Archive for December, 2024

ஸ்ரீ அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் -திருப்பாவை —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் –ஸ்ரீ வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் உடன் தொகுத்தவை–

December 31, 2024

நாராயணனே -திருப்பாவை -1-
பாற் கடலுள் பையத் துயின்ற -திருப்பாவை –2-
மன்னு வட மதுரை மைந்தனை -திருப்பாவை –5-
விண்ணோர் தலைவா -கேசவா -ஆயர் குல முதலே -திருவாய் மொழி -1-5-6-

பர வ்யூஹ விபவ நிலைகள் மூன்றையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உதசருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம்
பர வ்யூஹ விபவ ஆத்மாநா த்ரிவிதம் பரஹம இதி பாகவத சித்தாந்த -பராசர பட்டர்
க -பிரமன் -ஈச சிவன் இவர்களுக்கு உதபாதகனாய் ஆஸ்ரயநீயனான ஷீராப்தி சாயீ கேசவன்

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

விண்ணோர் தலைவா –விரோதி பிரசங்கம் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவனே –
கேசவா–அவர்களை போல் அன்றியே ப்ரயோஜனாந்தர பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் சத்தா ஹேதுவாகையாலே கேசவன் என்னும் திருநாமம் யுடையவனே –
மனை சேர் ஆயர் குல முதலே -குடிசில் கூடக் கொண்டு திரிகையாலே மனையோடு சேர்ந்த ஆயருடைய குலத்துக்கு மூலமானவனே
மா மாயனே -அபர்யந்தமான நவ நீத ஸுர்யாதி ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனே –
மாதவா-அதுக்கு அடியாய் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்று பிராமண ஸித்தமான இவ்வாதார கதமான ஸ்ரீ யபதித்தவத்தாலே -மாதவன் என்ற திருநாமம் யுடையவனே

விண்ணோர் தலைவா –
நிரந்தர அனுபவம் பண்ணுவாரை ஒரு நாடாக யுடையவனே –
கேசவா –
அவர்களால் பர்யாப்தி பிறவாதே திருத்தி அடிமை கொள்ளுகைக்கு -ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான் -என்று
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகனுமாய் -தன் மத்யச்தனாய் வந்து அவதரிக்கும் படி –

மனை சேர் ஆயர் குல முதலே –
பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல்
இவ்வருகே இடையர் இருந்த மனைகளிலே வந்து அவர்கள் குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே
மனை சேர்ந்த ஆயர் என்னவுமாம்
மூங்கில்களை கையோடு கொண்டு போய் பசுக்களுக்கு புல் உள்ள விடத்தே வளைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்கை
புலவிக் குல வானவர் தம் கோ -என்னும் அதுக்கு அவ்வருகே யாயிற்று ஆயர் குல முதலே -என்கிற இது
மா மாயனே
சர்வ சக்தியாய் இருந்து வைத்து வெண்ணெய் களவிலே இழிந்து அதை தலைக் கட்ட மாட்டாதே கட்டுண்டு நிற்கும் ஆச்சர்யம்
மாதவா –
இவ் வெளிமைக்கு நிதானம் இருக்கிற படி -அவளை உகப்பிக்கை யாகிறது -ஆஸ்ரிதற்கு எளியன் ஆகை இறே

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –

வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )
நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –

தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்
மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள் என்னவுமாம் –

இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயணா சப்தார்த்தம் -என்றும்-

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்
நாராயண பரம் பரமம் -என்றும்
பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –
இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-

சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து

நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –
இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –

பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத்வ ஷமா சம்குசந்தீ -(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவம் )
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் –வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்-
இத்தனை இறே காகமும் சிசுபாலனும் செய்தது –இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இறே இருவரையும் –

நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே

பையத் துயின்ற
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இறே இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே-பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே-
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி-ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி- இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது-சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே-நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி-கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –கௌசல்யா ஸூ ப்ரஜா ராம — உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்-சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்

ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

பாற் கடலுள் பையத் துயின்ற –
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்-
நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை அழிக்கிறார்களோ-என்று பயப்பட்டு-
கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்-ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய-ஹ்யாகதோ-மதுராம் புரீம் -என்னக் கடவது இறே

மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
ஆனை படும் ஆகரம் போலே அவதாரம் மாறாத வூர் –
சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாமனனாய் தபஸ்ஸூ பண்ணி வர்த்தித்ததும்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் வன்னியம் அறுத்து தனக்கு படைவீடாகப் பெற்று நெடு நாள் இருந்து ராஜ்ஜியம் பண்ணியும்
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும் –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –-மல்லை  மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இறே -அப்படி இறே மஹரிஷிகள் ஈடுபட்டது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )–நகரீ -விட்டுப் போந்த இடமோ -பிறந்து படைத்து விரும்பின விடமோ படை வீடாவது –
புண்யா -அபிமத லாபத்தை யுண்டாக்க வற்றாய் இருக்கை-அவனைப் பெறுகைக்கு உபாயமும் தானே –
பாப ஹரீ-அப் பேற்றுக்கு பிரதிபந்தக நிரசனமும் பண்ண வற்றாய் இருக்கை –
சுபா -ஒன்றைப் போக்கவும் ஒன்றைத் தரவும் வேண்டா -பரம பதம் போலே ப்ராப்யமும் தானேயாய் இருக்கும் –
யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத -யாதொன்றிலே ஜகந்நாதன் ஆனவன் ஜாதனானான் –
சம்சாரிகளுடைய குறை தீர்க்கைக்காக நியாந்தாவானவன் நியாம்ய கோடியிலே பிறந்தான் –நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே- பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் –பரம பதத்திலும் காட்டில் இவ்வூர் பிரசித்தம் போலே – கலங்கா பெரு  நகரம் ஆகையால் கலங்காது இருக்கிறது அங்கு – கலங்கும் தேசத்திலே கலங்காதே இருக்கிறது இங்கு –
பரம பதம் கலவிருக்கை என்னும்படி-பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை – விரோதி நிரசனத்துக்கும் தானே யாகை-
பிராப்யமும் தானே யாகை-இத்தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை –
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு-அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே- அஜஹத் ஸ்வபாவனாய் கொண்டு-நித்யனானவன்-
ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு-சதைக ரூப ரூபாய என்கிறபடியே –
அங்கு ஏக ரூபனாய் நின்று உடம்பு கொடுத்த படியைச் சொல்லிற்று
இங்கு ப்ரவாஹ ரூபேண உடம்பு கொடுக்கும் படி சொல்லுகிறது –சாஷாத் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும் –பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாயா -என்னும் படியே-மாயை -என்று ஞானமாய் -தன்னுடைய இச்சையால் அவதரித்தான் என்கிறது
விஷ்ணு -வியாபக வஸ்து -வியாப்பிய ஏக தேசத்திலே வந்து பிறந்தான் என்கை
எங்கும் உளனானவன் ஓர் இடத்திலே தோன்றின படி
சனாதன -என்றும் உளனானவன் ஒரு நாளிலே தோன்றின படி –

——–

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் -அத் திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று – சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )-(நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது – அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்-விலக்காமையும் அதுக்கு அடியான சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசங்கமாம் –

நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்–ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை –சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்-நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்- தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே-உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே – இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது–இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )-தருவான் –பிராப்தி உண்டானாலும் அவன் தரக் கொள்ள வேணும் என்னுமிடம் தோற்றுகிறது-உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்- ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா –தருவான் -தருவதற்காகவே நாராயணன் இங்கு கண்ணனாக அவதாரம்-நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் -என்றுமாம்-அருள் தருவான் அது நம் விதி வகையே

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1

நல்ல வருள்கள்
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-

நமக்கே தந்தருள் செய்வான் –நிர்ஹேதுகமாகையாலே விலக்ஷணமான ஆத்மந ஆஸந்தி அந்த பிரவேச
விரோதி நிவர்த்தக அனுபவங்களுக்கு அடியான நிரவதிக கிருபைகளை-தாரேன் பிறர்க்கு உன்னருள் என்னிடை வைத்தாய் -என்கிற கணக்கிலே -நமக்கே அசாதாரணமாக தந்து மேலும் இடை விடாமல் அருள் செய்வானாய்
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே
– -9-4-2-

கண்ணே உன்னைக் காணக் கருதி –எனக்கு தர்சன சாதன பூதனாய்க் கொண்டு த்ருஷ்ட்டி யானவனே –-சாதன பூதனான உன்னையே சதா தர்சனம் பண்ணி அனுபவிக்கக் கருதி –காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே-பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –-அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இறே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இ றே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –

————–

மலரிட்டு நாம் முடியோம் -திருப்பாவை -2-
இனிப் பிறவி யான் வேண்டேன் -திருவாய்மொழி -10-6-1-

அவன் தானே வந்து சூட்டில் செய்யல் ஆவது இல்லை என்பதால் நாம் விசேஷித்து அருளுகிறாள் –
ஆழ்வாரும் என் புத்தியால் விட்டேன் -அவன் இருத்தலில் செய்யல் ஆவது இல்லை -ஈட்டு திவ்ய ஸ்ரீ ஸூக்தி

மலரிட்டு நாம் முடியோம் – சுரும்பார் குழல் கோதை -என்றும்–வாசம் செய் பூம் குழலாள் -என்றும் இறே இருப்பது இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது – அது செய்யக் கடவோம் அல்லோம் என்கை -பூச் சூடுகை போக ரூபமாகையாலே -மலரிட்டு நாம் முடியோம் என்று பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் –என்கிறது –தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால் சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்–நாம் முடியோம் – அவன் தான் மாலையைக் கொடு வந்து-மயிரை முடித்து அலங்கரித்து-விரல் கவ்வி- இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை- அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை – நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இறே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து – இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே-நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே – அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் – அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை -யான் வேண்டேன் – என் புத்தியால் விட்டேன் – அவன் இருத்தில் செய்யலாவது இல்லை-

————-

தூயோமாய் -திருப்பாவை -5–தூயோமாய -திருப்பாவை -16
ஆசற்றார் மாசற்றார் -திருமாலை -22

பிரயோஜனாந்தர பரத்வமும் -உபாயாந்தர -பரத்வமும் -இல்லாத தூய்மை
ஆசு -மாசு -குற்றம் –
பகவானே உபய உபேயங்கள் என்று அறிந்த தூய்மை –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

தூயோமாய் வந்து நாம் –
அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-இடைச்சிகள் தூய்மை இறே – தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே – அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே – (தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ ) விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது – அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது – திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா –அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா –நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –தூயோமாய்-அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் –-அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்-ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

ஆசு -குற்றம்-உபாய விஷயமாக வரும் குற்றம் –அதாகிறது
1-பாரதந்த்ர்யத்துக்கு சேராதவை –
2-அஹங்கார கர்ப்பமான அசேதன கிரியா கலேபங்களை சாதனமாக நினைத்து இருக்கை –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது –
தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

மாசற்றார்-
இதுவும் ஒரு மானஸ தோஷம் ஆயிற்று –-அதுவும் பிராப்ய ஆபாசங்களிலே பிராப்ய புத்தியைப் பண்ணி இருக்கை –அவன் தன்னையே பற்றி ஐஸ்வர்யாதிகளை லபித்துப் போகா நிற்பர்கள் –அங்கன் அன்றியே-அவன் தன்னையே பெற வேண்டும் என்று இருக்கை -மாசறுகை யாவது –

————-

நாராயணன் மூர்த்தி கேசவன் -திருப்பாவை -7–வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்
கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்-ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை -சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்
கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்-கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து-உறங்கக் கடவையோ

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை–கோ ரக்ஷணத்துக்கு முடி சூடினவனாய் ரஷ்ய விரோதியான மதுவுக்கு நிராசகனாய் – அத்யுஜ்ஜ்வல தேஜோ ரூப ஸிம்ஹம் போலே விரோதிகளுக்கு அநபிபவ நீயனானவனை-அதாவது ஆஸ்ரித பவ்யனாய் இருக்கையும் -தத் விரோதி நிரசீலனாய் இருக்கையும் அநாஸ்ரிதர்க்கு அ நபிபவ நீயனாய் இருக்கையும் –ஜ்வலந்தம் – விளங்குகின்றவனை’ என்கிறபடியே, ‘கோளரி’ என்கிறார்.-(உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்)

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

கோளரியஸ்ய சா ஜனகாத்மஜா -அப்ரமேயம் ஹி தத் தேஜ--என்கிற பெருமை
எல்லாம் தோற்ற மேணானிப்போடே வந்தபடி-மாதவன் – பரம ரசிகன் என்று தோற்ற நடந்து வந்த படி –கோவிந்தன் – விவாஹமாய் இரா நின்றது -ஆராலே என்ன விக்நம் வரும் -என்று அறியாமையாலேஎல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொடு வந்தபடி

——-

மாமாயன் மாதவன் வைகுந்தன் -திருப்பாவை -9-
தீ வினைக்கு அரு நஞ்சே -தேவி மணாளனை -ஆயனை -திரு விருத்தம்-89-
சௌலப்யம் பரத்வம் இரண்டுக்கும் மூல காரணம் ஸ்ரீ மத் வத்வம் -மத்ய மணி ந்யாயம் –மஹா மாயன் -172—மாதவன் -73-வைகுண்ட: 406
72. பூகர்ப்ப:, 73. மாதவ:, 74. மதுஸுதன: |

ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டச்ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || –8-

மஹா மாய –
ஆச்சர்ய சக்தி படைத்தவன் -பெரு மாயன்-குண மாயா சமாவ்ருத -ஜிதந்தா–குணங்கள் என்ற மாயை மூலம் மறைத்த படி-மாயை என்பது பொய் என்ற பொருளில் இல்லை என்ற படி-மம மாயா துரத்யயா-பகவத் ஸ்வரூபம் திரோதானகரி தானே பிரகிருதி -நாம் மருள் உற்றவர் -தெருள் உற்ற ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-எல்லையில் மாயன் -3-10-8-

வைகுண்ட: — –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்-குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூகர்ப்ப: — பூமியையும் தம்முள் கருவாய்ப் பேணி வளர்க்கும் தாய்மை.-ஓம் பூ கர்ப்பாய நம
பூமியை ரக்ஷித்து அருளுபவர் உண்டு உமிழ்ந்து இத்யாதி செய்ததால்-பார்வண்ண மடமங்கை பத்தர் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்-அரவாகி சுமத்தி யால் -எயிற்றால் ஏந்தி —அறிந்தால் சீறாளோ -விராடன் ஸ்துதி
மாதவ: — திருவுக்கும் திருவாகிய செல்வர்.-அஸ்ய ஈசாநா ஜகதீ விஷ்ணு பத்நீ–புருஷ ஸூக்தம்ஹ்ரீஸ் ச தே லஷ்மீம் ச பத்ந்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17--மஹா விஷ்ணுவே உனக்குப் பூமா தேவியும் மஹா லஷ்மியும் பத்னிகள்-நித்யைவ ஏஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ -அநபாயிநீ- யதா ஸர்வ கதோ விஷ்ணோர் ததைவ இயம் த்விஜோத்தம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
அந்தணரே உலகின் தாயான இந்த மஹா லஷ்மி நித்தியமாக இருப்பவள்
ஒரு நொடி கூட மஹா விஷ்ணுபைப் பிரியாமல் உள்ளவள்
மஹா விஷ்ணு எவ்விதம் வியாபித்து உள்ளானோ அது போன்று இவளும் எங்கும் வியாபித்து உள்ளாள்-திருவுக்கும் திருவாகிய செல்வன்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
அமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்
ஸ்ரீ வல்லபன்-மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமாபெருமானுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ க்தம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
மதுஸூதந: — மதுவென்னும் புலன்களை ஒடுக்குவதில் அடியார்க்கு உதவி.: —இந்திரியங்களுக்கு மது என்று பெயர்-இவற்றைத் தன் பக்கம் இழுப்பதால் மது ஸூதனன் எனப்படுகிறான் நித்ய ஸூரிகளின் இந்திரியங்களை எந்தவிதமான தடையும் இல்லாமல் தன் வசப்படுத்தி வைத்துள்ளதாலும் அவனுக்கு மது ஸூதனன் என்னும் பெயர் என்றுமாம்

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே-அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-

மாதவன் –
அதுக்கடியான ஸ்ரீ ய பதி–அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்-சுவையன் திருவின் மணாளன் –

வைகுந்தன் –
ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்
அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் -பெண்களையே அன்றிக்கே ஆண்களையும் அடிமை கொண்டு ஒரு நாட்டுக்காக கையாளாய் இருக்குமவன் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தை உடையவன் –

மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்-நீர்மைக்கு அடியான திரு நாமங்களும்
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக
ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை-பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை

நல் வினைக்கு இன்னமுதினை ––
பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )நிரதிசய போக்யனாய் பரம ப்ராப்யனாய் உள்ளவனை-இப்படி பாபங்களை போக்குகைக்கும் – தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –

பூவினை மேவிய தேவி மணாளனை
பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே நித்ய வாஸத்தை யுடையளாய் நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே-சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-வல்லாயனை–மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –

———–

சினத்தினால் -திருப்பாவை -12
உகிரால் கீண்டான் சினம் -பேயாழ்வார் -42
சீற்றம் ஓன்று உண்டு -கலியன் -5-8-3-
ஆஸ்ரித சத்ருக்கள் சக்கரவர்த்தி திரு மகனுக்கும் விரோதி –
அருள் அன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சீற்றம் உத்தேச்யம்-அச் சினத்தை தெரி -அனுசந்தி
தரித்ரனாவன் தணிகனை அடையுமா போலே -சீற்றமும் உண்டு -என்று இறே இவர் பற்றுகிறது-ஆஸ்ரியருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌசீல்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய-பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே -தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –கோபஸ்ய வசமே இவான்-க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்–விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே – ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்–தன் இச்சா ரூபமான அபிமத விக்ரகங்களை பரிக்ரஹித்துஆஸ்ரித வாத்சல்யத்தை யுடைய தான் ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலே தன் சீற்றம் முடிப்பானாய் இருப்பானாய்-பிரஜையை நலிந்தவர்களை தாய் தனக்கு சத்ருசு என்று நிலைக்குமா போலே-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது
ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரி யுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் —-42–(எரி உருவம் -கோபக்கனலுடன் என்றும் பாட பேதம் )

அருள் என்று நமக்கு உத்தேச்யம் –ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்-அச் சினத்தை தெரி –(நெஞ்சே)அநுஸந்தி -என்றுமாம் -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

கொண்ட சீற்றம் –
சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம் தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால் சரீரி பேசாது இரானே
வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே
இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும்   –ஓன்று உண்டு-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

———–

பொல்லா அரக்கனை -திருப்பாவை -13
சுரி குழல் –அரக்கன் -கலியன் -5-7-7-
முன் பொலா இராவணன் -திருக் குறும் தாண்டகம் -15
பொல்லாங்கே வடிவு எடுத்தவன் இராவணன் -ஆண்டாள் கலியன் -பிராட்டியை பிரித்த பொல்லாங்கு –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–13-

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி-நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது- முன்பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம்) -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் விபீஷணஸ் து தர்மாத்மா –நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-த்வன் நீச -என்றாள் இறே(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )-மாயா மிருகத்தைக் காட்டுவார் – மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய் ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

சுரி குழல் கனி வாய்த் திருவினைப்
ஸூ கேச்யா-என்றும்-சாரு கேசீம் – என்றும் சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –பிரித்த கொடுமையில் –அனந்யா ராகவேணாஹம்-என்றும்-அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்
இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும்-இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி-கடு விசை யரக்கன்-க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான
ராவணன் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

முன்பொலா ராவணன் தன்-
அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் –
ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

பொல்லா  அரக்கன் -திருப்பாவை -13
பொல்லா ஆக்கை -திரு வாய் மொழி -3-2-3-
விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டு-துரியோதனன் பிரதி கூலனாய் தோன்றினான் -ஆக்கை அநு கூலமாக போலே ஆயிற்று இருந்து பிரதி கூல்யம் ஆயிற்று –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா-அநர்த்த ஹேதுவான சரீரத்தோடு உண்டான சம்பந்தத்தை அறுக்க உத்யோகித்தாலும் என்னால் அறுக்கலாம் படி அல்ல –துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-தன்பக்கல் போக்யதா புத்தியைப் பிறப்பித்து, ஈஸ்வரனுடைய போக்யதையை திரஸ்கரிப்பிக்கும் .
எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இ றே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி–பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே? அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார். இராவணன் தலைகள் போன்று முளையாநிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.சிறையிலே கிடப்பாரைப் போலே பிரக்ருதியிலே கிடக்கிற நான் ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும் நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்-இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

———-

கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
அவுணன் உடல் கீண்ட -அமலன் -8
கல் எடுத்து கல் மாரி காத்தாய்-கலியன் -திரு நெடும் தாண்டகம் -13
வீர பத்னி ஆகையாலே கல் எடுத்து என்னுமா போலே கிள்ளி களைந்தான் என்கிறாள்
தோஷம அசத்தி கிள்ளிப் பொகட்டிய படி
உலர்ந்த தாழை நாரை கிழித்தால் போலே அஹங்கார ஹேதுவான தேகத்தை பொகட்டான்
சோலை சூழ் குன்று எடுத்தான் -கல் எடுத்தான் என்றது அனாயசேன எடுத்தமை காட்ட
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே -என்று இருக்குமவள் இறே

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –மறுவலிடாத படி கிழங்கோடு வாங்கின படி–கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப் பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி-மோடி பருத்து இருக்கிறபடி-சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா போலே இரண்டு கூறு செய்தவனாய் -தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-

கல்லெடுத்து
அவன் எடுத்தது –சோலை சூழ் குன்றாய் இருக்க –
கல்லெடுத்து –அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.-வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க– ஒரு சிலா மாதரத்தை எடுத்தால் போலே ஒசழக்காகச் சொல்கிறாள் –ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்த போதை அநாயாசத்தை கண்டு இருந்தவள் ஆகையாலே இந்த சக்தி இறே இவள் ஹ்ர்தயத்தில் கிடப்பது -கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே என்று இருக்குமவள் இறே –
அசக்தாதிகாரம் இது சக்தாதிகாரம் இது -சாதனாந்தரங்கள் -என்கிற வார்த்தைகள்
நம் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் புகுரக் கடவது அன்றியே இறே இருப்பது –
சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை –ஈஸ்வர சக்தியைக் கொண்டு
தலை எடுக்கைக்கு என்று இருக்கும் கோஷ்டி இறே

பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-

———-

சங்கொடு சக்கர பங்கயக் கண்ணன் -திருப்பாவை -14-
வெள்ளச் சுரி -தாமரைக் கண்ணன் -திருவாய்மொழி -7-3-1-
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்கள் திருமேனிக்கு திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாக இருப்பது போலே திருக் கண் நோக்கு ஆத்ம குணங்களுக்கு பிரகாசகமாய் -அகவாயில் தண் அளிவு கண் வழியே தோற்றுமே -பிரதி கூலருக்கு திவ்ய ஆயுதங்களும் திருக் கண்களும் விரோதியாய் தோற்றும்-அநு கூலருக்கு அழகுக்கு உடலாய் தோன்றும் -தோற்பித்த படிக்கு இரண்டுமே சேருமே -ஜிதம் தே –பண்ண வைக்குமே -செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வலலானே -கலியன் -7-7-1-என்னக் கடவது இறே-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை
ப் பாடேலோ ரெம்பாவாய்-14-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும் திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை-ஆசைப்படப் பண்ணுமதுவும் அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

தாமரைக் கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
(ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு – ஆங்கு மலரும் குவியும் என்கிற திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –-விடவே செய்து விழிக்கும் -(1-7)-கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரிசங்கொடு-ஆழி ஏந்தித்தாமரைக் கண்ணன் -ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை-முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி-திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,-ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி-.பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும்
விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா –
செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே
உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

செய்ய கண்ணா-புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே-உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –

————–

நாயகனாய் நின்ற -திருப்பாவை -16
தெருள் கொள் -திருவாய்மொழி -5-7-3-
நாயணன் -நந்தகோபனுக்கும் -கோயில் காப்பானுக்கும் அந்வயம்
தெருள் கொள் -அடை மொழியை நான்மறைக்கும் -வல்லவா -இரண்டுக்கும் அந்வயம் –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய் எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும் பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –

வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே-தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது-பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு-ஞானாதிசயத்தை யுடையராய்க் கொண்டு நாலுவகைப்பட்ட வேதங்களையும் தங்கள் நினைத்தபடி நிர்வகிக்க வல்லவர்கள் பலரும் பகவத் அனுபவத்தால் சம்பன்னராய் வர்த்திக்கிற ஸ்ரீ வர மங்கல நகருக்கு-தெருள் கொள் நான்மறை என்று வேத விசேஷணம் ஆகவுமாம்-வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்

————

அம்பரம்–உம்பர்கோமானே எழுந்திராய் -திருப்பாவை -17
நல்கி ..பொழில் ஏழும் வினையேற்கே -திருவாய்மொழி -1-4-5-
அகலிடம் படித்து –வாரான் -திருவாய்மொழி -9-9-2-
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு -கலியன் -9-4-9-
ஆண்டாளும் -பராங்குச பரகால நாயகிகளும்  வருந்த ஒரே காரணம்
நாட்டுக்கு உள்ள நியாயம் அந்த புரத்துக்கு இல்லையாய் யாயிற்றே
சாமான்யத்தில் பண்ணும் ரஷணம்  விசேஷத்தில் இன்றிக்கே இருப்பது என்று –

ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்களாய் மானவர்களுக்கோ கார்யம் செய்யலாவது –
அபலைகளுமாய் அனன்யா பிரயோஜனைகளுமான வர்களுக்கு கார்யம் செய்யலாகாதோ
வரையாதே உகப்பாரையும் யுகவாதாரையும் தீண்டுகிற நீ -ஆசைப்பட்ட எங்களைத் தீண்டல் ஆகாதோ
நீயே அர்த்தியாய் கார்யம் செய்யக் கடவ யுனக்கு நாங்கள் அர்த்திக்கை குற்றமோ –
நீ நிபுணரான இந்த்ராதிகளுக்கோ கார்யம் செய்யலாவது -அநிபுணரான எங்கள் கார்யம் செய்யலாகாதோ
உறங்குவாரை தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தாரை தழுவல் ஆகாதோ
அவிசேஷஞ்ஞமான விபூதிக்காக உன்னைக் கொடுத்தால் வாசி அறிவார்க்கு உன்னைக் கொடுக்கலாகாதோ –
கழஞ்சு மண்ணை ஆசைப்படாதே உன்னை ஆசைப்பட்டது இழவுக்கு உடலாயத் தாகாதே

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து–எங்கும் அளிக்கின்ற –பரப்பை யுடைத்தான பூமி உரு மாய்ந்து போக -அத்தை யுண்டாக்கி பிரளய ஆபத்தில் அகப்படாதே வயிற்றிலே வைத்து நோக்கி -வெளிநாடு காண உமிழ்ந்து -பிரபலர் அபகரித்த அளவிலே எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி வரையாதே ரஷிக்கையே ஸ்வ பாவமாக இருக்குமவன் –இருந்ததே குடியாக ரக்ஷிக்குமவன் கிடீர் மஹிஷி நோவு பட உதவாது இருக்கிறவன் இப்படி வரையாதே நோக்கும் தன்மையன் கண்டீர்-இப்போது வாராது ஒழிகிறான் – என்றது-–பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்-தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கி
உலகங்களைக் காப்பாற்றும்போது, கார்த்த்வயா புத்தி இன்றிக்கே -செய்து தீர வேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப் பேறு தன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள்.
அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி.-தான்-அபேக்ஷிப்பார் இன்றிக்கே -விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள்.-காத்தளித்தல் என்பது–விருப்பமில்லாதன வற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல்.-பொழிலேழும் உலகம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள்.
அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு
அதனோடு மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும்.
ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக் கோடல் அன்பினாலே ஆதலின், ‘தான் நல்கிக் காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள்-வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-
‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப் புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி.-வினையேன்-‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம் படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.

இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு,-பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று, யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்? நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று, தன் மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும்,-வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ?’ என்பதற்கு, ‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே —-9-4-9-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் – ஜகத்துக்கு கண் (வழி )காட்டியாக வேதத்தை உண்டாக்கி-அத்தாலே ப்ரதிபாத்யனான தன்னைக் கிட்டுகைக்கு சாதனமாக யாகாத்ய உபகரணங்களையும் உண்டாக்கி அதுக்கு பல பூமியான ஸ்வர்க்கங்களை உண்டாக்கி ஜகத்துக்கு பிரகாசத்தை பண்ணக் கடவரான சந்திர ஸூர்யர்களையும் உண்டாக்கி அவ் வழியாலே ஜகதாகாரனாய் இருக்கிறவன் –அருள் தந்தவா நமக்குப் – அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே- (ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய ஸூவ ஜன ரக்ஷிதா -கண்ணனைப் போல் இல்லாமல்
தம் ஜனங்களையும் ரக்ஷிக்கும் ராமனும் நமக்கு அரிதாவதே )

———-

பஞ்ச சயனம் -திருப்பாவை -19–அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் தாவள்யம் -மெத்தன என்றது மார்தவம் விசேஷித்த படியால்
அஞ்ச லோதியை -திருவாய்மொழி -10-2-4-இருண்ட கூந்தலுக்கு ஐஞ்சு லஷணங்கள் -அல் -கருமை -விசேஷித்து அருளி –
ஐம்பால் ஓதியை -கலியன் திரு எழு கூற்று இருக்கை –கூந்தலுக்கு -மார்த்வம் சைத்யம் பரிமளம் கருமை நீட்சி

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி –மெத்தன்ற பஞ்சாலே செய்த படுக்கை ஆகிலும்-கட்டில் -ஜாதி பேச்சு- கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே –கண் உறங்குவதே-பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்-பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி -அதாவது-அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இறே இருப்பது – அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் –
பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –பஞ்ச சயனம்
பஞ்ச வித சயனம் –
1-சீத பரிஹாரமுமாய் -உஷ்ண பரிஹாரமுமாய் –
2-தர்ச நீயமாய் –
3-பரிமளத்துவமாய்-
4-விஸ்தார
5-பாண்டரோ பேதமுமாய் இருக்கை-

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

அஞ்சலோதியைக் கொண்டு நடமின்-
சுருண்டு நெய்த்து பரிமளிதமாய் என்றாப் போலே அஞ்சு வகைப் பட்டிருப்பதாய்த்
(இருட்சி நீட்சி சுருட்ச்சி குளிர்ச்சி அழகு ஐந்தும் -அல்லும் -இருட்டு -கறுத்து )
இருண்டு இருந்துள்ள மயிர் முடியை உடைய பிராட்டியை கொடு போங்கோள்-அஞ்சு -என்று அஞ்சு வகைப் பட்டிருக்கை – அல் -என்று இராத்திரி-அத்தால் இருட்சியை நினைக்கிறது –ஓதி -என்று மயிர் முடி –

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் -அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை
ந கச்சித் ந அபராத்யதி என்னும் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

————

கப்பம் தவிர்க்கும் -திருப்பாவை -20-கப்பம் -கம்பம் என்றபடி
இரு கூறா நகந்தாய் -திருவாய்மொழி -9-4-7-நகந்தாய -நகத்தாய என்றபடி
வல்லொற்று மெல்லொற்றாக மாறிய இடங்கள்
நகத்தை தாவும்படி பண்ணின விசேஷ அர்த்தமும் பன்னீராயிரப்படியில் அருளி உள்ளார்-

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்-கப்பம் தவிர்க்கும்–கப்பம் -என்கிறது கம்பம் -என்கிறபடி -அதாவது நடுக்கம் – கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துக் கிடக்கிறது –அஸூர ராஷசராலே குடி இருப்பு உள் பட இழந்து-புகலிடம் அற்றுப் படுகிற நடுக்கைத்தை தவிர்க்கை –நாட்டார் நடுக்கத்தை தவிர்க்கக் கடவ நீ –-எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய்-அவர்கள் நடுக்கத்துக்கும் எங்கள் நடுக்கத்துக்கும் வாசி அறிய வேண்டாவோ –அவர்கள் நடுக்கம் எதிரிகள் நிமித்தமாக-உன்னைக் கிடையாது ஒழியப் புகுகிறதோ -என்று எங்களுக்கு நடுக்கம்-கப்பம் -என்று இறை யாகவுமாம் –ராவணாதிகளுக்குப் பணிப் பூ விட்டு திரியாமைக்காக-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–
9-4-7-

ரண்டு கூறாம் படி பண்ண வல்ல திரு நகத்தை யுடையவுமாய் -ஆர்த்தருடைய ஆர்த்தியைத் தீர்க்கும் நரசிம்ம ரூபி யானவனே -நகத்தாயே-நகந்தாய் என்று மெல்கிக்  கிடக்கிறது –நகத்தாய்-என்று வல்லொற்றை மெல்லொற்றாய்க் கிடக்கிறது என்று கிடக்கிறது-இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல-நகத்தை உடையவனே-நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் ஹிரண்யனுடைய மார்பகத்தில் பெரிய இடத்தை இரு கூறாம்படியாக நகத்தை தாவும்படி பண்ணின ஸ்ரீ நரஸிம்ஹமான திவ்ய ரூபத்தை யுடையவன்-

——————

பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -திருப்பாவை -21
அடியோமுக்கே எம்பெருமான் -கலியன் -4-9-5-
உன்னை நீ உணர வில்லை -உன் பிறவியைப் புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
பரம பதத்தில் வந்தோமோ -ஷீராப்திக்கு வந்தோமோ -எங்களைத் தேடி நீ திருவாய்ப்பாடிக்கு அன்றோ வந்தாய் -இங்கே உறங்கலாமோ -ஆண்டாள் –
எங்களைத் தேடி திரு இந்தளூர்  எழுந்து அருளிய ஸ்ரீ பரிமள ரெங்க நாதனே உணராய் –

ஆற்றப் படைத்தான் மகனேஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும்-நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே கோப குலமும் கோபாலத்வமும்- நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே 
—4-9-5-

அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே   –
அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு-ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும் உகந்து அருளின நிலங்கள் –தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே

———-

அன்று இவ் உலகம் போற்றி -திருப்பாவை -24
அருகலிலாய –நம் –திருவாய்மொழி -1-9-3-
அடி போற்றி -திறல்  போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய வீர சரிதத்தையே ஏத்தி புருஷார்த்தத்தை லபிக்கைக்காக சத்வம் தலை எடுத்த இன்று உன் கை பார்த்து இருக்கும் நாங்கள் வந்தோம் நீ கிருபை செய்து அருள வேணும் இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் — ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை- ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ )

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
–1-9-3-

ஹேய ப்ரத்ய நீகமாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்வரூப வைலக்ஷண்யமும்- நித்ய ஸூரி நிர்வாஹகத்வ ரூபமான மேன்மையும்-விலக்ஷண விக்ரஹ யோகமும் —
புண்டரீகாக்ஷத்வமும் -கருட வாஹனத்வமும் -ஸ்ரீ யபதித்வமும்–ஆகிற பரத்வ சிஹ்னங்களாய் யுள்ள அறு சுவையும் -தாரா நின்றான்-என் அளவில் நித்ய ஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்-
——————————————–

கன்று குணிலா எறிந்தாய் -திருப்பாவை -24-விளங்கனிக்கு எறிந்த விஷயம் அஸ்பஷ்டம்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -கலியன் -9-10-7-அஃது ஸ்புடமாகிறது இதில் –

ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்-குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே கழல் போற்றி என்கிறார்கள் –

வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி

மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க) மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க) வாசியற பழி கேடன் என்று சொல்லும் படி இறே

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து – கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும் ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய்
ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் –

குணம் போற்றி-பசிக்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ – அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் ––குன்று குடையா வெடுத்தாய்-விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான்
நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து – கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும் ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –ஆநிரைக்கு அழிவு என்று  மா மழை நின்று காத்து உகந்தான் – பசுக்களுக்கு அழிவு வருமன்று மகா வர்ஷத்தை மலையை எடுத்துக் கொண்டு நின்று காத்து இவற்றுக்கு உறுப்பாக பெற்றோம் -என்று உகந்தவன் –நில மா மகட்கு இனியான்- பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள் ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே- பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –

———–

ஒருத்தி மகனாய் -திருப்பாவை -25
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய்  வளர்ந்ததும் கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-

ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 ) தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்-சர்வ வியாபகனுமாய் நித்யனுமாய் இருக்கிற மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் ) சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே – தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –இவன் பிறந்த போதே ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

அவன் பிறவி நமக்கு என்று கோல – நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –அவன் பிறப்பு கூட்டும் –
அவனை விட்டு நீங்கவே  நம் பிறப்பு பிரபத்தி யாவது இந்த ஞானமே -(பிரபத்தி இந்த பிரதிபத்யே )

ஒருத்தி மகனாய் பிறந்து வளர -திருப்பாவை -25
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

அங்கே பிறந்து இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி-ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்-திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும் ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-ஈன்ற முதல்  தாய் சடகோபன் -மொய்ம்பால்  வளர்த்த இதத்தாய் இராமானுசன் –இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

தான் தீங்கு நினைந்த -திருப்பாவை -25
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த -திருவாய்மொழி -2-6-6-
நினைந்த -மனஸ் சஹ காரம் உண்டாவதே
உக்தி மாதரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் ஆய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்து கழுத்துக்கு மேலும் அமையும் –
கைவிடும் இடத்தில் அக வாயிலும் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான் –
அவன் விடுவது புத்தி பூர்வம் பிரதி கூல்யம் பண்ணினவரை
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும் –

அஸ்மாந் ஹந்தும் ந சம்சய -(விபீஷணன் -நமக்கு எல்லாம் உயிரான பெருமாளை நம்மை அழிக்க வருகிறான் என்றாரே சுக்ரீவ மகா ராஜர் )

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த –
வார்த்தையோடு நில்லாது நெஞ்சினாலும் இகழ்ந்தவன். இத்தால், அவன் விடுவது, மனம் அறிந்தே தீவினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

தீங்கு -திருப்பாவை -25
பொல்லா  -திருப்பாவை -13
இன்னது என்று சொல்ல மாட்டாமையாலே தீங்கு பொல்லா என்கிறார்கள்
இராவணன் பொல்லாங்குக்கு பாசுரம் இட்டு சொல்ல முடியாமல் -பொல்லா -என்னும் அளவே சொல்கிறார்கள்
கம்சனுடைய தீமையும் வாசாம் அகோசரம் -என்றபடி

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

———————-

மாலே -திருப்பாவை -26
நெடுமாலே -திருவாய்மொழி -5-8-1-
இருவரும் ஆஸ்ரித வ்யாமோகத்தை அருளுகிறார்கள் –
சம புத்தியால் மாலே இடைப்பென்கள் வார்த்தை மால் வியாமோகம்
நெடுமால் மிக வியாமோகம் -நீராய் அலைந்து கரைய என்கிற அடைவு

மாலே-முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் – சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்-மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் – இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும் எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு-யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு-ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே – ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே – பெண்களை பிரியாமைக்கு இறே-மாலே -மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
உன் பக்கல் உள்ள நிரதிசய அநு க்ரஹத்தாலே நீராய் உருகும்படி பண்ணி வைத்து எனக்கு
அரியையாய் இருக்கிறவனே -உன் பக்கல் யுண்டான ஸ்நேஹாதிசயத்தாலே அசேதனமான என்னுடைய சரீரமும் கூட அத்யந்த சிதிலமாம் படி பண்ணுகிற அபி நிவேச ப்ரகர்ஷத்தை யுடையவனே-ஜலமயமாம் படி கட்டுக் குலைந்து ஒரு நிலையில் நில்லாத வ்யாகுலமாய்
ஆஸ்ரயமும் தெரியாதபடி கரையும்படியாக உருகப் பண்ணா நிற்கிற அபரிச்சின்ன போக்யதா மஹாத்ம்யத்தை யுடையவனே-நெடுமாலே!-1-சர்வேஸ்வரன் என்னுதல் -2-போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -3-வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -4-இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –5-தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -6-தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்

ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின்,-நெடுமாலே’ என்கிறார். என்றது, எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு என்றபடி.
அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராத படியாயிருக்கும்.
அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-நெடுமால்’ என்னில் என்னுமித்தனை.
மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை.
அன்றிக்கே, மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில், அன்று, நெடுமால் – மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்-சர்வேச்வரன் என்றபடி.
அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ.-
பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது -என்றவாறு-

——–

சூடகமே -திருப்பாவை -26
கை வண்ணம் -திரு நெடும் தாண்டகம் -21
இருவரும் அடைவு கெட அனுபவம் -பிடித்த கைக்கும் அணைத்த தோளுக்கும் அணைத்த விடத்தே உருத்தும் அதுக்கும் ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் துறைக்கு ஆபரணம் –
அம்மி மிதித்த காலத்திலேயே என் காலைப்  பிடித்த கை –
ஆதி ஷடேமம அசமாநம ஆசமேவ த்வம சத்திரா பவ -என்று அப்போதே மந்த்ரம் சொன்ன வாய் –இமாம் சமேத பச்யதே -அப்போதே காலே பிடித்து கரிய குழல் அளவும் பார்த்த கண்
பின்பு சப்தபதீ பர கரணத்தில் நடந்த திருவடிகள் –

சூடகமே-பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –(பாணி கிரஹணம் முதல் அன்றோ )-முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்-

தோள் வளையே –அந்த ஸ்பர்சத்தாலே -அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

தோடே-தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –

செவிப் பூவே –அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு –முகந்து பார்க்க )விஷயமான இடம்

பாடகமே–அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம் –

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இறே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

கை வண்ணம் இத்யாதி –
அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் –
பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது-தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-

1-கை வண்ணம் தாமரை —-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –2-வாய் கமலம் போலும் – கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற – இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –3-கண் இணையும் அரவிந்தம்- இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால் குறையும் தலைக் கட்டும் கண் – இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு – அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று – கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று கீழ் சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே
அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –அடியும் தாமரை -என்னாதே- அடியும் அக்தே -என்றது உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

கூடாரை வெல்லும் கோவிந்தா -திருப்பாவை -27
பருப்பதத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-7-
அத்வேஷ மாதரத்தை பற்றாசாக கொண்டு அவன் அருளும் தன்மை இரண்டாலும் அருளப்படுகிறது – கூடுவோம் அல்லோம் என்று அபிசந்தி இல்லாத மாதரத்தில் ரஷித்த படி
பொருந்தோம் என்று துர் அபிமானம் இன்றிக்கே -ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவன் கோவிந்தன்
பருப்பத்தது -விலக்காமை ஒன்றே வேண்டுவது-வருவானும் -விரோதிகளை போக்குவானும் -தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் தானே–பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி –
ஸ்வ சாசநாதி வரு ததி வ்யவசாய நிவ்ருத்தி மாத்ரேண -ரசன அநு பபத்தி அதிகரண ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்தி — விலக்காமை ஆத்ம ஞானம் -பிரளயத்தில் மோஷ பிரதானம் பண்ண இதுவே ஹேது ததேக சேஷத்வ ததேக ரஷ்யத்வ ஞானம் இல்லை பிரளயத்தில் -தத் கார்யமான விலக்காமை அப்போது இல்லையே –

கூடாரை வெல்லும் –-ஆந்தனையும் பார்த்தால் –-ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் – வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும் அங்கதனை இட்டும் பின்பு வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் – வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 ) ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது-பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் – லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்-பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் —-என்று ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் ) ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற துரியோதனனை வெல்ல வல்லனானான் –நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும் தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

எல்லாரையும் வெல்வது குணத்தால் – கூடுவாரை சீலத்தாலே வெல்லும் – கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்-ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் — சீலம் அழகுக்கு இலக்காகும் –அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்-சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்-அம்பு தோல் புரையே போம் – அழகு உயிர்க் கொலை யாக்கும்

சீர்-அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் – சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்-தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷன்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

கோவிந்தா – கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத மாத்ரத்திலே ரஷித்த படி –கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ-பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

மகா மேருவிலே  தன் வெற்றி எல்லாம் தோன்றும்படி தன் அடையாளத்தை இட்டுப் போந்தான்-அப்படியே பரம பதம் கலவிருக்கையான  ஈஸ்வரன் இங்கு நின்றும் இவர் பக்கலிலே வரும் அளவும் உண்டான பாவக் காட்டையும் சீய்த்து இவர் வன்னியத்தையும் அறுத்து இவர் –சென்னித் திடரில் பாத இலச்சினை-வைத்த படிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகிறது –இவர் வருதல் இருவரும் பாதி பாதி வழி வருதல் செய்கை அன்றிகே அவன் தானே வந்தான் ஆய்த்து –மலைக்கு உள்ளது விலக்காமை இறே
1-அப்படியே வருவானும்
2-வழியில் உள்ள விரோதிகளை போக்குவானும்
3-தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் -தானே இறே -இவர்க்கும்

பொறித்தாய்-கர்ம பாரதந்த்ர்யத்தால் பொறித்த பொறி போல் அன்றி-ஈஸ்வர பரதந்த்ர்யமாக பொறித்த பொறி-

—————

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -திருப்பாவை -28
நம்பீ -திருமாலை -25
குண பூர்த்தி -அனுபவம் இருவரும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் -நைச்ய அநு சந்தானம் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அவன் மேன்மை அனுசந்தானம் –
அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் -என் கண் இல்லை -நின் கணும் பக்தன் அல்லேன் -நைச்ய அநு சந்தானம் –

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ சர்வ நிரபேஷன் -என்கை-எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ-உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால் உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –

1-குறைவு இல்லை-2-குறை ஓன்று இல்லை-3-குறை ஒன்றும் இல்லை-

1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –2-ஸாவதியும் அன்று –3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-(1-எதையும் எதிர்பாராமல்-2-எல்லைக்கு உட்படாதது-3-பிரதிபந்தகங்களால் தடுக்க முடியாதே )

1-உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
2-பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
3-பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே

1-நிரபேஷனைப் பற்றாய் —2-பூர்ணணைப் பற்றாய் –3-பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –

நாரணனே நீ நான் இன்றி இலேன்–பயன் இருவருக்குமே -அமுதனார்
நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்-அமுதனார் -நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் – நிகரின்ற நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிரை ஒன்றும் இலேன்–உன்னுடைய அருளுக்கும் -என்னை விட தாழ்ந்தவன் இல்லையேபயன் இருவருக்கும் ஆனபின்பு--மா முனிகள் ஆர்த்தி பிரபந்தம் –எனைப் போல் பிழை செய்வார் உண்டோ
உனைப் போலே பொறுப்பார் உண்டோ–மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ —

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா-இக் குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று –
தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்- அவர்களில் சிறியவர்களுக்கும்
அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி-கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும்
ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-

கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் – கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை
கோவிந்தா என்கிறார்கள் –
(நிறைவினால் குறையில்லா நெடும் பணைத்தோள் பின்னை —
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும்-திருவாய் )

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்

களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-

அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் –ப்ராஹ்மண்யம் –ஒளித்திட்டேன் – ப்ராஹ்மண்யம் இல்லாமை என் அளவாய் போகை அன்றிக்கே இவ் வர்ணம் தான் தண்ணிது -என்னும்படி பண்ணினேன் –விசிஷ்டராய் இருப்பாரைக் கண்டால் இன்னான் அதிகரித்த வர்ணத்திலே சிலர் அன்றோ என்று கொண்டு அவர்களுக்கும் அவத்யமாம் படி திரிந்தேன் – இது இறே நான் கர்ம யோகத்தில் நின்ற நிலை-என் கண் இல்லை--என் விஷயமாக எனக்கு ஒன்றும் இல்லை – ஆத்ம விஷய ஞானம் எனக்கு இல்லை -என்கை-கர்ம யோகம் இல்லை என்ற போதே தத் சாத்யமான ஜ்ஞான யோகம் இல்லை என்னும் இடம் அர்த்த சித்தம் அன்றோ -என்னில் – இஜ் ஜன்மத்தில் அனுஷ்டித்த தொரு கர்மம் இல்லை யாகிலும் பூர்வ ஜன்மத்தில் கர்ம யோகம் பக்வமாய் அவ் வளவிலே தேக விஸ்லேஷம் பிறந்து அனந்தர ஜன்மத்திலே ஜ்ஞானம் நைசர்க்கிகமாய் இருக்கும் இறே – அதுவும் இல்லை என்கை –

ஆனால் பக்தி யோகம் இருந்தபடி என் என்னில் –நின் கணும் பக்தனும் அல்லேன் –
கண்டார்க்கு ஸ்ப்ர்ஹை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத உன் பக்கல் எனக்கு ஸ்நேஹமும் இல்லை –கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க –
உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இறே – அதுவும் இல்லை என்கை –அதவா
கர்ம ஜ்ஞான பக்திகள் மூன்றையும் தனித் தனியே உபாயமாகச் சொல்லுவாரும் உண்டு –
அந்த பிரகாரத்தில் சொல்லிற்றாகவுமாம் –கர்மனை வஹி சம்சித்தி மாஸ்திதா ஜனகாதய –என்றும்-சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே -என்றும்-பக்த்யாத் வனன்ய யாசக்ய -என்றும் – சொல்லக் கடவது இறே –இது இறே கர்ம ஜ்ஞான பக்திகளிலே நான் நின்ற நிலை –மற்றும் இவ் விஷயத்தில் அறிவுடையார் – நோற்ற நோன்பு இலேன் -என்றும்
கறைவைகள் பின் சென்று -என்றும்-ந தர்ம நிஷ்டோச்மி -என்றும் தம் தாம் வெறுமைகளை பேற்றுக்கு உடலாக முன்னிட்டுக் கொண்டு போரக் கடவதாய் இறே இருப்பது –

நம்பி –நான் உபயாந்தரங்களில் வெறுமையில் பூரணன் ஆனவோபாதி
தேவரீர் சீலாதி குண பரிபூர்ணன் அல்லீரோ – தேவரீர் உடைய பூர்த்தி சஹகார நிரபேஷம் அன்றோ –அறிவொன்றும் இல்லாத -அநந்தரம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றாள் இறே –கடல் வண்ணா – தேவரீர் உடைய சீலாதி குண பரி பூர்த்தி எல்லாம் வேணுமோ – வடிவு அழகே அமையாதோ என் பேற்றுக்கு –-ஒரு கடலோடு ஸ்ப்ர்தை பண்ணி ஒரு கடல் சாய்ந்தால் போலே இறே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறது –ஐயப் பாடு அறுத்துத் தோன்றும் அழகன் – இவ் வடிவு அழகு இறே இவர் பற்றாசாகச் சொல்லிப் போந்தது –

———–

கறைவைகள் -திருப்பாவை -28 -த்வய பூர்வ வாக்யார்த்தம் –-அகலகில்லேன் -திருவாய்மொழி -6-10-10–த்வய பூர்வ வாக்யார்த்தம்-சிற்றம் -திருப்பாவை -த்வய உத்தர வாக்யார்த்தம் – ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி –த்வய உத்தர வாக்யார்த்தம் -மேம்பொருள் -திருமாலை -38-த்வ்யார்த்தம் –

மேம்பொருள் -திருமாலை -38-மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலேஇப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது –த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான்
என் என்னில்-வ்யுத்பத்தி வேளையிலே-பிராப்யம் முன்னாகவும்-பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இறே-ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இறே வ்யுத்பத்தி வேளை இருப்பது –அனுஷ்டான வேளையிலே ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இறே ஸ்வர்க்க சித்தி பிராபக நிஷ்டையால் இறே பிராப்யம் சித்திக்கும்-அப்படியே இப் பாட்டிலே வுயுத்பத்தி வேளையாய் த்வயத்தில் அனுஷ்டான வேளையாய்
இருக்கிறது –அதில் பூர்வ பாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் –
உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள்-அவ் விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து

மேம்பொருள் போக விட்டு -என்றும் ஐம்புலன் அகத்தடக்கி -என்றும் நமஸ் சப்தார்த்தம் சொல்லப் பட்டது-மெய்ம்மையை மிக உணர்ந்து -என்கிற இது –
நாராயண பதத்தில் –நார -சப்தார்த்தம் சொல்லிற்றாய் அந்த சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தியை ஒழிய ஸ்திதி இல்லாமையாலே சேஷித்வம் ஆர்த்தமாய் சொல்லிற்றாய்
ஆக –நாராயண -சப்தார்த்தம் சொல்லிற்றாய் -ஆய்த்து-உணர்ந்து -என்று கொண்டு
ஜ்ஞாத்ருவ பரமாகச் சொல்லுகையாலே பிரணவார்த்தம் சொல்லிற்றாயிற்று-இப்பாட்டில் குறையும் பூர்வார்த்தத்தில் சொல்லுகிற பிராபகத்தைச் சொல்லுகிறது –உன் கடைத் தலை இருந்து –உன் தலைக்கடை -என்றபடி – சரணவ் -என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –காம்பற தலை சிரைத்து -என்ற இடம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமான உபாயாந்தர பரித்யாகத்தை சொல்லுகிறது –சூழ் புனல் அரங்கத்தானே –உன் கடைத்தலை -என்று நாராயண சப்தார்த்தமான சீலாதிகளை நினைக்கிறது –பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும் நாராயண சப்தத்தில் அந்தர்பூதை யாகையாலும்
உன் -என்கிற இதிலே –லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயம் –கடைத்தலை -என்றது
சரணவ்  -என்றபடி –இருந்து வாழும் -என்ற கிரியா பதத்தில் உபாயத்வ அத்யாவச்யதையும்
அது தான் போக ரூபமாயும் இருக்கிற படியும் சொல்லிற்று –சோம்பரை –
என்றது –பிரபத்யே -என்கிற உத்தமனால் ஆஷிப்தனான அதிகாரியைச் சொல்லிற்று –

—————–

வங்கக் கடல் கடைந்த மாதவனை -திருப்பாவை -30
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –

வங்கக் கடல் கடைந்த-தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதை பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே
இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஒல்லை நானும் கடைவன் என்று (பெருமாள் திருமொழி )-விண்ணவர் அமுதுண்ண என்று ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து
அபேக்ஷித சம்விதானம் பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன் அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ-பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று
ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )

மாதவனை –ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் –
அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது -பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக – -என்கிறது –பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து
அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –
கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

———-

மாதவனை திருமாலால் -திருப்பாவை -30-
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீ ய பதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை  இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி

செல்வத் திருமாலால் –உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –-இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி முடிவிலும் சொல்லுகையாலே த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை-திருமால் –செல்வம்-திருவுக்கும் திருவாகிய –செல்வு -செல்வச் சிறுமியரைப் பெற்ற பின்பு சிறந்தது-இங்கு உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது-ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம்
வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –(மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்-செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே)செல்வத் திருமாலால் உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே-இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்–புருஷகார யோகம் என்ன கைங்கர்ய வர்த்தகம் என்ன இரண்டு ஆகாரத்தையும் யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டனானவனுடைய மாதவன் என்கிற திரு நாமத்தை
பூர்வ கண்ட மர்யாதையாலே உபாயத்வேன ஆஸ்ரயணீயன் என்றும்
உத்தர கண்ட மர்யாதையாலே உபேயாத்வேன புருஷார்ய பூதன் என்றும் அனுசந்தித்து
உச்சரிக்கைக்கு -கிடையாதது கிடைத்தது -என்ற பேர் ஆதாரத்துடன் சொல்ல வல்லி கோளாகில்-மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி –
ஆச்சார்யா ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10
முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது-பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-முமுஷுப்படி -சூர்ணிகை -122-ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று –

————-

தண் தெரியல் -திருப்பாவை -30
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் -அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பைங்கமலத் தண் தெரியல் –பிராமணருக்கு தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –பசுத்த கமலத்தினுடைய குளிர்ந்த மாலை – தண்ணம் துழாய் அழல் போல் (திருவிருத்தம் -3 )-என்று வட பெரும் கோயில் யுடையானுடைய மாலை போலே கொதித்துக் கிடவாதே
பெரியாழ்வார் கழுத்தில் மாலை –பிரித்தவன் மாலை போல் அன்றே சேர்ப்பார் மாலை –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் -பொருள் பத -பிரயோகங்களும் -அவற்றின் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்

December 28, 2024
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு - 

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லான் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 –

பொருள் தாயம் இத்யாதி – என்னுடைய நாதனானவனே- இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –
--------–
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்- முன்பு இவன் கையில் கண்டவை அடைய -அட்டைகள் போல் சுவைப்பர் -என்கிறபடியே இவன் கையில் உள்ளவை நிச் சேஷமாக வாங்கிக் கொள்ளுவார்கள் – இவர்களைக் காணாமல் வைத்தது உண்டாகில்
------------
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய் -

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்--11-

எற்றுக்குறங்கும் பொருள்-எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு
கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்

எற்றுக்குறங்கும் பொருள்-
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
உள்ளு கூடு பூரித்த தில்லை யாகில் எங்கள் ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
ஆர்த்த த்வனி கேட்டால் கண் உறங்குமோ –
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகிற இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இருக்கும் படி அழகிதாய் இருந்தது –
அவனைத் தனியே அனுபவிக்கை கைவல்ய மோஷத்தோடே ஒக்கும் அத்தனை –
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்று இருக்க வேண்டாவோ –

(கேவலம் -ஓன்று மட்டும் -பாகவதர் இல்லாமல் பகவானையே அனுபவித்தாலும் கைவல்யம் போல் ஆகுமே )

எற்றுக்கு உறங்கும் பொருள்
உன்னுடைய உத்தேச்யத்தை பாராதே –
எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே –
கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
ஏதுக்காகக் கிடக்கிறாய் –

எற்றுக்கு உறங்கும் பொருள் –
அவனை உகப்பிக்கப் பார்த்தாய் ஆகில் அவன் உடையாரையும் உகப்பிக்க வேணும் காண்
ஸ்வ பிரயோஜனமாக கைங்கர்யத்தில் காட்டிலும் ஒரு வாசி கண்டிலோமே உனக்கு

1-உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேணும்
2-அவனைப் பிரிந்த அன்று -வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கைக்கு நாங்கள் வேணும்
3-நீயும் அவனும் அனுபவியா நின்றால்–எடுத்துக் கை நீட்ட நாங்கள் வேணும் –

ஆன பின்பு எங்களை ஒழிய உனக்கு விரகு உண்டோ –

எற்றுக் குறங்கும் பொருள் –
உறங்கும் பொருள் எற்றுக்கு-
உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது –
எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா-சொல்லாய் -என்கிறார்கள் –

இப்பாட்டில்
ஜாதி உசிதமான தர்மத்தை-
சாதனா புத்தி அன்றிக்கே-
கைங்கர்ய புத்யா -அனுஷ்டித்தால்-குற்றம் இல்லை என்கிறது
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
கைவல்ய மோக்ஷம் போலே தனி கிடக்கிற கார்யம் அன்றே -என்று –
(அந்தமில் பேர் இன்பத்து அடியவரோடு இருந்தமை வேண்டாவோ )

எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்–
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் செய்வதோ இது
இவ்வளவும் வந்தார்க்கு தனித்து பகவத் அனுபவம் பண்ணுவது குடிப் பழி

எனக்கு இங்கே கூடு பூரித்து இருந்ததோ என்ன

இல்லை யாகில் எங்கள் பாடு புறப்படாதே
கைவல்ய மோக்ஷம் போலே தனிக் கிடக்கிற கார்யம் என் -என்கிறார்கள் என்றுமாம் –

புனமயிலே! முகில் வண்ணன் பேர்பாட, நீ எற்றுக்குறங்கும் பொருள் என இயைத்து,
மயில் முகிலின் பேரைக் கேட்டவுடனே களித்துக் கூத்தாட வேண்டியிருக்க,
நீ இங்ஙனே கிடந்துறங்குவது என்றிய? என க்ஷேபிக்கின்றனரெனக் கருத்துக் கூறுக.

---------
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

போற்றும் பொருள்
போற்றுகிற பிரயோஜனம் –
இவர்கள் போற்றும் பொருள் என்று பாரித்துக் கொண்டு
சொல்லத் தொடங்கினவாறே-கேளாய்--இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் –இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று- உனக்கு க்ரமத்திலே இவர்கள் கார்யம் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –த்வரிக்க வேணும் காண் என்கிறார்கள் –ஆற்றாமையும் ஸ்வரூபம் ஆகையாலே அடைவு கெட மேலே விழுந்த படி –
---------
கலை கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா

தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16-

சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
அபிதாந வ்ர்த்தியாலும் தாத்பர்ய வ்ர்த்தியாலும் ஒரோ அவதாரத்தை நெஞ்சாலும்
பரிச்சேதிக்க மாட்டாமையாலே

-----------
மேம் பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே

மேம்பொருள் –
இதுக்கு மூன்று படி நிர்வாஹம் –
1-மேல் எழுந்த பொருள் என்றும்
2-மேவின பொருள் என்றும்
3-மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்றும்

மேல் எழுகையாவது –
கர்மம் அடியாக வந்தேறி யாய் –
பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –

இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும்
ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி
நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –

மேவின பொருள் -என்றது –
துரத்யயா -என்கிறபடி
சேதனனால் பிரிக்க ஒண்ணாத படியாய் இருக்கை –
தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று
உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இறே
இத்தோட்டை பொருத்தம் இருப்பது –
அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –

மேம்பாட்டை விளைக்கை யாவது -மெய்ப்பாட்டை –
தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –

பொருள் -என்று பதார்த்தம் –
அதாகிறது -தேஹம் –
இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-

---------

நம்பினேன் பிறர் நல் பொருள் தன்னையும்

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை-விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவனை
பொருள் -என்று த்ரவ்யம்--நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை-விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இறே ரத்னம் களவு காண்பது--இருப்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இறே பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது-ஆழ்வார் அளவும் வந்த வன்று இறே இது அனந்யார்ஹம் ஆய்த்தாவது
நன் பொருள்-விலஷண த்ரவ்யம்--என் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள்-என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்-நன்மையாவது -பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் –மேவிய பொருள் -என்றும் சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும் அது போலே அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும் பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில் ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இறே அவன்

இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இறே
நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று
ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வத்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் –
போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்
பிறர் நன் பொருள்-உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்
இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்
அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்
அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ
அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌஸ்துபத்தை அன்றோ நான் களவு கண்டது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்
ஸ்வம்மும் -விலஷணமாய் -ஸ்வாமி யும் விலஷணமுமாய் இருக்க வன்றோ நான் இவ்வாத்மவஸ்துவை அபஹரித்தது
இவ்வாத்ம அபஹாரம் ஸ்வ தந்த்ரனுக்கும் தேஹாத்மா அபிமாநிக்கும் உண்டாமதாகையாலே இத்தால் தேஹாத்மா அபிமானம் சொல்லிற்று
அப்போது நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் என்று தேஹ ரஷண சேஷமாக-பர த்ரவ்யேஷ் வபித்யானம் -என்கிறபடியே-அந்ய த்ரவ்யங்களையும் ஆசைப்பட்டுப் போந்தேன் என்றுமாம்-அங்கு நன் பொருள் என்றது அவர்கள் நினைவாலே சொல்லுகிறது
பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-அவ்விடம் தன்னிலும் மேல் எழுந் த்ரவ்யங்களை யாசைப்பட்ட வளவன்றிக்கே அவர்கள் சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும் மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது
-----------

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-

அவ்வரு மறையின் பொருளை அருளினான் –
நித்ய சத்வஸ்தர்க்கு அல்லது தோன்றாத உபநிஷத் அர்த்தத்தையும் அருளிச் செய்தார் –பரம சாத்விகர்க்கு நித்தியமான ஐஸ்வர்யமும் -உபநிஷத் ரஹஸ்யமே இறே-
சா ஹி ஸ்ரீ ரம்ருதா சதாம் -என்னக் கடவது இறே -அதாவது சர்வ ரச என்றும் ரசோ வை ச -என்றும்-சொல்லுகிற விஷயத்தை தத் ப்ரசாதத்தாலே லபிக்கை
ஏஷ ஹ்யேவா நந்தயாதி – என்றும் -தத்ஹேது வ்யபதேசாச்ச -ப்ரஹ்ம ஸூத்ரம்-1-1-15–என்றும் சொல்லக் கடவது இறே
பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு அருளிச் செய்தானே )
ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் / விருத்திக்காரர் -கீதாச்சார்யன் / ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே )இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது
அப்பொருளை-
கருணை சாதனம் -கைங்கர்யம் புருஷார்த்தம் என்கிற அப்பொருளை-வழுவிலா வடிமை செய்ய வேண்டும் -எனபது -அடியை யடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்பதே இவற்றை உபதேசிக்ககை--தாம் வாக்ய உச்சாரணம் பண்ண மாட்டாமையாலே பொருளை அருளினார்--விருப்பம் உள்ளாருக்கு வேதம் சொல்லும் -ஆழ்வார் சொல்லி விருப்பம் உண்டாக்குவார்-

----------

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடைந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம்
–7–

சொல் பொருள் ஆளீர் –
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் நிலவரான நீங்கள்
சொல்லுடைமைக்கு உங்களில் காட்டில் இல்லை
ப்ரமேய ஜ்ஞானம் உடையார் உங்கள் அத்தனை இல்லை-
நல் பொருள் காண்மின் –
நன்றான அர்த்தத்தை கண்டு கொள்ளுங்கோள்
பேறும் தானேயாய் -தன்னைத் தருவதும் தானேயாய் இருக்கை
வாசகங்களில் தலை அகாரம்-
வாஸ்யங்களில் தலை கீழ் நான் சொன்னது-சூழ் புனல் குடந்தை என்று -இதுவே நல் பொருள்-
-------------

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4-

பிறர் பொருள் தாரம்-பிறர் தாரம் பிறர் பொருள்-விஷயாந்தரங்களிலே ப்ருஹையைப் பண்ணுமே – அவற்றில் வந்தால் வம்புலாம் கூந்தலாகவும் வேண்டாம் ஆயிற்று
பிறர் தாம் இத்தனையே ஆயிற்று ஆதரிக்கைக்கு வேண்டுவது –
----------

கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-5-

சொல்-பதங்களை நிர்வஹித்துக் கொடுக்கக் கடவ வ்யாகரணமும்
பொருளும்-அர்த்த விசாரம் பண்ணக் கடவ மீமாம்சையும்
----------

சொல்லு வன் சொற் பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றம் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே-2-9-1-

சொல்லு –
பிரத்யஷ்யாதிகளுக்கு அவிஷயமாய்-அர்த்தத்தையும் சொல்லக் கடவதான-சப்தம் –
வன் சொல் –இது தன்னிலும் நித்தியமான வேதம் –
பொருள் –துரவகாஹமான வேதார்த்தம் –
தானவையாய் –-அவற்றுக்கு நிர்வாஹகனாய்-(அனுபவிப்பவர்களுக்கும் அனுபவிக்கும் பொருள்களுக்கும் இவனே நிர்வாஹகன் )
--------------

மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-

பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம்-
பரந்து நாலுவகைப்பட்ட வேதத்தில் அவ்வோ இடங்கள் தோறும் சொல்லப்பட்ட பதார்த்தங்கள் அடங்க-தனக்கு சரீரதயா பிரகாரமாய் தான் ஒருவனே பிரகாரியாய் இருக்கையாலே சர்வ ஸ்மாத் பரனானவன்-வேதைச சர்வைஸ் ரஹமேவ வேத்யே-என்றான் இறே
-------------
ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–3-5-9-

ஒரு பொருள் –
உன்னை பெறுகைக்கு சாதனம் இதுவே என்று ஓர் அர்த்தத்தைச் சொல்ல வேணும்
---------

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-

உடனே உண்பன் நான் என்று –-இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே-சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –
சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே

அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா
)

ஒண் பொருள் –சீரிய அர்த்தம்
---------------
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-

பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் –
(இறுத்தேன் -கொடுத்தேன்-உறவுக்காரர்களுக்கு கொடுத்ததும்-இந்திரியங்களுக்கு கொடுத்ததும் )
சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால்அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே –பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே
ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற இரண்டையும் கடமை இறுப்பாரைப் போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்
------------
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது-என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே-ஒரு சாந்தீபனோடே-தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு-திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
----------
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

ஒண் பொருள் –
இது சத்தையை உண்டாக்கும் அர்த்தம் –
தான் மரிக்கும் இறே அர்த்த நிமித்தமாக-(லௌகிக பொருள் )
புருஷார்த்த உபயோகியான அர்த்தமுமாய் –

--------------------------
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39-

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
வேதார்த்தின் முடிவும் இதுவே-பொருள் முடிவும் –பிரயோஜனத்தின் எல்லை –-அது ஏது என்னில்-உத்தமன் பேர் ஏத்தும் திறம் –எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய-ஒருக்கால் தனக்கும் பாங்கான போது அவனை அனுசந்திக்கப் -பின்பு இவன் கலங்கின சமயத்திலும் அவன் தானே தெளிந்து இருந்து இவனை அவ்வருக படுத்த வல்லவன்-திரு நாமத்தை யேத்துகை-மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –-ஒத்தினுடைய சங்கரஹம்-லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-இவன் பக்கலிலே ஒரு கால் ஸ்ம்ருதி மாதரம் யுண்டாக-பின்னையும் இவனுக்கு ஸ்மரிக்க ஒண்ணாத தசையிலும் –-அஹம் ஸ்மராமி -என்கிறபடியே
உணர்ந்து இருந்து நோக்க வல்லவன் திரு நாமத்தைச் சொல்லுமதுவே –
--------------
சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்
—-40–

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் –சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அறிந்து இருக்கச் செய்தே அறிந்ததாக ஒட்டாத போகத்தால்-அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-பொல்லாது என்று இருக்கச் செய்தே கை விடப் போகாத அர்த்த சுகத்தால் பிரயோஜனம் இல்லை என்றுமாம்
நினைமின் என்கிற இது-இரண்டு இடத்திலும் கிடக்கிறது-நெருக்கா முன் நினைமின்
திருப்பொலிந்த ஆகம் நினைமின்)-விஷய போகத்தைக் கை விட்டுத் திருப்பொலிந்த ஆகத்தான் பாதத்தை சரண் அடையுங்கோள் என்கிறார் -
அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள்-
பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை –
ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்களால் வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை-மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே-ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே-பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே
வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும்
பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்
---------
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும்
பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58–

வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த வருள்
இனிய விது வேம்பு போலே கையா நின்றதே ஆகிலும்-பாடு என்று அருளி அல்லது நிற்கப் போகாதே-அவனுடைய நீர்மையாலே தந்த அருள் –
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -
வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
கையும் திரு ஆழியுமான சேர்த்தி இருந்தபடி கண்டாயே-இது வேம்பாகிற பதார்த்தத்தின் யுடைய ஸ்வ பாவத்தை யுடைத்தே யாகிலும் இத்தைப் பாடு என்று –
இனிது என்று இருந்தில்லை யாகிலும் இத்தைச் செய்யப் பார் –
----------
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக் கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டான படியை அருளிச் செய்தார் ஆயிற்று
----------
ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

ஒண் குருதி அழகிய ரத்தத்தாலே–கண்ட பொருள்-அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை-சொல்லில்–சொல்லத் தொடங்கினால்-கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.
இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத் தந்து -இத்தைக் கொடு போய்
நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு கொடுத்து வாரும் -என்று போக விட –
அப்போது இப்பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய –அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும் தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –இது இறே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் –-சாபத்தைப் போக்கினவனோ –
தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ பார்த்துக் கொள்ளும் அத்தனை –
---------------
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே
எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

ஒரும் பொருள் முடிவும் இத்தனையே-ஸ்ருதி ஸ்ம்ருதிகள் எங்கும் ஆராயும் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இவ்வளவே –இத்தகையன் என்று யாரால் சொல்ல முடியும்
தனக்கும் தன் தன்மை அறியான்
யதோ வாசோ –நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
எத்தனையேலும் ஞான அதிசரராக இருந்தாலும் அவனது பெருமையை பரிச்சேதிக்க வல்லார்கள் அன்றே-ஆராயப் புக்கால் அர்த்தத்தின் உடைய நிர்ணயமும் இதுவே –
ஏழு ஏழு படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-
-----------
கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன –சகல சப்தங்களின் யுடைய அர்த்தங்களும் அவன் சங்கல்பத்தாலே உண்டாய்த்தின –
லோகத்தில் சொல்லப் படுகிற பதார்த்தங்கள் -என்றுமாம் –பகவத் குண சேஷ்டிதங்களைப் பரக்கச் சொல்லுகிற இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகள்
அதனால் பிரதிபாதிக்கும் தேவாதி ஆத்ம வஸ்துக்கள் – ஸமஸ்த சேதனர்கள்
சர்வ காலத்திலும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் திவ்ய சங்கல்பத்தால் தானே ஒரு வினாடி கூட மிச்சம் இல்லாமல் சத்தை பெற்று வர்த்திக்கின்றன-
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ-ஒரு நொடி மாத்ரம் போது போக்கு இன்றி--ஆச்சர்ய குணத்தில் (ஸத் குணத்தில் ) அகப்படாதது-பர ஹிம்சை விட்டு அவனை ஆஸ்ரயிங்கோள்-அவனுடைய குண விஷயம் அல்லாதன நிஷித்தங்கள்--சேதனர் பர ஹிம்சை பண்ணுகிற இதுக்கு ஹேது-அவனுடைய குண அனுசந்தானத்தைப் பண்ணாமை -என்றுமாம் -ஆன பின்பு -கல்யாண குணகனானவன் திருவடிகளை அழகிதாக அனுசந்தியுங்கோள் -என்கிறார் –உதைப்பளவு – க்ஷணம் பொழுதில்-வதைப்பொருள் -நசித்துப் போகும் வஸ்துக்கள்-
-----------------
காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8-

சென்று பொருள் –நீயே பொருள் என்று இருந்த படி கண்டோம் –(இப்பொழுது என்னை விட்டுப் பொருள் தேடிப் போகிறாயே )
திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல-கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை-யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள-நிஷேதிக்க முடியாத விஷயம்-எழுந்து அருள ஆகாலாதோ
திரு நாள் அணித்தாய் இருந்தது-நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்றுஇப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்
--------
நளிர் மதி சடையனும் நான் முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-

ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும் அகப் படக்-ஒரு பதார்த்தமும் பிரி கதிர் படாத படி எல்லாவற்றையும்
-----------------
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில் அதுவோர் பொருள் இல்லை
கண் கண்டது ஒழியப் போகை அரிது-இது பொல்லாது என்று -பரம பதம் வேணும் என்று இருக்கில்-அவன் உகப்பதாகையாலே அது தருகையில் அவனுக்குப் பொருள் இல்லை
--------
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார்
அறம் பொருள் இன்பம் என்று –கீழே புருஷார்த்தத்தை மூன்று என்று சொல்லச் செய்தே இங்கு எடுத்ததுக்கு பிரயோஜனம் என் என்னில் மோஷம் இதின் உள்ளே ஓன்று என்று சொல்லுவார் உண்டாகிலும் என்று அவர்களுக்கு இடமறச் சொல்லுகிறாள் –
---------------
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10
மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே நான்கினிலும் –11

மன்னு மறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நன்னெறி மேம்பட்டன நான்கு என்றே
தர்மார்த்த காம மோஷங்கள் என்று லோகத்திலே நன்றான வழியாலே மேற்பட்ட நாலு புருஷார்த்தத்தோடே அடங்கப் பெற்றோம் இறே –
முந்துற முன்னம் –அறம் என்கிறது தர்மத்தை –மன்னு மறம்-என்கிறது சாத்திய ரூபத்தாலும் சாதனா ரூபத்தாலும் ஒக்க கொண்டு நிற்பதொரு நிலை உண்டு இறே
பொருள் என்கிறது -அர்த்த புருஷார்த்தத்தை
இன்பம் என்கிறது -தாம் ஆதரித்த காம புருஷார்த்தத்தை
வீடு என்கிறது நாலாவதாகச் சொல்லுகிற மோஷ புருஷார்த்தத்தை –
---------------

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி –
அவஸ்துவான என்னை லோகத்திலே-ஒரு வஸ்துவாம் படி பண்ணி –
வஸ்து உபாதேயம்-ஆளவந்தார் துளி கடாக்ஷம் பெற்று-
என்னை
பூர்வ காலத்திலே அசத்தாக -பொருள் அல்லாத என்னை-
புவியில்-
இருள் தரும் மா ஞாலத்தில்
ஒரு பொருளாக்கி –
ஒரு வஸ்துவாகும் படி பண்ணி -ப்ரஹ்ம வித்துக்களிலே அத்வதீயனாக பண்ணி-
பகவத் விஷயத்துக்கும் -கூட ஆள் ஆகாதபடி உலகியல் இன்பத்திலே உழன்ற படியால்
பெரியோர்களால் ஒரு பொருளாக மதிக்கத் தகாத என்னைக் கூட எங்கனம் பொருள் ஆக்கினாரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் –
வடுக நம்பியைப் போலே தம்மையும் பொருளாக்கி ஆள் கொள்ள வேணும் என்று பிரார்த்திப்பது காண்க –
அமுதனாரோ மேலோர்க்கும் வாய்த்தற்கு அரிதான நிலையை எய்தினவர் ஆதலின்-ஒப்பற்ற பொருள் ஆனார் –
ஒரு பொருள்-
ஒப்பற்ற பொருள்
சீரிய பேறு உடையாரான ஆழ்வான் திருவடிக் கீழ் சேர்த்து எம்பெருமானார்
பொருளாக்கினமையின் அமுதனார் ஒப்பு இல்லாத பொருள் ஆனார் -என்க-
கூரத் ஆழ்வான் சரண் கூடி –இராமானுசன் புகழ் பாடி -ஆள் செய்வதாக-மொழியைக் கடக்கும் –என்னும் பாசுரத்தில் அமுதனார் அருளி செய்வது இங்குக் கருத தக்கது –
இவ் ஒப்பற்ற நிலையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்ரம் அன்று –உலகு எங்கும் -என்பார் புவியில் -என்கிறார் –இனி இருள் தரும் மா ஞாலத்திலே என்னவுமாம் –
----------

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

ஸ்ரீ பூர்வாசார்யர்கள் எல்லாரும் –வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட –அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை-வைப்பாய வான் பொருள் என்று
சேமித்த மகா தனம் என்று -நிஷேபித்து வைத்த-பரம தனம் என்று –
விஷ்ணுஸ் சேஷி ததீய சுப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரிஸ் ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பதே கமல யுகம் பாதிரம் யம் ததீயம் -என்று
சொல்லப்படுகிற பத கமலத்தை –தனம் மதீயம் -என்று அருளிச் செய்கையாலே –
அப்படி பட்ட ஸ்ரீ எம்பெருமானாரை பரம தனமாக நிரூபித்து என்றபடி –
குருரேவ பரம்தனம் -என்னக் கடவது இறே –
இப்படி யாவதாத்ம பாவி உஜ்ஜீவன ஹேதுவான பரம தனம்-என்று அத்யவசித்து இருக்கிற
எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக் காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4- என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்-ஸ்ரீ மது சூதனையே ஸ்ரீ ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே – நல்லன்பர் ஸ்ரீ எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர்
வைப்பாய பொருள் –பயன் பட பயன் பட -குறைந்து கொண்டே போம் –
ஸ்ரீ எம்பெருமானாராகிய வைப்பு பொருளோ -அங்கன் குறைவுறாது – என்பார் -வான் பொருள்-என்றார் –வான்பொருள் என்று –வான் என்று விபு வாசகமாய் –குரு ரேவா பரம் பிரம்ம -என்று சொல்லப்பட்ட மகா தனம்
----------

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

ஆரணச் சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –
சமுத்திர மத்யத்திலே -மறைந்து கிடக்கிற -தரைப்பட்டு கிடக்கிற-மகா ரத்னங்களை எடுத்துக் கொண்டு வந்து உபகரிப்பாரைப் போலே -கடல் போல் கம்பீரமாய் இருந்துள்ள வேதாந்த வாக்யங்களிலே –
தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மானச்ய விஜானதா -என்னும் படியாக –
ரகஸ்ய தமமாய் -விலஷண அர்த்தங்களை அடைவே கடாஷித்து –கீதா சாஸ்திர முகேன உபதேசித்து-ரஷித்து அருள –குக்ய தமமாக பிரதிபாதிக்கப்படுகிற-விலஷண அர்த்தங்களை எல்லாம் -கண்டு திரட்டி –
மன்மனாபவ மத பாகத்த -என்றும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
இரண்டு ஸ்லோகத்தாலே சகல சேதனருடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக
-அர்ஜுன வயாஜேன பிரபத்தி-உபதேசம் பண்ணியும்-லோகத்தை எல்லாம் ரஷிக்க என்னவுமாம்
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
எம்பெருமானாரும் அந்த ச்லாக்கியமான கீதா சாஸ்தரத்துக்கு வியாக்யானம் பண்ணி யருளி அத்தைக் கொண்டு –
அன்றிக்கே –
திருக் கோட்டியூர் நம்பியை பதினெட்டு தரம் அனுவர்த்தித்து பரம குக்யம் என்று அவரால் உபதேசிக்கப் பெற்ற-
சரம ஸ்லோக அர்த்தத்தை கொண்டு –தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் –
அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –
------------

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

பொருளும் –
அதுக்கு அங்கமாவது ஆதல் –பரம்பரையா சாதனமாகவாதல் -சாதனா அனுஷ்டானத்து உடலாதல் –-விதிக்கப்படுகிற ந்யாயார்ஜித தனமும் –பொருளும் தர்மமும்-அவ்வீட்டிற்கு சாதனமாய் உள்ளன பொருளும் தருமமும் –-பொருள் தருமத்திற்கு பயன்பட்டு சாதனம் ஆகும்-தருமம் நேரே சாதனம் ஆகும்-நியாயமான முறையிலே பாகவத ஆராதனா ரூபமான தருமத்துக்கு தேடப்படும் பொருள் புருஷார்த்தம் ஆகும்
தர்ம அர்த்த காமங்கள் மூன்றும் ப்ராக்ருதங்களுமாய்-ஸ்வரூப அந அநு ரூபங்களாயுமாய்-இஸ் சரீரத்தோடு அனுபவிக்கபடுமவையாய் இருக்கும்
பொருள் –தாச்யத்துக்கு உபயுக்தமாய் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றுக்கு சாதனமாய் இருக்கிற அர்த்தம் –
அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் –
தர்ம அர்த்த மோஷங்கள் கூடல் இன்பமான காமத்திற்கு உறுப்பாய் பயன்படுவன என்பது ஸ்வாமியின்-உபதேசம் –
தர்மம் பகவத் சம்ச்லேஷ ரூபமான காமத்துக்கு தடங்கலான பாபம் தொலைவதற்கு உபயோகப்படும் –
பொருள் தானம் முதலியவற்றால் அதற்கு உபகரிப்பதாகும் வீடு -அதனை மேலும் மேலும் தொடர்ந்து துய்ப்பதற்கு-ஹேதுவாகும் –
----------

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

இனி நாம் பழுதே அகலும் பொருள் என் –
இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் –
நாம் என்றது
தம்மையும் ஸ்ரீ எம்பெருமானாரையும் –
அன்றிக்கே –
நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே –
ஸ்ரீ எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் –
---
பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

வேதப் பொருள் இது என்று உன்னி –
வேதாந்தங்களினுடைய தாத்பர்ய அர்த்தம் இதுவே என்று நிரூபித்து-இது வேதப் பொருள் என்று தாம் கொண்ட கொள்கையை அவர்கள் வேதப் பொருள்களாக ஆக்குகின்றனர்-வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –-தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –
செம்மைப் பொருளை அவர்கள் உன்ன வில்லை .-தாங்கள் கற்பித்த பொருளை வேதப் பொருளாக உன்னுகின்றனர்-உண்மைப் பொருளாகிய கயிற்றில் பொய்ப் பொருளாகிய பாம்பு தோற்றுவது போலே – உண்மைப் பொருள் ஆகிய -சத் -எனப்படும் ப்ரஹ்மத்தின் இடத்தில் பொய்ப் பொருளாகிய உலகம் தோற்றுகிறது -கயிற்றினில் பாம்பின் தோற்றம் அச் சொல் தொடரினால் நீக்கப் படுகிறது
ப்ரஹ்மத்தில் உலகின் தோற்றம் இச் சுருதி வாக்கியத்தால் நீக்கப் படுகிறது –
----------
ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

செம்மை –செவ்வை -ஆர்ஜவம் –-ஆதி மத்திய அவசானங்களிலே-கரூபத சங்கர ஸ்ரீ தர ஆனந்த தீர்த்தாதிகள் போலே தத்தவத்தை உபதேசிக்க வேணும் என்று உபக்ரமித்து – நடுவே தம்முடைய குதர்ஷ்டி பஷத்துக்கு அனுரூபமாக சில அர்த்தங்களை கலந்து -பூர்வோத்தர விருத்தமாக சொல்லுகை அன்றிக்கே –
யதாவச்தித்தார்த்த வபோதகமாய்–உபநிஷத்துகளோடு ஏக வாக்ய தாபன்நமான-பொருள் –ஸ்ரீ கீதா பாஷ்யத்தை –
ஸ்ரீ கண்ணன் தேரினில் அர்ஜுனன் ஒருவனை நோக்கிச் சொன்னான் ஸ்ரீ கீதையை –
ஸ்ரீ எம்பெருமானாரோ-அதன் செம்மைப் பொருளைப் பாரினில் அனைவரையும் நோக்கி அருளிச் செய்தார் –ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ கீதை செப்பினானே யன்றி -கேட்ட அர்ஜுனன் தெரிந்து கொள்ளும்படி செப்பிலன் .வ்யாமிச்ரேணை வவாக்யே ந புத்திம் மோஹயஸீவமே –என்று கலந்து கட்டியான வாக்யத்தினாலே என் புத்தியை மயக்குகிறாய் போல் இருக்கிறது -என்று கேட்கும் அர்ஜுனனே கூறுவது காண்க –ஸ்ரீ எம்பெருமானாரோ அனைவரும் தெரிந்து கொள்ளும்படி ஸ்ரீ கீதையின் செம்மைப் பொருளைச் சொன்னார் .
---------
மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

அவப் பொருளாம் இருள் சுரந்து –ஜடாகலாப பச்ம ருத்ராஷ லிங்க தாரணம் தொடக்கமான-நிஷித்தார்த்தங்கள் ஆகிற அந்தகாரமானது வியாபித்து —
அவப் பொருள் -பொல்லாத பொருள் –
ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்ற பாடமான போது –
ருத்ர ஹரத்ர்யம் பக ஸ்த்தாணு விருபாஷாதி-சப்தங்களாலே நிஷித்த தர்ம ப்ரவர்த்தனான ருத்ரனுடைய வ்யாப்யத்வத்தை தெரிய மாட்டாதே வேதத்தில் –
ச ப்ரஹ்மா ச சிவா -இத்யாதிகளாலே -அவனே அவனும் அவனும் அவனும் – சாமானாதி கரண்யேன--உக்த வாக்யங்களினுடைய தாத்பர்யத்தையும் -உபக்ரமோபா சம்ஹாரத்தையும் பராமர்சியாதே – ப்ரசம சாபரங்களாயும்-அப்ரசித்தார்த்தங்களாயும் இருந்துள்ள-சூத சம்ஹிதாதிகளுக்கு அனுகூலமாக – அதுக்கு சொன்ன அவப் பொருளாகிற அந்த காரத்தை என்னவுமாம்
அன்றிக்கே –கூறும் அறைப் பொருள் என்று பதச் சேதமாய் –-அவர்கள் சொல்லுகிற காதுகமான அர்த்தவத்தை -என்க--காதுகம் என்கிறது ஆத்மா நாசகம் ஆகையாலே –அங்கனும் அன்றிக்கே-அறை என்று த்வநியாய் –கடலோசை யோபாதியான பொருள் என்னவுமாம் –அவப்பொருள் –பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும்-கீழ்ப் பொருளைப் பரம் பொருளாக்கியும்-உலகினுக்கு உபாதான காரணமாக பிரகிருதி தத்த்வத்தையும் நிமித்த காரணமாக மட்டும் பரம் பொருளையும் சொல்லுவது –வேதப் பொருள் ஆகாமையின்-அவப் பொருளாம் –
ஸ்ரீ நாராயணனே முதல் பெரும் கடவுள்-பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உள்ளானவர்களே -என்பதும் –உலகமாக அப் பெரும் கடவுளே மாறுதலின் -உலகினுக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் அவனே என்பதும்
வேத நூல் ஓதும் உண்மைப் பொருள் என்று அறிக –

எல்லா உயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் –
பதிம் விச்வச்ய -உதாம்ர்தத் வச்யேசான -லோக நாதம் புராபூத்வா –முழு ஏழு உலகுக்கும் நாதன் –என்றும்-சொல்லுகிறபடி-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி -நமக்கு எட்டாத நிலத்தில் அன்றிக்கே –-நாம் இருந்த ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் -என்கிற விசேஷ அர்த்தத்தை-லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி உபதேசித்தார் -அனைவருக்கும் தலைவன் -சேஷி ஒருவனே –
அவனே தன் சேஷித்வம் தோற்றச் சேஷ தற்பத்திலே ஸ்ரீ திருவரங்கத்திலே -பள்ளி கொண்டு இருக்கிறான்-என்னும்-மெய்ப் பொருளை ஸ்ரீ எம்பெருமானார் உணர்த்தி யருளினார் -என்றபடி .-தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன நற் பொருளாக மாற்றப் பட்டது -
------------
கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

கட்டப் பொருளை மறைப் பொருள் என்று
பரம் ப்ரஹ்மை வாஞ்சம் ப்ரம பரிகதம் சம்சரதி-தத்பரோ பாத்ய லீடம் -இத்யாதி படியே-உப ப்ரஹ்மண விருத்தங்களாயும் -ஸூத்திர விருத்தங்களாயும் -ப்ரத்யஷ விருத்தங்களாயும் இருக்கையாலே-நிஹீன தர்மமான அர்த்தங்களை-வேதார்த்த அர்த்தங்கள் என்று –-கட்டம் -கட்டு –கட்டம்-கஷ்டம் என்னும் வடமொழிச் சொல் இங்கனம் ஆயிற்று –
கட்டப் பொருள் -கஷ்டமான பொருள்-செம் பொருளாய் அல்லாமல் வலிந்து உரைக்கும் பொருள் -என்றபடி –க்லிஷ்ட அர்த்தம் -என்பர் வடநூலார் –

இதுவே மறையின் கருத்தில் உள்ள பொருள் என்கின்றனர் கயவர் .
அது உலகத்தாரை மயக்கச் செய்யும் பேச்சு -என்கிறார் ஸ்ரீ அமுதனார் –
----------
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்-பரந்த பவ்திக பதார்த்தங்களும் எல்லாம் தானாம் படி அவற்றுக்கு உபாதானமாய் அவ்வோ பதார்த்தங்கள் தோறும்
இவை மிசை படர் பொருள்-இவற்றின் கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள தேவாதி பதார்த்தங்கள் என்ன-இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் –இவற்றை அடியாகக்கொண்டு மேலே விஸ்திருதமாகா நின்றுள்ள பதார்த்தங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி.‘ஆய்’ என்றது ‘ஆக்கி’ என்கிறபடி. ஆய் என்பான் என் என்னில் -பஹு ஸ்யாம் ( பொருள்களாக விரிகின்றேன்) என்கிற தனது விகாசமே யாகையாலே வைதிக நிர்த்தேசம் இருக்கிறபடி.அவை அவைதொறும்- அவ்வோ பதார்த்தங்கள் தோறும். அவற்றிலே வியாபிக்கும் இடத்திலே –பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல அன்றி -ஜாதி வியக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமா போலே(ஒவ்வொரு பொருளிலும் அவ்வச்சாதித் தன்மை நிறைந்திருத்தல் போன்று )
எல்லாப் பொருள்களிலும் தனித்தனியே குறைவு அற வியாபித்து நிற்கும்
------------
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

ஒண் பொருள்– அகமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய் ஆவிர்ப்பூத ஸ்வரூபமான விலக்ஷண ஆத்ம வர்க்கம்--ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து -நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-
-----------
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்–ஆஸ்ரித ஆபி முக்யம் பிரயோஜனம் என்று இந்த லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய-தயா ஷமா ஓவ்தார்யாதி குண ப்ரதை விஷயமாக-பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே-கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து-இவற்றை உண்டாக்கி கரண களேபரங்களை கொடுத்து விட்டால் கொடுத்த உபகரணங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களிலே
பிரவணராய் கை கழியப் புக்கால் நம் நினைவு தப்பிற்றே என்று நெகிழ்ந்து கை வாங்குகை யன்றிக்கே – ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும் பிரயோஜனப் படாதோ என்ற பலகாலும் உண்டாக்கா நிற்கும்-
-------------
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

மன்னா மனிசரைப் பாடிப்-படைக்கும் பெரும்பொருள்! –என்னாவது,– எத்தனை நாளைக்குப் போதும், –நீங்கள் பாடிச் செல்லுந்தனையும் நிலை நில்லாத மநுஷ்யர்களை கவி பாடி பெறாப் பேறாகப் படைக்கும் உங்கள் பாரிப்பாலே பெரிய அர்த்தமானது எது உண்டாம் –உண்டானாலும் எத்தை நாளைக்கு விநியோக அர்ஹமாம்-பாடிப் படைக்கும் பெரும்பொருள்!-இந்த ஸ்ரீ யபதி குறைவற கொடானோ -என்று ஷேப யுக்தி--இந்தத் திருமகள் கேள்வன் குறைவு அறக் கொடானோ?’ என்று பழிக்கிறார்.
-------------
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்–ஒரு வஸ்து வென்று புத்தி பண்ண ஒண்ணாத படி அவஸ்துவான என்னை லப்த ஸ்வரூபனாம் படி அங்கீ கரித்து -அதுக்கும் மேலே -வாசிகமான கைங்கர்யத்தையும் கொண்டவனாய்-ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம் -கைங்கர்யமே ஜீவனம் –கார் முகில் என்றது பலித்த படி –என் கார் முகில் வண்ணா –-பெருமை பார்க்காமல் அனுக்ரஹித்தாயே-வர்ஷிக்கும் ஸ்தலம் தான் பார்த்தாயோ –-உன் பெருமையை பார்க்காமல்-நீசன் என்றும் பார்க்காமல் ஔதார்யம் -செய்து அருளி -பிரயோஜன நிரபேஷமாய் பண்ணின படி-
------------------
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்!
என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்–பூமி முதலாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கம ரூபமான பதார்த்தங்கள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–பலவற்றையும் பிரதமத்திலே படைத்தவனாய் -ஜகத் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்த ஸுலப்யத்தை எனக்குப் பிரகாசிப்பித்தவனாய் –எனக்கு அநு பாவ்யனுமாய் நிரதிசய உஜ்ஜ்வல்ய யுக்தமான திரு வடிவை யுடையவனே –ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ-எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-‘நீ, உலகத்தைப் படைத்தல் முதலாயினவற்றைச் செய்கிற போது உனக்கு ஆர் துணைப்படச் செய்தாய்?’ என்கிறார்.
அன்றிக்கே,-‘படைத்தலுக்குப் பயன் மோக்ஷம் அன்றோ? அது பெற வேண்டாவோ?’ என்னலுமாம்.-அழிந்த உலகத்தை உண்டாக்கின உனக்கு, உள்ளதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?
-------
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து-பலவகைப்பட்ட தேவாதி பேதங்களை யுடைத்தாய் புண்ய பாப அனுரூபமாக விஸ்தீர்ணமான பதார்த்தங்களை எல்லாம் ஒன்றும் இன்றியே சூன்யமாய்க் கிடந்த த்விபரார்த்த கால அவசானத்திலே-
தேவாதி பேதங்களை யுடைத்தாய் கர்ம அனுகுணமாக விஸ்திருதமான பதார்த்தங்கள் ஒன்றும் இன்றிக்கே பாழாய் த்விபரார்ர்த்த காலம் சென்ற அளவிலே -தன் சங்கல்பத்தாலே தனக்கு இப்பால் உண்டான காரியத்தை பிறப்பிக்கும் நன்மையுடைய ஜலத்தை ஜலத்தை ஸ்ருஷ்டித்து -அது அண்டமாய் பரிணமித்தவாறே அதிலே சதுர்முகனை ஸ்ருஷ்டித்து-பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து-ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான்.-பயிர் செய்கிறவன் விளை நிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே,-இவற்றினுடைய துர் வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன்.-கண்ணுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி சத்து என்ற நிலையுடன் கூடிய காலத்து.
----------
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்–இந்த லோகங்களில் காட்டில் விஞ்சி புறம்பான மகாதாதி ஸமஸ்த பதார்த்தங்கள் பிராமண பிரசித்தமாய் தோன்றின யுண்டாகிலும் அவையும் நீ இட்ட வழக்கு-
---------
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை-திருச் செங்குன்றூர் ஒழிந்த அர்ச்சா ஸ்தலங்களான புகலிடமும் அவனை ஒழிந்து வேறாய் இருப்பது இல்லை -அதுவே அர்த்த ஸ்திதி ஆனாலும்-பொருள் அது -பொருளின் உண்மை அது –ஆகிலும் –இங்கனே இருந்தது ஆகிலும் –
--------
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல

மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல–அவனுக்கு இவ்விருப்பு ஒழிய வேறு புருஷார்த்தம் உண்டோ என்னில்-த்ரிவித சித் அசித் சேஷத்வமும் ஒரு பொருளாய் இருக்கிறது இல்லை –நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –
என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது-இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –
--இதில் இதுவே தனக்கு பரம புருஷார்த்தம் என்று இருந்தான் –
மூ உலகும் பொருள் அல்ல -ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் என்று இரண்டு நிர்வாகங்கள்
--------------
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல்
பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்-மற்றும் உள்ள புருஷார்த்தங்கள் தன்னிலே எனக்கும்-ஒரு புருஷார்த்தத்தை சேர்க்க தந்து விட்டானாகில்-தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும் -பின்னை அவன் நிரதிசய புருஷார்த்த பூதனான தன்னை ஆருக்கு கொடுப்பான் –-புறம்பு கொள்வார் இல்லாமல் மறந்தான் அல்லனே -கிருபாகார்யம் என்று கருத்து –இப் பொகடு சரக்கை கொள்வார் இல்லை என்று ஷேபம் -எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்-புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ-
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்-
----------
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்–கையிலே அர்த்தம் உண்டாய் செல்லக் கண்டார்கள் ஆகில்-மங்களா சாசனம் பண்ணி அவன் கொடுத்ததைக் கையிலே ஏற்றுக் கொண்டு யதாபிலஷிதம் போகா நிற்பர்--ஒருவன் கையில் அர்த்தம் யுண்டாய் பரிமாறக் காணில் –பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனர் சொல்லும் வார்த்தையைச் சொல்லுவார் -இன்னம் அர்த்தம் அநேகம் உனக்கு உண்டாக வேணும் என்பார்கள்-உனக்கு இன்னமும் கிழிச்சீரை பெருக வேண்டும் -என்பார்கள்--நம் ஸம்ருத்தியே தனக்கு பிரயோஜனமாய் இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று குளிர பார்த்து -கண்ணற மாட்டான் என்று அறிந்த வாறே-ஏற்றி எழுவர்-இடலாகாதோ போக என்று எழுந்து இருப்பார்கள் –
---------------
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்

அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்-அறிந்தனவாய் இருக்கிற வேதங்களினுடைய அறிதற்கு அரிய பொருள்களையும் நிஷ்கர்ஷித்துத் தருவதான ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர இதிஹாச புராணாதிகளான சாஸ்திரங்கள் – யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று சொல்லும் மர்யாதையாலே-அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்–அறிய அரிய பொருள் என்று அறிந்தனவாக கொள்ள அமையும்-துர்ஜ்ஜேயன் என்னும் -இவ்வளவு அறிந்தனவாக கொல்ல அமையும் -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் –அவ்விஞ்ஞாதம் விஜா நதம் -என்னும் இவ்வளவே அறிந்தது –வேத வாக்குகள் அறிய முடியாமல் எந்த ஆனந்த குணத்தின் நின்றும்மீண்டனவோ
அறியப் படாதது என்று இருப்பவன் எவனோ அவனுக்கு அறியப் பட்டது-
அறிந்தேன் என்று இருப்பார்க்கு அறியப்படாதது-என்னும் இவ்வளவே அறிந்தது –
------------
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து --அவன் தானே இப்படி மேல் விழில்-விழும் அத்தனை போக்கி-தம் தாமே அறியப்பார்ப்பார்க்கு-அறியப் போகாது –-ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இறே பிரதானம் –அறிய அரியன் என்று கை வாங்கி இருக்கலாம் பொருள் அன்று –வருந்தியும் மேல் விழ வேண்டும் பொருள் ஆயிற்று-இது இனிமை இருந்தபடி –
பஹூ மநோ ரத்தங்களைப் பண்ணுகிறான் –பாரிப்பு எண்ண முடியாத அளவு - என் கார்ய விஷயத்தில் பெரியவன் - இயத்தா ரஹிதன் அப்படிப்பட்டவன் என்ற அளவு அல்லன் -ஸ்வரூப அபரிச்சின்னன் என்று சொல்ல முடியாதே மனத்தில் செறிந்தான் திண்ணம் என்பதால் பிரகரணத்துக்கு சேராது – என்றவாறு-விசார அவ்விஷய பூதன்-என்று சொன்னாலோ என்னில்-ஸூ ஷ்ம விஷயம் -எண்ணில் நுண் பொருள் –
-------------
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்–அதி ஸூஷ்மாமாயை அல்பமான ஸ்தலங்கள் தோறும் -அந்த ஸ்தலங்களிலே ஸ்வயம் பிரகாசமான உஜ்ஜவலமான ஆத்ம வஸ்துக்கள் தோறும்-இப்படி சமஸ்த வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும்
இடம் திகழ் பொருள் தொறும் –அவ்வச் சரீரங்களில் ஞான ஆனந்தங்களோடு கூடி மிளிருகிற ஆத்துமா தோறும்.
கரந்து – வியாபித்த பதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அன்யை ரத்ருஷ்டனாய்
(தான் நிறைந்திருக்கும் பொருளுக்குத் தெரியாதவாறு மறைந்து, )
எங்கும் பரந்து உளன்
சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே-எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.
------------
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
-நினைக்கப் பட்ட ஸமஸ்த பதார்த்தங்களும் உபாதான காரணமாய் -ஸ்வரூப விகாரம் பிறவாதபடி-சம்ஹார சமயத்திலே புருஷார்த்த உபயோகியான கரணங்களை இழந்து கிடக்கிற தய நீய தசையைக் கண்டு ஐயோ என்று நினைப்பதொரு நினைவு உண்டு -அத்தைச் சொல்லுகிறது-அசித விசேஷிதான் ப்ரலய ஸீம நிசம்சரத கரண கலேபரைர் கடயிதுந்தயமாநமநா
வித்தாய்-தேவாதி சகல பதார்த்தங்களுக்கும் காரணமாய்
முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை –ஸ்வ கார்யத்தைப் பிறப்பிக்கும் போது தான் முதல் அழியாத படியான மநோ வியாபார ரூப சங்கல்ப ஞானத்தை யுடைய உன் வைலஷண்யம்-ஆனால் சங்கல்பமோ ஜகத் காரணம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில்-ஆனாலும் காரணமாம் போது சங்கல்ப பூர்வகமாக வேணும்-சங்கல்ப விசிஷ்டன் காரணம் ஆனாலும் பஹூச்யாம் என்கிற சங்கல்ப ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் –
தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்.
‘மேல் மனம் செய் ஞானம்’ என்று சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில்,
காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து
‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று,புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும்,
வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும்,
இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;-அதனை அருளிச் செய்கிறார்.
இனி, நினைத்தல் –
கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு,-‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக் கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’என்று-பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ பிள்ளை யமுதனார்.
முதலில் சிதையாமே –-நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று இவன் படி,’ என்கிறார்.
---------------
கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை திரு மால் இரும் சோலை யதே -4 -3-9 –

பல் பொருள்கள்–பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்-பெருகி வரும் திரு மலையில் இரண்டு அருகில் உள்ள பதார்த்தங்களையும் வாரிக் கொண்டு வருகையாலே-பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைமா கரிக்கோடும் அகில் குறடும் சந்தனமும் முதலாக (பெரிய திருமொழி ) தான் திரட்டின பல பதார்த்தங்களையும் என்னுடைய நாதனுக்கு திரு முன் காணிக்கை என்று இத்தை
சமரிப்பிக்கையில் உண்டான த்வரையாலே மிகவும் விரைந்து வாரா நிற்பதாய்
தன் பக்கல் அவஹாகித்தார் உடைய சகல சிரமங்களும் ஆறும் படி குளிர்ந்து இருப்பதான திரு சிலம்பாற்றை உடைய திரு மால் இரும் சோலை-ஆகிற இதுவே -விமலன் மலை-
---------------------
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் –-கைம் முதல் உள்ளவையும் –வளை நிறம் போன்ற அனைத்தையும் -முன்னே கொண்டார்-
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது –ஒரு வேடுவிச்சி குரங்கு இடைச்சி –சபரி சுக்ரீவன் யசோதை -இவர்களுக்கு ஸூலபனாய் நின்று –இங்கு அந்தராத்மாவாய் நின்ற நிலை சொல்ல வில்லை –
மேலே ஆர்க்கும் எய்தாது என்று இருப்பதால்-அதற்கு பிரதி கோடியாக சௌலப்யம் காட்டி அருளியதையே சொல்லும்-
நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–
வேதைக சமதி கம்யராய் -ஸ்ரீ கீதை -15-15-நின்றார்
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு –பெரியாழ்வார் திருமொழி -4-3-11-என்னக் கடவது இறே
ஆத்மாத்மீயங்கள் இரண்டையும் கொண்டார் –
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார்
இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்தது இறே –
முலைப் பால் உண்ணும் குழந்தை பருவத்திலே -பகவத் சம்பந்தம்
ஸ்ருஷ்டத்வம் வனவாசாய –அயோத்யா -40-5-போலே –
பிறக்கிற போதே வளை இழந்து கொண்டே போலே காணும் பிறந்தது –
இத்தனையும் சொல்லத் தகும் படி யோக்ய வஸ்து விறே
பால்யாத் ப்ரப்ருத்தி ஸூஸ்நிக்த –
அன்வயத்திலே தரித்து வ்யதிரேகத்திலே தரியாமை-இவளுக்கு சத்தா பிரயுக்தமாய்த்து

-------------- –
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-

ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்-ஒரோ வகையாலே ஒத்தும் ஒரேவகையாலே ஒவ்வாததுமான தேவ மனுஷ்ய ரூபேண பலவாய் பிரதிவ்யக்தய சங்க்யமான பதார்த்தங்களை விபூதியாக யுடையையாய்--ஞான ஏக ஆகாரதயா ஒத்து -ஸ்வயம் பிரகாசத்வ ஞாத்ருத்வாதி குண வைலக்ஷண்யத்தை யுடைத்தாய் ஸ்வரூப பேதத்தை யுடைத்தாய்-அஸங்யாதமான சித் அசித் பதார்த்தங்களை பிரகாரமாக யுடையையாய் –அவற்றினுடைய சாம்யா ஆகார திரோதாயகமான தேவ மனுஷ்யாதி ஆகாரங்களால் யுண்டான வேறுபாட்டுக்கு நிர்வாஹகனாய்--ஜாதியால் ஒத்தும் வ்யக்தி பேதங்களால் வேறுபட்டும் என்னுதல் -ஞாநை காகாரதையாலே ஒத்தும் -அஹம் த்வமாதி பேதத்தாலே வேறுபட்டும் என்னுதல் -இப்படி பலவகைப்பட்ட பதார்த்தங்கள் அசங்க்யேயமாய் இருக்கிற இத்தை விபூதியாக யுடையையாய்-எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே-வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி
----------
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-

அல்லாப் பொருள்களுமாய வெந்தை
மற்றும் இடி மின் தொடக்கமானவை எல்லா வற்றுக்கும் நியந்தாவான சர்வேஸ்வரன்
------------
யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-

எழில் வேதப் பொருள்களுமாய் –தேஹா திரிக்தமான ஆத்ம வஸ்து
காரண அவஸ்தமான சித் அசித்துக்கள்-கல்யாண குணங்கள்-பகவத் ஸ்வரூபம்
இவற்றை பிரதிபாதிகக் கடவ வேதைக சமதிகம்யமான அர்த்தங்களும் தானாய்
--------
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

மற்றும் -படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை--மற்றும் அனுக்தமான தேவ திர்யக் ஸ்தாவரங்களுமாய்க் கொண்டு விஸ்த்ருதனாய் நின்றவனை--தத் த்ருஷ்ட்வா ததேவ அநு பிராவிசத் -இத்யாதிப் படியே இவற்றை அடைய உண்டாக்கி
இவற்றின் உள்ளே தான் அனுபிரவேசித்து-அத்தாலே இவை எல்லாம் தான் என்னலாம் படி நிற்கிறவனை
தத்வமஸி ஸ்வேதகேதோ –
அயமாத்மா ப்ரஹ்ம
ப்ரஹ்ம தாஸா--என்றும் சொல்லுகிறபடியே ( அப்ருத் சித்த விசேஷணமாய் )
---------------
ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

என் பொருளா -என்ன பிரயோஜனம் -மூலம் ஏது -என்று கேட்க -மக்நானுத் தீராதே லோகன் -என்கிறபடியே-சர்வரையும் உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த நீரும் சர்வேஸ்வரனைப் போலே என்னை உம்முடைய-கிரீடைக்கு இவ்வளவும் விஷயமாக்கி வைத்தீரே -என்ன -இவ்வளவும் உமக்கு அதிகாரம் இல்லாமையாலே
அப்படி வைத்தோம் -என்ன -அதிகாரம் உண்டேல் அரங்கர்-இரங்கரோ – அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ எதிராசா நீர் இரங்க வேண்டுவது -ஆனாலும் இப்போது நீர் இரங்க வேண்டுவது எந்த அதிகாரத்தை பார்த்து-என்று முன்பு தம்மை –அவமே புறத்திட்டது என் பொருளா –என்னும்படியை பிடிக்கிறார் காணும் -இன்று என்னைப் பொருள் ஆக்கி – என்கிற பாட்டிலே ஆழ்வாரும் அவன் மடியைப் பிடித்தார் இறே -நம்முடைய கிருபையாலே இன்று உம்மை இப்படி-பண்ணினோம் என்றீர் ஆகில் -அந்த கிருபையினுடைய ஸ்வபாவத்தை சொல்ல வேணும் என்கிறார் –
இதற்கு முன் நோக்காததும் -இன்று இலக்கு ஆக்கியதுமான பிரகாரம் தெரிவரிதாய் உள்ளது –
எம்பெருமானார் –நல்லோர் இன்று உம்மை ஆளாக்கினர் -ஆகையால் அருள் பெற்றீர்–என்றார்
-அன்நல்லோர் இது காறும் ஏன் ஆள் ஆக்கி கிற்றிலர் என்றார் -இவர்
இது காறும் உமக்கு இசைவில்லை -என்றார் அவர் –
இன்று இசைவு வந்தது எங்கனம் -என்றார் இவர்
அத்வேஷாதிகள் உம்மிடம் உண்டானமையால் என்றார் அவர்
அத்வேஷாதிகள் இன்று உண்டாவானேன் -என்றார் இவர்
அது ஈஸ்வர கடாஷம் ஆகிற பிரதம சூக்ருதத்தாலே என்றார் அவர்
அவ் வீச்வரனும் தேவரீர் அன்றோ –ஏன் முன்பே கடாஷித்து இருக்க கூடாது -இப்பொழுது-கடாஷிப்பதற்கு என்று ஒரு அதிகாரம் உண்டாயிற்றோ எனக்கு -ஆகையால் இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
------------
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய்-–5-7-3-
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய்-–9-8-8-
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்-10-8-9-

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்–ஒரு வஸ்து வென்று புத்தி பண்ண ஒண்ணாத படி அவஸ்துவான என்னை லப்த ஸ்வரூபனாம் படி அங்கீ கரித்து -அதுக்கும் மேலே -வாசிகமான கைங்கர்யத்தையும் கொண்டவனாய் ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்
பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்–இவன் செய்தபடி செய்கிறான்-என்று கிருபை பண்ணாது இருக்கிலும் இருக்கிறாய் –அடியேனை அநந்ய கதியாம்படி யுனக்கேயாய் இருக்கிற என்னை நிரவதிக கிருபை பண்ணி லப்த சத்தாகனாக்கி உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளின் கீழே பிரவேசிக்கும் படி வைக்கிலும் வைக்கிறாய்-அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்-பிரதம கடாக்ஷம் பெற்ற -மயர்வற மதிநலம் அருள பெற்ற பின்-இக்காலம் -முன்பு அசன்னேவா -என்று கிடந்த என்னை -சந்தமேவ -வஸ்துவாக்கி -ஹேயமான என் நெஞ்சுக்குள் அவனை தானே வைத்தான்-அனுமதி கெடுக்காமல் எதுவும் செய்யாது இருக்க இன்று செய்தாய்
அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை
என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –
----
பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

பழகு நான் மறையின் பொருளாய்
அபௌருஷேயமான வேதங்களின் அர்த்தம் இவனே இறே
அல்லாதவை ஏக விஜ்ஞான நியாய சித்தம் –
------
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

மறையாய்-வேதங்களும் தான் இட்ட வழக்கு-தன்னை உள்ளபடி பிரதிபாதியா நின்ற வேதங்களாய் – –மறைப் பொருளாய்--வேத ப்ரதி பாத்யனாய் –அப்படிப் பட்ட வேதாந்த ரகஸ்யமாய்
-----------
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற வரங்கனே-
நாயமாத்மா ப்ரவசநே நலப்ய நமேதே யான பஹூ நா ஸ்ருதேன் (கட உபநிஷத் )-என்னும்படியே-உன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே- ஸ்ரவணாதிகள் பண்ணுவார்க்கு அரியையாய் நீயே காணக் காட்டக் காண்பார்க்கு எளியை யாகைக்காக-கோயிலிலே கண் வளருகிறவனே-புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே-
-------
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான்
-69–

செவிக்கும் பிரியமாய் இருப்பதும் சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வேஸ்வரன் உடைய திரு நாமமே-லோகத்தாருக்கும் ஸூகமான ஸ்தானமும் அத் திரு நாமமே
கவி பாடுகைக்கும் பூரண விஷயமாய் இருக்கும் ஸ்ரீ யபதியை அடைந்தேன்
விசாரித்துப் பார்த்த இடத்தில் வேதாந்த அர்த்தமும் அதுவே –பார்க்கில்-மறைப் பொருளும் அத்தனையே தான் –இல்லாதன இட்டுச் சொல்ல வேண்டாதே பூரணமாக என் கவிக்குப் பிரதிபாத்யனானவனைப் பெற்றேன்-ஆராயில் வேதார்த்தமும் அத்தனையே-
-----
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -1-1-1-

உய்வதோர் பொருளால் –
விஷயங்களிலே கை கழியப் போய் ஓடி இளைத்து விழுந்த இடத்தில் –
இனி இவன் தானாக மீள மாட்டான் -என்று அது தானே ஹேதுவாக ரஷிக்க ஒருப்பட்ட சர்வேஸ்வரன் –கிருபையாலே உஜ்ஜ்வன உபாயமாய் இருப்பதொரு நல்ல அர்த்தத்தாலே -நல்ல அர்த்தம் என்கிறது-பகவத் கிருபையை -கௌரவத்தாலே -உய்வதோர் பொருள் -என்று மறைத்துச் சொல்லுகிறார்-நாலாம் பாட்டில் -ஆழியான் அருளே -என்று அது தன்னை தெரிய அருளிச் செய்வர்
நம்மாழ்வார் அவ்வருகு போகப் பொறாமை நடுவே மயர்வற மதி நலம் அருளினன் என்றார் இறே-நானே நாநா வித நரகம் புகும் பாவம் -செய்தேன் -என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் நானே விநாசத்துக்கு ஈடான பரிகரம் தேடிக் கொள்ள எனக்கு உஜ்ஜீவிக்கலாவதொரு உபாயம் உண்டாயிற்று
அசந்நேவ -வான என்னை -சந்தமேநம் -என்னும் படி பண்ணிற்று ஒரு நல்ல அர்த்தம் உண்டாயிற்று-
------------
பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்-பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது-பொருளாலே ஸ்வர்க்கத்தில் புக-யத்னம் பண்ணப் போகாது-அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –அர்த்த புருஷார்த்தத்தை சாதனமாகக் கொண்டு ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய பூமியிலே புக ஒண்ணாதே -என்னுதல்
அன்றிக்கே – வஸ்துத்வ புத்தி பண்ணி ப்ரஹ்மாதி லோகங்களிலே புகுவதாக அர்த்திக்க யத்நிக்கலாகாது –
--------
ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

அம் மறைப் பொருளால்
-ஸ்ருதிகளுக்கு -சுத்த அபேத பிரதிபாதனமே பொருள் என்று குறும்பு சொல்லுகிற அந்த குத்ர்ஷ்டி மதநிஷ்டரை அடங்கலும் -அகிஞ்ச்சித்ஜ்ஞனாய் கர்ம வச்யனான சேதனனுக்கும் -சர்வஜ்ஞ்ஞனாய் அகர்ம வச்யனான – ஈஸ்வரனுக்கும் ஸ்வரூப ஐக்ய பிரதிபாதாகநத்தாலே அவற்றுக்கு தாத்பர்யம் சொல்ல ஒண்ணாமையாலே -விசிஷ்ட ஐக்யமே அவற்றினுடைய தாத்பர்ய விஷயீ பூதார்த்தம் என்று ஸ்வரூப ஐக்ய பிரதிபாதகனத்துக்கு -அத்யந்த பிரதி கூலங்களாயும் -விசிஷ்ட ஐக்ய பிரதிபாதாக நத்துக்கு அத்யந்த அனுகூலங்களாயும் -இருந்துள்ள -போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா – என்றும் – த்வா ஸூபர்ணா ஸ யுஜா ஸ காயா சமானம் வர்ஷம் ப்ரிஷஸ் வஜாதே -தயோ ரக்ய பிப்பலம் சாத்வத்தி அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி -என்றும் -இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சான்-ஏதத் சாம காயான் நாஸ்தே -என்றும் -யஸ் யாத்மா சரீரம் யஸ்ய பர்த்வீ சரீரம் -என்றும் -இத்யாதி பேத சுருதிகளையும்கடக சுருதிகளையும் உபன்யசித்தும் பஹூ முகமாக ப்ரசங்கித்தும் அந்த ஸ்ருதிகளுடைய தாத்பர்யன்களைக்-கொண்டு தானே பாய்ந்தனன் -அந்த ஸ்தலத்தில் நின்றும் பலாயனம் பண்ணுவித்தார் –பாய்தல் -உதைத்தல் –
இறைவன் பால் பக்தி உணர்வு இல்லாதாருக்கு தம் பொருளைக் காட்டாது மறைப்பது பற்றி-வேதத்திற்கு இப்பெயர் வந்தது .பக்தி உணர்வு அற்ற மற்றவர்கள் மெய்ப்பொருள் காணாது-தம் தமக்கு தோற்றும் அவப்போருள்கள் கூறி இடர்ப்படுவதற்கு இதுவே காரணம் என்று உணர்க .-எந்த மறைக்குக் குத்ருஷ்டிகள் அவப்பொருள்கள் கூறினரோ-அந்த மறைக்கே மெய்ப்பொருள்கள்-கூறி அவற்றின் பலத்தினாலே அந்தக் குத்ருஷ்டிகளை உதைத்து தள்ளி விட்டார் எம்பெருமானார்-
---
மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை
வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள
ஸ்வயம் பிரகாச வஸ்து வானவனை –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்கள் ஆவன –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஸ்வேதாஸ்வரம்
ஷரம் ப்ரதானம் அம்ர்த அஷரம் ஹர ஷராத்மாநா வீசதே தேவ ஏக –
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச –
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற தத்வ த்ரயமும்
மேல் இருந்த என்றது –
இந்த தத்வ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு- மேலாய் இருந்துள்ள என்றபடி
அதாவது-சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாக -தான் பிரகாரியாய் –
நதத் சமஸ் அப்யதிகச்ச தர்ச்யதே -என்னும்படி-சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்கை-
---
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-

சொலப்படும் பொருளும் நீ
ஸ்ருதி ஸ்ம்ர்தியாதிகளிலே ஆஸ்ரயணீயாராகத் தோற்றுகிற தேவதைகளுக்கு ஆத்மாவும் நீ –
--------
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-

பதங்களின் பொருளும் –
அவ்வோ பதங்களால் அறியப் படுகிற ஜீவ சமஷ்டியும் –
(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் போலே பொருள் ஜீவ சமஷ்டியைக் குறிக்கும் இங்கும் )
------
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

கதையும்–இதிஹாஸ புராணங்களும்-பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும் -கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே-
இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது -சர்வ ஸூ லபனான உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களே –சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-
-------------
மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——–4—
மருந்தும் பொருளும் அமுதமும் தானே –

மருந்து என்று-விரோதி நிரசன மாதரத்தைக் கொண்டு
பொருள் என்று-உபாயம் ஆக்கி
அமுதமும் தானே -என்று-உபேயத்தைச் சொல்லுகிறது –

விரோதியைப் போக்குவானும்--அபிமதத்தைத் தருவானும் அபிமதம் தானும் அவனே -அநிஷ்ட நிவாரண பூர்வகமான இஷ்ட பிராப்தி பண்ணித் தருவானும் அவனே -என்றபடி
அன்றிக்கே-மருந்து என்று உபாயமாக்கி-பொருளும் அமுதமும் தானே என்று
உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது
என்றுமாம் –
மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின ஜஞ்யாக்யம் பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து
அர்தியாய் வருகையாலே பொருளானான்-திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்
----
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான்
-69–

கவிக்கும் நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்-
ஸ்துத்யனுக்கு ஒரு பூர்த்தி இன்றிக்கே-ஸ்தோதா நிரப்ப வேண்டும்படி யன்றிக்கே
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் –பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான் –யாத்ருச்சிகமாக அன்றிக்கே ஆராய்ந்து பார்க்கில் வேதாந்த ரகசியமும் அத்தனையே –நிறை பொருள் -நிறைவைச் சொல்ல சொற்கள் இல்லை -பரிபூர்ணமான வாஸ்யனாக நின்றவனை யாதிருச்சிகமாகப் லபித்தேன்-நேர் பட்டேன்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் – பகவத் கிருபையால் லபிக்கப் பெற்றேன்-யாதிருச்சிகமாக அளவு அன்றிக்கே
ஆராய்ந்து பார்க்க-வேதாந்த பொருளின் ஸித்தமான அர்த்தமும் அதுவேயாய் இருந்ததே-
------------
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு-76—

பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூற வந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
பாசுரங்களும் ஸ்ரீ ராமாயணமும் முன் நடந்த இதிஹாசங்களைப் ப்ரதிபாதிக்கிற மஹா பாரதமும்-அவற்றிலே சொல்லப்பட்ட அநேக அர்த்தங்களும்-செறிந்த அக்னியும் விசாலமான ஆகாசமும் ஆப்த தமம் என்று கேட்கப்பட்ட மனு ஸ்ம்ருதியும்
எழுதாமல் குரு முகமாகக் கேட்கப்பட்ட நான்கு வேதங்களும்
ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனுடைய ஸங்கல்பத்தினால் உண்டான தத்வங்கள் –பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்--அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –
லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
----
அன்ன வறத்தின் பயனாவது ஒண் பொருளும்
அன்ன திறத்தே யாதலால் காமத்தின் ———-37
மன்னும் வழி முறையே நிற்று நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39

இது வன்றே அன்ன வறத்தின் பயனாவது
இது விறே அப்படிப் பட்ட தர்மத்தின் உடைய பிரயோஜனம் ஆயிற்று
ஆகையாலே தர்மமும் காம சேஷம்
மோஷம் தானே தள்ளுண்டது
இனி சேஷிப்பது அர்த்தம் இறே –
ஒண் பொருளும் அன்ன திறத்தே
சிறியார் பெரியார் இன்னார் என்று வாசி இன்றிக்கே எல்லாரும் ஒக்க நன்று நன்று என்று-விரும்புகிற அர்த்தமும் காம சேஷம் –
----------
இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –

இயலும் பொருளும் இசையத் தொடுத்து
தொடுத்து என்னும் சொல் -வல்லவன் மாலையில் பூத் தொடுப்பது போலச் சொற்களையும் படி-கோப்பதை கூறுகிறது ..
நறிய நல் மலர் நாடி -என்று நம் ஆழ்வாரும் சொற்களை மலராக கூறினமை காண்க –இப்பாசுரத்திலே சொல் என்னும் பொருளில் இயல் என்னும் சொல்லை அமுதனார் தொடுத்து இருப்பதைக் காண்க -இச் சொல் அன்றி வேறு எந்தச் சொல்லை வழங்கினும் இங்கு இசையாமை காண்க .
----
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

பொருளும்
சமஸ்த புருஷார்த்த சாதனமாய் -ஸ்வ ஜனங்களோடு கூடி யாவஜ்ஜீவம் செய்கைக்கு உறுப்பாய்-இருந்துள்ள –
தன கனக வஸ்து வாஹனாதி சகல பதார்த்தங்களும்
பொருளும் –
பொருள் இல்லார்க்கு இவ் உலகமில்லை யாதலின் அது முந்துறக் கூறப்பட்டது
-----------
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

பொருளும் –
அதுக்கு அங்கமாவது ஆதல் –பரம்பரையா சாதனமாகவாதல் -சாதனா அனுஷ்டானத்து உடலாதல் –
விதிக்கப்படுகிற ந்யாயார்ஜித தனமும் –
-------------
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–

தேவும் எப்பொருளும் படைக்க-தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்காக –
---
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

மிகும் தேவும் எப்பொருளும் படைக்க-ஈஸ்வரன் என்று சங்கிக்கலாம் படி மிக்க -ப்ரஹ்ம ருத்ராதி தேவ ஜாதியையும் -மனுஷ்யாதி சகல பதார்த்தங்களையும் -ஸ்ருஷ்டிக்க –
--------
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6-

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–எல்லா சேதனரும் எல்லா அசேதனங்களுமாகிற ஸமஸ்த பதார்த்தங்களும்-எவரும் யாவையும் எல்லாப் பொருளும் –சேதன வர்க்கத்தையும் அசேதன வர்க்கத்தையும் -இப்படி இரண்டு வர்க்கத்தையும் சொன்னவற்றையும் கூட்டி-இப்படி இருக்கிற சகல பதார்த்தங்களும் பிரளய காலத்தில் தன் வயிற்றில் சேர்ந்திருந்தபோது.
-----
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8-

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்–வருத்தித்த- மாயப்பிரானை யன்றி யாரே– தன் நினைவாலே தேவ வர்க்கமும் மனுஷ்யாதி சகல பதார்த்தங்களும்
சத்தை பெற்று அபி வ்ருத்தமாம் படி உண்டாக்கின -ஆச்சர்ய சக்தியாதிகளை யுடைய ஈஸ்வரனை ஒழிய ஆர் தான்
---------------
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –தனக்குள்ளே சம்பந்தியாது இருப்பது ஏதேனும் ஒரு பொருளும் இல்லை –-சர்வ வஸ்துவுக்கும் தத் வ்யதிரேகத்தில் சத்தா ஹானி ஸ்வரூப பிரயுக்தை-ஈஸ்வரனுக்கு இவருடைய வ்யதிரேகத்தில் சத்தை இல்லை என்று நினைக்கிற இடம் சீலக்ருதம் என்று கருத்து –
ந ததஸ்தி வினா யத்ஸ்யாத் -என்கிறபடியே ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருபத்தொரு வஸ்து சச விஷாணத்தோ பாதி முதலிலே இல்லை –
-அவை இவனைப் பற்றாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது ஸ்வரூபத்தாலே
-இவன் இவரைக் கலவாத போது சத்தை இன்றிக்கே இருக்கிறது குணத்தால் –
---------
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்-எல்லா பொருளும் தானான சர்வாத்ம பாவமும் நிறம் பெற்று -மரகத மலை போல் உயர்த்தியும் நிறமும் உரமும் உடையனானான் –எப்பொருளும் தானாய் – சகல பதார்த்தங்களும் தனக்கு பிரகாரம் ஆகையால் தான் இட்ட வழக்காய் -ஸ்வ அதீனம் இல்லாததொரு பதார்த்தத்தைப் பற்றி இப்பாடு படுகிறானோ-எப்பொருளும் தனாய் – ஸ்வ வ்யாதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் -தன்னில் வேறாக நின்ற எல்லாப் பொருள்களும்
‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே பிரகாரமாம்படி தான் பிரகாரியாய்.
இதனால், ‘ஸ்வாதீனம் அல்லாதது ஒரு பொருளைப் பெற்றுதான் இப்பாடு படுகிறானோ?’ என்கிறார்.
--------------
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

எல்லாப் பொருளும் விரித்தானை -கீத உபநிஷத் முகத்தால் இவ்வார்த்தை விசேஷங்களை விஸ்தீர்ணமாக உபதேசித்து-அர்ஜுனனுக்கு சார்வார்த்தங்களையும் வீசாதீ கரித்தால் போலே யுக்த அயுக்தம் அறியாதே
சிஷ்யாஸ் தேஹம் சாதிமாம் த்வம் ப்ரபன்னம் -என்று அர்ஜுனனுக்கு ஆத்ம யாதாம்யா ஞான பூர்வகமாக கர்மத்தை உபதேசித்து
தத் சாத்தியமான ஞானத்தை உபதேசித்து உபய அனு க்ருஹீதையான பக்தியை உபதேசித்து அவன் அதன் அருமையைக் கண்டு
அஞ்சின அளவிலே என்னையே தஞ்சமாகப் பற்று என்று அருளிச் செய்தான் இறே
எல்லாப் பொருளும் விரித்தானை –
முதல் வார்த்தையிலே ‘தர்மம் இன்னது என்றும், அதர்மம் இன்னது என்றும் அறிகின்றிலேன்,
‘நான் உனக்கு மாணாக்கன்; உன்னைச் சரணம் அடைந்தேன்; என்னைத் தெளியச் செய்வாய்,’ என்ற அருச்சுனனுக்குப்
பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து, கரும யோகத்தை விதித்து, ‘அதுதன்னை, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப்
பொகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து,
எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை
அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு,
‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று,
கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.இங்கு வகை –உபாயம் இல்லை -அடியிலே இவனே உபாயம்
கிருஷ்ண த்ருஷ்ணையை வளர்த்ததே –குண சேஷ்டிதங்களை அனுபவிப்பது
அர்ஜுனனுக்கு உபாயம் -ஆழ்வாருக்கு ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவிப்பித்து பக்தியை வளர்த்ததே ஆற்ற நல் வகை
------
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்-வேறு ஒரு பதார்த்தமும் இன்றி நீ நின்ற படியால்-ஸ்வ சரீரத்தில் வ்யாத்யாதிகள் சரீரி தானே சமிப்பிக்குமோபாதி
மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்-வேறு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தம் இல்லாத படி சர்வத்தையும் பிரகாரமாகக் கொண்டு நீ பிரகாரியாய் நிற்கையாலே
மற்று ஒரு பொருளும் இன்றி –
இவ்வுலகில் பல பொருள்கள் பரமாத்துமாவை நீங்கித் தனித்து இயங்குகின்றன என்று எவன் எண்ணுகிறானோ,
அவன் நனி பேதை ஆவான்; (ஆதலால்) இவ்வுலகில் பல இல்லை என்று
மனத்தால் எண்ணக்கடவன்,’ என்று சொல்லுகிறபடியே,
பரம் பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்ச் ஸ்வதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று,
ஈண்டு ‘இல்லை’ என்கிறது.
(ந இக நாநா அஸ்தி -அப்ரஹ்மாத்மாக தத்வம் இல்லை –
யத்ர அஸ்ய சர்வ ப்ரஹ்மாத்மகம் – கேன கம் பஸ்யத் -எத்தைக் கொண்டு எதை பார்க்க –
அவனைத்தவிர விஷயமும் கருவியும் இல்லையே
அவனைக் கொண்டு அவனையே பார்க்க வேண்டும்
வேறு ஓன்று கொண்டு வேறு ஒன்றையும் பார்க்க முடியாதே )


---------------------------------------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் த்யான ஸ்லோகம்

December 28, 2024

ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் த்யான ஸ்லோகம்
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா. ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா

ஸ்ரீ பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,

ஸ்ரீ பஞ்சமுக ஹனுமானின் ஒவ்வொரு முகமும் முக்கியத்துவம் வாய்ந்தது

ஸ்ரீ ஹனுமான் கிழக்கு நோக்கி இருக்கிறார். அவர் மனத்தின் தூய்மையையும் வெற்றியையும் தருகிறார்.
நரசிம்மர் தெற்கு நோக்கி இருக்கிறார். அவர் வெற்றியையும் அச்சமின்மையையும் தருகிறார்.
மேற்கு நோக்கிய கருடன் சூனியம் மற்றும் விஷங்களை நீக்குகிறது.
வடக்கு நோக்கிய வராஹம், செழுமையையும், செல்வத்தையும் பொழிகிறது.
ஹயக்ரீவ முகமானது வானத்தை நோக்கி உள்ளது . ஆனால் நம்மால் பார்க்க முடியாததால் அனுமனின் முகத்திற்கு மேல் சாய்ந்து காட்டப்படுவது வழக்கம். ஹயக்ரீவர் அறிவையும் நல்ல குழந்தைகளையும் தருகிறார்.

ஓம் ஸ்ரீராம தூத்தாயா, ஆஞ்சநேயா, வாயு புத்ராய, மஹா பல பராக்கிரமயா,
சீதா துகா நிவாரணய, லங்கா தஹன காரணயா, மஹா பல பிரசண்டாய, பால்குன சகாய,
கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட விஸ்வ ரூபய, சப்த சமுத்திர நிர்லங்கனய, பிங்கல நயனய,
அமித விக்ரமயா, சூர்ய பிம்ப பல சேவனயா, துஷ்ட நிவாரணயா, த்ருஷ்டி நிரலங்க்ருதய,
சஞ்சீவினி சஞ்சீவிதாங்கதா லக்ஷ்மணா மஹா கபி சைன்ய ப்ரணதாயா, தாஸ கண்ட வித்வம்சனாயா,
ரமேஷ்தாயா, மஹா பால்குன சகாயா, சீதா ஸஹித ராம வர பிரதயா,
ஷட் பிரயோக கம பஞ்ச முக வீர ஹனுமான் மந்த்ர ஜபே வினியோக.

ஓம் தக்ஷிண முகாய பஞ்ச முக ஹனுமதே கரால வதனாய நரசிம்ஹாய ஓம் ஹ்ராம்
ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரூம் ஹ்ரஹ் ஸகல பூத ப்ரேத தமனாய ஸ்வாஹா

ஐந்தின் ஐந்து முகங்களில் மிகவும் கோபமான நரசிம்மமாக தெற்கு முகத்தை உடையவர் ஓம் ஹனுமான் ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ரஹ்” என்று அர்ச்சனை செய்கிறார்.

ஓம் பஸ்சிம முகாய கருடாசனாய பஞ்ச முக ஹனுமதே மம் மம் மம் மம் ஸகல விஷ ஹராய ஸ்வாஹா
“ஓம் ஐந்து முகம் கொண்ட ஹனுமான் மேற்கு கருடன் முகத்துடன் மம் மம் மம் மம் மம்” என்று அர்ச்சனை செய்து அனைத்து விஷங்களும் தீரும்

ஓம் உத்தர முகாய ஆதி வராஹாய லாம் லாம் லாம் லாம் லாம் ந்ருசிம்ஹாய நீலகண்ட மூர்த்தயே பஞ்ச முக ஹனுமதே ஸ்வாஹா
“ஓம் கடவுள் வடக்குப் பக்கம் பன்றி முகத்துடன், லாம் லாம் லாம் லாம் லாம், நரசிம்மர் கடவுள், நீல கழுத்தை உடைய சிவன் ” என்று தீ பிரசாதம்.

ஓம் ஊர்த்வ முகாய ஹய கிரீவாய ரம் ரம் ரம் ரம் ரம் ருத்ர மூர்த்தயே ஸகல பிரயோஜன நிர்வாஹகாய ஸ்வாஹா
அனைத்து பயனுள்ள செயல்களையும் நிர்வகிக்க ஒரு பிரார்த்தனையுடன் “ஓம் கடவுள் மேல் ரம் ரம் ரம் ரம் ரம் ரம் முகத்துடன் ஓம் கடவுள், மிகவும் கோபமாக இருக்கும் கடவுள்” என்று தீ பிரசாதம்

ஓம் அஞ்சனி சுதாயா, வாயு புத்திரயா, மஹா பலாய, சீதா சோக நிவாரணா,
ஸ்ரீ ராமச்சந்திர கிருபா பாதுகாய மஹா வீர்ய பிரமதானய,
ব்ரஹ்மாண்ட நாதய கமধாய பஞ்ச முக வீர ஹநுமதே ஸ்வாஹா ॥
அக்னி பிரசாதம் “ஓம் அஞ்சனா மகனே, காற்றின் மகனே, மகா வீரன், சீதையின் துக்கத்தை நீக்கியவன், ராமரின் கருணையின் வாகனம் , கடவுளின் வீரம் மிக்க படைவீரன், அவனே. பிரபஞ்சத்தின் அதிபதி, விரும்பத்தக்கவர், ஐந்து முகங்கள் கொண்ட ஹனுமான்”

ஆஞ்சநேயர் (கிழக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வ கபி முகே சகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாகா!

நரசிம்மர்(தெற்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய ந்ருசிம்மாய சகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாகா!

கருடர் (மேற்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பச்சிம முகே கருடாய சகல விஷ ஹரணாய ஸ்வாகா!

வராகர் (வடக்கு முகம்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே ஆதிவராஹாய சகல சம்பத்கராய ஸ்வாகா!

ஹயக்ரீவர் (மேல் முகம் )

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய சகல ஜன வசீகரணாய ஸ்வாஹா!

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

ஓம் இராம தூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாயட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம!

————-

பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்!
1.கிழக்கு முகம்-ஹனுமார்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

2.தெற்கு முகம்-நரஸிம்மர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

3.மேற்கு முகம்-கருடர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

4.வடக்கு முகம்- வராஹர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

5.மேல்முகம்-ஹயக்ரீவர்
(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

———-

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே

புத்திர் பலம் யசோ தைரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்

————-

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லக்ஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் ஸமேத சீதாப்பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யாதவாப்யுதயம்-சதுர் விம்ஶ: ஸர்க₃:: -ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்-

December 26, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

அத₂ நிஜ விப₄வாத₃ஜாத ஶத்ரவ்
ப்ரஶமித ஶத்ரு ப₃லே நிவேஶ்ய பூ₄மிம்
பரிசரண ப₂லம் ப்ரபு₄: ப்ரயச்ச₂ந்
அமித கு₃ணாபி ₄ரரம்ஸ்த வல்லபா₄பி ₄: — 24.1 —

க்ரதுவிதி ₄நியதோ அப்ய கர்ம வஶ்ய:
பரிசித காமரஸோ அபி வீத ராக₃:
நக₃ரவஸதி ரப்ய ஸேஷவாஸ:
கத₂மிவ கேந விபு₄: ஸ வர்ணநீய: — 24.2 —

அநுக₃மிதமித₃ம் ஸ்வ தா₃ர ரக்ஷாம்
அநக₄மநோப₄வதந்த்ர மாநநீயம்
நிருபதி ₄கரஸஸ்ய நேது ராஸீத்
ந்ரு’பதி மஹர்ஷிபி ₄ரஞ்சிதம் சரித்ரம் — 24.3 —

ஶ்ருதி ஶத மஹிதே பதே ₃ பரஸ்மிந்
ஸித ஜலதவ் ₄ ரவி மண்ட₃லே ச ஸித்₃தா₄ம்
ப₃ஹுமதி மதி ஶய்ய ஸா ப₃பா₄ஸே
நரகரி போரவரோத₄ பூ₄மிரக்₃ர்யா — 24.4 —

நிதி ₄க₃ண முக₂வாந்த நிஷ்கராஶி:
ப்ரசித கு₃ணா மணிபி ₄: ஸ்யமந்தகாத்₃யை
ப்ரமுதி ₃தமஹி ஷீக₃ணேந சக்ரே
யது₃நக₃ரீ விபு₄நா நிவாஸ பூ₄மி: — 24.5 —

அவிகல விப₄வஸ்ய விஶ்வமூர்தே :
அதி ₄வஸநம் யது₃வீர ராஜ தா₄ந்யாம்
அநுதி ₃ந மநபாயி நீம் ப்ரதிஷ்டாம்
அபி ₄லஷதா மநுசிந்தநீய மாஸீத் — 24.6 —

ஸஹ முநபி ₄ருபாஸ்த த₄ர்ம மாத்₃யம்
வ்யவஹரணாநி த₃த₃ர்ஶ வேத₃வித்₃பி ₄:
அரமத ச வதூ₄ஜைநர் யதா₂ர்ஹம்
ப₃ஹுதநுரக்ரமதோ விசித்ர ஶக்தி : –24.7 —

அபி யுக₃பத₃வாப்த நைக தே ₃ஹை :
உபநதயோக₃ப₃லை : ஸ்வ கர்ம நிக்₄நை :
த்₄ரு’த ப₃ஹு வபுஷா ஜக₃த்₃விதா₄த்ரா
ஜித கரணேந து பு₄ஜ்யதே தத₃ர்த₂: — 24.8 —

யது₃பதி ரதி ₄ரூட₄ சந்த்₃ரஶால:
ஸஹ த₃யி தாபி ₄ரநந்ய மாநஸாபி ₄:
ஜலநிதி ₄மபி ₄த: ப்ரத₃ர்ஶயம்ஸ்தா:
நிஜமிவ தா₄ம நிவேத₃யாம் ப₃பூ₄வ — 24.9 —

நிஜபத₃மநபாய மாஶ்ரிதாநாம்
ப்ரபு₄ ரபவர்க₃த₃ஶாமிவ ப்ரயச்ச₂ந்
அமித ப₃ஹு கு₃ணாமநந்ய லப்₄யாம்
அதநுத காமபி ஸம் பத₃ம் ப்ரியாணாம் — 24.10 —

ஸ்வயமுத₃ வஸிதே ஸ்வ வாஸ த₄ந்யே
த்ரிஷு பு₄வநேஷு ஸமாமிவாத்₃பு₄தாநாம்
அதநுத ஸமவாய மாத்ம யோகா₃த்
அதி ஶயி நீமத₂வா விபு₄: ஸம்ரு’த்₃தி ₄ம் — 24.11 —

விதி ₄ஸத₃நமுகே ₂ஷ்வ த்₃ரு’ஷ்ட பூர்வாம்
ப்ரதி ₂த பரஸ்பர ஸம்மதிம் ஸம்ரு’த்₃தி₄ம்
யது₃பதி த₃யிதாக்₃ரு’ஹேஷு பஶ்யந்
முத₃மப₄ஜத்₃பு₄வி நாரதோ ₃ முநீந்த்₃ர: — 24.12 —

லலித ருசிஷு கல்ப வ்ரு’க்ஷ போதை :
உபவநராஜிஷு தஸ்ய ஸஞ்சரிஷ்ணோ :
அத₃து₄ர வயவைர்முத₃ம் முராரே :
அநுக்ரு’த புஷ்ப ப₂லாதி ₃கைஸ்தருண்ய: –24.13 —

அதி ₄க₃தகுஸுமாபசாயலீல:
ப்ரமத₃வநாநி விபூ₄ஷயந் ஸ்வதா₄ம்நா
ப்ரஜநி தமத₃நோ மநஸ்வி நீபி ₄:
கு₃ண ஸுரபி ₄: ஸுரபி ₄: ஸ்வயம் ஸ மேநே — 24.14 —

பரிபணமிவ மந்மதோ₂த்ஸவாநாம்
ப்ரத₂ம விகஸ்வர பத்₃ம த₃ர்ஶநீயம்
அநுதி ₃தப₃ஹு விப்₄ரமம் வதூ₄நாம்
அபி ₄நவயவ் வநமந்வ பு₄ங்க்த நாத₂: — 24.15 —

அம்ரு’தமய பய: பரிப்லுதாநாம்
விஷம கு₃ணேஷு விஹார வாபிகாநாம்
கமல குவல யாதிஷு ப்ரியாணாம்
முக₂நயந ஸ்மித காந்தி மப்₄யநந்த₃த் — 24.16 —

அவிதத₂மஹிமா நிஜ ப்ரஸாதா₃த்
அநக₄மநோ ரத₂ தோஷி தாஸு தாஸு
ஸ்வ பரிஜந தயா ஸுரைர் நியுக்தா:
நிரதி ₃ஶத₃ப்ஸரஸோ நிதே ₃ஶபா₄ஜ: — 24.17 —

ப₃ஹி ருப நக₃ரம் ப₃லாநி த்₃ரு’ஷ்ட்வா
ஸஹ யது₃பி ₄: ஸமயே நிவர்தமாநம்
த₃த்₃ரு’ஶுரதி ₄க₃வாக்ஷ மேக சி த்தா:
ரத₂ துரகா₃தி ₃ஷு ராம பஶ்சிமம் தம் — 24.18 —

விதி ₄வத₃நுவிதா₄ய தே₃வ யாத்ராம்
ப்ரதி புரவீதி ₂பரிக்ரமேண த்₃ரு’ஶ்யம்
பதி மநு த₃த்₃ரு’ஶுஸ்த மேவ தூ₃ராத்
அசரமதே ₃வமநந்ய தே₃வதாஸ்தா: — 24.19 —

ப₃ஹுவித₄முபஹார ஜாதமக்₃ர்யம்
ஸுரபதிபி ₄: ஸ்வய மாஹ்ரு’தம் முகுந்த₃:
அபி க₃க₃ந சரைர த்₃ரு’ஷ்ட பூர்வம்
ஸமமவரோத₄ ஜநஸ்ய ஸம் விபேஜே — 24.20 —

உபசித ஶிக₂ரே வதா₃ந்ய ரத்ந:
உசித கு₃ஹாஶ்ரித ஹம்ஸ தூல தல்பே
ப₃ஹுரிவ ஸ ப₃பவ் ₄ விஹார ஸைலே
ப்ரதி மணி பி ₄த்தி விப₄க்த சாரு பி ₃ம்ப₃: — 24.21 —

யுக₃பத₃கி ₂லமாத₃ரேண ஸாக்ஷாத்
யுவதி ஜநஸ்ய நித₃ர்ஶயந் முகுந்த₃:
அஸக்ரு’து₃பக₃மய்ய சித்ரஶாலா:
அநக₄ஸமாதி ₄த₃ஶாமிவாததாந — 24.22 —

அநிதர மநஸாம் ஸ்வ வல்லபா₄நாம்
நரக ஜிதா நிரபாய வைப₄வேந
ப₄வ ப₄ய வி நிவாரிணீ ஸ்வ ப₄க்தி :
லலித விஹார முகே₂ந லம்பி ₄தா அபூ₄த் — 24.23 —

ப்ரமுதி ₃தவி பு₃தா₄ஹ்ரு’த ப்ரக்லு’ப்தை :
கநக ஸரோஜ வநைர லங்க்ரு’தாநாம்
அதி ஶய மவரோத₄ தீ₃ர்கி ₄காணாம்
அதி ₄ஸுர ஸிந்து₄ ஸமீஷிதம் நித₃த்₄யவ் –24.24 —

விஹரதி வநி தாஜநே ததீ₃யை :
அபலபி தாமவ லோகந ப்ரபா₄வை :
புநரபி ஹரி நீல ரத்ந பா₄ஸா
த₃து₄ர ஸிதோத் பல ஸம்பத₃ம் ஸரஸ்ய: –24.25 —

ஸ்தி₂ர த்₄ரு’தி மதி ₄ரோப்ய ரத்ந டோ₃லாம்
கு₃ண க₄டிதாமிவ மாத₄வ: ஸ்வ மாயாம்
அக₃மயத க₃தாக₃தாந்ய பீ₄ஷ்ணம்
ஸுக்ரு’த ஜுஷ: ஸ்வய மங்க₃நா: ஸ்வ தந்த்ர: — 24.26 —

ருசிர கநக ஶ்ரு’ங்க₃ வக்த்ர வாந்தை :
ப்ரதி தநு குங்குமவாரிபி ₄: ப்ரஸிஞ்சந்
அஜநயத₃நுராக₃யோக₃மந்த:
ப₃ஹிரபி தோய விஹாரதோ வதூ₄நாம் — 24.27 —

நவ மணி பரிகல்பிதேஷு நாத₂:
கமல வநாந்தர கேலிமந்தி ₃ரேஷு
ஶ்ரிய இவ ஸுத்₃ரு’ஸோ க்₃ரு’ஹீத பத்₃மா:
ஹ்ரு’தி ₃ நித₃தே ₄ புருஷோத்தம: ப்ரதீத: — 24.28 —

தி₃ஶி தி₃ஶி மகரந்த₃வர்ஷ தி ₃க்₃தா₄ம்
விவித₄பராக₃விப₄க்த ஸூர்ண சித்ராம்
பு₄வம ப₄ஜத ஸாக மங்க₃நாபி ₄:
புலகித த்₃ரு’ஷ்டிஷு புஷ்ப மண்ட₃பேஷு –24.29 —

அநு விஹித மஹோத்ஸவோ யதா₂ர்ஹம்
விதரண தோஷித வந்தி ₃ப₃ந்து₄ வர்க₃:
பரிணய நவிதி₄ம் லதா வதூ₄நாம்
அதநுத ஸூதவரை : ப்ரியார்பிதாநாம் — 24.30 —

ஸுத ப₃ஹு மதபா₄கி ₃நாம் ஶுகாநாம்
உபஹ்ரு’ததி ₃வ்யரஸோ பபோ₄க₃ பா₄ஜாம்
ஶ்ருதி மது₄ரகி ₃ராம் ஸ்வ ஶிஷிதாநாம்
அதிஶய ஸித்₃தி ₄மத₃ர்ஶயத் ப்ரியாப்₄ய: –24.31 —

அநுக்ரு’த நிஜ ஶக்திபி ₄: ப்ரியாபி ₄:
ஸஹ கு₃ண ப₃ந்த₄ விப₄க்த ஸந்நிவேஸை
முஹுரிஹ நிபதத்₃பி₄ருத்பதத்₃பி ₄:
கரண வஸைரிவ கந்து₃கைர தீ₃வ்யத் — 24.32 —

நிஜ யுவதிஷு யத்₃யபி த்ரிதா₄மா
நயநபிதா₄நவிஹாரமாஜஹார
ந தத₃நுசரிதம் ததா₂அபி தாபி ₄:
த்ரிபு₄வந த்₃ரு’ஷ்டி நிரோத₄ஶங்கி நீபி ₄: –24.33 —

ஶ்ருதி விஹிதம வந்த்₄யயந் ஸ்வ த₄ர்மம்
ப்ரதிதி ₃நமந்யபரோ யதா₃ ப₃பூ₄வ
தது₃பசரணதஸ் ததா₃ அபி தாஸாம்
ஸமஜநயத் ப்ரிய போ₄க₃மேவ கால: –24.34 —

மணிபருவக மஞ்ஜுலஸ்தநீபி ₄:
மது₄ஸமயாபக₃மே வராங்க₃நாபி ₄:
ஸிதமணி விஹிதான் ஸ யந்த்ரதா₄ரா –
வ்யதிகர ஶீதலிதாந பு₄ங்க்த ஸவ்தா₄ந் –24.35 —

ஸ்ப₂டிக ஸத₃ந தீ₃ப்தி த₃த்தஹஸ்தாம்
முரபி₄த₃ஸேவத ஸாத₃ரம் ஸதா₃ர:
அபஜலத₃ நிஸோதி ₃தஸ்ய ஸோபா₄ம்
ஹலத₄ர காந்தி ப்₄ரு’தஸ் துஷாரபா₄ஸ: –24.36 —

அகு₃ருபி ₄ரஸிதை ரநூரு கௌ ₃ரை :
நவ கு₄ஸ்ரு’ணைரபி நிர்விவேஶ நாத₂:
ஹி மரு’து மவரோத₄ஸுந்த₃ரீணாம்
ஸ்தந பரிரம்ப₄ ஸமர்பிதைர் விலிப்த: –24.37 —

அநலஶகடிகாபி ₄ரப்ய ஜய்யம்
ஶிஶிரஸமீரணமஞ்ஜஸா ஜிகா₃ய
அவிரல பரிரம்ப₄ லம்ப₄நீயை :
ஸ்தநகலஸோஷ்மபி ₄ராத்ம வல்லபா₄நாம் -24.38 —

உபநிஷது₃பேத₃ஶஸாபி ₄லாஷை :
உபசரிதோ முநிபி ₄: ஸநந்த₃நாத்₃யை :
ரதி பதி ஸமயஸ்தி ₂தோ வதூ₄நாம்
லலித கலாக₃மதே ₃ஶிகோ ப₃பூ₄வ — 24.39 —

கலமது₄ரகி₃ராம் கலா ப்ரஸங்கா₃த்
அதி மத₃நோபநிஷத் பரம் ரஹஸ்யம்
ப்ரிய ஹித ருசி ராக்ஷரம் ப்ரியாணாம்
ஶ்ருதிஷு சகார ஶிகா₂மணி: ஶ்ருதீநாம் –24.40 —

நிருபதி ₄க நிஜ ப்ரபா₄வ க₃ர்ப₄ம்
பரிஷதி ₃ விஶ்வ பதி : ப்ரியா ஸஹாய:
கிமபி நிஶமயாம் ப₃பூ₄வ கீ₃தம்
ப்ரமுதி ₃தகிந்நரத₃ம் பதி ப்ரயுக்தம் — 24.41 —

ம்ரு’து₃கரதல லீலயா ம்ரு’த₃ங்கா₃ந்
அஸமய நர்தித நீல கண்ட₂யூதா₂ந்
த்₄வநயதி த₃யிதே விடூ₃ரபூ₄மே :
ஶ்ரியமிவ தா: புலகோத்₃க₃ மைர புஷ்யந் –24.42 —

கர கமல பரிக்₃ரஹேண த₄ந்யம்
வரதநுஸம்ஸதி ₃ வாத₃யந் விபஞ்சீம்
அவிதி ₃தக₃மநாய கா₃யகை : ஸ்வை :
உபரதகீ₃ திபி ருந்முகை ₂: ஸிஷேவே — 24.43 —

ஶ்ருதி மது₄ ஸுப₄கை ₃ரதீ₃நஹ்ரு’த்₃யை :
ஶ்ருத க₄ந நாத₃ஶிக₂ண்டி₃நீக₃ணஶ்ரீ:
மது₄ரி புவநி தாஜந: ஸமாஜே
த்₄வநி பி₄ரமாத்₃யத தி₃வ்ய து₃ந்து₃பீ₄நாம் –24.44 —

ஸ லலித கரணாங்க₃ ஹார ஹ்ரு’த்₃யம்
ஸஹ த₃யி தாபி ₄ருதா₃ரதி ₃வ்யநாட்யம்
அநுதி ₃நமநிமேஷ த₃ர்ஶநீயம்
ஜித மது₄ர ப்ஸரஸாம் த₃த₃ர்ஶ ந்ரு’த்யம் –24.45 —

அபி ₄நயமபி ₄நந்த்₃ய நர்தகீநாம்
ஸ்வயமுபதி ₃ஷ்டமலங்கி ₄தோ பேத₃ஶம்
புநரபி முதி ₃தஸ்த மேவ யுஞ்ஜந்
அவிதித பூர்வமிவாத₃ராத₃பஶ்யத் — 24.46 —

ப்ரதி யுவதி க்₃ரு’ஹீத நைக ரூப:
ப்ரணயவதீபி ₄ரநந்ய இத்யுபேத:
அபஹ்ரு’த மணி பாது₃க: கயாசித்
பத₃மபி க₃ந்துமஶக்நுவந் நிவாஸீத் –24.47 —

அநவஹித தயா ஸகீ₂ஸமக்ஷம்
த்₃ருத முபஹூய ஸமாக்₂ய யேதரஸ்யா:
முஷி தமந ஸமத்₃பு₄தைர் விலாஸை :
இத₃மபி நாம தவேத் யுவாச முக்₃தா₄ம் — 24.48 —

ஸமுசிததி ₃நலங்க₄நம் ஸ பத்ந்யா:
பரிபணிதம் ஸ்வயமப்₄யு பேத்ய நாத₂:
ஸ்மித மது₄ரமுகோ ₂ ஜித: கயாசித்
விவஶ இவாக்ஷ விஹாரதோ ப₃பூ₄வ — 24.49 —

அநுக₃த நிஜ பி ₃ம்ப₃மேநமந்யா
மணி முகுரஸ்த₂மவேஷ்ய மந்த₃ஹாஸம்
ந க₂லு தத₃வலோகநாய பஶ்சாத்
வ்யதநுத ஸாசி விதி₄ம் ததே₃க த்ரு’ப்தா — 24.50 —

புலகிநி குசகுட்மலே பரஸ்யா:
கத₂மபி ஸாத்₄வஸகம்பி தாக்₃ர ஹஸ்த:
ஸ்தி ₂ரசரஜக₃தே ₃கதி ₃வ்யஶில்பீ
விஷம தமம் விலிலேக₂ பத்ர ப₄ங்க₃ம் –24.51 —

ம்ரு’து₃ஸுரபி ₄ஸுஜாத ப₃ந்து₄ராபி ₄:
ப்ரணித₃த₄த₃க்₃ர நிப₃த்₃த₄ பங்கஜாபி ₄:
முஹுரஸித த்₃ரு’ஶாம் ஸ்வ கண்ட ₂யோக்₃யாம்
பு₄ஜலதி காமமிமீத மாலிகாபி ₄: — 24.52 —

அப₄ஜத ஸ ச தாஶ்ச தூ₃தி காநாம்
அம்ரு’த பரிப்லுத பே ₄ஷ ஜாயமாநை :
ப்ரதிதி ₃நமித₃மாதி ₃மம் ப்ரமோத₃ம்
ப்ரணய விரோத₄ஸிதாஸி தைர்வ சோபி ₄: –24.53 —

நி ஜ பத₃பரிசார காங்ஷிணீபி ₄:
கதிஷு ப₄வேஷு ஸமர்சி தாங்க்₄ரிபத்₃ம:
ப்ரதி விதி ₄ம ப₄ஜத் ப்ரஸாதி ₄காவத்
ப்ரிய பரிகர்ம விதா₄நத: ஸ தாஸாம் –24.54 —

நிஜ ஸமுத₃ய ஸம்ப₄வைர் நிஶாயாம்
ப்ரணய பயோ நிதி ₄வீசி காவிஸர்பை :
ப்ரணதி பி ₄ரிவ விப்₄ரமை : ப்ரியாணாம்
ப₃ஹுமதி பே₄த₃மவாப யாத₃வேந்து₃: –24.55 —

ஶரது₃பக₃மஸோதி ₄தா இவாப:
துஹி நகரோத₃ய நிர்மலா இவாஶா:
முரபி ₄து₃பக₃ம ப்ரஶாந்த கே₂தா₃:
ப்ரதி யயுருந் மந ஸஸ்தமாய தாஷ்ய: — 24.56 —

அம்ரு’த மயமி வோத₃தி₄ம் தமுச்சை :
அநுஸகி ₂ லோசந ஶுக்திபி ₄: பி ப₃ந்த்ய:
அவஶ நியத சித்த வ்ரு’த்தி மேகாம்
அத₃து₄ர த்₃ரு’ஷ்ட பரஸ் பராம வஸ்தா₂ம் –24.57 —

ஸ்மர ஜநகதநு: ஸ்வ த₃ர்ஶிநீநாம்
நநு விரஹ: ஸுத்₃ரு’ஶாம் நிமேஷ ஏவ
இதி கில விக₃ணய்ய விஶ்வ கர்தா
நியதம கல்பயத₃ப்ஸரஸ் த்வமாஸாம் — 24.58 —

அநுசரப₃ஹுமாநமாப்துகாமை :
அவஸரவித்₃பி₄ரநு ஸ்ம்ரு’தாத் மரஷை :
அநு தி ₃ந முபநீதமாதி ₃தேயை :
அம்ரு’த மபாய யத ப்ரியா: ப்ரதீத: — 24.59 —

ப்ரிய வசந ஶதைருதா₃ரவாதீ₃
ரஹஸி மந: ஶ்ருதி ரஞ்ஜ கைர்வி சி த்ரை :
முக₂கமல மதூ₄பமை : ப்ரகாமம்
மத₃முதி ₃தா இவ மாநி நீரகார்ஷீத் — 24.60 —

அதி சயித கு₃ணை : ப்ரியோப போ₄கா₃த்
வஸந விபூ₄ஷண மாலிகாதி₃பி ₄ஸ்தா:
முத₃மதி ₄கதமாம் த₃து₄ஸ் தருண்ய:
ப்ரணய ரஸோ ஹி ரஸ ப்ரகர்ஷ ஹேது: –24.61 —

அபி ₄லபந மநஸ் க்ரியாதி பாதி –
ந்யநு பு₃பு₄ஜே யது₃புங்க₃வேந தாஸாம்
அதி ஶயமிதரே தரம் ப்ரயச்ச₂ –
ந்த்யபி ₄நவயவ்வந ஸம்பத₃ப்ரகம்ப்யா –24.62 —

அஜ நிஷத குதோ நு பா₄க₃தே₄யாத்
த்ரிபு₄வந மங்க₃ல தீ₃பிகா: ஶுபா₄ங்க்₃ய:
யது₃பதி ஸஹ த₄ர்ம சாரிணீபி ₄:
ஸுக₂மநக₄ம் பு₄வி யாபி ₄ரந்வபா₄வி — 24.63 —

அதி ₄பு₄ஜக₃பதி ஶ்ரியோப பு₄க்தம்
யுக₃பரிபாகவிஹாரிணம் யுவாநம்
நரபதி ப₃ஹு மாநதோ நதாங்க்₃ய:
ஸுலப₄மிவாந்வ ப₄வந் ஸ்வ தல்ப பா₄ஜம் –24.64 —

ஶக யுவதிக போல பாண்ட₃ராபை ₄:
ஶஶிஶக லைரிவ நாக₃வல்லி பத்ரை :
ஸ்மர ஸுப₄டய ஸோநிபை₄ர நந்த₃த்
யுவதி ஜநோ பஹ்ரு ’தைஸ்தத₃ர்பி தஸ்தா: — 24.65 —

ஜக₃து₃பஜநநாதி ₃ஜாதபூ₄ம்ந:
க இவ வதூ₄ஜந மோஹநோ விஹார:
கத₂மிவ ஸ குதஶ்ச கீர்தநீய:
ப்ரதி ₂தமநோப₄வதந்த்ர பார த்₃ரு’ஶ்வா — 24.66 —

யதி பி₄ரநுபு₃பூ₄ஷித: ஸ தாபி ₄:
யது₃பதி ரத்₃பு₄த ரூப வேஷஶீல:
நிருபதி ₄கர ஸாம்ரு’தவ்க₄ஸிந்து₄:
ஸததம பூர்வமபூர்வ மந்வ பா₄வி — 24.67 —

ஹரி பரி சரணேந தோஷி தாநாம்
ஹரிண த்₃ரு’ஶாம் விப₄வம் விபா₄வயந்த:
அபஜஹ ஸுர வாப்த ஸம்யமா: ஸ்வாந்
அபரிமிதா நணிமாதி₃ஸித்₃தி ₄பே₄தா₃ந் — 24.68 —

ஸரித இவ ம்ரு’கீ₃த்₃ரு’ஶஸ்தமேகம்
மஹித கு₃ணவ்க₄மஹோத₃தி₄ம் ப₄ஜந்த்ய:
அபி ₃ப₄ருரநபாய மைகரஸ்யம்
முநி க₃ணிதஶ்ச ஸ ஏவ முக்த போ ₄க₃: — 24.69 —

அநுப₄வ ரஸதோ ஜக₃த் ப்ரஸூதே :
அபசித ஸுப்தி ஸுஷுப்ததி ₄வாஸ்தா:
விதமஸி விஷயே ஸ்தி₂தா இவாஸந்
விரதி விஹீந விஹார ஜாக₃ரேண — 24.70 —

ப்ரதிதி ₃நமித ரேதராநுகு₃ண்யாத்
ப்ரசிதம யோக₃வியோக₃ஸம்ப்ரயோகை ₃:
ரஸமதி ₄கமவா புராய தாஷ்ய:
ப்ரணயிநி ஶார்ங்கி ₃ணி பா₄க₃தே₄ய பூ₄ம்நா — 24.71 —

ரவிருசிரமணி ப்ரதீ₃பகேஷு
ஸ்பு₂ரத₃ ஸிதா கு₃ருதூ₄மதூ₄பிதேஷு
ஸஹ யுவதி க₃ணை : க்ஷணோ பமேயாம்
அநயத வாஸ க்₃ரு’ஹேஷு வாஸ தேயீம் –24.72 —

புலகித வபுஷாம் ஸவே பதூ₂நாம்
க₄நரஸபா₄விதக₄ர்ம பி₃ந்து₃பா₄ஜாம்
ஶ்லத₂மிவ ஸுத்₃ரு’ஶாமமுஷ்டி மேயம்
சிகுரம கு₃ம்ப₄யத₃த்₃பு₄தம் சிரேண — 24.73 —

ஸ்வ வதூ₄ர வதூ₄தபவ் ₄மபா₄வா:
ஸ்வத₃மாநா: ஸ்வயமாத்மநைவ த்ரு’ப்த:
அநுபூ₄ய ந த்ரு’ப்யதி ஸ்ம நாத₂:
தமபி ப்ரேம விலீந சேதஸஸ்தா: — 24.74 —

சபலப்ரதி கூல தீஷ்ணரூக்ஷா:
ஸ்த்ரிய இத்யாக₃மிகைர் நித₃ர்ஶிதார்த₂:
ப்ரதி ₂தோ யது₃வீரவல்லபா₄பி ₄:
பரிவாதோ ₃அயமபாக்ரு’த: ப்ரு’தி₂வ்யாம் –24.75 —

ஶரணாக₃தஸர்வபாபேமாேக்ஷ
க்ரு’த ஸங்கல்பமிஹாநுபூ₄ய க்ரு’ஷ்ணம்
பரிதோ அபி ததா₂விதா₄நுபூ₄தி :
ஸ்மர லப்₃தா₄ ப்ரதி லம்பி₄தா ப்ரியாபி ₄: –24.76 —

அநகா₄மநபாய ப₄க்தி ரூபாம்
அநுபூ₄தி ம் யது₃வீர வல்லபா₄நாம்
அநுகர்துமபி ப்ரவர்தமாநை :
அவஸைரேவ ஸமஹிதைரபா₄வி — 24.77 —

உத₃தவ் ₄ ப₃ஹவோ ரமா ப₃பூ₄வு:
யதி ₃ வைகைவ க்₃ரு’ஹீத நைகரூபா
இதி நாம விமர்ஶமாத₃தா₄நா:
த₃யிதா: ப்ரேஷ்ய நநந்த₃ தே₃வ வந்த்₃ய: — 24.78 —

அஜிதஸ்ய விஶால துங்க₃ பூ₄ம்நா
பு₄ஜமத்₄யேந பயோத₄ரைஶ்ச தாஸாம்
இதரே தர ஸம் வ்ரு’தத்வ மாஸீத்
பரி ரம்பே ₄ பரிதோ மித₂: ஸமத்வம் — 24.79 —

பரிஹாஸ குதூஹலீ ப்ரியாணாம்
விஹிதத்₃யூத விஹார கௌதுகாநாம்
உப₄யத்ர ஜயம் ஜகா₃த₃ ப்ரு’ஷ்ட:
கிதவஸ்தே ₂யபதே ₃ நிவேஶித: ஸந் — 24.80 —

ஸ்வயமாதி ₃கவி : ப்ரகல்பி தாபி ₄:
ப்ரணயோல்லங்க₄நரவ்ஷ்ய முத்தி தீர்ஷு :
ப்ரஹஸந் ப₃ஹுஶ: ப்ரஹேலிகாபி ₄:
மதி மவ்ட்₄யம் வித₃தே ₄ மநஸ்விநீநாம் — 24.81 —

ஏகீப₄வத்₃பி₄ரயுதைரபி மந்மதா₂நாம்
யத் காந்தி பி ₃ந்து₃ ப்ரு’ஷதா அநுக்ரு’தி ர்ந ஶக்யா
ஸம் ப்ரேஷ்ய தம் யது₃பதிம் யமிநோ அபி நூநம்
ஸ்த்ரீ பா₄வமேவ மநஸா பி₃ப₄ராம் ப₃பூ₄வு: — 24.82 —

க்ரு’ஷ்ணாநுபூ₄தி விப₄வேந க்ரு’தார்த₂ பா₄வா:
தத்₃வல்லபா₄ஸ் த்ரித₃ஶ மாத்ரு’தயா சகாஸு:
யத்பாத₃ பங்கஜ பராக₃ஜுஷாம் ஶஶம்ஸு:
ஜந்மாத்₃பு₄தம் ஜக₃தி கு₃ல்மலதாதி ₃காநாம் — 24.83 —

ஶ்யாேமா ப₃பூ₄வ க¦மெஸௗ ஸுத்₃ரு’ஶாம் கடாைக்ஷ:
ஶ்யாமாஸ் தத₃ந்வய வஶாத₃த₂வா தருண்ய:
தாபி ₄: கிமஸ்ய வவ்ரு’தே ₄ மஹிமா மஹீயாந்
தாஸா மநேந யதி ₃ வேதி பு₃தை ₄: ஶஶங்கே — 24.84 —

அக்₃ராம்ய மேவ பரிஹாஸ ரஸம் விதேநே
நாஶ் லீலமாஹ ந ம்ரு’ஷா ந ச மர்மபே₄தீ₃
த₄ர்மா விருத்₃த₄விப₄வோசித காமகாம:
ஸ்த்ரீணாம் வரேண பு₃பு₄ஜே வரதோ ₃ வரஸ்த்ரீ: — 24.85 —

தாராபி ₄ரிந்து₃ரிவ பா₄நுரிவ ப்ரபா₄பி ₄:
யுக்தோ வஶாபி ₄ரிவ வாரண யூத₂நாத₂:
வித்₃யாபி₄ராத்ம விதி₃வாப்₄யதி ₄கம் விரேஜே
யோகே ₃ஶ்வரோ யுவதிபி ₄: ஸஹ மோத₃மாந: — 24.86 —

பாயம் பாயம் ப்ரேயஸ: காந்தி மாத்₄வீம்
மாத்₃யந்தீபி ₄ர்மஞ்ஜுலாலாபி நீபி ₄:
ப்ரத்யே கோக்தி ஶ்லாக₄ந ப்ரீணிதாபி ₄:
ப்ராயோ போ₄கா₃: பர்யவாஹ்யந்த தாபி ₄: –24.87 —

கரண வ்யபாய ஸமயே புநர் ப₄வம்
விநி வர்த்ய ஶாஶ்வத ஸுக₂ம் ப்ரதா₃ஸ்யதா
ஸ்வபதா₃நுபூ₄தி ருத₃பாதி ₃ தாத்₃ரு’ஶீ
ஸுத்₃ரு’ஶாம் ஸ்வ ஸம்மதி ப்₄ரு’தாம் க₃தா₃ப்₄ரு’தா — 24.88 —

தத்₃க₃தேந மநஸா விவஶாநாம்
தந் மயீ க்ரு’ததி ₄யாமிவ தாஸாம்
அப்ரலுப்த ரஹஸாம ப₄ஜேதாம்
ஸ்வப்ந ஜாக₃ரத₃ஸே ந விஸேஷம் –24.89 —

ஶ்ரிய மநபாயிநீம் வஸுமதீமிவ த₃த்தகராம்
ஸஹ மஹிஷீ க₃ணேந விபு₄ரேக இவாநுப₄வந்
யது₃பி₄ரநந்த தார்ஷ்ய ப்ரு’தநேஶ நிபை ₄: ஸஹிதோ
நிஜ பத₃மஸ்மரந் நிஹ நிவாஸ மரோசயத –24.90 —

உபசித சித்ர த₄ர்மமுபஶாந்தவிபக்ஷ ப₄யம்
முதி ₃த வதூ₄ ஜந: ஸ முக₂ரம் நிக₃ம த்₄வநபி :
ப₃ஹுவித₄ ரத்ந ஶாலி ப₃ஹுமாந்ய ஸமக்₃ர கு₃ணம்
வலய ஸமம் பு₄ஜஸ்ய வஸுதா₄வலயம் பு₃பு₄ஜே — 24.91 —

அநிதர ஜந லப்₄யாம் ப்ரீதி மாஸேது₃ஷீபி ₄:
ஸுசிர மநு ப₃பூ₄வே ஸ்வர்க₃மோக்ஷாதி ஶாயீ
நிருபதி₄க ரஸாப்₃தி₄ம் நிர் விஶந்தீபி ₄ராத்₃ய:
குலயுவதி பி₄ரித்த₂ம் கோ அபி ஶ்ரு’ங்கா₃ர பூ₄மா — 24.92 —

ஸஹஜ ப₃லஸ மேத: ஶக்ர பூர்வை ரஜய்ய:
ஸமுதி ₃தவிஷ மாஸ்த்ரஸ் தாத்₃ரு’ஶா நந்த₃ஹேது:
அவிதி ₃தரசநேந ஸ்வேந பார்தா₂ய கீ₃த:
ஸ்வயமஜநி ஸ காம: கோ அபி
த₄ர்மா விருத்₃த₄: — 24.93 —

ஸ்வ பத₃நலிந பா₄ஜாம் ஸ்வர்க₃மோக்ஷவ் யதா₂ர்ஹம்
கரணவிக₃ம காேல கல்பயிஷ்யந் க்ரமேண
மது₄ரிபுரிஹ நூநம் மந்த₃புண்யை ரலப்₄யவ்
ஸமதநுத விஹாரைஸ் தாவுபவ் ₄ ஸம் ப்ரயுக்தவ் –24.94 —

த ஸ்வபதநலிந பாஜாம் என்கிறசுலோகத்திற்குத் தமிழுரை கேளீர்;
தன் திருவடித் தாமரையடைந்தார்க்கு உடல் விடுங்காலத்திலே தக்கவாறு ஷ்வர்க்கமும்
மோக்ஷமும் முறையே அளிப்பவனாய் மதுசூதனன் அற்பபுண்யம் செய்கவர்கள் அடைய
ஆகாத ஸ்வர்க்க மோக்ஷங்கள் இரண்டையுமே சேர்த்து இங்குத் தனது விஹாரங்களாலே விஸ்தரித்தருளினான்”. சுலோகத்தின் கருத்தைக் கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டீர்களல்லவா? எழுதினவர் ரு கருத்தை வைத்துக்கொண்டு எழுதின பங்க்திகளா இவை?( மதநுத) என்று மூலம், நு -விஸ்தாரே; என்றுதாதுவாகையாலே, விஸ்தரித்தானென்றார்;(ஸம்) என்று உபஸர்க்கமிருக்கையாலே விஸ்தரித்தருளினானென்றார். எதை விஸ்தரித்தருளினான்? போகமோக்ஷங்களிரண்டையும், எப்படி விஸ்தரித்தருளினான் -சேர்த்து விஸ்தரித்
தருளினான்.எதனாலே – விஹாரங்களாலே. (முறையே அளிப்பானாய் ) என்றுஒன்றுகிடக்
கிறது. அதற்கு என்ன உபயோகமோ அவர்தாமேயறிய வேண்டும். அந்தேவாளிகள் அறியக்
கூடும். “பெருப்பெருத்த புண்ணியங்கள் செய்து பெறவேண்டிய மறுமைப் பேறுகளை இவ்விடத்தில் கருஷ்ணலீலைகளை நேரில் ஸேவிக்கப்பெற்றவர்கள் புண்ணியமொன்றுமின்றியேபெற்றார்கள் ; “இங்கேகாண இப்பிறப்பே மகிழ்வர்’ என்ற திருவாய்மொழியின் படியேயாயிற்று’ என்றிரண்டுவரியில் முடிக்கவேண்டியதற்கு அர்த்தமற்றவிஸ்தரம்.

நாரீ த்₃ரு’ஷ்ட்யா நியமிததி ₄யோ நாக நாதே ₂ஶ்வரத்வம்
ஸம்போ₄கே ₃ ச ப்ரவண மநஸ: ஶாஶ்வதம் ப்₃ரஹ்ம சர்யம்
அத்ரைகஸ்யாம் புரி நிவஸத: ஸர்வ லோகாதி ₄கத்வம்
நித்₄யாயந்தஸ் த்வரிதமதரந் து₃ஸ்தராம் தஸ்ய மாயாம் — 24.95 —

ஆஸீதே₃வம் பரிணதமதி ₄த்₃வாரகம் த்₃வாபராந்தே
வ்யாஸ ப்ரக்₂யாவி ப₄ஜந ப₄வத்₃வேத₃ ஶாகோ ₂பமாநாம்
சிந்தாதீதம் யது₃பதி மந:ப்ரீதி சிந்தாமணீநாம்
ஏகம் தாஸாம் ப₄வ ரஸ பு₄ஜாம் பா₄க்₃ய மேகாத பத்ரம் — 24.96 —

கு₃ருபி ₄ரநக₄சித்தை ராஹிதோ தா₃ர பூ₄மா
ஸுரபி ₄தரஸமே தத் ஸூந்ரு’தம் வேங்கடேஶ:
வ்யதநுத யது₃வீரப்ரீதி மிச்ச₂ந் ப்ர பூ₄தாம்
கவி கத₂கம்ரு’கே₃ந்த்₃ர: ஷேமத₃ம் காவ்ய ரத்நம் — 24.97 —

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்-விம்ஶ: ஸர்க₃: -பாணாசுர வதம், ஸ்ரீ உஷா பரிணயம்

December 25, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

அதோ ₂பஹூதை : புருஹூதஜேதா
ஸேநேஶ்வரை ரப்ரதி மாந வீர்யை :
அபீ₄ஷிபி ₄: ஸூர்ய இவாபி ₄தீ₃ப்த:
குபே₃ர கு₃ப்தாம் ககுப₄ம் ப்ரதஸ்தே ₂ –20.1 —

ப்ரயாண தூர்யத்₄வ நிரஸ்ய பூ₄யாந்
க₄ர்மாந்த ஜீமூதர வாநுகாரீ
அநர்தயத்₃த₄ர்ம மயூர மாத்₃யம்
ப்ராப்தஸ்தி ₂திம் பாத₃யுகே₃ந பூ₄ம்யாம் –20.2 —

நப₄:ப்ரு’தி ₂வ்யோரு பதி ₃ஷ்ட கம்பே
நாத₂ஸ்ய யாத்ரா படஹப்ரணாேத₃
உஷே தராஸாம் நயநம் சகம்பே
வாமேதரம் பா₃ண புராங்க₃நாநாம் — 20.3 —

தஸ்யேந்து₃பி₃ம்ப₃ம் ஸிதமாதபத்ரம்
பா₄ஸ்வாந் மணீந்த்₃ரோ மஹநீய தேஜா:
தாராஶ்ச முக்தாவலயா விரேஜு:
ஶிகீ₂ ரதா₂ங்கா₃க்ரு’தி ராத்மதா₄ம்ந: –20.4 –

அக்₃ரே முகுந்த₃ஸ்ய தத₃க்₃ர ஜந்மா
தை₃த்யை : ஸமம் ஜந்ய விஹார மிச்ச₂ந்
அவாஹயத்₃ யாத₃வ பூ₄பதீநாம்
வரூதி ₂நீம் ஶம்ப₃ர வைரி பூர்வாம் — 20.5 —

கத₂ஞ்சிது₃த் ஷிப்த கரேண ஸோட₄ம்
பு₄க்₃நாக்₃ர போ₄க₃ம் பு₄ஜகே₃ஶ்வரேண
ஆஸந்ந பா₄ராத்ய யஜாத ஹர்ஷா
விஶ்வம் ப₄ரா ஸைந்ய ப₄ரம் விஷேஹே — 20.6 —

ப்ரஸ்தா₂நபா₄ஜி ப்ரத₂மே யதூ₃நாம்
ப்ரு’த்₂வீ ஸ்வயம் தத்₃ ப₃ல ரேணு லக்ஷாத்
பா₄ராவதார ப்ரியவாத₃ லுப்₃தா₄
ப்ராேயா யயவ் பத்₃ம பு₄வ: ஸகாஶம் –20.7 —

அஸேஷ தச்சா₂த₃யதா தி₃க₃ந்தாந்
ஆரோஹதா பூ₄மி ப்₄ரு’தாம் ச மூர்த்₄ந:
ப்ராயேண ஸேநாரஜஸா ஸ்வமேவ
ப்ராது₃ஷ்க்ரு’தம் லாக₄வ முல்ப₃ணேந — 20.8 —

ரதா₂தி ₃கோ₄ஷை ரத₂ ஶார்ங்க₃பாணே :
கல்பாத்யயை கார்ண வநாத₃கல்பை :
வித்ராஸிதேவ த்ரித₃ஶாரி லஷ்மீ:
இயேஷ க₃ந்தும் யது₃வீர து₃ர்க₃ம் — 20.9 —

அத₂ க்ஷணா தா₃த்ம பு₄வம் ப்ரயாந்தம்
பரிஷ்க்ரு’தம் பஞ்சபி ₄ராயுதா₄க்₃ர்யை :
ஆஶாப₃லேந ஸ்வய முத்த ராஶா
ப்ராய: ப்ரதீயாய ஜக₃த் ப்ரதீஷ்யம் — 20.10 —

புரம் தத: ஸோணித பூர்வமக்₃ரே
த₃த₃ர்ஶ தை₃த்யாதி ₄பத₃ர்ப ஹந்தா
க₂கே ₃ந்த்₃ர பக்ஷாநில தீவ்ரகா₄தாத்
த்ராஸாதி ₃வோத் கம்பித கேது ஹஸ்தம் –20.11 –

புரோப கண்டே ₂ புரபி₄ந் நியோகா₃த்
ப்ராகார பா₄வம் ப்ரமதா₂ ப₄ஜந்த:
ப்ரலம்ப₃ ஹந்து: ப்ரஸமீஷ்ய வேக₃ம்
பீ₄தா: பலாயந்த ப்₄ரு’ஶார்த நாதா₃: –20.12 —

இதஸ்தத: ஸம் பததாம் யதூ₃நாம்
வ்யக்தாநு ப₃ந்த₄ம் பி₃ருதை ₃ருதா₃ரை :
ஸுர த்₃விஷ: ஶுஶ்ருவுரே கதாநம்
கலத்₄வநிம் காஞ்சநகா ஹலீநாம் — 20.13 —

கஶாக்₃ர ஸம் ஸ்பர்ஶ மம்ரு’ஷ்யமாணை :
ஸமீரவேகை ₃: ஸமரா வலிப்தா:
உத₃க்₃ரஹேஷா முக₂ரைஸ் துரங்கை ₃:
வ்ரு’ஷ்ண்யந்த₄கா வைரி புரீமவ்ரு’ண்வந் –20.14 —

உத்₃வேல வேகா₃ந் ஸ்தநதோ க₃பீ₄ரம்
ஔர்வ ப்ரதிச் ச₂ந்த₃ விதீ₃ப்த த்₃ரு’ஷ்டீந்
அசோத₃யந் தா₃நவ வப்ரப₄ங்கே ₃
ஸ்தம்பே₃ரமாந் ஸாக₃ர போத கல்பாந் –20.15 —

ப்ராகார ப₄ங்கே₃ ப்ரஸப₄ம் ப்ரயுக்தா
த₃ம் போ₄லிபீ₄மாயத த₃ந்த காண்டா₃:
ஊர்த்₄வ ப்ரவ்ரு’த்தைர் நிஜ ஹஸ்த தாலை :
உத்தம்ப₄யாமா ஸுரி வாந்தரிக்ஷம் –20.16 —

அஸஹ்ய வேகை ₃: ஸஹஸா ப₃லவ் கை ₄:
ஆக்ரம்யமாணா ப₃லிநாம் யதூ₃நாம்
ப்ரசுஷுபே ₄ தை₃த்ய புரீ ப்ரபூ₄தா
ஸம் வர்தபி₄ந்நேவ ஸமுத்₃ர வேலா –20.17 —

யதா₂ர்த₂ஶவ்ர்யா யது₃வீர யோதா₄:
ஸ்தா₂நாநி சித்தாநி ச தா₃நவாநாம்
வ்யகம்பயந் விக்ரம ஸத் கதா₂நாம்
ஸித்₃தா₄ந்த பா₄கை ₃ரிவ ஸிம்ஹ நாதை ₃: –20.18 —

ஜஹார சித்தாநி பி₃பே₄த₃ ஸவ்தா₄ந்
ஶ்ரோத்ராண்யரீணாம் ப₃தி ₄ரீசகார
அநந்ய ஶப்₃த₃ம் ச ஜக₃த்₃விதேநே
கோ₄ரஸ் ததா₃ யாத₃வ ஸைந்ய கோ₄ஷ: –20.19 –

விமத்₂யமாநாத் ஸ்வ புராத்₃ய தூ₃நாம்
மந்தா₂சலேநேவ மஹா ப₃லேந
விநிஷ்பபாத த்ரித₃ ஶாரிநேதா
காேல ஸமுத்₃ராதி ₃வ காலகூட: — 20.20 –

ஸரோஷரூஷோ ப₃ஹு தீ₃ப்த ஹேதி :
தி₃ஸோ தி₃த₄க்ஷந் நிவ தை₃த்ய வாஹ்நி :
க்ரு’ஷ்ணாம் பு₃வாஹ ப்ரமுக₂ம் ப்ரதஸ்தே ₂
தாபச் சி₂தா₃ தேந ஶமம் ப்ரயாஸ்யந் –20.21 –

ஸரித்பதீநாமிவ ஸந் நிபாேத
வார்ஷ்ணே யதை ₃தேய ப₃லோத₃தீ₄நாம்
அத₃ ப்₄ரஸங்கோ ₄ஷமபூ₄த பூர்வம்
யுகா₃ந்த ஸம்வாதி ₃ ப₃பூ₄வ யுத்₃த₄ம் –20.22 —

ப₃லத்₃வய ஷுண்ண மஹீத லோத்த₂ம்
ரஜஸ் ததா₃ ஸம் வ்ரு’த ஸர்வ லோகம்
அகல்பயத் ஸ்வேதர தத்த்வ லோபாத்
அபஞ்ச பூ₄தாமிவ விஶ்வ ஸ்ரு’ஷ்டிம் –20.23 —

ப்ரதீ₂யஸா ஸூஷ்ம நிரந்தரேண
க்ஷவ் மாபி ₄ராமேண பராக₃ பூ₄ம்நா
ப்ரச்ச₂ந்ந ஸே நாங்க₃தயா ததா₃நீம்
ஆஸீஜ் ஜய ஶ்ரீரவ குண்டி₂தேவ — 20.24 —

ரஜோநுப₃ந்தா₄த₃பி ₄ஸம் வ்ரு’தாங்கீ₃
பா₄ஸ்வத் கர ஸ்பர்ஶ மநஶ் நுவாநா
நிவாரிதா ஶாவிததிஸ் ததா₃ஆஸீத்
நப₄: ஸ்த₂லீ நாகிபி ₄ரப்ய த்₃ரு’ஶ்யா –20.25 —

ரணாக்₂ய த₃ர்ஸே ரஜஸோத்தி ₂தே ந
ப்ரச்சா₂த்₃யமாநே தமஸேவ பா₄நவ்
நிஸ் த்ரிம்ஶதா₄ராஸலிலே நிமக்₃நா:
ஶுத்₃தி₄ம் பராமந்வ ப₄வந் ஸுயோதா₄: — 20.26 —

அஸ்ரு’க்ச₂டாஸார வஶாத் த்₄வஜிந்யா
ரஜ: ஸமேதே தமஸி ப்ரஶாந்தே
ஸத்த்வாநுரூபம் வித₃தே ₄ ப்ரமோத₃ம்
ஸமாந்மித₂: ஸம் முக₂யந் ப்ரகாஶ: — 20.27 —

ததோ ஹரஸ்த்ராதுமநா: ஸ்வ ப₄க்தம்
த₃த்தாப₄யம் தா₃நவ ஸார்வ பவ் ₄மம்
அநுத்₃ருதோ பூ₄த க₃ணைர நந்ைத:
ப்ரத்யுத்₃யயவ் விஶ்வபதிம் ப்ரகுப்யந் — 20.28 —

தமுந்மதோ ₃த₃க்₃ர வ்ரு’ஷாதி ₄ரூட₄ம்
ஸிதாசலே மேருமிவ ஜ்வலந்தம்
ஶரை : ப்ரதி ப்ராஸ்தி ₂த ஶார்ங்க₃ த₄ந்வா
தே₃வம் ஸுதா₄ஸூதி கலாவதம்ஸம் –20.29 –

ஶிலீமுகை ₂: ஶவ்ரித₄நுர் வி முக்தை :
விஸ்மாரிதாந் பூர்வ விகத்த₂நாநி
பலாய மாநாந் ப்ரமதா₂நஸேஷாந்
மேநே பஶூநேவ பதி : பஶூநாம் — 20.30 —

ஆஸ்வாத₃நீம் தா₃நவ ஸோணிதாநாம்
அகுண்டி₂தாம த்₃ரிவிதா₃ரணே அபி
அநாஹதாஸ்த்ரோ யுதி ஶம்ப₃ராரி:
ஸம்ஸ்தம்ப₄யாமாஸ கு₃ஹஸ்ய ஶக்திம் Á–20.31 —

க்லேஶாதி ₃தோ₃ஷைர பரா ஹதேந
க்ரீடா₃மநுஷ்யேண ஜநார்த₃நேந
ஜ்வரே நிரஸ்தே கி₃ரிஶ ப்ரயுக்தே
வீத ஜ்வரம் விஶ்வமித₃ம் ப₃பூ₄வ — 20.32 —

அத₂ ப்ரயுக்தாந ஸுரேந்த்₃ர கு₃ப்த்யை
ப்ரஸஹ்ய வஹ்நீநபி பஞ்ச ஜித்வா
அஜ்ரு’ம்ப₄ யத்₃ பா₄வித ஜ்ரு’ம்ப₄ணாஸ் த்ரோ
வ்ரு’ஷ த்₄வஜம் விஷ்ணுர சிந்த்ய பூ₄மா –20.33 –

ஶரவ்யபூ₄ தத்ரிபுரே அப்யமோக₄ம்
ஶூலாயுதே ₄ ஶவ்ர்யம வேஷ்ய ஶவ்ரே :
புரந்த₃ர ப்ரத் யுபரோத₄ஜாதம்
வ்யயோஜயந் விஸ்மயமாதி ₃தேயா: — 20.34 —

பா₃ண: ஸஹஸ்ரேண பு₄ஜை : ப்ரமாத்₃யந்
ஆத்மாநுரூபை ரஸுரை : ஸமேத:
அஸஹ்ய ஶஸ்த்ராஸ் த்ர ப₃லோ ப₃லாதீ₃ந்
ப்ரத்ய க்₃ரஹீத் ப்ரத் யயித ப்ரபா₄வாந் — 20.35 —

ஸ வஜ்ர நிர்கோ₄ஷநி பா₄ட்ட ஹாஸோ
கா₃த்ரேண ருந்த₄ந் க₃க₃ நாவகாஶம்
உத₃க்₃ர த₄ந்வா ஶர வ்ரு’ஷ்டி முக்₃ராம்
உத்பாத ஜீமூத இவோஜ் ஜகா₃ர — 20.36 —

ஶராஸ நைரர்த₄ஸஹஸ்ர ஸங்க்₂யை :
யோத்₃து₄ம் ப்ரவ்ரு’த்தோ யுக₃பத் ப்ரக்ரு’ஷ்டை :
ப்ரதி த்₃ருதாந் ப்ரார்த₃யத ப்ரகுப்யந்
ஏக: ஸமஸ்தாநபி யாத₃வாக்₃ர்யாந் — 20.37 —

அத₂ க்ஷணா த₃ந்தரி தாந்தரிக்ஷா
வாத்யா விஹங்கே₃ந்த்₃ர விஹார ஜாதா
அலாத சக்ர ப்ரதிமாந கார்ஷீத்
பா₃ணாஶநீந் பா₃ணக₄ந ப்ரஸூதாந் — 20.38 —

க₃ருத்மத: பக்ஷ மருத் ப்ரசாராத்
தூ₃ரீ க்ரு’தோ வாருணநாக₃பாஸை :
உஷா ஸஹாய: ஸரத₂: ஸத₄ந்வா
ஜக்₃ராஹ தை₃தேய ப₃லஸ்ய பார்ஷ்ணிம் –20.39 —

விநிக்₄நதோ தை ₃த்யப₃லவ்க₄மக்₃ரே
சாபாபி ₄யோகோ ₃ யுதி ₄ ஶம்ப₃ராரே :
சகார சக்ரீ க்ரு’தசந்த்₃ரலே க₂ம்
ஶம்போ₄ஶ்ஶிர: கம்ப மநந் யலப்₄யம் — 20.40 —

ராமோ அபி லங்காதி ₄பேத: ஸமாநாந்
முஸல்ய வ்ரு’த்தீந் முஸலேந பி ₄ந்த₃ந்
சமத்க்ரு’திம் சக்ரத₄ரஸ்ய குர்வந்
ஆத₃த்த ஸங்க்₃ராம விஹாரமக்₃ர்யம் –20.41 —

உத₃க்₃ரஶ்ரு’ங்கோ₃ல் ப₃ண பா₃ஹு பூ₄ம்நா
ஸஞ்சாரி கைலாஸ நிபே₄ந தேந
அம்ரு’ஷ்யதா ஷிப்ரமகாரி ஸைந்யம்
நாகா₃தி ₄பேநேவ வநம் நலாநாம் — 20.42 —

ஸ லாங்க₃லா கர்ஷண நிர் விசேஷ்டாந்
நிஷ்பிஷ்ய நாகா₃ந் நிஷத₄ப்ரமாணாந்
ரண ஷிதிம் ஸோணிதமாம் ஸபங்கை :
ஆமக்₃நநிஸ் பந்த₃ரதா₂மகார்ஷீத் — 20.43 —

ஹலாயுதோ ₄த்ஷிப்தரதவ்₂க₄பூர்ணம்
ஸமீஷ்ய தே₃வா: ஸஹ ஸா அந்தரிக்ஷம்
ஆஶங்க்ய தை₃தேயப₃லோபயாநம்
த்₃ரு’டா₄ர்க₃லாம் தே₃வபுரீம குர்வந் — 20.44 —

ப்ரபு₄ஶ்ச கிஞ்சித் ப்ரத₂யந்நமர்ஷம்
க்ரீடோ ₃சிதாந் ப்ரேஷ்ய க்ரு’தாபி ₄யோகா₃ந்
விவ்யாத₄ பா₃ணாநுசரா நயோத்₄ய:
ஶார்ங்கோ₃த₃ தே ₄ரூர்மிநிபை ₄: ஶரவ்க₄: — 20.45 —

அத்₃ரு’ஷ்ட தூணீர மநுப்ல வாந்யை :
அக்₃ராஹ்ய ஸந்தா₄நவிமோக்ஷ பா₃ணம்
அமம்ஸதைநம் ஸ்தி ₂ரசாப சக்ரம்
ப்ரத்யேக மாத்மாபி ₄முக₂ம் ப்ரதீபா: –20.46 —

நிஷங்க₃ த₃த் தாக்₃ர கரே முராரவ்
நிர்பி₄த்₃ய தை ₃த்யாந் பு₄வமாவி ஶந்த:
லஷ்யாணி தூ₃ராத₃லப₄ந்த பா₃ணா:
ரஸாதலஸ்தை₂ரபி தா₃நவேந்த்₃ரை : — 20.47 —

ந ஸேஹிரே ஶார்ங்க₃ பயோத₃ ஜாதாம்
நாராச வ்ரு’ஷ்டிம் த₃நுஜேந்த்₃ர யோதா₄:
அமோக₄வாசா கவிநா ப்ரயுக்தாம்
அந்தர்வதீம் ஸூக்தி மிவாநபி₄ஜ்ஞா: — 20.48 —

யதோ யதோ யாத₃வ ஸைந்யமாஸீத்
ததஸ்ததோ தை₃த்ய சமூர பாயாத்
க₃தாநி தேஜஸ் தம ஸோரி வாராத்
ஆஶா விகல்பேந தயோர பூ₄வந் — 20.49 —

அஶூர ஸந்த₃ர்ஶந தாப ஶாந்த்யை
ஸ்வஹேதி தா₄ரா க்₃ரு’ஹ மாஶ்ரயந்தீம்
விஹாரயாமாஸுரிவ ஸ்வ வ்ரு’த்த்யா
வீர ஶ்ரியம் வ்ரு’ஷ்ணி குல ப்ரவீரா: — 20.50 —

க்ரு’பாண பி₄ந்நத்₃விப கும்ப₄ முக்தா
முக்தா: பதந்த்யோ ரணவ ப்ரபூ₄மவ்
ப்ரரோஹதாம் வீர யஶஸ் தரூணாம்
பீ₃ஜாந்யபூ₄வந் ப₃ஹுதா₄ விகீர்ணா: –20.51 —

த்₃வி பாசலேப்₄ய: ஶர வ்ரு’ஷ்டி பாதை :
ஆபாதி தாநாம் ருதி ₄ராபகா₃நாம்
அகல்பயந் யோத₄முகே ₂ந்து₃க்லு’ப்தா:
கௌமுத்₃வதீம் ஸம்பத₃ மட்ட ஹாஸா: — 20.52 —

அத்₃ரு’ஶ்ய தாந்யோந் யவிலூந ஶீரஷை :
ஆரப்₃த₄மந்யோந்ய க்ரு’த ப்ரஶம்ஸை :
அநேக ரூபைக ஸுராங்க₃நாப்தை :
அபாஸ்த வைரம் ரண ரங்க₃ ந்ரு’த்தம் — 20.53 —

ப்ரயோஜிதை : ப்ராண த்ரு’ணை : ப்ரக₃ல்பா₄
ரத்₂யாபி ₄க₃ம்யேஷ¨ ரணாபணேஷு
க்ஷண ப்ரபா₄லோல தரை ரவிந்த₃ந்
யாவத் யுகா₃ந்தாநி யஸோத₄நாநி — 20.54 —

க்ரு’தாபதா₃நா: க்ரு’ஶ ஜீவி தாஶா:
ஸ்வ நாத₂நாமாங்கஜ யோக்தி மந்த:
ஜயஶ்ரியம் தோ₃ஷ்ணி நிவேஶயந்த:
கீர்திம் தி₃க₃ந்தா வஸதா₂ம குர்வந் — 20.55 —

அமோக₄ஶஸ்த்ராஸ்த்ர தரங்க₃பீ₄மே
வைரோப ஸந்த₃ர் ஶிதபா₃ட₃பா₃க்₃நவ்
வி கத்த ₂நம் ஸம்யதி விக்லவாநாம்
வீரோத₃தவ் ₄ கோ₃ஷ்பத₃வத்₃ விலில்யே –20.56 —

ஜிகீ₃ஷு பி₄ர் ஜீவித ஸம்ஶயாக்₂யா
தோ₃லா அதி ₄ரூடா₄ த்₃ரு’ட₄ வைரப₃ந்தா₄
அதூ₃ரதோ யாத₃வமர்ஷவேக₃ம்
மித₂: ப்ரதி ஷேபஶதாநி சக்ரே — 20.57 —

ஶர ப்ரயாேகா₃சிதவி ப்ரகர்ஷம்
ஸம்பாத₃யிஷ்யந்த்ய பராங்முகா₂நாம்
ப்ரஶம்ஸ நீயாநி ப₃பூ₄வு ராஜவ்
பஶ்சாத் ப்ரயாதாநி த₄நுர் த₄ராணாம் — 20.58 —

ப்ரதீப வ்ரு’த்த்யா ப்ரதி க்₃ரு’ஹ்ய ஶூரா:
ஶத்ரு ப்ரயுக்தாம் ஶர வ்ரு’ஷ்டி முக்₃ராம்
த்ரிவிஷ்ட பாநோகஹ புஷ்ப வ்ரு’ஷ்டிம்
வைமாநி கைரந்வப₄வந் விமுக்தாம் — 20.59 —

தஸ்மிந் நக₄ச்சே₂தி ₃ நி த₄ர்ம யுத்₃தே ₄
காயத்யஜாம் க்ரு’ஷ்ண ஸமீஷி தாநாம்
ஸுஹ்ரு’த்₃ த்₃விஷத்₃பே₄த₃வதாம் ஸமோ அபூ₄த்
ஸ்வர்கா₃ பவர்கா₃ந்த க₃தி : ஸுபந்தா₂: — 20.60 —

ப₃பூ₄வ கீர்த்யா த்₄ரு’தேகதகஶ்ரீ:
நிஸ்த்ரிம்ஶதா₄ராத₄ர பங்க்தி நீலா
ரணஸ்த₂லீ யாத₃வ தா₃நவாநாம்
ஆகாலிகீ ப்ராவ்ரு’டி₃ வாஸ்த்ர வர்ஷை : –20.61 —

அலங்க₄நீயா ரத₂வாரணாத்₃யை :
ஆஸாக₃ராத₃ ப்ரதிக₄ ப்ரவாஹா:
உத₃க்₃ர பூ₄ப்₄ரு’த் ப்ரப₄வா: ப்ரு’தி ₂வ்யாம்
உத்தஸ்தி ₂ரே ஸோணித ஸைவ லிந்ய: — 20.62 —

ஜ்வலத் ப்ரதாபாநலஜாத தீ₃ப்தி :
ஸமித்₃வதீ ஸைந்ய யுக₃ஸ்ய லீலா
ஜயஶ்ரியா வீரபதிம் வராயா
வைவாஹிகீ ஸம்பதி ₃வாப₃பா₄ஸே –20.63 —

அமர்ஷ வைஶ்வாநர தூ₄மலேகா₂ம்
அந்யோந்ய ஸம்ஹார நிஶாம் க்ரு’பாணீம்
அவேஷ்ய ம்ரு’த்யோர் ப்₄ருகுடீ மநந்த₃ந்
வீரா: ஸ்வ விக்ராந்தி ஶிரீஷமாலாம் –20.64 —

மநஸ்வி ந: ஸம்யதி வீரஶய்யாம்
அபூ₄ஷயந் ப்ரீதி க்ரு’த: ஶிவாநாம்
ஸுகா₂வஹா: ஸ்வர்க₃விலாஸிநீநாம்
விஹார ஶய்யாமபி வீர லாேகே — 20.65 —

ஸமாஶ்ரிதை ராஹவஸத்ர தீ₃க்ஷாம்
குர்வத்₃பி₄ரந்யோந்ய மிவோபகாரம்
அலப்₄யத ஶ்லாகி ₄தமப்ஸரோபி ₄:
தை₃த்யைர் மநுஷ்யை ரபி தே₃வ பூ₄யம் — 20.66 —

பர்யஸ்தபாத₃ம் பதிதை : ப்ரு’தி ₂வ்யாம்
வஜ்ராஹ தைரத்₃ரிக₃ணை ரிவாந்யை :
த்₃வி பேந்த்₃ர யூதை₂ர் த்₃ருத ஸர்பிணீநாம்
த்₃வீபாயிதம் ஸோணித வாஹிநீநாம் — 20.67 —

ஹதாவஶிஷ்டா த₃நுஜேந்த்₃ர ப்₄ரு’த்யா:
ப்ரத்₃யும்ந விக்ராந்தி ப₄யாந் நிவ்ரு’த்தா:
தத்கேது சிஹ்ந ஸ்மரணேந பி₃ப்₄யு:
நிஶாம்ய த்₃ரு’ஷ்டீர் நிஜ வல்லபா₄நாம் — 20.68 —

ஸ்வகோபசாபேந தத: ப்ரணுந்நோ
மஹேஶ்வரா நுக்₃ரஹ ஸம்ஹிதாத்மா
அதீத்ய மவ்ர்வீமிவ தை₃த்ய ஸேநாம்
பா₃ண: ஸ்வயம் ஶவ்ரிப₃லம் விவேஶ –20.69 —

வ்யப₄ஜ்யத வ்யாப்தஹயோர் மிஜாலம்
ப₃லம் யதூ₃நாம் ப₃லிநந்த₃ நேந
ஏகேந பர்யாப்த பு₄ஜாத்₃ரி பூ₄ம்நா
நாதோ ₂ நதீ₃நாம் நல ஸேது நேவ — 20.70 –

அஸ்த்ராணி தேந ப்ரஹிதாநி தூர்ணம்
விஹாரபூ₄ம்நா விததா₂நி க்ரு’த்வா
யுகா₃ந்த ஸூர்யாயுத யோக₃தீ₃ப்தம்
ராமாநுஜந்மா ஜக்₃ரு’ஹே ரதா₂ங்க₃ம் — 20.71 —

அதா₂ச்சி₂நத்₃பீ₄ஷண ஸத்த்வ ஸாராம்
பு₄ஜாடவீம் பூ₄தபதே : ஸமக்ஷம்
சக்ரேண ஸங்கல்ப நிபே₄ந க்ரு’ஷ்ண:
கிம் வா விதவ் ₄ வைரிணி கேந ரஷ்யம் — 20.72 —

அவ்ரு’ண்வத ஷமாம் ஹரி சக்ர லூநா
மஹத்தரா பா₃ண பு₄ஜா: பதந்த:
மஹேந்த்₃ர ஹஸ்த ப்ரஹி தேந பூர்வம்
வஜ்ரேண பி₄ந்நா இவ ஸாநுமந்த: — 20.73 —

அமர்த்ய ஶத்ரோ ரவலே பஹேதவ்
ப₃ஹிர்த்₃வயே பா₃ஹுவநே விலூநே
த₃யாத₄ந: ஸம்யதி தை₃த்ய ஹந்தா
ப்ரதீ₃ப்த மஸ்த்ரம் ப்ரதி ஸஞ்ஜஹார –20.74 —

அநகி நீமாஶ்ரித தீ₃ர்க₄ நித்₃ராம்
பா₃ணோ நிக்ரு’த்தாமபி பா₃ஹு பங்க்திம்
அஜாத கே₂தோ ₃ பு₃பு₃தே ந நூநம்
விபத்₃பி₄ரஶ்ராந்ததி ₄யோ ஹி வீரா: –20.75 —

அஶாந்தத₃ர்பஸ் த்வஸுரோ பு₄ஜாப்₄யாம்
விக்ரு’ஷ்டத₄ந்வா விஸ ஸர்ஜ பா₃ணாந்
ததை₃நமந் வீஷ்ய நி₂ஹந்து மைச்ச₂த
ஜந்யோத்₃த₄தம் தை ₃த்ய மநந்ய ஜந்ய: — 20.76 —

ததஸ் தம வ்யாஹததி ₃வ்யஶக்திம்
மத்₄யாஹ்ந மார்தாண்ட₃விதீ₃ப்த ஹேதிம்
பஶ்யந் முகுந்த₃ம் ப்ரதி போ₃த₄ பூ₄ம்நா
ஜயோக்தி பூர்வம் கி₃ரிஸோ ஜகா₃த₃ — 20.77 —

மைவம் ப்ரேபா₄ மத் பரிவார பூ₄தம்
ப₃லே : ஸுதம் பா₃தி ₄து மர்ஹஸி த்வம்
மயைஷ ரஷ்யோ த₃நுஜஸ்த்வயா அபி
ஸ்வ ப₄க்த பு₃த்₃த்₄யைவ ஸமீக்ஷணீய: — 20.78 —

த்வமாதி ₃தே₃வ: த்ரி யுக₃ஸ் த்ரிதா₄மா
ஶுத்₃தா₄ம ஶுத்₃தா₄ம் ச விபா₄வ்ய ஸ்ரு’ஷ்டிம்
அகர்ம தந்த்ரை ரவதாரபே₄தை ₃:
க்ரீட₃ஸ்யநந்தை ரபி ஜந்துஜாதை : –20.79 —

அயம் ஸ தே வேத மயோ க₃ருத்மாந்
வேதை ₃ர ஸேஷரபி வேத்₃யஸே த்வம்
விபா₄க₃ம் ரு’ச்ச₂ந்த்ய மராஸ் த்வத₃ந்ேய
ஶாகை ₂கதே ₃ஸேஷு ஶகுந்த கல்பா: –20.80 —

ஸிஸ்ரு’க்ஷ தஸ்தே பு₄வநாநி ஸப்த
ப்ரஸாத₃தோ நாத₂ ப₃பூ₄வ வேதா₄:
ஸம் ஹர்து காமஸ்ய தவைவ கோபாத்
அஹம் த்வயா த₃த்த நிஜாதி ₄கார: –20.81 —

அவிக்ரியஶ் சேஷ்டயஸி த்வேமேகா
விஶ்வாநி பூ₄தாநி விஹார ஶக்த்யா
அசேஷ்டமாந ப்ரக்ரு’தீந்ய யாம்ஸி
ஸ்தா₂தா அப்யயஸ் காந்த இவாபி ₄முக்₂யாத் — 20.82 —

அலங்க்₄ய மாயா கு₃ண ஜால பீ₄தாந்
அநந்ய சித்தாந நுகம்பமாந:
ஸ்வ த₃த்த யைவ ஸ்வ பதா₃ப்₃ஜ பா₄ஜா
ப₄க்த்யா ஸ்வயம் தாரயஸே ப₄வாப்₃தி₄ம் –20.83 —

பா₄ராவதாராய பு₄வோ அவதீர்ணம்
ப₄வந்த மந்தர் ஹிததி ₃வ்யபா₄வம்
ஸம்ஸ்தா₂பயந்தம் நியமேந த₄ர்மம்
த₄ர்மம் பரம் வேத₃ விதோ ₃ விது₃ஸ்த்வாம் –20.84 —

விதா₄ய தை₃த்ய ப்ரக்ரு’ தீந ஸேஷாந்
நாமா வஸேஷாந் நர லோக பாலாந்
கரிஷ்யஸி த்வம் கருணார்த்₃ர சேதா
நாத₂ ஷிதிம் நாவமிவாஸ்த பா₄ராம் –20.85 —

த₃யாக்ஷமாப்₄யாமிஹ தீ₃வ்யஸி த்வம்
லஷ்மீ மஹீப்₄யாமிவ லாலிதாத்மா
தத் க்ஷம்யதாமஸ்ய மதே₃க ப₄க்தே :
ஆஜாநத: ஸ்வாத்ம சமத் க்ரியேயம் –20.86 —

நாதோ ₂ யதூ₃நாமிதி பூ₄தநாதே ₂
ஸ்வ ப₄க்த ரக்ஷாமபி ₄யாசமாேந
அதர்கித ப்ரத்யுபகார லேஶாம்
ஆகஸ்மி கீமாத்₃ரி யதாநு கம்பாம் — 20.87 —

ப்ரவிஶ்ய தே₃ஹம் புநருத்ப தந்த்யா
ஸ்வ மவ்லி பா₄ஜேவ ஸுரஸ்ர வந்த்யா
வாசா மந:ப்ரீதி மிவோத்₃வம ந்தம்
ஶவ்ரிஸ் ததா₃ ஶூலிந மித்யுவாச — 20.88 –

தவைஷ ப₄க்தோ மம சேதி மந்யே
க்ஷாந்தஸ் ததோ நித்ய மஸவ் மயா அபி
ந சாஸ்தி ப₃ந்தோ ₄ரபி ஸாம்பராயே
வீர வ்ரதம் தா₄ரயதோபகார: — 20.89 —

விஹார ந்ரு’த்தாநி விதந்வதஸ்தே
வல்கு₃த்₄வம் வாத₃யிதா ம்ரு’த₃ங்க₃ம்
ப₄ஜத்வவிச் சி₂ந்நத்₄ரு’திர் ப₄வந்தம்
த₃த் தாப₄யோ தை₃த்யபதிர் மயா அஸவ் –20.90 —

அதா₂ந்வ மம்ஸ்த த்ரிஜக₃ந் நியந்தா
பத்யு: பஶூநாம் ப்ரணயாநு ரோதா₄த்
பா₃ணாவ ரோத₄ப்ரமதா₃ஜநாநாம்
ஸ்தா₂யீ நி மங்க₃ல்யவ வி₄பூஷணாநி –20.91 —

ததோ அ ₃ஸூரேந்த்ர ப்ரணி பாத பூர்வம்
ஜக₃த் பரித்ராண ரதம் ஜகா₃த₃
உஷா நிருத்₃தா₄ந்வயத: ஸமீஷ்யா:
ப்₄ரு’த்யா வயம் ப்ரீததி ₄யா த்வயேதி — 20.92 —

ஹிரண்ய ரத்நாநி ஹிரண்ய பூர்வை :
ப₃லாது₃ பாத்தாந் யுபதா₃ய பா₃ண:
நிரோத₄ கி₂ந்நாவு சிதோபசாரை :
ஆநர்ச ஸஸ்நேஹ முஷாநி ருத்₃தவ் ₄ –20.93 —

ஸம்ப₃ந்தி ₄பா₄வ ப்ரதி பத்தி பா₄ஜா
ஸந்தா₄ய பா₃ணேந ஸ ஸத்ய ஸந்த₄:
உஷா பதேர் யவத கலாப₄ லஷ்யாத்
ஜேதா ஜஹாரைவ விபக்ஷ லஷ்மீம் — 20.94 —

ஹரேண த₃த்தாம் ஹரிணா அபி பா₃ண:
ஸ்தி₂ரீ க்ரு’தாம ப்ரதி கா₄ம பீ₄திம்
தநு த்ரயந் வர்ஜித லேக₂வைர:
ஶமாந்விதாமாஸ்தி₂த ஶம்பு₄ஸேவாம் — 20.95 —

யதா₂ர்த₂ நாமாநமதா₂ நிருத்₃த₄ம்
க்ரு’த்வா ஸபா₄ர்யம் க்ரு’தக்ரு’த்ய சேதா:
ஸ ப₃ந்து₄ஸைந்ய: ஸ விஸேஷ த்₃ரு’ஶ்யாம்
ப்ரத்யாய யவ் விஶ்வபதி : புரீம் ஸ்வாம் –20.96 —

தே₃வா: ஸஹஸ்ர நயநம் த₃நு ஜேந்த்₃ர மந்யே
நிர்தூ₄தமாந மநகே₄ந நிஶாமயந்த:
கூபோத₃க ப்ரப₄வ கூர்ம நயந ஜாதாம்
அஸ்வாமிக ப்ரபு₄ பரிக்₃ரஹ பு₃த்₃தி ₄மவ்ஜ்ஜ₂ந் — 20.97 —

நீதஸ் த்ரிலோகபதிநா நிஜ ராஜதா₄நீம்
பூ₄ய: ப்ரஜாத இவ பவ்ரஜநை : ப்ரதீத:
தை₃த்யேஶ்வரஸ்ய ஸுதயா ஸஹித: ஸ ரேமே
ராகா₃தி ₄கோ ரதி பதே ரநக₄: குமார: –20.98 —

அத₂ தமுஷா ஸஹாய முபயாத முபாயநவாந்
ஜந பத₃ பத்தந ப்ரப்₄ரு’தி காது₃பக₃ம்ய ஜந:
உபசரதி ஸ்ம ஸம்ய கு₃ப பந்ந த்₄ரு’திர் ப₃ஹுதா₄
யது₃நக₃ரே விவாஹ விஜேயோத்ஸவ யந்த்ரிததீ₄: — 20.99 —

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்-ஏகோந விம்ஶ: ஸர்க₃: -ஸ்ரீ க்ருஷ்ண ப்ராபோதிகம்

December 24, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

நித்ய ப்ரபு₃த்₃த₄ மபி நிர்மலயா ஸ்வ த்₃ரு’ஷ்ட்யா
நித்₃ராண வத்₃த₃ர நிமீலித நேத்ர பத்₃மம்
ப்ரா போதி₄ கீபி₄ருப ஸேது₃ரிதீவ வாக்₃பி ₄:
ஸ்வாதீ₄ந மர்த்யத நயம் ஶ்ருதி வந்தி ₃நஸ்தம் — 19.1 —

யாமிந்யபைதி யது₃நாத₂ விமுஞ்ச நித்₃ராம்
உந்மேஷ ம்ரு’ச்ச₂தி தவோந்மிஷிதேந விஶ்வம்
ஜாத: ஸ்வயம் க₂லு ஜக₃த்₃தி ₄தமேவ கர்தும்
த₄ர்ம ப்ரவர்தநதி ₄யா த₄ரணீதலே த்வம் –19.2 —

அஶ்ராந்த ஸந்ததி பி₄ராப₄ரண ப்ரகாஸை :
ஆராத்ரிகம் ப்ரமுக₂யந்த்ய இவோபசாரம்
இச்ச₂ந்தி தே ப்ரத₂ம த்₃ரு’ஷ்டி மநந்ய லப்₄யாம்
பத்₃மாநநா: பத₃ நிவேஶந த₄ந்ய ஹஸ்தா: –19.3

வ்ரு’த்₃தா₄: கத₂ஞ்சித₃ரரம் வ்யதி பி ₄த்₃ய ஹைமம்
தவ் ₃வாரிகாஸ் தவ க்₃ரு’ஹீத ஸுஜாத வேத்ரா:
நிர்க₃ச்ச₂த: ப்ரவிஶ தஶ்ச நிஶாமயந்தோ
நாத₂ த்வேத₃ கஹ்ரு’த₃யா ந ப₄ஜந்தி தந்த்₃ரீம் –19.4 —

விஶ்வைகதீர்த₂ப₄ஜநேந விஶுத்₃தி ₄மந்தோ
நித்₃ரோஜ்ஜி₂தா நிக₃ம ஸீம்நி நிஶாத்யயே ச
வைதாநிகாந் விதி ₄வஸேந விஹ்ரு’த்ய வஹ்நீந்
புண்யா ஶயா: பரிசரந்தி புரோத₄ஸஸ்தே –19.5 —

நித்₃ராவஸேந நிப்₄ரு’தேக்ஷண முத்தி ₂தாநாம்
த்₃வித்ராணி மந்த₂ர பதா₃ந்யபக₃ த்வரீணாம்
காலே க்₃ரு’ஹீத முசிதே ரஶநா: கத₂ஞ்சித்
மவ்ந வ்ரதம் ஜஹதி முக்₃த₄ வதூ₄ ஜநாநாம் — 19.6 —

ஸந்த் யஜ்யதே தரல மவ்க்திக ஜால த்₃ரு’ஶ்யை :
தாராக₃ணைஸ் த்ரித₃ஶ வர்த்ம தமால நீலம்
பத்₃மாபதே ரம்ரு’த நிர்மத₂நாவஸாநே
து₃க்₃தா₄ம்பு₃ ராஶி ப்ரு’ஷ தைரிவ ரூப மக்₃ர்யம் — 19.7 —

நாத₂ ஸ்பு₂ரந்த் யுபயதி த்₃யு மணி ப்ரகாஸே
ந ஜ்யோதி ரிங்க₃ண க₃ணா ந ச தார காத்₃யா:
தேஜஸ் விநோ அபி தமஸைவ ஸம்ரு’த்₃தி ₄மந்த:
த்வத் ஸந்நிதவ் ₄ முஷிதபா₄ஸ இவ த்வத₃ந்யே — 19.8 —

ஆநர்தி தாந் ஸலலிதம் தி ₃வஸா வஸாநே
வாசால ரத்ந வலயைர் நிஜஹஸ் ததாலை :
நித்₃ரா லஸாந் ம்ரு’க₃ த்₃ரு’ஸோ க்₃ரு’ஹ நீல கண்டா₂ந்
ஆவாஸ யஷ்டி ஶிக₂ராத₃வரோஹயந்தி — 19.9 —

ந்ரு’த்யந் த்யுதீ₃ரிதக₄ நஸ்தநி தாம காண்டே ₃
நேதீ₃யஸீம் தவ நிஶம்ய விபா₄த நாந்தீ₃ம்
சித்ராத பத்ர பரிமண்ட₃ல சாரு ப₃ர்ஹா:
ஶ்ரு’ங்கா₃ர யோநி ஶர பத்ரருசோ மயூரா: –19.10 –

நிர்க₃த்ய சித்ர க₃ருேதா நிலயாந்த ரேப்₄ய:
தாரஸ்வநாஸ்த ருணவித்₃ருமதாம்ரசூடா₃:
ரத்நாங்கணேஷு ரமணீபி ₄ர வேஷ்ய மாணா:
க்ரீடா₃ரணம் வித₃த₄தே க்ரு’கவாகு வர்யா: –19.11 —

ப்ராப்தாஸ் துலாம் ஹரித கோமல பா₃ஹ்ய பத்ரை :
கிஞ்சித் பரிஸ் பு₂ரித ஸோணமுகை ₂: ஸரோஜை :
வாமப்₄ருவாம் வலய பங்க்திஷு ஸஞ்சரந்த்யோ
மஞ்ஜு க்வணந்தி மணி பஞ்ஜர ஶாரி காஸ்தே — 19.12 —

ப்ரத்யஷிதே தமஸி யாஸ்யதி விப்ரகர்ஷம்
ஸஞ்ச₂ந்ந பா₄நுமதி ஸம்ப்ரதி ஜீவலாேகே
க₃ங்கா₃யமாந ஸலிலம் நிஜரஶ்மி யோகா₃த்
ஸிஷ்ணாஸ யே வ ஸித பா₄நுருபைதி ஸிந்து₄ம் — 19.13 —

ப்ரத்யூஷ க₄ர்ம ஸமயேந ஸமக்₃ரதா₄ம்நா
ஸோஷம் வ்ரஜ த்யம்ரு’தரஶ்மி மயூக₂பூரே
அஹ்நாய கைஶ்சித பி₄கா₄தமவாப்நுவத்ய:
தாரா: ப்ரயாந்தி விலயம் தநுபு₃த்₃ பு₃தா₃பா₄: — 19.14 —

பத்யுஸ்த்விஷாம் ப்ரஜஹத: ப்ரத₂மாப்₃தி ₄தல்பம்
ஸந்த்₄யாஸ ரோருஹத்₃ரு’ஶ: ப்ரத₂மோத்தி ₂தாயா:
ஸீமந்திதே திமிர குந்தல மத்₄ய பா₄கே ₃
ஸிந்தூ₃ர ராஜிரிவ பா₄தி மயூக₂ரேகா₂ –19.15 —

ஜ்யோத்ஸ்நாபதே ₃ஶம வதூ₄ய ஸிதோத்தரீயம்
ஸ்தோகாவ ஸேஷி தஸ தா₃ப₄ரண ப்ரப₃ந்தா₄
அங்கீ₃கரோத் யருண பா₄வித மங்க₃ராக₃ம்
ப்ராசீ தி ₃ஶா தி ₃ந பதிம் பரி போ₄க்து காமா –19.16 —

நிர்ணிஜ்ய ஸம்ப்ரதி நிஶாங்க₃நிவேஶ லக்₃நம்
காலேய பங்கமிவ ஸந்தமஸம் கலங்கம்
ஷோணீ ப்₄ரு’தா மருணதீ₃தி ₄தயோ அநு ரக்தா:
பாதா₃ந லக்த கரஸை ரிவ ரஞ்ஜயந்தி — 19.17 –

ப்ராது₃ர் ப₄விஷ்யதி சராசரஜந்து வர்கே ₃
ப்ராப்தா அரணேந விது₄நா தமஸா ச வேலா
ஆபா₄தி பா₄வி தபரஸ்பர லேஶ யோகா₃
மாயாவி பக்தி ரிவ லோஹித ஶுக்ல க்ரு’ஷ்ணா — 19.18 —

உந்நித்₃ர பத்₃ம நயந: ஸுப₄கோ ₃த்பலாப₄:
ஸம்பா₄விதோ முநி க₃ணை ருப பந்ந போ₃தை ₄:
ராகோ₃த்தராம் ஶ்ரிய மவாப்ய ரதா₂ங்க₃ஸோபீ₄
ஜாத: ஸ ஏஷ ஸமயோ ஜக₃தே ₃கஸேவ்ய: –19.19 —

நீத: ஶ்ரமம் நிஹத ராத்ரிவரூதி ₂நீக:
சந்த்₃ராத பத்ரவி நிபாத விலுப்த பூ₄மா
ப்ரத்யூஷ வைரிவிப₄வேந பராஹதாத்மா
கால ப்ரதீக்ஷ இவ க₃ச்ச₂தி காம வீர: –19.20 —

யோ அஸவ் ஜநஸ்ய தி₃ஶதீவ ஸுதா₄நி தா₄நம்
ஜாத த்₄வநி : ஶ்ருதிஷு ஜாக₃ரது₃ந்து₃பி₄ஸ்தே
மந்யே ஸ ஏவ மத₃நஸ்ய நிஶாசரஸ்ய
ஸ்வச்ச₂ந்த₃ ஸவ்ப்திக நி வ்ரு’த்தி மபி ₄வ்யநக்தி — 19.21 —

அந்தர் ப₃ஹிஶ்ச தமஸா பரிமுச்யமாநோ
ஜாக₃ர்யயா ஜக₃தி ஸம் ப்ரதி தீ₃ப்யமாநே
பஞ்சாயுத₄ஶ் சிரபரிஶ்ரம ஶாந்தி மிச்ச₂ந்
நித்₃ராமுைபதி ஹ்ரு’த₃யேஷு நிதம்பி ₃நீநாம் — 19.22 —

அக்₃ரே ப₄வந் கு₃ருரிவ ஸ்வயமாநகாநாம்
ஆதி₃ஷ்ட ஸம்பதி ₃வ கந்த₄ரயா தைவஷ:
வ்யக்தப்லுதேந நிநேத₃ந விஶுத்₃த₄ வர்ண:
ப்ரஸ்தவ்தி நாத₂ நிக₃மாந் ப்ரதி போ₃த₄ ஶங்க₂: — 19.23 —

முக்₃தா₄: ஸ்வ முஷ்டி பரிமேய மநோஜ்ஞ மத்₄யா:
பர்யாய சாபலதி கா இவ பஞ்ச பா₃ண:
ப்ராஸ்தா₂நிக ப்ரணய து₃ர் விநயோ பஶாந்த்யை
ப்ரத்யக்ஷயந் ப்ரதி நிவர்தயதீவ யூந: — 19.24 —

அந்தஶ்சகாஸத₃ ஸிதோத் பல மங்க யோகா₃த்
பா₄ஸோந்மதே₃வ பரிமீலித தாரகார்தா₄
நிஷ் பீத காந்தி மகரந்த₃ ரஸம் ப்ரதீச்யாம்
நீஹார பா₄நுசஷகம் நித₃தா₄தி ஸந்த்₄யா — 19.25 —

த்₃ரு’ஷ்ட்வா நிமீலிதவதீம் நியதி ப்ரபா₄வாத்
ஆத்ம ப்ரியாம் குமுதி ₃நீமவதூ₄ததா₄மா
ச்யோதத்துஷார நயேநாத₃கபி₃ந்து₃ரிந்து₃:
ப்ரஸ்தா₂நமிச்ச₂தி மஹத்ப்ரதி பந்ந தை₃ந்ய: — 19.26 —

போ₄க்தும் தி₃வம் நிஜ வியோக₃ விலுப்த தீ₃ப்திம்
ப்ராகே₃வ தீவ்ர ருசிநா ப்ரஹி தேவ ஸந்த்₄யா
மாலிந்ய யோக₃மபநீய கராவமர்ஸை :
ப்ராயோ யதா₂ர்ஹமநுலிம்பதி குங்குமேந –19.27 —

அர்தே₄ந பாடலமநூருகராநுஷங்கா₃த்
அர்தா₄ந்தரேண மணிமேசகமந்தரிக்ஷம்
அஸ்ப்ரு’ஷ்டதாபமதி ₄ரோஹதி நிஸ்தமஸ்கம்
ஸம்வீதபீத வஸநேந துலாம் த்வையவ — 19.28 —

பத்₃மாபதா₃ம்பு₃ருஹயாவக பிங்க₃பா₄ஸா
பா₄ஸா நிதாந்த முத₃ யாந்தரி தஸ்ய பா₄நோ :
ஆரஜ்யதே க₃க₃ந மத்₃ய ஜக₃த் ப்ரஸூதே :
நாபீ₄ஸரோ ருஹபு₄வா ரஜஸேவ கா₃த்ரம் — 19.29-

த₃க்₃து₄ம் தமோ த₃நுஜ ப்₃ரு’ந்த₃ மிவாம்பு₃ராஸே :
உத்தஸ்து₂ஷோ மது₄ரி போரிவ திக்₃மதா₄ம்ந:
உந்மேஷிணீ ஸுமநஸா முதி₃தா புரஸ்தாத்
சக்ர ப்ரபா₄மநுகரோதி மரீசி மாலா — 19.30 —

த்₃ரு’ஷ்டி த்₃வயம் நியத காலமித₃ம் ப்ரஜாநாம்
ஏகா நிமீலதி தயோரிதரா அப்ய லஷ்யா
தத்தாத்₃ரு’ஸோஸ்தவ த்₃ரு’ஸோர் யுக₃பத் ப்ரேபா₃தா₄த்
ஆலோக யோக₃மநக₄ம் ப₄ஜதாம் த்ரிலோகீ — 19.31 —

ப்ராசீந ஸைல விஷயே ப்ரசுராம் ஶுரேகா₂ம்
ஸந்த்₄யாத₃ ஶாம ருண ராக₃ க்₄ரு’தாவ ஸிக்தாம்
காேலா நிதா₄ய ஸ்ரு’ஜதீவ ஶநைஸ் தத₃ந்தே
திக்₃மத்₃யுதிம் த்ரிபு₄வநைக மஹா ப்ரதீ₃பம் — 19.32 —

பர்யாப்த ரஶ்மி நிகரேண ஸுவ்ரு’த்த பூ₄ம்நா
ஸூர்யேந்து₃பி₃ம்ப₃ யுக₃லேந ஸமஸ்தி ₂தேந
ஆபா₄தி கால வணிஜா பரிகல்ப்ய மாநா
நக்தம் தி₃வக்ஷணதுலேவ நப₄: ஸ்த₂லஶ்ரீ: –19.33 —

நைஶம் தம: ஷிபதி நந்தி ₃த சக்ரவாகே
பத்₃மாந் ப்ரபோ₃த₄யதி பா₄வித மித்ர பா₄வே
த்₃ரு’ஷ்டிம் ப்ரஸாத₃யதி த₃ர்ஶித ஸத் பேத₂ அஸ்மிந்
தோ₃ஷோல்ப₃ணா குமுதி ₃நீ ப₃ஹு மாந ஶூந்யா — 19.34 —

பாத₃ஸ்ப்ரு’ஶாம் தி₃ஶதி பூ₄மி ப்₄ரு’தாம் ப்ரகாஶம்
ஸத்த்வம் ஸமேத₄யதி ஸத்₃பி ருதீ₃ரிதார்க்₄ய:
தேஜோ க₃ணா நபி திரஸ்குருதே ஸ்வ தீ₃ப்த்யா
சக்ர ப்ரியஸ்த்வமிவ ஸம் ப்ரதி சண்ட₃பா₄நு: — 19.35 —

ஆஜாந பாண்ட₃ரதநு: பரபா₄க₃ம்ரு’ச்ச₂ந்
நீலாம்ப₃ரத்₃யுதி முஷா நிஜ லாஞ்ச₂நேந
ஸ்பீ₂தாக்ரு’தி : பரிக₃தோ மத₃ராக₃ லஷ்ம்யா
வீர த்வத₃க்₃ரஜ இவைஷ விபா₄தி சந்த்₃ர: — 19.36 —

ஸந்த்₄யோ பராக₃ஸமயம் ப்ரதி லப்₄ய புண்யம்
ஸ்நாதும் நிஶா க₃க₃ந ஸவ்த₄ தலாவதீர்ணா
ஆரக்த ரூப மவலம்ப₃ யதா கராக்₃ரம்
பத்யா ஸஹ ப்ரவி ஶதீவ பரம் ஸமுத்₃ரம் –19.37 —

தே₃வ த்வயீவ தி₃வஸாக₃மஜாக₃ரூகே
ஸம்ரக்த விஶ்வமுத₃யம் ஸவி தர்யுபேதே
அஸ்தம் ஶநைரபி ₄பதந் ப₄ஜேத ம்ரு’கா₃ங்க:
த்வத்₃ வைரிவாரவ நிதாவத₃ நேந்த்₃வ வஸ்தா₂ம் — 19.38 —

ராஜா அஸ்த மேதி ஸுஹ்ரு’தா₃ மத₃நேந ஸார்த₄ம்
தீ₃நாக்ரு’தி : குமுதி ₃நீத்₃ரு’ட₄ ப₃த்₃த₄ கோஶா
வைரீ ஸமேதி விஷமாஶ்வ இதீவ பீ₄தா
சா₂யாச்ச₂லேந ப₄ஜதே க₃க₃நம் த்ரியாமா –19.39 —

ஆம்ரு’ஶ்ய ராத்ரி மருேணாத₃ய ஜாத புஷ்பாம்
ப்ராப்தாநுதாப இவ ஸத் பத₂லங்க₄நேந
ஜ்யோத்ஸ்நாம் ஶுகம் த்₃வி ஜபதி : பரிதா₄ய நூநம்
வ்ரீடா₃நதோ விஶதி வாரிநி தி₄ம் விவர்ண: — 19.40 —

அப்₄யேதி பா₄நுருத₃ யாத்₃ரி மஸஹ்ய தே ஜா:
ஸ்தா₂தும் ஸ ஏஷ ஸமேயா ந மமேதி பஶ்யந்
ப்ராய: ஸமாஶ்ரயதி பாஶப்₄ரு’தா அபி ₄கு₃ப்தம்
தாராபதிஶ் சரமஸாக₃ரதோய து₃ர்க₃ம் –19.41 —

மூலே மநாக்₃ப₄வதி முஞ்சதி பூர்வ பா₄க₃ம்
ஸைதி ₂ல்யம் ரு’ச்ச₂தி தமால ருசிஸ் த்ரியாமா
ஆக்ரு’ஷ்யதே சரம ஸைல வேந விஹர்தும்
ஸீரா யுதே₄ந யமநேவ ஸுதா₄ம் ஶுநேயம் — 19.42 —

ப்ரஸ்தா₂ந காலப₄ ஜநாத் பரிதோஷி தேந
ஜ்யோத்ஸ்நாத்மிகாம் ஹரிவதூ₄ஸஹஜேந த₃த்தாம்
ப்ராயேண நாகவநி தாநக₂ தீ₃ப்தி லஷ்யாம்
ஸேஷாபடீம் சரம பூ₄ப்₄ரு’த₃ஸவ் த₃தா₄தி –19.43 —

ஸூஷ் மாப ₄ராமநி ஜதீ₃தி ₄திஸூத்ரலம்பீ₃
பர்யந்த லக்₃ந திமிராலக த₃ர்ஶநீய:
ஸிந்தூ₃ர ரஞ்ஜித இவைஷ விபா₄த லஷ்ம்யா:
ஸீமந்த மவ்க்திக மணி: ப்ரதி பா₄தி சந்த்₃ர: –19.44–

ப்ராலே யரூஷிதமித₃ம் ப்ரத₂மே தராப்₃தவ் ₄
மக்₃நை கதே ₃ஶமநுயாதி ம்ரு’கா₃ங்க பி₃ம்ப₃ம்
மாநச் சி₂தா₃ம் மகர கேதந ஸாயகாநாம்
ஶாநோ பலம் சிரநி க₄ர்ஷண கர்ஶி தார்த₄ம் — 19.45 –

ஆதவ் ₃ வராப₄முதி ₃தம் ஶரபாண்டு₃ மத்₄யே
பஶ்சாந் மதூ₄கபரிதூ₄ஸர மிந்து₃பி₃ம்ப₃ம்
ஸம்பத்₃யதே புநர த்₃ரு’ஶ்ய தமாம வஸ்தா₂ம்
காலார்பிதம் கரஜ சிஹ்நமிவ க்ஷபாயா: –19.46 —

நைஶம் தமிஸ்ர மருணேந விலுப்த ஸாரம்
நி : ஸேஷயந்நய முதே₃தி மயூக₂ மாலீ
ஸத் ஸேவநேந புரதோ முஷிதை கதே ₃ஶம்
வித்₃யாவதாம் வ்ரு’ஜி நராஶி மிவாந்தராத்மா — 19.47 —

உத்₃க₃ச்ச₂தா புருஷ கேஸரி ணேவ பூஷ்ணா
காலே தமோ வித₃லிதம் கரஜை : ப்ரவாலை :
கா₃ட₄ம் ஹிரண்ய கஶி போரிவ கா₃த்ரமந்யத்
ஸந்த்₄யாச்ச₂லேந ருதி ₄ரம் க்ஷரதீவ ஸாந்த்₃ரம் — 19.48 —

ப்ராப்தோத₃யஸ்ய தபநஸ்ய தவேவ தா₄ம்நா
ஷிப்தோ கு₃ஹாந்தர நிருத்₃த₄ இவாந்த₄கார:
விஶ்வா வலோகந நிரோத₄ வியாத வ்ரு’த்தே :
அத்யா ஹிதஸ்ய பரிபாக மிவைஷ பு₄ங்க்தே — 19.49 —

மக்₃நா சிரம் மஹதி ஸந்தம ஸாம்பு₃ராஶவ்
த₃ம்ஷ்ட்ராபி ₄ராம ருசிநா தி₃வ ஸாக₃மேந
உத்ஷிப்யதே த₃நுஜ ஸோணி தலோ ஹிதேந
ப்ராயோ வராஹ வபுஷா விபு₄நேவ பூ₄மி: –19.50 —

நித்₃ராமபாஸ்ய தமஸா ச த்₃ரு’ஸோ நிரோத₄ம்
ப்ரத்யங்முக₂ம் ப்ரத₂மத: ப்ரத₂யந் ப்ரகாஶம்
நிஶ்ரேயஸப்ரதி பதே₃ந நிஜேந தா₄ம்நா
விஶ்வம் ஸமாதி₄ரிவ த₃ர்ஶயதே விவஸ்வாந் — 19.51 —

ஆஶாபரீதம விவேக மிவாந்த₄காரம்
ஶங்காஶதாஸ் பத₃ம லஷித ஸர்வ தத்த்வம்
நிர்தூ₄ய ஸம் ப்ரதி நிஶாமிவ பா₃ஹ்ய வித்₃யாம்
தத்த்வாவஸாய இவ பா₄தி விபா₄தகால: –19.52 —

நிர் விஶ்ய சந்த்₃ர ஸித பத்₃ம ரஸம் நிஶாத்மா
லோலம்ப₃ஜாதி ரபி₄தோ லுலிதாந்ய புஷ்பா
த்வத்₃ வக்த்ர சந்த்₃ர நிரபாய ரஸாநி தா₃நீம்
பத்₃மாநுபைதி பரிதோஷித ராஜ ஹம்ஸாந் — 19.53 —

நாத்யந்தத: குமுதி ₃நீ ப்ரதி பந்ந நித்₃ரா
நாதீவ போ₃த₄முபயாதி ரோராஜிநீ ச
ஏதேந நூந மநயோர விஸேஷ த்₃ரு’ஶ்யா
நாதா₂நு வ்ரு’த்தி நியதே வ ப₄வத்யவஸ்தா₂ — 19.54 —

பர்யஸ்யதா ஸுரபி ₄ பத்₃மபராக₃ஜாலம்
பக்ஷா நிலேந பரிதூ₄நந ஸம்ப₄வேந
ஸம் து₄க்ஷ யந்தி மகர த்₄வஜ ஹவ்ய வாஹம்
ஶாந்தம் புந:புநரமீ ஸரஸீஷு ஹம்ஸா: –19.55 —

காலோத்தி ₂தா: ஸ்தி ₂தி ப்₄ரு’தோ கு₃ண யந்த்ரி தத்த்வாத்
தா₃நோத₃கார்த்₃ரகர புஷ்கர த₃ர்ஶநீயா:
ஸம்பா₄வ யந்த்யபி ₄முகா₂: ஸமயோ பயாதாந்
ப்₄ரு’ங்கா₃ந் வநீ பகஜ நாநிவ வாரணேந்த்₃ரா: — 19.56 —

க₃ஞ்ஜாமுபேத்ய மத₃குஞ்ஜர க₃ண்ட₃பாலிம்
மத்தாந் ஸமீஷ்ய மது₄பாந் பரி கூ₄ர்ண மாநாந்
ஶுத்₃தா₄நி ஹந்த குமுதா₃நி தமஸ்ய பேதே
பூ₄யஸ் தத₃ந்வய ப₄யாதி ₃வ ஸங்குசந்தி –19.57 —

ஸத்த்வ க்ஷமாதி ₄கதயா ஶயிதா: ப்ரு’தி₂வ்யாம்
நித்₃ரா மயீம் வ்யபக₃மய்ய நிஜாம வித்₃யாம்
நி : ஸங்க₃ வ்ரு’த்தி நியதா: ஸ்தி ₂ர ஸம்ய மார்ஹா:
முஞ்சந்தி ஸம்ப்ரதி மத₃ம் முதி ₃தா க₃ஜேந்த்₃ரா: – 19.58 —

ஸைந்யாத₃யஸ்தவ ஹயா: ஸமயே ப்ரபு₃த்₃தா₄:
சத்வார ஏவ நிக₃மாஸ்தவ மூர்தி மந்த:
ஆவர்தயந்த்ய தநு ஹேஷித வீசி பே₄தை ₃:
வைராத்ரிகம் வடுபி₄ரத்₄ யயநம் ப்ரவ்ரு’த்தம் — 19.59 —

ஆயோத₄நே விஹரேண அப்யவதா₄ நவந்த:
ப்ராஜ்யை : பரிச்ச₂த₃பரிஷ்கர ணோபசாரை –
ஸம் யோஜயந்தி ரத₂யோக₃வித₃: ஶதாங்க₃ம்
தார்ஷ்யம் த்₃விதீயமிவ ஸாரத₂யஸ் த்வதீ₃யம் — 19.60 —

நித்₃ரா வஸேஷ விக₃மே அபி மதா₃நுஷங்கா₃த்
மந்த₃ம் த்₃ரு’ஸோ முகுலயந்தி மதா₃வ லேந்த்₃ரா:
ஏஷாமநூரு கிரணை ரருணீக்ரு’தாநாம்
ஸப்த ஸ்ருதாம் ப₄வதி ஸாந்த்₄யப யோத₃லஷ்மீ: — 19.61 —

ஆலஷ்ய தூ₃ர மவரரோத₄ க்₃ரு’ஹாத₃ முஷ்மாத்
ஸ்வாபா₄விகம் வத₃ந மாருத ஸவ்ரப₄ம் தே
அம்போ ₄ருஹாம் கு₃ணமபத்ரபயந் ஸமீரோ
மந்த₃ம் பரிப்₄ரமதி மந்தி ₃ரதீ₃ர்கி ₄காஸு –19.62 —

ஆகூ₄ர்ணிதாநி ம்ரு’து₃நா பவநே ந பத்₃மா –
ந்யாவேத₃யந்தி மத₃லேஶ மயீ மவஸ்தா₂ம்
நிர்க₃ச்ச₂தாம் தவ ச வாரவதூ₄ஜநாநாம்
நித்₃ராவ ஸேஷ கலுஷாணி விலோசநாநி –19.63 —

ரேணூத்கரா: ஸரஸிஜோத் பல கைரவாணாம்
குர்வந்த்யநூருதி மிரேந்து₃ருசி ப்ரகாஶா:
ப்ராய: ஸமுத்₃ர தருணீ பரிகர்மபூ₄தாம்
சர்சாம் நவீநகு₄ஸ்ரு’ணாகு₃ரு சந்த₃நாநாம் — 19.64 —

அத்₄யாஸிதம் குமுத₃தல்பம போஹ்ய காேல
பத்₃மோத் பலாநி ஶநகை : ஶ்ரிய மாவ்ரஜந்தீம்
ஸம் வீஜயந்த்ய லகு₄சாமரத₃ர்ஶநீயை :
பஷை : ஸ்வயம் பரிஜநா இவ ராஜ ஹம்ஸா: — 19.65 —

ப்ரத்யூஷ லக்ஷண ரஸாயந ஸம் ப்ரயோகா₃த்
ப்ராலே யரஶ்மி மஹஸா ஜரஸேவ முக்தா:
பத்₃மோத்பல ப்ரப்₄ரு’திபி ₄: பரிகர்ம வத்யோ
க்₃ரு’ஹ்ணந்தி யவ்வந த₃ஶாம் க்₃ரு’ஹ தீ₃ர்கி ₄காஸ்தே — 19.66 —

ஔத்₃யாநிகீஷு ஸுமந: ஸ்வநவாப்த பூர்வம
நூநம் ஸரோருஹவ நேஷு ச நூதநேஷு
ஆதி ₃த்ஸதே வத₃ந மாருத ஸவ்ரப₄ம் தே
ஶய்யாநி காய்யமபி ₄தோ விஹரந் ஸமீர: –19.67 —

அர்ச்யஸ்ய ஸம்ப்ரதி ஸதாமவகா₃ட₄ தீர்தா₂
மந்யே ப்ரக்₃ரு’ஹ்ய நலிநீ மகரந்த₃ மர்க்₄யம்
வ்யக்தத்₃ விரே ப₂ நிநதா₃ விஹி தாபி ₄முக்₂யா
பத்யுஸ் த்விஷாம் ப்ரணயதீவ கர ப்ரஸாரம் — 19.68 —

ஜ்யோத்ஸ்நாஸகீ₂ம் குமுதி ₃நீம் ப்₄ரமர: ப்ரஹ்ரு’ஷ்யந்
நிர்விஶ்ய நித்ய பரி ஶுத்₃த₄ ருசிம் நிஶாயாம்
ராகா₃து₃பைதி நலிநீம் ரஜஸா அபி ₄ஜுஷ்டாம்
கிம் நாம நாசரதி மந்மத₂ ஹஸ்த வர்தீ — 19.69 —

ஸந்த்₄யாச்ச₂லேந புருஷோத்தம ஸாம்ப்ரதம் தே
ஸைவாது₄நா ப்₄ரு’கு₃ஸுதா தமஸாம் நிஹந்த்ரீ
பூ₄ய: ஸமுத்தி ₂தவதீ த்₄ரு’த புண்ட₃ரீகா
போ₄கா₃ய ஸாக₃ர க்₃ரு’ஹாத்₃ பு₄வ நைகயூந: –19.70 —

சந்த்₃ராதபத்ரிதி ₃வஸை வலிநீப்ரவாேஹ
மக்₃நோத்தி ₂தாம் கமலிநீமுபஸேவமாநா:
ப்ரத்யக்₃ர பி ₄ந்ந முகுல ப்ரஸ்ரு’தை : பராகை ₃:
உத்தா₂பயந்த்ய கு₃ருதூ₄ பமிவோத் பலிந்ய: — 19.71 —

பவ்ரந்த₃ரீம் தி₃ஶமநூரு நிப₃த்₃த₄ராகா₃ம்
த்₃ரு’ஷ்ட்வா ததா₂ பரிணமத்யபரா தி₃ஶா அபி
ஸ்த்ரீணாம் க₃தாநுக₃திக ப்ரதி பத்தி பா₄ஜாம்
க்₂யாதம் ததோ ப₄வதி காமித காமிநீத்வம் — 19.72 —

நித்₃ராயதே குமுதி ₃நீ சிர ஸம் ப்ரபு₃த்₃தா₄
ஸுப்தா ப்ரபோ₃த₄முபயாதி ஸரோஜிநீ ச
யாமேஷு வ்ரு’த்தி மநயோரதி ₄க₃ம்ய நூநம்
ஶிஷ்யாயிதம் த்வத₃வரோத₄நிதம்பி ₃நீபி ₄: –19.73 —

மித்ரஸ்ய லுப்த தமஸோ அப்யதி ராக₃பா₄ஜ:
ஸம் ப்ரேக்ஷணம் மம ந யுக்தமிதீவ மத்வா
மீலத்யஸவ் குமுதி ₃நீ ஸஹ தாரகாபி ₄:
ப்ராப்தம் வ்ரதம் ததி₃ஹ ராஜ பரிக்₃ரஹாணாம் — 19.74 —

ஆமோத₃யோக₃மவஶாத் ஸஹஸா ஆஶ்ரயந்தே
பத்யுஸ் த்விஷாம் தவ ச பாத₃நிஷேவணந
ஷிப்தாஸ் த்வயா ஹ்ரு’தி ₃ க்₃ரு’ஹீத ஶுச: ஷிதீந்த்₃ரா:
ஸ்வாந்தர் நிவிஷ்டமது₄பாஶ்ச ஸரோஜ கோஶா: — 19.75 —

ஆவிஸ் ஸ்மிதை ரம்ரு’த ஸிந்து₄ தரங்க₃ கல்பை :
ஆகே கர ப்ரிய தமா ஜந த்₃ரு’ஷ்டி போ₄க்₃யை :
த்வத் ஸவ்க₂ஶாயநிக ஸூரி க₃ணேந ஸார்த₄ம்
நிர்வேஶ யோக₃முபயாம நிரீக்ஷணைஸ் தே — 19.76 —

அதி ₄க₃த நிலயா நாமவ் பவாஹ்ய த்₃விபாநாம்
மத₃பயஸி விதந்வந் மஜ்ஜநோந் மஜ்ஜநாநி
ப்ரவஹதி பவமாந: ஸ்பந்த₃யந் மந்த₃மந்த₃ம்
பரிணமத₃ ருணிம்ந: பங்கஜாரண்ய கோஶாந் — 19.77 —

உபவந மது₄பாநாமுந்மத₃ ஸ்வைர கீ₃தை :
தநு மருது₃பதி₃ஷ்டைஶ் சாருலாஸ்யைர் லதாநாம்
த₃ரவிலுலிததா₃நைர் த₃ந்தி நாம் கர்ண தாலை :
ஸமய ஸமுசிதம் தே பா₄தி ஸங்கீ₃த க்ரு’த்யம் — 19.78 —

ஹரதி ரதி விஹாரைரர்த₄ விஸ்ரம் ஸிதாநாம்
யுவ ஜந ஹ்ரு’த₃யாநி ஶ்ராந்த பஞ்சாயுதா₄நி
உபஹித கு₃ணமாராது₃த்தி ₂தாபி₄ர் வதூ₄பி ₄:
குடில நியமிதாக்₃ரம் கு₃ம்ப₄நம் ஸூலிகாநாம் — 19.79 –

ஷிதிரிய மவதூ₄தத்₄ வாந்த நீலோத்தரீயா
விகஸித முக₂பத்₃மா வ்யக்த ஸந்த்₄யாங்க₃ராகா₃
அபி ₄மத கரதா₃நா நிர்வ்யபேக்ஷா த்வத₃ந்யை :
அநுப₄விதுமிவ த்வாம் த₃ர்ஶய த்யாத்ம ரூபம் – 19.80 —

மது₄ந இவ த₃யாயா: ஸாமரஸ்யம் த₃தா₄நை :
கமல வந மநந்யாம் காந்தி மத்₄யா பயத்₃பி ₄:
ப₂ணி பதி ரமணீயம் தே₃வ பர்யங்க முஜ்ஜ₂ந்
பரிணமய ஶுப₄ம் ந: பாவநை ரஷி பாதை : — 19.81 —

தி₃நமுக₂மிதி நாம ஶ்ராவித: ஸூத புத்ரை :
அப₄ஜத ஜித நித்₃ரோ ஜாக₃ரம் யாத₃வேந்த்₃ர:
ஸரித₃பக₃மகாலே ஸாது₄ ஸம்ரக்ஷணார்த₂ம்
முநி பி₄ரிவ ஸ ஏவ ஸ்தூயமாநோ முகுந்த₃: — 19.82 —

த₄நமிவ நிக₃மாநாம் த₄ர்மமுத்தம் ப₄யி ஷ்யந்
த்ரிஜக₃த₃நுவிதே ₄யம் கர்ம நிஷ்பாத்₃ய ஸாந்த்₄யம்
ஸித கு₃ண பரிதா₄நை : ஸேவிதோ மந்த்ரிமுக்₂யை :
அலமகுருத நாதோ ₂ ஹைம மாஸ்தா₂ந பீட₂ம் — 19.83 —

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம் –அஷ்டாத₃ஶ:- ஸர்க₃–ப்ரதி மார்க்க வர்ணநம்-

December 23, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

அதா₂த்ம சிந்தாநுசரேண யாஸ்யந்
விஹங்க₃ராேஜந வி பு₄: புரீம் ஸ்வாம்
உவாச பத்நீம் த₃ஶநாம் ஶுலஷ்யாத்
வமந் நிவாநந்த₃மமாந்தமந்த: –18.1 —

ஸத்யே ஸமீக்ஷஸ்வ விபாரிஜாதாம்
வ்ரு’த்தேந ஹீநாமிவ வேத₃வித்₃யாம்
நிஶாமிவ ப்ரோஷித ஶீதபா₄நும்
நாரீமநாதா₂மிவ நாக லஷ்மீம் — 18.2 —

ஆலம்பி ₃தா நம்ரமுகீ₂ ப₄வத்யா
ஹஸ்தேந ரக்தாங்கு₃லி பல்லவேந
வதா₃ந்ய வ்ரு’க்ஷஸ்ய விபா₄தி ஶாகா₂
வக்தும் வயஸ்யேவ ரஹ: ப்ரவ்ரு’த்தா — 18.3 —

ஸுபர்ண வேகா₃நிலவி ப்ரகீர்ணை :
ஸுரத்₃ருமைரந்தரித: ஸுமேரு:
ஆலஷ்யதே காலவஸேந பூ₄ய:
ப்ரரூட₄லூ நைரிவ பக்ஷஜாலை : — 18.4 —

நி ஸர்க₃கல்யாண தயா ப்ரதீதம்
ஸர்வோத்தரம் தத்த்வமிவைகமாத்₃யம்
அமும் ப்ரியே நூநமதந்த்₃ரிதாநி
ஜ்யோ தீம்ஷி ப₄க்த்யா பரியாந்த்யஜஸ்ரம் –18.5 –

விதாநவாந் வ்யோமதலேந மேரு:
தாரா க₃ணை ராஹித மவ்க்தி கேந
நிவிஶ்ய மத்₄யே ஷிதி ப₄த்₃ர பீட₂ம்
க₃ங்கோ ₃த₃கை ராத்₃ரி யதே அபி ₄ஷேகம் — 18.6 –

ஸஹஸ்ர பா₄நு ப்ரமுகை ₂: ஸமந்தாத்
ஜ்யோதிர்க₃ணை ரஸ்ய விகூ₄ர்ண மாநை :
மஹீ ப்₄ரு’தாமக்₃ரஸ ரஸ்ய மந்யே
நீராஜநம் விஶ்வஸ்ரு’ஜா ப்ரயுக்தம் — 18.7 —

ப்ரக்₂யாததா₄ம் நாமபி தி₃க்பதீநாம்
ப்ராஸாத₃வாஸாத₃ரமாஷி பந்த:
அத்₄யாஸிதா யோகி ₃பி₄ரஸ்ய நித்யம்
ராஜந்த்யமீ ரத்ந கு₃ஹா விஸேஷா: — 18.8 —

பரிஸ் பு₂ரந்த்யா: ஷிதி பத்₃ம மத்₄யே
பார்ஶ்வேஷு ஹேமாசல கர்ணிகாயா:
பஶ்ய ப்ரியே ரத்ந விஸேஷ சித்ராம்
க்ரு’ஸோந்நதாம் கேஸர ஸைல பங்க்திம் –18.9 –

வலீ விப₄ங்கை ₃ரிவ வர்ஷ பே₄தை ₃:
த்ரிபி₄ர் விப₄க்தம் த்ரித₃ஶாநுபா₄வ்யை :
ஸம் த்₃ரு’ஶ்யதே ஸாக₃ர மேக₂லாயா:
ஸுமத்₄யமே மத்₄யமித₃ம் த₄ரண்யா: — 18.10 —

அப₄ஞ்ஜநீயம் ப்ரதி ₂மாநமாப்தாம்
ஸ்தா₂நேஷ் வரை ராகலிதா மஹார்யை :
சராசராணாம் ப்ரப₄வேந தா₄ர்யாம்
சக்ராக்ரு’திம் பஶ்ய ஸமுத்₃ர நேமிம் –18.11 —

விகல்பிதாநி த்ரிதி ₃வேந பூ₄மவ்
வர்ஷாணி தி₃வ்யாநி விலோகயேதா₂:
த்₃வந்த்₃ வைரிஹ த்₃வந்த்₃வ விஷாத₃ முக்தை :
நிர் விஶ்யதே யவ்வந மேக ரூபம் — 18.12 —

இலாவ்ரு’தாந்தாம் நிஷதா₄த₃வாசீம்
விலங்க்₄ய ஹ்ரு’த்₃யாம் ஹரி வர்ஷஸீமாம்
க₂கே₃ஶ்வர: ஸம்ஶ்ரித ஹேம கூடம்
நிநீஷதே கிம் புருஷாஸ்பத₃ம் ந: — 18.13 —

வபு: ஶுப₄ம் வாஜி முகா₂ங்க₃ நாநாம்
வக்த்ரம் ச யுஞ்ஜந்நிஹ கிந்நரீணாம்
ஸ்த்ரீ ரத்ந ஸம்ஸ்ரு’ஷ்டி விதவ் ₄ விதி ₄ஶ்சேத்
த்ர்யக்ஷ: கத₂ம் பஞ்சஶரஸ்ய ஜேதா –18.14–

தி₃த்₃ரு’க்ஷமாணஸ்ய மமைஷ தே₃ஶாந்
ஸவ்யாப ஸவ்யேந க₃தி க்ரேமண
அமோக₄ வ்ரு’த்திர் க₃க₃நே க₃ருத்மாந்
விஸேஷ்டதே சித்தமிவ த்₃விதீயம் — 18.15 —

நிபத்ய சோத்பத்ய ச லங்க₄யந்தீ
நிம்நோந்நதாந் வர்ஷ விபா₄க ₃தே ₃ஶாந்
சா₂யா ஸமேந ஸ்வபதே ₂ந யாந்தம்
தரஸ்விநம் தார்ஷ்ய மிவாதி ஶேதே –18.16 —

மஹீயஸோ வேக₃வஸேந மத்₄யே
ஸீமந்த யந்நேஷ ஶரத் பயோதா₃ந்
யத்₃ரு’ச்ச₂யா ஸம்ப்₄ரு’த சாமரஶ்ரீ:
ஸம்த்₃ரு’ஶ்யதே தே₃வி தவவ் பவாஹ்ய: –18.17 —

வியத்பயோதி₄ம் தரதாம் விஶாலம்
விமாந தீ₃ப்தேந க₃ருத்மதா ந:
இயம் புர: ஸைல வநோப பந்நா
விஶ்வம்ப₄ரா பா₄தி விலோமகே₃வ –18.18 —

ஶரத்₃க₄நஸ்தோம இவோ பஸீத₃ந்
ஸம் த்₃ரு’ஶ்யதே கிந்நர நாத₂ஸைல:
ஸந்த்₄யா விஹாரச்யுத ஸம்ஹதாத்மா
ஶம்போ₄ரிவோத்₃தூ₄ல நப₄ ஸ்மராஶி: — 18.19 —

ஸுதா₄ய மாநாம் த₄நத₃ஸ்ய ஸவ்தே ₄
ஸ்வாபா₄வி கீமஸ்ய கி₃ரே ரபி₄க்₂யாம்
பர்யாகுலைர் விஷ்ணுபதீ₃தரங்கை ₃:
ஆம்ரேட₃யந்தீவ ஹராட்டஹாஸா: — 18.20 —

அமுஷ்ய தீ₃ப்தோந்நத த₃ந்த பூ₄ம்நோ நக்ஷத்ர மாலார் சித துங்க₃ மவ்ல:
பாதே₃ஷு பா₄ந்தி ஸ்ப₂டிகா: ப்ரபூ₄தா:
நாகத்₃விபஸ்யேவ நகே₂ந்து₃ பி₃ம்பா₃: — 18.21 –

உத₃க்₃ர வஜ்ர வ்ரணகர்க ஶாநாம்
பர்யாப்த ஸாரேண பு₄ஜார் க₃லாநாம்
அநேந விக்₂யாபித விக்ரமம் தத்
ரக்ஷ: புரா ராமஶரவ்யமாஸீத் — 18.22 —

அயம் வநை : ஶ்யாம நிதம்ப₃பா₄கோ ₃
கௌ₃ர: ஸ்வயம் கை₃ரிக ஸம்ப்₄ரு’தஶ்ரீ:
வலாஹக க்₃ராஹ்ய கு₃ணாந்தரீயம்
மதா₃ருணம் வ்யஞ்ஜயதே மதா₃ர்யம் –18.23 —

அஸ்மிந் த₄நாதீ₄ஶ்வர ராஜதா₄ந்யாம்
ஆகர்ணிதம் ஹைமவதீ ஸகே₂ந
த்வத் கீர்த் யுபக்₄நம் ஶ்ரு’ணு கிந்நரீணாம்
க்₃ரு’ஹே க்₃ரு’ஹே கிந்நரகண்டி₂ கீ₃தம் –18.24 —

நிஶம்ய தி₃வ்ய த்₃ரும ஸம்ப₄வாநாம்
நூநம் ரவம் நூபுர மஞ்ஜரீணாம்
உட்₃டீ₃ய மாநா: ப்ரதி யாந்த்யமீ த்வாம்
மஞ்ஜுஸ்வரா: மாநஸ ஹம்ஸ தா₃ரா: –18.25 —

இதோ ஹிரண்ய ப்ரமுகை ₂: ப்ரபு₄க்தா
ஸோணாத₄ரே ஸோணித ராஜதா₄நீ
ஆதவ் ₃ ஸமுத்கா₂த புநர் நிகா₂தை :
கைலாஸ ஶ்ரு’ங்கை ₃ரிவ பா₄தி ஸவ்தை ₄: –18.26 —

ம்ரு’த₃ங்க₃ நாதே ₃ந ம்ரு’கா₃ங்க மவ்லிம்
ப்ரஸாத₃யந் பாலய தீஹ தை₃த்யாந்
ப₃லேர பத்யம் ப₃லிநாம் விஜேத
பா₃ணா ஸுரோ பா₃ஹு ஸஹஸ்ர ஶாலீ — 18.27 —

ராமாஸ்த்ரரந்த்₄ரோதி ₃தஹம்ஸயூத₂ம்
க்ரவ்ஞ்சம் கி₃ரிம் லக்ஷய தூ₃ரலஷ்யம்
பீதாம் புந: ஶ்ரோத்ர பதே₂ந காலே
பா₄கீ₃ரதீ₂ம் ஜஹ்நுமிவோத்₃வமந்தம் –18.28 —

அமுஷ்ய தூ₃ராத₃ஸிதாஷி த்₃ரு’ஷ்டிம்
தி₃வ்யே கி₃ரவ் தா₃துமிஹார்ஹஸி த்வம்
மருத்₃க₃ணேந ஹ்யமுநோந்நதேந
ஸ்வாஹார ஸம்பூ₄திர மந்தி ₂ ஸிந்து₄: — 18.29 —
விலக்₃ந தை₃த்யேஶ்வர ஸோணிதாநாம்
வைகுண்ட₂கேயூர ஜுஷாம் மணீநாம்
அயத்ந ஶாணோ பலதாம புஷ்யந்
ஆர்த்₃ரா: ஸுதா₄பி₃ந்து₃பி₄ரஸ்ய கூடா: –18.30 —

லஷ்மீ ஸுதா₄ஸஞ்ஜநநாய தூர்ணம்
விமத்₂நதா வேக₃மநேந த₃த்தம்
ஆவர்தபே₄தை ₃ரது₄நா அப்யகா₃தை ₄:
அர்தா₂பயந்த்யம்பு₃ நிதே ₄ர் மஹவ்கா₄: — 18.31 —

அமோக₄பா₃ணஸ்ய முநேர ஸோஷ்யே
பே ₂நாய மாநாநி யஶ:பயயோதவ் ₄
க₃தாக₃தைர் ஹம்ஸ குலாந்யமூநி
சா₂யா பத₂ம் ஸஞ்ஜந யந்த்ய பூர்வம் — 18.32 —

த்₄ரு’தி க்ஷமம் தே₃வி ஸுரஸ்ரவந்த்யா:
ஸித்₃தா₄ஶ்ரிதம் ஶம்பு₄மிவ த்₃விதீயம்
பரிஷ்க்ரு’திம் பா₄ரத வர்ஷ ஸீம்ந:
ப்ராப்தா வயம் பர்வத ஸார்வ பவ்₄மம் –18.33 —

அநுப்ரவிஷ்டம் கி₃ரிஜாஸகீ₂பி ₄:
பர்யந்த ஸம் ஸ்தம்பி₄த பூ₄த வர்க₃ம்
அதூ₃ரதஶ் சைத்ர ரதா₂த் ப்ரபூ₄தம்
வைஹாரிகம் பஶ்ய வநம் புராரே :– 18.34 —

அப₄ங்கு₃ரை ராஹத யோரநங்க₃:
ஶ்ரு’ங்கா₃ரதி ₃க்₃தை ₄ரிஹ சித்ர புங்கை ₂:
அபி ₄ந்ந மந்யோந்யலயாத₃கார்ஷீத்
தே ₃ஹம் த்₃வயோரர்த₄ஸமீஷ்ய பே₄த₃ம் –18.35 –

தி₃வா மஹா நீல மயூக₂ஜாலை :
நக்தம் ப்ரகாஸேந மஹவ்ஷதீ₄நாம்
பஶ்யந்த்யமுஷ்மிந் பரி வ்ரு’த்தி ஶூந்யம்
காலம் ஸதா₃ கர்பு₃ரமாதி ₃தேயா: — 18.36 —

அலுப்த மேக₄த்₃யுதி ரிந்த்₃ர நீலை :
வஜ்ரை ரஸவ் நித்ய தடித் ப்ரகாஶ:
ப்ரவ்ரு’த்த க₃ங்கா₃ஸ்தநிதோ த₃தா₄தி
ப்ராவ்ரு’ட்₃கு₃ணாந் ப்ரீணித நீல கண்ட₂: –18.37 —

அமுஷ்ய மூர்த₄ந் யுபபத்ய நிம்நை :
சதுர் தி₃ஶம் விஷ்ணுபதீ₃ ப்ரயாதி
சதுர் பி₄ருந்மீலி தராஶி பே₄தா₃
வேதோ ₄முகை₂ர் வேத₃மயீவ வித்₃யா –18.38 —

ஸரித் ஸஹஸ்ரை ரபி ₄க₃ம்ய மாநா
ஶிலோச்சைய ரந்தரிதா த₃தா₄தி
ப்ரவால முக்தா ப்ரப்₄ரு’தே : ப்ரஸூதி :
பத்நீ பயாேதே ₄ரியமாநு ரூப்யம் — 18.39 —

த்ரயீமிவ க்ஷாலித விஶ்வ பங்காம்
த்ரை லோக்ய லஷ்ம்யா இவ ஸத்த்வ ஶுத்₃தி₄ம்
தபோத₄நா: ஸர்வ இமாம் ப₄ஜந்தே
த₄ர்மஸ்ய நிஶ்ரேணிமிவ ப்ரபூ₄தாம் — 18.40 —

ப்ரக்₂யாத கோ₃த்ர ப்ரப₄வே அபி நித்யம்
பரிக்₃ரஹே பூ₄யஸி வர்தமாநே
த்வயைவ மாம் வேத்தி கலத்ரவந்தம்
நாத₂ம் நதீ₃நாம நயைவ லோக : — 18.41 —

பதத்₃க்₃ரேஹ திஷ்ட₂தி ருக்ம ஸைலே
த₄ர்மத்₃ரவைராத்ம பு₄வா அர்ச்யமாந :
அஸ்யா: ப்ரஸூதி : பரமஸ்ய பும்ஸ:
பாதோ ₃ நப₄: ஸாக₃ர பார த்₃ரு’ஶ்வா — 18.42 —

த்ரிபி ₄ஸ்த்ரி லோகீ மநகை ₄: ஸ்வபூரை :
தாரா க₃ணாம் ரேடி₃த ஶீக ரவ்கை ₄:
விமார்ஜயந்தீ வ்ரு’ஜிநாத் புநீதே
விஷ்ணோரியம் விக்ரம வைஜயந்தீ –18.43 —

அபு₄க்₃நபா₄கா₃ந்தரிதை : பயோபி ₄:
ஸம்பி₄த்₃ய மாநை ரிய மந்தரேஷு
நாகே ₃ந்த்₃ர மூர்த₄ந்யுபயாதி ஸோபா₄ம்
நக்ஷத்ர மாலேவ க₃ஜேந்₃த்ர கும்பே ₄ –18.44 —

ஸ்ரோதோபி ₄ரஸ்யா: பரி பூர்யமாண:
ஸுதா₄மயம் ஸிந்து₄மிவாத₃தா₄நை :
அபாம் பதிர் நித்யமபிந்த₄நேந
ஜ்வாலாவதா நூநம ஸோஷிதோ அபூ₄த் –18.45 —

ப₄கீ₃ரத₂ ப்ரார்தி ₂த ஸித்₃தி ₄மேநாம்
ப்ரு’த₂க் ப்ரவாஹாம் ப்ரு’தி ₂வீம் புநாநாம்
ப₄ஸ்மீ க்ரு’தாநாம் ஸக₃ராத் மஜாநாம்
ப்ராஹு: ஸுதா₄ம் ப்ராபித தே₃வ பா₄வாம் –18.46 —

ஸ்தா₂நாநுரூபம் ப்ரஸ்ரு’தை : ப்ரவாஹை :
மஹத்₃பி₄ரேஷா மது₄ராவதா₃தை :
ப்ராலேய ஸைலாத் ப்ரதி ₂தாநுபா₄வா
ப்ரவர்ததே வாகி ₃வ வஶ்யவாச: — 18.47 —

உதீ₃ரிதாஸ் தார்ஷய ஜவாநி லேந
த்வந் நூபுராந் நூநமதீ₄தநாதா₃:
ப₄வந்த்யமீ ஸ்வாக₃தவாதி ₃நஸ்தே
பா₄கீ₃ரதீ₂ ஸைகத ராஜ ஹம்ஸா: –18.48 —

ப்ரதீ₃யதே ஸுந்த₃ரி தூ₃ர க்ரு’ஷ்டை :
தி₃வ்யேந தே ஸேக₂ர ஸவ்ர பே₄ண
மயூரபிஞ்சா₂தபவாரணஶ்ரீ:
மந்தா₃கிநீ ஹேம ஸரோஜ ப்₄ரு’ங்கை ₃: — 18.49 —

வஹந்நஸவ் காஞ்சந பத்₃ம ரேணூந்
வ்யோமாபகா₃வீசி விஹாரஶீல:
விலுப்த பத்ராங்குர மாநநே தே
ஸ்வேதோ ₃த்₃க₃மம் ந க்ஷமதே ஸமீர: — 18.50 —

அஸ்யா: ஸமீரைரபநீத க₃ந்தா₄ –
ந்யலக்த கைரங்கி தஸை கதாநி
ஸ்வைரோ பபோ₄க₃ம் ஸுர ஸுந்த₃ரீணாம்
விவ்ரு’ண்வதே தீர லதாக்₃ரு’ஹாணி — 18.51 —

ரஹஸ்த்வதா₃ஶ்லேஷ ரஸோத் ஸுகஸ்ய
த்வேத₃கத்₃ரு’ஷ்டே ரபி விஶ்வ த்₃ரு’ஷ்டே :
வியந் நதீ ₃ லோசந யோரஸவ் மே
விஹந்தி லஷ்யாந்தர பக்ஷபாதம் — 18.52 —

தி₃வ்யம் ப₃த₃ர்யாஶ்ர மமேத த₃ந்தே
தே ₃வை : ஸ்துதம் த₃ஷிணத: ப்ரதீயா:
நி:ஶ்ரேயஸம் த₃ர்ஶயதீவ வ்ரு’த்த்யா
நாராயணோ யத்ர நரேண ஸார்த₄ம் — 18.53 —

நிவ்ரு’த்தராகை ₃: பரிசர்ய மாணோ
நாத₂: ஸ்வயம் நாகநி கேத நாநாம்
அந்யை ரநந்யை ரநுபாலநீயம்
த₄ர்மம் நிஜம் தா₄ரயதீஹ ஶுத்₃த₄ம் –18.54 —

த்ரு’தீய வர்ண ப்ரப₄வே நிஜாங்கே ₃
ஸ்த்ரீ ரத்ந முத்பாத்₃ய விஹார யோகீ₃
இஹாத்ம ஸம்மோஹந லாலஸாநாம்
அபத்ரபாமப் ஸரஸாமகார்ஷீத் — 18.55 —

அந்யச்ச தூ₃ராத₃நக₄ம் ததீ₃யம்
ப்ராக்₃த₃ஷிணம் பா₄தி தபோவ நாக்₃ர்யம்
ப₄ஜந்தி யஸ்மிந் பத₃யோரமுஷ்ய
ந்யாஸம் ஶுப₄ம் நிஶ்சித யோக₃லஷ்யா: –18.56 —

அத்ர ஸ்தி₂தம் ஶ்ராந்தி ஜுஷாம் முநீநாம்
சா₂யால க்ரு’ஷ்ணாஜிந பல்லவேந
வைரோச நேர்தா₃நஜலாவ ஸேகாத்
வர்தி₄ஷ்ணுநா வாமநபாத₃பேந — 18.57 —

இமாநி ச ப்ரேயஸி தாபஸாநாம்
ஏகாந்த ஹ்ரு’த்₃யாநி தபோ வநாநி
இஹைக பாத₃ஸ்தி ₂தி மேததீ₃யாம்
த₄ர்மோ யகே ₃ தா₄ரயதீவ துர்ய– 18.58 —

தேமா நிகீ₃ர்ணம் ஸக்ரு’தே ₃வ பும்ஸாம்
ஆஸீத₃ தாமாஶ்ர மஹ வ்யவாஹா:
இஹவ் ஷதா₄தீ₃நி ஹவீம்ஷி பு₄க்த்வா
தூ₄மோ பலஷ்யம் த்₄ருவ முத்₃வ மந்தி — 18.59 —

நிஜாஶ்ர மேப்₄ய: ப்ரதி நிர்ஜிஹாநா
தூ₃ராத₃மீ த₃ர்ஶித பூர்ணகும்பா₄:
ஸத்யா ஶிஷ: ஸம் ப்ரதி ஸாது₄வாக்யை :
அப்₄யர்ச யந்த்யா ஹித வஹ்நயஸ் த்வாம் — 18.60 —

ஸமீப வ்ரு’ஷேஷ்விஹ ப₃த்₃த₄நீடா₃:
ஶிஷோப பந்நாம் ஶ்ருதி முத்₃க்₃ரு’ணந்த:
ஶகுந்தய: ஸோணமுகா₂ ப₄ஜந்தே
ஸ ப்₃ரஹ்மசர்யம் ஸஹ தீஷ்ணதீ₄பி ₄: — 18.61 —

த₄ர்மஸ்ய ஸம்பூ₄தி ரிவாக்₃ரதஸ்தே
ஸாந்தீ₃பி நேராஶ்ரம பூ₄மிரேஷா
அதீ₄திநோ யத்ர மம த்ரிவேத்₃யாம்
அந்த: ஸ்தி ₂ராலோக இவாந்தராத்மா –18.62 —

ஸமக்₃ரரத் நவ்க₄மிவாப்₃தி ₄தோயம்
தாராக₃ணை ராப்த மிவாந்தரிக்ஷம்
விஶங்கடம் விந்த்₄யஹி மாத்₃ரி மத்₄யம்
புண்யம் ப்ரியே பூ₄ஷிதமேததா₃ர்யை : –18.63 —

பித்ரு’க்ரியா நிர்வ்ரு’த ஜாமத₃க்₃ந்யம்
ஷிப்தை நஸாம் ஷேத்ரமித₃ம் குரூணாம்
ஸமே யுஷாம் ஸம்யுக₃தீ₃க்ஷயை தத்
தே₃ஹத்யஜாம் த₃ஷிணதோ ந பந்தா₂: –18.64 —

ஸவ்யே ப₄வத்யா: ஸரயூ ஸமேதா
ரம்யே யமாபா₄தி புரீ ரகூ₄ணாம்
த₃யாவி பாகேந சரா சராணாம்
தி₃வ்யம் பத₃ம் யத்ர தி₃தே ₃ஶ ராம: –18.65 —

தமாலஷண்டை ₃ஸ்தமஸேவ த்₃ரு’ஷ்டை :
வாமே தரோ வாம விலோசநே ந:
வஸுந்த₄ரா குந்தல காந்தி சோரை :
காந்தை ரஸவ் பா₄தி கலிந்த₃ஸைல: –18.66 —

தி₃வாகரே ணாத்ர பி₃லேஷு நூநம்
ப₃ந்தீ₃ க்ரு’தாநாம் ப₃ஹு லக்ஷபாணாம்
சா₂யா விஸேஷை : ப்ரசிதை ஸ்தத₃ர்ஹாம்
ஆப்யாய நாமாரசயந்தி வ்ரு’க்ஷா: –18.67 —

இத: ப்ரபூ₄தாத் பிதுராவ்ரஜந்தீ
காலிந்த்₃யஸவ் காலிய தோ₃ஷ முக்தா
ஸமேத்ய ஸக்₂யேவ ஸுரஸ்ர வந்த்யா
ஸரித்பதிம் ஶுத்₃தி ₄மதீ ப்ரயாதி — 18.68 —

ஸ்வ மூல ஸைலஸ்ய விபா₄தி ஶ்ரு’ங்கே ₃
தா₄தூபரக்தே ஸவிது: ஸுதே யம்
மஹா வராஹஸ்ய மஹீவ பூர்வம்
த₃ம்ஷ்ட்ராங்குரே தா₃நவ ஸோணி தாங்கே — 18.69 —

யமஸ் வஸுஸ் தந்வி யதா₂ர்த₂நாமா
மாந்யா ஸமீபே மது₄ரா விபா₄தி
ஸுபர்வணாம் யத்ர ஸபா₄ம் ஸுத₄ர்மாம்
பூ₄மே ரஹம் பூ₄ஷண தாம நைஷம் — 18.70 —

பிப₃த்யஸவ் பஶ்சி மத₃ஷிணாஶாம்
நூநம் க₂கே ₃ஸோ அயமநூநவேக₃:
விலோகி தாநாமிஹ ந வ்யவஸ்தா₂
நேதீ₃யஸாம் தே ₃வி த₃வீயஸாம் வா –18.71 —

த்ரயீமயஸ்தந்வி தவவ் பவாஹ்ய:
கால க்ரமாதா₃பததோ த₄ரண்யா:
ஸாமாபி ₄ராம த்₄வநி பி ₄: ஸமந்தாத்
பக்ஷா நிலைர் மார்ஜயதீவ தோ₃ஷாந் — 18.72 —

ஆ பஶ் சிமாத₃ம்பு₃நி தே₄ர வந்த்₄யா
ஶரத் ப்ரஸூதை : ஷிதி ரஸ்ய ஸஸ்யை :
தி₃வவ் கஸாம் த₃ர்ஶித பா₄க₃தே ₄யா
தி₃ஶத்யஸவ் லோசநதி ₃ஷ்ட வ்ரு’த்₃தி₄ம் –18.73 —

ஸரித் ப்ரவாஹைர் வ்யதி கீர்யமாணை :
ஸங்கல்ப யாேநேரிவ ஶில்ப பே₄தை ₃:
பஶ்ய ப்ரியே த்வம் பரிவ்ரு’த்ய கிஞ்சித்
தி₃வ்யோபமாந் ஜாநபதா₃ந் விஸேஷாந் –18.74 —

தவைஷ ஜீர்ணஶ் சலயந் புரஸ்தாத்
வித்₃யுந் மயீம் வேத்ர லதாம் ப்ரதந்வீம்
பி ₃ப₄ர்தி ஶுத்₃தோ ₄ த்₄ரு’த கஞ்சுகஶ்ரீ:
ப்ராய: ப்ரதீ ஹார பத₃ம் பயோத₃: — 18.75 —

ஆதா₃ய ஶாலிஸ்தப₃காநதூ₃ராத்
ப்ராப்தா ஶுகஶ்ரேணி ரஸவ் விபா₄தி
த்வதா₃க₃ம ப்ரீத ஶரத் ப்ரயுக்தா
வைஹாயஸீ வந்த₃நமாலிகேவ –18.76 —

ஆரக்தபு₂ல்லை ரரவிந்தி ₃நீநாம்
ஸூநைரமீ நூதந ஸூர்ய கல்பை :
த்வத்காந்தி மாத்₄வீமநுபூ₄ய ரக்தை :
நேத்ரை ரிவாபா₄ந்தி ஸமுத்₃ரதா₃ரா: –18.77 —

கரேணுகாபி ₄: ஸஹ கா₃ஹமாநா:
பய: ப்ரஸந்நம் ஶரதா₃பகா₃நாம்
அமீ நிமீலந் நயநா: கபோலை :
ஆவிர்மதை ₃ராவி லயந்தி நாகா₃: — 18.78 —

ஸ ஏஷ ஸப்தச்ச₂ த₃ரேணு ஜாலை :
க்ரீட₃ந் நிவாலிம்பதி க₃ந்த₄வாஹ:
வந்யத்₃விபாநாம் வ்ரஜதாம் ப்ரதீபம்
மத₃ப்ரவாஹைர் மலிநாந் கபோலாந் — 18.79 —

அபி ₄ந்ந வர்ணா க்₃ரு’ஹிணீவ ப₄வ்யா
வேலாடவீ வாரி நிதே₄ர்விபா₄தி
நித்யாநுபூ₄தாமபி நவ்ய பு₃த்₃த்₄யா
ரஸை ரஸவ் நிர்வி ஶதீவ ஹ்ரு’ஷ்யந் –18.80–

தரங்க₃வேகா₃த் தரலாம்பு₃தா₄ரீ
க்₃ரு’ஹ்ணாத்யஸவ் கா₃ருட₃ ரத்ந வர்ண:
வஸுந்த₄ரா வாரிருஹஸ்ய பார்ஶ்வே
ஸித்₃தோ ₄த₃யாம் ஶ்யாமல பத்ர ஸோபா₄ம் — 18.81 —

விபா₄தி பர்யந்தமஹீ பயாேதே ₄:
பே₂நை ரஸவ் வீசிகர ப்ரகீர்ணை :
அப்₄யர்சி தாநாம் த்ரித₃ஶாதி தீ₂நாம்
ஆஹார ஸேஷைரிவ பர்யுத₃ஸ்தை : — 18.82 —

ப்ரவாலவஹ்நவ் பரிதீ₃ப்யமாநே
முஞ்சந்த்யஸவ் மவ்க்தி கலாஜ வர்ஷம்
அமுஷ்ய வேலா த்₄ரு’தவே பது₂ஸ்தே
வைவாஹிகீம் ஸ்மாரயதி ஸ்ம வேலாம் –18.83 —

ஸ்வ ஸம்ப₄வம் ஸம்ப்ரதி பாரிஜாதம்
த்₃ரு’ஷ்ட்வா சிரப்ரோஷித ஸந் நிவ்ரு’த்தம்
ஆலிங்க₃நார்தீ₂வ தரங்க₃ஹஸ்தாந்
ஆவிர்மணீநுந்நமயத் யுத₃ந்வாந் — 18.84 —

அஹீந்த்₃ர நிஶ்வாஸ மருத் ப்ரணுந்நை :
ஆவர்த ஸம்பே₄தி ₃பி₄ரேஷ பேநை :
உபாயநம் தி₃த்ஸுரிவாம்பு₃தி ₄ஸ்தே
முக்தாத பத்ராணி முஹு: ப்ரஸூதே — 18.85 —

வேலாசலாத₃ர்ப₄க பஞ்ச வக்த்ராந்
விஹங்க₃பாதேந ஜிக்₄ரு’க்ஷமாணாந்
நிமஜ்ஜ நோந்மஜ்ஜந வேக₃பூ₄ம்நா
மாதங்க₃யாதா₃ம்ஸி விலோ ப₄யந்தி -18.86 —

ப்ரவால முக்தாமணிபி ₄: ப்ரதி ₃ஷ்டை
ப்ரத்யாஹ்ரு’தை : பத்ர லதாங்குராத்₃யை :
அந்யோந்ய பூ₄ஷா பரிவ்ரு’த்தி லீலாம்
கரோத்யஸவ் தீர பு₄வா பயோதி ₄: — 18.87 —

வர்ணம் மஹா நீல மணி ப்ரகாஸை :
ஸ்மிதத்₃யுதிம் மவ்க்தி கசந்த்₃ரிகாபி ₄:
பி₃ம்பா₃த₄ரம் வித்₃ருமப₄ங்க₃பே₄தை ₃:
வ்யநக்த்யஸவ் தந்வி தவாம்பு₃ராஶி: — 18.88 —

விவ்ரு’ண்வதீ பா₃ட₃ப₃வஹ்நி தீ₃ப்திம்
வித்₃யோததே வித்₃ருமபங்க்தி ரேஷா
தே₃வேந ஸம்பீடி₃த யோஸ் த்ரிதா₄ம்நா
தை₃த்யேந்த்₃ர யோராந்த்ர பரம்பரேவ — 18.89 —

மஹா வராஹஸ்ய கு₂ராத்₃ரிகா₄தை :
ஷுண்ண: ப்ரவித்₃தோ ₄ ரகு₄வீர பா₃ணை :
விஸம்ஸ்து₂ல த்₃வீபதயோ பலஷ்யை :
வீர வ்ரணே ரேஷ விபா₄தி ரூடை ₄: –18.90 —

ஸம்ப்₄ரு’த்ய தோயம் ஸஹ ஸோஜ்ஜி ஹாநாந்
ஸேந்த்₃ராயுதா₄ந் பஶ்ய க₄நாந் ஸநாதா₃ந்
உத₃ந்வதா து₃ர்ஜய மந்தரிக்ஷம்
ஜேதும் ப்ரவ்ரு’த்தா நிவ தஸ்ய புத்ராந் — 18.91 —

அபாம் தரங்கை ₃ரயமந்தரங்கை ₃:
ஆப்லா வயிஷ்யந் ஸமயே த₄ரித்ரீம்
ஸமீநயூத₄ஸ்தநுதே ஸரஸ்வாந்
ஸந்நாஹ க₃ந்தீ₄நி க₃தாக₃தாநி — 18.92 —

அஸவ் பரப்ரேம பத₃ம் ஸ்வபா₄வாத்
ஆபூர்யமாணோ மஹதா ரஸநே
ஆத்மேவ த்₃ரு’ஷ்ட: ஸஹஸா ப்ரஜாநாம்
அத₃ர்ஶ நேச்சா₂மிதேரஷு த₃த்தே — 18.93 —

க₃ருத்மத: கம்பி ததி ₃வ்யவ்ரு’க்ஷம்
பக்ஷா நிலம் பாதுமுபேத்ய நாகா₃:
விதந்வதே அபா₃ல மணி ப்ரகாஸை :
அஸூர்ய பா₃லாதப மந்தரிக்ஷம் — 18.94–

மருத்₃பி ₄ராகூ₄ர்ணித ஸாத்₃ரிநாகை ₃:
வேகோ₃த்₃ப₄வைரஸ்ய விமத்₂யமாந:
உத்ஷிப்த ஶங்க₂ ப்ரகராப தே₃ஶாத்
பூ₄ய: ஸுதா₄முத்₃கி₃ரதீவ ஸிந்து₄: — 18.95 —

தோ₃தூ₄யமாநம் விவி தோ₄ர்மி யோகா₃த்
சா₂யாக₃ருத் மந்தம வேஷ்ய பீ₄தா:
ஆவர்தஸை லீமபி ₄நேதுமிச்ச₂ –
ந்த்யங்கை ₃ரமீ குண்ட₃லிதைர் பு₄ஜங்கா₃:–18.96 –

ஸபே ₂நஹாஸோ ஜடில: ப்ரவாலை :
உத்₃வர்த யந்நூர் மிபு₄ஜைர் பு₄ஜங்கா₃ந்
விட₃ம்ப₃யத்யேஷ நிஸர்க₃பீ₄ம:
கஸ்யாபி கல்பாந்த நடஸ்ய லீலாம் — 18.97 —

அஸேஷத: ஸோ அயம சிந்த்ய பூ₄மா
கும்பீ₄ குமாரேண நிபீதவாந்த:
ஸிஷ்ணாஸயா ஸம்பததோ அபி த்₃ரு’ஷ்ட்வா
த்₃வி ஜாதி ₄பாந் வேபத இத்யவைமி –18.98 —

ப்ரத₃ர்ஶி தாத்ம ப்₄ரமணேந நூநம்
ப்ரத்யாயி தாம் மந்த₃ரநர்தகேந
ஸவ்யாப ஸவ்யைர் ப்₄ரமணைஸ் தரஸ்வீ
ரம்யாமஸவ் புஷ்யதி ராஸ லீலாம் — 18.99 —

தைஸ்தைரஸவ் நிர்மதி ₂தோ விதூ₄த:
ஸம் ஷோபிதோ ₄ப₃ந்த₄ந பீட₃நாத்₃யை :
ப்ரஸாத₃ கா₃ம்பீ₄ர்ய நிதி : ப்ரதி ₂ம்நா
க்ஷமாந்வயம் நோஜ்ஜ₂தி ஶீதலாத்மா – 18.100 –

விமத்₂ய விஶ்ராணி தமேததீ₃யம்
தை₃த்யத்₃விஷா தே ₃வி மருத்வதா₃த்₃யா:
ஸாரம் பிப₃ந்தஸ்த்ரித₃ஶா: கதா₃ அபி
த்₃ராகீ₄யஸீம் நாநுப₄வந்தி நித்₃ராம் –18.101 –

கலத்ரவந்தம் புருஷம் புராணம்
கபாலிநம் சந்த்₃ர கலாவதம்ஸம்
ஐராவதாத்₃யை : ப்ரசிதாந கார்ஷீத்
வைமாநிகா நேஷ மஹாவதா₃ந்ய: –18.102 —

இத₃ம் ஜக₃த்₃த₃ர்ஶித தார தம்யம்
யத்₃ப்₄ரூலதாலாஸ்ய விஸேஷ நிக்₄நம்
ப்ரஜாபதீநாம் ஜநநீமஜந்யாம்
தாமேஷ தே ₃வீ மநகா₄மஸூத — 18.103 —

வராய த₃த்த்வா நிரவத்₃யயூேந
கந்யாமஸவ் கௌஸ்துப₄ யவ் தகம் ச
மஹோத்ஸவே வாஹந போ₄ஜநாத்₃யை :
ஆநர்ச தே ₃வா நிதராந் யதா₂ர்ஹம் –18.104 —

ஜக₃ந்த்ய ஸேஷாணி யதே ₃கதே ₃ஸே
பர்யங்கதாம் தஸ்ய க₃த: ப்ரதி₂ம்நா
அலங்க₄நீயம் மஹி மாநமந்யை :
ப₄ஜத்யஸவ் பா₄வித ஸேஷ பா₄வ: –18.105 —

அநர்க₄மாத்₃யம் ஹரி நீல ரத்நம்
லஷ்மீத்₃ரு’ஶா நித்ய நி த₃ர்ஶநீயம்
நப₄:ப்ரதிச்ச₂ந்த₃நிபே₄ந நூநம்
அந்தர்க₃தம் வ்யஞ்ஜயதி ஸ்வ தா₄ம்நா — 18.106 —

மது₄த்விஷோ வர்ணமுஷாம் மணீநாம்
த்ராஸவ்ய பாயே அபி திரோஹி தாநாம்
உத₃ந்தமாக்₂யாதுமிவோர்மிமாலீ
கராநஸவ் கர்ஷதி வீசி ஹஸ்தை : –18.107 —

பஶ்யாமி ஸவ்ஹார்த₃வதாம் தவாஷ்ணா
தரங்க₃நிம்நோந்ந தலங்க₄நேந
உத்₃வர்தி தாநாம் மஹஸாம் மணீநாம்
ஊர்த்₄வம் ப்ரஸர் பந்தமிவோர்மிமந்தம் — 18.108 —

அந்வேஷயந் தி₃த்ஸித த₃ஷிணோ அஹம்
ஆசார்ய ஸாந்தீ₃பிநி வ்ரு’த்தம்
ஆவிஷ்டஶங்கா₂ஸுர ஸந்நி வேஶம்
ப்ராஞ்சம் மஹா ஶங்க₂மிஹாந்வவிந்த₃ம் –18.109 —

யாதோ ₃நிதா₄நே யது₃ராஜ தா₄ந்யா:
ஸம்ப்ராப்தேயே ஸேதுரிஹோபக்லு’ப்த:
ராமேண ஸீதா பதிநா நிப₃த்₃ேத₄
லங்காபதே ₂ லாக₄வமாத₃தா₄தி — 18.110 —

அமூநி கைலாஸநி பா₄ந்ய தூ₃ராத்
ஸித்₃தா₄ங்க₃நாஸேவ்ய லதாக்₃ரு’ஹாணி
புண்யாநி ஸத்யே புலிநாநி ஸிந்தோ ₄:
சிரேண த்₃ரு’ஷ்டிம் சரிதார்த₂யந்தி -18.111 —

தடப்ரதே ₃ஸேஷு தரங்க₃ஹஸ்தை :
ப்ரஸாரயந் ஸம்ப்ரதி பே ₂ந பங்க்தீ:
ஸபா₄ஜநார்த₂ம் தநுதே ப₄வத்யா:
ப்ராய: பத₃ந்யாஸ படீ முத₃ந்வாந் — 18.112 —

விலங்க₄யந் வ்யோம பதே ₂ந ஸிந்து₄ம்
த்வத்₃த₃ர்ஶநே தீ
₃ப்த குதூஹலாநாம்
ரத₂ஸ்தவாஸவ் த்வரயா அதி ஶேதே
மநோ ரத₂ம் விஷ்ணுபதீ₃வதூ₄நாம் –18.113 —
ஸுரத்₃ருமஸ் த்வத்₃ விரஹாலஸாநாம்
தவாக₃மம் ஸூசயிதும் ஸகீ₂நாம்
மது₄வ்ரதீநாம் மது₄ரை : ப்ரணாதை ₃:
ப்ரியம் வத₃ம் ப்ரேஷயதீவ க₃ந்த₄ம் –18.114 —

விஜித்ய ஸங்க்₂யே நரகம் ஸநாகம்
ப்ரத்யாக₃தம் மாம் ப்ரதி க₃ந்துகாமா:
பவ்ரா: ப்ரஹர்ஷோ பநதை : ப்ரணாதை ₃:
அம்போ ₄நிதே ₄ரந்தரயந்தி கோ₄ஷாந் –18.115 –

விதா₄ய தார்ஷ்யம் க₃க₃நாப்₃தி ₄போதம்
ஸார்த₄ம் மயா தே ₃வி ஸமாவ்ரஜந்தீம்
ப்ரத்யுத்₃க₃தேவ ப்ரதி பா₄தி ப₄வ்யா
தூ₃ராதி₃யம் த்₃வாரவதீ புரீ த்வாம் — 18.116 —

நி ப₃த்₃த₄ஜைத்ரத்₄வஜபங்க்தி ரம்யா
புஷ்பை ரஸவ் பூஜித ராஜமார்கா₃
ஸதா₃மஜாம்பூ₃நத₃தோரணஶ்ரீ:
ஸவ்த₄ த்விஷா ஸூசயதீவ ஹர்ஷம் –18.117 —

பதே ₃ பரஸ்மிந் நிவ நித்யமஸ்யாம்
ஶுத்₃தே₄ந ஸத்த்வேந விபூ₄ஷி தாயாம்
த₄ர்மஸ்ய வாஸா: ப்ரதி ₂தா: ப்ரு’தி ₂வ்யாம்
ஸரித்பதவ் கோ₃ஷ்பத₃வத்₃ப₄வந்தி — 18.118 —

ஸ்வரஶ்மி நிஷ்பாதி ₃த ஸூர்யபே ₄தா₃ம்
அர்சசிர் முகை ₂ரஞ்சித ப₄வ்ய பா₄கா₃ம்
நிவ்ரு’த்தி த₄ர்மே நியதஸ்தி ₂தீநாம்
நை : ஶ்ரே யஸீம் பத்₃த₄தி மாஹுரே நாம் –18.119 —

ஸவ்தோ ₄பருத்₃த₄த்ரிதி ₃வாவகாஶாம்
சா₂யா ஸமாக்ராந்த பு₄ஜங்க₃லோகாம்
புரீமிமாம் பூ₄ஷித ஸிந்து₄மத்₄யாம்
குத்ரஸ்தி₂தாம் வேத்ஸி குதோ முகா₂ம் வா –18.120 —

உத₃ந்வதா கா₂தவதீ ஸமந்தாத்
அயத்நவ ப்ராயி ததுங்க₃வேலா
ந ஶக்யேத ஸாத்யகிநா ஸநாதா₂
நாதை ₂: ஸுராணாமபி ஜேதுமேஷா — 18.121 —

ப்ராகார சக்ரம் யது₃ ராஜ தா₄ந்யா:
பஶ்யை தது₃த்துங்க₃ம ஸூர்ய லங்க்₄யம்
யத்₃பா₄வமேவம் ப₄ஜதே யதா₂ர்த₂ம்
ஸங்கோசம்ரு’ச்ச₂ந்நிவ சக்ரஸைல: — 18.122 —

நிர்முக்தஶேஷோரக₃நிர்விஸேஷை :
நிகேத நைருந்நமிதாந்தரிக்ஷம்
உத₃க்₃ரதாலத்₄ வஜமேத த₃க்₃ேர
ஸீமாந்தரம் ஸீரப்₄ரு’தோ கு₃ரோர்ந: –18.123 —

அபவ்₄ம ஸம்பா₄வ்ய விபூ₄தி யோக₃ம்
ஹைமம் ஸுரத் நைர சிரோபநீதை :
அநுத்தமாது₃த்தர மார்யதா₄ம்ந:
க்₂யாதம் த்வயா கே₃ஹ மித₃ம் மதீ₃யம் — 18.124 —

ப்ரதீக்ஷ மாணாநதி ₄சந்த்₃ர ஶாலம்
பஶ்ய த்வயா ஶிஷித சாருலாஸ்யாந்
த்வத் கேஶ ஹஸ்த ஸ்வ ஜநை : கலாபை :
கோ₃பாந ஸீஶ்சா₂ த₃யேதா மயூராந் –18.125 —

ஆஹார பே₄தை ₃ருசிதைர் ப₄வத்யா
ஸம் ரஷிதாநாம் தநயாபி ₄மாநாத்
ஶ்ரு’ணு த்வதா₃லோகந தர்ஷ பா₄ஜாம்
ப்ரஜல்பிதம் பஞ்ஜர ஶாரி காணாம் — 18.126 —

ஸீமந்த முக்தாமணி ஸந்நிகர்ஷாத்
ப்ரஸூதி சித்ரீ க்ரு’த ஶுக்தி ரம்யா:
அமீ புரஸ்தாத்₃ ப₄வதீ ஸகீ₂நாம்
அந்தர் முதா₃மஞ்ஜலய: ஸ்வத₃ந்தே –18.127 —

மாயாதி ₄கேந விதி ₄நா மநஸேவ ஸ்ரு’ஷ்டை :
ஆபா₄தி யாத₃வ க்₃ரு’ஹைரநகா₄ புரீயம்
நாபா₄க₃ நாஹுஷ நலாதி ₃நராதி ₄பாநாம்
ஆஜாந ஸம்பத₃ வலேப மிவாத₃தா₄நை : –18.128 —

நித்யம் த₄நேஶ நக₃ரீம் நிதி பி ₄: ப்ரபூ₄தாம்
ஆக₂ண்ட₃லேந மஹிதாம மராவதீம் ச
ப்ரத்யே கதா₄ம விப₄வை : பரிபூ₄ய த்₃ரு’ப்தா
ஸவ் த₄ரியம் ப்ரஹஸதீவ ஸுதா₄வதா₃தை : — 18.129 —

இத்யால பந்த மத₂ தார்ஷ்ய ரதே ₂ந க்ரு’ஷ்ணம்
ஹேமாத்₃ரிணா ஹரித ஸைல மிவோபநீதம்
பவ்ரா: ஸமீஷ்ய முதி₃தா: ஸஹ வல்லபா₄பி ₄:
பத்₃மா வ்ரு’தாம் தி₃வமகுர்வத த்₃ரு’ஷ்டி பாதை : — 18.130 —

ப்ரத்யுத்₃க₃த ப்ரியஸகீ₂ ஜநத₃த்த ஹஸ்தாம்
ஸத்யாம் த்ரயீமய ரதா₂த₃வதார யிஷ்யந்
நாத₂ஸ்ததா₃ நக₃ர மத்₄ய நப₄: ப்ரதே₃ஶாத்
ஆஸீத₃தி ஸ்ம நிஜஸவ்த₄ஸமீபரத்₂யாம் –18.131 —

வ்யதி கரித ஸுவேலாம் விஶ்வ கர்ம ப்ரஸூதிம்
லவண ஜலதி ₄கு₃ப்தாமாப லங்கா மிவாந்யாம்
த₄நபதி ப₃ஹுமாந்யாம் த₄ர்ம ஸேதுர் யதூ₃நாம்
து₃ரதி₄க₃ம ஸமீபாம் த்₃வாரகாம் ராஜதா₄நீம் — 18.132 —

விஜயி நமுபயாதம் வீஷ்ய ஸத்யா ஸஹாயம்
வ்யதநுத முதி ₃தேவ த்₃வாரகா வந்தி ₃க்ரு’த்யம்
அமர தருஸ மீரை : ப்ரேஷிதை ராஹ்ரு’ தாநாம்
உபவநமது₄ பாநாமுந்மதா₃நாம் ப்ரணாதை ₃: — 18.133 —

ஸ்துதி ஶத முக₂ராபி ₄: ஸ்வர்க₃நேது: ஸ ஜேதா
ஸ விநய மநுயாத: ஸத்யபா₄மா ஸகீ₂பி ₄:
நிஜமக₃ மத₃கா₃ரம் நிர்விஶந் ப்ரேயஸீநாம்
ஸ்மர ஶரஶ யிதாநாம் மந்த₃மப்₄யுத்தி ₂தாநி — 18.134 —

அபி₄க₃த முஷயா ததா₃அநி ருத்₃த₄ம்
ப₃லித நயநே ப₃லீயஸா நிருத்₃த₄ம்
யது₃பரிஷதி ₃ ஸர்வ லோக த₃ர்ஶீ
கலஹ ருசி : கத₂யாம் ப₃பூ₄வ யோகீ₃ –18.135 —

பா₃ணா பி₄க்₂யம் ப₃லி ஸுதமதோ ₂
ப₃த்₃த₄ ப₃ந்து₄ம் ஜிகீ₃ஷு :
ஸேநோத்தா₂நம் ஸுமஹதி புரே
ஶ்வஸ் தநம் கோ₄ஷயித்வா
சிந்தா ரூட₄ த்ரிபு₄வந ஹிதஶ் –
சிந்தநீயோ முநீநாம்
வாஸாகா₃ரம் ப்ரபு₄ரதி ₄க₃தோ
வாஸ தேயீம் நிநாய — 18.136 —

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம் –ஸப்த த₃ஶ:- ஸர்க₃–பாரிஜாதாபஹரணம்–

December 22, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

ஆதபத்ரமத₂ தத்ப்ரசேதஸோ
மந்த₃ரஸ்ய மணி ஶ்ரு’ங்க₃ முந்நதம்
ஸாவரோத₄மபி ஸாத்த்வதாம் பதிம்
லீலயைவ க₃ருேடா₃ வஹந் யயவ் — 17.1 —

தம் ஷிபந்தமதி ₄கேந ரம்ஹஸா
மாருதஸ்ய மநஸோ அபி ஶீக்₄ரதாம்
வாலகி ₂ல்ய ஸுக்ரு’தம் விபக்த்ரிமம்
ப்ராண மைக்ஷத ப₃ஹிஶ்சரம் ப்ரபு₄: –17.2 —

லோகத: க₂க₃ரதே ₂ந மத்₄யமாத்
உத்பதந்தமவநம்ய மாத₄வம்
நிர்ஜரா: ஸ்துதி பி₄ரப்₄ய பூஜயந்
புஷ்கலாபி ₄ரபி புஷ்ப வ்ரு’ஷ்டிபி ₄: — 17.3 —

பாஞ்ச ஜந்யநி நதோ ₃பஹூதயா
பர்யசாரி பரி தோஷ நிக்₄நயா
ப₄க்தி பா₄ரநதயா ஸதோ₃ந்நத:
ஸ்வர்கி₃ணாம் பரிஷதா₃ யதூ₃த்₃வஹ: –17.4 —

ப்ராப்ய யாத₃வ பதி ஸ்த்ரி விஷ்டபம்
தே₃வமாதுருப நீத குண்ட₃ல:
அக்₃ர ஜேந ஹரிணா ஹரி: ஸ்வயம்
பாவிதேந ஸம பா₄வ்யே தோசிதம் — 17.5 —

பா₄க₃தே₄ய பரிபாகதஸ்ததா₃
வாஸவோ வஸதி மப்₄யுபாக₃தம்
தே₃வதா₃நவ ஸமாந தை₃வதம்
பர்யுபாஸ்த பரிகல்பி தார்ஹண: — 17.6 –

தத்ர ஸம்மத₃வதீபி ₄ரஞ்ஜஸா
லோக பாலமஹிஷீபி ₄ரர்சிதாம்
தே₃ஹி நீமிவ ஜயஶ்ரியம் நிஜாம்
ப₃ஹ்வமம்ஸ்த த₃யிதாம் ப₃லாநுஜ: — 17.7 —

ஸ ப்ரஸாத₃மபி ₄நந்த்₃ய ஸந்நதாந்
நாகிநோ நரகபீ₄தி வர்ஜிதாந்
க்ரு’த்ய ஸேஷவித₄யே க்ரு’தீ பு₄வ:
ப்ரத்யபத்₃யத நிவ்ரு’த்தி பத்₃த₄திம் — 17.8 —

ஸ்வ ப்ரபா₄வ வி நிவ்ரு’த்த ஸாத்₄வஸாம்
ஸோ அதி பத்ய நக₃ரீம் ஸுபர்வணாம்
புஷ்ப த₄ந்வந இவோப காரிகாம்
ப்ரைக்ஷதோ பவந ஸம்பத₃ம் புர: — 17.9–

வர்தேத த₃ஶஶ தேக்ஷணோ அபி ஸந்
ஏகசஷு ரிவ யந்நிரீஷணே
தத்ர த₃த்த நயநோ வியத்₃வேந
விஶ்வ த்₃ரு’ஷ்டி ரநகோ ₄ விஸிஷ்மியே –17.10 —

த₃ர்ஶயம்ஸ் தத₃நு ராமணீயகம்
நந்த₃நஸ்ய வஸுதே ₃வ நந்த₃ந:
இத் யுவாச மது₄ரஸ்மி தேக்ஷணாம்
ப்ரே யஸீம் ப்ரணய பேஶ லாக்ஷரம் –17.11 —

புண்ய க்ரு’த்₃பி ₄ரபி ₄காங்ஷிதம் த்வயா
பவ்ரு ஹூத மநுபூ₄தமாஸ்பத₃ம்
அஸ்ய ஸம்பத₃மநேக ஶாக₂யத்
ப்ரேஷ்ய தாமித₃ மிஹாந் யத₃த்₃பு₄தம் –17.12 —

அஞ்சி தஸ்மித மகேவ லேக்ஷணம்
ப₄ங்கு₃ர ப்₄ருபரிவர்தி தாநநம்
கிஞ்சி த₃த்ர தரலாஷி தாவகீம்
நந்த₃நம் நயந வ்ரு’த்தி மர்ஹதி — 17.13 –

விஶ்வ மேதத₃வதே₄ந ஜேஷ்யத:
ஷட் பத₃ஜ்யத₄நுஷோ த₄நுர் ப்₄ரு’த:
அத்ர நித்ய ம்ரு’துபி ₄: ஸஹோதி ₃தை :
ஷட்₃வித₄ம் ப₃லமிவை கதாம் க₃தம் –17.14 —

ஐக முக்₂ய மமரேந்த்₃ர துஷ்டயே
ஸம்ஶ்ரிதை ரிஹ வஸந்த பூர்வகை :
ஸோப₄தே ஸுநயேந கு₃ணைரிவ
ஸ்வாநுரூப ப₂ல ஸம்பதா₃ஹிதா — 17.15 —

ஜம்பு₃ ஸூதரஸ ஜக்₃தி ₄ரஞ்ஜிைத:
ஸ்நிக்₃த₄ கண்டி₂ கல கண்ட₂ நி :ஸ்வநை :
த்யக்த கே₃ஹக₃மநாய நிஷ்பதந்
புஷ்ப கேதுரிஹ கு₄ஷ்யேத த்₄ருவம் –17.16 —

அர்தி ₃தாந் மகர கேதுஸாயைக:
அத்ர தே ₃வி த₃யிதாந் பதா₃ஶ்ரிதாந்
முத்₃ரயந்தி சகிதாந் ஸுரஸ்த்ரிய:
பத்ரப₄ங்க₃மகரை : ஸ்தநார்பிதை : –17.17 —

கைஶ்சி த₃த்ர க்ரு’திபி₄: க்ரு’தாஸ்பதை ₃:
நிர்மமைர் மநஸிஜோ நிரஸ்யதே
ஸம்ப₄வந்த் யுபவநே வநோ அபி வா
ஸாவதா₄நமநஸாம் ஸமாத₄ய: — 17.18 —

பல்லவைரத₄ரகாந்திரம் ஶத:
ஸ்மேரகுட்₃மலருசா ஸ்மிதம் ச தே
வல்லரீபி ₄ரிஹ தோ₃ர்லதாகு₃ண:
சோரிதாநி நிஹிதாநி வா த்வயா –17.19 —

வாதி ₃தேஷு விஹேக₃ஷ்வநு க்ஷணம்
மஞ்ஜு கா₃யதி ச ஷட் பத₃ வ்ரஜே
மாருதேந சதுரேண நர்திதா
லாஸ்ய மத்ர பரிசிந்தே த லதா: — 17.20 —

மந்த₂ரஶ் வஸந ஸவ்ர போ₄ல்ப₃ணா
வல்லரீ: ஸ்பு₂ரிதபல்லவாத₄ரா:
மந்மதே₂ந ரு’து ஸங்க₃மாதி ₃மா
நிர்வ்ரு’தா இவ நிஶாமயாத்₃பு₄தா: — 17.21 —

கேலிஸைலமணி மேக₂லாபதா₃த்
உத்₃க₃தாமிஹ தமாலவாடிகாம்
பஶ்ய நந்த₃ந பு₄வ: ஸுமத்₄யேம
ரோமராஜிமிவ மத்₄ய ஸம்ஶ்ரிதாம் — 17.22 —

ஸம் ப்₄ரமேண வநபால தா₃ரிகா:
ஸாமிலங்கி ₄தபராக₃ரோத₄ஸம்
ஆலவாலவலயேஷ¨ ஶாகி ₂நாம்
வாஹயந்தி மகரந்த₃ வாஹி நீம் — 17.23 —

சக்ரவாகமிது₂நோதி ₃தஸ்தநீ
வீஷ்யதாமிஹ விஹாரவாபிகா
புஷ்ப ரேணுருசிரா மது₄ஶ்ரிய:
புத்ரிகேவ புருஹூத ஸம்மதா — 17.24–

தி₃வ்ய பத்₃மவத₃நா மணி ப்ரபா₄
தீ₃ர்கி ₄கேயமஸிதாப்₃ஜலோசநா
அந்தரிக்ஷமணி த₃ர்பணாந்தரே
பி₃ம்பி ₃தேவ ப₄வதீ விபா₄வ்யதே — 17.25 —

அப்ஸரஸ்ஸு நிகி₂லாஸ்வலஷிதாம்
ரூப ஸம்பத₃மஸவ் தவாத்₃பு₄தாம்
பஶ்யதீவ புருஹூதவாபிகா
ப்₄ரு’ங்க₃தாரகித பத்₃ம லோசநா — 17.26-

பி₃ப்₄ரதீ த்வத₃பி₄லாப சேதஸோ :
ஸ்வாது₃தாம் ப்ரஸத₃நம் ச ஶாஶ்வதம்
த்₃ரு’ஷ்டி ருத்பலவநம் தி₃ஶத்வஸவ்
தீ₃ர்கி₄காபயஸி தீ₃ர்க₄லோசநே — 17.27 —

ஸோணகுட்₃மலமுகீ₂ ஸரோஜிநீ
ஸோப₄தே ஹரித பத்ர ஶாலிநீ
ஸம் வ்ரு’தா த்ரித₃ஶபாத₃ பைரஸவ்
ஶாரிகேவ மணி பஞ்ஜரஸ்தி ₂தா — 17.28 —

வ்யாஹ்ரு’தி க்ஷமத₃ஶாதி வர்தி நீம்
விப்லுதாம்பு₃ஜ ருசிம் ரஜ:கணை :
ஸேவதே மது₄மதே₃ந மோஹித:
புஷ்பிதாம் ப்₄ரமர ஏஷ பத்₃மிநீம் — 17.29 —

ஏஷ சாத்ர ஸமயா ஸரோஜிநீம்
ஏகதா நயதி சித்த சஷுஷீ
பாத₃பைருபக₃தஶ்சதுர்விதை ₄:
பாரிஜாத உத₃தீ₄ந்த்₃ர ஸம்ப₄வ: — 17.30 —

பத்₃ம ராக₃ ரமணீய பல்லவம்
பஶ்ய கோமல ஹரிந் மணிச் ச₂த₃ம்
புஷ்ப பூ₄த வர ஶில்ப பூ₄ஷணம்
தப்த ஹேம ருசிரத்விஷம் தரும் — 17.31 —

நம்ரதாமுபக₃த: ப₂லை ரஸவ்
வல்கு₃ப்₄ரு’ங்க₃விருதைரபி ₄ஷ்டுவந்
ஆர்த்₃ரபா₄வஸுப₄கோ ₃ விபா₄வ்யதே
காம கிங்கர இவோ சித க்ரிய: — 17.32 —

அக்ஷதா₃ மரசநோ சிதை : ப₂லை :
தே ₃வதாநுகு₃ண புஷ்ப ஸம்பதா₃
வல்கலைஶ் ச வஸநைஶ்ச விந்த₃தே
வீத ராக₃த்₄ரு’தராக₃ஹ்ரு’த்₃யதாம் –17.33 —

த்வத்ஸக₃ந்த₄துலஸீ ஸஹோத₃ர:
புண்ய ஏஷ புருஹூத பாத₃ப:
ப்ராணிநாம் யத₃வ லோக நக்ஷணே
பூர்வ ஜாதிஷு ப₄வத் யநுஸ்ம்ரு’தி : –17.34 —

ஏஷ கல்பலதி காபரிஷ்க்ரு’த:
ப்ரத்யேவக்ஷயதி பல்லவாருண:
ஸாக₃ரேந்த்₃ர ஸுதயா ஸமந்விதம்
தா₄ம கௌஸ்துப₄ மயூக₂ ரஞ்ஜிதம் — 17.35 —

பஶ்ய ஜாலகி தபல்லவாத₄ரை :
மவ்க்திகைரம்ரு’தபி₃ந்து₃நிர்மலை :
ஸூசித ஸ்மித ருசிம் ஸுரத்₃ருமம்
பா₃ல சந்த்₃ர மணி ராஜ ஸோத₃ரம் — 17.36 —

அஸ்ய நூந மம்ரு’தாதி ₄கை : ப₂லை :
ஸேவிதைர நுதி ₃நம் தி₃வவ் கஸாம்
ந ப்ரஸக்தி ரபவர்க₃ நந்த₃தவ் ₂
ந ஷுதா₄ ந ச ஜரா ந ச வ்யதா₂ — 17.37 —

த்வாமிஹ த்ரிதி ₃வத₃ர்ஶநாக₃தாம்
மஞ்ஜரீபி ₄ரவநம்ய பூ₄ரிபி ₄:
மாநயத்ய யமஸவ் ஸுரத்₃ருமோ
மந்மதோ ₂பவந தே₃வதாமிவ — 17.38 —

த்₃வாரகா பரிஷத₃ம் ப்ரயாஸ் யதோ
தூ₃ர வர்த்ம பதி ₂கஸ்ய மே த்₃ரு’ஶா
ப்ராதரா ஶவதி ₃ஹாஸ்ய பு₄ஜ்யேத
ஸப்த லோகதி லகஸ்ய சாருதா — 17.39 —

கா₃ட₄ப₃த்₃த₄நயநா த்வமீஹஸே
காமதே ₄நு ஸஹ ஜந்மநி த்₃ருமே
நூந மஸ்ய மணி பூ₄ப்₄ரு’தா ஸஹ
ஸ்தா₂பநம் நிஜ நிவேஶ நிஷ்குடே — 17.40 —

வ்யுத்தி ₂தேஷு விமுகே₂ஷு வா ஸ்வயம்
நிர் நிமேஷ நயநேஷு நாகிஷு
த்வத்₃ விவஷிதமத: பரம் கத₂ம்
புஷ்பமஸ்ய பி₃ப்₄ரு’யாத் புலோமஜா –17.41 —

ஶங்க₂ பத்₃ம ஸுர பாத₃பாதி ₃பி ₄:
ஶ்லாகி₄தாம் த்ரிதி ₃வேதா கு₃ணாதி ₄காம்
மாநநீயசரிதா மயா ஸஹ
த்₃வாரகாம் த்வமதி ₄வத்ஸ்யஸி ப்ரியே — 17.42 —

து₃க்₃த₄ ஸிந்து₄ து₃ஹிது: ஸஹோத₃ரே
வாஸமே யுஷி வதா₃ந்யபாத₃பே
ஶக்ரதா₃ரவத₃நே அபி து₃ர்லபா₄ம்
லப்ஸ்யதே தவ விஹாரபூ₄: ஶ்ரியம் –17.43 —

இத்த₂மாதி ₃கவிநா ஸமீரிதா
ஸா அந்வ பா ₄வி கில ஸத்ய பா₄மயா
ஸாமரஸ்யமிவ தேந ஜக்₃முஷீ
ஸவ் குமார்ய ஸுப₄கா₃ ஸரஸ்வதீ –17.44 —

யோஜிதோ அத₂ யது₃வம்ஶ கேதுநா
க்₂யாத கீர்தி ரம்ரு’தாபஹாரத:
உத் ஷிபந் க₂க₃பதி : ஸுரத்₃ருமம்
பக்ஷபங்க்தி விபிநே ந்யவீவிஶத் — 17.45-

ஏதமஶ்ருதசரம் புரந்த₃ர:
ஶுஶ்ருவாந் க்ஷண முத₃ந்த மைஶ்வரம்
பீ₄தி கோப ஸமவாய ரூபயா
தோ₃லயேவ ஸமக்ரு’ஷ்யத த்₃விதா₄ –17.46 –

அப்ரதி க்ரியமபி ப்ரபோ₄ரித₃ம்
சேஷ்டிதம் ப்ரதி சிகீர்ஷதா ததா₃ —
மந்யுரேவ ஶதமந்யுநா மஹாந்
ஆக்₃ரு’ஹீத மநஸா அப்₄ய மந்யத — 17.47 —

தீ₃ப்த த்₃ரு’ஷ்ட்ய சிரரஶ்மிஸந்ததி :
வஜ்ர கோ₄ஷ பருேஷா மருத்ஸக₂:
சித்ர சாப ஶர வர்ஷ வாம்ஸ்தத:
ப்ரத்ய த்₃ரு’ஶ்யத மருத்வத₃ம்பு₃த₃: — 17.48 —

ந்யஸ்த கர்பு₃ரகுதோ ₂த்தரம் நிஜம்
வாரணேந்த்₃ரமதி ₄ருஹ்ய வாஸவ:
நைகதா₄துமதி ரவ்ப்ய பூ₄த₄ரே
ஸோப₄தே ஸ்ம நிஜரத் ந ஸைலவத் — 17.49 —

அப்ரதர்க்ய வ்ரு’ஜிநோத்த₂மாஸுரம்
பா₄வமாஸ்தி ₂தவதா வலத்₃விஷா
து₃ர்ஜயோ அபி விஜிகீ₃ஷிதோ விபு₄:
ஸஸ்மித: ஸமர ஸம்முகோ ₂அப₄வத் — 17.50 —

தேவ ராஜ யது₃ராஜ யோரித₃ம்
த்₃வைரத₂ம் ப்ரதி ப₄யம் தி₃த்₃ரு’க்ஷவ:
வேத₄ஸா ஸஹ ஸநந்த₃நாத₃ய:
த்யக்த ஸம்யமதி ₄யோ அவதஸ்தி ₂ரே –17.51 —

பீ₄ஷண ப்ரலயமேக₄ஸந்நிப₄ம்
க்ரு’ஷ்ண மேக₄மத₂ மேக₄வாஹந:
ஆப தந்ந ஸுர பே₄த₃கம் க்ஷணாத்
ஆசகர்ஷ ரு’ஜுரோஹிதம் த₄நு: — 17.52 –

சக்ர பாணி விஜயாய சக்ரிதாத்
பீ₄மகோ₄ஷத₃லிதாகி₂லஶ்ருதே :
வஜ்ர பாணி த₄நுஷ: ஶரோர்மய:
ஸம்ப₃ பூ₄வுருத₃தே₄ரிவோர்மய: –17.53 —

வஜ்ரிண: ஶரக₃ண: ஸமாபதந்
வாஹநே க₂க₃பதவ் முரத்₃விஷ:
தஸ்ய தேஜஸி ப₃பூ₄வ ப₄ஸ்மஸாத்
தூலராஶிரிவ கால பாவகே — 17.54 —

ப்லாவவிதோ விஶிக₂ வ்ரு’ஷ்டிபி ₄ஸ் ததா₃
ஜம்ப₄பே ₄தி ₃ ஜலத₃ப்ரஸூதிபி ₄:
அந்வதீ₃பி க₃ருட₃: ப்ரதாபவாந்
ஆஜ்ய ஸிக்த இவ வஹ்நிராத்₄வர: — 17.55 —

வ்ரு’த்ர ஹந்துர சமத் க்ரியா மிமாம்
விஶ்வவித் ஸ்வவிஷயே விபா₄வயந்
பஶ்யதி ஸ்ம விபு₃தே ₄ஷு காஶ்யபி :
பந்ந கே₃ஷ்விவ பராக்ரமம் க்ஷமம் — 17.56 —

தஸ்ய தே₃வ ப்ரு’தநா விதூ₄தயே
ஜ்ரு’ம்ப₄மாண வபுேஷா மஹவ் ஜஸ:
அப்ரபூ₄தமப₄வஜ்ஜக₃த் த்ரயம்
பி₃ப்₄ரதஸ் த்ரி ஜக₃தே₃க த₃ம்பதீ — 17.57 —

துங்க₃பக்ஷதி ஶதாங்க₃ஶாலிநோ
பீ₄ம நாக₃க₄டிதாக்ரு’தேரபூ₄த்
வாஹதாம் ச வஹத: ஸ்வபத்தி தாம்
ஸைந்யதா அஸ்ய ஸுர ஸைந்ய யோதி ₄ந: –17.58 —

பாரிஜாத பவநோர்மிப்₃ரு’ம்ஹிதை :
வாஸுகி ப்ரப்₄ரு’தி பி ₄ர் மஹோரகை ₃:
கா₃ட₄தாம் ஹரிரத₂ஸ்ய பி₃ப்₄ரத:
ஸாரதி ₂ஶ்ச துரகா₃ஶ்ச ஸாஹஸம் — 17.59 —

கா₃ட₄ தீ₃ப்த க₃ரலாந லோஷ்மலா
தார்ஷ்ய பூ₄ஷண பு₄ஜங்க₃பூ₂த் க்ரு’தி :
பீத நிர்ப₄ர ஸுதா₄ர ஸோந்மதா₃:
பாக ஶாஸந சமூர மூமுஹத் — 17.60 —

அப்ரதர்க்ய தரேஸா க₃ருத்மத:
பக்ஷ வேக₃பவநேந தாடி₃தா:
ஆத்மகங்கடம போஹ்ய வஜ்ரிணம்
ப₃ப்₄ர முர்த₃ஶஸு தி₃ஷு மாருதா: — 17.61 —

தஸ்ய பக் ஷமருதா நிவர்திதை :
வாஹிநீ தி₃விஷதா₃மஸேஷத:
வ்ரு’த்ர ஶாஸந ஶராஸநச்யுைத:
ப்ரத்ய வித்₄யத ஶரைரஜிஹ்மகை ₃: –17.62 —

வைநதேய நக₂ரைர் விதா₃ரிதோ
பா₃ஹ்ய மாந்தரமபி த்யஜந் மத₃ம்
ஸோணிதைர் விருருசே ஸுரத்₃விப:
ஶ்வேத ஸைல இவ தா₄து நிர்ஜ₂ரை : — 17.63 —

ஷ்வேடி₃தேந முஷிதா ஶயாநிவ
ப்லோஷி தாநிவ த்₃ரு’ஶா ப்ரதீ₃ப்தயா
தா₃ரிதாநிவ பதத்ரமாருதை :
நிர்ஜராநதநு தாருணாநுஜ: — 17.64 —

ஸ்வாஸு தி₃ஷு ஸமவஸ்தி ₂தாஸ்ததா₃
தி₃ஷ்ட வஞ்சி ததி ₄யோ தி₃வவ் கஸ:
தோயதா₃ இவ யுகா₃ந்த பா₄ஸ்கரம்
ஸந்நி க்ரு’ஷ்ய ஸம வ்ரு’ண்வதாச்யுதம் –17.65 —

நாஜிகா₄ம்ஸத₃பராதி ₄நோ அபி தாந்
நாக நாயக க₃ணாந் ஜநார்த₃ந:
ஆந்ரு’ ஶம்ஸ்ய மத₂வா ந ப₄ஜ்யதே
தஸ்ய ஸம்ஶ்ரித ஜநஷு ஜாதுசித் — 17.66 —

தேஷு ஶிக்ஷண பர: ஶிலீ முகா₂ந்
ப்ராஹி ணோத் ப்ரபு₄ரமர்ம பே₄தி ₃ந:
அங்குஸேந நிஶிதேந ஹஸ்திபோ
து₃ர்மதா₃ந் ப்ரஶமயந்நிவ த்₃விபாந் — 17.67 —

தம் ஸமேத்ய நிரபாய தேஜஸம்
ஸப்த ஸப்தி மிவ தார காக்₃ஹை :
ஸத்₃பி₄ரேவ விபு₃தை ₄ரஸத்ஸமா
கா அபி து₃ர் க்₃ரஹத₃ஶா அந்வ பூ₄யத — 17.68 —

அஷ்ட பி ₄ஶ்ச ஹரிதாம தீ₄ஶ்வரை :
அர்யம ப்ரப்₄ரு’தி பி₄ஶ்ச ஸம்ஹதை :
வ்ரு’ஷ்ணி வீர ஶர க₂ண்டி₃தாயுதை ₄:
விஹ்வ லைரஜநி வீத ஶக்திபி ₄: — 17.69 —

அக்ர மாத்₃த₃ஶ தி₃ஸோ அவலோகயந்
த₃த் தத்₃ரு’ஷ்டிரபி₄த: க்ரமாத்₃வ்ரு’ஷா
ஸ்ரஸ்த கார்முக ஶிரஸ்த்ர கஞ்சுகாம்
ப்ரேஷ்ய தே₃வ ப்ரு’த நாம தூ₃யத — 17.70 —

அஸ்த்ர ஶஸ்த்ர விநி பாத மோஹிதாந்
அர்தி ₃தாந ஸுர வைரி ஸாயகை :
ஸத்ர பேவ ஸபதி ₃ த்ரபா ஜஹவ்
தை₃ந்யமீலி தத்₃ரு’ஸோ தி₃வவ் கஸ: –17.71 —

அப்ஸயோ நயந தோயகஜ்ஜலை :
ஸோணி தைஶ்ச விபு₄நா ஸுபர்வணாம்
ஆத்ம கீர்தி ஸுத₄யா விஸோதி₄தே
சித்ர மம்ப₃ர தலே வ்யலிக்₂யத — 17.72 —

பஞ்ச வக்த்ர வத₃நஸ்த₂ மாமிஷம்
ப்ராப்து காம இவ பா₃ல வஞ்சக:
ப்ரஸ்தி ₂தாமபி₄நிவேஶவாந் புந:
ப்ரத்யபத்₃யத த்₄ரு’திம் புரந்த₃ர: — 17.73 —

வஜ்ர மாத்த மரிஹந்த்ரு’ ஜிஷ்ணுநா
விஷ்ணுநா ச யுதி ₄ சக்ர முத்₃யதம்
த்₃ரு’ஷ்ட வந்தி பு₄வநாநி ஜஜ்ஜிரே
கம்பி தாநி கலுஷாணி ச க்ஷணாத் — 17.74 —

தவ் பரஸ்பர ஜிகீ₃ஷ யோத்₃யதவ்
வீஷ்ய நிஷ் ப்ரதிம வீர்ய வைப₄வவ்
வ்யோம பி₄த்தி லிகி ₂தைரிவ ஸ்தி₂தம்
வ்யக்த விஸ்மயப₄யை : ஸுராஸுரை : — 17.75 —

கஸ்ய கேந பரிபூ₄தி ராபதேத்
கஶ்ச வேத₃ ரண வர்த நீமிதி
ஸந்தி ₃ஹா நமந ஸைவ தத் க்ஷணம்
மத்₄யஸீம்நி விஜயஶ்ரியா ஸ்தி ₂தம் –17.76 —

ப்ரேஷிதாம் ஹரிஹயேந பீ₄ஷணாம்
ஹ்ராதி ₃நீம் ஹ்ரு’தவதி த்ரிதா₄மநி
லோலிதா நிவவ்ரு’தே பரஸ்பரம்
லோக பால ப்ரு’தநா பராங்முகீ₂ — 17.77 —

காந்தி ₃ஶீக ஜிதகா ஶிநோரிமாம்
வ்யாப்ரு’திம் விபு₃த₄ வ்ரு’ஷ்ணி வீரயோ :
ப்ரேஷ்ய து₃ர்மத₃ விவேக யோரிவ
ப்ரஸ்தி ₂தேவ சகிதா அமராவதீ — 17.78 —

தம் ததா₂ ஸமரதை ₃ந்ய விப்லுதம்
ஶாந்த த₃ர்பம யதா₂புரம் ஸ்தி₂தம்
வ்யக்தந்ரு’த்த ஹ்ரு’த₃யம் வலத்₃விஷம்
வீஷ்ய விஶ்வமகி₂லம் வ்யலஜ்ஜத — 17.79 —

வ்ரீட₃யா தரலி தைர் விலோசநை :
வேப மாந கமலா கரோபம:
ஸந்நத: க்ஷண மவைஷி வாஸவ:
ஸாபஹாஸமிவ ஸத்ய பா₄மயா — 17.80 —

யாத₃வேந்த்₃ர விபு₃தே₄ந்த்₃ரேயாஸ்ததா₃
ரத்ந யோரிவ துலாதி ₄ரூட₄யோ :
கௌ₃ரவேண த₃த்₃ரு’ஸே ஸமுந்நதி :
லாக₄வேந ச நதிஸ் தத₃த்₃பு₄தம் — 17.81 —

யத் ப்ரபவ் ₄ நரகமர்த₃நே அப₄வத்
தே ₃வத₃ர்பத₃மநே ததோ அதி ₄கம்
புஷ்யதி ஸ்ம மகரந்த₃ மேது₃ரம்
புஷ்ப வர்ஷ மம்ரு’தோத்₃ப₄வஸ்தரு: — 17.82 —

இத்ய நாகலித பூர்வ ஸத் க்ரு’திம்
வ்ரு’க்ஷ மாத்ர கல ஹோல்ப₃ணம் விபு₄:
நிர்ஜிகா₃ய மிஷதாம் தி₃வவ்கஸாம்
ஆத்த ஶஸ்த்ர மமராவதீஶ்வரம் — 17.83 —

தீ₃ப்ய மாநமநகே ₄ந தேஜஸா
தே ₃வகீ ஸுத மவேஷ்ய தே₃வதா:
அஸ்த்ர ஜாலமவதூ₄ய ஸித்₃தி ₄தா₃ந்
அஞ்ஜலீநபி ₃ப₄ரு: கராம்பு₃ஜை : — 17.84 —

ஸோ அத₂ ஸம்யதி பலாய நோந்முக₂:
பாகஶீல இவ பாக ஶாஸந:
ஸத்யயா விஹஸிதோ அபி ஸத்த்வவாந்
ப்ரத்யபோ₃தி ₄ பரமேஷ்டி₂நம் புந: — 17.85 —

தி₄க் ப்ரமாத₃மதி ₃ராம் விமோஹி நீம்
திஸ₄க் பரிக்₃ரஹ விஸேஷ மீத்₃ரு’ஶம்
தி₄க் ச மே த்ரித₃ஶ ராஜதாமிதி
ஸ்வம் ஜக₃ர்ஹ மக₄வாந் முஹுர்முஹு: –17.86-

தேந தத்ர விஹகே₃ந்த்₃ர வாஹநோ
வாரணாத₃வநதேந பி₃ப்₄யதா
நிர்ஜிதேந ஹரிணா ஹரி: ஸ்வயம்
பர்யவைஷி ஶரணம் ப்ரியாஸக₂: — 17.87 —

துஷ்டுவே ச புருஷம் புருஷ்டுதம்
ப்ராஞ்ஜலி: பரிப்₃ரு’டோ ₄ தி₃வவ் கஸாம்
ரக்த பா₄வ விக₃மோஜ்ஜ்வலம் முக₂ம்
ராஹுமுக்தமிவ சந்த்₃ரமுத்₃வஹந் — 17.88 —

ஶக்ர ஏஷ ஶரணம் ப்ரபத்₃யதே
ப₄க்த ஜீவித ப₄வந்தமீஶ்வரம்
மித்ர பா₄வ ஸமுபாக₃தம் ஜநம்
ந த்யஜேயமிதி நாத₂ மந்யஸே — 17.89 —

மாதரம் த்ரிஜக₃தாம் தவ ப்ரியாம்
மாநுஷீதி மநுதே ஸ்ம மத்₃வதூ₄:
தேந நூந மநுபூ₄த மீத்₃ரு’ஶம்
தை₃ந்ய மேதத₃வஸோதி ₃தம் மயா — 17.90 —

நிர்ஜிதோ அஹமஜிதேந யத் த்வயா
லம்பி ₄தோந்நதி ரநேந ந த்ரேப
ந ஹ்யஜய்யமிஹ கிஞ்சித₃ஸ்திதே
ஸர்வ நேதுரதி ரிக்தமாத்மந: — 17.91 —

அஸ்து மா ஸ்ம ப₄வதி ₃த்யநந்யயா
வீக்ஷயா ஜக₃தி ₃த₃ம் நியச்ச₂தா
நாத₂ நிஷ்ப்ரதிக₄தேஜஸா த்வயா
நந்வயம் மம பராஜயோ ஜய: — 17.92 —

ஆத்மகா₄தி பி ₄ரஹம்மதி க்₃ரஹாத்
மாத்₃ரு’ஸைஸ்த்வதி ₃தரேஷு ராகி ₃பி :
அவ்யவஸ்தி ₂த ஜயேதரக்ரமம்
த்₃யூத மேதத₃க்₄ரு’ணைர் நிஷேவ்யதே –17.93 —

ஆதி ₄காரிகபதே ₃ஷு தே வயம்
ஸ்வேஷு யாவத₃தி ₄காரமாஹிதா:
ப்ராபிதாஸ் தவ பரம் பத₃ம் த்வயா
நிர் விஸேம நிவிஸே மஹி த்வயி –17.94 —

ந ஷிபேத₃பி த்ரு’ணம் ஸமீரண:
த்வத் ப்ரயுக்த மநலோ ந நிர்த₃ஹேத்
ந ப்ரஜாபஶுபதீ ந சேதரே
த்வத்₃விபக்ஷமபி ₄ரஷிதும் க்ஷமா — 17.95 —

அக்₃ரஜே மயி திவவ்கஸாம் பிது:
புத்ர பா₄வமுப ஸேது₃ஷா த்வயா
மாநிதோ அஹமவ மாநித: ஸ்வயம்
வாநராநுசரிதை : ஸ்வ ஸேஷ்டிதை : –17.96 –

மத்₃விதா₄ விஷமவ்ரு’த்தி ஶாலிந:
ஶாந்த கோ₄ர ஸமயாதி லங்கி₄ந:
ேபாஷயந்தி ப₄வத: க்ஷமாநிதே ₄:
ப்ராயஶ: ப்ரஹஸ நோசிதம் ரஸம் — 17.97 —

அஸ்மதி ₃ஷ்ட மநகா₄ஸ்த்ரிவிஷ்டபம்
து₃:க₂ மிஶ்ர மவதா₄ர்ய து₃ர் க₃திம்
த்வத் பத₃ம் பரமநந்ய சேதஸ:
ஸம்ஶ்ரயந்தி நிரபாயமாஶ்ரயம் — 17.98 —

அல்பமஸ்தி₂ர மபாயத₃ந்துரம்
ஸ்வர்க₃ ஸவ்த₄ மவதீ₄ர்ய ஸூரய:
நிஸ்தரந்தி ஜக₃தே ₃க ஹேதுநா
ஸேதுநேவ ப₄வதா ப₄வார்ணவம் — 17.99 —

த்வத் பதை ₃க த்₃ரு’ட₄ ப₄க்தி ரூபயா
முக்தி வாஸர வி பா₄த ஸந்த்₄யயா
ஷீயதே ஜக₃தி கஸ்யசித் ப்ரேபா₄
மோஹ ஸந்ததி மயீ மஹா நிஶா — 17.100 —

தே ₃ஶ கால க₃ண நாதி லங்கிபி
மாதுமாக₃மக₃ணேந வாஞ்சி₂தை :
பூ₄ஷிதோ கு₃ண விபூ₄தி ஸாக₃ரை :
த்வத் ஸமஸ்த்வ மிதரே மித₂: ஸமா: –17.101 —

கா கதா₂ தவ ஸமே அதி கே அபி வா
ஹீந இத்யபி க ஏவ க₃ண்யதே
மேரு ஸர்ஷ பநி த₃ர்ஶநம் ச தே
மா ஸ்ம பூ₄த்த்₃வதி தரஸ்ய சாத்மந: –17.102 —

பூ₄த ப₄வ்ய ப₄வதா₃த்மந: ப்ரேபா₄
யந் நிதா₃ந மகி₂லஸ்ய ஶாஶ்வதம்
யத் ப்ரவிஶ்ய ந புநர் நிவர்தேத
யத் பரம் பத₃முஶந்தி தத்₃ப₄வாந் –17.103 —

ஜாதி வர்ண ரசநா விசித்ரிதம்
விஶ்வ சித்ரமுத₃மீலயத்₃ப₄வாந்
ஆத்மபி₄த்தி ¦யதஸ்தி ₂ராஶ்ரய:
தூலிகாம் த்ரிகு₃ண லக்ஷணாம் வஹந் –17.104–

அப்ரயச்ச₂தி து₃ரத்யயக்ரமே
த்வய்ய ஸேஷ ஜக₃தே ₃கதா₄தரி
இஷ்டமந்யது₃ப₄யம் ச மிஶ்ரிதம்
கஸ்ய கேந கிமிவோப பத்₃யேத – 17.105 —

ஆயதந்த பு₄வநாந்ய ஸேஷத:
த்வய்ய தஸ்த்வமநுபாதி ₄ரீஶ்வர:
வர்த₄நீய விப₄வா வயம் புந:
த்வத் ப்ரதி ₃ஷ்ட புர பத்த நேஶ்வரா: –17.106 —

ஜந்ம கர்மபி ₄ரஸவ் நிப₃த்₄யதே
தாநி யஸ்தவ ந வேத்தி தத்த்வத:
த்வத் கதா₂ம்ரு’த ரஸம் பிப₃ந்தி யே
தே ப₄வே யுர புந: ஸ்தநந்த₄யா: — 17.107 —

கத்₂யதே சித₃சித₃ந்தராத்மந:
ஶாஸ்த்ர ஶுத்₃த₄ ஹ்ரு’த₃யைர் மநீஷீபி ₄:
ஸ்ரு’ஷ்டி ஸம்ஹரண ரஷணேஷு தே
விஶ்வ ரூப நநு கர்ம கர்த்ரு’தா — 17.108 —

ஆகுமார மநுபா₄வ மீத்₃ரு’ஶம்
நாத₂ விஶ்வ விதி ₃தம் தவ ஷிபந்
ஹந்த நூந மஹிமாம் ஶுமண்ட₃லம்
தஸ்கரஸ் தமஸி கோ₃ப்துமிச்ச₂தி –17.109 —

பக்ஷபாத பரிஹார ஶுத்₃த₄யா
பஶ்யதி ப்ரணித₃தா₄நயா தி₄யா
யத் ப்ரு’ஷந்தி நிக₃மா: ஸ்ப்ரு’ஶந்தி தம்
த்வத் ப்ரபா₄வ மநபாய மாத்மவாந் –17.110 —

மாநுஷத்வ மநுக₃ச்ச₂தா த்வயா
மோஹிதைஸ் த்வமவதீ₄ர்யஸே ஜநை :
தேந நஸ் த்ரிகு₃ண தந்த்ர சேதஸாம்
ஆக₃தேய மஸ மீஷ்ய காரிதா — 17.111 —

ஶர்வரீதி ₃வஸவத்₃விகூ₄ர்ணயந்
ஸ்வாபஜாக₃ ரத₃ஶா விதே₄ரபி
கிம் புநஸ்ததி ₃தரஸ்ய தந்மயா
மோஹ போ₃த₄ விவஸேந பூ₄யதே –17.112 —

யோ அஸி ஸோ அஸி ச யதா₂ ததா₂அஸி ச
த்வாம் த்வேமவ க₂லு வேத்ஸி வா ந வா
தஸ்ய தே ந க₂லு தத்த்வேவதி ₃நோ
வாரி தே₄ரிவ வயம் தடஸ்தி ₂தா: — 17.113 —

த்வத் ப்ரதீப சரணாத்₃தி ₃வவ்கஸாம்
தா₃நவாயி தவதாம் த்வயா அது₄நா
ஸ்தா₂ந ஏவ பரிபூ₄தி ராஹிதா
நா ஸுரோ ந ச ஸுரோ கு₃ணாந்தரே –17.114 —

அர்சநீய சரணாம்பு₃ஜே ப₄வ –
த்யாததாயி பத₃வீமுபே யுஷாம்
ந்யஸ்த ஶஸ்த்ர பரிகர்மணா மஸவ்
நிஷ்க்ரு’தி ஸ்த்வது₃பஸத்தி ரேவ ந: –17.115 —

கிம் தத₃ஸ்தி குஶலேஷு யந்நதே
தச்ச கிம் த்வதி ₃தரேஷு யத்தவ
ஈத்₃ரு’ஶஸ்ய ப₄வத: கிமீத்₃ரு’ஶா
தஸ்து₂ஷா த்ரியுக₃ ஜக்₃முஷா அபி வா –17.116 —

அல்ப ஸத்த்வமவலே பயந்த்ரிதம்
ப₃ல்ப₃ஜேஷு ப₃ஹுமாந ஶாலிநம்
த்வத் க்ரு’பைக பரிஹார்ய விப்லவம்
ப்ரத்ய வேக்ஷண பத₃ம் ப்ரதீஹி மாம் — 17.117 —

ம்ரு’ஷ்யதாம் மம விபோ ₄ வ்யதி க்ரம:
ப்ர ஸ்ம்ரு’தத்வது₃பகார பத்₃த₄தே :
ருத்₃ர கோப விவஶஸ்ய தே₃ஹிந:
கஸ்ய நாம ந ப₄வத்யப க்ரியா — 17.118 —

த்ராதுமேவ ஶரணாக₃தாந் ஸுராந்
ஆஸுராநபி ₄ஜிகா₄ம்ஸதா த்வயா
ராக₃ரோஷ ரஹி தாத்மநா ஸ்வயம்
தை₃த்யஶத்ருரிதி நாம க்₃ரு’ஹ்யதே –17.119 —

த்வத்₃ க்₃ரு’ஹீத கு₃ண ஸூத்ர ஸந்தி ₃தாந்
தா₃ரு புத்ர நயத: ப்ரவர்தி ந:
நிர்கு₃ணாநபி நி ஸர்க₃கிங்கராந்
ஸ்வீ குருஷ்வ க்ரு’பயா ஸ்வயைவ ந: — 17.120 —

வாஸவஸ்ய வசநம் நி ஶம்ய தத்
பா₄வ ஶுத்₃தி ₄பரிகர்மிதாக்ஷரம்
தீ₃நகு₃ப்தி ஜநநீம் புநர்த₃யாம்
அந்வ வி ந்த₃ த₃ரவிந்த₃ லோ சந: — 17.121 —

உத்₃த்₄ரு’தம் ச விபு₄நா ஸுத₃ர்ஶநம்
த்ராணத₃ம் த்ரிதி ₃வஸத்₃மநாமபூ₄த்
தஸ்ய த்₃ரு’ப்த த₃மநேந தீ₃வ்யத:
ஶிக்ஷணைக நியதம் ஹி ஶாஸநம் –17.122 —

ஆஹ சைந மந கே ₄ந சஷுஷா
ஸோத₄யந்ந ம்ரு’த ஸிந்து ஸோபி ₄நா
ஸ்வாது₃ஸூந்ரு’ தக₃பீ₄ரயா கி₃ரா
பாரிதோஷிக மிவார் பயந் ப்ரபு₄: — 17.123 —

ப₄த்₃ரமஸ்து ப₄வேத தி₃வஸ்பதே
நிர்ஜராஶ்ச நிரபாயமாஸதாம்
ஆத்ம சவ்ர்யது₃ரிதா கரத்யஜாம்
மா அபஹார்ஷு ரஸுரா: பதா₃நி வ: –17.124 —

மா ஸ்ம பை ₄ஷ்ட மயி கோ₃ப்தரி ஸ்தி ₂தே
பா₄விதாநி ப₄வுகாநி ஸந்து வ:
வீததா₃ நவபராப₄வாஶ் சிரம்
த்ராது மர்ஹத₂ ஸுராஸ் த்ரிவிஷ்டபம் — 17.125 —

மந்த்ர பூத மநுபப்லவம் ஹவி :
யாய ஜூக பரிஷந் நிஷேவிதம்
அந்தராத்மநி நிவிஷ்ட மந்தரா
விந்த₃த ஸ்தி₂ர ஸுதா₄ரஸாந்தரம் — 17.126 —

ஜந்மதோ அபி ப₄வதாம் மஹீயஸாம்
ஆப்த ப₃ந்து₄ரதி ₃தேரஹம் ஸுத:
தே₃வகீ தநய பா₄வேதா அபி மே
ஸை வ ஸம்ப்ரதி ஸஹோத₃ரத்வதீ₄: –17.127 —

ஆயுதா₄நி புநரக்ஷதாநி வ:
ஸந்து ஸத்த்வமபி தை₃த்ய ஸூத₃நம்
பாலயந்து ப₃லிநோ ஜக₃த் த்ரயீம்
தே ப₄வந்த உபபந்ந பவ்ருஷா: — 17.128 —

இத்ய நாவில மநோஜ்ஞயா கி₃ரா
நிர்மலாம் நிஜத₃யாமி வோத்₃வமந்
ஸவ்ம்ய த்₃ரு’ஷ்டி ரகரோத் ஸுதா₄பு₄ஜ:
பர்யவஸ்தி ₂தத்₄ரு’தீந் பர: புமாந் — 17.129 —

தே ச தேந க₃ருட₃ம் நியச்ச₂தா
க₃ம்யதாமிதி க₃பீ₄ரமீரிதா:
அத்₃ய ஜாதவத₃நந்யவத்ஸலே
ப்ரஶ்ரிதா: ஸு மநஸ: ப்ரதஸ்தி ₂ரே –17.130 —

க்₃ரு’ஹ்யதாம் தருரஸாவிதி ஸ்வயம்
பா₄மயா ப₄க₃வதா ச பா₄ஷிதே
ஆக₃மிஷ்யதி புநஸ் த்வயா ஸஹே –
த்யாஹ தா₃ந வரிபும் திஸ₃வஸ்பதி : — 17.131 –

ஶாந்த க₃ர்வக₃ரலே தி₃வஸ்பதவ்
ஸந்நிவேஶ்ய ஸுர லோக ஸம்பத₃ம்
ஆப்து மைச்ச₂ த₃நுஜீவி ரஷிதாம்
ஸ்வாம் புரீமத₂ ஸுபர்ண வாஹந: — 17.132 —

ஆத்மாதி ₄காரமநுமத்ய தி₃ஶாபதீநாம்
வஜ்ரம் ப்ரதி ₃ஶ்ய புநரப்யநக₄ம் மேகா₄நே
தி₃வ்ய த்₃ரும ப்ரதி க₃திம் ச புநர் விதா₄ஸ்யந்
த₃த் தாப₄யோ த₃நுஜ ஶத்ரு ரவாப துஷ்டிம் — 17.133 —

அத₂ பத₃வி நி கீர்ண மந்தா₃ர வந்தா₃ருப்₃ ரு’ந்தா₃ரக –
ஸ்துதி ஶத ப₃ஹுமாந ஸத்யாபிதேஹ: ஸ ஸத்யாபதி :
அமர ஸமர வேக₃விக்₂யாததா₃ஷ்யேண தார்dேயண கா₃ம்
ப்ரதி ஜிக₃மிஷி தாம் புரீம் த்ராதுமந்வக் ஸமந்வ க்₃ரஹீத் — 17.134 —

பஶ்யத் யாராத₃நிமிஷக₃ணே பாரிஜாதா பஹாராத்
ஸ்ரஸ்தா கல்பாமிவ யது₃பதி : ஸ்தா₂பயந் ஸ்வர்க₃லஷ்மீம்
ஆஶா பாலைர வநத பத₃ஸ் த்யக்த லஜ்ஜை ரபீ₄ஷணம்
ராமத்ராதாம் க₂க₃பதி ரதோ ₂ ராஜதா₄நீம் ப்ரதஸ்தே ₂ — 17.135 —

——————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம் –ஷோடஸ:- ஸர்க₃–நரகாஸுர வதம்–

December 21, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

ஐராவதமதா₂ருஹ்ய ஶ்வேதாத்₃ரிமிவ ஜங்க₃மம்
புரீம் த்₃வாரவதீம் ஶவ்ரே ராஜகா₃ம புரந்த₃ர: –16.1 —

அபத்ய பா₄வமாபந்ந மாத்மாநமம் ரு’தோ த₃தே ₄:
நிமேஷ ரஹிதை :பவ்ரர் தே ₃வ பூ₄தைர் நிரீஷிதம் –16.2 —

அத்₃ரு’ஶ்யம் மந்த₃ புண்யா நாம மந்த₃ப்ரீதி தா₃யிநம்
ஆத் ததே₃ஹமிவ ஸ்வர்க₃மாஸே சநக த₃ர்ஶநம் — 16.3 —

மஹநீய பரிஷ்காரம் வல்கு₃ த்₄வஜ மதல்லிகம்
மஹோத்ஸவ மிவா ஶாநாமா ஶாப்₄யதி ₄க ஸம்பத₃ம் — 16.4 —

உத₃தே ₄ரிவ மந்தே ₂ந
பீடி₃தஸ்ய ஸமுத்தி ₂தை :
த்₃ரு’ட₄லக்₃ நைரிவோத் பத்தவ்
தீ₃ப்தம் ஸோணித பி ₃ந்து₃பி : — 16.5 —

தை ₃த்யதா₃ நவத₃ர்பக்₄நைர் த₃ந்தைர்த₃லித மந்த₃ரை :
ஸிம்ஹாநாமபி ஹந்தாரம் ஸிம்ஹ வக்த்ர விபூ₄ஷணை : — 16.6 —

மேருகல்பேந ரூபேண மேதி₃நீ த்₄ரு’தி ஹேதுநா
த்ரித₃ஶப்ரீதி தா₃தாரம் ஸ்த்யா ந ஸிந்தூ₃ரதா₄துநா — 16.7 —

மூர்த்₄நா விபுல துங்கே ₃ந மேநகாஸ்தந ப₃ந்து₄நா
த₃த₄தம் மவ்க்தி காகல்பம் க₃ங்கா₃பு₃த்₃பு₃த₃நிர்மலம் 16.8 —

அஜஹத்₃ ப்₄ரு’ங்க₃ கீ₃தேந க₃ர்ஜாட₃ம்ப₃ர ஸோபி ₄நா
ஸ்வகாந்த்யா கர்ணதாலேந க்லு’ப்த ஸங்கீ₃த கே₂லநம் — 16.9 —

நர்தயந்த மமர்த்யாநாம் நேத்ர கௌதுக ஸூதி காம்
நாஸாம் த்ரித₃ஶ நாரீணா மூரு நிர்மாண மாத்ரு’காம் –16.10 —

மங்க₃லத்வ மிவேச்ச₂த்₃பிர் ₄ஹேம ஶங்கா₂தி ₃மண்ட₃நை :
ஆஶ்ரிதம் ரத்ந பூர்ணேந கும்பே ₄ந ச மஹீயஸா –16.11 —

விபூ₄தி ஶரத₃ம் போ₄தை ₃: கீர்தி வல்லீ கு₃லுச்ச₂கை :
காந்தி ஸாக₃ர கல்லோலை : ஸபக்ஷமிவ சாமரை : — 16.12 —

ஸஹஜம் ப்ரப₄யா சந்த்₃ரம்
வாருணீம் மத₃ஸம்பதா₃
ஸூச யந்தம் ஸ்வமூர்த்யா ச
ஸுதா₄ம் ஶுத்₃தா₄நுபா₄வ்யயா — 16.13 —

ஜக₃தா₃மோத₃ ஜநகம் தா₃நார்த்₃ரகர புஷ்கரம்
த₃ப்₄ரயந்த மிவவ் தா₃ர்யாத்₃தி ₃வ்யபாத₃ப ஸம்பத₃ம் — 16.14 —

உத₃க்₃ர ப₃ஹு த₃ந்தாம் ஶும் ப்₃ரு’ம் ஹித வ்யாப்ததி ₃ங்முக₂ம்
ஹஸந்தமிவ தி₃ங்நாகா₃நந்யாநதி ப₃லாநபி — 16.15 –

உத்₃வ ஹந்தம் கத₃லிகாம் காஞ்சநீம் கிங்கிணீ ப₂லாம்
வப்ராபி ₄கா₄தபீ₄ தஸ்ய ஸுமேரோ ருபதா₃மிவ — 16.16 —

சித்ர கம்ப₃லஸஞ்ச₂ந்நம் காந்தம் கநக கஷ்யயா
வித்₃யுதேவ பரிஷ்வக்தம் வாஸ ராந்த ஶரத்₃க₄நம் — 16.17 —

அவதி₄ம் த₃ர்ஶ நீயா நாமா கல்பமநக₄ம் தி₃வ:
ஜீவாதும் தே₃வ ஸைந்யாநாம் த₃ர்ப ப₄ங்க₃ம் விருந்த₄தாம் — 16.18 —

க₄ண்டா யுக₃ல நாதே ₃ந நகே₃ந்த்₃ரேஷ் வநுநாதி ₃நா
க்ஷரந்தமம்ரு’தஷ் வேலவ் கர்ணேஷ்வ மரதத்₃த்₃விஷாம் — 16.19 —

மஹதா மத₃க₃ந்தே₄ந தஸ்ய விக்₃நா விப₃ப்₄ரமு:
உத் கா₂தவி புலஸ்தம்பா₄ நாகா₃ஸ் த்ருடித ஶ்ரு’ங்க₂லா: — 16.20 —

ஸ தம் த்₃வாரவதீ த்₃வாரே ஸம வஸ்தா₂ப்ய ஸாநுக₃ம்
ஆஸ ஸாத₃ ஹரே : ஸ்தா₂ந மவஜ்ஞாத த்ரி விஷ்டபம் — 16.21 –

ஶுபா₄நாமிவ ஸாம்ராஜ்யம் ஶ்வேத த்₃வீப மிவாபரம்
நிவேதி ₃தஸமாஹூத: ப்ராஸாத₃ம் ப்ராவிஶத் ப்ரேபா₄: — 16.22 —

ஸ தேந விஹிதாம் ஶக்ர: ப்ரதி க்₃ரு’ஹ்ய ப்ரியார்ஹணாம்
நிஜகா₃த₃ நிஜாம் பீ₄திம் க₃த்₃ க₃தோ₃த்₃க₃மயா கி₃ரா — 16.23 —

த₃யநீயேஷு தே ₃வேஷு தே ₃வ தே ₃வ த்வயா அது₄நா
அபாங்கா₃: பரிபாத்யந்தா மநுக்ரோ ஶாநுவர்திந: — 16.24 —

ஸுஷுவே நரஸிம்ஹம் த்வாம் ப₄க்த ப்ரஹ்லாத₃ ஸம்முக₂ம்
ரக்ஷார்த₂மிஹ தீ₃நாநாம் ரத்நஸ் தூ₂ணேவ தே₃வகீ — 16.25 —

நாத₂ த்வயி நிராபா₃த₄ம் த்ரிலோகீம் த்ராதுமாக₃தே
நரகோ நாம தை₃த்யேந்த்₃ர: கத₃ர்த₂யதி நாகிந: — 16.26 —

த₄ர்ம ஸூகர ரூபஸ்ய தவாஸவ் க்ஷமயா அந்வயே
உத்பாத இவ பூ₄தாநாமுத்₃ ப₃பூ₄வ ப₄யாநக: –16.27 —

ஜநநீ ஸர்வ பூ₄தாநாம் பத்நீ தவ வஸுந்த₄ரா
ப்ரஸூய நரகம் தே₃வீ தூ₃யதே தத்வது₃பேக்ஷயா — 16.28 —

ந ஹிரண்ய ஹிரண்யாக்ஷவ் ந மது₄ர்ந ச கைடப₄:
உபமாந பதே ₃ தஸ்ய த்வச்ச₂க்தி ஜநி தாத்மந: — 16.29 —

ஏஷ கல்பாந்த வ்ரு’த்தாந் தமிதா₃ நீந்த நயந்நிவ
விது₄நோதி த்வதா₃ லம்ப₃ம் ப்₃ரஹ்ம ஸ்தம்ப₃ மித₃ம்பர: — 16.30 —

விக்ரமஸ் ரோதஸா தஸ்ய ப்₃ரு’ஹந்த்யபி ப₃லாநி ந:
ஸஹஸா பே₄த₃மாயாந்தி ஸைகதா இவ ஸேதவ: — 16.31 —

யத்₃ரு’ச்சோ ₂பக₃மே அப்யஸ்ய யாந்தி தே₃வ க்₃ரு’ஹாஶ்ரிதா:
ப்ரதா₄விதுமநீஶாநா: ஸாஷிதாம் ஸாலப₄ஞ்ஜிகா: — 16.32 —

மஹதா மத் ப்ரயுக்தேந வஜ்ரேண ஜ்வலிதாத்மநா
நிலில்யே தஸ்ய தோ₃ர் மத்₄யே நிஷ்காப₄ரண வர்ஷ்மணா — 16.33 —

த்வத் கோப இவ தீ₃ப்தோ அபி ஜ்வலநோ ந ப்ரகாஶதே
ஜ்யோதி ரிங்க₃ணவத் தஸ்ய த்₃யுமணே ரிவ ஸந்நிதவ் ₄ — 16.34 —

அமோக₄த்வய ஸோப₄ங்க₃ப₄யாதி ₃வ நிவர்தேத
அக₂ண்டி₃ தப₃லே தஸ்மிந் த₃ண்டோ ₃ த₃ண்ட₃ த₄ரார்பித: — 16.35 —

நயநார்சிஷ்மதஸ் தஸ்ய நைர்ரு’தேஶ் வரவாஹிநீ
அபஸ்ரு’ப்ய புரோபா₄கா₃த₃ த்₃யாபி ந நிவர்தேத — 16.36 —

தம் ஸுப்தமபி வா மத்தம் வாருேணா வைரி தா₃ருண:
ந ரோத்₃து₄ம் க்ஷமதே பாஸோ நலஸ்தம்ப₃ இவ த்₃விபம் –16.37 —

ஶக்த: ஶமயிதும் தஸ்ய ஸம்வர்தார்ஹ ஜவோ அபி ஸந்
நப₄ஸ்வாந் கே₂லத: ஸங்க்₂யே ந ஸ்வேத₃கணிகாமபி –16.38 —

த₄நதே ₃ந க₃தா₃ தஸ்ய மஹதீ மூர்த்₄நி பாதி த
அபி₄த்த்வா பவ்ஷ்பமா பீட₃ மநா பீட₃த்வ மாத₃தே ₄ — 16.39 —

ஜடிலாந் க்ரு’த்தி வஸநாந் நியமம் தீவ்ரமாஸ்தி ₂தாந்
தபஸ்விந இதி ஜ்ஞாத்வா ஸ ருத்₃ராந்நாதி வர்ததே – 16.40 —

அஹரத்₃வாருணம் ச₂த்ரம் மாமகம் மணி பூ₄த₄ரம்
அம்ரு’தஸ்யந்தி ₃நீ சாஸ்மஜ் ஜநந்யா மணி குண்ட₃லே — 16.41 —

ஆத₃ர்ஶமிவ ஸம்பத்தேர ம்ரு’தாப்₃தே₄ரிவாஶயம்
ஔபவாஹ்ய மஸவ் மத்கமாருருக்ஷதி ஸாம் ப்ரதம் — 16.42 —

தே₃வதா₃நவ ஸித்₃தா₄நாம் ந்ரு’பாணாமபி கந்யகா:
அபஹ்ரு’த்ய த்வேத₃ கார்ஹாஸ் த்வரதே பாணி பீட₃நே –16.43 –

ஸ பவ் ₄மஸ்த்வந் நிரஸ்தாநாம் ஸமவாய இவோத்தி₂த:
பா₃த₄தே விபு₃தா₄நேவம் ப₃ல வீர்ய பராக்ரமை : — 16.44 —

ததே ₃வ மவஸீத₃த்ஸு த₃யா தே₃வேஷு பாத்யதாம்
அநபஹ்நு ததா₃ஸ்யாநாம் தோ₃ஷ நிஹ்ந வஸாஷிணீ — 16.45 —

தமர்த₄ம் பூ₄மி பா₄ரஸ்ய
த்வயை வோத்பாதி ₃தம் ப்ரேபா₄
த்ரி லோகீ கண்டகம் தீஷணம்
த்வமேவோத்₃த₄ர்துமர்ஹஸி — 16.46 —

நிவர்த்யே த₄ர்ம ஶல்யே அஸ்மிந் நிதா₃நே ஸர்வ பாப்மநாம்
நிவேத₃நமிஹாஸ் மாகமம்ஸோ நிர்வஹணம் த்வயி –16.47 —

மஶகாமர்ஶவத்₃ யஸ்ய மது₄கைடப₄ மர்த₃நம்
தத₃ந்யத₃நுஜத்₄வம்ஸே தஸ்ய தே கிமிவாத்₃பு₄தம் –16.48 —

நிக₃மாந்தேஷு நிக₃த₃ வ்யாக்₂யாத நிஜ வைப₄வ:
வித₄த்ஸ்வ விபது₃த்தீர்ணாந மர்த்யா நநுகம்பயா — 16.49 —

இதி விஜ்ஞாபி தோத₃ந்தம் த₃த்த ஹஸ்தம் ப₃லத்₃விஷம்
விநி வர்த்ய ஜக₃ந்நாதோ ₂ வைநதேய மதா₂ஸ்மரத் — 16.50 —

அநுசிந்தித மாத்ரஸ் தமுபதஸ்தே ₂ க₂கே₃ஶ்வர:
அஹீந்த்₃ரதா₃மபி₄ர் பீ₄மை ரம்ஸ லம்பிபி ₄ரம்ஸல: — 16.51 —

பக்ஷ மாருத கோ₄ஷேண த்ரை லோக்ய து₃ரிதச் சி₂தா₃
சதுர்ணாமிவ வேதா₃நாம் ஸம்பூ₄தி மிவ பா₄வயந் — 16.52 —

தருணார்க ப்ரபா₄ ஸார ஸாமரஸ்ய ஜுஷா த்விஷா
தப்த ஹேமத்₃ர வவ்கே₄ந லிம்பந்நிவ தி₃ஸோ த₃ஶ — 16.53 —

ஸ்வாமி த₃ர்ஶந ஸந்தோஷாத் ப்ரஹ்ரு’ஷ்யத்₃பி ₄ஸ் தநூருஹை :
யுகா₃ந்த ஸந்த்₄யா ஜலத₃: தடிஜ்ஜா லைரிவ ஜ்வலந் — 16.54 —

விபுலாத்₃பு₄தஸம்ஸ்தா₂நைர்த்₃யோதிதோ தி₃வ்ய பூ₄ஷணை :
பு₄ஜகே₃ந்த்₃ர ப₂ணா ரத்ந ஶங்கார்ஹ மணி சித்ரிதை : –16.55 —

துங்க₃ வஜ்ர வ்ரணாங்கேந ஸுவிஸ்தீர்ணேந வக்ஷஸா
அப₃ஹிர் பா₄வயந் க்ரு’த்ஸ்ந மவகாஶம் விஹாயஸ: — 16.56 —

ப்ரு’து₂நா பு₄ஜ யுக்₃மேந போ₄கீ₃ந்த்₃ர பரிகர்மணா
மந்த₃ர த்₃விதயே நேவ ஸமேதோ ருக்ம பர்வத: — 16.57 —

வ்யால க₂ண்ட₃ந ஸங்க்ராந்த விஷ பங்க கலங்கி நா
த₃தா₄ந இவ துண்டே ₃ந தை₃த்ய த₃ர்பக₃ ஜாங்குஶம் — 16.58 —

தக்ஷகஶ்ரோணி ஸூத்ரேண த்₃ரு’ட₄ ப₃த்₃தே₄ந ப₃ந்து₄ரம்
மாந்யமக்₃ர ஜவர்ணேந வஸாநோ தி₃வ்ய மம்ப₃ரம் — 16.59 –

நாத₂ப₄க்தி பரிஷ்கார்யாம் ந்ரு’த்த லீலாமிவ ஸ்ப்ரு’ஶந்
நிஜேந ஸ்தா₂நகே நாக்₃ரே நிஹிதோந்நத ஜாநுநா –16.60 —

வபுஷா ப₄க்தி நம்ரேண தீ₄ரோந்நத மஹீயஸா
ஶாந்த வீராத்₃பு₄தரஸாந் ஸமாஹ்ரு’த்யேவ ஸம்பதந் — 16.61 —

மூர்தி மாநிவ ஸம்ரம்போ ₄ ரூபவாநிவ மாருத:
தரங்கா₃ந் பக்ஷதீக்ரு’த்ய ஸங்ஷிப்த இவ ஸாக₃ர: — 16.62 —

ஸம் வர்த இவ நாகா₃நாம் ஸங்கா₄த இவ ரம்ஹஸாம்
வாலகி₂ல்ய சரித்ராணாம் விபாக இவ ஜங்க₃ம: — 16.63 —

ப்ரபு₄ஸ்தம் தை₃த்ய ஸித்₃தீ₄நாம் ப்ரஸூதகில கிஞ்சிதம்
ஓலண்டி₃த மிவாபஶ்ய து₃க்₃ரம் ஸமர தாண்ட₃வம் – 16.64 –

த₃த்தநீராஜநஸ்தேந த₃த்₃ரு’ஸே வாஹநேஶ்வர:
ப்ரத₃கஷிணீ க்ரு’த: ஶஶ்வத் ப்ரதாப விஜய ஶ்ரியா — 16.65 —

ஸ ததா₃ஆஸ்போ ₂ட யாமாஸ விந்த்₄ய மேரு ஸமவ் பு₄ஜவ்
ருத்₃ரயா ச ஸுகீர்த்யா ச ம்ரு’திவ் தவ் கண்ட₂ பூ₄ஷணை : –16.66 —

து₃து₄வே பக்ஷதீ ச த்₃வே டோ ₃லாயித குலாசலே
வீஜயந் கோ₄ரது₃ர்வாதி ₃க₄ர்ம தப்தாமிவ த்ரயீம் –16.67–

முஹுராம் ரேட₃யாமாஸ ஜயா லோகய பா₄ரதீம்
முக்₃த₄ மத்₄ய ப்ரக₃ல்பா₄பி₄ர்த₃ ஶாபி ₄: கர்பு₃ராமிவ — 16.68 —

ஸ ததா₃ ஸந்நதஸ் கந்தோ ₄
ப₃த்₃தா₄ஞ்ஜலிர நி:ஶ்வஸந்
முமுதே ₃ மூர்த்₄நி ஸம் ஸ்ப்ரு’ஷ்டோ
முகுந்தே₃ந ப்ரஸேது₃ஷா — 16.69 –

தஸ்மிந் ப்ரத₂ம மாரோப்ய ஸத்யாம் விரஹ விக்லபா₃ம்
ஆருரோஹ தத: ஶவ்ரி ராக₂ண்ட₃லக்ரு’தஸ்துதி : — 16.70 —

நிவர்த்ய ஸ்வ நிவாஸாய ஶக்ரம் ஶமித ஸாத்₄வஸம்
ப்ரயயவ் தீ₃ப்த ஸந்நாஹ: ப்ராக்₃ ஜ்யோதிஷ புரம் ப்ரபு₄: — 16.71 —

ஶ்ரேய:பரிபணம் தஸ்ய ஶ்ருதி ஶ்ரேணி ஶிரோத்₄ரு’தம்
ப்ரணத: பரி ஜக்₃ராஹ ஶாஸநம் பாகஶாஸந: –16.72 —

யதா₂ஸ்வம் நக₃ர த்₃வாரே யாத₃வா தா₃நவாஶ்ச தம்
தரஸ்விக₃ருடா₃ரூட₄ம் ஸத்ய மைக்ஷந்த தத் க்ஷணம் — 16.73 —

ஸமந்தாத்₃ வைரிது₃ர்க₃ஸ்ய ஷிப்த சக்ர: க்ஷணேந ஸ:
ஷுராந்தா நச்சி₂ நத் பாஶா நாத தாஞ்ச₂ தயோ ஜநம் — 16.74–

முரம் பஞ்ச ஜநம் ஸப்த ஸஹஸ்ராணி முரோத்₃ ப₄வாந்
ஶலபீ₄ க்ரு’த்ய சக்ராக்₃நிருபது₃த்₃ராவ தத்புரம் –16.75 —

தத: ப்ராக்₃ஜ்யோதி ஷத்₃வாரே தை₃த்ய தா₃நவ ஸூத₃ந:
பாஞ்ச ஜந்ய முபாத₃த்₄மவ் ப்ரலயாம்பு₃தி ₄நிஸ்வநம் –16.76 —

வீஷ்ய தம் விவிஶுர் து₃ர்க₃ம் தி₃வாபீ₄தா இவாஸுரா:
உத்₃யந்தமிவ திக்₃மாம்ஶு முத₃யாத்₃ ரவ் க₃ருத்மதி – 16.77 –

அபி ₄மாநோதி ₃த வ்யக்தி ரஹங்கார இவோல்ப₃ண:
மஹதோ தை₃த்ய நக₃ராந் நிரகா₃ந்நரகா ஸுர: — 16.78 —

தமஸ்த்ர மாயாப்₄யதி ₄கா தா₃நவா: பர்யவாரயந்
ப்ரகடச் ச₂ந்ந கௌடில்யா: பாஷண்ட₃மிவ ஹைதுகா: — 16.79 —

ஸம்யுகே ₃ ரஜஸோத்₃ரிக்தே தஸ்மிந் ஸத்த்வதமஸ்தவிஷோ
அர்தி ₂ப்ரத்யர்தி ₂நோரா ஸீத₃நபி ₄வ்யக்தரூபதா — 16.80 —

ஶரதா₄ ராஸஹஸ்ரேண சா₂த₃யந்நரகோ தி₃ஶ:
ஸ்வ ஹேதுமபி ₄ஸம்பேதே ₃ ஸமுத்₃ரமிவ தோயத₃: — 16.81–

நரகாம்பு₃த₃முக்தாபி ₄ர் நாதோ ₂ நாராச வ்ரு’ஷ்டிபி ₄:
விபத்₃பி₄ரிவ தத்₃ப₄க்தோ விஷமாபி ₄ர்ந விவ்யேத₂ — 16.82 —

த்₃ரு’ப்யதாமத₂ தை₃த்யாநாம் த்₄வநிருத்கம்பயந் தி₃வம்
பாஞ்ச ஜந்ய ப்ரணாதே ₃ந பர்யபூ₄யத பூ₄யஸா –16.83 —

தி₃த்₃ரு’ஷோபக₃தாநாம் தத்₃தே₃வாநாம் ரோம ஹர்ஷணம்
அதீ₃வ்யத ரணத்₃யூத மந்தரஸ்த₂யஶ:பணம் –16.84 –

ப்ரதி விவ்யாத₄ தை ₃தேயம் பா₃ணை ரஶநி பீ₄ஷணை :
பக்ஷவந்தமிவாத்₃ரீந்த்₃ரம் ப்ரகுப்யந் பாகஶாஸந: — 16.85 —

ஶர ஸம்ஹதயஸ் தஸ்ய க்ஷரந்த்ய: ஶார்ங்க₃ஸைலத:
த்₃விதா₄ சக்ரு: ஸ்வவேகே₃ந த்₃விஷத்₃ப₃ல மஹார்ணவம் –16.86 —

தஸ்ய ஜ்யாஸ்வந கீ₃தாநி ஸமயுஜ்யந்த ஸம்யுகே ₃
கரிணாம் கர்ண தாலைஶ் ச கப₃ந்தா₄நாம் ச தாண்ட₃வை : — 16.87 —

தை ₃த்ய ஸோணி ததி₃க்₃தா₄பி ₄: தத்₃பா₃ண ததிபி₄ர்நப₄:
ருருதே ₄ ரோஷதாம்ராபி ₄: க்ரு’தாந்தஸ் யேவ த்₃ரு’ஷ்டிபி ₄: — 16.88 —

த்₃விரதா₃: ஶரநிர்பி₄ந்ந கும்ப₄ நிர்முக்த மவ்க்திகா:
க்ஷரந்த: கரகாஸாரம் கல்பமேகா₄ இவாப₃பு₄: –16.89 —

நாஸாவாலதி ₄பி₄ர்நாகா₃: க்ஷரந்தோ ரக்த நிர்ஜ₂ராந்
ஶஶம்ஸுர் லாக₄வம் தஸ்ய நிஷ்பத்ரா க்ரு’த ஸாயகம் — 16.90 —

அக்₃ரிமம் விஶதாம் ஸ்கந்த₄மா மூல மஹிதாம் சமூம்
ஶராணாம் தஸ்ய ஸந்தா₄நநிபாதவ் ந த்₃விஷோ அவிது₃: — 16.91 —

லஷ்ய மேகமபூ₄த்தஸ்ய ஶராணாமுத்பல த்விஷாம்
அமர ஸ்த்ரீ கடாக்ஷாணாமப்ய ப₄ங்கு₃ரத₄ந்வந: — 16.92 —

சிர ப்ரார்தி ₂தபீ₄தாநாம் ஸ தாஸாமேவ ஶாத்ரவாந்
ஸ்வயம் வரபதீம்ஶ்சக்ரே ஸுத₄ந்வா ஸுர ஸுப்₄ருவாம் — 16.93 —

த்யக்த்வா பீ₄தி வ்ரு’தாம்ஸ் தத்ர விமுக்தாந் ஜீவிதாஶயா
ஸார்த₄மப்ஸரஸ: கீர்த்யா வீராந் ஸ்வய மவ்ரு’ண்வத — 16.94 —

அநந்தஸ்ய ததா₃ அநந்தை ரஸுரைராஹ வோத்ஸவ:
ஜயஶ்ரியம் ச ஸத்யாம் ச ஸம்மதே ஸம தோஷயத் — 16.95 —

ஸ்வபா₃த₄நியதஸ் தத்ர பரபா₃தா₄பி ₄லாஷிணாம்
ப்ரயாஸ: ஸுர ஶத்ரூணாம் ஜாத்யுத்தர மிவாப₄வத் — 16.96 —

விஸந்தி ₄விக்₃ரஹா: ஷிப்த யாநாஸந ஸமாஶ்ரயா:
த்₃வைதீ₄பா₄வஸ்ரு’ஜோ யோதா₄ து₃ர்நயஸ்தா₂ இவாப₄வந் — 16.97 —

அநக₄ வ்யவஸாயா நாம ஸங்க₃ த்யக்த வர்ஷ்மணாம்
யோகி₃நாமிவ தத்ராஸீத₃பராவர்தநா க₃தி : –16.98 —

தநும் தத்ர முகுந்தே₃ந த்யாஜிதாந் மஹதீ ஸ்வயம்
அவ்ரு’ணோத₃நகா₄ கீர்தி ரதி ₄விந்நாப்ஸ ரோக₃ணாந் — 16.99 —

நி : ஸஹாயீக்ரு’தஸ் தத்ர ஶர வர்ஷைர் த₄ராஸுத:
ப₃ஹ்வ மந்யத தேநைவ த்₃வந்த்₃வ யுத்₃த₄முபஸ்தி₂தம் — 16.100 —

க்ரு’த ப்ரதிக்ரு’தைரஸ்த்ர ப்ரயோகை ₃: க்ரீட₃தோஸ்தயோ :
அத்₃ரு’ஷ்டாந்தம பூ₄த்₃ யுத்₃த₄மந்ய த்₃ரு’ஷ்டாந்த வர்ஜிதம் — 16.101 –

வக்ர வ்ரு’த்தி : ஸருதி ₄ரோ லோஹி தாங்கோ ₃ மஹீஸுத:
ப்ராப்ய யாத₃வ பா₄ஸ்வந்தம் மூட₄: ஸம ப₄வத் க்ரமாத் — 16.102 —

ஸ்வாயுதை ₄க ஸஹாயஸ்து தே₃வ: ஸ்வச் ச₂ந்த₃ யாத₃வ:
நிரயாபர பர்யாயம் ரிபும் சக்ரே நிராயுத₄ம் — 16.103 —

க்ரோத₄ரக்ததநுர் தை₃த்ய: க்ஷரச்சோ₂ணித நிர்ஜ₂ர:
க்₃ரு’ஹீத பாத₃ ஸஞ்சாரோ கை₃ரிகாத்₃ரி ரிவாப₃பவ ₄ — 16.104 —

நிஶிதைஸ் தஸ்ய நாராசைர் நிர்பி₄ந்நரத₂ ஸாரதி ₂:
ஆஸ்போ₂டித பு₄ஜஸ் தார்ஷ்ய மஜிகா₄ம்ஸத₃மர்த்யஜித் — 16.105 —

நிஸர்க₃ தமஸஸ் தஸ்ய ஜிஹ்மக₃ஸ்யாங்க₃முத்தமம்
ரத₂பாதே₃ந சிச்சே₂த₃ ராஹோரிவ ரமாபதி : –16.106 —

உத₃திஷ்ட₂த ஹாகாரஸ் ததோ யுக₃பதே ₃கதா₄
தே₃வதா₃நவ ஸவ்தே₄ப்₄யோ ஹர்ஷ ஸோக ஸமுத்₃ப₄வ: — 16.107 —

ஸ்பு₂ரத்₃ப்₄ருகுடி தை₃த்யஸ்ய ரோஷத₃ஷ்டாத₄ரம் முக₂ம்
நிக்ரு’த்தமபி ந த்₃ரஷ்டும் ப்ரப₃பூ₄வுர்தி₃வவ்கஸ: — 16.108 —

நிக்ரு’த்தஶிரஸம் தே ₃வீ நிஜாங்கே பதிதம் ஸுதம்
மஹதீ மேதி ₃நீ தீ₃நம் கம்பமாநா அந்வகம்பத — 16.109 —

அத₂ ஸா தை₃த்ய ஹந்தாரம் ப்ரணம்ய நதஜீவிதம்
அயாசத த₃யா ஸிந்து₄மாத்மஜஸ்ய ஶுபா₄ம் க₃திம் — 16.110 —

துஷ்டாவ ச பதிம் துஷ்டா மேதி ₃நீ விஶ்வ வேதி ₃நீ
ஸ்நபயந்தீவ ஸம் யத்தம் த₃ந்த தீ₃தி ₄தி க₃ங்க₃யா — 16.111 —

அஹமஸ்மி விபூ₄தி ஸ்தே பூ₄த தா₄த்ரீ த்வயா த்₄ரு’தா
அஸேஷாதா₄ரமேகம் த்வாம நாதா₄ ரமதீ₄ யதே –16.112 —

திஸ்ரு’பி ₄: ஶக்திபி ₄ர் யுக்தம் ஷாட்₃ கு₃ண்ய ப்ரதி ₂தோத₃யம்
அதி ₄ராஜமஸேஷஸ்ய ஜக₃து₃ஸ் த்வாம் ஜிதாஹிதம் — 16.113 —

அபி கோடி முகை ₂: ஸர்வை –
ரநந்தே நாப்ய நேஹஸா
நாத₂ த்வத்₃ கு₃ண து₃க்₃தா₄ப்₃தி ₄
ப்ரு’ஷதா₃ஸ்வாத₃நம் க்ஷமம் — 16.114 —

அகர்துமந்யதா₂கர்தும் கர்துமப்யகி₂லம் க்ஷமம்
லஷ்மீ லக்ஷண மாஹுஸ்த்வாம் லங்கி ₄தத்ரிவிதா₄வதி₄ம் — 16.115 —

ஸ்தி ₂ரத்ரஸவிப₄க்தம் தே
சித₃சித்₃பே₄த₃சித்ரிதம்
ஸ்வ ஸ்ரு’ஷ்டமித₃முத்₃யாநம்
த்வத₃ந்யோ நாஸ்தி ரஷிதும் — 16.116 —

ஸ்வாதந்த்ர்ய பரதந்த்ரஸ் த்வம் பாரதந்த்ர்ய ஸ்வதந்த்ரிதை :
விஹரஸ் யாத்ம ஸூத்ரஸ்தை ₂: ஶகுநைரிவ ஜந்துபி ₄: — 16.117 —

ஸிதாஸித கு₃ணாரப்₃தை ₄: பாஶ ஜாலைர் து₃ரத்யயை :
நி ப₃த்₃தா₄: பஶவோ நாத₂ த்வேத₃காதீ₄ந முக்தய: — 16.118 —

யஸ்ய த்வம் யஶ்ச ஹ்ரு’த்₃யஸ்தே யஸ்யாஸவ் தஸ்ய யஸ்ததா₂ Á
நாத₂ த்வத் பத₃மாருஹ்ய ந புநஸ் தைர் நிவ்ரு’த்யதே –16.119 —

ஸுராஸுரவிபா₄கோ ₃அயம் துலாக்₃ரந்யா யதஸ் த்வயா
கல்பித: கால பர்யாயாந் நிம்நோந்நத ஸமக்ரம: — 16.120 —

கஸ்த்வத₃ங்கீ₃ க்ரு’தம் ஹந்தா
கஸ்த்ராதா த்வஜ்ஜிகா₄ம்ஸிதம்
நிஹம்ஸி பாஸி ஸைகஸ்த்வம்
ஸ்வேந விஶ்வம் பரேண வா — 16.121 —

வ்ரு’த்₃தி ₄ஸங்கோச விஷமா க₃தாக₃த ஸஹாயி நீ
நியதி : கேந லங்க்₄யேத நிஜச்சா₂யாநுகாரிணீ –16.122 —

ந புத்ரவத₄மந்வீஷ்ய ந தூ₃யே த்வந்மதஸ்தி ₂தா
ந ச புத்ராபி ₄மாநோ மே மத் ப்ரஸூதேஷு ஜந்துஷு — 16.123 —

ஸூத₃நே க்ரு’த ஸங்கல்ப: ஸ்வ ப₄க்த பரிபந்தி ₂நாம்
யதி ₃ தீர்ண ப்ரதி ஜ்ஞஸ்த்வம் கிம் மேயத₃ம் ந ம்ரு’ஷ்யதே — 16.124 —

த்வந்மாயாஜ்ரு’ம்பி₄தைர்தே₃வ ப்₃ரஹ்மாண்டை ₃ரபி லீயதே
ஜந்மந்யபி ஸுராேதே ₄ஷு ஜந்து வர்கே₃ஷு கா கதா₂ –16.125 —

த்வத் ப்ரஸூதஸ் த்வயை வாஸவ் வதி ₄தஶ் சக்ர தா₄ரயா
கா நாம க்ரு’தி நஸ்தஸ்ய பரிதே ₃வயி தவ்யதா — 16.126 —

நிருத்₃தே ₄ நரகே நாத₂
நித்ய த₄ர்மாத்மநா த்வயா
நிஷ் ப்ரதி த்₃வந்த்₃விகம் ஸ்வர்க₃ –
ஸுக₂மாஸ்வாத்₃யதாம் ஸுரை : — 16.127 —

நிர்யாதி தமித₃ம் பூ₄ய: த்வஜ்ஜநந்யை மயா ஸ்வயம்
ஶ்ரவணாப₄ரண த்₃வந்த்₃வம் ஶீதலார்க யுக₃ப்ரப₄ம் — 16.128 —

இதி விஜ்ஞாப்ய ஸா தஸ்மை விஷாதா₃பா₄வமாத்மந:
விரராம ததோ தே ₃வீ விலக்ஷா விஶ்வ தா₄ரிணீ — 16.129 —

தாம ஸேஷ ஜக₃த்₃தா₄த்ரீம் ஸந்ந தாங்கீ₃மஸாந்த்வயத்
ஸஹ த₄ர்ம சரீம் பூர்வாம் வாஸுதே ₃வோ வஸுந்த₄ராம் –16.130 —

புரஸ்க்ரு’த ப்ரஸாத₃ஸ்தாம் பூர்வ ஸம்ப₄வகே ₃ஹிநீம்
க்₃ரு’ஹீத குண்ட₃லோ க₃ந்து மந்வமம்ஸ்த க₃தா₃க்₃ரஜ: — 16.131 —

தத: ஸா தத் ஸமா தே₃ஶாத் ஸத்யபா₄மாபி ₄வந்தி ₃தா
ரம்யம் ப்ரதி யயவ் ஸ்தா₂நம் ரத்ந ஸாநு ஶிக₂ண்ட₃கம் — 16.132 —

த₃த₃ர்ஶ யது₃வீரோ அத₂ தை₃த்ய வீர நிவேஶநம்
அசிந்த்யமிவ மாயாநாம் ப்ரபா₄வ மநுபப்லவம் — 16.133 –

விசக்ஷணவரம் தை₃த்யம் வைரி ஸம்பத் கரக்₃ரஹே
விபூ₄தி ஸஞ்சயப்ரேஷி ப₃ஹ்வமம்ஸ்த ப₃லாநுஜ: — 16.134 —

ஸுதா₄நிஷ்யந்தி ₃பி ₄: ஸ்தூ₂லை : முக்தாதா₃மபி ₄ராவ்ரு’தம்
பஶ்யந் பாஶப்₄ரு’தஶ் ச₂த்ரம் விஶ்வகர்தா விஸிஷ்மியே –16.135 —

நித₃த்₄யவ் கந்யகாஸ் தத்ர நித₃ர்ஶித பரஸ்பரா:
அமுத்₃ரா ப₄ங்க₃ ஸுப₄கா₃ நீவீரிவ ரதே : ஶுப₄: –16.136 —

லாவண்ய ஜலதவ் ₄ லஷ்ம்யாஶ்சா₂யா இவ ஸஹோதி ₃தா:
மது₄ஸ்வச்ச₂ந்த₃ தாஸீம்நோ மாந்மதீ₂ரிவ தீ₃ர்கி₄கா: — 16.137 —

காமகீர்தி பதாகாபி ₄: ஸ தாபி ₄: ப்ரத்ய வேஷித:
ஆத்மாந மம்ரு’தோ த₃ந் வத₃ந்த: ஸ்தி ₂தமமந்யத — 16.138 —

ஸுப்ரபா₄தமபூ₄த்தாஸாம் ஸுதி ₃நம் ச தேமாபஹம்
ப₄வதோ ₃ஷார்யமா யாஸாம் தே ₃வோ த்₃ரு’ஷ்டி பத₂ம் க₃த: –16.139 —

ரத்நைஶலநி பா₄ம்ஸ்தஸ்ய பு₄ஜாந் கடக பூ₄ஷிதாந்
உபதா₄ஸ்யந்தி யாஸ்தாஸாம் ஶ்ரேயஸீ ப₄வி தவ்யதா — 16.140 —

ஸர்வ ஸ்வமிவ புண்யாநாம் ஸாம்ராஜ்யமிவ ஸம்பதா₃ம்
ஸமாஜமிவ ஸித்₃தீ₄நாம் ஸ தத்₃ யவ்வதமக்₃ரஹீத் — 16.141 —

பு₄ஜமந்த₃ர வேகே₃ந சக்ர ப்₄ரமவதா விபு₄:
மதி ₂தாத்₃தா₃நவாம் போ ₄தே ₄ரம்ரு’தம் தத₃விந்த₃த — 16.142 —

மணி பருவக ஸம்பந்மாநநீயஸ்தநீநாம்
மநஸி ஜவபுஷேவ ஸ்வேந ஸங்கல்பிதாநாம்
ஸகல ஜக₃த₃பி₄க்₂யா ஸார ஸீம்நாம் ஸ தாஸாம்
ஸ்வயம ஜுஷத ஸித்₃தி ₄ம் ஸ்வ ப்ரஸாத₃ ப்ரஸூதாம் — 16.143 —

புரமத₂ க₃மயித்வா பூ₄ஷிதம் யாத₃வாக்₃ர்யை :
ஶதஸமதி ₄க ஸங்க்₂யம் ஷோட₃ஶ ஸ்த்ரீ ஸஹஸ்ரம்
அவநி தந யபீ₄தாந் ப்ரீணயந்நாதி ₃தேயாந்
பரிணயந விலம்ப₃ம் பத்₃மநாப₄: ப்ரஸேஹே — 16.144 —

தி₃வி பு₄வி ச ஸமித்₃த₄ம் தீ₃ப ரூபேண ரூடை ₄:
த்ரிபு₄வந விப₄வாநாமங்குைரைர் ஏகரூபை :
ஜநி தநி க₃மஸக்₂யம் தா₃நவீநாம் விலாபை :
நரகவத₄தி₃நம் தந்நாத₂ பூஜார்ஹமாஸீத் — 16.145 —

ஐராவதப்ரதிநி தீ₄நத₂ ஷட் ஸஹஸ்ரம்
ஸ்தம்பே₃ரமாந் ப்ரு’து₂ல த₃ந்த சதுஷ்க பா₄ஜ:
காம்போ ₄ஜவாஜி நியுதாநி ச ஸத்ரி ஸப்தா –
ந்யப்₄யா நயந் நிஜ புரம் நரகஸ்ய ப்₄ரு’த்யை : — 16.146 —

உத்₃க₃ம்ய து₃ர்க₃ஜலதே ₄ருத₃ யாத்₃ரி கல்பம்
துங்க₃ம் விஹங்க₃மபதி ம் த்வரயா அதி ₄ரோஹந்
உல்லாஸ ஹேதுரப₄வத்₃ யது₃ வீரபா₄ஸ்வாந்
வைமாநிக ப்ரணயி நீவத₃நாம் பு₃ஜாநாம் — 16.147 —

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்-பஞ்சத₃ஶ:- ஸர்க₃–ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

December 20, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

அத₂ பத்₃மபு₄வ: பிது: ஸகாஶாத்
அபி ₄க₃ச்ச₂ந் யது₃புங்க₃வம் தி₃த்₃ரு’ஷு
முநி ரத்₄வநி வல்லகீ ஸஹாய:
ப்ரஜகவ் ₃ லாஸ்யதரங்கி ₃தப்ரசார:– 15.1 —

அஹமஸ்மி பிதாமஹஸ்ய ஸூநு:
ஸ விபோ ₄ராத்மபு₄வ: ஸரோஜநாபே ₄:
ப₄ஜதே பு₄வி ஸாம்ப்ரதம் ஸ தே₃வ:
ஸ்வயமேவா நக து₃ந்து₃பே ₄: ஸுதத்வம் –15.2 —

அவரோபிதகோ ₃பஸூநுபா₄வ:
ஸ நட: ஸம் ப்ரதி தே₃வகீ ஸுத: ஸந்
பரிதோஷித பா₄வுக: ஸ்வ வ்ரு’த்த்யா
ஶ்ருதி லஷ்யாம் மஹதீம் ப்ரியாம விந்த₃த் –15.3 —

தத₃ஹம் தமஸ: ஸ்தி ₂தம் பரஸ்தாத்
அநபாயத்₃யுதி பா₄ஸ்வதா ஆத்மநைவ
கமலோல்லஸிதேந த₃ர்ஶநீயம்
தி₃நமாத்₃ யந்த விவர்ஜிதம் தி₃த்₃ரு’ஷே –15.4 —

கு₃ண ஸிந்து₄ரஸவ் கு₃ணாதி வர்தீ
க₃தி ரந்த: ஸ்தி ₂தி ராக₃மை கக₃ம்ய:
த₃யிதா ஸஹிதோ த₃யைக ஸங்கீ₃
கு₃ருராத்₃யோ மயி கௌ ₃ரவம் விதா₄தா –15.5 —

ஜக₃தே₃க ஹிதேந ஜந்மநா அஸவ்
த₃நுஜைராக்ரமணம் பு₄வோ நிருந்த₄ந்
கலஹப்ரிய மத்₃வஸோநுரோதா₄த்
ந கத₂ம் விக்₃ரஹமாரபே₄த நாத₂: –15.6 —

அதி ₄கார விலம்பி ₃தாப வர்க₃ –
ஸ்தி₂ர ஸங்கா₃த₃ பகவ் துகஸ்த்ரிவர்கே ₃
விதி ₄நா நியதேந த₄ர்ம கு₃ப்தவ்
விநி யுக்தோ அஸ்மி விரோத₄நேந தீ₃வ்யந் — 15.7 —

வித₃தே ₄ விநி வேதி₃தம் மயா அஸவ்
விவித₄ம் விஶ்வ ஹிதம் விதா₄ஸ்யதே ச
ஸ்வ ஜநத்வதி ₄யா ஸுரா ஸுராணாம்
ப₃ஹுமா நைகபத₃ம் யதோ அஹமாஸம் — 15.8 —

விநிவேத₃யதா ரிபோருத₃ந்தம்
தி₃விஷத்₃வைப₄வதா₃வசித்ர பா₄நும்
அஜிதஸ்ய ஜிகீ₃ஷதோ மயா அஸவ்
விஜயாரம்ப₄மஹோத்ஸவோ விதே ₄ய: –15.9 —

இதி ப₄வ்ய மநோ ரதோ ₂ மஹீயாந்
ப்ரபு₄மாஸீந முபஹ்வரே அபி ₄யாத:
விதி ₃தாகி ₂லேவதி ₃தவ்யமித்த₂ம்
முதி ₃த: ப்ராஹ ஜக₃த்₃தி ₄தம் முநீந்த்₃ர: — 15.10–

ஜய தே ₃வ ஜக₃த் த்ரயாந்தராத்மந்
ந நியந்தா ந ச தே ஸமஸ்த்வத₃ந்ய:
ப₄வபீ₄தி நி ஶீதி ₂நீவி பா₄தம்
பரமம் ப்₃ரஹ்ம ப₄வந்தமாமநந்தி –15.11 –

உதி ₃த: ப்ரணவாங்குராத்மநா த்வத்
விவித₄ஸ்கந்த₄வி ப₄க்தரூட₄ஶாக₂:
த்வத₃நுக்₃ரஹபுஷ்பித: ப்ரஜாநாம்
ப₂லமிஷ்டம் நிக₃மத்₃ரும: ப்ரஸூதே –15.12 —

விஷமம் நிஜ கர்ம பே₄த₃யோகா₃த்
ப₃ஹுமாநாஸ்பத₃ப₃ந்த₄ மோக்ஷ லீல:
ஜநிதம் ப₄வதைவ புத்ரநீத்யா
ஜக₃தே₃தத் ஸ்வயமேவ ரக்ஷஸி த்வம் –15.13 —

கு₃ண சித்ரித ஜந்து த₃ந்துரே அஸ்மிந்
ஜக₃தி த்வத்₃விஹிதே ஹிதேதரேப்₄ய:
அபி விஶ்வ ஸ்ரு’ஜாம் ஸமாஹி தாநாம்
அயதா₂சிந்தி தமாபதந்த் யவஸ்தா₂: –15.14 —

ஸுக்ரு’தோபசயேந ஜாதஸித்₃தி ₄:
த்வத₃ ஸவ் கஶ்சிது₃பஸ்தி ₂தாபராத₄:
அநுபூ₄ய ஹ§ரண்ய ராவணத்வே
ப₄ஜதே ஸம்ப்ரதி சேதி ₃ராஜபா₄வம் — 15.15 —

த்ரிஷு ஜந்மஸு தே விஹாரத₃க்ஷம்
விதி ₄நா ஸிம்ஹக₃ஜக்ரமேண ஸ்ரு’ஷ்ட:
ஸஹஜ: கில ருக்மிணீ நிமித்தே
ஸ ரிபு: ஸம்ப்ரதி க்ரு’த்ரிமஶ்ச ஜாத: –15.16 —

விபதே₂ந ஸதை₃ஷ விப்ரதா₄வந்
விபு₃த₄க்₃ராமவி பந்நிதா₃நபூ₄த:
ப₄வதோ ப₄ஜதாமநந்ய ஸாத்₄யம்
விநி பாதம் ப்ரணி பாத வ்ரு’த்த்யநர்ஹ: — 15.17–

த₃மநம் த₃மேகா₄ஷ ஸம்ப₄வஸ்ய
ப்ரப₃லஸ்யாபி யத₃ர்த்₂யதே ததே ₃தத்
மது₄கைடப₄மேருமர்தி ₃நஸ்தே
மஶகாமர்ஶந மாத்ர மித்யவைமி — 15.18 —

அத₂வா ஜக₃தே ₃ததோ ₃த₃நஸ்தே
தது₃பக்₄நந்நு பஸே சநம் ச ம்ரு’த்யு:
மஹதா₃தி ₃ விலாபயந் மஹிம்நா
த₃மநை ராத்₃ரியஸே ந தா₃நவாநாம் — 15.19 —

ஸுஹ்ரு’தோ ₃ அபி ஸதா₃ ஸுரா ஸுராணாம்
ப்ரணதாநுக்₃ரஹ பா₄வி தாத்மநஸ்தே
க்வசிதா₃பதிதோ அபி பக்ஷபாத:
ஸமதாமேவ ஸமர்த₂யேத ஸத்யாம் — 15.20 —

ப்ரத₂மா சரமா ச தே ₃வதா த்வம்
வரணீயா வரதா₃ ச விஶ்வவந்த்₃யா
நிக₃மேஷு ஸதீ புரேஷு ஸைகா
ஜநயித்ரீ ஜந பங்க்தி ஹாரிணீ ச — 15.21 —

க₄டகைரிவ கர்ம பாஶநத்₃தை ₄:
ஸ்தி ₂ர காலாத்மக சக்ர யந்த்ர நிக்₄நை :
விஹரஸ்யத₄ரோத்தர க்ரமேஷு
ஸ்வ வஸைரேவ ஸுராஸுரை : ஸ்வ தந்த்ர: — 15.22 —

ஸவேந ப₄வ முக்தி ஸந்தி ₄ரூபே
விதி ₄நா விஶ்வபதே விசித்ர ஹேதிம்
ஹ்ரு’தி ₃ ஶாந்ததி ₄ய: ஸமிந்த₄தே த்வாம்
அநகா₄த்மக்ரது ஹவ்ய வாஹமாத்₃யம் — 15.23 —

அணிமாதி ₃பி ₄ரேக ஏவ பி₄ந்ந:
பர வித்₃யா மணி த₃ர்பணேஷு பா₄நாத்
ஸுத்₃ரு’ஶாம் ப₄ஜஸி த்வமாத்மபூ₄த:
ஸுக₂ ஸந்த₃ர்ஶந யோக்₃யமாபி ₄முக்₂யம் –15.24 —

அபி த்₃ரு’ஷ்டமபி ஶ்ருதம் ப்ரபா₄வம்
ப₄வதீ₃யம் ப₄விநஸ்தமோபி₄ பூ₄தா:
ந வித₃ந்தி யதா₂வதா₃த்மவந்த:
த்வநுபஶ்யந்தி கரஸ்தி ₂தாம்பு₃கல்பம் — 15.25 —

ஸஹ த₄ர்ம சரீம் ஸதா₃ அநு வ்ரு’த்தாம்
ஸ்வயமுத்₃தீ₃பயதா த்வயா அநுகம்பாம்
ஶரணாக₃த ரக்ஷண வ்ரதஸ்ய
ப்ரதி லப்₃தோ ₄அயமிஹ ப்ரேயோக₃கால: — 15.26 —

அஹிதம் ந விசிந்திதம் மயைதத்
சிர து₃ஷ் கர்ம க்ரு’தோ அபி சேதி ₃ப₄ர்து:
ஸஹ நாக ஸதா₃மஸவ் விமாநை :
ஸுக்ரு’தி த்வம் லப₄தாம் த்வத₃ஸ்த்ர பூத: –15.27 —

ஸ்வபத: கில ஜாக்₃ரதஶ்ச தஸ்ய
த்வயி வைரேண விதீ₃ப்த சித்த வ்ரு’த்தே :
த்வத₃நுஸ்மரண ப்ரபா₄வ யுக்தா
நியதிஸ்த்வந் மயதா மிவாதநோதி –15.28–

விநிவேதி₃தவிஶ்வகார்ய இத்த₂ம்
க்ரு’தி நா தேந க்ரு’தார்ஹணோ யதா₂ர்ஹம்
முநிராத்ம மநீஷி காவதா₃த:
க₂லசேதோ மலிநம் க₂முத்பபாத — 15.29 —

வஸு தே ₃வ ஸுதஶ்ச பாண்ட₃வேந
க்ரதுமாரப்₃த₄வதா க்ரு’தோ பஹூதி :
ஸமர ப்ரியயா ஸஹ த்₄வஜிந்யா
ஸவநம் தஸ்ய ஜகா₃ம ஸத் ப்ரதீஷ்ய: — 15.30 —

யது₃பி ₄: ஸஹ யாத₃வேஶ்வரம் தம்
பரிஷத் ப்ராப்த முபேத்ய பஞ்ச பார்தா₂:
விப₄வோசித மீஶ்வராநுரூபம்
ஸுஹ்ரு’ த₃ர்ஹம் ச ஸமர்சயாம் ப₃பூ₄வு: –15.31 —

க்ரதுமப்யநக₄ம் ஸ த₄ர்ம ஸூநு:
ஹவி ஷாம் போ₄க்தரி த₃த்தஸந் நிதா₄நே
விதி ₄வத் ஸ்வதி ₄யா ஸமர்ப்ய சக்ரே
ப₃ஹுதா₄ அநுஶ்ருத தத் ப்ரபா₄வ பூ₄மா — 15.32 —

ஹரி த₃ஶ்வ ஸமுத்₃ப₄வம் ப்ரதா₃நே
த₄ந கு₃ப்தவ் ச ஸுயோத₄நம் ந்யயுங்க்த
ஸ்வயமேவ ஸமாஹிதேந வவ்ரே
ஹரிணா விப்ரபதா₃வநேஜ நாம்ஶ: –15.33 —

ஸமேய பரிஷத்ஸபா₄ஜநார்ஹே
தி₃விஷத் பூஜ்ய பேதா₃அபி தை₃த்ய ஹந்தா
கிமஸாவிதி யாத₃வேஷு கஶ்சித்
ந்ரு’ப இத்யைஷி ஜநைர லஷ்ய பார: — 15.34 —

அவி ஸேஷித் அசேஷ வ்ரு’த்தி வாசம்
நிஜபாரம்யநி கூ₃ஹநாதி ₄க₃ம்யம்
அப்ரு’த₂க்₃ விப₄வைஸ் தமாஸ நாத்₃யை :
உபம்ரு’த்₃நந்த இவாஸத ஷிதீந்த்₃ரா: — 15.35 —

அத₂ யுக்த விமர்ஶிபி ₄ஶ் சதுர்பி ₄:
கு₃ருபி ₄: பஶ்சிம பாண்ட₃வோ நியுக்த:
ப்ரவிவேஸ ஸபா₄மஸேஷ கர்து:
யது₃வீரஸ்ய விதா₄து மக்₃ர பூஜாம் — 15.36 —

அவத₃ச்ச தமே தமக்₃ர க₃ண்யம்
விபு₃தா₄நாம் பிதரம் பதிம் கு₃ரும் ச
ஹரி மர்சிது மர்ச்ய முத்₃யதா: ஸ்ம:
தத₃ ஸேஷை ரநுமந்யதாம் ஸுதீ₄பி ₄: — 15.37 —

ஜக₃தே ₃க பதேரமுஷ்ய பூஜாம்
ஸ்தி ₂ர த₄ர்மத்₃ருமமூலஸேக ரூபாம்
நிகி₂லாநுமதாம் ந்ரு’போ வித₄த்தே
நிரபாய ப்ரிய பத்₂யபா₄வப₄வ்யாம் –15.38 —

இதி த₃ர்ஶயத: பத₃ம் ஸமாஜே
ப₃லிநாம் மாந ப்₄ரு’தாம் மஹீபதீநாம்
மஹதீ ப₃ஹுவார முத்தமாங்கே ₃
ஸஹ தே₃வஸ்ய பபாத புஷ்ப வ்ரு’ஷ்டி: — 15.39 —

ஹரிமர்சயிதும் ய ஈஹேத தம்
ஸுர புஷ்பை : ஸ்வயமர்சயந்தி தே ₃வா:
இதி நூநமகா₃பயத் த்₃வி ரேபை ₂:
ப்ரஸ்ரு’த: பாண்டு₃ஸுதே ப்ரஸூந வர்ஷ: — 15.40 —

அவலோக்ய தத₃த்₃பு₄தம் மஹீய:
ப்ரதி பந்நாநுமதே நரேந்த்₃ர லாேகே
நிஜகா₃த₃ ஹஸந்ந மர்ஷ வேகா₃த்
ஷிதி பாலாந் ஶிஶுபால உந்மதி ₃ஷ்ணு: –15.41 —

விதி₃தம் ப₄வதாமித₃ம் யதே ₃தத்
ஸ்வயமாஹூய மஹீயஸே : ஷிதீந்த்₃ராந்
அவமந்யத ஏவமத்₄வரஸ்த₂:
குடிலோ ஹந்த குமார ஏஷ குந்த்யா: –15.42 —

அயமஶ் விஸுதோ அபி தாவதா₃ஸ்தாம்
யதி ₃ மாத்₃ரீ தநய: ஸ பாண்டு₃ஸூநு:
ரப₄ஸாத₃வமத்ய ராஜ லோகம்
யதி ₃ ஜீவேத₃லமந்வவாய வாதை ₃: –15.43 —

க்ரு’பணேந கிமத்ர ஸாது₄நா ந:
ஸஹ தே ₃வேந நியோக₃ஸாத₄கேந
சதுர: புநரஸ்ய பூர்வ ஜாதாந்
மநஸா யாத ஶடா₂ந் மநுஷ்ய தே₃வா: ! — 15.44 —

த்₃விரதா₃யுத ஸத்த்வ ஶாலிநோ மே
யதி ₃ த₄ர்ம த்₄வஜ ஏஷ த₄ர்ம ஸூநு:
மிஷத: பரிபூ₄ய த₄ர்ம பாலாந்
யஜதே பஶ்யத பஶ்சி மேஷ்டி மஸ்ய — 15.45 —

அத₂வா வஸுதே₃வ ப₃ந்து₄ த்₃ரு’ஷ்ட்யா
வயமாஸீ மஹி மந்த₃ஹாஸ க₃ர்ப₄ம்
ஸ்வயமஸ்ய பிதா கத₂ம் ஸ த₄ர்ம:
தமிமம் த₄ர்ம விபர்யயம் ஸஹேத — 15.46 —

அயமஸ்மத₃நுஜ்ஞயா விஜித்ய
ஷிதி மாஸாதி ₃த ராஜ ஸூய த₄ர்ம:
ப்ரஸவோ பக₃மே பதி ப்ரதீபா
வநி தேவாத்₃ய பி₃ப₄ர்தி வைபரீத்யம் — 15.47 —

பரிபஶ்யதி ஹந்த ராஜ லாேகே
பஶு பாலஸ்ய விதீ₄யதே ஸபர்யா
அத₂ தத்ர ஸமர்த₂தைவ தந்த்ரம்
தத₃ ஸவ் வீர வரேண்ய ஏகலவ்ய: — 15.48 –

குரு வ்ரு’த்₃த₄முபேஷ்ய ஜாஹ்நவேயம்
ஜய ஸம் ப்ரீணித ஜாமத₃க்₃ந்ய ராமம்
இதராநபி தாத்₃ரு’ஶாநி ஹைதாந்
ந ச கோ₃போ ந ச யாத₃வ: ஸமர்ச்ய: –15.49-

அதி மர்த்ய ப₃லா விராடஶல்ய –
த்₃ருபதா₃த்₃யா ப₃ஹவோ ஹி ஸந்தி வ்ரு’த்₃தா₄:
அதி லங்க₄ந மப்₄யுபைது கோ வா
கு₃ண கர்ம ஶ்ருத ஶாலி நாமமீஷாம் –15.50 —

க்வசி த₃ர்சநமிந்த்₃ர ஜால தஶ்சேத்
குஹகா: ஸந்தி பரஶ் ஶதா: ப்ரு’தி₂வ்யாம்
அத₂ கஶ்சந ஸத்ய ஏஷ பூ₄மா
க்வ க₃தோ அஸவ் யவநாதி ₃ஸைந்ய க₃ந்தே ₄ –15.51–

அயமக்₃ரஜ ஏஷ ரவ்ஹிணேயா
ப₃லஶாலீ வபுஷா ச ஶுத்₃த₄வர்ண:
அநததி க்ரமணம் தத₃ஸ்ய யுக்தம்
யதி ₃ ஶேஷோ அயம விப்லுத: க்ரேமா வ: –15.52-

நடவத்₃ த்₄ரு’த ஶங்க சக்ர சிஹ்நா:
கதி நாமாத்ர விட₃ம்ப₃யந்தி விஷ்ணும்
அநுகர்துமயம் ச தத்₃வதீ₃ஶ:
கத₂மீ ஶத்வ மநூர்மிஷட் கஹீநே — 15.53 —

ந ச விஶ்வஸிமோ ந வ்ரு’த்₃த₄ வாக்யம்
ப₃லவந்மாநவிலங்க₄நம் ந சேத் ஸ்யாத்
ந வத₃ந்த்ய நித₃ம்பரேஷு ஸந்த:
ஸ்துதி வாக்யேஷு யதா₂ஶ்ருதார்த₂ ஸித்₃தி₄ம் — 15.54 —

இதி தத்ர முதா₃ விகத்த₂மாநம்
கடி₂நம் கண்ட₂விலக்₃ந ம்ரு’த்யு பாஶம்
பரி த்₃ரு’ஷ்ட பராவரஸ்தமீஷத்
விநயந் விஷ்ணு பதீ₃ஸுதோ ப₃பா₄ஷே –15.55 —

ஶ்ரு’ணு தாத ஹிதம் ஸமாஹிதஸ்த்வம்
ருஶதீம் வாசமபாஸ்ய ரோஷ ஜாதாம்
அவிம்ரு’ஶ்ய விபத்தி மாபதந்தீம்
ந ஹி திஷ்ட₂ந்த்ய ஹிதேஷு பு₃த்₃தி ₄மந்த: –15.56 —

அதி பத்ய முகுந்த₃மந்தி கஸ்த₂ம்
பதி₂காநர்சிது முந்மநா ப₄வேத்₃ய:
அவதீ₄ரித கௌஸ்துப₄: ஸ நூநம்
குருவிந்தே₃ஷு குதூஹலம் வித₄த்தே — 15.57 —

ஸ்துதிபி ₄: கதிசித் த்ரிவர்க₃ ம்ரு’ச்ச₂ –
ந்த்யபவர்க₃ம் ச யமேகமாஶ்ரிதாபி :
நிரயே நிபதந்தி நிந்த₃யா அந்யே
யதி ₃ தத்₃வேத்த₂ வதை₃ஷ யத் க்ரியார்ஹ: –15.58 —

ஸஹஜம் நயநம் ச தத்த்ரு’தீயம்
பு₄ஜயுக்₃மம் ச தவ ஸ்தி ₂தாதி ரிக்தம்
ஸஹஸா யது₃பாக₃மேந நஷ்டம்
ஸ்வய மாகார யஸி ஸ்வ ம்ரு’த்யு மேநம் –15.59 —

ந ஹி ஸந்தி ந நிஶ்சிதாக₃மார்தா₂
ந க₃தா: ஸந்நிஹிதாஶ்ச ந ப்ரஸுப்தா:
அபி து த்ரபயா நதாஸ்த்வது₃க்தீ:
த இமே நந்விஹ சேதஸா ஹஸந்தி — 15.60 —

யதி ₃ ஜீவிது மீஹேஸ சிராய
ப்ரதி பத்₃யஸ்வ ஹிதம் யத₃ஸ்மது₃க்தம்
அத₂ ந ப்ரஹிதேர் ஜலாஞ்ஜலிஸ்தே
ஶ்ரு’ணுதாந்யே ய இஹ ஶ்ருதவ் நிரூடா₄: — 15.61 —

யுக₃கோடி ஶதாயுதாநி வேதா₄:
ஸ்வ பத₃ம் ப்ராப யமேக மர்சயித்வா
மநுஜஸ்ய தத₃ர்சநே விகா₃யந்
மதி ஹீந: பஶுரேஷ மர்ஷணீய: — 15.62 —

விதி ₄ஹஸ்த த்₄ரு’தாத் யத₃ங்க்₄ரி பத்₃மாத்
ச்யவமாநா பவமாந வேக₃ஹீநா
விபுநாதி ஜக₃ந்தி தி₃வ்ய ஸிந்து₄:
க்ரமேத ஹந்த தத₃ர்சநே விவாத₃: — 15.63 —

ஸ ச கஶ்சந ஸர்வ மேத₄யஜ்வா
ஹவிராத் மாஹ்வய மாத்மநைவ ஹுத்வா
யத ஏவ ப₃பூ₄வ தே₃வதே₃வ:
ஸ கிமஸ்மாபி ₄ரதை ₃வதைர நர்ச்ய: –15.64 —

ய இஹாத்₃ய ப₄ஜந்தி யஜ்ஞபா₄கா₃ந்
க்ரு’திந: கார்தயுகே₃ந கர்மணா தே
அயஜந்த புரா யமேக மாத்₃யம்
வரிவஸ் யாமிஹ தஸ்ய வாரயேத் க: –15.65–

அத₂வா விபு₃தா₄தி ₃பூஜநீயே
மநுஜைரர் சநமத்ர மா விதா₄யி
இதி நாம விமந்ய தாமிதா₃நீம்
அப ஶுத்வாய ச கல்பதா மயம் ந: — 15.66 —

த₄நப₃ந்து₄வய: க்ரியாதி ₃மாத்ரை :
அதி ₄கேஷ்வப்ய சமத் க்ரியா விஹத்யை
ஜக₃தே₃க பதவ் ஸதோ ₃பகர்த –
ர்யபக்ரு’ த்யைஷ ப₄ஜேத காம வஸ்தா₂ம் — 15.67 —

க்வசி த₃ர்சயதி ப்ரபூ₄த புண்யே
த்ரியுக₃ம் தத்₃வத₃ லப்₃த₄பா₄க₃தே₄யை :
யதி ₃ நாம தி₄யா ந ஸோசி தவ்யம்
ந கத₂ம் த₃ர்ஶநதோ அபி நந்த₃நீயம் –15.68 —

யத₃நுக்₃ரஹ நிக்₃ரஹ ப்ரயுக்தே
ஸுக₂ து₃:கே ₂ ஶ்ரு’ணும: ஸ்வயம்பு₄வோ அபி
விமதிம் ப₄ஜதஸ் தத₃ர்ஹணாயாம்
ந ச தே₃யோ அநுநயோ ந ஸாந்த்வநா ச — 15.69 —

ந பநாயதி சேத₃ஸவ் ந ஜிஹ்வா
ந நமஸ்யத்யத₂ நைத து₃த்தமாங்க₃ம்
யதி ₃ நார்சயதோ ந தவ் ச ஹஸ்தவ்
க்ரு’பயா கல்பித ஸந்நிதா₄நமேநம் — 15.70 —

நிருபாதி₄க ஸர்வ ப₃ந்து₄மேநம்
த்₃விஷதா அநேந ந பா₄ஷண ப்ரஸங்க₃:
நிரயஜ்வல நேந்த₄நீப₄விஷ்யந்
க்ரு’பண: கேவலமேஷ ஸோசி தவ்ய: — 15.71 —

ஸஹநீயதயா ப்ரதி ஶ்ருதம் யத்
வஸுதே ₃வஸ் வஸுரச்யுதேந பூர்வம்
அபராத₄ஶதம் தத₃த்₃ய பூர்ணம்
ப₄விதா சைத்₃ய விபத்தயே பரம் தத் — 15.72 —

குரு வ்ரு’த்₃த₄ வசஸ்ததே₃ தத₃ர்த்₂யம்
த₃ம கோ₄ஷ ப்ரப₄வோ நிஶம்ய தீ₃ப்தி :
ப்ரப₄யா அநுக்ரு’த ப்ரவர்க்₃ய தீ₃ப்தி :
ப்ரதி ருந்தா₄நது₃ராஸதோ ₃ ரராஸ — 15.73 —

நிபுணை ரதி பா₃ல வ்ரு’த்₃த₄ வாக்யம்
ந பரிக்₃ராஹ்யமிதி ப்₃ருவந்தி ஸந்த:
ஸஹதே ₃வ வதே₃ஷ இத்யநிந்த்₃யம்
ப்ரு’து₂கத்வேந பிதாமஹம் நிநிந்த₃ — 15.74 —

அதி வ்ரு’த்தி மவேஷ்ய தஸ்ய கோ₄ராம்
அஶநி ஷோப₄ நிபா₄ம் ஸபா₄ஸத₃ஸ்தே
ஸத₃ஸத் ப்ரதி பத்தி மூட₄சித்தா:
க்ஷண மாலேக்₂ய ஸமர்பிதா இவாஸந் — 15.75 —

ஜஹஸு: கதி சித்₃ விநிந்த்₃ய ஸைத்₃யம்
பித₃து₄: கர்ண யுக₃ம் பரே கராப்₄யாம்
ஸுரஸிந்து₄ஸுதம் ஶஶம்ஸுரந்யே
வ்யசிகித்ஸந்த ச கேசித₃ல்பஸத்த்வா: — 15.76 —

முநிபி ₄: புலகாஞ்சி தாகி ₂லாங்கை ₃:
க்ஷரதா₃நந்த₃து₄ பா₃ஷ்பதி₃க்₃த ₄தே₃ஹை :
அநு மோத₃ந ஜாத மவ்லி கம்பை :
ஹரி கீர்தி ஶ்ரவணோந் முகை₂ரபா₄வி — 15.77–

ஸ்துதி நிந்த₃நேயார பி₄ந்ந ரூபம்
முக₂ராக₃ம் மது₄ஹந்துரீக்ஷமாணை :
யது₃பி ₄: ப்ரதி ருத்₃த₄ரோஷவேகை ₃:
க்ஷமயா திர்யக₃வைஷ்யத க்ஷமைவ –15.78 —

மது₄ஜித் பரிவாத₃ஜாத ரோஷம்
ஸஹஸா சேதி ₃பதேர்வதா₄ய ஸஜ்ஜம்
க₃த₃யா ஸஹ பீ₄ம முஜ்ஜிஹாநம்
ஶமயந் நித்த₂மவோசதா₃பகே₃ய: — 15.79 —

ப₃லபீ₄மஸுயோத₄நைரமுஷ்மிந்
பரிஹீணாயுஷி ந ப்ரவர்தி தவ்யம்
அதி பர்யநுயோக₃யா நியத்யா
ஹரிணைவைஷ ப₄வாப்₃தி ₄வந் நிவர்த்ய: — 15.80 —

த்யஜ ஸாஹஸ முஜ்ஜ்₂ய தாம மர்ஷ:
ஸமயே விக்ரம ஸம்பதா₃ த்₃ரியேத
ஸத₃நாக₃த ஸூத₃நாபவாதோ ₃
மஹதாம் ஸம்ப்ரதி மா ச பூ₄த₃யம் வ: –15.81 —

ப₄ஜது ப்ரத₂மார்ஹணாம் யதா₂ர்ஹம்
ப₄க₃வாநேஷ ப₄வார்ண வைகஸேது:
ப்ரக்ரு’தஸ்ய விதா₄துமந்தராயம்
ஸ்வயமே தஸ்ய ஶுப₄ஸ்ய ந க்ஷமம் வ: — 15.82 —

இதி ஶாந்தநவே ப்ரபா₄ஷமாணே
நி கி ₂லாநுஶ்ரவ ஸம்ஶய ப்ரமோக்தா
முதி₃தோ முநி ரப்₃ஜ யோநி ஜந்மா
முஹுராதூ₄ தகரஸ் தத₃ப்₄ய நந்த₃த் — 15.83 —

ஷிதி பாலக₃ணோ த₃தி ₄ஸ்ததா₃நீம்
விஷமாரம்ப₄ விரோத₄ஸேது பி₄ந்ந:
ஸ்திமித ஷுபி ₄தாக்ரு’திர்ப₃பா₄ஸே
க₃க₃நாம் போ₄த₄ர ஸந்நிபோ ₄ க₃பீ₄ர: — 15.84 —

நந்ரு’தே முதி₃தேந நாரதே₃ந
ஷிபதா மங்ஷு ம்ரு’க₃த்வகு₃த்தரீயம்
ஸுரஸிந்து₄ஸுதோதி₃தம் விபஞ்சீம்
அஸக்ரு’த்₃கா₃ப யதா அநுநாத₃ வ்ரு’த்த்யா –15.85 —

உத₃கீ₃யத யத் ததா₃ விதி₄ஜ்ஜை :
ஸமமுத்₃கா₃த்ரு’பி₄ரே கதாநநாதை ₃:
மது₄மர்த₃ந கீ₃தக₃ர்ப₄யா தத்
விஶத₃ம் நாரத₃ வீணயா அந்வவாதி ₃ –15.86 —

வ்ரஜ யோஷித₃ பாங்க₃வேத₄நீயம்
மது₄ராபா₄க்₃ய மநந்ய போ₄க்₃யமீடே ₃
வஸு தே₃வ வதூ₄ஸ் தநந்த₄யம் தத்
கிமபி ப்₃ரஹ்ம கிஸோர பா₄வ த்₃ரு’ஶ்யம் –15.87 —

நிகடேஷு நிஶாமயாம நித்யம்
நிக₃மாந் தைரது₄ நா அபி ம்ரு’க்₃ய மாணம் —
யமலார்ஜுந த்₃ரு’ஷ்ட பா₃ல கேலிம்
யமுநா ஸாஷிக யவ்வநம் யுவாநம் — 15.88 —

பத₃வீமத₃வீயஸீம் விமுக்தே :
அடவீ ஸம்பத₃மம்பு₃வாஹ யந்தீம்
அருணாத₄ரஸாபி ₄லாஷ வம்ஶாம்
கருணாம் காரணமாநுஷீம் ப₄ஜாமி — 15.89 —

அத₄ரஹித சாருவம்ஶ நாலா:
மகுடாலம்பி ₃மயூரபிஞ்ச₂மாலா:
ஹரி நீல ஶிலாவி ப₄ங்க₃நீலா:
ப்ரதி பா₄: ஸந்து மமாந்திம ப்ரயாணே — 15.90–

ஜயதாதி ₃ஹ தே₃வகீ ஸுதோ அஸவ்
ஜக₃தாமாதி ₃ரநாத்₃யநந்த பூ₄மா
அவதாரயிதும் ப₄ரம் ப்ரு’தி₂வ்யா
வஸுதே₃வஸ்ய க்₃ரு’ஹே க்ரு’தாவதார: — 15.91 —

க்ரதுரத்ர ஸமர்பித: க்ரு’தார்த₂:
ஸ ச த₄ர்ம: கிமிவாசசார த₄ர்மம்
ஜக₃தே ₃கபதேர முஷ்ய பூஜாம்
வித₃தா₄நேந யுதி ₄ஷ்டி₂ரேண புத்ரீ — 15.92 —

இஹ நாகஸேதா₃ ந மாநுஷாஸ்தே
ய இமே க்ரு’ஷ்ண மிஹார்சயந்த்யநந்யா:
அயமேவ மஹோ மமேதி கா₃யந்
ஸ ததா₃ மூர்த இவாஸ நாட்யவேத₃: –15.93 —

அபி ₄நந்தி ₃தவ்ரு’த்தி ரார்யமிஶ்ரை :
அவி ஸம்வாதி ₃பி ₄ராக₃மோதி₃தேஷு
விநயாத₃வநம்ய விஶ்வ ப₄ர்து:
ஸஹதே₃வ: ஸ்வயமாஹரத் ஸபர்யாம் — 15.94 —

அரஜஸ் தமஸாம் மஹீபதீநாம்
அநுமத்யா முநி முக்₂ய ஸம்மதே ச
புருஷஸ்ய பரஸ்ய பூர்வ பூஜாம்
ஸஹதே₃வ ப்ரஹிதாம் ஶஶம்ஸுரார்யா: –15.95 —

த்ரு’ண பு₄க்ப்ரதி மஸ்த்ரு’ணாய மத்வா
ஸ ததா₃ சேதி ₃பதிர் யுதி₄ஷ்டி₂ராதீ₃ந்
அஜஹத் பருஷோபி ஹேதி ஜாலோ
த₃ரஶே ஷேந்த₄நவஹ் நிவத்₃தி ₃தீ₃பே — 15.96 —

அஜுகு₃ப்ஸத பூ₄ப்₄ரு’த: ஸஹிஷ்ணூந்
பரிவாதை₃ஶ்ச திரஶ்சகார பார்தா₂ந்
அவமத்ய முகுந்த₃மர்ப₄கோ அஸா –
விதி தி₄க்க்ரு’த்ய பிதாமஹம் ஜக₃ர்ஹ — 15.97 —

அநகோ ₄அயமதந்த்₃ரித: க்ரியாயாம்
கு₃ருபி ₄: ஶிஷித ஶுத்₃த₄ தீ₄ரநேகை :
குருவம்ஶபிதாமஹ: குதோ அஸவ்
மதி மாேஹேந மஹீயஸா க்₃ரு’ஹீத: –15.98 —

அஶடை ₂ரஜடை ₃ரநேட₃மூகை :
முநி பி₄ஶ் சாத்ர கிமங்க்₃யகாரி மவ்நம்
அத₂வா கிமராதி பக்ஷஸக்தை :
அஹமஸ்மீதி முஹுர் ஜஹாஸ மூட₄: — 15.99 —

பரிவர்த ஹுதாஶந ப்ரதீ₃ப்தம்
வத₃நம் தஸ்ய ருஷா விஜ்ரு’ம்ப₄மாணம்
ப₂ண ப்₄ரு’த்₃பி₃ லபீ₄ஷணம் ததா₃ஆஸீத்
ஜ்வல து₃ல்காஶதது₃ர் நிரீக்ஷ நேத்ரம் — 15.100 —

ப₃ட₃பா₃நலதூ₄மராஜிரூக்ஷா
ப்₄ருகுடிஸ் தஸ்ய முகே ₂ பரிஸ்பு₂ரந்தீ
த₃த்₃ரு’ஸே தத₃ஸூந் ப்ரஸஹ்ய பாதும்
ஶமநேநேவ நிவேஶிதா பு₄ஜங்கீ₃ — 15.101 —

ப₄ஸிதீக்ரு’த சந்த₃நாநுலேப:
க்வதி ₂தத்₃ராவித ஹேம புஷ்பதா₃மா
ஸஹஸா ஹ்ரு’தி ₃ தஸ்ய கோப வஹ்நி :
ஸமதீ₃பி ஸ்பு₂டித ப்ரகீர்ண ஹார: –15.102 —

கடி₂நவ் பரிபிம்ஷத: கரவ் த்₃வவ்
ப₃ஹு ஶஸ்தஸ்ய வரோர்மிகா விஶீர்ணா
த்₄ருவம ப்ரஶமாய ரோஷ வஹ்நை :
துஷ விஷேபம த₄த்த ரத்ந ஸூர்ணை : 15.103 —

ஸ்வவதா₄ஹதடி₃ண்டி₃மஸ்வநாபா₄ந்
அஸக்ரு’ச்சேதி ₃நியந்துரட்ட ஹாஸாந்
அபி ₄தோ மணி பி₄த்திபி ₄: ஸபா₄ ஸா
ப்ரஜஹாஸேவ விஜ்ரு’ம்பி ₄த ப்ரதி ஶ்ருத் — 15.104 —

ப்ரதி பத்₃ய ருஷா விவர்ண பா₄வம்
தமஸா பி₃ப்₄ரத₃லங்க்₄ய மைகராஶ்யம்
உபரக்த இவார்யமா அஸ்தம்ரு’ச்ச₂ந்
ஸ ப்₄ரு’ஶம் ஸத்₃பி ₄ரபூ₄த₃ த₃ர்ஶநீய: –15.105 —

ஶ்வ ஸிதை ரவிதூ₃ரவ்ரு’த்தி மத்₃பி ₄:
பரிவாரைரிவ தத்யஜே த்ரஸத்₃பி ₄:
நிஜமம்ஸ மராதி வந்நி ஜக்₄நே
பவி கல்பேந பதே ₃ந சாஸ்ய பூ₄மி: –15.106 —

நிப்₄ரு’தைரபி பூர்வமை கமத்யாத்
விக்ரு’தஸ்யாத₂ விருத்₃த₄ ஸேஷ்டிதாநி
த₃தி₄ரே த₃மகோ ₄ஷஸம்ப₄வஸ்ய
ப்ரதி பி₃ம்பை ₃ரிவ தஸ்ய மித்ர பூ₄தை : — 15.107–

விக்ரு’தாக்ரு’தி வேஷ ஸேஷ்டிதாநாம்
அவலே பக்₃ரஹ லுப்த மாநஸாநாம்
அவதீ₄ரித ஜாஹ்நவே யவாசாம்
அபஹாஸ: பரமாத₃தே ₃ மஹத்₃பி ₄: –15.108 —

உபஹூய ரணாய வ்ரு’ஷ்ண வீராந்
ந்ரு’பலோ காத₃த₂ நிர்ஜகா₃ம ஸைத்₃ய:
தமமம்ஸத யாத₃வாஸ்ததா₃நீம்
அநலஸ்கந்த₄விநி : ஸ்ரு’தம் ஸ்பு₂லிங்க₃ம் –15.109 —

கதிபி ₄ஶ்சந காமசாரஸக்தை :
உப ஸஞ்ஜாத மதை ₃ருத₃க்₃ர ஶ்ரு’ங்கை ₃:
க₃ஜயூத₄பதேரிவாக்₃ரபா₄ஜோ
க₃திரே தஸ்ய க₃ஜைரிவா நுஜக்₃மே — 15.110 —

அத₂ தாநநுமத்ய பாண்ட₃வாதீ₃ந்
ஸமரஸ்தா₂நமுபாக₃த: ஸஸைந்ய:
ஹரிரப்ரதி ரோத₄நீய வ்ரு’த்தி :
த்₃விரதா₃தீ₄ஶமிவ த்₃விஷம் ருரோத₄ — 15.111 —

ரத₂ஹஸ்தி துரங்க₃பத்தி ரூபை :
யுயுஜாதே ப்ரு’தநே யதா₂ர்ஹமங்கை ₃:
ஸ்தி₂தி கர்மபி ₄ராபி ₄முக்₂யவத்₃பி ₄:
யுதி ₄ பி₃ம்ப₃ப்ரதி பி ₃ம்ப₃வத்₃ப₄வந்த்யவ் — 15.112 —

க₃ருடா₃ இவ பந்நகா₃நுத₃க்₃ராந்
த்₃ருமஷண்டா₃நிவ மாருதா: ப்ரசண்டா₃:
அஹிதாநபி₄நிக்₄நதோ நிஜக்₄நு:
யது₃வீரா மது₄வைரி ஹதி கல்பா: — 15.113–

ஸ்தி₂தம ப்ரதிமே ரதா₂ங்க₃ பாணிம்
க₃ருட₃ப்ரக்₂யக₃ தாக₃தே ரதா₂க்₃ர்யே
பத நோத்₃யததார காநுகாரீ
ஶலபோ ₄ வஹ்நி மிவாஸஸாத₃ ஸைத்₃ய: –15.114–

ஜ்வல து₃ஜ்ஜ்வலஹேதி ப்₃ரு’ந்த₃ஶாலீ
விபுலஸ்யந்த₃நேவதி ₃மத்₄ய தீ₃ப்த:
ஸ்வயமேவ ப₃பூ₄வ சேதி ₃ராஜ:
ஸ்வ விபூ₄தே ரபி ₄சாரஹவ்யவாஹ: –15.115 —

யது₃புங்க₃வ ஸூர்ய ஸந் நிதா₄நே
ஶிஶுபால: ப்ரதி ஸூர்யவத் ப்ரதீ₃ப்த:
கிமதோ ப₄வதீதி கி₂ந்ந சித்தை :
ஸகி ₂பி ₄: ஸ்வர்கி ₃பி₄ரப்ய வைஷ்யதைக: –15.116 —

மத₃லுப்ததி ₄யா ததா₃ அபி ₄யுக்தோ
யது₃ஸிம்ஹஶ் ஶிஶுபால குஞ்ஜரேண
விஜஹார கு₃ஹாஶயஸ் தரஸ்வீ
நிகி₂லாரண்யக நிர்விகா₄த வ்ரு’த்தி : — 15.117 —

மது₄ மர்த₃ந கார்முக ப்ரணாத₃:
ஸுமநஶ் ஶ்ரோத்ர ஸுதா₄ரஸாயமாந:
த்ரி ஜக₃த்₃ப₄ய ஶாந்திக ப்ரயாேகோ ₃
ரணவேத₃ப்ரணவோ ப₃பூ₄வ ரம்ய: –15.118 —

அசிரத்₃யுதி பா₄ஸ்வரோ அத₂ ஸைத்₃ய:
புருஹூதாயுத₄சாரு சித்ரசாப:
ப்ரலயஸ் தநயித் நுபீ₄மநாத₃:
ஶரவர்ஷேண முகுந்த₃மப்₄ய வர்ஷத் –15.119 —

க₃த₃யா தத₃போஹ்ய பா₃ண ஜாலம்
ப்ரதி நிர்தூ₄த ஹிம ப்ரபா₄கராப₄:
அஹிதம் விஶிகை ₂ரஹந் முகுந்தோ ₃ –
அத₃ர வேதே ₄அபி த₃ரவ்யதா₂விமுக்த: –15.120 —

முஷி தாம்ப₃ரமஸ்த்ர ஶஸ்த்ர பூ₄ம்நா
த₃நுஜாரேர்த₃மகோ₄ஷ ஜந்மநஶ்ச Á
அதி ராக₄வராவணம் ததா₃நீம்
அப₄வத்₃த்₃வைரத₂மாகுலேந்து₃ஸூர்யம் –15.121 —

ரதி ₂நோரத₂ வாதி ₃நோரி வாஸீத்
யுதி ₄ ஶஸ்த்ராஸ்த்ரமயை : ப்ரமாண தர்கை :
அபரஸ்பரபாதிபி ₄: ப்ரபூ₄ைத:
அவதா₄நேந பரஸ்பரம் ஜிகீ₃ஷா — 15.122 –

ப்ரதி₂தவ் ரண யஜ்ஞயாய ஜூகௌ
த₄நுராம் நாய ஸமாஹித ப்ரயயோ கௌ ₃
தத₃நந்ய ரஸாந தோஷயேதாம்
நரேத₃வாநு பஹூத ஸந்நிதா₄த்ரூ’ந் –15.123 —

யது₃ ஸூர்ய மவாப்ய ஸைத்₃ய சந்த்₃ர:
ஶநகைர் யத்ர ப₃பூ₄வ மந்த₃தா₄மா
க₃ணநா ந ப₃பூ₄வ க்ரு’ஷ்ண பஷே
ஹத ப₄க்₃நாதி ₃விகலபிதே அபி தஸ்மிந் –15.124 —

ரப₄ஸப்₄ரமணேந ஹேதி ராஜோ
ரண நீராஜ நமாசசார ஶவ்ரே :
தமமம்ஸத ஸைநி காஸ்ததா₃நீம்
த்₃விஷ து₃த்பாத மலாத சக்ர ரூபம் –15.125 —

ஸுக்ரு’தே ந புராக்ரு’தேந ஸைத்₃ய:
ப்ரதி பந்ந ப்ரக்ரு’தி : ப்ரஶாந்தவைர:
க்ஷண மத்₃பு₄த க்ரு’ஷ்ண ரூபத₃ர்ஶீ
ஶிதி ₂லாக்ரு’ஷ்ட ஶிலீ முகோ ₂அவதஸ்தே ₂ — 15.126 —

ஸம யோத₃ய ஸம் ப்₄ரு’த ப்ரஸாத₃:
த்ரி கு₃ண க்₃ரந்தி ₂சிகித்ஸக: ஶ்ரிதாநாம்
விலுலாவ ஸு த₃ர்ஶநேந க்ரு’ஷ்ண:
ஶிஶுபாலஸ்ய ஶிர: கிரீட ஜுஷ்டம் –15.127 —

ஸஹ ப்₄ரு’த்ய க₃ணை : ஸமித்ர வர்கே₃
நிஹதே சேதி ₃பதவ் நிவ்ரு’த்த கே₂தா₃:
அபி ₄துஷ்டுவுராத₃ரேண தே₃வா
நர தே₃வாஶ் ச தமீட்₃யமாதி ₃தே₃வம் — 15.128 —

ஹரிணா நித₄நம் ததீ₃க்ஷணம் ச
ப்ரயதாமப்ரதி போ₃த₄ ஸம் ப்ரயுக்தம்
ஜக₃த₃த்₃பு₄ததி ₃வ்யபோ₄க₃ஹேது:
ப்ரவி போ₃தே ₄ து து₃ரத்யயா வி முக்த¦: –15.129 —

ஸஹஸா ஹரி சக்ர ஸம் ப்ரேயாக₃ –
க்ஷண ஸம் ப்ராப்த விபாகயா நியத்யா
அநக₄ஸ்தி₂தி மந்தி மாமவஸ்தா₂ம்
ஸ ததா₃ ஸம்யமிநாமவாப ஸைத்₃ய: — 15.130 —

ரப₄ஸேந ரதா₂ங்க₃ லூந கண்டா₂த்
வபுஷஶ் சேதி ₃பேதருதீ₃யமாநம்
தபநாயுதஸந் நிப₄ப்ரகாஶம்
யது₃வீரஸ்ய தநும் விவேஶ தேஜ: — 15.131 —

அவலோக்ய தத₃த்₃பு₄தம் மஹீய:
ஷிதி பாலை ரமைர:லோலாக பாலை :
முநி பி₄ஶ்ச முஹு: க்ரு’தாவமர்ஸை :
இத₃மித்த₂ம் த்விதி நிஶ்சயோ ந லேபே ₄ –15.132 —

இதி ஸம் ப்₄ரு’த வீர ஸப்த தந்து:
க்ரு’திநா த₄ர்ம பு₄வா க்ரு’தாநுயாத்ர:
விநிவர்த்ய தமக்₃ரஜாநுவர்தீ
பரமேஶ: ஸ்வ புரீம் புந: ப்ரதஸ்தே ₂ –15.133 —

ஜக₃த்₃வந்த்₃ய: ப்ராப்தோ ஜலதி ₄ரஶநா மாத்ம நக₃ரீம்
யதா₂ர்ஹம் ஸம் ஸ்ரு’ஷ்டோ யது₃பி₄ரகி ₂லைரர்சிதபத₃:
த₄ரித்ரீ பா₄ரார்த₄வ்யபநயந தர்மே த்₄ரு’தமதி :
மஹிஷ்யா ருக்மிண்யா மஹித சரித: ஸாது₄ முமுதே ₃ — 15.134 —

அலகு₄பி₄ரபராதை ₄ராஶரீரம் ப்ரவ்ரு’த்தை :
ஶ்ரிதமபி ஶிஶுபாலம் ஶ்ரு’ண்வதா மப்ய ஸஹ்யை :
விதி ₄வஶநி யதேந வ்யாஜ மாத்ரேண முஞ்சந்
அஜநி பரிஜநாநாம் ஶவ்ரி ராஶ்வாஸ பாத்ரம் — 15.135 —

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்