Archive for the ‘Kannan’ Category

ஸ்ரீ கலியனுக்கும்‌ ஸ்ரீ கண்ணனுக்கும்‌ 12 வகைகளால் ஓற்றுமை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

July 26, 2025
1-[ஸூர்யத்வாத்‌] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌ கண்ணபிரானுடைய திருவவதாரத்தைக்‌ கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை ; *ததோகிலஜஐக த்பத்மபோதாய அச்யுதபாநுநா, தேவகீபூர்வஸந்த்யாயாம்‌ ஆவிர்ப்பூதம்‌ மஹா த்மநா* என்கிற ச்லோகம்‌ க்ருஷ்ணாவதாரத்தைக்‌ கூறுமது. இதில்‌, தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றது. இதனால்‌ க்ருஷ்ணன்‌ ஸுூர்யனென்னுமிடம்‌ ஸித்தித்தது. 
கலியனும்‌ ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை “கலயாமி கலித்‌வம்ஸம்‌ கவிம்‌ லோக திவாகரம்‌” என்கிற அவருடைய ஸ்துதிபத்யத்‌தினால்‌ உணரலாம்‌, ஆக இருவரும்‌ ஸூர்யர்களென்னு மத்தாலே ஸாம்யம்‌.

2-[ஸூசிதத்வாத்‌] ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன்‌ பொருள்‌. கண்ணனுடைய அவதாரமும்‌ கலியனுடைய அவதாரமும்‌: இவர்கள்‌ அவதரிப்பதற்கு வெகுநாள்‌ முன்னமே ஸசஃசிப்பிக்கப்‌' பட்டிருந்தது. எங்ஙனே யென்னில்‌ ; கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்‌ அக்கம்ஸன்‌- தேவகிக்கு. மிகச்‌ சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்தி வத்துப்‌ பரமப்ரீதியுடன்‌ தம்பதிகளை ரதத்தில்‌ வீற்றிருக்கச்‌ செய்து அதனைத்‌ தானே ஓட்டிக்கொண்டு போகையில்‌ ஆகாசவாணி யொன்று செவிப்பட்டது! “இத்‌ தேவகியின்‌ எட்டாவது குழந்தையினால்‌ உனக்கு ம்ருத்யு விளையும்‌' என்று, அந்த வாக்கு அப்படியே பலித்தது. இதனால்‌ ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்‌
முன்னமே ஸுசிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை யாழ்வாருடைய திருவவதாரமும்‌ முன்னமே ஸூசிதமாகி யுள்ளது. திருவாய்மொழியில்‌ (5-௨-1) “'கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌” என்கிற பாசுரத்தை ஆகாசவாணி யென்றே கொள்க. -தவறாமல்‌ பலிப்பது ஆகாசவாணி. இந்தப்‌ பாசுரமும்‌ தவறாமல்‌
பலித்திருக்கின்‌றது. ஆசார்யஹ்ருதயத்தில்‌ “கலியுங்‌ கெடும்‌ போலே ஸுசிதம்‌'” என்றவிடத்து வியாக்கியானத்தில்‌ மணவாளமாமுனிகள்‌ -“இவர்‌ தாம்‌ மயர்வற மதிநலம்‌ பெற்றவராகையாலே “கலியுங்‌ கெடும்‌' என்று-திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ அவதரித்துக்‌ கலியுக ஸ்வபாவமும்‌ கழியுமென்று மேல்‌ வரும்‌ அம்சத்தை தர்சித்து அருளிச் செய்தாப் போலே” என்று திருவாய்மலர்ந்தருளியுள்ள திவ்ய உக்தி இங்கே அநுஸந்தேயம்‌, கண்ணன்‌ கம்ஸ வதம்‌ செய்தவன்‌ ;இவ் வாழ்வார்‌ கலி புருஷவதம்‌ செய்தவர்‌.

3-[அபஹ்ருதிகரணாத்‌] கண்ணன்‌ கள்வனென்று ப்ரஸித்தி பெற்றதுபோல இவ்வாழ்வாரும்‌ கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர்‌. “வெண்ணெய்‌ களவுசெய்தான்‌, பெண்களைக்‌ களவுசெய்தான்‌! என்று ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்‌. இவருடைய சரித்திரத்‌திலும்‌ திருவரங்கம்‌ பெரியகோயிலில்‌ கோபுர ப்ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப்‌ பலபல களவுகள்‌ செய்த செய்திகளை வாசிக்‌கின்றோம்‌. ஆக இத்தகைய கள்வத்தினாலும்‌ ஸாம்யம்‌.

4-[கோகுலோத்தாரகத்வாத்‌] *ஆயர்பாடிக்கணிவிளக்கே' என்‌றும்‌, “'ஆயர்குலத்தினில்‌ தோன்று மணிவிளக்கை” ' என்றும்‌ சொல்லுகிறபடியே கண்ணன்‌ திருவாய்ப்பாடியில்‌ திருவவதரித்துக்‌ கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்‌, இவ்வாழ்வாரும்‌
கோகுலோத்தாரணம்‌ செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்‌; *ந்ருபசு;” என்று ஆளவந்தாரும்‌, “வ்ருத்த்யா பசுர்‌ ஈரவபு:” என்று மணவாள மாமுனிகளும்‌ அருளிச்செய்தபடி நாமெல்லாரும்‌ பசுக்களேயன்றோ.
“ஜ்ஞாநறேற ஹீந : பசுபிஸ்‌ ஸமா௩ :”” என்றும்‌ ப்ரஸித்தமாகவுள்ளது.
ஞானமும்‌ நன்னடத்தையும்‌ ஒன்றுமின்றிக்கே யிருப்பதனால்‌ கோக்களா யிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார்‌ வந்து அவதரித்து உத்தாரகராயினர்‌.

5-[பத்தத்வாத்‌] கண்ணன்‌ “மத்துறு கடை வெண்ணெய்‌ களவினிலுரவிடையாப்‌ புண்டு” என்றும்‌ “கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌?' என்றும்‌ சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்‌தம்‌, இவ்வாழ்வாரும்‌, பகவதாராதனத்திற் காட்டிலும்‌ பரமபாவனமான பாகவதாராதனத்தில்‌ ஊன்‌றியிருந்த காலத்தில்‌ தாம்‌ அரசுக்‌குச்‌ செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச்‌ செல்வம்‌ முழுதையும்‌ செலவிட்டுவர, அச்செய்தியைச்‌ சிலர்‌ சொல்லக்கேட்ட கொற்றவன்‌ கோபங்‌ கொண்டு। இவரை ஒரு தேவாலயத்தில்‌ சிறைவைக்கச்‌ செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில்‌ பிரஸித்தம்‌. -ஆக, கட்டுண்டமையினால்‌ இருவர்க்கும்‌ ஸாம்யம்‌.

6-[சாஸ்த்ரதத்வாத்‌] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சரஸ்‌திரத்தைக்‌ கொடுத்ததனாலே என்று பொருள்‌. கண்ணபிரான்‌ “அறிவினால்‌ குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத்‌ தொருமுர்‌த்தி என்கிறபடியே-ஸகலார்த்தப்ரகாசகமாய்‌ ஸகலசேதரோஜ்ஜீவரஸாதனமான கீதா சாஸ்த்‌ரத்தை யருளிச்செய்தான்‌. திருமங்கையாழ்வாரும்‌ “நெஞ்சுக்கிருள்‌ கடி திபம்‌ அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம்‌, தமிழ நன்னூல்‌ துறைகளஞ்சுக் கிலக்கிய மாரண சாரம்‌, பர சமயப் பஞ்சுக்‌ கனலின்‌ பொறி பரகாலன்‌ பனுவல்களே! என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற்காட்டிலும்‌ பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹா
சாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார்‌. கண்ணன்‌ தந்த சாஸ்திரத்தை *கீதோப நிஷத்து” என்னுமாபோலே இதையும்‌ “பொங்கு புகழ்‌ மங்கையர்கோனிந்த மறையாயிரம்‌” என்பர்கள்‌. : ஆக, சாஸ்த்ர ப்ரதாநத்தாலே இருவர்க்கும்‌ ஸாம்யம்‌ பொருந்தும்‌.

7-படுஜநஸஹயோகாத்‌ -கண்ணபிரான்‌ “ தன்னேராயிரம்‌ பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்‌?” என்கிறபடியே 'கொந்தளமாக்கிப்‌ பரக்கழித்துக்‌ குறும்பு செய்வானோர்மகனான தான்‌ செய்யும்‌ திமைகளுக்குத்‌ துணைவராகப்‌ பல சதுரர்களை உடன்‌ கொண்டிருக்‌தான்‌. திருமங்கையாழ்வாரும்‌, நீர்மேல்‌ நடப்பான்‌, நிழலிலொதுங்குவான்‌, தாளூதுவான்‌, தோலாவழக்கன்‌ முதலான சதுரர்களைத்‌
தமது செய்கைகளுக்குத்‌ துணைவராகக்‌ கொண்டிருந்தார்‌.

8-லக்ஷ்மீபதித்வாத்‌ -கண்ணபிரான்‌ ஸாக்ஷாத்‌ நாராயணமூர்த்தி யாதலால்‌ லக்ஷ்மீபதியாவன்‌. திருமங்கையாழ்வாரும்‌ லக்ஷமீபதி யாவர்‌. எங்ஙனே யென்னில்‌ : இவர்‌ வளர்ந்து வருகையில்‌ அற்‌மாட்டில்‌ அண்ணன்கோயில்‌ என்று வழங்குகின்‌ற திருவெள்ளக்குளமென்னும்‌ திருப்பதியில்‌ மிகச்‌ சிறர்ததொரு தாமரைப்‌ பொய்கையில்‌
ீதவலோகத்து அப்ஸர ஸ்த்ரீகள்‌ பலர்‌ வந்து ஜலக்ரிடைசெய்து செல்ல, அவர்களுள்‌ திருமாமகளென்பாள்‌ தன்‌ இச்சையால்‌ தெய்வ வடிவத்தைவிட்டுமானுடவடிவங்கொண்டு தனியே குழுதமலர்‌ கொய்து நின்றாளாக, அங்கு அநுஷ்டாஈத்திற்காக வந்த ஒரு
வைஷ்ணவ வைத்யன்‌ அவளைக்‌ கண்டு செய்தி விசாரிக்க, அவள்‌ என்னோடு கூடவந்த மாதர்கள்‌ என்னைவிட்டுப்‌ போய்விட்டார்கள்‌, தனியிருந்து அலைகின்ற என்னை நீர்‌ பாதுகாத்தருளவேணும்‌” என்று வேண்டிக்கொள்ள, மலடனான அம்மருத்துவன்‌ மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத்‌ தன்‌ மாளிகைக்கு அழைத்துப்‌ போய்‌ மனையாள்‌ வசம்‌. ஒப்பித்து, குமுதமலர்‌ கொண்டு நின்றது
காரணமாகக்‌ குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து வருகையில்‌ அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய, பிராயம்‌ வந்தவளவிலே அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு “மஹா குணவதியான இப்‌ பெண்ணுக்கு ஏற்ற கணவன்‌ உலகத்திலுளனோ' என்ற கவலையுண்டாக, அப்பொழுது அவளுடைய ரூப
லாவண்ய ஸெளந்தரியங்களையும்‌ குணாதிசயங்களையும்‌ சாரர்கள்‌ திருமங்கை மன்னனிடம்‌ கொண்டாடிக்‌ கூற, உடனே அவர்‌ அங்கு வந்து அந்த வைத்தியனிருக்கும்‌ வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷை செய்து அப்பெண்ணின்‌ வரலாற்றை வினாவி அதைத்‌ தந்தையார்வாயில்‌ அறிந்த வளவில்‌ “இவளை எனக்குத்‌ தாரைவார்த்துக்‌
கொடுக்கவேணும்‌” என்று அவரை வணங்கிக்கேட்டார்‌, அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு **திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்க்கேயன்றிப்‌ பிறர்க்கு வாழ்க்கைப்பட மாட்டேன்‌” என்று தன்‌ உறுதியைத்‌ தெரிவித்தாள்‌. -அதுகேட்ட திருமங்கை மன்னன்‌ உடன்‌ திருநறையூர்க்குச்‌ சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு மெம்பெருமானுடைய திருமுன்‌
பேஙின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்‌ திருவிலச்சினை பெற்றுப்‌ பன்னிரண்டு திருமண்‌ காப்புகளும்‌ சாத்திக்‌ கொண்டு விவாஹார்த்தமாக விரைவில்‌ வந்துசேரக்‌ கண்டு மீண்டும்‌ குமுதவல்லி “நீர்‌ ஓராண்டளவும்‌ நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும்‌ போனகஞ்‌ செய்த சேஷத்தையும்‌ உட்கொண்டாலன்றி உம்மை நான்‌பாணிக்கிரஹணஞ்‌ செய்து கொள்ளமாட்டேன்‌”! என்ன, அவளிடத்‌தில்‌ கொண்ட ஆசையின்‌ கனத்தால்‌ அவர்‌ இவ்வரிய விரதத்தைச்‌ செய்து முடிப்பதற்கும்‌ உடன்பட்டு அங்ஙனமேசெய்வதாகச்‌ சபதஞ்‌ செய்து கொடுக்க, அதன்பின்‌ இருவர்க்கும்‌ திருமணம்‌ நடை பெற்றது. லக்ஷ்மீபதித்வமானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும்‌ லக்ஷ்மியின்‌ பெயரைத்‌ தரித்திருந்த குமுதவல்லித்‌ தாயாருக்குப்‌ பதியென்னுங்‌ காரணத்தினால்‌ ஆழ்வாரும்‌ லக்ஷ்மீபதி யாயினர்‌. ஸ்ரீ வைஷ்ணவலக்ஷ்மிக்குப்‌ பதியென்றுங்‌ கொள்ளலாம்‌.

9-நீலத்வாத்‌ -கண்ணபிரான்‌ “கண்ணனென்னுங்‌ கருந்தெய்வம்‌” என்றும்‌ “கானகமெல்லாக்‌ திரிந்து உன்‌ கரிய திருமேனிவாட” என்றும்‌ சொல்லுகிறபடியே நீலநிறத்தழகார்ந்தவன்‌. திருமங்கை யாழ்வாரோவென்னில்‌ நீலனென்னுக்‌ திருநாமமுடையவர்‌. இராமானுச நூற்றந்தாதியில்‌ “தண்டமிழ்‌ செய்த நீலன்‌ தனக்கு” என்னுமிடத்தில்‌ நீலனென்ற சொல்லால்‌ திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்பதறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

10-நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்‌ -கண்ணபிரானுடைய சரித்திரங்‌களை நோக்குமிடத்து “மச்சொடுமாளிகையேறி மாதர்கள்‌ தம்மிடம்‌ புக்குக்‌ கச்சொடுபட்டைக்‌ கிழித்துக்‌ காம்பு துகிலவை கீறி நிச்சலுற்‌ தீமைகள்‌ செய்வாய்‌” என்றும்‌ “பிறர்‌ மக்களை மையன்மை செய்து தோளாலிட்டவரோடு திளைத்து. நீ சொல்லப்படாதன செய்தாய்‌” என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டி தங்களைச்‌ செய்த விவன்‌ நீதிநெறியில்‌ நின்றும்‌ நழுவினவனல்லவா என்று நினைப்பதற்கு இலக்காயிருப்பன்‌ கண்ணபிரான்‌. திருமங்கையாழ்‌வாரும்‌ அப்படியேயன்றோ. இத்‌ தன்மையினால்‌ ஒரு ஸாம்யம்‌. நீதி
நெறியில்‌ ஈழுவின தாக நினைக்கலாமத்தனையன்‌றி உண்மையில்‌ இருவரும்‌ நீதிநெறிவழுவாதவர்களே, மது: ச்லோகத்தில்‌ “நீதி மார்க்கச்யுதிமதிபஜநாத்‌” என்றது ச்யுதிமதிவிஷயத்வாத்‌' என்றபடி கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த தேசிகன்‌ யாதவாப்யுதயத்தில்‌ (4-64) “விமோஹரே வல்லவகேஹிநீநாம்‌
நப்ரஹ்மசர்யம்‌ பிபிதே ததீயம்‌, ஸம்பத்ஸ்யதே பரலகஜீவரம்‌ தத்‌ ஸத்யேக யேறைவ ஸதாம்‌. ஸமக்ஷம்‌?
என்னும்‌ ச்லோகத்தினால்‌ தெளிவித்தார்‌. அதாவது,பாரதப்போரில்‌ அச்வத்தாமா பிரயோகித்த அபாண்டவாஸ்த்ரத்தினால்‌ உத்தரையின்‌ கருப்பிண்டம்‌ கரிக்கட்டையாக, அப்போது கண்ணபிரான்‌ “யதி மே ப்ரஹ்மசர்யம்‌ ஸ்யாத்‌ ஸத்‌
யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம்‌ மமைச்வர்மம்‌ த ஜீவது பாலக!
” (நான்‌ ப்ரஹ்மசர்யமும்‌ ஸத்யமும்‌ வழுவா தவனாயிருந்தேனாகில்‌ இது உயிர்பெற்றெழுக) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால்‌ கண்ணன்‌ நீதிநெறிவமுவாதவனென்‌பது விளங்கிற்று, திருமங்கையாழ்வார்‌ நீதிறெறிவமுவா தவரென்‌பதை பட்டர்‌ ஸ்ரீ ரங்கராஜஸ்‌தவதத்தில்‌ “ஜிதபாஹ்யஜிநா தி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமண்டபவப்ரகணாக்‌ வித்தே பரகாலகவி: ப்ரணமேமஹி தாக்‌” என்னும்‌ ச்லோக ரத்நத்தினால்‌ வெளியிட்டருளினர்‌.

11-[அந்ததச்ச அவதாராத்‌] பகவானது விபவாவதாரங்களில்‌ க்ருஷ்ணாவதாரமே முடிவானது. கல்கியவதாரம்‌ பவிஷ்யத்தென்‌கிறார்கள்‌. அது வந்தபோது பார்த்துக் கொள்வோம்‌. இதுகாறும்‌ முடிந்துள்ள அவதாரம்‌ க்‌ருஷ்ணாவதாரமே. திருமங்கையாழ்வாரும்‌ ஆழ்வார்களுக்குள்‌ கடைப்பட்டவர்‌. “பொய்கையார்‌ பூதத்தார்‌
பேயார்‌ புகழ்‌ மழிசையையனருள் மாறன்‌ சேரலர்கோன்‌, துய்யபட்ட நாதன்‌ அன்பர்தாள்தூளி நற்பாணன்‌ *நன்கலியன்‌', ஈதிவர்தோற்‌ றத்து அடைவாமிங்கு”
என்ற உபதேசரத்தினமாலைப்‌ பாசுரமுங்‌ காண்க. ஆக இருவரும்‌ சரமாவதாரபூதர்‌ என்பதனால்‌ ஸாம்யம்‌ பெற்றனர்‌.

12-சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ -கண்ணபிரான்‌ '*தேனுகன்‌ பிலம்‌பன்‌ காளியனென்னும்‌ தீப்பப்பூடுகளடங்கவுழக்கி” என்றும்‌ “மலை புரைதோள்‌ மன்னவரும்‌ மாரதரும்‌ மற்றும்‌ பலர்‌ குலைய, நூற்றுவரும்‌ பட்டழிய” என்றும்‌ சொல்லுகிறபடியே பகைவர்களை யெல்லாம்‌ வேரோடு களைந்கொழிப்பதில்‌ பேர்‌ பெற்றவன்‌. ஆழ்வாரும்‌ “அருள்‌ மாரி அரட்டமுக்கி அடையார்‌ சீயம்‌” என்றும்‌ '*ஒற்றலர்‌ தங்களை வெல்லு மாடல்மாவலவன்‌ கலிகன்றி” என்றும்‌ தாமே யருளிச்‌ செய்தபடியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக்‌ களைக்தொழித்து இதனாலேயே பரகாலனென்று பேர்பெற்றவர்‌.

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும்‌ கலியனுக்கும்‌ ஒற்றுமை நிர்வஹிக்கப்‌ பட்ட தாயிற்று. இந்த 12 அர்த்தங்களைக்‌ காட்டுவதொரு சுலோகம்‌--
ஸூர்யத்வாத்‌ ஸூசிதத்வாத்‌ அபஹ்ருதிகரணாத்‌ கோகுலோத்தாரகத்வாத்‌
பத்தத்வாத்‌ சாஸ்த்ரதத்வாத்படுஜஸஹயோகாச்ச லக்ஷ்மீபதித்வாத்‌
நீலத்வாத்‌ நீதிமார்க்கச்யுதி மதிபஜநாத்‌ அந்ததச்சாவதாராத்‌
சத்ருத்வம்ஸோத்படத்வாத்‌ கலிரிபுமுநிராட்‌ க்ருஷ்ணதுல்யோ விபாதி.


———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ கிருஷ்ணகானம் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் பாடல்கள்

January 18, 2024

பல்லவி

ஆருடம் ஒன்று சொல்லடி — என்
அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின
நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க (அ)

அனுபல்லவி

பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே
பச்சைப் பிள்ளைத் தனம் போக வில்லையே மானே
ஆரோடு சொல்வேனோ அந்தரங்கம் தானே
அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம் தானே

(மத்யமகாலம்)
அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ
அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ
ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ
உள்ளதைச் சொல்லப் போனால் உனக்கென்ன சிரிப்போ. (ஆ)

சரணம்

அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான்
ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான்
மிச்சம் மீதி இல்லாது வெண்ணைகளவாடுவான்
வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான். (ஆ)

——–

பல்லவி

இன்னமுது அன்ன உன் வண்ணமுகம் கண்டு
சொன்னபடி யாடுது மனமே – இங்கு
துள்ளித் துள்ளிப்பாடுது முன்னமே

அனுபல்லவி

பின்னலும் சாயக் கொண்டையும் சூழ மயில்
பீலிஒன்று நிரந்தரம் வாழ
மின்னலொளி கடைக் கண்ணில் தாழ – நீல
மேனிமுழுதான வனமலர் மாலைகள் மிருந்து தாழ கடைதலிராத (இ)

சரணம்

மெய்யுணர்ந்த மறைமாதவர் ஆனவர்
மெய்ப்பொருள் இதென்று உனைநாட — நீல
மேனிபடும் சுதமானதை ஒரு ஆவினம்
மிக்க அருகில் அணைந்து கூட
ஐயன் உன் முக வண்ணனை ஆராரோ சொல்லக் கேட்டு
அரம்பையர்கள் மண்ணுலகம் நாட –
அருந்ததியும் கூட தன்னிலை இழந்து
ஆவட்டமிட தூது – பா – ட … … …

மத்யமகாலம்

அதிலுமிதுவென்று தகுதிமியெனவொரு ஆடக மயில் நடமாட
அங்கிங் கெனாது தங்கி உறவாடும் தென்றலும் வந்து குழல் கூட
பொதுவில் நடமாடும் புனத நற் சுடலை பூத்துக் குலுங்கி வனமாக
பொங்கு கடலரவு மலையென இலாது பொரும்
எனாது ஒருபோதும் கடையாத (இ)

பல்லவி

கள்ளமே அறியா – த – கண்ணனை
கானக்குழல் எதிரொலி மாதுளப கானத்திடையுலவு நீல ஒளிதனைக்
கண்டபடி சொல்லப் போகாதே – அது அந்தரங்க மாகவும் ஆகாதே.

அனுபல்லவி

மெள்ள மறைபாடும் தேவனை……… வேணது தரும் கற்பக கா…வி…னை..
தெவள்வே குழலூதும் தேவாதி தேவனை
மெள்ள மனைசென்று உள்ளதயிர்கண்டு அள்ளிமிகவுண்ட கள்ளத்தனமன்றி (க)

சரணம்

தென்றல் ஊறவரும் சின்னக் குழலிசையில்
சிந்தை வழி…கா…ட்ட சென்றோமே அங்கு
நின்ற அழகினிலே நெஞ்சாரத் தந்திங்கு
சிந்தைகவர்கள்வன் என்றோமே.
கன்றோடு பசுவெல்லாம் காக்கும் அருளாளன்
கருணையினால் வந்த தென்றோ…மே…

கைக்கொள்ளும் வெண்ணையுண்ட கருணையை மனமார
கள்ளம் கள்ளம் கள்ளம் என்றோமே.
தொன்று முதல் வந்த தொரு கோடிபிறவி
தூயதென வாக ஆனதே
சொல்லழகிலும் பண்ணழகிலுமாக
சொன்னதொரு உறவும் ஆனதே
கதியெனவானதும் துதியெனவானதும்
காளீய நடனமும் ஆனதே
கண்கண்ட தெய்வம் பண்கொண்ட தெய்வம்
கைகொண்ட வெண்ணை அது உண்டதன்றி (க)

—–

பல்லவி

அலைபாயுதே–கண்ணா! என்மனம் மிக
அலைபாயுதே–உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

அனுபல்லவி

நிலைபெயராது சிலைபோல நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதராமனம் (அ)

சரணம்

தெளிநத நிலவு பட்டப்பகல்போல் எரியுதே–உன்
திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா–ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனைகடலலையினில் கதிரவன் ஒளியென இணையிருக் கழலெனக் கனித்தவா
கதறிமனமுருக நானழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ – இது முறையோ – இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு (அ)

———–

பல்லவி

ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது)

அனுபல்லவி

ஆடலைக் காணதில்லை – அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே – ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது)

சரணம்

சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று – தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே – குழல்
பாடிவரும் அழகா – உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)

————

பல்லவி

நீலவானம்தனில் ஒளி வீசும் –
நிறைமதியோ உன் முகமே – கண்ணா (நீ)

அனுபல்லவி

கோல வண்ணம் காட்டி – குழலிசையைக் கூட்டி
மோன நிலையில் எம்மை – ஆட்டி வைத்த எங்கள்

இறைவா! என் மனமதிலே நிறைவாகி ஒளிமிளிர இன்பம் தர வந்
தவனே ப்ருந்தாவனம் நின்றவனே – காளிங்கனை வென்றவ –
னே-தித்தஜம் தஜம் தரி தாம் – தித் தஜம் தஜம் தரி தாம் – த
தாகிட குந்தரி – தரிஜகணம்தரி – ததீங்கிணதொம் – நீதாபதம மகாரிஸநி

சரணம்

நதிக்கரை ஓரத்திலே – யமுனை
நதிக்கரை ஓரத்திலே – அன்று ஒரு –
நாள் இந்நேரத்திலே – அன்
றலர்ந்த நறுமணமலரோ – மலரிதழோ உன் மதிமுகமென்றதும்
மதிமயங்கி வசமிழந்த என்னிடம் மனமிறங்கி அருள் புரிந்து சென்றதும்
மறவேனே – கணம் தரியேனே – தித்
தரிகுத ரிகுதீம் தததரிதீமித ஜணுத ஜணுததிம் தகததிங்கிணதொம் தத்தித்
தகதணக ஜம்தரி தித்தகணகஜம்தரி – தகணகஜம்தரி களங்கமிலா – த (நீ)

——

பல்லவி

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு – ராக
ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு –
அருமையென வந்தப் பிறவிகளோ – பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் (ஆ)

அனுபல்லவி

நாரத நாதமும் வேதமும் நாண
நாணக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட – கோபியரும் பாட
நேர் நேர் எனச் சொல்லி – தானாடுவான் அந்த (ஐ)

சரணம்

தோலை யறிந்து கனி தூர எறிந்து
வெறுந் தோலைத் துணிந்தொருவன்
தந்தானல்லவோ –
மேலைப்பிடி அவலை – வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ –
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி –
கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ – இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக் கெதற்கு என்று தள்ளி – நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி (ஐ)

———

பல்லவி

வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது ஆனானும்
மனமன்றோ களவானதே தயிரொடு நவனீதம் களவிட (வ)

அனுபல்லவி

நந்தகோபன் செய்ததவம் நல்வதொரு பயனாகி
இந்த விதமாக வந்து இன்பமுழுக் காட்டுதடி (வ)

சரணம்

காலினில் வழிந்த தயிர் கமலமலர்க் கோலமிட
கையில் வழி வாரும் வெண்ணைக் கானக் குழல் மூடியிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட (வ)

———-

பல்லவி

நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் எங்கள்
நீல நிறமேனி மாதவன் செய்வது
நிமிஷம் போவது யுகமாய் ஆகுது

அனுபல்லவி

காதாரக் குழலூதி கன்றோடு விளையாடி
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி
ஏதேதோ ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி
எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து
களவாடிடும் எனதாருயிர் மகனை (நீ)

சரணம்

செய்யும் துஷ்டத்தனத்திற்கு எல்லையே இல்லை
தேடிப் பிடிக்க என்றால் சக்தியும் இல்லை
கையும் களவுமாக்க காலமும் வல்லை –
காலம் தவறாது கோள் சொல்ல வந்து நின்ற
மாதர்க்கு விடை சொல்ல நேரமுமில்லை (நீ)

கட்ட எண்ணிக் கயிற்றைத் தேடியும் காணோம்
கைக்கான கயிறெல்லாம் அளவாகக் காணோம்
மட்டமென உரலொடு கட்டிடத் தோணும் ஆனால்
மட மட வெனும் ஒலி செவிபுக வந்தால்
மருத மரமிரண்டைக் காணவே காணோம் (நீ)

——–

பல்லவி

ஆடும் வரை அவர் ஆடட்டும்
அறிந்து கொண்டேனடி……மயங்கேனடி குறையேனடி

அனுபல்லவி

தேடும் வரை எனைத் தேடட்டும்
தெறிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்றமட்டும் (ஆ)

சரணம்

இங்கித மென்றாலே வீசை என்ன விலை
என்று கேட்பாரந்த மன்னன் – அதை
எடுத்துச் சொல்லவந்து நின்றாயே பெண்ணே நீ
ஏற்குமோடி எந்தன் எண்ணம்
ஸங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக
தவிக்குதே என் சொல்ல இன்னும
ஸரளி வரிசை முரளிக்காச்சு
ஜண்டை வரிசை கொண்டைக் காச்சு
அலங்கார பாம்பு மேலே
ஆடியாச்சு பாடியாச்சு

காவடிச்சிந்து

மாஞ்சி

1) கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிடையானத்தரம்
ஆனக் குழலிசைக் கேளும் – போன
ஆவியெல்லாம் கூட மீளும்.

2)
சல்லச் சலனமிட்டோடும் நதி பாடும்
வனம் தங்கித் தங்கி சுழன்றாடும் – நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோல்என
துள்ளித் துள்ளிக் குதித்தோடும் – புகழ்ச்
சொல்லிச் சொல்லி இசைபாடும்.

3)
கண்ணன் நகைபோலும் முல்லை இணை இல்லை
என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை – இது
கனவோ அல நனவோ என கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன்.

4)
தாழைமடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும்
என்ன சௌக்கியமோ என்று கேட்கும் – அட
மொழிபேசிட இதுவோபொழுதெனவோ அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்.

சரணம்

பா பா – பா பா – பா பா     மாத ப – பமகரி – கஸரீ
இங்கி – த மென் – றா லே     வீசை – என்ன .-வி.லை
ரிக மாபம – காரீ – காரீ     ஸா; – ஸா; – ஸா ஸா
என் . று ..- கேட் பா ரந்த     மன் — னன் .- அதை
ஸஸ பா – பா பா – பநிதா மா     தநி – ஸர்ரிஸ் நீதா பா; பாநித – மா
எடுத் துச் – சொல்ல – வந் .- து    நின் .- றா .. யே – பெண்.ணே…நீ
பா பா – பாமா – காரீ     பம கரீம கரி ஸா ;; ||
ஏற் கு – மோடி – எந்தன்     எண் . .. ணம் … … . ||
பா பா – பா ப ப – பாநித தம     நிதநீ – ஸாஸா – ஸா ஸா
சங்கீ – தம் அவர் – கை … யில்     கோ.விற் – குரங் – காக
ஸ்ரி .ரீபம க்ரி ஸா – ஸாஸா     தாரிஸ் நித – ஸா :-;; ||
தவிக்கு … தே . என் – சொல்ல     இன் … … னும் .-… ||
ரிரிரிரி – க்ரி ஸ்க்ரி ஸர்ஸ்     ஸா ஸ் நி தி – ஸா ஸ் ஸா ஸ்
சரளிவ ரிசை முரளிக் காச்சு     ஜண்டைவரிசை-கொண்டைக் காச்சு
பபாபா க்ரி ஸா ஸ் பா ப     பா ப பதம – மபம – காரி ||
அலங்கா ர – பாம்பு மேலே     ஆடி யாச்.சு பாடி – யாச்சு || (ஆடும்)

——–

பல்லவி

அவராக வருவாரோ வரமாட்டார் இதில்
அதிசய மென்னடி அன்னமே கண்ணன் (அவ)

அனுபல்லவி

எவருக்கும் மேலான இன்னருளாளன் யமுனாவனம் பூத்த இனமலர் தாளன்
புவனம் மயக்கும் புல்லாங்குழல் இசையாளன் புண்ணிய மிகுந்த எங்கள் ராதை மணவாளன்

மத்யமகால ஸாஹித்யம்

தவமிருந்த காளியன் தலமிசை இருந்து தாண்டவ மாடிய பதங்கொண்டு
தமால மரநிழல் இருந்து என்னிடம் தனியாக பேசி அதை நினைவு கொண்டு
குவளை நீல திருமேனி கொண்டன்று கோவர்த்தனம் சுமந்தது போல – இன்று
குவலய முழுதுள கவலையை ஒருங்கு கொண்டவரங்கிருந்திங்கு நேராக

சரணம்

தூது சென்ற உந்தன் வாயாடி தனம் கண்டு தொல்லை என்றெண்ணி விட்டாரோ
நாத குழலிசையில் நவநவமாக ராகம் இணைத்து விட்டாரோ
ஆதவன் அஞ்சி அஞ்சி அங்கே நிற்க ஆனந்தமாக நினைந்தாரோ
அடியேனையுந் சைரந்திரி போலவே எண்ணி ஆகட்டும் என்று விட்டாரோ.

(மத்யமகால ஸாஹித்யம் பாடி பல்லவியை எடுக்கவும்)

———

பல்லவி

அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! – நம் –
அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)

அனுபல்லவி

இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த –
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் –
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

மத்யமகாலம்

எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – ஒரு –
– பதம் வைத்து மறு பதம்தூக்கி – நின்றாட – மயிலின் இறகாட – மகர குழையாட
– மதிவதனமாட – மயக்கு விழியாட – மலரணிகளாட – மலர்மகளும் – பா…ட –
இது “கனவோ நனவோ!” – என – மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட –
(அசைந்தாடும் மயில்)

சரணம்

அசைபோடும் ஆவினங்கள் கண்டு – இந்த –
அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு
நிசமானசுகம் என்று ஒன்று – இருந்தால்
நீளுலகில் இதையன்றி – வேறெதுவும் அன்று!
இசையாரும் கோபாலன் இன்று – நின்று –
எழுந்தெழுந்து நடம்ஆட – எதிர்நின்று ராதைபாட -,

எங்………………………………….. கொண்டாட (அ)

—–

பல்லவி (ராகம்: தர்பார்)

இப்படியும் ஓர்பிள்ளை எங்கேயும் இல்லை
இன்பம் தரும் தொல்லை இதற்கீடிணையும் இல்லை (இப்படியும்)

அனுபல்லவி

பொற்புயத்தே வனமலரும் பூப்புனையும் பலராமா
தப்பிதமாகாத உன்தன் தம்பி என்றால் அறமாமோ
இப்போதே நீ சென்று எங்கள் மொழி ஈதென்று
எந்த விதமோ இதை யசோதையிடம் போய் சொல்லு (இப்படியும்)

சரணம் (ராகம்: தன்யாஸி)

எப்படியும் உறிக்கலயம் எட்ட முடியா உயரம்
கட்டி ஒரு வகை செய்து காவல் வைத்துப் போன பின்னர்

(ராகம்: வஸந்தா)

யாரென்று வினவ எம்மை அஞ்சுவோம் என்று கண்டுன்
பேர்சொல்லி உன்னுடனே பிறந்தோன் என்றான்
பார் இங்கே வந்து தயிர் பானையுள்ளேது எனில்
கார் ஒன்றைத் தவிர்த்த இளங்கன்றொன்றை காணுமென்றான் (இப்படியும்)

(ராகம்: மத்யமாவதி)

இத்தனையும் செய்து பின்னர் எங்கள் மனம் நோகு மென்று
முத்தம் ஒன்று ஈந்து நாங்கள் மயங்கி நின்ற வேளையிலே
கத்தைக் குழல் பற்றி எழில் மிக்க மயில் பீலி வட்டம்
சுற்றி ஒரு கையில் குழல் பற்றி விரைந்தோடினான் (இப்படியும்)

——–

பல்லவி

ஏனிங்கே வந்து வந்திருந்தென்னென்னமோ கண்ணனை
வண்ணனைப் பாடுராய் எல்லமறிந்த விளிவண்டே வண்டே (ஏ)

அனுபல்லவி

வானோடு மண்ணை அளந்தானை என் மனமோடு உறாவாடி களவாடினானை
வானரக் கொடியோன் தோழனானை

மத்யகால ஸாஹித்யம்

மனைவாசல் என்ற எல்லாம் துறந்து
அறியாது நின்ற அடியோங்கள் முந்தி

சரணம்

வடமாமதுரை நகர் வழி இதோபாரு மதுகர வாயிசை நிதமுரவாகிட
வண்டே வண்டே பறந்தோடு அங்கேபாடு மட நல்லார் அங்காயிரம் ஆயிரம்
மாதவன் உறவெனும் காதலியருண்டு வண்டே வண்டே பறந்தோடு அங்கே பாடு
மலரணிந்தேனை வனமளித்தானை மனமறிந்தானை வாயாரப் பாடு – அந்த
மங்கையர் இங்கிதம் அறிந்து உனக்கானது செய்வாரது பாரு (ஏனிங்கே வந்து)

———

பல்லவி

ஒய்யாரமாக ஒய்யாரமாக
ஒய்யாரமாக யமுனை நதி ஓரமாக வெகு
நேரமாக வந்தாரவாரமாக
மெய்யாக குழலொன்று ஊதிடுங் கண்ணா
நீலமேனி வண்ணம் கண்டு மனம் ஆடிடுங் கண்ணா(ஒய்யார)

அனுபல்லவி

கையார மலர் கொண்டு தூவினும் ஆகாதே – இரு
கண்ணார கண்டு கொண்டு நின்றாலும் ஆகாதே
மெய்யான நிலைவந்து மேவினும் ஆகாதே
மென்மேலும் மேலும் பேராசை கொள்வதும் தீராதே

மத்யமகாலம்

என்ன சொல்லியும் சொல்லியும் மனமதில் ஏறாதே
என் இறைவா நீதரும் புன்னகையில் தோயும்
நெஞ்சம் மறுமொழி கூறாதே மாறாதே
மன்னவனே மாதவனே மலர்முக ராதை மகிழ் மணவாளனே
கன்னல் எனஓடி முன்நிலவில் கூடி
நன்னயமொடு ஒரு புன்னை நிழலாடி

சரணம்

முத்தார மணி துள்ளி மொய்யுவன மாலை ஆட
மோன குறும்பு நகை முன்உதடு வந்து கூட
வித்தாரமான பண்ணில் வேணுமென்று இசைபாட
வேதங்கள் எல்லாம் தேட ப்ருந்தாவனம் வந்து கூடகூட

சரணம் (அதிமத்யமம்)

நாநாவிதமான புலந்தரு தொழில்
நான் எங்கென அகல் சரியை கிரியையும்
ஞானங்களொடு பரமும் பரஸுகமும்
நான் இங்கென வரு கருணை முகங்காட்டி
வேறெங்கிலும் இயலாதேன் தொழுதேன்
விழுந்து தஞ்சமென்றடைந்தேன் எனக்
கானந்த நிலை காட்டி அருள்கூட்டி
விண்மதியென ஒளிகாட்டி எனக் கெதிரில் (ஒய்யார)

——

பல்லவி

கண்ணல்லவோ ஸ்வாமீ
கார்மேனி கட்டழகா நீ என் (கண்)

அனுபல்லவி

வண்ண மலர் போலும் சின்னஞ்சிறு பெண்கள்
வந்து வந்து நகைப்பதைப் பாராய்
பண்ணுரு குழல் ஊதிடும் பிள்ளாய்
இங்கிதமோ தகுமோ சொல்லாய்
எண்ணமொடும் சினமானது தள்ளாய்
என்னெதிரில் முத்தம் தர நில்லாய்(கண்)

சரணம்

கொய்யுமலர் நீலக்குவளை விழியாலே வையாது வைகின்ற கண்ணா
சின்னகையளவு வெண்ணை தந்தால் மெய்யவும் போதா தென்று
பையப்பைய வாதாடுகிறாய் அய்யய் யய்யய்ய அய்ய என் (கண்)

ஓச்சலொழி வில்லாது – உன் காவல் செய்தால்
ஊராரென்ன சொல்வாரோ கண்ணா
ஆச்சியர்கள் இங்கே வந்து கூச்சலிட்டுப் போனார்கள்
பேச்சென்ன இனிமேலே – சேச் சேச் சேச்சே (கண்)

2வது சரணம் முதல் சரணம் போல்

——-

பல்லவி

கண்கண்ட தெய்வமே – எங்கள்
கதி நீயே குருநாதா கழலே துணை என்ன
கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே (கண்)

அனுபல்லவி

பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி
பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி
கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி என்
எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடை யோட்டும் (கண்)

சரணம்

சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே உடனே
பாடும் பணி செய்ய கற்றேனே
நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல பெற்றேனே உடனே
ஆதியந்தம் எல்லாம் அற்றேனே

மத்யமகால ஸாஹித்யம்

இத்தனைக்கும் யாரென மிகையாகா
எங்கள் குருநாதனருள் அல்லவோஹ இதை
எத்தனையும் சொன்னாலும் அத்தனை அமுதூறும்
ஆனந்த நிலை என்று சொல்லவோ. (கண்)

——–

பல்லவி

காணீரே!……………..கஞ்சமலர்க்
கண்ணன் வந்து நின்றதுவும், கை வெண்ணையைத் தின்றதுவும் (காணீரே!)

அனுபல்லவி

தூணிறுத்ததாண நடு தொங்கும் உறுமேலே
துப்புக் கண்டு கொண்டான்! – யாரோ சொல்லி வைத்தாற் போலே!
நாணிக்கோணி நின்ற ஒரு – நங்கையவள் மேலே
நல்ல மணங்கமழ்ப்பதம் கொண்டேறி மெல்ல உரியாடி விந்தைக்களவாடக் (காணீரே!)

சரணம்

ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் – கண்ணன்
ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் இவனுக்கு
அப்படித்தான் வெண்ணை என்ன சுவையோஹ
அன்னை இவனைப்பெற என்ன தவம் செய்தாளோ!
ஆனாலும் இனிமேலும் குறையோஹ

போனாலும் வந்தாலும் …. கண்ணன்
– போனாலும் வந்தாலும் – முன்னழகைக் காட்டிப்
– போனாலும் வந்தாலும் – பின்னழகைக் காட்டிப்
– போனாலும் வந்தாலும் – தன்னழகைக் காட்டி என்
– புத்தியை மயக்குறான்! – இதென்னவோஹ

மத்யமகாலம்

புதுமலர் வண்டு-கருவிழியாகப் புன்னகை தண்ணொளி நிலவென்று ஆகக்
“கருகரு” வென்ன குழலலைந்து ஆடி-கார்முகிலோ என- ஒளியதுமாக
குளிர்மதி நீலத் தடநுதல் வந்து – குடிபுகுந்ததெனத் திலகமாக
கொற்றவன் செய்த களவை – “நற்றவம்” எனக் கருதிகூட நீ பாட – கோவிந்தனும் ஆடக் (காணீரே)

———

பல்லவி

தாயே! யசோதே! – உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே – இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணம்

1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க – முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் – கையசைவும் – தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! – அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் – வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் – ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல – நாணமிக வாகுதடீ! (தாயே)

2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே – கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை – அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் – அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி – நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

3. எங்கள்மனை வாழவந்த – நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே – கண்ணன்
சங்கையுமில்லாதபடி – பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
“உங்கள்மகன் நான் என்றான்! – சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள – நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி – எண்ணித் தவிக்கின்றார்! – நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)

4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து – எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் – மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு – “அம்மே” என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் “அம்மா” என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் “உன் செல்வமகன்!”
பட்டியில் கறவையிடம் – பாலை யூட்டுறானடீ! (தாயே)

5. சுற்றி சுற்றி என்னை வந்து – அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து – மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)

6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி – மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! – கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து – வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த – புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி – கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)

7. முந்தாநாள் – அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை – தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் – அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு – சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு – எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)

———-

பல்லவி

தவமொன்றும் அறியாத பாமரத்தி பதத்
தாமரைக்கே நமஸ்காரம்

(மத்யமகாலம்)
தானாகி தன்னருளொடு தராதல மெங்கும் உள்ளம் புறமொடு துலங்கும்
தருணா மழை போலு வந்த தயாநிதியே உன் சன்னதியே பெரும் (தவ)

அனுபல்லவி

குவளை நீலமலர் கோலக் கண்ணா
கோவிந்த தாமோதரானந்த கண்ணா – எனக்

(மத்யமகாலம்)
கூவி குறை துறந்த அடியவர் தம்மொடு
குணங் கலந்திடு திருவே கண்டு கொள்ளா திருக்க
மாயை எனும் திரை மூடி மறைந்திடும் உருவே என்
ஆவி உடல் பொருள் சுமந்த பரமானந்த கற்பகத் தருவே
ஆதியந்த நடுவிலாது நின்றிடும் ஆனந்த நிறைவே அறவே (தவ)

சரணம்

புனைந்தான் ஒருவனை வேடமை நீங்கி புத்தி அற்றாரங்கு காணார் அது
போலே உன் மாயையை தாண்ட இயலாது புண்ணியத்தாரும் மயங்கி போனார்
முனைந்தார் தவநிலை முனிவரும் யோகியரும் முற்றும் துறந்தவைந்து ஆனார் உன்
மோகன புன்னகைக்கு தாகமும் மேலிட்டு
மோர் கடைந்து விற்கும் நிலை கோபியர்கள் ஆனார்

(மத்யமகாலம்)
புரியாத மாயை யுந்தன் லீலை யல்லவோ
புத்தியற்ற நானுமதை கண்டு கொள்ளவோ
சரியான தத்துவங்கள் உன்னை யல்லவோ
தானாக கொண்ட தென்றால் நானென்ன சொல்லவோ.

———–

பல்லவி

தேடி அருள வந்தான் தேவி திருவேதவல்லி முகங்காண
தேவதேவன் திருவல்லிக்கேணி கரை (தேடி)

அனுபல்லவி

நாடி தவமுறும் பார்க்கவ முனிக்காக நல்ல திருவேதவல்லி தனக்காக
பாடிப்பரவும் தொண்டர் பக்தி தனக்காக பக்தி இல்லாதவரை சுத்தி வளைத்தாக
பக்குவமான மனதறிந்தொரு கணம் பாதமலரினையும் காதலுறவாக
பண்ணார பற்றிய தவநிலையது முனம் ஒண்ணாத நிலைபெறும் புண்ணியந்தனக்காக (தேடி)

சரணம்

கள்ள மறியாத தன்னைக் காட்டிக் கொடுக்க வந்த
கான முனி நாரதரைக் காண வந்தானோ
காதல் வலை விரித்து கத்து மாட்டையும் வைத்து
கட்டிப் பிடித்தானவனை காண வந்தானோ

பிள்ளைக்கறி முகத்தன் பெற்றவன் பித்தானான்
பெண்ணைக் கண்டழைக்கவும் காண வந்தானோ
தேவாதி தேவன் தெள்ளிய சிங்கன் தேடித்தேடி இந்த திருத்தலம் காண
திரைகடவிடைமுனம் அலைந்தது போக சிகரமந்தரந்தனை சுமந்ததுபோக
அரனயன் அமரரும் பணிந்ததுபோக அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக (தேடி)

——

பல்லவி

நல்லதல்ல வென்று சொல்லடி (சென்று) நந்தவனந்தனில் அந்த
நடமிடும் நந்த முகுந்த கோவிந்தனிடம் சென்று (நல்லதல்ல)

அனுபல்லவி

அல்லும் பகலும் நான் அடியிணைக்கே ஏங்க
ஆரவாரம் நிறையும் ராஸ நடனம் ஓங்க
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதோம் கிடதகதோம்
அனந்த வ்ரஜயுவதிகளின் நடமிடும் ஆட்டம் நிறையும் அரவமுடன்
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதொம் கிடதஹஹஹம்
மலர்ந்த நறுமலருடன் வண்டினமிடும் கூட்டம் இசையும் இசைபலவும்
தளாங்கு தகதக திக ததிங்கிமதோம் தித்தாம் கிடதோம் கிடதகதொம்
கலந்த நறுமண துளபமணியவரும் தோற்றம் முறுவல் தவழ வரும்
முகமும் மகர குண்டலுமும் கனக அம்பரமும் களப சந்தணமும் அணிபணியும்
அகமும் புறமும் தவமிருந்து நான் வர மறந்து ப்ருந்தாவனந்தனில் அலைந்திடவும்

——-

பல்லவி

பார்வை ஒன்று போதுமே! – கள்ளப் –
பார்வை ஒன்று போதுமே! – சங்கப் –
-பதுமநிதி இரண்டும் – வலியத் தந்தாலன்ன கள்ளப் (பார்வை)

அனுபல்லவி

கார்முகில் போல் வண்ணக் கதிரென்ன மதியென்னக் –
கருவிழி கடலிணை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் – கள்ளப் – (பார்வை)

சரணம்

அன்னை யசோதை – அருகினிலே சென்று – இவன்
-வெண்ணை திருடிவந்த விந்தை சொல்லப் போனால்-
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று-
-“சொல்லாதே !” என்று கண்ணால் சொல்லிடும் – கள்ளப் (பார்வை)

——-

பல்லவி

பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்-
பரவச மிக வாகுதே!………………..கண்ணா! – (பால்)

அனுபல்லவி

நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் –
நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் –
எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் – (பால்)

சரணம்

வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்-
-மோனமுகம் வந்து தோணுதே – தெளி-
-வான தெண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்-
சிரித்த முகம் வந்து காணுதே – சற்று-
கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் – அங்கு -உன்
கானக் குழலோசை மயக்குதே –

மத்தியம காலம்

கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -,
கான மயிலாடும் – மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-,
குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே-
கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-,
காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி –
கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்)

——

பல்லவி

முன் செய்த தவப்பயனே! – எங்கள் –
முக்தி தரும் மாதவனைப் – பக்தி செய்யக் கிடைத்தது (முன் செய்த)

அனுபல்லவி

முன்னொரு காலடியில் மூவுல களந்தோன்! – இப்போ
மூவுலகும் வாழக் – கான மழை பொழிந்தோன்!
புன்னகை சிதறாமே – புள்ளின் வாய் பிளந்தோன்! – சின்னப்
-புல்லாங் குழலைக் கொண்டு – எல்லா உலகாள – வல்லானிவனைப் பாட-
வாயாறத் தோனூற (முன் செய்த)

சரணம்

நினைந்தாலும் ஒரு சுகமே! கண்ணணை – நினைந்தாலும் ஒரு சுகமே!
நினைந்து நினைந்து – மனம் கசிந்து கண்ணீருருக நனைந்தாலும் ஒரு சுகமே!!

1. ஞானமெனும் – ஆயர்வாழ் மனையில் வந்து – ,
தானுமுறவாகும் – தன்மையது சொல்லி (நினைந்தாலும்)

2. ஆடுவர் – ஆடாதவர்-புகழ்சொல்லிப் பாடுவர்-பாடாதவர் மறை வழி புகத்-
தேடுவர்-தேடாதவர்-யாவருளமும் அறிந்து அருள் மழை பொழிந்து நின்றதை (நினைந்து)

3. அரைக்கிசைந்த ஞாணொடு-புலிநகம் அசைந்தாட-கிண்கிணி சதங்கை ஒலிக்-
-கறவைகள் அணி-மணி-நாதமொடு காதல் மடவார் தரு-கரவளை யொலிகளும்-,
-கன்று குளம்பொலியும்-, மலரின்மது வண்டு நுகர்ந்திடு வண்டொலியும்- கலம்-
கொண்டிடையும் -சிறுவர்கள் பலருடன்-வனம் நின்று குழலோதும் பண்ணிசையும்-இங்கு (நினைந்து)

4. சங்கொடு, சாரங்கமும், ஆழியும்-குடை கமண்டலமும்-கோடரி கோதண்டமும்-,
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் – பொன் துகிலும்-மா-மயிலிறகும்-,
தங்கிய மரகத மேனியும்-ஆவரிக் கொம்பொடு-குழலும்-குஞ்சித பதமும் -,
எங்கெங்கு நோக்கினும் – பொங்கு குறு நகையும் – மங்கள முகமொடு மான்மதத் திலகமும் (நினைந்து)

5. மறை முதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு
பரந்த தொரு வெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் தானே என
பிறை மதி வந்தார்க் கொடு சமரிடையினில் பெரும் பவமகனார்க் கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என (நினைந்து)

6. எனையாளும் – ஈரெழு உலகாளும் – அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் – கண்ணனை
முனைந்தோடும் – யமுனைத்துறைவனை – எவ்வுயிர்க்கும்-
இறைவனே – என் மன நிறைவோனைப் – பாடப் பாட (முன்செய்த தவப் பயனே!)

——-

பல்லவி

வந்தே பிறந்தான்! – கண்ணன் வந்தே பிறந்தான் – மாதவன்
தேவகியோடணைந் தந்தே இருந்தான் (வந்தே)

அனுபல்லவி

மந்தமாருதம் மெல்லெனவீச – வானவர் மெதுவாய் வர்ணனைபேச
நந்தன் மனையெல்லாம் – சகுனங்கள் பேச
நம்முடை வஸுதேவன் கண்களும் கூசக்கூச (வந்தே)

சரணம்

1.
வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க –
மற்றவை சங்க சக்கரம் ஏற்க –
தலையை நீட்டி – வசுதேவனும் பார்க்க – அங்கே
சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க (வந்தே)

2.
தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை –
சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை
கலைசொல்லி – ஜாதகம் கணிப்பாரும் இல்லை – எங்கள்
கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை (வந்தே)

3.
கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க
கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க –
பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப்
பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க (வந்தே பிறந்தான்)

—–

பல்லவி

வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
வரதா பயகரம் தரு கருமுகில் வர்ண

அனுபல்லவி

செய்யத் தாமரை சீரடி கொண்டு சீரிய காளீயன் மேலாடியது கண்டு
உய்ய தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு
உலகீரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அது தரும்

ஜதி

தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமிதிமி திர்ரீ தைய
ணந்தம் ணந்தம்பாரி ஜாத கந்தம்
கிடதகதிரி ஜமுணந்தரி குகுகுந்தம் ஜந்தரி திரி திலானா
தித்தளாங்கு தையததையத தித்ஜையத கஜ்ஜையத
திரி சையத்தைய புவனங்களும் உய்ய (வையம்)

——–

பல்லவி

கொஞ்சும் மழலை பேசி குறுநகையை வீசி
குற்றந்தனை மறைக்க பாராதே நான்
கோபங் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே (கொஞ்சும்)

சரணம்

1.
கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா மிஞ்சினால் கெஞ்சுவாய்
கிட்ட கிட்ட வந்த போது அஞ்சுவாய்
பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணைக்கும்
பாய்ந்தோட பாராதே ஆய்ந் தோய்ந்து பாராய் (கொஞ்சும்)

2.
செய்ததை செய்து விட்டு சிற்றன்னை பின்னாலே
செல்லங் கொண்டு மறைந்தாலே போதுமா
மெய் யெல்லாம் வெண்ணை பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு
வேணு கானம் ஊதி விட்டால் போதுமா கண்ணா (கொஞ்சும்)

3.
ஒன்றிரண்டு எண்ணுவேன் எட்டினுக்குள்ளே
ஓடோடி வந்தால் உன்னை ஒன்றும் செய்வதில்லை
பன்றி என்றும் ஆமை என்றும் பாதி மிருக மென்றும்
பற்பல வாய் வைய என்றால் பாழும் மனம் வல்லை (கொஞ்சும்)

——

பல்லவி

அகணித மஹிமாத்புத லீல ஸதா
கர்ஷித ரஜஸாதி சத்யாத்மக ப்ரபஞ்ச பரிபால
அனந்த பர்யங்க சயன நமோ நமஸ்தே (அகணித)

அனுபல்லவி

ககதுரங்க கருணால வால மது கைடபாதி ஸூரரிபு குலகால
கமலாமுக கமலசிலீமுக ஸூரகண முனிகண ஸஜ்ஜன நத்*ரங்க்ரியுக (அகணித)

சரணம்

நமோ நமஸ்தே புருஷோத்ம நமோ நமஸ்தே நாராயண புருஷோத்தம
நமோ நமஸ்தே புனரபி புனரபி நாராயணா அனந்த லோகபதே

1.
ஸ்ருத ஜன கலி கல்மஷ ஹரதானவ*ருல பஞ்ஜன ரமா ரமண (நமோ)

2.
மனஸாம்ருக நானாவித முக்தி வி*நாயக சரா சராத்மக ரூப (நமோ)

3.
விதூர குயோகிநாம் பத பங்கஜ வினுத ஜனாவன ரமித பரமீஸ (நமோ)

4.
தான ஸௌ மனதபோயசா*த்ய தந்த்ர மந்த்ர பல தாயக மங்கள
கான ஸம்பத நாரதாதி முனிகீய மானவர கீர்த்தி விதாரண (நமோ)

5.
க்ஷீர பாராவார தரங்க ம்ருதுதரள பங்கஜா பதயே
க்ஷிதி ஜா பதயே க்ஷிதிபதயே தினகர சந்த்ர பதயே பதயே
ஸாது ஜனாம்பதயே வ்ரஜபதயே தான யோக ஜபதப சாதன
சங்கீத பரமோத விதாயக பதயே மதுமுர ஹரயே (நமோ)

சரணம்

6.
திவ்ய மங்கள விக்ரஹ சோபமான ஜலத வர்ண கம்பீர ஸூபாங்க
தீர தரோன்னத விலாஸ பாஸூர தேவ தேவ மஹனீய உத்துங்க
பவ திமிர கோர ஹரமிகிர கோடி விஜித கமலதள கருணா பாங்க
பாவித வீஹித நிமித்த ஸத் ப்ரேம பாகவத ஜன ஹருதாயாந்த ரங்க (நமோ)

7.
சந்த்ர ஜடாதர பகவான்னத தைத்ய வர்ய மனு குடும்ப வேன
ஜனகாங்கத்ருவ மு*ககுந்த விதேஹ காதி ரகு நாருஷா மாந்தா தானு
சந்தனு ப*லி நந்திதேவ பிப்பிலாத பூரிஷேண திலீப
உதங்கதேவல ஸாரஸ்வத சகர பராசர விஜய விதுர அதூர்த்
தரயாம்பரீக்ஷ விபீஷண அதிசய மஹிமோத்தம சித்த பாவ
மாருத தனய ப்ரமுகாதி பாகவத வினுத நிரந்தர மனோ ரமண (நமோ)

***
ஸாமோத கோபீஜன ப்ருந்தாரக ஸரஸாங்க ஸூந்தர ராதாபதே
ஸர்வதாபரித கோகண ** தரண புஜங்க சிரஸீநடன (1)

—-

பல்லவி

வாஸூதேவாய நமோ நமஸ்தே (ஸ்ரீ)
ஸர்வபூதக்ஷயாய

(மத்யமகாலம்)
வனமாலாதர ஸூந்தர கந்தராய மணிகண பூஷண பூஷிதாய
மாதவாய மது ஸூதனாய வர நாரதாதி முனி பூஜிதாய பர (வா)

அனுபல்லவி

ஆஸூர மத ஹரணா க்ருஷ்ணாய
அனந்த சக்த்யாய நமோ நமஸ்தே
பாஸ*த பாஸகாய வ்ரஜேசாய
பவபய ஹரண அருண சரணாய

(மத்யமகாலம்)
வாஸித கனகாம்பராய நிதுவன வரரஸமதுகர ப்ரமுதிதமுகாய
ராஸலோக வ்ரஜயுவதி ஜனமுக நவதள ஸௌரப ஸங்கதுங்காய (வா)

சரணம்

சரதுதஞ்சித பாடலீ-தள-ஸௌரப் பரிவாதிலோசனாய
ஸகலவேத வேதாந்தாடவீ – சரிதாபாவ்ருத பாதாம்புஜாய

பரம கருணாரஸமய விகஸித
பங்கேருஹ ப்ரஸன்ன வதனாய
பாவராக முரளீ-ரவ நிநாத
பக்த மனோஹரணாய க்ருஷ்ணாய

பரிமள உலப லவங்க ஸதனாய பாகதேய ஜன மதனமதனாய
புஜக பணமணி தரள பதாங்குளி பூஷண நடவர வேஷணாய பர (வா)

——-

பல்லவி

ஸ்வாகதம் க்ருஷ்ண சரணகதம் க்ருஷ்ணா (மாமவ)
மதுகர ஸதன – ம்ருது வதனா – மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)

அனுபல்லவி

போக தாப்த ஸூலபா – ஸூபுஷ்பகந்த களபா – கஸ்த்
தூரிதிலக மஹிபா – மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வா)

சரணம்

முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன – காளிங்கநர்த்தன – கோகு*லாக்ஷண – ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு – மார தைத்ய ஸம்ஹார – தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித

*ஸா,த – பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் – தகதரிகுகுதணகிடதகதீம்
தகதரி குகுதண கிடதக (ஸ்வா)

——–

பல்லவி

என்னதான் இன்பம் கண்டாயோ-
இணையில் எழில் காண விழையும் என்னிலும்
மிகவும் அதிகமோ அதிசயமோ – குழலிசையில் (என்)

அனுபல்லவி

புன்னகையாடும் புல்லென்ற குழல் ஊதும்
புனிதனே – எங்கள் – புண்ணியனே –
முன்னழகைக் கண்டால் மோகமிகும் என்று சொல்லி
பின்னழகை அருளும் பெம்மானே –

சரணம்

அலைஅலையாய்ப்பறந்து குழல் ஆடவே – காற்றில்
அணிஅணியாய் சரிந்து இடை மூடவே
தலையணிக் கம்பளம் புயம் கூடவே கண்டு
தரிசித்தபோது நாணம பறந்தோடவே (என்)

———

பல்லவி

எப்படித்தான் என்னுள்ளம் புகுந்து
என்னையடிமை கொண்டீரோ – ஸ்வாமி
இசைதரு குழலொடும் குண்டலம் ஒளிர இவைதரு சுவையினில் வண்டினமுரல (எ)

அனுபல்லவி

ஒப்புயரில்லாத உத்தமனே – ஒரு
உரக நடமாடும் வித்தகனே
உலகிருந்த வாய்திறந்த படியோ – உரலொடு பிணைந்து இருந்தபடியே (எ)

சரணம்

வெளியில் சொல்லமனம் துள்ளுதே – சொல்ல
வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே – ஆனால்
குளிரொளி முகம் கண்டு நாணி நாணம் உன்
கொய்மலர் பதத்திலென்னைத் தள்ளுதே

இனியொருமுலகம் உனைத்தவிர எனக்கொருசுகம் இலை எனத் தந்தவா
தனியொருமுடிமேல் இளமயிலானது தருதோகையணியத் தந்தவா –
உறியேறி களவாடி தோழருடன் உனக்கு எனக்குஎனத் தின்றவா –
ஊரறி*யயுமுன்பு அன்னையிடம் சென்று ஒன்றுமறியாது நின்றவா – (எப்)

———

பல்லவி

குழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ – ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ –

அனுபல்லவி

அழகான மயிலாடவும் – (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் –

மத்யம காலம்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)

சரணம்

மகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ……..
மிகவும் எழிலாகவும் ……. காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ….
அகமகிழ்ந் …………………………….இறைவன் கனிவோடு (குழ)

———

பல்லவி

மஞ்சனமாடநீ வாராய் – கண்ணா
மஞ்சனமாடநீ வாராய் – எங்கள்
மலர்*மகமது மாதவ யாதவகுல தாமரை நாயக (மஞ்)

அனுபல்லவி

கொஞ்சும் கிளி அன்னமே – எங்கள்
கோகுலம் ஆள – வந்த தெய்வமே – உன்னைக்
கெஞ்ச வேணுமோ – இன்னமே – ஆயர்
குலம் வாழ வந்து நின்ற நலம்தேறும் செல்வமே

மத்யம காலம்

கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும்
வெம்புனலும் வர தண்ணென்றாகுது
பொன்பெறுமாடையளாவி எடுத்தது
போதுமுனக்கொரு புண்ணியமாகுது (மஞ்)

சரணம்

கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி – நான்
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி – எங்கும்
காணாத ராஜ கோபால ஸ்வாமி – கதை
எதையும் சொன்னால் எனக்கு அதுவும் தெரியும் என்றாய்
இனிமேலே என்கதை ஒன்றுதான் ஸ்வாமி.

மத்யம காலம்

இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி
இதுவரையறியாதொரு மாதவ மாமுனிகளும் மா மலரடிபணி மாதவ
நிதியறிந்து நீதியறிந்து நின் இளமுக ஸன்னிதியறிந்தமா
சுந்தரமுகமொடு மந்த நகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு (மஞ்)

———–

பல்லவி

எத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை
ஏனோ – இப்படியாச்சே – – – –
இன்னிசையங்குழலூதி யதுகுலமொடு உறவாடும்
தன்னிகரில்லாத ராஜகோபால – ஸ்வாமி – உன்புகழ் (எத்)

அனுபல்லவி

முத்தாரமணியாடி – மோனஎழிலைக் கொள்ளும்
முன்னோடும் கன்று – கூட தன்னை மறந்து துள்ளும்
அத்தைக் கண்ட மனமோ – ஆனந்தக்கடல் *ள்ளும்
ஆனாலு*முன் கதையால் – ஆகாத தெது சொல்லும்

மத்யம காலம்

அறிவெனும் நந்த வனமலர்ந்த மாமலரே அருளுகந்த
நறுமணமே …….. மணமலைந்து மகரந்தந்தனை
நா-டி வரும் பண்ணுகர்ந்த கரு வண்டெனும் தீங்குழலே – குழ
லிசையே – அரவேறி – நடமாடும் – அரசே – என் உயிரே உன்புகழ் (எத்)

சரணம்

கண்ணைத் திறந்தால் ரூபம் –
காதைத் திறந்தால் – கானம்
காற்றை – யுகந்தால் – துளபகந்தம் – ஆனந்தம்
விண்ணை நோக்கினால் வண்ணம் – விண்
மதியை நோக்கினால் கன்னம்
வேறெங்கும் போகாது என் எண்ணம் – இது திண்ணம்
மண்ணையுகந்து உண்டாய் – பொன்னை அணிந்து கந்தாய்
மாற்றார் மயங்க எழில் கொண்டாய்.

(அறிவெனும் …………….உன் புகழ்) (எத்தனை)

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம் –ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்

February 21, 2023

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————

ஸ்ரீ பாரதியின் கண்ணனின் அனுபவம்

ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.

நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.

‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.

இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.

புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி.

நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!

நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.

ண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –

புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே.

ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.

நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே.

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை 

கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்
தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. … (தீராத)1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். … (தீராத)
 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் – சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; … (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே – என்னை
அழஅழச் செய்துபின், ”கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்” – என்பான் – என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். … (தீராத)4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; – தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். … (தீராத)5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; – அமுது
பொங்கித் ததும்புநற்

​கீதம் படிப்பான்; 

கள்ளால் மயங்குவது போலே – அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். … (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே – கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? – கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? … (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; – வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; – எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். … (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! – மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் – வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். … (தீராத)

9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; – பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் – தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். … (தீராத)
——-

கண்ணன் – என் காதலன் – 2

உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.

நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி – உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே – என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! – அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், – மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . … 1

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், … 2

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், … 3

எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். … 4

(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? … 5 –

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா — நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா;1பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா — நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;

​KE​

ட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா — நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா;3

தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா — நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.

பாரதியின் கண்ணன்பாட்டை பொறுத்தவரை அதற்கு இரு முகங்கள் உண்டு. உணர்ச்சிகரமான காதல்பாடல்கள். அதேசமயம் பக்தி மற்றும் வேதாந்த பாடல்களும் கூட. அந்த இருமுகங்களும் பிரித்துப்பார்க்கக்கூடியவை அல்ல. ஒன்றை வைத்து ஒன்றை புரிந்துகொள்ளவேண்டியவை
——————————————————————————–

ஜீவாத்மாவாகிய உயிர் இறுதியில் பரமாத்மாவான இறைவனை அடைய முழு சரணாகதியே சிறந்த வழி என்று நம்பிய பாரதி,

கரணமும் தனுவும் நினக்கெனத் தந்தேன்-
கரணம் – மனம்,  தனு – உடல்)என்று முழுவதுமாகத் தம்மை அர்ப்பணிக்கிறார்.

தெய்வத்தின் உதவியின்றி மனித முயற்சியால் மட்டுமே எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது பாரதியின் எண்ணம். ஆகவே
நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள் அல்லது நீங்கும் . . . . .(அல்லது – துன்பம்) என்று குறிப்பிடுகிறார்.

மகாபாரதத்தில் திரௌபதி கண்ணனிடம்,
வையகம் காத்திடு வாய் கண்ணா!
மணிவண்ணா என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே – சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி(பாஞ்.சப.299)
என்று முழு சரணாகதி அடைந்த பிறகே அவளுக்குக் கண்ணன் அருள் கிடைத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பூமணித் தாளினையே கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்(ஆறுதுணை – 4)
‘புண்ணியம்’ என்று அவர் நினைப்பது கல்வியை எனக் கொள்ளலாம்.

கவிதை இயற்றக் கல்வியறிவு தேவை, அந்த அறிவைப் பெற விரும்பும் பாரதி, ஒரு கணப் (விநாடி) பொழுதும் கலைமகளைப் பிரிய விரும்பவில்லை.
கலைமகளிடம் எங்ஙனம் சென்றிருந்தீர் – என
தின்னுயரே! யென்றன் இசையமுதே--என்று கேட்ட பாரதி,

பாதங்கள் போற்று கின்றேன் – என்றன்
பாவ மெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொடு எப்பொழுதும் – என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்-என்று வேண்டுகிறார். ஞானம் வந்து விட்டால் அகந்தை கெடும். எனவே ஞானம் வேண்டுகிறார்.

மந்திரம் சொல்லி புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடுவது கலைமகள் பூசை அல்ல என்று கண்டிக்கிற பாரதி,
அவளை முறையாக வழிபடுவது எங்ஙனம் என்று தெளிவுபடுத்துகிறார்.

அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் மனத்தில் அறிவுத் தீயை ஏற்றுகிறார். எனவே

மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்தி ரமிவள் பூசனை யன்றாம்--என்று கலைமகளை வழிபடும் விதத்தைக் கண்டிக்கிறார்.
பின் எது தான் முறையான பூசை? இதோ அவரது விளக்கம்:

வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொரு ஊரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்(விளக்கம் – இருப்பிடம், மடுத்தல் – மூட்டுதல், அழித்தல்)

ஏடுகளை அடுக்கி வைத்து இன்னமுது படையலிட்டால் அறிவு வளராது, அறியாமை நீங்காது.
அறிவு வளர வீடுகளிலும் வீதிகளிலும் கல்வி முழக்கம் செழிக்க வேண்டும்.
கல்வியில்லாத ஊரைத் தீக்கிரையாக்க வேண்டுமென்று சினந்து கூறுகிறார் பாரதி.
ஊரையும் நாட்டையும் அழிக்கச் சொல்வது அவர் நோக்கமல்ல.

—————-

ஸ்ரீ கிருஷ்ண மங்கள ஸ்லோகம்–

மங்களம் யாதவேந்த்ராய மஹனீய குணாப்தயே
வசுதேவ தனூஜாய வாஸுதேவாய மங்களம்
கிரீடகுண்டல ப்ராஜ தனூ கைர்யன் முகஸ்ரியே
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸே சாஸ்து மங்களம்

யாதவ குலத் தோன்றலே, கிருஷ்ணா உமக்கு நமஸ்காரம்.
நல்லறிவு வழங்கும் மகானே நமஸ்காரம்.
வசுதேவரின் மகனாக அவதரித்த வாசுதேவனே நமஸ்காரம்.
கிரீட, குண்டலங்களின் பேரொளியால் துலங்கும் பேரழகனே நமஸ்காரம்.
ஸ்ரீவத்ஸம், கௌஸ்துப மணி போன்ற மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்திருக்கும் கிருஷ்ணா, நமஸ்காரம்.

———-

நீலாம்புத நிகாஸாய வித்யுத் ஸத்ரு ச வாஸஸே
தேவகீ வஸுதேவாப்யாம் ஸம்ஸ்துதாயாஸ்து மங்களம்
தாப்யாம் ஸம்ப்ரார்த்தி தாயாத ப்ராக்ருதார்பகரூபிணே
யஸோதாய க்ருஹம் பித்ரா ப்ரார்பிதாயாஸ்து மங்களம்

நீருண்ட மேகம் போன்ற நிறத்தையுடையவரே,
மின்னல் போன்று ஒளிவீசும் ஆடை தரித்தவரே,
தேவகி-வசுதேவரின் அருந்தவத்தால் அவதரித்து, அவர்களால் போற்றப்பட்ட பரந்தாமா, நமஸ்காரம்.
பிறகு அவர்களிடமிருந்து பிரிந்து, தந்தையார் வசுதேவரால் ஒப்படைக்கப்பட்டு,
யசோதையிடம் பாலகனாக வளர்ந்து வந்த பரம்பொருளே… கிருஷ்ணா, நமஸ்காரம்.

————–

பூதனாஸுபய: பானபேஸலாயா ஸுராரிணே
சகடாஸுர வித்வம்ஸி பாதபத்மாய மங்களம்
யசோதா லோகிதே ஸ்வாஸ்யே விஸ்வரூப ப்ரதர்ஸினே
மாயா மானுஷரூபாய மாதவாயாஸ்து மங்களம்

வஞ்சகமாக வந்த பூதனையின் பாலையும் அவள் உயிரையும் சேர்த்துக் குடித்தவரே,
யாவரையும் மயக்கும் பேரெழில் வாய்ந்தவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
அசுரத் தனங்களை எதிர்ப்பவரே, சகடாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா,
தங்கள் பாதத் தாமரைகளுக்கு நமஸ்காரம்.
சிறு வாய் திறந்து அதில் அண்ட சராசரங்களையும் தன் விஸ்வரூபத்தையும் காட்டி
யசோதையை பிரமிக்கவைத்தவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.
மனித உருக்கொண்டு மங்களம் அருளிய மாதவா… நமஸ்காரம்.

—————-

த்ருணாவர்த்த தனூஜாஸுஹாரிணே ஸுபகாரிணே
வத்ஸா ஸுரப்ரபேத்ரே ச வத்ஸபாலாய மங்களம்
தாமோதராய வீராய யமளார்ஜுன பாதினே
தாத்ராஹ்ருதானாம் வத்ஸானாம் ரூபதர்த்ரேஸ்து மங்களம்

த்ருணாவர்த்தன் என்ற அசுரனைக் கொன்றவரே,
அனைத்து பக்தர்களுக்கும் மங்களங்களை அருள்பவரே கிருஷ்ணா, நமஸ்காரம்.
இளம் கன்றுகளைக் காப்பதற்காக, அந்தக் கன்றுகளோடு தானும் ஒரு கன்றாக மாறிச் சென்று,
வத்ஸாஸுரனை வதைத்தவரே, மாயவா, நமஸ்காரம்.
தாமோதரனே, பரிசுத்த வீரனே, யமளார்ஜ்ஜுனம் எனும் மரத்தை (அசுரனை) வீழ்த்தியவரே… நமஸ்காரம்.

————

பிரம்மஸ்துதாய க்ருஷ்ணாய காளியபணந்ருத்யதே
தாவாக்னி ரக்ஷிதாஸேஷ கோ கோபாலாய மங்களம்
கோவர்த்தனேச லோத்தர்த்ரே கோபி கிரீடாபி லாஷிணே
அஞ்சல் யாஹ்ருத வஸ்த்ராணாம் ஸுப்ரீதாயாஸ்து மங்களம்

நான்முகனால் துதிக்கப்பட்டவரே, கிருஷ்ணா, காளியன் எனும் பாம்பின் தலைமீது நர்த்தனமாடியவரே, நமஸ்காரம்.
காட்டுத் தீயினின்று எல்லாப் பசுக்களையும் யாதவர்களையும் காப்பாற்றியவரே, கோபாலா, நமஸ்காரம்.
கோவர்த்தன கிரியை எளிதாகத் தூக்கி நின்றவரே, கோபியருடன் விளையாடி மகிழ்வித்தவரே,
அவர்களுக்கு இரு கரங்களாலும் ஆடைகளை அளித்து அவர்கள் பக்தியைப் பாராட்டியவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————–

ஸுதர்ஸனாக்ய கந்தர்வ ஸாப மோக்ஷணகாரிணே
சங்கசூட சிரோஹர்த்ரே வ்ருஷபக்னாய மங்களம்
காந்தினீஸுத ஸந்த்ருஷ்ட திவ்யரூபாய ஸௌரிணே
த்ரிவக்ரயா ப்ரார்த்திதாய ஸுந்தராங்காய மங்களம்

சுதர்சனன் என்ற கந்தர்வனின் சாபத்தைப் போக்கியவரே,
சங்கசூடனின் தலையைக் கொய்து எறிந்து வீரத்தை நிரூபித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காளை வடிவமெடுத்து வந்த அசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
காந்தினியின் மகனாகிய அக்ரூரரால் போற்றித் துதிக்கப்பட்ட சுந்தர சொரூபரே,
அழகிய நீண்ட கேசத்தைக் கொண்டவரே, த்ரிவக்ரையினால் பிரார்த்திக்கப்பட்டவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————

கந்தமால்யாம் பராட்யாய கஜராஜ விமர்த்தினே
சாணூர முஷ்டிகப்ராண ஹாரிணே சாஸ்து மங்களம்
கம்ஸஹந்த்ரே ஜராஸந்த பலமர்த்தன காரிணே
மதுராபுர வாஸாய மஹாதீராய மங்களம்

சந்தனம், மாலை, பட்டுப் பீதாம்பரம் ஆகியவற்றைத் தரித்து அவற்றுக்குப் பெருமை சேர்த்தவரே,
எதிர்த்த குவலாபீடம் எனும் கஜராஜனைக் கொன்றவரே,
சாணூரன், முஷ்டிகன் முதலான துஷ்டர்களின் ஆயுளை முடித்தவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
கம்சனை வதைத்தவரே, ஜராசந்தனின் படையை அழித்தவரே,
மதுரா நகரில் வசித்த புண்ணிய புருஷரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.

————-

முசுகுந்த மஹானந்த தாயினே பரமாத்மனே
ருக்மிணி பரிணேத்ரே ச ஸபலாஸ்து மங்களம்
துவாரகாபுர வாஸாய ஹாரநூபுர தாரிணே
சத்யபாமா ஸமேதாய நரகக்னாய மங்களம்

முசுகுந்த சக்ரவர்த்திக்கு பெரு மகிழ்ச்சி அளித்தவரே, பரமாத்மா, ருக்மிணியைத் துணைவியாக அடைந்தவரே,
பலராமனின் பாசத்துக்கு உரியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
துவாரகா பட்டணத்தில் வசிப்பவரே, ஒளிவீசும் மாலையும் இன்னிசை எழுப்பும் பாத கிண்கிணியும் அணிந்தவரே,
சத்யபாமாவுடன் கூடியவரே, நரகாசுரனை வதைத்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

————–

பாணாசுரகரச் சேத்ரே பூதநாதஸ்துதாயா ச
தர்மாஹுதாய யாகாரத்தம் சர்மதாயாஸ்து மங்களம்
காரயித்ரே ஜராசந்தவதம் பீமேன ராஜ பி:
முக்தைஸ் ஸ்துதாய தத்புத்ர ராஜ்ய தாயாஸ்து மங்களம்

பாணாசுரனின் கைகளை வெட்டி அவனை வீழ்த்தியவரே, பரமேஸ்வரனால் துதிக்கப்பட்டவரே,
யாகத்தில் கலந்து கொள்வதற்காக தர்மரால் அழைக்கப்பட்டவரே,
மங்களங்களைத் தரும் மாதவா, நமஸ்காரம்.
ஜராசந்தனை வதைக்க பீமனுக்கு அருளியவரே,
ஜராசந்தனின் சிறையிலிருந்து விடுதலை பெற்ற மன்னர்களால் வணங்கப்பட்டவரே,
அவனுடைய மகனுக்கே ராஜ்யத்தைத் தந்தவரே, கிருஷ்ணா… நமஸ்காரம்.

—————

சைத்யதேஜோ பஹர்த்ரேச பாண்டவப்ரிய காரிணே
குசேலாய மஹாபாக்ய தாயினே தேஸ்து மங்களம்
தேவ்யஷ்டக ஸமேதாயச புத்ர பௌத்ரயுதாயச:
ஷோடஸ ஸ்த்ரீ ஸஹஸ்ரைஸ்து ஸம்யுதாயாஸ்து மங்களம்

சிசுபாலனுடைய பராக்கிரமத்தைப் பறித்தவரே, பாண்டவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியவரே,
குசேலருக்கு மகா பாக்யங்களையும் அருளியவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.
அஷ்டமகிஷிகளுடன் இருப்பவரே, பிள்ளை- பேரன் என்று சந்ததிகளைப் பெற்றவரே,
பதினாயிரம் மனைவியருடன் கூடியிருப்பவரே, கிருஷ்ணா…நமஸ்காரம்.

—————-

ஸ்ஸிஷ்டரக்ஷணபர: கருணாம்புராசி:
துஷ்டாஸுராம் ஸந்ருபதீன் விந்க்ருஹ்ய யஸுரான்
கஷ்டாம் தசாம் அபநுதந்தரஸா ப்ருத்வ்யா:
புஷ்டிம் ததாது ஸஹரி: குலதைவதம் ந:

எந்த பகவான் தன்னைச் சரணடைந்தவர்களைக் காக்கிறாரோ, கருணைக் கடல் எவரோ,
துஷ்டர்களை அழித்து பூமியைப் புனிதப்படுத்துபவர் எவரோ அந்த ஹரி என்ற கிருஷ்ணன்
எங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து, குலம் விளங்கச் செய்யும் குலதெய்வமாக அருளட்டும்!

————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரோஹிணி திரு நக்ஷத்ரம் —

January 16, 2023
ஸ்ரீ ஆவணி ரோஹிணி திரு நக்ஷத்ரம் —  ஸ்ரீ கிருஷ்ணன் எம்பெருமான் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..
“அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே”
என்று அர்ஜுனனை பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.
வேதை: ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய: |
வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் || – பகவத்கீதை:-அத்யாயம் 15: ஸ்லோகம் 15
வேதம், “நாராயணனை” பற்றி மட்டுமா சொல்கிறது?
வேதம், ‘இந்திரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம் ‘ருத்ரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம், ‘சகல தேவதைகளை’ பற்றியும் சொல்கிறதே?
இப்படி இருக்க,-‘வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது’ என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?
வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம்.
“வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு,
சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு,
சொர்க்க லோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு,
இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை”
என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் ‘கேட்கவே இல்லை’ என்று நாம் பார்க்கிறோம்.
வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.
நாராயணனே ‘பரமாத்மா’ (பரம்பொருள்)-என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது…
பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, “புருஷன்” என்ற பெயரை கொண்டு “ஸ ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)” என்கிறது வேதம்.
வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், ‘நாராயணனே அந்த புருஷன்’ என்று விளக்கி, அந்த ‘புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்’ என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..
நாராயணனே ‘பரமாத்மா’ (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக “நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||” என்று பல முறை சொல்கிறது வேதம்.
இப்படி ‘பர’ என்ற சொல்லாலும், ‘பர ப்ரஹ்ம’ என்ற சொல்லாலும், ‘புருஷ’ என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,
அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம்.
அதாவது, ‘அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்’ என்ற ரகசியத்தை சொல்கிறது.
ஒரு இடத்தில் வேதம், “பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!” (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..
இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, “பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்” என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.
“அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)”-என்று வேதமே தெளிவாக சொல்கிறது.
மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது,
கிருஷ்ண பரமாத்மா “அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே” என்று சொன்னதன் ரகசியம் புரியும்.
—————-
கிருஷ்ண நாமத்தால் ”
சோறு கிடைக்குமா?
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான்.
அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள்.
“கிருஷ்ணா’ என்ற இந்த வார்த்தையில் என்ன தான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான்.
விடை தெரியவில்லை.
அங்கிருந்த பெரியவரிடம்,
“கிருஷ்ணா! கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்து விடும்?
உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்.
பெரியவர் அந்த இளைஞனிடம், “கிருஷ்ண” நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல,
நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,” என்றார்.
இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,
அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான்.
அவன் வாயில் “கிருஷ்ணா’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.
ஒரு வழிப்போக்கன் மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச் சோற்றை சாப்பிட்டான்.
அசதியில் அங்கேயே தூங்கி விட்டான்.
இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே “கிருஷ்ண ”-நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.
கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.
எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு உடன் பாடில்லை.
இந்தச் சாப்பாட்டை சாப்பிடும் படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.
அப்போது காட்டுப் பாதையில்
சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மர நிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர்.
கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.
அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.
ஆனால், கள்வர் தலைவன், “இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது.
நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான்.
அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.
இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள்,
உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர்.
இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
“நம்பிக்கையில்லாமல்” “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே’ என்று எண்ணியவன்,
“அழியாத செல்வம் – கிருஷ்ண நாமம் தான்”
என்ற முடிவுக்கு வந்தான். காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான்.
“இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,”
என்று கிருஷ்ணனிட்டம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான் ஆகவே, “அழியாத செல்வம் ஆன கிருஷ்ண நாமத்தை” சொல்லி பயனடையுங்கள்
—————
சித்திரை ரோஹிணி ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் திருஅவதார திருநக்ஷத்திரமாகும்
ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை நிறுத்த வரதராஜப் பெருமாள் உதவி புரிந்த போது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார்.
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதி கேசவப் பெருமாள், கஜேந்திர வரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.
வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.
இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சந்நதியின் அருகே கருங்காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது.
கோயில் திருக்குளத்தில் யானை ஒன்று தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வரும் வேளையில் ஒருநாள் குளத்தில் இருந்த முதலை யானையை பிடித்துக் கொள்ள, பெருமாள் தமது சக்ராயுதத்தால் முதலையைக் கொண்டு யானையை காத்து அருளிய ஸ்தலம்.
ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
————–
கார்த்திகை ரோகிணி ஸ்ரீ திருப் பணாழ்வாரின் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஸ்ரீவத்ஸாம்சராய் கலியுகம் 343-வதான துன்மதி வருஷம் கார்த்திகை மாசம் க்ருஷ்ண பக்ஷம் த்விதீயை புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் உறையூரின் புறத்தில் செந்நெல் பயிரில் அயோநிஜராய் அவதரித்து ஓர் பாணனால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்து வந்தார். காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றின்றி கண்ணனையே கண்டுரைத்த கடிய காதலாய் அருளிச் செய்தார்.
பாணர் அமலனாதிபிரான் என்னும் பத்து பாசுரங்களைப் பாடி நம் பெருமானின் திருவடியில் இரண்டறக் கலந்தார்.
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் ஶயாநம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மனவை முநிவாஹநம் தம்–திருப்பாணாழ்வார் தனியன்:
உம்பர் தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்த பிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே–திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்:
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே – உம்பர்கள் என்னும் வார்த்தை நித்யஸுரிகள் / தேவர்களைக் குறிப்பதாகும். அந்த நித்யஸுரிகளே திருப்பாணாழ்வாரைத் தொழுவார்களாம். அப்படிப்பட்ட வைபவத்தை உடையவர் திருப்பாணாழ்வார். உறையூரில் அவதரித்த உண்மையான ஞானத்தை உடைய திருப்பாணாழ்வார் வாழ்க என்பது இவ்வரியின் விளக்கம்.
உண்மையான ஞானம் என்பது பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் தான் அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிவதாகும். “நாம் பரமபதம் தான் உயர்வு; அர்ச்சாவதாரம் அதை விடக் குறைந்தது” என்று எண்ணலாம். பரமபதத்தில் எம்பெருமானின் பரத்வம் தான் வெளிப்படும். ஆனால் ஸௌலப்யம் என்பது பகலிலே எரித்த விளக்கு போல இருக்கும். அவனுடைய ஸௌலப்யத்தை பரமபதத்தில் காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. தவறு செய்பவர்கள் இருந்தால் தான் எம்பெருமானின் ஸௌலப்யம் வெளிப்படும். ஆகவே தவறு செய்பவர்கள் நிறைந்துள்ள பூலோகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுக்குதான் ஏற்றம் எனலாம். அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் அர்ச்சகருக்கு பரதந்த்ரன் ஆக இருப்பான். அவர் எப்போது திருமஞ்சனம் செய்கிறாரோ அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அர்ச்சகர் எப்போது உணவு கண்டருளச் செய்தாலும் அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அவர் அணிவிக்கும் ஆடைகளையே உகந்து அணிந்து கொள்கிறான். அவ்வாறு தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி தன்னை எளியவனாக அர்ச்சாவதாரத்தில் காட்டுகிறான். எம்பெருமானின் அர்ச்சாவதார மேன்மையை நன்கு உணர்ந்தவர் திருப்பாணாழ்வார். எனவேதான் அமலனாதிபிரான் பத்து பாசுரங்களிலும் எம்பெருமானின் வடிவழகை மட்டுமே பாடியிருக்கிறார். அவ்வாறு சிறப்புடைய திருப்பாணாழ்வார் வாழ்க.
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே – கார்த்திகை மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார். இப்பூவுலகத்தாருக்கு அர்ச்சாவதார பெருமையை எடுத்துக் காட்டிய வள்ளல் திருப்பாணாழ்வார். அவர் பல்லாண்டு வாழ்க.
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே – பிரான் என்றால் நமக்கு நன்மை செய்பவர் என்று பொருள். நமக்கு நன்மை செய்யக்கூடியவரான திருப்பாணாழ்வார் வாசனை மிருந்த மாலையை அணிந்த லோக சாரங்க முனிவர் தோளிலே ஏறி திருவரங்கம் வந்தார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே – மலர் போன்று இருக்கக் கூடிய கண்களில் பெரிய பெருமாளைத் தவிர வேறு ஒரு காட்சியும் அறியாதவர் திருப்பாணாழ்வார. அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் வாழ்க.
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே – அழகியதான இப்பூவுலகில் ஸப்த ப்ரகாரம் என்று சொல்லக்கூடிய ஏழு மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் மனத்தில் புகுந்தவரான திருப்பாணாழ்வார் பல்லாண்டு வாழ்க.
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே – திருப்பாணாழ்வார் அருளிய ப்ரபந்தம் பத்து பாசுரங்கள் கொண்ட அமலனாதி பிரான். அவர் வாழ்க பல்லாண்டு.
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே – திருவரங்கம் பெரிய பெருமாளின் சிவந்த பொன் போன்ற திருவடி தொடங்கி திருமுடி வரையிலும் அமலனாதி பிரான் ப்ரபந்தத்தில் திருப்பாணாழ்வார் வர்ணித்திருப்பார். அவ்வாறு திருவரங்கப் பெருமாளின் அவயவங்களை சேவிக்கும் திருப்பாணாழ்வார் வாழ்க என்ற இந்த வரியில் காட்டப்படுகிறது,
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே – பொன்னை ஒத்து இருக்கும் திருப்பாணாழ்வாரின் திருவடிகள் இப்பூவுலகில் பல்லாண்டு வாழ வேண்டும்.
ஆண்டாள் மாசம் இன்று அழைக்கபடும் மார்க்கழியில் ஸ்ரீ ரங்கநாதனுடன் ஐக்கியமானவர்கள் இவர்கள் இருவரே.
அரங்கனை நினைத்து 9 பாசுரங்கள் பாடிய பாணர். ‘என் அமுதினை கண்ட கண்கள், மற்றொன்றினை காணாவே; நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை. அவைகள் எனக்கு தேவையில்லை என்ற பொருளில் 10வது பாடலை பாடினார். இதை கேட்ட, அரங்கன், திருப்பாணரை, தன்னருகே அழைத்தான், தன் சோதியில் சேர்த்துக் கொண்டான்
கோயில் என்றாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்’ என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது திருவரங்கத் திருத்தலம்
குடதிசைமுடியை வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.”
எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர்,
இந்த ஆலயத்தின் ஏழு சுற்றுகளையும் ஏழு லோகங்களாகச் சொல்வார்கள்.
அவற்றில், திருமாடங்கள் சூழ்ந்த சுற்று `பூலோகம்’ என்றும்,
திரிவிக்ரம சோழன் சுற்று `புவர்லோகம்’ என்றும்,
அகளங்கன் சுற்று எனும் கிளிச்சோழன் சுற்று `ஸுவர்லோகம்’ என்றும்,
திருமங்கை ஆழ்வார் சுற்று `மஹர்லோகம்’ என்றும்,
குலசேகர ஆழ்வார் சுற்று `ஜநோலோகம்’ என்றும்,
ராஜமகேந்திரச் சோழன் சுற்று `தபோலோகம்’ என்றும்,
ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `சத்யலோகம்’ என்றும் போற்றப்படுகிறது.
மேலும், இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ஒன்பது நதிகளின் அம்சமாக அடங்கியுள்ளன என்கிறார்கள்.
சந்திர புஷ்கரணி கங்கையாகவும்,
வில்வ தீர்த்தம் யமுனையாகவும்,
சம்பு தீர்த்தம் சரஸ்வதியாகவும்,
பகுள தீர்த்தம் கோதாவரியாகவும்,
பலாச தீர்த்தம் கிருஷ்ணாவாகவும்,
அசுவ தீர்த்தம் நர்மதாவாகவும்,
ஆம்ர தீர்த்தம் துங்கபத்ராவாகவும்,
கதம்ப தீர்த்தம் கண்டகி நதியாகவும்,
புன்னாக தீர்த்தம் காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன.
விண்ணகத்து லோகங்களும், மண்ணகத்து நதிகளும் ஒருசேர அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருவரங்கம்.
‘இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த அரங்கமாநகரத்து ஆலயம் போதும்’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயம்.
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்.
நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா
இராப்பத்து மூன்றாம் திருநாள்
ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில்  நம்பெருமாள், சௌரி சாயக் கொண்டை, அதில் புஜ கீர்த்தி, சிறு சிகப்பு கல் பதக்கம்,
பிராட்டி பதக்கம், முத்து பட்டை, மார்பில் விமான பதக்கம், வைர அபய ஹஸ்தம், ரத்தின கடி அஸ்தம்,
அடுக்கு பதக்கங்கள், 2 வட முத்து சரம், ஹஸ்த தொங்கல் கைகளில் சாற்றி,
பின் சேவையில்- காசு மாலை, வெள்ளை கல் ரங்கோன் அட்டிகை, வெள்ளை அரசிலை பதக்கம் சாற்றி சேவை சாதிக்கிறார்.
—————

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

பெரியவாச்சான் பிள்ளையின் “இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணபாதர்.
தந்தை யாமுனதேசிகர், தாய் நாச்சியராமளுக்கும் ,
சேங்கநல்லூர் எனும் தலத்தில் கலி 4329 சர்வஜித்து வருடம் ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் அவரித்தார்.
அதாவது, கி.பி. 1228-ல் பிறந்தார். “ஆச்சான் என்பது வைணவ பரிபாஷையில் ஆசாரியன். பலர் ஆச்சான் என்ற பெயரோடிருந்தமையால்,
இவரை வேறு பிரித்துக் காட்டப் பெரிய ஆச்சான் பிள்ளை என
இருந்த பெயர் உடம்படு மெய் பட்டு பெரியவாச்சான் பிள்ளை என அழைப்பதை அறிய முடிகின்றது.
வைணவ மரபில் ஆச்சான் என்று மட்டும் சொன்னால் இவரே. கிருஷ்ணசூரி என்றும்
இவர் வழங்கப் பெற்றார்.
ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள்.
இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும்.
பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம்.
ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார்.
பெரியவாச்சான் பிள்ளையை வியாக்கியான சக்ரவர்த்தி என்றும், உரைமன்னன் என்றும்,
உரைவித்தகர் என்றும் பரம காருணிகர் என்றும் பற்பல அறிஞர்கள் போற்றுகின்றனர்.
ஒரு சமயம் திருவரங்கத்திலே தங்கி வாழ்ந்து வந்த இவர் நஞ்சீயரிடத்தும் நம்பிள்ளையிடத்தும்
எல்லா வகையான சாத்திர உண்மைகளையும், திருவாய்மொழி வியாக்கியானங்களையும் நன்கு கேட்டுணர்ந்தார்.
நம்பிள்ளையை அவர் தம்முடைய ஆசாரியராகக் கொண்டிருந்தார்.
அவர்தம் புலமையை நன்குணர்ந்த நம்பிள்ளை, திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதுமாறு கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளையின்படி அவரும் திருவாய்மொழிக்கு உரை வகுத்தார்.
இராமயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு.
அதன் விளைவால் அவர் தம்முடைய உரை விளக்கத்தில் பல இடங்களில் இராமாயணப் பாடல்களைச் சான்று காட்டுவார்.
தம் குருவின் கட்டளைக்கு ஏற்ப அவர், இராமாயணப் பாடல்களின் எண்ணிக்கையுடையதாக 24000 கிரந்தத்தில் திருவாய்மொழிக்கு உரை வழங்கியுள்ளார்
————-

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

ஆவணி ரோகிணி ஸ்ரீ நயினாராச்சன் பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ
என்ற ஸ்லோகத்தை அருளினார் நாயினாராசார்யர்.
இதன் பொருள் : கவிகள் வாதம் செய்பவர்கள் ஆகியவர்களுக்குச் சிங்கம் போன்றவரும் மங்களக் குணங்கள் பொருந்தியவரும்
உபய வேதாந்தங்களுக்கும் ஆசாரியரும் ஸ்ரீமான் வேங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டவருமான ஸ்வாமி தேசிகனை வணங்குகிறேன்.
தேசிகன் விஷயமாக பிள்ளை அந்தாதி அருளினார். அதில் ஸ்ரீதேசிகனுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் பொருந்துமாறு சில பாசுரங்களை அமைத்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இவரே ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி ஸ்ரீரங்கத்தில் வேதாந்த தேசிகனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து ஆராதித்துக்கொண்டு வந்தார்.
———–
ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.
திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார்.
கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர்.
இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.
,அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர், தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு
தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர்.
நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில்
அவரைப் போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே–அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:
திருநக்ஷத்ர தனியன்கள்
அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||
அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||
வாழித்திருநாமம்
சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே
—————–
வைகாசி ரோகிணி நக்ஷத்திரம்.
திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் திருகோஷ்டியூரில் வைகாசி ரோகிணியில் அவதரித்தார்.
ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.
ஸ்ரீ ஆளவந்தார் என்னும் மஹாசார்யர் அவதரித்துப் பதினொரு வருடங்கள் கழிந்தபின் (கி.பி.987) ஸர்வஜித் வருஷத்தில்
வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில், காஸ்யப கோத்ரத்தில் ருக்ஸாகையில் பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான (ப்ரீதியுடையவரான)
செல்வநம்பியின் வம்சத்திலே, ஸ்ரீபுண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாய்,
பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தவர் ஆவார் திருக்கோட்டியூர் நம்பி.
இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார்.
இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீஶர் என்ற திருநாமங்களும் உண்டு.
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம் ருதஸாகரம் |
ஸ்ரீமத கோஷ்டீபரிபூர்ணம தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||
ஸ்ரீயப்பதியின் திருவடித்தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும்,
திருக்கோட்டியூர் நம்பி என்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆச்ரயிக்கிறோம்.
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “பெரிய திருமொழி” என்னும் பிரபந்தத்திற்கு
“கலயாமி கவித்வம்ஸம் கவிம்லோக திவாகாரம் |
யஸ்ய கோபி: ப்ரகாஸாபிராவித்யம் நிஹதம் தம: ||”
என்னும் தனியனை அருளிச்செய்தவர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஆவார்.
திருநக்ஷத்ர தனியன்:
வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டிபூர்ணம் ஸமாஸ்ரயே |
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோஸ்வதத் ||
வாழி திருநாமங்கள் :
மன்னியசீர் ஆளவந்தார் மலர்பதத்தோன் வாழியே
வைகாசி ரோகிணிநாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்துதித்தோன் வாழியே
திருக்குருகைப்பிரான் என்னும் பேர் திகழவந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்குரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில் வாழியே.
காசிபன் தன்கோத்திரத்தைக் கருநிலத்தோன் வாழியே
கலையனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருளே திக்குவழங்குமவன் வாழியே
வைய்யகமுன் தரிசனத்தால் வாழுமென்றான் வாழியே
ஏசறவே உகந்தெதியை எடுத்துரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ் செல்வன்மொழி தேர்ந்துரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
ஈரேழு மூன்றொன்றில் இதமுரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈரேழுலகுக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடிவந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கொட்டிநம்பி நற்பதங்கள் வாழியே.
அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதினியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள்மந்திரம் எதிராசர்க்கு ஒளித்துரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைந்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்கச் செகத்துதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
————–
ஹம்பியிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்று யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.
இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.
நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும்
எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது.
இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே
தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.
இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம்
————–
நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்.
இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும்,
ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும்,
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார்.
பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.
இவற்றுள்,
 முதற்பத்தாலே ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் – துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாகவுடையவனாய்
வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும்,
இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம்,
‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும்,
‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண்புகழ் நாரணன்’ என்றும் ‘திருவுடை அடிகள்’ என்றும் ‘
செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி,
‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால்
முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’ என்று அறுதியிட்டார்.
மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன்,
கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே,
பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக. அடிமை செய்து தலைக்கட்டுகிறார்.
ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
இனி,
• நான்காம் பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ என்றும்,
விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால்,
ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து,
‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார்.
ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும்
‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.
ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற தனால் ஏற்றுக்கொண்டார்.
ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 – 6) துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
ஏழாம்பத்தால், இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க்
‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே,
‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்;
அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே பிரிந்தபடியை அருளிச் செய்தார்.
எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார்,
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, அடியார்கட்கு அதீனப்பட்ட
சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம்,
ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு,
அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.
ஒன்பதாம் பத்தால், ‘நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி.,
‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,.
‘சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.
பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, ‘திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி,
இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே
‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
——————
கார்த்திகை கார்த்திகை நக்ஷத்திரம்.
கார்த்திகை கார்த்திகை ஸ்ரீ நம்பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த “வரதர்” பிற்காலத்தில்,
“நம்பிள்ளை” என்று தனது ஆசார்யராயன் மூலம் திருநாமம் சூட்ட பெற்றார்.
நஞ்ஜீயர் தனது திருவாய்மொழி வ்யாக்யானத்தை எழுத தகுந்த ஒருவர் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அனைவரும் வரதராஜன் அதற்கு ஏற்றவர் என கூற அந்த பணியை செய்ய நஞ்ஜீயர் வரதராஜனிடம் ஒப்படைத்தார்.
தனது மூல குறிப்புகளை கொடுத்து அதனை கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை எழுத பணித்தார்.
வரதனும் அந்த ஒலைகளை எடுத்துக்கொண்டு நம்பூர் சென்றார்.
பெருமாளின் விசித்ர சங்கல்பத்தால் அந்த ஓலைகள் காவிரியை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட,
ஸ்வாமி வரதராஜன் தனது ஆசாரியனை வேண்டி மீண்டும் முழுவதுமாக எழுதி முடித்தார்.
இவர் தமிழிலும் வடமொழியிலும் நல்ல ஞானம் இருந்தமையால் சில இடங்களில் சில கூடுதல் அர்த்தங்களைச் சேர்த்து எழுதினார்.
நஞ்ஜீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, தாம் எழுதிய வியாக்யானத்தை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு,
என்ன மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார்.
வரதரும் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் நஞ்ஜீயர் மிகவும் மகிழ்ந்தார்.
வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்ஜீயர் அவருக்கு “நம்பிள்ளை” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
பலருக்கு பெருமாள் என்னும் திருநாமம் இருக்க நம்பெருமாள் என்னும் திருநாமம் அழகியமணவாளனுக்கு ஒருவருக்கே
அதேபோல் பலருக்கு பிள்ளை என்னும் திருநாமம் இருக்க நம்பிள்ளை என்னும் திருநாமம் ஸ்வாமி நம்பூர் வரதராஜன் ஒருவருக்கே.
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்–நம்பிள்ளையின் தனியன்:
நம்பிள்ளையின் வாழி திருநாமம்:
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே
காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே
———————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராதா ப்ரணாமம்–ஸ்ரீ கீத கோவிந்தம் –

December 6, 2022

கீத கோவிந்தம் 12 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.

இதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர்.

அப்ரக்ருத தத்வ யார ஹய அகோசார
பௌதிகா பவேதே யார அபத்த அந்தரா

அப்ரகிருத-தத்துவம் (ஆன்மீகக் கொள்கைகள்) என்பது சாதாரணமான உணர்வுகளால் இதயம் கட்டப்பட்டிருப்பவர்களுக்குப் புலனாகாது.

அத்யாத்ம-நயனா யார உன்மிலிதா நய
பிரேம-தத்வே அதிகார தாஹார ந ஹயா

ஆன்மீகக் கண்கள் திறக்கப்படாதவர்களுக்கு, அத்தகைய நபர்களுக்கு பிரேமா – தத்வா (தெய்வீக அன்பின் கொள்கை) எந்த தகுதியும் இல்லை.

சமஸ்த தத்வேரா சாரா மதுர சாதனா
பூர்ணாநந்த லாப யாதே கரே சாது-ஜன

 அனைத்து ஆன்மீக உண்மைகளின் சாராம்சம் மதுரா-சாதனா (இணைய ரசத்தை வளர்ப்பது ), இதன் மூலம் சாதுக்கள் முழுமையான பேரின்பத்தை அடைகிறார்கள்.

சு-கீத-கோவிந்த க்ரந்தே சே பத்ம பிரகாஷா அதிகாரி பேதே தாரா
சாஸ்கோ-விகாசா

அந்தத் தாமரை ( மாதுர்ய-ரசத்தின் ) அற்புதமான புத்தகம், கீத கோவிந்தமாக வெளிப்படுகிறது , மேலும் பல்வேறு வகையான தகுதிகளின் அடிப்படையில், அது சுருங்கி அல்லது விரிவடைகிறது.

அதிகாரி பிரேமி ஜானே மானஸ-நயனே
நித்யானந்த ஞான-யோக தேகே விருந்தானே

மனக் கண்ணால், பிரேமை கொண்ட ஒரு தகுதியான நபர், நித்திய ஆனந்தமான ஞானத்தின் உதவியுடன் பிருந்தாவனத்தை உணர்கிறார் .

அதிகாரி நா ஹையா யஹார அந்தரா
ராதா-கிருஷ்ணா-பிரேம-சுதா யாசே நிரந்தர தாஹார
ஆகணாக்ஷா கபு நா ஹயா புராண
காராபிராபிராகல் தாதாயசித்ர-பிரமாணம்

 தகுதி பெறாத ஒருவருக்கு, ராதா-கிருஷ்ண பிரேமையின் அமிர்தத்திற்காக இடைவிடாது ஏங்கும் ஒருவருக்கு , அவரது ஆசை ஒருபோதும் நிறைவேறாது. மாயாவின் திட்டங்களால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை மட்டுமே அவர் பார்க்கிறார்.

ப்ராக்ருத கரிய தேகே விருந்தாவன-தத்வா
ஹீனா பாவே லய பரப்ரஹ்மேர மஹத்வா

அவர் பிருந்தாவனத்தின் ஆன்மீக யதார்த்தத்தை ஜடப்பொருளாகக் கருதுகிறார் மற்றும் பரமாத்மாவின் பெருமைகளை மிகவும் அற்பமானதாகக் கருதுகிறார்.

நாயக-நாயக-பாவே பத்த கரி’மனா
ப்ராக்ருத காரிதே ஆத்மா கரே சமர்பணா

நாயகன், நாயகி என்ற கருத்துக்களுக்குக் கட்டுப்பட்ட மனதுடன், இந்தப் புத்தகம் உலகியல் சுரண்டல்களைப் பற்றியது என்று நம்புவதற்கு அவர் தன்னை ஒப்படைத்தார்.

அதாவ சாது-கனா இ கிரந்த-பதனே
ஆத்யாத்மிகா பவ லஹா நிஜ நிஜ மானே

எனவே, ஓ சாதுக்களே , இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது, ​​உங்கள் மனதிற்குள் இருக்கும் ஆன்மீகப் பாவத்தைப் புகலிடம் பெறுங்கள்.

பத்மாவதி-நாதா யஹா கைலா ஆஸ்வதனா
சே விசுத்த பிரேம கராஹா சாதனா

 பத்மாவதியின் (ஜெயதேவனின்) கணவனால் எதை ருசித்ததோ – அதுவே நீ வளர்க்க வேண்டிய தூய பிரேமை .

 ப்ரஹ்ம-தத்வ பரி-சுத்த சத்வ-குண-தாம
ஸாரக்ராஹி வைஷ்ணவேர யஹதே விஷ்ரமா

 ஆழ்நிலை கொள்கைகள் மிகவும் தூய்மையானவை மற்றும் அவை சத்வ-குணத்தின் உறைவிடம் . அவர்கள் சாராகிரஹி வைஷ்ணவர்களின் (சாரத்தை தேடுபவர்கள்) ஓய்வு .

சே கோலோக-தாம தியாஜி’ தமோ-தர்மே ரதா
ஹைபே யஹார மனா யே பாபி சதாதா

தமோ-தர்மத்தில் (அறியாமையின் மதங்கள்) தங்கள் மனதை ஈடுபடுத்துவதற்காக கோலோக தாமத்தை நிராகரிப்பவர் எப்போதும் துரோகியாகவே கருதப்படுகிறார்.

கீத 
கோவிந்தம் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது, மேலும் இருபத்தி நான்கு பாடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் எட்டு ஜோடிகளைக் கொண்டது, இது 
அஷ்டபதி என்று அழைக்கப்படுகிறது. அத்தியாயம் ஒன்று மற்றும் அத்தியாயம் இரண்டு, நான்கு ஐந்து மற்றும் பன்னிரெண்டாம் 
ஒவ்வொன்றிலும் இரண்டு 
அஷ்டபதிகள் உள்ளன; மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது மற்றும் பத்து அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு 
அஷ்டபதி மட்டுமே உள்ளது . இவ்வாறு இருபத்து நான்கு 
அஷ்டபதிகள் உள்ளன . 
இந்த 
அஷ்டபதிகள் வெவ்வேறு மெல்லிசை 
ராகங்களில் இசை அமைக்கப்படலாம் 
, அவை பிற்காலத்தில் கவிஞர்களால் பாராட்டப்பட்டு பின்பற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்ணனைகள் சமஸ்கிருதத்திலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வர்ணனைகளும் சமஸ்கிருதத்திலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட வர்ணனைகள் இந்தியாவில் பிராந்திய மொழிகளிலும் பல வெளிநாட்டு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன.

முதல் பாடலில் நான்கு அறிமுக வசனங்கள் உள்ளன, அதைத் தொடர்ந்து பதினொரு அஷ்டபதிகள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் நோக்கத்தை விவரிக்கின்றன மற்றும் முடிவில் பணியை தடையின்றி முடிக்க தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு அஷ்டபதியில் படைப்பின் நாயகன் போற்றப்படுகிறார். இங்கே ஆசிரியர் இந்த அஷ்டபதியை மங்களம் – ஆசிர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது பாடலில், வசந்த காலம், இனிமையான வாசனை மற்றும் குளிர்ந்த காற்று போன்ற பலதரப்பட்ட அம்சங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது, தேனீக்கள் மற்றும் காக்காக்கள் கிருஷ்ணரை நினைத்துக்கொண்டிருக்கும் இனிமையான சத்தங்கள், கிருஷ்ணரைக் காணக்கூடிய இந்த வில்லுப்பாட்டுகளுக்கு தனது முதல் தோழியால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நம்பிக்கையில் ராதா தன் தோழியைப் பின்தொடர்கிறாள்.

நான்காவது பாடலில், விருந்தாவனத்தின் இருண்ட காட்டில் அனைத்து கோபியர்களுடன் கிருஷ்ணரின் காதல் நடனத்தை கவிஞர் விவரிக்கிறார். அனைத்து கோபியர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் அவரைத் தழுவி, அன்புடன் அரவணைத்து, ஒருவரைக் கட்டிப்பிடித்து, இன்னொருவரை ஆவேசத்துடன் முத்தமிட்டு, இன்னொருவரைப் பார்த்து, மற்றப் பெண்ணுடன் சிரித்துப் பாராட்டுகிறார். உண்மையில், கிருஷ்ணர் அனைவருக்கும் பேரின்பத்தை அளிப்பதாக ஜெயதேவர் கூறுகிறார்.

பதினொன்றாவது பாடலில் விப்ரலம்பச் சிருங்காரத்தைப் பற்றிக் கவிஞர் விவரிக்கிறார் . அன்பின் கடவுள் கிருஷ்ணன் யமுனை நதிக்கரையில் ராதைக்காக காத்திருக்கிறான். கவிஞர் ராதை மற்றும் கிருஷ்ணரின் அரவணைப்பை மின்னலுடனும் கருமேகத்துடனும் வெள்ளை கொக்கு மற்றும் கருமேகத்துடனும் ஒப்பிடுகிறார்.

பன்னிரண்டாவது பாடலில், கவிஞர் ராதையின் வலியையும் துயரத்தையும் கிருஷ்ணரைப் பிரிந்ததை விவரிக்கிறார். அசைய முடியாமல் தன் வில்லில் அமர்ந்திருக்கும் ராதையின் நிலையைப் பார்த்து, ஆவேசத்தால் நிரம்பி, கிருஷ்ணரிடம் எப்போதும் தன் மனதை நிலை நிறுத்தினாள். கிருஷ்ணனை எங்கும் பார்க்கும் ராதாவை, தன் மனக்கண் முன்னே, தன் காதலனின் ஒரே நினைவுடன் தான் உயிரோடு இருக்கிறாள் என்று கிருஷ்ணனிடம் கூறுகிறாள் சகி . ராதாவைச் சந்திக்க விரைவாகச் செல்லும்படி சகி அவனைக் கேட்டுக்கொள்கிறாள் ; கிருஷ்ணரின் வருகைக்காக முழு அலங்காரத்துடன் காத்திருக்கிறார். 

————-

கீ³தகோ³வின்த³ம் ப்ரத²ம: ஸர்க:³ – ஸாமோத³ தா³மோத³ர:

॥ கீ³தகோ³வின்த³ம் ॥
॥ அஷ்டபதீ³ ॥

॥ ஶ்ரீ கோ³பாலக த்⁴யானம் ॥

யத்³கோ³பீவத³னேன்து³மண்ட³னமபூ⁴த்கஸ்தூரிகாபத்ரகம் யல்லக்ஷ்மீகுசஶாதகும்ப⁴ கலஶே வ்யாகோ³சமின்தீ³வரம் ।
யன்னிர்வாணவிதா⁴னஸாத⁴னவிதௌ⁴ ஸித்³தா⁴ஞ்ஜனம் யோகி³னாம் தன்னஶ்யாமளமாவிரஸ்து ஹ்ருத³யே க்ருஷ்ணாபி⁴தா⁴னம் மஹ: ॥ 1 ॥

॥ ஶ்ரீ ஜயதே³வ த்⁴யானம் ॥

ராதா⁴மனோரமரமாவரராஸலீல-கா³னாம்ருதைகப⁴ணிதம் கவிராஜராஜம் ।
ஶ்ரீமாத⁴வார்ச்சனவித⁴வனுராக³ஸத்³ம-பத்³மாவதீப்ரியதமம் ப்ரணதோஸ்மி நித்யம் ॥ 2 ॥

ஶ்ரீகோ³பலவிலாஸினீ வலயஸத்³ரத்னாதி³முக்³தா⁴க்ருதி ஶ்ரீராதா⁴பதிபாத³பத்³மபஜ⁴னானந்தா³ப்³தி⁴மக்³னோனிஶம் ॥
லோகே ஸத்கவிராஜராஜ இதி ய: க்²யாதோ த³யாம்போ⁴னிதி⁴: தம் வன்தே³ ஜயதே³வஸத்³கு³ருமஹம் பத்³மாவதீவல்லப⁴ம் ॥ 3 ॥

॥ ப்ரத²ம: ஸர்க:³ ॥
॥ ஸாமோத³தா³மோத³ர: ॥

மேகை⁴ர்மேது³ரமம்ப³ரம் வனபு⁴வ: ஶ்யாமாஸ்தமாலத்³ருமை-ர்னக்தம் பீ⁴ருரயம் த்வமேவ ததி³மம் ராதே⁴ க்³ருஹம் ப்ராபய ।
இத்த²ம் நன்த³னிதே³ஶிதஶ்சலிதயோ: ப்ரத்யத்⁴வகுஞ்ஜத்³ருமம் ராதா⁴மாத⁴வயோர்ஜயன்தி யமுனாகூலே ரஹ:கேலய: ॥ 1 ॥

மேகைர் மேதுரம் அம்பரம் வன-புவஹ் ஷ்யமாஸ் தமால-த்ருமைர்:
நக்தம் ப்ரேரு ராயயம் த்வம் ஏவ தத் இமம், ராதே காஹம் ப்ராபய |
இத்தம் நந்த-நிதேஷதஹ கலிதயோஉ ப்ரத்ய-அத்வ-குய்ஜ-த்ருமா
ராதா-மாதவயோர் ஜெயந்தி யமுனா-குலே ரஹௌ-கேலயா: ||1||

வானம் மேகங்களால் அடர்த்தியானது; வனப்பகுதி தமலா மரங்களால் இருண்டது; இரவு அவனை (கிருஷ்ணனை) பயமுறுத்துகிறது; ஓ ராதா! நீங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்; இது நந்தனிடமிருந்து வந்த கட்டளை. ஆனால், ராதாவும் மாதவனும் யமுனை நதிக்கரையில் உள்ள மரத்திற்கு வழிதவறி, அவர்களின் ரகசிய காதல் விளையாட்டு மேலோங்குகிறது.

வாக்³தே³வதாசரிதசித்ரிதசித்தஸத்³மா பத்³மாவதீசரணசாரணசக்ரவர்தீ ।
ஶ்ரீவாஸுதே³வரதிகேலிகதா²ஸமேதம் ஏதம் கரோதி ஜயதே³வகவி: ப்ரப³ன்த⁴ம் ॥ 2 ॥

ஸ்ரீ-வாஸுதேவ-ரதி-கேலி-கதா-ஸமேதம்
ஏதம் கரோதி ஜெயதேவ-கவிஹ் பிரபந்தம் ||2||

மகா கவி ஸ்ரீ ஜெயதேவரின் இதயம், பத்மாவதியின் காலடியில் இருக்கும் பேச்சாற்றல் தேவி (சரஸ்வதி)யால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை போன்றது, ஸ்ரீ மற்றும் வாசுதேவா ஆகியோரின் தெய்வீக நாடகங்களை உள்ளடக்கிய இந்த சிறந்த படைப்பை இயற்றுகிறது. ஜெயதேவா – ஜெயா என்றால் “மிகச் சிறப்பானது”; தேவா என்றால் த்யோதயாதி, ப்ரகாஷயதி அல்லது “அவர் ஒளிரச் செய்கிறார்”. ஸ்ரீஜெயதேவா என்பது ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பொழுது போக்குகளை அவரது பக்தியின் மூலம் ஒளிரச் செய்பவர்.

யதி³ ஹரிஸ்மரணே ஸரஸம் மனோ யதி³ விலாஸகலாஸு குதூஹலம் ।
மது⁴ரகோமலகான்தபதா³வலீம் ஶ்ருணு ததா³ ஜயதே³வஸரஸ்வதீம் ॥ 3 ॥

யதி ஹரி-ஸ்மரணே சரசம் மன:
யதி விலாச-கலாசு குதூஹலம் |
மதுர-கோமலா-காந்த-பதாவலேம்
ஷ்ருணு ததா ஜெயதேவ-சரஸ்வதிம் ||3||

அன்பான பார்வையாளர்களே! ஸ்ரீ ஹரியின் பொழுது போக்குகளைக் கேட்கும் பொழுது உங்கள் மனம் எப்போதும் புதுமையான அன்பினால் நிரம்பியிருந்தால், காமக் கலைகளில் அவருடைய புத்திசாலித்தனத்தைப் பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், மென்மையான, மென்மையான மற்றும் மென்மையானவற்றைக் கேட்டு நீங்கள் ஆனந்தத்தில் மூழ்கிவிடுவீர்கள். கவிஞர் ஜெயதேவாவின் இப்பாடல் தொகுப்பின் அன்பான வசனங்கள்

வாச: பல்லவயத்யுமாபதித⁴ர: ஸன்த³ர்ப⁴ஶுத்³தி⁴ம் கி³ராம் ஜானீதே ஜயதே³வ ஏவ ஶரண: ஶ்லாக்⁴யோ து³ரூஹத்³ருதே ।
ஶ்ருங்கா³ரோத்தரஸத்ப்ரமேயரசனைராசார்யகோ³வர்த⁴ன-ஸ்பர்தீ⁴ கோபி ந விஶ்ருத: ஶ்ருதித⁴ரோ தோ⁴யீ கவிக்ஷ்மாபதி: ॥ 4 ॥

vacaù பல்லவயதி உமாபதிதரா, ஸந்தர்ப-சுத்திம் கிரிஜா
ஜானிதே ஜெயதேவ ஏவ ஶரணா, ஶ்லாக்யோ துருஹ-த்ருதே |
ஶ்ருங்காரோத்தர-ஸத்-ப்ரமேய-ரசனைர்:, ஆசார்ய-கோவர்தன-
ஸ்பர்தே, கோ’பி ந விஷ்ருத, ஸ்ருதிதரோ தோயீ கவி-க்ஷ்மாபதி: ||4| |

உமாபதிதாரா என்ற புகழ்பெற்ற கவிஞரின் சொல்லாட்சிக் குறிப்புகள் மற்றும் பிற பேச்சு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சரண என்ற கவிஞன் தனது மறைநூல் வசனங்களால் பாராட்டைப் பெற்றுள்ளார். உலகக் காதல் சுவையை கோவர்த்தனத்தைப் போல் சாமர்த்தியமாகச் சொல்லக்கூடிய கவிஞரைப் பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். கவிராஜ தோயி எதையும் கேட்ட பிறகு ஒருமுறை சொல்லலாம். இந்த வல்லமைமிக்க கவிஞர்கள் கூட திறமையின் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற முடியாதபோது, ​​ஜெயதேவனின் கவிதை எப்படி அனைத்து பண்புகளுடனும் நிறைந்திருக்கும்? (இதன் மூலம் அவர் தனது பணிவை வெளிப்படுத்துகிறார்)

॥ கீ³தம் 1 ॥

ப்ரலயபயோதி⁴ஜலே த்⁴ருதவானஸி வேத³ம் ।
விஹிதவஹித்ரசரித்ரமகே²த³ம் ॥
கேஶவ த்⁴ருதமீனஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 1 ॥

பிரளய-பயோதிஜலே கோபால கிருஷ்ணா, த்ருதவாநஸி வேதம்
விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம் |
கேசவ த்ருத-மின-ஷரீர
ஜெய ஜகதீச ஹரே ||த்ருவபதா||

இறைவா, மீன் வடிவில்! கரைப்பு வெள்ளத்தில், வேதங்களின் வெளிப்பட்ட அறிவை, ஒரு படகு போல, முயற்சியின்றி தாங்கி வைத்திருக்கிறீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

க்ஷிதிரதிவிபுலதரே தவ திஷ்ட²தி ப்ருஷ்டே² ।
த⁴ரணித⁴ரணகிணசக்ரக³ரிஷ்டே² ॥
கேஶவ த்⁴ருதகச்ச²பரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 2 ॥

கிதிரதி-விபுலதரே கோபால கிருஷ்ணா தவ திஹதி பே
தாரை-தாரா-கின-சக்ர-கரிஹே |
கேசவ த்ருத-கச்சப-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||1||

ஆண்டவரே, ஆமை வடிவில்! உங்கள் முதுகின் பரந்த பரப்பில், அது சுமக்கும் பூமியின் சுமையால் சோர்வடைந்து, உலகம் பாதுகாப்பாக நிற்கிறது. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

வஸதி த³ஶனஶிக²ரே த⁴ரணீ தவ லக்³னா ।
ஶஶினி கலங்ககலேவ நிமக்³னா ॥
கேஶவ த்⁴ருதஸூகரரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 3 ॥

வசதி தாசன-சிகரே கோபால கிருஷ்ணா தரணி தவ லக்ன ஷாசினி கலக
-கலேவ நிமக்னா |
கேசவ த்ருத-சுகர-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||2||

ஆண்டவரே, பன்றியின் வடிவில்! சந்திரனின் வட்டில் உள்ள இருண்ட குறியைப் போல, உங்கள் தந்தத்தின் நுனியில் உலகம் அமைதியாக இருக்கிறது. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

தவ கரகமலவரே நக²மத்³பு⁴தஶ்ருங்க³ம் ।
த³லிதஹிரண்யகஶிபுதனுப்⁴ருங்க³ம் ॥
கேஶவ த்⁴ருதனரஹரிரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 4 ॥

தவ கர-கமலா-வரே , நக அத்பூத-ஶ்ரீங்கம்
தலித-ஹிராயகசிபு-தனு-பிஹக |
கேசவ த்ருத-நர-ஹரி-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||3||

ஓ ஆண்டவரே, மனித சிங்கத்தின் வடிவில்! தாமரை போன்ற அழகுள்ள உங்கள் கையில், அற்புதமான நுனிகளைக் கொண்ட விரல் நகங்கள் உள்ளன, அவை மிகவும் சக்திவாய்ந்த அரக்கன் ஹிரண்யகசிபுவை ஒரு பெரிய பூச்சியைப் போல கிழித்தன. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

ச²லயஸி விக்ரமணே ப³லிமத்³பு⁴தவாமன ।
பத³னக²னீரஜனிதஜனபாவன ॥
கேஶவ த்⁴ருதவாமனரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 5 ॥

சலயஸி விக்ரமணே , பலிமத்பூத-வாமன
பத-நக-நிர-ஜனித-ஜன-பவனா |
கேசவ த்ருத-வாமன-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||4||

குள்ள வடிவான இறைவனே! உங்கள் கால்களை ஊன்றி பலசாலியான பாலியை ஏமாற்றி விட்டீர்கள். உலகையே புனிதப்படுத்தும் நதியான கங்கை உன் கால் நகங்களிலிருந்து வெளிவந்து விட்டது. வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

க்ஷத்ரியருதி⁴ரமயே ஜக³த³பக³தபாபம் ।
ஸ்னபயஸி பயஸி ஶமிதப⁴வதாபம் ॥
கேஶவ த்⁴ருதப்⁴ருகு⁴பதிரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 6 ॥

காஷ்த்ரிய-ருத்திர-மயே , ஜகத் அபகத-பாபம்
ஸ்நபயஸி பயஸி ஸமித-பவ-தபம் |
கேசவ த்ருத-ப்ருகு-பதி-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||5||

ஆண்டவரே, பிருகுவின் வடிவில், கொடுங்கோல் ஆட்சியாளர்களின் இரத்தத்தில் உலகத்தை குளிப்பாட்டினீர்கள், இதனால் பாவத்தை நீக்கி, அதன் உறவின் துயரத்தை அழித்துவிட்டீர்கள். வாழ்க! பிரபஞ்சத்தின் கடவுளான ஹரி, உனக்கே வெற்றி!

விதரஸி தி³க்ஷு ரணே தி³க்பதிகமனீயம் ।
த³ஶமுக²மௌலிப³லிம் ரமணீயம் ॥
கேஶவ த்⁴ருதராமஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 7 ॥

விதராசி திக்ஷு ரனே , திக்-பதி-கமணியம்
தச-முக-மௌலி-பலி ராமையாம் |
கேசவ த்ருதா- ரகுபதி ரூபா
ஜெய ஜகதீச ஹரே ||6||

ஸ்ரீராமனின் சரீரத்திலே! போரில் ராவணன் என்ற அரக்கனின் பத்துத் தலைகளை, கார்டினல் திசைகளின் காவலர்களுக்கு அழகான காணிக்கையாகச் செய்துள்ளீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

வஹஸி வபுஷி விஶதே³ வஸனம் ஜலதா³ப⁴ம் ।
ஹலஹதிபீ⁴திமிலிதயமுனாப⁴ம் ॥
கேஶவ த்⁴ருதஹலத⁴ரரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 8 ॥

வஹஸி வபுஷி விஷதே , வசன ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித-யமுனாபம் |
கேசவ த்ருத-ஹல-தார-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||7||

உழவைத் தாங்குபவனாகிய பலராமன் வடிவான இறைவனே! உனது கலப்பையால் இழுத்துச் செல்லப்படுமோ என்ற அச்சத்தால் கருமையாகிய யமுனை போன்ற நீலநிற மேகத்தின் நிற ஆடையை உனது மாசற்ற உடம்பில் அணிகிறாய். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

நின்த³ஸி யஜ்ஞவிதே⁴ரஹஹ ஶ்ருதிஜாதம் ।
ஸத³யஹ்ருத³யத³ர்ஶிதபஶுகா⁴தம் ॥
கேஶவ த்⁴ருதபு³த்³த⁴ஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 9 ॥

நிந்தாசி யஜ்ஞ-விதே ஆஹாஹா! ஸ்ருதி-ஜாதம்
சதய-ஹ்ருதய தர்ஷித-பசு-கதம் |
கேசவ த்ருத-புத்த-ஷரீர
ஜெய ஜகதீச ஹரே ||8||

ஓ ஆண்டவரே, புத்தரின் உடலில், ஞானம் பெற்றவர்! உங்கள் இதயத்தின் மீது இரக்கத்தால், விலங்குகளைக் கொல்லும் யாகத்தின் சடங்குப் பகுதியை நீங்கள் கண்டனம் செய்துள்ளீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

ம்லேச்ச²னிவஹனித⁴னே கலயஸி கரவாலம் ।
தூ⁴மகேதுமிவ கிமபி கராலம் ॥
கேஶவ த்⁴ருதகல்கிஶரீர ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 1௦ ॥

ம்லேச்ச-நிவாஹ-நிதனே கலயஸி ​​கரவலம்
தூம-கேதும் இவ கிம் அபி கரலாம் |
கேசவ த்ருத-கல்கி-ஷரீர
ஜெய ஜகதீச ஹரே ||9||

கல்கி வடிவில் ஆண்டவரே! துன்மார்க்கரை அழிப்பதற்காக, விண்கல் போன்ற வாளைக் கையில் ஏந்தி, அவர்களுக்குப் பேரழிவு தரும் ரயிலைக் கொண்டு செல்கிறீர்கள். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உனக்கே வெற்றி!

ஶ்ரீஜயதே³வகவேரித³முதி³தமுதா³ரம் ।
ஶ்ருணு ஸுக²த³ம் ஶுப⁴த³ம் ப⁴வஸாரம் ॥
கேஶவ த்⁴ருதத³ஶவித⁴ரூப ஜய ஜக³தீ³ஶ ஹரே ॥ 11 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-காவேரிடம் இடம் உதிதம் உதரம்
ஷ்ருணு சுகதம் ஷுபதம் பவ-சரம் |
கேசவ த்ருத-தஷவித-ரூப
ஜெய ஜகதீச ஹரே ||10||

பத்து வடிவங்கள் எடுத்தவனே! ஜெயதேவாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள். இது நன்மையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; அது வாழ்க்கையின் சாராம்சம். வாழ்க! ஹரி, உலக கடவுளே, உமக்கு வெற்றி!

வேதா³னுத்³த⁴ரதே ஜக³ன்னிவஹதே பூ⁴கோ³லமுத்³பி³ப்⁴ரதே தை³த்யம் தா³ரயதே ப³லிம் ச²லயதே க்ஷத்ரக்ஷயம் குர்வதே ।
பௌலஸ்த்யம் ஜயதே ஹலம் கலயதே காருண்யமாதன்வதே ம்லேச்சா²ன்மூர்ச்ச²யதே த³ஶாக்ருதிக்ருதே க்ருஷ்ணாய துப்⁴யம் நம: ॥ 5 ॥

வேதான் உத்தாரதே, ஜகந்தி வஹதே…, பூகோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே, பலிம் சலயதே, க்ஷத்ரக்-ஷாயம் குர்வதே… |
பௌலஸ்த்யம் ஜாயதே, ஹலம் கலயதே, காருண்ய மாதன்வதே
ம்லேச்சன் மூர்ச்சயதே, தஷ க்ருதி-க்ருதே,கிருஷ்ணாய துப்யம் நம: ||

வேதங்களை விடுவிப்பவர், அசையும் மற்றும் நிலையான உயிரினங்களின் உலகத்தை நிலைநிறுத்துபவர், அன்னை பூமியின் மீட்பர், ஹிரண்ய-கசிபுவைக் கொன்றவர், பலியை வஞ்சிப்பவர், க்ஷத்ரியர்களை அழிப்பவர், பவுலஸ்தியரை (ராவணன்) வென்றவர். , ஆயுதா எனப்படும் கலப்பையை கையாள்பவர், இரக்கத்தின் வக்கீல் மற்றும் பார்ப்பனர்களைக் கொன்றவர்; இந்த பத்து ஆன்மிக வடிவங்களை எடுத்துக் கொண்ட உங்களுக்கு, ஓ ஸ்ரீ கிருஷ்ணா! நான் உங்களுக்கு என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

॥ கீ³தம் 2 ॥

ஶ்ரிதகமலாகுசமண்ட³ல! த்⁴ருதகுண்ட³ல! ।
கலிதலலிதவனமால! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 1 ॥

ஸ்ரீத-கமலா-குச-மண்டல த்ருத-குண்டல இ
கலித-லலிதா-வன-மாலா
ஜெய ஜெய தேவ ஹரே ||த்ருவபதா||

ஓ தேவா! ஓ ஹரி! உங்கள் திகைப்பூட்டும் குண்டலத்துடன் (காதணிகள்) ஸ்ரீ (ராதா) மீது நீங்கள் ஓய்வெடுக்கிறீர்கள் மற்றும் உங்கள் மயக்கும் வனமாலா மாலையுடன் விளையாடுகிறீர்கள்! ஓ ஹரி, நீ வெற்றி பெறுவாயாக!

தி³னமணீமண்ட³லமண்ட³ன! ப⁴வக²ண்ட³ன! ।
முனிஜனமானஸஹம்ஸ! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 2 ॥

தின-மணி-மண்டல-மதன
பவ-கதனா இ
முனி-ஜன-மானஸ-ஹஸ
ஜெய ஜெய தேவ ஹரே ||1||

ஓ தேவா! ஓ ஹரி! ஆயிரம் சூரியன்கள் போல் பிரகாசிக்கும் ஆபரணம் நீ. நீங்கள் பொருள் இருப்பின் அடிமைத்தனத்தைத் துண்டிக்கிறீர்கள். முனிவர்களின் இதயங்களின் மானசா (மன) ஏரியில் விளையாடும் அன்னம் நீ. நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

காலியவிஷத⁴ரக³ஞ்ஜன! ஜனரஞ்ஜன! ।
யது³குலனலினதி³னேஶ! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 3 ॥

கலிய-விஷ-தார-பஞ்சன
ஜன-ரஞ்சனா இ
யதுகுல-நளின-தினேஷ
ஜெய ஜெய தேவ ஹரே ||2||

ஓ தேவா! ஓ ஹரி! காளியா என்ற விஷப் பாம்பின் பெருமையைப் பொடியாக்குகிறாய். உங்கள் அன்புக்குரியவர்களின் இதயங்களை முடிவில்லா மகிழ்ச்சியால் நிரப்புகிறீர்கள். யது வம்சத்தின் தாமரையை மலரச் செய்யும் சூரியன் நீ. நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

மது⁴முரனரகவினாஶன! க³ருடா³ஸன! ।
ஸுரகுலகேலினிதா³ன! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 4 ॥

மது-முர-நரக-வினாஷன
கருடாசன இ
சுர-குல-கேலி-நிதான
ஜெய ஜெய தேவ ஹரே ||3| |

ஓ தேவா! ஓ ஹரி! மது, முரா, நரகா ஆகிய அரக்கர்களை அழிப்பவனே! உன்னுடைய உன்னதமான கழுகு கருடா மீது சவாரி செய்பவனே! மற்ற கடவுள்களின் மகிழ்ச்சிகரமான விளையாட்டை நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

அமலகமலத³லலோசன! ப⁴வமோசன்! ।
த்ரிபு⁴வனப⁴வனநிதா⁴ன! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 5 ॥

அமலா-கமலா-தல-லோசன
பவ-மோசன இ
திரிபுவன-புவன-நிதான
ஜெய ஜெய தேவ ஹரே ||4||

ஓ தேவா! ஓ ஹரி! உன்னுடைய அற்புதமான கண்கள் மாசற்ற தாமரை மலரின் இதழ்களை ஒத்திருக்கின்றன. பௌதிக இருப்பின் துக்கத்திலிருந்து நீங்கள் விடுதலையை வழங்குகிறீர்கள். நீங்கள் மூன்று உலகங்களுக்கும் அடித்தளம். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

ஜனகஸுதாக்ருதபூ⁴ஷண! ஜிததூ³ஷண! ।
ஸமரஶமிதத³ஶக²ண்ட²! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 6 ॥

ஜனக-சுத-குச்சா-பூஷண
ஜித-தூஷண இ
சமர-ஷமித-தாஸ-காந்த
ஜெய ஜெய தேவ ஹரே ||5||

ஓ தேவா! ஓ ஹரி! உங்கள் அவதாரத்தில் சீதாதேவியை ஸ்ரீ ராமராக அலங்கரிக்கிறீர்கள். நீங்கள் துசானா என்ற அரக்கனை தோற்கடித்து, பத்து தலைகள் கொண்ட ராவணனை போரில் கொன்றதன் மூலம் உலகிற்கு அமைதியை மீட்டெடுக்கிறீர்கள். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

அபி⁴னவஜலத⁴ரஸுன்த³ர! த்⁴ருதமன்த³ர! ।
ஶ்ரீமுக²சன்த்³ரசகோர! ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 7 ॥

அபிநவ-ஜல-தார-சுந்தர
தூத-மந்தர இ
ஸ்ரீ-முக-சந்திர-சகோர
ஜெய ஜெய தேவ ஹரே ||6||

ஓ சியாமசுந்தரா, உங்கள் நிறம் புதிய மழைமேகம் போல் பளபளக்கிறது. மந்தார மலையை உடையவனே! சந்திரனுக்கு ஒரு காகோரா பறவை பைன்களாக, நீங்கள் அதிர்ஷ்டத்தின் உச்ச தெய்வமான ஸ்ரீயின் சந்திரன் போன்ற முகத்துடன் இடைவிடாமல் இணைந்திருக்கிறீர்கள். ஓ ஹரி! ஓ தேவா! நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

தவ சரண ப்ராத வயம்
இதி பாவய இ
குரு குசலம் ப்ரணதேஷு
ஜய ஜய தேவ ஹரே ||7||

ஓ பகவானே, நாங்கள் உனது தாமரை பாதங்களில் தஞ்சம் அடைந்தோம். பக்தி (அன்பு) என்ற பரிசைக் கொண்டு எங்களை ஆசீர்வதிப்பதன் மூலம் நீங்கள் ஐஸ்வர்யத்தை வழங்குவீர்கள். ஓ தேவா! ஓ ஹரி! நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

ஶ்ரீஜயதே³வகவேரித³ம் குருதே முத³ம் ।
மங்க³லமுஜ்ஜ்வலகீ³தம்; ஜய, ஜய, தே³வ! ஹரே! ॥ 8 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-கவேர் இட
குருதே மூடம் இ
மகல முஜ்ஜ்வல-கீதா
ஜெய ஜெய தேவ ஹரே ||8||

ஓ தேவா, ஸ்ரீ ஜெயதேவாவால் இயற்றப்பட்ட இந்த வசீகரமும், பிரகாசமும், இன்னிசையுமான மங்கள ஆவாஹனம் (மங்களாசாசனம்) உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும். உன்னுடைய மகிமையான குணங்களைக் கேட்கும் மற்றும் சொல்லும் உனது பக்தர்களுக்கு அது பேரின்பத்தை அளிக்கட்டும். நீங்கள் வெற்றிபெறட்டும்! நீங்கள் வெற்றிபெறட்டும்!

பத்³மாபயோத⁴ரதடீபரிரம்ப⁴லக்³ன-காஶ்மீரமுத்³ரிதமுரோ மது⁴ஸூத³னஸ்ய ।
வ்யக்தானுராக³மிவ கே²லத³னங்க³கே²த-³ஸ்வேதா³ம்பு³பூரமனுபூரயது ப்ரியம் வ: ॥ 6 ॥

பத்மா-பயோதர-ததி, பரிரம்ப-லக்ன- காஷ்மேர
முத்ரிதம் உரோ மதுஸு…தனஸ்ய |
வ்யக்தானு ராகம் இவ, கேலட்-அனங்க-கேதா
ஸ்வேதாம்பு-புரம், அனுபுரயது ப்ரியம் வா….||9||

“ராதாவின் அரவணைப்பில் அவன் தங்கியிருக்கும்போது, ​​மதுசூதனனின் குங்குமப் பொட்டு அவனது இதயத்தில் ஆழமான அன்பு வெளிப்படுவதைப் போல வெளிப்பட்டது. அனுராகாவின் சிவப்புத் துளிகளின் வியர்வைத் துளிகளால் கறை படிந்திருக்கிறது (ஆர்வம்) மதுசூதனனின் பரந்த மார்பு, தனது காதலியுடன் இணைந்திருக்கும் போது, ​​உங்கள் அனைவரின் இதய விருப்பங்களையும் நிறைவேற்றட்டும்.

வஸன்தே வாஸன்தீகுஸுமஸுகுமாரைரவயவை-ர்ப்⁴ரமன்தீம் கான்தாரே ப³ஹுவிஹிதக்ருஷ்ணானுஸரணாம் ।
அமன்த³ம் கன்த³ர்பஜ்வரஜனிதசின்தாகுலதயா வலத்³பா³தா⁴ம் ராதா⁴ம் ஸரஸமித³முசே ஸஹசரீ ॥ 7 ॥

வஸந்தே வஸந்தி-குஸும-சுகுமாரைர் அவயவைர்
ப்ரமாந்தி காந்தரே பஹு-விஹித-கிருஷ்ணாநுசாரம் |
அமண்ட கந்தர்ப-ஜ்வர-ஜனித-சிந்தகுலதயா
வளட்-பஹா ராதா சரசம் இடம் உசே சஹா-காரி 

ஒருமுறை, அற்புதமான வசந்த காலத்தில், ராதிகா கிருஷ்ணனைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​அவள் ஒரு காட்டுத் தோப்பில் அவனைத் தேட ஆரம்பித்தாள். அவளது நேர்த்தியான, இளம் கால்கள், மத்தவட் மலர்களைப் போல மென்மையானவை, சோர்வடைந்தன, மேலும் மன்மதன் அவள் மனதை கவலையினால் மயக்கமடையச் செய்தாள். அப்போது அவளின் அந்தரங்க தோழி அன்புடன் பின்வருமாறு உரையாற்றினாள்.

॥ கீ³தம் 3 ॥

லலிதலவங்க³லதாபரிஶீலனகோமலமலயஸமீரே ।
மது⁴கரனிகரகரம்பி³தகோகிலகூஜிதகுஞ்ஜகுடீரே ॥
விஹரதி ஹரிரிஹ ஸரஸவஸன்தே ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி² விரஹிஜனஸ்ய து³ரன்தே ॥ 1 ॥

லலிதா-லவாக-லதா-பரிசிலனா-கோமலா-மலய-சாமிரே |
மதுகர-நிகர-கரம்பித-கோகில-குஜித-குஞ்ச-குயிரே ||1||

அவர் வந்து, மீண்டும் மீண்டும் மென்மையான, வசீகரமான படர்தாமரைகளை அணைத்துக்கொள்ளும் போது மலாயா தென்றல் மிகவும் மயக்குகிறது. குக்கூக்களின் இனிமையான குஹூ சத்தம் மற்றும் தேனீக்களின் ட்ரோன் ஆகியவை அங்கும் இங்கும் குதிக்கும்போது வனப் போவர் ஊடுருவுகிறது.

விஹரதி ஹரிரிஹ சரஸ-வசந்தே
நிருத்யதி யுவதி-ஜநேன ஸமம் சகீ, விரஹி-ஜனஸ்ய துரந்தே ராதே (விஹரதி ஹரிரிஹா) ||த்ருவபதா||

மேலும், வசந்தம் பூத்துக் குலுங்கும் போது, ​​அன்பின் (பக்தி) திருவிழாவில் மூழ்கியிருக்கும் போது, ​​ஹரி தனது கோபியர்களுடன் இந்தக் காட்டில் நடனமாடுகிறார்.

உன்மத³மத³னமனோரத²பதி²கவதூ⁴ஜனஜனிதவிலாபே ।
அலிகுலஸங்குலகுஸுமஸமூஹனிராகுலப³குலகலாபே ॥ 2 ॥

உன்மத-மதன-மனோரத-பதிக-வது-ஜன-ஜன-ஜனித-விலாபே |
அலி-குல-சகுல-குசும-சமுஹா-நிரகுல-பகுல-கலாபே, ராதே விஹரதி ஹரிரிஹா ||2||

மடிலடி மரங்கள் பூக்களால் மூடப்பட்டிருக்கும். அவர்களின் கிளைகளில் காலி இடம் இல்லை. பம்பல்பீக்களின் எண்ணற்ற குழுக்கள் பகுலா பூக்களின் கொத்துகளில் முனகுகின்றன. மன்மதனின் அம்புகள் கோபியர்களை காயப்படுத்தியது, அங்கே கிருஷ்ணர் மற்ற கோபியர்களுடன் காதலில் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்.

ம்ருக³மத³ஸௌரப⁴ரப⁴ஸவஶம்வத³னவத³லமாலதமாலே ।
யுவஜனஹ்ருத³யவிதா³ரணமனஸிஜனக²ருசிகிம்ஶுகஜாலே ॥ 3 ॥

ம்ரிக-மட-சௌரப, ரபஸ-வஷவத-நவ-டல-மலா-தமலே |
யுவ-ஜன-ஹ்ருதய-விதாரண மனஸிஜா, நக-ருசி-கிஞ்சுக-ஜலே, ராதே விஹரதி ஹரிரிஹா ||3||

புதிய இலைகளால் அலங்கரிக்கப்பட்ட தமலா மரங்கள் கஸ்தூரி போன்ற நறுமணத்தை எல்லா திசைகளிலும் பரப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றன. சகி, பார்! இந்த பளபளப்பான பல்ட்சா மலர்கள் காமதேவரின் விரல் நகங்களை ஒத்திருக்கும். காதல் காதல் மன்னன் இளமைத் தம்பதிகளின் மார்பில் கிழித்து விட்டான் போலும் .

மத³னமஹீபதிகனகத³ண்ட³ருசிகேஶரகுஸுமவிகாஸே ।
மிலிதஶிலீமுக²பாடலிபடலக்ருதஸ்மரதூணவிலாஸே ॥ 4 ॥

மதன-மஹிபதி-கனக-தண்ட-ருசி, கேசர-குசும-விகாஸே |
மிலித-ஷிலி-முக-பாடலா-பாதாலா,க்ருத-ஸ்மர-துன-விலாஸே, ராதே விஹரதி ஹரிரிஹா ||4||

மலர்ந்த ndga-kesara மலர்கள் மன்மத மன்னனின் தங்கக் கம்பிகளாகத் தோன்றுகின்றன, மேலும் பம்பல்பீகளால் சூழப்பட்ட பிடிதலி மலர்களின் கொத்துகள் அவனுடைய நடுக்கமாகத் தோன்றும்.

விக³லிதலஜ்ஜிதஜக³த³வலோகனதருணகருணக்ருதஹாஸே ।
விரஹினிக்ருன்தனகுன்தமுகா²க்ருதிகேதகத³ன்துரிதாஶே ॥ 5 ॥

விகலித-லஜ்ஜித-ஜகத்-அவலோகன-தருண-கருண-க்ருத-ஹஸே |
விரஹி-நிக்ருந்தன-குந்த-முகக்ருதி, கேதகி-தந்துரி தஸே, ராதே விஹரதி ஹரிரிஹா ||5||

வசந்தத்தின் வலிமைமிக்க செல்வாக்கால் உலகம் முழுவதும் வெட்கக்கேடானது போல் தெரிகிறது. இதைப் பார்த்து கருணை மரங்கள் பூத்து குலுங்குகின்றன. பார்! தனிமையில் இருக்கும் காதலர்களின் இதயங்களைத் துளைக்கும் ஈட்டிகள் போன்ற வடிவில், திருக்குறள் பூக்கள் எல்லாத் திசைகளிலும் பிரகாசமாக மலர்கின்றன, மேலும் அவர்களுடன் ஒன்றிணைவதில் திசைகளும் மகிழ்ச்சியடைகின்றன.

மாத⁴விகாபரிமலலலிதே நவமாலிகஜாதிஸுக³ன்தௌ⁴ ।
முனிமனஸாமபி மோஹனகாரிணி தருணாகாரணப³ன்தௌ⁴ ॥ 6 ॥

மாதவிகா-பரிமலா-லலிதே நவ-மாலதி-ஜாதி-சுகந்தௌ |
முனி-மானஸம் அபி மோஹன-காரீ தருவாகரண-பந்தௌ, ராதே விஹரதி ஹரிரிஹா ||6||

இளவேனிற் பூக்களின் தேனும், மல்லிகைப் பூக்களின் நறுமணமும் மனதை மயக்கும். பெரிய முனிவர்களின் மனங்கள் கூட வசந்த காலத்தில் கிளர்ந்தெழுகின்றன, அவர்கள் திடீரென்று குழப்பமடைகிறார்கள். வசந்தம் இளைஞர்களின் தன்னலமற்ற நண்பன்

ஸ்பு²ரத³திமுக்தலதாபரிரம்ப⁴ணமுகுலிதபுலகிதசூதே ।
ப்³ருன்தா³வனவிபினே பரிஸரபரிக³தயமுனாஜலபூதே ॥ 7 ॥

ஸ்பூரததி -முக்த-லதா-பரி ரம்பனா, முகுலித-புலகித-சூடே |
வ்ருந்தாவன-விபினே பரிசர-பரிகத-யமுனா-ஜல-பூதே, ராதே விஹரதி ஹரிரிஹா ||7||


பிருந்தாவனத்தின் வனத் தோப்புகளில் உள்ள மா மரங்கள் , அமைதியற்ற மத்தவி படர்தாமரையின் அணைப்பினால் பரவசமடைந்ததால், புதிதாக துளிர்விட்ட மொட்டுகளால் மூடப்பட்டிருக்கும் . அந்த வனத் தோப்புகளை ஒட்டி ஓடும் யமுனையின் தூய நீரில் கோபியர்களுடன் அன்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீ ஹரி.

ஶ்ரீஜயதே³வப⁴ணிதமித³முத³யதி ஹரிசரணஸ்ம்ருதிஸாரம் ।
ஸரஸவஸன்தஸமயவனவர்ணனமனுக³தமத³னவிகாரம் ॥ 8 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் உதயதி, ஹரி-சரா-ஸ்ம்ருதி-சரம் |
சரஸ-வசந்த-சமய-வன-வாரணம், அனுகத-மதன-விகாரம், ராதே விஹரதி ஹரிரிஹ சரஸ.. ||8||

இந்த மங்களகரமான, ரசம் நிறைந்த பாடல் ஸ்ரீ ஜெயதேவா மூலம் மிகச்சரியாக வெளிப்பட்டது. வசந்த காலத்தில் காட்டின் சித்தரிப்பு ராதா கிருஷ்ணனைப் பிரிந்த கவலையில் மூழ்கியிருக்கும் போது அவளது சிற்றின்ப மாறுபாடுகளால் நிரப்பப்படுகிறது. பேரார்வத்தின் மாற்றங்களோடு பின்னப்பட்ட, வசந்த காலம் ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களின் நினைவை எழுப்புகிறது.

த³ரவித³லிதமல்லீவல்லிசஞ்சத்பராக-³ப்ரகடிதபடவாஸைர்வாஸயன் கானநானி ।
இஹ ஹி த³ஹதி சேத: கேதகீக³ன்த⁴ப³ன்து⁴: ப்ரஸரத³ஸமபா³ணப்ராணவத்³க³ன்த⁴வாஹ: ॥ 8 ॥

தாராவி-தலிதா-மல்லி, வல்லி-சம்சத்-பரகா
பிரகதித்த-பட-வசை:, வசயன் கானா…நானி |
இஹ ஹி, தஹதி சேத:, கேதகி-கந்த-பந்து:…
ப்ரசராத் அஸம-பான ப்ராணவத்-கந்தவாஹ:||9||

“புதிதாக மலர்ந்த மல்லிகைப்பூக்களில் இருந்து தளர்வாக அசைக்கப்படும் மெல்லிய மகரந்தத்தால் காற்று காடுகளை நறுமணமாக்குகிறது, அது அன்பின் நறுமண மூச்சை வீசுகிறது, அது தொடும் ஒவ்வொரு இதயத்தையும் சித்திரவதை செய்கிறது.”

உன்மீலன்மது⁴க³ன்த⁴லுப்³த⁴மது⁴பவ்யாதூ⁴தசூதாங்குர-க்ரீட³த்கோகிலகாகலீகலகலைருத்³கீ³ர்ணகர்ணஜ்வரா: ।
நீயன்தே பதி²கை: கத²ங்கத²மபி த்⁴யானாவதா⁴னக்ஷண-ப்ராப்தப்ராணஸமாஸமாக³மரஸோல்லாஸைரமீ வாஸரா: ॥ 9 ॥

உன்மேலன், மது-கந்த-லுப்த-மதுபா, வ்யதுதா-சூடாங்குர
கிரிடா * கோகில-காகலி-கலகலை:, உத்கேரன-கர்ண-ஜ்வர: |
நியந்தே பதிகை:, கதம் கதம் அபி, த்யானா….வதானா
க்ஷண ப்ராப்த-ப்ராண, ஸமா சமகம, ரஸோ ல்லசை:, அமி வஸர:||10||

“தேனீக்கள் மொட்டுகள் திறக்கும் தேன் வாசனையைத் தேடும் போது மாம்பழத் தளிர்களில் குக்கூவின் இனச்சேர்க்கையின் சப்தங்கள் தனிமையில் இருக்கும் பயணிகளின் காதுகளில் காய்ச்சலை எழுப்புகின்றன, எப்படியோ அவர்கள் தங்கள் தியானத்தில் பரமாத்மாவுடன் தெய்வீக லீலைகளை நினைத்து க்ஷண பிராப்த பிராணனைப் போல உயிர்வாழ்கிறார்கள்.”

அனேகனாரீபரிரம்ப⁴ஸம்ப்⁴ரம-ஸ்பு²ரன்மனோஹாரிவிலாஸலாலஸம் ।
முராரிமாராது³பத³ர்ஶயன்த்யஸௌ ஸகீ² ஸமக்ஷம் புனராஹ ராதி⁴காம் ॥ 1௦ ॥

அநேக-நரி……பரிரம்ப-சம்பிரம-
ஸ்பூரன்-மனோஹரி *விலாச-லாலசம்…. |
முரீம் …ärä…த், உபதர்ஷ யாந்த்யாஸௌ
சகி ஸமக்ஷம், புனராஹ… ராதிகாம்….

அப்போது ராதிகாவின் சாகி கிருஷ்ணாவை நிபுணத்துவத்துடன் தேடி அவர் அருகில் இருப்பதைக் கண்டார். அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்கும் அழகான கோபியர்களுடன் அவர் பொழுது போக்குகளில் மூழ்கியிருந்தார். கோபியர்கள் கிருஷ்ணரை அரவணைக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியபோது, ​​கிருஷ்ணரின் மனதில் சந்தோசமான, உணர்வுபூர்வமான பொழுதுபோக்கிற்கான தேவை திடீரென எழுந்தது. இந்தக் காட்சியை ராதாவிடம் சுட்டிக் காட்டி, சாகி மீண்டும் அவளிடம் பேசினாள்

॥ கீ³தம் 4 ॥

சன்த³னசர்சிதனீலகலேப³ரபீதவஸனவனமாலீ ।
கேலிசலன்மணிகுண்ட³லமண்டி³தக³ண்ட³யுக³ஸ்மிதஶாலீ ॥
ஹரிரிஹமுக்³த⁴வதூ⁴னிகரே விலாஸினி விலஸதி கேலிபரே ॥ 1 ॥

சந்தன-சர்சித-நிலா-கலேவர-பிட-வசன-வன-மாலி |
கேலி-காலன்-மணி-குண்டல-மண்டிதா, கந்த-யுக-ஸ்மிதா-ஷாலி ||1||

ஹரிரிஹ முக்த-வது-நிகரே, விலாசினி விலாசதி கேலி-பரே ||த்ருவபதா||

“ஓ விளையாட்டுத்தனமான ராதா, பார்! பீதாம்பரம் (மஞ்சள் துணி) மற்றும் வனமாலை (காட்டுப் பூக்களின் மாலை) அணிந்து, சந்தனப் பூச்சு (சந்தனம்) தனது நீல கைகால்களில் பூசப்பட்டு, இந்த விருந்தாவன வனத்தில் வசீகரிக்கப்பட்ட கோபியர்களுடன் ஹரி மிகுந்த மகிழ்ச்சியை உணர்கிறான். விளையாட்டில் தொங்கும் காதணிகள், சிரிக்கும் கன்னங்களை அலங்கரிக்கின்றன. அவரது கன்னங்களின் அழகு வியக்க வைக்கிறது மற்றும் அவரது விளையாட்டு சிரிப்பின் தேனுடன் அவரது முகம் அற்புதமான இனிமையைக் காட்டுகிறது.

பீனபயோத⁴ரபா⁴ரப⁴ரேண ஹரிம் பரிரம்ய ஸராக³ம் ।
கோ³பவதூ⁴ரனுகா³யதி காசிது³த³ஞ்சிதபஞ்சமராக³ம் ॥ 2 ॥

பின-பயோதர-பார-பரேண,. ஹரி பரிரப்ய சரகம் |
கோப-வது ரனு காயதி காசித், உதஞ்சித-பஞ்சம-ராகம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||2| |

கோபியர்களில் ஒருவர் தீவிர பற்றுதலுடன் கிருஷ்ணரை உறுதியாகத் தழுவிக் கொண்டிருக்கிறார். கிருஷ்ணனின் மார்பில் அவளது கனமான மார்பகங்களை அழுத்தி, ஐந்தாவது இசை முறையில் அவனுடன் காதல் மெல்லிசையைப் பாடத் தொடங்கினாள்.

காபி விலாஸவிலோலவிலோசனகே²லனஜனிதமனோஜம் ।
த்⁴யாயதி முக்³த⁴வதூ⁴ரதி⁴கம் மது⁴ஸூத³னவத³னஸரோஜம் ॥ 3 ॥

கபி விலாஸ-விலோலா-விலோசனா, கேலன-ஜனதா-மனோஜம் |
த்யாயதி முக்த-வது மதுசூதன-வதன-சரோஜம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||3||

மற்றொரு கோபி, அவனது அலாதியான நடுங்கும் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, மதுசூதனனின் தாமரை முகத்தில் தியானம் செய்கிறான். அவனது அமைதியற்ற கண்களின் காதல் பக்கவாட்டுப் பார்வைகளால் உணர்ச்சிமிக்க இளம் பெண்களின் இதயங்களில் அவன் காமத்தைத் தூண்டுகிறான், அவள் அவனது தாமரை முகத்தின் தேனைக் குடிக்க பேராசை கொண்டாள்.

காபி கபோலதலே மிலிதா லபிதும் கிமபி ஶ்ருதிமூலே ।
சாரு சுசும்ப³ நிதம்ப³வதீ த³யிதம் புலகைரனுகூலே ॥ 4 ॥

கபி கபோல-தலே மிலிதா லபிதும் கிமபி ஸ்ருதி-மூலே |
சாரு சுச்சும்பா நிதம்ப வதி, தயிதம் புலகைர் அணுகுலே (ராதே, ஹரிரிஹ முகதா-வது-நிகரே) ||4||

ஒரு வளைந்த கோபி தன் முகத்தை கிருஷ்ணனின் கன்னத்தில் சாய்த்து, அவனது காதில் ரகசியத்தை கிசுகிசுக்கிறாள். கிருஷ்ணர்
அவளது அன்பின் நோக்கத்தைப் புரிந்துகொண்டபோது , ​​அவர் பதிலடி கொடுத்தார். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கோபி, அவளது மிகவும் நேசத்துக்குரிய ஆசையை நிறைவேற்றிக் கொண்டான். மிகுந்த மகிழ்ச்சியுடன், அவள் அவனது கன்னத்தில் முத்தமிட ஆரம்பித்தாள்-

கேலிகலாகுதுகேன ச காசித³மும் யமுனாஜலகூலே ।
மஞ்ஜுலவஞ்ஜுலகுஞ்ஜக³தம் விசகர்ஷ கரேண து³கூலே ॥ 5 ॥

கேலி-கல-குடுகேன ச கச்சித், அமும் யமுனா-ஜல-குலே |
மஞ்ஜுல-வஞ்ஜுல-குஞ்ச-கதம், விச்சகர்ஷ கரேண துகுலே (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||5||

காதல் கலையில் ஆர்வமுள்ள மற்றொரு கோபி, யமுனை நதிக்கரையில் ஒரு அழகான கரும்பு தோப்பில் ஒதுங்கிய இடத்தைக் கண்டுபிடித்தார். அமானுஷ்ய கலைகளின் மீதான மகிழ்ச்சியான மோகத்தால் தூண்டப்பட்ட அவள், கிருஷ்ணரின் பீதாம்பரத்தை இரண்டு கைகளாலும் இழுத்து இழுத்துச் சென்றாள்.

கரதலதாலதரலவலயாவலிகலிதகலஸ்வனவம்ஶே ।
ராஸரஸே ஸஹன்ருத்யபரா ஹரிணா யுவதி: ப்ரஶஶம்ஸே ॥ 6 ॥

கர-தல-தல-தரால-வலய வலி, கலித-கலஸ்வன-வம்ஷே |
ரஸ-ரஸே ஸஹ-ந்ருத்ய பரா, ஹரிண-யுவதி-ப்ரஶம்ஸே (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே)||6||


ஹரி ஒரு கோபி குடிபோதையில் உள்ளங்கைகளை அடித்து நடனமாடுவதைப் புகழ்ந்தார், அவரது தெய்வீக புல்லாங்குழலின் அற்புதமான மெல்லிசையைக் கேட்டு , அவளது வளையல்களின் ஒலியைக் கேட்டதும் அன்பின் சடங்கில் .

ஶ்லிஷ்யதி காமபி சும்ப³தி காமபி காமபி ரமயதி ராமாம் ।
பஶ்யதி ஸஸ்மிதசாருபராமபராமனுக³ச்ச²தி வாமாம் ॥ 7 ॥

ஶ்லிஷ்யதி கமாபி சும்பதி கம் அபி, கம் அபி ரமயதி ராமம் |
பஷ்யதி ச-ஸ்மித-சாரு-தாரம், அபரம் அனுகச்சதி வாமம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே) ||7||

கிருஷ்ணர் தனது அன்புக்குரியவர்களில் ஒருவரைத் தழுவிக் கொண்டிருக்கிறார்; அவர் இன்னொருவரை முத்தமிடுகிறார், வேறொரு இடத்தில் அவர் மற்றொருவருடன் உணர்ச்சிப்பூர்வமான அரவணைப்பை அனுபவிக்கிறார். வேறொரு இடத்தில் அவர் மற்றொரு காதலனின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்க்கிறார், அதே நேரத்தில் அவளது இனிமையான புன்னகையின் அமிர்தத்தைப் பாராட்டுகிறார். வேறொரு இடத்தில் அவர் ஒரு விருப்பமுள்ள கோபியைப் பிரதிபலிக்கிறார்.

ஶ்ரீஜயதே³வகவேரித³மத்³பு⁴தகேஶவகேலிரஹஸ்யம் ।
வ்ருன்தா³வனவிபினே லலிதம் விதனோது ஶுபா⁴னி யஶஸ்யம் ॥ 8 ॥

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அத்பூதம், கேசவ-கேலி-ரஹஸ்யம் |
விருந்தாவன-விபினே லலிதா விடனோது சுபானி யசஸ்யம் (ராதே, ஹரிரிஹ முக்த-வது-நிகரே, வில்சனி…)||8||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்த மங்களகரமான, மகிழ்ச்சிகரமான மற்றும் பிரமிக்க வைக்கும் பாடல் அனைவருக்கும் நற்பெயரை அதிகரிக்கட்டும். இந்தப் பாடல் அனைத்து நற்குணங்களையும் அருளுகிறது. கிருஷ்ணன் புலம்பும்போது நிகழ்த்திய சிற்றின்ப விளையாட்டுகளின் அற்புதமான மர்மத்தின் மீது ராதாவின் பார்வையை இது விவரிக்கிறது.

விஶ்வேஷாமனுரஞ்ஜனேன ஜனயன்னானந்த³மின்தீ³வர-ஶ்ரேணீஶ்யாமலகோமலைருபனயன்னங்கை³ரனங்கோ³த்ஸவம் ।
ஸ்வச்ச²ன்த³ம் வ்ரஜஸுன்த³ரீபி⁴ரபி⁴த: ப்ரத்யங்க³மாலிங்கித: ஶ்ருங்கா³ர: ஸகி² மூர்திமானிவ மதௌ⁴ முக்³தோ⁴ ஹரி: க்ரீட³தி ॥ 11 ॥

விஸ்வேஷம்* அனு ரஞ்சனேன ஜனயன், ஆனந்தம் இந்தேவர-
ஷ்ரேனே- ஷ்யாமலா-கோமளை:, உபநயன்… அங்கை: அனகோத்ஸவம் |
ஸ்வச்சந்தம் வ்ரஜ-சுந்தரி-பீர- பீட:, ப்ரத்ய-அங்க மா…லிங்கிதா:
ஶ்ரீங்கார: சகி மூர்த்திமான், இவ மாதௌ முகதோ, ஹரி: கிருதாதி… ||9||

“மக்களிடையே உலகில் பேரின்பத்தை ஏற்படுத்த, லக்ஷ்மி பதி (இந்திவரம்) தனது தெய்வீக நுரையுடன் (ஷ்யாமளா-கோமள ரூப) பிராணய லீலாவைத் தொடங்குகிறார். கிருஷ்ணர் மன்மதன் உருவமாகி, அவர் காதல் வசந்த கால சந்திப்புகளின் ரசத்தால் மகிழ்ந்தார். நீல தாமரை மலரின் அழகை மிஞ்சும் மென்மையான, நீல நிற உறுப்புகளுடன், அவர் மன்மதனின் பெரிய திருவிழாவைத் தொடங்குகிறார். தொடர்ந்து அதிகரித்து வரும் பற்றுதலுடன், கோபியர்களின் அலாதியான பேரார்வத்தை அவர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக திருப்திப்படுத்துகிறார். ஆயினும்கூட, அன்பின் பேரானந்தத்தில் ஆதரவற்ற முறையில் தொலைந்து போன வ்ரஜாவின் அழகிய கோபிகைகள், அவனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சுதந்திரமாகத் தழுவிக்கொண்டனர்.

அத்³யோத்ஸங்க³வஸத்³பு⁴ஜங்க³கவலக்லேஶாதி³வேஶாசலம் ப்ராலேயப்லவனேச்ச²யானுஸரதி ஶ்ரீக²ண்ட³ஶைலானில: ।கிம் ச ஸ்னிக்³த⁴ரஸாலமௌலிமுகுலான்யாலோக்ய ஹர்ஷோத³யா-து³ன்மீலன்தி குஹூ: குஹூரிதி கலோத்தாலா: பிகானாம் கி³ர: ॥ 12 ॥
அத்யோத் சங்க-வஸத்-புஜங்கா, கவாலா*க்லேஷாதி வேஷாசலம்
ப்ரலேய-ப்லவ நேச்சய, அநு சரதி, ஷ்ரே-கண்ட-ஷைல நிலா: |
கிஞ்ச ஸ்நிக்த-ரஸல-மௌலி , முகுலன் யா லோக்யா, ஹர்ஷோ தயாத்
உன்மிலந்தி* குஹு குஹுர் இதி, கலு தால:, பிகானாம் கிரா: ….||10||

சந்தன மலையிலிருந்து காற்று இப்போது இமயமலைச் சிகரங்களை நோக்கி வீசுகிறது, பல வாரங்களுக்குப் பிறகு பனியில் குதிக்க ஏங்குகிறது. வழுவழுப்பான மாம்பழக் கிளைகளின் நுனியில் இருக்கும் மொட்டுகளைப் பார்க்கும்போது குக்கூக்களின் இனிமையான குரல்கள் மகிழ்ச்சியான ஒலியை எழுப்புகின்றன.

ராஸோல்லாஸப⁴ரேணவிப்⁴ரமப்⁴ருதாமாபீ⁴ரவாமப்⁴ருவா-மப்⁴யர்ணம் பரிரம்யனிர்ப⁴ரமுர: ப்ரேமான்த⁴யா ராத⁴யா ।
ஸாது⁴ த்வத்³வத³னம் ஸுதா⁴மயமிதி வ்யாஹ்ருத்ய கீ³தஸ்துதி-வ்யாஜாது³த்³ப⁴டசும்பி³தஸ்மிதமனோஹரீ ஹரி: பாது வ: ॥ 13 ॥

räso lläsa-bharena ,vibrama-bhutäm, äbhira väma-bruväm
Abhyarnam, Parirabhya nirbhara mura:, premändhayä Rädhayä |
ஸாது த்வத்-வதனம், ஸுதா-மயம் இதி, வ்யஹ்ருத்ய கீதா-ஸ்துதி-
வ்யஜாத்…, உத்பாத-சும்பிதா, ஸ்மிதா-மனோஹரி, ஹரி: பத்து வ: ||11||

ராதா கிருஷ்ணன் மீதான காதலால் கண்மூடித்தனமாக மயக்கமடைந்தாள். இந்த நிலையில் அவள் முற்றிலும் வெட்கமற்றவளாகிவிட்டாள். ராச-லீலாவில் அன்பால் மூழ்கியிருந்த மற்ற பிரகாசமான கோபியர்களின் கவர்ச்சிகரமான கண்களுக்கு நேராக, ராதை கிருஷ்ணரின் மார்பில் இறுக்கமாகத் தழுவினார். அவரைப் புகழ்ந்து பாடி, “ஓ என் அன்பே, உன் தாமரை முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது. ஏராளமான அமிர்தத்தின் ஒப்பற்ற சுரங்கம், ”என்று அவள் அவனை ஒரு மகிழ்ச்சியான முத்தத்தில் ஈடுபடுத்தினாள். அவளது காதலின் தீவிரத்தைக் கண்ட கிருஷ்ணன், தன் இதயத்தில் இருந்த ரம்சத்தை ஒரு வசீகரமான சிரிப்புடன் வெளிப்படுத்தினான். ஓ ஸ்ரீ கிருஷ்ணா, நீ அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை வழங்குவாயாக.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ஸமோத-தாமோதரஹ் நம, ப்ரதம சர்க:

॥ இதி ஶ்ரீகீ³தகோ³வின்தே³ ஸாமோத³தா³மோத³ரோ நாம ப்ரத²ம: ஸர்க:³ ॥

கீ³தகோ³வின்த³ம் த்³விதீய: ஸர்க:³ – அக்லேஶ கேஶவ:

—————————-

விஹரதி வனே ராதா சதாரண-ப்ராணயே ஹரௌ
விகலித-நிஜோத் கர்ஷத் ஏர்ஷ-வசேன கத’ந்யதா |
க்வசித் அபி லதா-குஞ்ஜே குஞ்சன்-மது-வ்ரத-மௌலி
முகர-சிகரே லினா தினாப்யுவாச ரஹ சகீம் ||

பிருந்தாவனத்தின் தோப்புகளில் கிருஷ்ணர் அனைத்து கோபியர்களுடனும் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ராதை, தன் மேன்மையை அவர் அங்கீகரிக்காததால் கோபமடைந்தாள். அவள் உடனடியாக காட்டின் மற்றொரு பகுதிக்கு புறப்பட்டு, பம்பல்பீஸ் ட்ரோன் ஒலித்த ஒரு நிழலான வில்லுக்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டாள். பரிதாபமாக உணர்ந்த அவர், தனது நெருங்கிய பெண் தோழரிடம் ரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

சஞ்சரத்-ஆதார-சுதா-மதுர-த்வனி-முகரித-மோகன-வம்சம் |
சலித-டிஜி-அஞ்சல-சஞ்சல-மௌலி-கபோல-விலோல-வதசம் |
ராஸே ஹரிம் இஹ விஹித-விலாசம்
ஸ்மரதி மனோ மம க்ருத-பரிஹாசம் ||த்ருவ-பதா||1||

” அவரது வசீகரிக்கும் உதடுகளில் இருந்து இனிமையான குறிப்புகள் ஒரு இனிமையான வெளிப்பாடான மெல்லிசையை உருவாக்குகின்றன. அவரது அமைதியற்ற கண்கள் பார்க்கின்றன, அவரது தலை அசைகிறது மற்றும் அவரது காதணிகள் அவரது கன்னங்களில் விளையாடுகின்றன. ஹரியின் கவர்ச்சியான நீல நிறம், அவரது சிரிப்பு மற்றும் அவரது நகைச்சுவையான நடத்தை எனக்கு மீண்டும் மீண்டும் நினைவிருக்கிறது.

சந்திரக-சாரு-மயூர-சிகண்டக-மண்டல-வலயிட்ட-கேசம் |
ப்ரசுர-புரந்தர-தனுர்-அனுரஞ்சித-மேதுர-முதிரா-சுவேஷாம் (ரஸே ஹரிம் இஹ) ||2||

“அவரது தலைமுடி அழகான மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, நிலவொளியால் அவரது தலைமுடியை மகுடமாக்குகிறது. அவரது பளபளப்பு புதிய மழைமேகங்கள் மற்றும் புத்திசாலித்தனமான வானவில் போன்ற வண்ணமயமான மெல்லிய துணி அவரது மென்மையான உடலை அலங்கரிக்கிறது.

கோப-கதம்ப-நிதம்பவதி-முக-சும்பன-லம்பித-லோபம் |
பந்துஜிவ-மதுர்-ஆதார-பல்லவ, கலிதா தரஸ் -ஸ்மிதா-ஷோபம் (ரஸே ஹரிம் இஹ) ||3||

மன்மத உற்சவத்தில் கோபியர்களின் முகத்தில் முத்தமிட வேண்டும் என்ற ஆசையில் முகத்தைத் தாழ்த்திக் கொள்கிறார். அவரது மென்மையான உதடுகள் ஒரு கருஞ்சிவப்பு மல்லோ பூவின் மொட்டு போன்ற ஒரு மயக்கும் மென்மையான ரூபி-சிவப்பு நிறம். அவரது வசீகரிக்கும் புன்னகையின் முன்னோடியில்லாத பிரகாசம் அவரது அழகான முகத்தில் பரவுகிறது.

விபுல-புலக-புஜ-பல்லவ-வலயிதா, வல்லவ-யுவதி-ஸஹஸ்ரம் |
கர-சரணோ ராசி மணி-கன-பூஷண, கிரண-விபின்ன-தமிஷ்ரம்(ரஸே ஹரிம் இஹ) ||4||

மலர் இதழ்கள் போல மென்மையான, நீண்ட கரங்களால் ஆயிரமாயிரம் அழகான கோபிகைகளை ஆழமாக அணைத்துக் கொள்ளும்போது அவனது முழு உடலும் திகிலுடன் சிலிர்க்கிறது. அவனது கை, கால், மார்பில் உள்ள ஆபரணங்களில் இருந்து வெளிப்படும் அழகுக் கதிர்களால் எல்லா இருளும் விலகும்.

ஜலத-படலா-சல-திந்து-வினிந்தகா, சந்தன-பிந்து-லலாதம் |
பின-பயோதர-பரிசர-மர்தனா, நிர்தயா-ஹ்ருதய-கவதம் (ரஸே ஹரிம் இஹ) ||5||

அவரது நெற்றியில் வசீகர திலகம் உள்ளது. அதன் விவரிக்க முடியாத பளபளப்பானது, பல புதிய மழை மேகங்களின் மத்தியில் அமைதியற்ற நிலவின் அபரிமிதமான அழகை தோற்கடிக்கிறது, கோபியர்கள் கொடூரமான இதயம் கொண்ட கிருஷ்ணரால் எப்படி நசுக்கப்படுவார்கள் என்பதை நான் நினைவில் கொள்கிறேன்.

மணி-மய-மகர-மனோஹர-குண்டல, மண்டித-கந்த முதாரம் |
பிதா-வசனம் அனுகத-முனி-மனுஜா, ஸுராஸுர-வர-பரிவாரம் (ரஸே ஹரிம் இஹ)||6| |

அவரது கன்னங்களின் அழகை அவரது மயக்கும், நகைகள், மீன் (மகர) வடிவ காதணிகள் மேம்படுத்துகின்றன. அவர் ஒரு ஹீரோவின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார் மற்றும் அவரது பக்தர்களின் (காதலர்கள்) இதயங்களின் விருப்பங்களை தாராளமாக நிறைவேற்றுகிறார். பீதாம்பர உடையில், கிருஷ்ணர் தனது இனிமையைப் பரப்பி, தேவர்கள், முனிவர்கள் மற்றும் அசுரர்கள் (அசுரர்கள்) உட்பட அவரைப் பின்பற்றுபவர்களில் சிறந்தவர்களைக் கவர்ந்தார்.

விஷத-கதம்ப-தலே மிலிதம், கலி-கலுஷ-பய சமயந்தம் |
மாம் அபி கிம் அபி தரங்க-அனகா, த்ருஷா வபுஷ ராமயந்தம்(ரஸே ஹரிம் இஹ) ||7||

ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து என் இதயம் மேலும் கலங்குகிறது. ஒரு அகன்ற கடம்ப மரத்தின் அடியில் பூத்து குலுங்கியதும், எதிர்பார்ப்புடன் சுற்றிப் பார்த்துக் கொண்டே எனக்காகக் காத்திருக்கிறார். பல புத்திசாலித்தனமான மற்றும் முகஸ்துதியான வார்த்தைகளால் என்னை ஆறுதல்படுத்துவதன் மூலம், பிரிவினை பற்றிய எனது பயத்தை அவர் முற்றிலும் அகற்றுகிறார். அவர் தனது அன்பான பார்வைகளால் விரைவாக என்னை மகிழ்விக்கிறார்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் அதி சுந்தர, மோகன-மது-ரிபு-ரூபம் |
ஹரி-சரணம்-ஸ்மரணம் ப்ரதி ஸம்ப்ரதி, புண்யாவதம் அனுரூபம் (ரஸே ஹரிம் இஹ விஹித-விலாசம்..) ||8||

ஸ்ரீ ஜெயதேவா இந்த கவிதையை பகவானின் சேவையில் அர்ப்பணித்த அந்த அதிர்ஷ்டசாலிகளுக்காக வழங்கியுள்ளார். இது கிருஷ்ணரின் வடிவத்தின் மயக்கும் அழகை விவரிக்கிறது. இது ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களின் நினைவின் உருவகமாகும், மேலும் இது தூய பக்தியின் முதன்மையான ரசத்தின் முழு அடைக்கலத்தைப் பெற்ற பிறகு அதை அனுபவிக்க வேண்டும்.

———–

கணயாதி குண-கிர…மம், ப்ரம்மம்* ப்ரமாத் அபி நேஹதே
வஹதி ச பரி தோஷம், தோஷம் விமுஞ்சதி துரத:… |
யுவதிஷு…, வலத்-த்ரிஷ்ணே… கிருஷ்ணே… விஹாரிணி மா வினா…
புனர் அபி, மனோ வாமம், காமம் கரோதி கரோமி கிம்… ||9||

“சகி, கிருஷ்ணர் என்னைக் கைவிட்டுவிட்டு இப்போது மற்ற கோபியர்களுடன் சென்றுவிட்டார். அவர் மீது என் அன்பை வெளிப்படுத்துவது வீண் என்று எனக்குத் தெரியும். இன்னும், நான் என்ன செய்ய வேண்டும்? அவர் மீது எனக்குள்ள பற்று எந்தச் சூழலிலும் நீங்காத அளவுக்கு சக்தி வாய்ந்தது. நான் அவருடைய அற்புதமான குணங்களை எண்ணிக்கொண்டே செல்கிறேன். நான் என் மேன்மையை உணரும்போது, ​​நான் பரவசத்தால் வெறித்தனமாகி விடுகிறேன். தவறுதலாகக் கூட நான் அவனிடம் கோபப்பட முடியாது; அவருடைய தவறுகளை நான் கவனிக்காமல் விடும்போது நான் திருப்தி அடைகிறேன். ஒவ்வொரு கணமும் அவருக்காக நான் ஏங்குகிறேன். சகி, என்னால் அவரை மறக்க முடியாது. என் இதயம் அவனை மட்டுமே விரும்புகிறது”

நிப்ருத-நிகுஞ்ச-க்ருஹம் கதயா, நிசி ரஹஸி நீலிய வசந்தம் |
சகித-விலோகித-ஸகல-திஷா, ரதி-ரபஸ-பரேண ஹஸந்தம், கிருஷ்ணம் ||1||

ஒருமுறை, நாங்கள் புத்திசாலித்தனமாக குறிப்புகள் மற்றும் சிக்னல்கள் மூலம் ஏற்பாடு செய்த திட்டத்தின்படி அவர் இரவில் தனிமைப்படுத்தப்பட்ட வன வில்வரிடம் சென்றார். குறும்புத்தனமான மனநிலையில், அவரைச் சந்திக்கும் என் ஆர்வத்தையும், அவர் இல்லாத நேரத்தில் என் வேதனையையும் கவனிப்பதற்காக அவர் காட்டின் அடர்ந்த இலைகளில் தன்னை மறைத்துக்கொண்டார். சோர்வு, பயம் நிறைந்த கண்களுடன், கவலையில் மூழ்கி, ‘அட, எப்போ வருவார்?’ அப்போது அவர் தனது காமச் சிரிப்பின் அமிர்தத்தால் என்னை மகிழ்வித்தார்.

சகி ஹே கேசி-மதன முதாரம்
ராமாய மாயா சஹ மதன-மனோரத-பவிதய ச-விகாரம் (கிருஷ்ணம், சகி அவர்)||துருவபதா||

காமதேவரின் எரியும் வெப்பத்தைத் தணிக்கும் விஷயத்தில் கேசி-மதன கிருஷ்ணருக்கு ஒருபோதும் தாராள மனப்பான்மை குறையாது. இன்னும் சொல்லப்போனால், என் மீதுள்ள பற்றுதலால் அவன் மனமும் கலங்குகிறது. என் உணர்வுகள் அவனால் அலங்கரிக்கப்பட்டுள்ளன; அவருடன் இணைய வேண்டும் என்ற எனது ஆசை எப்படி நிறைவேறும்? எங்கள் கூட்டத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

பிரதம-சமகம-லஜ்ஜிதாய, படு-சது-ஷதை ரனுகுலம் |
ம்ருது-மதுர-ஸ்மித-பாஷிதாயா, ஷிதி-லிக்ருத-ஜகன-துகுலம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||2||

“ஒருவரின் முதல் காதல் சந்திப்பின் போது ஏற்படும் இயற்கையான சங்கடத்தின் காரணமாக நான் மிகவும் அப்பாவியாகவும் ஏமாறக்கூடியவனாகவும் இருப்பதைப் பார்த்த அவர், என் கூச்சத்தைத் தணிக்க வரிசையாக மரியாதையான வார்த்தைகளையும் பணிவான வேண்டுகோளையும் பயன்படுத்தினார். அவரது முகஸ்துதியான வார்த்தைகளில் மயங்கி, மென்மையாகவும் இனிமையாகவும் சிரித்துவிட்டு அவருடன் உரையாட ஆரம்பித்தேன். ஓ சகி, உடனடியாக நான் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்!”

கிசால-ஷயன-நிவேதிதய, சிரம் உரசி மமைவ ஷயனம் |
க்ருத-பரிரம்பான-சும்பனாய, பரிரப்ய க்ருததார-பானம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||3||

“அவர் என்னை மென்மையான, புதிய மலர்கள் கொண்ட ஒரு அழகான படுக்கையில் படுக்க வைத்தார், பின்னர், மிகுந்த மகிழ்ச்சியுடன், அவர் என் இதயத்தில் மிகவும் பிரகாசமாக வைத்தார். நான் அவரை முத்தமிட்டு ஆழமாக தழுவினேன். மேலும், அவர் என்னைத் தழுவி, அனங்க-ராசாவின் சக்திவாய்ந்த செல்வாக்கின் கீழ் என் உதடுகளின் அமிர்தத்தை மீண்டும் மீண்டும் குடித்தார். ஓ சகி, அவர் என் உயிரை விட எனக்கு மிகவும் பிடித்தவர். உடனே அவரைச் சந்திக்க என்னை அழைத்துச் செல்லுங்கள்.

அலச-நிமிலிதா-லோசனயா, புலக வலி-லலிதா-கபோலம் |
ஷ்ரம-ஜல-சகல-கலேவராய, வர-மதன-மத தாதிலோலம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||4||

“அவருடனான உணர்ச்சிகரமான அன்பின் மகிழ்ச்சியில் திடீரென, எதிர்பாராத பேரானந்தம் ஏற்பட்டதால், என் கண்கள் சோர்வடைந்து மூடப்பட்டன. இந்த காதல்-விளையாட்டின் மகிழ்ச்சியிலிருந்து கிருஷ்ணரின் கன்னங்கள் ஒரு அசாதாரண அழகையும் அழகையும் பெற்றன. அன்பின் வியர்வை முழுவதும், அவரது தோற்றம் என்னை மயக்குகிறது. கிருஷ்ணர் அன்பு நிறைந்தவர். ஓ சகீ, ஸ்ரீ கிருஷ்ணரை நான் சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்!”

கோகில-கலா-ரவ-குஜிதாய, ஜித-மனசிஜ-தந்திர-விசாரம் |
ஷ்லத-குசும குல-குந்தலயா, நகஹ-லிகித-கனா-ஸ்தான-பாரம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||5||

“ஸ்ரீ கிருஷ்ணர் உண்மையான கையேடுகளில் காதல் செய்யும் நுட்பங்களைப் பற்றிய இரகசியக் கோட்பாடுகளை நன்கு அறிந்தவர். கிருஷ்ணருடன் காதல் வயப்பட்ட நேரத்தில், நான் ஒரு காக்காயைப் போல் முணுமுணுக்கிறேன் & அவரை மட்டுமே நினைத்துக் கொள்கிறேன். என் பின்னல் திறக்கப்பட்டது மற்றும் மலர் பூக்களின் அமைப்பு நழுவி என் தலைமுடியிலிருந்து விழுந்தது & நான் அவரது நகங்களை தாங்கினேன். ஓ சகி, எனக்கு மிகவும் பிரியமான ஸ்ரீ கிருஷ்ணரை நான் உடனே சந்திக்க ஏற்பாடு செய்!”

சரண-ரனித-மணி-ன்பூராய, பரி பூரித-சுரத-விதானம் |
முகர-விஷ்ரு கல-மேகலாயா, சக சக்ரஹ-சும்பன-தானம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||6||

“நாங்கள் காதல் விளையாட்டை ரசித்தபோது, ​​அவருடைய அன்பைக் கண்டு என் காலில் இருந்த நகைகள் பதிக்கப்பட்ட கணுக்கால் மணிகள் ஒலித்தன. என்னை முடியைப் பிடித்து இழுத்து, மீண்டும் மீண்டும் என் முகத்தில் முத்தமிடும் அந்த ஸ்ரீ கிருஷ்ணருடன் என்னை ஒரேயடியாக இணைத்துவிடு. ”

ரதி-சுக-சமய-ரச லசய, தர-முகுலித-நயன-சரோஜம் |
நிசாஹ-நிபதித-தனு-லதாயா, மதுசூதன முதித-மனோஜம் (கிருஷ்ணம், சகி ஹெ) ||7| |

“அவருடன் மகிழ்ந்தபோது, ​​நான் படிப்படியாக சோர்வடைந்தேன். கிருஷ்ணரின் சற்றே திறந்த தாமரை கண்கள் மன்மதத்தின் மெல்லிசையில் நனைந்தன. நான் ஒரு கொடியைப் போல் ஒட்டிக்கொள்கிறேன் & மதுசூதனன் அவனுடைய அன்பில் என்னை மகிழ்விக்கிறான். ஓ சகீ, என் பிரியமான ஸ்ரீ கிருஷ்ணருடன் உடனே என்னை இணைத்துவிடு.”

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அதிசய-மது-ரிபு-நிதுவன-ஷிலம் |
சுகம் உட்காந்தித-ராதிகாயா, கதிதம் விடனோது சலிலம் (சகி ஹே கேஷி…)||8||


ஸ்ரீ ஜெயதேவாவால் இயற்றப்பட்ட இந்த வர்ணனை ஸ்ரீ கிருஷ்ணரின் அன்பை சித்தரிக்கிறது, இது அவரது பிரிவின் வேதனையில் கவலையும் பொறுமையும் இல்லாத நாயகி விவரிக்கிறது . இதை பாராயணம் செய்து கேட்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஐஸ்வர்யம் பெருகட்டும்.

****************

ஹஸ்த-ஸ்ரஸ்த-விலாசம்-வம்சம் அன்ருஜு | ப்ரு-வல்லி மத்-பல்லவி
விருந்தோத்சரி-தாகந்த விக்ஷிதம், அதிஸ் வேதார்த்ரா, கந்த-ஸ்தலம் …|
மாம் உத்வேக்ஷ்ய, விலாஜ்ஜிதா, ஸ்மிதா-சுதா, முக்தா-நானம்-கனானே…
கோவிந்தம், வ்ரஜ-சுந்தரி, கண-வ்ருதம், பஷ்யமி ஹாஷ்யாமி கா ||10||

“அவரது கையில் மயக்கும் புல்லாங்குழல், அவரது மெல்லிய பார்வையில் விழுந்தது. காதல் மணிகளின் வியர்வை அவரது மென்மையான கன்னங்களை நனைக்கிறது. அவர் கோபியருடன் காட்டில் விளையாடுவதை நான் பார்த்து, அவரது மயக்கும் முகம் புன்னகைக்கிறது. அவரது எதிர்வினையைப் பார்க்கும்போது நான் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை உணர்கிறேன்.

துரலோக-ஸ்தோக-ஸ்தவக-நவக- ஷோக-லதிகா-
விகாச:, காஸரோ-பவன-பவனோயம், வ்யதாயதி… |
அபி ப்ராம்யாத், பிங்கி-ராணிதா, ரமணியா… ந முகுல
ப்ரஸுதிஷு சூடானாம், சகீ …ஷிகரா-நீயம் ஸுகயதி ||11||

“ஏரி பக்கத்திலுள்ள தோட்டத்தில் இருந்து வீசும் காற்று, மரங்களில் துள்ளிக் குதிக்கும் பறவைகள் மற்றும் கருஞ்சிவப்பு பூக்களின் கொத்துகள் அனைத்தும் என்னை எரிப்பதற்காக தீப்பிழம்புகளை எழுப்புகின்றன. புதிய மா மலர்கள் நிறைந்த இந்த மலை, அலையும் பம்பரங்களுடன் முனுமுனுப்பது, இப்போது எனக்கு ஆறுதலாக இல்லை, சகி”

சாகுத-ஸ்மிதம், ஆகுல குல-கலாத்-தம் மில்லம், உல்லாசித
ப்ரு…-வல்லிகம், அலேக-தர்ஷிதா, புஜே-முலோர்த்வா, த்ரிஷ்ட-ஸ்தானம் |
கோபினம், நிப்ருதம், நிரேக்ஷ்ய கமிதம்-கண்க்ஷ-சிரம்-சிந்தாயந்
அந்தர் முக்தா, மனோஹரம், ஹரது வ:, க்லேஷம், நவ கேஷவ: ||12||

கோபியர்களின் புன்னகை அவர்களின் நோக்கங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது, ஒரு அப்பாவியான நபரைக் கூட ஈர்க்கும். அவர்களின் தோலின் துளைகள் தீவிர ஆசையில் சிலிர்க்க, அவர்களின் ஜடைகள் தளர்ந்தன. ஆனால் அத்தகைய சைகைகள் பயனளிக்கவில்லை. கிருஷ்ணர் நீண்ட நேரம் ஆழமாகப் பிரதிபலித்தார், கோபியர்களின் சகவாசத்திற்கான தனது கடைசி அபிலாஷைகளை படிப்படியாக அழித்தார். இப்போது அவர் ராதாவின் உணர்ச்சிகளால் பிரத்தியேகமாக உற்சாகமடைந்தார் மற்றும் ஒவ்வொரு புதிய தருணத்திலும் அவரது ஆச்சரியம் அதிகரிக்கிறது. அந்த இளமை கேசவா உங்கள் அனைவரின் துன்பங்களையும் அழிக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
அக் லேஷா கேஷவௌ நம, த்விதீய சர்கா

ராகம்: பூபாலா; சாப்பு தாலா

கம்ஸாரி-ரபி , சம்சார-வாசனா பத்த-ஷங்கலம் |
rädhäm- ädhäya- hridaye, ta tyäja vraja-sundari… ||

“கம்சனின் எதிரியான கிருஷ்ணன், ராதை முன்பு வெளிப்படுத்திய அந்தரங்க அன்பை நினைத்து, அதுவே உயர்ந்த பக்தியின் சாராம்சம் என்பதை உணர்ந்தான். அவனது இதயம் உலக ஆசையின் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, ராதையின் வடிவில் திகழ்ந்தது. எனவே, வ்ரஜாவின் மற்ற கோபிகளின் அன்பை அற்பமானதாகக் கருதி, அவர் அனைவரையும் கைவிட்டார்.

இதஸ் டாடஸ் தாம், அனுஸ்-ருத்ய ராதிகம்…
அனங்கா-பானா…வ்ரண-கின்னா, மனச:… |
க்ருதாநு தாப:, ச கலிந்த-நந்தினி….
தடான்..த-குஞ்சே, விஷசாத மாதவ: ||

“அவன் ராதையை வீணாகத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​அன்பின் அம்பு அவனைத் துளைத்தது. ஜமுனா நதிக்கரையில் உள்ள அடர்ந்த காட்டில் மாதவன் தவமிருந்தான்”

மாமியாம் கலிதா விலோக்யா, விருதம் வது-நிச்சயேன |
சபராததய மாயாபி ந, வாரித’தி பாயேன ||
ஹரி ஹரி ஹத’தராதயா.. ச கத குபிதேவ ஹரி ஹரி ||1||

“என்னை கோபியால் சூழப்பட்டதைக் கண்ட ராதா கோபமடைந்து அங்கிருந்து கிளம்பினாள். ‘நான் குற்றம் செய்துவிட்டேன்’ என்று நினைத்தேன், அதனால் நான் பயந்தேன், அவள் வெளியேறுவதைத் தடுக்க தைரியம் வரவில்லை. ஐயோ! கோபத்தில் அவளை வெளியேறச் செய்தேன்.

கிம் கரிஷ்யதி, கிம் வாதிஷ்யதி ச சிரம் விரஹேண |
கிம் தானேன ஜநேன, கிம் மம ஜீவிதேன க்ருஹேண ஹரி ஹரி (ஹத’தராதய) ||2||

“அவள் நீண்ட காலமாக பிரிவினையின் பேரழிவு வெப்பத்தால் அவதிப்படுகிறாள், அதனால் அவளுடைய நடத்தையை என்னால் கணிக்க முடியவில்லை. அவள் என்ன செய்வாள்? அவள் என்ன சொல்வாள்? ஐயோ! ராதா இல்லாததால், என் செல்வம், என் உறவினர்கள், என் உயிர், என் வீடு மற்றும் அனைத்தும் மதிப்பற்றதாகத் தோன்றுகிறது.

சிந்தயாமி ததானனம் குடில-ப்ரு-கோப பாரேண |
ஷோண-பத்மம் இவோபரி-பிரமதகுலம் பிரமரேண ஹரி ஹரி (ஹட’தரதய) ||3||

“ஸ்ரீ ராதையின் வளைந்த புருவம் போன்ற புருவங்களை நான் நேரடியாகப் பார்ப்பது போல் உணர்கிறேன். அவளது கோபமான முகம் சிவந்த தாமரை மலரைப் போன்றது.

தம் அஹம் ஹ்ருதி சங்கதம், அனிஷம் புருஷம் ராமயாமி |
கிம் வனே’னு சராமி தமிஹ கிம் வ்ருத விலாபாமி ஹரி ஹரி (ஹத’தரதய) ||4||

“ஐயோ! ராதையின் நேரடி இருப்பை நான் தொடர்ந்து உணர்ந்து, அவளை என் இதயக் கோவிலில் ஆழமாகத் தழுவிக்கொண்டிருக்கும்போது, ​​நான் ஏன் அவளைப் பற்றி வீண் புலம்புகிறேன், ஏன் காடு விட்டு காடு வரை அவளைத் திரும்பத் திரும்பத் தேடுகிறேன்?”

தன்வி கின்ன மசூயாய ஹ்ருதயம் தவ கலயாமி |
தன்னா வேத்மி குடோ கதாஸி, ந தேன தே’னு நயாமி ஹரி ஹரி (ஹத’தராதயா) ||5||

“ஓ மெல்லிய இடுப்பைக் கொண்ட மென்மையான பெண்ணே, உங்கள் இதயம் பொறாமையால் மாசுபட்டது போல் தெரிகிறது, இது உங்கள் இதயத்தை வீணாக்குகிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? பெருமிதத்துடன் விட்டுவிட்டீர்கள். உங்கள் கோபத்தை போக்க நான் என்ன வகையான தாழ்மையான மன்றாட வேண்டும்? எனக்கு எந்த யோசனையும் இல்லை.

த்ருஷ்யஸே புரதோ கத, கதமேவ மே விததஸி |
கிம் புரேவ ஸஸம்ப்ரமம், பரிரம்பம் ந ததாஸி ஹரி ஹரி (ஹத’தரதய) ||6||

“மீண்டும் தோன்றுவதையும் மறைவதையும் நீங்கள் வேட்டையாடுகிறீர்கள். ஒருமுறை நீ எனக்குக் கொடுத்த அணைத்து வளைவுகளையும் ஏன் மறுக்கிறாய்”

க்ஷாம்யதம் அபாரம் கதாபி, தவேத்ருஷம் ந கரோமி |
தேஹி சுந்தரி தர்சனம் மம மன்மதேன துனோமி ஹரி ஹரி (ஹத’தராதய)||7||

“ஓ அழகானவளே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் உன்னை இனி ஒருபோதும் புண்படுத்த மாட்டேன். உங்களை ஒருமுறை பார்க்க அனுமதியுங்கள். மம்தா கொடுத்த வலியில் நான் தவிக்கிறேன்”

வர்ணிதம் ஜயதேவகேன ஹரேரிதம் ப்ரவணேன |
கிந்து-பில்வ-சமுத்ர-சம்பவ-ரோஹிணி-ரமணேன ஹரி ஹரி (ஹட’தரதய)||8||

கடலில் இருந்து சந்திரன் தோன்றுவது போல் ஸ்ரீ ஜெயதேவர் கிந்துபில்வ கிராமத்தில் அவதரித்தார். இந்தப் பாடலின் வடிவில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆழ்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை அடக்கத்துடன் சேகரித்துள்ளார்.

****************

ஹ்ரிதி பிசா-லதா, ஹாரோ நாயம் புஜங்க மனயாக:
குவலயா-டலா-ஷ்ரேனி, காண்டேனா. sä கரால-த்யுதி: |
மலையஜ-ரஜோ நேதம், பஸ்ம ப்ரியா, ரஹிதே மயி
ப்ரஹார ந, ஹர-ப்ராந்த்யா, அனங்க க்ருதா, கிமு தவசி… ||9||

“தாமரை தண்டுகள் என் இதயத்தை மாலையாக்குகின்றன, பாம்புகளின் கழுத்தில் அல்ல! நீல லில்லி இதழ்கள் என் கழுத்தில் வட்டமிடுகின்றன, விஷத்தின் கோடு அல்ல! சந்தனப் பொடி, சாம்பலை அல்ல, என் காதலியின் உடலில் பூசப்பட்டது! மன்மதா, என்னை சிவன் என்று தவறாக நினைத்து தாக்காதே! ஏன் கோபத்தில் என் மீது விரைகிறாய்”

.
பனௌ மா குரு, சூட்ட-சாயகம், அமும் மா சாபம், ஆரோ…பயா
கிரிடா. நிர்ஜித-விஷ்வ- மூர்ச்சித-ஜனக தேன, கிம் பௌருஷம் |
தஸ்யா ஏவ, ம்ரி-த்ரிஷோ, மனசிஜா ப்ரீகத்-கடாக்ஷா, ஷுக-
ஷ்ரேணே-ஜர்ஜரிதம், மனக் அபி மனோ, நாத்யாபி ஸந்துக்ஷ் நாதே ||10||

“உன் மாவிளக்கு அம்பை தூக்காதே! உன் வில்லை குறிவைக்காதே! எங்கள் விளையாட்டுகள் உங்கள் வெற்றியை அங்கீகரிக்கின்றன, அன்பே. பலவீனமான பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது வெற்று வீரம். ராதாவின் கண்கள் சரமாரியான பார்வைகளால் என் இதயத்தை உடைத்தது. அன்பின் தூண்டுதலால் இப்போது எதுவும் என்னை ஆதரிக்க முடியாது!

ப்ரு-பல்லவம், தனுர் அபாங்க-த ரங்கிதானி
பானா குணா ஷ்ரவண:, பாலி: இதி ஸ்மரேண |
தஸ்யம். அனங்க-ஜெய, ஜங்கம-தேவதா…யாம்
அஸ்த்ரானி நிர்ஜித-ஜகந்தி, கிம் அர்பிதானி ||11||

“அவளுடைய வளைந்த புருவம் அவனது வில், அவளது பாயும் பார்வைகள் அம்புகள், அவளுடைய காது மடல் வில்லு – ஆயுதங்கள் ஏன் பாதுகாக்கப்படுகின்றன. அன்பின் வாழும் தெய்வம், உலகம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டது.

bhrü-chäpe, nihita: katäksha-vishikho, nirmätu marma-vyathäm
shyämätmä, kutila: Karotu, kabari-bhäro’pi, Märodyamam |
மோஹம் தவத் அயன் கா, தன்வி தனுதம், பிம்பா…தாரோ ராகவன்
சத்-வஸ்த: ஸ்தான-மண்டலங்கள், தவ கதம், ப்ரானை: மம கிருததி… ||12||

“உன் புருவத்தின் வில் மறைக்கும் அம்புகளைப் பார்ப்பது, என் மென்மையான மரண மையத்தில் வலியை ஏற்படுத்தக்கூடும். உனது கனமான கறுப்புப் பின்னல், என்னை வக்கிரமாகத் துரத்தலாம். உங்கள் சிவப்பு பெர்ரி உதடுகள், ராதா, ஒரு விசித்திரமான மயக்கத்தை பரப்பலாம். நீங்கள் என் வாழ்க்கையை நாசமாக்குகிறீர்கள்.

தானி ஸ்பர்ஷா, சுகானி தே கா தரால:, ஸ்நிக்தா… த்ரிஷோர் விப்ரமா:
தத்-வக்த்ரம் புஜா, சௌரபம், ச ச சுதா-ஸ்யந்தி, கிரி- வக்ரிம |
ச பிம்பதார-மாதுரிதி –விஷய, ஸங்கே’பிச்சேந் மானஸம்
தஸ்யாம், லக்ன-சமாதி, ஹந்த- விரஹ-வ்யதி:, கதம் வர்ததே ||13||

“என் தொடுதலுக்கு அவளது மகிழ்ச்சியான பதில்கள், அவளது கண்களின் நடுங்கும் திரவ அசைவுகள், அவளது தாமரை வாயிலிருந்து நறுமணம், இனிமையான தெளிவற்ற வார்த்தைகளின் ஓட்டம், அவளது சிவப்பு பெர்ரி உதடுகளிலிருந்து தேன்-உணர்வு பொருட்கள் மறைந்தாலும். என் மனம் அவளை ஒரு மயக்கத்தில் பிடித்துக்கொண்டது, அதனால் அவள் கைவிடப்பட்டதன் காயம் ஏன் ஆழமடைகிறது.

திர்யக்-காந்த-விலோல-மௌலி, தாரலோத்-தம்ஸஸ்ய, வம்ஷோச் காரத்
கீதா-ஸ்தான-கிருதவதானா-லாலனா…லக்ஷைர் ந, ஸம்-லக்ஷித: |
ஸம்முக்தம், மதுஸுதனஸ்ய- மதுரே- ராதா, முகேந்து
மிருதுஸ்-யந்தம், கண்டலித சிரம், ததாது வ:, க்ஷேமம் கடாக்-ஷோர்-மயா: ||14||

ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று இடங்களில் வளைந்து கோணலான தோரணையை ஏற்க பரவச உணர்ச்சிகளால் கட்டாயப்படுத்தப்படுகிறார். அவர் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்ததால், அவரது கிரீடம் மற்றும் காதணிகள் அசைகின்றன. லட்சக்கணக்கான கவர்ச்சிகரமான கோபியர்களுக்கு நடுவே அமைந்திருப்பதால், ஸ்ரீ ராதாவின் மயக்கும் அமுத தாமரை முகத்தைப் பார்த்துக்கொண்டு, அவளைப் பார்ப்பதற்காக, அவர் தனது புல்லாங்குழல் பாடலின் மிகவும் ஆத்திரமூட்டும், மயக்கத்தைத் தூண்டும் குறிப்பை தியானிக்க அவர்களைத் தூண்டினார். அவர் மீது அளவுகடந்த பாசம். ஸ்ரீ கிருஷ்ணரின் ஓரக்கண்ணின் எண்ணற்ற அலைகள் அனைவருக்கும் ஐஸ்வர்யங்களை வழங்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜயதேவ க்ருதவ்
முக்த-மதுஸுதனா நம, த்ரிதிய ஸர்க:

ராகம்: சௌராஷ்டிரா; ஆதி தாலா

யமுனா-திர-வனிர-நிகுஞ்சே மந்த மஸ்திதம் |
ப்ராஹ-ப்ரேம-பரோத்ப்ராந்தம் மாதவம் ராதிகா-சகி ||

யமுனை நதிக்கரையில், அடர்ந்த செடிகளுக்கு நடுவே, மாதவன் தீவிர அன்பினால் தத்தளித்துக் கொண்டிருந்த காட்டில், ராதையின் சகி(தோழி) பேசினாள்:

நிந்ததி சந்தனம் இந்து கிராம், அனு விந்ததி கேதம் அதிரம், கிருஷ்ணா |
வ்யால-நிலையா-மிலா நேனா கரளம் இவ, கலயாதி மலாய-சமீரம் ||1||

மாதவ மனஸிஜ-விசிக-பயாத் இவ பாவனாய த்வயி லினா, கிருஷ்ணா |
 ச விரஹே தவ தினா ||த்ருவபதா||

“ஓ மாதவா! ராதா உன்னைப் பிரிந்து கடுமையான துன்பத்தை அனுபவிக்கிறாள். மதனாவின் அம்புகளின் இடைவிடாத மழைக்கு அவள் மிகவும் பயந்தாள், அவள் மெதுவாக எரியும் இந்த துயர நெருப்பிலிருந்து விடுபட தியான-யோகத்தை நாடினாள். அவள் நிபந்தனையின்றி உன்னிடம் சரணடைந்தாள், இப்போது அவள் தியானப் பயிற்சியால் உன்னில் முழுமையாக மூழ்கிவிட்டாள். நீங்கள் இல்லாத நேரத்தில், சந்திரனின் கதிர்கள் கூட, அவள் அவளை எரிப்பதைப் போல உணர்கிறாள். சந்தன மணம் கொண்ட மலாயா தென்றல், அவளது பிரிவின் வலியை அதிகரிக்கிறது.

அவிரல-நிபதித-மதன-ஷரதிவ பவடவனய விசாலம், கிருஷ்ணா |
ஸ்வ-ஹ்ருதய-மர்மணி வர்ம கரோதி சஜல-நளினி-தல-ஜலம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா)||2||

“காமதேவரின் அம்புகள் அவள் இதயத்தில் இடைவிடாமல் விழுகின்றன. நீ அங்கே வசிப்பதால், அவளது பாதிக்கப்படக்கூடிய இதயத்தை நீர்த்துளிகள் தாங்கிய பெரிய தாமரை இதழ்களால் மூடி, உன்னைக் காக்க ஒரு மாயக் கவசத்தை (கவச்சா) உருவாக்குகிறாள்.

குசும-விஷிக-ஷர-தல்ப மணல்ப-விலாச-கலா-கமணியம், கிருஷ்ணா |
வ்ரதம் இவ தவ பரிரம்ப-சுகாய கரோதி குஸும-ஷயநியாம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||3||

“மாதவா! ராதா உங்கள் இன்பத்திற்கு ஏற்ற வகையில் ஒரு மகிழ்ச்சியான மலர் படுக்கையை உருவாக்குகிறார். ஆயினும் அது மன்மத அம்புகளின் படுக்கையாகத் தெரிகிறது. உனது ஆழ்ந்த அரவணைப்பை அடையும் நம்பிக்கையில் அவள் அம்புப் படுக்கையில் சாய்ந்து கொள்வதாக சபதம் வடிவில் கடுமையான துறவறம் செய்கிறாள்.

வஹதி ச கலிதா-விலோசன-ஜல-தார, மனன-கமலம் உதரம், கிருஷ்ணா |
வித்தும் இவ விகட-விதுந்து-ததாந்த-தலன-கலிதா ம்ருத-தரம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||4| |

கிரகணப் பற்களால் ஏற்பட்ட வெட்டுக்களில் இருந்து அமிர்தத்தை சொட்டும் சந்திரனைப் போல, மேகமூட்டமாகவும், கண்ணீருடன் வடிந்ததாகவும், தன் கம்பீரமான தாமரை முகத்தை உயர்த்துகிறாள்.

விலிபதி ரஹஸி குரக-மதேன பவந்தம் அசம-ஷர-பூதம், கிருஷ்ணா |
ப்ரணயாதி மகர மதோ விநிதாய கரே ச ஷரம் நவ-சூதம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||5| |

“ஓ ஸ்ரீ கிருஷ்ணா, ஒதுங்கிய இடத்தில், ராதை மான் கஸ்தூரியில் உனது வசீகர வடிவத்தின் படத்தை வரைகிறாள். உன் கையிலும் மாதவாவிலும் மாங்காய் மொட்டு அம்புகளுடன் உன்னைச் சித்தரித்த பிறகு, அவள் உன் திருவுருவப் படத்திற்கு மரியாதையுடன் வணங்கி, உன்னை வணங்குகிறாள்.

தியான-லயேன புரா பரிகல்ப்ய பவந்தம் அதிவ துரபம், கிருஷ்ணா |
விலாபதி ஹஸதி விஷிததி ரோதிதி சஞ்சதி முஞ்சதி தபம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||6||

“ஓ மாதவா, ராதா மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறாள் ‘ஹே ஸ்ரீ கிருஷ்ணா! உன் காலடியில் விழுகிறேன். நீ என்னைப் பற்றி அலட்சியமாக மாறியவுடன், சந்திரக் கடவுளான சந்திரமா அமிர்தம் கூட என் உடலில் நெருப்பு மழையைப் பொழிவது போல் உணர்கிறது.

ப்ரதி-பதம் இடம் அபி நிகததி மாதவ தவ சரணே பதிதஹம் , கிருஷ்ணா |
த்வயி விமுகே மயி சபதி சுதா-நிதி ரபி தனுதே தனு-தஹம் (கிருஷ்ணா, ச விரஹே தவ தினா) ||7||

“ஸ்ரீ ராதா உன்னைப் பற்றிய தியானத்தில் முழுமையாக மூழ்கிவிட்டாள். நீங்கள் நேரடியாக அவளுக்கு முன்னால் இருப்பதாக அவள் கற்பனை செய்கிறாள். சில சமயம் அவள் பிரிந்து புலம்புகிறாள், சில சமயங்களில் அவள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள், சில சமயம் அவள் அழுகிறாள், சில சமயங்களில் அவள் ஒரு கணப் பார்வையில் தழுவி அனைத்து துன்பங்களையும் கைவிடுகிறாள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அதிகம், யதி மானஸ நடனியம், கிருஷ்ணா |
ஹரி-விரஹாகுல-வல்லவ-யுவதி, சகி-வசனம் படனியம் கிருஷ்ணா (துருவபதா) ||8||

ராதாவின் அன்புத் தோழி சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் ஸ்ரீ ஜெயதேவா இயற்றிய இந்தப் பாடல் இதயக் கோவிலுக்குள் இயற்றப்பட வேண்டும். ஸ்ரீ ஹரியை விட்டு பிரிந்த ராதையின் விரஹா (வலி) பற்றிய சாகியின் விளக்கம் தொடர்ந்து பாராயணத்திற்கு தகுதியானது.

ராகம்: பிலஹரி; ஆதி தாலா

அவாஸோ, விபிநாயதே ப்ரிய-சகி மாலாபி. ஜாலியாதே…
தபோ’பி நிஷ்-வசிதேன, தவ-தஹன-ஜ்வாலா கலாபயதே |
சாபி த்வத்-விரஹேண, ஹந்த ஹரிணி-ரூபயதே, ஹா கதம்
கந்தர்போ’பி யமாயதே, விரசயன், ஷர்துல-விக்ரேதிதம் ||

“ஓ ஸ்ரீ கிருஷ்ணா, என் சகி ராதை ஒரு மான் போல நடந்து கொள்கிறாள். அவள் வசிப்பிடம் காடு என்றும், தன் நண்பர்கள் வலையுடன் வேட்டையாடுபவர்களைப் போலவும் கருதுகிறாள். அவளது உடம்பில் எரியும் காட்டுத் தீயின் ஜுவாலை அவளது வலியின் பெருமூச்சுகளால் உக்கிரமாகிறது. ஐயோ, ஐயோ! மன்மதன் இரையை வேட்டையாடும் புலியைப் போல் மாறுவேடமிட்டு மரணத்தை வெளிப்படுத்தினான்.

ஸ்தான-வினிஹிதம் அபி ஹர முதாரம் |
ச மனுதே க்ருஷ-தனுராதி பரம் |
ராதிகா கிருஷ்ணா ராதிகா | ராதிகா விரஹே தவ கேசவ (ராதிகா கிருஷ்ண ராதிகா)| |1||

“ஓ கேசவா, ராதா உன்னைப் பிரிந்ததில் மிகவும் மெலிந்திருக்கிறாள், அழகான கழுத்தணி மாலை அவளுக்குச் சுமையாகிவிட்டது. ஏய் கேசவா, ராதிகா உன் பிரிவின் வேதனையில் தவிக்கிறாள் (விரஹா)”

சரஸம ஸ்ருண மபி மலையஜ-பங்கம் |
பச்யதி விஷமிவ வபுஷி சஷங்கம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||2||

“ஓ கேசவா, உன்னைப் பிரிந்து, ராதா தன் உடலில் பூசப்பட்ட ஈரமான, வழுவழுப்பான சந்தனக் கட்டையைப் பார்க்கிறாள், அவளுக்கு விஷம் போல் உணர்கிறாள்.”

ஸ்வசித-பவனம் அனுபம-பரிணஹம் |
மதன-தஹன மிவ வஹதி ஸதஹம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||3||

“அவளுடைய சொந்த பெருமூச்சின் வலுவான காற்று, அன்பின் நெருப்பை எரிப்பது போல் உணர்கிறது”

திசி திசி கீரதி சஜல-கா-ஜலம் |
நயன-நளினம் இவ விகலிதா-நலம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா) ||4||

“அவளுடைய தாமரைக் கண்கள் எல்லாத் திசைகளிலும் பார்க்கின்றன, அவளது கண்ணீர்த் துளிகளின் மழையை அவற்றின் தண்டுகளிலிருந்து பிரிந்த நீர்ப் புள்ளிகள் கொண்ட தாமரை மலர்களைப் போல சிதறடிக்கின்றன.”

நயன-விஷய மாபி கிசலய-தல்பம் |
கலயாதி விஹித-ஹுதாஸ-விகல்பம் |
ராதிகா கிருஷ்ணா ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||5||

“”புதிய இதழ்கள் கொண்ட படுக்கையை அவள் நேராகப் பார்த்தாலும், அவளது திகைப்பில் அவள் அதை எரியும் நெருப்பாக உணர்கிறாள்.”

த்யஜதி ந பணி-தலேன கபோலம் |
பாலா-ஷஷினம் இவ, ஸயம் ஆலோலம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா) ||6||

“அவளுடைய சிவந்த தாமரை கை அவளது கன்னத்தை அழுத்துகிறது, அது அந்தி வானத்தில் புதிதாக உதயமான நிலவின் அழகை ஒத்திருக்கிறது – அவள் தனிமையான இடத்தில் தனியாக அமர்ந்திருக்கும் போது.”

ஹரிரிதி ஹரிரிதி ஜபதி சகமம் |
விரஹ-விஹித-மரணேவ நிகாமம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ண ராதிகா)||7||

“ராதா தன் உயிரை துறக்க முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. உன்னைப் பிரிந்து, உன்னை அடைய வேண்டும் என்ற ஆசையுடன், ‘ஸ்ரீ ஹரி, ஸ்ரீ ஹரி’ என்று உனது நாமத்தைத் தொடர்ந்து ஆவேசமாக உச்சரிக்கிறாள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இதி கீதம் |
சுகயது கேசவ-பதம் உபநிதம் |
ராதிகா கிருஷ்ண ராதிகா – தவ விரஹே கேசவா (ராதிகா கிருஷ்ணா ராதிகா)||8||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்த பாடல் நிபந்தனையின்றி கேசவரின் பாதத்தில் சரணடையும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.

****************

ச ரோமாஞ்சதி, சித்-கரோதி விலாபதி, உட்கம்பதே தம்யதி
த்யாயதி, உத்ப்ரமதி, பிரமேலதி, பததி, உத்யதி. முர்ச்சட் யாப்பி… |
ஏதாவதி, அதானு-ஜ்வரே- வர-தனு:, ஜெவேன்ன கிம் தே ரஸத்
ஸ்வர்-வைத்ய-ப்ரதிமா ப்ரஸிதாஸி, யதி த்யக்தோ அன்யதா ஹஸ்தக:…. ||9||

“ஓ சிறந்த மருத்துவர்களே! மிகவும் அழகான ராதா பிரிவினையின் கவலையால் நிலைகுலைந்து போனாள். சில சமயங்களில் அவள் தலைமுடி உதிர்ந்து நிற்கும், சில சமயம் அவள் மூச்சுத் திணறத் தொடங்குகிறாள், சில சமயம் அவள் திடுக்கிடுகிறாள். சில சமயம் சத்தமாக அழுவாள், சில சமயம் நடுங்குகிறாள். சில நேரங்களில் அவள் மிகுந்த கவனத்துடன் உன்னைப் பற்றி தியானிக்கிறாள். அவள் உங்கள் அன்பான பொழுதுகளின் இடங்கள் முழுவதும் அலைந்து திரிகிறாள். அவள் குழப்பத்தில் மூழ்கும்போது, ​​அவள் கண்களை மூடுகிறாள். சில நேரங்களில் அவள் தரையில் விழுகிறாள். பின்னர் அவள் எழுந்து செல்ல தயாராகிறாள், ஆனால் அவள் திடீரென்று மயக்கமடைந்து மீண்டும் தரையில் விழுந்தாள். அவள் சன்னிப்தா-ஜ்வரா என்ற ஆபத்தான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். நீங்கள் திருப்தி அடைந்தால், தயவு செய்து ரசம்ருத மருந்தை வழங்குங்கள். அப்போது அவள் பிராணன் என்ற பொக்கிஷத்தை அடையலாம். தெய்வீக குணப்படுத்துபவராக விளையாடுங்கள் அல்லது நீங்கள் அவளை இழக்க நேரிடும்.

ஸ்மரதுரம்- தைவத-வைத்ய-ஹ்ருத்யா
த்வத்-அங்க-சங்கம்ருதா, மாத்ர-சாத்யம் |
நிவ்ருத்த-பாதம், குருஷே ந ராதம்
உபேந்திர வஜ்ரத் அபி தருணோ’ஸி ||10||

“ஓ உபேந்திரா! இதயத்தின் தெய்வீக மருத்துவரே, அவள் உன்னுடன் தெய்வீக ஐக்கியத்தின் மருந்தை உட்கொண்டால் மட்டுமே அவள் குணமடைய முடியும். ராதாவை அவளது வேதனையில் இருந்து விடுவிக்க கிருஷ்ணா அல்லது இந்திரனின் வஜ்ராயுதத்தை விட உன் கொடூரமானவள்”

kandarpa-jvara-saàjvarä-tura-tano:, ashcarya masyash ciram
cetash candana-candramaù-kamalini , cintasu santämyati |
கிந்து க்லாந்தி-வஷேந ஶீதல-தனும், த்வாம் ஏகம் ஏவ ப்ரியம்
த்யயந்தி. ரஹஸி ஸ்திதா கதம் அபி, ஷேனா ஷனம் ப்ரானிதி ||11||

“அவள் காதல் காய்ச்சலால் அவதிப்படுகிறாள், அவளது இதயம் சந்தன தைலம் நிலவொளி மற்றும் தாமரை மலர்களின் அதிசயங்களில் மெதுவாக மூச்சுத் திணறலை அனுபவிக்கிறது. சோர்வு அவளை தியானிக்கத் தூண்டும் போது, ​​தன் பிராணன் ஒரு கணம் திரும்பி வருவதை அவள் உணர்கிறாள்.

க்ஷணம் அபி, விரஹ:, புரா ந சேஹே
நயன-நிமிலன-கின்னய யய தே |
ஷ்வஸ் இதி கதம் அசௌ, ரஸல-ஷகாம்,
சிர-விரஹேண, விலோக்ய, புஸ்பிதாக்ரம் ||12||

“உன்னை உற்றுப் பார்க்கையில், கண் இமைப்பதால் ஏற்பட்ட பிரிவை ராதாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, இந்த நீண்ட வலிமிகுந்த பிரிவின் போது அவள் எப்படி உயிருடன் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை, குறிப்பாக ஒரு மகிழ்ச்சியான மாமரம் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கும்போது (அதன் மேல் கிளைகளில் புதிய பூக்கள் பூத்திருக்கும்).”

த்ருஷ்டி-வ்யகுல-கோகுல-வன-ரஷாத், உத்ருத்ய கோவர்தனம்
பிப்ரத் பல்லவ-வல்லபாபி:, அதிக ஆனந்த் சிரம், கும்பிட:… |
தர்பெனேவா, தட்-அர்பிடா, தாரா-ததி, சிந்துரா-முத்ராங்கிடோ….
பாஹு: கோப-தனோ:, தனோது பவதாம், ஷ்ரேயாஸி கம்ஸ-த்விஷ: ||13||

கிருஷ்ணனின் கரங்கள் இந்திரனுடன் போட்டியிட்டு, கிரி கோவர்தனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள ஆர்வத்துடன் வசிப்பவர்களைக் கனமழையில் இருந்து பாதுகாக்கின்றன. அழகான இளம் கோபிகளால் அவரது கரங்கள் நீண்ட நேரம் முத்தமிட்டு, புதிதாக திருமணமான அந்த கோபியர்களின் உதடுகளிலிருந்து குங்குமமும், அவர்களின் நெற்றியில் இருந்து சிந்துராவும் பூசப்பட்டன. மாடு மேய்க்கும் சிறுவன் வடிவில் காட்சியளிக்கும் கம்சனை அழிப்பவனான ஸ்ரீ கிருஷ்ணனின் அந்தக் கரங்கள் உங்கள் அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை அளிக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ஸ்நிக்த-மதுஸுதனோ நாம, சதுர்த ஸர்க:

ராகம்: ஆனந்த பைரவி ; ஆதி தாலா

அஹம் இஹ நிவாஸாமி யாஹி, ராதாம்… அன் உனய
மத்-வசனேன சா அனா-யேதா:|
இதி மது-ரிபுனா சகி… நியுக்தா
ஸ்வய மிதம் ஏத்யா, புனர் ஜகதா, ராதம்…. ||

“நான் இங்கேயே இருப்பேன், நீ ராதாவிடம் போய் என் வார்த்தைகளால் அவளை சமாதானம் செய்து என்னிடம் அழைத்து வா” என்று மதுசூதனாவின் கட்டளைப்படி அவள் சகி ராதாவிடம் அவனது வார்த்தைகளை மீண்டும் சொல்ல சென்றாள்.

ராதே, வஹதி மலய-சமிரே, மதனம் உபநிதயா |
ராதே, ஸ்புயத்தி குசும-நிகரே, விரஹி-ஹ்ருதய-தலனாய ||1||

ராதே, தவ விரஹே வனமாலி.. சகி சிதாதி ராதே || துருவ-பதா ||

“எனது அன்பு தோழி ராதா, சந்தன (மலாயா) தென்றல் மெல்ல மெல்ல நகர்கிறது, எல்லோரையும் அமோக மனநிலையில் ஊறவைக்க. தனிமையில் இருக்கும் காதலர்களின் இதயங்களை பலவகையான மலர்கள் திறந்து கிழித்துக் கொண்டிருக்கின்றன. வசந்தத்தின் இந்த தூண்டுதல் நேரத்தில், உணர்ச்சிவசப்பட்ட வனமாலி உன்னைப் பிரிந்திருப்பதை உணர்கிறாள், ராதே.”

ராதே, தஹதி ஷிஷிர மயூகே மரணம் அனுகரோதி |
ராதே, படதி மதன-விசிகே விலாபதி விகல தாரோ’தி (ராதே, தவ விரஹே வனமாலி) ||2||

“சந்திரன் அவரை மரணத்தை அச்சுறுத்துகிறது. மன்மதனின் (காமதேவனின்) அம்புகள் போன்ற மரங்களிலிருந்து விழும் மலர்களால் அவன் இதயம் துளைக்கப்படுகிறது. உங்கள் பிரிவை நினைத்து அவர் கடுமையாக புலம்புகிறார்.

ராதே,த்வநதி மதுப-ஸமுஹே, ஷ்ரவணம் அபி ததாதி |
ராதே, மனஸி சலித-விரஹே, நிஷி நிஷி ருஜு உமுபயதி (ராதே, தவ விரஹே வனமாலி) ||3||

“பம்பல்பீஸின் ஓசையைக் கேட்கும்போது அவர் தனது கைகளால் காதுகளை மூடுகிறார். ஒவ்வொரு இரவும் அவர் உங்கள் நிறுவனத்தை அடைவார் என்று எதிர்பார்க்கிறார், ஆனால் அவர் ஏமாற்றமடைகிறார். நாளுக்கு நாள் அவர் பிரிவினையின் சித்திரவதைகளைத் தாங்கிக் கொள்ளும்போது அவரது உடல் பலவீனம் அதிகரிக்கிறது.

ராதே, வஸதி விபின-விதனே, த்யஜதி லலிதா-தாமா |
ராதே, லுததி தரணி-ஷயனே, பஹு விலாபதி தவ நாம (ராதே, தவ விரஹே வனமாலி) ||4||

“அவர் அரண்மனையில் உள்ள தனது அழகான படுக்கை அறையை விட்டுவிட்டு காட்டில் வசிக்கிறார். வீட்டில் வசதியாக வாழ்வதற்குப் பதிலாக, தரையில் உருண்டு, திரும்பத் திரும்ப உன் பெயரைச் சொல்லி, ‘ராதா! ராதா!”

ராதே, பானதி கவி-ஜயதேவே, விரஹ-விலாசிதேன |
ராதே, மனஸி ரபஸ-விபாவே.. ஹரி ருதயது ஸுக்ருதேன (தவ விரஹே வனமாலி, சகி சிதாதி ராதே) ||5||

ஸ்ரீ ஜெயதேவரின் இந்தப் பாடலில் கிருஷ்ணரின் பிரிவினை பற்றிய கவலை நிறைந்துள்ளது. இப்பாடல் புகுத்திய பக்தியின் பலனாக, இதனை ஓதுபவர்கள் பிரிவின் பொழுதுகளில் நிகரற்ற திளைப்பை அடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் இதயங்களில் வெளிப்படட்டும்-

ராகம்: யமன்; ஆதி தாலா

பூர்வம், யத்ர சாமம், த்வயா ரதி-பதேர்… ஆராதிதா சித்தய:
தஸ்மின் …ஏவ நிகுஞ்ச…மன்மத-மஹா-தீர்த்தே… புனர் மாதவ: |
த்யாயன்… த்வாம் அனிஷம், ஜபன்னாபி தவைவா, அலாப-மந்த்ராவலிம்
பூய:, த்வத்-குச-கும்ப-நிர்பர பரிரம்பாம்ருதம், வஞ்சதி ||

“மாதவா இன்னும் உங்களுக்காக மிகவும் புனிதமான புதர்க்காடுக்காக காத்திருக்கிறார், அங்கு நீங்கள் ஒன்றாக அன்பை பூர்த்தி செய்தீர்கள். அவர் தூங்காமல் உங்களை தியானிக்கிறார்.தொடர் மந்திர ஜெபங்களை முணுமுணுக்கிறார். அவர் உங்களுக்காக ஏங்குகிறார்”

ரதி-சுக-சரே கதம் அபிசரே மதன-மனோஹர-வேஷம் |
ந குரு நிடம்பினி கமன-விலம்பனம் அனுசர தம் ஹ்ருதயேசம் (ராதே) ||1| |

“வனமாலி கிருஷ்ணன் வன மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறான், அவனுடைய வடிவம் மின்னுகிறது. அவர் சிற்றின்பத்தின் கடவுளைப் போலவே மிகவும் கவர்ச்சிகரமான உடையை அணிந்துள்ளார். அவனை காத்திருக்க வைக்காதே ராதே. உங்கள் இதயத்தின் இறைவனைப் பின்பற்றுங்கள்.

திர-சாமிரே யமுனா-டையர் வசதி வனே வனமாலி
கோபி பினா பயோதர மர்தனா
சஞ்சல கர யுக ஷாலி ராதே
திர-சாமிரே யமுனா-டையர் வசதி வனே வனமாலி|| துருவ-பதா ||

“அவர் தற்போது யமுனையின் மென்மையான மலாயா-காற்றுக் கரையில் ஒரு காட்டுப் போரில் காத்திருக்கிறார். அவர் உனக்காகக் காத்திருக்கிறார் ராதே”.

நாம ஸமேதம் க்ருத-சங்கேதம், வாதயதே ம்ருதுவேனும் |
பஹு மனு தே நானு தே, தனு தே, தனு-சகத, பவனா-சலிதம் அபி ரேனும்(ராதே) ||2| |

“ஓ ராதா, உன் பெயரை அழைப்பது போல் அவன் புல்லாங்குழலை மென்மையாக வாசிக்கிறான். முதலில் உங்கள் உடலைத் தொட்ட மகரந்தத்தால் தீண்டப்பட்டதை அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறார். அவர்கள் தென்றலில் அவரிடம் வரும்போது, ​​அவர் அவர்களை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறார்.

பததி படத்ரே விசலதி பத்ரே சகித-பவத் உபயனம் |
ரசாயதி சயன சசகித-நயன பச்யதி தவ பந்தனம் (ராதே)||3| |

“கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் படுக்கையை உருவாக்கும்போது, ​​அவர் பல உள் பார்வைகளை அனுபவிக்கிறார். மரத்தின் மீது இறங்கும் பறவை இலைகளை சலசலத்து, சிறிய சத்தம் எழுப்பும்போது, ​​கிருஷ்ணர் திடுக்கிட்ட கண்களுடன் நீங்கள் எதிர்பார்க்கும் பாதையில் பார்க்கிறார்.

முகர மாத்திரம் த்யஜ மஞ்சிரம், ரிப்பும் இவ கேலி ஷூலோலம் |
சல சகி குஞ்சம் சதிமிர-புஞ்சம், ஷைலயா நிலா-நிச்சோலம் (ராதே)||4||

“சகி, போ! அந்த அடர்ந்த திசையில் நகரவும். உங்கள் கணுக்கால் மணிகளை கழற்றவும். உங்கள் நாடகத்தில் துரோகிகள் போல் முழங்குகிறார்கள். இந்தக் கருநீல நிற ஆடையை அணிந்துகொள்” என்றார்.

உரசி முராரே உபஹித-ஹரே, கானா இவ தரல-பாலகே
தைதி ரிவா பிதே, ரதி-விபரிதே, ராஜஸி ஸுக்ருத-விபாகே (ராதே)||5||

“இருண்ட மேகத்தின் மீது மின்னுவதைப் போல நகைகளால் அலங்கரிக்கப்பட்ட முராரியின் மார்பில் உனது மாலை விழுகிறது. அந்த போதையில் இருக்கும் அன்பைக் குடித்து உனது சுக்ருதத்தை (நல்ல அதிர்ஷ்டத்தை) அனுபவிக்கவும்.” .

விகலித-வசனம், பரிஹ்ருத-ரசனம், கதயா ஜகநம் அபி தானம்.
கிசலய-ஷயனே பகஜ-நயனே, நிதிம் இவ ஹர்ஷ-நிதானம் (ராதே)||6||

“ஓ நீல தாமரை கண்களையுடைய ராதா, உனது வசனங்களை அவிழ்த்து, பக்தி ரசத்தைக் குடி. புதிதாக முளைத்த இலைகளின் படுக்கையில், உங்கள் காதலரின் மகிழ்ச்சியான நிறைவோடு இருங்கள்.

ஹரிர் அபிமானி ரஜனி ரிதானிம், இயம் அபி யதி விரமாம் .
குரு மம வசனம், சத்வார-ரச்சனம், பூராய மாதுரிபு-காமம்(ராதே) ||7||

“இப்போது ஸ்ரீ ஹரி பெருமிதத்தால் நிறைந்திருக்கிறார். இரவின் கடைசிக் காலம் கடக்கப் போகிறது, எனவே என் ஆலோசனையை ஏற்றுக்கொள். இனியும் தாமதிக்காமல் உடனே சென்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் (மது) விருப்பங்களை நிறைவேற்றுங்கள்”

ஸ்ரீஜயதேவே க்ருத ஹரி சேவே, பானதி பரம-ராமியம்
ப்ரமுதித-ஹ்ருதயம், ஹரிம் அதி சதயம், நமத ஸுக்ருத-கமணியம்(ராதே) ||8||

புனிதர்களே! கிருஷ்ணர் உற்சாகமானவர், காரணமின்றி இரக்கமுள்ளவர், விதிவிலக்காக இனிமையானவர், நல்லொழுக்கமுள்ளவர் மற்றும் விரும்பத்தக்க அனைத்து குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர். மிகவும் மயக்கும் கவிதைகளை இயற்றியவரும், ஸ்ரீ ஹரியின் அடியவருமான ஸ்ரீ ஜெயதேவரின் இந்தப் பாடலைச் சொல்லி ஆனந்த இதயத்துடன் அவருக்கு வணக்கம் செலுத்துங்கள்.

****************

விகிரதி முஹு ஷ்வாஸன், அஷ புரோ முஹுர் ஏக்ஷ்ணதே
ப்ரவிஷதி முஹுர், குஞ்சன் குஞ்சன், முஹுர் பஹு தம்யதி |
ரசாயதி முஹுர் ஷய்யம், பர்யகுலம், முஹுர் ஏக்ஷ்ணதே
மதன-கடன-க்லாந்த:- காண்டே , ப்ரியஸ் தவ வர்ததே ||9||

“இடைவிடாமல் பெருமூச்சு விடுகிறார், அவர் தனது துயரத்தை ஊற்றுகிறார். வெற்று திசைகளை முடிவில்லாமல் தேடுகிறான். ஒவ்வொரு முறையும் தனக்குத்தானே முனுமுனுத்துக்கொண்டு காட்டுக்குள் நுழையும்போது மூச்சுத் திணறுகிறது. வெற்றுக் குழப்பத்துடன் உங்களின் அன்பின் படுக்கையை மீண்டும் மீண்டும் உருவாக்குகிறார். ஏய் ராதா, உன் ப்ரியா உன் விரஹாவை அனுபவிக்கிறாள்.

த்வத்-வாம்யேன, சமம், சமக்ரம் அதுனா, திக்மம்-ஷுரஸ் தம்கதோ
கோவிந்தஸ்ய-மனோரதேன-ச-சமம், ப்ராப்தம், தம சந்த்ரதம் |
கோகனம், கருணா-ஸ்வநேன சத்ருஷி, திர்கமத்-அப்யர்தனா
தன் முக்தே, விபலம், விலம்பனம் அசௌ , ரம்யோ அபிஷ-ரக்ஷண: ||10||

“உங்களுடைய மாறுபட்ட மனநிலையுடன், சூரியனும் அஸ்தமித்தது. கிருஷ்ணனின் ஆசையுடன் இருளும் உக்கிரமாகி விட்டது. இரவில் பரிதாபமான குரலில் புலம்பும் தனிமையான சக்ரவ்ட்கா பறவையின் தொடர்ச்சியான அழுகைப் போல, எனது கோரிக்கையும் பயனற்றதாகிவிட்டது. திகைத்தவனே, நான் உன்னிடம் நீண்ட நாட்களாக மன்றாடுகிறேன். இனி தாமதிப்பதால் பயனில்லை”

ஆஷ்லேனாத் அனு, கும்பனாத் அனு, நகோ-லேகாத், அனு ஸ்வாந்தஜா…
ப்ரோத்போதாத் அனு, ஸம்ப்ரமாத், அனு ரதாரம்பாத், அனு ப்ரிதாயோ:… |
அன்யார்த்தம் கதயோ:, ப்ராமன் மிலிதயோ:, ஸம்பாஷனைர் ஜானதோ:
தம்பத்யோர் இஹ, கோ ந கோ ந தாமஸி, விருதா-விமிஷ்ரோ ரஸ: ||11||

“இருளில் சந்திக்கும் காதலர்கள் அன்பின் மயக்கம் தரும் உயரங்களை தழுவி முத்தமிடுகிறார்கள். இருப்பினும், இங்கே மனநிலை வேறுபட்டது.

ச-பய-சகிதம், வின்யாஸ் யாந்திம், தஷாம் திமிரே
பதி ப்ரதிதரு முஹு: ஸ்தித்வா, மந்தம் பதானி விதன்வதிம் |
கதம் அபி ரஹ: ப்ராப்தம், அங்கைர் அனங்க-தரங்கிதி:…
சுமுகி, சுபக: பஷ்யன், ச த்வாம் உபைது, குடார் ததாம் ||12||

“இருண்ட பாதையில் பயமுறுத்தும் பார்வையை செலுத்தும்போது, ​​ஒவ்வொரு மரத்திலும் நின்று, மெதுவாக உங்கள் அடிகளை அளந்தால், நீங்கள் எப்படியாவது ஒதுக்குப்புறமான இடத்திற்கு வந்துவிடுவீர்கள். கிருஷ்ணர் உனக்காகக் காத்திருக்கிறார்!அவர் உங்கள் வருகையைக் கொண்டாடட்டும்.”

ராதா-முக்த-முகாரவிந்த-மதுப:, ட்ரைலோக்ய-மௌலி-ஸ்தாலி
நேபத் யோ…சிதா, நிலா-ரத்னம் அவனி, பரா அவதாரா, அந்தக: |
ஸ்வச்சந்தம் வ்ரஜ-சுந்தரி, ஜன-மனஸ்-தோஷ-பிரதோஷ ஷிரோù…
கம்ச-த்வம்சனா-தும-கேதுர்- அவது, த்வாம் தேவகி-நந்தன: ||13||

ராதையின் தாமரை முகத்தின் தேனைக் குடிக்கும் பம்பல்பீ அவர். அவர் மூன்று உலகங்களின் முகடு-மணியான பிருந்தாவனத்தின் நீலமணி ஆபரணம். இரவுப் பொழுதைப் போலவே, வ்ரஜாவின் அழகிய கோபியர்களைத் திருப்திப்படுத்த அவர் இயல்பாகவே திறமையானவர். அவர் பூமியின் மீது அதிக சுமைகளை சுமக்கும் ஆக்கிரமிப்பு அனுபவவாதிகளை நிர்மூலமாக்குகிறார். அவர் தூமகேது நட்சத்திரம் போன்றவர், கம்சனுக்கு அழிவை முன்னறிவிப்பவர். தேவகியின் மகனான அந்த ஸ்ரீ கிருஷ்ணரே உங்கள் அனைவரையும் காக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
அபிசாரிக வர்ணனே, ஸகாங்க்ஷ புண்டரிகாஶோ நாம, பஞ்சம ஸர்க:

ராகம்: சங்கராபரணம்; ஆதி தாலா

அத தம் கந்து மாஷக்தம், சிர மனுரக்தம், லதா….க்ருஹே, த்ரிஸ்த்வா |
தக்-சரிதம்… கோவிந்தே, மனசிஜா-மண்டே… சகி ப்ராஹா | |

“ராதா மலர்ந்த கொடிகளின் அறையில் அமர்ந்திருந்தாள். ராதா கிருஷ்ணரின் சகவாசத்தை விரும்பினாலும் அவரிடம் செல்ல முடியாமல் இருப்பதைக் கண்ட சாகி, ராதாவின் நிலையை கோவிந்தனிடம் விவரித்தார்.

பச்யதி திசி திசி ரஹஸி பவந்தம் |
த்வத்-ஆதார-மதுர-மதுனி பிபந்தம் ||1||
நாத ஹரே சிதாதி ராதா வாச-கே ||த்ருவபதா ||

“ஓ ஹரி, நீ அவளுக்கு ஒரே அடைக்கலம். ஸ்ரீ ராதா சோதனையிடும் இடத்தில் விரக்தியின் ஆழத்தில் மூழ்குகிறாள். அவள் வேதனையில் இருக்கிறாள். எல்லாத் திசைகளிலும், அவள் இதயத்தின் மையத்திலும், அவள் உதடுகளின் இனிமையான அமிர்தத்தைக் குடிப்பதில் மிகவும் திறமையான உன்னைப் பார்க்கிறாள். ”

த்வத்-அபிசரா-ரபசேனா வாலந்தி |
படதி பதனி கியாந்தி காலந்தி ||2||

“உன்னைச் சந்திக்கும் அவசரத்தில், அவள் சில படிகளில் தடுமாறி கீழே விழுகிறாள்”.

விஹித-விசதா-பிஸ-கிசலய-வலயா |
ஜீவதி பரம் இஹ தவ ரதி-கலயா ||3||

“அவள் வளையல்கள், புடவைகள், மோதிரங்கள், கவசங்கள், கழுத்தணிகள் மற்றும் களங்கமற்ற வெள்ளைத் தாமரை-இழைகள் மற்றும் புதிதாக முளைத்த இலைகளால் செய்யப்பட்ட மற்ற ஆபரணங்களை அணிகிறாள். அவள் மீண்டும் உன்னுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையில் மட்டுமே வாழ்கிறாள்.

முஹூர் அவலோகித-மான-லீலா |
மது-ரிபுரஹம் இதி பாவனா-சிலா ||4||

“ஓ கிருஷ்ணா, அவளுடைய பிராணன் உன்னுடன் ஒன்றாகிவிட்டது. ‘நான் மதுசூதனா’ என்று கற்பனை செய்து கொண்டு, உங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தன் ஆபரணங்களை உற்றுப் பார்க்கிறாள்.

த்வரிதம் உபைதி ந கதம் அபிசாரம் |
ஹரிரிதி வததி சகிம் அனுவாரம் ||5||

“ஏன் ஹரி என்னை சந்திக்க சீக்கிரம் வரமாட்டான்?” அவள் இடைவிடாமல் தன் சகியிடம் (நண்பன்) கேட்கிறாள்.

ஸ்லியாதி சும்பதி ஜல-தார-கல்பம் |
ஹரிரூபகத இதி திமிரம் அனல்பம் ||6||

அடர்ந்த இருளில், அவள் உருவம் போன்ற மேகத்தைத் தழுவி முத்தமிட்டு, “ஹரி வந்துவிட்டான்” என்று கூறுகிறாள்.

பவதி விலாம்பினி விகலிதா-லஜ்ஜா |
விலாபதி ரோதிதி வாசக-சஜ்ஜா ||7||

“ராதா வெளி உணர்வுக்குத் திரும்பியதும், நீங்கள் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்தவுடன், அவள் எல்லா வெட்கத்தையும் இழந்து சத்தமாக அழத் தொடங்குகிறாள்.”

ஸ்ரீ-ஜெயதேவா-காவேர் இடம் உதித்தம் |
ரசிக-ஜன தனுதம் அதிமுதிதம் ||8||

கவிஞர் ஜெயதேவாவின் இந்தப் பாடல் ரசத்தை ருசிப்பதில் வல்லவர்களின் உள்ளங்களில் மிகுதியான மகிழ்ச்சியை எழுப்பட்டும்.

****************

விபுல-புலக-பலிம்- ஸ்பித-சேத்-கார மாந்தர்-
ஜனிதா-ஜாதிமம்-ககு, வ்யகுலம் வ்யஹரந்தி |
தவகி தவ விதத், அமண்ட-கந்தர்ப-சிந்தம்
ரச-ஜல-நிதி-மக்னம், தியான-லக்னா, மிருகக்ஷி ||9||

“அவள் உடல் ஏக்கத்தால் துடிக்கிறது; குழப்பமான வார்த்தைகளில் அவள் மூச்சு உறிஞ்சும்; ஆழ்ந்த பயத்தில் அவள் குரல் உடைகிறது-உன் தீவிர எண்ணங்களால் ஆவேசப்பட்டது. ராதை உன் விரகத்தில் மூழ்கி, தன் தியானத்தில் உன்னோடு ஒட்டிக்கொண்டு உயிருடன் இருக்க முயல்கிறாள்”

அங்கேஷ்வ பரம், கரோதி பஹுஷா:, பத்ரே’பி சஞ்சாரிணி…
ப்ராப்தம் த்வாம்- பரிஷங்கதே விதனுதே, ஷய்யம் சிரம் த்யாயதி |
இத்ய கல்ப-விகல்ப-தல்ப-ரசான, சங்கல்ப-லீலாஷத-
வ்யசக்தாபி- வினா. த்வயா வர-தனுர், நைஷாம் நிஷாஷம் நேஷ்யதி ||10||

“அவள் தன்னை ஆபரணமாக்கிக் கொள்கிறாள், இலைகள் சலசலக்கும் போது, ​​’ஓ, நீ வந்துவிட்டாயா’ என்று நினைத்துக் கொண்டு எதிர்பார்ப்பில் நிறைந்திருக்கிறாள். அவள் ஒரு மென்மையான படுக்கையை உருவாக்கி, தியானத்தில் நீண்ட நேரம் காத்திருக்கிறாள். ஆபரணங்கள் மற்றும் கற்பனைகளின் படுக்கையை உருவாக்கி, தனது அழகான விளையாட்டில் உங்களைப் பற்றிய நூறு விவரங்களைத் தூண்டுகிறார். ஆனால் பலவீனமான பெண் நீங்கள் இல்லாமல் இரவில் வாழ மாட்டாள்.

கிம் விஷ்ராம்யஸி, கிருஷ்ண-போகி-பவனே, பாந்திர-பூமி-ருஹி
ப்ரதர் ​​யாஸி ந த்ரிஷ்டி-கோசாரம் இத:, ஸாநந்த-நந்தே…ஸ்பதம் |
ராதாயா வசனம் தத் அத்வாக-முகாந் நந்தாந்திகே கோபதோ
கோவிந்தஸ்ய, ஜெயந்தி ஷாயம், அதிதி-ப்ரஷஸ்த்ய-கர்பா கிரா: ||11||

நான் ஸ்ரீ ராதா வீட்டில் விருந்தினராக இருந்தபோது, ​​அவள் என்னிடம், ‘அண்ணே, இந்த பண்டிரா மரத்தின் அடிவாரத்தில் ஏன் ஓய்வெடுக்கிறீர்கள்? இங்கு விஷமுள்ள கருப்பு பாம்பு ஒன்று வாழ்கிறது. எழுந்து, உங்களுக்கு முன்னால் தெரியும் நந்தாவின் மகிழ்ச்சியான வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் ஏன் அங்கு செல்லக்கூடாது?’” ராதாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஒரு யாத்ரீகரின் உதடுகளிலிருந்து, கிருஷ்ணர் “அவருக்கு” ​​நன்றி கூறினார், ஸ்ரீ நந்த மகாராஜா தனது அறிக்கைகளின் உள் மனநிலையைப் புரிந்து கொள்ளாத வகையில். கோவிந்தரின் துதி வார்த்தைகள் ஜெயிக்கட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
சோத்கந்த-வைகுண்ட நம, சாஸ்தா சர்கா:

ராகம்: அஹிரி; ஜும்பா

அத்ராந்தரே ச குலத-குல, வர்த்ம-காதா
சஞ்ஜாத-பதாக, இவ ஸ்புடலா.லாஞ்சன-ஸ்ரீ:|
விருந்தா-வனந்தரம், அதிபயத், அம்சு-ஜாலை:
திக்-சுந்தரி, வதனா-சந்தன-பிந்துர் இந்து: ||

“இரவு வந்ததும், மனநிலை பள்ளம் படிந்த கறைகளைக் காட்டியது, பிருந்தாவனத்தின் ஆழத்தில் நிலவொளியுடன் ஒளி வீசியது. வானத்தின் முகத்தில் சந்தனப் பொடி படிந்த பொட்டு போல சந்திரன் தோன்றினான்.”

பிரசரதி ஷஷ-தார-பிம்பே விஹித-விலம்பேச, மாதவே விதுரா |
விரசித-விவித-விலாபம் ச-பரிதாபம்சகார உச்சை: | |

“சந்திரன் உதயமாகி, மாதவா சும்மா இருந்த போது, ​​தனிமையில் இருந்த ராதா, பரிதாபமான துக்கத்தில் தன் வலியை உரக்க அழுதாள்.”

கதிதசமயே’பி ஹரிரஹஹ ந யயௌ வனம் |
மம விபலா மிதா மமல ரூபம் அபி யௌவனம் ||1||

யாமி ஹே கம் இஹ சரணம் சகி-ஜன-வசன-வஞ்சிதஹம் ||த்ருவபதம்||

“வாக்களிக்கப்பட்ட நேரத்தில் ஹரி காட்டிற்கு வராததால் எனது மாசற்ற இளமை, அழகு அனைத்தும் வீணாகிவிட்டன. நான் என் நண்பர்களால் ஏமாற்றப்பட்டேன், இப்போது நான் யாரிடம் அடைக்கலம் தேடுவது?”.

யதனு கமனாய நிஷி, கஹனம் அபி ஷிலிதம் |
தேன மம ஹ்ருதயம் இடம், அசம-ஷர-கிளிதம் (யாமி ஹே கம் இஹ சரணம்)||2||

“இத்தகைய ஒரு இருண்ட இரவில் நான் யாரைப் பின்தொடர்ந்து இந்த காட்டுக் காட்டிற்குள் நுழைந்தேனோ, அந்த நபர் என் இதயத்தை அன்பின் அம்புகளால் துளைக்கிறார். நான் யாரிடம் அடைக்கலம் தேடுவது?”

மம மரம் ஏவ வரம், இதி விதத-கேதன |
கிம் இஹ விஷஹாமி, விரஹானாலம் அசேதன (யாமி ஹே கம் இஹ ஷரணம்) ||3||

“இனிமேலும் இந்த உடலை பராமரிப்பதில் பயனில்லை. நான் உடனே இறக்க வேண்டும். நான் உணர்வற்றவனாக மாறுகிறேன். இந்த சகிக்க முடியாத பிரிவினையை நான் எப்படி தாங்குவது?”.

மம ஹாஹா விதுரயதி, மதுர-மது-யாமினி |
கபி ஹரிம் அனுபவவதி, க்ருத-சுக்ருத-காமினி (யாமி ஹே கம் இஹ சரணம்)||4||

“ஓ, நான் எவ்வளவு துரதிர்ஷ்டசாலி. இந்த விதிவிலக்கான இனிமையான வசந்த இரவு தனிமையின் வலியால் என்னை நிலைகுலையச் செய்கிறது. இது போன்ற ஒரு நேரத்தில், சில உணர்ச்சிவசப்பட்ட இளம்பெண்கள் ஹரியின் தயவின் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள் என்பது உறுதியானது.

அஹஹா கலயாமி வளையாடி-மை-பூஷணம் |
ஹரி-விரஹ-தஹன-வஹனேன பஹு-தூஷணம் (யாமி ஹே கம் இஹ சரணம்) ||5||

“நான் அணியும் ஒவ்வொரு வளையலும், நகைகளும், ஹரியின் துறவறத்தின் நெருப்பைச் சுமந்து, என்னை வலியச் செய்கின்றன.”

குசும-சுகுமார-தனும், அசம-ஷர-லீலயா |
பிரகதி ஹ்ருதி ஹந்தி மாம், அதி விஷம-ஷிலயா (யாமி ஹே கம் இஹ சரணம்) ||6||

“என் மார்பில் இருக்கும் இந்த வன மலர் மாலையும் கூட மன்மதனின் அம்புகள் போன்ற பயங்கரமான அடிகளை என் உடலில் செலுத்துகிறது, இது மென்மையான பூக்களை விட மென்மையானது.”

அஹம் இஹ நிவாஸாமி, நவி-கணித-வேதஷா |
ஸ்மரதி மதுசூதனோ, மமாபி ந சேதஸ (யாமி ஹே கம் இஹ ஷரணம்) ||7||

“இந்தப் பயங்கரமான கரும்புகைக் காடுகளுக்கு நடுவே நான் கிருஷ்ணருக்காக அச்சமின்றி அமர்ந்திருக்கிறேன். ஆனால் மதுசூதனன் ஒரு முறை கூட என்னை நினைவில் கொள்ளாதது எவ்வளவு வியப்பாக இருக்கிறது.

ஹரி-சரண-ஷர்ணா, ஜெயதேவ-கவி-பாரதி |
வஸது ஹ்ருதி, யுவதி ரிவா, கோமலா-கலாவதி (யாமி ஹே கம் இஹ ஷரணம்)||8||

சகல கலைகளிலும் வல்லவளான ஓர் அழகிய இளம்பெண்ணின் குணங்கள் ஓர் இளைஞனின் இதயத்தில் எப்பொழுதும் ஒளிர்வது போல, ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நிபந்தனையின்றி சரணடைந்த ஸ்ரீ ஜெயதேவரின் இந்த இன்பமான பாடல் எப்பொழுதும் அருளட்டும். பக்தர்களின் இதயங்கள்.

****************

தத்-கிம் காமபி காமினிம், அபிஸ்ருத:, கிம் வா கலா-கேலிபி:…
பத்தோ பந்துபி:, அந்தகாரிணி வனாப்யர்ணே, கிமுத் ப்ராம்யதி |
காந்தா: கிளாந்த-மனா, மனக் அபி, பதி பிரஸ்தா தும் ஏவாக் ஷம:….
சங்கேதி-க்ருத-மஞ்சு-வஞ்சுல-லதா-குஞ்சே’பி , யான் நகதா:… ||9||

“ஸ்ரீ கிருஷ்ணர் என் உயிரை விட எனக்கு மிகவும் பிடித்தவர். மலரும் கொடிகளின் நியமிக்கப்பட்ட அறைக்கு அவர் ஏன் வரவில்லை? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? அவர் மற்றொரு உணர்ச்சிமிக்க பெண்ணுடன் முயற்சிக்கு சென்றாரா? தன் நண்பர்களுடன் விளையாடும் மகிழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்தை அவர் கவனக்குறைவாக அனுமதித்தாரா? இந்த அடர்ந்த மரங்களின் நிழலால் ஏற்பட்ட பயங்கரமான இருளில் இந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் அலைகிறானா? ஒரு அடி கூட நடக்க முடியாத அளவுக்கு என்னைப் பிரிந்த உணர்வுகளால் அவர் பலவீனமடைந்துவிட்டாரா?

ராகம்: சாரங்கா ; ஆதி தாலா

அதா… கடம், மாதவ மாந்தரேண
சகிமியம், வீக்ஷ்ய விஷத-முகம் |
விஷங்கமானா, ரமிதம் கயாபி
ஜனார்தனம் த்ருஸ்தவத், ஏதத் äஹ ||

ராதா, மாதவன் இல்லாமல், நாக்கு பிடிப்பும், நாக்கு பிடிப்பும் இல்லாமல் திரும்பி வந்ததைக் கண்ட ராதா, சில கோபி ஜனார்த்தனனை மகிழ்விப்பதைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பி, அவளிடம் சொன்னாள்.

ஸ்மர-சமரோசித-விரச்சித-வேஷா |
கலிதா-குசும-பார-விடுலித-கேஷா ||1||

கபி மாதுரிபுனா விலாசதி யுவதிர் அதிக-குணா ||த்ருவபதா||||

“ஓ சகி, அவள் ஒரு காமப் போருக்குத் தகுந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்திருக்கிறாள். அவளது தளர்ந்த கூந்தலில் மலர்கள் சிக்குண்டு கிடக்கின்றன. என்னை விட அதிக தகுதியுள்ள சில இளம்பெண்கள், மதுரிபுவுடன் மகிழ்ச்சியுடன் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹரி-பரிரம்பான-வலித-விகாரா |
குச்ச-கலஷோபரி தரலிதா-ஹரா (கபி மாதுரிபுனா)||2||

“கிருஷ்ணன் அவளை ஆழமாக அணைத்துக் கொண்டபோது, ​​அவள் சிற்றின்பக் கிளர்ச்சியால் திகைக்கிறாள். அவளது தோலின் ஒவ்வொரு துளையின் சிலிர்ப்பிலும் தொடங்கி அவள் உடல் மாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்க வேண்டும், அவளுடைய கழுத்தணி அவளுக்கு அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருக்க வேண்டும்.

விச்சலாட்-அலக-லலிதனனா-சந்திரா |
தத்-ஆதார-பான-ரபஸ-க்ருத-தந்த்ரா (கபி மாதுரிபுனா) ||3||

“அவளுடைய சந்திரன் போன்ற முகத்தின் அழகு அவளது சுருள் முடிகளால் மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் கிருஷ்ணரின் உதடுகளின் அமிர்தத்தைக் குடிக்கும் பேராசையால் அவள் கண்கள் ஆனந்தமாக மூடப்பட வேண்டும்.”

சஞ்சல-குண்டல-லலிதா-கபோல |
முகரித-தாஷன-ஜகனா-கதி-லோலா (கபி மாதுரிபுனா) ||4||

“அவளுடைய காதணிகள் ஆடும் போது அவளுடைய கன்னங்கள் இன்னும் அழகாக இருக்க வேண்டும். அவளது இடுப்பை நேர்த்தியாக அலங்கரித்திருந்த நகைப் புடவையில் உள்ள சிறிய மணிகள் நடுங்குவது போல் மிகவும் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தயிதா-விலோகிதா-லஜ்ஜித-ஹசிதா |
பஹு-விதா-குஜித-ரதி-ரஸ-ரசிதா (கபி மாதுரிபுனா) ||5||

“கிருஷ்ணன் அவளை அன்புடன் பார்க்கும்போது, ​​அவள் வெட்கப்பட்டு வெட்கத்துடன் சிரிக்கிறாள். அதீத பரவச நிலையில் மூச்சுத் திணறும்போது, ​​காக்கா அல்லது கலஹம்சா போன்ற பறவைகளின் சலசலப்பைப் போன்ற ஒரு தெளிவற்ற ஒலியை அவள் எழுப்பியிருக்க வேண்டும்.

விபுல-புலக-ப்ருது, வெபத்து-பங்கா |
ஷ்வசித-நிமிலிதா-விகாஸத்-அனகா (கபி மாதுரிபுனா) ||6||

“மன்மதன் பரவசத்தால் அவள் சிலிர்க்கப்படும்போது, ​​திகில் மற்றும் உடல் வலிப்பு அலைகள் போல அவளைக் கழுவுகிறது. அவள் கண்களை மூடிக்கொண்டு நீண்ட பெருமூச்சு விடுவதன் மூலம் கிருஷ்ணரிடம் அவளது முழுமையான உறிஞ்சுதல் வெளிப்படும்.

ஸ்ரம-ஜல-கன-பார-சுபக-சரீரா |
பரி பதி தோரசி ரதி-ரண-தீரா (கபி மாதுரிபுனா) ||7||

“அவளுடைய அழகான உடல் வியர்வைத் துளிகளால் மூடப்பட்டிருக்கும் போது அவள் இன்னும் கவர்ச்சியாகத் தோன்றுகிறாள். இறுதியாக கிருஷ்ணரின் மார்பில் தங்கும்போது அவள் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனித-ஹரி-ரமிதம் |
கலி-கலுஷம் ஜனயது பரிசமிதம் (துருவபதா) ||8||

ஸ்ரீ ஹரியின் காதல் நாடகத்தைப் பற்றிய ஸ்ரீ ஜெயதேவரின் விளக்கம், கலி யுகத்தின் தீய விளைவுகளைத் தணிக்கட்டும். (இது தேவையற்ற ஆசைகளிலிருந்து இதயத்தை சுத்தப்படுத்தட்டும்.)
அத்தியாயம் 15

ராகம்: சவேரி; ஆதி தாலா

விரஹா…பந்து-முராரி, முகம்புஜா-
த்யுதி ராயம், திரையன் அபி வேதனம்… |
விதுர் அதிவ தநோதி மனோ-புவ:
ஸுஹ்ருதயே ஹ்ருதயே மதன-வ்யதம்… ||

“மதுசூதனனின் தாமரை முகத்தைப் போன்ற தனிமையான நிலவு, காதலின் அழிவில் வாடி, என்னைப் பிரிந்து வாடிவிடும். ஆனால் சந்திரன் மன்மதனின் நண்பன், அது இன்னும் என் இதயத்தில் வேதனையை ஏற்படுத்துகிறது.

சமுதித-மதனே ரமணி-வதனே சும்பன-சலித்ததாரே கோபாலம் |
ம்ருக-மட-திலகம் லிகதி சபுலகம் ம்ருகமிவ ரஜனி-கரே கோபாலம்||1||

ரமாதே யமுனா-புலினா-வனே, விஜயீ முராரிரதுனா கோபாலம்||த்ருவபதா||||

“காதல் போரில் மாதுரிபு வெற்றி பெற்றவர். இந்த கவர்ச்சியான கோபி, அவளது தோலின் ஒவ்வொரு துவாரமும் மகிழ்ச்சியுடன் வெடிக்கிறது, இது பேரின்பத்தின் அவதாரம். ஸ்ரீ கிருஷ்ணர், சந்திரனில் உள்ள மானின் அடையாளத்தை ஒத்த கஸ்தூரியில் தனது முகத்தை அலங்கரிக்கிறார். அவனது தலைமுடியும் நின்று அவளை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. இப்போது அவர் தனது காதலியுடன் யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு காட்டில் காதல் செய்து வருகிறார். ”

கானா-சாய-ருச்சிரே ரசாயதி சிகுரே, தரலித-தருஅணனே கோபாலம் |
குருவாக-குசுமம் கபால சுஷமம், ரதி-பதி-முர்க-கனனே கோபாலம்||2||

“அவளுடைய தலைமுடி மிகவும் கறுப்பாகவும், மென்மையாகவும், சுருளாகவும், ஏராளமாகவும் இருக்கும், அது பல மழை மேகங்களை ஒத்திருக்கிறது. அல்லது மன்மதன் அல்லது காமதேவன் என்றழைக்கப்படும் மான் பயமின்றி அலையக்கூடிய அடர்ந்த காடாகத் தெரிகிறது. ஸ்ரீ ஹரி அவள் தலைமுடியில் வரிசைப்படுத்தப்பட்ட ரோஜா லாரல் மலர்கள் கருமேகங்களில் மின்னலைப் போல பிரகாசமாக பிரகாசிக்கின்றன.

கதயதி சுகனே குச்ச-யுக-ககனே, ம்ருக-மட-ருச்சி-ருஷிதே கோபாலம் |
மணி-சர மாமலம், தாரக-படாலம், நக-பதா-ஷஷி-பூஷிதே கோபாலம் ||3||

“அவர் அவளை மான் கஸ்தூரியால் பூசுகிறார் & இரவு வானத்தின் வானத்தின் மீது மாசற்ற நட்சத்திரங்களின் விண்மீன்களை வைப்பது போல், மயக்கும் முத்து மாலையால் அவளை அலங்கரிக்கிறார்.”

ஜித-பிஸ-ஷகலே ம்ருது-புஜ-யுகலே, கர-தல-நளினி-தலே கோபாலம் |
மரகத-வலயம் மது-கர-நிசயம், விதரதி ஹிம-சீதலே கோபாலம்||4||

“அவர் அவளது தாமரை இதழ் கையின் மேல் ஒரு இருண்ட நீலக்கல் வளையலை நழுவ விடுகிறார். தாமரை மிருதுவான தண்டை விட குளிர்ச்சியான அவளது கரங்களை தேனீக்கள் சூழ்ந்திருப்பது போல் தெரிகிறது.

ரதி-க்ருஹ-ஜகனே, விபுல பாகனே, மனசிஜ-கனகாசனே கோபாலம் |
மணி-மய-ரசனம், தோரண-ஹாசனம், விக்கிரதி க்ருத-வசனே கோபாலம்||5||

“அவள் தொடைகளில் ரத்தினக் கச்சையை வைத்தான்”

சரண-கிசலயே, கமலா-நிலையே, நக-மணி-கன-பூஜிதே கோபாலம் |
பஹிர்-அப வரம், யவக-பாரம், ஜனயதி ஹ்ருதி யோஜிதே கோபாலம் ||6||

” அவன் அவளது கால் நகங்களில் பளபளக்கும் லாக்கைப் பயன்படுத்துகிறான். உள்ளே லக்ஷ்மியின் இடத்தைக் கௌரவிக்க முத்துக்களால் சூடப்பட்ட மென்மையான தளிர்கள் போல அவர் இதயத்தில் கிடக்கிறார்.

த்யாயதி ஸுத்ருஷம், கம் அபி ஸுத்ருஷம், கல-ஹல-தார-சோதரே கோபாலம் |
கிம பல மவாசம், சிரமிஹ விரசம், வட சகி விட்ட போடரே கோபாலம் ||7||

“ஹலதராவின் சகோதரர் – அந்த கண்மூடித்தனமான கிருஷ்ணர் – அழகான கண்களுடன் சில கோபியின் அரவணைப்பில் மகிழ்ச்சியடைகிறார். எனவே சகீ, சொல்லுங்கள் – அவருடைய பிரிவால் பிணிக்கப்பட்ட இந்த மலர்க்கொடிகளில் நான் எவ்வளவு நேரம் காத்திருப்பேன்.

இஹ ரஸ-பானனே, க்ருத-ஹரி-குணனே, மது-ரிபு-பதா-சேவகே கோபாலம் |
கலி-யுக-சரிதம், ந வசது துரிதம், கவின் ரூப-ஜெயதேவகே கோபாலம் (துருவபதா)||8| |

கவிகளின் மன்னன் ஜெயதேவா, ஸ்ரீ ஹரியின் பொழுது போக்குகளை, அவனது தெய்வீக குணங்கள் முழுவதுமாக நிரம்பப் போற்றுகிறான். கலியுகத்தில் மிகவும் பரவலாக இருக்கும் துன்மார்க்க நடத்தையின் தவறு, ஸ்ரீ மதுசூதனனின் இந்த அடியாருக்குள் ஒருபோதும் நுழையக்கூடாது.

ராகம்: புன்னாகவரலி ; ஆதி தாலா

நயத: சகி, நிர்தயோ யதி ஷத:, த்வம் துதி கிம் துயஸே…
ஸ்வச்சந்தம், பஹு-வல்லப:…, ச ராமதே, கிம் தத்ர தே, துஷணம் |
பஸ்யாத்யம், ப்ரிய-சங்கமாய தயிதஸ்யா, அகுஷ்ய மானம், குணை:…
உட்காந்த ஹார்தி-பாரத் இவ, ஸ்பூத இடம் சேத: ஸ்வயம் யஸ்யதி ||

.
“சகி, அவர் இன்னும் வராதது உங்கள் மீது என்ன தவறு? பார்! இன்று என் இதயம் தீவிர ஆர்வத்தின் சுமையால் உடைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிரியமான கிருஷ்ணரின் குணங்களால் ஈர்க்கப்பட்டு, என் இதயம் அவரைச் சந்திக்கச் செல்லும்.

அணில-தரால-குவலய-நயனேன |
தபதி ந ச கிசலய-ஷயனேன ||1||

சகி யா ரமிதா வன-மலினா ||த்ருவபதம் ||

“அவரது கண்கள் நீல இரவு அல்லிகள் காற்றில் பறக்கின்றன. ஓ சகி! இறைவனின் வனமாலா (காட்டுப் பூ மாலை) அவளைத் தழுவுகிறது.

விகசித-சரசிஜ-லலிதா-முகேனா |
ஸ்பூதி ந ச மனசிஜ-விஷிகேனா ||2||

“வனமாலி கிருஷ்ணனால் அருளப்பட்ட அந்த அழகிய பெண்ணை மன்மதனின் பயங்கர அம்புகளால் துளைக்க முடியாது. அவரது வசீகரமான முகம் முழுவதும் மலர்ந்த தாமரை மலரை ஒத்திருக்கிறது”

அம்ருத-மதுர-ம்ருது-தார-வச்சனேன |
ஜ்வலதி ந ச மலையஜ-பவனேன ||3||

“கிருஷ்ணன் அந்த கோபியிடம் அமிர்தமான இனிய மற்றும் இனிமையான வார்த்தைகளைப் பேசுகிறான். மலாயா தென்றலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவள் ஒருபோதும் எரிவதை உணர முடியாது.

ஸ்தல-ஜல-ருஹ-ருச்சி-கர-சரணேன |
லுததி ந ச ஹிம-கர-கிறேன ||4||

“வனமாலி கிருஷ்ணரின் கைகளும் பாதங்களும் பூக்களைப் போல குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கின்றன. அவர்களால் மகிழ்ந்த வசீகரமான பெண், சந்திரனின் கதிர்களில் எரிந்து பூமியில் சுற்ற வேண்டியதில்லை.

சஜல ஜலதா-சமுதய-ருசிரேண |
தலதி ந ச ஹ்ருதி விரஹா பாரேணா||5| |

“வனமாலி கிருஷ்ணா, புதிதாக ஒடுங்கிய மழைமேகத்தை விடவும், வசீகரமாகவும், புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கிறார். கிருஷ்ணனுடன் இருக்கும் அந்த கோபி நீண்ட காலப் பிரிவின் வடிவில் பெரிய அளவிலான விஷத்தால் ஒருபோதும் எரிக்கப்பட மாட்டார்.

கனக-நிச்சய-ருச்சி-சுசி-வசனேன |
ஸ்வசிதி ந ச பரிஜன-ஹஸனேன ||6||

“அவருடைய பிரகாசமான பீதாம்பரம் தங்கம் போல் ஜொலிக்கிறது. இந்த அதிர்ஷ்டசாலிப் பெண் தன் சொந்தக்காரர்களால் கிண்டல் செய்யப்பட்டாலும், அவளிடம் கையெழுத்திடும்.

ஸகல-புவன-ஜன-வர-தருணேன |
வஹதி ந ச ருஜம் அதி கருணேன ||7| |

“முழு பிரபஞ்சமும் அவரது அழகால் தொட்டது. கிருஷ்ணரின் வசீகரம், இளமை வடிவம் பளபளப்பானது. இப்போது அவனைக் காதலித்துக்கொண்டிருக்கும் அந்த கோபி, அவன் மிகுந்த இரக்கமுள்ளவனாக இருப்பதால், அவள் இதயத்தின் மையத்தில் பிரிவின் பயங்கரமான வலியை உணரமாட்டான்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனித-வச்சனேன |
ப்ரவிஷது ஹரிர் அபி ஹ்தயம் அனேனா ||8||

ஸ்ரீ ஜெயதேவா இங்கு வழங்கிய வார்த்தைகளால், ஸ்ரீ ஹரி பக்தர்களின் இதயங்களில் நுழையட்டும்.

****************

மனோ-பவ நந்தனா, சந்தனா நிலா
-பிரசிதரே தக்ஷிணா, முஞ்ச வாமதம் |
க்ஷணம் ஜகத்-ப்ராண, நிதாய மாதவம்…
புரோ மம ப்ராண-ஹரோ… பவிஷ்யஸி ||9||

“சந்தன மலைக் காற்றே, அன்பின் பேரின்பத்தைப் பரப்பும் தென்றல் காற்றை நீ வீசுவது போல, என்னை அமைதிப்படுத்து! முரண்பாடு முடிவுக்கு! ஏ பிராணா, நீ ஒரு கணம் மாதவாவை என்னிடம் அழைத்து வந்தால், என் உயிரை நீ எடுக்கலாம்!”

ரிபூர் இவ சகி-சம்வசோ’யம், ஷிகிவ ஹிமானிலோ
விஷம் இவ, சுதா-ரஷ்மிர், யஸ்மின் துனோதி மனோ-கேட்… |
ஹ்ருதய மதயே தஸ்மின்ன் ஏவம், புனர் வலதே பலாத்
குவலய-த்ரிஷம், வாம காமோ, நிகாம-நிரகுஷ: ||10| |

“ஓ சகீ, எதிரிகளின் சங்கமம் போல என் நண்பர்களின் மகிழ்ச்சியை என் இதயம் உணர்கிறது. குளிர்ந்த மெல்லிய தென்றல் ஒரு தியாகத்
தீயாகத் தெரிகிறது, நிலவு எனக்கு விஷம் போல் வலியைத் தருகிறது. கிருஷ்ணா என் இதயத்தில் வேதனைப்படுகிறார். ஆனால் அப்போதும் நான் அவரை திரும்ப அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அழகான அல்லி போன்ற கண்களை உடைய பெண்கள் அன்பின் வலியை உணர்கிறார்கள்.

பாதாம் விதேஹி, மலயநிலா பஞ்ச-பானா
ப்ரானான் க்ருஹா ந, ந க்ருஹம், புனர் ஆஷ்ர-யிஷ்யே |
கிம் தே க்ருதாந்த-பாகினி, க்ஷமாய தரங்கை:
அங்கனி, ஸிஞ்ச மம-ஶ்யாம்யது, தேஹ-தாஹ: ||11||

“மன்மத அம்புகளால் என் பிராணனை எடு, நான் இனி வீட்டிற்கு செல்லமாட்டேன். ஜானுமா, நீ ஏன் கருணையுடன் இருக்க வேண்டும், என் கைகால்களை அலைகளால் மூழ்கடித்துவிடு, என் உடலின் எரிப்பு தணியட்டும்!”

சந்தர-நாட- புரந்தரபி-திபிஷத், பிருந்தை: அமந்தர தரத்
அனம்பிரி: மகுதேந்திர நீல மணிபி:, சந்தர்ஷிதே நிவாரோ…
த்வத் சந்தம், மகரந்த்ர சுந்தரகலா, மந்தாகினி மேதுரம்
ஸ்ரீ கோவிந்த பதரா விந்தம், அசுப- ஸ்கந்தயா||-12||

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கர மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாச ஜெயதேவ க்ருதவ்
விப்ர லப்த வர்ணனே, நகர நாராயணா நம, சப்தம சர்க:
அத்தியாயம் 17

ராகம்: அரபி ; ஆதி தாலா

அதா கதை அபி, யாமினி வினியா….
ஸ்மர-ஷர-ஜர் ஜரிதா…பி, ச பிரபதே |
அனுநயா-வசனம், வதந்தம்…
அக்ரே ப்ரணதம் அபி, ப்ரியா மஹா சப்ய-ஸுயம் ||

இரவு முழுவதும் போராடிய பிறகு, அவள் மன்மத அம்புகளால் சோர்வடைந்தாள். மன்னிப்புக் கோரி அவள் முன் குனிந்தபடி அவள் கோபத்துடன் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

ரஜனி-ஜனதா-குரு-ஜாகர-ராக, கஷாயிதம் அலச-நிவேஷம் |
வஹதி நயனம், அனுராகம் இவ ஸ்பூதம், உதித-ரசாபி நிவேஷாம் கிருஷ்ணா||1||

“உறக்கமில்லாத இரவு உணர்ச்சியிலிருந்து உங்கள் சிவந்த கண்கள் மெதுவாக மூடுகின்றன. இப்போதும் அவர்கள் அந்த அழகான வ்ரஜ-கோபியரிடம் ஒரு சக்திவாய்ந்த மற்றும் அதிகரித்து வரும் பற்றுதலை வெளிப்படுத்துகிறார்கள்.

யாஹி மாதவ யாஹி கேசவ, மா வாதா கைதவ வதம் |
தம் அனுசர சரசிருஹ-லோச்சனா, யா தவ ஹரதி விஷதம் ||த்ருவபதா||||

போ மாதவா! போ கேசவா! என்னிடம் பொய் சொல்லாதே, அந்த தாமரை கண் கொண்ட கோபியின் பின்னால் செல். அவள் உங்கள் விரக்தியை எளிதாக்குவாள்.

கஜ்ஜால-மலின-விலோசன-சும்பனா, விரச்சித-நிலிம-ரூபம் |
தஷன-வசனம் அருணம் தவ கிருஷ்ணா, தனோதி தனோ ரனு ரூபம் கிருஷ்ணா ||2||

“கொல்லிரியம் தடவிய கண்களை முத்தமிட்டதால் உங்கள் அழகான சிவப்பு உதடுகள் கருமையாகிவிட்டன.”

வபுரனு சரதி, தவ ஸ்மர சங்கர, கார-நகர-கத-ரேகம் |
மரகத-ஷகல-கலித-கலா தௌத-லிபெரிவ ரதி ஜெய-லேகம் கிருஷ்ணா ||3||

“உன் உடம்பில் அந்த கோபியின் கூரிய நகங்களில் கீறல்கள் பதிந்துள்ளன. வெற்றிச் சான்றிதழ் மரகதச் சுவரில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

சரண-கமலா-கலதா, லக்தக-சிக்தம், இடம் தவ ஹ்ருதய முதாரம் |
தர்சயதிவ பாஹிர், மதன-த்ருமா, நவ-கிசலய-பரிவாரம் கிருஷ்ணா ||4||

“உங்கள் கொண்டாடப்பட்ட மார்பு, அந்த கவர்ச்சியான பெண்ணின் தாமரை பாதங்களில் இருந்து சிவப்பு பாதத்தின் அடையாளங்களால் நிறமாக உள்ளது. உங்கள் இதயத்தின் மையத்தில் அமைந்துள்ள காம ஆசையின் உறுதியாக வேரூன்றிய மரம் அதன் புதிதாக துளிர்விட்ட சிவப்பு இலைகளை வெளிப்புறமாக வெளிப்படுத்துவது போல் தெரிகிறது.

தாஸன-பதா பவதாதார-கத மம ஜனயதி சேதஸி கேதம் |
கதயதி கதம் அதுனாபி மயா ஸஹ தவ வபுரேதத் அபேதம் கிருஷ்ணா||5||

“உன் உதடுகள் அந்த சிற்றின்பப் பெண்ணின் பற்கள் கடித்ததால் வெட்டப்பட்டு காயம் அடைந்துள்ளன. இதைப் பார்த்து, என் இதயத்தில் துக்கம் எழுகிறது, ஆனால் இப்போது கூட, ‘உன் உடல் என்னிடமிருந்து பிரிக்கப்படவில்லை. நாங்கள் வேறுபட்டவர்கள் அல்ல.

பஹிரிவ மலினா, தாரம் தவ கிருஷ்ணா, மனோ’பி பவிஷ்யதி நூனம் |
கதமாத வஞ்சயஸே ஜனம், அனுகதம் அசம ஷர-ஜ்வர-தூனம் கிருஷ்ணா ||6||

“உன் இதயம் இருளாக இருக்க வேண்டும் கிருஷ்ணா! உங்கள் அன்பினால் சித்திரவதை செய்யப்பட்ட ஒரு உண்மையுள்ள உயிரினத்தை எப்படி ஏமாற்ற முடியும்?”

பாமதி பவன் அபல-கவாலயா, வநேஷு கிமத்ர விசித்ரம் |
பிரதயாதி பூதானி, கைவ வது-வதா, நிர்தயா-பால சரித்திரம் கிருஷ்ணா ||7||

“நீங்கள் காட்டில் அப்பாவிப் பெண்களைத் தேடி அலைகிறீர்கள். இதில் என்ன ஆச்சரியம்? உன் குழந்தைப் பருவத்திலேயே பூதனாவைக் கொன்றதன் மூலம், உனது கொடூரமான இரக்கமற்ற தன்மையை எங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டாய்.”

ஸ்ரீஜயதேவ-பனித-ரதி வஞ்சிதா, கண்டித-யுவதி-விலாபம் |
ஷ்ருணுதா ஸுதா மதுரம் விபுதா, வததாபி ஸுகம் ஸுதுரபம் கிருஷ்ணா||8| |

கற்றறிந்தவர்களே, அமிர்தத்தை விடவும் இனிமையான ராதை என்ற இளம் பெண்ணின் துரோகம் மற்றும் புலம்பலை நீங்கள் கேட்கலாம். சொர்க்கம் அத்தகைய இனிமையான அமுதத்தை அரிதாகவே அளிக்கிறது.

********

தா வேதம், பஷ்யந்தியா:, ப்ரசாரத்-அனுராகம் பஹிர் இவ,
ப்ரிய-பதா-லக்த-ச்சுரிதம், அருணா-சாயா ஹ்ருதயம்… |
மமத்யா ப்ராக்யாத-ப்ராணயா-பார, பங்கேன கிதவ
த்வதா-லோகாத் ஷோகாத் அபி, கிம் அபி லஜ்ஜாம், ஜனயதி ||9||

அவளது லாக் வர்ணம் பூசப்பட்ட பாதங்கள் உங்கள் இதயத்தில் அன்புடன் விட்டுச் சென்ற சிவப்பு கறைகள், என்னை அன்பாக (அனுராகம்) பார். ஏ ஏமாற்றுக்காரனே! அவமானம் மட்டுமே என் இதயத்தில் நான் உணரும் துக்கத்தை மிஞ்சுகிறது.

ப்ரதர் ​​நீல நிஷோலம், அச்சுத முர சம்வீத, பேதம் சுகம்…
ராதாயா ஸஹிதம், விலோக்ய ஹசதி ஸ்வைரம், சகி மண்டலே…
கிரிடா சஞ்சல மஞ்சலம் நயனயோ:, ஆதயா, ராதா நானே
ஸ்மேர ஸ்மேர முகோய மஸ்து, ஜகத்நந்த ஆத்மஜ: ||10||

ஒரு நாள் காலையில், முற்றிலும் திகைத்த நிலையில், அச்யுத கிருஷ்ணன் ராதாவின் நீல நிற மேல் ஆடையை அணிந்தாள், ராதை கிருஷ்ணனின் மஞ்சள் மேல் ஆடையால் மார்பகத்தை மூடினாள். இதைப் பார்த்து, அனைத்து சாக்கியர்களும் அடக்க முடியாத சிரிப்புச் சிரிப்பில் மூழ்கினர். அவர்கள் அனைவரும் சிரிப்பதைக் கண்ட கிருஷ்ணர் வெட்கமடைந்து, லேசான புன்னகையுடன், ராதையின் தாமரை முகத்தை நோக்கி வெளிப்படையான ஒரு பக்க பார்வையை வீசினார். அந்த நந்தனின் மகன் முழு பிரபஞ்சத்திற்கும் மகிழ்ச்சியைத் தரட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே, ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
கண்டித வர்ணனே, விலக்ஷ்ய-லக்ஷ்மிபதி நாம, அஷ்டம சர்கா:

ராகம்: கம்போடி ; ஆதி தாலா

am அத மன்மத-கின்னம், ரதி-ரஸ-பின்னம்….,
விஷத-சம்பன்னம் அனு சிந்தித்த-ஹரி-சரிதம்,
கலஹந்தரிதம், உவாச ரஹஸி சகி… ||

ராதா மன்மதனின் அம்புகளால் கடுமையாக ஒடுக்கப்பட்டாள், கிருஷ்ணனுடன் இணைந்த பேரானந்தத்தை இழந்து ஏமாற்றமடைந்தாள். அவளது சண்டைக்கு ஹரியின் பதிலில் மனமுடைந்து பேய்பிடித்த அவள் சகி ராதாவிடம் பேசினாள்.

(ராதே) ஹரிர் அபி சரதி வஹதி மது-பவனே |
கிம் அபாரம் அதிக-சுக சகி பவனே ||1||
மாதவே மா குரு மணினி மனம் ஆயே ||துருவபதம் ||

“ஓ துர்நாற்றமான பெண்ணே, பார்! மென்மையான வசந்த காற்று வீசுகிறது, கிருஷ்ணர் உங்கள் முயற்சி அறைக்கு வந்துவிட்டார். என் அன்பான நண்பரே, இதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?

தல-பலத் அபி குரும் அதிசரஸம் |
கிமு விபலி-குருஷே குச-கலஹசம் மாதவே ||2||

உங்கள் இளமையை வீணாக்காதீர்கள்.

கதி ந கதிதம் இடம் அனுபதம் அச்சிரம் |
மா பரிஹர ஹரிம் அதிஷய-ருச்சிரம் மாதவே ||3||

“உன்னிடம் எத்தனை முறை சொல்ல வேண்டும்? மிகவும் அழகான மற்றும் வசீகரமான ஸ்ரீ ஹரியைக் கைவிடாதே.”

கிம் இதி விசிதாஸி ரோதிஷி விகலா |
விஹாசதி யுவதி-சபா தவ ஸகல மாதவே ||4||

“ஏன் இப்படி புலம்புகிறாய்? ஏன் அழுகிறாய்? உங்கள் இளமைப் போட்டியாளர்கள் உங்களின் கவர்ச்சியான சைகைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.

ம்ருது-நளினி-தல-சீதல-ஷயனே |
ஹரிம் அவலோகய சபலய நயனே மாதவே ||5| |

“ஈரமான தாமரை இதழ்கள் கொண்ட குளிர்ந்த படுக்கையில் சாய்ந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை அன்புடன் பார்த்து உங்கள் கண்களை வெற்றியடையச் செய்யுங்கள்.”

ஜநயஸி மனஸி கிம் இதி குரு-கேதம் |
ஶ்ருணு மம வசனம் அநிஹிதம்-அபேதம் மாதவே ||6||

“உங்கள் இதயத்தில் ஏன் இவ்வளவு கலவரமாக இருக்கிறீர்கள்? நான் சொல்வதை கேள். நான் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உங்கள் நலனுக்காக மட்டுமே பேசுகிறேன்.

ஹரிர் உபயது வதாது பஹு-மதுரம் |
கிம் இதி கரோஷி ஹ்ருதயம் அதி விதுரம் மாதவே ||7||

“ஸ்ரீ ஹரியை உன் அருகில் வர அனுமதியுங்கள். சில இனிமையான வார்த்தைகளை பேச அனுமதிக்கவும். உங்கள் இதயத்தில் ஏன் இன்னும் அதிக வலியை ஏற்படுத்துகிறீர்கள்?

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் அதி லலிதம் |
சுகயது ரசிக-ஜனம் ஹரி-சரிதம் மாதவே ||8||

ஸ்ரீ ஜயதேவரால் இயற்றப்பட்ட ஸ்ரீ ஹரியின் செயல்பாடுகள் பற்றிய இந்த நேர்த்தியான விளக்கம், ரசத்தை அனுபவிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த பக்தர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.

ஸ்நிக்தே யத் பரு ஷாஸி யத் ப்ரணமதி, ஸ்தப்தாஸி யத் ராகினி
த்வேஷாம் தாசி- யத்-உன்முகே-விமுகாதம், யதாசி, தஸ்மின் பிரியே… |
தத் யுக்தம் விபரீத-காரிணிம், தவ ஸ்ரீ-கந்தா-சர்ச்சா விஷம்
ஷிதம்து, தபனோ ஹிமம், ஹுதவஹ:, கிரிடாமுதோ, யதாந: ||9| |

அவர் மென்மையாக இருக்கும் போது, ​​உங்கள் கடுமையான. அவர் இணக்கமாக இருக்கும் போது, ​​உங்கள் திடமான. அவர் உணர்ச்சிவசப்படுபவர், உங்கள் வெறுக்கத்தக்கவர். அவர் எதிர்பார்ப்புடன் காணும்போது, ​​நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். அவர் அன்பாக இருக்கும்போது நீங்கள் வெளியேறுகிறீர்கள். உங்கள் பிடிவாதமானது செருப்பை விஷமாகவும், குளிர்ந்த சந்திரனின் கதிர்களை வெப்பமாகவும், பனியை நெருப்பாகவும், கிரிதாவின் மகிழ்ச்சியை நரக வேதனையாகவும் மாற்றுகிறது.

அந்தர்-மோகன-மௌலி-குர் நானா-மிலன், மந்தார-விப்ரம்ஷன
ஸ்தம்ப-கர்ஷண-த்ரிஸ்டி-கர்ஷனா, மஹா-மந்திரம்: குரைகி-த்ருஷம் |
த்ரிப்யத்-தானவ, துயாமனா-திவிஷத், துர்வார-துக-பதாம்
ப்ரம்ஷ: கம்ஸ-ரிபோ:, ஸமர்பயது வஹ, ஷ்ரேயாம்ஸி வம்ஷி-ரவ: ||10||

கிருஷ்ணரின் புல்லாங்குழலின் சத்தம் கோபியர்களின் இதயங்களைக் குழப்புகிறது. இது அவர்களின் நகைகள் அணிந்த தலைப்பாகைகளை சுழற்றச் செய்கிறது மற்றும் அவர்களின் நேர்த்தியான மலர் அலங்காரங்கள் விழச் செய்கின்றன. அது வானவர்களின் அடக்க முடியாத துன்பத்தை விரட்டுகிறது. இது கண்களைக் கொண்ட பெண்களை திகைக்க வைக்கிறது. இது அவர்களை ஈர்க்கிறது மற்றும் அவர்களின் கண்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. அந்த புல்லாங்குழல் சத்தம் அனைவருக்கும் ஐஸ்வர்யத்தின் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் அழிக்கட்டும்.

sändränanda-puraà-darädi-diviñad-våndair amandadaräd
änamrair mukuöendra-néla-maëibhiù sandarshitendivaram |
ஸ்வச்சந்தா மகரந்த-சுந்தர-கலன்-மந்தாகினே-மேதுரா
ஷ்ரே-கோவிந்த-பதாரவிந்தம் அசுப-ஸ்கந்தாய வந்தாமஹே ||11||

மன்னன் பாலியின் பெருமையை கிருஷ்ணன் அழித்தபோது, ​​வானவர்கள் ஆனந்தத்தில் மூழ்கினர். அவர்கள் மிகுந்த பயபக்தியுடன் அவரை வணங்கும்போது, ​​அவர்களின் கிரீடங்களில் பிரதிபலித்த நீலமணிகளின் பிரகாசம் அவரது பாதங்களை நீல தாமரை மலர்களாகத் தோன்றியது. வசீகரமான கங்கை அந்த பாத தாமரையிலிருந்து தேன் போல சிரமமின்றி தன்னிச்சையாக பாய்கிறது. எல்லா அசுபங்களையும் போக்குபவர்களான அந்த ஸ்ரீ கோவிந்தரின் தாமரை பாதங்களுக்குத் தலைவணங்குகிறோம்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜயதேவ க்ருதவ்
கலந்தரித வர்ணனே, முக்த-முகுந்த நம, நவம ஸர்க:

ராகம்: பைரவி; ஜும்பா தாலா

அட்ரான்…தாரே *மஸ்ருண-ரோஷா வஸ்த் மசிமா….
நிஷ்வாஸ-நிஸாஹ-முகீம், ஸுமுகீம் உபேத்யா… |
சபரிதாம், ஏக்ஷித-சகி-வதானம், தினந்தே
ஸாநந்த-கட்கதா-பதம், ஹரிர் இத் யுவசா ||

இரவு வந்ததும், அவன் ராதாவை அணுகினான், அவளுடைய கோபத்தின் சக்தி தணிந்து, முடிவில்லாமல் கையெழுத்துப் போடாத அவளுடைய முகம் பலவீனமாக இருந்தது. தன் தோழிகளின் முகத்தை வெட்கத்துடன் வெறித்துப் பார்த்தாள், ஹரி தன் உணர்ச்சிகள் நிறைந்த ஆனந்த வார்த்தைகளை பேசினாள்.

வதாஸி யதி கிஞ்சிதபி தந்த-ருச்சி-கௌமுதி
ஹரதி தர-திமிரம் அதி கோரம் |
ஸ்பூரத் ஆதார-சிதவே தவ வதன-சந்திரமா
ரோசயது லோச்சன-சகோரா ||1||

“என் அன்பானவரே, கருணையுள்ளவரே, இந்த காரணமற்ற வெறுப்பைக் கைவிடுங்கள். நீ என்னிடம் கொஞ்சம் பேசினால், என் பயத்தின் பயங்கரமான இருள் உன் பற்களின் ஒளிரும் கதிர்களால் அகற்றப்படும். அப்போது உன் நிலவு போன்ற முகம் என் கண்களின் ககோரா பறவையை உன் உதடுகளின் அமிர்தத்தைக் குடிக்கத் தூண்டும். ”

ப்ரியே சாருஷிலே முஞ்ச
மயி மனம் அனிதானம் |
சபதி மதன மணலோ தஹதி மம மானசம்
தேஹி முக-கமலா-மதுபானம் ||த்ருவபதா ||

“என் நேசத்துக்குரிய அன்பே! உங்கள் அடிப்படையற்ற அகங்காரத்தை கைவிடுங்கள்.காம ஆசையின் நெருப்பு என் இதயத்தை எரிக்கிறது. உமது முகத் தாமரையின் தேனைக் குடிக்க எனக்கு அனுமதியுங்கள்” என்றான்.

ஸத்யம் ஏவாஸி யதி ஸுததி மயி கோபினி
தேஹி கார-நகர-ஷர கதம் |
கதாய புஜ-பந்தனம் ஜனய ரதா-கதானம்
யேன வா பவதி சுக-ஜாதம், ப்ரியே சாருஷிலே ||2||

“ஓ யாருடைய பற்கள் பிரகாசமாக உள்ளன, நீங்கள் உண்மையில் என் மீது கோபமாக இருந்தால், உங்கள் பார்வையின் கூர்மையான அம்புகளால் என்னைத் தாக்குங்கள். உமது கரங்களின் கயிற்றில் என்னைக் கட்டுங்கள். உன் பற்களால் என் உதடுகளை வெட்டு. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்யுங்கள். ”

த்வமஸி மம ஜீவனம், த்வமஸி மம பூஷணம்
த்வமஸி மம பவ-ஜலதி-ரத்னம் |
பவது பவதிஹ மயி, சததாம் அனுரோதினி
தத்ர மம ஹ்ருதயம் அதி யத்னம் , ப்ரியே சாருஷிலே ||3||

“நீ தான் எனக்கு ஒரே ஆபரணம். நீதான் என் உயிர். என் இருப்புப் பெருங்கடலில் உள்ள மாணிக்கம் நீ. எப்போதும் எனக்கு சாதகமாக இருங்கள் – என் இதயம் அதையே விரும்புகிறது.”

நிலா-நலினா பாம் அபி தன்வி தவ லோசனம்
தாரயதி கோக-நாத-ரூபம் |
குசும ஷர-பான-பாவேன யதி ரஞ்சயஸி
கம் இடம் ஏதத் அனுரூபம் , ப்ரியே சாருஷிலே||4||

“ஓ மெலிந்த பெண்ணே, உனது நீல தாமரை போன்ற கண்கள் இப்போது சிவப்பு நிறமாகிவிட்டன. மன்மதனின் அம்பு அன்பின் வெளிப்பாடாக எழுகிறது. கிருஷ்ணா காதல் அதற்கு அதே தீவிரத்துடன் பதிலளிக்கிறது.

ஸ்புரது குச்ச-கும்பயோர் உபரி மை-மஞ்சரி
ரஞ்சயது தவ ஹ்ருதய-தேசம் |
ரஸது ரஸனாபி தவ ஞான-ஜகன-மதாலே
ஶோஷயது மன்மத-நிதேசம் , ப்ரியே சாருஷிலே||5||

“உன்னை அலங்கரிக்கும் முத்துக்கள், உன் இதயத்தின் ஆழத்தை நகர்த்துகின்றன. உன்னை அழகாக அலங்கரிக்கும் இந்த மணிகள் மன்மதனின் வரிசையை அறிவிக்கட்டும்”

ஸ்தல-கமலா-கஞ்சன மம ஹ்ருதய-ரஞ்சனம்
ஜனித-ரதி ரங்க-பர-பகம் |
பான மஸ்ருணா வாணி கரவாணி சரணாத் வயம்
சரஸ-லஸத்-அலக்தக-சரகம் , ப்ரியே சாருஷிலே ||6||

“ஓ மென்மையாகப் பேசுபவனே, நிலத் தாமரையின் அழகை உன் பாதங்கள் தோற்கடித்து, என் இதயத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்கின்றன. அந்த பாதங்களுக்கு பாதம் பூசும்படி எனக்கு உத்தரவிடுங்கள்.

ஸ்மர-கரால-கதனம், மம ஷிரஸி மந்தனம்
தேஹி பத-பல்லவம் உதாரம் |
ஜ்வலதி மயி தருணோ மதன-கடனனலோ
ஹரது தத் உபஹித-விகாரம் , ப்ரியே சாருஷிலே||7||

“என் அன்பே! உனது மயக்கும் பாதங்களின் புதிய மொட்டுகளை என் தலையில் ஆபரணமாக வழங்கு, அதனால் மன்மத விஷத்தின் பேரழிவு விளைவு தணிந்து, காம ஆசைகளின் கடுமையான நெருப்பும் தணியக்கூடும்.

இதி சதுல-சௌபௌ-சாரு முர வைரிணம்
ராதிகம் அதி வசன-ஜாதம் |
ஜெயது பத்மாவதி ரமண, ஜெயதேவ-கவி-பாரதி
பனிதம் இதி கீதம், ப்ரியே சாருஷிலே||8||

பத்மாவதியின் பிரியமான ஸ்ரீ ஜெயதேவா, முராரி சொன்ன மென்மையான, முகஸ்துதியான வார்த்தைகளை ராதாவிடம் விவரித்தார். இந்த இனிமையான, மயக்கும் வார்த்தைகள் வெற்றிபெறட்டும்.

********

பரிஹார க்ருதா டாங்கே, ஷங்கன் த்வயே. சடதம் கானா-
ஸ்தான-ஜகனாய. க்ராந்தே, ஸ்வாந்தே பரண்-அவகாஷினி |
விஷதி விட்டநோர் அந்யோ, தன்யோ ந கோ’பி, மாமந்தரம்…
ஸ்தான பர பரி ரம்ப ரம்பே, விதேஹி விதேயதாம்… ||10| |

“பதட்டப்பட்ட ராதா, என்னை சந்தேகிக்காதே! ஒரு போட்டியாளருக்கு இடமில்லை, நீங்கள் எப்போதும் என் இதயத்தை ஆக்கிரமிக்கும்போது. எங்கள் விதியை நிறைவேற்றுங்கள்! ”

முகதே விதேஹி, மயி நிர்தயா-தந்த-தம்சம்
டோர்-வல்லி-பந்த-நிபிட-ஸ்தானா, பிடானானி |
காண்டித்வம் ஏவ முத மஞ்சனா, பஞ்ச-பான
சண்டல-காண்ட-டலானாத், அஸவ ப்ரயந்து ||11||

“என்னை அன்புடன் தண்டியுங்கள்! என்னைக் கடி, உன் தவழும் கரங்களால் என்னைச் சங்கிலியால் பிணைத்து, நசுக்கு, மகிழ்ச்சியில் தளர்ந்துவிடாதே! மன்மதனின் அம்புகள் என்னைத் துளைக்கட்டும்!”

ஷஷி-முகி தவ பதி, பாங்குரா-ப்ரு:
யுவ-ஜன. மோஹ-கரால-கல-சர்பி |
தத்-உதித-பய-பஞ்சனாய யுனாம்
த்வத்-ஆதார-சேது-ஸுதைவ, சித்த-மந்த்ர: ||12||

“சந்திரனைப் போன்ற ஒளிவீசும் முகத்தை உடைய பெண்ணே, உனது புருவத்தின் வளைந்த கொடி இளைஞர்களின் இதயங்களை மூழ்கடிக்கிறது. இது காலத்தின் பயங்கரமான செல்வாக்கைக் கூட தோற்கடிக்கும் ஒரு பெண் பாம்பை ஒத்திருக்கிறது. உன் உதடுகளில் இருந்து வழியும் போதை தரும் அமிர்தமே உன் புருவம் உண்டாக்கிய பயத்தைப் போக்க ஒரே மருந்து.”

bandhüka-dyuti-bändhavo’yam adhara:, snigdho madhü kacchavi:…
gadah candi ca kästi, nila-nalina-shri-mochanam Lochanam |
நாசாப்யேதி தில-ப்ரஸுன-பதவீம், குந்தபா-தந்தி ப்ரியே
ப்ராய:, த்வான்-முக-சேவயா விஜயதே, விஷ்வம் ச புஷ்ப,யுத: ||13||

“என் அன்பிற்குரிய கேண்டி, ஓ சூடான குணமுள்ள பெண்ணே, உன் மயக்கும் சிவந்த உதடுகள் ஒரு பந்துக மலரின் பிரகாசத்துடன் நட்பு கொள்கின்றன. உங்கள் குளிர்ச்சியான கன்னங்கள் ஒரு மதுக மலரின் சிறப்பைப் பெற்றன. உங்கள் கண்கள் நீல தாமரை மலரின் அழகை மறைக்கிறது. உங்கள் மூக்கு எள் பூ போன்றது. உங்கள் பற்கள் மல்லிகைப் பூக்கள் போல் பிரகாசமாக உள்ளன. அன்பே, மலர் வில்வீரன் காமதேவன் தனது ஐந்து மலர் அம்புகளால் உன் முகத்தை வணங்கி, பின்னர் முழு பிரபஞ்சத்தையும் வென்றான்.

வ்யத்தயாதி வ்ருத மௌனம், தன்வி பிரபஞ்சய பஞ்சமம்
தருணி? மதுரா லபை:, தாபம் வினோதய த்ரிஷ்டிபி: |
சுமுகி விமுகி-பாவம், தவத் விமுஞ்ச ந, முன்ச மாம்
ஸ்வயம் அதிஷய-ஸ்நிக்தோ, முகதே ப்ரியோயம், உபஸ்திதா:…. ||14||

“உன் ஈரமான உதடு, கிரிம்சன் இலையுதிர்காலம் போல் பளபளக்கிறது; கன்னத்தின் தோல் தேன் நிற மலர். ராதா, உங்கள் கண்கள் பளபளக்கும் கருமையான தாமரைகள் போல ஒளிர்கின்றன. உன் மூக்கு எள் பூ; உங்கள் பற்கள் வெள்ளை மல்லிகை. சரியான பாகுபாடு இல்லாதவரே, உங்கள் அன்பான அன்புக்குரியவர் உங்கள் முன் இருக்கிறார்.

த்ரிஷௌ தவ மதலஸே, வதனம் இந்து-மத்யுன்-மதம்
கதிர் ஜன-மனோரமா, விடுத-ரம்பம் உரு-த்வயம் |
ரதிஸ் தவ கலாவதி, ருசிர-சித்ர-லேகே ப்ருவம்
அஹோ விபுத-யௌவனம், வஹஸி தன்வி பிருத்வி-கதா… ||15||

“உன் கண்கள் மதலசாவைப் போல சோம்பலாக இருக்கின்றன. உன் முகம் சந்திர ஒளி பெண்மை இந்துமதியைப் போல் ஒளிர்கிறது. உங்கள் நடை மனோரமா போன்ற அனைத்து உயிரினங்களையும் மகிழ்விக்கிறது. உங்கள் தொடைகள் ரம்பாவைப் போல அசைவதில் உள்ளன. உங்கள் ஆர்வம் கலாவதியின் மாய சடங்கு. உங்கள் புருவங்கள் சித்ரலேகாவின் சிற்றின்ப வரியை உருவாக்குகின்றன. ராதா, நீ பூமியில் நடக்கும்போது, ​​நீ சொர்க்க நிம்ஃப்களின் இளம் அழகு.

ப்ரீதிம் பாக்-தனுதா ஹரி:, குவலயா-பிடேன, ஸார்தம் ரனே
ராதா…பின-பயோதர-ஸ்மரண, க்ருத்-கும்பேன ஸம்பேதவன் |
யத்ர ஸ்வித்யாதி, மீலாதி, க்ஷணம் அபி, ஷிப்தே பிதே, தத்-ஷனாத்…
கம்ஸஸ்-யாலம், அபூஜிதம் ஜிதமிதி, வ்யமோஹ கோலாஹல: ||16||

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ராதா வர்ணனே, சதுர்-சதுர்-புஜஹ, தஷ்ம சர்கா:

ராகம்: கல்யாணி; ஆதி தாலா

சுசிர மனுனாயேன, ப்ரிண-யித்வா… மிருகாக்ஷி…
கடவதி க்ருதவேஷே கேஷவே குஞ்ச-ஷய்யம் |
ரசித-ருசிர-பூஷம், த்ரிஷ்டி-மோஷே பிரதோஷே
ஸ்பூரதி நிரவசாதம்…, காபி ராதம் ஜகதா ||

“அவரது வேண்டுகோள்களால் ராதாவை சமாதானப்படுத்தி, கேசவா விரிவாக உடை அணிந்து, படுக்கையில் படுக்கச் சென்றார். இரவு கண்களுக்குப் புலனாகும் போது, ​​ராதை பளபளக்கும் ஆபரணங்களை அணிந்தாள்.

விரசித-சது-வசன-ரச்சனம், சரணே ரசித-ப்ரணிபதம் |
ஸம்ப்ரதி மஞ்ஜுல-வஞ்சுல-சிமானி, கேலி-சயனம் உபயதம் ||1||

முகதே மது-மதனம், ஹே ராதே, அனுகதம் அனுசரா ராதே,ராதே,ராதே ||துருவபதா||

அவர் முகஸ்துதியால் உங்களை அமைதிப்படுத்தினார், அவர் உங்கள் காலடியில் விழுந்தார், இப்போது அவர் இனிமையான மலர்களின் கரையில் உங்களுக்காக காத்திருக்கிறார். ஏய் ராதே, மாதவா எப்போதும் உன்னுடையவன். அவரை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள், அவரைப் பின்பற்றுங்கள் ராதே.

கானா-ஜகனா-ஸ்தான-பார-பரே, தர-மந்தர-சரண-விஹாரம் |
முகரித-மணி-மஞ்சிரம் உபைஹி விதேஹி மரால-விகாரம் ராதே ||2||

முழங்கால்கள் முழங்க அவரை அணுகவும். அவர்களின் ஒலி உங்கள் நீடித்த கால்களை ஊக்குவிக்கட்டும். காட்டு வாத்தின் நடையுடன் ஓடுங்கள்.

ஷ்ருணு ராமையா தாரம் தருணி, ஜன-மோகன-மதுப-விரமம் |
குசும-ஷரசனா-ஷாசன-வந்தினி, பிக-நிகரே பஜ பாவம் ராதே ||3||

இளம் பெண்களின் இதயங்களைக் குழப்பும் பம்பல்பீஸின் மகிழ்ச்சியான வார்த்தைகளைக் கேளுங்கள். மன்மதனின் இனிமையான கட்டளைகளைப் பரப்பும் காக்காக்களின் பாடலில் உங்கள் சொந்த மனநிலையை உணருங்கள்.

அணில-தரால-கிசலய-நிகரேண, கரேண லதானி குரம்பம் |
ப்ரேராமிவ கரபோரு கரோதி, கதிம் ப்ரதி முஞ்ச விளம்பம் ராதே ||4||

கொடிகள் காற்றில் ஓய்வின்றி நகர்கின்றன, அவற்றின் புதிதாக துளிர்விட்ட இலைகளைக் காட்டி உங்களைப் போகத் தூண்டுவது போல், உங்கள் வேகத்தை விரைவுபடுத்துமாறு சைகை காட்டுவது போல் தெரிகிறது.

ஸ்பூரிதம் அனக-தாரக-வஷாதிவ, சுசித-ஹரி-பரிரம்பம் |
ப்ருச்சா மனோஹர-ஹர-விமலா, ஜல-தரமமும், குச-கும்பம் ராதே ||5||

மயக்கும் நெக்லஸ் வடிவில் உள்ள மாசற்ற நீரோடைகளால் நீங்கள் அழகு படுத்தப்படுகிறீர்கள். அன்பின் வலுவான அலைகள் உங்களில் துடிக்கிறது, ஸ்ரீ ஹரியின் உடனடி அரவணைப்பை நீங்கள் உணருங்கள்

அதிகதம் அகில-சகிபிரிதம், தவ வபுராபி ரதி-ரண-ஸஜ்ஜம் |
சண்டி ரசித-ரசனா-ரவ-டிண்டிமம், அபிசார சரசம் அலஜ்ஜம் ராதே||6||

நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான போருக்கு தயாராக உள்ளீர்கள் என்பதை உங்கள் நண்பர்கள் அறிவார்கள். உங்கள் கணுக்கால்களின் துடிப்பால், அவரது செழுமையான மனநிலையை சந்திக்கவும்.

ஸ்மர-சர-சுபக-நகேன சகீம், அவலம்ப்ய கரேண சலிலம் |
சல வலய-க்வைதைரவ போதய, ஹரிம் அபி நிஜ-கதி-ஷிலம் ராதே||7||

உங்கள் தாமரை கையின் கவர்ச்சிகரமான விரல் நகங்கள் காமதேவரின் ஐந்து அம்புகள். ஆதரவைப் பெறவும், மனதார செல்லவும் அவற்றைப் பயன்படுத்தவும். ஸ்ரீ ஹரியின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. உங்கள் வளையல்களின் முழக்கத்தின் மூலம் உங்கள் வருகையை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் அதரிக்ருத, ஹர முதாசித-வாமம் |
ஹரி-வினிஹித-மானஸம் அதிதிஹது காந்த-ததிமா விரமம் ||8||

ஸ்ரீ ஜெயதேவாவின் இந்தப் பாடல் நேர்த்தியான கழுத்தணியின் அழகைக் கிரகணம் செய்கிறது. இது அழகின் முரண்பாட்டை தீர்க்கிறது. ஹரிக்கு தங்கள் இதயங்களை முழுவதுமாக அர்ப்பணித்த அந்த பக்தர்களின் தொண்டையை அது நிரந்தரமாக அலங்கரிக்கட்டும்.

********

sä மாம் த்ரக்ஷ்யதி வக்ஷ்யதி, ஸ்மர-கதா:, ப்ரத்யங்க மாலிகனை:
ப்ரீதிம் யஸ்யதி, ரம்ஸ்யதே சகி, ஸம-கத்யேதி சிந்தாகுல: |
ச த்வாம் பஷ்யதி, வேபதே புலகயதி, ஆனந்ததி ஸ்வித்யாதி
ப்ரத்யுத்-கச்சதி, மூர்ச்சதி ஸ்திர-தமஹ்புஞ்சே நிகுஞ்சே ப்ரிய: ||9||

“அவள் என்னை பாசமான கண்களால் பார்ப்பாள், எனக்கு ஒரு காதல் கதை சொல்வாள், என் அணைப்பிலிருந்து ஒவ்வொரு உறுப்பிலும் இன்பம் அடைவாள், என்னை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாள், நண்பரே” என்று அவர் கவலையுடன் கூறுகிறார். உன் காதலன் உன்னைத் தேடுகிறான், நடுங்குகிறான், முட்கள் வீசுகிறான், மகிழ்ச்சியடைகிறான், வியர்த்து, முன்னேறுகிறான், இருளில் புதைந்திருக்கும் புதரில் மயங்கி விழுகிறான்.

அக்ஷ்ணோ: நிக்ஷ்பத் ரஞ்சனம், ஷ்ரவணயோ:, தபிச்ச-குச்சாவலிம்
மூர்தினி ஷ்யாம-சரோஜா, தாம குசயோ:, கஸ்தூரிகாபத்ரகம் |
துர்தனாம் அபிசார-ஸஹஸ க்ருதா, விஸ்வì-நிகுஞ்சே சகி
த்வாந்தம் நிலா-நிச்சோல-சாரு ஸுத்ருஷம், பிரத்யங்க மலிங்காதி ||10||

இரவு அவர்களின் கண்களில் கருப்பு லைனர், காதுகளில் தமலா மலர்கள், தலையில் கருமையான தாமரை மாலைகள், கஸ்தூரி இலை வடிவமைப்பு. யாருடைய இதயங்கள் சந்திக்க துடிக்கிறதோ அந்த இரவுகள் இருண்ட கைகால்களைத் தழுவுகின்றன.

காஷ்மிர-கௌர-வபுஷம், அபிசாரி கானாம்
அபத்த-ரேகம், அபிதோ ருசி மஞ்சரிபி: |
ஏதத் தமலா-தல-நிலதமம், தாமிஸ்ரம்…
தத்-பிரேம-ஹேம-நிகாஷோ, பலதம் தனோதி… ||11||

குங்குமப் பொலிவான உடல் கொண்ட பெண்கள், ஒளிக் கொத்துக்களுடன் அவரைச் சந்திக்க விரைந்தபோது, ​​இரவு தமல இலைகளைப் போல அடர்த்தியான இருளைப் பரப்பியது, அவர்களின் உண்மையான அன்பைச் சோதிப்பது போல.

ராகம்: நாதனமக்ரியா; ஜும்பா தாலா

ஹராவலி-தராலா, காஞ்சன-காஞ்சி-தாம
மஞ்சிர-கங்கனா-மணி-த்யுதி-திபிதஸ்யா… |
துவேரே நிகுஞ்ச-நிலையஸ்ய, ஹரிம்… நிரீக்ஷ்ய
கிரீடவதிம் அத சகீம், நிஜகதா ரதம் ||

புத்திசாலித்தனமான நகைகள், கௌஸ்துபம், காஞ்சி கலாப பர்யஸ்தம், நூபுரம்.

மஞ்ஜுதர-குஞ்ச-தல-கேலி-சதனே |
இஹ விலாஸ ரதி-ரபஸ-ஹசித-வதனே ||1||

“ஓ ராதா, உனது ஆர்வத்தால் உன் முகம் அதிகப்படியான ரசத்தால் மலர்கிறது . இந்த மயக்கும் மாதவாவின் ஆடம்பரத்தில் மகிழுங்கள். மாதவனிடம் சென்று அவருடன் மகிழுங்கள்.

ப்ரவிச ராதே மாதவ-சமீபம் |
குரு முராரே மகல-சதானி |||துருவபடா ||

“ராதே, மாதவனை நெருங்கி அவனுடன் மகிழ்ச்சியில் இரு.”

நவ-பவதா, ஷோக-தலா, ஷயனா-சரே |
இஹ விலாஸ குச்ச-கலச தரல-ஹரே ||2||

“ராதே, உன் முத்துச் சரம் நடுங்குகிறது. அவருக்குப் பிரசாதமாகப் பறிக்கப்பட்ட சிவப்பு இதழ்களின் படுக்கையில் களிகூருங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

சல மலாயா வரபவனா சுரபி-ஷிதே |
இஹ விலாஸ ரஸ வலிதா, லலிதா கீதே ||3||

“சந்தன மரங்களின் நறுமணமிக்க மெல்லிய காற்றில் மிகுந்த மகிழ்ச்சி அடைக. அவரை மகிமைப்படுத்த உங்கள் பாடலைப் பயன்படுத்துங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

குசும-சாயா ரசிதா ஶுசி-வாஸ-கேஹே |
இஹ விலாச குசும-சுகுமார-தேஹே ||4||

“பூக்களால் குவிக்கப்பட்ட பிரகாசமான பின்வாங்கலில் மகிழ்ச்சியாக இருங்கள்! நீங்கள் அவருக்கு என்று பூவை வழங்குங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

மது-தரால பிக நிகர நினத முகரே |
இஹ விலாஸ தாஷன ருசி ருசிர ஷிகரே ||5||

“ஓ ராதா, உன்னுடைய பற்கள் மாணிக்கங்கள் அல்லது முழுமையாக பழுத்த மாதுளை விதைகள் போன்றவை. பூக்கும் கொடிகளின் இந்த பந்தலில் நுழையுங்கள். காக்காக் கூட்டத்தின் இனிமையான கூச்சலுடன் அது ஒலிக்கிறது. ராதே, மாதவனை நெருங்கு”

விதத-பாஹு வல்லி-நவ பல்லவ-கானே |
இஹ விலாஸ பின குச்சா, குன்ப-ஜகனே ||6||


“ அதன் செழிப்பான கொடிகளின் புதிய இலைகளால் அடர்த்தியாக மூடப்பட்டிருக்கும் இந்த ஒதுங்கிய பின்வாங்கலில் மகிழுங்கள் .! அவரை அடைய உங்கள் உள் ஒளியைப் பயன்படுத்துங்கள். ராதே, மாதவனை நெருங்கு”

மது முடிதா மதுபாகுல கலிதா ராவே |
இஹ விலாஸ மதனா, ஷர-ரபஸ பாவே ||7||


“ தேனைக் குடித்து வெறிபிடித்த பம்பல்பீக்களின் ஓசையுடன் ஒலிக்கும் இந்த அழகிய இடத்தில் மகிழ்ச்சியடையுங்கள் . அன்பு நிறைந்த உங்கள் உணர்ச்சியை அவரிடம் கொடுங்கள் & அவரை மட்டும் நேசியுங்கள்.

விஹித-பத்மாவதி-சுக-சமாஜே |
பானதி ஜெயதேவ-கவி-ராஜ-ராஜே ||8||

எல்லாக் கவிஞர்களின் சக்கரவர்த்தியான ஜெயதேவா, ராதையின் இதயத்தை பல்வேறு வழிகளில் மகிழ்விக்க இந்தப் பாடலை இயற்றியுள்ளார்.
ஓ மாதவா, முழு உலகத்திற்கும் அளவற்ற ஐஸ்வர்யங்களை வழங்குவாயாக.

********

த்வம் சித்தேன சிரம் வஹன், அயம் அதிஷ்ராந்தோ, பீஷம் தபிதா:
கந்தர்பேன ச படும் இச்சதி சுதா…சம்பந்த-பிம்பதாரம் |
அஸ்யங்கம் தத் அலங்குரு, க்ஷணம் இஹ, ப்ரு-க்ஷேப-லக்ஷ்மி…
லவ-கிருதே தாஸ இவோப, ஸேவித-பதாம்போஜே, கூட: ஸம்ப்ரம:… ||9||

“இவ்வளவு காலம் உன்னை அவன் மனதில் தாங்கிக்கொண்டு, அவனை சோர்வடையச் செய்து, பிரேமாவைத் தூண்டியது. உனது பிம்பதாரத்தைக் குடிக்க ஆசைப்படுகிறான். நீ ஏன் பயப்படுகிறாய்”

ராகம்: மத்யமாவதி; ஆதி தாலா

ச ஸஸாத்-வஸ-ஸாநந்தம், கோவிந்தே லோல-லோகனா |
சிஞ்ஞான-மஞ்சு-மஞ்சிரம், பிரவிவேஷ நிவேஷனம் ||

“ராதா தனது அமைதியற்ற கண்களால் கோவிந்தனைப் பார்த்தபோது முழு மகிழ்ச்சியில் இருந்தாள். அவள் அவனது பின்வாங்கலுக்குள் நுழையத் தொடங்கியபோது அவளது நகைகள் அணிந்த கணுக்கால் மணிகள் வசீகரமாக ஒலித்தன. ”

ராதா-வதன-விலோகனா-விகாசித-விவித-விகார-விபாகம் |
ஜல-நிதி மிவ வது-மண்டல-தர்ஷன-தரலித-துங்க-தாரகம் ||1||

பௌர்ணமி தோன்றும்போது கடல் அலைகள் அலைவதைப் போல, ராதையின் முகத்தைப் பார்த்ததும் அவனது உணர்ச்சிகள் எல்லாம் பொங்கின.

ஹரிம் ஏக-ரசம் சிரம் அபிலாஷித-விலாசம் |
ச தாதர்ஸ குரு-ஹர்ஷ-வசம் வாத-வதன மனக-விகாசம் || துருவபாதம்||

பௌர்ணமி நிலவின் கோளத்தைக் கண்டு கடல் அலைகள் கொந்தளிப்பது போல, ஹரி அவள் முகத்தைக் கண்டு மகிழ்ச்சியில் மலர்ந்தான்.

ஹர மாமலதர-தாரா முரஸி ததாதம் பரிலம்ப்ய விதுரம் |
ஸ்பூதர-பேன-கதம்ப-கரம்பிதம் இவ யமுனா-ஜல-புரம் ||2||

ஹரி தனது பரந்த மார்பை அலங்கரித்து, பிரகாசமான முத்துக்களை அணிந்திருந்தான். யமுனை ஆற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடுவது போல் இருந்தது.

ஸ்யாமலா-ம்ருதுல-கலேவர-மண்டலம் அதிகத-கௌர-துகுலம் |
நிலா-நலினா மிவ பிட-பரகா படல-பார-வலயிட்ட-மூலம் ||3||

ஹரி தனது மென்மையான மற்றும் பளபளப்பான உடலில் பீதாம்பரத்தை அணிந்துள்ளார். ஒரு நீல தாமரை மலர் அதன் தங்க மகரந்தத்தால் நனைந்தது போல் தெரிகிறது.

தாரலா-துருக்-அஞ்சல-சலன-மனோஹர வதன-ஜனித்த-ரதி-ராகம் |
ஸ்புவ-கமலோதர-கேலித-கஞ்ஜன யுகம் இவ சரதி தடகம் ||4||

கிருஷ்ணரின் மயக்கும் முகம் இலையுதிர் காலத்தில் ஏரியின் தூய நீரில் முழுமையாக மலர்ந்த நீல தாமரை மலரைப் போல அழகாக இருக்கிறது. தாமரையின் மீது காஞ்சனா (தங்க) பறவையின் விளையாட்டாகத் தோன்றும் அவரது அமைதியற்ற கண்களின் வெளிப்படையான பக்கவாட்டுப் பார்வைகள்
ராதையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

வதன-கமலா-பரிஷிலானா-மிலிதா மிஹிர-சம-குண்டல-ஷோபம் |
ஸ்மித-ருசி-ருசிர-சமுல்ல-சீத-ஆதார-பல்லவ-க்ருத-ரதி-லோபம் ||5||

கிருஷ்ணரின் காதில் அணிந்திருக்கும் நகைகளின் அழகு அவரது தாமரை முகத்தின் அழகைக் கவருகிறது. காலைச் சூரியனைப் போல் சிவந்த அவனது இனிமையான உதடுகள், அவனது பிரகாசமான புன்னகையின் பிரகாசத்தால் பிரகாசிக்கின்றன, அவனது நடுங்கும் பூ மொட்டு உதடுகள் ராதாவின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன.

ஷஷி-கிரண-ச்சுரிதோதர-ஜலதர-சுந்தர-குஸும-சுகேசம் |
திமிரோதித-விது-மண்டல-நிர்மலா மலையஜ-திலக-நிவேசம் ||6||

அவனுடைய கூந்தலில் மலர்கள் சிக்குண்டு, மேக முறிவுகளில் சிக்கிய நிலவுக் கதிர் போல் தெரிகிறது.
அவரது நெற்றியில் சந்தனப் பூசப்பட்ட திலகத்தின் மகிமை இருளை நீக்கும் சந்திரனைப் போல் தெரிகிறது.

விபுல-புலக-பார-தந்துரிதம் ரதி-கேலி-களபிராதிரம் |
மணி-கன-கிரண-சமுஹா-ஸமுஜ்ஜ்வல-பூஷண-சுபக-ஷரீரம் ||7||


அவரது அற்புதமான வடிவத்தை அலங்கரிக்கும் அவரது நகைகளின் பிரகாசம், மிகவும் வசீகரிக்கும் ஒளியைப் பெற்றுள்ளது . மேலும் ராதையின் அன்பான பார்வைகளுக்கு கிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனித-விபவ-த்விகுனிக்த-பூஷண-பாரம் |
ப்ரணமத ஹ்ருதி விநிதாய ஹரிம் ருசிரம் ஸுக்த்ருதோ-தயா-சரம் ||8||

ஸ்ரீஜெயதேவரால் இயற்றப்பட்ட பல்வேறு அலங்கார வெளிப்பாடுகளால் கிருஷ்ணரின் ஆபரணங்களின் மகத்துவம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
சுவைமிக்க பக்தர்களே! உங்களின் அனைத்து புண்ணிய செயல்களுக்கும் கிருஷ்ணரே பலன்.
மிகுந்த கவனத்துடன், உங்கள் இதயத்தில் அவரைப் பிடித்துக்கொண்டு அவருக்கு வணக்கம் செலுத்துங்கள்.

********

அதிக்ரம்ய பங்கம், ஷ்ரவண-பாத-பர்யந்த-கமன-
ப்ராயசேன ஏவக்ஷ்யோ:, தரலதர-தாரம் கமிதயோ:|
இதானேம் ராதாயா: ப்ரியதமா-சமாலோக-சமயே…
பாபாத ஸ்வேதாம்பு-ப்ரஸார இவ, ஹர்ஷஷ்ரு-நிகர: ||9||

தன் காதலியைச் சந்தித்த சில நிமிடங்களில், ராதாவின் உள்ளக் குதூகலம், அவள் கண்களின் உழைப்பினால் எழும் வியர்வையைப் போல் ஆனந்தக் கண்ணீராக வழிந்தது.

bhajantyäs talpäntam kuta-kapata-kantüti-pihita-
smitae Yäte… gehäd Bahir Avi, hitälé-parijane |
ப்ரியஸ்யாம் பஷ்யந்த்யா:, ஸ்மர-ஷர ஸமகுத-சுபகம்
சலஜ்ஜ-லஜ்ஜாபி, வ்யாக மத் இவ துரம், மிருக-த்ரிஷா: ||10||

ராதாவின் சகி அவளை மகிழ்ச்சியாக பார்க்க ஆவலுடன், தந்திரமாக தங்கள் புன்னகையை மறைத்து பின்வாங்கினாள். ராதா தன் மிகவும் பிரியமான கிருஷ்ணனின் முகத்தில் ஒரு அழகான பக்கவாட்டுப் பார்வையை வீசினாள். அப்போது அவளின் வெட்கமும் விலகியது.

ஜய-ஸ்ரீ-விந்யஸ்தை:, மஹிதைவ மந்தார-குசுமை:
ஸ்வயம் சிந்துரேண த்விப-ரண-முதா, முத்ரிதா இவ |
புஜேபிட-கிரிடா-ஹத-குவலயபிட-கரிண:….
பிரகேர äஷ்ரு-பிந்து:, ஜெயதி புஜ-டானோ, முராஜித: ||

மல்யுத்தப் போட்டியில் குவலயாபிடா என்ற யானையைக் கொன்று கிருஷ்ணரின் கரங்கள் அழகுபடுத்தப்படுகின்றன. யானையுடன் போரிடுவதில் அவரது உற்சாகத்தால், அவரது கரங்களில் வெண்ணிறம் பூசப்பட்டது மற்றும் வெற்றியின் தெய்வத்தால் மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முராவை வென்ற கிருஷ்ணரின் பரந்த கரங்கள் எப்போதும் வெற்றிபெறட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதுவா
ச நந்தோ கோடிந்தோ நம, ஏகாதச சர்க:

ராகம்: நாதனமக்ரியா; ஆதி தாலா

கதவதி சகி-பிருந்தே,மந்தத்ர-பாபார-நிர்பார-
ஸ்மர-பரவஷா-குதா, ஸ்பூதித-ஸ்மித-ஸ்னபிதா-தரம் |
சரஸ-மனாசம் த்ரிஸ்த்வா, ராதம் முஹு:, நவ-பல்லவ-
ப்ரஸவ-ஷயனே, நிக்ஷிப் தக்ஷிம், உவாச ஹரி: ப்ரியம்… ||

“ராதாவின் தோழிகள் சென்றதும் அவள் உதட்டில் புன்னகை பரவியது. ஆழ்ந்த காதலில் இருந்தபோது, ​​அடக்கத்துடன் போராடினார். ராதாவின் இதயத்தின் மனநிலையைப் பார்த்து, அவளது கண்கள் அவனது மலர்கள் மற்றும் மென்மையான தளிர்கள் மீது நிலைத்திருக்க, ஹரி அவனது அன்புடன் பேசினான்.

கிசலயா ஷயன-தலே குரு காமினி சரண-நளின-வினிவேஷம் |
தவ பத-பல்லவ-வைரி-பரபவம் இடம் அனுபவது சுவேஷாம் ||1||

“ராதே, புதிதாய் துளிர்விட்ட இலைகளைக் கொண்ட இந்தப் படுக்கையில் உனது பூ போன்ற பாதங்களை விடு. ”

க்ஷண மதுன நாராயணம், அனுகதம் அனுசர ராதே ராதே ராதே ||த்ருவ||

“நாராயணா உன்னுடையவள், என்னுடையவள் ராதே!”

கர-கமலேன கரோமி சரண மஹம், அகமிதஸி விதுரம் |
க்ஷணம் உபகுரு ஷயனோபரி மாம் இவ, நூபுரம் அனுகதி-ஶுரம் ராதே ராதே ||2||

“என் அன்பே, நீ தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கிறாய். என் தாமரை கைகளால் உங்கள் தாமரை பாதங்களை மசாஜ் செய்வேன். உங்கள் கணுக்கால் மணிகளை படுக்கையில் வைக்கவும்.

வதன-சுதா-நிதி-கலிதம் அம்ருத மிவ, ராசய வசனம் அனுகுலம் |
விரஹம் விபநயாமி பயோதரா, ரோதகம் உரசி துகுலம் ராதே ராதே ||3||

“ஓ ராதா, தயவு செய்து முகத்தைப் போன்ற சந்திரனிலிருந்து அமிர்தம் போல சில இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். எங்கள் பிரிவை முடிவுக்குக் கொண்டுவர, நான் என் மார்பில் பட்டுத் துணியைச் சுமக்கிறேன்.

ப்ரிய-பரிரம்பான-ரபஸ-வலிதா மிவ, புலகிதம் அதிதுரவபம் |
மதுரஸி குச்ச-கலச வினிவேஷயா, ஷோஷய மனசிஜ-தபம் ராதே ராதே ||4||

“உங்கள் மனக் கிளர்ச்சிகளைத் தணிக்க, என் மார்பில் ஓய்வெடுங்கள் (அவரது தொடுதலே மனதின் சிதைவுகளை நீக்கும்). அன்பின் நெருப்பை அன்பான அரவணைப்பால் அணையுங்கள்.”

ஆதார-சுதா-ரசம் உபநய பாமினி, ஜீவாய ம்ருதம் இவ தசம் |
த்வயி வினிஹித-மானஸா விரஹானாலா,தக்த-வபுஷாம் அவிலாசம் ராதே ராதே ||5||

“ராதே, என் மனம் உன்னில் லயிக்கிறது. பிரிவின் நெருப்பில் நான் எரிகிறேன், உங்கள் உதடுகளின் அமிர்தத்தை வழங்குங்கள்.

ஷஷி-முகி முகராய மணி-ரஷன-குணம், அனுகுண-காந்த-நினதாம் |
ஸ்ருதி-யுகலே பிக-ருத-விகலே, மம ஷமய சிராத் அவஸதம் ராதே ராதே ||6||

“உன் முகம் சந்திரனைப் போல் அழகு. உமது குரல் என் காதுகளுக்கு இதமளிக்கும்.”

மமாபி விபால-ருஷா விகலி-க்ருதம், அவலோகிதும் அதுநேதம் |
மிலதி லஜ்ஜித விமானயனம் தவ, விரமா விஸ்ருஜா ரதி-கேதாம் ராதே ராதே ||7||

“ராதே, ஆதாரமற்ற கோபத்தால் நான் சித்திரவதை செய்யப்படுவதைக் கண்டு உன் கண்கள் வெட்கப்படுகின்றன. என்னைப் பார்த்து விரக்தியை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

ஸ்ரீ-ஜெயதேவ-பனிதம் இடம் அனுபதா, நிகதித-மது-ரிபு-மோதம் |
ஜனயது ரசிக-ஜனேஷு மனோரமா, ரதி-ரஸ-பவ-வினோதம் ராதே ராதே ||8||

ஸ்ரீ ஜெயதேவா ஒவ்வொரு வார்த்தையிலும் மதுரிப்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பேரானந்த கேளிக்கைகளை விவரிக்கிறார்.
தூய ஆழ்நிலை மெல்லிசைகளை ருசிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பக்தர்களின் இதயங்களில் இன்பமான காதல் ரசத்தின் விளையாட்டுத்தனமான பொழுதுகளை அவரது பாடல் எழுப்பட்டும் .

********

ப்ரத்யுஹ-புலகன் குரேண, நிபில-ஷ்லேஷே-நிமேஷேன ச
கிரிடா-குட-விலோகனே, ஆதார-சுதா-பனே?, கதா-நர்மபி: |
ஆனந்தாதி-கமேன-மன்மத-கலா-யுத்தே’பி, யஸ்மின்ன் அபூத்
உத்பூதா ச தயோர் பாபுவ, ஸுரத-ரம்ப: ப்ரியம் பௌக: ||9||

பின்னர் அவர்கள் வியக்கத்தக்க மற்றும் உயர்ந்த பேரின்பத்தைத் தொடங்கினர், அதற்காக அவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஏங்கிக்கொண்டிருந்தனர். ஆழ்ந்த அரவணைப்பின் சிலிர்ப்பிலிருந்து திகிலடைவது ஒரு தடையாகத் தோன்றியது. அவர்களின் கண்கள் சிமிட்டுவது ஒருவரையொருவர் இனிமையாகப் பேசுவதை விடாமுயற்சியுடன் கவனிப்பதைத் தடுப்பதாகத் தோன்றியது.

தோர்பயம் சம்யமித:, பயோதர-பரேண, பீடித: பாணிஜை:
äவித்தோ தஷனை: க்ஷதாதார-பூத:, ஷ்ரோனிததே-நஹத: |
ஹஸ்தேனா நவித:, கசி’ம் ஆதார-சுதா-ஸ்வாந்தேன, ஸம்-மோஹிதா:
காந்தா: காமபி த்ரிப்திம் äப தத் அஹோ, காமஸ்ய வாம கதி: ||10||

ராதிகாவின் அன்பான காதலன் கிருஷ்ணா, அவள் கரங்களால் கட்டப்பட்டிருந்தாள். அவள் உதடுகளின் அமிர்தத்தால் அவனைப் பொழிவதற்காக, அவன் தலைமுடியை பின்னுக்குத் தள்ளினாள்.

மாரங்கே ரதி-கேலி, சங்குல-ரண-ரம்பே, தயா சஹாசத்-
ப்ராயாம், காண்ட-ஜெய கஞ்சித் உபரி, ப்ராரம்பி யத்-சம்ப்ரமாத் |
nishpandhä jaghana-sthali, Shithilitä, dor-vallir utkampitam
Vaksho militam akshi paurusha-rasa:, strinäm kuta: Sidhyati ||11||

“தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி, காதல் விளையாட்டில் அவள் அவனுக்கு மேலே ஒரு தைரியமான தாக்குதலைத் தொடங்கினாள் மற்றும் புருஷாவை வென்றாள்.”

தஸ்யா: பாடல-பனி ஜாங்கி மூரோ, நித்ரா-காஷாயே த்ரிஷௌ
நிர்தௌதோ ஆதார-ஷோணி மா, வில்லுலித-ஸ்ரஸ்த-ஸ்ரஜோ மூர்த-ஜ: |
காஞ்சி-தாம தர-ஷ்லதம் கால-மிதி, ப்ராதர் நிகதைர் த்ரிஷோ
யேபி: காம ஷரை:, தத்-அத்பூதம் அபூத், தத்யுர் மன: கிளிதம் ||12||

தூக்கமின்மையால் அவள் கண்கள் சிவந்திருந்தன. அவளது உதடுகளில் இருந்த சிவப்பு நிற ஒப்பனை நீண்ட முத்தத்தால் துடைக்கப்பட்டது. அவள் தலைமுடியில் நெய்யப்பட்டிருந்த மலர் மாலை வாடியிருந்தது. அதிகாலையில் ஐந்து அம்புகள் கிருஷ்ணரின் கண்களை எதிர்கொண்டபோது, ​​மீண்டும் காமதேவரின் ஐந்து அம்புகளால் அவரது மனம் குத்தப்பட்டது. எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!

வ்யலோல: கேஷ-பாஷா ஸ்டாரலிதா மலகை:, ஸ்வேத-லூலௌ கபோலௌ தஸ்தா
பிம்பாதர-ஶ்ரீ:, குச-கலஷ-ருச்சா, ஹரிதா ஹார-யஸ்தி: |
காஞ்சி-காஞ்சித்-கடாஷாம், ஸ்தான-ஜகனா-பதம், பானினா ச்சத்ய:
பஷ்யந்தி சத்ரபம் மான், தத் அபி விழுலிதா, ஸ்ரக்த-ரீயம் தினோதி ||13||

அதிகாலையில், ராதாவின் தலைமுடி கலைந்து, சுருண்டிருந்த பூட்டுகள் அவிழ்ந்திருந்தன. அவள் கன்னங்கள் வியர்வையால் ஈரமாகி,
உதடுகளின் பிரகாசம் மங்கிப் போயிருந்தது.

ஏஷன்-மிலிதா-ட்ரிஸ்தி முக்த-ஹசிதம், ஷேத்-கார-தாரா-வஷாத்
அவ்யக்தா-குல-கேலி-ககு-விகாஸத்-தந்தாம்ஷு-தௌத-தரம் |
ஸ்வஷோ-தப்த-பயோதரூ பரி, பரிஷ்-வாங்கி குராகி-த்ரிஷோ
ஹர்ஷோத்கர்ஷா, விமுக்த-நிஸ்ஸஹ-தனோர் தன்யோ தயாத்-யானானம் ||14||

கோவிந்தரால் அலங்கரிக்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அவரிடம் மரியாதையுடன் பேச ஆரம்பித்தாள் ராதா.

ராகம்: காந்தா; ஆதி தாலா

அத க்ரந்தம் ரதி ஷ்ராந்தம், அபி-மண்டன வாஞ்சயா…. |
ஞஜகதா மாதவம் ராதாம் முகதம், ஸ்வாதினா பத்ருகா ||

அவன் அவளது காதலுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ராதா அவளை அலங்கரிக்க விரும்பினாள்.

குரு யது-நந்தன சந்தன-ஷிஷிர, தாரேண கரேண பயோதரே |
ம்ருக-மட-பத்ரகம் அத்ர மனோ-பவ, மங்கள-கலச-சஹோதரே ||1||

“யது நந்தனா, நான் உன்னிடம் முழுமையாக உள்வாங்கும் வகையில் உன் கைகளால் என்னை அலங்கரிக்கவும். நான் கிருஷ்ணமாயி. முதலில், உங்கள் குளிர்ந்த கையால் மான் கஸ்தூரியில் இலைகளை வரிசையாக வரையவும். உங்கள் தொடுதல் சந்தன பேஸ்ட்டை விட (சந்தனம்) புத்துணர்ச்சி தருகிறது.

நிஜகதா ச யது-நந்தனே, கிருததி ஹ்ருதய-நந்தனே
நந்த நந்தனே, பக்த சந்தனே, நிஜகதாச யதுநந்தனே ||த்ருவபதா|| |

ஆனந்தமான யது நந்தனா, ராதையின் இதயத்தை மகிழ்விக்க விளையாடினார்.

அலி-குல-பஞ்சன மஞ்சனகம், ரதி-நாயக-சயக-மோச்சனே |
த்வத்-ஆதார-சும்பன-லம்பித-கஜ்ஜலம், உஜ்ஜ்வலயா ப்ரிய லோசனே, நிஜகதாஸ யதுநந்தனே ||2||

“ஓ என் அன்பே, இந்த புதிய ஐ-லைனரால் என் கண்களுக்கு அபிஷேகம் செய், இது பம்பல்பீஸ் கூட்டத்தின் சிறப்பை மிஞ்சுகிறது. காமதேவரின் அம்புகள் என் பக்கவாட்டுப் பார்வையிலிருந்து பறந்தன. உங்கள் உதடுகளின் முத்தத்தால் என் கண்களில் கோலிரியத்தின் முந்தைய பயன்பாடு மங்கிவிட்டது.

நயன-குரங்க-தரங்க-விகாஸ,நிரஸ-கரே ஷ்ருதி-மண்டலே |
மனசிஜ-பாஷ-விலாஸ-தாரே, சுபகே-வினிவேசய குண்டலே, நிஜகதாஸ யதுநந்தனே ||3||

“பிதாதம்பரத்தை அணிந்திருக்கும் என் அன்பே, காமதேவரின் பொறியைப் போன்ற நேர்த்தியான இந்த ஆபரணங்களால் என் காதுகளை அலங்கரிக்கவும். என் காதுகள் என் கண்களின் மான்களை
உதிர்வதைத் தடுக்கின்றன. என் இதயத்தின் மகிழ்ச்சியே, இளைஞர்களின் இதயங்களைக் குழப்பும் இந்த ஆபரணங்களால் என் காதுகளை அலங்கரிக்கவும்.

ப்ரமர-சாயம் ரச்சா யந்த முபரி, ருசிரம் சுசிரம் மம ஷம்முகே |
ஜித-கமலே விமலே பரிகர்மயா, நர்ம-ஜனகம் அல கா முகே,நிஜகதாஸ யதுநந்தனே ||4||

“என்னுடைய கறையற்ற மற்றும் மகிழ்ச்சியான முகம் ஒரு மாசற்ற தாமரை மலரின் அழகை தோற்கடிக்கிறது. என் நேர்த்தியான ஆடைகளை பின்னல் போடுங்கள், அல்லது தாமரை மலரில் எப்போதும் இறங்கும் பம்பல்பீக்கள் என்று என் சுருட்டை ஒருவர் தவறாக நினைக்கலாம்.

ம்ரிக-மட-ரஸ-வலிதம் லலிதம், குரு திலக மாலிகா-ரஜனி-கரே |
விஹித-கலங்க-காலம் கமலானா, விஷ்ரமித-ஷ்ரம-ஷிகரே, நிஜகதாஸ யதுநந்தனே ||5||

“ஓ கமலானா (தாமரை முகம் கொண்டவரே), வியர்வை என் நெற்றியில் நிலவில் உள்ள மான் வடிவ அடையாளத்தைப் போல கறைபட்டது. தயவு செய்து என் நெற்றியின் அரை நிலவில் இந்த வசீகரிக்கும் கஸ்தூரியைக் கொண்டு அழகான திலகத்தை வரையவும். கிருஷ்ணா! நீ என் அதிர்ஷ்டத்தின் மையப்புள்ளி – நீ என் நெற்றியில் திலகம்”

கானா ருசிரே சிகுரே குரு மனதா, மனசிஜ-த்வஜ-சாமரே |
ரதி-கலிதே லலிதே குசுமணி, ஷிகண்டி-ஷிகண்டக-தாமரே,நிஜகதாஸ யதுநந்தனே ||6||

“மற்றவர்களுக்கு (மானடா) மரியாதை கொடுப்பவனே, என் தலைமுடி, காமதேவரின் கொடியின் துடைப்பம் போன்றது. இது மயிலின் வால் இறகுகளை விட வசீகரமானது. தயவுசெய்து என் தலைமுடியை மலர்களால் அலங்கரிக்கவும். பூக்களால் பின்னப்பட்ட என் பின்னல் நீயாகி, அதை உன் தெய்வீக நறுமணத்தால் பரப்புவாயாக.”

சரஸ-கானே ஜகனே மம சாம்பரா, தாரன-வரண-கந்தரே |
மணி-ரஷனா-வசனா பரணானி சுபாஷாய வாசய சுந்தரே, நிஜகதாஸ யதுநந்தனே ||7||

“ஓ நல்லொழுக்கமுள்ளவனே, என் இதயத்தின் மகிழ்ச்சி! உங்கள் தாமரை கைகள் எல்லா அதிர்ஷ்டங்களுக்கும் உறைவிடம். உங்கள் இதயம், ரசத்தால் நிறைந்திருப்பது, அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் ஆணிவேராகும்
. என் முழு உயிரும் உன்னுடையது, அவற்றை ஆடைகளாலும் ஆபரணங்களாலும் கொடுங்கள்.

ஸ்ரீ-ஜெயதேவ-ருசிர வசனே, ஹ்ருதயம் சதயம் குரு மந்தனே |
ஹரி-சரண-ஸ்மரண அம்ருத-நிர்மிதா,கலி-கலுஷ-த்வஜ-கந்தனே, நிஜகதாஸ யதுநந்தனே ||8||

ஸ்ரீ ஜெயதேவாவின் வார்த்தைகள் ஐஸ்வர்யத்தை அளித்து, உங்கள் இதயத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன.
கலி யுகத்தில் முக்கியமான அசுத்தங்களின் காய்ச்சலை நீக்கும் ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களின் அமுத நினைவுகள் அவை .

********

ரசாய குசயோ:, பத்ரம் சித்ரம், குருஷ்வ கபோலயோ:
கதயா ஜகனே, காஞ்சி முஞ்ச-ஸ்ரஜம், கபரி-பரே |
கலயா வலய-ஷ்ரேயீனிம், பானௌ, படே குரு-நுபுராவ்
இதி நிகதிதா:, ப்ரீத:, பிதாம்பரோ’பி, ததா காரோட் ||9||

“என் கன்னங்களில் கலர் போடு! என் பின்னலை மலர்களால் கயிறு! என் கைகளில் வளையல்களின் வரிசைகளையும், என் கணுக்காலில் நகைகள் பதிக்கப்பட்ட கணுக்கால்களையும் பொருத்துங்கள். கிருஷ்ணர், பீதாம்பர-தாரி, ராதை தன்னிடம் கேட்டதைச் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார். ராதாவின் பிரேமாவின் இறுதி மாற்றத்தில், அவள் தன்னை முழுவதுமாக கிருஷ்ணரிடம் மூழ்கடிக்க விரும்புகிறாள். அவள் கிருஷ்ணமயமாக மாற விரும்புகிறாள் – கிருஷ்ணனில் மூழ்கி – அவனுடைய தெய்வீக கரங்களின் ஸ்பரிசத்தால். அவளுடைய இதயம் கிருஷ்ணனுடையது, அவளுடைய உடைகள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் கிருஷ்ணர்.

த்வாம-ப்ராப்ய-மயி, ஸ்வயம் வர-பரம், க்ஷிரோதா-திரோதரே…
ஷங்கே சுந்தரி, கால குட மாபிபன், பந்தோ மிருதானி-பதி: |
இத்தம் பூர்வ-கதாபிர் அந்ய-மானஸ:, விக்ஷிப்ய தக்ஷோன் சலம்
ராதாயா: ஸ்தான-கூர கோபரி-மிலன்-நேத்ரோ ஹரி: படுன: ||10||

“ஓ அழகானவளே! பாற்கடலின் கரையில் சிவபெருமான் உன்னை அடைய முடியாத போது; உன் அழகைக் கண்டு மயங்கி, அவன் கொடிய
கோலாகுடா விஷத்தை விழுங்கினான். பிறகு என்னைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தாய்.”

பர்யங்கி-கிருத-நாக-நாயக-பனா, ஷ்ரேணி-மணினம் கணே
சங்க்ராந்த-பிரதிபிம்ப-சம் வளநாய, பிப்ரத்-விபு-பிரக்ரியாம்… |
பாதாம்போ-ருஹ-தாரி-வாரிதி-சுதம், அக்ஷம் தித்ரிக்ஷு ஷதை:
காயா-வ்யூஹம் இவ-சரந், உபசிதி பூதோ ஹரி: பது ந: ||11||

சர்ப்பங்களுக்கெல்லாம் தலைவனான சேஷ-ராஜாவைத் தன் படுக்கையாகக் கொண்டவன்; ஷேஷ-ராஜாவின் எண்ணற்ற பேட்டைகளில் உள்ள நகைகளில் பிரதிபலிப்பாக அதன் மகிமை விரிவடைகிறது; அவனை ஆயிரமாயிரம் கண்களால் பார்க்க ஆசைப்படும் சேஷா; & யாருடைய தாமரை பாதங்கள் அதிர்ஷ்ட தெய்வமான மகாலட்சுமியால் நித்தியமாக மசாஜ் செய்யப்படுகிறதோ; ஒரே நேரத்தில் பல வடிவங்களில் நிறைந்திருக்கும் ஸ்ரீ ஹரி உங்கள் அனைவரையும் காக்கட்டும்.

யத் கந்தர்வ-கலாசு கௌஷலம், அனுத்யானம் ச யத் வைஷ்ணவம்
யக் ஷிங்கர-விவேக-தத்வ-மபி, யத்-காவ்யேஷு லீலாயிதம் |
தத் ஸர்வம் ஜெயதேவ-பண்டித-கவே:, கிருஷ்ணை-கடா-நாத்மனா:
ஸாநந்த:, பரிஷோதா யந்து ஸுதியா:, ஸ்ரீ-கேதா-கோவிந்ததா: ||12||

“ஜெயதேவரின் இசைத்திறன், விஷ்ணவம், யதார்த்த தரிசனம், இந்த சர்காக்களில் அவரது லாவகமான நாடகம், இவையனைத்தும் மகா கவிஞன் கிருஷ்ணருடன் பொருந்தியிருப்பதைக் காட்டுகிறது – ஞானத்தின் பேரின்ப மனிதர்கள் கீத கோவிந்தத்தைப் பாடி உலகைத் தூய்மைப்படுத்தட்டும்”

சாத்வி மாத்விகா, சிந்தா ந பவதி, பவதா: ஷர்கரே கர்கஶாஸி
த்ராக்ஷே த்ரக்ஷ்யந்தி கே, த்வாம் அம்ருதா ம்ருதா மாஸி, க்ஷீரைரம் ரஸஸ்தே |
மகாண்ட க்ரந்தா, காண்ட-தார தரணி தாலம், கச்ச யச்சந்தி பவம்
யாவச் ஶ்ரீங்கார, ஸரஸ் ஸ்வத மிஹா, ஜயதேவஸ்ய விஷ்வ கச்சாம்ஸி ||13||

“ஏய் சக்தி வாய்ந்த மது! நீங்கள் மிகவும் போதை என்று நினைக்க வேண்டாம். ஏய் சர்க்கரை! நீங்கள் மிகவும் கடுமையானவர். ஏய் திராட்சை! உன்னை யார் பார்ப்பார்கள்? ஹே அமிர்தம் (அமதா)! நீங்கள்
மரணம் போன்றவர் (மாதா). ஏய் பால்! நீங்கள் தண்ணீரைப் போல சுவைக்கிறீர்கள். ஏய் பழுத்த மாம்பழம்! இப்போது போய் அழுங்கள். அழகான பெண்ணின் உதடுகளே! இப்போது நீங்கள் செல்ல இடமில்லை.
சிற்றின்பக் காதலின் முழுமையான சாராம்சம் ஸ்ரீ ஜெயதேவரின் அருளும், கலைநயமும் நிறைந்த வடிவில் இருக்கும் வரை , இந்தக்
கவிதையின் ரசத்தை ரசிப்பதில் வல்லவர்கள் உங்களுக்கு எந்த இனிமையையும் அனுபவிப்பதில்லை.

ஸ்ரீ-போஜதேவ-பிரபவஸ்ய வாமா-
தேவி ஸுதா ஸ்ரீ-ஜெயதேவகஸ்ய
பராஷராதி-ப்ரிய-பந்து-காந்தே,
ஸ்ரீ-கீதா-கோவிந்த-கவித்வம் அஸ்து||14||

“இந்த ராச லீலாவின் முன்னோடியில்லாத படம் பக்தர்களின் இதயங்களில் என்றென்றும் அழகுபடுத்தப்படட்டும். ஸ்ரீ கீதா-கோவிந்தம் அவர்களுக்கு
மிகவும் பிரியமான, மிகவும் பிரியமான மற்றும் மிகவும் பிரியமான அனைத்தையும் உள்ளடக்கிய ஜீவ மூச்சாக, ரசத்தின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணரின் நினைவை எழுப்பட்டும்.

ஏதி ஸ்ரீ கீத கோவிந்தே ஶ்ரீங்கார மஹாகாவ்யே
ஸ்ரீ கிருஷ்ண தாஸ ஜெயதேவ க்ருதவ்
ஸ்வாதினா பத்ருகா வர்ணனே, ஸுப்ரிதா-பீதாம்பரஹ நாம, த்வாதஶ சர்கா:

மேகேயர் மெதுரா அம்பரம். வன-புவ:, ஷ்யமாஸ் தமலா-த்ருமை:
நக்தௌ பிர்-உரயம், த்வமேவ தத் இமம், ராதே க்ருஹம் ப்ராபய |
இத்தம் நந்த-நிதேஷத:, கலிதயோù:, ப்ரத்-யத்வ-குஞ்ச-த்ருமம்
ராதா-மாதவ யோ: , ஜெயந்தி யமுனா-குலே, ரஹ-கேளயா: ||1||

 ஜெய் ஜெய் ஸ்ரீ ராதே!! 

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜெயதேவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


ஸ்ரீ கேசவ நாம -வை லக்ஷண்யம் —

March 1, 2022

(புரஸ்தாத் கேசவ: பாது சக்ரி ஜாம்பூனத: பிரப:)
(இதீதம் கீர்தநீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன:)

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எவ்வாறு ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையானது கடலையே சென்று அடைகிறதோ அதை போல
அனைத்து தெய்வங்களுக்கு செய்யும் நமஸ்காரமும் கேசவனையே சென்று அடைகிறது

“சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்ஸ்ரிஜ்ய புஜம் உச்யதே, வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்”.
(இது உண்மை உண்மை என்று கைகளை உயர்த்தி சொல்லுங்கள் –
வேதங்களை காட்டிலும் உயர்ந்த சாஸ்திரம் இல்லை, கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் ஒன்று இல்லை).

ஒரு திருநாமம் என்றால் கீழ்கண்ட நான்கு வகைகளில் தான் பகவானை குறிக்கும்:
1. ரூபம்
2. ஸ்வாபாவிக தன்மை
3. குணம்
4. லீலை (திருவிளையாடல்)

பொதுவாக திருநாமங்களுக்கு பல பொருள்கள் உண்டு.
பல திருநாமங்கள் மேற்கண்ட நான்கில் எதாவது ஒரு வகையை மட்டும் சேரும்.
சில திருநாமங்கள் 2 அல்லது 3 வகைகளில் பகவானது மேன்மையை சொல்லும்.
கேசவ நாமம் மட்டுமே பகவானது மேன்மையை மேற்கண்ட நான்கு வகைகளிலும் கூற வல்லது.

அழகிய கேசங்களை உடையவன்
1. ரூபம்: அழகிய முடி கற்றைகளை (கேசங்களை) உடையவன் என்பதால் பகவானுக்கு கேசவன் என்று பெயர்.
ஸ்ரீ கிருஷ்ணனின் திருப்படத்தை பார்த்தால் போதும், இந்த அர்த்தம் எளிதில் விளங்கிவிடும்.

2. ஸ்வாபாவிக தன்மை: பகவானே பரம்பொருள்.
“கா இதி ப்ரஹ்மனோ நாம இஷோஹம் சர்வ தேஹினாம்
ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான்”

பரமசிவன் கேசவ நாமத்திற்கு அர்த்தமாக இந்த ஸ்லோகத்தை கூறுகிறார்.
க என்றால் பிரம்மதேவரை குறிக்கும், ஈச என்றால் நான் (சிவபெருமான்).
நாங்கள் இருவரும் உங்களது உடலில் இருந்து தோன்றியதால், உங்களுக்கு கேசவன் (க + ஈச = கேசவன்) என்று பெயர்.

3. குணம்: துன்பங்களை அழித்தல்
கேசவ: க்லேஷ நாசன:
கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன (நம்மாழ்வாரின் திருவாய்மொழி)

4. லீலை (திருவிளையாடல்):
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை வதம் செய்ததால் கேசவன்.

கஜேந்திர மோக்ஷம்
கேசவ நாமத்தை விளக்கும் ஒரு முக்கிய சரித்திரம் கஜேந்திர மோக்ஷம்.
இந்திரத்யும்னன் என்ற பாண்டிய மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன்.
அகஸ்த்ய மகரிஷியின் சாபத்தினால் அடுத்த பிறவியில் யானையாக பிறக்கிறான்.
ஒரு நாள் ஒரு பொய்கையில் நீராடும் பொழுது ஒரு முதலை அந்த யானையின் காலை பிடித்தது.
ஆயிரம் வருடங்கள் போராடிய பிறகு தனது முற்பிறவி பயனால். பகவானை துதிக்க,
அவரும் கருட வாஹனத்தில் எழுந்தருளி முதலையை கொன்று யானையை காக்கிறார்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அட்டபுயக்கரத்தில் பகவானுக்கு ஆதி கேசவன் என்று திருநாமம்.
பேயாழ்வருக்கு பகவான் இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷ லீலையை காட்டியதாக தல வரலாறு.

திருவட்டாறு என்னும் தலத்திலும் பகவான் ஆதிகேசவனாக அருள்பாலிக்கிறார்.
பொதுவாக இடமிருந்து வலமாக சயனிக்கும் பெருமாள், இத்தலத்தில் வடமிருந்து இடமாக சயனதிருக்கிறார்.
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளை நமது பிறப்பு தளையை முக்தி கொடுப்பவனாக பாடியுள்ளார்
(வாற்றாட்டான் அடி வணங்கி மாஞால பிறப்பறுப்பான்…).
திருமயிலையிலும் பகவான் மயூரவல்லி நாயிகா சமேத ஸ்ரீகேசவஸ்வாமியாக அருள் பாலிக்கிறார்.

வாழி கேசவா!!!

நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவ ப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

———-

திவ்யப்ப்ரபந்தம் 3776 ஆக இருப்பினும் 4000 பாசுரமாக கணக்கில் கொள்வது எப்படி?

“இலங்கெழு கூற்றிருக்ககையிரு மடலீந்தான் வாழியே
இம்மூன்றிலிருநூற்றிருபத்தே ழீந்தான் வாழியே “
என்னும் அப்பிள்ளையருளிய வாழித்திருநாமத்தைப் பின்பற்றி திருமடல்களில் ஈரடி கொண்ட கண்ணிகளை
ஒரு பாட்டாகக்கொண்டு சிறிய திருமடல் 77 1/2 பாட்டாகவும்,
பெரியதிருமடல் 148 1/2 பாட்டாகவும் கொண்டு மூன்றாமாயிரத்தில் மொத்தப் பாசுரங்கள் 817 என்று கொண்டு
சில பதிப்புகளில் திருவாய்மொழியோடு சேர்த்து திவ்யப்ரபந்தம் நாலாயிரம் பாட்டாகக் கணக்கிடப்பட்டது.

“சிறியமடற்பாட்டு முப்பத்தெட்டிரண்டும் சீர்பெரியமடல்தனிற் பாட்டெழுபத்தெட்டும் (தேசிகப்ரபந்தம் 389) என்னும்
பிரபந்த பாட்டில் உள்ளபடி சிறியமடலை 40 பாட்டாகவும்
பெரிய திருமடலை 78 பாட்டாகவும் கொண்டு
மூன்றாமாயிரம் 709 பாசுரங்களாகவும்
திருவாய்மொழியையும் இராமானுஜ நூற்றாந்தாதி 108 பாட்டையும் சேர்த்து 4000 பாசுரங்களாக கணக்கிடப்படுகிறது.

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

————–

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———

கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ —9-9-6-

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

(அவருக்கும் ஒரு அவயவம்-குழலுக்கு- இவளுக்கும் ஓர் அவயவம் -கண்ணி-சொல்லி )

————–

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

—————

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேட்டும் உணர்ந்தவர் –
ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு,
ஏவம் ஞாத்வா பவிதும் அர்ஹதி -அறிந்து இதன்படி ஆகக் கடவன்’ என்கிறபடியே,
பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள்.

கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –
புறம்பே ஆஸ்ரயணீயர் இல்லாதபடி தானே ஆஸ்ரயணீயனான வனுக்கு ஒழிய ஆள் ஆவரோ?
இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
கேசவன்’ என்ற பெயர் பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், கேசவன் என்ற பெயரை யுடையரானீர்,’ என்கிறபடியே யாதல்
அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது.

—————

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-

அழகிய மாடங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரிலே பிரசஸ்த கேச யுக்தனாய்
கல்யாண பரிபூர்ணனான ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ நந்தகோபருடைய இனிய மாளிகையிலே
எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து தூவ
விசாலமாய் தர்ச நீயமான முற்றமானது எண்ணையும் மஞ்சள் பொடியும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து
சேறாய் விட்டது –
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் திண்ணை சேர் திரு கோட்டியூர் -என்கிறபடியே –
நானா வித ரத்னங்களை அழுத்தி சமைக்கையால் வந்த அழகை உடைத்தான மாடங்களால் சூழப் பட்ட ஸ்ரீ திரு கோட்டியூரில்
பிரசஸ்த கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்

பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து
ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம் தோன்றாமல் போக வேண்டாதே –
எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற
இனிய இல்லிலே பிறந்து –
அதவா –
பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –

கண்ணன் –
கண்ணில் கூர்மை உடையராய் நிபுணராய் இருப்பாராலே பரிக்ராஹ்யமான
தேவகி புத்ர ரத்னம் திருஷ்டி கோசரம் ஆகையால் கண்ணன் என்கிறார்
(கண் -ஸூஷ்ம தர்சீ களுக்குக் காட்சி கொடுத்து அருளுபவர் -ஞானக் கண்ணால் அறியப்படுபவன்
பத்திமை -பக்தி அஞ்சனம் -ஞாதும் த்ரஷ்டும் பிராப்தி -)

கேசவன் நம்பி
அவனுடைய சர்வ காரணத்வத்தையும்
விரோதி நிரசனத்தையும் தாம் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
அவன் போக்யதைக்கு மங்களா சாசனம் பண்ணி
பிரசச்த கேசன் -கல்யாண குண பூரணன் -என்கிறார்

(ப்ரஸஸ்த கேசன்
கேசி அசுரனைக் கொன்றதால் -கேசவன் -விரோதி நிரசன சீலன்
க ஈஸா நியந்தா-சர்வ காரணத்வம்
நம்பி -கல்யாண குண பூர்ணன் –
பெரியாழ்வார் தாமே ஏறிட்டுக் கொண்டாரே -)

——————

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

கேசவன் பேர் இட்டு –
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவாம் கே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
கேசவ க்லேச நாசன -என்கிறபடியே
க்லேச நாசனாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை இட்டு –
கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித் திருமினோ –
நீங்கள் அந்த பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து சந்தோஷத்தோடு இருங்கள்
தேனித்து இருக்கை யாவது -இனியராய் இருக்கை

நாயகன் நாரணன்
நாயகன் -என்றது – சர்வ சேஷி -என்றபடி
நாரணன் -என்றது -சமஸ்த கல்யாண குணாத்மகன்-என்றபடி

இத்தால் –
ஆஸ்ரிதரத்தை ரஷிக்கைக்கு ஈடான ப்ராப்தியையும்
குண யோகத்தையும் உடையவன் என்கை

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்

——————

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2

சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-

தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.

————-

பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாடவல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-

அவர் கேசவன் தமரே –
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;
‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவதீயர் -பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மை தனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்–திருவாய்மொழி நூற்றந்தாதி-16-

வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –

——————-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே –2-7-1-

நம்முடைய வாழ்வு -ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ -வி லஷணமாக உள்ளது -கேசவன் தமர் என்னும்படியான சிறப்பு பெற்றார்கள்
சர்வேஸ்வரன் -கண் அழகால் என்னை ஈடுபடுத்திக் கொண்டு
வடிவு அழகாய் முடூட்டாக அனுபவிப்பித்து
விஷயீ கரித்த மகா உபாகாரகன் நாராயணனாலே மா சதிர் பெற்றோம்
கேசவன் -கேசாபாசம்/கேசி நிரசித்தவன் /பிரமனுக்கும் சிவனுக்கும் ஈசன் –

—————–

கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11-

கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன –
கேசி ஹந்தாவான -கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரன் திருவடிகளிலே.
கீழில் திருவாய் மொழியிற் -நல்குரவும்”-சொன்ன சர்வேஸ்வரத்வத்தையும்,
இத் திருவாய் மொழியிலே, கேசியைக் கொன்றவனான கிருஷ்ணனுடைய அவதாரத்தையும்
அநுபாஷித்துத் தலைக் கட்டுகிறது” என்று சொல்லுவர்.
அன்றிக்கே,
க்ருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திரபிசாப்யய:
க்ருஷ்ணஸ்ய ஹிக்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்”–மஹாபாரதம் சபாபர். 38 : 23.
எல்லா உலகங்கட்கும் காரணன் கிருஷ்ணனே” என்கிறபடியே, கிருஷ்ண விஷயமே சொல்லுகிறது என்னுதல்,

————–

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே–7-5-3-

கேசவன் கீர்த்தி அல்லால் –
விரோதி நிரசன சீலன் -பகைவர்களை அழிக்கும் தன்மையனான ஸ்ரீ கிருஷ்ணன் கீர்த்தி அல்லது
வேறே சிலவற்றைக் கேட்பரோ?
பருவம் நிரம்பிக் கற்ற பின்பு அன்று விரோதிகளைப் போக்கியது;
பூதனை தொடக்கமான விரோதிகளைத் தொட்டில் பருவத்தே அன்றோ போக்கியது?
விரோதிகளை அழிப்பது தான் அறிந்ததனால் அன்று;
பொருளின் -சத்தயா -உண்மையாலேயே பாதகமாய் இருக்கிறபடி.
நஞ்சு கொல்லுவது அறிவு உண்டாய் அன்றே? ‘
வ்யாதிதாஸ்ய: மஹா ரௌத்ர: ஸ. அஸூர: க்ருஷ்ணபாஹூநா
நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 16 : 14.
நன்றாகத் திறந்து வாயையுடைவனும் மஹா பயங்கரமானவனுமான அந்தக் கேசி என்னும் அசுரன் இடியேறு உண்ட மரம் போன்று
கிருஷ்ணனுடைய திருக் கரத்தால் இரண்டாகச் செய்யப் பட்டவனாய்க் கீழே விழுந்தான்,’ என்கிறபடியே,
இந்த ஸ்லோகத்தில், பாஹூப்யாம் என்னாமல்‘பாஹூ நா’ என்றதற்கும்,
த்விதா பூத;’ என்றதற்கும் கருத்து அருளிச் செய்கிறார்,
கேசி யானவன் வாயை அங்காந்து கொண்டு கண்டார் எல்லாரும் நடுங்கும்படி வந்து தோற்ற,
இளைஞராய் இருப்பார் துவாரம் கண்ட இடத்தே கை நீட்டக் கடவர்களாய் இருப்பார்கள் அன்றோ?
அந்த வாசனையாலே இவன் வாய்க்குள்ளே கையை நீட்ட, புதிதான அனுபவத்தால் கை விம்ம வளர்ந்து கொடுத்தது;
அப்போதோ இடியேறு உண்ட மரம் போலே இரு பிளவாய் விழுந்தான்.

மற்றும் கேட்பரோ –
கீழில் கூறிய ராமனுடைய வ்ருத்தாந்தம் -சரிதையைத்தான் கேட்பரோ?
இவர் ஸ்வபாவம் இருந்தபடி என்?
ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்றார் கீழே –
இங்கே, ‘கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?’ என்னா நின்றார்;
இது தனக்கு அடி என்? என்னில்,
அந்த அவதாரத்தினை நினைத்த போது
தயரதற்கு மகன்தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாக’ திருவாய். 3. 6 : 8.-என்பர்;
இந்த அவதாரத்தை நினைத்தபோது ‘நம் கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே’ திருவாய். 2. 2 : 1.-என்பர்;
இப்படி இழிந்த துறைகள் தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ?
ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் குணா ந்தரங்களில் -வேறு குணங்களில் கால் வாங்க மாட்டாதவாறு போலே ஆயிற்று,
ஒவ்வோர் அவதாரத்தில் இழிந்தால் மற்றை அவதாரங்களில் போக மாட்டாமையும்.

————

மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:3688/1

மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்று முருவுஞ் சுவடுங் காட்டான்
ஏல மலர்க் குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்ப தாணை உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

மால் –
அடியார்கள் பக்கல் வ்யாமோஹமே வடிவாய் உடையவன்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வரக் கூப்பிடச் செய்த வியாமோஹம்

அரி –
விரோதிகளை அழிக்கும் தன்மையன்-விரோதி -நிரசன சீலன் –

கேசவன்
காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் மீள ஒண்ணாத பிரசஸ்த கேசன் –
செறிந்த நீண்ட மயிர் முடியை உடையவன்

நாரணன் –
ஆஸ்ரித வத்சலன் -அடியார்கள் இடத்தில் அன்பை உடையவன்

சீ மாதவன் –
அதற்கு அடியான ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் ஆனவன்

கோவிந்தன்
அவளுடைய சேர்த்தியாலே ஆஸ்ரிதற்கு அடியார்கட்கு கையாளாய் இருக்குமவன்

வைகுந்தன்
இவற்றுக்கு எல்லாம் அடியான மேன்மையை உடையவன்

என்று என்று
நிரந்தரமாக -எப்பொழுதும்

ஓலம் இட
கார்யப்பாடு அற கூப்பிடும்படி

————–

கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –
மா ஞாலம் பிறப்பு அறுப்பான் –வாட்டாற்றான் அடி வணங்கி-
இந்த உடலின் சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேண்டும் அன்றோ
நாம் சர்வேஸ்வரன் திருவடிகளைப் பற்றியது –
அதற்கு மேலே நம்மை அவன் அடிமையும் கொண்டானே கண்டாயே
வாக்கினாலாய அடிமை அன்றோ கொண்டது -பாட்டாய பல பாடுதல் –

கேசவன் எம்பெருமானை –
கேசி என்னும் அசுரனைக் கொன்ற சர்வேஸ்வரனை -என்றது
கேசியை கொன்றால் போல் நம் விரோதிகளை நீக்கி
நம்முடைய சேஷத்வத்தை -அடிமைத் திறத்தினை நிலை நிறுத்தி
நமக்கு ஸ்வாமியாய் உள்ளவனை -என்றபடி –
அன்றிக்கே –
பிரசஸ்த கேசன் -நீண்ட மயிரை உடையவன் தன் அழகினைக் காட்டி
நம்மை அடிமை கொண்டவன் -என்றுமாம் –

பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து –
நாம் அடிமை செய்ய-பிராப்தி பந்தகமாய் -அடைவதற்குத் தடைகளாய்-அநாதி கால ஆர்ஜிதமான –
பலகாலமாக ஈட்டப்பட்ட அவித்யை முதலியவைகள் எல்லாம் போகப் பெற்ற படியைக் கண்டாயே –
இவை வினை அறுக்க குடித்த வேப்பங்குடிநீர் இது காணும் –
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண
கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –கேசவனாகிய மருத்துவனை –
இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த
இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலாய் இருக்கும் அன்றோ –

————-

கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த-
பரம பதத்தை கலவிருக்கையாக உடையவன் அதனை விட்டு
பிரமன் முதலாயினார்கட்கு முகம் கொடுக்கைக்காக
திருப் பாற் கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிற படி
தொடு கடல்
தோண்டப்பட்ட கடல்
ஆழ்ந்த கடல் -என்றபடி –

எம் கேசவன்
ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களுக்காக கிருஷ்ணனாய் வந்து பாதுகாத்தவன் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே —
அவதாரத்துக்கு பிற்பாடர் இழவாதபடி திருக் குடந்தையிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறவன் –
கிருஷ்ணன் தானே வந்து திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறான் -என்கிறது
மருதரும் வசுக்களும் அவன் போய்ப் பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று கொண்டாட நிற்பார்கள்

கிளர் ஓளி மணி முடி
மிக்க ஒளியை யுடைய ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேயம்
வ்யூஹ விபவங்கள் அளவு அன்றிக்கே திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுகையாலே நீர்மையிலே தோற்று
சந்தானமாக எழுதிக் கொடுத்தவர்கள் அன்றோ இவர்கள் என்றாய்த்து அவர்கள் ஆதரிப்பது –

————-

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

திரை நீர் சந்திர மண்டலம் போல் செம் கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத் துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளஞ் சோரத் தளர் நடை நடவானோ -1 7-10-

செம் கண் மால் இத்யாதி –
சிவந்த திருக் கண்களையும்
அதுக்கு பரபாகமான கருத்த நிறத்தையும் உடையவனாய் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன்
மால்-கரியவன் –

————-

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்றும்
தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே 2-9 8- –

கேசவனே இங்கே போதராயே –
பிரசச்த கேசன் ஆனவனே -அசைந்து வருகிற குழல்களும் -நீயுமாய் அசைந்து வருகிற போதை
அழகை நான் அனுபவிக்கும்படி அங்கு நின்று இங்கே வாராய்
ப்ரஸித்த நாமம் ஆதல்

—————

கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு

பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –

————–

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

நாயகப் பெண்பிள்ளாய்! — இத்திரளுக்கெல்லாம் நீ தலைவியானபடி இதுவோ?
எல்லோரையும் திரட்டிக் கொண்டு போய் உத்தேச்யத்தைப் பெறுகை யன்றோ தலைவியின் காரியம் என ஏசியவாறு.

இங்ஙன் ஏசக் கேட்ட அவள், ‘என்னை நீங்கள் தலைவி என்னலாமோ, உங்களுக்கு நான் அடிமைப்பட்டவளல்லேனோ?
இதோ வந்து கதவைத் திறக்கிறேன்; எம்பெருமானுடைய சில அபதாநங்களைப் பாடிக்கொண்டிருங்கள் என்ன;
இவர்கள் கேசி வத வ்ருத்தாந்தத்தைப் பாடத் தொடங்கினார்கள்.

கேசியின் வாயைக் கீண்டெறிந்த வரலாறு:–
கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கேசி என்பவன் குதிரையின் உருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி
கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணபிரான் மேற் பாய்ந்து வர,
அப் பெருமான் திருக் கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப் பற்களை உதிர்த்து
உதடைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

நாராயணன் மூர்த்தி கேசவனை –
நாராயணமூர்த்தியாகிய கேசவனை;
அன்றி,
மூர்த்தி என்று ஸ்வாமிக்கும் பெயராகையாலே,
நாராயணாவதாரமாய் ஸர்வ ஸ்வாமியான கேசவனை என்றும் உரைக்கலாம்.
கேசவன் என்பதற்கு,
கேசியைக் கொன்றவன், சிறந்த மயிர் முடியையுடையவன், அயனரர்கட்குத் தலைவன் என மூவகைப் பொருள்களுண்டு.

கேசவன் –
கண்ணுக்கு தோற்ற நின்று–நம் விரோதிகளை போக்குமவன்-
கேசவன் இந்த்ரியங்கள் குதிரைகள் அழித்து-தேசுடையாய் உள் நாட்டு தேசு –
ஆழியம் கை பேராயர்க்கு ஆட்பட்டார்க்கு அடிமை —
பூதனை முதலில் கேசி இறுதியில் -ஸ்ரீ மத் பாகவதம் சொல்லி முடித்தார்கள்-
புள்ளும் சிலம்பின தொடங்கி கீசு கீசு பாசுரங்களில் –
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாளே-ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் காட்டும் திரு நாமம்

நாராயணன் மூர்த்தி கேசவன் –
வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

————–

வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

———————–

தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

——————-

தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

——————

கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–

கேடு இல் விழுப் புகழ் கேசவனை –
கேடு இல்லாமல் விழுப்பத்தை யுடைத்தான நித்யமாய் இருக்கிற மங்களம் பொருந்திய
கல்யாண குணங்களையுடைய,கேசி ஹந்தாவை – கேசியைக் கொன்ற கிருஷ்ணனை.

———————

திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

————–

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள்
கேடு வேண்டுகின்றனர் பலருளர் கேசவனோடி வளைப்
பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே -3-7-5 –

கேசவனோடி வளைப் பாடு காவல் இடுமின் என்று என்று பார் தடுமாறினதே
கேசவனோடே –ப்ரசஸ்த கேஸனானவனோடே
இவளை -பருவத்து அளவே அன்றியே பரிபாகம் மிக்க இவள்
இவள் பிறங்கு இரும் கூந்தலானாலும் -இவள் சொல்லுவது
மயிரும் முடி கூடிற்று இல –என்று இறே

கேசவன் -இத்யாதி –
ஆன பின்பு -பிரசஸ்த கேசவனோடே-
அவ் வை லக்ஷண்யத்தில் எடுப்புண்டு பின் பற்றித் திரிகிற இவளை –

————

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – 3-3 2-

(கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரம் -குலசேகரப்பெருமாள் )

நித்ய வாசம் பண்ணுகிற ஸௌசீல்ய குணயுக்தனாய்-
ஆஸ்ரித விரோதிகளை -மதுவை – நிரசித்தால் போலே நிரசித்து பொகடுமவனாய் –
அவர்களுக்கும் அனுபாவ்யமாம்படி பிரசஸ்தமான திருக் குழலை உடையனாய் இருக்கிறவனே

பிரபத்தி மார்க்க பிரகாசகமான
தெற்கு திக்கு முதலான எல்லாத் திக்கு களுக்கும் ப்ரதாநமான கோயிலிலே நித்ய வாஸம் செய்கையாலே
ஆஸ்ரிதருக்கு ஸூ லபனாய்
விரோதி நிரசன சீலனுமாய்
ப்ரசஸ்த கேஸ ப்ரதானனுமாய் –இருக்கிறவனே

——————–

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக்கு அரிது
வாட்டமிலா புகழ் வாசுதேவா வுன்னை அஞ்சுவன் இன்று தொட்டும் -3 -3-8 –

கேசவா
ப்ரம்மா ஈஸா நாதிகளுக்கு காரணமாகை அன்றிக்கே
இப் பழிச் சொல்லுக்கு நீ காரணம் ஆவதே –
(அகில காரணம் அத்புத காரணம் அன்றோ )

பிரம ருத்ரர்களுக்கு காரண பூதன் ஆகையாலே -கேசவன் -என்னும்
திருநாமத்தை உடையவனே –

—————

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

பேசவும் தெரியாத பெண்மை என் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுருகின்றாளே – 3-7 -7-

கேசவா என்றும்
பிரசச்த கேச வனானவனே-என்றும்

கேசவா என்றும்
விரோதி நிரசன சீலன் என்னுதல்
ப்ரசஸ்த கேசன் என்னுதல்

கேடிலீ என்றும் –
உன்னால் அல்லது செல்லாதவர்களை ஒரு நாளும் கை விடாதவனே -என்றும்

————–

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

—————

கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

—————-

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து –

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

——————–

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி
மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள்
பொலியும் நீர் முகில் குழவியே போலே
அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும்
அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ!
கேசவா ! கெடுவேன் கெடுவேனே– 7-2-

கேசவா ! கெடுவேன் கெடுவேனே–
அப்போதைத் திருக் குழல் அழகை அனுபவிக்கவும் பெற்றிலேன்
முன்பு மலடு நின்று இழந்தேன்
பின்பு பெற்று வைத்தே அனுபவிக்கப் பெறாது ஒழிந்தேன்
இரண்டாலும் மஹா பாபி இறே நான் –

———–

பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4

கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20

பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்

கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
ஏச வன்று நீ கிடந்தவாறு –
தேவதைகள் அடங்க சாபேஷராய் நின்ற வன்று -சர்வாதிகனான நீ –
உன் படி அறியாதார் -ஆமையானான் -என்று உன்னுடையாரை ஏசும்படி -மந்த்ரம்
முதுகிலே நின்று சுழலக் கண் வளர்ந்து அருளின பிரகாரம்
கூறு தேற வவேறிதே –
தெரியும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும் –
ஆமையானே நீர்மையிலே சர்வாதிகத்வமும் பிரகாசியா நின்றது
ப்ரஹ்மாதிகள் ஏத்த கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே நீர்மை பிரகாசியா நின்றது
இவற்றை பிரித்து தெரிய அருளிச் செய்ய வேணும் -என்று கருத்து –

—————

வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2

வினையேன் வினை தீர் மருந்தானாய்! விண்ணோர் தலைவா! கேசவா!
மனை சேர் ஆயர் குல முதலே! மா மாயவனே! மாதவா!
சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

விண்ணோர் தலைவா-
நித்தியானுபவம் பண்ணும்போது ‘நான் அயோக்கியன்’ என்று அகல வேண்டாதார்க்கு-நியாந்தாவாய் –
ஏவுகின்றவனாய் இருக்கும் இருப்பில் நின்று வந்து போக்கினான்.

கேசவா-
அதுக்கு அவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி –
ஆவாம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் ( ‘க என்னும் இது பிரமனுக்குப் பெயராம்;
எல்லாரையும் ஏவுகின்றவன் நான் ஆதலின், எனக்கு ஈசன் என்று பெயராம்;
நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்;
ஆதலால், ‘கேசவன்’ என்ற பெயரை அடைந்தீர்’ )என்கிறபடியே-

—————

கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
ப்ரஹ்ம ஹத்யைக்கு -பிராயச்சித்தமாக -கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு பிராயச்சித்தம் -கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –
ப்ராயச்சித்தமும் -கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன

கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
ராவணன் ஒருவனும் பிரதிகூல்யம் -தீ வினை செய்ய ராக்ஷஸ ஜாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே
எல்லாம்-
அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
என்ன –
கார்யத்தில் வந்தால் -அர்த்தக்ரியா காரியாயே – அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின்
யுக்தி -வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –

இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
பிரசஸ்த கேசனாய் -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-சம்சார துரிதங்கள் –
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனோ நாம ஈசோஹம் சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் நிர்வாஹகன் -தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

————-

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை

————

கேசி (1)
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

கேசி –
ஸ்வர்க்க வாசிகளான தேவதைகளுக்கும் பாதகனான கேசி –

இவ் வசுர வர்க்கத்தின் க்ரௌர்யத்தை பேசிற்று -தம்முடைய பிரதிபந்தங்களை-க்ரௌர்யம் தோற்றுகைக்காக
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த –
துக்கத்தை அனுபவித்து ம்ர்தராய் விழும்படி ஆயுஸை வாங்கின
நாசம் -துக்கம்
வீழ்தல் -என்று விடுதலாய் -பிராணனை விடும்படி என்னவுமாம்
இத்தால் –
ஆ ஸ்ரீ த விரோதிகளை ஸ்வ சத்ருக்களைப் போலே கண்ணற்று க்ரூரமாக வகுத்தபடி
நின் கழற்கலால் நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் –
விரோதி நிரசன சீலனான உன் திருவடிகளில் அல்லது
பக்தியாகிற கயிற்றை எவ் விஷயத்திலும் வையேன் –
பந்தகம் என்கையாலே பக்தியை கயிறு என்கிறது
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -என்னக் கடவது இ றே

எம் ஈசனே –
என் நாதனே
விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவான பாபங்களையும்
தேவரீர் பக்கலில் பிரேமத்துக்கு விரோதியான பாபங்களையும் போக்கி
இவ்வளவும் புகுர நிறுத்துகைக்கு அடி -இத்தை உடையவன் ஆகை -என்கை

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 5, 2022

ஸ்ரீ யதிராஜருக்கும் யதுகுல திலகமான ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள
ஸாம்யத்தை சாடுக்தியான ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய –ஸ்ரீ யதிராஜ சப்ததி—13-ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –
கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால்
யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் -பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-
பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-

ஸ்ரீ பார்த்த சாரதியே தானே இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ
சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூ க்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

———-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ கலியனும்

1-ஸூர்யத்வாத் –
2-ஸூசிதத்வாத் –
3-அபஹ்ருதி கரணாத் –
4-கோகுல உத்தாரகத்வாத்
5-பத்தத் வாத்
6-ஸாஸ்த்ர தத்வாத்
7-ஜன ஸஹ யோ கச்ச
8-லஷ்மீ பதித் வாத் –
9-நீலத் வாத்
10-நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்
11-அந்த தச்சா வதாராத்
12-ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்
கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஸூர்யத்வாத் –

தத் அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

கலயாமி கலி த்வம்ஸம் கவிம் லோக திவாகரம் –5-2-1-

ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் கண்ணபிரானுடைய திருவவதாரத் தைக் கூறுகின்ற பராசரமஹரிஷி கண்ணனவதரித்தானென்று சொல்லவில்லை,
*ததோகிலஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநர், தேவகீபூர்வஸந்த்யாயாம் ஆ ர்ப்
பூதம் மஹாத்மநா. என்கிறச்லோகம் க்ருஷ்ணாவதாரத்தைக் கூறுமது. இதில்
தேவகியாகிற பூர்வஸந்தியையிலே க்ருஷ்ணஸூரியன் ஆவிர்ப்பவித்தான் என்றது.
இதனால் க்ருஷ்ணன் ஸுர்யனென்னுமிடம் ஸித்தித்தது. கலியனும் ஸூர்யனாகவே பேசப்பட்டிருப்பதை *கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் * என்கிற அவருடைய
ஸ்து பத்யத்தினால் உணரலாம். ஆக இருவரும் ஸூர்யர்களென்னு மத்தாலே
ஸாம்யம் பெற்றனர்.

——-

ஸூசிதத்வாத் –

அவதாரம் அசரீரி வாக்கு –

கலியும் கெடும் கண்டு கொண்மின்

கண்ணன் கம்ச வதம்
கலியன் கலி புருஷ வதம்

ஸூசிப்பிக்கப்பட்டபடியாலே என்பது இதன் பொருள்.
கண்ணனுடைய அவதாரமும் கலியனுடைய அவதாரமும் இவர்கள் அவதரிப் பதற்கு வெகுநாள் முன்னமே ஸூசிப்பிக்கப்பட்டிருந்தது எங்ஙனே யென்னில்;
கண்ணனுடைய திருத்தாயாரான தேவகிப்பிராட்டி கம்ஸனுக்கு உடன்பிறந்தவள்
அக்கம்ஸன் தேவகிக்கு மிகச் சிறப்பாக விவாஹமஹோத்ஸவத்தை நடத்திவைத் துப் பரமப்ரீதியுடன் தம்பதிகளை ரதத்தில் வீற்றிருக்கச் செய்து அதனைத் தானே ஓட்டிக்கொண்டு போகையில் ஆகாசவாணியொன்று செவிப்பட்டது; ‘இத் தேவகியின் எட்டாவது குழந்தையினால் உனக்கு மருத்யு விளையும்’ என்று அந்த
வாக்கு அப்படியே பலித்தது. இதனால் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய திருவவதாரம்
முன்னமே சிதமாயிற்றென்பது விளங்கிற்று. இது போலவே திருமங்கை
யாழ்வாருடைய திருவவதாரமும் முன்னமே சிதமாகியுள்ளது. திருவாய்மொழி
பயில் (5-2-1)*கலியுங் கெடும் கண்டு கொண்மின்* என்கிற பாசுரத்தை ஆகாச
வாணி யென்றே கொள்க. தவறாமல் பலிப்பது ஆகாசவாணி. இந்தப் பாசுரமும்
தவறாமல் பலித்திருக்கின்றது ஆசார்யஹ்ருதயத்தில் “கலியும் கெடும்போலே
ஸூசிதம்” என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள் “இவர் தாம்
மயர்வற மதிநலம் பெற்றவராகையாலே *கலியுங்கெடும் * என்று – திருமங்கையாழ்
வார் உடையவர்போல்வார் அவதரித்துக் கலியுகஸ்வபாவமும் கழியுமென்று மேல்
வரும் அம்சத்தை தர்சித்து அருளிச்செய்தாப்போலே ”என்று திருவாய்மலர்ந்
தருளியுள்ள திவ்யஸுத்தி இங்கே அநுஸந்தேயம், கண்ணன் கம்ஸவதம் செய்த
வன்; இவ்வாழ்வார் கலிபுருஷவதம் செய்தவர்.

———

அபஹ்ருதி கரணாத் -பட்டர் மங்களா ஸாஸனம் கலியன் திருட்டுக்கு
மணி கொடுத்த பெருமாள் ஸூசிக்கும்படி காஞ்சியில் திருமங்கை சேவை மணி கையில்

வெண்ணெய் பெண்களை களவு கண்ணன்
கோயில் பிரகார மண்டபாதி நிர்மாண அர்த்தத்துக்காக கலியன் பல பல களவுகள் ப்ரஸித்தம்

வீரனாக முன்
விநயனாக பின்
இன்றும் வேடுபரி உத்சவத்தில் சேவிக்கிறோமே

அபஹ்ருதிகராத் கண்ணன் கள்வனென்று ப்ரஸித்திபெற்றதுபோலே இவ்வாழ்வாரும் கள்ளரென்று ப்ரஸித்திபெற்றவர். ‘வெண்ணெய் களவுசெய்தான்,பெண்களைக் களவுசெய்தான்’ என்று ஸ்ரீக்ருஷ்ண சரித்திரங்களிலே வாசிக்கிறோம்,
இவருடைய சரித்திரத்திலும் திருவரங்கம் பெரியகோயிலில் கோபுர ராகார மண்டபாதி நிர்மாணத்திற்காகப் பலபல களவுகள் செய்த செய்திகளை வாசிக் கின்றோம். ஆக இத்தகைய கள்வத்தினாலும் ஸாம்யம்.

————

கோகுல உத்தாரகத்வாத்

ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயர் குலத்தினில் தோன்றும் மணி விளக்கு

இவரும்
ந்ருபசு
வ்ருத்தயா பசுர் நரவபு
ஞாநேந ஹீந பசுபிஸ் ஸமாந
நம்மை உத்தரிக்கவே இவரது அவதாரம்

*ஆயர்பாடிக்க விளக்கே என்றும், *ஆயர்குலத்தினில் தோன்று மணிவிளக்கை என்றும் சொல்லுகிறபடியே கண்ணன் திரு வாய்ப்பாடியில் திருவவதரித்துக் கோகுலத்தை உத்தரிப்பித்தமை பிரஸித்தம்.-இவ்வாழ்வாரும் கோகுலோத்தாரணம் செய்ததுண்டு; எங்ஙனே யென்னில்;*ந்ருபசு:* என்று ஆளவந்தாரும் *வ்ருத்த்யா பசுர் நரவபு:* என்று மணவாள மாமுனிகளும் அருளிச்செய்தபடி நாமெல்லாரும் பசுக்களேயன்றோ. * ஞாநேந்
ஹீந: பசுபிஸ் ஸமாந:* என்றும் ப்ரஸித்தமாகவுள்ளது. ஞானமும் நன்னடத்தையு மொன்றுமின்றிக்கே யிருப்பதனால் கோக்களாயிருக்கின்ற நம்முடைய குலத்திலே ஆழ்வார் வந்து அவதரித்து உத்தாரகராயினர்.

———

பத்தத் வாத்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான்
இவரும் அரசனால் சிறையில் வைக்கப்பட்டார்

[பத்தத்வாத்] கண்ணன் * மத்துறு கடைவெண்ணெய் களவினிலுரவிடை
யாப் புண்டு* என்றும் *கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான்* என்றும்
சொல்லுகிறபடியே கட்டுண்டமை ப்ரஸித்தம். இவ்வாழ்வாரும், பகவதாராதனத்திற் காட்டிலும் பரமபாவனமான பாகவதாராதனத்தில் ஊன்றியிருந்தகாலத்தில் தாம் அரசனுக்குச் செலுத்தவேண்டிய பகுதிப்பொருளுமுட்படச் செல்வம் முழுதையும் செலவிட்டுவர, அச்செய்தியைச் சிலர் சொல்லக்கேட்ட கொற்றவன் கோபங்கொண்டு இவரை ஒரு தேவாலயத்தில் சிறைவைக்கச் செய்தனனென்பது இவ்வாழ்வாருடைய சரித்திரத்தில் பிரஸித்தம், ஆக கட்டுண்டமையினால் இருவர்க்கும் ஸாம்யம் உணரத்தக்கது.

———-

ஸாஸ்த்ர தத்வாத்

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –
கீதாச்சார்யன்
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்லமுதம்
தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்
பர சமயப் பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம்

[சாஸ்த்ரதத்வரத்] சேதநர்களுக்கு உஜ்ஜீவநோபாயமான சாஸ்திரத்தைக்கொடுத்ததனாலே என்று பொருள், கண்ணபிரான் அறிவினால் குறைவில்லாஅகல்ஞாலத்தவரறிய, நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி* என்கிறபடியே ஸகலார்த்தப்ரகாசமாய் ஸகலசேதநோஜ்ஜீவநஸாதனமான கீதா சாஸ்த்ரத்தை யருளிச்செய்தான். திருமங்கையாழ்வாரும் *நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி நஞ்சுக்கு நல்லவமுதம், தமிழநன்ணூல் துறைகளஞ்சுக்கிலக்கிய மாரணசாரம், பரசமயப்பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே*-என்கிறபடியே கீதா சாஸ்த்ரத்திற் காட்டிலும் பரமோத்க்ருஷ்டமான திவ்யப்ரபந்த மஹாசாஸ்த்ரத்தை யுபகரித்தருளினார். கண்ணன் தந்த சாஸ்திரத்தை கீதோப நிஷத்து‘ என்னுமாபோலே இதையும் பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையா யிரம்” என்பர்கள். ஆக, சாஸ்த்ரப்ரதாநத்தாலே இருவர்க்கும் ஸாம்யம்

————-

ஜன ஸஹ யோ கச்ச

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
வாரணம் ஆயிரம் சூழ வலம்

நீர் மேல் நடப்பான்
நிழலில் ஒதுங்குவான்
தாளூதுவான்
தோலா வழக்கன்

படு ஜநஸஹயோகாத்] கண்ணபிரான் *தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்* என்கிறபடியே கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர்மகனான தான் செய்யும் தீமைகளுக்குத் துணைவராகப் பல சதுரர்களை உடன் கொண்டிருந்தான். திருமங்கையாழ்வாரும், நீர்மேல் நடப்பான் நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் முதலான சதுரர்களைத் தமது செய்கைகளுக்குத் துணைவராகக் கொண்டிருந்தார்.

———

லஷ்மீ பதித் வாத் –

ஸுமங்களா -குமுதவல்லி நாச்சியார் இயல் பெயர்
மாப்பிள்ளை மிடுக்குடன் அண்ணன் கோயிலுக்கு எழுந்து அருளுவார்
நீசனை–நீலனை சந்தித்து பாகவத ஸ்ரேஷ்டர் ஆக்குவாய் -சாபம்
குமுத வல்லி வஸ்திரம் தலைப்பாகையாக சூட்டிக்கொண்டு மஞ்சக்குழி உத்ஸவம் திருமஞ்சனம் -சென்னிக்கு அணி

ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பதி என்றும் இவரைக் கொள்ளலாம்
மற்று எல்லாம் பேச்சிலும் உன் அடியார்க்கு அடிமை என்றார் அன்றோ –

[லக்ஷ்மீபதித்வாத் . கண்ணபிரான் ஸாக்ஷ த் நாராயணமூர்த்தியாதலால்
லக்ஷமீபதியாவன்.திருமங்கையாழ்வாரும் லக்ஷ்மீபதியாவர். எங்ஙனே யென்னில்;
இவர் வளர்ந்துவருகையில் அந்நாட்டில் அண்ணன்கோயில் என்று வழங்குகின்ற
திருபெள்ளக்குள மென்னுந் திருப்பதியில் மிகச் சிறந்ததொரு தாமரைப் பொய்
கையில் தேவலோகத்து அப்ஸரஸ் ஸ்த்ரீகள் பலர் வந்து ஜலக்ரீடைசெய்து செல்ல
அவர்களுள் திருமாமகளென்பாள் தன் இச்சையால் தெய்வவடிவத்தைவிட்டு,
மானுடவடிவங்கொண்டு தனியே குமுதமலர் கொய்துநின்றாளாக, அங்கு அநுஷ்டாநத்திற்காக வந்த ஒரு வைஷ்ணவ வைத்யன் அவளைக் கண்டு செய்தி விசாரிக்க
அவள் ‘என்னோடு கூடவந்த மாதர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். தனி
யிருந்து அலைகின்ற என்னை நீர் பாதுகாத்தருளவேணும்’ என்று வேண்டிக்கொள்ள,
மலடனான அம்மருத்துவன் மகிழ்ச்சியோடு அதற்கு உடன்பட்டு அம்மகளைத் தன்
மாளிகைக்கு அழைத்துப்போய் மனையாள் வசம் ஒப்பித்து, குமுதமலர் கொண்டு
நின்றது காரணமாகக் குமுதவல்லியென்று அப்பெண்ணுக்கு நாமமிட்டு வளர்த்து
வருகையில் அக்கன்னிகைக்கு விவாஹத்துக்குரிய பிராயம் வந்தவளவிலே
அவளை வளர்க்கிற அந்த வைத்தியனுக்கு ‘மஹாகுணவதியான இப்பெண்
ணுக்கு ஏற்ற கணவன் உலகத்திலுள்னோ என்ற கவலையுண்டாக, அப்பொழுது
அவளுடைய ரூபலாவண்ய ஸௌந்தரியங்களையும் குணாதிசயங்களையும் சாரர்கள்
திருமங்கை மன்னனிடம் கொண்டாடிக்கூற,உடனே அவர் அங்கு வந்து அந்த
வைத்தியனிருக்கும் வீட்டிலே புக்கு அவனோடு ஸம்பாஷணை செய்து அப்பெண்ணின்
வரலாற்றை வினவி அதைத் தந்தையார்வாயில் அறிந்த வளவில் ‘இவளை எனக்
குத் தாரைவார்த்துக்கொடுக்கவேணும்’ என்று அவரை வணங்கிக் கேட்டார்
அப்போது குமுதவல்லி குறுக்கிட்டு ‘‘திருவிலச்சினை திருமண்காப்பு முதலிய
பஞ்ச ஸம்ஸ்காரமுடைய ஒரு ஸ்ரீவைஷ்ணவர்க்கேயன்றிப் பிறர்க்கு வாழ்க்கைப்பட
மாட்டேன்” என்று தன் உறுதியைத் தெரிவித்தாள். அதுகேட்ட திருமங்கை
மன்னன் உடன் திருநறையூர்க்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள நம்பி என்னு
மெம்பெருமானுடைய திருமுன்பே நின்று பிரார்த்தித்து அப்பிரானிடத்தில்
திருவிலச்சினை பெற்றுப்பன்னிரண்டு திருமண் காப்புகளும் சாத்திக்கொண்டு
விவாஹார்த்தமாக விரைவில் வந்துசேரக் கண்டு மீண்டும் குமுதவல்லி “நீர்
ஓராண்டளவும் நித்தியமாக ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து
அவர்களுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் போனகஞ் செய்த சேஷத்தையும் உட்
கொண்டாலன்றி உம்மை நான்பாணிக்கிரஹணம் செய்து கொள்ளமாட்டேன்
ன்ன, அவளிடத்தில் கொண்ட ஆசையின் கனத்தால் அவர் இவ்வரிய விரதத்
தையும் செய்துமுடிப்பதற்கு உடன்பட்டு அங்ஙனேமே செய்வதாகச் சபதஞ்செய்து
கொடுக்க, அதன்பின் இருவர்க்கும் திருமணம் நடைபெற்றது லக்ஷ்மீபதித்வ
மானது பகவானுக்கு அஸாதாரணமாயிருந்தாலும் லக்ஷ்மியின் பெயரைத் தரித்
திருந்த குமுதவல்லித்தாயாருக்குப் பதியென்னுங் காரணத்தினால் ஆழ்வாரும்
லக்ஷ்மீபதியாயினர். ஸ்ரீவைஷ்ணவலக்ஷ்மிக்குப் பதியென்றுங் கொள்ளலாம்.

———-

நீலத் வாத்

கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட

தண் தமிழ் செய்த நீலன் தனக்கு

நீலத்வாத்] கண்ணபிரான் * கண்ணனென்னுங் கருந்தெய்வம்* என்றும்
*கானகமெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனிவாட என்றும் சொல்லுகிறபடியே
நீலநிறத்தழகார்ந்தவன். திருமங்கையாழ்வாரோவென்னில் நீலனென்னுந்திருநாம
முடையவர் . இராமானுச நூற்றந்தாதியில் “தண்டமிழ்செய்த நீலன் தனக்கு”
என்னுமிடத்தில் நீலனென்ற சொல்லால் திருமங்கையாழ்வாரே விவக்ஷிதரென்ப
தறிக. குருபரம்பராப்ரபாவத்திலு முள்ளதேயிது.

——–

நீதி மார்க்கச்யுதி மதி பஜ நாத்

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்

கலியனும் இது போல் பல அநீதி சேஷ்டிதங்கள் ப்ரஸித்தம்

விமோஹநே வல்லவ கேஹி நீநாம் ந ப்ரஹ்ம சர்யம் பிபதே ததீயம் ஸம்பத்ஸ்யதே
பாலக ஜீவநம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் சமஷம் –யாதவா ப்யுதம் -4-64-

யதி மே ப்ரஹ்ம சர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயிதிஷ்டதி அவ்யா ஹதம் மமைஸ்வர்யம் தேந ஜீவது பாகை

ப்ரஹ்ம சர்யம் ஸத்யம் வழுவாதனானால் உயிர் பெற்று எழுக என்றதும் கரிக்கட்டை போல் இருந்த பரிஷீத் எழுந்தான்

ஜித பாஹ்ய ஜிநாதி மணி ப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரெங்கபுரே மணி மண்டபவ பிரகாரணன் விததே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

(நீதிமார்க்கச்யுதிமதிபஐநாத்] கண்ணபிரானுடைய சரித்திரங்களை நோக்கு
மிடத்து”மச்சொடுமாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் சுச்சொடுபட்டைக்
கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலுந் தீமைகள் செய்வாய்* என்றும், * பிறர்
மக்களை மைன்மை செய்து தோளா ட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய்* என்றுமுள்ள பாசுரங்களின்படி கொடிய கடிய சேஷ்டிதங்களைச்செய்த
விவன் நீதிநெறியில் நின்றும் நழுவினவனல்லவா? என்று நினைப்பதற்கு இலக்கா யிருப்பனன்றோ கண்ணபிரான். திருமங்கையாழ்வாரும் அப்படியேயன்றோ. இத்
தன்மையினால் ஒரு ஸாம்யம். நீதி நெறியில் நழுவினதாக நினைக்கலாமத்தனை
யன்றி உண்மையில் இருவரும் நீதிநெறிவழுவாதவர்களே. நமது ச்லோகத்தில் ”நீதிமார்க்கச்யுதிமதிபஜநாத்” என்றது ‘சயுதிமதிவிஷயத்வாத்’ என்றபடி.
கண்ணபிரானுடைய நீதிநெறிவழுவாமையை வேதாந்த வாசிரியர் யாதவாப்யுத
யத்தில் (4-64.) விமோஹநே வல்லவகேஹிநீநாம் நப்ரஹ்மசர்யம் பிபிதே ததீயம், ஸம்பத்ஸ்யதே பாலகஜீவநம் தத்ஸத்யேந யேநைவ ஸதாம் ஸமக்ஷம். * என்னும்
ச்லோகத்தினால் தெளிவித்தார். அதாவது, பாரதப்போரில் அச்வத்தாமா பிரயோ கித்த அபாண்டவாஸ்த்ரத்தினால் உத்தரையின் கருப்பிண்டம் கரிக்கட்டையாக. அப்போது கண்ணபிரான் “ யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத் ஸத்யஞ்ச மயி திஷ்டதி, அவ்யாஹதம் மமைச்வர்யம் தேந் ஜீவது பாலக:‘ (நான் ப்ரஹ்மசர்யமும் ஸத்யமும் வழுவாதவனாயிருந்தேனாகில் இது உயிர்பெற்றெழுக.) என்று பலருமறிய ப்ரதிஜ்ஞை செய்து நிறைவேற்றப்பெற்ற கதையினால் கண்ணன் நீதி நெறிவழுவாதவனென்பது விளங்கிற்று திருமங்கையாழ்வார் நீதிநெறி வழு வாதவரென்பதை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் *ஜிதபாஹ்யஜிநாதி மணிப்ரதிமா அபி வைதிகயந்நிவ ரங்கபுரே, மணிமன்டபவப்ரகணாந் விததே பரகாலகவி ப்ரணமேமஹி தாந் என்னும் ச்லோக ரத்நத்தினால் வெளியிட்டருளினர்.

——–

அந்த தச்சா வதாராத்

கடைக்குட்டி அவதாரங்கள் இரண்டும்
இருவரும் சரம அவதார பூதர் இப்பொழுது –
கல்கி இன்னும் அவதரிக்க வில்லையே

(அந்ததச்ச அவதாராத் ] பகவானது விபவாவதாரங்களில் கிருஷ்ணாவ தாரமே முடிவானது. கல்கியவதாரம் பவிஷ்யத்தென்கிறார்கள். அது வந்தபோது பார்த்துக்கொள்வோம். இதுகாறும்முடிந்துள்ள அவதாரம் க்ருஷ்ணாவதாரமே. திரு மங்கையாழ்வாரும் ஆழ்வார்களுக்குள் கடைப்பட்டவர் *பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசையையனருள்மாறன் சேரல கோன், துய்யப ட நாதன் அன்பர்தாள் தூளி நற்பாணன் நன்கலியன், ஈதிவர்தோற்றத்து அடைவாமிங்கு என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரமுங்காண்க. ஆக இருவரும் சரமாவதாரபூதர் என்பதனால் ஸாம்யம் பெற்றனர்.

———

ஸத்ரு த்வம்ஸ உத் படத் வாத்

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கி
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய

அருள் மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
ஒன்றலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி

[சத்ருத்வம்ஸோத்படத்வாத்.] கண்ணபிரான் *தேனுகன் பிலம்பன்காளிய னென்னும் தீப்பப்பூடுகளடங்கவுழக்கி*என்றும் மலைபுரைதோள் மன்னவரும் மார
தரும் மற்றும் பலர் குலைய, நூற்றுவரும் பட்டழிய * என்றும் சொல்லுகிற படியே பகைவர்களையெல்லாம் வேரோடு களைந்தொழிப்பதில் பேர் பெற்றவன் ஆழ்வாரும் * அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் என்றும் *ஒன்றலர் தங்களை வெல்லு மாடல்மாவலவன் கலிகன்றி* என்றும் தாமே யருளிச் செய்த படியே புறமதத்தவர்களாகிற பகைவர்களைக் களைத்தொழிந்து இதனாலே பரகாலனென்று பேர்பெற்றவர். ஆக இப்பன்னிரண்டு படிகளாலே கண்ணனுக்கும் கலியனுக்கும் ஒற்றுமை நிர்வஹிக்கப்பட்டதாயிற்று.

———–

கலிரிபு முநிராட் கிருஷ்ண துல்யோ விபாதி

ஆக இப்பன்னிரண்டு படிகளாலே ஸாம்யம் காட்டப் பட்டது

ஸ்ரீ க்ருஷ்ண கலித்வம்ஸி ஸாம்ய நிர்வாஹம் முற்றிற்று.

—————-

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத கலியன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பகவத் கீதையின் சாரம்

December 11, 2021

ஸ்ரீ பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது.
இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும்,
குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு
ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்த நூலாக உள்ளது.
இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து,
ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன.
முதல் பகுதியில் (1 முதல் 6 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுயமுயற்சி குறித்து விளக்கப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் (7 முதல் 12 வரை உள்ள அத்தியாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அனுக்கிரகம் குறித்து விளக்கப்படுகிறது.
மூன்றாம் பகுதியில் (13 முதல் 18 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவ-ஈஸ்வர ஐக்கியம் (சீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்),
ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது

1 1 அருச்சுன விசாத யோகம்
2 2 சாங்கிய யோகம்
2.1 அருச்சுனனின் சரணாகதி
2.2 ஞான யோகத்தின் அறிமுகம்
2.3 கர்ம யோகம்
2.4 ஞானியின் இலக்கணங்கள்
3 3 கர்ம யோகம்
3.1 கர்ம யோகம்
3.2 உலக வாழ்க்கை
3.3 காமத் தியாகம்
4 4 ஞானகர்ம சந்நியாச யோகம்
4.1 அவதார தத்துவம்
4.2 ஞானகர்ம சந்நியாசம்
4.3 சில சாதனைகள்
5 5 கர்ம சந்நியாச யோகம்
5.1 இரண்டு விதமான வாழ்க்கை முறைகள் (நிஷ்டாத்துயம்)
5.2 வித்வத் சந்நியாசம்
5.3 ஞான சாதனைகள்
5.4 ஞானத்தின் பலன்கள்
6 6 ஆத்ம சம்யம யோகம் அல்லது தியான யோகம்
6.1 தியானம்
6.2 யோகப் பிரஷ்டன்
7 7 ஞான விஞ்ஞான யோகம்
7.1 ஈஸ்வர தத்துவம்
7.2 பக்தி / பக்தன்
7.3 பக்தியின் மேன்மை
8 8 அட்சர பிரம்ம யோகம்
8.1 அருச்சுனனின் கேள்வியும் பகவானின் பதிலும்
8.2 மரண காலத்தில் பகவானை எவ்வாறு நினைப்பது
8.3 மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்)
9 9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
9.1 ஈஸ்வரத் தத்துவம்
9.2 பக்தி
10 10 விபூதி யோகம்
10.1 ஈஸ்வர தத்துவம்
10.2 பக்தி
10.3 ஈஸ்வர விபூதி (மகிமைகள், பெருமைகள்)
11 11 விஸ்வரூப தரிசன யோகம்
11.1 அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல்
11.2 சஞ்சயன் விஸ்வரூப தரிசனம் செய்தல்
11.3 அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல்
11.4 அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்
12 12 பக்தி யோகம்
12.1 பக்தி யோகத்தின் ஐந்து நிலைகள்
12.1.1 பக்தி யோகத்தின் பலன்கள்
12.2 பரா பக்தனின் இலக்கணம்
13 13 சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம்
13.1 சேத்திரம்
13.2 சேத்திரக்ஞன்
13.3 புருஷன்
13.4 பிரகிருதி
13.5 ஞானம் அடைய வழிகள்
13.6 நேயம்
14 14 குணத்திரய விபாக யோகம்
14.1 முக்குணங்களின் இலக்கணம்
14.2 முக்குணங்களால் பந்தப்படுதல்
14.3 லிங்கம் (அடையாளம்)
14.4 பலன்கள்
14.5 வழி (கதி)
14.5.1 முக்குணங்களைக் கடந்த குணாதீதனின் இலக்கணம்
15 15 புருசோத்தம யோகம்
15.1 சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை
15.2 பிரம்மமே அனைத்துமாக உள்ளார்
15.3 பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்
16 16 தெய்வ அசுர சம்பத் விபாக யோகம்
16.1 தெய்வீக சம்பத் (நற்பண்புகள்)
16.2 அசுர சம்பத் (தீய குணங்கள்)
17 17 சிரத்தாத்திரய விபாக யோகம்
17.1 சிரத்தையின் (நம்பிக்கை) பண்புகள்
17.2 ஓம் தத் ஸத்
18 18 மோட்ச சந்நியாச யோகம்
18.1 சந்நியாசம்
18.2 வர்ணாசிரம தர்ம கடமைகள்
18.3 கர்ம யோக சாரம்
18.4 பக்தி யோக சாரம்
18.5 ஞான யோக சாரம்
18.6 நிதித்யாசனம் (ஆத்ம தியானம்)
18.7 முடிவுரை

———

1 அருச்சுன விசாத யோகம்

46 சுலோகங்களைக் கொண்டுள்ளது. அருச்சுனன் தன் உறவினர்கள் மற்றும் குருமார்களுக்கு எதிராக
போர் செய்வது குறித்தான தனது துயரத்தை (விசாதம்) பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் எடுத்துரைத்தலே இவ்வத்தியாயத்தின் சாரம்.

குருச்சேத்திரப் போர்களத்தில் தங்கள் பாண்டவர் படையை எதிர்த்து நிற்கும் கௌரவர்களின் படையை பார்க்க விரும்பிய அருச்சுனன்,
தனது தேரோட்டியும் நண்பனுமான ஸ்ரீகிருஷ்ணரிடம், தனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்துமாறு கூறுகிறான்.

அருச்சுனன், எதிரணியில் நிற்கும் தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டனார் பீஷ்மர், போர்க்கலையை கற்றுக்கொடுத்த
தனது குருவான துரோணர் ஆகியவர்களை கண்டு, போரில் இவர்களது மரணத்தை நினைத்து மனம் கலங்கி செயலற்று நின்றான்.

தன்னால் இவர்களை போரில் கொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை என்றும், போரில் எதிராளிகளை அழித்து
நாட்டை திரும்ப அடைவதை விட துறவு மேற்கொள்வதே மேல் என்றும், போரில் சத்திரிய வீரர்கள் கொல்லப்படுவதால்
சத்திரிய குலதர்மம் சீர் குலைந்து வர்ணக் கலப்பு உண்டாகிவிடும் என்றும், எனவே கௌரவர்கள் என்னைக் கொன்றாலும்
அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகிவிடும் என்றும் கூறி கவலையாலும், துயரத்தாலும் தனது கையில் இருந்த
காண்டீபம் எனும் வில்லை எறிந்து விட்டு, செய்வதறியாது அருச்சுனன் தேர்த் தட்டில் அமர்ந்து விட்டான்.

———–

2 சாங்கிய யோகம்

சாங்கிய யோகம் எனில் பகவத் கீதையில் ஞான யோகம் என்று பொருள். 72 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை
அருச்சுனனின் சரணாகதி, ஞான யோகத்தின் அறிமுகம், கர்ம யோகம், மற்றும்
சிதப்பிரக்ஞனின் (ஞானியின்) இலக்கணங்கள் எனும் நான்கு தலைப்புக்களில் பகவான் விளக்குகிறார்.

அருச்சுனனின் சரணாகதி

உங்கள் சீடனாகிய என்னை, மனத்துயரம் மற்றும் மனக்குழப்பத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று கூறி அருச்சுனன்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை ஒப்படைக்கிறான் (சரணாகதி அடைகிறான்).
அதன் பின் பகவான் அருச்சுனனுக்கு குருவாக மாறி ஆத்ம உபதேசம் செய்ய முடிவு செய்கிறார்.

ஞான யோகத்தின் அறிமுகம்

துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை.
ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றி அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள்.
ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு
மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்றும் ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.

பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியவர்களின் ஆத்மா அழிவது பற்றிய கவலையா?
அல்லது அவர்களின் அனாத்மா எனும் உடல் அழிவது பற்றிய கவலையா?
ஆத்மாவைப் பற்றிய கவலை எனில், இந்த ஆத்மா எதனாலும் அழியக்கூடியது அல்ல என்று புரிந்து கொள்.
ஆனால் இந்த அனாத்மா எனும் உடல் ஒரு காலத்தில் உறுதியாக அழியக்கூடியது என்று புரிந்து கொள்.
உடலானது ஆத்மாவிற்கு சட்டையைப் போல், எனவே தீரன் (ஞானி) இது குறித்து கவலைப்படுவதில்லை என
பகவான் அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகம்

கர்ம யோக வாழ்க்கை முறையில் எதிர்மறை பலன் இல்லை. மன ஒருமுகப்பாட்டுடன் கடமைகளைச் செய்பவன் இலக்கை அடைகிறான்.
பலன் கருதி செய்யும் கர்மங்களை (செயல்கள்) செய்பவர்களை பகவான் இடித்துரைக்கிறார்.
கர்மத்தை நிந்தனை செய்து கர்ம யோகத்தை பகவான் புகழ்கிறார்.

கர்ம யோகத்தால் உனக்கு செயல்கள் (கர்மத்தை) செய்வதில் மட்டுமே தகுதி உண்டு.
ஆனால் அச்செயல்கள் மூலம் கிடைக்கும் பலனில் நீ உரிமை கொண்டாட முடியாது.
எனவே செயல் செய்வதிலிருந்து விலகி விடாதே. சமத்துவ நோக்குடன் கடமை ஆற்ற வேண்டும்.
பந்தப்படுத்தும் செயல்களை, பந்தப்படுத்தாதவாறு செய்ய வேண்டும்.
கர்ம யோகத்தின்படி கடமையைச் செய்பவனுக்கு மனத்தூய்மை கிட்டும்.

கர்ம யோக வாழ்வின் மூலம் மனமானது மோகம் எனும் மனக்குழப்பத்தை நீக்கி
(விவேகம்), வைராக்கியம், மனத்தூய்மை எனும் பலன்களை அடைவாய். எப்போது அறிவு ஆத்மாவில் நிலை நிற்குமோ
அப்போது ஞான யோகம் உண்டாயிற்று என அறிந்து கொள் என்று கிருஷ்ணர் அருச்சுனக்கு அருள்கிறார்.

ஞானியின் இலக்கணங்கள்

கர்ம யோகத்தைப் பயின்று மனத்தூய்மை அடைந்தவன், அதன் பின் ஞான யோகத்தை பயின்று
ஞானத்தில் நிலை பெற்றவனை பகவான் இங்கு சிதப்பிரக்ஞன் (ஞான நிஷ்டன்) என்று ஞானியைச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.

எவன் தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனோ அவன் (Happy with Himself) சிதப்பிரக்ஞன் அல்லது ஞானி ஆவான்.
தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே சிதப்பிரக்ஞன் எனும் ஞானி ஆவான்.
வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை, அகிம்சை, தவம்
போன்ற நற்குணங்கள் பெற்றவனையே ஞானி என்பர்.

ஞானிக்கு பகலாக இருப்பது அஞ்ஞானிகளுக்கு இருளாகும். அஞ்ஞானிகளின் பகலாக இருப்பது ஞானிக்கு இருளாகும்.
மரண காலத்திற்குள் இந்த ஞானத்தை ஒருவன் அடைந்து விட்டால் அவனின் உடல் அழிந்த பின்பு
பிரம்ம நிர்வானம் எனும் விதேக முக்தி அடைகிறான். விதேக முக்தி அடைந்த ஞானிக்கு மறுபிறப்பு இல்லை.

3 கர்ம யோகம்

இவ்வத்தியாயம் 43 சுலோகங்கள் கொண்டது. மனிதன் செய்ய வேண்டிய செயல்களை எடுத்துரைக்கிறது.
முன்பு ஞான யோகம் உயர்ந்தது கூறினீர்கள், ஆனால் தற்போது என்னை ஏன் கர்மம் (செயல்) எனும் போரில்
ஈடுபடத் தூண்டுகிறீர்கள் என அருச்சுனன் கேட்க, அதற்கு கண்ணன்
கர்ம யோகத்தின் சிறப்புகளை 1 கர்ம யோகம், 2 உலக வாழ்க்கை மற்றும் 3 காமத்தியாகம் (பற்று விடல்) எனும்
மூன்று தலைப்புக்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

கர்ம யோகம்

விருப்பு – வெறுப்பு இல்லாமல் ஒருவன் கடமை ஆற்ற வேண்டும்.
அவ்வாறு ஆற்றிய கடமையிலிருந்து பலனை எதிர்பார்த்து கொண்டு இருக்கக்கூடாது.
ஒருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், அந்த விருப்பமான ஆசையை அனுபவிக்கும் போது,
அதை பகவானின் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு, மற்றவர்களுடன் அந்த பிரசாதத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் ஆசையில் மூழ்கி விட மாட்டார்கள். உழைப்பு இல்லாது வரும் இன்பங்களை ஒருவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
(இலவசமாக கிட்டும் இன்பம் / பொருட்களை புறக்கணிக்க வேண்டும்).

உலக வாழ்க்கை

ஜனகர், அசுவபதி போன்ற ராஜரிஷிகள் உலக நன்மைக்காக சமூக வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் வாழ்ந்தார்கள்.
எனவே உலக நன்மைக்காக நீயும் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும். பகவான் தன்னையே எடுத்துக்காட்டாக கூறுகிறார்.
எனக்கு எதுவும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இருப்பினும் நான் கர்ம யோகம் எனும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகிறேன்.
மேலும் மேலானவர்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ, அதையே மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.
எனவே உலக நன்மைக்காகவாவது கர்ம யோகத்தில் ஒருவன் ஈடுபடவேண்டும்.

காமத் தியாகம்

தியாகம் எனில் விட்டுவிடுதல் என்று பொருள். எனவே ஒருவன் காமத்தை (ஆசையை) தியாகம் செய்துவிட வேண்டும்
(பேராசையை விட்டுவிட வேண்டும்). மனிதனின் பகைவன் அவன் மனதிலே உள்ளதன்றி வெளியே இல்லை.
நமது பகைவன் நம் மனதில் உள்ள காமமே (பற்று / ஆசை). எனவே ஆசையின் இருப்பிடத்தை அறிந்தால் நமக்கு பாதி வெற்றி கிட்டிவிடும்.

ஐம்புலன்கள், மனம், புத்தி, அகங்காரம் இவற்றிக்கு மேலானது ஆத்மா. இந்த ஆத்மாவை மறைக்கும் இவைகளை வென்று,
ஆசையை அழித்து விடவேண்டும். பேராசை, வெறுப்பு போன்ற காரணத்தினால் பாவம் செய்கிறான்.
எனவே பாவம் செய்வதிலிருந்து விடுபட வேண்டுமானால், காமத்தை (பற்று-பேராசை) தியாகம் (விட்டு விடுதல்) செய்து விடவேண்டும்ம்.
கர்ம யோக சாதனை மூலம் காமத்தை வெல்ல முடியும். காமத்தின் பிறப்பிடங்களான ஐம்புலன்கள்,
மனம்,அகங்காரம் மற்றும் புத்தியை நம் கட்டுக்குள் வைத்திருந்தால் மனத்தூய்மை அடையலாம்.

4 ஞான கர்ம சந்நியாச யோகம்

அத்தியாயத்தில் உள்ள 42 சுலோகங்களை, இறைவனின் அவதார தத்துவம், ஞான கர்ம சந்நியாசம்
(ஞானம் பெற மேற்கொள்ளப்படும் சந்நியாசம்), சில சாதனைகள் எனும் மூன்று தலைப்புக்களில் பகவான் விளக்குகிறார்.

அவதார தத்துவம்

பகவத் கீதையில் இவ்விடத்தில் மட்டுமே அவதார தத்துவம் தெளிவாக விளக்கப்படுகிறது.
அனைத்து சீவராசிகளின் இப்பிறப்பிற்கு, அவர்கள்/அவைகள் முற்பிறப்பில் செய்த கர்மவினைகள் (பாவ-புண்ணியம்) அடிப்படையே காரணம்.
ஆனால் பகவான் இவ்வுலகில் பிறப்பு எடுப்பதற்கு பாவ – புண்ணியம் காரணம் இல்லை.
கர்மவினை இன்றி பகவான் பிறவி எடுப்பது அவதாரம் ஆகும். சீவராசிகள் கர்மவினைக்கு ஏற்ப பிறப்பு எடுப்பார்கள்.
பகவான் அவதாரம் எடுக்கும் நோக்கம், பல்வேறு காலகட்டத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே ஆகும்.

ஞான கர்ம சந்நியாசம்

எவன் செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்கிறானோ அவன் மனிதர்களில் ஞானி ஆவான்.
(செயல்படுகின்றது போல் தோண்றும் கோள்களிலும், சீவராசிகளிலும் செயலின்மையும், செயல்படாமல் இருப்பதாகத் தோன்றும்
ஆத்மாவில் செயலையும் ஞானி ஒருவனே காண்கிறான்).
எனவே ஞானத்தினால் ஒருவன், தான் எப்போதும் செயல் செய்பவன் அல்ல என்று புரிந்து கொள்பவன்
ஸூத்தராத்மா (மாபெரும் ஞானி) ஆவான் என்கிறார் பகவான்.

சில சாதனைகள்

ஒரு மனிதன் செய்ய வேண்டிய சாதனைகளில், விவேகம், வைராக்கியம், புலனடக்கம், மனவடக்கம், தவம், யக்ஞம்,
வேதாந்த சாத்திரங்களை கேட்டல், பிராணயாமம் செய்தல், சத்துவ உணவை நியமத்துடன் உண்பதுடன்
ஞான யக்ஞம் செய்வது அனைத்திலும் சிறந்தது.
மேலும் குருவின் மூலம் சாத்திரங்களை கேட்டு ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிரத்தையை (இடைவிடாத முயற்சி, நம்பிக்கை) மனதில் வளர்த்து கொள்வதால் ஞானத்தை அடைவது எளிது.

5 கர்ம சந்நியாச யோகம்

29 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை, இரண்டு விதமான வாழ்க்கை முறைகள், வித்வத் சந்நியாசம்,
ஞான சாதனைகள், ஞானத்தின் பலன்கள் எனும் நான்கு தலைப்புக்களில் பிரித்து பகவான் அருச்சுனனுக்கு உபதேசிக்கிறார்.

இரண்டு விதமான வாழ்க்கை முறைகள் (நிஷ்டாத்துயம்)

மனிதர்கள் பின்பற்ற வேண்டிய இல்லறம் மற்றும் துறவறம் எனும் இரண்டு விதமான வாழ்க்கை முறை குறித்து விளக்குகிறார் பகவான்.
இல்லற தர்மத்தை ஒருவன் நன்கு கடைப்பிடித்தால் கர்ம யோகியாவான். கர்ம யோகம் நன்கு செய்தால் மனத்தூய்மை அடைந்து
ஞான யோகத்திற்கு தகுதி பெறுகிறான். அதே போல் ஒருவன் துறவற தர்மத்தை நன்கு மேற்கொண்டால் ஞான யோகி ஆவான்.

வித்வத் சந்நியாசம்

இல்லறத்தில் ஞானம் அடைந்த பின்பு சந்நியாசம் (துறவறம்) மேற்கொள்வது விவிதிஷா சந்நியாசம் என்பர்.
வேதாந்த ஞானம் அடைந்த பின்பு சந்நியாசம் மேற்கொள்வதை வித்வத் சந்நியாசம் என்பர்.
வித்வத் சந்நியாசி உலகத்தை எவ்வாறு எவ்வாறு காண்பான் எனில் அனைத்து சீவர்களில் சம நோக்குடன் ஆத்மாவை பார்ப்பான்.
ஈசா வாஸ்ய இதம் சர்வம் எனும் அடிப்படையில், அனைத்து சீவர்களிடம் இறைவனை காண்பான்.

ஞான சாதனைகள்

விவேகம், வைராக்கியம், முமுச்த்துவம் (இறைவனை அறிந்து கொள்ளும் ஆர்வம்) ஆகியவைகளே
ஞானத்தை அடையும் சாதனைகள் ஆகும்.

ஞானத்தின் பலன்கள்

ஞானத்தில் சாதனை அடைந்த ஞானி சீவ முக்தி எனும் மனநிறைவு பெறுகிறான்.
பின் தன் சட உடலை விட்டு நீங்கிய பின் (இறந்த பின்) மறு பிறப்பு இல்லாமை எனும் விதேக முக்தி அடைகிறான்.

6 ஆத்ம சம்யம யோகம் அல்லது தியான யோகம்

47 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை தியானம், யோகப் பிரஷ்டன் எனும்
இரண்டு தலைப்பின் கீழ் வகுத்து வழங்குகிறார் பகவான்.

தியானம்

பகவான் தியானத்தை ஆறு பிரிவுகளில் விளக்குகிறார்.

1. பகிரங்க சாதனை :- தியான நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் நமது உணவு, உறக்கம், பழக்க வழக்கங்களில்
கட்டுப்பாட்டுடன் சமமாக இருக்க வேண்டும். இவைகளே தியானத்தை ஒழுங்கு படுத்தும்.

2. அந்தரங்க சாதனை :- தியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவைகளான தூய்மையும் அமைதியுமான இடம்,
நல்ல ஆசனம் மற்றும் பொருத்தமான நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

3. தியானத்தின் வகைகள் :-
1. ஞானம் அடைவதற்கு முன்பு மனதை ஒருமுகப்படுத்தும் தியானம்
2. ஞானம் அடைந்த பின்பு நிதித்யாசனம் செய்ய வேண்டும்.

4. தியானத்தின் நன்மைகள் :- தியானத்தினால் மன அமைதி, மன ஒருமுகப்பாடு, ஈஸ்வரனை அடையத் தகுதி
மற்றும் தியானத்தினால் பெற்ற ஞானத்தை நம்மில் நிலைபடுத்த இயலும்.

5. தியானத்தின் போது வரும் தடைகள் :- மனம் அலைபாய்தல் (விட்சேபம்) மற்றும் உறக்கம் (லயம்).

6. தடைகள் நீங்க வழிகள் :- வைராக்கியத்துடன் செய்யும் தியானத்தால் மேற்படி தடைகள் நீங்கும்.
மேலும் வேதாந்த சாத்திரங்கள் கேட்டல், படித்தல், சான்றோர்களின் கூட்டு (சத் சங்கம்) முதலியவைகளால்
மனதை வெளிவிசயங்களிலிருந்து நீக்கி, நம்மிடமே வைத்துக் கொள்ள முடியும்.
மனத்தூய்மை கிடைக்கும் கர்ம யோகத்தை செய்து பழகிய பின்பு அதனை நீக்கி உபாசனா யோகம் எனும் தியானம் செய்ய வேண்டும்.

யோகப் பிரஷ்டன்

பஞ்ச பூதங்களில் தன்னையே பார்ப்பவன் மற்றும் தன்னில் பஞ்ச பூதங்களை பார்ப்பவனே யோகப் பிரஷ்டன் ஆவான்.
இந்த யோகப்பிரஷ்ட நிலையில் நழுவியவன் (யோகப்பிரஷ்டகம்) இறப்பிற்குப்பின், மறுபிறவியில் அவன் மனக்கட்டுப்பாடு, புலனடக்கம்
ஆகிய நற்பண்புகளுடன் பிறப்பான். முற்பிறவியில் செய்த முயற்சிகள் வீண் போகாமல் மேல் நிலைக்கு உயர்வான்.

7 ஞான விஞ்ஞான யோகம்

முப்பது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தை பகவான் 1. ஈஸ்வர தத்துவம் 2. பக்தி/பக்தன் 3. பக்தியின் மேன்மை
எனும் மூன்று தலைப்புக்களில் அருச்சுனனுக்கு எடுத்துரைக்கிறார்.

ஈஸ்வர தத்துவம்

நாம் அனுபவிக்கும் இந்த உலகை பராபிரகிருதி எனும் இறைத் தத்துவமாகவும், அபராபிரகிருதி எனும்
சடமான தத்துவமாகவும் பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். இந்த உடல், உலகை அறியும் சடப்பொருளாக உள்ளது.
இந்த சட தத்துவமும் (அபராபிரகிருதி), இறைத்தத்துவமும் (பராபிரகிருதி) நானே என அறிமுகப்படுத்துகிறார் பகவான்.
பராபிரகிருதி என்பது மேலான, நிலையான, சத்தியமான இறைத்தத்துவம் ஆகும்.
அபராபிரகிருதி என்பது கீழான நிலையற்ற சடதத்துவம் ஆகும். சடதத்துவம் மாயையின் வசத்திற்குட்பட்டது.
மேலும் இது நிலையற்றதும் அழியக்கூடியதும் ஆகும் (மித்யா).
இந்த மாயை பகவானின் வெளிப்பாடே என்று ஈஸ்வர தத்துவத்தை கண்ணன் விளக்குகிறார்.

பக்தி / பக்தன்

பகவான் தன்னை வழிபடுபவர்கள் மற்றும் வழிபடாதவர்கள் என இரண்டாக பிரிக்கிறார்.
மேலும் செம்மையான மனம் இல்லாதவர்கள் பகவானை வழிபட மாட்டார்கள் என்று இடித்துரைக்கிறார்.
பகவானை வழிபடும் பக்தர்களை நான்காக பிரிக்கிறார்.
1. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.
2. ஆபத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் மற்றும் துயரங்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.
3. பகவானையே அடைய வேண்டும் எனும் நோக்கில் பகவானை வழிபடும் பக்தர்கள்.
4. பகவானை அறிந்து கொள்ள சாதனை செய்யும் ஞானி பக்தன்.
இந்த ஞானி பக்தனே அனைத்து பக்த்ர்களில் உயர்வானவன் என்று பகவான் ஞானியை புகழ்கிறார்.

பக்தியின் மேன்மை

பகவானின் மாயையை யாராலும் வெல்ல முடியாது. பகவானை சரணாகதி அடைந்து பக்தி செலுத்துபவன்
மாயையை (அறியாமையை) கடக்க பகவான் அருள் புரிகிறார்.
எவரேவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ அவரவர்களின் கோரிக்கையை பகவான் நிறைவேற்றுகிறார்.
பகவானுக்கு எந்த பக்தனிடத்திலும் விருப்பு – வெறுப்பு இல்லை. மேலும் பகவானை அறிவது எளிதல்ல.
பகவான் அனைத்தையும் அறிபவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது.
சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்புகளுடன் உள்ளான்.
இது சீவர்களின் இயற்கை குணமாகும். பிறகு எவர்கள் இந்த விருப்பு – வெறுப்பு எனும் இருமையிலிருந்து விடுபட்டு,
அத்யாத்மம், அதிதெய்வம், அதியக்ஞம், அதிபூதம் எனும் தத்துவங்களை அறிந்தவர்கள்
என்னிடம் பக்தி செலுத்தி மோட்சம் எனும் (வீடுபேறு) அடைகிறார்கள்.

8 அட்சர பிரம்ம யோகம்

இருபத்தி எட்டு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தை மூன்று தலைப்புகளில் விளக்கப்படுகிறது.
1. அருச்சுனனின் கேள்வியும், பகவானின் பதிலும்
2. மரண காலத்தில் பகவானை நினைத்தல்
3. மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்).

அருச்சுனனின் கேள்வியும் பகவானின் பதிலும்

அழியாத பொருள் (வஸ்து) எது? என்ற அருச்சுனனின் கேள்விக்கு பகவான், அழியாத பொருள் பிரம்மம் ஒன்றே என பதில் அளிக்கிறார்.
பிரம்மத்தின் தன்மையான ஜீவாத்மாவை அத்யாத்மம் என்பர். மேலும் தோன்றுவது, அழிவது என்ற தன்மையுடன் கூடியவை அனைத்தும் அதிபூதம் ஆகும்.
படைக்கும் தொழில் செய்யும் நான்முக பிரம்மாவை அதிதைவம் ஆவார்.
சீவர்களில் பிரம்ம சைதன்யம் எனப்படும் ஞானமாக நானே அந்தர்யாமி உருவில் அதியக்ஞம் ஆக இருக்கிறேன்.

மரண காலத்தில் பகவானை எவ்வாறு நினைப்பது

மரண காலத்திற்கு முன்பும், மரண காலத்திலும் தொடர்ந்து பகவானை நினைத்து தியானிப்பவனுக்கு,
அதன்படி அந்த சீவனுக்கு மறுபிறவி நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே பகவான் நாமத்தை என்றும் நினைத்துக் கொண்டே இறப்பவன் பகவானை அடைகிறான்.

ஒருவன் வாழ்க்கை முழுவதும் எதை நினைத்துக் கொண்டு இருந்தானோ, அதையே மரணகாலத்திலும் நினைப்பான்.
எனவே உடல்நிலை நன்கு இருக்கும் போது, எல்லா காலத்திலும் பகவான் நாமத்தை
தியானித்துப் பழகியவன்தான் மரணகாலத்திலும் பகவானை நினைப்பான்.

கிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் முழு பிரம்ம ஞானத்தை அடைய இயலாவிட்டாலும்,
தான் செய்த புண்ணியம் காரணமாக பிரம்மலோகத்தை அடைந்து, அங்கு முழு பிரம்ம ஞானம் அடைந்து
மறுபிறப்பில்லா பேற்றை அடைகிறான். எனவே பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை.
எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பகவானின் இருப்பிடம்.

மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்)

எந்த காலத்தில் (வழியில்) உடலை நீத்துவிட்டுச் செல்கின்ற யோகியர் மீண்டும் பிறவியிலா பெரு வாழ்வையும்,
மேலும் எந்த வழியில் செல்கின்ற யோகிகள் மீண்டும் பிறவி எடுக்கும் நிலையையும் (மறுபிறப்பு எனும் நிலையும்)
அடைகிறார்கள் என்பது குறித்து பகவான் விளக்குகிறார்.
மரணத்திற்கு ஒன்று உத்தராயணம், மற்றது தட்சிணாயனம் எனும் இரண்டு வழிகள் உள்ளது.
உத்தராயன காலத்தில் இறப்பவர்கள் சுக்கில கதியில் (வழியில்) பிரம்மலோகத்திற்கும் (மறுபிறவி இல்லா நிலை),
தட்சிணாயன காலத்தில் இறப்பவர்கள் கிருஷ்ண கதியில் சொர்க்க லோகத்திற்கும் (மீண்டும் பிறவி எடுப்பது) செல்வார்கள்.

9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

முப்பத்தி நாலு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாத்தில் இரண்டு முக்கிய கருத்துக்களை பகவான் விளக்குகிறார்.
1 ஈஸ்வரத் தத்துவம். 2 பக்தி. இந்த தத்துவம் அனைத்து அறிவைக் காட்டிலும் மேலான அறிவு என்றும்,
அனைத்து இரகசியங்களில் மேலான இரகசியம் என்றும் பகவான் கூறுகிறார்.

ஈஸ்வரத் தத்துவம்

அபரா பிரகிருதி எனும் பிரபஞ்சம் (மாயை), பரா பிரகிருதி எனும் ஈஸ்வரனை சார்ந்து உள்ளது.
ஆனால் பரா பிரகிருதியான ஈஸ்வரன் மாயையை (அபரா பிரகிருதி) சார்ந்து இல்லாதவன்.
அபரா பிரகிருதி எனும் இந்த பிரபஞ்சம் பொய்த் தோற்றம் கொண்டது.
இந்த பிரபஞ்சம் மற்றும் சீவர்கள் இருப்பது போல் தோற்றமளித்தாலும், அழியும் தன்மை கொண்டதுவே.
இந்த மாயையான பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரனே காரணம். ஈசுவரன் எதனுடனும் தொடர்பு அற்ற தன்மையுடயவன்.
ஈஸ்வரன் எந்த செயலையும் செய்வதில்லை, செயலின் விளைவுகளையும் அனுபவிப்பது இல்லை.
(ஈஸ்வரன் அகர்த்தா / அபோக்தா). எனவே ஈசுவரன் உதாசீனன் ஆக உள்ளார்.

பக்தி

எவ்வித பலனை எதிர்பாராது பகவானிடம் முழு மனதுடன் பக்தி செலுத்துவது “ அநன்ய பக்தி “ ஆகும்.
இவ்வாறு பக்தி செலுத்தி பகவானையே சரணாகதி அடைந்த பக்தர்களை காப்பது எனது கடமை என பகவான் உறுதிமொழி தருகிறார்.
மேலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துவது பக்குப்படாத பக்தி என்று இடித்துரைக்கிறார் பகவான்.

எவரெவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ, அவரவர் கோரிக்கைகயை பகவான் நிறைவேற்றுகிறார்.
பகவானுக்கு எந்த பக்தர்களிடம் விருப்பு – வெறுப்பு இல்லை. பகவானை அறிந்து கொள்வது அரிது.
பகவான் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது.

இயற்கையாக சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்பு உணர்வுகளுடன் இருப்பதால்,
அச்சீவர்கள் பகவானை அறிது கடினம். பிறகு எவர்கள் அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞம் என்ற
தத்துவங்களை அறிகிறார்களோ அவர்களே இருமைகளிருந்து விடுபட்டு
பகவானிடம் பக்தி செலுத்தி வீடுபேறு எனும் விதேக முக்தி அடைகிறார்கள்.

எனவே சீவர்கள் பகவானையே மனதில் கொண்டு வழிபட்டு, பகவானுக்காவே அனைத்து நற்செயலகளையும் செய்ய வேண்டும்.

10 விபூதி யோகம்

நாற்பத்தி இரண்டு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் ஈஸ்வர தத்துவம், பக்தி, ஈஸ்வரனின் விபூதி (மகிமை, பெருமை) விளக்குகிறது.

ஈஸ்வர தத்துவம்

ஈஸ்வர தத்துவத்தை பகவான் அத்தியாயம் 10, 13, 14 மற்றும் 15-இல் விளக்கியுள்ளார்.

பக்தி

பக்தி குறித்து பகவான் 12வது அத்தியாயத்தில் விளக்கியுள்ளதை காண்க.

ஈஸ்வர விபூதி (மகிமைகள், பெருமைகள்)

சீவராசிகள் மற்றும் பிரபஞ்ச படைப்பிற்கு பகவானே காரணமாகவும் காரியமாகவும் உள்ளார்.
(எவ்வாறு பானைக்கு களிமண் உபாதான காரணமோ அவ்வாறே பகவானின் உடல் இந்த பிரபஞ்சமாகவும், சீவராசிகளாகவும் வெளிப்பட்டுள்ளது).
மேலும் பகவான் தான் சிறப்பாக எதுவாக உள்ளார் என்று தனது பெருமைகளை கீழ்கண்டவாறு உரைக்கிறார்.

அதிதியின் மகன்கள் பன்னிருவர்களில் விஷ்ணுவாகவும்
ஒளிர்பவைகளில் சூரியனாகவும்
49-வாயு தேவர்களில் தேஜஸ் ஆகவும்
நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனாகவும்
வேதங்களில் சாம வேதமாகவும்
தேவர்களில் இந்திரனாகவும்
பொறிபுலன்களில் மனமாகவும்
உயிரினங்களுள் உணர்வாக – ஞான சக்தியாகவும்
11- ருத்திரர்களில் பரமசிவனாகவும்
யட்ச – இராட்சசர்களுல் செல்வத்திற்கு தலைவனான் குபேரனாகவும்
அஷ்டவசுக்களில், அக்னியாகவும்
சிகரமுடைய மலைகளுல் சுமேரு மலையாகவும்
புரோகிதர்களில் பிரகஸ்பதியாகவும்
படைத்தலைவர்களில் ஸ்கந்தனாகவும்
நீர்நிலைகளுல் கடலாகவும்
மகரிஷிகளுல் பிருகு மகரிஷியாகவும்
சொற்களுல் ஒரெழுத்தான ஓங்காரமாகவும்
வேள்விகள் அனைத்துள்ளும் ஜெபமாகிய யக்ஞமாகவும்
அசையாப் பொருட்களுல் இமயமலையாகவும்
மரங்களுல் அரசமரமாகவும்
தேவரிஷிகளில் நாரதர் ஆகவும்
கந்தர்வர்களில் சித்ரரதன் ஆகவும்
சித்தர்களுல் கபிலர் ஆகவும்
குதிரைகளுல் அமுதத்துடன் தோண்றிய உச்சைச்சிரவம் ஆகவும்
யாணைகளுல் ஐராவதம் ஆகவும்
மனிதர்களுல் அரசன் ஆகவும்
போர்க்கருவிகளுல் வஜ்ராயுதம்ஆகவும்
பசுக்களுல் காமதேனு ஆகவும்
சாத்திர முறையில் மகப்பேற்றுக்கு காரணமான மன்மதன் ஆகவும்
சர்பப்ங்களுல் சர்ப்பராஜனான வாசுகியாகவும்
நாகங்களுல் ஆதிசேஷன் ஆகவும்
நீர் வாழ்வனவற்றிற்கும் நீர் தேவதைகளுக்கும் தலைவனான வருணன் ஆகவும்
பித்ரு தேவதைகளுல் அர்யமா என்ற பித்ரு தேவதையாகவும்
அடக்கி ஆள்பவர்களுல் யமன் ஆகவும்
தைத்தியர்களுல் பிரகலாதன் ஆகவும்
காலம் கணிப்பவர்களுல் காலமாகவும்
விலங்குகளில் சிங்கமாகவும்
பறவைகளுல் கருடனாகவும்
தூய்மைப்படுத்துபவர்களுல் காற்றாகவும்
ஆயுதம் தாங்கியவர்களுல் இராமன் ஆகவும்
மீன் இனங்களுல் முதலையாகவும்
ஆறுகளுல் பாகீரதியாகவும்
படைப்புகளின் துவக்கமாகவும், முடிவாகவும், நடுவாகவும்
வித்தைகளுல் பிரம்ம வித்தை எனும் ஆத்ம வித்தையாகவும்
தர்க்கம் செய்பவர்களுடைய தத்துவத்தை தீர்மானிப்பவனாகவும்
எழுத்துக்களுல் அகாரமாகவும்
தொகைகளுல் உம்மைத் தொகை ஆகவும்
காலங்களுக்கெல்லாம் காலமாகவும்
அனைத்துப் புறங்களிலும் முகங்கள் கொண்ட விராட் விஸ்வரூபனாகவும்
அனைத்தையும் காத்து பேணுபவனாகவும்
எல்லாவற்றையும் அழிக்கின்ற மரண தேவனாகவும்
இனி படைக்கப்படுபவைகளுக்கும் காரணமாகவும்
மாதர்களுல் கீர்த்தி தேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், வாக் தேவியாகவும், ஸ்ம்ருதி தேவியாகவும், மேதா தேவியாகவும்,
த்ருதி தேவியாகவும், சமா தேவியாகவும்
கானம் செய்யத் தக்க வேதப் பகுதிகளுல் பிருகத் சாமம் எனும் சாம வேதப் பகுதியாகவும்
சந்தங்களுல் காயத்ரீ சந்தமாகவும்
மாதங்களுல் மார்கழி மாதமாகவும்
பருவங்கள் ஆறினுள் வசந்த காலமாகவும்
வஞ்சகர்களுல் அவர்களது சூதாட்டமாகவும்
திறமை படைத்தவர்களுடைய திறமையாகவும்
வெற்றி கொள்பவரது வெற்றியாகவும்
தீர்மானம் செய்யும் சக்தி உள்ளவர்களின் தீர்மானமாகவும்
சாத்வீக குணம் படைத்வர்களிடம் சத்துவ குணமாகவும்
யாதவர்களில் வாசுதேவனாகவும்
பாண்டவர்களுல் அருச்சுனன்ஆகவும்
முனிவர்களுல் வேத வியாசர் ஆகவும்
கவிஞர்களுல் சுக்ராச்சாரியர் ஆகவும்
அடக்குபவர்களுல் அடக்கும் சக்தியாகவும்
வெற்றி பெற விரும்புபவர்களின் நியாய உணர்வாகவும்
மறைத்து வைக்கப்பட வேண்டியவற்றைக் காப்பாற்றும் மௌனமாகவும்
ஞானிகளுடைய தத்துவ ஞானமாகவும் இருக்கிறேன்
எல்லா உயிரினங்கள் தோண்றுவதற்கு எது விதையோ அதுவும் நானாகவும்
எது எது சிறப்புடையதோ, ஒளியுடையதோ, சக்தி படைத்ததோ, அந்த அந்த பொருட்கள் எல்லாம்
என்னுடைய ஒளியின் ஒரு பகுதியின் வெளிப்பாடே என்று அறிந்து கொள்.
இந்த அனைத்துலகையும் எனது யோக சக்தியின் ஒர் அம்சத்தினால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

11 விஸ்வரூப தரிசன யோகம்
பகவான் அருச்சுனனுக்கு விசுவரூப தரிசனம் காண்பித்தல்

இவ்வத்தியாம் 55 சுலோகங்கள் கொண்டுள்ளது. விசுவரூப தரிசன யோகம் நான்கு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.
1 அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல்.
2 சஞ்சயன் விஸ்வரூப தர்சனம் செய்தல்.
3 அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல்.
4 அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்.

அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல்

பகவானாகிய நீங்கள் (ஸ்ரீகிருஷ்ணர்) அனைத்துமாக உள்ளதாக விபூதி யோகத்தில் கூறினீர்கள்.
அனைத்துப் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகளாக, நீங்களாகவே உள்ள உங்களது விஸ்வரூப காட்சியை எனக்கு காட்ட வேண்டும்
என அருச்சுனன் பகவானிடம் வேண்டினான். பகவானும், எனது விஸ்வரூபத்தை உனது ஊனக்கண்ணால் பார்க்க இயலாது,
அதனால் நான் உனக்கு அருளும் ஞானக்கண் மூலம் எனது விஸ்வரூபத்தை பார் எனக் கூறி
அருச்சுனனின் மனதில் உள்ள விருப்பு – வெறுப்புக்களை நீக்கி ஞானக்கண் (தெய்வீக பார்வை) வழங்குகிறார்.

சஞ்சயன் விஸ்வரூப தரிசனம் செய்தல்

குருச்சேத்திரப் போர்க்களக் காட்சிகளை அத்தினாபுரம் அரண்மனையில் இருந்தவாறே கண்டு அதை
திருதராட்டிரனுக்கு எடுத்துச் சொல்ல வியாச முனிவர் சஞ்சயனுக்கு ஞானக்கண் (தெய்வீக பார்வை) வழங்கியமையால்,
சஞ்சயன் பகவானின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு அதை திருதராட்டிரனுக்கு விளக்கிக் கூறினார்.

அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல்
அருச்சுனனுக்கு கிருஷ்ணர் தனது விராட் விஸ்வரூபத்தை காட்டல்
ஆயிரக்கணக்கான சூரிய ஒளியால் மின்னும் பகவானின் ஆயிரக்கணக்கான முகங்கள், கண்கள்,
ஆயிரக்கணக்கான ஆயுதங்களுடன் கூடிய கைகளைக் கொண்ட விராட் விஸ்வரூபத்தை தரிசனம் செய்த அருச்சுனன்,
பகவானின் பெருமைகளை பலவாறு பேசி வர்ணிக்கிறான்.

அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்

பகவானின் விஸ்வரூபக்காட்சியை கண்ட அருச்சுனனுக்கு மனதில் மூன்று விதமான உணர்வுகள் ஏற்பட்டது.
1 ஆச்சரியம் (பார்காததைப் பார்த்தல்).
2 ஞானம் இல்லாமையால் பயம் எனும் உணர்வு அருச்சுனனுக்கு ஏற்பட்டது. விஸ்வரூப காட்சியில் பகவானின் செயல்களைப் பார்த்து
அருச்சுனன் திகில் அடைகிறான். பகவானின் அழிவுத் தத்துவத்தை தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமையும் பயத்திற்கு காரணம் ஆயிற்று. பகவானின் விராட் விஸ்வரூப தர்சனத்தை தன்னில் வேறாக பிரித்துப் பார்த்ததால் அருச்சுனனுக்கு இந்த பயம் உண்டாயிற்று.
3 பயந்த அருச்சுனன் பகவானிடம் மீண்டும் பழைய நிலைக்கே காட்சி அளிக்க வேண்டுகிறான்.
பகவானும் விராட் விஸ்வரூப காட்சியிலிருந்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணராக அருச்சுனனுக்கு காட்சி அளிக்கிறார்.
பகவான் அருச்சுனனைப் பார்த்து பயப்படாதே என்று கூறிய பின்பு அருச்சுனனுக்கு பகவான் மீது பக்தி ஏற்படுகிறது.
மேலும் அருச்சுனன், பகவானிடம் நான் உங்களை ஒரு நண்பனைப் போல் பேசி அவமதித்து விட்டேன்.
அதனால் என்னை மன்னித்தருள வேண்டுகிறான் அருச்சுனன். பகவானிடம் இடைவிடாத பக்தி செலுத்துதல்
மற்றும் யாரிடமும் பகைமை பாராட்டாமை போன்ற நற்குணங்கள் உள்ளவர்களே இது போன்ற விஸ்வரூப காட்சியை காண இயலும்,
மற்றவர்களால் இக்காட்சியை எளிதில் பார்க்க இயலாது என்று பகவான் அருச்சுனனுக்கு அருளினார்.

12 பக்தி யோகம்

இருபது சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை இரண்டு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.
1 பக்தியின் ஐந்து நிலைகள் மற்றும் பக்தி யோகத்தின் பலன்கள்.
2 பரா பக்தனின் இலக்கணம்.

பக்தி யோகத்தின் ஐந்து நிலைகள்
மாயை நீக்கிய பிரம்ம தத்துவத்தை புரிந்து கொண்டு பகவானை தியானிப்பது நிர்குண பக்தியாகும் (அருவ வழிபாடு).
அனைத்து பிரபஞ்சத்தை ஈஸ்வரனாகவே கருதி பகவான் மீது பக்தி செலுத்துவது விராட் பக்தியாகும் (இயற்கையை வழிபடுதல்).
தனக்கு பிரியமான உருவமுள்ள தெய்வத்தை தியானிப்பது, இஷ்ட தேவதா பக்தியாகும் (உருவ வழிபாடு).
கர்ம யோகத்தை செய்து கொண்டே ஈஸ்வரனிடம் பக்தி செலுத்துவது.
சில பக்தர்களின் மனது ஆசையால் நிரம்பியுள்ளதால், எல்லா செயல்களையும் பகவானின் பிரசாதம் என்ற
உணர்வுடன் போகங்களை அனுபவித்துக் கொண்டே பகவானிடம் பக்தி செலுத்துதல்.

பக்தி யோகத்தின் பலன்கள்
இறைவன் மீது நம்பிக்கையுடன் கூடிய தளராத பக்தி செலுத்துவதால், ஒரு சீவன் வாழம் பொழுதே
சீவ முக்தியும் (மன அமைதி & மனநிறைவு), சீவனின் உடல் அழிந்த பின்
விதேக முக்தி எனும் மறுபிறவி இல்லாமை எனும் பேரின்பம் கிடைக்கிறது.
சீவாத்மா, பரமாத்மாவுடன் கலப்பதே பக்தி யோகத்தின் பலனாகும்.

பர பக்தனின் இலக்கணம்
முதல் நிலையில் உள்ள நிர்குண பிரம்மத்தை உணர்ந்தவர்களே பர (மேலான) பக்தர்கள்.
வேதாந்த சாத்திரங்கள் துணையுடன் குருவின் மூலம் பிரம்மத்தை உணர்ந்த ஞானியே பகவானின் பரபக்தன் ஆவான்.
பரபக்தன் எவர்களையும் வெறுக்காதவன், என்றும் சமத்துவ குணத்துடன் விளங்குபவன். அவனே எனது பிரியமான பக்தன் ஆவான்.

13 ஷேத்ரம் ஷேத்ரக்ஞன் விபாக யோகம்

34 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை 1 ஷேத்திரம் (உலகம், உடல்கள்), 2 ஷேத்திரக்ஞன் (பகவான்),
3 புருஷன், 4 பிரகிருதி, 5 ஞானம், 6 நேயம் எனும் ஆறு தலைப்புகளில் விவரிக்கப்படுகிறது.

ஷேத்திரம்
விளைநிலத்திற்கும், பூமிக்கும் சேத்திரம் என்பர். பகவான் அகிலப் பிரபஞ்சத்தையே ஷேத்திரம் என்று கூறுகிறார்.
மனித சட உடலையும் பகவான் சேத்திரம் என்று கூறுகிறார்.

ஷேத்திரக்ஞன்
இந்த உடலை சேத்திரம் என்று அறிபவன் சேத்திரக்ஞன் ஆவார்.
ஷேத்திரக்ஞன் ஆகிய நான், ஈஸ்வரன் என அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை ஈஸ்வரனாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மா அனைத்து உடலுக்குள் இருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் சேத்திரக்ஞனை நான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஷேத்திரக்ஞன் அனைத்து உயிரினங்களில் சாட்சியாக அறிமுகப்படுத்துகிறார் பகவான்.
இதுவே அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் ஆகும். ஷேத்திரத்தையும் ஷேத்திரக்ஞனையும் ஐக்கியப்படுத்துகிறார்
(சீவாத்மாவையும் பரமாத்மாவையும் ஐக்கியப்படுத்துகிறார்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

புருஷன்
ஷேத்திரக்ஞன் மற்றும் ஆத்மா ஆகிய சொற்கள் ”புருஷன்” என்பதைக் குறிக்கிறது.
அனைத்தும் ஒரே பொருளைத் தரும் சொல். புருஷன் இந்த உடலில் இருப்பதால், உடல் சுக – துக்கங்களை அனுபவிக்கிறது.

பிரகிருதி
பிரகிருதி எனும் சொல் மாயையைக் குறிக்கிறது. காரணப் பிரபஞ்சம் இவ்வுலகம், காரியமான பிரபஞ்சம் மாயை;
மாயையிலிருந்து வெளிப்பட்ட இந்த பிரபஞ்சமே பிரகிருதி எனப்படும்.

ஞானம் அடைய வழிகள்
ஞானம் என்பது சாதாரனமாக மனதில் தோன்றும் அறிவைக் குறிக்கும்.
ஞானத்தை அடைய இருபது சாதனைகள் செய்ய வேண்டும் என பகவான் அருள்கிறார்:
1 தற்பெருமையின்மை
2 தன்னிடமில்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை
3 எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்
4 சுக-சுக்கங்களை பொறுத்துக் கொள்ளுதல்
5 மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை
6 நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பெரியோர்களுக்குப் சேவை செய்தல்
7 உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல்
8 உள்ளத்தின் உறுதி
9 மனம் மற்றும் ஐம்புலன்களோடு கூடிய உடலை கட்டுப்படுத்துதல்
10 இவ்வுலக இன்பங்களில் பற்று அற்ற தன்மை
11 அகங்காரம் இல்லாமை
12 பிறப்பு – இறப்பு, மூப்பு, நோய் இவைகளை சிந்தித்தல்
13 மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை)
14 வேண்டியன – வேண்டாதனவாற்றை அடையும் போதும் எப்போதும் சமபாவனையுடன் இருத்தல்
15 யோகத்தின் மூலம் பிறழாத பக்தி
16 தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு
17 உலகியலில் ஈடுபாடு கொண்டவர்களிடம் விலகி இருத்தல்
18 அத்யாத்ம ஞானத்தில் என்றும் நிலைத்து நிற்றல்
19 தத்துவஞானப் பொருளான பரமாத்மாவையே தியானம் செய்தலே ஞானம் என்றும்
20 எது அதனில் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் எனும் அறியாமை என்று தெரிந்து கொள்வதே ஞானத்தை அடையும் வழிகளாகும்.

நேயம்
நேயம் எனில் நம்மால் அறியப்படுவது எனப் பொருள்.
எது அறிவதற்கு தகுதி உடைய விஷயம் எனில் பிரம்மம் ஒன்றே.

14 குணத்திரய விபாக யோகம்

27 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தில் புருஷன் மற்றும் பிரகிருதி விளக்கப்பட்டு,
பின் மாயையின் சத்துவம், ராஜசம் மற்றும் தாமசம் எனும் முக்குணங்களை விளக்குகிறார்.
மேலும் முக்குணங்களை கடந்த குணாதீதனின் இலக்கணத்தையும் உரைக்கிறார்.
முக்குணங்களைப் பற்றிய ஐந்து கருத்துக்களை கீழ்கண்டவாறு பகவான் விளக்குகிறார்.

முக்குணங்களின் இலக்கணம்
சத்வகுண இலக்கணம்:-
நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்),
துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை,
கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை),
தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

சத்துவ குணப் பலன்கள்:-
சத்துவ குணத்திலிருந்து தர்மச் செயல்கள்; தன் செயல்களை அனைத்தும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது;
பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும்,
நிவிருத்தி (முக்தி) மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.

இராட்சத குண இலக்கணம்,
ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர்,
தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம்,
தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் இராட்சத குணமாகும்.

இராட்சத குணப் பலன்கள்:-
இராட்சத குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம்,
கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.

தாமச குண இலக்கணம்:-
காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம்,
கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல்
மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

தாமச குணப் பலன்கள்:-
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது.
தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில்
விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

முக்குணங்களால் பந்தப்படுதல்
சத்துவ, ரஜஸ் மற்றும் தாமச குணங்கள் மனிதர்களை எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார்.

லிங்கம் (அடையாளம்)
முக்குணத்தை எவ்வாறு அடையாளம் (லிங்கம்) காண்பது என்று பகவான் விளக்குகிறார்.

பலன்கள்
தாமச குணம் சோம்பல் மற்றும் மயக்கத்தையும்,
இராட்சத குணம் கோபத்தையும் மற்றும் துக்கத்தையும்,
சத்துவ குணம் அறிவு மற்றும் ஆனந்தத்தையும் வழங்கும்.

வழி (கதி)
இம் முக்குணங்கள் கொண்டவர்கள் இறந்த பின் மறு பிறவியில், தாமச குணம் உடையவர்கள் மூடர்களிடத்திலும்,
இராட்சத குணம் உடையவர்கள் செயல் திறன் மிக்கவரிடத்திலும்,
சத்துவ குணம் உடையவர்கள் ஞானம் அறிந்தவர்களிடம் பிறக்கிறார்கள்.

முக்குணங்களைக் கடந்த குணாதீதனின் இலக்கணம்
தாமசம், ராஜசம் மற்றும் சத்வம் எனும் முக்குணங்களைக் கடந்தவனே குணாதீதன் {ஞானி}ஆவான்.
குணாதீதன் அறிவு ஒளியாக, அனைத்துப் பொருட்களில் சமத்துவ நோக்குடன், வெறும் சாட்சியாக மட்டும் விளங்குவான்.

15 புருசோத்தம யோகம்

இருபது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் பகவான் அருள்கிறார்.
1 சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை.
2 பிரம்மமே அனைத்துமாக இருத்தல்.
3 பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்.

சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை
உபநிடதங்களில் வாழ்க்கைத் துயரத்தினை வர்ணித்துள்ளது. பிரம்மத்திலிருந்து தோண்றிய பிரபஞ்சம்
எப்போதும் காணப்படுவது போல் தோண்றினாலும், அது ஒரு காலத்தில் அழியக்கூடியேதே (மித்யா).
ஒருவனுக்கு உண்மையாக தெரியக்கூடிய பொருள், பொதுவான உண்மை அல்ல. துயரம் காலத்திற்குட்பட்டது.
பிரம்மம் மேலானது. துயரம் / சம்சாரம் எனும் மரத்தின் வேர்கள் வெளியே தெரிவதில்லை.
ஆனால் அந்த கண்ணுக்கு தெரியாத வேர்களே மரத்தினை காக்கிறது.
அதுபோல் கண்ணுக்கு தெரியாத பிரம்மம் சாதாரணமான கண்களுக்கு தெரிவதில்லை.
சம்சாரம் எனும் துயரமான மரத்தை வெட்ட வைராக்கியம், பற்றின்மை எனும் கோடாரியால் மட்டுமே வெட்ட இயலும்.
அவ்வாறு செய்தால்தான் முக்தி எனும் மோட்சம் கிடைக்கும். பக்தி யோகம் எனும் சாதனையால்
பிரம்மத் தியானம் செய்து வீடுபேறு அடையவேண்டும்.

பிரம்மமே அனைத்துமாக உள்ளார்
சீவனின் தன்மை விளக்கப்படுகிறது. பிரம்மம் சீவ வடிவாகவும், சூரிய – சந்திரர்களின் ஒளியாகவும் உள்ளது.
வயிற்றில் அக்னியாக இருந்து உணவை ஜீரணிக்கும் சக்தியாகவும் பிரம்மம் உள்ளது.

பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்
புருசோத்தமன் எனில் எல்லோரையும்விட மேலானவர் என்று பொருள். உத்தமபுருஷனே புருசோத்தமன்.
புருஷனை சர, அட்சர புருஷன் என்று பிரித்து பகவான் விளக்குகிறார்.
சர புருஷன் எனில் அழிகின்ற பிரபஞ்சத்தைக் குறிக்கும்.
அட்சர புருசன் எனில் இங்கு மாயையைக் குறிக்கும்.
உத்தமபுருஷன் எனில் பிரம்மத்தைக் குறிக்கும்.

16 தெய்வ அசுர சம்பத் விபாக யோகம்

இருபத்தி நாலு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில்,
1 தெய்வீக சம்பத் (நற்பண்புகள்).
2 அசுர சம்பத் (தீய குணங்கள்) எனும் இரு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.

தெய்வீக சம்பத் (நற்பண்புகள்)
1 மனம், மொழி, மெய் இவற்றால் எவர்க்கும் எவ்விதமான தீங்கும் செய்யாமை.
2 மனமறிந்த உண்மைகளை தெளிவாக எடுத்துரைத்தல்.
3 செயல்களை செய்யும் போது, இது நான் செய்கிறேன் எனும் இறுமாப்பின்மை,
4 கோபமின்மை,
5 மனதை அலைபாயாமல் நமது கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாக இருத்தல்,
6 பிறறை பழியாமை, குறை கூறாமை
7 புலன் நுகர்பொருட்களில் பற்றின்மை,
8 உயிரினங்களிடம் பரிவு,
9 பொலிவு,
10 பொறுமை,
11 மனஉறுதி,
12 புறத்தூய்மை,
13 பகைமை பாராட்டாமை மற்றும்
14 கர்வம் கொள்ளாமை போன்ற
இந்த நற்குணங்கள் அனைத்தும் தெய்வீக குணங்கள் (சம்பத்துக்கள்) என்று பகவான் கூறுகிறார்.

அசுர சம்பத் (தீய குணங்கள்)
பேராசை எனும் காமம், கோபம், பகட்டுத்தனம், ஆடம்பரம், தற்பெருமை, இறுமாப்பு, வெறுப்புணர்வு போன்ற
தீய குணங்கள் படைத்தவர்களே அசுர குணம் (சம்பத்) உடையவர்கள்.
இவர்கள் காமம், கோபம், பேராசை எனும் நரகத்தின் மூன்று வாயில் வழியாகச் செல்வார்கள்.
எனவே செய்யத்தக்கச் செயல்கள், செய்யத் தகாத செயல்கள் என்று எவைகள் சாத்திரங்கள் கூறியுள்ளதோ
அதன்படி நமது செயல்கள் அமைய வேண்டும்.

17 சிரத்தாத்திரய விபாக யோகம்

இருபத்தி எட்டு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் மூன்று சிரத்தைகளை (நம்பிக்கைகள்) இரண்டு தலைப்புகளில் விளக்கப்படுகிறது.
1 சிரத்தையின் பண்புகள் விளக்கப்படுகிறது.
2 ஓம் தத் சத் என்பதன் பொருள் விளக்கப்படுகிறது.

சிரத்தையின் (நம்பிக்கை) பண்புகள்
மனிதர்களுக்குள் முக்குணங்களுடன் கூடிய சிரத்தைகள் (நம்பிக்கைகள்) உண்டு.
அவை சத்துவ குண சிரத்தை, ரஜோகுண சிரத்தை மற்றும் தாமசகுண சிரத்தை ஆகும்.
எந்த மனிதன் எந்த சிரத்தையுடன் கூடியவனோ, அவன் அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே.
சத்வ குணத்துடன் கூடிய சிரத்தையே இறைவன் விரும்புவார்.

சத்துவ குணம் நிறைந்த மக்கள் தேவர்களையும்,
ரஜோ குணமுடையவர்கள் யட்சர் மற்றும் அரக்கர்களையும்,
தமோ குணமுடையவர்கள் பூதப் பிரேதங்களை வழிபடுகிறார்கள்.

எந்த மனிதர்கள் சாத்திர விதிமுறைகளை மீறி, கொடிய தவம் செய்கிறார்களோ, ஆடம்பரம், அகங்காரம் இவற்றோடு
பேராசை, விருப்பம், மற்றும் உடல் வலிமை – இவற்றின் மீது கர்வமும் கொண்டுள்ளார்களோ,
மனிதர்களையும், இறைவனையும் துன்புறுத்துகிறார்களோ, அவர்களை அசுரப் பண்புடையவர்கள் ஆவர்.

முக்குணங்களுடன் கூடியஉணவு, யாகம், யக்ஞம், தவம், தானம் ஆகியவற்றில்
சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தை எனும் முக்குணங்கள் மூலம் செய்யப்படுகிறது.
இவற்றில் சத்துவ சிரத்தையுடன் செய்யப்படும் செயல்களே இறைவனை மகிழ்விக்கும்.
சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தையுடன் உடல், வாக்கு, மனம் மூலம் செய்யப்படும்
தவத்தில் இறைவனுக்கு சத்துவ சிரத்தையுடன் கூடிய தவமே சிறந்தது.

ஓம் தத் ஸத்

ஓம் தத் ஸத் என்று மூன்று விதமாக சத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தினுடைய குணங்களை குறிக்கும்.
ஓம் என்பது ஈஸ்வரனை குறிக்கும். தத் என்பதும் இறைவனை குறிக்கும். ஸத் என்பதும் இறைவனை குறிக்கும்,
அத்துடன் நல்லது என்பதையும் குறிக்கும்.
ஒரு செயலை செய்யத் துவங்கும் போது ஓம் தத் சத் என்று மனதில் கூறி தொடங்க வேண்டும்.
நம்பிக்கையின்றி பகவானுக்காக செய்யப்படும் நற்செயல்களான யாகம், யக்ஞம், ஜெபம், தவம், தானம்
ஆகியவைகள் அஸத் (சடத்தன்மை) ஆகும்.
எனவே நம்பிக்கை இன்றி செய்யும் அச்செயல்கள் இம்மையிலும், மறுமையிலும் நன்மை பயக்காதவைகளே ஆகும்.

18 மோட்ச சந்நியாச யோகம்

72 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை கீழ்கண்ட ஆறு தலைப்பின் கீழ் விளக்கப்படுகிறது.
1 சந்நியாசம், சந்நியாசத்தின் பலன்கள்,
2 முக்குணங்களுடன் கூடிய தியாகம், தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம்,
கருமத்தின் தன்மைகள், கர்த்தா(செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம்
3 கர்ம யோக சாரம், வர்ணாசிரம தர்மங்கள்
4 பக்தி யோக சாரம்,
5 ஆத்ம ஞானம் அடையும் வழிகள்,
6 நிதித்யாசனம் (ஆத்ம தியானம்),
7 முடிவுரை.

சந்நியாசம்
வாழ்கையில் வெறுப்பு அடையாது, மனநிறைவுடன் மேற்கொள்வதே சந்நியாசம் எனும் துறவறம் ஆகும்.
கர்மங்களினால் வரும் புண்ணியத்தை துறப்பது கர்மபல சந்நியாசம் என்பர்.
இவ்வாறு புண்ணியத்தை துறப்பதால் நமக்கு விவேகம், வைராக்கியம் மற்றும் முமுச்த்துவம் எனும்
பிரம்மத்தைப் பற்றிய அறிவுத் தேடலில் ஆர்வம் பிறக்கும்.

மேலும் வேதாந்தங்களை கேட்கும் ஆர்வம் மனதில் வரும். இதன் பயனாக ஆத்மாவாகிய
”நான்” எந்த செயலை செய்வதில்லை என்ற ஞானம் (அறிவு) ஏற்படுகிறது.
இதனால் “நான் செயல் செய்கிறேன்” என்ற எண்ணம் துறக்கப்படுகிறது. இதற்கு கர்த்துருத்துவ சந்நியாசம் என்பர்.
இதனால் ”நான்” எனும் ஆத்மா எந்த செயலை செய்பவனும் அல்ல என்றும்
செயலின் பயனை அனுபவிப்பவனும் அல்ல என்ற அறிவு மனதில் பிறக்கிறது.

வர்ணாசிரம தர்ம கடமைகள்
சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் முக்குணங்களின் அடிப்படையில்
அனைத்து சீவர்களும் வர்ணாசிரம தர்மத்தின்படி பிரிக்கப்படுகின்றனர்.

கர்ம யோக சாரம்
நமது செயல்கள் அனைத்தும் பகவானை முன்னிட்டு செய்வதே கர்ம யோகமாகும்.
நமது செயல்கள் பகவானுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருத்தல் வேண்டும்.
வேள்வி, தானம், தவம் எனும் செயல்களை துறக்கக்கூடாது.

ஆனால் விலக்கப்பட்ட செயல்களையும், பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களையும் துறக்க வேண்டும்.
ஆனால் சாத்திரங்கள் விதித்த செயல்களை செய்யாமல் இருப்பது தகாது.
எனவே அறியாமையால் அச்செயல்களை செய்யாமல் இருப்பது தாமசத் தியாகம் ஆகும்.
(இங்கு தியாகம் எனில் விட்டு விடுதல் என்று பொருள்)
துன்பம் வரும் எனக்கருதி, செய்ய வேண்டிய செயலை, செய்யாமல் இருப்பது ராஜசத் தியாகம் ஆகும்.
பற்றையும் பயனை கருதாமல் செய்யும் செயலே சாத்வீகமான தியாகம் ஆகும்.
இதே போன்று முக்குணங்களுடன் கூடிய தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம்,
கருமத்தின் தன்மைகள், கர்த்தா (செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம் ஆகியவைகளைப் பற்றி பகவான் விளக்குகிறார்.

செயலின் பயனைத் துறக்காதவர்களுக்கு செயலினால் வரும் பாவ – புண்ணியம் மேலும் இரண்டும் கலந்த மூன்றுவிதமான
பயன் இறந்தபின் உறுதியாக கிடைக்கிறது. ஆனால், கர்மபயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் கிட்டாது.
எனவே கர்ம பலனை துறந்தவனுக்கு மறு பிறவி இல்லை.

பக்தி யோக சாரம்
பகவானின் அருளினால் மட்டுமே ஒருவன் மோட்சத்தை அடையமுடியும். ஒருவன் அகங்காரத்துடன் செயல்பட்டால் அழிந்துவிடுவான்.
பக்தி நம் மனதை பக்குவப்படுத்தும். ஒருவன் மற்ற சாதனைகளை (தர்மங்களை) கைவிட்டாலும்,
முடிவின் இலக்கை அடைய பகவான் மீது செலுத்தும் பக்தி அவசியமானது.

ஞான யோக சாரம்
சுத்தமான புத்தியுடன் மற்று உறுதியுடன் தன் மனதை அடக்கி, ஐம்புல விஷயங்களிலிருந்து மனதை நீக்கி,
விருப்பு வெறுப்புகளை விட்டுவிட வேண்டும்.
தனிமையில் சிறிதளவே உண்டு, நாக்கையும், மனதையும் அடக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் ஈடுபட்டு,
வைராக்கியத்தை மேற்கொண்டு; அகங்காரம், உடல் பலம், ஆணவம், ஆசை, வெறுப்பு, பற்று ஆகிய
தீய குணங்களை விட்டொழித்து, மமகாரமற்று தன்னில் மனநிறைவைப் பெற்றவனே பிரம்ம நிலைக்கு உயர தகுதி பெறுகிறான்.
பிரம்மமாகவே ஆனவன், உள்ளம் தெளிந்தவனாகிவிடுகிறான்; அவன் எதற்கும் வருந்துவதில்லை; ஆசைப்படுவதில்லை;
எல்லா உயிரிடத்திலும் சமநோக்குடன் இருப்பான்; அவன் பகவானிடம் அதிகமான பக்தியையும் பெறுகிறான்.

நிதித்யாசனம் (ஆத்ம தியானம்)
ஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களை துறந்து, தனிமையில் ஆத்மாவை தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும்.

ஒருவன் கர்மத்தினால் கிடைக்கும் பாவ – புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் சரணாகதி அடைந்து,
பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவான்.

முடிவுரை

இந்த அரிய உபதேசத்தை தவம் உடையவர்களுக்கு மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன்,
இந்த கீதா சாத்திரத்தை கேட்டவர்களும், படித்தவர்களும் வீடுபேறு அடைய புண்ணியம் செய்தவர்களாகி விடுகின்றனர்
என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

இறுதியாக பகவானின் உபதேசத்தின் மூலம் அருச்சுனன் தன் மனக் கலக்கம் நீங்கியது என்று கூறி,
பகவான் கிருஷ்ணரின் ஆணையை நிறைவேற்றுவதாக கூறினான்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

————–

ஸ்ரீ பாசுரப்படி ஸ்ரீ மத் பாகவதம் —

October 30, 2021

(ஸ்ரீ திருப்பாற் கடல் வர்ணனை )
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன்
மன்னிய நாகத்தணை மேல் ஓர் மா மலை போல்
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்றுத்
திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலகக்

கடலோதம் கால் அலைப்பக்
கடலோன் கை மிசைக் கண் வளர்வது போல்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக் கொண்டு
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்தக்

கொத்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழப்
பக்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் சித்தர்களும் தொழுது இறைஞ்ச
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து

(திரு அவதார காரணம் )
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்யப்
பாரேறு பெரும் பாரம் தீரத்
துவரிக் கனி வாய் நில மங்கை துயர் தீர
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வேண்டித் தேவர் இரக்கச்

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்றும் வார்த்தை எய்துவிக்கத் தந்தை காலில் பெரு விலங்கு தாளவிழ
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்த தாயைக் குடல் விளக்கம் செய்யக்

(திரு அவதாரம் )
கதிராயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்து
மல்லை மூதூர் வட மதுரையில்
மந்தக் களிற்று வீசு தேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிக் கஞ்சன் வலை வைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவன் எனக்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனாய்த் தெய்வ நான்கை யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய்ப்
பலதேவர்க்கு ஓர் கீழ்க் கன்றாய்

(ஆயர்கள் நாயகனாய் )
ஆயர் பாடிக்கு ஓர் அணி விளக்காய்க்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தாய்க்
காண்டல் இன்றிக் கொண்டு வளர்க்கக்
குழவியாய்த் தான் வளர்ந்து

(திரு ஆயர்பாடியில் மங்களம் )
எண்னம் சுண்ணம் எதிர் எதிர் தூவிடப்
பாடுவார்களும் பல் பறை கொட்ட
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாட அயலிடத்துப் பேர்ந்து
தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
பேணிச் சீருடைப் பிள்ளை ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

(பூதனை வதம்)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
பெண்மை மிகு வடிவு கொண்டு
வன் பேய்ச்சி தன் மகனாகத் தான் முலை யுண்ணக் கொடுக்க
முலை யுண்பான் போலே முனிந்து உண்டு
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கி
சூர் உருவின் பேய் அளவு கண்டு

(சகட பங்கம் )
மாணிக்கம் சுட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்
உறங்குவான் போல் கிடந்து
நாள்கள் ஓர் நால் ஐந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து உருளும் சகடம் உதைத்து

(திரு நாம கரணம் )
ஆய்ப்பாடி ஆயர் பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திறமும் சய மரம் கோடித்துக்
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னை
வேதம் வல்லார்களைக் கொண்டு
கார் முகிலே என் கண்ணா
செங்கண் நெடுமால் சிரீ தரா என்று அழைத்து
நாவினால் நவிற்று இன்பம் எய்த

(பால லீலைகள் )
மாயக் கூத்தன்
தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன் முகக் கிண் கிணி ஆர்ப்பப் புழுதி அளைந்து
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள
வெள்ளி முளைப் போல் சிறு பல் இலகக்
கண கண சிரித்து வந்து முன் வந்து
நின்று முத்தம் தந்து

ஆயர்கள் போர் ஏறாய்ச் செங்கீரை யாடி
எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக் கழ கண்டு செய்து
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிப்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப

மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்து
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா
மழலை முற்றா திளம் சொல்லால்
வனிலா அம்புலீ சந்திரா வா என்று அம்புலி விளித்து

(பிள்ளை வாயுள் ஏழு உலகம் )
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்கு ஆந்திட வாயுள் வையம் ஏழும் காண
ஆடி யாடி யசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

(உரலில் கட்டுப்படுதல் )
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைக்க
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயைத்
தாயர் மனங்கள் தடிப்ப உள்ளம் குளிர அமுது செய்து
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு

ஒளியா வெண்ணெய் உண்டான் என்றும் உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுது
பொத்த விரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கி

சீரல் அசோதை அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவருக்கும் காட்ட
ஊரார்கள் எல்லாம் காணக்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டு
பெரு மா யுரலில் பணிப்புண்டு இருந்து
விண்ணெல்லாம் கேட்க அழுது
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கி

(மருத மரங்களை முறித்தது )
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும்
ஒருங்கு ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்தி
எண் திசையோரும் வணங்க
இணை மருதூடு நடந்து

(மாடு கன்றுகளை மேய்த்தல் )
அழகிய பைம்பொன்னின் கோல் அம்கையில் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
பழ கன்றினங்கள் மறித்துத் திரிந்து
புகழ்ப் பலதேவன் என்னும் நம்பியோடப் பின் கூடச் சென்று

தன்னே ராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை விட்டு அதன் ஓசை கேட்டு
அசல் அகத்தார் பரிபவம் பேச
இல்லம் புகுந்து அவர் மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொள்ளையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்டு
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாடி
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல்
வனமாலை மினுங்க நின்று விளையாடி

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதிக்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழையக்
குழல்களும் கீதமுமாகி

முற்றத்தூடு புகுந்து தன் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுடன்
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிறும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியாமே
ஆயிரம் தாழி வெண்ணெய் பாகந்தான் வையாதுண்டு

(வத்ஸாஸூர பகாஸூர வதம் )
கானக வல் விளவின் காய் உதிரக் கருதி கொன்றது கொண்டு எறிந்து
பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது என்று பொதுக்கோ வாய்க்கீண்டிட்டு

(தேனுகாஸூர வதம் )
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்த்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மெல் நிமிர்ந்த தோன் இல்லையாக்கி

(காளிய மர்த்தனம் )
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பேறித்
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப்
படும் படு பைந்தலை மேல் ஏழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து
வெயின் குழலூதி வித்தகனாய் நின்று
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

(பிலம்ப வதம் )
பாண்டி வடத்தில் பிளம்பர் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வெல்ல

(காட்டுத்தீயை விழுங்கல் )
நின்ற செந்தீ மொண்டு குறை நீள் விசும்பூடு எரியக்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்று தான் விழுங்கி உய்யக் கண்டு

(வேணு கானம் செய்தல் )
வல்லி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோளரோடு
கானம் பாடி உலாவி உலாவிச்
சிறு விரல்கள் தடவிப் பரிமாறிச்
செங்கண் கோடச் செவ்வாய் கொப்பளிப்பக்
குறு வியர்ப்புருவம் கூடலிப்பக்

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறுப்பப்
பறைவவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்க

மருண்ட மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலங்காப் புடை பெயரா
எழுது சித்ரங்கள் போல் நிற்க
மரங்கள் நின்று மது தாரைகள் பாய

மலர்கள் வீழ வளர் கொம்புகள் தாழக்
கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முடிஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல் தன்னை
குழல் முழவம் விளம்பக் கோவலனாய்க் குழலூதி யூதி

(கோபியர் வஸ்திர அபஹரணம் )
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்த
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
ஆயர் மட மக்களைப் பின்னே சென்று ஒளித்து இருந்து
அங்கவர் பூந்துயில் வாரிக் கொண்டிட்டு
அச்சேரி இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்து
கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாடி

(வேள்வி மங்கையர் வேண்டடிசில் அளித்தது )
பக்த விலோசனத்தில்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வந்து அடிசில் உண்டு

(கோவர்த்தன கிரி பிடித்தது )
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
இமயப் பெரு மலை போல்
அமைத்த சோறு அது எல்லாம்
போயிருந்து அங்கோர் பூத வடிவு கொண்டு
முற்ற வாரி வளைத்து உண்ண

மேலை அமரர் பதி மிக்க வெகுண்டு வரக்
காள நன் மேகவை கல்லொடு கால் பொழிய
வண்ண மால் வரையே குடையாகச்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாகக் கொடுத்து
கல் எடுத்துக் கல் மாரி காத்து

(கண்ணன் கோபியரோடு விளையாடுதல் )
மங்கல நல் வனமாலை மார்பில் இலங்க
மயில் தழைப் பீலி சூடிப்
பொங்கிள ஆடை அரையில் சாத்திப்
பூங்கொத்துக் காதில் புணரப் பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழலூதிக்

கொல்லாமை செய்து குரவை பிணைந்து சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டாடி
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்து
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
முற்றா இளையார் விளையாட்டொடு
காதல் வெள்ளம் விளைவித்து

(கேசி வதம் )
மா வாயின் அங்கம் மதியாது கீறி

(மதுராபுரிக்கு விஜயம் )
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி
கூனி கூன் நிமிர்ந்தது
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி யவளும் திரு உடம்பில் பூச
ஊறிய கூனை உள்ளொடுக்க அன்று ஏற உருவி

(குவலயா பீட வதம் )
விற் பிடித்து இறுத்து
வளவெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஓன்று பறித்து

(மல்லர் வதம் )
இரு மலை போல் எதிர்த்த இரு மல்லர்
வலிய முடி இடிய வாங்கி

(கம்ஸ வதம் )
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழி யொடு
கேடயம் ஒண் மலர் பற்றித்
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்

கறுத்திட்டு எதிர் நின்ற
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்று
அரையனை எழப் பாய்ந்து உதைத்துக்
குஞ்சி பிடித்து அடித்து உண்டு
அவன் மாளக் கண்டு

(ஸ்ரீ சாந்தீபனியின் புத்ரனை மீண்டது )
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையாய் உருவுருவே கொடுத்து

(ஸ்ரீ ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் )
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்து
ருக்மிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையைச் சிரைத்து
அன்று அங்கு அமர் வென்று நங்கை அணி நெடும் தோள் புணர்ந்து
ரடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்து அருளித்
திருவுக்கும் திருவாகிய செல்வனாய் பெண் அமுது உண்டு

(ஸ்ரீ நப்பின்னை திருக் கல்யாணம் )

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கருங்குழல் நல் தோகை மயில் அனைய
நப்பின்னை தன் திறமாக நல் விடை ஏழு அவிய
வீயப் பொருது வியர்த்து நின்று

(நரகாஸூர வதம் )
மன்னு நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்து

(துவாரகை அமைத்தல் )
பதினாறாம் ஆயிரவர பணி செய்யத்
துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்து

(பாரிஜாத அபஹரணம் )
என்னதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வல் நாதப் புள்ளால் வலியப் பறித்துக்
கற்பக காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்து

(வாணாஸூர வதம் )
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகன் இருந்த
காவலைக் கட்டழித்துப் பிரிவின்றி
வாணனைக் காத்து என்று
அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் பெற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்

பொரு சிறைப் புள்ளைக் கடாவிப்
பொரு கடலை அரண் கடந்து புக்கு
மாயப் பொரு படை வாணனை
ஆயிரம் தோளும் பொழி குருதியாய ஆழி சுழற்றி

(பவ்ண்ட்ரக வாஸூ தேவன் பங்கம் )
புகரார் உருவாகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிருண்டு
அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்து
காய் சின காசி மன்னன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்து

(சிஸூபால வதம் )
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைய பெரும் துன்பம் வேர் அற நீக்கித்
தன் தாளிணைக் கீழ் சேர்த்துப்

தந்தவக்கரனை முடித்தல்
(பொங்கரவ வக்கரணைக் கொன்று )

(திரௌபதி சரணாகதி )
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்
அணியிழையைச் சென்று
எம் தமக்கு உரிமை செய் -எனத் தரியாது
எம்பெருமான் அருள் என்னப்

(கண்ணன் விஸ்வரூபம் காட்டியது )
பங்கயக் கண்ணன் ஒன்றே உரைப்பான்
ஒரு சொல்லே சொல்லுவான்
துன்னு முடியன் துரியோதனன் பக்கல் சென்று
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டு

அரவு நீள் கொடியோன் அவையுள்
ஆசனத்தை அஞ்சிடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுறவப்
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்து
ஊர் ஓன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாப் பெரும் போரில்

(தேரோட்டியாய்த் திகழ்ந்தது )
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்று
தீர்த்தான் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி
அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிய

(கீதோபதேசம் )
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவருக்கு அருள் செய்து நின்ற

(ஜயத்திரதனை முடித்தது )
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச்
சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருது

(பரீக்ஷித்தை உயிர் மீட்டது )
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன் மார்
உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து
சந்தம் அல் குழலாளை அலக் கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி

( வைதிகன் மக்களை மீட்டது )
வேத வாய் மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழுதில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்திபனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்து

(ஆதி யஞ்சோதி யுருச் சேர்தல்)
துயரில் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிதப் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து துயரங்கள் செய்து
தன் தெய்வ நிலை யுலகில் புகை உய்த்துக்
கதையின் திரு மொழியாய் நின்று
நல் குரவும் செல்வமும் நரகமும் ஸ்வர்க்கமுமாய்ப்
பல்வகையும் பரந்து வைகுந்தம் புகுதலும்
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மலையால் பரவி ஓவாது எப்போதும்
மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்து
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி
ரதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமொடு இசை திசை கெழுமிக்
கீதங்கள் பாடி மயங்கித் திருவடி தொழ
பாடு நல் வேதவொலி பரவைத் திரை போல் முழங்க
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
உவந்த உள்ளத்தனாய்
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்
நீதியான பண்டமாம் பரம சோதியாய்
ஆடரவு அமளியில் அறி துயில் அமர
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய்க்
கிடந்தும் எழுந்தும் இருந்தும் கீதங்கள் பல பல பாடி
நடந்தும் பரந்தும் ஒளித்தும் நாடகம் செய்கின்றனவே
தோட்டலர் பைந்தார் சுடர் முடியானை
தொழுது நல் மொழியால் தொகுத்து உரைத்த
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே

பொலிக பொலிக பொலிக

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமங்கள்–

August 30, 2021

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி

தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்

வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன்

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே

நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –

மன்னு வடமதுரை மைந்தனே –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –

மாலாய்ப் பிறந்த நம்பி

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை

நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்

வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே

அல்லிக் கமலக் கண்ணனை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்

வல்வினை தீர்க்கும் கண்ணனை

என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே

அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே

மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –

பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ

வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்

தேவக் கோலப் பிரான்

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு

சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர்

பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –

மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா

பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்

காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்

காளியன் மேல் நடமாடிய கூத்தனார்

பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை

விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –

கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா

யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை

இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை

கோ நிரை மேய்த்தவனே எம்மானே

பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்

ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –

ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா

பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனை

இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்

கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –

குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன்-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன்

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன்-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை

கரும் சிறுக்கன் குழலூதின போது

நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப-

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்-

அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை-

குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்-

குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை-

குடமாடுவார் –தேவ தேவ பிரான்

குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்

குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா

சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்-

ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனை-

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை

ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை

தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை

ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன்

கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கள்வா

மாயோனே ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்

மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன்

கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

கால நேமி காலனே

மா பிளந்த கைத்தலத்த கண்ணன்

கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே

கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன்

புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –

கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை-

மல்லடர்ந்த்த மல்லா –

புள் வாய் பிளந்த புனிதா-

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை –

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே

ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான்

கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா

அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன்

நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே

பின்னை மணாளனை

ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை

பின்னை தன காதலன்

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா

எருத்து இறுத்த நல்லாயர் ஏறு

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே

அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே

பின்னை தோள் மணந்த பேராயா

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்

தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன்

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானை

பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர்

————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பற்றிய விசேஷ விஷயங்கள்
1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -5235-வருஷங்களுக்கு முன்
2-பிறந்த நாள் -18th ஜுலை -3228-கி .மு –
3-பிறந்த மாதம் -ஆவணி -( ஸ்ரவணம் )
4-பிறந்த திதி -அஷ்டமி
5- பிறந்த நக்ஷத்ரம் -ரோஹிணி

6-பிறந்த கிழமை -புதன் கிழமை
7- பிறந்த நேரம் -இரவு 00-00 A M –
8- இங்கு இருந்து அருளியது –125 வருஷங்கள் -8 மாதங்கள் -7 நாள்கள்
9- தன்னுடை ஜோதிக்கு எழுந்து அருளிய நாள் -18th February 3102 கி மு
10-குருஷேத்ரா யுத்தம் -இவரது 89 -திரு நக்ஷத்திரத்தில்

11-மஹாபாரத யுத்தம் முடிந்து மேல் 36 திருநக்ஷத்ரங்கள் இங்கே இருந்து அருளி உள்ளார்
12-குருஷேத்ர யுத்தம் தொடக்கம் மிருகசீர்ஷ ஏகாதசி -3139 கி மு –8th Dec -முடிவு -25 th Dec
13-சூர்ய கிரஹணம் –21 st Dec -ஜெயத்ரன் முடிவு
14- பீஷ்மர் உயிர் நீத்தது -முதல் உத்தராயண ஏகாதசி -2nd -Feb –3138 கி மு

15-ஸ்ரீ வடமதுரை தேவகி வஸூதேவ புத்ரன்
16-ஸ்ரீ ஜெகன்நாத் -ஒரிசா
17-ஸ்ரீ நாதன் ராஜஸ்தான்
18-ஸ்ரீ துவாரகா தீசன் -குஜராத்
19-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கர்நாடக
20-ஸ்ரீ குருவாயூரப்பன் -கேரளா

21-ஸ்ரீ நந்தன் மதலை யசோதை இளஞ்சிங்கம் கோபீ வல்லபன் -திருவாய்ப்பாடி
22-நம்பி மூத்த பிரானின் தம்பி சுபத்ரா -தங்கை
23–ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ சத்யபாமா பிராட்டி -ஸ்ரீ ஜாம்பவதி பிராட்டி -ஸ்ரீ காளிநிதி பிராட்டி –
ஸ்ரீ மித்ரவிந்தா பிராட்டி -ஸ்ரீ நக்நஜிதி பிராட்டி -ஸ்ரீ பத்ரா பிராட்டி -ஸ்ரீ லஷ்மணா பிராட்டி அஷ்ட திவ்ய மஹிஷிகள்

24) சாணூர -கம்ச -சிசுபால -தந்த்ரவத்ரன் -நால்வர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்

25- ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு ஒன்பதாவது திரு நக்ஷத்திரத்தில் –சென்று 20 மாதங்கள் அங்கேயே எழுந்து அருளி இருந்தான்
26-பின்பு வடமதுரை சென்று கம்சவதம் முடித்து தாய் தந்தை கால் விலங்கு விடுவித்து அருளினான்
27-ஸ்ரீ துவாரகா நிர்மாணம்
28-ஸ்ரீ சாந்தீபினி இடம் ஆய கலைகள் 60 தனது -16-18-திருநக்ஷத்ரத்தில் கற்றான்

——–

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் -ஸ்ரீ கீதா சாரமே இதுவே –

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்–9-27-

கௌந்தேய-குந்தி மகனே!
யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ,
யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ,
யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ,
யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ,
யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ,
தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.

நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும்,
எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்–18-56-

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ–18-57-

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:–18-68-

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.

————

காயேன வாசா மனஸேந்த்ரியைா் – வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ,
இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ
அது எல்லாவற்றையும் பரம புருஷனாகிிய நாராயணனுக்கே என்று ஸமா்ப்பிக்கிறேன்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –