிவா ராவண ஸ்வயம் என்ற இடம் காண்க.
ஆனால் அபக்தன், பக்தன் இவர்களிடம் வேறுபாடு பார்க்கமாட்டான் என்பது இல்லை.
காருண்யம் – பரதுக்க துக்கித்தவம், பரதுக்க அஸஹிஷ்ணுத்வம் . பிறர் வருத்தம் கண்டு பொறாதா தன்மை
மாதுர்யம் – போக்கிய வஸ்துவான பால் மருந்தாமாப் போலே, உபாய உபேயம் இரண்டிலும் மதுரமாம் தன்மை.
காம்பீர்யம் – ஆழங்கால் காண முடியாத கொடையாளி. திரௌபதி விஷயத்தில் எல்லாம் செய்தும், என்ன செய்தோம் என்ற அதிருப்த்தி .
சாமர்த்தியம் – அடியார்கள் அபராதங்களை தான் கணிசியாததோடு , மறைக்கிறார்.
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்னடியார் அது செய்யார் என்று தோஷ கோபத்வம்.
ஸ்தைர்யம் – பக்தர்கள் ரக்ஷண விஷயத்தில் யார் எதுசொன்னாலும் அசராதவன் தடங்கலைக் கண்டு கலங்காதவர் .
தைர்யம் – பழுதாகாத பிரதிக்ஞை உடையவர்.
சௌர்யம் – பரபல பிரவேஸ சாமர்த்தியம்.
பராக்கிரமம் – பரர்களை சின்னாபின்ன மாக்கல் .
என்று எண்ண முடியாததாய், அனுபவித்து முடிக்க முடியாததாய் இருக்கும் பரமாத்மாவுடைய ஜ்ஞானம்.

இனி பக்தி பிரபத்தியின் தன்மைகளை கிஞ்சிது பார்ப்போம்,
ஏனெனில் அவைகளை பற்றி முழுவதுமாக ஒரு ஆசாரியனை வணங்கியே அறியலாவது.

பக்தி பிரபத்திகளை வியாஜமாகக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனே உபாயமாக இருந்து
மோக்ஷத்தை அளிக்கிறான் என்பது தேர்ந்த உண்மை.

மோக்ஷோபாயத்தை சித்தோபாயம் சாத்யோபாயம் என்று இரண்டாக பிரிக்கலாம்
இதில் சித்தோபாயம் பகவான். சாத்யோபாயம் பக்தி/பிரபத்தி.
இது விஷயமான கலா பேதம் பிள்ளைலோகாச்சார்யார் (தென்கலை) சம்பிரதாயம் என்றும்;
வேதாந்த தேசிகர் (வடகலை) சம்பிரதாயம் என்றும் இரண்டு.
பக்தியோ பிரபத்தியோ வியாஜ உபாயமே. பகவானே முக்கிய உபாயம் என்பது தேசிக பக்ஷம்.
அவை அதிகாரி விசேஷணம் மாத்திரமே வியாஜ மாத்ர உபாயமும் இல்லை என்பது பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.
இருவருக்கும் பகவானே உபாயம் என்பதில் பேதமில்லை.
ஆனால் அவனுடைய அந்த உபாயத்வம்; கிருபா ஜன்யமா? கிருபா ஜனகமா? என்பதிலேயே பேதம் சொல்லப்படுகிறது. .’
‘அதுவும் அவனது இன்னருளே ” என்கிறபடி கிருபா ஜன்யம் . இது பிள்ளை லோகாசார்யர் அபிப்ராயம்.
இவன் செய்யும் பிரபத்தி கிருபா ஜனகம் என்பது தேசிகர் அபிப்ராயம்.

பக்திக்குச் சாதனம் கர்மயோகமும், ஜ்ஞான யோகமும். கர்மயோகம் சித்த சுத்தியை ஏற்படுத்தும் அது ஜ்ஞான யோகத்திலும்,
ஜ்ஞான யோகம் ஆத்ம சாக்ஷத்காரத்தை வரவழைத்து, பகவத் பக்தியிலே மூட்டும்.

இவை மூன்றும் தனித்தனியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு.
ந தர்ம நிஷ்டோஸ்மி நசாத்மவேதி ந பக்திமான் — ஆளவந்தார். பக்திக்கு அங்கமாக மற்றை இரண்டும் வைத்து,
பக்தியே மோக்ஷோபாயம் என்று சொல்பவர்களும் உண்டு. நோற்ற நோன்பிலேன், நுண்ணறிவிலேன் — நம்மாழ்வார்.
பக்திக்கு அங்கமான இவை இரண்டும் இல்லை என்றால், மோக்ஷோபாயமான பக்தியம் இல்லை என்று சொல்ல பிரசக்தியே இல்லை என்கிறார்.

கர்மயோகமாவது :

வர்ணாஸ்ரம தர்மத்தில் நின்று
தேவதா ஆராதனா, யாக யஜ்ஞம், தான தர்மாதிகளை செய்வது
ஆச்சார்யனை அண்டி தத்வ ஜ்ஞானம் பெற்று, அதற்கநுகுணமான ஆசாரத்தில் நிற்பது
அகிருத்ய கிருத்யம் , கிருத்ய அகிருத்யம் இவைகளை தவிர்ப்பது
கர்த்ருத்வ தியாகம், பலத் தியாகம் , பல சங்கத் தியாகம் கூடிய நித்ய கர்மாநுஷ்டான வர்தனம்
தாழ்ந்த பலன்களில் கண் வையாமை
செய்பவை யாவும் பகவத் கைங்கர்யமாக செய்தல் இத்யாதி.

கர்ம யோகத்தால் மனதின் அழுக்கு நீங்கி ஜ்ஞான யோகத்துக்கு வழி வகுக்கும்.

ஜ்ஞான யோகமாவது :

வேதாந்த விசாரமும்
பகவத் சேஷமான
நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்வரூப
தியான, ஆசன, யோக முறைகளும் (அ )
நாம சங்கீர்த்தனம் (அ )
திவ்ய தேச வாசம் (அ)
பக்திக்கு அங்கமான சரணாகதியாலே

பகவத் பக்தியில் ஈடுபட உள்ள தடங்கல்கள் விலகி
பக்தி யோகத்திலே மூட்டும்.

பக்தி யோகமாவது :

யமம் நியமம் ஆஸனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணம் தியானம் ஸமாதி என்று எட்டு அங்கங்களோடு கூடியதான
தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தானம் (அ)

விவேக, விமோக, அவ்யாச, கிரியா, கல்யாண, அநவசாத, அனுதர்ஸ்வ ; சாதன சப்தகம் பக்தி.

இந்த மேலே விளக்கமாகப் பார்க்கலாம்:

பக்தி பிரபத்தி இரண்டுமே ஜ்ஞானத்தின் வெளிப்பாடுதான். தர்மிபூத ஜ்ஞானம் நெருப்பு என்றால்,
அந்த தீயின் பொறி போன்றது தர்ம பூத ஜ்ஞானம். ஜ்ஞானத்தின் முதிர்ந்த நிலை பக்தி.
கர்ம, ஜ்ஞான யோகத்தாலேயே பெறப்படும் ஒன்று. இந்த பக்தியே முக்தியைப் பெற்றுக் கொடுக்கும் என்று ஒரு சாரார் கருத்து.
இல்லை கர்ம, ஜ்ஞாம, பக்தி யோகங்களே தனியாக, நேரே மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்பது இன்னொரு சாரார் கருத்து.

கர்ம ஜ்ஞான ஸகக்ருதையான பக்தி யோகம் என்பது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து,
தூமலர் தூவித் தொழுது என்கிறபடி மனம் மொழி காயம் என்று மூன்றாலும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருத்தல்.
அர்ச்சனம் செய்தல், நமஸ்காரம், பூத் தொடுத்தல், நாம சங்கீர்த்தனம் செய்தல்,
”மத் கதா ப்ரீதிஹி” என்று அவனுடைய கதையைக் கேட்டல் , அவரை விட்டுப் பிரிந்தால் தாங்க மாட்டாமை ,
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருத்தல் பத்திக்கு லக்ஷணம்.
இது 8 அங்கங்களைக் கொண்டு , பக்தி அங்கியாய் இருக்கும்.

யமம் – சத்தியம் பேசுதல், திருடாமை, அஹிம்சை, பிரஹ்மசரியம் ,
அபரிக்ரஹம் (= தேவைக்கு அதிகமான பொருள்கைளின்மேல் பற்றின்மை) யமம் .

நியமம் – வேதம் (அ ) அதுக்கு நிகரான ஆழ்வார் பாசுரங்களை ஓதுதல், சுத்தியோடு இருத்தல்=
சரீரத்துக்கு அழுக்கு சேறு, சகதி, வியர்வை, மலஜலம்.
மனசுக்கு அழுக்கு காம, குரோதாதி அரிஷட் வர்க்கங்கள்.
ஆத்மாவுக்கு அழுக்கு பாப புண்யங்கள். துஷ்டி = இருப்பதைக் கொண்டு நிறைவடைதல்.
காய கிலேசமான சுத்தி = தேகமாய் போஷிக்காமல், சரிரமாய் நோக்கிப் போதல். மனதை நியமித்து பகவானிடத்தில் ஈடுபடுத்தல் நியமம்.

ஆசனம் – தியானத்துக்கு உசித (துதிகால் தொடையில் தொட அமர்ந்து கொள்கிற பத்மாசனம் போன்ற ) அமர்வு நிலை.

பிராணாயாமம் – கும்பகம் (உள்வாங்கல்), பூரகம் (இழுத்து நிறுத்தல்), ரேசகம் (வெளியேற்றல்) இவைகளை சமமான கால அளவில் செய்தல்.

பிரத்யாஹாரம் – புறப்பொருள்களில் ஈடுபட்டுள்ள புலன்களை வாங்கி, ஆத்ம, பரமாத்ம விஷயத்தில் திருப்பி விடுகை.

தாரணம் – அவைகளை பரமாத்ம விஷயத்தில் நிலை நிறுத்தல் .

தியானம் – நிறுத்திய மனதை மற்றது கலசாத சதத பகவத் நினைவு.

சமாதி – இப்படிப்பட்ட முயற்சிகளால் அந்த பகவானை வசீகரித்தல்.

தைல தாரை போலேயுள்ள விடுபடாத தொடர் நினைவுச் சங்கிலி சாதன பக்தி.
மோக்ஷத்துக்கு சாதனமாக இருக்கிற பக்தி சாதன பக்தி. இது உபாசகர்களுக்கு வழி.

பிரபன்னர்கள் செய்கிற பக்தி சாத்ய பக்தி. மோக்ஷத்துக்கு
சாதனமாக இல்லாது அதுவே பிரயோஜனமாய், பகவானால் அருளப்படும் (பிரசாதிக்கப்படும்) பக்தி சாத்ய பக்தி (அ) பலபக்தி யாகும்.

பிரபத்தி அனுஷ்ட்டித்த பிறகு, மோக்ஷம் போவதற்கு இடையில் உண்டான – இருக்கும் நாள் –
பிராப்ய ருசியினாலே செய்கிற பக்தி ஸ்வயம் பிரயோஜன (சாத்ய) பக்தி. கொடுத்துக் கொள்ளாதே,
கொண்டதுக்கு கைக்கூலி கொடுக்க வேண்டுமாய் –
ஒன்று நூறாக பின்னும் ஆளும் செய்வன் என்கிற ஸ்வயம் பிரயோஜன பக்தி. இவை 8ம் ஒருவகை.

சாதன சப்தகமடியாக செய்கிற பக்தி இன்னொரு வகை.

விவேகம் – ஆகார சுத்தி = ஜாதி துஷ்டமான, ஆச்ரய துஷ்டமான, நிமித்த துஷ்டமான (=தலை மயிர், புழு விழுந்த ) பண்டங்களை ஸ்வீகரியாமை .

விமோகம் – பற்று அற்று இருத்தல் = லௌகீகர்கள் விரும்புகிற விஷயங்களில் இருந்து விலகி இருத்தல்.

அப்பியாசம் – பகவத் விஷயத்தை மீண்டும் மீண்டும் சிந்திப்பது.

கிரியா – பஞ்ச மஹா யக்ஞங்களை ( ப்ரஹ்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவைகளை), விடாமல் செய்வது.

கல்யாணம் – உண்மை பேசுதல், ஆர்ஜவத்தோடு (=மனஸ் ஏகம் , வசஸ் ஏகம் , கர்மண் ஏகம் என்று) நேர்மையாய் நடத்தல்,
கருணையோடு இருத்தல், தான, தர்மம் செய்தல், அஹிம்சை, பிறர் பொருள் நச்சுதல் செய்யாமை இவை .

அநவசாதம் – துக்கம் கண்டு துவளாமை. நிர்வேதம் கொள்ளாமை .

அனுர்தர்ஷம் – சந்தோஷம் வரும்போது உன்மத்தர் ஆகாமை.

இந்த 7 னாலும் கிட்டுவதும் பக்தியே .

பக்திக்கு பிரயோஜனம் தரிசன சமானாகார பகவத் சாக்ஷத்காரம் . இதை மோக்ஷ பர்யந்தம் அனுஷ்டிக்க வேண்டுவதாய்,
மோக்ஷம் அடைந்து அங்கு செய்கிற பக்தி , சாதன பக்தியாய் இல்லாது, சாத்ய பக்தியாய் இருக்கும்.

யாருக்கு எப்போது மோக்ஷம் என்ற கேள்வி வரும் போது,
சாஸ்திரம் ”கர்மாவசாநே மோக்ஷம்” என்கிறது. கர்மங்கள் முழுவதுமாக தொலைவது எப்போது என்றால்

பக்தி நிஷ்டனுக்கு பக்தி யோகத்தில் இழியும் நிலையில் சஞ்சித கர்மங்கள் தீயினில் தூசாகும்.
உபாசன மாஹாத்ம்யத்தாலே ஜன்மாந்தரத்தில் பிராரப்த கர்மம் முடிந்த நிலையில், அந்திம ஸ்மிருதி ஏற்பட்டு மோக்ஷம் கிட்டும் .
இப்படி உபாசகர்கள் விஷயத்தில் பிராரப்த கர்மத்தைக் தொலைத்துக் கொள்வது அவர்களுடைய பொருப்பு .

பிரபன்னனுக்கு சரணாகதி அனுஷ்ட்டிக்கும் போது சஞ்சித கர்மமும், தேஹாந்தர ஆரப்த கர்மமும் நசியும்.
வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் தேஹாவசாநே தொலைந்து இந்த ஜன்மத்தின் முடிவிலேயே மோக்ஷம் கிட்டும்.
இவர்களுக்கு அந்திம ஸ்ம்ருதி நியமமில்லை. அத்தோடு இவர்களின் பிராரப்த கர்மாவை போக்கிக் கொடுப்பது பகவானின் பொருப்பு.

பூர்வாகங்கள் (சரணாகதிக்கு முன்செய்தவை) இப்படிக் கழியுமாகில், உத்தராகங்கள் க்ஞாதம், அக்ஞாதம் என்று இரண்டாய்,
க்ஞாதம் பஸ்சாதாபத்தால் கழியப் பெற்று, அதில்லாது தெரிந்தே செய்தவையாய், வருத்தமும் படாததாய் உள்ளவை யாவை,
அவை அனைத்தும் வர்த்தமான சரீர ஆரப்தத்தோடே சேர்க்கப்பட்டு அதிகப்படி அனுபவிக்க வேண்டியதாய் வரும்.

”ஆக, ஸர்வ பாபேப்யோ மோக்ஷ இஷ்யாமி ” என்கிற இதுக்குப் பொருள், மேல் சொன்ன சஞ்சித பாபங்கள் வரை பக்தனுக்கும் ,
தேஹாந்த்ர ஆராப்த கர்மம் வரை சரணாகதனுக்கும் போக்கித் தருவேன் என்பது கூடார்த்தம் .
அதுவா, வர்த்தமான சரீர ஆராப்த கர்மம் மோக்ஷ பர்யந்தம் அனுபவித்தே அற வேண்டும் என்பதிலே கிருஷ்ண கீதைக்கு நோக்கு.

இங்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது ஒருவனுக்கு ஆயுசு 80 என்று வைத்துக் கொண்டால் ,
அவன் 60 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, மீதம் உள்ள 20 வயதுக்கான ஆரப்த கர்மத்தோடு,
உத்தராகங்களையும் சேர்த்து அந்த 20 வருடத்தில் தீவ்ரமாக அனுபவிக்க வேண்டி வரும்..
அங்கனன்றி, அவரே 20 வயதில் பிரபத்தியை அனுஷ்டிக்க, அனுபவ காலம் நீண்டு தீக்ஷண்யம் மிதமாய் இருக்க ஹேது உண்டு.

வேதனம், தியானம், உபாஸனம் என்கிற எல்லாம் பக்தியையே குறிக்கும்.
இந்த பக்திக்கு அங்கமான சரணாகதியும் ஜ்ஞான விபாகமே.
இத்தை பரபக்தி , பரஜ்ஞான, பரம பக்தி என்று பக்தியின் மூன்று நிலைகளாகச் சொல்லுவார்.

ஜ்ஞாதும், திரஷ்ட்டும் , பிரவேஷ்ட்டும்
அறிகை, காண்கை , அடைகை
ஜ்ஞான, தரிசன , பிராப்தி
இவை ஒவ்வொன்றும் பக்திக்கு அங்கமான பிரபத்தியின் ஆவிஷ்காரமே.

அறிகை – பகவானாப் பற்றிய ஜ்ஞானம் ஏற்படுகை., ஸம்ஸ்லேஷத்தில் தரிப்பும் , விஸ்லேஷத்தில் தரியாமையுமாகிற பரபக்தி நிலை.
காண்கை – பிரத்யக்ஷ தர்சன ஸமானாகாரமான பர ஜ்ஞானம். சாட்சாத்காரமாவது நேரில் காண்பது போன்ற மானச அநுபவம் .
அடைகை – பகவான் திருவடிகளை அடையப் பெற்று மீளா இன்பத்தில் திளைக்கை பரம பக்தி.

பிரபன்னாதிகாரிக்கு சரீர அவஸாந பர்யந்தம் பரபக்தியாலே செல்லும். சரீர வியோகத்தில், அர்ச்சிராதி மார்க கதி மத்தியில்
பரஜ்ஞான தசையான தரிசன ஸமாநாகாரம் லபிக்கும் . பரம பதத்தை சேர்ந்தவாரே பரம பக்தி தலை எடுக்கும்.

ஆழ்வாருக்கு இவைமூன்றும் திருப்புளியாழ்வார் அடியிலேயே பிராப்தமாம்பட்டி வைத்தது,
இவரைக் கொண்டு ஊரும் நாடும் திருத்த வேண்டிய படியாலே. அது ஆழ்வார் பால் அவனுக்குண்டான கருணை என்பதை விட
ஆழ்வார்மேல் அவன் கொண்ட பிரேமம் என்றே சொல்ல வேண்டும். கணவன் மனைக்கு மத்தியில் நியமங்கள் நடக்கலாம் ,
காமுகன் காமுகிக்கு இடையில் அக்ரமமே ஸக்ரமம் அன்றோ?

சாதன பக்தியானது கீழ்ச் சொன்ன அஷ்டாங்க யோகத்தாலோ (அ) சாதன சப்தகத்தாலோ உண்டாவது.
பல பக்தியோ வென்னில் ஈஸ்வர கிருபையாலே ஏற்படுவது. நம் பூர்வாச்சார்ய கோஷ்டியில்
நம்மாழ்வார் தொடக்கமாக நாதமுனிகள், எம்பெருமானார் என்று அனைவரும் பல பக்தி நிஷ்டர்களேயாவர் .
பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி என்று கொண்டு பக்தியில் அவர்கள் இழிந்தார் இல்லையோ என்னில், அங்கனன்று.

அவதார ரஹஸ்யம், புருஷோத்தம வித்தை இதன் படிக்கு பக்தி உபாசகனாக இருந்து ”புனர் ஜன்ம ந இதி” என்கிற விதி விலக்கால்,
அந்த ஜன்மத்தின் இருதியில் , பிரபன்னனைப் போலவே முக்தி அடைய வழி உண்டானாலும் ,
கால விளம்ப அசகதவமும் காரணமன்று. ஸ்வரூப விரோதமே காரணம். பக்தி ஸ்வாதந்த்ரிய அனுரோதாமான படியாலே .
தங்கமயமான பாத்திரத்தில் வைத்த பாலேயானாலும் , ஒரு துளி கள்ளு சேர்ந்தால் எப்படி நிஷித்தமோ அதுபோலே ,
ஆத்மா = தங்கபாத்ரம். பக்தி = பால். ஸ்வாதந்திரியம் = கள்ளு, என்பதாலே அஸ்வீகாரம்.

அங்கனாகில் பூர்வாச்சார்ய கோஷ்டியில் பக்திக்கு அங்கீகாரமில்லையோ என்னில் , தவறு.
சாதன பக்தியை விட்டு, சாத்ய பக்தியை அன்றோ அவர்கள் ஆதரித்தது.
”சார்வே தவ நெறிக்கு தாமோதிரன் தாள்கள் …” என்கிற திருவாய்மொழி (10-4-1) வியாக்கியானம் இங்கு அனுசந்தேயம் .

ஸ்வ பிரயோஜனம், ஸ்வயம் பிரயோஜனம், பர பிரயோஜனம் என்கிறத்தின் அடிப்படையில் வந்தவை இத்தனையும்.

ஸ்துதி, நமஸ்காரம் போன்கிற பிரயோகம் பக்தியை குறிக்குமோ என்னில் , இல்லை. அவை உபசார வழக்கே ஆகும்.

ஆத்மாவா அரே திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதிவ்ய: என்றவிதில்
எது விதி வாக்கியம் , எது ராக பிராப்தம் என்று விசாரித்ததில்
வேத படன வனந்தரம் ப்ரஹ்ம தியான விஷயமாக கேட்பதற்கும், மனனம் பண்ணுவதற்கும்
ஒருவன் ஆசைகொண்டு வருவது பிராப்தமாகையால் , ஸ்ரோத்ரம், மந்தாரம் இரண்டும் ராக பிராப்யமாய் ,
ப்ரஹ்ம சாட்சாத்காரத்துக்கு நிதித்யாஸனமே விதி வாக்கியம் என்று கொள்வதே அநுமதம்.

தியானம் என்கிற பக்தியை, வித்யா பேதத்தால் இரண்டாக பார்க்கப் படுகின்றது.
இகலோக பலத்தைக் குறித்தாக்கில், ஐஹிக்க-பலா என்றும், மோக்ஷ பலத்தைக் குறித்து செய்யும் தியானம்
பாரமார்த்திக-பலா என்றும் இரண்டு வகை. இதையே உத்கீத வித்யா, மற்றும் பிரம்மா வித்யா என்றும் கூறுவார்.

அக்ஷி வித்யா – கண்ணில் சூரியனை வைத்து செய்யும் தியானம்.

அந்தராதித்ய வித்யா – சூர்ய மண்டல மத்திய வர்தியான ப்ரஹ்மத்தைக் குறித்துச் செய்யும் உபாசனம்.

தகர வித்யா – ஹ்ருதயத்து தகராகாசத்தில் உள்ள ப்ரஹ்மத்தை தியானிப்பது.
.
பூமா வித்யா – நிரதிசய சுகம் முதலிய குணங்களுக்கு ஆஸ்ரயனாக செய்யும் வித்தை.

ஸத் வித்யா – ஸத் சப்த வாச்யனான பகவானைத் தியானிப்பது.

மது வித்யா – வஸ்வாதிகளுக்கு அந்தராத்மாவாககே கொண்டு தியானிப்பது.

பஞ்சாக்கினி வித்யா – பகவானை ஆத்மாவாகவும், தன் ஆத்மாவை அவருக்கு சரீரமாகவும் வைத்து செய்யும் வித்யை.

அந்தரிக்ஷ வித்யா –

உப போசல வித்யா –

சாண்டில்ய வித்யா –

புருஷ வித்யா –

பிரதர்தன வித்யா –

வைஸ்வானர வித்யா –

என்று ப்ரஹ்ம வித்தைகள் 32. அதில் ஒன்று

நியாஸ வித்தை – இதுதான் சரணாகதி.

அநன்ய ஸாத்யே ஸாபீஷ்டா மஹா விஸ்வாசா பூர்வகம் ததேக உபாயதா யாஞ்சா பிரபத்தி சரணாகதி ஹி – என்கிற
பிரபதனம் சரணாகதி. பிரபத்யே என்கிறதில் உள்ள கத்யர்தே புத்யர்த்தம் ஜ்ஞான கார்யமான படியாலே ,
இந்த பிரபத்தி ஜ்ஞான விபாகமாக சொல்லப்படுகிறது.

பஞ்ச அங்க வித்யையே பரண்யாசம்.

ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்
பிராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விசஸ்வாச:
கோப்திருப்த வரணம் ததா
கார்ப்பணயம்
இவை ஐந்தும் அங்கங்களாகக் கொண்ட ஞாசமாகிற = ஆத்ம ரக்ஷணாபர ஸமர்ப்பணமே
பிரபத்தி என்பது ஸ்வாமி தேசிகர் பக்ஷம்.

இத்துடன்
ஆத்ம நிக்ஷேபமாகிற
ஆத்ம ஸமர்பணம் சேர்த்து ஷடங்கியாக இருப்பது சரணாகதி.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய – என்கிற ஒன்றே பிரபத்திக்கு அங்கம்.
மேற்சொன்ன 6ம் அவகாத-ஸ்வேதம் = நெல் குத்த வியர்வை தானே சுரக்குமா போலே
சம்பாவித ஸ்வபாவம் என்பது ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யர் பக்ஷம்.

ஈஸ்வர பிரவிருத்தி விரோதி ஸ்வ பிரவிருத்தி தந் நிவிர்த்தி ஏவ பிரபத்திஹி என்கிற இத்தால்,
ஸ்வ பிரவிருத்தி நிவிருத்திக்கு ஈடான ஸர்வ தர்ம பரித்யாகம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமாகாதோ என்னில் ,

அங்கங்களை எதிர்பார்க்கும் பிரபத்தியால் பகவான் கார்யம் செய்கிறான் என்றால்
அது சாதன பக்தியாகுமே ஒழிய சாத்ய பக்தி ஆகாது.
அந்த விதத்தில் மேற்சொன்ன ஸர்வ தர்ம பரித்யாகம் நிவிர்த்தி தர்மம் மாகையாலே அது, அங்கமாக கணக்கிடப் படாது.

பிரபதியின் விசேஷங்களாவன :
தேஹாவஸாநே மோக்ஷம்.
அந்திம ஸ்மிருதி வர்ஜனம்.
ஸக்ருத் = ஒருமுறையே செய்யப்பட வேண்டியதான் அபேக்ஷை .
ஜ்ஞான விசேஷ ரூபம் = ஜ்ஞானத்தின் செறிந்த நிலையோடு .
ஒரு சதாசார்யனை அண்டி அறிய வேண்டும் ரஹஸ்யம் இது.

சணல் கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே , பிரபத்திக்கு விஷய நியமம் அதிமுக்யம்.
இத்தால், தேவதாந்திர சம்பந்தமும், பாகவதா பச்சாரத்தையும் இது பொறாது . ஆர்த்தி தலை எடுத்து,
ஆர்த்தியில் பூர்த்தி ஏற்பட்ட வன்றே (= விஷயாந்தர ஸ்பர்சம் லவலேசமும் இல்லையான பின்பே) மோக்ஷம் சுநிஸ்ச்சிதம் .

”இன்நின்ற நீர்மை இனியாமுறாமை” என்று தொடங்கின ஆழ்வாருக்கு உடனே கிட்டாத மோக்ஷம்,
நாலு பிரபந்தம் பாடி, வைகுந்தத்தில் நின்று, வரகுண மங்கை இருந்து, புளிங்குடிக்கிடந்து என்றபடி
ஆழ்வாராகிற ஆத்ம = அன்னம் பரிபக்குவமாக பார்த்தானாய், நமக்கும்
”மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்” பிரானான அவன், அந்திம தசையில்
அவைகளை உண்டாகித் தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வான்.

தேகமே ஆத்மா என்றிருக்கிற லோகாயதனுக்கு ஸ்வர்க, நரக , பாப, புண்யங்கள் கிடையா தாகையாலே
பக்தி, பிரபத்தி இவை பொருந்தாது .

க்ஷணிக வாதியான பௌத்தன், க்ஷணிக ஜ்ஞானமே ஆத்மா என்பதால், முக்தி, உபாயங்களின் பிரசங்கமில்லை.
ஒன்று இன்னொன்றில் மூட்டுக்கையாகிற ஜ்ஞான பரம்பரை வைத்துக் கொண்டு பார்க்கில்,
உபாசிக்கும் ஆத்மா ஒன்றாக, மோக்ஷ பல சித்தி அடையும் ஆத்மா வேறு என்று முடியும் .
ஒருத்தன் நோவுபட்ட இன்னொருத்தன் அனுபவிப்பது சாத்தியமல்லவே.

சப்த பங்கி வாதிகளான க்ஷபணர்கள் மோக்ஷத்தை இருக்கு, இல்லை, இருந்தும் இல்லை, இல்லையாய் இருக்கும்
என்று பேசி சேருமிடம் அறியமாட்டாத அவர்களுக்கும் பக்தி, பிரபத்தி பொருந்தாது.

வைசேஷிகர்கள் பாஷாண கல்பமான ஸ்திதியை மோக்ஷம் என்றும்,
சாங்கியன் சித் , அசித் தத்வங்களை ஒப்புக்கொண்டு,
ஈஸ்வரனை இல்லை செய்கிறபடியால், யாருக்கு எதனால் மோக்ஷம் என்பது அஸ்பஷ்ட்டம்.

மாய வாதிகளான அத்வைதிகள் வியாவஹாரிக பிரஹ்ம வாதத்தால் பாரமார்த்திக மோக்ஷத்தை ஒப்புக்கொள்வ தில்லை .
பாஸ்கர, யாதவ பிரகாசர்கள் கர்ம – ஜ்ஞான சமுச்சயம் மோக்ஷ சாதனம் என்ன, வேதமானது பக்தியையே
மோக்ஷ சாதனமாக சொல்லுகிற படியால், இவர்கள் மதம் குதிருஷ்டி மதமாகிறது.
வேத பிராமாண்யத்தை ஒப்புக் கொண்டும், அதற்கு விருத்தமான கொள்கையை பேசுவதால் அதுவும் தள்ளுபடி.

சைவம், லைங்கியம் , பாசுபதம் போன்ற மதங்களில், பிராப்யம் சிவன் என்று பேச, அதுவும்
அநுத்தேஸ்ய மாயிற்று.

இத்துடன் தர்மபூத ஜ்ஞான விளக்கம் முற்றுப் பெறுகிறது.

———————————————————————————-

8 வது அவதாரம் ஜீவனைப் பற்றியது.
கீழே சொல்லப்பட்டவையுள் பிரமாணங்கள் 3 அவதாரம் .
பிரமேயத்தில் அடங்கின திரவ்யங்களைப் பற்றியதான 4 அவதாரங்கள்.
பிரகிருதி, காலம், தர்ம பூத ஜ்ஞானம், சுத்த சத்வமான பரம பதம்.
இவை பராக் என்றும், திரவ்யங்களில் அடங்கின ஜீவனும் , ஈஸ்வரனும் பிரத்யக் என்றும் பார்த்தோம்.

ஜீவன் என்பது :
அணுவாய், நித்தியமாய், ஜ்ஞானமாய், ஜ்ஞான குணகனாய் பகவத் சேஷ பூதனாய் விளங்குமவர்.
தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றிற்கும் சாமான்ய லக்ஷணம் சொல்லப் புகில் :

சித்தும், அசித்தும் பகவத் சேஷ வஸ்து.
சித்தும், ஈஸ்வரனும் ஜ்ஞானம் உடைத்து.
அசித்தும், ஈஸ்வரனும் தன்னை சேர்ந்தவர்களை தன்னைப் போல் ஆக்கும் ஸ்வபாவம் படைத்தவர்கள்.
அசித் சம்பந்தம் அவஷ்டப்யம் . பகவத் சம்பந்தம் உன்மீயம்.

பிரத்யக்த்வம் – தனக்குத் தானே ஒளி விடுபவர். தானே பிரகாசிப்பவர். ஸ்வயம் பிரகாசத்வம்.
சேதனத்வம் – அறிவுடையவர். தனக்குப் பிரகாசிப்பவர். ஸ்வஸ்மை பிரகாசத்வம்.
ஆத்மத்வம் – அநாத்மா அல்லாதது. சரீரத்துக்கு பிரதி சம்பந்தியாய், ஈஸ்வரனுக்குத் தான் சரீரமாக இருப்பது.
கர்திருத்வரம் – செயல் திறன் உடையது. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, மோக்ஷ பிரதத்வம் நீங்கலாக ,
லௌகிக கார்ய, மோக்ஷ சாதன அனுஷ்டான பர்யந்தமான கர்திருத்தவம் உடையவர். சங்கல்ப ஜ்ஞான ஆஸ்ரயத்வம் கர்திருத்தவம் .

இவை 4ம் ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கு உண்டான சாமான்ய (பொதுவான) லக்ஷணம்.

ஆத்மா, அறிவு, பொருள் (அசேதனம்) இவையில்,

ஆத்மா – ஜ்ஞானம் உடையதாய், ஜ்ஞானமுமாய் – இரண்டுமாய் இருக்கும்.

அறிவு – ஜ்ஞானமாய் இருக்கும். ஜ்ஞான முடையதாய் இருக்காது.

பொருள்கள் – ஜ்ஞான ஆகாரமோ, பாசமோ – இரண்டும் இல்லாதது.

இல்லதும் , உள்ளதும் அல்ல தவனுரு — நம்மாழ்வார்.

இல்லது – ஜ்ஞானம் அற்றது, அசித்து .
உள்ளது – ஜ்ஞானம் உள்ளது. சித்து .
அல்லது அவனுரு – சித் , அசித் விலக்ஷணன் என்கிற வியாவர்த்தம் சொல்ல வந்த பாசுரம் இது.

கணவனுக்கு மனைவி, பிரதி சம்பந்தி.
சேஷனுக்கு சேஷி, பிரதி சம்பந்தி. அது போல
சரீரத்துக்கு ஆத்மா, பிரதிசம்பந்தி –
ஒன்றிருந்தால்தான் , இன்னொன்று இருக்கும் என்கிற சம்பந்தம், பிரதி சம்பந்தத்வம்.

இனி ஆத்மாவுக்குண்டான அசாதாரண லக்ஷ்ணம் :

1. அணுவாய் இருக்கும் போதே அறிவுடையதாய் இருக்கும்.
2. பகவத் சேஷமாய் இருக்கும் போதே ஜ்ஞானத்தோடே இருப்பவர்.

சேஷத்வத்தை முதலில் சொல்லி ஜ்ஞாத்ருத்வத்தை அடுத்து சொன்ன படியால், ஆத்ம ஸ்வரூபத்துக்கு சேஷத்வமே பிரதானம்.

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் (திருவாய் 8-8-2)

ஈஸ்வரனுக்குண்டான சரீர-ஆத்ம அந்தராத்மதையைச் சொல்லும்போது, ஆத்மாவை ஆழ்வார்
அடியேன் என்று சொன்னபடி காணலாம். ”உள்ளான்” என்கிற வியாபக ஜ்ஞானம் உடைய ஆழ்வார் தன்னை,
என்னுள் உள்ளான் என்று சொல்லாமல் அடியேன் உள்ளான் என்று சொன்ன படியாலே,
ஜ்ஞாதிருத்துவத்தைக் காட்டிலும், சேஷத்வமே ஆத்மாவுக்குண்டான விசேஷ தர்மமாய் தேறுகிறது .

யானும் தானாய் ஒழிந்தானே (நம்மாழ்வார் 8-8-3) என்ற இடத்தில் ஜீவ-பர ஐக்கியம் அர்த்தம் ஆகுமோ என்னில்,
”ஆய்” என்கிற சாமானாதிகரண்யத்தாலே சரீராத்மா பாவத்தைக் காட்டியதாகவே பார்க்கலாம்.

பகவத் சேஷத்வம் சித் அசித் இரண்டுக்கும் பொது. அந்த சேஷத்வமாகிற வைரத்தை ஜ்ஞாத்ருத்வமுடைய
தங்க பெட்டியில் இருப்பது அசித்தோடு இருப்பதைக் காட்டிலும் உயர்வு.
அது தோற்ற சேஷத்வத்தைச் சொல்லி பிறகு ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லுகிறது.

அப்படிப்பட்ட உயர்ந்த பகவத் சேஷத்வத்தை மறந்து வர்த்திக்கை அசித் சமானமன்றோ?
ராஜ புத்திரன் அத்தை அறியாது கிடக்க, சம்பந்த ஜ்ஞானம் பெற்றவாரே உண்மை யான அறிவு பிறக்குமா போலே,
ஒரு சதாசாரியனை அண்டி வருகிற சேஷத்வ ஜ்ஞானம் , ஆத்மாவை அழகு படுத்தும்.

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல்நெஞ்சே ! (திருமழிசை ஆழ்வார்) அப்போது தான்
பகவத் தத்வம் நெஞ்சுக்கு நன்கு பிரகாசிக்கும். நெஞ்சும் நல் நெஞ்சாகும்.

ஆதேயத்வம் (தாங்கப் படுமவர் )
விதேயத்வம் (ஆணைப்படி நடப்பவர்)
பராதீன கர்த்ருத்வம் (எண்ணப்படி செய்பவர்)
பரதந்திரம் (பகவானையே பரம பிரயோஜனமாக கொண்டிருப்பவர்)

தேக, இந்திரிய, மனப் பிராண, தீ: விலக்ஷணர்.

தேகமே ஆத்மா என்பது பொருந்தாது. நான் உடல் என்பது வழக்கு இல்லை. என்னுடைய உடல் என்பது தான் வழக்கு.
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு தேக அதிரிக்தன் ஆத்மா என்பதை உறுதி படுத்துகிறது.

கண்களால் பார்க்கிறேன் என்பதிலுள்ள ”ஆல்” 3ஆம் வேற்றுமை உறுபு வெளி இந்திரியங்கள் ஆத்மா இல்லை,
அவை கருவி , ஆத்மா கர்த்தா என்பதை உறுதி படுத்துகின்றன. த்ரிதீயா விபத்தே கருத்ருத்வாத் என்பது சூத்திரம்.

மனஸா ஸ்மராமி , நெஞ்சால் நினைக்கிறேன் என்கிற வழக்கும் – ”ஆல்” வேற்றுமை உறுபு –
அந்தக் கரணமான மனசைக் காட்டிலும் ஆத்மா வேறு என்பதை தெரிவிக்கிறது.

மம பிராணாஹி – என்னுடைய பிராணன் என்கிற வழக்கும்
”உடைய” என்கிற வேற்றுமை உறுபு கொண்டு ஆத்ம பரிச்சேதம் சொல்லிற்று.

தீ = ஜ்ஞானம். தர்ம ஜ்ஞானத்தை உடையது ஆத்மா. ”யான்” தர்மி ஜ்ஞானம். ”எனது” தர்ம (பூத) ஜ்ஞானம்.
ஆக தர்ம பூத ஜ்ஞானமும், ஆத்மாவும் வேறு.

ஆத்மா அணு, வேத உபநிஷத் பாகங்களில் இப்படி சொல்லி இருக்கிறபடியால். .
ஆனையின் ஆத்மா ஆனை அளவு, பூனையின் ஆத்மா பூனை அளவு என்கிற ஜைன சம்பிரதாயம் பொருந்தாமையோடு கூடியது.
அவர்கள் சொல்லுகிற படியானால், ஆத்மாக்கள், வேறு வேறு பிறவிகளில் , எடுத்துக் கொள்கிற தேகத்துக்கு ஏற்ப
சுருங்கல் , விரித்தல் செய்ய வேண்டும். அதாவது ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் உண்டு என்பதை நியாயப் படுத்த வேண்டும்.
உண்மையில் ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களை அனுபவித்தலாகிற ஸ்வபாவ விகாரம் உண்டு. ஸ்வரூப விகாரம் கிடையாதே .
ஆகவே அது ஏகதா அணுவாகவே இருக்கும், ஒரு கால விசேஷத்தில் சரீரத்தை விட்டு ஆத்மா, உத்கிரமித்து,
அர்ச்சிராதி மார்க்கத்தில் பரமபதத்தை அடைகிற படியால். ஆத்மா விபுவாக இருந்தால், பயணப்பட வாய்ப்பில்லை யாகையாலே.

ஆத்மா ஒரு இடத்தில் இருந்தாலும், அதனுடைய தர்மபூத ஜ்ஞானம் சரீரம் முழுவதும் வியாபிக்கும்.
ஸ்வப்ன சரீரத்திலும் வியாபிக்கும். ஆபாச இன்பத்துக்கு ஐம்பது சரீரம் என்று சௌபரிக்குப் போலே
அத்தனைக்கும் வியாபிக்கும். கூடு விட்டு கூடு பாய்கிறபோது அந்த இரண்டு சரீரமளவும் வியாபிக்கும்.

ஆத்மா நித்யம். பௌத்த, சார்வாக மதத்தில் சொல்லியது போல் ஆத்மா அநித்யமாய், சரீரத்தோடே அழிவதாகில் ,
கிருத பிரணாசம் (=செய்தவை களுக்கு பலன் கிட்டாமை)
அகிருத அப்பியாகமம் (=செய்யாதவைகளுக்கு அனுபவிக்கை)
ஆகிற தோஷம் வரும்.
ஆத்மாவுக்கு உற்பத்தி, நஷ்ட்டம் தேக சம்பந்தமும், வியோகமும் ஸ்வரூபேண உண்டாதல் சாதல் கிடையாது.
ஜீவராசிகளுக்கு ஜ்ஞானத்தில் உண்டான தாரதம்யத்துக்குச் சேர மனுஷ்ய, மிருக, ஸ்தாவர, ஜங்கம பிறவிகள் கிடைக்கின்றன.
அவர்களின் ஜ்ஞானம் கர்மத்தால் மறைக்கப் படும் அளவைப் பொருத்து
ஜ்ஞான சங்கோச, விகாச பரிமாணத்தின் அளவையைக் கொண்டு அந்தந்த பிறவி கிட்டுகிறது எனலாம்.

மனுஷ்ய சரீரத்தில் நகம் முதல், மயிர் கால் வரை பல ஆத்மாக்கள் உண்டு.
அவைகள் கல்லுக்குள் இருக்கிற ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் மழுங்கின நிலையில் உள்ள படியாலே
அதிஷ்டான ஆத்மாவுக்குண்டான சுக துக்க அனுபவங்கள் வியாபரியாத ஆத்மாக்களுக்கு கிடையாது.

ஆக ஆத்மா ஒன்றல்ல, பின்னமே. ஒவ்வொரு சரீரத் துக்குள்ளேயும் உள்ள ஆத்மாக்கள் வேறு வேறு என்பது அத்வைத சித்தாந்த பிரதிபடம் .
ஜ்ஞானத்தில் சமண ஆகாரத்தைக் கொண்டு, ஜாத்யேக வசனமாய் அவை ஒன்று என்று சொல்லும் வழக்கு உண்டு.
பரமாகாச-கடாகாசம் போலன்று.

ஆகாசத்தில் உள்ள சூரியன், குளத்தில், கிணற்றில், கண்ணாடியில் பட்டு ஒன்று பலவாக தெரிவது போல்,
ப்ரஹ்மம் ஒன்றே. சரீரமாகிற உபாதியால் அவை பலவாக தோற்றுகின்றன.
சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தால், பல என்ற அந்த பிரமம் விலகும் . என்பது உண்மையானால்

நித்யோ நித்யானாம், சேதன சேதனாநாம் என்கிற பஹு வசன பிரயோகம் ஆத்மாக்கள் ஒன்றல்ல,
பல என்று பேசுவதை எப்படிப் பரிஹரிப்பது? ”ஏஷாம் – தேஷம் ” என்கிற கீதா ஸ்லோகத்தை எப்படிப் பொருந்த விடுவது?
ஆக அத்வைதம் பொய்யாகி, ஆத்மாக்கள் பல என்பதே நிரூப்யம்.

அஹம் அல்லாததை அஹம் புத்தி பண்ணுகை

ஆத்மா கர்த்தா – லௌகிக வியாபாரங்கள், மற்றும் மோக்ஷோபாய சாதனா அனுஷ்டான, உபாசனா கிரியா கர்தாவாகையாலே.
போக்தா-பாப புண்ய விஷயானுபவங்கள் நடக்கிற படியாலே .
சரீரி, சரீரம் – இந்த உடலோடும் , பரமாத்மாவோடும் வைத்துப் பார்க்கையில்,
உடலை தாங்குபவராயும், ஈஸ்வரனால் தாங்கப் படுமவராயும் இருக்கையாலே.
அமலத்வம்-குற்றமற்ற தன்மை. இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஆத்மா -; ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருக்கும்

ஜ்ஞானம் -; ஜ்ஞானம் ஞேயம் 2ஆய் மட்டும் இருக்கும் . ஜ்ஞாதாவாய் இருக்கமாட்டார் அசேதன மாகையாலே.

பிரகிருதி -; ஞேயமாய் மட்டும் இருக்கும்.

ஈஸ்வரன் -; ஆத்மாவைப் போலே ஜ்ஞானம் ஜ்ஞாதா ஞேயம் 3 மாய் இருப்பர்.
கூடவே தாதாவாய் இருப்பர், மூன்றன் பிரதாதா அவரானபடியாலே.

—————————————————————————

பர பக்ஷம் :

பௌத்தன் – ஆத்மா க்ஷணிகம். ஏனெனில் அவர்கள் மதத்தின் படி ஜ்ஞானமே ஆத்மா. ஜ்ஞானம் க்ஷணிகம்.
ஆகவே ஆத்மாவும் க்ஷணிகம். ஒருகாலத்தில் ஏற்படும் ஜ்ஞானம் மறறொரு காலத்தில் ஏற்படும் ஜ்ஞானத்தைக் காட்டிலும் வேறு பட்டது,
காலத்தால். அப்படிப் பார்த்தால் நோற்பும் பயனும் வெவ்வேறு ஆத்மாக்களதாய் ஸ்ரமிசிதவனுக்கு பலன் இல்லாமல் போகும்.
உலகியல் நடைமுறை இப்படி இல்லை ஆதலால், ஜ்ஞானமும் க்ஷணிகமல்ல. ஆத்மாவும் க்ஷணிக மல்ல .

சாருவாகன் – பூத சதுஷ்டயத்தால் (ஆகாசம் தவிர்ந்த பிருதிவி, அப்பு தேஜஸ் வாயு இவற்றால்) ஆன தேகமே ஆத்மா.
தேக அதிருக்த ஆத்மா என்பது இல்லை. ஸ்வர்க்க நரகங்கள் இல்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்கிற நாஸ்திக வாதம்.
உயிருள்ள தேகம், உயிரற்ற உடல் என்கிற வித்யாசம் தெரிகிற படியால் இவர்கள் பக்ஷமும் உண்மைக்குப் புறம்பானது.

ஜைனர் – யானைக்கு யானை அளவு பெரிய ஆத்மா . எறும்புக்கு எறும்பளவு ஆத்மா என்கிற இவர்கள் பக்ஷமும் நிரஸ்த்தம் .
இந்த ஜென்மத்தில் யானையாக இருந்து அடுத்த ஜென்மத்தில் எறும்பாக பிறக்க வேண்டுமானால்,
ஆத்மா சுருங்கல், விரித்தலுக்கு உள்ளாக வேண்டும்.
சாஸ்திரங்கள் ஆத்மாவை அணு என்று சொல்லி இருக்கிற படியால்,, இவர்கள் வாதமும் தவறு.

சாங்கியம் – கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பிரகிருதி புருஷன்கள் அளவே. மூன்றாவதான ஈஸ்வர தத்துவம் இல்லை என்று மறுப்பவர்கள் .
செயல் உடலதாகவும், அனுபவம் ஆத்மா வுடையதாகவும் பார்ப்பவர்கள்.
இது நிரீஸ்வர் சாங்கியம். ஸேஸ்வர சாங்கியர் ஈஸ்வரனை ஒத்துக் கொண்டாலும்,
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் பூத பரிமாண உடலுக்கேயாய்,
ஜெபா குஸும – ஸ்படிக உதாரணத்தின் மூலம், எப்படி புஷ்பத்தின் சிகப்பு நிறம் ஸ்படிகத்தில் பட்டு, ஸ்படிகம் சிகப்பாக தெரிகிறதோ,
அதுபோல, தேகத்துக்குண்டானது ஆத்மாவுக்குப் போலே தெரிகிறது என்பர்.
உண்மையில் கருத்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜீவனுக்கே என்பது வைதிக பக்ஷம். ராமானுஜ சம்பிரதாயமும் கூட.

யாதவ பக்ஷம் – பிரம்மத்தின் அம்சம் ஜீவன் என்பது . அதுவும் தவறு ஏனென்றால், பிரமத்துக்கு சரீரம் பிரக்ருதியும், ஆத்மாவும்.

பாஸ்கர பக்ஷம் – சரீரமாகிற உபாதியாலே பிரம்மத்தின் ஒரு கண்டமாக (பகுதியாக) சோபாதிக ஜீவன் இவர்களால் பார்க்கப் படுகிறது.
அதுவும் தவறு ஏனெனில், ஆத்மா அணுவாகவும், பிரமத்துக்கு சரீரமாகவும் இருக்கிற படியால்.

அத்வைதம் – பிரம்மத்துக்கு அஜ்ஞானம். தன்னைப் பலவாக பிரமிக்கிறது அப்படி இல்லை என்கிற ஐக்கிய ஜ்ஞானம் வந்தால்,
அதுவே மோக்ஷம். இதிலே பல கேள்விகள்.

1. பிரம்மத்துக்கு பிரமம் என்பது இயற்கையா? செயற்கையா?
2. அதாவது, ஸ்வரூபமா? ஸ்வரூப வியதிரேகியா?
3. ஸ்வரூபம் (இயற்கை) என்றால், அவித்யை விலக வாய்ப்பில்லை. அப்படியானால்,
பிரமத்தால் வந்த ஜகத் வியாவிர்த்தி விலகாது / அஸ்த்தமிக்காது .அங்கனாகில் மோக்ஷம் சித்திக்காது .
4. இயற்கை இல்லை. செயற்கைதான் என்றால், அத்வைதம் நிற்காது. பிரம்மம் என்கிற ஒருதத்வம்.
பிரம்மத்துடைய அஜ்ஞானம் என்கிற ரெண்டாவது தத்வம் சித்திக்கும்.
5. இதில் எது உண்மை? பிரம்மம் பாரமார்த்திகமா? அதன் அஜ்ஞானம் பாரமார்த்திகமா?
6. பிரமத்தை பொய் என்று சொல்ல வாய்ப்பில்லை. அவித்யை பொய்யானால், பொய்யான ஒன்றை எப்படிப் போக்க?
7. முடிவாக, அவித்யா சபளித்த பிரம்மத்தின், அஜ்ஞானத்தை யார் போக்க?
அதுவும் பொய்யான ஒரு ஆசாரியானால் , பொய்யான ஜ்ஞானத்தால் மறைக்கப் பட்ட உண்மையான
பிரம்மத்தினிட மிருந்து பிரமத்தை எப்படிப் போக்க முடியும்?
என்பதான 7 வித (ஸப்தவித) அனுபபத்தி சித்திக்கும் . இதனால் ஏக ஜீவ பக்ஷமும் நிரஸநமாகிறது .

வாசஸ்பதி மதம் – பிரம்மத்துக்கு பல அந்தக் கரணங்கள் (மனசு) இருப்பதால், பல ஜீவர்களாக தோற்றுகிறது
என்பதும் ஆத்மா விபு என்கிற வாதம் உள்பட அனைத்தும் தவறு. ஏனென்றால்,

1. ஆத்மாக்கள் அநேகம்.
2. அதனதன் கர்மத்தால், வெவ்வேறு சரீரங்களை எடுத்துக் கொள்கின்றன.
3. பிராகிருத சரீரம் அசேதனம். கர்மத்தால் அதனுள் விலங்கிடப் பட்டுள்ள ஆத்மாக்கள் அனைத்தும் சேதனம்.
4. அவை அனைத்தும் பிரம்மத்துக்கு சரீரமாய் (உடலாய்) பிரகாரமாய் இருக்கும்.
5. சாஸ்திர ஜ்ஞானத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் , கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களை
அனுஷ்ட்டித்து (அ) பகவானை சரணமடைந்து அவனுடைய கருணையால் பாபங்கள் விலக்கப் பெற்று
சம்சாரத்தைக் கடந்து மோக்ஷமடைகிறான். என்கிற, இதுவே சாஸ்திர சம்மதமான மார்க்கம். மற்றவை குத்ருஷ்டிகள் மதமாகின்றன.

6. ஆத்மா விபுவல்ல அணுவே. அதன் தர்ம பூத ஜ்ஞானம் பல சரீரங்களில் பிரசுரிக்க ஒருவர் பல சரீரம் எடுக்கவோ
அவர் புகழ், பெருமை பல இடங்களில் வியாபிக்கவோ, வாய்ப்புண்டு .
அது யோக சக்தியாலோ / அதிருஷ்ட பலத்தாலோ உண்டாவது.

இங்கு அதிருஷ்டமாவது பகவானுக்கு பிரீதியை விளைவிக்கிற , ஜீவனாலே செய்யப் பட்ட கர்ம விசேஷம்.
சுருங்கச் சொல்லில், பகவத் கிருபை (அ) பகவத் ப்ரீதி விசேஷ ஜ்ஞான ரூபம் அதிருஷ்டம்.
”விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?” என்று ஆழ்வார் விளக்கம்.
அது பகவான் ஒருவனிடத்தில் மட்டும் நிலைப்பது., தேவதாந்தரங்கள் அநித்யமாகையாலே.

—————–

அந்த ஜீவாத்மா 1. பத்தர். 2.முக்தர். 3. நித்யர் என மூவகைப் பட்டவர்கள்.
இதில் பத்தர்கள் கர்மத்துக்கு வசப்பட்டு, பிராகிருத பூமியில் இன்னும் உழன்று கொண்டு இருப்பவர்கள்.
முக்தர்கள் கர்மங்களில் இருந்தும், பிறவித் தளையிலிருந்தும் விடுபட்டு, அர்ச்சிராதி மார்க்கத்தில்
”அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை” என்ற கணக்கில் வைகுந்தம் புகுந்தவர்கள்.
நித்யர்கள், அநந்த,கருட,விஸ்வக்ஷேணர் போல, கர்ம வாசனையே இல்லாதவர்களாய்,
பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தில் இருப்பவர்கள்.

1. பத்தர்கள் : 1. தேவர்கள் :

பிரம்மா ; சிவன்.
||
V
நாரதாதி தேவர ரிஷிகள்
விசிஷ்டாதி பிரம்ம ரிஷிகள் (ராஜ ரிஷி, மகா ரிஷி, ரிஷி என்று அவர்களின் யோக/வைராக்யங்களை இட்டு தார தம்யாம்)
புலஸ்திய, மரீசி, கச்யப, தக்ஷ நவ பிரஜாபதிகள்
திக்பாலகர்க்ள் -; வ – குபேரன் ; கி – இந்திரன்; தெ – எமன்; மே – வருணன்)
14 – இந்திரர்கள் (பிரம்மா பகல் போதில் படைக்கப் படுமவர்கள்)
14 – மநுக்கள்
அஸுரர்கள்
பித்ருக்கள்
கந்தர்வ யக்ஷ
கின்ன
கிம்புருஷ
சித்த
வித்யாதரர்கள்
8 – வஸுக்கள்
11 – ருத்ரர்கள்
12 – ஆதித்யர்கள்
2 – அஸ்வினி தேவதைகள்
தானவ யக்ஷ ராக்ஷஸ
பிசாசங்கள் .

2. பத்தர்கள் : மநுஷ்யர்கள் :
||
v
பிராஹ்மண
க்ஷத்ரிய
வைஸ்ய
சதுர்த்தர்கள்

3. பத்தர்கள் : திர்யக்கு :
||
v
பசு
பக்ஷி
ஊர்வன (பாம்பு முதலான)
பறப்பன (விட்டல் பூச்சி முதலான)
கீடங்கள் (புழு பூச்சிகள்)

4. பத்தர்கள் : ஸ்தாவரம் :
||
v
விருக்ஷம்
குல்மம் (புதர்)
லதா (கொடி)
வீறு (அறுக்க, அறுக்க முடியாதன)

இந்த நான்கையும் வேறுவிதமாகவும் பிரிக்கலாம்.

ஜராயுஜ (கர்ப பையிலிருந்து உண்டாவன ) = 1,2;3.
அண்டஜ ( முட்டையிலிருந்து உண்டாவன ) = 3
உத்பிஜ்ஜ (முளைவிட்டு உண்டாவன) = 4
ஸ்வேதஜ (வியர்வையில் உண்டாவன ) = 3
அயோநிஜ (யோநியில் சேராத)
||
v
பிரம்மா (நாபி கமலம்)
சிவன் (பிரம்மாவின் புருவ நெறிப்பு)
ஸநகாதிகள் (பிரம்மாவின் மனசிலிருந்து )
சீதா (பூமியிலிருந்து)
முதலாழ்வார்கள் (பூவிலிருந்து)
திரௌபதி, (நெருப்பிலிருந்து)
திருஷ்ட துயும்னன்
பூத, வேதாளங்கள்.

கர்ம பிரவாக சக்ரம் :

அவித்யா (அறியாமை)
ருசி (தூண்டுதல்)
கர்மா
(தவறான செயல்)
ஜென்மம்
(அழுத்தம்)
வாசனை
விதை செடி பூ காய் பழம் விதை போலே பிறவியும்

கர்ப ஜன்ம சைஸவ பால்ய யௌவன
ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்தி மூர்ச்சா
ஜரா மரண
ஸ்வர்க்க நரகாதி
ஆத்யாத்மிக ஆதி தைவீக ஆதி பௌதிக தாப த்ரய சுழற்சி .

ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தியும் இழந்து,
இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடு கிறவர்களே பத்தர்கள்..

——————————————————————

சாஸ்திரத்துக்கு வசப்படாதவை -; விலங்குகளும், ஸ்தாவரங்களும்..

சாஸ்திரத்துக்கு வசப்பட்டவர்கள் -; தேவர்களும், மநுஷ்யர்களும். விவேக ஜ்ஞானம் உள்ளபடியால்.
||
V
புபுக்ஷுக்கள் ; தேஹாத்மாபிமானிகளாய்
அர்த்தத்தில், காமத்திலும் இச்சை உடையவர்கள்.

முமுக்ஷுக்கள் -; தேஹ அதிருக்த ஆத்ம பிரசம்ஸை உள்ளவர்கள். தர்மத்தில் பற்றுடையவர்கள்.

பரலோக அனுபவ ச்ரேயஸ் சாதனம் தர்மம் . யக்ஞ, தான, தபஸ், தீர்த்த யாத்திரை, திவ்ய தேச வாசம் இத்யாதி இதில் அடங்கும்.
||
V
தேவதாந்த்ர பரர்கள் ; தர்மார்த்த புருஷார்த்த துக்காக அன்ய தேவதைகளை உபாசிப்பவர்கள்.

பகவதாஸ்ருதர்கள் -; பக்தன். தர்மார்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களில் ,
வீட்டின்பத்தை விட்டு இதர பலன்களுக்காக பகவானை ஆச்ரயிப்பவர்கள்.
பிரபன்னன் -; மோக்ஷ லாபார்த்தி.

ஆர்த்தன் -; பிரஷ்ட ஐஸ்வர்ய காமன்.
அர்த்தார்த்தி -; அபூர்வ ஐஸ்வர்ய காமன்.
ஜிக்ஞாஸி -; கைவல்யார்த்தி.

கேவலன் -; ஆத்மானுபவம் தவிர்ந்த இரண்டாவதான பகவதனுபவ பர்யந்தம் வராதவன்.

தேசிக பக்ஷம் -; கேவலன் புபுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் , பிரகிருதி நியுக்த ஸ்வாத்மானுபவ நிஷ்டராய்
விரஜைக்கு இப்பால் வர்த்திப்பவர். திருந்தி பகவன் லாபார்த்தியாக வழியுண்டு.

பிள்ளை லோகாச்சாரியர் பக்ஷம் =; கேவலன் முமுக்ஷுக்கள் கோஷ்டியிலேயாய் ,
ப்ரக்ருதி நியுக்த ஸ்வாத்மானுபவம் விரஜைக்கு அப்பால். கர்ம பூமியை விட்டு விலகி
போக பூமியுள் வந்துவிடுகிற படியால் ஸ்வானுபவத்தை விட்டு, பதி -தியக்த பத்நி போலே ,
பகவன் லாபார்த்தியாக வழியில்லை.

பகவத் பக்தனுக்கும் , பிரபன்னனுக்கும் வேண்டியவை :

வேதத்தை அதன் அங்கங்களோடே வாசிக்கை. அதாவது கர்ம காண்டம் + தேவதா காண்டம் + ஜ்ஞான காண்டங்கள் கற்று
பூர்வ மீமாம்ஸா + உத்தர மீமாம்ஸா இவைகளில் தேர்ந்து
சித், அசித்தினின்றும் வேறுபட்ட
அதிசய, ஆச்சர்ய, ஆனந்த நிலையனாய்
ஹேய குணங்கள் இல்லாதவனாய்
கல்யாண குணைகதானனாந பகவான்
அவனை, ஸ்த்ரீ. சதுர்த்த வர்ணத்தவர்கள் நீங்கலாக
அடைய அங்கங்களோடே கூடிய பக்தியை உபாயமாகக் கொண்டு மோக்ஷமடைபவன் பக்தன். இவர்கள் சாத்யோபாய நிஷ்டர்கள்.

ஆர்த்தித்தவம் , சாமர்த்தியம் இரண்டும் பக்திக்கு யோக்யதைகள்.

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தணன் ஒருவன்
காதலென் மகன் புகலிடம் காணேன்
கண்டுநீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உன்னை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்–(பெரிய திருமொழி 5-8-7)

வைதிகன் பிள்ளை மோக்ஷ பூமியை பிராபித்தும் திரும்ப சம்சாரத்தில் வந்தது மோக்ஷ மடைய சாமர்த்தியம் இல்லையான படியால்.
அர்ஜூணனும் வைதிகனும், மோக்ஷத்தின் வாயில் வரை சென்றார்களாயினும்,
மோக்ஷ பூமியைப் பிராபிக்காதது அவர்களிடத்தில் ஆர்த்தித்தவம் இல்லை யானபடியாலே.
அத்தகைய பக்தியானது புத்தி பரிச்சேத ஜ்ஞான விசேஷம் (அ ) முதிர்ந்த ஜ்ஞானம் என்பர்.

வியாசர் முதலானோர் -; சாதன பக்தி நிஷ்டர்கள். அறம், பொருள், இன்பமாகிற திரைவர்கிக பலம் உத்தேஸ்யம்.

நாதமுனி முதலானோர் -; சாத்ய பக்தி (பல பக்தி) நிஷ்டர்கள். மோக்ஷ பலம் உத்தேஸ்யம்.

பிரபத்திக்கு உறுப்பு ஆகிஞ்சின்யமும் , அநன்யகதித்வமும் .
நம்மாழ்வாருடைய நோற்ற நோன்பிலேன், ஆராவமுதே திருவாய்மொழிகள் இதுக்கு லக்ஷணம்.

வீடடைய வேண்டுவது :
சத்ஸங்கம்
நித்ய, அநித்ய வஸ்து விவேகம்
ஸம்சாரத்தில் நிர்வேதம்
வைராக்கிய சீலராய்
மோக்ஷத்தில் விருப்பம்
த்வேஷ மற்றவனாய், விஷ்ணு பக்தனாய், வேத சாஸ்திர விற்பன்னனாய் இருக்கிற ஆசாரியனை அடைந்து
அவர் மூலமாக புருஷகார பூதையான பிராட்டியை ஆஸ்ரயித்து
பக்தி முதலான மற்ற உபாயங்களை (அசத்தி ஆயாசங்களுக்காயும், பிராப்தி இன்மைக்குமாக) விட்டவனாய்
ஆகிஞ்சின்யத்வ , அனன்ய கதித்வங்களை (கர்ம, ஜ்ஞான, பக்தி இல்லை. வேறு கதி இல்லை என்று) பிரார்த்திப்பவராய்

1. ஆனுகூல்யஸ்ய சங்கல்பம்;
2. பிராதி கூல்யஸ்ய வர்ஜனம்;
3.ரக்ஷஸ்யதி இதி விச்வாஸ:
4.கோப்த்ருத்வ வரணம்;
5.கார்ப்பண்யம்;
6. ஆத்ம நிக்ஷேபம்

இந்த ஆறும் ஏற்பட்டவனாய்
ஸ்ரீமன் நாராயணனுடைய சரணங்களையே உபாயமாக சுவீகரிப்பவன் பிரபன்னன்.

தேசிக பக்ஷம் =; ஆத்ம சமர்ப்பணத்துக்குக் கீழ் சொன்ன
5 ம் அங்கமாய் அங்க பிரபத்தியிலே சேரும்.

லோகாசார்ய பக்ஷம் =; அங்கமாகக் கொண்டு செய்கிற பிரபத்தி சாதன பக்தியில் போய் முடியுமாகையால்
கீழ்ச் சொன்ன 5 ம் ஸம்பாவித ஸ்வபாவங்களாய் – நெல் குத்த வியர்க்குமா போலே –
இவை 6ம் தானே ஏற்பட, ஸ்வதந்த்ர பிரபத்தியிலே சேரும்.

பிரபதிக்கு ஸர்வரும் அதிகாரிகள்.
||
V
ஏகாந்தி :
தேஹ யாத்திரை நிமித்தமாக மற்றதும் கேட்டு, மோக்ஷமும் பிரார்திப்பார்..
இரண்டும் பகவானிடத்திலேயாய், தேவதாந்தரங்கள் பக்கல் போகாதவர்கள்.

பரமைகாந்தி:
பரமனான பகவானை மட்டுமே பலமாக பிரார்த்திப்பவர். இவரும் பகவானைத் தவிர
வேறு இடத்தில் கை ஏந்தாதவர்கள். பிராப்பியா பிராபக ஐக்கியம் இங்கே உண்டு.
||
V
திருப்தன் -; அஸ்மதாதிகள் . இவர்களுக்கு தேஹாவஸானே மோக்ஷம். மரணமானால் வைகுந்தம் தரும்.

ஆர்த்தன் -; ஆழ்வார், ஆசாரியர் போல்வார். பிரபத்தி உத்தர க்ஷணத்திலே மோக்ஷம். .மரணமாக்கி வைகுந்தம் தரும் .

இதுவரை சொல்லப் பட்டவர்கள் பக்தர்கள். கர்மத்தால் தளைப் பட்டவர்கள். பகவத் கிருபையால் மோக்ஷ மடைபவர்கள்.

——————————————————————————

இனி முக்தர்கள் :

உபாய சுவீகார அனந்தரம்
ஆஜ்ஞா கைங்கர்யம் (அகரனே பிரத்யவாயங்கள் – செய்யத் தவறினால் பாபம் )
அநுஜ்ஞா கைங்கர்யம் (பாபம் ஸம்பவிக்காது – செய்யாமல் விட்டால் அவன் முகமலத்திக்கு குந்தகம் ஏற்படும்).
ஸ்வயம் பிரயோஜனமாய் (வேறு எந்த பலனையும் எதிர்பாராது அல்ல அல்ல செய்வதே பிரயோஜனமாய்)
பகவத், பாகவத, ஆச்சார்ய, அசக்கியா அபசார விமுக்தராய்/தவிர்ந்தவராய்
தேஹாவாசானே / சரீரம் விழும் போது
புண்யங்களை மித்ரர்களுக்கும் , பாபங்களை அமித்ரர்களுக்கும் பகவானாலே கொடுக்கப் பட
ஹ்ருதய வாசியான பெருமானிடம் விடை பெற்று
ஸுஷும்நா நாடியை அடைந்து
பிரம்ம ரந்தரம் வழி வெளிப்பட்டு
சூரிய கிரணங்களை வாகனமாகப் பற்றி

அர்ச்சிஸ் மார்க்கத்தில் முதலில் அக்கினி லோகம்
பகல்
ஸுக்ல
உத்தராயணம் வாயு
சூர்ய லோகம்
சந்திர
வித்யுத் / மின்னல்
வருண
இந்திர
சத்ய லோகம் இவைகளை ஆதிவாகர்கள் கடத்த , அவ்வோ லோகங்களின் அபிமானிநி தேவதைகள் ஸத்கரிக்க

பரமபத வாசலில் உள்ள விரஜையில் குளித்து
ஸூக்ஷ்ம சரீரத்தை உதிரி
அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று
அபிராக்ருத திருமேனியும்
பிரம்மாலங்காரமும் செய்யப் பெற்று
நகர பாலகர்களுடைய அனுமதி கிட்டி

வைகுந்தம் புகுதலும்
அனந்த கருட விஸ்வகஸேனர்களைச் ஸேவித்து
திருமாமணி மண்டபத்தில், ஸ்வ ஆச்சார்ய கூடஸ்தரையும் ஸேவித்து
பர்யங்க சயனத்தில், தர்மாதி பீடத்தில் தேவிமார் மூவருடன் ஜாஜுல்யமாய் எழுந்தருளி இருக்கும்
திவ்ய பூஷணார் பூஷிதம், அபரிமித கல்யாண குண பூர்ணராய் ஸேவை சாதிக்கும்
பகவான் திருவடிகளை தலைகளால் வணங்கி
பர்யங்கத்தில் கால் வைத்து மிதித்து ஏறலும்

பகவான் கைபிடித்து தூக்கி மடியில் அமர்த்தி
”கோஸி ?” என்று விளிக்க
அஹம் பிரஹ்ம பிரகார:
பிரஹ்ம பரிகார:
பிரஹ்ம பிரகாஸ: அஸ்மி என்று சொல்லி நிற்க
பகவான் தன்னுடைய குளிர்ந்த கண்களால் கடாக்ஷிக்க
அந்த அனுபவம் தந்த ஆனந்தம் பல்கிப் பெருக
ஸர்வ தேச ஸர்வ கால சர்வாவதோசித சகலவித கைங்கர்யங்களையும் செய்ய விரும்புவனாய்
ஸாலோக ஸாமீப்ய ஸாரூப ஸாயுஜ்ய மாகிற
( ஜகத் வியாபார வர்ஜம் – போக மாத்ர ஸாம்ய லிங்காஸ்ச — ஸ்ரீபாஷ்யம் இத்யாதிகளில் தெரிவித்த )
அஷ்டவித ஆவிர்பாகத்தை அடைந்து எல்லை யற்ற பிரம்மானந்தத்தில் தோய்கிறவன் முக்தன்.

”ஸோஸ்ணுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா ” என்று
ஆனந்தத்தில் ஸாம்யம் அடைவதன்றி ஸ்வரூப ஐக்கியம் அடைகிறான் அன்று .

———————————————————————————-

வேத வேதாந்தங்களிலே பிரஹ்மத்தைப் பற்றி சொன்ன வாக்கியங்களுக்கு அர்த்தம் பார்க்கும் போது
எந்தவித முரண்பாடும் கிடையாது. அப்படி விரோதம் தோற்றினாலும் அதை பரிஹரிக்கவே
சுவாமி எம்பெருமானார் பல கிரந்தங்களை அனுகிரகித்தார்.
அவருடைய மதத்தை வெளிச்சம் போட்டு காட்ட அவதரித்த கிரந்தமே ”யதீந்த்ர மத தீபிகா என்கிற இந்த நூல்.

இதிலுள்ள 10 அவதாரங்களில், 9 வது அவதாரம் ”ஈஸ்வரனைப் ” பற்றிய விசாரம்.

ஸர்வேஸ்வரத்வம் .= நியந்திருத்தவம். ஈஸ் +வரச் =ஈஸ்வரன். நியமன சாமர்த்தியம்.
ஸ்வபாவார்த்தே வரச். ஈசன சீல: நாராயண: என்று சங்கராச்சாரியார் வியாக்கியானம்.
ஸர்வ சப்தத்தால் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருக்குமான ஈஸ்வரன், தனக்கொரு ஈஸ்வரன் இல்லாத என்று பொருள்படும்.
அவன் ஈஸ்வரன். அவனுடைய செயல் ஈசனம் நாம் ஈஸிதவ்யர்கள்.

ஸர்வ சேஷித்வம் = எல்லோருக்கும் ஸ்வாமியாய் , சேஷியாய் இருத்தல். கைங்கர்ய பிரதி சம்மந்தி.
பகவானுக்கு பெருமை சேர்க்க வல்ல கார்யங்களையே எவனொருவன் செய்கிறானோ அவனே சேஷன். பகவான் சேஷி.

ஸர்வ கர்ம ஸமாராத்யத்வம்.= எல்லாருடைய (சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஸ்ரார்த்தமித்யாதி)
கர்மங்களாலும் ஆராதிக்கப் படுமவர். ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி.
.
ஸர்வ கர்ம பலபிரதத்வம்.= எல்லா கர்மங்களுக்கும் பலன் கொடுப்பவர் நாராயணனே..
தேவதாந்தரங்கள் கொடுக்கிற பலன்கள் இவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற சக்தி சாமர்த்தியத்தைக் கொண்டு.
அப்படிக் அவர்கள் கொடுக்கும் போதும் இவன் அவர்களுக்குள் அந்தராத்மாவாக இருந்தே கொடுக்கிறான்.

ஸர்வ ஆதாரத்வம்.= எல்லாவற்றையும் தாங்குமவர். அவன் ஆதாரம். நாம் ஆதேயம்.

ஸர்வ கார்ய உத்பாதகத்வம்.=
”செய்கின்ற கிரியெல்லாம் யானே என்னும், செய்வா நின்றகளும் யானே என்னும் ,
செய்து முநிறந்தவையும் யானே என்னும், செயகைப் பயநுண்னுபேம் யானே என்னும் ” (திருவாயிமொழி-5-6-4) என்றபடி
செய்வார்கள் செய்யும் கிரியைகள் அனைத்துக்கும் ஊற்றுவாய் அவரே.

ஸர்வ வாச்யத்வம். = எல்லா சொல்லின் பொருளும் அவரே. திருமால் , சிவன், இந்திரன் என்று எது சொன்னாலும்
அவை அனைத்தும் பர்யவஸான விதியின் படி சரீரியான நாராயணனையே குறிக்கும். வாசகம் = சொல். வாச்யம் = பொருள்.

ஸ்வக்ஞான ஸ்வேதிர ஸமஸ்த திரவ்ய ஸரீரத்வம் = தன்னையும், தன் ஜ்ஞானம் இரண்டும் தவிர்ந்த அனைத்தும் அவருக்கு சரீரம்.
ஜ்ஞானம் அவருக்கு குணமாதலால் அவர் குணியாகிறார். அவர் மற்றவைகளை தாங்குபவராக இருக்கிறாரே ஒழிய,
தன்னைத் தான் தங்குபவராக இல்லை. எனவே தன்னையும், தன் ஜ்ஞானமும் தவிர மற்றவைகளுக்கு சரீரியாக இருக்கிறார் என்று சொல்லப் பட்டது..

இவை ஈச்வரனுக்குண்டான அடையாளங்கள். இந்த பிரஹ்மம் ஜகத்துக்கு திரிவித – உபாதான, நிமித்த, சககாரி – காரணங்களாக இருக்கிறார்.

எது எதுவாக மாறுகிறதோ, அது அதுக்கு உபாதானம். மண் குடத்துக்கு உபாதானம்.
தங்கம் சங்கிலிக்கு உபாதானம். பஞ்சு வேஷ்ட்டிக்கு உபாதானம். மூலப் பொருள் உபாதானம்.
செய்கிறவர் சங்கல்பமடியாக பொருள்கள் படைக்கப் படிகின்றன.
எனவே குயவன், தட்டான், நெசவாளி இவர்கள் குடத்துக்கு, சங்கிலிக்கு, வேஷ்டிக்கு நிமித்த காரணம்.
இப்படி படைக்க உதவும் கருவிகளுக்கு – சககாரி காரணம் என்று பெயர்.
குயவனுக்கு தண்ட ,சக்ரம். தட்டானுக்கு நெருப்பு துருத்தி, ஊது குழல், நெசவாளிக்கு ராட்டை,
நெய்கிற இயந்திரம் இவைகள் அவரவர்களுக்கு சககாரி காரணம்.

சித் அசித் விஷிஷ்ட பிரஹ்மம் ஏகம் .

பிரஹ்மத்தோடு கூட இரண்டாவது கிடையாது. – அதுவைதம்

சித் அசித்தோடு கூடிய பிராஹ்மம் (போல ) இரண்டாவது கிடையாது – விஷிஷ்டாத்வைதம்

விஷிஷ்ட யோகோ அதுவைதம் விஷிஷ்டாத்வைதம் –
பிரஹ்மத்தோடு கூடி இருக்கிற (ஜாத்யேக வஸ்துக்களான) சித் அசித் போலே இரண்டாவது கிடையாது.
விஷிஷ்ட அஸ்ய அத்வைதம் விஷிஷ்டாத்வைதம் – சித் அசித் கூடி இருக்கிற பிரஹ்மத்தைப் போல இரண்டாவது கிடையாது .-
ந த்வத் சமஸ்ச அப்யதிகஸ்ச திருஸ்யதே என்றபடி.

ஸத் வித்யா பிரகரணம் :(சாந்தோக்ய உபநிஷத்)

ஏக விஜ்ஞானேந ஸர்வ விஜ்ஞானம் – பிரதிக்ஞை.

ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் ஜ்ஞானம்.

மண் என்கிற காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யமான குடம், மடக்கு, பொம்மை அனைத்தும் அறிந்ததாகும் அல்லவா? அதுபோல

காரண பிரஹ்மத்தை அறிந்தால், அதன் காரியமான ஜகத் அனைத்தும் அறிந்ததாகும்.

குடம் என்றும், மடக்கு என்றும் பொம்மை என்றும் பலவாக பார்ப்பது வியவகார வழக்கு.
ஆனால் எல்லாம் மண் என்பதே உண்மை. காரண ரூபத்திலான மண்ணுக்கும் காரிய ரூபத்திலான
மண்ணுக்கும் நாம (குடம்) ரூப (வாயும், வயிறுமான ஆகாரம்) வியவகார வித்யாசம் உண்டு போலே ,
காரண பிரஹ்மமான ஈஸ்வரனுக்கும் கார்ய பிரஹ்மமான ஜகத்துக்கும் குடத்துக்கும் மிருக் பிண்டத்துக்குமான
வேறுபாடு போலே ஆதார ஆதேயத்தவ, சேஷ சேஷிதவ வியவகார பேதம் உண்டு.

மண், மண்ணால் ஆன குடம். பிரஹ்மம். பிரஹ்மத்தால் ஆன ஜகத் என்பதே உண்மை.
எது எதுவாகிறதோ அது அதுக்கு உபாதாந காரணம் என்று வைத்து பார்க்கில், ஜகத்துக்கு ஈஸ்வரன் உபாதாந காரணம்.

பிரளயம் காரண தசை. ஸ்ருஷ்டி கார்ய தசை. காரண பிரஹ்ம விசிஷ்டமான சித்தசித் ஸூக்ஷ்ம தசையிலும் ,
கார்ய பிரஹ்மமான ஜகத் நாம-ரூப வியார்த்தமாய் ஸ்தூல தசையை அடைவதே ஸ்ருஷ்டி.

” பஹுஸ்யாம் பிரஜாயேய ”என்று பிரஹ்மம் சங்கல்பிப் பதால் பிரஹ்மமே நிமித்த காரணம்.
நான் பலவாக ஆகிறேன் ”அநேந அநுபிரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி ” என்று தான்
தன்னை கார்ய வஸ்துக்களாக மாற்ற நினைப்பதால், ”அபிந்ன நிமித்த உபாதான காரணம் பிரஹ்ம”
என்கிற சாஸ்திர வசனத்தின்படி உபாதாந காரணமாகவும் அவரே ஆகிறார்.

தண்ட, சக்ரம் போலே பிரஹ்மம் தன்னிடத்தேயான பிரக்ருதி, காலம், ஜ்ஞானம், சக்தி இவைகளைக் கொண்டே படைப்பதால் ,
சககாரி காரணமும் பிரஹ்மமே என்று தேறுகிறது.

”ஸதேவ ஸோம்ய ஏகமேவ அக்ர ஆஸீத், அத்விதீயம் ”

ஸத்தாகவே இருந்தது, ஒன்றாகவே இருந்தது, இரண்டாவது இல்லை என்றால்

1. ஸதேவ = உள்ளத்திலிருந்து உள்ளது வந்தது (ஸத் கார்ய வாதம்) அன்றி இல்லத்திலிருந்து உள்ளது வர (அஸத் கார்ய வாதம்) இல்லை ‘
2. ஏகமேவ = நாம ரூபம் இல்லாது ஒன்றே என்று சொல்லும்படியாக ஸூக்ஷ்ம தசையில் இருந்த சேதநா சேதன விஸிஷ்ட காரண பிரஹ்மம் அதுவே
3. அதுவிதீயம் = ஸ்தூல தசையிலான சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மமாயித்து, இரணடாவது இல்லை.
வஸ்து இரண்டாவது இல்லை என்ற பொருள் அல்ல. காரண பிரஹ்மமே காரிய பிரஹ்மம் ஆனபடியால் இரண்டாவது இல்லை என்கிறது.

சைஸவம், பால்யம், யௌவனம் , யுவா, குமார விருத்த என்று ஒருவருக்கு பல அவஸ்தை உண்டு போலே,
பிரஹ்மத்தின் சரீரமான சித்தசித் பிரகிருதி பிராகிருதங்களாக விகாரமடைகிறதே ஒழிய,
ஆத்மாவுக்குப் போலே பிரஹ்மத்துக்கும் எந்தவித விகாரமும் ஏற்படுவது இல்லை . பிரஹ்மம் நிர்விகாரம்

”தத்வமஸி ஸ்வேத கேதோ” = தது + த்வம் +அஸி .

விட்டு (ஜகல்) இலக்கணம்
விடாத (அஜகல் ) இலக்கணம்
விட்டு விடா (ஜகாலஜகல்) இலக்கணம்

விசேஷணத்தை (அடைமொழி) விட்டு விசேஷ்யத்தை (அடைகொளியைப் ) பார்ப்பது விட்டிலக்கணம் .
சேர்த்துப் பார்ப்பது விடாவிலக்கணம்.

தது = த்வம் அஸி
விசிஷ்ட பிரஹ்மமே = ஸ்வேதகேதோ, உனக்கு அந்தராத்மாவான பிரஹ்மம் ஆகிறது.

ஸூக்ஷ்ம சேதநாசேதன விசிஷ்டமாய் பிரஹ்மம் இருக்கிறபடியால் அது உபாதான காரணம் ஆகிறது.
கார்ய ரூபமாக விகாரம் அடையக் கூடிய வஸ்து உபாதான வஸ்து . மண் குடமாவதற்கு இடையில் பல நிலைகள் உள்ளன.
மண்ணைப் பிசைந்து உருட்டி, சக்கரத்தில் இட்டு சுழற்றி வாயும் வயிறுமாகப் பிடித்தால் குடம் உண்டாகும் .
இப்படியான அடுத்தடுத்த நிலைகளின் (நியத) முன் நிலை, அதன் அதன் உபாதானப் பொருள் ஆகும்.

சங்கல்ப விசிஷ்ட பிரஹ்மமாய் இருக்கிறபடியால் அதுவே நிமித்த காரணம் ஆகிறது.
காரணப் பொருளை கார்யப் பொருளாக யார் பரிணமிக்கச் செய்கிறாரோ அவர் நிமித்தம்.
தான் மாறாமல் தன்னோடு கூடிய சேதநாசேதனங்களை மாற்றமடையச் செய்கிறபடியால்.

காலம் , ஜ்ஞான, சக்தியாதிகளுக்கு அந்தர்யாமி பிரஹ்மம்மாய் இருக்கிறபடியால் சககாரி காரணமும் அதுவே ஆகிறது.
கார்ய உத்பத்தியில் உதவி செப்பவை ஸஹகாரி.

இப்படியாகப் படைப்பவர் நாராயணன் என்று சொல்லலாம். அதுதான் எப்படி? என்றால் :

கஸ்ய த்யேய:? காரணம்து த்யேய:

உள்ளது காரணமா? இல்லது காரணமா? உள்ளது காரணம் என்றால் ”ஸத் ” காரணம். ‘ஸதேவ ஸோம மக்ரம் ஆஸீத்”.

ஜ்ஞானம் உள்ளது காரணமா? ஜ்ஞானம் அற்றது காரணமா? ஜ்ஞானம் உள்ளது காரணம் என்றால் ‘
‘ஆத்மா ” காரணம். ”ஆத்மா வா இதம் ஆக்ர ஆஸீத் ”

சிறியது காரணமா? பெரியது காரணமா? பெரியது காரணம் என்றால், ”உள்ளதாய் ,
” ஜ்ஞானம் உள்ளதாய்” இருக்கிற ”பிரஹ்மம் ” காரணம். ஆகும்.

அந்த பிரஹ்மம் நாராயணனே என்றது எந்த நியாயத்தாலே?

1. ஸர்வ சாகா பிரத்யயம் நியாயம். – பூர்வ பாகத்தில், பல சாகைகளில் பலபடி சொல்லப்பட்ட
ஒன்றை சமன்வயப் படுத்தி பொருள் கொள்ளல்.

2. ஸகல வேதாந்த பிரத்யயம் நியாயம். – பல பல உபநிஷத்துக்களில் சொன்ன விஷயத்தை ஒன்றுக்கொன்று
முரண்படாமல் பொருள் கூறல். ஸத் , ஆத்மா , பிரஹ்மம் என்று வெவ்வேறு சொல்லால் குறிப்பிட்ட பிரஹ்மத்தை ,
வேதாந்தங்களில் பூர்ணமாக பிரஹ்மத்தைப் பற்றி சொன்னதுக்கு முரண் படாமல் இன்னது அன்று அறுதி இடல்.

3. சாமான்ய விசேஷ நியாயம். – பொதுவாக சொன்னவைகளை விசேஷித்து சொன்னதனோடு சேர்த்துப் படித்தல்.
அதாவது, ஸத்; ஆத்மா; என்கிற சாமான்ய சப்தங்களை , பிரம்மா; சிவன்; இந்திரன் என்று விசேஷித்துச் சொன்ன சப்தங்களோடு சேர்ப்பது.

4.சாக-பசுந் நியாயம். – பசுவைக் (4 கால்மிருகம்) கொண்டு யாகம் செய் என்று சாஸ்திரம் சொல்ல,
எந்த நாலுகால் பசு? என்ற விசாரம் வந்தது. அதற்கு சாஸ்திரம் சாக-பசு என்று விசேஷித்து
”வெள்ளாட்டைக்” கொண்டு யாகம் செய் என்று நிர்தேசித்தது.

சப்தங்களுக்கு பொருள் இரண்டு வகையில் சொல்லலாம்.
ஒன்று யோகம்.= சப்த சேர்க்கை.
இரண்டாவது ரூடி = பிரசித்த வழக்கு.
பங்கஜ -; தாமரை. நாய்க்குடை, ஆம்பல், அல்லி எல்லாம் தாமரையை போலவே நீர் அளரில் தோன்றினாலும்,
ரூடி அர்த்தம் தாமரை என்பதே.

வேதாந்தத்தில் பிரம்மா, சிவன், இந்திரன், ருத்ரன், ஹிரண்யகர்பன், நாராயணன் என்று பல படி சொல்லி இருப்பதால்,
இவர்களில் காரண பிரஹ்மம் யார் என்ற விசாரம் வந்தது. இந்த சப்தங்களின் ரூடி அர்த்தத்தை மாற்ற முடியாது.
யோக அர்த்தத்தைக் கொண்டு மற்றவர்களின் பெயர்களை நாராயணனுக்கு பொருந்த விட வழி உள்ளது போல்
மற்றவர்களின் பெயருக்கு நாராயணன் என்பதும் அர்த்தமாகச் சொல்ல வழி இல்லை. காரணம்:

பூர்வ பததாது ஸம்க்ஞா: அக: என்ற பாணினி சூத்திரத்தின் படி
நாரா: + அயன = நாராயன என்பதற்கு பதிலாக நாராயண என்றாகும் என்கிறார்.
அதாவது ஒருசொல் ”ர ” வில் முடிந்து அடுத்த சொல் ”க ” வில் தொடங்காவிடில், ”ன ” என்பது ”ண ” என்று மாறி,
விசேஷித்து ஒருத்தரை மட்டுமே குறிக்கும் என்பது வியாகரணம்.

ஆதலால் யோகிகப் பொருள் கொண்டு ”நாராயணன் ‘ என்ற சொல்லை, இந்திரன், சிவன், ருத்ரன் பிரம்மன்
இவர்களுக்கு பொருந்த விட முடியாதோ , என்றால், ‘ண ” த்வம் ஒரு தேவதா விசேஷத்தைத்தான் குறிக்கும்
என்பது பாணினி சூத்திரத்தின் விதி.
அவர்கள் எல்லாம் ”ஸ்ரஷ்டம் ” என்பது பிரசித்தமும் கூட.
எனவே ”ஸத் ” ஆத்மா ” பிரஹ்மம் ” என்ற நாமங்கள் நாராயணனை மட்டுமே குறிக்கும்
ஆதலால், நாராயணனே ஸ்ருஷ்டி கர்த்தா, பர பிரஹ்மம் என்பது கரதலாமலகமாய் விளங்குமன்றோ?

பிரகிருதி காரணமா? என்றால் அதுக்கு உபாதான காரணத்வம் சொல்லப் போனாலும்,
நிமித்த காரணம் சொல்லப் போகாது , ஜ்ஞானம் இல்லையாதலால்.

சாந்தோக்கியத்தில் ஸத், ஆகாச, பிராண, சப்தங்களைச் சொல்லி ஜகத் காரணம் என்றது..
வாஜஸநேயத்தில் பிரஹ்ம்ம சப்தம் சொல்லி காரணத்வம் கூறப்பட்டது.

ஸகல வேதாந்த பிரத்யய நியாயத்தைக் கொண்டு சாமான்ய சப்தங்களை பிரஹ்மத்தினிடத்தில் சேர்க்க வேண்டும்.
பிரஹ்ம சப்தத்தை சாக-பசுந் நியாயத்தாலே ஒரு தேவதா விசேஷத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த பிரஹ்மம் எது என்று கேள்வி எழ, தைத்ரீய உபநிஷத்தின் படி ஆத்ம சப்தத்திலே சேர்க்க வேண்டும்.

அந்த ஆத்மா யார் என்ற கேள்வி வர, ஸ்ருதிகளில் சொல்லப்பட்ட இந்திரனா?
அல்லது அவரைப் போல பிரசித்தமாய் இருக்கிற அக்நியா? உபாஸ்ய விஷயமான ஸூர்யனா?
அல்லது ஸோமந் தான் பிரஹ்மமா? குபேரனா? வருணனா? எமனா? என்ற சந்தேகம் எழ,
கர்ம வஸ்யராய் படைப்புக்கு உள்ளாகி, பரிமித ஐஸ்வர்ய தேவதைகளாகவும், பிரம்மாவினுடைய ஆயுஸ்
காலத்துக்குள்ளாக அழிவராகவும் இருக்கும் பக்ஷத்தில், அவர்களுக்கு பிரஹ்மத்துவம் சித்திக்க வழி உண்டோ? இல்லையே.

ஸ்வேதஸ்வேதா உபநிஷத்தில் ”சிவவஸ்ச காரணன் ” என்று சொல்லப் பட்டு இருக்கிறதே ?
அவர்தான் பிரஹ்மமோ? அதர்வ சிகையிலே சம்புவை காரணம் , சர்வத்துக்கும் ஆத்மா என்கிறதே?
தைத்ரீய உபநிஷத்தில் ஹிரண்யகர்பர்க்கு இதே காரணத்வம் சொல்லப் பட்டிருக்கிறதே? என்றால்
ஸாமான்ய-விசேஷ நியாயத்தாலே ஸம்பு, சிவன், ருத்ர வாச்யர்களை , ஹிரண்யகர்பர் என்கிற
பிரம்மாவிடத்திலே சேர்க்க வேணுமாகும் . காரணம் – சிவன், சம்பு என்று சொல்லப் படுகிற ருத்ரன்,
பிரம்மாவினுடைய கோபத்தால் புருவ நெறிப்பின் நடுவில் இருந்து பிறந்தான் என்றும்,
கபாலித்தவம் பவிஷ்யத்தலாகிற பாபங்கள் அவருக்கு புராணங்களில் படிக்கிற படியால்.

மஹோபநிஷது , நாராயண உபநிஷது , ஸுபாலோபநிஷது , மைத்ராயணி, புருஷ ஸூக்தம் ,
நாராயண அநுவாகம் , அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதிகளில்
பரம காரணத்வம்
ஸர்வ ஸப்த வாச்யத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ ஸரீரகத்வம்
நாராயணனுக்கே என்கிறபடியால், பிரம்மாவுக்குண்டான ஸ்வயம்பூ , ஹிரண்யகர்ப, பிரஜாபதி சப்தங்கள்
நாராயணிடத்தே பர்யவசானமாக , சாக – பசுந் நியாயத்தாலே நாராயணனே காரண பிரஹ்மம் என்று இறுதியாகத் தேறுகிறது.

அந்தராதித்ய வித்யா பிரகாரணத்தில் , சூர்ய மண்டல மத்திய வர்த்தி பர்க்க: = சிவன் என்று இருப்பதால்,
நாராயண பரத்வம் ஏற்பல்ல என்கிற வாதம் வந்ததாகில் அதற்கு சமாதானம் :

ஹர : சிவ: பர்க: சிவனைக் குறித்தாலும், தது ஸவிதுஹு வரேண்யம் பர்க: என்று இருப்பதால்,
தது – வரேண்யம் என்று ”நபும்ஸஹ ” லிங்கத்தோடே வருகிற பர்க: சப்தத்தையும்,
அது புல்லிங்க மானாலும், ”ஹார்ஷ பிரயோகமாக”, நபும்ஸக லிங்கமாகவே கொள்ள வேண்டும்.
அப்படி ”அ ”காரத்தில் முடிவதை ”ஸ ” காரமாகக் கொண்டால் , ”உயர்ந்த ஒளி ” என்றுதான் பொருள் படும்,
”சிவன் ” என்று அர்த்தம் வராது. ஆக அந்தராதித்ய வித்யா பிரகரணத்தில் சிவ தியானம் சொன்னதாக ஆகாது.
என்றால் நாராயண பரத்வத்துக்கு குறை இல்லை.

இதே போல தகர வித்யா பிரகரணத்தில் ”தஸ்ய பிரகிருதி லீனஸ்ய யப்பரஸ்ய மஹேஸ்வர:” என்று
ஹிருதய மத்தியில் இருக்கிற ஆகாசத்தை விஷ்ணுவாகச் சொல்லி, விஷ்ணுவுக்கு அந்தராத்மாவான சிவனை
தியானம் பண்ண வேண்டும் என்கிறது என்பர்.
”வி சோக:” என்பதற்கு சிவன் என்று கொள்ளாமல் அஷ்ட குணங்களில் உள்ள ”வி சோக:” என்கிற குணமாகக் கொண்டு,
அந்தராத்மாவான நாராயணனுடைய குணங்களை உபாசிப்பாய் என்றே கொள்ள வேண்டும்.
ஆக அந்த விதத்திலும் நாராயண பரத்வத்துக்குக் குறை இல்லை.

ஸப்ரஹ்மா ஸசிவஸ் ஸேந்திர ஸோ அக்ஷரப் பரம ஸ்வராட்| —
அந்த பரமாத்மாவே சிவன், இந்திரன், அக்ஷரம் அனைத்துமே என்கிறது விஷ்ணு ஸூக்தம்.
அவனே கல்யாண குணாத்மகனாய் , பிரகிருதி புருஷர்களோடு கூடியவராய், அவர்களைக் காட்டிலும் வேறு பட்டவராய்
இருக்கிற நாராயணன். அவரே ஜகத் காரணம் . மற்ற தேவதைகளின் பெயர்கள் ஜகத் காரண விஷயத்தில் ,
சரீராத்ம சம்பந்தத்தாலே அவை அனைத்தும் நாராயணனையே சொன்னதாக அமையும். காரணம்:

ப்ரஹ்மாச நாராயண: சிவச்ச நாராயண: என்று நாராயண உபநிஷத்திலும்;
முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று ஆழ்வாரும் சொல்லி இருக்கிறபடியால்
சரீராத்ம பாவம் அவருக்கே பிரஸித்தம் .
மேலும் ”நீராய் நிலனாய் ..சீரார் சுடர்கள் இரண்டாய், சிவனாய் அயனானாய் (திருவாயமொழி-6-9-1) என்று
சாமான்யதிகரணத்தில் ( முதல் வேற்றுமை உறுப்பில்) படித்ததும் சரீராத்ம சம்பந்தத்தைக் கொண்டே எனலாம்.

—————————————————————————————————————————————–

ஆத்மா – பரமாத்மா = இருவருக்கும் ஜ்ஞானம் பொது.
சேதனன் – பரம சேதனன்
தத்வம் – பரதத்வம் / பர பிருஹ்மம்
பிருஹ்மம் என்று சொல்ல தகுதி படைத்தவர் ஒருவரே. அவரே பர பிருஹ்மம் ஸ்ரீமந் நாராயணன்.
அவரே அகில ஜகத்துக்கும் மூன்று வித காரணமாயும் இருக்கிறார். ஆனால் தான் விகாரமடைவதில்லை.
தன்னோடு கூடி இருக்கிற சேதநா சேதனங்கள் நிலை பெருத்தலும் நீக்கலும் உடையன.
ஸ்தூல சேதநா சேதன விசிஷ்ட காரிய பிரஹ்மம் ஸூக்ஷ்ம சேதநா சேதன விசிஷ்ட காரண பிருஹ்மமாய்
இருக்கையை நிலை பெருத்தலும் நீக்கலும் ஆகும்.
எதுபோல என்றால், 25 வயது கட்டிளங் காளை 60 வயது முதியவர் ஆகும்போது
அவருடைய சரீர கத மாற்றங்கள் ஆத்மாவை பாதியாது போலத்தான்

அங்கனாகில், ஆத்மா இந்த உடலோடு கூடி இருக்கும்போது, படுகிற இன்ப துன்பங்கள் ,
சேதநா சேதன விசிஷ்ட பிருஹ்மத்துக்கும் உண்டோ என்னில்? கிடையாது.

ஸம்ஸார பத்தமான ஆத்மாவுக்கு இன்ப துன்பங்களாகிற ஸ்வபாவ விகாரம் உண்டே ஒழிய,
ஸ்வரூப விகாரம் கிடையாது. இவை அனைத்தும் கர்மத்தால் வருவன. தோஷ பூயிஷ்டம்..

மாறாக பரமாத்மா விஷயத்தில், ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டுமே கிடையாது,
காரணம் அவருக்குச் சரீரமான சேதநா சேதனங்கள் அவருடன் கூடியிருப்பது அவருடைய சங்கல்பத்தாலே யாகி குண கோடியிலே சேரும்.

ஆனால், முக்த ஆத்மாவுக்கு பரமாத்மாவைப் போலே ஸ்வரூப-ஸ்வபாவ விகாரம் இரண்டும் கிடையாது,
அங்கு சென்றதும் கர்மம் தொலைந்து, ஸாரூப ஸாயுஜ்யம் பெறுவதாலே .

அத்துவைதிகள் பிருஹ்மம் ஒன்றே சத்தியம் . ஜகத்து கானல் நீரைப் போலே பொய்த் தோற்றம்.
ஆத்மாக்கள் பலவாக தோற்றுவது மாயை. அந்த மாயை எப்படிப் பட்டது என்றால், அநிர்வசனீயம்.
பிருஹ்மம் அவித்தையால் மறைக்கப்பட்டு, ஒன்றை பலவாக பிரமிக்கிறது. (அபேத ஸ்ருதி) வாக்கிய ஜன்ய (தத்வமஸி)
வாக்கியார்த்த (ஐக்கிய) ஜ்ஞானத்தாலே, அவித்தையாகிற திரை விலகி,
பிரஹ்மமே மோக்ஷம் அடைகிறது என்பது அவர்களுடைய மதம்.

பிரக்ருதி பிராக்ருதங்களுக்கு ஸ்வரூப, ஸ்பாவ விகாரம் இரண்டும் உண்டு.
பத்த ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் கிடையாது. ஸ்வபாவ விகாரம் மட்டும் உண்டு.
தத்வம் எல்லாம் ஒன்று என்றால், இப்படியான தோஷங்கள் பிருஹம்மத்துக்கும் வந்து சேரும் அல்லவா?
என்கிற விசிஷ்டாத்வைத வாதத்துக்கு எதிர்வாதம் :

நேஹ நாநாஸ்தி கிஞ்சந …பல என்பது இல்லை. பல என்று படித்தால் சம்ஸாரம் சித்திக்கும் என்பதும்
சாத்திர வசனம் தானே இது போன்ற ஆக்ஷேபங்கள் வருமே? என்றால்

போக்தா போக்கியம் பிரேரிதாம் ச மத்வா க்ஷரம் பிரதானம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநா ஈஷதே தேவ ஏக: என்று
பேத ஸ்ருதிகள் தத்வங்களை மூன்றாகப் பிரிக்கின்றன.

யஸ்ய ஆத்மா சரீரம், யஆத்மா நவேத யஸ்ய பிருதிவி சரீரம், யம்பிருதிவி நவேத என்கிற
அந்தர்யாமி ப்ராஹ்மணங்களில் சொல்லப் பட்ட கடக வாக்கியங்களை முக்கியமாகக் கொண்டு,
அத்துவைத -துவைத மத சங்கடங்களைப் பரிகரிக்கலாவது.

ஸஜாதீய பேதம் = ஒரே ஜாதியில் வெவ்வேறு வகை = மா, பலா என்று மரங்களிலேயே வேறு வகை.
விஜாதீய பேதம் = வேறு ஜாதி வேறு பொருள் = மலை, மரம் என்கிற இரு வேறு ஜாதி
ஸ்வகத பேதம் = ஒரு வகையில், வேறு வேறு பிரிவு, பாகங்கள் = மரம், கிளை, பூ, காய், பழம் என்பன.

சங்கரர் இந்த மூன்றுவித பேதங்களும் பிரஹ்மத்துக்குக் கிடையாது என்கிறார். அதாவது

பிரஹ்மம் ஜ்ஞான முடைத்து. சஜாதீயமான (ஜ்ஞான வாச்சயமான) ஆத்மா தனிப்பட இல்லை யாதலால் ஸஜாதிய பேதமில்லை.

ஜடப் பொருள்களுக்கு ஜ்ஞானமில்லை. ஜெகன் மித்யா வாதத்தால் விஜாதீயமான பேதமும் இல்லை.

ஜ்ஞான முடைய பிரஹ்மத்துக்கு, குணங்கள் இல்லை யாதலால் , ஸ்வகத பேதமும் இல்லை என்பர்,

ஆத்மா, பிரக்ருதி , குணங்கள் மூன்றும் பிரஹ்மத்தைப் போலே சத்தியம், நித்தியம் அனந்தம் ஆகையால் ,
ராமானுஜ ஸம்பிரதாயத்தில் திரிவித பேதமும் ஒப்புக் கொள்ளப் படுகின்றன.

இந்த மூறு பேதமும் கிடையாது என்கிற அத்துவைதிகள் , சரீர கத தோஷம் ஆத்மாவுக்கு உண்டு போல் ,
அந்தர்யாமி பிரம்மத்துக்கும் சேதநா சேதன விகாரங்கள் வாராதோ என்று ஆக்ஷேபிக்க , அதற்கு உத்தரம் என்ன வென்றால் :

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா – என்று வியாப்பியம் சொன்ன விடத்தில்,
வியாப்பிய கத தோஷமும் தட்டாதவர் என்கிற வாக்கியங்களும் சேர்த்தே படிக்கிற படியால்,
அமலன், விமலன், நின்மலன் நீதி வானவன் – என்றார் திருப்பாணாழ்வாரும்.

யோகபத்யம் அனுக்கிருஹ கார்யம். விஷம ஸ்ருஷ்டிக்கு ( படைக்கப் பட்டவைகளுள் ஏற்ற தாழ்வுக்கு)
அவரவர் கர்மா காரணமே ஒழிய, பிரஹ்மம் காரணமன்று.
வீட்டை பண்ணி விளையாடும், விமலன் ..(நாச்சியார் திருமொழி) என்றபடியால்
பிரஹ்மத்துக்கு வைஷம்ய நைர்கிருண்ய தோஷம் இல்லை என்பது ஆண்டாள் திருவாக்கும் கூட .

படைப்பாளி பிருஹ்மம் நாராயணன் என்று தேறின பிறகு

கர்திருத்வ (செய்ப்பவர்)
காரயித்வ (செய்விப்பவர்)
நியந்திருத்தவ (உள்ளிருந்து நடத்துபவராய்)
பிரகாசயித்தவ (பிரகாசப் படுத்துவராய் )
அநுமந்திருத்வ (ஜீவ சுவாதந்ரியத்தைக் கொண்டு செய்யப் புகுகிற காரியங்களில் அனுமதிப்பிரதானம் பண்ணி )
சககாரித்தவ (கர்மானுசாரமாய் மேன்மேலும் பிரவர்திப்பித்து)
உதாசீனத்தவம் (சாஸ்த்ர வஸ்யத்தை இன்றி புறம்பே போகும் போது தடுக்கவும் தடுக்காமல் ,
ஆதரிக்கவும் செய்யாமல் திருந்துவான் என்று உதாசீனவது ஆசீனம் – நித்ய, நிரவதிக, நிருபாதிக, நிர்ஹேதுக கிருபை காரணம் )

இவை அனைத்தும் நாராயணனுக்கே குறைவின்றிப் பொருந்தும்.

ஆதார-ஆதேயத்வம்.
விதாதா-விதேயத்வம்.
சேஷி-சேஷத்வம்.

என்று சரீரத்துக்கும் ஆத்மாவுக்குமான தொடர்பு போல,
ஆத்மாவுக்கும் (சரீரம்) பரமாத்மா (ஈஸ்வரன்) வுக்குமான தொடர்பு இவையாகும்.

அந்த ஈஸ்வரன் விபுவாக (எங்கும் நீக்கமற நிறைந்து) இருக்கிறார். இப்படி அவர் வியாபிப்பதுவும் மூன்று படியாலே .

ஸ்வரூப வியாப்தி.
விக்ரக வியாப்தி
தர்ம பூத ஜ்ஞானத்தாலே வியாப்தி.

ஆத்மா அணுவாகையால், தர்ம பூத ஜ்ஞான வியாப்தி தவிர்ந்த மற்ற இரண்டும் கிடையாது.

ஈஸ்வரன் அனந்தன் . அதாவது அந்த மற்றவன்.

கால அபரிச்சினன் (நித்யமானபடியாலே)
தேச அபரிச்சினன் (எங்கும் வியாபித்திருக்கிற படியாலே )
வஸ்து அபரிச்சினன் (ஸமஸ்த வஸ்துக்களும் அவருக்கு சரீரமான படியாலே ).

சத்யத்வம்
நித்யத்வம்
ஆனந்தத்வம்
அமலத்வம்

இவை அவருக்கு ஸ்வரூப நிரூபக தர்மங்கள்.

ஸ்ருஷ்டி உபஹிருதங்களான ஸர்வக்ஜ்ஞத்வம்
சர்வ சக்தித்வம் நிரூபித ஸ்வரூப குணங்கள்.

சௌலப்யம்
சௌசீல்யம்
வாத்சல்யம் இத்யாதி ஆச்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்.

காருண்யம் முதலியன ரக்ஷணத்துக்கு உபயோகியான குணங்கள்.

அந்த ஈஸ்வரன் அண்டங்களை படைப்பதற்கு ஸமஷ்டி ஸ்ருஷ்டி என்று பெயர்..
பிறகு சதுர்முக பிரம்மா, தக்ஷ பிரஜாபதி இவர்களுக்கு அந்தர்யாமியாக இருந்து வியஷ்டி ஸ்ருஷ்டிகளைத்த தொடங்குகிறார்.
தான் விஷ்ணுவாக அவதரித்து காலம், மனுவாதிகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ரக்ஷணத் தொழிலைச் செய்கிறார்.
ருத்ரன், மிருத்யு தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருந்து ஸம்ஹாரத் தொழிலைச் செய்கிறார்.
ஆக, ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும் இவரே செய்கிறார்.

இப்படியான ஈஸ்வரனின் நிலைகள் ஐந்து. இதை

விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய், கடல் சேர்ப்பாய் , மண்மீதுழல்வாய், இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் (திருவாய்மொழி -6-9-5)
பாட்டு கேட்குமிடம்; கூப்பீடு கேட்குமிடம், குதித்த விடம் , வளைத்த விடம் , ஊட்டுமிடம் என்று ஆழ்வார்களில்
நம்மாழ்வாரும், ஆச்சாரியர்களில் பிள்ளை லோகாச்சாரியரும் பேசியுள்ளனர்.

பர – பரம பதத்தில் இருப்பு. – பரபிருஹ்மம் , பர வாசுதேவனான ஸ்ரீமந் நாராயணனாய் ஸர்வ லோக மஹேஸ்வரனாய் இருக்கும் இருப்பு.

வியூகம் – திருப்பாற்கடல் சயன வியூக வாசுதேவன் தன்னை நான்காக வகுத்துக் கொண்டு முத்தொழிலும் நடாத்துகின்ற கார்ய வைகுண்டம் வாசம்..

வியூக வாசுதேவன் -ஷாட்குண பூர்ணன் -கேசவன் சக்ரதாரி தங்க வர்ணம் ; நாராயணன் சங்கம் கருநீல வர்ணம் ; மாதவன் கதை மணியின் வர்ணம் ;
ஸங்கர்ஷணன் – ஜ்ஞான, பலம் – ஸம்ஹாரம் – கோவிந்தன் சார்ங்கம் நிலாவின் ஒளி ;
விஷ்ணு கலப்பை தாமரை மகரந்த வர்ணம் ; மதுசூதனன் கல் உலக்கை செந்தாமரை வர்ணம்;
பிரத்யுமனன் – ஐஸ்வர்ய, வீர்யம் – ஸ்ருஷ்டி- திருவிக்ரமன் வாள் நெருப்பு வர்ணம் ;
வாமனன் வஜ்ராயுதம் உதய சூர்ய வர்ணம் ; ஸ்ரீதரன் கோடாரி வெண்டாமரை வர்ணம்;
அநிருத்தன் – சக்தி, தேஜஸ் – ஸ்திதி – ஹிருஷீகேசன் மின்னல் வர்ணம் இரும்பு உலக்கை ;
பத்மநாபன் – சூரிய ரஷ்மி வர்ணம் பஞ்சாயுதம் ; தாமோதரன் இந்திரகோப வர்ணம் (பட்டாம்பூச்சி வர்ணம்) பாசக்கயிறு பிடித்திருப்பார்.

விபவம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள் .
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கற்கியுமானான் .
தேவ மனுஷ்ய திர்யக் ஜாதிகளில் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா ! – என்று ஆழ்வார் காட்டினபடி.

முக்கியாவதாரம் – ராம, கிருஷ்ணாத் யவதாரங்கள். இவர்கள் மட்டுமே உபாசிக்கத் தக்கவர்கள். மற்ற.அநுபாஸ்யங்களான கௌணாவதாரத்தில்
ஸ்வரூப ஆவேசாவதாரம் – பரசுராம, பலராமர்கள்
சக்தி (அம்ச) ஆவேசாவதாரம் – பிரம்மா, ருத்ரன், மரீசி, வியாசர் இவர்கள்.

1. நம்முடையது பிறப்பு. அவனுடையது அவதாரம். நம் பிறப்பு கர்மத்தால். அவன் அவதாரம் தன் இச்சையால் (ஸ்வ சங்கல்ப்பத்தால்).
2. நாம் பிறந்து சிரமப் படுகிறோம். அவன் அவதரித்து மேன்மை அடைகிறான். ஸௌ ஸ்ரேயான் பவதி ஜாயமான:
3. நம்முடையது பாஞ்ச பௌதிக தேகம். (பிறந்த இடத்தும்) அவனுடையது அபிராக்ருத திருமேனி.
4. தர்மம் செய்து மேன்மை அடைய நம் பிறவி. நலிவுற்ற தர்மத்தை உத்தரிக்க அவன் அவதாரம்.
5. கர்மம் கழிய வேண்டி நாம் பிறக்கிறோம் . அதர்மத்தை அழித்து, ஸாதுக்களை ரக்ஷிப்பது பகவதவதார பிரயோஜனம்.
6. நாம் பிறவாதிருக்க வேண்டி அவன் பிறக்கிறான்

அந்தர்யாமி – ஹார்த்த ரூபியான – தகராகாஸ வாசி. தன்னை அநாதரிப்பவர்களையும் ஆதரித்துப் போருகிற இடம்.
இவனுடைய ஸ்வர்க்க நரகாதி யானத்திலும் விடாதே பற்றி இருக்கும் நிலை. உடன் கேடனாய் இருக்குமிடத்தும்,
தோஷ அஸம்ஸ்பிருஷ்ட்டனாய். ரிஷி யோகிகளுக்கும் பிரத்யக்ஷம்.

அர்ச்சை .- திருவாளன் திருப்பதிகள் தோறும் விக்ரக ரூபத்தில் எழுந்தருளி இருத்தல்.
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று கிருஹார்ச்சையாய் சந்நிதி பண்ணி அபூர்ணனைப் போலேயும்
அசகத்தனைப் போலேயும் இட்டது கொண்டு நிறைவு அடைபவனாய் ரக்ஷணம் பண்ணி போருமவன்.

ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வானமாமலை , திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் திருவேங்கடம் நைமிசாரண்யம் புஷ்கரம் பத்ரிநாத் முக்திநாத்.

தெய்வ
சித்த
மநுஷ்யர்களால்
ஏறி அருளப் பெற்ற க்ஷேத்ரங்கள் என அர்ச்சாவதார க்ஷேத்ரங்கள் நான்கு வகை.

பகவத் விபவ அவதார காலங்களிலும் ஆராதிக்கப் பெற்ற பெரிய பெருமாள், ராமப்பிரியன் போன்று
பெருமை உடைய அவதாரம் அர்ச்சாவதாரம். ஸர்வம் பூர்ணம் ஸஹோம் என்று பிரபத்திக்கு உகந்தவிடம் அர்ச்சாவதாரம் .
ஆழ்வார்களும், பகவத் ராமானுஜரும் பிரபத்தி பண்ணித்து அர்ச்சையிலே .

இந்த 5 நிலைகளிலும் ” அகலகில்லேன் இறையும் என்று லக்ஷ்மி விசிஷ்டனாகவே அவன் கோயில் கொள்கிறான் என்பது
வேத, இதிஹாச, புராண, ஆழ்வார் பாசுரங்களில் பிரசித்தம்.
ஆக, இது ஒரு மிதுன ஸம்பிரதாயமாய் ஏகாயான மதம் நிரசிக்கப் பட்டது .

—————————————————————————–

கடிகாசலம் என்கிற சோள சிம்ம புரம் தொட்டையாச்சார் ஸ்வாமியின் சிஷ்யர்
ஸ்ரீநிவாஸ குரு சாதித்த பால போத கிரந்தம் ”யதீந்திர மத தீபிகா” என்கிற இந்த நூல்,
பகவத் அவதாரங்கள் 10 போலே , ஆழ்வார்கள் அவதாரங்கள் 10 போலேயும் 10 அவதாரங்களைக் கொண்டது.
அவை பிரமாணங்கள் விஷயமான 3ம் + பிரமேயங்கள் விஷயமான 7 மாக 10 அவதாரங்கள். அவையாவன:

பிரத்யக்ஷ பிரமாணம்.
அனுமானப் பிரமாணம்,
சப்த பிரமாணம்
என்ற மூன்று.

அடுத்து பிரமேயத்துக்கான 7ல் திரவியம் 6 + அதிரவ்யம் 1. திரயங்களில் ஜடம் 4 + அஜெடம் 2.

பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்; (பராக்)
சுத்த சத்வமாகிற பரம பதம் (பராக்) 4ம் ஜடம்.

ஜீவாத்மா; (பிரத்யக்)
பரமாத்மா (பிரத்யக்) 2ம் அஜடம்.

லக்ஷ்மி லக்ஷியா அனயா தேவி. பூ நீளா தேவிகளோடு சேர்ந்து நம் குற்றங்களைப் பொறுப்பிக்குமவள் அவளே.
ஜீவாத்மாவுக்கு ஒரு மிதுனமே உத்தேச்யம். பகவான் உபாயமும், பிராப்பியமுமாய் இருக்க,.
பிராட்டி புருஷகார பூதை மற்றும் கைங்கர்ய பிரதி சம்மந்தியுமாவள். அவளை பற்றித்தான் பகவானைப் பற்ற வேண்டும்.
புருஷம் கரோதி இதி புருஷகார: நம்மை அருளாலே திருத்தி, அவனை அழகால் திருத்தும்,
பிராட்டியை முதலில் பற்றுவதற்குக் காரணம், உபாய அத்யாவசாயம் பலிக்கவே.
இவளுடைய அருளாலே அவனுடைய ஸ்வாதந்திரியம் மடிந்தால், தலை எடுக்கும் குணங்கள் :
நீரிலே நெருப்பு கிளருமா போலே ,
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம். கார்யம் செய்யுமென்று துணிக்கைக்கு ஸ்வாமித்வம் .
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீலயம் . கண்டு பற்றுகைக்கு சௌலப்யம்.
விரோதியைப் போக்கி தன்னை கொடுக்கைக்கு ஜ்ஞான சக்திகள்.

அஸ்ய ஈஸானா ஜகத: விஷ்ணு பத்நி என்று அவள் நமக்கு சேஷியாய், விஷ்ணுவுக்கு பத்நியாய் , பிரதம கிங்கரியாய் விளங்குமவள்.

இந்த விஷயத்தில் ஒரு யோஜனா பேதம் உண்டு. பிராட்டியை பிருஹ்ம கோடியிலே சேர்ப்பதா? சேஷ கோடியிலே சேர்ப்பதா ? என்பதே அது.
விசிஷ்ட அத்வைதம் என்று பிரஹ்ம ஏக வாதமாய் இருக்க, பிராட்டியை ஆத்ம கோடியில் இல்லாது பிரஹ்ம கோடியில் சேர்த்தால்,
விசிஷ்ட துவைத்த சம்பிரதமாக வன்றோ தேறும்? என்பது தென்னாசார்ய பக்ஷம்.

நம் விஷயத்தில் அவளுக்கான ஆகாரத் திரயம் :(லோகாசார்ய பக்ஷம்)

புருஷகாரத்வம்.
சேஷித்வம்.
பிராபியத்வம்.
ஸ்வரூபதயா அணுத்வம்.
பகவத்விக்ரக வியாப்திதயா விபுத்வம் ஸம்பாவிதம்.

அவளுக்கு உபாயத்வம் இல்லை என்பதாம். உபாயத்வம் ஸ்வதந்திரனான பரமாத்மாவுக்கே அசாதாரணம்.
பிராட்டி உட்பட அனிதரர்கள் அவனுக்கு பரதந்திரப் பட்டவர்கள் என்பது கொண்டு.

தேசிக பக்ஷம்:

புருஷகாரத்வம்.
உபாயத்வம்.
பிராபியத்வம் .
ஸ்வரூபத்தாலேயே விபுத்வம் வியவஸ்திதம்.

—————————————————————————————–

இனி பத்தாவது அவதாரம் அ திரவ்யம்.

சம்யோக ரஹிதம் அதிரவ்யம். (Dimensionless-non object ) அதாவது அதிரவ்யங்கள் ஒன்றோடு ஒன்று சேர இயலாதன.

குணங்கள் ஒன்றொடு ஒன்று சேர இயலாது. ஆனால் அவை ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம்.
அதாவது ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் ஒன்றோடு ஒன்று சேராது
ஆனால் அவை சரீரமாகிய ஓரிடத்தில் ஆஸ்ரயித்து இருக்கலாம். குணம் சரீரத்தை ஆஸ்ரயித்து இருக்கலாம்.
குணம் குணத்தை ஆஸ்ரயித்து இருக்கலாகாது.

அவஸ்தாஸ்ரயம் (மாறுதலுக்கு உட்படுவது) திரவ்யம் = உபாதானம்.

அ-திரவியங்களாவன :

ஸத்வம் = உண்மை அறிவாய், சுகமாய் லாகவமாய் அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. மோக்ஷ ஹேது .
அதுவும் இரண்டு வகை.
1. சுத்த ஸத்வம் = ரஜஸ் தமஸ் ரஹித விருத்தி (ரஜஸ் தமஸ் இல்லாத ஆஸ்ரயம்).
அவைதான் பரம பதமும் , பகவத் திவ்ய மங்கள விக்கிரகமும்.
2. மிஸ்ர ஸத்வம் = ரஜஸ் தமஸ் சகசாரி . பிரகிருதி, பிராகிருத்தங்கள்.

ரஜஸ் = அதீந்திரியமாய் சக்தி அதிரிக்தமானது. உலக விஷயங்களில் விருப்பம், ஆசை, பேராசை செயல்பாடு இவைகளுக்கு காரணம்.
ஸ்வர்க்க, பித்ரு லோக பிறப்பிக்குமதாய், அல்ப, அஸ்திர, ஆமுஷ்கிக பல, துக்க ஹேது .
மாறாக, பகவத் விஷயத்திலான விருப்பம், ஆசை, பேராசை, செயல் பாடு சத்வ குண பிராசர்யத்தால் வருவது.

தமஸ் = மறதி , மயக்கம், சோம்பல், தூக்கம், கவனக் குறைவு இவைகளுக்கு காரணமாகிறது. அஜ்ஞான ரூப, நரக ஹேது.

இம்மூன்றும் பிரளய தசையில் சமமாய் இருக்க , சிருஷ்டியின் போது வி சமமாய் (ஆகவே தான் ஸ்ருஷ்டி விஷம சிருஷ்டி யாகிறது?).
உபயுக்த மாகின்றன. ஸ்ருஷ்டி ரஜோ குண கார்யம். சம்ஹாரம் தமோகுண கார்யம். ரக்ஷணம் ஸத்வ குண கார்யம் .
பகவானுக்கு முக்குணங்கள் உண்டா என்றால் இல்லை. லீலார்த்தமாக, தன் இச்சையால் அவைகளை அவலம்பித்து கார்யம் செய்வார்.

ஸப்த = காற்றின் உதவியால் காதால் உணரப் படுவது. பஞ்ச பூதத்தால் ஆனது.
இதுதானும் வர்ணாத்மகம். அவரணாத்மகம் என இரண்டு வகை.
உயிர் எழுத்து (13), மெய்யெழுத்து (18), உயிர்மெய்எழுத்து (216) அனைத்தும் வர்ணாத்மகம்.
இவை மனுஷ்ய, தேவ உதட்டசைவுகளால் ஏற்படுவன.
மற்ற ஒலி வடிவங்கள் (பட்சிகளின் சப்தம், வாத்தியங்களின் சப்தம் இவை) அவர்ணாத்மகம் .

விஜாதீயமாய் பரமபதத்தில் உணரப்படிகிற சப்த ரூப ரஸ கந்தம் இங்கு சொல்லப் பட்டவைகளைக் காட்டிலும்
விலக்ஷணமானவை.வேறுபட்டவை.

பிரணவத்தின் உள்ள அகாரம் , சப்தங்களுக்கு உபாதானமாய் சொல்லப்படுவதால்,
சப்தம் அதிரவ்யம் என்பது பொருந்தாதே என்னில் , ”அ ” என்பது விஷ்ணுவைக் குறிக்குமாதலால்,
எப்படி விஷ்ணு ஜகத்துக்கு உபாதான காரணமோ, அதுபோல் சப்த ராசிகளுக்கு அகாரம் உபாதான காரணம் என்று
கொள்வதும் ஒளபசாரிகமாய் ஒழிய வஸ்துதா இல்லை.

ஸ்பர்ச = தொடு உணர்ச்சியால் அறியப் படுவது. வெப்பம், குளிர்த்தி, இரண்டும் அற்ற தன்மை என மூன்று வகையாக உணரப்படும்.
தண்ணீர் குளிர்த்தி. நெருப்பில் இருப்பது வெப்பம். நிலம், காற்று இவைகளில் இரண்டும் அற்ற தன்மையைப் பார்க்கலாம்.
இந்த ஸ்வபாவ குணங்கள் அவையவை நெருப்போடு சம்பந்தப் படும்போது மாறலாம்.
ஆனால் அவை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். நெருப்போடு சம்பந்தப் பட்டால்
”பாகஜம்” என்றும், மற்ற நிலை ”பாகஜ அபேதம் ” என்றும் பிரிக்கலாம். உ.ம். அமிர்தம், பஞ்சு நெருப்பு, கல்லு, பசு இவை.

ரூப = நிறம், பளபளப்பு எனப்படுகிற அதிரவ்யம் ரூபம். அத்தை கண்களால் மட்டுமே உணர முடியும் .
மஞ்சளான அக்ஷதையை கண்ணால் பார்த்தும் , கைகளாகிற தொடு உணர்ச்சியாலும் அறியலாம்.
ஆனால் அதன் மஞ்சள் நிறத்தை கண்களால் மட்டுமே கிரஹிக்க முடியும். துவக் இந்திரியத்தால் ஆகாது.
எனவே ரூபம் கண்களுக்கு மட்டுமே விஷயம்.
நிறங்களில், வெண்மை, சிகப்பு, மஞ்சள், கறுப்பு என்று நால்வகை வர்ண பேதம் பார்க்கப் படுகின்றன.
பாஸ்வரம் =ஒளிவிடக் கூடிய (நெருப்பில் உள்ள சிகப்பு)
ஆபாஸ்வரம் = ஒளிவிடாத (ஜெபா குசுமாம் ) என்று நிறங்களை வேறு விதமாவும் பிரிக்கலாம்.

ரஸ = வாயிலுள்ள நுனி நாக்கால் உணரப்படும் சுவைகள் 6 – இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு , காரம்.
அடியார்களுக்கு ஆறு சுவை அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்கிற ஷட் ரஸமாகும்

கந்தம் = மூக்காகிற இந்திரியத்தினால் உணரப்படுவது. பூ, சந்தனம் இவைகளில் உள்ள நறுமணம்,
மல, மூத்திராதிகளில் உள்ள துர்நாற்றம் என்று இரண்டு வகை.
காற்று, ஜலம் இவைகளுக்கு இயற்கையில் மணம் இல்லாவிட்டாலும், ‘
‘கந்தவது பிரிதிவி ” என்ற வகையில் பூமியில் இருந்து உண்டாகும் பூக்களின் மகரந்த சேர்க்கையால்
காற்றுக்கும், ஏலம், கிராம்பு போன்றவைகளின் சேர்க்கையால் ஜலத்துக்கும் மணம் பாக பேதத்தால் சம்பாவிதம்.

ஆகாசம் – சப்தம் – காது
நெருப்பு – ரூபம் – கண் –
காற்று – ஸ்பர்சம் – தொடு உணர்சி
நீர் – சுவை – நாக்கு
நிலம் – மணம் – மூக்கு.

பஞ்சிகரணத்தால் எல்லாவற்றிலும் எல்லா குணங்களும் இருக்குமானால் , பிரதானமான குணங்கள் இவை.
பாகம் படும்போது மற்றைய குணங்கள் வெளிப்படுவது உண்டானாலும் அது நேரம் போகப் போக பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
இரும்பு கொதிக்கிறது என்றால், காய்ச்சும் போது கடின பதார்த்தம் திரவம் போல் ஆனாலும்,
உஷ்ணம் நீங்கும் போது மீண்டும் கெட்டிப் படும் என்பது இயற்கை.

ஸம்யோகம் – கூட்டறவுக்கான புரிதல் ஸம்யோகம். உ.ம். மேசை மேல் புத்தகம் இருக்கும் போது
புத்தகத்தின் ஒரு பகுதியும் மேசையின் குறிப்பிட்ட பகுதியும் சம்பந்தப் பட்டிருக்கும்.
அப்படியான மேசையின் ”மேல் ” புத்தகத்துக்கான சம்பந்தத்தை ” மேல்” என்கிற புரிதலால் அறிகிறோம். அந்த அறிவு ஸம்யோகம்.

கார்ய ச சயோகம் – இரண்டு ஆடுகள் முட்டிக் கொள்ளும்போது அதன் தலைக்கான சம்பந்தம்.
மரக் கிளையின் மேல் கிளி வந்து உட்காருதலால் ஏற்படுகிற சம்பந்தம். கையில் புத்தகத்தை எடுக்கும் போது உண்டாகும் சம்பந்தம் இவை.

கையோக ச சயோகம் – கையில் புத்தகம் இருக்க, உடலுக்கும் புத்தகத்துக்குமான சம்பந்தம்.
இது கையோகத்தில் அடக்கமாதலால், அதிவாதமாய் மறுக்கப் படுகிறது.
அதே கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டால் ஏற்படும் எதிர் நிலை விபாகச விபாகம் என்பர் தாரிக்கிகர் .
இதுவும் மறுக்கப் படுகிறது. இத்தை சையோகச அபாவத்தில் அடக்கிவிட முடியுமாதலால்.

ஆகார்யச சையோகம் – இரண்டு விபு தத்வங்களுக்கான சம்பந்தம். பிரஹ்மமும் காலமும் சம்பந்தப் பட்டிருத்தல்.
பிரஹ்மமும் பிரகிருதியும் சேர்ந்து இருத்தல்.

சக்தி.- நெருப்புக்கு சுடுதலாகிற தன்மையை எது செய்கிறதோ அதை சக்தி என்கிறோம்.
அதேபோல் எல்லாப் பொருட்களுக்கும் அதனதன் தன்மையை நிர்வகிக்கும் அதிரவ்யம் ”சத்தி” எனப்படும்.
காந்தமும்-இரும்பும் போலே . மந்த்ரம், மருந்து, இவைகளால் கட்டி இடாதபோது வெளிப்படுமது .

பரா அஸ்ய சக்திஹி விவிதைஸ்ச ஸ்ரூயதே — என்று சொல்லப்பட்ட விஷ்ணு சக்தி அதுவாகும்.
அது இந்திரியங்களுக்கு கோசரம் இல்லை.

தார்க்கிகள் சொல்லும் மேலும் 14 விதமான குணங்கள் தனித்து சொல்லாமல் மேல் சொன்ன 10 அதிரவ்யங்க ளுக்குள்ளேயே
அடக்கிவிடலாம் என்பது ராமானுஜ பக்ஷம்.

புத்தி, இச்சை சுகம் துக்கம் த்வேஷம் யத்தனம் இந்த 6ம் ஜ்ஞானத்தின் வெளிப்பாடு ஆகையால்
தனிப்பட்ட சொல்ல வேண்டியதில்லை ஜீவனுடைய ஜ்ஞாத்துக்குள் அந்தர்கதம் .

தர்ம அதர்மமௌ பாப புண்யௌ ஈஸ்வ்ர ப்ரீதி கோபௌ என தர்ம அதர்மங்களை ஈஸ்வர ஜ்ஞானத்துள் படிக்கலாம்.

சம்ஸ்காரம் எனப்படும் பாவனை, வேகம் , ஸ்திதி ஸ்தாபனம் (எத்தனைப் பிரயத்னப் பட்டாலும்
அதன் முன் நிலைக்கே திரும்புவது, நாய் வால் போலே ) மூன்றும் ஜ்ஞான விபாகமாகவும்,
வஸ்து ஸ்வரூபமாகவும், சையோகத்து க்குள்ளாகவும் சேர்த்து விடலாம்.

விபாகம் (பிரிவு) பிரதத்வம் (தனிமை) இரண்டும் அப் பாவ நிலையாய், சையோகத்துக்குள் அடங்கும்.

சங்கியா (எண்ணிக்கை), பரிமாண (மாறுதல்), திரவத்வ (நீரான தன்மெய்), ஸ்நேஹானாம் (பிசு பிசுப்பு)
இவை வஸ்து ஸ்வபாவமாய், தனிப்பட சொல்ல வேண்டியதில்லை.

குருத்வம் (எடை கூடிய நிலை) சக்தி- அதிரவ்யத்துக்குள் அடக்கி விடலாம். ஆக அதிரவ்யங்கள் 24 (அ ) 38 இல்லை 10 மட்டுமே.

சத்வ, ரஜஸ் , தமோ குணங்கள் பிரகிருதி சம்பந்தப் பட்டது. ஆத்மாவுக்கு இல்லை.
ஆனால் சரீரத்துக்குள்ளான ஆத்மாவுடைய தர்மபூத ஜ்ஞானம் முக்குணங்களால் மறைக்கப் படுவதால்
ஆத்மாவை அவை பாதிப்பதாக சொல்லப் படுகிறது.

சாத்விக ஜ்ஞானம் , சாத்விக காலம் என்கிற வழக்கு உபசார வழக்கே. உண்மையில் சரீரத்தில் சாத்விக தாதுக்கள்
மேலோங்கின காலத்து ஜ்ஞானம், சாத்விக வஸ்து பரிமித காலம் என்று கொண்டு ஒளபசாரிகமாக கொள்ளவேண்டும்.

ஆகாசம் – சப்தம்
நெருப்பு – ரூபம் + சப்தம்
காற்று – ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நீர் – சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
நிலம் – மணம் + சுவை + ஸ்பர்சம் + ரூபம் + சப்தம்
என கலசி இருக்கும்.

சுத்த சத்வம் திரிபாத் விபூதியிலும் அதனை வளர்த்துக் கொடுக்கும் பகவானி டத்திலுமாய் இருக்கும் .

சையோக சக்தி கீழ்ச் சொன்ன
பிரகிருதி;
காலம்;
தர்மபூத ஜ்ஞானம்;
சுத்த சத்வமாகிற பரம பதம்
ஜீவாத்மா;
பரமாத்மாவாகிற
6 திரவ்யங்களில் இருக்கும்.

ஆத்யாத்கமி சாஸ்திரமான இதில் தத்வ ஹித புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டதும் இப்புடைகளாலே :

பிரகிருதி, ஜீவ பர பரிச்சேதம் சொல்லு முகேண தத்துவமும்; புத்தி பரிச்சேத முகேண ஹிதமும் (பக்தி, பிரபத்தி முதலான உபாயமும் ) ;
நித்ய விபூதி, ஈஸ்வர பரிச்சேத முகேண புருஷார்த்தமும்
(நித்ய விபூதியைப் பிராபிக்கை பிராப்தி என்றும் ஈஸ்வர கைங்கர்யம் பிராப்தி பலம் என்றும்) விளக்கப்பட்டன.

தத்வம் ஏகம் என்று சூரிகளும் ; அதுவே
ஆத்மா (ஜீவ, பரர்கள்) அநாத்மாவாய் (பிரகிருதி) இரண்டு என்று ரிஷிகளும்
போக்யம், போக்தா பிரேரிதா என்று மூன்றாய் ஸ்ருதியிலும் ;
ஹேயம் (சரீரம்), தஸ்ய நிவர்த்தகம் (கழிய வழி ) உபாதேயம் (கொள்ளத்தக்கது )
தஸ்ய உபாயம் ( அதை அடைய வழி) என நான்காய் இதர ஆசாரியர்களும் ;
பிராப்பியம், பிராப்தா, உபாயம், பலம், விரோதி என் அர்த்த பஞ்சகமாய் அஸ்மத் ஆசாரியர்களும்
அத்தோடு ஜீவா-பர சம்பந்தம் சேர்த்து தத்துவங்கள் ஆறு என்று சொல்பவரும் உண்டு.

எப்படிச் சொன்னாலும், சிதசித் விசிஷ்ட பிரஹ்மம் ஏக மேவ என்பதே வேதாந்தத்தின் முடிவு..
அதையே வேத வியாசரும் தன்னுடைய பிரஹ்ம சூத்திரத்தில் பிரஹ்ம ஜகத் காரணத்வத்தை முதல் இரண்டு அத்தியாயத்திலும்,
அத்தை அடைய உபாயம் பக்தியே என்று 3வது அத்யாயத்திலும், பிரஹ்ம சாயுஜ்யமாகிற முக்தியை 4வது அத்தியாயத்திலும்
காட்டியதான அந்த பிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே தத்வம் என்பது விசிஷ்டாத்வைதிகளின் தர்சனமாகும் .

அற நூல் அளித்த அறிவின் வழி யாத்த
மறை நூல் ”யதிபதி போதநல் — நிறை கொள்
விளக்கம்” திருவளர் சீனிவாச மா குருநாம்
ஆள வகுத்த தொழுகு

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .