Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ கலியனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ திருக்குடந்தை உ. வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

January 28, 2026

ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த நவ ரத்ன க்ரந்தங்களுக்கும் அடி இப்பதிக 9 பாசுரங்கள் -சமத்காரமாக ஸ்வாமியின் நவரத்ன க்ரந்தங்களும் இப்பதிக பாசுரங்களின் அடிப்படையில் அருளிச் செய்து இருப்பதாகக் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ ராமானுஜர் கலியன் சம்பந்தம் மூன்று பாடல்களில் அமுதனார் காட்டி அருளுகிறார் -இதில 7 பாசுரத்திலேயே திருமங்கை ஆழ்வாருக்கு இனியவராக ராமானுஜர் -பவிஷ்ய ஆச்சார்ய விக்ரஹம் சேவித்து இருப்பாரே கலியனும் –

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன்
மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-வாள் வீசி படித்துறை -நம் போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு – ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு – இவ் விராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை
வந் தெய்தினரே.–17-நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –-எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்--அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு-இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன்
மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88–மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் . எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று-ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி


பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை
முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-=வேதார்த்த ஸங்க்ரஹம் -அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய 

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும் அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும் எவ்விதமான தோஷமும் அற்றவனும் ஆனந்த ஸமுத்ரமுமாகவும் உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு- ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி -நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥–அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர-* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6—ஶரணாக³தி க³த்³யம் ॥-ௐ ப⁴க³வந் நாராயணாபி⁴மதாநு ரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்
நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம்
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே * பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே * ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த
வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-அழித்த அசுரர்கள் பட்டியல்-கீதா பாஷ்யம் தொடக்கம் -பூதனை -அகங்கார மமகார –கர்மங்களைப் போக்கவே அவதாரம்-பூபார அவதரண தேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாஸ்ரயணித்வாத் அவதிர்யோர்வ்யாம்
சகல மனுஷ நயன விஜயதாம் கத பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி
திவ்ய சேஷ்டிதானி குர்வன்-பூதநா சகட யமளார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த
அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை- விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-திருவாராதனம் யாகம் -யாக பூமி கச்சேத் நோக்கி போவதாக நித்ய கிரந்தம்-ததீயாராதனம் கண்ணாலே பார்க்கலாமே–பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய| பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா – அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா| ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய ! ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –திரு உள்ளமாகில் –ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –கலிகன்றி தாஸர் ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கேட்டு அருளிச் செய்த வியாக்யானங்கள் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

கப்யாஸ ஸ்ருதியின் பொருள் விளக்கம்-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

January 12, 2026

கம்பீராம்பஸ் ஸமுத்பூத-ஸும்ருஷ்ட நாள- ரவி கர விகஸித புண்டரீக தலாம
லாயதேக்ஷ :*

கம்பீராம்பஸ்ஸமுத்பூதமாயும், ஸும்ருஷ்டநாளமாயும், ரவிகரவிகஸித
மாயுமிருக்கிற புண்டரீகத்தை எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு உவமை
யாகச் சொல்லுவது பொருத்தமென்று எம்பெருமானாருடைய திருவுள்ளத்திலே
தோன்றினது

திவ்யப்பிரபந்தங்களில் அவர் ஆழ அவகாஹித்திருந்ததனாலேயே.
ஆழ்வார்கள் எம்பெருமானுடைய திருக்கண்ணழகைப்பற்றிப் பேசுமிடங்களில்
மேலே காட்டிய மூன்று விசேஷங்களையும் வெகு அற்புதமாகப் பேசியுள்ளார்கள். 

கம்பீராம்பஸ் ஸமுத்பூத புண்டரீக] ஜல மென்றும் அம்புஜமென்றும்-அம்போஜமென்றும் நீரஜமென்றும் பேர்பெற்ற புண்டரீகமானது நீரில் நின்று முண்டாகாமல் மற்றொன்றினின்று உண்டாக ப்ரஸக்தியில்லாமையாலே அம்பஸ் ஸமுத்பூத” என்றதன் கருத்து, நீரை விட்டுப் பிரியாமலிருக்கையைச் சொல்லுவதேயாம்.

‘தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன்தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமாபோலே” என்கிற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீஸூக்தியும், “கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி” என்கிற ப்ரமாணமும் இங்கே அநுஸந்தேயம். நீரைவிட்டுப் பிரியாமலிருக்கிற தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.

நீரார் கமலம் போல் செங்கண்மாலென்றொருவன்”-என்கிற சிறிய திருமடற் பாசுரத்திலும்‘அழறலர் தாமரைக் கண்ணன்” (58)என்ற திருவிருத்தப் பாசுரத்திலும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றிய அர்த்த மென்றே இஃது எம்பெருமானாரால் ஆதரிக்கப்பட்டது. ‘நீரார் கமலம் போல்” என்றவிடத்தில் (நீரார்) என்ற விசேஷணம் எதுகை யின்பத்திற்காக மாத்திரம் இடப்பட்டதன்று. ” அழறலர் தாமரைக் கண்ணன்” என்றவிடத்து நம்பிள்ளை யீட்டில் கப்யாஸ ஸ்ருதி ஸ்பஷ்டமாகவே உதாஹரிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்து ஸ்ரீஸூக்தி வருமாறு-” அழறலர் தாமரைக் கண்ணன்) அழற்றிலே நின்றலர்ந்த தாமரைப் பூப் போலே யிருந்துள்ள திருக் கண்களை யுடையவன். யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணீ.என்னக் கடவதிறே.” இங்கு வாதி கேசரியின் ஸ்வாபதேச வுரை வருமாறு- அழறு என்று அளறு; நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவனென்ற படி

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –கமலம் போல் செங்கண் -என்கையாலே குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது 

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

ஆக, நீரார் கமலம்போல் செங்கண் மாலென்றொருவன்’ என்ற சிறிய திரு
மடற் பாசுரத்தையும், அழறலர் தாமரைக் கண்ணன்’ என்ற திருவிருத்தப் பாசு
ரத்தையும் “தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்குங் கண் பெருங் கண்
ணன் ‘ என்கிற திருவாய் மொழிப் பாசுரத்தையும் திருவுள்ளம்பற்றியே கம்பீராம்
பஸ்ஸமூத்பூத’ என்ற விசேஷணத்தை ஸ்வாமி யிட்டருளினாரென்பது பொருத்த
மாக முடிந்தது.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன்
நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலேயாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்

[ஸும்ருஷ்டநாள புண்டர்க] நீரை விட்டுப் பிரிந்த தாமரைக்கு சோபையில்லாதது போலவே நாளத்தை விட்டு நீங்கின தாமரைக்கும் சோபையில்லாமையாலே தாமரைக்கு நாளத்திலிருப்பும் அவச்ய வக்த யமாயிற்று. இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவிருத்தத்தில் “வன்காற்றறைய’ என்கிற பாட்டிலே “எம்பிரான்தடங்கண்கள் – மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன” என்றருளிச் செய்யப்பட்டிருக்கிறது. கமலத்திற்கு இடப்பட்டிருக்கிற ‘மென்கால்’ என்னும் விசேஷணத்திற்கு ‘மெல்லிய நாளத்திலே யிருக்கின்ற’ என்பது பொருள்.(நாளமாவது தண்டு). கமலத்திற்கு அது கால் போன்றிருத்தலால் கால்என்னுஞ் சொல்லால் குறிக்கப்பட்டது. நாளமென்கிற பொருளையே பூருவர்களும் உரை செய்துள்ளார்கள். ஆக இந்த திவ்ய ஸூக்திக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என் றருளிச்செய்யப்பட்டது.

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே
-42-மென் கால் கமலம் என்றது –
ஆபி முக்ய ஸூசகமான மானஸ ப்ரபத்தியையும் பொறாத அவனுடைய ஸுவ்ஹார்த்தம்–ஸூஹ்ருத் பாவம்-வன் காற்று -பூர்ண பிரபத்தி அறைகை –ஆர்த்த பிரபத்தி )மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில் மார்த்தவத்தை யுடைய-கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே-பொலிந்தன-அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை-கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை-மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)-கமலத் தடம் என்று நிறத்தாலும் குளிர்த்தியாலும் பரப்பாலும் போக்யமாய் இருக்கை-பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப் போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )-ஊர்த்தவ லோகங்களும் என் காலுக்கு அளவு போராது நீங்கள் காணுங்கோள் என்று தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம் என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து-த்ரை விக்ரம அபதானத்தாலே அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய பெரிய திருக்கண்கள்

ரவிகரவிக“த புண்டரீக.) தாமரை நீரிலிருந்தாலும் நாளத்திலிருந்தாலும் ஸூர்ய கிரணங்களால் அலர்த்தப்பட்ட நிலையில்தான் எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு ஒப்பாகு மாதலால் இந்த விசேஷணமும் ஆவச்யகமாயிற்று.இதுவும் ஆழ்வாரருளிச் செயலிலுள்ளது. திருவாய்மொழியில் (5-4-9) “செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வன்” என்றுள்ள பாசுரம் இங்கே கொள்ளக்கடவது.இவ்விடத்து ஈட்டிலும் கப்யாஸ ச்ருதியை உதாஹரித்தருளி யுள்ளார். இதில்(செஞ்சுடர்த் தாமரை) என்பதற்கு செவ்விய சுடரையுடைய தாமரை என்று பொருளாகிறது. அச்செவ்விய சுடர் அதற்கு எங்ஙனம் வந்ததென்னில், அதற்கு முன்னடியில் ‘அஞ்சுடர வெய்யோன்’ என்று ஸூர்யனை ப்ரஸ்தாவித் திருக்கையாலே தததீநமென்று காட்டப்படுகிறது. ஆக ஸூர்ய ப்ரகாசமடியாக வந்த செவ்விய சுடரை யுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவன் என்றதாயிற்று.இந்த ஸ்ரீக்தியைத் திருவுள்ளம்பற்றியே, “ரவிகரவிகளித புண்டரீக” என்றருளிச் செய்தது. “செந்தண்கமலக்கண் சிவந்த வாயோர் கருநாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே” என்கிற திருவாய்மொழிப் பாசுரமும் இங்கு யோஜிக்க வுரியது.( ‘செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்” என்கிற பெருமாள் திருமொழிப் பாசுரமும் இங்கு நினைக்கத்தக்கதுஆனால் அப்பாசுரத்தில் திருக்கண் ப்ரஸ்தாவ மில்லாமையுணர்க.]

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–தன்னுடைய தோற்றத்தில் இருளை போக்கி துக்க நிவ்ருத்தியை பண்ண வல்ல ஒளியோடு கூடின ஆதித்யனுடைய அழகிதான உதய ஸூ சகமான தேரும் தோன்றுகிறது இல்லை-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் –சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே

‘கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷி ” என்கிற உபநிஷத்வாக்யத்திற்கு விவரணமாக ஸ்வாமியருளிச்செய்த கம்பீராம்பஸ் ஸமுத் தேத்யாதி திவ்யஸுக்தியில் “புண்டரீகதளாமலாயதேக்ஷண என்றிருக்கின்றதன்றோ? மூல ச்ருதியில்
புண்டரீகமேவ மக்ஷி” என்றிருக்கிறதேயொழிய வேறில்லை; உள்ள மூலத்திற்குச்சேர “புண்டரீகக்ஷிண என்றிவ்வளவே அருளிச்செய்திருக்க வேண்டும்; அதிகப்படியாக மூன்று பதங்களைச் சேர்த்திருக்கிறார். (1) தள . (2) அமல. (3) ஆயத. என்னுமிந்த மூன்று சொற்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு ஸ்வாமியாலருளிச் செய்யப்பட்டனவென்று விசாரம் செய்யுமளவில், ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை ஆதாரமாகக் கொண்டுதானென்று நிர்ணயிக்க ப்ராப்தம்.-ஆழ்வார்கள் ‘தாமரைக்கண்ணன்‘ என்று சிலவிடங்களிலும் “தாமரைத்தடங்கண்ணன்” “கமலத்தடங்கண்ணன்” “கமலத்தடம் பெருங்கண்ணன்” என்று பல விடங்களிலுமருளிச் செய்து போருகிறார்கள்-வடமொழிலுள்ள லகரமும் ளகரமும் தன்மொழியில் டகரமாக மாறுபடுவதுமுண்டு; “லடயோரபேத: ”என்கிற நியாயம் ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரஜ்ஞர்களுமிசைந்ததே. தமிழர்கள் எழுத்துப்போலி யென்பர்கள். ஏவஞ்ச, ” பத்ரம் பலாசம் சதனம் தளம் பர்ணம் சது: புமாந்”என்ற அமர கோசத்தில் படிக்கப்பட்ட தலமென்கிற வடசொல்லே தமிழில் தட மென்றாயிற்று என்று திருவுள்ளம் பற்றிய எம்பெருமானார் கமலத்தடங்கண்ணன் தாம்ரைத் தடங்கண்ணன்‘ என்னுமிடங்களிலே மன்னும் பொருளிலே தட மெனவந்ததென்று கொண்டு “புண்டரீகதள”என்றருளிச்செய்தார். தடமென்னுஞ் சொல்லுக்கு விசால மென்கிற பொருளும் தடாகமென்கிற பொருளும் தள மென்கிற பொருளும் ஆங்காங்கு வியாக்கியான கர்த்தாக்களால் ஆதரிக்கப்படு கின்றன. “நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல…. எம்பிரான் கண்ணின் கோலங்களே” என்ற திருவிருத்தப் பாசுரத்தில் தடமென்பதற்கு தடாகமென்பது பொருள்.

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
-39-நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே-பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி அழகு விஞ்சி-எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன-பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்-கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்–இத்தால்-ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல் முந்நீர் ஆனால் போலே-அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி-விசும்புக்கும் பிரான்-வெளி நாடான நித்ய விபூதிக்கும்-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

“கமலக் கண்ணன் ….அமலங்களாக விழிக்கும்” என்கிற நம்மாழ்வார் பாசுரத்தை யுட்கொண்டே“புண்டரீகதளாமல்.. ஈஷண” என்றார் ஸ்வாமி. கீழே காட்டிய பாசுரங்களையும் “கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்பெரியவாய கண்கள்’ என்கிற அத்தீயான திருப்பாணாழ்வார் பாசுரத்தையுமநுஸந்தித்துக் கொண்டே “புண்டரீக… ஆயதேக்ஷண: என்றார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார்-

January 6, 2026

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8-
–– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

——–

அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3-
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1- 5- –
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 – –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 – –
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –

———–

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே 85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –

———

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே  –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

————-

இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார் அடுத்து

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன்
—10-10-9-தேவனோ
மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் – இன்னார் என்று அறியேன் –சாரங்க பாணியின் படியையும் ஆராவமுத ஆழ்வாரையும் அனுபவித்து அவர்களுடைய போக்யதை நெஞ்சில் ஊறி முன்னே வந்தால் போல் இவளுக்குப் பட மனுஷ்யத்தவே பரத்வம் இவருக்கு அடையாளம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள்-ஆழியும் சார்ங்கமும் சேர்ந்து அனுபவம் இதில் –சக்ர பாணி சாரங்க பாணி -சேர்ந்தே புறப்பாடு இங்கு)

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே  –11-3-3-அந்தாதி தொடையில் அமைந்த ஒரே திருமொழி இதுவேநெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –(இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே )என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே 
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே-உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-
– நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
  –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே
-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு  பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே
—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4–ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3
— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- –
நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

——————————–

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று – நாலாயி:4/3–நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –-நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்-நன்கறிய –நன்றாக அறிய –பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –இந் நன்மையை அறிய என்றுமாம்-நாமோ நாராயணா என்று –இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே  நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இறே புருஷார்த்தம் ஆவது –

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே -1-1-4- நாலாயி:16/4-திருவாய்ப்பாடியில் உள்ள கோபர்கள்-பாலும் தயிரும் இருக்கிற உறிகளை முற்றத்திலே உருட்டி நின்று
ஆடுவாரும் மணம் மிக்க நெய் முதலியவற்றை நிச்சேஷமாக தானம் பண்ணுவாருமாய்
நெருங்கி மெத்தென்ற மயிர் முடியானது அவிழ்ந்து களையும் படி நர்த்தனம் பண்ணி
சேரி அடங்கலும் மதுவனம் அழித்த முதலிகள் போல் கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்-1 4-4 –- நாலாயி:57/3–உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே-பிள்ளைகள் பெறாத வந்த்யன்  அல்லவாகில் வந்து கொடு -நில் கிடாய் –

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் –1-5-6– நாலாயி:69/3—ஆயம் அறிந்து -மல்ல யுத்தம்  செய்யும் வகை அறிந்து
அந்தரம் இன்றி -உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி-ஆடிய -இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்தமல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான இடை வெளி இல்லாமல் அபாயம் இல்லாமல் என்றுமாம் அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் –1 6-5
–– நாலாயி:79/2,3-ஓடிப் போய் உள்ளே புக்கு –வைத்த நான் அறியாதபடி –சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் –தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின்- -1 7-8 — – நாலாயி:93/3–லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8-
–– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை– 2-2 2– – நாலாயி:129/2-பழுதற உருக்கி வைத்த நெய்யும் –செறிவுறக் காய்ந்த பாலும் –நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் –செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்-என்னுடைய நாயகனே நீ பிறந்த பின்பு –இவை ஒன்றும் பெற்று அறியேன் –அன்றிக்கே –
இத்தனையும் என்றது –ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட –
–2 7-1 – –-நாலாயி:182/1,2-உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும் பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்-நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை-இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்-அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – -2-7- 8–நாலாயி:189/3-சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால் மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே-இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்—2 8-7 – நாலாயி:198/3-உள்ளபடி ஒன்றும் அறிகிறேன் இல்லை-அதாவது –இன்னமும் அப்படிக்கு ஒத்தவற்றை செய்குதியாகில் –ஒரூ நாள் அல்ல ஒரு நாள் அபாயம் விளையும் -என்று பயப்படா நின்றேன் என்கை

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் –  2-9- 7–
நாலாயி:208/2,3-பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –-முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்-அதாவது –திருவோண வ்ரதத்துக்கு  என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –இவனும் தீம்பிலே ஆரம்பித்து –தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –- நாலாயி:223/4-அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை-முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை உனக்கு தாரகாதிகளாகவும்  நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால் ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும் அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்-
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பா -குணமே குணி )கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்-தீம்பன் -என்ற படி –இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று
உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-3- –- நாலாயி:225/4-உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் –உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – –3 1-4 – –-நாலாயி:226/4-ஐயா இது என்ன தெளிவு தான்  என்று கொண்டாடுகிறாள்-அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்-உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – -3-1- 5–நாலாயி:227/4-இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்-
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1 6- நாலாயி:228/4-தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் – அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்-ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன் ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே- -3 -1-7 – – நாலாயி:229/4-என்னுடைய நாதனானவனே–இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய-இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3 1-8 –- நாலாயி:230/4-பசும் புல்லு சாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ-அன்றிக்கே -அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்–-
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 நாலாயி:231/4–காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள் நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே – குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை -நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –-என்னுடைய நாதனே -உன்னை அறிந்து கொண்டேன் –உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில்- 3-4-6- – – நாலாயி:259/3-ஒப்பனை அழகும் -வருகிற அலங்காரமும் – லீலா வியாபாரமும் -ஒர் ஒன்றே
எத்தனை யேனும் அளவுடையாராலும் எல்லை காண ஒண்ணாத இடைப் பிள்ளை-தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – – 3-7- 4–நாலாயி:289/4-இவள் படி பார்த்தால் –முகந்து பரிமாறுகிற மூழை யானது தான் முகக்கிற பதார்த்தத்தின் ரசம் அறியாது-என்னும் அந்த மூதுரையும் தன் பக்கல் இல்லாதவள் -கிடீர்

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் –3-7-5 – நாலாயி:290/1-தானும் தன்னை அணைந்த பந்து வர்க்கமும் அறிந்த அளவாக அவன் பக்கலிலே பிரவணையாய்-
அகம் விட்டு புறப்படாமல் இருக்கை அன்றிக்கே – திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் –
திரு ஆய்ப்பாடி யான ஊர் தானும் – இருந்ததே குடியாக அறியும்படி -க்ரஹத்தை விட்டு புறம்பே போய்

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள்-3-8 -2- – – நாலாயி:298/1-பொருந்தின அறிவு ஒன்றும் இல்லாத லௌகிக வைதிகங்களோடு சேர்ந்த அறிவு அல்பமும் இல்லாத-அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் இறே காட்டிலே பசு மேய்க்க போன இடங்களிலே -வழி திகைத்தால் வழி காட்டுவது பசுக்களாம்  படி இறே இவர்கள் அறிவு இருப்பது

தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி-3- 8-3 – – நாலாயி:299/2-பந்துக்களும் மற்றும் உள்ளாறும் அறியும்படி–தாமோதரனுக்கு இவளைக் கொடுக்க புகா நின்றோம் -என்று பிரசித்தமாக்கி-தாமோதரன் -என்றது –மாதாவானவள் கட்டின கட்டு அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே அவள் நியமனம் தப்பாமல் இருந்த நீர்மையை உடையவன் -என்றபடி

நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து –3-8-6-– நாலாயி:302/3-இரண்டு குடிக்கும் பழி வாராதபடி-திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் – திரு ஆய்ப்பாடி ஆகிய நகரமும் அறியும் படியாக – இதுக்கு முன்பு இப்படி இல்லை -என்னும்படி விலஷணமாய் அத்வீதியமான கல்யாணத்தைச் செய்து – ஜாதி உசிதமான தர்மத்துக்கு தகுதியாக பாணி க்ரஹணம் செய்யுமோ

அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க–3-10-1– – நாலாயி:318/3-இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே –பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால)-என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க
தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து-இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் –
ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்
(பெருமாள் முதலோர் )திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய-விலங்க-என்றது –
விலக்க-என்றபடி –

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – –4- 6-6 -நாலாயி:386/1–நாட்டில் உள்ளாரோடு நகரத்தில் உள்ளாரோடு வாசியற எல்லாரும் –இவன் அசாதாரணன் -என்று அறியும் படி சூத்திர மனுஷ்யர் பேர் இட்டு -அவர்களோடு கூடி -அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து- அவர்கள் விழுந்த  குழியில் விழுந்து ஒளி மழுங்கி – தவறி வர்த்தியாதே 

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே -4 -10-4 –- நாலாயி:426/1-சர்வ காரண பூதனாய்-சர்வ ரஷகனாய் –சர்வ சேஷியாய் –சர்வ சரீரியாய் -இருக்கும் உன்னை-உள்ளபடி அறிய ஒண்ணாது இருக்கும் பெருமையை உடையவனே –யன்ன தேவா ந முநயோ ந சாஹம் ந ச சங்கர ஜானந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –என்று விஷ்ணு உடைய பரமமான ஸ்வரூபத்தை தானும் – ருத்ரனும் –மற்றும் உண்டான தேவர்களும் –ரிஷிகளும்அறியார்கள் என்னும் இடம் பிரம்மா  தானே சொன்னான் இறே –கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி – என்று அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தையும் உட்பட அவர்கள் அறிய மாட்டார்கள்- என்று இறே ஸ்ரீ திரு மழிசைப் பிரான் (நான்முகன் திருவந்தாதியில் )அருளிச் செய்தது-

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த — 4-10- 8– நாலாயி:430/1-அதீத அநாகதங்களில் ஒன்றும் அறியாத நான்(அதீத அநாகதங்கள் -முன்பு போன கர்மங்கள் -மேல் வரும் கர்மங்கள் ) சர்வ சக்தியான உன்னுடைய மாயைகளில் ஏதொன்றும் அறியேன் –இப்போது இவர் -உன் மாயம் -என்கிறது – போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை -என்று சொன்னது போலே இருக்குமவற்றை இறே –அதாவது –கர்ம அனுகுணமாக இச் சேதனர் விஷயத்தில் அவன் பண்ணி வைக்கும் வஞ்சனங்கள் அநேகம் இறே –அவை தான் அவன் தான் அறியும் அத்தனை ஒழிய –எதிர்  தலைக்கு தெரியாதபடி இறே இருப்பது –அத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது -4-10-9
–- நாலாயி:431/2,3–சர்வ காரணமாய் – விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன் 

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –5-1- 1– நாலாயி:433/2-ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – —-உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன்-5- 1-3 – – நாலாயி:435/3-நான் திரு நாமம் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய் தலை கட்டுகிறதோ –தீமையாய் தலை கட்டுகிறதோ –அறிகிறிலேன் –

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை-5-3- 6– – நாலாயி:458/2-ஒரு சேதனரும்-இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை
சம்சாரத்துக்கு மருந்து அறியும் இத்தனை -அத்தை வெளி இடுகைக்கு ஆய்த்து –
கைலாச யாத்ரையிலே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தை கொடுத்து ருத்ரன் பக்கலிலே- பிள்ளை வரம் வேண்டி சென்றது ஆகையாலே சம்சார வர்த்தகர்

சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் -5- 3-8 –- நாலாயி:460/4-சர்வஞ்ஞனான நீ தானே அறியாயோ-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனான உனக்கு தெரியாதோ –விட்டு சித்தன் தன் மனம்
உன்னுடைய வ்யாப்தி விபூதி அளவிலே(குணங்களோடு வியாபிக்கிறார் என்னும் போது குணத்தில் வியாபித்தால் ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருமே )என்னுடைய மநோ வ்யாப்தி உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே –

அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே –5- 4-2 –– நாலாயி:464/4-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி   வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது
அதனில் பெரிய என் அவா -என்றபடி-நீ என்னைக் கை கொண்ட -என்றது –
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஓட்டேன் நாம்மாழ்வார் -என்றபடி
அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு அனுகூல ஞான வர்ஷம் எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –-சேதன கதமாக வந்த ஞானம் ஆகில் இறே பின்பு வற்றி வருவது சஹ்யம் பற்றி வருகிற ஆறு இறே திரு மலை இறே சஹ்யம் வர்ஷிக்கிறது ஒரு காள மேகம் இறே(ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் )

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8–பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –அது எல்லாம் செய்தற்றது –நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4-
-நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம்-நாங்கள் இன்றாக அறிகிறோமோ –சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்-எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே-நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ – பண்டே அறியோமோ –குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன-நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -பண்டே அறியோமோ-

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5--ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும் பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும் இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால் நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் – அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்–பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் – திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை

ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் –
நாலாயி:494/3,4-சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது –கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்ய பரதையாலே
எழுப்புகிறார்கள்-மகனே அறிவுறாய்-உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை – ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்

சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2-மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –-பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்-இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )

அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன் தன்னை —–அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6–1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை–1-கர்ம யோகத்தில் உண்டான –2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும் பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள் சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய் முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –அறியாத பிள்ளைகளோம் –1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் 

பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் -2-7 – நாலாயி:520/2-நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது-எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே – அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே – -2-8-நாலாயி:521/4-கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே -கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை-ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் –3-8- நாலாயி:527/4-காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்-ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் 

அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே -5-4— நாலாயி:548/3-பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
5-8- – நாலாயி:552/2,3-பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை –அதாகிறது -இன்றியமையாமை ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம் நானும் அவனும் அறியும் அத்தனை அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்–கச்சங்கம் -பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை–சமயம் பண்ணின இடம் இதுவோ என்னில் – இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்-
நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை
தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே –அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே–5-10- – நாலாயி:554/2,3-அதில் வாசி அறியாதவர்கள் என்னை நலியும் முறைமை அறிகிறிலேன்–அடிமையில் வாசி அவை அறியா விறே-அவன் அளந்த கால் வாசியும் கூட அறியாதவை இறே-ராவணன் நடுவே வந்து நலிந்தால் போலே தென்றலும் சந்திரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கு ஈடாக இருப்பதொரு முறை யுண்டாக அறிகிறிலேன்-தங்களுக்கு கடவார்க்கு -கடவாரைச் சேர்க்க முறை யுண்டு –தங்களுக்கு கடவார் -அவன் –அவனுக்கு கடவார் -அவள் —அப்படி சேர்த்து செய்த திருவடிக்கு உண்டான ஆகாரம் இல்லை-அத்தனை அல்லது நலிகைக்கு முறை இல்லை இறே-புத்ரனுக்கு உண்டான பரிவிலே கால் கூறும் இல்லை காண் -இக்காற்றுக்கு –
அவனால் படைக்கப் பட்ட இவை புத்ர ஸ்தானம் இறே –தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் –கிஷ்கிந்தா -1-105-என்று அவனும் கால் கண்ட மாத்ரத்திலே படுமது அறியானே – கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –13-4– தான் கிடக்குமா போலே இறே அவன் காலால் துகை உண்ணும் படி

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை-12-1 – நாலாயி:617/1-வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –-மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் –12-2– நாலாயி:618/1-இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது –இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே-இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம்
அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து-அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து – இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து- மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே-12-5- – நாலாயி:621/1-இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது-இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்-இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்-தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- –தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக-13-1– – நாலாயி:627/3–கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது –புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் – உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –

தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் -14-6— நாலாயி:642/1-ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்-இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்
இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் –நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –இரக்கமே சிறந்த குணம் என்று -மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது –இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் –

கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – 4-7– நாலாயி:683/2,3–ஆகாசப் பரப்புக்கு எல்லாம் சந்தரன் ஒருவனுமே யானாப் போலே லோகம் எல்லாம் தன் வெண் கொற்றக் குடைக்கீழே ஒதுங்கும் படியாக-நஷத்ர தாரா கணங்கள் சந்த்ரனை சேவித்து இருக்குமா போலே ராஜாக்கள் எல்லாம் வந்து சேவித்து இருக்கும் படி ராஜராஜனாய் வேறு பட இருந்து கொண்டாடும் சம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாய் இருக்கிறது இல்லை

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – 5-2– நாலாயி:689/2–தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – 6-1– நாலாயி:698/2-அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் –
உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து-உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –நீ யல்லது புகல் உண்டோ –
உன்னை யல்லது நான் அறிவேனோ –என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –

தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே-6-2- – நாலாயி:699/4-உன் நெஞ்சுக்கு பொருந்தின தயிர் கடைந்த படி – இவள் சொன்னவாறே இங்கனே இருப்பன சில எனக்கு வேண்டா என்ன-உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே -70-– நாலாயி:821/4-ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவஸ்யமும் போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவஸ்யமும்-பாரவஸ்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச
-என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்-பரிசம் பரமாத்மாநமநாதி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே-அமரரே யறிவரே-ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் -74— நாலாயி:825/1-தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து –அத்திருவடிகளில் ந்யஸ்தபரன் ஆதல் –வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –அறிந்து அறிந்து -என்று சாஸ்திர ஸ்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் –என்றுமாம் –

அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – –தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் -84-— நாலாயி:835/3-விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ –அன்பு உறைக்கை யாவது -பரம பக்தி உக்தனாகை –வைத்து அனுபவிக்கும் நாள் -என்கிறது -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை –இத்தால் –
இச் சேதனனுக்கு ஜன்மமும் விஸ்ம்ர்தியும் விநாசமும் -பக்தி இல்லாமை –உஜ்ஜீவனம் -பரம பக்தி உக்தனாகை -என்றது ஆய்த்து –ஜன்மம் ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய ஹேது –
விஸ்ம்ர்தி ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய கார்யம் ஆகையாலே ஆத்மாவுக்கு உபயமும் விநாசம் இறே

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே 85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –

புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – -திரு மாலை-6- நாலாயி:877/2–தேகத்தை புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு
விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –-புறஞ்சுவர் -என்கிறது-இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில்-அது தானே உத்தேச்யமாம் இறே-அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி அஸ்த்ரிமாய் இருக்கையாலே –ஓட்டை மாடம்-சொல்லுகிறார் -ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை-மாடம் -என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே-ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்-நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே
க்ரமத்தில் செய்கிறோம் -என்ன-புரளும் போது அறிய மாட்டீர் –ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்-மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது –க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –

அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – -9-நாலாயி:880/3–அற்றம் -மறை பொருள்-அறியாமைக்கு அடி ஆயிதான விருத்திக்கு மேல்பட தாத்பர்ய விருத்தி யறிகிலி கோள் –வசஸாம் வாச்ய முத்தமம் -என்றும்-வேதைச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்-நாராயண பரா வேதா -என்றும் -சொல்லக் கடவது இறே

அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் -13-– நாலாயி:884/3–மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும் திருவரங்க பிராவண்யம் வேண்டா உக்தி மாத்ரமே அமையும் –ஆகில் –என்றது –பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்-22- – நாலாயி:893/2–இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது – தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – 28-நாலாயி:899/1-ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வைகுண்டம் அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று அறியவும் முடியாது என்கை –

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய–32- – நாலாயி:903/3–உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக நீர் உபதேசித்து வைத்த மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –அவை யாகிறன –கர்ம யோகம் –தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்-உபய சாத்யமான பக்தி யோகம்-அவதார ரஹஸ்யம்-புருஷோத்தம வித்யை-அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்-புண்ய ஷேத்திர வாஸம்-இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இறே உபாய பேதமும் –இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று –34- நாலாயி:905/3–நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் சர்வஞ்ஞனாய் –சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே கூட இருந்து அறுதி என்று –

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி –38- நாலாயி:909/2–பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்னையும்-ஆம் பரிசு ஆவது – கைங்கர்யமே யாய்த்து –ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –அறிந்து கொண்டு – நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே-மேம் பொருள்மெய்ம்மைஆம் பரிசு என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –

வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் -41-– நாலாயி:912/1-பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனே –ஆகா -என்கிறது சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ – மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –அகிஞ்சனஅநந்ய கதி –
என்று இருப்பார் அறியும் அத்தை-ஈஸ்வரோஹம் –என்று இருப்பார்க்கு அறியலாமோ –

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு –5— நாலாயி:931/3–இப் பேற்றுக்கு அடி என் என்று பார்த்தார் —இந்திரியங்களை ஒறுத்து மஹா தபஸை பண்ணினேனோ அறிகிறிலேன் –நான் அறிய ஒன்றும் இல்லை –இப்படி சங்கிப்பான் என் என்னில் –பெற்ற பேறு அப்படிப்பட்டாருக்கு கிடைக்குமது யாகையாலே –அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ்ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் —கோரமான தபஸ்ஸூ ஆகிறது –அத் தலையாக தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை
எந் நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே -என்னுமா போலே-

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி -2- – நாலாயி:938/3-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் – மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்
மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்
ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –நான் அப்படி இருப்பதொரு ஸ்வாமி யுண்டாக வ்யுத்பத்தி பண்ணி வைக்கில் அன்றோ வேண்டுவது-தேவு அறிவன் -ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

எண் திசையும் அறிய இயம்புகேன் -7- நாலாயி:943/3-விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்-எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்-அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – 1-1-7-நாலாயி:954/1—அவர்கள் கார்ஹஸ்யத்தில் நின்ற நிலை அறியிகோள் – அவர்கள் ஜன்மம் அறியிகோள்-இவர் அவர் என்னீர்  -ஒரே சொல்லாய் -ஒருவர் வாசியும் அறியீர் என்னவுமாம்-பண்டு தரித்ரனாய் கிலேசப்பட்டு போந்தான் ஒருவன் இப்போது ஜீவிக்க புக்கால் இது இவன் அளவு அன்றிகே இருந்தது -இது வேறு ஒருவன் அடியாக வேணும் -என்று அறிய மாட்டாதே ஸ்ரீயபதியைப் போலே- பிறப்பே பிடித்து ஸ்ரீ மானாக போந்தானாக நினைத்து இருப்புதி கோள் –

அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி -—1-3-3–ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – 1-3-10--நாலாயி:977/4-ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்-அன்றிக்கே-நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்-இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம் அவ்வோபாதி ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –ஆன பின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-

ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள -1-5-10– நாலாயி:997/3-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – -1-9-3-நாலாயி:1030/2,3-இட்டறியேன் என்பது அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே

மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே -1-9-9-– நாலாயி:1036/2-பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே பாபங்களையே பண்ணி பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –
அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி-

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே -1-10-8– நாலாயி:1045/4–ஆய –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது –இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – 2-3-7-நாலாயி:1074/4-ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-(பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்-–2-7-1- – நாலாயி:1108/2-வடிவு அழகாலும் பருவத்தாலும் பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –அவளுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமான மார்பு ஆயிற்று –
அகலகில்லேன் இறையும்-என்கிற படி – இம் மார்பில் இருப்புக்கு ஏதேனும் இழவு வரில்
செய்வது என் என்று துணுக்கு துணுக்கு என்று ஆயிற்று வர்த்திப்பது –இருந்தால் கலந்தாளாய் பின்னை பிரிவும் பொறுக்க மாட்டாள் –( இருப்பதும் கலப்பதும் வேறே வேறே இல்லையே -தொழுவதும் எழுவதும் ஒன்றே போல் )அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள் என்ன ஒண்ணாதே – அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-அவளும் அங்கே இருக்கச் செய்தே எனக்கு இழக்க வேண்டுகிறது என் -என்று அது தானே இவளுக்கு ஆசைக்கு உடலாயிற்று – அதுவாயிற்று இவளுக்கு ஆசைப்படுகைக்கு ஆலம்பனம்-(அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும் அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம் )

அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து -2-8-4
– நாலாயி:1121/2,3-இதுக்கு முன் பயம் வுயுத்புத்தி பண்ணி அறியாதது பயப்பட-அதினுடைய கொம்பை குப்பைக் கீரை பிடுங்குமா போலே அநாயாசேன வாங்கும் ஆனை வாசி அறியாமையாலே
பலித்துக் கொண்டு நின்றது இத்தனை-அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – 2-8-6-நாலாயி:1123/1–ஆபாத ப்ரதீதம் மாதரம் அன்றிக்கே நம்முடைய இயற்றி எல்லாம் கொண்டு
இவரை உள்ள அளவு எல்லாம் அறிய வேணும் என்று பார்த்தால் (அறிந்து அறிந்து தேறி தேறி ) ஒன்றும் அறியப் போகிறது இல்லை-அட்டபுயகரத்தேன் என்றாரே–நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்றார்-உனக்கு பற்றுக்கோடாக இருக்கவே இப்படி சேவை

நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே––2-8-9-
– நாலாயி:1126/3,4–இவர் பார்க்கிற பார்வை விபாகத்தில் நம்மை முடிக்கும் போலே இரா நின்றது சொன்ன வார்த்தையை கிரயம் செலுத்துவாரைப் போலே இரா நின்றார் –
அது ஒரு உக்தி மாத்ரம் ஆகாமே அத்தை அர்த்த க்ரியா காரியாக்கி நினைக்கிறார் போலே இரா நின்றது –இவர் ரஷகராய் இருக்கிறாரோ- நம்மை முடித்தே விட இருக்கிறாரோ –
அறிகிறிலேன்

ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல–3-3-7- – நாலாயி:1174/1-ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்-அஞ்சன மலை -விசேஷணம் யானைக்கும் கண்ணனுக்கும் வேழப் போதகம் அன்னவன் அன்றோ-எவர் இவை செய்வது அறிவார் இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்-அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே-ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி

பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே ––3-6-2-– நாலாயி:1199/4–(பணி செயல்-உக்தி- சொல் ஓன்று பணித்தது உண்டு போல் )
1-என்னை அணைக்கையே தொழிலாய்-இங்கு ஏற வருகையில் ஒருபடிப்பட்டு இருக்கிறானோ
அன்றிக்கே-2-ஜாம்பவதி போல்வார்க்கு பூப் பறித்து தொடா நிற்குமோ அறியேன் –
அன்றிக்கே-3-பணி என்று சகுந்தலையை உபேஷித்த துஷ்யந்தனைப் போலே
அறியாமை பாவித்து இருக்குமோ -அதுவும் அறியேன்
அன்றிக்கே-4-நா விலும் பல்லிலும் நீர் அற்று -என் செய்தாள் – என் பட்டாள் –
என்று கேட்கிறானோ
உக்தியிலும் கிரியையிலும் கொள்ளக் கடவது – அவன் படி நிச்சயிக்க ஒண்ணா விட்டாலும்
நமக்கு அவனை ஒழிய செல்லாது இறே –

கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே –3-6-3– நாலாயி:1200/4-அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் – நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம் அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து வார்த்தை சொல் என்றுமாம் –மிகச் சொல்லில் அவனைக் கிடையாது-அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் – நாம் முடிந்து பிழைக்கும் படி —

ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே –3-6-4- நாலாயி:1201/4-திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு
(சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் )
அன்றிக்கே -அறியச் சென்று உரை – உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய அவன் அறிந்து நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி சென்று சொல் என்றுமாம் —

கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -3-7-1–– நாலாயி:1208/1-சோரேண என்று இவனுடைய ஆத்மா அபஹாரத்தோபாதி யாய் இருக்கிறதாயிற்று
உடையவன் தன்னுடைய உடைமை கொண்டு போனதும் – என்னது என்று போந்த வாசனையாலே-உடையவன் உடைமை கொண்டு போனானே யாகிலும் காணும் பொழுதே எடுத்துக் போகையாலும் – கள்ளன் என்ற இது மமகாரத்தின் ஊற்றத்தாலே-
(மம ஸூ தா -மமகாரம் விட்டவனுடைய மமகாரம் இது குண சம்பூர்ணத்தால் சொல்ல வைத்ததே )காத்துக் கிடக்கிற தான் அறியாள் ஆகில் கொண்டு போனவனைப் போலே காணும் கேட்பது –

தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் —3-7-4-– நாலாயி:1211/2,3–உகவாதார் இருந்த இடத்தே -வெறும் கையே செல்லுமவன் உடைய ஊர் ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்
இடையனாய் பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்
எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –ஆழம் காலை மிதப்பு என்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால் தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-

தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -4-9-4-– நாலாயி:1331/2–சேஷ பூதன் சேஷியை ஆசைப் பட்டு ஏத்துகை முறை அன்றோ என்று இருக்கை அன்றிக்கே
இது தன்னை அவத்யமாய் உப பாதிக்கும் படியாக வந்து விழுந்தது–உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர் எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம் இப்படி விளைவது அறிந்தோம்  ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே-லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்–இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான் தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான் ஆறி இருக்கிறீரோ(அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே
-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே  –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே -4-9-7-
– நாலாயி:1334/1,2-சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்- (கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ )

விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே-4-10-8– – நாலாயி:1345/4-அங்கு உள்ளாருக்கு திவாராத்ரா விபாகம் பண்ண ஒண்ணாத படியாய் இருக்கும் ஆய்த்து இவை தான் ஒரு கால விசேஷங்களிலே உண்டாகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-அன்றியே இவருடைய உகப்புக்கு அவதி இல்லாமையாலே ஆகவுமாம்-உகந்த விஷயங்களில் எல்லா நன்மைகளும் உண்டாகத் தோற்றும் இறே –

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – –5-1-1-நாலாயி:1348/1-ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்-என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்-அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே-அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் 

மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் –5-4-9— நாலாயி:1386/2–தூரஸ்தனாய்
சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பு ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-பசுக்களை மேய்க்கும் அவனோ தான்-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற
பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்-ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை
என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   –அறிகிறிலேனே-கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை-என்னால் அறியப் போகாது – திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -நாள் மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – -5-5-5–நாலாயி:1392/3-ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது(தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம் -இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி-இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )நாம்  அறிய – இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
(தூறு வார வேண்டுமோ-ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர்
ஆஷேபமே இல்லையே )

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8--நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள் என்னால் பேசி முடிக்கப் போகாது  –ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால்-இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ-

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால் இதுக்கு மேல் என்னால் போக்கடி தேடப் போமோ

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – 5-7-6-நாலாயி:1413/3–அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும் அநந்தரம் திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து
திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – -–5-8-3--நாலாயி:1420/3-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே-சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – 5-8-4-
நாலாயி:1421/2,3–பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து அவனை இட்டு ரஷிப்பித்தாய்- ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது -ந ஷமாமி
நத்யஜேயம்-என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு–அவனை இட்டு இறே ரஷித்தது-தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே-தானே ரஷிக்க வல்லனாய் இருக்க- நம் கையிலே காட்டித் தருவதே என்று
இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது-இனி இருவருக்கும் அந்யோந்யம்
ரஷ்ய ரஷக பாவம்  இறே உள்ளது- பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே–முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும் பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –தன் கையிலே காட்டிக் கொடுத்தால் ரஷிக்க வேண்டுகிறது சேஷியினுடைய நினைவே நடக்க வேண்டுகை யாலே இறே- சேஷ பூதர் இருவருக்கும் வந்த விரோதத்துக்கு சேஷி உடைய முகம் இறே வாடுவது-

வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – 5-8-9-நாலாயி:1426/3-அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது (பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )-பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )அடியேன் அறிந்து –
இவர் உடைய நான் இருக்கிற படி (நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம்
ஆழ்வாராதிகளுக்கு மாற்றியே உண்டே )

அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்–5-9-8– – நாலாயி:1435/1-ஓர் இடைச் சேரி மாத்ரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய

அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் –5-10-9-
நாலாயி:1446/2,3-அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ சேஷ பூதர் ஆனவர்கள்
பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம் அனுபவியார்கள்-அறிதியேல் – சைதன்ய பிரசுரமாகில் –

அறிவு அரும் நிலையினையாய் – -6-1-6–நாலாயி:1453/3–சதுர் தச புவநேஸ்வரனான சதுர்முகன் தொடக்கமான ப்ரதானர் ஆனவர்களாலும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையாய்(யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத இத்யாதி )

அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி-6-2-4- – நாலாயி:1461/2–(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்
த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –-இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று

தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6— நாலாயி:1473/4–தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்-7-2-4- – நாலாயி:1561/3–சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து-அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
பரம பதம் போலே இடம் பெற இருந்து-என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள-இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை -7-3-3- நாலாயி:1570/1–பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே –(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் ) என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் -திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்–அனந்தன்  பாலும்  கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்-இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு   அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே –7-4-7 நாலாயி:1584/4–ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை அனுசந்தித்தேற்கு  –ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான
வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –

அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-2–நாலாயி:1609/4-வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று –
உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-3-நாலாயி:1610/4-நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-5-
நாலாயி:1612/3,4-இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல் பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —

ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-6-நாலாயி:1613/4-காலம் நீ இட்ட வழக்கு அன்றோ – உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்-அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு  அன்றோ
நீ இங்கே வந்து நிற்கிறது –

தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-9-
நாலாயி:1616/3,4–ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே- உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் –

உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே -7-9-3— நாலாயி:1630/4-சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –

சிறு புலியூர் சல சயனத் தானாயனது  அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே-7-9-4- – நாலாயி:1631/4-கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி அவ்வதார்ரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் – அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –

தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே-7-9-7- – நாலாயி:1634/4-உன் திருவடிகளில் அசாதாரணராய்  இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )

தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே -8-5-2– நாலாயி:1689/4-ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் –தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ-அவன் போனாலும் அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி
உண்டாகில் நான் ஜீவியேனோ-அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று –நாயகனோ வந்து அணைகிறிலன்-இனி எத்தைச் செய்வது –

கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே -8-5-6-– நாலாயி:1693/4-தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே-அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்-அன்றிக்கே-கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்-அன்றிக்கே
அந்த சந்த்யா காலமானது – கரிய நாழிகை -அந்தி  காலம் –ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  –இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே -8-5-7- நாலாயி:1694/4-இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள குழல் ஓசையுமாய்
என்னை முடியா நின்றது –(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )

தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே-8-5-8- – நாலாயி:1695/4–பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும்-கொடியதோர் கடு வினை அறியேனே –அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே-அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் –இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –(வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் -அம்பில் பட்ட பாடே போதுமே -இதுவே பெரிய நரகம் –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் )

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த-8-5-10- – நாலாயி:1697/2-அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீட்டைப் புத்தி பண்ணி அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  –

எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ–8-9-5– – நாலாயி:1732/2–என் ஸ்வாமி யானவனே – ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்-நித்ய ஸூரிகள் பக்கலில் போவதாகவும் நினைக்கிறது இல்லை –இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என்-

அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – -8-10-10-நாலாயி:1747/4-இவற்றை நிதியாகக் கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது – அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்-சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )-இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –

தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு –9-2-6- நாலாயி:1763/2–ஒப்பித்து இருக்கிற பெண்கள் உடைய நெஞ்சை தமக்கு அபாஸ்ரயமாக
உடையவர் போலே இரா நின்றார் –என்னால் ஒன்றும் சொல்லலாய் இருக்கிறது இல்லை –
தாமரைக் கண்கள் இருந்தவாறு –அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே –(நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – 9-2-7-
நாலாயி:1764/1,2–என்னால் இவர் படி பரிச்சேதிக்கலாய்   இருக்கிறது இல்லை –பணியும் என்னெஞ்சம் –என் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே என் நெஞ்சானது வணங்கி நில்லா நின்றது-இது என் கொல் தோழி--உன்னை அறியாமை வருவதொரு நன்மை இல்லை இறே எனக்கு நாம் இவரிடை யாட்டம் நினைத்து அறிவுதுமோ –பண்டிவர் தம்மையும் கண்டறியோம் –பழைமை யாலே செய்கிறது ஒன்றும் சொல்லவுமாய் இருக்கிறதில்லை –

மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – 9-2-9-
நாலாயி:1766/2,3–மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே    பள்ளி கொள்கிற ஆச்சர்ய  பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் –
கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள்-9-4-3- – நாலாயி:1780/2–நாயகன் பிரிந்து போகிற போது தோளில் இட்டதொரு மாலையிலே ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று – நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு இத் தலையை உதறிப் போன படி –நம்மாள் அங்கே நின்றதாகில் ஆசை அற்று வந்தால் அன்றோ நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ –நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –

நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – 9-5-6-நாலாயி:1793/2–அவர்கள் விலஷணைகள் அன்றோ – ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள் என் சொல்லாதார் –நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை –
நம்முடைமை நம் கையதாகில் அன்றோ நமக்கு ஸ்மரிக்கல்  ஆவது –அவர்களுக்கு ஸ்த்ரீத் வாதிகள் குறி அழியாது இருக்கையாலே சொல்லலாம் –நம்முடைய ஸ்த்ரீத் வாதிகள் நம் கையில் இல்லை –

ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – –9-5-7-
நாலாயி:1794/3,4-அவன் பிரிவை உணர்த்தினான் – காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்-வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்-அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் –9-5-8- நாலாயி:1795/4-அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்-அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – 9-5-9–நாலாயி:1796/2-போனாலும் ஆறி இருக்கலாம் இறே போன ஊரைச் சொல்லிப் போனான் ஆகில் –அவன் சொல்லிப் போகாமை இல்லை –இவள் குறிக் கொள்ள மாட்டாமை இழந்தாள்-இத்தனை இறே-இங்கு இருந்த நாள் அவன் வாய் வெருவும்படி அறிந்து இருப்புதோமே-அத் தேசத்திலே என்னைக் கொடு போய் பொகடப் பாருங்கோள்   –

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – 10-2-2-நாலாயி:1859/2-ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் –அறிவு கேடரான நாங்கள் 

யாயும் பிறரும் அறியாத யாமத்து -10-5-8- நாலாயி:1895/1–பெற்ற தாயும் மற்று உள்ளவர்கள் ஒருவரும் அறியாத நடுச்  சாமத்திலே –

அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை-10-8-7- – நாலாயி:1928/2-முருடராய் இருப்பார் அன்றோ உம்முடைய் செவ்விக்கு இட்டுப் பிறந்தவர்கள் – ஆசை உடையார்க்கு கிடையாது இறே –இரவு கலக்கிற போதே நினைவு ஒன்றும் -செயல் ஒன்றுமாய் -இருந்தது என்னும் இடம் அறிந்தோம் –உம்மை நீர் அறிந்தால்-காலத்தைக் குறித்தோ போவது-எங்களை அறிந்தால் -சொன்ன போதிலே வர வேண்டாவோ-எல்லே –உறவு முறையாரைப் போலே
நீர் கவிழ்ந்து இருக்கிறது என் – இங்கே வாரீர் –இது என் இது என் இது என்னோ –உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –

அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் –—10-9-2- நாலாயி:1933/2–கோ கோபீஜ ந சங்குலம் -அதீவார்த்தம் -என்கிறபடியே பசுக்களும் இடையரும் நோவு படாத படி ரஷித்த ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ -அறிகிறிலேன் 

அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் -10-9-5– நாலாயி:1936/2-ஆயுதம் எடுக்க ஒட்டாமே அத் தேரின் மிடுக்கையே கொண்டு
(சித்திரத்தேர் வலவன் அன்றோ ) கேவலம் போக வரிய வீர ஸ்வர்க்கத்துக்கு போவார் இல்லாமையாலே புல் எழுந்து கிடந்தவற்றை பெரு வழியாம்படி கண்ட ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ செய்தது –

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9-
– நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய   -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –

அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
  –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே
-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு  பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-

அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய்  மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே
—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –

முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – 11-4-8-
நாலாயி:1989/1,2–முன்பு ஒரு காலத்தில் சர்வ லோகங்களும்(ஸூர்ய லோகத்துக்கு மேல் உள்ள ஏழு லோகங்களும் ) அஞ்ஞான அவ்ருத்தங்களாக துடங்கிற்று இது விடுகிறது இது என்று அறியாதே அஸ்த்தானே நமக்கு வந்ததிது என்னோ  என்று லோகத்துக்கு வெளிச் சிறப்பைப் பண்ணும் தேவதைகளும் அகப்பட அறிவு கெட – யோவை வேதாம்ச ப்ரஹிணோதி தஸ்மை (ஸ்வேதாஸ்வர )-என்று தான் முதலிலே அறிவிக்க கைம் முதலான இவ் வேதங்களும் அபஹ்ருதமாக –

அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி -11-5-4- நாலாயி:1995/1–மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு-தயிரை வருந்திக் கடைந்து உறியிலே  சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே -11-6-2-– நாலாயி:2003/4-மிடுக்கை உடைத்தான திண் தோள் ஆகிற பெரிய கையாலே பஹிரண்டங்களையும் அகப்படுத்தின காலம்-இவ்வர்த்தம் அறியாதார் உண்டோ –இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி
இவனைக் கை விட்டி கோளோ-லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதா யத்தம்
என்னும் இடம் அறியீர்களோ –

யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – 11-6-10-நாலாயி:2011/2

அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – -11-7-8-நாலாயி:2019/4-ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் –மேன்மையால் குறையற்று-சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனை –நினைத்து  அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும் இரண்டையும் அறியாதவர்கள் –

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–திருக் குறும் தாண்டகம் –10-அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ(மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* -இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்* பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே)(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-)(வடிவழகிலே யீடுபடுமவர்கள் ”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே அதிகமான ஆவல் இருப்பதனாலும்”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.)

அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – 4-நாலாயி:2055/3–ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை –
யமாத்மா ந வேத -என்று யாவன் ஒருவனை ஆத்மா அறியான் – அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி ) அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –அந்தரத்தில் -வ்யாபிகிறான்-அயன சப்தம்-அகடிகடதாக சாமர்த்தியம்–வியாபிக்கும் இடத்தில் வியாபிக்கும் காலத்தில்-அந்தரத்தில்–தேவர்க்கும் அறியல் ஆகா —என் இடம் வ்யாபித்ததை என்னாலே அறியல் ஆகா –யா  ஆத்மா வ ந வேத –யா பிரத்வி ந வேத -ஞானம் இருக்கும் ஆத்மா கூட அறிய முடியாதே–அப்ரமேயன்-தேவர்களுக்கும் விசேஷித்து -சொன்னது -ஞான சக்திகளால் அதிகம் கொண்டவர்கள்–என்பதால்–

என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – 10-நாலாயி:2061/2-நான் அடைவு பட -சாஸ்திர க்ரமத்திலே -ஓன்று அறிவேனோ –1-அமாநித்வாத்யாத்ம குணங்களை அறிவேனோ(ஸ்ரீ கீதை 13-7 ஸ்லோகம் தொடங்கி-13-11-வரை -20 ஆத்ம குணங்கள் )2-கர்ம யோகத்தை அறிவேனோ-3-ஜ்ஞான யோகத்தை அறிவேனோ-4-உபய சாத்யமான பக்தி யோகத்தை அறிவேனோ –நான் எத்தை அறிந்தேன் –உறங்குகிறவனுக்கு விடிந்தால் போலே விஷயாந்தரங்களை ஒழியவே ஓன்று அறியாதே திரியச் செய்தே உன்னுடைய வைலஷண்யத்தைக் காட்டக் கண்டேன் இத்தனை போக்கி –
சாதனாந்தரங்களை எங்கே கண்டேன் -என்கை –

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் -12- நாலாயி:2063/1-தன் கார்யம் தலைக் கட்டின படி இது –என் கார்யத்தில் இவள் நின்ற நிலை இது –இவளுடைய ஊணும் உறக்கமும் போலே காணும் -தனக்கு உத்தேச்யம் –உண்கிறிலள் -என்கை அன்றிக்கே
முதலிலே ஊணை மறந்தாள் என்கிறாள் சம்ச்லேஷ தசையில் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -என்றும்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்றும் இருக்கையாலே-ஊண் இல்லை –தத் விஸ்லேஷத்தில் உபவாச க்ர்சையாய் இருக்கையாலே ஊண் இல்லை –

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி
———3–-நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே நீயும் இவற்றை அளந்து கொண்டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில்  – சூருருவின் பேயளவு கண்ட பெருமான்– இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார் ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று-நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை-உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –அறிகிலேன் -நீ யளவு கண்ட நெறி –நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்-மகாபலியாலே பூமியை அளந்து-உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு – பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீகரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –

பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த –4-
நாலாயி:2085/2,3–இந்த்ரியங்களை விஷயாதிகளில் போகாத படி முட்ட நியமிக்க ஒருவருக்கும் முடியாது –அறிவானாம் –
ஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு ஷேபோக்தி இருக்கிறபடி

அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி -14- நாலாயி:2095/1-ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய் பின்ன ருசிகள் ஆகையாலே -அவர் அவர் -என்று அநாதரித்துச் சொல்லுகிறார் –தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –கர்மம் அடியாக வந்த ருசியும் அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –சாஸ்திரத்தின் பின் செல்லார்களே-ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்–இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே-உன்னைக் கொடு

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -22-– நாலாயி:2103/1-இது ஜகத் பிரசித்தம் அன்றோ-நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா-சிஸூ பாலனும் கூட அறியானோ

ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய –45- நாலாயி:2126-ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ-இவர்களால் அறியப் போகாமைக்கு மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –அதுக்கு மேலே –அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க நாமே அவனை அறியப் புகுகிறோம்-அங்கன் அன்றிக்கே அது கிடக்க நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் – அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

ஆரே அறிவார் அது நிற்க நேரே –56- நாலாயி:2137/2-என் நாயகன் ஆனவனை யார் தான் அறிவார்-இவருக்கு அவன் தானே காட்டின படி –அவ் விடை யாட்டம் கிடக்கிடீர்-அறிவார் கிடக்கிடீர்-அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ –சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –

பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு -60-
நாலாயி:2141/3,4–ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்-உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது-அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது-இத்தால் அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி-சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து –84-
நாலாயி:2165/1,2-எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர் அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ-ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-

படி கண்டு அறிதியே பாம்புஅணையினான் புள் – நாலாயி:கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – 85-நாலாயி:2166–அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அன்றிக்கே அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்-படி -என்று திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –பாம்பணையினான் கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே
புட்கொடி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –

நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு-87 – நாலாயி:2168/4-நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின- திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –நாவலம் சூழ் நாடு –ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி – பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் – சப்தாதி விஷயங்களினுடைய  பொல்லாங்கையும் அறிந்து – சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு  இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –ஸ்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ்ஸூ-அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி-அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –காண்பரே –தம்முடைய நோயாசை -நப்பாசை –காரோத வண்ணன் –அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –காண்பரே –இது நிச்சயம் –

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – 16-நாலாயி:2197/1,2–பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் – ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே இவ்வாத்மா தனக்குக் கூறுபட்டது சேஷத்வம் –எம்பெருமானுக்கு கூறுபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் – ஆத்மதாஸ்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் – சம்யக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்-இப்படி பிரமாண பிர சித்தியாலும் ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள்   எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான் வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்-மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும் ருசி மாத்ரமே உடையானாகை என்றும் ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்-ஓன்று பட்டரது-ஓன்று திருமலை நம்பியது-ஓன்று ஆழ்வானது-

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று –36-
நாலாயி:2217/2,3-அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும்
பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது பின்னையும்  பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்-நாம் இனி அறிவுடையார் போன வழி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது –அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன்-நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் – அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்-எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-

தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் –38- நாலாயி:2219/2-எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு – நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து –இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–-எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய திரு நாமத்தை யேத்துகை-சாங்க அத்யயனத்தைப் பண்ணி-வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்-அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்-ஒத்தினுடைய சங்கரஹம் லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –

ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் –40– நாலாயி:2221/3,4-பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை – ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்களால்  வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை-மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே-பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை -அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும் பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே-பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே-வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்

செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த-52- – நாலாயி:2233/2–மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் – அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால்  சாலவதிகன் –அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –அந்த  ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –அவன் அகவாய் அறிவார் யார் –புறவாய் அறிவார் யார்–எம்பெருமான் தன்னைக் கூடு பூரித்து வைக்க அறிவாராய் பெறு கிறிலோம்-

அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது -53– நாலாயி:2234/2-அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு-சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-
நாலாயி:2236/3–தேவரை ஒரு காலமும் மறந்து அறியேன் -கண்டால் இழவு மறக்கும் படி இருக்கை-அதுக்கடி-ஸ்ரவண மநந  நிதித்யாசன அநந்தரம் பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதியாலேயோ   மறவாது ஒழிகிறது -என்னில் –எல்லா ஜன்மங்களிலும் -எல்லா அவஸ்தைகளிலும்-தேவர் எதிர் சூழல் புக்கு நின்று இவன் நம்மை மறவாதே பெற்றிடுவானுக்கு என்று அனுசந்திக்கிற இவ் வனுசந்தானம் ஒரு நாளும் மறவாத ஸ்வ பாவத்தாலே இப்பொழுது நினைத்த படியாலே எல்லாக் காலமும் மறந்து அறியேன் -என்கிறார்-எம்பெருமான் விடாதே இருக்கையாலே மறக்க விரகு இல்லை –
என்னுடைய ஞானம் குறைவற்று இருக்கை அல்ல -உன் நினைவாலே –இவனுடைய ஞானமும் பண்டாரத்து நின்றும் புறப்பட வேண்டி இருக்கிறபடி –தர்ம பரதந்த்ரமான மாத்ரமே யல்ல -ஆத்மாவினுடைய தர்மபூத ஞானமும் பரதந்த்ரம் –சத்தை பராதீனமான போது ஞானமும் பராதீனமாய் இருக்கை-இத்தால்-ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியாலே யன்று -நீ யாகிற சித்த உபாயத்தாலே என்றபடி –நாம் செய்த அம்சம் செய்தோம் இறே -எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ என்ன-பிரபல பிரதி பந்தங்களைப் போக்குகைக்கு ஈடான பரிகரத்தை யுடையாய்-அதுக்கு மேலே உன்னை அறிவுதி -என்னை அறிவுதி-என்னாலே உன்னைப் பெற ஒண்ணாது –உன்னாலே உன்னைப் பெற வேணும் என்னும் இடம் நீயே அறிவுதி –சர்வஜ்ஞன் சர்வ சக்தி அல்லையோ –இத் தலைக்கு அஜ்ஞ்ஞான அசக்திகள் போலே அத்தலைக்கும் ஞான சக்திகள் ஸ்வரூபமாகை- உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு வைகல்யம் காண்கிறிலேன் -ஆன பின்பு பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக்   கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்-ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-எண்ணப் பண்ணி அருளவும்  வேணும் – கண்டால் பிறக்கும் ஸூ கத்தையும் பண்ணித் தந்து அருள வேணும் அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று–-60- – நாலாயி:2241/3–ஜகத் காரணாமாய் இருப்பது என்னும் இடத்தை அறிந்தவர்கள் கிடீர் –எல்லார்க்கும் சத்தை அவன் என்று அறிந்த வைஷ்ணவர்கள்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார் ஆகிறார்-ஸ்வ தந்த்ரன் என்னா ஜகத்து கை விட்டுப் போம் –எளியன் என்னப் பிழைத்துப் போம் –அருமை சொல்லுகிறவர்கள் ஜகத்தை வெளிப்படுத்துகிறார் –அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –

பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்-62- – நாலாயி:2243/1-இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் –அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை-அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது
என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து –நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன்  –

போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த-72- – நாலாயி:2253/1-காலம் அறிந்து –ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –

ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – 76-நாலாயி:2257/3–ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன்-உபாய  வஸ்து ஏது என்ன –
காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே -இப்படி உபாச்யனுமாய் –
இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை-கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில் இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை -87-– நாலாயி:2268/1-இன்றாக அறிகிறேனோ –இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் –பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை -88– நாலாயி:2269/1-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –

நூல் கடலான் நுண் அறிவினான்–மூன்றாம் திருவந்தாதி 11- – நாலாயி:2292/4-கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன் 

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – -மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -12-நாலாயி:2293/1-வ்யதிரிக்த விஷயங்களில் மனஸ் ஸூ போகாதபடி-அறிவாகிற தாளைக் கொத்துத் திண்ணிதான ஸ்ரவண ஜ்ஞானத்தை மூட்டி –

இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய -56-– நாலாயி:2337/2–இறையினுடைய திரு நிறமானது வெளுத்து இருக்கும் சிவந்து இருக்கும் கருத்து இருக்கும்
பச்சென்று இருக்கும் என்று கொண்டு ஆராயும் இடத்தில் நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது –எண்ணாதே பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில் நிற்கும் இத்தனை –ஸ்ரீ யபதியினுடைய சம்ருத்தியைச் சிலராலே பேசப்போமோ- அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ-அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை – அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ என்றபடி –

வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் -59-– நாலாயி:2340/1-வாழும் பிரகாரம் அறிந்து கொண்டேன் –சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத்து இது வென்று
வ்யுத்பத்தி பண்ணினேன் –புத்தி நாசாத் ப்ரணச்யதி -கீதை -2-62/63-என்னும் படியே –
சப்தாதி விஷயங்களை விநாச்யத்துக்கு உபாயம் அறிந்த இத்தனை இறே முன்பு
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் மொழி -6-9-9-என்னும் படியே – பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
யதி ஜீவிது மிச்சசி -சுந்தர -21-20- மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப – விநாசத்தை பண்ணினாலும் விட ஒண்ணாது –

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-நான்முகன் திருவந்தாதி –1- நாலாயி:2382/3-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –ஆழ்  பொருள்-மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3
— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து  அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை

————–

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-–:2386/4-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-இத்தை புத்தி பண்ணு

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி-13- – நாலாயி:2394/1-மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு மோஷத்தைத் தருவிக்கும் மெய்யான உபாயமும் வேதை க சமதி கம்யனுமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-

மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம்–50- – நாலாயி:2431/2–எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும் கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும் அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும் காரணம் அறிந்தேன் –திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை –70– நாலாயி:2451/3-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன் இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த –73- நாலாயி:2454/1–சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –

தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை–77 – நாலாயி:2458/1-என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –

பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் -89-– நாலாயி:2470/1—பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன் பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –-அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் –
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் –
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை –
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –
நாலாயி:2477–ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நான் அழகிதாக அறிந்தேன் –

காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-7- – நாலாயி:2484/4-குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன் சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –

பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – 8-
நாலாயி:2485/2,3-தன் உடைமைக்கு  தான் செய்யும் அளவன்றிக்கே பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்

ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே -10– நாலாயி:2487/4-இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்-அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ  – நாவலோ நாவல் -என்றால் போலே –என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில் உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த-15- நாலாயி:2492/2-தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும் அயலார் என்கிறாள் — பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் -அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது-அறியிலும் அறியக் கூடாது என்று இருக்கிறாள்-
இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே , அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா – இன்னார் என்று அறியேன் என்பாரை போலே
கிட்டின போது சம்சயமாய் , உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–
பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே -34– நாலாயி:2511/4-க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம்  – பலம் அவன் தன்னாலே இருந்த படி-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை-41– – நாலாயி:2518/1–சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்
சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே —ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று –பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி-இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி வாடை என்று இந்த வியக்தி -இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண -49-– நாலாயி:2526/2-இவ்விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது – இவ்விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் –56- நாலாயி:2533/3–தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது – இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே சம்ஸ்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக (மறைத்து )சொல்லுகிறாள்  –அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை –74- நாலாயி:2551/2-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக –  நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –

தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – 83-நாலாயி:2560/4-இத் தையலுக்கு  உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –
இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே – முடியிலாகாதே -இவளுக்கு   பிழைக்கல்  ஆவது -அறிகிறிலேன்-

எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து -1- நாலாயி:2578/11–அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி – அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்- சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்-அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும் இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் – த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் – திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –

கடவுள் நிற்ப புடை பல தான் அறி-தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல்
தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–-பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை-பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று

இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் -3-பெரிய திருவந்தாதி- நாலாயி:2587/2–புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்-த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்-என்னால் பரிக்ரஹவும் போகாது த்யஜிக்கவும் போகாது

முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய்
– 6-நாலாயி:2590/2,3-அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி
–14-நிறத்தால் கரியனாய் யுள்ளவனை-ஆழ வநுபவிக்க அறியாராய்(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் ) ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்–நீ யார் போய்த் பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே-ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து-அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார் உனக்கு அண்ணியளோ பூதனை அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் – ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து) உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —

சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – -16-நாலாயி:2600/4–நீ இப்படி எளியையாய்-அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

தொல் உருவை யார் அறிவார் சொல்லு -18- நாலாயி:2602/4–இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் ) காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே பழையதான உன்னுடைய வடிவை -ஸ்வரூபத்தை-வேறு சிலர் அறியப் போமோ-நீயே சொல்லு-பரிபவம் பண்ணின போதோடு பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ – நீயே சொல்லு

சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே -19- நாலாயி:2603/1-பகவத் விஷயம் நன்று என்றும் விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும் விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு (விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம் -எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )

காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் – 20-நாலாயி:2604/1-நாம் அறியாதே காணப் புகுதல்-அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால் அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27–இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ-திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ-செறி கழல் -என்கையாலே-திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்-நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே திரு முடியிலே முத்து உண்டாகையாலும்-அடியிலே படியை அளந்தன முத்துக்களோ முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ-உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் சாத்தின முத்தாதல்

அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் -31– நாலாயி:2615/1-புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய் ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்

யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ -33– நாலாயி:2617/1-ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே அவனை அறிந்ததாய் விடும் –இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும் ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால் இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே -37-நாலாயி:2621/1-வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றேயுக்தமான அறிவுடையாராகை கிடையாது-ஆமாறு -ஆறு -வழி-நாம் நல்ல அறிவுடையோம்-(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்-வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை-நெஞ்சே-அறி கண்டாய்-சொன்னேன் உனக்கு அத்தை-1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்-2-போக்யனுமாய்-3-வகுத்தவனுமானவனை-அறி என்று சொன்னேன்-இது சிலருக்குச் சொல்லுமது அன்று-இத்தைப் புத்தி பண்ணு

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு –75-
நாலாயி:2659/3,4–உபய விபூதியை யுடைய நீயோ
விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்–சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
-நாலாயி:2672/19-–கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது- ஸர்வ பல பிரதத்வம்முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை– – நாலாயி:2672/21–தேவர்களாலும் அறிய முடியாத பெருமை-தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும் ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் – அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது -அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்- அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது ––நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –நாலாயி:2672/28-புருஷகாரம்– –தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் – எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/45-நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்-உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து – நாலாயி:2678/5–பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவாரும் சொல்லும் வார்த்தைகளை கொள்ளேன் –கேட்கைக்கு பரிகரம் இல்லாமையாலே

ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3-தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்–இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன் இந்த்ரன் படி கேட்கிறாய் வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இறே
அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும் மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் -கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகேனோ – நாலாயி:2684–இவள் நோய் படும் காட்டில் உங்களையும் மறக்க வேணுமோ
உங்கள் வயிற்றில் பிறந்தாரை அவர தேவதைகளால் நோவப் பார்க்க ஒண்ணுமோ-நாய் தீண்டிற்று இல்லை –ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள் -உமக்கு அறியக் கூறுகேனோ – இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும் நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று – நாலாயி:2685/10-இவனுக்கு வேறு ஒரு நினைவு இல்லை -உறக்கமோ -என்று தோன்றக் கிடந்தபடி –அறிவுற்று –சில அசித் பதார்த்தங்களுக்கு அறிவு குடி புகுந்தால் போலே இருக்க உறங்கி உணர்ந்தானாக இருந்தபடி –அவள் போனவாறே உறங்கி உணர்வார் உணருமா போலே உணர்ந்த படி –
நடுவே வந்து அவள் புகுந்தாலே யாகிலும் உறங்கினவன் உணர்ந்தான் -என்று அவளுக்கு தோற்ற கிடந்தான் என்றபடி – அறிவு குடி புகுந்து மூரி நிமிர்வது கொட்டாவி கொள்வதாய் யுணர்ந்த படி –

தண் வாடை சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2–நஞ்சூட்டின ஆயுதம் போலே குளிர்த்தியை யுடைத்தான வாடை–சோரவும் பண்ணா நின்றது
மறுக்கவும் பண்ணா நின்றது-திரள சோரப் பண்ணா நின்றது என்று சொல்லும் இத்தனை ஒழிய செய்கிற வகைகள் பேச்சுக்கு நிலம் அல்ல –

காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க – நாலாயி:2704/2–இங்கன் சொல்லலாமோ – பத்து மாசம் ஆறி இருந்திலளோ ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் அப்படி இரா விடில் போல்லாதாகாதோ -என்னில் பேர் ஆழமான கடல் போலே ஆசை கரை புரண்டு போரா நிற்க – பொல்லாங்கு சொல்லுவார்கள் -என்று ஆறி இருக்கப் போமோ – ஆறி இருந்தவர்களுக்கு ஆசை அளவு பட்டதாம் இத்தனை இறே –
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே ஆற்றலாமோ அவ்வடிவைக் காண வேணும் என்னும் ஆசை கரை புரண்டு இருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞானத்தால் ஆற்றினார் உண்டாகில் அவர் ஆசை மட்டமாம் இத்தனை இ றே –

இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார்  என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5–இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – மோஷத்து ஏறப்  போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே ஸூகோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை – நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை
ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை  –உண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2-மோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே இதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள் அதுக்கு அடி அறிவு கேடராகை –மேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி அல்ப மனாக்கள்

தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4–அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –

அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3-சொல்ல வாய் வேம் தன்மை அறியாதார் – தலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும்  என்று அறியாதார் –குழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –ப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –அந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –

முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3-ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள்  ஆகில் தவிருகிறிகோள்  – பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
– நாலாயி:2756/4,5-அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில் பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம் இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-வெறும் தரையாகப் போந்தேன் வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி-

மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4-சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று கடலைச் சரணம் புக என்றால்  போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள்  -என்று பட்டர் –

தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1-சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே – அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-மருங்கே நின்றது அறியாதே அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்-அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-என்னுடைய நெஞ்சும் அறிவும் –ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர் அறிவை இட்டு வைக்கைக்கு கலமான  என் நெஞ்சும் –

தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2-சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே வையும்படியாய் இருக்காய்- பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்
அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை – நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –

என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4-மடலிலே துணிந்த படி –என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –
உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று  தாயே தந்தையே  யில் ஆசைப் பட்ட படியும்-ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்-என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்
கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6–ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று-ஒருப்பட்டு மோகன்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்
வெருவாதாளிலே-5-5–
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்
தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்
கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்
சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –
தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு  பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்-தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்
கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று
நாழிகை ஊழியில் பெரிதான படியும்
காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்
தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்
மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே
திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-
தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4-இவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்-நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்-இனி அதுக்கு உனக்கு என் -என்ன-லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்-பொரி புறம் தடவி தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –

உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1–நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)-அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு-பரகால நாயகியாகிய நான்-முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.

உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-2- – நாலாயி:2792/4-விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடைய-திருவடிகளிலே –இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு- திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது- இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-

அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே -19- நாலாயி:2809/4-இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –அன்றிக்கே –இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –ஸ்ரீ எம்பெருமானார் –அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும் செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து – கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி 

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு -25- நாலாயி:2815/2-தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே -57- நாலாயி:2847/4-எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –பிரத்யஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி –த்யஜபட தூரதரென தான பாபான் –என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது .-இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே
ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து – தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின் இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்– தெரிந்து விட வில்லை வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–

உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே -59– நாலாயி:2849/4-தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று –அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு –அறியத் தக்கார் இல்லை –பிபேத் அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே- அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –இங்கனம் உயிர்களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-
யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும் உபயோகப் படுத்திக் கொள்வதனால்-
உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .

ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே-79- – நாலாயி:2869/4-பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே –அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே தலைக் கட்டிற்று –சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத ஸூஹ்ருதர்-ஆகையாலே அவர்களுக்காக ஸ்ரீ அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –ஸ்ரீ இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை தேடுவது – அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க-தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின் கிடைக்கப் பெறாமையின் – மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை-நல் அறிவைத் தரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே என்று இரங்குகிறார்-அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது சொன்னாலும் புரியாது . இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார் 

சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் –85- நாலாயி:2875/2–வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் – வேத வேத்யே பரே பும்சி -என்றும் – வேதே ராமாயனே புண்யே -என்றும் ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே–என்றும் சொல்லுகிறபடியே-வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் – ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் – என்கிறபடியே நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை –
பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே –வேதத்தின் உட் பொருளும் -அதன் உச்சியில் மிகவும் பிரகாசிக்கும் ஸ்வயம் பிரகாசமான வஸ்த்வுமான ஸ்ரீ இறைவனை வேதியர்கள் ஓதி இருந்தும் -அவர்களால் ஓதப்படுவது ஸ்ரீ இறைவனைத் தெரிவிக்கும் நூலாய் இருந்தும் – நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று அவ் இறைவனை அறியாது புறம்பே தொண்டு பட்டு உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .-பிரதானம் ஆகிய அசித்துக்கும் -ஷேத்ரஞ்ராகிய சித்திற்கும் -அவனே பதி என்று அறியாமையாலே
புறம்பான உலகியல் இன்பங்களிலே உள்ளம் ஈடுபட்டு -அதற்காக கண்ட கண்ட வர்களுக்கு தொண்டு பட்டு உள்ள வேண்டியதாயிற்று -வேதம் கற்றது பயன் அற்றதாய் ஆயிற்று –-ஸ்ரீ இறைவன் நாதன் -நாம் சேஷப்பட்டவர் -என்று அறிந்து -அவன் நல் தாள் தொழ வில்லையானால் –கற்றதனாலாய பயன் என் கொல் –சதுர்வேத தரோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி வேதபார பராக்ராந்த சவை ப்ராஹ்மண கரதப -என்று எந்த பிராமணன் நால் வேதங்களையும் நெஞ்சில் தாங்கி கொண்டு இருப்பினும் ஸ்ரீ வாசுதேவனை அறிய வில்லையோ –அவன் வேதச் சுமையின் பழுவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராமணக் கழுதை யாவான் -என்றபடி குங்குமம் சுமந்த கழுதை போல் ஆயினரே –இது என்ன பேதமையோ-என்கிறார் .

தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – 97-
நாலாயி:2887/3,4–தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –
விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே –பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து – இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தெளிந்து இருக்குமவர் இவர் ஒருவரே என்று இருக்கிறார் காணும் ஸ்ரீ அமுதனார் –

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –2903-1-1-5–அவரவர்-சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது–தமதமது குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது-அறிவறி-அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது-வகைவகை-மார்க்க பேதங்களாலே-அவரவர்-அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை இறையவர் என-அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று-வடி யடைவார்கள் ஆஸ்ரயிப்பவர்கள்-அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – —புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8- – நாலாயி:2906/3,4–தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய ஒண்ணாத நிலையை யுடைத்தான-ஆகாசம் முதலாய் யுள்ள சமஷ்டி ரூப ஸமஸ்த வஸ்துக்களும்-வரிஷ்டமான காரணமாய் அவற்றை நிஸ் சேஷமாக உப சம்ஹரிப்பதும் செய்கையாலே வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய்க் கொண்டு பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் பரனானவன்-ருத்ரனும் -ப்ரஹ்மாவும் என்று பிரசித்தராம்படி-அத்விதீயமான புர த்ரயத்தை தஹித்தும் தேவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தும்-அண்டாந்தர வர்த்தி லோகங்களை சம்ஹரித்து அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும் அவர்களுக்கு உள்ளே ஆத்மாவாய் நிற்குமவன் –

அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே-1-3-3- – நாலாயி:2923/4–தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கையாலே நாரணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன்-சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ-பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி-நித்ய ஸூரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்-ப்ரஹ்மாதிகள் துர்மாநத்தாலே அறிய மாட்டார்கள் சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்-இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான்-1-3-4- – நாலாயி:2924/2–அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இறே-எம்பெருமான் உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்-அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான் ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற -1-3-7-– நாலாயி:2927/1-மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ-அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்-1-5-3– – நாலாயி:2945/3-ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை -1-5-7– நாலாயி:2949/1-இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று-ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே-அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார்-அல்ப ஜ்ஞானத்தை யுடையவன்-ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –அவன் அதிகராலும் அபரிச்சேத்யன்-ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இறே-பர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இறே 

மிகும் சோதி மேல் அறிவார் எவரே –2-2-5- நாலாயி:3024/4–இவனை ஒழிய வேறே சிலர் உண்டு என்று சொன்னால் வைதிகராய் இருப்பாரில் இசைவார் உண்டோ -என்கை
இவ் உபநிஷத் பிரசித்தி வேறு ஒருவர்க்கு உண்டோ என்கை-வைதிக –க — தஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்-

உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-
– நாலாயி:3026/3-அத்யகாதமாய் ஒருவருக்கும் தெரியாதே
அறிந்த தோற்றம் -ஆச்சர்யமான மானஸ வ்யாபாரமானது ஒருவருக்கும் அறிய ஒண்ணாது
அவனுடைய பாஹ்யமான வியாபாரமும் நிலம் அன்று மானஸ வியாபாரமும் ஒருவருக்கும் அறிய நிலம் அன்று என்கிறது –

அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-
நாலாயி:3032/3,4–வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்
ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே–ஸ்வாமி-இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்-மாதா பிதா பிராதா -இத்யாதி
நாராயண -என்கிறார்-நீ செய்தன -பேசவும் போகாது -நினைக்கவும் போகாது -நீ செய்யும் என்னும் அத்தனை-உபகரித்த நீயே அறியும் அத்தனை –நான் அதுக்கு இலக்காய் குமிழ் நீர் உண்ணும் அத்தனை -என்கிறார் –

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
–2-3-3– – நாலாயி:3033/3–கண் அன்பு செய்வித்து-வைத்தாயால்-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் –அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்-அடியேன் என்கிறது -நமக்கு அர்ஹமான வஸ்து இப்படி எளிவரவு படுவதே –என்று செய்து அருளின அத்தனை இறே என்றுமாம் –இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்-
ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-போக்யதை மிக்கு இருக்கிறபடி –
மேல் தம்மை வசீகரித்த படிக்கு நிதர்சனம்–தன் நெஞ்சை ஒளிப்பாரைப் போலே பிராட்டியும் அறியாத படி –சேர்ப்பால் போலே போக்யதை மிக்கு இருக்கிறபடி –தன்னைத் தாழ விட்டு அர்த்தியான படி – நிலம் என்றால் -அவன் முகம் பாராமையாலே மா வலி என்றான் -முதல் பேர் சொல்லுவார் இல்லாமையால் அவன் பார்த்து உனக்கு வேண்டுவது என் என்ன மூவடி என்றான் இப்படி அந்நவிதமான பேச்சாலே வசீகரிக்கை-சுக்கிராதிகள் இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -என்ற வார்த்தை செவிப் படாத படி தன் பேச்சாலே வஞ்சித்தான் –அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்

பட்ட போது எழு போது அறியாள் விரை – 2-4-9-நாலாயி:3050/1–உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்
ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்

பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே-2-6-2- – நாலாயி:3065/4-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் – இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-3084-ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –திண்ணம் அறி-இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு-அறிந்து அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –
2-7-12– நாலாயி:3086–ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள்-தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய்-அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –
எம்மானை என்னாழி வண்ணனையே-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்களாய் -தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்- தரமறிய ஆமோ–என்று அந்வயம்-

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன் – -2-9-9-
நாலாயி:3107/1,2-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-

இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே-3-1-10- – நாலாயி:3130/4-பிறையை ஸீரோ பூஷணமாக உடையவன் ஆகையால் போக பிரதன் ஆகையும்-ஜடாதரன் ஆகையால் அந்த போகம் தபஸாலே சாத்தியம் என்கையும்–சதுர்முகோ ஜாயதே -என்று உன்னாலே ஸ்ருஷ்டனாய் ருத்ரனுக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மாவும் ஷேத்ரஞ்ஞதயா ஸம்ப்ரதிபன்னனான இந்திரனும்-நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ –

கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ-3-4-2- – நாலாயி:3155/1-பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் – இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்

எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே -3-4-9— நாலாயி:3162/4-இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் -3-10-10-– நாலாயி:3229/2-அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்

தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –-அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இறே இருப்பது-இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –

அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – -4-4-3-நாலாயி:3266/1-தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –

ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற -4-4-5-– நாலாயி:3268/3-சர்ப்பம் என்று மீள மாட்டு கிறிலள்-இது என்னாய் விழக் கடவது -என்கிறாள் -இவளைக் கிடையாது ஒழிய அவனைக் கிடையாது-அவனைக் கிடையாது ஒழிய உபய விபூதியும் கிடையாது -சர்வ சம்ஹாரமாக புகுகிறதோ என்கிறாள்

ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே -4-5-4-– நாலாயி:3278/4-ஆவி -நிருபாதிகமான சர்வாத்மா –ஆத்மன ஆகாசஸ் ஸம்பூத–சர்வாத்மா –என் ஆவியை -அத்யந்தம் நிஹீனனான என்னை செய்த ஆற்றையே.-யான் அறியேன்-விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் – சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப் பேறாகத் தலையால் சுமப்பதே-யான் அறியேன் -உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்

நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- –
நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-
பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே-4-8-5- – நாலாயி:3312/4–இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன்-பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு.-‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி-இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு?-ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு;  என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
–4-8-6- நாலாயி:3313/1,2–பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது

ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவுஅணையாய் அம்மானே -4-9-2– நாலாயி:3320/3-சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன் -என்றுமாம் 

அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை-4-9-6- – நாலாயி:3324/2-தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார் -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம்-ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார்-அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் –இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே

ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல –4-9-9-
நாலாயி:3327/2,3-நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி-தேவர்களே யாகிலும் நீ நினையாதாரை உன்னை அனுபவிக்க ஒண்ணாத படி விஷயங்களை காட்டி அலமந்து திரியப் பண்ணுதி-அரவணையாய்!-திருவடிகளிலே கூட்டும் கொள்ளும்படிக்கு உதாஹரணம் – அடியேனும் அஃது அறிவன்; லோக வேதங்களில் பிரசித்தமான உன்னுடைய இந்தப்படியை நானும் அறிவன்

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே -4-10-6-– நாலாயி:3335/4-மிகவும் வல்லவன் –அதிசயித சக்திகன் -சேதனர் பண்ணின புண்ய பாபங்கள் கலசாத படி பல அனுபவம் பண்ணுவிக்க வல்லவன் –மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்
மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –

பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் -5-3-1-– நாலாயி:3363/3-அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது 

அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் -5-3-5– நாலாயி:3367/2–வடிவைக் கண்டால் -ஸர்வஸ்வாதானம் பண்ண இருக்கிறானோ –ஸர்வஸ்வாபஹாரம் பண்ண இருக்கிறானோ என்று தெரியாதபடி ஆச்சர்ய ஸ்வ பாவன்–என்னுடைய ஆத்மாத்மீயங்கள் உன்னது என்று சொல்லி வைத்து இத்தலையில் உள்ளவற்றை எல்லாம் –ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினவன் –ஆகிலும் 

மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -5-4-3– நாலாயி:3376/4–அபிமதர் வாரா விட்டால் முடிகை இ றே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –

எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –

அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – —அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே-5-5-11- – நாலாயி:3395/4–ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களால் அறிய ஒண்ணாது ஒழியப் பெற்றோமே என்கிறார் -இக்குடியில் உள்ளார் ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களோ என்னில்-இவளால் மீளலாம் என்று மீட்கப் பார்த்த போதே -தம் தம்மாலே பெறவுமாம் -என்று இருந்தார்களாம் இறே–பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள்

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – 5-7-1-நாலாயி:3407/1–அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இ றே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று

அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3– நாலாயி:3409/4–சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் -5-7-8-
நாலாயி:3414/1,2–அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே -5-8-6– நாலாயி:3423/4–ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் –6-2-1- நாலாயி:3462/3–உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வை கள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய -6-2-3— நாலாயி:3464/1-உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – 6-2-5-நாலாயி:3466/1-உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல்-

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – 6-9-7-நாலாயி:3545/4–சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-
– நாலாயி:3546–அறிவி லேனுக்கு அருளாய் -உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்

சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன் அடி-7-1-4- – நாலாயி:3564/1-உறுவது இன்னது என்று நான் அறியாதபடி பிரமிப்பித்து -பகவத் பிரவணமாவது -அதுவே உறுவது -விஷய ப்ராவண்யம் அனர்த்த ஹேது என்று விவேகிக்க ஒண்ணாத படி மனசைக் கலக்கி

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – 7-2-1-நாலாயி:3572/1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்

முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – 7-2-10-நாலாயி:3581/1-இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -7-5-3– நாலாயி:3607/4-இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-4- நாலாயி:3608/1–தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமவர்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்

மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – 7-5-8-நாலாயி:3612/4-மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன்

மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – -7-5-9-நாலாயி:3613–அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்-மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு-வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – -7-5-10-நாலாயி:3614/1-ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு –அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ –

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப -7-6-6– நாலாயி:3621/1-நீயே வந்து கிட்டுமது ஒழிய நான் சாதன அனுஷ்டானம் பண்ணிக் கிட்டும் விரகு அறிகிறிலேன் -கிட்டுக்கைக்கு இச்சை இறே இத்தலையில் உள்ளது -நீ வந்து கிட்டினால் விலக்காமைக்கு வேண்டுவது உண்டு-பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ

ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – -7-7-1-நாலாயி:3627/2,3–ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை –ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே-அன்றியே பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –அறியேன்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இறே இவள் பிரதிபத்தி இருப்பது –முதல் உறவு பண்ணினவை தானே இறே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள்

மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே –7-7-2- நாலாயி:3628/2,3-இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை -எங்களைக் காட்டில் இவ்விஷயத்தில் அவஹாகித்த நீ சொல்லிக் காணாய் என்ன

கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் -7-7-3- – நாலாயி:3629/2,3-அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை-அறியேன்--நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்

அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – 7-7-5-நாலாயி:3631/4–என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்–இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் –7-7-7- நாலாயி:3633/1,2-தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இ றே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இ றே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது

கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே –7-7-9- நாலாயி:3635/4-உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த–7-8-11- – நாலாயி:3648/2-ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காண ப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – 7-10-10-
நாலாயி:3669/1,2—திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -உம்முடைய நினைவுக்கு சர்வேஸ்வரனை சாக்ஷி யாக்கைக்கு ஹேது என் என்னில்-நினைவுக்கு வாய்த்தலையில் இருக்கிறவன் அறியானோ -மனசாலே செய்யுமவற்றில் அவன் அறியாத வஞ்சகங்கள் ஒன்றும் இல்லை

அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – 8-1-4-நாலாயி:3674/2–அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்

சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் — 8-1-7-நாலாயி:3677/2-தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் – அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –

வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-1-8- நாலாயி:3678/4- -பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறிலேன்

ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என்-8-2-3- – நாலாயி:3684/2-யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ 

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி -8-3-1- நாலாயி:3693/2–உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இ றே இவர் நினைத்து இருப்பது-அறியகிலாது -அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்

பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-3-9– நாலாயி:3701/2-சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை-யார் அறிகிற்பார்-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ

அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – 8-4-4-நாலாயி:3707/4–திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக-மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-ஆத்மாநம் -மானுஷம் மன்யே என்றும் -அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் -மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –
அடி இணைய யல்லதோர் அரணே-–அவன் திருவடிகள் அல்லது ஒரு ரக்ஷகம் இல்லை -அடி இணை யல்லதோர் அரண் –பிறிதில்லை எனக்கு–

தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை-8-4-6- – நாலாயி:3709/2–ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னை பரிச்சேதிக்கப் போகாது –

புகழுமாறு அறியேன் பொருந்து மூஉலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – 8-4-8-நாலாயி:3711/4-அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –

தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே-8-7-2- – நாலாயி:3738/4-நாலாயி:3739/1-தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் –8-7-3- என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் -அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய்-பெறாப் பேறு பெற்றானாய்– -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –

அவ் வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே-8-7-7- – நாலாயி:3743/4-அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் -8-7-8-– நாலாயி:3744/1- –மற்று அருள் அறியேன்-வேறு ஒரு அருளும் அறியேன் –என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –

நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே –8-8-5- நாலாயி:3752/4-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை-இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –
கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் -சாங்க்யத்தில்-தத்வ சங்க்யான க்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3–:3805-அறிந்தனவாய் இருக்கிற  துர்ஜ்ஜேயார்த்த ஸூசகமான வேதங்கள் சர்வேஸ்வரனை துர்ஜ்ஜேயன் என்று அறிந்த -மற்று அறிந்தாராய் இருக்கிற ரிஷிகளும் சம்சார துரித பேஷஜம்  என்று அறிந்தார்கள் –வேதங்களுக்கும் ரிஷிகளுக்கும் அறிய நிலம் இல்லாத எம்பெருமான் தன்னை எனக்கு பூர்ணமாக அறிவித்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

தழுவுமாறு அறியேன் உன தாள்களே –9-3-9- நாலாயி:3811/4-உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் –

அறிவது அரிய அரியாய அம்மானே -9-4-4- நாலாயி:3817/4-தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –

கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்-9-6-3- – நாலாயி:3838/4-முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – -9-6-4-நாலாயி:3839/1-உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறிலேன் –தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இறே –

அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -9-8-3-– நாலாயி:3860/4-திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத்திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் -அடியார்கள்  குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் –9-8-4- நாலாயி:3861/1-பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் -பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல் 

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ -9-9-1- நாலாயி:3869/4-வ்யதிரேகத்தில் தென்றல் முதலான பதார்த்தங்களைத் தப்பிச் சென்று புகுகைக்கு இடம் காண்கிறிலோம் -ஷாம காலத்தில் பஹு பிரஜராய் இருப்பார் தங்கள் பசி கிடக்க பிரஜைகள் அலைப்புக்கு அலைந்து புகலிடம் அறியாதா போலே -நான் ஜீவித்த படி ஜீவிக்கின்றேன் -இவற்றைக் கொண்டு புகுமிடம் காண்கிறிலேன் -என்கிறார் –

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ -9-9-2- நாலாயி:3870/1-மேல் வர புகு கிற பாதக வர்க்கத்தை நினைத்து சொல்லுகிற வார்த்தை யாதல் -கீழ் நலிந்த வற்றுக்கு அஞ்சி அவ்வச்சம் பின்னாட்டுகிற அனு பாஷாணம் ஆதல்-

யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் –9-9-9- நாலாயி:3877/4–அது பாதகம் ஆகிறபடி எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை-

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் –10-2-3- நாலாயி:3904/3–சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்-என்னுமாறு போலே –அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை –திண்ணமாக அனுபவத்தாலே கை கண்ட நாம் இதில் வாசி அறியாத நீங்களும் இழக்க ஒண்ணாது என்று உங்கள் நெஞ்சில் படும்படி சொன்னோம்-பல நாள் துன்பப் பட்டு கரை கண்டவர் ஆகையாலே -நாம்-என்கிறார்-இனி கர்மங்களுக்கு கட்டுப் பட்டவர்களாய் படுமவர்கள்
சொன்ன வார்த்தையை நினையாமையாலே படுகிறார்கள் அத்தனை நம் மேல் குறையற நாம் சொன்னோம் -என்பார் -சொன்னோம் -என்கிறார்பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –

திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து-10-2-5- – நாலாயி:3906/3-வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம்–10-2-8- – நாலாயி:3909/4-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம்–திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்-இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று -நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் – -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –அவ்வடிவினைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தினைக் உடைய நீங்கள் அறியும்படி சொன்னோம்

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான-10-2-9-நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர் -என்று-அவன் அருளிச் செய்த வார்த்தையை இப்போது இவர் தாம் அருளிச் செய்கிறார்-இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே-எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் –ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-

சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – 10-3-2-நாலாயி:3914/2–அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்-

நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் 10-7-1--நாலாயி:3957/3-நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே

ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் –10-10-3- நாலாயி:3992/2-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்ன -ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன் தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-

அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – -10-10-11-நாலாயி:4000/4–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் -வாழ்ச்சியும் -தாழ்ச்சியும் -பத பிரயோகங்களும் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

December 24, 2025

வாழ்ச்சியும் -தாழ்ச்சியும்

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே
–3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–-இரண்டாம் திருவந்தாதி23-த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –-ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் ––இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –
-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை   யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் கேழ்ந்த அடித்தாமரை மலர்மேல் –கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை-இத்தால்
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை –எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –அவளுக்கு போக்தாவானவன் –அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும் கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை–-அடித் தாமரை யாமலர் – திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –இத்தால் நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி-கேழ்த்த வடித் தாமரை மேல் மங்கை மணாளன் அடித் தாமரையா மலர் வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வாங்கத் தழும்பாமே
என்று அந்வயம் –

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி 11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு
-என்று அந்வயம்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவசரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

———————————-

வாழ்ச்சி

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2-உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது-அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ- என்றான் இறே மாரீசன்-ஸ்ரத்தயாதேவோ தேவத்வமஸ் நுதே -என்னக் கடவது இறே-ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம் அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ-வடிவாய் ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்-நின் வல மார்பினில் சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இறே-வடிவு இருப்பது வல மார்பினில் அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை-வாழ்கின்ற மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி இறே போக்யதை இருப்பது மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது – யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது
மங்கையும் –ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல் மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல் பல்லாண்டு கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்-வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது-சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி -நாய் தொழில் –என்னக் கடவது இறே-சேஷத்வம் துக்க ரூபம் உலகில் -அபிமத விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே —
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -உபாசக நிஷ்டர் –அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும் துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் – என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –

பட்டு -என்பது-உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு-ஓடினேன் ஓடி –பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –கிருபாவசப் பட்டு -கர்மவசம் தவிர்ந்து -வாழாள் பட்டால் நின்றீர் கூழாள் பட்டு திரிந்து என்றவாறு-உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இறே இருப்பது–வாசுதேவாஸ் சர்வம் இதி மகாத்மா -ஸ்ரீ கிருஷ்ண சித்தாந்தம் -ஸூ துர்லப – பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -நம்மாழ்வார் -திருவவதாரம் -திருக் குருகைப் பிள்ளான் சாதிப்பாராம்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார் தேட்டமாய் இறே இருப்பது –இந்த யதி–ஆல் -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை – துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்-இவர்கள் அபிப்ராயத்தால் வாழும் –புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும் மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை

தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – -4- 4-1 –பகவத் பாகவத கைங்கர்யங்களுக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து –
வேத பிரதிபாத்ய வஸ்துவை கண்ணாலே கண்டு அனுபவிக்கிறவர்கள்
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னக் கடவது இறே

செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – 4-4- 2-செற்றம் ஆவது பொறாமை-அதாவது-பர சம்ர்த்தய அசஹதை-ஒன்றும் இல்லாமையாவது – முதலிலே அதிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை-கீழ் சொன்னவை எல்லாம் உண்டாகிலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது –வண் கை யினார்கள்-உதாரமான கொடையை உடையவர்கள்-அதாவது ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும் இடத்தில்
கொள்ளுகிறவன் சிறுமையையும் கொடுக்கிறவன் சீர்மையையும் பாராமல் கொடுக்குமவர்கள் -என்கை த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஒக்கும் இறே இவர்களுக்கு இது –வாழ் திருக் கோட்டியூர்-இத் தேச வாசம் தானே இவர்களுக்கு வாழ்வு
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் (நாச்சியார் )-என்றும்-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் ( நாச்சியார் ) -என்றும் சொல்லக் கடவது -இறே-இப்படி இருக்கிறவர்கள் வர்த்திக்கிற திருக் கோட்டியூரில்

கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து -3-8- 7– நாலாயி:303/3-இவளைக் கொண்டு தன்னுடைய குடி வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து –அதாவது –இவள் முகப்பாக தன்னுடைய க்ர்ஹ க்ர்த்யம்  எல்லாம் நடத்தி -என்கை-கோப குலத்துக்கு ஸ்வாமி-என்று தன் மகிஷி யானமை தோற்ற பட்டம் கட்டி-பண்டே பட்டம் கட்டி -தனக்கு மகிஷிகளாய் இருக்கிறவர்கள் முன்னே-அந்த புரக் காவலில் வைக்குமோ-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் –  4-4-6-பூதம் ஐந்தோடு –-இத்தால் பஞ்ச பூத ஆரப்தமான தேஹத்தை சொல்லுகிறது–மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு வுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -இறே  –இத்தோடே-வேள்வி ஐந்து –பஞ்ச மகா யக்ஞங்கள்-புலன்கள் ஐந்து –சப்தாதிகளான விஷயங்கள் ஐந்து-புலன் -என்று புலப்படும் விஷயங்களை சொல்லுகிறது-பொறிகள்-என்று-ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது-இவற்றால் ஏதம் ஒன்றும் இலாத –-இவற்றோடு கூட இருக்கச் செய்தே தோஷம் இன்றிக்கே இருக்கை-( நான்கிலும் –பூதம் ஐந்து-வேள்வி ஐந்தும்-புலன்கள் ஐந்தும்-பொறிகள் ஐந்தும்-மூன்று-ஏதம்-ஏதம் இன்றிகே இருக்கை-ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஆக 12- விஷயங்கள் சாதிக்கிறார் மேல் )
பூதம் ஐந்து ஏதம் ஓன்று இலாத  –-ஏதம்-தேகத்தை தனக்கு என்று இருக்கை-ஏதம்
ஏதம் இன்றிகே இருக்கைஈஸ்வரனுக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை
ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-வேள்வி ஐந்தும் ஏதம் ஓன்று இலாத–ஸ்வர்காதி சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம்-மோஷ சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம் இன்றிகே இருக்கை-பகவத் பாகவத ப்ரீதி என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-புலன்கள் ஐந்தும் ஏதம் ஓன்று இலாத –சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களை தனக்கு என்று இருக்கை-ஏதம் இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத-இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை -ஏதம்-பகவத் விஷயத்தில் மூட்டுகை -ஏதம் இன்றிக்கே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-வண் கையினார்கள் –அதாவது ஒவ்தார்யம்-அதாவது பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி -என்கிறபடி-அப்பதார்தங்கள் நசியாதபடி வாங்குகையும்–இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கொடுக்கையும்

ஈஸ்வரனையும் உள் படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்-அதற்க்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது- –துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றைதான் துற்றிய தெற்றெனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தானே உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது -பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு (நாச்சியார் )-என்று ஸ்ரீ பாஞ்சசன்ய ஆழ்வாரையும் உள்பட கர்ஹித்தாள் இறே பெண்மகள்-அவ்வளவும் அன்றிகே –சாதுக் கோட்டியுள் கொள்ளப்படுவாறே – என்கிறபடியே – தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச சந்யத்தை பத்ம நாபனோடு கூட்டி வைத்தது-அவதாரத்தில் உண்டான இழவு தீர இறே –அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போல் குறையாமல் கொடுக்கிறது –வாழ்–கண்ணாலே கண்டு அனுபவிக்க பெற்றவர்கள்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -திருப் பாற் கடல் நாதன் -என்பதிலும் –திருக் கோட்டியூர் நாதன் -எனபது இறே ஏற்றம்

திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:366/2–4-4-7–வேதத்துக்கு திருத்தம் ஆவது-பகவத் ஸ்வரூபாதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கை
நான் மறைரயோருக்கு திருத்தம் ஆவது –இதில் இவர்கள் செய்வது-குண விக்ரக அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை-இராப் பகல் ஏத்தி –வேறு அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாமல் நடக்கும்-வாழ் –
அநந்ய பிரயோஜனர் ஆகையாலே இது தானே பலமாக இருக்கும்-திருக் கோட்டியூர்
அவர்கள் வர்த்திக்கிற தேசம்-

தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/2-4-4 -10-யஜஸ் கரமான  வார்த்தைகளை படைக்கும்-அதாவது-இருந்தார் இருந்த இடங்களிலே -தங்களுடைய ஒவ்தார்யம் கிருபை முதலான குணங்களை சொல்லிக் கொண்டாடும்படி யாகை –இவர்கள் புகழை நச்சி செய்யாது இருந்தாலும் தன்னடையே வந்து உண்டாமிறே இது-உதாரமான கையை உடையவர்கள்-அதாவது-உள்ளது எல்லாம் பரார்த்தமாகவே விநியோக்கிக்க வேணும் -என்னும் ஒவ்தார்ய கையை  உடையவர்கள்-என்கை-வாழ் திருக் கோட்டியூர் –இப்படி இருந்துள்ளவர்கள் இத் தேச வாசமே தங்களுக்கு வாழ்வாகக் கொண்டு வர்த்திக்கிற திருக் கோட்டியூர்-

சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4–4-8-2 –வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் –பகவத் சமாராதனத்தையும்-அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே –

புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று –– 5-3-3- –- நாலாயி:455/3-புனத்தில் புதுத் தினையை முறித்து -ஹவிஸ்சுக்கு காட்டி –புதியது அமுது செய்யப் பண்ணி இப்படி அமுது செய்யப் பண்ணினால் வேண்டிக் கொள்ளும் படி ஏது என்னில்  -இந்த தேசம் தான் –அமுது செய்திடப் பெறில் பின்னும் ஆளும் செய்வன் -என்னும் தேசம் இறே –

வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3-2-10-வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-5-1-என்னுடைய சோகத்து அடியான அக் குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும் நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே-எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-

காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் – நாலாயி:547/4–—5-3-பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –
காமரம்
 -என்ற பண்ணைப் பாட – அதுக்கு செவி தாழ்த்து-மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே

பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – –59-நாலாயி:553/2ஒ குயிலே என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே அவ் விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்-ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்–9-4- – நாலாயி:590/1-பரந்த பொழிலிலே வர்த்திக்கிற குயில்காள் உங்களுக்கு சோலை நோக்கித் தருவார் யார் –
ஏக தேச வாசித்வமே ஹேதுவாக பாதகமாகா நின்றி கோளீ

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – 12-8–நாலாயி:624/1-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-பசுக்களை மேய்க்கையை உகந்தான் –-அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ்
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் –
-2-1– நாலாயி:658/1,2–தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-ய ஆத்மதா பலதா-என்னுமா போலே – தன்னையும் கொடுத்து –
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்- திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1-மெய் என்றும் -பொய் என்பது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது – நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ – திருச்சந்த விருத்தம்-68-நாலாயி:819/4–சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்-ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே-

பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –திரு மாலை-13 நாலாயி:884/4-இந்த்ரியங்களுக்கு குடி மக்களாய் வர்த்திக்கிற லீலா விபூதி –எல்லா அவஸ்தையிலும் தப்பாத படி தங்களுக்குள் அகப்படுத்திக் கொள்ள வற்று ஆகையாலே-பொறி -என்று இந்த்ரியங்களை சொல்லுகிறது-நரகம் –அவிவிவேகிகளுக்கு நரகம் யமனுடைய தண்டல்
அறிவுடையார்க்கு நரகம் –சம்சாரம்–லீலா விபூதி கட்டடங்க தரிசாய்ப் போம் இறே –நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்னக் கடவது இறே-

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – -23-நாலாயி:894/4-இவ் விஷயத்தை கண்டு அனுபவிப்பதற்கு முன்பாகிலும் மறக்கவுமாம் –கண்டு அனுபவித்த பின்பு இனித் தான் எந்த பிரகாரத்தாலே மறப்பது –வாழ்கேன் –இவ் விஷயத்தை விட்டுப் போய் மணலை முக்கவோ –அனுபவித்தால் மறக்க ஒண்ணாது-ஏழையேன் ஏழையேனே-நானோ அத்யந்த சபலனாய் கிட்டினால் அனுபவிக்க மாட்டே-முன்பு இதர விஷயங்களிலே அகப்பட்டு சிதிலராய் இருப்பார் இப்போது பகவத் விஷயத்தில் அகப்பட்டு புறம்பு கால் வாங்க மாட்டாதே இருப்பார் –அது கர்மத்தாலே வந்த சைதில்யம்-இது விஷய வை லஷண்யத்தாலே வந்த சைதில்யம்

வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் -6-– நாலாயி:932/2–லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்-வண்டு வாழ் பொழில் –வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை -–2-1-3– நாலாயி:1050/3-வண்டுகள் ஆனவை மது பாநத்தைப் பண்ணி மத்தமாய் கொண்டு வாழா நின்றுள்ள திருமலையைத் தனக்கு நித்ய வாஸத்துக்கு ஸ்தானமாகக் கொண்டு உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு ––ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு -வெறும் அண்டம் என்னில்
ஸ்வர்க்காதிகளிலும் ஏறும் என்று மீமிசை அண்டம் என்று பரம பதத்தை சொல்லுகிறது
மஹா ஆகாசம் பரம ஆகாசம் -என்னக் கடவது இறே உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –

அருள் நடந்து இ ஏழ்உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – -3-10-1-நாலாயி:1238/2,3 -இப்படி இருக்கிற இவன் அல்லது லோகத்திலே வேறு ஆஸ்ரயணீயர் அல்ல என்று ஏழு வகைப்பட்ட லோகங்கள் உள்ளாறும் அடைய ஆஸ்ரயிக்க தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான
இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –பெரும் புகழ் வேதியர் வாழ்-தரும் இடங்கள்-
இவனை அனுபவிக்கையே யாத்ரையாம் படி இருக்கையாலே மிக்க புகழை உடைய ப்ராஹ்மனர் வர்த்திக்கிற இடங்களை உடைத்தாய் –வாழ் தரும் இடங்களிலே உண்டாய்
அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள்
மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள
அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது –

அள்ளி அம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – 4-10-7-நாலாயி:1344/3 -அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல் அன்றிக்கே அளியை அள்ளி என்னுதல்  -அத்தாலே தண்ணளி யாய் குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து ஹரி ஹரி என்னுமா போலே திரு நாம  சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து (மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து அங்குத்தை திர்யக்குகளுக்கும் –

பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே – 5-1-8-நாலாயி:1355/4 -வேதத்தால் அக்னி த்ரயத்தையும் வளர்க்கும் மாறாத புகழால் ஔதார்யத்தால் ஷமையால்
இவை எல்லா வற்றாலும் மிக்கு இருந்துள்ள பிராமணர் வர்த்திக்கிற தேசம் –புள்ளம் பூதங்குடி தானே  –

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை மருவுமூர் போல்- 5-2-8-நாலாயி:1365/1 –கலைகளானவை பிணை யோடு -மானோடே அணைந்து வாழா நின்றுள்ள
திரு நீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத் தேசமும் தனக்கு உண்டாய்  இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –புருஷோத்தமன் தான் இந்தப் பெண்கள் உடன் ஸம்ஸ்லேஷிக்க குருகுல வாசம் திரு நீர்மலை மான் இடம் கற்றுக் கொண்டானாம்

முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – 5-4-6-நாலாயி:1383/2 –யசோதை பிராட்டியைப் போலே அலங்கரித்துக் கொண்டு கலையை உடுத்து அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடைய-யசோதை பிராட்டியில் இவளுக்கு ஓர் ஏற்றம் -வன்மை யாய்த்து-யசோதை பிராட்டியைப் போலே பரிவு எல்லாம் தோற்ற ஒசழக்காக தூக்கி எடுத்து இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன்–இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள் –

துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – -–5-4-7-நாலாயி:1384/2 –திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் -என்பர்கள்-

நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே -6-7-7- நாலாயி:1514/4 இவையே யாத்ரையாம் படி கை வந்து இருக்கிற  பிராமணர் வர்த்திக்கிற தேசம்-தங்களை நோக்குகைக்காக-தங்கள் உடைய வித்யா  வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –(ஸ்வரூப ரக்ஷணம் -மங்களா சாசனம் செய்தல் இது அன்றோ வாழ்கை )

நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே6-7-8-– நாலாயி:1515/4 -தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – -–6-7-10-நாலாயி:1517/1 -அநந்ய பிரயோஜனரான பிராமணர் வர்த்திக்கிற திரு நறையூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூரணன் ஆனவனை  –

மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – 6-8-10-நாலாயி:1527/1 –சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை  –இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா –  -7-6-7-நாலாயி:1604/1 -ஸ்வ வ்யதிரிக்தர் உடைய ஐஸ்வர்யத்துக்கு-நிதான பூதையான பிராட்டி-அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும் படியான மார்வு படைத்தவனை –-ஈசேசி தவ்ய வைஷம்ய நிம்னோன் நத மிதஞ் ஜகத் நமஸ் ஸ்ரீ ரெங்க நாயக்யை யத்ப்ரூவி ப்ரமபேததா    -என்னக் கடவது இறே-

ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே – 8-5-5–நாலாயி:1692/4-ஆதித்யன் ஆனவன் தான் தோற்றின கடலிலே புக்கு அஸ்தமிக்க-ஆஸ்வாச கரனான அவனை இழந்து பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற பிராணங்களை முடிப்பதாக அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –

பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2-தமப்பன் தாய் புத்ரர்கள் உறவு முறையார் சம்பந்திகள் என்று இங்கனே பற்றிக் கொடு நிற்கிற
பந்தகமான யாத்ரையை –மாதா பிதா ப்ராதா -என்கிறபடியே அவன் ஒருவனே சர்வ வித பந்துவாய் இருக்க சோபாதிக பந்துக்களை நிருபாதிக பந்துக்களாக நினைத்து போருகிற பந்தகமான யாத்ரையை அனுசந்தித்து வெறுத்து ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவுக்கு இது அவத்யாஹம் என்று புத்தி பண்ணினாய் ஆகில் –


நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று – 10-3-3–நாலாயி:1870/3-கூற்றமாய் வந்த படி கண்டு அஞ்சி – நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று -10-3-7– நாலாயி:1874/3-வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய   அவன் பக்கலிலே ப்ராவண்யம் – இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –

ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – -11-8-1-நாலாயி:2022/3 – நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ –சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-ஆறு பெருகித்  தன் வேரை அகழ்ந்து   பொகடா நின்றால்-பேர நிற்றல் பரிஹரித்துக் கொள்ளுதல் கூப்பிடுதல் செய்வது அறியாது இறே-பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும்
பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் – பயமே இறே இவனுக்கு உள்ளது –அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )-நன்றும் அஞ்சுவன் –(திருவாய் )-மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில் என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –

ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே – நாலாயி:2039/4-த்ருடம் இன்றியே அப்போது போயிற்று இப்போது போயிற்று என்றும் மின்னிலும் நிலை அற்று இருக்கிற இச் சரீரத்துக்கு பூண் கட்டவே தேடுவர்கள் 

தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த -மூன்றாம் திருவந்தாதி—100– நாலாயி:2381/2 -திருத்துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் – மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவனான தானே –போக உபகரணமான திருத்துழாயை யுடையவன் தானே முயங்கும் முயங்குகை -தழுவுகை –-அபி நிவேசித்து சம்ச்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –இப்படி இருக்கிற தான் –அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே 

வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே — 72– நாலாயி:2549/4-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று இதுவும் போழ்க-வாலிமையாவது சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது-அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்-இத்தால் போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – -16-நாலாயி:2806/4-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –

மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் – 96-நாலாயி:2763/1 இது விளைத்த
மன்னன் –-இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –நறுந்துழாய்-இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்-வாழ் மார்பன் –தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –

மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் –141- நாலாயி:2787/7 -ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய் தன்னை வாழ்வாகவும்
துணையாகவும் தோழனாகவும் தூதனாகவும் உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று – 2-3-1-நாலாயி:3031/1 —ஊன் என்று சரீரமாய் -வாழ்க்கையாவது வர்த்திக்கிறதாய் -சரீரத்திலே-வர்த்திக்கிற – வசிக்கிற உயிரே!
இவ் விளியால்,
-பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? மாம்ச பிரசுரமான சரீரத்தில் இருந்து வைத்து வாழுகிற உயிரே சரீரத்தைப் பற்றி வாழ்ந்து போந்த உயிரே -என்றுமாம்-பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று -மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம்.–இவ்விளியால்,‘நெடு நாள்-பிராகிருத போகங்களை – இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ,-அப்ராக்ருத போகத்துக்கு- அவ்வுலக இன்பத்துக்குக் கை தர நிற்பதே!’ என்ற தொனிப் பொருள் தோன்றும்.-இப் பொருளில் வாழ்தல் – அனுபவித்தல்.–வாழ்கை -வர்த்தனமும் விஷய ஸூக அனுபவமும் -நித்ய முக்தர் போல் பகவத் அனுபவ ஏக ஸூகமும்

தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் – -–2-3-5-நாலாயி:3035/3 -எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே -பிராட்டி-ஏக அஷ- ஒற்றைக் கண்ணள், -ஏக கர்ணி- ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், தனியேன்’-என்கிறார் – எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை -நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு

அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள ––2-5-1- நாலாயி:3053/2 -அழகிய மாலை வாழா நின்றுள்ள முடி -வாள் -என்று ஒளியாய் -அழகிய மாலையும் ஒளியையும் உடைத்தான் திரு அபிஷேகம் என்றுமாம் –-‘வாண்முடி’ என்பது பாடமாயின், வாள்-என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான – ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள்-தாமம் -தேஜஸ் ஆகவுமாம்-இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் அருளிச் செய்வர். -இனி, இதற்கு எம்பெருமானார்,-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்-அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.

போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே
-3-1-6– நாலாயி:3126/3
–வேதங்களும் கூட ஏங்குவது இளைப்பதாகா நிற்க நான் இச் சேர்த்திக்கு பாசுரமிட்டு ஏத்தவோ –பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று வாழா நின்றுள்ள திருத் துழாயை திரு அபிஷேகத்திலே உடையவனே-திருத் துழாய்ப் பூ முடி சூடி வாழா நிற்கிறது -இவ்வொப்பனை என்னால் பேசலாய் இருந்ததோ –சிந்து பூ மகிழும் -விஷ்வக் சேனர் எடுத்து திரு வேங்கடவனுக்கு சமர்ப்பிப்பார் என்கிறார் –-பூவிலே வர்த்திக்கிற பிராட்டி உன் சுவடு அறிந்த பின்பு அப்பூ நெருஞ்சி முள்ளாம் படி மார்பு படைத்தவனே —பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –
இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ ––சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –3-2-4– நாலாயி:3135/4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

———————————-

மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ4-1-5- – நாலாயி:3235/4-நீல ரத்னம் போலே ஒளியை யுடைத்தான திரு மேனியை யுடையவனாய்-ஆனபின்பு பக்தா நாம் என்று இருக்குமவன் உடம்பை பற்றுங்கோள்-ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -ஸூ லபமாய் நிரவாதிக தேஜோ ரூபமான வடிவை உடையவன்-நம்-ஆஸ்ரிதரான நமக்குத் தன்னை அனுபவிப்பிக்கும்-மாயவன் –ஆஸ்ரித விஷயத்தில் செய்தது போராது என்று இருக்குமவன்-பேர் சொல்லி வாழ்மினோ.–ஆச்சர்ய பூதனுடைய திரு நாமங்களைச் சொல்லி ஆனந்திகள் ஆகுங்கோள்-திரு நாமத்தைச் சொல்லி நிரதிசய போகத்தில் அந்வயின்கோள் –செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே-கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்

ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை -–4-9-8– நாலாயி:3326/2 –பஞ்ச பூதங்களையும் -சமேத்ய அந்யோன்ய சம்யோகம் என்கிறபடியே த்ரிவ்ருத்திகரித்து-சமைத்து வைத்த-ப்ரஹ்மாதிகளுக்கு போக ஸ்தானமாய் -ஈஸ்வரோஹம் -என்று வன்னியம் செய்கிற தேசமாய் அத்விதீயமான வை லக்ஷண்யத்தை உடைத்தான் அண்டமாகிற அரணின் நின்றும் புறப்பட விட்டு – புக்காருக்கு புறப்பட ஒண்ணாத அரண் இறே

தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு–5-7-3- – நாலாயி:3409/3 –வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்-நித்ய ஸூரிகளை போலே திரள் திரளாக பகவத் குண அனுபவம் பண்ணி வர்த்திக்கிறவர்கள்-இத் தலையில் சாதனமும் இல்லை -செய்யலாவதொரு பிரதியுபகாரமும் இல்லை என்று பகவத் குண அனுபவமே யாத்ரையாய் இருக்குமவர்கள்

வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே–5-8-6- – நாலாயி:3423/3 –விஸ்லேஷ கந்தம் இல்லாத படி உன்னை அனுபவிக்கை யாகிற ஸ்லாக்யமான புகழை யுடையவர்களதான -திருக் குடந்தை -பழையதான புகழ் என்றுமாம் -எனை நாள் அகன்று இருப்பன் என்ன வேண்டாதவர்கள் -விஷய சந்நிதி தனக்கும் அவர்களுக்கும் ஒத்து இருக்க அவர்கள் வாழுகிற படி எங்கனே என்னில் -தம்மைப் போலே கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்

பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் —–6-3-6- நாலாயி:3478/2 -ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.-தவ்வை – திருமகள் அல்லாதவள்.-திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,-தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.

மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – -6-3-10-நாலாயி:3482/3 -மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்-பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

நிற்கும் நால்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் -–6-5-4- நாலாயி:3498/1–அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் -நித்தியமான நான்கு வேதங்கள்.-நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம்.-ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ.–வேதங்கள் தங்கள் இட்ட வழக்காய் செல்லுகையாலே வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள்-வாழ் தொலை வில்லி மங்கலம்-வேத தாத்பர்ய பூதனானவனைக் கண்டு நித்ய அனுபவம் பண்ணுகிற வூர் -(காட்சி இருந்தாலே வாழ்ச்சி தானே )–ஸ்வாத்யாயாத் யோகம் ஆஸீத -என்னும் அளவு அன்றிக்கே -யோகாதி ஸ்வாத் யாயமா மநேத் -என்று ஆரூட யோகமாய் இருக்குமவர்கள்-“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்” என்னுமளவன்றியே,–ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழே–ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு
மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் ––6-5-8– நாலாயி:3502/2-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர்

ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் ––6-10-4– நாலாயி:3553/1-அ ஸூ ரர்கள் உடம்பில் அன்றிக்கே அவர்கள் ஆயுசிலே யாயிற்று அம்பு தைப்பது –இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை-

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள் கொடுக்கும் – -–6-10-11–நாலாயி:3560/1-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-சேஷபூதர்கள் -உங்கள் உத்தேஸ்யம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக் கிருத்தியராய்ப் போங்கோள் என்று,-அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.-கொடுத்த -என்னாமல் -கொடுக்கும் வர்த்தமானம் -இப்பாசுரம் அநுஸந்திக்கும் நமக்கும் இப்பேறு உண்டு 

பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே
–7-10-3– நாலாயி:3662/3,4-அவனுடைய கல்யாண குணங்களை பாடா நின்றுள்ள நாலு வேதங்கள்-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் -ஷடங்கங்கள் இவற்றை பயின்றவர்கள் -வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் -நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் -எஃகிக் கரை கண்டு இருக்குமவர்கள்.
போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்.–ஒக்கத்தை யுடைய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையிலே புக்கு அங்கு உள்ள வைஷ்ணவர்களோடே கூடி அனுபவிக்க காலம் எல்லாம் இங்கனே யாக வற்றோ –

திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் —–8-3-7-– நாலாயி:3699/2-திருப் பரிசாரத்தில் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ண வேணும்-என்-திரு வாழ் மார்வற்கு-அதுக்கு மேலே பிராட்டியோட்டை சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேணும் –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்ற இளைய பெருமாளை போலே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் படி யாயிற்று இங்குத்தை இருப்பு-என்-திரு வாழ் மார்வற்கு-என் ஸ்வாமி நி சந்நிதி யாகையாலே சொன்ன வார்த்தை விலை செல்லும் கிடீர்-ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய்

மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே –
–8-4-6- நாலாயி:3709/3,4-ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கடவராய் பிரதானரான மூவரும் செய்யக் கடவ காரியத்தை ஓர் ஒருத்தரே செய்ய வல்லராம் படி யாயிற்று இவர்கள் சக்தி இருக்கும் படி-அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன்
வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8- – -9-1-8-நாலாயி:3788/3–அவன் குணங்களை அனுசந்தித்து -வாழுமதே கிடி கோள் யுக்தம் –-அந்தோ-கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை அபேக்ஷிக்க வேண்டுவதே எனக்கு –ஆச்சர்யமான ஸுந்தர்ய சீலாதிகளை யுடைய வனுடைய திருவடிகளை ப்ரீதியாலே அக்ரமமாக ஏத்தி அத்தாலே கால ஷேபம் பண்ண வேணும் என்று அத்யசிக்க வல்லரான அநந்ய பிரயோஜனர்க்கு--புன்மை யிலாதவர்கள்–சீரியவர்கள் –வுள்ள கிற்கை-உள்ள வல்லராகை –அத்யவசிக்க வல்லராகை ––கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்காக –அஹம் வோ பாந்தவோ ஜாத -என்கிறபடி துணையாக வந்து பிறந்தவன் -பரித்ராணாய ஸாதூ நாம் -என்று இறே அவதாரத்துக்கு பிரயோஜனம் இருப்பது –கல்யாண குணங்களையே ஆசைப்படும் துணையாக பற்றும் இது போக்கி – வீழ் துணை-ஆசைப்படும் துணை -தாம் வீழ்வார் -என்ன காட்டுவதே ஆசா யுக்தரை –யாதுமில்லை மிக்கதே–இதில் காட்டில் மேல் பட்டது வேறு ஒன்றும் இல்லை –

காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் 9-1-9-– நாலாயி:3789/2-பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை –காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –

நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர் -10-1-2— நாலாயி:3892/3-–ஆன்ரு ஸம்சயமே வேதார்த்தம் -என்று வேத தாத்பர்யம் கை வந்து இருக்குமவர்களாய் -வேத நிர்வாஹகரானவர்கள்-நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் –அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து-கை வந்து இருக்குமவர்களாய் வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்-அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்–அத்தேச வாசத்தாலே ஆஸ்ரித சம்ரக்ஷணமே பரம தர்மம் -என்று ஈஸ்வரனுக்கு அதிலே நிஷ்டனாக வேண்டி இருக்கும் தேசம் -அவ்வூரில் ஆஸ்ரயிக்க சென்றாரை -அஸ்மாபிஸ் துல்ய பவது -நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –

வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -–10-4-8– நாலாயி:3931/4-வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து -ஆயுஷ்மன் -என்னுமா போலே –நடுவே மங்களா சாசனம் செய்கிறார் –-உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழ் நெஞ்சே என்கிறார் –-புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் -சா ஹானி –என்னக் கடவது இறே –வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இறே நான் கால் பிடிக்கிறது –பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே–பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே- இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –

மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – -10-8-3- நாலாயி:3970/2-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்–மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –-கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் பிறவி புக்க இடத்தே புகக் கூடிய-பிணியைக் கிட்டேன் ––மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –ஸூஷ்ம சரீர விமோசனம் –இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –ஸூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –

நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன் – -10-8-11-நாலாயி:3978/2-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பிநல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ-சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்–நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி – திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே-–10-9-1- – நாலாயி:3979/4–வாழ் புகழ் நாரணன்ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —

முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்–10-10-9- – நாலாயி:3998/3-விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து – வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து- மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

—————————————————————————————————–

தாழ்ச்சி

தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட –-1-6 2- –- நாலாயி:76/2-தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க அத்வீதியமான சுட்டியானது-திருக் குழலில் சாத்திய-உங்கள் தமப்பனராய் இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்த கோபருடைய மடியில் இருந்து –இத்தால்-தன் மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும்-அவர் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை தனக்கு உகப்பு ஆகையாலே அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து-

தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் –-1-9 4- –- நாலாயி:111/2-நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை-ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் –திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு – நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக அர்ஜுனனுடைய அழகியதாய் –
திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் – என்னைப் புறம் புல்குவான் –

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் –  2-3 1- நாலாயி:139/1–பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –அன்றிக்கே –போய் –என்ற இது –மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் ) ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே – -3-6-9- –நாலாயி:283/2-சிவந்த செந்தாமரைப் பூவை சூழப் படிந்த வண்டினுடைய திரள் போலே 
சுருட்சியும்  மிருட்சியும்  உடைத்தான திருக் குழல்கள் தாழ்ந்த திரு முகத்தை உடையவன் –

முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் –6-6– நாலாயி:561/2–முத்து மாலை நிரைகளானவை தலையிலே வந்து தாழ்ந்த பந்தலின் கீழே(இன்றும் யானை வாஹனம் பொழுது முத்துக் கொடை கொண்டே புறப்பாடு –மற்ற நாள்களில் ஸ்வர்ணம் கொடை -யானை வாகனமும் ஆறாம் நாள் நடக்கும் 

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – 6-2-நாலாயி:699/3-மேல் பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹா பாரதம் இறே—ஊர் எங்கும் அடி ஒத்தித் திரியும் இறே -தனியே நின்று தயிர் கடைவார் உண்டோ என்று –ஒருத்தி தனியே நின்று தயிர் கடையக் கண்டவாறே அலாப்ய லாபம் பெற்றானாய்-ஓடிச் சென்று புக்கான் –நீ தனியே நின்று தயிர் கடையில் -ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாகப் படாது —
சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப் பற்றி கடையில் யாய்த்து என்று
அன்று தேவரசுரர் வாங்க -என்று பிறர் கை விட்டால் கடிவது பிறர் கார்யம் ஆகில் இறே
இங்கும் இவளும் ஒரு தலைப் பற்றில் இறே தன் பிரயோஜனம் ஆவது -இவன் கள்ள விழி –
அவள் கெண்டை ஒண் கண் மடவாள்-நோக்கும் நினைவும் செயலும் -சொல்லும் ஒருபடிப் பட்டு இருக்கும் அவளுக்கு-இவனுக்கு நோக்கு ஒரு படியும் நினைவு ஒரு படியும் சொல்லு ஒரு படியும் செயலும் வேறு ஒரு படியுமாய் இருக்கும் – இவன் நோக்காலே எல்லாம் மெய் என்று அவள் விஸ்வசித்தாள் யாய்த்து–வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ-உன் குழலை விஸ்வசித்த வண்டுகள் என் பட்டனவோ 

சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – –7-3-4-நாலாயி:1571/4–கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ -8-4-2– நாலாயி:1679/4-பூத்துச் செவ்வியை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –

தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ-–8-4-4- – நாலாயி:1681/4-பூமிக்கு ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –(கிருஷ்ணன் கிருஷ் பூமி வாச -கிருஷ்ண துளஸீ –சாத்திக் கொண்ட தாலேயே கறுத்த திருமேனி என்றும் –அவன் ஸ்பர்சத்தாலே இதுவும் கறுப்பானது )

தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-5–நாலாயி:1682/4-பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-6–நாலாயி:1683/4-ஆதி ராஜ்ய பிரகாசமான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான செவ்வியை உடைத்தான திருத் துழாயிலே படிந்து இங்கே வந்தூதப் பாராய் –(இவனே தேவாதி ராஜன் கோள் சொல்லிக் கொடுக்குமே )

தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – ––8-4-7–நாலாயி:1684/4-மாலையாய்
பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –

தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் ––8-5-2– நாலாயி:1689/2–ஒரு பிரயோஜனத்துக்காக போகில் இறே அத்தைக் கொடு போகல் ஆவது –
வரை போலே இருக்கிற திரு மார்பிலே இரண்டருகும் அருவி விழுந்தால் போலே இட்ட மாலையைப் பெற வேணும் என்னும் ஆசையாலே போன நெஞ்சானது ஒரு கால் மீளுகை அன்றிக்கே அங்கே அதி மாத்ர பிராவண்யத்தை  உடைத்தாய்க் கொண்டு கால் தாழ்ந்தது –

கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – 9-5-4-நாலாயி:1791/1–கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற ஒரு மணி யாய்த்து –மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –

தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – -திரு நெடும் தாண்டகம்–-25-நாலாயி:2076/2–இத்தால் ஒப்பனை அழகு சொல்கிறது-தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று அதி பரிமளிதமான திருத் துழாயாலே அலங்க்ருதமான வளையத்தின் கீழே –வைத்த வளையத்தின் கீழே திருத் தோள் அளவும் வரத் தாழ்ந்து பரபாக ரூபத்தாலே விளங்கா நின்றுள்ள திரு மகரக் குழையும் காட்டி –பிரிந்ததுக்கு மேலே –திருவடி திருத் தோளிலே ஏறி இவள் முன்னே சாரிகை வந்து -(புள்ளூறும் கள்வா கீழே உண்டே ) தனக்கு உள்ளதை அடையக் காட்டி இங்குள்ளத்தை அடையக் கொண்டான் -என்கிறாள் –இத்தால் ஒப்பனையோடு ஆபரணத்துக்கு உண்டான சேர்த்தி அழகு சொல்லுகிறது-

தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து – இரண்டாம் திருவந்தாதி –-22-நாலாயி:2203/4-பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது   இல்லையோ – ஆன பின்பு அதிலும் ஒரு குறையில்லை –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்–23--நாலாயி:2204/1–த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –

தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த – நாலாயி:2331/2

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது
–53- நாலாயி:2234/1,2–புறம்புத்தை அந்ய பரத்தையடைய அற்றுத் திருமலை   யாழ்வார்  பக்கலிலே அனுசந்தானத்தை யுடையராய்க் கொண்டு வழி பட ஆஸ்ரயிக்கிற வர்களுடைய குழல் கற்றையிலே –அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி –மூன்றாம் திருவந்தாதி-70– நாலாயி:2351/1-மஸ்தகஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும் பாய்த்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே –மதம் மிகைத்துக் கொண்டு வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இறே – அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் -கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தைக் கொண்டு கால் கழுவி

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
-கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை   யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும்

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி 11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு
-என்று அந்வயம்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவசரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

தற்கச் சமணரும் சாக்கிய பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
-99- நாலாயி:2889/1,2-தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் -தன்னை ஈஸ்வரன் என்று பிரமித்து லோகம் எல்லாம்-ஆராதிக்க வேண்டும் என்று -அதுக்கு தகுதியாக தீர்க்க ஜடையைத் தரித்து கொண்டு -சாதனா-வேஷத்தோடு இருந்து -மோஹா சாஸ்தராணி காராய -என்கிறபடியே -பகவத் அனுமதியாலே மோஹா சாஸ்த்ரத்தை-பிரவர்த்திப்பித்த ருத்ரனுடைய  வசனமான ஆகமத்தை அதிகரித்து போந்து -அதி தாமசராய் இருக்கும் பாசுபதரும் –பௌ த்தரை எடுத்த உடனே பாசுபதரை எடுத்தது –அவர்களோபாதி  இவர்களும் வேத பாஹ்யர் என்னும் இடம்  தோற்றுக்கைக்காக –

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது —–2-10-2– நாலாயி:3111/1-சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக புத்தி பண்ணாதே -என்னுதல்
சதிரிள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே -என்னுதல்-கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் –கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் –இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்-ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல்-அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்-பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை-பக்தாநாம் தவம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3-3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப – 4-7-10–நாலாயி:3306/1-திரு வாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -என்று இவ்வுக்தியோடே தரைப்பட்டு இவருடைய அவசாதனத்தினுடைய எல்லை காண்பது கண்ண நீரிலே யாயிற்று 

மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –5-5-8– நாலாயி:3392/4-தர்ச நீயமாக கண்டால் மறக்கப் போகாத குழல்கள் வந்து அலை எறியா நிற்பதாய் அணைக்கப் பாங்கான தோளும்-மொய் -அழகு-பாவியேன் -முன்னே நில்லா நிற்க அனுபவ யோக்யம் அல்லாத பாபத்தைப் பண்ணினேன் -கண் வட்டத்தில் தோற்றா நிற்க அணைக்க எட்டாது இருக்கிறதே –அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.-கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்
-7-3-3- – நாலாயி:3585/1,2–பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று -பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி
இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் -8-5-11– நாலாயி:3725/2–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

December 21, 2025

அக்காக்காய் – சிறுபிள்ளைகளுக்குக் குழல் வாருவார்
சீராட்டாகச் சொல்லும் பாசுரம். பெரியாழ்.
2-5-1-10
அக்காணி – ஸ்தூல சரீரம், பெரியாழ். 5-2-3.
அக்காரம்- வெல்லம், அக்ஷாரம் பெரியாழ்.2-4-5.
அக்காரம்- கருப்புக்கட்டி, இக்குரஸம், (இக்குரஸம் – கரும்புச்
சாறு) பெரியாழ். 2-9-7.
அக்காரக்கனியே- சருக்கரைக்கனியே. திருவாய். 2-9-8.
அக்காரவடிசில் சர்க்கரைப் பொங்கல். நாச்சி, 9-6.
அக்கு – எலும்பு, உருத்திராக்கம். பெரிய. 9-6-1. தே 6.76.7 புத்தூர்.
அக்குவடம் – சங்குமணி மாலை. பெரியாழ். 1-7-2
அகடு – வயிறு, நடுவிடம். பெரிய. 1-2-1.
10 அகப்பணி – அந்தரங்ககைங்கரியம். திருவாய். 10-2-6.
அகம் – சித்தம். நெஞ்சு,இடம்,பெரியாழ். 5-1-5:
இரண்டாம் திரு.22.
அகம்படி -உள்ளிடம். பெரிய. 11-6-89. தே. 4-1-7,8 அதிகை
5-91-1 தனித்திருக் குறுந்தொகை
அகம்படியர் – அந்தரங்கர். திருப். வியாக்.4.
அகமகந்தோறும் நின்ற இடங்கள் தோறும். திருவாய். 10-3-2
தே. 4-104-5. அதிகை.
15 அகமேனி ஆத்மஸ்வரூபம்.திருவாய். 9-7-10.
அகலம்-பரப்பு, மார்பு.மூன்றாம் திரு. தே. 1-43-3 கற்குடி.
அகலிடம் – பூமி. பெரிய 5-3-9.
அகலில்கலும் திருவாய்.1-7-10
அகவலை – வலையின் உள்ளிடம். திருவாய். 6-2-9
20 அகவலைப்படுத்தல் – வசப்படுத்தல். திருவாய். 6-2-9.
அகாரியம் – செய்யத் தகாததொழில். பெரியாழ். 4-4-1.
அகைப்பு – மதிப்பு. நாச்சி. 38.
அங்கம் ஆறு சிக்ஷை.வியாகரணம், சந்தசு, நிருத்தம்,
சோதிடம்,கல்பம்,திருமா.43. தே. 1-65-9
பல்லவனீச்சரம்; 5-67-4 வாஞ்சியம்.
அங்காத்தல் – வாய்திறத்தல். பெரியாழ். 1-1-6.
25 அங்கி – அக்கினி. இராமாநுஜ 2, தே. சூரியன், 1-36-9. ஐயாறு.
அங்குத்தை – அங்கு உண்டாகும் செயல். பெரியாழ். 3-8-10; 4-1-3.-அங்குற்றேனல்லன் – அவ்விடத்தும் புகுந்தவனல்லேன்.
திருவாய், 5-7-2.
அங்கையில் வட்டு- உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டி.
பெரிய. 10-9-3. வட்டு – கருப்புக்கட்டி.)
அச்சன் -நாதன், சுவாமி. பெருமாள். 29 (மலை நாட்டுச் சொல்).
30அச்சுதன் – அடியார்களை நழுவவிடாதவன்,
அழிவில்லாதவன்.திருமா. 2.
2
அச்சோ- அணைத்துக்கொள். பெரியாழ். 1-8-1. ஆச்சரியம்.
அச்சோ ஒருவரழகியவா.பெரிய . 9-2-1 அச்சோ.
பத்து. திருவாசகம். திருவால்.பொன்னனையாளுக்கு
அருள்புரிந்த திருவிளையாடல்செய்.15,17.
அசும்பு- நீர்ப்பெருக்கு, சேறு, கல்மஷம். பெரியாழ். 5-4-8.
அசுரர் – தேவர்களுக்கு விரோதிகள். பிரமன் தொடையில்
உதித்துப் பிரமனைப் பெண்ணாக நினைத்து
விரும்பியமையால் அசுரர் ஆயினர் . பெருமாள்.10-10.
அசோகின் இளந்தளிர் – அசோகமரத்தின் இளந்தளிர்கள்.
பெரிய. 3-5-1.
35 அஞ்சலோதி -ஐம்பால் . அஞ்சு+ அல்+ ஓதி. சுருட்சி,நீட்சி,
குளிர்ச்சி, அழகு, பரிமளம்,என்ற ஐந்து
வகையான தன்மைகளையுடைய கருமையான
கூந்தல், பெரிய. 10-2-4.
40
அஞ்சனத்தினீறு – மையின் சுண்ணம். அஞ்சனம் மை. சிறிய
திரு. 10
அட்டகில்லேன் – வார்க்கமாட்டேன். திருவாய்4-7-9
அட்டல்- வார்த்தல், சமைத்தல். பெரியாழ். 3-5-1. அட்டி -இட்டு. (போஜனம் பெரியாழ். 1-6-5.
அட்டுக்குவி சோற்றுப்பருப்பதம் – சமைத்துக் குவிக்கப்பட்ட
சோறாகிய மலை. பெரியாழ். 3-5-1
அட்டைகள் – சுவைப்பர். திருவாய்.9-1-2.
அடம்பு – ஒருவகைக் கடம்பு. பெரிய. 6-7.9.
அடல்- வலிமை, போர், கொல்லல், சமைத்தல். முதல் திரு 71. தே. அடல், போர். 3-107-1 வலஞ்சுழி.
அடலாழி கொண்டான் மாட்டன்பு – பராக்கிரமம் பொருந்திய
சக்கரத்தைக் கையிலே கொண்டுள்ள பெருமானிடத்தில்
செலுத்திய அன்பு. முதல் திரு.71
45 அடிக்கண்ணி சூடிய மாறன் – திருவடிகளாகிற பூமாலையை
முடிக்கு அணிந்த நம்மாழ்வார். திருவிருத்தம். 100. (மாறன்=உண்டியே உடையே உகந்தோடும் உலகத்தாருடைய
இயற்கைக்கு மாறு பட்டு “உண்ணும்
சோறு பருகுநீர், தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன்” என்று இருந்ததனால்
ஆழ்வார் மாறன் என்ற திருநாமம்
பெற்றார். என்பது அண்ணங்கராசாரி
யார் சுவாமி உரை.)
அடிகள் – சுவாமி. திருவாய். 6-1-8.
அடிக்கொட்டிட- அடியைச் சேர நாச்சி. 4-1.
அடிச்சி – அடியவள்(வெள்ளாட்டி) சிறிய திரு.54.
அடிச்சியோம் தலைமிசை- உன் அடியவர்களாகிய எங்களுடைய
தலையின் மேல். திருவாய். 10-3-5,6.
50 அடிதாறு அடிக்கு அளவாக இருத்தல், பாதுகை, பாதரேகை
பெரிய திரு. 32.
55
அடிநிலை ஈந்தான் – திருப்பாதுகைகளை அளித்தவன்.
பெரியாழ். 3-9-6.
அடிநீறு- அடிப்பொடி. திருவாய். 5-9-2.
அடிநீறு கொண்டு -ஸ்ரீபாத தூளியைக் கொண்டு. பெரியாழ், 4-6-6.
அடியுறை – ஸ்ரீ பாத காணிக்கை. பெரியாழ். 4-3-9.
அடியேன் மனம் புகுந்ததேனே – அடியேனுடைய மனத்தில்
புகுந்த தேன் போல்
இனியவளே, பெரிய. 7-2-9.
அடிவீழ்ச்சி – அடியாட்டி, அடியாள். நாச்சி. 9-7.
அடுதல் – சமைத்தல், கொல்லுதல், வருத்துதல். திருவாய்.
7-7-4,6., 8-1-1.
அடை – இலை. பெரியாழ். 2–3-1.
அடைக்காய் – வெற்றிலைப்பாக்கு, பெரியாழ். 2-3-1.
60 அடைபுடை – அகோராத்திரம். (இரவும் பகலும்) பெரிய. 4-10-3.
அண்டம் – அண்டகபாலம், மேலுலகம். திருவாய்.7-4-1.
அண்டர் – இடையர், நித்யசூரிகள், பெரியாழ், 1-1-5
அண்ணல் – பெருமையுடையவன். பெரியாழ். 4-10-6. தே. 1-49-9.
நள்ளாறு.
அண்ணா-தலைவா. பெரிய. 1-9-6; 1-10-1. தே 4-62-1. ஆலவாய்,
1-89-3 எருக்கத்தம்புலியூர்.
65 அண்ணிக்கும் – தித்திக்கும். கண்ணிநுண். 1. தே.6-54-3
புள்ளிருக்குவேளூர்; 6-52-2. வீழிமிழலை; 5-61-5.
அரிசிற்கரை புத்தூர்.-அணங்காடு மிளந்தெய்வம் – தெய்வ ஆவேசங்கொண்டு
ஆடுகின்ற அற்ப தெய்வம்.
திருவாய். 4-6-2.
அணங்கு – தெய்வமகள், வருத்தம். திருவாய்மொழி. 4-6-2.
புறநா.52. சீவக. 162, 171, 353, 1473, 2444. முருகு. 289.
சிலப். வேட்டுவவரி. அடி. 42, அகநா. 98. குறுந்,
136, 204, 308.
அணர் -மோவாய்க்கட்டை. பெரியாழ். 3-6-2.
அணவி -அணைந்து.திருவாய். 592; பெரியாழ். 4-8-9
அணார் – கழுத்து, கழுத்துக்கீழ் உறுப்பு. பெரியாழ். 3-5-8.
அணில் அணை கட்டியது – திருமா. 27.
அணுக்கர் சமீபத்திலிருப்பவர். பெரியாழ்.5-4-11.
அணுக்கன் – அந்தரங்கன். பெரியாழ். 3-2-5.
அணை – படுக்கை. பெருமாள். 1-1.
75 அத்தன் – மிடுக்கன். பெரியாழ். 2-1-7,
அத்தாணிச்சேவகம் – பிரியாமல் நெருங்கிச் செய்யும் சேவை.
அருகான இடம், ஆஸ்தானம். திருப்பல். 8
அத்திரம் அம்பு.பெரியாழ். 3–10-6.
அதக்கி – அடக்கி. பெரியாழ். 5-2-3.
அதகன் – பகைவரைக் கொல்லுவோன். பெரியாழ். 2-1-9.
80 அதர் – வழி. (புழுதி ) பெரிய. 4-3-6.
அதவி – அடர்த்து. இரண்டாம் திரு. 89.
அதவுதல் – நெருக்குதல். இரண்டாம் திரு. 89.
அதள்- தோல். பெரிய.9-6-1. தே. 4-22-5. கோயில்.
அந்தகன் – குருடன், இயமன். பெரிய. 2-3-7.
85 அந்தணர்களொரு மூவாயிரவர் பெருமாள்.10-2. தே. 7-90-7
கோயில்.
அந்தணர்தஞ்சிந்தையான் – திருநெடுந். 14. தே6-1-1- கோயில்.
அந்தணன் தோட்டம்- அக்கினி ஹோத்திரியான அந்தனுடைய தோட்டம். பெரிய, 10-9-9
அந்தண்மை பிராமணத் தன்மை.திருமா.25.
அந்தது – அப்படிப்பட்ட பிராப்யவஸ்து. திருவாய். 10-10-3.
90 அந்தமிழின் இன்பப்பாவினை. பெருமாள். 1-4 அந்தமில்பேரின்பம் – முடிவில்லாத பேரின்பம். திருவாய்.
10-9-10. சிலப் வரந்தரு. அடி. 182, கீர்த்தித்திரு அகவல். 101.அந்தரம் – இடையூறு, தாமதம், இடைவெளி. பெரியாழ். 1-5-6.
அந்தரி – துர்க்கை. நாச்சி. 6-3. சிலப் வேட்டுவவரி. 21.
புறஞ்சேரி. அடி.104.
அந்தாதியோராயிரத்துள். திருவாய். 5-3-11, 7-3-11.
95 அந்தாதியோராயிரம். திருவாய். 10-5-11.
அந்தி – மாலைப்பொழுது. பெரிய. 4-2-9; சந்தியாவந்தனம்.
முதல் திரு. 33. சிலப். அந்திமாலைச். அடி -23.
சந்தியாதேவி. சீவக 313.
அந்தி காலவன் பெரிய. 8-5-1. சந்திரன்.
அந்தி மூன்று -காலை, உச்சி, மாலை. பெரிய. 7-5-1.
அந்தியம் போது – சந்தியாகாலம் பெரிய. 2-8-1.
100 அந்நான்று அக்காலம், அன்று.பெரிய. 6-5-7. நான்முகன்.1 ,
பெரிய திரு. 52.
அநகன் – குற்றமற்றவன்.)
அநங்கதேவா . காமதேவனே. நாச்சி. 11.
அநந்தன் – ஆதிசேஷன். பெருமாள். 1-1.
அநுராகம் – ஆசை. திருவாய். 8-8-8.
105 அப்பா பெரிய. 1-9-5. தே. 6-95-1. பொது 3-47. ஆவடுதுறை.
அப்பில்- நீரில், நாச்சி.3.
அபிமான துங்கன் அகங்காரத்தால் உயர்ந்தவன்,
பெரியாழ். 4-4-8. திருப்பல். 11.
அம்பரம்-ஆடை, ஆகாயம். திருப்.17, பெரியாழ். 3-6-6.
அம்பு- நீர். சீவக.2332.
110 அம்புதம் – மேகம். பெரிய. 2-8-3.
அம்புயம் – தாமரை. பெருமாள், 7-1.
அம்புலி -சந்திரன். பெரியாழ். 1-4-3.
அம்மணி – அரை (இடுப்பு) பெரியாழ். 1-6-3.
அம்மமுண்ண – முலைப்பால் பருக. பெரியாழ்.2-2-1.
115 அம்மணைமார் – தாய்மார். நாச்சி. 33.
அம்மா- சுவாமியே. பெருமாள். 5-2.
அம்மா நின்பாதத்தருகு – ஸ்வாமி தங்களுடைய திருவடிகளின்
சமீபத்தில். பெரியதிரு .7.)
அமணர்-சைனர். பெரிய.7-4-5.
அமம் சூழ்ந்து வியாபித்து. மூன்றாம் திரு.98.
120 அமரர்களதிபதி – தேவராசன், நித்திய சூரியர் தலைவன்,
திருவாய், 1-1-1-அமருலகு – தேவருலகு, பரமபதம். பெரியதிரு, 6.7.
அமுக்கி – நன்றாகப்பூசி. பெரியாழ். 1-6-5.
அமுதிலுமாற்றவினியன் – அமிர்தத்தைக்காட்டிலும் மிக்க
இனியவன். திருவாய். 1-6-6.
அமை – மூங்கில்.
125 அயர்வில் அமரர்களாதிக் கொழுந்து – நித்ய சூரியகளுக்குக்
காரணமான
தலைவன். திருவாய். 1-7-4.
அயராப்பாய் – மறவாதிருக்கில் இரு. பெரிய திருவந். 83.
அயன்வாளி பிரமாத்திரம்.
அயில்- வேல், கூர்மை.
அரக்க நில்லா – அரக்க-அடக்க, நாச்சி. 3-4.
அரக்கன் போல்வானை – மாவலியை. இரண்டாம் திரு. 52.
அரக்கிலச்சினை – அரக்குமுத்திரை. திருவிருத், 76.

அரசிப்படுதி – அரசியின் தன்மை அடைகிறாய், கோபியா
நின்றாய். பெரியாழ். 2-9-10.
அரட்டன் – தீம்பன், மிடுக்கன். பெரிய. 3-4-10. தே. அரட்டர்
5-7-5.ஆரூர், திருவிசைப்பா.37.
அரட்டமுக்கி- சத்துருக்களை அமுங்கச் செய்வர். பெரிய.
3-4-10. தே. 5-100-10. ஆதிபுராணம்.
அரணம் – ரக்ஷகம், புகல். திருவாய், 9-1-4
அரந்தை- துக்கம். எழுகூற்றிருக்கை. 12.
145 அரம்பா -தீம்பனே. பெரியாழ். 3-1-6.
அரம்பையர் – தேவமாதர். பெருமாள். 4-2.
அரவதண்டம்-யமதண்டனை. பெரியாழ். 4-5-3,9. திருப்புகழ். 19.

அர்த்த பஞ்கசம்- ஸ்வஸ்ரூபம், பரஸ்வரூபம்,புருஷார்த்த
ஸ்வரூபம், உபாய் ஸ்வரூபம், உபாய
விரோதி ஸ்வரூபம். திருவாய். தனி.
அரக்கர் – ராட்சஸர். பெரிய. 4-3-5.

அரக்கு வழித்தது அரக்கு, செந்நிறம் வழித்தது. பூசியது.
பெரியாழ், 2-6-2.
அரக்கும் – அழுத்தும். பெரிய. 2-7-3 தே. 2-75-8. சீகாழி.
அரங்கத்தம்மா – திருப்பள்ளி. 1-9.
அரங்குதல் – அழிதல். திருச்சந் 32.49.
அரசாணி – அரசங்கொம்பு. பெரியாழ். 3-8-3.

அரவப்பகையூர்தி – கருடனைவாகனமாக உடைய கண்ணன்.
பெரியாழ். 3-5-11.
அரவு – பாம்பு. பெரியாழ். 3-5-11, திருவாய். 2-1-6.
150 அரனே – உருத்திரனுடையதே.திருவாய். 2-5-2.
அரி – திருமால். திருவாய். 1-3-6.
அரிகுரல்- தழுதழுத்த குரல். பெரிய. 8-5-9.
அரிகுலம் – குரங்குக் கூட்டம். பெரிய. 1-2-2.
அரிசினம்- மிக்க கோபத்தினால் .பெருமாள். 5-1.
155 அரியயனரன் – திருமால், பிரமன், சிவன். திருவாய். 1-3-6.
அருகல் சமீபம், சுருங்கல், திருவாய். 1-9-2,3.
அருத்தி – ஆசை. திருப்பா.25.
அருத்தித்தல். பிரார்த்தித்தல். திருப்பா. 20. தே. 4-92-8. ஐயாறு
7-47-8. பொது
அருபொருளை- அரியபொருளை. நான்முகன்
160 அருவித் தின்றிட – அலைத்துத்தின்ன. பெரிய. 7-7-1. தே. 7-16-1
கலய நல்லூர். (அருவ)
அருவிவேங்கடம் – அருவிகளையுடைய திருமலை நான் முகன் 40
அரைத்தொடர். அரைவடம். பெரியாழ். 1-3-4.
அல்குல்- அரை, நிதம்பம்.திருப்பா- 11, பெருமாள். 9-7
பெரியாழ். 1-7-8. தே. -54-3. ஓத்தூர்.)
அல்லல்-பாவம்,துக்கம். நாச்சி 13-10 சிவபுராணம் -91.
சீவக. 343. திருவிசைப்பா. 6-10.
165 அல்லி – அகவிதழ்.தாமரை, திருநெடுந் 12, பெருமாள் 2-10,
திருவிசைப்பா 19-3. சீவக. 162, 355, 606, 1422.
அல்லிமாதர் – இலக்குமி. பெரிய 1-7-9. தே. 2-101-11. ஆரூர்.
அலக்கண்- துன்பம். பெரிய
அலக்கழித்து – கிலேசப்படச்செய்து. பெரிய. 4-10-3. தே. 5-73-1
மங்கலக்குடி
170) அலகு விதை.முதல்திரு. 49.
அலங்கெழுதடக்கை – அலம்- கலப்பை. பெரிய. 2-7-8.
அலம்பிவண்டு- (அலம்பி- கிண்டி ) திருவாய்.9-9-10.
திருவிசைப்பா. 22.2.
அலம்புதல் – அலையச்செய்தல். பெரியாழ். 4-2-1.
அலத்தல்- கிலேசப்படுதல், கதறிஅழுதல், பெரியாழ். 4-5-1
175 அலந்தலை – கலக்கம் பெரியாழ். 3-7-1.
அலப்பாய் – அலமந்து. திருவாய். 5-8-4.
அலம்- கலப்பை பெரிய. 4-4-3.அலமருதல் சுழலுதல். திருவாய். 3-2-9. திருவிசைப்பா. 26-4,10.
அலர் மலர். திருவாய். 6-10-10 மணிமேகலை. பக். 46.
180 அலர்மேல் மங்கை- திருமகள். திருவாய். 6-10-10.
அலவலை – கண்ணன். கூடார்த்தங்களைச் சொல்பவன்
பெரியாழ், 2-1-2.
185
அல்வலைமை- அற்பத்தனம், அலைச்சல் தன்மை, பெரியாழ். 435
அலவன் ஆண்நண்டு, பெரிய. 6-7-7.
அலவை- வஞ்சகமுள்ளவள். பெரிய. 10-5-8.
அலவைப் பெண்- கெட்டவளான பூதனை. பெரிய. 10-5-8.
அலற்றி வாய்விட்டுக்கூவி, திருவாய். 4-4-9, 5-5-11, 6-4-1,6-7-11.
அலற்றி முறைகெடக்கூவி, கூப்பிட்டுநின்று, திருவாய்8-3-1.
அலற்றிய கூப்பிட்ட திருவாய். 9-7-11.
அலற்றும் – கூப்பிடும். திருவாய் 4-9-2.
190 அலற்றுவதென் – கூப்பிடுவதனால் என்னபயன்.திருவாய். 4-7-4.
அலற்றுவதே – துதிப்பதே, திருவாய். 3-5-9.
அலற்றுவன்-முறைமாறி அவன் குணங்களை வாயாலே
சொல்லுவேன்.திருவாய்1-3-10- கூவுகின்றேன். திருவாய். 1-57.
அலறி கதறிக்கூப்பிட்டு, பெரியாழ். 3-5-3.
அலி – நபும்ஸகம். திருவாய். 2-5-10.
195 அலைப்பூணுண்ணும்- அலைப்புண்ணுதலை அனுபவிக்கும்
அலைப்பூண் – அலைக்கப்படுகிற. திருவாய். 3-2-10.
அலோகம் காணப்படாத உலகம். திருவாய்.2-9-6. சீவக, 3082.
அவத்தங்கள் – பொல்லாங்குகளான யுத்தங்கள், திருவாய்.10-3-9.
அவத்தம்- அபத்தம். (பொல்லாங்கு) திருவாய், 10-3-9, பெரிய. 2-5-2.
அவபிருதம் – யாகத்தின் முடிவில் செய்யும் மங்களஸ்நானம்.
பெரியாழ். 4-7-6, திருப்பள்ளி 4.
200 அவம்- வீண். நான்முகன் திரு. 19, திருவிசைப்பா, வீழிமிழலை – 6.
அவலம்- துன்பம். பெரிய. 2-7-7,
அவனியாள் – பூமிதேவி. பெரியாழ். 1-3-8.
அவா. ஆசை. திருவாய். 10-10-11.
அவி- அவிஸ். யாகங்களில் தேவர்களுக்குக் கொடுக்கப்படும்
உணவு, நாச்சி. 1-5.
205 அவுணன்- ராட்சசன். பெரியாழ். 1-5-2. திருவிசைப்பா.
கோயில். 27.3
அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு.பெரியாழ். 4-8,10 அழக்காடி – பேய்ப்பெண். பூதனை. திருவாய், 2-10-9.அழகியான் – அழகுடையவன். நான்முகன் திரு. 22.
அழகு – சௌந்தர்யம். பெரிய திரு31.
210 அழல்- நெருப்பு. பெரியாழ். 4-7-3. பெரிய. 3-2-6, நாச்சி. 13-8.
அழலம்புகவூதி – அழலிற்புக, திருவாய். 4-8-8.
அழன்-பேய், பிணம், திருவாய், 2-10-9. தொல். எழுத். 354.
அழிப்பன் – சத்ருதுக்களை அழிப்பவனாகிய எம்பெருமான்
பெரியாழ். 4-8-6.
அழுந்தூர் மேற்றிசை நின்ற அம்மானே. பெரிய. 7-6-1-10,
சோழநாட்டில் மாயூரத்தை அடுத்துள்ளது.
உபரிச்ரவசு என்னும் அரசன் தனது தபோ
வலிமையினால் விமானத்துடன் ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் தன்மையுடையவன், ஒரு சமயம்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நேர்ந்த
விவாதத்தில் பட்ச பாதகமாக இவ்வரசன் தீர்ப்புச்
சொன்னமையால் முனிவர்களால் சபிக்கப்
பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர்
அழுந்தப் பெற்ற இடமாதல் பற்றி இதற்கு
அழுந்தூர் என்று பெயர் வந்தது. கம்பர் பிறந்த
இடம். தேவாரப்பாடல் பெற்றதலமுமாகும்.
215 அழுந்தை – பெரிய. 6-6-9. தே. 2-20-1-11 திருவழுந்தூர்.
அழும்புதல் – மிக நெருங்குதல். திருவாய். 1-7-9.
அள்ளல்- குழைசேறு, நெருக்கம், திருவிருத். 100.
அள்ளல் பயலை – அடர்த்தலையுடைய பசலை நிறம்.
திருவிருத் 12.
220
அள்ளியம் பொழில்வாய் – குளிர்ச்சி பொருந்திய அழகிய
சோலைகளில். பெரிய. 4-10-7.
அளகைக்கோன் – குபேரன். பெரிய. 2-10-8.
அளம்பு – உபமானம். பெரிய. திரு. 24.
அளறு -சேறு. திருப்பா.14 (வியாக்
அளி – கிருபை,வண்டு. பெருமாள். 1-6.
அளியத்த மேகங்காள் – தயையையுடைய மேகங்களே.
225 அளியத்தாய்- அருமந்தநீ எல்லோராலும் கிருபை
பண்ணத்தக்க நீ. திருவாய். 2-1-9.
அளை- வங்கு. பெரிய 1-2-5.
அற்கம்- அடக்கம். திருவாய். 6-5-4.
அற்புதன் – ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடையவன்.
திருவாய், 8-6-10.
அற்றம்- அறுதி. பெரியாழ். 5-2-6. பெரிய. 10-1-10.அற்றேன் வந்தடைந்தேன். பெரிய. 1-9-9.
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார் – தருமமே சுவராக நிற்கிற
அரங்கனார். திருமா.6
அறவன்- தருமஸ்வரூபி. திருவாய். 1-7-1.
அறிகண்டாய் – தெரிந்துகொள். பெரிய. திரு. 66.
அறுகால்- ஆறுகால்கள். பெரியாழ். 4-2-8.
235 அறுசுவை கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, தித்திப்பு,
துவர்ப்பு. திருவாய். 4-1-7. சீவக.193. நச்.உரை.
பெருங்.இலாவாண. கடிக்கம்பலை.80.
கட்டிலேற்றியது. 24. மணி. 28.116,241.
அறுதல்- சீரணித்தல். பெரியாழ். 1-4-6. (அறா}
அறுதி – முடிவு, வரை. பெரியாழ். 410-9.
அறுதொழில்- ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல். எழுகூற், அடி14. பெருங். 2.3.9.
புறநா. 397.20.
அறை- பாறை. பெரிய. 2-5-5.
240 அறைகை – சொல்லுதல், அடித்தல், ஒலித்தல், திருப்பா. 16.
அறையிடுதல் – அறைகூவுதல். திருவிருத். 19
245
அறையோ-ஐயம். பெரியாழ். 3-5-8, முறையிடும் சொல்.
திருவிருத். 10.
அறையோ – முறையோ முறையோ. பெரியாழ். 3-5-5,
திருவாய்.5-1-1.
அன்றிக் கொண்டு சீறிக்கொண்டு, நான்முகன், 29.
அன்றில்- அன்றிற் பறவை. கிரவுஞ்சப்பறவை. பெரிய. 11-2-5
தே. 1-60-7 தோணிபுரம், ஆரூர். 2-50-1 ஆமாத்தூர்.
அன்றிற்கூடு- அன்றில் பறவையின் கூடு. பெரிய. 11-2-1. அன்றிற்பேடைகாள் – திருவாய். 9-5-2,3.
அன்றுதல்- சீறுதல். திருவிருத் 18, பெரிய.8.3-8. அன்னமதாயிருந்து அறநூலுரைத்தது. பெரிய. 11-4-8.
250 அன்னமாய் மறையை வெளிப்படுத்த. திருநெடுந்.30.
அன்னவசம் செய்கை- உண்ட உணவிற்கு ஏற்ப இடம் வலங் கொள்ளுதல், தூங்குதல், திருவாய். 3-7-10. அன்னன்ன – அப்படிப்பட்ட. திருவிருத். 29. அனந்தல்- சோம்பல். திருப்.10.
அனன்றுண்ட நீர் – (இரும்பானது) பழுக்கக்காய்ச்சப் பெற்று
உட்கொண்டநீர். திருக்குறுந். 13.அனுங்குதல் – நோவுபடுதல்,வருந்துதல், நாச்சி. 14-2, பெரிய
7-8-3.
260
ஆக்கம்- செல்வம், பேறு, திருவாய். 9-1-2, 1-6-8. திருவாசகம்.
சிவ, 41.
ஆக்கை- சரீரம். நான்முகன். 93. திருவாசகம்.
திரு அண்டப்பகுதி. 137.
ஆகமவாதிகள். சைவர். இராமாநுஜ.91.
ஆதரம்- அன்பு . திருமா. 16.
ஆதன்மையால் – ஆன தன்மையால், அதனால்
ஆட்பட்டதனாலே.பெரிய. 2-4-8,9.
ஆதானும் யாதானும். பெரியதிரு. 25, 59.
ஆதித்தியன் – சூரியன். திருப். 22.
ஆது – யாது, பெரிய 939 தே 6-20-9 நள்ளாறு.
ஆதும் – யாதும். நாச்சி. 11-3, பெரிய. 10-7-10,
திருவாய். 3-4-10, 8-2-11.
265 ஆதுமில்காலம் – ஒன்றும் இல்லாத காலம். ஒரு துணையும்
இல்லாத சம்சாராவஸ்தை. திருவாய்.
3-4-4.
ஆதுமில்லை – யாதுமில்லை. பெரிய. 10-7-10. தே. 2-84-8.
நனிபள்ளி.
ஆநிரை- பசுக்கூட்டம். பெரியாழ். 3-4-4.
ஆப்பங்கொழியவும் சரீரம் ஒழியவும். நான்முகன். 93.
ஆப்பு -கட்டு. முதல்திரு. 75.
270 ஆப்புண்ட-யாப்புண்ட. பெரிய. 8-2-5.
ஆப்புண்டிருந்தவனே- கட்டுண்டிருந்தவனே. பெரிய. 5-6-1.9.
ஆம்பல் – இலைக்குழல். பெரிய. 9-5-8.
275
ஆம்பற்கழியும் இலைக்குழலோசைக்கு அழிவாள்.
பெரிய. 5-6-10.
ஆமருவி – பசுக்களை விரும்பி. (மருவுதல் விரும்புதல்)
பெரிய. 5-6-10.
ஆமுகம் (ஆ- ஐயோ). நாச்சி. 11-1.
ஆமைத்தாலி – ஆமைவடிவமாகச் செய்யப்பட்ட தாலி
பெரியாழ். 1-7-2, 2-6-1.
ஆய்க்குலம் – இடைக்குலம், திருப். 28. திருவிருத் 61.
ஆய்ந்தேத்த வல்லார் – ஆராய்ந்து துதிக்க வல்லவர்கள்.
நாச்சி.. 7-10.
ஆய்ப்பாலர் – இடைச்சியர்கள். பெரியாழ். 2-3-1.ஆயப்பிள்ளை – கண்ணன். பெரியாழ். 3-4-9.
ஆயம்-தோழியர் கூட்டம், வேலைத்திறம். சிநேகம்.
திருவாய். 8-2-1.
ஆயர்குலம் இடைக்குலம். பெரியாழ். 1-7-11,3-1-8, திருப்பா.5.
ஆயர்கொழுந்து கோபாலருக்குச் சிரோபூஷணம்,
நப்பின்னை. திருவாய். 5-6-11.
ஆயர்கொழுந்தே- இடைக்குலத்தலைவனே. பெரியாழ். 2-3-3.
285 ஆயர்பாடி -இடைச்சேரி. நாச்சி. 14-2; பெரியாழ். 2-2-5.
ஆயர்பாவை நப்பின்னை – இடை மகளான நப்பின்னை.
பெரிய. 2-3-5.
ஆயிரம் பேருடையவாளன் – ஆயிரம் பெயர்களையுடைய
பெருமான். பெரிய. 6-6-9.
ஆயிரவர் நலனேந்து திருவல்லவாழ் – ஆயிரம் பேர்
தன்னுடைய கலியாண குணங்களைக்
கொண்டாடும் படியாகத் திருவல்ல
வாழில் எழுந்தருளியிருக்கின்றவன். திருவாய் 5-9-10. இத்திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற
திருக்கோலம். நாச்சியார் செல்வத்
திருக்கொழுந்து. கிழக்கு நோக்கிய சந்நிதி.
பெருமான்கோலப்பிரான்.
ஆயோ – கிளி முதலிய பறவைகள் வந்து தானியங்களை
அழிக்காதபடி அவற்றை வெருட்டுவதாக
ஆயல் இடுகிற சொல். அதுவோ என்று
வினவுகிறபடி, திருவிருத் 10. தே. 7-9-4. சீபருப்பதம். சூளாமணி . 1658. ஆர்த்த- கட்டிய. முதல் திரு. 22. ஆரவாரம் செய்தல்.
பெரிய. 1-5-5
ஆர்தல் – நிறைதல். திருப்பா. 1, சிறிய -69, திருவாய். 4-1-6
ஆர்ப்பு -பேரொலி. ஸ்ரீவசனபூஷணம். சூ. 77. ஆர்படுவான்நேமி கூர்மை. மூன்றாம் திரு. 80.
ஆர்வம் அன்பு. பெரியாழ் 4-5-3. இரண்டாம் திரு. 1. திருவிசைப்பா. 25-8.
295 ஆர்வினவிலும் -எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும், பெரியாழ். 4-5-3.
ஆரல் – ஒருவகை மீன். பெரிய. 5-1-5.
ஆராமம் – உபவனம் சிறிய திரு. 71ஆராமை – திருப்தி பெறாமை.
ஆராவமுதம் தெவிட்டாத அமிர்தம். சிறிய. திரு. 7.
300 ஆராவமுது திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான்.திருவாய். 5-8-1.
ஆராவமுதே – திருமலையில் எழுந்தருளியிக்கின்ற
எம்பெருமானே.பெரிய. 1-10-3.
ஆரியன்-ஆசாரியன். உபதேசரத்தினமாலை. 64.
சிவபுராணம். 64. கீர்த்தித்திரு அகவல். 22.
ஆல்- தண்ணீர் . ஆலமரம். திருவாய். 9-10-1.
ஆலநிழலில் அறம் நால்வர்க்கு உரைத்து- ஓர் ஆலமரத்தின்
நிழலில் நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தவன் ருத்திரன்.
நான்முகன் திரு. 17. (நான்கு முனிவர்கள்: அகத்தியர்,
புலத்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர்) என்று அண்ணங்
கராசாரிய சுவாமிகள் உரை காண்கின்றார். நால்வர்
என்பது சனகர், சனந்தனர், சனாதனர்,சனத்குமாரர்
இவர்களைத்தான் எல்லா நூல்களும், பாகவதமும்
கூறுகின்றன. அப்படியிருக்க சுவாமிகள் கண்ட உரைக்கு
ஆதாரம் யாதோ? திருச்சாழல். 16.
ஆலமரத்தின் சிறப்பு: நூறுயோஜனை தூரம் உயரம்
உள்ளது எழுபத்தைந்து யோஜனை நீளமுள்ள கிளைகளை
யுடையது. எங்கும் நிழலையுடையது. தாபமற்றது. உயர்ந்த
யோகத்தின் ஸ்வரூபம் . மோட்சமடைய விருப்பமுள்ள
வர்களுக்கு ஆசிரயமுமானது
305 ஆலி – சிறுதுளி. பெரிய. 11-1-8. 1-2-1.
ஆலித்தல் – ஆரவாரஞ்செய்தல். பெரியாழ். 3-4-7.
திருவிசைப்பா. 29-9.
ஆலிநகர்க்கதிபதியே- திருவாலி நகர்க்கு தலைவனே.
பெருமாள். 8-7. இத்திருப்பதி சோழ நாட்டில்
சீகாழியிலிருந்து ஆறுகல் தொலைவில் உள்ளது.
திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று. இவ்வூருக்கு
அருகிலுள்ள வேதராஜபுரத்தில் பங்குனி
உத்திரத்தில் திருமங்கையாழ்வார் திருமாலை
வழிபறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது.
எம்பிரான் வயலாலி மணவாளன்.
ஆலிவளநாடன் திருவாலி நாட்டிற்க்குத் தலைவன்.
பெரிய.8-3-10.
ஆலிலை யன்னவசம் செய்யும்- ஆலிலையிலே தூங்குகின்ற
திருவாய். 7-1-4; 4-2-1.ஆலுதல் – ஆடுதல் கூவுதல், சப்தித்தல், பொருந்துதல்.
ஆவத்தனம் ஆபத்துக்காலத்தில் உதவும் செல்வம்.
(ஆவத்தனம் . ஆபத்தனம்). பெரியாழ்.
ஆவர் -யாவர், பெரிய. 3-3-7.
ஆவலிப்பு – பலம்,கர்வம். திருமா. 1
ஆவித்தல் – நெடுமூச்சுவிடுதல். கொட்டாவி கொள்ளுதல்.
பெரிய. 1-2-8. சீவக. 2426.
315 ஆழ்பொருள்- எளிதில் அறிய முடியாத பொருள்.
நான்முகன். 1.
ஆழ்தல் – மூழ்குதல். ஆழமாதல்.பெரிய. 6-3-4,
திருவாய். 4-7-5. 4-1-6.
ஆழமோழைமோழை- கீழ்த்திசையில் பெருகும் ஆறு. பெரியாழ். 3-7-4.
ஆழாந்து-ஆழ்ந்து, ஈடுபட்டு,திருவாய். 2-1-8. ஆழி-சக்கராயுதம், கடல், சூரியன், வட்டவடிவம்,
பெரிய. 5-7-8, திருவாய். 8-10-6. திருவிருத். 34.
4-2-6.
320 ஆழியான் ஆழ்ந்து தேறியவன். பெரியாழ். 1-9-7, திருவெம். 8. ஆள்- ஆண்மகன், காலாள். முதல்திரு. 81 ஆளம்வைத்தல் – ஆலாபித்தல், பெரியாழ். 4-8-6.
ஆளரி- நரசிங்கம். பெரியதிருமடல். 127 ஆளி – சிங்கம். பெரிய. 7-3-4.
325 ஆற்றங்கரை மரம். பெரிய. 11-8-1. நீத்தல். விண்ணப்பம். 3. ஆற்றல் – பராக்கிரமம். (கீர்த்தித்திருவகவல். 103.) ஆறு – விதம். திருவாய். 5-10-6.
ஆறுசமயம் சார்வாகம், பெளத்தம், க்ஷபணம், வைகம்,
14
சாங்கியம், பாசுபதம், திருவாய். 9-48. அண்டப்பகுதி,79. ஆறுபொதி சடை கங்கைனயத்தரித்த சடை. திருவெழுகூற். 20.
330 ஆன் – பசு. திருச்சந்.40. பெரியாழ். 2-7-1, திருவாய். 1-8-8.
335
ஆனாத- அழியாத. பெருமாள். 4-2 ஆனாய் – ஆனையே .பெரிய. 1-9-2, தே. 3-55-7. வான்மியூர். ஆனாயன் – மாட்டிடையன். பெரிய. 5-5-3. திருவாய். 1-8-8. ஆனாயனாகி – மாடுமேய்க்கும் இடைக்குலத்தவனாகி . பெரிய. 11-5-4.
ஆனெய்- பசுவின் நெய். திருச்சந். 40 ஆனைச்சாத்தன் பாரத்துவாசம், வலியன். திருப். 7. இகல்- பகை, போர். திருவாய். 6-46-இகுளாய் – தோழியாய். திருவாய்.6 -3-9.
இங்குத்தை – இவ்விடத்திய. நாச்சி. 12-4.
340 இங்குத்தை நின்றுந்துரப்பன் – இவ்விடத்தினின்றும் உன்னை
ஓட்டி விடுவேன். நாச்சி. 5-10.
345
350
355
இங்குற்றேனல்லேன் – இங்கு நிற்கமாட்டேன்.)
( பிறரோடு பொருந்துகிறதில்லை என்று
கூறினும் பொருந்தும் ) திருவாய். 5-7-2
இங்கே- இங்கு. நாச்சி. 14-1.
இசலி – இகலி. பெரிய. 3-9-3.
இசலுதல் – பேரொலிசெய்தல். ஈடு.4-10.6.
இசித்தல் – இழுத்தல். பெரிய. 1-2-6.
இசை – இராகம், உடன்பாடு. திருவாய். 2-4-11.
திருவண்டப்பகுதி . 35
இசைகாரர் – பாடுபவர். திருவாய். 1-5-6.
இட்டம்- இஷ்டம். விருப்பம், நாச்சி. 14-1, திருவாய். 1-8-8.
இட்டாதெய்வம் – இஷ்டமான தேவதை. திருவாய். 3-9-6.
இட்டிடை சிறிய இடுப்பு. திருச்சந்.13, திருவெம்பாவை. 16.
இட்டீடு – பரிகாசச்சொல்.திருப். 18. வியாக்.
இட்டீறு – களிப்புடன் செய்யும் விளையாட்டு. நாச்சி 14-1
இட்டு வெந்நீரைக் காய்ச்சுதல். பெரியாழ். 2-4-3. (உரை)
இடங்கை இடக்கை. இரண்டாந்திரு. 71.
இடங்கொள்ளுதல்-வியாபித்தல். திருவாய். 5-2-4.
இடத்தல் – பிளத்தல். இரண்டாந்திரு. 94.
இடம் – வசிக்குமிடம். நான்முகன் திரு. 66.
இடம் பெறுதல் – இடம் பெற்றிருத்தல். திருவாய். 1-3-9.
இடமுடைமை விசாலமானதாயிருத்தல். பெரிய. 11-5-3.
360 இடர் – துன்பம். பெரிய. 6-9-1.
இடராட்டியேன் – துன்பமுடையநான். திருவாய். 8-2-2.
இடவகை- வசிக்குமிடம். பெரியாழ். 5-4-10.
இடவணரை – இடத்தோளோடு சாய்த்து. பெரியாழ். 3-6-2.
இடவன்- மண்கட்டி, பெரியாழ். 3-5-5.
365 இடற தட்டித் திரியும்படி. பெரியாழ். 3-2-6.
இடறி- கடந்து. திருவாய். 6-7-2 (தே) 6-27-1, 10 ஆரூர்
திருவிசைப்பா. 26.6.
இடறுதல் துன்புறுதல், திருவாய். 4-1-7.இடறும்- சுழலானின்ற. திருவாய்.4-7-7.
இடிசேர் – இடியை. ஒத்த – திருவாய்.4-1-3.
இடித்தல் – தகர்த்தல். திருவிருத்.36.
இடிதல் – கட்டுக்குலைதல். திருவாய். 9-6- 2.
இடுக்குண்ட – நெருக்குற்ற. பெரியதிருவந். 21.
இடுகை- கொடுக்கை. பெரிய. 1-6-5.
இடும்பை- துன்பம். பெரிய. 1-6-5.
இடைகழி இடைக்கட்டு. முதல் திரு. 86.
இடையனெறிந்த மரமே யொத்திராமே பெரிய. 11-8-6.
சீவக. 1914. பழமொழி.314. இடையில்லை- அவசாசமில்லை. திருவாய். 8-2-8, 9-5-5.
இடையுவா பௌர்ணமி. – நாச்சி. 7-3.
இடைவீடின்றி – இடைவிடாமல். திருவாய். 1-10-8, 2-9-4.
இண்டைக்குலம் நெருங்குதலையுடைய கூட்டம். திருப்பல். 5.
இண்டைகொண்டு பூமாலைகொண்டு. பெரியாழ். 3-2-10. (தே)5-7-3. ஆரூர். இண்டைச்சடை முடியீசன் – மாலையையும், ஜடையையும்,
கிரீடத்தையும் உடைய உருத்திரன்.
திருவாய். 7-5-7. (தே). 5-6-9, ஆரூர், இணக்கம்- சகவாசம், பொருத்தம், திருவாய். 6-2.8. இணர் – பூங்கொத்து. பெரிய திருவந். 29.
இணைந்து – கலந்து. திருவாய். 6-1-4. இணைவனாம்- சமனாகியிருப்பான். திருவாய். 2-8-1. இத்தனை – இவ்வளவு. திருவாய். 9-5-1. இதணம் பரண், பெரிய. 1-8-8. இதழுக்குக்கமுகம்பழம் திருவாய். 8-9-6.
390 இது வென்னிது வென்னிது வென்னோ. (ஊடல்). பெரிய. 10-8-1,9.
இந்தளூரீரே – பெரிய. 4-9-1,3,4,5,6,7,8,9, இந்திரகோபம் – தம்பலப்பூச்சி, நாச்சி, 91. இந்திர ஞாலங்கள் -பொய்யான வித்தைகள். திருவாய். இந்திரலோகம் – இந்திரனது உலகம். திருமா. 2.
395 இந்திரன் சிறுவன – அருச்சுனன். பெரிய. 2-3-6. இந்து- சந்திரன். பெரிய. 4-2-9. திருப்பூவல்லி.4. இமம்-பனி. மூன்றாம் திரு. 98.-இமவந்தம்- இமயமலை. பெரியாழ். 4-7-4.
இமில்- கழுத்து. திருவிருத்.21.
இமையவர் – தேவர். பெரியாழ். 4-7-4.
இயக்கர் – யக்ஷர். திருப்பல். 9.
இயக்கு – துன்பம். திருச்சந்த.120
இயங்கல்- செல்லுதல். முதல்திரு. 8.
இயத்தல்-கடத்தல். திருவாய். 1-3-6.
இயந்த- இகந்த.திருவாய். 1-3-6.
இயல்- இலட்சணம். இராமாநுஜ.
இயல்வு- விரகு. முதல்திரு 12,13; இராமாநுஜ 26 திருவிருத் 24.
இரண்டத்தில் இரண்டில். சிறியதிரும.59.
இரண்டுதறுகண் இரண்டுதிருக்கண்கள் . பெரிய. 11-4-4.
410 இரந்தார் – யாசிப்பவர். பெரிய, 1-9-3.
415
இரவியர் – சூரியர். திருப்பள். 6.
இராக்கதி- ராக்ஷஸி.பெரிய. 10-6-9.
இராகம் – இசைப்பாட்டு,ஆசை. திருவாய். 1-6-5.
இராவணாந்தகன் – இராவணனைக் கொன்றவன். பெரிய. 2-3-7
இரிதல் – ஓடுதல். பெருமாள். 1-1
இரிய – ஆரவாரித்து. திருவாய். 5-2-3.
இரீஈ- இருத்தி. திருவாய். 2-7-9.
இருக்கு- வேதம். பெரியாழ். 5-1-6, திருவிருத்.64.
இருடீ கேசன் இந்திரியங்களையடக்கியாள்பவன்.
பெரியாழ். 5-4-5 திருவாய். 2-7-10, நாச்சி. 5-6,
420 இருந்தில் – கரி. பெரிய. 2-10-3.
இருபாடெரி கொள்ளியின் உள்ளெறும்பே போல்- பெரிய
11-8.4. திருவாசகம், நீந்தல் விண்ணப்பம். செய்.சு,
சீவக . நாமகள் 243, தே 4-75-6.
இரும்பு நான்றுண்ட
நீர்போல். திருக்குறுந்5.
இரும்புபோல் வலிய நெஞ்சம். திருமா. 17.
இரைதேரும் புதாவினங்காள். பெருநாரை, திருவாய். 6.8.9.
425 இல்லம்- வீடு. பெரியாழ். 3-8-1.
இல்லம் வெறியோடிற்று வீடு வெறிச்சென்றிருக்கிறது.
இல்லறமல்லேல் துறவறமில் நான்முகன். 72.
இல்லி- சிறுவழி. பெரியதிரும. 87.
இலக்கு – குறி. பெரிய திரும. 87-இலகுதல் – விளங்குதல். திருவாய். 8-8-1.
இலச்சினை – அடையாளம், முத்திரை. பெரியாழ். 1-7-6.
இலட்டுவம் – வட்டு. பெரியாழ். 2-9-9,
இலிங்கியர் – இலிங்கப்பிரமாணவாதியரான அனுமானியர்.
திருவாய். 4-10-4.
இலைக்குடை நீழல். இலையாகிற குடையின் நிழல்
பெரிய 9-1-5.
435 இலைக்குழலூதி – இலையினால் ஆகிய ஊது குழல்.
பெரிய. 10-7-6.
இலையம்- இலை. பரியாழ். 3-4.8-
இவரித்தல் – எதிர்த்தல். பெரிய. 8-8-9.
இவரித்து – ஏறி. பெரிய. 8.8.9.
18
இவள்பரமே-இவளிடம் உண்டாகக் கடவதோ. திருவிருத். 60.
இவையா இவை இருக்கிறபடிபாராய். பெரியாழ். 2-3-2.
440 இழந்ததுகட்டே லோக மரியாதையை இழந்தாள்.
திருவாய். 6-6-10.
445
450
இழந்தது கற்பே- தன்னுடையச் சாயே-காந்தி திருவாய். 6-6-7.
இழந்தது மாமை நிறமே அழகிய நிறத்தை இழந்தாள்.
திருவாய். 6-6-2.
இழுக்காய்த்து குற்றமாகியது. பெரிய. 4-9-4.
இழிசிய – எழுதப்பட்ட. பெரிய. 2-8-7.
இள்கி- வஞ்சித்து. பெரியாழ், 3-7-4.
இளக – இல்லையாக. பெரியதிருவந். 18.
இளங்கோ- பெருமாள். 9-2.
இளங்கோயில் இரண்டாந்திரு. 54 தே. 6-70-5. க்ஷேத்திரக்
கோவை.
இளநீர் குலை தாழ்கிடங்கின் கூடலூர். பெரிய 5-2-8
இளம்படி – மிருதுஸ்வபாவம் . பெரிய. 2-7-2.
இளைதே – பிள்ளைத்தனமே. திருவாய். 6-2-6.
இளமையாடும் பால்யசேஷ்டைகளைச் செய்யும்.பெரிய
11-2-2. சீவக. 2491
455 இளையவரேசாமுன் – பெரிய. 1-3-2.
இளையாப்பாய் – தளராதொழிவாய் பெரிய திருவந் 23.
இற்றைப்பறை கொள்வான் – பிரயோசனம் திருப்பா. 29. இறப்பு – மரணம்,மோட்சம் திருவாய். 4-1-10.
இறவு – முடித்தல். பெரியாழ். 5-4-2-இறுகல்-அழுந்தல் திருவாய். 41-10.
இறுத்தல் – செலுத்துதல் திருவாய். 5-2-8.
இறை- சிறிது, அரசன், கடவுள், கப்பம். பெரிய 5-10-4
திருவாசகம். திருச்சதகம.செய். 57.
இறைகளவை – சரீரங்களாகிய அவை. பெரிய. 5-10-4.
இறைஞ்சென்- மனனே. பெரிய. 11-4-1.
465 இறைநிலை- பரமாத்ம ஸ்வரூபம். திருவாய்.தனியன். 1-1-5.
இறையான்- சிவன். பெரியாழ்வார். 518. முதல் திரு. 28.
இறையிறை யுருகும் வண்ணம்- கொஞ்சம், கொஞ்சம்
திருமா. 17.
470
இறைவன் குறை யிரப்ப மார்பு வாசநீர் அளித்தான்.
பெரிய 6-9-9.
இன்பமாரி- இன்பத்தையுண்டாக்கும் மேகம்.
இன்மை- இல்லாமை.. திருவாய். 6-3-4.
இன்னாமை- துன்பம். திருக்குறள். 630.
இன்னாரினையார் – இவர் இப்படிப்பட்டவர். நாச்சி. 7-5.
இனமலரெட்டுமிட்டு – செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி,
பாதிரி,புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை
அஷ்டவித புஷ்பம். ஆசார்ய ஹ்ருதயம். பெரிய. 1-2-7.
இனவேற்கண். திருவாய்மொழி. 5-6-6.
475 இனிதிரை – இனிதுதிரை கடைக்குறை. திரை இனிது –
அலைகள் இனிதாக. திருமா. 18.
இனியெம்பரமே – பரம் – வசம்.திருவாய். 6-2-4.
ஈசன்- சிவன். பெரிய. 2-10-1, நான்முகன்- திரு. 96.
கீர்த்தித்திருவகவல். 25, திரு அண்டப்பகுதி,46.
திருவிசைப்பா. 4-1, 25-9. தே. 4-65-3. சாய்க்காடு.
ஈசிபோமின் – சீசீ போங்கள். பெரிய. 1-3-8.
ஈட்டம் – கூட்டம். பெருமாள். 2-1.
480 ஈட்டுதல் – திரளுதல், திருவிருத்.21
ஈடுமெடுப்புமிலீசன்- குற்றம் பார்த்துத் தள்ளுகையும், குணம்
பார்த்துக் கொள்ளுகையும் இல்லாத
எம்பெருமான். திருவாய். :-6- 3.
ஈப்பாய்- ஈவாய். நான்முகன் திரு. 19.
ஈர்த்தல் – இழுத்தல். நாச்சி. 14.4. சிவபுராணம். 74.
ஈர்மை அறுக்குந்தன்மை. திருவாய். 9-6-3.
485 ஈர்மை கொள்தேவர் – அன்புடைய தேவர்கள். 2-8-10.
ஈர்மைசெய்து- ஈடுபடுதல்செய்து. திருவாய். 9- 6-3.-ஈரியாயிருப்பாள்- அன்புள்ளவளாய் இருப்பாள்
திருவாய். 6-7-9.
ஈவிலாத தீவினைகள் – நாசமில்லாத தீவினைகள்
திருவாய். 4-7-3.
ஈவு- நாசம்.திருவாய். 47-3.
490 ஈளை- கோழை. பெரிய. 6-4-1. தே. 1-67-6, 2-100-8.
கோவலூர்வீரட்டம்.
ஈளையேங்கி- கோழையாலே இளைத்து. பெரிய, 1-3-6.
ஈற்றுத்தாய் பெற்றதாய் . பெரிய. 3-9-2.
ஈன்துழாய்- போக்கியமான திருத்துழாய். பெரியதிரும.60.
495 ஈன்துழாயானை – இனிய துளசிமாலையையுடைய திருமால்
முதல்திருவந். 26.
ஈனமர் சாபம் – தன்மைபொருந்திய சாபம். பெரிய, 5-9-4.
உக்கம்- ஆலவட்டம். திருப்பா. 20.
உகட்டுண்டு- உகட்டு- உவட்டு, திருவாய். 3-5-4.
உகவை- சந்தோஷம். திருவாய். 6-2-8.
500 உகிர் – நகம். பெரிய. 10-9-8.
உகைத்தல் – உபேக்ஷித்தல். நான்முகன் திரு. 38. உச்சிமணிச்சுட்டி – தலையிலே அணியத்தக்க ஒரு ஆபரணம்.
பெரியாழ். 1-3-8.
உட்கண் – ஞானக்கண். பெரியதிருவந். 28. உட்கு – பெருமை, அச்சம்.
505 உடல் உள் அவிழ்ந்து சரீரமும், மனமும் நெகிழ்ந்து.
பெரியாழ். 3-6-1.
உடலையுள் – உடலுள். பெரிய. 10-1-5.
உடன் – ஒருங்கு. பெரிய, 11-2-10.
உடுக்கை- உடைத்தோல். திருவாய், 4-8-4.
உடைமணி – அரையில் கட்டிய மணிகள். பெரியாழ். 1-7-1.
510 உணங்கல் உலர்தல். (புழுக்கப்பட்ட நெல் ) திருவாய். 4-6-7. உணர்வத்தொடு – ஞானத்தோடு. திருவாய். 4-1-10. உத்தரவேதி – யாகசாலை. பெரியாழ். 1-9-6. உத்தானம் எடுத்தல். பெரியாழ். 1-8-1. உதரம்- வயிறு. அம .4.
515 உந்தி – கொப்புழ். பெரிய. 5-4-1. உந்தி பறக்கை- மகளிர் குழாம் உந்தி விளையாட்டு ஆடுதல். பெரியாழ். 3.9-11.-உபகாரம் கொள்ளாது – உபகாரத்தைக் கொள்ள முயலாமல்.
(தொண்டுகள் செய்கையாகிற உதவியைப் பெறமுயலாமல்)
பெரிய திருவந்.39.
உம்பர் -மேலிடம், தேவர். பெரிய. 7-8-10; திருவாய். 10-8-7.
திருச்சதகம். 64,66.
உம்பர்கோன் – இந்திரன். பெரிய. 5-4-5.
520 உமர் – உம்மைச் சேர்ந்தவர். திருவாய்.8-1-4.
உய்வு – பிழைப்பு. திருவாய். 4-3-11.
உயர்த்துணவு -ஞானம் . மூன்றாந்திருவந். 94
உயிர்நிலை – சீவாத்மஸ்வரூபம். திருவாய். தனியன். . உயிர்ப்பு – மூச்சு.நாச்சி. 5-2.
525உயோகுதுயில் – யோகநித்திரை.எல்லாவற்றையும் அறிந்து
கொண்டே தூங்குதல். பெரியாழ். 1-5-1.
உரப்புதல் அதட்டுதல். சிறிய திரும. 37.
உரப்பாள் – அதட்டாள். நாச்சி. 3-9.
உரம் – பலம், மார்பு. திருவாய். 1-3-1.
உரவு- விஷம். திருவாய். 6-4-1.
530 உரு – ரூபம், தேகம். பெரிய. 1-4-2.
உருப்பன் – உருக்குமன். பெரியாழ். 4-3-1.
உருப்பிணி – உருக்குமிணி. பெரியாழ். 3-9-3, 4-3-1.
உருப்பொலிகை – தழும்பேறுதல். பெரியாழ். 5-4-7.
உருமகம்- நரமேத யாகம். பெரியாழ். 4-8-3.
535 உருவறை – அவலக்ஷணம். பெரியாழ். 3-8-2.
உருவெண்ணும் – கணக்கெண்ணும். முதல்திரு. 33.
உரைக்கியம் – சொல்லுவம். திருவிருத்.55.
உரோடம் – ரோஷம். பெரியாழ். 2-6-5. நாச்சி. 2-5.
உரோமகூபம் – மயிர்ச்சிலிர்ப்பு. பெரியாழ். 5-1-7.
540 உலக்க ஒதுவனே -எப்படி முடியச் சொல்லுவன்.
திருவாய். 3-1-5.
உலக்க- முடியக் கண்டு திருவாய்.8-3-10.
உலங்கு- பெரு நுளம்பு- பெருங்கொசுகு. நாச்சி. 8-6.
உலங்குண்ட விளங்கனி – பெருங்கொசுக்கள் உண்ட
விளாம்பழம். நாச்சி. 8-6.
உலப்பு – வறட்சி, அழிவு. திருவாய்.6-10-1.
545 உலாகின்ற – கெண்டை- உலாவுகின்ற. திருவிரு . 75.
உலோபாய்- உலோபமற்றிரா நின்றாய். பெரியாழ். 2-7-6.
(தே.6-35-7. வெண்காடு)
உவணம்-கருடப்பட்சி முதல்திரு. 22.-உவரி – கடல் . நான்முகன். 56.
உவலையாக்கை – அருவருப்பான உடம்பு. திருவாய் 1-5-8.
550 உவனியம்-உபநயனம். பெரிய. 5-8-7.
உழக்குண்டு – துன்பப்பட்டு. நாச்சி. 13-4.
உழலையென்பு -உழலைத்தடி கோத்தாற்போலேயிருக்கின்ற
எலும்புகள். திருவாய்5-8-11.
உழறா நெகிழ்ந்தாய் -கலங்கி. பெருமா . 6-8.
உழறியுண்ண- துகைத்து. பெரிய. 9-5-2.
555 உழறுதல் – துகைத்தல். கலங்குதல். பெருமாள்.6-3.
திருவிருத்.58. (தே.3-47-7.ஆலவாய். உழறுமேல்’ தக்க. 32. உழிதருதல் – அலைதல். திருநெடுந். 9, திருமா.1, திருச்சதகம்.8. (திருவாசகம்.5,7)
560
22
உழுவை – புலி. பெரியாழ். 1-7-6. (திருச்சதகம். 7. அச்சப்பத்து. 8 )
உழை – புள்ளிமான். பெரியாழ். 5-1-2.
உள்ளுதல் – நினைத்தல். திருமா. 84.
உற்றாரிலி- கண்டு கிட்டினாரில்லாத. திருவாய். 5-6-7.
உறகல்- உறங்கல், உறங்கவேண்டா. பெரியாழ். 5-2-9. உறகுதல்- உறங்குதல். பெரியாழ்5-2-9.
உறல்- ஸ்பரிசம். திருவாய். 3-6-6.
உறிகள் போல் மெய் நரம்பெழுந்து – உடலிலுள்ள நரம்பகள் உறிகளைப் போல வெளியே தெரியும்படி. பெரிய. 1-3-3.
565உறுகை- கிட்டுகை, சேருகை, திருவாய். 4-9-10.
570
உறுவது – உற்றது. திருவாய். 4-10-6. உறைக்கும் பொல்லாதாய் முடியும். நாச்சி. 2-9. உறைப்பன் – மிடுக்கன். பெரியாழ். 4-8-2. உன்மத்தர் பைத்தியம் பிடித்தவர், பெருமாள். 3-4.
உன்னி – நினைத்தற்குரியவன். பெரிய. 10-1-3. உன்னித்து- நினைத்து, அனுசந்தித்து. திருவாய். 4-6-9. உன்னுடைய சுண்டாயம் நானறிவன் – உன்னுடைய வஞ்சகத்தை நான் அறிவேன். திருவாய் 6-2-11
சுண்டாயம் – விளையாட்டு.திருவாய். 7-8-7. உன்னை என்னுள்ளே குழைத்தாய்-என்னோடு ஒன்றாகக் கலந்தாய். திருவாய். 2-6-9. உனக்கேயறக் கொட்டு – உனக்கென்றேயற்றொழிய.
திருவாய். 7-8-5.
575 ஊக்கம் – முயற்சி, உயர்ச்சி, மிடுக்கு, பெரிய. 10-9-1. ஊட்டம்-உணவு, நாச்சி. 1-9. (திருவாசகம்) திருச்சாழல். 14.-ஊட்ட முதல் இலேன் தினந்தோறும் ஊட்டி வளர்க்கத்தக்க
கைப்பொருள் என்னிடம் இல்லை. பெரியாழ். 3-3-8
ஊடல் பிரண கலகம்.நாச்சி, 4-11.
ஊடாடுதல் நடுவேதிரிதல். திருவாய். 1-4-9
580 ஊத்தை அசுத்தம். பெரியாழ். 4-6-10)
ஊத்தைவாய் அசுத்தமானவாய். பெரியாழ். 4-4-3.
தே 2.38.10 சாய்க்காடு.
ஊமனார் கண்ட கனவினும் பழுதாய். பெரிய1- 1-3
ஊர்தல் – நடத்தல். பரவுதல்,ஒழுகுதல், திருநெடுந். 23.
ஊரவர் கவ்வை- ஊராருடைய ஆரவாரம். திருவாய். 5-3-1,2,3,4
55 ஊரவர் கவ்வை எருவிட்டு – ஊரார் கூறும் பழியாகிற
எருவை இட்டு. திருவாய். 5-3-4
590
595
ஊரா – ஊர்ப்பசு. திருவிருத். 94.
ஊராமிலைக்க – ஊர்வந்து சேர்ந்த கண்தெரிந்த பசுக்கள்
கனைக்க. திருவிருத். 94.
ஊழ்-முறை,விதி.
ஊழ்த்தல் – கனிதல். பெரிய.
ஊழ்மை. முறைமை. திருவாய 4-6.9
ஊழி கல்பம், பெரிய. 8-5-6 திருவாய் 5-4-8
திரு அண்டப்பகுதி 9.
ஊழி- விலக்ஷண காலம். திருவாய், 2-1-4, 5. பெரிய 1-4.9
திருப்பா. 4.
ஊழிலை – முற்றிப்பழுத்து விழுந்த இலை. சருகு.
ஊளியெழ – சப்தம் எழ. திருவாய். 7-4-4
ஊற்றம் -உறுதி. அனுசந்தானம். திருப்பா.21.
ஊறல்-ஊறிவந்த ஸாரம், நாச்சி. 10-9
ஊறு – தீமை. திருவாய். 7-4-2.
ஊன் -மாமிசம். பெருமா. 41. பெரிய. 1-4-2
ஊனகரகர் – பிறரைக்கொண்டு தீமை செய்பவர். திருமா.41.
600 ஊனக்குரம்பை. மாமி தேகம். முதல்திரு.91.
ஊனில்வாழ் உயிரே – மாம்சரூபமான சரீரத்தில் வாழ்கின்ற
நெஞ்சமே. திருவாய் 231.
எஃகு – எஃகினாற்செய்த சூலம். பெரியதிரும்.94.
எக்கல்-மேடு. திருவாய். 4-1-4
எக்கே – இது என்ன கஷ்டமோ, பெரிய. 10-8-8எக்கம் ஒரு தந்தியையுடைய வாத்தியம்,தாளம்.
பெரியாழ். 3-4-1.
எங்கள் குடிமுழுது எங்களுடைய குடியிலுள்ளார்
எல்லாரையும். பெரியாழ். 3-4-1.
எட்டினோடிரண்டு- பத்து, திருச்சந்த 83. திருச்சதகம். 49.
எடுப்பு-உயர்வு. திருவாய். 1-6-3. ஈடு 8-1-3.
எடுவிய – எடுத்த. பெரிய. 8-7-3.
610 எண் கண்ணான் – பிரமன். நான்முகன்திரு.73
எங்கு-கரடி. பெரிய. 6-10-6.
எண்டிசை எட்டுத்திக்கு. பெரியாழ். 2-9-11.
எண்டோளினாள் துர்க்கை. பெரிய. 2-10-6.
எண்டோளீசற்கு எழின்மாடமெழுபது செய்து
உலகாண்டவன் -கோச்செங்ணான். பெரிய. 6-6-8.
615 எதிர்தல் ஒப்பாதல் . நான்முகன். திரு. 84.
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை – பத்துத்
தலைமுறை. பெரிய. 7-2-6.
எந்தை- என் சுவாமி. பெரிய. 2-3-5. (சிவபுராணம். அடி. 11)
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை நமக்கே
உற்பத்திப் பரம்பரையில் முதல்வனான
சம்பந்தத்தையுடையவன். திருவாய். 3-3-2.
எந்தை தந்தை தம்பெருமான் – குலநாதனான பெருமான்.
பெரிய 2-2-4, 2-3-5.
24
620 எந்தை தந்தை தம்மானென்று எம்முடைய குலநாதனென்று.
பெரிய. 4-9-9.
எம்பரத்தல்லார் – என்னைப்போலே அடிமை செய்யார்.
பெருமாள்.3-6 (தே 7-100-4, நொடித்தான்மலை. 6-95-8 பொது எம்பிராக்கள் – எம்பிரான். பெரிய. 10-5-2.
எம்மனா – எமது குல தெய்வமே. பெரியாழ். 5-4-3. எம்மாவீடு – எமக்காகத் தருகிற விலஷணமானமோட்சம்
625 எம்மையுடைமாடு கொண்டான் -எனது ஆடை செல்வம்
எல்லாம் கொண்டான். நாச்சி. 10-7. எம்மோய் எனதுதாய். பெருமாள். 7-6. எய்க்கை-இளைக்கை. திருவாய். 8-8-7. பெரிய. 1-3-6. எய்த்தாது – போராதொழிவது. பெரிய. 11-3-6. எய்ப்பினில் வைப்பு – தளர்ந்த காலத்தில் உதவும் செல்வம்.
பெரிய. 7-10-4. நீத்தல் விண்ணப்பம். 39.-எரி – ஒளி. திருவிருத் 82.
எரிதி – தீ. பெரிய. 8-7-7.
எரியன கேசரம் – தீயைப்போன்ற உளைமயிர். பெரிய. 2-8-1.
எரிவு – கோபம். பெரியாழ். 1-2-4.
எருக்கிலைக்காக வெறிமழு வோச்சல் – எருக்கிலையை
உதிர்ப்பதற்கு மழுப்படை கொண்டு
ஓங்கி அடித்தல். பெரிய. 10-9-6.
635 எருத்துக் கொடியுடையான்- இடபக் கொடியையுடையவன்
பெரியாழ். 5-3-6.
எல்லி- இரவு. பெரிய . திருவந். 19.
எல்லே – என்னே,தோழி பெரியாழ். 3-2-1-10; திருப்பா.15;
நாச்சி. 3-3; திருவாய் 2-1-3. 5-4-1.
எல்லேபாவம் – என்ன மகாபாவம். திருநெடுந். 24.
எவ்வதெவ்வத்துள் – எவ்வகைப்பட்ட சத்துரு சமுகம்.
திருவாய். 5-7-5.
640 எவ்வம் – துன்பம். பெரிய. 9-10-2. திருச்சதகம். 41.
எவ்வும் – துன்பப்படுத்தல். பெரிய. 1-7-4. (தே). 7-31-10
இடைமருது.
எவஞ் செய்கேன் – என்ன உபகாரத்தைப் பண்ணுவேன்.
திருவாய். 9-9-6.
எழநண்ணி – போக்கிலே ஒருப்பட்டு. திருவாய். 9-5-10.
எழப்பாய்ந்து – உயரக்கிளம்பி. பெரியாழ். 1-4-7.
645 எழில் – அழகு. மூன்றாம் திருவந். 86, சிவபுராணம் 22,
கீர்த்தித்திருஅகவல். 3.
எழுநரகம் – எழுவகையான நரகங்கள். ஒன்றாந்திருவந்.87.
எழுமை – ஏழு பிறப்பு. திருவாய். 3-6-7.
எள்கல் – ஏய்த்தல். பெரியாழ். 3-7-4, திருவாய். 2-6-4.
எள்கலல்லால் – வருந்துதலே அல்லாமல். திருவிருத் 92.
650 எள்காது – இகழாமல். திருவிருத். 89.
எள்கி -மெலிந்து. பெரிய. 2-10-3. 1-3-3.
எள்கி- ஈடுபட்டு. பெரியாழ். 3-7-4; பெரிய. 9-3-6.
எள்கியுரைத்த – ஈடுபட்டுரைத்த. பெருமாள்.6-10; (தே) 4-82-2.
கழுமலம். 2-6-2. ஐயாறு.
எள்கினாள் – ஈடுபட்டாள். பெரிய. 8-2-7.
655 எள்கு நிலையும் பையாந்து நிற்கும் நிலை.
பெருமாள் 7- 8. (தே.) 4-82-2. கழுமலம்.-எளிவே – எளிமை. திருவாய். 1-3-1.
எற்றே- என்னே; ஆச்சரியக் குறிப்பு. பெரியதிருவந்.5.
எறிஞர் – பகைவர். பெரிய. 6-10-1.
என்கடவேன் -என்ன செய்ய வல்லேன். பெரிய. 10-10-7.
திருச்சதகம். 12.
660 என்சொல்லி-என்னையும் ஒரு பொருளாகக்கொண்டு.
திருவாய். 7-9-2.
என்பிலெள்கி-எலும்பிலே தட்டும்படி சரீரம் சிதிலமாய்
திருச்சந்த. 76.
என்றும் எப்போதும் – சர்வகாலமும் சர்வாவத்தையும்.
பெரிய.7-3-1.
என்றேய என்னில் – ஏனென்னில். திருவிருத். 30.
என்னம்மம்- முலைப்பால். பெரிய. 10-4-1.
665 என்னம்மா – எனக்குச் சுவாமியே. திருவாய். 7-1-8.
என்னானை – எனது ஆனை. பெரிய. 1-10-6; 4-8-3.
திருவாய். 3-9.1. (தே.) 6-79-8. தலையாலங்காடு; 7- 38-8
அதிகை. திருவெம்பாவை. 7.
என்னுசாகோ – எதனை வினாவுவேன். திருவாய். 7-3-4. என்னுயிர் உண்டமாயனால். திருவாய். 9-6-7. என்னுயிரை யறவிலை செய்தனன் சோதீ – அறுதிக்கிரயம் செய்து விட்டேன். திருவாய். 8-1-10.
670 என்னெற்றியுளானே -என் நெற்றியிலே புகுந்து நின்றான்.
திருவாய். 1-9-9.
என்னே என்பாரும் இல்லை – ஐயோ என்பாரும் இல்லை.
திருவாய். 9-1-3.
என்னைத்தன்னாக்கி – என்னைத் தன்பக்கலிலே ஞானம்
அன்பு முதலியவைகளை உடையேனாம்படி
செய்து. திருவாய். 7-9-1.
என்னைமார் – எங்கள் தமையன்மார். நாச்சி. 3-5; 6-9.
எனக்காய் – எனக்குத் தாயாகியும். திருவாய். 6-3-9
675 எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் எனக்கு எப்போதும் பெருமானுடைய திருநாமம் தேனும், பாலும், அமுதும் போல பரம போக்கியமானது.
பெரிய 6-10-6. எனக்கென்ன மனப்பரிப்பே – எனக்கு என்ன மனத்துயரம் உள்ளது? திருவாய். 6-4-6. எனக்கேல் – எனக்கு. ஏல் இடைச்சொல். திருவாய். 9-10-9,10.-எனைத்தோர் பலநாள்- பலகாலம் நாள்தோறும் திருவாய் 8-7-1.
எனையூழி-காலம்உள்ளளவும். திருவாய். 2-1-7.
ஏக சிந்தையனாய் -ஒரே நினைவாய். திருவாய். 5-10-1.
ஏச்சு- பழிப்பு. பெரியாழ். 3-8-2; நாச்சி. 12-8.
ஏசறுகை – துக்கப்படுதல். திருவாய். 5-3-1.
ஏடி-தோழி. பெரியாழ் 3-4-4; பெரிய. 10-8-9. திருச்சாழல். 1-20.
ஏண் -எல்லை. திருவாய். 2-8-8.
685 ஏடு – சூக்கும சரீரம். திருப்பல்.4.
ஏடு ஏறு பெருஞ்செல்வம் – ஏடு – புத்தகங்கள். பெரிய. 4-1-7.
ஏண்- நிலை, வலிமை. பெரிய. 1-6 1- (திருச்சதகம். 84.)
ஏணி ஏறு கருவி. பெரியாழ். 4-9-3.
ஏத்துதல் – புகழ்தல். இரண்டாம்திரு. 10,12.
690 ஏதம் – குற்றம், துன்பம். இரண்டாம்திரு. 37.
ஏதலன் – பகைவன். பெரிய. 1-7-4.
ஏதிலர் – பகைவர், நான்முகன்திரு. 71. (அண்டப்பகுதி.104.)
ஏந்தல் – தேங்கல், தாங்குதல், திருச்சந்த. 6
695
ஏமத்தூடி- நடுராத்தியில் ஊடி.பெருமாள். 6-10.
ஏமப்பட்டாளோகாவலிடப்பட்டாளோ.திருப்பா. –
ஏமாற்றம் – துன்பம். பெரியாழ். 2-7-8.
ஏய்த்தல் – ஒத்தல். திருவாய். 1-5-11.
ஏயான் – இரப்புக்குத்தகாதவன். பெரிய, 1-5-6.
ஏர் – அழகு, ஒப்பு. திருப்பா. 1
700 ஏர்விலா – தகுதியில்லாத.திருவாய். 7.9-5,8.
ஏலம் – வாசனை. பெரிய. 1-2-1.
ஏலும் – ஏற்கும். இரண்டாம் திரு. 16.
ஏவல்ல – எய்யவல்ல. இரண்டாம் திரு. 73.
ஏவலம் – அம்பின் திறமை. பெரிய. 9-5-8; 9-10-6.
705 ஏழ் – எழ. திருவாய்.1-5-1, எழுச்சி. 8-10-4.
ஏழ்ச்சி- விரிதல். திருவாய். 3-2-4.
ஏழ்படிகால்.ஏழுதலைமுறை. திருப்பல். 6 (தே.) 7-52-9.
ஆலங்காடு.
ஏழ்மைப்பிறப்பு -ஏழுபிறப்பு. திருவாய். 1-6-9.
ஏழளவும் . ஏழுதலைமுறையாக. பெரிய. 4-9-9.
710 ஏழிசை – தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி,
கைக்கிளை, திருவாய். 10-8-8; பெரிய. 3-10-1.-ஏழுதல் – பிரகாசித்தல். திருவாய். 1-5-1.
ஏழுமால் வரை ஏழுகுல பர்வதங்கள், கைலை. இமயம்
மந்தரம், விந்தியம்,நிஷதம், ஏமகூடம்
நீலகிரி என்பன 5 -2.
ஏழுலகும் தாள்வரையும் ஏழுத்வீபங்களும் பக்கத்திலுள்ள
சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும்.
ஏழுத்வீபங்களாவன. 1 நாவலந்தீவு, இறலித்தீவு,
இலவந்தீவு, கிரவுஞ்சத்தீவு, குசைத்தீவு, தேக்கந்தீவு,
புட்கரத்தீவு, பெரிய. 4-4-9.
ஏழுழியாய் -ஏழு கற்பங்களாகி. திருவாய். 5-4-8.
715 ஏழெழு பிறப்பு – ஏழு பிறப்புக்களிலும். ஏழுவகைப்
720
725
730
பிறப்புக்கள். 1 தேவர் 2. மனிதர், 3. மிருகம்,4. பறவை

ஊர்வன 6. நீர்வாழ்வன. 7. தாவரம். திருவாய். 2-7-1,4. ஏழை – அறிவில்லாதவன். பெரிய. 5-8-1. (கம்ப கங்கைப்.6 )
ஏற்பன – தக்கன.திருப்பள்ளி. 8.
ஏற்றான்- சிவபெருமான், எருதையுடையவன். முதல்திரு. 97.
ஏற்றை – தலைவனை. திருவாய். 3-6-6.
ஏறக்கொலோ – ஆவேசித்தானாகக்கூடுமோ. திருவாய்.
ஏறு – ஆண்சிங்கம். இரண்டாந்திருவந்.63. ஏறேழுடனே – ஏழு காளைகளை ஒரு க்ஷணநேரத்தில்.
பெரியதிருவந். 48.
ஏறேறி – சிவபெருமான். இரண்டாந்திரு. 63 ஏன்றேன்- பொருந்தினேன். நான்முகன்திரு. 95.
5-6-1,10.
ஏனம் – பன்றி. மூன்றாம்திரு. 89.
ஏனமுழுசாலில் தினைகள் – காட்டுப்பன்றிகள் நன்கு
உழுத சால்களிலே புதிய தினைகளை விதைத்த. மூன்றாந்திருவந். 89. (தே.) 2-114-5 கேதாரம். ஏனாகி – பன்றியாகி. பெரிய. 5-6-2.
ஏனொருவனாய் -ஏனம் ஒருவனாய்.(எதுகை)
நான்முகன்திரு. 70.
ஏனோர் – மற்றையோர். பெரிய. 1-5-7. போற்றித்திரு அகவல். 117.
ஐ – கோழை. பெரிய. 1-3-7 திருவாய். 2-9-3. ஐங்கனாணவில்லி – மன்மதன். பெரிய 9-5-7. ஐதுநொய்து – மெல்லிது. பெரியாழ். 5-4-8. ஐந்தழல் – பஞ்சாக்கினி. உதராக்கினி, சூரியதாபாக்கினி, தவாக்கினி, நிதாககாலாக்கினி. இரவிகாந்தாக்கினி. பெரிய. 5-5-9.ஐந்துநோய் – ஐந்து விஷயங்களாகிய நோய், சப்தாதிகளாகிற
நோய். திருவாய். 7-1-5.
ஐம்படை -பஞ்சாயுதமாகிய அணி. பெரியாழ்.1-3-5; 1-5-9, 10.
ஐம்பால் – ஐந்துவகையாக முடிக்கும் கூந்தல். பெரிய. 7-5-3.
ஐம்புலன் – பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகை உணர்ச்சிகள்.
திருவாய். 1-9-9.
ஐம்பூதம் – பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாயம்.
பெரிய. 4-69; இரண்டாம்திரு. 26.
ஐயம் – தியாகம் உபாதானம் இடுதல். திருப்பா. 2.
740 ஐயறிவும் கொண்டானுக்கு- ஐம்பொறி ஞானம். பெரிய. 7-4-7
ஐவர் -பஞ்சேந்திரியங்கள். பெரிய. 1-6-8; 9-6-5.
ஐவர்குமைக்கும் சிற்றின்பம் – பஞ்சேந்திரியங்களும்
பீடிக்கும்படியான சாரமற்ற விஷயங்கள். திருவாய். 6-9-9.
குமைக்கும் – நலிகிற.
ஐவரால் குமைத்தீற்றி நலிவுண்ணும்படிபண்ணி. திருவாய். 6 7-1.
ஒக்கலித்திட்டு – நடைபழகி. பெரிய. 3-3-1.
745 ஒக்கலை – மருங்கு. பெரியாழ். 1-4-4; திருவாய். 1-9-5.
ஓசித்தல் – ஒடித்தல். முதல்திரு. 27, திருவாய். 1-9-5.
ஓசிதல் – தளர்ச்சியடைதல், முறிதல் திருவிருத்.37.
ஒட்டார். பழிப்பார். நாச்சி. 3-3,சம்மதியார். 3-7.
ஒட்டி – இசைந்து, பொருந்தி. திருவாய். 1-7-7.
750 ஒட்டுகை- இசைகை, திருவாய். 1-7-7.
ஒட்டுவனோ – இசைவேனோ. திருவாய் 1-7-7.
ஒண்ணுதல் – பிரகாசமான நெற்றியையுடைய பெண்.
திருவிருத்50.
ஒத்து அணிவகை. பெரியாழ். 1-2-2.
ஒருக்கருத்து – ஒருமைப்படப்பிடித்து. திருவாய். 8-6-2.
755 ஒருக்கா – அடக்கமாட்டாமல். திருவிருத். 64.
ஒருகாலிருகாற்சிலைவளைய. பெரிய. 1-5-4.
(திருக்கோவையார். 152).
ஒருங்கப்பிடித்து ஒருமிக்கப்பிடித்து. திருவாய்.5-8-8.
ஒருங்க மல்லரைக் கொன்று – பெரிய.4-2-4. (தே. 4-32-9.
பயற்றூர்
ஒருங்கிற்று – சேர்ந்தது. பெரியதிருவந்.54.
760 ஒரு தாரா ஒரு மாலையாக. பெரிய. 8-10-2.
ஒரு நான்று ஒரு நாள். நாச்சி. 13-9; ஒருகால்.திருவாய். 6-2-7.ஒருப்படுத்த – ஒருமைப்பாட்டோட சமைத்த. திருவாய். 5-10-5.
ஒருபாடு -ஒருபக்கம். திருவாய். 8-3-7.
ஒருவன் என்று ஏத்த நின்ற – ஒப்பற்ற கடவுள் என்று
அடியார்கள் துதிக்கும்படி நின்ற. திருவாய். 3-4-8.
765 ஒல்குதல்- நாணங்கொண்டு கூசுதல்.
ஒல்லை- விரைவு. திருப்பா.15.
ஒலிகள்- பாடல்கள். பெரிய. 2-7-10; 4-5-10; 9-1-10.
ஒலி ஐந்துமைந்தும் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பத்துப் பாசுரங்களும். பெரிய. 2-10-10.
770
775
780
785
ஒலிசெய்த அருளிச்செய்த. பெரிய. 8-8-10
ஒலிமாலை – அருளிச் செய்தபாமாலை. பெரிய. 1-3-10;
3-10-10; 5-10-10. 8-10-10. (தே.) 3-54-8. பொது திருப்பாசுரம். ஒளிவட்டம் கண்ணாடி. பெரியாழ், 1-4-3.
ஒற்கம் – ஒடுக்கம். திருவாய். 1-8-4.
ஒற்றைப்பிறை – ஒரு கலையையுடைய சந்திரன். திருவாய். 1-9-10. ஒன்றிரண்டு கண்ணினான் மூன்று கண்களையுடைய
சிவபெருமான். திருச்சந்.7.
ஒன்று இடக்கிலேனொன்றட்ட கில்லேன்- பிடிசோற்றை இடேன் ஒருமிடறு தண்ணீரை வார்க்க மாட்டேன்.
திருவாய். 4-7-9.
ஓஒ உலகினதியல்வே – ஹாஹா என்ன ஆச்சரியம் உலகினது
தன்மை. திருவாசிரி. 6. ஓகெடுவினையேன் – மகாபாபி. பெருமாள். 7-6. ஒக்குதல் – உயர்த்துதல். இரண்டாந்திருவந்59. ஓசலித்தல் – அசைதல். பெரியாழ். 4-9-1.
ஓசனையான் – கும்பகர்ணன். (கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு யோசனை உள்ளது பற்றி. நான்முகன்திரு.29 ஒட்டருதல் – ஓடிவருதல். பெரிய, 4-3-9.
ஓட்டைமாடம் – நிலையற்ற உடல்.திருமா. 6. ஓணவிழவு – திருவோணத் திருநாள். நான்முகன்திரு. 41. ஒத்து – வேதம். பெரிய. 5-9-6. இரண்டாந்திருவந்.39.
ஒத்தொலி மறையொலி. பெரிய. 5-9-6.
(தே.) 1-41.5. திருப்பாம்புரம்.
ஓதம் – குளிர்ச்சி, அலை, முதல்திருவந். 16. ஓதி – கூந்தல். முதல்திருவந். 33.-ஓர்ப்பால் – ஆராய்ந்தறிகையால். திருவாய். 4-6-1.
ஓராமை-ஆராய்ந்தறியாமை சிறியதிரும. 10, 11.
790 ஓரீற்றுப்பிடி ஒரு குட்டியை ஈன்றபெண்யானை . பெரியாழ். 3-5-2.
ஓலமிடல் – அபயக்குரலிடுதல். திருவாய். 4-3-6.
ஓவி – சித்திரம் பெரிய, 2-8-7.
ஓவுதல் – ஒழிதல். திருவாய். 3-2-8.
ஒளித்துகிற்படலம் -ஒழுங்கு பெற்ற கொடிச்சீலை.
பெரிய. 6-9-4.
795 கங்கு -எல்லை, இராத்திரி – திருவாய். 5-4-7.
கங்குல்- இரவு. திருப்பள்ளி – 5, திருவாய்- 7-1-11, 7-2-1.
கச்சங்கம் – பிரதிக்ஞை, வியவஸ்தை – நாச்சி. 5-8.
கச்சி – காஞ்சிபுரம், மூன்றாம் திருவந். 26, பெரிய. 2-6-5,
கசிகை- ஈடுபாடு-கசிகையும் வேட்கையும். திருவாய். 10-3-8.
800 கஞ்சு – கஞ்சன் – நாச்சியார் 13-3, பெரிய. 2-6-7, மூன்றாந்
திருவந். 4.
805
கஞ்சை- கஞ்சனை. மூன்றாந்திரு. 34.
கட்கண்(உட்கண்). பெரியதிருவந். 28.
கட்கிலீ – கண்ணுக்குக் காணவொண்ணாதவன்.திருவாய். 7-2-3.
கட்டம்- கஷ்டம். திருவாய். 7-2-4, திருச்சதகம். 48.
கட்டழித்தல் நிலை குலைத்தல். திருச்சந்த.
கட்டி – வெல்லம். நாச்சி. 1-7.
கட்டு – அரண். திருவாய். 6-6-10,
கட்டுப்படுத்திரேல் – சிறிய திரும.19.
கட்டுரை – நற்செயல். திருவாய். 3-1-1.
54.
810 கட்டுவிச்சி – திருநெடுந். 11. சிறியதிரு. 20; திருவாய். 4-6-3.
கட்டேறி – தெய்வ ஆவேசம் கொண்டு. சிறிய திரும. 20.
கடம்- காடு, மதநீர், பாபபலம்,அவசியம் செயற்பாலது
நான்முகன்திரு. 52.
கடமை – கடன். திருவாய். 3-3-6.
கடல் கடைந்து அமுதம் கொண்ட. திருவாய். 3-4-9.
அழகர் கிள்ளை. கண்ணி. 73.
815 கடலே – உவர், நன்னீர், பால்,தயிர்,நெய், கருப்பஞ்சாறு. பெரியாழ்.
கடவன் – கடமைப்பட்டவன், எசமானன்.
கடாகின்று – கடாவுக இன்று. திருவிருத். 50.கடாய் -பாதுகாக்கப் பெற்ற. திருவிருத். 49.
தடாயன – உபயோகிக்கத்தக்கன. திருவிருத். 6.
கடாரம் பெரிய பாத்திரம். பெரியாழ். 1-1-6, 2-4-3.
கடாவுதல் – செலுத்தல், திருவாய். 7-3-1.
கடி- காவல், மதிள், வாச னை. பெரிய. 10-2-6.
கடிகாவையிறுத்து – அசோகசவனத்தை அழித்து. பெரிய.
10-2-6.
கடிகைத்தடங்குன்று சோளசிங்கபுரம். பெரிய. 8-9-4.
825 கடிப்பு – ஒருகாதணி. பெரியாழ். 2-3-2.
கடிறு களிறு. ளகரத்துக்கு டகரம் வந்துள்ளது.
பெரியாழ். 3-2-6.
கடுவன் – ஆண்குரங்கு. மூன்றந்திரு. 68; புறநா. 158.
அடி. -23, 200-2; குறுந். 26,278.
கடுவினை – தீவினை. திருவாய். 10-2-8. கடைகயிறு – தயிர் கடைகின்ற கயிறு. பெரியாழ். -3- -8.
830 கடைக்கொண்டு – பெரியாழ். 4-4-7, கடைத்தலை- திருவாசல் – திருவாய்-10-2-7; திருமா. 38.
கடையா – மூங்கிற்குழாய் திருவாய்- 4-8-4.
கண்- இடம் – பெரிய- 7-10-6. கண்களுக்கற்றுத்தீர்ந்து – புறம்பேபற்றற்று அனந்யர்ஹமாயிருக்கிற திருவாய் 7-3-3.
835 கண்டகர் – முன்போலக் கொடிய ராக்ஷஸர் – பெரியாழ். 4-8-4. குலாப்பத்து. 86.)
840
கண்டம் தேவப் பிரயாகை- பெரியாழ். 4-7. கண்டல்-தாழை.
கண்டாய்-கிடாய்- இரண்டாந்திரு.51.
கண்டீர் – கண்டு, கேட்டு. இரண்டாந்திரு. 75.
கண்டுரைத்த தமிழ்மாலை – பெரிய. 3-6-10. கண்ணநீர் – திருவாய். 678. கண்ணறாய்- தயவில்லாதவனே. திருமா. 44. கண்ணாலங் கோடித்து- கலியாணம்- நாச்சி.- கண்ணாளன் – பெரிய 11-6-7.
11-9.
845 கண்ணிக்கயிறு- முடிகளையுடையகயிறு திருவிருத்.91. கண்ணியார் குறுங்கயிற்றால்- முடிகளார்ந்த குறுங்கயிறு பெரிய. 5-9-7- 11-5-5. கண்ணுதல் கூடிய அருத்தனை- பெரிய, 7.10-7. கண்ணுறக்கம் நித்திரை – பெரிய. 4-5-5.-கண்படை- தூங்குதல் முதல்திரு- 19; நாச்சி- 4-9-10;
திருவாய்-4-9-10.
850 கண்புதைத்தல் மறைத்தல். (திருக்கோவையார். 43: சீவக. 1982.
கண்முகப்பே- கண்ணுக்கெதிரில் – திருவாய்-47-4;6-4-11;9-2-7-8.
கண்முதலியவை – பெரிய-11-7-1-9.
கண்மூன்றத்தானும் – சிவன். நான் முகன்திரு-42.
கணகணப்ப- கணகண என்று ஒலிப்ப. பெரிய. 4-4-8-(தே)
1-21-7 சிவபுரம், 4-28-1அதிகை.
855 கணபுரம் பெருமாள். -8-1-11, திருநெடுந் -16; பெரியதிருவந் 90.
சிறிய திரு. 72.
கணவலரும் அலரியும் – பெரிய. 11-7-6.
கணி -சோதிடன். பெரிய.
கணைநாண் – அம்புவிடுங்கயிறு.
கணைபாரித்து – அம்புகளைப் பிரயோகித்து. பெரியாழ். 4-3-7.
860 கத்தக்கதித்து- மிகவும் கொழுத்து- பெரியாழ் – 1 -9-6.
கத்திரபந்து – க்ஷத்ரபந்து- க்ஷத்திரியர்களுள் அதமன். திருமா. 4.
கத்திரியர் – க்ஷத்திரியர். பெரியாழ். 1-9-6.
கதவி – கோபித்த. இரண்டாந்திரு. 99.
கதலி-வாழை. பெரிய. 3-9-3. 4-10-1.
865 கதிரவன் – சூரியன். திருப்பள்ளி. .
கதுவப்படுதல் – கவ்வப்படுதல். நாச்சி. 8-2.
கதுவாய் – புண்பட்டவாய். பெரியாழ். 3-5-5.
கதுவாய்ப்படுதல் – வடுப்படுதல், வெறுந்தரையாம்படி.
பெரியாழ். 3-5-4.
கந்தாரம் – தேவ காந்தாரி ராகம் – பெரிய. -3-9-1.
870 கந்து – கந்தம். பெரிய. 6-7-8.
கப்பம் தவிர்க்கும் கலியே- நடுக்கத்தைப் போக்கும்
கண்ணனே .திருப்பா.20.
கப்பு – தோள். பெரியாழ். 3-1-5; காம்பிலடியிலுண்டானகிளை.
கபாலநன்மோக்கம் – பிரமகபாலத்தையொழித்தல்.
திருவாய். 4-10-4.
கபாலி – சிவன்; துர்க்கை. பெரியாழ். 2-8-8.
875 கபிலை- பசு. படிமைக்கலம் – திருப்பள்ளி.
கபோதம் – புறா, கொடுங்கு – பெரிய. 3-8-2.
கம்பம்-நடுக்கம். பெருமாள். 4-5-கம்பக் கபாலி – நடுக்கத்தைக் கொடுக்கவல்ல துர்க்கை.
ருத்ரனுமாம். பெரியாழ் -2-8–8
கமலத்திலை போலுந்திருமேனி – திருவாய்.9-7-3.
880 கமுகு – பாக்குமரம் – பெரிய. 2-10-7; 3-1-94-2-1.
கமுகம்-பாக்குமரம் பெரிய -3-10-4.
கமை- ( மை .பொறுமை. பெரியாழ்வார். 4-7-4.
கயம்-தடாகம், க்ஷயரோகம், யானை. பெரிய. 8-5-4. 8-7-1.
கயல்-கயல்மீன் – பெரிய. 1-8-10, 2-7-5, 3-2-9, 3-9-1. 8-7-3
885 கயவர் -மூடர்
34
கயிறு மாலை கயிற்றில் தொடுத்த பூமாலை – பெரியாழ் -3-6-1.
கரண்டம் – நீர்க்காக்கை, திருச்சந்த. 62.
கரணப்பல்படை – போர்க்கு உபகரணமாகிய பல்படை-
திருவாய்- 8-3-2.
கரத்தல் – ஒளித்தல் திருவாய்-1-1-7.
890 கரம்- கை, உறுதி. திருவாய். 7-8-9. திருச்சந்த. 25.
கரம் விற்கிலும்- நெல்விற்கும்படியான துர்பி காலத்திலும்.
பெரிய. 4-4-10.
கரா – கராம்- முதலை.
கரிமுகத்தான்-யானைமுகமுடைய விநாயகன்.
கரிய நாழிகை- அந்திக்காலம் பெரிய- 8-5-6.
895 கரியவாகி -அம.8.
900
905
கரு- கல்பிரதிமை,கர்ப்பம்.
கருக்காய் பிஞ்சு.கருக்காய் கடிப்பவர் திருவிருத்.64.
கருந்தேவன் – திருவாய். 9-3-4
கருநாயிறு – கருமை நிறமுடைய சூரிய மண்டலம்
திருவிருத்-17, திருவாய் -8-5-2.
கருநெல்- கருவடைந்த நெற்பயிர்- பெழி. 10-1-1.
கருப்புச் சிலை – கரும்பு வில்.
கரும்பு கண்வளரும். பெரிய. 2-10-4.
கருமாணிக்கம் கரிய மாணிக்கம் போன்ற வடிவுடையவன்.
திருவாய். 2-7-4,
கருமுகை – இருவாட்சி, சிறுசண்பகமுமாம். திருவாய். 9-9-10.
கருமேந்திரியம் ஐந்து – உபஸ்தம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு.திருவாய். 10-7-10.
கருவரங்கத்துள் – கர்ப்பஸ்தானத்தில் – முதல்திரு- 6. கருவிருந்தநாள் – கர்ப்பத்திலிருந்தநாள்- நான் முகன்திரு- 92.

கருவிளை மலர்காள் – காக்கணம் பூக்களே- நாச்சி- 9-3.
கருவூர்- பெரிய. 2-9-7.
910 கருளக்கொடி கருடக்கொடி- பெரியாழ். 5-1-1; நாச்சி-5-4.
கரை ஓசை. பெரிய- 8-3-1.
கரையாய் காக்கைப் பிள்ளாய் – பெரிய-10-10-2.
கல் (ஏவல்)- கற்றுக்கொள் – பெரியதிருவந்- 67.
ஒலி. பெரிய -2-7-3-10.
கல்கி- குதிரை முகத்துடன் அவதரிக்கும். பெருமாள்.7-6.
915 கல்வி- சாதுர்யம் – பெரியாழ்-2-9-1.
920
கல்விச்சிலை – தனுர்வேதம் பெரிய-8-6-3.
கலக்கழிய கட்டுக்குலைய. பெரியாழ்-2-2-4, 2-8-7; திருப்பா-6.
கலம்பகம் – திருப்பள்ளி. 5.
கலவர் – மரக்கலத்தினுள்ளேயிருப்பவர் – பெரிய – 11-8-2.
கலவி-கலத்தல். பெருமாள்- 1-6. திருவாய்-8-10-7.
பெரிய-9 -8-1.
கலவிருக்கை கொலுவிருத்தல் பெரியாழ் – 4-9-7.
கலாய்- கலந்து. திருவாய்-4-6-8.
கலி- காலதோஷம், கலி புருஷன் – இராமா நுஜ – 16,34.
திருவாய் 5-2-1.
கலிகன்றி- திருமங்கையாழ்வார் – பெரிய தனியன்-1
பெரிய. 11-6-10;2-5-10.
925 கலிங்கம்- ஆடை. பெரிய. 10-8-1.
கலுழி – கலங்கல், வெள்ளம் திருநெடுந் – 6.
கலை – ஆடை, சாஸ்திரம்,அம்சம், பக்கம். பெரிய-9-1-10.
கலைப்பாகி – ஆண்மானை வாகனமாகவுடைய துர்க்கை.
பெரியாழ்வார்-1-3-9.
கவ்வை- பழிச்சொல் – திருவாய் – 5-3-4; பெரிய-4-5-2.
930கவண் – கல்லெறி கயிறு.
கவந்தம் – தலையற்ற உடல். பெரிய. 9-8-5.
கவரி செய்வார் சாமரை வீசுதல் முதலான
கைங்கரிங்களைச் செய்வார்கள் – திருவாய்-7-6-11
கவரிப் பிணா – சாமரம் வீசுகின்ற பெண்கள் – நாச்சி- 1-4.
கவளமால் யானை- (எதுகை விசேடம்) – திருமா.45.
935 கவாடம்-கதவு பெரியதிரும 73.
கவி – குரங்கு- மூன்றாம்திரு 84.-கவிஞர் – வித்துவான்கள்.
கவிதை- பாட்டு- பெரிய-7-2-2.
கவின்- அழகு பெரிய. 3-1-6.
940 கவுட்கொண்ட நீராம் – பெரிய – 10-9-8.
கவுள் – கன்னம்- பெரிய – 10-9-8.
கவை- பிளவு 3-2-4.
கவையின் மனமின்றி வேறொன்றிற்புகும் மனமின்றி.
திருவாய் 9-8-3.
கடிகண்டு- தீம்பு . இது ‘கழகு” எனவும் வழங்கு.
பெரியாழ்வார்-2-4-6. (தே.) -5-13-8 வீழிமிழலை.
945 கழகம் – கூட்டம் “கழகமேறேல் – திருவாய் – 6-2-6.
கழல் விளையாட்டுக் கருவி.
கழல்கமவம் – திருவடித்தாமரை.
கழல்வளை (கை வளைக்கும் கழல்வளையென்று
இடுகுறிப்பெயர், நாச்சி11-2.
கழறல்- கிலேசப்பட்டுச் சொல்லுகை- பெரிய – 3-2-10.
950 கழறாநிற்றிர் – நியமியாநின்றீர் – திருவாய் 7-7-9.
கழிகோல் வீசுகோல், கன்றின் வாயில் கட்டும்
கொறுக்கோல். திருவாய்4-8-4.
கழி நேர்மை கழிவையுடைத்தான நுண்மை- திருவாய்- 8-8-2.
கழுது – பேய், பூதனை. பெரிய. 3-8-6.
கழுதை உதடாட்டங்கண்டு என்பயன் – திருவாய்-4-6-7.

கழை -மூங்கில்.
36
கள்கின்ற – திருடுகின்ற -(எதுகை) திருவாய்7-7-9.
கள்வங்களே கிருத்திரிமவியாபாரங்கள். திருவாய்-9-6-5-6, 10-4-5.
கள்ளமே காதல் செய்து- திருமா-24.
களகம்- அன்னம், சாந்து, நெற்கதிர் – பெரிய – 6-9-10.
960 களகமதின் – சாந்தையுடையமதிள் – பெரிய. 6-9-10. (தே)1-102-3.
களவம்- களா. யானைக்கன்று பெரிய. 11-6-4.
களவே – களவு பிரகாசிக்கும்படி-திருவாய் -1-5-1.
களனிழைத்து – தேவாந்திர சன்னிதானம்- திருவாய்-4-6-4. களிதாகிய சிந்தையனாய்- மிகுகளிப்பையுடைய. திருவாய்-10-8-4.
965 களிறட்ட பொன்னாழிக்கையென்னம்மான் -திருவாய். 8-10-6,10;
களைகண்-ரக்ஷகர், பற்றுக்கோடு. திருவாய். -5-8-3,8, கற்பகத்தின் வல்லி- திருவாய் -7-7-1,-கற்பம்- வேதாங்கங்களில் ஒன்று.
கற்பார் புரிசை- பெரிய. 5-1-4.
கற்புவானிடறி- பெண்மைக்குணம். திருவாய்-6-7-2.
கற்பு – அறிவுடைமை, இழந்ததுகற்பே- திருவாய். 6-6-5.
கற்றமொழியாகிக் கலந்து- நான் முகன்திரு. 81.
கற்றா -கன்றையுடைய பசு – பெரிய -5-1-10.
கற்றினம் – கன்றுகளின் கூட்டம் நாச்சி-12-8; பெரியாழ்.2-5-5;
பெரிய-8-10-3.
975 கற்றைக்குழல் – பெரிய. 2-6-7.
கறங்குதல் – ஒலித்தல்.
கறந்த பாலுள் நெய்யே போல் – திருவாய்.8-5-10.
கறவு -கப்பம். பெரிய. 10-7-10.
கறவை கறக்கும்பசு. திருப்பா.11,28.
980 கறி- மிளகு. பெரிய.
கறு- கோபம். பெரியாழ். 2-8-6.
கறையார் நெடுவேல்- பெரிய. 6-4-10.
கறையினார் துவருடுக்கை திருவாய். 4-8-4.
கன் பறை கறங்க-பெரிய. 11-5-6.
985 கன்றுகள் இல்லம் – பெரியாழ். 2-8.2.
கன்றுகள் காதில் கட்டெறும்பு பிடித்துவிடல் – பெரியாழ். 3-8-2.
கன்னல் – கருப்பஞ்சாறு. பெரியாழ். 2-9-9.
(கன்னலிலட்டுவத்தோடு சீடைகாரெள்ளின் உருண்டை).
கன்னார்மதிள் – தொழில் நிரம்பிய மதில். திருவாய். 5-8-3.
தே. 2-40-11 பிரமபுரம்.
கன்னி – இளம்பெண், அழியாமை. பெரியாழ். 3-1-6.
990 கன்னிமதிள் – பெரிய. 6-7-10.
கனகக்கடிப்பு – பொன்னால் செய்த ஒரு காதணி
கனங்குழை – கனமான குண்டலம்.
கனகம்- பெரியாழ். 1-3-8.
கனியிலிருந்தனைய செவ்வாய் -திருமா.18.
995 கா- சோலை- திருவாய். 6-5-6.
காஅடியேன் – இரண்டாந்திரு. 10. கா – வினைமுற்று.
காகுத்தன்- இராமன். சூரிய குலத்தரசன். திருவாய். 5-4-3;
நான்முகன்திரு. 53; அம. 2; பெருமாள். 9-4
காசையாடை -காஷாய ஆடை. பெரிய. -2-2-1.
காட்சி – தோற்றம். (தே. 3-45-10 ஆரூர் )-காண் – அழகு. திருவாய். 7-4-5.
காண்கின்றனகளும் -காணப்படுகின்ற செய்கைகளும்.
திருவிருத்8.
காண்டவம்- காண்டவ்வனம்.பெரிய. 2-5-2.
காணக்ொடாள்-காண இடம் தருகின்றிலள்.
திருவாய். 5-5-7-10;
காத்தனே – காத்தவனே. பெரிய. 4-6-7-
1005 காதணி (காதலிமார் குழையும்) மாங்கல்யம் போல்வது.
பெரிய. 4-4-1 மதுரைக் கலம்பகம்.”நம்பா”
காதல் – அன்பு .பெருமாள். 10-6.
காதலன் – கணவன். பெருமாள்5-2.
காதுகள் தூரும் – குத்தப்பட்ட காதுகள் தூர்த்துவிடும்.
பெரியாழ். 2-3-8,9.
காது செய்வான் – செவி செய்பவன். திருவாய். 9-1-9.
1010 காந்தப்பர் – கந்தருவர்கள். பெரியாழ். 3-6-6.
காப்பு -பாதுகாவல், ரட்சை.திருப்பல் 1.
காபாலி -பிரமகபாலத்தைக் கையிலேந்திய சிவன்.
பெரிய. 1-3-2.
காம்பற – தொற்றற, சம்பந்தமற. திருமா. 38. காம்பு – சிறுகாம்பன்சேலை. பெரியாழ். 1-3-8.
1015 காமம் – அபீஷ்டம்.(விருப்பம்). திருப்பா. 29. காமதேவா – மன்மதா. நாச்சி. 1 -3-4,6,8
காமரங்களிசை பாடும் – காமரம் என்னும் இசையைப்
பாடுகின்ற. பெருமாள். 8-4.
காமரானவாறும் – ஸ்திரீகள் தன்னை விரும்பியிருந்த
படியையும் பெரிய. 7-6-5. காய்தல் – கோபித்தல், பெரிய. 7-6-5.
1020காயகாயா. குறுக்கல் விகாரம். பெரியாழ் – 5-6.
கார் – சினை, பெருமை, நாச்சி. 9-2. பெரிய. 8-4-5. கார்க்கண்டன் -சிவன். நான்முகன்திரு. 87.
கார்க்கலி- அஞ்ஞானமாகிய தோஷம். கார்க்கோடற் பூச்சூடுதல் பெரியாழ். 3-3-3.
1025 கார்த்தல் – அரும்புதல். திருவிருத் 68. கார்த்தனவே – கருவடைந்து அரும்பின.திருவிருத். 68. கார்த்திகையான் – சுப்பிரமணியன். இராமாநுஜ. 22.காரார்புறவின் மங்கை- பெரிய. 1-5-10.
காரிகை – அழகுடைய பெண். திருவிருத் 19.
1030 காரேழ் – சம்வர்த்தம். ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம்,
துரோணம். காளமுகி,நீலவர்ணம்.
கால்- காற்று, சக்கரம், நுனி. நாச்சி. 1-8.
காலசக்கரம் – காலத்தை நடத்துகிற திருமொழி
திருவாய். 4-3-5,6, 7-2-7.
காலம் பெற . தாமதமாகாதபடி. திருவாய். 5-2-1, 7-3-5,6.
காலம் பெறச் சிந்தித்து காலந்தாழ்த்தாமல் உடனேயே
நினைத்து. திருவாய். 4-1-1.
1035 காலன் – யமன்.
காலாழும் -கால் அழுந்தும். பெரிய திருவந். 34.
காலி – பசுக்கூட்டம். பெரியாழ். 1-5-2,-2-6-7, 3-4-10.
காவவன் – அரசன். பெருமாள்.7-11.
காவி – நீலோற்பலம். திருவாய். 5-4-2, 1-9-8.
1040 காவு -விளையாட்டுச்சோலை – திருவாய். 6-3-5.
காள நன் மேனியினன் – திருவாய்-9- 3-1.
காளம் -வாத்திய விசேடம், கறுப்பு.
காற்றத்திடைப்பட்ட கலவர்மனம். பெரிய. 11-8-2.
காறை-கழுத்திலணியும் ஆபரணம் பெரிய. 3-7-8.
1045 கான்- காடு, வாசனை – பெரிய. 2-3-9.
கானதர் – காட்டுவழி- பெரிய. 3-2-3
கானகம்படியுலாவி – பெரியாழ். 3-6-4.
கானவர் -காட்டில் திரியும் வேடர் .
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூ – திருப்பா- 22.
1050 கிஞ்சுகம் – கிளி. பெரிய- 3-7-7.
கிடங்கு – அகழ் – பெரிய. 5-2-8. முதல்திருவந். 77.
கிதயுகம்- கிருதயுகம் – திருவாய். 5-2-3.
கிதி – கிரியை (நிகழ்காலச் செய்கை) திருவாய்- 5-6-4.
கிரமாலங்காரம் – பெரிய- 2-10-2, 3-4-1, 3-8-4, 4-2-2, 6-7-7.
1055 கிரிசை – கிரியா- திருப்பா- 2, நான்முகன்திரு – 95, திருவாய். 2-7-2.
கில்லேன்- மாட்டேன் பெரியாழ் -2-3-12, 2-9-8. நாச்சி-1-5,
திருவாய். 3-9-7.
கிழி -பணமுடிப்பு பெரியாழ்தனி – 1,2.
கிலிர்தல்- விளங்குதல் பெரியாழ். 4-8-6.
கிளரிக்கிளரி வருந்தி எடுத்தெடுத்துக் கூறி திருவிருத் – 8311060 கிளப்பைதலே – (பைதல் இளையது). திருவாய். -9-5-6.
கிளியைக் கைமேற்கொள்ளல் – பெரிய. 4-4-6.
கிற்கின்றியேன் – சக்தியற்றவன். பெரிய. -9-5.
கிற்பன்கில்லேன் – வல்லேன் மாட்டேன். திருவாய். 3-2-6.
கிற்றி – வல்லை – நாச்சி- 5-8.
1065 கிறி – தந்திரம் பெரிய. 3-8-2, திருவிருத்91.
சிறுபவளவடம். பெரிய . 192, திருவாய்.2106.
கிறிக்கொண்டு-உபாயத்தைக் கொண்டு. திருவாய். 2-3-8, 2-10-6.
கிறியம்மான் – நல்விரகையுடைய சர்வேசுவரன் – திருவாய்
4-8-6.
கின்னரம் – தேவ வாத்தியம் – பெரியாழ். 3-6-5.
கீசுகீக -ஓர் ஒலிக்குறிப்பு,ஒரு சார் பறவையொலி.
திருப்பா.7.
1070 கீர்த்தித்த – துதித்த – திருவாய். 7-9-2. கீழ்க்கன்று- தம்பி நாச்சி. 14-1. கீழ்து பிளந்த கீழதாம்படி திருவாய். -7-4-6. கீழ்மேல் ஏழெழு பிறப்பும் – கீழும் மேலுமாகிய ஏழெழு பிறப்புக்களிலும் திருவாய். 2-7-1. கீழையகம் – கீழைவீடு – பெரிய 10-7-1.
1075 குக்கர் – சண்டாளரிற்றண்ணியர் – திருமா.
குக்கூடல் – முட்டாக்கு பெருமாள்-6-5.
குஞ்சி – ஆண்தலை மயிர் – பெருமாள்.89. குட்டநாடு – திருவாய். 8 -9-1.
குட்டம் – மடு பெரிய. 3-5 -7, பெரிய. 11-4-4.
1080 குட்டன் – குமாரன் – பெரிய் – 1-4-2.
குட்டேற்றை சேங்கன்றை- நாச்சி- 14-2. குடக்கூத்தனுக்கு திருவாய். 4-10-10.
குடக்கூத்தனை – திருவாய்ப்.3-6, 3-7.
குடக்கூத்து பெரிய. 2-7-7, நாச்சி. 3-6
39.
1085 குடங்கலந்தாடி பலகுடங்களைச் சேர்த்து எடுத்தாடி- பெரிய. 9-8-6.
குடங்கள் தலை மீதெடுத்துக் கொண்டாடி- பெரிய திருவந். 31. குடங்கால் மடி, முழங்கால்- திருநெடுத் 11, பெரிய, 5-5-1, 10-4-3. நான் முகன்திரு. 44
குடங்கை – உள்ளங்கை பெருமாள். 7-7 திருவிருத். 11,24. குடதிசை மேற்குத்திசை – திருமா. 19.1090 குடந்தைகிடந்தார் – பெரியாழ்- 2-6-6.
குடமாட்டும் – குடக்கூத்து – பெருமாள்- 7.9.
குடமாடி – குடக்கூத்தாடி- நாச்சி- 13-2, பெரிய 5-5-6, 6-9-4.
திருவிருத் 38, பெரியதிரும- கண்ணி. 143. இரண்டாந்திரு. 98.
குடமாடிய கூத்தனை – குடக்கூத்தாடினவன் – பெரிய- 7-3-3.
குடமா – பெரிய- 3-6-8, 6-3-9.
1095 குடமாடுதடமார்வர் – குடக்கூத்தாடினவனும்
மார்பையுடையவனும் ஆகிய பெருமாள். பெரிய 5-10-1.
குடமிரண்டு ஏந்தியாடுமது சிறிய திரும-12.
குடமூக்கில் – கும்பகோணக்ஷேத்திரம்- இரண்டாந்திரு -97
குடுமி மலையுச்சி. திருவாய்- 2-10-2.
குடைந்து – அமிழ்ந்து- திருப்பா- 13.
1100 குடையேற – குடை முதலாக நான்முகன்திரு- 43.
குண்டர்- நீசர், ஆழம், தாழ்ச்சி,நீசம் – பெரிய -2-6-5.
குண்டிகை – கமண்டலம்- நாச்சி- 9.
குண்டு- ஆழம் நாச்சி – 2-3.
குணதிசை – கிழக்குத்திக்கு – திருமா. 19.
1105 குணாலமாடுதல் – குணாலைக்கூத்து தலைகீழாக
ஆடுவதொரு கூத்து பெரிய- 4-6-9.
குணில்- குறுந்தடி- திருப்பா- 26.
குணங்குநாறி முடைநாற்றம்நாறி – பெரிய- 2-4-1, நாச்சி 14-2.
குத்தாலொக்கும் – குத்தினாற் போலேயிராநின்றது- திருவாய். 95-9.
குத்து விளக்கு – திருப்பா. 19.
1110 குதற்று மிடுக்குக்கள் – திருவாய்- 10-1-5.
குதிரியாய்- (குஸ்திரி)- அடங்காதவள் – திருவாய்-5-3-9.
குதுகலிப்ப – ஆசைப்பட – பெரியாழ்- 3-6-1.
குதைகை – தடுமாறுகை – நான் முகன்திரு-21.
குதையும் வினை – அலையப்பண்ணுகிற துஷ்கருமம்.
நான்முகன்திரு. 81
1115குந்தி – குந்திக்கொண்டு, வினையெச்சம் – பெரிய-4-2-9.
குப்பாயம்- சட்டை- பெரிய. 3-5-6, நாச்சி. 14-4,
பெரியாழ். 3-5-6, நாச்சி. 14-4.
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை – குப்பையைக்
கிளறினாற்போலத் தோஷமே தோன்றும்படியான
செல்வமுடையாரை திருவாய். 3-9-5.
கும்மாயம் – புழுக்கிய பச்சைப் பயறோடு சருக்கரை

குழகி – விளையாடி -திருவாய். 6-2-6.
குழகு – அழகு திருவாய். 5-10-2.
குழகேலே விளையாடாதே – திருவாய்.6-2-5.
1045 குழமணன் கொண்டு- மரப்பாவை கொண்டு- திருவாய் -6-2-6.
குழமணி தூரமே – குணாலைக்கூத்துப் போலே தோற்றார்
தோல்விக்கீடாக ஆடுவதொரு கூத்து. பெரிய -10-3-1-10.
குழல் – கூந்தல் – பெருமாள். 6-2.
குழல் முழஞ்சுகளின் ஊருகுமிழ்த்து – வேய்ங்குழலினுடைய
துளைகளிலே நீர்க்குமிழி வடிவாய்க்கிளர்ந்து.
பெரியாழ். 3-6-11.
குழாவரிவண்டு – குழாமாகியவரி வண்டு-பெரிய. 2-10-4.
1150 குழிய – குழவிய – கூடிய – திருவிருத் 84.
குள்ளக்குளிர – மிகக் குளிர்ந்திருத்தல். திருப்பா -13.
குளப்பு கூறுகொள்ளப்பட்டு- துகைத்து மிதித்த இடத்திலே
மிதிக்கப்பட்டு. நாச்சி- 13-6.
குறந்து – சிக்குவிடுத்து – பெரியாழ் -2-5-8.
குறளை – பொய். திருப்பா-2.
1155 குறிக்கொள்ளே – திருவுளம் பற்றுக – திருவாய் -2-3-7.
குறிக்கோலொன்றிலாமையினால்- (குறிக்கோள் – நம்பிக்கை)
பெரிய -1-9-3.
குறிஞ்சித்திணை ஒழுக்கம் – பெரியாழ் -3-8-6.
குறிஞ்சியிசை தவருமாலோ – குறிஞ்சிப் பண்துளைக்கும் –
திருவாய்-9-9-1.
குறுங்குடி – இத்திருப்பதி திருநெல்வேலி இரயில்
சந்திப்பிலிருந்து 27 கல் தொலைவில் உள்ளது.
குறுகியவனான வாமனனது திருத்தலமாதலால் குறுங்குடி
எனப்பெயர் பெற்றுள்ளது. பெரிய – 1-6-8.
1160 குறுந்தலை- நீசர்வகுப்பில் முதல் நின்ற – பெரியாழ் -3-7-2. குறையிரந்த – குறைவாளனாயிருந்த- பெரிய -4-4-7. குன்றெயிற்றென்னவன் -மலை போன்ற மதிள்களையுடைய
நாட்டுக்கரசன் – பெரிய. 2-9-5.
கூகிற்றியாகில் – கூவவல்லையானால்- நாச்சி -5-6.
கூகின்றது – கூவுகின்றது – பெரிய -11-2-6.
1165 கூசம் – கூச்சம்- பெரியாழ் -3-7-7, திருவாட் -10-2-4,
தேவாரம் 7-7-7, எதிர்கொள்பாடி. 3-107-8;
நாரையூர், 6-65-2- ஏகம்பம்.

தோற்கருவி – பெரிய. 3-5-8.
கேயத்தீங்குழலோதி – பாட்டுடன் மதுரமாகிய
வேய்குழலையூதி – திருவாய். 6-4-2.
கேவலமன்று – சாமானியமன்று – பெரிய. 9-5-8.
கைசெய்தல் – ஒழுங்குபடுத்தல் – பெரிய. 2-6-5, 1-8-3, 2-1-1,
3-9-5, 4-1-7, பெரிய -1-8-4, திருவாய் 5-10-1.
-7-4-3. 1200 கைத்தலத்தா – அழகிய கையையுடையவனே – பெரிய
கைத்தலம் – பாணிக்கிரஹணம் நாச்சி -6-6.
கைத்தால் – நெஞ்சம் கசந்துபோனால் – நாச்சி – 2-8.
கைதவம் – கபடம் – திருவாய்-6-3-5, (பெருங். மகத -15-18)
கைதைத் தோடாரும் -தாழை மடல்களில் பொருந்தியுள்ள
பெரிய -3-4-9.
1205 கைதைமலர்க்குக்குருகு – பெரிய – 5-2-9.
கைந்நாகம் – கைம்மா – துதிக்கையையுடைய யானை.
கைப்பற்றுதல் – பாணிக்கிரஹணம் – பெரியாழ் -3-8-6.
கையறைபோழ்து- கை வகுத்துப் பொருத போழ்து
திருவாய். 7-4-5.
கைவலம் – கைம்முதல்.
1210 கொங்கு – வாசனை. பெரியாழ் -2-6-2.
கொங்கை வன்கூனி – பெரியாழ்-2-1-8.
கொட்டாய் பல்லிக்குட்டி – (தணி கௌளி) கொட்டாய்-
ஒலிசெய்- பெரிய. 10-10-4.
கொட்டை பஞ்சுச்சுருள் – திருவிடைமருதூர் மும்மணி
கோவை பெரியாழ் -3-5-1.
கொடிக்கோழி கொண்டான் -சுப்பிரமணியன் – திருவாய். 7-4-8.
1215 கொடிமூக்கு – நீண்டமூக்கு- பெரியாழ் -7-4-3. சிறிய.
திருமடல் -40, ஒழுகுபொற் கொடிமூக்கும் (சீவக. 165)
பெருங் -2-15:85, 5-8:16, கூர்ம – பலவகைத் -17.
கொடியேறு செந்தாமரைக்கை – பெரியாழ் -3-5-10.
கொடுங்கோளால் – திருவாய் -4-8-6.
கொடுவுலகம் – கொடியதாகிய உலகத்தை- திருவாய் -4-9-7.
கொண்டல் – காளமேகம் – பெரியாழ் -2-9-4.
1220 கொண்டற்கு- கொண்டதற்கு- பெரிய. 2-9-3.
கொத்துத் தலைவன் – கூட்டங்களுக்குத் தலைவனாகிய
துரியோதனன் – பெரியாழ் -1-9-3.
கொந்தக்குழல் – நெறிப்பையுடைய கூந்தல் – பெரியாழ் -2-5-8.கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.

கூடல் – ன்கன்சிரு -39, பெரிய -9-2-5, (தே. 5-64-4-
கோழம்பம்).
கூடலர் – பகைவா – பெருமாள்.1-11. 7-18-10- வேள்விக்
குடியும் துருத்தியும்.
கூடலித்தல் – பெரியாழ் -3-6-8.
கூடலூர் – அப்பக்குடத்தான் சந்நதி – பெரிய -5-2-1, 1-10.
1170 கூடார் – பகைவர் – திருப்பா-27.
கூத்தன் – சிவன் – பெரியதிரும-71, நாச்சி -4-4.
கூத்தர் குடமெடுத்தாடில் -திருவாய் -4-5-4.
கூதல் – குளிர் – பெருமாள் -6-1, தே. 1-130-3. ஐயாறு.
கூதை – மூளி (கூதைசெய்து) திருவாய் -9-1-9.
1175 கூந்தல் – கேசி (ஓரசுரன் – இரண்டாந்திரு -93.
கூம்பு-பாய்மரத்தின் நுனி பெருமாள் 55.
கூர்வேல் – கூர்மையான வேலாயுதம் -பெருமாள் -4-11.
கூயேகொள் – அழைத்துக் கொள் – திருவாய் -4-9-7.
கூவாய் பூங்குயிலே- பெரிய – 10-10-3.
1180 கூவிளை – வில்வம் – பெரிய -11-7-6.
கூழ்ப்பு- சந்தேகம் – திருவாய் -8-2-6.
கூழேன்மின் – சந்தேகப்படாதீர் – திருவாய்-3-6-9.
கூழை- கூந்தல் பெரிய. 2-6-7, திருவாய் -9-4-3. (தே) 5-64-8,
கோழம்பம்,
கூழைப்பார்வை – கள்ளப்பார்வைபெரிய -9-6-3.
1185 கூழைமைசெய்கை-அவரவர்க்குத் தக்கபடி பரிமாறுகை.
பெரிய. 6-3-2,5.
1190
கூற்றுச் சொல்ல- திருவாய் -5-1-2.
கூற்றுத்தாய் – பெரிய. 3-9-4.
கூறை -ஆடை,பெரிய. 4-5-5.
கூறையுடை – பரியட்டத்தின் உடுப்பு- பெரிய -3-3-1.
கூனின் மேல் உண்டையோட்டியது – பெரிய -10-6-2.
திருவாய் – 1-5-5, திருச்சந் -49. கூனே சிதையவுண்டைவில் நிறத்தில் தெளித்தாய்.
கெருடர்கள். திருப்பள்ளி. 9.
கேசம்- தலைமயிர். பெரியாழ். 1-2-2-1. கேசரம் உளை மயிர் – பெரிய -2-8-1.
திருவாய் -1-5-5.
44
1195 கேட்.டேயும் – கேட்கும்போதே, கேட்டாலும் – பெரிய திருவந்-34.
கேடகம் – ஆயுதத்தைத் தடுப்பதற்குக் கையில் கொள்ளும்

முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி.
பெரியாழ்- 3-1-3, மணிமேகலை காதை – 27-185.
(ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த
பருப்பு என்று பொருள் செய்திருக்கின்றனர்’
” பயற்றது கும்மாயம்” நன். சூ 299, மயிலை மேற்)
குமரதண்டம் – சேனாசமூகம்- திருப்பள்ளி. 6.
1120 குமரி – கன்னி – பெரியாழ். 3-8-3.
குமுதம் – அல்லி. பெரிய, 4-2-6, 7-5-10.
குமுறுதல் – வாய்விட்டுச் சொல்லமாட்டாது உள்ளே
முறுகுதல் – திருவாய்.6-5-1.
குமைக்கும் – நலிகிற, வருந்தும். திருவாய். 6-9-9, 5-1-6, 7-1-1.
குயிற்பைதல்காள் – குயில்பிள்ளைகளே. திருவாய். 9-5-8.
1125 குரம்பை – குடிசை- பெரிய . 4-4-3.
குரவம் – ஒருவாசனை மரம்.
குரவிற்கொடி முல்லைகள் நின்றுறங்கும் – பெரியாழ். 3-5-11.
குரவை கோத்த குழகனை – திருவாய் 3-6-3.
குரவை கோத்ததும் – பெருமாள். 7-9, பெரிய. 7-8-8, 2-5-4,
திருவாய். 3-6-3.
குரவை பிணைந்து – குரவைக் கூத்தாடி – பெரிய -1-8-4, பெருமாள். 7-9. பெரியாழ்வார். 2-3-5.
1130 குரவையாச்சியரோடு கோத்ததும் திருவாய். 6-4-1. குராப்போது – மணம்மிக்க மலர் (பூசைக்குரியது) – இரண்டாம்திரு. 31. குருக்கள்குல மதலை குருவமிசத்துப் பிறந்து அருச்சனன்
பெரியதிரும. 56.
குருடன் திருதராட்டிரன் பெரிய. 2-3-6. குருந்தம் அசுரன் ஆவேசித்திருந்த ஒரு குருந்தமரம். முதல்திரு – 54, 62 நான் முகன்திரு. 57.
1135 குருத்தமொசித்து குருந்த மரத்தை முறித்து. பெரிய. 3-8-5. குருத்திடைக் கூறைபணியாய் – குருந்தமரத்தின் மேலுள்ள
ஆடைகளை தந்தருள்வாய் நாச்சி. 3-4. குருந்தொசித்த மூன்றாம்திரு. 32. குருமணி – சிறந்த இரத்தினம். பெரிய. 3-10-2. குலாகின்ற – வளைகிற. திருவிருத். 75
1140 குலை – கரை – பெருமாள். 10-7.
குழகன் – எல்லாரோடுங்கலந்திருப்பவன் – பெரியாழ். 1-4-5, பெருமாள். 7-7, திருவாய். 3-6-3

கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.1250கோடிமூடி எடுத்தல். பெரியாழ் -4-5-8.
கோடு – தந்தம், கரை,
கோணை – பிரயாசம், மிடுக்குக்கள் திருவாய் -2-5-10; 5-3-9.
கோத்துக்குரவை பிணைந்த – ராசக் கிரீடை செய்தருளின
பெரிய 1-8-4.
கோதா – கௌதுகலத்தைச் செய்பவனே – பெரிய -6-2-9.
1255கோது – சாரமற்றது – திருவிருத் – 26.
கோதுகுலமுடையபாவை – திருப்பா – 8.
கோ துகுலமுடைக்குட்டனே – எல்லாராலும் விரும்பத்தக்க
குணங்களையுடையவனே. பெரியாழ். 2 – 9-6.
கோமளம் – பேரழகு, மிருதுவான தன்மை திருவாய்.
7-2-7; பெரிய – 10-8-9.
கோமிறைசெய்து – அரசன் செய்யக்கடவ மிடுக்குகள்.
நாச்சி-10-7.
1260கோயில் – ஸ்ரீரங்கம் – திருநெடுந் – 22.
கோயிலினுள்ளேமன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
பெரிய – 4-3-8.
கோயின்மை – அநீதி, ஆராய்ச்சியில்லாத செயல். பெரிய – 8-
2 – 8; 11 – 1 – 4; 11 – 2 -3; திருவாய் – 6 – 2 -6.
கோரம்பு – தீம்பு- பெருமாள்.6-4.
கோல் கழிந்தான் மூலைபோல் – பெரியாழ் – 3 – 7 – 7.
1265கோல்துணையா – ஊன்றுகோலைச் சகாயமாகக் கொண்டு
பெரிய-1-3-1.
கோல் தும்பீ – பெரிய – 8 -4 – 1,10.
கோல்தேடியோடுங் கொழுந்தே போன்றது – இரண்டாம்
திரு- 27.
கோலாடி -ஆஞ்ஞை செல்லுமிடம் – பெரிய. 5 – 4 – 4.
கோவலப் பட்டம் கவித்து – இடைக்குலத்துத் தலைவி என்று
பட்டம் கட்டி. பெரியாழ். 3 – 8 – 7.
1270கோவலர் ஸ்ரீநந்தகோபர் – பெரியாழ். 1 -2 – 13, பெரிய-9-2-5.
கோவலூர் – பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும்
பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்த
திருப்பதி.திருநெடுந் – 17.
கோவாய் – நிர்வாகர்களாய் – பெரிய – 7-7-9.
(தே. 4 -96 – 1. சத்தி முற்றம் )
கோவி நாயகன் – கோபீஜன வல்லபன் – பெரிய – 2-1-4.
கோவைமணாட்டி நீ – கோவைக் கொடியாகிய மங்கையே.
நாச்சி- 10 – 3.1275கோவயின்றமிழ் பாடுவார் – பெரிய – 9-10-9.
கோழம்பம் – குழப்பம், கலக்கம் பெரியாழ் – 3 -4 – 5.
கோழி -உறையூர் – பெரிய -9-2-5.
கோழி கூவெனல்- பெரிய – 10 – 10-6.
கோழிமுட்டைக்குக் குறுந்தடியென் செய்வது. பெரிய. 10-9-7.
1280கோழியும் கூடலுங்கோயில் கொண்ட – பெரிய – 9-2-5.
கோள்- சிறை, கிரகம், குற்றம்,துன்பம்,கொள்கை.
பெரியாழ் – 5 – 1 – 3, 9.
கோளூர் – திருவாய்- 8-3-5.
இத்திருப்பதி ஆழ்வார் திருநகரியிலிருந்து ஒரு கல்
தொலைவில் உள்ளது. நவநிதிகள் இங்கே ஒளிந்து
கொண்டிருக்கின்றன என்று அதர்மம் குபேரனுக்குக் கோள்
சொல்லிய இடாமாதல் பற்றிக் கோளூர் என்று பெயர்
வந்தது என்பர். மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.
கோறம்பு – திலகம், குறம்பம் என்ற ஆபரணம்.
பெரியாழ்- 3 -4 – 6.
கோனேரி திருவேங்கட மலைமேல் உள்ள புஷ்கரிணி.
பெருமாள். 4 – 1.
1285கோனோக்கி வாழுங்குடி உவமை – பெருமாள். 5-3.
கௌத்துவம் – மணி . பெரியாழ் – 4 – 5 – 8.
சக்கரச் செல்வன் – திருவாழியாலே அழகுபெற்றவன்.
பெரிய -5-9-5.
சக்கரப் பொறி ஒற்றுதல் – பெரியாழ்-5 -4-1;
சக்கரபாணி. திருச்சந்.14.
திருப்பல்லாண்டு. 7.
1290 சகடம்-வண்டி-பெரியாழ் – 1 -2 11. சங்கத்தழகர் – திருவாய் – 2 – 10 -2.
சங்கையாகி சம்பந்தமுடையளாகி- பெரியாழ் – 3 – 7 – 3. சடகோபனறிந்துரைத்த – திருவாய் – 7-8-11.
சண்டம்- உக்கிரம் – திருச்சந் 67.
1295 சண்டாள சண்டாளர்கள் – திருவாய். 3-7-9. சண்ணம் – ஆண்குறி – பெரியாழ். 1 – 8- 10 சாத்தியங்காண்மின் – திருமா. 7. சத்துருக்கனன் – பெரிய – 2 – 3 – 7.
சதிரா – அத்தாட்சியாயிருக்கும் தன்மை – பெரியாழ் – 5 -4 – 1.
1300 சதிர்த்தேன் – சதிரையுடையேன் – கண்ணிநுண். 5 (தே) சதிர்வு 1 – 1 -7 பிரமபுரம்.

1330சாடுதல் – தள்ளி அழித்தல், அடித்தல் – பெரியாழ். 3 -1-3.
சாத்து-சமூகம், தீர்த்தயாத்திரைக்குச் செல்வோர் கூட்டம்.
பெரிய. 1-7-2.
சாத்தன் – பெரியாழ். 2 -9 – 8; சிறியதிரும. 17.
சாதித்தல்-கொல்லுதல் – திருவாய். 3 -5-5
சாதி மாணிக்கம் – திருவாய். 3-4-4.
1335சாதியந்தணர்கள் – திருமா. 43.
சாது ஜனங்கள் – திருவாய்- 3-5-4.
சாதுவராய் -நான்முகன்திரு – 68.
சாதுவாய் – திருவாய் – 3-1-6.
சாந்தினிற் பஞ்சமம் வைத்து – திருவாய் – 8-9-8.
1340சாந்தினிக்குப் புத்திரனை அழைத்தது – பெரியாழ். 4-8 – 1.
சாம்பவான் – பெரிய – 10 -2-9
சாம நிறத்தன் – திருவாய் – 9-5 -6.
சாமம்- சாமத்தினிறங்கொண்டதாடாளன் – நாச்சி – 8-2.
சாமத்திருமேனி -சியாமளமான சரீரம் – திருவாய். 8 – 5 – 1.
1345 சாமமாமேனியன் – நீலநிறத்தையுடைய சிறந்த
சரீரத்தையுடையவன் பெரிய. 9-1-1.
சாமரை கவரிமானின் மயிரால் அமைந்த அரச சின்னம் –
பெரிய. 3-8-3.
சாமவேதகீதன் சாமவேதத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டவன் –
திருச்சந். 14.
சாமவேதி – பெரிய. 5-5-9.
சாமவேதியன் -சாமவேதத்தை முதலில் அத்தியயனம்
செய்தற்கு உரிமை பெற்றவன் – பெரிய . 7 – 7-2.
1350சாமாறு பணி கண்டாய் – சரீர விச்லேஷத்தைப் பெறும்படி
பார்த்தருள வேணும். திருவாய். 4-9-1.
சாமியப்பன்- சிவன் – பெரிய. 2 – 2-7.
சாய்-ஆச்சரியப்படும்படியான அழகு. திருவாய். 8-2-1.
சாயை- தேஜஸ். ஒப்பு- பெரியாழ். 5-3-3.
சார்கொடான் – அணுக ஒட்டான். திருவாய். 1 -10-6.
1355சார்ங்க முதைத்த சரமழை- வில்லால்விடப்பட்ட அம்பு
மழை. திருப்பா. 4.
சாரிகைப்புள்ளர் – விரைந்த நடையையுடைய. திருவிருத்.19.
சாலகம்- பலகணி. பெரியாழ். 3-4-1.
சாலேகம்- சன்னல். பெரியதிரும. 31.
சாழலேதோழியே. – சாழல் – மகளிர் விளையாட்டில்
ஒன்று. திருவாசகம். சாழல். பெரிய. 11-5-1-10.

1360 சாளக்கிராமம். பெரிய. 1-5-1.10; 4-7-9; பெரியாழ். 2-9-5.
சாற்றிச் சொன்னேன் – வற்புறுத்திச் சொல்லுகிறேன்.
பெரியாழ். 2-2-5.
சாற்றினேன் தடம் பொங்க – பெரிய. 10-2-10.
சாறுபட -உற்சவமுண்டாக, (விழவுபட) திருவாய். 7-4-2.
சிக்கென- உறுதியாக . விரைவாக. பெரியாழ். 2-7-6, 4-1-2,
4-5-9, பெரிய. 1-1-5. திருவாய். 2-6-1, 10-2-3. (தே)
5-71-9 விசயமங்கை. 4-59.1. பருப்பதம்.
1365 சிங்கப்பிரான், நரசிங்கமூர்த்தி. திருவாய். 2-8-9.
பெரியாழ். 5-2-4.
சிங்கவேள் குன்றம் – அஹோபிலம். பெரிய. 1-7-1-10.
சிங்கம் உறங்கிவிழித்தல் உவமை. திருப்பா.23
சிங்காமை – சங்கோசியாமல். பெரிய. 10-6-1.
சிசுபாலன்- வசுதேவனுக்கு உடன்பிறந்தவளும் அதனால்
கண்ணனுக்கு அத்தையுமான சுருதசிரவை
என்பவளுடைய மகன். திருவாய். 7-5-3.
1370 சிசுபாலன் – தலையைச்சிரைத்திட்டது. பெரியாழ். 3-9-3.
சிணுங்கி- முக்கால முதல். பெரிய. 10-5-1.
சித்தர் – அஷ்டமாசித்தியடைந்தோர். திருப்பள்ளி. 9.
சித்திர குப்தன்- இயமராசனது கணக்கன். பெரியாழ். 5-2-2.
சித்திரகூடப்பொருப்பு – சித்திரகூடமலை. பெரியாழ். 2-6-7.
1375 சித்திரகூடம் – இராமன் வனவாச காலத்தில் தங்கியிருந்த
ஒரு மலை. பெரியாழ்.3-10-6; பெருமாள். 10-5.
சிதகு – கடுஞ்சொல், குற்றம். பெரியாழ். 4-8-4; 4-9-2.
சிதைகிய – உடைந்த. திருவாய். 4-1-1.
சிந்தாமணி – நினைத்த மாத்திரத்தில் விரும்பியவற்றைத்
தரக்கூடிய மணி. பெரிய. 1-10-9.
சிந்து பூமகிழும் திருவேங்கடம்- தூவினமலர்கள் அழகு
கெடாதிருக்கப்பெற்ற திருமலை. திருவாய். 3-3-2.
1380 சிந்துரம் நெற்றியிலணியும் பொடி. பெரியாழ். 3-4-6.
சிமயம் – சிகரம். திருவிருத். 31.
சிரமம் தீர்தல் – இளைப்பாறப்பெறுதல். பெரியாழ். 5-4-8.
சிரமப்பட்டோம்-கஷ்டப்பட்டுச் செய்தோம். நாச்சி. 2-3.
சிரீதரன் – திருமால். திருவாய். 2-7-9.
1385 சிரீதரன் மூர்த்தி திருவாய். 4-4-2.
சிரீவர மங்கல நகர் – திருவாய். 5-7-1-11.

சிரைத்திட்டான்-பெரியாழ். 3-9-3.
சிரைத்து அழித்து. பெரியாழ். 3-9-3.
சில்லி – சில்லெனல், சிள்வீடு.பெரிய. 1-7-9.
1390 சில்லென்றழையேன்மின் – சிலுகிடாதே அழையுங்கோள்.
திருப்பா.15.
சில்லென்றொல்லறாத – சில்லென்ற ஓசை மாறாத.
பெரிய. 1-7-9.
சில்லை – சிலுகுசெய்தல். திருவாய். 6-7-4.
சிலம்பாறு. பெரியாழ். 4-2-1; 4-3-9. நாச்சி. 9-10.
சிலம்பியலாறு சிலம்பு என்று கூறப்படுவது நூபுரகங்கை.
பெரிய. 9-9-9.
1395 சிலாதலம் – கற்பாறை. மூன்றாந்திரு. 58.
சிலிங்காரம் – சிருங்காரம். பெரியாழ். 3-4-9.
சிலுகு – சண்டை, கூச்சல். திருப்பா. 15. (வியாக்) சிலுப்பி- கையால் சிலிப்பித்து.பெரிய. 10-8-2.
சிலும்ப- முழங்க. பெரியதிரும. 69.
1400 சிலை – ஒளி. பெரிய. 3-9-4. (தே.1-116.3.பொது.)
சிவசாபம் தவிர்த்தது பிரமனால் சிவனுக்கு ஏற்பட்ட
பிரம்மஹத்தி சாபத்தைப் போக்கினது. பெரிய. 1-4-8. 1-5-8; 4-2-8; 6-9-1, திருச்சந். 42.
சிவப்பட்டார் – சைவர். நாச்சி. 6
சிவபெருமான் பங்கத்தாய் – சிவபிரானை வலது
52
பக்கத்திலுடையவனே. திருநெடுந். 9. சிவளிகைக்கச்சு – கட்டுங்கச்சு, பொன் எழுதினகச்சு.
பெரிய. 8-1-7.
1405 சிவன் ஆலநீழல் அறம்பகர்ந்தது – ஆலமரத்தின் நிழலிலே அகத்தியர், புலத்தியர் தக்ஷர், மார்க்கண்டேயர்
என்கிற நால்வருக்கு அறம் உரைத்தது முதல் திருவந்.4. சிவன்கூத்து வகை – பெரியதிரும. 68.71. சிவனுக்கு எழுபது மாடம் செங்கணான் செய்தது. பெரிய. 6-6-8.
சிற்ற- ஆயாசப்பட. திருவாய். 9-1-7. சிற்றங்சிறுகாலே- குளிர்போதில். திருப்பா. 29.
1410 சிற்றவை – சிறிய தாயார் பெருமா. 8-6. சிற்றாடை – சிறிய ஆடை. பெரியாழ். 3-3-5. சிற்றாதே -அசையாமல்.திருப்பா.11.

சிற்றாற்றங்கரையில் மூவாயிரவேதியர். திருவாய். 8-4-8.
சிற்றுதல்-ஆயாசப்படல். திருவாய். 9-1-7. திருப்பா . 11.
1415 சிறுக்கண் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-7.
சிறுக்கன்று – இளங்கன்று பெரியாழ். 2-6-3.
சிறுக்குட்டன் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-2; 3-3-5.
சிறுக்கை – சிறியகை. பெரியாழ். 1-4-2,7.
சிறுகால் நெறி – சிற்றடிவழி. பெரியாழ். 4-2-8.
1420 சிறுகாலே – விடியற்காலையில், திருப்பா. 29. பெரியாழ். 3-3-2.
சிறுச்சண்ணம் – சிறிய ஆண்குறி. பெரியாழ். 1-8-10
சிறுச் சிறிது கொஞ்சம் கொஞ்சமாக. திருப்பா. 22.
சிறுச் சேவகம்- பாலபராக்கிரமம்.திருவாய். 5-10-3.
சிறுத்தாம்பு – சிறிய கயிறு, கண்ணிநுண் 1.
1425 சிறுத்தேவி – பருவம் நிரம்பாதவள். திருவாய். 6-7-5.
சிறுதூதை – மண் முதலியவற்றால் இயன்ற சிறுகலம்
நாச்சி. 2.8.
சிறு தொண்டீர்- நீசர்களே. பெரிய. 7-9-3.
சிறுநோன்பியர் – அற்பவிரதங்களைக் கொண்டவர்.
சிறுப்பத்திரம் சிறியவாள். பெரியாழ். 3-3-5.
1430 சிறுபுலியூர்ச் சலசயனம் பெரிய. 7-9-1-10.
1435
சிறுபுறம் பேசுதல் – அற்பமான குற்றங்களை மறைவில்
சொல்லுதல்.
சிறு பேரழைத்தல் – சிறுபேர் நாராயண நாமம். திருப்பா. 25.
சிறுமனிசர் – அற்ப மனிதர். திருவாய் 1-5-8; 8-10-3.
சிறுமானிடவர் – நீச மனிதர்கள். நாச்சி. 12.4
சிறுமியின் நிலைமை பெரியாழ். 3-7-1-10.
சிறு வீடு – சிறுகாலையில் விடுதல். திருப்பா. 8.
சிறை- க்ஷயம். பெரிய. 11-8-7.
சின்மொழி – சிலபேச்சு.திருவிருத். 22.
சின்ன நறுந்தாது – சிறிய மணமுள்ள தாதுக்கள். பெரிய
திரும. 32.
1440சின்ன நறும்பூந்திகழ்வண்ணன் – சிறிய மணமிக்க பூப்போல்
விளங்குகின்ற நிறத்தையுடையவன். பெரியதிரும. 97.
சின்ன மலர்க்குழலும் – துகள்களையுடைய மலாகளை
அணிந்த கூந்தலையும். பெரிய திரும. 45.
சீடை – உருண்டை வடிவமுள்ள சிறு பண்ணிகாரவகை.
பெரியாழ். 2-9-9

சீதனையே. (ஸ்ரீதரனை) – குளிர்ந்த தன்மையுடையவன்.
சீதை- உழுபடைச்சால், நிலத்தை ஜனகமகாராசன்
யாகத்திற்காக உழும்பொழுது தோன்றியதால்
பிராட்டிக்குச் சீதை என்று பெயராயிற்று.
திருவாய்.4-2-8; பெரிய. 7-8-7. இரண்டாந்
திருவந். 15, பெரியாழ். 3-3-5.
1445சீமாலிகன் – கண்ணனுடைய தோழன். பெரியாழ். 2-7-8.
சீய்க்கை- திருவலகிடுகை. திருவாய். 10-2-7.
சீயம் – சிங்கம்.
சீரரசாண்டு – சிறப்பாக ராச்சியபரிபாலனம் செய்து.
திருவிருத்.80.
சீராம விண்ணகரம்-இத்திருப்பதி சோழநாட்டில் சீகாழியிலிருந்து அரை கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். பெரிய. 3-4-1-10.
1450 சீலைக்குதம்பை – சீலைத்தக்கை (காதுவளர்தற்பொருட்டு
இடுவது) பெரியாழ். 3-3-1.
சுக்கிரன் கண்ணைத்தர்ப்பத்தின் நுனியால் குத்தியது. பெரியாழ். 1-8-7.
சுக வெள்ளம் – இன்பக்கடல். திருவாய். 10-2-1. சுகிர்ந்திட்ட – கழித்திட்ட திருவாய் 7-7-9.
சுகிர்ந்து- பிளந்து மூன்றாந்திருவந். 95.
1455 சுட்டி – ஒரு நெற்றியணி. பெரியாம். 1-6- 1-7-10, பெருமாள் 7-5.
சுடரடி – தேவராசன் திருவடி. 1-1-1.
சுண்டாயம் விளையாட்டு,வஞ்சனை. திருவாய்.
6-2-1, 7-8-.7,8.
சுணங்கையெறிந்து – மயிர்கிளர்த்து திருவாய். 4-6-7.
சுணம் – சுணங்கு (சுண்ணம் முலைமேல் தோன்றும் நிற வேறுபாடு. பெரியாழ். 2-3-4.
1460சுந்தரத்தோளன் – அழகிய தோளையுடையவன். பெரியாழ். 1-3-6.
சுந்தரர் – கந்தருவர். திருப்பள்ளி.7.
சுந்தரன் – அழகன். நாச்சி. 9-10. சும்மெனாதே- மூச்சுவிடாதே. பெரியாழ். 5-4-3. சுமடு -சும்மாடு. திருவாய். 7-1-10.
1465 சுமந்திரன் – தசரதருக்கு மந்திரியும், சாரதியும் ஆனவர். பெருமாள்.9-7.
சுமாலி – விஷ்ணுவின் சக்கரத்தால் கொல்லப்பட்டவன். .
திருச்சந்த. 107.

சுரவி – பசு. திருவிருத்.73.
சுரிகை அணைத்து – உடைவாளைத் தரித்துக்கொண்டு.
பெரிய. 10-8-5.
சுரிகையும் தெறிவில்லும், செண்டுகோலும்
உடைவாளையும், சுண்டுவில்லையும், பூச்செண்டு
வில்லையும். பெரியாழ். 3-4-3.
1470சுரியேறுசங்கு- சுழித்தலையுடையசங்குட மூன்றாந்திரு.49.
சுருக்கே- சங்கிரகமாகச் சொல்லலாவது, திருவாய். 9-1-6.
சுருப்பு- சுரும்பு வண்டு. பெரியாழ். 1-3-21.
சுரும்பலற்றும் – வண்டுகள் ரீங்காரம் செய்தல்.
திருவாய். 10-2-1.
சுருள்பங்கி நேத்திரத்தாலணிந்து – சுருண்ட குழல்களைக்
கட்டி பீலிக்கண்களாலே அலங்கரித்துக் கொண்டு
பெரியாழ். 3-4-5.
1475சுலாய் – சுற்றி. திருவாய். 7-4-2.
சுலாவிநிற்றல் – சூழ்ந்து கொண்டு நின்று.
இரண்டாந்திருவந்.40.
சுவடு-அடையாளம். பெரியாழ். 4-1-4,7 திருச்சந். 41,
பெரிய திருவந்.8.
சுவேதன் – அர்ச்சுனன். நான்முகன்திரு. 24.
சுழலை – சூழ்வலை நாச்சி. 9-1.
1480 சுழலை – சுழன்று கழன்று வருகிற ஆறு. துன்பங்கள்
இவ்வுடலைச் சூழ்ந்து கொண்டிருப்பதனால் அவற்றைச்
சுழலாயாக உருவகப்படுத்தினார். பெரியாழ். 5-3-1.
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனன். ஆலோசனையுடைய
துரியோதனன். பெரியாழ். 1-8-5. ‘சூழலை’ என்பதன்
குறுக்கல் விகாரம். சூழல் – ஆலோசித்தல்.
சுளகு -முறம். நாச்சி. 2-8.
சுளை கொண்ட பலங்கனி – சுளைகளையுடைய
பலாப்பழம். பெரிய. 6-9-3.
சுற்றத்தவர் – உறவினர்கள். திருவாய். 9-1-1.
1485சுறவ நற்கொடிகள் – சுறாமீனையுடைய நற்கொடிகள்
நாச்சி. 1-4.
சுனை – தன் இடமானசுனை (மலையூற்று) திருவாய். 10-5-10.
சூடகம் – கைவளை. திருப்பா. 27.
சூடாமணி – தலையில் அணியும் இரத்தினம்.
பெரிய திரும. 77.
சூடிக்கொடுத்தாள். இராமாநுஜ. 66

1490 சூதகம் – தேமாமரம். பெரிய. 4-2-1:5-3-8.
சூது – உபாயம், காரணம். நான்முகன்திரு. 64; பெரிய
திருவந்.19; திருவாய். 2-10-10.
சூர் – பேய், தெய்வப்பெண். முதல்திருவந். 3.
சூர்ப்பணகா – இராவணனுடைய தங்கை. பெரிய
திரும. 145; பெரியாழ். 3-9-8.
சூரியமண்டலத்தினூடே செல்லல். பெரியாழ். 4-9-3;
பெரிய. திரும. 16,17.
1495சூலம் மாளிகையில் வைத்தல். பெரிய. 7-5-6; மாடத்துச்சி
மிசைச் சூலம். 3-9-4.
சூலிகை – சூலம். பெரிய. 8-3-3. (தே. சூளிகை 1-129-4. கழுமலம்
2-34-2. பழுபூர்; 3-92-10 நெல்வேலி; 2-50-1. ஆமாத்தூர்.
சூழ்தல் – ஆராய்தல், எண்ணல். திருவிருத். 81.
சூழ்போகி- கொல்லும் வகைகளை ஆராய்ந்து பெரியாழ். 4-3-3.
சூழல் – தந்திரம்,மணம், வட்ட வடிவமான பூமி, பெரியாழ்.
2-9-10; 4-1-4.
1500 சூழறும் ஆணையற்ற. நாச்சி. 2-7.
சூனியவாதர் நிரீசுவரவாதிகள், இராமாநுஜ. 99. செக்கஞ் செக – நினைவுகெட. திருவாய்.1-9-5
செக்கர் -சிவப்பு. திருவாசிரியம். 1; பெரியாழ். 1-7-2
செக்கிலிட்டுத் திரித்தல். திருவாய். 7-1-5.
1505 செக-போக. திருவாய். 1-9-5.
செகில்- சிவப்பு. திருவிருத்தம். 69.
செங்கண்மால் -திருமால், பெரியாழ். 3-8-4.
செங்கண்ணா. மூன்றாந்திரு. 47.
செங்கணான். பெரிய. 6-6-1,5.
1510 செங்கலங்கல் – சிவந்தவெள்ளம். பெரிய. 4-4-7. செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து – செங்கழுநீர்ப்பூக்கள் மலர. திருப்பா.14. சிலப். அந்திமாலைச் சிறப்புச்செய்காதை. அடி. 64. செங்களம் – சிவந்த யுத்த பூமி. திருவிருத். 77. செங்கற் பொடிக்கூறை காவியில் தோய்த்த ஆடை. திருப்பா. 14.
செங்கீரை – தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்தாடுவிப்பதொரு
நிருத்தவிசேடம். பெரியாழ். 15.110
1515 செங்குறிஞ்சித்தாரார் சிறிய திரும.16. செங்கோல் வலவன் – சோழன். பெரிய. 6-4-3.

செஞ்சொல்மாலை. பெரிய. 1-7-10.
செஞ்சொற்கவிகள். திருவாய். 10-7-1.
செஞ்சோற்றொடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்- சமணர். பெரிய 7-9-2
1520 செடியாக வல்வினைகள் -பாபம்.பெருமாள். 4-9.
செடியராக்கை- (சம்சாரமாகிற) பெருங்காடு நிறைந்த
சரீரசம்பந்தத்தை. திருவாய். 1-5-7.
செண்டன் – பூச்செண்டு. பெரிய. 4-8-3.
செண்டுகோல் பந்தடிக்கும் கோல்; நுனியில் பூக்கள்
வைத்துக்கட்டிய கோல்.பெரியாழ். 3 -4 – 3.
செண்டு சிலுப்பி- செண்டைக் கையிற்சலிப்பித்துக்கொண்டு.
பெரிய. 10-8-2.
1525 செந்தமிழ் பாடுவார்தாம் வணங்கும் தேவர். பெரிய. 2-8-2.
செந்தமிழ் மாலை. இரண்டாம்திரு. 13.
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் – அந்தணர்.
பெரிய 7-8-7.
செந்திறத்த தமிழோசை. திருநெடுந்.4.
செந்நெ இ – செவ்வனேநிறுத்தி. முதல்திருவந். 30,47.
திருவாய். 5-2-6.
1530 செந்நெல்கவரிவீசும்.திருவாய்.5-8-1; 7-3-6.செப்பம் –
செப்பம் – செவ்வை. திருவாய். 2- 9-1. திருப்பா. 20
செப்பாடு – செம்மையான குணம். பெரியாழ். 3-5-6.
செம்பாடு- செம்மண்தரை. பெருமாள். 10-2.
செம்பியன் கோச்செங்கணான் – ஓரரசன். இவன் ஈசற்கு
எழில்மாடம் எழுபது செய்தவன். பெரிய. 6-6-1.
1535 செம்பினாலியன்ற பாவை -செம்பினால் செய்யப்பட்ட
பிரதிமை. பெரிய. 1-6-4.
செம்பொன் செய்கோயில். பெரிய. 4-3-1,10
செம்பொன் இலங்குவாளி – விளங்குகின்றபொன்னால்
செய்யப்பப்பட்ட அம்பு பெரிய. 2-8-3.
செம்போத்துத் திருத்துதல். பெரிய. 10-10-1.
செம்மாது பிராட்டி. பெரியதிருவந். 7.
1540 செம்மாந்திரே – செவ்வனே. பெரியாழ். 3-8-5.
செம்மாபாத பற்பம் – செவ்விய சாமளமான பாதபத்மம்
திருவாய். 2-9-1.

செம்மாய் நிற்றல் – நேர்மையாய் நிற்றல். திருவாய். 9-6-6.
செம்மி- அடைத்து. மூன்றாந்திரு. 12.
செய்கிறுதி – செய்கிறாய். பெரியதிருவர். 83.
58
1545 செய்குன்றம் – செல்வமக்கள் விளையாடல் பொருட்டு
அமைக்கப்படும்கட்டுமலை. பெரிய. 5-1-4.
செய்தனகள் – செய்தவகைகள். பெரிய. 5-5-1-10.
செய்ந்நன்றி குன்றேன்மின் – செய்த நன்றியை மறவாதீர்கள்.
பெரிய. 1161.
சிலப். வரந்தருகாதை. அடி. 191.
செய்மிறை – செய்யுநடுக்கம். திருவாய்.7-5-8.
செய்யப் பெறாய் – செய்யாய் – பெரிய.10 -7 – 1 – 8.
1550 செய்வானின்றகளும் எதிர்காலத்திலுள்ள செயல்களும்.
திருவாய். 5-6-4.
செய்வினை – முற்பிறப்பில் செய்த கருமம் .திருவாய். 4-7-1. செருந்திப்பொழில் – சுரபுன்னைச்சோலை. திருநெடுந். 25. செருநுதல் போர்முகம். பெரிய. 11-4-6.
செல்சார்வு – அடைதற்குரிய இடம். திருவாய். 8-4-2.
1555 செல்லா நல்லிசையாய் அழியாத புகழையுடையவனே
பெரிய. 6-3-9.
செல்வக் கொழுந்து. பெரியாழ். 2-8-10. செல்வவிபீடணற்கு – அழியாத செல்வமாகிய
பக்தியுடைமைபற்றி செல்வ விபீடணன் என்று சிறப்பிக்கின்றார். பெரிய. 6-8-5. செல்வரிப்போதில்லை – உங்களுக்கு வேண்டியவற்றைச் கொடுக்கவல்ல செல்வர்கள் இல்லை. திருவாய். 3-9-6. செல்வன் – சிறந்த குணங்கள் பொருந்திய செல்வநம்பி பெரியாழ். 4-4-8 திருப்பல்.11.
1560செல்வு-செல்வம். பெரியாழ். 1-5-1; பெருமாள்.4-7. செலக்காண்கிற்பார் – முன்புபெற்ற ஞானம்போதாது என்று மேன்மேலும் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு காணவல்லார். திருவாய். 5-8-4. செவ்வி அழகு. திருப்பல். 1. செவிப்பூ – மகளிர் அணி. திருப்பா.27. செவியில் கட்டெறும்பு பிடித்திட்டு விளையாடுதல். பெரியாழ். 2-4-2.
1565 செற்றம் பகைமை, கோபம், பொறாமை, திருமா.30. செற்றலேறி – ஈமுட்டையிட்டு. பெரியாழ். 4-5-2.

செற்றார்- பகைவர். திருப்பா. 11.
செற – சீறிக்கோபிக்க பெரிய. 5-10-1.
செறுதல்- அழித்தல். பெரிய.
செறுப்பனாகில் – கோபித்துக்கொள்வேனாயின். நாச்சி. 12-9. (தே.) 1.134.4. பறியலூர்.
1570 செறுவாரு நட்பாகுவர் – பகைவரும் நண்பராவர்.
திருவிருத், 27.
சென்னி – நெற்றி. பெரியாழ். 3-6-3.
சே அதக்குதல் – கிட்டிகட்டி அடித்தல். பெரியாழ். 4-5-7 5-2-3.
சேக்கழுத்தின் மணிக்குரல் – இடபத்தின் கழுத்தில்
கட்டப்பட்டுள்ள மணிஒசை. பெரியாழ். 1-7-7.
சேட்டை- மூதேவி. திருமா. 10.
1575 சேடர் இளம்பருவமுள்ளவர். பெரிய. 9-2-2.
சேடார்பொழில்-இளமைபொருந்திய சோலை.
பெரிய. 6-8-4.
சேடு- சேண்.பெரிய. 3-3-1. (சேடு – கரை . தே.6.76-4.
திருப்புத்தூர்; 1-61-8. செங்காட்டங்குடி.
சேடேறுபொழில் இளமைபொருந்திய சோலை. பெரிய.
4-1-7.
சேது – திருவணை. நான்முகன்திரு. 28.
1580 சேது பந்தனந்திருத்தினாய் – அணை கட்டுதலை நன்றாகச் செய்தவனே.நாச்சி. 2-7.
சேமம்-எப்போதும் ரட்சகன். பெரிய. 6-5-10.
சேமம் செங்கோனருளே – நம்மைப் பாதுகாப்பது
எம்பெருமானது திருவருள். இ
திருவிருத்.27.
சேமவைப்பு – சேமித்து வைத்த தனம். இராமாநுஜ.22.
சேய். முருகன். பெரிய.
1585 சேர்கொடான் – அகப்படும்படி பண்ணான். பெரிய. 7-3-3. திருவாய். 2-7-3.
சேரிகையேறும்- ஊரில்பரவும். திருவிருத். 19.
சேவகங் கொள்ளுதல்- அடிமை கொள்ளுதல். பெரியாழ். 4-4-8. சேவகம்- வீரப்பாடு. திருப்பா. 24.
சேவகன்-வீரன். பெருமாள். 8-8; பெரியாழ். 5-4-4.

1590 சேவகனார் – பெருமாள். திருமா . 11.
சேவடி- சிவந்த பாதம். பெரியாழ். 5-4-7.
சேவையதக்கி – இடபங்களை அடக்கி. பெரியாழ். 5-2-3.
சேவியேன் – வணங்கமாட்டேன். திருமா. 35.
சேழுயர்ந்த மணிமாடம் – மிகவும் உயர்ந்த அழகிய
மாடங்கள். பெரிய. 4-4-9.
1595 சேறை-பஞ்ச ஸார க்ஷேத்திரம். சிறியதிரும. 72;
பெரியதிரும. 115; பெரிய. 7-4-1-10; 10-1-6.
சைவர் – சிவ தீட்சை பெற்றுச் சிவனைவழிபடுவர்.
இராமாநுஜ.99.
சொட்டுச் சொட்டெனல். பெரிய. 1-9-1.
60
சொட்டைநம்பி – ஆளவந்தார் குமாரர் மணக்கால் நம்பியை
ஆச்ரயித்தவர்.
சொப்பட – நன்றாக. பெரியாழ்.2-4-5.
1600 சொல்லாய் பைங்கிளியே. பெரிய 10-10-5.
சொன்மாலை இரண்டாந்திரு. 85; திருவாய்.9-4-5.
சோத்தம் – அஞ்சலி பண்ணுமவர்கள் அதற்கு அனுகூலமாகத்
தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு (பாசுரம்)
சப்தவிசேஷம். பெரியாழ். 2-3-4,5; தாழ்ந்தார்
சொல்லும் சொல். பெரிய. 2-3-6 8-10-6
சோத் தெம்பிரான். பெரியாழ் 2-4-5; பெரிய. 10-7-8; சோத்தென: பெரிய. 10-5-5.
சோத்து – சோத்தம். பெரிய. 9-5-9; 10-5-5.
சோதிவட்டங் கொல்முகம்-சோதிமண்டலமோ.
திருவாய். 7-7-8.
1605 சோதிவெள்ளம் – அழகுவெள்ளம். திருவாய் 5-5-10. சோப்பூண்டு- அடிபட்டு. பெரியாழ். 2-1-5. சோம்பர்-சோம்பேறிகளாய்த் திரிபவர்கள். சோம்பியிருப்பவர்கள். திருமா.38.
சோம்பாது – பின்வாங்காமல் பெரிய திருவந். 18.
1610 சோமு சோமயாகம். பெரிய. 2-10-1; 6-7-5. சோரேல் கண்டாய் – நழுவவிடாதே. திருவாய். 9-3-4,5. சோலுதல் – கவர்ந்து கொள்ளுதல். திருவிருத். 35.
சோலை – திருமாலிருஞ்சோலை. பெரிய. 4-9-23 மூன்றாந்திரு. 61.
சோழன் செங்கணான். பெரிய. 6-6-1-10.

1615 சோற்றை நாய்க்கிடுதல். திருமா. 14.
சோறு நியதமுமத்தாணிச் சேவகம், கையடைக்காய்,
கழுத்துக்குப்பூண், காதுக்குக் குண்டலம், சாந்தம்.
இவை அடியார்களுக்குக் கோயிலில் கிடைப்பவை.
திருப்பல் 8.
ஞானக்கை – ஞானமாகியகை. திருவாய். 2-9-2.
ஞானச்சுடர்விளக்கு – அறிவாகிய பிரகாசமான தீபம்.
இரண்டாந்திரு. 1.
ஞானத்தமிழ் – அறிவைக் கொடுக்கக்கூடிய திருவந்தாதிப்
பிரபந்தம். இரண்டாம்திரு 1.
1620 ஞானமேபடை -அறிவே கருவி. திருவாய். 3-1-9.
ஞானப்பிரான் – அறிவைக் கொடுக்கும் எம்பெருமான்.
திருவிருத். 99.
ஞானமும் முடமும் அறிவும் அறிவில்லாமையும். திருவாய்.
6-4-3.
ஞானிக்கும் அறிவாளிக்கும். திருவாய். 4-1-10.
தக்கணை தணை. பெரியாழ். 4-8-1. 4-9-5. பெரிய. 11-7-2.
1625 தகவிலி – ஈரநெஞ்சில்லாதவன். பெரிய. 10-2-3.
தகளி – அகல். முதல்திருவந். 1; இரண்டாந்திரு 1.
தசக்கீரீவற்கிளையோன் – இராவணன் தம்பி. விபீஷணன்
பெரிய. 8-6-7.
தசாவதாரம் – பத்து அவதாரம். பெரிய. 11-4-1. 10.
தஞ்சுடையாளர் – தஞ்சமாகவுடையவர். பெரிய. 9-2-6.
1630 தஞ்சை – தஞ்சை மாமணிக்கோயில். இரண்டாந்திரு. 70
தஞ்சையாளி – தஞ்சை மாமணிக் கோயிலை ஆள்பவன்.
பெரிய. 7-3-9.
தட்ட- அடைத்த, தடுத்த. பெரிய. 8-9-3.
தட்டு – இதழ். பெரிய. 7-3-6.
தட்டுளுப்பு – தடுமாற்றம். பெரியாழ். 3-7-3. (திருவாசகம்
திருத்தோணோக்கம். 6.)
1635 தட்டொளி – கண்ணாடி. திருப்பா.20.
தடம் பொங்கத் தம் பொங்கோ- ஐய சூசகவாத்தியத்தின்
சப்தாநு ராகம். பெரிய. 10-2-1.
தடவந்து – பரிசித்த. பெரிய. 8-5-1.
தடவிற்று- பரிசித்தது. திருவிருத். 56.
தடா- ஒருவகை நவபாண்டம். நாச்சி. 3-6.

1640 தடாவிய – பரந்த, மூன்றாந்திரு.75; வளைந்த. திருவிருத்.6
தடாவியதே – கோடியது. திருவிருத். 5.
தடித்தல் – பெருத்தல். பெரிய. 2-1-6.
தடிப்ப- துடிப்ப. பெரிய. 10-5-2.
தடிபிணக்கு – தடிக்கொண்டு பிணங்கும்படியாகும். திருவாய்.
6-2-7.
1645 தடு குட்டமாய் -தலைகீழாய். திருவாய். 3-5-3.
தண்கடல் வட்டம் – குளிர்ந்த கடலால் சூழப்பட்ட
பூமண்டலம்.திருவாய். 3-5-1,2.
தண்கால். திருநெடுந்.17; இரண்டாந்திரு.70; சிறியதிரும. 71 )
பெரியதிரும. 120
தண்டகாரணியம் – தக்கணதேசத்தில் துறவிகள் வசித்துவந்த
ஒருவனம். பெரிய. 10-2-3.
தண்டம்- சேனை, தண்டனை. திருப்பள்ளி. 6. பெரிய.
11-1-2,7.
1650 தண்டவரக்கன் – இராவணன். நான்முகன்திரு. 44.
தண்டு காலாவூன்றி – தடியைக் காலாகக் கொண்டு ஊன்றி.
பெரிய. 1-3-5.
தண்ணாவது – தாமதியாமல். திருவாய். 4-9-1.
தண்ணுமை – மத்தளம், வேறுவேறு. திருப்பள்ளி. 9. தண்ணெனவு – மென்மைத் தன்மை. பெரியாழ். 4-10-6.
1655 தணர்தல் – பிரிதல். பெரிய. 9-3-5.
தணிகிடாய் – தணித்துக்கொள். நாச்சி 2-2.
தத்து – ஸ்வீகாரம் பெரியாழ் 2-1-7. தத்துவப்பாடல்கள் – திருவாய். 8-8-5,9. தத்துவமன்று தகவு – தகவு அன்று தத்துவம் – நீ இப்படி இருப்பது உனக்குத் தகுதி அன்று,
இஃது உண்மை. திருப்பா. 19.
1660 தத்துவமிலி-உண்மை இல்லாதவன்.நாச்சி. 1-3. தத்துவன் – எனது தன்மை உள்ளவன். நாச்சி. 5-6. தத்துறல் – கிட்டுதல். பெரியாழ். 5-1-7. தத்துறுமாகில் கிட்டுமாகில். பெரியாழ். 5-1-6. ததர்கை – நெரிகை. திருவாய். 7-4-5.

1670 தகர்த்தாதே – நோவு படுத்தாதே.நாச்சி. 5-10.
ததைத்துக் கொண்டு- நெருங்கிக்கொண்டு. நாச்சி. 10-8.
தந்தச்சீப்பு- தந்தத்தினால் செய்த சீப்பு. பெரியாழ். 2-5-8.
தந்தம் மக்கள் – தங்கள் தங்களுடைய பிள்ளைகள்.
பெரியாழ். 2-2-3.
தந்துவன்-தந்து – கொணர்ந்து. உவன் – நடுத்தரமாய்
இருப்பவன். பெரியாழ். 1 – 3 – 3.
1675 தந்தை காலில் பெரு விலங்கு – பெரிய. 7-5 – 1.
தம்பகமாய் – புதராய். பெருமாள். 4-5.
தம்பர மல்லன – தம்மால் தாங்க முடியாதவற்றை
பெரிய. 10-7-13.
தம்மன்னை – தாய். பெரியாழ். 4 -5 – 1 – 9.
தம்மனை- தாய். பெரியாழ். 1 – 5-3.
1680 தம்மையுகப்பாரைத் தாமுகப்பர் என்னுஞ் சொல்
கொண்டாடுவர் – ஒரு பழமொழி. நாச்சி. 11 – 10.
தமப்பன்மார் – தகப்பன்மார். பெரியாழ். 3-1- 9.
தமர் – உறவினர். திருவாய். 4-6-6.
தமருகந்த தெவ்வுருவம் ஆச்ரிதர்களால் விரும்பப்பட்ட
உருவம் எதுவோ. முதல் திருவந் 44.
தமனகம் -தவனம். பெரியாழ். 2-7 – 3.
1685தமியாட்டி – தனிமையையுடையவள். திருவிருத். 73
தமிழ்த் தலைவன் – இராமாநுஜ.10.
தமிழ் நல்மாலை- தமிழ்மொழியினால் ஆகிய நல்ல சொல்
மாலைகள். இரண்டாம் திரு. 74.
தமிழ் நன்னூற்றுறைகள் அஞ்சு. பெரிய. தனியன்.
தமிழரிசைகாரர் பத்தர், திருவாய்.1 -5 – 11.
1690 தமிழொரு மூன்று முணர்ந்தவன். இராமாநுஜ. 44 தமிழோசை வட சொல்லாகி – தமிழ் வேதத்தாலும்,
வடமொழி வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன்.
திருநெடுந். 4.
தயங்குதல் – அசைதல். பெரிய. 8 – 5 – 4.
தரணி – பூமி. பெரியதிரும. 136.
தரு- மரம். திருவாய். 9- 8 – 8.
1695தருக்கு – அகங்காரம், ஹிம்சை. பெரிய. 2 – 1 – 7.
தருக்குகை வருத்துகை, சுளிக்கை. பெரியதிருவந். 22.
தருமன்- யமன். முதல் திருவந். 67.

தலைக் கணத்துக்கட்குழம்பு. திருச்சந். 16.
தலைச்சங்கம் – தலைச்சங்காடு; (தலைச் சங்க
மேற்றிசையுள்) பெரிய. 8 -9- 9.
1700 தலைச் சிரைத்து வாழ்தல் – திருவாசலிலே காவலாளராக
இருந்து வாழ்தல். திருமா. 38.
தலை நிலாப்போது – குழந்தைப் பருவம். பெரியாழ். 2 – 3-7.
தலைப்பழியெய்தல் – பெரும் நிந்தைகளைப் பெறுதல்.
நாச்சி 12,9
தலைப்புகழ் – சிறந்த புகழ். நாச்சி. 1 – 7.
தலைப் பெய்திடல் – சேர்ந்துவிடல். பெரியாழ். 5 – 3 -5.
1705 தலை மறிதல் நீங்கல். நாச்சி. 12.2.
தலையல்லாற் கைம்மாறில்லேனே – நாச்சி. 5 – 6.
தலைவன்பொற்படந்தலைவிக்குத் தந்துபோதல். பெரிய. 9-5-9.
தலைவிளாக்கொள்ளுதல் – முழுதும் வியாபித்தல் திருமா. 35.
தவராசா – மகா தபஸ்வியே. பெரிய தனியன்.
1710 தவளப் பொடி கொண்டு – சுத்தமான தூளி கொண்டு
திருவாய். 4-6 – 5.
தவிவு- விச்சேதம். திருவாய். 3 – 4-4.
தழல் மூன்று நால்வேதம். பெரிய. 4 – 2 – 2.
த இக் கோளியார் – தழுவிக்கொண்டவர். திருவாய். 4 – 2-5. தழுத் தொழிந்தேன் – தழுதழுக்கும் படியானேன்.
பெரிய. 1-1 5,
தழுவி முழுசி – முழுவித்தழுவி. நாச்சி. 13 – 5.
1715 தழை – தொங்கல், பீலிக்குடை விசேஷங்கள். பெரியாழ். 3-4-1. தழை – திரள். திருவாய்.7-7-9.
தழைக்கா – குடையாகிற சோலை.
பெரியாழ். 1 – 9-5; 3-4-6, 7. தழைகள் – மயில் தோகைக் குடைகள். பெரியாழ். 3 -4 -5. தள்ளம் பாறி தடுமாறி. பெரியாழ். 1-7-10 (உரை).
1720 தளர் நடை-காலூன்றி நடக்கும் பருவம், அன்றிக்கே. நடக்கின்ற தசை ஆகையாலே தள்ளம்பாறி நடக்கும் நடை. பெரியாழ். 1 – 7-10. தளர் நடையிடுதல். பெருமாள். 6 – 4.
தளைக் காலன் – விலங்கு பூட்டப்பட்ட
கால்களையுடையவன். சிறியதிரும. 67. தற்பு – தத்துவம், யதார்த்தம். நான்முகன் திருவந். 76.

1725 தன் தாமமேவியது (இராமன்) பெருமாள் . 10-10.
தன் பேரிட்டு – கோவர்த்தனன் என்ற தனது பெயரை
மலைக்கு வைத்து. பெரியாழ். 3-5-9.
தன்ம பாவம்-தருமமும், பாவமும். திருவாய். 6 -2-7.
தன்னடியார் மனத்தென்றும் தேனாகியமுதாகித்
திகழ்ந்தானை. பெரிய. 5 -6 – 3.
தன்னானார்- தன்னைப் போன்றவர். திருவாய். 8 – 4-9.
1730 தன்னுடைச் சோதி – தன்னுடைய விக்கிரகம். திருவாய். 3 – 10 -5.
தனஞ்செயன் – அருச்சுனன். பெரியாழ். 1 -9-4.
தனிக் காளை – ஒப்பற்ற யுவாவான கண்ணன்.
பெரியாழ். 4 – 3 – 4.
தாசரதி – இராமபிரான். (தத்திதாந்த நாமம் ) பெரிய. 8 -4-1-10.
தாடகை – சுகேதுவின் பெண், சுந்தனுடைய மனைவி.
விசுவாமித்திரர் ஏவலால் இராமன் இவளைக்
கொன்றான். பெரிய. 9-8 – 4; பெருமாள். 10-2.
1735 தாடாளன் – மேன்மையுடையவன். பெரிய. 3 – 4-1; 6-10-2;
77-6. நாச்சி. 8 -2.
தாபதர் – இருடிகள்
தாமம் -ஸ்தானம். திருவாய். 6-4.10; பெருமாள். 10 10.
தாய் – தாவி.திருவாய். 6 – 9 – 6.
தாய்சொல்லுக் கொள்வது தருமங் கண்டாய்.
பெரியாழ். 2 – 9 – 8.
1740 தாய் நாடு கன்றேபோல் (உவமை) முதல் திருவந்.3 .
தாய் மனத்திரங்கி – தாய் போல மனமிரங்கி. பெரிய. 4 – 3 – 5.
தாயப் பதி-பழமையாய் இருக்கின்ற ஸ்தானங்கள்.
திருவாய். 8-6-9.
தாயம்-பங்கு. பெரியாழ். 3 – 1 – 7.
தாயர்வாய்ச்சொல் – தேவகியின் வாய்ச்சொல்.
தாயிருக்க
பெரியாழ் 2-2-5.
மணை நீராட்டுதல் – பெற்ற தாய்க்கு ஒரு
உபசாரமும் பண்ணாமல் அறிவற்ற மணைக் கட்டைக்கு
உபசாரம் செய்தல். பெரிய. 11 – 6 – 6, திருவாசி. 6.
1745 தாயைக் குடர் விளக்கஞ் செய்தல். திருப்பா.5.
தாயோன் -தாவியவன், தாயானவன். திருவாய். 1-5-3.
தார்க்கிளந் தம்பிக்கு – பரதன். பெரியாழ். 3-9-8.
தாரகை – பூமி. நான்முகன் திரு. 57.
தாரா – ஒரு பறவை. பெரிய 1 – 5 – 4; 10; 9-6-8.

750 தாரா கணம் – நக்ஷத்திரக் கூட்டம் நாச்சி. 14 – 7.
தாராயினும் வேராயினும் வீசுமினே. திருவிருத்53.
தாரித்து – தரித்து; நீண்டு கிடக்கிறது.
பெரியாழ். 1 – 6 – 6; 2-3-10.
தாலேலோ – ‘தாலேலோ தாலேலோ’ என்றது குழந்தையைத்
தாலாட்டுவார் கூறும் ஒருவகை வாய்பாடு.
தால்-நா. பெரியாழ் 1 – 3 – 1 – 10; பெருமாள் 8.
தாலொலித்திடும் – தாலாட்டும். பெருமாள். 7-1.
1755 தாவடியிடல் – தாவியடியிடல். பெரியாழ். 2 – 10 – 7.
தாவளந்துலகம் -தாவித்திரிந்து. பெரிய. -6-1.
தாழ் சடையும்- தாழக்கட்டின சடை. மூன்றாம்திருவந். 63.
தாழ்வர் – பரிபந்தம். பெரிய. 9-3-2.
தாழ் பீலி-வாத்தி வகை. பெரியாழ் 3 -4-1.
1760 தாழம் – தாழ்த்தல், தாழ்ச்சி. பெரிய. 10 -2-7.
தாள் கொளுவி – பூட்டைத் தொடுத்து. மூன்றாந்திருவந். 12.
தாளால் உலகமளந்த வசைபு. திருவாய். 8 – 3-5.
தாளும் தடக்கையும்- கால்களையும், கைகளையும்.
திருவாய்.3-7-2.
தாறு – அளவு; ரேகை. பெரிய திருவந்.31.
66
1765 தன்றாம் மேவி -பரமபதத்திற்குச் சென்று. பெருமாள். 10 – 10.
தான் – ஸ்வரூப நிரூபணம். திருவாய்.107-1.
தானத்தே வைத்தல் – இருந்த இடத்தில் வைத்தல்.
பெரியாழ். 2 – 10 – 9.
தானவன் – அரக்கன். பெரிய. 2 – 2 – 2.
தானாக நினையானேல் – அவன் தானாக என்னை
நினைக்கா விட்டாலும்.பெரிய.8-7-7.
1770 திங்கள் சிறை விடுத்து – சந்திரனை ரோகமாகிய
சிறையிலிருந்து விடுவித்து. பெரிய. 11 – 8 -7. திங்களம் பிள்ளை – பிறைச் சந்திரனாகிய அழகிய பிள்ளை. திருவிருத். 77.
திங்களைக் கோள் விடுத்து – சந்திரனுடைய ஓளியை
விரித்து. திருவாய். 4-6-2. திசைக்கும் – அறிவழியா நிற்பள். திருவாய்.5 -5-3. திசைப்ப- திகைப்ப, அறிவு கெடும்படி. பெரிய. 2 – 9-5, 3 – 9 – 2,5-7 – 4, 7 – 8 – 2, 11 – 4 -8.
1775 திசை முகனனைய மறையோர் – பிரமனைப் போன்ற
அந்தணர்கள். திருவாய். 7-2-3.

திட் கொடி – அவிழ்த்துக் கட்டாத கொடி. திருவாய்7 – 2-3.
திடரே -ஸ்திரப்பட்டவர். திருவாய். 1 – 1 – 6.
திண்டிறலார் – மிக்க பலசாலிகள். பெரிய. 4-1 -5
திண்ணம்- திருடம். பெரியாழ். 41-9, பெரிய. 8 – 2 – 2.
திண்ணார் மதிள் – வலிமைபொருந்திய மதில். பெரிய. 4 – 7 – 1.
1780 திண்ணார் மாடங்கள் -வலிமை மிக்க மாடிவீடுகள்.
பெரிய. 1-9- 1:0. தே. 1.64.11. பூவணம்.
திண்ணெவு – வலிமை. பெரிய. திரும. 146.
திண்ணை – மேட்டிடம். பெரியாழ். 1-7-2.
திணர்த்த வண்டல்கள் – இறுகலையுடைத்தான திருவாய்.6-1-5.
திணரார் மேகம் – திண்மை மிக்க மேகங்கள் திருவாய். 6-10-5.
1785திணிம்பு – செறிவு. திருவிருத். 72.
திரி காதுக் கிடுதல் – நூல்திரியைக் காதுக் கிடுதல்.
காதுகுத்தி நூல்திரியை இட்டுக்காதின்
துளை பெரிதான பின்பு காதணி இடுதல்
பெரியாழ். 2 – 3 – 2 -, 5.
திரிசுடர் சூழும் மலை- இடைவிடாது சஞ்சரிக்கின்ற சந்திர
சூரியர்கள் பிரதணம் பண்ணுகின்ற
மலை. பெரியாழ். 4-3-8.
திரிதர்வேன் – திரிந்து கொண்டிருந்தேன். பெரிய. 1 – 1-8.
திரி மூர்த்தி- மும் மூர்த்திகள் (பிரமன், விஷ்ணு, ருத்திரன்
பெரிய. 2-10 – 1.
1790திரி விக்கிரமன் – திருமால். பெரிய, 9 -9-5. திருவாய். 2-7-7.
திருக்கடித்தானம் – அம்பலப்புழாவிலிருந்து 23 கல்
தொலையில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 8 – 6 – 1.
திருக்கண்ணங் குடி இத்திருப்பதி கீவளுர் இரயில்
நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது.
இத்தலத்தைப் பற்றி, தீரா வழக்கு திருக்கண்ணங்குடி’
என்ற பழமொழி உண்டு. பெரிய. 9-1 – 1.
இத்திருப்பதி திருவாருக்கு நான்கு கல் தொலைவில்
உள்ளது.
திருக்காலாண்ட பெருமானே – திருவடியைக் காரியம்
கொண்ட. திருவாய். 6 – 9 – 4.
1795திருக் குடந்தை – இது சோழ நாட்டுத் தலம்.
திருவாய். 5 – 8 – 1 – 10.
திருக்குருகூர் – இத்திருப்பதி ஆழ்வார் திருநகரி இரயில்
நிலையத்தின் அருகில் உள்ளது.
திருவாய். 4-10 – 1 – 10.1

திருக்குறளன் -ஸ்ரீவாமனன். திருவாய். 9-8 -10 – 3.
திருக்கூடல் கூட இழைப்பன் – சகுனம் பார்க்கும் வகையில்
இஃது ஒருவகை . நான்முகன்திரு.
(திருக்கோவையார் செ.186)
திருக்கோட்டி -பாண்டி நாட்டுத் திருப்புத்தூருக்கு,
21 கல் தொலைவில் உள்ளது. இரண்டாந்திரு.46,87
1800 திருக் கோவலூர் -இத்திருப்பதி திருக்கோயிலூர்
நிலையத்திற்கு மேற்கே2 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 2-10-10.
திருக்கோவலூரில் துர்க்கை வாழ்தல் பெரிய 2.10.6.;
திருநெடுந்.7.
திருச் சாழல் – பெரிய. 10 -5 – 1 – 10.
திருச்சிற்றாறு – திருச்செங்குன்றூரிலுள்ள ஒரு நதி
திருவாய். 8-4 – 10.
திருத் தண்கால் – இது ஸ்ரீ வில்லி புத்தூருக்கு அருகில்
உள்ளது. தண்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று
பொருள். சீதவாதபுரம் என்பர். பெரிய; 5 6-2.
1805 திருத்தன் – திருப்தியாக இருப்பவன். பெரிய: 7-10 – 7.
திருத்தாய் – நீ திருத்த வேண்டும். பெரிய. 10-10-1.
திருத்திப் பணி கொள்ளல் – விரோதிகளைத் திருத்தி அடிமை
கொள்ளுதல். திருவாய். 3 -5 – 11. திருத்தெற்றியம்பலம் – திருநாங்கூரின் ஒரு பகுதியாகிய
திருத்தெற்றியம்பலம் என்னும் திருப்பதி.
பெரிய. 4-4 – 1 – 10.
திரு நறையூர் – நாச்சியார் கோவில்.
பெரிய. 6 – 3-3: 6-4 – 1 – 10: 7-4 – 1 – 10; 7- 1 – 3,
பெரியதிரும. 73; திருநெடுந். 16.
1810திரு நாம மிடுதல் ஊர்த்துவ புண்ட்ரம் இடுதல், பெரியாழ். 3 -4-8. திருநாமம் எட்டெழுத்து – “ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டர்ட்ச மந்திரம். பெரிய : 1 – 8 – 9. திருநாவாய்- இது செறு வண்ணூர் கள்ளிக் கோட்டை இரயில் பாதையில் திருநாவாய் நிலையத்திற்குத் தெற்கே பாரத் புழை என்ற ஆற்றங்கரையிலுள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்: 9 – 8 – 1 – 10. திருநின்ற பக்கந்திறவிது – திருமகள் இருக்கின்ற வலப்பக்கமே சிறந்தது. நான்முகன்திரு. 62. திருநீர் மலை- நீரானது அரண்போலச் சூழப்பெற்ற
மலையாதல் பற்றி இது திருநீர்மலை என்றாயிற்று. பெரிய: 5-8 – 2, 6-8 -4.

1815 திருப்பாதகேசம்- வடசொல் தொடர். பெரியாழ்.1 – 2 – 21
திருப்புகழ்கள் – கீர்த்திகள் பெருமாள். 1 -9.
திருமணி கூடம் – இத்திருப்பதி சீகாழிக்கு ஐந்துக்கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
பெரிய. 4-5-1-10.
திருமல்லி நாடி – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த நாடு.
நாச்சி தனியன்.
திருமலை – திருப்பதி. திருக்குறுந்: 7,மூன்றாம் திரு. 62.
1820 திருமழிசை- திருமழிசைப்பிரான் அவதரித்த தலம்.
திருச்சந் – தனியன்.
திருமறு மார்வன் – பிராட்டியையும், ஸ்ரீவத்ஸம் என்னும்
மறுவையும் உடைய மார்பன். திருவாய்: 3 – 4 – 3.
திருமாலிருஞ்சோலை – நாச்சி. 9-1,3,5.
பெரிய. 7-3-67-979-9-1-10; 11 – 7-9.
திருமூழிக்களம் – எர்ணாகுளம் செறு வண்ணூர் இரயில்
பாதையில் கருக்கட்டி நிலையத்திற்கு நான்கு
கல் தொலைவில் உள்ளது. பெரிய. 7-1-6
திருநெடுந்.10.
திருமெய்யம் – சத்யகிரி என்ற சொல்லேதிருமெய்யமலை
என்றும், அத்திருப்பதி திருமெய்யம் என்றும்
வழங்கப்பெறும் எம்பெருமான் பெயர்
சத்தியகிரிநாதர் பெரிய. 3 – 6 – 9, பெரிய திரும. 126.
1825 திருமோகூர் – இத்தலம் மதுரைக்கு 7 கல் தொலைவில்
உள்ளது.வடமொழியில் மோகனபுரம் எனப்படும்.
இறைவன் பால் மோகத்தை (பக்தி) அருளும் ஊர்
என்பது மோகூர் ஆயிற்று. சிறிய திரும. 74.
திருவடி – சுவமி. திருவாய். 4-9-11, 7- 5 – 3, 8 – 4 – 7,
10-3-7, நான்முகன்திரு. 68. இரண்டாம் திரு. 87.
திருவடி பிடித்தல் – திருவாய். 9-2-10.
திருவயிந்திர புரம் – அஹீந்திரன் என்னும் அநந்தாழ்வான்
பூசித்த தலமாதல் பற்றி இதற்கு அயிந்திரபுரம்
என்னும் பெயர், பெரிய. 3 – 1 – 1 – 10.
1830 திருவரங்கம் – ‘ரங்கம்’ என்று விமானத்திற்குப் பெயர்.
அதுவே ல ணையால் திவ்யதேசத்திற்குத்
திருநாமமாயிற்று. முதி.6,மூதி. 62, தி. சூ 7,
திநெ 11, 23, பெரியாழ். 4 – 9 – 10,
பெரிய. 5-5-4-65-8-1 – 10.

திருவரங்கத்தமுது – இராமாநுஜ தனி.
திருவரங்கர் பள்ளி கொண்ட நிலை – திருமா. 19.
திருவல்லவாழ் – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 5-9 – 1 – 10
திருவல்லிக்கேணி – இத்தலப் புஷ்கரணி அல்லிமலர்
நிறையப் பெற்றதனால் திருவல்லிக்கேணி
என்று பெயர் பெறும். தீர்த்தத்தின் பெயரே
தலத்திற்குப் பெயராயிற்று. மூன்றாம்திரு. 16.
1835 திருவழுந்தூர் -சோழநாட்டில் மயிலாடுதுறையை
அடுத்துள்ளது. கம்பர் பிறந்த ஊர்.
தேவாரப்பாடல் பெற்ற தலம். சிறிய திரும 12.
திருவன்- அழகள் இரண்டாம் திரு. 84
திருவாகாரம் – திருமகள் இருக்கு மிருப்பு. பெரிய 4 -4 – 8.
திருவாய் கருப்பூர நாறுதல் – பெரியாழ் 1 – 5-9.
திருவாலியிருந்தான். – திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று
வீற்றிருக்கிற திருக்கோலம்.
1840 திருவாழ் மார்பன் – திருமகள் இருந்து வாழப்பெற்ற
திருமார்பையுடையவன். பெரிய. 7-6 -7.
திருவாளன் – திருமால் பெரிய 5-5-1,6-9-1.
திருவாறன்விளை – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 37
கல் தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்.7 10 – 1 – 10.
திரு விண்ணகர் (விஷ்ணு நகர் விண்ணகர்) இப்பதி சோழநாட்டில் திருநாகேசுவரம் இரயில் நிலையத்திலிருந்து
ஒரு கல் தொலைவில் உள்ளது. பெரிய 6 – 2 – 1 – 10,6-3 –
1-10, திருவாய், 6 – 3-1-11.
1845 திருவில்லாத்தேவரைத் தேறேன் மின் – நான்முகன்திரு – 53. திருவுக்குந் திருவாகிய செல்வா- பெரிய 7-7-1.
திருவுடை மன்னர்- செல்வத்தையுடைய அரசர்கள் திருவாய்4 – 4 — 8.
திருவுறுக – திருமேனி அழகு விளங்கட்டும். பெரியதிரும.46. திருவெட்டெழுத்து – ஓம் நமோநாராயணாய. பெரிய. 8-10-3.
1850 திருவெவ்வுள் திருமால் சாலிஹோத்திர மகரிஷிக்குப்
பிரத்யக்ஷமாகி உறைதற்குரிய உள் ‘எவ்வுள்’
என வினவியதனால் திருவெவ்வுள் என்று பெயராயிற்று. நான்முகன்திரு. 36.

திருவெள்ளக்குளம் – இப்பதி சீர்காழியை அடுத்து நான்குகல்
தொலைவில் உள்ளது.நின்ற
திருக்கோலம்.பெரிய 4 -7 – 1 – 10.
திருவேங்கடத்தான் – திருமலையில் உள்ளவன். பெரிய. 6 – 8-1.
திருவேங்கடப் பொருப்பர். திருமலையில் உள்ள பெருமாள்.
பெரிய.5-3-4.
திருவேங்கடம் – அழிவற்ற ஐசுவரியம். பெரிய 1 -8 – 1 – 10,
1-9-1 – 10, 4 – 7 – 5, திருவாய். 2-6-9, 6-
10, பெரியாழ் 2 – 7-2, 5 -4 1, பெருமாள்
4 – 2. சிறியதிரும் 67, முதல் திருவந். 76,77.
1855 திருவோணத்தான் – சிரவண நட்சத்திரத்தில் அவதரித்தவன்
பெரிய. 1-1-3.
திருவோணத்திரு விழவு – சிரவண நட்சத்திரத் திருநாள்.
திருப்பல். 6, 9.
திருவோணத்தில் மங்கையரை முளையட்டிப் பல்லாண்டு
கூறுவித்தல். பெரியாழ். 3 – 3 – 9
திருவோணமின்று நீராட வேண்டும் பெரியாழ் 2 – 4 -2.
திருவோணம் பன்னிரண்டு அக்காரம் அட்டேன்.
(அக்காரம்- யஸம்,பக்ஷணம்,முதலிய.ை திரட்டுப்பால்
எனவும் கூறலாம்) பெரியாழ். 2-9-7.
திருவோணமின்றேழுநாள் பெரியாழ் – 3-3-9.
திரேத(யுகம்) நான்கு யுகங்களுள் இரண்டாவது பெரிய -7-7-6.
திரேதை – த்ரேதாயுகம். திருநெடுந். 3
தில்லை மூவாயிரவர் – தில்லையில் இருக்கின்ற மூவாயிரம்
அந்தணர்கள். பெரிய. – 3 – 2 – 8, பெருமாள். 10-2.
திலதம் – திலகம்.திருவாய். 6-10-1
திலோத்தமை நாடகத்தெய்வ மகளிர் எண்பதின்மருள்
ஒருத்தி. பெரியாழ். 3-6-4.
திவம் – பரமபதம். பெரிய – 7 – 10-2.
திவளுதல் – ஒளிவிடுதல். பெரிய. 2 – 7 – 1.
திளை – பருமை. பெரிய. 6 – 9 – 3.
திறவிது -பரதத்துவம். நான்முகன்திரு. 62.
1870 தீங்கவி மதுரமான கவி. திருவாய். 7-9-7.
தீத்தொழில் – அக்கினி ஹோத்திரம் பெரிய. 4-5 – 3.
தீதில் நன்னெறி – குற்றமில்லாத நல்வழி. பெருமாள். 2-6; 3-5.
தீப்பப் பூடுகள் – கொடிய பூண்டுகள். பெரியாழ்3 – 6 -4.
தீமனம் கெடுத்தல் – தீயமனத்தைக் கெடுத்தல். திருவாய். 2-7-8.

1875 தீம் பலங்கனி – மதுரமான பலாப்பழம். பெரிய. 5 – 3-4.
தீயிணக்கிணங்காடி – களவுப் புணர்ச்சி செய்து.
பெரியாழ். 3-7-2
தீயில் மூன்று – சப்தம், ஸ்பர்சம்,ரூபம்.திருச்சந். 1
72
தீயினில் தூசாகும் – நெருப்பிலிட்ட பஞ்சுபோல் உருவழிந்து
போகும். திருப்பா- 5.
தீ யோங்க வோங்க – அக்கினி காரியங்கள் வளர வளர.
பெரிய – 3-2-2.
1880 தீர்த்தகரர் – பரிசுத்தப் படுத்துவோர். இரண்டாந்திரு.14.
தீர்த்தன் – பரிசுத்தன். திருவாய் – 2 – 8 -6.
1885
தீரா மாற்றாக பரிகாரமில்லாத செயலாக. திருப்பா- வியாக்
தீ வலஞ் செய்தல்- ஏழடி நடந்து அக்கினியை வலம்
வருதல். நாச்சி – 6 – 7.
தீவிகை-விளக்கு. (தீ பிகை) பெரிய – 2 – 10 – 3.
தீ விழித்தல் – நெருப்புப்பொறி பறக்கும்படி கண்கை
விழித்தல். திருப்பா- 23.
தீ விளி விளிதல் மிகக் கொடுமையான வார்த்தைச்
சொல்லுதல். திருமா. 30.
தீ வினைக்கரு நஞ்சை – கொடிய துன்பத்தை உண்டு
பண்ணுகிற தீய செயல்களை எம்பெருமான்
எளிதில் போக்குபவன்.திருவாய்7 – 1 -8-9.
தீற்றி – உண்ணப் பண்ணி. திருவாய்.71-7.
1890 துக்கக் சூழலை – துக்கங்களாகிற சுழலாறு. பெரியாழ். 5-3-1.
துங்கார் – துங்கம் – ஓக்கம். பெரிய – 9 – 6-2. தே. 7 – 42 -9.
வெஞ்சமாக் கூடல்.
துக்கு – துங்கம். (வடமொழி) பெரிய – 9 -6-2.
துச்சோதனன் – துரியோதனன் தம்பி. பெரியாழ். 1 – 8 – 5. துடியிடையார் உடுக்கைபோன்ற இடையையுடைய
பெண்கள். திருப்பள்ளி. 10.
1895 துண்ணென – சீக்கிரமாக. பெரிய. 4-6-2.
துணரி – பூங்கொத்து. பெரிய – 4-6-2.
துணிவதுசூதே – காரணம். திருவாய். 2 – 10 – 9.
துதம் – ஸ்துதம், ஸ்தோத்திரம். பெருமாள்.1 – 2.
துந்தி – திருநாபி. திருவாய். 1 – 3-9.
1900 துப்பம் – நெய். (கன்னட மொழி) பெரியாழ். 2 – 1 -6. துப்பரவாம்- சக்தியையுடைவனான் திருவாய். 7 – 9 – 9.

துமிலம்- பெரிய ஆரவாரம். பெரியாழ். 3-8-3.
துயக்கு – கலக்கம். திருவாய்.1 – 3-9.
துயராட்டியேன் – துன்பத்தையுடைய நான். திருவாய். 7-7-1.
1905 துரகம் வாய் பிளந்தது – குதிரை வடிவு கொண்ட கேசி
என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்தது.
மூன்றாந்திரு. 47, 98. தே. 7-87 – 7. பனையூர்.
துரிசன் – கள்ளன். திருமா. 31 – 32.
துலை கொண்டு – துலைத்தலைக் கொண்டு. திருவிருத். 51.
துலையாய் – பரிமாணமாகி. திருவாய். 7-8-7; தே. 1-47-8
சிரபுரம். 6-19-10 ஆலவாய்.
துவக்கற – ஸ்பரிசம் அற. பெரியாழ். 2 – 10 – 6.
1910 துவர்தல் – உலருதல். திருவாய்.8 -5 – 2.
துவர்ப்பு- (மாந்தளிர்) துவர்ப்பென்னும் ரசம். பெரிய. 5-3-4.
துவராபதி – துவாரகை. பெரியாழ. 5 -4-10; நாச்சி. 9-8;12-9.
துவரித்தவுடையார் – காவித்துணிகட்டித் திரியும் பெளத்தர்.
பெரிய. 5-6-8.
துவரியாடையார் -காவியுடை அணிந்தவர்கள். பெரிய. 2-1-6.
1915 துவர்ந்து துவர்ந்து மிகவும் உலர்ந்து. திருவாய். 4-7-5.
துவராடையுடுத்து- காவியூட்டிய ஆடையை உடுத்து.
பெரிய. 10-8-2 (தே) 3-56-10 பிரமபுரம். துவரிக் கனிவாய் – இலவம்பூ. பெரிய. 8 -8-9.
துவருடுக்கை – காவியுடை. திருவாய்.4 – 8 – 4.
துவரை – துவாரகை. பெரியாழ். 4-1 – 6; 4 – 7 – 9.
1920 துவாதசியில் மாதர் தூபமேந்தி வேங்கடவனை வணங்கல்.
முதல் திருவந். 82.
துவாபரயுகம் – யுகங்கள் நான்கனுள் மூன்றாவது. பெரிய. 7-7-6.
துழதி – சுழற்சி. திருவாய்.2 -7 – 8. துழதிப்படாதே – துக்கப்டாதேயிருங்கள். நாச்சி. 12-5.
துழாய் -துழாவி.மூன்றாந்திரு. 23.
1925 துழாய் மாலை – துளசி மாலை. மூன்றாந்திரு.
துள்ளம் – துளி. பெரியாழ். 5 -7-7
துளக்கம் – சலிப்பு, இடைவீடு.
துளம்-மாதுளம், பீலிக்காம்பு பெரிய. 2-7-2.
துளம் – களைக் கொட்டு. பெரிய. 8 – 7 – 3.
23.
1930 துளவுத் தொண்டு – திருத்துழாய்த் தொண்டு. திருமா. 45.
துளவும் கூடையும் பொலிந்து திருத்துழாயும்,
பூக்குடலையும் விளங்க. திருப்பள்ளி. 10

துளும்பு- அலைய. திருவாய். 6 – 7 – 8.
துற்று- உணவு. (கவளமாக ) பெரியாழ். 4 -4 – 2.
பெரிய. 7 – 1 – 2, 1 – 6 – 5.
துற்றற்றா -ஒரு கவளத்திற்கும் போதாது. திருவாய். 2-8-8.
74
1935 துற்றிய – உண்ட. பெரிய. 7-1-2; பெரியதிரும 141.
துற்றுவார் – புசிப்பார். திருவாய். 4-1-7.
துறவி – துறந்தவன். திருவாய்.1-7-1.
துன்றோளித்துகிற் படலம் ஒழுங்கு, கொடிகள். பெரிய.6-9-4.
தூங்கார் – அசைவு பெரிய – 11-8-3.
1940 தூசனம் – தூஷணம் பெரிய – 6-7-4.
தூது வந்த குரங்கு – அநுமன். பெரிய -10 -26.
தூதை – சிறு சோறு சமைக்குமட் பாத்திரம், விளையாட்டுக்
கருவி. பெரியாழ். 1 – 2 – 19; 3-7-1.
தூம்புடைப் பனைக்கை வேழம். பெரிய. 4-5 – 1.
தூராக்குழி தூர்த்தல்.திருவாய்.5-8 – 6.
1945 தூரியம் – வாத்தியம்.
தூவிக் குருகு – வெள்ளைக் குருகு. திருவாய். 6-8-8.
தூற்றித்து – தூற்றின அதுவே. திருவாய். 7-3 – 8.
தூறுகள்- புதர்கள் பெரியாழ். 5-4 – 3.
தெக்கு – தெற்கு. பெரியாழ். 4 – 2 – 3.
1950 தெட்டப்பழம் – பக்குவமான பழம். பெரிய. 3 – 4 – 8. தெட்டித் திளைக்கும் – முற்றிக்களியா நிற்கும். பெரியாழ். 4-2-10. தெப்பராவர் – அற்பர். திருவாய். 9 – 1 -4. தெய்வச் சிலையான் – திருப்புல்லாணி இறைவன் பெயர்.
பெரிய. 9-4-3.
தெய்வத்தைச் சுவர்மிசைச் சாத்தியும் வைத்துத் தொழுதல், முதல் திருவந்14.
1955 தெய்வ நன்மாலை – திவ்வியமான நல்ல சொல்மாலை.
பெரிய. 1 – 1 – 10. தெய்வ நாயகன் – திருவயிந்திரபுர இறைவனின் பெயர்.
பெரிய 3 – 1 – 3.
தெய்வ நாறுதல் – நல்ல வாசனை வீசுதல். பெரிய – 5-3-3.
தெய்வப் புள்ளேறி வருவான் – (தெய்வப்புள் – கருடன்) பெரிய 3 – 3 – 6. தெய்வவாள் வலங்கொண்ட சோழன். பெரிய. 6 – 6 – 3.

1960 தெருவிற்றிரி நோன்பியர் – தெருவில் திரிகின்ற சமணர்
பெரிய 7-9-2.
தெழ்கு- இடைச்சுரிகை பெரியாழ். 1 – 3 -2.
தெள்கி- இளைத்து பெரிய. 3 -4-7.
தெள்ளிய சிங்கம் – திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள
அழகிய சிங்கப் பெருமாளுக்குத் தெளிசிங்கப்
பெருமாள் என்று திருநாமம் வழங்கப்
பெறுகின்றது. பெரிய. 2 3 8.
தெள்ளியர் கை தொழும் தேவனார் – பெரிய – 9-7-9; 8-10-4;
நாச்சி. 4-1.
1965 தெளி விசும்பு கடிதோடி – நிர்மலமான ஆகாசத்திலே
விரைவாக ஓடி, திருவாய்.9 -7-5.
தெளிவிலாக் கலங்கனீர் சூழ் – தெளியாமல் கலங்கியிருக்கிற
காவிரியாலே சூழப்பெற்ற. திருமா. 37.
தெற்றல் – வலிமை. பெரிய -11-11-9.
தெற்றியம்பலம் – சீகாழியிலிருந்து ஐந்துகல் தொலைவில்
உள்ளது. தெற்றி அம்பலம் என்பதற்குக்
கோயில் மேட்டிடமாக அமைந்த மன்றம்
என்பது பொருள். பெரிய 4 – 4-10.
தெற்றெனவு ” தெளிவு, பெருமை. பெரியதிரும – 141.
1970 தெறிவில் – சுண்டுவில். பெரியாழ். 3 – 4-3.
தென் குடந்தை – திவ்விய திருப்பதி, திருக்குடந்தை.
மூன்றாந்திரு. 62.
தென் குளந்தை – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏழு கல்
தொலைவில் உள்ளது. திருவாய். 8 – 2 – 4
தென் கொள் திசைக்கும் திலதம். திருவாய். 10 – 7 – 4.
தென் கொள் திசைக்கும் திலதம் – தெற்குத்திக்குத் திலகம்
போல். பெரிய. 4-8-8.
1975தென் தில்லைச் சித்திர கூடம் – கோவிந்தராசன் சந்நிதி
என்பர். இராமனுக்கு வடநாட்டுச் சித்திர கூடத்தைப் போல இத்தலமும் உகந்த திருப்பதி. தென்புலக் கோன் – இயமன். பெரியாழ் -5 -2 – 2.
தென்புலர் யமபடர். பெரிய – 7 -3 – 3.
தென்றமிழன் – தெற்கிலுள்ள தமிழ்நாட்டுக்கரசன். பெரிய. 6-6-5. தென்றி – சிதறி. பெரியாழ். 2 – 4-2; (தே 1 – 68 -5 கயிலாயம்.
1980 தென்றிருப்பேரை – ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கல்
தொலைவில் உள்ளது. திருவாய் 7 – 3 – 1 – 10.

தென்றுதல் – சிதறுதல் பெரிய. 5 – 3-9.
தென்னரங்கன் – அரங்கநாதன் பெரியாழ்2 – 9 – 11.
தென்னவன்-யமன், பாண்டியன். பெரிய 2-9-2;
பெரியாழ் 4-5-7.
தென்னவென்று- தென்ன தென்ன என்று ஆளத்திவைக்க.
பெரிய. 9-1-9.
1985 தென்னன் – மலையத்துவச பாண்டியன். திருவாய். 5-5-2;
பெரியாழ்4-2-7.
தென்னன் குருகூர் – தெற்குத்திக்கிலுள்ள திருநகர்.
திருவாய். 4-3 – 11; 5-2-11
76
தென்னன் குறுங்குடி – குறுகியவனான வாமநனது
க்ஷேத்திரமாதல் பற்றிப் பெயர் பெற்றது.
பெரிய திரும. 114.
தென்னன் திருமாலிருஞ் சோலை – இத்திருப்பதி மதுரையிலிருந்து 12 கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். திருவாய். 10-7-3.
தென்னன் தொண்டையர்கோன்- தொண்டைமான்
என்பவன் தென்னவனுடைய வமிசத்தில்
தோன்றினமை பற்றித் தென்னன் தொண்டையார்கோன்
என வழங்கப்பெற்றான். பெரிய. 2-3-10.
1990 தென்னன் பொதியில் – பாண்டியனுடைய பொதிய
மலையில். பெரிய திரும. 40, 83. தென்னனுயர் பொருப்பு – திருமாலிருஞ் சோலைமலை.
பெரியதிரும.6.
தென்னனோட வடவர சோட்டங்கண்ட – சோழனும்
தோற்று ஒடும்படியாகச் செய்த. பெரிய. 4 – 5-6. தென்னாடன் – தென் தேசத்தரசன் பெரிய. 6 – 6- 6. தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்.
பெரியாழ். 4 -9 – 11.
1995 தென்னா தெனா வென்று – தாளச் சொற்கட்டு.
திருவாய். 3 – 9-1. சிலப். 3. 26 உரை. தென்னானாய் – தெற்கே உள்ள ஆனை. திருமாலிருஞ்
சோலை மலையில் நின்ற யானை போன்றவனே. தென்னுரை தமிழுரை. பெரிய. 39. தேக்கம் -தாமதம். பெரியாழ், 2 -9-3. தேசம்- புகழ் (தேஜஸ்). திருப்பா.7; பெரிய. 1 -9-9; திருவாய்3 – 3-4.

2000 தேசமறியவுமக்கே ஆளாய் – உலகமெல்லாம் அறியும்படி.
உமக்கே தொண்டராய். பெரிய. 4 – 9 – 4.
தேதென வெனல்- தென்னதென்ன என்று. பெரிய. 4 – 1 – 1.
தேர்வழி தூல் -தேர் போன வழியை அழித்திடாதே.
‘தேர்வழி தூரல்’ என்பது ஒரு துறை. திருவிருத். 17.
தேராழியால் மறைத்தார் – சக்ராயுதத்தால் சூரியனை
மறைத்த பெருமான். நான்முகன்திரு. 16.
தேவர் காரியம் – பகவதாராதனம். பெரியாழ். 4 – 4 – 1.
2005 தேவகி சிங்கமே – தேவகி வயிற்றில் தோன்றிய சிங்கக்
குட்டியே. பெரியாழ். 1 – 3 – 4.
தேவிமை தகுவார் – உம்மோடு, ஒக்க முடி சூடுகைக்குத்
தகுதியாக இருப்பவர். திருவாய். 6 – 2 – 6.
தேவில் – கோயில் திருவாய். 4 -4-8.
தேவை – அடிமை. பெரியாழ். 1 – 4 – 8.
தேற்றன்மை – தெளிவு. பெரிய. 10 -9 – 9.
2010தேனித்து – இனித்து. பெரியாழ். 4 -61; திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் – 9.
தேனுகன் கதை. திருச்சந்த. 80, 107, பெரியாழ்.
1-5-4; 2-10-4, 3-6-4; பெரிய. 3-10-7, நாச்சி. 11-9.
தேனும் பாலுங் கலந்தன்னவர்- தேனும் பாலும் ஒன்றாகச்
சேர்ந்தாற்போல ஏகரசமாக இருக்கின்ற பக்தர்கள்.
பெரிய. 5 – 4 – 8.
தைத்திரியன் – தைத்திரீய உபநிடதத்தினால்
சொல்லப்படுகிறவன். பெரிய. 5 – 4 – g.
தையில் தரை விளக்கி மாசியில் தெருவணிந்து நோற்றல்.
நாச்சி. 1 – 1.
2015தைவருகை தடவுதல். திருவாய். 5 – 4-8.
தொங்கல் – மாலை, பீவிக்குடை விசேடம். பெரியாழ். 3-4-1. தொடர் – தொடர் சங்கிலி. பெரியாழ். 1-7-1, 1-9-1.
தொடுப்புண்ணுதல் – திருடியுண்டல். பெரியாழ். 2-3-9. தொடுப்புண்ட- ஒளித்துண்ட. பெரியாழ். 2 – 3 – 9.
2020தொடுவுண்ட – கனவினால் உண்ட. திருவாய். 1-5-1; 3-8-3.
தொடுவுண்ண – களவினால் உண்ண. திருவிருத் – 21.
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
திருவாய். 9 – 4 – 9.
தொண்டர் கைத்தண்டு. பெரிய. 10 – 9-4.
தொண்டர் தம்மை நீசர்களை. பெரிய. 7 – 2 – 2.

2025 தொண்டர் தொண்டர் தொண்டன். திருவாய். 7-1-11; 8-9-11.
தொண்டரைப் பாடும்- தொண்டர் என்ற சொல் இங்கு
நீசர்களைக் குறிக்கின்றது. பெரிய. 1 – 1 – 7.
தொண்டனேன் -அடியேன். பெரிய. 1 – 6 – 3.
தொண்டையர் கோன் செய்ததொண்டைமான்
சக்கரவர்த்தி செய்த. பெரிய. 2 – 3-10.
தொழு-தொழுவத்தில். திருவாய். 10-3 -4.
2030 தொழுகுலம்- வணங்குதற்குரிய குலம். திருவாய். 3 – 7-8.
தொழுத்தனில் – தொழுவில். திருவாய்.10- 3-4.
தொழுத்தைமார் – அடிமை செய்யுமவர்கள்.
பெரியாழ். 2-9-8.
தொழுதுவனாய்- அஞ்சலி செய்து கொண்டு முன்நிற்றல்
பெரியாழ். 1 – 3 – 5.
தொழும்பர் – நீசர். திருமா. 5.
2035 தொளி – வீதி. பெரிய. 2 – 10-5.
தொறுப்பாடி – ஆய்ப்பாடி, பெரியாழ். 2 – 1 -6.
தோக்கை- முன்தானை. பெரிய. 4 -4 -3.
தோகைமயில், பெரியாழ். 1 -5 – 7.
தோண்டல் – ஊற்றுக்கள். பெரியாழ். 4 – 3 – 6.
2040 தோத வத்தி – தோய்த்து உலர்த்தின வஸ்திரம். பெரியாழ். 4-8-1.
தோரணவாயில் – தெருவில் கட்டும் அலங்காரத் தொங்கலை
உடைய வாசல். திருப்பா – 16.
தோழமை-நட்பு. பெரியாழ். 3 -10-4;நாச்சி.55.
தோள் குலைக்கப்படுதல் – தோள்கள் அசைந்தாடப்படுதல்.
திருவாய். 4-6 – 7, 10
தோள் விசிறி – தோள்வீசி. பெரிய. 3 – 7-5.
2050 தோளாத மாமணி – துளை பட்டு ஒளி மழுங்காத, நீலமணி, பெரிய – 11-7-2.
நக்கபிரான் – சிவபெருமான். திருவாய். 3-10-9; 4-10-8.5-3-10. நகந்தாய் (நகத்தாய்) நகத்தையுடையவனே. திருவாய். 9-4 -7. நகரிழைத்து – கோயில் கட்டி. இரண்டாம் திரு.4. நங்கைமீர்கள் – பெண்காள். பெரியாழ். 3 -6 -1.
2055 நச்சிலை கொல்-நஞ்சு வடிவாயிருப்பதோர் இலையே.
திருவாய். 7 – 7-7.
நச்சுமாமருந்தம் – விரும்பப்படுகிற சிறந்த மருந்து.
திருவாய். 3-4-5.

நச்சுவார் முன்னிற்கு நாராயணன். பெரியாழ். 1-8 – 11.
நச்சுவாருச்சிமேனிற்கு நம்பி – பெரிய. 7 – 10-8.
நஞ்சு- நைந்து. பெரிய. 11 – 2 – 8.
2060 நடுவு பாட்டு – நடுவிடம். பெருமாள். 1 -11, திருமா. 23.
நண்ணம் – சிறிது. திருச்சந் – 46.
நண்ணார் முனை – பகைவர்களுடைய யுத்தத்தில். பெரிய. 4-7-1
நந்தி பணி செய்த நகர்- ஒரரசன். பெரிய -5 – 10 – 7.
நப்பின்னை – திருப்பா 19, 20; பெரிய. 1 – 5 – 7, 2-4-9.
2065 நம்பர் – விசுவனீயர். பெரிய. 9 – 2-4.
நம்பரமன்று- நம்மால் எம்பெருமான் பெருமைகளைப் பேசி
முடிக்க முடியாது. பெரியாழ். 4 – 5 – 1.
நம்பன் -திருமால்.பெரிய. 5-10-3.
நம்பி- நற்குணங்களால் நிறைந்தவன். பெரிய. 6 – 10 – 1;
திருநெடுந். 12.
நம்பிமீர் – உலகினரே. திருமா. 10.
2070 நம்புதல் விரும்புதல்,பெரிய. 6 – 3-9.
நம்மன்-பூதப்பிரேத பிசாசங்கள். பெரியாழ். 5 – 4 -3.
நம்மை- தங்களை, பெரியாழ்.4 -9-1.
நமர்-நம்மைச் சேர்ந்தவர். பெரியாழ் -1 – 1 – 6.
நமவென்ன- நமோ வாசகம். திருவாய்- 3-3-6.
2075 நமன் சூழ் – யமனைத் தலைவனாகக் கொண்ட
மூன்றாந்திரு. 98.
நமன்று-வணங்கி, திருவாய். 3-3-7.
நமனார் பாடியைப் பெரிதும் – யம பட்டணம்.பெரிய. 1-6-6.
நமுக- குழையும்படி, திருவாய் – 9 -9 – 3.
நமுசி – மகாபலியின் குமாரன். பெரியாழ் – 1 – 8 – 8.
நமையாமல் – உபத்திரவம் செய்யாமல்.முதல்திருவந். 32.
நமோ நாரணம். பெரிய, 6 – 10 – 1 – 10.
நயவேன் ஆசைப் படேன். முதல் திருவந். 64
நயாசலன் – நீதிக்குக் குலைதலில்லாதவன். பெரியாழ். 4-4-8.
2080 நரகநாசன் நரகத்தை ஒழித்தருளுகிறவன். பெரியாழ். 4-4-4.
நரகம் – ஸம்ஸாரம். (விவேகிகள் ஸம்ஸாரத்தை நரகம் என்ற
பெயரால் வழங்குவர்) பெரிய. 11.8-9.
நரகன் – நரகாசுரன். பெரியாழ். 1-5-4; 4-3-3, பெரிய. 3-9-8.
நரசிங்கன் – நரசிம்மன். திருவாய் – 2 -4 -1; பெரியாழ்4 -4-6,9
நரத்திலும் – மனுஷ்ய யோனியிலும். திருச்சந். 29.

2085 நர நாராயணர் – திருமால் அவதாரமான இரு முனிவர்.
பெரிய. 7 – 1-5; 7 – 7 – 3; 11 – 4-4
நரம் – நரசென்மம்.திருச்சந்த. 29.
நரியாயரக்கர் – நரிபோல அரக்கர்கள். திருவாய்.7-6 – 8.
நல்கல் – கொடுத்தல். திருவாய். 1-4-5.
நல்குவான் – கொடுப்பான். பெரிய திருவந். 23.
2090 நல்லரன் – சிவபெருமான். பெரிய. 2 – 9-1.
நல்லனகள் – நன்றாய். திருவாய். 6 -7 – 9.
நலங்கழல் ருசி ஜனகமான திருவடி. திருச்சங்.78.
கலியாண நலந்திகழ் நாரணன் குணத்தையுடைய
நாராயணன். பெருமாள். 1-11; 10, 10; பெரிய 9-9 – 9.
நலமந்த மில்லதோர் நாடு – அளவுகடந்த ஆனந்தம்
இருப்பதான நாடு. திருவாய் – 2-8-4.
2095 நவிலுகை – சொல்லுகை. திருவிருத்50.
நள்ளி – பெண்நண்டு. பெரிய. 6 – 7 – 6.
நளிர்ந்த- சீதளமான பெரிய. 4-4-8, திருவாய். 9-2-4.
நளிர் மதிச்சடையன் – சிவபெருமான்.திருவாய். 3-4-8
திருவாசி – 7, பெரிய திருவந் – 43.
நற்கிரிசை -நல்ல வியாபாரம். நான்முகந்திரு. 96.
2100நற்றம் -நன்மை. பெரியாழ் – 4-5-8.
நறையூர் – திருநறையூர் என்றது நாச்சியார் கோயிலைப்
பற்றியது. கும்பகோணத்திற்கு ஆறுகல் தொலைவில்
உள்ளது. பெரிய திரும. 73. திருநெடுந். 17,
பெரிய -4-9-2, 10-1-5, சிறியதிரும – 71.
நன்புருகி -ஞானம்,நன்மை. இரண்டாம் திரு-1
(தே.) 3-125-3. நல்லூர்ப் பெருமணம்.
நன்னடுவுள் – நன்றான நடுவுள். பெரிய. 4-3-1, 2,3,4,10.
நன்னாளால் நல்ல நாளும். திருப்பாவை.1.
2105 நாக்கு நீளுதல் – அளவுகடந்து பேசுதல். திருவாய். 4-7-6.
நாக்கொண்டு – நாவினால். நான்முகந்திரு. 75, திருவாய். 3-9-9.
நாக கன்னிகையை அருச்சுனன் மணந்தது. பெரிய திரும. 55-59.
நாகணை ஆதி சேஷனாகிய படுக்கை. நாச்சி – 10-9.
நாகராயன் மடப்பாவை – அருச்சுனன் மனைவி.
பெரியதிரும. 57.
2110 நாகரிகர் – ரஸிகர். பெரிய – 9-2-4, பெருங்கதை. 1-41 அடி. 83.
நாகு கன்றுள்ளினாற் போல் – இளங்கன்று தன் தாயை நினைத்துக் கத்துமா போல். பெரிய 7-1-1.
நாகை -நாகப்பட்டினம் என்பதன் மரூஉ. பெரிய – 9-2-1-10.

நாகையழகியார் – நாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தர
ராஜப் பெருமாள். பெரிய – 9-2-10.
நாங்கூர் – திவ்விய தலம். பெரிய – 3-8-10, 10-1-3;
பெரிய திரும. 131.
2115 நாங்கை – மயிலாடுதுறைக்கு வடகிழக்கிலுள்ள திருப்பதி,
பெரிய. 4-8-1-10.
நாட்காலே நீராடல் – விடியல் காலத்தில் நீராடுதல்.
திருப்பா. 3.
நாட்டு மானிடத் தோடெனக் கரிது. எனக்கு நாட்டிலுள்ள
மனிதர்களோடு வசிப்பது என்பது அரிது. பெரியாழ். 5-1-5.
நாடகத்தொலி நடனத்தினுடைய ஓசை. பெரிய. 4-10-3.
நாண் மட மச்சம் -இவை பெண்களுக்குரிய குணங்கள்.
நாணமாவது தகாத காரியத்தில் மனம்
ஒடுங்கி இருப்பது. மடமாவது எல்லாம்
அறிந்தும் அறியாது போன்றிருத்தல்.
அச்சமாவது மிகச்சிறிய காரணத்தினாலும்
மனம் நடுங்குதல். பெரிய. 9-5-6.
2120 நடுங்குதல். பெரிய. 9-5-6.
நாணற் படுத்துப் பரிதி வைத்தல் – பசுமையான
நாணற்புற்களை அக்னிக்கு நான்கு புறங்களிலும்
வைத்தல். நாச்சி – 6 – 7.
நாதானை – நாதனாய் இருப்பவன்.(சர்வ சேஷியாய்)
நான்முகன் திரு-64; தே. 1-30-5 புகலி
நாந்தகம் – திருமாலின்வாள். பெரியாழ். 4-7-4.
2125 நாமங்கை- சரசுவதி. பெரிய. – 2-10-6.
நாமதேயம் – பெயர். திருச்சந்- 14.
நாய்கூழை வாலாற் குழைக்கின்றது போல். திருவாய். 9-4-3.
நாரணம் – ஓம் நமோ நாராயணாய’ என்றும்
அஷ்டாக்ஷரமந்த்ரத்தைக் குறிக்கும். திருவாய்.10-5 – 1.
நாராயணா என்னும் நாமம் -அஷ்டாக்ஷர மகாமந்த்ரம்
பெரிய, 1-1-10.
2130 நால்வேதம் -ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்.
முதல் திருவந். 11; 31; 68.
நாலிரு மூர்த்தி – அஷ்டாக்ஷர ஸ்வரூபி. பெரியாழ். 4-3-11.
நாலு மாறும்பத்து. பெரிய. -9-10-10.
நாலு மூர்த்தி – பிரதாநம்,புருஷன், அவ்யக்தம்,காலம்
என்னும் இவற்றைச் சரீரமாகக் கொண்ட
நாலுமூர்த்தியாய். திருச்சந். 17.

நாலைந்து திங்களில் சகடம் சாடியது- நான்கு ஐந்து
மாதத்தில் சகடாசுரனை அழித்தது. பெரியாழ். 1-2-11.
2135 நாவகாரியம் – நாவினால் சொல்ல வொண்ணாத
பெரியாழ். 4-4-1.
நாவல் – தோற்றவர்கள் முன்னே ஜயித்தவர்கள்
சொல்லுஞ்சொல்அறையோவறை யென்னுமாப்
போல. திருமா. 1.
நாவழித்தல் – நாக்கை வழித்தல். பெரியாழ் – 1-1-6.
நாவாய் -பாரத்புழை என்ற ஆற்றங்கரையில் உள்ளது
இத்திருப்பதி. நின்ற திருக்கோலம்.பெரிய – 6-8-3; 10-1-9.
நாழ்-சாமர்த்தியம். நானென்னும் செருக்கு. அகங்காரம்,
அர்த்தமில்லாத வார்த்தை. பெரிய திருவந். 10;
இரண்டாம் திருவந். 65. திருவிரு .71.
2140 நாழ்மை – ஏற்றம். திருவாய்-4-6-9.
நாழம் – குற்றம். பெரியாழ் – 4-3-5.
நாழல்-கோங்கு. பெரிய. 3-5-7.
நாழிவளோ – நாழ் – சுதந்திரமாய் நடக்கும் செருக்கு.
பெரியதிருவந்.10,11.
நாளோலக்க மருளுதல் சபையிலிருந்து அருள்பாலித்தல்.
திருப்பள்ளி. 9.
2145 நான்முகன் பிரமன். திருவாய். 10-10-1.
நான்முகனை நாராயணன் படைத்தான். நான் முகந்திரு – 1. நான்று-காலத்தில். நான்முகன் திரு – 5, திருவிருத் – 5. நானப்புதலில் – மஞ்சள் தூற்றில். பெரிய – 6-5-3.
நானம் – சந்தனம், கத்தூரி, கர்ப்பூரம் முதலான சுகந்த திரவியம். மஞ்சள். பெரியாழ் – 1-3-9; பெரிய. 6-5-3.
2150 நானாவிதம் – பலவிதம். பெரிய – 1-9-2. நானிலம் – பூமி. திருவிருத் -26. நிச்சித்து – நிச்சயித்து. திருவாய் 10-4-4,5.
நிமியும் வாய் – நெளிந்தவாயையுடையவள். திருவாய். 1-5-2. நியதம் எப்பொழுதும். திருப்பல்.8.
2155 நிரந்தரம்- இடைவிடாமை. திருச்சந்த 101, தே.7-61-8. ஏகம்பம்
நிரந்தவர் – பகை அரசர்கள். பெரிய. 2-9-3. நிருமித்தல் – சங்கற்பித்தல். திருவாய் -4-8-1. நிறைகோளுழவர் – பசுக்களை ஹிம்சிப்பதையே

தொழிலாகவுடையவர். திருவிருத் -37.
நிரைப் பொற்பூ- ஒழுங்கான பொற்பூ. பெரியாழ் 1-3-8.
2160 நில்லாப்பாய்- பின்தொடரா தொழியிலுமொழி. பெரிய.
திருவந் -60.
நில – நிலா. பெரிய -7-8-3.
நிலத்தேவர் குழு அந்தணர் தொகுதி. திருவாய் -5-1-8.

நிலந்தரஞ்செய்யும் – தரைமட்டமாக்கிவிடும். பெரிய -1-1-9.
(தே) 6-34-7. ஆரூர்.
நிலாகின்ற- விளங்கி வாழப் பெற்ற. திருவிருதி -75.
2165 நிலாத் திங்கள்துண்டத்தாய் – காஞ்சிபுரத்திலிருந்து ஒருகல்,
தொலைவில் உள்ளது.
நின்றகோலம்.திருநெடுந் -8.
நிவர்தல்-ஒங்குதல். இரண்டாந்திருவந்- 78.
நிவந்த – உயர்ந்த. அம -2.
நிவந்து-உயர்ந்து. இரண்டாந்திருவந் -78.
நிவா – வெள்ளாறு. பெரிய -3-2-9; தே2-90-1-10
நெல்வாயிலரத்துறை.
2170 நிவா – வலங்கொள்தில்லை. பெரிய. 3-2-7.
நிழலுமடிதாறும் – பாதநிழலாகவும், பாதரேகையாகவும்.
பெரிய திருவந் – 31.
நிழறுதொல்படையாய் – நிழறு – ஒளியைச் செய்கிற
திருவாய். 6-2-5.
நிழறுதல் ஒளிவிடுதல் திருவாய் -6-2-5.
நிறம் – வெளிது. மூன்றாம் திருவந் -56.
2175 நிறை – பெண்தன்மை. பெரிய -2-4-4.
நிறைமொழி – வேதம். பெரிய 11-6-3.
நின் திருவானை – உனது பிராட்டியின் மேலாணை.
பெரியாழ் -5-3-2.
நின்புள்ளுவ மறியாதவர்க்கு புள்ளுவம். வஞ்சனை.
திருவாய் 6-2-3.
நின்றவூர் – இப்போது திண்ணனூர் என்று வழங்குகிறது.
சென்னை அரக்கோணம் பாதையில் உள்ளது.
பெரிய. 2-5-2, பெரிய -7-10-5.
2180 நின்றான் இருந்தான் – திருருநிறையூரில் நின்ற திருக்கோலம்
திருவாலியில் வீற்றிருந்த திருக்கோலம்.
நின்னையே வேண்டி – உன்னையே விரும்பி. பெருமாள். 5-9.

நினை தொறும் நினைக்கும்தோறும் திருவாய். 9- 6-1.
நீர்கள் – நீங்கள். திருவாய் 7-3-9.
நீர்ப்பூ நிலப்பூ. திருவிருத் – 55
84
2185 நீர்மலை பல்லாவரத்திலிருந்து 3 கல் தொலைவில் உள்ளது.
எம்பெருமான் நாமம். பொன்மாணிக்கம். சிறிய
திரும.73;பெரிய திரும-130; பெரிய -2-4-1-10;
2-7-8; 8-2-3, 10-1-1.
நீரகம்-காஞ்சிபுரத்திலிருந்து முக்கால் கல் தொலைவில்
உள்ளது . திருநெடுந் – 8.
நீராட வாராய் – நீராடுவதற்கு வரவேணும்.
பெரியாழ் -2-4-1, 10.
நீலன் – திருமங்கையார், வானரர் தலைவன். இராமநுஜ – 17;
பெரிய – 10-3-3.
நீலார் கண்டத்தம்மானும் – கருமை. திருவாய் -6-10-8.
2190 நீற்கண்டன்-நீலகண்டன். (நீலம் என்ற சொல்அம் கெட்டு
நீல் என நின்று லகரம் றகரமாயிற்று) நான்முகன்திரு – 15. நீறாடிதான் – சிவன். திருமுகன்திரு.-15.
நீறு – சுண்ணம், தூளி. சிறிய திரும-10; திருவாய் -4-6-6. நீறு செவ்வேயிடக்காணில் – நீறு பஸ்மம். திருவாய் -4-4-7.
நீறுபூசி – திருநீற்றைப்பூசி. பெரிய -6-7-9.
2195 நுண்பு – நுண்மை. பெரிய திருவந்-8.
நுணுக்கிய மஞ்சள் – அரைத்த மஞ்சள். பெரியாழ். 1-2-15.
நுளைப் பாவையர் – குறத்திகள். பெரிய 387.
நூக்க – தள்ள. திருமா – 27.
நூல்- ஆகமம். முதல் திருவந். 5.
2200 நூலாட்டி – லக்ஷ்மிநாதன். நான்முகன் திரு .40 நூலிழத்தல் – மாதர் மாங்கல்யமிழத்தல். பெரிய -2-3-6. நூற்றவள் – (விசாரித்தவள்) கைகேயி. பெரியாழ் -3-9-8. நூற்றவர் – துரியோதனாதியர். பெரியாழ். 2-1-2.
நூறு தடா நிறைந்த வக்கார அடிசில் – தடா – பானை.)
நாச்சி -9-6.
2205 நூறு தடாவில் வெண்ணெய்- நூறு பானைகள் நிறைய வெண்ணெய். நாச்சி – 9-6. நெக- கழல. பெரிய -8-5-9. நெஞ்சகம்பால் சுவர் – நெஞ்சு என்றும் சுவரில். பெரியாழ். 5-4-6.

நெஞ்சறவறப்பாடும் பாட்டை – பிரிவு பிரியும்படி.
திருவாய் -9-9-9.
நெஞ்சிடிந்துகும் – நெஞ்சு சிதிலமாய். திருவாய் -9-6-2.
2210 நெஞ்சென்னும் பொன் வண்டு – நெஞ்சாகிய அழகியவண்டு.
இராமாநுஜ – 100.
நெடுஞ்சொலால் மறுத்த நீசனேன் – நீண்டசொற்களாலே
மறுத்த நீசனான நான். பெரிய – 1-6-5.
நெடு நோக்குக் கொள்ளுதல் – நீண்ட நோக்குடன்
எதிர்பார்த்தல். நாச்சி -12-6.
நெடும்புரிசை – உயர்ந்த மதில். பெருமாள். 10-3.
நெடுமறுகில் – பெரியவீதியில். பெரிய. 2-6-10.
2215 நெடுமாலடியார் -திருமாலுக்குத் தொண்டு செய்பவர்கள்.
திருவாய். -4-5-7.
நெய்ச்சுவைத்தேறல் என்கோ – நெய்போலும் சுவையை
யுடைய தேன் என்று
சொல்லுவேனோ.
திருவாய். 3-4-5.
நெய் தொடுவுண்டு – நெய்யைக் கவர்ந்து உண்டு. திருவிருத்54.
நெல்லி- நெல்லி இலை. பெரியாழ் -2-4-3.
நெல்லி மல்கி- நெல்லி மரங்கள் நிறைந்து. பெரிய. 1-7-9.
2220 நெற்று – வாகை மரத்தின் நெற்று. பெரிய 1-7-8.
நெறியெல்லாம் – சகல உபாயங்களையும். திருவாய் -4-8-6.
நெறு நெறென – இரட்டைக்கிளவி. பெரிய -5-10-4; (தே)
6-18-11 பூவணம்.
நென்மெலி -ஒருபடை வீடு. பெரிய -2-9-8.
நென்னல் நேற்று. பெரிய திரும. 130.
2225 நேச பாசம் ஆசாபாசம். திருச்சந் 107.
நேத்திரம் – பீலிக்கண். பெரியாழ்.3-4-5-7-8.
நேர்ந்து பராவி வைத்தல் வேண்டி வணங்கி நிற்றல்.
நாச்சி. 9-6.
நேர்ப்பம் பிரகிருதி. திருவாய் -8-1-6.
நேரா- அறுத்துப் போட்டு. பெரியாழ் – 3-9-10.
2230 நைமி சாரணியம் – வடநாட்டில் நிம்சார் என்னும் இரயில்
நிலையத்திலிருந்து ஒருகல் தொலைவில்
உள்ளது .நின்ற திருக்கோலம்.
பெரிய 1 – 6 – 1 – 10.

நையாடல்-எண்ணெய் விளையாட்டு. திருப்பா. 4 வியாக்;
நைவளம்-நவிற்று பொழில் குறிஞ்சிப்பண். பெரிய. 5-10-2.
நொக்கென – விரைவாக. திருவாய் -4-1-3.
நோன்பியர் -சமணர். பெரிய. 2-1-5.
பக்க நிற்க நின்ற பண்பர். பெரிய. 9-6-1.
பகடு விண்டலறல் – யானைபோல் ஒலித்தல். பெரிய 5-7-4.
பகர்தல் பிரகாசித்தல். பெரியாழ். 1-7-8.

பத்திராகாரன் – விலக்ஷணமான வடிவுடையவன்.
பெரியாழ் – 1 -9- 6.
பத்து – பக்தி. திருச்சந் – 79.
2285 பத்துடையடியவர்க்கு – பக்தியையுடைய அடியார்களுக்கு.
திருவாய்-1 -3-1.
பதக முதலை – துன்பம் தரும் முதலை. பெரியாழ் -2 -1-9.
பதலைக் கபோதம் (பதலை – கும்பம், கபோதம் -புறா)
பெரிய -3-8-2.
பதவிய-மிருதுவான. திருவாய் -7-9-10.
பதவியாய் – நீர்மையை உடையவனாய்க் கொண்டு. இரண்டாந்திரு – 89.
2290 பதியம் – பாசுரம். திருப்பா. தனியன்.
பதிற்றைந் திரட்டி – நூற்றுவரான துரியோனாதிகள்.
பெரிய – 2-4-4.
பதினொரு விடையர் – ஏகாதசருத்திரர்கள். திருப்பள்ளி 6. பந்தணைந்த மெல்விரலாள் – பெரிய -2-2-4.
பந்தனை – அனுக்கம், பிள்ளைக்கு வரும் வியாதி. திருப்பல் 6.
2295 பந்தார் மெல்விரல் – பந்துபொருந்திய விரலினையுடையவள். இ
பெரிய -7-7-2; திருப்பா -18.
பந்து தூதை – சிறு முட்டி, பூங்குலைகள். திருவாய் -6-7-3.
பப்ப – ஒலிக்குறிப்பு. பெரிய -1-3-7; தே. 4-5-6. ஆரூர். பம்பை-வடபாலை. திருவாய் – 6-1-10.
பயந்தேன் -பசந்தேன். பெரிய – 9-4-2.
2300பயலை – பசலை வர்ணியம். நோய். பெரிய. 2-7-9; 8-1-1, திருவாய். 2-1-1; பெரிய – 3-6-2; திருவிருத் – 70. தே 1-60-3,9 தோணிபுரம்.
பயலோவிலீர் – பாகமுடையீரல்லீர், திருவிருத் -15. பரக்கழித்து பழிவிளைத்து. நாச்சி. 12-3, தே. 5-86-10 வாட்போக்கி.
பரக்கழிந்தாள் – அடக்கமழிந்தாள். பழிக்கு அஞ்சாளானால் பெரிய -3-7-9; 4-8-5.
பரக்கழிந்து பழியஞ்சாதே, மிகவும் கழிவுமாம். பெரிய.3-7-3.
2305 பரகாலன் எதிரிகளுக்கு யமன் போன்றவன்.
பெரிய. 3-4-10; 3-9-10: 7-4-10; 7-5-10. பரங்குன்று இமயமலைகள் உள்ள திருப்பிரிதி. பெரிய. 7-1-6. பரசுராமன் – ஜமதக்னி முனிவருடைய மைந்தன்.
பெரிய. 8-5-8. திருவாய். 6-2-10.

பரண்மேல் – மச்சின்மேல். திருவாய் 8-4-1.
பரத்தர் – பெருமாள்.3-6.
2310 பரத்தை – பெரியாழ்வார்.3-5-9.
பரத நம்பி- பரதாழ்வான். பெரியாழ்வார்-3-9-6, 3-10-5,
பெருமாள்8.5.
பரதன் – இராமனின் தம்பி. பெரியாழ்-2-1-8. பெரிய -2-3-7.
பரதனுக்கு – பெருமா. 10-4.
பரம் – பொறுக்க ஒண்ணுதல் பெரியாழ். 4-5-1,
திருவிருத் . 2-9-3 (மழபாடி-7-100-4. நொடித்தூன்மலை.)
2315 பரம்பரமாய் – ஒன்றுக்கு ஒன்றுமேலாய் – திருவாய்
8-8-5.(திருவாசகம். கீர்த்தி -119)
பரம்பரன் – பெரிய. 1-5-1, திருவாய்,4-3-9, 8-8-2.
பரம்புருடன் – உத்தம புருஷன் – திருவாய்–4-8-3.
பரம்புருடா -புருஷோத்தமனே – பெரியாழ்.5-4-2.
பரமகவிகள் – திருவாய் – 7-9-6.
2320 பரமசோதி -பரஞ்சோதி – திருக்குறுந் – 11.
பரமே – வசமோ. திருவாய்.6-2-6.
பரமேச்சுரவிண்ணகரம் – பெரிய – 2-9-1-10.
பரமேட்டி – திருப்பல் -12. திருவாய். 9-1-8.
பராங்கதி – சிறந்த பதவி – திருமா – 4.
2325 பரிப்பு – பரிவு. துக்கம் – திருவாய் -6-4-6.
பரிபவம் -அவமானம் – பெரியாழ் -2-9-2.
பரிமாற -வியாபரிக்க – பெரியாழ் – 3 – 6 – 8.
பரிமுகமானவன் -ஹயக்ரீவாவதாரமெடுத்தவன் –
பெரிய -5-3 -2.
பரிமேற்கற்கி – கற்கியவதாரம் – பெரிய-2-5-3.
2330 பரிதிவட்டத்தூடுபோய் – சூரிய மண்டலத்தின் வழியாகச்
சென்று. அர்ச்சராதி மார்க்கம்.
4-5-10.
பரிவேடம் – சந்திரனைச்சுற்றிச் சில காலங்களில்
காணப்படும் கோடு .ஊர்கோள்- பெரியாழ்-1-7-3.
பருங்கிப்பறித்தல்-கொன்றுமுறித்தல். பெரியாழ்-1-2-7.
தே. 3-69-3. காளத்தி.
பருக்குதல் – பருகச் செய்தல். நாச்சி- 13-4.
பருகுநீர் – குடிக்கின்ற தண்ணீர்- பெரியாழ் -4-4-4.

2335 பருச்செவி – பருமனானகாது பெரியதிருவந் – 63
பருப்பதம் – மகாமேரு பருவதம் பெரியாழ்-5-4-7.
பல்லவர் கோன் பணிந்ததில்லை – பெரிய -3-2-3.
பல்லவன் – பல்லவ அரசன். பெரிய -2-9-2.
பல்லாண்டிசைத்தல் – மங்களாசாகனம் செய்தல்.
பெரியாழ்-1-9-5.
90
2340 பல்லாண்டு திருவோணத்தில் கூறுவித்தல்- மங்களாசாசனம்
திருவோண நட்சத்திரத்தில் செய்வித்தல்.
பல்லி சொற்கொள்ளல் – திருவிருத் – 48.
பல்லிநுண்பற்றாக – பல்லியானது சுவரிலே இடைவெளி
யின்றிப் பற்றியிருப்பது போல.
பெரியாழ்-3-4-2.
பலங்கனி – பலாப்பழம் – பெரிய -3-1-5,3-10-3,5-3-5. பலதேவன் – பலராமன். நாச்சி14-1.
2345பவர் – பரப்பு- திருவாய் -2-2-6.
பவித்திரன்-தூயவன், பரிசுத்தமூர்த்தி. திருவாய். 2-3-9.
பவத்தர் – பௌத்தர்கள். நான்முகன்திருவந். 6.
பழநடை – முன்பு செய்து போதருங்கிரமம் பெரிய-2-3-4. பழிகாப்பு- கெட்டபேரைக்காப்பது- நாச்சி-12-3.
2350பழுக்காய் – பழுத்தபாக்கு – பெரிய-6-9-8. பள்ளிக்கட்டில். கிருப்பா 22
பள்ளிக்குறிப்பு – தூக்கக்குறிப்பு (கொட்டாவி
விடுதல் முதலியன)பெரிய-10-4-6.
பள்ளிகமலம் தாமரைப்பூவாகிறபடுக்கை. பெரிய.6-7-6.
பள்ளிகோள்- கோள்முதனிலைதிரிந்த தொழிற்பெயர். கோள். கொள்ளுதல்பெரியாழ்-5-4-9).
2355 பள்ளியிலோதி வந்த சிறுவன் – பிரகலாதன். பெரிய-2-3-8 பற்பநாபன்-பத்மநாபன்.திருச்சந்23, பெரியாழ்-2-3-2. பற்பபாதன்- தாமரைமலர் போன்ற மென்மையான பாதங்களையுடையவன் திருச்சந்த. 32. பற்பபாதா. விளி திருவாய் -7-6-1. பற்றுமஞ்சள் நிறம்பிடிக்கும் பூச்சுமஞ்சள். பெரியாழ்-3-2-2.
2360பற்றையை பயனற்ற பொருளை. திருவாய். 3-9-7. பற – உந்திபற பெரியாழ்-3-9-1-10.
பறியோலைச் சயனத்தர் – தாழை ஓலைகளினாற் செய்த படுக்கையையுடையவர்.பெரியாழ்-1-1-5,
திணைமாலை-113,குறுந் -221,அகநா-94, நற்-142,

பறை-நோன்புக்கு அங்கமானதொரு வாத்திய விசேடம்.
திருப்பா- 8, 24 – 28.
பறை தரும் – புருஷார்த்தத்தைத் தரும் – திருப்பா10.
2365 பன்னிரண்டா நாள் சிசுவுக்கு உத்தானம் செய்தல்.
உத்தானம் – குழந்தையைப் பிரசவ அறையிலிருந்து
வெளிக்கொணரும் சடங்கு. பெரியாழ்-1-1-8.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் – பன்னிரண்டு
திருவோணத் திருநாளளவும் சமைத்தேன். பெரியாழ்-2-9-7.
பன்னிருதிங்கள்- பன்னிரண்டு மாதம். பெரியாழ்-3-2-8.
பன்னிருநாமம் – திருமாலினுடைய பன்னிரண்டு பெயர்கள்
ஒவ்வொரு செய்யுளிலும் வந்துள்ளது. திருவாய். 2 – 7-1 – 10.
பனங்கனி தலைக்குவமை திருச்சந்-80.
2370பனங்கனிபோலப்பருமுடியுதிர – பெரிய 9-1-7-
பனிவரை – திருவேங்கடமலை திருநெடுந் 9.
பனுவல் – நூல் பெரிய – 10-4-10.
பாக்கியம் – அதிர்ஷ்டம் – இரண்டாந்திரு – 34.
பாகுடம் – உபகாரம், பச்சை- பெரியாழ். 4-5-8.
2375பாசனம் – மரக்கலம் திருச்சந் – 100.
பாசறவு -பசுமையழிவு திருவாய் – 6-8-7,8.
பாசி தூர்த்துக்கிடந்த பார்மகள் – பாசி படிந்து கிடந்த
பூமிப்பிராட்டி நாச்சி-11-8.
பாசிலை நாணல்-பசுமையான நாணற்புற்கள் நாச்சி-7-7.
பாஞ்சசன்னியம் -எம்பெருமான்கையிலுள்ள சங்கு.
பெரியாழ். 3-3-5.நாச்சி-7-10
2380பாஞ்சாலி பாஞ்சாலதேசத்து அரசன் மகள் –
பெரியாழ். 4-3-6. (தத்திதாந்த நாமம்)
பாஞ்சாலி கூந்தல் – பெரிய -6-7-8.
பாட்டும் முறையும் – இயலும். இசையும்- நான்முகன்திரு – 76.
பாடகம்-பாடகம் என்னும் திருப்பதி திருப்பா-27
மூன்றாந்திரு-30 திருச்சந்-63, இரண்டாந் திருவந்-94,
பெரியதிரும்127, பெரிய-4-8-7,6-10-4.
பாடல் பத்தும் வல்லார் நாச்சி -4-11.
2385பாடி – திருவாய்ப்பாடி மூன்றாந்திரு – 26,
பாடிப்பறைகொண்டு- பிராப்பியத்தைப் பெற்று. திருப்பா-27,
பாடுகாவலிடுமின் அருகுகாவலிடுங்கள். பெரியாழ்-3-7-5.
பாடுசாரா – அருகுவாரா திருவாய். 9-10-10.
பாடையிடுதல் பாடையில் படுக்க வைத்தல் பெரியாழ். 4-5-8.

2390பாண் -பாட்டு மூன்றாம் திருவந் – 35,55.
பெரிய. 6-2-5, 6-10-3.
பாண்டியர் குலபதி – பாண்டிய வம்சத்து அரசன்.
பெரியாழ் – 5-4-7.
பாண்டிவடம்-பிலம்பனைப்பலதேவன் வென்றவிடம்
நாச்சி–12-7.
பாணன்-கடகன், ஆசாரியன்- பெரிய – 8-2-2.
பாதமத்தாலெண்ணினான்-பாதமத்தால் -பாதத்தால்
முதல்திருவந்.45.
2395 பாதமூலம் திருவடிகள் – திருமா – 29.
பாதுகம் -மரவடி. பெருமாள்- 10-4.
பாந்தட்பாழியில் அனந்தாழ்வானாகிற படுக்கை.
பெரிய. 10-1-7.
பாம்புடைப்பல்லவர் கோன் – பாம்பைக் கொடியிலேயுடைய
பல்லவ அரசன் – பெரிய-2-9-5.
பாம்பு போல் நாவும் – நாச்சி, – 10-3.
2400பாமரு – பரப்பையுடைத்தான் – திருவாய்.7-6-1. பார்த்தசாரதி – கண்ணன் – பெரிய -2-3-1. 2-10-8.
பார்த்தன் – அருச்சுனன் – பெரியாழ் – 2 -6 – 5, 6, பெரிய -5-7-8 9-9-8.
பார்த்தன் பரத்வம் தெளிந்தது. திருவாய். 2-8-6.
பார்த்தன்பள்ளி – சீகாழியிலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது. பெரிய 4-8-1-10.
2405 பார்ப்பனச்சிட்டர்கள் – நாச்சி – 6-4-.
பார்மன்னர் – பூமிக்கு அரசர் – பெரிய – 7-7-4. பார்மன்னு பல்லவர்கோன் – பூமியில் நெடுங்காலம் வாழ்ந்தபல்லவ அரசன் – பெரிய. 2-9-2,10. பாரசிநாள் – துவாதசி. முதல் திருவந் – 82. பாரதங்கையெறிந்தான் – பாரதயுத்தத்தை உறுதிப்படுத்தி வந்தவன். பெரியாழ்.-2-6-4.
2410பாரதப்போர். திருவாய் -3-2-3, பெரிய-4-6-6. பாரதம் – பெரிய திரும -72. பெரிய-7-3-4, 7-5-2,9-9-8,11-1-10.
பாரத மாபெரும்போர். பெரிய-9-2-9. பாரதவெம்போர் – மூன்றாந்திரு -28. பாரிசாதாபகரணம் பாரிஜாத மரத்தைத் தேவலோகத் திலிருந்து கண்ணன் சத்யபாமையின்
பொருட்டு அபகரித்து வந்தது. பெரியாழ். 1 – 9 – 9. 3 – 9-1.

2415 பாரித்த – முயற்சி செய்த – மூன்றாந்திருவந் -44.
பெரியாழ்-1-6-6. (தே) 4-70-10.நனிபள்ளி, 5-54-9-
அதிகை வீரட்டம்.
பாரிப்பு – பரப்பு- திருவிருத் 67.
பாரோர் – உலகத்தவர்கள். திருப்பா- 1.
பால்பொன் பசப்புக்கார் – வெண்மை, சிவப்பு, பசுமை,
கறுப்பு. நான்முகன்திரு.24.
பால்சோர – பால்பெருக. திருப்பா-12.
2420 பால்வாய் – பால்மணம் மாறாதவாய். திருவிருத். 35.
பாலகன்-உவப்பினால் ஆகிய பால்வழுவமைதி.
பெரியாழ்-3-7-4-.
பாலப்பிராயம்- குழந்தைப்பருவம். பெரியாழ்2-6-6.
பாலன்றனதுருவாய் – சிறுகுழந்தை வடிவம் கொண்டு
முதல்திருவந் 69.
பாலேய்தமிழரிசை காரர்- பால்போன்ற இனிய இயற்றமிழ்
அறிவாரும், இசையறிந்து பாடவல்லாரும். திருவாய். 1-5-11.
2425 பாலை – பாலைப்பண் பெரிய -7-3-7.
பாவக்காடு – பாவசமூகம் பெரியாழ் -5-4-2.
பாவகாரிகள் – தீயசெயல்களைச் செய்கிறவர்கள்
பெரியாழ்-4-4-1.
பாவநாச நாதன் – திருச்சந்த – 27.
பாவை- நோன்பு – திருப்பா- தனி.
2430 பாவைக்குச் சாற்றி நீராடுதல் – நோன்புக்கென்று சங்கற்பித்து
நீராடுதல் – திருப்பா.3.
பாழ் – மூலப்பிரகிருதி. திருவாய்- 10-10-10.
பாழி படுக்கை பரமபதம் -பெரிய – 10-1-7,
இரண்டாந்திருவந்-13.
பாழிமை – பெரியமேன்மை. பெருமிடுக்கு- பெரிய-11-2-6.
திருவாய்-2-1-5. தே. 5-92-1 காலபாசம்.
பாளைமுத்தும் – பாளையில் உண்டான முத்துக்கள் –
பெரிய. 6-9-8.
2435 பாற்கடல் – திருப்பாற்கடல், மூன்றாந்திருவந் 31,61,72.
பாற்றுதல் – சிதறவடித்தல் பெரிய -4-7-5.
பாறு பாறாக்கினான் – துண்டுதுண்டாகச் செய்தான் –
பெரிய திருவந் 33.
பான்மதிக்கிடர் தீர்த்தவன் – சந்திரனுக்கு க்ஷய ரோகத்தைப்

போக்கியவன் – பெரிய-1-8-6,
பானல் – மருதநிலம், கடல் – பெரிய -6-7-2
2440 பிச்சச் சிறுபீலி – மயிலிறகு. பெரிய -2-4-8,2-6-5,
பிச்சைதானம் – – திருப்பா -2.
பிச்சைக்குறை – நாச்சி -11-4.
பிஞ்சுகள் – உருத்திரன் – பெரிய-2-6-9.
பிண்டத்திரள் – பித்ருக்களுக்கு இடும்பிண்ட உருண்டை
பெரியாழ்.2-5-7.
2445 பிண்டமாய்- மூலகாரணமாய் – மூன்றாந்திருவந் – 46,
பிண்டியார் – ஜைநர்கள். பெரிய-9-7-9.
பிண்டியுடைநோன்பியர் – அசோகமரத்தைத் தஞ்சமாக
உடைய அமணர். பெரிய. 2-1-5.
பிணத்தின் மடவார் – பிணங்களைத்தின்கின்ற பெண்
பேய்கள். பெரிய 2-4-8.
பிணம்படுத்தல் – சவமாக்கி ஒழித்து அருளல் பெரியாழ்-5-3-4.
2450 பிணா – பெண்பால் பொதுப்பெயர். நாச்சி.1 – 4. பிதற்றும்- பெரியாழ். 3-7-8. திருவாய் – 10-4-1.
பிதற்றுமின் – திருவாய். 3-5-10.
பிதிர் – அதிசயம், மிச்சம். நான்முகன் திரு -83. பிது (பிதா) – பெரிய. திருவருந் -70.
2455 பிதுவை – தந்தையை. திருவிருத் 95. பிரகலாதன் – திருவாய். 2-8-9.
பிரகிருதி- சுபாவம். திருவாய்-10-7-10.
பிரமகுரு – பிரம்மோபதேசம் செய்யத்தக்க ஆசாரியன். பெரியாழ். 5-2-8.
பிரமபரம்பரன்- இந்திராதிகளில் ஏற்றமுடைய பிரமாவாகிற பராத்பரன். திருவாய்-8-4-9,
2460) பிரமமுதல் வித்தாய் – பிரமமாகிற பிரதான
பீசமாய் – திருவாய்-8-10-7.
பிராக்கள் – உபகாரிகள் – திருவாய் -3-7-5. 9-1-11. பிரிதி – ஒருதலம் – பெரிய – 1-2-1-10.
பிலம்பன் – பிரலம்பாசுரன் – பெரியாழ். 3-6-4. 4-9-3. பிழக்குடையவசுரர் – தீமைகளைச் செய்கின்ற அசுரர். பெரியாழ். 4-8-7.
2465 பிள்ளைக்குழாம் பிள்ளைகளின் திரள் – திருவாய்-7-3-1. பிளவெடுத்து கிழித்துப்போகட்ட. பெரிய -1-5-7.

பிற்காலும் – மேலும்- இரண்டாந்திரு. – 93.
பிறப்பிலி- பிறத்தல் இல்லாதவன். பெரிய – 1-8-7.
பிறப்பு – திருப்பா-7.
2470 பிறவியில் மாண்ட பிள்ளைகள் – பெரிய -4-8-2.
பிறை -ஓரணி பெருமாள் -7-4.
பிறைதங்குகடையான- சிவன் – பெரிய-3-4.
பின்னை – நப்பின்னை. திருச்சந்- 13. 33, நான்முகன்திரு. 33
மூன்றாம் திருவந் -49.85, பெரிய-3-10-7,4-4-4.
4-5-3, திருவாய்- 4-8-4. 5-9-8. 4-2-5.
பின்னைக்கு மணவாளன் – நப்பின்னைப்பிராட்டியின்
மணவாளன் – பெரிய -6-6-9.
2475 பீர் – வெளுப்பு – திருவாய் – 1-5-8.
பீலிசூடி -மயில் தோகையைச்சூடி. பெருமாள். 6-9.
பீலித்தழை – மயில்தோகை. பெரியாழ் -2-6-1.
பீளையோடீளை – நேத்திரமலம். பெரிய -6-4-1.
பீற -பிறக்க- நான்முகன் திருவந் – 49.
2480 பீனத்தெட்டபழம் பருத்து நன்றாகப் பழுத்த
பலாப்பழங்கள். பெரிய -3-4-8.
புகழ் மங்கை – கீர்த்தியாகிற மங்கை- பெரிய -3-2-5.
புகா – உணவு – பெரிய திருவந் – 42.
புட்கவ்வக்கிடத்தல் – பறவைகள் கவ்விக்கொள்ளும்படி
கிடத்தல். திருமா -6,
புட்குழி – காஞ்சீபுரத்திலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது
இருந்த திருக்கோலம். பெரிய -2-7-8.
2485 புட்டியிற்சேறு – இடையில் படிந்த சேறு திருவாய் -6-3-4.
புண்ணி புளிப்பெய்தல் – புண்ணின் மேல்புளிச்சாற்றைப்
பெய்தல்- பெரியாழ் -2-9-1 நாச்சி -13-1
புணர்ப்பு – படைப்பு, சம்பந்தம், சூழ்ச்சி முதல் திருவந் – 61.
திருவாய் – 2-8-2. பெரியாழ் -4-5-2.
புணைவன் – மரக்கலமாயிருப்பன் – திருவாய் -2-8-1.
2490 புத்து – புத்தர் திருமா -7.
புதஞ்செய்தல் – தாவுதல் – பெரிய -9-3-7.9-10-1.
புதம் – அம்புதம் – பெரிய -9-10-1,
புதமிகு விசம்பு-மேகம். பெரிய. 9-8-8.
புதாவினம் – புதா பெருநாரை – திருவாய் -6-8-9.

2495 புதியதுண்கை – முதல் விளைந்த விளைவை நல்லவேளையில்
சமைத்து உண்ணுதல். பெரிய. 9-3-7.
புதுக்கணிப்பு – வடிவிலுண்டான புதுமை – திருவாய்- 8-9-5.
புதுவிரை – மணம் – பெரிய – 9-1-3.
புதுவைக்கோன் -ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவன்.
பெரியாழ்-5-3-10,நாச்சி-3-10.
புதுவைப்பட்டன் – பெரியாழ் – 1-2-21, 1-3-10.
2500 புதுவை மன்னன் – பெரியாழ். 2-3-13, நாச்சி -5-11.
புயக்கற்றது- கைவிட அப்பியஸியா நின்றது. திருவாய். 9-5-10.
புரந்தரன் – இந்திரன் . பெரிய.4 – 6 – 8,
புரமெரிய அம்பானது – முப்புரம் அழிய திருமால்
அம்பானது. பெரிய.6-1-3.
புரவி முகஞ்செய்து- குதிரைமுகம் போலத் தலைவணங்கி.
பெரியாழ்.4-1-10.
2505 புராணர் – பழையவர். பெரிய. 1-8-1.
புருடோத்தமன் – திருமால். பெரியாழ். 4 – 7 – 2.
புருவ வட்டம் – வட்டமான புருவங்கள். நாச்சி. 14-6.
புரைபுரை – வீடுதோறும். பெரியாழ். 2-9-1.
புல்குதல் – தழுவுகை. பெரியாழ். 1-9-1.
2510 புல்லாணி – திருப்புல் அணை என்பதன் சிதைவு. வடமொழியில் தர்ப்பசயனம் என்பர். இப்புண்ணியத்
தலம் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. புல்லாரண்ய மகரிஷிக்கும், சமுத்திரராஜனுக்கும் அசுவத்த நாராயணனுக்கும்
அருள்பாலித்த இடம். பெரிய. 9-3-1-10. புல்லெழுந்தொழிதல் புல்முளைத்து அழிதல். திருமா. 13. புலம்- அழகு. திருவிருத்57.
புலமங்கை பூமிப்பிராட்டி. பெரிய. 3-2-5.
புலரி – விடியற்காலம். திருப்பள்ளி. 5.
2515 புலவர் – சர்வஞ்ஞர் பெரிய -1-1-7. புலாகின்ற மீன்நாற்றம் வீசப்பெற்ற. திருவிருத் . 75. புலையர் – சண்டாளர். திருமா.43. புழுதிக் காப்பிடுதல் ஸ்ரீபாததூளியைக் கொண்டு ரட்சை செய்தல். சிறிய திரு.16.
புள்ளரையன் கோயில்- கண்ணன் கோயில். திருப்பா.6.

2520 புள்ளுப்பிள்ளை. (புள்ளு- பறவை.) பெரிய.5-1-2.
புள்ளுவன் – வஞ்சகம். பெருமாள்.10 – 74.
புள்ளுவம் பேசுதல் – வஞ்சகமாகப் பேசுதல். பெரியாழ் 5-1-3.
புள்ளைக்கடாகின்றவாற்றை- பெரிய திருவடியை நடத்துகிற
விதத்தை .திருவாய். 7-3-1.
புளிங்குடி – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இரண்டு
கல்தொலைவில் உள்ளது. சயனத்திருக்கோலம்.
திருவாய். 8-3-5, 9-2-1.
2525 புளிப்பழம் – புளிப்புச் சுவையையுடைய ஒருவகைப்பழம்.
பெரியாழ். 2-4-1.
புளியட்டி புளிப்பழத்தைக் கொண்டு நீராட்டி.
பெரியாழ். 2-5-8.
புற்கு- புன்மை. திருவாய். 3-1-2.
புற்பா முதலா – பரவிய புல்முதலாக. திருவாய்.7-5-1.
புற்றுமறிந்தன – புற்றும் சிதைந்தன. பெரிய. 3-4-7.
2530 புறக்கிட – புறங்காட்ட திருவாய். 8-4-1.
புறம் சுவர்கோலம் செய்தல் – உடலை அவங்கரித்தல்.
திருமா 6.
புறப்பாடின்றி- வெளிப்படுதலில்லாமல், திருவாய்.7.
புறம்புல்குதல் முதுகைக்கட்டிக்கொள்ளுதல்.
பெரியாழ். 1-9-1-10.
புறமலை- திருமலைக்குப்புறம்பானமலை. திருவாய். 2-10-5
2535 புறவம் – புறா பெரிய. 3-8-2.
புன்புலவழி- அற்பமான சப்தாதி விஷயங்களிலே ஐம்பொறிகள்
செல்வதற்குரிய வழி. திருச்சந்.76.
புனக்கொள்காயா – தன்னிடத்திலே நிலையையுடைத்தான
காயா . திருவாய் -9-7-8.
புனிதம் – பரிசுத்தம். திருமா.23.
புனிதர் – புனிதரே.பெரிய. 10-8-8.
2540 புனை – புன்னை. பெரிய. 9-9-2.
பூகம் – பாக்குமரம். பெரிய. 7-8-4-8. (தே.) 1-30-10. புகலி.
பூங்கொத்து மலரின் தொகுதி. பெருமாள்.6-9.
பூச்சிகாடடி. பெரியாழ் 2-1-1-10.
பூசல்- போர். நாச்சி. 7-8.
2545 பூணித்தொழு – பூணி -பசு. பெரியாழ். 2-4-9.
பூணிபேணும் ஆயன். பசுக்களை மேய்க்கும் இடையன்.
திருச்சந்.26.

பூணிமேய்க்கும் பசுக்களை மேய்க்கும். பெரியாழ். 3-6-7.
பூதத் திருவடி – பூதத்தாழ்வார் திருவடி, இராமாநுஜ.9.
பூதனை – கம்சனால் கண்ணனைக் கொலைசெய்ய ஏவப்பட்ட
அரக்கி. பெரிய. 3-10-7.10-10-1.
2550 பூந்தண்துழாய் – அழகிய குளிர்ச்சி பொருந்திய துளசி.
திருவாய். 6-1-5,2-8-2.
பூந்தண்புனல் -பூவையுடைய குளிர்ந்த நீர். திருவாய். 2-8-2.
பூந்தாமம்- அழகிய மாலை. திருவாய்.2-8-6.
பூநிலாய ஐந்து – பூமியில் உள்ள ஐந்து குணங்கள். திருச்சந். 1
பூம்பாடகம் – பெரிய காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர்
சந்நிதி. இக்கோயில் கட்டு வெட்டுக்களில் எம்
பெருமான் பெயர் தூதுஹரி என்றுள்ளது.
இரண்டாந்திரு. 94.
2555 பூம்பாவை – பெரியபிராட்டி – திருவாய். 2-8-1.
பூமிபாரங்கள் – பூமிக்குச் சுமையான பாலிகள்.
பெரியாழ். 4-4-5.
பூரணபொற்குடம் – தீர்த்தம் நிறைந்த பொன்னாலான குடம்
திருவாய். 10-9-2. நாச்சி .6-1.
பூரிப்ப – பூரணமாக. திருவாய்.5-9-9, மூன்றாந்திரு. 44.
பூரியர் – நீசர்கள். இராமாநுஜ – 3.
2560 பூவியேல்- தள்ளிவிடாதே. பெரியதிருவந் – 40
பூவை – நாகணவாய்ப்புள். திருவாய். 6-2-5
பெட்டைக்கெடுத்தல் – பொய்ப்பேச்சுக்களைக் கண்டித்து
ஒழித்தல். இராமாநுஜ. 93. பெண்டாட்டி – பெண்பிள்ளை. திருப்பா – 11.
பெண்டுகள் – பெண்கள். பெரியாழ். 2-3-1.
2565 பெண்ணாகி – மோகினியவதாரம் எடுத்து. பெரிய. 2 – 6 – 1. பெண்ணைத் தென்பால் – பெண்ணையாற்றின்
தென்கரையில் பெரிய. 2 – 10 – 1.
பெண்ணைமேல் அன்றில் பனைமரத்தின் மேல் அன்றில்
பறவை. பெரிய. 11 – 1 – 6; 11 – 2-19 – 4 -1. பெய்தகாவு – உண்டாக்கின சோலை. திருவாய்.6- 3-5. பெய்தறியா பெற்றறியாத. பெரியாழ். 1 – 7 – 8.
2570 பெரிய கோயில் – ஸ்ரீ ரங்கம், திருமா. 11. பெருங்கிறியான் – திருமால். திருவிருத். 91. பெருந்தமிழன் – சிறந்த தமிழ்மொழியில் வல்லவன்.)
இரண்டாந்திரு. 74

பெருந்தேவன் – பரதேவதை திருவாய்.4-6-4.
பெருந்தேவி – சீதை. பெரியாழ். 3-10-4.
2575 பெருநிலம்- வீடு. பெரிய. 1 – 1 – 9.
பெருப்பெருத்த கண்ணாலங்கள் – மிகவும் விசேஷமான
கலியாணங்கள். பெரியாழ் – 3 – 7-10.
பெரும்பாழ் – பிரகிருதி. திருவாய். 8 – 8 – 6, 10-1-7.
பெரும்பாழ்க்காலத்து – உலகம் அழிந்து கிடக்கின்ற காலத்து.
திருவாய் 10 – 1 – 7.
பெரும்பாழி சூழ்ந்த – பாழி படுக்கை. முதல்திரு. 80.
2580 பெரும்புணர்ப்பு – பெரிய வியாபாரம். திருவாய். 2-8 – 3.
பெரும்புறக்கடல் – இந்த அண்டகோளத்துக்கு
அப்பாற்பட்டுச் சுத்த நீராக உள்ள கடல். பெரிய. 7-10-1.
பெரும்பொருள் சிறந்த அர்த்தம். இரண்டாந்திரு.- 64.
பெருமக்கள் – பரமசேஷிகள். திருவாய். 3 – 7-4.
பெருவழி நாவற்கனியினும் எளியள் – பெரிய வழியில் விழுந்து
கிடக்கின்ற நாவல்கனியினும் இனியள். பெரிய. 10 9 – 5.
2585 பெற்றம் – பசு. பெரிய – 10 – 1 – 10.
பெற்றமாளியை- பசுக்களை ஆளப் பிறந்தவன்.
பெரிய. 10 – 1 – 10.
பெற்றார் – தாய் தந்தையர். பெரிய. 8 – 9 – 7.
பெறுத்தி- பெறச் செய்து. பெரியாழ். 2 – 9 – 9,
திருவாய். 3-10 – 10.
பெறுத்து – உண்டாக்கி. திருவாய். 3 – 7 – 7.
2590 பேச்சும் அலைந்தலையாய் – பொருந்தாத பேச்சையும்
உடையவளாய். பெரியாழ். 3 – 7-1.
பேசுதல் – ஒலித்தல். பெரிய. 8 – 2-7.
பேதுறுவனே – கலங்காநின்றேன். திருவாய். 9 -4 – 3.
பேயரே – பைத்தியக்காரர்களே. பெருமாள்.3 – 8.
பேர் – திருப்பேர். பெரியாழ். 2 – 5 – 1; 2 – 6-2.
2595 பேரகத்தாய் – திருப்பேர்நகர். திருநெடுந் – 8; சிறிய திரும.70.
பேரீஞ்ஞூறு பெயர் ஆயிரம். இரண்டாந்திரு. 77.
பேரெழுதி – திருநாமத்தை எழுதி. நாச்சி. 1 – 2 – 3.
பேழ்வாய் – பெரியவாய். பெரிய. 2 – 3-8.
பைங்கூழ்கள் – பசுமையுடைய பயிர்கள். பெருமாள். 5-7.

2600 பைதல் – இளையது. திருவாய்.9 -5 – 6.
பைதல்காள் – குயிற்பிள்ளைகளே.திருவாய்.9-5 -8.
பொங்கத்தம் பொங்கோ – தோற்றவர் தோல்வியாலே
பறையடிக்க ஆடுவது தொருகூத்து.
பெரிய. 10-2-1-10.
பொங்கேழ் புகழ்கள் – பொங்கிக் கிளம்புகிற புகழ்கள்.
திருவாய். 8 – 10-4.
பொட்ட -சடக்கென . பெரியாழ். 3-5 – 1; 3-7-6.
2605 பொடியாடி பஸ்மதாரியானசிவன். பெரிய திரும. – 71.
100
பொத்த -துவாரப்படுத்திய. பெரியாழ். 1 – 9-7.
பொத-துளைத்த. திருச்சந்.73; பெரிய திருவந். 22.
பொதியறை – காற்றோட்டமில்லாத கீழறை. பெரிய. 10 – 7-4.
பொதுக்கோ-பொதுக்கென – சடக்கென. பெரியாழ். 2 – 5-4.
2610 பொது நாயகம் – சர்வ நிர்வாககத்துவம். பெரியாழ். 4 -9 – 4.
பொதும்பிடை பொந்துகளின் நடுவே.பெரிய. 4 – 10-2.
பொதும்பு – சோலை. நாச்சி -5 – 1.
பொய்கைப் பிரான் – பொய்கையாழ்வார். இராமாநுஜ – 8.
பொய்ச்சரம் காட்டுதல் – பொய்யாக அஞ்சினவன் போல்
நடித்தல். பெருமாள். 6 – 8.
பொய்ச்சுற்றம் – மனப்பூர்வமாக இன்றி உறவு முறை
கொண்டாடுதல். பெரியாழ். 5 – 3-4.
2615 பொய்ச்சூது – க்ருத்ரிமமான சூது. பெரியாழ். 2 – 1-1.
பொய்ந்நிலம் – தரை காண ஒண்ணாத சோறு.திருவிரு 100. பொய்ந்நூலை பிறமத நூல்களை. பெரிய. 2-5-2.
பொய்மொழி – பொய்யுரை. பெரிய. 6 -6 – 10.
2620 பொய்யறைவாய் – கிருத்ரிமமாகச் செய்யப்பட்ட நிலவறை.
பெரிய. 2-5-5.
பொய்யாதா – சாத்தியவாதிகள் நாக்கு. பெரிய. 5 -1 -5.
பொரி முகந்து அட்ட- நெற்பொரியை எடுத்துச் சேர்க்க.
(லாஜஹோமம்) நாச்சி. 6 -9. பொருட்டாயம் பொருள் தாயம் பொருட்பங்கு.
பெரியாழ். 3 – 1 – 7.
பொருதவனார் பொருதவன். நாச்சி – 8 – 8.
2625 பொருநல் தாமிரபரணி. திருவாய். 6 – 7-8.9-2 – 11. பொருநற்சங்கு திருப்பொருநலில் சங்குகள். திருவாய்-10-3 – 11.

பொருளின்பமென – பெரிய. 6- 2 – 1. திருவிருத். 73.
பொலிக பொலிக பொலிக – சாந்தி. சாந்தி. சாந்தி.
திருவாய். 5 – 2 – 1.
பொழிலேழும் – ஏழு உலகங்களையும். திருவாய். 1 – 4 – 5.
2630 பொள்ளை – துளை, பெரிய. 5 – 1 – 2.
பொள்ளை கரத்த போதகம் – துளைக்கையையுடைய
கஜேந்திரன். பெரிய. 5 – 1 – 2.
பொற்சுரிகை – பொன்னால் செய்த உடைவாள்.
பெரியாழ். 1 -3 -8.
பொற்றாமரை – குடந்தையில் உள்ள புண்ணிய நீரையுடைய
புஷ்கரிணி. திருநெடுஞ். 19.
பொற்றை – மலைக்கும், யானைகள் பலதிரிகின்ற காட்டுக்கும்
பெயர். திருச்சந் .52.
2635 பொன் பெயரோன் – இரணியன். பெரிய. 1 – 7-4, 3-3-8,
4-2-7,7 – 3 – 9, மூன்றாந்திரு. 23
பொன்பெற்றார் – வசிட்டர் முதலிய ஆசிரியர்கள்.
பெருமாள்.9 – 8.
பொன்முடியன் – அழகிய திருமுடியையுடையவன்.
திருவாய். 3 – 7 – 4.
பொன்மேனி – அழகிய சரீரம். மூன்றாந்திரு 1.
பொன்வட்டில் – தங்கக்கிண்ணம். பெருமாள். 4 – 3
2640பொன்வயிறு -அழகிய வயிறு. பெரிய. 1 – 8 – 6
பொன்னன் – இரணியாசுரன். பெரிய. 3 – 4 – 4.
பொன்னி – காவிரி. பெரிய. 3 -8 – 3.4 – 6 – 1.
பொன்னித் தென்பால் – காவிரியின் தென்கரையில்.
திருவாய். 10-8-1.
பொன்னி நாடன் – காவிரியையுடைய
பெரிய. 6-5 – 7.
நாட்டுக்குத் தலைவன்.
2645 பொன்னூலினன் – அழகிய யக்ஞோபவீதத்தையுடையவன்.
திருவாய். 3-7-4.
பொன்னை – தங்கம். பெரிய. 5 – 4 – 5
போக்கு-போக்கிலே.திருவாய்.10 – 3 – 1.
போக மூழ்கி- போகத்திலீடுபட்டு. திருவாய். 6 – 1 – 4.
போகலொட்டேன். போகவொட்டேன். பெரிய. 7 – 2-5
2650போகு – போவாய். பெருமாள். 6 – 7, 9 – 4,
திருவாய். 6-2-7.

போகே என்று- போய்ச்சேர் என்று அறிவித்து.
நாச்சி. 12 – 6, பெரியாழ். 3 – 9 -4.
போட்கன் – முறைகேடன். வெட்கம் கெட்டவன்.
நாச்சி.13 6, திருமா. 33.
போத்தந்த – வரவிட்ட பெரியாழ். 1 – 2- 1, 1 – 3-4,
போத – போதுக. பெரிய. 3 – 7 – 1.
7,8.
2655 போதர்கண்டாய் – விரைந்து ஓடிவா. பெரியாழ். 2 -9-6.
போதரேன் – வரமாட்டேன். பெரியாழ். 2 – 9 – 6.
போதியார் – பௌத்தர்கள். பெரிய. 9 – 7-9.
போதியும் – அரசமரத்தையும். பெரிய. 2 -1 – 5.
போதொடு நீரேந்தி – மலரோடு தீர்த்தத்தையும் எடுத்துக்
102
கொண்டு.முதல்திருவந்.43. (தே,) 4 -3-1. ஐயாறு.
2660 போய்ப்பாடுடைய – மிகவும் இடமுடையன, மிகவும்
புகழுடையன திருப்பா. 26.
போயினாலறையோ. விட்டுப்போக நினைத்தாய் ஆகில்
அறையோ அறை.அறையோ – முறையிடும்
சொல். அறையோவிதறிவரிதே
திருவிருத்10
ஜய சந்தோஷங்களைப்பற்றி வரும் குறிப்புச் சொல்.
போர்க்கதவம் – இரட்டைக்கதவு. முதல் திருவந்.4.
போரவிடாய் – தந்தருள வேண்டும். நாச்சி. 3-7.
போரவைத்தாய் – மிகவும் இட்டுவைத்தாய். திருவாய். 5-1-5.
2665 போருங்கொல் – மீண்டுவருவாளோ. திருவ. 6-7-2.
போல்- அசை.பெரிய. 5 – 2 – 1-9.
போழ்க்கனேன் – முறைகேடனான அடியேன். திருமா. 33.
(தே .) ‘போழம்பலபேசி’ 1-45-11. ஆலங்காடு.
பெளவம்-கடல். பெரிய 5 – 5-9,7-7-2.
பெளழியன்- ரிக்வேதி.பெரிய, 5 – 5 – 9, 7 – 7-2.
2670 மக்கள் பெறாத மலடன் – பிள்ளை பெறாதவன்.
பெரியாழ். 1 -4 -4.
மக்கள் வயது நூறு மக்களுக்குவேத சாத்திரப்படி விதிக்கப்
பட்ட வயது நூறு. திருமா. 3.
மக்கள் அறுவர் – கண்ணனுக்கு முன் பிறந்த ஆறுபிள்ளைகள் . பெரியாழ். 5 – 3 – 1.
மகள் பேசுதல் – மணமகளாகச் சொல்லி. நாச்சி. 6 – 3. மகரக்குழை சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட
காதணி. பெரிய திரும. 39.

2675 மகன்றில்காள் – ஆண் அன்றில்களே (அன்றில் – கிரவுஞ்ச
பட்சி) திருவாய்.1 – 4-4.
மகிழ்மாலை மகிழம்பூமாலை. திருவாய். 4-10-11.
மங்கைகுலவேந்தன் – திருமங்கை நாட்டுக்குத் தலைவன். பெரிய. 6-6 – 10.
மங்கைதன் பங்கன் -சிவபெருமான். பெரிய. 7 -10 – 3.
மங்கையர் கோன் – திருமங்கையாழ்வார்.பெரிய தனியன். 1, 3.
மங்கை வேந்தன் பரகாலன் – திருமங்கையாழ்வார். பெரிய. 7-5-10.
2680 மச்சணி மாடங்கள் -மேல்தளத்தை அலங்காரமாகவுடைய
மாடங்கள். திருவாய். 5-9-4.
மச்சணி மாடம்-மேல் தளம். நாச்சி. 11-4.
மச்சாவதாரம் – அசுரர் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டு
அருளினதும் மச்சாவதாரம். பெரிய. 11-4-1.
மச்சொடு மாளிகை -மேல் மாடம். பெரியாழ். 2-7-3.
மசுமையிலி- இலச்சையில்லாதவனே.நாச்சி. 3-9.
மஞ்சரி – தோரணம். பெரிய திரும. -26.
2685 மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் வாசிகை மாலை
பெரியாழ். 2-4-4.
மஞ்சளும் மேனியும் – பற்று மஞ்சள் மயமான சரீரம்.
பெரியாழ். 3-4-3
மஞ்சனம் – நீராட்டம். பெரியாழ்வார். 2-4-3, 6-7-9-10.
மஞ்சு- மேகம், அழகு, ஆபரணம். பெரிய. 1-1-10.
மட்டித்து – வீசி. நாச்சி -6-10, பெரிய திரும -68.
தே 4-53-10. ஆரூர்.
2690 மட்டையர் – மொட்டையர். பெரிய. 2-1-6. தே. 2-34-10.
பழுவூர்.
மடநாகு – இளம்பசு. பெரிய. 7-1-1.
மடப்பாவையிடப்பால் கொண்டவன். திருநெடுந். 9.
மடல்- பனை முதலியவற்றின் ஏடு. சிறிய திரும. 78.
மடலூர்தல் – தான் விரும்பிய தலைவியை அடைய வேண்டி
பனை மடலால் செய்யப்பட்ட குதிரையின்
மீது தலைவன் ஏறி ஊர்தல் – திருவாய்.5-3-9, 10.
2695 மடவார் கேள்வன் – பெண்களுக்கு விரும்பத் தகுந்தவன்.
பெரிய. 6-10-10.
மண்கோட்டுக் கொண்டான் மலை – பூமியைப்
கோரப்பல்லின் மீது எடுத்துக் கொண்டு வந்த
பெருமானுடைய திருமலை. மூன்றாந்திரு. 45.

மண்டை- பிச்சைக்கலம். பெரியாழ். 1-8-9.
மண்டோதரி- இராவணன் மனைவி. பெரிய -10-2-8.
மண்டோதரி காதலன் – இராவணன். பெரிய. 5-4-5.
2700 மண்ணரசும் வேண்டேன் -இப்பூமியை அரசாளும்
ஆட்சியை யான் விரும்ப மாட்டேன். பெருமாள். 4-2.
மண்ணி-மண்ணியாறு. பெரிய. 4-10-4.
மண்ணியின் தென்பால் – மண்ணியாற்றின் தென்கரை.
பெரிய. 4-10-1.
மண்ணை – ஒரு படை வீடு, ஒரு நதி சிற்றூறு போல.
பெரிய. 2-9-3.
2705 மண்மதியிற் கொண்டுகந்தான் – பூமியை தனது புத்தி|
சாமர்த்தியத்தினால் மாவலியிடம் பெற்று
உவந்தான். மூன்றாந் திரு. 58.
104
மணத்தூண் திருமணத்தூண். அழகிய மணவாளன்
சந்நிதியில் கர்ப்பகிரகத்திற்குப் பக்கத்திலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திருமணத்தூண்” என்று பெயர். வடமொழியில் ஆமோதஸ்தம்பம் என்று வழங்கும். ஆமோதம் -மணம்.பெருமாள். 1-2.
மணவாளீர் – மணவாளப் பிள்ளாய். பெரிய. 10-8-7.
மணாட்டுப் புறம் திருமணமுறை. பெரியாழ். 3-8-4. மணிக்கதவம் – அழகிய கதவு.(அம் – சாரியை) திருப்பா-16.
2710 மணிமாடக் கோயில். பெரிய திரும. -132.
மணி மாடம் – திரு நறையூர். பெரிய. 6-6-1-10.
மணிமேகலை- நவமணிகள் பதித்த அரைஞாண். பெரியாழ். 3-2-3.
மணி வயிறு – அழகிய வயிறு. பெருமாள். 8-1.
மணை நீராட்டி – கட்டை (பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதிரோ) (பழமொழி) பெரிய. 11-6-6.
2715 மத்தகம் – சிரம். பெரியாழ். 4-5-2.
மத்தணி – வாச்சியம். திருப்பள்ளி. 9.
மத்த மலர் – மதமத்தம்பூ. நாச்சியார். 1-3.
மத்தளி – வாத்திய வகை. பெரியாழ்.3-4-1. மதலைத் தலை – தூண் மேலுள்ள சிறுதூண். பெரிய – 3-8-2.
2720 மதிக் கண்டாய்- புத்தி பண்ணிகிடாய். இரண்டாந்திரு.51. மதி கோள் விடுத்தல் – சந்திரனுடைய துன்பத்தைப் போக்கி
அருளுதல். நான்முகன்திரு. 12.

மதிகோள்விடுத்து – யம். பெரிய -8-3-3.
மதுகரம் -வண்டு. பெரிய. 8-7-4.
மது கைடவர்கள் – திருமாலின் நாபிகமலத்தில் இரண்டு
நீர்த்துளிகள் இருந்தன. அவற்றைத் திருமால்
நோக்க இரண்டு அசுரர்கள் ஆயினர். இவர்கள்
ஹயக்ரீவரால் கொல்லப்பட்டனர். பெரிய. 10-6-3.
2725 மதுசூதன் – திருமால். பெரிய. 5-5-6; திருவாய். 2-1-5, 10-4-7.
மதுரையார் மன்னன் – கண்ணன். நாச்சியார். 6-5.
மந்தக் கோவை -செவ்வியழியாத தொடையல்.திருவாய். 9-9-8.
மந்த முழவு ஓசை -வாத்தியங்களின் மந்தமான ஓசையை
பெரிய -5-10-7.
மந்திரக் கோடியுடுத்தி – நிச்சயதார்த்தச் சீலையை
அணிவித்து. நாச்சியார். 6-3.
2730 மந்திரப் படுதல் – மந்திரத்தால் கட்டுப்படுதல். திருப்பா -9.
மயக்கு – மயக்கத்தைச் செய்யும் பொருட்கள். முதல் திரு. 7.
மயர்வறுத்தேனே – அஞ்ஞானத்தை அறுத்தேன்.
திருவாய் 1-7-3.
2735
மயிர்க் கூச்சு – புளகம். பெரியாழ். 5-3-5.
மயிரும் முடி கூடிற்றில மயிரும் சேர்த்து முடிக்கும்படி
கூடவில்லை. பெரியாழ் -3-7-2.
மரக்காற் கூத்து – மரத்தைக் காலிலே கட்டிக் கொண்டு
ஆடுவதொரு கூத்து. பெரிய -11-5-6.
மரங்கள் போல் வலிய வஞ்ச நெஞ்சனேன் – மரங்களைப்
போலக் கடினமான நெஞ்சையுடையனாய்
வஞ்சனையே தொழிலாகவுடையவனாம். திருமா. 27.
மரவடியைத் தம்பிக்கு – பாதுகைகளைப் பரதனுக்குக்
கொடுத்து. பெரியாழ். 4-9-1.
மருத்துவப் பதம் – வைத்தியம் செய்யும் மருந்தின் பக்குவம்.
பெரியாழ்-3-7-10
மருத்துவன் சுடினும்- வைத்தியன் சூடு போட்டாலும்.
5-4. பெரிய. 9-4-3
மருதஞ்சாய்த்தது – இரட்டை மருதமரங்களை முறித்துத்
தள்ளினது. மூன்றாந்திரு. 51
2740 மருதர் மருத கணங்களான நாற்பத்தொன்பதின்மர்.
திருவாய் – 10-9-7; திருப்பள்ளி – 6, தே. 2-110-6
மாந்துறை, 7-50-2 புனவாயில்.
மருதரும் வசுக்களும் – மருத்கணங்கள் ஒன்பதின்மரும்.

அட்டவசுக்களும். திருப்பள்ளி -6.
மருந்தம் – மருந்து. திருவாய் -3-4-5.
மருமகன் சந்ததியை உயிர்மீட்டது -அபிமன்யுவினுடைய
புத்திரனான பரிக்ஷித்தை மறுபடியும்
பிழைப்பித்தது. பெரியாழ் -4-8-3.
மருவலர் – பகைவர். பெரிய -3-9-10.
2745 மருள் பாடுதல் – மயங்கும்படி ஒருவகைப் பாட்டைப்
பாடுதல். நாச்சியார். 9-8.
மல்லிகை வெண் சங்கூதும் – மல்லிகைப் பூவாகிய
வெண்மையான சங்கை ஊதும். பெரியாழ். 4-8-8.
மல்லி நாடி – திருமல்லி நாட்டை ஆண்டவள். நாச்சியார்
தனியன்.
மல்லை – திருக்கடல் மல்லை. திருநெடுந் -9, திருக்குறுந் -19.
மல்லைச் செல்வம்-தனக்கு மேலில்லாத செல்வம்.
திருவாய். 8-9-8.
2750 மல்லை மாநகர் – செல்வம் நிறைந்த பெரிய நகரமாகிய
வடமதுரை. பெருமாள்-7-11.
மல்லை மா முந்நீர் செல்வம் நிறைந்த பெரிய கடல்.
பெரிய. 4-3-6, 4-8-4, 8-6-4.
மல்லையர்கோன் – மல்லாபுரி என்னும் திருக்கடல்
மல்லையுள்ளார்க்குத் தலைவன். பெரிய. 2-9-1.
மலக்க மெய்த – கலங்கும்படி. திருவாய். 8-3-10.
2755 மலக்கு நாவுடையேற்கு – மிகு களிப்பாலே சுழலப்
பண்ணுகிற. திருவாய் -6-4-9.
மலங்க – அழிய. பெரிய -5-7-8.
மலடன் – மகப் பெறாதவன். பெரியாழ் -1-4-4.
மலரெட்டுமிட்டு- கருமுகை, கற்பகம், சௌகந்தி,
செங்கழுநீர், தாமரை, கைதை – பெரிய. 3-5-6. தே. 5-54-1. 10,
அதிகை வீரட்டம்; 4-18-8 – விடந்தீர்த்த பதிகம்.
மலினம் – தோஷம், குற்றம். திருவாய் -5-1-4.
2760 மலைத்த – தகையப்பட்ட. பெரிய -1-7-2.
மலைப் பண்டம் – மலையில் விளையக் கூடிய பல பொருள் பெரிய -3-8-3.
மலையரசன் – மலையமான். திருநெடுந் -7. மலையில் மிளிர்ந்து மின்னும் – பெரிய மலையின்
கொடுமுடியில் விளங்குகின்ற. பெரியாழ். 5-4-10. மலையேழும் – சப்தகுலாசலம். இரண்டாந்திரு -49.

2765மழலை – இளமை. திருவாய் -5-8-11.
மழறு – இனிமை. திருவாய். 6-2-5.
மழுவாளி – சிவபிரான், பரசுராமன். திருவாய். 9-3-10,
பெருமாள். 9-9.
மழுவேந்தி – பரசுராமன். திருநெடுந். 7.
மழைக் கண்ணி – நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற
கண்களையுடையவள். பெரிய. 2-7-8.
2770மழையே மழையே – ஓ மேகமே. நாச்சியார் -10-8.
மற்கடம் – குரங்கு. பெரிய -5-8-2.
மற்றிண்டோண் – மல்யுத்தத்தில் வலிமையான, தோள்கள்.
திருவாய். 10-4-11.
மறந்த காலத்தும் – மழை பெய்யாமல் போனாலும்.
பெருமாள். 5-7.
மறியோடுதல் – கன்றுகளைத் திருப்புவதற்காக முன்னே
ஓடுதல். பெரியாழ் -3-3-6.
2775 மறுக்கம் – மனக்கலக்கம். பெரியாழ். 3-3-6.
மறுக்கேலே – கலங்கப் பண்ணாதே. திருவாய். 4-9-5.
மறுகாலின்றி – மறுதரமின்றியே. திருவாய். 6-9-10.
மறையாளன் – அந்தணன். பெரிய- 5-8-5.
மறைவலார் – வேதத்தை நன்கு கற்றவர்கள். பெரிய -9-7-10.
278 மறை வாணர்கள் – அந்தணர்கள். திருவாய் -10-8-10.
மன்றது பொலியத்திருமால். பெரிய. 4-3-8.
மன்றாடிகள் – இரந்து கேட்டல். பெரியாழ். 4-5-7.
மன்றில் – நாற்சந்தி. பெரியாழ் -2-8-2.
மன்றில் தூற்றல் வெளியில் அயலாரை விட்டுத் தூற்றுதல்.
திருவிருத் 41.
2785 மன்றிலார புகழ் மங்கை – நாற்சந்தியிலும் பரவிய
புகழையுடைய வரும் திருமங்கை
நாட்டையுடையவர். பெரிய. 11-1-10.
மன்றில் குரவை – நாற்சந்தியில் கைகோத்துக் குரவை
கூத்தாடுதல். பெரிய. 11-2-1.
மன்று- வெளிநிலம். பெரிய. 9-6-4.
மன்று – நாங்கூர்ச் செம்பொன் கோயில். பெரிய. 4-3-8.
மன்னர் குருதி கொண்டு – அரசர்களின் இரத்தத்தாலே
பெரிய. 3-4-5.
2700மனக் குற்ற மாந்தர் – கெட்ட இதயத்தையுடைய மனிதர்.
இராமாநுஜ-5.

மனிசப் பிறவி -மானிடப்பிறவி. பெரிய -1-10-6.
மனிசர் – மனிதர். பெருமாள் 1-10; திருமா-32, நான்முகந்திரு. 38.
மனிசர்க்கா – மனிதர்க்காக. திருவாய். 1-5-8.
2795 மனு குலத்தார் – மநு வம்சத்தில் பிறந்த அரசர்கள்.
பெருமாள்.9-10.
மாக்கோல் – குதிரையை நடத்துகிற கோல். திருவாய். 3-2-3.
மாகம்- பெரிய ஆகாயம். பெரிய. 9-10-5.
மாகாயமாய் நின்றமால் – திரிவிக்கிரமனாய் நின்ற திருமால்.
மூன்றாந்திரு.13.
மாசதிரிது பெற்று- மா சதிர் இது திருவாய் -2-7-1.
2800மாசுடம்பின் வல்லமணர் – அழுக்குப் படிந்த
உடம்பையுடையவராய் வலியவந்து வாது
செய்பவர்களான சைனர்கள். பெரிய 7-4-5.
மாகுணாதோ – அழுக்கடையாதோ,திருவாய். 1 -5-2.
மாசூணும் – அழுக்கடையச் செய்யும். முதல் திருவந்.82.
மாடக் கவாடம் – சந்நிதியின் திருக்காப்பு. பெரிய திரும,73.
மாடக் கோயில்- மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக்
கோச்செங்கணான் கட்டிய கோயில். பெரிய திரும. 132,133.
2805 மாடத்துச்சி மிசைச் சூலம் – மாளிகைகளின் முடிமேலே
இருக்கிற சூலங்கள். பெரிய. 3-9-4
மாட நெற்றி மாளிகைகளின் முகங்கள். பெரிய. 3 – 8-2.
மாடு- செல்வம். பெரியாழ் -3-7-9. பெரிய திருவந் – 58.
மாண்- அழகு, மாணி. பெரிய -7-4-10, எழுகூற்றிருக்கை8,
திருவாய்-1-4-3, 1-8-6, 8-4-4.
மாணிக்கப் பண்டாரம் – மாணிக்க நிதிபோல் இனியவன்.
பெரிய – 5-2-5.
2810மாணிக்க மொட்டு – இந்திர நீலமயமான அரும்பு.
பெரியாழ் -1-9-1.
மாணுருவாய் வாமன ரூபி. பெரிய. 2-9-7.
மாத்தடுப்ப – பசுக்களை வெளியே போகாதபடி தடுப்ப.
பெரியாழ். 3-5-2.
மாத்தமர் பாகன் – யானைப்பாகன். பெரிய -4-6-7
மாதர்க்காய் – சத்தியபாமைக்காக. பெரிய. 6 – 8 – 7
2815 மாதாபிது – தாய் தந்தை. பெரிய திருவந். 70
மாதாவினைப் பிதுவை – தாய் போன்றவனும், தந்தை போன்றவனும். திருவிருத். 95.

மாதுளம் பூ- அணிவகை. பெரியாழ். 1-3-2, 1-5-10.
மாந்தேர் – மாத்தேர். பெரிய 1-5-2.
மாமணி மண்டபம் – மாணிக்க மண்டபம். திருவாய் 10-9-11.
2820 மா மருந்தம் – மருந்து. திருவாய். 3-4-5.
மாமழை மொக்குள் பெருமழைக் குமிழி. திருவாய். 4-1-6.
மாமான் மகளே- அம்மான் பெண்ணே. திருப்பா– 9
“மாமான்” சீவக. 484.
மாமி தன் மகனாப் பெறுதல். நாச்சியார். 2-1.
மாமீர் – அம்மாமீர் திருப்பா. 9.
2825 மாமுனி கொணர்ந்த கங்கை. பெரிய -1-4-8.
மாமை- நிறம். திருவாய். 7-3-4.
மாயக்கவி – கிருத்திரிமக் கவி. திருவாய். 10-7-1.
மாய வலவை – கபடியான கட்டுவிச்சி. திருவாய். 4-6-4.
மாயிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலை மலை. திருக்குறுந். 3.
2830 மார்க்கண்டன் – மிருகண்டு முனிவரின புத்திரன். நான்முகன்
திரு-15.
மார்வனை ஆர்வத்தால் மார்வம் – மார்பு. பெரிய. 11-7-4.
தே -2-113-3 சீகாழி.
மாரதர் – பெரிய தேர் வீரர். திருச்சந்த .89, பெரிய -2-1-2.
மாரன் – மன்மதன். இரண்டாந்திரு -23.
மாருதி – அனுமன். பெருமாள். 10-6.
2835 மாலபாதம் -எம்பெருமானுடைய திருவடிகள். திருச்சந்த.
மாலவன் – கரியன். பெரிய. 10-5-2.
மாலி -மாலி என்னும் அரக்கன். பெரிய. 2-10-4.
திருச்சந்த. 28. திருவாய் 9-2-6.
மாலிமான் – சுமாலி. திருச்சந்த. 28.
112.
2840 மாலிருஞ் சோலை – பெரிய. 2-7-7,9-2-8, 9-8-1-10,11-2-8
நாச்சியார் -4-1, சிறியதிரும. 74, பெரிய திரும. 125,
திருவாய் -2-10-1-10, பெரியாழ் -3-4-5.
மாவரும் திண்படை (மா – குதிரை) பெரிய -3-4-5.
மாவலவன் – ஆடலமாவென்னும் குதிரையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய. 10-2-10.
மாவலி – அசுரசக்கரவர்த்தி, பிரகலாதன் பேரன்
மூன்றாந்திரு – 18, முதல் திருவந். 50, சிறிய திரும. 46,
நாச்சியார் -4-93 8-6, பெரிய -1-5-6, 4-10-7,7-8-6, 8-8-5, 10-6-4,
11-5-10, 11-7-2, இரண்டாந்திரு.89, பெரியதிரும- 108,

திருவாய், 3-8-9.
மாழாந்து- ஒளி மழுங்கி. திருவாய். 2-1-6.
110
2845 மாற்றாண்மை- பகைத் தன்மையை யாளுகை. திருவாய். 2-1-7.
மாற்றரசர் – பகைவரான துரியோதனன் முதலிய அரசர்கள்.
பெரிய. 4-4-1.
மாற்றிலி பிரதி உபகாரத்தை விரும்பாமல் உதவி செய்தல்.
பெரியாழ் – 4-4-10.
மாற்றிலிசோறிடுதல் – உதவியை எதிர்பார்க்காமல்
விருந்தினர்களுக்கு அன்னம் அளித்தல். பெரியாழ். 4-4-10.
மாற்றுத்தாய் – சுமித்திரை. பெரியாழ்-3-9-4.
2850 மாறன் – நம்மாழ்வார். இராமாநுஜ. 19. திருவாய் -4-10-11.
மாறன் பசுந்தமிழ் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்
மொழி. இராமாநு – 64.
மாறன் பணித்த மறை நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதம்.
இராமாநு -46.
மாறனடி பணிந்துய்ந்தவன் – நம்மாழ்வாருடைய திருவடிகளைப்
பணிந்து உஜ்ஜீவித்த இராமாநுஜர். இராமாநுஜ-1.
மான் கொண்டதோல் – கிருஷ்ணாஜினம். பெரிய -6-8-1.
2855 மானம்- பெருமை. பெரிய -4-10-10.
மானவேற் கலியன் – சிறந்த வேற்படையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய -4-10-10, 9-1-10.
மானிடம் பாடல் என்னாவது – மனிதர்களைப் பாடுதலால்
என்ன பயன். திருவாய். 3-9-3.
மானிடம் பாட வந்த கவியேனல்லேன். திருவாய்.3-10-9.
மானிடம் பாடேன் – மனிதர்களைப் பாடமாட்டேன்.
நான்முகன் திருவந் – 75
2860 மிடுக்கு – சத்தி. பெரியாழ். 1-1-9, (தே) 7-17-10 நாவலூர்.
மிண்டர்- மூர்க்கர். திருமா -14. தே. 1-133-10. கச்சியே
கம்பம் 2.104.10. கடிக்குளம்.
மிண்டுதல் செறிதல். பெரிய -4-10-2.
மிலைக்க – கனைக்க. திருவிருத் – 94.
மிழற்றுதல் . இன்சொல்கூறல், சேஷ்டிதங்களைச் செய்தல், பெரியாழ். 4-5-9.
2865 மிளிர்ந்து பாய்ந்து. திருவிருத் -14.
மிளை – சிலுபுதல். பெரிய, 8-7-3. மிறை- மிடுக்குக்கள். நாச்சியார். 10-7.

மிறைத்து மேடாணித்து. பெரிய – 3-4-10.
மினுங்கநின்று -விளங்கும்படி நின்று. நாச்சியார். 14-2.
2870 மீட்சி – திரும்பி வருதல்.
2875
மீதியன் – மேற்பட்டவன்
மீமீதாடாவுலகத்து- மேலே செல்லாத உலகத்தில்.
நாச்சியார். 13-7.
முக்கட்பிரான் – சிவபெருமான். திருவாய். 7-6-1.
முக்கணம்மான் – சிவபெருமான். திருவாய் 10-7-7.
முக்கி- பெரிதும் வருந்தி. பெரிய திருவந். 69
முகத்துச் சுட்டி சுட்டி – நெற்றியணி. பெரியாழ். 1-4-1.
முகப்படாயெனனும் எதிர்ப்படாதிருக்கிறாய். திருவாய் -7-2-2.
முகப்பு – முன்பு. இரண்டாந்திரு -50, பெரிய – 10-6-10.
முகப்பே- முன்னே. பெரிய.4-8-4, 10-2-4, பெரியாழ். 4-1-8,
இரண்டாந்திரு. 69, திருவாய் -4-7-4, 6-3-11, 8-5-9, 9-2-8.
முகப்பே கூவி – சந்நிதி. திருவாய். 8-5-7.
2880 முசுக்கணங்கள் – முசு என்ற சாதிக் குரங்குகளின்
கூட்டங்கள். பெரியாழ் – 3-5-9.
முடித்தன்றே- நிறைவேற்றிக் கொண்டது அன்றே.
இரண்டாந்திரு. 22.
முடிவட்டம் – திருவபிஷேகம். மூன்றாந்திரு. 13
முண்டம் – சுபாவம். பெரியாழ். 1-8-9, பெரிய – 3-9-3, 5-1-8.
முண்டர் – சைவர். திருமா- 8.
2885 முத்கலன் – ஒரு புண்ணிய புருஷன்.
முத்தப்பன்- முத்துப் பால போக்கியன்.திருவாய். 6-3-9.
முத்தம் – அதரம். பெரியாழ். 3-3-2.
முத்தி வளர்த்து மோந்து. பெரிய – 10-7-12.
முத்திறத்து நீர் – கடல், திருச்சந்த – 82.
2890 முத்திறத்து வாணியத்து -சாத்விக, ராஜஸ, தாமசங்களான
பலன்கள், திருச்சந்த – 68.
முத்தின் குப்பாயம் – முத்தினாலான போர்வை.
நாச்சியார். 14-4.
முத்தின் கோடாலம் முத்தாலே தொடுக்கப்பெற்ற
வளைவான மாலை (ஆரம்- ஆம் ) பெரியாழ் -3-3-1.
முத்தீயர் – கார்கபத்தியம், ஆகவனீயம்,
தக்கிணாக் நிகளையுடையவர். பெரிய – 3-8-4
முத்தீ நான்மறை- முத்தீ-கார்கபத்தியம்,

ஆகவனீயம், தக்ககிணாக்கிநி, நான்மறை- ருக், யசுஸ்,
சாமம், அதர்வணம், எழுகூற் -13-14.
முத்தோ- சந்தோஷமோ. பெரிய திருவந். 27.
2895 முதல் – பாக்கியம். நாச்சியார். 10-7.
முதலையின் பல்விடம் – முதலையினுடைய பல் விஷம்.
திருப்பள்ளி. 2.
முதுகத்திடை – முதுகின்மேல். பெரியாழ். 4-4-5.
முதுகயம் – கடல். பெரிய – 8-5-6.
முது புணர்ப்பு – பழைய நிலைமை. நான்முகந்திரு. 54.
2900 முந்நீர் ஞாலம் – ஆற்றுநீர், ஊற்று நீர்,மழை நீர்
திருவாய். 3-2-1.
முந்தை- முற்பட்டவர். திருவாய் -3-3-2.
முப்பத்து முவரமரர் – முப்பத்து முக்கோடி தேவர்.
திருப்பா.20.
முப்புரி நூல் -பூணூல். பெரிய – 6-5-7.
மும்மதப்புனல் இருகபோலமும் மேட்ரமுமாகிற
மூன்றினின்றும் வடியும் மத ஐலம். பெரியாழ். 1-7-1.
2905 மும்மூர்த்தியுருவானவர்-திருமால். திருவாய் -7-6-3.
முயல் விட்டுக் காக்கை பின் போவதே. சிறியதிரும. 8,
தே 4-5-2. ஆரூர். பழமொழி
முயற்றி – உற்சாகம். பெரிய 1-8-5.
முயற்றியவாய் – முயற்சியையுடையவாய். பெரியதிருவந்.85.
முரன் – நரகாசுரன் மந்திரி. திருச்சந்த, 59, 104, மூன்றாந்திரு, 78, பெரியாழ். 1-5-4.
2910 முரி சுரியேறு பெரிய சுழித்தலையுடைய. மூன்றாந்திரு. 49. முல்லைப் பிராட்டி- முல்லைக் கொடி, பெண்பிள்ளை. பெரிய.5-2-7.
முழுவி -முத்தம். நாச்சியார். 13-5.
முழு சிவண்டாடிய துழாய்- வண்டு முழுசி ஆடிய துழாய். வண்டுகள் தேனிலே முழுகிக் கூத்தாடிய துளசி. பெரிய. -2-8-7.
முழுசுதல்- முழுகுதல், பெரிய. 2-8-7; 8-7-6. பெருமாள். 9-6.
2915 முழுவுதல் – முத்தமிடுதல். (திருக்கோவையார். 227.) முள் முளரிக் கூடு -தாமரைத் தண்டால் செய்த கூடு. பெரியதிரு. -84. முள்ளிச் செழுமலரோர் தூரான் – திருமங்கையாழ்வார்.

முளரிக் குரம்பை – தாமரையிலைகளையும், பூக்களையும்
கொண்டு வந்த செய்த கூடு. திருவிருத் -83.
முளரிக் கூட்டகம் – தாமரைப் பூவாலும், தண்டினாலும்
செய்யப்பட்ட கூடு. பெரிய – 11-1-6.
2920 முளிந்தீந்த வெங்கடம் – உலர்ந்து தீய்ந்து போன கொடிய
பாலைவனம். பெரிய -6-3-8.
முளையட்டி – திருமணத்தின் அங்கமாக நவதானியங்களைக்
கொண்டு பலிகை வைத்தல். பெரியாழ் -3-3-9.
முற்கலன் – ஓரடியான். விஷ்ணு தர்மத்தில் கண்டது இந்த
உபாக்கியானம்.திருமா. 12.
முற்றமூத்து – மிகவும் கிழத்தனத்தை அடைந்து. பெரிய -1-3-1.
முற்றல் யானை – குவலயாபீடம் என்னும் யானை.
திருச்சந்- 52.
2925 முற்றாவுருவாகி – முதிராத வடிவையுடையையாகி.
திருவாய். 8-3-4.
முற்றில் – சிறு முறம். பெரியாழ் -3-7-1, 1-2-19.
முற்றும் – முற்றுதும் என்பதன் குறுக்கல். தன்மைப் பன்மை
வினைமுற்று. பெரியாழ். 2 – 10 – 1-9.
முன்றிலெழுந்த முருங்கையிற்றோனாம். (பழமொழி)}
பெரிய. 10-9-2.
முன்றிற் பெண்ணை-வாயில். பெரிய. 11-2-1.
2930 முன்னல் – முன்னர். பெரியாழ் – 1 – 7 – 5.
முன்னுரை – பாரதம். பெரியதிரும. 59.
முனி – திருமால். திருவாய். 10 – 10 – 1.
முனிவர் வேங்கையின் அணார் சொறிதல் – பெரியாழ் -3-5-8.
முனைவன் – முக்கியமானவன், தலைவன்.
2935 மூக்கின்று – மூக்கின்றது. பெரிய திரும. 92
மூக்குறிஞ்சி – மூக்கை உறிஞ்சிக் கொண்டு. பெரியாழ். 2-2-2.
இராமாநுஜ தனியன்.
மூடநெய்- பால்சோறு மறையும்படி நெய் ஊற்றி. திருப்பா. 27
மூத்தவை – பெரிய அவை. பெரியாழ். 1 – 9-8.
மூத்திரப் பிள்ளை – அசுத்தனான பிள்ளை. பெரியாழ். 4-6-9.
3940 மூதறியும் அம்மனைமார் – பழம்பாடல்கள் தெரிந்த
பாட்டிமார்கள். சிறிய திரும. 19.
மூதுரை – பழமொழி. பெரியாழ். 3-7-4.
மூதுவர் – முற்பட்டவர். திருவிருத்2

மூப்புப்பற்றிய பதிகம். பெரிய. 6 -4 – 1 – 10.
மரி – மிடுக்கு. பெரிய. 6 – 3 – 8. மூலமாகிய ஒற்றையெழுத்து – ஓம் என்ற பிரணவம்.
பெரியாழ். 4-5-4.
மூவாயிர நான்மறையாளர் – தில்லை வாழ் அந்தணர்கள்.
பெரியாழ். 3-2-8.
மூவுருவும் – அரி, அயன், அரன். நெடுந்தாண்டகம். 2.
மூவெழுகால் -இருபத்தோரு படிகள். இராமாநுஜ 56.
பெரிய. 5-3-1, 6-7-2-8-8-6-9-1-6.
மூழ்க்கச்சூழ்ந்து- அறிவையழுத்த. திருவாய். 10-3-2.
2950 மூழ்த்த நாள் – பிரளய காலம் .பெரிய 6 – 8-2.
மூழை- அகப்பை.பெரியாழ் – 3-7-4.
மூன்று என்ற எண்ணுள்ளபொருள்கள் . திருச்சந். 2, 4, 77.
மூன்று தண்டர் – துறவிகள். திருச்சந்த – 52.
மூன்று நாட்டரசராகவும் கூறப்படுதல்,பெருமாள். 2 – 10.
114
2955 மூன்றெழுத்துடைய பேர் – கோவிந்தன் என்ற பெயர், திருமா. 4. மூன்றேழுத்துள்ள மந்திரங்கள் – ஓம் என்னும் விரணம்.
பெரியார் 4 – 7 – 10.
மெச்ச ஊது – மெச்சூது. அகரம் – தொகுத்தல் விகாரம்.
பெரியாழ்2 – 1 – 1.
மெத்தை – படுக்கை. பெரியாழ். 5 – 1 -7. மெய்ஞ்ஞானம் – தத்துவ அறிவு. நான்முகன்திரு – 71.
2960 மெய்த்தன் – மெய்யே. திருச்சந்85.
மெய் நாவன் – உண்ைைம பேசுபவன். பெரியாழ். 4-9-11. மெய்ப்பிணக்கிடுதல் – உடல் சேர்க்கைசெய்தல்.
நாச்சியார். 2 -9. மெய்யடியார்கள் – உண்மையான அன்பையுடைய
பாகவதர்கள் பெருமாள். 2 – 1 – 10. மெய்யடியான் – உண்மையான தொண்டு செய்பவன்.
பெரியாழ். 4 -9 – 11
2965 மெய்யம் – இத்திருப்பதி திருமயம் இரயில் நிலையத்திலிருந்து
அரைகல் தொலைவில் உள்ள. பூசித்துப் பேறு பெற்றோர் – சத்திய தேவதையும். அனந்தனும். சயனத்திருக்கோலம். பெரிய. 2-5-8; 9-2-3; 10-1-5. மெய்ய மலையாளன் – மெய்யமலையை இருப்பிடமாகக்
கொண்டவன். பெரிய. 5 – 5 – 2; 11 – 7-5.
மேகக் குழாங்கள் மேகக் கூட்டங்கள். திருவாய். 9-5-7.

மேகின்ற – விரும்பித தழுவுகின்ற. திருவிருத் – 83.
மேகின்றாய்- மேவி நின்றாய். திருவாய் – 2 -6 – 10.
2970 மேம் பொருள் – ஜனங்கள் விரும்புகின்ற பொருள். (லௌகிக
பதார்த்தங்கள்) திருமா – 38.
மேய்க்கிய – மேய்க்க. திருவாய்.10 – 3-7.
மேய்க்கின்று – மேய்க்கும்பொழுது. திருவாய்- 10 -3 – 7.
மேல் தோன்றி – செங்காந்தள். நாச்சியார். 10 – 1.
மேலாப்பு – விதானம், மேற்கட்டி. நாச்சியார் – 8 – 1.
2975 மேலெழுந்ததோர் வாயு – ஊர்த்துவ உச்சுவாசம் (மேல்
4-5-4. மூச்சுக் காற்று பெரியாழ்
மேலெழப் பாய்ந்திட்டு – காளியன் என்னும் பாம்பின் தலை
மீது நின்று. பெரியாழ் – 2 – 10 – 3.
மேலையகம் – யசோதையின் வீட்டிற்கு மேலண்டை வீடு.
பெரியாழ் – 2 – 9 – 5, பெரிய. 10-7-2.
மேற்கிளைக் கொண்டிருமி – மேலான த்வனியோடு இருமல்
மேலிட்டு, பெரிய. 1 – 3 – 2.
மேன்மக்கள் – நித்திய சூரிகள். திருவாய். 4 -3 – 9.
2980 மேனகை – தேவலோகத்து மகளிருள் ஒருத்தி.
பெரியாழ்- 3 -6 -4.
மேனிக்குப் பூசுஞ் சாந்து – திருமேனிக்குப் பூசத் தகுந்த
பரிமள திரவியம் திருவாய் – 4-3-1.
மைத்த சோதி -மையின் தன்மைவாய்ந்த ஒளி.
பெரிய – 1 – 3 -6.
மைத்துனன்மார் – அத்தைபிள்ளைகள், பெரியாழ் -4-9-6.
மைதிலி- சீதை, பெரிய. 3 -1-8. பெருமாள். 8-4.
2985 மைந்தன் – கண்ணன். நாச்சியார் -5-1.
மைப்படி – கரிய திருமேனி. திருவிருத். -94.
மையன்மை – மயக்கம். பெரியாழ். 2-3-3, 3-1-4.
மையாக்கும் – மோகியர் நிற்பாள். திருவாய். 4-4-6, 7-2-3.
மொக்குள் – மொக்கல், நீர்க்குமிழி.
2990 மொட்டு- அரும்பு.
மொய்குழல் – நெருங்கிய கூந்தல்.
மொய்ம்பு – வலிமை.
மோக்கம் – மோட்சம். திருவாய். 3-4-7.
மோடி காளி. – திருச்சந். 53, இராமாநுஜ.22.

2995மோடு பருப்பார் – வயிறு பருப்பவர்கள். திருவாய். 3-5-7.
மோய் -தாய் . பெருமாள் -7-6, 9-9.
மோழை – குமிழி, நீர்ப்பெருக்கு, கீழாறு, துவாரம்.
பெரியாழ் 3-7-4, பெரிய -4-4-9, திருவாய் -7-4-1,
தே. 7-7-8. எதிர்கொள்பாடி
மௌவல்- மல்லிகையில் ஒருவகை.
யமுனைக்கரை – நாச்சியார். 12.
யமுனைத்துறைவன் ஆள வந்தார். இராமாநுஜ.21.
3000 யவர் -எவர். திருவாய் – 3-4-9-10.
யவரும்- எல்லாச் சேதனரும். திருவாய் – 2-2-6.
யாய் – தாய். பெரிய -10-5-8.
யார் முகப்பும்-எல்லார் முன்பும். இரண்டாந்திரு -50.
யாவகையுலகம் -எவ்வகைப்பட்ட உலகம். திருவாசி.
3005யோகம் – மருந்து. கண்ணுக்கு விஷயமாகிய வஸ்து.
நாச்சியார் -12-5.
-4-7.
116
யோகு செய்தல் – உலகைக் காப்பாற்ற உபாயஞ் செய்தல்.
திருவாய் -5-4-11; 7-8-4; தே -5-81-10 பாண்டிக் கொடுமுடி
வக்கரன் வாய்முன் கீண்ட – தந்தவக்ரனுடைய வாயைக்
கிழித்த. பெரிய. 5-9-5.
வக்கரனைக் கொன்றான் கண்ணன். மூன்றாந்திரு. 21.
தே 4-56-6. ஆவடுதுறை.
வகுக்கின்று – வகுப்பதாயிருக்க. திருவாய். 1-4-9.
3010 வங்கக் கடல் – கப்பல்களையுடைய திருப்பாற்கடல்.
திருப்பா- 30.
வங்கத்தின் கூம்பேறு பறவை – கப்பற்காகம். பெருமாள்.5-5.
வசவு- நிந்தனை. நாச்சியார் -12-8.
வசிட்டன் – இக்குவாகு வம்சத்துப் புரோகிதர். பெருமாள். 9-7.
வசுக்கள் – அஷ்ட வசுக்கள். திருச்சந். 6. திருவாய். 10-9-7. வசுதேவர் – இவர் சூரசேனன் என்பவனுடைய புதல்வர். இவரது மனைவி பெயர் தேவகி. திருமால் இவருக்கு மகனாகத் தோன்றினார். பெரிய -6-8-10. வட்கு – லஜ்ஜை. திருவாய் -7-2-3.
வட தடம் – வடக்குத்திக்கிலுள்ள திருப்பாற்கடல்.
பெரியாழ். 5-4-10.
வடபுலக் கோன் வடநாட்டு அரசன். பெரிய 6-6-5.
வட மரத்திலை மேல் பள்ளி – ஆலமரத்தின் இலைமேல்
பள்ளி கொண்டவன். பெரிய. 6-6-1,
தே. 1-20-5 வீழிமிழலை

3020 வட மலை – திருவேங்கட மலை. பெரிய- 5-6-7.
வண்டமிழ் – அழகிய தமிழ். பெரிய – 1-8-10.
வண்டமிழ் நூல் – திருவாய் மொழி. திருவாய். 4-5-10.
வண்டமிழ் மாமுனி – அகத்தியர். பெருமாள். 10-5.
வணங்கேனேலும் – வணங்கேனாயினும் திருவாய். 4-3-4.
3025 வதரி – பதரி என்ற வடசொல் வதரி என்று திரிந்தது. பதரி –
இலந்தை. இத்திருப்பதி இமயமலையிலுள்ளது. பதரீ
நாராயணன் என்னும்நாராயணன் ஆவார். சிறிய
திரு. 74, பெரிய. -1-3-1-10. பெரியாழ். 4-7-9.
வதரியாச்ரிராமம்- பெரிய. 1-4-1-10.
வதுவை -மணம் .நாச்சியார். 6-2.
வதை செய்தல் – கொலை செய்தல். நாச்சியார் – 8-9.
வந்திக்கு மற்றவர் – பலாத்காரமாக அபகரிக்க. பெரிய. 7-4-5.
3030 வந்தி பற்றும் வழக்கு- வருத்தி அபகரித்துக் கொண்ட
நியாயம். நாச்சியார் -9-3.
வந்தீயாய் – வந்து கண்களுக்கு உன்னைக் காட்டியருள
வேணும். திருவாய் -4-7-2.
வம்பர் -புதியர். திருவாய் -3-5-3.
வயிச்சிரவணன் – குபேரன். பெரியாழ். 1-3-5.
வயிரக்கடிபிட்டு- வச்சிரகுண்டல மணிந்து. பெரியாழ். 2-3-4.
3035 வயிரமேகன் – ஓரரசன். பெரிய. 2-8-10.
வயிர வழக்கு – சத்துருத்வ முறை. நான்முகன்திரு. 25.
வயிற்றினகம் படியில் – திருவயிற்றின் உட்புறத்தில்.
பெரிய. 11-6-8,9.
வயிற்றிற்றொழுவைப் பிரித்து – கர்ப்ப வாசத்தைக் கழித்து.
பெரியாழ். 5-2-3.
வயிறசைதல் – வயிறு தளர்தல். பெரியாழ். 2-2-1.
3040 வயிறடித்தல் – வயிற்றில் மோதிக் கொள்ளுதல்.
சிறிய திரும. 34.
வயிறு மறுக்குதல் – வயிற்றைக் கலக்குதல். பெரியாழ். 3-3-6.
வரகுண மங்கை – ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 1 /2 கல்
தொலைவில் உள்ளது. அக்னி தேவனுக்கு அருள
புரிந்தவன். வீற்றிருக்கும் திருக்கோலம். திருவாய்.9-2-4.
வரண்ட – தள்ளப் பெற்ற. பெரிய -4-5-10.
வராகவதாரம் – திருமால் காட்டுப்பன்றி வடிவம் எடுத்து
நீரிலே மூழ்கியிருந்த நிலமகளை வெளியில்
கொண்டு வந்தார். பெரிய -11-4-3.

3045 வருத்தித்தல் – சிருஷ்டித்தல். திருவாய் -2-2-8.
வருமை- பரலோகம், மறுமை. திருவாய். 3-7-5.
வல்லரட்டன் – பெருமிடுக்கன். திருவாய். 10-1-9.
வல்லவாழ் – திருவல்லா என வழங்கும் திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 9-7-2.
வல்லாளன் – கருடன். முதல்திரு. 80.
118
3050 வலவை பிறர் ஏற்றுக் கொள்ளும்படி பேசுபவன்.
திருவாய். 4-6-4.
வலி செய்ய- பீடிக்க. பெரிய. 3-6-4.
வலிப்படுதல் – பலாத்காரத்திற்கு உட்படுதல். பெரியாழ். 3-5-2.
வழுவிலாவடிமை – குற்றமில்லாத அடிமை. திருவாய். 3-3-1.
வள்ளி கொடி.பெரியாழ். 3-2-7.
3055 வள்ளி கொழுநன் – முருகன். பெரிய. 6-7-6.
வள்ளி நுண் மருங்குல் – கொடி போன்று நுட்பமான
இடை. பெரிய 2-7-5.
வளர்ந்தவன் – கண் வளர்ந்தவன். பெரிய – 5-6-4.
வளைவணன் – பலராமன் – பெரிய – 8-5-2.
வற்பு – வலி. பெரிய. 5-1-4.
3060 வன மாலை – திருத்துழாய் மாலை, காட்டிலே பூப்பறித்துக்
கட்டிய மாலை. நாச்சியார். 13-3, 14-2.
பெரிய. 3-4-9, 5-5-6, பெருமாள் 69.
வளாய்க் கொள்ள – சூழ்ந்து கொள்ள. திருவாய் -8-7-7.
வளை கொண்ட வண்ணத்தன் – சங்குபோல
வெண்மையான நிறத்தையுடையவன். பெரிய -6-9-3. வளைத்து வைத்தேன் – தடையிட்டு. திருவாசகம்.
வாகை நெற்று – வாகை மரங்களின் நெற்றுக்களானவை.
பெரிய. 1-7-8.
3065 வாசிகை – முத்து மாலை, திருவிருத், 50,68 பெரியாழ் 1-3-7; 2-4-4.
வாசி வல்லீர்- தாரதம்மியம் அறிய வல்லீர், வேறுபாடு
அறியவல்லீர். பெரிய -4-9-4; 4-9-9. தே. 1-92- வீழி மிழலை, 1-3-10 வலிதாயம்.
வாட்டாறு – திருவனந்தபுரத்திலிருந்து 28 கல் தொலைவில் உள்ளது. இத்திருப்பதி வாட்டாறு என்னும்
நதியால் பெயர் பெற்றது. திருவாய் 10-6-1-10. வாணபுரம் வாணாசுரனுடைய நகரம். திருவாய். 7-10-7.

வாணன்- பலியின் குமரன். இவனது நகரம் சோணிதபுரம்.
கம்சனுக்கு நண்பன் . இவனுடைய மகள் உஷை.
இவன் பூசித்த லிங்கம்பாணலிங்கம். திருநெடுந். 20,
மூன்றாந்திரு. 80, 92, நான்முகந்.56, திருவிருத். 78,
திருச்சந் 53,70,71, பெரியாழ். 5-3-9, பெரிய 3-4-3,
5-1-7, 6-7-6; 9-7-3; 11-4-5, திருவாய் 2-4-2, 3-8-9,
3-10-4, 4-8-9, 6-4-8.
3070 வாணன் மகள் – உஷை. பெரிய திரும. 60,64.
வாணாள் – வாழ்நாள் என்பது வாணாள் என மருவிற்று.
பெரிய – 1 – 1-6.
வாணிபம் – பயன். பெரியாழ் – 3 -7-9. தே, 7 – 35-3.
புறம்பயம்.
வாணியம் வாணிபம். திருச்சந்த 68.
வாத மா மகன் – அனுமன். பெரிய – 5 -8-2.
3075 வாதித்தல் – பாதித்தல். நாச்சியார் – 2-3.
வாதிப்புண் – துன்பமடைந்த. பெரியாழ், 2 – 10 – 8.
வாதை- பாதை துன்பம். நாச்சியார் – 2-3.
வாமனன் – காசியபருக்கு அதிதியிடம் அவதரித்தவர்.
விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம், இவர் மாவலியின்
செருக்கடக்க மூவடி மண் வேண்டினார். மூன்றாந்திரு – 18.
வாமான்றேர்ப் பரகாலன் தாவுதலையுடைய குதிரைகள்
பூட்டிய தேரையுடைய திருமங்கையாழ்வார். பெரிய. 7-4-10.
3080 வாய்க்கோட்டம் – வாக்கின் அநீதி. பெரிய. 4 – 3 – 8.
வாய் கொண்டு மானிடம்பாடுதல் – வாக்கைக் கொண்டு
மனிதரைப் பாடுதல். திருவாய். 3 – 9 – 9
வாய்த்த நன்மக்கள் – சிறந்த சீடர்கள். பெரியாழ். 1 – 9 – 10.
நாச்சியார் – 6 – 11.
வாய் நேர்ந்து – கொடுப்பதாக விண்ணப்பித்து. நாச்சியார் 9-6.
3085 வாயுறை – அறுகம்புல். திருப்பள்ளி. 8.
வாரம் அன்பு – பெருமாள். 2 -7. 5,
பெரிய. 2 – 10 – 5.
வாரமாக ஓதுதல் – திருவஷ்டாக்ஷரத்தை அன்புடன்
சொல்லுதல். திருச்சந்த 78
வாராகம் – பன்றி. பெரிய – 4 – 7 – 8.
வாலாட்டுதல்- செருக்கான செய்கை.(அஹங்காரம்)
நான்முகன் திருவந் 38.

3090 வாலி – இந்திரன் குமாரன். இவன் தம்பி சுக்ரீவன்.
நாள்தோறும் எண்திசைக்கடலிலும் தீர்த்தமாடிச்
சிவபூசை செய்பவன். நான்முகந்திரு. 85, பெருமாள் 10 -6.
வாலிதன்றன் – வாலியின் தம்பியான சுக்கிரீவன். திருச்சந் – 81.
வாலோலை கட்டி -வாலிலே ஓலையைக் கட்டி.
பெரியாழ். 4-7-5.
வாளி – அணிவகை. பெரியாழ். 1-5 – 10.
3095
3100
வானமாமலை – நாங்கு நேரியில் கோயில் கொண்டுள்ள|
பெருமாள்(சிறப்புப் பொருள்; பரமபதத்திலே பெரிய
மலைபோல வீற்றிருக்கும் திருமால) திருவாய். 5 -7 – 6.
வானரக்கோன் – வாலி. நான்முகன்திரு. 85.
வானவர்கோன் பாழி – திருமாலின் இருப்பிடமான பரமபதம்.
வானவர் தமக்கு- தேவர்களுக்கு. பெரிய -5-7-9.
வானிளவரசு -பரமபத இளவரசு . பெரியாழ் – 3 -6-3.
விக்கிரமம்- வீரச்செயல். பெரியாழ் – 5 – 4 -6.
விகிர்தம் – ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல். திருவாய். 3-10-9. விகிர்தமாதர் – வேறுபட்ட ஸ்திரீகள். பெரிய – 3 – 4-5.
விச்சாதரர் – வித்யாதரர்கள். திருப்பள்ளி -7.
விச்சைக்கிறை – சர்வஞ்ஞன். சமணர்கள் சர்வஞ்ஞர் என்று
ஒரு தெய்வமே கல்விக்குக் கடல் என்று
பணிவார்கள். பெரிய – 2 – 6 – 5.
3105 விசாதி -வியாதி.திருவாய்.5-2-6, நான்முகன் திரு. 52.
விசித்திரப்படுதல் – அமைத்தல். நாச்சியார். 2 – 5.
விசித்திரம் – அழகு. திருவாய் – 7 – 8-2.
விசும்பிலார் – பிரமன் முதலியோர். முதல் திருவந். 79. விசுவாமித்திரர் – காதியின் புத்திரர். ரிக் வேதத்தின் மூன்றாவது கண்டத்தில் அடங்கியிருக்கின்ற
கீதங்களுக்கெல்லாம் கர்த்தா. திருப்பள்ளி – 4.
3110 விட்டு – விஷணு. பெரியாழ் – 2-3 -5.
விட்டு சித்தன் – கருடாம்சம். புரச்சூடவைணவருடைய
மகனார் . கோதையின் வளர்ப்புத் தந்தை.
நாச்சியார் – 14 -10.
விடத்தேள் எறிதல் – விஷத்தையுடைய தேள் கொட்டுதல்.
நாச்சியார். 3 – 6.
விடமங்கள் – வைஷம்யங்கள். நேர்மையான
காரணமில்லாமல் வேறுபடுத்துதல். திருவாய். 7-8-3.

விடிவை சங்கொலிக்கும் – காலையில் சங்குமுழங்கும்.
திருவாய். 6 – 1 – 9.
3115 விடைக்கொடி – பாம்புக் கொடியோன். (பல்லவன்
நாகலோகம் சென்று வந்ததன் காரணமாக
“பாம்புக் கொடியோன்” என்றும வரலாறு
உள்ளது .பெரிய. 2 -9-6.
விடைச்செறுமணியோசை – எருதின் க்ருரமான மணிஓசை.
பெரிய. 8-5-7-9.
விடைமணிக்குரல் – எருதுகளின் கழுத்தில் கட்டியுள்ள
மணிகளின் ஓசை. திருப்பள்ளி – 4.
விடையான் – சிவன். பெரிய. 7 – 6 – 3.
விடையேழ் அடர்த்தது – இரண்டாந்திரு. 63, திருச்சந். 92,
பெரிய திருவந். 48, திருவாய். 1 – 5 – 1, 3 – 5 – 4, 4 – 2-5.
3120 விண்களகத்திமையவர் – பரமபதத்தில் உள்ள நித்திய
சூரிகள். பெரிய . 6 – 9-10.
விண்ட குன்று. பெரியாழ் -1 – 1-5.
விண்ணகர் பரமபதம். மூன்றாந்திரு – 61, முதல்திருவந். 77.
பெரிய திரும – 113, பெரிய – 6 – 1 – 1 – 10, 10 – 1 – 8
(ஒப்பிலியப்பன் சந்நிதி)
விண்ணகரம் – ஒப்பிலியப்பன் சந்நிதி. மூன்றாந்திரு – 62,
சிறிய திரும. 72.
விண்ணப்பம் – வேண்டுகோள். நாச்சியார் – 8 – 7, 10.
3125 விண்ணி – வெண்ணி. பெரிய – 6 – 6 – 3,4.
விண்ணுளார் – திருவாய். 7-1 – 6.
விண்மிசை – பரமாகாசம்.திருவாய். 6 – 4-10.
விததகன் விட்டுசித்தன் – பெரியாழ் – 1 – 4-10.
வித்துமிட வேண்டுங்கொலோ – நான்முகன்திரு. 23.
3130 வித்துவக்கோடு -பட்டாம்பி இரயில் நிலையத்திலிருந்து
ஒருகல் தொலைவில் உள்ளது. பெருமாள். 5.
விதலைத் தலை – நடுங்கிக் கிடந்த சமயம். பெரிய – 3 -8 – 2.
விதி பாக்கியம். திருமா – 8.
விதிர் விதிர்த்து – உடம்பு நடுங்கி, பெரியாழ்4-5 -4.
விதிவாய்க்கின்று – பகவானுடைய தயை கிட்டுமிடத்து
திருவாய். 5 – 1 – 1.
3135 விந்தமேய கன்னி -விந்திய மலையில் வீற்றிருக்கின்ற
துர்க்கை. திருநெடுந் – 7.

விபரீதம் – பிரதி கூலம்.திருவாய் 6 -2 -3.
விபீடணன் – விச்சிரவசு முனிவரின் மகன். இராவணன் தம்பி
அயோத்தியிலிருந்து திரும்பும் போது
ஸ்ரீரங்கத்தில் திருமாலைப் பிரதிட்டை செய்தான்.
பெரியாழ் -4 -9 – 2. பெரிய – 6-8-5.
வியவு -வேறுபாடு.திருவாய். 7-8-3.
வியாழம்- பிரகஸ்பதி. திருப்பா. 13.
3140 வியூகம்- படைவகுப்பு பெரிய, 6 – 5 – 8.
விராது விராதன். பெருமாள். 10-5.
விருத்தம் – கூட்டம். நாச்சியார் 14 -7.
விருந்தாவனம் – துளசி வனம்.யமுனைக்கரையில் கண்ணன்
இளமையில் விளையாடிய காடு. நாச்சியார் 14 – 1-10.
வில்லவன் – வில்லவன் என் பகை அரசன். பெரிய – 2-9-8.
3145 வில்லார் மலி வேங்கடம்- வேடர்கள் நிறைந்த
திருவேங்கடம். பெரிய – 1 – 10 – 10.
வில்லார் விழவு – கம்சன் செய்ததநுர்யாகம். பெரிய – 6-7-5.
வில்லி புதுவை நகர் – ஸ்ரீவில்லி புத்தூர். நாச்சியார் – 13 – 10.
வில்லி புத்தூர் கோன் – பெரியாழ்வார். நாச்சியார். 6 – 11. விலங்கு நூலர் – பூணுலைத் தரித்தவர். திருச்சந். 56.
3150 விலாவறச் சிரித்திடுதல் – அளவு கடந்து சிரித்தல். திருமா 34. விலைக்காட்படுதல் – வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு
அடிமைப்படுதல் . நான்முகன்திரு. 52. விலையாள் – அடியவள்(வேலைக்காரி). பெரிய. 5 – 5-2. விழலுகுத்தல் – விசுவாமித்திரத்தைக் கயிறாகத் திரித்துக் கட்டுதல் பெருமாள். 9 -7. விழிக்குங் கண்ணிலேன் – உன்னைத் தவிர வேறு
ஒருவரையும் ரக்ஷகமாக மதிக்கவில்லை.
பெரியாழ். 5 – 1 – 2.
3155 விள்கை விள்ளாமை – விட்டுப் போதல், விடாது ஒழிதல். திருவாய். 1 – 6 – 5.
விளங்கனி – கபித்தாசுரன். பெரிய. 3 – 9-7.
விளரிக்குரல் – விளரி என்னும் இசைக்குரல். விளரி
என்பதற்கு மத்யமஸ்வரம் என்று பொருள் கொள்ளலாம். திருவிருத். 83.
விளவின்காய் – இரண்டாந்திரு – 19,23,100; பெரிய. 9 – 8 – 6. விளிந்தீய்ந்த மாமரம்- தள்ளப்பட்டுக் கெட்டுப்போன பெரிய மரம். பெரிய. 6 – 3 – 8.

3160 விளையாட்டம்- விளையாடுதல் பெருமாள். 7 – 9.
விற்பெருவிழவு தநுர்யாகம் என்ற சிறந்த உற்சவம்.
பெரிய. 2-3-1.
வினதைச் சிறுவன் – கருடன். நாச்சியார். 14 – 3.
வினவப்பெறுதல் – ஆராய்தல். பெரிய. 10 – 6 – 5.
வினையாட்டியேன் – பாவத்தையுடையேன்.
திருவாய். 6-8 – 1,7 – 7-3, 6 -8-7.
3365 வீடுதரும் மோட்சத்தைத் தரும். திருவாய். 3 – 3 -7.
வீதியார வருவானை – தெரு நிறைந்து வருகின்ற கண்ணன்.)
நாச்சியார் – 14 -5.
வீரணிதொல்புகழ்- வீரத்தை ஆபரணமாக உடையவரும்,
நிலையான புகழை உடையவருமான
பெரியாழ்வார். பெரியாழ். 4 -6-10,
வீழ்ச்சி- விழுந்து. நாச்சியார். 8 – 7.
வெஃகணைக் கிடந்தது – திருவெஃகா என்னும் திருப்பதியில்
சயனத்திருக்கோலம். திருச்சந். 63,64
3170 வெஃகா – காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. சயனத் திருக்கோலம். திருநெடுந். 8,13,14,
பெரிய திரும. 70,128. மூன்றாந்திரு. 26,62,64,76.
பெரிய 10 – 1 -, முதல்திரு 77, நான்முகந்.36.
வெங்கலி – கொடிய கலி. பெரியாழ். 4 – 7-10.
வெங்கடத்துக் களிறு -கொடிய பாலைவனத்திலுள்ள
யானை. பெரிய – 6-3-8.
வெட்டென்றிருத்தல் – இசைந்திருத்தல். பெரிய. 5 -9 – 7.
வெண்கலப் பத்திரம் வெண்கலத்தால் செய்த இலை.
(பத்திரம் – இலை.) பெரியாழ். 1 – 9-5.
3175 வெண்ணிப்போர் – பெரிய. 6-6 – 3, 4.
6-51-4 வீழிமிழலை; 5-17 – 2, 3. வெண்ணியூர். 5 -65 – 4.
பூவனூர்.
வெண்ணெய் தொடுவுண்ட வெண்ணெயை வஞ்சனையால்
எடுத்து உண்ட. திருவிருத். 91
வெண்ணெற்கு- வெண்மையான நெல். பெரிய – 3 – 8 – 7.
வெந்தாரென்பும் – பிரேதங்களின் எலும்பு. பெரிய – 1 -5 -8.
வெள்கி- வெட்கப்பட்டு.திருமா – 34.
3180 வெள் வரைப்பு – கிழக்கு வெளுக்கை. பெரியாழ்.3 – 8 – 9.
நாச்சியார். 1 -2.
வெள்ளச்சுகம் – அளவு கடந்த சுகம்.திருவாய் 7- 3-1

வெள்ளறை- வெண்மையான பாறைகளால் இயன்றமலை.
(சுவேதாத்ரி எனப்படும்) சிறிய திரும. 70, பெரியாழ்.
1-5-8, 2 – 8 – 4, 5 பெரிய திரும – 117.
வெள்ளித்தலை வெள்ளித்தண்டு. பெரியாழ்- 1 – 2 – 3.
வெள்ளிப் பெருமலை- பெரிய வெள்ளிமலை.
பெரியாழ். 1 – 7-5.
3185 வெள்ளியார் – சுக்கிரன். பெரிய. 4-10 – 7, 9 – 7-9.
வெள்ளியெழுந்து -சுக்கிரன் உதயமாகி. திருப்பா. 13.
வெள்ளுயிராக்குதல் – சாத்துவிக்னாக ஆக்குதல். திருப்பல். 8.
வெள்ளெனல் – வெளுத்தல். திருப்பா – 8.
வெள்ளேறன் – வெண்மையான ரிஷபத்தையுடைய உருத்திரன். திருவாய். 2 – 2 – 10.
3190 வெள்ளை நுண்மணல்- வெண்மையான நுட்பமான மணல்.
நாச்சியார் – 1 – 2.
வெள்ளை விளி சங்கு – வெண்மையானதும் எல்லோரையும் அழைப்பதுமாகிய சங்கு. திருப்பா – 6. பெரியாழ். 4 – 1 – 7.
வெளிய நீறு – அஞ்சன சூர்ணம். திருவாய் – 4-5 – 6. வெற்பு சம்பந்தமான திருமால் செயல். திருச்சந். 39. வெறி -வெறியாட்டு. திருவாய் – 4 – 6 – 11, திருவிருத் – 20.
3195 வெறியோடிற்று வெறிச்சென்று இருக்கிறது.
பெரியாழ். 3 -8 – 1, திருவாய். 4 – 6 – 1, 10. வேகவதி – காஞ்சிபுரத்தில் முன்னாளில் ஒடிய ஓர் ஆறு நான்முகன் செய்த வேள்வியை அழிக்கவர நான்முகன் திருமாலைக் கொண்டு அடக்கினான். பெரிய திரும – 52 – 55.
வேங்கடத்தான் திருமலலையில் எழுந்தருளியிருப்பவன். இரண்டாந்திரு . 28,45, மூன்றாந்திரு. 39,40. வேங்கடநாடர் – திருமலையை நாடியவர். நாச்சியார். 10-5.
3200 வேங்கடம் – நாச்சியார். 8 – 4 – 2, 10 – 8, பெரிய – 1 – 10-1 – 10, 2-1-1-10,5-5-1,7-3-5, 8-2-3,9-7-4, முதல்திரு 26,99, இரண்டாந்திரு – 46,53, மூன்றாம்திரு. 14,26,30,32,45,59,61,62,68,69,
திருச்சந் 60-81.திருவிருத். 60,81, பெரிய திரும. 124. வேங்கடமலை – பெரிய. 4 3-8.
வேங்கடவன் – இரண்டாந்திரு – 72, நாச்சியார். 1 – 1. வேங்கடவாணன் திருவேங்கடமலையில் இருப்பவன். பெரியாழ். 1 – 4 – 3, 1 – 8-8, 2 – 6 – 9,

3205 வேங்கடவேதியன் – வேங்கடமலையிலுள்ள ஸ்ரீனிவாசன்.)
பெரிய – 9-9-9.
வேங்கை கழுத்திற் சொரிய உறங்கல். பெரியாழ் – 3-5-8.
வேட்டத்தைக் கருதாது – ஆசைப் பெருக்கத்தைக் கருதாமல்.
பெரிய – 10-9-10.
வேடர் தெழிப்பு -வேடர்களின் ஆரவாரம். பெரிய- 1 – 7 – 2.
வேடர் மறக்குலத்தவரின் மணவகை. பெரியாழ். 3 -8-6.
3210 வேடார் திருவேங்கடம் வேடர்கள் நிறைந்த திருமலை.
பெரிய – 4-7-5.
3215
வேடுமுடை வேங்கடம் – வேடர்கள் நிறைந்த திருமலை,
நான்காந்திரு – 47.
வேதகீதன் – வேதத்தினால் புகழ்ந்து பாடப்படுபவன்.
திருச்சந்த – 117.
வேதத்தினுட் பொருள் – திருவாய் மொழியில் நிற்கப்
பாடியது. கண்ணிநுண்- 9.
வேதநாவர் – அந்தணர்கள். திருச்சந் – 23.
வேதநான்கைந்து தீ வேள்வி-நான்கு வேதம், ஐந்து அக்கினி,
ஐந்து மகா யக்ஞம். பெரிய – 9-7-6.
வேதநூற் பிராயம் நூறு – வேதநூல் பிரகாரம் மனிதர்களுக்கு
வயது நூறு. திருமா – 3.
வேதப்பிரானார் எம்பெருமான். பெரியாழ் – 5 – 2 – 1.
வேதாந்த விழுப்பொருள் -வேதாந்தங்களில்
சொல்லப்டுகின்ற சிறந்த அர்த்தங்கள். பெரியாழ். 4-3 – 11.
வேம்பின் புழு – வேப்பமரத்திலுண்டான புழு. பெரிய – 11-8-7.
3220 வேம்புங்கறியாதல் -வேப்பிலையும் கறியமுதாகும். நான்
முகந்திரு – 94.
வேய்-புல்லாங்குழல். பெரிய -8-5-3.
வேயர் – அந்தணர். நாச்சியார் தனியன்,
பெரியாழ். 1 – 7 – 11, 4 – 10 – 10, 5-4 – 11.
வேயர் தங்கள் – அந்தணர்களுடைய. பெரியாழ் – 5 -4 – 11.
வேல் வலவன் – வேற்படையில் வல்லவன். பெருமாள்-9 – 11.
3225 வேல்வலவனாலிநாடன் – வேற்படையை ஆளுகின்ற
திருவாலி நாட்டுக்கதிபன். பெரிய. 4-4 – 10.

வேல வெறியாட்டாளனே. திருவிருத் – 20.
வேலால் துன்னம் பெய்தல் வேலால் துளைத்தலை
இடுதல். நாச்சியார் -13 – 2.
126
வேலை மோதும் மதிள் – கடல் அலைகள் வந்து
மோதுகின்ற மதிள். திருவாய். 9 – 10 – 1.
வேழப் போதகம் அன்னவன் – யானைக்குட்டி போன்றவன்.
பெருமாள். 7 – 1.
3230 வேள் – முருகன். மன்மதன். திருநெடுந். 7.
வேள்வு – வேள்வி-யாகம். பெரிய. 6 – 4 – 8.
வேளுக்கை காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. நின்ற திருக்கோலம். மூன்றாந்திரு. 34, 62.
வேளுக்கைப்பாடி – வேளுக்கை என்ற திருப்பதி.
மூன்றாந்திரு. 26.
வேளுஞ்சேயுமனையார். வேள்- மன்மதன்,சய்- முருகன்.
பெரிய. 6 – 7 – 1.
3235 வேனிலஞ்செல்வன் – சூரியன். திருவிருத். 25.
வைகுந்தக் குட்டன் – நித்திய சூரிகளுக்குப் பரிந்து
நோக்கும்படியான பருவத்தை
உடையவன். பெரிய. 3 – 6 – 3.
வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டம். பெரியாழ். 4 – 7 – 9.
வைகுந்த விண்ணகர்- திருநாங்கூரிலே உள்ள வைகுந்த
விண்ணகரம் என்னும் திருப்பதி. 3-9 – 1 – 10. வைட்டணவர். வைஷ்ணவர். திருவாய். 5-5 – 11.
3240 வைத்தநாள் – ஈசுவரன் நியமித்த ஆயுள். திருவாய். 6 – 7-11. வைதிகன் – வேதநெறிப்படி ஆசார அனுஷ்டானமுள்ளவர்.
திருவிருத் 94.
வைதேகி – சீதை. (தத்திதாந்த நாமம்) பெருமாள். 10-6. வைப்பு – புதையல். திருவாய். 1 – 7-2.
வையத்தேவர் – அந்தணர், அடியார். திருவாய்.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ சார ஸங்க்ரஹம்-வார்த்தை -456-

December 17, 2025

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-தாமரைப் பூவை பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ மஹா லஷ்மியானவள் விரும்பும்படியான பெறுவதற்கு அறிய நம் ஸ்வாமியானவன்-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி  அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம் பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-நித்ய ஸூரிகள் ஜீவனம் இருக்கிற படி–‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.-மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்-அவளுக்கு மிடுக்கானவன்.-இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –தர்மத்தினுடைய பரம பிரயோஜனமான திருமகளார்-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?-அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி-சுவையன் –-ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே-திருவின் மணாளன் –இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்-அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்-புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நித்ய யவ் வன ஸ்வ பாவனை—மைந்து -மிடுக்கு இனிமை அழகு கெடுவாய், இவ் விஷயத்தைச் சிலரால் விடப் போமோ?–நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்?

—————

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ -அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –ஸூலபனுக்கு என்னவுமாம்-ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-அவர்களை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –தன் மேன்மை பாராதே -சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு இவற்றின் சத்தையை நோக்கி நிற்கும் வத்சலன் ஆனவனாலே –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்-கேசவன் தமர் ஆனார்கள் -மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாநாராயணனாலே என்கிற இடம் மா சதிரினுடைய உபபாதனம்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-அர்த்தத்தை சொல்லுகைக்காக சப் தத்தை உபாதானம் பண்ணுகிறார் -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை  அருளிச் செய்கிறார் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே-வேத மயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் நாராயணனையே குறிக்கும் –

—————-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-நிரதிசய போக்யமான திருவடிகளை—செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.-வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.-மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு –அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –நிலத்தைச் சொல்லுகிறது.-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும் அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.-செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது-சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.-இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி. இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.-மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.-‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

———————

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-4-11-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-5-4-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர்
தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்-சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்-கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்–அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.-சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?-பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-சரத்தின் பலம் -வாய் வலி –யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.-ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்-சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி-முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11–அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே–என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை—தொல் வினை தீர -அநாதி யான அவித்யாதிகள் நீங்கி-இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய ஸூரிகள் உய்வு பெறும்படி.-வீற்றிருப்பாரே –-அவன் இறைவனாம் தன்மைக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்.-‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,-‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு. ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘ வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்-லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்-க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.-‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது-பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் -கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,-அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,-இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.-கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –-பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி-அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன் -அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம் செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்–சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம் படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து-அழைத்துக் கொள் -ஆதி -மநோ வியாதி என்றவாறு -வியாதி தேக வியாதி–கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி—எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் —யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று—திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை –அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –-அது ஏது என்னில்-ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?-‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.-இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?-திருவடியில் என்ன ப்ராவண்யம் –-

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-–4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து ––இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.-அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்-

—————–

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு—தமியேனுக்கு –1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ-இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு–2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர ஸூன்யன்-அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே-நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.–பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –தமியேன்-3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,-இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை செய்ய வேண்டுவது என் என்ன-ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”– ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.-அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே-அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.-விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.தேவோ நாம சஹஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-பாரதம். என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்—-‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேஸ்வரன்.-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட–புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே-ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே – ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.-புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய், பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் –தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

————–

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை -ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.-திருமாமகள் – செல்வம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8–வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளைக் கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இறே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது-ஒசிந்த நுண்ணிடை-இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.-ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.-பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.-அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.-ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.-திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-என் ஸ்வாமிநி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு-எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே

————————–

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ர்வ கந்த: ஸர்வ ரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு –துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –‘அவன் குப்பைக்காலன் காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?(குப்பைக்காலன்-நல்லவன் விபரீத லக்ஷணை)இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்த மயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இறே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி –ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இறே –இந்த லோகங்களுக்கு ஸூகம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற-எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இறே

——————

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் ச ரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது-அடியேன் என்று நான் சொல்ல நீ ஈஸ்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை-எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி-மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்-பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய-திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –-நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –-ஆக-இப் பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்- இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —

——————–

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்
பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே -என்னடியார் யது செய்யார் –என்னும் உன் கடாக்ஷமும் –நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து-உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் – உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும்-இவ் வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே–அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம் யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் –மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று —துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-சீரியது அடிமை செய்யுமது என்று–உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இறே-உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ-என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து –என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே –கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் –கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-நித்ய ஸூரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ

————-

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண-வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் –பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி –விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் – –என்னக் கடவது இறே-நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்-க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார் –என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் –யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபாலி ஸ்ம்ருதி –எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே- -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –அப்ராப்த விஷயத்துக்கு இறே அதிகாரி சம்பத்து வேண்டுவது –கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது -சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்–சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி –
பெரிய திருவந்தாதி -54-–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –-திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் ––பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இறே–இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –-இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –-ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக-பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன-சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்–சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன--தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்- உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண்
–இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –-ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்–இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –வியக்தமாக -மதிநலம் அருளப் பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா -அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே10-4-3-துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய்தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே-இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் -தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் -கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று–அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ 

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே–இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ-தானே--புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –அவை யாவன-பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3—தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்-பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின –பாரதம் மோஷம் -என்கிறபடியே –-அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்-யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே மேலைத் தொண்டு –-அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –

———————–

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள்

December 11, 2025

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை  பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –

இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)

(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)

இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –-ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

—————

முதல் வார்த்தை (பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத்
(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர்-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் – –எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் -விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ ––அலமந்தால் -தடுமாறினால் –இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –-நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ-யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜ னார்த்தியாய் அழைக்கிறேனோ –-கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற-கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே – நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை-சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை –கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -என்பது பிரமாணம்- –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – –கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை –செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப் பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன –இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்–இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே-இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்-இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று-அலந்தேன்;-வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இறே-பாவியேன் காண்கின்றிலேன்; ஆபத் சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்-காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை-எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

——————————

இரண்டாம் வார்த்தை –(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)
அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –
இவற்றை பொகட்டு புறம்பே போய் –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை
அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-நானும் உனக்கு பிரகாரமே –அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்-மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி-ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே–என் உடைமையும் உனக்கு பிரகாரமே–யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமாநாதி கரண்யம்-என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி-வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமாநாதி கரண்யம்-அனைத்தும் அவனது சொத்து –-வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த-நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ–மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-என்னுடைய பிராணன் அவன் கையதே –நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் -மிதுனமானால்-உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ- உங்களுக்கு இது அவ்யுத் பன்னமோ –அஸ்யா தேவ்யா-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-தத் தஸ்ய சத்ரு சம்பவேத் –என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி-இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்–தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —-இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள்

————————————-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை எனபது –

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் – தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது – பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் – வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே –ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே-சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்!
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இறே பாபம்-அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்-பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

———————

நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுமரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத்தேவர் தம் துவக்கைப் பாரது ஒழிவதே (
சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே)-என்றும் –
பரம் தாமத்தை பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதி யாம் போலேயும்
ஸ்தா லீஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும்
(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய் இருக்கிற திருக் கடல் மல்லையிலே-ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே– எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .(அவஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அ வைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

——————–

ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்-மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே-அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –நளிர் அரங்கம்நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்-நாகணையான்-அனந்த சாயி-என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் -புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று-பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்-பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் –சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே ––தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே-அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-மா முகில்காள்-ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே- அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் – புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்பாம்பணையான் வார்த்தை என்னே- படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே-ஏதேனும் ஆவேனே – ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்-அது என் என்னில் –சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை-அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

————

ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(
பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-தெருளுதியாகில்-அறிவுடைய யாகில் -ஞான இந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உண்டாகில் நெஞ்சே வணங்கு –-உபகாரகனான அவன் திருவடிகளில் விழப் பார்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாக புத்தி பண்ணு அறிந்து-அவன் விட அடான் என்று அறிந்து-உனக்கு ஒரு போதாக அயோக்யதா அனுசந்தானத்தாலே அகல நினைப்பதொரு அறிவு கேடு உண்டு -அவ்வளவிலும் விடாதே கிடாய்-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே-முன்பு உபகரித்து நின்ற படி கண்டாயே
இவ்விஷயத்தை விட்டால் எத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்க –

————————

ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

——————–

எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் -விரித்துரைத்த வெநநாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான்  போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல்திருவந்தாதி -33- என்றும் இருக்கை –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே-14-அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க – அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது-நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை – அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-இது தான் –“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிறஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.-நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ-அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று-அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;-இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.
——————-

ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு  நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –
-(தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இறே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க-சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –பட்டு -என்பது- உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்- வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்தேட்டமாய் இறே இருப்பது –-இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு கலந்து கொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.-காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-15-உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன-போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன-ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –போந்து எண்ணிக் கோள் –புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்-தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் 

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
?—1-10-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இறே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்-அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய-நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே– –நனி -மிகுதி – மா -வேண்டற்பாடு-நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3-ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே –பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்னக் கடவது இறே –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.-நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா-மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை   இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“-வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று- ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்–வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல்
-என்று- பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்–தவம் –ஸூஹ்ருதம்–பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

——————

பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும்
(எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ))-எம்பாரைப் போலவும் (எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை
(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)

இப்பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப்பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிகே பட அனுசந்திப்பான்
இப்பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –
வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்-மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவடிகள்-திருமேனி -திருவதரம் -திருக்கண்கள்-திரு நாமம் திருமுடி -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய் -5-சர்வ ரஷகமுமாய் இருப்பதை விளக்கும் ஸ்ரீ அருளிச் செயல்கள்

December 4, 2025

வார்த்தை -438-
திருவடிகள் -1-சேஷியுமாய் -2-உபாயுமுமாய் -3-உபேயமுமாய் -4-பாதகமுமாய்(விரஹ தாபத்தால் பாதகமாகுமே) -5-சர்வ ரஷகமுமாய்
இருக்கும் -எங்கனே என்னில் –

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே
சேஷித்வம் சொல்லிற்று

ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -5-7-10-என்கையாலே
உபாயத்வம் சொல்லிற்று

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று

அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ
ரஷகத்வம் சொல்லிற்று -(தனக்கும் தனது திருவடியையே ரக்ஷகத்வம் -ஆகவே ஸர்வ ஸப்த பிரயோகம்)

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்-இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது –அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-பிராப்தமுமாய் போக்யமுமான திருவடிகள் –சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர்பவிஷ்யதி -என்னும் என் சென்னிக்கு போக்யமுமாம் –தாரகாதிகளுக்கும் உப லக்ஷணம்-குரை -பரப்பு -போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுதல் -ஆபரண த்வனியை சொல்லுதல்–ஒன்றும் வாராயாகிலும்,-
குசஸ்த்தலே நிலசதி சச ப்ராத ரிஹைஷ்யதி-என்று புறப்பட்டான் அங்கே -இங்கே விட்டான் என்று வருகைக்கு பிரசங்கம் ஒன்றும் இல்லையே யாகிலும்-நாம க்ராஹஞ்ச நாதஸ்ய சீதல காஹள த்வனி –என்ன கடவது இறே-வாராய் யாகிலும் கோலமாம் என்பான் என் என்னில்-வாராது ஒழிகை கூடாது -கூடிலும் என் நினைவு இது என்கிறார் -என்னை இப்படிஆக்கினாய் என்று கருத்து –

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ-தகவு செய்திலை;-நிர்த்தயர் செய்வதைச் செய்தாய் -பிரிந்த போதே பிரணயித்தவம் போயிற்று இறே -நீர்மை யுடையார் செய்வதுவும் செய்திலை-நான் செய்த குறை என் என்ன –எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு-நின்-முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-எங்கள் லீலைகளைக் கண்டு ப்ரீதனாய் -நின் முகத்தில் ஒளி திகழ முறுவல் செய்து நிற்க -நாங்கள் சிற்றிலை தொட்டுக் கொண்டு இருந்து கடைக் கண்ணாலே உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்க வைத்திலையே -முழுக்க பார்க்கில் எல்லோரையும் பாதி யுமாமே -பிரணயியைப் பார்ப்பது கடைக் கண்ணாலே இறே -உன்னுடைய லீலை போலே என்று இருந்தாயோ எங்களுடைய லீலையை –கர்மா நிபந்தம் ஆகையால் த்யாஜ்யம் இறே இது -உன்னோடே சம்ஸ்லேஷியன் என்று நான் பண்ணின சங்கல்பத்தை அழகாலே அழித்தாய்-லீலைகளைத் திருவடிகளாலே அழித்தாய் என்று இன்னாதாகிறாள்-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-பூதனை விஷயமாகவும் சகடாசூரன் விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களாலே -அவர்கள் நிரஸனம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் என்கிறாள் –பருவம் நிரம்பி ப்ரணயத்தில் தேசிகனாய்ச் செய்தவை ஒழிய பால சேஷ்டிதங்களும் தனக்காக செய்தான் என்று இருக்கிறாள் –அவதரித்தது தனக்கு என்று இருக்கையாலும்-ஸ்நேஹம் சத்தா ப்ரயுக்தம் ஆகையால்-ஊர் சகடம் அன்று -ஊர்ந்த சகடம் – அது செய்தது எல்லாம் செய்தற்றது -இவன் மௌக்கியத்தாலே அகப்பட்டான்-திருவடிகளினுடைய அவதானத்தாலே பிழைத்தான் அத்தனை –தாயார் ரக்ஷகமாக நிறுத்தின சகடம் -பாடி காப்பாரே களவு காண்பாரைப் போலே இறே நலிந்து –
உதைத்த பாதத்தன்--ஸ்தன்யார்த்தீ ப்ரருரோத ஹா -என்று -முலையை நினைத்து சீறிச் திருவடிகளை நிமிர்த்தான் -மேல் விழுந்த சகடம் துகளாகப் போயிற்று -இது பக்வ தசை என்னும் படி இறே பூதனை நிரசன தசை

——————————–

திரு மேனியும் -1-ருசி ஜனகமுமாய் -2-உபாயமுமாய் -3-உபேயமுமாய் -4-சேஷியுமாய் -5-பாதகமுமாய் இருக்கும்
எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா சிறிய திருமடல் -55 -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –(வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-)

வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று -(பாசுரம் தோறும் திருவடி பிரயோகம் -அனைத்துமே உபாய பரமாகவே இருக்கும்)

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று(ஆழ்வாரது பக்தி சாத்திய ஸஹஜ பக்தி -ஆகையால் -விளைவித்த -பத பிரயோகம் -ஆகவே இது உபேயத்வம் தானே)

எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று

சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3–நிறமானது கண்டார் நெஞ்சை அறிவு கெடுக்கும் படியான அழகிய மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனே -வண்ணம் உண்டு -படி -ஸ்வபாவம் -அது அருள் கொண்டு இருக்கும் -கொள்வார் அளவன்றிக்கே கொடுக்கும் ஸ்வபாவனாய் இருக்கை-வண்ணமானது – வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம்.
மைப்படி மேனி” திருவிருத்தம், 94.-அன்றோ. –மருள்-மேகத்துக்கும் எம்பெருமானுக்கும் விசேஷணம்-மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன்
தோழீ! கடியனே?–5-3-4-பேரமர் காதல்--ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –
ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காமகடல் புரைய விளைவித்த-
அப்ரமேயோ மஹாத-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் -பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7-
சம்ருத்தமான ஜலத்தை உடைத்தாய்-ஜல சர சத்வங்கள் தன்னில் கூடி விளையாடா நிற்கிற
கடல் போலே இருக்கிற நிறத்தை உடையனாய் பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற நிறத்தை உடையவனை –இந் நிறத்தைக் காட்டி-என்னை அனந்யார்ஹன் ஆக்கிக் கொண்டவனுடைய நிறத்தை ஒழிய என்னுடைய வாக் இந்த்ரியம் ஆனது வேறு ஒன்றைப் பேசாது –(ஐயப்பாடு அறுக்கவும் ஆதாரம் பெருக்கவும் அழகன் அன்றோ )

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-அந்நிய பரரான ருத்ராதிகளோடு வாசி அற உடம்பு கொடுக்கும் சீலம் ஸ்மாரகமாய் நித்தியமான ஆத்மாவை முடியா நின்றது -அந்நிய பரர்க்கு எளிதான உடம்பு கிடீர் எனக்கு அரிதாய்த்து –எவன் இனிப் புகுமிடம் -சர்வ சாதாரணமான உடம்பை இழந்தால் இனி எங்கே போய் தரிப்பது –அவன் உடம்பு கிட்டிற்று இல்லை என்னா ஹிதம் சொல்லுகிற உங்கள் உடம்பைப் பற்றித் தரிக்கவோ -ஆனாள் லோக யாத்ரையைப் பற்றி தரித்தாலோ என்ன
எவன் செய்கேனோ-அவ் அளவில் தரிக்கலாம் விஷயம் அன்றே -தோழிமார் உடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரித்தாலோ என்ன –ஆருக்கு-வடுகருக்கு தமிழர் வார்த்தை போலே சொல்லும் வார்த்தைக்கு அதிகாரிகள் யார் -வ்ருத்த கீர்த்தனம் பண்ணும் தோழிமார் எனக்கு முன்னே அழிந்தார்கள்-என் சொல்லுகேன் -கேட்ப்பாரைப் பெற்றால் சொல்லுகைக்கு பாசுரம் தான் உண்டோ-அன்னைமீர்காள்–தோழிமார் அழிந்தார்கள் –நாட்டார் அந்நிய பரர் — சேஷித்து கோள் நீங்களாய் இருத்தி கோள் -உங்களுக்குச் சொல்லவோ –

—————

திருவதரமும் –1-தாரகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-ப்ரப்யமுமாய் -4-போக்யமுமாய்
5-பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –

அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே –
நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –

பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே
ப்ராப்யத்வம் சொல்லிற்று

கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று

முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே--13-4-இவளுடைய விசல்ய கரணியும் சந்தான கரணியும் இருக்கிறபடி -சஞ்சீவி மலை மூலிகைகள்-மார்பில் பட்ட அம்புகளை எடுக்கவும்-அதனால் பட்ட புண்களை ஆற்றவும்-ஆராவமுதம் அனையான் -கண்ணன் —விசல்ய கரணி -அவன் வாயில் ஊறிய நீர் -சந்தான கரணி இவளுக்கு-மார்வில் கொணர்ந்து புரட்டீர் -என்றது-எல்லாம் பெற்றதில்லை யாகிலும் -பல அவயவ சம்பந்தம் கொண்ட மாலை அன்றோ – அவனுடைய ஒரோ அவயவத்தில் உள்ளதைக் கொடு வந்தாகிலும் –புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே– இது சருகாய்ப் போகாமே -அந் நீரைக் கொடு வந்து தெளித்து பருகும் படி பண்ணி-உமிழ் நீர் மருந்தாகத் தீரும் காணும் என் நோய்-அவ்யவதா நேன என் தசைக்கு அவனைக் கொடு வர வேணும் இறே – அது செய்ய ஒண்ணாத பின்பு-இத்தாலே என் இளைப்பைப் பரிஹரித்துக் கொண்டு நிற்கப் பாருங்கோள்-வாய் மருந்திட்டு தீர்க்க வேண்டும் நோய் இறே இது –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்-பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து –திரளிலே நாம் அவனை வளைக்கும் படி என் – என்று நீ நினைக்க வேண்டா – நாங்கள் விளையாடுகிற போது எங்கள் பந்தைப் பறித்து கொண்டு போனான் -என்று சொல்லி போகாதபடி தடுத்து வைத்து-பவள வாய் முறுவலும் காண்போம் தோழி –நாம் இப்படி செய்தவாறே அவன் கால் வாங்கிப் போகாமே நின்று மந்த ஸ்மிதம் பண்ணுமே –அப்போது அவனுடைய பவளம் போல் இருக்கிற திரு அதரத்துக்கு பரபாகமான முறுவலையும்-தோழி-நாம் கண்டு அனுபவிக்க கடவோம் -என்று மனோரதிக்கிறாள்

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –கனி இருந்தனைய செவ்வாய்–அக் கண்ணாலே நிர்மமர் ஆனார்க்கு அனுபாவ்யமான விஷயம் இருக்கிறபடி –கண்ட போதே நுகரலாம் கனி போலே யாய்த்து திரு அதரத்தில் போக்யதை இருப்பது –இருந்து -என்றது அச் செவ்வி என்றும் ஒக்க ஏக ரூபமாய் இருக்கிறபடி – சதைக ரூபரூபாய -என்னக் கடவது இறே-கண்ணனை-பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால்
அவதாரத்துக்கு பிற்பாடர்க்கு உதவுவதற்காக கிருஷ்ணனாய் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படி யாய்த்து இருப்பது –கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன்– அண்டர் கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.-யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்ந்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்-பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதி களாலே ஸூசிஷிதராய் வார்ந்து வடிந்த விநயம் எல்லாம் தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும்
பட்டர் அருளிச் செய்வர் –

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5–மலையை எடுத்து மழையிலே நோவு படாத படி பெண்களை நோக்கின உபகாரகனுடைய முறுவலானது,
என் ஒருத்திக்கும் பாதகமாகா நின்றது.‘பசுக்களை அன்றோ தான் நோக்கிற்று?’ என்னில்,
‘‘கோ கோபீஜந ஸங்குலம், அதீவார்த்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு. புரா. 5. 11. 13.மிக்க வருத்தம் அடைந்த பசுக்களின் கோபிமார்களின் கூட்டத்தைப் பார்த்து’ என்னக் கடவது அன்றோ?
மழையால் வந்த நலிவை மலையை எடுத்து நீக்கி, அவர்கள் துன்பம் எல்லாம் போம் படி
புன்முறுவல் செய்து கொண்டாயிற்று நின்றது.கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனுடைய முறுவல் என்னுடைய பிராணனை நலியா நின்றது -பிரிவால் பட்ட நலிவு எல்லாம் தீரும்படி பெண்கள் முகங்களில் பண்ணின ஸ்மிதம் எனக்கு ஒருத்திக்குமே பாதகம் ஆகா நின்றது -இவை நலியாத இடத்தில் போனாலோ என்னில்
அன்னைமீர்!எனக்கு உய்விடமே.-ஒன்றும் அறிகின்றிலேன்-இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –

—————–

திருக்கண்களும் -1-ரக்ஷகமுமாய் -2-சேஷியுமுமாய் -3-உபாயுமுமாய் –4-உபேயமுமாய் -5-பாதகமுமாய் -இருக்கும்
எங்கனே என்னில்
உயிர்க்கெல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-1-9-என்கையாலே ரக்ஷகத்வம் சொல்லிற்று -அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
அமலங்களாக விளிக்கும் -திருவாய் 1-9-9- என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -திருவாய் -7-3-3-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று –
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ-திருவாய் -10-3-1- -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

(அச்சேத்யம் என்னும் அது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த வென்னப் பட சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க கரணங்கள் முடியானேயில் அவையாக உடலம் ஆத்ம தர்மம் கொள்ள காற்றும் கழியும் கட்டி அழக் கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே —சூரணை –132-)

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9-ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே-சர்வ பூத ஸூ ஹ்ருதாய்-ஆனுகூல்யம் பண்ணினாரோடு-பிரதி கூல்யம் பண்ணினாரோடு-வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே –சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –அன்றிக்கே-சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் –

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10–இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது. ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ; அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;-உபய விபூதி உக்தன் என்கிற இடத்தை கோட் சொல்லுகிற கண்களை உடையவனை –இவள் நெடுங்கண் இளமான்-அவன் அரவிந்த லோசனன் –அவன் கண் ஸர்வேச்வரத்வ ஸூ சகம் -அவனையும் கூட விளாக் குலை கொள்ளும் கண் இவளது-அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.-கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.- காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் – புண்டரீகாக்ஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான்.
ந சஷூஷா க்ருஹீயதே ‘இறைவன் கண்ணுக்குப் புலப்படுமவன் அல்லன்,’ என்னும் மரியாதை குலைந்தது.-அவன் அவ் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயமாக்கினான் ஆகில், நீர் பின்னைச் செய்வது என்?’ என்னில்,-காண்பன் –நானும் கண்டு அனுபவியா நின்றேன்.உலகத்திற்கே வேறுபட்ட -விலக்ஷண இறைவனை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரானபடி எங்ஙனே?’ எனின்,-அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் –அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்-தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,-‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1–நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

————————————————————————————————-

வார்த்தை – 439-
திரு நாமமும் திருமுடியும்
1-பாவனமுமாய் -2-தாரகமுமாய் -3-போக்யமுமாய் -4-பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –
மாயனை –தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்-திருப்பாவை -5-என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே-நாச்சியார் என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று
ஆயர் கொழுந்தே என்னும் இச்சுவை -திருமாலை -2-என்கையாலே பரம போக்யத்வம் சொல்லிற்று

கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-
உத்தர பூர்வாகக்ங்கள்-பால் குடித்து வியாதி போக்குமா போலே –இனியது அனுபவிக்க இன்னாதது குலையும்-பூர்வமாகிறது –ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாக பண்ணின பாவம்-உத்தாரகம் ஆவது –
பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு பின்பு பிரகிருதி வாசனையால் பிராமாதிகமாகச் செய்யுமது –தீயினில் தூசாகும் –நெருப்பில் இட்ட பஞ்சே போலே ஆம்-அர்த்தம்-பெரியாழ்வார் மகள் ஆகையால் இடைச்சியான பின்பும் பின்னாட்டுகிற படி –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-என் –-இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-மேன்மைக்கு எல்லை யானவர்களுக்கு நியாமகனாய் இருக்குமா போலே-தாழ்வுக்கு எல்லையான இடையருக்கும் பசுக்களுக்கும் ஸூலபன் ஆனபடி-வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் ஒரு பசும் கூட்டமாய் இறே பரத்வம் இருப்பதுஎன்னும் – இஸ் ஸ்வபாவங்களை அனுபவித்தோ உமக்கு இவ்வினிமை பிறந்ததோ என்னில்-அங்கன் அன்று-திரு நாமத்தின் உடைய உக்தி மாத்ரத்திலே வந்த இனிமை –இச்சுவை தவிர –இந்த ரசத்தை விட்டு-சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –இவருடைய அறு சுவை இருக்கிறபடி –திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

—————-

திருமுடியும் -(குழல்) -1-பாவனமுமாய்–2–ரக்ஷகத்வமுமாய்-3–சேஷியுமாய்04-போக்யமுமாய் -5-பாதகமுமாய்
இருக்கும்–எங்கனே என்னில் –
கெடும் இடராயவெல்லாம் கேசவாய என்கையாலே பாவனத்வம் சொல்லிற்று
துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும்–திருநெடும் தாண்டகம் -16-என்கையாலே -ரக்ஷகத்வம் சொல்லிற்று
முடியானே மூ வுலகும் தொழும் சீர் அடியானே–என்கையாலே-சர்வ சேஷித்வம் சொல்லிற்று
பூந்துழாய் முடியார்க்கு –திருவடி மூழிக் களத்தார்க்கு -9-7-என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் –7-7-10-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் -பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –
கேசவா வென்ன -ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்– என்கிறபடியே -சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் – பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி – இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய-இராக்கச சாதியாக அழிந்தால் போலே –இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்- முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்-என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா –யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்-நாள் தோறும் குரூரமான வ்ருத்தியைப் பண்ணும் யமபடரும் கிட்ட மாட்டார் –ஸ்வ புருஷம் –இத்யாதி -தாஸ் யஞ்ஞ வராஹஸ்ய –இத்யாதி –கில்லார் -சக்தர் அல்லர் – எரிகிற நெருப்பில் ஏறச் சக்தர் யுண்டோ –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-நம்பி உடைய திருக் குழலையும் வடிவையும் சொல்கிறது – அற நெருங்கி இருண்ட குழலையும்-காளமேக நிபச்யாமமான வடிவையும் உடைய என் துணையே –தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக் கண் கனிவாய்
காள மேகத்தை யன்றி மற் றொன்றிலம் கதியே-இறே இவர்கள் துணையாகப் பற்றுவது –
இந்தக் குழலிலும் வடிவிலும் போலே காணும் தான் அகப்பட்டது – பிராட்டியைத் தேடி திரிகிற காலம் திருக் குழல் பேணாமையாலே ஜடையாய் கிடந்தது-கண்டவாறே அவள் கையாலே வகிர்ந்து பேணின குழல் ஆகையாலே துன்று குழல் -என்கிறது –என் துணையே –ஸ்நிக்த நீல குடில குந்தளம் என்கிற மயிர் முடியையும் வடிவில் ஸ்ரமஹரதையும் காட்டி
என்னை அனன்யார்ஹை ஆக்கினவனே –ப்ரஷஸ்த கேஸ பாஸம்-ப்ரஷஸ்த ஸ்நிக்த நீல குடிலை குண்டல -புகழப் படும் -வழுவழுப்பான -கறுத்த -சுருண்ட திருக் குழல் கற்றை-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-ஆதிராஜ்ய ஸூ சகமாய் உபய விபூதிக்கும் தவித்த முடி இ றே-சேஷ பூதனுக்கு சேஷித்வம் இறே முதல் காணப்படுவது-அவன் சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகத்தில் முந்துறக் கண் வைக்கிறார் -தர்ச நீயமான திரு அபிஷேகம்-ஆயின், சிவன் முதலானோர்க்கும் முடி உண்டே?’ எனின்,-அல்லாதார் முடிகளைப் பொய்ம்முடி ஆக்கும்படி-அசத் சமம் -அலங்காரத்துக்கு இட்டவை – தலையான முடியே அன்றோ இது?
மற்ற தலைகள் வணங்கும் -அடி சேர் முடியனராகி -அபிமான பங்கமாய் வந்து சங்கம் இருப்பார்களே –உபய விபூதிகளும் ஒரு முடியிலே கட்டுண்ணும்படி கவித்த முடியே அன்றோ இது?  இவருடைய அபிநிவேச அதிசயம் இசையின் ஓசையிலே அறியும் அத்தனை மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு

ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-பூந்துழாய் முடியார்க்கு –திருமுடிக்கு ஒப்பனையான வளையம் இருக்கிற படி–பாண்டியன் கொண்டை -வளையம் திருத் துழாய் மேலே சாத்தி –-பொன் ஆழிக் கையார்க்கு-திரு முடிக்கு வளையம் போலே யாய்த்து திருக்கைக்கு திரு வாழி –திரு மூழிக் களத்தார்க்கு–வளையம் போலேயும் ஆபரணம் போலேயும் அவ் வூரில் நிலையும் அழகுக்கு உடல் என்று இருக்கிறாள் -அவை விக்ரஹத்துக்கு ஆபரணம் ஆனால் போலே -சீலம் ஸ்வரூபத்துக்கு ஆபரணம் இ றே -அழகும் குணமும் ஒரு தலைத்த விஷயம் இறே

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-
நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களின் ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒருப்பட்டது என்னுதல் -அங்கே விலை செய்து கொடுத்தது என்னுதல் -ஒற்றுமை -ஒருமை-ஒருப்பட்டது தத்பரமானது ஐகாந்த்யம் –ஈடுபட்டு கிரயம் பண்ணிக் கொடுத்தது –‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி.

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வைபவம் -ஸ்ரீமத் பாகவதம் -ஸ்ரீ நாராயணீயம் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்-ஸ்ரீ அருளிச் செயல்கள் -ஸ்ரீ ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்–

December 2, 2025

ஸ்ரீமத் பாகவதம் – ஸ்கந்தம் 8-அத்தியாயம்- 24-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி திருவவதாரம்

ராஜோவாச
ப⁴க³வன் ஶ்ரோதுமிச்சா²மி ஹரேரத்³பு⁴தகர்மண꞉ .
அவதாரகதா²மாத்³யாம்ʼ மாயாமத்ஸ்யவிட³ம்ப³னம் .. 1..

யத³ர்த²மத³தா⁴த்³ரூபம்ʼ மாத்ஸ்யம்ʼ லோகஜுகு³ப்ஸிதம் .
தம꞉ப்ரக்ருʼதி து³ர்மர்ஷம்ʼ கர்மக்³ரஸ்த இவேஶ்வர꞉ .. 2..

ஏதன்னோ ப⁴க³வன் ஸர்வம்ʼ யதா²வத்³வக்துமர்ஹஸி .
உத்தம ஶ்லோகசரிதம்ʼ ஸர்வலோக ஸுகா²வஹம் .. 3..

ஸூத உவாச
இத்யுக்தோ விஷ்ணுராதேன ப⁴க³வான் பா³த³ராயணி꞉ .
உவாச சரிதம்ʼ விஷ்ணோர் மத்ஸ்ய ரூபேண யத்க்ருʼதம் .. 4..

ஶ்ரீஶுக உவாச
கோ³ விப்ர ஸுர ஸாதூ⁴னாம்ʼ ச²ந்த³ஸாமபி சேஶ்வர꞉ .
ரக்ஷாமிச்ச²ம்ʼ ஸ்தனூர்த⁴த்தே  த⁴ர்மஸ்யார்த²ஸ்ய சைவ ஹி .. 5..

உச்சாவசேஷு பூ⁴தேஷு சரன் வாயுரிவேஶ்வர꞉ .
நோச்சாவசத்வம்ʼ ப⁴ஜதே நிர்கு³ணத்வாத்³ தி⁴யோ கு³ணை꞉ .. 6..

வாயு -எங்கும் நிறைந்து -துர்நாற்றம் ஒட்டாதது போல் -அகிலேஹேய ப்ரத்யநீக கல்யாணை ஏக ஸ்தானன் -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆதியம் சோதி யுருவை அங்கே வைத்து இங்கே பிறந்த

ஆஸீத³தீத கல்பாந்தே ப்³ராஹ்மோ நைமித்திகோ லய꞉ .
ஸமுத்³ரோபப்லுதாஸ் தத்ர லோகா பூ⁴ராத³யோ ந்ருʼப .. 7..

காலேநாக³தநித்³ரஸ்ய தா⁴து꞉ ஶிஶயிஷோர்ப³லீ .
முக²தோ நி꞉ஸ்ருʼதான் வேதா³ன் ஹயக்³ரீவோ (அ)ந்திகே (அ)ஹரத் .. 8..

ஹயக்ரீவன் காரணப்பெயர் குதிரை முகத்தான் –அசுரனுக்கு இதே பெயர் –

ஜ்ஞாத்வா தத்³தா³னவேந்த்³ரஸ்ய ஹயக்³ரீவஸ்ய சேஷ்டிதம் .
த³தா⁴ர ஶப²ரீரூபம்ʼ ப⁴க³வான் ஹரிரீஶ்வர꞉ .. 9..

ஶப²ரீரூபம்ʼ–மத்ஸ்ய மீன் ரூபம்-பிரார்த்தனை பண்ணாமலேயே தானே திருவவதரித்த திருவவதாரம்-இச்சா மீன-தேசிகர்-

தத்ர ராஜ ருʼஷி꞉ கஶ்சின்நாம்னா ஸத்ய வ்ரதோ மஹான் .
நாராயண பரோ(அ)தப்யத்தப꞉ ஸ ஸலிலாஶன꞉ .. 10..

மதுரை -க்ருதமாலா நதிக்கரையில் சத்யவ்ரதர் பாண்டிய அரசனுக்கு காட்சி-ஸ ஸலிலாஶன꞉தண்ணீர் மட்டுமே உண்டு தவம் இருந்து ராஜரிஷி யானவள் -முன்பு ராஜரிஷி -ஸூர்ய மகன் -விவஸ்வனனுக்கு பிள்ளை ஸ்ராத்தா தேவனே -வைவஸ்ஸ மனுவாக இப்பொழுது உள்ளான்

யோ(அ)ஸாவஸ்மின் மஹாகல்பே தனய꞉ ஸ விவஸ்வத꞉ .
ஶ்ராத்³த⁴தே³வ இதி க்²யாதோ மனுத்வே ஹரிணார்பித꞉ .. 11..

ஏகதா³ க்ருʼதமாலாயாம்ʼ குர்வதோ ஜலதர்பணம் .
தஸ்யாஞ்ஜல்யுத³கே காசிச்ச²ப²ர்யேகாப்⁴யபத்³யத .. 12..

ஸத்யவ்ரதோ(அ)ஞ்ஜலிக³தாம்ʼ ஸஹ தோயேன பா⁴ரத .
உத்ஸஸர்ஜ நதீ³தோயே ஶப²ரீம்ʼ த்³ரவிடே³ஶ்வர꞉ .. 13..

தமாஹ ஸாதி கருணம்ʼ மஹா காருணிகம்ʼ ந்ருʼபம் .
யாதோ³ப்⁴யோ ஜ்ஞாதிகா⁴திப்⁴யோ தீ³னாம்ʼ மாம்ʼ தீ³ன வத்ஸல .
கத²ம்ʼ விஸ்ருʼஜஸே ராஜன் பீ⁴தாமஸ்மின் ஸரிஜ்ஜலே .. 14..

தமாத்மனோ(அ)னுக்³ரஹார்த²ம்ʼ ப்ரீத்யா மத்ஸ்ய வபுர்த⁴ரம் .
அஜானன் ரக்ஷணார்தா²ய ஶப²ர்யா꞉ ஸ மனோ த³தே⁴ .. 15..

தஸ்யா தீ³னதரம்ʼ வாக்யமாஶ்ருத்ய ஸ மஹீபதி꞉ .
கலஶாப்ஸு நிதா⁴யைனாம்ʼ த³யாலுர்னின்ய ஆஶ்ரமம் .. 16..

ஸா து தத்ரைகராத்ரேண வர்த⁴மானா கமண்ட³லௌ .
அலப்³த்⁴வா(ஆ)த்மாவகாஶம்ʼ வா இத³மாஹ மஹீபதிம் .. 17..

நாஹம்ʼ கமண்ட³லாவஸ்மின் க்ருʼச்ச்²ரம்ʼ வஸ்துமிஹோத்ஸஹே .
கல்பயௌக꞉ ஸுவிபுலம்ʼ யத்ராஹம்ʼ நிவஸே ஸுக²ம் .. 18..

ஸ ஏனாம்ʼ தத ஆதா³ய  ந்யதா⁴தௌ³த³ஞ்சனோத³கே .
தத்ர க்ஷிப்தா முஹூர்தேன ஹஸ்த த்ரய மவர்த⁴த .. 19..

ந ம ஏதத³லம்ʼ ராஜன் ஸுக²ம்ʼ வஸ்துமுத³ஞ்சனம் .
ப்ருʼது² தே³ஹி பத³ம்ʼ மஹ்யம்ʼ யத்த்வாஹம்ʼ ஶரணம்ʼ க³தா .. 20..

தத ஆதா³ய ஸா ராஜ்ஞா க்ஷிப்தா ராஜன் ஸரோவரே .
ததா³வ்ருʼத்யாத்மனா ஸோ(அ)யம்ʼ மஹா மீனோ(அ)ன்வவர்த⁴த .. 21..

நைதன்மே ஸ்வஸ்தயே ராஜன்னுத³கம்ʼ ஸலிலௌகஸ꞉ .
நிதே⁴ஹி ரக்ஷா யோகே³ன ஹ்ரதே³ மாமவிதா³ஸினி .. 22..

இத்யுக்த꞉ ஸோ(அ)நயன் மத்ஸ்யம்ʼ தத்ர தத்ராவிதா³ஸினி .
ஜலாஶயே(அ)ஸம்மிதம்ʼ தம்ʼ ஸமுத்³ரே ப்ராக்ஷிபஜ் ஜ²ஷம் .. 23..

க்ஷிப்யமாணஸ்தமாஹேத³மிஹ மாம்ʼ மகராத³ய꞉ .
அத³ந்த்யதிப³லா வீர மாம்ʼ நேஹோத்ஸ்ரஷ்டு மர்ஹஸி .. 24..

ஏவம்ʼ விமோஹிதஸ்தேன வத³தா வல்கு³பா⁴ரதீம் .
தமாஹ கோ ப⁴வானஸ்மான் மத்ஸ்ய ரூபேண மோஹயன் .. 25..

நைவம்ʼ வீர்யோ ஜல சரோ த்³ருʼஷ்டோ(அ)ஸ்மாபி⁴꞉ ஶ்ருதோ(அ)பி ச .
யோ ப⁴வான் யோஜன ஶதமஹ்நாபி⁴வ்யானஶே ஸர꞉ .. 26..(1-யோஜனை -10 மைல்)

நூனம்ʼ த்வம்ʼ ப⁴க³வான் ஸாக்ஷாத்³த⁴ரிர்நாராயணோ(அ)வ்யய꞉ .
அனுக்³ரஹாய பூ⁴தானாம்ʼ த⁴த்ஸே ரூபம்ʼ ஜலௌகஸாம் .. 27..

அக்னி பகவான் ஒளிந்து கொண்டதைக்காட்டிக்கொடுத்ததால் வலையால் பிடிக்கும் படி சாபம்-அக்னி சாபத்தால் நிந்திக்கப்பட்ட மீன்களை உஜ்ஜீவிக்கவே அவதாரம் -உண்மையாக இருந்தாலும் நன்மையைச் தராவிட்டால் சொல்லக்கூடாது -நன்மை செய்யும் உண்மை -உபதேசம் செய்யவேணும் அவதாரம் -பாண்டியர் கொடியில் வைத்ததே இதனால் தான் –

நமஸ்தே புருஷ ஶ்ரேஷ்ட² ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .
ப⁴க்தானாம்ʼ ந꞉ ப்ரபன்னானாம்ʼ முக்²யோ ஹ்யாத்மக³திர்விபோ⁴ .. 28..

ஸ்தி²த் யுத்பத் யப்யயேஶ்வர .-generation operation destruction God

ஸர்வே லீலாவதாராஸ்தே பூ⁴தானாம்ʼ பூ⁴தி ஹேதவ꞉ .
ஜ்ஞாது மிச்சா²ம்யதோ³ ரூபம்ʼ யத³ர்த²ம்ʼ ப⁴வதா த்⁴ருʼதம் .. 29..

(அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-ஸ்ரீ தயா சதகம்-35)

பொய் சொன்னால் ஏழு ஜென்மங்கள் மீனாகப்பிறக்க வேண்டும் -தாயார் தூண்ட இவனை பெரிய மீனாக அவதரிக்க தூண்டி அவதாரம்-என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக-மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல் சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.-இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான். ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?)

ந தே(அ)ரவிந்தா³க்ஷ பதோ³பஸர்பணம்ʼ
ம்ருʼஷா ப⁴வேத் ஸர்வஸுஹ்ருʼத் ப்ரியாத்மன꞉ .
யதே²தரேஷாம்ʼ ப்ருʼத²கா³த்மனாம்ʼ ஸதாமதீ³த்³ருʼஶோ
யத்³வபுரத்³பு⁴தம்ʼ ஹி ந꞉ .. 30..

அ)ரவிந்தா³க்ஷ-பர ப்ரஹ்ம சிஹ்னம்-பங்கஜம் -சேற்றில் மலரும் செந்தாமரை அஜோபிசன் –பெருமை குன்றாமல் அவதாரம்-வழிபாடு எதுவும் வீணாகாதே

ஶ்ரீஶுக உவாச
இதி ப்³ருவாணம்ʼ ந்ருʼபதிம்ʼ ஜக³த்பதி꞉
ஸத்யவ்ரதம்ʼ மத்ஸ்யவபுர் யுக³க்ஷயே .
விஹர்து காம꞉ ப்ரலயார்ணவே(அ)ப்³ரவீ-
ச்சிகீர்ஷுரேகாந்த ஜனப்ரிய꞉ ப்ரியம் .. 31..

ஶ்ரீப⁴க³வானுவாச
ஸப்தமே(அ)த்³யதநாதூ³ர்த்⁴வ மஹன்யேத த³ரிந்த³ம .
நிமங்க்ஷ்யத் யப்யயாம் போ⁴தௌ⁴ த்ரைலோக்யம்ʼ  பூ⁴ர்பு⁴வாதி³கம் .. 32..

த்ரிலோக்யாம்ʼ லீயமானாயாம்ʼ ஸம்ʼவர்தாம்ப⁴ஸி வை ததா³ .
உபஸ்தா²ஸ்யதி நௌ꞉ காசித்³ விஶாலா த்வாம்ʼ மயேரிதா .. 33..

த்வம்ʼ தாவதோ³ஷதீ⁴꞉ ஸர்வா பீ³ஜான் யுச்சாவசானி ச .
ஸப்தர்ஷிபி⁴꞉ பரிவ்ருʼத꞉ ஸர்வ ஸத்த்வோப ப்³ருʼம்ʼஹித꞉ .. 34..

ஆருஹ்ய ப்³ருʼஹதீம்ʼ நாவம்ʼ விசரிஷ்யஸ்யவிக்லவ꞉ .
ஏகார்ணவே நிராலோகே ருʼஷீணாமேவ வர்சஸா .. 35..

தோ³தூ⁴யமானாம்ʼ தாம்ʼ நாவம்ʼ ஸமீரேண ப³லீயஸா .
உபஸ்தி²தஸ்ய மே ஶ்ருʼங்கே³ நிப³த்⁴னீஹி மஹாஹினா .. 36..

அஹம்ʼ த்வாம்ருʼஷிபி⁴꞉ ஸாகம்ʼ ஸஹனாவமுத³ன்வதி .
விகர்ஷன் விசரிஷ்யாமி யாவத்³ப்³ராஹ்மீ நிஶா ப்ரபோ⁴ .. 37..

மதீ³யம்ʼ மஹிமானம்ʼ ச பரம்ʼ ப்³ரஹ்மேதி ஶப்³தி³தம் .
வேத்ஸ்யஸ்யனுக்³ருʼஹீதம்ʼ மே ஸம்ப்ரஶ்னைர்விவ்ருʼதம்ʼ ஹ்ருʼதி³ .. 38..

பிரளயத்தில் ஸூர்ய சந்திர நக்ஷத்திரங்கள் இல்லாவிட்டாலும் சப்த ரிஷிகள் ப்ரஹ்ம தேஜஸ் ஒளி கொண்டு பார்த்து-ப்ரசண்ட மாருத புயல் வருமே என்ன-1000 மைல் நீளம் மீன் இப்பொழுது -அதை விட -பெரிய மீனாக வரும் -ஒற்றைக்கொம்பு -வாசுகி கொண்டு படகைக்காட்டு -நான் வழி நடத்துவேன் -பிரளய காலம் -1000 சதுர்யுகமும் நான் உங்களைக் காப்பேன் -ஞான உணவு ஊட்டுவேன்-கேள்வி கேட்டு அறிந்து கொள்

இத்த²மாதி³ஶ்ய ராஜானம்ʼ ஹரிரந்தரதீ⁴யத .
ஸோ(அ)ன்வவைக்ஷத தம்ʼ காலம்ʼ யம்ʼ ஹ்ருʼஷீகேஶ ஆதி³ஶத் .. 39..

ஆஸ்தீர்ய த³ர்பா⁴ன் ப்ராக்கூலான் ராஜர்ஷி꞉ ப்ராகு³த³ங்முக²꞉ .
நிஷஸாத³ ஹரே꞉ பாதௌ³ சிந்தயன் மத்ஸ்ய ரூபிண꞉ .. 40..

சொல்லி மறைந்து போக -அந்த ஏழு நாள்களும் பார்த்த மத்ஸ்ய சூபியைத் த்யான பண்ணி -பெரிய மத்ஸ்ய ரூபியைத் தரிசிக்க காத்து இருந்தார்

தத꞉ ஸமுத்³ர உத்³வேல꞉ ஸர்வத꞉ ப்லாவயன் மஹீம் .
வர்த⁴மானோ மஹா மேகை⁴ர் வர்ஷத்³பி⁴꞉ ஸம த்³ருʼஶ்யத .. 41..

த்⁴யாயன் ப⁴க³வதா³ தே³ஶம்ʼ த³த்³ருʼஶே நாவமாக³தாம் .
தாமாருரோஹ விப்ரேந்த்³ரைராதா³ யௌஷதி⁴வீருத⁴꞉ .. 42..

தமூசுர்முனய꞉ ப்ரீதா ராஜன் த்⁴யாயஸ்வ கேஶவம் .
ஸ வை ந꞉ ஸங்கடா த³ஸ்மாத³விதா ஶம்ʼ விதா⁴ஸ்யதி .. 43..

ஸோ(அ)னு த்⁴யாதஸ் ததோ ராஜ்ஞா ப்ராது³ராஸீன் மஹார்ணவே .
ஏக ஶ்ருʼங்க³ த⁴ரோ மத்ஸ்யோ ஹைமோ நியுத யோஜன꞉ .. 44..

ஹைமோ நியுத யோஜன꞉-பொன்நிறம் 10 லக்ஷணம் மைல் நீளம்

ஸ கோ³ நா ஸம்ʼ கோ³ கோ³
நிப³த்⁴ய நாவம்ʼ தச்ச்²ருʼங்கே³ யதோ²க்தோ ஹரிணா புரா .
வரத்ரேணாஹினா துஷ்டஸ் துஷ்டாவ மது⁴ஸூத³னம் .. 45..

ராஜோவாச
அநாத்³யவித்³யோபஹ தாத்ம ஸம்ʼவித³ஸ் தன் மூல ஸம்ʼஸார பரிஶ்ரமாதுரா꞉ .
யத்³ருʼச்ச²யேஹோபஸ்ருʼதா யமாப்னுயுர் வி முக்திதோ³ ந꞉ பரமோ கு³ருர் ப⁴வான் .. 46..

ஸ்துதிக்கிறார் -அநாதி அவித்யை -பொய் நின்ற ஞானம் -அழுக்கு உடம்பில் உழன்று-யாதிருச்சியா ஸூஹ் ருதம் -நாமும் அறியாமல் ஸாஸ்த்ரமும் அறியாமல் தானே அறிந்து -என் பேரைச் சொன்னாய் -பிரதம குரு -பீதகவாடைப்பிரானார் -லஷ்மீ நாதன் ஞானப்பிரான்

ஜனோ(அ)பு³தோ⁴(அ)யம்ʼ நிஜகர்ம ப³ந்த⁴ன꞉ ஸுகே²ச்ச²யா கர்ம ஸமீஹதே(அ)ஸுக²ம் .
யத்ஸேவயா தாம்ʼ விது⁴னோத்ய ஸன்மதிம்ʼ க்³ரந்தி²ம்ʼ ஸ பி⁴ந்த்³யாத்³த்⁴ருʼத³யம்ʼ ஸ நோ கு³ரு꞉ .. 47..

யத்ஸேவயாக்³னேரிவ ருத்³ரரோத³னம்ʼ புமான் விஜஹ்யான்மலமாத்மனஸ்தம꞉ .
ப⁴ஜேத வர்ணம்ʼ நிஜமேஷ ஸோ(அ)வ்யயோ பூ⁴யாத்ஸ ஈஶ꞉ பரமோ கு³ரோர்கு³ரு꞉ .. 48..

சர்வஞ்ஞனே அஞ்ஞாராகிய நம்மை வழி நடத்த வேண்டும்

ந யத்ப்ரஸாதா³யுதபா⁴க³லேஶமன்யே ச தே³வா கு³ரவோ ஜனா꞉ ஸ்வயம் .
கர்தும்ʼ ஸமேதா꞉ ப்ரப⁴வந்தி பும்ʼஸ- ஸ்தமீஶ்வரம்ʼ த்வாம்ʼ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 49..

அசக்ஷுரந்த⁴ஸ்ய யதா²க்³ரணீ꞉ க்ருʼதஸ்ததா² ஜனஸ்யாவிது³ஷோ(அ)பு³தோ⁴ கு³ரு꞉ .
த்வமர்கத்³ருʼக்ஸர்வத்³ருʼஶாம்ʼ ஸமீக்ஷணோ வ்ருʼதோ கு³ருர்ன꞉ ஸ்வக³திம்ʼ பு³பு⁴த்ஸதாம் .. 50..

ஜனோ ஜனஸ்யாதி³ஶதே(அ)ஸதீம்ʼ மதிம்ʼ யயா ப்ரபத்³யேத து³ரத்யயம்ʼ தம꞉ .
த்வம்ʼ த்வவ்யயம்ʼ ஜ்ஞானமமோக⁴மஞ்ஜஸா ப்ரபத்³யதே யேன ஜனோ நிஜம்ʼ பத³ம் .. 51..

த்வம்ʼ ஸர்வலோகஸ்ய ஸுஹ்ருʼத்ப்ரியேஶ்வரோ ஹ்யாத்மாகு³ருர்ஜ்ஞானமபீ⁴ஷ்டஸித்³தி⁴꞉ 
ததா²பி லோகோ ந ப⁴வந்தமந்த⁴தீ⁴-ர்ஜானாதி ஸந்தம்ʼ ஹ்ருʼதி³ ப³த்³த⁴காம꞉ .. 52..

தம்ʼ த்வாமஹம்ʼ தே³வவரம்ʼ வரேண்யம்ʼப்ரபத்³ய ஈஶம்ʼ ப்ரதிபோ³த⁴னாய .
சி²ந்த்⁴யர்த²தீ³பைர்ப⁴க³வன் வசோபி⁴-ர்க்³ரந்தீ²ன் ஹ்ருʼத³ய்யான் விவ்ருʼணு ஸ்வமோக꞉ .. 53..

(எட்டு ஸ்லோகங்கள் -நீயே குரு -ஞானக் கண் அளித்து -ஆசை இருப்பதைக் காட்ட வேண்டுமே –ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது=சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்)

ஶ்ரீஶுக உவாச
இத்யுக்த வந்தம்ʼ ந்ருʼபதிம்ʼ ப⁴க³வாநாதி³பூருஷ꞉ .
மத்ஸ்ய ரூபீ மஹாம் போ⁴தௌ⁴ விஹரம்ʼஸ்தத்த்வ மப்³ரவீத் .. 54..

புராண ஸம்ʼஹிதாம்ʼ தி³வ்யாம்ʼ ஸாங்க்²ய யோக³ க்ரியாவதீம் .
ஸத்ய வ்ரதஸ்ய ராஜர்ஷேராத்ம கு³ஹ் யமஶேஷத꞉ .. 55..

திவ்யமான மாத்ஸ்ய புராணம் -முதலில் சாங்க்ய -தத்வ உபதேசம் -26 தத்வங்கள்-அடுத்து -யோக -பக்தி யோகம் -யுஜ் -சேர்ந்து -த்யானம் -அடுத்து கிரியாவதம் -ஸ்வ வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனஸ் ஸூத்தி -பெற -1000 சதுர்யுகம் முழுவதும் உபதேசம்

அஶ்ரௌஷீத்³ருʼஷிபி⁴꞉ ஸாகமாத்ம தத்த்வ மஸம்ʼஶயம் .
நாவ்யாஸீனோ ப⁴க³வதா ப்ரோக்தம்ʼ ப்³ரஹ்ம ஸனாதனம் .. 56..

அதீத ப்ரலயாபாய உத்தி²தாய ஸ வேத⁴ஸே .
ஹத்வாஸுரம்ʼ ஹயக்³ரீவம்ʼ வேதா³ன் ப்ரத்யாஹரத்³த⁴ரி꞉ .. 57..

ஸ து ஸத்ய வ்ரதோ ராஜா ஜ்ஞான விஜ்ஞான ஸம்ʼயுத꞉ .
விஷ்ணோ꞉ ப்ரஸாதா³த் கல்பே (அ)ஸ்மின்னாஸீத்³ வைவஸ்வதோ மனு꞉ .. 58..

ஸத்ய வ்ரதஸ்ய ராஜர் ஷேர் மாயா மத்ஸ்யஸ்ய ஶார்ங்கி³ண꞉ .
ஸம்ʼவாத³ம்ʼ மஹதா³க்²யானம்ʼ ஶ்ருத்வா முச்யேத கில்பி³ஷாத் .. 59..

அவதாரோ ஹரேர்யோ (அ)யம்ʼ கீர்தயே த³ன்வஹம்ʼ நர꞉ .
ஸங்கல்பாஸ் தஸ்ய ஸித்⁴யந்தி ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 60..

ப்ரலயபயஸி தா⁴து꞉ ஸுப்த ஶக்தேர் முகே²ப்⁴ய꞉ ஶ்ருதி க³ணமபனீதம்ʼ ப்ரத்யுபாத³த்தஹத்வா 
தி³திஜமகத²யத்³யோ ப்³ரஹ்ம ஸத்ய வ்ரதானாம்ʼதமஹ மகி²ல ஹேதும்ʼ ஜிஹ்ம மீனம்ʼ நதோ(அ)ஸ்மி .. 61..

இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹா புராணே வையாஸக்யா மஷ்டாத³ஶ ஸாஹஸ்ர்யாம்ʼ
பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயா மஷ்டம ஸ்கந்தே⁴ மத்ஸ்யாவதார சரிதானுவர்ணனம்ʼ
நாம சதுர் விம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 24..

.. இத்யஷ்டமஸ்கந்த⁴꞉ ஸமாப்த꞉ ..

———————————

பரீக்ஷித் பகவானின் ஆதி அவதாரமாகிய மத்ஸ்யாவதாரத்தைப் பற்றிக் கூறும்படி சுகரிடம் கேட்டான்.
சுகர் கூறியது.
பிரம்மாவின் இரவில் ஏற்படுவது நைமித்திக ப்ரளயம் . அப்போது ஹயக்ரீவன் என்ற அசுரன் பிரம்மா துயிலுறும் போது
வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டான். பகவான் மத்ஸ்ய உருவெடுத்து அவனைக் கொன்று சமுத்திரத்தில்
ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை வெளிக்கொணர்ந்தார் . இதுதான் மத்ஸ்யாவதாரம்.

முன்னொரு காலத்தில் சத்ய வ்ரதன் என்ற அரசன் சித்தத்தை நாராயணனிடம் வைத்துத் நீரை மட்டும் உட்கொண்டு தவம் செய்து வந்தான்.
ஒருநாள் அவன் நதியில் அர்க்கியம் விடும்போது அந்த கையளவு நீரில் ஒரு சிறு மீன் இருக்கக் கண்டான்.
அதை நதியில் விட நினைக்கையில் அந்த மீன் தன்னை நதியில் விட்டால் பெரிய மீன்கள் விழுங்கிவிடும் என்று கூறியதால்
அதைத் தன் கமண்டலுவில் ஆஸ்ரமத்திற்கு எடுத்துச்சென்றான்.

அந்த சிறிய மீன் விரைவில் கமண்டலு கொள்ளாமல் வளர்ந்து தன்னை அதைவிட பெரிய இடத்தில் விடுமாறு கூறியது.
படிப்படியாக ஒன்றை விட ஒன்று பெரியதான நீர் நிலையத்தில் அதை சேர்க்க அது பெரியதாகிக் கொண்டே வந்தது.
கடைசியில் அதை சமுத்திரத்திற்கு எடுத்துப் போகையில் அந்த மீன் இங்கு தன்னைவிடப் பெரிய சுறாமீன் முதலை போன்றவைகள்
தன்னைத் தின்று விடும் எனக்கூற அப்போது சத்யவ்ரதன் வியப்புற்று மீன் வடிவில் தன்னை மயக்குவது யார் எனக் கேட்டான்.

சத்ய வ்ரதன் கூறியது.
“ஒரே நாளில் நூறு யோஜனை பரப்புள்ள ஏரியை நிறைத்த நீங்கள் நிச்சயமாக நான் வணங்கும் நாராயணனே .
இந்த அற்புத வடிவை எடுக்க க் காரணம் என்ன என்று கூறியருள வேண்டும்” என்றான்.

பகவான் அவனிடம் அன்றைய தினத்தில் இருந்து ஏழாவது நாள் பூமி பிரளய ஜலத்தில் முழுகப்போகிறது என்றும்,
அப்போது பெரிய ஓர் ஓடம் மத்ஸ்ய ரூபியான தன்னால் செலுத்தப்பட்டு அங்கு வரும் என்றும்,
அதில் சத்ய வரதன் எல்லாவிதமான ஔஷதிகளையும் விதைகளையும் எல்லாப் பிராணிகளையும் நிரப்பிக் கொண்டு
சப்த ரிஷிகளுடன் பயமின்றி சஞ்சரிப்பான் என்றும் ,
அப்போது அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் விடை அளித்து பிரம்ம ஞானத்தை அருளுவதாகக் கூறினார்.

பகவானால் கூறப்பட்ட அந்தக் காலத்தில் பெரும் மேகங்கள் மழை பொழிய பூமி முழுகுவதைக் கண்டான்.
அப்போது பகவான் வாக்குப்படி ஒரு ஓடம் வர அதில அவர் சொன்னபடி எல்லா பொருள்களுடனும் சப்த ரிஷிகளுடனும் ஏறினான்.
அங்கு பகவான் மத்ஸ்ய ரூபத்தில் பொன் நிறமுடன் ஓர் லக்ஷம் யோசனை நீண்டு ஒற்றைக் கொம்புடன் காட்சியளிக்க
அவருடைய கொம்பில் அவரால் முன்னமே சொல்லப்பட்டவாறு ஓடத்தை வாசுகியை கயிறாகக் கொண்டு கட்டினான்.
பிறகு மகிழ்ச்சி பொங்க பகவானைத் ஸ்துதித்தான்.

“ தேவ ஸ்ரேஷ்டரும் உலகுக்கெல்லாம் நண்பரும் பிரியமானவரும் ஆத்மாவும் அறிவையும் இஷ்ட சித்தியையும் அளிப்பவரான
உம்மை குருடர்களைப் போல் உலக மக்கள் அறிந்து கொள்வதில்லை. ஈஸ்வரராகிய உம்மை அறிவின் விளக்கத்திற்காக சரண் அடைகிறேன்

ரஹஸ்யார்த்தங்களின் விளக்குப்போன்ற சொற்களால் இருதயத்தின் முடிச்சுகளை சேதித்து உமது உண்மையான
ஸ்வரூபத்தைக் காட்டியருள வேண்டும்,”இவ்வாறு கூறிய அரசனிடம் பகவான்
பிரளய ஜலத்தில் விளையாடியபடியே தத்துவத்தை உபதேசித்தார்.

அப்படிப்பட்ட மாயா மத்ஸ்ய ஸ்வரூபியான அவரை வணங்குவோமாக.

எட்டாவது ஸ்கந்தம் முடிவுற்றது

——————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 32–ஸ்ரீ மத்ஸ்யாவதாரம் –

இத்துடன் ஸ்ரீ மத் பாகவதம் 8 ஸ்கந்தம் நிறைவு அடையும்
1-2-5-6-7-8- உபஜாதி மீட்டர் –
3-4-9 இந்திர வஜ்ரா
10 -உபேந்த்ர வஜ்ரா

———

புரா ஹயக்ரீவ மஹா ஸூரேண ஷஷ்டாந்தரான் தோத் யதகாண்ட கல்பே
நித்ரோந் முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு வேதேஷ் வதித்ஸ கில மத்ஸ்ய ரூபம் –1-

ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலே -நைமித்திக பிரளயம் ஏற்பட்டது -அப்போது தூங்கிக் கொண்டு இருந்த பிரமதேவனின்
முகத்தில் இருந்து ஹயக்ரீவன் என்ற அரசன் வேதங்களைத் திருடிச் சென்றான் –
அப்போது ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தியாக திரு அவதாரம் செய்ய விரும்பினீர்கள் அல்லவா –

வைவஸ்வர மன்வந்தரம் ஏழாவது இப்பொழுது
ஆகவே புரா -தொடங்கி இந்த ஸ்லோகம்-குதிரை முக அசுரன் என்பதால் ஹயக்ரீவன்

முகாத்-முகம் என்பது இங்கு வாயைக் குறிக்கும்

எழுதாக் கிளவி வேதம் -ஸ்ருதி -ஓதுவித்து ஓதுவதால் இந்தப் பெயர்-

———

ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதி பர்துர் நதீ ஜலே தர்பய தஸ்ததா நீம்
கராஞ்சலவ் சஞ்ஜ வலிதா க்ருதிஸ் த்வம் அத்ருஸ்யதா கஸ்சந பால மீந –2-

தமிழ் நாட்டில் கிருதமாலை என்ற நதியில் ஸத்ய வ்ரதன் என்ற அரசன்-(ராஜரிஷி-ஜடபரதர் அரசனாக இருந்து தவம் செய்தது போல் இவனும் )தர்ப்பணம் செய்து
கொண்டு இருக்கும் போது கூப்பிய அவனுடைய கைகளிலே தாங்கள் –பால மீந –மீன் குஞ்சாகத் தோன்றினீர்கள்

த்ரமிலா-த்ரமிடா -லகார டகார பேதம்

க்ருதமாலா என்பது வேறே கிளை நதி -வைகையே என்றுமே சொல்வர்

மீன் கொடி பாண்டியருக்கு இதனால் தான் -சத்யவ்ரதன் முதல் பாண்டிய மன்னன்

கராஞ்சலவ்-திருக்கைக்கள் அஞ்சலி முகமாக கூப்பிய போது

————-

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய நிந்யே அம்பு பாத்ரேண முனி ஸ்வ கேஹம்
ஸ்வல்பை ரஹோபி க்லஸீம் ச கூபம் வாபீம் சரஸ் சாந சிஷே விபோ த்வம் –3-

உடனே தங்களை நீரிலே விட்டான் -பயந்த உம்மைத் தன் –அம்பு பாத்ரேண-தீர்த்த பாத்திரத்தில் விட்டு –ஸ்வ கேஹம்-தன் வீட்டுக்குக் கொண்டு சென்றான்
எங்கும் நிறைந்தவனே -சில நாள்களுக்குள் தங்கள் தீர்த்த பாத்திரத்தையும் கிணற்றையும்
குளத்தையும் ஏரியையும் விட பெரிதாக வளர்ந்து விட்டீர்கள் –

அம்பு பாத்ரம் கமண்டலம் -குடம் -கலசம் -கிணறு கூபம் -குளம் வாபி -ஏரி -ஸரஸ் -இவற்றை விடக் கடந்து வளர்ந்தாயே

————

யோக ப்ரபாவாத் பவதா ஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முனிநா பயோதிம்
ப்ருஷ்டோ அமுநா கல்ப தித்ருஷு மேநம் ஸப்தாஹம் ஆஸ்வேதி வதன் நயாஸீ –4-

பிறகு தங்கள் கட்டளைப்படி ஸத்ய வ்ரதன் தன் யோக மகிமையால் (தபஸ் சக்தியால் இவன் உணர்ந்து  கேட்க – நீர் ஆணை இட்ட படி )மீனான தங்களைக் கடலில் கொண்டு –பயோதிம்-சேர்த்தான்
அவன் பிரளயத்தைக் காண விரும்புகிறேன் என்று தங்கள் இடம் சொல்ல
ஏழு நாட்கள் பொறுத்து இரு என்று சொல்லி –நயாஸீ-மறைந்தீர்கள்

————

ப்ராப்தே த்வத் யுக்தே அஹநி வாரி தாரா பரிப்லுதே பூமி தலே முனீந்திர
சப்த ர்ஷிபி சார்தம் அபார வாரிண் யுத் கூர்ணமாந சரணம் யயவ் த்வாம் –5-

தங்கள் குறிப்பிட்ட –அஹநி-நாளும் வந்தது –வாரி தாரா-மழை பெய்து –பரிப்லுதே பூமி தலே-பூமி முழுவதும் நீரில் மூழ்கியது
ஸத்ய வ்ரதன் ஸப்த ரிஷிகளுடன் நீரில் சுழன்று கொண்டு தங்களைச் சரண் அடைந்தான் –

அபார வாரிண்-எல்லை காண முடியாத ப்ரளயக் கடலில்

———–

தராம் த்வத் ஆதேச கரீம் ஆவாப்தாம் நவ் ரூபிணீம் ஆருரு ஹுஸ் ததா தே
தத் கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூயஸ் த்வம் அம்புதேர் ஆவிரபூர் மஹீ யான் –6-

தங்களுடைய கட்டளைப் படியே தராம்-பூமி தோணியாக வந்தது -அவர்கள் அனைவரும்
தோணியில் ஏறினார்கள் -தோணி ஆடியதால் நடுங்கினார்கள்
அப்பொழுது தாங்களும் மறுபடியும் கடலில் இருந்து மிகப் பெரிய மீனாகத் தோன்றினீர்கள் –

———-

ஜஷாக்ருதம் யோஜன லக்ஷ தீர்க்காம் ததாம் உச்சைஸ் தர தேஜஸம் த்வாம்
நிரீஷ்ய துஷ்டா முனயஸ் த்வத் உக்த்யா த்வத் துங்க ஸ்ருங்கே தரணிம் பபந்து –7-

லக்ஷ யோஜனை (1 யோஜனை 10 mile )நீளம் உள்ள –ஜஷாக்ருதம்-மீன் உருவத்தில் மிகப் பிரகாசமாய் விளங்கினீர்கள் –
அதைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் தங்கள் சொல்படி அந்தத் தோணியை மிகப் பெரிய
தங்கள் கொம்பின் நுனியில் கட்டினார்கள் -(துங்க ஸ்ருங்கே-உயர்ந்த கொம்பிலே )

———–

ஆ க்ருஷ்ட நவ்கோ முனி மண்டலாய பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்
ஸமஸ்தூய மாநோ ந்ரு வரேண தேந ஞானம் பரம் ச உபதி சன்ன சாரீ –8-

ஆ க்ருஷ்ட நவ்கோ-படகை இழுத்துக் கொண்டு சென்றாய்

ஓடத்தை இழுத்துக் கொண்டு –முனி மண்டலாய-அவர்களுக்கு –பிரதர்சயன் விஸ்வ ஜகத் விபாகாந்-உலகின் பல வேறு பிரிவுகளைக் காண்பித்தீர்கள் –
அரசனும் தங்களை –ஸமஸ்தூய மாந-ஸ்துதித்தான் -அவனுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்தீர்கள் –

மாத்ஸ்ய புராணம் இவர் உபதேசித்தது
இப்பொழுது உள்ள மாத்ஸ்ய புராணத்தில் சில மாறு பாடுகள் உள்ளன

———-

கல்பாவதவ் ஸப்த முநீந் புரோவத் ப்ரஸ்தாப்ய ஸத்ய வ்ரத பூமிபம் தம்
வை வஸ்வ தாக்யம் மநு மாத தாந க்ரோதாத் ஹயக்ரீவம் அபி த்ருதோ அபூ –9-

கல்பாவதவ்-பிரளயத்தின் முடிவில் அந்த ரிஷிகளை-புரோவத்-முன்பு போலவே ஸப்த ரிஷிகளின் ஸ்தானத்தில் இருக்கச் செய்து -ஸத்ய வ்ரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினீர்கள்
பிறகு மிகுந்த கோபத்துடன் ஹயக்ரீவன் என்ற அசுரனைத் தொடர்ந்து சென்றீர்கள் –

பிரளயம் ஆனபின்பு வேறே கல்பம் வரும் -விவஸ்வான் பிள்ளை என்பதால்-வை வஸ்வ-இந்தப் பெயர்
சாஷுச மன்வந்தரம் முந்திய ஆறாவது மன்வந்தரம்

மனு ஸ்ம்ருதி இந்த வைவஸ்ய மனு வழங்கியது

சரீர ஆத்ம பாவம் முதல் அத்யாயம் விளக்கும்
மேல் தர்மங்களை விளக்கும்
நாராயணன் உகப்புக்காக செய்யும் தர்மங்கள் என்பதால் முதலில் அவன் பெருமைகளை சொல்லும்

———–

ஸ்வ துங்க ஸ்ருங்க ஷத வக்ஷஸம் தம் நிபாத்ய தைத்யம் நிகமாத் க்ருஹீத்வா
விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந பிரபஞ்ச நாகார பதே ப்ரபாயா –10-

குருவாயூரப்பா தங்களுடைய மிகப் பெரிய கொம்பா-துங்க ஸ்ருங்க- அந்த அசுரனுடைய பிளந்து சாய்த்து(வேத ஞானம் ஹ்ருதயத்தில் தானே இருக்கும் -)
நிகமாத் க்ருஹீத்வா-வேதங்களை மீட்டு வந்து-விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே ததாந- பிரமன் இடம் கொடுத்து அருளிய தாங்கள் (பிரபஞ்ச நாகார-வாயு ஆகாரம்)-அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

ப்ரம்மா ஜீவாத்மா
குதிரை அசுரன் ஐம் புலன்கள்
ஞானம் இழந்து இருக்க
சரண் அடைந்து
ஞான உபதேசம் பெறுகிறோம்பொய்களை மன்னிக்க பிராட்டி
பொய் சொன்னால் மீனாகப் பிறக்க வேண்டுமே
நீயே பிறந்து இவனை ரக்ஷிக்க பிரார்த்திக்க -அதனால் மத்ஸ்ய அவதாரம்

அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-தயா தசகம்–35-

என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.
இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.
ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?

———————————

ஸ்ரீ மத்ஸயவதாரம் –

211-குருர் குருதம -பிரமனுக்கே உபதேசித்த படியாலே ஆசார்யனுக்கே ஆசார்யனானவர் –
212-தாம -சராசரங்களின் வித்துக்களை படகில் தாண்டி -தாங்கி -நடத்தியவர் -சித் அசிதுக்களுக்கு இருப்பிடம் –
213-சத்ய -பிரளயத்தில் தன்னைச் சரண் அடைந்த மனு முதலானவர்களுக்கு உண்மையானவர் –
214-சத்ய பராக்கிரம -மனுவின் இடத்தில் தன் பராக்கிரமத்தைக் காட்டினவர் –
215-நிமிஷ -பகைவர்க்கு அருள் புரியாமல் கண்களை மூடி இருப்பவர் –
216-அ நிமிஷ -தன் அடியார்களைக் கடாஷிக்க எப்போதும் கண் திறந்து இருப்பவர் –
217-ஸ்ரகவீ-வைரம் முத்து முதலான த்வ்யமான ஐந்து மணிகளால் ஆன வைஜயந்தீ எனும் மாலையை அணிந்தவர் –
218-வாசஸ்பதீ-வேதத்தின் பொருளை மத்ஸ்ய புராணத்தில் கூறியபடியால் பேச்சுக்கே தலைவர் –
219-உதாரதீ -அனைவரும் உய்வடைவதற்கான அறிவை உடையவர் –
220-அக்ரணீ–பக்தர்களை பரமபத்துக்கு நடத்திச் செல்பவர் –

3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

அவதாரிகை
அத₂ மத்ஸ்ய அவதார꞉ । அஸேஷ வித்₃யா பரமாசார்யக꞉ குரு--இனி மத்ஸ்ய அவதாரம் கூறப்படுகிறது

சத்ய விரத மனு -வைகை நதிக்கரையில் -மத்ஸ்ய அவதாரம்-ஏக ஸ்ருங்கம்–இச்சா மீனா இத்யாதி -மத்ஸ்ய கமல லோஷணா –கடாக்ஷத்தாலே ரக்ஷணம் -மத்ஸ்ய புராணம் உபதேசித்து அருளினார் –

3–9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்

211- குரூர் குரு தம–குரு தம குரு -பரமாச்சார்யன் –அனைவருக்கும் குரு இவரே

க்ருக்₃ரோருச்ச, இதி கு ப்ரத்யய ꞉ உகாரஶ் சாந்தாதே ₃ஸ ꞉ । தஸ்யைவ விஸேஷணம்

உணாதி ஸூத்ரம் –குரோர் உச்ச –-செய்வது என்ற பொருள் தருகின்ற –க்ரு -பேசுதல் என்ற பொருள் தருகின்ற க்ரு
ஆகிய இரண்டிலும் உள்ள  என்ற ப்ரத்யயம்

கு₃ருதம꞉
ந ஸ்வதந்த்ர நாமத்வமஸ்ய ;குரு தம என்பது தனிச்சொல் அல்ல -குரு பதத்தை மேலும் விவரித்து உயர்ந்த குரு என்கிறது

ச பூர்வேஷாம் அபி குரு இதி ஹிரண்ய கர்ப்ப–இவனே பழைமையான குரு என்று ஹிரண்ய கரப்பன் கூறினான்

* பூஜ்யஶ்ச கு₃ருக₃ரீயான் இதி –ஸ்ரீ கீதை -11-43-
அனைவரையும் விட மேம்பட்ட பூஜிக்கத்தக்க குருவாக நீயே உள்ளாய்

கு இருள் ரு போக்கி -அஞ்ஞானம் போக்கி -இதற்கு அடை மொழி குரு தம

அறியாக் காலத்துள்ளே அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
பிதா மகராண ப்ரஹ்மனுக்கும் வேதங்கள் வெளிட்டு உபதேசித்து அருளினவன்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -பெரியாழ்வார் -5-2-8-

மத்ஸ்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால்
ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

ஓம் குரவே நம:

ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும்

ஸர்வேஶாம் அனைவரையும் (அனைத்தையும்)

ஜனகத்வாத்வா தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும்

குரு: பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் ‘குரு’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

———

குருர் குருதம – ஆசான்களில் முதன்மையானவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் குருர் மற்றும் குருதமாவை இரண்டு வெவ்வேறு நாமங்களாகக் கருதுகிறார், ஆனால் ஸ்ரீ பராசர பட்டர் அவற்றை ஒரே நாமமாகக் கருதுகிறார். குருர் குருதமஹ். சுவாரஸ்யமாக, ஸ்ரீ பராசர பட்டர் ‘வாசஸ்பதி’ மற்றும் ‘உதாராதீ’ ஆகிய இரண்டு தனி நாமங்களாகக் கருதுகிறார், ஸ்ரீ ஆதி சங்கரர் அவற்றை ஒரு நாமமாகக் கருதுகிறார். இருப்பினும், ஒட்டுமொத்த பெயர் எண்ணிக்கையும் இதனால் பாதிக்கப்படவில்லை. ஸ்ரீ பராசர் பட்டர், மேலே குறிப்பிட்டுள்ளபடி, குருர் குருதமாவை ஒரே கூட்டுப் பெயராகக் கொண்டு, ‘குரு-தமா’ என்ற சொற்றொடரை குருவின் பெயரடையாக விளக்குகிறார், அதாவது, சிறந்த குரு. அனைத்து குருக்களின்.

குரு என்றால் ‘ஆன்மீக போதகர்’ மற்றும் தமா என்பது ஒரு உயர்ந்தது, அதாவது சிறந்தது. சமஸ்கிருதத்தில் வார்த்தையின் முடிவில் ‘தமா’ சேர்த்தால் அது உயர்ந்த பட்டம். எனவே குருதமா என்பது அனைத்து ஆசான்களிலும் உயர்ந்தது அல்லது முதன்மையானது.

ஸ்ரீஆதிசங்கரர் இதை இரண்டு நாமங்களாகக் கருதுகிறார், குரு மற்றும் குரு-தமம். அவர் நாம ‘குரு’வை இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் விளக்குகிறார், ஒருவர் சிறந்த ஆசிரியர் என்றும் மற்றவர் உலகளாவிய தந்தை என்றும். அவர் கூறுகிறார் ‘சர்வ வித்யாநாம் உபதேஷ்த்ருத்வாத் சர்வேஷாம் ஜனகத்வாத் வா – அவர் அனைத்து அறிவுக்கும் சிறந்த ஆன்மீக ஆசிரியராக இருப்பதால் அவர் குரு என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் பிரபஞ்சத்தின் தந்தை அல்லது படைப்பாளர் என்பதால்.

‘விரிஞ்சயாதீனாம் அபி பிரம்மவித்யா ஸம்ப்ரதாயகத்வாத் குருதமாஹ் – பிரம்மனைப் பற்றிய அறிவை பிரம்மனுக்குத் தானே கற்பிக்கிறார்’ என்று அவர் இதை நியாயப்படுத்துகிறார். இந்த யோசனை ஸ்வேதாஷ்வதார உபநிடதத்தில் (6.18) பிரதிபலிக்கிறது, இது ‘யோ ப்ரம்ஹாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாங்க ப்ரஹிணோதி தஸ்மை– பிரம்மத்தை உண்டாக்கி அவருக்கு வேதத்தை வழங்கியவர்’ என்று கூறுகிறது.

இதே போன்று மஹா நாராயண உபநிஷத் (8.15) ‘குருஹ் கா இதி | குரு சாக்ஷாத்-ஆதிநாராயணா – இறுதி குரு ஸ்ரீ ஆதி நாராயணா’. குரு-சிஷ்ய பரம்பரையின் ஆரம்பம் நர மற்றும் நாராயணருடன் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

தர்மச் சக்கரத்தில், எழுத்தாளர் குரு-தமஹ் என்று கூறுகிறார், ஏனென்றால் அவர் எல்லாவற்றிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார், அவருடைய போதனைகளைப் பெற நாம் செய்ய வேண்டியது எல்லாம், அதற்காக நாம் ஏங்குவதுதான். உண்மையான அறிவை (ஞானத்தை) அடைவதற்காக முன்னேற அவரது அருளுக்கான தேடுதலே தேவை.

—————

212-தாம –
இருப்பிடம் – மநு என்கிற பக்தன் இடம் அனைத்தையும் தன் கொம்பில் கட்டி விட சொல்லி ரஷித்தவன்-மீனாய் வந்து உய்யக்கொண்டவன் –

ஸம்ஹார நஶ்வர சராசர பீ₃ஜ ஆதா₄ர நவ்கர்ண (படகு-நாவாய் முகுந்தன்  )தா₄ரத்வேந ததா₃ஶ்ரயத்வாத்
தா₄ம । தா₄ஞ꞉
* ஸர்வதா₄துப்₄யோ மநிந், இதி மநிந் ப்ரத்யய ꞉ ॥

உணாதி ஸூத்ரம் –ஸர்வ தாதுப்ய —மனிந்-தாக்குவது என்ற பொருள் கொண்ட தா என்பது அனைத்து
வினைகளுடன் உள்ள போது அத்துடன் மதின் என்பது இணையும்
தாம +மன் +இன் =தாமன்

மீனாய் ஆமையுமாய்-2-1-10-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் -பெரிய திருமொழி -8-8-10-
தேவுடை மீனாய் ஆமையாய் -பெரியாழ்வார் -4-9-9-
முன்பு 62 த்ரி ககுத் தாம பார்த்தோம்

சராசரங்கள் அனைத்தையும் தாங்குபவர் -பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும்
கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

ஓம் குருதமாய நம:

விரிஞ்ச்யாதீனாமபி நான்முகக் கடவுளான ப்ரஹ்மா முதலானோருக்கும்

ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால்

குருதம: பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

தம என்றால் ‘உயர்ந்த’ அல்லது ‘சிறந்த’ என்று பொருள். குருதம: என்றால் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று பொருள்.

‘யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’ (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 6.18)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவர் முதன் முதலில் நான்முகனைப் படைத்தாரோ…

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி பகவான் ‘குருதம’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

————

தாம – உறைவிடம்

தாம என்பதற்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன:

  1. வசிக்கும் இடம்;
  2. உச்ச ஒளி; மற்றும்
  3. அனைத்து விரும்பிய பொருட்களின் உறைவிடம்.

தாம முதலில் ‘த்ரி-ககுட்-தாம‘ என்று நாம 62 ஆகத் தோன்றியது. அதே விளக்கங்கள் இங்கேயும் பொருந்தும். ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை முந்தைய நாமத்துடன் இணைத்து மத்ஸ்ய அவதாரத்தைக் குறிப்பிடுகிறார். பிரளய வேளையில் அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களின் விதைகளைச் சுமந்து கொண்டு படகைச் செலுத்தும் தலைவன் போல இருப்பதால், பகவான் தாமனாக இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ சங்கரர் நாமத்தை உச்ச முன்னணி ஒளியாக விளக்குகிறார். அவரது கருத்துப்படி, நாராயண ஸூக்தம் ‘நாராயண பரோ ஜோதிஹ் – நாராயணனே இறுதி ஒளி’ என்று கூறுவதால் இந்த அர்த்தம் பொருத்தமானது.

ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா தனது கீதா பாஷ்யத்தில் (அத்தியாயம் 10 வசனம் 12) பரம் ப்ரஹ்ம பரம் தாம என்று கூறுகிறார், தாம – தாம சப்தோ ஜோதிர்வாசனஹ் – பரம் ஜோதிஹ் என்ற வார்த்தைக்கு “உச்ச ஒளி” என்று பொருள் தருகிறார். தர்ம சக்கரத்தில் எழுத்தாளர் “உச்ச ஒளி” என்ற வார்த்தையை மேலும் விரிவாகக் கூறுகிறார். சூரியனிடமிருந்து வரும் ஒளியைக் கண் பார்க்கிறது. ஆனால் சூரியனின் ஒளியோ அல்லது கண்ணோ அல்டிமேட்டைப் பார்க்க முடியாது. அதற்கு பகவானின் அருள், உள்ளொளி என்னும் ஒளி வேண்டும். இதுவே மஹா விஷ்ணு, தாமா என்பது உச்ச ஒளி, வேறு எந்த ஒளியும் செய்ய முடியாததை வெளிப்படுத்தும். அவரை அடைய வேண்டும் என்ற தீவிர ஆசையின் கண்தான் இந்த ஒளியைக் காண முடியும், வேறு எந்தக் கண்ணாலும் பார்க்க முடியாது.

கொடுக்கப்பட்ட பிற விளக்கங்கள் அடங்கும்

  • விரும்பிய பொருள்கள் அனைத்திற்கும் அவன் உறைவிடம்,
  • அவர் ஆசைகள் அனைத்திற்கும் இருப்பிடம்,
  • கர்மங்கள் முதலிய எல்லாவற்றுக்கும் அவனே இருப்பிடம்.

ஸ்வ அமி சின்மயாஆனந்தா, “உச்ச ஒளி” என்பதன் விளக்கத்திற்கு கூடுதலாக, அவர் இறுதி இலக்கு (தாமா அல்லது சிகரம்) என்பதால் அவர் தாமா என்று மாற்று விளக்கம் கொடுக்கிறார்.

தற்செயலாக, சார் தாம் பற்றிய குறிப்பு (அதாவது: ‘நான்கு வசிப்பிடங்கள்/இருக்கைகள்) என்பது இந்தியாவில் உள்ள நான்கு புனிதத் தலங்களின் பெயர்கள் ஆகும், அவை இந்துக்களால் பரவலாக மதிக்கப்படுகின்றன. அவை பத்ரிநாத், துவாரகா, ராமேஸ்வரம் மற்றும் ஜகன்னாத் புரி. ஒருவர் வாழும் காலத்தில் சார் தாம் தரிசனம் செய்வது இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.


213-ஸத்ய
நல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-(873)

மந்வாதி₃ஷு தத் கால ஸமாஶ்ரிதேஷு ஸத்ஸு ஸாது₄ரிதி
ஸத்ய ꞉ ॥
நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7

தாஸ சத்யன் அடியவர்க்கு மெய்யன் திரு வஹீந்திர புரம்-பிரியம் மட்டும் செய்தால் பொய்யன்–ப்ரயோஜனாந்தர பரர்களும் வேண்டியதைத் தந்து அருளுபவர் -கோவிந்த ஸ்வாமி விரும்பியபடியே இங்கேயே இருந்து பின் வா என்று அருளினார் அன்றோ -ஹிதம் அருளி தன்னுடன் சேர்த்துக் கொள்ளுபவன் மெய்யன் –

பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

ஓம் தாம்னே நம:

தாம ஜ்யோதிதாம என்றால் ஒளி (ஜ்யோதி) என்று பொருள்

நாராயண பரோ ஜ்யோதி:’(நாராயண உபநிஶத் 13.1)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நாராயணரே உன்னதமான ஒளியாவார்

இதி மந்த்ர வர்ணாத் இந்த மந்திரத்தின் படி

தாம: பகவான் ‘ தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தாம என்றால் ஒளி மிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளி வடிவினராக இருப்பதால் பகவான் ‘தாம:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப் படுகிறார்.

ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா அனைத்து ஆசைகளும் சென்றடையும் இடமாக இருப்பதால்

தாம: பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் ‘தாம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரம் ப்ரஹ்ம பரம் தாம‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரப்ரஹ்மமே அனைத்தும் சென்றடையும் இடமாக இருக்கிறார்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———

சத்யா – நல்லது

இந்த நாமம் முன்பு நம 107 ஆக இருந்தது, மேலும் ஒரு முறை நம 873 ஆக நிகழும். இந்த நாமத்தின் பொருளின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  1. அவர் தூய உண்மை.
  2. அவர் பிராணன், பொருள் மற்றும் சூரியனால் ஆனது.
  3. அவர் உன்னத ஆன்மாக்கள் மீது நல்ல மனநிலை கொண்டவர்.
  4. கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அவர் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அந்த நேரத்தில் தனது உதவியை நாடிய மனு போன்ற சத்-புருஷர்களுக்கு நல்லவராக இருந்ததால் அவர் சத்யா என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரர், ‘சத்யஸ்ய சத்யம்-அனைத்து உண்மைக்குப் பின்னும் உள்ள சத்தியம்’ என்று அனைத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார். சத்யா என்பது பாணினி சூத்திரம் 4.4.98 இன் அடிப்படையில் சத்தில் ‘சிறப்பாக’ இருப்பவர்.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் கிருஷ்ணரின் வார்த்தைகளில் ‘சத்’ என்பதன் வரையறைக்காக பகவத் கீதையை (அத்தியாயம் 17 வசனங்கள் 26 மற்றும் 27) குறிப்பிடுகிறார்.

ஸத் பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே |
ப்ரஷஸ்தே கர்மணி ததா சச்-சப்தஹ் பார்த்த உச்யதே || (17.26)

ய~ஜ்னே தபஸி தநே ச ஸ்திதிஹ் சதிதி கோச்யதே |
கர்ம சைவ ததார்த்தீயம் ஸதித்யேவ அபிதீயதே || (17.27)
சத்‘ என்ற சொல் இருப்பு, நன்மை, நல்ல செயல்கள், தியாகத்தில் உறுதிப்பாடு, துறவு, வரங்கள் அல்லது அத்தகைய நோக்கங்களுக்காகச் செய்யும் செயல்களைக் குறிக்கிறது. இவை அனைத்திலும் சிறந்தவர் அல்லது இந்த வழியில் செயல்படுபவர்களுக்கு சிறந்தவர் (அதாவது ஆதரவளிப்பவர்) சத்யா ஆவார்.


214-ஸத்ய பராக்கிரம
வஞ்சனை அற்ற ஆற்றல்

தேஷு ஸத்யோ(அ)கைதவ ꞉ பராக்ரமோ வ்ருத்திரஸ்யேதி
ஸத்ய பராக்ரம꞉

பொய் கலவாமல் -பொய் கலவாது மெய்கலந்தான் வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும்

தீய புந்திக் கஞ்சனை வஞ்சனை செய்தவன்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சன் -பெரிய திருமொழி -7-10-8-

அஹம் வேத்மி –மஹாத்மாநம் ராமம் சத்ய பராக்ரமம்

மெய்யன் மெய்ய மலையான் சங்கு ஏத்தும் கையன்

மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்திய வசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் ஸத்யாய நம:

ஸத்ய வசன உண்மைக் கூற்றுக்களாகவும்

தர்ம ரூபத்வாத் அறமே வடிவானவராயும் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.

புராணங்கள், அறத்தை நான்கு கால்கள் கொண்ட ஒரு எருதாக உருவகப் படுத்துகின்றன. அந்த நான்கு கால்களில் உண்மையும் ஒன்றாகும். முதல் யுகமான க்ருத யுகத்தில் நான்கு கால்களுடன் இருந்த அறமானது, இந்தக் கலியுகத்தில் வாய்மை என்னும் ஒரே காலில் மட்டும் நின்று கொண்டிருக்கிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திரு மெய்யம் என்னும் திருத் தலத்தில், பகவான் ‘ஸத்ய மூர்த்தி’, ‘மெய்யன்’ என்ற திருநாமத்துடனே எழுந்தருளியிருக்கிறார்.

தஸ்மாத் ஸத்யம் பரம் வதந்தி

வேதங்களிலும்உபநிடதங்களிலும் கூறப்பட்டுள்ளது: ஆகவே, அந்த (என்றும் மாறாது இருக்கும்) உண்மையான தத்துவத்தையே பரம்பொருள் என்று கூறுகின்றனர்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஸத்யஸ்ய உண்மையான பொருட்கள் அனைத்திற்குள்ளும்

ஸத்யமிதி வா உண்மையின் வடிவாய் இருப்பதால்

ஸத்ய பகவான் ‘ஸத்ய’ (மெய்யானவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஸத்ய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ராணா வை ஸத்யம் தேஶாம் ஏஶ ஸத்யம்‘ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.3.6)

ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஜீவாத்மா என்றும் மாறாத உண்மைப் பொருளாகும். அதற்குள்ளும் (அதனிலும் மேம்பட்ட) உண்மையாக பரமாத்மாவே இருக்கிறார்.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

———

ஓம் ஸத்யபராக்ரமாய நம:

ஸத்ய: அவிதத: உண்மையான, என்றும் வீணாகாத

பராக்ரமோ யஸ்ய ஸ

வீரத்தை உடையவராதலால்

ஸத்ய பராக்ரம: பகவான் ‘ஸத்யபராக்ரம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் சக்தியும், வீரமும் என்றும் மாறாதவை (நித்தியமானவை). அவை ஒரு நாளும் வீண்போவதில்லை. எனவே, அவர் ‘ஸத்யபராக்ரம:’ (உண்மையான வீரமுடையவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——–

சத்ய-பராக்ரமா – தவறாத வீரம்

பராக்ரம் என்றால் வீரம். எனவே சத்திய பராக்கிரமம் உண்மையான வீரம் கொண்ட ஒன்றாகும். ஆதி சங்கரரின் வார்த்தைகளில், ‘சத்யஹ் அவிதாத: பராக்ரமோ யஸ்ய சஹ் – உண்மையான மற்றும் தடையற்ற வீரம்’.

ஸ்ரீ பராசர பட்டர், மத்ஸ்ய அவதாரத்தின் அடிப்படையில் நமஸ்ஸின் இந்த வரிசையின் விளக்கத்தைத் தொடர்கிறார், மனு மற்றும் பிறரிடம் துணிச்சலான செயல்களை பகவான் உண்மையாகச் செய்ததற்கான உதாரணத்தைக் கூறுகிறார். தர்மச் சக்கரத்தில் எழுத்தாளர் இரண்டு வகையான வீரம் இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகிறார், ஒன்று ஸ்ரீ ராமனுடையது போன்ற மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றொன்று சக்தியை வெளிப்படுத்தவும் மற்றவர்களைக் காயப்படுத்தவும் பயன்படுகிறது. என்று அரக்கன் ராவணன். மஹா விஷ்ணுவை தியானிப்பது சரியான வகையான வீரத்தை வளர்க்கும் திறனை அளிக்கிறது.


215-நிமிஷ –
கண் மூடி -அநாஸ்ரிதரை கடாஷியாதவன்-நிமி வம்சம் சீதா பிராட்டி -காணாக் கண் இட்டு இருப்பது -வேறே -உயர்ந்த விஷயம்

தத்₃விரோதி₄ஷு நிமிஷதி – ந கடாக்ஷய தீதி
நிமிஷ꞉ ॥

சந்தமர் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன்
நின்றான் -பெரிய திரு மொழி -2-3-6-

நஷ்டம் பராக் தத் அலாபஸ் த்ரிலோகம் –ஸம்பத் அநயோதயம் -சதுஸ் ஸ்லோகி

சத்வ அசத்வ நிதானம் இருள் தரும் அமலங்களாக வென்னும் ஜன்ம ஜாயமான கால கடாஷங்கள்-

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும்
ஜன்மம்
ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்-

சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் –
அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

ஓம் நிமிஶாய நம:

நிமிலிதே மூடியுள்ளன

யதோ நேத்ரே எவரது (அவரது) கண்கள்

யதோ யோக நித்ராரதஸ்ய யோக நித்திரையின் பொழுது

அதோ நிமிஶ: எனவே, பகவான் ‘நிமிஶ:’ (கண்களை மூடியுள்ளவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் யோக நித்திரைக் கொள்ளும் பொழுது அவரது கண்கள் மூடியுள்ளன. எனவே, அவர் ‘நிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நிமிஷா – கண்களை மூடியவர்

ஆதி சங்கரரின் கூற்றுப்படி இதன் பொருள் ‘நிமீலிதே யதோ நேத்ரே யோகநித்ரா ரதஸ்ய அதோ நிமிஷா – அவரது கண்கள் யோகநித்ரா அல்லது யோக உறக்கத்தில் மூடப்பட்டிருக்கும், எனவே அவர் நிமிஷா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ந ஈக்ஷதே இதி நிமிஷாஹ்‘ என்று விளக்குகிறார். அவரை எதிர்ப்பவர்கள் மீதும் அல்லது அவரது பக்தர்கள் மீதும் அவருடைய அருள் பார்வை படுவதில்லை.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவர் நிமிஷா (மூடிய கண்களுடன்) என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருக்குப் பார்க்க அவரது கண்கள் தேவையில்லை.

அவர் எங்கும், நம் ஒவ்வொருவரிடமும், எல்லா நேரத்திலும் இருப்பதால், கண்கள் இல்லாமல் எல்லா இடங்களிலும் நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர் தனது மூடிய கண்களால் அனைத்தையும் பார்க்கிறார் என்று தர்ம சக்கரம் எழுத்தாளர் சுட்டிக்காட்டுகிறார்.

விஷ்ணுவின் யோக நித்ராவைப் பற்றி சிந்திப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த நிலையில் (பொதுவாக, நம் கண்கள் திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும், அவர்கள் அலைந்து திரிவார்கள்) உலக எண்ணங்கள்!).


216-அநிமிஷா –
மீன் பார்வையாலே முட்டைகளை வளரச் செய்யும்-கீழ் தன்மைகளை சொல்லி இங்கு அவதார திரு நாமம்

க ஏவம் ?
அநிமிஷ꞉ ;
ஸத்ஸு ந நிமிஷதி ஜாக₃ர்தீதி
அநிமிஷ꞉,
தி₃வ்ய மீந தநு꞉ ॥

ஆஸ்ரிதர்களை குளிரக் கடாஷித்து அருளி
மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

சபரி -விதுரர் -ரிஷி பாதணிகளை பூதராக்கும் நெடு நோக்கு கொள்ளும்

கற்பார் ராமபிரானை அல்லால் -விதியைச் சொல்லி உத்தரம் வார்த்தை அறிபவர் சரம ஸ்லோகம் கீதாச்சார்யர்

சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில்
இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் அநிமிஶாய நம:

நித்ய எப்பொழுதும்

ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் விழிப்புடன் இருப்பதால்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எப்பொழுதும் விழிப்புடனே இருக்கிறார். நம்மைப் போன்று அவர் தூங்குவதில்லை. எனவே, அவர் ‘அநிமிஶ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரபுத்த என்ற சொல்லிற்கு பல பொருட்களுள் உண்டு. அவற்றுள் ‘விழிப்புடன் இருத்தல்’, ‘அறிவொளியோடு இருத்தல்’ என்பவையும் அடங்கும். இங்கு பகவான் எப்பொழுதும் விழித்திருக்கிறார் என்று பொருள். யோக நித்திரையில் கண்களை மூடி இருந்தாலும், விழிப்புடனேயே இருக்கிறார். மேலும், அவரது அறிவானது என்றும் ஒளிவீசிக் கொண்டே இருக்கும்.

மத்ஸ்யரூபதயா வா மீனாக அவதரித்ததனாலும்

ஆத்மரூபதயா வா (அனைவருக்குள்ளும்) உறையும் ஆத்மாவாக இருப்பதனாலும்

அநிமிஶ: பகவான் ‘அநிமிஶ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் முதலில் மீனாய் திருவவதாரம் செய்தார். மீன்கள் இயற்கையாகவே தம் இமைகளை மூடாது. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும், அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உள்ளுறை ஆத்மாவாக இருக்கிறார். புலன்கள் தூங்கினாலும் (அடங்கினாலும்) ஆத்மா தூங்குவதில்லை. எனவே, பகவான் ‘அநிமிஶ:’ (கண்களை மூடாதவர், விழிப்புடன் இருப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

மத்ஸ்யாவதார வரலாறு:

முந்தைய கல்பத்தின் முடிவில் (அதாவது, ப்ரஹ்மாவின் ஒரு பகல் பொழுதின் முடிவில்) ஹயக்ரீவன் என்ற அசுரன் ப்ரஹ்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றான். ப்ரஹ்மாவின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் அந்த வேதங்களை மீட்க முடிவெடுத்தார். அச்சமயம், ஸத்யவ்ரதன் என்றொரு த்ராவிட தேசத்து அரசன் இருந்தான். அவன் (இன்றைக்கு நாம் ‘வைகை’ என்று அழைக்கும்) க்ருதமாலா நதிக்கரையில் நீராடும் வேளையில் பகவான் அவன் கைகளில் ஒரு சிறு மீனாகத் தோன்றினார்.

பெரும் திமிங்கலங்களும், முதலைகளும் வாழும் சமுத்திரத்தில் தம்மால் வாழ இயலாதென்றும், தம்மை காக்குமாறும் அந்த மீன் (பகவான்) வேண்ட, ஸத்யவ்ரதன் அந்த மீனை தன் கமண்டலத்தின் கொண்டு சென்றான். அவன் அரண்மனையை அடையும் பொழுதே அந்த மீன் அவனது கமண்டலம் வரையிலும் வளர்ந்தது. அவன் அதை ஒரு தொட்டியில் விட, தொட்டில் வரையிலும் வளர்ந்தது. பின்னர் குளம், ஏரி ஆகியவற்றில் விட அந்த மீன் அந்தந்த அளவிற்கு வளர ஸத்யவ்ரதன் இது ஒரு சாதாரண மீன் அல்ல என்று உணர்ந்தான்.

அவன் வேண்ட, பகவான் அவனுக்கு காட்சியளித்தார். ‘அன்றிலிருந்து ஏழாவது நாளில் பூமி ஒரு பெருமழையால் மூழ்கும் என்றும் அப்பொழுது ஒரு படகு தோன்றுமென்றும், அப்படகில் ஸத்யவ்ரதன், ஸப்த ரிஶிகள் மற்றும் அனைத்து வகை மூலிகைகள் மற்றும் விதைகளை ஏற்றிக் கொண்டு அந்த படகை (மீனான) தனது கொம்பில் வாசுகி என்னும் பாம்பைக் கொண்டு கட்டி விடுமாறும்’ கூறிவிட்டு மறைந்தார்.

அவ்வாறே, ஏழாம் நாள் பெருமழை பொழிய, ஒரு படகும் தோன்றியது. ஸத்யவ்ரதனும் பகவான் கூறியபடியே ஸப்தரிஷிகள் மற்றும் மூலிகைகளையும் அந்த படகில் ஏற்றிக் கொண்டு, வாசுகியை பகவானின் (மத்ஸ்யாவதார மூர்த்தியின்) கொம்பில் கட்டினான். பகவான் ஸத்யவ்ரதனுக்கும், ஸப்தரிஷிகளுக்கும் வேதார்த்தங்களை உபதேசித்த படியே ப்ரளய ஜலத்தில் அந்த படகை வழி நடத்தி சென்றார்.

முடிவில், கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவனைக் கொன்று அவனால் கவரப்பட்ட வேதங்களை மீட்டு ப்ரஹ்மாவிடம் தந்தருளினார்.

இந்த ஸத்யவ்ரதனே இந்த கல்பத்தின் மனுவாக நியமிக்கப்பட்டார்.

———-

அனிமிஷா – எப்போதும் விழித்திருப்பவர்

ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை மத்ஸ்ய அல்லது வான மீன் அவதாரத்தின் அடிப்படையில் விளக்குகிறார். இந்த அவதாரத்தில், அவர் ஒருபோதும் தனது கண்களை மூடுவதில்லை மற்றும் அவரது பக்தர்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார் (மீன்களுக்கு கண் இமைகள் இல்லை, எனவே அவற்றின் கண்களை மூடவே இல்லை).

ஸ்ரீ ஆதிசங்கரர் இரண்டு கூடுதல் விளக்கங்களைத் தருகிறார் – அவர் தனது ஞானத்தின் காரணமாக எப்போதும் விழித்திருக்கிறார், அல்லது அவர் ஆத்மா ஸ்வரூபம், மற்றும் ஆத்மா ஒருபோதும் தூங்குவதில்லை. ‘நித்ய ப்ரபுத்த ஸ்வரூபத்வாத் அனிமிஷா மத்ஸ்யரூபதாயா வா ஆத்மாரூபதாயா வா அனிமிஷா’ என்கிறார்.

என் அமுதினைக் கண்ட கண்கள் மாதொன்றினைக் காணவே” என்ற அமலன்ஆதிபிரானில் திருப்பனாழ்வாரின் நிறைவுப் பாசுரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. திருக்கோயிலில் இறைவனின் அழகை வர்ணிக்கும் போது ஆழ்வார் இதைப் பாடிய போது, ​​அகக் கண்களுக்கும் பொருந்தும்.

இந்த நாமத்தை தியானிப்பவர் ஆன்மீக ரீதியில் எப்போதும் விழிப்புடன் இருப்பார் என்றும், கெட்ட எண்ணங்கள் மற்றும் உலக கவனச்சிதறல்கள் அவரது மனதில் நுழையாது என்றும் இந்த பெயரின் முக்கியத்துவத்தை தருகிறார் தர்ம சக்கரம் ஆசிரியர்.


217-ஸ்ரக்வீ
பரத்வ ஸூ சகமான மாலை அணிந்தவன் -வைரம் முத்து போன்ற  ஐந்து வித வைஜயந்தி மாலை-தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி அம்ச அவதாரம்

திர்யக்த்வே (அ)பி பரத்வ ஸூசிநீ வைஜயந்தீ ஸ்ரக₃ரஸ்ய நித்ய யோகி₃நீதி
ஸ்ரக்₃வீ ।
* அஸ்மாயா மேகா₄ஸ்ரஜோ விநி꞉ இதி விநி

அஷ்டாத்யாயீ –அஸ் மாயா மேதா ஸ்ரஜஸ் விநி —
மாயா–மேதா –ஸ்ரத் என்பதுடன் சேர்ந்து இருத்தல் என்பதை உணர்த்தும் விநி என்பது உண்டாகும்

கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை மினுங்க நின்று விளையாட -நாச் -14-2-
திருத் துழாய் மாலையைச் சொல்லிற்றாகவுமாம்
தோளிணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடைய அம்மான் -1-9-7-

மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக -பஞ்ச பூத ஸூஷ்மங்கள் சேர்ந்ததான-வைஜயந்தி என்னும் வன மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் வன மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————

ஓம் ஸ்ரக்விணே நம:

பூததன்மாத்ரரூபாம் பஞ்ச பூதங்கள், மற்றும் தன்மாத்திரைகளின் வடிவமான (அதாவது புலன்களின் சூட்சுமமான நிலை)

வைஜயந்த்யாக்யாம் ‘வைஜயந்தி’ என்ற பெயருடைய

ஸ்ரஜம் மாலையை

நித்யம் என்றும் (எக்காலத்திலும்)

பிபர்த்தீதி தாங்கியிருப்பதால் (அணிந்திருப்பதால்)

ஸ்ரக்வீ பகவான் ‘ஸ்ரக்வீ” (மாலையை அணிந்திருப்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் பஞ்சபூதங்கள், மற்றும் அனைத்து தன்மாத்திரைகளின் வடிவான ‘வைஜயந்தி’ என்ற மாலையை எப்பொழுதும் அணிந்துள்ளார். எனவே, அவர் ‘ஸ்ரக்வீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தன்மாத்திரைகள்  இவை நம் புலன்களின் சூட்சும வடிவங்களாகும். இந்த தன்மாத்திரைகளே நமது புலன்களுக்கு அதன் சக்தியை வழங்குகிறது (உதாரணமாக, ஶப்த தன்மாத்திரையிலிருந்து நமக்கு கேட்கும் திறன் கிடைக்கிறது).

நித்யம்  எப்பொழுதும். பகவான் வைஜயந்தி மாலையை எப்பொழுதும், எல்லா அவதாரத்திலும் (நமக்குத் தெரியாவிடினும்) அணிந்துள்ளார். சங்கு, சக்கரம் போன்று வைஜயந்தி மாலையும் பகவானுடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு அடையாளமாகும்.

ஸ்ரக்வீ – மாலையால் அலங்கரிக்கப்பட்டவள் (வைஜயந்தி)

ஸ்ரக் என்ற சொல் மாலையைக் குறிக்கிறது. ஸ்ரக்வீ ஒரு மாலையால் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டவர். பாணினியின் அஷ்டாத்யாயி 5.2.121 படி – மாயா மேதா ஸ்ரஜோ விநிஹ் – ஸ்ரஜுக்குப் பின் வரும் ‘வின்’ என்ற இணைப்பு ‘உடன் இணைந்து’ என்பதைக் குறிக்கிறது. எனவே இங்கு பொருள் ‘எப்பொழுதும் மாலையால் அலங்கரிக்கப்பட்டவர் – ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் வைஜயந்தி மாலையைக் குறிக்கிறது.

பூத தன்மாத்ர ரூபம் வைஜயந்த்யாக்யம் ஸ்ரஜம் நித்யம் பிபாரதி இதி ஸ்ரக்வீ – தன்மாத்ரங்களின் ஐந்து அடிப்படை கூறுகளை (சுவை, பார்வை, ஒலி, வாசனை மற்றும் உணர்வு) குறிக்கும் வைஜயந்தி என்ற மாலையை எப்போதும் அணிந்திருப்பதால் அவர் ஸ்ரக்வீ என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரி விஷ்ணு புராணத்தின் குறிப்பைக் கொடுக்கிறார் –
பஞ்ச ஸ்வரூப யா மாலா வைஜயந்தி கதா பிரிதா |
ச பூத ஹேது ஸங்காதா பூதா மாலா ச வை த்விஜா || (1.2.72)

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டா என்பது ‘ஸ்ரிஜ்’ என்பதிலிருந்து தொடங்கும் அர்த்தம், ‘உருவாக்க அல்லது அமைக்க’. நட்சத்திரங்கள், சூரியன் முதலான படைப்புகள் அனைத்தும் அவனுடைய படைப்புகள் என்பதால், அவன் ஸ்ரக்வீ. ஒரு மாலையில், பல்வேறு வகையான பூக்கள் இருக்கலாம், ஆனால் அவை மாலையின் ஒரு பகுதியாக இருக்கும்போதே தங்கள் அடையாளத்தை இழக்கின்றன. மேலும், இந்த வெவ்வேறு படைப்புகள் அனைத்தும் ஸ்ராக்வீ அல்லது பகவான் விஷ்ணுவைப் போல ஒன்றாக உள்ளன. அல்லது, நம் சமுதாயத்தில் உள்ள ஒரு சிறந்த நபரின் கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம் போல, பகவான் இந்த தனித்துவமான மாலையால் அவரது இறைவனையும் மேன்மையையும் குறிக்கிறார்.

முத்து, மாணிக்கம், மரகதம், நீலம், வைரம் ஆகிய ஐந்து விலையுயர்ந்த ரத்தினங்களால் ஆனது வைஜயந்தி என்று பேராசிரியர் ஏ. சீனிவாச ராகவன் குறிப்பிடுகிறார்.

தர்ம சக்கரத்தில் உள்ள எழுத்தாளர், விஷ்ணுவின் சேவையில் நமது அனைத்து தனமாத்ரங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் (ரங்கநாதருக்கு அது போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் தன்னை மலர் மாலையால் அலங்கரித்த ஆண்டாள் உதாரணத்தை கூறுகிறார்)


218-வாசஸ்பதி –
சொல்லுக்கு அதிபதி-மேலும் இந்த நாமம் வரும் –

ஸ ஏவ ஶ்ரீமந் மாத்ஸ்ய புராணேந வேத₃உப ப்₃ரும்ஹணாத்₃
வாஸ ஸ்பதி꞉ ।
ஷஷ்ட்₂யா அலுக்,
* ஷஷ்ட்₂யா ꞉ பதி புத்ர இத்யாதி₃ நா ஸத்வம் ॥

சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் சொல்ல வல்லரே -திருச்சந்த -118-

மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர்-வாக்கு என்னும் சொல்லுக்கு அதிபதி -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

ஓம் வாசஸ்பதய உதாரதியே நம:

வாசோ வித்யாயா ‘வாச’ என்றால் அனைத்து வகையான அறிவையும் குறிக்கும்

பதிஅவற்றின் தலைவர் (அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சி பெற்றவர்)

வாசஸ்பதி‘வாசஸ்பதி:’ என்று அழைக்கப்படுகிறார்

ஸர்வார்த்தவிஶயாதீர் அனைத்து பொருட்களையும் உள்ளபடி அறியும்

புத்திரஸ்யேத்யுதாரதீஅறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார்

வாசஸ்பதிருதாரதீ: எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ:’ என்ற திரு நாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘வாச’ என்றால் அனைத்துவித ஞானத்தையும் (அறிவையும்) குறிக்கும். வாசஸ்பதி என்றால் ‘அறிவின் தலைவர்’ என்று பொருள். அனைத்தையும் உள்ளபடி அறியும் அறிவைப் பெற்றிருப்பதால் ‘உதாரதீ’ என்று அழைக்கப்படுகிறார். எனவே, பகவான் ‘வாசஸ்பதிருதாரதீ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இத்யேகம் நாம | பொருள் தனித்தனியே இருப்பினும் ‘வாசஸ்பதி’, ‘உதாரதீ’ ஆகியவை இணைந்து ‘வாசஸ்பதிருதாரதீ’ என்று ஒரே திருநாமமாக வழங்கப்பட்டுள்ளது.

———

வாசஸ்பதி – பேச்சின் இறைவன் 

ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீமத் மத்ஸ்ய புராணத்தின் மூலம் வேத அறிவை எடுத்துரைத்ததால், அவர் வாசஸ்பதி என்று கூறுகிறார். மத்ஸ்ய புராணத்தில் உள்ள வெளிப்பாட்டின் சக்தியே வாச்சஸ்பதியின் குணத்தை வெளிப்படுத்துகிறது.

ஸ்ரீஆதிசங்கரர் இந்த நாமத்தையும், அடுத்த நாமத்தையும் – உதாரதிஹ், ஒரு நாமமாக விளக்குகிறார். அவர் விளக்குகிறார் ‘வாச்சோ வித்யாயாஹ் பதிஹ் வாசஸ்பதி; ஸர்வார்தவிஷயா தீஹ் புத்திஹ் அஸ்ய இதி உதாராதீஹ், வாசஸ்பதி ருதாராதீ இதி ஏகம் நாம – அவர் அனைத்து அறிவுக்கும் அதிபதி, அற்புதமான புத்திசாலி.’ இவ்வாறு இது பகவானின் இரண்டு தொடர்புடைய பண்புகளை இணைத்து ஒரு பெயர். ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர், பகவான் வித்யா அல்லது வேதத்தின் மாஸ்டர் என்பதைக் குறிக்க, வாசஸ்பதி என்ற சொல்லை விளக்குகிறார்.


219- உதார தீ
சிறந்த ஞானம் உடையவன் -சர்வஞ்ஞன் -எல்லையில் ஞானத்தன் -கம்பீர ஸ்வபாவன்-தயாளு ஞானவான்

ஏவம் ஸர்வ உப ஜீவ்ய ஸார்வஜ்ஞ்யாத்₃
உதா₃ரதீ₄꞉

ஞானம் அக்தே கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-9-

ஞானக் கை தா காலக் கழிவு செய்யாமல்-

யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர் -ஸர்வஞ்ஞர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் –
வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் –
உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

உதார-தீஹ் – பரந்த அறிவைக் கொண்டவர்.

இங்கு ‘தீ’ என்றால் புத்தி அல்லது புத்தி. உதாரா என்றால் தாராளமான, உன்னதமான, புகழ்மிக்க, முதலியன. உதாராதீஹ் என்றால் தன் பக்தர்களிடம் தாராள மனப்பான்மை கொண்டவர், அல்லது எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் கைப்பற்றக்கூடிய புகழ்பெற்ற அல்லது அற்புதமான புத்திசாலித்தனம் கொண்டவர்.

ஸ்வாமி சின்மயாநந்தா, பகவான் தனது பக்தர்களின் இதயத்தின் பலவீனத்தைப் பாராட்டுவதற்குப் பெரிய மனதுடன் சகிப்புத்தன்மை கொண்டவர் என்றும், பொதுவாக பாவிகளிடம் மிகுந்த அனுதாபத்தையும் அளவற்ற கருணையையும் வெளிப்படுத்துகிறார் என்றும் விளக்கம் தருகிறார். கண்மூடித்தனமான மற்றும் சமரசமற்ற உடல் இயற்கையின் விதிகளைப் போலல்லாமல், நம்முடைய மீறல்களைக் கவனிக்க அவருக்கு போதுமான தந்தையின் கருணை உள்ளது.


211-குருர் குருதம-
மத்ச்யாவதாரத்தில் எல்லா வித்யைகளையும் பிரமன் முதலியவர்களுக்கு உபதேசித்தமையால் ஆசார்யர்களுக்கும் ஆசார்யர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குரு-எல்லோரையும் படைத்தவர் -எல்லா வித்யைகளையும் உபதேசித்தவர் –குருதம -பிரமன் முதலியவர்க்கும்
ப்ரஹ்ம வித்யையைக் கொடுத்தவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –

குரு -கற்பிப்பவர் -குருதம -மேலான ஆசார்யன் -இரண்டு திரு நாமங்கள் -பிரம்மா முதலியவர்களால்
விரும்பப் படுபவர் -பிருஹஸ்பதிக்கு ஞானம் அளித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

212-தாம –
பிரளயத்தில் அழிந்த சராசரங்களின் வித்துக்களுக்கு ஆதாரமான பூமி என்னும் கப்பலைத் தாங்கி நடத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜ்யோதிஸ் ரூபமானவர் -எல்லா விருப்பங்களுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிவடிவானவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

213-சத்ய –
பிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபகரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –
உலகைப் படைப்பவர் -நற் கதியைத்   தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

214-சத்ய பராக்ரம-
மனு முதலியவர்கள் விஷயத்தில் தம் சக்தியை வீண் போகாமல் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பழுது படாத பராக்ரமத்தை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

————————————————————

உண்மையான பராக்கிரமம் உள்ளவர் -சத்தியவசனம் உள்ள பலிச் சக்ரவர்த்தியின் மீது திருவடிகளை
நன்றாக வைத்தவர் –வாயு பிரமன் சூர்யன் ஆகியோருக்கும் பராக்கிரமம் அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

215-நிமிஷ –
சாதுக்களுக்கு விரோதிகளை கடாஷியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யோக நித்ரையினால் மூடிய இரு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

நிமி என்ற அரசனுக்கு பலம் அளித்தவர் -நிமிஷம் என்னும் காலத்தை நியமித்து நடத்துபவர் -அசுரர்களை எதிர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

216-அநிமிஷ-
சாதுக்களை இடைவிடாமல் கடாஷிப்பவர் -இமை கொட்டாத மீன் உருக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் விழித்து இருக்கும் ஆத்ம  ஸ்வரூபம் உடையவர் மீன் உருவில் அல்லது ஆத்ம ரூபத்தில் இமையாதவர் -கண் மூடாதவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயு பக்தர்களுக்கு அருகில் இருப்பவர் -பக்தர்களை எப்போதும் தயையுடன் பார்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

217-ஸ்ரக்வீ-
மீன் வடிவிலும் பரத்வ அடையாளமாக வைஜயந்தி மாலையை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூத தந்மாத்ரா ரூபமான வைஜயந்தி என்னும் மாலையை எப்போதும் தரித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

மாலை அணிந்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

218-வாசஸ்பதி –
மத்ஸ்ய புராணத்தில் வேதார்த்தத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேத வாக்யங்களுக்குப் பதியாய் இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

219-உதாரதீ –
யாவரும் ஆஸ்ரயிக்கத் தக்க ஞானம் உள்ளவர்  -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்யைகளுக்கும் அதிபதி -எல்லாவற்றையும் அறியும் ஞானம் உள்ளவர் -வாசஸ்பதிருதாரதீ-என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த தேவியான லஷ்மிக்கு ஞானம் அருள்பவர் -உதாரமாய் -தோஷமற்ற ஞானம் உடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

———

‘குருதமோ குரு:’ என்றால் குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்று பொருள். அவ்வாறு குருவுக்கெல்லாம் குருவாக விளங்கி
நடாதூர் அம்மாள் போன்ற குருமார்களை எல்லாம் உருவாக்கியபடியால், மத்ஸ்யாவதாரப் பெருமாள் ‘குருதமோ குரு:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 211-வது திருநாமம்.

“குருதமோ குரவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்வழிகாட்டும் சிறந்த
குருநாதர் அமையத் திருமால் அருள் புரிவார்.

ஊழிக் காலத்தில், பாருக்கெல்லாம் (அனைத்துலகுக்கும்) பாராக (இருப்பிடமாக) இருந்த படியால், மத்ஸ்ய மூர்த்தி ‘தாம’ என்றழைக்கப்படுகிறார்.
‘தாம’ என்றால் அனைவருக்கும் இருப்பிடமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 212-வது திருநாமம்.
“தாம்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் எப்போதும் புகலிடமாக இருந்து அவர்களைக் காத்தருள்வார்.

உயர்ந்த உண்மைகளையும் ரகசியங்களையும் அடியார்களுக்கு மத்ஸ்யபுராணம் மூலமாகவும்,
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மூலமாகவும் வெளியிட்ட மத்ஸ்ய மூர்த்தி, ‘ஸத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்றால் அடியார்களிடத்தில் உண்மையாக இருப்பவர் – அதாவது, வெறும் உண்மையைச் சொல்லாமல்,
மிகச்சிறந்த நன்மை பயக்கும் உண்மையை வெளியிடுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 213-வது திருநாமம்.
“ஸத்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் எந்நாளும் வாய்மையிலிருந்து வழுவாதபடி திருமால் அருள்புரிவார்.

மெய்யடியார்களுக்குத் தனது வீர தீர பராக்கிரமங்களை நன்கு காட்டி அருளுவதால்,
மத்ஸ்யமூர்த்தி ‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸத்ய:’ என்பது மெய்யடியார்களைக் குறிக்கிறது. அவர்களிடத்தில் தனது பராக்கிரமங்களை வெளிப்படுத்திக் காட்டும் திருமால்
‘ஸத்யபராக்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 214-வது திருநாமம்.
“ஸத்யபராக்ரமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது மேன்மைகளை நன்கு காட்டியருள்வார்.

வடமொழியில் ‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடிக் கொள்ளுதல் என்று பொருள்.
அறவழியில் வாழும் அடியார்களுக்கு மட்டும் கண் திறந்து அருள்புரிந்து விட்டு,
அறவழிக்குப் புறம்பாக வாழ்வோரைக் கண்ணால் பாராமல் கண்களை மூடிக் கொண்டதால்,
மத்ஸ்ய மூர்த்திக்கு ‘நிமிஷ:’ என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 215-வது திருநாமம்.

“நிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அறநெறியிலிருந்து வழுவாத படித் திருமால் காத்தருள்வார்.

“அடியார்களின் மேல் கண்களின் கடாட்சத்தை நன்கு பொழிவதற்கு நாமே மீனாகப் பிறப்பது தான் சிறந்த வழி!” என்று கருதிய திருமால்,
மத்ஸ்யாவதாரம் செய்து, பிரம்மா, மனு, சப்தரிஷிகள், சத்தியவிரத மன்னன் உள்ளிட்ட மெய்யடியார்களின் மீது
தனது அருட்பார்வையை நன்கு பொழிந்தார். ஒருநொடி கூட கண்களை இமைக்காமல் தொடர்ந்து அவர்களைக் கடாட்சித்தார்.

‘நிமிஷ:’ என்றால் கண்களை மூடுதல், அல்லது இமைத்தல்.
கண்களை இமைக்காது தொடர்ந்து அடியார்களைக் கடாட்சித்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அநிமிஷ:’ கண்களை இமைக்காதவர்
என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர
நாமத்தின் 216-வது திருநாமம்.

“அநிமிஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமாலின் அருட்பார்வை பரிபூரணமாகக் கிட்டும்.

மத்ஸ்ய மூர்த்தியைத் திருமாலின் அவதாரம் என்று சத்தியவிரதர் அடையாளம் கண்டுகொள்ள ஏதுவாகக் கழுத்தில்
வைஜயந்தி வனமாலையுடன் தோன்றியதால், மத்ஸ்யமூர்த்தி ‘ஸ்ரக்வீ’ என்றழைக்கப்படுகிறார்.
வடமொழியில் ‘ஸ்ரக்’ என்றால் மாலை, ‘ஸ்ரக்வீ’ என்றால் மாலையை அணிந்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 217-வது திருநாமம்.

“ஸ்ரக்விணே நமஹ” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி, திருவரங்கத்தில் தசாவதார சந்நதியில் உள்ள
மத்ஸ்ய மூர்த்தியைத் தியானித்து வரும் அன்பர்களின் இல்லங்களில்,
விரைவில் மாலை மாற்றும் வைபவம் நடக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

‘வாக்’ என்றால் பேச்சு. ‘வாசஸ்பதி:’ என்றால் பேச்சுக்கு அதிபதி என்று பொருள்.
கூறுவதற்கரிதான பற்பல வேத ரகசியங்களை எல்லாம் மத்ஸ்யபுராணத்தில் விளக்கி அருளியதால்
மத்ஸ்யமூர்த்தி ‘வாசஸ்பதி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 218-வது திருநாமம்.

“வாசஸ்பதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல பேச்சாற்றலைத் திருமால் அருள்வார்.

பக்தர்களின் பாபங்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் இனி பிறவாமல் காப்பதற்காகவும், திருமால் கருணையோடு பூமிக்கு இறங்கி
வந்து மீன் போன்ற வடிவங்களில் அவதாரங்கள் எடுக்கிறார்.
இத்தகைய அவதாரங்கள் செய்ய வேண்டுமென்றால், அந்த இறைவனுக்கு எவ்வளவு பரந்து விரிந்த கருணை இருக்க வேண்டும்?
அதனால் தான் மத்ஸ்யமூர்த்தி ‘உதாரதீ:’ என்றழைக்கப்படுகிறார்.

பரந்த மனப்பான்மையை வடமொழி யில் ‘உதாரம்’ என்று சொல்வார்கள்.
‘உதாரதீ:’ என்றால் விசாலமான கருணை உள்ளத்தை உடையவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 219-வது திருநாமம்.“உதாரதியே நமஹ” என்று தினமும் சொல்லி வரும்
அன்பர்களின் மீது திருமால் தனது விசாலமான கருணையைப் பொழிவார்.

—————

ஸ்ரீ மத்ஸ்ய அவதார பரமான அருளிச் செயல்கள்

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –வேத பிரதமான ஹம்சமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும்- ஹிரண்ய நிரசன அர்த்தமான நரசிம்ஹமும் –இந்திர அபேஷித சம்விதானம் பண்ணும் வாமனனும்-மந்திர ஆதாரமான கூர்மமும் ஆனவனே -இத்தால் –-ஆஸ்ரித சம்ரஷித அர்த்தமாக -அசாதாரண திவ்ய விக்ரகத்தை அழிய மாறிக் கொண்டு – அவ்வவ தச குண அநு குணமாக -ரஷிக்கும் அவன் என்கை-உம்மைத் தொகை ஒவ்வொன்றுக்கும் -அந்த அந்த சேஷ்டிதங்கள் தனித்தனியே ஆகர்ஷணமாக இருப்பதால்

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3 -3-7 –பூமி உத்தாரணம் பண்ணின வராஹமும் –மந்தர ஆதாரமான கூர்மமும் – பிரளய ஆபத் சகமான மத்ஸ்யமும் ஆன-(நரசிம்ம வாதி அவதாரங்கள் இருக்க இம்மூன்றையும் ஒரு கோவையாக அருளிச் செய்தது ) இத்தால் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை அழிய மாறி  – திர்யக் சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணி அருளின நீர்மையை சொல்லுகிறது-வராஹ அவதாரத்தை முற்படச் சொல்லிற்று -பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை எடுத்த அளவு அன்றிக்கே -சம்சார ஆர்ணவ மக்நரான சேதனரை உத்தரிப்பைக்காக
தத் அநுரூப உபாயங்களை உபதேசித்த ஏற்றத்தைப் பற்ற –-ஏனத் துருவாய்  இடந்த பிரான் –  ஞானப் பிரான்-(திரு விருத்தம் -99-) -என்றார் இறே ஆழ்வாரும்-திரு மங்கை ஆழ்வாரும் -ஏனத்தின் உருவாகி நில மங்கை எழில் கொண்டான் ( 2-7-)-என்ற அநந்தரம்-ஞானத்தின் ஒளி உருவை -என்றார் இறே-இவர் தாமும் –எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகல் ஓதுவித்து-( 4-2 ) -என்று மேலே அருளி செய்கிறார் இறே-மத்ஸ்யாதி அவதாரங்கள் பிரஸித்தமாய் இருக்கச் செய்தேயும்-அன்னமும் மீன் யுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே-(ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-5-11) என்பது–ஆனாயன் ஆனான் மீனோடு ஏனமும்-(திருவாய் -1-8-) என்பது-இப்படியே பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய என்று மாறாடி அனுசந்திப்பது-மீனோடு ஆமை கேழல் -(8 -10-10-)என்று அடைவே அனுசந்திப்பது ஆகிறது –-யுகே யுகே ஸம்பவாமி -என்கிற நியாயத்தையும்-வையம் காக்கும் உருவும் பேரும் செய்கையும் –ஊழி தோறு ஊழி வேறவன் (திருவாய்-7-3-11 ) -என்கிற அவதார ரஹஸ்யங்களையும் விஸதமாக அறிந்தவர்கள் ஆகையாலே இறே –

தேவுடைய மீனமாய்  யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய்
முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-தசாவதாரமாய் கொண்டு ஜகத் ரஷணம் பண்ணுமவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்—தேவுடைய-த்யோதமாந குணங்களை யுடையவனாய்
ஆபத் ரக்ஷகங்களுமான–(மீனமாய் )பிரளயத்தை வற்றுவித்து-வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வந்து உய்யக் கொண்ட மத்ஸ்ய அவதாரமாய்——-முடிப்பான் கோயில் அவ் வவதாரங்களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் இழக்க வேண்டாத படி நித்ய வாஸம் பண்ணுகிற கோயில் –

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –35-ஜலத்தில் உள்ள மீனுமாகியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி-பல பிறப்பாய் ஓளி வரும் முழு நலம் -எனவே மிக்கதாய் –

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே-2-7-10-அறிவு குடி போய் நோவு பட தமக்கு அறிவு கொடுத்த அவதாரங்களை நினைக்கிறார் –-இன் தொண்டர்க்கு இன் அருள் புரிந்த உபகாரம் தாஸோஹம் என்று அறிய வைத்த அருள்–இப்படிப் பட்ட ருசியை உடையராய் அவதாரங்களுக்கு பிற்பட்டவர்கள் உடைய இழவு தீர்க்கைக்காக திருவிடவெந்தையில் வந்து நிற்கிற உபகாரகனை யாயிற்று கவி பாடிற்று –

கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்  அண்டமும் சுடரும் அல்லா  ஆற்றலும் ஆய எந்தை  ஒண் திறல் தென்னன் ஓட  வட அரசு ஓட்டம் கண்ட  திண் திறலாளர் நாங்கூர்த்  திருமணிக்கூடத்தானே.  –4-5-6- ஸ்ரீ மத்ஸ்யமும் ஸ்ரீ வாமனனும் ஸ்ரீ அன்னமும் ஸ்ரீ வராஹமும் ஸ்ரீ நரசிம்ஹமும் ஸ்ரீ ஹயக்ரீவரும்–அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து அவ் ஊரில் உள்ளார் இருப்பது (ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் இவர்களே செய்ய வல்லவர்கள் )

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு  ஏறுகைக்காக-வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்-அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்-மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்-இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்-நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம் என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

கொழுங் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன்
எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி  வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2—மிக்க ஜலமானது பூமியை அடையக் கொண்ட காலம் – கொழு விதமான-த்ருடமான கயலாய்-குல வரைக்கு மேலே போய் அண்ட பித்தி அளவும் செல்லத் துள்ளி ஸ்வைரமாக லீலா ரசம் அனுபவிக்கும் ஸ்வ தந்த்ரன்  –

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்

தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே—6-8-2-மீனாய் பிரளயம் கொண்ட பூமியை ரஷித்த படி-மூழ்த்த நாள் –லோகத்தை பிரளயம் கொண்ட காலத்து –அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத் –அந்நீர் தானே -பாடி காப்பாரே களவு காணுமா போலே-
ஜகத்தை அடையக் கோக்க ஒரு மத்ஸ்யமாய் அத்தை தன்னுடைய செலுவிலே ஏக தேசத்திலே அடக்கினான் ஆய்த்து –கடல் கடைகைக்கு தேவர்களையும் அசுரர்களையும் கூட்டி-தானான மேன்மை குறையாதே நிற்க வேண்டிற்று – ஜகத்துக்காக வந்த பிரளயத்தை பரிகரிக்கிற இடத்தில்-அங்கன் ஒரு சகாயமும் இன்றிக்கே-தானும் தன்னைக் குறைய விட்டு நிற்கும் அளவிலே ஆய்த்து-ஓன்று செய்யும் இடத்தில் அநேகம் பேரைக் கூட்டி கொண்டு செய்யவும் வல்லனாய்-தனியேயும் செய்ய வல்லனுமாய் இருக்கும் பெருமானை – சர்வாதிகன் உடைய செயல் இறே –

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே —7-8-10-ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாமையும் ரஷிக்குமவன் ஆய்த்து –பூமியை சிருஷ்டித்து பன்றியாய் இத்யாதிகளால் காத்து -அத்தை ரஷித்து-திரியவும்
பிரளயம் வர -வயிற்றிலே வைத்து – திரிய வெளிநாடு காணப் புறப்பட விட்டு-இப்படி சர்வ வித ரஷணங்களையும் பண்ணும் இடத்தில் தன்னை எண்ணினால் பின்னை ஒருவரையும் எண்ணாது இருக்கிற சர்வாதிகனை –

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்

தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-கடலிலே அக் கடல் கண் செறி இட்டால் போலே(நெருக்கமாக வியாபித்து ஒரு லக்ஷம் யோஜனை-10 லக்ஷம் mile)
இருக்கிற வடிவை உடைய மத்ஸ்யமாய் –அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வருமீனை -(11-4-)-என்னக் கடவது இறே –கடலிலே நீர் குழம்பிச் சேறாம் படி இறே கொண்ட வடிவின் பெருமை –
அன்றிக்கே-ஜலசர ஜாதியுமான வடிவை உடைய ஆமையாய் –(தண்ணீரில் நீந்தும் -ஜலத்தில் பிறந்த இரண்டு உருவங்கள் என்றுமாம் )

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்

ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-தேவர்கள் எல்லை அளவும் செல்லக் கடல் வெள்ளம் பரந்த நாள் அத்தை அடைய தன்னுடைய ஒரு   செலுவிலே அடக்க வல்ல மிடுக்கை உடைய மத்ஸ்யமாய் வந்து –வியந்துய்யக் கொண்ட –நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால் தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்-சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –தண் தாமரைக்கண்ணன் –
மத்ஸ்ய கமல லோசன
-என்னக் கடவது இறே –ஆனா வுருவிலானா யவனை-சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –(சதைக ரூப ரூபாயா -ஸ்வரூபமும் உருவமும் மாறாதவை அன்று )-ஆனாத வுரு -கெடாத வுரு என்றபடி –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி-ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்-2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்-4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்-8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம் 9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்

போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட ஆகாசமும் பூமியும் குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட -இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய மத்ஸ்ய ரூபியாய் பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்-ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும் ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும் (ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த
ஜகத் காரண பூதனானவன் –(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் ) திரு நாகையிலே தன் அழகாலே விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –

நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே
–11-4-1-நிலை கொள்ளலாவதொரு இடமும் இன்றிக்கே ஆழம் காலாய்   இருக்கிற -என்னுதல் –
ஓர் இடத்திலே நில்லாதே அலைஞ்சு வருகிறது -என்னுதல்
இது கீழ் இது நடுவு இது மேல் -யென்று பரிச்சேதிக்க ஒண்ணாத மஹா பிரளயம் –லோகத்துக்கு ரஷகரான தேவர்கள் குடி இருப்பையும் கூட மேலிட –நாம் ரஷகராம் எல்லை கழிந்தது -யென்று தேவர்கள் கவிழ்  தலை இட –-அன்றிக்கே –தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன – மேலாய் இருப்பதொரு  இருப்பிடம் அற்று எங்களுக்கு ரஷகர் இல்லை யென்ன –நான் உளனாய் இருக்க நீங்கள் அஞ்ச வேணுமோ – நான் ரஷகனாய் இருக்கிறேன் – என்னும் படியான  கிருபையாலே –ஷூபிதமாய் வருகிற கடல் குழம்பாம் படியாக தன் கீழ் வயிற்றிலே அலை எறியும் படியாகவும்-ஆகாசத்தில் ப்ரஹ்மாதிகள் குடி இருப்பிலே வீசும் படியாக தன் திரு முதுகிலே-மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம்  தாரகமான வஸ்துவை –சர்வாதிகனான சர்வேஸ்வரனை –அவன் அப்படி தன்னுருக் கொடுத்து-வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு -இத்தனையும் செய்யப் பாராய்
மறக்க ஒண்ணாத செயல்களை அவன் செய்யா நின்றால் நீ மறவாது இருக்க வேண்டாவோ 

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
–1-8-8-சர்வாதிகனான தானே இறே திர்யக் சஜாதீயன் ஆனான்-அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தேயும் – அனுசந்தானத்தில் பதற்றத்தாலே ஏக காலத்திலே இரண்டு அவதாரம் போலே சொல்லுகிறார்-வடிவும் சொலவும் செயலும் ஜாதிக்கு அடுத்தவையாய் இருக்கை-இதுக்கு ஹேது என் என்னில்-என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே என்னுதல் என்னைக் குறித்து தான் பண்ணின அவதாரங்கள் சங்கம் என்கிற மஹா சங்க்யைக்குப் போரும் என்னில் என்னைக் குறித்து -தானாய தானவை -சங்கே -சங்கத்து அளவே அன்று இறே

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
வித்யா ப்ரவர்த்தகமான அவதாரங்கள்-அனுஷ்ட்ட்டே யதார்த்த ப்ரகாசகமான ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள்–அகர்ம வச்யனானவன் கர்ம வச்யரோடு ஒக்கப் பிறந்தாயிற்று-இப்படி செய்கின்றவன் தான் ஆர் என்னில்-ப்ரஹ்மாதிகளுக்கு ஆதி தேவர்களான நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் கிடீர் இப்படி தாழ நின்றான் என்கை –
இந்த்ராதிகளும் பூமியில் துர்க்கந்தாதிகள் பொறுக்க மாட்டாதே ஒரு யோஜனத்துக்கு அவ்வருகு இ றே நிற்பது –நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்-என்னை பிரயோஜ நான்தர பரதையை தவிர்த்தவன் –
நான் இழிந்து ஆடும் துறை என்றுமாம் –

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-
ஞான ப்ரதானார்த்தமான ஜல சர சஜாதீயன் ஆனான் –தாரண அர்த்தமாக கூர்ம ரூபி யானான் -சடக்கென விரோதியைப் போக்குகைக்கு இரண்டு வடிவைச் சேர்த்துக் கொண்டு வந்து பிறந்தான் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு ஆர்த்தி யானான் –சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுக்கைக்கு வராஹ ரூபத்தைக் கொண்டான் –மனுஷ்யர் நடையாடாத காட்டில் மிகவும் வர்த்திக்கும் வராஹம் –என் கார்யம் சமைந்த பின்பும் -சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கும் தனையும் -இவருக்கு என் வருகிறதோ என்று கொண்ட குதை மீண்டிலன் –
மேல் வரும் விரோதத்தை போக்குகைக்கு இன்னமும் கல்கியாக இருந்தான் -நான் தன்னைத் தப்புகைக்காக பிறந்த அளவும் போரும்-அவன் ரஷிக்கைக்காக பிறந்த பிறவி -நான் கர்மத்தால் பிறந்தவை அடங்க அனுக்ரஹத்தாலே பிறந்தான் –வர்ஷூகவலாகஹம் போலே இருக்கிறான் அத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறிலன்-

மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே 
(மகாபாரதம், சல்லிய பருவம். 1) 
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.

————————————————

(ஸூந்தர பாஹு ஸ்தவம -மத்ஸ்ய அவதார பரமான ஸ்லோகமும் – ஓசையும் பொருளும் நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–ஒட்டியே இருக்கும்

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந
ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் ஸ்வ க்ருபயா
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீநதநு ரத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–92-

ப்ரலயஜ நீரபூர பரிபூரி தஸ்வ நிலய அவசந் நவ தந ப்ரமத் அசரண்ய பூத சரணார்த்தி நாகி சரணம் பவந் –பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தால் நிரப்பட்ட தம் தாம் இருப்பிடங்களை உடையவர்களாய் –-அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவராய் –
தடுமாறினவர்களாய் – நாதன் அற்றவர்களாய் – புகலிடம் விரும்புவர்களான தேவர்களுக்குத் தஞ்சமாகக் கொண்டு
1-பரிபூரி தஸ்வ நிலய-2- அவசந் நவ தந-3-ப்ரமத் -4- அசரண்ய பூத -5-சரணார்த்தி-ஆகிய ஐந்தும் நாகிகளுக்கு விசேஷணங்கள்

சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா
சலகுல ஏஷ மீந தநுர
–இவற்றை ஸமஸ்த பதமாகக் கொள்ளவுமாம் –இடையில் உள்ள –
கலுஷீ க்ரியாட்ய கமன என்று விஸர்க்க அந்தமாக்கி -அதை ஒருபதமாகவும்
மேல் உள்ளதை ஒரு பதமாகவும் கொள்ளலாம் -பொருளிலும் கருத்திலும் வாசி இல்லை
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச-என்றதற்கான கருத்தை –
சலதுத தீரி தாம்பு கலுஷீ க்ரியாட்ய கமன-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனமாலை-என்றதற்கான கருத்தை –
ஸ்வ ப்ருஷ்ட வித்ருதா சலகுல ஏஷ மீநதநு-என்றதானாலே அருளிச் செய்கிறார் –
கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதனுள்ளே சஞ்சரிப்பவரும் –முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்யவதாரப் பெருமாள்
அத்ர ஸூந்தர புஜோ வநாத்ரி நிலய–இங்கே திருமாலிருஞ்சோலை மலை உறையும்
சுந்தரத் தோளராக சேவை சாதித்து அருளுகிறார் -என்கை –)

தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

—————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://


இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)

ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே

கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)

வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ

ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .

” மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)

[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)

மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)

(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டாத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அந்தர்யாமி திருவாராதனம்–

November 29, 2025

வார்த்தை -434-
அந்தர்யாம்ய ஆராதனம் விளக்கும் வார்த்தை-

பகவத் விஷயம் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -திருவாய்மொழி -2-5-4- என்றார் –
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய்
பிரகிருதி மானாங்கார மனங்கள் -திருவாய்மொழி -10-7-10-என்கிறபடியே
இருபத்து நால்வர் ஏறின ஆகாரத்திலே
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
பெரியாழ்வார் திருமொழி -4-5-3-என்கிறபடியே
நடுவில் திரு முற்றத்தில் இருபத்தரறுவர் ஆவானை உகந்தருளப் பண்ணி –
அநந்யார்ஹனாய் -அநந்ய சரண்யனாய் -அநந்ய போகனாய் -ஜ்ஞானாநந்தியான
இருபத்தைவரான ஆத்மா திருவாராதானம் பண்ணும் நம்பியாருக்கும் பரத்வம் எட்டாது –

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-தாரா வாஹிக ஞானத்தில் கால உபஷடம்பாதிகளால் வருவதொரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு-அது போல் அன்றிக்கே அனுபவித்த ஒன்றை அனுபவித்தால் போலே நித்ய அபூர்வமாய் இருக்கை-அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின் கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.அதாவது, பூர்வ க்ஷணத்தில் ‘ அனுபவம் போல அல்ல ஆயிற்று உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது’ என்றபடி.

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –-வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கர்ம இந்திரியங்கள் ஐந்தும் -பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ்ஸூக்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து -8-8-3-என்று அவன் தான் இவர் பக்கல் செய்ததனை–இப்போது அவனுக்கு இவர் தாம் அறிவிக்கிறார் –ஒரு கர்மம் செய்தது செய்ய மாட்டாமை இல்லை அன்றோ கழி பெரும் காதல் –

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன் 
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி 
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி -ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து  என் நெஞ்சு நிறைய புகுந்தான் (10-8 )-என்று இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து  கொள்ளும் கிடீர் என்று  பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –-நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே  இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –வந்தாய் என் மனம் புகுந்தாய்(பெரிய திருமொழி – 1-10-9 )-என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து (பெரிய திருமொழி -6-2 )-என்கிறபடியே-இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே –அடியார் மனத்தாயோ-(பெரிய திருமொழி 11-5 )-வெள்ளத்தான் வேம்கடத்தான்  ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் –என்று   உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –

வ்யூஹம் கால்கடியாருக்கு
அவதாரம் அக்காலத்தில் உள்ளாருக்கு
அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களில் எப்போதும் திருவடிகளைப்
பிடித்து இருக்க ஒண்ணாது –

இவனுக்கு எப்போதும் ஒக்கப் பற்றலாவது அந்தர்யாமித்வம் இறே
இவனையே குறித்து நிற்கும் இடம் இறே அவ்விடம்
அல்லாத இடங்களில் காட்டில் அவன் அதி ப்ராவண்யம் பண்ணா நிற்பதும் இங்கே இறே
எங்கனே என்னில் –

(அர்ச்சாவதாரத்தை விட உயர்ந்த அந்தர்யாமித்வம் என்றும் அழகாக விளக்கிக் காட்டுகிறான்)

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில்
வாழ வல்ல மாய மணாளா நம்பி -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-என்றும் –
வில்லாளன் நெஞ்சத்துளன் -நான்முகன் திருவந்தாதி -85-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் -பெரிய திருமொழி -11-3-7- என்றும் –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன்
என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய்மொழி -10-8-6-என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த விருத்தம் -65-என்றும் –

(பரத்வமும் வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் அந்தர்யாமிக்குள்ளே அடங்குவதற்கு பிரமாணங்கள்)

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்-கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே -உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க் கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக் கூட்டியும்,-எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ் முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத் தடம் கண்
’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து  என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ

தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –சகல தாப ஹராமான கடல்-சம்சாரத்தில் தாப த்ரய தப்தரானவர்களுக்கு-ஸ்ரீ திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்திக்க போம் என்கை–சீதள ஸ்வபாவமான கடல் –
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனை -என்று அவனுடைய ஸ்வபாவம் இதுக்கு உண்டாய் இருக்கிற படி –சம்பந்தம் அடியான வாத்சல்யம்
(கடல் அரசன் அபசாரம் பொறுத்தார் அன்றோ பெருமாள் )பள்ளி கொண்ட படி என்னும் இத்தனை -பாசுரம் (விசேஷணம்) இடப் போகாது –-கிடந்ததோர் கிடக்கை -என்றும்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -என்றும் சொல்லும் இத்தனை இறே –நாளும் வாய்க்க (8-10)-என்கிற பாட்டில் ஒரு போலி சொல்லும் இத்தனை இறே –இவர் தாமும் -வெள்ளை வெள்ளத்தின் மேல் -என்று ஆசைப்பட்ட படியே வந்து புகுந்தான் ஆய்த்து-தல சயனப்பெருமாள் போல் ஆதி சேஷன் படுக்கையை விட்டு வந்தாரா-அங்கு உள்ள சேவை கண்டு ஆனந்தம் படுவது போல் இங்கும் – இவருக்கு சேவை சாதித்தான்-ஆகவே மனதில் இல்லாமல் மனக்கடலில் என்கிறார்-பழக விட்டு –அங்கு உண்டான ஆசையை நேராக மறந்து விட்டு-ஓடி வந்து  –காதக் குதிரை கட்டி ஆய்த்து வந்தது –(காதக்குதிரை இட்டு –குதிரை போல் தானே நடை இட்டு என்றுமாம் )என் மனக் கடலில் வாழ வல்ல–அது பனிக் கடல் ஆகையாலே குளிர்ந்து இருக்கும்-இது மனக் கடல் ஆகையாலே குளிர் கெட்டு இருக்கும்(சந்தனம் சீதளம் -சந்திரன் இன்னும் சீதளம் —சத்துக்கள் மனஸ்ஸூ அவற்றை விட சீதளம் -பிரமாணம் )அது ஊற்று மாறினாலும் இது ஊற்று மாறாது-பனிக் கடலையும் தனக்கு உள்ளே அடக்கும் கடல் இறே –பரவைத் திரை பல மோதி -இத்யாதி-இக் கடலை கண்ட வாறே பனிக் கடல் காட்டுத் தீயோடு ஒத்தது –வாழ வல்ல–செருக்கரான ராஜாக்கள் பழைய படை வீடை விட்டு –தாங்களே காடு சீய்த்து சமைத்த – படை வீட்டிலே இறே ஆதாரத்தோடு இருப்பது –(ஸ்ரீ ரங்கம் -ஷீராப்திகளை விட்டு ஆசையுடன் கண் வளரும் திவ்ய தேசம் போல் )சாதன தசை போலே அன்று இறே போக தசை-பனிக் கடலையும்   விரும்புகைக்கு அடி -இவரைச் சேர்த்துக் கொள்ளுகைக்கு-யோக நிந்த்ரை சிந்தை செய்க்கைக்கு இறே –(ஸாத்யம் கை புகுந்த பின்பும் விடாமல் இருப்பதுக்கு காரணம் –இளம் கோயில் கை விடேல் என்ற பிரார்த்தனையாலும்-க்ருத்தஞ்ஞதா கந்தத்தாலும் )-மனக் கடலில் வாழ வல்ல –வாழ வல்ல வாசு தேவா –-அக் கடல் எங்கும் வாழ்ச்சி இறே-கீழில் பாட்டில் -வாழச் செய்தாய் -என்று –ஸ்ரீ ஆழ்வாரை வாழ்வித்து-அவ் வாழ்வு கண்டு தான் வாழுகிற  படி-மாய மணாளா நம்பீ –இவர் திரு உள்ளத்திலே புகுந்த பின்பு இறே –குணங்களும் -திரு மேனியில் செவ்வியும் பூர்த்தி பெற்றது(அந்தாமத்து அன்பு போல்-மாய-குணங்களும் –-மணாளா-திரு மேனியில் செவ்வியும்-நம்பீ -பூர்த்தி பெற்றது)

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-—மிக்க சினத்தை உடையனாய் -பெரு மிடுக்கனாய்  -வாநராதிபனுமாய் -இருந்த வாலியுடைய கர்வத்தை யழித்த- வில்லை யுடை யவன் என்னுடைய ஹிருதயத்தே யுளன் –வானவர் கோன் மதம் அழித்த வில்லாளன் அன்றோ இவன் –சரணாகத வத்சலன் -தம் பலத்தை தீயோரை அழித்து ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பயன் படுத்த வாலி தனது வலிமையை சரணாகதனான ஸூக்ரீவனை சிஷிக்க பயன் படுத்திய வில்லாளன்-அந்ய பரதை அறும்படிக்கு இடம் யறும் படி ஹ்ருதயத்தில் சன்னிஹிதராய் இரா நின்றார்-ஆகையாலே மிருத சஞ்சீவனமான ராம குணங்களிலே அகப்பட்ட எனக்கு நித்ய க்ருத்யம்-பழையவனாய் சர்வாதிகனான சக்ரவர்த்தி திருமகனுடைய திரு நாமங்களை அபிநிவேச பர வசனாய்க் கொண்டு
வாயாரப் பாடுகை ஏத்துகை-லௌகிகரான உங்களில் வியாவ்ருத்தமான எனக்கு மற்று உள்ள காலங்கள் எல்லாம் அதுக்கே நேரம் போதும்-எங்கள் தம் யுடையவர் திருக்கை அருளை ராமருடைய அருளைப் பெற இரக்கும் எங்களுக்கு அந்நிய பரதை பண்ணுவது எங்கனே என்கிறார்
– என்று பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாக அருளிச் செய்யும் படி-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை   யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6–ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்புகின்றதையும் சொல்லி –-திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம்–இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் -அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் –ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இறே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது-நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் – என்கிறபடியே அத் திருப்பதிகளை காற்கடைக் கொண்டு அவ் வவ் இடங்களில் நின்றும் இருந்தும் கிடந்தும் செய்து அருளின நன்மை எல்லாம் என் நெஞ்சிலே யாய்த்து –நிகிந அக்ரேசரனான என்னை -விஷயீ கரித்தவாறே -திருமலையில் நிலையும் மாறி என் நெஞ்சில் நின்று அருளினான் –தன் திருவடிகளில் போக்யதையை எனக்கு அறிவித்த பின்பு -பரம பதத்தில் இருப்பை
மாறி -என் நெஞ்சிலே போக ஸ்தானமாய் இருந்தான் –தாபார்த்தோ ஜல சாயிநம் -என்கிறபடியே திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியைக் காட்டி –என்னுடைய சாம்சாரிகமான தாபத்தை தீர்த்த பின்பு திருப் பாற் கடலில் கிடையை மாறி என் நெஞ்சிலே கண் வளர்ந்து அருளி தன் விடாய் தீர்ந்தான் –இப்படி என் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் என்னால் மறக்கலாய் இருக்கிறது இல்லை -என்கிறார் –

இங்கு இருக்கும் இடத்தில் தான் ஒருவனுமேயோ -என்னில் –
அரவத்தமளி யினொடும் -அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10 -என்கிறபடியே
நாய்ச்சிமாரோடும் சர்வ பரிகரத்தோடும் கூடி இருக்கிற இவனை இந் நம்பியார்
திருவாராதனம் பண்ணும்படி –

அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவல் பொருட்டே -5- 2-10 -அடியார்கள் குழாங்களுடனே வந்து புகுந்து-தான் இவர் திரு உள்ளத்திலே கண் வளர்ந்து அருளுகிற படிக்கு ஸ்மாகரமாக அலை கேட்கும் படி கண் வளர்ந்து அருளுகிற உபகாரத்துக்குத் தோற்று தம் சத்தைக்கு போற்றுகை அன்றிக்கே –ரஷையின் பொருட்டு –காவலுக்கு உறுப்பாகப் போற்றுகிறார்-காத்தல் ரக்ஷை-உபய விபூதி உடன் இங்கும் அங்கும்-அரவிந்த பாவை –
அகம்படி வந்து புகுந்து -சுடர் ஆழி தானும் என்கையாலே நின்னோடும்
-இத் திருமொழியால்
திருப் பல்லாண்டில் அர்த்தத்தை நிகமிக்கிறார் –சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற அர்த்தம் –உறகல் உறகலிலே நிகமித்தார்-அடியோமோடும் நின்னோடும் -என்கிற பாட்டின் அர்த்தத்தை –அரவத் தமளியிலே -நிகமித்தார்-

ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய -என்கிறபடியே –
சத்வோத்தர காலத்திலே பிறந்து –
ஆத்மனோ ஹிதம் -என்கிற நன் ஜ்ஞானத் துறை (திருவிருத்தம்)படிந்தாடி –
அத் துறையிலே ஒரு குடம் திருமஞ்சனத்தை எடுத்து –
குரு பரம்பர அனுசந்தானத்தாலே கோயிலிலே வந்து-
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான –
அனன்யார்ஹ சேஷத்வ அனுசந்தனத்தாலே தண்டனிட்டு

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
அநந்ய  சரணத்வ அனுசந்தானாம் ஆகிற திருவிளக்கை எழத் தூண்டி –
அநந்ய போகத்வ அனுசந்தானத்தாலே -பிரயோஜநாந்தரம் ஆகிற துராலை விரட்டி –
சம்பந்த ஜ்ஞான அனுசந்தானத்தாலே திருவடி விளக்கி –

அன்பினால் ஜ்ஞான நீர் கொண்டாட்டுவன் அடியனேனே -திருக் குறும் தாண்டகம் -15-என்கிறபடியே திருமஞ்சனம் செய்து –
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே -திருவாய்மொழி -4-3-2-என்கிறபடியே
வாசிக அனுசந்தானத்தாலே திருப் பரியட்டம் சாத்தி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி 4-3-2- என்கிறபடியே மானஸ அனுசந்தானத்தாலே சாத்துப்படி சாத்தி –

தேசமான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே -திருவாய்மொழி -4-3-2- என்கிறபடியே புரையற்ற அஞ்சலியாலே
திரு வாபரணம் சாத்தி –

நாடாத மலர் -திருவாய்மொழி -1-4-9- என்றும் –
விண்டு வாடா மலர் -திருவாய்மொழி -9-10-3- என்றும் –
இனமலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும்
கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6- என்றும் சொல்லுகிற ஆனுகூல்யத்தாலே திருமாலை சாத்தி –

(அடிக்கடி எட்டு மலர்கள் -அஹிம்சா ப்ரதமம் இத்யாதி -என்பக்கர் பூவும் கொணர்ந்தேன் -அஷ்ட வித கல்யாண குணங்கள் ஸூசிதம்)

பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்க துலகே -திருவாய்மொழி -5-2-9- என்கிற
அனுசந்தானத்தாலே தூபம் கண்டருளப் பண்ணி
மாடு விடாது என் மனன் -பாடும் என் நா -ஆடும் என் அங்கம் -திருவாய்மொழி -1-6-3-
என்கிறபடியே பக்தி ப்ரேரிதமான ந்ருத்த கீத வாத்யம் கண்டருளப் பண்ணி

கர்த்ருத்வ நிவ்ருத்த பூர்வகமான அனுசந்தானத்தாலே –
அஹம் அன்னம் -என்கிறபடியே அவனுக்கு போக்யமாக்கி
அஹம் அந்நாத -என்கிறபடியே தானும் புஜித்து
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே யிருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்கிறபடியே
இப்படி உணர்த்தின ஆசார்யன் விஷயத்திலே க்ருதஜ்ஞதா  அனுசந்தானத்தோடே தலைக் கட்டுகை –

இருபத்து நாலுபேரில் ஐஞ்சு பேர் க்ராமணிகள்(கண் காது மூக்கு வாய் த்வக் -ஞான இந்திரியங்கள்)
இவ் வைவர் கூடே கூடாதார் ஐஸ்வர்யம் இது
இவ் வைவரோடும் கூடினார் இமையாத கண்-முதல் திருவந்தாதி -32-(ஞானக் கண்) – பறி யுண்டு விடுவார்கள் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –நெஞ்சு என்ற பேராய்-பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;

ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே -சாந்துக்கு பூக்கட்டி இறே மணம் கொடுப்பது-இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டா; இவர் உண்மையாகில் அவனுக்கேயாய் இருக்கும்; ஆதலின், ‘எனதுடைய’ என்கிறார்.-இவர் நெஞ்சினைக் காட்டிலும் வாக்குப் பரிமளம் விஞ்சி இருக்கும் போலே காணும்.-சாந்து மணம் கொடுப்பது பூவை அணிந்த பின்பே அன்றோ? ஆஸ்ரித கர ஸ்பர்சம் விரும்புவன் அன்றோ -இவர் அவனுக்கு என்று சொல்ல வேண்டாமே-ஆழ்வார் எனக்கு சொன்னாலும் அவனுக்கே -நாம் அவனுக்கே சொன்னாலும் நமக்கே –-நான் -அஹம் -மாறாடி அன்றோ இருக்கும்
நானே அவர் தனம் ஆன பின்பு என்னுடையது எல்லாமே உன்னுடையதே-ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே-பெரு விலையனான திருப் பரிவட்டம்–நெஞ்சின் பெருமை வாசகத்தாலே தானே தெரியும் –அந்தச் சொற்கள் தாமே புருஷோத்தமனாம் தன்மைக்கு அறிகுறியான பரிவட்டமும்.-இவருடைய பா, நல்ல நூல் ஆதலின், வான் பட்டாடை ஆயிற்றுக்காணும்;
‘நல்ல நூலாக வேண்டும்’ என்று அடியிலே நோற்று நூற்றவர் அன்றோ
?தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே-ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உத்கர்ஷ ஹே துவாய் இருக்கிற படி-சேரபாண்டியன் தம்பிரானைப் போன்று, அவனுக்கு ஒளியை உண்டாக்கா நின்றது இவருடைய அஞ்சலி.அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –என்னுடைய உறுப்புகளின் காரியங்களான – நினைவு முதலானவைகளே எல்லாவற்றாலும் நிறைவுற்று விளங்கும்-இறைவனுக்கு இன்பப் பொருள்கள் எல்லாம் ஆயின,’ என்கிறார்.

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று

வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-அபி நிவேசத்துக்கு ஈடாகத் தேட வரிதான புஷ்பங்களைத் தேடி –எண்டிசையும் உள்ள பூக் கொண்டு -என்னுமா போலே–‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’-விச்சேதியாத படி-கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெரும் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இறே-சர்வ ஸ்வாமி யானவனுடைய ஏக ரூபமான செவ்விப் பூ போலே இருந்துள்ள திருவடியின் கீழே-அகிஞ்சித்கரமான வன்றும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்-ஸ்ருஷ்டச்த்வம் வன வாசாய -என்னுமா போலே இதுக்காக வாயிற்று இவனை உண்டாக்கிற்று-வைக்க-சேர்க்க–ஆக, இப்படி வகுத்ததுமாய், சுலபமுமாய்-நிரதிசய போக்யமுமான – எல்லை இல்லாத இனிய பொருளுமாய் உள்ள திருவடிகளிலே- சர்வவித கைங்கர்யங்களையும் – எல்லா வகைத் தொண்டுகளையும் செய்யவாயிற்று இதனை உண்டாக்கினான்சேஷ பூதனுக்கு கிஞ்சித் காரத்தாலே ஸ்வரூப லாபம் ஆனால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்து கொண்டு அத்தாலே இறே ஸ்வரூப சித்தி

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-அலரத் தொடங்கின அளவாய் கழிய அலர்ந்து வாடாத பூ – –ஈஷத் விகசிதம் –செவ்விப் பூவைக் கொண்டு வணங்கும் கோள்-ஆஸ்ரயிங்கோள்-

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்றடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-7-அஹிம்ஸாதிகளான  புஷ்பங்கள் எட்டும் இட்டு(அஹிம்சா-பிரதமம் இந்திரிய நிக்ரஹம் சர்வ பூத ஹிதம் ஷமா தானம் தபஸ் த்யானம் சத்யம் -அஷ்ட விதம் விஷ்ணுவுக்கு பிரிய தர்மம் )அன்றிக்கே செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குறுக்கத்தி கருமுகை தாமரை என்றாப் போலே பிரதானமாய் இருப்பன எட்டும் ஆதல்-அஷ்டாங்க பிரணாமத்தை சொல்லுதல் ஆதல் –மனஸ் புத்தி அஹங்காரம் தலை கால்கள் கைகள்-அத்தை மலர் என்னும்படி என் –என்னில் பூவோபாதி அவனுக்கு ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கும் ஆகில் இறே –சூட்டினேன் சொன் மாலை -என்னுமா போலே –அன்றிக்கே கீழில் திரு மொழியில் திரு மந்த்ரம் பிரஸ்துதம் ஆகையாலே திரு வஷ்டாஷரத்தை சொல்லிற்று ஆதல் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-கந்த வத்தான விலஷண புஷ்பங்கள் எட்டையும் இட்டு –அவை யாவன – கருமுகை -கற்பகம் -நாழல் -மந்தாரம் -சௌகந்தி -செங்கழுநீர் – தாமரை -கைதை –ஸ்வாபதேசம் – பரம போக்யமான திரு மந்தரத்தால் பிரதிபாத்யமான வஸ்துவின் பக்கலில் தன்னை சமர்ப்பித்து –-சர்வ கந்த -என்கிற வஸ்து ஆகையாலே – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான சிவந்த திருவடிகளை கையாலே தொழுது உஜ்ஜீவிக்க வேணும் என்னும் அத்யவாசாயத்தை உடைய என்னுடைய ஹிருதயத்திலே –

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-
–வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷ சூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும் கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் -இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “
அவர்களை விட மாட்டேன்” என்னுமவன்.–பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் –பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –உலகம் அடைய என்றபடி.-ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.

ஈடும் யெடுப்புமிலீசன் –மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இறே பலத்து அளவிலே மீளுவது நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன–‘நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்’ என்பது அன்றோ உம்முடைய தன்மை?
ஆதலால் உம்முடைய மனத்தோடு படாத சொற்களே அமையாதோ எங்களுடைய நலனுக்கு?’ என்ன,-என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது-உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன-என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது–அதுவும் அவன் விஷயத்திலேயே பிரவணம் அன்பு கொண்டதாயிற்று.-தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே –என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே-ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –((ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண 
)நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்  –

—————————-——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .