Archive for the ‘அருளிச் செயலில் அமுத விருந்து –’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களில் -கண்ணன் -பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

September 15, 2026

1 -கண்ணன் –கண்ணாக இருப்பவன் –
கண்ணாவான் என்றும் மன்னார் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதி வாய்ச செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற மாதரார் கண்களூடே வாவுமான தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே
உறுப் பொருள் உணர்த்தி விட்டான் –ராமனே கண்ணன் என்னும் பொருளில் கம்பர்
2 – கண்ணே -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப் படும் விஷயமும் அவனே –
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –
3-கண்ணா -நிர்வாஹகன் -கணவன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
களை கண் -மற்றிலேன் -மணியை வானவர் கண்ணனை –எண்ணிலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண் அலால் ஓர் கண்ணிலேன் –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் -உலகத்துயிர் தேவர்கட்டு எல்லாம்
4-கண்ணன் எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாரையும் சீர்மைத்தே
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணன்
5-கண்ணன் -கண் அழகன் –
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் –
தண் பெரு நீர்த்தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் / தகும் கோலத்தாமரைக்கு கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / அணி கொள் செந்தாமரைக் கண்ணன் / தாமரைக்கு கண்ணினன் / கமலத் தடம் பெரும் கண்ணினன் / செய்ய கண்ணினன்
5–கண் -கண்ணோட்டம் -கடாக்ஷம் -இரக்கம் -கருணை -அனுக்ரஹம் -கண்ணோட்டம் அதிகாரம் -திருக் குறளில் -தன்னோடு பயின்றாரைக் கண்டால்
அவர் கூறியன மறுக்க மாட்டாமை -இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாதலின் அப்பெயர் யாயிற்று -பரி மேல் அழகர் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண-ஆபத் சகத்வாதி குண பெரிதமான விசேஷ கடாக்ஷத்தை பண்ணினவன் -வியாக்யானம்
கார்த்தன் கமலக் கண் -நாச் திரு –அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தை பண்ணுமது யாய்த்து திருக் கண்கள் –
6–கண்ணன் –கையாளன்–ஸுசீல்யம் உரு எடுத்த எளியவன் –
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்கு கையாளாகத் தருமவனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை -சர்வேஸ்வரனாய் இருந்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளானவன்
கரிய மேனியன் கண்ணன் –விண்ணோர் இறை –ஆஸ்ரிதற்குக் கையாளாய் உள்ளவன்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —விரஹ வியசனம் தீர்க்கும் ஆச்ரித ஸூ லபன்
8–கண்ணன் -கரிய மேனியன் –
கார் முகில் போலே வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போலே என் அம்மான் கண்ணன்
காரார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்துகே கண்ணபிரானை
காரார்ந்த திரு மேனிக் கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
9–கண்ணன் –களிக்கச் செய்பவன் -ஆனந்திப்பிக்கிறவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை –ஆனந்தாவாஹனனைப் பற்றின எனக்குத் துக்கம் இல்லை
9–கண்ணன் –ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -மாயன் என்னும் பொருளில்
மலியும் சுடர் ஓளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் / கண்ணனை மாயன் தன்னை / கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் –
-எத்திறம் என்னும் படியான குண சேஷ்டிதங்களை யுடையவன் –
10–கண்ணன் -அறிவு அளிப்பவன்
உள்ளொற்றி உள்ளூர் நகப்பருவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண் சாய்பவர் -கண் சாய்பவர்–அறிவு தளர்வார் –
விண்ணருள வந்ததொரு மெல்லமுதம் அன்ன வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
தண் அருளி ஏழ்மை துடைத்து எழு மெய் ஞானக் கண்ணருள் செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் —
ஞானக் கண்ணருள் செய் கண்ணன் –இராம பிரானை கம்பர் -மயர்வற மதி நலம் அருளுபவர் கண்ணன்
இப்படி பல பொருள்கள் உண்டே –

—————————————————-

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாவான்-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்

அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–(3459) -6-1-9-துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்

வண்ண மாடங்கள் சூழ் திரு கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன்  முற்றம் கலந்து அளராயிற்றே–1-1-1-ஸ்ரீ திரு கோட்டியூரில் பிரசஸ்த  கேசனாய்-பரிபூர்ண குணனான ஸ்ரீ கிருஷ்ணன்–பிறந்தினில் -பிறந்து இன் இல் -இன் இல் பிறந்து-ஸ்ரீ மதுரையில் சிறைக் கூடம் போலே பிறந்த இடம்  தோன்றாமல் போக வேண்டாதே –எல்லா உபாலாள நத்துக்கும் யோக்யமான ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகை யாகிற-இனிய இல்லிலே பிறந்து –அதவா –-பிரம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய்-பரி பூர்ண குணனானவன் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து
அவதரித்த -அளவில் என்னவுமாம் –கண்ணன் முற்றம் -என்றது –ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த போதே க்ர்ஹ நிர்வாககன்-பிள்ளையாக ஸ்ரீ நந்த கோபர் நினைத்து இருக்கையாலே ஸ்ரீ கண்ணனுடைய முற்றம் என்னுதல் –கண் நல் முற்றம் –இடமுடைத்தாய் -தர்ச நீயமான முற்றம் என்னுதல் –
எண்ணையும் மஞ்சளும் -இவை இரண்டும் துகை உண்டு தன்னிலே சேர்ந்து சேறாய் விட்டது –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ -(42)-1-3 3- –கிஞ்சித் கரித்தவர்களை குளிர கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

போர் ஒக்கப்  பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்க்காய்
கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோ அச்சோ – 1-8-6-வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவனாய் –கரிய வாகிப்  புடை  பரந்து இருக்கிற திருக் கண்களை உடையவனாய் இருக்கிறவனே –இத்தால் –பூ பாரத்தை போக்குகையாலும் –ஆஸ்ரிதனான அர்ஜுனனை விஜயீ ஆக்குகையாலும் உண்டான ஹர்ஷம் வடிவிலும் கண்ணிலும் தோற்றும்படி நின்ற நிலையை சொல்லுகிறது –

கிண் கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர்  கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-2-எனக்கு ஸூலபனானவன் -என்னைப் புறம் புல்குவான்-எனக்கு ஸ்வாமி யானவன் என்னைப் புறம் புல்குவான்-

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –அழகிய சுலபனானவன் –கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில்-முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் –என்கிறது –அன்றிக்கே –-ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே – அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –

பதக முதலை வாய்ப்  பட்ட களிறு
கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -(126) 2 1-9 – அத் தசையில் சர்வேஸ்வரனே தனக்கு ரஷகனாக நினைத்து –தன் கையை எடுத்து அஞ்சலி பண்ணி – தன் ஆர்த்தி எல்லாம் தோற்றும்படி கூப்பிட்டு கொண்டு -எனக்கு நிர்வாகனானவனே என்று பல காலும் சொல்ல –
(முக்கரண பிரபத்தி நடந்ததே ) நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் – இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் – மூலேதி முக்த பதம் ஆலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே – இவை தன்னில் சேரும்படி என் என்னில் – மூலம்-என்கிற இடத்தில் அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் –
ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை ––

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – (144) -2-3 6- –எனக்கு சுலபன் ஆனவனே-ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே எனக்கு உன்னை உபகரித்தவனே=எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே-எனக்கு ரஷகன் ஆனவனே – என்று ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும்  மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கரும் குழல்
தூயதாக வந்து குழல் வாராய் அக்காக்காய்
தூ மணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-2 – –காயா மலர் வண்ணன்--ஆத்ம குணங்கள் மிகை யாம்படி அப்போது அலர்ந்த செவ்வி காயம் பூ போலே யாய் –அனுகூலரை எழுத்து இடுவித்து கொள்ளும் வடிவு அழகு படைத்தவன் –கண்ணன் –விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சௌலப்யத்தை உடையவன் –

திண்ணக் கலத்து திரை உறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக்காக்காய்

கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய் – (164)-2-5 3-இது நவநீத ஸௌர்ய வ்ருத்தாந்தத்தாலே அனுகூலரானவர்களை எழுதிக் கொள்ளும் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதியை – மேன்மைக்கு  இவ்வருகு சொல்லலாவது இல்லை இறே –அம்  மேன்மைக்கு எதிர் தட்டான நீர்மை சொல்லுகிறது – இடக்கை வலக்கை அறியாத இடையருக்கு நிர்வாஹன் ஆனவனை

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் –(195)-2-8 -4- – எல்லாருக்கும் ஸூலபனாய் கொண்டு திரு வெள்ளறையிலே நின்று அருளினவனே–

வெண்ணெய் விழுங்கி வெரும்கலத்தை வெற்ப்பிடை இட்டதன் ஓசை கேட்கும்
கண்ண பிரான் கற்ற கல்வி தன்னை காக்கிலோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையா இவை செய்ய வல்ல
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 – வெண்ணெய் தான் விழுங்கினான் ஆகிறான் -வெறும் கலங்களை வெற்ப்பிடை இட்டு உடைக்குமோ –அது உடைகிற போதை ஓசை கேட்கை ஆய்த்து இவனுக்கு பிரயோஜனம் –கிருஷ்ணான உபகாரகன் கற்ற க்ரித்ரிம வித்யையை நாங்கள் காக்க மாட்டுகிறிலோம்-எல்லாருடைய களவும் காக்கலாம் –
இவனுடைய களவு எங்களால் காக்கப் போகாது என்கை-பிரான் என்கிறது-வ்யதிரேக உக்தி  -சர்வஸ்வ  அபஹாரி என்கிறபடி –

திண்ணார் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு –(252) -3 -3-9 –எனக்கு கண்ணாய் உள்ளவனே-ஜாதி உசிதமான தர்மம் -என்று கன்றுகள் மேய்க்க போம் நீ -நாளை முதலாக
கன்றுகளின் பின்னே போகாதே கோள்-ஆபராணாதிகளால் வந்த ஒப்பனை உடையவனாய் கொண்டு -அத்தை விட்டுப் போகாமல்-இங்கே இரு என்று அனுவர்த்தன பூர்வகமாக நியமித்து சொல்கிறாள்

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என் பெண்  நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 -4-3 –இப்படி வருகிற அளவில் –-பசுக்களின் பின்னே திரிந்த ஆயாசம் பொறாத ஸௌகுமார்யத்தாலும் –
பகல் எல்லாம் பெண்களைப் பிரிந்து போகையாலும் உண்டான தளர்த்தியாலும் –வந்த வாட்டத்தை உடையவனாய் – நவ யவ்வனாய் இருந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணனுடைய –பற்று மஞ்சள் பூசும்படி சுலபன் ஆகையாலே -அவர்கள் பூச -பட்டுப் படாத மஞ்சளும்-அதுக்கு பரபாகமான திரு மேனியின் நிறமும் -திவ்யமான அவயவ சமுதாய சோபையும் – அவன் வருகிற வழிக்கு அருகே நின்றவளான என் பெண் –
எல்லாரும் காண்கிறவோபாதி கண்டாள்-நோக்கிக் கண்டாள் –-விளையாடப் போகிறவள் அபூர்வ தர்சனத்தாலே புரிந்து கண் வைத்துப் பார்த்தாள்-

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற

வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – –திரு ஆய்ப்பாடியிலே தெருவின் நடுவே -பசுக்களின் பின்னே – கீழ் சொன்ன ஒப்பனைகளோடும்  –
அவை தானும் மிகை யாம்படியான வடிவு அழகோடும் – கிருஷ்ணன் எழுந்து அருளக் கண்டு-யுவதிகளான இடைப் பெண்கள் ஆசைப்பட்டு விகர்தைகளான பிரகாரத்தை

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் 
நம் பரமன் இந்நாள் குழலூத கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் 
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீதம் வலையால் சுருக்குண்டு 
நம் பரமன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -3-6-6 –சிவந்து மிகவும் பெருத்து இருக்கிற திருக் கண்களை உடையவன்-கணையங்கள் போலே திரண்டு இருக்கிற திருத் தோள்களை உடையவன்-தேவகி பிராட்டிக்கு விதேயனான புத்ரனானவன் -துர்மானிகளான தேவர்களுக்கு சிம்ஹம் போலே அநபிபவநீயனாய் இருக்குமவன்-தன் அபிமான அந்தர் பூதரான நமக்கு தன் பெருமை எல்லாம் அறியலாம் படி இருக்குமவன் –

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும் கொலோ – 3-8-8—குடிப் பிறப்பில்  வந்தால் ஸ்ரீ நந்த கோபர் திரு மகனாய் இருக்கிற  – கிருஷ்ணன்-குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் –நடை ஒன்றும் செய்திலன் -அந்தோ -என்று அவன் முறை கெட கொண்டு போன பிரகாரத்தை சொல்லி 
விஷண்ணையாய் மேல் தன்னுடைய பெண் பிள்ளையின் மார்த்வத்தை நினைத்து நொந்து சொல்கிறாள்-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-
–சாபிப்ரயமாக புத்தி பண்ணி அனுசந்திக்குமவர்கள்-அத்யந்த ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை கண்டு அனுபவிக்கப் பெறுவர்

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8–சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது  திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை –

தேவுடைய மீனமாய்  யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -(420)–4-9 9-தேவுடைய–திவு -காந்தி -தேஜஸ்-இது அனைத்து அவதாரங்களும் விசேஷணம்-ஈஸ்வரனுடைய ஜன்மம் –-ஐசசீயமாய் -பரார்த்தமாய் -இருக்கையாலே பிறக்க பிறக்க-ஒளி பெற்று வாரா நிற்கும் –
பல் பிறப்பாய் ஒளி வரும் -என்று அருளிச் செய்தார் இறே –-ச ஏவ ஸ்ரேயான் பவதி ஜாயமான–(யஜுர் வேதம் )என்னக் கடவது இறே-கண்ணனாய் –-பூ பார நிரசன அர்த்தமாக ஸ்ரீ கிருஷ்ணனாய்

கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாராயணா என்று
எண்ணா நாளும் இருக்கு யசுர் சாம வேதம் நாள் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை  தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே –-(438)- 5-1-6-ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து தண்ணியரோடு நின்றான் -என்னும்படி ஸூலபன் ஆனவனே

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே
எண்ணுவர் இடரைக் களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள் தோறும் ஏத்தும் நன்மையே அருள் செய்யும் பிரானே -(440)-5-1-8 –சர்வ ஸூலபனே-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானின் ஆபத்தைப் போக்கினவனே-ஜகத்தை ஸ்ருஷ்ட்டித்து இறே வந்து அவதரிப்பது –இருவர் அவர் முதல்வன் தானே -இத்யாதி -குவலயா பீடத்தை நிரசித்தவனே

ஆழி மழைக் கண்ணா ஓன்று நீ கை கரவேல்
ஆழி யுட்புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–4–கம்பீர ஸ்வபாவத்தை உடையவனாய்-வர்ஷத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும் கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்“ஆழி மழைக் கண்ணா!” என்று அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் என்னை வாட்டம் தணிய வீசீரே–13-1-கிருஷ்ணன் என்றால்
தன்னை உகப்பார்க்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும் என்று இறே பிரசித்தி-இப்போது அது தவிர்ந்து-மனுஷ்யத்வே பரத்வமே சித்தித்து விட்டது-கிருஷ்ணன் என்றால் நாம் நினைத்து இருந்தவை எல்லாம் போய் – தான் பிறரைக் கும்பிடு கொள்ளத் தொடங்கினான்- பிரணயித்வம் போயிற்றே –நம்மைப் பெறுகைக்கு தான் நம் வாசலிலே அவசர ப்ரதீஷனாய் துவளுகை எல்லாம் போய் –
முகம் தோற்றாமே நின்று- வயிறு வளர்த்து போவாரோபாதி யானான்-கால் தரையிலே பாவாத படி நின்று முகத்தை மாற வைத்து ஹவிஸ்ஸை கொண்டு போம் தேவதைகளோ பாதி யானான்-கிருஷ்ணன் என்றால் உகப்பாருக்கு பவ்யன் என்று சொல்லுவது ஒரு சப்த மாத்ரமாய் – முன்புத்தை  நிலையே -(பரத்வமே )அர்த்தமாய் விட்டது-ஸ்வரூபம் மாறாடினால் –-ஆஸ்ரித பார தந்தர்யம்  -ஸ்வ பாவமும் -கருமை நிறமும் மாறாடினால் ஆகாதோ-இந் நிறம் எப்போதும் ஒக்க படு குலை அடிக்குமது தவிருகிறது இல்லை-கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது – புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-இவன் பவ்யன் என்னுமது வடயஷ பிரசித்தி போலே -ஆல மரத்தில் பிசாசு -போலே யாய்த்து-உகப்பார்க்கு எளியன் என்னுமது விக்ருதியாய் -வெளி வேஷமாய் -பிரக்ருதிவத் பாவித்தே விட்டான் –இயற்கைத் தன்மை போலே நடித்துக் காட்டி விட்டான் –

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—(650)–1-4-கேசியை அநாயாசேன பிளந்து –ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை-ஆஸ்ரித விரோதிகளை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவனை-வெறும் வடிவு அழகே அன்றியே எனக்கு பவ்யனானவனை

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– (665)-2-8-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-

களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– (711)-7-4-செறிந்த நிலாவை வுடைய பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற திரு முகமும்-ஸ்ரீ கிருஷ்ணனே -சொல்லுகிற -விலஷணமான திண்ணிதாய் இருக்கிற திருக் கையும் திரு மார்வும் திருத் தோளும்-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6–குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-தவழ்ந்து எழுந்து இருந்து நடக்கப் புகுவது தள்ளம்பாறுவதான தளர் நடையாலே-நிலப் பண்பாலே சிவந்த புழுதியை யாடி வந்து அக்கோலத்தோடே என் மார்விலே வந்து கட்டிக் கொண்டு கிடக்கப் பெற்றிலேன் –

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –(776)-25--கிருஷ்ணனாய்  வந்து அவதரித்து இடக்கையும் வலக்கையும் அறியாத இடையரையும் பசுக்களையும் ரஷித்து உன்னை ஒழியச் செல்லாதபடி பண்ணி அவர்களுக்கு நியாம்யனான நீயே அருளிச் செய்ய வேணும் என்று கருத்து –

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –(788) 37-ஓர் ஆயுதத்தால் அன்றிக்கே லீலையாக அழித்த திருக்கையை உடைய க்ருஷ்ணன் என்று ஜ்ஞாநாதிகாரான வியாச பராசராதிகள் சொல்லா நிற்பர்கள்-யசோதை பிராட்டியாருடைய பாலையையும் வெண்ணெயையும் அமுது செய்து –இத்தால் -விஜி கத்ஸ -என்கிற தத்வத்துக்கு ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யத்தால் அன்றிக்கே செல்லாது இருக்கிறபடியைச் சொல்லிற்று –தாய் வடிவு கொண்டு விநாசிகையாய் வந்த பூதனையினுடைய முலையை அமுது செய்து – அவ்வழியாலே அவளை முடித்து –யசோதையினுடைய பாலோபாதி பூதனையினுடைய ப்ராணனும் தாரகமாய் இருக்கிற படி

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –(837)-86-சம்சாரிகளுக்கு இச்சையே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக எல்லா அவஸ்தைகளையும் உண்டாக்கி முக்தர் ஆக்குகைக்கு அன்றோ அவதாரத்துக்கு பலம் அனுபாவ்யமாய் இருப்பதொரு கர்ம சேஷம் உண்டாயோ அவதரித்தது –

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –(838) 87-நெற்றியிலே கண்ணை உடைய ருத்ரன் –தன்னுடைய சக்தி அதிசயத்துக்கு பிரகாசகம் ஆகையாலே லலாட நேத்ரத்தை தனக்கு பேறாக நினைக்கிறான் ஆய்த்து –ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகரான இந்த்ரனோடே திரு நாபி கமலத்தை பிறப்பாகவும் ஸ்தாநமாகவும் உடையனாய் துஷ்கரமான தபச்சாலே சதுர் தச புவன ஸ்ர்ஷ்டாவுமாய் அதுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவோடே ஹவிர்பாகபுக்குக்களான சகல தேவதைகள் – சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான தேவர்களோடும் இந்த்ரனோடும் கூட ப்ரஹ்ம ருத்ரர்களைச் சொல்லிற்று –அவர்களோபாதி இவர்களும் ஷேத்ரஞ்ஞர் என்று தோற்றுகைக்காக

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-பெரிய பெருமாள் உடைய கந்தத்தைச் சொல்லுகிறது –திருப்பாற் கடலிலே அபேஷா நிரபேஷமாக கண் வளர்ந்து அருளுகிற சௌலப்யத்தை
உடையவனே -ப்ரஹ்மாவுக்கு ஷீராப்தி நாதன் உகந்து அருளின படியாலே –அங்குத்தை சௌலப்யமும் வடிவழகும் பெரிய பெருமாள் பக்கலிலே பிரத்யபிஜ்ஜை-பண்ணலாம்படி இறே இருப்பது –

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-(889)18-நினைவு அறிந்து பரிமாறுவார் ஒரு நாடாக உடையவன் கிடீர் இங்கே வந்து தனியே கண் வளர்ந்து அருளுகிறான் –இப்படி கண் வளர்ந்து அருளா நிற்க-ஒரு கார்யம் அற்று அந்ய பரராய் திரியா நின்றார்கள் இறே ஸூகமே சம்சாரிகள் –
தனியேன் வாழ் முதலே -என்பான் ஒரு தனியேனைக் கிட்டுமோ என்னும் நசையிலே இறே-தனியே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –அரசு செய்யும்--அரசு செய்கை யாவது -வன்னியம் அறுக்கை-இவ்வன்னியம் அறுக்கைக்கு பரிகரம் எது என்னில்-தாமரைக் கண்ணன்--கையிலே ப்ரஹ்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இறே –-அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இறே –அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர் இவர்களுடைய விரோதியைப் போக்குவது –(“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக் கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.)இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் –எம்மான் – நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –(900) -29–முதல் அடியிலே ருசி ஜனகமாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய் அன்றோ உன் வடிவு அழகு இருப்பது –கண்ணனே-வடிவு அழகு உண்டாலும் உத்துங்க தத்வம் அன்றோ -என்ன ஒண்ணாத படி -சௌலப்யாதி குண யுக்தன் அல்லையோ –பரம சேஷியாய் – விலஷண விக்ரஹோபேதனாய் சௌலப்யாதி குண யுக்தனாய்
இருக்கிற நீ இருக்க -எனக்கு இழக்க வேணுமோ-வகுத்த சேஷியாவது- சேஷித்வ சம்பந்தம் இல்லை யாகிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனாவது – இவை இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத நீர்மையை உடையனாவது-இப்படிப் பட்ட தேவரீர் உள்ளீராய் இருக்க -எனக்கு ஓர் இழவு உண்டோ-

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே-32-கண்ணனே – மேகத்தில் காட்டிலும் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –கடக்க நின்று ஜலத்தை உபகரிக்குமது இறே மேகங்கள் – சஜாதீயனாய் வந்து கிட்டுத் தன்னை அன்றோ உபகரிப்பது –பெரிய பெருமாளை கண்டதும் – யசோதை பிராட்டி வைத்த வெண்ணையைக் களவு கண்டு அமுது செய்து மூலை அடியே திரிந்து வளர்ந்த செருக்கு தோற்றி யாய்த்து இருப்பது –கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்னக் கடவது இறே –

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–(916)-45-கவளம் கொண்டு இருப்பதாய்
பெருத்து இருந்துள்ள ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார்-இங்கே ஆனை கொன்ற என்கிறார்-இத்தால்-தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே
இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி – திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்-

பாலனாகி ஞாலமே ழும் உண்டு பண்டா லிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–(1062)2-2-5-அத்யந்தம் செம்பால் பாய்கிற பருவத்தை உடைய பாலனாய் அப்பருவத்திலே சகல லோகங்களையும் எடுத்து வயிற்றிலே வைத்து-தனக்கு ஒரு பரிவர் இல்லாத பிரளய காலத்திலே-ஒரு ஆலந்தளிரிலே –பிள்ளை அகாலத்திலே உறங்கா நின்றான்-என் செய்தான் என்று எழுப்புகைக்கு ஒரு யசோதாதிகளும் இல்லையே –பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைத்தான தேசத்தில் அரியது செய்ய வல்லவன் ஆயிற்று கண் வளர்ந்து அருளுகிறான் எழுப்பி கார்யம் கொள்வார் குறையே –

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–(1129)2-9-2-இவை அடைய திரு நாபீ கமலத்திலே உண்டாம்படி இருக்கிற புண்டரீகாஷனுக்கு வாச்ஸ்தானம் –

காரார்ந்த திரு மேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–(1257)4-1-10-மேகம் போல் ஸ்ரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசமான

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு  நாங்கூர் வண் புருடோத்தமமே-(1263)4-2-6-கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–(1276)-4-3-9-சிவந்து இருத்தல்-வெளுத்து இருத்தல்-செய்கை அன்றிக்கே-கண்ணுக்கு குளிர்ந்து-களாப் பழம் போலே இருக்கிற வடிவை உடையவனே கிருஷ்ணனே

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -(1298)-4-6-1-உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே-ரஷகன் ஆக வேணும்-அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை-இவர் தாமே அருளிச் செய்கிறார்-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2--அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய்
புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-

ஏ விளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –(1305)-4-6-8-அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக-திருக் காவளம் பாடியிலே வந்து-சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்

மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசராகிக்
கோ விள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –(1307)-4-6-10-திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை-கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்

தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –(1318)4-8-1-கண்டார் மேல் விழும்படி ஆசை
மத முதிதமாய் குவலயபீடம் -அனாயாசன அநாயாசேன நிரசித்தவன்-விரோதியை போக்கா விட்டாலும் விட ஒண்ணாத வடிவு அழகு-கண்டாருக்கு பெரு விருப்பம் கொள்ளும் படி குவளை மேகம் போன்றவற்றை இன்னும் இப்புடைகளில் – கடல் மணி போன்ற -வடிவை பரிக்ரஹித்த ஸ்வாமி-வடிவு அழகுக்கு ஓன்று உவமானம் போகாமல் அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—(1326) 4-8-9-கிருஷ்ணன் என்றும்
ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக்  கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்-ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –

காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –(1367)5-2-10-காவி போலேயும்-பெரும் கடல் போலேயும் இருந்துள்ள வடிவை உடைய கிருஷ்ணன் திரு உள்ளத்தோடு பொருந்தி உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற திருக் கூடலூர் மேல் –

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –(1556)-7-1-9-சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் -அன்றிக்கே சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் – அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும் திருக் கண்களை உடையவனே -என்னுதல் -இப்படி இருந்து வைத்து உன்னுடைய விபூதி பூதரிலே சிலர் -இவன் என் புத்திரன் -என்று அபிமாநிக்கலாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனே –

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –(1571) -7-3-4-கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
சங்க மிடத்தானைத் தழலாழி  வலத்தானைச்
செங்கமலத் தயனனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே —(1598)-7-6-1-புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை –(தேவாதி ராஜனே இங்கே சேவை )அவ் ஊரில்  உள்ளார் உடைய ஜன்மமும் இன்றிக்கே ஸ்ரீ பிரகலதான் உடைய படியும் இன்றிக்கே இருக்கிற நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –அயர்வறும் அமரர்கள் அதிபதியே –புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —(1661) 8-2-4-கண்ணபுரம் தொழும் –
இது இவளுடைய தாரகம் – அது என்னம்புது -ஒருவரைத் தொழுதால் என்றால் தாரகம் ஆமோ -என்ன –கண்ணனூர் –-எல்லாம் கண்ணன் -என்கிற கிருஷ்ணன் அன்றோ உள்ளே நின்றான் –-பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்று இறே ஸ்வேத தீப வாசிகள் இருப்பது –தோற்றோம் -என்றும்-ஜிதம் –என்றும் –
அஞ்சலி மாறாதே இவர்கள் இருப்பது – அஞ்சலி மாறுவது சந்நிதி மாறில் இறே – அஞ்சலியால் சர்வ அவயவங்களும் புஷ்டமாய் இறே அவர்களுக்கு இருப்பது –

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —(1662)-8-2-5-அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –ஸ்ரீ மதுரை -திருவாய்ப்பாடி -ஸ்ரீ மத் த்வாரகை -என்கிற இவை எல்லாம் கண்ணன் விண்ணூர் -என்கிற பரம பதத்தோபாதி கலவிருக்கை இறே –கலவிருக்கை -கொலு வைத்து -கொலு சாவடி -களைவது போல் -அங்கு எல்லாம் இருந்து தீர்த்தம் பிரசாதித்து போனானே-இங்கே 64 சதுர்யுகமாக நித்ய வாசம்-த்யக்த்யா வைகுண்டம்-ஸ்ரீ வைகுண்டம் விரக்த்யா ஸ்வாமி புஷ்கரணி தடம் போல் இங்கே தானே-கண்ணன் ஸ்வ பாவம் விட ஊரின் ஸ்வ பாவம் இருக்க ஓட்டவில்லையே 

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —(1718)8-8-1-மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –

பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-பொறை தானாய் இருக்கை–தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே-செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி –  என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று – நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்குமவள் ஆயிற்று – (கண்ணாளா -நோக்கு –மது மலராள் -போக்யதை )

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால்  ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —(1890)-10-5-3-உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே – எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

காரார் புயல் கைக் கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -(4-5-)-என்னா அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் -இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை  உடையனான இது – பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று -செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தாராளா -கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி- இவை எல்லாம் ஐஸ்வர்ய ஸூசகமாய் இருக்கிறது –இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை ( யசோதை பாவனையே பின்னாட்டி ) இவ் வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது –

அல்லிக் கமலக் கண்ணனை  யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–(1931)-10-8-10-அரை ஷணம் மாறி நிற்கில் கண்ணாஞ் சுழலை இடும்படியான நோக்கை உடையவன் –யங்கோர் ஆய்ச்சி –-அவன் தன்னை நூறு பட்டினி கொள்ளுமவள் ஆயிற்று –

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும்
எய்த்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி
கைத் தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –(1977) 11-3-6-(கண்ணன் என் கண்ணனையே-ஸூகம் கொடுக்கும் கண்ணன் –-கிருஷ்ணன் -கிருஷி பூமி வாசக -நகன் -ஸூகம் கொடுக்கும் )

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை 
  யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம்   நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –(1978) 11-3-7-அவன் ஹிருதயத்தில் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் கையில் வளை கழலும் படி இருக்கிற நமக்கு –நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -(2024)-11-8-3-ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே-பெருமாளாதானவாறே–விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-தலைமை பெற்று-உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு
–(2088) 7-ஒரு நாள் குறைந்து ஒரு நாள் நிறைந்து வரக் கடவது அன்றிக்கே
நித்தியமான கல்யாண குணங்களை யுடையவன் அல்லாதார் உடைய சீருக்கு அசைவுண்டு போலே –கண்ணன்--அந்த கல்யாண குணங்களாலே போந்து அவதரித்து கொண்டு ஸூலபன் ஆனவன்
தன்னை இதர சஜாதீயன் ஆக்குவதும் தன்னுடைய இச்சையாலே -என்றபடி –அன்றிக்கே
அசைவில் சீர்க் கண்ணன் –-தன்னை இதர சஜாதீயன் ஆக்கின இடத்திலும் அவனது அசைவில் சீர் -என்றுமாம்-இவன் தானே உயர வைத்துத் தரம் கொடுத்தாலும் அவர்களது அசையும் சீர் –நெடுமால்-
இப்படி ஸூலபன் ஆன இடத்திலும்-தன்னை அளவிட ஒண்ணாத படியான பெருமையை உடையவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஒதப் படுமவன்-அன்றிக்கே ஆஸ்ரிதரை விட மாட்டாத பெரும் பிச்சன் -என்றுமாம் –

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ––(2137) 56-
-சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான-திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –கடற்கரையிலே குடில் கட்டி இருக்கும் காட்டில்
கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ-அபரிச்சேத்யம் என்று அறியில் அறியலாம்-அவன் பெரிய கிழாய் கிழாயனாய்-ப்ரஹ்ம விதாம் வர -யுத்த -120-3-என்னும் அவனான பின்பு அவன் தானே வரும்படி மறை காட்டும் இத்தனை போக்கி ஒருவரால் அறிந்ததே விடப் போமோ என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–(2245)-64-இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது 
சர்வ ஸூ லபனான உன்னுடைய  குண சேஷ்டிதங்களுக்கு  வாசகமான திரு நாமங்களே –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –(2281)-100-சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் -அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –-கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்–

நாமம் பல சொல்லி நாராயணா வென்று
நாம் அங்கையால் தொழுது நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்க்
கண்ணனையே காண்க நங்கண்    ——(2289_—8-பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி
வயிற்றிலே வைத்துப் பேணி வெளிநாடு காண உமிழ்ந்து –போகய பூதனாய்-ஸூ லபனான கிருஷ்ணனையே-பூமியை அடங்க நோக்கும் ஸ்வ பாவனே யாகிலும்-விட ஒண்ணாத போக்யதை உடைய கிருஷ்ணனையே-அரியன செய்து நோக்கா விடிலும் விட ஒண்ணாத ஒப்பனையை யுடைய கிருஷ்ணனையே-நம் கண்கள் காண்பதாக விரும்பிக் காண வேணும்-

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ —(2328)—–47-அவன் நீர் வார்த்த அநந்தரம் ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையவனே –

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனிமலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87–கண்ணனே – கலந்து மணி இமைக்கும் நின் மேனியை மரகதமே மலர்ந்து காட்டா நின்றது –கிருஷ்ணனே – ஸ்ரீ கௌஸ்துபத்தின் உடைய சிவந்த தேஜஸ்ஸூம் ஸ்ரீ வத்ஸத்தின் உடைய கருத்த தேஜஸ்ஸூம் ஸ்யாமமான திரு நிறத்திலே விரவினவாறே – ஸ்யாமமான திரு நிறத்தைக் கொண்டு பிரகாசிக்கிற உன்னுடைய திரு மேனியை ஸ்ரமஹரமான மரகதத்தின் உடைய பிரபை விஸ்த்ருதமாய்க் கொண்டு ஸ்பஷ்டமாகக் காட்டா நின்றது –

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி- (2413) 32-சாஸ்த்ரங்களால் சொல்லப்பட்ட தேவ திர்யகாதிகளான ஆத்மாக்கள் எல்லாம் ஒரு ஷண காலமும் ஒழியாமே- எப்போதும் சத்தை பெற்றுச் செல்லுகிறது அவனுடைய சங்கல்ப்பத்தாலே –

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –(2431) 50-
திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது – திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் –பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு–(2461) -80-—பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய லோகங்கள் ஆனவை பரந்து-திரு நாமங்களை பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –(2465) 84-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்
அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –-ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட-ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-(2474)-93-இவ்வாத்மாவுக்கு என்றும் உன்னுடைய ரஷையை மறந்து அறியேன் –கிருஷ்ணனே ப்ராப்ய ப்ராபகன் என்று இருப்பேன் -என்றுமாம்

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர்
மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —(2479)-2-இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –கண்ணன்-பவ்யதா உச்யதே-எடுக்கவும் கட்டவும் அடிக்கவும் ஆஸ்ரித பரதந்த்ரனானவன்–அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய் எட்டாதே இருக்கை இன்றிக்கே பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய-கிருபா மயனானவனுடைய-

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —(2488)-11-கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நிரதிசய போக்ய பூதை யானவளே (கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )

பேர்கின்றது மணியாமை  பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே
—(2489)-12–ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டு எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய-

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16–அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே-விண் அனையாய் -என்று-க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ-

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
 –23-புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால்
திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-சர்வேஸ்வரன் உடைய மண்ணையும் விண்ணையும் ரஷியா நின்ற வாஞ்ஜையை பக்னம் ஆக்கா நின்றது-ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன் லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26–ஆஸ்ரித ஸுலப்யத்தாலே-சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது அடுத்து அணித்தாயிற்று-

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே
 –27–துயில் அமர்ந்த வேந்தின் பாடே நின்றும் பிரசாதம் வந்தது போலே காணும்–வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே –அழகியதாய் ஸ்ரமஹரமான திரு துழாய் மாலையை ஸ்பர்சிக்க —சர்வாங்க சம்பந்தமாக கலக்க வேண்டா–ஸ்பர்சிக்கவே அமையும்–நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட–அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன் இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி
அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30–ஸுலப்யத்தை முன்னம் காட்டி என் மனசைக் கவர்ந்து கொண்டு-பரத்வத்தால் என்னை இன்று அளவும் வந்து கலவாது நிற்பவன் இடம் என் மனம் வீணே சென்று சேர்ந்து அலைகிறதே – அவனைக் கண்டாலும் காணலாம் –அந்தரங்க பரிவாரங்களில் ஒன்றாக கலந்த நெஞ்சைக் காண்பது அரிதே-வைகுந்தனோடு-என் நெஞ்சினாரை கண்டால் என்கிறார்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே –37–சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம்
தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –(2524) 47–அவதரித்து ஸூலபனான இது தான் காதா சித்கதம் ஆகையாலே -என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற
(கண்ணன் காதா சித்கதம் -விண்ணூர் என்றும் ஒக்க ஓர்  இருப்பேயாய் காட்சி கொடுக்கிற) கண்ணன் விண்ணூர் –ராகவஸ்ய நிவேசனே -ஸூந்தர காண்டம் – 33-7 – ஸ்ரீ ராமனுடைய அரண்மனையில் -என்னுமா போலே –(மானுஷன் லோகான் -ராகவஸ்ய வீட்டில் போல் இங்கும் கண்ணன் விண்ணூர் ) 

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே  – -57–ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல்(ஆயிரம் கையால்; அலை கடல் கடைந்து தாள்கள் ஆயிரத்தாய் இத்யாதி ) கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு –தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று – இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –மறி கடல் போன்று -என்னுதல்-மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்–அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே-அந் நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அக வாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே தோற்றும்படி நின்றாளாய்  –அவற்றை நினைக்கிறான் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58–இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்-அழறு என்று அளறு நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி-

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே 
— 63–பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்(சுவையன் திருவின் மணாளன் )திருமால்— நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்–

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4–தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்-அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –(ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே-இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி )

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
-ஆகில் இனிச் செய்வது என் என்று நெஞ்சு கேட்க-அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க-நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்-அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம் (அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம்

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —(2590)-6-மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ-மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ-மயர்வற மதி நலம் முதலிய நன்மைகளைப் பண்ணினோமே என்ன –மாஸூச -என்று சொல்லுகையாம் இறே (ஸூலபனான உன்னைத் தானே நிர்பந்திக்க முடியும் )

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —
(2609)-25-நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி-ஸூலபனான கிருஷ்ணனாலே பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன் எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்– (2651) -67-–ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்-அவன் உபய விபூதியும் தந்தாலும்-நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப் போது போக்குவதையே கல் என்றபடி –(உபய விபூதி அனுபவமும் வேண்டாம் திருநாம சங்கீர்த்தனமே – இச்சுவை இங்கே இருக்க -அச்சுவை பெறினும் வேண்டா என்கிறார் )

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள் எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ-தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே-

கண மங்கை –கண்கள் ஆரளவும் நின்று கண்டு கொண்டேன் -என்று நான் சொன்னேன் இ றே-
அங்கன் சொன்னது அவனைப் பேணினேன் இத்தனை –-நான் கண்ணாரக் கண்டேனோ இல்லையோ என்று என் வடிவைக் காட்டுகிறேன் –காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் –(2707)- பரம பதத்தை விட்டுக் குறைவாளர்க்கு முகம் கொடுக்கத் திரு விண்ணகரிலே வந்தான்-தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழல் – என்று பிரசித்தம் இறே –குறைவாட்டியாய் இருக்கிற எனக்கு முகம் தந்தானோ இல்லையோ -என்று என் வடிவைக் காட்டுகிறேன் –சீரார் கணபுரம்- கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று நான் தனக்கு அனன்யார்ஹை யாகத் தாலி கட்டி இருக்க அங்கே சென்று என்னைத் தனக்குப் புறம்பாக்கின படி பாருங்கோள்-என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத் தானைத் –(2784)-கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –பெரிய திருமொழி -8-9-3-என்னும்படி அனந்யார்ஹை யாக்கின வடிவைக் கொண்டு நின்று அருளினவனை –

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்

வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –வகுத்த சேஷியாய் -சுலபனான சர்வேச்வரனுடைய சம்ச்லேஷத்தை அபேஷிக்கும்படியான காமம் பிரதான புருஷார்தமாய் இருக்கும் –
அதிலே சுவார்த்தை யாகிற அஹங்காரத்தை-தவிர்த்து -அவனுடைய முக மலர்த்தியை உத்தேசித்து பண்ணும் –பகவத் சம்ச்லேஷமே பிரதான புருஷார்த்தம் என்றபடி –-கண்ணனுக்கே –-என்கிற அவதாரணத்தாலே –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –என்றும் –உற்றோமே யாம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறபடியே அத்யவசிக்க வேண்டும் -என்றபடி –

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –(2942)-1-4-11-கண்ணனை-இவ்வளவில் முகம் காட்டிற்று இலன் -என்ற குறை தீருகையாலே ஆஸ்ரித ஸூலபனானவன்-பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டின கிருஷ்ணன் என்னவுமாம் –

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–(2949)-1-5-7-சர்வாதிக வஸ்துவுக்கு அடையாளம் இருக்கிறபடி-சர்வ கந்த -என்கிற விஷயம் ஆகையாலே பரிமளம் அலை எறியா நிற்கும் திரு மேனியில் குளிர்த்தியாலே செவ்வி மாறாதே இருக்கும்-இப்படி இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதன் ஆனவனை-கண்ணனை-அறிவரிதான நிலை தான் அவதரித்து நின்ற இடத்திலே கடல் கிட்டிற்று என்றால் பரிச்சேதிக்கலாமோ- மனுஷ்யத்வே பரத்வம் இருக்கிற படி
அன்றிக்கே ஐஸ்வர்யத்தாலே எட்டாது இருக்குமோ என்னில் ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கும் என்னவுமாம் –

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –(2977)-1-8-2-அநாயாசேன பிளந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடையவனை-அம்மானாய் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் எம் மாண்பும் ஆனான் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-சம்சாரிகளோடு நித்ய ஸூரிகளோடு வாசி இல்லை –அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாவான்-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் –-சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் -என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –(2989) -1-9-3–அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமாய் இருக்கும் திருக் கண்களை உடையவன் –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4—இவ்வாச்சர்யங்கள் எல்லாம் தன் பக்கலிலே காணலாம் படி இருக்கிற கிருஷ்ணன்-யசோதை பிராட்டி ஓக்கலையிலே இருக்குமா போலே என் ஓக்கலையிலே இருந்தான் –

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8–புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன்-என் கண்ணினுள் உளானே–என் கண்ணுக்கு உள்ளே புகுந்தான் -என்னுதல்-கண்ணுக்கு விஷயமானான் என்னுதல் –

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9–புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான் –-ந மாம்ஸ சஷூர் அபி வீக்ஷ தேதம் ந சஷூஷா பஸ்யதி-என்கிற மரியாதை குலைந்தது-காண்பன் – நானும் அவனைக் காணா நின்றேன் காண்பன் -என்கிற இடம் வர்த்தமானம்-நீர் காண வல்லீர் யாயிற்று -எத்தாலே என்னில்-அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –(3000)-1-10-3-பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்-

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –(3008)-1-10-11-தனக்கு முடிந்து ஆளலாம் படி ஸூ லெபனான் படியைச் சொல்லுகிறார் –-வானவர் கண்ணனைத்–நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான மேன்மையை உடையவனை-தன்னதோர் -அணியை – தனக்குத் தானே ஆபரணமாக அழகை உடையவனை

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே – (3020) -2-2-1-நம்-கண்ணன்-என்று –க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –-களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே–வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை-கண்ணன் கண் -என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே-இல்லையோர் கண் -இது திண்ணம் –

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-தகும் என்னும் இடத்தை ஸ்பஷ்டம் ஆக்குவதாய் -ரக்ஷகத்வம் இல்லையே யானாலும் விடப் போகாதபடி தர்ச நீயமான-அக் கண் அழகாலே என்னை ஜிதம் என்னப் பண்ணினவன் –-யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி-ராம கமல பத்ராஷ

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–(3037) -2-3-7-கன்னலே–நிரதிசய போக்யமானவனே -அமுதே–போன உயிரை மீட்க வற்றாகை-கார் முகிலே–பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை-என் கண்ணா-எனக்கு உன்னைத் தந்தவனே நின்னலால் இலேன் காண் –
உன்னை ஒழிய ரக்ஷகரை உடையேன் அல்லேன் என்னுதல்-உன்னை ஒழிய தரிக்க மாட்டேன் என்னுதல்-என்னை –-வை தர்மயம் நேஹா வித்யதே -என்று தம்மைக் காட்டுகிறார்-நீ குறிக்கொள்ளே–
திரு உள்ளம் பற்ற வேணும் –

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –(3039) –2-3-9-திரு மேனியில் ஸ்பர்சத்தாலே பிறந்த மது தாரைகளை உடைத்தான திருத் துழாயாலே அலங்க்ருதனான கிருஷ்ணன்-கடி என்று பரிமளமாய்-வார் என்று மிகுதியாகவுமாம் –கடி என்று புதுமையாய் -செவ்வி மிக்க என்னவுமாம் –

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –(3048)-2-4-7-தனக்கு தாரகமாக அவனுடைய உதார பவ்யத்தைகளை சொல்லா நின்றாள் – அதி பிராவண்யம் ஆகாது என்று ஜனனி சொன்ன ஹிதமும் நெஞ்சில் படாத படி என்னை அநன்யார்ஹை ஆக்கினவனே-அவ்வளவு அன்றிக்கே உன்னை எனக்கு கையாளாக தந்தவனே

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –(3057)-2-5-5–என்னோட்டை கலவி பெறாப் பேறு-என்னும் இடம் வடிவிலே தோற்ற இரா நின்றான் தனக்கு நிறக் கேடாம் படி இ றே என்னோட்டைக் கலவி இருப்பது கார் காலத்தில் ஆர்ந்த மேகம் –தன் காலத்தில் காள மேகம்-என்னம்மான் கண்ணனுக்கு
அவ் வடிவைக் காட்டி முறையை உணர்த்திய கிருஷ்ணனுக்கு

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
–(3065)-2-6-2-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூ ரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று-தலைமகனை – இப்படிக்கு கூப்பிடா நின்றாலும் -நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்-துழாய் விரைப்-பூ மருவி கண்ணி எம்பிரானைப்–அவர்களைக் கண்ணாலே தோற்ப்பித்தான்-என்னைத் தோளில் மாலையால் தோற்ப்பித்தான் –

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே -(3074)-–2-6-11-இவர் நம்மை விடில் செய்வது என் என்று அவனுக்கு ஓடின அதி சங்கை தீருகையாலே பிறந்த செவ்வியைச் சொல்லுகிறது –-வைத்த வளையமும் செவ்வி பெற்று இருக்கிற கண்களும் விகசித்தம் யாயிற்று

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே– (3075) -2-7-1-ஈசன் –-சர்வ நியாந்தாவானவன்
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்-அந்த சாமான்ய ரக்ஷகம் அன்றிக்கே தன வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி திருக் கண்களாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனே –-ஆரைப் போலே என்னில்-விண்ணோர்-நாயகன்- எம்பிரான்-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-எம்மான்– அவர்களைப் போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் -என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே– (3087)-2-7-13-அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான நீல மணி போலே இருக்கிற வடிவை உடையவனை-அமரர் தலைமகனை-இவ் வழகு நித்ய ஸூ ரிகளாலும் அனுபவித்து முடிக்க ஒண்ணாத படி அவ்வருகாய் இருக்கை-கண்ணனை–இவ் வழகு விலக்ஷண அதிகாரமாய் அன்றிக்கே அஸ்மாதாதிகளுக்கும் ஸூலபனாக்கை-நெடுமாலைத்-என் அளவில் பர்யவசியாதே என்னோடே பரம்பரயா சம்பந்தித்தவர்கள் அளவும் செல்லும் வியாமோஹ அதிசயத்தை உடையவனை

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-சர்வேஸ்வரனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு ஸூலபனானவனை ஸ்வ யத்னத்தால் காண்பார் யார்-

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –-(3096)-2-8-9-சர்வேஸ்வரன் சர்வகதன் என்றான் -இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு –மயா ததாமிதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தி நா –என்றும்
நத தஸ்தி விநாயத் ஸியாத் மயா பூதம் சராசரம் -என்று அவன் தானே சொன்னதை யாயிற்று இவன் சொல்லிற்று –

சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –(3102)-2-9-4-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –-எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு – ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு – சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டை -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –(3138)-3-2-7-சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –-நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-கண்ணனை -மேவுதுமே
ஸூலபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்–நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –-யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் –

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-விதித–சத்ருக்கள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாய் ஸ்வா பாவிகமான கல்யாண குணங்களை உடைய கிருஷ்ணனே-வென் பரஞ்சுடரே-
தாழ நின்று இவ் வடிவு அழகை எனக்கு முற்றூட்டாக்கி தந்தவனே -பரஞ்சுடர் உடம்பாய் -என்ன கடவது இறே

தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–(3141)-3-2-10-பல கலைகளாலும் அறியப் படுபவன்
வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு-

அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன்
செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. – (3145) -3-3-3-அந்த ஐஸ்வர்ய ஸூசகமான திருக் கண்களை உடையவன் -தனக்குத் தானே ஆபரணமாக திருக் கண்கள்

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—(3154)—–3-4-1—அர்ஜுனன் -ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்றத்தோடு -பூமி -என்றத்தோடு வாசி அற்று இருக்கிறது இறே-

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–-(3155) -3-4-2-பரந்த குணங்களை உடைய கிருஷ்ணன்-தன் கண் அழகால் என்னை அநந்யார்ஹன் ஆக்கினவனை –

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-கிட்டினாரோடு முதல் உறவு பண்ணும் கண்-

பால் என்கோ! நான்கு வேதப்பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–(3159) -3-4-6-உனக்கு நான் உளேன் -மா ஸூ ச –நீ சோகியாதே கொள்-என்னுமவன் என்பேனோ-

ஒளி மணி வண்ணன் என்கோ! ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ! நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.–(3161)3-4-8-எத்திறம் என்று மோஹிக்கும் படியான ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணனை –

கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-ஸுலப்யமும்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களும் பின்னாடுகிற படி

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!– (3165)–3-5-1-ஆனைக்கு அதின் கையிலே புஷ்பத்தைச் செவ்வி குலையாமல் அலங்கரிக்கை யாகிற அருளைப் பண்ணினவனாய்-அது தன் ஆர்த்தி தீரக் கண்டு -களிக்கும்படியாய்-உகக்கும்படியாய் -ஸ்ரமஹரமாய்-காளமேக நிபமான வடிவையும் உள்ளே இழிந்து எடுத்துக் கரை ஏற்றும்படியான சவ்லப்யத்தையும்-

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒருமூவர் ஆகிய மூர்த்தியே.– (3176) 3-6-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே -செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர் படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் – வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ.–(3177) -3-6-2-பாபத்தை உண்டாக்கிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவனை -ராம கமல பத்ராஷ

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது-வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்-சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூலபன் ஆனவன்-அந்நிலையில் நித்ய ஸூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்-

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?– (3185) -3-6-10-அபரிச்சேத்ய மஹீனனான கிருஷ்ணன் என்னுதல்-சிரமஹரமான வடிவை உடைய கிருஷ்ணனை என்னுதல்

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-செறியா நின்றுள்ள மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவனை-பயிலுகை -செறிகை -சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ்ஸாய் மிக்க தேஜஸ் ஸூ என்கை-சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் என்கை
இவ்வடிவிலே துவக்குண்டாரை அநந்யார்ஹம் ஆக்கும் கண்

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–(3188)3-7-2-ஆளும் பரமனைக்
இவ்வஸ்துவை ஆளும் போது ஒப்பு இல்லாதவனை –-அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன் -என்னக் கடவது இறே-கண்ணனை –-தான் கையாளாக நின்றாய்த்து ஆட்க்கொள்ளுவது
ஆட்க்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை-ஆழிப்பிரான் தன்னைத்
– ஆஸ்ரித ரக்ஷணத்தில் பகலை இரவாக்குகை பெரு நிலை நின்ற திரு ஆழியை உடையனாய் கொண்டு உபகரிக்குமவனை
கையும் திரு ஆழியுமான சேர்த்தியை காட்டி அநந்யார்ஹன் ஆக்குமவனை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–(3192) -3-7-6-அளிக்கும் பரமனைக் –
ரக்ஷிக்கும் இடத்தில் தனக்கு மேற்பட்டார் இல்லாதவனை-கண்ணனை–உபகரித்தது தன்னை யாயிற்று
ஆழிப் பிரான் தன்னைத்-நா யுதாநி -என்கிறபடி -தன்னோடே ஆயுதங்களோடு வாசி அற பக்தா நாம் என்று இருக்குமவனை

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?––(3210) -3-9-2-கண்ணன் குறுங்குடி சர்வேஸ்வரன் என்னது என்று அபிமானித்த தேசம்-கண் நல் குறுங்குடி என்று நிர்வஹித்தான் ஒரு தமிழன்-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-தகுதியான மிக்க புகழை உடையனாய் நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் -அம்மேன்மையோடே வந்து அவதரித்து மனுஷ்யத்தவே பரத்வத்தை உடையவனும்-

குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்

கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–(3221) -3-10-2–ரஷ்ய வர்க்கத்தை தன வடிவு அழகாலே துவக்கி கரைமரம் சேர்க்கைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்–ஒளியை உடைய நீல மணி போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்-

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–(3225) -3-10-6-ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களையும் ஆச்சர்யமான சேஷ்டிதங்களையும் உடைய கிருஷ்ணனுடைய புகழை
நெருங்க புஜிக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–(3229) -3-10-8-எல்லை இல் மாயனைக் சங்கல்ப ரூப ஞானத்தால் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ண வல்ல ஆச்சர்ய சக்தி உக்தனை
இப்படி ஆர் இருக்கிறார் என்னில்-கண்ணனைத்-கிருஷ்ணனை -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம்
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே
.–-பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய் ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –

அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–-(3233)-4-1-3--ஸர்வேஸ்வரத்வ ஸூசகமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதமான கிருஷ்ணன் திருவடிகளை நினையுங்கோள் –திருமுடி யோட்டை ஸ்பர்சத்தாலே நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் பரிமளம் மிகா நிற்கை-பரிகர மது ஸூதன ப்ரபந்நான் -என்று யமாதிகள் அஞ்சும் மதிப்பை பெறுவர் –

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–(3241)–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று-அது ஏது என்னில்-கண்ணன் கழல்கள் மேல்-நினைமினோ என்கிறது –
ஸூலபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.––(3251) -4-2-10-மின்னா நின்ற ஆபரணம் உண்டு -ஸ்ரீ கௌஸ்துபம் -அத்தை திரு மார்பிலே உடைய கிருஷ்ணனுடைய திருவடிகளில்-விரஹத்தாலே துவண்ட முலைக்கு வேணும் என்று சொல்ல நினைத்து முடியச் சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்-

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.– (3252) -4-2-11-இவ் வவ சாதனம் எல்லாம் தீரும்படி வந்து முகம் காட்டின கிருஷ்ணன் திருவடிகளில் –மெலியும் என் செய்கேன்-என்று கை விட்டாள் திருத் தாயார் –உடையவர்கள் கை விடார்கள் இறே-நம் கண்ணன்-தாஸாம் ஆவிர் பூத் ஸவ்ரி என்று இப்படிப் பட்ட ஆபத்துக்களில் வந்து முகம் காட்டும் என்ற பிராமண பிரசித்தி-

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–(3257) -4-3-5-–கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி எனக்கு அநந்ய பரத்வ மஹா உபகாரத்தை பண்ணி தொழுது எழும் படி பண்ணின ஸ்வாமியான கிருஷ்ணனுக்கு-பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -என்னக் கடவது இறே

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–-(3263)-4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து –வேறு இல்லாமை -அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–(3270) -4-4-7-இவள் பிச்சேறி இருக்கிற தசையில் இஜ் ஜகத்து எல்லாம் கிருஷ்ணனால் ஸ்ருஷ்டமாயிற்று என்னுதல்-கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி -என்னா நின்றாள்-அவன் ஆதரித்து ஸ்ருஷ்டித்தது என்று தத் சம்பந்தத்தால் விபூதியையும் விரும்பா நின்றாள்-ஏதேனும் ஒரு பதார்த்தமும் தத் சம்பந்தம் ஒழிய தோற்றதாய் இருக்கிற படி-ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே கலங்கின போதும் வாசனையால் இவ்விஷயமேயாய் இருக்கிற படி –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8--தெளிவுடையாளாய் பந்துக்களுக்கு அஞ்சின போதோடு -அறிவழிந்து மோஹித்த போதோடு வாசி அற கிருஷ்ணன் திருவடிகளை விரும்பா நிற்கும்-அல்லாதவை அஸ்திரமாய் இவளுக்கு இது ஸ்திரமாய் செல்லா நின்றது-வெருவுகை -அஞ்சுகை –வீழ்கை -மோஹிக்கை –

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-கறுத்து பெருத்த மேகங்களை காணில் –ஞான அஞ்ஞான விபாகம் அறத் தன் வடிவைக் காட்டி அபகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் என்று மேலே எழப் பறக்கத் தேடா நிற்கும் –

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–(3273)4-4-10-

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–(3274) -4-4-11-பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-பத்ம வர்ணையான அவளை அனுபவிக்கையாலே பழைய சிவப்புக்கு மேலே சிவந்து அழகை யுடைத்தாய் –ப்ரேம பாரவசயத்தாலே விஸ்தீர்ணமான திருக் கண்களை யுடையனாய்-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-முடிவு இல்லாத யுவத்வாதி நித்ய குண விபூதி வைலக்ஷண்யத்தை யுடையனாய்-இவ்வதிசயத்துக்கு ஸூசகமாம் படி புண்டரீ காஷனாய் -இக் கண் அழகாலே-விண்ணோர் பரவும் தலை மகனானவனை

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–(3280) -4-5-6-ஒப்பனை வேண்டாத படி -அழகு அளவிருந்து இருக்கிற படி-தடங்கண்ணன்-போக்தாக்கள் அளவு அன்றிக்கே போக்யத்தை இருக்கிற படி–கறுத்த திரு நிறத்தால் வந்த அழகுக்கு மேலே அதுக்கு பரபாகமாக திருக் கண்களிலே அஞ்சனத்தை இடும் என்றுமாம்-கரி -என்று ஆனையாய்-அத்தால் நினைக்கிறது குவலயா பீடமாய் -அது -அம் மேனியில் -அழகிய மேனியில் – வெளிய கோபிக்க -நீறு சிறிதே இடும் -பொடியாகும் -பஸ்மாத்தாக்கும் -என்று ஒரு தமிழன் நிர்வாஹம்-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–(3307) -4-7-11-நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே-தாமரைக் கண்ணன்றனைக் –இக் காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்-கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –-செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மண்ணினான் -என்ன கடவது இறே -இது இ றே மதி நலம் அருளின படி

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –(3344)-5-1-4-அஷமனான என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் -தன் பக்கல் அசக்தியை அனுசந்தித்து சோகித்தவனை -மாஸூச -என்றில்லையோ –அதாவா –கண்டு கொண்டு உந்து ஒழிந்தேன் -என்ற இடம் ஞான அனுசந்தான மாத்ரமாய்-பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து -அது கை வராமையாலே இதுக்கு அடி பிரகிருதி சம்பந்தம் -என்று அனுசந்தித்து -இந்த விரோதியை போக்குகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ண -உன் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தாலே நான் மாட்டு கிறிலேன்-நீயே இத்தை அறுத்து தந்து அருள வேணும் என்கிறார்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.(3351)–5-1-1-ஓர் இடைச்சி கையிலே  கட்டுண்ட தசையில் அந்த பந்தத்தை தப்ப விரகு அறியாதே சக்தியும் இன்றிக்கே இருந்த நீயோ போகப் புகுகிறாய்-கண்ணபிரான் என்று சம்புத்தி -இனிப்போனால் அறையோவறை -அனுக்ரஹ சீலனான உனக்கும் -மெய் என்று பேரிடலாவதொரு பொய் என் பக்கலிலே உண்டான பின்பு போகலாமோ-மித்ர பாவம் பெற்றால் -நத்யஜேயம் என்னும் உனக்குப் போகலாமோ -ஸூ க்ரீவ மஹா ராஜரைப் போலே அறை கூவுகிறார் –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–-(3358) 5-2-7-இதர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி யாகிற தண்ணிய நெஞ்சு ஒன்றும் உங்களுக்கு வேண்டா-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–(3361) -5-2-10-கிருஷ்ணன் உடைய அசாதாரண விக்ரஹத்தை பொருந்தி ஆஸ்ரயித்து-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-மிகவும் வி லக்ஷண தேஜோ ரூபமான வடிவை யுடையவன் -அருளாதே அநாதரிக்கிலும் விட ஒண்ணாத வடிவு -அருள் செய்தது அவ்வடிவு தானே யாயிற்று –மாயப் பிரான்கண்ணன் தன்னை–அத்யாச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய கிருஷ்ணனை –

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை ச்ரவஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இ றே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் -தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இ றே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –-என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-எருவும் நீரும் உண்டானாலும் வர்ஷம் வேணும் இறே -வ்ரஷூக வலாஹம் போலே சிரமஹரமான வடிவு-நம் கண்ணன்-விரூபனானாலும் விட ஒண்ணாத பவ்யதையை-இவ்வடிவும் பவ்யதையும் யாயிற்று புறம்பு உள்ளோரோட்டை தொக்கை அறுத்ததும் -அபரிச்சின்னமான காதலை விளைத்ததும்-நம் கண்ணன் -கிருஷ்ணன் என்றால்பெண்களுக்கு கையாள் என்று பிரசித்தம் இறே-

ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–(3375)-5-4-2-புல்லேந்தீவர பத்ராபம் –என்கிற நிறத்தை யுடையவன் –இருளோடு செறிந்த நிறம் நிறம் ஆகையால் -இருளோடு செறிந்து வரலாம் கிடீர் கம்சன் காவலாக வைத்த துஷ்ப்ரக்ருதிகள் கண் படாத படி -இருளிலே வந்து அவதரித்தவர் -அன்று தாமஸ பிரக்ருதிகளை போக்க வந்தவனுக்கு இன்று இந்த தமஸை போக்கல் ஆகாதோ-என் கண்ணனும்  வாரானால்–-முன்பு இராத்திரிகளில் வந்து உதவுமவன் பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.-
அவனும் என்னுடையவனாய் இ றே உதவாது ஒழிந்தது -ஆபத்துக்கு உதவாதவனாய் யன்றே -அது உனக்கும் ஒக்கும் இறே -என் கண்ணன் என்னலாம் படி இ றே அவன் பவ்யதை-பவ்யரானார் அடங்க அபவ்யராம் பாவத்தை பண்ணினேன் –

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே.–5-4-5-வர்ஷூகமான மேகம் போலே சிரமஹரமான வடிவை யுடைய கிருஷ்ணனும் வருகிறிலன் –தாஸாம் ஆவீர்பூத் –என்று ஒரு நீர் சாவியிலே வர்ஷித்தால் போலே தோற்றுமவன் வருகிறிலன் –-நம் கண்ணனும்-பெண்களுக்கே யுதவுமவன் வருகிறிலன் –

தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.–5-4-8-நினைத்தபடி விதேயமான திரு வாழி யை யுடைய -பாவஞ்ஞமான பரிகரத்தை யுடையவன் கிடீர்–என் கண்ணனும் வாரானால்--ஆஸ்ரிதற்காக தன் ப்ரதிஞ்ஞஜையை அழிய மாறுமவன் -கையில் திரு வாழி யை விட்டு இருளைத் துணித்து தன் வடிவைக் காட்டுகிறிலன்

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–(3399) 5-6-4-அஸி தேஷிணா -கரிய கண்ணை யுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது,-மையக் கண்ணாளான தன்மை போய், செய்ய கோலத் தடங்கண்ணன் படியாய் விட்டது என்றபடி.-கரும் தடம் கண்ணி -தாயார் -திரு நாமம் -திருத் தொலை வில்லி மங்கலம் – ஆழ்வார் தன் பாவனை மாறி பெண்ணாகி அதுவும் மாறி புருஷோத்தமனாது வாசா மகோசரம் அன்றோ –

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.–(3422)-5-7-5-பெருத்து தர்ச நீயமான நீர் நிலங்கள் ஆசைப் பட்டார்க்கு நெடுங்கை நீட்டாக ஒண்ணாது என்று காண் கைக்கு அண்ணிதாக கண் வளர்ந்து அருளுகை-செந்தாமரைக் கண்ணா!-சந்நிதியே இன்றிக்கே ரக்ஷண பரிகரமும் உடையவனே -என் ஆர்த்தி தீர நோக்குகைக்கு யோக்யதை யுண்டாய் இருக்க இழக்கவோ-அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் என்கை –அவலோக நதாநேந

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–(3454) -6-1-4-கடல் போலே சிரமஹரமான வடிவை யுடையவன் –பிரான் -பக்தானாம் என்று அவ்வடிவை ஆஸ்ரிதற்கு உபகரிக்குமவன் – கண்ணன் -அவர்க்கு கையாளாய் யாயிற்று அனுபவிப்பது-நெடுமால் – வ்யாமுக்தனானவனை –அன்றிக்கே -சிரமஹரமான வடிவை எனக்கு உபகரித்து -பவ்யனாய் -இன்று எட்டாதே இருக்கிறவனைக் கண்டு -இது பட்டர் நிர்வாஹம் –

அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–(3459) -6-1-9-துரியோதனாதிகளை அழிய செய்யும் இடத்தில் கடியனாய் -பாண்டவர்களுக்காக பகலை இரவாக்குகை முதலான ஆச்சர்ய சேஷ்டிதங்களை பண்ணுமவனை -அவர்களுக்கு கையாளாய் நிற்குமவனை -அவ்வளவிலும் பர்யாப்த்தன் அன்றிக்கே இருக்கிற வ்யாமுக்தனாய் -அன்றிக்கே பிறர் நோவு அறியானாய் கலக்கிற போது பிரியேன் என்று வைத்து பிரிய வல்லவனை கலக்கும் போது தாழ நின்று பரிமாறி பின்னை எட்டாதவனை என்றுமாம்

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–(3476) -6-3-4-அவ் வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்- தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இறே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–(3480)-6-3-8-எனக்கு புகலானவன்–எனக்கு பவ்யனானவன்-என்னை அடிமை கொண்டு போகிறவன் -எனக்கு உபகாரகன் –

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–(3517) -6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் –தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் –என்று ஆயிற்று இவள் இருப்பது-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-பதார்த்தங்களில் நல்லனவற்றைக் காணில் -ஒன்றிலும் கண் வைப்பது இல்லை -கண்டாள் ஆகில் எனக்காக தன்னை யோக்கி வைத்த கிருஷ்ணனுக்கே என்னும் –ஈரியா யிருப்பாள் -கிருஷ்ணனுக்கு என்றால் மேல் ஒன்றும் சொல்ல மாட்டாதே -அவன் குணங்களை அனுசந்தித்து நீராய் இரா நின்றாள் -ஈரித்து இருக்கும் -ஆர்த்த ஹ்ருதையாய் இருக்கும்-

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-(3528) –6-8-1-ஸ்ருஷ்ட்டி காலத்தில் வரையாதே சகல லோகங்களையும் உண்டாக்கினவன்-அழிந்தவற்றை உண்டாக்கினவன் உண்டான வஸ்துவை அழிக்குமோ-உண்டாக்கும் இடத்தில் தரமிடாதவன் தன்னைப் பெற வேணும் என்று இருப்பாரே தரம் விடுமோ-முகில் வண்ணன்-தரம் இட்டாலும் விட ஒண்ணாத வடிவு -தன் பேறாக கொடுக்குமவன் என்றுமாம் –-கண்ணன்-ஆஸ்ரிதற்கு தன்னைக் கையாள் ஆக்குமவன்

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-மேகத்திலே மின்னினால் போலே திரு யஜ்ஜோபவீதத்தைக் காட்டி என்னை அநன்யார்ஹை யாக்கினவன்-என் கரும் பெருமான் -அதற்கு பரபாகமான வடிவை எனக்காக்கி என்னை அடிமை கொண்டவன்-என் கண்ணன்-இங்கனம் பிரித்து சொல்ல வேண்டாத படி தன்னை எனக்கு கையாளாக்கினவன்-

பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–(3533) -6-8-7-பூவைப் போப் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -வடிவில் போக்யதை இருக்கிற படி -பிரிந்தார் உடம்பில் வை வர்ணயம் குடி புகுரும்படியான வடிவு –அகவாயில் தண்ணளி எல்லாம் தோற்றும் படியான கண் அழகை யுடையவன் -பிரிந்தாரை பாவைகள் காலிலே விழ விடும் கண் இறே

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-கறுப்பு எல்லாம் திரண்டால் போல் இருக்கிற மஹா மேகம் போன்ற வடிவை உடையவன் -கார் காலத்தில் திரண்ட மேகம் என்றுமாம் –மா முகில் -மாறாதே கொடுக்க வல்ல முகில் –கண்ணன் -தன்னை பிறருக்கு ஆக்கி வைக்குமவன் –விண்ணவர் கோனை-மத்ஸ்யத்துக்கு தண்ணீர் வார்ப்பாரைப் போலே இவ் வழகையும் குணத்தையும் நித்ய ஸூரிகளை அனுபவிப்பித்து இருக்கிறவனை

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா! இமையோர் தம் குல முதலே!–(3568)-7-1-8-எனக்கு தாய் போலே பரிவனானவனே-என் கண்ணா!-எனக்கு பவ்யனானவனே இமையோர்தம் குலமுதலே!–நித்ய ஸூ ரிகள் சமூகத்தை அடிமை கொண்டு உஜ்ஜீவிப்பிக்குமவனே -நித்ய ஸூ ரிகளை அடிமை கொள்ளுமா போலே நானும் அடிமை செய்யும் படி பண்ணி அருள வேணும் என்கை -ஒரு விபூதிக்காக தாயும் தந்தையாய் அவர்கள் சிந்தித்து ஏத்தி தொழும் படி அருளிக் கொண்டு இருக்கிறவனே –

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில மு தல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-பூமி தொடக்கமாக மற்றும் எல்லா லோகங்களுக்கும் ஸ்தாவர ஜங்கமாத்மகமாய் உள்ள அநேக பதார்த்தங்களையும் முதலிலே படைத்தாய் -ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷமான பின்பு அது தான் பெற வேண்டாவோ என்கை
என் கண்ணா! என் பரஞ்சுடரே!–எனக்கு பவ்யனாய் நிரதிசய போக்யனுமாய் உள்ளவனே -சர்வ சக்தியாய் எனக்கு பவ்யனாய் போக்யனான நீயே இந்திரிய உபாதையை போக்கி அருள வேணும்-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந்நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–(3574)-7-2-3-ஆயாந்தம் புண்டரீகாக்ஷம் வீக்ஷ மாணா குருஸ் த்த்ரிய-என்றும் தாஸாம் ஆவிர்பூத் என்றும் இடைச்சிகளுக்கும் அகப்பட காட்டிக் கொடு திரிந்திலையோ

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7–நீ எங்களை காலம் பார்த்து அன்றோ கிடக்கிறது –ஒரு கடல் கடலிலே சாய்ந்தால் போலே அணித்தாக திருப் பாற் கடலிலே சாய்ந்தில்லையோ-அவ்வளவு வர வல்லார்க்கே என்ன –-கண்ணனே!’ என்னும்;-அசக்தரான இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் கிருஷ்ணனாய் வந்து உதவிற்றிலையோ –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரீம் -அது தப்பிற்று இறே என்ன –

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- (3583).–7-3-1-ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-வானப் பிரான்-மேன்மை இருந்த படி-மணி வண்ணன் -அம்மதிப்பு இல்லை யாகிலும் விட ஒண்ணாத அழகு
கண்ணன்-இரண்டும் இல்லை யாகிலும் விட ஒண்ணாத பவ்யதை-செங்கனி வாயின் திறத்ததுவே.–-இவை மூன்றிலும் போக ஒட்டாத ஸ்மிதத்திலே படிந்தது-பிரிவை பிரசங்கித்து தாழ்வு தோற்ற வார்த்தை சொல்லப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே ஸ் மிதம் பண்ணி நின்ற படி-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.
–7-7-8-தன் ஒளியே தனக்கு ஆபரணமாக உடைய திரு முகமாய்க் கொண்டு உபமான உபேமேயங்கள் மாறாடும் படி ரூபகம் முற்றின படி-கொடியேன் உயிர் கொள்கின்றதே.-எல்லாரும் உயிர் பெறும் நிலத்திலே இப்படி துக்கப் படுகைக்கு ஈடாகப் பண்ணின பாபத்தை யுடைய என் பிராணனை நலியா நின்றது-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–(3615)-7-5-11-நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன -அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–(3637) -7-7-11-மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை -ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் -சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்-

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–(3641)-7-8-4-அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் -தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இறே இப்போது அனுகூலமாய் இருக்கிறது

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-ஆஸ்ரிதர்க்கு துக்கத்தை விளைக்கிற கிருஷ்ணனே -எத்தாலே நலிவது என்னில்-சுடர் நீள் முடி யாய்!-திரு அபிஷேகத்தில் அழகை காட்டி யாயிற்று நலிவது -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் சூடின முடி -திரு அபிஷேகம் நலிகிறாப் போலே யாயிற்று விபூதி யோகமும் நலிகிற படி-அருளாய்-இவற்றால் நலிவு படாத படி பண்ணி அருள வேணும்

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.-என்ன லீலைகளாய் யுடையையாய்க் கொண்டு என்ன பிரகாரத்தாலே நின்றாய் -லோகத்தில் காண்கிற லீலையில் காட்டிலும் லீலையும் வ்யாவ்ருத்தமாய் இரா நின்றதீ–என்னை ஆளுங்கண்ணா!-எனக்கு பவ்யனான கிருஷ்ணனே-

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-என்ன ஸ்வபாவங்களை யுடையையாய் கொண்டு நிற்கிறாய்-என் கண்ணா-என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே

நீணகரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–(3666) -7-10-7–விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூலபன் ஆனவன் –

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-திருவாறன் விளையை திரு நகரியிலே அணித்து ஆக்குதல் -நான் கால்நடை தந்து போய் புக வல்லேனாம் படி பண்ணுதல் செய்யாய் -இப்படி நாம் அங்கே செய்யக் கண்டு நிர்பந்திக்கிறீர் -என்னா-காகுத்தா !-காகுஸ்த வம்சத்தில் அவதரித்து உன் வடிவை எல்லார்க்கும் காட்டிற்று இல்லையோ -ரூப சம்ஹநனம் லஷ்மீம் –காகுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி-என்னும் படி அன்றோ –-கண்ணா !-ருஷிகளுக்கே அன்றிக்கே தாஸாம் ஆவிர் பூத் -என்று இடைப் பெண்களுக்கு உன்னை காட்டிற்று இலையோ-தொண்டனேன் கற்பகக் கனியே !-எனக்கு உபகரித்தது கிடக்க பழம் கிணறு கண் வாங்குகிறது என் விஷயாந்தரங்களிலே சபலனான என்னை அத்தை தவிர்த்து நீயே வந்து உன்னை எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினவனே -அத்யத்ன சித்த போக்யன் ஆனவனே-பேணுவாரமுதே !–உன் பக்கல் ஆஸாலேசம் உடையோருக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -கலங்குகையும் அக்ரமமாக கூப்பிடுகையும் மிகையாகும் படி அன்றோ உன் படி இருப்பது

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?-(3683)–8-2-2–காணத் தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை – கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் ! இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான் எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-நீலமாய் -விஸ்திருதமாய் அபரிச்சேத்யமான தேஜஸ் ஸூ சூழ்ந்த அபரிச்சேத்யமான காள மேகத்தின் நிறம் போலே இருக்கிற நிறத்தை யுடைய ஆஸ்ரித பவ்யன் இவ் வழகைக்காட்டி அபஹரித்துக் கொண்ட

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–(3692) -8-2-11-திருவடிகளிலே சங்கத்துக்கு முதல் அவனுடைய கல்யாண குணங்கள் -இக் குணங்களுக்கு கோதாவது தன்னை ஒழிய புறம்பேயும் நசை பண்ணும் படி இருக்கை-கண்ணன் தன்னடி மேல்-இப் புகழை யுடைய கிருஷ்ணனுடைய திருவடிகளிலே யாயிற்று சொல்லிற்று -எல்லாம் கண்ணன் -என்று இறே தொடங்கிற்று-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1–ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து இந்திரனுக்கு ஆனால் போலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தது தனக்காக என்று இருக்கிறார் -அவதாரங்களில் காட்டில் கிருஷ்ணாவதாரத்தில் அண்மையாலே சொல்லுகிறார் -சர்வ சாதாரணனுடைய அவதாரம் ஆகையால் உணர்ந்தவர்களுக்கு எனக்கு என்னலாம் படி இருக்கையாலே சொல்லுகிறார் என்றுமாம் —வினையேன் என்கிறது பல்லில் பட்டு தெறித்தால் போலே அவதாரத்துக்கு பிற்பட்ட படியால் சொல்லுகிறார்-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-கண்ட போதே விடாய் கெடும்படி சிரமஹரமான வடிவை யுடையவனே-குடக்கூத்தா-மநோ ஹரமான சேஷ்டிதங்களை யுடையவனே
வினையேன் கண்ணா-கண்ணா– எனக்கு த்ருஷ்டியான கிருஷ்ணனே –வினையேன் -கண்ணை இழந்து இருக்கும் படியான பாபத்தை பண்ணினேன்

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–(3765) -8-9-7-நிரவதிகமாய் அழகிதான சம்பத்தை யுடைய கிருஷ்ணன்=தாள் அடைந்தாள்-பிரணயித்தவ குணத்திலே தோற்றுத் திருவடிகளை பற்றினாள்-இம் மடவரலே–இம் முக்தையான பெண் பிள்ளை -முன்பு எனக்கு பவ்யையான இவள் என்னால் விலக்க ஒண்ணாத தேசத்திலே போய்ப் புக்காள்-

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–(3780) -8-10-11-இவர் ததீயரைப் பற்றின ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே புதுக் கணித்த திருக் கண்களை யுடையவன்-

யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–
9-1-9-கம்சன் வாழ்கிறானாய் படை வீட்டைக் கொடி கட்ட இவர் அத்தை கிருஷ்ணனுடைய அவதாரத்துக்கு உடலாக்குகிறார் -சிசுபாலன் விவாஹத்துக்குச் செய்த சடங்குகளை தனக்கு உடலாக்கிக் கொண்டது போலே-தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-வைஜயந்தி உள்ளிட்ட தோள் மாலைகளால் அலங்க்ருதமான கிருஷ்ணனை ஒழிய வேறு பிரயோஜனம் வேண்டாம் என்கை-இல்லை கண்டீர் சரணே-புறம்பு ரக்ஷகம் இல்லை கிடி கோள் –ஆனபின்பு சர்வாதிகனாய் ஸூ லபனான கிருஷ்ணனே பரம ப்ராப்யன் -என்கை –

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-கிருஷ்ணனை ஒழிய வேறு சரணம் ஆவார் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் சேஷியாயும் ஸூலபனானாயும் உள்ள அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள்-அவனது நம்மதோ என்று விசாரிக்க வேண்டா -உங்களோடு உங்கள் உடைமையோடு வாசி யற அவனுக்கே சேஷம்-உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவன் ஒழிய வேறு இல்லை -சமிதை பாதி சாவித்ரி பாதி யாய் உங்கள் தலையிலும் சிறிது கிடக்கிறது அன்று -அவனே நிரபேஷ உபாயம்-

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–(3791) -9-1-11-அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து-தாது சேர் தோள் கண்ணனை -இவருக்கு இவ்வத்ய வஸ்யத்தை பிறப்பித்தார் யார் என்னில் -தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி யாயிற்று இவருக்கு இவ்வத்யா வஸ்யத்தை பிறப்பித்தது

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–(3806) -9-3-4-காள மேக நிபாஸ்யமான திவ்யமான வடிவை யுடையவன்-எம்மான்-அவ்வடிவைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் -நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவைக் கிடீர் எனக்கு உபகரித்தது-கண்ணன் -தன்னிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து வந்து உபகரித்தவன்-விண்ணுலகம்-தருந்தேவனை -பரமபதத்தை தருவானாய் இருக்கிற சர்வேஸ்வரனை-சோரேல் கண்டாய் மனமே–நெஞ்சே விடாதே கிடாய் –அவன் உபகாரகனாய் நிற்க நீ வை முக்கியம் பண்ணாதே கிடாய் -அவன் வை லக்ஷண்யத்தை புத்தி பண்ணாதே ஸூ லபன் என்னா கால் கடைக் கொள்ளாதே கிடாய் –

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–(3821)-9-4-8-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை-கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இறே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–(3828) -9-5-4-நீங்கள் கூவுகிற த்வனியைக் கேட்டு வைத்தும் -இவற்றினுடைய த்வனி செல்லாத இடம் இல்லை என்று இருக்கிறாள் –-நம் கண்ணன்-வட யஷி பிரசித்தி போலே இது ஒரு யுண்டாக்கி வைப்பதே –-மாயன் -ஆச்சர்ய சீலன் -பிரிந்தால் தரிக்க ஒண்ணாத படி கிட்டின போது கையைக் காலைப் பிடித்து தாழ நின்று பரிமாறுமவன் –-வெளிப்படான்-இவள் பிழையாள் -என்று தோற்றுகிறிலன் -தாஸாம் ஆவீரபூத் -என்னுமவன் கிடீர் -ருஷியும் ஆவீரபூத் -என்றான் -இவளும் வெளிப்பாடான என்றாள்-கை கழிய போகான் -மறைந்து நின்று தோற்றும் என்று இருக்கிறாள் –

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-உன்னுடைய சிவந்த வாய் போலே இருக்கும் வாயை யுடையவன் -உபமானத்தைச் சொல்லி சேர்த்து விடுமது ஒழிய உபமேயம் தன்னை பேச முடியாது-கண்ணன் கை காலினன்-உன்னைப் போலே சிவந்த கண்ணையும் கையையும் திருவடிகளையும் உடையவனே –-நின் பசுஞ்சாம நிறத்தன்–உன்னுடைய குளிர்ந்த ஸ்யாமமான நிறத்தை யுடையவன்

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் –-வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –-இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி -நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இறே-கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-தீரா மாற்றாலே நெஞ்சைப் புண் படுத்தி வைக்கும் கிருஷ்ணன் திரு நாமங்களையே அவ்யக்தமாகச் சொல்லி முடித்தி கோள் -ம்ருத சஞ்சீவனமான ராம குணங்களை ஒரு காள் சொல்லலாகாதோ-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-(3833) 9-5-9-
குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்-நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–(3840) -9-6-5–கருவளர் மேனி -கறுப்பு வளரா நின்றுள்ள வடிவு -சதைகரூபம் என்று சொல்லுமது கண்டிலோமீ-நம் கண்ணன் –ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் –
கள்வங்களே–முகப்பில் ஒன்றாய் -முடிவில் ஒன்றாய் இருக்கும் ப்ரவ்ருத்திகள் –அடிமை கொள்வாரைப் போலே புகுந்து -தான் நியாம்யனாய் தாழ நிற்கையும் -விரோதியான சரீரத்தை கழித்து தர வேணும் என்று புகுந்து தேஹாத்ம விபாகம் பண்ண மாட்டாது ஒழிகையும் -போக்யமாய்ப் புகுந்து தான் போக்தாவாகையும் -எனக்கு உபகரிப்பானாய் புகுந்து தன் பேறாகத் தலைக் கட்டுகையும் -இது அடங்க வடிவிலே வேறுபாடடாலே தோற்றி இருக்கையும் -இத்தலையில் ஆத்மபஹாரத்தை தவிர்த்தது தன்னாத்ம அபஹாரத்தாலே யாயத்து –

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6- எனக்கு பவ்யரைப் போலே இருக்கிற கிருஷ்ணனுடைய வஞ்சனங்கள் எனக்கு செவ்வையாய்த் தோற்றும் -அவன் களவிலே அகப்பட்டாலும் மீள மாட்டாதே -அவன் முகத்தே விழித்த வாறே அது எல்லாம் எனக்கு மெய்யாய் இருக்கும்
அவன் நமக்கு பவ்யன் அன்றோ -என் பக்கல் களவு பரிமாறுமோ -அவன் செய்தது எல்லாம் எனக்கு மெய் -என்றுமாம் –சேமம் போலே இருக்கும் என்றுமாம் –நம் கண்ணன் கள்வங்கள் -என்று கீழ் முடிய –எம் கண்ணன் -என்று தொடங்குவான் என் -நாம் என்றும் யாம் என்றும் பர்யாயம் ஆகையால் பொருளிசை அந்தாதியாகக் கிடக்கிறது –எம் கண்ணன் கள்வங்கள்-என்ற பாடமாகில் நேரே கிடக்கும் –
அம் கண்ணன் உண்ட -அதி சபலனானவன் அனுபவித்த -அதி பிரவணனானவனை -அம் கண்ணன்-என்ன கடவது இறே –என் ஆர் உயிர்க்கோது இது–கோதான என் ஆத்மாவான இது -ஆத்மாவை கோதாம் படியாய்த்து பரிமாறிற்று –புன் கண்மை எய்தி-பேகணிப்பு -பொல்லா நோக்கை யுடைத்தாய் -என்கை –மீளவும் உயிர்ப்பு பெய்து -என்றும் சொல்லிப் போரும் -ஸ்ருதமும் சப்தார்த்தமும் சேரும் படி என் என்று விசாரித்து -கோதான வாருயிர் பேகணிக்கும் போது மீளவும் உயிர்ப் பெய்ய வேணும் இ றே -என்று பிள்ளை அவிவிரோதேன அன்வயித்து அருளிச் செய்வர்புலம்பி இராப்பகல்-என் கண்ணன் -என்று அவன் காட் கரை ஏத்துமே-முன்பு எனக்கு பவ்யனான கிருஷ்ணன் என்று அஹோராத்ர விபாகம் இன்றியே கூப்பிட்டு -அவன் வர்த்திக்கிற திருக் காட்கரையையே ஏத்தா நின்றது –ராகவஸ்ய நிவேசனே -என்னுமா போலே –

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் -என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –(3869) -9-9-1-இவற்றை இன்னாது ஆகிறது என் -அவன் தான் முன்னே நாம் முடிகைக்கு அன்றோ கலந்து போகின்றது சர்வமும் பாதகமாம் படி முன்னே புகல் அறுத்தான் அவன் அன்றோ –அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இறே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இறே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3—இப்படி விருப்பத்துக்கு விஷய பூதையான என்னைக்  கை விட்டு அசேதனத்தை பொகட்டால் போலே -பொகட்டோம் என்னும் நினைவும் இல்லாத படி பொகட்டு -இப்படி அவகாஹித்தது எல்லாம் கை விடுகைக்கு உடலாய்த்து என்கை –-அகல் கண்ணன் -அகலுகையே ஸ்வபாவமான கிருஷ்ணன் -அவனுக்கு கலவி காதாசித்கம் -அகலுகையே நிரூபகம் -கலவியால் அல்லது பிரிவு யுண்டாகாமையாலே கலந்தான் அத்தனை –-கள்வன்-தனி இளம் சிங்கம் -கலக்கிற போது நோக்கும் -பேச்சும் பண்ணின வியாபாரங்களும் சர்வ ஸ்வ அபஹாரிகளாய் இருக்கை –அப்போது தன் ஆற்றாமையால் கழிக்கிறான் என்று தோற்றும் படி -யாய் -பலத்தில் பிரிந்து நோவு படுத்தச் செய்தானாய் இருக்கை என்றுமாம் –தனி -தன்னோட்டை கலவியாலே அத்விதீயன் என்று தோற்றும்படி இருக்கிறவன் –இளஞ்சிங்கம் -என்னோட்டை கலவியாலே இளகிப் பதித்து மேனாணித்து இருக்கிறவன் –அவன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல்-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-மேகம் போலே ஸ்ரமஹரமான நிறத்தாலே அந்நிய பரமாக்கி நமக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய கள்வம் உண்டு -சம்ச்லேஷ தசையில் சொன்ன தாழ்வுகளும் செயல்களும் -அவற்றால் அபஹ்ருதமாய் -அத்விதீயமான என் நெஞ்சானது அவன் பக்கலது-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-கலக்கிற போது நமக்கு ஸ்வம் என்னும் படி இருந்த கிருஷ்ணனுடைய தற்காலத்து பரிமாற்றம் -அவன் தன்னில் காட்டிலும் பாதகமாகா நின்றது -கலக்கிற போது தாழ்வுகள் தோற்ற பரிமாறின பரிமாற்றத்தில் காட்டிலும் அவன் தானே நல்லன் என்கை –

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–

தகவிலை தகவிலை யே நீ கண்ணா தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-நீ கண்ணா தகவிலையே–பெண் பிறந்ததற்கு ஸ்வம்மான நீ நிர்த்தயனே யாகா நின்றாய் –கிருஷ்ணன் என்றால் பெண்களுக்கேயாய் இருக்கும் என்னும் இடம் பிரசித்தம் இறே -நாம் பிரிய நினையாது இருக்க நிர்த்தயன் என்கிறது தன் ஆற்றாமையால் இறே -என்று அதுக்கு பரிகாரமாக அணைத்தான் –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே –உன்னைப் பிரியாமைக்கு சொல்லுகிற வார்த்தை அல்ல -உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்-இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற வார்த்தை யாகையாலே மெய் –நான் போனேனோ என்ன –பகல் நிரை மேய்க்கிய போய -பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய் –-கண்ணா-என்று சம்போதித்து -அவன் தனக்கே -நீ போனாய் -என்கிறாள் இறே –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-கண்ணாலே குளிர நோக்க வேணும் -தலையிலே கையை வைக்கவும் வேணும் -என்கிறாள் -உனக்குத் தோற்றாரை–ஐயோ -என்று குளிர நோக்கி -ஈராக் கையால் தடவ வேண்டாவோ –ஆழி அம் கண்ணா ––கடல் போலே ஸ்ரமஹரமாய்–தர்ச நியாமான கண் –தலை மிசை நீ அணியாய்—என்கிற அதன் அருகே யாகையாலே –ஆழி அம் கண்ணா–என்கிற சம்போதானத்துக்கு -குளிர நோக்கி அருள வேணும் -என்று கருத்து

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-கற்றார்க்கு கிருஷ்ணனுடைய திருவடிகளே ப்ராப்யமாம் -தாமோதரன் –தாள்கள் –சார்வு -என்று ஆழ்வார் அறுதியிட்ட பேற்றைக் கொடுக்கும் –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-விபக்ருஷ்டமான பரம பதத்தில் இருக்கை இன்றிக்கே -இங்கே வந்து அவதரித்து -அதிலும் அதிகாரம் ஆராய்க்கைக்கு வசிஷ்டாதிகளும் வாசல் காப்பாரும் இன்றிக்கே -சர்வ ஸூலபனான கிருஷ்ணன் திருவடிகளை –கழலிணை–தூது போதல் -சாரத்யம் பண்ணுதல் -செய்யும் திருவடிகளை –இதுக்கு ஒரு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -இச்சையே வேண்டுவது -விலக்ஷண புருஷார்த்தமாய் இருக்க ருசி மாத்திரமே அமையும் ஆகிறது -இதுக்கு சத்ருசமான அதிகாரம் சம்பாதிக்க ஒண்ணாமையாலும் ப்ராப்த விஷயம் ஆகையால் அதிகார அபேக்ஷை இல்லாமையாலும் — கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்-எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது 

ஸ்ரீ பராங்குசரும் ஸ்ரீ பரகாலனும்–

September 9, 2026

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்

2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் ப்ராவண்ய ப்ராஸூர்யம் உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –முலையோ முழு முற்றும் போந்தில பால்யாத் ப்ராவண்யம் –கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்

3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் -மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே

4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே –கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் –யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் –8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –

5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி

6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே

7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே

8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்

9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –

10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
1

3-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-

14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்

15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /

16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –

17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-

மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ் சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18-
–என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

கலியுகத்தில், தமிழகத்தில் உள்ள ஆற்றங்கரையோரங்களில் ஆழ்வார்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்று துவாபர யுகத்திலேயே ஸ்ரீமத் பாகவதத்தில் வேதவியாசர் கூறியுள்ளார்.-அந்தச் சமஸ்கிருத ஸ்லோகம்:
“கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் க்வசிந் மஹாபாகா
த்ரமிடேஷுச பூரிச: | தாம்ரபர்ணி நதியத்ர
க்ருத மாலா பயஸ்விநீ | காவிரீ ச மஹாபாகா ப்ராதீசீச மாஹாநதீ ||”.

இதன் பொருள்: கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்த ரிஷிகள் கலியுகத்தில் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால், நாராயணனே அடையத்தக்கவன் என்று பறைசாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் திராவிட தேசத்தில் தோன்றுவார்கள். எங்கு தாமிரபரணி, கிருதமாலா (வைகை), பயஸ்வதி (பாலாறு), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிக்கரையில் அவர்கள் தோன்றுவார்கள் என்று வேதவியாசர் கூறினார். அப்படியே பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து, சரணாகதி தர்மத்தை நிலைநாட்டினர்.

——–

கஜ ஸிம்ஹ -கதி விசார ஸதஸ் -வேழம் -வலிமிக்க சீயம் ராமானுஜன் –

விரிவு நம்மாழ்வார் -சுருக்கம் திருமங்கை ஆழ்வார் -தூது -நான்கு பதிகம்-இவர் 3 -6 வயலாலி மணவாளனுக்கு வண்டு தூது -வேதம் வல்லார் மூலம் பற்ற என் நிலைமை உரையாய் — –
நரஸ்துதி தவிர்தல் – 3-10-திருவாய் மொழி -சொன்னால் விரோதம் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடாமல் திருக்குடந்தை வம்மின் –
அனுகரித்துத் தரித்தல்-5-6-கடல் ஞாலம் –8-2-6-வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொண்டது யான் -ஒரே பாசுரம்

நம்மாழ்வார் சுருக்கமாக -இவர் விரித்து பாடியவை
பிரளயம் -திருவாசிரியம் -7 பாசுரம் -ஒரே -11-6-பதிகம் முழுவதும் –

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட  பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்-

மடலூர்தல் -5-3- ஒரே பாசுரம் -தேவப்பிரான் தன்னை –மடலூர்துமே -சிறிய திரு மடல் -155 வரிகள் 297 வரிகள் பெரிய திரு மடல் -அரங்கனுக்கு மதிள் நறையூர்நம்பிக்கு மடல் ஆச்சார்யன் -என்பதால் –
யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –

சமமாக பாடியவை
பாகவத சேஷத்வம் -இரண்டு பதிகங்கள் இருவரும் -பயிலும் சுடரொளி 3-7/நெடுமாற்க்கு அடிமை -8-10-/கடல்மல்லை 2-6-/திருச்சேறை -7-4/
தாய் பாசுரம்–கங்குலும் பகலும் -7-2/திருவிடவெந்தை -2-7-
பிரேமத்தில் பெண் பேச்சு -27 பதிகங்கள் இருவரும் இவள் திறத்து என் செய்கின்றாய் -உன் மனத்தால் என் நினைத்திருந்தாய் –
சரணாகதி -நோற்ற நாலும் -திருவேங்கடத்திலும் 6-10–இவர் பத்து இடங்களிலே –1-6நைமிசாரண்யம் -1-9-திருவேங்கடம் /4-6 காவளம்பாடி /4-7 திருவெள்ளக்குளம் /5-8 திருவரங்கம் /6-2-ஒப்பிலியப்பன் /6-9- நாச்சியார் கோயில் /7-7 தேரெழுந்தூர் -திருஎழுகூற்றிருக்கை திருக்குடந்தை

சிறப்பித்து பாடியவை
குறி சொல்வது -கட்டுவிச்சி -4-6-தீர்ப்பாரை -ஸ்ரீ வைஷ்ணவ கட்டுவிச்சி இவளுக்கு -தெய்வ நல் நோய் இது –
உண்ணும் சோறு -திண்ணம் இள மான் புகுவது திருக்கோளூரே -3-7-1கள்வன் கொல் – அணியாலி புகுவர் கொலோ -ஆளவந்தார் நிர்வாகம் –
கேசவன் தமர் -2-7- திரு நாமங்கள் பதிகம் -பன்னிரு நாமப்பாட்டு -நாராயணன் -ஒன்றே -20 தடவை -1-1 வாடினேன் உப கிரமத்திலும் பின்பு நறையூர் -6-10 கிடந்த நம்பி -நாமம் சொல்லில் நமோ நாராயணமே

இருவரும் -6-3 ஒப்பிலியப்பனுக்கு

———

வார்த்தை -435-
நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு –
அறிவு நடையாடின போதோடு –
சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே அநுவர்த்தநத்தோடு -வாசியற
மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில் –

அறிவு கலங்கின போது
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –

அறிவு நடை யாடின போது –
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான்
தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் –

அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –

அநுவர்த்தநத்தில் –
அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

——————————————————-

வார்த்தை -436-

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து –
இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது –
இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது அவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார்-என்கிற இதுவே பற்றாசாக
நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட
அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

————————————————————

வார்த்தை -437-

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் –
அவருக்கு எல்லாம் பரத்வத்திலேயாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலேயாய் இருக்கும் -எங்கனே என்னில்

அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-

(அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது என்றோ -அர்ச்சாவதார மஹிமை பேசிய செந்தாமரைக்கண்ண பதிகம் நிகமனம் பாசுரம்)

அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –

அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் – சிறிய திருமடல் -72-77- என்றும் –

அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் 
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –

அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –

அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்

அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –

அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –

அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3 -என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

——————————————————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களில் ஒருமைப்பாடு -பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்–

September 9, 2026

நான்கு பாதங்களும் ஒன்றானவை

கடைநின்றமரர் கழல்தொழுது* நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்
…. இரண்டாம் திருவந்தாதி 11

கடைநின்றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்
…. நான்முகன் திருவந்தாதி 55

———

3,4 பாதங்கள் ஒன்றானவை

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே
–திருக் குறும் தாண்டகம்-13

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே! அருளாய்
என்னும் இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே
….பெரிய திருமொழி 2-7-10

பொன்னுமாமணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து
அன்னமாடுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமாநகரமர்ந்தானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார்நாளும் பழவினை பற்றறுப்பாரே…
.பெரிய திருமொழி 5-7-10

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டைநம் வினைகெடவென்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணியநின்று அங்கண்டமொடகலிடமளந்தவனே
ஆண்டாயுன்னைக் காண்பதோர் அருளெனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே…
.பெரிய திருமொழி 6-1-1
6-1-1 முதல் ஒன்பது பாசுரங்கள் ஒரே பின்னடியில் அமைந்தவை.

—————–

சிறு மாறுதலுடன் 3,4பாதங்கள் ஒன்றானவை

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் – தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்* அண்டத்து
இருசுடருமாய இறை…
. மூன்றாம் திருவந்தாதி 38

நீயே உலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்” அண்டத்து
இருசுடருமாய இவை
…. நான்முகன்திருவந்தாதி 20

————

மூன்றாம் பாதம் ஒன்றானவை

மின்னனைய நுண்மருங்குல்
மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
புன்னை பொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே
என்னைம்புலனும் எழிலும் கொண்டு
….பெரிய திருமொழி 5-1-6

மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
அன்னம் பெடையோடுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
-..பெரிய திருமொழி 7-5-9

கொல்லையென்பர் கொலோ?
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நடங்க இளமான் செல்ல மேவினளே
….. திருவாய்மொழி 6-7-4

மல்குநீர்க்கண்ணொடு …..
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே
…..திருவாய்மொழி 6-7-7

சீர்கண்டுகொண்டு …
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
பார்பரவின்கவி பாடும் பரமரே
-திருவாய்மொழி 7-9-5

ஆர்வனோ? ஆழியங்கை
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே
…. திருவாய்மொழி 7-9-8

கோதில வண்புகழ்…….
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஒதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே
…. திருவாய்மொழி 4-2-4


மாதர் மாமண்மடந்தை ……..
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஓதுமால் எய்தினள் என்தன் மடந்தையே
…. திருவாய்மொழி 4-2-6

————–

மூன்றாம் பாதம் சிறுமாறுதலுடன் ஒன்றானவை

குடையா விலங்கல் கொண்டேந்தி
குடியாவண்டு கள்ளுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடிதானே-பெரிய திருமொழி 5-1-7

வடிவாய் மழுவே படையாக….
குடியாவண்டு கொண்டுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும் அடியேன் கண்டு கடியார் புறவிற் கண்ணபுரத்து கொண்டேனே….பெரிய திருமொழி 8-8-6

————

நான்காம் பாதம் ஒன்றானவை

மாடமாளிகைசூழ் திருமங்கை
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
….பெரிய திருமொழி 5-8-10

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே
….பெரிய திருமொழி 7-3-10

———-

தொடக்கம் ஒன்றானவை

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் தொண்டர்கள் பூச்சூட்டவாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-7-9

அண்டத்தமரர் பெருமான் ஆழியான்…. வைக்குங் கொலோ….பெரியாழ்வார் திருமொழி 3-8-7

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளுமெல்லாம் அமுது செய்த வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-2

அண்டமும் இவ் வலைகடலும் அவனிகளும் குலவரையும் உண்டபிரான் திருத்தேவனார் தொகையே…. பெரிய திருமொழி 4-1-5

அருளாதொழியுமே ஆலிலைமேல் * அன்று தெருளாத நிற்பார்க்கு முன்… மூன்றாம் திருவந்தாதி 19அருளாதொழிவாய் அருள் செய்து……. தென்திருநாவாய் என்தேவே … திருவாய்மொழி 9-8-8

அவரிவரென்றில்லை அரவணையான் பாதம் எவர்வணங்கி .. நாளும்தொடர்ந்து… இரண்டாம் திருவந்தாதி 2அவரிவரென்றில்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை…. தோற்றான் ஒருங்கு
நான்முகன் திருவந்தாதி 56

அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் ….. என்று மதித்து-இரண்டாம் திருவந்தாதி 50அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் .. வெற்பு… நான்முகன் திருவந்தாதி 39

அறிந்தறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் செறிந்தெழுந்த … .பற்றறுதல் பான்மையே… திருச்சந்தவிருத்தம் 74அறிந்தறிந்து தேறித்தேறி யான் எனதாவியுள்ளே நிறைந்த ஞான ……கண்டுகொண்டே-திருவாய்மொழி 4-7-7

அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு எம்பாவாய்… திருப்பாவை 24அன்றிவ்வுலகம் அளந்த அசைவேகொல் நின்றிருந்து நெஞ்சமே காண்… நான்முகன் திருவந்தாதி 34

அன்றுலகமளந்தானையுகந்து …….நின்றும் துரப்பன்… நாச்சியார் திருமொழி 5-10
அன்றுலக மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் ….. மணிமாடம் சேர்மின்களே
…. பெரிய திருமொழி 6-6-5

ஆங்குமாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடமளந்து… திருவயிந்திரபுரமே.. பெரிய திருமொழி 3-1-5
ஆங்குமாவலி வேள்வியில் இரந்துசென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம! திருவெள்ளறை நின்றானே
…. பெரிய திருமொழி 5-3-9

இரும்பனன்றுண்ட நீர்போல் எம்பெருமானுக்கு * என்தன் அரும்பெறலன்பு ….பருகினேற்கு இனியவாறே…. திருக்குறுந்தாண்டகம் 7–இரும்பனன்றுண்ட நீரும் போதரும் கொள்க* என்தன் அரும்பிணி பாவமெல்லாம் களிக்குமாறே …. திருக்குறுந்தாண்டகம் 13

உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்து பெண்ணாக்கை … எண்ணுவரே…. நாச்சியார் திருமொழி 11-7-உண்ணாது உறங்காது உணர்வுறும்……உயிராயின காவிகளே-…திருவிருத்தம் 66

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்றங்கேக பாடிப்பற-பெரியாழ்வார் திருமொழி 3-9-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்…….. மாலிருஞ் சோலையதே…. பெரியாழ்வார் திருமொழி 4-3-1

உலவு திரையும் குலவரையும்…….… சாளக்கிராமம் அடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-5-3
உலவு திரைக்கடல் பள்ளி கொண்டுவந்து………அணியாலியம்மானே…. பெரிய திருமொழி 3-5-7

உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்றோர் முதல் திருவந்தாதி 99–உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்ணொடுங்கத் தானளந்த. மன்--மூன்றாம் திருவந்தாதி 40-உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் தன்னொப்பான் தானாய் உளன்காண் தமியேற்கும் என்னொப்பார்க் கீசனிமை|-
… நான்முகன் திருவந்தாதி 86

ஊழிதோறூழி ஒவாது * வாழிய வென்றே.. மாமுதலடியே—திருவாசிரியம் 4
ஊழிதோறூழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் …… நைவாயே ….திருவாய்மொழி 2-1-5-ஊழிதோறூழி உருவும் பேரும் செய்கையும் ஆழியாரே…. திருவாய்மொழி 7-3-11

எந்தை தந்தைதந்தை தந்தைதம்……….…..பல்லாண்டு பாடுதுமே-திருப்பல்லாண்டு 6
எந்தை தந்தை தம்மான் என்றென்று …..இந்தளூரீரே…. …. பெரிய திருமொழி 4-9-9
எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை….காரெழிலண்ணலே …. திருவாய்மொழி 3-3-2

எனக்காவார் ஆரொருவரே! எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் – புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ
மாமேனி காட்டும் வரம்
.-முதல் திருவந்தாதி 89

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி -51-

என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா. … காண்.
இரண்டாம் திருவந்தாதி 55
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும். காப்பு
-நான்முகன் திருவந்தாதி 92

ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்|-மூதுரையுமிலளே… பெரியாழ்வார்திருமொழி 3-7-4 ஏழை பேதை இராப்பகல் * தன|கேழில்……வாட்டேன்மினே. திருவாய்மொழி 2-4-10

ஓதியாயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு…பிரிதி சென்றடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-2-9
ஓதியாயிர நாமம் பணிந்தேத்தி ……..அணியாலியம்மானே. பெரிய திருமொழி 3-5-9

கண்டு கொண்டு என்னைக்….…..சடகோபனருளையே-.கண்ணிநுண் சிறுத்தாம்பு 7
கண்டு கொண்டு என் கைகளார ……..வந்திடகில்லாயே. திருவாய்மொழி 4-7-8
கண்டு கொண்டு என் கண்ணிணையாரக்….அடியேனே. திருவாய்மொழி 9-4-9

கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு…அடியேனிடரைக் களையாயே… பெரிய திருமொழி 1-10-1 கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை…..களையாயே-. பெரிய திருமொழி 4-7-1

கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்……..வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-4
கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவைகதிர்முத்த……என் செங்கண்மாலே– பெரிய திருமொழி 4-4-5

கல்லார் மதிள்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்வல்லாகம்…………….நறையூரில் கண்டேனே. பெரிய திருமொழி 6-8-8
கல்லார் மதிள்சூழ் கச்சிநகருள் நச்சி .நமோநாராயணமே-. பெரிய திருமொழி 6-10-5

கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை பற்றியெறிந்த .அக்காக்காய். பெரியாழ்வார் திருமொழி 2-5-5
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ்– என்னை உய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-8

கன்னிநன் மாமதிள் சூழ்தரு என்குட்டனே முத்தம் தா…. பெரியாழ்வார் திருமொழி 3-3-2
கன்னிநன் மாமதிள் புடைசூழ் …….பாங்காய பக்தர்களே.. பெருமாள் திருமொழி 8-11

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் கற்ற திண்ணனவே. திருவிருத்தம் 8-காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற. செய்கின்றவே-திருவாய்மொழி5-6-3

காரிகையார்க்கும் உனக்கும்……இருடீகேசா என்தன் கண்ணே. பெரியாழ்வார் திருமொழி 2-3-10
காரிகையார் நிறைகாப்பவர் ……..என் சின்மொழிக்கே.. திருவிருத்தம் 19

கார்த்தண் கமலக் கண்ணென்னும்…..….விருந்தாவனத்தே கண்டோமே-. நாச்சியார் திருமொழி 14-4
கார்த்தண் முகிலும் கருவிளையும் ….பக்தலிலோசனத்துய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-6

காலையெழுந்து கடைந்த இம்மோர்…..….என்செய்கேனோ..பெரியாழ்வார் திருமொழி 10-7-2
காலையெழுந்திருந்து கரிய குருவிக்….வார்த்தையுரைக்கின்றவே…. நாச்சியார் திருமொழி 9-8
காலையெழுந்து உலகம் கற்பனவும் …..பெயர் குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…….
என்னதாவி மேலதே
…. முதல் திருவந்தாதி 66

குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…என்னதாவி மேலதே-திருவாய்மொழி 4-3-7 குரைகழல்கள் குறுகினம் நம் ……மெய்ந்நின்று கமழுமே…. திருவாய்மொழி 10-6-7

குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் ஒன்றிநின்ற ………கற்பார்க்கே-. திருவாய்மொழி 7-4-11
குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில்புகழ் .சாரகில்லாவே – பெரிய திருமொழி 11-8-10
குன்றமெடுத்து மழைதடுத்து இளையாரொடும் மன்றில் குரவை .. …..ஆர்கொலோ–. பெரிய திருமொழி 11-2-1

குன்றால் மாரி தடுத்தவனைக் ……நிறைந்தேனே…. பெரிய திருமொழி 7-6-4
குன்றால் மாரி பழுதாக்கிக் …..கண்ணபுரம் நாம் தொழுதுமே ……. பெரிய திருமொழி 8-6-9 குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் என்வசமல்லவே…. பெரியாழ்வார் திருமொழி 3-4-4
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா! ……அரங்கத்தரவணைப் பள்ளியானே-. பெரியாழ்வார் திருமொழி 4-10-9

கொங்குமலி கருங் குழலாள்கௌசலை …..தாலேலோ…. பெருமாள் திருமொழி 8-31
கொங்குமலி கருங் குவளை கண்ணாக……..செறி வளையே…. பெரிய திருமொழி 8-3-8

கொண்டல் வண்ணனைக்கோவலனாய்—.காணாவே–. அமலனாதிபிரான் 10 கொண்டல் வண்ணா! இங்கே போதராயே! கோயிற்பிள்ளாய். .கலவிதானே. –பெரியாழ்வார் திருமொழி 2-9-4
கொண்டல் வண்ணா! குடக்கூத்தா! ஒருநாள் வந்து தோன்றாயே— திருவாய்மொழி 8-5-6

சலங்கொண்ட இரணியனது…….வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-1 சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த …….நடலை நோய் செப்புமினே…. நாச்சியார் திருமொழி 8-6-

செய்கின்றது என் கண்ணுக்கொன்றே ……ஊழி பெயர்த்திடும்கொன்றே-. திருவாய்மொழி 5-2-5
செய்கின்ற கிதியெல்லாம் யானே யென்றும் செய்வானின்றனகளும்…………..திறத்தே…. திருவாய்மொழி 5-6-4

சேயன்அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் ..மற்றறியேனே–. பெரிய திருமொழி 1-10-8
சேயன் அணியன் சிறியன் பெரியன்……..தொழில் பூண்டாயே-. பெரிய திருமொழி 2-1-8
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரை…. மெய்ஞ்ஞானமில்-நான்முகன் திருவந்தாதி 71

சோத்தென நின்று தொழவிரங்காள்..–என்னை உய்த்திடுமின்…. பெரிய திருமொழி 9-5-9 சோத்தென நின்னைத் தொழுவன் வரம்தர பேய்ச்சி .கொட்டாய் சப்பாணி …. பெரிய திருமொழி 10-5-5-

ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத்துயில் …..…. இல்லை வருதுயரே-. பெரியாழ்வார் திருமொழி 3-7-11
ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாதன்…..பார்த்தன் பள்ளி பாடுவாளே-. பெரிய திருமொழி 4-8-6=

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த .எவ்வுயிர்க்கும் நீ-. நான்முகன் திருவந்தாதி 19
தவம் செய்து நான்முகனே பெற்றான் * தரணி நிவந்தளப்ப………. பேர்மொழிந்து பின்…. இரண்டாம் திருவந்தாதி 78

தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்…..வந்துலாகின்றதே--. திருவிருத்தம் 74
தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர்…..விண்மீதே …. திருவாய்மொழி 6-9-4

தாங்கரும் சினத்துவன் தாள்……திருமணிக்கூடத்தானே…. பெரிய திருமொழி 4-5-4
தாங்கரும் போர் மாலி படப்….. கண்டேன் நானே…. பெரிய திருமொழி 2-10-4-

தாராய தணதுள் போரானைக்.. ….கவர்வானோ… பெரிய திருமொழி 3-6-6
தாராய தண்துளவ வண்டுழுத…கண்டாள் கொலோ. பெரிய திருமொழி 8-1-4-

திடவிசும்பெரிநீர் திங்களும் சுடரும்….கண்டுகொண்டுய்ந்தொழிந்தேனே…. பெரிய திருமொழி 4-3-3
திடவிசும்பெரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் ……சுரனே…. திருவாய்மொழி 1-1-7-

திருமாலிருஞ் சோலையானேயாகிச் அருளையீந்த அம்மானே— திருவாய்மொழி 10-7-6- திருமாலிருஞ் சோலை மலையே……….முதல்வன் ஒருவனே— திருவாய்மொழி 10-7-8-
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து —-தென்திருப்பேரே–. திருவாய்மொழி 10-8-1

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை …………….இயம்பிக் காணே-.. திருநெடுந்தாண்டகம் 26
தேமருவு பொழில்புடைசூழ் ……வினையாய நண்ணாவே…. பெரிய திருமொழி 8-3-10

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை…….ஒருகாலும் பிரிகிலேனே…. பெரிய திருமொழி 7-4-4-தேராளும் வாளரக்கன் செல்வம்…..என்றல்லால் பேசலாமே…. திருநெடுந்தாண்டகம் 20

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் .இராகவனேதாலேலோ
…. பெருமாள் திருமொழி 8-10
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும்….பொலிவர் தாமே.– பெரிய திருமொழி 11-6-10-

தொண்டெல்லாம் நின்னடியே தொழுதுய்யுமா கண்டு தான் ….தக்கதே–. பெரிய திருமொழி 8-2-8-தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி…..….பரவுவேனே…. திருக்குறுந்தாண்டகம் 11-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் நிகரில் சூழ் .புண்ணியமே – திருவாய்மொழி 6-3-3 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்….….எனை யூழியானே…. திருவாய்மொழி 7-3-10

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ………….. அல்லலில்லையே-பெரியாழ்வார் திருமொழி 3-9-11-
நந்தன் மதலை நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் கோல்தும் !…. பெரிய திருமொழி 8-4-9-

நீலத்தடவரை மாமணிநிகழக் …….அணியாலி யம்மானே…. பெரிய திருமொழி 3-5-2-நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல பொலிந்து ….. .கோலங்களே-திருவிருத்தம் 39

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ
…. பெரியாழ்வார் திருமொழி 1-8-3-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற…. பெரியாழ்வார் திருமொழி 3-9-5-

பண்டை நாளாலே நின்திருவருளும் ….திருப்புளிங்குடிக்கிடந்தானே…. திருவாய்மொழி 9-2-1
பண்டை நான்மறையும் வேள்வியும்…….அரங்கமாநகரமர்ந்தானே…. பெரிய திருமொழி 5-7-1

பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய…….புனலரங்கமே…. பெரியாழ்வார் திருமொழி 4-9-4
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மதுவாயில் செல்வப் பெருஞ்சங்கே…. நாச்சியார் திருமொழி 7-9-

பந்தணைந்த மெல் விரலாள் பாவைதன் ….. எவ்வுள் கிடந்தானே…. பெரிய திருமொழி 2-2-4
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகி………அமரர் கோவே… பெரிய திருமொழி 7-8-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் …செங்கழுநீர் சூட்டவாராய்…. பெரியாழ்வார் திருமொழி 2-7-5
புள்ளினை வாய் பிளந்து பொருமாகரி ….வல்லள் கொலோ…. பெரிய திருமொழி 9-9-7
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி சப்பாணி
…. பெரிய திருமொழி 10-5-7

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை. . எம்பாவாய்…. திருப்பாவை 13-புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை …….. உய்யுமாறு எனக்கே…. திருவாய்மொழி 5-7-9

பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து………..திருக்கோட்டியூரானே ….பெரிய திருமொழி 9-10-8
பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து ஆங்கு வேழத்தின் இளமையே … பெரிய திருமொழி 11-2-2-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தங் கயலிடத்து உற்றாரொருவரும்…… ..சப்பாணி…. பெரிய திருமொழி 10-5-4
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த ..நின்று
…. முதல் திருவந்தாதி 20-

பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருத்தண்கால் ஊரானைக் .தென்னரங்கத்தே
…. பெரிய திருமொழி 5-6-2-பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கொளி சொ
வாரார் .கண்டு கொண்டு களித்தேனே-….பெரியதிருமொழி 7-6-9

மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணும். .வந்து காணீரே-.பெரியாழ்வார் திருமொழி 1-2-18
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும்…..…மணந்தானைக் கண்டாருளர்
….பெரியாழ்வார் திருமொழி 4-1-9
மண்ணும் மலையும் மறிகடலும்மாருதமும் விண்ணும்……………உண்டோவுன்வாய் –முதல் திருவந்தாதி 10

மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா…..பணிமின் நீரே--திருமாலை 9
மற்றுமோர் தெய்வம் உளதென்று …….கண்ணபுரத்துறையம்மானே-பெரிய திருமொழி 8-10-3

மனத்துள்ளான் வேங்கடத்தான்………பிளந்த மகன்-…. இரண்டாம் திருவந்தாதி 28
…. திருமாலை 9-மனத்துள்ளான்மாகடல் நீருள்ளான்…மருந்து…. மூன்றாம் திருவந்தாதி 4
…. பெரிய திருமொழி 8-10-3
மாடமாளிகை சூழ் மதுரைப் பதி நாடி….. .கூடிடு கூடலே-நாச்சியார் திருமொழி 4-5-மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன் ஒன்னலர்…….-.பாவம் நில்லாவே…. பெரிய திருமொழி 5-8-10

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியிலுழைக்கும் ஊனே யாக்கை ……திருவிண்ணகர் மேயவனே…. பெரிய திருமொழி 6-2-3
மானேய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்துலவும் ஊனேய் கண் …..திருவிண்ணகரானே
….பெரிய திருமொழி 6-3-3
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய்! மாதவா!கூனே சிதைய .சேருமாறு வினையேனே…. திருவாய்மொழி 1-5-5

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் …..முலை யுணாயே -.பெரியாழ்வார்திருமொழி 2-2-6-மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் ……
..அருந் தவத்தனாவேனே
….பெருமாள் திருமொழி 4-6
மின்னனைய நுண் மருங்குல்…. வணங்கு மடநெஞ்சே--.பெரிய திருமொழி 3-9-5

மின்னொத்த நுண்ணிடையாய்! …..ஓர் அடையாளம்….பெரியாழ்வார் திருமொழி 3-9-5
மின்னொத்த நுண்ணிடையாளைக்.மட நம்பி! நீயே….பெருமாள் திருமொழி 6-5-

மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை .வந்து காணீரே….பெரியாழ்வார் திருமொழி 1-2-12
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு…. இடரில்லையே….பெரியாழ்வார் திருமொழி 1-4-10-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட–அஞ்சன. இல்லை இடர் தானே
….பெரியாழ்வார் திருமொழி 1-3-10 –-வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு வாய்த்த வணங்கு மட நெஞ்சே….பெரிய திருமொழி 3-10-9

வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் ….….கண்டாள் கொலோ….பெரிய திருமொழி 8-1-9
வண்டமரும் மலர்ப்புன்னை வரி ழல்………என்ஒளிவளையே….பெரிய திருமொழி 8-3-7-வண்டமரும் சோலை வயலாலி…..கோல்தும்பீ….பெரிய திருமொழி 8-4-10

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய…….விரும்புவரே–….பெரிய திருமொழி 3-8-10
வண்டார் பொழில் சூழ் நறையூர்…… இல்லை துயரே–….பெரிய திருமொழி 7-4-10

வண்ணக் கருங்குழல் மாதர்வந்து …..எல்லே பாவமே….பெரியாழ்வார் திருமொழி 3-2-4
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் ….சாழலே….பெரிய திருமொழி 11-5-5

வந்தாய் என்மனத்தே வந்து நீ ….மறவாமை பெற்றேனே….பெரிய திருமொழி 8-9-5-….வந்தாய் என் மனம் புகுந்தாய் .என்றும் விடேனே….பெரிய திருமொழி 1-10-9-

வந்தாய் போலே வந்தும் என் …. அணுகிற்பனே… திருவாய்மொழி 3-2-5
வந்தாய் போலே வாராதாய் ……அகலகில்லேன் இறையுமே–… திருவாய்மொழி 6-10-9

வம்பவிழும் துழாய் மாலை ……ஒருவர் அழகியவா….பெரிய திருமொழி 9-2-4-வம்பவிழ் வானவர் வாயுறை –பள்ளி எழுந்தருளாயே –திருப்பள்ளியெழுச்சி -8-
வம்பவிழ் கோதை பொருட்டா –சாது சனங்களினிடையே –-திருவடி –3-5-4-

வம்புலாம் கூந்தல் மனைவியை –நைமிசாரண்யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி -1-6-4-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி –தென்னரங்கமே –பெரிய திருமொழி -5-4-5-

வாரணிந்த கொங்கை யாய்ச்சி —பெறுவர் தாமே –பெரியாழ்வார் –2-2-11-
வாரணிந்த முலை மடவாய் –ஓரடையாளம் –பெரியாழ்வார் –3-10-4-

வாராரும் முலை மடமாள் வைதேவி –இமையவரோடு இருப்பாரே -பெரியாழ்வார் -3-10-10-
வாராரும் முலை மடமாள் பின்னைக்காகி –என் செங்கண் மாலே -பெரியாழ்வார்-4-4-4-
வாராரும் இளங்கொங்கை மைதிலியை —திருத்தேவனார் தொகையே –பெரிய திருமொழி –4-1-8-

வாராளும் இளம்கொங்கை வண்ணம் ….. எங்ஙனம் நான்செப்புகேனே….பெரிய திருமொழி 5-5-7-வாராளும் இளம்கொங்கை……… இழந்தேன் என் பெய்வளையே….பெரிய திருமொழி 8-3-9-

வாழ்த்தி அவனடியைப் பூப் புனைந்து………..தங்கு–….பெரிய திருவந்தாதி 84
வாழ்த்திய வாயராய் வானோர் ….…தாமரையாமலர்….மூன்றாம் திருவந்தாதி 96

வெஞ்சினக் களிறும் வில்லொடு அல்லல் தீர்ந்தேனே…. பெரிய திருமொழி 4-3-7
வெஞ்சினக் களிற்றை விளங்காய் ………கண்டு கொண்டேனே….பெரிய திருமொழி 7-10-8

வெந்திறல் களிறும் வேலைவாய் ….வதரியாச்சிராமத்துள்ளானே--….பெரிய திருமொழி 1-4-7
வெந்திறல் வாணன் வேள்வியிட…….நம்மையாளுமரசே….பெரிய திருமொழி 11-4-5-

வெள்ளை நுண் மணற் கொண்டு…….. என்னை எய்கிற்றியே….நாச்சியார் திருமொழி 1-2
வெள்ளை நுண் மணற் கொண்டு…..…… உன்முகத்தன கண்களல்லவே–.நாச்சியார் -2-5-திருமொழி 2-5

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் ……….கைசெய்யக் கண்டாருளர்….பெரியாழ்வார் திருமொழி 4-1-7–வெள்ளைவிளிசங்கு இடங்கையில்…… என் வேங்கடவன் வரக்கூவாய்-.நாச்சியார் திருமொழி 5-2

வெற்பென்று வேங்கடம் பாடும்……புகும்--….மூன்றாம் திருவந்தாதி 69
வெற்பென்று வேங்கடம் பாடினேன்… காண்….நான்முகன் திருவந்தாதி 40-

வையமெல்லாம் பெறும் வார்கடல் வாழும்…….மாதவனே! இங்கே வாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-3-3
வையமெல்லாம் உடன்வணங்க வணங்கா….கண்டுகொண்டேனே….பெரிய திருமொழி 8-8-7

————————

முடிவு ஒன்றான பாசுரங்கள்

இல்லை பாவமேசெந் நெலார் வயல் சூழ் –இம் மன்னுபாடல் வல்லார்க்கு இல்லை பாவமே …. பெரியாழ்வார் திருமொழி 1-1-10 ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை… பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லைபாவமே —நாச்சியார் திருமொழி-4-11-

இடரில்லையே
1) மைத்தடங்கண்ணி யசோதை சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே.. பெரியாழ்வார் திருமொழி 1-4-10
z) என்றும் எனக்கினியானை என்………. மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே… பெரியாழ்வார் திருமொழி 3-2-10-

வினைபோமே
1) ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர்தங்…..சொல்லுவார் வினை போமே--. பெரியாழ்வார் திருமொழி 1-6-11
2) போதமர் செல்வக் கொழுந்து ………பத்தருள்ளார் வினை போமே... பெரியாழ்வார் திருமொழி 2-8-10

மக்களைப் பெற்று மகிழ்வரே
1) ஆய்ச்சியன்றாழிப்பிரான் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே…பெரியாழ்வார் திருமொழி 1-9-10
2) ஆயனுக்காகத் தான்கண்ட கனாவினை…… வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
…. நாச்சியார் திருமொழி 6-11

கழலிணை காண்பர்களே
1) புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி……..கடல் வண்ணன் கழலிணை காண்பர்களே
…. பெரியாழ்வார் திருமொழி 3-3-10—2)மருதப் பொழிலணி மாலிருஞ–கண்ணன் கழலிணை காண்பர்களே.... பெரியாழ்வார் திருமொழி 4-2-11-

பரமான வைகுந்தம் நண்ணுவரே
1) விண்ணின் மீது அமரர்கள் விரும்பித்…….பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே… பெரியாழ்வார் திருமொழி 3-4-10
2) அரவில் பள்ளி கொண்டுஅரவம் ……..பரவுமன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.... பெரியாழ்வார் திருமொழி 3-5-11-

தூமணி வண்ணனுக்கு ஆளரே
1) மாயவன்பின் வழிசென்று ……. தூமணி வண்ணனுக்குஆளரே-. பெரியாழ்வார் திருமொழி 3-8-10
2) மாயவனை மதுசூதனனைமாதவனை …. தூமணி வண்ணனுக்கு ஆளரே--… பெரியாழ்வார் திருமொழி 4-10-10

8. அல்லலில்லையே-நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று…… ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரியாழ்வார் திருமொழி 3-9-11
2) அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட்கலி கன்றி* சொல் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரிய திருமொழி 10-1-10
3) பாதம் நாளும் பணியத் தணியும் பிணி… ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே
…. திருவாய்மொழி 9-10-9-

நண்ணுவாரொல்லை நாரணனுலகே- காமர்தாதை கருதலர்சிங்கம் .. நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவாரொல்லை நாரணனுலகே... பெரியாழ்வார் திருமொழி 5-1-10
2) மல்லை மாநகர்க்கிறையவன் தன்னை….. நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவாரொல்லை நாரணனுலகே-.… பெருமாள் திருமொழி 7-11

10. அணுக்கர்களே / அணுக்கரே-வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே…..
சாயை போலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.. பெரியாழ்வார் திருமொழி 5-4-11-பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும்..ஆய்ந்தேத்த வல்லாரவரும் அணுக்கரே.. நாச்சியார் திருமொழி 7-10

நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே
1) திடர்விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலந் திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 1-11
2) தில்லை நகர்த் திருச் சித்திர கூடந்தன்னுள் நல்லியலின் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 10-11-

பாங்காய பத்தர்களே
1) மன்னிய தண்சாரல் வடவேங்கடத்தான் தன் ……  பன்னியநூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே… பெருமாள் திருமொழி 4-11
2) கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் பன்னியநூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே... பெருமாள் திருமொழி 8-11

பயில்வார்க்கு இல்லை பாவங்களே
1) கண்ணாய் ஏழுலகுக்குஉயிராய எங்கார் வண்ணனை….. பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே... பெரிய திருமொழி 1-9-10
2) தேடற்கரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற…..பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே… பெரிய திருமொழி 9-9-10-

வானவராகுவர் தாமே / வானவர் தாமே
1) வில்லார்மலி வேங்கடமாமலை மேய … வல்லாரவர் வானவராகுவர் தாமே… பெரிய திருமொழி 1-10-10- நல்லனபுடை வேதியர் மன்னிய நாங்கூர் …வல்லரென வல்லவர் வானவர் தாமே–…. பெரிய திருமொழி 4-7-1

15. இடமாகும் வானுலகே–.மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கட மலை………
மன்னுபாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே... பெரிய திருமொழி 2-1-10
2) ஆலுமாவலவன் கலிகன்றி மங்கையர் தலைவன்….நாலுமாறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.. பெரிய திருமொழி 9-10-10

நாளும் பழவினை பற்றறுப்பாரே
1) அன்னமும் மீனும் ஆமையும் அரியும் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே.… பெரிய திருமொழி 2-7-10
2) பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து……. பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப்பாரே... பெரிய திருமொழி 5-7-10

இமையவரோடும் கூடுவரே
1) மன்னுளார்புகழ் வேதியர் நாங்கூர் எண்ணிலாத பேரின்பமுற்று இமையவரோடும் கூடுவரே... பெரிய திருமொழி 3-2-10
2) வார்கொள் மென்முலை மடந்தையர்……. ஏர்கொள் வைகுந்தமாநகர்புக்கு இமையவரோடும் கூடுவரே--…. பெரிய திருமொழி 8-5-10

18. பாவம் நில்லாவே-மாடமாளிகைசூழ் திருமங்கைமன்னன் ……..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்பாட நும்மிடைப் பாவம் நில்லாவே… பெரிய திருமொழி 5-8-10-தோடுவிண்டலர் பூம்பொழில் மங்கையர் …..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே.… பெரிய திருமொழி 7-3-10
3) மீனோடு ஆமை கேழல் அரிகுறளாய்……தேனாரின்சொல் தமிழ்மாலைசெப்பப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 8-8-10
4) சிலையால் இலங்கை செற்றான் நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 9-6-10-

இவை பாடி ஆடுமினே
1) செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்…. வருநீர் வையமுய்ய இவை பாடி ஆடுமினே-… பெரிய திருமொழி8-9-10
2) மெய்ந்நின்ற பாவமகல ஐயொன்றுமைந்தும் இவை பாடி ஆடுமினே-…. பெரிய திருமொழி 11-7-10

20. நல்குரவே–கலையுலாவல்குல் காரிகை திறத்துக் உலவ சொல்மாலை வான்றும் வல்லவர்க்கில்லை நல்குரவே... பெரிய திருமொழி 9-1-10
2) ஆய்ச்சியாகிய அன்னையால் நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே-…. திருவாய்மொழி 6-2-11

21. பாவம் பயிலாவே-மூவராகிய ஒருவனை மூவுலகுண்டுஉமிழ்ந்தளந்தானை ….. பாவுதண்டமிழ்ப் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே… பெரிய திருமொழி 3-1-10
2) சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சலசயனத்து ….பாரார் இவை பரவித்தொழப் பாவம் பயிலாவே… பெரிய திருமொழி 7-9-10-

22. செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
1) சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது…… . செந்தமிழ்ப்பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே... நாச்சியார் திருமொழி 9-10
2) சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்…..செந்தமிழ்ப்பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே... திருவாய்மொழி 6-5-11

—————-

கவலை தரும் பகுதிகள்

உழந்தாள்  நறு நெய் ஒரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே -1-2-6-

வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-

அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே-1 3-10

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-

துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவா தொரு கால் தூய கரும் குழல் நல்  தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 5-7 –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –

கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் -1-9 7- –

வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2- 1-10 – –

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 -7- –

ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்ப நாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –

கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது  ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து  இருண்ட  குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –

கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –

வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய்  இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 -2-9 –

கடியார் பொழில் அணி வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை  கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு  உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே
-3 3-10 –

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

சிந்துரப் பொடி கொண்டு சென்னி யப்பிப் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்
அந்தரம் இன்றி தன்னெறி பங்கியை யழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று  கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – 

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே  – 3-8 -10-

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை 
உருவரங்க  பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்  
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் 
திருவரங்கம் என்பதுவே  என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம்  ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே  – 4-10 -10-

சழக்கு நாக்கொடு புன்  கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி  ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும்  புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…..தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது-5-நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய…. தூயோமாய் வந்தோம்- துயிலெழப் பாடுவான்–16-

நாச்சியார் திருமொழி
வெள்ளை நுண்மணற் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து-1-2-
வெள்ளை நுண்மணற்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்-2-5-

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-

நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்--12-4-

போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .












ஸ்ரீ அருளிச் செயல்களில் -திவ்ய தேச பொய்கைகள் – திரு நாமங்கள்-வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

August 18, 2026

ஸ்ரீ எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று;ஸ்ரீ திருமோகூரில் தடாகத்தைத் தாள தாமரை யென்றும்- ஸ்ரீ வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரை யென்றும், அவ்விடத்துச் சோலை யொன்றைப் தேனமாம்பொழிலென்றும், ஸ்ரீ திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும், ஸ்ரீ திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும் இங்ஙனே யுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும்.-ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளை மூலமாகக் கொண்டே இவ் வழக்குகள் தோன்றின வென்னலாம்-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1–தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை – உரத்த தாளையுடைய தாமரை –உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-என்னக் கடவது இறே –-தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்-திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் –காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இறே இருப்பது –மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இறே –வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1—பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது –சர்வ கந்த என்ன கடவது இறே –

கர சரண ஸரோஜே காந்திமந் நேத்ர மீநே
ஶ்ரம முஷி பு⁴ஜ வீசி வ்யாகுலேঽகா³த⁴மார்கே³ ।
ஹரி ஸரஸி விகா³ஹ்யா பீய தேஜோஜலௌக⁴ம்
ப⁴வ மரு பரிகி²ந்ந: க்லேஶ மத்³ய த்யஜாமி
–முகுந்தமாலை॥ 9॥–திருக்கைகள் திருவடிகளாகிற தாமரைகளை யுடையதாய், அழகிய திருக் கண்களாகிற கயல்களை யுடையதாய், – விடாயைத் தீர்க்குமதாய், – திருத்தோள்களாகிற அலைகளால் நிறைந்ததாய், – மிகவும் ஆழமான, எம்பெருமானாகிற தடாகத்தில், குடைந்து நீராடி, – (திருமேனியில் விளங்குகின்ற) தேஜஸ்ஸாகிற ஜல ஸமூஹத்தை, பாநம் பண்ணி, ஸம்ஸாரமாகிற பாலை நிலத்திலே மிகவும் வருந்திக் கிடந்த அடியேன், அந்த ஸாம்ஸாரிக துக்கத்தை, இப்போது, விடுகின்றேன்.

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே
 —4-10-5–சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே – (ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்-ஏர் கர்ம பாசங்கள்-லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை
அடைந்து உய்ந்து போனேனே–8-9-4–தக்கானைக்–பரம தார்மிகனை –(கிருபை -தகவு –ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )தக்கான் குளம்-பக்தர்களுக்கு உசிதனான -தக்க அவனுக்கு -தக்க குளம்-

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ – 1-8 3- –விஷத்தை உமிழா நின்ற காளியனாகிற சர்ப்பம் கிடந்த கொடிய பொய்கையிலே –-அத்தை மதியாமல் சென்று புக்கு –நல் பொய்கை என்றது – விபரீத லஷணையாய்-காளிய விஷ தூஷிதம் ஆகையாலே க்ரூரமான பொய்கை என்றபடி –

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3-இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு-பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை –நிபபாத  ஹ்ரதே தத்ர   சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே பெரிய விசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி-

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட
விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் -2 10-8 –கரையிலே தாழைகளையும் -உள்ளே குளிர்ந்த ஆம்பல்களையும் உடைத்தாய் – மிகவும் பெரிதாய் இருந்துள்ள பொய்கை யிடத்திலே-தாழை -கரையில் உண்டான சோலைக்கு உப லஷணம்-மொய்ம்மாம் பூம் பொழில் பொய்கை -(3-5-)-என்றார் ஆழ்வார்
ஆம்பல் -உள்ளுண்டான புஷ்பங்களுக்கு எல்லாம் உப லஷணம்-வைகு தாமரை வாங்கிய வேழம் – என்கிறபடியே தாமரை நெருங்கி பூத்துக் கிடக்கிறது கண்டு அது பரிக்கைக்கா இறே-உள்ளே துஷ்டச்தவம் கிடக்கிறது என்று அறியாதே ஸ்ரீ கஜேந்த்திரன் தான் இப்பொய்கையிலே – அத்ய ஆதரத்தோடே சென்று இழிந்தது-

அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ  பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதுமோர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் -3- 3-6 –கருதும் இடம் பொருது கை நிற்கும் பரிகரம் உண்டாய் இருக்க -இயற்றி இல்லாதாரைப் போலே நீ உன்னுடைய மார்த்தவத்தைப் பாராமல் நச்சுப் பொய்கையிலே போய் புக்கு –

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –பரப்பு மாற தாமரை பூத்துக் கிடக்கையாலே –அழகியதாய் –-அத்விதீயமான பொய்கை யானது-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற – 3-9- 5-அருகு அணைந்த வர்ஷங்கள் பஷிகள் எல்லாம் பட்டு விழும்படி -விஷத்தை உமிழா நின்ற காளியன் ஆகிற சர்ப்பம் கிடந்த-நற் பொய்கை-என்றது நல்ல பாம்பு நல்ல நெருப்பு போலே விபரீத லஷணை-அதவா-காளியன் பிரவேசிப்பதற்கு முன்புத்தை படியை  இட்டு சொல்லுகிறது என்னவுமாம்-

காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணி வண்ணனைப் பாடிப் பற – 3-9- 7-வெறும் புறத்திலே-காளியன் பொய்கை -என்ன அமையும் காணும் அதின் க்ரௌர்யத்துக்கு-பாம்புப் பாழி -என்னுமா போலே-அணுகின ஸ்தாவர ஜங்கமாதிகள் எல்லாம் அழலாலே  பட்டு  விழும் படி இறே பொய்கையிலே-விஷத்தினுடைய க்ரௌர்யம் இருப்பது –
ஆயிர வாய் நச்சு அழல் பொய்கை -என்னக் கடவது இறே-(ஐந்து தலைகள் என்றும் -101 தலைகள் என்றும் – புராணாந்தரங்கள் உண்டு க்ரூரத்தால் ஒன்றைப் பத்தாக்கி ஆயிரம் இங்கு )-காளியன் தடத்தை கலக்கி -என்கிறபடியே பொய்கை கலங்கும் படி ஓடிச் சென்று குதித்து-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –இப்படி இருந்துள்ள கௌரவத்தை உடைய -திருச் சிலம்பாறானது-அவிச்சின்ன ஸ்ரோதா ரூபேண ப்ரவஹியா நிற்கும் –-க்வசித் த்வரித காமிநி க்வச நமந்  தமந்தாலச -என்று தொடங்கி ஒரு ஸ்லோகத்தாலே திருச் சிலம்பாற்றின் உடைய கதியை வர்ணித்து அருளி செய்தார் இறே -ஆழ்வானும்

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-சாபத்தாலே கஜ யோனியில் பிறந்து இருக்க செய்தேயும்-பூர்வ ஜன்ம ஸ்ம்ருதி குலையாமையாலே -மிகவும் பகவத் பத்தியை உடைத்தாய்
திருப் படித் தாமம் -திருத் துழாய் -பறித்து இட்டுத் திரியா நிற்க-ஜகத்திலே ஒரு பூ  மலர் கிடையாதபடி –
வர்ஷ அபாவமாய் வரண்ட அளவிலே – எங்கே ஒரு பூ காணலாம் -என்று தேடித் திரியச் செய்தே –மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை -என்கிறபடியே தூரத்திலே ஒரு குளிர்ந்த சோலையும் பூத்த பொய்கையுமாய் தோற்றக் கண்டு ஓடிச் சென்று -ஒரு துஷ்ட சத்த்வம் கிடக்கிறது  -என்று அறியாமல் இழிந்து-காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் ( 5-8 )-என்கிறபடியே தன் அபி நிவேச அனுகுணமாக பூவை வாரிப் பறித்து கரையிலே ஏறுவதற்கு முன்னே-

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1–ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –-பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி –என்றும் பொய்கைக்கு வாரோம் –

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –இது அறிந்து நீ வந்தபடி எங்கனே – நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்- இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை –-அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை – பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை நீ வந்த வழி என் –

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி – தாமரைப் பொய்கையிலே  தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால் கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன — ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான் கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே – திருவாய்மொழி -9-7-3-தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே-கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா-சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா-
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே
 -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-இதுக்கு  பட்டர்  அருளிச் செய்ய நான்-நம்பிள்ளை – கேட்டேன் -என்று அருளிச் செய்வர்–காளியன் தலையிலே கிருஷ்ணன் பாய்ந்தான் -என்று கேட்டார் கேட்ட இடங்களிலே ஆழ விழுந்ததாய்த்து-பொய்கை அளவும் கால் நடை தந்து போய் புக வல்லார் இல்லையாய்த்து இறே-அனந்தாழ்வான் எம்பெருமானாரைக் காண வேணும் என்று வாரா நிற்கச் செய்தே – வடகரை அளவிலே வந்தவாறே -திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று சில ஏகாங்கிகள் தலைகளையும் சிரித்து ஏறினார்கள்-அவர்களைக் கண்டு -அனந்தாழ்வான் உடன் வந்த ஸ்ரீ நம்பி குஹ தாசர் -மரத்திலே ஏறி விழுவதாக ஏறினாராய்- தெளிந்து ஏறின நீ சாவ மாட்டாய் காண் போந்திழி -என்றானாம் –பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–
இங்கே தெளிவாக இருந்து கிலேசப்படாதே-மோஹித்து கிடக்கலாம் தேசத்திலே பொகடுங்கோள் –

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-வாதாஹதாம் புவி ஷேப ஸ்பர்ச தக்தவிஹங்கம் -என்கிறபடியே-அதி பீஷணம் ஆகையாலே அத்விதீயமான பொய்கையிலே –-முதலை கிடந்த பொய்கையும் இதுக்கு ஸத்ர்சமன் அன்று என்கை –

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே –-62–நீர்க் காக்கை சஞ்சரிக்கும் பொய்கையிலே -பனையினுடைய கறுத்த பெரிய பழம்-அதினின்றும் விழுந்து -புரண்டு நீரிலே விழ -அவற்றை நீர்க் காக்கையாக கருதி-வாளைகள் அஞ்சிப் பாயா நின்ற திருக் குருங்குடியிலே –அழகும் சௌகுமார்யமும் சீலமும் மேன்மையும் -ஆகிற இஸ் ஸ்வபாவங்கள் குறைவற்று இருக்கிற மஹா ப்ரபாவனே-கரண்டம் -நீர்க் காக்கை-ஆடுகை -நடையாடுதல் -என்னுதல் -முழுகுதல் -என்னுதல்-தகை -இயல்வு-போலியைக் கண்டு வாளையானது அதி சங்கை பண்ணுகிற இது அத் தேசத்தின் பதார்த்தங்கள் நம்பி பக்கல் அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறபடிக்கு ஸூசகமாய் இருக்கிறது-

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-சலங்கலந்த பொய்கைவாய் – விஷமே ப்ரசுரமாய் -அத்தோடே யமுநா ஜலமும் மிச்ரமாய் இருந்துள்ள பொய்கையிலே –தஸ்யாச்வாஸ மஹா பீமம் விஷான் நிஸ்ஸ்ர் தவாரிணம் ஹ்ர்தம் காளிய நாகஸ்ய தத்ர் சேதி விபீஷணம் –என்னக் கடவது இறே-ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற –-அப் பொய்கையிலே வர்த்திக்கிற காளியனுடைய திண்ணிய பிடரியிலே நின்று சஞ்சரிக்கிற சஞ்சாரம் வல்லார் ஆடினாப் போலே இருக்கை-

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9–நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே இடர் பட்டுத் திரிந்த விது – பூத்த தடாகத்தைக் கண்டு – ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே வந்து இழிந்த –

தூம்புடைத் திண் கைவன்தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம்புனல் பொய்கை புக்கனவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி
தேம் பொழில் குன்றெயில்  தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-5–காளியனானவன் ஒரு தடாகத்தை விஷத்தால் தூஷிக்க அவன் அஞ்சி ஒடும்படியாக தான் அதிலே போய்ப் புக்கான் ஆயிற்று

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றுனுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரம் ஏவரத் தோன்றி அருள் செய்தானை
எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்ன முத்தரும்பிச் செம்பொன் காட்ட
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும் திருக் கோவலூர் அதனுள் கண்டேனே–2-10-3—கொழுந்தையும் அலருகிற மலரையும் உடைய சோலை சூழ்ந்த பொய்கையிலே-ம்ருத்யு போலே இத்தை அடைய முடிக்க வந்த முதலை வாள் போலே இருக்கிற எயிற்றாலே-இத்தை கிரஹித்ததாய் ஆயிற்று -அதுக்கு எள்கி -ஈடுபட்டு-

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-வளையாலே அலங்க்ருதமான கையையும் பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-தாமரைப் பொய்கை புக்கான்-தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை
காளியன் புக்கு தூஷித்து கிடக்க அங்கே போய் புக்கான் ஆயிற்று-மேலே பாசுரத்தில் எதற்க்காகப் புக்கான் ஜல க்ரீடை-வஸ்திர அபஹரணம்-காளியன் புக்கு தூஷித்து கிடக்க- இத்யாதி உண்டே-பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன் திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்-நெஞ்சே அத் தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்-

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்-தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல் -பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-இது தன்னையும் ஆனை தனக்கே யாக்கி
ஓர் இடத்தில் ஒரு பூ மலர் காணாமையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தாவித் திரிந்தது -என்னவுமாம்
அன்றிக்கே-திரு உலகளந்து அருளின படியை யாக்கி பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்து கொண்டான் -என்னுதல்-நீ பூமி அளந்து கொள்ளுகைக்கு அந்த பூமியில் உள்ளார் தாங்கள் ஏதேனும் யத்நிதித்தது உண்டோ ஒரு பூ மலர் காணலாமோ என்னும் ஆசையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தட்டித் திரிந்து பின்பு ஒரு பிரதேசத்திலே பெரிய மலரை உடைத்தாய் இருப்பதொரு பொய்கைகைக் கண்டு -அதிலே முதலை உண்டு என்று அறியாதே போய்ப் புக்கு அதின் வாயிலே அகப்பட்டு ஒரு போக்கடி அறியாதே தடுமாறி-தான் அகப்பட்ட பொய்கையிலே நின்று திரு நாமத்தைச் சொல்லுகிற ஆனையினுடைய அச்சத்தை போக்கினவனே ஆனை தான் தனக்கு உதவுதல் முதலை உதவுதல் செய்ததோ நீயே அன்றோ மடுவின் கரையிலே அரை குலைய தலை குலைய வந்து உதவினாய்-

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே
 —4-10-5–சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே – (ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்-ஏர் கர்ம பாசங்கள்-லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே
 –5-3-3-கருப்பு மிக்கு இருந்துள்ள வரால் இனம் உண்டு இவற்றின் உடைய திரள்கள் ஆனவை பூக்களைக் கிழித்துக் கொண்டு அழகிய தடாகங்களில் பாய-ஸ்லாக்கியமான – அக் கமலங்கள் மணம் நாறா நின்றுள்ள பொய்கைகள் சூழ்ந்த
திரு வெள்ளறை நின்றானே –

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3–பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு பொழிலையும்  பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்-அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே தட்டித் திரியா நிற்க இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை-அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில் அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே பரிமளம் வந்து பிராண விஷயமாய் அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று    –ஆகர்ஷகமான பொய்கை-ஆகர்ஷகமாக இருக்கை யாவது அகாதமாய் துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே மேல் விழும்படியாய் இருக்கை –வைகு தாமரை –அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க-

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்

இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக யுத்தத்தில் முன்பு ஒரு நாள் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும் நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு-அவனைத் துரத்தின ஏற்றத்தை உடையவன் –தாடாளன்–திருவடிகளை உடையவன் –-நாட்டியம் ஆடிய தாள் அன்றோ -காளியன் பெற்ற பேறு விஷ துஷ்டமான ப்ரக்ருதி ஒட்டி –

குலத்தலைய மத வேழம் பொய்கை புக்குக் கோள் முதலை பிடிக்க வதற்கு அனுங்கி நின்று
நிலத்திகழும் மலர்ச் சுடரேய் சோதி யென்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய வென் நிமலன் காண்மின்
மலைத் திகழ்  சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள் தோறும் மடைகள் பாய
அலைத்து  வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே—7-8-3-நல்ல ஆகரத்திலே பிறந்து -தான் ஆனைகளுக்கு எல்லாம் பிரதானமாய்- மதமுதிதமாய் – மூலையடியே திரிகிற யானை  விழுக்காடு அறியாதே தன்னிலம் அல்லாத வேற்று நிலத்திலே புக்கு கொடிதான முதலையின் கையிலே அகப்பட்ட தாய்த்து –

இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை யார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-இலைகளால் மிக்கு இருப்பதாய் பரப்பு மாறப் பூத்து தர்ச  நீயமான பொய்கையிலே போய் புக்கு ஒரு ஜல சரசத்வத்தாலே நெருக்குண்டு –

கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச்   சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2–கவளம் கொண்டு இருப்பதாய் மிக்க மதத்தை உடைத்தாய் இருக்கிற ஆனையானது தன் செருக்காலே தன் நிலம் அல்லாத பொய்கையிலே புக்கு தன் நிலம் ஆகையாலே நினைத்த படி வியாபாரிக்க வல்ல
முதலையின் வாயலிலே அகப்பட்டு –-காரம் -முதலை –தன்னால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாமையாலே கலங்கி –(பரமாபத ஆபன்ன ) மனஸா சிந்த யத்தரிம் – என்கிறபடியே நெஞ்சால் நினைக்க-

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-பொய்கை வேலி- இப்படிப் பட்ட வயல்களையும் தடாகங்களையும் சுற்றிலே உடைத்தாய் இருக்கை –
நதீஸ் தடா காநி ச பூரயித்வா -என்கிறபடியே-வர்ஷம் நிறைக்கை அன்றிக்கே ஆறு நிறைக்கக் கடவதான பொய்கைகள் இறே –

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி யம் பூ மலர்ப் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-தாது மிக்கு பரிமிளிதமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள புஷ்பங்களை உடைத்தான தடாகங்களையும் நீர் நிலங்களையும் வேலியாக உடைய தேசம்-பிரதி கூலர்க்கு துஷ் ப்ராபமாய்-அநு கூலர்க்கு ஸ்ரமஹரமாய்-இருந்துள்ள தேசம் -என்கை

தடமால் வரை போலும் போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்–மிகப்பெரிய மலைபோன்ற மத்தகஜமானது-நீர்நிலத்திலே முதலையின் வாயிலகப்பட்டு நின்று வருந்தி-நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போதலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு-

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –பொற் கால் இட்ட ஆழ்வார் அன்றோ பொய்கை ஆழ்வார்-

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-இது த்ருஷ்டாந்தம் – பரப்பு மாறப்பூத்து குளிர்ந்த நீரை உடைய பொய்கையில் முதலையாலே நலிவு பட்ட யானை இடரைப் போக்கின-செவ்வியை உடைத்தாய் குளிர்ந்த திருத்த துழாயாலே அலங்க்ருதனான அத்விதீய நாயகன் – இது திருத் துழாயின் குளிர் வாசனையால் யாயிற்று யானையை ஆசுவாசிப்பித்தது- ஆனைக்கு உதவினதும் தமக்கு உதவிற்றாக நினைத்து இருக்கிறார்-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-செறிந்து பரந்து தர்ச நீயமான பொழில் என்னுதல் -செறிந்து பூத்த மாம் பொழில் என்னுதல்-மா பொழில் -மொய் பூம் பொய்கை-
மாம் பொழிலையும் செறிந்த பூவையும் உடைய பொய்கை என்னுதல் –-நெடு நாள் பூத் தேடி விடாய்த்த ஆனைக்கு விடாய் கெடுகைக்கு உடல் ஆகையால் பொய்கையோபாதி சோலையும் உத்தேசியமாய் இருக்கிறது இவருக்கு-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-வலியை யுடைத்தான நீர் -விஷத்தால் பாதகமான வலி யாதல் -முது நீர் ஆகையால் வலிய நீர் ஆதல் —உரவு-விஷம் என்னுதல் -வலிய என்னுதல் –-நாகங் காய்ந்ததும் -பெண்களோட்டை ஜலக் க்ரீடைக்கு விரோதி என்று காளியனை ஓட்டினதுவும் –-உள்பட மற்றும்பல-இவை முதலான சேஷ்டிதங்களுக்கு தொகை இல்லை-பிறந்த வாற்றில் பல ஹானியால் சொல்ல மாட்டிற்று இலர்-இங்கு ப்ரீதி பிரகர்ஷத்தாலே தரித்து சொல்ல மாட்டாது ஒழிகிறார்-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-கஜ ஆகர்ஷதே என்கிற ஸ்வ சாமர்த்தியம் கார்யகரம் ஆகாத அளவிலே உன் திருவடிகளை ஒழிய வேறு பற்று உடையேன் அல்லேன் என்கிறாள் –-அகலிரும் பொய்கையின் வாய்-அகன்று ஆழ்ந்து இருந்துள்ள பொய்கையை வாயிலே -இப்போது அகலமும் ஆழமும் சொல்லுகிறது -அவன் ஏற விடுதல் -தானேயேற பார்க்கில் முடித்தல் செய்யும் படியாய் இருக்கை –-நின்று-ஸ்வ சாமர்த்தியம் ஓவிச் செயல் அற்று நின்று-தன் நீள் கழல் -செயல் அற்றார் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகள் -நினைத்த அளவிலே நபி பேதி குதச்சந -என்னப் பண்ணுகிற திருவடிகளிலே-ஏத்திய-முள் பாய்ந்தால் அம்மே என்பாரைப் போலே ப்ராப்தியையும் ஸுலப்யத்தையும் நினைத்து நாராயணா என்று ஏத்தினான்-ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-துதிக்கையும் பூவும் ஒழிய அழுந்தின அழுந்தின அளவிலே -பூவில் செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளில் சாத்தப் பெற்றிலேன் என்கிற இடரைத் தீர்த்த உபகாரகன்

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில்-தாமரை-பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்–

August 18, 2026

(கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்-வாக்ய பேதம் பண்ணுதலும்-அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.)

ஆக –
ஒருவாறு ஒப்புமை சொல்லவும்
படைத்ததை காட்டவும்
பெருமை சொல்லவும்
புண்டரீகனே -அவனை நேராகச் சொல்லவும்
அரவிந்தப்பாவை -அவளை நேராகச் சொல்லவும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து -என்று அநந்யார்ஹத்வம் சொல்லவும்
எளிதில் குனிந்து பறித்து அர்ச்சிக்கும் படி அன்றோ தாமரை -ஸுலப்யம் காட்டவும்
பொற்றாமரைக் கயம் நீராடப் போவோம்

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-(529)-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி –-தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்-கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்-கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3–தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா- தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(1149)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –-பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்-சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இறே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-தாமரை அரவிந்தம் பங்கயம் கமலம் பத்மம் பலவாறு ஒப்பிட்டும் பின்னையும் —

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
–9-7-3-(3849)-இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –அக் கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலை போலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக் கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்டுப் பாருங்கோள் –

என் தம்பிரானார் எழில் திரு மார்வற்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடை கிண் கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ -1-3 3- (43)–சிகப்பாலும் விகாசாதிகளாலும் நிறம் அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனுக்கு –கிஞ்சித் கரித்தவர்களைக் குளிரக் கடாஷிக்கும் தாமரை போன்ற திருக் கண்களை உடையவனே -தாலேலோ –

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம்படு பைம்தலை மேல் எழப் பாய்ந்திட்ட
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் -2-10 3- (215)இடமுடைத்தான தாமரைப் பொய்கை என்று இறே பிரசித்தி காளியன் புகுவதற்கு முன்பு பின்பு இறே நச்சு அழல் பொய்கையாயிற்று-இப்படிப் பட்ட பொய்கையை – நிபபாத  ஹ்ரதே தத்ர   சர்ப்ப ராஜச்ய வேகத தேந அதிபததா தத்ர ஷோபித ச மகாக்ரத -என்கிறபடியே பெரிய விசையோடு உள்ளே  குதித்து கலங்க பண்ணி

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-(388)–சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது 
திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை 

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே   – 4-9 -2-(413)-குணத்தை தோஷமாக பிரமித்தாயோ -என்று இறே அவன் பாசுரம்-ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஆஸ்ரித பஷ பாத அதிசயம் சொல்லுகிறது-இருவரும் -இசலி -ஸ்பர்த்தித்து -( பொய்ச் சண்டை இட்டு )-ஆஸ்ரிதரை நோக்கும்படி சொல்லுகிறது –-என் அடியார் அது செய்யார் -என்பதிலும் -சிதகுரைக்கும் -என்கிறது இறே உத்தேச்யம்-கைக் கொள்ளுகைக்கு சொல்லும் வார்த்தை போல் அன்றிக்கே கை விடாமைக்கு சொல்லும் வார்த்தை-அடியார் -என்று ஸ்வா தந்த்ரய நிவர்த்தி-தன்னடியார் -என்று அந்ய சேஷ நிவர்த்தி-திரு நாரணன் தொண்டர் -என்று இறே இவர்களுக்கு நிரூபகம்-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிலும்-அபி சப்தம் –-ஆஸ்ரித விச்லேஷம் பொறுக்க மாட்டாத மார்த்த்வ பரம்

நல்லதோர் தாமரைப் பொய்கை நாள் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்தது ஆலோ
இல்லம் வெறி ஓடிற்று ஆலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ -3- 8-1 –(297)-பரப்பு மாற தாமரை பூத்துக் கிடக்கையாலே – அழகியதாய் – அத்விதீயமான பொய்கை யானது-சிகப்பு -விகாசம்-குளிர்த்தி -பரிமளம்-மார்த்தவம் – இவற்றை உடைத்தான நாள் பூவிலே அதற்கு வ்ருத்தமான பனியானது சொரிய-அத்தாலே அல்லியும் தாதும் -செவ்வி கெட்டு தீர்ந்து – அலங்காரமான பூ அழிகையாலே தான் அழகு அழிந்தால் போலே இரா நின்றது-ஸ்தாவர ஜாதிக்கு எல்லாம் உபகாரமாய் இருந்ததே ஆகிலும்
தாமரைக்கு பாதகமாகை நியத ஸ்வாபம் இறே பனிக்கு -அப்படி பனி ஏறுண்ட தமரையோடை போலே ஆய்த்து இத் திரு மாளிகை கிடக்கிறது-

வெள் நிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து கடையவும் தான் வல்லள்  கொலோ
ஒண் நிறத் தாமரை செம் கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8-9-(305)-அலர்ந்த போதை அழகிய நிறத்தை உடைத்தான தாமரை போலே சிவந்த திருக் கண்களை உடையவனாய் – சமஸ்த லோகங்களையும் தன் திருவடிக் கீழ்  ஆக்கிக் கொண்டவன் –இத்தால்-தன் கண் அழகாலே இவளை அனந்யார்ஹை ஆக்கி தன் கால் கீழ் இட்டுக் கொண்டவன் -என்கை –

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் 
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம் 
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால் 
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-(388)-சிவந்த பெருத்த தாமரை போலே இருக்கிற திருக் கண்களை உடையவனுடைய  திரு நாமத்தை இட்டு அழைத்தக்கால் -அதாவது  திரு நாமம் சொன்னவர்களுக்கு சகல சம்பத்துக்களும் உண்டாம்படி கடாஷிக்கும்  திருக் கண்களை உடையவன் திரு நாமத்தை – உங்கள் பிள்ளைக்கு இட்டு ஆதரம் தோற்ற – அழைத்தக்கால் -என்கை –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் (எம் கண்)மேல் நோக்குதியேல்
எங்கள்  மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்–(495)-ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை – அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது – நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே--2-4-(517)-பின்னையும் அழிப்பதாக ஒருப்பட்டது மாறாதே இருக்கச் செய்தேயும் சாதரமாகப் பார்த்தான் – செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே- கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் –-அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்-

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-(529)-பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –துணுக்  என்னுமோ பாதி –-தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்-கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்-கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே -திருவாய்மொழி -9-7-3–தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா- தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே -திருவாய்மொழி -8-5-1— தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

தீதில் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதி யாரொடும் கூடுவதில்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அம் தாமரை
பேதை மா மணவாளன் தன் பித்தனே
– 3-5-(672)-அழகிய தாமரைப் பூவைத் தனக்கு இருப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபர் ஆனவருக்கு பித்தனானேன் நான் ஓரடி இவன் புகுரா நின்றால்-அத்தைக் குவாலாக்கி -அவன் நெஞ்சிலே புண்படும்படி இவன் பண்ணின அபராதத்தை அவன் காணாத படி இருக்கிற புருஷகார பூதை-அப்ரமேயம் ஹி தத்தேஜ-இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை உடையவன்-பித்தன் நான் –

களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும்
தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே– 7-4-(711)–ஒரு தாமரைப் பூவே தடாகம் எல்லாம் விழுங்கும் படி அலர்ந்தாப் போலே-திரு மேனி எல்லாம் பரப்பு மாறும் படி அலர்ந்த திருக் கண்களும்-

தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே –7-6-(713)-குளிர்ந்து அழகிதான தாமரைப் பூப் போலே அலர்ந்த திருக்கண்களை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனே-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-(715)-இளம் தளிர் போலேயும் நிறத்துக்கு -விகாசம் -செவ்விக்கு தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கைகளும் –

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–(722)-(திருநாபிக்) கமலத்திலே-பிரமனை உண்டாக்கினவனே!-

இனித் திரைத்  திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி யரும்பு திரு மாலோ  என் செய்கேன் பாவியேனே-18-(889)-தாமரைக் கண்ணன்--கையிலே ப்ரஹ்மாஸ்திரம் இருக்க வெல்ல ஒண்ணாத இடம் இல்லை இறே –-அங்கு உள்ளாரை வென்ற பரிகரத்தைக் கொண்டாய்த்து இங்கு உள்ளாரையும் வென்றது-தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்னக் கடவது இறே –அவர்களுக்கு போக உபகரணமான இத்தைக் கொண்டு கிடீர் இவர்களுடைய விரோதியைப் போக்குவது –(“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது திருக் கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.)இப் ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு அகப்பாட்டார் யார் என்னில் – எம்மான் –
நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன் –சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னைத் தோற்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-(891)-பிராட்டியோடு ஹிரண்யாதிகளோடு வாசி அற குளிர நோக்குகிற திருக் கண்களும் –நோக்குத் தூய்மை யாவது – நிர்ஹேதுகமாக கடாஷிக்கை –ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்கிறபடியே – அனுகூல பிரதி கூல விபாக ரஹீதமாய்த்து சௌஹார்த்தம் இருப்பது –தேவாநாம் தாநவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிறபடியே
சம்பந்தம் ஒத்ததாய்த்து இருப்பது –இப்படி இருக்க சில பதார்த்தங்களுக்கு கடாஷம் அநர்த்த ஹேது வாகிறது -பிரகிருதி தோஷத்தாலே – சர்வ அனுகூலமான தென்றல் ஆனது ஒரு பதார்த்ததில் வந்தால் சோஷகம் ஆகாது நின்றது இறே –மென்மை குளிர்த்தி நாற்றம் இவற்றுக்கு தாமரை ஒரு போலியாம் இத்தனை -போக்கி அகவாயில் தண்ணளிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆக மாட்டாதே

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–(996)–கூத்தாடுமவர்கள் அடி இட்டால் ததஸ்த்ரராய் -சதஸ்ஸிலே- இருப்பார் தம் முக விகாசத்தாலே கொண்டாடுமா போலே
தாமரைகள் முகம் மலர்த்தும் ஆயிற்று –

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-(1238)–இடங்கள் தொறும் திகழ அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும்- மலர்கள் மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர் என்னுதல்-வாழ் தரும் இடங்களிலே உண்டாய் அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள் மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர் என்னுதல்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே–1-8-1-(1018)-இவ் வதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து சந்நிதி பண்ணின படியைச் சொல்லுகிறது –-சங்கு என்று பேர் பெற்றவை அடைய சேரா நிற்பதாய் கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் –

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே -1-8-3-(1020)-நித்ய ஸூரிகள் ஒரு நாடாக பரிய இருக்குமவன் கிடீர் தனியே புகுந்து அகப்பட்டான் –

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-9-(1056)-1-ஆடு –என்று பெருமையாய் -அலர்ந்த தாமரை என்னுதல் –-அன்றிக்கே-2-ஆடுகை -நடையாடுகையாய்-அதிலே வர்த்திக்கிற -என்னுதல் –அன்றிக்கே –3-ஆடுகை உண்டாகையாய் –திரு நாபீ கமலத்தை உத்பத்தி ஸ்தானமாக உடையவன் -என்னுதல்-அன்றிக்கே-4-ஆடு –வெற்றியாய் – வெற்றியை உடையவன் -என்னுதல்-

பாலனாகி ஞாலமேழும் உண்டு பண்டாலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி
ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே—2-2-5-(1062)-தனக்கு ஒரு பரிவர் இல்லாத
பிரளய காலத்திலே-ஒரு ஆலந்தளிரிலே – பிள்ளை அகாலத்திலே உறங்கா நின்றான்
என் செய்தான் என்று எழுப்புகைக்கு ஒரு யசோதாதிகளும் இல்லையே –

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத் தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதலறிய வல்லார் தாமே –2-5-10–(1097)-நீர் நிலங்களால் சூழப் பட்டு அழகிய தடாகங்கள் உடைத்தான திருக் கடல் மல்லை தல சயனத்திலே –யஞ்ஞே சோயஞ்ஞ புருஷ –என்கிறபடியே சர்வாதிகனான புண்டரீகாஷன் என்று தோற்றும் படி
கண் வளர்ந்து அருளினவனை ஆயிற்று கவி பாடிற்று – (ஸ்ரீ விஷ்ணு தர்மம் யஜ்ஜ ஈசன் யஜ்ஜ பிரபு புண்டரீ காஷன் விஷ்ணு மோக்ஷ ப்ரதன் )

முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி யஞ்சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்கனம் சொல்லுகேன் ஓவி நல்லார்
எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவரார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே–2-8-7-(1124)–சித்ரம் எழுதுகையில் குசலராய் இருக்குமவர்கள் எழுதின தாமரைப் பூ போலே இருக்கிற கண்களும்-அதாகிறது-கண்ட பின்பு இமையாதே இருந்தபடி – (பரகால நாயகியைக் கண்டபின்பு இமைக்க மாட்டானே )

கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக் கண்ணனிடம் தட மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திரள் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே–2-9-2-(1129)-இவை அடைய திரு நாபீ கமலத்திலே உண்டாம்படி இருக்கிற புண்டரீகாஷனுக்கு வாச்ஸ்தானம் –

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(1149)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –-பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்-சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பொன்னை உபமானமாக போராது என்கைக்காக சிக்ஷிக்கிறார் -காய்ச்சி உரைத்த வி லக்ஷணமான நன் பொன்-ருக்மஅபாம் -என்னக் கடவது இறே
உன் திருமேனி ஒளி ஒவ்வாது-பரஞ்சோதி ரூப சம்பத்ய–ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து பரிஷ் வங்கோ ஹா நூ மத -என்று தான் மதித்து இருக்கும் வடிவு

வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய் தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-(1150)–சிவந்த தாமரையை உடைத்தான நீர் நிலங்களிலே உஜ்ஜ்வலமாக நின்றுள்ள திருவயிந்திரபுரமே –அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று-குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-(மெய்த்து திருமேனி மார்த்வம்-முல்லை நிலம் -நிர்ஜலப் பிரதேசம் -முல்லைக்கொடி ஆட-செழும் பணை -நீர் நிலத்தில் தாமரை மலர -மருத நிலம்-மலைச்சாரல் குறிஞ்சி நிலம்-இப்படி அனைத்தும் சேர இருக்கும் தேசம் )

வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-(1171)-கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலி யம்மானே–3-5-7-(1194)–நித்தியமான மலரை உடைத்தாய் இருக்கிற புன்னை நாழல் இவற்றின் உடைய நிழலிலே பரந்த தாமரைகளின் மேலே அலவன் கண் படுக்கும் –
அப்பரப்புக்கு எல்லாம் போரும்படி பெரிய வடிவை உடைய ஆண் நண்டானது மற்று ஒரு நியமத்தை அறியாதே படுக்கை வாய்ப்பாலே கிடந்தது உறங்கா நிற்கும் ஆயிற்று –வயலாலி மணாளன் உடைய வியாபாரத்தோடு அங்கு உண்டான திர்யக்குகள் உடைய வியாபாரத்தோடு வாசி அற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு அந்நிலத்தில் உள்ள ஆசையாலே –

இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-(1222)-தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை-காளியன் புக்கு தூஷித்து கிடக்க அங்கே போய் புக்கான் ஆயிற்று-பெண்கள் நீராடப் புக்க இடத்தையும் உடைத்தாய்
தாமரையையும் உடைய பொய்கையிலே புக்கு அவர்கள் துகிலை வாங்கின படி ஆகவுமாம் –

தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-(1224)-தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –-மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்-தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல் பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10-(1237) ஆஸ்ரித அர்த்தமாக ஸ்ரீ பஞ்ச ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இருக்கிற புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-(1318)-மாடங்கள் எப்பொழுதும் ஓக்க சாந்து பூசியே-தளம், வெண்மை ஓக்கமான மாடங்கள் நித்ய ஸந்நிஹிதனான ஸ்ரீ யபதி

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-(1357)-தன்னைப் பாராதே யாய்த்து அழிவுக்கு இட்டது ஸ்ரீ யபதியான தன் சௌகுமார்யத்துக்குச் சேராது இறே-இஸ் சாஹசம் –

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல்
திரு வெள்ளறை நின்றானே –5-3-7-(1374)-ஒப்பிலாத புகரை உடைய வாய் மரகதம் போலே இருந்துள்ள பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி வண்டுகள் ஆனவை இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-(1420)-பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு பொழிலையும்  பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்-அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே தட்டித் திரியா நிற்க இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை-அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே-கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில்-அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே பரிமளம் வந்து பிராண விஷயமாய் அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று    –ஆகர்ஷகமான பொய்கை-ஆகர்ஷகமாக இருக்கை யாவது-அகாதமாய்துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே மேல் விழும்படியாய் இருக்கை –அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க-இவ்வாதரத்தோடே புக்கு தாமரைப் பூவை பறித்த அளவிலே ஓர் ஆனைக் கால் காண வல்லோமே -என்று பார்த்துக் கொடு கிடக்கிற முதலை ஆனைக் கால் பற்றிற்று

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-(1466)-காலத்திலே அலர்ந்த செவ்விப் பூவை இருப்பிடமாக உடையவள் -என்னுதல்-அன்றிக்கே –-செவ்விப் பூவை உடைத்தான தாமரையை வாசஸ் ஸ்தானமாக உடையவள் -என்னுதல் –-போது என்று காலம் ஆதல் புஷ்பம் சொல்லிற்று ஆதல்-
(போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் )புலவி–ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு திரு நாமம் ஆகவுமாம் –-அன்றிக்கே-போதார் தாமரையாள் புலவி இடத்தில் குல வானவர் தம் கோதா -என்றுமாம்

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-(1539)–விஷத்தை உடைய காளியன் அஞ்சும்படியாக யுத்தத்தில் முன்பு ஒரு நாள் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு முன்னே பரப்பு மாறாப் பூத்த தாமரைகளையும் நினைத்த வகைகள் எல்லாம் விநியோகம் கொள்ளலாம் படியான ஜல சம்ருத்தியையும் உடைய பொய்கையிலே போய்ப் புக்கு

தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ  –7-1-9(1556)சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும் தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த திருக் கண்களை உடையவனே -என்று திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –)

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச் சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4(1571)-கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது -ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும் மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத் தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப் புண்ட
தீங் கரும்பினைத் தேனை நன் பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே –7-3-5-(1572)ரஷிக்குமது செவ்வித் தாமரைப் பூ போலே ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை கொண்டாய்த்து – விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -இவற்றுக்கு தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படியாய் அவ்வளவு அல்லாத படி அதி ஸூகுமாரமாய் -ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை-உடைய என் ஆயனே –

ஏடிலங்கு தாமரை போல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும்
நீடு மாடத் தனிச் சூலம் போழ்கக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத் தார்ப் போவா அணியார் வீதி அழுந்தூரே–7-5-6-(1593)இதழ் விளங்கா நின்றுள்ள தாமரை போலே ஸ்மிதம் பண்ணி அருளி – என்னைப் பெறுகையால் வந்த அலாப்ய லாபம் தன்னது என்னும் இடம்  தோற்ற ஸ்மிதம் பண்ணி – அத்தாலே தான் செய்தது விலக்காத படியான தசையை எனக்கு பிறப்பித்து என் அருகே வந்து நின்று அது சாத்மித்தவாறே ஹிருதயத்திலே வந்து புகுந்து இனி இவருக்கு ஒரு போக்கு இல்லை என்று தோற்ற நிற்கிறவர் கண்ணுக்கு இலக்காகும்படி வந்து நிற்கிற தேசம் போலும் –

நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே
—7-9-5-(1632)மிக்க ஜலத்தை உடைத்தான பொய்கைகளிலே அந்த நீர்ச் செறிவாலே தாமரைகள் போய் அலறுகிற  சிறு புலியூர்ச் சலசயனத்திலே –(சேஷ புஷ்கரணி -அநந்த சரஸ் இங்கு )செவ்விப் பூ போலே இருக்கிற திருவடிகளை உடையவனே –அல்லாதார் செய்தபடி செய்ய அநந்ய கதியான என் பக்கலிலே உன்னுடைய கண் அழிவற்ற கிருபையைப் பண்ணி அருள வேணும் –

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக் கமலம் கள்ளுகுக்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-5-(1652)–அடித் தலமும் தாமரையே –நம்முடைய உத்தேச்யமும் நிரதிசய போக்யமாய் இரா நின்றது-அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் –அத் திருவடிகளிலே தோற்று விழுந்தவர்களை எடுத்து அணைக்கும் கைகளும் தாமரை போலே இரா நின்றது -என்னா நின்றாள் –கடிக்கமலம் கள்ளுகுக்கும் – பரிமள பிரசுரமாய் இருந்துள்ள புஷ்பமானது மதுவை பிரவஹியா நிற்கும் ஆயிற்று –மது பானம் பண்ண விருந்த வண்டுகளுக்கு பிரயோஜனம் இல்லாத படியாகவும்-ஆஸ்ரயம் பொறாத படியாலும்-மதுவை உகா நிற்கும் –அவ் ஊரில் தாமரையில் படிந்த வண்டுகளால் அதில் மது வற்றப் பருகப் போகாது -என்கை –

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-(1718)-வியந்துய்யக் கொண்ட –
நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே-இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே-வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான் ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால்
தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்
சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து ) அங்கனும் அன்றிக்கே –
விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை  விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-(1736)-பரிமளத்தை புறப்படவிடா நிற்பதாய் ஸ்ரமஹரமான தாமரைகளாலே சூழப் பட்ட தலைச் சங்க காட்டில் மேல் பார்ஸ்வத்தில் –

வேயிரும்   சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு

சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு  இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-3-(1760)-பூமிப் பரப்பை அடைய அநாயாசேன அளந்து கொண்ட ஸ்வாமிகள் என்னலாய் இரா நின்றார்-நீர்மை பார்த்த வாறே –புண்டரீகஷனாய் இரா நின்றார் என்று சொல்லலாய் இரா நின்றார் –

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன்  தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும்  ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-(1763)தாமரைக் கண்கள் இருந்தவாறு –-அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –-நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே – (நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி  பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-7-(1764)-ஆதித்யன் தன்னுடைய உஷ்ண கிரணங்களாலேதாமரைகளில் உண்டான பூவை அலர்த்தக் கடவனாய் இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே-ஷீண  பாபரானவர்கள் உடைய ஹிருதய கமலத்துக்கு விகாசத்தை பண்ணி
பண்ணிக் கொடுக்கும் பெரிய கருணை உடையராய் இரா நின்றார் –திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாய் இருக்கிறது –திருக் கண்களும் அணைக்கக் கணிசிக்கிற கைகளும் –(பக்தர்களாகிய தாமரையை அலர்த்தும் ஸூர்யனைப் போல் மட்டும் இல்லாமல் பக்தனான ஸூர்யனைக் கண்டு அலரும் தாமரைக் கண்கள் அன்றோ இவையும் )

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா
—-9-2-9-(1766)–பரிமளத்தை புறப்பட விடா நின்றுள்ள தாமரை போலே இரா நின்றது திருக் கண்களும் திரு அதரமும் –மேன்மையைப் பார்த்த வாறே நித்ய ஸூரிகளும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்-மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம்  என்று நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை வடிவு அழகைப் பார்த்தவாறே –

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்

கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடில் வைகுந்தமே –9-3-10-(1777)-இந்த தேச வை லஷண்யம் ஆயிற்று இவர் தம்மை இங்கன் கவி பாடுவித்தது –-உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள முத்தும்-அழகிய பவளக் கொழுந்தும் தன் பரப்பு மாறச் செவ்வி பெற அலர்ந்த தாமரைப் பொய்கைகளையும் உடைத்தான
சோலைகளாலே சூழப் பட்ட திருப் புல்லாணி மேலே யாயிற்று கவி பாடிற்று –

தாம் மோர் உருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டுத்
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால்  ஆர்க்கத் தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி —10-5-3-(1890)-உடம்பிலே தழும்பு கிடைக்கையாலே-தாமோதரன் என்னும் திரு நாமத்தை உடையவனே –-எனக்கு கட்டலாம்படி பவ்யனான நீ இத்தையும் செய்யப் பாராய் –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-(2024)தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –அதற்கு நான் செய்ய வேண்டுவது என் என்ன –-என் தாமரைக் கண்ணா –-ஆஜகாம -என்று இலங்கையில் பொருந்தாதே போனவன் தானே-பெருமாளாதானவாறே–விபீஷண விதேயம் ஹி -என்னலாம் படி அங்கே பொருந்தினான் இறே –அப்படியே நீயே உன் திருக் கண்களால் நோக்கப் பெறில் நான் இது தன்னிலும் இருக்க வல்லேன் –ஸ்வம் சம்பந்தத்தாலே பார்த்த அன்று இறே  இவ்விடம் த்யாஜ்யம் ஆவது-அவன் சம்பந்தத்தை இட்டு பார்த்த போது இது தானே உத்தேச்யமாய் இருக்கும் இறே –இதில் அரை ஷணம் பொருந்தாத படியாய் இருக்கிற இவர் பாசுரத்துக்கும்-இது ஒழியச் செல்லாத படியாய் இருக்கிற நம் பாசுரத்துக்கும் வாசி அறியாதான் ஒருவன்
சரண்யனாகப் பெறில் நமக்கு அப் பேறு பெறலாவது-என்று அருளிச் செய்த தாமே-அநந்தரம் – மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்கிறபடியே இத் தலையில் உள்ளது போட்கன் ஆனாலும் நான் அவனை விடேன் -என்று அருளிச் செய்த படியால் நமக்குப் பெறுகைக்கு தட்டில்லை -என்று அருளிச் செய்து அருளினார் நஞ்சீயர் –இது மெய்யாதல் -இல்லை யாகில்-பரிஹாரம் இன்றிக்கே போதல் -செய்யும் அத்தனை-இது பொய்யாகிலும் நமக்கு அஞ்ச வேண்டா –-இத்தால்  பொய்யாகாது என்ற படி –-இது பொய்யாகில்-நரகாத்ய அனுபவங்களை  சொல்லுகிறவையோ மெய்யாகப் புகுகிறது  –

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-(2030)-தலைமை பெற்று உபாஸ்யன் ஆனவனுக்கு லஷணம் என் என்ன –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மஷிணீ-என்று சொல்லிற்று இறே –

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள் அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே -19-பொற்றாமரைக் கயம் என்கிற விசேஷணங்களால் அனுபாவ்ய விஷய ஸ்வபாவத்தை சொல்லுகிறது –மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ -என்று ஊரைச் சொன்னாள் – தான் –பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறாள் –தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்-வாசத் தடம் போலே வருவானே -என்றும் தடாகமாக சொல்லக் கடவது இறே –பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணிய தீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள் கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக் கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21(2072)-அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் – பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது–தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-கை வண்ணம் தாமரை —-1-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –2-வாய் கமலம் போலும் – கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற –இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –3-கண் இணையும் அரவிந்தம்- இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால்
குறையும் தலைக் கட்டும் கண் –
இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு – அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று – கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று கீழ் சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –அடியும் தாமரை -என்னாதே-
அடியும் அக்தே
 -என்றது-உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் -பெரிய திருமடல்    -(2027)

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு —60–(2141)-அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாயங்களை உபபாதிக்கிற
வேதத்தை ஜகத்துக்கு அறிவித்ததாலே-ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -என்கிற ப்ரஹ்மா
மந்திர க்ருதப்யோ  நம
-என்று தன்னைச் சால ஜ்ஞானாதிகனாக அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மாவோடே கூட –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் –உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு
–67-(2148)–அப்படியே அறிவாகில் ஸ்ரீ யபதியைப் பற்றி யல்லது இராது-இவ் வாத்மா வாகிற தாமரைக்கு ஞானமாகிய விகாஸம் பிறக்கைக்கு-பாஸ்கரனும்
பிரபையும் இறே-ஒண் தாமரையாளும் கேள்வனும்
ஒருவனையே என்கிற அவதாரணைக்கு
வ்யாவ்ருத்தம் தான் அத்தலையாலே தோற்றும் தான் ஒழிய தனித் தோற்றம் தான் இன்றிக்கே இருக்கை

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-(2199)–தாமரைக்கண் மால் –புண்டரீ காஷனான சர்வேஸ்வரன் –அனைத்துலகும் உடைய அரவிந்த லோசன்னை -திருவாய் -6-5-10-

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21–(2202)-தாமரை புறம்பே யுண்டே – அல்லோம் என்று இவன் போகிலும்-புறம்பே போக ஒண்ணாத படி பண்டே அவை யுண்டாய்த்தே –ஆகிறது -தான் புறம்பே போய் தேடுமதான புஷ்பமும் -தனக்கே தேட வேண்டாத படி -அவன் குறைவறுத்து வைத்தானே – இவனுடைய விபூதிக்கும் புறம்பு அன்றே பூ –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் –எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்

திருவல்லிக் கேணியான் சென்று   —-16–(2297)–நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்-ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே-கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை-அவன் புருஷோத்தமன் ஆனாப் போலே இவள் நாரீணாம்   உத்தமை –மலர்மகள் விரும்புகையாலே சர்வாதிகத்வம் ஆகை-பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-அநாதரே சஷ்டி – பிரஜைகள் பார்த்து இருக்க-பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே-தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன்
படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன் முடி வண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அக்தே அன்றே
ஆராழி கொண்டார்க்கு அழகு —-5–(2286)-திருவடிகள் உடைய படி தாமரை –

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-(2294)-பூ வலயம் -என்னக் கடவது இறே –-பத்மாகார சமுத்பூதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-37-என்னக் கடவது இறே –-சர்வேஸ்வரன் சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை அருளிச் செய்கிறார் –படிவட்டத் தாமரை –-திருவடிகள் பிரவேசிக்கப் பெறுகையாலே வந்த ஸ்லாக்யதை-பண்டுலகம் நீரேற்று – படிவட்டத் தாமரை யாகிற லோகத்தை முன்பு நீரேற்று –

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-(2313)-பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்சாப் யதோ முகம் -என்று
சாஸ்த்ரைக சமதி கம்யமான ஹ்ருதயக் கமலத்திலே அவனுக்கு இருப்பாக அனுசந்தித்து இருக்கும் அவர்கள் உடைய மனசும்-சாஸ்த்ரங்களிலே ஹ்ருதய கமலம் என்று சொல்லப் பட்ட-அதின் மேலே வைக்கப்பட்ட இந்த்ரியங்களை யுடையரான யோகிகள் உடைய மனசும் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி
———–84-(2365)–ஆஸ்ரிதர்க்கு அனுபவ யோக்யமான விக்ரஹத்தை யுடைய
ஆச்சர்ய சக்தி யுக்தனை-யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று சுருதி பிரசித்தமான கண் அழகை யுடையவனை தமக்குக் காட்டின  வடிவு –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை  மணாளன்
அடித் தாமரை யாமலர்
–96-(2377)–இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம்
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் –-கேழ்ந்த அடித்தாமரை மலர் மேல் – கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை –இத்தால் பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை – எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து
நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –மணாளன் – அவளுக்கு போக்தாவானவன் –மணாளன் அடித் தாமரை –-அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும்
கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை-இத்தால் நித்ய ஸூரிகளுக்கும்
ப்ரஹ்மாதிகளுக்கும்-உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி –அடித் தாமரை யாமலர் –-திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு
——100-(2081)-ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற
உதாரமான தாமரை போலே இருக்கிற ஒழுகு நீண்ட கண்ணை யுடையவள் –பஸ்யதாம் சர்வதேவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105–அநாதரே ஷஷ்டி –தயா விலோகிதா தேவா ஹரி வஷச்தலஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-மார்விலே இருந்து அவர்கள் புறங்கால் வீக்கம் தீரக்
குளிர நோக்கினாள்-தேன் செறிந்து இருந்துள்ள பூவின் மேலே இருக்கிற பெரிய பிராட்டியார்-நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –- நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-(2424)-மேக பதத்தளவும் உயர்ந்த சிகரங்களை யுடைத்தான-
வடக்கில் திருமலையிலே நின்று அருளினவனை- ராத்ரியிலே காப்பிடுகைக்காக புகுந்தார்கள்
சந்த்ரனை ஜடையிலே வைத்த ருத்ரனும்–திரு நாபி கமலத்திலே பிறந்த ப்ரஹ்மாவும்-பக்தி பாரவச்யத்தாலே திரு முத்தின் குடை தொடக்கமான சமாராதன உபகரணங்களைக் கொண்டு
தத் சர்வம் தர்ம வீர்யேண  யதாவத் சப்ரச்பச்யாதி -பால -3-4-என்னும்படி திருமலையிலே-வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து சந்த்யா காலத்திலே ப்ரஹ்மாதிகள் பணி கண்டு அருளுகைக்கு-
சத்ராத் யுபகரணங்களைக்  குடையாகப் பிடித்துக் கொண்டு திரு வந்திக் காப்பு அணிகைக்குப்   புகா நிற்பார்கள் -என்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58-(2535)—பங்கஜம் -சேற்றுத் தாமரை -நீர் நிலையிலே இருந்து அலர்ந்து செவ்வி குன்றாத இருக்கும் தாமரை போன்ற திருக் கண்கள்–அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே 
– -76 (2553)-விஸ்மயநீயமான தாமரையினுடைய பெருத்த பூவானது ஒடுங்கவும் – ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும் பண்ணுமதான வெண் திங்கள்-சந்திரன் தாமரையை வருத்தி மூடச் செய்து ஆம்பலை அலர்த்துவது போலே -தாமரைக்கு தலைவன் ஸூரியன் மறைந்த இடத்தில் தலைவனை பிரிந்த என்னை வருத்தி கை வளைகள் கழல பண்ணுவதில் ஆச்சர்யம் இல்லையே-

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-(2472)–தாளையுடைய தாமரைப் பூக்களை திருவடிகளிலே இட்டு வணங்கி சர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளை அடைவோம் என்று-தாள் தாமரை அடைவோம் என்று தமராவார் தாமரை மேலாற்கும்  அமரர்க்கும் ஆடரவத்தாற்கும்-அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளுக்கும் மற்றும் எல்லாருக்கும் நிர்வாஹகரான தேவர்களாம் படி யான பெருமையை யுடையவர்கள் என்றுமாம்-மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடியே கறுத்த  நிறத்தை யுடையனான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளிலே செவ்விப் பூக்களைப் பணி மாறித் தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து அவன் திருவடிகளை அடைவோம் என்னுமவர்கள் என்றுமாம்
தாள் தாமரை அடைவோம் -என்று தமராவார் தாமரை மேலாற்கும் ஆடரவத்தாற்கும் அமரர்க்கும் இத் யந்வய –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே
 – 58-(2535)-அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –-தச்யதா கப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே–

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய் திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே –1–(2578)–சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவனாய் இப்படி இருப்பார் அவ்வருகு யாரேனும் உண்டோ என்ன-இத்தால் அவ்வருகு இல்லை என்னும் இடத்தைச் சொல்லுகிறது
அவ்வருகு இல்லையாகில் தன்னோடு ஓக்க சொல்லலாவார் உண்டோ என்னில்-தனி அத்விதீய நாயகன் – புறம்பேயும் சிலரை நாயகராகச் சொல்லுவது ஓவ்பசாரிகம் ருத்ரம் ஸமாச்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மணம் ஆஸ்ரித- ப்ரஹ்மாம் மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சித் உபாஸ்ரித-பாரதம் -ஆஸ் –118-37-தாமரை யுந்தி -தனி பெரும் -இவற்றால் –-நிமித்த -உபாதான -ஸஹகாரிகளும் தானே என்கை –சேவடியோயே – இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பில் இன்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு அசைவோர் அசைக திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–(2579)–தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே-கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்-த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31- (திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான் அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே-

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?-5-(2582)–பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் -திருவடி தனக்கேயாய் சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால் அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்-அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி-அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை-ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே-திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது-ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே திருக்கண் செவ்வி பெறுமாயிற்று–தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –
72-(2656)-ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான தாமரைப்பூ உன் திரு நாபியதன்றோ-இத்தால் ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனுக்கு ஸமர் அல்லர் என்னும் இடமும் அவர்களில் ஒருவன் ஜகத்துக்குக் காரணம் என்னும் இடமும் மூவரையும் ஒழிய-மூவரில் பிரதானராய் இருக்கிற விஷ்ணுவையும் ஒழிய – வேறே ஓன்று ஜகத்துக்குக் காரணம் அன்று என்னும் இடமும் சொல்லுகிறது

தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்–சிறியதிருமடல் -5-(2708)-தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்-2(713)-மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல்(2715)

தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் (2771)-பெரிய திருமடல்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு
உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-(2861)-அன்பு தான் –தாமரைத் தாள்களுக்கு –
உன் தாளிணை-என்று சம்பந்தம் உள்ளமையின் சிந்தை சார்ந்தமை கூறினார் முன்பு .-இப்பொழுது சம்பந்தம் இல்லா விடினும் -விட ஒண்ணாத இனிமை-போக்யதை –கூறுகிறார் .-தாமரைத் தாள்கள் ஆதலின் -இனிமையை நுகர்ந்து -பக்தி தானே மிகவும் வளர்ந்து விட்டது -என்க –-சார்ந்து இனிமையை நுகர விசேஷ கடாஷம் ஹேது-அன்பு மிகவும் கூர்தல் -தானாக வந்தது -என்று அறிக-

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –(2887)-மன்னு தாமரைத்தாள் தன்னை உற்றாள் செய்ய என்னை உற்றான் இன்று – த்ர்ணீ கர்த விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலி ந-என்றும் – ஸ்ரீ ராமாநுஜார்ய சரண த்வந்த்வ கைங்கர்ய வ்ர்த்தய-சர்வாவச்தாஸூ சர்வ ரஸூ -தாரக போஷகாஸ் சமே –என்றும் சொல்லுகிறபடி – இப்படி சர்வ பிரகாரத்தாலும் ஸ்லாக நீயராய் இருக்குமவர்கள் –-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் –என்று ஸ்ரீ ஆழ்வார் அத்யவசித்தால் போலே
தமக்கு தாரகாதிகளாக அத்யவசித்து –-கம்பீராம்பஸ் சமுத்பூதமாய் -செவ்வி பெற்று இருக்கிற செந்தாமாரை போலே-அதி ஸூ குமாரங்களாய் -ஒன்றுக்கு ஓன்று போலியாய் -பொலிந்து என்றும் –
மன்னு தாமரை தாள்கள் அன்றோ-அத்யந்த போக்யங்களாய் இருக்கிற அவர்களுடைய திருவடிகளை –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-(2933)-விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும்-உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள்-ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர்-இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இறே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர்யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-(3000)–தம் அளவேயாய் அடி அற்று இருக்கை அன்றிக்கே-என் குடி நாயன் -என்கிறார்-சமாசத்ரிய ஜெகந்நாதம் மமபூர்வேபிதா மஹா விபஷாபஹ்ருதம் ராஜ்ய மவாபு புருஷோத்தமம்-தண் தாமரைக் கண்ணனை-பிரயோஜன நிரபேஷமாக புகழுகிறார் -என்று உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணாலே குளிர நோக்கினான்-இந்நோக்குக்கு அடி சொல்லுகிறது மேல்-கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-(3024)–தகும் என்னும் இடத்தை ஸ்பஷ்டம் ஆக்குவதாய் -ரக்ஷகத்வம் இல்லையே யானாலும் விடப் போகாதபடி தர்ச நீயமான-அக் கண் அழகாலே என்னை ஜிதம் என்னப் பண்ணினவன் –யதா கப்யாசம் புண்டரீக ஏவம் அஷிணி-ராம கமல பத்ராஷ

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-(3056)-முன்பு சொன்ன சாமான்யம் ஒப்பாக மாட்டாது -அப்போது அலர்ந்தது ஆனால் யாயிற்று ஒப்பாவது-கண் பாதம் கை கமலம்–கண் -பந்தத்தை விளைக்கும் கண்-பாதம் -பந்தம் பிறந்தால் அனுபவிக்க இழியும் துறை –-கை கமலம் -தம்மோட்டை ஸ்பர்சத்தாலே செவ்வி பெற்ற படி-

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –
2-6-2-(3065)-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் –-இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-என் பைந்தாமரைக் கண்ணனே–ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3-(3066)-ஒரு கால் நோக்கினால் நித்ய ஸூரிகள் ஜ்வர சந்நிபதரைப் போலே அடைவு கெடக் கூப்பிடுவார்கள் ஆயிற்று-தலைமகனை – இப்படிக் கூப்பிடா நின்றாலும் –நிரவத்ய பர ப்ராப்தே-என்கிறபடியே அவ்வருகாய் இருக்கும்

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-(3079)-விட்டு விளங்கா நின்றுள்ள சிவந்த தேஜஸை உடைத்தான தாமரைப் பூ போலே தலையிலே வைக்கப் புகுகிற திருவடிகளும் அணைக்கப் புகுகிற கைகளும் குளிர நோக்குகிற கண்களும்

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-(3079)–நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் –என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-(3082)-ஸுலப்யத்தையும்-ஸ்ரமஹரமான வடிவு அழகையும் -அதுக்கு பரபாகமாய் தன் பேறாக நோக்கின கண் அழகையும் உடையவன்-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-(3083)-ச்ரியா சார்த்தம் ஜகத் பத்தி ஆஸ்தே -என்று நித்ய ஸூ ரிகள் ஓலக்கத்திலே-பிராட்டியும் தானும் சேர இருக்கும்-இருப்பில் யாயிற்று இவர் ஊனில் வாழும் உயிரிலே ஆசைப்பட்டது –-செய்ய தாமரைக் கண்ணன்–நீர் பாய்ந்த பயிர் போலே -அவள் சந்நிதியாலே குளிர்ந்த திருக் கண்களை உடையவன்-வக்ஷஸ்தலேந ச்ரியம் உத்வஹம் விபு -விஸ்தாரி பத்மோத்பல பத்ர லோசன–மைய கண்ணாள் -என்று இறே அவனை அனுபவிக்கிறவள் கண் இருப்பது

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-திரு முகத்தின் அழகு நிலை கொள்ள ஒண்ணாமையாலே திருவடிகளில் வர வீசிற்று-அங்கண் அல்லது அழகுக்கு ஆவது உண்டாயாயாதல் ஆசைக்கு அவதி உண்டாயாயாதல் அன்றே -திருவடிகளின் அழகு ஆசன பத்மமாய்க் கொண்டு விகசிதமாயிற்றோ-நீ நின்ற தாமரை அடிச்ச சோதியாய் அலர்ந்ததுவோ-திரு அபிஷேகத்தின் சம்சயம் இங்கே தீர வந்தார் -இங்கும் சம்சயமாய் இருந்தது

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-(3122)-சொல்லில் -கட்டுரை என்று முழுச் சொல்லாய் -சொல்லில் என்றபடி -நெஞ்சாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதாய் இருக்க பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-தாமரை –-தாமரை ஜாதியாக ஓர் அவயவத்துக்காக ஒப்பாக மாட்டாது என்கை –
நின் கண் பாதம் கை யொவ்வா-முதல் உறவு பண்ணும் கண் -அதுக்கு தோற்று ஜிதந்தே என்று விழும் திருவடிகள் -அவ் விழுக் காட்டுக்கு தோற்று அவன் தான் ஜிதந்தே என்று அணைக்கும் கை
நின் கண் -என்கையாலே –உனது முகச் சோதி -என்றத்தை நினைக்கிறது –பாதம் -என்றது அடிச் சோதி என்றத்தை நினைக்கிறது-கை -என்று நடுவு தாம் அனுபவித்த அழகுக்கு உப லக்ஷணம்

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–
3-3-9-(3151)-துக்க நிவ்ருத்திக்காக திருமலையில் வந்து நின்ற ஸூ லபன் ஆனவன்-நிரதிசய போக்யமான திருவடிகளை மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்க-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர் 

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-(3176)–தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித -என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய்-பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் –வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-(3180)-கரிய மேனியன்
அசாதாரண விக்கிரஹத்தை சொல்லுகிறது-செய்ய தாமரைக் கண்ணன்-வாத்சல்ய ஸூ சகமான கண் அழகை உடையவன்-கண்ணன்-சர்வ ஸமாச்ரயணீயன் ஆகைக்காக ஸூ லபன் ஆனவன்-விண்ணோர் இறை-அந்நிலையில் நித்ய ஸூ ரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி பரத்வத்தை உடையவன்

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-(3205)-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை
தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!-தாமரையை ஒரு போலியாகச் சொல்லலாம் படி யான திருக் கண்களை உடையையாய் அதுக்கு பரபாகமாய் சிரமஹரமான வடிவை உடையவனே-அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்
நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-(3263)-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று –அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு

அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-(3282)-குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை-திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி-ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை

காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-(3300)0மானஸ அனுபவம் மாத்திரம் அன்றிக்கே கண் எதிரே காணும் படி வந்து காணும் படி வர வேண்டும் என்றுமாம் –தாமரைக் கண் பிறழ,
தாமரை போன்ற திருக் கண்கள் கடல் கிடந்தால் போலே மிளிர –பிறழ,-விளங்க என்றுமாம் 

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-(3307)–நான் விடுவேன் என்னிலும் விட ஒண்ணாத உடன் வந்தியான-அதிமாத்ர ப்ரேமத்தாலே-தாமரைக் கண்ணன்றனைக் –இக் காதலுக்கு கிருஷி பண்ணினாராய்ச் சொல்லுகிறார்-கண்ணாலே குளிர நோக்கி யாயிற்று -இவருக்கும் காதலை விளைவித்தது –செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் -என்னக் கடவது இறே -இது இறே மதி நலம் அருளின படி

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே
–5-1-6-(3346)-நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்-வைத்த கண் வாங்க ஒண்ணாத படி அழகிய நிறத்தை உடைத்தாய் -சர்வ பூஷண பூஷார்ஹங்களாய் -கற்பக தரு பணித்தாள் போலே நாலாய்-பாஹுச்சாயாம் அவஷ்டப்த -என்று சகல லோக ஆபாஸ்ரயமான தோள் —செய்ய வாய் -சவிலாசஸ்ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் என்று முகமாகிறது முறுவல் எடுத்து வைக்க கொள் காலம் ஆயிற்று-செய்ய வாய் -தோளை அண்டை கொண்டார்க்கு -அபாயம் சர்வ பூதோப் யோ தாதாமி -என்னும் வாய்-செய்ய தாமரைக் கண் -ராம கமலா பத்ராஷ -என்கிறபடி இதுக்கு அடியான பிராப்தி எல்லாம் தோற்றும் படி விசேஷ கடாக்ஷம் பண்ணும் கண் – அறமுயல் ஆழி அங்கைக் – லஷ்மணஸ்ய தீமத-என்கிறபடி ரக்ஷகனான ஈஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷண தர்மத்தில் உத்யுக்தமான திரு வாழியைக் கையிலே உடையவன்-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-(3364)-கண்ணாலே தவாஸ்மி-என்று என்னை சொல்லி என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணினான் -கிட்டினால் என்னுடையவன் என்னும் படி இறே இருப்பது -வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த கண்ணாலே -ஆத்மாத்மீயங்கள் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று சொல்லி என்னை உரி சூறை கொண்டான் –தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -என்னக் கடவது இறே -சொலவு ஒன்றும் செயல் ஒன்றும் ஆயிற்று -அவனுக்கு புண்டரீகாக்ஷத்வம் போலே இவளுக்கு ஸ்த்ரீத்வம் –என்னை நிறைகொண்டான்-என்று வாய் விடப் பண்ணுகை -இழந்தவை இன்னவை என்கிறாள் -மேல

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–(3382)-இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீயபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-(3385)ஒரு கலத்தில் உண்பாரைப் போலே வாகாம்ருத சாரஸ்யத்தை அறியும் ஸ்ரீ பாஞ்ச கண்ட பின் -மீட்கப் பார்க்கில் ஒக்கவே துடக்க வேண்டாவோ-சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்ஜன்யத்தோடு சாம்யம் உண்டே -ஸ்யாமளமான வடிவுக்கு பரபாகமான ஆழ்வார்களோடே யுண்டான சேர்த்தியோடும் -இரண்டிலும் வந்து அலை எறிகிற திருக் கண்களோடும் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் என்கிற இவை யுண்டாய் இருக்கை

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-(3389)–அப்புருவத்துக்குத் தகுதியாக தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்-பாவியேன் -அவன் அழகை அனுசந்தித்தால் பிரியப்படுகை யன்றிக்கே நோவு படும் படியான பாபத்தை பண்ணினேன்-ஆவியின் மேலனவே-தோல் புரையிலே போகை யன்றிக்கே -உயிர் நிலையிலே நின்று நலியா நின்றது -உள்ளு வெளிச்சு இருக்கிறாப் போலே புறம்பும் ஆகப் -பெற்றோம் ஆகிறிலோம்-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-(3390)-அழகு மிக்க கொடி போலே இருக்கிற மூக்கும் -அழகு கொழுந்து விட்ட தொரு கொடி போலே இருக்கை-அக் கொடி பூத்தால் போலே யாய் -தாமரைப் பூப் போலே இருக்கிற திருக் கண்களும் -அது ஒரு பலத்தை உண்டாக்கினால் போலே கனி போலே இருக்கிற திருவதரமும்-நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.
இவற்றுக்கு பரபாகமாய் -தாமரை இலை போலே இருக்கிற திரு மேனியும் –-கற்பக தரு பணைத்தால் போலே மநோ ஹரமாய்-அவ் வழகைக் காத்தூட்ட கடவ தோள்களும்-என் நெஞ்சம் நிறைந்தனவே.–ஹித வசனம் கேட்க்கைக்கு நெஞ்சில் இடம் இல்லை –

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-(3392)-அநந்யார்ஹம் ஆக்கும் கண்ணும் -அதுக்குத் தோற்றார் இளைப்பாறும் அல்குலும் -கீழையும் மேலையும் கொண்டு எறி யும் படி உன்நேயமான இடையும் -இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும்-

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-(3407)-வரள் தாமரை யுண்டாகையாலே -சேற்றுத் தாமரை என்று விசேஷிக்கிறார் -செந்நெல்களூடே அலர்ந்த தாமரைகள் செந்நெலுக்கும் கூட நிழல் செய்யா நிற்கும் என்கை -வான மா மலைக்கு சத்ருசமாய் இருந்துள்ள போக்யதையைச் சொல்லுகிறது-பரமபதத்தில் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வர்த்திக்கிற தேசம் -சம்சாரிகளுடைய ரக்ஷணத்துக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-(3434)-தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –

பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7-(3435)-கடல் போலே பெருத்த பொய்கை களிலே யடி உயரத்தால் உயர்ந்த தாமரைகளும் செங்கழு நீரும் -ஸ்த்ரீகளுடைய ஒளியை யுடைத்தான முகத்தையும் கண்ணையும்-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-(3442)-நெய்யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இறே-நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்-உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-(3458)-அவனுடைய போக்யத்தையே அன்றிக்கே போக ஸ்தானமே அமைந்து இருக்கை -போக்தாக்கள் அளவன்றிக்கே பெருத்து சிரமஹரமாய விகாசம் செவ்வி குளிர்த்தி இவற்றையும் யுடைத்தான திருக் கண்கள் –

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-(3463)-இவளுடைய அம்ருத உபமானமான நிஷேத வசனம் கேட்ட வாறே ஓர் நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே அவயவங்கள் விக்ருதமாயிற்றன-ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கிட்ட உபேக்ஷிக்க கிடையாத சம்சாரத்தில் இவ்வளவு அவகாஹித்து -பிரளய ரோஷத்தால் போ என்பாரைப் பெற்றால் விக்ருதனாகச் சொல்ல வேணுமோ – தாமரை புரை கண்ணிணையும் –விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமளம் இவற்றை உடைத்தாகை-செவ்வாய் முறுவலும்-ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு அதரத்தில் பழுப்பு எறித்து தோற்ற ஸ்மிதம் பண்ணி நின்ற நிலை-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-(3470)-பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி-உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –-தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இறே அநந்யார்ஹம் ஆக்குவது –

துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-(3495)–தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய்-போக்தாக்கள் அளவன்றிக்கே இரண்டு ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற திருக் கண்கள்-என்றும் என்றும் என்கையாலே துர்பலன் மலையை எடுத்தால் போலே இருக்கிற படி-3499)

குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-(3499)இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர் ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாய் இருக்கை என்னுதல் -வேறு ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான தேஜஸ் என்னுதல் -ஆபரண ஓளி தன்னுள்ளே அடங்கும்படி இருக்கும் இருக்கும் சோதி என்னுதல்-செந்தாமரைக்கண் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் தாமரையை ஒப்பாகச் சொல்லலாய் இருக்கும் திருக் கண் -அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான கண்கள்-பிரான் -பக்தானாம் என்கிற வடிவு-இருந்தமை காட்டினீர்-கிடையை காட்டுதல் -நின்றமையைக் காட்டுதல் -அன்றிக்கே இருந்தபடியை காட்டினி கோள் -கிடந்தான் ஆகில் -கிடந்ததோர் கிடக்கை -என்பார்கள் -நின்றான் ஆகில் நிலையாரே நின்றான் -என்பார்கள் -இருந்தான் ஆகில் பிரான் இருந்தமை காட்டினீர் என்பார்கள் -இருந்தபடியே உத்தேசியமாம் இத்தனை காட்டினீர் -தானே கண்டு மீள மாட்டாதே -நோக்கி இருந்த படி கண்டாயே -முறுவல் இருந்தபடி கண்டாயே -என்று காட்டிக் கொடுத்து கெடுத்தி கோளே

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச்செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்குஎன்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-(3507)-ஸ்ரீ பஞ்சாயுதங்களின் சேர்த்தி அழகிலே யாயிற்று இவள் ஈடுபட்டது –இவளுடைய நிறம் கொள்ளுகைக்கு எத்தனை ஆபரணம் வேணும் -ஸ்மிதமும் நோக்கும் போலே ஆயுதச் சேர்த்தியும் தகுதியாய் இருக்கிற படி-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற்சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-(3511)-நன்றாய் பலவாய் செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற திருக் கையை உடையவனுக்கு –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-(3547)-வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-(3551)-அறாக்கயமான சுனைகளிலே அக்னி ஜ்வலிக்கிறால் போலே தாமரை பரப்பு மாற பூக்கையாலே நிரதிசய போக்யமான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிறவனே-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-(3555)--நித்ய ஸூரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூலபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இறே சீல குணத்தில் ஏற்றம்

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–(3570) எனக்கு நிரதிசய போக்யனானவனே-அந்யோன்யம் ஒப்பாய் ஸ்ப்ருஹணீயமான உன்திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தால் சிதிலனாய் நிற்கும் அந்த புருஷார்த்தத்தை ஒழிய-

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-(3572)-இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் –தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் –ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா! என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்! என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்! என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-(3573) தாமரைக் கண் என்றே தளரும் -என்று தளர்த்திக்கு உடலானது இப்போது தாரகமாகச் செல்லுகிறது -நீர் ஏறுண்டார்க்கு அந் நீரைத் தெளித்து ஆஸ்வசிப்பிக்குமா போலே -எனக்கு ஆற்றாமையை விளைத்த கண்களாலே என் ஆர்த்தி தீர்க்கப் பார்த்தாயோ இல்லையோ -கண்களால் பிறர்க்கு ஆகாதபடி பண்ண அமையுமோ -சதா தரிசனத்தையும் பண்ண வேண்டாவோ -முதலிலே நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ -என்று கண்ணாலே சொன்ன வார்த்தை ப்ரதிஜ்ஜா மாத்ரமாய் அமையுமோ -அது அர்த்தகிரியாகாரியாக வேண்டாவோ

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-(3583)-ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி –ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ! நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-(3585)ஆயுதமும் ஆபரணமு மாய் இருக்கிற ஆழ்வார்களுடைய சேர்த்தியைக் கண்டு உகந்தும்- தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்-தன்னோட்டை சம்பந்தம் எல்லாம் தோற்றும் படி நோக்கின கண் அழகிலே அநந்யார்ஹ சேஷமாயும்

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-(3616)–இத்தை உண்டாக்கி நோக்கின அளவேயோ –போக்யத்தை இல்லை என்று தான் ஆறி இருக்கிறேனோ -உமக்கு வேண்டுவது என் -என்ன –அவலோகந தாநேந பூயோ மாம் பாலய -என்கிறபடியே அழகிய திருக் கண்களால் நோக்கி அருள வேணும் –தாமரைக் கையாவோ! –ஸோ அப்யேநம் -என்றும் அப்யேஷ ப்ருஷ்ட்ட்டே மம ஹஸ்த பத்மம் கரிஷ்யதி என்றும் சொல்லுகிற படியே திருக் கையில் அடையாளங்கள் என் உடம்பிலே இலச்சினை பட திருக் கைகளால் ஸ்பர்சிக்கவும் பெற்றிலேன் –அக்ரூரனோ பாதியும் போரேனோ நான் -கரேணம் ருது நா தேவ பாபாந்நிர் மோசயன் ஹரிஉன்னை என்று கொல் சேர்வதுவே?பூர்ணே சதுர்தசே வர்ஷே ப்ஞ்சம்யாம் -என்று நாள் இட்டு கொடுக்கலாவது தம்பி மார்க்கோ -அடியார்க்குச் செய்யலாகாது –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-(3627)பார்த்த பார்த்த இடம் எல்லாம் அதுவேயாய் இறாய்க்க பார்த்த இடத்தே வந்து நிற்கும் -நாண் மலர் என்று சம்ச்லேஷ தசையில் செவ்வியை சொல்லுகிறாள் –நைவ தம்சான் நமஸகான் -என்று பிரிந்த பின்பு அத்தலையில் உள்ளது எல்லாம் அறியாளே-வந்து தோன்றுங் உருவு வெளிப்பட்டால் வந்தது என்று இருக்கிறாள் அல்லள் -அத் தலையாலே வந்தது என்று இருக்கிறாள் –

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-(3634)-கோளிழைத் தாமரையும்-முடிக்கையில் ஒருப்படுகிற தாமரை என்னுதல் -தன் ஒளியே தனக்கு ஆபரணமான தாமரை என்னுதல் -இழையைக் கொள்ளப் பட்ட தாமரை என்னுதல் –பொற்காற்றாமரை-நூற்காற்றாமரை -என்று சில பேதம் உண்டு -அந்த நூற்காற்றாமரைச் சொல்லுகிறது –

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-(3641)அப்போது அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களை யுடையனாய் –பவ்யனாய் இருக்கிறவனே -அவனுடைய திருக் கண்கள் போலே யாயிற்று இவருக்கு விபூதியும் ஆகர்ஷகமாய் இருக்கிறபடி -கீழில் திருவாய் மொழியில் –தாமரை நாண் மலர் போல் -என்று பாதகமானது தானே இறே இப்போது அனுகூலமாய் இருக்கிறது

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-(3683)-காணத்தக்கு இருந்துள்ள கண்களை யுடையவன் -சதா தர்சன யோக்கியமான கண்கள் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றால் பங்கஜ சத்ருசமாய் இருக்கை –-கள்வன்-நானும் என் உடைமையும் உன்னதன்றோ என்று ஒரு கால் தன் செல்லாமையை ஆவிஷ்கரித்து ஆத்மாத்மீயங்களை அபஹரித்தவன்-

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே
-8-5-1-(3715)-ஒளியை யுடைத்தாய் ஸ்யாமமான திருமேனி குளிர்ந்த பச்சிலையாக -புருஷ புண்டரீகாப -அக்கமலத்து இலை போலும் திரு மேனி -என்ன கடவது இறே-தாமரை நீள்-வாசத்தடம் போல் வருவானே-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இறே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-(3732)–சர்வ ஸூலபனானவனுடைய -சகல லோகங்களையும் அளந்த –ஒண் தாமரை-ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று அளந்தது-மண்ணவர் தாம் தொழ -ஸுலபயத்தையும் போக்யதையும் அறிய மாட்டாத அஞ்ஞர் தொழ-தாம் வந்து-பரமபதம் நித்ய ஸூரிகளுக்கே யாய் இருக்குமா போலே -உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கேயாய் இருக்கை -அந்தர்க்கு வைத்த இறையிலியில் கண்ணுடையார்க்குப்பிராப்தி இல்லை இறே

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–
8-7-6-(3742)-கரு மாணிக்கக் குன்றத்துத் -ஆச்சர்யத்துக்கு துருதாந்தம் –-தாமரை போல்-அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம் –
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி இருக்கிற திரு மார்வு-கால் -அச்சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்-கண் -திருவடிகளிலே விழுந்தாரை குளிர நோக்கும் திருக் கண்கள்-கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை-செவ்வாய் -இந்த சொல்லுச் சொல்லும் திருவதரம்-யுந்தியானே–அவர்களுக்கு அனுபாவ்யமான திரு உந்தி –உந்தி மேலதன்றோ-என்ன கடவது இறே-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-(3759)-குளிர்ந்து பிரகாசகமாய் -நிரதிசய போக்யமாய் இருக்கும் வடிவு -அனுபவிப்பாருடைய மனஸ்ஸூக்கு தாப ஹரமாய் -பிரகாசகமுமாய் -அபரிச்சின்ன போக்யமுமாய்-இருக்கை -கறுத்த இருள் நீக்குவதொரு மலை -என்றுமாம் –மணித் தடந் தாமரைக் காடுகள் போல்-தெளிந்த தடாகத்தில் பரப்பு மாற பூத்தால் போலே யாயிற்று -திவ்யயவங்களும் வடிவும் இருப்பது –-திரு மார்பு-திருமார்வுக்குச் சிவப்பு பிராட்டி சந்நிதானத்தாலே-வாய்-அவள் வழி யாலே உறவு பண்ணினார்க்கு அனுகூல பாஷணம் பண்ணும் திருவதரம்-கண் -இன் சொல்லு சொல்லப் புக்கு தடுமாறினால் குறையும் தலைக் கட்டிக் கொடுக்கும் கண் –-கை-அந்த நோக்குக்குத் தோற்றாராய் அணைக்கும் கை-உந்தி-உத்தேச்ய பூமியிலே விழா நின்றால்-நடுவே கால் கட்ட வற்றான யுந்தி –-கால் -இவை இத்தனைக்கும் தொற்று விழும் திருவடிகள்
உடை யாடைகள் -அங்கே கிடந்து அனுபவிக்கும் திருப் பீதாம்பரம் –திருக் கமல பாதம் -என்னா -சிவந்தவாடை -என்ன கடவது இறே –-செய்ய பிரான்-இவ்வவயவ சோபை யுடைய பக்தா நாம் -என்று இருக்குமவன் –-திருமால்-அழகே யன்று -இவளுக்கு ஈடான மேன்மையும் உண்டு –யஸ்ய சா ஜனகாத் மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜஎம்மான் -இவளுக்கு இவன் போருமோ என்னாத படி வி லஷணனாய் பெற்ற ப்ரீதியாலே என்னாயன் என்கிறார்

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-(3763)–பொய்கைகளிலே தாமரை மலரும் -பொய்கைகளில் தாமரை கண் செறி இட்டால் போலே பூத்து மலர்ந்து நிற்கும் வூர் -அவ் வூரில் பதார்த்தங்கள் பிறர்க்கு இடம் கூடாது என்கிறாள் –-தண் திருப் புலியூர்-முனைவன் மூவுலகாளி-அவ் வூருக்கு பிரதானம் -அவ்வளவு அன்றிக்கே ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் – ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய
திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம் தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ் திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-(3767)-முதலை மிக்கு இருந்துள்ள தடாகம் தோறும் —கரவு -முதலை /-தாமரைக் கயம் -தாமரை பெருமை –தாமரைத் திரள் -தடவும் கயவும் நளியும் பெருமை -என்ன கடவது இறே / தீவிகை நின்றலரும்-– நிலை விளக்கு எரியுமா போலே அலரா நின்றன –

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-(3792)-அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –-உன்-தாமரைக் கண்களால் நோக்காய்--வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் –அவலோக நதா நேந பூயோ மாம்பால யாவ்யய

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-(3794)-வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி – இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்-தடம் கொள் தாமரைக் கண் விழித்து-பொய்கையை விழுங்கின தாமரை போலே இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி-நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்-நீ எழுந்து அருளி இருந்து -உணர்ந்து அருளும் போதை செவ்வியை அனுபவிக்க வேணும் –மாரி முலை முழைஞ்சில் -என்கிறபடியே –உன் தாமரை மங்கையும் நீயும் -பிராட்டியும் தேவரும் சேர இருந்து -எனக்கு காட்டித் தர வேணும் –பங்கயத்தாள் திருவருளும் -என்று ஆஸ்ரயண தசையாகையாலே புருஷகார பாவத்தை சொல்லிற்று கீழ் -அடிமை செய்யும் இடத்திலும் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவது -என்னுமத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-(3796)கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி –தயங்குகை -தத் காலத்தில் ஒளி யாதல் -கடல் சலித்தால் போலே அசைந்து வருகிறபடி யாதல் –

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்

நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-(3798)-எங்களுடைய சாம்சாரிக சகல துக்கங்களையும் போக்கி –-இங்கு – என்னை யாள்வானே-பகவத் ஞானத்துக்கு அடைவு இல்லாத இஹ லோகத்தில் அடிமை கொள்ளுகிறவனே –-இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-–அகிஞ்சனரான எங்களுக்கே அன்றிக்கே –ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கும் அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்-சிவந்த மடல் -மலரா நின்றுள்ள தாமரையை யுடைய நீர் நிலங்களை யுடைத்தாய் ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-(3812)–தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபியைப் பற்றி வர்த்தியா நின்றான் -கமல யோனித்துவத்தாலே வந்த துர்மானத்தை யுடையவனுக்கு இறே உடம்பு கொடுத்தது-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-(3831)-ஏக தத்வம் என்னும் படி கலந்து பிரிந்த பின்பு அவனுடைய அவயவ சோபை இருந்த படி என்னுதல் -இவளோடு கலக்கையால் வந்த சோபை என்னுதல் – கோலத் தாமரைக் கண் செவ்வாய்–தர்ச நீயமான தாமரை போலே இருக்கிற கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய் – வாட்டமில் என் கரு மாணிக்கம்-பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி ஸ்மாரகமாய் நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தை யுடையனாய் –கலந்த போதை வடிவில் பிரிந்த செவ்வி பிரிந்த பின்பும் அப்படியே இருக்கிற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு நிறம் இரட்டித்த படி –நைவ தம்சான் ந மசகான்-என்று அவன் இருக்க அரை க்ஷணம் தாழ்த்தான் என்னா இவ்வார்த்தையைச் சொல்லுகிறாள் இறே
கண்ணன் மாயன் போல்-ஆச்சர்ய பூதனான கிருஷ்ணனைப் போலே -கலந்த போது காலைக் கையைப் பிடித்து பரிமாறி பவ்யனாய் இருந்த படி-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-
9-5-9-(3833)குளிர்ந்த பெரிய நீரை யுடைய பொய்கையிலே தாமரைப் பூ அலர்ந்தால் போலே யாய் அவ்வளவு இன்றிக்கே பெரிய கண்களை யுடைய கிருஷ்ணன்-நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–அவ் அழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனான் –

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-(3844)-தம்மை நோவு படுத்தின வற்றை சொல்லுகிறார் -பெரிய இதழை யுடைய தாமரை போலே இருந்துள்ள கண்ணையையும் சிவந்த வாயையும் யுடையனாய் –-கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்--கறுத்த எழிலை யுடைத்தான மேகம் போலே வடிவை யுடையனாய் -திருக் காட்கரையை கோயிலாக யுடையனாய்

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
–9-7-3-(3849)-இக் குளிர்த்திக்கு அடியான அகவாயில் வாசத்தடம் இருக்கிற படி -சிவந்து அலர்ந்த தாமரை போலே இருக்கிற கண் முதலான திவ்ய அவயவங்களை யுடையவன் –முதல் உறவு பண்ணும் கண் -அந்நோக்குக்குத் தோற்றாரை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்றார் விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தாரை சாந்த்வனம் பண்ணி தரிப்பிக்கும் முறுவல் –அக் கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே––அவர்களுக்கு உஜ்ஜீவனமான வடிவு -அவயவங்களை பரபாகமான செந்தாமரை இலை போலே யாய்த்து திரு மேனி -வெண்டாமரை என்னில் விஜாதீயம் என்று –அக் கமலம் -என்கிறது —அடிகளுக்கு –வடிவு அழகையும் அவயவ சோபையையும் காட்டி எழுதிக் கொண்டவர்க்கு இவ் வடிவுக்குத் தோற்று வைவர்ணயத்தை தரித்து இருப்பார் யோக்யர் அல்லரோ என்று கேட்டுப் பாருங்கோள் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-(3869)-அல்லி யம் தாமரைக் கண்ணன் -அல்லியை யுடைத்தான அழகிதான தாமரை போலே இருந்த திருக் கண்களை யுடையவன் -முதல் உறவு பண்ணுவது கண்ணாலே இ றே -த்ருஷ்ட்டி பந்தம் பிறந்தால் இறே சம்ச்லேஷம் யுண்டாவது -எம்மான் -அவ் வழகாலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன்
ஆயர்கள் ஏறு -அவ் வழ காலே இடையரைத் தோற்பித்தால் போலே -தன்னோடு ஒத்த ஆண்களை தோற்பிக்குமவன் -பெண் பிறந்தாரை நோவு படுத்தச் சொல்ல வேண்டாம் இ றே -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே-அரி ஏறு எம் மாயோன்-என்னை அநன்யார்ஹை யாக்கி-என்னோடே கலந்து அத்தாலே பெறாப் பேறு பெற்றானாய் மேநாணிப்பு தோற்ற இருக்கிற படி -ஸிம்ஹ ஸ்ரேஷ்டம் –எம் மாயோன் -சம்ச்லேஷ தசையில் காலைக் கையைப் பிடித்து தாழ நின்று பரிமாறினவன் -பேர நின்ற அநந்தரம் தரிப்பு அரிதாம் படி யாயிற்று பரிமாறிற்று –

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-(3871)-வன் கண்ணுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் -இவை நெஞ்சுக்கு விஷயம் ஆகாது ஒழிந்தால் ஆகாதோ -தான் போகா நின்றால் -இவற்றை வைத்து போக வேணுமோ -கலந்த போது தன் பேறு என்று தோற்றும் படியான ஹர்ஷம் அடங்க கண்ணிலே தோற்றும் படியான திருக் கண்களை யுடையவன் என்னுதல் –பிரிவை நினைத்து வாய் விட மாட்டாதே ஆற்றாமை அடங்கலும் நோக்கிலே நின்ற நிலை என்னுதல் –செவ்வாயும் -பிரிவை பிரசங்கித்து முடியச் சொல்ல மாட்டாதே போதைச் சிவந்த அதரமும் –நீலப்-பணி இரும் குழல்களும்–கலவியாலே குலைந்து பிரிவை நினைத்து பேண மாட்டாதே போதை -கறுத்துக் குளிர்ந்த பெரிய திருக் குழல்களும் –

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-(3891)தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை -சென்டரின் நன்மையாலே உரத்த தாளையுடைய தாமரை -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்ன கடவது இறே –-தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்-திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–
10-1-6-(3896)–பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யதை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே
–10-2-10-(3911)-அங்குத்தைக்கு தகுதியான
மதிலை யுடைய திருவனந்த புரத்திலே வர்த்திக்கிற என் ஸ்வாமிக்கு என்று புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க வல்லார்-அந்தமில் புகழினாரே–அமரர் ஆவார் என்கிற அளவன்றிக்கே -விண்ணுளாரிலும் சீரியர் ஆவார் –

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-(3913)-நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–தகவிலை தகவிலையே நீ கண்ணா–தகவிலை-நீ இருந்த லோகத்தில் கிருபை இல்லை -கண்ணா நீ தகவிலை -ஜகத்தில் யுண்டாகிலும் கிருஷ்ணனே உன் பக்கல் கிருபை இல்லை என்னுதல் –வீப்சையாலே-உனக்கு கிருபை இல்லை என்று நான் கொடி எடுக்கிறேன் என்னுதல் —சீதா விவாஸ நபடோ கருணாகுதஸ்தே –சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்யதே –விலக்காத அளவைக் கொண்டு பிறரை இன்னாதாகிறது என் –உன் பக்கல் கிருபை இல்லை –ஏவமார்த்தா ஸூ யோஜித் ஸூ க்ருபா கஸ்ய நஜாயதே —

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-(3917)-ஆபரண பிரசுரமாய் -அது தான் மிகையாம் படி தனக்குத் தானே ஆபரணமான கையை –அந்தோ -சேர்ந்து குளிர்ந்து விடாயார்க்கு சமைத்து வைத்த தண்ணீரை வார்க்கச் சொல்ல வேண்டுவதே -என் ஆற்றாமையை நான் உனக்கு அறிவிக்க வேண்டும்படி யாவதே –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-(3920)-இனிப் பொருந்தோம் என்று பெண்கள் நெஞ்சில் பிறந்த மறம் எல்லாம் தீரும்படி வசீகரிக்க வல்ல கண்ணும் –
வாயும்-கண்ணாலே நினைத்ததை ஆவிஷ் கரிக்கிற வாயும் – கைகளும்-அந்நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்ற அளவில் அனுவர்த்தித்து அணைக்கிற கைகளும்-பீதக வுடையும்-அவற்றுக்குத் தோற்று விழும் போது நடுவே தொகையும் திருப் பீதாம்பரமும் –பீதாம்பர தர ஸ்ரக்வீ –-காட்டி--உனக்கு அவர்களை அழைக்கைக்கு பணி யுண்டோ -வடிவைக் காட்ட அமையாதோ-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-(3951)-திருவடிகளாலே என் தலையை அலங்கரியா நின்றான் –-தாமரைக் கண் என் அம்மான்–என் முன்னே நின்று கண் அழகைக் காட்டி ஜிதம் எண்ணப் பண்ணா நின்றான்-நிலை பேரான் என் நெஞ்சத்து -ஹிருதயத்தின் நின்றும் கால் வாங்கு கிறிலன்-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-(3990)-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –-என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே -நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல்களில் மாலை -பத பிரயோகங்களும் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

August 13, 2026

திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
– 2-8-ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்-வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற பெரும் திரு மார்வை உடையராய் –-மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் – ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கேv
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-தெய்வ நன் மாலை – அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள்-
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்து கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா -1-4 7- –இப்படி பெரியனான அவனை(மால் -வியாமோஹம் -பெருமை -கறுமை )-சிறியன் என்று பரிச் சேதியாதே–பெருமையை உடைய சந்த்ரனே –-உன் பெருமைக்கு ஈடாக – இவன் நம்மை ஆதரித்து அழைக்கப் பெற்றோமே -என்னும் உகப்பு தோற்ற ஓடி வா –

அன்னமும் மீன் உருவுமாய் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்ன வலம் களைவாய் ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் யசோதை உகந்த பரிசு ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே -1 5-11 –ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாகரான ஸ்ரீ ஆழ்வார் அருளி செய்த -திராவிட ரூபமாய் –
இனியதான இசையோடு கூடி இருந்துள்ள -தொடைகளான இப் பத்தையும் -அப்யசிக்க வல்லவர்கள் –

தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –மருவும் தமநகமும் கலந்து கட்டின அழகிய மாலைகள் ஆனவை பரிமளம் கமழா நின்றன-உன் திருக் குழலிலே சேரத் தக்க மணம் பாழே போகா நின்றது என்கை-

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே
– 2-7 10-யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றை சொல்லிலும் பண்ணிலே சேரும்படி சொல்லா நிற்கும்-ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த-இம் மாலையும் ஒரு பத்தே -என்று இதனுடைய ஸ்லாக்கியதையை சொல்லுகிறது –இதுக்கு ஒரு பலம் சொல்லாதே இத்தை ஸ்லாகித்து விட்டது இதனுடைய ரச அனுபவம் தானே இதுக்கு பலம் என்று தோற்றுகைக்காக –

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே
-2 8-10 –பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுகையே வேத தாத்பர்யம் என்று அறிந்து –கைக் கொள்ள வல்ல ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இத் திருமொழியில் –பாட்டுகள் தோறும் பின்னடியில் சொன்ன பிரயோஜனத்தை கைக் கொள்ள வல்ல பக்திமான்களாய்  உள்ளவர்களுடைய மங்களா சாசன விரோதியாய் உள்ள பாபம் தன்னடையே விட்டு போம் –

காரார் மேனித் நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே -3-1-11- –இயல் அழகால் மிக்கு -அதுக்கு மேலே இனிய இசையோடு கூடி இருந்து உள்ள சந்தர்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்கள்-இந்திரியங்களை பட்டி புகாமல் ஸ்வரூப அநுரூபமாக நடக்கும்படி நியமிக்கும் அவனுக்கு
நித்ய கிங்கராய் பெறுவர்-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள்
வல்லவர்க்கு இடர் இல்லையே -3 2-10 –ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளவர்களுக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சப்தார்தங்களினுடைய ரசத்தை உடைத்தான -தமிழ் தொடைகளான இப்பத்தை சாபிப்ராயமாக வல்லவர்களுக்கு ஸ்ரீ பகவத் விஸ்லேஷ துக்கம் இல்லை

வலம் காதில் மேல் தோன்றிப் பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய் மடுத்தூதி ஊதி
அலங்காரத்தால் வரும் மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு
விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – 3-4-9-வலக் காதிலே செம் காந்தள் பூவை அலங்காரமாக சாத்தி –இடக் காதுக்கு ஒன்றும் சொல்லாமையாலே –
ஒரு காதுக்கு சாத்திக் கொண்டு வருகிற இது தானும் ஓர் அழகாக சாத்திக் கொண்டு வந்தான் -என்னுதல்-ஒரு காதுக்கு சாத்தின அளவில் மல்லிகை மாலையை காண்கையாலே-அத்தை மறந்து இத்தை சாத்தி விட்டான் -என்னுதல்-வனம் -என்கிற இத்தை மல்லிகையோடு சேர்த்து -காட்டு மல்லிகை -என்னுதல்-அன்றிக்கே-வனம் என்று –வனப்பத்தை உடைத்தாய் -அழகாய் -மல்லிகையால் உண்டான அழகிய மாலை -என்னுதல்-மௌவல் மாலை-மௌவலாவது   -மல்லிகையின் அவாந்தர பேதம்
பூவை காயா என்னும் இடத்தில் பூவை யாவது காயாவின் அவாந்தர பேதம் ஆனால் போலே
மௌவல் மாலை என்று இங்கும் அந்த வனப்பு கூட்டிச் சொல்லவுமாம்-கீழ் –அணிந்து -என்றதை-
இங்கும் கூட்டி இம் மாலைகளை அணிந்து என்று சொல்லக் கடவது-இவை தான் திரு மார்புக்கு அலங்காரமாக சாத்துமவை இறே-சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு –சிலிங்காரம் -சிருங்காரம் -அலங்காரம் என்றபடி-இத்தால் திருக் குழல் பணியாக சாத்தும் பூம் தொடைகளை சொல்லுகிறது

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 – ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளார்க்கு நிர்வாஹராய்-அரவத்தமளிப் படியே –-ஸ்ரீ சர்வேஸ்வரனை எப்போதும் தம்முடைய திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கையாலே –-ஸ்ரீ விஷ்ணு சித்தர் -என்னும் திரு நாமத்தை உடையரான-ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இப்பத்தையும் –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –ஸ்ரீ வில்லி புத்தூரிலே சர்வோத்தரராய்க் கொண்டு -விளங்கா நின்றுள்ள ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த சப்த சந்தர்ப்பமான இப் பத்தையும்

நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள் இதோர் அற்புதம் கேளீர்
தூவலம் புரி உடைய திருமால்  தூய வாயில் குழலோசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகுலிப்ப வுடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே -3 6-1 – –கயிறு மாலையாகி வந்து –

கயிற்றிலே ஒழுங்கு பட சேர்த்த மாலைகள் போலே நிரை நிரையாக வந்து –இவனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்-அன்றிக்கே – குழலோசை வழியே வந்து -இவனைக் கண்டவாறே -லஜ்ஜித்து –
கவிழ்தலை இட்டு -( சூழ்ந்து )-நின்றார்கள் என்னுதல் -எதிர் செறிக்க மாட்டாமல் கவிழ்தலை இட்டு நின்றார்கள் -என்னுதல்-

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள்  என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே
-3 7-11 –ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த –
சந்தர்ப்பமாய் ஸ்லாக்யமாய் இருந்துள்ள பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக அனுசந்திக்க வல்லார்களுக்கு ஸ்ரீ பகவத அனுபவாதிகளுக்கு விரோதியாய் வருவதொரு துக்கம் இல்லை-

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-எல்லியம்போது-அம் எல்லிப் போது – இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் -அழகிய-ஸூக அனுபவத்துக்கு ஏகாந்தமான
காலம் என்பதால் அம் காலம்– இராத்திரி வேளையிலே- – இனிமையான இருப்பாக இருந்ததான ஓர் இடத்திலே-மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் — மல்லிகைப் பூவினால் தொடுக்கப் பட்ட சிறந்த மாலையினால் நீர் ஸ்ரீ ராமபிரானைக் கட்டியதும் ஓர் அடையாளம் –வனவாசம் பற்றி இன்னும் அருளிச் செய்யவில்லை என்பதால் இது திரு அயோத்யையில் நிகழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தம் –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே
-4- 1-10 –வேதத்துக்கு நிர்வாஹரான 
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த மாலையான இப் பத்தையும் -ப்ரீதி பர வசராய் கொண்டு  
அடைவு கெடப் பேசும் மனசை உடைய பக்தராய் உள்ளவர்கள் -காண்கைக்கு தேட வேண்டாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் படி  சர்வ ஸ்மாத் பரனான அவனுடைய திருவடிகளை சேரப் பெறுவர்கள்.

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால்  இரும் சோலையே
– 4-2 -10-மாலை வாய்த்-ராத்திரி இடத்திலே-அந்த சம்ஸ்லேஷ ரசம் முற்றிக் கனியா நிற்கும்-இப்படி இருந்துள்ள சிறப்பை உடைய திரு மால் இரும் சோலை -என்கை-

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3-பொற்கென்ற பூக்களை உடைத்தான புன்னையும் -செருந்தியும் – புனத்தில் உண்டான வேங்கையும் கோங்கும் ஒழுங்கு பட நின்று பூக்கையாலே – திருமலை ஆழ்வாருக்கு பொன்னரி மாலைகள் சுற்றினாலே போலே இருக்கும் பொழில்களை உடைய மால் இரும் சோலை -அதுவே -கடல் வண்ணன் மலை –(பொன்னரி-மரம் தங்கம் -பூக்கள் மணிகள் போல் )

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான் மேல் 
பத்தராய் இறந்தார்   பெரும் பேற்றை பாழித் தோள்  விட்டு சித்தன் புத்தூர்  கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் 
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே –
4- 5-10 –ஆசைவாய் சென்ற சிந்தையராகி -என்கிறபடியே  கரண த்ரயமும் –புறம்பு போதல் -கலந்து இருத்தல் செய்யாதே  ஸ்ரீ யபதி விஷயமாக செய்த இப் பத்துப் பாட்டையும் அப்யசித்தவர்கள் -ஸ்ரீ ஆழ்வாரைப் போலே – கரண த்ரயமும் ஒரு படிப்பட உடையராய்  ஸ்ரீ யபதி பக்கல் சென்ற மனசை உடையர் ஆவார்கள்-

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கிய வன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு

கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4- 7-11 –நிலை நின்ற பிரேமத்தாலே செய்த தமிழ் தொடை யான இது-ஒருகாலும் நீங்காதே வர்திக்கும்படியான நாவை உடையவர்களுக்கு –அதாவது – எப்போதும் இத்தையே சொல்லிக் கொண்டு திரியும் அவர்களுக்கு -என்கை-கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே-இருந்த கணக்காமே-அதாவது
இத் திருமொழி தங்கின நா உடையார்களுக்கு -ஏதேனும் ஓர் இடத்தில் இருந்தாலும் – ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பிறப்பால் வந்த ஏற்றத்தை உடைய கங்கையிலே ஸ்நானம் பண்ணி – ஸ்ரீ திருக் கண்டம் கடி நகரிலே எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீயபதியானவன் திருவடிகளின் கீழே நிரந்தர சேவை பண்ணி -இருந்ததோடு பிரயோஜனம் ஒக்கும் -என்கை-பகவத் ப்ரீதி இறே அதுக்கு பிரயோஜனம் –-அது இவர்களுக்கும் ஒக்கும் என்றது ஆய்த்து

பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல் 
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு 

இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –பாட்டு தோறும் திருவரங்கம் என்கிற திரு நாமத்தை உடைத்தான தமிழ்த் தொடையாக -ஸ்ரீ பெரியாழ்வார் விஸ்தரேண அருளிச் செய்த இப்பத்தையும் கொண்டு -மது கைடபர் களாகிற இவருடைய சரீரத்தையும் திரு வனந்த ஆழ்வானுடைய சுவாச உஷ்ணத்தாலே  தக்தமாக்கி பொகட்டவனை-இத் திரு மொழியைக் கொண்டு இப்படி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ பெரிய பெருமாளை  வாய் படைத்த பிரயோஜனம்  பெரும் படி   ஏத்த வல்லார்களுக்கு அடியாராய் உள்ளவர்கள் -நாங்கள் என்று தம்முடைய சம்பந்திகளையும் கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் -இத்தால்-இத் திரு மொழியைக் கொண்டு ஸ்ரீ பெரிய பெருமாளை ஏத்துமவர்கள்  விஷயத்தில்  தமக்கு உண்டான பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்தார் ஆய்த்து-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே
  – 4-10 -10-அனுபவத்துக்கும் –
மங்களா சாசனத்துக்கும் விரோதி ஆனவற்றை போக்கிக் கொள்ளுகைக்காக அருளிச் செய்த
சப்த சந்தர்ப்ப ரூபமான இப் பத்து பாட்டையும்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–30-சங்கத் தமிழ் மாலை – குழாங்களாய்-என்னுமா போலே திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் – பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறேபிராட்டி ஆண்டாள் ஆனால் போலே உபநிஷத் தமிழ் ஆனபடி –பாவனமான அளவன்றிக்கே போக்யமுமாய் இருக்கையும் தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –கோதை சொன்ன மாலை –மாலையே கட்டின மாலை – மாலைக் கட்டின மாலை –அடுத்த பத்தியோடு இரண்டு தலையும் தாள் பூவும் நடுவே நாயகமுமாய் தொடுப்புண்ட மாலை

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடை ன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்- சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து-பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –-இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக –
வானவர்க்காவர் நற்கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8--எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –திருவாய் -7-9-11-மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே– நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——5-11-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே-விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்-நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -என்று இறே தமப்பனார் வார்த்தை-இக்குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்- நாத்தனராய் -இதுக்கு எல்லாம் கடவாளாய் அபிமானித்த துர்க்கை யாய்த்து-மாலைகளும் மடியும் (கூறைப் புடைவையையும் ) சூட்டி ஒப்பித்தாள்–இவளுடைய ஸ்பர்சம் தானே ஓன்று தங்கி அவனோடு அணைந்தால் போலே இருக்கிறது காணும் இவளுக்கு–வேத மந்த்ரங்களால் பரிசுத்திக்கப் பட்ட கூறைப் புடைவையையும் தேன் ஒழுகும் மண மாலையையும் சித்தப் படுத்திக் கொண்டு – அவனோடு கூடப் பிறந்தவள் என்னைத் தொட்டு மண மாலை சூட்டப் பெற்றேன் காண் தோழி –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில் கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –ஆண்டாளுக்கும் உப லஷணம் – பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றதுமாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11- என்றார் இறே தாம் கை கண்டவர் ஆகையாலே –

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று – சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்–பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –-கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்-மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5- அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே – அம்மாலையின் படியும் அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் – தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே – அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த –-அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்-

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-ஒரு மாலை பெற வேணும் என்று அல்ல இவளுக்கு நிர்பந்தம் –அவனும் மால் தானே-அவன் மார்விலே ஆசைப்பட்டு இட்ட மாலை வேணும் என்றதாய்த்து-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே--14-2-மின்னும் மேகமும் சேர்ந்தால் போலே யாய்த்து ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமாய் உஜ்ஜ்வலமான வனமாலை அசைந்து வரும்படியாக –
மாலையிடுவான் -மாலா காரர் -இவனுக்கு பவ்யனாய்த்து இறே இருப்பது-கர்ப்ப தாசர் -என்னுமா போலே – தானும் மாலா காரர் மகள் இறே – தான் இட்ட மாலையையும் சாத்திக் கொண்டு விளையாடுமே-இம்மாலை யிட்டால் விக்ருதராய் இருக்கும் திரு ஆய்ப்பாடியிலே காண்கை அன்றிக்கே கண்ட பெண்கள் மயங்கி விழுவார்கள் – ஸ்ரீ பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி விளையாடக் கண்டோம் –

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே —14-8-அக வாயில் தண்ணளி மிக்கு இருக்கும்
அதுக்கு நிபந்தனம் பிராட்டியோட்டை வாசனம்-பாஞ்ச ஜன்யத்தோடு சொல்லில் கண் எச்சில் படும் என்று பிரித்து அனுபவிக்கிறாள் –-கூராழி வெண் சங்கு ஏந்தி-திருவாய் -6-9-1- என்றும்-சங்கு சக்கரங்கள் -திருவாய் -7-2-1-என்பது போலே சேர்த்துச் சொல்லாமல் பிரித்து அனுபவிக்கிறாள் –

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-காயாவின் அழகிய பூவாலே செய்யப்பட மாலை போலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை-அரணாகப் போரும் மதிளை யுடைய ஸ்ரீ கோயிலிலே-அப்படி பரிவனான ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற-சமயோ போதிதஸ் ஸ்ரீ மான் -என்னும் படி கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனை-

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-கேசியை அநாயாசேன பிளந்து – ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த ஆஸ்ரீத-வ்யாமுக்தனை-

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-உள்ளில் அர்த்தத்தில் இழிய வேண்டாதே – பதங்கள் சேர்ந்த சேர்த்திகள் பார்க்க வேண்டாதே –
இது தானே ஆகர்ஷகமாய் இருக்கிற தமிழ்த் தொடை பத்தும் வல்லார்-சீலாதி குண பூரணராய் –
சர்வ ஸ்வாமிகளாய்- வத்சலராய் இருக்கும் -ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே யனுபவிக்க ஆசைப் பட்டால் போலே கிட்டப் பெறுவார்கள் –

தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே–2-1-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்-திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வாழ்த்தி –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே-அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி-மால் கொள் சிந்தையராய்-பித்தேறின மனஸை உடையராய்

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே
– 2-8-ஸ்வ ஸ்பர்சத்தாலே அலை எறிகிற திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன்-வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற பெரும் திரு மார்வை உடையராய் –-மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-செவ்வித் தாமரைப் பூ போலே மலர்ந்த திருக் கண்களை உடையவரை-பக்தியை உடையராய் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் – ப்ரீதி பிரேரிக்க இருக்க மாட்டாதே சஞ்சரித்து-ஸ்ரீ கோயிலிலே ஸூலபரான படியைக் காட்டி என்னை எழுதிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாளுக்கேv
பக்தி கார்யமான பித்தேறித் திரியும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மிக்கு பித்தேறா நின்றது -என்கிறார் –

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே
2-10-இனிய சப்தங்களை உடைய தமித் தொடை வல்லவர்கள்-இவர் ஆசைப் பட்டுப் போந்த பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆகிற புருஷார்த்தத்தை லபிப்பார்கள் –-

நூலினேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னோடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா! என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-2..-தேநத்தேதம நு வ்ரதா-என்னுமா போலே
அவன் என் பக்கல் வ்யாமுக்தன் ஆன படி கண்டு நானும் பித்தேறினேன் –

மங்கல நல் வனமாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி
பொங்கிள வாடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின் இன் இசை போதராதே– 6-9-மங்களம் என்று சொல்லப் பட்டவை எல்லாம் உடைத்தாய் –தர்ச நீயமுமாய் இருக்கிற வனமாலை-மை போல் நெடு வரைவாய் தாழும் அருவி போல் தார் கிடப்ப –என்னுமா போலே-திரு மார்விலே விளங்க-

அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான் குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே– 6-10-பாட்யே கே யே ச மதுரம் –என்னும்படியான தமித் தொடை பத்தும்-

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை தமக்கு முடி மேல் மாலையாக உடைய ஸ்ரீ பெருமாள்-அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே
உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-அழகிய இசையோடு கூடின தமிழ்த் தொடை வல்லவர்கள்-இங்கே இருந்து அவதாரத்தில் ஏக தேசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாதே இருந்து புலம்பாதே-உபய விபூதி நாயகனை ஸ்ரீ பரம பதத்தில் நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் –

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன

பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— 8-11-ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய பால்ய அவஸ்தையில் ஸ்ரீ கௌசல்யார் சொன்ன பாசுரத்தை ஸ்ரீ திருக் கண்ணபுரத்திலே சொன்ன தமிழ் தொடை-ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த-லஷணத்தால் குறைவற்ற இப்பத்தும் வல்லார்கள்
ஸ்ரீ திருத் தாயாராயும் அடியாராயும் அனுபவிக்கப் பெறுவார்கள் –

ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் – ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார் –

தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-தாது மிக்க கொன்றை மாலை என்ன -நெருங்கி சிவந்த ஜடை என்ன -இவற்றை உடைய ருத்ரன்-கொன்றை மாலையைச் சொல்லுகையாலே -போக ப்ரதானன் என்றும் – தீர்க்கத பாவாகையாலே செறிந்து ஸ்தான பாஹூள்யத்தாலே சிவந்து இருக்கிற ஜடையை உடையான் ஆகையாலே -அந்த போகம் தான் சாதித்து லபித்தது என்றும் சொல்லுகிறது –இத்தால் -போகமே புருஷார்த்தம் -அது தானே ஈஸ்வரனை ஆஸ்ரயித்து பெற வேணும் என்கிறது-

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே-திருத் துழாய் -நாதத்வ சிஹ்னம் ஆகையாலும் -போஹ்யத்வ சிஹ்னம் ஆகையாலும்-ப்ராப்ய பூதனும் நீயே என்கை

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38–இப்படி ஷூத்ரரான இடையருடைய சேஷ்டிதத்திலே இழிந்தவன் -சர்வ சேஷியாய் –-அவாக்ய அநாதர -என்கிற பூரணன் கிடீர் என்கிறார்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் வடத்தோடும் வனமாலை யோடும் கூடின திரு மார்வை உடையவனே –சத்தா ப்ரயுக்தமான சக்தி யதிசயத்தையும் -அவயவ சோபையையும் -அலங்கார
சோபையையும் அனுபவிக்கிறார்-

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்–ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-பரம்பி கிளர்ந்து தெளிந்த திரைகளை உடைய ஷீராப்தியிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஆஸ்ரித வத்ஸலனுடைய வாத்ஸல்ய வாசியான திரு நாமத்தை வாயாலே-சொன்னால் 

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113–ஸ்வரூப அநு பந்தியான கல்யாண குணங்களால் வந்த வைலஷண்யத்தை உடைய சர்வேஸ்வரனை-நண்ணும் வண்ணம் எண்ணு –இப்படி துர்மாநியானவனுடைய பாதகத்தைப் போக்கினவன் –அநந்ய பிரயோஜனரான நம்முடைய துர்மாநாதிகளைப் போக்குவிக்கக் குறை இல்லை –நீ அவனை ப்ராபிக்கும் பிரகாரம் அவன் இரக்கமே என்று புத்தி பண்ணி இரு-அதாகிறது –அவனை நம் தலையாலே ப்ராபிக்க விரகு இல்லை –
அவன் தானே இரங்கி தன்னைத் தந்து அருள வேணும் என்று வ்யவஸ்திதனாய் இருக்கை=

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-தமோ அபிபூதி யோடும் -விஷயாந்தர ப்ராவண்யத்தோடும் -செல்லக் கடவ ராத்ரியும் – தேக யாத்ரா  சேஷமாக போது போக்கக் கடவ அஹஸ்ஸூம் – ராத்ரியோடே கூடின ஸாயம் சந்தையும் – அஹஸ் ஸோ டே கூடின ப்ராதஸ் சந்தையும் – கரண த்ரயங்களும் ஏக விஷயமானாப் போலே – சர்வ காலத்துக்கும் விஷயம் அதுவே யாகை –

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–5—தண் துழாய் மாலை மார்பன் –சர்வேஸ்வரத்வ ஸூசுகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமானவன் –இவர்கள் பற்றின துராரராத விஷயங்கள் போல் அன்றியே தன் வெறுமையை முன்னிட்டு என்னைப் பற்றுமவனை ரஷிக்க கடவேன் என்று தனி மாலை இட்டு கொண்டு இறே அவன் இருப்பது –அவன் ரஷகன் ஆகாதவன்றும் கிட்டுவார்க்கு அவ் வடிவும் ஒப்பனையுமே பிரயோஜனம் போரும் கிடீர்-திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்

எறியு நீர் வெறி கொள் வேலை மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர் கோனை ஏத்த
அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
பொறியில் வாழும் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –13-பரிமளத்தையும் – செவ்வியையும் உடைத்தான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருத்யனாய் இருக்கும் இருப்புக்குத் தோற்று நித்ய ஸூரிகள் ஏத்துமா போலே இவர்களையும் ஏத்த வாய்த்து கண்டது –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-நம்முடைய குறைகளைப் பார்த்து அகல வொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத் தோற்றத் தனி மாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்;-நாங்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு நீர் தனி மாலை யிட்டுக் கொண்டிருப்பானேன்?

உள்ளத்தே உறையும் மாலை யுள்ளுவார் உணர்வு ஓன்று இல்லாக்
கள்ளத்தேன் நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்லிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே–34-நினைவுக்கு வாய்த் தலையான நெஞ்சிலே இருக்குமவன் ஆய்த்து- புறம்பு உள்ளான் ஒருவன் ஆகில் இறே-கண்ணால் கண்டத்துக்கு அவ்வருகு அறியான் என்று இருக்கலாவது –சதா சந்நிஹிதனாய் இருக்கை-போக்குப் பகுதி உண்டாகில் இறே போன போதாக மூலை அடியே நடக்கலாவது –மாலை –சர்வாதிகனை –ஆத்மாவும் உள்ளே வர்த்தியா நிற்கச் செய்தே சர்வத்தையும் அறிய மாட்டான் –ஆகாசம் வியாபியா நிற்கச் செய்தே
வ்யாப்யத்தை குறித்து அதுக்கு நியந்த்ர்தை இல்லை –இவன் –சர்வஞ்ஞனாய் சர்வ நியந்தாவாய் இருக்கும் –

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-தேன் பெருகா நின்ற திருத் துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்) போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை-தருவர் ஏல் அன்றேஅநுக்ரஹிப்பாரானால் அப்போதே-புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்க மாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே–45-கவளமால் யானை கொன்ற கண்ணனை –
கவளம் கொண்டு இருப்பதாய் பெருத்து இருந்துள்ள ஆனையைக் கொன்ற கிருஷ்ணனை –-களபமால் -என்று எதுகைக்கு சேர பாடம் ஆன போது – களபம் என்று உருவத்தில் பெருத்த யானை -என்றபடி –அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி கோயிலிலே வந்தார் ஆய்த்து –-கீழே ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றார் இங்கே ஆனை கொன்ற என்கிறார்-இத்தால்
தேவாநாம் தானவாநாஞ்ச -என்றது அழிந்தது-அங்கு உள்ளார் விரோதிகளைப் போக்கி தன்னை அனுபவிப்பித்தாப் போலே இவர் தம் உடைய பிரதிபந்தங்களைப் போக்கி தம்மை அனுபவிப்பித்த படி –
திரு அவதரித்த அன்று ஒளிந்து போன ஊரிலே கண் காண வந்து விரோதியை அழியச் செய்த ஏற்றத்தை அனுபவிக்கிறார்–யரங்க மாலைத் – அவதாரத்துக்கு பிற்பாட ரான தம்முடைய விரோதியைப் போக்கி கோயிலிலே வந்தார் ஆய்த்து –மாலை -ஆஸ்ரித விஷயத்தில் பெரும் பித்தர் ஆனவரை –விரோதி நிரசனமும் தத் பூர்வகமான ஸ்வ அனுபவமும் தன் பேறாய் இருக்கை-

மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் —10-அதிக்ருத அதிகாரமாய் -சமஸ்க்ருதமாய் -தெரியாத சப்தங்களாலே சொன்ன அர்த்தங்களை வ்யக்தமாக எல்லார்க்கும் தெரியும்படி செவ்விய சொல்லால் சொன்ன-தெய்வ நன் மாலை – அப்ராக்ருதமாய் – கேட்டார் ஆரார்கள் செவிக்கு இனிய செஞ்சொலே -10-6-11-)-என்று நித்ய ஸூரிகள் கேட்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற மாலை தொடை-

கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட களிறென்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே
—1-2-10–ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று-அரிய இன்னிசை-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தம் வாயாலே அரிய இன்னிசை -என்பதே என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சிலரோடு பிணக்கி-கையிலே தாளத்தை பொகட்டு-இந்த பதிகத்தை என்னுடன்- இயலிலும் இழியலாம் பொருளிலும் இழியலாம் இசையில் ஒருவராலும் இழிய ஒண்ணாது-அருமையால் நினைக்கிறது பெருமை-இனிமையால் நினைக்கிறது -சுவைப் பாட்டை –அருமை பெருமைகளையும் சுவைப் பாட்டையும் உடைத்தாய் இருக்கும்-

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த மாலை-

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10-திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை
வல்லவர் தீதிலரே-1-7-10–இரும் தமிழ் நூல் புலவன் – ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –செஞ்சொல் மாலை வல்லவர் –-அரிய அர்த்தத்தை உள்ளபடி காட்டவற்றான செவ்விய சொல் தொடை வல்லவர் –

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே–1-8-10–திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அழகிய தமிழில் செவ்விய சொல்லாலே செய்த தொடையை தரித்து சொல்ல வல்லவர்கள் நிச்சிதமாகவே கடல் சூழ்ந்த பூமிக்கு ரஷகராய் பின்பு நித்ய விபூதியும் தங்கள் இட்ட வழக்காம் படி
ஆகப் பெறுவர்கள் –

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லாரவர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்

அண்டமாள்வதாணை அன்றேலாள் வர மருலகே—2-2-10-சீர் என்று கவிக்கு அலங்காரமாய் இருப்பது ஓன்று உண்டு – அத்தை சொல்லிற்று ஆகவுமாம் –அன்றிக்கே – இங்கே வந்து சாய்ந்த படியாலே பகவத் குணங்கள் நெஞ்சிலே ஊற்றிருந்து சொல்லி அல்லது நிற்க ஒண்ணாதபடி அவை ப்ரேரிக்க பாடின மாலை என்னவுமாம் –

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—
2-3-10-ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –

நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே–2-4-10-திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதாநராய் இருப்பாருமாய் – யுத்தத்திலே மத்த கஜத்தை நடத்த வல்லருமான
ஆழ்வார் ஒலி உடைத்தாம்படி செய்த தமிழ் தொடை வல்லார்க்கு –

மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி தன்னை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே—2-8-10—-ராஜா தொண்டைமான் சக்கரவர்த்தி அவன் பக்ன அபிமானியாய் ஆக்கின பின்பாயிற்று ஈஸ்வரன் நல் முடி தரித்ததும்-சர்வேஸ்வரத்வம் நிலை நின்றதும்-முன்பு எல்லாம் ஈரரசு பட்டு இறே போந்தது –தான் குறையக் கடவது அன்றிக்கே கேட்டார் செவிக்கும் ஆகர்ஷகம் ஆகும்படியான இசையை உடைத்தாய்
ஆஸ்ரயம் தான் செவ்வியதாய் இருக்கிற இவற்றைக் கொண்டு

பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே—2-9-10–கவிக்கு சொல்லுகிற லஷணங்கள் ஒன்றும் குறையாதபடி அருளிச் செய்த பகவத் குணங்கள் நெருங்கத் தொடுத்த செவ்விய தமிழ்த் தொடை வல்லார் பெரிய பிராட்டியார் உடைய கடாஷத்தாலே லோகத்திலே மகா ரதராய் கடல் சூழ்ந்த பூமியை அடைய ஆண்டு –

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக் கோவலூர் அதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும் வல்லார்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே–2-10-10-பிறருக்கு இடரை விளைக்கக் கடவதான அது கொண்ட இடரைப் போக்கி அதின் பக்கலிலே வ்யாமுக்தன் ஆனவனை-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10–பரம உதாரரான திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த திரு மொழி பத்தும் வல்லார் ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வாராகப் பெறுவர்- கைங்கர்ய ஸ்ரீ விச்சேதம் இல்லாமல் பெரும் தாளுடை பெருமான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே –

பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னம் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதி உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணை கிற்பீர் நீல மாலைத்
தஞ்சடைய இருள் தழைப்பத் தரளம் ஆங்கே
தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்
செஞ்சுடர் வெயில் விரிக்கும் அழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே–3-4-4—அவ் ஊரில் மாடங்களில் அழுத்தின நீல ரத்ன மாலையை தனக்கு தஞ்சமாக உடைய-அதாவது-ராத்ரியை தனக்கு அபாஸ்ரயமாக உடைத்தாய் இருக்கிற-இருளை தழைப்ப நடுவே அழுத்தின முத்தானது குளிர்ந்த சந்தரன் உடைய நிலாவைக் காட்ட இடை இடையே அழுத்தின பவளமானது புகரை உடைய
ஆதித்யன் உடைய பிரகாசத்தை காட்டா நின்றது –ஆக ஏக காலத்தில் இருளும் சந்த்ரோதயமும் வெய்யிலும் ஒக்கக் கண்டு அனுபவிக்கும் படியான தேசம் ஆயிற்று – (கோபமும் அருளும் ஓக்கக் காட்டி அருளிய ஸ்ரீ நரசிம்மன் போல்

செங்கமலத் தயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்ட முக்கி யடையார் சீயம்
கொங்கு மலர் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலக்குக்கு தலைவர் தாமே–3-4-10—சதுர்முக சமரான பிராமணர் திரண்ட தேசத்திலே சீராம விண்ணகரிலே நித்யவாசம் பண்ணுகிற புண்டரீ காஷனை கவி பாடிற்று –தமிழுக்கு கடவார் திரள இருந்தால் இத்தையே எப்போதும்
ஒக்க கொண்டாட வேண்டும்படி இருக்கிற இத் தொடையல் பத்தும் வல்லார்-

நீடு பல் மலரிட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா
பாடலின் ஒலி சங்கினோசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடலோசை யறா அணி யாலி யம்மானே–3-5-5-ஒழிவில் காலம் எல்லாம் – 3-3-1–எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டு -4-7-8- என்கிறபடியே-பலவகைப்பட்ட மலரை உடைத்தான மாலைகளை இட்டு உன்னுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருக்கிற திருவடிகளை தொழுது ஏத்துகிற –

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென்னாலி யிருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலி செய்த
நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று
தாம் உடனே
வல்லராய் யுரைப்பார்க்கு இடமாகும் வானுலகே–3-5-10–ஆழ்வார் அருளிச் செய்த நல்ல இன்னிசையான- தொடை-இதில் உண்டான ஆதராதி அதிசயத்தாலே விட மாட்டாமை பிரித்து பிரித்து அருளிச் செய்கிறார்-

மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே
–3-6-10-நெடுமாலை – தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும்-தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை –கண்டுரைத்த தமிழ் மாலை –-தூதருக்கு வார்த்தை சொன்னபடி கேட்டு அவன் முன்னே வந்து நிற்க கண்டு சொன்ன-

தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10–திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த-இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் – தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா – ஆதி வாஹிக கணத்தோடு தானே வழி காட்டிப் போம்-

வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10—நல்ல வயலை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்-ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த தமிழ் தொடை யாகிற இத் திரு மொழியைக் கற்றார்-

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கமலி கடலுலகில் மலி வெய்து நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ்
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியோடும் விசும்பாளும் தன்மை பெறுவாரே–3-9-10—சத்ருக்கள் உடல் துணியும்படியாக வாள் வீசுகிற பர கால ஆழ்வார் அருளிச் செய்த சங்கப் புலவர்கள் திரள இருந்து தமிழ் கொண்டாடப் புக்கால் இத்தையே கொண்டாடும்படியான தமிழ் தொடை
பத்தையும் வல்லார்கள் உபய விபூதியையும் தாங்கள் இட்ட வழக்காம் படியான பிரபாவத்தை உடையராய்ப் பெறுவர்-

சென்று சினவிடை ஏழும் பட அடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரி மேய விண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை
கன்றிநெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் கலிகன்றி யொலி மாலை ஐந்தினோடு மூன்றும்
ஒன்றினோடும் ஒன்றும் இவை கற்று வல்லார்
உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே–3-10-10-திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானரான ஆழ்வார் அருளிச் செய்த-ஒலி உடைத்தான தொடை எட்டும் இரண்டும் பத்தான இத்தை அப்யசிதவர்கள் (எட்டும் -ஐந்தும் மூன்றும் -விபவ அவதார இரண்டும் -முதலும் முடிவும் )

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே  –4-4-10-ஆழ்வார் அருளிச் செய்த-கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும்-அது கலசாத ஐந்தும்-

நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர்  வானவர் தாமே —-4-7-10-தோள் வலி போலே கவி பாட வல்ல வலியும்-

ஏரார்  பொழில்  சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தார் –பகவத் குணங்களை நிறையத் தொடுத்த தொடை-

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2–குழலிலே பூக்களை வைத்து முலையை குங்குமத்தால் அலங்கரித்து இருந்துள்ளவர்கள்-படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில்
ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்-குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி ஓடா நிற்கும் யாய்த்து –

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்  
தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-நன்றான இசையோடு கூடின
தொடை நாலிரண்டு இரண்டினையும் – இதில் உண்டான ஆதரத்தாலே சேர்த்து அனுபவிக்கிறார்-உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம் -விளைத்த -வம்பு -ராமன் விஷயம்-கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்-சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்-இப்படி நாலு இரண்டும்-இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்-பண்டு -திருக் குறளன் விஷயம்-ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்-இப்படி இரண்டும்– இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்

தாதாடு வன மாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி  மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6–தாது மாறாத –ஆடுகை யாவது -நடை யாடுகை-காட்டிலே தானும் தன்னேராயிரம் பிள்ளைகளும் கூடப் பறித்து செவ்வி அழியாத மாலையை – அது பரார்த்தம் என்று இருந்தோம் –

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–
5-5-10–பர காலன் என்று பேர் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த சொல் தொடையைக் கற்று வல்லார்கள் –(இவரைப் போல் ) கைப்பறி பறிக்கை அன்றிக்கே இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்-தனி முத்துக் குடைக் கீழே இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்- (இங்கே-நாடு பரிபாலனம் – கடமை நிறைவேற்றி அங்கு ஸூக அனுபவம் )

ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10–மனஸ் சஹகாரம் வேண்டாதே இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால் பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து-

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-திரு மங்கைக்கு நிர்வாஹகராய் திண்ணிய திறலை உடைத்தான தோளை உடையரான ஆழ்வார்-அதி கிருதாதிகாரமான வேதார்த்தத்தை சர்வ அதிகாரமான சொல்லாலே அருளிச் செய்தார் ஆய்த்து –

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி  சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10–உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு சத்ரு நிரசனம் பண்ணி கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும் இப் பத்தையும் முறையில் இவை பயில-

தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ்  வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10—திருமங்கை  ஆழ்வார் கையில் வேல் உருவிய சத்ரு சரீரங்கள் ஆயத்து சத்ரு சரீரங்களிலே குளித்த வேலை உடையரான ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் –

தாரார் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீரார் நெடு மறுகில் திரு விண்ணகரானைக்
காரார் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆரார் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே –6-3-10-கார் காலத்திலே கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின மேகம் போலே கொடுத்து வளர்ந்த கையை உடைய ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை வல்லார் –

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே–6-5-10–அழகிய புகரை உடைத்தான-காமம் என்று பிரகாமமாய்-பிரதிஷ்டமாய் -அத்தால் நினைக்கிறது மிகுதியாய்-மிக்க புகரை உடைய வேலைக் கையிலே உடைய திரு மங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாய் சொன்ன மாலை –செப்பு மவர்க்குத்-திருமால் -சேமத் துணையாம் – இவனை அடை கொடு பாழ் போக்குகை அன்றிக்கே இவனுடைய ரஷணத்தை முடிய தலைக் கட்டிக் கொடுக்கும் துணையாம்-கோலத் திரு மா மகளோடு உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் உகந்து ஸ்ரீ யபதி அன்றோ

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி  யொன்றில்லாத மெய்ம்மை யாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே —6-6-10—யதா பூத வாதிகளாய் வேதத்துக்கு வியாச பதம் செலுத்த வல்லராய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நறையூரிலே வர்த்திக்கிற புண்டரீ காஷனான சர்வேஸ்வரனை  கவி பாடிற்று –

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பன்னி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10–அரணாக போரும்படியான மதிளாலே சூழப் பட்ட திரு மங்கைக்கு ராஜாவான ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையை-

ஒடா வரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4-திரு நீர் மலையிலே சந்நிஹிதன் ஆனவனை –ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை-

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே –6-10-10–முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது -( பண்டு காமனானவாறும் ) இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே- இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் இதுவும் விஷயமான படி கண்டி கோளே –(நாராயண நாமத்தால் வந்த மஹிமை ப்ரத்யக்ஷம் )-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10—அவன் திருவடிகளில் நித்ய கைங்கர்யத்தை அதிகரித்த திருமங்கை ஆழ்வார் ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடை –

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து  நெடும் காலம் வாழ்வாரே –7-2-10–இத்தை அனுசந்தித்தார்க்கு -இது ஒரு சப்தமே -என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையைச் சொல்லும் அவர்கள் இத்தை சொல்லுகையே போரும் ஆய்த்து பிரயோஜனம் –

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10–தாம் அறிந்ததாக அனுபவித்து விடுகை அன்றிக்கே பின்பு உள்ளார்க்கும் அனுபவ யோக்யமாம் படி-பக்தாம்ருதம்–தொண்டர்க்கு அமுது உண்ண -என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் விருந்து இட்டார் ஆய்த்து –

பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10—ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –ஹேய ப்ரத்ய நீகமாய் தர்ச நீயமாய் இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்–அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை உடையராய்க் கொண்டு தொழுது இம் மாலையைச் சூட்டுங்கோள் –பாகவத பிரபாவம் சூடுவதே பலன் -வேறே வேண்டாமே –

மாலைப் புகுந்து மலரணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும்
வேலைக் கடல் போல் நெடு வீதி விண்டோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப்   புகையால்   அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே —7-5-7-போக யோக்யமான காலத்திலே வந்து புகுந்து பூம் படுக்கையிலே தங்கி அநந்தரம் அங்கு நின்றும் போந்து –

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொதிந்த தமிழ் மாலை
சொல்லப் பாவம் நில்லாதே –7-5-10–திரு மங்கையில் உள்ளாருக்கு ராஜாவாய் உள்ளவர் பிரதி பஷ நிரசன சீலராய் உள்ளார் –சொல்களால் சம்ருத்தமாய் உள்ள தமிழ் தொடையை வாயாலே சொல்ல –

அன்னம் மன்னும் பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன்  மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும்
வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –7-7-10–சொன்ன இனிய தமிழான இந்த நல்ல ரத்ன மாலையை-லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப் பத்தையும் அப்யசிக்க வல்லார் –இந்த்ரிய வஸ்தையை  அனுசந்தித்து அஞ்சின ஆழ்வார் (யோகியாக இல்லாமல் போகியாக) இத்தை பலமாகச் சொல்லுவான் என் என்னில் இவருக்கு அந்த ஐஸ்வர்யம் பாகவத சேஷமாக்குக்கைக்கு உடலாகையாலே அதுவும் புருஷார்த்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

சீரார் நெடு மறுகில் சிறு புலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே —7-9-10–திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம்படி அருளிச் செய்த மாலை –

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-மாலை –
சர்வாதிகனை –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9–மாலுருவாய் நின்ற விண்ணினை--த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய நித்ய விபூதி உக்தன் ஆனவனை –மாலை –-ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை-

வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —8-1-9-தன் நிலத்திலே நின்ற போது மணம் மட்டமாய் –திருக் குழலிலே  ஏறினவாறே இரட்டிற்றாய் இற்று இருப்பது – வண்டுகள் பரிமளம் போலே படிந்து கிடக்கும் யாயிற்று-

மா வளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்

பூ வளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-சந்தஸ் ஸூக்களால் குறைவற்று லஷணோபேதமுமான –

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே —8-3-10–எல்லாருக்கும் ஸ்பருஹை  பண்ண வேண்டும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையரான  ஆழ்வார் அருளிச் செய்த இந்த தமிழ் தொடையை –

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ -8-4-10–பிரமாணங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படியான நிரவதிக சம்பத்தை உடையருமாய் பிரதி பஷத்தை வென்று இருப்பாருமான ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி சொன்ன இத் தொடையைக் கொண்டு –

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே
—8-8-10-ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-விஷய வைலஷண்யத்தை ஒழியவே
மிக்க நன்மையை உடைத்தாய் இருக்கிற இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு
கைங்கர்ய ருசியை உடையரான  நீங்கள் –(பாவின் இன்னிசைப் பாடித் திரிவேன் -இன்னிசையே போதும் -நாவினால் நவிற்று இன்பம் எய்த )

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10–ஆழ்வார் ஒலியை உடைத்ததாக
அருளிச் செய்த மாலை-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10–திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானராய் எல்லாருக்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஆழ்வார் ஒன்றும் குறையாத படி இனிய இசையாலே அருளிச் செய்த  -தம்மால் அளவிட ஒண்ணாமையால் பிரித்து அனுபவிக்கிறார்- (ஸூய அனுபவம் முதல் ஏழும் -பர உபதேசம் அடுத்த இரண்டும் -பலம் அருளி நிகமனம் )-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3–காலையிலும் மாலையில் போலே இருக்கை -பாதித்து முடியா நின்றது –காலையும் மாலை போலே பாதகமாகா நின்றது – காலை யரும்பி –மாலை யலரும் (தமிழர்கள் சொல்வர் )-என்கிறபடியேயேயாய்
இருக்கிற படியே இருக்கிறது இல்லை – ஏக ரூபமாய் நலியா நின்றது –

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-தென்றலோடு கூட பெரிய கோட்பாட்டை உடைத்தாய் வருகிற மாலையும் –

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10–சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி கவி பாட வல்லரான ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்த –

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2–மௌவல் மாலையோடும் மல்லிகை மாலையோடும்
மது பானம் பண்ணின வண்டுகள் ஆடா நின்றன –-இவற்றோடு கூடி அணைந்த மாருதம் உண்டு -காற்று-அது அப்ராக்ருதமான பரிமளத்தை கந்திக்க வந்து உலவா நிற்கும் திருக் கோட்டியூரானே –

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3–அந்த ரஸ்யதையில் உண்டான ஏற்றம் போலே
ஐஸ்வர்ய ஸூசகமாய் அழகிதான   திருத் துழாயை  உடைய சர்வேஸ்வரனை – திரு வாலியிலே கண்டு உகந்து போய் –

வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து
அன்று அரக்கர் குன்ற மன்னார் ஆடி யுய்ந்த  குழ மணி தூரத்தைக்
கன்றி நெய்நீர் நின்ற  வேற்கைக் கலியன் ஒலி மாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்றாடுமினே
—10-3-10—திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது –ஆக –ஆண் பிள்ளை கவி பாடுகிறார்-ஆண் பிள்ளைகள் தோற்று ஆடுகிறார்கள் –இப் பத்தையும் பாடிக் கொண்டாட உங்களுக்கு இனி வரக் கடவதொரு பயம் இல்லை –

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்து இமையோர்க்கும் அப்பால் செல வெய்துவாரே —10-6-10-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-2–ரஷகத்துவத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவனை ஒழிய செய்ததுக்கு நிவாரகர் இல்லாதவனை ஒழிய (நிரங்குச ஸ்வ தந்த்ரன் அன்றோ ) இது செய்யக் கடவார் இல்லை –

அன்ன நடை மட வாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அருவரை போல்
மன்னு கருங்களிற்று ஆர் உயிர் வவ்விய   மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே –10-7-14--இத் திரு மொழியை வல்லவர்களுக்கு யசோதைப் பிராட்டியார் உடைய அனுபவித்தில் குறைய அனுபவிக்க வேண்டா -என்கிறார் –

அல்லிக் கமலக் கண்ணனை  யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே–10-8-10-

தொண்டீர் பாடுமினோ
சுரும்பார் பொழில் மங்கையர் கோன்
ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ
-10-10-10-அழகிய மாலையை உடைய-வேலை நிரூபகமாக உடைய
ஆழ்வார் அருளிச் செய்த மாலைகள்-தொண்டீர் பாடுமினோ –பல ஸ்ருதி சொல்லாது ஒழிந்தது
இது தானே பிரயோஜனம் -ஆகையாலே –

பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ்  மாலை
கற்றாரோ முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10-

நிலையிட மெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே –11-4-1–மலைகள் அழிஞ்சு போகாத படி தரித்து ஏறிட்டுக் கொண்டு வருகிற ஜலம்  தாரகமான வஸ்துவை – சர்வாதிகனான சர்வேஸ்வரனை – அவன் அப்படி தன்னுருக் கொடுத்து வேற்றுருக்  கொண்டு அரியன செய்து ரஷியா நின்றான் -( பக்தானாம் ப்ரஸாததே ) உனக்குச் செய்ய வேண்டும் அருந்தேவை -அவனை மறவாது இருக்கை-( இதுவே அரிய சேவை நமக்கு

தளை யவிழ் கோதை மாலை யிரு பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க  வரி யாகி யன்று  பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோன தாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள வெழ  விட்ட குட்டமது வைய மூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11-4-4–மத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ஸ நரசிம்ஹ –இறே-கட்டு நெகிழா நின்றுள்ள தொடை கொள் மாலை-பூ மாலை என்றும் (பேதம் )-இவை இரண்டு அருகும் அசைந்து வர அந்த தோளின் மாலைகளோடு கண்ணில் புறப்படுகிற நெருப்போடு வாசி இல்லை காணும் இவருக்கு – இரண்டு வட்டணித்த கண் –

மெய்நின்ற  பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும்  ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-திருமாலைக் –-அவள் முன்னாக ஆஸ்ரயிக்கில் இறே
பாபங்கள் அகலுவது –பதினொன்று என்று கொள்ளக் கூடாது -இவை பத்தும் அவை பத்தும்வெளிக் கரணங்கள் நிந்தனை முதல் ஐந்து ‘ஆத்ம நிந்தித்து இவை ஐந்து -ஆத்ம சப்தம் மனசையும் ஜீவனையும் கீதையில் சொன்னான் அன்றோ )

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-1-
மாலை –மாலாய் பிறந்த நம்பி -இறே –
ஆசா லேசம் உடையார் பக்கல் முக்தனாய் இருக்குமவனை –

வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே-8-நிராலம்பனாய் இருக்கிற என்னை
நிர்ஹேதுகமாக வந்து விஷயீகரித்தவனை என்கிறார் –மாலை –-அதுக்கடியான வ்யாமோஹம் –

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12–உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –அரங்க மாலை – கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-தேவ ஜாதிகள் சொல் போல் அன்றிக்கே –
தூய-பிரயோஜன நிரபேஷமான-மா மாலை சொற்கள் ஆகிற செவ்வி அழியாத -மாலையைக் கொண்டு –சூட்டுவன் தொண்டனேனே – இத்தால் அல்லது செல்லாத சபலன் – அநசூயை பிராட்டிக்கு சூட்டினாப் போலே-இப் பத்தால் அடி சூட்டலாகும் அந் தாமமே -திருவாய்மொழி -2-4-11- –நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-)

வானவர் தங்கள் கோனும் மலர் மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்தும்
ஊன மதி இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே-20–பெரும் தன்மையை உடைய -வேலை உடைய -ஆழ்வார் அருளிச் செய்த பரமோதாரமான-தமிழ் மாலை-நாலைந்து -இருபதையும்-அநந்ய பிரயோஜனராய் கற்க வல்லார்கள் –-தெளி விசும்பான பரம பதத்தை ஆளப் பெறுவார்கள்-இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81- இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்-கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திருவெள்ளறையான் என்கிறார் அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –)

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து – என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும்  இளம் தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன் என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-தோளிலே இட்ட தனி மாலையும் தாமுமாய் வந்த வரவை நீ காணப் பெற்றது இல்லை காண் – புழுகு நெய் ஏறிட்டுக் கொண்டு வருவாரைப் போலே நான் உகந்தபடி ஒப்பித்து வந்தார் –அவனூர் பட்டது அத்தனையும் படும் காண் அவன் உடம்பு – ரச சிரைகள் திறந்து மது ஒழுகா நின்றுள்ள திருத் துழாய் மாலையாலே அலங்க்ர்தன் ஆனவனே –கள்ளூறும் –-தன்னிலத்தில் காட்டில் திரு மார்பில் ஸ்பர்சித்த பின்பு செவ்வி பெற்ற படி –பைம் துழாய் – திருத் துழாய் குளிர்ந்து இருந்தது என்று நீ அறிந்தபடி என் என்ன – என்னை அணைக்கையாலே அறிந்தேன் -என்கிறாள் –

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-இப்படி இத் தேசத்தில் நிற்பது இருப்பது கிடப்பது -ஆகைக்கு அடி என் என்னில்-மாலை –-ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே –(மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.)

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30–பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –-பன்னுதல் -பரம்புதல்-ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும் விளாக் கொலை கொண்டு இருக்கை –நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –மாலை-ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –(எம்பெருமானும் அவனடியார்களும் உகந்து முடி மேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.)

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-சொன்மாலை  – சொற்றொடை -என்னுமா போலே செவ்வி மாறாத மாலை-அநசூயையினுடைய ஒப்பனை போலே அழகியதாய் இருக்கை–அவனுடைய தார் -சர்வேஸ்வரத்வ ஸூசகம் ஆனாப் போலே இப் பிரபந்தமும் பகவத் பரத்வத்தைக் காட்ட வற்றாய் இருக்கை –சொன்மாலை -யென்று-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை மாறுபாடுருவப் பேசின படி –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று
—-52–விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு
அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி-எப்போதும் – விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –திருமால் – வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது
——57-நயிக்கப் படுகின்ற -நீர்மை யுடைத்தான -திரு மந்த்ரத்துக்கு நிர் வசன ரூபமான இப் பிரபந்தத்தைக் கொண்டு-அவனுக்கு வாசகமான திரு மந்த்ரத்தை அப்யசித்தேன்-சொல் தொடை கற்றேன்-அநந்தரம் அனுகூல வ்ருத்தியையும் பண்ணினேன்   –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை
-100-திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையேசாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி  -ஸூலபனும் அன்றிக்கே விரோதி போக்காதே ஒழியிலும் விடப் போகாது –

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று——————16-அவன் ஆஸ்ரித வ்யாமுக்தனாய் இருக்க -இவன் தான் அவனை மனத்தடைய வைப்பதாம் – இவனாலே அவனை மனசிலே வைக்கப் போமோ – இவன் அவனை அறிக்கையும் ஆஸ்ரயிக்கையும் என்று ஓன்று உண்டோ-அவன் தானே ருசி ஜனகனாயும்
பிராப்தியும் பண்ணித் தரும் அத்தனை போக்கி இவன் யத்நிக்கை என்று ஒரு பொருள் உண்டோ -என்றபடி-

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு———–17-தன் நெஞ்சிலே மாலைக் கொண்டு -சர்வேஸ்வரனை தன்னுடைய ஹ்ருதயத்திலே கொண்டு-

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-அழகிய செவ்விப் பூ மாலைகளைக் கொண்டு ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் உடைய செவ்வித் திருவடிகளிலே சேர்த்து –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-–கருமாலைப் – கறுத்து ஸ்ரமஹரமான நிறைத்தை யுடையனான சர்வேஸ்வரன் –-ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதற்கு முன்னே–ஸ்ரீ யப்பதியை நமக்கு ஸ்வாமிநியான பெரிய பிராட்டியார் பேணிக் காட்டும் -ஆதரித்துக் கொடு வந்து காட்டும்-திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் -மூன்றாம் -1-என்கிறபடியே அவளைக் கண்டால் இறே அவ்வடிவு தோற்றுவது-

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த விலஷணமான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய
விலஷணமான தமிழாகிற மாலையைச் சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–-நித்ய முக்தரும் அடைவு கெட்டுச் சொல்லுவார்கள் –நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்-என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் –ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83–மறை யாங்கு என உரைத்த மாலை – இவை  எல்லாத்தாலும் வருவது ஓன்று இல்லை இறே – சொல்லப் பட்டவன் தான் மறப்பான் ஒருவனாகப் பெற்றதாகில் -வாய் திறந்து ஏதேனும் ஒன்றைச் சொன்னான் ஆகில் – அது வேத சப்தமாம்படி இருப்பான் ஒரு சர்வேஸ்வரன் ஆய்த்து-வாக் விவ்ருதாஸ் ச வேதா -முண்டகம் -2-1-4-என்று சொல்லப் படுகிற சர்வாதிகனை –அங்கன் அன்றிக்கே – அர்த்தங்களை யுள்ளபடி சொல்லப் போந்த வேதங்களும் அது என்று சொல்லும் அத்தனை போக்கி இது என்று கொண்டு  பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பிரபாவத்தை யுடைய சர்வேஸ்வரனை –வேதங்கள் ஆங்கு என்று சொல்லிப் போனவனை என்றுமாம் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று
–85—அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் – அவனையும் தேவர்கள் அம்ருதத்தையும் ஒழிய இவருடைய அம்ருதம் -அவனைப் பேசும் சொல்லு –சொன் மாலை –அவை -எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு –-எல்லா போக்யதையும் தன்னுடைய போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –-இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து-திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –ஏத்தித் தொழுதேன் – அறிந்து கவி பாடினேன் அல்லேன் – ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று யஸ்மின் அக்ருத்ரிமகிராம் கதிரேகண்டா-என்று
பிரமாணங்களாலே சொல்லப் பட்ட நன் மாலை –-விலஷணமான எம்பெருமானை சர்வ சப்தங்களுக்கும் வாச்யனானவனை-வசஸாம் வாச்யமுத்தமம் -ஜிதந்தே -9–ஏத்தி நவின்று –
மிகவும் ஆதரித்து ஏத்தினேன் –-ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு ——21-வாசம் என்று குளிர்த்தியாகவும் பரிமளமாகவும்-பரிமளத்தையும் செவ்வியையும் உடைத்தாய் சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவன் –

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில்  சென்றூத  -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும்
——-23-திரு மார்வில் ஸ்பர்சத்தாலே தன்னிலத்தில் நின்றாப் போலே இருக்கிற திருத் துழாய் மாலையை யுடையவன்–ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே –-மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று மேலே மனஸ்ஸோடே கூட்டவுமாம்-மனஸ்ஸானது ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு மாலாய் வரும்-பிச்சேறா  நிற்கும்-வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது – வண்டுகள் பட்டது படா நின்றது –

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-ஸ்ரமஹரமாய் அசைந்து வாரா நின்றுள்ள
மாலையை உடையனானவன் திருவடிகளை –

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-சொன்மாலை – தம்முடைய திருவந்தாதி

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
 –21-சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்-(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )மாலைக்கு  நன்மை யாவது-அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை-அனுரூபமாய் புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )-சூட்டு -திருமுடி சாத்தாய்-மாலை -தோளுக்கு விடுவதாகவும்(மூன்று முடிக்கு உரிய அரசு-பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே-வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்) அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்-புஷ்பத்துக்குத் தூய்மையாவது-த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் )-அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–-கெண்டை ஒண் கண்  இத்யாதி–மிக்க சீர் தொண்டர் இட்டதொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்-சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்-மிக்க சீர் தொண்டர் -ஸ்வயம் பிரயோஜனம் )ஏந்தி-பாரதந்தர்யத்தால்-யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை (கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு-மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி — மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி  –(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்-ஏற்றுக் கொள்வது அவன் இச்சை இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே
 –20–-மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே – அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது–சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் –தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று-மேல் பூசும் மருந்தும் –தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்– பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறதுஉலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று நாம உச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி–மாலை யம் தண் யம் துழாய் -என்று போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாயிற்று–கொண்டு சூட்டுமினே –என்கையாலே போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி-அத்தாலே-நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே-ஆகையால் உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும் போக்ய அந்வயமும் விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
  –35–உலகு அளந்த இத்யாதி –-சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான மனசை உடைய இவளுக்கு-மாலை நல்கிற்று எல்லாம்-மாலை நல்குகை-சத்த்தையை வைக்கை — சந்தான சாபம் வைத்த படி–மாலை சோல்வான் இத்யாதி–சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது-

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே 
– 68-மாலைகளாகவும் – அம் மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே –சுருளவும் இறே யவை தான் பூப்பது – கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் –தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் –மாலைகளாகவும் பொன் மாலையால் சமைந்த வட்டம் போலே சுருளவும் கொன்றை பூத்தலால்–அம்மலர் அலரத் தொங்குதல் -பந்தலில் கொம்புகளின் இடையில் தொங்க விட்டதை போல் உள்ளதால்-புலந்தோய் தழைப் பந்தர் -என்கையாலே இந்திரியங்கள் படியும்படியான விஷய பிரவணர் ஒதுங்க நிழல் என்றபடி–மாலையும் மாலைப் பொன் வாசிகையும்-என்கையாலே
ருஜு வாயும் (நேர்மையாயும் -சாத்விக ஆகாரம் அளவு விஞ்சி போல் ) வக்ரமாயும் (வளைந்தும் ராஜஸ தாமஸ ஆகாரங்கள் தள்ளுபடி தானே ) யுண்டான போக்ய வஸ்துக்களை ஸூசித்தப்படி-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே 
– -69-புல்லிதான தலையை உடைத்தான  சந்த்யை யானது –(சிறிய பொழுது -ஆழ்வாருக்கு துன்பம் தருவது ஆகவே புல்லியது ) நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யையினுடைய உபக்கிரமம் இத்தனை – சந்த்யை யானது அல்ல காண் இது –புன் தலை மாலை -நலியும் மாலை -பகலுக்கும் இரவுக்கும் நடுவில் சிறிய பொழுது என்றுமாம்-புன் தலைமாலை-புல்லிதான தலையை யுடைத்தான ஸந்த்யையானது-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே
 – 73–மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று.-ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப் பொழுதிலே இத் தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது-ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு.-முதிர்ந்த மாலையில் வெளுத்த சந்த்ரனாகிற ஆகாசத்தில் உள்ள ஸூரபியானது லோகங்கள் எல்லாம் நிறையும்படி வான் -மிகவும் வெளுத்த நிலாவாகிற முதிர்ந்த பாலை சுரக்குமாயிற்று முதிர்ந்த மாலை பால் சுரக்கும் காலமாகையாலே அற முதிர் மாலை யாயிற்று-

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே
 –  -77-மாலைப் பொழுதை மகளாகவும் -சூரியனை அவள் கணவனாகவும் -சந்திரனை அவர்கள் பிள்ளையாகவும் சூரியனது சிவந்த கிரணங்களை செங்கோலாகவும் சூர்யன் அஸ்தமிப்பதை கணவன் இறந்ததாகவும் -அஸ்தமித்த திக்கை அவன் இறந்து விழுந்த போர்காலமாகவும் அஸ்தமிக்கும் காலத்து செவ்வானத்தை அவன் ரத்தம் தெரித்ததாகவும் உருவாக்கப் படுத்தியவாறு-புன்மாலை என்றதால் செக்கர் நல் மேகங்களைக் காட்டி பீதாம்பரம் சாத்திக் கொண்டு மேகம் போன்று இருக்குமவர் திருமேனியை ஸ்மரிப்பித்து நலிகிற படி சொல்லிற்று-

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  
– – -85–மாற்றுடைய பொன் போலே ஒளியை யுடைய சுடரானது இருளோடே வந்து கிட்டி மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் அக்குரங்கின் கையிலே மாணிக்யம் அகப்பட்டால் போலே படும்படியான மாலையிலே-அன்றியே மாணிக்யத்தைக் கொண்டு குரங்கை எறிந்தால் போலே என்றுமாம்–குரங்குதலாவது வளைதலாய்-உதித்த ஆதித்யன் உயர எழுந்து விழுந்து அஸ்தமித்த கொடுமையைச் சொன்னபடி-

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே 
– – 92-அவ் வடிவைக் காண்கைக்கு  அர்த்திப்பார்  நேரும் அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் –அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –
 – -93 —உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது –ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டு வைத்தும் –நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜனம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்–கங்குல் ஆகிற குறும்பர் அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே-மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்–மாலை –இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை இறே வேண்டுவது –மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை 

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
 – 97–தொல்லை மால் -சம்ச்லேஷம் பழையது என்றவாறு -அநாதியான வியாமோஹம் கொண்டவன் -என்றும் அனைத்துக்கும் பழைய பெரியவன் என்றுமாம் –பகவத் ஸ்வரூபத்தை முழுவதும் ஸாக்ஷாத்கரிக்க விரும்பித் தொடங்கினார்க்குக் காலம் முடிந்துபோவதேயன்றி அவ்வநுபவம் முடிந்து கண்வாங்குந் தன்மையில்லையென்று ஆழ்வார் அன்பர்க்கு அருளிச் செய்கிறார்.-ஸூர்யன் உதிப்பதும் மீண்டும் அஸ்தமிப்பதுமாய் இப்படியே நாள் திங்கள் நோக்கி இரங்குதலே யன்றி நித்யஸூரிகள் எப்பொழுதும் கைகூப்பிக்கொண்டு கைங்கர்யம் பண்ம் பொருட்டு சூழப்பெற்ற அநாதியான எம்பெருமானைக் கண் களிப்பக் கண்டு முடிக்க வேணுமென்பதோர் ஒப்பற்ற அன்பைக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் பக்கல் வைத்தகண் வாங்கி இமைக்க இடமுண்டோ வென்கிறார்.-தொல்லை மால்’ என்றதற்கு ஜீவாத்மாக்களிடத்தில் அநாதியாகவுள்ள வ்வயாமோஹ முடையானென்றும் எல்லாவற்றுக்கும் பழமையான பெரியோனென்றும் பொருள் கொள்வர்.-

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44—ஸத்வ கார்யமான ஞானத்தாலே ரஜஸ் தமஸ்ஸூக்களைத் தள்ளி
ஸர்வேஸ்வரனை வாழ்த்தாதே இருப்பர்கள்-இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்–இது பராசர பட்டர் நிர்வாகம்=ஈஸ்வரனுடைய குணங்களில் சேர்ந்த நெஞ்சும் குணம் ஒன்றையுமே ஏத்தும் வாயும் அல்லாத குணங்களிலும் உள் புக்கதில்லை யாகிலும் எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து ஸர்வேஸ்வரனை ஏத்தாது இருப்பர்கள் இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு
–65-அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)-ஸ்ரீ ஸூக்தி –சொல் மாலை –
மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –வாடாத மணம் மாறாத மாலை தானே சொல் மாலை-அவனோ பராத்பரன் -நாம் சூட்டும் மாலை போகுமோ என்கிற சங்கைக்கு
தன்னைத் தாழ விட்டு நாராயணன் கேசவன் மாதவன் ஆனபடியால் வாத்சல்யம் மிக்கு -அழகு ஈர்க்கும் -பிராட்டி இருக்க ஏற்றுக் கொள்ள வைப்பவளும் அருகில் உண்டே

திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா –திருத்துழாய்மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையையும் அபிநயித்துக் காட்டினாள்.

கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி-அவ்வசுரனுடைய குடலை (பிடுங்கி யெடுத்து)-அழகிய பிராட்டிக்கு இருப்பிடமான மார்பிலே வெற்றிலையாக அணிந்துகொண்டு

சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை-சிறந்த திருத்துழாய் மாலையை-தருவன் தரமாட்டான் என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை-

இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலை சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடம் கண் ——25–இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே,-புஷ்பங்களை யணிந்தும் மயில் தோகை போன்றுமிருக்கிற கூந்தலை யுடையவர்களாயும்-

என் மனத்து மாலை யிடவெந்தை ஈசனை ——–119-என்மேல் வ்யாமோஹ்முடையனாகி எனது நெஞ்சை விட்டுப்பிரியாதவனாய்-திருவிடவெந்தையிலெழுந்தருளியிருக்கிற ஸர்வேவரனாய்-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்

பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –தொல்லை மாலை –-நித்யஸ் சத்யா -என்கிறபடி -நித்ய சத்யனுமாய் –-ஏகோஹைவை நாராயணா ஆஸீத் ந பிரம்மா ந ஈசான ச ஏகாகீ நாமேத -என்றும்-அசிதவிஷ்டா ந் பிரளயே ஜந்தூ நவலோக்ய ஜாத நிர்வேத – என்றும் -சொல்லுகிறபடியே சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட்டு உரு மாய்ந்து கிடக்கிற இச் சேதனருக்காக நிர்வேதப்படும்படியான வ்யாமோஹத்தை வுடைய ஸ்ரீயபதியை-

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும்
பேராத சீரரங்கத்
தய்யன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-மிக்க சீர் தொண்டரான தம்மாலே –வைஜயந்தீ வனமாலை என்றும் கலம்பகன் மாலை என்றும் அனுபோக்தாக்களாலே உல்லேக்கிக்கும் படி சந்தர்ப்பிக்கப் பட்டதாய் -தம்முடைய கர ச்பர்சத்தாலே வந்த புதுக் கணிப்பு எல்லாம் நிறத்திலே காணலாம் படியான பசுமை உடைத்தான -திருத் துழாயாலே வகுப்புண்டாய் சமைத்த திரு மாலையும்-தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் இவர் தம்மை தாமே நிரூபித்து கொள்ள வல்லவர் இறே –செய்யும் மறைத் தமிழ் மாலையும் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இருவகை மாலைகளை அரங்கத்து ஐயனுக்கு சமர்ப்பிக்கின்றார் –
ஒருவகை -திரு துழாய் மாலை-மற்று ஒரு வகை -தமிழ் மாலை-ஆண்டாளும் அரங்கனுக்கு பா மாலையும் பூ மாலையும் சமர்பித்து உள்ளாள்-ஆயின் அப்பூ மாலை அவளால் தொடுக்கப் பட்டது அன்று -சூடி சமர்பிக்கப் பட்டது தான்-திருத் துழாய் மாலையோ தொண்டர் அடி பொடி ஆழ்வார் தம் கையினாலேயே தொடுத்தது –ஆதலின் –-செய்யும் துளப மாலை -என்றார் –

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –-அலங்கரிக்கத் தக்க புஷ்ப மாலையை -சூடிக் கொடுத்தவள்-முந்துற முன்னம்-குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும்- 4-11–சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ்ப் பத்தும் வல்லார் -9-10–தாழ் குழலாள் துணிந்த துணிவை -12-10–தாழ் குழலாள்–என்னும்படியான தன்னுடைய திருக் குழலிலே அலங்கரித்துக் கொண்டு -அது தன்னைக் களைந்து ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கும்படி கொடுத்தவள் -இப்படி யாகையாலே இவளுக்கு -சூடிக் கொடுத்தவள் -என்று அதுவே நிரூபகமாய் ஆய்த்து – சூடிக் கொடுத்த சுடர் கொடியே -என்னக் கடவது இறே –

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை

சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8—யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளும் படியான உத்கர்ஷத்தை உடையவனை-தண் துழாய் மாலையனை–சர்வாதிக விஷயத்துக்கு அடையாளமான திருத் துழாய் மாலையை உடையவனை-என் முடிவு காணாதே- என்னுள் கலந்தானை
தன்னுடைய உத்கர்ஷத்துக்கு முடிவு இல்லாதோபாதி உஎன்னுடைய நிகர்ஷத்துக்கும் முடிவு இன்றிக்கே இருக்க அத்தைப் பாராதே அவ்விஞ்ஞாதவாய் என்னோடே கலந்தவனை -தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்

பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-வேதம் போலே அடி அன்றிக்கே இருக்கிறது அன்று -அப்வருஷேயம் -என்னுமதில் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கிறதாயிற்று வக்த்ரு சுத்தியால்-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்

உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-செயிர் -குற்றம் –இல் -இல்லாமை -ஆக நிர்த்தோஷமான சப்த சந்தர்ப்பத்தை உடைய ஆயிரம்-

கண்ணனை மாயன் றன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே.–3-4-9-ஆபத்து கண்டால் படுக்கையில் பொருந்தாதே ரக்ஷிக்கும் சர்வேஸ்வரனை-

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது-நான் விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்-வாசக மாலை கொண்டு-உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு உன்னையே இருந்திருந்து யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3–பாக்களால் இயலப் பட்ட வேதம் -சந்தஸ்ஸூக்களை உடைத்தான் வேதம் அதில் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு – சர்வ வேதா யத் பத்மாம நந்தி -என்கிறபடியே அல்லாத இடங்களுக்கும் ப்ரதிபாத்யனே யானாலும் ஆராத நத்திலே யாதல் -விபூதியிலே யாதல் பரந்து இருக்கும் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று -வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இ றே சாந்துக்கு பூக்கட்டி இறே மனம் கொடுப்பது

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
–4-3-4-பூத்தண் மாலை கொண்டு- உன்னைப் போதால் வணங்கேனேலும்-குளிந்த பூ மாலையைக் கொண்டு -பூதனை வந்து கிட்டின போது ஆதல் -அசுரர்கள் இடத்தே சென்ற போது ஆதல்-பிராட்டியும் தானும் இருந்த போது ஆதல் -அவ்வவ காலங்களில் வணங்கேனேலும் திருவடிகளில் விழுந்து சிசிர உபசாரம் பண்ணப் பெற்றிலேன் யாகிலும்-நின்-பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.
குளிர்ந்த பூ மாலையோடு நித்ய சித்தமாய்ச் செல்லுகிற உன்னுடைய திரு அபிஷேகத்துக்கு ஆதரித்து சாத்தும் மாலை என் பிராணன் ஆவதே-பிராணன் -சத்தை –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?
–4-5-1-கைகள் ஆரத் தொழுது--வைகுந்தம் என்று ககை காட்டும் -தாயவனே என்று தடவும் என் கைகள் -என்னும் கைகளின் விடாய் தீர்க்கும்படி தொழுது
சொல் மாலைகள்-வாடாத மாலைகள்-ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே–கிருஷ்ணா தி சிரஸா ஸ்வயம் -என்கிறபடியே சிரஸா வஹிக்கும் படியாக பாக்யம் பண்ணின எனக்கு-இவர் கவி பாட்டு ஈஸ்வரனுக்கு அலங்காரமாக இருக்கையாலே மாலை என்கிறதுஇவருக்கு நோன்பு ஆகிறது -மண்ணை இருந்து துழாவி -யில் விடாய் ஆதல் பகவத் பிரசாதம் ஆதல் -தம்முடைய பேற்றுக்கு அடியாக மயர்வற மதி நலம் அருளினான் என்றார் இறே-பூர்வ க்ஷண வர்த்தி இறே ஒன்றுக்கு ஹேது ஆவது –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-மொய்-என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை–பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –இசை மாலைகள் –-பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை –-அவனும் அவளும் நித்ய ஸூரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இறே-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக-நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே-கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –-ஏத்தி உள்ளப் பெற்றேன்-மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று -இவர் படி-ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது-கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி-சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி-முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறதுஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;-இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;

காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5–மாற்ற மாலை புனைந்து ஏத்தி
பண்ணின உபகாரகத்துக்கு பிரதிபகாரம் காணாமையாலே ஏத்தினேன் -அது திருவாய்மொழி யாயிற்று-சொல் மாலையைத் தொடுத்து ஏத்தி -மாற்றம் –சொல்-நாளும் மகிழ்வு எய்தினேன்;
நாள் தோறும் ஆனந்தத்தை உடையேன் ஆனேன் –-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவி -என்னும்படி யானேன்-தேவ மாத்ருகம் போலே காதாசித்கம் அன்றிக்கே பகவத் பிரசாதம் அடியாக வந்தது ஆகையால் நதீ மாத்ருகம் போலே நித்ய ஸித்தமாய் இருக்கும் இறே

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-உரிய சொல்லால்-இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே-இசைமாலைகள்-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு-அரியது உண்டோ-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம்
என்னகுறை நமக்கே?–4-5-7–ஆபத்தே கைம்முதலாக – ரஷிக்கும் இடத்தில் பரிகர நியதி இல்லை என்கை-இடையரும் பசுக்களும் தொலையும் படி இந்திரனும் பசியாக்ரஹத்தாலே வர்ஷிக்க ரஷித்தான்-தீ மழை இறே –-பிரானை – தென்றல் சந்திரன் தண்ணீர் போலே உபகரிக்கையே செல்லமாய் இருக்குமவன்-சொன் மாலைகள்-என்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை -என்னக் கடவது இறே-நன்று சூட்டும்-அவ்விஷயத்தை விளாக் குலை கொண்டு பேச வல்லேன் ஆனேன் -அவன் விரும்பும்படி சொல்லப் பெற்றேன்-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு

அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-சொல்மாலைகள் சொல்லுமாறு-அமைக்க வல்லேற்கு-ஈஸ்வரன் அழைத்து -நமக்கு ஒரு கவி சொல் என்றால் அப்போதே சமைக்க வல்ல எனக்கு என்று பூர்வர்கள் நிர்வாஹம்-பகவத் குணங்களில் உடைகுலைப் பட்டு இருக்கிற நெஞ்சை தரித்து நின்று கவி சொல்ல வல்லேனாம் படி அமைக்க வல்ல எனக்கு என்று பட்டர் நிர்வாஹம்
ஈஸ்வரன் விஷயீ கரித்து குளிர நோக்கினால் அவ் வழகிலே சுழி யாறு பட வேண்டி இறே இருப்பது

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11-செயிர் -குற்றம் –இல் – இல்லாமை -குற்றமற்ற இப்பத்து –ஈஸ்வரன் விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்கிற இடம் அகவாயிலும் உண்டாம் படி இருக்கை –

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-நாள் தோறும் கமலா நின்றுள்ள திரு மகிழ் மாலையை திரு மார்பிலே யுடையவர்-நண்ணாதார் முறுவலிப்ப -திருவாய் மொழியில் சம்சாரிகள் கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளம் வாடின வாறே இட்ட மாலையும் வாடிற்று-பகவத் பரத்வத்தை உபதேசித்து -இவர்களுக்கு ஒரு குறை இல்லை -என்று திரு உள்ளமுகந்தவாறே அதுவும் செவ்வி பெற்றது

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4–தர்ச நீயமாய் குளிர்ந்த திரு மாலையும் -உபய விபூதி ரக்ஷணத்துக்கு முதலி என்று தோன்றும் படி இட்ட தனி மாலையும் -ஸ் ப்ருஹணீயமான திரு அபிஷேகமும் -உபய விபூதி நாதன் என்று கோட் சொல்லுகிற முடி என்கை வடிவும் -அந்த முடிக்கு தகுதியான விக்ரஹமும்-

கூந்தல்  மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை-இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

ஆய்ச்சியாகிய அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்றமுண்டழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.–6-2-11–பிரணய ரோஷம் போனவாறே -போகு நம்பீ என்றும் -புள்ளுவம் பேசாதே என்றும் சொன்னவை ஏத்திற்றாய் விட்டது-அத்விதீயமான பத்து -ஆஸ்ரிதரோடு பாவ பந்தம் வெளியிட்ட பத்து-

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7–ஆஸ்ரித விரோதிகளை போக்கப் பெற்றதால் ஒப்பித்து இருக்கிற படி-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-பெரிய பெருமாள் திருவடிகளிலே யாயிற்று ஆயிரமும் சொல்லிற்று –திரு மோகூர்க்கு ஈத்த பத்து -திரு வேங்கடத்துக்கு இவை பத்து –என்றும் பிரித்துக் கொடுத்த அத்தனை –திருப் பலகையில் அமுது படியில் திருப் பதிகளில் நாயன்மார்க்கு அளந்து கொடுக்குமா போலே –என்று பிள்ளை அருளிச் செய்வர் –

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11–அவனைத் தாம் ஆசைப்பட்ட படியை சொன்ன இப்பத்து –யதோ வாசோ நிவர்த்தந்தே என்று மீளுகை அன்றிக்கே பகவத் குணங்களுக்கு நேரே வாசகமாகை-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை
மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11–சிரமஹரமாய் -தர்ச நீயமான சோலையை யுடைய திருக் கடித் தானத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ யபதியை-

வயிற்றில்  கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-இவற்றை அடைய தன் திரு வயிற்றிலே கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே முன்பு போலே நின்ற சர்வேஸ்வரனை-

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11—அந்த வாஸ்யத்துக்கு தகுதியான யுக்தி வாய்த்த தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இத் திருவாய் மொழி நேர் பட்டவர்கள் –

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை
பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11–அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரி -அன்றியே -கோல நீள் -என்று சப்தம் தானே உண்டாகையாலே –அடி மேல் அணி -மாலை -என்று கூட்டிக் கொள்ளவுமாம் –

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9–என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்–இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-செல்லப்பட்டு இருந்துள்ள கதிரை யுடைத்தான மலையானது மயங்கப் பண்ணா நின்றது -அஸ்தமியா நின்றுள்ள ஆதித்யனை யுடைய ஸந்த்யையானது மோஹிப்பியா நின்றது -புடைவையை வாயிலே கொடுத்து நலிவாரைப் போலே ஓடுகிற வியசனத்துக்கு போக்கு விட்டு கூப்பிட ஒண்ணாத படி உணர்த்தி அழியும் படி மோஹிப்பியா நின்றது-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2—பதார்த்த தர்சனம் பண்ணி தரிக்கலாம் பகலையும் முடித்துக் கொண்டு மலையானது தோற்றா நின்றது –பிராட்டி தனிமையில் ஐயோ என்னும் பெரிய யுடையாரை முடித்துக் கொண்டு ராவணன் நலிந்தால் போலே-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என் அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-ஒரு துணை யற்று இருக்கிற அளவிலே பசுக்கள் புகுரும் ஸந்த்யையும் ஆகா நின்றது –எனக்குத் துணை இல்லை என்று அறிந்தால் மாலைக்கு பிற்காலிக்க வேண்டாவோ -ஆச்வாஸ கரமான பகல் போய்-பிரிந்தார் வெருவும் ஸந்தயையும் ஆகா நின்றது-

அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-ஆச்வாஸ ஹேதுவான பகலையும் முடித்துக் கொண்டு -மாலையும் ஆகா நின்றது –சர்வ காலத்துக்கும் துணையான நெஞ்சையும் காண்கிறிலேன் என்னுதல் -மாலையையும் காண்கிறிலேன் -என்னுதல் 

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-மிகவும் பயாவஹமாம் படி ராத்திரியும் வந்தது -இனி இருந்து கிலே ஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது –

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-மாலையையும் அவனையும் கூடப் பிணைத்து விட்டாள் போலே காணும் -அவன் வருவதாக குறித்துப் போன காலமும் வந்தது -தான் வருகிறிலன் –

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11–ஒப்பிக்கப் பட்ட ஆபரணங்களை யுடைய இடைப் பெண்கள் -கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து -என்கிறபடியே அவன் வரவுக்கு உடலாக தங்களை அலங்கரித்து வரும் காலத்திலே வரக் காணாமையாலே கூப்பிட்ட கூப்பீட்டை –அப்படி வியாமோஹத்தை யுடையவனைக் கிட்டி தொழுது சாபலமுடையார் பூமியிலே நின்று அடைவு கெடக் கூப்பிட்டு உஜ்ஜீவியுங்கோள் -இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு என்னைப் போல் என் சொல்லி உய்வன்-என்று கூப்பிட வேண்டா -பேற்றிலே அந்வயம் என்கை –

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்

வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1–சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் -மால் -என்று ஸ்நேஹ கார்யமான வியாமோஹமாய்-மாலையுற்று -என்னவுமாம் –பக்தி உக்தராய் -என்றபடி –காலை மாலை -ஆஸ்ரயணீயத்துக்கு கால நியதி இல்லை -என்கிறது -ஆதி நடுவந்திவாய் -என்கிறபடியே சர்வ காலத்துக்கும் உப லக்ஷணம் –

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5–பத்மகேசரே ஸம்ஸ்ருஷ்ட -மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன்னோடே விட்டுக் கொண்டே பெரிய கிளர்த்தியோடே ஸந்த்யையும் வந்தது -இவளை முடிக்க வேணும் என்று ஸந்த்யையானது கூட்டுத் தேடிக் கொண்டு வாரா நின்றது -/வந்தன்றாலோ—வந்தால் பரிஹரிக்க ஒண்ணாது

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11–அவனோட்டை பிரிவு பொறுக்க மாட்டாத படியால் -ஒரு பருவத்தில் இடைப் பெண்கள் அனுசந்தித்த -தொடையாய் -அவர்களில் ஒருத்தி பசு நிரை மேய்க்க வேண்டா -என்று உரைத்தாள் -எல்லாரும் திரளச் சொன்னால் அவன் செவிப்படாது என்னுமத்தாலே -நப்பின்னைப் பிராட்டியைப் போலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத தரம் யுடையாள் ஒருத்தியை வார்த்தை சொல்ல விட்டார்கள் -இப்படி யாகில் இறே –அடிச்சியோம் -என்றும் –தொழுத்தையோம் -என்றும் -ஆழும் என்னாருயிர் -என்றும் -என் சொற் கொள் என்றும் -சொன்ன பன்மைகளும் ஒருமைகளும் -சேரக் கிடப்பது

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-பரம பரம்பரனை–மல் திண் தோள் மாலை–பற்று என்று பற்றி-சர்வாதிகனாய் -விரோதி போக்குகைக்கு ஈடான தோள் மிடுக்கை யுடையனாய் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தனானவனை -பரம ப்ராப்யம் என்று பற்றி –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்

கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11—பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் –ன்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-தாம் விரும்புகிற மார்வுக்கு மாலை யானவள் -உன் திருமார்வுக்கு அலங்காரம் ஆனவள் என்கை –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அமலனாதிபிரான் -அனுபவம்

August 11, 2026

வ்ருச்சிகே ரோஹிணீ ஜாதம்‌ ஸ்ரீபாணிம் நிசுளாபுரே
ஸ்ரீவத்ஸாம்சம்‌ காயகேந்தரம்‌ முனி வாஹனன் ஆஸ்ரயே
-திருப்பாணாழவார்‌ திருநக்ஷத்திரத் தனியன்‌

பெரியாழ்வார் அவதார ஈடுபாடு-(பெரியாழ்வார் திருமொழி)

அ. பாதக்கமலம் -(1.3.1)-திருப்பாணாழ்வார் அருளியதிருப்பாணாழ்வார் அர்ச்சாவதார
ஈடுபாடு (அமலனாதிபிரான்) திருக்கமலபாதம் (1)
ஆ. பீதகச்சிற்றாடையொடும்(1.8.3.)–அரைச்சிவந்தாடையின்மேல் – (2)
இ.அழகியஉந்தி-(1.3.8)-அயனைப்படைத்ததோர்எழில் உந்தி -(3)
ஈ. பழம்தாம்பால் ஆர்த்தஉதரம் (13.9)-திருவயிற்றுதர பந்தனம் (4)
உ. குருமாமணிப் பூண்குலாவித் திகழும் திருமார்பு (1.3.10)-திருவார மார்பு-(5)
ஊ. அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம்-(1.3.13)-முற்றுமுண்ட கண்டம் – (6)
எ. நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் – (1.3.12)-கையினார் சுரிசங்கனலாழியர் – (7)
ஏ. செந்தொண்டைவாய்-(1314)-செய்ய வாய்(7)
ஐ.கண்களிருந்தவா – (1.3.16)-அப்பெரியவாய கண்கள் – (8)
ஒ. உருவுஉரியவொளிமணிவண்ணன் (1.3.17)-எழில் நீலமேனி -(9)-குழல்களிருந்தவா – (13.20)-துளப விரையார் கமழ் நீண்முடி- (7)

நாச்சியார் பெரிய பெருமாளுடன் “நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ” என்று கூறுகிறார். இதில் ஆழ்வாரை ”பாண் பெருமாள்’ என்று பெயரிட்டு அழைப்பது காண முடிகிறது-எம் பெருமான் ஆணைப்படி லோகசாரங்க முனிவர் திருப்பாணாழ்வாரைத் தம்தோள்களின் மேல் ஏற்றிக் கொண்டு எம்பெருமான் சன்னதிக்கு வந்ததனால் இவருக்கு’முனி வாகனர்.’ என்ற பெயர் வழங்கலாயிற்று.”மேலும்,நம்மாழ்வார் தாம் அருளிய திருவாய்மொழியில் ”இசைகாரர்’ என்ற பெயரால் திருப்பாணாழ்வாரை நினைப்பதாகக் கூறுவர்.” பட்டர் தாம் அருளிய வடமொழி ஸ்லோகத்தில் ஆழ்வாரை “யோகி வாஹாந் என்றும் அழைக்கின்றார். இவ்வாறாக திருப்பாணாழ்வாருக்கு பாண் பெருமாள், முனி வாகனர், இசை காரர் யோகி வாஹான் என்று பலபடியான திருநாமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

அமலனாதிபிரான் முதல் மூன்று பாடல்களில் எல்லா வேதத்தின் சுருக்கமாய் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியதான ‘ஓம்” என்கிற பிரணவத்தின் அகார,உகார, மகாரங்களாலே முதலீட்டு மூன்று பாட்டுக் களையுடைய அடியிலே அமைந்துள்ளது இப்பிரபந்தம் என்றும், ”ஓம்” என்ற பிரணவத்தைத் தெரிவிப்பதான வஸ்து எம்பெருமான் என்றும், பெரிய பெருமாளைப் பிரணவ வடிவமான விமானத்தின் நடுவில் திருவடி தொடங்கி திருமுடி வரையில் அனுபவித்த பிரபந்தம் என்கிற விருப்பத்தோடு ஆசாரிய உச்சாரண முறையில் கற்பார்கள் என்றும், அமலனாதிபிரானின் பெருமையைச் சீயர் கூறுவர்.’சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள்–திருவரங்கத்து அமுதனார்-மாமுனிகள் இதற்கு உரைய-எம்பெருமானின் இயல்பு, வடிவம், குணம் செல்வங்கள் (லீலா விபூதி, நித்ய விபூதி ) இவற்றை உள்ளபடியே தெரிவிப்பதால் வந்த சீர்மையை உடையது என்றும், ருக்,. யஜூர்,சாம, அதர்வண என்று நான்கு வகைப்பட்ட வேதத்தினுடைய இனிமையான பொருளை சொல்வது என்றும், இதனை அருளியவர் நடை விளங்கு தமிழ் மாலையாலே உதவி செய்தவராய் பூமியிலே நிலையாக நின்றுள்ள கீர்த்தியையுடைய திருப்பாணாழ்வார்

“அண்டர்கோன் அணியரங்கள் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று அருளியபடியே ஆளவந்தார் வேறொரு விஷயம் அறியாதவராய் இருந்தார்; அவ்வாறே ஆளவந்தார் திரு மேனியிலே வாட்டம் கண்டு எழுந்தருளியிருக்கும் போது அவருடைய சீடர்கள் தங்களுக்குத் தஞ்சமாக இருப்பதின் பொருளைச் சொல்ல வேண்டும்படி வேண்டினர், அதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாளின் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரஹத்தை பாதாதிகே சாந்தமாக ( பாதம் முதல் முடிவரையில்) சேவித்துக் கொண்டு போருங்கள்” என்று சொன்னார். மேலும், பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்தவர் திருப்பாணாழ்வார்; திருப்பாணாழ்வார் உயிர் நிலை அறிந்தவர் திருவரங்கப் பெருமாள் அரையர் என்றும் அருளினார்.திருமந்திரத்தின் பொருளாக போக மண்டபமாகத் திருவரங்கம் திகழ்கிறது-இதனை வெளியிட்டவர் திருப்பாணாழ்வார்-கோயில் என்று சொல்லப்படும் திருவரங்கத்துக்கு முதன்மை வந்ததுக்குக் காரணம் அவ்வெம்பெருமான் திருப்பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே என்பர்-பரமபதம், திருவேங்கடம், திருவரங்கம்ஆகிய இம்மூன்று திவ்விய தேசங்களையும் ஆழ்வார் இருந்த இடத்திலிருந்தே முதல் பாடலிலேயே மங்களாசாசனம் செய்தார் என்பது அறிய முடிகிறது.

‘சதுர மா‘ நாலாம் பாட்டின்‌ முகலெழுத்தான, :‘ என்பது முதலாவதான பிரமாண-பிரணவம் – சாரத்தையும்‌, இரண்டாவதான பிரமேய சாரத்தையும்‌-பாதுகை – சேர்கிறது

‘உயர்வற உயர் நலம் உடையவன்.”–”அமலன்” என்ற சொல்லாலே குறிப்பிடுகிறார்.அதாவது, குற்றங்களுக்கு எதிர்தட்டானவன் என்றும், தூய்மை யானவன் என்றும், தான் ஒருவன் தூயனாவது மட்டுமின்றித் தன்னோடு உறவுடையாரையும் தூய்மை யாக்க வல்ல திருவடியை யுடையவன்

யவன்” என்று திருவாய்மொழியில் குறிப்பிட்டதை, ஆழ்வார் ‘‘ஆதி” என்று குறிப்பிடுகிறார்; ‘யவன்” என்ற சொல் பிரசித்தியைக்காட்டுகிறது . அத்தகைய பிரசித்தியைத்தான் ”ஆதி” என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இச் சொல்லுக்கு ‘உலகுக்கு காரணமாம் தன்மை” ( ஜகத் காரணத்வம்) என்றுஉரையிடுவர் பெரியவாச்சான் பிள்ளை-

மயர்வற மதி நலம் அருளினன்“-இது தன்னையே திருப்பாணாழ்வார் ” பிரான்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”பிரான்” என்பதினால் ஆழ்வார் தாழ்ச்சியைப் பாராதே எம்பெருமான் ஆழ்வாரைத் தனக்கு இலக்காக்கிக் கொண்ட உதவியாளனைச் சொன்னபடி.

”நீதி வானவன்“-வானவனுடைய நீதியாவது ஆண்டவன் – அடியவன் என்ற உறவாம் தன்மை (சேஷ சேஷித்துவங்கள்) முறை மாறாது இருத்தல்-அதாவது “சேஷித்வம்” என்பது தலைவனாம் தன்மை.-ஈச்வரன் நான்” என்று எதிரிட்டு இருக்கும் இடம் இந்த உலகம்:-நித்ய விபூதியான வானுலகில் கலக்குவாறுமில்லை. கலங்குவாறுமில்லை; இந்த பூமியில் கலக்குவாறுமுண்டு கலங்குவாறுமுண்டு என்றவாறு.

கொண்டல் வண்ணன்” என்ற சொல்லடிப் படையில் எம்பெருமான் மேகம் போல் வள்ளல்
தன்மை யுடையவன் என்பதை இவர் பக்கல் ஔதார்யம் இல்லை யென்று போகவோ?-‘வெண்ணெய் உண்ட வாயன்” என்ற சொல்லடிப் படையில் அடியார்களுடைய உடைமையான வெண்ணெயை விழுங்கியதனால் அந்தக் குணுங்கு நாற்றம் வாயிலே தோன்றும்படி இருப்பதினால் “வடிவில் பசை யில்லை யென்று போகவோ?“-கோவலனாய்” என்ற சொல்லடிப்படையில் இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்ததனால் “செனசில்யம் இல்லை யென்று போகவோ?” என்றும்.”என்னுள்ளம் கவர்ந்தானை” என்ற சொல்லடிப்படையில் கோவலனாய் வெண்ணெய் உண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் ஆழ்வார் உள்ளத்தைக் கவர்ந்ததனால்”நெஞ்சுக்கு பிடித்திருந்த தில்லை யென்று போகவோ?”-“அண்டர் கோன்” என்ற சொல் அடிப்படையில் வேறு அண்டத்திலுள்ள ஆத்ம சமூகத்திற்குத் தலைவனாய் இருப்பதனால் “மேன்மை யில்லை யென்று போகவோ?”-” அணியரங்கன்” என்ற சொல்லடிப்படையில் கண்ணாலே காணலாம்படி சம்சாரத்துக்கு
ஆபரணமான திருவரங்கத்தில் எம்பெருமான் வந்து பள்ளி கொண்டதனால் சௌலப்பியம்
(எளிவந்த தன்மை) இல்லை யென்று போகவோ?
என் அமுதினை” என்ற சொல்லடிப்படையில்
அளப்பரிய ஆரமுதாய் இருப்பதனால் இனிமை (போக்யதை) இல்லையென்று போகவோ?”அமுதினைக் கண்ட கண்கள்” என்ற சொல்லடிப்படையில் திருவரங்கத்து இறைவனை முழுமையாக அனுபவித்த கண்கள் ஆதலால் “அனுபவத்தில் குறை யுண்டென்று போகவோ?”–நாயனார் அருளுவது சுவை மிக்கதாகும்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-“மற்ற அவயவங்களின் அழகில் முன்பே என் நெஞ்சு பறிகொடுத்த என்னை மற்ற அவயவங்களைக்காட்டிலும் தனது திருப்பவள செவ்வாயைக் காட்டி “கல்லை நீராக்கி, நீரையும்தானே கொண்டது என்றும் உகக்கின்றார். ஆழ்வார். இதையே ‘கல்லை நீராக்கி நீரைத் தானே கொண்டதனால் வந்த உகப்பு என்பர்.

வேதாந்த தேசிகர் தாம் அருளிய முனிவாகன போகத்தில் முதல் மூன்று பாடல்கள்
அகார, உகார, மகாரமாகிய ” ஓம் ” என்ற பிரணவத்தின் பொருள் என்பதையும், நான்காவது பாடல் ‘ நம:” என்பதின் பொருள் என்றும், ஐந்து ஆறாவது பாடல்கள் ” நாராயண ” என்ற சொல்லின் பொருள் என்றும், ஏழு எட்டு ஒன்பது பத்து ஆகிய நான்குபாடல்கள் “ஆய” என்பதின் பொருள் என்றும், இவற்றை அனைத்தையும் கூட்டி “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தின் பொருளாக அமலனாதிபிரான் அமைந்துள்ளது
என்று விரிவாக உரை வழங்கியுள்ளார்.

பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ” என்னும் தொடருக்கு உரை
வழங்கிய ஆசாரியர்கள், முன்பாட்டான “கையினார் சுரிசங்கனலாழியர்” என்ற பாடலில் ”என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ” என்று அறிவு வளர்ச்சிக்கு இடமான வழியைக் கவர்ந்தபடியைச் சொல்லிற்று என்பர். அதாவது அறிவை அபகரித்தபடியைச் சொல்லுகிறது. “அறிவைக் கவர்தலாவது அழகிலே அலமருகை

ஆல மா மரத்தினிலை மேல்–ஆல மாமரத்திலே நெரித்தால் பால்பாயும்படி இருக்கின்ற இளந்தளிர்” என்று சொல்லி”மாமரம்” என்பதற்கு எதிர் மறையாய்ச் சிறிய மரம் என்று பொருள் உரைப்பர். “‘இலைமேல் என்பதனால் இந்த இலைக்குள்ளே அடங்கும்படியாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது”யசோதை பாலகன் முற்றினவன்” (மிகப்பெரியவன்) என்னும்படி “ஒப்பற்ற இளம் பாலகன் – முற்றினவன்” மிகப்பெரியவன். இங்கே எதிர்மறையாக யசோதையின் பால் வாய்ப் பிள்ளையான கிருஷ்ணனும் முரணித்திருக்கும்படி இவனுடைய இளமை (பால்யம்) செம்பால்பாயா நிற்கும்’ என்று எதிர்மறைப் பொருள் கூறிஉணர்த்துவார்.

உலகறிய மலிபுகழ்க்‌ கார்த்திகை மாதத்தில்‌ உரோகிணி நாளுறந்தை வளம்பதியில்‌ தோன்றித்‌
தலமள ந்த தென்னரங்கர்பால்‌ உலோக சாரங்கமா முனிதோள்‌ தனிலே வந்து
பலமறையின்‌ பொருளாற்‌ பாண் பெருமாளே நீ பாதாதி கேசமதாய்ப்‌ பாடித்‌ தந்த
சொல வமலனாதிபிரான்‌ பத்துப்பாட்டும்‌ சோராமலெனக்‌ கருள் செய்‌ துலங்க நீயே| |
(பிரபந்த ஸாரம் )

வணடின முரலுந்‌ தாமவன மணி மார்பன்றன்னைக்‌
கண்‌ டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
அண்டர்‌ நாயகனை வாழ்த்தி யவனருளமுதமாந்‌திப்‌
பண்டுபோம்‌ பொருள்‌ கிடைத்தபடியுள மகிழ்ந்தானன்றே,
மாடமாளிகையரங்க மறைவலாரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப்‌ பரனுக்‌ குற்ற குணங்களிலீடுபட்டுப்‌
பாடலிலுனக்கு நாமம்‌ பாண்‌ பெருமாள்‌ என்றரோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே
(ஸ்ரீ சடகோப திவ்ய சரிதம் )

உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே
வம்பவிழித்தார் முனிதோளில் வந்த பிரான்வாழியே
மலர்க் கண்ணை மற்றொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான்வாழியே
செம்பொன்னடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

எம்பெருமானுறையூராரேத்த வந்தோன் வாழியே
ஏற்ற கார்த்திகையில் உரோகிணி யுதித்தான் வாழியே
அம்புவியிலங்கருக் கண்டுகந்தான் வாழியே
அக மகிழ்ந்ததே அவர் புகழநின்று யர்ந்தோன் வாழியே

அம்புய நேர்தாண்முனிதோள் வைத்திட்டான் வாழியே
அமலனாதிபிரான் பத்து அருள் செய்தான் வாழியே
பைம்பொழில் சூழ் திருவரங்கந் திகழ்ந்தபிரான் வாழியே
பாண்பெருமாள் பங்கயத்தாள் பார்தனில் வாழியே

    —————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

    ஸ்ரீ மாறன் பாவும் அவர் பொன்னடி மேவியவர் பாவும் –

    June 15, 2026

    உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
    சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
    நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
    சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-
    –ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை –சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க -அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –

    இப்படி சரம பர்வ ஏக நிஷ்டரான இவர் தாம் ஸ்வ ஆச்சார்யரான நம்மாழ்வார் பகவத் விஷயத்திலே பண்ணும் அனுசந்தான பிரகாரத்தை இவ்வாழ்வார் விஷயத்தில் பண்ணினார் இறே -எங்கனே என்னில்
    1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுது -என்றார் -அந்த போக்யதா ப்ரகர்ஷத்தை ஸ்ரீ மதுரகவிகள் தாம் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-என்கிறார்

    எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
    அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
    எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
    அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-இப்படிக் காலமெல்லாம் அனுபவியா நின்றாலும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமேயாம்.-தாராவாஹிக விஞ்ஞானத்தில்-கால உபஷ்டம்பாதிகளால் வருவது ஒரு பேதம் உண்டு இறே ஞானத்துக்கு –அதாவது ஒரு பொருளைப் பற்றித் தொடர்ச்சியாக உண்டாகின்ற பல வகை அனுபவங்களில் காலம் தேசம் முதலியவைகளின்
    கூட்டரவுகளால் வருவது ஒரு பேதம் உண்டு ஞானத்திற்கு;-இங்கு விஷயந்தானே பேதியா நின்றது வேறுபடுகின்றது-ஆயிற்று – என்பதாம்.–இப்படி கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும்
    பூர்வ க்ஷணத்தில் அனுபவம் போலே அன்றியே உத்தர க்ஷணத்தில் அனுபவம் இருப்பது –நித்ய அபூர்வமாய் இருக்கை-

    அண்ணிக்கும் அமுதூரும்
    ரச பதார்த்தங்கள் இட்ட பதார்த்தம் மாண்ட வாறே ரசம் மாளும்
    இது ஒரு கால் இட்டால் உள்ளது அளவும் அமுது ஊற்று மாறாது என்கிறார்-அமுதூரும்
    அமுது தான் ஊற்று மாறாதே செல்லும்–நசபுநர் ஆவர்ததே போலே-நினைத்த நெஞ்சம் தித்தித்தது
    சொன்ன நாக்கும் தித்தித்துவாரா நின்றது-பகவத் விஷயம் நினைக்க நெஞ்சும் இல்லை
    சொல்ல நாக்கும் இல்லை-அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா அன்றோ-அமுதூரும்-அமுதூற்று மாறாதே நிற்கும்-அவ்விஷயம் ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே எனக்கும் ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்
    என் நாவுக்கே –இவ் வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை-இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்-முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு-அதின் எல்லையில் நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ-என் நாவுக்கே-அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம் ரசிக்கிறது –என்றுமாம்

    2-அவர் மலக்கு நாவுடையேற்கு -என்றார் -இவர் நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்றார்

    கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
    உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
    வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
    மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும்-நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ
    ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு-சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ -ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-சோளேந்திர சிங்கன்’ என்பது, நம் பெருமாளுடைய யானை. உளுக்காக்க – இருக்கும்படி. என்றது-சர்வேஸ்வரனாகிற மத்த யானையானது பணிந்து கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.-மலக்கும் நாவுடையேன் – இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன் தான்.
    இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலே யன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி.

    நாவினால் நவிற்று -ஓர் உக்தியாலே இந்த சரீரத்தோடே அனுபவிக்கலாம் என்கிறார் –ஆழ்வார் -அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினேன் –இத்தையும் செய்து அடைந்ததை-இவர் நாவினால் நவிற்று எய்தினார் என்கிறார் –என்றக்கால் அண்ணிக்கும் -என்று ப்ரஸ்துதமானத்தை யனுபாஷிக்கிறார்-மனஸ் சஹ காரம் இல்லை என்கிறார் –-பகவத் விஷயத்தில் உபகாரகரை ஸ்தோத்ரம் பண்ணக் கடவ நாவைக் கொண்டு அந்த கார்யதைக் கொள்ளப் பெற்றேன் -என்னவுமாம்-ஈஸ்வர ஸ்ருஷ்டிக்கு பிரயோஜனம் கொள்ளப் பெற்றேன் -நான் ஒருவனே என்கிறார்-இன்பம் எய்தினேன் –வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
    சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
    விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –
    அநாதி காலம் நரகத்திலே ஸ்ருஷ்டியும் -நரகத்திலே சம்ஹாரமும் ஆம்படி பண்ணின பாபத்தை-பண்ணிப் போந்த நாவால் -நிரதிசய ஆநந்தத்தை ப்ராபித்தேன் -என்னவுமாம் – (வையத்து வாழ்ச்சி போலே நாக்காலே இன்பம் -என்றபடி 

    3-அவர் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றார் -இவர் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -என்றார்

    அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
    நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
    நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
    புகல் ஓன்றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது–அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை
    புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-அடிக் கீழ் -என்கையாலே சரண சப்தார்த்தையும்-அமர்ந்து –என்கையாலே கிரியா பதத்தில் உபசர்க்க அர்த்தமாக உபாய உபேய விஷயமான வ்யவசாயத்தையும்-புகுந்தேனே.–என்று கிரியா ரூபமான ஆஸ்ரயணத்தையும்-புகுந்தேன் என்கிற பூதார்த்த நிர்த் தேசத்தாலே ஆஸ்ரயணத்துக்கு ஆவிருத் அபேஷை இல்லாத ஸக்ருத் கரணத்தையும் பிரகாசிப்பதாய்–இது பூர்ண சரணாகதி யாகையாலே ஆச்ரயண அர்த்தமான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் -குண யோகமும் ப்ராப்ய அன்விதமாய் இருக்கையாலும்
    அடியேன் என்கிற அதிகாரி ஸ்வரூபத்தில் அநந்யார்ஹத்வ அநந்ய சரணத்வங்களோ பாதி அநந்ய போக்யத்வமும் ஸூசிதமாகையாலே-அமர்ந்து என்று பிரயோஜனாந்தர நிரசனம் ஸூசிதமாகையாலே நமஸ் சப்தார்த்தம் சித்திக்கையாலும்-புகுந்தேன் என்கிற பிரதி வசனம் ப்ராப்திக்கும் ஸூசகமாக வற்றாகையாலும்-பிரதானமான உபாய வரண வாக்யத்துக்குள்ளே வாக்ய சேஷமான உத்தர வாக்யார்த்தமும் அந்தர் கதமாயிற்ற தாயிற்று-ஆகையால் இப் பாட்டு வாக்ய த்வயார்த்த ப்ரகாசகமாகையாலே பூர்ண சரணாகதி யாகக் குறையில்லை-“புகல் ஒன்றில்லா அடியேன்”என்கையாலே, உத்தமனால் (உத்தமன் – தன்மையிடம்) போதருகின்ற அதிகாரியும்,
    உன்னடிக் கீழ்” என்கையாலே, “சரணௌ” என்ற சொல்லின் பொருளும்,-“அமர்ந்து புகுந்தேனே” என்கையாலே,“பிரபத்யே” என்ற சொல்லின் பொருளும் கூறியுள்ளதைத் தெரிவித்தபடி.
    “சரணம்” என்ற சொல்லின் பொருளைத் தெரிவிக்கும் பதம் திருப்பாசுரத்தில் இல்லையே? எனின்,
    “புகுந்தேன்” என்றதனால்“சரணம்” என்ற சொல் கோல் விழுக்காட்டாலே வருவது ஒன்றாம் ஆதலின், தனியே கூறிற்றிலர் என்க.-இப் பொருள் தன்னையே விவரணம் செய்கிறார்
    ‘“அகலகில்லேன் இறையும்” என்று’ என்றது முதல்‘பதத்தோடே சேரக் கடவனவாம்’ என்றது முடிய.

    அமர்ந்து புகுந்தேனே – “முமுக்ஷுவான நான் சரணம் அடைகிறேன்” என்னுமாறு போலே.
    அவனுக்கு ஒரு -ஸஹகாரி -துணை வேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ-நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார், (இடையூறும் கால விளம்பமும் இல்லையே -பக்தி யோகம் இல்லையே )உன் அடிக் கீழ் –
    “சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்ரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின்,
    1-ஸூபாஸ்ரயமாய் -எளிதில் பற்றக் கூடியதாய்,
    2-உலக விஷயங்களிலே அருசி முன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி,
    3-பிறந்த உருசியையும் வளர்த்து,
    4-பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து,
    5-ஒரு தேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த் தொடர்புள்ளதுமாய்,
    6-எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க.

    முதல் முதலிலே,
    “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச் செய்து,
    தாம் பற்றுகிற இடத்தில்
    “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும்,
    “உன்னடி சேர் வண்ணம் அருளாய்” என்றும்,
    உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும்,
    “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும்,
    “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும்,
    “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும்,
    “நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும்,
    அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும்,
    “உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடி விடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!

    அமர்ந்து –
    அமருகையாவது, வேறு உபாயங்களை விட்டதைப் போன்று வேறு பலன்களில் அருசியைச் சொல்லுகிறதோ? என்னில், அது இங்குச் சொல்லப்பட வேண்டியது இல்லாமையாலே பொருள் அன்று.
    இதற்குப் பொருள்,-“எல்லாத் தர்மங்களையும் விட்டு” என்றும், “பற்றுக்கோடாகப் பற்று” என்றும் சொல்லச் செய்தே “ஏகம்” என்னும் சொல்லைச் சொன்னதைப் போன்று,-திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது.

    மேவினேன் அவன் பொன்னடி
    -இங்கு இருந்த நாள் அஞ்ஞாத ஞாபநத்தாலே உபகாரகர் ஆகவும்-பகவல் லாபத்துக்கு புருஷகாரமாகவும் –-நித்ய விபூதியில் யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்கிறபடியே ப்ராப்யமாகவும் இவர் தம்மையே-பற்றினேன் -ஆளவந்தார் -அத்ர பரத்ர சாபி என்கைக்கடி இவர் இறே-இஹ லோக சுக ஜனகரும் -பர லோக சுகத்துக்கு சாதனமும் –எனக்கு சுவாமியும் -கால ஷேப விஷயமும் -ஆழ்வாரே என்கிறார்-அவன் பொன்னடி-அவனது போலே உலகம் அளந்த-ஊர் பொதுவாய் -எல்லார் தலையிலும் இருக்கும் பொன்னடி அன்று-நான் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராத திருவடிகள்
    மேவினேன் –வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டாமல் சத்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது
    உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே போலே இன்றி-எங்கேனும் இருந்து ஆஸ்ரயிக்கலாம் படி
    அத்தோடு -வேறு ஒரு கால் இருக்கைக்கு இடம் இல்லாத படி -பொருந்தி விட்டேன்-மெய்மையே-சத்தியமே -ஸ்ரீ சடகோபனை தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்வார் உண்டோ-கால ஷேப விஷயம் எனக்கு ஓன்று இரண்டா ஆயிரம் பிரகாரம் அல்லையோ

    மேவினேன் அவன் பொன்னடி – ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் – ஷிபாமி -என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )
    நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
    மெய்ம்மையே மேவினேன் –
    1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
    அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
    2-இங்கு இருந்த நாள் அஜ்ஞாத ஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
    யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –


    4-அவர் -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றார் -இவர் தேவு மற்றறியேன் -என்றார் –

    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
    மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
    இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-சர்வ தேவா தேவகீபுத்ர ஏவ -என்கிறபடியே கிருஷ்ணனை ஒழிய ஆஸ்ரயணீயர் இல்லை –-அவனுக்கு பிரகார பூதராய் கொண்டு உளராம் அத்தனை அல்லாத தேவதைகள் –யோயோ யாம் யாம் தனும் பக்த –“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.
    “எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை.

    தேவு மற்று -அறியேன் விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு பாவோ நாந்யாத்ர கச்சதி போலே –
    பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
    ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து-அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் -தழை யாயினும் -தண் கொம்பாயினும் – கீழ் வேராயினும் -நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினோ -இத்யாதிப் படியே-பகவத் சம்பந்தம் போகப் போக நிறம் பெறுகிற படி-ரசாயன சேவை பண்ணித் திரிவாரைப் போலே –பாடித் திரிவனே-இது காணும் இவருக்கு தாரகமாய் சஞ்சரிக்கப் பண்ணுகிறது

    தேவு மற்று அறியேன் –
    ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்-மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று–புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இறே-அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே-சாஸ்திர வாசனையாலே யாதல் –ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

    5-அவர் பாடி இளைப்பிலம் என்றார் -இவர் பாடித் திரிவனே -என்றார்

    அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
    நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–நீர்மைக்கு ஒப்பு இல்லாதவனுடைய-புகழ் பாடி இளைப்பிலம்-கல்யாண குணங்களை பாடி விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-இளைக்கை யாகிறது விடுகை -அதாவது விச்சேதம்-அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்-

    குருகூர் நம்பி பாவின்னிசை பாடித் திரிவனே
    குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறு தாம்பு என்னுதல் -திரு வாய் மொழி என்னுதல் –பாவின் இன்னிசை -பாவிலே பூண்ட இன்னிசை-ஐஸ்வர்யத்தை -அல்பம் அஸ்திரம் என்று கழித்து
    ஸ்திரமான ஆத்மப்ராப்தியை அபுருஷார்தம் என்று கழித்து-ஸ்திரமுமாய் பரம போக்யமுமாய் உள்ள பகவத் ப்ராப்தியை ப்ராப்யத்தில் பிரதம அவதி என்று கழித்து-இதில் சரம அவதியான ஆழ்வாரையும் உத்தேச்யர்  அன்று என்று கழித்து-அவரோடு சம்பந்தித விஷயத்தையும் ரசாஸ்ரயம் அன்று என்று கழித்து அத்தோடு சம்பந்தித இசையே உத்தேச்யம் என்கிறார்-பாடித் திரிவனே--உம்முடைய தேக யாத்ரை நடத்திப் போரும்படி என் என்ன –-ப்ரீதி ப்ரேரிரதனாய்க் கொண்டு சொல்லி இதுவே தாரகமாக சஞ்சரிப்பன் –-உண்டு திரிவன் -என்னுமா போலே –பாடித் திரிவன் -என்கிறார்-

    6-அவர் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றதென் -என்றார் -இவர் திரி தந்தாகிலும் -என்றார்

    இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
    செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
    பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய் புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
    அங்கு ஏய் மலர்கள் கைய ஆய் வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-இங்கே திரிந்தேற்கு -பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இறே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை –இழுக்கு உற்று என்-தண்ணிதானது என்–பாகவதர்கள் உடைய ப்ரீதியின் உருவமான-பகவத் கைங்கர்யத்தை-அவன் திருவருளாலே இங்கே செய்யப் பெறில்-எனக்கு அதுவே பேறு -என்கிறார் –-திரிதந்தாகிலும் தேவபிரானுடை-கரிய கோலத் திரு உரு காண்பன் நான் –
    ஆசார்ய ஹிருதயம் –அழும் தொழும் ஸ்நேக பாஷ்ய அஞ்சலியோடு –புலன் கொள் நித்திய சத்ரு விசிதனம் – என்ற ஸ்ரீ சூக்தி இங்கே அனுசந்தேயம்-

    திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
    கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
    பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
    உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-திரி தந்தாகிலும் –திரி தருகை -யாவது மீளுகை –மீண்டாகிலும்-திரிதல் -என்றது கடைக் குறையான சொல்லாய் –திரி தந்தாகிலும் -போன வழி எல்லாம் மீண்டாகிலும் –-அதாவது –திருவாய்மொழிப் பாவை விட்டு –இசைகளை விட்டு –ஆழ்வாரை விட்டு –அவர் உகந்த விஷயம் என்று பிரதம அவதியில் வந்து –

    7-அவர் உரிய தொண்டர் தொண்டர் என்றார் -இவர் நம்பிக்கு ஆள் உரியனே என்றார் -அவர் தாயாய் தந்தையாய் என்றார் -இவர் அன்னையாய் அத்தனாய் -என்கிறார்

    தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
    உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

    தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
    உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-
    சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.
    சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.-ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று –இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது–திருமகள் கேள்வனான சர்வேஸ்வரனுக்கே அடிமைபட்ட ஆழ்வார்,
    சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,
    பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘
    தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.
    –தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;-‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

    திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
    கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
    பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
    உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-நம்பிக்கு – நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது – அதாவது -ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கை-(குருகூர் நகரான என்னாமல் குருகூர் நம்பி -இதற்குள் குறுங்குடி நம்பியும் அந்தர்பூதம் –இருப்பிடம் வேங்கடம் இத்யாதி -பூர்ணர் -அன்றோ -)
    ஆள் உரியனாய் –-உரிய அடியனாய்-உரிய அடியாருக்கு -தம்தாமுக்கு -என்ற ஒரு பிரிய அப்ரியங்கள் இன்றிக்கே ஸ்வாமி உகந்ததையே பற்றி அவன் கை விட்டதை விட்டு இருக்கும் அது இறே ஸ்வரூபம்
    அடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இறே-பெற்ற நன்மை –பெற்ற பகவத் லாபம் – ஆழ்வாருக்கு உரிய அடியேனாய் பெற்ற பேறு இது இறே -ப்ராப்த அப்ராப்த விவேகத்தில் ப்ராவண்யத்தால் வந்த நன்மை அன்று -என்கை-

    மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
    தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
    தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
    நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-காரியங்களில் வந்தால் மாதா உபகரித்த உபகாரம் அன்று இறே தமப்பன் உபகரிப்பது -அவன் உபகரிப்பதும் அன்று இறே பிரஜைகள் உபகரிப்பது -அவர்கள் உபகரிக்குமது அன்று இறே மற்றை பந்துக்கள் உபகரிப்பது –

    நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
    புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
    அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
    தன்மையான் சடகோபன் என் நம்பியே-4–அப் புன்மையே ஹேதுவாக -இவ்வளவில் நாம் அல்லது ரஷகர் இல்லை -என்று எனக்கு-சர்வ வித பந்துவுமானவர்-ச பித்ரா ச பரித்யக்தாஸ் ஸூரைச்ச ச மகார்ஷிபி –தரீன் லோகன் சம்பரிக்ரம்யா தமேவ சரணங்கத-என்று-காகத்தோபாதி இவனுக்கும் புறம்பு ஒரு பற்றாசில் இல்லை என்றதே ஹேதுவாக-சர்வ வித ரஷகர் ஆனவர் –-பிரியமே செய்யக் கடவ மாதா செய்யுமதுவும் –-ஹிதமே செய்யக் கடவ பிதா செய்யுமதுவும் – ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளும் நாயகன்  செய்யுமதுவும் -செய்யுமவர்-தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –

    ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
    அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
    அத்தா
    நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—என்னைப் பெற்ற அத்தாயாய் –-வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்-தந்தையாய்த் – நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-அறியாதன யறிவித்து–சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இ றே
    அத்தா – ஸ்வாமி-நீ செய்தன – இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்
    மாதா பிதா பிராதா -இத்யாதிநாராயண -என்கிறார்

    8-அவர் -ஆள்கின்றான் ஆழியான் -என்றார் -இவர் என்னையே ஆண்டிடும் தன்மையான் -என்கிறார் –

    ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
    மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
    வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
    தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே
    –10-4-3-வகுத்த சர்வேஸ்வரன் அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –ஆஸிலே வைத்த கையும் தாணுமாய் விரோதியைப் போக்கி அடிமை கொள்ளா நின்றான் என்னுதல் –அசக்தனான தன்னாலே சாத்தியமான அசேதன க்ரியாகலாபங்கள் கொண்டு விரோதியைப் போக்குமவர் அன்றே இவர் –சர்வ சக்தி கையில் திரு வாழி யின் கூர்மையால் போக்குமவர் இறே –-ஆரால் குறை உடையம்-என்னால் வருமதொரு குறையும் இல்லை -யமாதிகளால் வருமவையும் இல்லை – மீள்கின்றதில்லை–இனி மறுவல் இடுகிறது இல்லை –சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்- சாதநாந்தரம்-செய்த பின்னையும் – அவன் கை பார்த்து இருக்கும் வேண்டும் படி–அறிவு இல்லாத கர்மங்களின் கூட்டங்களை -கர்மாதி உபாயாந்தரங்கள் -பூண் கட்டா நிற்பர் சிலர்-கூர் அம்பன் அல்லால் குறை-மற்று இலை துணை -நெஞ்சே -குறை -ரக்ஷணம் -நான் முகன் திருவந்தாதி -8-என்ற அம்பின் கூர்மையையும்-
    சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-என்று திரு ஆழியில் கூர்மையையும் கொண்டு பெற இருப்பர் சிலர் –
    ஆற்றல் இல்லாத தன்னாலே செய்யப் பட்ட கர்மங்களின் கூட்டத்தைப் பற்றிப் பெற இருப்பர் சிலர்-
    என்றும் உள்ள ஸ்வரூபத்தை உடைய சர்வஞ்ஞனான பராத்பரனைப் பற்றி பெற இருப்பர் சிலர் –
    கர்மங்களின் கூட்டத்தை நெகிழச் சொல்லி-கெடுவாய் என்னை அன்றோ பற்ற அடுப்பது -என்றான் அன்றோ அவன் சரம ஸ்லோகத்தில்

    நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
    புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
    அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
    தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தன்மையான் – அக்நிக்கு ஔஷண்யம் போலேயும் –-ஜலத்துக்கு சைத்யம் போலேயும் – இஸ் ஸ்வபாவாங்களை நிரூபகமாக உடையவர் –-அதாகிறது -இவனுக்கு உபகரித்தோம் -என்று தான் நினைத்தல் இவன் தனக்கு பிரத்யுபகாரத்தில் இழிய வேண்டி இருத்தல் -செய்யாது ஒழிகை-சடகோபன்-என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –-கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்-இப் பாட்டிலே சடகோபன் என்றார் இ றே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலேஎன் நம்பி-தாய் செய்வது தகப்பன் செய்ய மாட்டான்-அவன் செய்வது இவள் செய்ய மாட்டாள் ஆச்சார்யன் செய்யுமது இருவரும் செய்ய மாட்டார்கள்-நாயகன் செய்யுமது அடியான் செய்ய மாட்டான்-எல்லார் செய்வதும் செய்ய வல்ல பூர்த்தியை உடையவர் –-என் நம்பியே – என்னுடைய தண்மை யாகிற பாழ்ந்த ஆறு நிரம்பும்படியான பூர்த்தியை உடையவர் என்னும் இத்தனை- இவருக்கு கீழ்ச் சொன்ன த்ர்ஷடாந்தங்கள் சர்வதா சாம்யம் அல்ல-கர்ம ஔபாதிகமாக வந்த சம்பந்தம் ஆகையாலும் பூர்ண ஸ்தலம் ஆகையாலும் –

    9-அவர் கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்-என்கிறார் -இவர் தக்க சீர் சடகோபன் -என்கிறார்

    கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
    கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
    வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
    முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-கம்சன் தான் நினைத்த நினைவை அவன் தன்னோடே போம்படி பண்ணினான் —கடியனாய்க் -தன் பக்கலில் இன்றிக்கே வந்தேறி -என்கை –
    பிரான் தன்னைக்-முன்பு உபகாரகன் ஆனவன் கிடீர் நம்மை அழித்தான் —கொண்ட சீற்றம் -5-8-3- என்னக் கடவது அன்றோ – சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –உகந்தாரை அழிக்கை இறே பாதகம் ஆவது -விரோதிகளை அழிக்குமது உபகாரம் இறே

    மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
    நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
    தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
    புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-உபகார ஸ்ம்ருதியாலே தமக்குப் பிறந்த அபிநிவேசத்தை பேசுகிறார் –தக்க சீர் சடகோபன் – சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் தகுதியான கல்யாண குணங்களை உடைய ஆழ்வார் – அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றால் சர்வேஸ்வரத்துக்கு போரும்படி இருக்குமா போலே-சர்வேஸ்வரன் கவிகள் -என்றால் போரும்படி யாயிற்று ஆழ்வார் இருக்கும் படி –
    ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இ றே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –


    10-அவர் யானே என்தனதே என்று இருந்தேன் -என்றார் -இவர் நம்பினேன் பிறர் நன் பொருள் தன்மையும் -என்கிறார் –

    யானே என்னை யறியகிலாதே
    யானே என்தனதே என்று இருந்தேன்

    யானே நீ என்னுடைமையும் நீயே
    வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9–தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இறே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்-

    நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
    நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
    செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
    அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பிறர் -என்கிறது சர்வேஸ்வரனை-நன் பொருள் என்கிறது -ஆத்ம வஸ்துவை-பிறர் நன் பொருள்-த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் அவ்வருகாய் -(அசேதனம் போலே -ஜடம் இல்லை -சேதனம் போலே பரதந்தர்யம் இல்லையே -ஷரம்-பத்த  ஜீவன்  அக்ஷரம் முக்த ஜீவன் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து  விலக்ஷணம் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்திய ஆத்மனி திஷ்டயே -கட்டை விரல் போலே -உண்ண  கண்ட விரல் இல்லை எண்ண கண்ட விரல் – ) விசஜாதீயமான வைலஷண்யத்தை உடையவன் -ஆகையாலே –பிறர் -என்கிறது –உத்தம புருஷஸ் த்வன்ய-என்னக் கடவது இறே-பொருள் -என்று த்ரவ்யம்-நன் பொருள் -என்று -விலஷணமான ஆத்ம வஸ்து
    த்ரவ்யாணி நவ தே விது-என்று த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தார்கள் இறே
    அத்தை இ றே நான் அபஹரித்தது-நம்புதல் –ஆசைப்படுதல்-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று -கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இறே இவருக்கு முதல் –-பகவத் சேஷத்து அளவே நில்லாதே -சேஷத்வ காஷ்டையில் நிற்கக் கடவ ஆத்ம வஸ்துவைக் கிடீர் நான் -அபஹரித்தது-(நன் நன் பொருள் அன்றோ இது )-ததீய சேஷமான வன்று இறே இவ் வாத்ம வஸ்து அனன்யார்ஹம் ஆயிற்று ஆவது-அபஹாரத்தில் வந்தால் த்ரவ்யத்தின் உடைய ஸ்லாக்யதைக்கும்-அபிமாநித்தவனுடைய ஸ்லாக்யத்தைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் கனத்து இருக்கும் இறே –-ப்ராஹ்மண வஸ்துவை அபஹரித்தால் போல் அன்று இறே சண்டாளன் வஸ்துவை அபஹரித்தல்-த்ரவ்யங்களிலும் குரு லகு பாவத்தாலே ப்ரயாசித்த வைஷம்யம் உண்டு இறே விறகு வைக்கோல் களவு கண்டால் போல் அன்று இறே ரத்னம் களவு காண்பது-
    ஆத்ம வஸ்து ஸ்ரீ கௌச்துப ஸ்தாநீயமாய்-உடையவன் சர்வேஸ்வரனாய் இறே -இருப்பது-

    11-அவர் எமர் கீழ் மேல் எழு பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றார் -இவர் இன்று தொட்டு எழுமையும் -என்கிறார் –

    கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
    மாசரிது பெற்று
    நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
    ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
    நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1–கேசவன் தமர் –1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –-2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்-எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது-இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்கு என்றபடி-சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-அவனுடைய அவயவ ஸுந்தர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-கீழ் ஏழு படிகளிலும் மேலே ஏழு படிகளிலும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக கேசவன் தமர்கள் ஆனார்கள்
    ஆழ்வார் பரிகரம் என்றாயிற்று அவன் விரும்புவது -கேசவன் தமர் என்றாயிற்று இவர் விரும்புகிறது
    மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –-மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –-விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்—தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்–மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது-இது பெற்று
    காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி
    வாய்க்கின்றவா –ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –

    இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
    நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
    குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
    என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–விஷயீ கரித்த இன்று முதலாக -பகவத் சமாஸ்ரயணம் போலே ஆஸ்ரயிப்பதொரு காலமும்-பலிப்பதொரு காலமாயோ ஆழ்வார் உடைய விஷயீகாரம் இருப்பது –விஷயீகார திவசமே தொடங்கி அநுபவ காலமாய் அன்றோ  இருப்பது-எழுமையும் –
    ஏழு ஜன்மம் என்று உப லஷணம் -மேலுள்ள காலம் எல்லாம் -என்றபடி –எம்பிரான் –பிரான் பெரு நிலம் கீண்டவன் -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் பேசும்படியை உபகார ஸ்ம்ருதியாலே ஆழ்வார் விஷயத்தில் -பேசுகிறார்-(அருளின பின்பு தான் பிரான் -இங்கே பிரான் முன்பே சொல்லி –உபகார ஸ்ம்ருதி யால் அருளி -உயர்வற –நடுவில் மயர்வற அருளியதை சொல்லி அயர்வரும் அமரர்கள் அதிபதி அருளியது போலே-சதிர்த்தேன் -சொன்னதும் உபகார ஸ்ம்ருதியால் பிரான் முன்பே இங்கே  )
    எம்பிரான் –என் ஸ்வாமி-நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து-பின்பு அது கிட்டினவாறே-அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –

    12-அவர் -என்னால் தன்னை இன்கவி பாடிய ஈசன் -என்றார் -இவர் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்கிறார்

    என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
    அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
    இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
    நின்ற என் சோதியை
    என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கழிகிற காலம் எல்லாம் நாள் தோறும் நாள் தோறும் விஷயீ கரித்து –-என்னைத் தன்னாக்கி -கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி-என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –-என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே –சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –
    இன் தமிழ் பாடிய-அர்த்தம் கிடக்க -சப்தம் தானே ரசித்து சர்வாதிகாரமாக தமிழிலே இசையை வைத்து தானே பாடினவனை-ஈசனை -இப்படி வாய்க்கைக்கு அடி சர்வ சக்தி யாகையாலே -அவன் பாடினான் ஆகில் நீர் செய்தது என் என்ன-ஆதியாய்-நின்ற-எனக்கு அடியாய் நின்று பாடுவித்தான்-என் சோதியை -இவருக்கு கவி பாடுகைக்கு உள்ளுறை கொடுத்தது வடிவு அழகாயிற்று -எனக்கு வடிவு அழகை ஆவிஷ்கரிக்க-அத்தைக் கண்டு கூப்பிட்டது கவி யாயிற்று -பிடாத்தை விழ விட்டு வடிவு அழகை காட்டினான் -திருத் திரை எடுத்தால் போல் கூப்பிட்டேன் -அது கவி யாயிற்று-

    இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
    நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
    குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
    என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–ஒருபடிப்பட நின்று உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து பின்பு அது கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ
    ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து -நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் – மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறார் இறே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )

    13-அவர் ஒட்டுமோ இனி உன்னை நெகிழ்க்கவே -என்றார் -இவர் என்றும் என்னை இகழ்விலன் காண்மினே -என்கிறார் –

    யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
    ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7–தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் என்னை அறியாமே அகப்படுத்தி மனஸ் ஸூ பிடிபட்ட பின்பு செய்வது என் என்னில்-ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து-அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே எனக்கு த்யாஜ்யமான சரீரத்தை தனக்கு போக்யமாகப் பற்றி நின்று
    விலக்காத தொரு சமயம் பெற்றவாறே என் ஆத்மாவோடு வந்து சம்ச்லேஷித்தான்
    இயல் வான்-வியாமோஹத்தை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்-இப்படி உத்ஸஹிக்குமவன் என்னுதல்-ஓட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–-முன்பு நான் த்வேஷம் பண்ணித் திரிந்த நாள் என்னை என் கை வசத்தே விட்டுத் திரிந்தான்-இப்போது இப்படி நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தவன்-பல தசையில் நான் நெகிழ்ந்து போவேன் என்றால் அவன் சம்வத்திக்குமோ

    இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
    நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
    குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
    என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–நின்று –ஒருபடிப்பட நின்று-உபகார ஸ்ம்ருதியாலே பகவத் லாபத்தளவும் ஆழ்வாரை அநுபவித்து பின்பு அது கிட்டினவாறே அதிலே தோள் மாறும் படி அன்றிக்கே இருக்கை  –தன்  புகழ் ஏத்த –ஆழ்வார் உடைய அநுபவத்துக்கு உள்ளே பகவத் அநுபவம் ஆம்படியாய் அன்றோ-ஆழ்வார் உடைய பெருமை இருப்பது -(அவன் புகழ் -சொல்லாமல் தன் புகழ் -எம்பெருமானையும் சேர்த்து )-அருளினான் –நிர்ஹேதுகமாக கிருபை பண்ணினான் –-மயர்வற மதி நலம் அருளினன் -என்று ஆழ்வார் பகவத் விஷயத்தில் சொன்ன -வார்த்தையை-ஆழ்வார் திருவடிகளிலே சொல்லுகிறார் இறே இவர் -(என்னை அருளினான் சொல்ல வில்லை -தனக்கு அருளியது அனைவருக்கும் -அருளும் முன்பு வஸ்துவாகவே நினையாதவர்கள் அன்றோ )-என்றும் என்னை இகழ்விலன் –என்றும் இகழ்விலன் –என்னை இகழ்விலன் –-யாவதாத்மபாவி புறம்பே ஒரு விஷயத்தில் போக விட்டுக் கொடார் .-என் தண்மை பாராதே விஷயீ கரித்தவர் -என்னை விஷயாந்தரங்களிலே போக ஓட்டுவாரோ -தம் திருவடிகள் ஒழிய புறம்பு புகல் அற்று இருக்கிற என்னை புறம்பே போக -என்றாலும் போகலாம்படி என் கையிலே என்னைக் காட்டித் தருவரோ –
    காண்மினோ-இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க-ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ –

    14-அவர் மயர்வற மதிநலம் அருளினன் -என்றார் -இவர் எண்திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்கிறார்

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
    –1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி–ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.-ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
    அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)-விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம் (தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,) என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-மதி நலம் –-ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
    அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –
    ‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை
    (பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி – கர்மா ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது . ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,-ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். என் போலே என்னில் , ‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே – உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்– இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்-அவன் அதுக்கு மேலே ஒரு நன்மை சொல்லுகைக்காக அவன் என்று உத்தேசிக்கிறது –

    கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
    பண்டை வல்வினை பாற்றி யருளினான்
    எண் திசையும் அறிய இயம்புகேன்
    ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–விசேஷஞ்ஞர் உடன் அவிசேஷஞ்ஞர் உடன் வாசியற-ருசி உடையார் எல்லாரும் அறியும் படி சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்
    ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே-ஒண் தமிழ் சடகோபன் அருளையே- மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே-ஒண் தமிழ் -ஒள்ளிய தமிழ் -அழகிய தமிழ் -என்றபடி –
    பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள்

    15-அவர் அருளுடையவன் -என்றார் -இவர் -அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறார்

    பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
    மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
    தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
    அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
    –2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
    அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –

    அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
    வருளினான் அவ் வருமறையின் பொருள்
    அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
    அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-அருள் கொண்டாடும் அடியவர் – இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –-அதுவும் அவனது இன்னருள் -என்றும் –அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே – ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
    நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் –என்றும் – அருள் புரிந்த சிந்தை -என்றும் –நின் அருளே புரிந்து இருந்தேன் –என்றும் அருளாது ஒழியுமே -என்றும் -(சீறி அருளாதே -சீற்றத்தையும் அருள் -கொண்ட சீற்றம் ஓன்று உளது -என்றும் கொண்டாடுவார்கள் அன்றோ )இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –-இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
    பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
    ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே -கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் -தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்-அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் – இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இறே – ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இறே அவர்கள் பாசுரங்கள் -(கிருபையால் பக்தியை பெற்றோம் என்பார்கள் –சரணாகதி கிருபா ஜனகமா -கிருபா ஜன்யமா –சரணாகதி கிருபையை தூண்டாது –கிருபா ஜனகம்  இல்லை ஜன்யம் தானே -கிருபைக்கு பலம் தான் பக்தி -சரணம் நாக்கு பிறந்ததே தேவரீர் பிரசாதம் கூரத் தாழ்வான்-வைஷம்யம் இல்லை -அனைவரையும் –வரவாறு ஓன்று இல்லை -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்தே  -பண்ணுவதற்காக கொடுத்தால் சாதிய உபாயம் -அவனே கொடுப்பதால் சாத்தியம் நிர்ஹேதுகம் –உபாயம் எதிர் பார்க்காமல் -அதிகாரி ஸ்வரூபம் -அடைய ஆசை இச்சை வேண்டும் -ஆசை தகுதி -என்றவாறு -புருஷ சாபேஷமாய் புருஷகார சாபேஷமாய் இருக்கும் -)மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் – ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ -என்கை–இவ் உலகினில் மிக்கதே –சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயதையும் கபளீ கரித்திருக்கை –அதனில் பெரிய என் அவா -என்று பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான அபிநிவேசத்தளவும் போருமாயிற்று- என்னளவில் -கிருபையும்-(நீசனேன் நிறை ஒன்றும் இல்லா என்னளவும் என்றவாறு )

    16-அவர் -பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றார் -இவர் -நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-என்கிறார் –

    பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
    பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
    காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
    ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-திருப் பேரை தனக்கு கோயிலாகப் பெற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்-நீ போவுதியோ இருப்புதியோ -என்று கேட்பாரும் இன்றிக்கே-உதாசீனராக – இருக்கச் செய்தே—இன்று வந்து-பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன்னை ஒருவர் கேட்டார் இன்றிக்கே இருக்காது தானே -இனி ஒரு நாளும் போகேன் -என்று சொல்லி பிராட்டி தன் பக்கலிலே சொல்லுமத்தை தான் என் பக்கலிலே சொல்லா நின்றான் –நான் போகேன் போகேன் -என்று சூழ்த்துக் கொடா நின்றான் ஆயிற்று– என் நெஞ்சு நிறையப் புகுந்தான்–இவனுடைய அபி நிவேசத்தை ஆதரியாத நெஞ்சானது பூர்ணமாம் படி –முன்பு நினைவு இன்றிக்கே இருக்க இன்று வந்து புகுந்தான் -முன்பு நினைவு உண்டாவது தன் பக்கல் முதல் உண்டாகில் இறே –தான் சர்வேஸ்வரனாய் வைத்து-என்னோடு கலக்கப் பெறாமையாலே குறைவாளனானவன்- இன்று வந்து-நிர்ஹேதுகமாக என் மனத்தின் கண் புகுந்து நிறைவாளன் ஆனான் -என்கிறார்

    மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
    நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
    தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
    புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-என் நெஞ்சுள் நிறுத்தினான் – பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் – கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் -(ஆழ்வார் ஏவ கைங்கர்யம் இவருக்கு -ஆழ்வாருக்கு அர்ச்சை பெருமாள்  ஏவ மாட்டாரே  -ஏவிப் பணி கொள்ளப் படுவது அங்கே தானே )

    17-அவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றார் -இவர் ஆட்ப்புக்க காதல் அடிமைப் பயன் -என்கிறார் –

    ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
    வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
    தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
    எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-ஒழிவு இல் காலம்எல்லாம்-முடிவு இல்லாத காலம் எல்லாம்-உடனாய் -சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் —மன்னி – சர்வேஸ்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும்,-படிக்கம் குத்துவிளக்குப் போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளை – அடிமைகளைச் செய்ய வேண்டும்.-இதனால்,-சர்வ அவஸ்தைகளையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது.உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிகை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்-வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.-எல்லா அடிமைகளும் நானே செய்ய வேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப் போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதே யிருந்து செய்ய வேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பே யன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:-இருந்த விடத்திலே யிருந்து மநோ ரதிக்கிறார் இத்தனை யன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?-ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால்,-சதுர்த்தியில் -நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது;

    மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
    நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
    தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
    புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-என் நம்பிக்கு –அதுக்கு மேலே (கீழே அவனுக்கு தக்க குணம் -இதில் தாழ்ந்த என்னை அபகரித்த குணம் அன்றோ -) ஒரு பௌஷ்கல்யம் இறே இது -என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –ஆட் புக்க காதல் –
    அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )அடிமைப் பயன் அன்றே –இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாக பிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இறே இருப்பது –அங்கன் அன்றிக்கே-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு-முனியே நான்முகனுக்கு அவ்வருகு இறே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது –அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

    18-அவர் -ஆராத காதல் -என்றார் -இவர் -ஆட்ப்புக்க காதல் -என்கிறார்

    சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
    ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
    ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
    சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-லோகத்தில் சகல பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு பிரமிக்கும் படியான நிரவதிக பக்தியை உடையவர்-நிரூபக தர்மம் இவருக்கு காதல் ஆயிற்று-தம் படி சொல்லினும் தாமே சொல்லும் அத்தனை-ஆராத காதல் –-இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு,
    அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார்.-காதல் குருகூர்ச் சடகோபன் –-காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.-‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. -(அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே – இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

    மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
    நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
    தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
    புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-என்னை விஷயீ கரிக்கைக்கு தகுதியான சீலாதி குண பௌஷ்கல்யத்தை வுடையவர் ஆனவர்க்கு –அனந்யார்ஹ சேஷமாக்கின ருசி-(ஆள் புகப் பண்ணின காதல் -கைங்கர்யத்தில் மூட்டின காதல் )இந்த ருசி யன்றோ அப்போதே தாஸ்யமான பிரயோஜனத்தோடே வ்யாப்தமாய் இருப்பது -பகவத் விஷயத்தில் ருசி அடியாகபிறந்த தாஸ்யம் -சரீர விச்லேஷம் பிறந்தால் அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்தில் சென்றால் பெறக் கடவதாய் இறே இருப்பது – அங்கன் அன்றிக்கே ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –-துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகு இ றே பேறாயிற்று-இவ்விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது என்கிறது – அன்றே -என்றது –ஆம் என்றுமாம் –

    19-அவர் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்கிறார் -இவர் -பயனன் றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்-என்கிறார் –

    கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
    பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
    தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
    அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-ஓர் அறிவு இன்றிக்கே இருக்கிற என்னை -உன் வாசியை அறிவித்து ஒரு வஸ்துவாக்கி -அசன்னேவ -என்கிற என்னை சந்தமென்னும் என்று உஜ்ஜீவிக்கும் படி பண்ணினாய்-பெரு மக்கள் உள்ளவர் -என்கிற நித்ய சித்தர் செய்யக் கடவ கைங்கர்யத்தை என்னைக் கொண்டாய் -உண்டாக்கின அளவே அன்றிக்கே-ஜீவனமும் இட்டிலையோ -கைங்கர்யமே ஜீவனம் –கார் முகில் என்றது பலித்த படி –-மயர்வற மதி நலம் அருள பெற்றவர் இப்படி சொல்லுகையாலே ஸ்வ நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம் –ஈஸ்வரோஹம் என்று இருக்கை அஞ்ஞான கார்யம்

    பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
    செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
    குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
    முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-பயனன் றாகிலும் –நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இறே-அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –-பாங்கலராகிலும் –பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு பங்காய் இருக்கலாம் இறே-அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்-இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இறே இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் – ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இறே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும்  இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இறே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-செயல் நன்றாகத் –-தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே  ஒழிந்தால்-அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –-தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்-திருத்திப் பணி கொள்வான் –
    தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இறே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

    20-அவர் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றார் -இவர் தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் -என்கிறார் –

    கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
    நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
    கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
    நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -ரிஷிகளை ரக்ஷித்து அன்றோ பிராட்டியால் ஆலிங்கனம் பெற்றார் பெருமாள்–சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –இப்பாட்டினை-நம்முடையார் த்வயத்தின் அர்த்தத்தோடு அனுசந்திப்பார்கள் -என்பது -என்று ஜீயருக்கு அருளிச் செய்தார் –-திரு மால் என்னை ஆளும் மால் -10-7-5-என்னும்படியே–தம்முடைய அன்புக்கு அடி சொல்லுகிறார் –அந்தப்புரத்தைச் சார்ந்தவன் அன்றோ –என் அன்புக்கு அடி இல்லையோ –-திருவுக்கு பரிகரமான என்னிடமும் மால் -மால் நடுவில் -திரு என்னை இரண்டு பக்கமும் – திரு மால் இடம் பேசி இருவருமாக என்னை ஆள்வார்கள் -கைங்கர்யம் கொள்ளுவார்கள் -என்றபடி –பிராதி கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இறே-க்ருபயா பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இறே பிராட்டி நீர்மை –ஸ்ரீ பூமிப் பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-பிராட்டியை பெறுகைக்கு செய்த செயலையும்-என்னை பெறுகைக்கு செய்து- என்னைக் கிட்டப் பெற்ற பின்பு-உன்னைப் போக விடுவேனோ- நீ செய்த செயலின் பலத்தால் சேர்ந்த நான்-கைப்பட்ட செல்வத்தை விடத் தக்கவனோ-

    அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
    அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
    அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
    நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் – தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்-அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில் பாகவதர்களைப் பற்ற அமையும் –ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இறே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இறே -இருப்பது-

    21-அவர் -உலகம் படைத்தான் கவி -என்றார்-இவர் மதுரகவி -என்கிறார் –

    நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
    சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
    ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
    என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-சென்று சென்றாகிலும் நெடும் காலம் கூட வாகிலும்-கண்டு,-நம்மை இவன் கண்டு-சன்மம் கழிப்பான்-ஜென்ம சம்பந்தம் அரும்படி பண்ண வேண்டும் என்று-எண்ணி,-மநோ ரதித்து-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்
    கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு-அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
    என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?– கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்
    இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத– ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ –சென்று சென்று ஆகிலும் கண்டு நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் ஜன்மம் கழிப்பான் எண்ணிஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமோ –

    அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்து பண்ணின கிருஷி பலித்து, அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு.
    என்றும் என்றும் இனி மற்று ஒருவர் கவி ஏற்குமே –காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் வேறு சிலரைக் கவி பாடத் தகுமோ?-‘நன்று; இப்படிப் பலத்தது அவன் சன்மம் கழிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்ததே காரணமாம் ஆகில்,-பின்னை எல்லார்க்கும் பலிக்க வேண்டாவோ?’ என்னில், இறைவனுடைய நினைவு தானும் சென்று சென்று ஆகிலும் என்பதே அன்றோ?
    ஒரு நாளிலேயே பலிக்குமது என்பது இன்றே? ஆகையால், பலிக்கப் பலிக்கக் காணுமித்தனை. இனி, ‘என்றும் என்றும் உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு மற்று ஒருவர் கவி ஏற்குமே,’ என்று கூட்டி, ‘இனி, மேல் பலவாக உள்ள காலம் எல்லாம் இச்சரீரமுள்ளதனையும் இதுவே வாழ்க்கையாக இருந்து, மேல் ‘மேல் சொல்லப்போகிற சாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றும்,
    ‘அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நம்’ என்றும் பாடப் புகுகிற எனக்கு, பகவானுக்கு வேறுபட்டிருக்கிற பொருள்களைப் பற்றிக் கவி பாடுகை போருமோ?’ என்னலுமாம்.-வேறு சிலர்க்கு நான் கவியாகத் தகுமோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘வேறு சிலர் கவியிலே நான் சேர்தல் தகுமோ?’ என்னுதல்-கவி ஆயினேற்கு மற்றொருவர் கவி ஏற்குமே?’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: முதற்பொருள், ‘இறைவனைப் பாடுதற்கு அமைந்த புலவனாகிய யான் வேறு சிலரைப் பாடும் புலவனாதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது ஆழ்வாரைக் குறித்தது. இதனையே, ‘அவன் எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கிச் சிலரைக் கவி பாடத் தகுமோ?’ என்பது முடிய
    அருளிச்செய்கிறார்.
    இரண்டாவது பொருள், ‘அவனைப் பாடுகின்ற பாடல்களைக் கொண்டு வேறு சிலரைப் பாடுதல் கூடுமோ?’ என்பது. இப்பொருளில் ‘கவி’ என்பது,பாடல் அல்லது பிரபந்தம் என்பதனைக் குறிக்கும். இப்பொருளையே, ‘பலவாக உள்ள காலமெல்லாம்’ என்று தொடங்கிக் ‘கவி பாடுகை போருமோ?’ என்பது முடிய அருளிச் செய்கிறார்.

    22-அவர் உரைக்க வல்லாருக்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -என்றார் -இவர் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டுகிறார் –

    இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
    விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
    நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
    உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-இத்திருவாய் மொழியை சொல்ல வல்லார்க்கு உத்தேச்ய பூமி பரமபதமாக கடவது என்னுதல் -இது சொன்னவர்கள் இருந்த இடமே பரமபதம் என்னுதல் -அதாகிறது அவர்களுக்கு இவரைப் போலே மடல் எடுக்க வேண்டா -அவன் தானே மடல் எடுத்து இவர்கள் இருந்த இடத்தே நித்ய சம்ச்லேஷம் பண்ணும் என்கிறது -நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல், இவர்கள் இருந்த இடங்களிலே அவன் தானே வந்து எப்பொழுதும் சேர்ந்தே இருக்கையாலே, இவர்கள் இருந்த இடம் தானே பரம பதமாம் -அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ. இப் பாசுரங்களைச் சொன்ன அளவிலே இது கூடுமோ? என்ன ஒண்ணாது;-இப் பாசுரங்களில் சொல்லுகிற பகவானுடைய குணங்களைப் பார்த்தால், ‘இந்த வார்த்தை தானும் மிகை’ என்னலாம்படி இருக்கும்;-இது கூடாதாகில், பரிபூர்ண சமாஸ்ரயணத்துக்கும் பலம் இல்லையாம்;-இங்ஙன் அன்றாகில், புருடோத்தமன் இதர சஜாதீயன் ஆனான் ஆமே-

    அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
    அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
    அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
    நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
    ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில் திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம் அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இறே -நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
    உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் –உம்பர் -ஊர் திரு நாடு -திரு வனந்த  புரம்  /-வசிக்கும் ஊர்  மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ  எழில் ஆலி என்னார் தாமே -போலே )
    கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
    ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

    இப்படி ஆழ்வார் பகவத் விஷயத்திலே அனுசந்தித்து குண விசேஷங்களைத் தாம் ஆழ்வார் விஷயத்தில் அநுஸந்திக்கும்படிக்கு ஈடாக ஆழ்வார் தம்மை விஷயீ கரித்து சரம பர்வ ஏக நிஷ்டராம் படி பண்ணி அருளின உபகாரத்துக்கு -பிரதியுபகாரம் இல்லாமையாலே தத் குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாதபடியான தசை விளைந்து

    1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தையும்

    2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்

    3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –

    4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –

    5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்

    6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்

    7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்

    8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –

    9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்

    10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –

    11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

    திருவாய்மொழி வேத சாரமாய் -திருவாய் மொழியினுடைய சாரமாய்த்து இப்பிரபந்தம் இருப்பது –இவ்வாழ்வார் ஆகிறார் 1-அவ்வாச்சார்யா வைபவம் அறிந்தவர் ஆகையாலும்
    2-ஆழ்வார் திருவடிகளிலே நெடு நாள் பரிசர்யை பண்ணி அவருடைய பிரசாத பாத்ரராய்ப் போந்தவர் ஆகையாலும்
    3-அவர் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் உண்டாக நினைத்திராதவர் ஆகையாலும்
    4-அவரை வாயாராப் புகழ்ந்து அவருடைய உபகார அனுசந்தான ப்ரீதிக்குப்போக்கு விட வேண்டுகையாலும்
    இப்பிரபந்த முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார்-

    ஈஸ்வரன் துராராதனாய் ஆச்சார்யன் ஸ்வாராதனாய் இருக்கும்
    ஈஸ்வரனை ஆராதிக்கைக்கு திருவிருத்தம் தொடக்கமான நாலு பிரபந்தங்கள் வேண்டிற்று
    ஆழ்வாரை ஆராதிக்கைக்கு இப்பத்துப் பாட்டுக்களே அமைந்தது –

    உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இறே –-இது வாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து-

    லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் – அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
    அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே-ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்-மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் – இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –

    தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது-அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே-இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே-ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது

    கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
    பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
    நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
    அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-தத் குண அனுபவ ஜெனித ப்ரீதிகளுக்குப் போக்குவீடாக பகவத் விஷயத்திலும் அதிசயிதமான ஆழ்வாருடைய போக்யதா ப்ரகர்ஷத்தை அருளிச் செய்கிறார்-

    ஆழ்வார் உடைய போக்ய  அதிசயம் தோற்றுகைக்காகவும் – ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
    அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்-உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –-பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –-பையவே நிலையும் -என்றும்
    ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –

    பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
    வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
    மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
    எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
     –1-3-1-உரஸ் ஸ்தலத்திலே கட்டுண்டு
    மலர் மகள் விரும்பி அணைக்கும் மார்விலே கிடீர் கயிற்றை இட்டுக் கட்டிக் கட்டுண்டு இருந்தது –இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே –-அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-

    அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் -இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்-பிறந்தவாறும் -5-10-கிருஷ்ணாவதாரத்தில் போந்தார் ப்ரத்யாசத்தியாலே -அதுவும் தீர்த்தம் பிரசாதிக்கையாலே-பல்லில் பட்டுத் தெறித்தது -என்று கூப்பிடுகிறார் -இது ஆழ்வான் நிர்வாஹம் –
    உன்னைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் உன்னுடைய குண சேஷ்டிதாதிகள் ஸ்ம்ருதி விஷயமாய் நலியா நின்றது-இவ் வவசாதம் தீரும் படி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்று என்கிறார் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிட்டார் நிர்வாஹம் –

    பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
    செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
    நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
    பையவே நிலையும் வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்
    பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன

    தென் குருகூர் -நம்பி-
    நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
    விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இ றே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
    எங்கனே என்னில் – பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்-ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இறே- ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இறே என்று ஜீயர் அருளிச் செய்வர் –

    செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
    மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
    அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
    நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-
    நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்-அவன் இடை விடாதே ஸ்நேஹியா நின்றான்-அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்
    நம்பி -ஒருத்தனாக நினைத்து-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர்

    2-அவருடைய பாசுரமே தேஹ யாத்ரை யாம்படி தாரகமான படியையும்

    நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
    மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
    தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
    பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

    இன்பம் எய்தினேன் – வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவி -என்று ஆழ்வார் அவ் விஷயத்தில் பெற்ற பேற்றை -இவ் விஷயத்திலே பெற்றேன் என்கிறார் –
    சிந்தையினாலும் சொல்லாலும் செய்கையினாலும் -என்று கரண த்ரயத்தாலும் அவ்
    விஷயத்தை ஆஸ்ரயித்தவர் பெற்ற பேற்றை உக்தி மாத்ரத்திலே பெற்றேன் –

    1-எனக்கு இஹ லோக ஸூ க ஜனகரும் ஆழ்வாரே-2 -பர லோக ஸூ கத்துக்கு சாதனமும் ஆழ்வாரே-3-எனக்கு ஸ்வாமி யும் ஆழ்வாரே -4-கால ஷேப விஷயமும் ஆழ்வாரேநான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம்-பகவத் விஷயத்தை ஆஸ்ரயிக்கும் இடத்தில் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் என்று வர்த்தமான நிர்த்தேசம் பண்ண வேண்டிற்று
    இங்கு அப்படி அன்றிக்கே சக்ருத் சமாஸ்ரயணம் அமைந்தது

    வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
    வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
    வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்-அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
    மேவியே-அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
    அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –

    சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
    தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்

    முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
    செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-மநோ வாக் காயங்கள் மூன்றும் -ஒருபடிப்பட அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படி –இரங்கி -என்றும் –மணி வண்ணாவோ என்று கூவுமால் -என்றும் –தன் கரங்கள் கூப்பித் தொழும் -என்றும் -மூன்றாலும் இவருக்கு உண்டான இவருக்கு உண்டான பிராவண்ய அதிசயம் இ றே இது திருவாய் மொழியிலே சொல்லிற்று-அவனே தமக்கு சர்வவித்த பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது –அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே–“தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே”
    மாதாபிதா யுவதய: தநயா விபூதி: ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா”
    –என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள்.பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-

    குருகூர் நம்பி இன்னிசை பாடி –பகவத் பிரதிபாதகம் என்று அன்று இவர் திருவாய் மொழியைப் பாடிற்று –ஆழ்வார் அருளிச் செய்தது என்றாயிற்று –உயர்வற உயர் நலம் உடையவன் -வண் புகழ் நாரணன் -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –என் செய்ய தாமரைக் கண் பெருமானார் -என்று பாடா நிற்கச் செய்தும் பகவத் விஷயத்தோடு உறவற்று இறே இவர் பாடுகிறதுதிரிவனே
    அங்குப் போனால் அன்றோ ஏதத் சாம காயன் நாஸ்தே என்றிருக்க வேண்டுவது -இங்கு அப்படி அன்றிக்கே விஸ்ருங்கலாமாகத் திரியா நிற்பன்-திரிவேனே-இது எனக்கு கால யாத்ரை –ஆகையால்
    1-ஸூக பூதரும் -2-சாதனா பூதரும் -3-ஸ்வாமி யும் -4-காலஷேப விஷயமும் -( நான்குக்கும் நான்கு அடிகள் இந்த பாசுரம் – )ஆழ்வாரே

    3-ஆழ்வார் உகந்த விஷயம் என்றும் தமக்குப் பகவத் விஷயமும் உத்தேச்யமாம் படியையும் –சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறதுதேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –

    திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
    கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
    பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
    உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

    தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு- (கரிய உரு –கோல உரு -திரு உரு )
    நித்ய ஸூரிகளுக்கு படிவிடும் வடிவு -காளமேக நிபஸ்யாமமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே-இறே இருப்பது –-இவ்வளவும் இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இறே –என்று எம்பெருமான் திரு உள்ளம்-கோலமே தாமரைக் கண்ண தோர் அஞ்சன நீலமே –என்று ஆழ்வார் வாய் புலத்து கேட்டிருக்குமவர் ஆகையாலே பேசுகிறார்-என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே –கோலத்-ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய் வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது-அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இறே போவது –திரு உருக் –கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
    அவ் விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து-அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
    ஒழிவிலன் என்னோடுடனே
    என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்

    கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
    சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-அழகு என்றும் தாதாஸ்ரயம் என்றும் இரண்டு அன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை-ஞான ஸ்வரூபன் என்றும் ஞான குணகன் என்றும் சொல்லக் கடவது இறே ஞாதாவை–அஞ்சனம் என்றும் நீலம் என்றும் சொல்லுகையாலே ஓன்று ஒப்பாக மாட்டாமையாலே கதிர் பொறுக்குகிறார்-நீலம் தன்னை வடிவாக வகுத்தால் போலே இருக்கை –-வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியில் தம்மைச் சேரவிட்டுக் கொண்ட சீலமாதல்.–செய்ய தாமரைக் கண்ணனில் நெஞ்சினால் நினைப்பான் எவன் என்கிற அர்ச்சாவதாரத்தில் நீர்மையை இறே இவர் நினைக்கிறதுநம்பிக்கு –-நான் ஒன்றை விட்டேன் என்னலாம்படியோ ஆழ்வார் உடைய  பூர்த்தி இருப்பது –
    அதாவது –ஆழ்வாரை அனுபவிக்கும் அனுபவத்திலே பகவத் விஷயம் அந்தர்பூதமாய் இருக்கைஅடியேன் – ஆழ்வார் உடைய நீர்மைக்கு தோற்று -அடியேன் -என்கிறார் – தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் நீர்மை இறே

    கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
    தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
    வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
    பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.-தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –‘தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.-ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி

    பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு – சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு – ஆழ்வார் ஒருவருக்கும் இறே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று-இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இறே
    இவரையும் காட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது-விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்ட வூர் இறே-(பெரிய வண்மை இரண்டு விசேஷணங்கள் )-அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இறே இவர்க்கு –தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இறே சொல்லுவது-இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே-விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்

    பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
    குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
    பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
    உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-ரக்ஷணம் தாழ்ந்தவாறே அதி சங்கை பண்ணுகையும் -உபகார ஸ்ம்ருதியாலே ஹ்ருஷ்டராகையும் ஆகிற இவை யுண்டாகைக்கு அடி அவ் வூரிலே பிறப்பு என்கை -மானஸ அனுபவ மாத்திரமே யாய் விடாதே ப்ரபந்ததீ கரித்த உதார குணம்

    4-அப்படி உத்தேசியமாக விரும்புகைக்கு அடி தம்மை ஆழ்வார் விஷயீ கரித்த விஷயீ காரம் என்னும் அத்தையும் –

    நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
    புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
    அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
    தன்மையான் சடகோபன் என் நம்பியே-4தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -என்று பகவத் விஷயத்தில் ஆழ்வார் சொல்லுவது எல்லாம் ஆழ்வார் விஷயத்தில் சொல்லுகிறார் இவர் –என் பக்கல் சாட்யத்தை போக்கினவர் –கீழ் மூன்று -பாட்டிலும் தென் குருகூர் நம்பி -நம்பி என்று சொன்னவர்
    இப் பாட்டிலே சடகோபன் என்றார் இறே  –ஸ்வ தோஷத்தை போக்கின படியாலேஎன் தோஷ அதிசயத்தாலே அந்தப் பரம சாத்விகரும் என்னை நெகிழ அதுவே பற்றாசாக எனக்கு முகம் தந்து மாதா பிதாவும் தாமேயாய்என்னை அடிமை கொண்டு போந்த ஸ்வ பாவம் ஆழ்வார்க்கு உள்ளது ஒன்றாகையாலே அவரே அன்றோ எனக்குப் பூரணரான உபகாரகர்என்னை ரஷித்து சடகோபன் என்கிற பட்டப் பேர் சூடியவர்-சத்வ நிஷ்டர்க்கு பஹிஷ்டனான வென்னைத் தாம் அங்கீ கரித்தும் அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கை வளர்ந்து போந்த வென்னைக் கைங்கர்யம் கொண்டும் போந்த –சடகோபன் என் நம்பியே-பூர்த்தியை யுடையவர் ஆழ்வாரே

    ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
    அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
    அத்தா
    நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2—வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –-பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று-எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே-ஸ்வாமி-இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர் பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச் செய்கிறார்.-

    நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-அபகாரபரர் அளவிலும் உபகாரகனாய்ப் போருகை –அதாகிறது அவர்கள் அளவில் குறை காணாது ஒழிகை இறே-ததீயரை நலத்தால் மிக்கார் என்று ஆழ்வார் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாலே தாமும் -நன்மையால் மிக்க என்கிறார்-

    செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
    உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
    அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-க்ரம பிராப்தி பற்றாதபடி ஸ்நேஹித்து இருக்குமவர்கள் -அவர்களதான திருக் குடந்தையில் அவர்களை பிரிய மாட்டாமையாலே உடம்போடு கண்டு அனுபவிக்கலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவனே-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது

    என்னை யாண்டிடும்-பொலிந்து நின்ற பிரான் பக்கலிலும் ஒரு கால் போய் வாரீர் என்று உபதேசித்தார் என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்வர்-கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில் நண்ணி என்று நான் விட்டுப் போந்த விஷயத்தை-நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவது என்று பொலிந்து நின்ற பிரானுக்கும் ஓர் அஞ்சலி நேரும்படி பண்ணினார்

    5-இதர விஷய ப்ராவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான சாதுர்யத்தையும்

    நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
    நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
    செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
    அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-பர த்ரவ்யதை ஆசைப்படுகை இறே -அபஹாரம் –வன் கள்வன் -என்று –கள்வன் ஆனேன் என்றும் -ஆழ்வார் அனுசந்திதது இ றே இவருக்கு முதல் –அர்த்த அபஹாரத்துக்கு இடம் பார்த்து திரியா நிற்க – அச் செம்பொன் மாடத்தை களவு காண புக்கேன் –
    அங்கு வைத்த மா நிதியைக் கண்டு -அகப்பட்டேன் -என்கிறார் – இவருக்கு வைத்த மா நிதி ஆழ்வார் இறே-(திருக் கோளூர்-சொல்லாமல் திருக் குருகூர் என்கிறார் அன்றோ ) ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவருக்கு ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே திருநகரியைக் கவி பாடுகிறார் –

    உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் –என்றும் பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-நம்பிக்கு அன்பனாய் அடியேன்-ஆழ்வாருக்குப் பிறந்த மதி நலன்கள் போலே கிரமத்திலே வருகை அன்றிக்கே அன்பு முற்பட்டு அடிமையில் பட்டது ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தராகையாலே இவருடைய கடாஷ லஷ்யன் ஆகையாலே அம்மாத்ரத்திலே பதத்ரயார்த்தத்திலும் முன்னாய் விட்டேன்

    நான் அர்த்தாத்ஜ நேச்சுவாய் தேசாந்தர சஞ்சாரம் பண்ணா நிற்கச் செய்தே தைவாயத்தமாக திரு நகரியிலே மாடங்கள் ஓங்கி இருந்து பொற்கென்று தோற்றிற்று-இங்கே போய் அர்த்த அபஹாரம் பண்ணலாம் -இது தான் நகரி யாகையாலே நாகரிகைகளான மடவாரையும்-இம் மாடங்களிலே காணலாம் என்று அறுதியிட்டு வழி விலங்கி உள் புக்கேன் – அன்னகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் திரு வஷ்டாஷர சம்சித்தர் ஆகையாலே அவ்விடத்தில் தச்கர சஞ்சரணம் இல்லாமையாலே
    ஒரு வைஷ்ணவ சகாசத்திலே ஷத்ர பந்துவுக்குப் பிறந்த அவஸ்தை போலே எனக்கும் ஆழ்வார் சகாசத்திலே-அபஹார புத்தி போய் உள்ளே ஆழ்வார் தம்மைக் காண வேணும் என்று புக்கு அவருடைய பூர்த்தியைக் கண்டு நின்றாப் போலே இருக்க அவருக்கு அன்பனாய் விட்டேன்செம் பொன் மாடம்
    துவளில் மா மணி மாடம் ஓங்கு துலை வில்லி மங்கலம் -என்று உகந்து அருளின நிலங்களில் மாடங்களும் ஆழ்வாருக்கு உபாதேயம் ஆனாப் போலே இவருக்கும் ஆழ்வார் உடைய மதி நலங்களோ பாதி மாடங்களும் உபாதேயமாய் இருக்கிறது யாய்த்து – ஆகையாலே அர்த்த காம ப்ரவணரையும் ஆளாக்கும் தேசமாய்த்து –

    6-ஆழ்வார் தம்மை விஷயீகரித்த விஷயீ காரத்தினுடைய தார்ட்யத்தையும்

    இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
    நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
    குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி
    என்றும் என்னை இகழ்விலன்  காண்மினே-6–இது ப்ரத்யஷிக்கலாவது ஒன்றாய் இருக்க
    ஆழ்வார் பெருமை நான் சொல்ல கேட்க மிகை அன்றோ —நின்று-–மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று ஆழ்வாருக்கு வ்யவர்த்ய விஷயம் மனுஷ்யர் இறே -இவர்க்கு வ்யாவர்த்யம் எம்பெருமான் ஆனபடி –நின்று தன் புகழ் ஏத்த அருளினான்-–உபகார ச்ம்ருதியாலே பகவல் லாபத்து அளவும் இவரைப் பற்றி நின்று பின்னை அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றியே தம்முடைய அனுபவத்துக்கு உள்ளே பகவத் அனுபவமாம் படி ஆழ்வார் எனக்கு அருளிற்று–எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –என்று ஆழ்வார் பகவத் விஷயத்தைச் சொல்லக் கேட்டுப் போந்த-வாசனையாலே தாமும் எம்பிரான் என்கிறார்–ஏத்தநற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் இயற்றுவாய் -என்று தொடங்கி –மொய் கழலே ஏத்த முயல் -என்ற ஆழ்வார் தம்மைப் போலே
    ஏத்த உத்யோகித்து விட்ட அளவன்றிக்கே –தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்-என்று தொடங்கி –முயல்கின்றேன் உந்தன் மொய் கழற்கு அன்பையே என்று-பத்தும் பத்தாக ஏத்தும்படி அருளினார்–ஆழ்வாருடைய குணங்களைப் புகழ்கையே  புருஷார்த்தம்-அது சித்திப்பதும் அவருடைய அருளாலே என்று அத்யவசிதனாய் ஏத்தும் படியும் அருளினார் –புருஷார்த்த பூதருமாய் சாதன பூதருமானவர்கள் இறே அத்யவசாய ப்ரதரும்-அவருடைய குண அனுசந்தானத்தாலே மனஸ் சைதில்யம் பிறக்கையாலே – –நெஞ்சை ஒருங்கப் பிடித்து நின்ற ஏத்த என்றுமாம் –குன்ற மாடத்  திருக் குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன்-அம்மாடங்களுக்கு சலனம் உண்டானாலும் ஆழ்வார் திரு உள்ளம் சலியாதுகாண்மினேபாணானார் திண்ணம் -என்றும் சொல்லுகிற பிரமாணங்களிலே-பார்த்துக் கொள்ள மாட்டி கோளோ –

    7-தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான ஆழ்வாருடைய கிருபா ப்ரகர்ஷ ப்ரகாஸத்தையும்

    கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
    பண்டை வல்வினை பாற்றி யருளினான்
    எண் திசையும் அறிய இயம்புகேன்
    ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–இருந்தான் கண்டு கொண்டு -என்று எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டு இருந்தாப் போலே ஆழ்வாருக்கு அலாப்ய லாபம் ஆகிறபடி-காட்சி இத் தலைக்காக வன்றிக்கே தம் பேறாக இருக்கிறபடி-தொண்டீர் எல்லீரும் வாரீர் –என்னும் ஆழ்வாரோட்டை வாசநை யாலே சொல்லுகிறார்-அவர் -பகவத் விஷயத்தில் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-இவரும் ஆழ்வார் பக்கல் ருசி உடையார் எல்லாரும் வாரும் கோள் -என்கிறார்-ஆழ்வார் பக்கல் பாவ பந்தத்தாலே–மயர்வற மதிநலம் அருளினவனுடைய அருள் போலே அல்ல ஆழ்வார் உடைய அருள் – அவ்வருளுக்கும் அயலான அளவிலே பண்ணி யருளின அருள் இறே –பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்படி திருவாய்மொழி பாடின அருளுக்கு மேலே இறே என்னை விஷயீ கரித்த அருள் –பார்க்க ஒண்ணாத என்னைப் பார்த்தார்-எல்லாரும் கை விட்ட வென்னைக் கைக் கொண்டார் இவர் ச்வீகரித்தால் அவனாலும் விடப் போகாதேதெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலே அங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படிஅங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்இனி பதக்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

    இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
    அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
    பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
    கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-என்னைப் பெறுகையாலே -சம்சாரம் கொண்டவரை மீட்டோம் என்று இருந்தோம் -மாயக் கூத்தவன் கொண்டவரும் பிழைக்கப் பெற்றோமே -என்று குறைவற்று இருந்தான் என்னுதல் -என்னோட்டை கலவி தன் பேறாக இருக்கும் வேறுபாடு தோற்றும்படி இருந்தான் என்னுதல் –கண்டு கொண்டே -பிரபல வியாதிக்கே பிழைத்த புத்ரனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பிதாவை போலே –விஜூவர பிரமுமோதஹ-என்கிறபடியே மாயாக் கூத்தனில் ஆற்றாமைக்கு பிழைத்தவன் என்று வைத்த கண் வாங்காதே இரா நின்றன் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்-என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

    இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
    திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
    பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
    தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்—மொத்தமாக ஆழ்வாரை விழுங்கி -அசத் சமமாக திருவடிக்கு கீழ் சேர்த்துக் கொண்டானே —-இத்தை நினைத்து இறே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –

    கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
    தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
    வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
    பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்

    8-பகவத் கிருபையிலும் ஆழ்வாருடைய கிருபையே இவ் விபுதியில் விஞ்சி இருக்கும் என்னுமத்தையும் –

    அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
    வருளினான் அவ் வருமறையின் பொருள்
    அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
    அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8-ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
    கபளீ கரித்து இருக்கை-மயர்வற மதிநலம் அருளினான் -என்னும்படியான அருள் அல்ல –-அது தன்னையும் விளாக் குலை கொண்டு இருக்கும் அருள் இ றே -ஆழ்வார் அருள் –-ஈஸ்வரன் கை விட்ட ஆத்மாக்களிலும் -அவர்களுடைய துர்கதியைக் கண்டு திருத்த ஒருப்பட்ட படியாலே இவர் அருள் ப்ரத்யஷம் அன்றோ-பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-பாட்டும் அன்று-பாடினவரும் அன்று-பாட்டுக்கு அடியான அருளும் அன்று-இவர் அருள் யாய்த்து-இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே-வரை முறுவலான ஸ்ரீ கீதை சொன்னவனுடைய அருள் அன்று
    அவன் நெறி எல்லாம் எடுத்துப் பாடின இடத்திலும் அகப்பட்டாரும் அகப்படாதாருமாயிற்று-இவர் அருள் அப்படி இன்றியிலே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றப் பண்ணிற்று ஆயிற்று-கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -என்று அந்த லோகத்தில் இவருடைய பாட்டு மிக்கப் போலே-இந்த லோகத்தில் இவருடைய அருள் மிக்கது
    இங்கு அருள் மிக்கு அங்கு போகம் மிகும் படி இறே லோக ஸ்பாவங்கள் இருப்பது –அவனுடைய அருள் சாஸ்திர கம்யம் -இது ப்ரத்யஷ சித்தம்இவ்வுலகினில் –கண்டீர்-இப்போது இவ்வுலகத்தில் கண்டி கோளே-அந்த லோகத்தில் போனால் அங்குக் காண்கிறிகோள் (அவன் அருளை காண அங்கே போக வேண்டுமே -இங்கே கேடக்த் தானே முடியும் -என்றவாறு -இவர் அருள் இங்கேயே காணலாமே -மதுர கவி ஆழ்வார் சாக்ஷி அன்றோ -அங்கு ஆழ்வார் -ஓர் அரசு மட்டுமே -அதனால் தான் நம்புவார் பதி -வைகுந்தம் என்றார் )-இவ்வுலகினில் மிக்கது-இந்த லோகத்தையும் ஆழ்வாருடைய அருளையும் சீர் தூக்கிப் பார்த்தால் அதிலும் விஞ்சி இருப்பது இவர் அருள் அன்றோ–கடல் மண் எல்லாம் விலையோ வென மிளிரும் படி இறே இவருடைய கண்ணுடைமை இருப்பது-(அருள் பாலிப்பது திருக் கண்கள் தானே )


    9-இப்படி ஆழ்வாருடைய கிருபை இவ் வுலகில் விஞ்சி இருக்கைக்கு அடி ஸகல வேத ரஹஸ்ய அர்த்த ஞாபகமாய் தம்முடைய பாசுரமான இப்பிரபந்தத்தை என் நெஞ்சினிலே ஸூ பிரதிஷ்டமாக்கினான் என்னுமத்தையும்–உபகார பிரகார உபபாதனம் பண்ணா நின்று கொண்டு தம்முடைய் க்ருதஜ்ஞதையைச் சொல்லுகிறார்- ஆசார்யனுக்கு கிருபையே வேஷமாய் சிஷ்யனுக்கு க்ருதஜ்ஞதையே வேஷமாய் இருக்கும் –

    மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
    நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
    தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
    புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
    வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே—சகல வேத தாத்பர்யமான பாகவத சேஷத்வத்தை -பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கடிமை-என்கிற-இரண்டு திருவாய் மொழிகளிலும் அருளிச் செய்து -என் நெஞ்சின் உள்ளே நிறுத்தினான்-ஆழ்வார் பக்கல் பிறந்த ருசி -இச் சரீரத்தோடே இங்கே யாழ்வார் திருவடிகளிலே எல்லா
    அடிமையும் செய்யலாம்படி பண்ணும் –துயர் அறு சுடர் அடி தொழுது எழு -என்று முதலிலே அபிநிவேசித்த ஆழ்வாருக்கு முனியே நான்முகனுக்கு அவ்வருகு இறே பேறாயிற்று-இவ் விஷயத்தில் ருசி பிறந்தால் அத்தனை விளம்பியாது

    அவர் பகவத் சேஷத்வத்தையும் -பகவத் பிரேமத்தையும் -பகவத் சேஷ வ்ருத்தியையும் உபதேசித்தார்
    இவர் ஆழ்வாருக்கு சேஷமாய் -அவருக்கே ஸ்நிக்தராய்- அவருக்கே கிஞ்சித் கரிக்கத் தேடுகிறராய் நின்றது-இவர் கற்றது இதிலே யாய்த்து–அவர் புறப் பொருளை விட்டு உட்பொருளைக் கொடுத்தார்-
    இவர் உட்பொருளான பகவத் விஷயம் தன்னை புறப் பொருள் ஆக்கி அதிலும் உட்பொருளான ஆழ்வார் திருவடிகளிலே-சேஷ பூதராய் ப்ரேம பூர்வகமான கைங்கர்யத்திலே இழிகிறார் யாய்த்து

    10-இப்படி ஆழ்வார் தம் பக்கலிலே உபகரித்த உபகாரம் பிரதியுபகார நிரபேஷமாய் இருக்கும் என்னுமத்தையும் –

    பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
    செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
    குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
    முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-திருத்திப் பணி கொள்வான் –தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –அங்கன் இன்றிக்கே-இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இறே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)

    தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
    ஆர்த்த புகழ் அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
    வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
    நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் – அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்யப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை.-‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும்,-‘முகப்பே கூவிப் பணி கொள்வானாய் குறைவற்ற கல்யாண குணங்களை யுடையவனாய், அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருந்தாலும் -கிரியதாம் இதி மாம் வத -என்ன வேண்டுமே –

    முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
    உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –அர்த்தியா நின்றேன் –-செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இறே-என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம் அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே- பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-

    வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
    காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
    தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
    தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
    –2-7-8-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்- பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய் நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் – தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
    தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே-உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
    உனக்கு நான் எத்தைச் செய்வேன்

    குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி--இவர் ஆற்றாமையாலே ஒரு காலத்திலேயே காண வாராய் என்று கூப்பிடுவதுமொரு பாசுரம் உண்டு- ஹர்ஷத்தாலே யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லுவதும் ஒரு பாசுரம் உண்டு- இரண்டு பாசுரத்துக்கும் குயில் யாயிற்று பயிற்ருவன-இவர் பேச்சைக் கேட்க செவி ஏற்றாலே அவையும் இவர் பாசுரத்தைச் சொல்லும் யாயிற்று
    குருகூர் நம்பி-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்று சேதனர் அளவின்றியே திர்யக்குகள் அளவிலும்-ஏறும்படி யாய்த்து ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பதுசெயல் நன்றாகத் திருத்தி- இவர் உபதேசித்த அர்த்தம் என் நெஞ்சிலே பட்டு அது தான் அத்யவசாய பர்யந்தமாய் அவ்வளவு அன்றிக்கே அனுஷ்டான சேஷமாய்-அவ்வனுஷ்டானம் தான் சத் அஸத் அநுஷ்டான மிஸ்ரமாகை யன்றிக்கே சத நுஷ்டானமே யாம்படி திருத்தினார்-( சத் அஸத் அனுஷ்டானம் இரண்டும் கலந்து போலே இல்லாமல் )
    1-முற்பட ஸ்ரவணமும் –2-ஸ்ருதமான வர்த்தத்தில் மனனமும் -3- மனமான வர்த்தத்தில் மஹா விசுவாசமும் –4-விச்வச்தமான அர்த்தத்தில் அனுஷ்டானமும்-5-அதில் அசத நுஷ்டானம் கலசாதே சத நுஷ்டானமே யாய்ப் போருகையும் இறே செயல் நன்றாகத் திருத்துகை யாவதுதிருத்தி-இவற்றில் என் கையில் என்னைக் காட்டிக் கொடாதே தாமே கைத் தொடராய் நின்று இவ் வவஸ்தா பன்னமாக்கினார்-

    குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி-–அசேதனமான பஷி ஜாதம் அடைய ஆழ்வார் பரிசரத்திலே திருந்தி திருவாய் மொழி பாடக் கற்றுப் பாடா நின்றால் சேதனான நான் திருந்தச் சொல்ல வேணுமோ-சாகா சம்பந்தம் உண்டாகையாலே அக்குயில்கள் திருவாய் மொழியைப் யாய்த்து பாடுவது (சாகா சம்பந்தம் -கிளை சம்பந்தம் ஆயிரம் பாசுரங்கள் சம்பந்தம் ) –அவை பாடும் குயில்கள் ஆகையாலே தம்பிரான்மாரைப் போலே ஆழ்வாருக்கு திருவாய் மொழி பாடுவான வாய்த்து-(விண்ணப்பம் செய்வார் முன்னே  இரண்டு பேர் சேவிக்க –அத்தை அரையர் அனுவதிக்குமா போலே ஆழ்வார் முன்னே முன்னுரு அனுசந்திக்க -குயில்கள் தம்பிரான் பாட ஆழ்வாரும் கூட பாடுகிறார் என்றவாறு )-ஒரு தேச சம்பந்தத்தாலே செவ்வாய்க் கிளி நான்மறை பாடுமானால்-(தில்லை திருச் சித்ரகூடம்    பாசுரம் கலியன் ) இத்தேச வர்த்திகளுக்குத் திருவாய் மொழி பாடச் சொல்ல வேண்டா விறே- தாம் மதுர வாக்காகை யாலே மதுர வாக்கான குயிலை இட்டுப் பொழிலை சிறப்பிக்கிறார்மொய் கழற்கு அன்பையே-இத் திருவடிகளின் போக்யதை அன்பைக் கொடுத்தது-அன்பு பிரத்யுபகார்த்திலே மூட்டிற்று-அதுக்கு இடம் காணாமையாலே அலமரா நின்றேன்-இவ்வலமாப்பு யாவச் சைதன்யம் இறே –மொய் கழற்கு அன்பையே-முயல்கின்றேன்-(வர்த்தமானம் யாவதாத்மா பாவி ப்ரபத்யே போலே )

    11-இப் பத்துப் பாட்டாலே ஸூ க்ரஹமாக அருளிச் செய்து இப்பிரபந்தம் கற்றாருக்குப் பலம் ஸ்ரீ வைகுண்டம் என்றும் சொல்லித் தலைக் கட்டுகிறார்

    அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
    அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
    அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
    நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே பூரணராய் இருப்பர்–பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
    உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

    உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார் அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இ றே-இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று-

    நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
    1-ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
    2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
    3-ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
    4-தம்முடைய தோஷம் பாராமல் ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
    5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
    6-பின்பு அத்தோஷம் மேலிடாதபடி ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
    7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
    8-பகவத் கிருபையில் காட்டில் ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
    9-அக்கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
    10-அவ்வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-தாம் அலமருகிற படியையும் இ றே கீழ்ச் சொல்லி நின்றது –


    ஸ்ரீ கோயிலே கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ஸ்வாமிகள் -அருளிச் செய்த -எண்ணிலும் வரும்-எண் தானும் இன்றியே வந்தியலுமாறு ஸ்ரீ கண்ணன்–

    June 9, 2026

    கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
    எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
    மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
    விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
    –1-10-2-–

    சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்–பரி கணனையோடு பரம பக்தியோடு வாசி அற முகம் கொடுக்கும் என்று அக்குணத்திலே ஈடுபடுகிறார் –நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும்-சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா,
    இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன் என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப் போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான்–இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான்-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும்-‘வரும்
    வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’

    109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.
    ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌. (எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி  ‘“ஓரெண்டானுமின்றியே”” \என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

    கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
    எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
    உண்டானை உலகேழுமோர் மூவடி
    கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
    –1-10-5-எண்ணிலும் வரும் -என்கிறது தானும் மிகை யானபடி கண்டாயே -என்று அவன் படியை மூதலிக்கிறார் –

    தன் திறத்தில் எண்ணுகை தானும் இன்றியே இருக்கச் செய்தே எம்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்த படியைச் சொல்லுகிறார் –எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –-எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –-உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –பழம் கிணறு கண் வருகிறது என் –-நீ அவனைக் காண எங்கே எண்ணினாய்-பிரளய ஆபத்தில் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை-(விலக்குகைக்கு பரிகரமாவது – விஷய ப்ராவண்யம்-ஸ்வரூப யோக்யதை யாதல் என்றுமாம் –)பிரதி கூலிகைக்கும் பரிகரம் உடைய நீ யன்றோ பெற்றாய் –பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;-உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;-அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,-அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார்,  ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.


    ப்ரஹ்மம் -கடவுள் -இறைவன் -பரத்வம் அறிந்து வணங்கி -எம்பிரான் எந்தை என்னுயிர் எளிமை நினைத்து நெருங்குவோம் -கண்ணன் -அஹம் மாம் -இரண்டையும் காட்டுமே

    1-உள்ளத்தால் எண்ணினால் நினைத்தால் வரும்
    2- எண்ணம் இல்லாவிட்டாலும் வரும்
    3-ஓன்று இரண்டு மூன்று இவ்வாறு எண்ணிக் கொண்டு வந்தாலும் வரும்-

    பரம புருஷார்த்தம் -ஸ்ரீ வைகுண்டம் -எம்பெருமான் பதம் -அத்விதீயம் -ஓன்று
    கண்ணன் கோபாலனாக கோயிலே கொண்டுள்ள ஸ்தலங்கள் -இரண்டு –
    ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி பிரதான திவ்ய தேசங்கள் –மூன்று
    பிரசித்த போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் -நான்கு
    பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -ஐந்து
    விண்ணகர் என்று கொண்டாடப்படும் திவ்ய ஸ்தலங்கள் -ஆறு
    முக்தி அளிக்கும் ஷேத்ரங்கள் -ஏழு
    ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
    பகவத் ராமானுஜரின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்கும் ஷேத்ரங்கள் -ஒன்பது
    ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்கள் -பத்து

    ஸ்வயம் பாதம் ப்ரசார்ய ஸ்ரித்து ரிதஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா
    ஜானுன்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாக போக நிதாய

    பஸ்ஸாத் பாஹுத் வயேந ப்ரதிப டஸமநே தாரயன் சங்க சக்ரே
    தேவீ விபூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத

    ஆத்ம பரமாத்ம ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றுக்கு குறைவற்ற ஸ்தலம் -ப்ரளயத்திலும் அழியாதது -கர்மங்களைத் தொலைத்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்ற ஆத்மா திரும்பி வருவதில்லை -பரமபத நாதனை ஆதிசேஷனில் அமர்ந்துள்ளார் –

    வீர நாராயணப் பெருமாள் -மாடு கன்றோடு சேவை -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் திருவவதார ஸ்தவம் -ஸ்ரீ நாதமுனிகளுக்கு -அருளிச் செயல்களைக் காட்டிக் கொடுத்த ராஜகோபாலன் –பெரியவாச்சான் பிள்ளை -தென்னானாய் வடவானாய் -இத்யாதி பாசுரம் சமர்ப்பித்து அபிமானித்த ஸ்தலம்
    லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
    அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

    மன்னார்குடி -ராஜகோபாலன் -ருக்மிணி ஸத்யபாமையோடு ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் -32-திருக்கோல தர்சனம் ரிஷிகளுக்கு காட்டிக் கொடுத்து அருளினவன் –தக்ஷிண துவாரகை
    உன்னுத்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
    நும்மிச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
    மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
    மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே -4-6-10-மா முனிகள் ஸமர்ப்பித்து அபிமானித்து ஸ்தலம்

    ஸ்ரீ தேவிக்கு பிரதான ஸ்தவம் -ஸ்ரீ ஸ்வேத கிரி என்னும் ஆதி திருவெள்ளறை -புண்டரீகாக்ஷப் பெருமாளுடன் சேவை -கிருத யுகத்திலே சிபி சக்ரவர்த்திக்காக ஸ்ரீ வராஹ ரூபத்தை காட்சி கொடுத்தருளிய ஸ்தலம்

    நாச்சியார் ஆண்டாள் பிரதான ஸ்தவம் ஸ்ரீ வில்லிபுத்தூர் -பூதேவி நமக்காக குன்றாத வாழ்வான் வைகுந்தம் வான் போகந் தன்னை இகழ்ந்து ஆண்டாளாக திருத்துழாய்த் தோட்டத்தில் எடுத்து பெரியாழ்வார் திருமகளானார் –

    நாச்சியார் கோயில் -நீளா தேவிக்குப் ப்ரதானம் -வஞ்சுளவல்லித்தாயார் -திருநம்பிக்கை நாச்சியார் -நறையூர் நம்பி சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தன் அனைவருடன் சாளக்கிராம திருமேனியுடன் சேவை ஸாதிக்கிறார் -திருமங்கை யாழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளிய பெருமாள்

    1-போக மண்டபம் -ஸ்ரீ ரெங்கம் -பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள் –
    2-புஷ்ப மண்டபம் –சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -திருமலை -தோ மாலை பிரஸித்தம் -குறும்பறுத்த நம்பி வைபவம் -அநந்தான் பிள்ளை வைபவம் –
    3-தியாக மண்டபம் -அத்தியூரான் புள்ளை யூர்வான் –திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தைகள் -ஆலவட்டம் கைங்கர்யம்
    4-ஞான மண்டபம் -திரு நாராயண புரம் -கிருதயுகத்தில் தத்தாத்ரேயராக அவதரித்து வேதங்களை உபதேசித்து அருளிய ஸ்தலம் -த்ரேதா யுகத்தில் ராமனாலும் த்வாபர யுகத்தில் கண்ணனாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாள் -யதிராஜர் எழுந்தருளி ஞான பக்தி வளர்த்தருளிய ஸ்தலம் -யதிராஜ சம்பத்குமார் ப்ரஸித்தம்

    பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
    1-திருக்கண்ணங்குடி
    -கண்ணனூர் கண்ணபுரம் -64 சதுர்யுக ங்களாக சேவை -சவுரி ராஜர் ஐதிக்யம் -அமாவாசை தோறும் திருக் கைத்தல சேவை -விபீஷணனுக்காக -திருமங்கை ஆழ்வாருக்கு திருவெட்டு எழுத்து அர்த்தம்- கற்ப்பித்தார்
    2-திருக்கண்ணங்குடி -வசிஷ்டர் ஆராதனப் பெருமாள் –தாமோதர நாராயணன் -லோக நாயகித் தாயார் -திருமங்கை ஆழ்வாருக்கு உதவின நான்கு -தீரா வழக்கு-உறங்காப்புளி -ஊராக்கிணரூ -காயா மகிழ் -இங்கு பிரசித்தம்
    3-திருக்கோவலூர் -த்ரிவிக்ரமப் பெருமாள் ஆயனாக சேவை ஸாதிக்கும் ஸ்தலம் -மிருகண்டு மகரிஷி முதல் ஆழ்வார்கள் ப்ரத்யக்ஷம் –
    4-திருக்கண்ண மங்கை–பெரும் புறக் கடல்-அபிஷேக வல்லித் தாயாராய் திருமணம் செய்தருளிய ஸ்தலம் -அடியார்களை உயிராகக்கொண்ட பத்தராவிப் பெருமாள் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் –
    5-திருக் கபிஸ்தலம் -ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் –
    கஜேந்திர மோக்ஷம் திருவடிக்குக் காட்டி-ரமாமணித் தாயார் ஸமேத கஜேந்திர வரதன்

    மண்ணகத்திலேயே ஆறு விண்ணகர் திவ்ய ஸ்தலங்கள்
    1-திருவிண்ணகர்
    -ஒப்பிலி அப்பன் -உப்பிலி அப்பன் -பொன்னப்பன் மணியப்பன் -முத்தப்பன் -என்னப்பன் –
    2-திருக் காழிச் சீராம விண்ணகரம் -தாடாளன் -சீர் பெருகி பாபம் கழிகிற படியாக இந்தத் திருநாமம் – ஸித்தாஸ்ரமம் போல் இருப்பதால் ராம விண்ணகரம் என்றும் வழங்கப்படுகிறது –
    3-திரு நந்திபுர விண்ணகரம் —ஸ்ரீ நாதன் கோயில் –செண்பக வல்லித் தாயார் ஸமேத ஜெகந்நாதப் பெருமாள்
    4-திரு அரிமேய விண்ணகரம் -பொருள் வெண்ணெய் நம்முள்ளம் கோபிகள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யங்கள் -நம் பாபங்கள் அனைத்தையுமே அபகரிப்பதால் அரி -மூலவர் குடமாடு கூத்தன் -கோவர்த்தன கிரிநாதனே இங்கு எழுந்தருளி உள்ளார் –
    5-திரு வைகுந்த விண்ணகரம் -வீற்று இருந்த திருக்கோலம் -ஸ்வேதகேது இங்கு கைங்கர்யம் செய்து முக்தி பெற்றான் –
    6-திரு பரமேஸ்வர விண்ணகரம் -முகுந்தவல்லித்தாயார் ஸமேதரராய் வீற்று இருந்த திருக்கோலம்-நடு தளத்தில் சயனத் திருக்கோலம் -மேல் தளத்தில் நின்ற திருக்கோலம் –

    முக்தி தரும் ஷேத்ரங்கள் -ஏழு
    1-அயோத்யா
    -சரயு நதிக்கரை -அபராஜிதா
    2-மதுரா -யமுனைக்கரையில் மதுரமான ஸ்தலம் -பாபங்களை மதனம் பண்ணி -கடைந் தெடுத்துப் போக்கி -புண்ணியங்களை அளித்து முக்தி தரும் -கீதையில் தான் பிராணத்தையும் வளர்ந்ததையும் த்யானித்தாலே அந்தப் பிறவியலே மறு பிறவியில்லா மோக்ஷம் அடைவான் -என்று அருளிச் செய்துள்ளான் அன்றோ –
    3-மாயா -ஹரித்வாரம் -தேவ பிரயாக் கர்ண ப்ரயாக் -ருத்ர ப்ரயாக் -விஷ்ணு ப்ரயாக் -திருப்பிரிதி -பத்ரிநாத் அனைத்து ஸ்தலங்களுக்கும் தலைவாசல் -கங்கை கங்கையை என்னும் வாசகத்தினாலேயே கடு வினைகள் களையலாமே –
    கங்கா த்வாரே குசா வர்தே பில்வகே நீல பர்வதே
    ஸ்நாத்வா கநக லே தீர்தே புநர் ஜென்ம ந வித்யதே

    வியத்தகு ஆற்றல் உள்ள படியாக இது மாயா என்றும் பெயர் பெற்றது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடைபெறும் இடம் –
    4-காசி -வாரணாஸீ –
    அன்யாநி முக்திக் ஷேத்ராணி காசீ ப்ராப்தி கராணி ச
    காசீம் ப்ராப்ய விமுச்யதே நான்யதா தீர்த கோடிபி
    காசீ காசீதி ஜபதோ யஸ்ய ஸம்ஸ்தி திஸ்
    அந்யத்ராபி ஸதஸ்தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே —

    வர்ணா மற்றும் அஸீ நதிகளுக்கு இடையில் -வாராணஸீ -ஆத்ம விஷயங்களை எல்லாம் –காசயதி ப்ரகாசயதி– விளங்கு வைக்கும் ஸ்தலம்-பிந்து மாதவனாக சேவை
    5-காஞ்சீ -திருக்கச்சி -க -ப்ரஹ்மா யாகம் செய்து அஞ்சித்த-தொழுத ஸ்தலம் -ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்யகோடி விமானம் -ஒரு புண்ணியம் கோடி புண்ணியமாக வளர்ந்து முக்தியை அளிக்கும் –
    6-அவந்திகா -உஜ்ஜைன் -ஸூதாமா என்னும் குசேலருடன் ஸாந்தீபனி மகரிஷியிடம் 64 கலைகளையும் கற்ற ஸ்தலம் -ஷிப்ரா நதிக்கரையில் உள்ளது -12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் -இவ்வூரின் வாழியே கடக ரேகை ஓடுகிற படியாக விக்ரமாதித்ய மன்னர் காலத்தில் வானவியல் வல்லுநர்கள் இங்கு கூடிய கால க்ரஹ நிர்ணயம் செய்தனர் –
    7-துவாரகா -முக்திக்கு வாசல் -கோமதி நதிக்கரையில் உள்ளது த்வாரகாதீசனாக சேவை ஸாதித்து அருளுகிறான் —

    ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
    1-ஸ்ரீ ரெங்கம்
    காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம்
    ஸ வாசூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
    விமானம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
    ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவத் ப்ரணவார்த்ஹ ப்ரகாசக

    பூ லோக வைகுண்டம் –
    ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான் –
    2- ஸ்ரீ முஷ்ணம் –ஸ்ரீ தேவி பூ தேவி யுடன் ஒரே கல்லில் கரப்ப க்ருஹத்தில் -சங்கு சக்கரம் ஏந்தி சேவை -முத்தக்காசு கோரைக்கிழங்கு பிரஸாதம் ஸமர்பிக்கப் படுகிறது –
    ஸ்வேதம் ஸூ தர்சந தராங்கித பாஹு யுக்மம்
    தம்ஷ்ட்ராகரால வதனம் தரயா ஸமேதம்
    ப்ரஹ்மாதி பிர் ஸூர கணை பரி ஸேவ்யமானம்
    த்யாயேத் வராஹ வபுஷம் நிக மைக வேத்யாம்

    3-திருவேங்கடம் –
    ஸ்ரீ ஸேஷாசல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
    ஆக்யாம் த்வதீய வஸதே ரநிசம் வதந்தி ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸூ ப்ரபாதம்

    பத்து புராணங்களும் பேசும் பெருமை -கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் –
    4-சாளக்கிராமம்
    மம தத் ரோஸதே ஸ்தாநம் கிரி கூட ஸி லோச்சய சாளக்ராம இதி க்யாதம் பக்த ஸம்ஸார மோக்ஷணம்
    சாளக்ராம ஸிலாரூபீ தவ கர்ப கத ஸதா திஷ்டாமி தவ புத்ரத்வே பக்தா நுக்ரஹ காரணாத்

    கண்டகி நதியின் பிரார்த்தனைக்கு ஏற்ப மடியில் தோன்றியருலி -இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் முக்திநாதனாக தர்சனம் அருளுகிறார்
    5-நைமிசாரண்யம்
    ததோ கச்சேத ராஜேந்திர மிஸ் ரகம் தீர்த முத்தமம்
    தத்ர தீர்தா நி ராஜேந்த்ர மிஸ்ரிதாநி மஹாத்மநா
    வ்யாஸேன ந்ருப சார்தூலத் விஜார்த மிதி நஸ் ஸ்ருதம்
    ஸர்வ தீர்தே ஷு ஸ ஸ்நாதி மிஸ்ரகே ஸ்நாதி யோ நர

    இங்கு காடாகவே தர்சனர் -ஒரு நிமிஷ நேரத்திலே அசுரர்களை அழித்தவன்
    ஸூத மகரிஷி புராணங்கள் ஸுநகர் போன்ற முனிவர்களுக்கு அமர்ந்து உபதேசித்து அருளினார் -அயோத்யா மன்னர்களுக்கு யாக பூமியாக விளங்கிய ஸ்தலம்-

    6-வானமா மலை -ஸ்ரீ வைகுண்டம் போல் வீற்று இருந்த திருக்கோலம் -சிரீவர மங்கை ஸமேதனாய் தெய்வநாயகன் -ரோமச முனிவருக்கு ப்ரத்யக்ஷம் -நித்ய எண்ணெய் தைலக்காப்பு –
    7–புஷ்கரம் –
    யதா ஸூராணாம் ஸர்வேஷாம் ஆதிஸ்து புருஷோத்தம
    ததைவ புஷ் கரம் ராஜன் தீர்தா நாம் ஆதி ருச்யதே –

    தீர்த்த வடிவமாகவே சேவை -நான்முகனுக்கும் கோயில் உண்டு -அவர் ஒரு அரக்கனை தமது கையிலே உள்ள தாமரையை வீசி அழிக்க -அது 52 பகுதிகளாகி இணைந்து புஷ்கரம் எனப்படுகிறது
    8-பதரிகாச்ரமம்
    யோவதீர்ய ஆத்ம நோம் ஸேந தாஷாயண்யாம் து தர்மத
    லோகா நாம் ஸ்வஸ்தயே அத்யாஸ்தே தபோ பதரிகாஸ்ரமே

    அலகானந்தா நதிக்கரையில் இலந்தை மரத்தடியில் தவம் செய்யும் திருக்கோலம் -நர நாராயணனாக -சிஷ்ய ஆச்சார்யனாக அஷ்டாக்ஷரம் உபதேஸித்து அருளிய திவ்ய க்ஷேத்ரம் -அக்ஷய திருதீயை முதல் தீபாவளி வரையே திறந்திருக்கும் -பின்னர் பனி மூடி விடும்

    ஸ்ரீ ஸ்வாமி ராமானுஜ சரித்திர ஷேத்ரங்கள் ஒன்பது –
    1-ஸ்ரீ பெரும்பூதூர்
    -பிங்கள வர்ஷம் -1017-சித்திரை வளர்பிறை பஞ்சமி திதி வியாழக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் திரவவதாரம் -சிவனின் பூத கணங்களால் கட்டப்பட்டதால் பூத புரீ -திருவவதார மண்டலத்தில் 74 ஆச்சார்யர்களின் திருவுருவங்களும் சேவை உண்டு
    2-திருப்புட்குழி -வறுத்த பயறு முளைக்க வைக்கும் -மரகத வல்லித் தாயார் ஸமேத விஜய ராகவப் பெருமாள் -யாதவப்பிரகாசரிடம் கல்வி கற்ற ஸ்தலம் -பெரிய திருவுடையாருக்கு ஸம்ஸ்காரங்களைச் செய்த க்ஷேத்ரம்
    3-மதுராந்தகம் –பெரிய நம்பிகளால் சமாஸ்ரயணம் பெற்றார் -ஏரி காத்த பெருமாள் மந்த்ர உபதேசம் பெற்ற ஆத்மாவைத் திருக்கல்யாணம் செய்தருளிய ஸ்தலம் –

    4-தொண்டனூர் -நம்பி நாராயணப்பெருமாள் நின்ற திருக்கோலம் -ஆதிசேஷனாக ஆயிரம் புரவாதிகளை வாதத்தில் வென்றார்
    5-ஸிம்ஹாசலம் -பக்த பிரகலாதனை ரக்ஷிக்க ஸிம்ஹ முகம் –ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர் -இங்கு ஸ்ரீ பாஷ்யம் உபதேசித்து அருளினார்
    6- ஸ்ரீ கூர்மம்
    நாரதரிடம் கூர்ம மந்த்ர உபதேசம் பெற்ற ஸ்வேத மஹாராஜாவுக்கு ப்ரத்யக்ஷம்
    7-புரீ -புருஷோத்தமன் க்ஷேத்ரம்
    8-ப்ரயாக் ராஜ் -திரிவேணி சங்கமம் -வேணி மாதவப் பெருமாள் சேவை –

    த்ரிதண்டம் -தத்வத்ரயம் விளக்கி உபதேசம்
    9-கயா -கயன் என்னும் அசுரனை அடக்கி கதாதரப் பெருமாளாக தர்சனம் -பால்குனி நதி தீர்த்தம் பிண்ட பிரதானம் –

    ஆழ்வார்கள் திருவவதார ஸ்தலங்கள் பத்து
    1-பொய்கையாழ்வார்
    துலாயாம் ஸ்ரவணே ஜாதம் காஞ்சியாம் காஞ்சனா வாரிஜாத்
    த்வாபரே பஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே

    திருவெஃகா -சொன்ன வண்ணம் பொற்றாமரைக் குளத்தில் ஐப்பசி திருவோணம் அவதாரம் -பாஞ்சஜன்ய அம்சம் –

    2-பூதத்தாழ்வார் -திருக்கடல் மல்லை –
    துலாத நிஷ்டா ஸம் பூதம் பூதம் கல்லோல மாலிந
    தீரே புல்லோத் பலே மல்லா புர்யாமீடே கதாம்சகம்
    ஸ்தல சயனப் பெருமாள்
    ஐப்பசி அவிட்டம் கதையின் அம்சம்
    3-பேயாழ்வார் –
    துலாஸ தனி ஷக்ஜாதம் மயூர பிரிகைரவாத்
    மஹாந்தம் மஹாதாக்யாதாம் வந்தே ஸ்ரீ நந்தகாம்சகம்
    ஐப்பசி சதயம் –மயூரவல்லித் தாயார் சமேத கேசவப் பெருமாள் சேவை சாதித்தருளும் மைலாப்பூரில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில்

    4-திருமழிசை ஆழ்வார்
    மகாயாம் மகர மாஸே சக்ராம்சம் பார்க்கவோத்பவம்
    மஹீசார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே
    திருச்சக்கர அம்சம் -தை மகம்
    5-நம்மாழ்வார்
    வருஷயே து விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
    பாண்டிய தேசே கலே ராதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே
    கலிபிறந்து 42 நாள் வைகாசி விசாகம்
    மதுரகவியாழ்வார்
    மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்டியதே சே கணாம்சகம்
    ஸ்ரீ பராங்குச ஸத் பக்தம் மதுரம் கவிம் ஆஸ்ரயே
    திருக்கோளூரில் கணாம்சம் -சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம்
    6-குலசேகரப்பெருமாள்
    கும்பே புனர்வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
    கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆச்ரயே
    திருவஞ்சிக்களம் –

    7-பெரியாழ்வார்
    மிதுநீ ஸ்வாதி ஜம் விஷ்ணோரதாம்சம் தன்வின புரே
    ப்ரபத்யே ஸ்வ ஸூரம் விஷ்ணோர் விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்
    ஆனி ஸ்வாதி -பெரிய திருவடி -அம்சம்
    ஆண்டாள்
    கற்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீ காந நோத் பவாம்
    பாண்டிய விஸ்வம்பராம் கோதாம் வந்தேறி ஸ்ரீ ரெங்க நாயகீம்
    பூமா தேவி அம்சம் -திருவாடிப்பூரம் –
    8-தொண்டரடிப் பொடி ஆழ்வார்
    கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவாம்
    சோளோர்வ்யாம் வானமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
    திருமண்டங்குடியில் மார்கழி கேட்டை
    9-திருப்பாணாழ்வார்
    விருஸ்சிகே ரோஹிணி ஜாதம் ஸ்ரீ பாணம் நிசுளாபுரே
    ஸ்ரீ வத்ஸ அம்சம் காயகேந்த்ரம் முனிவாஹனம் ஆஸ்ரயே
    திரு உறையூரில் கார்த்திகை ரோஹிணி
    10-திருமங்கையாழ்வார்
    விருஸ்சிகே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சிகாமணிம்
    ஷட் பிரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிஹம் ஆஸ்ரயே
    சார்ங்கம் அம்சம் -திருக் கார்த்திகை -திருக் கார்த்திகையில் அவதாரமே -இவர் மட்டுமே 47 திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணி அருளி உள்ளார் -குமுதவல்லி நாச்சியாருடன் சேவை –


    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும் நிறைந்த ஓர் தனிப் பேர் வித்து–

    June 8, 2026

    கடவுள் – வித்து

    ஊழிதோ றூழி… … …யாவகை உலகமும் யாவரும் இல்லா
    மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட்
    கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி……– திருவாசிரியம் – 4

    தானே தனித்தோன்றல் தன்னொப்பொன் றில்லதான்
    தானே பிறர்கட்கும் தனித்தோன்றல் – தானே..

    வைப்பாம் … …
    எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து
    அப்பாலவன்

    இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
    யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
    அவையுள் தனிமுதல் எம்மான்…

    ஒக்கலை வைத்து … …
    ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்

    ஓவாத் துயர்ப்பிறவி … …
    மூவாத் தனிமுதலாய் 

    சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா
    ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
    வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற
    கார்முகில்போல் வண்ணன் …

    எங்கும் எதிலும் எதாகவும் எப்போதும்

    யவரும் யாவையும் எல்லாப் பொருளும்–கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
    பவர்கொள் ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி…

    அமைவுடை அறநெறி … … … …
    அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்
    அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே.–

    என்னுள் கலந்தவன் … … … …
    மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள்
    தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே–

    எப்பொருளுந் தானாய்… வானத்தும் வானத்துள் ளும்பரும்
    மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது
    நின்றான் தன்னை…

    எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
    அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
    பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால்
    மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –

    பூவைகள் போல்……………..
    யாவையும் யாவருமாய் நின்ற மாயன் …வான்புலன் இறந்ததும் நீயே.

    துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உல கங்களுமாய்
    இன்பமில் வெந்நர காகி இனியநல் வான் சுவர்க் கங்களுமாய்
    மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால்
    இன்புறும் இவ்விளையாட்டையானைப் பெற்றேதும் அல்லலிலனே.

    யானுநீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீ ஆனால்
    வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும்
    யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல்
    வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே-

    எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
    இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப
    அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என்
    சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே.

    யானே என்னை … … .யானே நீஎன் னுடைமையும் நீயே…

    என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து
    என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் …

    இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை என் னுள் வைத்தான்.. 

    மாயம் செய்யேல் … … நேசம் செய்து உன்னோடு என்னை
    உயிர் வேறின்றி ஒன்றாகவே

    ஊனில் வாழ் உயிரே… …தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே
    கலந்தொழிந்தோம்கூசம் செய்யாது கொண்டாய் 

    எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு
    எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வ தென்பதுண்டே
    எனதாவி ஆவியும்நீ பொழிலேழும் உண்ட எந்தாய்
    எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே.

    பற்ப நாபன்… … …
    எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த
    கற்பகம்..

    உணர்வி லும்பர் … … … யானும் தானா யொழிந்தேனே.

    என்னுடைக் கோவலனே…
    உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக்கண்டு…
    என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய
    அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
    இன்தமிழ் பாடிய ஈசனை-

    தாள்களை எனக்கே…
    தோள்களை யாரத் தழுவிஎன்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ.

    ஆறெனக்கு… … … எனதாவியும் உனதே…ஏகமூர்த்தி… … … உன்
    ஆகமுற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.

    மாயனென்… … …காயமும் சீவனுந் தானே…

    உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
    கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி

    அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
    இன்றேநாம் காணா திருப்பதுவும் – என்றேனும்
    கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
    உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

    மனனக மலமற மலர்மிசை எழுதரும்
    மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
    இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
    இனனில னெனனுயிர் மிகுநரை இலனே.

    நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
    நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய
    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
    நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே.

    கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
    கோலமில் நரகமும் யானே என்னும்
    கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும்
    கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
    கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்

    நாழாலமர் … …
    பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ
    நீரும்நீ யாய்நின்ற நீ.

    கண்ணுள்ளே… …
    மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்
    விண்ணுமாய் விரியும் எம்பிரானையே.

    தளர்வின்றி…
    வளரொளி ஈசனை மூர்த்தியைப்
    பூதங்கள் ஐந்தை இருசுடரை…

    நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
    சீரார் சுடர்கள் இரண்டாய்…என்று கொல் சேர்வது… …
    … … நிலநீர் எரிகால் விணு உயிர்
    என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ…

    பிறந்த மாயா … …
    சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே..

    ஏகமூர்த்தி இருமூர்த்தி … ….. ஐந்து பூதமாய் இரண்டு சுடராய்…

    காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
    காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
    காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
    காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
    காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
    காண்கின்ற கடல்வண்ணனேறக் கொலோ
    காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன்
    காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே.

    புகழுநல் லொருவனென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ
    திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ
    நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ
    இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே.

    மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய்…

    ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
    காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன்
    பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
    கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே

    நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
    சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய்.

    விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய்
    மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்…

    அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
    நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்…

    பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
    பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற
    கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தொறும்
    கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே.

    பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே
    சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவுமாய பெருமானே
    கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள்
    இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே

    போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
    ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென்
    தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை
    ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே.

    திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை
    படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
    உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே.

    இலனது வுடையனி தெனநினைவ் வரியவன்
    நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்.

    புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
    நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

    யாருமோர் நிலைமையனென வறி வரிய எம்பெருமான்…

    உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்த இந்நிலைமை
    உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது…

    பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
    காவி மலரென்றும் காண்டோறும் – பாவியேன்
    மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
    எல்லாம் பிரானுருவே என்று.

    பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும்
    செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
    நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன்
    தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறியேனே

    அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள்
    எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்
    வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
    செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

    ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்
    நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும்
    நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும்
    என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே.

    கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும்
    போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும்
    ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
    கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே.

    திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும்
    உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும்
    கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும்
    வெருவிலும் வீழ்விலு மேவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

    விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும்
    கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும்
    பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும்
    அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.

    மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும்
    யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான்
    மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம்
    ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே.

    வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ
    உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரை க்கியம் ஏனமொன்றாய்
    மண்துக ளாடி வைகுந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
    விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே.

    ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர்; பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர்.

    சொன்னால் விரோதம் … … …
    தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து
    என்னானை… 

    ஆரா அமுதே … … …
    சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
    ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் ..

    மானேய் நோக்கு நல்லீர் … … …
    வானோர் வண்கமு கும்மது மல்லிகை கமழும்
    தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும்
    கோனாரை .

    என்றுகொல் தோழிமீர் … … …
    பொன் திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி
    தென்றல் மணங்கம ழுந்திரு வல்லவாழ் நகருள்
    நின்ற பிரான்

    நிச்சலும் …
    பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
    மச்சணி மாடங்கள் மீதண வும்தண் திருவல்லவாழ்
    நச்சர வின் அணை மேல்நம் பிரானது நன்னலமே.

    காண்பதெஞ் ஞான்று… …
    பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும்
    சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்
    மாண்குறள் கோலப்பிரான்

    பாதங்கள் … … …
    ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர்
    மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
    நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை

    நாடொறும் … …
    ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும்
    மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ் தண்திருவல்லவாழ்
    நீடுறை கின்ற பிரான்

    கழல்வளை … …
    குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி
    மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
    சுழலில் மலிசக்கரப் பெருமான்.

    உணர்த்த லூடல்… …
    திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
    புணர்த்த பூந்தண்டுழாய் முடி நம்பெருமானை.

    நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை
    வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம்..

    காலம் பெற … …
    கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப்பேரையிற்கே.

    பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ …

    மாயோனிகளாய் … ….. … எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் ..

    நீயும் நானும் … …தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
    வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே.

    ஒத்தார் … அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா ..

    போகின்ற … … தாய் தந்தை உயிர் ஆகின்றாய்…

    மேலாத்… …மேலாத் தாய் தந்தையும் அவரே…

    முந்தைத் தாய் தந்தையே முழுவேழுலமுண்டாய்…
    சிந்தையாலும் … தேவபிரானையே
    தந்தை தாயென்றடைந்த வண்குருகூரவர் சடகோபன்…

    தாம்பாலாப்… …
    பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன்
    தொல்லுருவை யாரறிவார் சொல்லு.

    கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே
    வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால்
    விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக்குமற்றெப் பால்யவர்க்கும்
    எண்ணு மிடத்ததுவோ எம்பிரான தெழில்நிறமே.

    நிறமுயர் கோலமும் பேருமுருவும் இவையிவையென்று
    அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம்
    உறவுயர் ஞானச் சுடர்விளக்காய்நின்ற தன்றி ஒன்றும்
    பெறமுயன் றாரில்லை யால் எம்பிரான் பெருமையையே.

    உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
    எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் எரி நீர்வளிவான்
    மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
    கண்ணாய் அருவினை யேன் உயிராயின காவிகளே.

    செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
    பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
    பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
    திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்…

    கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல்
    பீதக ஆடை முடிபூண் முதலா
    மேதகு பல்கலன் அணிந்து சோதி
    வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
    பச்சை மேனி மிகப்ப கைப்ப
    நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி
    எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
    சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர்
    தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
    தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
    மூவுல களந்த சேவடி யோயே.- திருவாசிரியம் – 1

    நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
    தளிரொளி இமையவர் தலைவனும் முதலா
    யாவகை உலகமும் யாவரும் அகப்பட
    நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
    மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
    ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
    அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம்
    பெருமா மாயனை
     அல்லது
    ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.-திருவாசிரியம் – 7–

    முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
    முதலாகும் மூன்றுக்கு மென்பர்…

    தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர்…

    மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை…

    தஞ்சமாகிய… …
    … … மூவர் தம்முள்ளும் ஆதியை…

    தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன்
    மூவர் முதல்வன் ஒருமூவுல காளி…

    யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான்
    யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான்
    பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான்
    பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே’

    வரிவளையால்… …
    தெரிவரிய சிவன்பிரமன் அமரர்கோன் பணிந்தேத்தும்
    விரிபுகழான்… .

    பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
    நாயகனவனே…

    தளர்ந்தும்… …
    கிளர்ந்து பிரமன் சிவனிந்திரன்விண் ணவர்சூழ
    விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே

    நோலா தாற்றேன்… …. …
    நீலார் கண்டத் தம்மானும்
    நிறைநான் முகனும் இந்திரனும்
    சேலேய் கண்ணார் பலர்சூழ
    விரும்பும் திருவேங் கடத்தானே

    பராபரன்
    புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து
    அரனயனெனவுல கழித்தமைத் துளனே

    என்னப்பன் எனக்கா யிகுளாய்
    என்னைப் பெற்றவளாய்
    பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
    என்னப் பனுமாய்…

    திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய்
    எண்ணின் மீதியனெம்பெருமான்
    மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்ட நங்
    கண்ணன ல்லதில்லையோர் கண்ணே.

    வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
    ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானெனக்கேயுளன்
    சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
    நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே.

    வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய
    தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ
    கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்
    கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே.

    அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு
    அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள
    செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
    செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே

    புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
    எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால்
    திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து
    அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார்.

    அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
    அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
    அறியா மைக்குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
    அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே.

    எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தினை எனதாருயிர்
    கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தனை
    விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத்
    தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே.

    கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன
    நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற
    சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம்
    காலமே உன்னைஎந் நாள்கண்டு கொள்வனே.

    உரைக்க வல்லேனல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
    கரைக்க ணென்று செல்வன்நான் காதல் மையலேறினேன்
    புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்.

    மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற
    நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்…

    வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
    பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
    றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
    இணங்கும்நின்னோரையில்லாய் நின்கள் வேட்கை எழுவிப்பனே.

    அவரவர் தமதம தறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
    அவரவர் விதிவழி அடையநின் றனரே.

    பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த
    கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
    வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
    உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே.

    யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன்…

    மாட்டாதே யாகிலும் இம் மலர்தலைமா ஞாலம்நின்
    மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க
    மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
    மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே.

    அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய
    நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி…

    எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே
    அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
    பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னேயானால்
    மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே.

    உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம்
    பொருவாகி நின்றானவன்

    இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி
    நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
    மறுத்திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
    வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே.

    உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை
    உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள்
    உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன் என்னு மிவரை
    உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே.

    மும்மூர்த்திகளைப் பிர்மா – விஷ்ணு – ருத்ரன் – என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா – குமாரன் – பரிசுத்த ஆவி – என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரிஸ் – ஐஸிஸ் – ஹோரஸ் (எகிப்தியர்); ஓடின் – பிரீயா – தார் (ஸ்காண்டிநேவியர்); ஆனு – இயா – பேல் (அஸ்ரியர்); தௌலாக் – பான் – மொல்லாக் (துருயுதர்); அமிர்தாப்பர் – அவலோகீதீசுரர் – மஞ்ஜுசுரி (வட புலப்புத்தர்); கேதர் – பினா – சொக்மா (யூதர்); அஹுரமஜதர் – மித்திரர் – அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப்படுகிறது

    ——————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –