என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8- –– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –
——–
அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3-
ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-4 – –
அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1- 5- –
அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – 3-1 6- –
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-7 – –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 – –
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –
———–
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே —85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –
———
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )
————-
இன்னார் என்று அறியேன் என்றவரே அறிந்தேன் நான் என்கிறார் அடுத்து –
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னார் என்று அறியேன் —10-10-9-தேவனோ
மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய் ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் – இன்னார் என்று அறியேன் –சாரங்க பாணியின் படியையும் ஆராவமுத ஆழ்வாரையும் அனுபவித்து அவர்களுடைய போக்யதை நெஞ்சில் ஊறி முன்னே வந்தால் போல் இவளுக்குப் பட மனுஷ்யத்தவே பரத்வம் இவருக்கு அடையாளம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள்-ஆழியும் சார்ங்கமும் சேர்ந்து அனுபவம் இதில் –சக்ர பாணி சாரங்க பாணி -சேர்ந்தே புறப்பாடு இங்கு)
அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3-அந்தாதி தொடையில் அமைந்த ஒரே திருமொழி இதுவே –நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –(இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே )என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –
இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே-உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9- – நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –
அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-
அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –
இவரை அறிவேன் என்ற படி எங்கனே -என்ன –ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யம் ஒழிய
தமக்கு தாரகம் இல்லையாம் படி யிருக்கிறவரை எங்கனே நாம் அறியோம் -என்னும் படி தான் –
அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4–ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை–
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- – நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன –ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –
——————————–
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று – நாலாயி:4/3–நாடு -என்று அவிசேஷஜ்ஞரை சொல்லுகிறது –-நகரம் -என்று விசேஷஜ்ஞரை சொல்லுகிறது –
ராஜாவுக்கு ப்ரத்யா சந்னர் இ றே நகரஸ்தர் -நாட்டார் தூரஸ்தர் இ றே -ஆகையாலே அருளிச் செய்கிறார்-நன்கறிய –நன்றாக அறிய –பகவத் ப்ரத்யா சத்தியாலே அவிசேஷஜ்ஞர் விடும்படியாகவும் -அது தானே ஹேதுவாக விசேஷஜ்ஞர் பரிக்கிரஹிக்கும் படியாகவும் –
நன்கறிய –இந் நன்மையை அறிய என்றுமாம்-நாமோ நாராயணா என்று –இவ்வளவும் போராது -தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ர்த்தி இறே புருஷார்த்தம் ஆவது –
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே -1-1-4- நாலாயி:16/4-திருவாய்ப்பாடியில் உள்ள கோபர்கள்-பாலும் தயிரும் இருக்கிற உறிகளை முற்றத்திலே உருட்டி நின்று
ஆடுவாரும் மணம் மிக்க நெய் முதலியவற்றை நிச்சேஷமாக தானம் பண்ணுவாருமாய்
நெருங்கி மெத்தென்ற மயிர் முடியானது அவிழ்ந்து களையும் படி நர்த்தனம் பண்ணி
சேரி அடங்கலும் மதுவனம் அழித்த முதலிகள் போல் கிருத்ய அக்கருத்ய விவேக சூன்யர் ஆனார்கள்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்-1 4-4 –- நாலாயி:57/3–உனக்குத் தகுதியானது அறிதி யாகில் –எல்லாருக்கும் ஆஹ்லாத கரனாய் இருக்கும் நீ- இவனுக்கு வெறுப்பு செய்யாதே-பிள்ளைகள் பெறாத வந்த்யன் அல்லவாகில் வந்து கொடு -நில் கிடாய் –
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் –1-5-6– நாலாயி:69/3—ஆயம் அறிந்து -மல்ல யுத்தம் செய்யும் வகை அறிந்து
அந்தரம் இன்றி -உனக்கு ஒரு அபாயமும் இல்லாதபடி-ஆடிய -இன்னும் வருவார் உண்டோ -என்று கம்பீரமாய் சஞ்சரித்தமல் பொரும் கூறு அறிந்த பொரு வதாக எதிர்த்து வந்த மல்லரை வியாபரிக்கைக்கு இடம் இல்லாமல் -நிரசித்த இன்னம் வருவார் உண்டோ என்று மனோ ஹர மான இடை வெளி இல்லாமல் அபாயம் இல்லாமல் என்றுமாம் அவர்களே தங்களில் மாய்ந்து போம்படி என்றுமாம் –
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் –1 6-5 –– நாலாயி:79/2,3-ஓடிப் போய் உள்ளே புக்கு –வைத்த நான் அறியாதபடி –சட்டிகளிலே தோய்த்து வைத்த தயிரையும் –தடாக்களிலே சேர்த்து வைத்த வெண்ணெயையும் அமுது செய்யா நிற்கும் –
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின்- -1 7-8 — – நாலாயி:93/3–லோகத்தில் மனுஷ்யர் -பெற்று அறியாத அழகிய குழவி வடிவை உடைய –தகுதியான -நீல ரத்னம் போன்ற -நிறத்தை உடையனான ஸ்ரீ வாசுதேவர் திருமகன் தளர் நடை நடவானோ –
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன —1-8-8- –– நாலாயி:104/1,2-என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன்–-மின்னு முடியானே அச்சோ அச்சோ-திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை– 2-2 2– – நாலாயி:129/2-பழுதற உருக்கி வைத்த நெய்யும் –செறிவுறக் காய்ந்த பாலும் –நீர் உள்ள்து வடித்து கட்டியாய் இருக்கிற தயிரும் –செவ்வையிலே கடைந்து எடுத்த நறுவிய வெண்ணையும்-என்னுடைய நாயகனே நீ பிறந்த பின்பு –இவை ஒன்றும் பெற்று அறியேன் –அன்றிக்கே –
இத்தனையும் என்றது –ஏக தேசமும் என்றபடியாய்-இவற்றில் அல்பமும் பெற்று அறியேன் என்னுதல்
ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – –2 7-1 – –-நாலாயி:182/1,2-உன் வாசி அறியாதே -தனக்கு மேய்ச்சல் உள்ள இடம் தேடி ஓடா நிற்கும் பசு நிரையை மேய்ப்பைக்காக ஸூகுமாரனான நீ போகா நின்றாய்-நீ (சேதனர்கள் அனைவரும் )உன்னை பெறுதற்கு அரிய மருந்து ஆவது அறிகிறது இல்லை-இங்கு உள்ளார்களுக்கு -நோய்கள் அறுக்கும் மருந்தாய்-அங்கு உள்ளார்க்கு -போக மகிழ்ச்சிக்கு மருந்தாய் -இறே இவன் தான் இருப்பது
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – -2-7- 8–நாலாயி:189/3-சத்ரு நிரசனம் -ஆஸ்ரித ரஷணம் ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால் மேல் விளைவது அறியும் உபகாரகன் ஆனவனே-இங்கே கிடந்தால் நமக்கு முமுஷுக்களை லபிக்கலாம் -என்று சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோவிலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனே
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்—2 8-7 – நாலாயி:198/3-உள்ளபடி ஒன்றும் அறிகிறேன் இல்லை-அதாவது –இன்னமும் அப்படிக்கு ஒத்தவற்றை செய்குதியாகில் –ஒரூ நாள் அல்ல ஒரு நாள் அபாயம் விளையும் -என்று பயப்படா நின்றேன் என்கை
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – 2-9- 7–நாலாயி:208/2,3-பன்னிரண்டு திருவோணம் வ்ரதாங்கமாக பாயாசபூபங்கள் சமைத்தேன் –-முன்பும் இப்பிள்ளை பிரகாரம் அறிவன்-அதாவது –திருவோண வ்ரதத்துக்கு என்று ஆரம்பித்து -இவை சமைத்த போதே –இவனும் தீம்பிலே ஆரம்பித்து –தேவார்ச்சனம் செய்வதற்கு முன்பே இவற்றை வாரி ஜீவித்து விடும் -என்கை –இப்போதும் அப்படியே -எல்லாம் விழுங்கிட்டு –இத் திருவோணத்துக்கு என்று சமைத்தவை எல்லாம் ஒன்றும் சேஷியாதபடி விழுங்கி
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-1 –- நாலாயி:223/4-அதாவது -அம்மே -என்று அச்சத்தால் சொல்லுகிற வார்த்தை-முன்பு எல்லாம் என் பிள்ளையாகவும் -நான் தருகிற அம்மம் முதலானவை உனக்கு தாரகாதிகளாகவும் நினைத்து இருந்தேன் -உன் படிகள் அதி மானுஷ்யங்கள் ஆகையால் ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -என்கிறபடியே இவன் நம்மோடு சஜாதீயனும் அல்லன்நாம் கொடுக்கிறவை இவனுக்கு தாரகாதிகளும் அல்ல என்று நன்று அறிந்து கொண்டேன் –இப்படி இருக்கிற உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –தவழுகை பொய் என்றவோபாதி அம்மம் என்கிற இவன் சொலவும் பொய் என்று தோற்றா நிற்கச் செய்தேயும் அவன் சொலவை அனுசரித்து சொல்கிறாள்-
அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-2 – ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பா -குணமே குணி )கண்டது ஒன்றிலே மேல் விழும்படியான சிநேகத்தை உடையவனே
இத்தால்-தீம்பன் -என்ற படி –இவன் நம்மோடு சஜாதீயன் அல்லன் -வ்யாவர்த்தன் என்று
உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1-3- –- நாலாயி:225/4-உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் –உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – –3 1-4 – –-நாலாயி:226/4-ஐயா இது என்ன தெளிவு தான் என்று கொண்டாடுகிறாள்-அன்றிக்கே
ஐயா என்று க்ரித்மர்க்கு எல்லாம் ஸ்வாமி யானவனே என்கிறாள் ஆதல்-உன்னை அதி லோகமான வுக்தி சேஷ்டிதங்களை உடையவன் என்று அறிந்து கொண்டேன் –ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – -3-1- 5–நாலாயி:227/4-இந்த அதி மானுஷ சேஷ்டிதத்தை உடைய பெரியோனே -உன்னை
மனுஷ்ய ஜாதி அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அஞ்சம் தர அஞ்சுவன்-
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3-1 6- நாலாயி:228/4-தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளும் திருக் கண்கள் ஆகிற வலையை
எப்போதும் ஒக்க அவள் விஷயத்தில் வைத்து -அகப்படும் அளவும் – அந்ய பரரைப் போலே சஞ்சரிக்கிற தீம்பன் ஆனவன்-ஏவம் பூதனானவனை நன்றாக அறிந்து கொண்டேன் ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே- -3 -1-7 – – நாலாயி:229/4-என்னுடைய நாதனானவனே–இப்படி தீம்பனான உன்னைப் பிள்ளையாகப் பெற்ற குற்றம் ஒழிய-இவ் ஊரில் உள்ளார் என்னோடு காறுகாறு என்ன – எவர்களோடும் ஓரர்த்த தாயம் உடையேன் அல்லேன் –இப்படி தீம்பனானவனே-உன்னை நன்றாக அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் –
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –3 1-8 –- நாலாயி:230/4-பசும் புல்லு சாவம் மிதியாதே ஸ்ரீ நந்தகோபர் பிள்ளையான நீ இப்படி செய்யக் கடவையோ-அன்றிக்கே -அவர் உன்னை நியமித்து வளர்க்காமை இறே நீ இப்படி தீம்பனாய் ஆய்த்து என்னுதல்-பருவம் இதுவே இருக்க -செய்கிற செயல்கள் இது வாகையாலே உன்னை நாட்டார் படி இல்லை -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்–-
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 -1-9 நாலாயி:231/4–காய்வார் அன்றிக்கே -உனக்கு நல்லவர்களாய் நீ செய்கிற வியாபாரங்களை கண்டவர்கள் நீ செய்கிற தீம்பு பொறாமல் நியமிக்கும்படி திரியா நிற்கிற ஆயனே – குல மரியாதை தன்னையும் பார்கிறிலையே என்கை -நீ இப்படி திரிந்தாய் ஆகிலும் உன்னுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களை கண்ட பின்பு –உன்னை மனுஷ்ய சஜாதீயன் அல்லன் -என்று அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––
அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-10 –-என்னுடைய நாதனே -உன்னை அறிந்து கொண்டேன் –உன்னுடைய அதிமானுஷம் கண்ட பின்னை -அநியாம்யன் -என்று அறிந்து கொண்டேன் -ஆனபின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன் ––
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில்- 3-4-6- – – நாலாயி:259/3-ஒப்பனை அழகும் -வருகிற அலங்காரமும் – லீலா வியாபாரமும் -ஒர் ஒன்றே
எத்தனை யேனும் அளவுடையாராலும் எல்லை காண ஒண்ணாத இடைப் பிள்ளை-தன்னை ஒழிய எனக்கு செல்லாமையும் –என்னை ஒழிய தனக்கு செல்லும்படியான தீம்புகளையும் அறிந்தால் –இத் தெருவில் வரக்கூடாது –இவற்றை அறிந்து வைத்தும் இத் தெருவே வந்தானாகில்
மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – – 3-7- 4–நாலாயி:289/4-இவள் படி பார்த்தால் –முகந்து பரிமாறுகிற மூழை யானது தான் முகக்கிற பதார்த்தத்தின் ரசம் அறியாது-என்னும் அந்த மூதுரையும் தன் பக்கல் இல்லாதவள் -கிடீர்
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் –3-7-5 – நாலாயி:290/1-தானும் தன்னை அணைந்த பந்து வர்க்கமும் அறிந்த அளவாக அவன் பக்கலிலே பிரவணையாய்-
அகம் விட்டு புறப்படாமல் இருக்கை அன்றிக்கே – திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் –
திரு ஆய்ப்பாடி யான ஊர் தானும் – இருந்ததே குடியாக அறியும்படி -க்ரஹத்தை விட்டு புறம்பே போய்
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள்-3-8 -2- – – நாலாயி:298/1-பொருந்தின அறிவு ஒன்றும் இல்லாத லௌகிக வைதிகங்களோடு சேர்ந்த அறிவு அல்பமும் இல்லாத-அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் இறே காட்டிலே பசு மேய்க்க போன இடங்களிலே -வழி திகைத்தால் வழி காட்டுவது பசுக்களாம் படி இறே இவர்கள் அறிவு இருப்பது
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி-3- 8-3 – – நாலாயி:299/2-பந்துக்களும் மற்றும் உள்ளாறும் அறியும்படி–தாமோதரனுக்கு இவளைக் கொடுக்க புகா நின்றோம் -என்று பிரசித்தமாக்கி-தாமோதரன் -என்றது –மாதாவானவள் கட்டின கட்டு அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே அவள் நியமனம் தப்பாமல் இருந்த நீர்மையை உடையவன் -என்றபடி
நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து –3-8-6-– நாலாயி:302/3-இரண்டு குடிக்கும் பழி வாராதபடி-திரு ஆய்ப்பாடி சூழ்ந்த நாடும் – திரு ஆய்ப்பாடி ஆகிய நகரமும் அறியும் படியாக – இதுக்கு முன்பு இப்படி இல்லை -என்னும்படி விலஷணமாய் அத்வீதியமான கல்யாணத்தைச் செய்து – ஜாதி உசிதமான தர்மத்துக்கு தகுதியாக பாணி க்ரஹணம் செய்யுமோ
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க–3-10-1– – நாலாயி:318/3-இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே –பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால)-என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க
தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து-இருப்பத் தொரு படி கால் துஷ்ட ஷத்ரியரான ராஜாக்கள் ஆகிற களையை நிரசித்தவனாய் –
ஒருவரால் செய்ய ஒண்ணாத தபஸ்ஸை யுடையனாய் இருந்துள்ள பரசுராமன்
(பெருமாள் முதலோர் )திரு அயோத்யைக்கு எழுந்து அருளா நிற்கச் செய்தே
இடை வழியிலே -என் வில் வழி கண்டு போ -என்று வந்து தகைய-விலங்க-என்றது –
விலக்க-என்றபடி –
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – –4- 6-6 -நாலாயி:386/1–நாட்டில் உள்ளாரோடு நகரத்தில் உள்ளாரோடு வாசியற எல்லாரும் –இவன் அசாதாரணன் -என்று அறியும் படி சூத்திர மனுஷ்யர் பேர் இட்டு -அவர்களோடு கூடி -அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து- அவர்கள் விழுந்த குழியில் விழுந்து ஒளி மழுங்கி – தவறி வர்த்தியாதே
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே -4 -10-4 –- நாலாயி:426/1-சர்வ காரண பூதனாய்-சர்வ ரஷகனாய் –சர்வ சேஷியாய் –சர்வ சரீரியாய் -இருக்கும் உன்னை-உள்ளபடி அறிய ஒண்ணாது இருக்கும் பெருமையை உடையவனே –யன்ன தேவா ந முநயோ ந சாஹம் ந ச சங்கர ஜானந்தி பரமேசஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –என்று விஷ்ணு உடைய பரமமான ஸ்வரூபத்தை தானும் – ருத்ரனும் –மற்றும் உண்டான தேவர்களும் –ரிஷிகளும்அறியார்கள் என்னும் இடம் பிரம்மா தானே சொன்னான் இறே –கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி – என்று அவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தையும் உட்பட அவர்கள் அறிய மாட்டார்கள்- என்று இறே ஸ்ரீ திரு மழிசைப் பிரான் (நான்முகன் திருவந்தாதியில் )அருளிச் செய்தது-
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த — 4-10- 8– நாலாயி:430/1-அதீத அநாகதங்களில் ஒன்றும் அறியாத நான்(அதீத அநாகதங்கள் -முன்பு போன கர்மங்கள் -மேல் வரும் கர்மங்கள் ) சர்வ சக்தியான உன்னுடைய மாயைகளில் ஏதொன்றும் அறியேன் –இப்போது இவர் -உன் மாயம் -என்கிறது – போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை -என்று சொன்னது போலே இருக்குமவற்றை இறே –அதாவது –கர்ம அனுகுணமாக இச் சேதனர் விஷயத்தில் அவன் பண்ணி வைக்கும் வஞ்சனங்கள் அநேகம் இறே –அவை தான் அவன் தான் அறியும் அத்தனை ஒழிய –எதிர் தலைக்கு தெரியாதபடி இறே இருப்பது –அத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் –
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது -4-10-9 –- நாலாயி:431/2,3–சர்வ காரணமாய் – விலஷண தேஜோ ரூபமான உன்னுடைய விக்ரகத்தை மறந்து அறியேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று –5-1- 1– நாலாயி:433/2-ரசம் அறிந்தார்க்கு -சர்வ ரசனான உன்னை அல்லால் அறியாது –
(ரசம் சுவை என்றும் –ரஸோவைக -சர்வரஸ ஸர்வ கந்தனான அவனும் என்றுமாம் )
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – —-உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா என்பன்-5- 1-3 – – நாலாயி:435/3-நான் திரு நாமம் சொல்லுகை அத்தலைக்கு நன்மையாய் தலை கட்டுகிறதோ –தீமையாய் தலை கட்டுகிறதோ –அறிகிறிலேன் –
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை-5-3- 6– – நாலாயி:458/2-ஒரு சேதனரும்-இஜ் ஜன்மம் ஆகிற வியாதிக்கு ஒவ்ஷதம் அறிவார் இல்லை
சம்சாரத்துக்கு மருந்து அறியும் இத்தனை -அத்தை வெளி இடுகைக்கு ஆய்த்து –
கைலாச யாத்ரையிலே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தை கொடுத்து ருத்ரன் பக்கலிலே- பிள்ளை வரம் வேண்டி சென்றது ஆகையாலே சம்சார வர்த்தகர்
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் -5- 3-8 –- நாலாயி:460/4-சர்வஞ்ஞனான நீ தானே அறியாயோ-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனான உனக்கு தெரியாதோ –விட்டு சித்தன் தன் மனம்
உன்னுடைய வ்யாப்தி விபூதி அளவிலே(குணங்களோடு வியாபிக்கிறார் என்னும் போது குணத்தில் வியாபித்தால் ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருமே )என்னுடைய மநோ வ்யாப்தி உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளிலே –
அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே –5- 4-2 –– நாலாயி:464/4-ஞானம் அம்ர்தமாகிற ஆறு பெருகி வாய் அளவாய் தலைக்கு மேல் போகா நின்றது
அதனில் பெரிய என் அவா -என்றபடி-நீ என்னைக் கை கொண்ட -என்றது –
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஓட்டேன் நாம்மாழ்வார் -என்றபடி
அநு கூல ஞானம் ஆகிற பெருக்காறு அனுகூல ஞான வர்ஷம் எல்லாம் மென்மேலே ஒரு முகமாய் பெருக்கிடா நின்றது –-சேதன கதமாக வந்த ஞானம் ஆகில் இறே பின்பு வற்றி வருவது சஹ்யம் பற்றி வருகிற ஆறு இறே திரு மலை இறே சஹ்யம் வர்ஷிக்கிறது ஒரு காள மேகம் இறே(ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் )
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8–பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில் எல்லாரும் அறிந்தது –பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் ஆகையால்
பாலைகளாய் இருப்பாரும் உணர்ந்து வர வேணும் என்று இருக்கிறாயாகில் –அது எல்லாம் செய்தற்றது –நாங்கள் உன் வாசலில் வந்து எழுப்பவும் நீ சிறிது போதும் உணராது ஒழியவும் –இத்தால் வந்த மதிப்பு எல்லாரும் அறிய வேணும் என்று இருந்தாயாகில் –
அது எல்லாரும் அறிந்தது
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4--நங்கைமீர் -என்று உறவற்ற சொல்லால் வெட்டிமை எல்லாம் சொல்ல வல்லை என்னும் இடம்-நாங்கள் இன்றாக அறிகிறோமோ –சொல்லிற்றைச் சொல்லி எங்கள் தலையிலே குற்றமாம்படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம்-எங்கள் தலையிலே குற்றம் சொல்லலாவது எல்லாம் சொல்லி உன் தலையிலே குற்றம் இல்லை என்னலாம் படி உபபாதிக்க வல்லை இறே-நங்கைமீர் என்று உறவற்ற சொல்லாலே வெட்டிமை சொல்ல வல்லை என்னும் இடம்
நாங்கள் இன்றாக அறிகிறோமோ – பண்டே அறியோமோ –குண தோஷங்கள் என்று ஓன்று உண்டோ –நீ சொல்லிற்று வார்த்தையாம் அத்தனை அன்றோ –உன் வாசலிலே நாங்கள் எத்தனை காலம் உண்டு துவளுகிறது-என்ன-நங்கைமீர் என்ற உறவற்ற சொல்லாலே
நீ சொல்லிற்றவற்றைச் சொல்லி எங்கள் திறத்தே குற்றமாம் படி வார்த்தை சொல்ல வல்லை என்னும் இடம் இன்றே யல்ல அறிகிறது -எத்தனை காலமுண்டு உன்னோடே பழகுகிறது -பண்டே அறியோமோ-
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5--ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும் பிரிய காமையாய் இருக்கிற நீ கிடக்கக் கடவையோ –நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –இவள் அறிய அமையும் -பின்னை தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள் –
ஸ்ரீ நந்த கோபரை -எழுந்திராய் என்றும் இவளை அறிவுறாய் என்றும் சொல்லுகையாலே
இவள் நெஞ்சில் உணர்த்தி உண்டானால் நமக்கு அவனைப் பெறலாவது என்று குவாலாக உணர்த்துகிறார்கள் – அவளுடைய சம்வதம் கொண்டு உள்ளே புக்கு கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்–பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் – திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் – நாலாயி:494/3,4-சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது –கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான உபாய அந்ய பரதையாலே
எழுப்புகிறார்கள்-மகனே அறிவுறாய்-உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை – ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2-மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –-பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்-இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )
அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன் தன்னை —–அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6–1-அறிவில்லை-2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை–1-கர்ம யோகத்தில் உண்டான –2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால் அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும் பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள் சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய் முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –அறியாத பிள்ளைகளோம் –1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம்
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் -2-7 – நாலாயி:520/2-நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது-எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே – அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்வண்ணனே – -2-8-நாலாயி:521/4-கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே -கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை-ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் –3-8- நாலாயி:527/4-காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்-ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம்
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே -5-4— நாலாயி:548/3-பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்-சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை—5-8- – நாலாயி:552/2,3-பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை –அதாகிறது -இன்றியமையாமை ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம் நானும் அவனும் அறியும் அத்தனை அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்–கச்சங்கம் -பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை–சமயம் பண்ணின இடம் இதுவோ என்னில் – இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்-
நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை
தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே –அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே–5-10- – நாலாயி:554/2,3-அதில் வாசி அறியாதவர்கள் என்னை நலியும் முறைமை அறிகிறிலேன்–அடிமையில் வாசி அவை அறியா விறே-அவன் அளந்த கால் வாசியும் கூட அறியாதவை இறே-ராவணன் நடுவே வந்து நலிந்தால் போலே தென்றலும் சந்திரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கு ஈடாக இருப்பதொரு முறை யுண்டாக அறிகிறிலேன்-தங்களுக்கு கடவார்க்கு -கடவாரைச் சேர்க்க முறை யுண்டு –தங்களுக்கு கடவார் -அவன் –அவனுக்கு கடவார் -அவள் —அப்படி சேர்த்து செய்த திருவடிக்கு உண்டான ஆகாரம் இல்லை-அத்தனை அல்லது நலிகைக்கு முறை இல்லை இறே-புத்ரனுக்கு உண்டான பரிவிலே கால் கூறும் இல்லை காண் -இக்காற்றுக்கு –
அவனால் படைக்கப் பட்ட இவை புத்ர ஸ்தானம் இறே –தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் –கிஷ்கிந்தா -1-105-என்று அவனும் கால் கண்ட மாத்ரத்திலே படுமது அறியானே – கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –13-4– தான் கிடக்குமா போலே இறே அவன் காலால் துகை உண்ணும் படி
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை-12-1 – நாலாயி:617/1-வேறாய் இருந்தீர்கட்கு -என்னுதல் –-மற்று –உரைப்பது எல்லாம் -என்று மேலே கொடு போய்-அந்வயித்தல்-இருந்தீர்கட்கு அறியலாகா –ஏக தேச வாசமே போராது காணும் கோள்-
எனக்கு ஓடுகிற தசை அறிகைக்கு-இருந்தீர்கட்கு–நான் இருந்த தேசத்திலே நீங்களும் இருந்தி கோள் என்னா-எனக்கு ஓடுகிற தசை உங்களால் என்னை அறியப் போகாதே –
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் –12-2– நாலாயி:618/1-இது தான் பிறர் அறியாமைக்கே தான் பரிஹரிக்கப் பார்க்கிறது –இது அறியாதார் சிலர் உண்டாய் பரிஹரிக்க வேணுமே-இவள் தான் முந்துற அறியாமே பரிஹரித்து அநந்தரம்
அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து-அநந்தரம் அதுக்கு அசலில் உள்ளார் அறியாமல் பரிஹரித்து – இப்படி போரா நிற்கச் செய்தே ஓர் அசல் அறிந்து- மற்ற வசல் அறிந்து -அவ்வளவில் அடங்காதே அவ் ஊரில் உள்ளவர்கள் அறிந்து அது தான் புற வெள்ளம் இட்டு அவ் வழியாலே எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து-
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே-12-5- – நாலாயி:621/1-இந் நோவு விளைத்தவனுக்கும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாது-இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும்-இளம் தெய்வம் அன்று இது -திருவாய் -4-6-2- என்னக் கடவது இறே –யஸ்யா மதம் தஸ்ய மதம் –கேன -2-3-என்றதுக்குள்ளே புக்கான் இறே அவனும்-தாம் தம் பெருமை அறியார் -பெரிய திரு மொழி -5-2-1- –தன்னைப் பரிச்சேதித்தால் இறே என் நோயைப் பரிச்சேதிக்கலாவது
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக-13-1– – நாலாயி:627/3–கிருஷ்ண சப்தார்த்தம் -கரியவன் -மெய்யாகி விட்டது –புறம்பு போலும் உள்ளும் கரியனாய் இருக்கிறான்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் – உங்கள் இரண்டு தலைக்கும் ஒத்த உகப்புக்கு நாங்கள் சில யத்னம் பண்ணும் படி இருந்ததோ -என்ன உகப்பு ஒத்தாலும் ஆணும் பெண்ணும் என்கிற வாசி இல்லையோ – முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இறே -என்று பட்டர் –அருளிச் செய்தாராக பிரசித்தம் இறே
சாந்தீபிநி சிஷ்யனை இறே -பிறர் மிடி -அறியான் என்கிறது பிராப்ய த்வரையால்
பெருமாள் —துஷ்கரம் க்ருதவான் ஹீ நோ யத நயா பிரபு -சுந்தர -15-53-என்கிறபடியே
பிரிந்த போது கண்ணன் பெருமானாய் இருந்தான் -என்றபடி –
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் -14-6— நாலாயி:642/1-ஆன்ரு சம்சயம் இருக்கும் படி முதலிலே வ்யுத்புத்தி பண்ணி அறியான் –ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41–நீர் வரவிட்ட ஆளின் வாயிலே கேட்ட வார்த்தை அன்றே –அதுக்கு முன்னம் தம்முடைய வாயாலே அருளிச் செய்ய என் செவியாலே கேட்ட தன்றோ-இருவருமாகக் கலந்து ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவிலே –நீர் விரும்பி இருப்பது என் -என்று கேட்க –பிறர் நோவு படக் கண்டால் பொறுக்க மாட்டோம் -அதுவே காண் நாம் விரும்பி இருப்பது -என்றார்-இருவரும் ஒன்றை நினைத்துக் கிடக்கிறார்கள்
இக் கலவிக்கு பிரிவு வரில் செய்வது என் -என்று கேட்டாள் அவள் –நம்மைப் பிரிந்து நோவு பட விடோம் காண் நாம் -என்று அருளிச் செய்தாரானார் அவர் –இரக்கமே சிறந்த குணம் என்று -மயா ஸ்ருத -என்னால் கேட்க்கப் பட்டது –இது ஸ்ரவண மாத்ரமாய் போம் அத்தனையோ அனுஷ்டான பர்யந்தமாகப் போகக் கடவது அன்றோ -என்று கேளீர் –
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – 4-7– நாலாயி:683/2,3–ஆகாசப் பரப்புக்கு எல்லாம் சந்தரன் ஒருவனுமே யானாப் போலே லோகம் எல்லாம் தன் வெண் கொற்றக் குடைக்கீழே ஒதுங்கும் படியாக-நஷத்ர தாரா கணங்கள் சந்த்ரனை சேவித்து இருக்குமா போலே ராஜாக்கள் எல்லாம் வந்து சேவித்து இருக்கும் படி ராஜராஜனாய் வேறு பட இருந்து கொண்டாடும் சம்பத்து எனக்கு பிரதிபத்தி விஷயமாய் இருக்கிறது இல்லை
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – 5-2– நாலாயி:689/2–தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – 6-1– நாலாயி:698/2-அநேகம் பெண்கள் உள்ள ஊருமாய் -நீயும் சர்வ சாதாரணனுமானால் –
உன் மார்வை யாசைப் படக் கடவதன்று என்று அறிந்து வைத்து-உன் தன் பொய்யை கேட்டு
உன் ஸ்வரூபத்தை உணர ஒட்டாது இறே-உன் வார்த்தை –நீ யல்லது புகல் உண்டோ –
உன்னை யல்லது நான் அறிவேனோ –என்று தாழ்ச்சி தோன்ற நீ சொல்லும் வார்த்தையைக் கேட்டு –
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே-6-2- – நாலாயி:699/4-உன் நெஞ்சுக்கு பொருந்தின தயிர் கடைந்த படி – இவள் சொன்னவாறே இங்கனே இருப்பன சில எனக்கு வேண்டா என்ன-உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே -70-– நாலாயி:821/4-ருத்ரன் கொன்றையும் தும்பையும் ஜடையும் குலைய கேட்டுப் போன பாரவஸ்யமும் போக்கற்றவாறே கலங்கி க்ர்ஷ்ணனுடைய முகம் பெறுகைக்கு ஸ்தோத்ரம் பண்ணின பாரவஸ்யமும்-பாரவஸ்யம் சமாயாதஸ் சூலி ஜ்ர்ம்பித தேஜஸா
பாஞ்ச ஜன்யச்ய யகோ ஷேண சாரங்க விஷ்ப் பூர் ஜி தே ந ச -என்றும்
க்ர்ஷ்ண க்ர்ஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்-பரிசம் பரமாத்மாநமநாதி நிதநம் ஹரிம் -என்னக் கடவது இறே-அமரரே யறிவரே-ஆக இப்படி இரண்டு வகைப்பட்ட ஆகுலத்துக்கும் கெட்டுப் போன தேவர்களே சாஷி நான் இன்று சொல்ல வேண்டி இருந்ததோ –
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் -74— நாலாயி:825/1-தன்னுடைய உடைமையை லபிக்கைகாக தான் அர்த்தியாய் வந்தவன் திருவடிகளை –ப்ராப்யமும் ப்ராபகமும் அதுவே -என்று அத்யவசித்து –அத்திருவடிகளில் ந்யஸ்தபரன் ஆதல் –வாமனன் அடி இணை -என்று -வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே -சர்வ சுலபன் ஆனவன் திருவடிகளை -என்றுமாம் –அறிந்து அறிந்து -என்று சாஸ்திர ஸ்ரவணத்தாலும் -ஆசார்ய உபதேசத்தாலும் –என்றுமாம் –
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – –தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் -84-— நாலாயி:835/3-விச்சேதம் இல்லாதபடி தன் திருவடிகளிலே அன்பை உறைக்க வைத்து அனுபவிக்கும் நாள் எனக்கு உண்டாகும்படி நினைத்து இருக்கிறானோ –அன்பு உறைக்கை யாவது -பரம பக்தி உக்தனாகை –வைத்து அனுபவிக்கும் நாள் -என்கிறது -ஒரு தேச விசேஷத்தில் அனுபவத்தை –இத்தால் –
இச் சேதனனுக்கு ஜன்மமும் விஸ்ம்ர்தியும் விநாசமும் -பக்தி இல்லாமை –உஜ்ஜீவனம் -பரம பக்தி உக்தனாகை -என்றது ஆய்த்து –ஜன்மம் ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய ஹேது –
விஸ்ம்ர்தி ஆகிறது -விஷயாந்தர ப்ராவண்ய கார்யம் ஆகையாலே ஆத்மாவுக்கு உபயமும் விநாசம் இறே
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே —85- நாலாயி:836/3-ஒருத்தனை கேள்வி கொண்டு கார்யம் வேண்டாதபடி வஸ்துவை -வஸ்த்வந்தரம் ஆக்க வல்ல சக்தியை உடையை யாகையாலே உன்னை ஸ்வ தந்த்ரன் என்று அறிந்து கொண்டேன் –
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – -திரு மாலை-6- நாலாயி:877/2–தேகத்தை புருஷார்த்த உபயோகியாக ஈஸ்வரன் தந்த சரீரத்தைக் கொண்டு
விஷயாந்தர பிராவண்யம் ஆக்குகையாலே –-புறஞ்சுவர் -என்கிறது-இத்தைக் கொண்டு ஆத்மாவுக்கு ஒரு நன்மை தேடினான் ஆகில்-அது தானே உத்தேச்யமாம் இறே-அப்பொழுது விழுந்தது இப்பொழுது விழுந்தது -என்னும்படி அஸ்த்ரிமாய் இருக்கையாலே –ஓட்டை மாடம்-சொல்லுகிறார் -ஓடும் பூட்டும் கொண்டு சமாதானம் பண்ணி நிற்க வேண்டும்படி இருக்கை-மாடம் -என்கிறது சம்சாரிகள் அபிப்ராயத்தாலே-ஓட்டை மாடம் என்றும் இச் சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்-நீர் ஹிதம் சொல்லுகிறது இப்போது அன்றே
க்ரமத்தில் செய்கிறோம் -என்ன-புரளும் போது அறிய மாட்டீர் –ஜீவிக்கும் காலம் இன்னளவு என்று அறிய மாட்டி கோள்-கெடுவிகாள்-மரணம் அன்றோ தோள் தீண்டியாக வந்து நிற்கிறது –க்ரமத்தில் செய்கிறோம் என்று ஆறி இருக்கலாமோ –
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – -9-நாலாயி:880/3–அற்றம் -மறை பொருள்-அறியாமைக்கு அடி ஆயிதான விருத்திக்கு மேல்பட தாத்பர்ய விருத்தி யறிகிலி கோள் –வசஸாம் வாச்ய முத்தமம் -என்றும்-வேதைச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்-நாராயண பரா வேதா -என்றும் -சொல்லக் கடவது இறே
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் -13-– நாலாயி:884/3–மனுஷ்ய ஜன்மத்திலே பிறந்து வைத்து அறிவின்றிக்கே இருந்தார்களே யாகிலும் திருவரங்க பிராவண்யம் வேண்டா உக்தி மாத்ரமே அமையும் –ஆகில் –என்றது –பாப பிரசுரர்க்கு இது தானும் சித்தியாது -என்கை
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்-22- – நாலாயி:893/2–இதர உபாயங்கள் பல பிரதமாம் இடத்தில் அவனுடைய அனுக்ரஹம் பார்த்து இருக்க வேணும் –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது – தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – 28-நாலாயி:899/1-ப்ரஹ்மாதிகளால் அறிய ஒண்ணாத ஒளி உண்டு -ஸ்ரீ வைகுண்டம் அத்தை வாசஸ் ஸ்தானமாக வுடையவர் –ஜ்ஞானாதிகர் ஆனாலும்-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார்க்கு பரம பதம் நிலம் அன்றே
பிராபிக்கை முடியாமையே யன்று அறியவும் முடியாது என்கை –
மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய–32- – நாலாயி:903/3–உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக நீர் உபதேசித்து வைத்த மார்க்கம் உண்டு -வழி -அதாகிறது -உபாயம் –அவை யாகிறன –கர்ம யோகம் –தத் சாத்தியமான ஜ்ஞான யோகம்-உபய சாத்யமான பக்தி யோகம்-அவதார ரஹஸ்யம்-புருஷோத்தம வித்யை-அனுக்தமான திரு நாம சங்கீர்த்தனம்-புண்ய ஷேத்திர வாஸம்-இப்படி சேதன பேதத்தோபாதி போரும் இறே உபாய பேதமும் –இவற்றில் ஒன்றை அனுஷ்டிக்க மாட்டாமை அன்றிக்கே ஒன்றையும் கூட அறிய மாட்டாதவன் ஆய்த்து –
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று –34- நாலாயி:905/3–நினைவுக்கு வாய்த் தலையைப் பற்றி இருக்கையாலே அனுசந்திப்பார் அனுசந்திக்கும் எல்லாவற்றையும் சர்வஞ்ஞனாய் –சர்வ நியந்தாவாய் இருக்கிற நீ உடனே கூட இருந்து அறுதி என்று –
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி –38- நாலாயி:909/2–பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –
பின்னையும்-ஆம் பரிசு ஆவது – கைங்கர்யமே யாய்த்து –ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –அறிந்து கொண்டு – நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும்
இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே-மேம் பொருள்–மெய்ம்மை–ஆம் பரிசு என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே –
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் -41-– நாலாயி:912/1-பிரஹ்மாதிகளால் துர்ஜ்ஞேயமான பரமபதத்தில் நித்ய வாசம் பண்ணுபவனே –ஆகா -என்கிறது சண்டாளன் அக்னி ஹோத்தரத்திலே ஆகாது என்னுமா போலே நிஷேதத்தை சொல்லிற்று ஆகவுமாம்-பரணிலே உயர இருந்தால் பரமபத நிலையனை அறியலாமோ – மனுஷ்யர்களில் காட்டில் வ்யாவ்ர்த்தி உண்டே -அது கொண்டு அங்கே செல்லலாமா –அகிஞ்சன–அநந்ய கதி –
என்று இருப்பார் அறியும் அத்தை-ஈஸ்வரோஹம் –என்று இருப்பார்க்கு அறியலாமோ –
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு –5— நாலாயி:931/3–இப் பேற்றுக்கு அடி என் என்று பார்த்தார் —இந்திரியங்களை ஒறுத்து மஹா தபஸை பண்ணினேனோ அறிகிறிலேன் –நான் அறிய ஒன்றும் இல்லை –இப்படி சங்கிப்பான் என் என்னில் –பெற்ற பேறு அப்படிப்பட்டாருக்கு கிடைக்குமது யாகையாலே –அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ்ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் —கோரமான தபஸ்ஸூ ஆகிறது –அத் தலையாக தம்மை அழிய மாறின பெரிய வுடையாரைப் போலே இருக்கை
எந் நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே -என்னுமா போலே-
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி -2- – நாலாயி:938/3-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் – மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் -தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்
மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்
ஐஸ்வர்யம் என்ன -ஆத்மலாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –நான் அப்படி இருப்பதொரு ஸ்வாமி யுண்டாக வ்யுத்பத்தி பண்ணி வைக்கில் அன்றோ வேண்டுவது-தேவு அறிவன் -ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்–ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ
எண் திசையும் அறிய இயம்புகேன் -7- நாலாயி:943/3-விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்-எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்-அறிய இயம்புகேன்
நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்
ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும்
தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – 1-1-7-நாலாயி:954/1—அவர்கள் கார்ஹஸ்யத்தில் நின்ற நிலை அறியிகோள் – அவர்கள் ஜன்மம் அறியிகோள்-இவர் அவர் என்னீர் -ஒரே சொல்லாய் -ஒருவர் வாசியும் அறியீர் என்னவுமாம்-பண்டு தரித்ரனாய் கிலேசப்பட்டு போந்தான் ஒருவன் இப்போது ஜீவிக்க புக்கால் இது இவன் அளவு அன்றிகே இருந்தது -இது வேறு ஒருவன் அடியாக வேணும் -என்று அறிய மாட்டாதே ஸ்ரீயபதியைப் போலே- பிறப்பே பிடித்து ஸ்ரீ மானாக போந்தானாக நினைத்து இருப்புதி கோள் –
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொல்லி -—1-3-3–ஜ்ஞான ப்ரசுர த்வாரம் ஆகையாலே அவன் பக்கலில் அன்பை உடையையாய் சிலவற்றை சொல்லி மீள வேண்டாதபடி
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – 1-3-10--நாலாயி:977/4-ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்-அன்றிக்கே-நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்-அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்-இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம் அவ்வோபாதி ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –ஆன பின்பு இவர் விடச் சொன்னவற்றை விட்டு இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள -1-5-10– நாலாயி:997/3-லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –நித்ய ஸூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம் அத்தை ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாருங்கோள் –
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – -1-9-3-நாலாயி:1030/2,3-இட்டறியேன் என்பது அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே -1-9-9-– நாலாயி:1036/2-பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே பாபங்களையே பண்ணி பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –
அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி-
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே -1-10-8– நாலாயி:1045/4–ஆய –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபன் என்னும் இடத்துக்கு ஸூஸகம் இறே இது –இதர நிர பேஷனான அவன் அநந்ய கதியாய் கொண்டு என் பக்கலில் வந்து புகுர ஸா பேஷனான நான் அவனை விட்டுப் போவேனோ –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – 2-3-7-நாலாயி:1074/4-ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-(பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்-–2-7-1- – நாலாயி:1108/2-வடிவு அழகாலும் பருவத்தாலும் பிறப்பாலும் வந்த ஏற்றத்தை உடையாள் ஆனவளும் –அவளுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமான மார்பு ஆயிற்று –
அகலகில்லேன் இறையும்-என்கிற படி – இம் மார்பில் இருப்புக்கு ஏதேனும் இழவு வரில்
செய்வது என் என்று துணுக்கு துணுக்கு என்று ஆயிற்று வர்த்திப்பது –இருந்தால் கலந்தாளாய் பின்னை பிரிவும் பொறுக்க மாட்டாள் –( இருப்பதும் கலப்பதும் வேறே வேறே இல்லையே -தொழுவதும் எழுவதும் ஒன்றே போல் )அவள் மார்விலே இருக்கிறது அறியாமை பற்றினாள் என்ன ஒண்ணாதே – அவள் இருக்கிற இருப்பு தனக்கு பற்றுகைக்கு பற்றாசு என்று பற்றினவளை-அவளும் அங்கே இருக்கச் செய்தே எனக்கு இழக்க வேண்டுகிறது என் -என்று அது தானே இவளுக்கு ஆசைக்கு உடலாயிற்று – அதுவாயிற்று இவளுக்கு ஆசைப்படுகைக்கு ஆலம்பனம்-(அறிந்தும் -உம்மைத் தொகை -விஸ்லேஷ பயம் அறிந்தும் அதி சங்கையே விசேஷம் -நிலைக்குமா நித்ய அநபாயினியும் நித்ய அதி சங்கை பண்ணி இருக்க அவளோடு-சாம்யம் கொண்ட இவளும் துணுக் துணுக் என்ன ஆசை
அன்றிக்கே பிராட்டிக்கு கடகர் இல்லை -இவளுக்கு அவள் இருப்பதால் பயப்பட வேண்டாம் அதி சங்கையும் பண்ண வேண்டாம் )
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு -2-7-9- நாலாயி:1116/2,3-சங்கம் அடியாக உம்முடைய பக்கல் பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி அழகை உடைய விலஷணையான இவளுக்கு –இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்-பயலை பூத்தாள் கண் துயில் மறந்தாள்-அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது யென்று நோவும் சொல்லி நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற – அதாகிறது
முறுவலிலேயோ நோக்கிலேயோ வடிவிலேயோ சீலத்திலேயோ அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து -2-8-4– நாலாயி:1121/2,3-இதுக்கு முன் பயம் வுயுத்புத்தி பண்ணி அறியாதது பயப்பட-அதினுடைய கொம்பை குப்பைக் கீரை பிடுங்குமா போலே அநாயாசேன வாங்கும் ஆனை வாசி அறியாமையாலே
பலித்துக் கொண்டு நின்றது இத்தனை-அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – 2-8-6-நாலாயி:1123/1–ஆபாத ப்ரதீதம் மாதரம் அன்றிக்கே நம்முடைய இயற்றி எல்லாம் கொண்டு
இவரை உள்ள அளவு எல்லாம் அறிய வேணும் என்று பார்த்தால் (அறிந்து அறிந்து தேறி தேறி ) ஒன்றும் அறியப் போகிறது இல்லை-அட்டபுயகரத்தேன் என்றாரே–நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்றார்-உனக்கு பற்றுக்கோடாக இருக்கவே இப்படி சேவை
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே––2-8-9- – நாலாயி:1126/3,4–இவர் பார்க்கிற பார்வை விபாகத்தில் நம்மை முடிக்கும் போலே இரா நின்றது சொன்ன வார்த்தையை கிரயம் செலுத்துவாரைப் போலே இரா நின்றார் –
அது ஒரு உக்தி மாத்ரம் ஆகாமே அத்தை அர்த்த க்ரியா காரியாக்கி நினைக்கிறார் போலே இரா நின்றது –இவர் ரஷகராய் இருக்கிறாரோ- நம்மை முடித்தே விட இருக்கிறாரோ –
அறிகிறிலேன்
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல–3-3-7- – நாலாயி:1174/1-ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்-அஞ்சன மலை -விசேஷணம் யானைக்கும் கண்ணனுக்கும் வேழப் போதகம் அன்னவன் அன்றோ-எவர் இவை செய்வது அறிவார் இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்-அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே-ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே ––3-6-2-– நாலாயி:1199/4–(பணி செயல்-உக்தி- சொல் ஓன்று பணித்தது உண்டு போல் )
1-என்னை அணைக்கையே தொழிலாய்-இங்கு ஏற வருகையில் ஒருபடிப்பட்டு இருக்கிறானோ
அன்றிக்கே-2-ஜாம்பவதி போல்வார்க்கு பூப் பறித்து தொடா நிற்குமோ அறியேன் –
அன்றிக்கே-3-பணி என்று சகுந்தலையை உபேஷித்த துஷ்யந்தனைப் போலே
அறியாமை பாவித்து இருக்குமோ -அதுவும் அறியேன்
அன்றிக்கே-4-நா விலும் பல்லிலும் நீர் அற்று -என் செய்தாள் – என் பட்டாள் –
என்று கேட்கிறானோ
உக்தியிலும் கிரியையிலும் கொள்ளக் கடவது – அவன் படி நிச்சயிக்க ஒண்ணா விட்டாலும்
நமக்கு அவனை ஒழிய செல்லாது இறே –
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே –3-6-3– நாலாயி:1200/4-அவன் கருத்து அறிந்து வந்து எனக்கு சொல்லுதல் என்னுதல் – நான் ஆற்றாமையாலே கண்ணாஞ் சுழலை இட்டு சொன்னவற்றை எல்லாம் அங்குச் சொல்லாதே -அவன் தரிக்கும்படி அளவு அறிந்து வார்த்தை சொல் என்றுமாம் –மிகச் சொல்லில் அவனைக் கிடையாது-அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் –
நம் தசையை அறிவித்தால் நமக்கு அத்தலை வேணும் -என்றான் ஆகில்
நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க நமக்கு அத்தலை வேண்டா -என்றான் ஆகில் – நாம் முடிந்து பிழைக்கும் படி —
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே –3-6-4- நாலாயி:1201/4-திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால்
பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு
(சர்வஞ்ஞன் சர்வ அந்தர்யாமி யந்த்ரா ரூடாநீ -இருந்தும் என் நோய் அறியாமை இருந்தால் )
அன்றிக்கே -அறியச் சென்று உரை – உன்னடையிலே தளர்த்தியிலே இத்தலை ஆற்றாமை அடைய அவன் அறிந்து நாவிலும் பல்லிலும் நீர் அற்று உடம்பு வெளுக்கும்படி சென்று சொல் என்றுமாம் —
கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -3-7-1–– நாலாயி:1208/1-சோரேண என்று இவனுடைய ஆத்மா அபஹாரத்தோபாதி யாய் இருக்கிறதாயிற்று
உடையவன் தன்னுடைய உடைமை கொண்டு போனதும் – என்னது என்று போந்த வாசனையாலே-உடையவன் உடைமை கொண்டு போனானே யாகிலும் காணும் பொழுதே எடுத்துக் போகையாலும் – கள்ளன் என்ற இது மமகாரத்தின் ஊற்றத்தாலே-
(மம ஸூ தா -மமகாரம் விட்டவனுடைய மமகாரம் இது குண சம்பூர்ணத்தால் சொல்ல வைத்ததே )காத்துக் கிடக்கிற தான் அறியாள் ஆகில் கொண்டு போனவனைப் போலே காணும் கேட்பது –
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் —3-7-4-– நாலாயி:1211/2,3–உகவாதார் இருந்த இடத்தே -வெறும் கையே செல்லுமவன் உடைய ஊர் ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்
இடையனாய் பிறந்தான் என்று ஆசைப் படுவாராய் ஆசைப்படா நின்றீர் கோள்
எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –ஆழம் காலை மிதப்பு என்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால் தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-
தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு -4-9-4-– நாலாயி:1331/2–சேஷ பூதன் சேஷியை ஆசைப் பட்டு ஏத்துகை முறை அன்றோ என்று இருக்கை அன்றிக்கே
இது தன்னை அவத்யமாய் உப பாதிக்கும் படியாக வந்து விழுந்தது–உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர் எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம் இப்படி விளைவது அறிந்தோம் ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே-லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்–இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான் தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான் ஆறி இருக்கிறீரோ(அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே-4-9-6–நாலாயி:1333/4–நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்-விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்–சொல்லாது ஒழிய கில்லேன் –-சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில் பரிமாற ஷமன் ஆகிறிலேன் சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே-இப்படி இருக்க மாட்டு கிறிலேன்–அறிந்த சொல்லில்–அறிந்தவற்றைச் சொல்லில் முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்–நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை-உம்மைப் பிரிந்து பின்னையும் காணலாம் என்னும் நசையாலே பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான எலும்பு முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து இரா நின்றீர்-அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )-உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து இவருடைய சௌகுமார்யம்-தூது விடப் புக்கு தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே தூ விரிய மலருழக்கியிலே –நல்லார் அறிவீர் – தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் – தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்-இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்-நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –-அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய் இருப்பது ஓன்று இல்லை –ஈதே அறியீர் –சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும் இவருடைய பிரகிருதி மார்த்தவம்-இந்தளூரீரே – தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும் அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே -4-9-7-– நாலாயி:1334/1,2-சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர் –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்- (கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ )
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே-4-10-8– – நாலாயி:1345/4-அங்கு உள்ளாருக்கு திவாராத்ரா விபாகம் பண்ண ஒண்ணாத படியாய் இருக்கும் ஆய்த்து இவை தான் ஒரு கால விசேஷங்களிலே உண்டாகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-அன்றியே இவருடைய உகப்புக்கு அவதி இல்லாமையாலே ஆகவுமாம்-உகந்த விஷயங்களில் எல்லா நன்மைகளும் உண்டாகத் தோற்றும் இறே –
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – –5-1-1-நாலாயி:1348/1-ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்-என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்-அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே-அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன்
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் –5-4-9— நாலாயி:1386/2–தூரஸ்தனாய்
சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பு ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-பசுக்களை மேய்க்கும் அவனோ தான்-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற
பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்-ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை
என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை –அறிகிறிலேனே-கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை-என்னால் அறியப் போகாது – திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -நாள் மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – -5-5-5–நாலாயி:1392/3-ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ தம்மை வ்யபதேசிப்பது(தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம் -இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி-இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )நாம் அறிய – இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
(தூறு வார வேண்டுமோ-ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர்
ஆஷேபமே இல்லையே )
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8--நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள் என்னால் பேசி முடிக்கப் போகாது –ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால்-இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ-
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால் இதுக்கு மேல் என்னால் போக்கடி தேடப் போமோ
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – 5-7-6-நாலாயி:1413/3–அவனாலே பீடிதரான தேவர்கள் அடங்கலும் அநந்தரம் திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து
திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – -–5-8-3--நாலாயி:1420/3-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே-சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம் –
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – 5-8-4-நாலாயி:1421/2,3–பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து அவனை இட்டு ரஷிப்பித்தாய்- ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது -ந ஷமாமி
நத்யஜேயம்-என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு–அவனை இட்டு இறே ரஷித்தது-தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே-தானே ரஷிக்க வல்லனாய் இருக்க- நம் கையிலே காட்டித் தருவதே என்று
இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது-இனி இருவருக்கும் அந்யோந்யம்
ரஷ்ய ரஷக பாவம் இறே உள்ளது- பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே–முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும் பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –தன் கையிலே காட்டிக் கொடுத்தால் ரஷிக்க வேண்டுகிறது சேஷியினுடைய நினைவே நடக்க வேண்டுகை யாலே இறே- சேஷ பூதர் இருவருக்கும் வந்த விரோதத்துக்கு சேஷி உடைய முகம் இறே வாடுவது-
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – 5-8-9-நாலாயி:1426/3-அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது (பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )-பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை திரளிலே வெளியிடுவாரைப் போலே தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை இங்கன் வெளியிடுவதே திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )அடியேன் அறிந்து –
இவர் உடைய நான் இருக்கிற படி (நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம்
ஆழ்வாராதிகளுக்கு மாற்றியே உண்டே )
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்–5-9-8– – நாலாயி:1435/1-ஓர் இடைச் சேரி மாத்ரம் அன்றிக்கே ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் –5-10-9- நாலாயி:1446/2,3-அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ சேஷ பூதர் ஆனவர்கள்
பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம் அனுபவியார்கள்-அறிதியேல் – சைதன்ய பிரசுரமாகில் –
அறிவு அரும் நிலையினையாய் – -6-1-6–நாலாயி:1453/3–சதுர் தச புவநேஸ்வரனான சதுர்முகன் தொடக்கமான ப்ரதானர் ஆனவர்களாலும் இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையாய்(யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத இத்யாதி )
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி-6-2-4- – நாலாயி:1461/2–(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்
த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –-இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்-இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே –6-3-6— நாலாயி:1473/4–தத்வம் இருந்தபடி அல்லது பிரதிபத்தி பண்ணக் கடவது அல்லாத படியான பின்பு வேறு சிலரை ஆஸ்ரயணீயனாக நினைத்து இரேன் –இப்படி திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதனான உன்னை ஒழிய பரதத்வமும் அறியேன் –(பர ப்ரஹ்மம் பர தத்வம் பர தேஜஸ் பர ஆத்மா அனைத்தும் நாராயணனே )
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்-7-2-4- – நாலாயி:1561/3–சேராச் சேர்த்தியாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து-அவ் வாலந்தளிர் அளவன்றிக்கே
பரம பதம் போலே இடம் பெற இருந்து-என்னை உனக்காக்கிக் கொண்ட இம் மகோ உபகாரத்தை அறியாதே நான் க்ருத்க்னனாய் இருக்கிறேன் அல்லேன் – அவ்விடை யாட்டமும் அறிந்தே இருக்கிறேன் –அறியாது இருந்தறியேன்-தெரிந்து கொள்ளாத நாள்களும் உண்டே -அத்தையும் காட்டி அருள-இரண்டு எதிர் மறை சொற்கள் இதில்
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை -7-3-3- நாலாயி:1570/1–பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது – அங்கன் ஓன்று இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும் இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –ஆவா சந்த்வஹ மிச்சாமி -என்கிறபடியே –(நீர் காட்டும் இடத்தில் குடிசை கட்டி வாழ பெருமாள் ரிஷிகள் இடம் பிரார்த்தித்து போல் ) என்னுடைய ஹிருதயத்தை தனக்கு இடமாக்கிக் கொண்டான் -திருவடி -திரு வநந்த வாழ்வான் தொடக்க மானவர் பக்கலிலும் போவானாய் இருக்கிறிலன்–அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் -5-4-8–என்றும்-இட வகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் –5-4-10–என்றும்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்-என்றும்
சொல்லுகிறபடியே-இவர் உடைய திரு உள்ளம் ஒழிய வேறு ஓர் இடம் உண்டாக நினைத்து இருக்கிறிலன் – பின்னை அவ்வோ இடங்களிலே இவன் இல்லையோ என்னில்
சௌபரி பல வடிவு கொண்டு அனுபவித்தால் போலே இதுக்கு அவ்வருகு இல்லை என்னலாம் படி அவன் முகம் கொடுத்துக் கொண்டு இருந்த படி –(இளம் கோயில் கை விடேல் என்று இவர்கள் பிரார்த்திக்கும்படி )
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே –7-4-7 நாலாயி:1584/4–ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை அனுசந்தித்தேற்கு –ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான
வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது –
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-2–நாலாயி:1609/4-வேறேயும் சில ரஷகரும் யுண்டாய் -அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று –
உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –அநந்ய கதியான நான் உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் –அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-3-நாலாயி:1610/4-நிருபாதிக பந்துவே உன் திருவடிகளை ஒழிய வேறு ஒரு புகல் யுடையேன் அல்லேன் –நிருபாதிக பந்தம் தோற்ற வந்து நிற்கிறவனே-
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-5-நாலாயி:1612/3,4-இக் கலியுகத்தின் யுடைய ஸ்வ பாவத்தை நான் அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வைமுக்யத்தை யுண்டாக்கி –பின்பு விஷய ப்ராவண்யத்தையும் பிறப்பித்து
முடிக்கும் -சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –எனக்கு ஹிதமாவதும் உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமதுவே என்று அறிந்தேன் –ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கும்
இடையருக்கும் பசுக்களுக்கும் உதவியது போல் பிற்பாடாருக்கும் உதவவே இங்கு வந்து நிற்கிறது —
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-6-நாலாயி:1613/4-காலம் நீ இட்ட வழக்கு அன்றோ – உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன்-அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ
நீ இங்கே வந்து நிற்கிறது –
தீ வாய் நாகஅணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – 7-7-9-நாலாயி:1616/3,4–ஆஸ்ரித சம்ஸ்லேஷ ஏக ஸ்வ பாவனே- உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாத படி சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற திரு வநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளினவனே –அப் படுக்கையிலே சாய்வது இருவரோடு சேர்த்தியோடு யாயிற்று-இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன்-ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும்-கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் இது அன்றோ –கிருபை ஒன்றே நான் அறிவேன் என்கிறார் –
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே -7-9-3— நாலாயி:1630/4-சிறு புலியீர் சல சயனத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை த்யாஜ்யதயா வாகிலும் அறிவது ஓன்று இல்லை –
சிறு புலியூர் சல சயனத் தானாயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே-7-9-4- – நாலாயி:1631/4-கிருஷ்ணாவதாரம் தீர்த்தம் பிரசாதித்தது என்று வெறுக்க வேண்டாதபடி -பிற்பாடருக்கும் அனுபவிக்கலாம் படி அவ்வதார்ரத்தின் படியே வந்து சாய்ந்தவன் – அவன் திருவடிகள் அல்லது வேறு ஒன்றையும் அறியேன் – அதுக்கடி அவன் சேஷ பூதன் ஆகையாலே –
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே-7-9-7- – நாலாயி:1634/4-உன் திருவடிகளில் அசாதாரணராய் இருப்பார் ஹிருதயங்களில் உள்ளாயோ –அடியேன் அறிகிறேன் இல்லை எனக்கு இது தெரிய அருளிச் செய்ய வேணும் –இத்தால் சொல்லிற்று ஆய்த்து –சௌபரி பல வடிவு கொண்டால் போலே இவ்வோ இடங்கள் தோறும் இனி அவ்வருகு இல்லை என்னும்படி குறைவற வர்த்திக்கிற படியைக் காட்டிக் கொடுத்தான் –
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-8-1-9- – நாலாயி:1656/3-முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ –எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – என்னும்படியாய் இருக்கும் –நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி-சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ – பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் ) எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)-(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே-பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே-இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே -8-5-2– நாலாயி:1689/4-ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் –தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ-அவன் போனாலும் அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி
உண்டாகில் நான் ஜீவியேனோ-அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று –நாயகனோ வந்து அணைகிறிலன்-இனி எத்தைச் செய்வது –
கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே -8-5-6-– நாலாயி:1693/4-தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே-அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்-அன்றிக்கே-கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்-அன்றிக்கே
அந்த சந்த்யா காலமானது – கரிய நாழிகை -அந்தி காலம் –ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம் –இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம் –
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே -8-5-7- நாலாயி:1694/4-இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள குழல் ஓசையுமாய்
என்னை முடியா நின்றது –(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )நான் முடியவே அவனைக் கிடையாது –அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்-ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )
தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே-8-5-8- – நாலாயி:1695/4–பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும்-கொடியதோர் கடு வினை அறியேனே –அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே-அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் –இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –(வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் -அம்பில் பட்ட பாடே போதுமே -இதுவே பெரிய நரகம் –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் )
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த-8-5-10- – நாலாயி:1697/2-அபிநிவேசம் கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீட்டைப் புத்தி பண்ணி அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட –
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ–8-9-5– – நாலாயி:1732/2–என் ஸ்வாமி யானவனே – ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்-நித்ய ஸூரிகள் பக்கலில் போவதாகவும் நினைக்கிறது இல்லை –இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என்-
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – -8-10-10-நாலாயி:1747/4-இவற்றை நிதியாகக் கொண்டு பாடும் அடியார்களுக்கு கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே பரமபதம் ஆட்சியாகக் கடவது – அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்-சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )-இத்தை அப்யசித்தவர்களுக்கும் அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு –9-2-6- நாலாயி:1763/2–ஒப்பித்து இருக்கிற பெண்கள் உடைய நெஞ்சை தமக்கு அபாஸ்ரயமாக
உடையவர் போலே இரா நின்றார் –என்னால் ஒன்றும் சொல்லலாய் இருக்கிறது இல்லை –
தாமரைக் கண்கள் இருந்தவாறு –அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே –(நயன பாஷை -கண்ணால் பேசியது இது )
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – 9-2-7-நாலாயி:1764/1,2–என்னால் இவர் படி பரிச்சேதிக்கலாய் இருக்கிறது இல்லை –பணியும் என்னெஞ்சம் –என் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே என் நெஞ்சானது வணங்கி நில்லா நின்றது-இது என் கொல் தோழி--உன்னை அறியாமை வருவதொரு நன்மை இல்லை இறே எனக்கு நாம் இவரிடை யாட்டம் நினைத்து அறிவுதுமோ –பண்டிவர் தம்மையும் கண்டறியோம் –பழைமை யாலே செய்கிறது ஒன்றும் சொல்லவுமாய் இருக்கிறதில்லை –
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – 9-2-9-நாலாயி:1766/2,3–மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி ஒரு பவனான ஆலந்தளிரிலே பள்ளி கொள்கிற ஆச்சர்ய பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் –
கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம் எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள்-9-4-3- – நாலாயி:1780/2–நாயகன் பிரிந்து போகிற போது தோளில் இட்டதொரு மாலையிலே ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று – நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு இத் தலையை உதறிப் போன படி –நம்மாள் அங்கே நின்றதாகில் ஆசை அற்று வந்தால் அன்றோ நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ –நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – 9-5-6-நாலாயி:1793/2–அவர்கள் விலஷணைகள் அன்றோ – ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள் என் சொல்லாதார் –நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை –
நம்முடைமை நம் கையதாகில் அன்றோ நமக்கு ஸ்மரிக்கல் ஆவது –அவர்களுக்கு ஸ்த்ரீத் வாதிகள் குறி அழியாது இருக்கையாலே சொல்லலாம் –நம்முடைய ஸ்த்ரீத் வாதிகள் நம் கையில் இல்லை –
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – –9-5-7-நாலாயி:1794/3,4-அவன் பிரிவை உணர்த்தினான் – காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்-வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்-அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே –
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் –9-5-8- நாலாயி:1795/4-அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்-அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – 9-5-9–நாலாயி:1796/2-போனாலும் ஆறி இருக்கலாம் இறே போன ஊரைச் சொல்லிப் போனான் ஆகில் –அவன் சொல்லிப் போகாமை இல்லை –இவள் குறிக் கொள்ள மாட்டாமை இழந்தாள்-இத்தனை இறே-இங்கு இருந்த நாள் அவன் வாய் வெருவும்படி அறிந்து இருப்புதோமே-அத் தேசத்திலே என்னைக் கொடு போய் பொகடப் பாருங்கோள் –
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – 10-2-2-நாலாயி:1859/2-ரஷகனானவன் போகையாலே-செய்வது அறியாத நாங்கள் –அறிவு கேடரான நாங்கள்
யாயும் பிறரும் அறியாத யாமத்து -10-5-8- நாலாயி:1895/1–பெற்ற தாயும் மற்று உள்ளவர்கள் ஒருவரும் அறியாத நடுச் சாமத்திலே –
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை-10-8-7- – நாலாயி:1928/2-முருடராய் இருப்பார் அன்றோ உம்முடைய் செவ்விக்கு இட்டுப் பிறந்தவர்கள் – ஆசை உடையார்க்கு கிடையாது இறே –இரவு கலக்கிற போதே நினைவு ஒன்றும் -செயல் ஒன்றுமாய் -இருந்தது என்னும் இடம் அறிந்தோம் –உம்மை நீர் அறிந்தால்-காலத்தைக் குறித்தோ போவது-எங்களை அறிந்தால் -சொன்ன போதிலே வர வேண்டாவோ-எல்லே –உறவு முறையாரைப் போலே
நீர் கவிழ்ந்து இருக்கிறது என் – இங்கே வாரீர் –இது என் இது என் இது என்னோ –உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ –
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் –—10-9-2- நாலாயி:1933/2–கோ கோபீஜ ந சங்குலம் -அதீவார்த்தம் -என்கிறபடியே பசுக்களும் இடையரும் நோவு படாத படி ரஷித்த ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ -அறிகிறிலேன்
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் -10-9-5– நாலாயி:1936/2-ஆயுதம் எடுக்க ஒட்டாமே அத் தேரின் மிடுக்கையே கொண்டு
(சித்திரத்தேர் வலவன் அன்றோ ) கேவலம் போக வரிய வீர ஸ்வர்க்கத்துக்கு போவார் இல்லாமையாலே புல் எழுந்து கிடந்தவற்றை பெரு வழியாம்படி கண்ட ஆண் பிள்ளைத் தனைத்தை நினைத்தோ செய்தது –
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் —10-10-9- – நாலாயி:1950/4–தேவனோ மனுஷ்யனோ அறிகிறிலேன்-தேவத்வ ஸூ சகமான திரு ஆழியையும் மனுஷ்யத் வைகாந்தமாய்
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ சார்ங்கத்தையும் உடைய -ஸ்வாமிகளை –அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே அறியேன் -என்னப் பண்ணுகிறது இறே -அவன் வைலஷண்யம் –
இன்னார் என்று அறியேன் –
அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே –11-3-3– நாலாயி:1974/4-நெருங்க கலந்த போதாக –இன்னார் என்று அறியேன் -என்னிலும் -என்னும் –காதாசித்கமாக சம்ஸ்லேஷித்த போது-ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் -அறிவேன் என்னிலும் -என்னும் –இன்னார் என்று அறியேன் என்றவர் அன்னே இவரை அறிவன் என்கிறாரே –
நீர்மை காணப்போகாதே -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணுமே-பிரளய காலத்திலே சப்த ராசியும் அகப்பட அழிய ஒரு பதார்த்தம் இன்றிக்கே இருக்கிற சமயத்தில் இவ் வநு பூர்வியை ஸ்மரித்துக் கொண்டு இருந்து பின்னை அத்தை உபதேசித்து ஹித அனுசாசானம் பண்ணினவர் –இதாயிற்று இதனுடைய நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் – உபாத்யாயன் உறங்கா நின்றாலும் சம்ஸ்காராத்மா வாய்க் கிடக்கும் இறே –அவர் நம்மை அகப்படுத்த ஏற்கவே கோலினார் நாம் அறிந்திலோம் இத்தனை காண் –தாம் ஹித ப்ரவர்த்தராய் இருக்கும் இருப்பைக் காட்டி நெஞ்சை நெகிழ்ந்து அது பலிக்கும் அளவானவாறே
ஸ்ப்ருஹணீயமான வளையை அபேஷித்து கால் வாங்கப் போகாமே த்வார ஹிருதயத்திலே வந்து புகுந்து நித்தியமான ஆத்ம வஸ்துவையும் தமக்காக்கிக் கொள்வாரைப் போலே இரா நின்றார் –இவர் மநோ ரதம் நமக்கு நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை –உடைமை நாம் இட்ட வழக்கானதற்குப் பின்னே
உடையவரும் நாம் இட்ட வழக்கு அன்றோ -என்று இருக்க மாட்டுகிறிலர்-
அறியோமே யென்று உரைக்கலாமே யெமக்கு
வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவிச்
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே—11-3-4-ஸ்வ யத்னத்தாலே அறிய இழிந்தவர்கள் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்யமதம் -என்னும் காட்டில்
அவன் காட்டின வழியே அறிய இழிந்த நமக்கு அறியப் போகாது யென்று சொல்லலாமே –பரிமள பிரசுரமாய் இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்டு விஸ்மயநீயமாய் இருக்கிற திருக் குடந்தையிலே வந்து சாய்ந்து அருளி –இவன் இது களவு கண்டான் -யென்று சொல்ல ஒண்ணாத படி மௌக்த்யத்தை உடையனாய் – பொய்யடி இட்டு போய்ப் புக்கு –உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தை புஜிக்கப் பெற்றோம் யென்று ஹ்ருஷ்டரானவரை அறியோம் யென்று உரைக்கலாமே எனக்கு –
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – 11-4-8-நாலாயி:1989/1,2–முன்பு ஒரு காலத்தில் சர்வ லோகங்களும்(ஸூர்ய லோகத்துக்கு மேல் உள்ள ஏழு லோகங்களும் ) அஞ்ஞான அவ்ருத்தங்களாக துடங்கிற்று இது விடுகிறது இது என்று அறியாதே அஸ்த்தானே நமக்கு வந்ததிது என்னோ என்று லோகத்துக்கு வெளிச் சிறப்பைப் பண்ணும் தேவதைகளும் அகப்பட அறிவு கெட – யோவை வேதாம்ச ப்ரஹிணோதி தஸ்மை (ஸ்வேதாஸ்வர )-என்று தான் முதலிலே அறிவிக்க கைம் முதலான இவ் வேதங்களும் அபஹ்ருதமாக –
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி -11-5-4- நாலாயி:1995/1–மனுஷ்யத்வே பரத்வம் அறியாதார்க்கு-தயிரை வருந்திக் கடைந்து உறியிலே சேமித்து வைத்த அன்று
கடைந்த வெண்ணெயை உண்டு உகந்தான் –சம்சாரிக்கு பகவல் லாபம் போலே அவனுக்கு இது –இவ் வயிற்றுக்கு கடல் சூழ்ந்த லோகம் அடையப் போராது காண் –
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே -11-6-2-– நாலாயி:2003/4-மிடுக்கை உடைத்தான திண் தோள் ஆகிற பெரிய கையாலே பஹிரண்டங்களையும் அகப்படுத்தின காலம்-இவ்வர்த்தம் அறியாதார் உண்டோ –இவனுக்கு புறம்பாய் இருப்பது ஒன்றைப் பற்றி
இவனைக் கை விட்டி கோளோ-லோகத்தின் உடைய சத்தை அவனுடைய பிரசாதா யத்தம்
என்னும் இடம் அறியீர்களோ –
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – 11-6-10-நாலாயி:2011/2
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – -11-7-8-நாலாயி:2019/4-ஆஸ்ரிதர்க்கு இப்படி எளியனாய் –மேன்மையால் குறையற்று-சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனை –நினைத்து அறியாதவர்கள் –இங்குத்தை எளிமையும் மேன்மையும் இரண்டையும் அறியாதவர்கள் –
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–திருக் குறும் தாண்டகம் ––10-அழகுக்கு தோற்று -என் ஆயன் -என்கிறார் –நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-
தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்ன –உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் –மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ –(மறந்தேன் உன்னை முன்னம்* மறந்த மதி இல் மனத்தால்* -இறந்தேன் எத்தனையும்* அதனால் இடும்பைக் குழியில்* பிறந்தே எய்த்து ஒழிந்தேன்* பெருமான்! திரு மார்பா!* சிறந்தேன் நின் அடிக்கே* திருவிண்ணகர் மேயவனே)(ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-)(வடிவழகிலே யீடுபடுமவர்கள் ”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய,
தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே அதிகமான ஆவல் இருப்பதனாலும்”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.)
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – 4-நாலாயி:2055/3–ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களுக்கும் அறிய ஒண்ணாது இருக்கை –
யமாத்மா ந வேத -என்று யாவன் ஒருவனை ஆத்மா அறியான் – அவன் அந்தரனான -அந்தராத்மா -என்னக் கடவது இறே -(உம்மைத்தொகை -அறிவால் சிறப்புற்ற இவர்களாலும் என்றபடி ) அது தோற்ற துர்ஞ்ஞேயன் -என்கிறார் –அந்தரத்தில் -வ்யாபிகிறான்-அயன சப்தம்-அகடிகடதாக சாமர்த்தியம்–வியாபிக்கும் இடத்தில் வியாபிக்கும் காலத்தில்-அந்தரத்தில்–தேவர்க்கும் அறியல் ஆகா —என் இடம் வ்யாபித்ததை என்னாலே அறியல் ஆகா –யா ஆத்மா வ ந வேத –யா பிரத்வி ந வேத -ஞானம் இருக்கும் ஆத்மா கூட அறிய முடியாதே–அப்ரமேயன்-தேவர்களுக்கும் விசேஷித்து -சொன்னது -ஞான சக்திகளால் அதிகம் கொண்டவர்கள்–என்பதால்–
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – 10-நாலாயி:2061/2-நான் அடைவு பட -சாஸ்திர க்ரமத்திலே -ஓன்று அறிவேனோ –1-அமாநித்வாத்யாத்ம குணங்களை அறிவேனோ(ஸ்ரீ கீதை 13-7 ஸ்லோகம் தொடங்கி-13-11-வரை -20 ஆத்ம குணங்கள் )2-கர்ம யோகத்தை அறிவேனோ-3-ஜ்ஞான யோகத்தை அறிவேனோ-4-உபய சாத்யமான பக்தி யோகத்தை அறிவேனோ –நான் எத்தை அறிந்தேன் –உறங்குகிறவனுக்கு விடிந்தால் போலே விஷயாந்தரங்களை ஒழியவே ஓன்று அறியாதே திரியச் செய்தே உன்னுடைய வைலஷண்யத்தைக் காட்டக் கண்டேன் இத்தனை போக்கி –
சாதனாந்தரங்களை எங்கே கண்டேன் -என்கை –
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் -12- நாலாயி:2063/1-தன் கார்யம் தலைக் கட்டின படி இது –என் கார்யத்தில் இவள் நின்ற நிலை இது –இவளுடைய ஊணும் உறக்கமும் போலே காணும் -தனக்கு உத்தேச்யம் –உண்கிறிலள் -என்கை அன்றிக்கே
முதலிலே ஊணை மறந்தாள் என்கிறாள் சம்ச்லேஷ தசையில் –
உண்ணா நாள் பசி யாவது ஓன்று இல்லை -என்றும்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்றும் இருக்கையாலே-ஊண் இல்லை –தத் விஸ்லேஷத்தில் உபவாச க்ர்சையாய் இருக்கையாலே ஊண் இல்லை –
பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–-நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே நீயும் இவற்றை அளந்து கொண்டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில் – சூருருவின் பேயளவு கண்ட பெருமான்– இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார் ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று-நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை-உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –அறிகிலேன் -நீ யளவு கண்ட நெறி –நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்-மகாபலியாலே பூமியை அளந்து-உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு – பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீகரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –
பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த –4- நாலாயி:2085/2,3–இந்த்ரியங்களை விஷயாதிகளில் போகாத படி முட்ட நியமிக்க ஒருவருக்கும் முடியாது –அறிவானாம் –
ஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு ஷேபோக்தி இருக்கிறபடி
அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி -14- நாலாயி:2095/1-ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய் பின்ன ருசிகள் ஆகையாலே -அவர் அவர் -என்று அநாதரித்துச் சொல்லுகிறார் –தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –கர்மம் அடியாக வந்த ருசியும் அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இறே இருப்பது –சாஸ்திரத்தின் பின் செல்லார்களே-ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி –21-திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும் திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்–இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே-உன்னைக் கொடு
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -22-– நாலாயி:2103/1-இது ஜகத் பிரசித்தம் அன்றோ-நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா-சிஸூ பாலனும் கூட அறியானோ
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய –45- நாலாயி:2126-ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ-இவர்களால் அறியப் போகாமைக்கு மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –அதுக்கு மேலே –அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க நாமே அவனை அறியப் புகுகிறோம்-அங்கன் அன்றிக்கே அது கிடக்க நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் – அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –
ஆரே அறிவார் அது நிற்க நேரே –56- நாலாயி:2137/2-என் நாயகன் ஆனவனை யார் தான் அறிவார்-இவருக்கு அவன் தானே காட்டின படி –அவ் விடை யாட்டம் கிடக்கிடீர்-அறிவார் கிடக்கிடீர்-அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ –சர்வேஸ்வரன் உடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்திலே அவ்யவதாநேன பிறந்து அவ்விடம் தன்னையே இருப்பிடமாக யுடையனான சதுர்முகன் ஆனவன் இன்னம் திருவடிகளைக் காணப் பெற்றிலன் –
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு -60- நாலாயி:2141/3,4–ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான உபகாரகனை யல்லது –கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்-உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது-அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது-இத்தால் அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி-சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து –84- நாலாயி:2165/1,2-எத்திறம் என்கிறார் –
உபாகாரகனான உன்னுடைய பெருமையை நீ அறிதி -அறியாய் -என்று சந்தேஹிக்கும் அத்தனை போக்கிப் பிறர் அறிவார்கள் என்று சந்தேஹிக்கைக்குத் தான் விரகு உண்டோ-ஸோ அங்க வேத யதி வா ந வேத -என்னக் கடவது இறே-
படி கண்டு அறிதியே பாம்புஅணையினான் புள் – நாலாயி:கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – 85-நாலாயி:2166–அவனுடைய பிராகாரங்களைக் கண்டு அறிதியே-அன்றிக்கே அவனுடைய திரு மேனியைக் கண்டு அறிதியே -என்றுமாம்-படி -என்று திரு மேனிக்கு பேர்
இந்த பிரகார விசேஷமாய்ப் புகும் இறே திருமேனி –பாம்பணையினான் கண்டு அறிதியே-அவன் திருவநந்த ஆழ்வானுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் படி கண்டு அறிதியே
புட்கொடி கண்டு அறிதியே-த்வஜம் முன்னாக அவன் வந்து தோற்றும் தோற்றரவு கண்டு அறிதியே –
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு-87 – நாலாயி:2168/4-நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின- திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –நாவலம் சூழ் நாடு –ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –
அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி – பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் – சப்தாதி விஷயங்களினுடைய பொல்லாங்கையும் அறிந்து – சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –ஸ்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ்ஸூ-அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி-அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –காண்பரே –தம்முடைய நோயாசை -நப்பாசை –காரோத வண்ணன் –அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –காண்பரே –இது நிச்சயம் –
தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – 16-நாலாயி:2197/1,2–பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்றும் –
தவாஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -60 -என்றும் – ஸ்வத்வம் ஆத்மனி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே இவ்வாத்மா தனக்குக் கூறுபட்டது சேஷத்வம் –எம்பெருமானுக்கு கூறுபட்டது சேஷித்வம் -என்னும் இம்முறை அறியானே யாகிலும் – ஆத்மதாஸ்யம் ஹரேஷ் ஸ்வாம்யம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னக் கடவது இறே-இப்படி இவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலேன் ஆகிலும் –தனக்கு சேஷத்வ ஞானம் இன்றிக்கே ஒழிந்ததே யாகிலும் – சம்யக் ஞானம் இன்றிக்கே இருந்ததே யாகிலும்-இப்படி பிரமாண பிர சித்தியாலும் ஆச்சார்ய சேவையாலும் -இருந்தபடிகள் எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்-எம்பெருமான் தனக்கு இவன் அடிமைப் பட்டது அறிந்திலனே ஆகிலும் -தனக்கு அடைத்தத்தைச் செய்வான் வேதாந்தத்தில் பழக்கத்தாலே சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் என்று அறிந்து இருந்தால் என்றுமாம்-மனத்தடைய வைப்பதாம் என்றதற்கு செய்வார் செய்தவற்றை கண்டு ஆஸ்ரயிக்கை என்றும் ருசி மாத்ரமே உடையானாகை என்றும் ருசியும் அவன் பிறப்பிப்பான் என்றும் மூன்று பொருள்-ஓன்று பட்டரது-ஓன்று திருமலை நம்பியது-ஓன்று ஆழ்வானது-
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று –36- நாலாயி:2217/2,3-அதி ஷூத்ர ரானர்கள் ஈச்வரோஹம் என்று தங்களைப் பெரியாராக அபிமாநித்தாலும்
பின்னையும் அது சிறுமையே யாய்த் தலைக் கட்டும் –தாங்கள் அஜ்ஞராய் இருக்கச் செய்தேயும் தங்களை சர்வஜ்ஞராக அபிமானித்து இருக்குமது பின்னையும் பழைய அஜ்ஞானத்தோடே தலைக் கட்டும் –அவர்களுக்கு நாம் சாதிக்க வேண்டா -தாங்களே சாதித்து வைப்பார்கள்-நாம் இனி அறிவுடையார் போன வழி போவோம்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன -பெரிய திரு -7-4-4-
அதாவது –அவனாலே அவனை அறிந்து -அவனாலே அவனைப் பெற விருக்கை –சர்வேஸ்வரன் செயலைச் செய்தான் என்று தோற்றாத படி –ஆஸ்ரித விஷயங்களில் பண்ணும் ரஷணங்களுக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய சக்தி யுக்தன்-நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் – அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்-எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் –38- நாலாயி:2219/2-எமக்கு என்றும் ஒக்க புகலிடமாய் இருக்கும் என்னும் இடத்தை புத்தி பண்ணு – நமக்கு நித்தியமான ஆஸ்ரயம் என்று அறிந்து –இவன் தனக்கு என்ன அறியாத காலத்திலும் -இவனைத் தனக்கு என்று இருக்குமவன் –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–-எல்லாத்துக்கும் பிரகாரியாய் இருந்துள்ளவனுடைய திரு நாமத்தை யேத்துகை-சாங்க அத்யயனத்தைப் பண்ணி-வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய -என்கிறபடியே வல்லீர்கள் ஆகில் அறியுங்கோள்-அப்படி அறிய மாட்டிகோள் ஆகில்-ஒத்தினுடைய சங்கரஹம் லஷ்மி பதியினுடைய திரு நாமத்தை சொல்லுகை-அவன் பிரசாதம் அடியாக பிறந்த ஞானம் உடையார் சொன்னத்தை அர்த்தம் என்று இருங்கோள் –
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் –40– நாலாயி:2221/3,4-பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதாரோடு வ்யாவர்த்தமாகப் பண்ணக் கடவதான ப்ராக்ருத போகங்களால் ஒரு பிரயோஜனம் இல்லை – ஜ்ஞானாதிகனானவனையும் அஜ்ஞ்ஞானவனோடு ஒக்கச் சொல்லும்படிக்கு ஈடாகப் பண்ணுவித்துக் கொள்ளுகிற சப்தாதி போகங்களால் வரக் கடவதொரு பிரயோஜனம் இல்லை-மஹா ராஜற்கு ராம பக்தி குறைவற்று இருக்கச் செய்தேயும் நாலு நாள் போகப் பிராவண்யத்தாலே அல்லாதாரோடு ஒக்க உணர்த்த வேண்டும்படியாய் விழுந்தது இறே-பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தே கை விடப் போகாத வர்த்த ஸூகத்தால் பிரயோஜனம் இல்லை -அந்த சப்தாதி போகங்கள் தானே அவ்வளவு யுண்டு -அவ்வளவும் அறிந்தாலும் பின்னையும் அறியாதார் படியேயாய்த் தலைக்கட்டும்படி பண்ணக் கடவதான போகங்களில் வருவதொரு பிரயோஜனம் இல்லை –ப்ராப்த விஷயத்தைப் பற்றாத ஜ்ஞானம் அஜ்ஞ்ஞானம் என்னக் கடவது இறே-பகவத் வ்யதிரிக்தங்களை அடங்க அறிந்தானே யாகிலும் அது ஒன்றையும் அறியாது ஒழியவே அவனை அஜ்ஞ்ஞன் என்னக் கடவது இறே-வ்யதிரிக்த விஷயங்கள் ஒன்றும் அறியாதே ஒழிந்தாலும் பகவத் விஷயம் ஒன்றையுமே அறியவும் அவன் சர்வஜ்ஞ்ஞனாகக் கடவன்
செய்ய நெடு மலராள் மார்வன் அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த-52- – நாலாயி:2233/2–மேகத்தில் மின்னினாப் போலே அவ்வடிவுக்கு பரபாகமான சிவந்த நிறத்தை யுடைய பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள திரு மார்பை யுடையவன் – அவளோட்டைக் கலவியாலே ஆன்ரு சம்ச்யத்தால் சாலவதிகன் –அவன் கிருபைக்கு ஊற்று இவள் -இவள் ஐஸ்வர் யத்துக்கு ஊற்று அவன் –அந்த ரஹச்யம் பத்தொன்பதாம் பாஷை -ஒருவருக்கும் தெரியாது –ஆழ்வார்கள் அறிதல் -அவர்களை அடி ஒற்றின நம் முதலிகளில் சிலர் அறிதல் செய்யும் அத்தனை –அவன் அகவாய் அறிவார் யார் –புறவாய் அறிவார் யார்–எம்பெருமான் தன்னைக் கூடு பூரித்து வைக்க அறிவாராய் பெறு கிறிலோம்-
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது -53– நாலாயி:2234/2-அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு-சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –
என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-நாலாயி:2236/3–தேவரை ஒரு காலமும் மறந்து அறியேன் -கண்டால் இழவு மறக்கும் படி இருக்கை-அதுக்கடி-ஸ்ரவண மநந நிதித்யாசன அநந்தரம் பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதியாலேயோ மறவாது ஒழிகிறது -என்னில் –எல்லா ஜன்மங்களிலும் -எல்லா அவஸ்தைகளிலும்-தேவர் எதிர் சூழல் புக்கு நின்று இவன் நம்மை மறவாதே பெற்றிடுவானுக்கு என்று அனுசந்திக்கிற இவ் வனுசந்தானம் ஒரு நாளும் மறவாத ஸ்வ பாவத்தாலே இப்பொழுது நினைத்த படியாலே எல்லாக் காலமும் மறந்து அறியேன் -என்கிறார்-எம்பெருமான் விடாதே இருக்கையாலே மறக்க விரகு இல்லை –
என்னுடைய ஞானம் குறைவற்று இருக்கை அல்ல -உன் நினைவாலே –இவனுடைய ஞானமும் பண்டாரத்து நின்றும் புறப்பட வேண்டி இருக்கிறபடி –தர்ம பரதந்த்ரமான மாத்ரமே யல்ல -ஆத்மாவினுடைய தர்மபூத ஞானமும் பரதந்த்ரம் –சத்தை பராதீனமான போது ஞானமும் பராதீனமாய் இருக்கை-இத்தால்-ஞான கர்ம அனுக்ருஹீதையான பக்தியாலே யன்று -நீ யாகிற சித்த உபாயத்தாலே என்றபடி –நாம் செய்த அம்சம் செய்தோம் இறே -எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ என்ன-பிரபல பிரதி பந்தங்களைப் போக்குகைக்கு ஈடான பரிகரத்தை யுடையாய்-அதுக்கு மேலே உன்னை அறிவுதி -என்னை அறிவுதி-என்னாலே உன்னைப் பெற ஒண்ணாது –உன்னாலே உன்னைப் பெற வேணும் என்னும் இடம் நீயே அறிவுதி –சர்வஜ்ஞன் சர்வ சக்தி அல்லையோ –இத் தலைக்கு அஜ்ஞ்ஞான அசக்திகள் போலே அத்தலைக்கும் ஞான சக்திகள் ஸ்வரூபமாகை- உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு வைகல்யம் காண்கிறிலேன் -ஆன பின்பு பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீயே
பெற்றால் அனுபவிக்கக் கடவதான நிரதிசய ஆனந்தத்தையும் பண்ணித் தந்தருள வேணும்-ஞான சங்கோசம் அறுத்தாப் போலே -யேஷஹ்யேவா நந்தயாதி -தைத் ஆன -7-எண்ணப் பண்ணி அருளவும் வேணும் – கண்டால் பிறக்கும் ஸூ கத்தையும் பண்ணித் தந்து அருள வேணும் அரியது செய்தால் எளியது செய்ய ஒண்ணாதோ
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று–-60- – நாலாயி:2241/3–ஜகத் காரணாமாய் இருப்பது என்னும் இடத்தை அறிந்தவர்கள் கிடீர் –எல்லார்க்கும் சத்தை அவன் என்று அறிந்த வைஷ்ணவர்கள்-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது-முறை தப்பாமல் நின்று ஜகத் ரஷணம் பண்ணுகிறார் ஆகிறார்-ஸ்வ தந்த்ரன் என்னா ஜகத்து கை விட்டுப் போம் –எளியன் என்னப் பிழைத்துப் போம் –அருமை சொல்லுகிறவர்கள் ஜகத்தை வெளிப்படுத்துகிறார் –அஜ்ஞானத்தாலே முன்பு கை விட்டாப் போலே இப்போது ஜ்ஞானத்தாலே கைவிடப் பார்க்கிறார் –
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்-62- – நாலாயி:2243/1-இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் –அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை-அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது
என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்-இத்தால் சொல்லிற்று ஆய்த்து –நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன் –
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த-72- – நாலாயி:2253/1-காலம் அறிந்து –ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – 76-நாலாயி:2257/3–ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன்-உபாய வஸ்து ஏது என்ன –
காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே -இப்படி உபாச்யனுமாய் –
இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை-கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில் இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை -87-– நாலாயி:2268/1-இன்றாக அறிகிறேனோ –இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் –பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை -88– நாலாயி:2269/1-ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –இப்போது அறிந்தேன் –
நூல் கடலான் நுண் அறிவினான்–மூன்றாம் திருவந்தாதி 11- – நாலாயி:2292/4-கூரிய அறிவாலே அறியப் படுமவனாய் உள்ளான் –ஸ்வ யத்னத்தாலே அறிவார்க்கு துர்ஜ்ஞேயன்
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – -மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -12-நாலாயி:2293/1-வ்யதிரிக்த விஷயங்களில் மனஸ் ஸூ போகாதபடி-அறிவாகிற தாளைக் கொத்துத் திண்ணிதான ஸ்ரவண ஜ்ஞானத்தை மூட்டி –
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய -56-– நாலாயி:2337/2–இறையினுடைய திரு நிறமானது வெளுத்து இருக்கும் சிவந்து இருக்கும் கருத்து இருக்கும்
பச்சென்று இருக்கும் என்று கொண்டு ஆராயும் இடத்தில் நம்மால் ஏக தேசமும் அறியப் போகாது –எண்ணாதே பக்தியால் பேசிக் கொண்டு நிற்கில் நிற்கும் இத்தனை –ஸ்ரீ யபதியினுடைய சம்ருத்தியைச் சிலராலே பேசப்போமோ- அவனும் அவளுமாய் நிற்கிற இடத்திலே சொல்லலாமோ-அவன் கொண்ட வடிவு ஒன்றுக்கும் இத்தனை – அவன் கல்யாண குணங்களைப் பேச முடியுமோ என்றபடி –
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் -59-– நாலாயி:2340/1-வாழும் பிரகாரம் அறிந்து கொண்டேன் –சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத்து இது வென்று
வ்யுத்பத்தி பண்ணினேன் –புத்தி நாசாத் ப்ரணச்யதி -கீதை -2-62/63-என்னும் படியே –
சப்தாதி விஷயங்களை விநாச்யத்துக்கு உபாயம் அறிந்த இத்தனை இறே முன்பு
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் மொழி -6-9-9-என்னும் படியே – பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
யதி ஜீவிது மிச்சசி -சுந்தர -21-20- மை போல் நெடு வரை வாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப – விநாசத்தை பண்ணினாலும் விட ஒண்ணாது –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை —-நான்முகன் திருவந்தாதி –1- நாலாயி:2382/3-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –ஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு – -நான்முகன் திருவந்தாதி -3— நாலாயி:2384/2-ப்ரஹ்மாதிகளுக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு பண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-சம்சாரிகளுக்கு ஸூலபனாய் லோயிலிலே கண் வளர்ந்து அருளின படியையும்-ஜகத்தை பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் கொண்டு வட தளத்திலே கண் வளர்ந்து அருளின படியையும்-அறிய வல்லார் -இல்லை –சம்சாரத்திலே திருவவதாரம் பண்ணிக் கோயில்களிலே யுகந்தருளி இருப்பதும் செய்து ஏகார்ணவத்தில் கண் வளர்ந்து அருளின பரம காரணனை நான் அறிந்த படி –ஞாலத்தொரு பொருளை -என்றது கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே-அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை
————–
தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-–:2386/4-தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத் மகமான ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே-இத்தை புத்தி பண்ணு
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி-13- – நாலாயி:2394/1-மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு மோஷத்தைத் தருவிக்கும் மெய்யான உபாயமும் வேதை க சமதி கம்யனுமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்- பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம்–50- – நாலாயி:2431/2–எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும் கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும் அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும் காரணம் அறிந்தேன் –திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை –70– நாலாயி:2451/3-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம் கொண்ட பூமியை இடந்து எடுக்கைக்காக நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன் இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த –73- நாலாயி:2454/1–சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை–77 – நாலாயி:2458/1-என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் -89-– நாலாயி:2470/1—பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன் பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –-அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் –
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் –
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை –
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் – நாலாயி:2477–ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்-என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்-இப்போது அறிந்தேன்-சர்வ காரணமும் நீயே-பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய் சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நான் அழகிதாக அறிந்தேன் –
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-7- – நாலாயி:2484/4-குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன் சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – 8-நாலாயி:2485/2,3-தன் உடைமைக்கு தான் செய்யும் அளவன்றிக்கே பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே -10– நாலாயி:2487/4-இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்-அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ – நாவலோ நாவல் -என்றால் போலே –என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில் உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த-15- நாலாயி:2492/2-தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும் அயலார் என்கிறாள் — பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் -அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது-அறியிலும் அறியக் கூடாது என்று இருக்கிறாள்-
இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே , அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை கண்டு அறிவது எவ் ஊரில் என்னா – இன்னார் என்று அறியேன் என்பாரை போலே
கிட்டின போது சம்சயமாய் , உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி–
பாஷிக தோஷம் பரிகரிக்க வேணும் இறே-
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே -34– நாலாயி:2511/4-க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை- அப்ரயோகம் – பலம் அவன் தன்னாலே இருந்த படி-
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை-41– – நாலாயி:2518/1–சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை இது என்று சொல்வான் என் எனில்
சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே —ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று –பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப் படுத்தும் ஜாதி-இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி வாடை என்று இந்த வியக்தி -இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம் —
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண -49-– நாலாயி:2526/2-இவ்விருளை தப்பி ஒதுங்க ஒரு நிழல் இல்லாதபடி பிரளயம் வந்தால் போல் –கண்ட இடம் எங்கும் தானே போந்தது – இவ்விருள் போலே இருப்பது ஒன்றும் நாம் இதுக்கு முன்பு கண்டு அறியோம் –
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் –56- நாலாயி:2533/3–தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது – இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே சம்ஸ்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக (மறைத்து )சொல்லுகிறாள் –அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை –74- நாலாயி:2551/2-பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக – நாம் வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – 83-நாலாயி:2560/4-இத் தையலுக்கு உய்யலாவது –இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ –
இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே – முடியிலாகாதே -இவளுக்கு பிழைக்கல் ஆவது -அறிகிறிலேன்-
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து -1- நாலாயி:2578/11–அறிவே வடிவாக உடைத்தாய் இருந்துள்ள நித்திரையில் பொருந்தி – அல்லாதார்க்கு முதல் தன்னிலே ஓன்று தோன்றாதே நெஞ்சு இருண்டு இருக்கும்- சஷுராதி கரணங்களாலே பதார்த்த தர்சனம் பண்ணிப் போது போக்குவார்கள்-அக்கண் தன்னையும் செம்பளித்தால் உள்ளொடு புறமோடு வாசியற இருண்டு இருக்கும் இவன் தான் திருக்கண் செம்பளித்தால் பிரகாசம் உள்ளே இறைத்து இருக்கும் அத்தனை –ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுதல் – த்யேய வஸ்து தனக்கு புறம்பு இல்லாமையால் ஸ்வ அனுசந்தானம் பண்ணுதல் – திருவானந்தாழ்வான் மேல் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –
கடவுள் நிற்ப புடை பல தான் அறி-தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6–-பிராமண ப்ரஸித்தமாய் இருப்பது ஓன்று அன்றே -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மிக்கு இருக்கிற தான் அறியும் தெய்வத்தை யாயிற்றுப் பற்றுகிறது-அவை தனக்கு என்ன ஒரு உத்கர்ஷம் இல்லாமையால் -மொட்டைத் தலையனை-பனி இரும் குழலன் -(குளிர்ந்தும் பரந்தும் இருக்கிற மயிரை யுடையவன் )-என்று கவி பாடுவாரைப் போலே ஆஸ்ரயிக்கிற இவனுக்கே பரமாயிற்று
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் -3-பெரிய திருவந்தாதி- நாலாயி:2587/2–புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்-த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்-என்னால் பரிக்ரஹவும் போகாது த்யஜிக்கவும் போகாது
முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – 6-நாலாயி:2590/2,3-அறியாதவர்களான எங்களை -அஞ்ஞான் அசக்தன் -நெறி காட்டினால் உபயோகிக்க ஞானாதிகர் இல்லையே-அதனால் நிர்ஹேதுக கிருபை ஒன்றே வேணும்
சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-நிறத்தால் கரியனாய் யுள்ளவனை-ஆழ வநுபவிக்க அறியாராய்(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் ) ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்–நீ யார் போய்த் பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே-ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து-அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார் உனக்கு அண்ணியளோ பூதனை அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் – ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து) உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – -16-நாலாயி:2600/4–நீ இப்படி எளியையாய்-அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்
தொல் உருவை யார் அறிவார் சொல்லு -18- நாலாயி:2602/4–இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் ) காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே பழையதான உன்னுடைய வடிவை -ஸ்வரூபத்தை-வேறு சிலர் அறியப் போமோ-நீயே சொல்லு-பரிபவம் பண்ணின போதோடு பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ – நீயே சொல்லு
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே -19- நாலாயி:2603/1-பகவத் விஷயம் நன்று என்றும் விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும் விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு (விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம் -எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் – 20-நாலாயி:2604/1-நாம் அறியாதே காணப் புகுதல்-அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால் அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ
அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27–இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ-திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ-செறி கழல் -என்கையாலே-திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்-நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே திரு முடியிலே முத்து உண்டாகையாலும்-அடியிலே படியை அளந்தன முத்துக்களோ முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ-உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் சாத்தின முத்தாதல்
அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் -31– நாலாயி:2615/1-புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய் ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்
யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ -33– நாலாயி:2617/1-ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே அவனை அறிந்ததாய் விடும் –இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும் ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால் இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே -37-நாலாயி:2621/1-வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றேயுக்தமான அறிவுடையாராகை கிடையாது-ஆமாறு -ஆறு -வழி-நாம் நல்ல அறிவுடையோம்-(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )
அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்-வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை-நெஞ்சே-அறி கண்டாய்-சொன்னேன் உனக்கு அத்தை-1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்-2-போக்யனுமாய்-3-வகுத்தவனுமானவனை-அறி என்று சொன்னேன்-இது சிலருக்குச் சொல்லுமது அன்று-இத்தைப் புத்தி பண்ணு
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு –75- நாலாயி:2659/3,4–உபய விபூதியை யுடைய நீயோ
விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்–சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு
ஐம்புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை -நாலாயி:2672/19-–கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது- ஸர்வ பல பிரதத்வம்—முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை– – நாலாயி:2672/21–தேவர்களாலும் அறிய முடியாத பெருமை-தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும் ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் – அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது -அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்- அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது ––நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –நாலாயி:2672/28-புருஷகாரம்– –தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் – எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33-அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/45-நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்-உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து – நாலாயி:2678/5–பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவாரும் சொல்லும் வார்த்தைகளை கொள்ளேன் –கேட்கைக்கு பரிகரம் இல்லாமையாலே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3-தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்–இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன் இந்த்ரன் படி கேட்கிறாய் வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இறே
அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும் மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் -கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகேனோ – நாலாயி:2684–இவள் நோய் படும் காட்டில் உங்களையும் மறக்க வேணுமோ
உங்கள் வயிற்றில் பிறந்தாரை அவர தேவதைகளால் நோவப் பார்க்க ஒண்ணுமோ-நாய் தீண்டிற்று இல்லை –ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள் -உமக்கு அறியக் கூறுகேனோ – இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும் நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று – நாலாயி:2685/10-இவனுக்கு வேறு ஒரு நினைவு இல்லை -உறக்கமோ -என்று தோன்றக் கிடந்தபடி –அறிவுற்று –சில அசித் பதார்த்தங்களுக்கு அறிவு குடி புகுந்தால் போலே இருக்க உறங்கி உணர்ந்தானாக இருந்தபடி –அவள் போனவாறே உறங்கி உணர்வார் உணருமா போலே உணர்ந்த படி –
நடுவே வந்து அவள் புகுந்தாலே யாகிலும் உறங்கினவன் உணர்ந்தான் -என்று அவளுக்கு தோற்ற கிடந்தான் என்றபடி – அறிவு குடி புகுந்து மூரி நிமிர்வது கொட்டாவி கொள்வதாய் யுணர்ந்த படி –
தண் வாடை சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2–நஞ்சூட்டின ஆயுதம் போலே குளிர்த்தியை யுடைத்தான வாடை–சோரவும் பண்ணா நின்றது
மறுக்கவும் பண்ணா நின்றது-திரள சோரப் பண்ணா நின்றது என்று சொல்லும் இத்தனை ஒழிய செய்கிற வகைகள் பேச்சுக்கு நிலம் அல்ல –
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க – நாலாயி:2704/2–இங்கன் சொல்லலாமோ – பத்து மாசம் ஆறி இருந்திலளோ ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் அப்படி இரா விடில் போல்லாதாகாதோ -என்னில் பேர் ஆழமான கடல் போலே ஆசை கரை புரண்டு போரா நிற்க – பொல்லாங்கு சொல்லுவார்கள் -என்று ஆறி இருக்கப் போமோ – ஆறி இருந்தவர்களுக்கு ஆசை அளவு பட்டதாம் இத்தனை இறே –
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே ஆற்றலாமோ அவ்வடிவைக் காண வேணும் என்னும் ஆசை கரை புரண்டு இருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞானத்தால் ஆற்றினார் உண்டாகில் அவர் ஆசை மட்டமாம் இத்தனை இ றே –
இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5–இன்னதோர் காலத்திலே ஏவம் வித ஸ்வ பாவராய் இருப்பார் இப்பேறு பெற்றார்கள் என்று சொல்லக் கேட்டு அறிவது இல்லை – மோஷத்து ஏறப் போனார்கள் என்று சாஸ்த்ரங்களிலே ஸூகோ முக்தோ வாம தேவோ முக்த -என்று சொல்லக் கேட்டு இருக்கும் இத்தனை – நான் கண்டேன் நான் போனேன் என்பார் இல்லை
ஆஸ்திக்யத்தாலே சில சொல்லும் இத்தனை –உண்டு என்று சொல்லில் அதுக்குப் போம் வழியின் அருமையைக் கேட்கலாகாதோ-
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2-மோஷம் என்று சொல்லப் படும் பழையதான ப்ராப்யத்தை லபித்தவர்களை இன்னார் என்று சொல்லுங்கோள்-என்று கேட்டால் சொல்லாதே இதுக்கு உத்தரமாக முன்பு சொன்னதையே சொல்லா நிற்பார்கள் அதுக்கு அடி அறிவு கேடராகை –மேல் அறிவு உண்டாக்கிக் கொள்ளவும் ஒண்ணாதபடி அல்ப மனாக்கள்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4–அபிமதம் எல்லாம் பெற்று அல்லது மீளாத படியான மடலூரக் கடவர் அல்லர் என்று கொண்டு இங்கனே சொல்லிக் கொண்டு போருவதொரு நிரர்த்தக சப்தம் உண்டு –
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3-சொல்ல வாய் வேம் தன்மை அறியாதார் – தலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும் என்று அறியாதார் –குழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –ப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –அந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3-ந காம தந்த்ரே தவ புத்தி ரஸ்தி -என்று காமதந்த்ரம், அறிந்திலிகோள் ஆகில் தவிருகிறிகோள் – பாபம் போகைக்கு பாவனம் என்றாகிலும் மஹா பாரதம் கேட்டு அறியீர்களோ –
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/4,5-அப்படிப் பட்டது என்னுமத்தை யன்றி இவ் வழகுக்கு தக்க வாசகம் இல்லை –அறிவு கெட்டு-
அறியாமையனபடி எங்கனே என்னில் பருப்பருத்தன சில பேசி முடியப் பேச மாட்டாமையாலே பிரித்துப் பேசும் போது பேசலாம் இருவரும் கூடி நின்றால் பேச முடியாது
கண்ணுக்கும் மனசுக்கும் அளக்க ஒண்ணாத விஷயம் ஆகையாலும் கண்டாரைக் குமிழ் நீரூட்டும் விஷயம் ஆகையாலும் அறியாதே -என்றுமாம் –நெஞ்சாவது அறிவு இட்டு வைக்கும் கலம்-வெறும் தரையாகப் போந்தேன் வாழச் சென்று உள்ளது எல்லாம் கொடுப்பாரைப் போலே சர்வத்தையும் இழந்து கடலிலே துரும்பு போலே சௌந்த்ர்ங்கள் வீச
மடலோ -என்று புறப்பட்ட படி-
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4-சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி -யுத்தம் -19-31-என்று கடலைச் சரணம் புக என்றால் போலே –
மடலைச் சரணம் புகு -என்பாரில்லையே இங்கு ஓர் அந்தராளிகர்-கடகர் – இல்லையோ -என்று கேட்கிறாள் -என்று பட்டர் –
தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1-சில சொன்னோமாம் இத்தனை யல்லது என்னால் முடியப் பேசித் தலைக் கட்டப் போகாதே – அப்படிப் பட்ட திருவுருவை –அன்ன திருவுருவம் -என்னலாம் இத்தனை இ றே சொல்லலாவது-மருங்கே நின்றது அறியாதே அறிந்தேன் ஆகில் கால் வாங்கிப் பிழைக்கலாம் கிடீர்-அறியாமையாலே இழிந்து கிடீர் நான் இப்படி பட்டது-என்னுடைய நெஞ்சும் அறிவும் –ஒன்றுக்கும் அழியாதே இருக்கக் கடவ என்னுடைய நெஞ்சு கிடீர் அறிவை இட்டு வைக்கைக்கு கலமான என் நெஞ்சும் –
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2-சௌலப்யத்தாலே தாழ நிற்க -சிசூபாலாதிகள் அறியாதே வையும்படியாய் இருக்காய்- பரம் பாவ மஜா நந்த அவஜா நந்தி மாம் மூடா -ஸ்ரீ கீதை -9-11-தானான தன்மையைத் தானே காட்டில் அறியலாய்
அல்லாதார்க்கு அறிய ஒண்ணாத அர்த்த தத்தவத்தை – நின்னை யாவர் காண வல்லர்–திருச் சந்த விருத்தம் -8-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4-மடலிலே துணிந்த படி –என்னிலைமை எல்லாம் அறிவித்தால் –என்னுடைய ஸ்த்ரீத்வத்தையும் குலைத்து மடலூருகை தவிரேன் என்கிற என்னுடைய துணிவை அறிவித்தால் –
உன்னைக் காண்பதோர் ஆசையினால் -1-9-1–என்று தாயே தந்தையே யில் ஆசைப் பட்ட படியும்-ஆகிலும் ஆசை விடாளால் -2-7-1–என்று பிறர் -தாயார் -சொல்லும்படி அவ்வாசை முடிய நடந்த படியும்-என் சிந்தனைக்கு இனியாய் -3-5-1- என்றும்
இனியையாம் படி புகுந்த உன்னைப் போகல ஒட்டேன் –3-5-6-என்றும்
கால் கட்டத் தாம் போய்த் திரு வாலியிலே தூது விட இருந்தபடியும் -3-6–ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன்-4-8-3-என்று தம்முடைய பிரணயித்வத்தை அனுசந்தித்து சொல்ல வென்று-ஒருப்பட்டு மோகன்கதையாய்-கொல்லையானால் பரிசளிந்தாள்-4-8-4-என்று பார்த்தன் பள்ளியிலே பரிசளிந்த படியும்
திரு இந்தளூரிலே அயலாரும் எச உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -4-9-3-
அறிவித்த படியும்
வெருவாதாளிலே-5-5–
வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்றும்
அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ -என்றும்
தாதாடு வனமாலை தாரானோ -என்றும் வாய் வெருவிக்
கோயில் திரு வாசலலிலே முறை இட்ட படியும்
சினவில் செங்கணிலே-7-3-திரு நறையூரிலே கனாக் கண்ட படியும் –
தந்தை காலில் பெரு விலங்கிலே -7-5-திரு அழுந்தூரிலே
என் ஐம் புலனும் எழிலும் கொண்டு பொன்னம் கலைகள் மெலிவெய்திப் போன படியும்-தெள்ளியீர் தேவரிலே -8-2- கண்ணபுரம் என்று பேசி உருகி வாய் வெருவின படியும்
கரை எடுத்த -8-3- யிலே வளை இழந்த படியும்
தந்தை காலிலே -8-5- நெஞ்சு தாரின் ஆசையில் போகத் துணை யற்று
நாழிகை ஊழியில் பெரிதான படியும்
காவார் மடலிலே -9-4- திருப் புல்லாணியிலே பொய் சொல்லிப் போன படியும்
தவள இளம் பிறையிலே -9-5-தரை கிடந்த படியும்
மூவரில் முன் முதல்வனில் -9-9- திருமலையிலே கூட ஆசைப் பட்டுக் கிடையாமே
திருத் தாய் செம்போத்திலே -10-10-நிமித்தம் பார்த்து இருந்த படியும் -இப்போது மடல் எடுக்கைருக்கிற நிலையையும்-ஆக இந்த நிலைகள் எல்லா வற்றையும் சொல்லுகிறது -எம்பெருமான் —-
தன்னை அழிய மாறியும் பெற வேண்டும்படி யன்றோ அத்தலையில் வைலஷண்யம்
அவன் வரும் தனையும் பார்த்து இருக்கலாம் படியோ என் தசை -என்கிறாள் –
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4-இவ்வடிவைக் காட்டி ஆற்றாமையை விளைத்து-மடல் எடுக்கும் படி பண்ணி என்னுடைய உடம்பு கொடுப்பதில்லை -என்று இருக்கிற தன் துணிவை எல்லாம் அறிவிப்பேன்-நான் ஆகாது என்று இருந்தான் அத்தனை -என்கிறாள்-இனி அதுக்கு உனக்கு என் -என்ன-லோகம் அடையக் கை விடும்படியாகப் பண்ணக் கடவேன்-பொரி புறம் தடவி தன்னை ஈஸ்வரன் என்று இருப்பார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை நாட்டிலே வெளியிடக் கடவேன் –
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1–நினைத்து முடிய மாட்டா (வாசாம கோசரம்)-அப்படிப்பட்ட சேஷ்டிதங்களை யெல்லாம் உலகத்தாரறியும்படி பிரகரப்படுத்திக் கொண்டு-பரகால நாயகியாகிய நான்-முன்னே முளைத்து எழுந்து வளர்ந்து விளங்குகின்ற சிறந்த அழகிய பனைமடலைக்கொண்டு மடலூரக்கடவேன்.
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே-2- – நாலாயி:2792/4-விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடைய-திருவடிகளிலே –இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு- திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது- இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே -19- நாலாயி:2809/4-இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –அன்றிக்கே –இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –ஸ்ரீ எம்பெருமானார் –அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும் செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து – கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு -25- நாலாயி:2815/2-தெளிந்தவர் தான் யார் –நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும் பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே -57- நாலாயி:2847/4-எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும்-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –பிரத்யஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி –த்யஜபட தூரதரென தான பாபான் –என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது .-இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே
ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து – தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின் இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்– தெரிந்து விட வில்லை வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே -59– நாலாயி:2849/4-தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன் இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று –அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு –அறியத் தக்கார் இல்லை –பிபேத் அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே- அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –இங்கனம் உயிர்களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-
யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும் உபயோகப் படுத்திக் கொள்வதனால்-
உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே-79- – நாலாயி:2869/4-பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே –அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே தலைக் கட்டிற்று –சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத ஸூஹ்ருதர்-ஆகையாலே அவர்களுக்காக ஸ்ரீ அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –ஸ்ரீ இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை தேடுவது – அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க-தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின் கிடைக்கப் பெறாமையின் – மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை-நல் அறிவைத் தரும் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே என்று இரங்குகிறார்-அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -ஸ்ரீ எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது சொன்னாலும் புரியாது . இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார்
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் –85- நாலாயி:2875/2–வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய –என்றும் – வேத வேத்யே பரே பும்சி -என்றும் – வேதே ராமாயனே புண்யே -என்றும் ஆதவ் மத்யே ததான் தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்றும் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் -ஸ்ருதி ஸ்ரசி விதீப்தே–என்றும் சொல்லுகிறபடியே-வேத சிரச்சுகளால் கட்டடங்க பிரதி பாத்யனாய் – ஜ்யோதிஷாம் ஜ்யோதி -தேஜசாம் ராசிமூர்ஜிதம் – என்கிறபடியே நிரவதிகமாக பிரகாசிக்கிற சர்வேஸ்வரனை –
பதிம் விச்வச்ய -என்கிறபடியே -நமக்கு பிராப்த சேஷி என்று அறிய மாட்டாதே –வேதத்தின் உட் பொருளும் -அதன் உச்சியில் மிகவும் பிரகாசிக்கும் ஸ்வயம் பிரகாசமான வஸ்த்வுமான ஸ்ரீ இறைவனை வேதியர்கள் ஓதி இருந்தும் -அவர்களால் ஓதப்படுவது ஸ்ரீ இறைவனைத் தெரிவிக்கும் நூலாய் இருந்தும் – நமக்கு -ஸ்ரீ நாதன் -என்று அவ் இறைவனை அறியாது புறம்பே தொண்டு பட்டு உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .-பிரதானம் ஆகிய அசித்துக்கும் -ஷேத்ரஞ்ராகிய சித்திற்கும் -அவனே பதி என்று அறியாமையாலே
புறம்பான உலகியல் இன்பங்களிலே உள்ளம் ஈடுபட்டு -அதற்காக கண்ட கண்ட வர்களுக்கு தொண்டு பட்டு உள்ள வேண்டியதாயிற்று -வேதம் கற்றது பயன் அற்றதாய் ஆயிற்று –-ஸ்ரீ இறைவன் நாதன் -நாம் சேஷப்பட்டவர் -என்று அறிந்து -அவன் நல் தாள் தொழ வில்லையானால் –கற்றதனாலாய பயன் என் கொல் –சதுர்வேத தரோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி வேதபார பராக்ராந்த சவை ப்ராஹ்மண கரதப -என்று எந்த பிராமணன் நால் வேதங்களையும் நெஞ்சில் தாங்கி கொண்டு இருப்பினும் ஸ்ரீ வாசுதேவனை அறிய வில்லையோ –அவன் வேதச் சுமையின் பழுவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிராமணக் கழுதை யாவான் -என்றபடி குங்குமம் சுமந்த கழுதை போல் ஆயினரே –இது என்ன பேதமையோ-என்கிறார் .
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – 97-நாலாயி:2887/3,4–தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –
விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே –பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து – இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தெளிந்து இருக்குமவர் இவர் ஒருவரே என்று இருக்கிறார் காணும் ஸ்ரீ அமுதனார் –
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –2903-1-1-5–அவரவர்-சத்வாதி குண பேதத்தால் வந்த பிரகிருதி பேதத்தைச் சொல்லுகிறது–தமதமது குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது-அறிவறி-அதுக்கு அடியான ஜ்ஞான பதத்தைச் சொல்லுகிறது-வகைவகை-மார்க்க பேதங்களாலே-அவரவர்-அவ்வோ பல பிரதானத்துக்கு சக்தராக ஸ்வீகரித்த தேவதைகளை இறையவர் என-அவர் அவர்களே தம்தாமுக்கு ஸ்வாமிகள் என்று-வடி யடைவார்கள் ஆஸ்ரயிப்பவர்கள்-அடி அடைவார்கள் -என்று ஸ்வ கோஷ்டி பிரசத்தியாலே அருளிச் செய்கிறார்
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – —புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே-1-1-8- – நாலாயி:2906/3,4–தேவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய ஒண்ணாத நிலையை யுடைத்தான-ஆகாசம் முதலாய் யுள்ள சமஷ்டி ரூப ஸமஸ்த வஸ்துக்களும்-வரிஷ்டமான காரணமாய் அவற்றை நிஸ் சேஷமாக உப சம்ஹரிப்பதும் செய்கையாலே வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி சம்ஹார கர்த்தாக்களாய்க் கொண்டு பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் பரனானவன்-ருத்ரனும் -ப்ரஹ்மாவும் என்று பிரசித்தராம்படி-அத்விதீயமான புர த்ரயத்தை தஹித்தும் தேவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தும்-அண்டாந்தர வர்த்தி லோகங்களை சம்ஹரித்து அவற்றை ஸ்ருஷ்ட்டித்தும் அவர்களுக்கு உள்ளே ஆத்மாவாய் நிற்குமவன் –
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே-1-3-3- – நாலாயி:2923/4–தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கையாலே நாரணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன்-சகல சேதன அசேதனங்களையும் தனக்கு பிரகாரமாக யுடைய தான் தன்னுடைய விபூதியிலே ஒரு பிரகாரத்துக்கு தான் பிரகாரமாய் -அவர்களுக்கு நியாம்யனாய் இருக்க ஆச்சர்யம் ஒருவர்க்கும் நிலமோ-பிதா புத்ரேண பித்ருமான் யோநியோ நௌ நாவேத வின்மநுதே தம் ப்ருஹந்தம் -இத்யாதி-நித்ய ஸூரிகள் அனுபவத்திலே அந்ய பரர் ஆகையாலே அறிய மாட்டார்கள்-ப்ரஹ்மாதிகள் துர்மாநத்தாலே அறிய மாட்டார்கள் சம்சாரிகள் விஷய பிரவணராய் அறியார்கள்-இவர் போல்வார் -எத்திறம் -என்று மோஹித்து கிடப்பார்கள்-
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான்-1-3-4- – நாலாயி:2924/2–அநாஸ்ரிதர் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் ஒரு ஸ்தூல ஆகாரமும் அறிய அரியனாய் இருக்கும் –தன்னை உட்புக்கு அறிய மாற்றிற்று இலர்களே யாகிலும் ஆபாதப்ரதீதி யாகவும் அறியப் போகாத படியாய் இருக்கும் –நேரே கடிக்கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை யான் -என்னக் கடவது இறே-எம்பெருமான் உகவாதார் கண் படாதபடி இருக்கிற இடம் தன் பேறாக உகக்கிறார்-அறிவில் குறைந்த இடைச்சிகள் -குரங்குகள் -ஆகிலும் ஆஸ்ரிதர்க்கு இப்படிப் பட்டான் என்று பரிச்சேதிக்கலாம் படி இருக்கும்
எம்பெருமான் ஆஸ்ரிதர்க்கு கை புகுந்து இருக்கிற இடமும் தம் பேறாக உகக்கிறார்
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற -1-3-7-– நாலாயி:2927/1-மூர்த்தி த்ரயமும் ஏகாத்ம அதிஷ்டதமோ–அநேக ஆத்ம அதிஷ்டிதாமோ-அநேக ஆத்ம அதிஷ்டிதமானால் அவர்களில் பிரதானன் எவன் என்று அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை யுடையராய் நின்ற
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்-1-5-3– – நாலாயி:2945/3-ஜ்ஞாநாதிகரரான ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் கோசரம் அல்லாதான்
யன்நாயம் பகவான் ப்ரஹ்ம ஜ்ஞாநாதி புருஷோத்தமம்
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை -1-5-7– நாலாயி:2949/1-இப்போது அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று-ஜ்ஞானா நந்தகளோபாதி நிரூபகமாக சேஷத்வத்தை பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே-அஹம் என்கிறவோ பாதி -அடியேன் -என்கிறார்-அல்ப ஜ்ஞானத்தை யுடையவன்-ஜ்ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அறிய அரியவனை ஷூத்ர விஷயங்களையும் பரிச்சேதிக்க மாட்டாதவன் நான் –அவன் அதிகராலும் அபரிச்சேத்யன்-ஸ்வ தஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது -தனக்கும் தன் தன்மை அரியான் இறே-பர்வத பரமாணுக்களுக்கு உண்டான சேர்த்தி போலே இறே
மிகும் சோதி மேல் அறிவார் எவரே –2-2-5- நாலாயி:3024/4–இவனை ஒழிய வேறே சிலர் உண்டு என்று சொன்னால் வைதிகராய் இருப்பாரில் இசைவார் உண்டோ -என்கை
இவ் உபநிஷத் பிரசித்தி வேறு ஒருவர்க்கு உண்டோ என்கை-வைதிக –க — தஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்-
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7-– நாலாயி:3026/3-அத்யகாதமாய் ஒருவருக்கும் தெரியாதே
அறிந்த தோற்றம் -ஆச்சர்யமான மானஸ வ்யாபாரமானது ஒருவருக்கும் அறிய ஒண்ணாது
அவனுடைய பாஹ்யமான வியாபாரமும் நிலம் அன்று மானஸ வியாபாரமும் ஒருவருக்கும் அறிய நிலம் அன்று என்கிறது –
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2-நாலாயி:3032/3,4–வளர்த்த தாயை வ்யாவர்த்திக்கிறது –எனக்கு பிரியமே செய்யக் கடவ தாயாய்–நேரே உத்பாதகனாய் கொண்டு ஹிதைஷையாய்-சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்
ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னுமவன் இறே–ஸ்வாமி-இவ் உபகாரங்களை -உடையவன் ஆகையால் செய்தாய் என்கிறார்-மாதா பிதா பிராதா -இத்யாதி
நாராயண -என்கிறார்-நீ செய்தன -பேசவும் போகாது -நினைக்கவும் போகாது -நீ செய்யும் என்னும் அத்தனை-உபகரித்த நீயே அறியும் அத்தனை –நான் அதுக்கு இலக்காய் குமிழ் நீர் உண்ணும் அத்தனை -என்கிறார் –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2-3-3– – நாலாயி:3033/3–கண் அன்பு செய்வித்து-வைத்தாயால்-அறிவு கேட்டைப் பண்ண வற்றாய்-துஸ்தரமான சம்சாரத்திலே இருக்கிற என்னை –அடியேன் -என்கிறது -அஹம் சப்த பர்யாயம் –அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே -பிராப்தி பலமான அடிமையிலே ஸ்நேஹத்தை பிறப்பித்து வைத்தாய்-அடியேன் என்கிறது -நமக்கு அர்ஹமான வஸ்து இப்படி எளிவரவு படுவதே –என்று செய்து அருளின அத்தனை இறே என்றுமாம் –இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவஹாகிப்பித்தது-அத்தாலே ஒரு தேச விசேஷத்திலே பெறும் பேறு சாத்மிக்கைக்காகவும்-
ப்ராப்யத்தில் த்வரை விஞ்சுக்கைக்காகவும் இறே-போக்யதை மிக்கு இருக்கிறபடி –
மேல் தம்மை வசீகரித்த படிக்கு நிதர்சனம்–தன் நெஞ்சை ஒளிப்பாரைப் போலே பிராட்டியும் அறியாத படி –சேர்ப்பால் போலே போக்யதை மிக்கு இருக்கிறபடி –தன்னைத் தாழ விட்டு அர்த்தியான படி – நிலம் என்றால் -அவன் முகம் பாராமையாலே மா வலி என்றான் -முதல் பேர் சொல்லுவார் இல்லாமையால் அவன் பார்த்து உனக்கு வேண்டுவது என் என்ன மூவடி என்றான் இப்படி அந்நவிதமான பேச்சாலே வசீகரிக்கை-சுக்கிராதிகள் இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் -என்ற வார்த்தை செவிப் படாத படி தன் பேச்சாலே வஞ்சித்தான் –அந்நிய பரமான என் ஆத்மாவில் புகுந்து -தன் குண சேஷ்டிதாதிகளாலே வசீகரித்து –
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று-அறியாமை வஞ்சித்தால் போலே – எனதாவியுள் கலந்தே-
அறியா மா மாயத்து அடியேனை-அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து- வைத்தாயால்-என்று அந்வயம்
பட்ட போது எழு போது அறியாள் விரை – 2-4-9-நாலாயி:3050/1–உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்
ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே-2-6-2- – நாலாயி:3065/4-பிராட்டி பின்னே வந்து அணைத்தாலும் விலங்கப் பார்க்கிறிலன் – இங்கே ஆளவந்தாருக்கு குருகைக் காவல் அப்பன் அருளிச் செய்த வார்த்தை-ஆடியாடியிலே ஆற்றாமையால் வந்த தாபம் தீர்ந்து திருக் கண்களும் குளிர்ந்த படி –
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-3084-ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –திண்ணம் அறி-இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு-அறிந்து அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12– நாலாயி:3086–ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள்-தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய்-அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –
எம்மானை என்னாழி வண்ணனையே-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்களாய் -தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்- தரமறிய ஆமோ–என்று அந்வயம்-
யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன் – -2-9-9-நாலாயி:3107/1,2-அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்-
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே-3-1-10- – நாலாயி:3130/4-பிறையை ஸீரோ பூஷணமாக உடையவன் ஆகையால் போக பிரதன் ஆகையும்-ஜடாதரன் ஆகையால் அந்த போகம் தபஸாலே சாத்தியம் என்கையும்–சதுர்முகோ ஜாயதே -என்று உன்னாலே ஸ்ருஷ்டனாய் ருத்ரனுக்கும் கூட ஜனகனான ப்ரஹ்மாவும் ஷேத்ரஞ்ஞதயா ஸம்ப்ரதிபன்னனான இந்திரனும்-நீ ஸ்வாமி என்று அறிந்து ஏத்த அத்தாலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இது விஸ்மயமோ உன்னாலே ஸ்ருஜ்யரான ப்ரஹ்மாதிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ண நீ இருக்கும் இருப்பு உனக்கு அவத்யம் அன்றோ –
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ-3-4-2- – நாலாயி:3155/1-பக்தி பாரவசியத்தாலே-பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டேன் என்னுதல் – இயத்தா ராஹித்யத்தாலே சொல்ல மாட்டேன் என்னுதல் அல்லது அர்த்தங்களில் அவிசதமாய் இருப்பது ஓன்று உண்டாய் சொல்லுகிறார் அல்லர்
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே -3-4-9— நாலாயி:3162/4-இவன் படிகளுக்கு என்னால் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது-சேதன அசேதனங்கள் உடையான் என்று பிரயோஜகத்தை சொல்லலாம் அத்தனை -என்கிறார் –
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் -3-10-10-– நாலாயி:3229/2-அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-சத்ருசமாகவும் சம்பந்தியாகவும் உள்ள பதார்த்தங்களை அவனாக அனுசந்திக்க நித்ய ஸூரிகள் வடிவு போலே இவள் வடிவும் அப்ராக்ருதமாய் இருக்கிறபடி-அவர்களைக் காட்டில் இவளுக்கு வாசி –பருவத்தாலே இளையளாய் முக்தையாய் இருக்கும் –-அவர்கள் பிரதம ஜா யே புராணா-என்னும் படி இறே இருப்பது-இவள் தொடங்குகிறது எது-தலைக் காட்டுகிறது எது -என்று ஒன்றும் தெரிகிறது இல்லை –
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – -4-4-3-நாலாயி:3266/1-தாஹகம் என்று அறிந்து போருமத்தை தழுவா நின்றாள்-மந்த்ர யவ்ஷாதிகளாலே பிரதிபந்தக சக்தி தான் உண்டாயத் தழுவுகிறாள் அன்றே-தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம் -என்று ஒளி உடைமையை பார்த்து தழுவா நின்றாள் –பொரு நீர்க் கடல் தீப்பட்டு எங்கும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப -என்னுமா போலே மாணிக்கப் படி சாத்தி வந்து தன்னோடே அணைவதாக நிற்கிறானாக கொண்டு தழுவா நின்றாள் –
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற -4-4-5-– நாலாயி:3268/3-சர்ப்பம் என்று மீள மாட்டு கிறிலள்-இது என்னாய் விழக் கடவது -என்கிறாள் -இவளைக் கிடையாது ஒழிய அவனைக் கிடையாது-அவனைக் கிடையாது ஒழிய உபய விபூதியும் கிடையாது -சர்வ சம்ஹாரமாக புகுகிறதோ என்கிறாள்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே -4-5-4-– நாலாயி:3278/4-ஆவி -நிருபாதிகமான சர்வாத்மா –ஆத்மன ஆகாசஸ் ஸம்பூத–சர்வாத்மா –என் ஆவியை -அத்யந்தம் நிஹீனனான என்னை செய்த ஆற்றையே.-யான் அறியேன்-விபுவான தான் அணு பரிமானனான என்னைத் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையேனாம் படி பண்ணினான்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி – வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் -என்னப் பண்ணினான் – சர்வ சரீரியானவன் ஸ்வ சரீரத்தில் ஒன்றைப் பெறப் பேறாகத் தலையால் சுமப்பதே-யான் அறியேன் -உபகாரத்தில் குமிழ் நீர் உண்ணும் அத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்லப் போமோ உபகார ஸ்ம்ருதியும் அவனது என்னவுமாம் தன்னோடு ஒத்த ஆனந்தத்தை உடையனாம் படி பண்ணி அதுக்கே மேலே என் பக்கல் பண்ணுகிற விசேஷ கடாக்ஷம் என்னால் பாசுரம் இடப போமோ -என்கிறார்
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே-4-7-6- – நாலாயி:3302/4—அடுத்து அடுத்து பார்த்து-சர்வாதிகனாய் துர்லபனான உன்னை காண் கைக்காக-அதிசபலனான நான்-வாயால் சொல்ல மாட்டாதே நெஞ்சினுள்ளே ஆசைப்படா நின்றேன்-இதுக்கு அடி என் அறிவு கேடு இறே-இவ்விஷயத்தில் ஆசையும் அறிவு கேடு ஆகிற படி என் என்னில்-சதா ஸந்நிஹிதனாய் சக்தனாய் இருக்க முகம் காட்டாது ஒழிகிறது -வர நினையாமை என்று இருக்க மாட்டாது ஒழிகிறது அறிவு கேட்டாலோ என்றோ–சர்வ காலமும்-பேற்றுக்கு பிரதி பந்தகமான சரீரத்தின் உள்ளும்-பெறுகைக்கு இருக்கிற ஆத்மாவினுள்ளும்-மற்றும் இந்த்ரியங்களிலும்-பிரியாதே எங்கும் வியாபித்து நின்றாய்-இப்படி ஸந்நிஹிதனாய் வைத்து செய்யாது ஒழி கிறது செய்ய நினையாமை என்று மிகவும் அறிந்து வைத்தே ஆசைப்படுகிறது மதிகேடு இறே
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–,-4-7-7-பரத்வம் என்ன -பஜ நீயத்வம் என்ன -ஸுலப்யம் என்ன -அபராத சஹத்வம் என்ன -இவ்வடைவிலே ஞானம் பிறக்க பிறக்க அந்தக்கரணமும் க்ரமத்தாலே தெளிந்து-ஞானம் பிறந்த நான் –-பரிபூர்ண ஞானத்தையே ஸ்வரூபகமாக உடைய உன்னை விசதமாக அனுபவித்து-பிறப்பதும் இறப்பதுமாய் நின்று நான் தடுமாறித் திரிகிற அறிவு கேடு போகப் பெற்றேன் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை என்று நான் அபேக்ஷித்து பெற்றேன்-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் – நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே-4-8-5- – நாலாயி:3312/4–இந்த ஸம்ஸா: மண்டலத்திலே மிகுந்த அருளையுடையவன்-பரமபதவாஸத்திற்காட்டிலும் இந்நிலவுலகில் வஸிப்பதே எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியம் என்றவாறு.-‘த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க அது உண்டதுருக்காட்டாதே தேஸரந்தரமதனாக புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்” என்கிற ஸ்ரீ வசநபூஷண ஸ்ரீஸூக்தி-இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதற்கு?-ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிறபடியே அவனை நோக்கும் அறிவே அறிவு; என்று ஸித்தாந்தமாயிருப்பதுபோல, அவனால் விரும்பப்படும் அறிவே அறிவு-
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4-8-6- நாலாயி:3313/1,2–பகவத் விஷயத்தில் அறிவு கொண்டு ஒரு கார்யம் இன்றிக்கே இருக்கை –-அன்ன பா நாதிகள்-பெறா விடில் செல்லாதாய் இருக்கும் அறிவு ஒன்றிலுமாயிற்று நிரபேஷராய் இறே இருப்பது
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவுஅணையாய் அம்மானே -4-9-2– நாலாயி:3320/3-சம்பந்தம் ஒத்து இருக்க அவர்களுக்கு அப்படிப்பட்ட வேண்டிற்று சரீர சம்பந்தத்தால் யன்றோ எனக்கும் அது கிடந்த பின்பு நானும் எதுக்கு கூப்பிடப் புகுகிறேன் என்று அறியா நின்றேனோ இவர்கள் உஜ்ஜீவிக்கும் உபாயம் அறிகிறி லேன் -என்றுமாம்
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை-4-9-6- – நாலாயி:3324/2-தர்ம தத்துவத்தை ரக்ஷகமாக அறிந்து அதனுடைய நிரூபணத்தை பண்ணையார்கள்
ஓரார் -பர ஹிம்சையில் நின்றும் நீங்கார்கள்-என்றுமாம்-ஓர்தல் -ஒருவதலாய்–நீங்குதலாய் -அதில் நின்றும் நிவ்ருத்தராகார்-அர்த்த புருஷார்த்தத்திலே மிகவும் பிரவணராய் வேறு ஒன்றை ஆராயார் என்றுமாம் –இது ஒரு லோக யாத்திரையை பண்ணி வைக்கும் படியே
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல –4-9-9- நாலாயி:3327/2,3-நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதி-தேவர்களே யாகிலும் நீ நினையாதாரை உன்னை அனுபவிக்க ஒண்ணாத படி விஷயங்களை காட்டி அலமந்து திரியப் பண்ணுதி-அரவணையாய்!-திருவடிகளிலே கூட்டும் கொள்ளும்படிக்கு உதாஹரணம் – அடியேனும் அஃது அறிவன்; லோக வேதங்களில் பிரசித்தமான உன்னுடைய இந்தப்படியை நானும் அறிவன்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே -4-10-6-– நாலாயி:3335/4-மிகவும் வல்லவன் –அதிசயித சக்திகன் -சேதனர் பண்ணின புண்ய பாபங்கள் கலசாத படி பல அனுபவம் பண்ணுவிக்க வல்லவன் –மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்
மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் -5-3-1-– நாலாயி:3363/3-அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் -5-3-5– நாலாயி:3367/2–வடிவைக் கண்டால் -ஸர்வஸ்வாதானம் பண்ண இருக்கிறானோ –ஸர்வஸ்வாபஹாரம் பண்ண இருக்கிறானோ என்று தெரியாதபடி ஆச்சர்ய ஸ்வ பாவன்–என்னுடைய ஆத்மாத்மீயங்கள் உன்னது என்று சொல்லி வைத்து இத்தலையில் உள்ளவற்றை எல்லாம் –ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினவன் –ஆகிலும்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -5-4-3– நாலாயி:3376/4–அபிமதர் வாரா விட்டால் முடிகை இ றே பிரியம் அதுக்கு விரகு அறிகிறிலன் -காலோ ஹி துரதிக்ரம -என்றாள் இறே பிராட்டி-அவன் வாராமைக்கு அடியான பாபத்தை பண்ணினேன் -முடியவும் அரிதான பாபத்தை பண்ணினேன் -பாபம் மரண ஹேது வன்றிக்கே ஜீவிக்கைக்கு ஹேது வாய் இருக்குமது யாகாதே -ஜீவிக்கை தேட்டமான போது அரிதாம் -முடிகையும் தேட்டமான போது அரிதாம் -அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே-முடிகையும் ஜீவிக்கையும் ஸ்வ அதீனம் இல்லாத ஜன்மத்தே பிறந்தேன் -எல்லா வளவிலும் அவனை நோக்க வேண்டும் ஜென்மம் இறே — முடியும் போது ஆண் பிள்ளையுமாய் ஸ்வ தந்திரனுமான சக்ரவர்த்தி போல்வார் வேணும் ஆகாதே –
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே -5-5-10- – நாலாயி:3394/4-உஜ்ஜவலமாய் தோற்றுகிற அத்விதீயமான விக்ரஹம்-இன்னார் என்று அறியேன் என்கிறபடியே நித்ய அபூர்வமாய் இருக்கும் வடிவு -தேஜஸாம் ராசி மூர்ஜ்ஜிதம்
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே-அத்திரளோடே அவ்வடிவு என் நெஞ்சில் பிரகாசியா நின்றது -அது நாங்கள் காண்கிறிலோமே என்ன -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கும் அறிய ஒண்ணாது -த்வரை இல்லார்க்கு அறிய ஒண்ணாது -எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே பிறர்க்கு நினைக்க ஒண்ணாது –
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – —அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே-5-5-11- – நாலாயி:3395/4–ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களால் அறிய ஒண்ணாது ஒழியப் பெற்றோமே என்கிறார் -இக்குடியில் உள்ளார் ஸ்வ யத்னத்தாலே அறியுமவர்களோ என்னில்-இவளால் மீளலாம் என்று மீட்கப் பார்த்த போதே -தம் தம்மாலே பெறவுமாம் -என்று இருந்தார்களாம் இறே–பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – 5-7-1-நாலாயி:3407/1–அறிவிலேன் என்னாதே -நுண்ணறிவிலேன்-என்றது ஸ்வரூப ஞான பூர்வகமாக பர ஸ்வரூபத்தை சாஷாத்கார பர்யந்தமாக அறியும் அறிவை அறிவை யுடையேன் அல்லேன் -கர்மம் இல்லை என்ற போதே -தத் சாத்தியமான ஞானம் இல்லை என்னும் இடம் அர்த்த ஸித்தமாய் இருக்க ஞானம் இல்லை என்றது என் என்னில்-பூர்வ ஜென்மத்தில் கர்மத்தை அனுஷ்ட்டித்து தத் பலமான ஞானம் இந்த ஜென்மத்தில் நைசர்க்கிகமாக பிறக்கலாம் இ றே -அத்தாலே சொல்லிற்று -அன்றிக்கே-புராணங்களில் தனித் தனியே கர்ம ஞானங்களே சாதனமாக சொல்லுகையாலே சொல்லிற்று ஆகவுமாம்-பக்தி இல்லை என்னாது ஒழிவான் என் என்னில் -பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையாலே ஞானத்தை சொன்ன போதே அத்தையும் சொல்லிற்று ஆயிற்று
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3– நாலாயி:3409/4–சி ரீ வர மங்கல நகரில் உள்ளார் அர்த்திக்க அன்றிக்கே அவர்கள் பக்கல் தண்ணளி யாலே வந்து இருந்தவன் -என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்து இருந்தாய் என்றுமாம் -கைங்கர்யத்து அளவும் வர புகுர நிறுத்தினோம் -அதுக்கு அவிச்சேதம் யுண்டான போது நம் சந்நிதி வேணும் என்று அங்கே இருந்தாய்-அறியேன் ஒரு கைம்மாறே-இவ்வளவு உபகரித்ததுக்கு நான் ஒரு பிரதியுபகாரம் பண்ணினேனாக அறிகிறி லேன்-பிராங்நியாயத்தாலே மேல் உள்ளதும் நீயே செய்யும் அத்தனை என்கை –
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் -5-7-8- நாலாயி:3414/1,2–அத்யாச்சர்யமான செயல்களை யுடைத்தாய் ஒருவரால் தப்ப ஒண்ணாதே இருக்கிற ஐந்து இந்திரியங்களும் -நீ வேண்டாதாரை யகற்ற வைத்தாய் என்னும் இடம் வ்யக்தமாக அறிந்தேன் -மயர்வற மதி நலம் அருள பெற்றவன் ஆகையால் அழகிதாக அறிந்தேன்-
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே -5-8-6– நாலாயி:3423/4–ஞானத்துக்கு பிரயோஜனமான விஷயம் -மனஸூக்கு போக்யமாய் இருக்கிற படி
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் –6-2-1- நாலாயி:3462/3–உன்னுடைய க்ரித்ரிம லீலை என்னுமிடம் நான் அறிவேன்நான் அறிந்த பின்பு அத்தை முன்னிட்டு என் பக்கல் பிரயோஜனம் இல்லை –அபூர்வை கள் பக்கலிலே போ என்ன -கைப் பட்டத்தை செய்யலாவது இல்லை இறே என்று பந்தையும் கழலையும் கொண்டு போகிறோம் என்று போகப் புக்கான்
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய -6-2-3— நாலாயி:3464/1-உன் பொய்யில் பழகின எங்கள் பக்கல் உன் பொய் விலை செல்லாது -இங்கு நின்றும் போய்-உன் பொய் அறியாதவர்கள் கோஷ்ட்டியில் இருந்து சொல்லு –நினைவு ஒன்றும் செலவு ஒன்றுமான உன்னை அறியாதே பிரமிக்கைக்கு பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் உண்டே
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – 6-2-5-நாலாயி:3466/1-உன் கிரித்திரிமம் உபய விபூதியும் நன்கு அறியும் – தானும் அவனுமானால் உபய விபூதியும் தன் பக்ஷத்தில் நிற்கும் என்று இருக்கிறாள் ஆதல் -வாயும் திரை யுகளில் படியே எல்லாரும் தன்னைப் போலே இழவாளர் என்று இருக்கிறாள் ஆதல்-
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – 6-9-7-நாலாயி:3545/4–சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –
அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8- – நாலாயி:3546–அறிவி லேனுக்கு அருளாய் -உன்னைக் கிட்ட முதல் இல்லாத எனக்கு அருளாய் -அறிவு இல்லை யாகில் அருளக் கடவதோ என்ன -சர்வஞ்ஞரான நித்ய ஸூரிகளுக்கு கிருபை பண்ணவோ -தளர்ந்த இடம் அன்றோ கிருபைக்கு விஷயம் -பொய் நின்ற ஞானத்தை உடைய எனக்கு ஞானப் பிரானான நீ கிருபை பண்ணி அருளாய்-அறிவார் உயிரானாய்!-உன்னை உள்ளபடி அறிவார்க்கு தாரகனாகை உனக்கு ஏற்றமோ -பத்தராவி என்கிறபடியே அறிவார்க்கு உயிராம் அவன் என்னுதல் -ஞானீத்வாத் மைவ -என்கிறபடியே அறிவாரை உயிராக யுடையவன் என்னுதல்
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன் அடி-7-1-4- – நாலாயி:3564/1-உறுவது இன்னது என்று நான் அறியாதபடி பிரமிப்பித்து -பகவத் பிரவணமாவது -அதுவே உறுவது -விஷய ப்ராவண்யம் அனர்த்த ஹேது என்று விவேகிக்க ஒண்ணாத படி மனசைக் கலக்கி
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – 7-2-1-நாலாயி:3572/1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – 7-2-10-நாலாயி:3581/1-இவள் தனக்கு ஒரு முடிவு காண்கிறிலேன் என்னா நின்றாள் –
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே -7-5-3– நாலாயி:3607/4-இந்தக் குண ஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ-
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-4- நாலாயி:3608/1–தத்துவ ஸ் திதியை உள்ளபடி அறியுமவர்கள் –தன்மை -உண்மை -காரணந்து த்யேய–ஜன்மாத் யஸ்யத -என்று உபாசன வாக்கியங்களையும் காரண வாக்கியங்களையும் அறியுமவர்கள் -ஜகத் காரணம் இன்னது என்று அறிந்து -அதுவே உபாஸ்யம் -என்று அறியுமவர்கள்
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – 7-5-8-நாலாயி:3612/4-மஹா விஷ்ணும் -என்கிற படியே அவன் உடம்பு குளப்படியாம் படி பெரிய வடிவைக் கொண்டு -மல்லல் -பெருமை –மல்லரி உரு என்று -லஷ்மீ நரஸிம்ஹம் -என்றுமாம் -திருவோடு புணர்ந்த ஸிம்ஹம் என்று ஒரு தமிழன் சொல்லி வைத்தான் –நரம் கலந்த சிங்கமாய் கண்ட திருவன்
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – -7-5-9-நாலாயி:3613–அத்யாச்சர்யமான அவனுடைய ஆஸ்ரித பவ்யதையை அறியுமவர்கள்-மேன்மையை கரை காணிலும் கரை காண ஒண்ணாத பவ்யதையை உடையவர்க்கு-வரபல புஜ பலங்களாலே திண்ணிதான உடம்பை பெரிய சீற்றத்தோடே சென்று அநாயாசேன கிழித்து பொ கட்ட ஆச்சர்யத்தை அனுசந்தித்தும் -செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?-
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – -7-5-10-நாலாயி:3614/1-ப்ரஸ்துதமான மஹா பாரதம் கடலோசை என்னும் படி சாரமான மாமேகம் சரணம் வ்ரஜ என்கிற வார்த்தையை அறியுமவர்கள் –ஆச்சர்யமான ஸுலப்யத்தை யுடையவனுக்கு -திரௌபதியினுடைய குழலை முடிக்கைக்காக ஹ்ருதகதமான அர்த்தத்தை வெளியிட்ட ஆஸ்ரித பவ்யதை யுடையவனுக்கு –அவனுக்கு அல்லது ஆளாவாரோ -சர்வாதிகன் தன்னளவில் வர தாழ்ந்தால்-புறம்பே போகக் கடவதோ -அவன் தன் ஸ்வரூபத்தை அழிய மாறினால் -தன் ஸ்வரூபத்தில் குறைய நிற்கக் கடவதோ –
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப -7-6-6– நாலாயி:3621/1-நீயே வந்து கிட்டுமது ஒழிய நான் சாதன அனுஷ்டானம் பண்ணிக் கிட்டும் விரகு அறிகிறிலேன் -கிட்டுக்கைக்கு இச்சை இறே இத்தலையில் உள்ளது -நீ வந்து கிட்டினால் விலக்காமைக்கு வேண்டுவது உண்டு-பரம ஆப்தனான என்னைப் பெற்றால் -அவனை விட்டு வேறு சிலருக்கு ஆளாவாரோ
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – -7-7-1-நாலாயி:3627/2,3–ஆசைப்பட்ட விஷயம் கிடையாது என்றாலும் மீள மாட்டாத சபலைகள் யுடைய பிராணனை முடிக்கும் -ராம சரம் போலே ஒப்பனை குறி அழியாது இருக்க பிராணனைத் துணிக்கும்-புருஷர்க்கும்-பருவம் நிரம்பி ஹிதம் சொல்லும் ஸ்த்ரீகளும் பாதை இல்லை –ஒரு மிருத்யுவால் முடிக்க ஒண்ணாது என்று இரண்டு மிருத்யு க்ருத சங்கேதிகளாய் வந்தால் போலே யாயிற்று இருக்கிறது-அறியேன்–சபலைகளையே நலிய வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே பும்ஸாம் த்ருஷ்டா சித்த அபஹாரியும் இறே-அன்றியே பெண் பிறந்தாரை நலியுமவை தானேயோ -உபகார சீலனான கிருஷ்ணனுடைய கடல் போலே இருந்துள்ள திருக் கண்கள் என்னுதல் –கடல் போலே சிரமஹரமான நிறத்தை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் -கையிலே திரு வாழி யை யுடையவனுடைய திருக் கண்கள் என்னுதல் –அறியேன்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண் -என்று இறே இவள் பிரதிபத்தி இருப்பது –முதல் உறவு பண்ணினவை தானே இறே இப்போது பாதகமாய் இருக்கிறது –ஒன்றை நிர்ணயிக்க மாட்டாமையாலே அறியேன் என்கிறாள்
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே –7-7-2- நாலாயி:3628/2,3-இஸ் ஸம்சயத்தை அறுத்து தர வல்லி கோள் ஆகில் பிரயோஜனம் உண்டு -கண்ணின் பாடே உன்னசம் என்கிறபடியே உயர்ந்த -கடலின் அருகே அது ஊற்றாக வளர்வது ஒரு கொடி போலே -அதன் நீர்மையாலே வளர்ந்ததொரு கற்பகக் கொடியோ -ஒழுகு நீண்டு இருக்கையாலே கொடி என்னவுமாய் -ச்ரத்தை யாலே கொழுந்து என்னவுமாய் இரா நின்றது -ஸர்வதா சாம்யத்தாலே இன்னது என்று நிச்சயிக்கலாய் இருக்கிறது இல்லை -எங்களைக் காட்டில் இவ்விஷயத்தில் அவஹாகித்த நீ சொல்லிக் காணாய் என்ன
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் -7-7-3- – நாலாயி:3629/2,3-அழகினுடைய திரளான பவளத்தின் ச்ரத்தை உடைய முறியோ -முறி என்கிறது முறிந்த போதை அகவாயில் நெய்ப்புத் தோற்றி இருக்கை-அறியேன்--நிர்ணயிக்க மாட்டு கிறி லேன்
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – 7-7-5-நாலாயி:3631/4–என் பிராணனை முடிக்கிற திரு முத்து நிரை தானேயோ அறிகிறிலேன்–இவை நலியாதபடி ஒதுங்கலாவது ஓர் இடமும் கான்கிறிலேன் -என்னுதல் -அழகுகளில்-உஜ்ஜீவன ஹேது என்று ஒதுங்கலாவது ஒன்றும் கான்கிறிலேன் என்னுதல் -அழகு ஆகில் பாதகமாய் அல்லது இருக்கிறது இல்லை –
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் –7-7-7- நாலாயி:3633/1,2-தாய்மாரான நீங்கள் காணுங்கோள் என்று வைத்து காட்டும் பிரகாரம் அறியேன் -என் கைக்கு பிடி தருதல் -உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் இ றே காட்ட விரகு உள்ளது -புருஷர்களுக்கு காட்டில் இ றே பருவம் நிரம்பினானுங்களுக்கு காட்டலாவது
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே –7-7-9- நாலாயி:3635/4-உங்களுக்கு ஒரு வ்யஸனம் இன்றிக்கே இருக்க என்னுடைய பிராணனை களவு காண்கிற படி அறிகிறிலிகோள் -களவாவது -இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்க அபஹாரம் பண்ணுகை -இத்தலை அத்தலை யாயிற்று -அப்ராப்தன் களவு கண்டால் பரிஹரிக்கலாம் -ப்ராப்தரானார் களவு கண்டால் பரிஹரிக்க ஒண்ணாது -கைப்பட்ட வாறே தன்னது என்று பிரமாணம் காட்டுகையாலே
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த–7-8-11- – நாலாயி:3648/2-ஒருவராலும் ஒரு வகையாலும் உள்ள அளவு இது என்று அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரனை இறே கவி பாடிற்று -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒரு வகையும் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –அவனை உள்ளபடி அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக அருளிச் செய்தார் யாயிற்று இவர் –விஷயம் அபரிச்சின்னமாய் இருக்கச் செய்தேயும் -மயர்வற மதி நலம் அருளினன்- என்று அவன் தானே கொடுத்த ஞானம் ஆகையால் உள்ள படியை அறிந்து அருளிச் செய்தார் –ஸ்வ யத்னத்தாலே காண ப் பார்க்கில் இறே அறிகை யில் அருமை உள்ளது
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – 7-10-10-நாலாயி:3669/1,2—திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -உம்முடைய நினைவுக்கு சர்வேஸ்வரனை சாக்ஷி யாக்கைக்கு ஹேது என் என்னில்-நினைவுக்கு வாய்த்தலையில் இருக்கிறவன் அறியானோ -மனசாலே செய்யுமவற்றில் அவன் அறியாத வஞ்சகங்கள் ஒன்றும் இல்லை
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – 8-1-4-நாலாயி:3674/2–அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் — 8-1-7-நாலாயி:3677/2-தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் – அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே –8-1-8- நாலாயி:3678/4- -பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறிலேன்
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என்-8-2-3- – நாலாயி:3684/2-யாம் மடலூர்ந்தும் என்று அன்று தொடங்கி பழி சுமந்து போருகிறேன் அன்றோ
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி -8-3-1- நாலாயி:3693/2–உன்னை இனைய என்று -சர்வ சேஷியான உன்னை இப்படிப்பட்டவன் என்று -நிரதிசய ஸுகுமார்ய யுக்தன் என்று -இவர் திரு உள்ளத்திலே அவன் ஸுகுமார்யமே உறைத்தாயிற்று இருப்பது -கருமுகை மாலையைப் போலே இ றே இவர் நினைத்து இருப்பது-அறியகிலாது -அறியாதே –பரிவதற்கு அறியாமைக்கு -அனுகூலரான தேவர்களோடு -பிரதிகூலரான அஸூரர்களோடு-இரண்டும் கலசின மனுஷ்யரோடு -வாசியில்லை -அவனைப் பரிய -கண்டவர்கள் எல்லாரும் என்று -இருக்கிறார் யாயிற்று இவர்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் -8-3-9– நாலாயி:3701/2-சர்வேஸ்வரனான உன்னுடைய ஸுகுமார்யத்தை-யார் அறிகிற்பார்-யார் அறிகிறவர்-அந்நிய பரராய் இருக்கிறவர்கள் உன் ஸுகுமார்யத்தை அறிவார்களா –அநந்ய பரரானால் தான் தேவருடைய ஸுகுமார்யம் சிலருக்கு அறிய நிலமோ
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – 8-4-4-நாலாயி:3707/4–திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக-மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-ஆத்மாநம் -மானுஷம் மன்யே என்றும் -அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் -மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –
அடி இணைய யல்லதோர் அரணே-–அவன் திருவடிகள் அல்லது ஒரு ரக்ஷகம் இல்லை -அடி இணை யல்லதோர் அரண் –பிறிதில்லை எனக்கு–
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை-8-4-6- – நாலாயி:3709/2–ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னை பரிச்சேதிக்கப் போகாது –
புகழுமாறு அறியேன் பொருந்து மூஉலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – 8-4-8-நாலாயி:3711/4-அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே-8-7-2- – நாலாயி:3738/4-நாலாயி:3739/1-தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் -அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் -முதலை ஓன்று-எனக்கு காலம் அநாதி -அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே -முதலை ஐந்து –இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் –8-7-3- என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் -அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய்-பெறாப் பேறு பெற்றானாய்– -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –
அவ் வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே-8-7-7- – நாலாயி:3743/4-அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் -8-7-8-– நாலாயி:3744/1- –மற்று அருள் அறியேன்-வேறு ஒரு அருளும் அறியேன் –என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே –8-8-5- நாலாயி:3752/4-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை-இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்-இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –
கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் -சாங்க்யத்தில்-தத்வ சங்க்யான க்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3–:3805-அறிந்தனவாய் இருக்கிற துர்ஜ்ஜேயார்த்த ஸூசகமான வேதங்கள் சர்வேஸ்வரனை துர்ஜ்ஜேயன் என்று அறிந்த -மற்று அறிந்தாராய் இருக்கிற ரிஷிகளும் சம்சார துரித பேஷஜம் என்று அறிந்தார்கள் –வேதங்களுக்கும் ரிஷிகளுக்கும் அறிய நிலம் இல்லாத எம்பெருமான் தன்னை எனக்கு பூர்ணமாக அறிவித்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –
தழுவுமாறு அறியேன் உன தாள்களே –9-3-9- நாலாயி:3811/4-உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் –
அறிவது அரிய அரியாய அம்மானே -9-4-4- நாலாயி:3817/4-தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்-9-6-3- – நாலாயி:3838/4-முகப்பிலே ஒன்றாய் -முடிவிலே ஒன்றான செயல்கள் தெரிகிறதில்லை -அடிமை கொள்ள வென்று புகுந்து அச் செயலை தானே செய்கிற நிலை எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – -9-6-4-நாலாயி:3839/1-உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கச் செய்தானோ -அறிகிறிலேன் –தன் சங்கல்பத்தைப் பற்றி -சகல லோகங்களும் நிற்க -சகல அபாஸ்ரயவன் கிடீர் என்னைத் தனக்கு அபாஸ்ரயமாக நினைத்தான் –சர்வாதிகன் இப்படித் தாழ பரிமாறுகை கூடாது -நான் பிரமித்தேனோ –சம்ச்லேஷத்திலும் மருள் தானீதோ-என்றவர் இறே –
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே -9-8-3-– நாலாயி:3860/4-திரு நாவாயிலே பேரோலக்கமாய் இருக்க அத்திரளிலே சென்று கூடப் பெறும் நாள் என்று என்று அறிகிறிலேன் -அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ–என்று இருக்குமவராகையாலே அந்நாளை யாசைப்படுகிறார்-
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் –9-8-4- நாலாயி:3861/1-பெறக் கடவ நாள் என்று என்று அறிகிறிலேன் -என்னுதல் -பிரிந்து இருக்கக் கடவ நாள் எத்தனை என்று அறிகிறிலேன் என்னுதல்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ -9-9-1- நாலாயி:3869/4-வ்யதிரேகத்தில் தென்றல் முதலான பதார்த்தங்களைத் தப்பிச் சென்று புகுகைக்கு இடம் காண்கிறிலோம் -ஷாம காலத்தில் பஹு பிரஜராய் இருப்பார் தங்கள் பசி கிடக்க பிரஜைகள் அலைப்புக்கு அலைந்து புகலிடம் அறியாதா போலே -நான் ஜீவித்த படி ஜீவிக்கின்றேன் -இவற்றைக் கொண்டு புகுமிடம் காண்கிறிலேன் -என்கிறார் –
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ -9-9-2- நாலாயி:3870/1-மேல் வர புகு கிற பாதக வர்க்கத்தை நினைத்து சொல்லுகிற வார்த்தை யாதல் -கீழ் நலிந்த வற்றுக்கு அஞ்சி அவ்வச்சம் பின்னாட்டுகிற அனு பாஷாணம் ஆதல்-
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் –9-9-9- நாலாயி:3877/4–அது பாதகம் ஆகிறபடி எனக்கு ஒன்றும் தெரிகிறதில்லை-
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் –10-2-3- நாலாயி:3904/3–சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்-என்னுமாறு போலே –அனுபவித்து கை வந்த நாங்கள் -ஒருத்தருக்கும் தெரியாத ரகஸ்யத்தை வியக்தமாக அறியும் படி சொன்னோம் -இது யுண்டாய்க் கழிந்தார் வார்த்தை யாகையாலே ஆப்தம் -என்கை –திண்ணமாக அனுபவத்தாலே கை கண்ட நாம் இதில் வாசி அறியாத நீங்களும் இழக்க ஒண்ணாது என்று உங்கள் நெஞ்சில் படும்படி சொன்னோம்-பல நாள் துன்பப் பட்டு கரை கண்டவர் ஆகையாலே -நாம்-என்கிறார்-இனி கர்மங்களுக்கு கட்டுப் பட்டவர்களாய் படுமவர்கள்
சொன்ன வார்த்தையை நினையாமையாலே படுகிறார்கள் அத்தனை நம் மேல் குறையற நாம் சொன்னோம் -என்பார் -சொன்னோம் -என்கிறார்பிரதிபத்தி பண்ணாதார் இழக்கும் அத்தனை -துக்க நிவ்ருத்திக்கு தேச ப்ராப்தியே அமையும் –
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து-10-2-5- – நாலாயி:3906/3-வியக்தமாக -மதிநலம் அருள பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –
நடமினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம்–10-2-8- – நாலாயி:3909/4-என்னோடு குடல் துவக்கு உடையார் அடைய நடவுங்கோள்-வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே -என்று சபலரான நாம்–திரு அத்த்யயனம் பாடா நிற்க -இதனைக் கேட்டருளி-ஆளவந்தார் –நமக்கு ஆழ்வார் உடன் ஒரு சம்பந்தம் உண்டாக வேண்டும் -என்று-அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு-எழுந்து அருளினார்-இத்தைச் செய்தாவது ஆழ்வார் சம்பந்தம் பெறலாம் என்று -நாமோ -ஆழ்வார் சம்பந்திகள் என்று இறுமாப்புடன் போவோமே –நாம் -திருக் கண் வளர்ந்து அருளுகிற அழகில் சுவடு அறிந்து எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -8-7-1-என்னக் கடவ நாம் – -ஏகம் துக்கம் ஸூகஞ்ச நவ் -என்னும் படி இருக்கிற உங்களுக்கு நெஞ்சிலே படச் சொன்னோம் –அவ்வடிவினைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தினைக் உடைய நீங்கள் அறியும்படி சொன்னோம்
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான-10-2-9-நாளேல் அறியேன் –என்றும் -மரணமானால் என்றும் -நாம் உங்களுக்குச் சொன்ன காலம் அணித்தாய்த்து தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர் -என்று-அவன் அருளிச் செய்த வார்த்தையை இப்போது இவர் தாம் அருளிச் செய்கிறார்-இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே-எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் –ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – 10-3-2-நாலாயி:3914/2–அந்த ஸூகம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்-
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – 10-7-1--நாலாயி:3957/3-நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் –உயிர் என்கிறது ஆத்மாவை -சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இறே
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் –10-10-3- நாலாயி:3992/2-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்ன -ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி-கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன் தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் -என்கிறபடியே-
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – -10-10-11-நாலாயி:4000/4–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –
சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம்-இவர்களுடைய பிறப்பும் –பிறக்க பிறக்க அவனுக்கு உதகர்ஷம் உண்டானாப் போலே -அனுக்ரஹ நிபந்தனம் சர்வேஸ்வரன் அவதாரம் —
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –