Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ மாறன் பாவும் அவர் பொன்னடி மேவியவர் பாவும் –

June 15, 2026

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-
–ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை –சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க -அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –

இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இறே -எங்கனே என்னில்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-இப்படிக் காலமெல்லாம் அனுபவியா நின்றாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமேயாம்.-தாராவாஹிக விஞ்ஞானத்தில்-கால உபஷ்டம்பாதிகளால் வருவது ஒரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு –அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின்
கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.–இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –நித்ய அபூர்வமாய் இருக்கை-

அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்கள் இட்ட பதார்த்தம் மாண்ட வாறே ரசம் மாளும்
இது ஒரு கால் இட்டால் உள்ளது அளவும் அமுது ஊற்று மாறாது என்கிறார்-அமுதூரும்
அமுது தான் ஊற்று மாறாதே செல்லும்–நசபுநர் ஆவர்ததே போலே-நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்துவாரா நின்றது-பகவத் விஷயம் நினைக்க நெஞ்சும் இல்லை
சொல்ல நாக்கும் இல்லை-அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா அன்றோ-அமுதூரும்-அமுதூற்று மாறாதே நிற்கும்-அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே –இவ் வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை-இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்-முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு-அதின் எல்லையில் நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ-என் நாவுக்கே-அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம் ரசிக்கிறது –என்றுமாம்

2-அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும்-நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ
ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு-சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ -ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது-சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.-மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.

நாவினால் நவிற்று -ஓர் உக்தியாலே இந்த சரீரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –ஆழ்வார் -அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினேன் –இத்தையும் செய்து அடைந்ததை-இவர் நாவினால் நவிற்று எய்தினார் என்கிறார் –என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார்-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்-ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-இன்பம் எய்தினேன் –வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி 

3-அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னாடி மெய்மையே -என்றார்

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன் னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது–அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி க தியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-அடிக் கீழ் -என்கையாலே சரண சப்தார்த் தையும்-அமர்ந்து –என்கையாலே கிரியா பதத்தில் உபசர்க்க அர்த்தமாக உபாய உபேய விஷயமான வ்யவசாயத்தையும்-புகுந்தேனே.–என்று கிரியா ரூபமான ஆஸ்ரயணத்தையும்-புகுந்தேன் என்கிற பூதார்த்த நிர்த் தேசத்தாலே ஆஸ்ரயணத்துக்கு ஆவிருத் அபேஷை இல்லாத ஸக்ருத் கரணத்தையும் பிரகாசிப்பதாய்–இது பூர்ண சரணாகதி யாகையாலே
ஆச்ரயண அர்த்தமான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் -குண யோகமும் ப்ராப்ய அன்விதமாய் இருக்கையாலும்
அடியேன் என்கிற அதிகாரி ஸ்வரூபத்தில் அநந்யார்ஹத்வ அநந்ய சரணத்வங்களோ பாதி அநந்ய போக்யத்வமும் ஸூசிதமாகையாலே-அமர்ந்து என்று பிரயோஜனாந்தர நிரசனம் ஸூ சிதமாகையாலே நமஸ் சப்தார்த்தம் சித்திக்கையாலும்-புகுந்தேன் என்கிற பிரதிவசனம் ப்ராப்திக்கும் ஸூ சகமாக வற்றாகையாலும்-பிரதானமான உபாய வரண வாக்யத்துக்குள்ளே வாக்ய சேஷமான உத்தர வாக்யார்த்தமும் அந்தரகதமாயிற்றதாயிற்று-ஆகையால் இப்பாட்டு வாக்ய த்வயார்த்த ப்ரகாசகமாகையாலே பூர்ண சரணாகதி யாகக் குறையில்லை-“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,-“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
“சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
“புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.-இப்பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

அமர்ந்து புகுந்தேனே – “முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே.
அவனுக்கு ஒரு -ஸஹ காரி -துணை வேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ-நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார், (இடையூறும் கால விளம்பமும் இல்லையே -பக்தி யோகம் இல்லையே )உன் அடிக் கீழ் –
“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
1-ஸூ பாஸ்ரயமாய் -எளிதில் பற்றக்கூடியதாய்,
2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
3-பிறந்த உருசியையும் வளர்த்து,
4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
5-ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க.

முதல் முதலிலே,
“துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
தாம் பற்றுகிற இடத்தில்
“உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
“உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
“பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
“உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
“எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
“நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
“உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

அமர்ந்து –
அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில், அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று.
இதற்குப் பொருள்,-“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச் செய்தே “ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,-திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

மேவினேன் அவன் பொன்னடி
-இங்கு இருந்த நாள் அஞ்ஞாத ஞாபநத்தாலே உபகாரகர் ஆகவும்-பகவல் லாபத்துக்கு புருஷகாரமாகவும் –-நித்ய விபூதியில் யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே-பற்றினேன் -ஆளவந்தார் -அத்ர பரத்ர சாபி என்கைக்கடி இவர் இறே-இஹ லோக சுக ஜனகரும் -பர லோக சுகத்துக்கு சாதனமும் –எனக்கு சுவாமியும் -கால ஷேப விஷயமும் -ஆழ்வாரே என்கிறார்-அவன் பொன்னடி-அவனது போலே உலகம் அளந்த-ஊர் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்கும் பொன்னடி அன்று-நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
மேவினேன் –வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டாமல் சத்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே போலே இன்றி-எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படி
அத்தோடு -வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி -பொருந்தி விட்டேன்-மெய்மையே-சத்தியமே -ஸ்ரீ சடகோபனை தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்வார் உண்டோ-கால ஷேப விஷயம் எனக்கு ஓன்று இரண்டா ஆயிரம் பிரகாரம் அல்லையோ

மேவினேன் அவன் பொன்னடி – ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் – ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –


4-அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –-அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –யோயோ யாம் யாம் தனும் பக்த –“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.
“எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.

தேவு மற்று -அறியேன் விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு பாவோ நாந்யாத்ர கச்சதி போலே –
பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து-அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் -தழை யாயினும் -தண் கொம்பாயினும் – கீழ் வேராயினும் -நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினோ -இத்யாதிப் படியே-பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி-ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே –பாடித் திரிவனே-இது காணும் இவருக்கு தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது

தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்-மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று–புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இறே-அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே-சாஸ்திர வாசனையாலே யாதல் –ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

5-அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–நீர்மைக்கு ஒப்பு இல்லாதவனுடைய-புகழ் பாடி இளைப்பிலம்-கல்யாண குணங்களை பாடி விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-இளைக்கை யாகிறது விடுகை -அதாவது விச்சேதம்-அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-

குருகூர் நம்பி பாவின்னிசை பாடித் திரிவனே
குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறு தாம்பு என்னுதல் -திரு வாய் மொழி என்னுதல் –பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-பாடித் திரிவனே--உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –-ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –-உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-

6-அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-இங்கே திரிந்தேற்கு -பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை –இழுக்கு உற்று என்-தண்ணிதானது என்–பாகவதர்கள் உடைய ப்ரீதியின் உருவமான-பகவத் கைங்கர்யத்தை-அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்-எனக்கு அதுவே பேறு -என்கிறார் –-திரிதந்தாகிலும் தேவபிரானுடை-கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
ஆசார்ய ஹிருதயம் –அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்திய சத்ரு விசிதனம் – என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-திரி தந்தாகிலும் –திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்-திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் –திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –-அதாவது –திருவாய்மொழிப் பாவை விட்டு –இசைகளை விட்டு –ஆழ்வாரை விட்டு –அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து –

7-அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றால் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.-ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று –இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது–திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,
பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘
தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.
–தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;-‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-நம்பிக்கு – நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது – அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை-(குருகூர் நகரான என்னாமல் குருகூர் நம்பி -இதற்குள் குறுங்குடி நம்பியும் அந்தரபூதம் –இருப்பிடம் வேங்கடம் இத்யாதி -பூர்ணர் -அன்றோ -)
ஆள் உரியனாய் –-உரிய அடியனாய்-உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே ஸ்வாமி உகந்ததையே பற்றி அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இ றே ஸ்வரூபம்
அடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இ றே-பெற்ற நன்மை –பெற்ற பகவத் லாபம் – ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இறே -ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இ றே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இ றே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இறே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4–அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு-சர்வ வித பந்துவுமானவர்-ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –-பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –-ஹிதமே செய்யக்கடவ பிதா செய்யுமதுவும் – ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன்  செய்யுமதுவும் -செய்யுமவர்-தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—என்னைப் பெற்ற அத்தாயாய் –-வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்-தந்தையாய்த் – நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-அறியாதன யறிவித்து–சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இ றே
அத்தா – ஸ்வாமி-நீ செய்தன – இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்
மாதா பிதா பிராதா -இத்யாதிநாராயண -என்கிறார்

8-அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
–10-4-3-வகுத்த சர்வேஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –ஆஸிலே வைத்த கையும் தாணுமாய் விரோதியைப் போக்கி அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –அசக்தனான தன்னாலே சாத்தியமான அசேதன க்ரியாகலாபங்கள் கொண்டு விரோதியைப் போக்குமவர் அன்றே இவர் –சர்வ சக்தி கையில் திரு வாழி யின் கூர்மையால் போக்குமவர் இறே –-ஆரால் குறை உடையம்-என்னால் வருமதொரு குறையும் இல்லை -யமாதிகளால் வருமவையும் இல்லை – மீள்கின்றதில்லை–இனி மறுவல் இடுகிறது இல்லை –சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்- சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்-கூர் அம்பன் அல்லால் குறை-மற்று இலை துணை -நெஞ்சே -குறை -ரக்ஷணம் -நான் முகன் திருவந்தாதி -8-என்ற அம்பின் கூர்மையையும்-
சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-என்று திரு ஆழியில் கூர்மையையும் கொண்டு பெற இருப்பர் சிலர் –
ஆற்றல் இல்லாத தன்னாலே செய்யப் பட்ட கர்மங்களின் கூட்டத்தைப் பற்றிப் பெற இருப்பர் சிலர்-
என்றும் உள்ள ஸ்வரூபத்தை உடைய சர்வஞ்ஞனான பராத்பரனைப் பற்றி பெற இருப்பர் சிலர் –
கர்மங்களின் கூட்டத்தை நெகிழச் சொல்லி-கெடுவாய் என்னை அன்றோ பற்ற அடுப்பது -என்றான் அன்றோ அவன் சரம ஸ்லோகத்தில்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தன்மையான் – அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –-ஜலத்துக்கு சைத்யம் போலேயும் – இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –-அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல் இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-சடகோபன்-என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –-கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்-இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலேஎன் நம்பி-தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்-அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள் ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்-நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்-எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –-என் நம்பியே – என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை- இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல-கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும் பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –

9-அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-கம்சன் தான் நினைத்த நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணினான் —கடியனாய்க் -தன் பக்கலில் இன்றிக்கே வந்தேறி -என்கை –
பிரான் தன்னைக்-முன்பு உபகாரகன் ஆனவன் கிடீர் நம்மை அழித்தான் —கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ – சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –உகந்தாரை அழிக்கை இறே பாதகம் ஆவது -விரோதிகளை அழிக்குமது உபகாரம் இறே

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –தக்க சீர் சடகோபன் – சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் – அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –


10-அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை-நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை-பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த  ஜீவன்  அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து  விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண  கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – ) விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது –உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இறே-பொருள் -என்று த்ரவ்யம்-நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இறே
அத்தை இ றே நான் அபஹரித்தது-நம்புதல் –ஆசைப்படுதல்-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இறே இவருக்கு முதல் –-பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )-ததீய சேஷமான வன்று இறே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது-அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்-அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இறே –-ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இறே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இறே விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இறே ரத்னம் களவு காண்பது-
ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இறே -இருப்பது-

11-அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–கேசவன் தமர் –1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –-2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது-இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்கு என்றபடி-சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-அவனுடைய அவயவ ஸுந்தர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-கீழ் ஏழு படிகளிலும் மேலே ஏழு படிகளிலும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக கேசவன் தமர்கள் ஆனார்கள்
ஆழ்வார் பரிகரம் என்றாயிற்று அவன் விரும்புவது -கேசவன் தமர் என்றாயிற்று இவர் விரும்புகிறது
மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –-மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –-விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்—தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்–மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது-இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி
வாய்க்கின்றவா –ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ  இருப்பது-எழுமையும் –
ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –எம்பிரான் –பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே  )
எம்பிரான் –என் ஸ்வாமி-நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து-பின்பு அது கிட்டினவாறே-அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –

12-அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை
என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கழிகிற காலம் எல்லாம் நாள் தோறும் நாள் தோறும் விஷயீ கரித்து –-என்னைத் தன்னாக்கி -கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி-என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –-என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே –சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –
இன் தமிழ் பாடிய-அர்த்தம் கிடக்க -சப்தம் தானே ரசித்து சர்வாதிகாரமாக தமிழிலே இசையை வைத்து தானே பாடினவனை-ஈசனை -இப்படி வாய்க்கைக்கு அடி சர்வ சக்தி யாகையாலே -அவன் பாடினான் ஆகில் நீர் செய்தது என் என்ன-ஆதியாய்-நின்ற-எனக்கு அடியாய் நின்று பாடுவித்தான்-என் சோதியை -இவருக்கு கவி பாடுகைக்கு உள்ளுறை கொடுத்தது வடிவு அழகாயிற்று -எனக்கு வடிவு அழகை ஆவிஷ்கரிக்க-அத்தைக் கண்டு கூப்பிட்டது கவி யாயிற்று -பிடாத்தை விழ விட்டு வடிவு அழகை காட்டினான் -திருத் திரை எடுத்தால் போல் கூப்பிட்டேன் -அது கவி யாயிற்று-

13-அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி மனஸ் ஸூ பிடிபட்ட பின்பு செய்வது என் என்னில்-ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து-அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று
விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்
இயல் வான்-வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்-இப்படி உத்ஸஹிக்குமவன் என்னுதல்-ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–-முன்பு த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்-இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன்-பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து பின்பு அது கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –தன்  புகழ் ஏத்த –ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ-ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )-அருளினான் –நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –-மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறார் இறே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )-என்றும் என்னை இகழ்விலன் –என்றும் இகழ்விலன் –என்னை இகழ்விலன் –-யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .-என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ -தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
காண்மினோ-இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க-ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –

14-அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி–ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.-ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)-விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம் (தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,) என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-மதி நலம் –-ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –
‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை
(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி – கர்மா ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது . ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,-ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். என் போலே என்னில் , ‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே – உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்– இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-அவன் அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-ஒண் தமிழ் சடகோபன் அருளையே- மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே-ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள்

15-அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
–2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-அருள் கொண்டாடும் அடியவர் – இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –-அதுவும் அவனது இன்னருள் -என்றும் –அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே – ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் –என்றும் – அருள் புரிந்த சிந்தை -என்றும் –நின் அருளே புரிந்து இருந்தேன் –என்றும் அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –-இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் – இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இறே – ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இறே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம்  இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் –வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே  -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் – ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை–இவ் உலகினில் மிக்கதே –சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )

16-அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-திருப் பேரை தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்-நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே—இன்று வந்து-பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன்னை ஒருவர் கேட்டார் இன்றிக்கே இருக்காது தானே -இனி ஒரு நாளும் போகேன் -என்று சொல்லி பிராட்டி தன் பக்கலிலே சொல்லுமத்தை தான் என் பக்கலிலே சொல்லா நின்றான் –நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று– என் நெஞ்சு –நிறையப் புகுந்தான்–இவனுடைய அபி நிவேசத்தை ஆதரியாத நெஞ்சானது பூர்ணமாம் படி –முன்பு நினைவு இன்றிக்கே இருக்க இன்று வந்து புகுந்தான் -முன்பு நினைவு உண்டாவது தன் பக்கல் முதல் உண்டாகில் இறே –தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்- இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து-நிறைவாளன் ஆனான் -என்கிறார்

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-என் நெஞ்சுள் நிறுத்தினான் – பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் – கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள்  ஏவ மாட்டாரே  -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )

17-அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-ஒழிவு இல் காலம்எல்லாம்-முடிவு இல்லாத காலம் எல்லாம்-உடனாய் -சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் —மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும்,-படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-இதனால்,-சர்வ அவஸ்தைகளையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது.உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்-வழுவிலா அடிமை செய்யவேண்டும் –-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:-இருந்த விடத்திலே யிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?-ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,-சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –ஆட் புக்க காதல் –
அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )அடிமைப் பயன் அன்றே –இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாக பிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இறே இருப்பது –
அங்கன் அன்றிக்கே-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு-முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

18-அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-லோகத்தில் சகல பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு பிரமிக்கும் படியான நிரவதிக பக்தியை உடையவர்-நிரூபக தர்மம் இவருக்கு காதல் ஆயிற்று-தம் படி சொல்லினும் தாமே சொல்லும் அத்தனை-ஆராத காதல் –-இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.-காதல் குருகூர்ச் சடகோபன் –-காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.-‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. -(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே – இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

19-அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -கைங்கர்யமே ஜீவனம் –கார் முகில் என்றது பலித்த படி –-மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-பயனன் றாகிலும் –நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இறே-அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –-பாங்கலராகிலும் –பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு பங்காய் இருக்கலாம் இறே-அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்-இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இறே இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் – ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இறே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்  இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இறே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-செயல் நன்றாகத் –-தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே  ஒழிந்தால்-அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –-தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்-திருத்திப் பணி கொள்வான் –
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இறே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

20-அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்–சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –-திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே–தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –-திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் – திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் – தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்-அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில் பாகவதர்களைப் பற்ற அமையும் –ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இறே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இறே -இருப்பது-

21-அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-சென்று சென்றாகிலும் நெடும் காலம் கூட வாகிலும்-கண்டு,-நம்மை இவன் கண்டு-சன்மம் கழிப்பான்-ஜென்ம சம்பந்தம் அரும்படி பண்ண வேண்டும் என்று-எண்ணி,-மநோ ரதித்து-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்
கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு-அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?– கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்
இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –சென்று சென்று ஆகிலும் கண்டு நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் ஜன்மம் கழிப்பான் எண்ணிஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமோ –

அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.
என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே –காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?-‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,-பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.-வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்-கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
அருளிச்செய்கிறார்.
இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.

22-அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-இத்திருவாய் மொழியை சொல்ல வல்லார்க்கு உத்தேச்ய பூமி பரமபதமாக கடவது என்னுதல் -இது சொன்னவர்கள் இருந்த இடமே பரமபதம் என்னுதல் -அதாகிறது அவர்களுக்கு இவரைப் போலே மடல் எடுக்க வேண்டா -அவன் தானே மடல் எடுத்து இவர்கள் இருந்த இடத்தே நித்ய சம்ச்லேஷம் பண்ணும் என்கிறது -நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் -அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;-இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;-இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;-இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே-

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில் திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இறே -நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் –உம்பர் -ஊர் திரு நாடு -திரு வனந்த  புரம்  /-வசிக்கும் ஊர்  மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ  எழில் ஆலி என்னார் தாமே -போலே )
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து

1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்

2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்

3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –

4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –

5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்

6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்

7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்

8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –

9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்

10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –

11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –இவ்வாழ்வார் ஆகிறார் 1-அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
2-ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
3-அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
4-அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்-

ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று
ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இறே –-இது வாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து-

லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் – அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே-ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்-மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் – இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –

தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது-அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே-இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே-ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தை அருளிச் செய்கிறார்-

ஆழ்வார் உடைய போக்ய  அதிசயம் தோற்றுகைக்காகவும் – ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்-உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –-பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –-பையவே நிலையும் -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-உரஸ் ஸ்தலத்திலே கட்டுண்டு
மலர் மகள் விரும்பி அணைக்கும் மார்விலே கிடீர் கையிற்றை இட்டுக் கட்டிக் கட்டுண்டு இருந்தது –இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே –-அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-

அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் -இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்-பிறந்தவாறும் -5-10-கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே-பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது-இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்
பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன

தென் குருகூர் -நம்பி-
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் – பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்-ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இறே- ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இறே என்று ஜீயர் அருளிச் செய்வர் –

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்-அவன் இடை விடாதே ஸ்நேஹியா நின்றான்-அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
நம்பி -ஒருத்தனாக நினைத்து-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர்

2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

இன்பம் எய்தினேன் – வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –

1-எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே-2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-3-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரேநான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம்-பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்-அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
மேவியே-அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இ றே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-அவனே தமக்கு சர்வவித்த பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது –அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே–“தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா”
–என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-

குருகூர் நம்பி இன்னிசை பாடி –பகவத் பிரதிபாதகம் என்று அன்று இவர் திருவாய் மொழியைப் பாடிற்று –ஆழ்வார் அருளிச் செய்தது என்றாயிற்று –உயர்வற உயர் நலம் உடையவன் -வண் புகழ் நாரணன் -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –என் செய்ய தாமரைக் கண் பெருமானார் -என்று பாடா நிற்கச் செய்தும் பகவத் விஷயத்தோடு உறவற்று இறே இவர் பாடுகிறதுதிரிவனே
அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்-திரிவேனே-இது எனக்கு கால யாத்ரை –ஆகையால்
1-ஸூக பூதரும் -2-சாதனா பூதரும் -3-ஸ்வாமி யும் -4-காலஷேப விஷயமும் -( நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் – )ஆழ்வாரே

3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறதுதேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு- (கரிய உரு –கோல உரு -திரு உரு )
நித்ய ஸூரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே-இறே இருப்பது –-இவ்வளவும் இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இறே –என்று எம்பெருமான் திரு உள்ளம்-கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே –என்று ஆழ்வார் வாய் புலத்து கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார்-என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே –கோலத்-ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய் வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது-அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இறே போவது –திரு உருக் –கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
அவ் விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து-அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
ஒழிவிலன் என்னோடுடனே
என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை–அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்-நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –-வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.–செய்ய தாமரைக் கண்ணனில் நெஞ்சினால் நினைப்பான் எவன் என்கிற அர்ச்சாவதாரத்தில் நீர்மையை இறே இவர் நினைக்கிறதுநம்பிக்கு –-நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது –
அதாவது –ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கைஅடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இறே

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.-தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.-ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு – சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு – ஆழ்வார் ஒருவருக்கும் இறே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று-இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இறே
இவரையும் கட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது-விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்டவூர் இ றே-(பெரிய வண்மை இரண்டு விசேஷணங்கள் )-அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இறே இவர்க்கு –தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இ றே சொல்லுவது-இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே-விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-ரக்ஷணம் தாழ்ந்தவாறே அதி சங்கை பண்ணுகையும் -உபகார ஸ்ம்ருதியாலே ஹ்ருஷ்டராகையும் ஆகிற இவை யுண்டாகைக்கு அடி அவ் வூரிலே பிறப்பு என்கை -மானஸ அனுபவ மாத்திரமே யாய் விடாதே ப்ரபந்ததீ கரித்த உதார குணம்

4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
இப் பாட்டிலே சடகோபன் என்றார் இறே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலேஎன் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ எனக்குப் பூரணரான உபகாரகர்என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடியவர்-சத்வ நிஷ்டர்க்கு பஹிஷ்டனான வென்னைத் தாம் அங்கீ கரித்தும் அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த வென்னைக் கைங்கர்யம் கொண்டும் போந்த –சடகோபன் என் நம்பியே-பூர்த்தியை யுடையவர் ஆழ்வாரே

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே-ஸ்வாமி-இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர் பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச் செய்கிறார்.-

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-அபகாரபரர் அளவிலும் உபகாரகனாய்ப் போருகை –அதாகிறது அவர்கள் அளவில் குறை காணாது ஒழிகை இறே-ததீயரை நலத்தால் மிக்கார் என்று ஆழ்வார் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாலே தாமும் -நன்மையால் மிக்க என்கிறார்-

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது

என்னை யாண்டிடும்-பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய் வாரீர் என்று உபதேசித்தார் என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்-கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் நண்ணி என்று நான் விட்டுப் போந்த விஷயத்தை-நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணினார்

5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று –கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க – அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் – இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இறே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ ) ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே திருநகரியைக் கவி பாடுகிறார் –

உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் –என்றும் பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-நம்பிக்கு அன்பனாய் அடியேன்-ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிரமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்

நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று-இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்-இம் மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் – அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தச்கர சஞ்சரணம் இல்லாமையாலே
ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே-அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்செம் பொன் மாடம்
துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து – ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –

6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ —நின்று-–மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இறே -இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-–உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று–எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்–ஏத்தநற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி –மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே –தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி –முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே என்று-பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்–ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே  புருஷார்த்தம்-அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இறே அத்யவசாய ப்ரதரும்-அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே – –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்-அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாதுகாண்மினேபாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –

7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத் தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-தொண்டீர் எல்லீரும் வாரீர் –என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே–மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள் –பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்-எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக் கொண்டார் இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதேதெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படிஅங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-என்னைப் பெறுகையாலே -சம்சாரம் கொண்டவரை மீட்டோம் என்று இருந்தோம் -மாயக் கூத்தவன் கொண்டவரும் பிழைக்கப் பெற்றோமே -என்று குறைவற்று இருந்தான் என்னுதல் -என்னோட்டை கலவி தன் பேறாக இருக்கும் வேறுபாடு தோற்றும்படி இருந்தான் என்னுதல் –கண்டு கொண்டே -பிரபல வியாதிக்கே பிழைத்த புத்ரனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பிதாவை போலே –விஜூவர பிரமுமோதஹ-என்கிறபடியே மாயாக் கூத்தனில் ஆற்றாமைக்கு பிழைத்தவன் என்று வைத்த கண் வாங்காதே இரா நின்றன் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்—மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்

8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
கபளீ கரித்து இருக்கை-மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –-அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –-ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ-பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-பாட்டும் அன்று-பாடினவரும் அன்று-பாட்டுக்கு அடியான அருளும் அன்று-இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று-இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று-கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இறே லோக ஸ்பாவங்கள் இருப்பது –அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்இவ்வுலகினில் –கண்டீர்-இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )-இவ்வுலகினில் மிக்கது-இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ–கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இறே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )


9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்–உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்- ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே—சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான்-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகு இறே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது

அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பவகச் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து–அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து

10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –

பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-திருத்திப் பணி கொள்வான் –தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் – அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.-‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணிகொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய், அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –

முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –அர்த்தியா நின்றேன் –-செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இறே-என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம் அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே- பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் – தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே-உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி--இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு- ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு- இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன-இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
குருகூர் நம்பி-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று சேதனர் அளவின்றியே திர்யக்குகள் அளவிலும்-ஏறும்படி யாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பதுசெயல் நன்றாகத் திருத்தி- இவர் உபதேசித்த அர்த்தம் என் நெஞ்சிலே பட்டு அது தான் அத்யவசாய பர்யந்தமாய் அவ்வளவு அன்றிக்கே அனுஷ்டான சேஷமாய்-அவ்வனுஷ்டானம் தான் சதசத நுஷ்டான மிஸ்ரமாகை யன்றிக்கே சத நுஷ்டானமே யாம்படி திருத்தினார்-( சத் அஸத் அனுஷ்டானம் இரண்டும் கலந்து போலே இல்லாமல் )
1-முற்படச்ரவணமும் –2-ஸ்ருதமான வர்த்தத்தில் மனனமும் -3- மதமான வர்த்தத்தில் மஹா விசுவாசமும் –4-விச்வச்தமான அர்த்தத்தில் அனுஷ்டானமும்-5-அதில் அசத நுஷ்டானம் கலசாதே சத நுஷ்டானமே யாய்ப் போருகையும் இ றே செயல் நன்றாகத் திருத்துகை யாவதுதிருத்தி-இவற்றில் என் கையில் என்னைக் காட்டிக் கொடாதே தாமே கைத்தொடராய் நின்று இவ்வவஸ்தா பன்னமாக்கினார்-

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-–அசேதனமான பஷி ஜாதம் அடைய ஆழ்வார் பரிசரத்திலே திருந்தி திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ-சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )-ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே- தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்மொய் கழற்கு அன்பையே-இத் திருவடிகளின் போக்யதை அன்பைக் கொடுத்தது-அன்பு பிரத்யுபகார்த்திலே மூட்டிற்று-அதுக்கு இடம் காணாமையாலே அலமரா நின்றேன்-இவ்வலமாப்பு யாவச் சைதன்யம் இ றே –மொய் கழற்கு அன்பையே-முயல்கின்றேன்-(வர்த்தமானம் யாவதாத்மா பாவி ப்ரபத்யே போலே )

11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே பூரணராய் இருப்பர்–பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார் அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இ றே-இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று-

நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
1-ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக்கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-தாம் அலமருகிற படியையும் இ றே கீழ்ச் சொல்லி நின்றது –


ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ஸ்வாமிகள் -அருளிச் செய்த -எண்ணிலும் வரும்-எண் தானும் இன்றியே வந்தியலுமாறு ஸ்ரீ கண்ணன்–

June 9, 2026

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
–1-10-2-–

சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்–பரி கணனையோடு பரம பக்தியோடு வாசி அற முகம் கொடுக்கும் என்று அக்குணத்திலே ஈடுபடுகிறார் –நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும்-சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா,
இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன் என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப் போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான்–இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான்-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும்-‘வரும்
வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’

109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.
ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌. (எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி  ‘“ஓரெண்டானுமின்றியே”” \என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
–1-10-5-எண்ணிலும் வரும் -என்கிறது தானும் மிகை யானபடி கண்டாயே -என்று அவன் படியை மூதலிக்கிறார் –

தன் திறத்தில் எண்ணுகை தானும் இன்றியே இருக்கச் செய்தே எம்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்த படியைச் சொல்லுகிறார் –எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –-எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –-உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –பழம் கிணறு கண் வருகிறது என் –-நீ அவனைக் காண எங்கே எண்ணினாய்-பிரளய ஆபத்தில் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை-(விலக்குகைக்கு பரிகரமாவது – விஷய ப்ராவண்யம்-ஸ்வரூப யோக்யதை யாதல் என்றுமாம் –)பிரதி கூலிகைக்கும் பரிகரம் உடைய நீ யன்றோ பெற்றாய் –பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;-உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;-அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,-அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார்,  ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.


ப்ரஹ்மம் -கடவுள் -இறைவன் -பரத்வம் அறிந்து வணங்கி -எம்பிரான் எந்தை என்னுயிர் எளிமை நினைத்து நெருங்குவோம் -கண்ணன் -அஹம் மாம் -இரண்டையும் காட்டுமே

1-உள்ளத்தால் எண்ணினால் நினைத்தால் வரும்
2- எண்ணம் இல்லாவிட்டாலும் வரும்
3-ஓன்று இரண்டு மூன்று இவ்வாறு எண்ணிக் கொண்டு வந்தாலும் வரும்-

பரம புருஷார்த்தம் -ஸ்ரீ வைகுண்டம் -எம்பெருமான் பதம் -அத்விதீயம் -ஓன்று
கண்ணன் கோபாலனாக கோயிலே கொண்டுள்ள ஸ்தலங்கள் -இரண்டு –
ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி பிரதான திவ்ய தேசங்கள் –மூன்று
பிரசித்த போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் -நான்கு
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -ஐந்து
விண்ணகர் என்று கொண்டாடப்படும் திவ்ய ஸ்தலங்கள் -ஆறு
முக்தி அளிக்கும் ஷேத்ரங்கள் -ஏழு
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
பகவத் ராமானுஜரின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்கும் ஷேத்ரங்கள் -ஒன்பது
ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்கள் -பத்து

ஸ்வயம் பாதம் ப்ரசார்ய ஸ்ரித்து ரிதஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா
ஜானுன்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாக போக நிதாய

பஸ்ஸாத் பாஹுத் வயேந ப்ரதிப டஸமநே தாரயன் சங்க சக்ரே
தேவீ விபூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத

ஆத்ம பரமாத்ம ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றுக்கு குறைவற்ற ஸ்தலம் -ப்ரளயத்திலும் அழியாதது -கர்மங்களைத் தொலைத்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்ற ஆத்மா திரும்பி வருவதில்லை -பரமபத நாதனை ஆதிசேஷனில் அமர்ந்துள்ளார் –

வீர நாராயணப் பெருமாள் -மாடு கன்றோடு சேவை -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் திருவவதார ஸ்தவம் -ஸ்ரீ நாதமுனிகளுக்கு -அருளிச் செயல்களைக் காட்டிக் கொடுத்த ராஜகோபாலன் –பெரியவாச்சான் பிள்ளை -தென்னானாய் வடவானாய் -இத்யாதி பாசுரம் சமர்ப்பித்து அபிமானித்த ஸ்தலம்
லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

மன்னார்குடி -ராஜகோபாலன் -ருக்மிணி ஸத்யபாமையோடு ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் -32-திருக்கோல தர்சனம் ரிஷிகளுக்கு காட்டிக் கொடுத்து அருளினவன் –தக்ஷிண துவாரகை
உன்னுத்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
நும்மிச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே -4-6-10-மா முனிகள் ஸமர்ப்பித்து அபிமானித்து ஸ்தலம்

ஸ்ரீ தேவிக்கு பிரதான ஸ்தவம் -ஸ்ரீ ஸ்வேத கிரி என்னும் ஆதி திருவெள்ளறை -புண்டரீகாக்ஷப் பெருமாளுடன் சேவை -கிருத யுகத்திலே சிபி சக்ரவர்த்திக்காக ஸ்ரீ வராஹ ரூபத்தை காட்சி கொடுத்தருளிய ஸ்தலம்

நாச்சியார் ஆண்டாள் பிரதான ஸ்தவம் ஸ்ரீ வில்லிபுத்தூர் -பூதேவி நமக்காக குன்றாத வாழ்வான் வைகுந்தம் வான் போகந் தன்னை இகழ்ந்து ஆண்டாளாக திருத்துழாய்த் தோட்டத்தில் எடுத்து பெரியாழ்வார் திருமகளானார் –

நாச்சியார் கோயில் -நீளா தேவிக்குப் ப்ரதானம் -வஞ்சுளவல்லித்தாயார் -திருநம்பிக்கை நாச்சியார் -நறையூர் நம்பி சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தன் அனைவருடன் சாளக்கிராம திருமேனியுடன் சேவை ஸாதிக்கிறார் -திருமங்கை யாழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளிய பெருமாள்

1-போக மண்டபம் -ஸ்ரீ ரெங்கம் -பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள் –
2-புஷ்ப மண்டபம் –சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -திருமலை -தோ மாலை பிரஸித்தம் -குறும்பறுத்த நம்பி வைபவம் -அநந்தான் பிள்ளை வைபவம் –
3-தியாக மண்டபம் -அத்தியூரான் புள்ளை யூர்வான் –திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தைகள் -ஆலவட்டம் கைங்கர்யம்
4-ஞான மண்டபம் -திரு நாராயண புரம் -கிருதயுகத்தில் தத்தாத்ரேயராக அவதரித்து வேதங்களை உபதேசித்து அருளிய ஸ்தலம் -த்ரேதா யுகத்தில் ராமனாலும் த்வாபர யுகத்தில் கண்ணனாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாள் -யதிராஜர் எழுந்தருளி ஞான பக்தி வளர்த்தருளிய ஸ்தலம் -யதிராஜ சம்பத்குமார் ப்ரஸித்தம்

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
1-திருக்கண்ணங்குடி
-கண்ணனூர் கண்ணபுரம் -64 சதுர்யுக ங்களாக சேவை -சவுரி ராஜர் ஐதிக்யம் -அமாவாசை தோறும் திருக் கைத்தல சேவை -விபீஷணனுக்காக -திருமங்கை ஆழ்வாருக்கு திருவெட்டு எழுத்து அர்த்தம்- கற்ப்பித்தார்
2-திருக்கண்ணங்குடி -வசிஷ்டர் ஆராதனப் பெருமாள் –தாமோதர நாராயணன் -லோக நாயகித் தாயார் -திருமங்கை ஆழ்வாருக்கு உதவின நான்கு -தீரா வழக்கு-உறங்காப்புளி -ஊராக்கிணரூ -காயா மகிழ் -இங்கு பிரசித்தம்
3-திருக்கோவலூர் -த்ரிவிக்ரமப் பெருமாள் ஆயனாக சேவை ஸாதிக்கும் ஸ்தலம் -மிருகண்டு மகரிஷி முதல் ஆழ்வார்கள் ப்ரத்யக்ஷம் –
4-திருக்கண்ண மங்கை–பெரும் புறக் கடல்-அபிஷேக வல்லித் தாயாராய் திருமணம் செய்தருளிய ஸ்தலம் -அடியார்களை உயிராகக்கொண்ட பத்தராவிப் பெருமாள் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் –
5-திருக் கபிஸ்தலம் -ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் –
கஜேந்திர மோக்ஷம் திருவடிக்குக் காட்டி-ரமாமணித் தாயார் ஸமேத கஜேந்திர வரதன்

மண்ணகத்திலேயே ஆறு விண்ணகர் திவ்ய ஸ்தலங்கள்
1-திருவிண்ணகர்
-ஒப்பிலி அப்பன் -உப்பிலி அப்பன் -பொன்னப்பன் மணியப்பன் -முத்தப்பன் -என்னப்பன் –
2-திருக் காழிச் சீராம விண்ணகரம் -தாடாளன் -சீர் பெருகி பாபம் கழிகிற படியாக இந்தத் திருநாமம் – ஸித்தாஸ்ரமம் போல் இருப்பதால் ராம விண்ணகரம் என்றும் வழங்கப்படுகிறது –
3-திரு நந்திபுர விண்ணகரம் —ஸ்ரீ நாதன் கோயில் –செண்பக வல்லித் தாயார் ஸமேத ஜெகந்நாதப் பெருமாள்
4-திரு அரிமேய விண்ணகரம் -பொருள் வெண்ணெய் நம்முள்ளம் கோபிகள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யங்கள் -நம் பாபங்கள் அனைத்தையுமே அபகரிப்பதால் அரி -மூலவர் குடமாடு கூத்தன் -கோவர்த்தன கிரிநாதனே இங்கு எழுந்தருளி உள்ளார் –
5-திரு வைகுந்த விண்ணகரம் -வீற்று இருந்த திருக்கோலம் -ஸ்வேதகேது இங்கு கைங்கர்யம் செய்து முக்தி பெற்றான் –
6-திரு பரமேஸ்வர விண்ணகரம் -முகுந்தவல்லித்தாயார் ஸமேதரராய் வீற்று இருந்த திருக்கோலம்-நடு தளத்தில் சயனத் திருக்கோலம் -மேல் தளத்தில் நின்ற திருக்கோலம் –

முக்தி தரும் ஷேத்ரங்கள் -ஏழு
1-அயோத்யா
-சரயு நதிக்கரை -அபராஜிதா
2-மதுரா -யமுனைக்கரையில் மதுரமான ஸ்தலம் -பாபங்களை மதனம் பண்ணி -கடைந் தெடுத்துப் போக்கி -புண்ணியங்களை அளித்து முக்தி தரும் -கீதையில் தான் பிராணத்தையும் வளர்ந்ததையும் த்யானித்தாலே அந்தப் பிறவியலே மறு பிறவியில்லா மோக்ஷம் அடைவான் -என்று அருளிச் செய்துள்ளான் அன்றோ –
3-மாயா -ஹரித்வாரம் -தேவ பிரயாக் கர்ண ப்ரயாக் -ருத்ர ப்ரயாக் -விஷ்ணு ப்ரயாக் -திருப்பிரிதி -பத்ரிநாத் அனைத்து ஸ்தலங்களுக்கும் தலைவாசல் -கங்கை கங்கையை என்னும் வாசகத்தினாலேயே கடு வினைகள் களையலாமே –
கங்கா த்வாரே குசா வர்தே பில்வகே நீல பர்வதே
ஸ்நாத்வா கநக லே தீர்தே புநர் ஜென்ம ந வித்யதே

வியத்தகு ஆற்றல் உள்ள படியாக இது மாயா என்றும் பெயர் பெற்றது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடைபெறும் இடம் –
4-காசி -வாரணாஸீ –
அன்யாநி முக்திக் ஷேத்ராணி காசீ ப்ராப்தி கராணி ச
காசீம் ப்ராப்ய விமுச்யதே நான்யதா தீர்த கோடிபி
காசீ காசீதி ஜபதோ யஸ்ய ஸம்ஸ்தி திஸ்
அந்யத்ராபி ஸதஸ்தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே —

வர்ணா மற்றும் அஸீ நதிகளுக்கு இடையில் -வாராணஸீ -ஆத்ம விஷயங்களை எல்லாம் –காசயதி ப்ரகாசயதி– விளங்கு வைக்கும் ஸ்தலம்-பிந்து மாதவனாக சேவை
5-காஞ்சீ -திருக்கச்சி -க -ப்ரஹ்மா யாகம் செய்து அஞ்சித்த-தொழுத ஸ்தலம் -ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்யகோடி விமானம் -ஒரு புண்ணியம் கோடி புண்ணியமாக வளர்ந்து முக்தியை அளிக்கும் –
6-அவந்திகா -உஜ்ஜைன் -ஸூதாமா என்னும் குசேலருடன் ஸாந்தீபனி மகரிஷியிடம் 64 கலைகளையும் கற்ற ஸ்தலம் -ஷிப்ரா நதிக்கரையில் உள்ளது -12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் -இவ்வூரின் வாழியே கடக ரேகை ஓடுகிற படியாக விக்ரமாதித்ய மன்னர் காலத்தில் வானவியல் வல்லுநர்கள் இங்கு கூடிய கால க்ரஹ நிர்ணயம் செய்தனர் –
7-துவாரகா -முக்திக்கு வாசல் -கோமதி நதிக்கரையில் உள்ளது த்வாரகாதீசனாக சேவை ஸாதித்து அருளுகிறான் —

ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
1-ஸ்ரீ ரெங்கம்
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம்
ஸ வாசூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
விமானம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவத் ப்ரணவார்த்ஹ ப்ரகாசக

பூ லோக வைகுண்டம் –
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான் –
2- ஸ்ரீ முஷ்ணம் –ஸ்ரீ தேவி பூ தேவி யுடன் ஒரே கல்லில் கரப்ப க்ருஹத்தில் -சங்கு சக்கரம் ஏந்தி சேவை -முத்தக்காசு கோரைக்கிழங்கு பிரஸாதம் ஸமர்பிக்கப் படுகிறது –
ஸ்வேதம் ஸூ தர்சந தராங்கித பாஹு யுக்மம்
தம்ஷ்ட்ராகரால வதனம் தரயா ஸமேதம்
ப்ரஹ்மாதி பிர் ஸூர கணை பரி ஸேவ்யமானம்
த்யாயேத் வராஹ வபுஷம் நிக மைக வேத்யாம்

3-திருவேங்கடம் –
ஸ்ரீ ஸேஷாசல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வஸதே ரநிசம் வதந்தி ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸூ ப்ரபாதம்

பத்து புராணங்களும் பேசும் பெருமை -கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் –
4-சாளக்கிராமம்
மம தத் ரோஸதே ஸ்தாநம் கிரி கூட ஸி லோச்சய சாளக்ராம இதி க்யாதம் பக்த ஸம்ஸார மோக்ஷணம்
சாளக்ராம ஸிலாரூபீ தவ கர்ப கத ஸதா திஷ்டாமி தவ புத்ரத்வே பக்தா நுக்ரஹ காரணாத்

கண்டகி நதியின் பிரார்த்தனைக்கு ஏற்ப மடியில் தோன்றியருலி -இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் முக்திநாதனாக தர்சனம் அருளுகிறார்
5-நைமிசாரண்யம்
ததோ கச்சேத ராஜேந்திர மிஸ் ரகம் தீர்த முத்தமம்
தத்ர தீர்தா நி ராஜேந்த்ர மிஸ்ரிதாநி மஹாத்மநா
வ்யாஸேன ந்ருப சார்தூலத் விஜார்த மிதி நஸ் ஸ்ருதம்
ஸர்வ தீர்தே ஷு ஸ ஸ்நாதி மிஸ்ரகே ஸ்நாதி யோ நர

இங்கு காடாகவே தர்சனர் -ஒரு நிமிஷ நேரத்திலே அசுரர்களை அழித்தவன்
ஸூத மகரிஷி புராணங்கள் ஸுநகர் போன்ற முனிவர்களுக்கு அமர்ந்து உபதேசித்து அருளினார் -அயோத்யா மன்னர்களுக்கு யாக பூமியாக விளங்கிய ஸ்தலம்-

6-வானமா மலை -ஸ்ரீ வைகுண்டம் போல் வீற்று இருந்த திருக்கோலம் -சிரீவர மங்கை ஸமேதனாய் தெய்வநாயகன் -ரோமச முனிவருக்கு ப்ரத்யக்ஷம் -நித்ய எண்ணெய் தைலக்காப்பு –
7–புஷ்கரம் –
யதா ஸூராணாம் ஸர்வேஷாம் ஆதிஸ்து புருஷோத்தம
ததைவ புஷ் கரம் ராஜன் தீர்தா நாம் ஆதி ருச்யதே –

தீர்த்த வடிவமாகவே சேவை -நான்முகனுக்கும் கோயில் உண்டு -அவர் ஒரு அரக்கனை தமது கையிலே உள்ள தாமரையை வீசி அழிக்க -அது 52 பகுதிகளாகி இணைந்து புஷ்கரம் எனப்படுகிறது
8-பதரிகாச்ரமம்
யோவதீர்ய ஆத்ம நோம் ஸேந தாஷாயண்யாம் து தர்மத
லோகா நாம் ஸ்வஸ்தயே அத்யாஸ்தே தபோ பதரிகாஸ்ரமே

அலகானந்தா நதிக்கரையில் இலந்தை மரத்தடியில் தவம் செய்யும் திருக்கோலம் -நர நாராயணனாக -சிஷ்ய ஆச்சார்யனாக அஷ்டாக்ஷரம் உபதேஸித்து அருளிய திவ்ய க்ஷேத்ரம் -அக்ஷய திருதீயை முதல் தீபாவளி வரையே திறந்திருக்கும் -பின்னர் பனி மூடி விடும்

ஸ்ரீ ஸ்வாமி ராமானுஜ சரித்திர ஷேத்ரங்கள் ஒன்பது –
1-ஸ்ரீ பெரும்பூதூர்
-பிங்கள வர்ஷம் -1017-சித்திரை வளர்பிறை பஞ்சமி திதி வியாழக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் திரவவதாரம் -சிவனின் பூத கணங்களால் கட்டப்பட்டதால் பூத புரீ -திருவவதார மண்டலத்தில் 74 ஆச்சார்யர்களின் திருவுருவங்களும் சேவை உண்டு
2-திருப்புட்குழி -வறுத்த பயறு முளைக்க வைக்கும் -மரகத வல்லித் தாயார் ஸமேத விஜய ராகவப் பெருமாள் -யாதவப்பிரகாசரிடம் கல்வி கற்ற ஸ்தலம் -பெரிய திருவுடையாருக்கு ஸம்ஸ்காரங்களைச் செய்த க்ஷேத்ரம்
3-மதுராந்தகம் –பெரிய நம்பிகளால் சமாஸ்ரயணம் பெற்றார் -ஏரி காத்த பெருமாள் மந்த்ர உபதேசம் பெற்ற ஆத்மாவைத் திருக்கல்யாணம் செய்தருளிய ஸ்தலம் –

4-தொண்டனூர் -நம்பி நாராயணப்பெருமாள் நின்ற திருக்கோலம் -ஆதிசேஷனாக ஆயிரம் புரவாதிகளை வாதத்தில் வென்றார்
5-ஸிம்ஹாசலம் -பக்த பிரகலாதனை ரக்ஷிக்க ஸிம்ஹ முகம் –ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர் -இங்கு ஸ்ரீ பாஷ்யம் உபதேசித்து அருளினார்
6- ஸ்ரீ கூர்மம்
நாரதரிடம் கூர்ம மந்த்ர உபதேசம் பெற்ற ஸ்வேத மஹாராஜாவுக்கு ப்ரத்யக்ஷம்
7-புரீ -புருஷோத்தமன் க்ஷேத்ரம்
8-ப்ரயாக் ராஜ் -திரிவேணி சங்கமம் -வேணி மாதவப் பெருமாள் சேவை –

த்ரிதண்டம் -தத்வத்ரயம் விளக்கி உபதேசம்
9-கயா -கயன் என்னும் அசுரனை அடக்கி கதாதரப் பெருமாளாக தர்சனம் -பால்குனி நதி தீர்த்தம் பிண்ட பிரதானம் –

ஆழ்வார்கள் திருவவதார ஸ்தலங்கள் பத்து
1-பொய்கையாழ்வார்
துலாயாம் ஸ்ரவணே ஜாதம் காஞ்சியாம் காஞ்சனா வாரிஜாத்
த்வாபரே பஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே

திருவெஃகா -சொன்ன வண்ணம் பொற்றாமரைக் குளத்தில் ஐப்பசி திருவோணம் அவதாரம் -பாஞ்சஜன்ய அம்சம் –

2-பூதத்தாழ்வார் -திருக்கடல் மல்லை –
துலாத நிஷ்டா ஸம் பூதம் பூதம் கல்லோல மாலிந
தீரே புல்லோத் பலே மல்லா புர்யாமீடே கதாம்சகம்
ஸ்தல சயனப் பெருமாள்
ஐப்பசி அவிட்டம் கதையின் அம்சம்
3-பேயாழ்வார் –
துலாஸ தனி ஷக்ஜாதம் மயூர பிரிகைரவாத்
மஹாந்தம் மஹாதாக்யாதாம் வந்தே ஸ்ரீ நந்தகாம்சகம்
ஐப்பசி சதயம் –மயூரவல்லித் தாயார் சமேத கேசவப் பெருமாள் சேவை சாதித்தருளும் மைலாப்பூரில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில்

4-திருமழிசை ஆழ்வார்
மகாயாம் மகர மாஸே சக்ராம்சம் பார்க்கவோத்பவம்
மஹீசார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே
திருச்சக்கர அம்சம் -தை மகம்
5-நம்மாழ்வார்
வருஷயே து விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
பாண்டிய தேசே கலே ராதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே
கலிபிறந்து 42 நாள் வைகாசி விசாகம்
மதுரகவியாழ்வார்
மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்டியதே சே கணாம்சகம்
ஸ்ரீ பராங்குச ஸத் பக்தம் மதுரம் கவிம் ஆஸ்ரயே
திருக்கோளூரில் கணாம்சம் -சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம்
6-குலசேகரப்பெருமாள்
கும்பே புனர்வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆச்ரயே
திருவஞ்சிக்களம் –

7-பெரியாழ்வார்
மிதுநீ ஸ்வாதி ஜம் விஷ்ணோரதாம்சம் தன்வின புரே
ப்ரபத்யே ஸ்வ ஸூரம் விஷ்ணோர் விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்
ஆனி ஸ்வாதி -பெரிய திருவடி -அம்சம்
ஆண்டாள்
கற்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்டிய விஸ்வம்பராம் கோதாம் வந்தேறி ஸ்ரீ ரெங்க நாயகீம்
பூமா தேவி அம்சம் -திருவாடிப்பூரம் –
8-தொண்டரடிப் பொடி ஆழ்வார்
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவாம்
சோளோர்வ்யாம் வானமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
திருமண்டங்குடியில் மார்கழி கேட்டை
9-திருப்பாணாழ்வார்
விருஸ்சிகே ரோஹிணி ஜாதம் ஸ்ரீ பாணம் நிசுளாபுரே
ஸ்ரீ வத்ஸ அம்சம் காயகேந்த்ரம் முனிவாஹனம் ஆஸ்ரயே
திரு உறையூரில் கார்த்திகை ரோஹிணி
10-திருமங்கையாழ்வார்
விருஸ்சிகே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சிகாமணிம்
ஷட் பிரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிஹம் ஆஸ்ரயே
சார்ங்கம் அம்சம் -திருக் கார்த்திகை -திருக் கார்த்திகையில் அவதாரமே -இவர் மட்டுமே 47 திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணி அருளி உள்ளார் -குமுதவல்லி நாச்சியாருடன் சேவை –


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும் நிறைந்த ஓர் தனிப் பேர் வித்து–

June 8, 2026

கடவுள் – வித்து

ஊழிதோ றூழி… … …யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி……– திருவாசிரியம் – 4

தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் – தானே..

வைப்பாம் … …
எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்…

ஒக்கலை வைத்து … …
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்

ஓவாத் துயர்ப்பிறவி … …
மூவாத் தனிமுதலாய் 

சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
கார்முகில்போல் வண்ணன் …

எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும்

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி…

அமைவுடை அறநெறி … … … …
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.–

என்னுள் கலந்தவன் … … … …
மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே–

எப்பொருளுந் தானாய்… வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது
நின்றான் தன்னை…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –

பூவைகள் போல்……………..
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் …வான்புலன் இறந்ததும் நீயே.

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இவ்விளையாட்டையானைப் பெற்றேதும் அல்லலிலனே.

யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீ ஆனால்
வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும்
யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே-

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

யானே என்னை … … .யானே நீஎன் னுடைமையும் நீயே…

என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் …

இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என் னுள் வைத்தான்.. 

மாயம் செய்யேல் … … நேசம் செய்து உன்னோடு என்னை
உயிர் வேறின்றி ஒன்றாகவே

ஊனில் வாழ் உயிரே… …தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
கலந்தொழிந்தோம்கூசம் செய்யாது கொண்டாய் 

எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

பற்ப நாபன்… … …
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
கற்பகம்..

உணர்வி லும்பர் … … … யானும் தானா யொழிந்தேனே.

என்னுடைக் கோவலனே…
உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு…
என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை-

தாள்களை எனக்கே…
தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ.

ஆறெனக்கு… … … எனதாவியும் உனதே…ஏகமூர்த்தி… … … உன்
ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

மாயனென்… … …காயமும் சீவனுந் தானே…

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும் – என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

மனனக மலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

நாழாலமர் … …
பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
நீரும்நீ யாய்நின்ற நீ.

கண்ணுள்ளே… …
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

தளர்வின்றி…
வளரொளி ஈசனை மூர்த்தியைப்
பூதங்கள் ஐந்தை இருசுடரை…

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்…என்று கொல் சேர்வது… …
… … நிலநீர் எரிகால் விணு உயிர்
என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ…

பிறந்த மாயா … …
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே..

ஏகமூர்த்தி இருமூர்த்தி … ….. ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்…

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

புகழுநல் லொருவனென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ
திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ
நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ
இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே.

மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்…

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே

நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய்.

விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய்
மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்…

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்…

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

யாருமோர் நிலைமையனென வறி வரிய எம்பெருமான்…

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது…

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்டோறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.

பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும்
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே

அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள்
எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும்
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்
ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும்
கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும்
வெருவிலும் வீழ்விலு மேவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ
உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரை க்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடி வைகுந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே.

ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

சொன்னால் விரோதம் … … …
தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
என்னானை… 

ஆரா அமுதே … … …
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ..

மானேய் நோக்கு நல்லீர் … … …
வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
கோனாரை .

என்றுகொல் தோழிமீர் … … …
பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
நின்ற பிரான்

நிச்சலும் …
பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

காண்பதெஞ் ஞான்று… …
பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான்

பாதங்கள் … … …
ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை

நாடொறும் … …
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
நீடுறை கின்ற பிரான்

கழல்வளை … …
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலில் மலிசக்கரப் பெருமான்.

உணர்த்த லூடல்… …
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை.

நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம்..

காலம் பெற … …
கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப்பேரையிற்கே.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ …

மாயோனிகளாய் … ….. … எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ..

நீயும் நானும் … …தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

ஒத்தார் … அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா ..

போகின்ற … … தாய் தந்தை உயிர் ஆகின்றாய்…

மேலாத்… …மேலாத் தாய் தந்தையும் அவரே…

முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்…
சிந்தையாலும் … தேவபிரானையே
தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்…

தாம்பாலாப்… …
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால்
விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்குமற்றெப் பால்யவர்க்கும்
எண்ணு மிடத்ததுவோ எம்பிரான தெழில்நிறமே.

நிறமுயர் கோலமும் பேருமுருவும் இவையிவையென்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்காய்நின்ற தன்றி ஒன்றும்
பெறமுயன் றாரில்லை யால் எம்பிரான் பெருமையையே.

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன் உயிராயின காவிகளே.

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்…

கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.- திருவாசிரியம் – 1

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை
 அல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.-திருவாசிரியம் – 7–

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர்…

தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்…

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை…

தஞ்சமாகிய… …
… … மூவர் தம்முள்ளும் ஆதியை…

தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
மூவர் முதல்வன் ஒருமூவுல காளி…

யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே’

வரிவளையால்… …
தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான்… .

பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகனவனே…

தளர்ந்தும்… …
கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

நோலா தாற்றேன்… …. …
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே

பராபரன்
புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
அரனயனெனவுல கழித்தமைத் துளனே

என்னப்பன் எனக்கா யிகுளாய்
என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப் பனுமாய்…

திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
எண்ணின் மீதியனெம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே.

அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால்
திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தினை எனதாருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத்
தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே.

கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்…

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின் றனரே.

பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்…

மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி…

எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னேயானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே.

உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
பொருவாகி நின்றானவன்

இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன் என்னு மிவரை
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.

மும்மூர்த்திகளைப் பிர்மா – விஷ்ணு – ருத்ரன் – என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி – என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் – ஐஸிஸ் – ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் – பிரீயா – தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு – இயா – பேல் (அஸ்ரியர்); தௌலாக் – பான் – மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் – அவலோகீதீசுரர் – மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் – பினா – சொக்மா (யூதர்); அஹுரமஜதர் – மித்திரர் – அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸித்த உபாய விஜயம் -கிருபா ஜன்யமா- கிருபா ஜனகமா–

June 7, 2026

ஸித்தோபாய விஜயம் : ஸித்தோபாயமாகிற எம்பெருமானுக்கே மோக்ஷோபாயத்வம் உண்டு என்னும் தென்னாசார்ய ஸம்ப்ரதாய ப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தத்தின்மீது ஸ்ரீரங்கத்தில் வாழும் ஸ்ரீ உ. வே. மதுராந்தகம் வீரராகவாசார்ய ஸ்வாமியும் திருவரங்கம் திருமலை தாதாசார்ய ஸ்வாமியும் சில ஆக்ஷேபங்களா எழுப்ப அவற்றுக்குத் தக்க ஸமாதானங்களைக் கூறி ஸித்தோபாயத்தின் நிரபேக்ஷோபாயபாவத்தை நிலைநாட்டும் நூல் / ஆசிரியர்கள், ஸ்ரீ உ. வே. வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ உ. வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி-

உள்ளபடி யுணரில் ஒனறு நமக்குணடென்று
விள்ள விரகிலதாய விட்டதே — கொள்ளக்‌
குறையேது மில்லாற்குக்‌ கூறுவதென்‌ சொல்லீர்
இறையேது மில்லாத யாம் ”
[பரமேயஸாரம் – 6]

உபாத,ததே ஸததா ஸதி,தி நியமநாத்‌யை : சித,சிதெள
ஸ்வமுத்‌, திஸய ஸ்ரீமாநிதி வத,தி வாக ஒளபநிஷ தீ ; |
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்தவம நது கு;ணெள
அதஸதவாம ஸ்ரீரங்கே,மய ஸரணமவயா ஜமபஜம |!
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-87-ஸ்ரீரஙக, நாதனே! உபநிஷத்‌; வாக்கானது (என்ன சொல்லு கிறதெனறால்‌) திருமால்‌ பயனடைபவனாகக தனனையே எண்ணி, சேதநா சேதனங்கள்‌ -ஸருஷ்டி, ஸ்திதி, நியமனம்‌ முதலியவறறைச்‌ செய்து ஸ்வீகரிககிறான் எனறு ஒதுகின்றது. ஆகையாlm, உபாயத் வமும்‌ உபேயத் வமும் தேவரீர்க் கு ஸ்வரூபமாகும் (முக்யமாகும்‌), ( உபாய உபேய சப்தத்தால் சொல்லப்படும மற்றவற்றுக்குப்போலே)கெளணம( அமுக்கி யம் ) அலல. ஆகையால் தேவரீரை நிருபாதிகமான உபாய மாகப்‌ பற்றினேன்‌-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

————————————————————

அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

———————————————————-

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை

——————————————————————

அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

———————————

“ அஸாரம் அல்பஸாரம ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத ஸார தமம் ஸாஸ்தரே ரத்நாகர இவாமருதம ||?” எனற வைகுணட ட தீ,க்ஷிதீயோ பாதத வசநம் பிரமாண பாவத்தை வஹிக்கும் . இவ் வசநத்தில் , ரதனாகாரம் த்ருஷ்டாந் தமாகவும் ஸாஸ்த்ரம் தார்ஷ்டாந்தகமாகவும காட்டப்பட்டுளள து உற்று நோககததககது. ஸமுத்ரத்தில் அடங்கி யுளள அஸரராதி;சதுஷடயம் தயாஜ்யம் , ஸார தமம பஞசமம் அம் ருதம் உபாதேயம் . இவ் வோபாதி ஸாஸ்த்ரத்தில் அடங்கியுளள அஸாராதி,களைத் துரநது ஸாரதமத்தைக் கைக் கொள்ளவேணும் எனறு ஸ்லோகார்த்தம் தேறுகிறது

தேசிகன் செய்தருளின வ்யாக்யாநத்தின் படி, பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அஸாரமென்றும் , வேதத்தில பூர்வ பாகத்தில் ஐஹிக பல தத் ஸாத,ந பிரதிபாதகம் அல்பஸாரம் என்றும் , ஆமுஷ்மிக பல தத் ஸாதந ப்ரதிபாதக பர தேசம் ஸாரம் எனறும, ஆத்மபராப்தி ததஸாதந ப்ரதிபாதக பாகம ஸார தரம் எனறும் , பரமாத்ம ப்ராப்தி ததஸாதந பிரதேசம் ஸார தமம் என்றும் , இதுவே வீவேகிக்கு உபாதேயம என்றும் இஸ் ஸ்லோகாரத்தம் தெரிய வருகிறது

யா வேத; பாஹ்யா: ஸ்ம்ருதய: யாம்ச காம்ச குக ருஷடய:! ஸாவாஸதர : நிஷ்படிலா: பரேதய தமோ நிஷடதா ஹி தாஸ ஸமருதா: |!” என்றிறே மநு ப,க;வான அருளிச்செய்த து. மேலும, *’ வேதாத்‌ ஸாஸ்த்ரம் பரம்‌ நாஸதி ‘” எனறு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த் ரஙகளுககு சாஸ்த்ரத்வம் நிஷிதம் – இவ் விடததில ‘“ அந்யவாசியெனக் கொளள வேணும் .-பரா-ததத கைங்கர்ய ததஸாத,ந ஸிதத்தோபாய பிரதிபாத,கமே ஸாரதமம ஆக ஸார தமமுமான ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸார தமம் எனத் தேறியது

——————————————————————-

அருள் கொண்டாடும் அடியவர் –
இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
அருள் புரிந்த சிந்தை -என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
அருளாது ஒழியுமே -என்றும் –
சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உளது –என்றும்
இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே –
கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் –
தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்
அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
கிருபையாலே பக்தி பெற்றோம் -பக்தியால் கிருபை பெற வில்லை -கிருபா ஜன்யம் -கிருபா ஜனகம் இல்லை
-பக்தி கிருபையின் பலம் என்றவாறு
-பக்தி ப்ரபத்திகளும் ஈஸ்வர கிருபா பலமே எனத் தேறியது-
பிரசாதத்தால் சரணம் என்கிறோம்
சரணம் அடையாதவர் பிரசாதம் பெற வில்லையா -அவன் அனைவருக்கும் பொழிபவன் அன்றோ
வரவாறு ஒன்றும் இல்லையே -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்து
நிர்ஹேதுக கிருபை -உபாயம் எதிர்பார்க்காமல் -அதிகாரி எதிர்பார்ப்பார் -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -தகுதி வேண்டும் –
இச்சை உபாயம் இல்லை அதிகாரி விசேஷம்
–போஜனத்துக்கு ஷூத்து போலே -பல அனுபவ யோக்யதா — ஆண்கள் பள்ளிக்கு ஆணை எதிர்பார்ப்பார்கள் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும்-இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் –

(1) ஸ்ரீதேவி உபாயமாகிறாள்‌,
(2) ஸ்ரீதே,வி விபு,ஸ்வ ரூபமுடையவள்‌;
(3) சரண வரண வாக்குக்கு உபாயத்வ முணடு என்பதற்கு பிரமாணம்‌ உள்ளது,
(4) கைவல்யம் மோக்ஷமாகாது
(9) கைவல்யத்தை ௮நுபவித்த பின்‌ பரமாத்மாவை அநுபவிககலாம்‌ எனறு கூறப்படுகிறது;
(6) கைவலயம்‌ ௮ண்டத்தினுள்ளேயே இருக்கிறது எனறு பிரமாணங்களால் கூறப்படுகிறது,
(7) பிரபததி துர் பல மானது.
(8) சக்தி யுள்ளவர்களுககு பக்தி யோகத்திலேயே அதிகாரம்
(9) பக்தி யற்றவர்களுக்கே ப்ரபத்தியில்‌ அதிகாரம்
(10) பக்திக்கு ௮ங்க மாகவேயிருககும் கர்ம யோகம்‌ முதலானவற்றுக்கு ஸ்வதந்தரோபாயத்வம் கூடாது.
(11) ஸாத்யோபாயததினால்‌ ஸித்த,வஸ்து ஸாதிக்கப்படுகிறது
(12) ஸாத்‌ய ஸாதநங்களுக்கு வேறு பாடு உண்டு.
(13) வேறான ஸாதரநத்தாலேயே வேறான ஸாதயம் ஸாதிக்கப் படுகிறது.
(14):பரித்யஜய என்கிற உபா யாந்தர தியாக,வசநம் அதிகாரத்தினால் ஏற்கனவே யுள்ளதை அநுவாத,மே செய்கிறது.
(15) திருமந்திரத்தில்‌ பரணவம்‌ இல்லாமலே எட்டு அக்ஷரமாகிறது
(16) மிகப்‌ பெரியவர்‌களான நித்யர்ககும்‌ முக்தர்க் கும்‌ ஸருஷ்டி முதலானவற்றில சக்தி கிடையாது
(17) தேஷத்தைக் காணாதிருக்கையே வாத்ஸல்யம்‌
(18) பிறர்‌ துன்பத்தைக்‌ களைவதில் விருப்பமே தயை என்று
சில பூர்வபக்ஷிகள்‌

1-ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளிலிருந்து. பகவத கிருபை ஒரு ஹேது வில்லாமல்‌ உண்டாகிறது என விளங்குகிறது –
2-உபாயங்களில்‌ ஏற்றத் தாழ்விருக்கையால் அதிகாரிகளுக்குத்‌ தக்கபடி பல பேதம் உணடு
3-மற்ற ஜீவரைப் போலே அணுத்வமே ஸ்ரீதேவிக்கு இயலவானது.-அகடி தகடநா சக்தியாலே அவள்‌ எங்குமிருக்கவும் செய்கிறாள்
4-இல சமயங்களில்‌ கர்மயோகமும் , ஜ்ஞாந யோகமும் மோக்ஷத்திற்கு ஸ்வதந்த்ர காரணமாகவும்‌ ஆவதுண்டு –
5-ஸ்ரீதேவிககு எப் போதும்‌ மோக்ஷோபாயத்வம்‌ கிடையாது, எப்போதுமுள்ளது புருஷகாரத்வமே
6-அடியார்களின் குறறங்களைக் குணமாகக்‌ கொளளுகை வாத்ஸல்யமாகும்
7-பிறர்‌ துனபங்‌களைக் கண்டு துன்புறுவதே காருண்யமென ப்ரமாணம் கூறுகிறது-
8-ஈஸ் வரனுடைய நிரபேஷ உபாயத் தன்மைக்கு ஓட்டாதாகையால, பிரபத்தி அதிகாரி விஸேஷணமே
9-ஸவரூபத்தைப் பற்றிய உண்மை யறிவுடைய அனைவருமே அதற்கு அதிகாரிகள்‌-
10-உபாயாந் தரங்களைக் கை விடுவதை பிரபத்திககு அவஸ்யமான அங்கமாகவே கீதை விதிக்கிறது-
11-ஸ்ரீ ய பதிக்குக்‌ கைங்கர்யமாயிருககும கர்மம் (உயிரகளிடதது) இரக்கம முதலான பல காரணங்களால உண்டாவது.
12-அத் யந்த பரந்தர ஸ்வரூபததை அறிந்தவர்களுக்கு ஸாதராந்தரஙகள்‌ ஸவரூப விருத்தமே யாகும்
13-நெல் குத்தி னால் வியர்வை ஏற்படுவது போலே ஸரணாகதனுக்கு இயல்‌ வாகவே ஏற்படும்‌ தன்மைகள் ஆநுகூல்ய ஸங்கலபம் முதலானவை-
14-பகவத் ப்ராப்தி விஷயத்தில்‌ பிரபத்தி பலத்தைக் கொடுத்தே தீரும் என்கிற இந்த நியமம்‌ இல்லை -பகவத் இச்சையே ஹேது என்பதை பரத ப்ரபத்தியிலே காணலாம் –

15-ப்ரபந்ந னுக்கு அக்ருத்ய கரண கருத்யாகரண ரூப பாப சம்பந்தமும் உபாயாந்தர சம்பந்தமும் உண்டானால் அவன்‌ முன் பிரபத்தியை நினைவிற் கொள்வதே பிராயச் சித்தமாகும்
16-குல தைவதம் போலே எல்லா பரபந்நர்களும் பூஜிக்கத் தக்கவர்களே
17-ஒவ்வொரு வயக்தியிலும ஜாதி பரி ஸமாப்ய வ்யாபித்திருப்பது போலவே, ஓவ்வோ ரணுவிலும் ஈஸ் வரன் உள் நுழைந்து பரி ஸமாப்ய வ்யாபித்‌திருக்கிறான்‌
18-கைவல்யம் நியாமாகவே கொள்ளத் தக்கது –

நம்பிள்ளை ஈடு -ஈமபிளளை ஈடு.1-1-1 (அருளினன்‌ ) நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்டவித்தனை. இத்தலை அர்த்திக்க வன்‌ றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிறகக் கண்டவித்தனை

8-7-9 மதி–௮நுமதி என்றாக்கி அநுமதி மாத்ரத்‌ தாலே” என்பர்‌ பட்டர்‌. அதாவது அவன் புகுருகிற விடத்தில் விலக்கிற்றிலன் என்கை

8-8-3-எனனுணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும்‌ அவனதின் னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன்‌ ப்ரஸாதத்‌ தாலே. நின்ற நின்ற அளவுகள் தோறும்‌ இவ்வளவும அவனாலே பிறந்தது எனனும்படி யாயிற்று இருப்பது அவனுடைய சவ் ஹார்த்தம்

10-8-10 அவன் தானே செய்தான்‌’ என்னுமன்று அவனுககு வைஷமயமும, நைர்க்ருண்யமும, ஸர்வ முக்தியும் பிரஸங்கியாதோ? என்னில்‌; இத் தலையில் ருசியை அபேக்ஷித்துச்‌ செய்கையாலே, ௮வனுககு அவை தட்டாது. அது ஹேது வெனறு ஈஸ்வரனுககு உத்தரமானாலோ வென்னில, அது உபாயமாக மாட்டாது. பல வ்யாப்தமான திறே உபாயமாவது. இநத ருசி ௮திகாரி ஸ்வரூபமாகையாலே தத,விஸேஷணமாமித்தனை. உபாயம ஸஹகாரி நிரபேஷமாகையாலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது –

மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சிற்ற வேண்டா–சூரணை -233

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

————————————————————-

இது தன்னைப் பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால் – பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் ) பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமாப் போலே இருப்பது ஓன்று –சூரணை -54-

சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி-

இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை –சூரணை -55-

சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  – இது தன்னை அருளிச்  செய்கிறார் –

அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை – சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –சூரணை -56-

உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத  ஸ்வேதம் போலே சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –சூரணை-58- (இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் – அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –

இது (பிரபத்தி உபாய வர்ணம் )இரண்டையும் பொறாது-சூரணை-59-ஆகவே அத்யந்த பாரதந்தர்யம் உள்ளவனுக்கு இவை தானே ஏற்படும்-ஆறு வகைகள் இவை ஆறு அங்கங்கள் அல்ல –

பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது –சூரணை -60-

அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம் –சூரணை-61-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று – பிரமித்து – அத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே வேண்டுவது –சூரணை -62-

ரஷணத்துக்கு அபேஷிதம் ரஷ்யத்வ அனுமதியே –சூரணை -63-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லைசூர்ணிகை – 134–

இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )-சூரணை -142-

அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —சூரணை-143-

இவை இரண்டும் ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும் காணலாம் –சூரணை -144-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று – ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –சூரணை -145-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –சூரணை -263-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்குமற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..சூரணை-266-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –சூரணை -269-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–சூரணை-270-

ஆகையாலே தோஷம் இல்லை –சூரணை -271-

இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும்
இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அதாவது – ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் – நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –சூரணை -396-

மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம் அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம் பல வி சத்ருசம் பலாந்தர ஹேது
—ஆசார்ய ஹ்ருதயம்-111-

நாலயலார்-அயல் சேரியார்-உபாய சதுஷ்ட 0அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

ஸம்பந்த ஐஞாநமாத்ரம் , ஸித்த உபாய ப்ரதிபத்தி மாத்ரம் , அநிவாரண மாத்ரம் , ௮நுமதி மாத்ரம்‌, ௮சித் வ்யாவ்ருத்தி மாத்ரம் , சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விசேஷணம– என்று இப் புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள்

உபாய ப்ரபத்தி ஷட் அங்க யோகம் – வேதாந்த ஸார ஸித்தமான அநுபாய ப்ரபத்தி அதிகாரி விஸேஷணம்‌-இவ் வாசியை அறிய வேணுமநீயே எனககு உபாயமாவாயாக–எனறு பிரார்த்திக்கும் அறிவே சரணாகதி எனப்‌ படுகிறது-மஹா விஸ்வாஸத்தோடு கூட பகவான் ஒருவனையே உபாயமாயிருக்கும்படி யாசிப்பதே ப்ரபத்தி என்றும்‌ சரணாக,தி என்றம கூறப்படுகிறது

உபாய வர்ணததுககு உபாயத்வமிலலாமையாலே “சரணம்‌ வ்ரஜ” எனகிற விதியால சரண வர்ணததுககு இஷ்ட ஸாதநத்வம ஏறபட மாட்டாது.-இதை அநுஸரித்தே தேசிகனும பிரபத்தியை வ்யாஜோபாய மெனறு ௮ருளிச் செய்திருக்கிறார்‌. இப்படியுளள பிரபததி அநுபாயம்‌ என்பதும தேஸிகன் நியாய ஸித்தா ஞஜனத்தில அருளிச்செய்துள்ளார்-

பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி, ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி
லக்ஷ்மீ நா தனையேஉபாயமாகக் கொளளும் எண்ணமாயிருககும்‌ இந்த பிரபத்தி தன்னை உபாயமாக எண்ணும நினைவைத்‌ தடுக்கிறது -ஸஹ காரிகளை உபாயமாகக்‌ கருதும்‌ நினைவைத் தடுக்கிறது என்பதைக்‌ கூறவும் வேண்டுமோ -பகவானைக்‌ காட்டிலும வேறுபட்டது உபாயமாகாது ‘ எனனும்‌ அறிவு -பிரபத்தி உபாயம” என்னும் அறிவுக்குத் தடையாயிருக்கத் தட்டில்லை என்று கருத்து-
ஸர்வேஸ்வரன் ஸர்வஜ்ஞனா யிருந்த போதிலும் எப்போதும்‌ கருண யுடையவனா யிருந்த போதிலும ஸமஸாரச்‌ சுழலை நிர்வஹிப்பவனாகையால் ரஷ்யனான ஜீவனின அபேஷயை எதிர் பார்க்கிறான் – என்று பகவத ஏவ அபேஷா ப்ரதீஷையைச் சொல்லுகை யாலேயும்‌ இதுக்கு அநுபாயத்வம் ஸித்தம்‌

ஆளவந்தாரின ஆகம ப்ராமாண்ய ஸ்லோகத்தின் கருத்து பின வருமாறு — சேதனர்களுடைய முயறசியால் ஸாதிக்கப் படும்‌ உபாயாந் தரங்களுடைய ௮திகாரமும் அவர்களுடைய முயற்சியால் ஸாதிக்கப் படுவதாகவே யிருந்தால் , இவ் வதிகாரத்தை ஸாதிப்பதறகு மற்றோரதிகாரம்‌ வேணும் ; அதுவும் ஸாத்யமாகில் அதை ஸாதிகக ஒரதிகாரம் வேணும்‌ எனனும்‌ ரீதியில் ௮நவஸதா தோஷம் ஏற்படும் ஆகையால் சேதநர்களின முயறசியால்‌ ஸாதிக்கப்படும் உபாயாந்தர ஸ்தலங்களில் ௮திகாரத்தை முன்பே ஸித்தமாயிருப்பதாகக் கொள்ளப் பட வேண்டும்‌. இவ் வண்ணமாகவே, ஸித்த உபாய ஸ்தலத்தில் அதிகாரத்தை ஸாத்யமாகவே கொண்டால் , எப்போதுமே பலம்‌ ஏறபட வேண்டி வருமாகையாலே எப்போதுமே மோக்ஷம்‌ ஏற்படுகை யாகிற நித்ய முக்தி ப்ரஸங்க,ம்‌ ஏற்படுமாகையால் ஸித்‌தோபாய ஸ்தலததில்‌ அதிகாரத்தை ஸாத்‌யமாகவே கொள்ள வேணடும்‌–என்று கருத்து. இவ்வளவால் சரணாகதி ஸாத்யரூபமாகையால் ஸித்‌தோபாய நிஷ்டனுக்கு இது ௮திகாரி விசேஷணமாகாது என்று சிலர்‌ மயங்குவது தள்ளப்பட்டது-

ப்ரபத்தியாவது -சேதனனுடைய பிரார்த்தநா ரூப ஞானமே -, நமஸ் சப்தத்துக்கு ஸ்தூல யோஜனை, ஸுஷ்ம யோஜனை, பர யோஜனை என்று மூன்று யோஜனைகள்‌ சொல்லப் பட்டிருக்கின்‌றன. அந்த மூன்று யோஜனைகளிலும்‌ பரபத்திக்கு உபாயத்வமில்லை என்று ஏற்படுகிறது –
முதல் யோஜனையில் நமஸ் -வணக்கத்தைச் சொல்லி –ஸ்வரூப அந்தர் கதமாய் -ஸ்வயம் ப்ரயோஜனமான சேஷ வ்ருத்தியைச் சொல்கிறது -இது மானஸ வாசிக காயிக ரூபமாய் த்ரிவிதமாய் இருக்கும் -மூன்றில் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாகும் –
ஸ்தூல யோஜனையில் ந மம –தேவோஹம் மனுஷ்யோஹம் -தவிர்ந்து யானும் என்னுடைமையும் நீயே என்னும் நினைவு -ஸ்வரூப உபாய பல அம்சங்களிலும் -பகவத் விஷயத்தில் சேஷ விருத்தியைப் பண்ணி தனக்கும் போகத்தை ஸம்பாதிக்க யோக்யனாகை–ஸ்வ சேஷத்வ ஸ்வ ரக்ஷகத்வ -ஸ்வ போக்யத்வ ரூப ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி நமஸ் ஸப்தத்தாலே சொல்லப்படுகிறது -ஸர்வேஸ்வரனுக்கே ஸ்வம்மாய் இருக்கையும் -அவனுக்கே ரஷ்யமாய் இருக்கையும் -அவனுக்கே போக்யமாய் இருக்கையும் -சொல்லிற்று -தன்னால் வரும்‌ நன்மை விலைப் பால் போலே-என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -பரயோஜனையில் -௮வனை யடையும்‌ பொருட்டு உபாயமும்‌ அவனே. பல ப்ரதனும் அவனே ”என்னும் நினைவு –

ஸரணாகதி தீபிகையில தேசிகன் ப்ரபத்தியை ஈஸ்வர யத்ந பலமாகவும்‌ ஈஸ்வர கிருபா பல மாகவும்‌ உபபாதித்துள்ளார்யாஜ்ஞா பிரபத்தி -பிரார்த்தனா மதி பிரபத்தி -அவ ரக்ஷணே ” “மந ஜ்ஞாநே ‘ என்கையாலே ரக்ஷண தர்மாஸ்ரய வஸ்துவுக்கு ரக்ஷய விஷயம் அபேக்ஷிதமானாப்‌ போலே, ஜஞாநாஸ்ரய வஸ்துவுககு ஜ்ஜேய விஷயம்‌ அபேக்ஷிதமாகையாலே, இருவர்க்கும் இரணடும்‌ அபேக்ஷத விஷயமா யிருக்கையாலும் , இரண்டும்‌ தர்மிக,ராஹகமாந ஸித்‌தமாகையாலும இருவர்க்கும்‌ இரண்டும் ஸ்வரூபமாய் இருக்கும்‌.புண்ணியம் யாமுடையோம் -நாங்கள் செய்தது அல்ல ஸ்வீ கரித்ததும் அல்ல புறப்பகையும் கழிக்க வேண்டாம் உள் பகையும் அழிக்க வேண்டாம்

பண்டே உனக்கு ஸேஷமாயிருககிற இவ்‌ வாத்மாவை நீ கொண்டருளினா யித்தனை யிறே என்று ஆறாயிரப்படி – ஸ்வரூப ஸமர்ப்பணமாவது ஸ்வதஸ ஸித்‌தமான ஸேஷத்வத்தினுடைய ௮நுஸந்தான மாத்ரமே யொழிய தன்னதான ஆத்ம வஸ்துவை அவனுக்கு ஸமர்ப்பிக்கை யன்று —
ஆசார்யாபிமாநமாவது–இவை யொனறுக்கும்‌ சக்தனன்றிக்கே யிருப்பா னொருவனைக குறித்து –ஸநந்தய பிரஜைககு வியாதி யுண்டானால் அது தனது குறையாக நினைதது ஓளஷத ஸேவையைப பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான் உபாயாநுஷ்ட்டாநம் பண்ணி ரக்ஷிக்க வலல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமாநததிலே யொதுஙகி –வல்ல பரிசு வருவிப்‌ பரேல் அது காணடுமே–என்கிறபடியே ஸகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி களையும அவனிட்ட வழக்காக்குகை -கைங்கர்யம் தான் நித்யம் -, நித்யமாக பிரார்தித்தே பெற வேணும — பேற்றுக்கு வேண்டுவது, விலக்காமையும இரபபும் —

நியாஸத்தில்‌ என் சுமையை நீ ஏற்றுக் கொள்ள வேணும்‌’ எனறு பிரார்த்திக்கப் படுகிறது. சரணாகதியில் ‘நீ எனக்குப்‌ பலனை யளிப்பாயாகா எனறு பிரார்த்திக்கப் படுகிறது. மேலும் , உன்னிடத்தில் என பரம்‌ வைக்கப்பட்டது ‘ எனனும பரந்யாஸம் ஸ்வாதந்தர்யததை உள்ளடக்கியது, “என் சுமையை நீயே மேல் விழுந்து ஏற்றுக் கொள்ள வேணும” என்னும் ப்ரார்த்தனையா யிருப்பதால் சரணாகதி பாரதந்தர்யத்தை உள்ளடக்கியது. நியாஸத்தில்‌ பர ஸமர்ப்பணம்‌ முக்கியம்‌, சரணாகதியில் உபாயமாக வரிப்பது முக்கியம்‌; சுமையை இறக்குவதாகிற ந்யாஸத்திற்குப்‌ பிராட்டியோடு கூடிய பெருமாள்‌ உத்தேஸ்யம்‌. சரணாகதியில்‌ பிராட்டிக்கு உப லக்ஷணத்வ மாத்ரமே; (உபாய ப்ரார்த்தனையில் நேரே அந்வயமிலலை. ) ந்யாஸம்‌ பிரணவத்தை ௮ங்கமாகக் கொணட தாகையால் ( பிரணவத்திற்குப்‌ பொருளான ஐகத்‌ காரணத்வம்‌ முதலான ) பரத்வ குணங்கள்‌ அதற்கு விஷயம்‌, சரணாகதியில் கரண மநதிரம த்வயமாகையாலே , அதில் சொல்லப்படும் ஸெளலப்யம்‌, ளெளஸீல்யம் முதலான நீர்மைக் குணங்கள்‌ விஷயம் – சரணாகதியில் -— ஜீவாத்மா தனக்குப்‌ புண்ணிய மில்லை யென்றும்‌, பாபம்‌ உண்டென்றும்‌ அநுஸந்திக்க வேணும்‌. நியாஸத்தில்‌ ப்ராதி கூல்ய வர்‌ஜனமும்‌. ஆநு கூல்ய ஸங்கல்பமும் அங்க மாகையால் , பாபத்தை விடுகையும் , புண்ணிய முடைமையும் அநுஸந்திக்கத் தககது–தன் அறிவாலே தேவனுடைய திருவடிகளிலே தன்னை ஸமர்ப்பிப்ப தென்பதே பிரபத்தியாகும் . இது எல்லாப்‌ பாபங்களையும போக்கும.” என்பது ந்யாஸத்தின் லக்ஷணம்‌. “நான்‌ அபராதங்களுக் கெல்லாம் ஆலயமாயும்‌. கைம்‌ முதலற்ற வனாயும. வேறு புகலற்றவனாயும்‌ இருக்கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாவாயாக என்று பிரார்த்திக்கும்‌ அறிவே ஸரணாகதி யெனப்படும்‌. அது இந்த தேவனிடத்‌தில் பிரயோகிக்கப்படட்டும, ” என்பது சரணாகதியின்‌ லக்ஷணம்‌–ஜிதந்தா ஸ்தோத்ரத்தில் :: ஜிதம்‌ தே” என்‌னும்‌ முதல் ஸ்லோகத்தாலே ந்யாஸமும்‌, “ தேவாநாம்‌ ” என்னும்‌ இரண்டாவது ஸ்லோகத்தாலே சரணாகதியும்‌ தனியாகச்‌ சொல்லப்பட்டது.

ஸ்தோத்ரத்திலும்‌ – நமோ நம ” [21] என்னும்‌ ஸ்லோகத்தாலே நியாஸமும, “ந தர்ம: [22] என்னும்‌ ஸ்லோகத்தாலே சரண வர்ணமும்‌ தனிப் படுத்திச்‌ சொல்லப்பட்டது. கத்யத்திலும்‌ “த்வத பாதார விந்தயுக,ளம்‌ ॥சரண மஹம பரபத்‌யே” என்று சரணாகதியும்‌, நமோ அஸ்து தே’ என்று பர ஸமர்ப்பணமும்‌ வேறாகக் கூறப்பட்டது. ஸ்ருதிகளிலும்‌ அவற்றுக்கு வேறாக விதி, காணப்படுகிறது. தைத்திரீய உடநிஷததில ஓம்‌ என்னும்‌ மந்திரத்தாலே ஆத்மாவைப் (பரமாத்மாவிடம்‌) ஸமர்ப்பிக்க வேண்டியது ” என்று ந்யாஸம்‌ விதிக்கப்‌ பட்டது. ஸ்வேதாஸ்வதர உபனிஷத்தில் “முமுஷு வான நான்‌ சரணமடைகிறேன்‌” என்று சரணாகதி விதிக்கப்‌ பட்டது. அவ் வண்ணமே புருஷ ஸூக்தத்தில் , *“அப,தந ந புருஷம்‌ பஸூம” என்று நியாஸமும்‌, **: அத பய: ஸமபூ,த. ” என்னுமிடததில் சரணாகதியும்‌ விதிக்கப் பட்டது “தஸ்ய தீரா.” எனறல் விடத்தில தீர( தீ மதா மக,ரேஸர) சப்‌த்தத்தாலே. உபாயாந்தர நிஷ்டர் களுக்குள்ள ‘ஸம் பந்த ஐஞாநத்‌தில்‌ அறி வின்மை’ இவனுக்கில்லை என்று கூறுவதன்‌ மூலம்‌ ஸமபந்த ஜ்ஞாந பூர்த்தியே இவனுக்குள்ள அதி,காரம்‌ (தகுதி) என்று காட்டி *யோநிம பரிஜாநநதி” – அவதார ரஹஸ்யத்தை நன்கு அறிகிறார்கள்‌ ] என்னும்‌ பகுதியாலே அவதார விஷயமாகவும் . ஸெளலப்யாதி குண விஷயமாகவு மிருககும் சரணாகதி தெரிவிக்கப்பட் து. அதற்கு வேணடிய புருஷகாரமும்‌ ஹ்ரீஸ் ச-லக்ஷமீம்‌ ச ” என்று காட்டப்படட து. பகவத கீதையிலும்‌–மந்மநா பவ” [18-65]என்‌னும் ஸ்லோகத்தாலே பர நியாஸமும, அடுத்த ஸ்லோகத்திலயே “ஸர்வ தர்மாந்‌ ? எனறு சரணாகதியும் சொல்லப்பட்டது; லக்ஷ்மீ தந்த்ரத்திலும ““ உபாயாந்தரங்களையும்‌, அபாயங்களாகிற பாபங்களையும கை விட்டவனாய்‌, நடு நிலையை ஏற்றவனாய்‌,என்னையே சரணமடைந்து, இறுதியில என்னையே அடைகிறான் ” [12-50] என்று சரணாகதியைக் கூறி, “அதுவே ஆறு அங்கமுடையதாய்‌ உபாயமாவதை என்னிடமிருநது கேட்பாயாக” [12-59] எனறு தொடங்கி பர ஸமர்பபணம் வேறுபடுத்திக் கூறப்பட்டது. அஹிர்‌ புத்ய ஸம்ஹிதையிலும் அவற்றை வேறு படுததிக் கூறி யுள்ளது ஸதூல பாரதந்தர்ய ரூபமாகையாலே ஷடங்க ந்யாஸத்தை ஸ்தூலமாகவும, ஸூ்ஷ்ம பாரதந்த்ர்ய ரூப மாகையாலே சரணாகதி ஸபக்ஷ்ட மாகவும் சொல்லப்பட்டது. எல்லா உபாயாந் தரங்களையும்‌ கை விடுகை அங்கமா யிருக்கை யால் அப்ரதாந மாகவும்‌, அதை அங்கமாக வுடையதாய் யிருக்கையால்‌ ஸித்தோபாய ஸ்வரூபம்‌ ப்ரதாநமாகவும்‌ கூறப் பட்டது ] என்று ஸ்ரீவசந பூஷண மீமாம்ஸா பாஷ்‌யத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளதே –

நியாஸ சரணாகதி களுக்கும் ‘ஸம்யோகம்‌ ரூபம்‌, சோதநா (விதி,), ஆகயா(பெயர் ) ஆகிய நான்கும் வேறுபடுகின்றன. எப்படி யெனில.–
“ஓம்‌ என்று ஆத்மாவைத் தியானிக்கக் கடவன் ” என்பது ந்யாஸத்தைப்‌ பறறிய விதி. “என்னை ஒருவனையே” உபாயமாக அடைவாய் ,! “லக்ஷ்மீ நாதனையே உபாயமாக வரிப்பாய்‌” முதலானவை சரணாகதியைப்‌ பற்றிய விதி, , இவ்விரு விதிகளும்‌ ஒன்றாக முடியாது –
‘யுஞ்ஜீத’ என்று சொல்லப் பட்ட யோகமும்‌, “சரணம்‌ வ்ரஜ’ * உபாயம் வ்ருணு’ என்று சொல்லப்பட்ட சரண வரணமும்‌ வெவ் வேறாகும் – யோக,மாவது தியானம்‌.–“ஓம் என்று ஆத்மாவை தியானியுங்கள்‌ ” என்று மற்றொரு வாக்கியம்‌ ஓதுகின்றதன்றோ. :யுஜிர்‌ யோகே,’ :யுஐஸமாதெள? என்னும் தாது பாடமும்‌ “யோகஸ் ஸநநஹந– உபாய– தியாந–ஸங்கதி — யுக்திஜு ” என்னும்‌ நிகண்டுவும் யோக ஸப்த்தம் தியானத்தையே குறிக்கும்‌ என்று காட்டுகின்றன. உபாய வரணமோ வெனில் உபாயமாகப்‌ பிரார்த்திக்கும் செயலாயிருப்பது. ஆகையால்‌ சோதநா(விதி) பேதத்தாலே ந்யாஸ வரணங்கள்‌ வெவ்‌ வேறுபட்டவை என்பது மறைக்க வொண்ணாதவையே

ஒரு முறையே அனுஷ்டிக்கப் படும் தியான ருபமாயிருடபது ந்யாஸம் என்றும்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, ஜீவனை ப்‌ரஹ்மத்திடம்‌ ந்யஸிக்க வேண்டும்‌” என்னும் வசனததில் நி எனனும்‌ உப சர்க்கத்தோடு கூடிய “அஸ்‌ தாது ஸமர்ப்பித்தல் , என்னும்‌ பொருளையே குறிக்குமாகையால, உபாய வரணம என்னும் பொருள்‌ அதிலிருந்து ஸித்திக்காதாகையால, ந்யாஸ சரணாகதிகளுக்கு வேறுபாடு மறைக்க முடியாததே யாகும் . ஆக, சோதநா பேதம் ஸாதிக்கப் பட்டதாயிற்று-

ந்யாஸ சரணாகதிகளின ரூபமும வேறு படுகிறது. எப்படி யெனில் : “ஆத்மாவை தியானிக்கக் கடவன்‌” என்று ந்யாஸ வித்யை ஜீவாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகை யாலும்‌. என்னையே உபாயமாக அடைவாய்‌ ” என்று சரணாகதி பரமாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகையாலும்‌ இரண்டுக்கும்‌ ரூபமும் வேறுபட்டதே.

தலை சிறந்த பெரிதாயிருக்கும் தன்மை முதலாக மஹஸ்த்வமீறாக வுள்ள பரத்வ குணங்கள்‌ விசேஷணமாக அநுஸந்திக்கத் தக்கவை –சரணாகதியிலோ வெனில (த்வயத்தில் கூறப்படும்‌) வாத்ஸல்யம்‌ முதலான எட்டு குணங்‌களோடு கூடியவனாகப் பரமாத்மா நேரே ௮நுஸந்திக்கத் தக்கவன்‌ “வஸூ ரண்யோ விபூ,ரஸி”என்று ஓதப்பட்ட ஸாவாதாரமான விபு ஸ்வரூபம் நியாஸத்திற்கு விஷயம் * ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம ‘ என்று த்‌வயோபனிஷத்தில் ஓதப் பட்ட குண பூர்த்தி யுடைய அாச்சாவதாரம் சரணாகதிக்கு விஷயம்‌. “பிரஹ்மாத்மா” எனறு ஓதப்பட்ட தே,வதாந்தர்‌யாமித்வமும்‌ ந்யாஸத்தில் அநுஸந்திக்கத்தக்கது. சரணா கதியில் ‘சரணெள என்னும் த்வய பூர்வ கண்ட, பதத்தில் ஸ்ரீபராங்குஸ பரகால யதிவராதிகளான ஆசார்யர்களோடு கூடி யிருக்கை அநுஸந்திக்கத் தக்கது–ந்யாஸத்தில :ப்ரஹ் மணே தவா மஹஸே‘ என்ற விடத்தில்‌ நாலாம் வேற்றுமைப்‌ பதங்களாலே ப்‌ரஹ்மத்திற்கு ஸேஷித்வமும அவற்றோடு ஓரே வேற்றுமையில்‌” படிக்கப் படும் -ஓமிதி ” என்னும் ப்ரணவத்திலுளள ௮காரததினால்‌ ரக்ஷகத்வமும் ௮நுஸந்திக்கத் தக்கது-சரணாகதியிலோ வெனில் , “ஸரண? சப்த்த்தினால் மோக்ஷ பஃல கரணத்வம் ௮நுஸந்திக்கத் தக்கது, ஆக, ரூப பேதமும் மறைக்க வொண்ணாதது -.

அவ் வண்ணமே ந்யாஸ சரணாகதிகளின்‌ ஸம்யோகமும் வேறு படுகிறது. நியாஸ வித்யை உபாயாந் தரங்களான முப்பத்திரண்டு வித்‌யைகளில ஒன்றாகையால் , அதில்‌ ஈடு படுபவர்களுக்கு ௮தின் பலத்தின்‌ ஸ்வாமியா யிருக்கை யாகிற அதிகாரம் பற்றிய ஜ்ஞானம ஏற் படுகையால் , “ ஸாஸ்த்ர பலம் பரயோக்தரி” [சாஸ்திரத்தின பலம்‌ அதைப்‌ பிரயோகப்பவனுக்கு ஏற்படுகிறது. ] என்கிற ந்யாயத்தாலே ந்யாஸ வித்யைக்கு ஸ்வார்த்த, மோக்ஷமே பலமாகிறது, சரணாகதி உபாயமாகாதாகையால் ஸித்‌தமான பகவானுககே அதில் உபாயத்வமாகையால. சேதனன் உபாயாநுஷ்டதாவாக ஆகாமை யாலும் , “’ பரம புருஷனால் ரக்ஷிக்கப் படும் இவனுக்குப்‌ பலத்தில் ஸவாமித்வமற்றிருக்கை” [ லஷ்மீதந்தரம்‌ 17-74] என்கிறபடியேயே பலஸவாமயமாகிற உபாயாதிகாரம இவனால் கைவிடப்படுகையாலும் , த்வயத்தில் உத்தர கண்டத்தில் நம சப்தத்தாலே பலனில் பார தந்த்ர்யமே பிரார்‌த்திக்கப் படுகையாலும, கேவல பரார்‌த்த மோக்ஷமே சரணாகதிக்குப்‌ பலமாகையால் , நியாஸ ஸரணா கதிகளுக்குப்‌ பலனில் இவ்வாறு. வாசி உள்ளதை யிட்டு ஸம யோக,பேதமும் ஸித்திக்கிறது.

‘ந்யாஸ வித்யை’ என்று நியாஸத்திற்கும்‌, சரணா கதி வித்யை’ என்று சரணாகதிக்கும்‌ பெயரில்‌ பேதமுள்ளதாகையால ஆகயோ பேதமும் அவற்றினிடையே உள்ளது. :: அதற்கே நியாஸம் என்னும்‌ பெயர் அறியப்‌படுகிறது. அது முதலில் உபாயமாகிறது ” எனறு ந்யாஸத்தைப்‌ பறறியும்‌, (நீயே உபாயமாவாயாக எனறு பிரார்ததிக்கும் அறிவே) சரணாகதியாகிறது; அது இந்த தேவனிடம்‌ பிரயோகிககப்படட்டும்‌ ” என்று சரணாகதி யைப்‌ பறறியும்‌ வசனங்களில இநத நாம பேதமம் மிகத் தெளிவு-

ஸாதநாந்தர நிஷ்டரர்ககும்‌, ஸித்‌தோபாய நிஷ்டரர்க் கும் அவர்களுக்குக் கிடைக்கும்‌ பலன்களுக்குமிடையே இவ்வாறு வேறுபாடு எளிதில் விளக்கத் தக்கதே யாகும்‌. இக் கருத்தினாலேயே ஸ்ருத ப்ரகாஸிகாசார்யா்‌ “தானே வந்தடைந்தவனை ஏறறுக்‌ கொள்வது ப்ரீதி விஷயத்வம் ” எனறு அருளிச் செய்தார் –

இவாகள அனைவரும உதாரர்களே, ஞானீயோ வெனில எனக்கே ஆத்மாவா யிருப்பவன என்பது எனது ஸித்தாந்தம் கீதை7-19] எனறு கீதையில் ஐஸ்வர்ய கைவல்யார்திகள் விஷயததில் எமபெருமாரான தனது வண்மையை மாத்திரம் காட்டி, பகவத் உபாசனத்தை இயல்வாகக் கொண்ட ஞானிகளைத் தனது ஆத்மாவைப் போலே இனியவர்களாகக் கூறினான் ”’ என்று கூறுவதும் பொருந்தாது. தனககுப் பெருமையை விளைக்கும மோக்ஷத்தை விரும்பி ஸாதநாநுஷ்டாநம்‌ செய்யும் தாழ்வை யுடையவர்களே ஸாதநாந்தர நிஷ்டர்‌ களாகையால, அவர்களையும் கைவல்யார்த்திகளோடு சேர்த்துத் :தமப’பிரத்யயத் தினால் வேறுபடுத்துவதாகக்‌ கொள்வதே உசிதமாகும் –ஞானியோ வெனில,– எப்போதும் என்னிடம சேர்ந் திருப்பதையே விருமபுகிறவாகள்‌’ [கீதை 10-10] :என்னோடு கூடியிருப்பதையே விருமபு கிறவனனறோ அவன் ‘ [கீதை7-18] – (உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும்‌) எல்லாம் கணணன”” முதலான விடங்களில சொன்னபடி பரம புருஷனிடமே ஓப்பற்ற பிரீதியை உடையவனாகையால்‌ வரிக்கத்தக்க ஆத்ம பூதனாகிறானாகையால ‘ உதாரர் , ‘ எனப்பட்ட மற்றவர்க ளோடு சேர மாட்டான்‌-ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான பலனை ௮டைகிறான் ‘ .’ப்ரஹ்மத்தை உபாஸிபபவன கல்யாண குணங்களை ௮னுபவிக்கிறான் ” முதலான உபாஸந விதிகளில் ஸவாரார்தத அநுப,வமும, சரணாகதி விதிககு த்வயத்தின உத்தர வாக்யத்தில் பரார்த்த கைங்கர்யமும் பலமாகக் கூறப் படுவதை ஆராய்ந்து பல பேதத்தை ௮றியலா மாயினும, மிகத் தெளிவான நிஷேத வாக்யத்தாலேயே அதை அறியலா யிருககும் போது பல வாக்யங்களில உள்ள விதியை ஆராய வேண்டா

நாட்டினான தெய்வமெங்கும்‌ நல்லதோர் அருள்‌ தன்‌னாலே காட்டினான திருவரஙகம் உய்பவர்க்கு உய்யும்‌ வணணம்‌–[திருமாலை 10]
இதுவே நிர்ஹேதுக கிருபையாகும்
. ஒன்றி யொனறி உலகம படைக்கை, மறை யருளுகை, எந் நினற யோனியுமாய்ப் பிறக்கை, திருவரங்கம்‌ ( முதலிய அர்ச்சாவதாரஙகளைக் ) காட்டுகை, ஆழ்வாராதிகளையும்‌, ஆசார்யர்களையும்‌ அவதரிப்பிக்கை முதலான சேதந உஜ்ஜீவநார்த்தமான எண்ணிறந்த செயல்கள்‌ இந்த நிர்ஹேதுக கிருபையினால்‌ செய்யப் படுமவையே யாகும்‌. இதை நலல தோர்‌ அருள்‌ ‘ என்கையாலே, இதற்குக கீழ்ப் பட்ட அருளும் -ஓரருளும்‌ எம்பெருமானுக்கு உண்டு என்று உணர்த்தப் படுகிறது. இவை ஸஹேதுக கிருபைகளாகும்‌. அதில், “அருள்‌ ‘ என்பது மற்ற தெய்வங்களுக்கு அந்தர்‌யாமியா யிருந்த எம்பெருமான் செய்வது, :ஓரருள்‌ ‘ என்பது தானே சேதனர்‌ அனுஷ்டிக்கும்‌ உபாயாந்தரங்களுக்குப்‌ பலனளிப்பது. சேதனரின பக்குவத்திற்குத் தக்கபடி தேவதாந்தர ஸமாஸ்யரயணமும உபாயாந்தராநுஷ்டானமும திருவரங்கம் தொழுகைக்குப்‌ படிப் படியாகக் காரணங்களாக ஆகின்றபடியால் தெய்வஙகளை நாடடுகைக்குக் காரணமான அருளும் உபாயாந்தரங்களைக் காட்டுகைக்குக்‌ காரணமான ஓரருளும்‌ திருவரங்கம்‌ காட்டுகைக்குக் காரணமான நல்லதோரருளை அடையும்‌ படிக் கட்டுகளாய்‌ அமைகின்றன.

ஸார தமமான ரஹஸ்ய த்ரயத்தால் விவேக முண்டாகப் பெற்றவர்களுக்குள் ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர் தாழ்ந்தவர் . இவருக்கு ஸ்வார்த்த கைங்கர்யமே பலம் – பரகத ஸ்வீகார நிஷ்டர் என்கிற ஸித்தோபாய நிஷ்டர் உயர்நதவர்‌ இவருககு பரார்த்த கைங்காயம பலம் என்று பூரணம் பண்ணிக்‌ கொள்ளலாம்ஸித்‌தோபாய நிஷ்டர்‌-ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்‌, உபாயாந்தர நிஷ்டர்‌ ஆகிய மூவருக்கும்‌ பலத்தின்‌ ஆகாரத்தில்‌ பேதமிருந்தாலும்‌ ஆநந்தத்தி ன்‌ அளவில்‌ பேதமில்லை என்பது தென்னாசார்யர்களின்‌ திருவுள்ளம்‌-

(இல்லை கண்டீர்‌ துணையே (9.1-1)—ஆபத்துக்கு வேறொரு ௮பாஸ்ரயம் உண்டாயிருக்க, இவனைப் பற்றச்‌ சொல்லுகிறதல்ல இது. ௮வனைப் பற்றி ஸவரூபம்‌ பெறுதல்‌ இல்லையாகில் இல்லையா மித்தனை ” என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளார் இறே –அஹம் மத் பராப்தயுபாயோ வை ஸாஷாத் லஷ்மீபதி. ஸ்வயம் ‘-லஷ்மீ நாதனான நான் தானே என்னை யடைய உபாயமாவேன் ] என்றிறே பகவத் வாகயம்‌. மத் ப்ராபத் யுபாய அஹம் –மத் ப்ராபத் யுபாய ஸாக்ஷாத் அஹம்‌” “மத் பராப்த யுபாய ஸாக்ஷாத்‌ ஸ்வயம்‌ அஹம் -என்று பகவான் தன் உபாயத்வத்தையும் மற்றவற்றின அநுபாயத்வத்தையும ஸ்பஷ்டமாக அருளிச் செய்தானிறே –ஸாஷாத் – என்று உபாயாந்தர வ்யாவ்ருததியும்‌,ஸ்வயம் ‘ என்று லஷ்மீ வ்யாவ்ருததியும் ஸித்‌தம்‌-

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202அதாவது – பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கேஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் – என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-அதாவதுஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது – அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை – இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் -நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே – சகல உபாய சாதாரணமாய் இருக்கை–இத்தால் ஓர் இடத்திலும் இவ் வனுமதிக்கு இவ் வதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பல சாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –

சைதன்ய கார்யம் ஆகை யாவது –ரஷ்யத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கச்  செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் வாகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே – அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் பக்கல் உண்டான அனுமதி – இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை – இத்தால் இவ் வனுமதி இச் சேதனனுடைய வாசியைப் பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் -அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி  கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

ஸ்வரூப அதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் வனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —

அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் வாகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி -இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது –இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்–அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –

பொரு மா நீள் படை -திருவாய் மொழி பிரமேயத்தை தேசிகன்‌ –அவ்யாஜோதார பாவாத் ” என்றும் மா முனிகள்‌ -தருமாறு ஓர் ஏது வற” என்றும்‌ அருளிச் செய்தார்களிறே. இது கொணடு பகவானுடைய விஷயீகாரம்‌ நிர்ஹேதுகம் என்ற விஷயததில் இரு மஹாசாரயர்களும ஏகாபியராயர்களே என்னலாமே என்றாலும் இருவரும பின்ன அபிப்ராயர்கள்‌ என்பதே உண்மை; இது ஸித்‌தோ பாய ஸாத்‌யோபாய போதநாதிகார சரம ஸ்லோகாதிகாரங்களிலே வியக்தம்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செயல்களை ஒற்றியே ஸ்ரீ நாச்சியார் அருளிச் செயல்கள்–

May 1, 2026

1-ஸ்ரீ புத்தூர்‌ – திவ்ய தேசமாகுகை
ஸ்ரீ கோதை நாச்சியாரும்‌, அவரது தகப்பனாரும்‌, பிறந்து வளர்ந்த பெருமையினாலேயே திருவில்லிபுத்தூர்‌ தெய்விகத் தன்மை பெற்று விளங்குகின்றது எனலாம்‌.
மென்னடை யன்னம்‌ பரந்து விளையாடும்‌ வில்லிபுத்தூர் உறைவான் தன் -நாச்சியார்‌ திரு-5-5-என்றும்‌
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் —பெரியாழ்வார்‌ திருமொழி-2-2-6–என்றும்‌ அருளிச் செய்து திவ்யதேசமாக ஆக்கி அருளினார்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே
-2 2-6 –மின்னோடு  ஒத்த நுண்ணிய இடையை உடையவர்கள் என்னுதல்- மின்னை ஒரு வகைக்கு ஒப்பாக உடைத்தாய் -அவ்வளவு இன்றிக்கே ஸூஷ்மமான இடையை உடையவர்கள் என்னுதல் –விச்தர்தமான குழல் மேலே மது பான அர்த்தமாக அவஹாகித்த வண்டுகள் ஆனவை –மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே – ஸ்ரீ பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-
தாழ்ந்தார்க்கு  முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே -திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே- பரம சாம்யாபந்நருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே ஸ்ரீ பரம பதத்தில் –
இங்கு இரண்டுமே சித்திக்குமே – (ரெங்க ராஜ ஸ்தவம் அஹ்ருத ஸஹஜ தாஸ்யம் பரிகொடாதவர்கள் -அஹங்காரம் இல்லாதவர் )நாட்டில் பிள்ளைகள் போல் அன்றிக்கே -ரூப குண சேஷ்டிதங்களால்
வ்யாவர்தனாய் இருக்கிற உன்னைக் கண்டவர்கள் – நாட்டிலே பாக்யாதிகைகளாய் விலஷணமான பிள்ளைகளை பெறுவாரும்  உண்டு இறே –அவ்வளவு அன்றிக்கே – லோகத்தில் கண்டு அறியாத வைலஷண்யத்தை உடைய இவனைப் பெற்ற வயிறு உடையவள் – இதுக்கு உடலாக என்ன தபஸை பண்ணினாளோ என்று ஸ்லாகித்து சொல்லும் வார்த்தையை – எனக்கு உண்டாக்கித் தந்த–கண்டவர்களுடைய சர்வேந்த்ரியங்களையும் வ்யக்த்யந்தரத்தில் போகாத படி உன் வசம்
ஆக்கிக் கொள்ளும் வைலஷண்யத்தை உடையவனே –-யாத்ர நாந் யத்ர பஸ்யதி பூமா )-முலை உணாயே-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து – பரம பதத்திலே நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது – இப்போது காணப் பெறாத வருத்தம் வெறுப்பு தோன்ற வந்து நிற்கிறது –என்கிறாள் –வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்கை பிராப்தம்-அது தூரஸ்தம் ஆகையாலே – தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள் என்றால் இது சேரும்படி எங்கனே என்று -நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன் –உள்ளுக்குப் புக்கால் குறி யாழியாமே நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து – உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தைக் கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும் –பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும் என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் –திருவாய் மொழி -6-5-5-என்று பரிஹாரம் சொல்லுகிறவர்கள் தாங்களே படுகுலை யடுத்தி கோள் -என்னும் படி இறே இருப்பது-பொன் -அழகு – பிறருக்கு காட்டுகைக்காக வந்து நிற்கிறவன் திருவடிகள் காண வேணும் என்னும் ஆசையினாலே-என் பொரு கயல் கண் இணை துஞ்சா –இக் கண்ணுக்கு   இலக்கானவன் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து – பொரா நின்றுள்ள கயல் போலேயே ஒன்றுக்கு ஓன்று ஒப்பான கண்களானவை உறங்கா –இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை-உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே – பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை– இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –-அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு-குயில் -ஆசார்யன் –-தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –-கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது – அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம்-கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –உலகளந்தான் வரக் கூவாய்-இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு – பேறு எனக்குக் கைப்படும் – எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் — குணாகுணம் நிரூபணம் பண்ணாதே – வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய் –

2-பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌, . உண்ணாத போது ஒரு வார்த்தையும்‌ பேசுபவர்கள்‌,
காற்றினைப்‌ புனலைச்‌ சென்று நாடிக்‌ கண்ணமங்கையுள்‌ கண்டு கொண்டேனே” -7-10-5- என்று பகவதநுபவம்‌ உண்டபோது ஒரு வார்த்தையும்‌,
‘ கடியன்‌ கொடியன்‌ நெடியமால்‌ உலகம்‌ கொண்ட அடியன்‌” -5-3-5-என்றும்‌,
ஆசை வழுவாதேத்தும்‌ எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்குத்‌ தேசமறிய உமக்கே யாளாய்த்‌ திரிகின்றோமுக்கு *. காசினொளியில்‌ திகழும்‌ வண்ணம்‌, காட்டீர்‌ எம்பெருமான்‌ ! * வாசிவல்லீர்‌! இந்தளூரீர்‌! வாழ்ந்தே போம்‌ நீரே! -4-9-4-என்று உண்ணாத போது ஒருவார்த்தையும்‌ பேசுவதைக்‌ காணலாம்

பகவதநுபவத்தை ஆசைப்பட்ட ஆழ்வார்களுக்கும்‌, பகவத்‌ ஸம்ருத்தியை (நிறைவில்‌ ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ நெடுவாசியுண்டு. பகவத்‌ ஸம்ருத்தியை ஆசைப்பட்ட பெரியாழ்வாருக்கும்‌ பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்ட ஆண்டாளுக்கும்‌ அம்மாதிரியே நெடுவாசி யுண்டு. ஆழ்வார்கள்‌ இளைய பெருமாளைப்‌ போன்றவர்கள்‌. “ பெரியாழ்வார்‌ பரதாழ்வானுக்கு ஒப்பானவர்‌. ஆண்டாளும்‌ மதுரகவிகளும்‌ ஸ்ரீசத்ருக்கனாழ்வானைப் போன்றவர்கள்

கலியுகம் -97-நள வருஷம் திருவாடிப்பூரம் சுக்ல பக்ஷம் -செவ்வாய் கிளம்பி -சதுர்த்தி -அயோநிஜையாய் திருவவதரித்தார்
மிக்க இறைநிலை விளக்கம் -திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்கள்
மெய்யாம் உயிர் நிலை -6-15 பாசுரங்கள்
தக்க நெறி -16-22-
வாழ்வினை பகவத் கைங்கர்யம் -23-27
ஊழ்வினை-ப்ரக்ருதி சம்பந்தம் -28-30-
பகவத் ஸம்ஸ்லேஷமே நீராட்டம்
பகவத் கைங்கர்யமே பறை

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் |
ஸமூடமஸ்ய பாகும்ஸுரே |
த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதா” ப்ய: |
தததோ தர்மாணி தாரயந் |-விஷ்ணு ஸூக்தம்

இதம் விஷ்ணுர் வி சக்ரமே த்ரேதா நிததே பதம் -ருக்வேதம் -ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
த்ரீணீ பதா வி சக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய -ருக்வேதம் -யாராலும் வெல்ல முடியாத ஸர்வ ரக்ஷகனான ஸ்ரீ விஷ்ணு உலகங்களை எல்லாமே மூன்றடியால் அளந்தான்
ஓங்கி உலகளந்த உத்தமன்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
அன்றிவ்வுலகம் அளந்தான் அடி போற்றி

ஸ காரணம் கரணாதிபாதிப ந சாஸ்ய கச்சித் ஜநிதா ந சாதிப -ஸ்வேதா -இவ்வாத்மாவுக்கு அதிபதியான ஈஸ்வரனே எல்லாவற்றுக்கும் காரணமாய் நின்று படைக்கும் முதல்வன் -அவனை உண்டாக்கியவனும் அவனுக்கு அதிபதியாகவும் யாரும் இல்லை
ஊழி முதல்வன் –பாழி யம் தோளுடை பற்ம நாபன்

அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் -ஸ்வேதா -மாயனான பரமபுருஷன் பிரபஞ்சம் அனைத்தையுமே படைத்தருளுகிறான்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-
மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
மாயன் மணிவண்ணன் -16-

ஸமுத்ரே அந்தம் விஸ்வ சம்பவம் அந்த ஸமுத்ரே கவயோ வயந்தி -தைத்ரியம் -பாற் கடலின் நடுவே பள்ளி கொண்டவன் அகிலப் பிரபஞ்சத்துக்கும் மங்கள கரன் -அவன் திருப்பாற் கடலுள் இடமுடையான் என்றும் கவிகள் அறிகிறார்கள்
பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து–6-

தத்யதா இஷீ காதூலம் அஃனவ் ப்ரோதம் ப்ரதூ யேத ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -நெருப்பிலிட்டு பஞ்ச போலே ஸஞ்சித பாபங்கள் அடியோடு அற்றுப் போகின்றன –
தத்யதா புஷ்கர பலாஸ ஆபோந ஸ்லிஷ்யந்தே ஏவமேவம்விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே —சாந்தோக்யம் -ஸ்வரூப ஞானம் பிறந்த பிறகு தாமரை இலையில் நீர் ஒட்டாதது போல் பாப கர்மங்கள் இவன் கண் ஒட்டுவதில்லை
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

அத யததஸ் பரோ திவோ ஜ்யோதிர் தீப்யதே -சாந்தோக்யம் -பரதத்வத்தின் தோற்றமாய் நின்ற ஒண் சுடர்
தோற்றமாய் நின்ற சுடரே –21-

ஞானம் ஆத்மனி மஹதி நியச்சேத் தத் யச்சேத் சாந்தா ஆத்மனி-கட உபநிஷத் –சேஷமான இவ்வாத்மாவை சேஷியான பரமாத்மாவுக்கே தக்கவனாய் சேர்க்க வேண்டியது –
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீலே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்த்தோம் –22-

அந்தப்பிரதிஷ்ட ஸாஸ்தா ஜனனாம் ஸர்வாத்மா -ஸ்வேதாஸ் –எல்லாப் பொருள்களிலும் உள் நிறைந்து உயிர் அனைத்தையுமே நியமிப்பவன்-குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி -24- இந்திரனுக்கு ஸர்வாத்ம பாவமும் நியமிப்பவனாயும் இருப்பதைக் உணர்த்தி அருளினவன்

ஸனோ புத்யா சுபயா ஸம்யுநக்து -ஸ்வேதா அவ்வெம்பெருமான் நன்மை நல்லறிவுடன் கூட்டுக -கைங்கர்யம் யவாதாத்மபாவி அருள வேண்டும் –
உனக்கே நாம் ஆட் செய்வோம் –எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்-29-

தேவஸ்யைஷ ஸ்வ பாவோயம் ஆத்ம காமஸ்ய காஸ் ப்ரூ –மாண்டூக்யம் -அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரனுக்கு அடையப்படாததாயும் அடையப்பட வேண்டியது ஒன்றுமே இல்லை
குறை ஒன்றுமே இல்லாத கோவிந்தா -29-

அறம் செய்ய விரும்பு -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
ஆறுவது சினம் -சில்லென்று அழையேன்மின்
ஓதுவது ஒழியேல் -முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்
ஓங்கி உலகளந்த –நீங்காத செல்வம் –
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வசனம் வழங்காது எனின் –
அம்பரமே தண்ணீரே
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

30-3+0=3-ஆச்சார்ய பரம் -மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ –
ஐ ஐந்தும் ஐ ஐந்தும் –பஞ்சபூதங்கள் சம்பந்தமுள்ள இந்த உடம்பில் ஐம் புலன்களையும் ஐம் பொருள்களையும் அடக்கி யாண்டால் அர்த்த பஞ்சகம் ஞானம் ஸித்தித்து ஆழ் பொருளை உணரலாம்
நாச்சியார் திருமொழி –143-1+4+3=8-–பிரணவத்தின்-1- விவாரமான – நான்கு வேத சாரத்தை -3 ஆச்சார்யர் அனுக்ரஹத்தின் மூலமும் அறிந்தால் ப்ரணவாகார விமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும் திரு அஷ்டாக்ஷர பொருளாக நாராயணனை அடையலாம்
எல்லே இளங்கிளியே -15-பாகவத நிஷ்டை சொல்லும் இது திருப்பாவை யாகிறது -1+5=6-உய்யும் ஆறு படி நடந்தால் அறிந்து அடையலாம்

பதின்மருடைய ஞானமும் ஸ்திரீ தனமாக இவள்‌ பக்கலிறே குடி கொண்டது. பத்துப்‌ பேர்க்கு ஒரு பெண்‌ பிள்ளை இறே – பெண்‌ ஆணைக்‌ கண்டு காதல் கொள்வது பள்ளமடை ஆகும்‌. எனவே ஆழ்வார்‌ களுடைய பக்தியைக்‌ காட்டிலும்‌ பதின் மடங்கு அதிகமான அன்பை யுடையவர்‌ கோதை நாச்சியார்‌-உபயவிபூதிக்கும்‌ நாயகன்‌ இடைக் குலத்தில்‌. பிறந்து எளிமைக்‌ குணமே நிரம்பப்‌ பெற்று இச்சை யுடையோர்க்கு வீட்டின்பத்தை அளித்தான்‌. அதே போன்று கோதை நாச்சியாரும்‌, . தாம்‌ அந்தண குலத்தில்‌ வளர்ந்தாலும்‌, இறைவனை அடைவதற்கு உபாயமாக, துவாபர யுகத்தில்‌ கோபியர்கள்‌ மேற் கொண்ட நோன்பினை வழியாகப்‌ பின் பற்றுகிறார்

இடை நடையும்‌ இடை முடியும்‌, இடையர் பேச்சும்‌ கொண்ட ‘இடைப் பெண்ணாக பாவநா ப்ரகர்ஷத்தாலே (நினைவின்‌ முதிர்ச்சியாலே) வடிவெடுத்து இடைக்குலச்‌ சிறுமியரோடு இணைந்து, ஸ்ரீவில்லி புத்தூரே . திருவாய்ப்பாடியாகவும்‌, வடபெருங்கோயிலுடையான்‌ திருக்கோயிலே நந்தகோபர்‌ திருமாளிகையாகவும்‌, வடபெருங்கோயிலுடையானையே கண்ணனாகவும்‌ பாவித்து, நோன்பினைக்‌ கைக்கொள்கிறார் –
கண்ணனும்‌, கோதை, நாச்சியாரும்‌, இழிந்த குலமென்ற தாழ்ச்சி எதுவும்‌ இன்றி இச்சை யொன்றே தாம்‌ உகந்தருளும்‌ இடம்‌ என்று காட்டியதை அடி யொற்றி இராமாநுசர்‌ பிட்டிதேவன்‌ என்ற அரசனை விஷ்ணு வர்த்தனன்‌ என்ற பெயரில்‌ திருத்திப்‌ பணி கொண்டார்‌. வில்லி என்ற: வேட்டுவனை அரங்கனின்‌ கண்ணழகைக் காட்டி, உய்வித்தார்‌, ஊனமுற்ற ஊமைக்கும்‌ உய்யும்‌ வழி அருளிச்‌ செய்தார் –-முத்தியோ சிலரது சொத்தென் றிருக்கையில்‌ தமிழ்நாடு தம்‌ இருந் தவப்‌ பயனாய்‌ நம்‌ இராமாநுசனைத்‌ தந்தது அன்றோ-

3-இளமைப்‌ பருவத்தில்‌ கோதையார்‌ ஆடிய விளையாடல்‌களிலும்‌ எம்பெருமானும்‌ எம்பெருமான்‌ தொடர்பு பெற்ற பொருட்‌ களுமே இடம்‌ பெருகின்றன.
பொங்கு வெண்‌ மணல் கொண்டு சிற்றிலும்‌ முற்றத்‌ திழைக்கலுறில்‌ சங்கு சக்கம்‌ தண்டு வாள்‌ வில்லுமல்லது இழைக்கலுறாள்‌”-பெரியாழ்வார் -3-7-3-என்பதனால்‌ இதனை அறியலாம்

பொங்கு -இத்யாதி-புறம்பே போய் -தீ இணக்கி  இணங்கி ஆடாதே முற்றத்திலே இருந்து விளையாடு -என்று நான் நியமித்து வைத்தால் வண்டலிட்டதாகையலே நுண்ணியதாய் -வெளுத்து இருக்கிற மணலைக் கொண்டு முற்றத்திலே கொட்டகமிட ஒருப் பட்டாளாகில்–உறில்-என்கையாலே-இவளுக்கு மனசு இல்லாமையும் – தன்னுடைய நிர்பந்தத்துக்காக செய்கிற இத்தனை என்னுமதும் தோற்ற சொல்லுகிறாள்-சங்கு -இத்யாதி-அவனுக்கு அசாதாராண சிஹ்னமாய் – அழகுக்கும் விரோதி நிரசனத்துக்கும் உடலாய் இருக்கும் ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆயுதம் ஒழிய   வேறு ஒன்றும் இட நினையாள்

4-அண்ணலார்‌ தாளிணை மேல்‌ அணி தண்ணந்துழாயென்றே மாலுமால்‌ வல்வினையேன்‌ மடவல்லியே -திருவாய் -4-2-1-என்கிறார்‌. பெரியாழ்‌வார் தன் பெண்‌ கொடியாகிய கோதை நாச்சியாருக்கு ஏற்ற கொழு கொம்பு எம்பெருமானே என்பதை அறிகிறார் -கோதை கோதை நாச்சியாரும் எந்நேரமும்‌ எம்பெருமானின்‌ வரவை எதிர் நோக்கிக்‌ காத்திருப்பவர்‌. அதனால்‌ எப்போதும்‌ அணி கலன்‌ பூண்டு ஆடைகளைச்‌ செவ்வனே உடுத்தி அழகு பார்த்திருப்‌பவர்‌. இதனை-காறை பூணும்‌ கண்ணாடி காணும்‌ தன்‌ கையில்‌ வளை குலுக்கும்‌ கூறை யுடுக்கும்‌ அயர்க்கும்‌ தன்‌ கொவ்வைச்‌ செவ்வாய்‌ திருத்தும்‌”பெரியாழ்வார் -3-7-8-என்பதால்‌ உணர இயலும்‌.
பரபக்தி நிலையில்‌ அருளிச் செய்தது திருப்பாவை. பரபக்தி, பரஜ்ஞானமாக வளர்ந்த நிலையில்‌ உருவானதே நாச்சியார்‌ திருமொழி. பரம பக்தி பிறந்த நிலையில்‌ சீவான்மாவின்‌ துடிப்பை உணர்ந்த எம்பெருமான்‌ தான்‌ தன்‌ உருக் காட்டலானான் –சேதன அசேதனம்‌ இரண்டையும்‌ எம்பெருமான்‌ உடலாகக்‌ கொண்டிருக்கிறான்‌. இவற்றுள்‌ உயிராக நின்று இயக்குபவன்‌ எம்பெருமான்‌.-இதையே திருவில்லிபுத்தூர்‌ கோயிலிலே ஆண்டாள் நாச்சியாரும்‌, ரங்கமன்னாரும்‌, பெரிய திருவடியும் ஏக ஆசனத்தில்‌ அமைந்திருப்பதைக்‌ காணும் போது எளிதில் உணர முடிகின்றது –

காறை பூணும் –தன் ஆற்றாமையாலே – ஏதேனும் ஒன்றைச் செய்து நாம் அவனை பெற வேணும் -என்று நினைத்து – அவனுக்கு ஆகர்ஷமாம் படி நம்மை அலங்கரிக்கவே அவன் தானே வந்து மேலே விழும் -என்று தன்னை அலங்கரிக்கையிலே -ப்ரவர்த்தையாய் –ப்ரதமம் –அவனைக் கண்டு பிரியப்பட்டு கட்டிக் கொள்ளும் கழுத்துக்கு அலங்காரமாக காறையைப் பூணும்-இது தான் உத்தம  அங்கத்துக்கும் உடம்புக்கும் நடுவாய் நின்று – ஒளி விடுவதோர் ஆபரணம் இறேகண்ணாடி காணும்-காறை பூண்ட திருத்தம் தன் கண்ணுக்கு விஷயம் அல்லாமையாலே அவனுக்கு உகக்கும்படி வாய்த்ததோ இல்லையோ என்னும் இடம் அறிகைக்காக-காறையும் கழுத்துமான சேர்த்தி அழகை கண்ணாடி புறத்திலே பாரா நிற்கும்–இது தான் அவயாந்தரங்களில் ஆபரணங்களும் இவள் பூணும் அதுக்கு உப லஷணம்–தன் கையில் வளை குலுக்கும்-இம் மநோ ரதம் அடியாக உடம்பிலே ஒரு பூரிப்பு தோற்றுகையாலே அது அறிகைக்காக கையிலே வளையை அசைத்து பாரா நிற்கும் –விரஹ கார்ச்யத்தாலே (பிரிவால் இளைப்பாலே )கையிலே வளைகள் கழன்றாலும் பின்னையும் எடுப்பது இடுவதாய் இறே இவள் தான் இருப்பது-இவள் எடுத்து இட்டாலும் அவை கையில் தொங்காதே
இப்போது உடம்பில் தோன்றுகிற பூரிப்பாலே -அவை கையிலே தொங்கினமை அறிகைக்காக
அசைத்து பாரா நிற்கும் -என்கை–கூறை உடுக்கும் – பரியட்டமும் அறையில் தொங்கும்படி ஆய்த்து -இம் மநோரத நிபந்தனமான தேக பௌஷ்கல்யத்தாலே இறே – அல்லாத போது – கையிலே ஒரு தலைப்பும் —காலிலும் தரையிலும் ஒரு தலைப்பு மாம் இறே–வளையும் கலையும் க்ரத சந்கேதரைப் போலே  –
கழலும் போது ஒக்க கழன்று தொங்கும் போதும் ஒக்க தொங்கா நிற்கும் ஆய்த்து —காறை பூண்டதுக்கு  மேலே ஓர் அதிசயம் தேடுகைக்காக இறே கூறை உடுக்கப் புகுந்தது–அதாவது அவனுக்கு ஆகர்ஷமாம்படி பரியட்டத்தை நன்றாக உடா நிற்கும் -என்கை-இவளுடைய அழகிலே ஆய்த்து அவன் ஈடுபடுவது-ஆதலால் அவன் உகக்க தக்க உடை வாய்ப்பு வரும் அளவும் குலைப்பது உடுப்பதுமாய் செல்லா நிற்கும் ஆய்த்து-அயர்க்கும்-இப்படி அவன் வரவுக்கு உடலாக -தன்னை அலங்கரித்த அளவிலும் வரக் காணாமையாலே அறிவு அழியா நிற்கும்–தன் கோவைச் செவ்வாய் திருத்தும் –
மீளவும் அறிவு குடி புகுந்து – இன்னமும் அவனுக்கு ஆகர்ஷமாம் படி இருப்பதோர் அதிசயம் நம் பக்கல் உண்டாக்க கடவோம் என்று – ஸ்வபாவமே கோவைப் பழம் போலே சிவந்து இருக்கிற தன்னுடைய அதரத்தை ராக ஜனகமான பதார்த்த சேவைகளாலும் மிகவும் சிவக்கும் படி பண்ணா நிற்கும்
அல்லாதவை போலே அன்றிக்கே –இது அவனுக்கு வாய் புகு சோறாய் இருப்பது ஓன்று இறே
தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தான் -என்கிறபடியே–தேறித் தேறி நின்று – தன்னுடைய அவயவ அலங்காரத்தின் வாய்ப்பாலும் – தச்மிம்ச் ச பகவோ குண-(ஸூந்தர )-என்கிறபடியே இத் தசையில் வந்து உதவுகைக்கு ஈடான அவன் குணங்களிலே விச்வாசத்தாலும்-அயர்க்கை தவிர்ந்து
மென் மேலும் தெளிவை உடையவளாய் -அத் தெளிவு கை கொடுக்க தரித்து நின்று –ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் –தேவோ நாம சஹஸ்ரவான் -என்கிறபடியே (தேவ -திவி கிரீடா கிரீஷா ஸ்தோத்ரம் பண்ணத்தக்கவர் ஆனந்தம் கொண்டவர் -பல அர்த்தங்கள் உண்டே )-தன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களை உடையவனாய் – அவை எல்லா வற்றிலும் மநோஹரமான வடிவு அழகை உடையனாய் – அவனுடைய பிரகாரங்களை -அவற்றினுடைய ரஸ்யதையாலே கலங்கி அடைவு கெட பேசா நிற்கும்–மாறில் -இத்யாதி-ஆகையால் ஒப்பு இல்லாத நீல ரத்னம் போன்ற வடிவு அழகை உடையவன் விஷயமாக இவள் இப்படி பிச்சேறா நின்றாள்-

5-மாணிக்கக்‌ கிண்கிணி யாரவாரிப்ப மருங்கின்‌. மேல்‌” பெரியாழ்வார்‌-1-6-1- கிங்கிணி வாய்ச்‌ செய்த தாமரைப்‌ பூப்போலே-25-

மாணிக்க கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய்ப் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்து இலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி
–1 6-1 –பழிப்பு அற்று –
அழகியதாய் இருந்துள்ள – அரை வடத்தை உடைத்தான மருங்கின் மேல் – மாணிக்க கிண் கிணியானது த்வனிக்க –ஆய் பொன்னுடை மணி -என்கிற இடத்தில் – ஆய்தல் தெரிதலாய் பழிப்பு அறுதலை சொல் நாக மாணிக்கம் ஆகையாலே என்னவுமாம் – கிண் கிணிக்கு புறம்பே மாணிக்கம் பதித்தாலும் சப்தியாது –(ஆணிப்பொன் என்பதால் -அழகு -மேல் பகுதி-மணியின் நாக்கு மட்டும் மாணிக்கம் -சப்திக்குமேநாக மாணிக்கம் என்று இத்தையே சொல்லுவார் )

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே – ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்றுஇழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படிகாலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி
பெண்காள் நம்மைக் கிட்டுகையாலே எல்லாம் சபலமாயிற்றோ என்ன – விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளீர்தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -உத்யோக பர்வதம் –90(ஆற்றாமை வெப்பம் போக்க ஆஹ்லாத கரம் -சந்திரன் – சேஷத்வம் அறிந்து முமுஷுவான பின்பும் அந்தகாரம் போக்க ஆதித்யன் குளிர்ந்த வெப்பம் உடைய கிருஷ்ணனை குரு வம்சம் -அனுகூலர்களுக்கு பிரசன்னம் -பிரதிகூலர்களுக்கு வெப்பம் )


6-வித்தகன்‌ வேங்கடவாணன்‌ உன்னை விளிக்கின்ற” _-1-4-3-
வித்தகன்‌ வேங்கடவாணன்‌ என்னும்‌*-விளக்கினில்‌ புக என்னை விதிக்கிற்றியே-1-3-

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி  பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –அழகாலும் குண சேஷ்டிதங்களாலும் -விஸ்மயநீயனாய் – துர்மாநிகளான- உன் போல்வாரை அநாதரித்து- கானமும் வானரமும் ஆனவற்றை ஆதரித்து கொண்டு திருமலையில் வர்த்திக்கிறவன்-(ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ) உன்னை ஆதரித்து அழைக்கிற திருக் கைத் தலம் நோவாதபடியாக அம்புலீ -விரைந்து ஓடி வா –வாணன்– வாழ் நன்

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே– பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து – குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே –வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

மைத்தடங்கண்ணி யசோதை தன்‌ மகனுக்கு? மைத்தடங்கண்ணி –1-4-10- யசோதைக்கு அடைமொழி
மைத்தடங்கண்ணினாய்‌ நீ உன்‌ மணாளனை” –19-மைத்தடங்கண்ணி – நப்பின்னைப்‌ பிராட்டிக்கு அடைமொழி-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை – அஞ்சனத்தாலே அலங்க்ருதமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து –இவன் பக்கல் ஸ்நேகத்தாலே விகசிதமான கண்ணை உடையவள்
என்னுதல் –(மையார் கண்ணி -யமுனா நதி கறுமை -கிருஷ்ண துளஸீ கறுமை –
இவற்றுக்கும் அந்யோன்யம் இவனுக்கும் உண்டே )

குத்து விளக்கு எரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ யுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்-19-மைத் தடங்கண்ணினாய் –சுத்த சத்வம் ஆகிற அஞ்சனத்தை உடைத்தாகையாலே-விஸ்ருங்கலமான ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவளே –இவன் மறுமாற்றம் சொல்லப் புக –நம்மை ஒழிய தாங்களே எழுப்புவதே என்று கண்ணாலே வாய் வாய் என்று வாயை நெரித்தாள் –இவன் வாய் திறக்கப் போக -இவர்கள் நம்மை ஒழிய இவனை எழுப்புவதே என்று அவனைக் கண்ணாலே வாய் வாய் என்ன பேசாதே கிடந்தான் ஆக் யாதி ஹ்ருதயம் ஹ்ருதா(உள்ளமும் உள்ளமும் பேசிக்கொள்ளுமே )-நாம் ஆரோனையும் இன்னாதாகிறது என் – நம் பரிகரம் நமக்கு உதவுகிறது இல்லை -என்கிறார்கள் – இவள் விலக்க வேணுமோ -இக் கண் உண்டாக அமையாதோ – அழகாலும் பரப்பாலும் கண்ணிலே அகப்பட்டவன் அக்கடலை கரை கண்டால் இறே நம்மைப் பார்ப்பது-மை இட்டு எழுதோம் -என்று இருக்கிற எங்களையும் மை இடப் பண்ணினால் அன்றோ நீ கண்ணுக்கு மை இடுவது – உன்னுடைய கண்ணில் அழகும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் – அது இழவுக்கு உடலாவதே –நீ யுன் மணாளனை-மைத்தடம் கண்ணினாய்- உன்னுடைய கண்ணில் புகரும் பெருமையும் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது இழவுக்கு உடலாவதேஇக் கடலைக் கரை கண்டால் இறே நம் அநீதியை அவன் பார்ப்பதுஅல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -(3-10-8) மண நோக்கம் உண்டான்(பெரிய திருமொழி -8-10) ந ஜீவேயம் க்ஷணம் அபி –என்னப் பண்ணுமவை இறேமையிட்டு எழுதோம் என்றவர்களையும் உன்படி ஆக்க வேண்டாவோ
உன்னாலே அவனைப் பெறுகை தவிர்ந்து இப்போது மற்றப்படி செய்கை யாய்த்தோ

கஞ்சன்‌ புணர்பினில்‌ வந்த கடிய சகடம்‌ உதைத்து -2-4-4-
கள்ளச்‌ சகடம்‌ கலக்கழியக் காலோச்சி”்‌–6-

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் -2 4-4 – கம்ச ப்ரேரிதனாய் வந்த அதி க்ரூரரான சகடாசுரனை –முலை வரவு தாழ்த்தி சீறி நிமிர்த்த திருவடிகளாலே கலக்கு அழியும்படியாக உதைத்து–

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி – பேயாகில் ஆராய்ந்து கொள்ளலாம்- தாயே ரஷையாக வைத்த சகடம் – அசூர ஆவேசத்தால் பிறந்த அபாயம் ஆகையாலே -கள்ளச் சகடம் -என்கிறது –சகடமானது கலக்கழியும் படி திருவடிகளை ஓச்சி -முலை வரவு தாழ்ந்தது என்று- மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது –இப்பொழுது இவ்வபதானங்கள் சொல்லுகிறது- பிறந்த அபாயங்கள் கேட்டு துணுக என்று எழுந்து இருக்கைக்காக-கள்ளச் சகடம்
கிருத்ரிம சகடம் ஆனதுகலக்கழிய காலோச்சிகட்டு அழிந்து சிதறும்படியாக திருவடிகளை நிமிர்த்து(இங்கும் கள்ளச் சகடம் வெளியில் உள்ளார் வார்த்தை –கலக்கழிய காலோச்சி உள்ளே இருப்பவள் வார்த்தை )காவலாக வைத்த சகடம் அஸூரா வேசத்தாலே தன் மேலே ஊரப் புக அது கட்டு அழிந்து
சிதறும் படியாக திருவடிகளாலே உதைத்து( திருக் கால் ஆண்ட பெருமான் -ஊர்ந்த சகடத்தை உதைத்த பாதத்தான்-ப்ரேமத்தாலே பயப்படுகைக்கு உடலாய் அச்சம் கெடுகைக்கும் உடலாய் இருக்கும்
பாதத்தன் -இவன் முஃயத்தாலே உறங்கத் திருவடிகளாலே பெற்றோம் -(திண் கழல் இறே )
அவனுடைய ஆபத்துக்கும் சேஷ பூதனுடைய ஆபத்துக்கும் ரக்ஷகமான திருவடிகள் – திருக் காலாண்ட பெருமான் (6-9-) ராமாவதாரத்துக்கு இளைய பெருமாளைப் போலகள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
காம குரோதங்களையும் நிவர்ப்பித்து

பேயின்‌ முலையுண்ட பிள்ளை இவன்‌ முன்னம்‌?-2-5-2-
பேய்முலை நஞ்சுண்டு -6-

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – முன்னம் தாய் வடிவு கொண்டு வந்த பூதனை உடைய முலையை – தாய் முலை உண்ணுமா போலே இருந்து உண்ட முக்தன் இவன் – இவனுக்கு பிள்ளைத் தனத்தில் புரை( குறை ) இல்லை யாகில் -அவள் முடிந்த படி என் என்னில் – பிரதி கூலித்து கிட்டினார் முடிய கடவ வஸ்து ஸ்வாபத்தாலே முடிந்த இத்தனை –

பேய் முலை நஞ்சுண்டு – பெற்ற தாயும் உதவாத தனிமையிலே பாதிக்க வந்த பூதனையை முடித்து-
இத்தலையை முடிக்க வந்தவள் தன்னோடே போம்படி பண்ணி –போது விடிந்தது பெண்ணே எழுந்திரு என்ன இவள் துணுக் என்று புறப்படுகைக்காகபுகுந்த அபாயம் கேட்டிலையோபெரியாழ்வாரோடு குடல் துவக்குடையார்க்கு உறங்க விரகு உண்டோ -என்கிறார்கள்(பேய் முலை நஞ்சு இது வெளியில் உள்ளார் வார்த்தை – உண்டு-இது உள்ளே இருப்பவள் வார்த்தை )சர்வேஸ்வரனை துக்க நிவர்த்தகன் என்று இருப்பார் அல்லாதார் இறே -பெரியாழ்வார் சம்பந்திகள்அங்குத்தைக்கு என் புகுகிறதோ என்று வயிறு பிடிக்குமவர்கள் இறேஅவள் பய நிவ்ருத்தி அளவும் அனுசந்தித்து பயம் கெட்டுக் கிடக்கிறாள்பேய் உண்டு -பிரகிருதிமுலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்நஞ்சுண்டு -அவைகள் ஆகிற விஷம்
உண்டு -அனுபவித்து –அதாவதுபிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி –பேய் பால் உண்டான் என்று அனுசந்திக்க தாய் பால் குடிக்க பிறக்க வேண்டாமே-

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின்‌ வாய் கீண்டான்‌’ -2-6-3-
புள்ளின்‌ வாய்‌ கீண்டானை’ -13-

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-வருகிற போதை வேகத்தை பொறுத்து நின்று தன்னை நலிவதாக எதிரே  வந்த பகாசுரனுடைய வாயை கிழித்தவன்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )- கள்ளச் சகடம் -என்னுமா போலே – மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் – பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல
அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் ) கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் – தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்- அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

புண்ணில்‌ புளிப்பெய்தாலொக்கும்‌ தீமை” -2-9-1-
புண்ணில்‌ புளிப்பெய்தால் போலப்‌ புறம்‌ நின்று அழகு பேசாதே” –13-1-

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 –புண்ணிலே புளியை குறந்திட்டால் கரிக்குமா போலே துஸ்ஸகமான தீமைகளை செய்யா நின்றால் எங்கனே பொறுப்பது -நீங்கள் ஓரகத்தில் உள்ளார் அன்றோ இப்படி சொல்லுகிறிகோள்-உங்கள் ஓரகத்திலும் இப்படி நின்று இவன் தீம்புகளை செய்கிறான் ஆகாதே என்ன –-எங்கள் அகம் ஒன்றிலும் அன்று –அகம் தோறும் இப்படி இருந்துள்ள தீமைகளை செய்ய வல்லவன் காண் இவன் என்கிறார்கள் –
புரையாவது -க்ரஹம்–வீப்சையால் அகம் தோறும் என்றபடி –-ஆல்-அசைஅண்ணல் கண்ணான் –
அண்ணல் என்றது ஸ்வாமி வாசகம்
-அண்ணல் கண்ணான் என்றது ஸ்வாமித்வ ஸூசுகமான கண்ணை உடையவன் என்றபடி –-இத்தால் இவ்விடத்தில் ஸ்வாமி என்றது –-க்ரித்ரிமர்க்கு தலைவன் என்றபடியாய்-இதுக்கு பிரகாசமான கண்ணை உடையவன் என்றது ஆய்த்து –அன்றிக்கே –-அண்ணற்கு என்றது  அண்ணனுக்கு என்றபடியாய்-அண்ணான் என்றது -அண்ணியன் ஆகாதவன் என்றபடியாய்-இப்படி தீம்புகளை செய்கையாலே-தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான் (10-7)-என்கிறபடியே-சாதுவாய் திரியும் நம்பி மூத்த பிரானுக்கும் தனக்கும் ஒரு சேர்த்தி இல்லாதவன் என்னவுமாம் –

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-புண்ணின் விவரத்திலே துளையிலே -புளியைப் பிரவேசிப்பித்தால் போலே-புறம் நின்று – வாசலுக்கு புறம்பு ஓன்று சொல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறாள் அல்லள்-என்னையும் அவனையும் சேர்க்கும் கூற்றிலே –-இதுவே அகம் –-நின்று வார்த்தை சொல்லுமது ஒழிய- மீட்கும் கூற்றிலே நின்று –புறம் நின்று -வார்த்தை சொல்லாதே-என்னையும் அவனோடு சேர்க்கைக்கு ஈடான வார்த்தை சொல்லுகை அன்றிக்கே-எனக்கு அவன் பக்கல் பிராவண்யத்தை குலைக்கு ஈடான வார்த்தை சொல்லாதே-அழகு சொல்லாதே –இப்போது மீட்கப் பார்க்கிறவர்கள் அவனுடைய சௌந்தர்யத்தைச் சொல்லுகிறார்கள் அன்றே–அவனிடம் ஈடுபாட்டைத் தவிர்ந்து மேல் வரும் நன்மைகளைப் பாராய் -என்று சொல்லாதீர்கள் -என்ற படி–இப்போது இவாற்றாமையைப் பரிஹரித்தால் –-மேல் வரும் நன்மைகளைப் பாராய் என்று அவற்றைச் சொல்லா நில்லாதே –அழகு -நன்மைபேசாதே-இது சப்த மாத்ரமாய் அர்த்த ஸ்பர்சி அன்று –காதிலே தான் விழும் நெஞ்சில் படாது என்றபடி – நீங்கள் இதில் படும் நேர்த்தியை -ஸ்ரமத்தை -செயலிலே நேரப் பாருங்கோள்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன
உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே-சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்-பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே-பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

வங்கம்‌ விட்டுலவும்‌ கடற்பள்ளி மாயனை”?-4-5-6-
வங்கக்‌ கடல்கடைந்த மாதவனை-30-

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை 
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன் 
வங்கம் விட்டு வுலவும்  கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து 
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –அன்றிக்கே –மாயனை -என்றது -ஞானமாய் –தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி –குரை கடல் மேல் அரவணை மேல் குல வரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே –மது சூதனை- மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே  வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்  துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே  வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் ( 8-10 )-என்னக் கடவது இறே 

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-கடல் கடையா நிற்க மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –கடைந்த போது சுழன்று வருகையாலே கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் – பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்றுஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்றுதேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டுபெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் –தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதைப் பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறேஅன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலேஇங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்கன்னிகைகளைப் பெறக் கடவனாய் இறே இருப்பதுபாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கைஅவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை-அறுப்புண்டான்

மானிட சாதியில்‌ தோன்றிற்று ஒர்‌ மானிட சாதியை.”–மானிட சாதியின்‌ பேரிட்டால்‌ மறுமைக்கில்லை?! -4-6-4-
மானிடவர்க்கென்று பேச்சுப்‌ படில்‌ வாழகில்லேன் -1-5-

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை 
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
 
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால் 
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-மனுஷ்ய ஜாதியில் உத்பன்னமான தொரு மனுஷ்ய ஜந்துவை  -ஆத்மா கர்ம அனுகுணமாக தேவாதி யோனிகள் தோறும் பிறக்கக் கடவன் ஆகையாலே -புண்ய பாபங்கள் இரண்டையும் அனுபவிக்கைக்கும்  ஆர்ஜிக்கைக்கும் -உறுப்பாக ஆய்த்து -மனுஷ்ய யோனியில் பிறந்தது – ஆகையால் இப்படி இருக்கிற மனுஷ்ய ஜாதியிலே உத்பன்னமானதொரு ஜந்துவை  -த்ருஷ்ட பிரயோஜனத்தை நச்சி -கர்ம வச்யமான மனுஷ்ய ஜாதியில் ஒன்றின்  பேர் இட்டால் ஐஹிகத்தில் சில பிரயோஜனம் சித்திக்கிலும் மறுமைக்கு  ஒரு பிரயோஜனம் இல்லை -மறுமை யாவது அத்ருஷ்டம் 

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–நானும் அறியாது இருக்க –அவனும் அறியாது இருக்க –மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம் பரிமாறும் ஆகில்- அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க – இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து – அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

செப்போது மென்முலையார்கள்‌ சிறுசோறும்‌ இல்லும்‌ சிதைத்திட்டு -2-8-3-
நாமமாயிரமேத்த நின்ற நாராயணா! நரனே?“ 2-1-என்று கண்ணனைத்‌ தாங்கள்‌ இழைத்த சிற்றிலைச்‌ சிதைக்க வேண்டாம்‌ என்று ஒரு பதிகத்தையே(2பதிகம் )அமைத்துள்ளார்

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும்  இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 -3-செப்பு என்று சொல்லும்படியான  சந்நிவேசத்தை உடைத்தாய் -அது போலே கடினமாய் இருக்கை அன்றிகே மிருதுவாய் இருக்கும் முலையை உடையவர்களுடைய லீலார்த்தமாக மணல் கொழித்து சமைத்த சிறு சோற்றையும்
கொட்டகத்தையும் அழித்திட்டு பெண்களோடே கை பிணக்கிட்டு திரிய வேண்டா காண் -என்று
அப்போது நான் கோபித்தவாறே- நான் பிடிக்குதல் அடிக்குதல் செய்யப் போகிறேன் என்று
என் முன் நிற்க அஞ்சி போய் உனக்கு இனிதாக சமைத்து வைத்த அடிசிலும் அமுது செய்திலை–

நமக்கு அசாதாரணைகளாய் இருக்கும் இவர்கள் தேவதாந்த்ரங்களின் காலில் விழப் பார்த்து இருக்கை நமக்கு மிகவும் பொல்லாங்கு என்று திரு உள்ளம் நொந்து தளும்பி முன் மடுவின் கரையிலே யானைக்கு உதவினால் போலே கடுக வந்து ஆய்ச்சிகட்கு முகம் காட்ட-அவர்களும் இவனை காணாதவர்கள் போலே அந்ய பரரையாய் இருக்கையைக் காட்டி சிற்றில் இழைக்க அந்த செயலும் காமாஸ்ரயணம் போலே இவனுக்கு அநிஷ்டம் ஆதலால் அவர்கள் இழைக்கும் சிற்றிலை இவன் அழிப்பதாக முயற்சி செய்ய-அவர்கள் அதுவும் வேண்டா என்ன இவன் வேணும் என்ன இப்படி நடுவே ஒரு மகா பாரதம் நடந்தது–பிறகு புணர்ச்சி நேர்ந்து அது தானும் பிரிவிலே தலைக் கட்டி நின்ற வாற்றை
ஆண்டாள் அனுகரித்து அருளிச் செய்யும் திரு மொழி இது–ஒன்பதாம் பாட்டில் -எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -என்பதால் புணர்ச்சி நேர்ந்த படி தோற்றும்-கோழி அழைப்பதன் முன்னம் -அடுத்த திருமொழியில் அமைக்கு நோக்கும் இடத்து பிரிவில் தலைக் கட்டினபடி தோற்றும்-

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-நான் உங்களை நெஞ்சாலும் நினைக்காமல் இருக்க என்னை எதிர் பார்த்து நீங்கள் சிற்றில் இழைக்க – உனக்காக சிற்றில் இழைக்க வில்லை- காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-காம தேவன் வீதி வலம் வரக் கூடும் என்று சொல்ல-நீங்கள் சிற்றில் இளைப்பது அந்ய அர்த்தமாகில் அதனை நான் அழிப்பதும் அந்ய அர்த்தம் தான் என்று அளிக்கப் புக ஆய்சிகள் அழிக்க வேண்டா என்று விலக்குகிறார்கள்

“இன்றுமுற்று முதுகு நோவ –2-2-என்பதற்குக் கருத்து எங்கள் முதுகை நோவு தீரச்சற்றுப் பிடிக்கலாகாதோ? என்பதாம்.-இச் சிற்றிலை இழைக்கப் பட்ட பாடு பன்னி உரைக்கும் கால் பாரதமாம் –
முதுகு நோவ தீர சற்று பிடிக்கல் ஆகாதோ-

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
—2-3-

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-4-பேச்சும் செய்கையும்
தாழ்ந்த வார்த்தைகளும் தாழ்ந்த வியாபாரங்களும் பிரானே எங்கள் திறத்திலே அடியேன் குடியேன் என்றால் போலே சொல்லும் அதி விநய வார்த்தைகளும் கள்ளக் குழைச்சல்களும் எங்களை மிகவும் மயக்குகின்றனவே இதற்கு எல்லாம் அடி உன் திருமுக மண்டலம் இறே-இப்படிப் பட்ட மயக்கத்தை உண்டு பண்ணுகைக்கு உன் திருமுகம் அம்மான் பொடியோ-

நாங்கள் இளைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்-
-2-5-நாங்கள் இளைத்த இக் கோலத்தை அழித்தாயேஆகிலும் சர்வ ஸ்மாத் பரனானவன் இப்படி எல்லாம் செய்யப் பெறுவதே
ஈது என்ன சௌசீல்யம் என்று நெஞ்சு உருகிப் போம் இத்தனை ஒழிய ரோஷம் என்று பேர் இடும்படி ஒரு விகாரம் பெற்றோம் ஆகோம்-
ஆகிலும் உன் முகத்தில் உள்ளவை மெய்யே கண்கள் ஆகில்
நீ இந்த சிற்றிலை அழிக்க ஒருப்பட மாட்டாய்-இச் சிற்றிலை அன்புடன் நோக்குகை அன்றோ
கண் படைத்ததற்குபிரயோஜனம் என்கிறார்கள்-உரோடம் -ரோஷம்-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம்-
-2-6-சிற்றில் விஷயமாக ஒரு வியாஜ்யத்தை வைத்துக் கொண்டு நீ சிறிதுண்டு –
நீ செய்யும் செய்திகள் சில உள-திண்ணென நாமது கற்றிலோம்-அவற்றை நாங்கள் அழகியதாக அப்யசித்தோம் அல்லோம்-கண்ண பிரான் இன்னது செய்தான் என்று பிறருக்கு சொல்ல முடியாத படி சில குறும்புகளைச் செய்ய அது கண்ட ஆய்ச்சிகள் அப்பா நெஞ்சில் நினைத்தபடி சில செய்யும் அளவேயோ வேண்டுவது-எங்கள் பருவத்தை சிறிது ஆராய வேண்டாவோ-கொங்கை இன்னும் குவிந்து எழுந்து இலாத எங்கள் திறத்து நீ செய்யும் குறும்புகளுக்கு நாங்கள் அறியும்படி குருகுல வாசம் பண்ணி ஒன்றும் கற்றிலோம்

ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே
——2-7-கண்ண பிரான் ஆய்ச்சிமார்களை நோக்கி சில குறும்பு வார்த்தைகளைச் சொல்லி சிற்றில் அழித்து நலிய அதுகண்ட அவர்கள் -அப்பனே
வார்த்தைகளின் வாசியை அறிய வல்லவர்கள் இடத்தில் நீ இந்த குறும்பு வார்த்தைகளைச் சொல்ல
அவர்கள் ஒன்பது சொல்ல மேன் மேலே வார்த்தைகள் பெருகி பரம ரசமாகச் செல்லும் கபடம் அற்ற
வார்த்தைகளின் கருத்தையும் அறிய மாட்டாத எங்கள் திறத்திலே அந்த பேச்சுகளைப் பேசி நலிவதனால் உனக்கு என்ன பயன் உண்டு என்று சொல்லச் செய்தேயும் அவன் மேன் மேலும் சிற்றிலை சிதைக்கப் புக நின் திருமேல் ஆணை -என்று பிராட்டி மேல் ஆணை இட்டு விலக்கப் பார்க்கிறார்கள்-

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய்
–2-8-கண்ணபிரான், ‘ஆய்ச்சிகாள்! இச்சிற்றிலை நான் காலாலும் கையாலும் உதைத்துச் சிதைப்பதினால் எனக்கு ஒரு பயனுமில்லை யென்பது மெய்யே உங்களைத் தீண்டுவதன்றோ எனக்குப் பிரயோஜனம்’ என்று அவர்களைத் தீண்ட-அது கண்டு ஆய்ச்சிகள், ‘ஹரி, ஹரி! நீ எத்தனை தூரிரஸ்த்ரிகளோடு கலந்துவந்தாயோ தெரியாது, எங்கள் மேல் தீண்டாதே கடக்க நில்’ என்ன’-அதுகேட்ட கண்ணன் ‘நான் ஸர்வேச்வரனல்லேனோ? என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ? நான் ஈச்வரனென்பதில் உங்களுக்கு ஸம்வயமுண்டாகில் என் திவ்யாயுதத்தைப் பாருங்கள்” என்று திருக்கையிற் சக்கரந் தோற்ற நின்றான்-

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
–2-9-இவன் தனித்தனியே ஒவ்வொரு ஆய்ச்சியிடத்துஞ் சென்று,-நங்காய்! எங்ஙனே இங்கு வந்தாய்? கால்கள் நோகின்றனவோ? நானும் நீயுங் கலந்துவரப் பெற்றிலோமே!’-என்றாற்போலே சிலவற்றைச் சொல்லி முகத்தை விளங்கக்காட்டினனென்க.-அங்ஙனஞ் சொல்லக்கேட்ட ஆய்ச்சிகள் ‘நமது எண்ணம் வீணாயொழிந்ததே!’ என்று தங்கள் தோல்வியை நினைத்து லஜ்ஜிக்க, இவன் புன்முறுவல் செய்தான்.-நாம் இவனுக்குத் தோற்று வெட்கமடைகின்றமையை இவன் அறியலாகாது’ அந்யபரதையைக் காட்டுவோம்’ என்று அங்கேயிருந்து சிற்றிலிழைக்கப் புக்கார்கள்.-அதுகண்ட கண்ணபிரான் ‘இங்கே நம் கண்வட்டத்திலே இவர்கள் அந்யபரராவதென்!’ என்று சிவிட்கென்று, நினைக்கைக்கு நெஞ்சுங் கூடாதே வியாபாரிக்கைக்குக் கையுங்கூடாதபடியாகச் சிலவற்றைச் செய்தான்; (சிற்றிலோடு இத்யாதி.) உனக்குப் பசுமேய்க்கையன்றோ தொழில்; பெண்களை நலிகையும் பணியோ? என்கிறார்கள். ‘கோவிந்தா!’ என்ற விளியில் நோக்கு.–ஆவது ஆயிடுக -என்று பெண்களின் பரியட்டங்களைக் கிழித்து அவர்கள் உடம்பு கொண்டு தாய்மார் முன் நிற்க ஒண்ணாதபடி பண்ணினான் – எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என்
சொல்லார் -என்கிறார்கள்-என்னோடு அணைகை உங்களுக்கு அசஹ்யமாய் இருந்ததோ
யோகிகளும் என் உடம்போடு அணைக்க ஆசைப்பட -என்ன உன்னோடு சம்ச்லேஷிக்கை எங்களுக்கு மிகவும் அழகிதே-ஆனாலும் அருகில் உள்ளார்க்கு அஞ்ச வேண்டுமே -என்றார்கள்-இத்தால் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்லுகிறதுஆழ்வார்கள் ஆண்களாய் இருந்துவைத்து
பெண்ணுடை உடுத்து மின்னிடை மடவார் முதலிய திருவாய் மொழிகளிலே என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி-ஒரு நான்று தடி பிணக்கே -என்றால் போல் சொல்லும் பாசுரங்கள் போல் அன்றிக்கே பெண் பிள்ளை தனக்கே அதுக்கு மேலே ஒரு மென்மை பிறந்து வார்த்தை சொல்லும் வேறுபாடு என்னே -என்று ஈடுபட்டு உருகுவாராம் நம்பிள்ளை-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே
–2-10-நிகமத்தில்
இப்பதிகம் ஓத வல்லார் பெரும் பேற்றை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-சீதை வாய் அமுதம் உண்டாய் -என்ற விளிச் சொல்லும்-ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை -என்பதையும் நோக்குக
பருவம் நிரம்பினவள் உடன் ரசானுபவம் பண்ணுபவன் எல்லாரும் திரளும் இடத்திலே மறைக்க வேண்டியவற்றை மறைக்கக்கூட தெரியாத தோற்றினபடி விளையாடுகிற பருவம் நிரம்பாத பெண்களுடன் போராடுகை விரூபம் என்று உணர்த்தியவாறு-

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை சேற்றாலெறிந்து வளை துகில்‌ கைக் கொண்டு”–2-10-1-என்று பெரியாழ்வார்‌ உரைத்தவற்றிலிருந்து கோதை நாச்சியார்‌,
கோழியழைப்பதன்‌ முன்னம்‌ குடைந்து நீராடுவான்‌ போந்தோம்‌
ஆழியஞ்செல்வன்‌ எழுந்தான்‌ அரவணை மேல்‌ பள்ளி கொண்டாய்‌ !
ஏழையமை யாற்றவும்‌ பட்டோம்‌ இனி யென்றும்‌ பொய்கைக்கு வாரோம்‌
தோழியும்‌ நானும்‌ தொழுதோம்‌ துகிலைப்‌
பணித்தருளாயே -3-1-என்று கண்ணன்‌ கவர்ந்து கொண்ட கூறைகளைக்‌ கன்னியர்‌ கேட்பதாக ஒரு பதிகம்‌(3) பாடியுள்ளார்

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றால் எறிந்து வளை துகில்  கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும்  
-2 -10-1 –சிலர் எங்களது -என்று அபிமாநிக்கும் நிலத்திலே இருந்தோமோ –சர்வ சாதாரணமான ஸ்தலத்திலே அன்றோ நாங்கள் இருந்தது –இத்தால் ஏகாந்தமாய் -இவனுக்கு வந்து தீம்பு செய்ய ஒண்ணாதபடி பலரும் போவார் வருவாரான ஸ்தலத்திலே அன்றோ-நாங்கள் அந்ய பரைகள் அன்றோ – தன் இடையாட்டம் பட்டமோ – நாங்கள் முன் தீமை செய்தோம் ஆகிலுமாம் இறே-தன்னைக் கடைக் கண்ணால் கணிசித்தோமோ – தன்னை இங்கு இட்டு (இங்கிட்டு இங்கே )எண்ணினார் இல்லை கிடீர் –சேற்றை இட்டு எறிந்து – பிறர் அறியாதபடி -கைகளாலே ஸ்பர்சித்தால் ஆகாதோ-இது ஏது என்று பிறர் கண்டு கேட்கும்படி சேற்றை இட்டு எறிய வேணுமோ –நாங்கள் குளிகைக்காக கழற்றி இட்டு வைத்த வளைகளையும் துகில்களையும்  வாரிக் கொண்டு
இடைப் பென்கள் ஆகையாலே ஆபரணங்களையும் பரிவட்டங்களையும் களைந்து இட்டு வைத்து இறே குளிப்பது-துடர அகப்படாதே காற்றிலும் காட்டிலும் கடியனாக ஓடி – தன் ஜீவனத்தில் ஒன்றும் குறையாடதபடி கொண்டால் – எங்கள் ஜீவனத்தையும் கொண்டு போக வேணுமோ –
அவனுக்கு ஜீவனம் -இவர்களுடைய வளையல்களும் துகில்களும் –இவர்களுக்கு ஜீவனம் –அவன் தன்னுடைய வடிவு இறே
(திருக்கோளூர் பதிகம் -இதே போல் -தனது ஜீவனம் தேடித் போனாள் – அவள் தானே திருத்தாயாருக்கு ஜீவனம் -முகத்தை வைத்து போகலாகாதோ )-பின் தொடர்ந்து சென்றாலும் காணப் போகாதபடி தன் அகத்திலே சென்று புக்கு வழி பறித்து அசாதாரண  ஸ்தலத்திலே ஆய்த்து இருப்பது-நாங்கள் தன் பேரை சொல்லி அழைத்தாலும் -அதுக்கு ஒரு மாற்றம் தானும் சொல்லுகிறான் இல்லை –
வார்த்தையும் -ஏதேனும் வளையும் துகிலுமோ (உம்மைத்தொகை -வளை துகில் தர வில்லை –வார்த்தையும் தர வில்லை-மாற்றமும் தாராரோ -திருப்பாவை -தூ மணி மாட பாசுரம் போல் )
ஒரு வாரத்தை தன்னை ஆகிலும் தந்தால் ஆகாதோ – இப்படி  ஒரு வார்த்தையும் உட்பட சொல்லாதவனாலே இன்று முடிவோம் – ஒரு வார்த்தை பேரில் ஜீவிப்பார் போலே காணும்
-தருவன் என்னுதல் -தாரேன் என்னுதல் -வளை இடையாட்டமாக ஒன்றும் சொல்லாதவனாலே இன்று முடிவோம்

வடிவார்சோதி வலத்துறையுஞ்‌ சுடராழியும்‌ பல்லாண்டு படைபோர்‌ புக்கு முழங்கும்‌ அப்பாஞ்ச சன்னியமும்‌ பல்லாண்டே-1-
பூங்கொள்‌ திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்‌ ‘ சார்ங்கவில்‌ நாணொலியும்‌ தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-9-9-

வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்குமுழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி கல் மதிள் இட்டால் போலே இருக்கிற ஆழ்வார்களைப்-பாரீர் என்ன -அவர்களோட்டை சேர்த்திக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று மங்களா சாசனம்-பண்ணுகிறார் –-வடிவார் சோதி – காளமேக நிபச்யாமமான திருமேனி ஸ்வ தேஜஸ் ஸாலே வ்யாப்தமாம் படியாய் இருக்கை –-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -என்னும் படியாய் இறே இருப்பது-தேஜோ ராசியாய் இருக்கும் வடிவை உடையவன் என்னவுமாம்-வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு –-வலம் அருகே நித்யவாசம் பண்ணுமவனாய் -பிறருக்கு அநபி பவநீயனாய் இருக்கிற ஆழ்வானோட்டை சேர்த்தி நித்தியமாய் செல்ல வேணும் என்கிறார் –
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார் என்கை –
படை போர் இத்யாதி – நம் கையை விடாதே த்வநியாலே எதிரிகளை யழிக்கும் இவனைப் பாரீர் என்ன –
படை போர் முழங்கும் –சேனையை உடையயுத்தத்திலே புக்கு முழங்கும் என்னுதல்
யுத்தத்திலே ஆயுதமாக புக்கு முழங்கும் என்னுதல்-முழங்கும் சகோஷொ  தார்த்தராஷ்டாராணாம்  ஹ்ருதயா நிவ்யதாரயத் -என்றும் – யஸ்ய நாதேன தைத்யானாம் பலஹா நிரஜாயத-என்றும் பிரதிகூலர் மண் உண்ணும்படியும் அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி-என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக்  என்று பயப்படுகிறார்-அப் பாஞ்ச சன்னியமும் –-முன்னிலையாய்  இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் – புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே-மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து-சொல்கிறார் அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்-

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
–9-9-இரண்டாவது அவதாரத்தில் பிராட்டிமார்க்கு உதவினது தனக்கு ஒருத்திக்குமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை-சிஸூ பாலன் ஸ்வயம் வரார்த்தமாக ஒருப்பட்ட சமயத்தில் புறச் சோலையிலே-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானது கோஷமானது-வந்து செவிப்பட்டு தரிப்பித்தது-ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை-ராவணன் மாயா சிரசைக் காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜய கோஷமானது வந்து செவிப்பட்டு –இரண்டு அவதாரத்தில் உள்ளவையும் மடுத்து ஒலிக்க வேண்டும் படி யாய்த்து இவள் விடாய்- அவர்கள் அளவல்ல வாய்த்து இவள் ஆற்றாமை –தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை

நல்ல என்‌ தோழி! நாகணையிசை நம்பரர்‌ * செல்வர்‌ பெரியர்‌ சிறுமானிடவர்‌ நாம்‌ செய்வதென்‌? வில்லிபுதுவை விட்டுசித்தர்‌ தங்கள்‌ தேவரை வல்லபரிசு வருவிப்பரேல்‌ அது காண்டுமே -10-10-

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-நல்ல வென் தோழீ – என்னிலும் என் இழவுக்கு நொந்து இருப்பாய் நீயே இறே-நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்-அநந்த சாயியாய் -ஸ்ரீ யபதியுமாய் -உயர்ந்தார் ஒருத்தரை இருக்கிறவரை -அதி ஷூத்ரராய் இருக்கிற நம்மால்-செய்யலாவது உண்டோ –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சரணம் புக ஒருப்பட்டவர் அதுக்கு உறுப்பாக –-அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்-தன் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தவை தன்னையும் இழவுக்கு உடலாகச் சொல்லி கை வாங்கும் படி காணும் கண்ணாஞ்சுழலை இட்ட படி –நாகணை மிசை--அநந்த சாயியாய் இருக்கைக்கு மேற்பட இல்லை இறே ஒருவனுக்கு ஏற்றத்துக்கு–நம் பரர் –அநந்ய பரமான வாக்யங்களாலே பிரசித்தமான பரத்வத்தை உடையவர்-நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர -நாராயண பரம் ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர —இத்யாதிகளில் -படியே-செல்வர் –ஸ்ரீ யபதிகள்-அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய் -2-8-1- ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யௌ-என்கிறபடியே ஆகையாலே–பெரியர் –
நமக்கும் அவனுக்கும் பர்வத பரம அணுக்களோட்டை வாசி போரும்-சிறு மானிடவர் – தேவ யோநியிலே பிறந்து சிறிது அணைய நிற்கையும்  அன்றிக்கே-ப்ராஜ்ஞராய் அவனோடு அணைய நிற்கவும் அன்றிக்கே அதி ஷூத்ரரான மனுஷ்யர் நாம் செய்வது என் முன்பே ஒரு வார்த்தை சொல்லி வைத்தார் என்பதையே கொண்டு நம்மாலே அவரை வளைக்கப் போமோ-ஆனால் நாம் இழந்தே போம் அத்தனையோ -என்ன -நமக்கு இழக்க வேண்டா காண் த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-பரதேன மஹா பாஹோ லஷ்மணேன யவீயஸா -யுத்த -41-4-என்றவனுக்குச் சொல்ல வேண்டுவதும் ஒரு விஷயம் உண்டு காண்-நீ பின்னையும் பேற்றுக்கு உடலாக நினைத்து இருந்தது என் என்ன-வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே– சர்வ சாதாரணமாக இருக்கும் வஸ்து என்று பற்றக் கடவது அன்று-ஆச்சார்யனுக்கு விதயம் அவ்வஸ்து – விஷ்ணு சித்தே யஸ்ய -அனந்தன் பாலும் -5-4-8– அவன் வழியாலே நமக்குக் கிடைக்கும் என்று இருக்க அடுக்கும்–சம்பந்தம் நமக்கும் அவனுக்கும் ஒக்கும் என்று நினைக்கலாகாது -சம்பந்தம் நித்தியமாய் இருக்கச் செய்தே இறே இந்நாள் வரை கிடந்தது-தங்கள் தேவரை -என்று தன்னோடு உறவு அறுத்து-பெரியாழ்வார் உடன் சேர்த்து சொல்லுகிறாள்–பெரியாழ்வார் உகந்தது என்றாய்த்து உகந்தது
திரிபுரா தேவியார் வார்த்தையை நினைப்பது –-வல்ல பரிசு வருவிப்பரேல் ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-2-7-பூ சூட்டு பதிகம்-ஒரு இசையைச் சொல்லி இசைவிக்கவுமாம் -திருப்பல்லாண்டு –
கிழியை அறுத்து வரப்பண்ணவுமாம்-
வேண்டிய வேதங்கள் ஓதி கிழி அறுத்து திருமஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கையுமாம்-2-4- நீராட்ட பதிகம் திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க வுமாம்
அன்றிக்கே திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம் -2-8- காப்பிட்டுபதிகம்வெண்ணெய் அளைந்த குணுங்கும் –ஆரை  மேய்க்க நீ போதி–இந்திரனோடு பிரமன் -இத்யாதிகள் அநேகம் இறே-அன்றிக்கே நான் தம்மை முன்னிட்டால் போலே -தமக்கு புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்–வல்ல பரிசு –ஆசார்ய பரம்பரையை முன்னிட்டு -என்றபடி-அது காண்டுமே -அவ் வழியாலே பெறக் கடவோம்–பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரசீத -ஸ்தோத்ர ரத்னம் -65-என்னுமா போலே த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே -ஸ்தோத்ர ரத்னம் -22-என்று சரணம் புக்கு வைத்து பிரபத்தி பண்ணினோம் நாம் ஆகையாலே அதுவும் போட்கனாகக் கூடும் என்று அக்குறை தீர -நாத முனிகளை முன்னிட்டால் போலே பெரியாழ்வாரை முன்னிடுகிறாள் –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்பல்லாண்டு இசைப்பாரே ––திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –வேணும் –கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் வேணும் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்--19-போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –போற்றி –புகழ்ந்து –வந்தோம்பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –புகழ்ந்துசத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்-இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது-

பிரானடிக் கீழ் பிரியாது -14-10
சாயை போலே அணுக்கர்களே -பெரியாழ்வார் திருமொழி -5-4-11-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 -4-11 –
ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் – ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது –-இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி
ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு – இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )தாமும் -என்கைக்கு அடி –
அவர்கள் ஏற்றதை நினைத்து-அதாவது – பிரயோஜனாந்தரங்களையும் -உபாயாந்தரங்களையும் -கணிசித்து – மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – தத் காலத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை அன்றிக்கே – கழிந்த காலத்துக்கும் மங்களா சாசனம் பண்ணுகை இறே ஏற்றம் –
(அன்று உலகு அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் ஆண்டாள் போல் )
இப்படிக்கொத்த தம்மை தம்முடைய வம்சத்தில் ஏழு படி கால் இல்லை என்னும் இடத்தை ஏழாட்  காலம் பழிப்பிலோம்  -என்று அருளிச் செய்தார் இறே –பாடுகை யாவது – உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்கை-சாயை போலே என்றது – புருஷனுடைய சாயை அவன் புக்க இடத்தே புக்கு – புறப்பட்ட இடத்தே புறப்பட்டு –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் இட்ட வழக்கமா போலே –இத் திரு மொழி கற்றார்க்கும்
தங்களுக்கு என்ன ஒரு பிரவ்ருத்தி நிவ்ருதிகள் இன்றிக்கே ஈஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகப் பெறுவார்கள் –செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்று பாட வல்லார் நிழலும் அடி தாறுமாகப் பெறுவார்கள்
–அடி தாறு -திருவடிகளில் ரேகைகள்-சாயை போலே பாட வல்லார் – நிழல் உண்டாக பாட வல்லார்-நிழல் ஆவது -குளிர்த்தி-குளிரப் பாட வல்லார் என்றும் சொல்லுவார்கள்

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-இது தான் சம்சார பேஷஜம் என்று தம்தாமுடைய ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குத்ஸ் சன –தை ஆ -9-என்கிறபடியே -இருக்குமவர்கள்-பரம பிராப்யமாய் – நிரதிசய போக்யமாய்- இருந்துள்ள திருவடிகளை – உடையவன் திருவடிகளிலே உனக்கே நாம் ஆட்  செய்வோம் என்று-பிரியாது என்றும் இருப்பரே— சிலரை கண்டீரே -என்று கேட்க வேண்டாதே என்றும் ஒக்க தங்கள் கண்ணாலே கண்டு நித்ய அனுபவம் பண்ணுமதுவே யாத்ரையாகப் பெறுவர்-தாள் -என்கையாலே
பிராப்யாதிக்யமும் போக்யதையும் சொல்லுகிறது –

————————————————————————————–

ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கலியனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ திருக்குடந்தை உ. வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

January 28, 2026

ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த நவ ரத்ன க்ரந்தங்களுக்கும் அடி இப்பதிக 9 பாசுரங்கள் -சமத்காரமாக ஸ்வாமியின் நவரத்ன க்ரந்தங்களும் இப்பதிக பாசுரங்களின் அடிப்படையில் அருளிச் செய்து இருப்பதாகக் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ ராமானுஜர் கலியன் சம்பந்தம் மூன்று பாடல்களில் அமுதனார் காட்டி அருளுகிறார் -இதில 7 பாசுரத்திலேயே திருமங்கை ஆழ்வாருக்கு இனியவராக ராமானுஜர் -பவிஷ்ய ஆச்சார்ய விக்ரஹம் சேவித்து இருப்பாரே கலியனும் –

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன்
மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-வாள் வீசி படித்துறை -நம் போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு – ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு – இவ் விராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை
வந் தெய்தினரே.–17-நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –-எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்--அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு-இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன்
மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88–மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் . எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று-ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி


பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை
முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-=வேதார்த்த ஸங்க்ரஹம் -அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய 

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும் அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும் எவ்விதமான தோஷமும் அற்றவனும் ஆனந்த ஸமுத்ரமுமாகவும் உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு- ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி -நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥–அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர-* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6—ஶரணாக³தி க³த்³யம் ॥-ௐ ப⁴க³வந் நாராயணாபி⁴மதாநு ரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்
நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம்
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே * பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே * ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த
வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-அழித்த அசுரர்கள் பட்டியல்-கீதா பாஷ்யம் தொடக்கம் -பூதனை -அகங்கார மமகார –கர்மங்களைப் போக்கவே அவதாரம்-பூபார அவதரண தேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாஸ்ரயணித்வாத் அவதிர்யோர்வ்யாம்
சகல மனுஷ நயன விஜயதாம் கத பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி
திவ்ய சேஷ்டிதானி குர்வன்-பூதநா சகட யமளார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த
அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை- விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-திருவாராதனம் யாகம் -யாக பூமி கச்சேத் நோக்கி போவதாக நித்ய கிரந்தம்-ததீயாராதனம் கண்ணாலே பார்க்கலாமே–பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய| பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா – அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா| ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய ! ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –திரு உள்ளமாகில் –ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –கலிகன்றி தாஸர் ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கேட்டு அருளிச் செய்த வியாக்யானங்கள் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

கப்யாஸ ஸ்ருதியின் பொருள் விளக்கம்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 12, 2026

கம்பீராம்பஸ் ஸமுத்பூத-ஸும்ருஷ்ட நாள- ரவி கர விகஸித புண்டரீக தலாம
லாயதேக்ஷ :*

கம்பீராம்பஸ்ஸமுத்பூதமாயும், ஸும்ருஷ்டநாளமாயும், ரவிகரவிகஸித
மாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமை
யாகச் சொல்லுவது பொருத்தமென்று எம்பெருமானாருடைய திருவுள்ளத்திலே
தோன்றினது

திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஹித்திருந்ததனாலேயே.
ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்ணழகைப்பற்றிப் பேசுமிடங்களில்
மேலே காட்டிய மூன்று விசேஷங்களையும் வெகு அற்புதமாகப் பேசியுள்ளார்கள். 

கம்பீராம்பஸ் ஸமுத்பூத புண்டரீக] ஜல மென்றும் அம்புஜமென்றும்-அம்போஜமென்றும் நீரஜமென்றும் பேர்பெற்ற புண்டரீகமானது நீரில் நின்று முண்டாகாமல் மற்றொன்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே அம்பஸ் ஸமுத்பூத” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம்.

‘தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன்தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீஸூக்தியும், “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அநுஸந்தேயம். நீரைவிட்டுப் பிரியாமலிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.

நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றொருவன்”-என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும்‘அழறலர் தாமரைக் கண்ணன்” (58)என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றிய அர்த்த மென்றே இஃது எம்பெருமானாரால் ஆதரிக்கப்பட்டது. ‘நீரார் கமலம் போல்” என்றவிடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகை யின்பத்திற்காக மாத்திரம் இடப்பட்டதன்று. ” அழறலர் தாமரைக் கண்ணன்” என்றவிடத்து நம்பிள்ளை யீட்டில் கப்யாஸ ஸ்ருதி ஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸூக்தி வருமாறு-” அழறலர் தாமரைக் கண்ணன்) அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப் பூப் போலே யிருந்துள்ள திருக் கண்களை யுடையவன். யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ.என்னக் கடவதிறே.” இங்கு வாதி கேசரியின் ஸ்வாபதேச வுரை வருமாறு- அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவனென்ற படி

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –கமலம் போல் செங்கண் -என்கையாலே குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது 

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

ஆக, நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றொருவன்’ என்ற சிறிய திரு
மடற் பாசுரத்தையும், அழறலர் தாமரைக் கண்ணன்’ என்ற திருவிருத்தப் பாசு
ரத்தையும் “தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்குங் கண் பெருங் கண்
ணன் ‘ என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே கம்பீராம்
பஸ்ஸமூத்பூத’ என்ற விசேஷணத்தை ஸ்வாமி யிட்டருளினாரென்பது பொருத்த
மாக முடிந்தது.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன்
நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலேயாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்

[ஸும்ருஷ்டநாள புண்டர்க] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபையில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமையாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்த யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவிருத்தத்தில் “வன்காற்றறைய’ என்கிற பாட்டிலே “எம்பிரான்தடங்கண்கள் – மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன” என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப்பட்டிருக்கிற ‘மென்கால்’ என்னும் விசேஷணத்திற்கு ‘மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற’ என்பது பொருள்.(நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் கால்என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ய ஸூக்திக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என் றருளிச்செய்யப்பட்டது.

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
-42-மென் கால் கமலம் என்றது –
ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி அறைகை –ஆர்த்த பிரபத்தி )மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய-கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை-கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை-மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)-கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை-பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )-ஊர்த்தவ லோகங்களும் என் காலுக்கு அளவு போராது நீங்கள் காணுங்கோள் என்று தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம் என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்

ரவிகரவிக“த புண்டரீக.) தாமரை நீரிலிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸூர்ய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகு மாதலால் இந்த விசேஷணமும் ஆவச்யகமாயிற்று.இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) “செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்” என்றுள்ள பாசுரம் இங்கே கொள்ளக்கடவது.இவ்விடத்து ஈட்டிலும் கப்யாஸ ச்ருதியை உதாஹரித்தருளி யுள்ளார். இதில்(செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செவ்விய சுடரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய சுடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் ‘அஞ்சுடர வெய்யோன்’ என்று ஸூர்யனை ப்ரஸ்தாவித் திருக்கையாலே தததீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸூர்ய ப்ரகாசமடியாக வந்த செவ்விய சுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.இந்த ஸ்ரீக்தியைத் திருவுள்ளம்பற்றியே, “ரவிகரவிகளித புண்டரீக” என்றருளிச் செய்தது. “செந்தண்கமலக்கண் சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே” என்கிற திருவாய்மொழிப் பாசுரமும் இங்கு யோஜிக்க வுரியது.( ‘செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்” என்கிற பெருமாள் திருமொழிப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கதுஆனால் அப்பாசுரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமையுணர்க.]

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் –சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே

‘கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷி ” என்கிற உபநிஷத்வாக்யத்திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச்செய்த கம்பீராம்பஸ் ஸமுத் தேத்யாதி திவ்யஸுக்தியில் “புண்டரீகதளாமலாயதேக்ஷண என்றிருக்கின்றதன்றோ? மூல ச்ருதியில்
புண்டரீகமேவ மக்ஷி” என்றிருக்கிறதேயொழிய வேறில்லை; உள்ள மூலத்திற்குச்சேர “புண்டரீகக்ஷிண என்றிவ்வளவே அருளிச்செய்திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள . (2) அமல. (3) ஆயத. என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரம் செய்யுமளவில், ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்க ப்ராப்தம்.-ஆழ்வார்கள் ‘தாமரைக்கண்ணன்‘ என்று சிலவிடங்களிலும் “தாமரைத்தடங்கண்ணன்” “கமலத்தடங்கண்ணன்” “கமலத்தடம் பெருங்கண்ணன்” என்று பல விடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள்-வடமொழிலுள்ள லகரமும் ளகரமும் தன்மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; “லடயோரபேத: ”என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞர்களுமிசைந்ததே. தமிழர்கள் எழுத்துப்போலி யென்பர்கள். ஏவஞ்ச, ” பத்ரம் பலாசம் சதனம் தளம் பர்ணம் சது: புமாந்”என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தலமென்கிற வடசொல்லே தமிழில் தட மென்றாயிற்று என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் கமலத்தடங்கண்ணன் தாம்ரைத் தடங்கண்ணன்‘ என்னுமிடங்களிலே மன்னும் பொருளிலே தட மெனவந்ததென்று கொண்டு “புண்டரீகதள”என்றருளிச்செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்கு விசால மென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளும் தள மென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கர்த்தாக்களால் ஆதரிக்கப்படு கின்றன. “நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல…. எம்பிரான் கண்ணின் கோலங்களே” என்ற திருவிருத்தப் பாசுரத்தில் தடமென்பதற்கு தடாகமென்பது பொருள்.

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
-39-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே-பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி-எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன-பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால்-ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே-அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி-விசும்புக்கும் பிரான்-வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

“கமலக் கண்ணன் ….அமலங்களாக விழிக்கும்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டே“புண்டரீகதளாமல்.. ஈஷண” என்றார் ஸ்வாமி. கீழே காட்டிய பாசுரங்களையும் “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்’ என்கிற அத்தீயான திருப்பாணாழ்வார் பாசுரத்தையுமநுஸந்தித்துக் கொண்டே “புண்டரீக… ஆயதேக்ஷண: என்றார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார்-

January 6, 2026

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8-
–– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

——–

அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3-
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1- 5- –
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 – –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 – –
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

———–

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே 85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –

———

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே  –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

————-

இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார் அடுத்து

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன்
—10-10-9-தேவனோ
மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் – இன்னார் என்று அறியேன் –சாரங்க பாணியின் படியையும் ஆராவமுத ஆழ்வாரையும் அனுபவித்து அவர்களுடைய போக்யதை நெஞ்சில் ஊறி முன்னே வந்தால் போல் இவளுக்குப் பட மனுஷ்யத்தவே பரத்வம் இவருக்கு அடையாளம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள்-ஆழியும் சார்ங்கமும் சேர்ந்து அனுபவம் இதில் –சக்ர பாணி சாரங்க பாணி -சேர்ந்தே புறப்பாடு இங்கு)

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-அந்தாதி தொடையில் அமைந்த ஒரே திருமொழி இதுவேநெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –(இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே )என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே 
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே-உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-
– நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
  –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே
-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு  பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே
—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4–ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3
— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- –
நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

——————————–

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று – நாலாயி:4/3–நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –-நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்-நன்கறிய –நன்றாக அறிய –பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –இந் நன்மையை அறிய என்றுமாம்-நாமோ நாராயணா என்று –இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இறே புருஷார்த்தம் ஆவது –

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே -1-1-4- நாலாயி:16/4-திருவாய்ப்பாடியில் உள்ள கோபர்கள்-பாலும் தயிரும் இருக்கிற உறிகளை முற்றத்திலே உருட்டி நின்று
ஆடுவாரும் மணம் மிக்க நெய் முதலியவற்றை நிச்சேஷமாக தானம் பண்ணுவாருமாய்
நெருங்கி மெத்தென்ற மயிர் முடியானது அவிழ்ந்து களையும் படி நர்த்தனம் பண்ணி
சேரி அடங்கலும் மதுவனம் அழித்த முதலிகள் போல் கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்-1 4-4 –- நாலாயி:57/3–உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே-பிள்ளைகள் பெறாத வந்த்யன்  அல்லவாகில் வந்து கொடு -நில் கிடாய் –

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் –1-5-6– நாலாயி:69/3—ஆயம் அறிந்து -மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து
அந்தரம் இன்றி -உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி-ஆடிய -இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்தமல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான இடை வெளி இல்லாமல் அபாயம் இல்லாமல் என்றுமாம் அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் –1 6-5
–– நாலாயி:79/2,3-ஓடிப் போய் உள்ளே புக்கு –வைத்த நான் அறியாதபடி –சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் –தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின்- -1 7-8 — – நாலாயி:93/3–லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8-
–– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை– 2-2 2– – நாலாயி:129/2-பழுதற உருக்கி வைத்த நெய்யும் –செறிவுறக் காய்ந்த பாலும் –நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் –செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்-என்னுடைய நாயகனே நீ பிறந்த பின்பு –இவை ஒன்றும் பெற்று அறியேன் –அன்றிக்கே –
இத்தனையும் என்றது –ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட –
–2 7-1 – –-நாலாயி:182/1,2-உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும் பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்-நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை-இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்-அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – -2-7- 8–நாலாயி:189/3-சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால் மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே-இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்—2 8-7 – நாலாயி:198/3-உள்ளபடி ஒன்றும் அறிகிறேன் இல்லை-அதாவது –இன்னமும் அப்படிக்கு ஒத்தவற்றை செய்குதியாகில் –ஒரூ நாள் அல்ல ஒரு நாள் அபாயம் விளையும் -என்று பயப்படா நின்றேன் என்கை

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் –  2-9- 7–
நாலாயி:208/2,3-பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –-முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்-அதாவது –திருவோண வ்ரதத்துக்கு  என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –இவனும் தீம்பிலே ஆரம்பித்து –தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –- நாலாயி:223/4-அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை-முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை உனக்கு தாரகாதிகளாகவும்  நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால் ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும் அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்-
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பா -குணமே குணி )கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்-தீம்பன் -என்ற படி –இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று
உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-3- –- நாலாயி:225/4-உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் –உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – –3 1-4 – –-நாலாயி:226/4-ஐயா இது என்ன தெளிவு தான்  என்று கொண்டாடுகிறாள்-அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்-உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – -3-1- 5–நாலாயி:227/4-இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்-
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1 6- நாலாயி:228/4-தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் – அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்-ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன் ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே- -3 -1-7 – – நாலாயி:229/4-என்னுடைய நாதனானவனே–இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய-இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3 1-8 –- நாலாயி:230/4-பசும் புல்லு சாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ-அன்றிக்கே -அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்–-
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 நாலாயி:231/4–காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள் நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே – குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை -நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –-என்னுடைய நாதனே -உன்னை அறிந்து கொண்டேன் –உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில்- 3-4-6- – – நாலாயி:259/3-ஒப்பனை அழகும் -வருகிற அலங்காரமும் – லீலா வியாபாரமும் -ஒர் ஒன்றே
எத்தனை யேனும் அளவுடையாராலும் எல்லை காண ஒண்ணாத இடைப் பிள்ளை-தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – – 3-7- 4–நாலாயி:289/4-இவள் படி பார்த்தால் –முகந்து பரிமாறுகிற மூழை யானது தான் முகக்கிற பதார்த்தத்தின் ரசம் அறியாது-என்னும் அந்த மூதுரையும் தன் பக்கல் இல்லாதவள் -கிடீர்

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் –3-7-5 – நாலாயி:290/1-தானும் தன்னை அணைந்த பந்து வர்க்கமும் அறிந்த அளவாக அவன் பக்கலிலே பிரவணையாய்-
அகம் விட்டு புறப்படாமல் இருக்கை அன்றிக்கே – திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் –
திரு ஆய்ப்பாடி யான ஊர் தானும் – இருந்ததே குடியாக அறியும்படி -க்ரஹத்தை விட்டு புறம்பே போய்

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள்-3-8 -2- – – நாலாயி:298/1-பொருந்தின அறிவு ஒன்றும் இல்லாத லௌகிக வைதிகங்களோடு சேர்ந்த அறிவு அல்பமும் இல்லாத-அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் இறே காட்டிலே பசு மேய்க்க போன இடங்களிலே -வழி திகைத்தால் வழி காட்டுவது பசுக்களாம்  படி இறே இவர்கள் அறிவு இருப்பது

தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி-3- 8-3 – – நாலாயி:299/2-பந்துக்களும் மற்றும் உள்ளாறும் அறியும்படி–தாமோதரனுக்கு இவளைக் கொடுக்க புகா நின்றோம் -என்று பிரசித்தமாக்கி-தாமோதரன் -என்றது –மாதாவானவள் கட்டின கட்டு அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே அவள் நியமனம் தப்பாமல் இருந்த நீர்மையை உடையவன் -என்றபடி

நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து –3-8-6-– நாலாயி:302/3-இரண்டு குடிக்கும் பழி வாராதபடி-திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் – திரு ஆய்ப்பாடி ஆகிய நகரமும் அறியும் படியாக – இதுக்கு முன்பு இப்படி இல்லை -என்னும்படி விலஷணமாய் அத்வீதியமான கல்யாணத்தைச் செய்து – ஜாதி உசிதமான தர்மத்துக்கு தகுதியாக பாணி க்ரஹணம் செய்யுமோ

அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க–3-10-1– – நாலாயி:318/3-இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே –பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால)-என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க
தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து-இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் –
ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்
(பெருமாள் முதலோர் )திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய-விலங்க-என்றது –
விலக்க-என்றபடி –

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – –4- 6-6 -நாலாயி:386/1–நாட்டில் உள்ளாரோடு நகரத்தில் உள்ளாரோடு வாசியற எல்லாரும் –இவன் அசாதாரணன் -என்று அறியும் படி சூத்திர மனுஷ்யர் பேர் இட்டு -அவர்களோடு கூடி -அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து- அவர்கள் விழுந்த  குழியில் விழுந்து ஒளி மழுங்கி – தவறி வர்த்தியாதே 

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே -4 -10-4 –- நாலாயி:426/1-சர்வ காரண பூதனாய்-சர்வ ரஷகனாய் –சர்வ சேஷியாய் –சர்வ சரீரியாய் -இருக்கும் உன்னை-உள்ளபடி அறிய ஒண்ணாது இருக்கும் பெருமையை உடையவனே –யன்ன தேவா ந முநயோ ந சாஹம் ந ச சங்கர ஜானந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –என்று விஷ்ணு உடைய பரமமான ஸ்வரூபத்தை தானும் – ருத்ரனும் –மற்றும் உண்டான தேவர்களும் –ரிஷிகளும்அறியார்கள் என்னும் இடம் பிரம்மா  தானே சொன்னான் இறே –கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி – என்று அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தையும் உட்பட அவர்கள் அறிய மாட்டார்கள்- என்று இறே ஸ்ரீ திரு மழிசைப் பிரான் (நான்முகன் திருவந்தாதியில் )அருளிச் செய்தது-

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த — 4-10- 8– நாலாயி:430/1-அதீத அநாகதங்களில் ஒன்றும் அறியாத நான்(அதீத அநாகதங்கள் -முன்பு போன கர்மங்கள் -மேல் வரும் கர்மங்கள் ) சர்வ சக்தியான உன்னுடைய மாயைகளில் ஏதொன்றும் அறியேன் –இப்போது இவர் -உன் மாயம் -என்கிறது – போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை -என்று சொன்னது போலே இருக்குமவற்றை இறே –அதாவது –கர்ம அனுகுணமாக இச் சேதனர் விஷயத்தில் அவன் பண்ணி வைக்கும் வஞ்சனங்கள் அநேகம் இறே –அவை தான் அவன் தான் அறியும் அத்தனை ஒழிய –எதிர்  தலைக்கு தெரியாதபடி இறே இருப்பது –அத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது -4-10-9
–- நாலாயி:431/2,3–சர்வ காரணமாய் – விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன் 

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –5-1- 1– நாலாயி:433/2-ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – —-உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன்-5- 1-3 – – நாலாயி:435/3-நான் திரு நாமம் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய் தலை கட்டுகிறதோ –தீமையாய் தலை கட்டுகிறதோ –அறிகிறிலேன் –

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை-5-3- 6– – நாலாயி:458/2-ஒரு சேதனரும்-இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை
சம்சாரத்துக்கு மருந்து அறியும் இத்தனை -அத்தை வெளி இடுகைக்கு ஆய்த்து –
கைலாச யாத்ரையிலே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தை கொடுத்து ருத்ரன் பக்கலிலே- பிள்ளை வரம் வேண்டி சென்றது ஆகையாலே சம்சார வர்த்தகர்

சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் -5- 3-8 –- நாலாயி:460/4-சர்வஞ்ஞனான நீ தானே அறியாயோ-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனான உனக்கு தெரியாதோ –விட்டு சித்தன் தன் மனம்
உன்னுடைய வ்யாப்தி விபூதி அளவிலே(குணங்களோடு வியாபிக்கிறார் என்னும் போது குணத்தில் வியாபித்தால் ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருமே )என்னுடைய மநோ வ்யாப்தி உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே –

அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே –5- 4-2 –– நாலாயி:464/4-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது
அதனில் பெரிய என் அவா -என்றபடி-நீ என்னைக் கை கொண்ட -என்றது –
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஓட்டேன் நாம்மாழ்வார் -என்றபடி
அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு அனுகூல ஞான வர்ஷம் எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –-சேதன கதமாக வந்த ஞானம் ஆகில் இறே பின்பு வற்றி வருவது சஹ்யம் பற்றி வருகிற ஆறு இறே திரு மலை இறே சஹ்யம் வர்ஷிக்கிறது ஒரு காள மேகம் இறே(ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் )

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8–பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –அது எல்லாம் செய்தற்றது –நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4-
-நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம்-நாங்கள் இன்றாக அறிகிறோமோ –சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்-எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே-நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ – பண்டே அறியோமோ –குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன-நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -பண்டே அறியோமோ-

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5--ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும் பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும் இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால் நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் – அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்–பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் – திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை

ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் –
நாலாயி:494/3,4-சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது –கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்ய பரதையாலே
எழுப்புகிறார்கள்-மகனே அறிவுறாய்-உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை – ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்

சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2-மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –-பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்-இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )

அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன் தன்னை —–அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6–1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை–1-கர்ம யோகத்தில் உண்டான –2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும் பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள் சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய் முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –அறியாத பிள்ளைகளோம் –1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் 

பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் -2-7 – நாலாயி:520/2-நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது-எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே – அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே – -2-8-நாலாயி:521/4-கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே -கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை-ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் –3-8- நாலாயி:527/4-காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்-ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் 

அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே -5-4— நாலாயி:548/3-பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
5-8- – நாலாயி:552/2,3-பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை –அதாகிறது -இன்றியமையாமை ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம் நானும் அவனும் அறியும் அத்தனை அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்–கச்சங்கம் -பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை–சமயம் பண்ணின இடம் இதுவோ என்னில் – இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்-
நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை
தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே –அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே–5-10- – நாலாயி:554/2,3-அதில் வாசி அறியாதவர்கள் என்னை நலியும் முறைமை அறிகிறிலேன்–அடிமையில் வாசி அவை அறியா விறே-அவன் அளந்த கால் வாசியும் கூட அறியாதவை இறே-ராவணன் நடுவே வந்து நலிந்தால் போலே தென்றலும் சந்திரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கு ஈடாக இருப்பதொரு முறை யுண்டாக அறிகிறிலேன்-தங்களுக்கு கடவார்க்கு -கடவாரைச் சேர்க்க முறை யுண்டு –தங்களுக்கு கடவார் -அவன் –அவனுக்கு கடவார் -அவள் —அப்படி சேர்த்து செய்த திருவடிக்கு உண்டான ஆகாரம் இல்லை-அத்தனை அல்லது நலிகைக்கு முறை இல்லை இறே-புத்ரனுக்கு உண்டான பரிவிலே கால் கூறும் இல்லை காண் -இக்காற்றுக்கு –
அவனால் படைக்கப் பட்ட இவை புத்ர ஸ்தானம் இறே –தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் –கிஷ்கிந்தா -1-105-என்று அவனும் கால் கண்ட மாத்ரத்திலே படுமது அறியானே – கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –13-4– தான் கிடக்குமா போலே இறே அவன் காலால் துகை உண்ணும் படி

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை-12-1 – நாலாயி:617/1-வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –-மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் –12-2– நாலாயி:618/1-இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது –இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே-இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம்
அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து-அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து – இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து- மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே-12-5- – நாலாயி:621/1-இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது-இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்-இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்-தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- –தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக-13-1– – நாலாயி:627/3–கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது –புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் – உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் -14-6— நாலாயி:642/1-ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்-இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்
இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் –நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –இரக்கமே சிறந்த குணம் என்று -மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது –இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் –

கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – 4-7– நாலாயி:683/2,3–ஆகாசப் பரப்புக்கு எல்லாம் சந்தரன் ஒருவனுமே யானாப் போலே லோகம் எல்லாம் தன் வெண் கொற்றக் குடைக்கீழே ஒதுங்கும் படியாக-நஷத்ர தாரா கணங்கள் சந்த்ரனை சேவித்து இருக்குமா போலே ராஜாக்கள் எல்லாம் வந்து சேவித்து இருக்கும் படி ராஜராஜனாய் வேறு பட இருந்து கொண்டாடும் சம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாய் இருக்கிறது இல்லை

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – 5-2– நாலாயி:689/2–தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – 6-1– நாலாயி:698/2-அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் –
உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து-உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –நீ யல்லது புகல் உண்டோ –
உன்னை யல்லது நான் அறிவேனோ –என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே-6-2- – நாலாயி:699/4-உன் நெஞ்சுக்கு பொருந்தின தயிர் கடைந்த படி – இவள் சொன்னவாறே இங்கனே இருப்பன சில எனக்கு வேண்டா என்ன-உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே -70-– நாலாயி:821/4-ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவஸ்யமும் போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவஸ்யமும்-பாரவஸ்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச
-என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்-பரிசம் பரமாத்மாநமநாதி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே-அமரரே யறிவரே-ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் -74— நாலாயி:825/1-தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து –அத்திருவடிகளில் ந்யஸ்தபரன் ஆதல் –வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –அறிந்து அறிந்து -என்று சாஸ்திர ஸ்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் –என்றுமாம் –

அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – –தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் -84-— நாலாயி:835/3-விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ –அன்பு உறைக்கை யாவது -பரம பக்தி உக்தனாகை –வைத்து அனுபவிக்கும் நாள் -என்கிறது -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை –இத்தால் –
இச் சேதனனுக்கு ஜன்மமும் விஸ்ம்ர்தியும் விநாசமும் -பக்தி இல்லாமை –உஜ்ஜீவனம் -பரம பக்தி உக்தனாகை -என்றது ஆய்த்து –ஜன்மம் ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய ஹேது –
விஸ்ம்ர்தி ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய கார்யம் ஆகையாலே ஆத்மாவுக்கு உபயமும் விநாசம் இறே

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே 85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –

புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – -திரு மாலை-6- நாலாயி:877/2–தேகத்தை புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு
விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –-புறஞ்சுவர் -என்கிறது-இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில்-அது தானே உத்தேச்யமாம் இறே-அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி அஸ்த்ரிமாய் இருக்கையாலே –ஓட்டை மாடம்-சொல்லுகிறார் -ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை-மாடம் -என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே-ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்-நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே
க்ரமத்தில் செய்கிறோம் -என்ன-புரளும் போது அறிய மாட்டீர் –ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்-மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது –க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –

அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – -9-நாலாயி:880/3–அற்றம் -மறை பொருள்-அறியாமைக்கு அடி ஆயிதான விருத்திக்கு மேல்பட தாத்பர்ய விருத்தி யறிகிலி கோள் –வசஸாம் வாச்ய முத்தமம் -என்றும்-வேதைச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்-நாராயண பரா வேதா -என்றும் -சொல்லக் கடவது இறே

அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் -13-– நாலாயி:884/3–மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும் திருவரங்க பிராவண்யம் வேண்டா உக்தி மாத்ரமே அமையும் –ஆகில் –என்றது –பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்-22- – நாலாயி:893/2–இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது – தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – 28-நாலாயி:899/1-ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வைகுண்டம் அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று அறியவும் முடியாது என்கை –

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய–32- – நாலாயி:903/3–உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக நீர் உபதேசித்து வைத்த மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –அவை யாகிறன –கர்ம யோகம் –தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்-உபய சாத்யமான பக்தி யோகம்-அவதார ரஹஸ்யம்-புருஷோத்தம வித்யை-அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்-புண்ய ஷேத்திர வாஸம்-இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இறே உபாய பேதமும் –இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று –34- நாலாயி:905/3–நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் சர்வஞ்ஞனாய் –சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே கூட இருந்து அறுதி என்று –

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி –38- நாலாயி:909/2–பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்னையும்-ஆம் பரிசு ஆவது – கைங்கர்யமே யாய்த்து –ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –அறிந்து கொண்டு – நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே-மேம் பொருள்மெய்ம்மைஆம் பரிசு என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –

வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் -41-– நாலாயி:912/1-பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனே –ஆகா -என்கிறது சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ – மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –அகிஞ்சனஅநந்ய கதி –
என்று இருப்பார் அறியும் அத்தை-ஈஸ்வரோஹம் –என்று இருப்பார்க்கு அறியலாமோ –

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு –5— நாலாயி:931/3–இப் பேற்றுக்கு அடி என் என்று பார்த்தார் —இந்திரியங்களை ஒறுத்து மஹா தபஸை பண்ணினேனோ அறிகிறிலேன் –நான் அறிய ஒன்றும் இல்லை –இப்படி சங்கிப்பான் என் என்னில் –பெற்ற பேறு அப்படிப்பட்டாருக்கு கிடைக்குமது யாகையாலே –அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ்ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் —கோரமான தபஸ்ஸூ ஆகிறது –அத் தலையாக தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை
எந் நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே -என்னுமா போலே-

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி -2- – நாலாயி:938/3-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் – மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்
மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்
ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –நான் அப்படி இருப்பதொரு ஸ்வாமி யுண்டாக வ்யுத்பத்தி பண்ணி வைக்கில் அன்றோ வேண்டுவது-தேவு அறிவன் -ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

எண் திசையும் அறிய இயம்புகேன் -7- நாலாயி:943/3-விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்-எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்-அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – 1-1-7-நாலாயி:954/1—அவர்கள் கார்ஹஸ்யத்தில் நின்ற நிலை அறியிகோள் – அவர்கள் ஜன்மம் அறியிகோள்-இவர் அவர் என்னீர்  -ஒரே சொல்லாய் -ஒருவர் வாசியும் அறியீர் என்னவுமாம்-பண்டு தரித்ரனாய் கிலேசப்பட்டு போந்தான் ஒருவன் இப்போது ஜீவிக்க புக்கால் இது இவன் அளவு அன்றிகே இருந்தது -இது வேறு ஒருவன் அடியாக வேணும் -என்று அறிய மாட்டாதே ஸ்ரீயபதியைப் போலே- பிறப்பே பிடித்து ஸ்ரீ மானாக போந்தானாக நினைத்து இருப்புதி கோள் –

அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி -—1-3-3–ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – 1-3-10--நாலாயி:977/4-ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்-அன்றிக்கே-நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்-இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம் அவ்வோபாதி ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –ஆன பின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-

ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள -1-5-10– நாலாயி:997/3-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – -1-9-3-நாலாயி:1030/2,3-இட்டறியேன் என்பது அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே

மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே -1-9-9-– நாலாயி:1036/2-பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே பாபங்களையே பண்ணி பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –
அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி-

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே -1-10-8– நாலாயி:1045/4–ஆய –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது –இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – 2-3-7-நாலாயி:1074/4-ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-(பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்-–2-7-1- – நாலாயி:1108/2-வடிவு அழகாலும் பருவத்தாலும் பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –அவளுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமான மார்பு ஆயிற்று –
அகலகில்லேன் இறையும்-என்கிற படி – இம் மார்பில் இருப்புக்கு ஏதேனும் இழவு வரில்
செய்வது என் என்று துணுக்கு துணுக்கு என்று ஆயிற்று வர்த்திப்பது –இருந்தால் கலந்தாளாய் பின்னை பிரிவும் பொறுக்க மாட்டாள் –( இருப்பதும் கலப்பதும் வேறே வேறே இல்லையே -தொழுவதும் எழுவதும் ஒன்றே போல் )அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள் என்ன ஒண்ணாதே – அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-அவளும் அங்கே இருக்கச் செய்தே எனக்கு இழக்க வேண்டுகிறது என் -என்று அது தானே இவளுக்கு ஆசைக்கு உடலாயிற்று – அதுவாயிற்று இவளுக்கு ஆசைப்படுகைக்கு ஆலம்பனம்-(அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும் அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம் )

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து -2-8-4
– நாலாயி:1121/2,3-இதுக்கு முன் பயம் வுயுத்புத்தி பண்ணி அறியாதது பயப்பட-அதினுடைய கொம்பை குப்பைக் கீரை பிடுங்குமா போலே அநாயாசேன வாங்கும் ஆனை வாசி அறியாமையாலே
பலித்துக் கொண்டு நின்றது இத்தனை-அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – 2-8-6-நாலாயி:1123/1–ஆபாத ப்ரதீதம் மாதரம் அன்றிக்கே நம்முடைய இயற்றி எல்லாம் கொண்டு
இவரை உள்ள அளவு எல்லாம் அறிய வேணும் என்று பார்த்தால் (அறிந்து அறிந்து தேறி தேறி ) ஒன்றும் அறியப் போகிறது இல்லை-அட்டபுயகரத்தேன் என்றாரே–நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்றார்-உனக்கு பற்றுக்கோடாக இருக்கவே இப்படி சேவை

நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே––2-8-9-
– நாலாயி:1126/3,4–இவர் பார்க்கிற பார்வை விபாகத்தில் நம்மை முடிக்கும் போலே இரா நின்றது சொன்ன வார்த்தையை கிரயம் செலுத்துவாரைப் போலே இரா நின்றார் –
அது ஒரு உக்தி மாத்ரம் ஆகாமே அத்தை அர்த்த க்ரியா காரியாக்கி நினைக்கிறார் போலே இரா நின்றது –இவர் ரஷகராய் இருக்கிறாரோ- நம்மை முடித்தே விட இருக்கிறாரோ –
அறிகிறிலேன்

ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல–3-3-7- – நாலாயி:1174/1-ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்-அஞ்சன மலை -விசேஷணம் யானைக்கும் கண்ணனுக்கும் வேழப் போதகம் அன்னவன் அன்றோ-எவர் இவை செய்வது அறிவார் இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்-அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே-ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி

பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே ––3-6-2-– நாலாயி:1199/4–(பணி செயல்-உக்தி- சொல் ஓன்று பணித்தது உண்டு போல் )
1-என்னை அணைக்கையே தொழிலாய்-இங்கு ஏற வருகையில் ஒருபடிப்பட்டு இருக்கிறானோ
அன்றிக்கே-2-ஜாம்பவதி போல்வார்க்கு பூப் பறித்து தொடா நிற்குமோ அறியேன் –
அன்றிக்கே-3-பணி என்று சகுந்தலையை உபேஷித்த துஷ்யந்தனைப் போலே
அறியாமை பாவித்து இருக்குமோ -அதுவும் அறியேன்
அன்றிக்கே-4-நா விலும் பல்லிலும் நீர் அற்று -என் செய்தாள் – என் பட்டாள் –
என்று கேட்கிறானோ
உக்தியிலும் கிரியையிலும் கொள்ளக் கடவது – அவன் படி நிச்சயிக்க ஒண்ணா விட்டாலும்
நமக்கு அவனை ஒழிய செல்லாது இறே –

கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே –3-6-3– நாலாயி:1200/4-அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் – நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம் அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து வார்த்தை சொல் என்றுமாம் –மிகச் சொல்லில் அவனைக் கிடையாது-அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் – நாம் முடிந்து பிழைக்கும் படி —

ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே –3-6-4- நாலாயி:1201/4-திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு
(சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் )
அன்றிக்கே -அறியச் சென்று உரை – உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய அவன் அறிந்து நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி சென்று சொல் என்றுமாம் —

கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -3-7-1–– நாலாயி:1208/1-சோரேண என்று இவனுடைய ஆத்மா அபஹாரத்தோபாதி யாய் இருக்கிறதாயிற்று
உடையவன் தன்னுடைய உடைமை கொண்டு போனதும் – என்னது என்று போந்த வாசனையாலே-உடையவன் உடைமை கொண்டு போனானே யாகிலும் காணும் பொழுதே எடுத்துக் போகையாலும் – கள்ளன் என்ற இது மமகாரத்தின் ஊற்றத்தாலே-
(மம ஸூ தா -மமகாரம் விட்டவனுடைய மமகாரம் இது குண சம்பூர்ணத்தால் சொல்ல வைத்ததே )காத்துக் கிடக்கிற தான் அறியாள் ஆகில் கொண்டு போனவனைப் போலே காணும் கேட்பது –

தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் —3-7-4-– நாலாயி:1211/2,3–உகவாதார் இருந்த இடத்தே -வெறும் கையே செல்லுமவன் உடைய ஊர் ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்
இடையனாய் பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்
எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –ஆழம் காலை மிதப்பு என்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால் தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-

தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -4-9-4-– நாலாயி:1331/2–சேஷ பூதன் சேஷியை ஆசைப் பட்டு ஏத்துகை முறை அன்றோ என்று இருக்கை அன்றிக்கே
இது தன்னை அவத்யமாய் உப பாதிக்கும் படியாக வந்து விழுந்தது–உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர் எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம் இப்படி விளைவது அறிந்தோம்  ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே-லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்–இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான் தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான் ஆறி இருக்கிறீரோ(அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே  –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே -4-9-7-
– நாலாயி:1334/1,2-சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்- (கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ )

விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே-4-10-8– – நாலாயி:1345/4-அங்கு உள்ளாருக்கு திவாராத்ரா விபாகம் பண்ண ஒண்ணாத படியாய் இருக்கும் ஆய்த்து இவை தான் ஒரு கால விசேஷங்களிலே உண்டாகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-அன்றியே இவருடைய உகப்புக்கு அவதி இல்லாமையாலே ஆகவுமாம்-உகந்த விஷயங்களில் எல்லா நன்மைகளும் உண்டாகத் தோற்றும் இறே –

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – –5-1-1-நாலாயி:1348/1-ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்-என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்-அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே-அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் 

மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் –5-4-9— நாலாயி:1386/2–தூரஸ்தனாய்
சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பு ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-பசுக்களை மேய்க்கும் அவனோ தான்-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற
பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்-ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை
என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   –அறிகிறிலேனே-கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை-என்னால் அறியப் போகாது – திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -நாள் மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – -5-5-5–நாலாயி:1392/3-ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது(தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம் -இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி-இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )நாம்  அறிய – இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
(தூறு வார வேண்டுமோ-ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர்
ஆஷேபமே இல்லையே )

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8--நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள் என்னால் பேசி முடிக்கப் போகாது  –ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால்-இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ-

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால் இதுக்கு மேல் என்னால் போக்கடி தேடப் போமோ

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – 5-7-6-நாலாயி:1413/3–அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும் அநந்தரம் திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து
திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – -–5-8-3--நாலாயி:1420/3-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே-சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – 5-8-4-
நாலாயி:1421/2,3–பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து அவனை இட்டு ரஷிப்பித்தாய்- ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது -ந ஷமாமி
நத்யஜேயம்-என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு–அவனை இட்டு இறே ரஷித்தது-தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே-தானே ரஷிக்க வல்லனாய் இருக்க- நம் கையிலே காட்டித் தருவதே என்று
இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது-இனி இருவருக்கும் அந்யோந்யம்
ரஷ்ய ரஷக பாவம்  இறே உள்ளது- பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே–முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும் பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –தன் கையிலே காட்டிக் கொடுத்தால் ரஷிக்க வேண்டுகிறது சேஷியினுடைய நினைவே நடக்க வேண்டுகை யாலே இறே- சேஷ பூதர் இருவருக்கும் வந்த விரோதத்துக்கு சேஷி உடைய முகம் இறே வாடுவது-

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – 5-8-9-நாலாயி:1426/3-அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது (பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )-பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )அடியேன் அறிந்து –
இவர் உடைய நான் இருக்கிற படி (நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம்
ஆழ்வாராதிகளுக்கு மாற்றியே உண்டே )

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்–5-9-8– – நாலாயி:1435/1-ஓர் இடைச் சேரி மாத்ரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய

அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் –5-10-9-
நாலாயி:1446/2,3-அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ சேஷ பூதர் ஆனவர்கள்
பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம் அனுபவியார்கள்-அறிதியேல் – சைதன்ய பிரசுரமாகில் –

அறிவு அரும் நிலையினையாய் – -6-1-6–நாலாயி:1453/3–சதுர் தச புவநேஸ்வரனான சதுர்முகன் தொடக்கமான ப்ரதானர் ஆனவர்களாலும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையாய்(யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத இத்யாதி )

அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி-6-2-4- – நாலாயி:1461/2–(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்
த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –-இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று

தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6— நாலாயி:1473/4–தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்-7-2-4- – நாலாயி:1561/3–சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து-அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
பரம பதம் போலே இடம் பெற இருந்து-என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள-இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை -7-3-3- நாலாயி:1570/1–பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே –(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் ) என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் -திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்–அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்-இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே –7-4-7 நாலாயி:1584/4–ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை அனுசந்தித்தேற்கு  –ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான
வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-2–நாலாயி:1609/4-வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று –
உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-3-நாலாயி:1610/4-நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-5-
நாலாயி:1612/3,4-இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல் பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-6-நாலாயி:1613/4-காலம் நீ இட்ட வழக்கு அன்றோ – உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்-அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு  அன்றோ
நீ இங்கே வந்து நிற்கிறது –

தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-9-
நாலாயி:1616/3,4–ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே- உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் –

உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே -7-9-3— நாலாயி:1630/4-சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

சிறு புலியூர் சல சயனத் தானாயனது  அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே-7-9-4- – நாலாயி:1631/4-கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி அவ்வதார்ரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் – அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே-7-9-7- – நாலாயி:1634/4-உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே -8-5-2– நாலாயி:1689/4-ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் –தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ-அவன் போனாலும் அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி
உண்டாகில் நான் ஜீவியேனோ-அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று –நாயகனோ வந்து அணைகிறிலன்-இனி எத்தைச் செய்வது –

கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே -8-5-6-– நாலாயி:1693/4-தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே-அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்-அன்றிக்கே-கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்-அன்றிக்கே
அந்த சந்த்யா காலமானது – கரிய நாழிகை -அந்தி  காலம் –ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  –இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே -8-5-7- நாலாயி:1694/4-இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள குழல் ஓசையுமாய்
என்னை முடியா நின்றது –(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )

தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே-8-5-8- – நாலாயி:1695/4–பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும்-கொடியதோர் கடு வினை அறியேனே –அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே-அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் –இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –(வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் -அம்பில் பட்ட பாடே போதுமே -இதுவே பெரிய நரகம் –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் )

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த-8-5-10- – நாலாயி:1697/2-அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீட்டைப் புத்தி பண்ணி அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  –

எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ–8-9-5– – நாலாயி:1732/2–என் ஸ்வாமி யானவனே – ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்-நித்ய ஸூரிகள் பக்கலில் போவதாகவும் நினைக்கிறது இல்லை –இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என்-

அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – -8-10-10-நாலாயி:1747/4-இவற்றை நிதியாகக் கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது – அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்-சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )-இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –

தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு –9-2-6- நாலாயி:1763/2–ஒப்பித்து இருக்கிற பெண்கள் உடைய நெஞ்சை தமக்கு அபாஸ்ரயமாக
உடையவர் போலே இரா நின்றார் –என்னால் ஒன்றும் சொல்லலாய் இருக்கிறது இல்லை –
தாமரைக் கண்கள் இருந்தவாறு –அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே –(நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – 9-2-7-
நாலாயி:1764/1,2–என்னால் இவர் படி பரிச்சேதிக்கலாய்   இருக்கிறது இல்லை –பணியும் என்னெஞ்சம் –என் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே என் நெஞ்சானது வணங்கி நில்லா நின்றது-இது என் கொல் தோழி--உன்னை அறியாமை வருவதொரு நன்மை இல்லை இறே எனக்கு நாம் இவரிடை யாட்டம் நினைத்து அறிவுதுமோ –பண்டிவர் தம்மையும் கண்டறியோம் –பழைமை யாலே செய்கிறது ஒன்றும் சொல்லவுமாய் இருக்கிறதில்லை –

மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – 9-2-9-
நாலாயி:1766/2,3–மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே    பள்ளி கொள்கிற ஆச்சர்ய  பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் –
கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள்-9-4-3- – நாலாயி:1780/2–நாயகன் பிரிந்து போகிற போது தோளில் இட்டதொரு மாலையிலே ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று – நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு இத் தலையை உதறிப் போன படி –நம்மாள் அங்கே நின்றதாகில் ஆசை அற்று வந்தால் அன்றோ நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ –நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –

நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – 9-5-6-நாலாயி:1793/2–அவர்கள் விலஷணைகள் அன்றோ – ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள் என் சொல்லாதார் –நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை –
நம்முடைமை நம் கையதாகில் அன்றோ நமக்கு ஸ்மரிக்கல்  ஆவது –அவர்களுக்கு ஸ்த்ரீத் வாதிகள் குறி அழியாது இருக்கையாலே சொல்லலாம் –நம்முடைய ஸ்த்ரீத் வாதிகள் நம் கையில் இல்லை –

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – –9-5-7-
நாலாயி:1794/3,4-அவன் பிரிவை உணர்த்தினான் – காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்-வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்-அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் –9-5-8- நாலாயி:1795/4-அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்-அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – 9-5-9–நாலாயி:1796/2-போனாலும் ஆறி இருக்கலாம் இறே போன ஊரைச் சொல்லிப் போனான் ஆகில் –அவன் சொல்லிப் போகாமை இல்லை –இவள் குறிக் கொள்ள மாட்டாமை இழந்தாள்-இத்தனை இறே-இங்கு இருந்த நாள் அவன் வாய் வெருவும்படி அறிந்து இருப்புதோமே-அத் தேசத்திலே என்னைக் கொடு போய் பொகடப் பாருங்கோள்   –

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – 10-2-2-நாலாயி:1859/2-ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் –அறிவு கேடரான நாங்கள் 

யாயும் பிறரும் அறியாத யாமத்து -10-5-8- நாலாயி:1895/1–பெற்ற தாயும் மற்று உள்ளவர்கள் ஒருவரும் அறியாத நடுச்  சாமத்திலே –

அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை-10-8-7- – நாலாயி:1928/2-முருடராய் இருப்பார் அன்றோ உம்முடைய் செவ்விக்கு இட்டுப் பிறந்தவர்கள் – ஆசை உடையார்க்கு கிடையாது இறே –இரவு கலக்கிற போதே நினைவு ஒன்றும் -செயல் ஒன்றுமாய் -இருந்தது என்னும் இடம் அறிந்தோம் –உம்மை நீர் அறிந்தால்-காலத்தைக் குறித்தோ போவது-எங்களை அறிந்தால் -சொன்ன போதிலே வர வேண்டாவோ-எல்லே –உறவு முறையாரைப் போலே
நீர் கவிழ்ந்து இருக்கிறது என் – இங்கே வாரீர் –இது என் இது என் இது என்னோ –உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –

அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் –—10-9-2- நாலாயி:1933/2–கோ கோபீஜ ந சங்குலம் -அதீவார்த்தம் -என்கிறபடியே பசுக்களும் இடையரும் நோவு படாத படி ரஷித்த ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ -அறிகிறிலேன் 

அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் -10-9-5– நாலாயி:1936/2-ஆயுதம் எடுக்க ஒட்டாமே அத் தேரின் மிடுக்கையே கொண்டு
(சித்திரத்தேர் வலவன் அன்றோ ) கேவலம் போக வரிய வீர ஸ்வர்க்கத்துக்கு போவார் இல்லாமையாலே புல் எழுந்து கிடந்தவற்றை பெரு வழியாம்படி கண்ட ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ செய்தது –

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-
– நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
  –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே
-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு  பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே
—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – 11-4-8-
நாலாயி:1989/1,2–முன்பு ஒரு காலத்தில் சர்வ லோகங்களும்(ஸூர்ய லோகத்துக்கு மேல் உள்ள ஏழு லோகங்களும் ) அஞ்ஞான அவ்ருத்தங்களாக துடங்கிற்று இது விடுகிறது இது என்று அறியாதே அஸ்த்தானே நமக்கு வந்ததிது என்னோ  என்று லோகத்துக்கு வெளிச் சிறப்பைப் பண்ணும் தேவதைகளும் அகப்பட அறிவு கெட – யோவை வேதாம்ச ப்ரஹிணோதி தஸ்மை (ஸ்வேதாஸ்வர )-என்று தான் முதலிலே அறிவிக்க கைம் முதலான இவ் வேதங்களும் அபஹ்ருதமாக –

அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி -11-5-4- நாலாயி:1995/1–மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு-தயிரை வருந்திக் கடைந்து உறியிலே  சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே -11-6-2-– நாலாயி:2003/4-மிடுக்கை உடைத்தான திண் தோள் ஆகிற பெரிய கையாலே பஹிரண்டங்களையும் அகப்படுத்தின காலம்-இவ்வர்த்தம் அறியாதார் உண்டோ –இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி
இவனைக் கை விட்டி கோளோ-லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதா யத்தம்
என்னும் இடம் அறியீர்களோ –

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – 11-6-10-நாலாயி:2011/2

அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – -11-7-8-நாலாயி:2019/4-ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் –மேன்மையால் குறையற்று-சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனை –நினைத்து  அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும் இரண்டையும் அறியாதவர்கள் –

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–திருக் குறும் தாண்டகம் –10-அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ(மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* -இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்* பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே)(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-)(வடிவழகிலே யீடுபடுமவர்கள் ”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே அதிகமான ஆவல் இருப்பதனாலும்”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.)

அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – 4-நாலாயி:2055/3–ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை –
யமாத்மா ந வேத -என்று யாவன் ஒருவனை ஆத்மா அறியான் – அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி ) அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –அந்தரத்தில் -வ்யாபிகிறான்-அயன சப்தம்-அகடிகடதாக சாமர்த்தியம்–வியாபிக்கும் இடத்தில் வியாபிக்கும் காலத்தில்-அந்தரத்தில்–தேவர்க்கும் அறியல் ஆகா —என் இடம் வ்யாபித்ததை என்னாலே அறியல் ஆகா –யா  ஆத்மா வ ந வேத –யா பிரத்வி ந வேத -ஞானம் இருக்கும் ஆத்மா கூட அறிய முடியாதே–அப்ரமேயன்-தேவர்களுக்கும் விசேஷித்து -சொன்னது -ஞான சக்திகளால் அதிகம் கொண்டவர்கள்–என்பதால்–

என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – 10-நாலாயி:2061/2-நான் அடைவு பட -சாஸ்திர க்ரமத்திலே -ஓன்று அறிவேனோ –1-அமாநித்வாத்யாத்ம குணங்களை அறிவேனோ(ஸ்ரீ கீதை 13-7 ஸ்லோகம் தொடங்கி-13-11-வரை -20 ஆத்ம குணங்கள் )2-கர்ம யோகத்தை அறிவேனோ-3-ஜ்ஞான யோகத்தை அறிவேனோ-4-உபய சாத்யமான பக்தி யோகத்தை அறிவேனோ –நான் எத்தை அறிந்தேன் –உறங்குகிறவனுக்கு விடிந்தால் போலே விஷயாந்தரங்களை ஒழியவே ஓன்று அறியாதே திரியச் செய்தே உன்னுடைய வைலஷண்யத்தைக் காட்டக் கண்டேன் இத்தனை போக்கி –
சாதனாந்தரங்களை எங்கே கண்டேன் -என்கை –

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் -12- நாலாயி:2063/1-தன் கார்யம் தலைக் கட்டின படி இது –என் கார்யத்தில் இவள் நின்ற நிலை இது –இவளுடைய ஊணும் உறக்கமும் போலே காணும் -தனக்கு உத்தேச்யம் –உண்கிறிலள் -என்கை அன்றிக்கே
முதலிலே ஊணை மறந்தாள் என்கிறாள் சம்ச்லேஷ தசையில் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -என்றும்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்றும் இருக்கையாலே-ஊண் இல்லை –தத் விஸ்லேஷத்தில் உபவாச க்ர்சையாய் இருக்கையாலே ஊண் இல்லை –

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
———3–-நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே நீயும் இவற்றை அளந்து கொண்டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில்  – சூருருவின் பேயளவு கண்ட பெருமான்– இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார் ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று-நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை-உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –அறிகிலேன் -நீ யளவு கண்ட நெறி –நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்-மகாபலியாலே பூமியை அளந்து-உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு – பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீகரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –

பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த –4-
நாலாயி:2085/2,3–இந்த்ரியங்களை விஷயாதிகளில் போகாத படி முட்ட நியமிக்க ஒருவருக்கும் முடியாது –அறிவானாம் –
ஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு ஷேபோக்தி இருக்கிறபடி

அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி -14- நாலாயி:2095/1-ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய் பின்ன ருசிகள் ஆகையாலே -அவர் அவர் -என்று அநாதரித்துச் சொல்லுகிறார் –தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –கர்மம் அடியாக வந்த ருசியும் அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –சாஸ்திரத்தின் பின் செல்லார்களே-ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்–இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே-உன்னைக் கொடு

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -22-– நாலாயி:2103/1-இது ஜகத் பிரசித்தம் அன்றோ-நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா-சிஸூ பாலனும் கூட அறியானோ

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய –45- நாலாயி:2126-ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ-இவர்களால் அறியப் போகாமைக்கு மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –அதுக்கு மேலே –அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க நாமே அவனை அறியப் புகுகிறோம்-அங்கன் அன்றிக்கே அது கிடக்க நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் – அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

ஆரே அறிவார் அது நிற்க நேரே –56- நாலாயி:2137/2-என் நாயகன் ஆனவனை யார் தான் அறிவார்-இவருக்கு அவன் தானே காட்டின படி –அவ் விடை யாட்டம் கிடக்கிடீர்-அறிவார் கிடக்கிடீர்-அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ –சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –

பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு -60-
நாலாயி:2141/3,4–ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்-உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது-அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது-இத்தால் அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி-சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து –84-
நாலாயி:2165/1,2-எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர் அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ-ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-

படி கண்டு அறிதியே பாம்புஅணையினான் புள் – நாலாயி:கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – 85-நாலாயி:2166–அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அன்றிக்கே அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்-படி -என்று திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –பாம்பணையினான் கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே
புட்கொடி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு-87 – நாலாயி:2168/4-நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின- திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –நாவலம் சூழ் நாடு –ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி – பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் – சப்தாதி விஷயங்களினுடைய  பொல்லாங்கையும் அறிந்து – சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு  இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –ஸ்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ்ஸூ-அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி-அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –காண்பரே –தம்முடைய நோயாசை -நப்பாசை –காரோத வண்ணன் –அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –காண்பரே –இது நிச்சயம் –

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – 16-நாலாயி:2197/1,2–பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் – ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே இவ்வாத்மா தனக்குக் கூறுபட்டது சேஷத்வம் –எம்பெருமானுக்கு கூறுபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் – ஆத்மதாஸ்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் – சம்யக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்-இப்படி பிரமாண பிர சித்தியாலும் ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான் வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்-மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும் ருசி மாத்ரமே உடையானாகை என்றும் ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்-ஓன்று பட்டரது-ஓன்று திருமலை நம்பியது-ஓன்று ஆழ்வானது-

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று –36-
நாலாயி:2217/2,3-அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும்
பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது பின்னையும்  பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்-நாம் இனி அறிவுடையார் போன வழி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது –அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன்-நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் – அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்-எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-

தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் –38- நாலாயி:2219/2-எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு – நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து –இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–-எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய திரு நாமத்தை யேத்துகை-சாங்க அத்யயனத்தைப் பண்ணி-வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்-அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்-ஒத்தினுடைய சங்கரஹம் லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் –40– நாலாயி:2221/3,4-பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை – ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்களால்  வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை-மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே-பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை -அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும் பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே-பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே-வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்

செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த-52- – நாலாயி:2233/2–மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் – அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால்  சாலவதிகன் –அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –அந்த  ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –அவன் அகவாய் அறிவார் யார் –புறவாய் அறிவார் யார்–எம்பெருமான் தன்னைக் கூடு பூரித்து வைக்க அறிவாராய் பெறு கிறிலோம்-

அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது -53– நாலாயி:2234/2-அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு-சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-
நாலாயி:2236/3–தேவரை ஒரு காலமும் மறந்து அறியேன் -கண்டால் இழவு மறக்கும் படி இருக்கை-அதுக்கடி-ஸ்ரவண மநந  நிதித்யாசன அநந்தரம் பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதியாலேயோ   மறவாது ஒழிகிறது -என்னில் –எல்லா ஜன்மங்களிலும் -எல்லா அவஸ்தைகளிலும்-தேவர் எதிர் சூழல் புக்கு நின்று இவன் நம்மை மறவாதே பெற்றிடுவானுக்கு என்று அனுசந்திக்கிற இவ் வனுசந்தானம் ஒரு நாளும் மறவாத ஸ்வ பாவத்தாலே இப்பொழுது நினைத்த படியாலே எல்லாக் காலமும் மறந்து அறியேன் -என்கிறார்-எம்பெருமான் விடாதே இருக்கையாலே மறக்க விரகு இல்லை –
என்னுடைய ஞானம் குறைவற்று இருக்கை அல்ல -உன் நினைவாலே –இவனுடைய ஞானமும் பண்டாரத்து நின்றும் புறப்பட வேண்டி இருக்கிறபடி –தர்ம பரதந்த்ரமான மாத்ரமே யல்ல -ஆத்மாவினுடைய தர்மபூத ஞானமும் பரதந்த்ரம் –சத்தை பராதீனமான போது ஞானமும் பராதீனமாய் இருக்கை-இத்தால்-ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியாலே யன்று -நீ யாகிற சித்த உபாயத்தாலே என்றபடி –நாம் செய்த அம்சம் செய்தோம் இறே -எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ என்ன-பிரபல பிரதி பந்தங்களைப் போக்குகைக்கு ஈடான பரிகரத்தை யுடையாய்-அதுக்கு மேலே உன்னை அறிவுதி -என்னை அறிவுதி-என்னாலே உன்னைப் பெற ஒண்ணாது –உன்னாலே உன்னைப் பெற வேணும் என்னும் இடம் நீயே அறிவுதி –சர்வஜ்ஞன் சர்வ சக்தி அல்லையோ –இத் தலைக்கு அஜ்ஞ்ஞான அசக்திகள் போலே அத்தலைக்கும் ஞான சக்திகள் ஸ்வரூபமாகை- உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு வைகல்யம் காண்கிறிலேன் -ஆன பின்பு பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக்   கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்-ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-எண்ணப் பண்ணி அருளவும்  வேணும் – கண்டால் பிறக்கும் ஸூ கத்தையும் பண்ணித் தந்து அருள வேணும் அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று–-60- – நாலாயி:2241/3–ஜகத் காரணாமாய் இருப்பது என்னும் இடத்தை அறிந்தவர்கள் கிடீர் –எல்லார்க்கும் சத்தை அவன் என்று அறிந்த வைஷ்ணவர்கள்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார் ஆகிறார்-ஸ்வ தந்த்ரன் என்னா ஜகத்து கை விட்டுப் போம் –எளியன் என்னப் பிழைத்துப் போம் –அருமை சொல்லுகிறவர்கள் ஜகத்தை வெளிப்படுத்துகிறார் –அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்-62- – நாலாயி:2243/1-இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் –அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை-அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது
என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து –நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன்  –

போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த-72- – நாலாயி:2253/1-காலம் அறிந்து –ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –

ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – 76-நாலாயி:2257/3–ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன்-உபாய  வஸ்து ஏது என்ன –
காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே -இப்படி உபாச்யனுமாய் –
இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை-கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில் இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை -87-– நாலாயி:2268/1-இன்றாக அறிகிறேனோ –இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் –பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை -88– நாலாயி:2269/1-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –

நூல் கடலான் நுண் அறிவினான்–மூன்றாம் திருவந்தாதி 11- – நாலாயி:2292/4-கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன் 

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – -மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -12-நாலாயி:2293/1-வ்யதிரிக்த விஷயங்களில் மனஸ் ஸூ போகாதபடி-அறிவாகிற தாளைக் கொத்துத் திண்ணிதான ஸ்ரவண ஜ்ஞானத்தை மூட்டி –

இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய -56-– நாலாயி:2337/2–இறையினுடைய திரு நிறமானது வெளுத்து இருக்கும் சிவந்து இருக்கும் கருத்து இருக்கும்
பச்சென்று இருக்கும் என்று கொண்டு ஆராயும் இடத்தில் நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது –எண்ணாதே பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில் நிற்கும் இத்தனை –ஸ்ரீ யபதியினுடைய சம்ருத்தியைச் சிலராலே பேசப்போமோ- அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ-அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை – அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ என்றபடி –

வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் -59-– நாலாயி:2340/1-வாழும் பிரகாரம் அறிந்து கொண்டேன் –சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத்து இது வென்று
வ்யுத்பத்தி பண்ணினேன் –புத்தி நாசாத் ப்ரணச்யதி -கீதை -2-62/63-என்னும் படியே –
சப்தாதி விஷயங்களை விநாச்யத்துக்கு உபாயம் அறிந்த இத்தனை இறே முன்பு
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் மொழி -6-9-9-என்னும் படியே – பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
யதி ஜீவிது மிச்சசி -சுந்தர -21-20- மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப – விநாசத்தை பண்ணினாலும் விட ஒண்ணாது –

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-நான்முகன் திருவந்தாதி –1- நாலாயி:2382/3-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –ஆழ்  பொருள்-மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3
— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை

————–

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-–:2386/4-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-இத்தை புத்தி பண்ணு

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி-13- – நாலாயி:2394/1-மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு மோஷத்தைத் தருவிக்கும் மெய்யான உபாயமும் வேதை க சமதி கம்யனுமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-

மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம்–50- – நாலாயி:2431/2–எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும் கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும் அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும் காரணம் அறிந்தேன் –திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை –70– நாலாயி:2451/3-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன் இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த –73- நாலாயி:2454/1–சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –

தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை–77 – நாலாயி:2458/1-என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –

பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் -89-– நாலாயி:2470/1—பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன் பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –-அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் –
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் –
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை –
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –
நாலாயி:2477–ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நான் அழகிதாக அறிந்தேன் –

காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-7- – நாலாயி:2484/4-குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன் சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –

பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – 8-
நாலாயி:2485/2,3-தன் உடைமைக்கு  தான் செய்யும் அளவன்றிக்கே பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்

ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே -10– நாலாயி:2487/4-இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்-அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ  – நாவலோ நாவல் -என்றால் போலே –என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில் உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த-15- நாலாயி:2492/2-தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும் அயலார் என்கிறாள் — பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் -அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது-அறியிலும் அறியக் கூடாது என்று இருக்கிறாள்-
இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே , அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா – இன்னார் என்று அறியேன் என்பாரை போலே
கிட்டின போது சம்சயமாய் , உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–
பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே -34– நாலாயி:2511/4-க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம்  – பலம் அவன் தன்னாலே இருந்த படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை-41– – நாலாயி:2518/1–சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்
சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே —ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று –பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி-இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி வாடை என்று இந்த வியக்தி -இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண -49-– நாலாயி:2526/2-இவ்விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது – இவ்விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் –56- நாலாயி:2533/3–தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது – இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே சம்ஸ்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக (மறைத்து )சொல்லுகிறாள்  –அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை –74- நாலாயி:2551/2-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக –  நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –

தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – 83-நாலாயி:2560/4-இத் தையலுக்கு  உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –
இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே – முடியிலாகாதே -இவளுக்கு   பிழைக்கல்  ஆவது -அறிகிறிலேன்-

எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து -1- நாலாயி:2578/11–அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி – அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்- சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்-அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும் இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் – த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் – திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

கடவுள் நிற்ப புடை பல தான் அறி-தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல்
தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–-பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை-பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று

இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் -3-பெரிய திருவந்தாதி- நாலாயி:2587/2–புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்-த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்-என்னால் பரிக்ரஹவும் போகாது த்யஜிக்கவும் போகாது

முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய்
– 6-நாலாயி:2590/2,3-அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி
–14-நிறத்தால் கரியனாய் யுள்ளவனை-ஆழ வநுபவிக்க அறியாராய்(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் ) ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்–நீ யார் போய்த் பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே-ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து-அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார் உனக்கு அண்ணியளோ பூதனை அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் – ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து) உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —

சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – -16-நாலாயி:2600/4–நீ இப்படி எளியையாய்-அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

தொல் உருவை யார் அறிவார் சொல்லு -18- நாலாயி:2602/4–இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் ) காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே பழையதான உன்னுடைய வடிவை -ஸ்வரூபத்தை-வேறு சிலர் அறியப் போமோ-நீயே சொல்லு-பரிபவம் பண்ணின போதோடு பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ – நீயே சொல்லு

சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே -19- நாலாயி:2603/1-பகவத் விஷயம் நன்று என்றும் விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும் விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு (விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம் -எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் – 20-நாலாயி:2604/1-நாம் அறியாதே காணப் புகுதல்-அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால் அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27–இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ-திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ-செறி கழல் -என்கையாலே-திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்-நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே திரு முடியிலே முத்து உண்டாகையாலும்-அடியிலே படியை அளந்தன முத்துக்களோ முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ-உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் சாத்தின முத்தாதல்

அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் -31– நாலாயி:2615/1-புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய் ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்

யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ -33– நாலாயி:2617/1-ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே அவனை அறிந்ததாய் விடும் –இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும் ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால் இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே -37-நாலாயி:2621/1-வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றேயுக்தமான அறிவுடையாராகை கிடையாது-ஆமாறு -ஆறு -வழி-நாம் நல்ல அறிவுடையோம்-(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்-வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை-நெஞ்சே-அறி கண்டாய்-சொன்னேன் உனக்கு அத்தை-1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்-2-போக்யனுமாய்-3-வகுத்தவனுமானவனை-அறி என்று சொன்னேன்-இது சிலருக்குச் சொல்லுமது அன்று-இத்தைப் புத்தி பண்ணு

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு –75-
நாலாயி:2659/3,4–உபய விபூதியை யுடைய நீயோ
விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்–சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
-நாலாயி:2672/19-–கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது- ஸர்வ பல பிரதத்வம்முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை– – நாலாயி:2672/21–தேவர்களாலும் அறிய முடியாத பெருமை-தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும் ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் – அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது -அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்- அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது ––நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –நாலாயி:2672/28-புருஷகாரம்– –தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் – எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/45-நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்-உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து – நாலாயி:2678/5–பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவாரும் சொல்லும் வார்த்தைகளை கொள்ளேன் –கேட்கைக்கு பரிகரம் இல்லாமையாலே

ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3-தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்–இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன் இந்த்ரன் படி கேட்கிறாய் வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இறே
அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும் மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் -கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகேனோ – நாலாயி:2684–இவள் நோய் படும் காட்டில் உங்களையும் மறக்க வேணுமோ
உங்கள் வயிற்றில் பிறந்தாரை அவர தேவதைகளால் நோவப் பார்க்க ஒண்ணுமோ-நாய் தீண்டிற்று இல்லை –ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள் -உமக்கு அறியக் கூறுகேனோ – இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும் நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று – நாலாயி:2685/10-இவனுக்கு வேறு ஒரு நினைவு இல்லை -உறக்கமோ -என்று தோன்றக் கிடந்தபடி –அறிவுற்று –சில அசித் பதார்த்தங்களுக்கு அறிவு குடி புகுந்தால் போலே இருக்க உறங்கி உணர்ந்தானாக இருந்தபடி –அவள் போனவாறே உறங்கி உணர்வார் உணருமா போலே உணர்ந்த படி –
நடுவே வந்து அவள் புகுந்தாலே யாகிலும் உறங்கினவன் உணர்ந்தான் -என்று அவளுக்கு தோற்ற கிடந்தான் என்றபடி – அறிவு குடி புகுந்து மூரி நிமிர்வது கொட்டாவி கொள்வதாய் யுணர்ந்த படி –

தண் வாடை சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2–நஞ்சூட்டின ஆயுதம் போலே குளிர்த்தியை யுடைத்தான வாடை–சோரவும் பண்ணா நின்றது
மறுக்கவும் பண்ணா நின்றது-திரள சோரப் பண்ணா நின்றது என்று சொல்லும் இத்தனை ஒழிய செய்கிற வகைகள் பேச்சுக்கு நிலம் அல்ல –

காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க – நாலாயி:2704/2–இங்கன் சொல்லலாமோ – பத்து மாசம் ஆறி இருந்திலளோ ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் அப்படி இரா விடில் போல்லாதாகாதோ -என்னில் பேர் ஆழமான கடல் போலே ஆசை கரை புரண்டு போரா நிற்க – பொல்லாங்கு சொல்லுவார்கள் -என்று ஆறி இருக்கப் போமோ – ஆறி இருந்தவர்களுக்கு ஆசை அளவு பட்டதாம் இத்தனை இறே –
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே ஆற்றலாமோ அவ்வடிவைக் காண வேணும் என்னும் ஆசை கரை புரண்டு இருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞானத்தால் ஆற்றினார் உண்டாகில் அவர் ஆசை மட்டமாம் இத்தனை இ றே –

இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார்  என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5–இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே ஸூகோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை – நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை
ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –உண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2-மோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே இதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள் அதுக்கு அடி அறிவு கேடராகை –மேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி அல்ப மனாக்கள்

தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4–அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –

அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3-சொல்ல வாய் வேம் தன்மை அறியாதார் – தலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும்  என்று அறியாதார் –குழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –ப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –அந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –

முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3-ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள்  ஆகில் தவிருகிறிகோள்  – பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
– நாலாயி:2756/4,5-அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில் பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம் இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-வெறும் தரையாகப் போந்தேன் வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி-

மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4-சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று கடலைச் சரணம் புக என்றால்  போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள்  -என்று பட்டர் –

தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1-சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே – அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-மருங்கே நின்றது அறியாதே அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்-அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-என்னுடைய நெஞ்சும் அறிவும் –ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர் அறிவை இட்டு வைக்கைக்கு கலமான  என் நெஞ்சும் –

தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2-சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே வையும்படியாய் இருக்காய்- பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்
அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை – நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –

என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4-மடலிலே துணிந்த படி –என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –
உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று  தாயே தந்தையே  யில் ஆசைப் பட்ட படியும்-ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்-என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்
கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6–ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று-ஒருப்பட்டு மோகன்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்
வெருவாதாளிலே-5-5–
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்
தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்
கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்
சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –
தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு  பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்-தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்
கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று
நாழிகை ஊழியில் பெரிதான படியும்
காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்
தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்
மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே
திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-
தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4-இவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்-நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்-இனி அதுக்கு உனக்கு என் -என்ன-லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்-பொரி புறம் தடவி தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –

உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1–நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)-அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு-பரகால நாயகியாகிய நான்-முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.

உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-2- – நாலாயி:2792/4-விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடைய-திருவடிகளிலே –இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு- திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது- இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-

அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே -19- நாலாயி:2809/4-இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –அன்றிக்கே –இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –ஸ்ரீ எம்பெருமானார் –அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும் செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து – கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி 

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு -25- நாலாயி:2815/2-தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே -57- நாலாயி:2847/4-எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –பிரத்யஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி –த்யஜபட தூரதரென தான பாபான் –என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது .-இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே
ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து – தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின் இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்– தெரிந்து விட வில்லை வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–

உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே -59– நாலாயி:2849/4-தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று –அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு –அறியத் தக்கார் இல்லை –பிபேத் அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே- அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –இங்கனம் உயிர்களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-
யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும் உபயோகப் படுத்திக் கொள்வதனால்-
உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .

ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே-79- – நாலாயி:2869/4-பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே –அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே தலைக் கட்டிற்று –சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத ஸூஹ்ருதர்-ஆகையாலே அவர்களுக்காக ஸ்ரீ அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –ஸ்ரீ இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை தேடுவது – அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க-தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின் கிடைக்கப் பெறாமையின் – மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை-நல் அறிவைத் தரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே என்று இரங்குகிறார்-அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது சொன்னாலும் புரியாது . இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார் 

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் –85- நாலாயி:2875/2–வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் – வேத வேத்யே பரே பும்சி -என்றும் – வேதே ராமாயனே புண்யே -என்றும் ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே–என்றும் சொல்லுகிறபடியே-வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் – ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் – என்கிறபடியே நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை –
பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே –வேதத்தின் உட் பொருளும் -அதன் உச்சியில் மிகவும் பிரகாசிக்கும் ஸ்வயம் பிரகாசமான வஸ்த்வுமான ஸ்ரீ இறைவனை வேதியர்கள் ஓதி இருந்தும் -அவர்களால் ஓதப்படுவது ஸ்ரீ இறைவனைத் தெரிவிக்கும் நூலாய் இருந்தும் – நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று அவ் இறைவனை அறியாது புறம்பே தொண்டு பட்டு உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .-பிரதானம் ஆகிய அசித்துக்கும் -ஷேத்ரஞ்ராகிய சித்திற்கும் -அவனே பதி என்று அறியாமையாலே
புறம்பான உலகியல் இன்பங்களிலே உள்ளம் ஈடுபட்டு -அதற்காக கண்ட கண்ட வர்களுக்கு தொண்டு பட்டு உள்ள வேண்டியதாயிற்று -வேதம் கற்றது பயன் அற்றதாய் ஆயிற்று –-ஸ்ரீ இறைவன் நாதன் -நாம் சேஷப்பட்டவர் -என்று அறிந்து -அவன் நல் தாள் தொழ வில்லையானால் –கற்றதனாலாய பயன் என் கொல் –சதுர்வேத தரோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி வேதபார பராக்ராந்த சவை ப்ராஹ்மண கரதப -என்று எந்த பிராமணன் நால் வேதங்களையும் நெஞ்சில் தாங்கி கொண்டு இருப்பினும் ஸ்ரீ வாசுதேவனை அறிய வில்லையோ –அவன் வேதச் சுமையின் பழுவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராமணக் கழுதை யாவான் -என்றபடி குங்குமம் சுமந்த கழுதை போல் ஆயினரே –இது என்ன பேதமையோ-என்கிறார் .

தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – 97-
நாலாயி:2887/3,4–தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –
விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே –பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து – இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தெளிந்து இருக்குமவர் இவர் ஒருவரே என்று இருக்கிறார் காணும் ஸ்ரீ அமுதனார் –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –2903-1-1-5–அவரவர்-சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது–தமதமது குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது-அறிவறி-அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது-வகைவகை-மார்க்க பேதங்களாலே-அவரவர்-அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை இறையவர் என-அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று-வடி யடைவார்கள் ஆஸ்ரயிப்பவர்கள்-அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – —புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8- – நாலாயி:2906/3,4–தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய ஒண்ணாத நிலையை யுடைத்தான-ஆகாசம் முதலாய் யுள்ள சமஷ்டி ரூப ஸமஸ்த வஸ்துக்களும்-வரிஷ்டமான காரணமாய் அவற்றை நிஸ் சேஷமாக உப சம்ஹரிப்பதும் செய்கையாலே வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய்க் கொண்டு பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் பரனானவன்-ருத்ரனும் -ப்ரஹ்மாவும் என்று பிரசித்தராம்படி-அத்விதீயமான புர த்ரயத்தை தஹித்தும் தேவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தும்-அண்டாந்தர வர்த்தி லோகங்களை சம்ஹரித்து அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும் அவர்களுக்கு உள்ளே ஆத்மாவாய் நிற்குமவன் –

அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே-1-3-3- – நாலாயி:2923/4–தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கையாலே நாரணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன்-சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ-பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி-நித்ய ஸூரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்-ப்ரஹ்மாதிகள் துர்மாநத்தாலே அறிய மாட்டார்கள் சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்-இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான்-1-3-4- – நாலாயி:2924/2–அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இறே-எம்பெருமான் உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்-அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான் ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற -1-3-7-– நாலாயி:2927/1-மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ-அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்-1-5-3– – நாலாயி:2945/3-ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை -1-5-7– நாலாயி:2949/1-இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று-ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே-அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார்-அல்ப ஜ்ஞானத்தை யுடையவன்-ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –அவன் அதிகராலும் அபரிச்சேத்யன்-ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இறே-பர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இறே 

மிகும் சோதி மேல் அறிவார் எவரே –2-2-5- நாலாயி:3024/4–இவனை ஒழிய வேறே சிலர் உண்டு என்று சொன்னால் வைதிகராய் இருப்பாரில் இசைவார் உண்டோ -என்கை
இவ் உபநிஷத் பிரசித்தி வேறு ஒருவர்க்கு உண்டோ என்கை-வைதிக –க — தஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்-

உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-
– நாலாயி:3026/3-அத்யகாதமாய் ஒருவருக்கும் தெரியாதே
அறிந்த தோற்றம் -ஆச்சர்யமான மானஸ வ்யாபாரமானது ஒருவருக்கும் அறிய ஒண்ணாது
அவனுடைய பாஹ்யமான வியாபாரமும் நிலம் அன்று மானஸ வியாபாரமும் ஒருவருக்கும் அறிய நிலம் அன்று என்கிறது –

அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-
நாலாயி:3032/3,4–வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்
ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே–ஸ்வாமி-இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்-மாதா பிதா பிராதா -இத்யாதி
நாராயண -என்கிறார்-நீ செய்தன -பேசவும் போகாது -நினைக்கவும் போகாது -நீ செய்யும் என்னும் அத்தனை-உபகரித்த நீயே அறியும் அத்தனை –நான் அதுக்கு இலக்காய் குமிழ் நீர் உண்ணும் அத்தனை -என்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
–2-3-3– – நாலாயி:3033/3–கண் அன்பு செய்வித்து-வைத்தாயால்-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் –அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்-அடியேன் என்கிறது -நமக்கு அர்ஹமான வஸ்து இப்படி எளிவரவு படுவதே –என்று செய்து அருளின அத்தனை இறே என்றுமாம் –இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்-
ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-போக்யதை மிக்கு இருக்கிறபடி –
மேல் தம்மை வசீகரித்த படிக்கு நிதர்சனம்–தன் நெஞ்சை ஒளிப்பாரைப் போலே பிராட்டியும் அறியாத படி –சேர்ப்பால் போலே போக்யதை மிக்கு இருக்கிறபடி –தன்னைத் தாழ விட்டு அர்த்தியான படி – நிலம் என்றால் -அவன் முகம் பாராமையாலே மா வலி என்றான் -முதல் பேர் சொல்லுவார் இல்லாமையால் அவன் பார்த்து உனக்கு வேண்டுவது என் என்ன மூவடி என்றான் இப்படி அந்நவிதமான பேச்சாலே வசீகரிக்கை-சுக்கிராதிகள் இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -என்ற வார்த்தை செவிப் படாத படி தன் பேச்சாலே வஞ்சித்தான் –அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்

பட்ட போது எழு போது அறியாள் விரை – 2-4-9-நாலாயி:3050/1–உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்
ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்

பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே-2-6-2- – நாலாயி:3065/4-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் – இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-3084-ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –திண்ணம் அறி-இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு-அறிந்து அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –
2-7-12– நாலாயி:3086–ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள்-தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய்-அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –
எம்மானை என்னாழி வண்ணனையே-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்களாய் -தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்- தரமறிய ஆமோ–என்று அந்வயம்-

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன் – -2-9-9-
நாலாயி:3107/1,2-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-

இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே-3-1-10- – நாலாயி:3130/4-பிறையை ஸீரோ பூஷணமாக உடையவன் ஆகையால் போக பிரதன் ஆகையும்-ஜடாதரன் ஆகையால் அந்த போகம் தபஸாலே சாத்தியம் என்கையும்–சதுர்முகோ ஜாயதே -என்று உன்னாலே ஸ்ருஷ்டனாய் ருத்ரனுக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மாவும் ஷேத்ரஞ்ஞதயா ஸம்ப்ரதிபன்னனான இந்திரனும்-நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ –

கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ-3-4-2- – நாலாயி:3155/1-பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் – இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்

எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே -3-4-9— நாலாயி:3162/4-இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் -3-10-10-– நாலாயி:3229/2-அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்

தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –-அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இறே இருப்பது-இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – -4-4-3-நாலாயி:3266/1-தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –

ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற -4-4-5-– நாலாயி:3268/3-சர்ப்பம் என்று மீள மாட்டு கிறிலள்-இது என்னாய் விழக் கடவது -என்கிறாள் -இவளைக் கிடையாது ஒழிய அவனைக் கிடையாது-அவனைக் கிடையாது ஒழிய உபய விபூதியும் கிடையாது -சர்வ சம்ஹாரமாக புகுகிறதோ என்கிறாள்

ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே -4-5-4-– நாலாயி:3278/4-ஆவி -நிருபாதிகமான சர்வாத்மா –ஆத்மன ஆகாசஸ் ஸம்பூத–சர்வாத்மா –என் ஆவியை -அத்யந்தம் நிஹீனனான என்னை செய்த ஆற்றையே.-யான் அறியேன்-விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் – சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப் பேறாகத் தலையால் சுமப்பதே-யான் அறியேன் -உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- –
நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே-4-8-5- – நாலாயி:3312/4–இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன்-பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு.-‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி-இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு?-ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு;  என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
–4-8-6- நாலாயி:3313/1,2–பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது

ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவுஅணையாய் அம்மானே -4-9-2– நாலாயி:3320/3-சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன் -என்றுமாம் 

அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை-4-9-6- – நாலாயி:3324/2-தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார் -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம்-ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார்-அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் –இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே

ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல –4-9-9-
நாலாயி:3327/2,3-நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி-தேவர்களே யாகிலும் நீ நினையாதாரை உன்னை அனுபவிக்க ஒண்ணாத படி விஷயங்களை காட்டி அலமந்து திரியப் பண்ணுதி-அரவணையாய்!-திருவடிகளிலே கூட்டும் கொள்ளும்படிக்கு உதாஹரணம் – அடியேனும் அஃது அறிவன்; லோக வேதங்களில் பிரசித்தமான உன்னுடைய இந்தப்படியை நானும் அறிவன்

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே -4-10-6-– நாலாயி:3335/4-மிகவும் வல்லவன் –அதிசயித சக்திகன் -சேதனர் பண்ணின புண்ய பாபங்கள் கலசாத படி பல அனுபவம் பண்ணுவிக்க வல்லவன் –மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்
மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –

பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் -5-3-1-– நாலாயி:3363/3-அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது 

அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் -5-3-5– நாலாயி:3367/2–வடிவைக் கண்டால் -ஸர்வஸ்வாதானம் பண்ண இருக்கிறானோ –ஸர்வஸ்வாபஹாரம் பண்ண இருக்கிறானோ என்று தெரியாதபடி ஆச்சர்ய ஸ்வ பாவன்–என்னுடைய ஆத்மாத்மீயங்கள் உன்னது என்று சொல்லி வைத்து இத்தலையில் உள்ளவற்றை எல்லாம் –ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினவன் –ஆகிலும் 

மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -5-4-3– நாலாயி:3376/4–அபிமதர் வாரா விட்டால் முடிகை இ றே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – —அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே-5-5-11- – நாலாயி:3395/4–ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களால் அறிய ஒண்ணாது ஒழியப் பெற்றோமே என்கிறார் -இக்குடியில் உள்ளார் ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களோ என்னில்-இவளால் மீளலாம் என்று மீட்கப் பார்த்த போதே -தம் தம்மாலே பெறவுமாம் -என்று இருந்தார்களாம் இறே–பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள்

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – 5-7-1-நாலாயி:3407/1–அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இ றே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று

அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3– நாலாயி:3409/4–சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் -5-7-8-
நாலாயி:3414/1,2–அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே -5-8-6– நாலாயி:3423/4–ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் –6-2-1- நாலாயி:3462/3–உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வை கள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய -6-2-3— நாலாயி:3464/1-உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – 6-2-5-நாலாயி:3466/1-உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல்-

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – 6-9-7-நாலாயி:3545/4–சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-
– நாலாயி:3546–அறிவி லேனுக்கு அருளாய் -உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்

சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன் அடி-7-1-4- – நாலாயி:3564/1-உறுவது இன்னது என்று நான் அறியாதபடி பிரமிப்பித்து -பகவத் பிரவணமாவது -அதுவே உறுவது -விஷய ப்ராவண்யம் அனர்த்த ஹேது என்று விவேகிக்க ஒண்ணாத படி மனசைக் கலக்கி

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – 7-2-1-நாலாயி:3572/1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – 7-2-10-நாலாயி:3581/1-இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -7-5-3– நாலாயி:3607/4-இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-4- நாலாயி:3608/1–தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமவர்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்

மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – 7-5-8-நாலாயி:3612/4-மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன்

மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – -7-5-9-நாலாயி:3613–அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்-மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு-வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – -7-5-10-நாலாயி:3614/1-ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு –அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ –

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப -7-6-6– நாலாயி:3621/1-நீயே வந்து கிட்டுமது ஒழிய நான் சாதன அனுஷ்டானம் பண்ணிக் கிட்டும் விரகு அறிகிறிலேன் -கிட்டுக்கைக்கு இச்சை இறே இத்தலையில் உள்ளது -நீ வந்து கிட்டினால் விலக்காமைக்கு வேண்டுவது உண்டு-பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – -7-7-1-நாலாயி:3627/2,3–ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை –ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே-அன்றியே பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –அறியேன்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இறே இவள் பிரதிபத்தி இருப்பது –முதல் உறவு பண்ணினவை தானே இறே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள்

மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே –7-7-2- நாலாயி:3628/2,3-இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை -எங்களைக் காட்டில் இவ்விஷயத்தில் அவஹாகித்த நீ சொல்லிக் காணாய் என்ன

கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் -7-7-3- – நாலாயி:3629/2,3-அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை-அறியேன்--நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்

அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – 7-7-5-நாலாயி:3631/4–என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்–இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் –7-7-7- நாலாயி:3633/1,2-தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இ றே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இ றே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது

கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே –7-7-9- நாலாயி:3635/4-உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த–7-8-11- – நாலாயி:3648/2-ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காண ப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – 7-10-10-
நாலாயி:3669/1,2—திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -உம்முடைய நினைவுக்கு சர்வேஸ்வரனை சாக்ஷி யாக்கைக்கு ஹேது என் என்னில்-நினைவுக்கு வாய்த்தலையில் இருக்கிறவன் அறியானோ -மனசாலே செய்யுமவற்றில் அவன் அறியாத வஞ்சகங்கள் ஒன்றும் இல்லை

அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – 8-1-4-நாலாயி:3674/2–அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்

சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் — 8-1-7-நாலாயி:3677/2-தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் – அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –

வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-1-8- நாலாயி:3678/4- -பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறிலேன்

ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என்-8-2-3- – நாலாயி:3684/2-யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ 

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி -8-3-1- நாலாயி:3693/2–உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இ றே இவர் நினைத்து இருப்பது-அறியகிலாது -அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்

பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-3-9– நாலாயி:3701/2-சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை-யார் அறிகிற்பார்-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ

அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – 8-4-4-நாலாயி:3707/4–திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக-மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-ஆத்மாநம் -மானுஷம் மன்யே என்றும் -அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் -மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –
அடி இணைய யல்லதோர் அரணே-–அவன் திருவடிகள் அல்லது ஒரு ரக்ஷகம் இல்லை -அடி இணை யல்லதோர் அரண் –பிறிதில்லை எனக்கு–

தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை-8-4-6- – நாலாயி:3709/2–ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னை பரிச்சேதிக்கப் போகாது –

புகழுமாறு அறியேன் பொருந்து மூஉலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – 8-4-8-நாலாயி:3711/4-அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே-8-7-2- – நாலாயி:3738/4-நாலாயி:3739/1-தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் –8-7-3- என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் -அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய்-பெறாப் பேறு பெற்றானாய்– -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –

அவ் வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே-8-7-7- – நாலாயி:3743/4-அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் -8-7-8-– நாலாயி:3744/1- –மற்று அருள் அறியேன்-வேறு ஒரு அருளும் அறியேன் –என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –

நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே –8-8-5- நாலாயி:3752/4-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை-இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –
கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் -சாங்க்யத்தில்-தத்வ சங்க்யான க்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3–:3805-அறிந்தனவாய் இருக்கிற  துர்ஜ்ஜேயார்த்த ஸூசகமான வேதங்கள் சர்வேஸ்வரனை துர்ஜ்ஜேயன் என்று அறிந்த -மற்று அறிந்தாராய் இருக்கிற ரிஷிகளும் சம்சார துரித பேஷஜம்  என்று அறிந்தார்கள் –வேதங்களுக்கும் ரிஷிகளுக்கும் அறிய நிலம் இல்லாத எம்பெருமான் தன்னை எனக்கு பூர்ணமாக அறிவித்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே –9-3-9- நாலாயி:3811/4-உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் –

அறிவது அரிய அரியாய அம்மானே -9-4-4- நாலாயி:3817/4-தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –

கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்-9-6-3- – நாலாயி:3838/4-முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – -9-6-4-நாலாயி:3839/1-உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறிலேன் –தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இறே –

அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -9-8-3-– நாலாயி:3860/4-திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத்திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் -அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் –9-8-4- நாலாயி:3861/1-பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் -பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் 

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ -9-9-1- நாலாயி:3869/4-வ்யதிரேகத்தில் தென்றல் முதலான பதார்த்தங்களைத் தப்பிச் சென்று புகுகைக்கு இடம் காண்கிறிலோம் -ஷாம காலத்தில் பஹு பிரஜராய் இருப்பார் தங்கள் பசி கிடக்க பிரஜைகள் அலைப்புக்கு அலைந்து புகலிடம் அறியாதா போலே -நான் ஜீவித்த படி ஜீவிக்கின்றேன் -இவற்றைக் கொண்டு புகுமிடம் காண்கிறிலேன் -என்கிறார் –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ -9-9-2- நாலாயி:3870/1-மேல் வர புகு கிற பாதக வர்க்கத்தை நினைத்து சொல்லுகிற வார்த்தை யாதல் -கீழ் நலிந்த வற்றுக்கு அஞ்சி அவ்வச்சம் பின்னாட்டுகிற அனு பாஷாணம் ஆதல்-

யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் –9-9-9- நாலாயி:3877/4–அது பாதகம் ஆகிறபடி எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை-

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் –10-2-3- நாலாயி:3904/3–சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்-என்னுமாறு போலே –அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை –திண்ணமாக அனுபவத்தாலே கை கண்ட நாம் இதில் வாசி அறியாத நீங்களும் இழக்க ஒண்ணாது என்று உங்கள் நெஞ்சில் படும்படி சொன்னோம்-பல நாள் துன்பப் பட்டு கரை கண்டவர் ஆகையாலே -நாம்-என்கிறார்-இனி கர்மங்களுக்கு கட்டுப் பட்டவர்களாய் படுமவர்கள்
சொன்ன வார்த்தையை நினையாமையாலே படுகிறார்கள் அத்தனை நம் மேல் குறையற நாம் சொன்னோம் -என்பார் -சொன்னோம் -என்கிறார்பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –

திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து-10-2-5- – நாலாயி:3906/3-வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம்–10-2-8- – நாலாயி:3909/4-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம்–திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்-இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று -நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் – -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –அவ்வடிவினைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தினைக் உடைய நீங்கள் அறியும்படி சொன்னோம்

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான-10-2-9-நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர் -என்று-அவன் அருளிச் செய்த வார்த்தையை இப்போது இவர் தாம் அருளிச் செய்கிறார்-இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே-எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் –ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – 10-3-2-நாலாயி:3914/2–அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்-

நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் 10-7-1--நாலாயி:3957/3-நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே

ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் –10-10-3- நாலாயி:3992/2-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்ன -ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன் தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – -10-10-11-நாலாயி:4000/4–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -வாழ்ச்சியும் -தாழ்ச்சியும் -பத பிரயோகங்களும் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

December 24, 2025

வாழ்ச்சியும் -தாழ்ச்சியும்

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே
–3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–-இரண்டாம் திருவந்தாதி23-த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –-ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் ––இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –
-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை   யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் கேழ்ந்த அடித்தாமரை மலர்மேல் –கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை-இத்தால்
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை –எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –அவளுக்கு போக்தாவானவன் –அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும் கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை–-அடித் தாமரை யாமலர் – திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –இத்தால் நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி-கேழ்த்த வடித் தாமரை மேல் மங்கை மணாளன் அடித் தாமரையா மலர் வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வாங்கத் தழும்பாமே
என்று அந்வயம் –

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி 11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு
-என்று அந்வயம்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவசரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

———————————-

வாழ்ச்சி

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2-உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது-அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ- என்றான் இறே மாரீசன்-ஸ்ரத்தயாதேவோ தேவத்வமஸ் நுதே -என்னக் கடவது இறே-ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம் அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ-வடிவாய் ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்-நின் வல மார்பினில் சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இறே-வடிவு இருப்பது வல மார்பினில் அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை-வாழ்கின்ற மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி இறே போக்யதை இருப்பது மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது – யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது
மங்கையும் –ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல் மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல் பல்லாண்டு கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்-வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது-சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி -நாய் தொழில் –என்னக் கடவது இறே-சேஷத்வம் துக்க ரூபம் உலகில் -அபிமத விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே —
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -உபாசக நிஷ்டர் –அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும் துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் – என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –

பட்டு -என்பது-உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு-ஓடினேன் ஓடி –பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –கிருபாவசப் பட்டு -கர்மவசம் தவிர்ந்து -வாழாள் பட்டால் நின்றீர் கூழாள் பட்டு திரிந்து என்றவாறு-உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இறே இருப்பது–வாசுதேவாஸ் சர்வம் இதி மகாத்மா -ஸ்ரீ கிருஷ்ண சித்தாந்தம் -ஸூ துர்லப – பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -நம்மாழ்வார் -திருவவதாரம் -திருக் குருகைப் பிள்ளான் சாதிப்பாராம்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார் தேட்டமாய் இறே இருப்பது –இந்த யதி–ஆல் -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை – துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்-இவர்கள் அபிப்ராயத்தால் வாழும் –புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும் மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை

தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – -4- 4-1 –பகவத் பாகவத கைங்கர்யங்களுக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து –
வேத பிரதிபாத்ய வஸ்துவை கண்ணாலே கண்டு அனுபவிக்கிறவர்கள்
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னக் கடவது இறே

செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – 4-4- 2-செற்றம் ஆவது பொறாமை-அதாவது-பர சம்ர்த்தய அசஹதை-ஒன்றும் இல்லாமையாவது – முதலிலே அதிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை-கீழ் சொன்னவை எல்லாம் உண்டாகிலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது –வண் கை யினார்கள்-உதாரமான கொடையை உடையவர்கள்-அதாவது ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும் இடத்தில்
கொள்ளுகிறவன் சிறுமையையும் கொடுக்கிறவன் சீர்மையையும் பாராமல் கொடுக்குமவர்கள் -என்கை த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஒக்கும் இறே இவர்களுக்கு இது –வாழ் திருக் கோட்டியூர்-இத் தேச வாசம் தானே இவர்களுக்கு வாழ்வு
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் (நாச்சியார் )-என்றும்-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் ( நாச்சியார் ) -என்றும் சொல்லக் கடவது -இறே-இப்படி இருக்கிறவர்கள் வர்த்திக்கிற திருக் கோட்டியூரில்

கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து -3-8- 7– நாலாயி:303/3-இவளைக் கொண்டு தன்னுடைய குடி வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து –அதாவது –இவள் முகப்பாக தன்னுடைய க்ர்ஹ க்ர்த்யம்  எல்லாம் நடத்தி -என்கை-கோப குலத்துக்கு ஸ்வாமி-என்று தன் மகிஷி யானமை தோற்ற பட்டம் கட்டி-பண்டே பட்டம் கட்டி -தனக்கு மகிஷிகளாய் இருக்கிறவர்கள் முன்னே-அந்த புரக் காவலில் வைக்குமோ-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் –  4-4-6-பூதம் ஐந்தோடு –-இத்தால் பஞ்ச பூத ஆரப்தமான தேஹத்தை சொல்லுகிறது–மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு வுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -இறே  –இத்தோடே-வேள்வி ஐந்து –பஞ்ச மகா யக்ஞங்கள்-புலன்கள் ஐந்து –சப்தாதிகளான விஷயங்கள் ஐந்து-புலன் -என்று புலப்படும் விஷயங்களை சொல்லுகிறது-பொறிகள்-என்று-ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது-இவற்றால் ஏதம் ஒன்றும் இலாத –-இவற்றோடு கூட இருக்கச் செய்தே தோஷம் இன்றிக்கே இருக்கை-( நான்கிலும் –பூதம் ஐந்து-வேள்வி ஐந்தும்-புலன்கள் ஐந்தும்-பொறிகள் ஐந்தும்-மூன்று-ஏதம்-ஏதம் இன்றிகே இருக்கை-ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஆக 12- விஷயங்கள் சாதிக்கிறார் மேல் )
பூதம் ஐந்து ஏதம் ஓன்று இலாத  –-ஏதம்-தேகத்தை தனக்கு என்று இருக்கை-ஏதம்
ஏதம் இன்றிகே இருக்கைஈஸ்வரனுக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை
ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-வேள்வி ஐந்தும் ஏதம் ஓன்று இலாத–ஸ்வர்காதி சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம்-மோஷ சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம் இன்றிகே இருக்கை-பகவத் பாகவத ப்ரீதி என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-புலன்கள் ஐந்தும் ஏதம் ஓன்று இலாத –சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களை தனக்கு என்று இருக்கை-ஏதம் இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத-இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை -ஏதம்-பகவத் விஷயத்தில் மூட்டுகை -ஏதம் இன்றிக்கே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-வண் கையினார்கள் –அதாவது ஒவ்தார்யம்-அதாவது பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி -என்கிறபடி-அப்பதார்தங்கள் நசியாதபடி வாங்குகையும்–இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கொடுக்கையும்

ஈஸ்வரனையும் உள் படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்-அதற்க்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது- –துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றைதான் துற்றிய தெற்றெனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தானே உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது -பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு (நாச்சியார் )-என்று ஸ்ரீ பாஞ்சசன்ய ஆழ்வாரையும் உள்பட கர்ஹித்தாள் இறே பெண்மகள்-அவ்வளவும் அன்றிகே –சாதுக் கோட்டியுள் கொள்ளப்படுவாறே – என்கிறபடியே – தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச சந்யத்தை பத்ம நாபனோடு கூட்டி வைத்தது-அவதாரத்தில் உண்டான இழவு தீர இறே –அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போல் குறையாமல் கொடுக்கிறது –வாழ்–கண்ணாலே கண்டு அனுபவிக்க பெற்றவர்கள்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -திருப் பாற் கடல் நாதன் -என்பதிலும் –திருக் கோட்டியூர் நாதன் -எனபது இறே ஏற்றம்

திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:366/2–4-4-7–வேதத்துக்கு திருத்தம் ஆவது-பகவத் ஸ்வரூபாதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கை
நான் மறைரயோருக்கு திருத்தம் ஆவது –இதில் இவர்கள் செய்வது-குண விக்ரக அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை-இராப் பகல் ஏத்தி –வேறு அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாமல் நடக்கும்-வாழ் –
அநந்ய பிரயோஜனர் ஆகையாலே இது தானே பலமாக இருக்கும்-திருக் கோட்டியூர்
அவர்கள் வர்த்திக்கிற தேசம்-

தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/2-4-4 -10-யஜஸ் கரமான  வார்த்தைகளை படைக்கும்-அதாவது-இருந்தார் இருந்த இடங்களிலே -தங்களுடைய ஒவ்தார்யம் கிருபை முதலான குணங்களை சொல்லிக் கொண்டாடும்படி யாகை –இவர்கள் புகழை நச்சி செய்யாது இருந்தாலும் தன்னடையே வந்து உண்டாமிறே இது-உதாரமான கையை உடையவர்கள்-அதாவது-உள்ளது எல்லாம் பரார்த்தமாகவே விநியோக்கிக்க வேணும் -என்னும் ஒவ்தார்ய கையை  உடையவர்கள்-என்கை-வாழ் திருக் கோட்டியூர் –இப்படி இருந்துள்ளவர்கள் இத் தேச வாசமே தங்களுக்கு வாழ்வாகக் கொண்டு வர்த்திக்கிற திருக் கோட்டியூர்-

சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4–4-8-2 –வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் –பகவத் சமாராதனத்தையும்-அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே –

புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று –– 5-3-3- –- நாலாயி:455/3-புனத்தில் புதுத் தினையை முறித்து -ஹவிஸ்சுக்கு காட்டி –புதியது அமுது செய்யப் பண்ணி இப்படி அமுது செய்யப் பண்ணினால் வேண்டிக் கொள்ளும் படி ஏது என்னில்  -இந்த தேசம் தான் –அமுது செய்திடப் பெறில் பின்னும் ஆளும் செய்வன் -என்னும் தேசம் இறே –

வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3-2-10-வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-5-1-என்னுடைய சோகத்து அடியான அக் குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும் நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே-எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-

காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் – நாலாயி:547/4–—5-3-பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –
காமரம்
 -என்ற பண்ணைப் பாட – அதுக்கு செவி தாழ்த்து-மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே

பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – –59-நாலாயி:553/2ஒ குயிலே என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே அவ் விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்-ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்–9-4- – நாலாயி:590/1-பரந்த பொழிலிலே வர்த்திக்கிற குயில்காள் உங்களுக்கு சோலை நோக்கித் தருவார் யார் –
ஏக தேச வாசித்வமே ஹேதுவாக பாதகமாகா நின்றி கோளீ

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – 12-8–நாலாயி:624/1-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-பசுக்களை மேய்க்கையை உகந்தான் –-அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ்
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் –
-2-1– நாலாயி:658/1,2–தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-ய ஆத்மதா பலதா-என்னுமா போலே – தன்னையும் கொடுத்து –
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்- திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1-மெய் என்றும் -பொய் என்பது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது – நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ – திருச்சந்த விருத்தம்-68-நாலாயி:819/4–சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்-ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே-

பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –திரு மாலை-13 நாலாயி:884/4-இந்த்ரியங்களுக்கு குடி மக்களாய் வர்த்திக்கிற லீலா விபூதி –எல்லா அவஸ்தையிலும் தப்பாத படி தங்களுக்குள் அகப்படுத்திக் கொள்ள வற்று ஆகையாலே-பொறி -என்று இந்த்ரியங்களை சொல்லுகிறது-நரகம் –அவிவிவேகிகளுக்கு நரகம் யமனுடைய தண்டல்
அறிவுடையார்க்கு நரகம் –சம்சாரம்–லீலா விபூதி கட்டடங்க தரிசாய்ப் போம் இறே –நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்னக் கடவது இறே-

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – -23-நாலாயி:894/4-இவ் விஷயத்தை கண்டு அனுபவிப்பதற்கு முன்பாகிலும் மறக்கவுமாம் –கண்டு அனுபவித்த பின்பு இனித் தான் எந்த பிரகாரத்தாலே மறப்பது –வாழ்கேன் –இவ் விஷயத்தை விட்டுப் போய் மணலை முக்கவோ –அனுபவித்தால் மறக்க ஒண்ணாது-ஏழையேன் ஏழையேனே-நானோ அத்யந்த சபலனாய் கிட்டினால் அனுபவிக்க மாட்டே-முன்பு இதர விஷயங்களிலே அகப்பட்டு சிதிலராய் இருப்பார் இப்போது பகவத் விஷயத்தில் அகப்பட்டு புறம்பு கால் வாங்க மாட்டாதே இருப்பார் –அது கர்மத்தாலே வந்த சைதில்யம்-இது விஷய வை லஷண்யத்தாலே வந்த சைதில்யம்

வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் -6-– நாலாயி:932/2–லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்-வண்டு வாழ் பொழில் –வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை -–2-1-3– நாலாயி:1050/3-வண்டுகள் ஆனவை மது பாநத்தைப் பண்ணி மத்தமாய் கொண்டு வாழா நின்றுள்ள திருமலையைத் தனக்கு நித்ய வாஸத்துக்கு ஸ்தானமாகக் கொண்டு உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு ––ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு -வெறும் அண்டம் என்னில்
ஸ்வர்க்காதிகளிலும் ஏறும் என்று மீமிசை அண்டம் என்று பரம பதத்தை சொல்லுகிறது
மஹா ஆகாசம் பரம ஆகாசம் -என்னக் கடவது இறே உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –

அருள் நடந்து இ ஏழ்உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – -3-10-1-நாலாயி:1238/2,3 -இப்படி இருக்கிற இவன் அல்லது லோகத்திலே வேறு ஆஸ்ரயணீயர் அல்ல என்று ஏழு வகைப்பட்ட லோகங்கள் உள்ளாறும் அடைய ஆஸ்ரயிக்க தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான
இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –பெரும் புகழ் வேதியர் வாழ்-தரும் இடங்கள்-
இவனை அனுபவிக்கையே யாத்ரையாம் படி இருக்கையாலே மிக்க புகழை உடைய ப்ராஹ்மனர் வர்த்திக்கிற இடங்களை உடைத்தாய் –வாழ் தரும் இடங்களிலே உண்டாய்
அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள்
மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள
அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது –

அள்ளி அம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – 4-10-7-நாலாயி:1344/3 -அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல் அன்றிக்கே அளியை அள்ளி என்னுதல்  -அத்தாலே தண்ணளி யாய் குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து ஹரி ஹரி என்னுமா போலே திரு நாம  சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து (மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து அங்குத்தை திர்யக்குகளுக்கும் –

பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே – 5-1-8-நாலாயி:1355/4 -வேதத்தால் அக்னி த்ரயத்தையும் வளர்க்கும் மாறாத புகழால் ஔதார்யத்தால் ஷமையால்
இவை எல்லா வற்றாலும் மிக்கு இருந்துள்ள பிராமணர் வர்த்திக்கிற தேசம் –புள்ளம் பூதங்குடி தானே  –

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை மருவுமூர் போல்- 5-2-8-நாலாயி:1365/1 –கலைகளானவை பிணை யோடு -மானோடே அணைந்து வாழா நின்றுள்ள
திரு நீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத் தேசமும் தனக்கு உண்டாய்  இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –புருஷோத்தமன் தான் இந்தப் பெண்கள் உடன் ஸம்ஸ்லேஷிக்க குருகுல வாசம் திரு நீர்மலை மான் இடம் கற்றுக் கொண்டானாம்

முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – 5-4-6-நாலாயி:1383/2 –யசோதை பிராட்டியைப் போலே அலங்கரித்துக் கொண்டு கலையை உடுத்து அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடைய-யசோதை பிராட்டியில் இவளுக்கு ஓர் ஏற்றம் -வன்மை யாய்த்து-யசோதை பிராட்டியைப் போலே பரிவு எல்லாம் தோற்ற ஒசழக்காக தூக்கி எடுத்து இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன்–இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள் –

துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – -–5-4-7-நாலாயி:1384/2 –திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் -என்பர்கள்-

நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே -6-7-7- நாலாயி:1514/4 இவையே யாத்ரையாம் படி கை வந்து இருக்கிற  பிராமணர் வர்த்திக்கிற தேசம்-தங்களை நோக்குகைக்காக-தங்கள் உடைய வித்யா  வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –(ஸ்வரூப ரக்ஷணம் -மங்களா சாசனம் செய்தல் இது அன்றோ வாழ்கை )

நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே6-7-8-– நாலாயி:1515/4 -தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – -–6-7-10-நாலாயி:1517/1 -அநந்ய பிரயோஜனரான பிராமணர் வர்த்திக்கிற திரு நறையூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூரணன் ஆனவனை  –

மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – 6-8-10-நாலாயி:1527/1 –சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை  –இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா –  -7-6-7-நாலாயி:1604/1 -ஸ்வ வ்யதிரிக்தர் உடைய ஐஸ்வர்யத்துக்கு-நிதான பூதையான பிராட்டி-அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும் படியான மார்வு படைத்தவனை –-ஈசேசி தவ்ய வைஷம்ய நிம்னோன் நத மிதஞ் ஜகத் நமஸ் ஸ்ரீ ரெங்க நாயக்யை யத்ப்ரூவி ப்ரமபேததா    -என்னக் கடவது இறே-

ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே – 8-5-5–நாலாயி:1692/4-ஆதித்யன் ஆனவன் தான் தோற்றின கடலிலே புக்கு அஸ்தமிக்க-ஆஸ்வாச கரனான அவனை இழந்து பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற பிராணங்களை முடிப்பதாக அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –

பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2-தமப்பன் தாய் புத்ரர்கள் உறவு முறையார் சம்பந்திகள் என்று இங்கனே பற்றிக் கொடு நிற்கிற
பந்தகமான யாத்ரையை –மாதா பிதா ப்ராதா -என்கிறபடியே அவன் ஒருவனே சர்வ வித பந்துவாய் இருக்க சோபாதிக பந்துக்களை நிருபாதிக பந்துக்களாக நினைத்து போருகிற பந்தகமான யாத்ரையை அனுசந்தித்து வெறுத்து ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவுக்கு இது அவத்யாஹம் என்று புத்தி பண்ணினாய் ஆகில் –


நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று – 10-3-3–நாலாயி:1870/3-கூற்றமாய் வந்த படி கண்டு அஞ்சி – நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று -10-3-7– நாலாயி:1874/3-வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய   அவன் பக்கலிலே ப்ராவண்யம் – இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –

ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – -11-8-1-நாலாயி:2022/3 – நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ –சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-ஆறு பெருகித்  தன் வேரை அகழ்ந்து   பொகடா நின்றால்-பேர நிற்றல் பரிஹரித்துக் கொள்ளுதல் கூப்பிடுதல் செய்வது அறியாது இறே-பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும்
பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் – பயமே இறே இவனுக்கு உள்ளது –அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )-நன்றும் அஞ்சுவன் –(திருவாய் )-மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில் என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –

ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே – நாலாயி:2039/4-த்ருடம் இன்றியே அப்போது போயிற்று இப்போது போயிற்று என்றும் மின்னிலும் நிலை அற்று இருக்கிற இச் சரீரத்துக்கு பூண் கட்டவே தேடுவர்கள் 

தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த -மூன்றாம் திருவந்தாதி—100– நாலாயி:2381/2 -திருத்துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் – மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவனான தானே –போக உபகரணமான திருத்துழாயை யுடையவன் தானே முயங்கும் முயங்குகை -தழுவுகை –-அபி நிவேசித்து சம்ச்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –இப்படி இருக்கிற தான் –அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே 

வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே — 72– நாலாயி:2549/4-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று இதுவும் போழ்க-வாலிமையாவது சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது-அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்-இத்தால் போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – -16-நாலாயி:2806/4-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –

மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் – 96-நாலாயி:2763/1 இது விளைத்த
மன்னன் –-இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –நறுந்துழாய்-இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்-வாழ் மார்பன் –தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –

மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் –141- நாலாயி:2787/7 -ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய் தன்னை வாழ்வாகவும்
துணையாகவும் தோழனாகவும் தூதனாகவும் உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று – 2-3-1-நாலாயி:3031/1 —ஊன் என்று சரீரமாய் -வாழ்க்கையாவது வர்த்திக்கிறதாய் -சரீரத்திலே-வர்த்திக்கிற – வசிக்கிற உயிரே!
இவ் விளியால்,
-பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? மாம்ச பிரசுரமான சரீரத்தில் இருந்து வைத்து வாழுகிற உயிரே சரீரத்தைப் பற்றி வாழ்ந்து போந்த உயிரே -என்றுமாம்-பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று -மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம்.–இவ்விளியால்,‘நெடு நாள்-பிராகிருத போகங்களை – இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ,-அப்ராக்ருத போகத்துக்கு- அவ்வுலக இன்பத்துக்குக் கை தர நிற்பதே!’ என்ற தொனிப் பொருள் தோன்றும்.-இப் பொருளில் வாழ்தல் – அனுபவித்தல்.–வாழ்கை -வர்த்தனமும் விஷய ஸூக அனுபவமும் -நித்ய முக்தர் போல் பகவத் அனுபவ ஏக ஸூகமும்

தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் – -–2-3-5-நாலாயி:3035/3 -எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே -பிராட்டி-ஏக அஷ- ஒற்றைக் கண்ணள், -ஏக கர்ணி- ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், தனியேன்’-என்கிறார் – எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை -நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு

அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள ––2-5-1- நாலாயி:3053/2 -அழகிய மாலை வாழா நின்றுள்ள முடி -வாள் -என்று ஒளியாய் -அழகிய மாலையும் ஒளியையும் உடைத்தான் திரு அபிஷேகம் என்றுமாம் –-‘வாண்முடி’ என்பது பாடமாயின், வாள்-என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான – ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள்-தாமம் -தேஜஸ் ஆகவுமாம்-இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் அருளிச் செய்வர். -இனி, இதற்கு எம்பெருமானார்,-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்-அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.

போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே
-3-1-6– நாலாயி:3126/3
–வேதங்களும் கூட ஏங்குவது இளைப்பதாகா நிற்க நான் இச் சேர்த்திக்கு பாசுரமிட்டு ஏத்தவோ –பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று வாழா நின்றுள்ள திருத் துழாயை திரு அபிஷேகத்திலே உடையவனே-திருத் துழாய்ப் பூ முடி சூடி வாழா நிற்கிறது -இவ்வொப்பனை என்னால் பேசலாய் இருந்ததோ –சிந்து பூ மகிழும் -விஷ்வக் சேனர் எடுத்து திரு வேங்கடவனுக்கு சமர்ப்பிப்பார் என்கிறார் –-பூவிலே வர்த்திக்கிற பிராட்டி உன் சுவடு அறிந்த பின்பு அப்பூ நெருஞ்சி முள்ளாம் படி மார்பு படைத்தவனே —பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –
இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ ––சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –3-2-4– நாலாயி:3135/4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

———————————-

மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ4-1-5- – நாலாயி:3235/4-நீல ரத்னம் போலே ஒளியை யுடைத்தான திரு மேனியை யுடையவனாய்-ஆனபின்பு பக்தா நாம் என்று இருக்குமவன் உடம்பை பற்றுங்கோள்-ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -ஸூ லபமாய் நிரவாதிக தேஜோ ரூபமான வடிவை உடையவன்-நம்-ஆஸ்ரிதரான நமக்குத் தன்னை அனுபவிப்பிக்கும்-மாயவன் –ஆஸ்ரித விஷயத்தில் செய்தது போராது என்று இருக்குமவன்-பேர் சொல்லி வாழ்மினோ.–ஆச்சர்ய பூதனுடைய திரு நாமங்களைச் சொல்லி ஆனந்திகள் ஆகுங்கோள்-திரு நாமத்தைச் சொல்லி நிரதிசய போகத்தில் அந்வயின்கோள் –செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே-கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்

ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை -–4-9-8– நாலாயி:3326/2 –பஞ்ச பூதங்களையும் -சமேத்ய அந்யோன்ய சம்யோகம் என்கிறபடியே த்ரிவ்ருத்திகரித்து-சமைத்து வைத்த-ப்ரஹ்மாதிகளுக்கு போக ஸ்தானமாய் -ஈஸ்வரோஹம் -என்று வன்னியம் செய்கிற தேசமாய் அத்விதீயமான வை லக்ஷண்யத்தை உடைத்தான் அண்டமாகிற அரணின் நின்றும் புறப்பட விட்டு – புக்காருக்கு புறப்பட ஒண்ணாத அரண் இறே

தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு–5-7-3- – நாலாயி:3409/3 –வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்-நித்ய ஸூரிகளை போலே திரள் திரளாக பகவத் குண அனுபவம் பண்ணி வர்த்திக்கிறவர்கள்-இத் தலையில் சாதனமும் இல்லை -செய்யலாவதொரு பிரதியுபகாரமும் இல்லை என்று பகவத் குண அனுபவமே யாத்ரையாய் இருக்குமவர்கள்

வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே–5-8-6- – நாலாயி:3423/3 –விஸ்லேஷ கந்தம் இல்லாத படி உன்னை அனுபவிக்கை யாகிற ஸ்லாக்யமான புகழை யுடையவர்களதான -திருக் குடந்தை -பழையதான புகழ் என்றுமாம் -எனை நாள் அகன்று இருப்பன் என்ன வேண்டாதவர்கள் -விஷய சந்நிதி தனக்கும் அவர்களுக்கும் ஒத்து இருக்க அவர்கள் வாழுகிற படி எங்கனே என்னில் -தம்மைப் போலே கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்

பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் —–6-3-6- நாலாயி:3478/2 -ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.-தவ்வை – திருமகள் அல்லாதவள்.-திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,-தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.

மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – -6-3-10-நாலாயி:3482/3 -மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்-பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

நிற்கும் நால்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் -–6-5-4- நாலாயி:3498/1–அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் -நித்தியமான நான்கு வேதங்கள்.-நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம்.-ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ.–வேதங்கள் தங்கள் இட்ட வழக்காய் செல்லுகையாலே வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள்-வாழ் தொலை வில்லி மங்கலம்-வேத தாத்பர்ய பூதனானவனைக் கண்டு நித்ய அனுபவம் பண்ணுகிற வூர் -(காட்சி இருந்தாலே வாழ்ச்சி தானே )–ஸ்வாத்யாயாத் யோகம் ஆஸீத -என்னும் அளவு அன்றிக்கே -யோகாதி ஸ்வாத் யாயமா மநேத் -என்று ஆரூட யோகமாய் இருக்குமவர்கள்-“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்” என்னுமளவன்றியே,–ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழே–ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு
மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் ––6-5-8– நாலாயி:3502/2-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர்

ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் ––6-10-4– நாலாயி:3553/1-அ ஸூ ரர்கள் உடம்பில் அன்றிக்கே அவர்கள் ஆயுசிலே யாயிற்று அம்பு தைப்பது –இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை-

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள் கொடுக்கும் – -–6-10-11–நாலாயி:3560/1-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-சேஷபூதர்கள் -உங்கள் உத்தேஸ்யம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக் கிருத்தியராய்ப் போங்கோள் என்று,-அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.-கொடுத்த -என்னாமல் -கொடுக்கும் வர்த்தமானம் -இப்பாசுரம் அநுஸந்திக்கும் நமக்கும் இப்பேறு உண்டு 

பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே
–7-10-3– நாலாயி:3662/3,4-அவனுடைய கல்யாண குணங்களை பாடா நின்றுள்ள நாலு வேதங்கள்-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் -ஷடங்கங்கள் இவற்றை பயின்றவர்கள் -வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் -நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் -எஃகிக் கரை கண்டு இருக்குமவர்கள்.
போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்.–ஒக்கத்தை யுடைய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையிலே புக்கு அங்கு உள்ள வைஷ்ணவர்களோடே கூடி அனுபவிக்க காலம் எல்லாம் இங்கனே யாக வற்றோ –

திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் —–8-3-7-– நாலாயி:3699/2-திருப் பரிசாரத்தில் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ண வேணும்-என்-திரு வாழ் மார்வற்கு-அதுக்கு மேலே பிராட்டியோட்டை சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேணும் –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்ற இளைய பெருமாளை போலே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் படி யாயிற்று இங்குத்தை இருப்பு-என்-திரு வாழ் மார்வற்கு-என் ஸ்வாமி நி சந்நிதி யாகையாலே சொன்ன வார்த்தை விலை செல்லும் கிடீர்-ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய்

மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே –
–8-4-6- நாலாயி:3709/3,4-ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கடவராய் பிரதானரான மூவரும் செய்யக் கடவ காரியத்தை ஓர் ஒருத்தரே செய்ய வல்லராம் படி யாயிற்று இவர்கள் சக்தி இருக்கும் படி-அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன்
வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8- – -9-1-8-நாலாயி:3788/3–அவன் குணங்களை அனுசந்தித்து -வாழுமதே கிடி கோள் யுக்தம் –-அந்தோ-கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை அபேக்ஷிக்க வேண்டுவதே எனக்கு –ஆச்சர்யமான ஸுந்தர்ய சீலாதிகளை யுடைய வனுடைய திருவடிகளை ப்ரீதியாலே அக்ரமமாக ஏத்தி அத்தாலே கால ஷேபம் பண்ண வேணும் என்று அத்யசிக்க வல்லரான அநந்ய பிரயோஜனர்க்கு--புன்மை யிலாதவர்கள்–சீரியவர்கள் –வுள்ள கிற்கை-உள்ள வல்லராகை –அத்யவசிக்க வல்லராகை ––கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்காக –அஹம் வோ பாந்தவோ ஜாத -என்கிறபடி துணையாக வந்து பிறந்தவன் -பரித்ராணாய ஸாதூ நாம் -என்று இறே அவதாரத்துக்கு பிரயோஜனம் இருப்பது –கல்யாண குணங்களையே ஆசைப்படும் துணையாக பற்றும் இது போக்கி – வீழ் துணை-ஆசைப்படும் துணை -தாம் வீழ்வார் -என்ன காட்டுவதே ஆசா யுக்தரை –யாதுமில்லை மிக்கதே–இதில் காட்டில் மேல் பட்டது வேறு ஒன்றும் இல்லை –

காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் 9-1-9-– நாலாயி:3789/2-பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை –காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –

நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர் -10-1-2— நாலாயி:3892/3-–ஆன்ரு ஸம்சயமே வேதார்த்தம் -என்று வேத தாத்பர்யம் கை வந்து இருக்குமவர்களாய் -வேத நிர்வாஹகரானவர்கள்-நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் –அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து-கை வந்து இருக்குமவர்களாய் வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்-அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்–அத்தேச வாசத்தாலே ஆஸ்ரித சம்ரக்ஷணமே பரம தர்மம் -என்று ஈஸ்வரனுக்கு அதிலே நிஷ்டனாக வேண்டி இருக்கும் தேசம் -அவ்வூரில் ஆஸ்ரயிக்க சென்றாரை -அஸ்மாபிஸ் துல்ய பவது -நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –

வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -–10-4-8– நாலாயி:3931/4-வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து -ஆயுஷ்மன் -என்னுமா போலே –நடுவே மங்களா சாசனம் செய்கிறார் –-உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழ் நெஞ்சே என்கிறார் –-புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் -சா ஹானி –என்னக் கடவது இறே –வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இறே நான் கால் பிடிக்கிறது –பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே–பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே- இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –

மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – -10-8-3- நாலாயி:3970/2-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்–மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –-கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் பிறவி புக்க இடத்தே புகக் கூடிய-பிணியைக் கிட்டேன் ––மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –ஸூஷ்ம சரீர விமோசனம் –இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –ஸூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –

நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன் – -10-8-11-நாலாயி:3978/2-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பிநல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ-சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்–நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி – திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே-–10-9-1- – நாலாயி:3979/4–வாழ் புகழ் நாரணன்ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —

முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்–10-10-9- – நாலாயி:3998/3-விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து – வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து- மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

—————————————————————————————————–

தாழ்ச்சி

தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட –-1-6 2- –- நாலாயி:76/2-தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க அத்வீதியமான சுட்டியானது-திருக் குழலில் சாத்திய-உங்கள் தமப்பனராய் இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்த கோபருடைய மடியில் இருந்து –இத்தால்-தன் மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும்-அவர் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை தனக்கு உகப்பு ஆகையாலே அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து-

தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் –-1-9 4- –- நாலாயி:111/2-நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை-ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் –திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு – நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக அர்ஜுனனுடைய அழகியதாய் –
திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் – என்னைப் புறம் புல்குவான் –

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் –  2-3 1- நாலாயி:139/1–பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –அன்றிக்கே –போய் –என்ற இது –மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் ) ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே – -3-6-9- –நாலாயி:283/2-சிவந்த செந்தாமரைப் பூவை சூழப் படிந்த வண்டினுடைய திரள் போலே 
சுருட்சியும்  மிருட்சியும்  உடைத்தான திருக் குழல்கள் தாழ்ந்த திரு முகத்தை உடையவன் –

முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் –6-6– நாலாயி:561/2–முத்து மாலை நிரைகளானவை தலையிலே வந்து தாழ்ந்த பந்தலின் கீழே(இன்றும் யானை வாஹனம் பொழுது முத்துக் கொடை கொண்டே புறப்பாடு –மற்ற நாள்களில் ஸ்வர்ணம் கொடை -யானை வாகனமும் ஆறாம் நாள் நடக்கும் 

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – 6-2-நாலாயி:699/3-மேல் பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹா பாரதம் இறே—ஊர் எங்கும் அடி ஒத்தித் திரியும் இறே -தனியே நின்று தயிர் கடைவார் உண்டோ என்று –ஒருத்தி தனியே நின்று தயிர் கடையக் கண்டவாறே அலாப்ய லாபம் பெற்றானாய்-ஓடிச் சென்று புக்கான் –நீ தனியே நின்று தயிர் கடையில் -ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாகப் படாது —
சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப் பற்றி கடையில் யாய்த்து என்று
அன்று தேவரசுரர் வாங்க -என்று பிறர் கை விட்டால் கடிவது பிறர் கார்யம் ஆகில் இறே
இங்கும் இவளும் ஒரு தலைப் பற்றில் இறே தன் பிரயோஜனம் ஆவது -இவன் கள்ள விழி –
அவள் கெண்டை ஒண் கண் மடவாள்-நோக்கும் நினைவும் செயலும் -சொல்லும் ஒருபடிப் பட்டு இருக்கும் அவளுக்கு-இவனுக்கு நோக்கு ஒரு படியும் நினைவு ஒரு படியும் சொல்லு ஒரு படியும் செயலும் வேறு ஒரு படியுமாய் இருக்கும் – இவன் நோக்காலே எல்லாம் மெய் என்று அவள் விஸ்வசித்தாள் யாய்த்து–வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ-உன் குழலை விஸ்வசித்த வண்டுகள் என் பட்டனவோ 

சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – –7-3-4-நாலாயி:1571/4–கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ -8-4-2– நாலாயி:1679/4-பூத்துச் செவ்வியை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –

தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ-–8-4-4- – நாலாயி:1681/4-பூமிக்கு ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –(கிருஷ்ணன் கிருஷ் பூமி வாச -கிருஷ்ண துளஸீ –சாத்திக் கொண்ட தாலேயே கறுத்த திருமேனி என்றும் –அவன் ஸ்பர்சத்தாலே இதுவும் கறுப்பானது )

தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-5–நாலாயி:1682/4-பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-6–நாலாயி:1683/4-ஆதி ராஜ்ய பிரகாசமான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான செவ்வியை உடைத்தான திருத் துழாயிலே படிந்து இங்கே வந்தூதப் பாராய் –(இவனே தேவாதி ராஜன் கோள் சொல்லிக் கொடுக்குமே )

தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – ––8-4-7–நாலாயி:1684/4-மாலையாய்
பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –

தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் ––8-5-2– நாலாயி:1689/2–ஒரு பிரயோஜனத்துக்காக போகில் இறே அத்தைக் கொடு போகல் ஆவது –
வரை போலே இருக்கிற திரு மார்பிலே இரண்டருகும் அருவி விழுந்தால் போலே இட்ட மாலையைப் பெற வேணும் என்னும் ஆசையாலே போன நெஞ்சானது ஒரு கால் மீளுகை அன்றிக்கே அங்கே அதி மாத்ர பிராவண்யத்தை  உடைத்தாய்க் கொண்டு கால் தாழ்ந்தது –

கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – 9-5-4-நாலாயி:1791/1–கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற ஒரு மணி யாய்த்து –மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –

தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – -திரு நெடும் தாண்டகம்–-25-நாலாயி:2076/2–இத்தால் ஒப்பனை அழகு சொல்கிறது-தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று அதி பரிமளிதமான திருத் துழாயாலே அலங்க்ருதமான வளையத்தின் கீழே –வைத்த வளையத்தின் கீழே திருத் தோள் அளவும் வரத் தாழ்ந்து பரபாக ரூபத்தாலே விளங்கா நின்றுள்ள திரு மகரக் குழையும் காட்டி –பிரிந்ததுக்கு மேலே –திருவடி திருத் தோளிலே ஏறி இவள் முன்னே சாரிகை வந்து -(புள்ளூறும் கள்வா கீழே உண்டே ) தனக்கு உள்ளதை அடையக் காட்டி இங்குள்ளத்தை அடையக் கொண்டான் -என்கிறாள் –இத்தால் ஒப்பனையோடு ஆபரணத்துக்கு உண்டான சேர்த்தி அழகு சொல்லுகிறது-

தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து – இரண்டாம் திருவந்தாதி –-22-நாலாயி:2203/4-பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது   இல்லையோ – ஆன பின்பு அதிலும் ஒரு குறையில்லை –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்–23--நாலாயி:2204/1–த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –

தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த – நாலாயி:2331/2

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது
–53- நாலாயி:2234/1,2–புறம்புத்தை அந்ய பரத்தையடைய அற்றுத் திருமலை   யாழ்வார்  பக்கலிலே அனுசந்தானத்தை யுடையராய்க் கொண்டு வழி பட ஆஸ்ரயிக்கிற வர்களுடைய குழல் கற்றையிலே –அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி –மூன்றாம் திருவந்தாதி-70– நாலாயி:2351/1-மஸ்தகஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும் பாய்த்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே –மதம் மிகைத்துக் கொண்டு வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இறே – அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் -கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தைக் கொண்டு கால் கழுவி

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
-கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை   யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும்

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி 11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு
-என்று அந்வயம்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவசரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

தற்கச் சமணரும் சாக்கிய பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
-99- நாலாயி:2889/1,2-தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் -தன்னை ஈஸ்வரன் என்று பிரமித்து லோகம் எல்லாம்-ஆராதிக்க வேண்டும் என்று -அதுக்கு தகுதியாக தீர்க்க ஜடையைத் தரித்து கொண்டு -சாதனா-வேஷத்தோடு இருந்து -மோஹா சாஸ்தராணி காராய -என்கிறபடியே -பகவத் அனுமதியாலே மோஹா சாஸ்த்ரத்தை-பிரவர்த்திப்பித்த ருத்ரனுடைய  வசனமான ஆகமத்தை அதிகரித்து போந்து -அதி தாமசராய் இருக்கும் பாசுபதரும் –பௌ த்தரை எடுத்த உடனே பாசுபதரை எடுத்தது –அவர்களோபாதி  இவர்களும் வேத பாஹ்யர் என்னும் இடம்  தோற்றுக்கைக்காக –

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது —–2-10-2– நாலாயி:3111/1-சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக புத்தி பண்ணாதே -என்னுதல்
சதிரிள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே -என்னுதல்-கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் –கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் –இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்-ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல்-அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்-பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை-பக்தாநாம் தவம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3-3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப – 4-7-10–நாலாயி:3306/1-திரு வாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -என்று இவ்வுக்தியோடே தரைப்பட்டு இவருடைய அவசாதனத்தினுடைய எல்லை காண்பது கண்ண நீரிலே யாயிற்று 

மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –5-5-8– நாலாயி:3392/4-தர்ச நீயமாக கண்டால் மறக்கப் போகாத குழல்கள் வந்து அலை எறியா நிற்பதாய் அணைக்கப் பாங்கான தோளும்-மொய் -அழகு-பாவியேன் -முன்னே நில்லா நிற்க அனுபவ யோக்யம் அல்லாத பாபத்தைப் பண்ணினேன் -கண் வட்டத்தில் தோற்றா நிற்க அணைக்க எட்டாது இருக்கிறதே –அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.-கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்
-7-3-3- – நாலாயி:3585/1,2–பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று -பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி
இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் -8-5-11– நாலாயி:3725/2–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

December 21, 2025

அக்காக்காய் – சிறுபிள்ளைகளுக்குக் குழல் வாருவார்
சீராட்டாகச் சொல்லும் பாசுரம். பெரியாழ்.
2-5-1-10
அக்காணி – ஸ்தூல சரீரம், பெரியாழ். 5-2-3.
அக்காரம்- வெல்லம், அக்ஷாரம் பெரியாழ்.2-4-5.
அக்காரம்- கருப்புக்கட்டி, இக்குரஸம், (இக்குரஸம் – கரும்புச்
சாறு) பெரியாழ். 2-9-7.
அக்காரக்கனியே- சருக்கரைக்கனியே. திருவாய். 2-9-8.
அக்காரவடிசில் சர்க்கரைப் பொங்கல். நாச்சி, 9-6.
அக்கு – எலும்பு, உருத்திராக்கம். பெரிய. 9-6-1. தே 6.76.7 புத்தூர்.
அக்குவடம் – சங்குமணி மாலை. பெரியாழ். 1-7-2
அகடு – வயிறு, நடுவிடம். பெரிய. 1-2-1.
10 அகப்பணி – அந்தரங்ககைங்கரியம். திருவாய். 10-2-6.
அகம் – சித்தம். நெஞ்சு,இடம்,பெரியாழ். 5-1-5:
இரண்டாம் திரு.22.
அகம்படி -உள்ளிடம். பெரிய. 11-6-89. தே. 4-1-7,8 அதிகை
5-91-1 தனித்திருக் குறுந்தொகை
அகம்படியர் – அந்தரங்கர். திருப். வியாக்.4.
அகமகந்தோறும் நின்ற இடங்கள் தோறும். திருவாய். 10-3-2
தே. 4-104-5. அதிகை.
15 அகமேனி ஆத்மஸ்வரூபம்.திருவாய். 9-7-10.
அகலம்-பரப்பு, மார்பு.மூன்றாம் திரு. தே. 1-43-3 கற்குடி.
அகலிடம் – பூமி. பெரிய 5-3-9.
அகலில்கலும் திருவாய்.1-7-10
அகவலை – வலையின் உள்ளிடம். திருவாய். 6-2-9
20 அகவலைப்படுத்தல் – வசப்படுத்தல். திருவாய். 6-2-9.
அகாரியம் – செய்யத் தகாததொழில். பெரியாழ். 4-4-1.
அகைப்பு – மதிப்பு. நாச்சி. 38.
அங்கம் ஆறு சிக்ஷை.வியாகரணம், சந்தசு, நிருத்தம்,
சோதிடம்,கல்பம்,திருமா.43. தே. 1-65-9
பல்லவனீச்சரம்; 5-67-4 வாஞ்சியம்.
அங்காத்தல் – வாய்திறத்தல். பெரியாழ். 1-1-6.
25 அங்கி – அக்கினி. இராமாநுஜ 2, தே. சூரியன், 1-36-9. ஐயாறு.
அங்குத்தை – அங்கு உண்டாகும் செயல். பெரியாழ். 3-8-10; 4-1-3.-அங்குற்றேனல்லன் – அவ்விடத்தும் புகுந்தவனல்லேன்.
திருவாய், 5-7-2.
அங்கையில் வட்டு- உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டி.
பெரிய. 10-9-3. வட்டு – கருப்புக்கட்டி.)
அச்சன் -நாதன், சுவாமி. பெருமாள். 29 (மலை நாட்டுச் சொல்).
30அச்சுதன் – அடியார்களை நழுவவிடாதவன்,
அழிவில்லாதவன்.திருமா. 2.
2
அச்சோ- அணைத்துக்கொள். பெரியாழ். 1-8-1. ஆச்சரியம்.
அச்சோ ஒருவரழகியவா.பெரிய . 9-2-1 அச்சோ.
பத்து. திருவாசகம். திருவால்.பொன்னனையாளுக்கு
அருள்புரிந்த திருவிளையாடல்செய்.15,17.
அசும்பு- நீர்ப்பெருக்கு, சேறு, கல்மஷம். பெரியாழ். 5-4-8.
அசுரர் – தேவர்களுக்கு விரோதிகள். பிரமன் தொடையில்
உதித்துப் பிரமனைப் பெண்ணாக நினைத்து
விரும்பியமையால் அசுரர் ஆயினர் . பெருமாள்.10-10.
அசோகின் இளந்தளிர் – அசோகமரத்தின் இளந்தளிர்கள்.
பெரிய. 3-5-1.
35 அஞ்சலோதி -ஐம்பால் . அஞ்சு+ அல்+ ஓதி. சுருட்சி,நீட்சி,
குளிர்ச்சி, அழகு, பரிமளம்,என்ற ஐந்து
வகையான தன்மைகளையுடைய கருமையான
கூந்தல், பெரிய. 10-2-4.
40
அஞ்சனத்தினீறு – மையின் சுண்ணம். அஞ்சனம் மை. சிறிய
திரு. 10
அட்டகில்லேன் – வார்க்கமாட்டேன். திருவாய்4-7-9
அட்டல்- வார்த்தல், சமைத்தல். பெரியாழ். 3-5-1. அட்டி -இட்டு. (போஜனம் பெரியாழ். 1-6-5.
அட்டுக்குவி சோற்றுப்பருப்பதம் – சமைத்துக் குவிக்கப்பட்ட
சோறாகிய மலை. பெரியாழ். 3-5-1
அட்டைகள் – சுவைப்பர். திருவாய்.9-1-2.
அடம்பு – ஒருவகைக் கடம்பு. பெரிய. 6-7.9.
அடல்- வலிமை, போர், கொல்லல், சமைத்தல். முதல் திரு 71. தே. அடல், போர். 3-107-1 வலஞ்சுழி.
அடலாழி கொண்டான் மாட்டன்பு – பராக்கிரமம் பொருந்திய
சக்கரத்தைக் கையிலே கொண்டுள்ள பெருமானிடத்தில்
செலுத்திய அன்பு. முதல் திரு.71
45 அடிக்கண்ணி சூடிய மாறன் – திருவடிகளாகிற பூமாலையை
முடிக்கு அணிந்த நம்மாழ்வார். திருவிருத்தம். 100. (மாறன்=உண்டியே உடையே உகந்தோடும் உலகத்தாருடைய
இயற்கைக்கு மாறு பட்டு “உண்ணும்
சோறு பருகுநீர், தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன்” என்று இருந்ததனால்
ஆழ்வார் மாறன் என்ற திருநாமம்
பெற்றார். என்பது அண்ணங்கராசாரி
யார் சுவாமி உரை.)
அடிகள் – சுவாமி. திருவாய். 6-1-8.
அடிக்கொட்டிட- அடியைச் சேர நாச்சி. 4-1.
அடிச்சி – அடியவள்(வெள்ளாட்டி) சிறிய திரு.54.
அடிச்சியோம் தலைமிசை- உன் அடியவர்களாகிய எங்களுடைய
தலையின் மேல். திருவாய். 10-3-5,6.
50 அடிதாறு அடிக்கு அளவாக இருத்தல், பாதுகை, பாதரேகை
பெரிய திரு. 32.
55
அடிநிலை ஈந்தான் – திருப்பாதுகைகளை அளித்தவன்.
பெரியாழ். 3-9-6.
அடிநீறு- அடிப்பொடி. திருவாய். 5-9-2.
அடிநீறு கொண்டு -ஸ்ரீபாத தூளியைக் கொண்டு. பெரியாழ், 4-6-6.
அடியுறை – ஸ்ரீ பாத காணிக்கை. பெரியாழ். 4-3-9.
அடியேன் மனம் புகுந்ததேனே – அடியேனுடைய மனத்தில்
புகுந்த தேன் போல்
இனியவளே, பெரிய. 7-2-9.
அடிவீழ்ச்சி – அடியாட்டி, அடியாள். நாச்சி. 9-7.
அடுதல் – சமைத்தல், கொல்லுதல், வருத்துதல். திருவாய்.
7-7-4,6., 8-1-1.
அடை – இலை. பெரியாழ். 2–3-1.
அடைக்காய் – வெற்றிலைப்பாக்கு, பெரியாழ். 2-3-1.
60 அடைபுடை – அகோராத்திரம். (இரவும் பகலும்) பெரிய. 4-10-3.
அண்டம் – அண்டகபாலம், மேலுலகம். திருவாய்.7-4-1.
அண்டர் – இடையர், நித்யசூரிகள், பெரியாழ், 1-1-5
அண்ணல் – பெருமையுடையவன். பெரியாழ். 4-10-6. தே. 1-49-9.
நள்ளாறு.
அண்ணா-தலைவா. பெரிய. 1-9-6; 1-10-1. தே 4-62-1. ஆலவாய்,
1-89-3 எருக்கத்தம்புலியூர்.
65 அண்ணிக்கும் – தித்திக்கும். கண்ணிநுண். 1. தே.6-54-3
புள்ளிருக்குவேளூர்; 6-52-2. வீழிமிழலை; 5-61-5.
அரிசிற்கரை புத்தூர்.-அணங்காடு மிளந்தெய்வம் – தெய்வ ஆவேசங்கொண்டு
ஆடுகின்ற அற்ப தெய்வம்.
திருவாய். 4-6-2.
அணங்கு – தெய்வமகள், வருத்தம். திருவாய்மொழி. 4-6-2.
புறநா.52. சீவக. 162, 171, 353, 1473, 2444. முருகு. 289.
சிலப். வேட்டுவவரி. அடி. 42, அகநா. 98. குறுந்,
136, 204, 308.
அணர் -மோவாய்க்கட்டை. பெரியாழ். 3-6-2.
அணவி -அணைந்து.திருவாய். 592; பெரியாழ். 4-8-9
அணார் – கழுத்து, கழுத்துக்கீழ் உறுப்பு. பெரியாழ். 3-5-8.
அணில் அணை கட்டியது – திருமா. 27.
அணுக்கர் சமீபத்திலிருப்பவர். பெரியாழ்.5-4-11.
அணுக்கன் – அந்தரங்கன். பெரியாழ். 3-2-5.
அணை – படுக்கை. பெருமாள். 1-1.
75 அத்தன் – மிடுக்கன். பெரியாழ். 2-1-7,
அத்தாணிச்சேவகம் – பிரியாமல் நெருங்கிச் செய்யும் சேவை.
அருகான இடம், ஆஸ்தானம். திருப்பல். 8
அத்திரம் அம்பு.பெரியாழ். 3–10-6.
அதக்கி – அடக்கி. பெரியாழ். 5-2-3.
அதகன் – பகைவரைக் கொல்லுவோன். பெரியாழ். 2-1-9.
80 அதர் – வழி. (புழுதி ) பெரிய. 4-3-6.
அதவி – அடர்த்து. இரண்டாம் திரு. 89.
அதவுதல் – நெருக்குதல். இரண்டாம் திரு. 89.
அதள்- தோல். பெரிய.9-6-1. தே. 4-22-5. கோயில்.
அந்தகன் – குருடன், இயமன். பெரிய. 2-3-7.
85 அந்தணர்களொரு மூவாயிரவர் பெருமாள்.10-2. தே. 7-90-7
கோயில்.
அந்தணர்தஞ்சிந்தையான் – திருநெடுந். 14. தே6-1-1- கோயில்.
அந்தணன் தோட்டம்- அக்கினி ஹோத்திரியான அந்தனுடைய தோட்டம். பெரிய, 10-9-9
அந்தண்மை பிராமணத் தன்மை.திருமா.25.
அந்தது – அப்படிப்பட்ட பிராப்யவஸ்து. திருவாய். 10-10-3.
90 அந்தமிழின் இன்பப்பாவினை. பெருமாள். 1-4 அந்தமில்பேரின்பம் – முடிவில்லாத பேரின்பம். திருவாய்.
10-9-10. சிலப் வரந்தரு. அடி. 182, கீர்த்தித்திரு அகவல். 101.அந்தரம் – இடையூறு, தாமதம், இடைவெளி. பெரியாழ். 1-5-6.
அந்தரி – துர்க்கை. நாச்சி. 6-3. சிலப் வேட்டுவவரி. 21.
புறஞ்சேரி. அடி.104.
அந்தாதியோராயிரத்துள். திருவாய். 5-3-11, 7-3-11.
95 அந்தாதியோராயிரம். திருவாய். 10-5-11.
அந்தி – மாலைப்பொழுது. பெரிய. 4-2-9; சந்தியாவந்தனம்.
முதல் திரு. 33. சிலப். அந்திமாலைச். அடி -23.
சந்தியாதேவி. சீவக 313.
அந்தி காலவன் பெரிய. 8-5-1. சந்திரன்.
அந்தி மூன்று -காலை, உச்சி, மாலை. பெரிய. 7-5-1.
அந்தியம் போது – சந்தியாகாலம் பெரிய. 2-8-1.
100 அந்நான்று அக்காலம், அன்று.பெரிய. 6-5-7. நான்முகன்.1 ,
பெரிய திரு. 52.
அநகன் – குற்றமற்றவன்.)
அநங்கதேவா . காமதேவனே. நாச்சி. 11.
அநந்தன் – ஆதிசேஷன். பெருமாள். 1-1.
அநுராகம் – ஆசை. திருவாய். 8-8-8.
105 அப்பா பெரிய. 1-9-5. தே. 6-95-1. பொது 3-47. ஆவடுதுறை.
அப்பில்- நீரில், நாச்சி.3.
அபிமான துங்கன் அகங்காரத்தால் உயர்ந்தவன்,
பெரியாழ். 4-4-8. திருப்பல். 11.
அம்பரம்-ஆடை, ஆகாயம். திருப்.17, பெரியாழ். 3-6-6.
அம்பு- நீர். சீவக.2332.
110 அம்புதம் – மேகம். பெரிய. 2-8-3.
அம்புயம் – தாமரை. பெருமாள், 7-1.
அம்புலி -சந்திரன். பெரியாழ். 1-4-3.
அம்மணி – அரை (இடுப்பு) பெரியாழ். 1-6-3.
அம்மமுண்ண – முலைப்பால் பருக. பெரியாழ்.2-2-1.
115 அம்மணைமார் – தாய்மார். நாச்சி. 33.
அம்மா- சுவாமியே. பெருமாள். 5-2.
அம்மா நின்பாதத்தருகு – ஸ்வாமி தங்களுடைய திருவடிகளின்
சமீபத்தில். பெரியதிரு .7.)
அமணர்-சைனர். பெரிய.7-4-5.
அமம் சூழ்ந்து வியாபித்து. மூன்றாம் திரு.98.
120 அமரர்களதிபதி – தேவராசன், நித்திய சூரியர் தலைவன்,
திருவாய், 1-1-1-அமருலகு – தேவருலகு, பரமபதம். பெரியதிரு, 6.7.
அமுக்கி – நன்றாகப்பூசி. பெரியாழ். 1-6-5.
அமுதிலுமாற்றவினியன் – அமிர்தத்தைக்காட்டிலும் மிக்க
இனியவன். திருவாய். 1-6-6.
அமை – மூங்கில்.
125 அயர்வில் அமரர்களாதிக் கொழுந்து – நித்ய சூரியகளுக்குக்
காரணமான
தலைவன். திருவாய். 1-7-4.
அயராப்பாய் – மறவாதிருக்கில் இரு. பெரிய திருவந். 83.
அயன்வாளி பிரமாத்திரம்.
அயில்- வேல், கூர்மை.
அரக்க நில்லா – அரக்க-அடக்க, நாச்சி. 3-4.
அரக்கன் போல்வானை – மாவலியை. இரண்டாம் திரு. 52.
அரக்கிலச்சினை – அரக்குமுத்திரை. திருவிருத், 76.

அரசிப்படுதி – அரசியின் தன்மை அடைகிறாய், கோபியா
நின்றாய். பெரியாழ். 2-9-10.
அரட்டன் – தீம்பன், மிடுக்கன். பெரிய. 3-4-10. தே. அரட்டர்
5-7-5.ஆரூர், திருவிசைப்பா.37.
அரட்டமுக்கி- சத்துருக்களை அமுங்கச் செய்வர். பெரிய.
3-4-10. தே. 5-100-10. ஆதிபுராணம்.
அரணம் – ரக்ஷகம், புகல். திருவாய், 9-1-4
அரந்தை- துக்கம். எழுகூற்றிருக்கை. 12.
145 அரம்பா -தீம்பனே. பெரியாழ். 3-1-6.
அரம்பையர் – தேவமாதர். பெருமாள். 4-2.
அரவதண்டம்-யமதண்டனை. பெரியாழ். 4-5-3,9. திருப்புகழ். 19.

அர்த்த பஞ்கசம்- ஸ்வஸ்ரூபம், பரஸ்வரூபம்,புருஷார்த்த
ஸ்வரூபம், உபாய் ஸ்வரூபம், உபாய
விரோதி ஸ்வரூபம். திருவாய். தனி.
அரக்கர் – ராட்சஸர். பெரிய. 4-3-5.

அரக்கு வழித்தது அரக்கு, செந்நிறம் வழித்தது. பூசியது.
பெரியாழ், 2-6-2.
அரக்கும் – அழுத்தும். பெரிய. 2-7-3 தே. 2-75-8. சீகாழி.
அரங்கத்தம்மா – திருப்பள்ளி. 1-9.
அரங்குதல் – அழிதல். திருச்சந் 32.49.
அரசாணி – அரசங்கொம்பு. பெரியாழ். 3-8-3.

அரவப்பகையூர்தி – கருடனைவாகனமாக உடைய கண்ணன்.
பெரியாழ். 3-5-11.
அரவு – பாம்பு. பெரியாழ். 3-5-11, திருவாய். 2-1-6.
150 அரனே – உருத்திரனுடையதே.திருவாய். 2-5-2.
அரி – திருமால். திருவாய். 1-3-6.
அரிகுரல்- தழுதழுத்த குரல். பெரிய. 8-5-9.
அரிகுலம் – குரங்குக் கூட்டம். பெரிய. 1-2-2.
அரிசினம்- மிக்க கோபத்தினால் .பெருமாள். 5-1.
155 அரியயனரன் – திருமால், பிரமன், சிவன். திருவாய். 1-3-6.
அருகல் சமீபம், சுருங்கல், திருவாய். 1-9-2,3.
அருத்தி – ஆசை. திருப்பா.25.
அருத்தித்தல். பிரார்த்தித்தல். திருப்பா. 20. தே. 4-92-8. ஐயாறு
7-47-8. பொது
அருபொருளை- அரியபொருளை. நான்முகன்
160 அருவித் தின்றிட – அலைத்துத்தின்ன. பெரிய. 7-7-1. தே. 7-16-1
கலய நல்லூர். (அருவ)
அருவிவேங்கடம் – அருவிகளையுடைய திருமலை நான் முகன் 40
அரைத்தொடர். அரைவடம். பெரியாழ். 1-3-4.
அல்குல்- அரை, நிதம்பம்.திருப்பா- 11, பெருமாள். 9-7
பெரியாழ். 1-7-8. தே. -54-3. ஓத்தூர்.)
அல்லல்-பாவம்,துக்கம். நாச்சி 13-10 சிவபுராணம் -91.
சீவக. 343. திருவிசைப்பா. 6-10.
165 அல்லி – அகவிதழ்.தாமரை, திருநெடுந் 12, பெருமாள் 2-10,
திருவிசைப்பா 19-3. சீவக. 162, 355, 606, 1422.
அல்லிமாதர் – இலக்குமி. பெரிய 1-7-9. தே. 2-101-11. ஆரூர்.
அலக்கண்- துன்பம். பெரிய
அலக்கழித்து – கிலேசப்படச்செய்து. பெரிய. 4-10-3. தே. 5-73-1
மங்கலக்குடி
170) அலகு விதை.முதல்திரு. 49.
அலங்கெழுதடக்கை – அலம்- கலப்பை. பெரிய. 2-7-8.
அலம்பிவண்டு- (அலம்பி- கிண்டி ) திருவாய்.9-9-10.
திருவிசைப்பா. 22.2.
அலம்புதல் – அலையச்செய்தல். பெரியாழ். 4-2-1.
அலத்தல்- கிலேசப்படுதல், கதறிஅழுதல், பெரியாழ். 4-5-1
175 அலந்தலை – கலக்கம் பெரியாழ். 3-7-1.
அலப்பாய் – அலமந்து. திருவாய். 5-8-4.
அலம்- கலப்பை பெரிய. 4-4-3.அலமருதல் சுழலுதல். திருவாய். 3-2-9. திருவிசைப்பா. 26-4,10.
அலர் மலர். திருவாய். 6-10-10 மணிமேகலை. பக். 46.
180 அலர்மேல் மங்கை- திருமகள். திருவாய். 6-10-10.
அலவலை – கண்ணன். கூடார்த்தங்களைச் சொல்பவன்
பெரியாழ், 2-1-2.
185
அல்வலைமை- அற்பத்தனம், அலைச்சல் தன்மை, பெரியாழ். 435
அலவன் ஆண்நண்டு, பெரிய. 6-7-7.
அலவை- வஞ்சகமுள்ளவள். பெரிய. 10-5-8.
அலவைப் பெண்- கெட்டவளான பூதனை. பெரிய. 10-5-8.
அலற்றி வாய்விட்டுக்கூவி, திருவாய். 4-4-9, 5-5-11, 6-4-1,6-7-11.
அலற்றி முறைகெடக்கூவி, கூப்பிட்டுநின்று, திருவாய்8-3-1.
அலற்றிய கூப்பிட்ட திருவாய். 9-7-11.
அலற்றும் – கூப்பிடும். திருவாய் 4-9-2.
190 அலற்றுவதென் – கூப்பிடுவதனால் என்னபயன்.திருவாய். 4-7-4.
அலற்றுவதே – துதிப்பதே, திருவாய். 3-5-9.
அலற்றுவன்-முறைமாறி அவன் குணங்களை வாயாலே
சொல்லுவேன்.திருவாய்1-3-10- கூவுகின்றேன். திருவாய். 1-57.
அலறி கதறிக்கூப்பிட்டு, பெரியாழ். 3-5-3.
அலி – நபும்ஸகம். திருவாய். 2-5-10.
195 அலைப்பூணுண்ணும்- அலைப்புண்ணுதலை அனுபவிக்கும்
அலைப்பூண் – அலைக்கப்படுகிற. திருவாய். 3-2-10.
அலோகம் காணப்படாத உலகம். திருவாய்.2-9-6. சீவக, 3082.
அவத்தங்கள் – பொல்லாங்குகளான யுத்தங்கள், திருவாய்.10-3-9.
அவத்தம்- அபத்தம். (பொல்லாங்கு) திருவாய், 10-3-9, பெரிய. 2-5-2.
அவபிருதம் – யாகத்தின் முடிவில் செய்யும் மங்களஸ்நானம்.
பெரியாழ். 4-7-6, திருப்பள்ளி 4.
200 அவம்- வீண். நான்முகன் திரு. 19, திருவிசைப்பா, வீழிமிழலை – 6.
அவலம்- துன்பம். பெரிய. 2-7-7,
அவனியாள் – பூமிதேவி. பெரியாழ். 1-3-8.
அவா. ஆசை. திருவாய். 10-10-11.
அவி- அவிஸ். யாகங்களில் தேவர்களுக்குக் கொடுக்கப்படும்
உணவு, நாச்சி. 1-5.
205 அவுணன்- ராட்சசன். பெரியாழ். 1-5-2. திருவிசைப்பா.
கோயில். 27.3
அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு.பெரியாழ். 4-8,10 அழக்காடி – பேய்ப்பெண். பூதனை. திருவாய், 2-10-9.அழகியான் – அழகுடையவன். நான்முகன் திரு. 22.
அழகு – சௌந்தர்யம். பெரிய திரு31.
210 அழல்- நெருப்பு. பெரியாழ். 4-7-3. பெரிய. 3-2-6, நாச்சி. 13-8.
அழலம்புகவூதி – அழலிற்புக, திருவாய். 4-8-8.
அழன்-பேய், பிணம், திருவாய், 2-10-9. தொல். எழுத். 354.
அழிப்பன் – சத்ருதுக்களை அழிப்பவனாகிய எம்பெருமான்
பெரியாழ். 4-8-6.
அழுந்தூர் மேற்றிசை நின்ற அம்மானே. பெரிய. 7-6-1-10,
சோழநாட்டில் மாயூரத்தை அடுத்துள்ளது.
உபரிச்ரவசு என்னும் அரசன் தனது தபோ
வலிமையினால் விமானத்துடன் ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் தன்மையுடையவன், ஒரு சமயம்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நேர்ந்த
விவாதத்தில் பட்ச பாதகமாக இவ்வரசன் தீர்ப்புச்
சொன்னமையால் முனிவர்களால் சபிக்கப்
பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர்
அழுந்தப் பெற்ற இடமாதல் பற்றி இதற்கு
அழுந்தூர் என்று பெயர் வந்தது. கம்பர் பிறந்த
இடம். தேவாரப்பாடல் பெற்றதலமுமாகும்.
215 அழுந்தை – பெரிய. 6-6-9. தே. 2-20-1-11 திருவழுந்தூர்.
அழும்புதல் – மிக நெருங்குதல். திருவாய். 1-7-9.
அள்ளல்- குழைசேறு, நெருக்கம், திருவிருத். 100.
அள்ளல் பயலை – அடர்த்தலையுடைய பசலை நிறம்.
திருவிருத் 12.
220
அள்ளியம் பொழில்வாய் – குளிர்ச்சி பொருந்திய அழகிய
சோலைகளில். பெரிய. 4-10-7.
அளகைக்கோன் – குபேரன். பெரிய. 2-10-8.
அளம்பு – உபமானம். பெரிய. திரு. 24.
அளறு -சேறு. திருப்பா.14 (வியாக்
அளி – கிருபை,வண்டு. பெருமாள். 1-6.
அளியத்த மேகங்காள் – தயையையுடைய மேகங்களே.
225 அளியத்தாய்- அருமந்தநீ எல்லோராலும் கிருபை
பண்ணத்தக்க நீ. திருவாய். 2-1-9.
அளை- வங்கு. பெரிய 1-2-5.
அற்கம்- அடக்கம். திருவாய். 6-5-4.
அற்புதன் – ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடையவன்.
திருவாய், 8-6-10.
அற்றம்- அறுதி. பெரியாழ். 5-2-6. பெரிய. 10-1-10.அற்றேன் வந்தடைந்தேன். பெரிய. 1-9-9.
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார் – தருமமே சுவராக நிற்கிற
அரங்கனார். திருமா.6
அறவன்- தருமஸ்வரூபி. திருவாய். 1-7-1.
அறிகண்டாய் – தெரிந்துகொள். பெரிய. திரு. 66.
அறுகால்- ஆறுகால்கள். பெரியாழ். 4-2-8.
235 அறுசுவை கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, தித்திப்பு,
துவர்ப்பு. திருவாய். 4-1-7. சீவக.193. நச்.உரை.
பெருங்.இலாவாண. கடிக்கம்பலை.80.
கட்டிலேற்றியது. 24. மணி. 28.116,241.
அறுதல்- சீரணித்தல். பெரியாழ். 1-4-6. (அறா}
அறுதி – முடிவு, வரை. பெரியாழ். 410-9.
அறுதொழில்- ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல். எழுகூற், அடி14. பெருங். 2.3.9.
புறநா. 397.20.
அறை- பாறை. பெரிய. 2-5-5.
240 அறைகை – சொல்லுதல், அடித்தல், ஒலித்தல், திருப்பா. 16.
அறையிடுதல் – அறைகூவுதல். திருவிருத். 19
245
அறையோ-ஐயம். பெரியாழ். 3-5-8, முறையிடும் சொல்.
திருவிருத். 10.
அறையோ – முறையோ முறையோ. பெரியாழ். 3-5-5,
திருவாய்.5-1-1.
அன்றிக் கொண்டு சீறிக்கொண்டு, நான்முகன், 29.
அன்றில்- அன்றிற் பறவை. கிரவுஞ்சப்பறவை. பெரிய. 11-2-5
தே. 1-60-7 தோணிபுரம், ஆரூர். 2-50-1 ஆமாத்தூர்.
அன்றிற்கூடு- அன்றில் பறவையின் கூடு. பெரிய. 11-2-1. அன்றிற்பேடைகாள் – திருவாய். 9-5-2,3.
அன்றுதல்- சீறுதல். திருவிருத் 18, பெரிய.8.3-8. அன்னமதாயிருந்து அறநூலுரைத்தது. பெரிய. 11-4-8.
250 அன்னமாய் மறையை வெளிப்படுத்த. திருநெடுந்.30.
அன்னவசம் செய்கை- உண்ட உணவிற்கு ஏற்ப இடம் வலங் கொள்ளுதல், தூங்குதல், திருவாய். 3-7-10. அன்னன்ன – அப்படிப்பட்ட. திருவிருத். 29. அனந்தல்- சோம்பல். திருப்.10.
அனன்றுண்ட நீர் – (இரும்பானது) பழுக்கக்காய்ச்சப் பெற்று
உட்கொண்டநீர். திருக்குறுந். 13.அனுங்குதல் – நோவுபடுதல்,வருந்துதல், நாச்சி. 14-2, பெரிய
7-8-3.
260
ஆக்கம்- செல்வம், பேறு, திருவாய். 9-1-2, 1-6-8. திருவாசகம்.
சிவ, 41.
ஆக்கை- சரீரம். நான்முகன். 93. திருவாசகம்.
திரு அண்டப்பகுதி. 137.
ஆகமவாதிகள். சைவர். இராமாநுஜ.91.
ஆதரம்- அன்பு . திருமா. 16.
ஆதன்மையால் – ஆன தன்மையால், அதனால்
ஆட்பட்டதனாலே.பெரிய. 2-4-8,9.
ஆதானும் யாதானும். பெரியதிரு. 25, 59.
ஆதித்தியன் – சூரியன். திருப். 22.
ஆது – யாது, பெரிய 939 தே 6-20-9 நள்ளாறு.
ஆதும் – யாதும். நாச்சி. 11-3, பெரிய. 10-7-10,
திருவாய். 3-4-10, 8-2-11.
265 ஆதுமில்காலம் – ஒன்றும் இல்லாத காலம். ஒரு துணையும்
இல்லாத சம்சாராவஸ்தை. திருவாய்.
3-4-4.
ஆதுமில்லை – யாதுமில்லை. பெரிய. 10-7-10. தே. 2-84-8.
நனிபள்ளி.
ஆநிரை- பசுக்கூட்டம். பெரியாழ். 3-4-4.
ஆப்பங்கொழியவும் சரீரம் ஒழியவும். நான்முகன். 93.
ஆப்பு -கட்டு. முதல்திரு. 75.
270 ஆப்புண்ட-யாப்புண்ட. பெரிய. 8-2-5.
ஆப்புண்டிருந்தவனே- கட்டுண்டிருந்தவனே. பெரிய. 5-6-1.9.
ஆம்பல் – இலைக்குழல். பெரிய. 9-5-8.
275
ஆம்பற்கழியும் இலைக்குழலோசைக்கு அழிவாள்.
பெரிய. 5-6-10.
ஆமருவி – பசுக்களை விரும்பி. (மருவுதல் விரும்புதல்)
பெரிய. 5-6-10.
ஆமுகம் (ஆ- ஐயோ). நாச்சி. 11-1.
ஆமைத்தாலி – ஆமைவடிவமாகச் செய்யப்பட்ட தாலி
பெரியாழ். 1-7-2, 2-6-1.
ஆய்க்குலம் – இடைக்குலம், திருப். 28. திருவிருத் 61.
ஆய்ந்தேத்த வல்லார் – ஆராய்ந்து துதிக்க வல்லவர்கள்.
நாச்சி.. 7-10.
ஆய்ப்பாலர் – இடைச்சியர்கள். பெரியாழ். 2-3-1.ஆயப்பிள்ளை – கண்ணன். பெரியாழ். 3-4-9.
ஆயம்-தோழியர் கூட்டம், வேலைத்திறம். சிநேகம்.
திருவாய். 8-2-1.
ஆயர்குலம் இடைக்குலம். பெரியாழ். 1-7-11,3-1-8, திருப்பா.5.
ஆயர்கொழுந்து கோபாலருக்குச் சிரோபூஷணம்,
நப்பின்னை. திருவாய். 5-6-11.
ஆயர்கொழுந்தே- இடைக்குலத்தலைவனே. பெரியாழ். 2-3-3.
285 ஆயர்பாடி -இடைச்சேரி. நாச்சி. 14-2; பெரியாழ். 2-2-5.
ஆயர்பாவை நப்பின்னை – இடை மகளான நப்பின்னை.
பெரிய. 2-3-5.
ஆயிரம் பேருடையவாளன் – ஆயிரம் பெயர்களையுடைய
பெருமான். பெரிய. 6-6-9.
ஆயிரவர் நலனேந்து திருவல்லவாழ் – ஆயிரம் பேர்
தன்னுடைய கலியாண குணங்களைக்
கொண்டாடும் படியாகத் திருவல்ல
வாழில் எழுந்தருளியிருக்கின்றவன். திருவாய் 5-9-10. இத்திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற
திருக்கோலம். நாச்சியார் செல்வத்
திருக்கொழுந்து. கிழக்கு நோக்கிய சந்நிதி.
பெருமான்கோலப்பிரான்.
ஆயோ – கிளி முதலிய பறவைகள் வந்து தானியங்களை
அழிக்காதபடி அவற்றை வெருட்டுவதாக
ஆயல் இடுகிற சொல். அதுவோ என்று
வினவுகிறபடி, திருவிருத் 10. தே. 7-9-4. சீபருப்பதம். சூளாமணி . 1658. ஆர்த்த- கட்டிய. முதல் திரு. 22. ஆரவாரம் செய்தல்.
பெரிய. 1-5-5
ஆர்தல் – நிறைதல். திருப்பா. 1, சிறிய -69, திருவாய். 4-1-6
ஆர்ப்பு -பேரொலி. ஸ்ரீவசனபூஷணம். சூ. 77. ஆர்படுவான்நேமி கூர்மை. மூன்றாம் திரு. 80.
ஆர்வம் அன்பு. பெரியாழ் 4-5-3. இரண்டாம் திரு. 1. திருவிசைப்பா. 25-8.
295 ஆர்வினவிலும் -எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும், பெரியாழ். 4-5-3.
ஆரல் – ஒருவகை மீன். பெரிய. 5-1-5.
ஆராமம் – உபவனம் சிறிய திரு. 71ஆராமை – திருப்தி பெறாமை.
ஆராவமுதம் தெவிட்டாத அமிர்தம். சிறிய. திரு. 7.
300 ஆராவமுது திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான்.திருவாய். 5-8-1.
ஆராவமுதே – திருமலையில் எழுந்தருளியிக்கின்ற
எம்பெருமானே.பெரிய. 1-10-3.
ஆரியன்-ஆசாரியன். உபதேசரத்தினமாலை. 64.
சிவபுராணம். 64. கீர்த்தித்திரு அகவல். 22.
ஆல்- தண்ணீர் . ஆலமரம். திருவாய். 9-10-1.
ஆலநிழலில் அறம் நால்வர்க்கு உரைத்து- ஓர் ஆலமரத்தின்
நிழலில் நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தவன் ருத்திரன்.
நான்முகன் திரு. 17. (நான்கு முனிவர்கள்: அகத்தியர்,
புலத்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர்) என்று அண்ணங்
கராசாரிய சுவாமிகள் உரை காண்கின்றார். நால்வர்
என்பது சனகர், சனந்தனர், சனாதனர்,சனத்குமாரர்
இவர்களைத்தான் எல்லா நூல்களும், பாகவதமும்
கூறுகின்றன. அப்படியிருக்க சுவாமிகள் கண்ட உரைக்கு
ஆதாரம் யாதோ? திருச்சாழல். 16.
ஆலமரத்தின் சிறப்பு: நூறுயோஜனை தூரம் உயரம்
உள்ளது எழுபத்தைந்து யோஜனை நீளமுள்ள கிளைகளை
யுடையது. எங்கும் நிழலையுடையது. தாபமற்றது. உயர்ந்த
யோகத்தின் ஸ்வரூபம் . மோட்சமடைய விருப்பமுள்ள
வர்களுக்கு ஆசிரயமுமானது
305 ஆலி – சிறுதுளி. பெரிய. 11-1-8. 1-2-1.
ஆலித்தல் – ஆரவாரஞ்செய்தல். பெரியாழ். 3-4-7.
திருவிசைப்பா. 29-9.
ஆலிநகர்க்கதிபதியே- திருவாலி நகர்க்கு தலைவனே.
பெருமாள். 8-7. இத்திருப்பதி சோழ நாட்டில்
சீகாழியிலிருந்து ஆறுகல் தொலைவில் உள்ளது.
திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று. இவ்வூருக்கு
அருகிலுள்ள வேதராஜபுரத்தில் பங்குனி
உத்திரத்தில் திருமங்கையாழ்வார் திருமாலை
வழிபறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது.
எம்பிரான் வயலாலி மணவாளன்.
ஆலிவளநாடன் திருவாலி நாட்டிற்க்குத் தலைவன்.
பெரிய.8-3-10.
ஆலிலை யன்னவசம் செய்யும்- ஆலிலையிலே தூங்குகின்ற
திருவாய். 7-1-4; 4-2-1.ஆலுதல் – ஆடுதல் கூவுதல், சப்தித்தல், பொருந்துதல்.
ஆவத்தனம் ஆபத்துக்காலத்தில் உதவும் செல்வம்.
(ஆவத்தனம் . ஆபத்தனம்). பெரியாழ்.
ஆவர் -யாவர், பெரிய. 3-3-7.
ஆவலிப்பு – பலம்,கர்வம். திருமா. 1
ஆவித்தல் – நெடுமூச்சுவிடுதல். கொட்டாவி கொள்ளுதல்.
பெரிய. 1-2-8. சீவக. 2426.
315 ஆழ்பொருள்- எளிதில் அறிய முடியாத பொருள்.
நான்முகன். 1.
ஆழ்தல் – மூழ்குதல். ஆழமாதல்.பெரிய. 6-3-4,
திருவாய். 4-7-5. 4-1-6.
ஆழமோழைமோழை- கீழ்த்திசையில் பெருகும் ஆறு. பெரியாழ். 3-7-4.
ஆழாந்து-ஆழ்ந்து, ஈடுபட்டு,திருவாய். 2-1-8. ஆழி-சக்கராயுதம், கடல், சூரியன், வட்டவடிவம்,
பெரிய. 5-7-8, திருவாய். 8-10-6. திருவிருத். 34.
4-2-6.
320 ஆழியான் ஆழ்ந்து தேறியவன். பெரியாழ். 1-9-7, திருவெம். 8. ஆள்- ஆண்மகன், காலாள். முதல்திரு. 81 ஆளம்வைத்தல் – ஆலாபித்தல், பெரியாழ். 4-8-6.
ஆளரி- நரசிங்கம். பெரியதிருமடல். 127 ஆளி – சிங்கம். பெரிய. 7-3-4.
325 ஆற்றங்கரை மரம். பெரிய. 11-8-1. நீத்தல். விண்ணப்பம். 3. ஆற்றல் – பராக்கிரமம். (கீர்த்தித்திருவகவல். 103.) ஆறு – விதம். திருவாய். 5-10-6.
ஆறுசமயம் சார்வாகம், பெளத்தம், க்ஷபணம், வைகம்,
14
சாங்கியம், பாசுபதம், திருவாய். 9-48. அண்டப்பகுதி,79. ஆறுபொதி சடை கங்கைனயத்தரித்த சடை. திருவெழுகூற். 20.
330 ஆன் – பசு. திருச்சந்.40. பெரியாழ். 2-7-1, திருவாய். 1-8-8.
335
ஆனாத- அழியாத. பெருமாள். 4-2 ஆனாய் – ஆனையே .பெரிய. 1-9-2, தே. 3-55-7. வான்மியூர். ஆனாயன் – மாட்டிடையன். பெரிய. 5-5-3. திருவாய். 1-8-8. ஆனாயனாகி – மாடுமேய்க்கும் இடைக்குலத்தவனாகி . பெரிய. 11-5-4.
ஆனெய்- பசுவின் நெய். திருச்சந். 40 ஆனைச்சாத்தன் பாரத்துவாசம், வலியன். திருப். 7. இகல்- பகை, போர். திருவாய். 6-46-இகுளாய் – தோழியாய். திருவாய்.6 -3-9.
இங்குத்தை – இவ்விடத்திய. நாச்சி. 12-4.
340 இங்குத்தை நின்றுந்துரப்பன் – இவ்விடத்தினின்றும் உன்னை
ஓட்டி விடுவேன். நாச்சி. 5-10.
345
350
355
இங்குற்றேனல்லேன் – இங்கு நிற்கமாட்டேன்.)
( பிறரோடு பொருந்துகிறதில்லை என்று
கூறினும் பொருந்தும் ) திருவாய். 5-7-2
இங்கே- இங்கு. நாச்சி. 14-1.
இசலி – இகலி. பெரிய. 3-9-3.
இசலுதல் – பேரொலிசெய்தல். ஈடு.4-10.6.
இசித்தல் – இழுத்தல். பெரிய. 1-2-6.
இசை – இராகம், உடன்பாடு. திருவாய். 2-4-11.
திருவண்டப்பகுதி . 35
இசைகாரர் – பாடுபவர். திருவாய். 1-5-6.
இட்டம்- இஷ்டம். விருப்பம், நாச்சி. 14-1, திருவாய். 1-8-8.
இட்டாதெய்வம் – இஷ்டமான தேவதை. திருவாய். 3-9-6.
இட்டிடை சிறிய இடுப்பு. திருச்சந்.13, திருவெம்பாவை. 16.
இட்டீடு – பரிகாசச்சொல்.திருப். 18. வியாக்.
இட்டீறு – களிப்புடன் செய்யும் விளையாட்டு. நாச்சி 14-1
இட்டு வெந்நீரைக் காய்ச்சுதல். பெரியாழ். 2-4-3. (உரை)
இடங்கை இடக்கை. இரண்டாந்திரு. 71.
இடங்கொள்ளுதல்-வியாபித்தல். திருவாய். 5-2-4.
இடத்தல் – பிளத்தல். இரண்டாந்திரு. 94.
இடம் – வசிக்குமிடம். நான்முகன் திரு. 66.
இடம் பெறுதல் – இடம் பெற்றிருத்தல். திருவாய். 1-3-9.
இடமுடைமை விசாலமானதாயிருத்தல். பெரிய. 11-5-3.
360 இடர் – துன்பம். பெரிய. 6-9-1.
இடராட்டியேன் – துன்பமுடையநான். திருவாய். 8-2-2.
இடவகை- வசிக்குமிடம். பெரியாழ். 5-4-10.
இடவணரை – இடத்தோளோடு சாய்த்து. பெரியாழ். 3-6-2.
இடவன்- மண்கட்டி, பெரியாழ். 3-5-5.
365 இடற தட்டித் திரியும்படி. பெரியாழ். 3-2-6.
இடறி- கடந்து. திருவாய். 6-7-2 (தே) 6-27-1, 10 ஆரூர்
திருவிசைப்பா. 26.6.
இடறுதல் துன்புறுதல், திருவாய். 4-1-7.இடறும்- சுழலானின்ற. திருவாய்.4-7-7.
இடிசேர் – இடியை. ஒத்த – திருவாய்.4-1-3.
இடித்தல் – தகர்த்தல். திருவிருத்.36.
இடிதல் – கட்டுக்குலைதல். திருவாய். 9-6- 2.
இடுக்குண்ட – நெருக்குற்ற. பெரியதிருவந். 21.
இடுகை- கொடுக்கை. பெரிய. 1-6-5.
இடும்பை- துன்பம். பெரிய. 1-6-5.
இடைகழி இடைக்கட்டு. முதல் திரு. 86.
இடையனெறிந்த மரமே யொத்திராமே பெரிய. 11-8-6.
சீவக. 1914. பழமொழி.314. இடையில்லை- அவசாசமில்லை. திருவாய். 8-2-8, 9-5-5.
இடையுவா பௌர்ணமி. – நாச்சி. 7-3.
இடைவீடின்றி – இடைவிடாமல். திருவாய். 1-10-8, 2-9-4.
இண்டைக்குலம் நெருங்குதலையுடைய கூட்டம். திருப்பல். 5.
இண்டைகொண்டு பூமாலைகொண்டு. பெரியாழ். 3-2-10. (தே)5-7-3. ஆரூர். இண்டைச்சடை முடியீசன் – மாலையையும், ஜடையையும்,
கிரீடத்தையும் உடைய உருத்திரன்.
திருவாய். 7-5-7. (தே). 5-6-9, ஆரூர், இணக்கம்- சகவாசம், பொருத்தம், திருவாய். 6-2.8. இணர் – பூங்கொத்து. பெரிய திருவந். 29.
இணைந்து – கலந்து. திருவாய். 6-1-4. இணைவனாம்- சமனாகியிருப்பான். திருவாய். 2-8-1. இத்தனை – இவ்வளவு. திருவாய். 9-5-1. இதணம் பரண், பெரிய. 1-8-8. இதழுக்குக்கமுகம்பழம் திருவாய். 8-9-6.
390 இது வென்னிது வென்னிது வென்னோ. (ஊடல்). பெரிய. 10-8-1,9.
இந்தளூரீரே – பெரிய. 4-9-1,3,4,5,6,7,8,9, இந்திரகோபம் – தம்பலப்பூச்சி, நாச்சி, 91. இந்திர ஞாலங்கள் -பொய்யான வித்தைகள். திருவாய். இந்திரலோகம் – இந்திரனது உலகம். திருமா. 2.
395 இந்திரன் சிறுவன – அருச்சுனன். பெரிய. 2-3-6. இந்து- சந்திரன். பெரிய. 4-2-9. திருப்பூவல்லி.4. இமம்-பனி. மூன்றாம் திரு. 98.-இமவந்தம்- இமயமலை. பெரியாழ். 4-7-4.
இமில்- கழுத்து. திருவிருத்.21.
இமையவர் – தேவர். பெரியாழ். 4-7-4.
இயக்கர் – யக்ஷர். திருப்பல். 9.
இயக்கு – துன்பம். திருச்சந்த.120
இயங்கல்- செல்லுதல். முதல்திரு. 8.
இயத்தல்-கடத்தல். திருவாய். 1-3-6.
இயந்த- இகந்த.திருவாய். 1-3-6.
இயல்- இலட்சணம். இராமாநுஜ.
இயல்வு- விரகு. முதல்திரு 12,13; இராமாநுஜ 26 திருவிருத் 24.
இரண்டத்தில் இரண்டில். சிறியதிரும.59.
இரண்டுதறுகண் இரண்டுதிருக்கண்கள் . பெரிய. 11-4-4.
410 இரந்தார் – யாசிப்பவர். பெரிய, 1-9-3.
415
இரவியர் – சூரியர். திருப்பள். 6.
இராக்கதி- ராக்ஷஸி.பெரிய. 10-6-9.
இராகம் – இசைப்பாட்டு,ஆசை. திருவாய். 1-6-5.
இராவணாந்தகன் – இராவணனைக் கொன்றவன். பெரிய. 2-3-7
இரிதல் – ஓடுதல். பெருமாள். 1-1
இரிய – ஆரவாரித்து. திருவாய். 5-2-3.
இரீஈ- இருத்தி. திருவாய். 2-7-9.
இருக்கு- வேதம். பெரியாழ். 5-1-6, திருவிருத்.64.
இருடீ கேசன் இந்திரியங்களையடக்கியாள்பவன்.
பெரியாழ். 5-4-5 திருவாய். 2-7-10, நாச்சி. 5-6,
420 இருந்தில் – கரி. பெரிய. 2-10-3.
இருபாடெரி கொள்ளியின் உள்ளெறும்பே போல்- பெரிய
11-8.4. திருவாசகம், நீந்தல் விண்ணப்பம். செய்.சு,
சீவக . நாமகள் 243, தே 4-75-6.
இரும்பு நான்றுண்ட
நீர்போல். திருக்குறுந்5.
இரும்புபோல் வலிய நெஞ்சம். திருமா. 17.
இரைதேரும் புதாவினங்காள். பெருநாரை, திருவாய். 6.8.9.
425 இல்லம்- வீடு. பெரியாழ். 3-8-1.
இல்லம் வெறியோடிற்று வீடு வெறிச்சென்றிருக்கிறது.
இல்லறமல்லேல் துறவறமில் நான்முகன். 72.
இல்லி- சிறுவழி. பெரியதிரும. 87.
இலக்கு – குறி. பெரிய திரும. 87-இலகுதல் – விளங்குதல். திருவாய். 8-8-1.
இலச்சினை – அடையாளம், முத்திரை. பெரியாழ். 1-7-6.
இலட்டுவம் – வட்டு. பெரியாழ். 2-9-9,
இலிங்கியர் – இலிங்கப்பிரமாணவாதியரான அனுமானியர்.
திருவாய். 4-10-4.
இலைக்குடை நீழல். இலையாகிற குடையின் நிழல்
பெரிய 9-1-5.
435 இலைக்குழலூதி – இலையினால் ஆகிய ஊது குழல்.
பெரிய. 10-7-6.
இலையம்- இலை. பரியாழ். 3-4.8-
இவரித்தல் – எதிர்த்தல். பெரிய. 8-8-9.
இவரித்து – ஏறி. பெரிய. 8.8.9.
18
இவள்பரமே-இவளிடம் உண்டாகக் கடவதோ. திருவிருத். 60.
இவையா இவை இருக்கிறபடிபாராய். பெரியாழ். 2-3-2.
440 இழந்ததுகட்டே லோக மரியாதையை இழந்தாள்.
திருவாய். 6-6-10.
445
450
இழந்தது கற்பே- தன்னுடையச் சாயே-காந்தி திருவாய். 6-6-7.
இழந்தது மாமை நிறமே அழகிய நிறத்தை இழந்தாள்.
திருவாய். 6-6-2.
இழுக்காய்த்து குற்றமாகியது. பெரிய. 4-9-4.
இழிசிய – எழுதப்பட்ட. பெரிய. 2-8-7.
இள்கி- வஞ்சித்து. பெரியாழ், 3-7-4.
இளக – இல்லையாக. பெரியதிருவந். 18.
இளங்கோ- பெருமாள். 9-2.
இளங்கோயில் இரண்டாந்திரு. 54 தே. 6-70-5. க்ஷேத்திரக்
கோவை.
இளநீர் குலை தாழ்கிடங்கின் கூடலூர். பெரிய 5-2-8
இளம்படி – மிருதுஸ்வபாவம் . பெரிய. 2-7-2.
இளைதே – பிள்ளைத்தனமே. திருவாய். 6-2-6.
இளமையாடும் பால்யசேஷ்டைகளைச் செய்யும்.பெரிய
11-2-2. சீவக. 2491
455 இளையவரேசாமுன் – பெரிய. 1-3-2.
இளையாப்பாய் – தளராதொழிவாய் பெரிய திருவந் 23.
இற்றைப்பறை கொள்வான் – பிரயோசனம் திருப்பா. 29. இறப்பு – மரணம்,மோட்சம் திருவாய். 4-1-10.
இறவு – முடித்தல். பெரியாழ். 5-4-2-இறுகல்-அழுந்தல் திருவாய். 41-10.
இறுத்தல் – செலுத்துதல் திருவாய். 5-2-8.
இறை- சிறிது, அரசன், கடவுள், கப்பம். பெரிய 5-10-4
திருவாசகம். திருச்சதகம.செய். 57.
இறைகளவை – சரீரங்களாகிய அவை. பெரிய. 5-10-4.
இறைஞ்சென்- மனனே. பெரிய. 11-4-1.
465 இறைநிலை- பரமாத்ம ஸ்வரூபம். திருவாய்.தனியன். 1-1-5.
இறையான்- சிவன். பெரியாழ்வார். 518. முதல் திரு. 28.
இறையிறை யுருகும் வண்ணம்- கொஞ்சம், கொஞ்சம்
திருமா. 17.
470
இறைவன் குறை யிரப்ப மார்பு வாசநீர் அளித்தான்.
பெரிய 6-9-9.
இன்பமாரி- இன்பத்தையுண்டாக்கும் மேகம்.
இன்மை- இல்லாமை.. திருவாய். 6-3-4.
இன்னாமை- துன்பம். திருக்குறள். 630.
இன்னாரினையார் – இவர் இப்படிப்பட்டவர். நாச்சி. 7-5.
இனமலரெட்டுமிட்டு – செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி,
பாதிரி,புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை
அஷ்டவித புஷ்பம். ஆசார்ய ஹ்ருதயம். பெரிய. 1-2-7.
இனவேற்கண். திருவாய்மொழி. 5-6-6.
475 இனிதிரை – இனிதுதிரை கடைக்குறை. திரை இனிது –
அலைகள் இனிதாக. திருமா. 18.
இனியெம்பரமே – பரம் – வசம்.திருவாய். 6-2-4.
ஈசன்- சிவன். பெரிய. 2-10-1, நான்முகன்- திரு. 96.
கீர்த்தித்திருவகவல். 25, திரு அண்டப்பகுதி,46.
திருவிசைப்பா. 4-1, 25-9. தே. 4-65-3. சாய்க்காடு.
ஈசிபோமின் – சீசீ போங்கள். பெரிய. 1-3-8.
ஈட்டம் – கூட்டம். பெருமாள். 2-1.
480 ஈட்டுதல் – திரளுதல், திருவிருத்.21
ஈடுமெடுப்புமிலீசன்- குற்றம் பார்த்துத் தள்ளுகையும், குணம்
பார்த்துக் கொள்ளுகையும் இல்லாத
எம்பெருமான். திருவாய். :-6- 3.
ஈப்பாய்- ஈவாய். நான்முகன் திரு. 19.
ஈர்த்தல் – இழுத்தல். நாச்சி. 14.4. சிவபுராணம். 74.
ஈர்மை அறுக்குந்தன்மை. திருவாய். 9-6-3.
485 ஈர்மை கொள்தேவர் – அன்புடைய தேவர்கள். 2-8-10.
ஈர்மைசெய்து- ஈடுபடுதல்செய்து. திருவாய். 9- 6-3.-ஈரியாயிருப்பாள்- அன்புள்ளவளாய் இருப்பாள்
திருவாய். 6-7-9.
ஈவிலாத தீவினைகள் – நாசமில்லாத தீவினைகள்
திருவாய். 4-7-3.
ஈவு- நாசம்.திருவாய். 47-3.
490 ஈளை- கோழை. பெரிய. 6-4-1. தே. 1-67-6, 2-100-8.
கோவலூர்வீரட்டம்.
ஈளையேங்கி- கோழையாலே இளைத்து. பெரிய, 1-3-6.
ஈற்றுத்தாய் பெற்றதாய் . பெரிய. 3-9-2.
ஈன்துழாய்- போக்கியமான திருத்துழாய். பெரியதிரும.60.
495 ஈன்துழாயானை – இனிய துளசிமாலையையுடைய திருமால்
முதல்திருவந். 26.
ஈனமர் சாபம் – தன்மைபொருந்திய சாபம். பெரிய, 5-9-4.
உக்கம்- ஆலவட்டம். திருப்பா. 20.
உகட்டுண்டு- உகட்டு- உவட்டு, திருவாய். 3-5-4.
உகவை- சந்தோஷம். திருவாய். 6-2-8.
500 உகிர் – நகம். பெரிய. 10-9-8.
உகைத்தல் – உபேக்ஷித்தல். நான்முகன் திரு. 38. உச்சிமணிச்சுட்டி – தலையிலே அணியத்தக்க ஒரு ஆபரணம்.
பெரியாழ். 1-3-8.
உட்கண் – ஞானக்கண். பெரியதிருவந். 28. உட்கு – பெருமை, அச்சம்.
505 உடல் உள் அவிழ்ந்து சரீரமும், மனமும் நெகிழ்ந்து.
பெரியாழ். 3-6-1.
உடலையுள் – உடலுள். பெரிய. 10-1-5.
உடன் – ஒருங்கு. பெரிய, 11-2-10.
உடுக்கை- உடைத்தோல். திருவாய், 4-8-4.
உடைமணி – அரையில் கட்டிய மணிகள். பெரியாழ். 1-7-1.
510 உணங்கல் உலர்தல். (புழுக்கப்பட்ட நெல் ) திருவாய். 4-6-7. உணர்வத்தொடு – ஞானத்தோடு. திருவாய். 4-1-10. உத்தரவேதி – யாகசாலை. பெரியாழ். 1-9-6. உத்தானம் எடுத்தல். பெரியாழ். 1-8-1. உதரம்- வயிறு. அம .4.
515 உந்தி – கொப்புழ். பெரிய. 5-4-1. உந்தி பறக்கை- மகளிர் குழாம் உந்தி விளையாட்டு ஆடுதல். பெரியாழ். 3.9-11.-உபகாரம் கொள்ளாது – உபகாரத்தைக் கொள்ள முயலாமல்.
(தொண்டுகள் செய்கையாகிற உதவியைப் பெறமுயலாமல்)
பெரிய திருவந்.39.
உம்பர் -மேலிடம், தேவர். பெரிய. 7-8-10; திருவாய். 10-8-7.
திருச்சதகம். 64,66.
உம்பர்கோன் – இந்திரன். பெரிய. 5-4-5.
520 உமர் – உம்மைச் சேர்ந்தவர். திருவாய்.8-1-4.
உய்வு – பிழைப்பு. திருவாய். 4-3-11.
உயர்த்துணவு -ஞானம் . மூன்றாந்திருவந். 94
உயிர்நிலை – சீவாத்மஸ்வரூபம். திருவாய். தனியன். . உயிர்ப்பு – மூச்சு.நாச்சி. 5-2.
525உயோகுதுயில் – யோகநித்திரை.எல்லாவற்றையும் அறிந்து
கொண்டே தூங்குதல். பெரியாழ். 1-5-1.
உரப்புதல் அதட்டுதல். சிறிய திரும. 37.
உரப்பாள் – அதட்டாள். நாச்சி. 3-9.
உரம் – பலம், மார்பு. திருவாய். 1-3-1.
உரவு- விஷம். திருவாய். 6-4-1.
530 உரு – ரூபம், தேகம். பெரிய. 1-4-2.
உருப்பன் – உருக்குமன். பெரியாழ். 4-3-1.
உருப்பிணி – உருக்குமிணி. பெரியாழ். 3-9-3, 4-3-1.
உருப்பொலிகை – தழும்பேறுதல். பெரியாழ். 5-4-7.
உருமகம்- நரமேத யாகம். பெரியாழ். 4-8-3.
535 உருவறை – அவலக்ஷணம். பெரியாழ். 3-8-2.
உருவெண்ணும் – கணக்கெண்ணும். முதல்திரு. 33.
உரைக்கியம் – சொல்லுவம். திருவிருத்.55.
உரோடம் – ரோஷம். பெரியாழ். 2-6-5. நாச்சி. 2-5.
உரோமகூபம் – மயிர்ச்சிலிர்ப்பு. பெரியாழ். 5-1-7.
540 உலக்க ஒதுவனே -எப்படி முடியச் சொல்லுவன்.
திருவாய். 3-1-5.
உலக்க- முடியக் கண்டு திருவாய்.8-3-10.
உலங்கு- பெரு நுளம்பு- பெருங்கொசுகு. நாச்சி. 8-6.
உலங்குண்ட விளங்கனி – பெருங்கொசுக்கள் உண்ட
விளாம்பழம். நாச்சி. 8-6.
உலப்பு – வறட்சி, அழிவு. திருவாய்.6-10-1.
545 உலாகின்ற – கெண்டை- உலாவுகின்ற. திருவிரு . 75.
உலோபாய்- உலோபமற்றிரா நின்றாய். பெரியாழ். 2-7-6.
(தே.6-35-7. வெண்காடு)
உவணம்-கருடப்பட்சி முதல்திரு. 22.-உவரி – கடல் . நான்முகன். 56.
உவலையாக்கை – அருவருப்பான உடம்பு. திருவாய் 1-5-8.
550 உவனியம்-உபநயனம். பெரிய. 5-8-7.
உழக்குண்டு – துன்பப்பட்டு. நாச்சி. 13-4.
உழலையென்பு -உழலைத்தடி கோத்தாற்போலேயிருக்கின்ற
எலும்புகள். திருவாய்5-8-11.
உழறா நெகிழ்ந்தாய் -கலங்கி. பெருமா . 6-8.
உழறியுண்ண- துகைத்து. பெரிய. 9-5-2.
555 உழறுதல் – துகைத்தல். கலங்குதல். பெருமாள்.6-3.
திருவிருத்.58. (தே.3-47-7.ஆலவாய். உழறுமேல்’ தக்க. 32. உழிதருதல் – அலைதல். திருநெடுந். 9, திருமா.1, திருச்சதகம்.8. (திருவாசகம்.5,7)
560
22
உழுவை – புலி. பெரியாழ். 1-7-6. (திருச்சதகம். 7. அச்சப்பத்து. 8 )
உழை – புள்ளிமான். பெரியாழ். 5-1-2.
உள்ளுதல் – நினைத்தல். திருமா. 84.
உற்றாரிலி- கண்டு கிட்டினாரில்லாத. திருவாய். 5-6-7.
உறகல்- உறங்கல், உறங்கவேண்டா. பெரியாழ். 5-2-9. உறகுதல்- உறங்குதல். பெரியாழ்5-2-9.
உறல்- ஸ்பரிசம். திருவாய். 3-6-6.
உறிகள் போல் மெய் நரம்பெழுந்து – உடலிலுள்ள நரம்பகள் உறிகளைப் போல வெளியே தெரியும்படி. பெரிய. 1-3-3.
565உறுகை- கிட்டுகை, சேருகை, திருவாய். 4-9-10.
570
உறுவது – உற்றது. திருவாய். 4-10-6. உறைக்கும் பொல்லாதாய் முடியும். நாச்சி. 2-9. உறைப்பன் – மிடுக்கன். பெரியாழ். 4-8-2. உன்மத்தர் பைத்தியம் பிடித்தவர், பெருமாள். 3-4.
உன்னி – நினைத்தற்குரியவன். பெரிய. 10-1-3. உன்னித்து- நினைத்து, அனுசந்தித்து. திருவாய். 4-6-9. உன்னுடைய சுண்டாயம் நானறிவன் – உன்னுடைய வஞ்சகத்தை நான் அறிவேன். திருவாய் 6-2-11
சுண்டாயம் – விளையாட்டு.திருவாய். 7-8-7. உன்னை என்னுள்ளே குழைத்தாய்-என்னோடு ஒன்றாகக் கலந்தாய். திருவாய். 2-6-9. உனக்கேயறக் கொட்டு – உனக்கென்றேயற்றொழிய.
திருவாய். 7-8-5.
575 ஊக்கம் – முயற்சி, உயர்ச்சி, மிடுக்கு, பெரிய. 10-9-1. ஊட்டம்-உணவு, நாச்சி. 1-9. (திருவாசகம்) திருச்சாழல். 14.-ஊட்ட முதல் இலேன் தினந்தோறும் ஊட்டி வளர்க்கத்தக்க
கைப்பொருள் என்னிடம் இல்லை. பெரியாழ். 3-3-8
ஊடல் பிரண கலகம்.நாச்சி, 4-11.
ஊடாடுதல் நடுவேதிரிதல். திருவாய். 1-4-9
580 ஊத்தை அசுத்தம். பெரியாழ். 4-6-10)
ஊத்தைவாய் அசுத்தமானவாய். பெரியாழ். 4-4-3.
தே 2.38.10 சாய்க்காடு.
ஊமனார் கண்ட கனவினும் பழுதாய். பெரிய1- 1-3
ஊர்தல் – நடத்தல். பரவுதல்,ஒழுகுதல், திருநெடுந். 23.
ஊரவர் கவ்வை- ஊராருடைய ஆரவாரம். திருவாய். 5-3-1,2,3,4
55 ஊரவர் கவ்வை எருவிட்டு – ஊரார் கூறும் பழியாகிற
எருவை இட்டு. திருவாய். 5-3-4
590
595
ஊரா – ஊர்ப்பசு. திருவிருத். 94.
ஊராமிலைக்க – ஊர்வந்து சேர்ந்த கண்தெரிந்த பசுக்கள்
கனைக்க. திருவிருத். 94.
ஊழ்-முறை,விதி.
ஊழ்த்தல் – கனிதல். பெரிய.
ஊழ்மை. முறைமை. திருவாய 4-6.9
ஊழி கல்பம், பெரிய. 8-5-6 திருவாய் 5-4-8
திரு அண்டப்பகுதி 9.
ஊழி- விலக்ஷண காலம். திருவாய், 2-1-4, 5. பெரிய 1-4.9
திருப்பா. 4.
ஊழிலை – முற்றிப்பழுத்து விழுந்த இலை. சருகு.
ஊளியெழ – சப்தம் எழ. திருவாய். 7-4-4
ஊற்றம் -உறுதி. அனுசந்தானம். திருப்பா.21.
ஊறல்-ஊறிவந்த ஸாரம், நாச்சி. 10-9
ஊறு – தீமை. திருவாய். 7-4-2.
ஊன் -மாமிசம். பெருமா. 41. பெரிய. 1-4-2
ஊனகரகர் – பிறரைக்கொண்டு தீமை செய்பவர். திருமா.41.
600 ஊனக்குரம்பை. மாமி தேகம். முதல்திரு.91.
ஊனில்வாழ் உயிரே – மாம்சரூபமான சரீரத்தில் வாழ்கின்ற
நெஞ்சமே. திருவாய் 231.
எஃகு – எஃகினாற்செய்த சூலம். பெரியதிரும்.94.
எக்கல்-மேடு. திருவாய். 4-1-4
எக்கே – இது என்ன கஷ்டமோ, பெரிய. 10-8-8எக்கம் ஒரு தந்தியையுடைய வாத்தியம்,தாளம்.
பெரியாழ். 3-4-1.
எங்கள் குடிமுழுது எங்களுடைய குடியிலுள்ளார்
எல்லாரையும். பெரியாழ். 3-4-1.
எட்டினோடிரண்டு- பத்து, திருச்சந்த 83. திருச்சதகம். 49.
எடுப்பு-உயர்வு. திருவாய். 1-6-3. ஈடு 8-1-3.
எடுவிய – எடுத்த. பெரிய. 8-7-3.
610 எண் கண்ணான் – பிரமன். நான்முகன்திரு.73
எங்கு-கரடி. பெரிய. 6-10-6.
எண்டிசை எட்டுத்திக்கு. பெரியாழ். 2-9-11.
எண்டோளினாள் துர்க்கை. பெரிய. 2-10-6.
எண்டோளீசற்கு எழின்மாடமெழுபது செய்து
உலகாண்டவன் -கோச்செங்ணான். பெரிய. 6-6-8.
615 எதிர்தல் ஒப்பாதல் . நான்முகன். திரு. 84.
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை – பத்துத்
தலைமுறை. பெரிய. 7-2-6.
எந்தை- என் சுவாமி. பெரிய. 2-3-5. (சிவபுராணம். அடி. 11)
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை நமக்கே
உற்பத்திப் பரம்பரையில் முதல்வனான
சம்பந்தத்தையுடையவன். திருவாய். 3-3-2.
எந்தை தந்தை தம்பெருமான் – குலநாதனான பெருமான்.
பெரிய 2-2-4, 2-3-5.
24
620 எந்தை தந்தை தம்மானென்று எம்முடைய குலநாதனென்று.
பெரிய. 4-9-9.
எம்பரத்தல்லார் – என்னைப்போலே அடிமை செய்யார்.
பெருமாள்.3-6 (தே 7-100-4, நொடித்தான்மலை. 6-95-8 பொது எம்பிராக்கள் – எம்பிரான். பெரிய. 10-5-2.
எம்மனா – எமது குல தெய்வமே. பெரியாழ். 5-4-3. எம்மாவீடு – எமக்காகத் தருகிற விலஷணமானமோட்சம்
625 எம்மையுடைமாடு கொண்டான் -எனது ஆடை செல்வம்
எல்லாம் கொண்டான். நாச்சி. 10-7. எம்மோய் எனதுதாய். பெருமாள். 7-6. எய்க்கை-இளைக்கை. திருவாய். 8-8-7. பெரிய. 1-3-6. எய்த்தாது – போராதொழிவது. பெரிய. 11-3-6. எய்ப்பினில் வைப்பு – தளர்ந்த காலத்தில் உதவும் செல்வம்.
பெரிய. 7-10-4. நீத்தல் விண்ணப்பம். 39.-எரி – ஒளி. திருவிருத் 82.
எரிதி – தீ. பெரிய. 8-7-7.
எரியன கேசரம் – தீயைப்போன்ற உளைமயிர். பெரிய. 2-8-1.
எரிவு – கோபம். பெரியாழ். 1-2-4.
எருக்கிலைக்காக வெறிமழு வோச்சல் – எருக்கிலையை
உதிர்ப்பதற்கு மழுப்படை கொண்டு
ஓங்கி அடித்தல். பெரிய. 10-9-6.
635 எருத்துக் கொடியுடையான்- இடபக் கொடியையுடையவன்
பெரியாழ். 5-3-6.
எல்லி- இரவு. பெரிய . திருவந். 19.
எல்லே – என்னே,தோழி பெரியாழ். 3-2-1-10; திருப்பா.15;
நாச்சி. 3-3; திருவாய் 2-1-3. 5-4-1.
எல்லேபாவம் – என்ன மகாபாவம். திருநெடுந். 24.
எவ்வதெவ்வத்துள் – எவ்வகைப்பட்ட சத்துரு சமுகம்.
திருவாய். 5-7-5.
640 எவ்வம் – துன்பம். பெரிய. 9-10-2. திருச்சதகம். 41.
எவ்வும் – துன்பப்படுத்தல். பெரிய. 1-7-4. (தே). 7-31-10
இடைமருது.
எவஞ் செய்கேன் – என்ன உபகாரத்தைப் பண்ணுவேன்.
திருவாய். 9-9-6.
எழநண்ணி – போக்கிலே ஒருப்பட்டு. திருவாய். 9-5-10.
எழப்பாய்ந்து – உயரக்கிளம்பி. பெரியாழ். 1-4-7.
645 எழில் – அழகு. மூன்றாம் திருவந். 86, சிவபுராணம் 22,
கீர்த்தித்திருஅகவல். 3.
எழுநரகம் – எழுவகையான நரகங்கள். ஒன்றாந்திருவந்.87.
எழுமை – ஏழு பிறப்பு. திருவாய். 3-6-7.
எள்கல் – ஏய்த்தல். பெரியாழ். 3-7-4, திருவாய். 2-6-4.
எள்கலல்லால் – வருந்துதலே அல்லாமல். திருவிருத் 92.
650 எள்காது – இகழாமல். திருவிருத். 89.
எள்கி -மெலிந்து. பெரிய. 2-10-3. 1-3-3.
எள்கி- ஈடுபட்டு. பெரியாழ். 3-7-4; பெரிய. 9-3-6.
எள்கியுரைத்த – ஈடுபட்டுரைத்த. பெருமாள்.6-10; (தே) 4-82-2.
கழுமலம். 2-6-2. ஐயாறு.
எள்கினாள் – ஈடுபட்டாள். பெரிய. 8-2-7.
655 எள்கு நிலையும் பையாந்து நிற்கும் நிலை.
பெருமாள் 7- 8. (தே.) 4-82-2. கழுமலம்.-எளிவே – எளிமை. திருவாய். 1-3-1.
எற்றே- என்னே; ஆச்சரியக் குறிப்பு. பெரியதிருவந்.5.
எறிஞர் – பகைவர். பெரிய. 6-10-1.
என்கடவேன் -என்ன செய்ய வல்லேன். பெரிய. 10-10-7.
திருச்சதகம். 12.
660 என்சொல்லி-என்னையும் ஒரு பொருளாகக்கொண்டு.
திருவாய். 7-9-2.
என்பிலெள்கி-எலும்பிலே தட்டும்படி சரீரம் சிதிலமாய்
திருச்சந்த. 76.
என்றும் எப்போதும் – சர்வகாலமும் சர்வாவத்தையும்.
பெரிய.7-3-1.
என்றேய என்னில் – ஏனென்னில். திருவிருத். 30.
என்னம்மம்- முலைப்பால். பெரிய. 10-4-1.
665 என்னம்மா – எனக்குச் சுவாமியே. திருவாய். 7-1-8.
என்னானை – எனது ஆனை. பெரிய. 1-10-6; 4-8-3.
திருவாய். 3-9.1. (தே.) 6-79-8. தலையாலங்காடு; 7- 38-8
அதிகை. திருவெம்பாவை. 7.
என்னுசாகோ – எதனை வினாவுவேன். திருவாய். 7-3-4. என்னுயிர் உண்டமாயனால். திருவாய். 9-6-7. என்னுயிரை யறவிலை செய்தனன் சோதீ – அறுதிக்கிரயம் செய்து விட்டேன். திருவாய். 8-1-10.
670 என்னெற்றியுளானே -என் நெற்றியிலே புகுந்து நின்றான்.
திருவாய். 1-9-9.
என்னே என்பாரும் இல்லை – ஐயோ என்பாரும் இல்லை.
திருவாய். 9-1-3.
என்னைத்தன்னாக்கி – என்னைத் தன்பக்கலிலே ஞானம்
அன்பு முதலியவைகளை உடையேனாம்படி
செய்து. திருவாய். 7-9-1.
என்னைமார் – எங்கள் தமையன்மார். நாச்சி. 3-5; 6-9.
எனக்காய் – எனக்குத் தாயாகியும். திருவாய். 6-3-9
675 எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் எனக்கு எப்போதும் பெருமானுடைய திருநாமம் தேனும், பாலும், அமுதும் போல பரம போக்கியமானது.
பெரிய 6-10-6. எனக்கென்ன மனப்பரிப்பே – எனக்கு என்ன மனத்துயரம் உள்ளது? திருவாய். 6-4-6. எனக்கேல் – எனக்கு. ஏல் இடைச்சொல். திருவாய். 9-10-9,10.-எனைத்தோர் பலநாள்- பலகாலம் நாள்தோறும் திருவாய் 8-7-1.
எனையூழி-காலம்உள்ளளவும். திருவாய். 2-1-7.
ஏக சிந்தையனாய் -ஒரே நினைவாய். திருவாய். 5-10-1.
ஏச்சு- பழிப்பு. பெரியாழ். 3-8-2; நாச்சி. 12-8.
ஏசறுகை – துக்கப்படுதல். திருவாய். 5-3-1.
ஏடி-தோழி. பெரியாழ் 3-4-4; பெரிய. 10-8-9. திருச்சாழல். 1-20.
ஏண் -எல்லை. திருவாய். 2-8-8.
685 ஏடு – சூக்கும சரீரம். திருப்பல்.4.
ஏடு ஏறு பெருஞ்செல்வம் – ஏடு – புத்தகங்கள். பெரிய. 4-1-7.
ஏண்- நிலை, வலிமை. பெரிய. 1-6 1- (திருச்சதகம். 84.)
ஏணி ஏறு கருவி. பெரியாழ். 4-9-3.
ஏத்துதல் – புகழ்தல். இரண்டாம்திரு. 10,12.
690 ஏதம் – குற்றம், துன்பம். இரண்டாம்திரு. 37.
ஏதலன் – பகைவன். பெரிய. 1-7-4.
ஏதிலர் – பகைவர், நான்முகன்திரு. 71. (அண்டப்பகுதி.104.)
ஏந்தல் – தேங்கல், தாங்குதல், திருச்சந்த. 6
695
ஏமத்தூடி- நடுராத்தியில் ஊடி.பெருமாள். 6-10.
ஏமப்பட்டாளோகாவலிடப்பட்டாளோ.திருப்பா. –
ஏமாற்றம் – துன்பம். பெரியாழ். 2-7-8.
ஏய்த்தல் – ஒத்தல். திருவாய். 1-5-11.
ஏயான் – இரப்புக்குத்தகாதவன். பெரிய, 1-5-6.
ஏர் – அழகு, ஒப்பு. திருப்பா. 1
700 ஏர்விலா – தகுதியில்லாத.திருவாய். 7.9-5,8.
ஏலம் – வாசனை. பெரிய. 1-2-1.
ஏலும் – ஏற்கும். இரண்டாம் திரு. 16.
ஏவல்ல – எய்யவல்ல. இரண்டாம் திரு. 73.
ஏவலம் – அம்பின் திறமை. பெரிய. 9-5-8; 9-10-6.
705 ஏழ் – எழ. திருவாய்.1-5-1, எழுச்சி. 8-10-4.
ஏழ்ச்சி- விரிதல். திருவாய். 3-2-4.
ஏழ்படிகால்.ஏழுதலைமுறை. திருப்பல். 6 (தே.) 7-52-9.
ஆலங்காடு.
ஏழ்மைப்பிறப்பு -ஏழுபிறப்பு. திருவாய். 1-6-9.
ஏழளவும் . ஏழுதலைமுறையாக. பெரிய. 4-9-9.
710 ஏழிசை – தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி,
கைக்கிளை, திருவாய். 10-8-8; பெரிய. 3-10-1.-ஏழுதல் – பிரகாசித்தல். திருவாய். 1-5-1.
ஏழுமால் வரை ஏழுகுல பர்வதங்கள், கைலை. இமயம்
மந்தரம், விந்தியம்,நிஷதம், ஏமகூடம்
நீலகிரி என்பன 5 -2.
ஏழுலகும் தாள்வரையும் ஏழுத்வீபங்களும் பக்கத்திலுள்ள
சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும்.
ஏழுத்வீபங்களாவன. 1 நாவலந்தீவு, இறலித்தீவு,
இலவந்தீவு, கிரவுஞ்சத்தீவு, குசைத்தீவு, தேக்கந்தீவு,
புட்கரத்தீவு, பெரிய. 4-4-9.
ஏழுழியாய் -ஏழு கற்பங்களாகி. திருவாய். 5-4-8.
715 ஏழெழு பிறப்பு – ஏழு பிறப்புக்களிலும். ஏழுவகைப்
720
725
730
பிறப்புக்கள். 1 தேவர் 2. மனிதர், 3. மிருகம்,4. பறவை

ஊர்வன 6. நீர்வாழ்வன. 7. தாவரம். திருவாய். 2-7-1,4. ஏழை – அறிவில்லாதவன். பெரிய. 5-8-1. (கம்ப கங்கைப்.6 )
ஏற்பன – தக்கன.திருப்பள்ளி. 8.
ஏற்றான்- சிவபெருமான், எருதையுடையவன். முதல்திரு. 97.
ஏற்றை – தலைவனை. திருவாய். 3-6-6.
ஏறக்கொலோ – ஆவேசித்தானாகக்கூடுமோ. திருவாய்.
ஏறு – ஆண்சிங்கம். இரண்டாந்திருவந்.63. ஏறேழுடனே – ஏழு காளைகளை ஒரு க்ஷணநேரத்தில்.
பெரியதிருவந். 48.
ஏறேறி – சிவபெருமான். இரண்டாந்திரு. 63 ஏன்றேன்- பொருந்தினேன். நான்முகன்திரு. 95.
5-6-1,10.
ஏனம் – பன்றி. மூன்றாம்திரு. 89.
ஏனமுழுசாலில் தினைகள் – காட்டுப்பன்றிகள் நன்கு
உழுத சால்களிலே புதிய தினைகளை விதைத்த. மூன்றாந்திருவந். 89. (தே.) 2-114-5 கேதாரம். ஏனாகி – பன்றியாகி. பெரிய. 5-6-2.
ஏனொருவனாய் -ஏனம் ஒருவனாய்.(எதுகை)
நான்முகன்திரு. 70.
ஏனோர் – மற்றையோர். பெரிய. 1-5-7. போற்றித்திரு அகவல். 117.
ஐ – கோழை. பெரிய. 1-3-7 திருவாய். 2-9-3. ஐங்கனாணவில்லி – மன்மதன். பெரிய 9-5-7. ஐதுநொய்து – மெல்லிது. பெரியாழ். 5-4-8. ஐந்தழல் – பஞ்சாக்கினி. உதராக்கினி, சூரியதாபாக்கினி, தவாக்கினி, நிதாககாலாக்கினி. இரவிகாந்தாக்கினி. பெரிய. 5-5-9.ஐந்துநோய் – ஐந்து விஷயங்களாகிய நோய், சப்தாதிகளாகிற
நோய். திருவாய். 7-1-5.
ஐம்படை -பஞ்சாயுதமாகிய அணி. பெரியாழ்.1-3-5; 1-5-9, 10.
ஐம்பால் – ஐந்துவகையாக முடிக்கும் கூந்தல். பெரிய. 7-5-3.
ஐம்புலன் – பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகை உணர்ச்சிகள்.
திருவாய். 1-9-9.
ஐம்பூதம் – பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாயம்.
பெரிய. 4-69; இரண்டாம்திரு. 26.
ஐயம் – தியாகம் உபாதானம் இடுதல். திருப்பா. 2.
740 ஐயறிவும் கொண்டானுக்கு- ஐம்பொறி ஞானம். பெரிய. 7-4-7
ஐவர் -பஞ்சேந்திரியங்கள். பெரிய. 1-6-8; 9-6-5.
ஐவர்குமைக்கும் சிற்றின்பம் – பஞ்சேந்திரியங்களும்
பீடிக்கும்படியான சாரமற்ற விஷயங்கள். திருவாய். 6-9-9.
குமைக்கும் – நலிகிற.
ஐவரால் குமைத்தீற்றி நலிவுண்ணும்படிபண்ணி. திருவாய். 6 7-1.
ஒக்கலித்திட்டு – நடைபழகி. பெரிய. 3-3-1.
745 ஒக்கலை – மருங்கு. பெரியாழ். 1-4-4; திருவாய். 1-9-5.
ஓசித்தல் – ஒடித்தல். முதல்திரு. 27, திருவாய். 1-9-5.
ஓசிதல் – தளர்ச்சியடைதல், முறிதல் திருவிருத்.37.
ஒட்டார். பழிப்பார். நாச்சி. 3-3,சம்மதியார். 3-7.
ஒட்டி – இசைந்து, பொருந்தி. திருவாய். 1-7-7.
750 ஒட்டுகை- இசைகை, திருவாய். 1-7-7.
ஒட்டுவனோ – இசைவேனோ. திருவாய் 1-7-7.
ஒண்ணுதல் – பிரகாசமான நெற்றியையுடைய பெண்.
திருவிருத்50.
ஒத்து அணிவகை. பெரியாழ். 1-2-2.
ஒருக்கருத்து – ஒருமைப்படப்பிடித்து. திருவாய். 8-6-2.
755 ஒருக்கா – அடக்கமாட்டாமல். திருவிருத். 64.
ஒருகாலிருகாற்சிலைவளைய. பெரிய. 1-5-4.
(திருக்கோவையார். 152).
ஒருங்கப்பிடித்து ஒருமிக்கப்பிடித்து. திருவாய்.5-8-8.
ஒருங்க மல்லரைக் கொன்று – பெரிய.4-2-4. (தே. 4-32-9.
பயற்றூர்
ஒருங்கிற்று – சேர்ந்தது. பெரியதிருவந்.54.
760 ஒரு தாரா ஒரு மாலையாக. பெரிய. 8-10-2.
ஒரு நான்று ஒரு நாள். நாச்சி. 13-9; ஒருகால்.திருவாய். 6-2-7.ஒருப்படுத்த – ஒருமைப்பாட்டோட சமைத்த. திருவாய். 5-10-5.
ஒருபாடு -ஒருபக்கம். திருவாய். 8-3-7.
ஒருவன் என்று ஏத்த நின்ற – ஒப்பற்ற கடவுள் என்று
அடியார்கள் துதிக்கும்படி நின்ற. திருவாய். 3-4-8.
765 ஒல்குதல்- நாணங்கொண்டு கூசுதல்.
ஒல்லை- விரைவு. திருப்பா.15.
ஒலிகள்- பாடல்கள். பெரிய. 2-7-10; 4-5-10; 9-1-10.
ஒலி ஐந்துமைந்தும் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பத்துப் பாசுரங்களும். பெரிய. 2-10-10.
770
775
780
785
ஒலிசெய்த அருளிச்செய்த. பெரிய. 8-8-10
ஒலிமாலை – அருளிச் செய்தபாமாலை. பெரிய. 1-3-10;
3-10-10; 5-10-10. 8-10-10. (தே.) 3-54-8. பொது திருப்பாசுரம். ஒளிவட்டம் கண்ணாடி. பெரியாழ், 1-4-3.
ஒற்கம் – ஒடுக்கம். திருவாய். 1-8-4.
ஒற்றைப்பிறை – ஒரு கலையையுடைய சந்திரன். திருவாய். 1-9-10. ஒன்றிரண்டு கண்ணினான் மூன்று கண்களையுடைய
சிவபெருமான். திருச்சந்.7.
ஒன்று இடக்கிலேனொன்றட்ட கில்லேன்- பிடிசோற்றை இடேன் ஒருமிடறு தண்ணீரை வார்க்க மாட்டேன்.
திருவாய். 4-7-9.
ஓஒ உலகினதியல்வே – ஹாஹா என்ன ஆச்சரியம் உலகினது
தன்மை. திருவாசிரி. 6. ஓகெடுவினையேன் – மகாபாபி. பெருமாள். 7-6. ஒக்குதல் – உயர்த்துதல். இரண்டாந்திருவந்59. ஓசலித்தல் – அசைதல். பெரியாழ். 4-9-1.
ஓசனையான் – கும்பகர்ணன். (கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு யோசனை உள்ளது பற்றி. நான்முகன்திரு.29 ஒட்டருதல் – ஓடிவருதல். பெரிய, 4-3-9.
ஓட்டைமாடம் – நிலையற்ற உடல்.திருமா. 6. ஓணவிழவு – திருவோணத் திருநாள். நான்முகன்திரு. 41. ஒத்து – வேதம். பெரிய. 5-9-6. இரண்டாந்திருவந்.39.
ஒத்தொலி மறையொலி. பெரிய. 5-9-6.
(தே.) 1-41.5. திருப்பாம்புரம்.
ஓதம் – குளிர்ச்சி, அலை, முதல்திருவந். 16. ஓதி – கூந்தல். முதல்திருவந். 33.-ஓர்ப்பால் – ஆராய்ந்தறிகையால். திருவாய். 4-6-1.
ஓராமை-ஆராய்ந்தறியாமை சிறியதிரும. 10, 11.
790 ஓரீற்றுப்பிடி ஒரு குட்டியை ஈன்றபெண்யானை . பெரியாழ். 3-5-2.
ஓலமிடல் – அபயக்குரலிடுதல். திருவாய். 4-3-6.
ஓவி – சித்திரம் பெரிய, 2-8-7.
ஓவுதல் – ஒழிதல். திருவாய். 3-2-8.
ஒளித்துகிற்படலம் -ஒழுங்கு பெற்ற கொடிச்சீலை.
பெரிய. 6-9-4.
795 கங்கு -எல்லை, இராத்திரி – திருவாய். 5-4-7.
கங்குல்- இரவு. திருப்பள்ளி – 5, திருவாய்- 7-1-11, 7-2-1.
கச்சங்கம் – பிரதிக்ஞை, வியவஸ்தை – நாச்சி. 5-8.
கச்சி – காஞ்சிபுரம், மூன்றாம் திருவந். 26, பெரிய. 2-6-5,
கசிகை- ஈடுபாடு-கசிகையும் வேட்கையும். திருவாய். 10-3-8.
800 கஞ்சு – கஞ்சன் – நாச்சியார் 13-3, பெரிய. 2-6-7, மூன்றாந்
திருவந். 4.
805
கஞ்சை- கஞ்சனை. மூன்றாந்திரு. 34.
கட்கண்(உட்கண்). பெரியதிருவந். 28.
கட்கிலீ – கண்ணுக்குக் காணவொண்ணாதவன்.திருவாய். 7-2-3.
கட்டம்- கஷ்டம். திருவாய். 7-2-4, திருச்சதகம். 48.
கட்டழித்தல் நிலை குலைத்தல். திருச்சந்த.
கட்டி – வெல்லம். நாச்சி. 1-7.
கட்டு – அரண். திருவாய். 6-6-10,
கட்டுப்படுத்திரேல் – சிறிய திரும.19.
கட்டுரை – நற்செயல். திருவாய். 3-1-1.
54.
810 கட்டுவிச்சி – திருநெடுந். 11. சிறியதிரு. 20; திருவாய். 4-6-3.
கட்டேறி – தெய்வ ஆவேசம் கொண்டு. சிறிய திரும. 20.
கடம்- காடு, மதநீர், பாபபலம்,அவசியம் செயற்பாலது
நான்முகன்திரு. 52.
கடமை – கடன். திருவாய். 3-3-6.
கடல் கடைந்து அமுதம் கொண்ட. திருவாய். 3-4-9.
அழகர் கிள்ளை. கண்ணி. 73.
815 கடலே – உவர், நன்னீர், பால்,தயிர்,நெய், கருப்பஞ்சாறு. பெரியாழ்.
கடவன் – கடமைப்பட்டவன், எசமானன்.
கடாகின்று – கடாவுக இன்று. திருவிருத். 50.கடாய் -பாதுகாக்கப் பெற்ற. திருவிருத். 49.
தடாயன – உபயோகிக்கத்தக்கன. திருவிருத். 6.
கடாரம் பெரிய பாத்திரம். பெரியாழ். 1-1-6, 2-4-3.
கடாவுதல் – செலுத்தல், திருவாய். 7-3-1.
கடி- காவல், மதிள், வாச னை. பெரிய. 10-2-6.
கடிகாவையிறுத்து – அசோகசவனத்தை அழித்து. பெரிய.
10-2-6.
கடிகைத்தடங்குன்று சோளசிங்கபுரம். பெரிய. 8-9-4.
825 கடிப்பு – ஒருகாதணி. பெரியாழ். 2-3-2.
கடிறு களிறு. ளகரத்துக்கு டகரம் வந்துள்ளது.
பெரியாழ். 3-2-6.
கடுவன் – ஆண்குரங்கு. மூன்றந்திரு. 68; புறநா. 158.
அடி. -23, 200-2; குறுந். 26,278.
கடுவினை – தீவினை. திருவாய். 10-2-8. கடைகயிறு – தயிர் கடைகின்ற கயிறு. பெரியாழ். -3- -8.
830 கடைக்கொண்டு – பெரியாழ். 4-4-7, கடைத்தலை- திருவாசல் – திருவாய்-10-2-7; திருமா. 38.
கடையா – மூங்கிற்குழாய் திருவாய்- 4-8-4.
கண்- இடம் – பெரிய- 7-10-6. கண்களுக்கற்றுத்தீர்ந்து – புறம்பேபற்றற்று அனந்யர்ஹமாயிருக்கிற திருவாய் 7-3-3.
835 கண்டகர் – முன்போலக் கொடிய ராக்ஷஸர் – பெரியாழ். 4-8-4. குலாப்பத்து. 86.)
840
கண்டம் தேவப் பிரயாகை- பெரியாழ். 4-7. கண்டல்-தாழை.
கண்டாய்-கிடாய்- இரண்டாந்திரு.51.
கண்டீர் – கண்டு, கேட்டு. இரண்டாந்திரு. 75.
கண்டுரைத்த தமிழ்மாலை – பெரிய. 3-6-10. கண்ணநீர் – திருவாய். 678. கண்ணறாய்- தயவில்லாதவனே. திருமா. 44. கண்ணாலங் கோடித்து- கலியாணம்- நாச்சி.- கண்ணாளன் – பெரிய 11-6-7.
11-9.
845 கண்ணிக்கயிறு- முடிகளையுடையகயிறு திருவிருத்.91. கண்ணியார் குறுங்கயிற்றால்- முடிகளார்ந்த குறுங்கயிறு பெரிய. 5-9-7- 11-5-5. கண்ணுதல் கூடிய அருத்தனை- பெரிய, 7.10-7. கண்ணுறக்கம் நித்திரை – பெரிய. 4-5-5.-கண்படை- தூங்குதல் முதல்திரு- 19; நாச்சி- 4-9-10;
திருவாய்-4-9-10.
850 கண்புதைத்தல் மறைத்தல். (திருக்கோவையார். 43: சீவக. 1982.
கண்முகப்பே- கண்ணுக்கெதிரில் – திருவாய்-47-4;6-4-11;9-2-7-8.
கண்முதலியவை – பெரிய-11-7-1-9.
கண்மூன்றத்தானும் – சிவன். நான் முகன்திரு-42.
கணகணப்ப- கணகண என்று ஒலிப்ப. பெரிய. 4-4-8-(தே)
1-21-7 சிவபுரம், 4-28-1அதிகை.
855 கணபுரம் பெருமாள். -8-1-11, திருநெடுந் -16; பெரியதிருவந் 90.
சிறிய திரு. 72.
கணவலரும் அலரியும் – பெரிய. 11-7-6.
கணி -சோதிடன். பெரிய.
கணைநாண் – அம்புவிடுங்கயிறு.
கணைபாரித்து – அம்புகளைப் பிரயோகித்து. பெரியாழ். 4-3-7.
860 கத்தக்கதித்து- மிகவும் கொழுத்து- பெரியாழ் – 1 -9-6.
கத்திரபந்து – க்ஷத்ரபந்து- க்ஷத்திரியர்களுள் அதமன். திருமா. 4.
கத்திரியர் – க்ஷத்திரியர். பெரியாழ். 1-9-6.
கதவி – கோபித்த. இரண்டாந்திரு. 99.
கதலி-வாழை. பெரிய. 3-9-3. 4-10-1.
865 கதிரவன் – சூரியன். திருப்பள்ளி. .
கதுவப்படுதல் – கவ்வப்படுதல். நாச்சி. 8-2.
கதுவாய் – புண்பட்டவாய். பெரியாழ். 3-5-5.
கதுவாய்ப்படுதல் – வடுப்படுதல், வெறுந்தரையாம்படி.
பெரியாழ். 3-5-4.
கந்தாரம் – தேவ காந்தாரி ராகம் – பெரிய. -3-9-1.
870 கந்து – கந்தம். பெரிய. 6-7-8.
கப்பம் தவிர்க்கும் கலியே- நடுக்கத்தைப் போக்கும்
கண்ணனே .திருப்பா.20.
கப்பு – தோள். பெரியாழ். 3-1-5; காம்பிலடியிலுண்டானகிளை.
கபாலநன்மோக்கம் – பிரமகபாலத்தையொழித்தல்.
திருவாய். 4-10-4.
கபாலி – சிவன்; துர்க்கை. பெரியாழ். 2-8-8.
875 கபிலை- பசு. படிமைக்கலம் – திருப்பள்ளி.
கபோதம் – புறா, கொடுங்கு – பெரிய. 3-8-2.
கம்பம்-நடுக்கம். பெருமாள். 4-5-கம்பக் கபாலி – நடுக்கத்தைக் கொடுக்கவல்ல துர்க்கை.
ருத்ரனுமாம். பெரியாழ் -2-8–8
கமலத்திலை போலுந்திருமேனி – திருவாய்.9-7-3.
880 கமுகு – பாக்குமரம் – பெரிய. 2-10-7; 3-1-94-2-1.
கமுகம்-பாக்குமரம் பெரிய -3-10-4.
கமை- ( மை .பொறுமை. பெரியாழ்வார். 4-7-4.
கயம்-தடாகம், க்ஷயரோகம், யானை. பெரிய. 8-5-4. 8-7-1.
கயல்-கயல்மீன் – பெரிய. 1-8-10, 2-7-5, 3-2-9, 3-9-1. 8-7-3
885 கயவர் -மூடர்
34
கயிறு மாலை கயிற்றில் தொடுத்த பூமாலை – பெரியாழ் -3-6-1.
கரண்டம் – நீர்க்காக்கை, திருச்சந்த. 62.
கரணப்பல்படை – போர்க்கு உபகரணமாகிய பல்படை-
திருவாய்- 8-3-2.
கரத்தல் – ஒளித்தல் திருவாய்-1-1-7.
890 கரம்- கை, உறுதி. திருவாய். 7-8-9. திருச்சந்த. 25.
கரம் விற்கிலும்- நெல்விற்கும்படியான துர்பி காலத்திலும்.
பெரிய. 4-4-10.
கரா – கராம்- முதலை.
கரிமுகத்தான்-யானைமுகமுடைய விநாயகன்.
கரிய நாழிகை- அந்திக்காலம் பெரிய- 8-5-6.
895 கரியவாகி -அம.8.
900
905
கரு- கல்பிரதிமை,கர்ப்பம்.
கருக்காய் பிஞ்சு.கருக்காய் கடிப்பவர் திருவிருத்.64.
கருந்தேவன் – திருவாய். 9-3-4
கருநாயிறு – கருமை நிறமுடைய சூரிய மண்டலம்
திருவிருத்-17, திருவாய் -8-5-2.
கருநெல்- கருவடைந்த நெற்பயிர்- பெழி. 10-1-1.
கருப்புச் சிலை – கரும்பு வில்.
கரும்பு கண்வளரும். பெரிய. 2-10-4.
கருமாணிக்கம் கரிய மாணிக்கம் போன்ற வடிவுடையவன்.
திருவாய். 2-7-4,
கருமுகை – இருவாட்சி, சிறுசண்பகமுமாம். திருவாய். 9-9-10.
கருமேந்திரியம் ஐந்து – உபஸ்தம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு.திருவாய். 10-7-10.
கருவரங்கத்துள் – கர்ப்பஸ்தானத்தில் – முதல்திரு- 6. கருவிருந்தநாள் – கர்ப்பத்திலிருந்தநாள்- நான் முகன்திரு- 92.

கருவிளை மலர்காள் – காக்கணம் பூக்களே- நாச்சி- 9-3.
கருவூர்- பெரிய. 2-9-7.
910 கருளக்கொடி கருடக்கொடி- பெரியாழ். 5-1-1; நாச்சி-5-4.
கரை ஓசை. பெரிய- 8-3-1.
கரையாய் காக்கைப் பிள்ளாய் – பெரிய-10-10-2.
கல் (ஏவல்)- கற்றுக்கொள் – பெரியதிருவந்- 67.
ஒலி. பெரிய -2-7-3-10.
கல்கி- குதிரை முகத்துடன் அவதரிக்கும். பெருமாள்.7-6.
915 கல்வி- சாதுர்யம் – பெரியாழ்-2-9-1.
920
கல்விச்சிலை – தனுர்வேதம் பெரிய-8-6-3.
கலக்கழிய கட்டுக்குலைய. பெரியாழ்-2-2-4, 2-8-7; திருப்பா-6.
கலம்பகம் – திருப்பள்ளி. 5.
கலவர் – மரக்கலத்தினுள்ளேயிருப்பவர் – பெரிய – 11-8-2.
கலவி-கலத்தல். பெருமாள்- 1-6. திருவாய்-8-10-7.
பெரிய-9 -8-1.
கலவிருக்கை கொலுவிருத்தல் பெரியாழ் – 4-9-7.
கலாய்- கலந்து. திருவாய்-4-6-8.
கலி- காலதோஷம், கலி புருஷன் – இராமா நுஜ – 16,34.
திருவாய் 5-2-1.
கலிகன்றி- திருமங்கையாழ்வார் – பெரிய தனியன்-1
பெரிய. 11-6-10;2-5-10.
925 கலிங்கம்- ஆடை. பெரிய. 10-8-1.
கலுழி – கலங்கல், வெள்ளம் திருநெடுந் – 6.
கலை – ஆடை, சாஸ்திரம்,அம்சம், பக்கம். பெரிய-9-1-10.
கலைப்பாகி – ஆண்மானை வாகனமாகவுடைய துர்க்கை.
பெரியாழ்வார்-1-3-9.
கவ்வை- பழிச்சொல் – திருவாய் – 5-3-4; பெரிய-4-5-2.
930கவண் – கல்லெறி கயிறு.
கவந்தம் – தலையற்ற உடல். பெரிய. 9-8-5.
கவரி செய்வார் சாமரை வீசுதல் முதலான
கைங்கரிங்களைச் செய்வார்கள் – திருவாய்-7-6-11
கவரிப் பிணா – சாமரம் வீசுகின்ற பெண்கள் – நாச்சி- 1-4.
கவளமால் யானை- (எதுகை விசேடம்) – திருமா.45.
935 கவாடம்-கதவு பெரியதிரும 73.
கவி – குரங்கு- மூன்றாம்திரு 84.-கவிஞர் – வித்துவான்கள்.
கவிதை- பாட்டு- பெரிய-7-2-2.
கவின்- அழகு பெரிய. 3-1-6.
940 கவுட்கொண்ட நீராம் – பெரிய – 10-9-8.
கவுள் – கன்னம்- பெரிய – 10-9-8.
கவை- பிளவு 3-2-4.
கவையின் மனமின்றி வேறொன்றிற்புகும் மனமின்றி.
திருவாய் 9-8-3.
கடிகண்டு- தீம்பு . இது ‘கழகு” எனவும் வழங்கு.
பெரியாழ்வார்-2-4-6. (தே.) -5-13-8 வீழிமிழலை.
945 கழகம் – கூட்டம் “கழகமேறேல் – திருவாய் – 6-2-6.
கழல் விளையாட்டுக் கருவி.
கழல்கமவம் – திருவடித்தாமரை.
கழல்வளை (கை வளைக்கும் கழல்வளையென்று
இடுகுறிப்பெயர், நாச்சி11-2.
கழறல்- கிலேசப்பட்டுச் சொல்லுகை- பெரிய – 3-2-10.
950 கழறாநிற்றிர் – நியமியாநின்றீர் – திருவாய் 7-7-9.
கழிகோல் வீசுகோல், கன்றின் வாயில் கட்டும்
கொறுக்கோல். திருவாய்4-8-4.
கழி நேர்மை கழிவையுடைத்தான நுண்மை- திருவாய்- 8-8-2.
கழுது – பேய், பூதனை. பெரிய. 3-8-6.
கழுதை உதடாட்டங்கண்டு என்பயன் – திருவாய்-4-6-7.

கழை -மூங்கில்.
36
கள்கின்ற – திருடுகின்ற -(எதுகை) திருவாய்7-7-9.
கள்வங்களே கிருத்திரிமவியாபாரங்கள். திருவாய்-9-6-5-6, 10-4-5.
கள்ளமே காதல் செய்து- திருமா-24.
களகம்- அன்னம், சாந்து, நெற்கதிர் – பெரிய – 6-9-10.
960 களகமதின் – சாந்தையுடையமதிள் – பெரிய. 6-9-10. (தே)1-102-3.
களவம்- களா. யானைக்கன்று பெரிய. 11-6-4.
களவே – களவு பிரகாசிக்கும்படி-திருவாய் -1-5-1.
களனிழைத்து – தேவாந்திர சன்னிதானம்- திருவாய்-4-6-4. களிதாகிய சிந்தையனாய்- மிகுகளிப்பையுடைய. திருவாய்-10-8-4.
965 களிறட்ட பொன்னாழிக்கையென்னம்மான் -திருவாய். 8-10-6,10;
களைகண்-ரக்ஷகர், பற்றுக்கோடு. திருவாய். -5-8-3,8, கற்பகத்தின் வல்லி- திருவாய் -7-7-1,-கற்பம்- வேதாங்கங்களில் ஒன்று.
கற்பார் புரிசை- பெரிய. 5-1-4.
கற்புவானிடறி- பெண்மைக்குணம். திருவாய்-6-7-2.
கற்பு – அறிவுடைமை, இழந்ததுகற்பே- திருவாய். 6-6-5.
கற்றமொழியாகிக் கலந்து- நான் முகன்திரு. 81.
கற்றா -கன்றையுடைய பசு – பெரிய -5-1-10.
கற்றினம் – கன்றுகளின் கூட்டம் நாச்சி-12-8; பெரியாழ்.2-5-5;
பெரிய-8-10-3.
975 கற்றைக்குழல் – பெரிய. 2-6-7.
கறங்குதல் – ஒலித்தல்.
கறந்த பாலுள் நெய்யே போல் – திருவாய்.8-5-10.
கறவு -கப்பம். பெரிய. 10-7-10.
கறவை கறக்கும்பசு. திருப்பா.11,28.
980 கறி- மிளகு. பெரிய.
கறு- கோபம். பெரியாழ். 2-8-6.
கறையார் நெடுவேல்- பெரிய. 6-4-10.
கறையினார் துவருடுக்கை திருவாய். 4-8-4.
கன் பறை கறங்க-பெரிய. 11-5-6.
985 கன்றுகள் இல்லம் – பெரியாழ். 2-8.2.
கன்றுகள் காதில் கட்டெறும்பு பிடித்துவிடல் – பெரியாழ். 3-8-2.
கன்னல் – கருப்பஞ்சாறு. பெரியாழ். 2-9-9.
(கன்னலிலட்டுவத்தோடு சீடைகாரெள்ளின் உருண்டை).
கன்னார்மதிள் – தொழில் நிரம்பிய மதில். திருவாய். 5-8-3.
தே. 2-40-11 பிரமபுரம்.
கன்னி – இளம்பெண், அழியாமை. பெரியாழ். 3-1-6.
990 கன்னிமதிள் – பெரிய. 6-7-10.
கனகக்கடிப்பு – பொன்னால் செய்த ஒரு காதணி
கனங்குழை – கனமான குண்டலம்.
கனகம்- பெரியாழ். 1-3-8.
கனியிலிருந்தனைய செவ்வாய் -திருமா.18.
995 கா- சோலை- திருவாய். 6-5-6.
காஅடியேன் – இரண்டாந்திரு. 10. கா – வினைமுற்று.
காகுத்தன்- இராமன். சூரிய குலத்தரசன். திருவாய். 5-4-3;
நான்முகன்திரு. 53; அம. 2; பெருமாள். 9-4
காசையாடை -காஷாய ஆடை. பெரிய. -2-2-1.
காட்சி – தோற்றம். (தே. 3-45-10 ஆரூர் )-காண் – அழகு. திருவாய். 7-4-5.
காண்கின்றனகளும் -காணப்படுகின்ற செய்கைகளும்.
திருவிருத்8.
காண்டவம்- காண்டவ்வனம்.பெரிய. 2-5-2.
காணக்ொடாள்-காண இடம் தருகின்றிலள்.
திருவாய். 5-5-7-10;
காத்தனே – காத்தவனே. பெரிய. 4-6-7-
1005 காதணி (காதலிமார் குழையும்) மாங்கல்யம் போல்வது.
பெரிய. 4-4-1 மதுரைக் கலம்பகம்.”நம்பா”
காதல் – அன்பு .பெருமாள். 10-6.
காதலன் – கணவன். பெருமாள்5-2.
காதுகள் தூரும் – குத்தப்பட்ட காதுகள் தூர்த்துவிடும்.
பெரியாழ். 2-3-8,9.
காது செய்வான் – செவி செய்பவன். திருவாய். 9-1-9.
1010 காந்தப்பர் – கந்தருவர்கள். பெரியாழ். 3-6-6.
காப்பு -பாதுகாவல், ரட்சை.திருப்பல் 1.
காபாலி -பிரமகபாலத்தைக் கையிலேந்திய சிவன்.
பெரிய. 1-3-2.
காம்பற – தொற்றற, சம்பந்தமற. திருமா. 38. காம்பு – சிறுகாம்பன்சேலை. பெரியாழ். 1-3-8.
1015 காமம் – அபீஷ்டம்.(விருப்பம்). திருப்பா. 29. காமதேவா – மன்மதா. நாச்சி. 1 -3-4,6,8
காமரங்களிசை பாடும் – காமரம் என்னும் இசையைப்
பாடுகின்ற. பெருமாள். 8-4.
காமரானவாறும் – ஸ்திரீகள் தன்னை விரும்பியிருந்த
படியையும் பெரிய. 7-6-5. காய்தல் – கோபித்தல், பெரிய. 7-6-5.
1020காயகாயா. குறுக்கல் விகாரம். பெரியாழ் – 5-6.
கார் – சினை, பெருமை, நாச்சி. 9-2. பெரிய. 8-4-5. கார்க்கண்டன் -சிவன். நான்முகன்திரு. 87.
கார்க்கலி- அஞ்ஞானமாகிய தோஷம். கார்க்கோடற் பூச்சூடுதல் பெரியாழ். 3-3-3.
1025 கார்த்தல் – அரும்புதல். திருவிருத் 68. கார்த்தனவே – கருவடைந்து அரும்பின.திருவிருத். 68. கார்த்திகையான் – சுப்பிரமணியன். இராமாநுஜ. 22.காரார்புறவின் மங்கை- பெரிய. 1-5-10.
காரிகை – அழகுடைய பெண். திருவிருத் 19.
1030 காரேழ் – சம்வர்த்தம். ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம்,
துரோணம். காளமுகி,நீலவர்ணம்.
கால்- காற்று, சக்கரம், நுனி. நாச்சி. 1-8.
காலசக்கரம் – காலத்தை நடத்துகிற திருமொழி
திருவாய். 4-3-5,6, 7-2-7.
காலம் பெற . தாமதமாகாதபடி. திருவாய். 5-2-1, 7-3-5,6.
காலம் பெறச் சிந்தித்து காலந்தாழ்த்தாமல் உடனேயே
நினைத்து. திருவாய். 4-1-1.
1035 காலன் – யமன்.
காலாழும் -கால் அழுந்தும். பெரிய திருவந். 34.
காலி – பசுக்கூட்டம். பெரியாழ். 1-5-2,-2-6-7, 3-4-10.
காவவன் – அரசன். பெருமாள்.7-11.
காவி – நீலோற்பலம். திருவாய். 5-4-2, 1-9-8.
1040 காவு -விளையாட்டுச்சோலை – திருவாய். 6-3-5.
காள நன் மேனியினன் – திருவாய்-9- 3-1.
காளம் -வாத்திய விசேடம், கறுப்பு.
காற்றத்திடைப்பட்ட கலவர்மனம். பெரிய. 11-8-2.
காறை-கழுத்திலணியும் ஆபரணம் பெரிய. 3-7-8.
1045 கான்- காடு, வாசனை – பெரிய. 2-3-9.
கானதர் – காட்டுவழி- பெரிய. 3-2-3
கானகம்படியுலாவி – பெரியாழ். 3-6-4.
கானவர் -காட்டில் திரியும் வேடர் .
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூ – திருப்பா- 22.
1050 கிஞ்சுகம் – கிளி. பெரிய- 3-7-7.
கிடங்கு – அகழ் – பெரிய. 5-2-8. முதல்திருவந். 77.
கிதயுகம்- கிருதயுகம் – திருவாய். 5-2-3.
கிதி – கிரியை (நிகழ்காலச் செய்கை) திருவாய்- 5-6-4.
கிரமாலங்காரம் – பெரிய- 2-10-2, 3-4-1, 3-8-4, 4-2-2, 6-7-7.
1055 கிரிசை – கிரியா- திருப்பா- 2, நான்முகன்திரு – 95, திருவாய். 2-7-2.
கில்லேன்- மாட்டேன் பெரியாழ் -2-3-12, 2-9-8. நாச்சி-1-5,
திருவாய். 3-9-7.
கிழி -பணமுடிப்பு பெரியாழ்தனி – 1,2.
கிலிர்தல்- விளங்குதல் பெரியாழ். 4-8-6.
கிளரிக்கிளரி வருந்தி எடுத்தெடுத்துக் கூறி திருவிருத் – 8311060 கிளப்பைதலே – (பைதல் இளையது). திருவாய். -9-5-6.
கிளியைக் கைமேற்கொள்ளல் – பெரிய. 4-4-6.
கிற்கின்றியேன் – சக்தியற்றவன். பெரிய. -9-5.
கிற்பன்கில்லேன் – வல்லேன் மாட்டேன். திருவாய். 3-2-6.
கிற்றி – வல்லை – நாச்சி- 5-8.
1065 கிறி – தந்திரம் பெரிய. 3-8-2, திருவிருத்91.
சிறுபவளவடம். பெரிய . 192, திருவாய்.2106.
கிறிக்கொண்டு-உபாயத்தைக் கொண்டு. திருவாய். 2-3-8, 2-10-6.
கிறியம்மான் – நல்விரகையுடைய சர்வேசுவரன் – திருவாய்
4-8-6.
கின்னரம் – தேவ வாத்தியம் – பெரியாழ். 3-6-5.
கீசுகீக -ஓர் ஒலிக்குறிப்பு,ஒரு சார் பறவையொலி.
திருப்பா.7.
1070 கீர்த்தித்த – துதித்த – திருவாய். 7-9-2. கீழ்க்கன்று- தம்பி நாச்சி. 14-1. கீழ்து பிளந்த கீழதாம்படி திருவாய். -7-4-6. கீழ்மேல் ஏழெழு பிறப்பும் – கீழும் மேலுமாகிய ஏழெழு பிறப்புக்களிலும் திருவாய். 2-7-1. கீழையகம் – கீழைவீடு – பெரிய 10-7-1.
1075 குக்கர் – சண்டாளரிற்றண்ணியர் – திருமா.
குக்கூடல் – முட்டாக்கு பெருமாள்-6-5.
குஞ்சி – ஆண்தலை மயிர் – பெருமாள்.89. குட்டநாடு – திருவாய். 8 -9-1.
குட்டம் – மடு பெரிய. 3-5 -7, பெரிய. 11-4-4.
1080 குட்டன் – குமாரன் – பெரிய் – 1-4-2.
குட்டேற்றை சேங்கன்றை- நாச்சி- 14-2. குடக்கூத்தனுக்கு திருவாய். 4-10-10.
குடக்கூத்தனை – திருவாய்ப்.3-6, 3-7.
குடக்கூத்து பெரிய. 2-7-7, நாச்சி. 3-6
39.
1085 குடங்கலந்தாடி பலகுடங்களைச் சேர்த்து எடுத்தாடி- பெரிய. 9-8-6.
குடங்கள் தலை மீதெடுத்துக் கொண்டாடி- பெரிய திருவந். 31. குடங்கால் மடி, முழங்கால்- திருநெடுத் 11, பெரிய, 5-5-1, 10-4-3. நான் முகன்திரு. 44
குடங்கை – உள்ளங்கை பெருமாள். 7-7 திருவிருத். 11,24. குடதிசை மேற்குத்திசை – திருமா. 19.1090 குடந்தைகிடந்தார் – பெரியாழ்- 2-6-6.
குடமாட்டும் – குடக்கூத்து – பெருமாள்- 7.9.
குடமாடி – குடக்கூத்தாடி- நாச்சி- 13-2, பெரிய 5-5-6, 6-9-4.
திருவிருத் 38, பெரியதிரும- கண்ணி. 143. இரண்டாந்திரு. 98.
குடமாடிய கூத்தனை – குடக்கூத்தாடினவன் – பெரிய- 7-3-3.
குடமா – பெரிய- 3-6-8, 6-3-9.
1095 குடமாடுதடமார்வர் – குடக்கூத்தாடினவனும்
மார்பையுடையவனும் ஆகிய பெருமாள். பெரிய 5-10-1.
குடமிரண்டு ஏந்தியாடுமது சிறிய திரும-12.
குடமூக்கில் – கும்பகோணக்ஷேத்திரம்- இரண்டாந்திரு -97
குடுமி மலையுச்சி. திருவாய்- 2-10-2.
குடைந்து – அமிழ்ந்து- திருப்பா- 13.
1100 குடையேற – குடை முதலாக நான்முகன்திரு- 43.
குண்டர்- நீசர், ஆழம், தாழ்ச்சி,நீசம் – பெரிய -2-6-5.
குண்டிகை – கமண்டலம்- நாச்சி- 9.
குண்டு- ஆழம் நாச்சி – 2-3.
குணதிசை – கிழக்குத்திக்கு – திருமா. 19.
1105 குணாலமாடுதல் – குணாலைக்கூத்து தலைகீழாக
ஆடுவதொரு கூத்து பெரிய- 4-6-9.
குணில்- குறுந்தடி- திருப்பா- 26.
குணங்குநாறி முடைநாற்றம்நாறி – பெரிய- 2-4-1, நாச்சி 14-2.
குத்தாலொக்கும் – குத்தினாற் போலேயிராநின்றது- திருவாய். 95-9.
குத்து விளக்கு – திருப்பா. 19.
1110 குதற்று மிடுக்குக்கள் – திருவாய்- 10-1-5.
குதிரியாய்- (குஸ்திரி)- அடங்காதவள் – திருவாய்-5-3-9.
குதுகலிப்ப – ஆசைப்பட – பெரியாழ்- 3-6-1.
குதைகை – தடுமாறுகை – நான் முகன்திரு-21.
குதையும் வினை – அலையப்பண்ணுகிற துஷ்கருமம்.
நான்முகன்திரு. 81
1115குந்தி – குந்திக்கொண்டு, வினையெச்சம் – பெரிய-4-2-9.
குப்பாயம்- சட்டை- பெரிய. 3-5-6, நாச்சி. 14-4,
பெரியாழ். 3-5-6, நாச்சி. 14-4.
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை – குப்பையைக்
கிளறினாற்போலத் தோஷமே தோன்றும்படியான
செல்வமுடையாரை திருவாய். 3-9-5.
கும்மாயம் – புழுக்கிய பச்சைப் பயறோடு சருக்கரை

குழகி – விளையாடி -திருவாய். 6-2-6.
குழகு – அழகு திருவாய். 5-10-2.
குழகேலே விளையாடாதே – திருவாய்.6-2-5.
1045 குழமணன் கொண்டு- மரப்பாவை கொண்டு- திருவாய் -6-2-6.
குழமணி தூரமே – குணாலைக்கூத்துப் போலே தோற்றார்
தோல்விக்கீடாக ஆடுவதொரு கூத்து. பெரிய -10-3-1-10.
குழல் – கூந்தல் – பெருமாள். 6-2.
குழல் முழஞ்சுகளின் ஊருகுமிழ்த்து – வேய்ங்குழலினுடைய
துளைகளிலே நீர்க்குமிழி வடிவாய்க்கிளர்ந்து.
பெரியாழ். 3-6-11.
குழாவரிவண்டு – குழாமாகியவரி வண்டு-பெரிய. 2-10-4.
1150 குழிய – குழவிய – கூடிய – திருவிருத் 84.
குள்ளக்குளிர – மிகக் குளிர்ந்திருத்தல். திருப்பா -13.
குளப்பு கூறுகொள்ளப்பட்டு- துகைத்து மிதித்த இடத்திலே
மிதிக்கப்பட்டு. நாச்சி- 13-6.
குறந்து – சிக்குவிடுத்து – பெரியாழ் -2-5-8.
குறளை – பொய். திருப்பா-2.
1155 குறிக்கொள்ளே – திருவுளம் பற்றுக – திருவாய் -2-3-7.
குறிக்கோலொன்றிலாமையினால்- (குறிக்கோள் – நம்பிக்கை)
பெரிய -1-9-3.
குறிஞ்சித்திணை ஒழுக்கம் – பெரியாழ் -3-8-6.
குறிஞ்சியிசை தவருமாலோ – குறிஞ்சிப் பண்துளைக்கும் –
திருவாய்-9-9-1.
குறுங்குடி – இத்திருப்பதி திருநெல்வேலி இரயில்
சந்திப்பிலிருந்து 27 கல் தொலைவில் உள்ளது.
குறுகியவனான வாமனனது திருத்தலமாதலால் குறுங்குடி
எனப்பெயர் பெற்றுள்ளது. பெரிய – 1-6-8.
1160 குறுந்தலை- நீசர்வகுப்பில் முதல் நின்ற – பெரியாழ் -3-7-2. குறையிரந்த – குறைவாளனாயிருந்த- பெரிய -4-4-7. குன்றெயிற்றென்னவன் -மலை போன்ற மதிள்களையுடைய
நாட்டுக்கரசன் – பெரிய. 2-9-5.
கூகிற்றியாகில் – கூவவல்லையானால்- நாச்சி -5-6.
கூகின்றது – கூவுகின்றது – பெரிய -11-2-6.
1165 கூசம் – கூச்சம்- பெரியாழ் -3-7-7, திருவாட் -10-2-4,
தேவாரம் 7-7-7, எதிர்கொள்பாடி. 3-107-8;
நாரையூர், 6-65-2- ஏகம்பம்.

தோற்கருவி – பெரிய. 3-5-8.
கேயத்தீங்குழலோதி – பாட்டுடன் மதுரமாகிய
வேய்குழலையூதி – திருவாய். 6-4-2.
கேவலமன்று – சாமானியமன்று – பெரிய. 9-5-8.
கைசெய்தல் – ஒழுங்குபடுத்தல் – பெரிய. 2-6-5, 1-8-3, 2-1-1,
3-9-5, 4-1-7, பெரிய -1-8-4, திருவாய் 5-10-1.
-7-4-3. 1200 கைத்தலத்தா – அழகிய கையையுடையவனே – பெரிய
கைத்தலம் – பாணிக்கிரஹணம் நாச்சி -6-6.
கைத்தால் – நெஞ்சம் கசந்துபோனால் – நாச்சி – 2-8.
கைதவம் – கபடம் – திருவாய்-6-3-5, (பெருங். மகத -15-18)
கைதைத் தோடாரும் -தாழை மடல்களில் பொருந்தியுள்ள
பெரிய -3-4-9.
1205 கைதைமலர்க்குக்குருகு – பெரிய – 5-2-9.
கைந்நாகம் – கைம்மா – துதிக்கையையுடைய யானை.
கைப்பற்றுதல் – பாணிக்கிரஹணம் – பெரியாழ் -3-8-6.
கையறைபோழ்து- கை வகுத்துப் பொருத போழ்து
திருவாய். 7-4-5.
கைவலம் – கைம்முதல்.
1210 கொங்கு – வாசனை. பெரியாழ் -2-6-2.
கொங்கை வன்கூனி – பெரியாழ்-2-1-8.
கொட்டாய் பல்லிக்குட்டி – (தணி கௌளி) கொட்டாய்-
ஒலிசெய்- பெரிய. 10-10-4.
கொட்டை பஞ்சுச்சுருள் – திருவிடைமருதூர் மும்மணி
கோவை பெரியாழ் -3-5-1.
கொடிக்கோழி கொண்டான் -சுப்பிரமணியன் – திருவாய். 7-4-8.
1215 கொடிமூக்கு – நீண்டமூக்கு- பெரியாழ் -7-4-3. சிறிய.
திருமடல் -40, ஒழுகுபொற் கொடிமூக்கும் (சீவக. 165)
பெருங் -2-15:85, 5-8:16, கூர்ம – பலவகைத் -17.
கொடியேறு செந்தாமரைக்கை – பெரியாழ் -3-5-10.
கொடுங்கோளால் – திருவாய் -4-8-6.
கொடுவுலகம் – கொடியதாகிய உலகத்தை- திருவாய் -4-9-7.
கொண்டல் – காளமேகம் – பெரியாழ் -2-9-4.
1220 கொண்டற்கு- கொண்டதற்கு- பெரிய. 2-9-3.
கொத்துத் தலைவன் – கூட்டங்களுக்குத் தலைவனாகிய
துரியோதனன் – பெரியாழ் -1-9-3.
கொந்தக்குழல் – நெறிப்பையுடைய கூந்தல் – பெரியாழ் -2-5-8.கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.

கூடல் – ன்கன்சிரு -39, பெரிய -9-2-5, (தே. 5-64-4-
கோழம்பம்).
கூடலர் – பகைவா – பெருமாள்.1-11. 7-18-10- வேள்விக்
குடியும் துருத்தியும்.
கூடலித்தல் – பெரியாழ் -3-6-8.
கூடலூர் – அப்பக்குடத்தான் சந்நதி – பெரிய -5-2-1, 1-10.
1170 கூடார் – பகைவர் – திருப்பா-27.
கூத்தன் – சிவன் – பெரியதிரும-71, நாச்சி -4-4.
கூத்தர் குடமெடுத்தாடில் -திருவாய் -4-5-4.
கூதல் – குளிர் – பெருமாள் -6-1, தே. 1-130-3. ஐயாறு.
கூதை – மூளி (கூதைசெய்து) திருவாய் -9-1-9.
1175 கூந்தல் – கேசி (ஓரசுரன் – இரண்டாந்திரு -93.
கூம்பு-பாய்மரத்தின் நுனி பெருமாள் 55.
கூர்வேல் – கூர்மையான வேலாயுதம் -பெருமாள் -4-11.
கூயேகொள் – அழைத்துக் கொள் – திருவாய் -4-9-7.
கூவாய் பூங்குயிலே- பெரிய – 10-10-3.
1180 கூவிளை – வில்வம் – பெரிய -11-7-6.
கூழ்ப்பு- சந்தேகம் – திருவாய் -8-2-6.
கூழேன்மின் – சந்தேகப்படாதீர் – திருவாய்-3-6-9.
கூழை- கூந்தல் பெரிய. 2-6-7, திருவாய் -9-4-3. (தே) 5-64-8,
கோழம்பம்,
கூழைப்பார்வை – கள்ளப்பார்வைபெரிய -9-6-3.
1185 கூழைமைசெய்கை-அவரவர்க்குத் தக்கபடி பரிமாறுகை.
பெரிய. 6-3-2,5.
1190
கூற்றுச் சொல்ல- திருவாய் -5-1-2.
கூற்றுத்தாய் – பெரிய. 3-9-4.
கூறை -ஆடை,பெரிய. 4-5-5.
கூறையுடை – பரியட்டத்தின் உடுப்பு- பெரிய -3-3-1.
கூனின் மேல் உண்டையோட்டியது – பெரிய -10-6-2.
திருவாய் – 1-5-5, திருச்சந் -49. கூனே சிதையவுண்டைவில் நிறத்தில் தெளித்தாய்.
கெருடர்கள். திருப்பள்ளி. 9.
கேசம்- தலைமயிர். பெரியாழ். 1-2-2-1. கேசரம் உளை மயிர் – பெரிய -2-8-1.
திருவாய் -1-5-5.
44
1195 கேட்.டேயும் – கேட்கும்போதே, கேட்டாலும் – பெரிய திருவந்-34.
கேடகம் – ஆயுதத்தைத் தடுப்பதற்குக் கையில் கொள்ளும்

முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி.
பெரியாழ்- 3-1-3, மணிமேகலை காதை – 27-185.
(ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த
பருப்பு என்று பொருள் செய்திருக்கின்றனர்’
” பயற்றது கும்மாயம்” நன். சூ 299, மயிலை மேற்)
குமரதண்டம் – சேனாசமூகம்- திருப்பள்ளி. 6.
1120 குமரி – கன்னி – பெரியாழ். 3-8-3.
குமுதம் – அல்லி. பெரிய, 4-2-6, 7-5-10.
குமுறுதல் – வாய்விட்டுச் சொல்லமாட்டாது உள்ளே
முறுகுதல் – திருவாய்.6-5-1.
குமைக்கும் – நலிகிற, வருந்தும். திருவாய். 6-9-9, 5-1-6, 7-1-1.
குயிற்பைதல்காள் – குயில்பிள்ளைகளே. திருவாய். 9-5-8.
1125 குரம்பை – குடிசை- பெரிய . 4-4-3.
குரவம் – ஒருவாசனை மரம்.
குரவிற்கொடி முல்லைகள் நின்றுறங்கும் – பெரியாழ். 3-5-11.
குரவை கோத்த குழகனை – திருவாய் 3-6-3.
குரவை கோத்ததும் – பெருமாள். 7-9, பெரிய. 7-8-8, 2-5-4,
திருவாய். 3-6-3.
குரவை பிணைந்து – குரவைக் கூத்தாடி – பெரிய -1-8-4, பெருமாள். 7-9. பெரியாழ்வார். 2-3-5.
1130 குரவையாச்சியரோடு கோத்ததும் திருவாய். 6-4-1. குராப்போது – மணம்மிக்க மலர் (பூசைக்குரியது) – இரண்டாம்திரு. 31. குருக்கள்குல மதலை குருவமிசத்துப் பிறந்து அருச்சனன்
பெரியதிரும. 56.
குருடன் திருதராட்டிரன் பெரிய. 2-3-6. குருந்தம் அசுரன் ஆவேசித்திருந்த ஒரு குருந்தமரம். முதல்திரு – 54, 62 நான் முகன்திரு. 57.
1135 குருத்தமொசித்து குருந்த மரத்தை முறித்து. பெரிய. 3-8-5. குருத்திடைக் கூறைபணியாய் – குருந்தமரத்தின் மேலுள்ள
ஆடைகளை தந்தருள்வாய் நாச்சி. 3-4. குருந்தொசித்த மூன்றாம்திரு. 32. குருமணி – சிறந்த இரத்தினம். பெரிய. 3-10-2. குலாகின்ற – வளைகிற. திருவிருத். 75
1140 குலை – கரை – பெருமாள். 10-7.
குழகன் – எல்லாரோடுங்கலந்திருப்பவன் – பெரியாழ். 1-4-5, பெருமாள். 7-7, திருவாய். 3-6-3

கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.1250கோடிமூடி எடுத்தல். பெரியாழ் -4-5-8.
கோடு – தந்தம், கரை,
கோணை – பிரயாசம், மிடுக்குக்கள் திருவாய் -2-5-10; 5-3-9.
கோத்துக்குரவை பிணைந்த – ராசக் கிரீடை செய்தருளின
பெரிய 1-8-4.
கோதா – கௌதுகலத்தைச் செய்பவனே – பெரிய -6-2-9.
1255கோது – சாரமற்றது – திருவிருத் – 26.
கோதுகுலமுடையபாவை – திருப்பா – 8.
கோ துகுலமுடைக்குட்டனே – எல்லாராலும் விரும்பத்தக்க
குணங்களையுடையவனே. பெரியாழ். 2 – 9-6.
கோமளம் – பேரழகு, மிருதுவான தன்மை திருவாய்.
7-2-7; பெரிய – 10-8-9.
கோமிறைசெய்து – அரசன் செய்யக்கடவ மிடுக்குகள்.
நாச்சி-10-7.
1260கோயில் – ஸ்ரீரங்கம் – திருநெடுந் – 22.
கோயிலினுள்ளேமன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
பெரிய – 4-3-8.
கோயின்மை – அநீதி, ஆராய்ச்சியில்லாத செயல். பெரிய – 8-
2 – 8; 11 – 1 – 4; 11 – 2 -3; திருவாய் – 6 – 2 -6.
கோரம்பு – தீம்பு- பெருமாள்.6-4.
கோல் கழிந்தான் மூலைபோல் – பெரியாழ் – 3 – 7 – 7.
1265கோல்துணையா – ஊன்றுகோலைச் சகாயமாகக் கொண்டு
பெரிய-1-3-1.
கோல் தும்பீ – பெரிய – 8 -4 – 1,10.
கோல்தேடியோடுங் கொழுந்தே போன்றது – இரண்டாம்
திரு- 27.
கோலாடி -ஆஞ்ஞை செல்லுமிடம் – பெரிய. 5 – 4 – 4.
கோவலப் பட்டம் கவித்து – இடைக்குலத்துத் தலைவி என்று
பட்டம் கட்டி. பெரியாழ். 3 – 8 – 7.
1270கோவலர் ஸ்ரீநந்தகோபர் – பெரியாழ். 1 -2 – 13, பெரிய-9-2-5.
கோவலூர் – பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும்
பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்த
திருப்பதி.திருநெடுந் – 17.
கோவாய் – நிர்வாகர்களாய் – பெரிய – 7-7-9.
(தே. 4 -96 – 1. சத்தி முற்றம் )
கோவி நாயகன் – கோபீஜன வல்லபன் – பெரிய – 2-1-4.
கோவைமணாட்டி நீ – கோவைக் கொடியாகிய மங்கையே.
நாச்சி- 10 – 3.1275கோவயின்றமிழ் பாடுவார் – பெரிய – 9-10-9.
கோழம்பம் – குழப்பம், கலக்கம் பெரியாழ் – 3 -4 – 5.
கோழி -உறையூர் – பெரிய -9-2-5.
கோழி கூவெனல்- பெரிய – 10 – 10-6.
கோழிமுட்டைக்குக் குறுந்தடியென் செய்வது. பெரிய. 10-9-7.
1280கோழியும் கூடலுங்கோயில் கொண்ட – பெரிய – 9-2-5.
கோள்- சிறை, கிரகம், குற்றம்,துன்பம்,கொள்கை.
பெரியாழ் – 5 – 1 – 3, 9.
கோளூர் – திருவாய்- 8-3-5.
இத்திருப்பதி ஆழ்வார் திருநகரியிலிருந்து ஒரு கல்
தொலைவில் உள்ளது. நவநிதிகள் இங்கே ஒளிந்து
கொண்டிருக்கின்றன என்று அதர்மம் குபேரனுக்குக் கோள்
சொல்லிய இடாமாதல் பற்றிக் கோளூர் என்று பெயர்
வந்தது என்பர். மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.
கோறம்பு – திலகம், குறம்பம் என்ற ஆபரணம்.
பெரியாழ்- 3 -4 – 6.
கோனேரி திருவேங்கட மலைமேல் உள்ள புஷ்கரிணி.
பெருமாள். 4 – 1.
1285கோனோக்கி வாழுங்குடி உவமை – பெருமாள். 5-3.
கௌத்துவம் – மணி . பெரியாழ் – 4 – 5 – 8.
சக்கரச் செல்வன் – திருவாழியாலே அழகுபெற்றவன்.
பெரிய -5-9-5.
சக்கரப் பொறி ஒற்றுதல் – பெரியாழ்-5 -4-1;
சக்கரபாணி. திருச்சந்.14.
திருப்பல்லாண்டு. 7.
1290 சகடம்-வண்டி-பெரியாழ் – 1 -2 11. சங்கத்தழகர் – திருவாய் – 2 – 10 -2.
சங்கையாகி சம்பந்தமுடையளாகி- பெரியாழ் – 3 – 7 – 3. சடகோபனறிந்துரைத்த – திருவாய் – 7-8-11.
சண்டம்- உக்கிரம் – திருச்சந் 67.
1295 சண்டாள சண்டாளர்கள் – திருவாய். 3-7-9. சண்ணம் – ஆண்குறி – பெரியாழ். 1 – 8- 10 சாத்தியங்காண்மின் – திருமா. 7. சத்துருக்கனன் – பெரிய – 2 – 3 – 7.
சதிரா – அத்தாட்சியாயிருக்கும் தன்மை – பெரியாழ் – 5 -4 – 1.
1300 சதிர்த்தேன் – சதிரையுடையேன் – கண்ணிநுண். 5 (தே) சதிர்வு 1 – 1 -7 பிரமபுரம்.

1330சாடுதல் – தள்ளி அழித்தல், அடித்தல் – பெரியாழ். 3 -1-3.
சாத்து-சமூகம், தீர்த்தயாத்திரைக்குச் செல்வோர் கூட்டம்.
பெரிய. 1-7-2.
சாத்தன் – பெரியாழ். 2 -9 – 8; சிறியதிரும. 17.
சாதித்தல்-கொல்லுதல் – திருவாய். 3 -5-5
சாதி மாணிக்கம் – திருவாய். 3-4-4.
1335சாதியந்தணர்கள் – திருமா. 43.
சாது ஜனங்கள் – திருவாய்- 3-5-4.
சாதுவராய் -நான்முகன்திரு – 68.
சாதுவாய் – திருவாய் – 3-1-6.
சாந்தினிற் பஞ்சமம் வைத்து – திருவாய் – 8-9-8.
1340சாந்தினிக்குப் புத்திரனை அழைத்தது – பெரியாழ். 4-8 – 1.
சாம்பவான் – பெரிய – 10 -2-9
சாம நிறத்தன் – திருவாய் – 9-5 -6.
சாமம்- சாமத்தினிறங்கொண்டதாடாளன் – நாச்சி – 8-2.
சாமத்திருமேனி -சியாமளமான சரீரம் – திருவாய். 8 – 5 – 1.
1345 சாமமாமேனியன் – நீலநிறத்தையுடைய சிறந்த
சரீரத்தையுடையவன் பெரிய. 9-1-1.
சாமரை கவரிமானின் மயிரால் அமைந்த அரச சின்னம் –
பெரிய. 3-8-3.
சாமவேதகீதன் சாமவேதத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டவன் –
திருச்சந். 14.
சாமவேதி – பெரிய. 5-5-9.
சாமவேதியன் -சாமவேதத்தை முதலில் அத்தியயனம்
செய்தற்கு உரிமை பெற்றவன் – பெரிய . 7 – 7-2.
1350சாமாறு பணி கண்டாய் – சரீர விச்லேஷத்தைப் பெறும்படி
பார்த்தருள வேணும். திருவாய். 4-9-1.
சாமியப்பன்- சிவன் – பெரிய. 2 – 2-7.
சாய்-ஆச்சரியப்படும்படியான அழகு. திருவாய். 8-2-1.
சாயை- தேஜஸ். ஒப்பு- பெரியாழ். 5-3-3.
சார்கொடான் – அணுக ஒட்டான். திருவாய். 1 -10-6.
1355சார்ங்க முதைத்த சரமழை- வில்லால்விடப்பட்ட அம்பு
மழை. திருப்பா. 4.
சாரிகைப்புள்ளர் – விரைந்த நடையையுடைய. திருவிருத்.19.
சாலகம்- பலகணி. பெரியாழ். 3-4-1.
சாலேகம்- சன்னல். பெரியதிரும. 31.
சாழலேதோழியே. – சாழல் – மகளிர் விளையாட்டில்
ஒன்று. திருவாசகம். சாழல். பெரிய. 11-5-1-10.

1360 சாளக்கிராமம். பெரிய. 1-5-1.10; 4-7-9; பெரியாழ். 2-9-5.
சாற்றிச் சொன்னேன் – வற்புறுத்திச் சொல்லுகிறேன்.
பெரியாழ். 2-2-5.
சாற்றினேன் தடம் பொங்க – பெரிய. 10-2-10.
சாறுபட -உற்சவமுண்டாக, (விழவுபட) திருவாய். 7-4-2.
சிக்கென- உறுதியாக . விரைவாக. பெரியாழ். 2-7-6, 4-1-2,
4-5-9, பெரிய. 1-1-5. திருவாய். 2-6-1, 10-2-3. (தே)
5-71-9 விசயமங்கை. 4-59.1. பருப்பதம்.
1365 சிங்கப்பிரான், நரசிங்கமூர்த்தி. திருவாய். 2-8-9.
பெரியாழ். 5-2-4.
சிங்கவேள் குன்றம் – அஹோபிலம். பெரிய. 1-7-1-10.
சிங்கம் உறங்கிவிழித்தல் உவமை. திருப்பா.23
சிங்காமை – சங்கோசியாமல். பெரிய. 10-6-1.
சிசுபாலன்- வசுதேவனுக்கு உடன்பிறந்தவளும் அதனால்
கண்ணனுக்கு அத்தையுமான சுருதசிரவை
என்பவளுடைய மகன். திருவாய். 7-5-3.
1370 சிசுபாலன் – தலையைச்சிரைத்திட்டது. பெரியாழ். 3-9-3.
சிணுங்கி- முக்கால முதல். பெரிய. 10-5-1.
சித்தர் – அஷ்டமாசித்தியடைந்தோர். திருப்பள்ளி. 9.
சித்திர குப்தன்- இயமராசனது கணக்கன். பெரியாழ். 5-2-2.
சித்திரகூடப்பொருப்பு – சித்திரகூடமலை. பெரியாழ். 2-6-7.
1375 சித்திரகூடம் – இராமன் வனவாச காலத்தில் தங்கியிருந்த
ஒரு மலை. பெரியாழ்.3-10-6; பெருமாள். 10-5.
சிதகு – கடுஞ்சொல், குற்றம். பெரியாழ். 4-8-4; 4-9-2.
சிதைகிய – உடைந்த. திருவாய். 4-1-1.
சிந்தாமணி – நினைத்த மாத்திரத்தில் விரும்பியவற்றைத்
தரக்கூடிய மணி. பெரிய. 1-10-9.
சிந்து பூமகிழும் திருவேங்கடம்- தூவினமலர்கள் அழகு
கெடாதிருக்கப்பெற்ற திருமலை. திருவாய். 3-3-2.
1380 சிந்துரம் நெற்றியிலணியும் பொடி. பெரியாழ். 3-4-6.
சிமயம் – சிகரம். திருவிருத். 31.
சிரமம் தீர்தல் – இளைப்பாறப்பெறுதல். பெரியாழ். 5-4-8.
சிரமப்பட்டோம்-கஷ்டப்பட்டுச் செய்தோம். நாச்சி. 2-3.
சிரீதரன் – திருமால். திருவாய். 2-7-9.
1385 சிரீதரன் மூர்த்தி திருவாய். 4-4-2.
சிரீவர மங்கல நகர் – திருவாய். 5-7-1-11.

சிரைத்திட்டான்-பெரியாழ். 3-9-3.
சிரைத்து அழித்து. பெரியாழ். 3-9-3.
சில்லி – சில்லெனல், சிள்வீடு.பெரிய. 1-7-9.
1390 சில்லென்றழையேன்மின் – சிலுகிடாதே அழையுங்கோள்.
திருப்பா.15.
சில்லென்றொல்லறாத – சில்லென்ற ஓசை மாறாத.
பெரிய. 1-7-9.
சில்லை – சிலுகுசெய்தல். திருவாய். 6-7-4.
சிலம்பாறு. பெரியாழ். 4-2-1; 4-3-9. நாச்சி. 9-10.
சிலம்பியலாறு சிலம்பு என்று கூறப்படுவது நூபுரகங்கை.
பெரிய. 9-9-9.
1395 சிலாதலம் – கற்பாறை. மூன்றாந்திரு. 58.
சிலிங்காரம் – சிருங்காரம். பெரியாழ். 3-4-9.
சிலுகு – சண்டை, கூச்சல். திருப்பா. 15. (வியாக்) சிலுப்பி- கையால் சிலிப்பித்து.பெரிய. 10-8-2.
சிலும்ப- முழங்க. பெரியதிரும. 69.
1400 சிலை – ஒளி. பெரிய. 3-9-4. (தே.1-116.3.பொது.)
சிவசாபம் தவிர்த்தது பிரமனால் சிவனுக்கு ஏற்பட்ட
பிரம்மஹத்தி சாபத்தைப் போக்கினது. பெரிய. 1-4-8. 1-5-8; 4-2-8; 6-9-1, திருச்சந். 42.
சிவப்பட்டார் – சைவர். நாச்சி. 6
சிவபெருமான் பங்கத்தாய் – சிவபிரானை வலது
52
பக்கத்திலுடையவனே. திருநெடுந். 9. சிவளிகைக்கச்சு – கட்டுங்கச்சு, பொன் எழுதினகச்சு.
பெரிய. 8-1-7.
1405 சிவன் ஆலநீழல் அறம்பகர்ந்தது – ஆலமரத்தின் நிழலிலே அகத்தியர், புலத்தியர் தக்ஷர், மார்க்கண்டேயர்
என்கிற நால்வருக்கு அறம் உரைத்தது முதல் திருவந்.4. சிவன்கூத்து வகை – பெரியதிரும. 68.71. சிவனுக்கு எழுபது மாடம் செங்கணான் செய்தது. பெரிய. 6-6-8.
சிற்ற- ஆயாசப்பட. திருவாய். 9-1-7. சிற்றங்சிறுகாலே- குளிர்போதில். திருப்பா. 29.
1410 சிற்றவை – சிறிய தாயார் பெருமா. 8-6. சிற்றாடை – சிறிய ஆடை. பெரியாழ். 3-3-5. சிற்றாதே -அசையாமல்.திருப்பா.11.

சிற்றாற்றங்கரையில் மூவாயிரவேதியர். திருவாய். 8-4-8.
சிற்றுதல்-ஆயாசப்படல். திருவாய். 9-1-7. திருப்பா . 11.
1415 சிறுக்கண் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-7.
சிறுக்கன்று – இளங்கன்று பெரியாழ். 2-6-3.
சிறுக்குட்டன் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-2; 3-3-5.
சிறுக்கை – சிறியகை. பெரியாழ். 1-4-2,7.
சிறுகால் நெறி – சிற்றடிவழி. பெரியாழ். 4-2-8.
1420 சிறுகாலே – விடியற்காலையில், திருப்பா. 29. பெரியாழ். 3-3-2.
சிறுச்சண்ணம் – சிறிய ஆண்குறி. பெரியாழ். 1-8-10
சிறுச் சிறிது கொஞ்சம் கொஞ்சமாக. திருப்பா. 22.
சிறுச் சேவகம்- பாலபராக்கிரமம்.திருவாய். 5-10-3.
சிறுத்தாம்பு – சிறிய கயிறு, கண்ணிநுண் 1.
1425 சிறுத்தேவி – பருவம் நிரம்பாதவள். திருவாய். 6-7-5.
சிறுதூதை – மண் முதலியவற்றால் இயன்ற சிறுகலம்
நாச்சி. 2.8.
சிறு தொண்டீர்- நீசர்களே. பெரிய. 7-9-3.
சிறுநோன்பியர் – அற்பவிரதங்களைக் கொண்டவர்.
சிறுப்பத்திரம் சிறியவாள். பெரியாழ். 3-3-5.
1430 சிறுபுலியூர்ச் சலசயனம் பெரிய. 7-9-1-10.
1435
சிறுபுறம் பேசுதல் – அற்பமான குற்றங்களை மறைவில்
சொல்லுதல்.
சிறு பேரழைத்தல் – சிறுபேர் நாராயண நாமம். திருப்பா. 25.
சிறுமனிசர் – அற்ப மனிதர். திருவாய் 1-5-8; 8-10-3.
சிறுமானிடவர் – நீச மனிதர்கள். நாச்சி. 12.4
சிறுமியின் நிலைமை பெரியாழ். 3-7-1-10.
சிறு வீடு – சிறுகாலையில் விடுதல். திருப்பா. 8.
சிறை- க்ஷயம். பெரிய. 11-8-7.
சின்மொழி – சிலபேச்சு.திருவிருத். 22.
சின்ன நறுந்தாது – சிறிய மணமுள்ள தாதுக்கள். பெரிய
திரும. 32.
1440சின்ன நறும்பூந்திகழ்வண்ணன் – சிறிய மணமிக்க பூப்போல்
விளங்குகின்ற நிறத்தையுடையவன். பெரியதிரும. 97.
சின்ன மலர்க்குழலும் – துகள்களையுடைய மலாகளை
அணிந்த கூந்தலையும். பெரிய திரும. 45.
சீடை – உருண்டை வடிவமுள்ள சிறு பண்ணிகாரவகை.
பெரியாழ். 2-9-9

சீதனையே. (ஸ்ரீதரனை) – குளிர்ந்த தன்மையுடையவன்.
சீதை- உழுபடைச்சால், நிலத்தை ஜனகமகாராசன்
யாகத்திற்காக உழும்பொழுது தோன்றியதால்
பிராட்டிக்குச் சீதை என்று பெயராயிற்று.
திருவாய்.4-2-8; பெரிய. 7-8-7. இரண்டாந்
திருவந். 15, பெரியாழ். 3-3-5.
1445சீமாலிகன் – கண்ணனுடைய தோழன். பெரியாழ். 2-7-8.
சீய்க்கை- திருவலகிடுகை. திருவாய். 10-2-7.
சீயம் – சிங்கம்.
சீரரசாண்டு – சிறப்பாக ராச்சியபரிபாலனம் செய்து.
திருவிருத்.80.
சீராம விண்ணகரம்-இத்திருப்பதி சோழநாட்டில் சீகாழியிலிருந்து அரை கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். பெரிய. 3-4-1-10.
1450 சீலைக்குதம்பை – சீலைத்தக்கை (காதுவளர்தற்பொருட்டு
இடுவது) பெரியாழ். 3-3-1.
சுக்கிரன் கண்ணைத்தர்ப்பத்தின் நுனியால் குத்தியது. பெரியாழ். 1-8-7.
சுக வெள்ளம் – இன்பக்கடல். திருவாய். 10-2-1. சுகிர்ந்திட்ட – கழித்திட்ட திருவாய் 7-7-9.
சுகிர்ந்து- பிளந்து மூன்றாந்திருவந். 95.
1455 சுட்டி – ஒரு நெற்றியணி. பெரியாம். 1-6- 1-7-10, பெருமாள் 7-5.
சுடரடி – தேவராசன் திருவடி. 1-1-1.
சுண்டாயம் விளையாட்டு,வஞ்சனை. திருவாய்.
6-2-1, 7-8-.7,8.
சுணங்கையெறிந்து – மயிர்கிளர்த்து திருவாய். 4-6-7.
சுணம் – சுணங்கு (சுண்ணம் முலைமேல் தோன்றும் நிற வேறுபாடு. பெரியாழ். 2-3-4.
1460சுந்தரத்தோளன் – அழகிய தோளையுடையவன். பெரியாழ். 1-3-6.
சுந்தரர் – கந்தருவர். திருப்பள்ளி.7.
சுந்தரன் – அழகன். நாச்சி. 9-10. சும்மெனாதே- மூச்சுவிடாதே. பெரியாழ். 5-4-3. சுமடு -சும்மாடு. திருவாய். 7-1-10.
1465 சுமந்திரன் – தசரதருக்கு மந்திரியும், சாரதியும் ஆனவர். பெருமாள்.9-7.
சுமாலி – விஷ்ணுவின் சக்கரத்தால் கொல்லப்பட்டவன். .
திருச்சந்த. 107.

சுரவி – பசு. திருவிருத்.73.
சுரிகை அணைத்து – உடைவாளைத் தரித்துக்கொண்டு.
பெரிய. 10-8-5.
சுரிகையும் தெறிவில்லும், செண்டுகோலும்
உடைவாளையும், சுண்டுவில்லையும், பூச்செண்டு
வில்லையும். பெரியாழ். 3-4-3.
1470சுரியேறுசங்கு- சுழித்தலையுடையசங்குட மூன்றாந்திரு.49.
சுருக்கே- சங்கிரகமாகச் சொல்லலாவது, திருவாய். 9-1-6.
சுருப்பு- சுரும்பு வண்டு. பெரியாழ். 1-3-21.
சுரும்பலற்றும் – வண்டுகள் ரீங்காரம் செய்தல்.
திருவாய். 10-2-1.
சுருள்பங்கி நேத்திரத்தாலணிந்து – சுருண்ட குழல்களைக்
கட்டி பீலிக்கண்களாலே அலங்கரித்துக் கொண்டு
பெரியாழ். 3-4-5.
1475சுலாய் – சுற்றி. திருவாய். 7-4-2.
சுலாவிநிற்றல் – சூழ்ந்து கொண்டு நின்று.
இரண்டாந்திருவந்.40.
சுவடு-அடையாளம். பெரியாழ். 4-1-4,7 திருச்சந். 41,
பெரிய திருவந்.8.
சுவேதன் – அர்ச்சுனன். நான்முகன்திரு. 24.
சுழலை – சூழ்வலை நாச்சி. 9-1.
1480 சுழலை – சுழன்று கழன்று வருகிற ஆறு. துன்பங்கள்
இவ்வுடலைச் சூழ்ந்து கொண்டிருப்பதனால் அவற்றைச்
சுழலாயாக உருவகப்படுத்தினார். பெரியாழ். 5-3-1.
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனன். ஆலோசனையுடைய
துரியோதனன். பெரியாழ். 1-8-5. ‘சூழலை’ என்பதன்
குறுக்கல் விகாரம். சூழல் – ஆலோசித்தல்.
சுளகு -முறம். நாச்சி. 2-8.
சுளை கொண்ட பலங்கனி – சுளைகளையுடைய
பலாப்பழம். பெரிய. 6-9-3.
சுற்றத்தவர் – உறவினர்கள். திருவாய். 9-1-1.
1485சுறவ நற்கொடிகள் – சுறாமீனையுடைய நற்கொடிகள்
நாச்சி. 1-4.
சுனை – தன் இடமானசுனை (மலையூற்று) திருவாய். 10-5-10.
சூடகம் – கைவளை. திருப்பா. 27.
சூடாமணி – தலையில் அணியும் இரத்தினம்.
பெரிய திரும. 77.
சூடிக்கொடுத்தாள். இராமாநுஜ. 66

1490 சூதகம் – தேமாமரம். பெரிய. 4-2-1:5-3-8.
சூது – உபாயம், காரணம். நான்முகன்திரு. 64; பெரிய
திருவந்.19; திருவாய். 2-10-10.
சூர் – பேய், தெய்வப்பெண். முதல்திருவந். 3.
சூர்ப்பணகா – இராவணனுடைய தங்கை. பெரிய
திரும. 145; பெரியாழ். 3-9-8.
சூரியமண்டலத்தினூடே செல்லல். பெரியாழ். 4-9-3;
பெரிய. திரும. 16,17.
1495சூலம் மாளிகையில் வைத்தல். பெரிய. 7-5-6; மாடத்துச்சி
மிசைச் சூலம். 3-9-4.
சூலிகை – சூலம். பெரிய. 8-3-3. (தே. சூளிகை 1-129-4. கழுமலம்
2-34-2. பழுபூர்; 3-92-10 நெல்வேலி; 2-50-1. ஆமாத்தூர்.
சூழ்தல் – ஆராய்தல், எண்ணல். திருவிருத். 81.
சூழ்போகி- கொல்லும் வகைகளை ஆராய்ந்து பெரியாழ். 4-3-3.
சூழல் – தந்திரம்,மணம், வட்ட வடிவமான பூமி, பெரியாழ்.
2-9-10; 4-1-4.
1500 சூழறும் ஆணையற்ற. நாச்சி. 2-7.
சூனியவாதர் நிரீசுவரவாதிகள், இராமாநுஜ. 99. செக்கஞ் செக – நினைவுகெட. திருவாய்.1-9-5
செக்கர் -சிவப்பு. திருவாசிரியம். 1; பெரியாழ். 1-7-2
செக்கிலிட்டுத் திரித்தல். திருவாய். 7-1-5.
1505 செக-போக. திருவாய். 1-9-5.
செகில்- சிவப்பு. திருவிருத்தம். 69.
செங்கண்மால் -திருமால், பெரியாழ். 3-8-4.
செங்கண்ணா. மூன்றாந்திரு. 47.
செங்கணான். பெரிய. 6-6-1,5.
1510 செங்கலங்கல் – சிவந்தவெள்ளம். பெரிய. 4-4-7. செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து – செங்கழுநீர்ப்பூக்கள் மலர. திருப்பா.14. சிலப். அந்திமாலைச் சிறப்புச்செய்காதை. அடி. 64. செங்களம் – சிவந்த யுத்த பூமி. திருவிருத். 77. செங்கற் பொடிக்கூறை காவியில் தோய்த்த ஆடை. திருப்பா. 14.
செங்கீரை – தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்தாடுவிப்பதொரு
நிருத்தவிசேடம். பெரியாழ். 15.110
1515 செங்குறிஞ்சித்தாரார் சிறிய திரும.16. செங்கோல் வலவன் – சோழன். பெரிய. 6-4-3.

செஞ்சொல்மாலை. பெரிய. 1-7-10.
செஞ்சொற்கவிகள். திருவாய். 10-7-1.
செஞ்சோற்றொடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்- சமணர். பெரிய 7-9-2
1520 செடியாக வல்வினைகள் -பாபம்.பெருமாள். 4-9.
செடியராக்கை- (சம்சாரமாகிற) பெருங்காடு நிறைந்த
சரீரசம்பந்தத்தை. திருவாய். 1-5-7.
செண்டன் – பூச்செண்டு. பெரிய. 4-8-3.
செண்டுகோல் பந்தடிக்கும் கோல்; நுனியில் பூக்கள்
வைத்துக்கட்டிய கோல்.பெரியாழ். 3 -4 – 3.
செண்டு சிலுப்பி- செண்டைக் கையிற்சலிப்பித்துக்கொண்டு.
பெரிய. 10-8-2.
1525 செந்தமிழ் பாடுவார்தாம் வணங்கும் தேவர். பெரிய. 2-8-2.
செந்தமிழ் மாலை. இரண்டாம்திரு. 13.
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் – அந்தணர்.
பெரிய 7-8-7.
செந்திறத்த தமிழோசை. திருநெடுந்.4.
செந்நெ இ – செவ்வனேநிறுத்தி. முதல்திருவந். 30,47.
திருவாய். 5-2-6.
1530 செந்நெல்கவரிவீசும்.திருவாய்.5-8-1; 7-3-6.செப்பம் –
செப்பம் – செவ்வை. திருவாய். 2- 9-1. திருப்பா. 20
செப்பாடு – செம்மையான குணம். பெரியாழ். 3-5-6.
செம்பாடு- செம்மண்தரை. பெருமாள். 10-2.
செம்பியன் கோச்செங்கணான் – ஓரரசன். இவன் ஈசற்கு
எழில்மாடம் எழுபது செய்தவன். பெரிய. 6-6-1.
1535 செம்பினாலியன்ற பாவை -செம்பினால் செய்யப்பட்ட
பிரதிமை. பெரிய. 1-6-4.
செம்பொன் செய்கோயில். பெரிய. 4-3-1,10
செம்பொன் இலங்குவாளி – விளங்குகின்றபொன்னால்
செய்யப்பப்பட்ட அம்பு பெரிய. 2-8-3.
செம்போத்துத் திருத்துதல். பெரிய. 10-10-1.
செம்மாது பிராட்டி. பெரியதிருவந். 7.
1540 செம்மாந்திரே – செவ்வனே. பெரியாழ். 3-8-5.
செம்மாபாத பற்பம் – செவ்விய சாமளமான பாதபத்மம்
திருவாய். 2-9-1.

செம்மாய் நிற்றல் – நேர்மையாய் நிற்றல். திருவாய். 9-6-6.
செம்மி- அடைத்து. மூன்றாந்திரு. 12.
செய்கிறுதி – செய்கிறாய். பெரியதிருவர். 83.
58
1545 செய்குன்றம் – செல்வமக்கள் விளையாடல் பொருட்டு
அமைக்கப்படும்கட்டுமலை. பெரிய. 5-1-4.
செய்தனகள் – செய்தவகைகள். பெரிய. 5-5-1-10.
செய்ந்நன்றி குன்றேன்மின் – செய்த நன்றியை மறவாதீர்கள்.
பெரிய. 1161.
சிலப். வரந்தருகாதை. அடி. 191.
செய்மிறை – செய்யுநடுக்கம். திருவாய்.7-5-8.
செய்யப் பெறாய் – செய்யாய் – பெரிய.10 -7 – 1 – 8.
1550 செய்வானின்றகளும் எதிர்காலத்திலுள்ள செயல்களும்.
திருவாய். 5-6-4.
செய்வினை – முற்பிறப்பில் செய்த கருமம் .திருவாய். 4-7-1. செருந்திப்பொழில் – சுரபுன்னைச்சோலை. திருநெடுந். 25. செருநுதல் போர்முகம். பெரிய. 11-4-6.
செல்சார்வு – அடைதற்குரிய இடம். திருவாய். 8-4-2.
1555 செல்லா நல்லிசையாய் அழியாத புகழையுடையவனே
பெரிய. 6-3-9.
செல்வக் கொழுந்து. பெரியாழ். 2-8-10. செல்வவிபீடணற்கு – அழியாத செல்வமாகிய
பக்தியுடைமைபற்றி செல்வ விபீடணன் என்று சிறப்பிக்கின்றார். பெரிய. 6-8-5. செல்வரிப்போதில்லை – உங்களுக்கு வேண்டியவற்றைச் கொடுக்கவல்ல செல்வர்கள் இல்லை. திருவாய். 3-9-6. செல்வன் – சிறந்த குணங்கள் பொருந்திய செல்வநம்பி பெரியாழ். 4-4-8 திருப்பல்.11.
1560செல்வு-செல்வம். பெரியாழ். 1-5-1; பெருமாள்.4-7. செலக்காண்கிற்பார் – முன்புபெற்ற ஞானம்போதாது என்று மேன்மேலும் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு காணவல்லார். திருவாய். 5-8-4. செவ்வி அழகு. திருப்பல். 1. செவிப்பூ – மகளிர் அணி. திருப்பா.27. செவியில் கட்டெறும்பு பிடித்திட்டு விளையாடுதல். பெரியாழ். 2-4-2.
1565 செற்றம் பகைமை, கோபம், பொறாமை, திருமா.30. செற்றலேறி – ஈமுட்டையிட்டு. பெரியாழ். 4-5-2.

செற்றார்- பகைவர். திருப்பா. 11.
செற – சீறிக்கோபிக்க பெரிய. 5-10-1.
செறுதல்- அழித்தல். பெரிய.
செறுப்பனாகில் – கோபித்துக்கொள்வேனாயின். நாச்சி. 12-9. (தே.) 1.134.4. பறியலூர்.
1570 செறுவாரு நட்பாகுவர் – பகைவரும் நண்பராவர்.
திருவிருத், 27.
சென்னி – நெற்றி. பெரியாழ். 3-6-3.
சே அதக்குதல் – கிட்டிகட்டி அடித்தல். பெரியாழ். 4-5-7 5-2-3.
சேக்கழுத்தின் மணிக்குரல் – இடபத்தின் கழுத்தில்
கட்டப்பட்டுள்ள மணிஒசை. பெரியாழ். 1-7-7.
சேட்டை- மூதேவி. திருமா. 10.
1575 சேடர் இளம்பருவமுள்ளவர். பெரிய. 9-2-2.
சேடார்பொழில்-இளமைபொருந்திய சோலை.
பெரிய. 6-8-4.
சேடு- சேண்.பெரிய. 3-3-1. (சேடு – கரை . தே.6.76-4.
திருப்புத்தூர்; 1-61-8. செங்காட்டங்குடி.
சேடேறுபொழில் இளமைபொருந்திய சோலை. பெரிய.
4-1-7.
சேது – திருவணை. நான்முகன்திரு. 28.
1580 சேது பந்தனந்திருத்தினாய் – அணை கட்டுதலை நன்றாகச் செய்தவனே.நாச்சி. 2-7.
சேமம்-எப்போதும் ரட்சகன். பெரிய. 6-5-10.
சேமம் செங்கோனருளே – நம்மைப் பாதுகாப்பது
எம்பெருமானது திருவருள். இ
திருவிருத்.27.
சேமவைப்பு – சேமித்து வைத்த தனம். இராமாநுஜ.22.
சேய். முருகன். பெரிய.
1585 சேர்கொடான் – அகப்படும்படி பண்ணான். பெரிய. 7-3-3. திருவாய். 2-7-3.
சேரிகையேறும்- ஊரில்பரவும். திருவிருத். 19.
சேவகங் கொள்ளுதல்- அடிமை கொள்ளுதல். பெரியாழ். 4-4-8. சேவகம்- வீரப்பாடு. திருப்பா. 24.
சேவகன்-வீரன். பெருமாள். 8-8; பெரியாழ். 5-4-4.

1590 சேவகனார் – பெருமாள். திருமா . 11.
சேவடி- சிவந்த பாதம். பெரியாழ். 5-4-7.
சேவையதக்கி – இடபங்களை அடக்கி. பெரியாழ். 5-2-3.
சேவியேன் – வணங்கமாட்டேன். திருமா. 35.
சேழுயர்ந்த மணிமாடம் – மிகவும் உயர்ந்த அழகிய
மாடங்கள். பெரிய. 4-4-9.
1595 சேறை-பஞ்ச ஸார க்ஷேத்திரம். சிறியதிரும. 72;
பெரியதிரும. 115; பெரிய. 7-4-1-10; 10-1-6.
சைவர் – சிவ தீட்சை பெற்றுச் சிவனைவழிபடுவர்.
இராமாநுஜ.99.
சொட்டுச் சொட்டெனல். பெரிய. 1-9-1.
60
சொட்டைநம்பி – ஆளவந்தார் குமாரர் மணக்கால் நம்பியை
ஆச்ரயித்தவர்.
சொப்பட – நன்றாக. பெரியாழ்.2-4-5.
1600 சொல்லாய் பைங்கிளியே. பெரிய 10-10-5.
சொன்மாலை இரண்டாந்திரு. 85; திருவாய்.9-4-5.
சோத்தம் – அஞ்சலி பண்ணுமவர்கள் அதற்கு அனுகூலமாகத்
தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு (பாசுரம்)
சப்தவிசேஷம். பெரியாழ். 2-3-4,5; தாழ்ந்தார்
சொல்லும் சொல். பெரிய. 2-3-6 8-10-6
சோத் தெம்பிரான். பெரியாழ் 2-4-5; பெரிய. 10-7-8; சோத்தென: பெரிய. 10-5-5.
சோத்து – சோத்தம். பெரிய. 9-5-9; 10-5-5.
சோதிவட்டங் கொல்முகம்-சோதிமண்டலமோ.
திருவாய். 7-7-8.
1605 சோதிவெள்ளம் – அழகுவெள்ளம். திருவாய் 5-5-10. சோப்பூண்டு- அடிபட்டு. பெரியாழ். 2-1-5. சோம்பர்-சோம்பேறிகளாய்த் திரிபவர்கள். சோம்பியிருப்பவர்கள். திருமா.38.
சோம்பாது – பின்வாங்காமல் பெரிய திருவந். 18.
1610 சோமு சோமயாகம். பெரிய. 2-10-1; 6-7-5. சோரேல் கண்டாய் – நழுவவிடாதே. திருவாய். 9-3-4,5. சோலுதல் – கவர்ந்து கொள்ளுதல். திருவிருத். 35.
சோலை – திருமாலிருஞ்சோலை. பெரிய. 4-9-23 மூன்றாந்திரு. 61.
சோழன் செங்கணான். பெரிய. 6-6-1-10.

1615 சோற்றை நாய்க்கிடுதல். திருமா. 14.
சோறு நியதமுமத்தாணிச் சேவகம், கையடைக்காய்,
கழுத்துக்குப்பூண், காதுக்குக் குண்டலம், சாந்தம்.
இவை அடியார்களுக்குக் கோயிலில் கிடைப்பவை.
திருப்பல் 8.
ஞானக்கை – ஞானமாகியகை. திருவாய். 2-9-2.
ஞானச்சுடர்விளக்கு – அறிவாகிய பிரகாசமான தீபம்.
இரண்டாந்திரு. 1.
ஞானத்தமிழ் – அறிவைக் கொடுக்கக்கூடிய திருவந்தாதிப்
பிரபந்தம். இரண்டாம்திரு 1.
1620 ஞானமேபடை -அறிவே கருவி. திருவாய். 3-1-9.
ஞானப்பிரான் – அறிவைக் கொடுக்கும் எம்பெருமான்.
திருவிருத். 99.
ஞானமும் முடமும் அறிவும் அறிவில்லாமையும். திருவாய்.
6-4-3.
ஞானிக்கும் அறிவாளிக்கும். திருவாய். 4-1-10.
தக்கணை தணை. பெரியாழ். 4-8-1. 4-9-5. பெரிய. 11-7-2.
1625 தகவிலி – ஈரநெஞ்சில்லாதவன். பெரிய. 10-2-3.
தகளி – அகல். முதல்திருவந். 1; இரண்டாந்திரு 1.
தசக்கீரீவற்கிளையோன் – இராவணன் தம்பி. விபீஷணன்
பெரிய. 8-6-7.
தசாவதாரம் – பத்து அவதாரம். பெரிய. 11-4-1. 10.
தஞ்சுடையாளர் – தஞ்சமாகவுடையவர். பெரிய. 9-2-6.
1630 தஞ்சை – தஞ்சை மாமணிக்கோயில். இரண்டாந்திரு. 70
தஞ்சையாளி – தஞ்சை மாமணிக் கோயிலை ஆள்பவன்.
பெரிய. 7-3-9.
தட்ட- அடைத்த, தடுத்த. பெரிய. 8-9-3.
தட்டு – இதழ். பெரிய. 7-3-6.
தட்டுளுப்பு – தடுமாற்றம். பெரியாழ். 3-7-3. (திருவாசகம்
திருத்தோணோக்கம். 6.)
1635 தட்டொளி – கண்ணாடி. திருப்பா.20.
தடம் பொங்கத் தம் பொங்கோ- ஐய சூசகவாத்தியத்தின்
சப்தாநு ராகம். பெரிய. 10-2-1.
தடவந்து – பரிசித்த. பெரிய. 8-5-1.
தடவிற்று- பரிசித்தது. திருவிருத். 56.
தடா- ஒருவகை நவபாண்டம். நாச்சி. 3-6.

1640 தடாவிய – பரந்த, மூன்றாந்திரு.75; வளைந்த. திருவிருத்.6
தடாவியதே – கோடியது. திருவிருத். 5.
தடித்தல் – பெருத்தல். பெரிய. 2-1-6.
தடிப்ப- துடிப்ப. பெரிய. 10-5-2.
தடிபிணக்கு – தடிக்கொண்டு பிணங்கும்படியாகும். திருவாய்.
6-2-7.
1645 தடு குட்டமாய் -தலைகீழாய். திருவாய். 3-5-3.
தண்கடல் வட்டம் – குளிர்ந்த கடலால் சூழப்பட்ட
பூமண்டலம்.திருவாய். 3-5-1,2.
தண்கால். திருநெடுந்.17; இரண்டாந்திரு.70; சிறியதிரும. 71 )
பெரியதிரும. 120
தண்டகாரணியம் – தக்கணதேசத்தில் துறவிகள் வசித்துவந்த
ஒருவனம். பெரிய. 10-2-3.
தண்டம்- சேனை, தண்டனை. திருப்பள்ளி. 6. பெரிய.
11-1-2,7.
1650 தண்டவரக்கன் – இராவணன். நான்முகன்திரு. 44.
தண்டு காலாவூன்றி – தடியைக் காலாகக் கொண்டு ஊன்றி.
பெரிய. 1-3-5.
தண்ணாவது – தாமதியாமல். திருவாய். 4-9-1.
தண்ணுமை – மத்தளம், வேறுவேறு. திருப்பள்ளி. 9. தண்ணெனவு – மென்மைத் தன்மை. பெரியாழ். 4-10-6.
1655 தணர்தல் – பிரிதல். பெரிய. 9-3-5.
தணிகிடாய் – தணித்துக்கொள். நாச்சி 2-2.
தத்து – ஸ்வீகாரம் பெரியாழ் 2-1-7. தத்துவப்பாடல்கள் – திருவாய். 8-8-5,9. தத்துவமன்று தகவு – தகவு அன்று தத்துவம் – நீ இப்படி இருப்பது உனக்குத் தகுதி அன்று,
இஃது உண்மை. திருப்பா. 19.
1660 தத்துவமிலி-உண்மை இல்லாதவன்.நாச்சி. 1-3. தத்துவன் – எனது தன்மை உள்ளவன். நாச்சி. 5-6. தத்துறல் – கிட்டுதல். பெரியாழ். 5-1-7. தத்துறுமாகில் கிட்டுமாகில். பெரியாழ். 5-1-6. ததர்கை – நெரிகை. திருவாய். 7-4-5.

1670 தகர்த்தாதே – நோவு படுத்தாதே.நாச்சி. 5-10.
ததைத்துக் கொண்டு- நெருங்கிக்கொண்டு. நாச்சி. 10-8.
தந்தச்சீப்பு- தந்தத்தினால் செய்த சீப்பு. பெரியாழ். 2-5-8.
தந்தம் மக்கள் – தங்கள் தங்களுடைய பிள்ளைகள்.
பெரியாழ். 2-2-3.
தந்துவன்-தந்து – கொணர்ந்து. உவன் – நடுத்தரமாய்
இருப்பவன். பெரியாழ். 1 – 3 – 3.
1675 தந்தை காலில் பெரு விலங்கு – பெரிய. 7-5 – 1.
தம்பகமாய் – புதராய். பெருமாள். 4-5.
தம்பர மல்லன – தம்மால் தாங்க முடியாதவற்றை
பெரிய. 10-7-13.
தம்மன்னை – தாய். பெரியாழ். 4 -5 – 1 – 9.
தம்மனை- தாய். பெரியாழ். 1 – 5-3.
1680 தம்மையுகப்பாரைத் தாமுகப்பர் என்னுஞ் சொல்
கொண்டாடுவர் – ஒரு பழமொழி. நாச்சி. 11 – 10.
தமப்பன்மார் – தகப்பன்மார். பெரியாழ். 3-1- 9.
தமர் – உறவினர். திருவாய். 4-6-6.
தமருகந்த தெவ்வுருவம் ஆச்ரிதர்களால் விரும்பப்பட்ட
உருவம் எதுவோ. முதல் திருவந் 44.
தமனகம் -தவனம். பெரியாழ். 2-7 – 3.
1685தமியாட்டி – தனிமையையுடையவள். திருவிருத். 73
தமிழ்த் தலைவன் – இராமாநுஜ.10.
தமிழ் நல்மாலை- தமிழ்மொழியினால் ஆகிய நல்ல சொல்
மாலைகள். இரண்டாம் திரு. 74.
தமிழ் நன்னூற்றுறைகள் அஞ்சு. பெரிய. தனியன்.
தமிழரிசைகாரர் பத்தர், திருவாய்.1 -5 – 11.
1690 தமிழொரு மூன்று முணர்ந்தவன். இராமாநுஜ. 44 தமிழோசை வட சொல்லாகி – தமிழ் வேதத்தாலும்,
வடமொழி வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன்.
திருநெடுந். 4.
தயங்குதல் – அசைதல். பெரிய. 8 – 5 – 4.
தரணி – பூமி. பெரியதிரும. 136.
தரு- மரம். திருவாய். 9- 8 – 8.
1695தருக்கு – அகங்காரம், ஹிம்சை. பெரிய. 2 – 1 – 7.
தருக்குகை வருத்துகை, சுளிக்கை. பெரியதிருவந். 22.
தருமன்- யமன். முதல் திருவந். 67.

தலைக் கணத்துக்கட்குழம்பு. திருச்சந். 16.
தலைச்சங்கம் – தலைச்சங்காடு; (தலைச் சங்க
மேற்றிசையுள்) பெரிய. 8 -9- 9.
1700 தலைச் சிரைத்து வாழ்தல் – திருவாசலிலே காவலாளராக
இருந்து வாழ்தல். திருமா. 38.
தலை நிலாப்போது – குழந்தைப் பருவம். பெரியாழ். 2 – 3-7.
தலைப்பழியெய்தல் – பெரும் நிந்தைகளைப் பெறுதல்.
நாச்சி 12,9
தலைப்புகழ் – சிறந்த புகழ். நாச்சி. 1 – 7.
தலைப் பெய்திடல் – சேர்ந்துவிடல். பெரியாழ். 5 – 3 -5.
1705 தலை மறிதல் நீங்கல். நாச்சி. 12.2.
தலையல்லாற் கைம்மாறில்லேனே – நாச்சி. 5 – 6.
தலைவன்பொற்படந்தலைவிக்குத் தந்துபோதல். பெரிய. 9-5-9.
தலைவிளாக்கொள்ளுதல் – முழுதும் வியாபித்தல் திருமா. 35.
தவராசா – மகா தபஸ்வியே. பெரிய தனியன்.
1710 தவளப் பொடி கொண்டு – சுத்தமான தூளி கொண்டு
திருவாய். 4-6 – 5.
தவிவு- விச்சேதம். திருவாய். 3 – 4-4.
தழல் மூன்று நால்வேதம். பெரிய. 4 – 2 – 2.
த இக் கோளியார் – தழுவிக்கொண்டவர். திருவாய். 4 – 2-5. தழுத் தொழிந்தேன் – தழுதழுக்கும் படியானேன்.
பெரிய. 1-1 5,
தழுவி முழுசி – முழுவித்தழுவி. நாச்சி. 13 – 5.
1715 தழை – தொங்கல், பீலிக்குடை விசேஷங்கள். பெரியாழ். 3-4-1. தழை – திரள். திருவாய்.7-7-9.
தழைக்கா – குடையாகிற சோலை.
பெரியாழ். 1 – 9-5; 3-4-6, 7. தழைகள் – மயில் தோகைக் குடைகள். பெரியாழ். 3 -4 -5. தள்ளம் பாறி தடுமாறி. பெரியாழ். 1-7-10 (உரை).
1720 தளர் நடை-காலூன்றி நடக்கும் பருவம், அன்றிக்கே. நடக்கின்ற தசை ஆகையாலே தள்ளம்பாறி நடக்கும் நடை. பெரியாழ். 1 – 7-10. தளர் நடையிடுதல். பெருமாள். 6 – 4.
தளைக் காலன் – விலங்கு பூட்டப்பட்ட
கால்களையுடையவன். சிறியதிரும. 67. தற்பு – தத்துவம், யதார்த்தம். நான்முகன் திருவந். 76.

1725 தன் தாமமேவியது (இராமன்) பெருமாள் . 10-10.
தன் பேரிட்டு – கோவர்த்தனன் என்ற தனது பெயரை
மலைக்கு வைத்து. பெரியாழ். 3-5-9.
தன்ம பாவம்-தருமமும், பாவமும். திருவாய். 6 -2-7.
தன்னடியார் மனத்தென்றும் தேனாகியமுதாகித்
திகழ்ந்தானை. பெரிய. 5 -6 – 3.
தன்னானார்- தன்னைப் போன்றவர். திருவாய். 8 – 4-9.
1730 தன்னுடைச் சோதி – தன்னுடைய விக்கிரகம். திருவாய். 3 – 10 -5.
தனஞ்செயன் – அருச்சுனன். பெரியாழ். 1 -9-4.
தனிக் காளை – ஒப்பற்ற யுவாவான கண்ணன்.
பெரியாழ். 4 – 3 – 4.
தாசரதி – இராமபிரான். (தத்திதாந்த நாமம் ) பெரிய. 8 -4-1-10.
தாடகை – சுகேதுவின் பெண், சுந்தனுடைய மனைவி.
விசுவாமித்திரர் ஏவலால் இராமன் இவளைக்
கொன்றான். பெரிய. 9-8 – 4; பெருமாள். 10-2.
1735 தாடாளன் – மேன்மையுடையவன். பெரிய. 3 – 4-1; 6-10-2;
77-6. நாச்சி. 8 -2.
தாபதர் – இருடிகள்
தாமம் -ஸ்தானம். திருவாய். 6-4.10; பெருமாள். 10 10.
தாய் – தாவி.திருவாய். 6 – 9 – 6.
தாய்சொல்லுக் கொள்வது தருமங் கண்டாய்.
பெரியாழ். 2 – 9 – 8.
1740 தாய் நாடு கன்றேபோல் (உவமை) முதல் திருவந்.3 .
தாய் மனத்திரங்கி – தாய் போல மனமிரங்கி. பெரிய. 4 – 3 – 5.
தாயப் பதி-பழமையாய் இருக்கின்ற ஸ்தானங்கள்.
திருவாய். 8-6-9.
தாயம்-பங்கு. பெரியாழ். 3 – 1 – 7.
தாயர்வாய்ச்சொல் – தேவகியின் வாய்ச்சொல்.
தாயிருக்க
பெரியாழ் 2-2-5.
மணை நீராட்டுதல் – பெற்ற தாய்க்கு ஒரு
உபசாரமும் பண்ணாமல் அறிவற்ற மணைக் கட்டைக்கு
உபசாரம் செய்தல். பெரிய. 11 – 6 – 6, திருவாசி. 6.
1745 தாயைக் குடர் விளக்கஞ் செய்தல். திருப்பா.5.
தாயோன் -தாவியவன், தாயானவன். திருவாய். 1-5-3.
தார்க்கிளந் தம்பிக்கு – பரதன். பெரியாழ். 3-9-8.
தாரகை – பூமி. நான்முகன் திரு. 57.
தாரா – ஒரு பறவை. பெரிய 1 – 5 – 4; 10; 9-6-8.

750 தாரா கணம் – நக்ஷத்திரக் கூட்டம் நாச்சி. 14 – 7.
தாராயினும் வேராயினும் வீசுமினே. திருவிருத்53.
தாரித்து – தரித்து; நீண்டு கிடக்கிறது.
பெரியாழ். 1 – 6 – 6; 2-3-10.
தாலேலோ – ‘தாலேலோ தாலேலோ’ என்றது குழந்தையைத்
தாலாட்டுவார் கூறும் ஒருவகை வாய்பாடு.
தால்-நா. பெரியாழ் 1 – 3 – 1 – 10; பெருமாள் 8.
தாலொலித்திடும் – தாலாட்டும். பெருமாள். 7-1.
1755 தாவடியிடல் – தாவியடியிடல். பெரியாழ். 2 – 10 – 7.
தாவளந்துலகம் -தாவித்திரிந்து. பெரிய. -6-1.
தாழ் சடையும்- தாழக்கட்டின சடை. மூன்றாம்திருவந். 63.
தாழ்வர் – பரிபந்தம். பெரிய. 9-3-2.
தாழ் பீலி-வாத்தி வகை. பெரியாழ் 3 -4-1.
1760 தாழம் – தாழ்த்தல், தாழ்ச்சி. பெரிய. 10 -2-7.
தாள் கொளுவி – பூட்டைத் தொடுத்து. மூன்றாந்திருவந். 12.
தாளால் உலகமளந்த வசைபு. திருவாய். 8 – 3-5.
தாளும் தடக்கையும்- கால்களையும், கைகளையும்.
திருவாய்.3-7-2.
தாறு – அளவு; ரேகை. பெரிய திருவந்.31.
66
1765 தன்றாம் மேவி -பரமபதத்திற்குச் சென்று. பெருமாள். 10 – 10.
தான் – ஸ்வரூப நிரூபணம். திருவாய்.107-1.
தானத்தே வைத்தல் – இருந்த இடத்தில் வைத்தல்.
பெரியாழ். 2 – 10 – 9.
தானவன் – அரக்கன். பெரிய. 2 – 2 – 2.
தானாக நினையானேல் – அவன் தானாக என்னை
நினைக்கா விட்டாலும்.பெரிய.8-7-7.
1770 திங்கள் சிறை விடுத்து – சந்திரனை ரோகமாகிய
சிறையிலிருந்து விடுவித்து. பெரிய. 11 – 8 -7. திங்களம் பிள்ளை – பிறைச் சந்திரனாகிய அழகிய பிள்ளை. திருவிருத். 77.
திங்களைக் கோள் விடுத்து – சந்திரனுடைய ஓளியை
விரித்து. திருவாய். 4-6-2. திசைக்கும் – அறிவழியா நிற்பள். திருவாய்.5 -5-3. திசைப்ப- திகைப்ப, அறிவு கெடும்படி. பெரிய. 2 – 9-5, 3 – 9 – 2,5-7 – 4, 7 – 8 – 2, 11 – 4 -8.
1775 திசை முகனனைய மறையோர் – பிரமனைப் போன்ற
அந்தணர்கள். திருவாய். 7-2-3.

திட் கொடி – அவிழ்த்துக் கட்டாத கொடி. திருவாய்7 – 2-3.
திடரே -ஸ்திரப்பட்டவர். திருவாய். 1 – 1 – 6.
திண்டிறலார் – மிக்க பலசாலிகள். பெரிய. 4-1 -5
திண்ணம்- திருடம். பெரியாழ். 41-9, பெரிய. 8 – 2 – 2.
திண்ணார் மதிள் – வலிமைபொருந்திய மதில். பெரிய. 4 – 7 – 1.
1780 திண்ணார் மாடங்கள் -வலிமை மிக்க மாடிவீடுகள்.
பெரிய. 1-9- 1:0. தே. 1.64.11. பூவணம்.
திண்ணெவு – வலிமை. பெரிய. திரும. 146.
திண்ணை – மேட்டிடம். பெரியாழ். 1-7-2.
திணர்த்த வண்டல்கள் – இறுகலையுடைத்தான திருவாய்.6-1-5.
திணரார் மேகம் – திண்மை மிக்க மேகங்கள் திருவாய். 6-10-5.
1785திணிம்பு – செறிவு. திருவிருத். 72.
திரி காதுக் கிடுதல் – நூல்திரியைக் காதுக் கிடுதல்.
காதுகுத்தி நூல்திரியை இட்டுக்காதின்
துளை பெரிதான பின்பு காதணி இடுதல்
பெரியாழ். 2 – 3 – 2 -, 5.
திரிசுடர் சூழும் மலை- இடைவிடாது சஞ்சரிக்கின்ற சந்திர
சூரியர்கள் பிரதணம் பண்ணுகின்ற
மலை. பெரியாழ். 4-3-8.
திரிதர்வேன் – திரிந்து கொண்டிருந்தேன். பெரிய. 1 – 1-8.
திரி மூர்த்தி- மும் மூர்த்திகள் (பிரமன், விஷ்ணு, ருத்திரன்
பெரிய. 2-10 – 1.
1790திரி விக்கிரமன் – திருமால். பெரிய, 9 -9-5. திருவாய். 2-7-7.
திருக்கடித்தானம் – அம்பலப்புழாவிலிருந்து 23 கல்
தொலையில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 8 – 6 – 1.
திருக்கண்ணங் குடி இத்திருப்பதி கீவளுர் இரயில்
நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது.
இத்தலத்தைப் பற்றி, தீரா வழக்கு திருக்கண்ணங்குடி’
என்ற பழமொழி உண்டு. பெரிய. 9-1 – 1.
இத்திருப்பதி திருவாருக்கு நான்கு கல் தொலைவில்
உள்ளது.
திருக்காலாண்ட பெருமானே – திருவடியைக் காரியம்
கொண்ட. திருவாய். 6 – 9 – 4.
1795திருக் குடந்தை – இது சோழ நாட்டுத் தலம்.
திருவாய். 5 – 8 – 1 – 10.
திருக்குருகூர் – இத்திருப்பதி ஆழ்வார் திருநகரி இரயில்
நிலையத்தின் அருகில் உள்ளது.
திருவாய். 4-10 – 1 – 10.1

திருக்குறளன் -ஸ்ரீவாமனன். திருவாய். 9-8 -10 – 3.
திருக்கூடல் கூட இழைப்பன் – சகுனம் பார்க்கும் வகையில்
இஃது ஒருவகை . நான்முகன்திரு.
(திருக்கோவையார் செ.186)
திருக்கோட்டி -பாண்டி நாட்டுத் திருப்புத்தூருக்கு,
21 கல் தொலைவில் உள்ளது. இரண்டாந்திரு.46,87
1800 திருக் கோவலூர் -இத்திருப்பதி திருக்கோயிலூர்
நிலையத்திற்கு மேற்கே2 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 2-10-10.
திருக்கோவலூரில் துர்க்கை வாழ்தல் பெரிய 2.10.6.;
திருநெடுந்.7.
திருச் சாழல் – பெரிய. 10 -5 – 1 – 10.
திருச்சிற்றாறு – திருச்செங்குன்றூரிலுள்ள ஒரு நதி
திருவாய். 8-4 – 10.
திருத் தண்கால் – இது ஸ்ரீ வில்லி புத்தூருக்கு அருகில்
உள்ளது. தண்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று
பொருள். சீதவாதபுரம் என்பர். பெரிய; 5 6-2.
1805 திருத்தன் – திருப்தியாக இருப்பவன். பெரிய: 7-10 – 7.
திருத்தாய் – நீ திருத்த வேண்டும். பெரிய. 10-10-1.
திருத்திப் பணி கொள்ளல் – விரோதிகளைத் திருத்தி அடிமை
கொள்ளுதல். திருவாய். 3 -5 – 11. திருத்தெற்றியம்பலம் – திருநாங்கூரின் ஒரு பகுதியாகிய
திருத்தெற்றியம்பலம் என்னும் திருப்பதி.
பெரிய. 4-4 – 1 – 10.
திரு நறையூர் – நாச்சியார் கோவில்.
பெரிய. 6 – 3-3: 6-4 – 1 – 10: 7-4 – 1 – 10; 7- 1 – 3,
பெரியதிரும. 73; திருநெடுந். 16.
1810திரு நாம மிடுதல் ஊர்த்துவ புண்ட்ரம் இடுதல், பெரியாழ். 3 -4-8. திருநாமம் எட்டெழுத்து – “ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டர்ட்ச மந்திரம். பெரிய : 1 – 8 – 9. திருநாவாய்- இது செறு வண்ணூர் கள்ளிக் கோட்டை இரயில் பாதையில் திருநாவாய் நிலையத்திற்குத் தெற்கே பாரத் புழை என்ற ஆற்றங்கரையிலுள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்: 9 – 8 – 1 – 10. திருநின்ற பக்கந்திறவிது – திருமகள் இருக்கின்ற வலப்பக்கமே சிறந்தது. நான்முகன்திரு. 62. திருநீர் மலை- நீரானது அரண்போலச் சூழப்பெற்ற
மலையாதல் பற்றி இது திருநீர்மலை என்றாயிற்று. பெரிய: 5-8 – 2, 6-8 -4.

1815 திருப்பாதகேசம்- வடசொல் தொடர். பெரியாழ்.1 – 2 – 21
திருப்புகழ்கள் – கீர்த்திகள் பெருமாள். 1 -9.
திருமணி கூடம் – இத்திருப்பதி சீகாழிக்கு ஐந்துக்கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
பெரிய. 4-5-1-10.
திருமல்லி நாடி – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த நாடு.
நாச்சி தனியன்.
திருமலை – திருப்பதி. திருக்குறுந்: 7,மூன்றாம் திரு. 62.
1820 திருமழிசை- திருமழிசைப்பிரான் அவதரித்த தலம்.
திருச்சந் – தனியன்.
திருமறு மார்வன் – பிராட்டியையும், ஸ்ரீவத்ஸம் என்னும்
மறுவையும் உடைய மார்பன். திருவாய்: 3 – 4 – 3.
திருமாலிருஞ்சோலை – நாச்சி. 9-1,3,5.
பெரிய. 7-3-67-979-9-1-10; 11 – 7-9.
திருமூழிக்களம் – எர்ணாகுளம் செறு வண்ணூர் இரயில்
பாதையில் கருக்கட்டி நிலையத்திற்கு நான்கு
கல் தொலைவில் உள்ளது. பெரிய. 7-1-6
திருநெடுந்.10.
திருமெய்யம் – சத்யகிரி என்ற சொல்லேதிருமெய்யமலை
என்றும், அத்திருப்பதி திருமெய்யம் என்றும்
வழங்கப்பெறும் எம்பெருமான் பெயர்
சத்தியகிரிநாதர் பெரிய. 3 – 6 – 9, பெரிய திரும. 126.
1825 திருமோகூர் – இத்தலம் மதுரைக்கு 7 கல் தொலைவில்
உள்ளது.வடமொழியில் மோகனபுரம் எனப்படும்.
இறைவன் பால் மோகத்தை (பக்தி) அருளும் ஊர்
என்பது மோகூர் ஆயிற்று. சிறிய திரும. 74.
திருவடி – சுவமி. திருவாய். 4-9-11, 7- 5 – 3, 8 – 4 – 7,
10-3-7, நான்முகன்திரு. 68. இரண்டாம் திரு. 87.
திருவடி பிடித்தல் – திருவாய். 9-2-10.
திருவயிந்திர புரம் – அஹீந்திரன் என்னும் அநந்தாழ்வான்
பூசித்த தலமாதல் பற்றி இதற்கு அயிந்திரபுரம்
என்னும் பெயர், பெரிய. 3 – 1 – 1 – 10.
1830 திருவரங்கம் – ‘ரங்கம்’ என்று விமானத்திற்குப் பெயர்.
அதுவே ல ணையால் திவ்யதேசத்திற்குத்
திருநாமமாயிற்று. முதி.6,மூதி. 62, தி. சூ 7,
திநெ 11, 23, பெரியாழ். 4 – 9 – 10,
பெரிய. 5-5-4-65-8-1 – 10.

திருவரங்கத்தமுது – இராமாநுஜ தனி.
திருவரங்கர் பள்ளி கொண்ட நிலை – திருமா. 19.
திருவல்லவாழ் – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 5-9 – 1 – 10
திருவல்லிக்கேணி – இத்தலப் புஷ்கரணி அல்லிமலர்
நிறையப் பெற்றதனால் திருவல்லிக்கேணி
என்று பெயர் பெறும். தீர்த்தத்தின் பெயரே
தலத்திற்குப் பெயராயிற்று. மூன்றாம்திரு. 16.
1835 திருவழுந்தூர் -சோழநாட்டில் மயிலாடுதுறையை
அடுத்துள்ளது. கம்பர் பிறந்த ஊர்.
தேவாரப்பாடல் பெற்ற தலம். சிறிய திரும 12.
திருவன்- அழகள் இரண்டாம் திரு. 84
திருவாகாரம் – திருமகள் இருக்கு மிருப்பு. பெரிய 4 -4 – 8.
திருவாய் கருப்பூர நாறுதல் – பெரியாழ் 1 – 5-9.
திருவாலியிருந்தான். – திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று
வீற்றிருக்கிற திருக்கோலம்.
1840 திருவாழ் மார்பன் – திருமகள் இருந்து வாழப்பெற்ற
திருமார்பையுடையவன். பெரிய. 7-6 -7.
திருவாளன் – திருமால் பெரிய 5-5-1,6-9-1.
திருவாறன்விளை – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 37
கல் தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்.7 10 – 1 – 10.
திரு விண்ணகர் (விஷ்ணு நகர் விண்ணகர்) இப்பதி சோழநாட்டில் திருநாகேசுவரம் இரயில் நிலையத்திலிருந்து
ஒரு கல் தொலைவில் உள்ளது. பெரிய 6 – 2 – 1 – 10,6-3 –
1-10, திருவாய், 6 – 3-1-11.
1845 திருவில்லாத்தேவரைத் தேறேன் மின் – நான்முகன்திரு – 53. திருவுக்குந் திருவாகிய செல்வா- பெரிய 7-7-1.
திருவுடை மன்னர்- செல்வத்தையுடைய அரசர்கள் திருவாய்4 – 4 — 8.
திருவுறுக – திருமேனி அழகு விளங்கட்டும். பெரியதிரும.46. திருவெட்டெழுத்து – ஓம் நமோநாராயணாய. பெரிய. 8-10-3.
1850 திருவெவ்வுள் திருமால் சாலிஹோத்திர மகரிஷிக்குப்
பிரத்யக்ஷமாகி உறைதற்குரிய உள் ‘எவ்வுள்’
என வினவியதனால் திருவெவ்வுள் என்று பெயராயிற்று. நான்முகன்திரு. 36.

திருவெள்ளக்குளம் – இப்பதி சீர்காழியை அடுத்து நான்குகல்
தொலைவில் உள்ளது.நின்ற
திருக்கோலம்.பெரிய 4 -7 – 1 – 10.
திருவேங்கடத்தான் – திருமலையில் உள்ளவன். பெரிய. 6 – 8-1.
திருவேங்கடப் பொருப்பர். திருமலையில் உள்ள பெருமாள்.
பெரிய.5-3-4.
திருவேங்கடம் – அழிவற்ற ஐசுவரியம். பெரிய 1 -8 – 1 – 10,
1-9-1 – 10, 4 – 7 – 5, திருவாய். 2-6-9, 6-
10, பெரியாழ் 2 – 7-2, 5 -4 1, பெருமாள்
4 – 2. சிறியதிரும் 67, முதல் திருவந். 76,77.
1855 திருவோணத்தான் – சிரவண நட்சத்திரத்தில் அவதரித்தவன்
பெரிய. 1-1-3.
திருவோணத்திரு விழவு – சிரவண நட்சத்திரத் திருநாள்.
திருப்பல். 6, 9.
திருவோணத்தில் மங்கையரை முளையட்டிப் பல்லாண்டு
கூறுவித்தல். பெரியாழ். 3 – 3 – 9
திருவோணமின்று நீராட வேண்டும் பெரியாழ் 2 – 4 -2.
திருவோணம் பன்னிரண்டு அக்காரம் அட்டேன்.
(அக்காரம்- யஸம்,பக்ஷணம்,முதலிய.ை திரட்டுப்பால்
எனவும் கூறலாம்) பெரியாழ். 2-9-7.
திருவோணமின்றேழுநாள் பெரியாழ் – 3-3-9.
திரேத(யுகம்) நான்கு யுகங்களுள் இரண்டாவது பெரிய -7-7-6.
திரேதை – த்ரேதாயுகம். திருநெடுந். 3
தில்லை மூவாயிரவர் – தில்லையில் இருக்கின்ற மூவாயிரம்
அந்தணர்கள். பெரிய. – 3 – 2 – 8, பெருமாள். 10-2.
திலதம் – திலகம்.திருவாய். 6-10-1
திலோத்தமை நாடகத்தெய்வ மகளிர் எண்பதின்மருள்
ஒருத்தி. பெரியாழ். 3-6-4.
திவம் – பரமபதம். பெரிய – 7 – 10-2.
திவளுதல் – ஒளிவிடுதல். பெரிய. 2 – 7 – 1.
திளை – பருமை. பெரிய. 6 – 9 – 3.
திறவிது -பரதத்துவம். நான்முகன்திரு. 62.
1870 தீங்கவி மதுரமான கவி. திருவாய். 7-9-7.
தீத்தொழில் – அக்கினி ஹோத்திரம் பெரிய. 4-5 – 3.
தீதில் நன்னெறி – குற்றமில்லாத நல்வழி. பெருமாள். 2-6; 3-5.
தீப்பப் பூடுகள் – கொடிய பூண்டுகள். பெரியாழ்3 – 6 -4.
தீமனம் கெடுத்தல் – தீயமனத்தைக் கெடுத்தல். திருவாய். 2-7-8.

1875 தீம் பலங்கனி – மதுரமான பலாப்பழம். பெரிய. 5 – 3-4.
தீயிணக்கிணங்காடி – களவுப் புணர்ச்சி செய்து.
பெரியாழ். 3-7-2
தீயில் மூன்று – சப்தம், ஸ்பர்சம்,ரூபம்.திருச்சந். 1
72
தீயினில் தூசாகும் – நெருப்பிலிட்ட பஞ்சுபோல் உருவழிந்து
போகும். திருப்பா- 5.
தீ யோங்க வோங்க – அக்கினி காரியங்கள் வளர வளர.
பெரிய – 3-2-2.
1880 தீர்த்தகரர் – பரிசுத்தப் படுத்துவோர். இரண்டாந்திரு.14.
தீர்த்தன் – பரிசுத்தன். திருவாய் – 2 – 8 -6.
1885
தீரா மாற்றாக பரிகாரமில்லாத செயலாக. திருப்பா- வியாக்
தீ வலஞ் செய்தல்- ஏழடி நடந்து அக்கினியை வலம்
வருதல். நாச்சி – 6 – 7.
தீவிகை-விளக்கு. (தீ பிகை) பெரிய – 2 – 10 – 3.
தீ விழித்தல் – நெருப்புப்பொறி பறக்கும்படி கண்கை
விழித்தல். திருப்பா- 23.
தீ விளி விளிதல் மிகக் கொடுமையான வார்த்தைச்
சொல்லுதல். திருமா. 30.
தீ வினைக்கரு நஞ்சை – கொடிய துன்பத்தை உண்டு
பண்ணுகிற தீய செயல்களை எம்பெருமான்
எளிதில் போக்குபவன்.திருவாய்7 – 1 -8-9.
தீற்றி – உண்ணப் பண்ணி. திருவாய்.71-7.
1890 துக்கக் சூழலை – துக்கங்களாகிற சுழலாறு. பெரியாழ். 5-3-1.
துங்கார் – துங்கம் – ஓக்கம். பெரிய – 9 – 6-2. தே. 7 – 42 -9.
வெஞ்சமாக் கூடல்.
துக்கு – துங்கம். (வடமொழி) பெரிய – 9 -6-2.
துச்சோதனன் – துரியோதனன் தம்பி. பெரியாழ். 1 – 8 – 5. துடியிடையார் உடுக்கைபோன்ற இடையையுடைய
பெண்கள். திருப்பள்ளி. 10.
1895 துண்ணென – சீக்கிரமாக. பெரிய. 4-6-2.
துணரி – பூங்கொத்து. பெரிய – 4-6-2.
துணிவதுசூதே – காரணம். திருவாய். 2 – 10 – 9.
துதம் – ஸ்துதம், ஸ்தோத்திரம். பெருமாள்.1 – 2.
துந்தி – திருநாபி. திருவாய். 1 – 3-9.
1900 துப்பம் – நெய். (கன்னட மொழி) பெரியாழ். 2 – 1 -6. துப்பரவாம்- சக்தியையுடைவனான் திருவாய். 7 – 9 – 9.

துமிலம்- பெரிய ஆரவாரம். பெரியாழ். 3-8-3.
துயக்கு – கலக்கம். திருவாய்.1 – 3-9.
துயராட்டியேன் – துன்பத்தையுடைய நான். திருவாய். 7-7-1.
1905 துரகம் வாய் பிளந்தது – குதிரை வடிவு கொண்ட கேசி
என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்தது.
மூன்றாந்திரு. 47, 98. தே. 7-87 – 7. பனையூர்.
துரிசன் – கள்ளன். திருமா. 31 – 32.
துலை கொண்டு – துலைத்தலைக் கொண்டு. திருவிருத். 51.
துலையாய் – பரிமாணமாகி. திருவாய். 7-8-7; தே. 1-47-8
சிரபுரம். 6-19-10 ஆலவாய்.
துவக்கற – ஸ்பரிசம் அற. பெரியாழ். 2 – 10 – 6.
1910 துவர்தல் – உலருதல். திருவாய்.8 -5 – 2.
துவர்ப்பு- (மாந்தளிர்) துவர்ப்பென்னும் ரசம். பெரிய. 5-3-4.
துவராபதி – துவாரகை. பெரியாழ. 5 -4-10; நாச்சி. 9-8;12-9.
துவரித்தவுடையார் – காவித்துணிகட்டித் திரியும் பெளத்தர்.
பெரிய. 5-6-8.
துவரியாடையார் -காவியுடை அணிந்தவர்கள். பெரிய. 2-1-6.
1915 துவர்ந்து துவர்ந்து மிகவும் உலர்ந்து. திருவாய். 4-7-5.
துவராடையுடுத்து- காவியூட்டிய ஆடையை உடுத்து.
பெரிய. 10-8-2 (தே) 3-56-10 பிரமபுரம். துவரிக் கனிவாய் – இலவம்பூ. பெரிய. 8 -8-9.
துவருடுக்கை – காவியுடை. திருவாய்.4 – 8 – 4.
துவரை – துவாரகை. பெரியாழ். 4-1 – 6; 4 – 7 – 9.
1920 துவாதசியில் மாதர் தூபமேந்தி வேங்கடவனை வணங்கல்.
முதல் திருவந். 82.
துவாபரயுகம் – யுகங்கள் நான்கனுள் மூன்றாவது. பெரிய. 7-7-6.
துழதி – சுழற்சி. திருவாய்.2 -7 – 8. துழதிப்படாதே – துக்கப்டாதேயிருங்கள். நாச்சி. 12-5.
துழாய் -துழாவி.மூன்றாந்திரு. 23.
1925 துழாய் மாலை – துளசி மாலை. மூன்றாந்திரு.
துள்ளம் – துளி. பெரியாழ். 5 -7-7
துளக்கம் – சலிப்பு, இடைவீடு.
துளம்-மாதுளம், பீலிக்காம்பு பெரிய. 2-7-2.
துளம் – களைக் கொட்டு. பெரிய. 8 – 7 – 3.
23.
1930 துளவுத் தொண்டு – திருத்துழாய்த் தொண்டு. திருமா. 45.
துளவும் கூடையும் பொலிந்து திருத்துழாயும்,
பூக்குடலையும் விளங்க. திருப்பள்ளி. 10

துளும்பு- அலைய. திருவாய். 6 – 7 – 8.
துற்று- உணவு. (கவளமாக ) பெரியாழ். 4 -4 – 2.
பெரிய. 7 – 1 – 2, 1 – 6 – 5.
துற்றற்றா -ஒரு கவளத்திற்கும் போதாது. திருவாய். 2-8-8.
74
1935 துற்றிய – உண்ட. பெரிய. 7-1-2; பெரியதிரும 141.
துற்றுவார் – புசிப்பார். திருவாய். 4-1-7.
துறவி – துறந்தவன். திருவாய்.1-7-1.
துன்றோளித்துகிற் படலம் ஒழுங்கு, கொடிகள். பெரிய.6-9-4.
தூங்கார் – அசைவு பெரிய – 11-8-3.
1940 தூசனம் – தூஷணம் பெரிய – 6-7-4.
தூது வந்த குரங்கு – அநுமன். பெரிய -10 -26.
தூதை – சிறு சோறு சமைக்குமட் பாத்திரம், விளையாட்டுக்
கருவி. பெரியாழ். 1 – 2 – 19; 3-7-1.
தூம்புடைப் பனைக்கை வேழம். பெரிய. 4-5 – 1.
தூராக்குழி தூர்த்தல்.திருவாய்.5-8 – 6.
1945 தூரியம் – வாத்தியம்.
தூவிக் குருகு – வெள்ளைக் குருகு. திருவாய். 6-8-8.
தூற்றித்து – தூற்றின அதுவே. திருவாய். 7-3 – 8.
தூறுகள்- புதர்கள் பெரியாழ். 5-4 – 3.
தெக்கு – தெற்கு. பெரியாழ். 4 – 2 – 3.
1950 தெட்டப்பழம் – பக்குவமான பழம். பெரிய. 3 – 4 – 8. தெட்டித் திளைக்கும் – முற்றிக்களியா நிற்கும். பெரியாழ். 4-2-10. தெப்பராவர் – அற்பர். திருவாய். 9 – 1 -4. தெய்வச் சிலையான் – திருப்புல்லாணி இறைவன் பெயர்.
பெரிய. 9-4-3.
தெய்வத்தைச் சுவர்மிசைச் சாத்தியும் வைத்துத் தொழுதல், முதல் திருவந்14.
1955 தெய்வ நன்மாலை – திவ்வியமான நல்ல சொல்மாலை.
பெரிய. 1 – 1 – 10. தெய்வ நாயகன் – திருவயிந்திரபுர இறைவனின் பெயர்.
பெரிய 3 – 1 – 3.
தெய்வ நாறுதல் – நல்ல வாசனை வீசுதல். பெரிய – 5-3-3.
தெய்வப் புள்ளேறி வருவான் – (தெய்வப்புள் – கருடன்) பெரிய 3 – 3 – 6. தெய்வவாள் வலங்கொண்ட சோழன். பெரிய. 6 – 6 – 3.

1960 தெருவிற்றிரி நோன்பியர் – தெருவில் திரிகின்ற சமணர்
பெரிய 7-9-2.
தெழ்கு- இடைச்சுரிகை பெரியாழ். 1 – 3 -2.
தெள்கி- இளைத்து பெரிய. 3 -4-7.
தெள்ளிய சிங்கம் – திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள
அழகிய சிங்கப் பெருமாளுக்குத் தெளிசிங்கப்
பெருமாள் என்று திருநாமம் வழங்கப்
பெறுகின்றது. பெரிய. 2 3 8.
தெள்ளியர் கை தொழும் தேவனார் – பெரிய – 9-7-9; 8-10-4;
நாச்சி. 4-1.
1965 தெளி விசும்பு கடிதோடி – நிர்மலமான ஆகாசத்திலே
விரைவாக ஓடி, திருவாய்.9 -7-5.
தெளிவிலாக் கலங்கனீர் சூழ் – தெளியாமல் கலங்கியிருக்கிற
காவிரியாலே சூழப்பெற்ற. திருமா. 37.
தெற்றல் – வலிமை. பெரிய -11-11-9.
தெற்றியம்பலம் – சீகாழியிலிருந்து ஐந்துகல் தொலைவில்
உள்ளது. தெற்றி அம்பலம் என்பதற்குக்
கோயில் மேட்டிடமாக அமைந்த மன்றம்
என்பது பொருள். பெரிய 4 – 4-10.
தெற்றெனவு ” தெளிவு, பெருமை. பெரியதிரும – 141.
1970 தெறிவில் – சுண்டுவில். பெரியாழ். 3 – 4-3.
தென் குடந்தை – திவ்விய திருப்பதி, திருக்குடந்தை.
மூன்றாந்திரு. 62.
தென் குளந்தை – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏழு கல்
தொலைவில் உள்ளது. திருவாய். 8 – 2 – 4
தென் கொள் திசைக்கும் திலதம். திருவாய். 10 – 7 – 4.
தென் கொள் திசைக்கும் திலதம் – தெற்குத்திக்குத் திலகம்
போல். பெரிய. 4-8-8.
1975தென் தில்லைச் சித்திர கூடம் – கோவிந்தராசன் சந்நிதி
என்பர். இராமனுக்கு வடநாட்டுச் சித்திர கூடத்தைப் போல இத்தலமும் உகந்த திருப்பதி. தென்புலக் கோன் – இயமன். பெரியாழ் -5 -2 – 2.
தென்புலர் யமபடர். பெரிய – 7 -3 – 3.
தென்றமிழன் – தெற்கிலுள்ள தமிழ்நாட்டுக்கரசன். பெரிய. 6-6-5. தென்றி – சிதறி. பெரியாழ். 2 – 4-2; (தே 1 – 68 -5 கயிலாயம்.
1980 தென்றிருப்பேரை – ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கல்
தொலைவில் உள்ளது. திருவாய் 7 – 3 – 1 – 10.

தென்றுதல் – சிதறுதல் பெரிய. 5 – 3-9.
தென்னரங்கன் – அரங்கநாதன் பெரியாழ்2 – 9 – 11.
தென்னவன்-யமன், பாண்டியன். பெரிய 2-9-2;
பெரியாழ் 4-5-7.
தென்னவென்று- தென்ன தென்ன என்று ஆளத்திவைக்க.
பெரிய. 9-1-9.
1985 தென்னன் – மலையத்துவச பாண்டியன். திருவாய். 5-5-2;
பெரியாழ்4-2-7.
தென்னன் குருகூர் – தெற்குத்திக்கிலுள்ள திருநகர்.
திருவாய். 4-3 – 11; 5-2-11
76
தென்னன் குறுங்குடி – குறுகியவனான வாமநனது
க்ஷேத்திரமாதல் பற்றிப் பெயர் பெற்றது.
பெரிய திரும. 114.
தென்னன் திருமாலிருஞ் சோலை – இத்திருப்பதி மதுரையிலிருந்து 12 கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். திருவாய். 10-7-3.
தென்னன் தொண்டையர்கோன்- தொண்டைமான்
என்பவன் தென்னவனுடைய வமிசத்தில்
தோன்றினமை பற்றித் தென்னன் தொண்டையார்கோன்
என வழங்கப்பெற்றான். பெரிய. 2-3-10.
1990 தென்னன் பொதியில் – பாண்டியனுடைய பொதிய
மலையில். பெரிய திரும. 40, 83. தென்னனுயர் பொருப்பு – திருமாலிருஞ் சோலைமலை.
பெரியதிரும.6.
தென்னனோட வடவர சோட்டங்கண்ட – சோழனும்
தோற்று ஒடும்படியாகச் செய்த. பெரிய. 4 – 5-6. தென்னாடன் – தென் தேசத்தரசன் பெரிய. 6 – 6- 6. தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்.
பெரியாழ். 4 -9 – 11.
1995 தென்னா தெனா வென்று – தாளச் சொற்கட்டு.
திருவாய். 3 – 9-1. சிலப். 3. 26 உரை. தென்னானாய் – தெற்கே உள்ள ஆனை. திருமாலிருஞ்
சோலை மலையில் நின்ற யானை போன்றவனே. தென்னுரை தமிழுரை. பெரிய. 39. தேக்கம் -தாமதம். பெரியாழ், 2 -9-3. தேசம்- புகழ் (தேஜஸ்). திருப்பா.7; பெரிய. 1 -9-9; திருவாய்3 – 3-4.

2000 தேசமறியவுமக்கே ஆளாய் – உலகமெல்லாம் அறியும்படி.
உமக்கே தொண்டராய். பெரிய. 4 – 9 – 4.
தேதென வெனல்- தென்னதென்ன என்று. பெரிய. 4 – 1 – 1.
தேர்வழி தூல் -தேர் போன வழியை அழித்திடாதே.
‘தேர்வழி தூரல்’ என்பது ஒரு துறை. திருவிருத். 17.
தேராழியால் மறைத்தார் – சக்ராயுதத்தால் சூரியனை
மறைத்த பெருமான். நான்முகன்திரு. 16.
தேவர் காரியம் – பகவதாராதனம். பெரியாழ். 4 – 4 – 1.
2005 தேவகி சிங்கமே – தேவகி வயிற்றில் தோன்றிய சிங்கக்
குட்டியே. பெரியாழ். 1 – 3 – 4.
தேவிமை தகுவார் – உம்மோடு, ஒக்க முடி சூடுகைக்குத்
தகுதியாக இருப்பவர். திருவாய். 6 – 2 – 6.
தேவில் – கோயில் திருவாய். 4 -4-8.
தேவை – அடிமை. பெரியாழ். 1 – 4 – 8.
தேற்றன்மை – தெளிவு. பெரிய. 10 -9 – 9.
2010தேனித்து – இனித்து. பெரியாழ். 4 -61; திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் – 9.
தேனுகன் கதை. திருச்சந்த. 80, 107, பெரியாழ்.
1-5-4; 2-10-4, 3-6-4; பெரிய. 3-10-7, நாச்சி. 11-9.
தேனும் பாலுங் கலந்தன்னவர்- தேனும் பாலும் ஒன்றாகச்
சேர்ந்தாற்போல ஏகரசமாக இருக்கின்ற பக்தர்கள்.
பெரிய. 5 – 4 – 8.
தைத்திரியன் – தைத்திரீய உபநிடதத்தினால்
சொல்லப்படுகிறவன். பெரிய. 5 – 4 – g.
தையில் தரை விளக்கி மாசியில் தெருவணிந்து நோற்றல்.
நாச்சி. 1 – 1.
2015தைவருகை தடவுதல். திருவாய். 5 – 4-8.
தொங்கல் – மாலை, பீவிக்குடை விசேடம். பெரியாழ். 3-4-1. தொடர் – தொடர் சங்கிலி. பெரியாழ். 1-7-1, 1-9-1.
தொடுப்புண்ணுதல் – திருடியுண்டல். பெரியாழ். 2-3-9. தொடுப்புண்ட- ஒளித்துண்ட. பெரியாழ். 2 – 3 – 9.
2020தொடுவுண்ட – கனவினால் உண்ட. திருவாய். 1-5-1; 3-8-3.
தொடுவுண்ண – களவினால் உண்ண. திருவிருத் – 21.
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
திருவாய். 9 – 4 – 9.
தொண்டர் கைத்தண்டு. பெரிய. 10 – 9-4.
தொண்டர் தம்மை நீசர்களை. பெரிய. 7 – 2 – 2.

2025 தொண்டர் தொண்டர் தொண்டன். திருவாய். 7-1-11; 8-9-11.
தொண்டரைப் பாடும்- தொண்டர் என்ற சொல் இங்கு
நீசர்களைக் குறிக்கின்றது. பெரிய. 1 – 1 – 7.
தொண்டனேன் -அடியேன். பெரிய. 1 – 6 – 3.
தொண்டையர் கோன் செய்ததொண்டைமான்
சக்கரவர்த்தி செய்த. பெரிய. 2 – 3-10.
தொழு-தொழுவத்தில். திருவாய். 10-3 -4.
2030 தொழுகுலம்- வணங்குதற்குரிய குலம். திருவாய். 3 – 7-8.
தொழுத்தனில் – தொழுவில். திருவாய்.10- 3-4.
தொழுத்தைமார் – அடிமை செய்யுமவர்கள்.
பெரியாழ். 2-9-8.
தொழுதுவனாய்- அஞ்சலி செய்து கொண்டு முன்நிற்றல்
பெரியாழ். 1 – 3 – 5.
தொழும்பர் – நீசர். திருமா. 5.
2035 தொளி – வீதி. பெரிய. 2 – 10-5.
தொறுப்பாடி – ஆய்ப்பாடி, பெரியாழ். 2 – 1 -6.
தோக்கை- முன்தானை. பெரிய. 4 -4 -3.
தோகைமயில், பெரியாழ். 1 -5 – 7.
தோண்டல் – ஊற்றுக்கள். பெரியாழ். 4 – 3 – 6.
2040 தோத வத்தி – தோய்த்து உலர்த்தின வஸ்திரம். பெரியாழ். 4-8-1.
தோரணவாயில் – தெருவில் கட்டும் அலங்காரத் தொங்கலை
உடைய வாசல். திருப்பா – 16.
தோழமை-நட்பு. பெரியாழ். 3 -10-4;நாச்சி.55.
தோள் குலைக்கப்படுதல் – தோள்கள் அசைந்தாடப்படுதல்.
திருவாய். 4-6 – 7, 10
தோள் விசிறி – தோள்வீசி. பெரிய. 3 – 7-5.
2050 தோளாத மாமணி – துளை பட்டு ஒளி மழுங்காத, நீலமணி, பெரிய – 11-7-2.
நக்கபிரான் – சிவபெருமான். திருவாய். 3-10-9; 4-10-8.5-3-10. நகந்தாய் (நகத்தாய்) நகத்தையுடையவனே. திருவாய். 9-4 -7. நகரிழைத்து – கோயில் கட்டி. இரண்டாம் திரு.4. நங்கைமீர்கள் – பெண்காள். பெரியாழ். 3 -6 -1.
2055 நச்சிலை கொல்-நஞ்சு வடிவாயிருப்பதோர் இலையே.
திருவாய். 7 – 7-7.
நச்சுமாமருந்தம் – விரும்பப்படுகிற சிறந்த மருந்து.
திருவாய். 3-4-5.

நச்சுவார் முன்னிற்கு நாராயணன். பெரியாழ். 1-8 – 11.
நச்சுவாருச்சிமேனிற்கு நம்பி – பெரிய. 7 – 10-8.
நஞ்சு- நைந்து. பெரிய. 11 – 2 – 8.
2060 நடுவு பாட்டு – நடுவிடம். பெருமாள். 1 -11, திருமா. 23.
நண்ணம் – சிறிது. திருச்சந் – 46.
நண்ணார் முனை – பகைவர்களுடைய யுத்தத்தில். பெரிய. 4-7-1
நந்தி பணி செய்த நகர்- ஒரரசன். பெரிய -5 – 10 – 7.
நப்பின்னை – திருப்பா 19, 20; பெரிய. 1 – 5 – 7, 2-4-9.
2065 நம்பர் – விசுவனீயர். பெரிய. 9 – 2-4.
நம்பரமன்று- நம்மால் எம்பெருமான் பெருமைகளைப் பேசி
முடிக்க முடியாது. பெரியாழ். 4 – 5 – 1.
நம்பன் -திருமால்.பெரிய. 5-10-3.
நம்பி- நற்குணங்களால் நிறைந்தவன். பெரிய. 6 – 10 – 1;
திருநெடுந். 12.
நம்பிமீர் – உலகினரே. திருமா. 10.
2070 நம்புதல் விரும்புதல்,பெரிய. 6 – 3-9.
நம்மன்-பூதப்பிரேத பிசாசங்கள். பெரியாழ். 5 – 4 -3.
நம்மை- தங்களை, பெரியாழ்.4 -9-1.
நமர்-நம்மைச் சேர்ந்தவர். பெரியாழ் -1 – 1 – 6.
நமவென்ன- நமோ வாசகம். திருவாய்- 3-3-6.
2075 நமன் சூழ் – யமனைத் தலைவனாகக் கொண்ட
மூன்றாந்திரு. 98.
நமன்று-வணங்கி, திருவாய். 3-3-7.
நமனார் பாடியைப் பெரிதும் – யம பட்டணம்.பெரிய. 1-6-6.
நமுக- குழையும்படி, திருவாய் – 9 -9 – 3.
நமுசி – மகாபலியின் குமாரன். பெரியாழ் – 1 – 8 – 8.
நமையாமல் – உபத்திரவம் செய்யாமல்.முதல்திருவந். 32.
நமோ நாரணம். பெரிய, 6 – 10 – 1 – 10.
நயவேன் ஆசைப் படேன். முதல் திருவந். 64
நயாசலன் – நீதிக்குக் குலைதலில்லாதவன். பெரியாழ். 4-4-8.
2080 நரகநாசன் நரகத்தை ஒழித்தருளுகிறவன். பெரியாழ். 4-4-4.
நரகம் – ஸம்ஸாரம். (விவேகிகள் ஸம்ஸாரத்தை நரகம் என்ற
பெயரால் வழங்குவர்) பெரிய. 11.8-9.
நரகன் – நரகாசுரன். பெரியாழ். 1-5-4; 4-3-3, பெரிய. 3-9-8.
நரசிங்கன் – நரசிம்மன். திருவாய் – 2 -4 -1; பெரியாழ்4 -4-6,9
நரத்திலும் – மனுஷ்ய யோனியிலும். திருச்சந். 29.

2085 நர நாராயணர் – திருமால் அவதாரமான இரு முனிவர்.
பெரிய. 7 – 1-5; 7 – 7 – 3; 11 – 4-4
நரம் – நரசென்மம்.திருச்சந்த. 29.
நரியாயரக்கர் – நரிபோல அரக்கர்கள். திருவாய்.7-6 – 8.
நல்கல் – கொடுத்தல். திருவாய். 1-4-5.
நல்குவான் – கொடுப்பான். பெரிய திருவந். 23.
2090 நல்லரன் – சிவபெருமான். பெரிய. 2 – 9-1.
நல்லனகள் – நன்றாய். திருவாய். 6 -7 – 9.
நலங்கழல் ருசி ஜனகமான திருவடி. திருச்சங்.78.
கலியாண நலந்திகழ் நாரணன் குணத்தையுடைய
நாராயணன். பெருமாள். 1-11; 10, 10; பெரிய 9-9 – 9.
நலமந்த மில்லதோர் நாடு – அளவுகடந்த ஆனந்தம்
இருப்பதான நாடு. திருவாய் – 2-8-4.
2095 நவிலுகை – சொல்லுகை. திருவிருத்50.
நள்ளி – பெண்நண்டு. பெரிய. 6 – 7 – 6.
நளிர்ந்த- சீதளமான பெரிய. 4-4-8, திருவாய். 9-2-4.
நளிர் மதிச்சடையன் – சிவபெருமான்.திருவாய். 3-4-8
திருவாசி – 7, பெரிய திருவந் – 43.
நற்கிரிசை -நல்ல வியாபாரம். நான்முகந்திரு. 96.
2100நற்றம் -நன்மை. பெரியாழ் – 4-5-8.
நறையூர் – திருநறையூர் என்றது நாச்சியார் கோயிலைப்
பற்றியது. கும்பகோணத்திற்கு ஆறுகல் தொலைவில்
உள்ளது. பெரிய திரும. 73. திருநெடுந். 17,
பெரிய -4-9-2, 10-1-5, சிறியதிரும – 71.
நன்புருகி -ஞானம்,நன்மை. இரண்டாம் திரு-1
(தே.) 3-125-3. நல்லூர்ப் பெருமணம்.
நன்னடுவுள் – நன்றான நடுவுள். பெரிய. 4-3-1, 2,3,4,10.
நன்னாளால் நல்ல நாளும். திருப்பாவை.1.
2105 நாக்கு நீளுதல் – அளவுகடந்து பேசுதல். திருவாய். 4-7-6.
நாக்கொண்டு – நாவினால். நான்முகந்திரு. 75, திருவாய். 3-9-9.
நாக கன்னிகையை அருச்சுனன் மணந்தது. பெரிய திரும. 55-59.
நாகணை ஆதி சேஷனாகிய படுக்கை. நாச்சி – 10-9.
நாகராயன் மடப்பாவை – அருச்சுனன் மனைவி.
பெரியதிரும. 57.
2110 நாகரிகர் – ரஸிகர். பெரிய – 9-2-4, பெருங்கதை. 1-41 அடி. 83.
நாகு கன்றுள்ளினாற் போல் – இளங்கன்று தன் தாயை நினைத்துக் கத்துமா போல். பெரிய 7-1-1.
நாகை -நாகப்பட்டினம் என்பதன் மரூஉ. பெரிய – 9-2-1-10.

நாகையழகியார் – நாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தர
ராஜப் பெருமாள். பெரிய – 9-2-10.
நாங்கூர் – திவ்விய தலம். பெரிய – 3-8-10, 10-1-3;
பெரிய திரும. 131.
2115 நாங்கை – மயிலாடுதுறைக்கு வடகிழக்கிலுள்ள திருப்பதி,
பெரிய. 4-8-1-10.
நாட்காலே நீராடல் – விடியல் காலத்தில் நீராடுதல்.
திருப்பா. 3.
நாட்டு மானிடத் தோடெனக் கரிது. எனக்கு நாட்டிலுள்ள
மனிதர்களோடு வசிப்பது என்பது அரிது. பெரியாழ். 5-1-5.
நாடகத்தொலி நடனத்தினுடைய ஓசை. பெரிய. 4-10-3.
நாண் மட மச்சம் -இவை பெண்களுக்குரிய குணங்கள்.
நாணமாவது தகாத காரியத்தில் மனம்
ஒடுங்கி இருப்பது. மடமாவது எல்லாம்
அறிந்தும் அறியாது போன்றிருத்தல்.
அச்சமாவது மிகச்சிறிய காரணத்தினாலும்
மனம் நடுங்குதல். பெரிய. 9-5-6.
2120 நடுங்குதல். பெரிய. 9-5-6.
நாணற் படுத்துப் பரிதி வைத்தல் – பசுமையான
நாணற்புற்களை அக்னிக்கு நான்கு புறங்களிலும்
வைத்தல். நாச்சி – 6 – 7.
நாதானை – நாதனாய் இருப்பவன்.(சர்வ சேஷியாய்)
நான்முகன் திரு-64; தே. 1-30-5 புகலி
நாந்தகம் – திருமாலின்வாள். பெரியாழ். 4-7-4.
2125 நாமங்கை- சரசுவதி. பெரிய. – 2-10-6.
நாமதேயம் – பெயர். திருச்சந்- 14.
நாய்கூழை வாலாற் குழைக்கின்றது போல். திருவாய். 9-4-3.
நாரணம் – ஓம் நமோ நாராயணாய’ என்றும்
அஷ்டாக்ஷரமந்த்ரத்தைக் குறிக்கும். திருவாய்.10-5 – 1.
நாராயணா என்னும் நாமம் -அஷ்டாக்ஷர மகாமந்த்ரம்
பெரிய, 1-1-10.
2130 நால்வேதம் -ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்.
முதல் திருவந். 11; 31; 68.
நாலிரு மூர்த்தி – அஷ்டாக்ஷர ஸ்வரூபி. பெரியாழ். 4-3-11.
நாலு மாறும்பத்து. பெரிய. -9-10-10.
நாலு மூர்த்தி – பிரதாநம்,புருஷன், அவ்யக்தம்,காலம்
என்னும் இவற்றைச் சரீரமாகக் கொண்ட
நாலுமூர்த்தியாய். திருச்சந். 17.

நாலைந்து திங்களில் சகடம் சாடியது- நான்கு ஐந்து
மாதத்தில் சகடாசுரனை அழித்தது. பெரியாழ். 1-2-11.
2135 நாவகாரியம் – நாவினால் சொல்ல வொண்ணாத
பெரியாழ். 4-4-1.
நாவல் – தோற்றவர்கள் முன்னே ஜயித்தவர்கள்
சொல்லுஞ்சொல்அறையோவறை யென்னுமாப்
போல. திருமா. 1.
நாவழித்தல் – நாக்கை வழித்தல். பெரியாழ் – 1-1-6.
நாவாய் -பாரத்புழை என்ற ஆற்றங்கரையில் உள்ளது
இத்திருப்பதி. நின்ற திருக்கோலம்.பெரிய – 6-8-3; 10-1-9.
நாழ்-சாமர்த்தியம். நானென்னும் செருக்கு. அகங்காரம்,
அர்த்தமில்லாத வார்த்தை. பெரிய திருவந். 10;
இரண்டாம் திருவந். 65. திருவிரு .71.
2140 நாழ்மை – ஏற்றம். திருவாய்-4-6-9.
நாழம் – குற்றம். பெரியாழ் – 4-3-5.
நாழல்-கோங்கு. பெரிய. 3-5-7.
நாழிவளோ – நாழ் – சுதந்திரமாய் நடக்கும் செருக்கு.
பெரியதிருவந்.10,11.
நாளோலக்க மருளுதல் சபையிலிருந்து அருள்பாலித்தல்.
திருப்பள்ளி. 9.
2145 நான்முகன் பிரமன். திருவாய். 10-10-1.
நான்முகனை நாராயணன் படைத்தான். நான் முகந்திரு – 1. நான்று-காலத்தில். நான்முகன் திரு – 5, திருவிருத் – 5. நானப்புதலில் – மஞ்சள் தூற்றில். பெரிய – 6-5-3.
நானம் – சந்தனம், கத்தூரி, கர்ப்பூரம் முதலான சுகந்த திரவியம். மஞ்சள். பெரியாழ் – 1-3-9; பெரிய. 6-5-3.
2150 நானாவிதம் – பலவிதம். பெரிய – 1-9-2. நானிலம் – பூமி. திருவிருத் -26. நிச்சித்து – நிச்சயித்து. திருவாய் 10-4-4,5.
நிமியும் வாய் – நெளிந்தவாயையுடையவள். திருவாய். 1-5-2. நியதம் எப்பொழுதும். திருப்பல்.8.
2155 நிரந்தரம்- இடைவிடாமை. திருச்சந்த 101, தே.7-61-8. ஏகம்பம்
நிரந்தவர் – பகை அரசர்கள். பெரிய. 2-9-3. நிருமித்தல் – சங்கற்பித்தல். திருவாய் -4-8-1. நிறைகோளுழவர் – பசுக்களை ஹிம்சிப்பதையே

தொழிலாகவுடையவர். திருவிருத் -37.
நிரைப் பொற்பூ- ஒழுங்கான பொற்பூ. பெரியாழ் 1-3-8.
2160 நில்லாப்பாய்- பின்தொடரா தொழியிலுமொழி. பெரிய.
திருவந் -60.
நில – நிலா. பெரிய -7-8-3.
நிலத்தேவர் குழு அந்தணர் தொகுதி. திருவாய் -5-1-8.

நிலந்தரஞ்செய்யும் – தரைமட்டமாக்கிவிடும். பெரிய -1-1-9.
(தே) 6-34-7. ஆரூர்.
நிலாகின்ற- விளங்கி வாழப் பெற்ற. திருவிருதி -75.
2165 நிலாத் திங்கள்துண்டத்தாய் – காஞ்சிபுரத்திலிருந்து ஒருகல்,
தொலைவில் உள்ளது.
நின்றகோலம்.திருநெடுந் -8.
நிவர்தல்-ஒங்குதல். இரண்டாந்திருவந்- 78.
நிவந்த – உயர்ந்த. அம -2.
நிவந்து-உயர்ந்து. இரண்டாந்திருவந் -78.
நிவா – வெள்ளாறு. பெரிய -3-2-9; தே2-90-1-10
நெல்வாயிலரத்துறை.
2170 நிவா – வலங்கொள்தில்லை. பெரிய. 3-2-7.
நிழலுமடிதாறும் – பாதநிழலாகவும், பாதரேகையாகவும்.
பெரிய திருவந் – 31.
நிழறுதொல்படையாய் – நிழறு – ஒளியைச் செய்கிற
திருவாய். 6-2-5.
நிழறுதல் ஒளிவிடுதல் திருவாய் -6-2-5.
நிறம் – வெளிது. மூன்றாம் திருவந் -56.
2175 நிறை – பெண்தன்மை. பெரிய -2-4-4.
நிறைமொழி – வேதம். பெரிய 11-6-3.
நின் திருவானை – உனது பிராட்டியின் மேலாணை.
பெரியாழ் -5-3-2.
நின்புள்ளுவ மறியாதவர்க்கு புள்ளுவம். வஞ்சனை.
திருவாய் 6-2-3.
நின்றவூர் – இப்போது திண்ணனூர் என்று வழங்குகிறது.
சென்னை அரக்கோணம் பாதையில் உள்ளது.
பெரிய. 2-5-2, பெரிய -7-10-5.
2180 நின்றான் இருந்தான் – திருருநிறையூரில் நின்ற திருக்கோலம்
திருவாலியில் வீற்றிருந்த திருக்கோலம்.
நின்னையே வேண்டி – உன்னையே விரும்பி. பெருமாள். 5-9.

நினை தொறும் நினைக்கும்தோறும் திருவாய். 9- 6-1.
நீர்கள் – நீங்கள். திருவாய் 7-3-9.
நீர்ப்பூ நிலப்பூ. திருவிருத் – 55
84
2185 நீர்மலை பல்லாவரத்திலிருந்து 3 கல் தொலைவில் உள்ளது.
எம்பெருமான் நாமம். பொன்மாணிக்கம். சிறிய
திரும.73;பெரிய திரும-130; பெரிய -2-4-1-10;
2-7-8; 8-2-3, 10-1-1.
நீரகம்-காஞ்சிபுரத்திலிருந்து முக்கால் கல் தொலைவில்
உள்ளது . திருநெடுந் – 8.
நீராட வாராய் – நீராடுவதற்கு வரவேணும்.
பெரியாழ் -2-4-1, 10.
நீலன் – திருமங்கையார், வானரர் தலைவன். இராமநுஜ – 17;
பெரிய – 10-3-3.
நீலார் கண்டத்தம்மானும் – கருமை. திருவாய் -6-10-8.
2190 நீற்கண்டன்-நீலகண்டன். (நீலம் என்ற சொல்அம் கெட்டு
நீல் என நின்று லகரம் றகரமாயிற்று) நான்முகன்திரு – 15. நீறாடிதான் – சிவன். திருமுகன்திரு.-15.
நீறு – சுண்ணம், தூளி. சிறிய திரும-10; திருவாய் -4-6-6. நீறு செவ்வேயிடக்காணில் – நீறு பஸ்மம். திருவாய் -4-4-7.
நீறுபூசி – திருநீற்றைப்பூசி. பெரிய -6-7-9.
2195 நுண்பு – நுண்மை. பெரிய திருவந்-8.
நுணுக்கிய மஞ்சள் – அரைத்த மஞ்சள். பெரியாழ். 1-2-15.
நுளைப் பாவையர் – குறத்திகள். பெரிய 387.
நூக்க – தள்ள. திருமா – 27.
நூல்- ஆகமம். முதல் திருவந். 5.
2200 நூலாட்டி – லக்ஷ்மிநாதன். நான்முகன் திரு .40 நூலிழத்தல் – மாதர் மாங்கல்யமிழத்தல். பெரிய -2-3-6. நூற்றவள் – (விசாரித்தவள்) கைகேயி. பெரியாழ் -3-9-8. நூற்றவர் – துரியோதனாதியர். பெரியாழ். 2-1-2.
நூறு தடா நிறைந்த வக்கார அடிசில் – தடா – பானை.)
நாச்சி -9-6.
2205 நூறு தடாவில் வெண்ணெய்- நூறு பானைகள் நிறைய வெண்ணெய். நாச்சி – 9-6. நெக- கழல. பெரிய -8-5-9. நெஞ்சகம்பால் சுவர் – நெஞ்சு என்றும் சுவரில். பெரியாழ். 5-4-6.

நெஞ்சறவறப்பாடும் பாட்டை – பிரிவு பிரியும்படி.
திருவாய் -9-9-9.
நெஞ்சிடிந்துகும் – நெஞ்சு சிதிலமாய். திருவாய் -9-6-2.
2210 நெஞ்சென்னும் பொன் வண்டு – நெஞ்சாகிய அழகியவண்டு.
இராமாநுஜ – 100.
நெடுஞ்சொலால் மறுத்த நீசனேன் – நீண்டசொற்களாலே
மறுத்த நீசனான நான். பெரிய – 1-6-5.
நெடு நோக்குக் கொள்ளுதல் – நீண்ட நோக்குடன்
எதிர்பார்த்தல். நாச்சி -12-6.
நெடும்புரிசை – உயர்ந்த மதில். பெருமாள். 10-3.
நெடுமறுகில் – பெரியவீதியில். பெரிய. 2-6-10.
2215 நெடுமாலடியார் -திருமாலுக்குத் தொண்டு செய்பவர்கள்.
திருவாய். -4-5-7.
நெய்ச்சுவைத்தேறல் என்கோ – நெய்போலும் சுவையை
யுடைய தேன் என்று
சொல்லுவேனோ.
திருவாய். 3-4-5.
நெய் தொடுவுண்டு – நெய்யைக் கவர்ந்து உண்டு. திருவிருத்54.
நெல்லி- நெல்லி இலை. பெரியாழ் -2-4-3.
நெல்லி மல்கி- நெல்லி மரங்கள் நிறைந்து. பெரிய. 1-7-9.
2220 நெற்று – வாகை மரத்தின் நெற்று. பெரிய 1-7-8.
நெறியெல்லாம் – சகல உபாயங்களையும். திருவாய் -4-8-6.
நெறு நெறென – இரட்டைக்கிளவி. பெரிய -5-10-4; (தே)
6-18-11 பூவணம்.
நென்மெலி -ஒருபடை வீடு. பெரிய -2-9-8.
நென்னல் நேற்று. பெரிய திரும. 130.
2225 நேச பாசம் ஆசாபாசம். திருச்சந் 107.
நேத்திரம் – பீலிக்கண். பெரியாழ்.3-4-5-7-8.
நேர்ந்து பராவி வைத்தல் வேண்டி வணங்கி நிற்றல்.
நாச்சி. 9-6.
நேர்ப்பம் பிரகிருதி. திருவாய் -8-1-6.
நேரா- அறுத்துப் போட்டு. பெரியாழ் – 3-9-10.
2230 நைமி சாரணியம் – வடநாட்டில் நிம்சார் என்னும் இரயில்
நிலையத்திலிருந்து ஒருகல் தொலைவில்
உள்ளது .நின்ற திருக்கோலம்.
பெரிய 1 – 6 – 1 – 10.

நையாடல்-எண்ணெய் விளையாட்டு. திருப்பா. 4 வியாக்;
நைவளம்-நவிற்று பொழில் குறிஞ்சிப்பண். பெரிய. 5-10-2.
நொக்கென – விரைவாக. திருவாய் -4-1-3.
நோன்பியர் -சமணர். பெரிய. 2-1-5.
பக்க நிற்க நின்ற பண்பர். பெரிய. 9-6-1.
பகடு விண்டலறல் – யானைபோல் ஒலித்தல். பெரிய 5-7-4.
பகர்தல் பிரகாசித்தல். பெரியாழ். 1-7-8.

பத்திராகாரன் – விலக்ஷணமான வடிவுடையவன்.
பெரியாழ் – 1 -9- 6.
பத்து – பக்தி. திருச்சந் – 79.
2285 பத்துடையடியவர்க்கு – பக்தியையுடைய அடியார்களுக்கு.
திருவாய்-1 -3-1.
பதக முதலை – துன்பம் தரும் முதலை. பெரியாழ் -2 -1-9.
பதலைக் கபோதம் (பதலை – கும்பம், கபோதம் -புறா)
பெரிய -3-8-2.
பதவிய-மிருதுவான. திருவாய் -7-9-10.
பதவியாய் – நீர்மையை உடையவனாய்க் கொண்டு. இரண்டாந்திரு – 89.
2290 பதியம் – பாசுரம். திருப்பா. தனியன்.
பதிற்றைந் திரட்டி – நூற்றுவரான துரியோனாதிகள்.
பெரிய – 2-4-4.
பதினொரு விடையர் – ஏகாதசருத்திரர்கள். திருப்பள்ளி 6. பந்தணைந்த மெல்விரலாள் – பெரிய -2-2-4.
பந்தனை – அனுக்கம், பிள்ளைக்கு வரும் வியாதி. திருப்பல் 6.
2295 பந்தார் மெல்விரல் – பந்துபொருந்திய விரலினையுடையவள். இ
பெரிய -7-7-2; திருப்பா -18.
பந்து தூதை – சிறு முட்டி, பூங்குலைகள். திருவாய் -6-7-3.
பப்ப – ஒலிக்குறிப்பு. பெரிய -1-3-7; தே. 4-5-6. ஆரூர். பம்பை-வடபாலை. திருவாய் – 6-1-10.
பயந்தேன் -பசந்தேன். பெரிய – 9-4-2.
2300பயலை – பசலை வர்ணியம். நோய். பெரிய. 2-7-9; 8-1-1, திருவாய். 2-1-1; பெரிய – 3-6-2; திருவிருத் – 70. தே 1-60-3,9 தோணிபுரம்.
பயலோவிலீர் – பாகமுடையீரல்லீர், திருவிருத் -15. பரக்கழித்து பழிவிளைத்து. நாச்சி. 12-3, தே. 5-86-10 வாட்போக்கி.
பரக்கழிந்தாள் – அடக்கமழிந்தாள். பழிக்கு அஞ்சாளானால் பெரிய -3-7-9; 4-8-5.
பரக்கழிந்து பழியஞ்சாதே, மிகவும் கழிவுமாம். பெரிய.3-7-3.
2305 பரகாலன் எதிரிகளுக்கு யமன் போன்றவன்.
பெரிய. 3-4-10; 3-9-10: 7-4-10; 7-5-10. பரங்குன்று இமயமலைகள் உள்ள திருப்பிரிதி. பெரிய. 7-1-6. பரசுராமன் – ஜமதக்னி முனிவருடைய மைந்தன்.
பெரிய. 8-5-8. திருவாய். 6-2-10.

பரண்மேல் – மச்சின்மேல். திருவாய் 8-4-1.
பரத்தர் – பெருமாள்.3-6.
2310 பரத்தை – பெரியாழ்வார்.3-5-9.
பரத நம்பி- பரதாழ்வான். பெரியாழ்வார்-3-9-6, 3-10-5,
பெருமாள்8.5.
பரதன் – இராமனின் தம்பி. பெரியாழ்-2-1-8. பெரிய -2-3-7.
பரதனுக்கு – பெருமா. 10-4.
பரம் – பொறுக்க ஒண்ணுதல் பெரியாழ். 4-5-1,
திருவிருத் . 2-9-3 (மழபாடி-7-100-4. நொடித்தூன்மலை.)
2315 பரம்பரமாய் – ஒன்றுக்கு ஒன்றுமேலாய் – திருவாய்
8-8-5.(திருவாசகம். கீர்த்தி -119)
பரம்பரன் – பெரிய. 1-5-1, திருவாய்,4-3-9, 8-8-2.
பரம்புருடன் – உத்தம புருஷன் – திருவாய்–4-8-3.
பரம்புருடா -புருஷோத்தமனே – பெரியாழ்.5-4-2.
பரமகவிகள் – திருவாய் – 7-9-6.
2320 பரமசோதி -பரஞ்சோதி – திருக்குறுந் – 11.
பரமே – வசமோ. திருவாய்.6-2-6.
பரமேச்சுரவிண்ணகரம் – பெரிய – 2-9-1-10.
பரமேட்டி – திருப்பல் -12. திருவாய். 9-1-8.
பராங்கதி – சிறந்த பதவி – திருமா – 4.
2325 பரிப்பு – பரிவு. துக்கம் – திருவாய் -6-4-6.
பரிபவம் -அவமானம் – பெரியாழ் -2-9-2.
பரிமாற -வியாபரிக்க – பெரியாழ் – 3 – 6 – 8.
பரிமுகமானவன் -ஹயக்ரீவாவதாரமெடுத்தவன் –
பெரிய -5-3 -2.
பரிமேற்கற்கி – கற்கியவதாரம் – பெரிய-2-5-3.
2330 பரிதிவட்டத்தூடுபோய் – சூரிய மண்டலத்தின் வழியாகச்
சென்று. அர்ச்சராதி மார்க்கம்.
4-5-10.
பரிவேடம் – சந்திரனைச்சுற்றிச் சில காலங்களில்
காணப்படும் கோடு .ஊர்கோள்- பெரியாழ்-1-7-3.
பருங்கிப்பறித்தல்-கொன்றுமுறித்தல். பெரியாழ்-1-2-7.
தே. 3-69-3. காளத்தி.
பருக்குதல் – பருகச் செய்தல். நாச்சி- 13-4.
பருகுநீர் – குடிக்கின்ற தண்ணீர்- பெரியாழ் -4-4-4.

2335 பருச்செவி – பருமனானகாது பெரியதிருவந் – 63
பருப்பதம் – மகாமேரு பருவதம் பெரியாழ்-5-4-7.
பல்லவர் கோன் பணிந்ததில்லை – பெரிய -3-2-3.
பல்லவன் – பல்லவ அரசன். பெரிய -2-9-2.
பல்லாண்டிசைத்தல் – மங்களாசாகனம் செய்தல்.
பெரியாழ்-1-9-5.
90
2340 பல்லாண்டு திருவோணத்தில் கூறுவித்தல்- மங்களாசாசனம்
திருவோண நட்சத்திரத்தில் செய்வித்தல்.
பல்லி சொற்கொள்ளல் – திருவிருத் – 48.
பல்லிநுண்பற்றாக – பல்லியானது சுவரிலே இடைவெளி
யின்றிப் பற்றியிருப்பது போல.
பெரியாழ்-3-4-2.
பலங்கனி – பலாப்பழம் – பெரிய -3-1-5,3-10-3,5-3-5. பலதேவன் – பலராமன். நாச்சி14-1.
2345பவர் – பரப்பு- திருவாய் -2-2-6.
பவித்திரன்-தூயவன், பரிசுத்தமூர்த்தி. திருவாய். 2-3-9.
பவத்தர் – பௌத்தர்கள். நான்முகன்திருவந். 6.
பழநடை – முன்பு செய்து போதருங்கிரமம் பெரிய-2-3-4. பழிகாப்பு- கெட்டபேரைக்காப்பது- நாச்சி-12-3.
2350பழுக்காய் – பழுத்தபாக்கு – பெரிய-6-9-8. பள்ளிக்கட்டில். கிருப்பா 22
பள்ளிக்குறிப்பு – தூக்கக்குறிப்பு (கொட்டாவி
விடுதல் முதலியன)பெரிய-10-4-6.
பள்ளிகமலம் தாமரைப்பூவாகிறபடுக்கை. பெரிய.6-7-6.
பள்ளிகோள்- கோள்முதனிலைதிரிந்த தொழிற்பெயர். கோள். கொள்ளுதல்பெரியாழ்-5-4-9).
2355 பள்ளியிலோதி வந்த சிறுவன் – பிரகலாதன். பெரிய-2-3-8 பற்பநாபன்-பத்மநாபன்.திருச்சந்23, பெரியாழ்-2-3-2. பற்பபாதன்- தாமரைமலர் போன்ற மென்மையான பாதங்களையுடையவன் திருச்சந்த. 32. பற்பபாதா. விளி திருவாய் -7-6-1. பற்றுமஞ்சள் நிறம்பிடிக்கும் பூச்சுமஞ்சள். பெரியாழ்-3-2-2.
2360பற்றையை பயனற்ற பொருளை. திருவாய். 3-9-7. பற – உந்திபற பெரியாழ்-3-9-1-10.
பறியோலைச் சயனத்தர் – தாழை ஓலைகளினாற் செய்த படுக்கையையுடையவர்.பெரியாழ்-1-1-5,
திணைமாலை-113,குறுந் -221,அகநா-94, நற்-142,

பறை-நோன்புக்கு அங்கமானதொரு வாத்திய விசேடம்.
திருப்பா- 8, 24 – 28.
பறை தரும் – புருஷார்த்தத்தைத் தரும் – திருப்பா10.
2365 பன்னிரண்டா நாள் சிசுவுக்கு உத்தானம் செய்தல்.
உத்தானம் – குழந்தையைப் பிரசவ அறையிலிருந்து
வெளிக்கொணரும் சடங்கு. பெரியாழ்-1-1-8.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் – பன்னிரண்டு
திருவோணத் திருநாளளவும் சமைத்தேன். பெரியாழ்-2-9-7.
பன்னிருதிங்கள்- பன்னிரண்டு மாதம். பெரியாழ்-3-2-8.
பன்னிருநாமம் – திருமாலினுடைய பன்னிரண்டு பெயர்கள்
ஒவ்வொரு செய்யுளிலும் வந்துள்ளது. திருவாய். 2 – 7-1 – 10.
பனங்கனி தலைக்குவமை திருச்சந்-80.
2370பனங்கனிபோலப்பருமுடியுதிர – பெரிய 9-1-7-
பனிவரை – திருவேங்கடமலை திருநெடுந் 9.
பனுவல் – நூல் பெரிய – 10-4-10.
பாக்கியம் – அதிர்ஷ்டம் – இரண்டாந்திரு – 34.
பாகுடம் – உபகாரம், பச்சை- பெரியாழ். 4-5-8.
2375பாசனம் – மரக்கலம் திருச்சந் – 100.
பாசறவு -பசுமையழிவு திருவாய் – 6-8-7,8.
பாசி தூர்த்துக்கிடந்த பார்மகள் – பாசி படிந்து கிடந்த
பூமிப்பிராட்டி நாச்சி-11-8.
பாசிலை நாணல்-பசுமையான நாணற்புற்கள் நாச்சி-7-7.
பாஞ்சசன்னியம் -எம்பெருமான்கையிலுள்ள சங்கு.
பெரியாழ். 3-3-5.நாச்சி-7-10
2380பாஞ்சாலி பாஞ்சாலதேசத்து அரசன் மகள் –
பெரியாழ். 4-3-6. (தத்திதாந்த நாமம்)
பாஞ்சாலி கூந்தல் – பெரிய -6-7-8.
பாட்டும் முறையும் – இயலும். இசையும்- நான்முகன்திரு – 76.
பாடகம்-பாடகம் என்னும் திருப்பதி திருப்பா-27
மூன்றாந்திரு-30 திருச்சந்-63, இரண்டாந் திருவந்-94,
பெரியதிரும்127, பெரிய-4-8-7,6-10-4.
பாடல் பத்தும் வல்லார் நாச்சி -4-11.
2385பாடி – திருவாய்ப்பாடி மூன்றாந்திரு – 26,
பாடிப்பறைகொண்டு- பிராப்பியத்தைப் பெற்று. திருப்பா-27,
பாடுகாவலிடுமின் அருகுகாவலிடுங்கள். பெரியாழ்-3-7-5.
பாடுசாரா – அருகுவாரா திருவாய். 9-10-10.
பாடையிடுதல் பாடையில் படுக்க வைத்தல் பெரியாழ். 4-5-8.

2390பாண் -பாட்டு மூன்றாம் திருவந் – 35,55.
பெரிய. 6-2-5, 6-10-3.
பாண்டியர் குலபதி – பாண்டிய வம்சத்து அரசன்.
பெரியாழ் – 5-4-7.
பாண்டிவடம்-பிலம்பனைப்பலதேவன் வென்றவிடம்
நாச்சி–12-7.
பாணன்-கடகன், ஆசாரியன்- பெரிய – 8-2-2.
பாதமத்தாலெண்ணினான்-பாதமத்தால் -பாதத்தால்
முதல்திருவந்.45.
2395 பாதமூலம் திருவடிகள் – திருமா – 29.
பாதுகம் -மரவடி. பெருமாள்- 10-4.
பாந்தட்பாழியில் அனந்தாழ்வானாகிற படுக்கை.
பெரிய. 10-1-7.
பாம்புடைப்பல்லவர் கோன் – பாம்பைக் கொடியிலேயுடைய
பல்லவ அரசன் – பெரிய-2-9-5.
பாம்பு போல் நாவும் – நாச்சி, – 10-3.
2400பாமரு – பரப்பையுடைத்தான் – திருவாய்.7-6-1. பார்த்தசாரதி – கண்ணன் – பெரிய -2-3-1. 2-10-8.
பார்த்தன் – அருச்சுனன் – பெரியாழ் – 2 -6 – 5, 6, பெரிய -5-7-8 9-9-8.
பார்த்தன் பரத்வம் தெளிந்தது. திருவாய். 2-8-6.
பார்த்தன்பள்ளி – சீகாழியிலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது. பெரிய 4-8-1-10.
2405 பார்ப்பனச்சிட்டர்கள் – நாச்சி – 6-4-.
பார்மன்னர் – பூமிக்கு அரசர் – பெரிய – 7-7-4. பார்மன்னு பல்லவர்கோன் – பூமியில் நெடுங்காலம் வாழ்ந்தபல்லவ அரசன் – பெரிய. 2-9-2,10. பாரசிநாள் – துவாதசி. முதல் திருவந் – 82. பாரதங்கையெறிந்தான் – பாரதயுத்தத்தை உறுதிப்படுத்தி வந்தவன். பெரியாழ்.-2-6-4.
2410பாரதப்போர். திருவாய் -3-2-3, பெரிய-4-6-6. பாரதம் – பெரிய திரும -72. பெரிய-7-3-4, 7-5-2,9-9-8,11-1-10.
பாரத மாபெரும்போர். பெரிய-9-2-9. பாரதவெம்போர் – மூன்றாந்திரு -28. பாரிசாதாபகரணம் பாரிஜாத மரத்தைத் தேவலோகத் திலிருந்து கண்ணன் சத்யபாமையின்
பொருட்டு அபகரித்து வந்தது. பெரியாழ். 1 – 9 – 9. 3 – 9-1.

2415 பாரித்த – முயற்சி செய்த – மூன்றாந்திருவந் -44.
பெரியாழ்-1-6-6. (தே) 4-70-10.நனிபள்ளி, 5-54-9-
அதிகை வீரட்டம்.
பாரிப்பு – பரப்பு- திருவிருத் 67.
பாரோர் – உலகத்தவர்கள். திருப்பா- 1.
பால்பொன் பசப்புக்கார் – வெண்மை, சிவப்பு, பசுமை,
கறுப்பு. நான்முகன்திரு.24.
பால்சோர – பால்பெருக. திருப்பா-12.
2420 பால்வாய் – பால்மணம் மாறாதவாய். திருவிருத். 35.
பாலகன்-உவப்பினால் ஆகிய பால்வழுவமைதி.
பெரியாழ்-3-7-4-.
பாலப்பிராயம்- குழந்தைப்பருவம். பெரியாழ்2-6-6.
பாலன்றனதுருவாய் – சிறுகுழந்தை வடிவம் கொண்டு
முதல்திருவந் 69.
பாலேய்தமிழரிசை காரர்- பால்போன்ற இனிய இயற்றமிழ்
அறிவாரும், இசையறிந்து பாடவல்லாரும். திருவாய். 1-5-11.
2425 பாலை – பாலைப்பண் பெரிய -7-3-7.
பாவக்காடு – பாவசமூகம் பெரியாழ் -5-4-2.
பாவகாரிகள் – தீயசெயல்களைச் செய்கிறவர்கள்
பெரியாழ்-4-4-1.
பாவநாச நாதன் – திருச்சந்த – 27.
பாவை- நோன்பு – திருப்பா- தனி.
2430 பாவைக்குச் சாற்றி நீராடுதல் – நோன்புக்கென்று சங்கற்பித்து
நீராடுதல் – திருப்பா.3.
பாழ் – மூலப்பிரகிருதி. திருவாய்- 10-10-10.
பாழி படுக்கை பரமபதம் -பெரிய – 10-1-7,
இரண்டாந்திருவந்-13.
பாழிமை – பெரியமேன்மை. பெருமிடுக்கு- பெரிய-11-2-6.
திருவாய்-2-1-5. தே. 5-92-1 காலபாசம்.
பாளைமுத்தும் – பாளையில் உண்டான முத்துக்கள் –
பெரிய. 6-9-8.
2435 பாற்கடல் – திருப்பாற்கடல், மூன்றாந்திருவந் 31,61,72.
பாற்றுதல் – சிதறவடித்தல் பெரிய -4-7-5.
பாறு பாறாக்கினான் – துண்டுதுண்டாகச் செய்தான் –
பெரிய திருவந் 33.
பான்மதிக்கிடர் தீர்த்தவன் – சந்திரனுக்கு க்ஷய ரோகத்தைப்

போக்கியவன் – பெரிய-1-8-6,
பானல் – மருதநிலம், கடல் – பெரிய -6-7-2
2440 பிச்சச் சிறுபீலி – மயிலிறகு. பெரிய -2-4-8,2-6-5,
பிச்சைதானம் – – திருப்பா -2.
பிச்சைக்குறை – நாச்சி -11-4.
பிஞ்சுகள் – உருத்திரன் – பெரிய-2-6-9.
பிண்டத்திரள் – பித்ருக்களுக்கு இடும்பிண்ட உருண்டை
பெரியாழ்.2-5-7.
2445 பிண்டமாய்- மூலகாரணமாய் – மூன்றாந்திருவந் – 46,
பிண்டியார் – ஜைநர்கள். பெரிய-9-7-9.
பிண்டியுடைநோன்பியர் – அசோகமரத்தைத் தஞ்சமாக
உடைய அமணர். பெரிய. 2-1-5.
பிணத்தின் மடவார் – பிணங்களைத்தின்கின்ற பெண்
பேய்கள். பெரிய 2-4-8.
பிணம்படுத்தல் – சவமாக்கி ஒழித்து அருளல் பெரியாழ்-5-3-4.
2450 பிணா – பெண்பால் பொதுப்பெயர். நாச்சி.1 – 4. பிதற்றும்- பெரியாழ். 3-7-8. திருவாய் – 10-4-1.
பிதற்றுமின் – திருவாய். 3-5-10.
பிதிர் – அதிசயம், மிச்சம். நான்முகன் திரு -83. பிது (பிதா) – பெரிய. திருவருந் -70.
2455 பிதுவை – தந்தையை. திருவிருத் 95. பிரகலாதன் – திருவாய். 2-8-9.
பிரகிருதி- சுபாவம். திருவாய்-10-7-10.
பிரமகுரு – பிரம்மோபதேசம் செய்யத்தக்க ஆசாரியன். பெரியாழ். 5-2-8.
பிரமபரம்பரன்- இந்திராதிகளில் ஏற்றமுடைய பிரமாவாகிற பராத்பரன். திருவாய்-8-4-9,
2460) பிரமமுதல் வித்தாய் – பிரமமாகிற பிரதான
பீசமாய் – திருவாய்-8-10-7.
பிராக்கள் – உபகாரிகள் – திருவாய் -3-7-5. 9-1-11. பிரிதி – ஒருதலம் – பெரிய – 1-2-1-10.
பிலம்பன் – பிரலம்பாசுரன் – பெரியாழ். 3-6-4. 4-9-3. பிழக்குடையவசுரர் – தீமைகளைச் செய்கின்ற அசுரர். பெரியாழ். 4-8-7.
2465 பிள்ளைக்குழாம் பிள்ளைகளின் திரள் – திருவாய்-7-3-1. பிளவெடுத்து கிழித்துப்போகட்ட. பெரிய -1-5-7.

பிற்காலும் – மேலும்- இரண்டாந்திரு. – 93.
பிறப்பிலி- பிறத்தல் இல்லாதவன். பெரிய – 1-8-7.
பிறப்பு – திருப்பா-7.
2470 பிறவியில் மாண்ட பிள்ளைகள் – பெரிய -4-8-2.
பிறை -ஓரணி பெருமாள் -7-4.
பிறைதங்குகடையான- சிவன் – பெரிய-3-4.
பின்னை – நப்பின்னை. திருச்சந்- 13. 33, நான்முகன்திரு. 33
மூன்றாம் திருவந் -49.85, பெரிய-3-10-7,4-4-4.
4-5-3, திருவாய்- 4-8-4. 5-9-8. 4-2-5.
பின்னைக்கு மணவாளன் – நப்பின்னைப்பிராட்டியின்
மணவாளன் – பெரிய -6-6-9.
2475 பீர் – வெளுப்பு – திருவாய் – 1-5-8.
பீலிசூடி -மயில் தோகையைச்சூடி. பெருமாள். 6-9.
பீலித்தழை – மயில்தோகை. பெரியாழ் -2-6-1.
பீளையோடீளை – நேத்திரமலம். பெரிய -6-4-1.
பீற -பிறக்க- நான்முகன் திருவந் – 49.
2480 பீனத்தெட்டபழம் பருத்து நன்றாகப் பழுத்த
பலாப்பழங்கள். பெரிய -3-4-8.
புகழ் மங்கை – கீர்த்தியாகிற மங்கை- பெரிய -3-2-5.
புகா – உணவு – பெரிய திருவந் – 42.
புட்கவ்வக்கிடத்தல் – பறவைகள் கவ்விக்கொள்ளும்படி
கிடத்தல். திருமா -6,
புட்குழி – காஞ்சீபுரத்திலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது
இருந்த திருக்கோலம். பெரிய -2-7-8.
2485 புட்டியிற்சேறு – இடையில் படிந்த சேறு திருவாய் -6-3-4.
புண்ணி புளிப்பெய்தல் – புண்ணின் மேல்புளிச்சாற்றைப்
பெய்தல்- பெரியாழ் -2-9-1 நாச்சி -13-1
புணர்ப்பு – படைப்பு, சம்பந்தம், சூழ்ச்சி முதல் திருவந் – 61.
திருவாய் – 2-8-2. பெரியாழ் -4-5-2.
புணைவன் – மரக்கலமாயிருப்பன் – திருவாய் -2-8-1.
2490 புத்து – புத்தர் திருமா -7.
புதஞ்செய்தல் – தாவுதல் – பெரிய -9-3-7.9-10-1.
புதம் – அம்புதம் – பெரிய -9-10-1,
புதமிகு விசம்பு-மேகம். பெரிய. 9-8-8.
புதாவினம் – புதா பெருநாரை – திருவாய் -6-8-9.

2495 புதியதுண்கை – முதல் விளைந்த விளைவை நல்லவேளையில்
சமைத்து உண்ணுதல். பெரிய. 9-3-7.
புதுக்கணிப்பு – வடிவிலுண்டான புதுமை – திருவாய்- 8-9-5.
புதுவிரை – மணம் – பெரிய – 9-1-3.
புதுவைக்கோன் -ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவன்.
பெரியாழ்-5-3-10,நாச்சி-3-10.
புதுவைப்பட்டன் – பெரியாழ் – 1-2-21, 1-3-10.
2500 புதுவை மன்னன் – பெரியாழ். 2-3-13, நாச்சி -5-11.
புயக்கற்றது- கைவிட அப்பியஸியா நின்றது. திருவாய். 9-5-10.
புரந்தரன் – இந்திரன் . பெரிய.4 – 6 – 8,
புரமெரிய அம்பானது – முப்புரம் அழிய திருமால்
அம்பானது. பெரிய.6-1-3.
புரவி முகஞ்செய்து- குதிரைமுகம் போலத் தலைவணங்கி.
பெரியாழ்.4-1-10.
2505 புராணர் – பழையவர். பெரிய. 1-8-1.
புருடோத்தமன் – திருமால். பெரியாழ். 4 – 7 – 2.
புருவ வட்டம் – வட்டமான புருவங்கள். நாச்சி. 14-6.
புரைபுரை – வீடுதோறும். பெரியாழ். 2-9-1.
புல்குதல் – தழுவுகை. பெரியாழ். 1-9-1.
2510 புல்லாணி – திருப்புல் அணை என்பதன் சிதைவு. வடமொழியில் தர்ப்பசயனம் என்பர். இப்புண்ணியத்
தலம் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. புல்லாரண்ய மகரிஷிக்கும், சமுத்திரராஜனுக்கும் அசுவத்த நாராயணனுக்கும்
அருள்பாலித்த இடம். பெரிய. 9-3-1-10. புல்லெழுந்தொழிதல் புல்முளைத்து அழிதல். திருமா. 13. புலம்- அழகு. திருவிருத்57.
புலமங்கை பூமிப்பிராட்டி. பெரிய. 3-2-5.
புலரி – விடியற்காலம். திருப்பள்ளி. 5.
2515 புலவர் – சர்வஞ்ஞர் பெரிய -1-1-7. புலாகின்ற மீன்நாற்றம் வீசப்பெற்ற. திருவிருத் . 75. புலையர் – சண்டாளர். திருமா.43. புழுதிக் காப்பிடுதல் ஸ்ரீபாததூளியைக் கொண்டு ரட்சை செய்தல். சிறிய திரு.16.
புள்ளரையன் கோயில்- கண்ணன் கோயில். திருப்பா.6.

2520 புள்ளுப்பிள்ளை. (புள்ளு- பறவை.) பெரிய.5-1-2.
புள்ளுவன் – வஞ்சகம். பெருமாள்.10 – 74.
புள்ளுவம் பேசுதல் – வஞ்சகமாகப் பேசுதல். பெரியாழ் 5-1-3.
புள்ளைக்கடாகின்றவாற்றை- பெரிய திருவடியை நடத்துகிற
விதத்தை .திருவாய். 7-3-1.
புளிங்குடி – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இரண்டு
கல்தொலைவில் உள்ளது. சயனத்திருக்கோலம்.
திருவாய். 8-3-5, 9-2-1.
2525 புளிப்பழம் – புளிப்புச் சுவையையுடைய ஒருவகைப்பழம்.
பெரியாழ். 2-4-1.
புளியட்டி புளிப்பழத்தைக் கொண்டு நீராட்டி.
பெரியாழ். 2-5-8.
புற்கு- புன்மை. திருவாய். 3-1-2.
புற்பா முதலா – பரவிய புல்முதலாக. திருவாய்.7-5-1.
புற்றுமறிந்தன – புற்றும் சிதைந்தன. பெரிய. 3-4-7.
2530 புறக்கிட – புறங்காட்ட திருவாய். 8-4-1.
புறம் சுவர்கோலம் செய்தல் – உடலை அவங்கரித்தல்.
திருமா 6.
புறப்பாடின்றி- வெளிப்படுதலில்லாமல், திருவாய்.7.
புறம்புல்குதல் முதுகைக்கட்டிக்கொள்ளுதல்.
பெரியாழ். 1-9-1-10.
புறமலை- திருமலைக்குப்புறம்பானமலை. திருவாய். 2-10-5
2535 புறவம் – புறா பெரிய. 3-8-2.
புன்புலவழி- அற்பமான சப்தாதி விஷயங்களிலே ஐம்பொறிகள்
செல்வதற்குரிய வழி. திருச்சந்.76.
புனக்கொள்காயா – தன்னிடத்திலே நிலையையுடைத்தான
காயா . திருவாய் -9-7-8.
புனிதம் – பரிசுத்தம். திருமா.23.
புனிதர் – புனிதரே.பெரிய. 10-8-8.
2540 புனை – புன்னை. பெரிய. 9-9-2.
பூகம் – பாக்குமரம். பெரிய. 7-8-4-8. (தே.) 1-30-10. புகலி.
பூங்கொத்து மலரின் தொகுதி. பெருமாள்.6-9.
பூச்சிகாடடி. பெரியாழ் 2-1-1-10.
பூசல்- போர். நாச்சி. 7-8.
2545 பூணித்தொழு – பூணி -பசு. பெரியாழ். 2-4-9.
பூணிபேணும் ஆயன். பசுக்களை மேய்க்கும் இடையன்.
திருச்சந்.26.

பூணிமேய்க்கும் பசுக்களை மேய்க்கும். பெரியாழ். 3-6-7.
பூதத் திருவடி – பூதத்தாழ்வார் திருவடி, இராமாநுஜ.9.
பூதனை – கம்சனால் கண்ணனைக் கொலைசெய்ய ஏவப்பட்ட
அரக்கி. பெரிய. 3-10-7.10-10-1.
2550 பூந்தண்துழாய் – அழகிய குளிர்ச்சி பொருந்திய துளசி.
திருவாய். 6-1-5,2-8-2.
பூந்தண்புனல் -பூவையுடைய குளிர்ந்த நீர். திருவாய். 2-8-2.
பூந்தாமம்- அழகிய மாலை. திருவாய்.2-8-6.
பூநிலாய ஐந்து – பூமியில் உள்ள ஐந்து குணங்கள். திருச்சந். 1
பூம்பாடகம் – பெரிய காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர்
சந்நிதி. இக்கோயில் கட்டு வெட்டுக்களில் எம்
பெருமான் பெயர் தூதுஹரி என்றுள்ளது.
இரண்டாந்திரு. 94.
2555 பூம்பாவை – பெரியபிராட்டி – திருவாய். 2-8-1.
பூமிபாரங்கள் – பூமிக்குச் சுமையான பாலிகள்.
பெரியாழ். 4-4-5.
பூரணபொற்குடம் – தீர்த்தம் நிறைந்த பொன்னாலான குடம்
திருவாய். 10-9-2. நாச்சி .6-1.
பூரிப்ப – பூரணமாக. திருவாய்.5-9-9, மூன்றாந்திரு. 44.
பூரியர் – நீசர்கள். இராமாநுஜ – 3.
2560 பூவியேல்- தள்ளிவிடாதே. பெரியதிருவந் – 40
பூவை – நாகணவாய்ப்புள். திருவாய். 6-2-5
பெட்டைக்கெடுத்தல் – பொய்ப்பேச்சுக்களைக் கண்டித்து
ஒழித்தல். இராமாநுஜ. 93. பெண்டாட்டி – பெண்பிள்ளை. திருப்பா – 11.
பெண்டுகள் – பெண்கள். பெரியாழ். 2-3-1.
2565 பெண்ணாகி – மோகினியவதாரம் எடுத்து. பெரிய. 2 – 6 – 1. பெண்ணைத் தென்பால் – பெண்ணையாற்றின்
தென்கரையில் பெரிய. 2 – 10 – 1.
பெண்ணைமேல் அன்றில் பனைமரத்தின் மேல் அன்றில்
பறவை. பெரிய. 11 – 1 – 6; 11 – 2-19 – 4 -1. பெய்தகாவு – உண்டாக்கின சோலை. திருவாய்.6- 3-5. பெய்தறியா பெற்றறியாத. பெரியாழ். 1 – 7 – 8.
2570 பெரிய கோயில் – ஸ்ரீ ரங்கம், திருமா. 11. பெருங்கிறியான் – திருமால். திருவிருத். 91. பெருந்தமிழன் – சிறந்த தமிழ்மொழியில் வல்லவன்.)
இரண்டாந்திரு. 74

பெருந்தேவன் – பரதேவதை திருவாய்.4-6-4.
பெருந்தேவி – சீதை. பெரியாழ். 3-10-4.
2575 பெருநிலம்- வீடு. பெரிய. 1 – 1 – 9.
பெருப்பெருத்த கண்ணாலங்கள் – மிகவும் விசேஷமான
கலியாணங்கள். பெரியாழ் – 3 – 7-10.
பெரும்பாழ் – பிரகிருதி. திருவாய். 8 – 8 – 6, 10-1-7.
பெரும்பாழ்க்காலத்து – உலகம் அழிந்து கிடக்கின்ற காலத்து.
திருவாய் 10 – 1 – 7.
பெரும்பாழி சூழ்ந்த – பாழி படுக்கை. முதல்திரு. 80.
2580 பெரும்புணர்ப்பு – பெரிய வியாபாரம். திருவாய். 2-8 – 3.
பெரும்புறக்கடல் – இந்த அண்டகோளத்துக்கு
அப்பாற்பட்டுச் சுத்த நீராக உள்ள கடல். பெரிய. 7-10-1.
பெரும்பொருள் சிறந்த அர்த்தம். இரண்டாந்திரு.- 64.
பெருமக்கள் – பரமசேஷிகள். திருவாய். 3 – 7-4.
பெருவழி நாவற்கனியினும் எளியள் – பெரிய வழியில் விழுந்து
கிடக்கின்ற நாவல்கனியினும் இனியள். பெரிய. 10 9 – 5.
2585 பெற்றம் – பசு. பெரிய – 10 – 1 – 10.
பெற்றமாளியை- பசுக்களை ஆளப் பிறந்தவன்.
பெரிய. 10 – 1 – 10.
பெற்றார் – தாய் தந்தையர். பெரிய. 8 – 9 – 7.
பெறுத்தி- பெறச் செய்து. பெரியாழ். 2 – 9 – 9,
திருவாய். 3-10 – 10.
பெறுத்து – உண்டாக்கி. திருவாய். 3 – 7 – 7.
2590 பேச்சும் அலைந்தலையாய் – பொருந்தாத பேச்சையும்
உடையவளாய். பெரியாழ். 3 – 7-1.
பேசுதல் – ஒலித்தல். பெரிய. 8 – 2-7.
பேதுறுவனே – கலங்காநின்றேன். திருவாய். 9 -4 – 3.
பேயரே – பைத்தியக்காரர்களே. பெருமாள்.3 – 8.
பேர் – திருப்பேர். பெரியாழ். 2 – 5 – 1; 2 – 6-2.
2595 பேரகத்தாய் – திருப்பேர்நகர். திருநெடுந் – 8; சிறிய திரும.70.
பேரீஞ்ஞூறு பெயர் ஆயிரம். இரண்டாந்திரு. 77.
பேரெழுதி – திருநாமத்தை எழுதி. நாச்சி. 1 – 2 – 3.
பேழ்வாய் – பெரியவாய். பெரிய. 2 – 3-8.
பைங்கூழ்கள் – பசுமையுடைய பயிர்கள். பெருமாள். 5-7.

2600 பைதல் – இளையது. திருவாய்.9 -5 – 6.
பைதல்காள் – குயிற்பிள்ளைகளே.திருவாய்.9-5 -8.
பொங்கத்தம் பொங்கோ – தோற்றவர் தோல்வியாலே
பறையடிக்க ஆடுவது தொருகூத்து.
பெரிய. 10-2-1-10.
பொங்கேழ் புகழ்கள் – பொங்கிக் கிளம்புகிற புகழ்கள்.
திருவாய். 8 – 10-4.
பொட்ட -சடக்கென . பெரியாழ். 3-5 – 1; 3-7-6.
2605 பொடியாடி பஸ்மதாரியானசிவன். பெரிய திரும. – 71.
100
பொத்த -துவாரப்படுத்திய. பெரியாழ். 1 – 9-7.
பொத-துளைத்த. திருச்சந்.73; பெரிய திருவந். 22.
பொதியறை – காற்றோட்டமில்லாத கீழறை. பெரிய. 10 – 7-4.
பொதுக்கோ-பொதுக்கென – சடக்கென. பெரியாழ். 2 – 5-4.
2610 பொது நாயகம் – சர்வ நிர்வாககத்துவம். பெரியாழ். 4 -9 – 4.
பொதும்பிடை பொந்துகளின் நடுவே.பெரிய. 4 – 10-2.
பொதும்பு – சோலை. நாச்சி -5 – 1.
பொய்கைப் பிரான் – பொய்கையாழ்வார். இராமாநுஜ – 8.
பொய்ச்சரம் காட்டுதல் – பொய்யாக அஞ்சினவன் போல்
நடித்தல். பெருமாள். 6 – 8.
பொய்ச்சுற்றம் – மனப்பூர்வமாக இன்றி உறவு முறை
கொண்டாடுதல். பெரியாழ். 5 – 3-4.
2615 பொய்ச்சூது – க்ருத்ரிமமான சூது. பெரியாழ். 2 – 1-1.
பொய்ந்நிலம் – தரை காண ஒண்ணாத சோறு.திருவிரு 100. பொய்ந்நூலை பிறமத நூல்களை. பெரிய. 2-5-2.
பொய்மொழி – பொய்யுரை. பெரிய. 6 -6 – 10.
2620 பொய்யறைவாய் – கிருத்ரிமமாகச் செய்யப்பட்ட நிலவறை.
பெரிய. 2-5-5.
பொய்யாதா – சாத்தியவாதிகள் நாக்கு. பெரிய. 5 -1 -5.
பொரி முகந்து அட்ட- நெற்பொரியை எடுத்துச் சேர்க்க.
(லாஜஹோமம்) நாச்சி. 6 -9. பொருட்டாயம் பொருள் தாயம் பொருட்பங்கு.
பெரியாழ். 3 – 1 – 7.
பொருதவனார் பொருதவன். நாச்சி – 8 – 8.
2625 பொருநல் தாமிரபரணி. திருவாய். 6 – 7-8.9-2 – 11. பொருநற்சங்கு திருப்பொருநலில் சங்குகள். திருவாய்-10-3 – 11.

பொருளின்பமென – பெரிய. 6- 2 – 1. திருவிருத். 73.
பொலிக பொலிக பொலிக – சாந்தி. சாந்தி. சாந்தி.
திருவாய். 5 – 2 – 1.
பொழிலேழும் – ஏழு உலகங்களையும். திருவாய். 1 – 4 – 5.
2630 பொள்ளை – துளை, பெரிய. 5 – 1 – 2.
பொள்ளை கரத்த போதகம் – துளைக்கையையுடைய
கஜேந்திரன். பெரிய. 5 – 1 – 2.
பொற்சுரிகை – பொன்னால் செய்த உடைவாள்.
பெரியாழ். 1 -3 -8.
பொற்றாமரை – குடந்தையில் உள்ள புண்ணிய நீரையுடைய
புஷ்கரிணி. திருநெடுஞ். 19.
பொற்றை – மலைக்கும், யானைகள் பலதிரிகின்ற காட்டுக்கும்
பெயர். திருச்சந் .52.
2635 பொன் பெயரோன் – இரணியன். பெரிய. 1 – 7-4, 3-3-8,
4-2-7,7 – 3 – 9, மூன்றாந்திரு. 23
பொன்பெற்றார் – வசிட்டர் முதலிய ஆசிரியர்கள்.
பெருமாள்.9 – 8.
பொன்முடியன் – அழகிய திருமுடியையுடையவன்.
திருவாய். 3 – 7 – 4.
பொன்மேனி – அழகிய சரீரம். மூன்றாந்திரு 1.
பொன்வட்டில் – தங்கக்கிண்ணம். பெருமாள். 4 – 3
2640பொன்வயிறு -அழகிய வயிறு. பெரிய. 1 – 8 – 6
பொன்னன் – இரணியாசுரன். பெரிய. 3 – 4 – 4.
பொன்னி – காவிரி. பெரிய. 3 -8 – 3.4 – 6 – 1.
பொன்னித் தென்பால் – காவிரியின் தென்கரையில்.
திருவாய். 10-8-1.
பொன்னி நாடன் – காவிரியையுடைய
பெரிய. 6-5 – 7.
நாட்டுக்குத் தலைவன்.
2645 பொன்னூலினன் – அழகிய யக்ஞோபவீதத்தையுடையவன்.
திருவாய். 3-7-4.
பொன்னை – தங்கம். பெரிய. 5 – 4 – 5
போக்கு-போக்கிலே.திருவாய்.10 – 3 – 1.
போக மூழ்கி- போகத்திலீடுபட்டு. திருவாய். 6 – 1 – 4.
போகலொட்டேன். போகவொட்டேன். பெரிய. 7 – 2-5
2650போகு – போவாய். பெருமாள். 6 – 7, 9 – 4,
திருவாய். 6-2-7.

போகே என்று- போய்ச்சேர் என்று அறிவித்து.
நாச்சி. 12 – 6, பெரியாழ். 3 – 9 -4.
போட்கன் – முறைகேடன். வெட்கம் கெட்டவன்.
நாச்சி.13 6, திருமா. 33.
போத்தந்த – வரவிட்ட பெரியாழ். 1 – 2- 1, 1 – 3-4,
போத – போதுக. பெரிய. 3 – 7 – 1.
7,8.
2655 போதர்கண்டாய் – விரைந்து ஓடிவா. பெரியாழ். 2 -9-6.
போதரேன் – வரமாட்டேன். பெரியாழ். 2 – 9 – 6.
போதியார் – பௌத்தர்கள். பெரிய. 9 – 7-9.
போதியும் – அரசமரத்தையும். பெரிய. 2 -1 – 5.
போதொடு நீரேந்தி – மலரோடு தீர்த்தத்தையும் எடுத்துக்
102
கொண்டு.முதல்திருவந்.43. (தே,) 4 -3-1. ஐயாறு.
2660 போய்ப்பாடுடைய – மிகவும் இடமுடையன, மிகவும்
புகழுடையன திருப்பா. 26.
போயினாலறையோ. விட்டுப்போக நினைத்தாய் ஆகில்
அறையோ அறை.அறையோ – முறையிடும்
சொல். அறையோவிதறிவரிதே
திருவிருத்10
ஜய சந்தோஷங்களைப்பற்றி வரும் குறிப்புச் சொல்.
போர்க்கதவம் – இரட்டைக்கதவு. முதல் திருவந்.4.
போரவிடாய் – தந்தருள வேண்டும். நாச்சி. 3-7.
போரவைத்தாய் – மிகவும் இட்டுவைத்தாய். திருவாய். 5-1-5.
2665 போருங்கொல் – மீண்டுவருவாளோ. திருவ. 6-7-2.
போல்- அசை.பெரிய. 5 – 2 – 1-9.
போழ்க்கனேன் – முறைகேடனான அடியேன். திருமா. 33.
(தே .) ‘போழம்பலபேசி’ 1-45-11. ஆலங்காடு.
பெளவம்-கடல். பெரிய 5 – 5-9,7-7-2.
பெளழியன்- ரிக்வேதி.பெரிய, 5 – 5 – 9, 7 – 7-2.
2670 மக்கள் பெறாத மலடன் – பிள்ளை பெறாதவன்.
பெரியாழ். 1 -4 -4.
மக்கள் வயது நூறு மக்களுக்குவேத சாத்திரப்படி விதிக்கப்
பட்ட வயது நூறு. திருமா. 3.
மக்கள் அறுவர் – கண்ணனுக்கு முன் பிறந்த ஆறுபிள்ளைகள் . பெரியாழ். 5 – 3 – 1.
மகள் பேசுதல் – மணமகளாகச் சொல்லி. நாச்சி. 6 – 3. மகரக்குழை சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட
காதணி. பெரிய திரும. 39.

2675 மகன்றில்காள் – ஆண் அன்றில்களே (அன்றில் – கிரவுஞ்ச
பட்சி) திருவாய்.1 – 4-4.
மகிழ்மாலை மகிழம்பூமாலை. திருவாய். 4-10-11.
மங்கைகுலவேந்தன் – திருமங்கை நாட்டுக்குத் தலைவன். பெரிய. 6-6 – 10.
மங்கைதன் பங்கன் -சிவபெருமான். பெரிய. 7 -10 – 3.
மங்கையர் கோன் – திருமங்கையாழ்வார்.பெரிய தனியன். 1, 3.
மங்கை வேந்தன் பரகாலன் – திருமங்கையாழ்வார். பெரிய. 7-5-10.
2680 மச்சணி மாடங்கள் -மேல்தளத்தை அலங்காரமாகவுடைய
மாடங்கள். திருவாய். 5-9-4.
மச்சணி மாடம்-மேல் தளம். நாச்சி. 11-4.
மச்சாவதாரம் – அசுரர் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டு
அருளினதும் மச்சாவதாரம். பெரிய. 11-4-1.
மச்சொடு மாளிகை -மேல் மாடம். பெரியாழ். 2-7-3.
மசுமையிலி- இலச்சையில்லாதவனே.நாச்சி. 3-9.
மஞ்சரி – தோரணம். பெரிய திரும. -26.
2685 மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் வாசிகை மாலை
பெரியாழ். 2-4-4.
மஞ்சளும் மேனியும் – பற்று மஞ்சள் மயமான சரீரம்.
பெரியாழ். 3-4-3
மஞ்சனம் – நீராட்டம். பெரியாழ்வார். 2-4-3, 6-7-9-10.
மஞ்சு- மேகம், அழகு, ஆபரணம். பெரிய. 1-1-10.
மட்டித்து – வீசி. நாச்சி -6-10, பெரிய திரும -68.
தே 4-53-10. ஆரூர்.
2690 மட்டையர் – மொட்டையர். பெரிய. 2-1-6. தே. 2-34-10.
பழுவூர்.
மடநாகு – இளம்பசு. பெரிய. 7-1-1.
மடப்பாவையிடப்பால் கொண்டவன். திருநெடுந். 9.
மடல்- பனை முதலியவற்றின் ஏடு. சிறிய திரும. 78.
மடலூர்தல் – தான் விரும்பிய தலைவியை அடைய வேண்டி
பனை மடலால் செய்யப்பட்ட குதிரையின்
மீது தலைவன் ஏறி ஊர்தல் – திருவாய்.5-3-9, 10.
2695 மடவார் கேள்வன் – பெண்களுக்கு விரும்பத் தகுந்தவன்.
பெரிய. 6-10-10.
மண்கோட்டுக் கொண்டான் மலை – பூமியைப்
கோரப்பல்லின் மீது எடுத்துக் கொண்டு வந்த
பெருமானுடைய திருமலை. மூன்றாந்திரு. 45.

மண்டை- பிச்சைக்கலம். பெரியாழ். 1-8-9.
மண்டோதரி- இராவணன் மனைவி. பெரிய -10-2-8.
மண்டோதரி காதலன் – இராவணன். பெரிய. 5-4-5.
2700 மண்ணரசும் வேண்டேன் -இப்பூமியை அரசாளும்
ஆட்சியை யான் விரும்ப மாட்டேன். பெருமாள். 4-2.
மண்ணி-மண்ணியாறு. பெரிய. 4-10-4.
மண்ணியின் தென்பால் – மண்ணியாற்றின் தென்கரை.
பெரிய. 4-10-1.
மண்ணை – ஒரு படை வீடு, ஒரு நதி சிற்றூறு போல.
பெரிய. 2-9-3.
2705 மண்மதியிற் கொண்டுகந்தான் – பூமியை தனது புத்தி|
சாமர்த்தியத்தினால் மாவலியிடம் பெற்று
உவந்தான். மூன்றாந் திரு. 58.
104
மணத்தூண் திருமணத்தூண். அழகிய மணவாளன்
சந்நிதியில் கர்ப்பகிரகத்திற்குப் பக்கத்திலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திருமணத்தூண்” என்று பெயர். வடமொழியில் ஆமோதஸ்தம்பம் என்று வழங்கும். ஆமோதம் -மணம்.பெருமாள். 1-2.
மணவாளீர் – மணவாளப் பிள்ளாய். பெரிய. 10-8-7.
மணாட்டுப் புறம் திருமணமுறை. பெரியாழ். 3-8-4. மணிக்கதவம் – அழகிய கதவு.(அம் – சாரியை) திருப்பா-16.
2710 மணிமாடக் கோயில். பெரிய திரும. -132.
மணி மாடம் – திரு நறையூர். பெரிய. 6-6-1-10.
மணிமேகலை- நவமணிகள் பதித்த அரைஞாண். பெரியாழ். 3-2-3.
மணி வயிறு – அழகிய வயிறு. பெருமாள். 8-1.
மணை நீராட்டி – கட்டை (பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதிரோ) (பழமொழி) பெரிய. 11-6-6.
2715 மத்தகம் – சிரம். பெரியாழ். 4-5-2.
மத்தணி – வாச்சியம். திருப்பள்ளி. 9.
மத்த மலர் – மதமத்தம்பூ. நாச்சியார். 1-3.
மத்தளி – வாத்திய வகை. பெரியாழ்.3-4-1. மதலைத் தலை – தூண் மேலுள்ள சிறுதூண். பெரிய – 3-8-2.
2720 மதிக் கண்டாய்- புத்தி பண்ணிகிடாய். இரண்டாந்திரு.51. மதி கோள் விடுத்தல் – சந்திரனுடைய துன்பத்தைப் போக்கி
அருளுதல். நான்முகன்திரு. 12.

மதிகோள்விடுத்து – யம். பெரிய -8-3-3.
மதுகரம் -வண்டு. பெரிய. 8-7-4.
மது கைடவர்கள் – திருமாலின் நாபிகமலத்தில் இரண்டு
நீர்த்துளிகள் இருந்தன. அவற்றைத் திருமால்
நோக்க இரண்டு அசுரர்கள் ஆயினர். இவர்கள்
ஹயக்ரீவரால் கொல்லப்பட்டனர். பெரிய. 10-6-3.
2725 மதுசூதன் – திருமால். பெரிய. 5-5-6; திருவாய். 2-1-5, 10-4-7.
மதுரையார் மன்னன் – கண்ணன். நாச்சியார். 6-5.
மந்தக் கோவை -செவ்வியழியாத தொடையல்.திருவாய். 9-9-8.
மந்த முழவு ஓசை -வாத்தியங்களின் மந்தமான ஓசையை
பெரிய -5-10-7.
மந்திரக் கோடியுடுத்தி – நிச்சயதார்த்தச் சீலையை
அணிவித்து. நாச்சியார். 6-3.
2730 மந்திரப் படுதல் – மந்திரத்தால் கட்டுப்படுதல். திருப்பா -9.
மயக்கு – மயக்கத்தைச் செய்யும் பொருட்கள். முதல் திரு. 7.
மயர்வறுத்தேனே – அஞ்ஞானத்தை அறுத்தேன்.
திருவாய் 1-7-3.
2735
மயிர்க் கூச்சு – புளகம். பெரியாழ். 5-3-5.
மயிரும் முடி கூடிற்றில மயிரும் சேர்த்து முடிக்கும்படி
கூடவில்லை. பெரியாழ் -3-7-2.
மரக்காற் கூத்து – மரத்தைக் காலிலே கட்டிக் கொண்டு
ஆடுவதொரு கூத்து. பெரிய -11-5-6.
மரங்கள் போல் வலிய வஞ்ச நெஞ்சனேன் – மரங்களைப்
போலக் கடினமான நெஞ்சையுடையனாய்
வஞ்சனையே தொழிலாகவுடையவனாம். திருமா. 27.
மரவடியைத் தம்பிக்கு – பாதுகைகளைப் பரதனுக்குக்
கொடுத்து. பெரியாழ். 4-9-1.
மருத்துவப் பதம் – வைத்தியம் செய்யும் மருந்தின் பக்குவம்.
பெரியாழ்-3-7-10
மருத்துவன் சுடினும்- வைத்தியன் சூடு போட்டாலும்.
5-4. பெரிய. 9-4-3
மருதஞ்சாய்த்தது – இரட்டை மருதமரங்களை முறித்துத்
தள்ளினது. மூன்றாந்திரு. 51
2740 மருதர் மருத கணங்களான நாற்பத்தொன்பதின்மர்.
திருவாய் – 10-9-7; திருப்பள்ளி – 6, தே. 2-110-6
மாந்துறை, 7-50-2 புனவாயில்.
மருதரும் வசுக்களும் – மருத்கணங்கள் ஒன்பதின்மரும்.

அட்டவசுக்களும். திருப்பள்ளி -6.
மருந்தம் – மருந்து. திருவாய் -3-4-5.
மருமகன் சந்ததியை உயிர்மீட்டது -அபிமன்யுவினுடைய
புத்திரனான பரிக்ஷித்தை மறுபடியும்
பிழைப்பித்தது. பெரியாழ் -4-8-3.
மருவலர் – பகைவர். பெரிய -3-9-10.
2745 மருள் பாடுதல் – மயங்கும்படி ஒருவகைப் பாட்டைப்
பாடுதல். நாச்சியார். 9-8.
மல்லிகை வெண் சங்கூதும் – மல்லிகைப் பூவாகிய
வெண்மையான சங்கை ஊதும். பெரியாழ். 4-8-8.
மல்லி நாடி – திருமல்லி நாட்டை ஆண்டவள். நாச்சியார்
தனியன்.
மல்லை – திருக்கடல் மல்லை. திருநெடுந் -9, திருக்குறுந் -19.
மல்லைச் செல்வம்-தனக்கு மேலில்லாத செல்வம்.
திருவாய். 8-9-8.
2750 மல்லை மாநகர் – செல்வம் நிறைந்த பெரிய நகரமாகிய
வடமதுரை. பெருமாள்-7-11.
மல்லை மா முந்நீர் செல்வம் நிறைந்த பெரிய கடல்.
பெரிய. 4-3-6, 4-8-4, 8-6-4.
மல்லையர்கோன் – மல்லாபுரி என்னும் திருக்கடல்
மல்லையுள்ளார்க்குத் தலைவன். பெரிய. 2-9-1.
மலக்க மெய்த – கலங்கும்படி. திருவாய். 8-3-10.
2755 மலக்கு நாவுடையேற்கு – மிகு களிப்பாலே சுழலப்
பண்ணுகிற. திருவாய் -6-4-9.
மலங்க – அழிய. பெரிய -5-7-8.
மலடன் – மகப் பெறாதவன். பெரியாழ் -1-4-4.
மலரெட்டுமிட்டு- கருமுகை, கற்பகம், சௌகந்தி,
செங்கழுநீர், தாமரை, கைதை – பெரிய. 3-5-6. தே. 5-54-1. 10,
அதிகை வீரட்டம்; 4-18-8 – விடந்தீர்த்த பதிகம்.
மலினம் – தோஷம், குற்றம். திருவாய் -5-1-4.
2760 மலைத்த – தகையப்பட்ட. பெரிய -1-7-2.
மலைப் பண்டம் – மலையில் விளையக் கூடிய பல பொருள் பெரிய -3-8-3.
மலையரசன் – மலையமான். திருநெடுந் -7. மலையில் மிளிர்ந்து மின்னும் – பெரிய மலையின்
கொடுமுடியில் விளங்குகின்ற. பெரியாழ். 5-4-10. மலையேழும் – சப்தகுலாசலம். இரண்டாந்திரு -49.

2765மழலை – இளமை. திருவாய் -5-8-11.
மழறு – இனிமை. திருவாய். 6-2-5.
மழுவாளி – சிவபிரான், பரசுராமன். திருவாய். 9-3-10,
பெருமாள். 9-9.
மழுவேந்தி – பரசுராமன். திருநெடுந். 7.
மழைக் கண்ணி – நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற
கண்களையுடையவள். பெரிய. 2-7-8.
2770மழையே மழையே – ஓ மேகமே. நாச்சியார் -10-8.
மற்கடம் – குரங்கு. பெரிய -5-8-2.
மற்றிண்டோண் – மல்யுத்தத்தில் வலிமையான, தோள்கள்.
திருவாய். 10-4-11.
மறந்த காலத்தும் – மழை பெய்யாமல் போனாலும்.
பெருமாள். 5-7.
மறியோடுதல் – கன்றுகளைத் திருப்புவதற்காக முன்னே
ஓடுதல். பெரியாழ் -3-3-6.
2775 மறுக்கம் – மனக்கலக்கம். பெரியாழ். 3-3-6.
மறுக்கேலே – கலங்கப் பண்ணாதே. திருவாய். 4-9-5.
மறுகாலின்றி – மறுதரமின்றியே. திருவாய். 6-9-10.
மறையாளன் – அந்தணன். பெரிய- 5-8-5.
மறைவலார் – வேதத்தை நன்கு கற்றவர்கள். பெரிய -9-7-10.
278 மறை வாணர்கள் – அந்தணர்கள். திருவாய் -10-8-10.
மன்றது பொலியத்திருமால். பெரிய. 4-3-8.
மன்றாடிகள் – இரந்து கேட்டல். பெரியாழ். 4-5-7.
மன்றில் – நாற்சந்தி. பெரியாழ் -2-8-2.
மன்றில் தூற்றல் வெளியில் அயலாரை விட்டுத் தூற்றுதல்.
திருவிருத் 41.
2785 மன்றிலார புகழ் மங்கை – நாற்சந்தியிலும் பரவிய
புகழையுடைய வரும் திருமங்கை
நாட்டையுடையவர். பெரிய. 11-1-10.
மன்றில் குரவை – நாற்சந்தியில் கைகோத்துக் குரவை
கூத்தாடுதல். பெரிய. 11-2-1.
மன்று- வெளிநிலம். பெரிய. 9-6-4.
மன்று – நாங்கூர்ச் செம்பொன் கோயில். பெரிய. 4-3-8.
மன்னர் குருதி கொண்டு – அரசர்களின் இரத்தத்தாலே
பெரிய. 3-4-5.
2700மனக் குற்ற மாந்தர் – கெட்ட இதயத்தையுடைய மனிதர்.
இராமாநுஜ-5.

மனிசப் பிறவி -மானிடப்பிறவி. பெரிய -1-10-6.
மனிசர் – மனிதர். பெருமாள் 1-10; திருமா-32, நான்முகந்திரு. 38.
மனிசர்க்கா – மனிதர்க்காக. திருவாய். 1-5-8.
2795 மனு குலத்தார் – மநு வம்சத்தில் பிறந்த அரசர்கள்.
பெருமாள்.9-10.
மாக்கோல் – குதிரையை நடத்துகிற கோல். திருவாய். 3-2-3.
மாகம்- பெரிய ஆகாயம். பெரிய. 9-10-5.
மாகாயமாய் நின்றமால் – திரிவிக்கிரமனாய் நின்ற திருமால்.
மூன்றாந்திரு.13.
மாசதிரிது பெற்று- மா சதிர் இது திருவாய் -2-7-1.
2800மாசுடம்பின் வல்லமணர் – அழுக்குப் படிந்த
உடம்பையுடையவராய் வலியவந்து வாது
செய்பவர்களான சைனர்கள். பெரிய 7-4-5.
மாகுணாதோ – அழுக்கடையாதோ,திருவாய். 1 -5-2.
மாசூணும் – அழுக்கடையச் செய்யும். முதல் திருவந்.82.
மாடக் கவாடம் – சந்நிதியின் திருக்காப்பு. பெரிய திரும,73.
மாடக் கோயில்- மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக்
கோச்செங்கணான் கட்டிய கோயில். பெரிய திரும. 132,133.
2805 மாடத்துச்சி மிசைச் சூலம் – மாளிகைகளின் முடிமேலே
இருக்கிற சூலங்கள். பெரிய. 3-9-4
மாட நெற்றி மாளிகைகளின் முகங்கள். பெரிய. 3 – 8-2.
மாடு- செல்வம். பெரியாழ் -3-7-9. பெரிய திருவந் – 58.
மாண்- அழகு, மாணி. பெரிய -7-4-10, எழுகூற்றிருக்கை8,
திருவாய்-1-4-3, 1-8-6, 8-4-4.
மாணிக்கப் பண்டாரம் – மாணிக்க நிதிபோல் இனியவன்.
பெரிய – 5-2-5.
2810மாணிக்க மொட்டு – இந்திர நீலமயமான அரும்பு.
பெரியாழ் -1-9-1.
மாணுருவாய் வாமன ரூபி. பெரிய. 2-9-7.
மாத்தடுப்ப – பசுக்களை வெளியே போகாதபடி தடுப்ப.
பெரியாழ். 3-5-2.
மாத்தமர் பாகன் – யானைப்பாகன். பெரிய -4-6-7
மாதர்க்காய் – சத்தியபாமைக்காக. பெரிய. 6 – 8 – 7
2815 மாதாபிது – தாய் தந்தை. பெரிய திருவந். 70
மாதாவினைப் பிதுவை – தாய் போன்றவனும், தந்தை போன்றவனும். திருவிருத். 95.

மாதுளம் பூ- அணிவகை. பெரியாழ். 1-3-2, 1-5-10.
மாந்தேர் – மாத்தேர். பெரிய 1-5-2.
மாமணி மண்டபம் – மாணிக்க மண்டபம். திருவாய் 10-9-11.
2820 மா மருந்தம் – மருந்து. திருவாய். 3-4-5.
மாமழை மொக்குள் பெருமழைக் குமிழி. திருவாய். 4-1-6.
மாமான் மகளே- அம்மான் பெண்ணே. திருப்பா– 9
“மாமான்” சீவக. 484.
மாமி தன் மகனாப் பெறுதல். நாச்சியார். 2-1.
மாமீர் – அம்மாமீர் திருப்பா. 9.
2825 மாமுனி கொணர்ந்த கங்கை. பெரிய -1-4-8.
மாமை- நிறம். திருவாய். 7-3-4.
மாயக்கவி – கிருத்திரிமக் கவி. திருவாய். 10-7-1.
மாய வலவை – கபடியான கட்டுவிச்சி. திருவாய். 4-6-4.
மாயிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலை மலை. திருக்குறுந். 3.
2830 மார்க்கண்டன் – மிருகண்டு முனிவரின புத்திரன். நான்முகன்
திரு-15.
மார்வனை ஆர்வத்தால் மார்வம் – மார்பு. பெரிய. 11-7-4.
தே -2-113-3 சீகாழி.
மாரதர் – பெரிய தேர் வீரர். திருச்சந்த .89, பெரிய -2-1-2.
மாரன் – மன்மதன். இரண்டாந்திரு -23.
மாருதி – அனுமன். பெருமாள். 10-6.
2835 மாலபாதம் -எம்பெருமானுடைய திருவடிகள். திருச்சந்த.
மாலவன் – கரியன். பெரிய. 10-5-2.
மாலி -மாலி என்னும் அரக்கன். பெரிய. 2-10-4.
திருச்சந்த. 28. திருவாய் 9-2-6.
மாலிமான் – சுமாலி. திருச்சந்த. 28.
112.
2840 மாலிருஞ் சோலை – பெரிய. 2-7-7,9-2-8, 9-8-1-10,11-2-8
நாச்சியார் -4-1, சிறியதிரும. 74, பெரிய திரும. 125,
திருவாய் -2-10-1-10, பெரியாழ் -3-4-5.
மாவரும் திண்படை (மா – குதிரை) பெரிய -3-4-5.
மாவலவன் – ஆடலமாவென்னும் குதிரையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய. 10-2-10.
மாவலி – அசுரசக்கரவர்த்தி, பிரகலாதன் பேரன்
மூன்றாந்திரு – 18, முதல் திருவந். 50, சிறிய திரும. 46,
நாச்சியார் -4-93 8-6, பெரிய -1-5-6, 4-10-7,7-8-6, 8-8-5, 10-6-4,
11-5-10, 11-7-2, இரண்டாந்திரு.89, பெரியதிரும- 108,

திருவாய், 3-8-9.
மாழாந்து- ஒளி மழுங்கி. திருவாய். 2-1-6.
110
2845 மாற்றாண்மை- பகைத் தன்மையை யாளுகை. திருவாய். 2-1-7.
மாற்றரசர் – பகைவரான துரியோதனன் முதலிய அரசர்கள்.
பெரிய. 4-4-1.
மாற்றிலி பிரதி உபகாரத்தை விரும்பாமல் உதவி செய்தல்.
பெரியாழ் – 4-4-10.
மாற்றிலிசோறிடுதல் – உதவியை எதிர்பார்க்காமல்
விருந்தினர்களுக்கு அன்னம் அளித்தல். பெரியாழ். 4-4-10.
மாற்றுத்தாய் – சுமித்திரை. பெரியாழ்-3-9-4.
2850 மாறன் – நம்மாழ்வார். இராமாநுஜ. 19. திருவாய் -4-10-11.
மாறன் பசுந்தமிழ் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்
மொழி. இராமாநு – 64.
மாறன் பணித்த மறை நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதம்.
இராமாநு -46.
மாறனடி பணிந்துய்ந்தவன் – நம்மாழ்வாருடைய திருவடிகளைப்
பணிந்து உஜ்ஜீவித்த இராமாநுஜர். இராமாநுஜ-1.
மான் கொண்டதோல் – கிருஷ்ணாஜினம். பெரிய -6-8-1.
2855 மானம்- பெருமை. பெரிய -4-10-10.
மானவேற் கலியன் – சிறந்த வேற்படையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய -4-10-10, 9-1-10.
மானிடம் பாடல் என்னாவது – மனிதர்களைப் பாடுதலால்
என்ன பயன். திருவாய். 3-9-3.
மானிடம் பாட வந்த கவியேனல்லேன். திருவாய்.3-10-9.
மானிடம் பாடேன் – மனிதர்களைப் பாடமாட்டேன்.
நான்முகன் திருவந் – 75
2860 மிடுக்கு – சத்தி. பெரியாழ். 1-1-9, (தே) 7-17-10 நாவலூர்.
மிண்டர்- மூர்க்கர். திருமா -14. தே. 1-133-10. கச்சியே
கம்பம் 2.104.10. கடிக்குளம்.
மிண்டுதல் செறிதல். பெரிய -4-10-2.
மிலைக்க – கனைக்க. திருவிருத் – 94.
மிழற்றுதல் . இன்சொல்கூறல், சேஷ்டிதங்களைச் செய்தல், பெரியாழ். 4-5-9.
2865 மிளிர்ந்து பாய்ந்து. திருவிருத் -14.
மிளை – சிலுபுதல். பெரிய, 8-7-3. மிறை- மிடுக்குக்கள். நாச்சியார். 10-7.

மிறைத்து மேடாணித்து. பெரிய – 3-4-10.
மினுங்கநின்று -விளங்கும்படி நின்று. நாச்சியார். 14-2.
2870 மீட்சி – திரும்பி வருதல்.
2875
மீதியன் – மேற்பட்டவன்
மீமீதாடாவுலகத்து- மேலே செல்லாத உலகத்தில்.
நாச்சியார். 13-7.
முக்கட்பிரான் – சிவபெருமான். திருவாய். 7-6-1.
முக்கணம்மான் – சிவபெருமான். திருவாய் 10-7-7.
முக்கி- பெரிதும் வருந்தி. பெரிய திருவந். 69
முகத்துச் சுட்டி சுட்டி – நெற்றியணி. பெரியாழ். 1-4-1.
முகப்படாயெனனும் எதிர்ப்படாதிருக்கிறாய். திருவாய் -7-2-2.
முகப்பு – முன்பு. இரண்டாந்திரு -50, பெரிய – 10-6-10.
முகப்பே- முன்னே. பெரிய.4-8-4, 10-2-4, பெரியாழ். 4-1-8,
இரண்டாந்திரு. 69, திருவாய் -4-7-4, 6-3-11, 8-5-9, 9-2-8.
முகப்பே கூவி – சந்நிதி. திருவாய். 8-5-7.
2880 முசுக்கணங்கள் – முசு என்ற சாதிக் குரங்குகளின்
கூட்டங்கள். பெரியாழ் – 3-5-9.
முடித்தன்றே- நிறைவேற்றிக் கொண்டது அன்றே.
இரண்டாந்திரு. 22.
முடிவட்டம் – திருவபிஷேகம். மூன்றாந்திரு. 13
முண்டம் – சுபாவம். பெரியாழ். 1-8-9, பெரிய – 3-9-3, 5-1-8.
முண்டர் – சைவர். திருமா- 8.
2885 முத்கலன் – ஒரு புண்ணிய புருஷன்.
முத்தப்பன்- முத்துப் பால போக்கியன்.திருவாய். 6-3-9.
முத்தம் – அதரம். பெரியாழ். 3-3-2.
முத்தி வளர்த்து மோந்து. பெரிய – 10-7-12.
முத்திறத்து நீர் – கடல், திருச்சந்த – 82.
2890 முத்திறத்து வாணியத்து -சாத்விக, ராஜஸ, தாமசங்களான
பலன்கள், திருச்சந்த – 68.
முத்தின் குப்பாயம் – முத்தினாலான போர்வை.
நாச்சியார். 14-4.
முத்தின் கோடாலம் முத்தாலே தொடுக்கப்பெற்ற
வளைவான மாலை (ஆரம்- ஆம் ) பெரியாழ் -3-3-1.
முத்தீயர் – கார்கபத்தியம், ஆகவனீயம்,
தக்கிணாக் நிகளையுடையவர். பெரிய – 3-8-4
முத்தீ நான்மறை- முத்தீ-கார்கபத்தியம்,

ஆகவனீயம், தக்ககிணாக்கிநி, நான்மறை- ருக், யசுஸ்,
சாமம், அதர்வணம், எழுகூற் -13-14.
முத்தோ- சந்தோஷமோ. பெரிய திருவந். 27.
2895 முதல் – பாக்கியம். நாச்சியார். 10-7.
முதலையின் பல்விடம் – முதலையினுடைய பல் விஷம்.
திருப்பள்ளி. 2.
முதுகத்திடை – முதுகின்மேல். பெரியாழ். 4-4-5.
முதுகயம் – கடல். பெரிய – 8-5-6.
முது புணர்ப்பு – பழைய நிலைமை. நான்முகந்திரு. 54.
2900 முந்நீர் ஞாலம் – ஆற்றுநீர், ஊற்று நீர்,மழை நீர்
திருவாய். 3-2-1.
முந்தை- முற்பட்டவர். திருவாய் -3-3-2.
முப்பத்து முவரமரர் – முப்பத்து முக்கோடி தேவர்.
திருப்பா.20.
முப்புரி நூல் -பூணூல். பெரிய – 6-5-7.
மும்மதப்புனல் இருகபோலமும் மேட்ரமுமாகிற
மூன்றினின்றும் வடியும் மத ஐலம். பெரியாழ். 1-7-1.
2905 மும்மூர்த்தியுருவானவர்-திருமால். திருவாய் -7-6-3.
முயல் விட்டுக் காக்கை பின் போவதே. சிறியதிரும. 8,
தே 4-5-2. ஆரூர். பழமொழி
முயற்றி – உற்சாகம். பெரிய 1-8-5.
முயற்றியவாய் – முயற்சியையுடையவாய். பெரியதிருவந்.85.
முரன் – நரகாசுரன் மந்திரி. திருச்சந்த, 59, 104, மூன்றாந்திரு, 78, பெரியாழ். 1-5-4.
2910 முரி சுரியேறு பெரிய சுழித்தலையுடைய. மூன்றாந்திரு. 49. முல்லைப் பிராட்டி- முல்லைக் கொடி, பெண்பிள்ளை. பெரிய.5-2-7.
முழுவி -முத்தம். நாச்சியார். 13-5.
முழு சிவண்டாடிய துழாய்- வண்டு முழுசி ஆடிய துழாய். வண்டுகள் தேனிலே முழுகிக் கூத்தாடிய துளசி. பெரிய. -2-8-7.
முழுசுதல்- முழுகுதல், பெரிய. 2-8-7; 8-7-6. பெருமாள். 9-6.
2915 முழுவுதல் – முத்தமிடுதல். (திருக்கோவையார். 227.) முள் முளரிக் கூடு -தாமரைத் தண்டால் செய்த கூடு. பெரியதிரு. -84. முள்ளிச் செழுமலரோர் தூரான் – திருமங்கையாழ்வார்.

முளரிக் குரம்பை – தாமரையிலைகளையும், பூக்களையும்
கொண்டு வந்த செய்த கூடு. திருவிருத் -83.
முளரிக் கூட்டகம் – தாமரைப் பூவாலும், தண்டினாலும்
செய்யப்பட்ட கூடு. பெரிய – 11-1-6.
2920 முளிந்தீந்த வெங்கடம் – உலர்ந்து தீய்ந்து போன கொடிய
பாலைவனம். பெரிய -6-3-8.
முளையட்டி – திருமணத்தின் அங்கமாக நவதானியங்களைக்
கொண்டு பலிகை வைத்தல். பெரியாழ் -3-3-9.
முற்கலன் – ஓரடியான். விஷ்ணு தர்மத்தில் கண்டது இந்த
உபாக்கியானம்.திருமா. 12.
முற்றமூத்து – மிகவும் கிழத்தனத்தை அடைந்து. பெரிய -1-3-1.
முற்றல் யானை – குவலயாபீடம் என்னும் யானை.
திருச்சந்- 52.
2925 முற்றாவுருவாகி – முதிராத வடிவையுடையையாகி.
திருவாய். 8-3-4.
முற்றில் – சிறு முறம். பெரியாழ் -3-7-1, 1-2-19.
முற்றும் – முற்றுதும் என்பதன் குறுக்கல். தன்மைப் பன்மை
வினைமுற்று. பெரியாழ். 2 – 10 – 1-9.
முன்றிலெழுந்த முருங்கையிற்றோனாம். (பழமொழி)}
பெரிய. 10-9-2.
முன்றிற் பெண்ணை-வாயில். பெரிய. 11-2-1.
2930 முன்னல் – முன்னர். பெரியாழ் – 1 – 7 – 5.
முன்னுரை – பாரதம். பெரியதிரும. 59.
முனி – திருமால். திருவாய். 10 – 10 – 1.
முனிவர் வேங்கையின் அணார் சொறிதல் – பெரியாழ் -3-5-8.
முனைவன் – முக்கியமானவன், தலைவன்.
2935 மூக்கின்று – மூக்கின்றது. பெரிய திரும. 92
மூக்குறிஞ்சி – மூக்கை உறிஞ்சிக் கொண்டு. பெரியாழ். 2-2-2.
இராமாநுஜ தனியன்.
மூடநெய்- பால்சோறு மறையும்படி நெய் ஊற்றி. திருப்பா. 27
மூத்தவை – பெரிய அவை. பெரியாழ். 1 – 9-8.
மூத்திரப் பிள்ளை – அசுத்தனான பிள்ளை. பெரியாழ். 4-6-9.
3940 மூதறியும் அம்மனைமார் – பழம்பாடல்கள் தெரிந்த
பாட்டிமார்கள். சிறிய திரும. 19.
மூதுரை – பழமொழி. பெரியாழ். 3-7-4.
மூதுவர் – முற்பட்டவர். திருவிருத்2

மூப்புப்பற்றிய பதிகம். பெரிய. 6 -4 – 1 – 10.
மரி – மிடுக்கு. பெரிய. 6 – 3 – 8. மூலமாகிய ஒற்றையெழுத்து – ஓம் என்ற பிரணவம்.
பெரியாழ். 4-5-4.
மூவாயிர நான்மறையாளர் – தில்லை வாழ் அந்தணர்கள்.
பெரியாழ். 3-2-8.
மூவுருவும் – அரி, அயன், அரன். நெடுந்தாண்டகம். 2.
மூவெழுகால் -இருபத்தோரு படிகள். இராமாநுஜ 56.
பெரிய. 5-3-1, 6-7-2-8-8-6-9-1-6.
மூழ்க்கச்சூழ்ந்து- அறிவையழுத்த. திருவாய். 10-3-2.
2950 மூழ்த்த நாள் – பிரளய காலம் .பெரிய 6 – 8-2.
மூழை- அகப்பை.பெரியாழ் – 3-7-4.
மூன்று என்ற எண்ணுள்ளபொருள்கள் . திருச்சந். 2, 4, 77.
மூன்று தண்டர் – துறவிகள். திருச்சந்த – 52.
மூன்று நாட்டரசராகவும் கூறப்படுதல்,பெருமாள். 2 – 10.
114
2955 மூன்றெழுத்துடைய பேர் – கோவிந்தன் என்ற பெயர், திருமா. 4. மூன்றேழுத்துள்ள மந்திரங்கள் – ஓம் என்னும் விரணம்.
பெரியார் 4 – 7 – 10.
மெச்ச ஊது – மெச்சூது. அகரம் – தொகுத்தல் விகாரம்.
பெரியாழ்2 – 1 – 1.
மெத்தை – படுக்கை. பெரியாழ். 5 – 1 -7. மெய்ஞ்ஞானம் – தத்துவ அறிவு. நான்முகன்திரு – 71.
2960 மெய்த்தன் – மெய்யே. திருச்சந்85.
மெய் நாவன் – உண்ைைம பேசுபவன். பெரியாழ். 4-9-11. மெய்ப்பிணக்கிடுதல் – உடல் சேர்க்கைசெய்தல்.
நாச்சியார். 2 -9. மெய்யடியார்கள் – உண்மையான அன்பையுடைய
பாகவதர்கள் பெருமாள். 2 – 1 – 10. மெய்யடியான் – உண்மையான தொண்டு செய்பவன்.
பெரியாழ். 4 -9 – 11
2965 மெய்யம் – இத்திருப்பதி திருமயம் இரயில் நிலையத்திலிருந்து
அரைகல் தொலைவில் உள்ள. பூசித்துப் பேறு பெற்றோர் – சத்திய தேவதையும். அனந்தனும். சயனத்திருக்கோலம். பெரிய. 2-5-8; 9-2-3; 10-1-5. மெய்ய மலையாளன் – மெய்யமலையை இருப்பிடமாகக்
கொண்டவன். பெரிய. 5 – 5 – 2; 11 – 7-5.
மேகக் குழாங்கள் மேகக் கூட்டங்கள். திருவாய். 9-5-7.

மேகின்ற – விரும்பித தழுவுகின்ற. திருவிருத் – 83.
மேகின்றாய்- மேவி நின்றாய். திருவாய் – 2 -6 – 10.
2970 மேம் பொருள் – ஜனங்கள் விரும்புகின்ற பொருள். (லௌகிக
பதார்த்தங்கள்) திருமா – 38.
மேய்க்கிய – மேய்க்க. திருவாய்.10 – 3-7.
மேய்க்கின்று – மேய்க்கும்பொழுது. திருவாய்- 10 -3 – 7.
மேல் தோன்றி – செங்காந்தள். நாச்சியார். 10 – 1.
மேலாப்பு – விதானம், மேற்கட்டி. நாச்சியார் – 8 – 1.
2975 மேலெழுந்ததோர் வாயு – ஊர்த்துவ உச்சுவாசம் (மேல்
4-5-4. மூச்சுக் காற்று பெரியாழ்
மேலெழப் பாய்ந்திட்டு – காளியன் என்னும் பாம்பின் தலை
மீது நின்று. பெரியாழ் – 2 – 10 – 3.
மேலையகம் – யசோதையின் வீட்டிற்கு மேலண்டை வீடு.
பெரியாழ் – 2 – 9 – 5, பெரிய. 10-7-2.
மேற்கிளைக் கொண்டிருமி – மேலான த்வனியோடு இருமல்
மேலிட்டு, பெரிய. 1 – 3 – 2.
மேன்மக்கள் – நித்திய சூரிகள். திருவாய். 4 -3 – 9.
2980 மேனகை – தேவலோகத்து மகளிருள் ஒருத்தி.
பெரியாழ்- 3 -6 -4.
மேனிக்குப் பூசுஞ் சாந்து – திருமேனிக்குப் பூசத் தகுந்த
பரிமள திரவியம் திருவாய் – 4-3-1.
மைத்த சோதி -மையின் தன்மைவாய்ந்த ஒளி.
பெரிய – 1 – 3 -6.
மைத்துனன்மார் – அத்தைபிள்ளைகள், பெரியாழ் -4-9-6.
மைதிலி- சீதை, பெரிய. 3 -1-8. பெருமாள். 8-4.
2985 மைந்தன் – கண்ணன். நாச்சியார் -5-1.
மைப்படி – கரிய திருமேனி. திருவிருத். -94.
மையன்மை – மயக்கம். பெரியாழ். 2-3-3, 3-1-4.
மையாக்கும் – மோகியர் நிற்பாள். திருவாய். 4-4-6, 7-2-3.
மொக்குள் – மொக்கல், நீர்க்குமிழி.
2990 மொட்டு- அரும்பு.
மொய்குழல் – நெருங்கிய கூந்தல்.
மொய்ம்பு – வலிமை.
மோக்கம் – மோட்சம். திருவாய். 3-4-7.
மோடி காளி. – திருச்சந். 53, இராமாநுஜ.22.

2995மோடு பருப்பார் – வயிறு பருப்பவர்கள். திருவாய். 3-5-7.
மோய் -தாய் . பெருமாள் -7-6, 9-9.
மோழை – குமிழி, நீர்ப்பெருக்கு, கீழாறு, துவாரம்.
பெரியாழ் 3-7-4, பெரிய -4-4-9, திருவாய் -7-4-1,
தே. 7-7-8. எதிர்கொள்பாடி
மௌவல்- மல்லிகையில் ஒருவகை.
யமுனைக்கரை – நாச்சியார். 12.
யமுனைத்துறைவன் ஆள வந்தார். இராமாநுஜ.21.
3000 யவர் -எவர். திருவாய் – 3-4-9-10.
யவரும்- எல்லாச் சேதனரும். திருவாய் – 2-2-6.
யாய் – தாய். பெரிய -10-5-8.
யார் முகப்பும்-எல்லார் முன்பும். இரண்டாந்திரு -50.
யாவகையுலகம் -எவ்வகைப்பட்ட உலகம். திருவாசி.
3005யோகம் – மருந்து. கண்ணுக்கு விஷயமாகிய வஸ்து.
நாச்சியார் -12-5.
-4-7.
116
யோகு செய்தல் – உலகைக் காப்பாற்ற உபாயஞ் செய்தல்.
திருவாய் -5-4-11; 7-8-4; தே -5-81-10 பாண்டிக் கொடுமுடி
வக்கரன் வாய்முன் கீண்ட – தந்தவக்ரனுடைய வாயைக்
கிழித்த. பெரிய. 5-9-5.
வக்கரனைக் கொன்றான் கண்ணன். மூன்றாந்திரு. 21.
தே 4-56-6. ஆவடுதுறை.
வகுக்கின்று – வகுப்பதாயிருக்க. திருவாய். 1-4-9.
3010 வங்கக் கடல் – கப்பல்களையுடைய திருப்பாற்கடல்.
திருப்பா- 30.
வங்கத்தின் கூம்பேறு பறவை – கப்பற்காகம். பெருமாள்.5-5.
வசவு- நிந்தனை. நாச்சியார் -12-8.
வசிட்டன் – இக்குவாகு வம்சத்துப் புரோகிதர். பெருமாள். 9-7.
வசுக்கள் – அஷ்ட வசுக்கள். திருச்சந். 6. திருவாய். 10-9-7. வசுதேவர் – இவர் சூரசேனன் என்பவனுடைய புதல்வர். இவரது மனைவி பெயர் தேவகி. திருமால் இவருக்கு மகனாகத் தோன்றினார். பெரிய -6-8-10. வட்கு – லஜ்ஜை. திருவாய் -7-2-3.
வட தடம் – வடக்குத்திக்கிலுள்ள திருப்பாற்கடல்.
பெரியாழ். 5-4-10.
வடபுலக் கோன் வடநாட்டு அரசன். பெரிய 6-6-5.
வட மரத்திலை மேல் பள்ளி – ஆலமரத்தின் இலைமேல்
பள்ளி கொண்டவன். பெரிய. 6-6-1,
தே. 1-20-5 வீழிமிழலை

3020 வட மலை – திருவேங்கட மலை. பெரிய- 5-6-7.
வண்டமிழ் – அழகிய தமிழ். பெரிய – 1-8-10.
வண்டமிழ் நூல் – திருவாய் மொழி. திருவாய். 4-5-10.
வண்டமிழ் மாமுனி – அகத்தியர். பெருமாள். 10-5.
வணங்கேனேலும் – வணங்கேனாயினும் திருவாய். 4-3-4.
3025 வதரி – பதரி என்ற வடசொல் வதரி என்று திரிந்தது. பதரி –
இலந்தை. இத்திருப்பதி இமயமலையிலுள்ளது. பதரீ
நாராயணன் என்னும்நாராயணன் ஆவார். சிறிய
திரு. 74, பெரிய. -1-3-1-10. பெரியாழ். 4-7-9.
வதரியாச்ரிராமம்- பெரிய. 1-4-1-10.
வதுவை -மணம் .நாச்சியார். 6-2.
வதை செய்தல் – கொலை செய்தல். நாச்சியார் – 8-9.
வந்திக்கு மற்றவர் – பலாத்காரமாக அபகரிக்க. பெரிய. 7-4-5.
3030 வந்தி பற்றும் வழக்கு- வருத்தி அபகரித்துக் கொண்ட
நியாயம். நாச்சியார் -9-3.
வந்தீயாய் – வந்து கண்களுக்கு உன்னைக் காட்டியருள
வேணும். திருவாய் -4-7-2.
வம்பர் -புதியர். திருவாய் -3-5-3.
வயிச்சிரவணன் – குபேரன். பெரியாழ். 1-3-5.
வயிரக்கடிபிட்டு- வச்சிரகுண்டல மணிந்து. பெரியாழ். 2-3-4.
3035 வயிரமேகன் – ஓரரசன். பெரிய. 2-8-10.
வயிர வழக்கு – சத்துருத்வ முறை. நான்முகன்திரு. 25.
வயிற்றினகம் படியில் – திருவயிற்றின் உட்புறத்தில்.
பெரிய. 11-6-8,9.
வயிற்றிற்றொழுவைப் பிரித்து – கர்ப்ப வாசத்தைக் கழித்து.
பெரியாழ். 5-2-3.
வயிறசைதல் – வயிறு தளர்தல். பெரியாழ். 2-2-1.
3040 வயிறடித்தல் – வயிற்றில் மோதிக் கொள்ளுதல்.
சிறிய திரும. 34.
வயிறு மறுக்குதல் – வயிற்றைக் கலக்குதல். பெரியாழ். 3-3-6.
வரகுண மங்கை – ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 1 /2 கல்
தொலைவில் உள்ளது. அக்னி தேவனுக்கு அருள
புரிந்தவன். வீற்றிருக்கும் திருக்கோலம். திருவாய்.9-2-4.
வரண்ட – தள்ளப் பெற்ற. பெரிய -4-5-10.
வராகவதாரம் – திருமால் காட்டுப்பன்றி வடிவம் எடுத்து
நீரிலே மூழ்கியிருந்த நிலமகளை வெளியில்
கொண்டு வந்தார். பெரிய -11-4-3.

3045 வருத்தித்தல் – சிருஷ்டித்தல். திருவாய் -2-2-8.
வருமை- பரலோகம், மறுமை. திருவாய். 3-7-5.
வல்லரட்டன் – பெருமிடுக்கன். திருவாய். 10-1-9.
வல்லவாழ் – திருவல்லா என வழங்கும் திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 9-7-2.
வல்லாளன் – கருடன். முதல்திரு. 80.
118
3050 வலவை பிறர் ஏற்றுக் கொள்ளும்படி பேசுபவன்.
திருவாய். 4-6-4.
வலி செய்ய- பீடிக்க. பெரிய. 3-6-4.
வலிப்படுதல் – பலாத்காரத்திற்கு உட்படுதல். பெரியாழ். 3-5-2.
வழுவிலாவடிமை – குற்றமில்லாத அடிமை. திருவாய். 3-3-1.
வள்ளி கொடி.பெரியாழ். 3-2-7.
3055 வள்ளி கொழுநன் – முருகன். பெரிய. 6-7-6.
வள்ளி நுண் மருங்குல் – கொடி போன்று நுட்பமான
இடை. பெரிய 2-7-5.
வளர்ந்தவன் – கண் வளர்ந்தவன். பெரிய – 5-6-4.
வளைவணன் – பலராமன் – பெரிய – 8-5-2.
வற்பு – வலி. பெரிய. 5-1-4.
3060 வன மாலை – திருத்துழாய் மாலை, காட்டிலே பூப்பறித்துக்
கட்டிய மாலை. நாச்சியார். 13-3, 14-2.
பெரிய. 3-4-9, 5-5-6, பெருமாள் 69.
வளாய்க் கொள்ள – சூழ்ந்து கொள்ள. திருவாய் -8-7-7.
வளை கொண்ட வண்ணத்தன் – சங்குபோல
வெண்மையான நிறத்தையுடையவன். பெரிய -6-9-3. வளைத்து வைத்தேன் – தடையிட்டு. திருவாசகம்.
வாகை நெற்று – வாகை மரங்களின் நெற்றுக்களானவை.
பெரிய. 1-7-8.
3065 வாசிகை – முத்து மாலை, திருவிருத், 50,68 பெரியாழ் 1-3-7; 2-4-4.
வாசி வல்லீர்- தாரதம்மியம் அறிய வல்லீர், வேறுபாடு
அறியவல்லீர். பெரிய -4-9-4; 4-9-9. தே. 1-92- வீழி மிழலை, 1-3-10 வலிதாயம்.
வாட்டாறு – திருவனந்தபுரத்திலிருந்து 28 கல் தொலைவில் உள்ளது. இத்திருப்பதி வாட்டாறு என்னும்
நதியால் பெயர் பெற்றது. திருவாய் 10-6-1-10. வாணபுரம் வாணாசுரனுடைய நகரம். திருவாய். 7-10-7.

வாணன்- பலியின் குமரன். இவனது நகரம் சோணிதபுரம்.
கம்சனுக்கு நண்பன் . இவனுடைய மகள் உஷை.
இவன் பூசித்த லிங்கம்பாணலிங்கம். திருநெடுந். 20,
மூன்றாந்திரு. 80, 92, நான்முகந்.56, திருவிருத். 78,
திருச்சந் 53,70,71, பெரியாழ். 5-3-9, பெரிய 3-4-3,
5-1-7, 6-7-6; 9-7-3; 11-4-5, திருவாய் 2-4-2, 3-8-9,
3-10-4, 4-8-9, 6-4-8.
3070 வாணன் மகள் – உஷை. பெரிய திரும. 60,64.
வாணாள் – வாழ்நாள் என்பது வாணாள் என மருவிற்று.
பெரிய – 1 – 1-6.
வாணிபம் – பயன். பெரியாழ் – 3 -7-9. தே, 7 – 35-3.
புறம்பயம்.
வாணியம் வாணிபம். திருச்சந்த 68.
வாத மா மகன் – அனுமன். பெரிய – 5 -8-2.
3075 வாதித்தல் – பாதித்தல். நாச்சியார் – 2-3.
வாதிப்புண் – துன்பமடைந்த. பெரியாழ், 2 – 10 – 8.
வாதை- பாதை துன்பம். நாச்சியார் – 2-3.
வாமனன் – காசியபருக்கு அதிதியிடம் அவதரித்தவர்.
விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம், இவர் மாவலியின்
செருக்கடக்க மூவடி மண் வேண்டினார். மூன்றாந்திரு – 18.
வாமான்றேர்ப் பரகாலன் தாவுதலையுடைய குதிரைகள்
பூட்டிய தேரையுடைய திருமங்கையாழ்வார். பெரிய. 7-4-10.
3080 வாய்க்கோட்டம் – வாக்கின் அநீதி. பெரிய. 4 – 3 – 8.
வாய் கொண்டு மானிடம்பாடுதல் – வாக்கைக் கொண்டு
மனிதரைப் பாடுதல். திருவாய். 3 – 9 – 9
வாய்த்த நன்மக்கள் – சிறந்த சீடர்கள். பெரியாழ். 1 – 9 – 10.
நாச்சியார் – 6 – 11.
வாய் நேர்ந்து – கொடுப்பதாக விண்ணப்பித்து. நாச்சியார் 9-6.
3085 வாயுறை – அறுகம்புல். திருப்பள்ளி. 8.
வாரம் அன்பு – பெருமாள். 2 -7. 5,
பெரிய. 2 – 10 – 5.
வாரமாக ஓதுதல் – திருவஷ்டாக்ஷரத்தை அன்புடன்
சொல்லுதல். திருச்சந்த 78
வாராகம் – பன்றி. பெரிய – 4 – 7 – 8.
வாலாட்டுதல்- செருக்கான செய்கை.(அஹங்காரம்)
நான்முகன் திருவந் 38.

3090 வாலி – இந்திரன் குமாரன். இவன் தம்பி சுக்ரீவன்.
நாள்தோறும் எண்திசைக்கடலிலும் தீர்த்தமாடிச்
சிவபூசை செய்பவன். நான்முகந்திரு. 85, பெருமாள் 10 -6.
வாலிதன்றன் – வாலியின் தம்பியான சுக்கிரீவன். திருச்சந் – 81.
வாலோலை கட்டி -வாலிலே ஓலையைக் கட்டி.
பெரியாழ். 4-7-5.
வாளி – அணிவகை. பெரியாழ். 1-5 – 10.
3095
3100
வானமாமலை – நாங்கு நேரியில் கோயில் கொண்டுள்ள|
பெருமாள்(சிறப்புப் பொருள்; பரமபதத்திலே பெரிய
மலைபோல வீற்றிருக்கும் திருமால) திருவாய். 5 -7 – 6.
வானரக்கோன் – வாலி. நான்முகன்திரு. 85.
வானவர்கோன் பாழி – திருமாலின் இருப்பிடமான பரமபதம்.
வானவர் தமக்கு- தேவர்களுக்கு. பெரிய -5-7-9.
வானிளவரசு -பரமபத இளவரசு . பெரியாழ் – 3 -6-3.
விக்கிரமம்- வீரச்செயல். பெரியாழ் – 5 – 4 -6.
விகிர்தம் – ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல். திருவாய். 3-10-9. விகிர்தமாதர் – வேறுபட்ட ஸ்திரீகள். பெரிய – 3 – 4-5.
விச்சாதரர் – வித்யாதரர்கள். திருப்பள்ளி -7.
விச்சைக்கிறை – சர்வஞ்ஞன். சமணர்கள் சர்வஞ்ஞர் என்று
ஒரு தெய்வமே கல்விக்குக் கடல் என்று
பணிவார்கள். பெரிய – 2 – 6 – 5.
3105 விசாதி -வியாதி.திருவாய்.5-2-6, நான்முகன் திரு. 52.
விசித்திரப்படுதல் – அமைத்தல். நாச்சியார். 2 – 5.
விசித்திரம் – அழகு. திருவாய் – 7 – 8-2.
விசும்பிலார் – பிரமன் முதலியோர். முதல் திருவந். 79. விசுவாமித்திரர் – காதியின் புத்திரர். ரிக் வேதத்தின் மூன்றாவது கண்டத்தில் அடங்கியிருக்கின்ற
கீதங்களுக்கெல்லாம் கர்த்தா. திருப்பள்ளி – 4.
3110 விட்டு – விஷணு. பெரியாழ் – 2-3 -5.
விட்டு சித்தன் – கருடாம்சம். புரச்சூடவைணவருடைய
மகனார் . கோதையின் வளர்ப்புத் தந்தை.
நாச்சியார் – 14 -10.
விடத்தேள் எறிதல் – விஷத்தையுடைய தேள் கொட்டுதல்.
நாச்சியார். 3 – 6.
விடமங்கள் – வைஷம்யங்கள். நேர்மையான
காரணமில்லாமல் வேறுபடுத்துதல். திருவாய். 7-8-3.

விடிவை சங்கொலிக்கும் – காலையில் சங்குமுழங்கும்.
திருவாய். 6 – 1 – 9.
3115 விடைக்கொடி – பாம்புக் கொடியோன். (பல்லவன்
நாகலோகம் சென்று வந்ததன் காரணமாக
“பாம்புக் கொடியோன்” என்றும வரலாறு
உள்ளது .பெரிய. 2 -9-6.
விடைச்செறுமணியோசை – எருதின் க்ருரமான மணிஓசை.
பெரிய. 8-5-7-9.
விடைமணிக்குரல் – எருதுகளின் கழுத்தில் கட்டியுள்ள
மணிகளின் ஓசை. திருப்பள்ளி – 4.
விடையான் – சிவன். பெரிய. 7 – 6 – 3.
விடையேழ் அடர்த்தது – இரண்டாந்திரு. 63, திருச்சந். 92,
பெரிய திருவந். 48, திருவாய். 1 – 5 – 1, 3 – 5 – 4, 4 – 2-5.
3120 விண்களகத்திமையவர் – பரமபதத்தில் உள்ள நித்திய
சூரிகள். பெரிய . 6 – 9-10.
விண்ட குன்று. பெரியாழ் -1 – 1-5.
விண்ணகர் பரமபதம். மூன்றாந்திரு – 61, முதல்திருவந். 77.
பெரிய திரும – 113, பெரிய – 6 – 1 – 1 – 10, 10 – 1 – 8
(ஒப்பிலியப்பன் சந்நிதி)
விண்ணகரம் – ஒப்பிலியப்பன் சந்நிதி. மூன்றாந்திரு – 62,
சிறிய திரும. 72.
விண்ணப்பம் – வேண்டுகோள். நாச்சியார் – 8 – 7, 10.
3125 விண்ணி – வெண்ணி. பெரிய – 6 – 6 – 3,4.
விண்ணுளார் – திருவாய். 7-1 – 6.
விண்மிசை – பரமாகாசம்.திருவாய். 6 – 4-10.
விததகன் விட்டுசித்தன் – பெரியாழ் – 1 – 4-10.
வித்துமிட வேண்டுங்கொலோ – நான்முகன்திரு. 23.
3130 வித்துவக்கோடு -பட்டாம்பி இரயில் நிலையத்திலிருந்து
ஒருகல் தொலைவில் உள்ளது. பெருமாள். 5.
விதலைத் தலை – நடுங்கிக் கிடந்த சமயம். பெரிய – 3 -8 – 2.
விதி பாக்கியம். திருமா – 8.
விதிர் விதிர்த்து – உடம்பு நடுங்கி, பெரியாழ்4-5 -4.
விதிவாய்க்கின்று – பகவானுடைய தயை கிட்டுமிடத்து
திருவாய். 5 – 1 – 1.
3135 விந்தமேய கன்னி -விந்திய மலையில் வீற்றிருக்கின்ற
துர்க்கை. திருநெடுந் – 7.

விபரீதம் – பிரதி கூலம்.திருவாய் 6 -2 -3.
விபீடணன் – விச்சிரவசு முனிவரின் மகன். இராவணன் தம்பி
அயோத்தியிலிருந்து திரும்பும் போது
ஸ்ரீரங்கத்தில் திருமாலைப் பிரதிட்டை செய்தான்.
பெரியாழ் -4 -9 – 2. பெரிய – 6-8-5.
வியவு -வேறுபாடு.திருவாய். 7-8-3.
வியாழம்- பிரகஸ்பதி. திருப்பா. 13.
3140 வியூகம்- படைவகுப்பு பெரிய, 6 – 5 – 8.
விராது விராதன். பெருமாள். 10-5.
விருத்தம் – கூட்டம். நாச்சியார் 14 -7.
விருந்தாவனம் – துளசி வனம்.யமுனைக்கரையில் கண்ணன்
இளமையில் விளையாடிய காடு. நாச்சியார் 14 – 1-10.
வில்லவன் – வில்லவன் என் பகை அரசன். பெரிய – 2-9-8.
3145 வில்லார் மலி வேங்கடம்- வேடர்கள் நிறைந்த
திருவேங்கடம். பெரிய – 1 – 10 – 10.
வில்லார் விழவு – கம்சன் செய்ததநுர்யாகம். பெரிய – 6-7-5.
வில்லி புதுவை நகர் – ஸ்ரீவில்லி புத்தூர். நாச்சியார் – 13 – 10.
வில்லி புத்தூர் கோன் – பெரியாழ்வார். நாச்சியார். 6 – 11. விலங்கு நூலர் – பூணுலைத் தரித்தவர். திருச்சந். 56.
3150 விலாவறச் சிரித்திடுதல் – அளவு கடந்து சிரித்தல். திருமா 34. விலைக்காட்படுதல் – வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு
அடிமைப்படுதல் . நான்முகன்திரு. 52. விலையாள் – அடியவள்(வேலைக்காரி). பெரிய. 5 – 5-2. விழலுகுத்தல் – விசுவாமித்திரத்தைக் கயிறாகத் திரித்துக் கட்டுதல் பெருமாள். 9 -7. விழிக்குங் கண்ணிலேன் – உன்னைத் தவிர வேறு
ஒருவரையும் ரக்ஷகமாக மதிக்கவில்லை.
பெரியாழ். 5 – 1 – 2.
3155 விள்கை விள்ளாமை – விட்டுப் போதல், விடாது ஒழிதல். திருவாய். 1 – 6 – 5.
விளங்கனி – கபித்தாசுரன். பெரிய. 3 – 9-7.
விளரிக்குரல் – விளரி என்னும் இசைக்குரல். விளரி
என்பதற்கு மத்யமஸ்வரம் என்று பொருள் கொள்ளலாம். திருவிருத். 83.
விளவின்காய் – இரண்டாந்திரு – 19,23,100; பெரிய. 9 – 8 – 6. விளிந்தீய்ந்த மாமரம்- தள்ளப்பட்டுக் கெட்டுப்போன பெரிய மரம். பெரிய. 6 – 3 – 8.

3160 விளையாட்டம்- விளையாடுதல் பெருமாள். 7 – 9.
விற்பெருவிழவு தநுர்யாகம் என்ற சிறந்த உற்சவம்.
பெரிய. 2-3-1.
வினதைச் சிறுவன் – கருடன். நாச்சியார். 14 – 3.
வினவப்பெறுதல் – ஆராய்தல். பெரிய. 10 – 6 – 5.
வினையாட்டியேன் – பாவத்தையுடையேன்.
திருவாய். 6-8 – 1,7 – 7-3, 6 -8-7.
3365 வீடுதரும் மோட்சத்தைத் தரும். திருவாய். 3 – 3 -7.
வீதியார வருவானை – தெரு நிறைந்து வருகின்ற கண்ணன்.)
நாச்சியார் – 14 -5.
வீரணிதொல்புகழ்- வீரத்தை ஆபரணமாக உடையவரும்,
நிலையான புகழை உடையவருமான
பெரியாழ்வார். பெரியாழ். 4 -6-10,
வீழ்ச்சி- விழுந்து. நாச்சியார். 8 – 7.
வெஃகணைக் கிடந்தது – திருவெஃகா என்னும் திருப்பதியில்
சயனத்திருக்கோலம். திருச்சந். 63,64
3170 வெஃகா – காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. சயனத் திருக்கோலம். திருநெடுந். 8,13,14,
பெரிய திரும. 70,128. மூன்றாந்திரு. 26,62,64,76.
பெரிய 10 – 1 -, முதல்திரு 77, நான்முகந்.36.
வெங்கலி – கொடிய கலி. பெரியாழ். 4 – 7-10.
வெங்கடத்துக் களிறு -கொடிய பாலைவனத்திலுள்ள
யானை. பெரிய – 6-3-8.
வெட்டென்றிருத்தல் – இசைந்திருத்தல். பெரிய. 5 -9 – 7.
வெண்கலப் பத்திரம் வெண்கலத்தால் செய்த இலை.
(பத்திரம் – இலை.) பெரியாழ். 1 – 9-5.
3175 வெண்ணிப்போர் – பெரிய. 6-6 – 3, 4.
6-51-4 வீழிமிழலை; 5-17 – 2, 3. வெண்ணியூர். 5 -65 – 4.
பூவனூர்.
வெண்ணெய் தொடுவுண்ட வெண்ணெயை வஞ்சனையால்
எடுத்து உண்ட. திருவிருத். 91
வெண்ணெற்கு- வெண்மையான நெல். பெரிய – 3 – 8 – 7.
வெந்தாரென்பும் – பிரேதங்களின் எலும்பு. பெரிய – 1 -5 -8.
வெள்கி- வெட்கப்பட்டு.திருமா – 34.
3180 வெள் வரைப்பு – கிழக்கு வெளுக்கை. பெரியாழ்.3 – 8 – 9.
நாச்சியார். 1 -2.
வெள்ளச்சுகம் – அளவு கடந்த சுகம்.திருவாய் 7- 3-1

வெள்ளறை- வெண்மையான பாறைகளால் இயன்றமலை.
(சுவேதாத்ரி எனப்படும்) சிறிய திரும. 70, பெரியாழ்.
1-5-8, 2 – 8 – 4, 5 பெரிய திரும – 117.
வெள்ளித்தலை வெள்ளித்தண்டு. பெரியாழ்- 1 – 2 – 3.
வெள்ளிப் பெருமலை- பெரிய வெள்ளிமலை.
பெரியாழ். 1 – 7-5.
3185 வெள்ளியார் – சுக்கிரன். பெரிய. 4-10 – 7, 9 – 7-9.
வெள்ளியெழுந்து -சுக்கிரன் உதயமாகி. திருப்பா. 13.
வெள்ளுயிராக்குதல் – சாத்துவிக்னாக ஆக்குதல். திருப்பல். 8.
வெள்ளெனல் – வெளுத்தல். திருப்பா – 8.
வெள்ளேறன் – வெண்மையான ரிஷபத்தையுடைய உருத்திரன். திருவாய். 2 – 2 – 10.
3190 வெள்ளை நுண்மணல்- வெண்மையான நுட்பமான மணல்.
நாச்சியார் – 1 – 2.
வெள்ளை விளி சங்கு – வெண்மையானதும் எல்லோரையும் அழைப்பதுமாகிய சங்கு. திருப்பா – 6. பெரியாழ். 4 – 1 – 7.
வெளிய நீறு – அஞ்சன சூர்ணம். திருவாய் – 4-5 – 6. வெற்பு சம்பந்தமான திருமால் செயல். திருச்சந். 39. வெறி -வெறியாட்டு. திருவாய் – 4 – 6 – 11, திருவிருத் – 20.
3195 வெறியோடிற்று வெறிச்சென்று இருக்கிறது.
பெரியாழ். 3 -8 – 1, திருவாய். 4 – 6 – 1, 10. வேகவதி – காஞ்சிபுரத்தில் முன்னாளில் ஒடிய ஓர் ஆறு நான்முகன் செய்த வேள்வியை அழிக்கவர நான்முகன் திருமாலைக் கொண்டு அடக்கினான். பெரிய திரும – 52 – 55.
வேங்கடத்தான் திருமலலையில் எழுந்தருளியிருப்பவன். இரண்டாந்திரு . 28,45, மூன்றாந்திரு. 39,40. வேங்கடநாடர் – திருமலையை நாடியவர். நாச்சியார். 10-5.
3200 வேங்கடம் – நாச்சியார். 8 – 4 – 2, 10 – 8, பெரிய – 1 – 10-1 – 10, 2-1-1-10,5-5-1,7-3-5, 8-2-3,9-7-4, முதல்திரு 26,99, இரண்டாந்திரு – 46,53, மூன்றாம்திரு. 14,26,30,32,45,59,61,62,68,69,
திருச்சந் 60-81.திருவிருத். 60,81, பெரிய திரும. 124. வேங்கடமலை – பெரிய. 4 3-8.
வேங்கடவன் – இரண்டாந்திரு – 72, நாச்சியார். 1 – 1. வேங்கடவாணன் திருவேங்கடமலையில் இருப்பவன். பெரியாழ். 1 – 4 – 3, 1 – 8-8, 2 – 6 – 9,

3205 வேங்கடவேதியன் – வேங்கடமலையிலுள்ள ஸ்ரீனிவாசன்.)
பெரிய – 9-9-9.
வேங்கை கழுத்திற் சொரிய உறங்கல். பெரியாழ் – 3-5-8.
வேட்டத்தைக் கருதாது – ஆசைப் பெருக்கத்தைக் கருதாமல்.
பெரிய – 10-9-10.
வேடர் தெழிப்பு -வேடர்களின் ஆரவாரம். பெரிய- 1 – 7 – 2.
வேடர் மறக்குலத்தவரின் மணவகை. பெரியாழ். 3 -8-6.
3210 வேடார் திருவேங்கடம் வேடர்கள் நிறைந்த திருமலை.
பெரிய – 4-7-5.
3215
வேடுமுடை வேங்கடம் – வேடர்கள் நிறைந்த திருமலை,
நான்காந்திரு – 47.
வேதகீதன் – வேதத்தினால் புகழ்ந்து பாடப்படுபவன்.
திருச்சந்த – 117.
வேதத்தினுட் பொருள் – திருவாய் மொழியில் நிற்கப்
பாடியது. கண்ணிநுண்- 9.
வேதநாவர் – அந்தணர்கள். திருச்சந் – 23.
வேதநான்கைந்து தீ வேள்வி-நான்கு வேதம், ஐந்து அக்கினி,
ஐந்து மகா யக்ஞம். பெரிய – 9-7-6.
வேதநூற் பிராயம் நூறு – வேதநூல் பிரகாரம் மனிதர்களுக்கு
வயது நூறு. திருமா – 3.
வேதப்பிரானார் எம்பெருமான். பெரியாழ் – 5 – 2 – 1.
வேதாந்த விழுப்பொருள் -வேதாந்தங்களில்
சொல்லப்டுகின்ற சிறந்த அர்த்தங்கள். பெரியாழ். 4-3 – 11.
வேம்பின் புழு – வேப்பமரத்திலுண்டான புழு. பெரிய – 11-8-7.
3220 வேம்புங்கறியாதல் -வேப்பிலையும் கறியமுதாகும். நான்
முகந்திரு – 94.
வேய்-புல்லாங்குழல். பெரிய -8-5-3.
வேயர் – அந்தணர். நாச்சியார் தனியன்,
பெரியாழ். 1 – 7 – 11, 4 – 10 – 10, 5-4 – 11.
வேயர் தங்கள் – அந்தணர்களுடைய. பெரியாழ் – 5 -4 – 11.
வேல் வலவன் – வேற்படையில் வல்லவன். பெருமாள்-9 – 11.
3225 வேல்வலவனாலிநாடன் – வேற்படையை ஆளுகின்ற
திருவாலி நாட்டுக்கதிபன். பெரிய. 4-4 – 10.

வேல வெறியாட்டாளனே. திருவிருத் – 20.
வேலால் துன்னம் பெய்தல் வேலால் துளைத்தலை
இடுதல். நாச்சியார் -13 – 2.
126
வேலை மோதும் மதிள் – கடல் அலைகள் வந்து
மோதுகின்ற மதிள். திருவாய். 9 – 10 – 1.
வேழப் போதகம் அன்னவன் – யானைக்குட்டி போன்றவன்.
பெருமாள். 7 – 1.
3230 வேள் – முருகன். மன்மதன். திருநெடுந். 7.
வேள்வு – வேள்வி-யாகம். பெரிய. 6 – 4 – 8.
வேளுக்கை காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. நின்ற திருக்கோலம். மூன்றாந்திரு. 34, 62.
வேளுக்கைப்பாடி – வேளுக்கை என்ற திருப்பதி.
மூன்றாந்திரு. 26.
வேளுஞ்சேயுமனையார். வேள்- மன்மதன்,சய்- முருகன்.
பெரிய. 6 – 7 – 1.
3235 வேனிலஞ்செல்வன் – சூரியன். திருவிருத். 25.
வைகுந்தக் குட்டன் – நித்திய சூரிகளுக்குப் பரிந்து
நோக்கும்படியான பருவத்தை
உடையவன். பெரிய. 3 – 6 – 3.
வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டம். பெரியாழ். 4 – 7 – 9.
வைகுந்த விண்ணகர்- திருநாங்கூரிலே உள்ள வைகுந்த
விண்ணகரம் என்னும் திருப்பதி. 3-9 – 1 – 10. வைட்டணவர். வைஷ்ணவர். திருவாய். 5-5 – 11.
3240 வைத்தநாள் – ஈசுவரன் நியமித்த ஆயுள். திருவாய். 6 – 7-11. வைதிகன் – வேதநெறிப்படி ஆசார அனுஷ்டானமுள்ளவர்.
திருவிருத் 94.
வைதேகி – சீதை. (தத்திதாந்த நாமம்) பெருமாள். 10-6. வைப்பு – புதையல். திருவாய். 1 – 7-2.
வையத்தேவர் – அந்தணர், அடியார். திருவாய்.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்