ஸ்ரீ திருப்பாவையால்–நாராயணன் -1-என்றும் –-பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்-ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆஹ்யதோ மதுராம் புரீம் -என்கிறபடியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி–திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –-பிரபன்ன நிஷ்டாக்ரமமும் – பிரபத்தவ்யன் அதி ஸூலபனாம் படிக்கு அடியான அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது–
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -1-என்றும்-நாராயணன் மூர்த்தி -7-என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -3–என்றும் சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே
முதல் பாட்டில்-பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது வேதார்த்தம் –
அதாவது-சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது-அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்-தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-–கண்ணே உன்னைக் காணக் கருதி எண்ணே கொண்ட சிந்தையினராய் அன்றோ ஆழ்வார்கள் இருப்பது -அவனே உபாயமும் ப்ராப்யமும் –
மார்கழித் திங்கள்–)சத்வோத்தரமான காலத்திலே–சதாசார்ய பிரசாதம் அடியாக -ஸ்வரூப யாதாத்ம்ய (மதி நிறைந்த )ஜ்ஞானம் பரி பூரணமாய்-இச் சேதனன் பகவத் விஷயீ கார பாத்ர பூதமான திவசத்திலே-தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்
(நன்னாளால்)-தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –-ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்(குடந்தைக் கிடந்தாய் அடியேன் ஒரு வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே அன்று நான் பிறந்திலேன் )
நீராடப் போதுவீர் –பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்-நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் ) அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே–நேரிழையீர் –இதுக்குத் தகுதியான-ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –ஆயர் சிறுமீர்காள்-ஜ்ஞான ஜன்மம் உடையவர்கள் போலே-பகவத் ஏக பரர்-ஸ்த்ரீத்வேன நிர்த்தேசம் – –உபாயாந்தர-உபேயாந்தர-தேவதாந்தர-பரர் போல் அன்றியே-அனன்யார்ஹத்வத் யோதனார்த்தம்-ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும் ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –
ஆய்ப்பாடி-பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று-அனுபவிக்க வேண்டாத ஊர்-ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்-பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே-கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்–அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் -இங்கு தான் கும்பிடுகிற இடம் இறே –-தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே
கூர் வேல் கொடும் தொழிலன் -இத்யாதி
கூரியதாய்-சர்வ அநிஷ்ட நிவர்தகமான மங்களா சாசனத்தை உடையவராய்- அல்ப அமங்களம் சம்பாவிக்கையிலும்-அதிசயித மங்களா சாசனை பரராய்–ஞானம் தாண்டி அவன் அழகு மார்த்வம் பொங்கும் பரிவால் ரக்ஷண ரக்ஷக பாவம் -தட்டு மாறிக் கிடக்குமே– பகவ லாபத்தாலே களித்து-(நந்த கோபன் -ஆனந்த மயமாய் -) பகவத் விஷயத்தை அசல் (கம்ஸாதிகள் )அறியாதபடி-ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்- தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்-(இளம் குமரன் )-தமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்-அம்பன்ன கண்ணாள் யசோதை -(பெரிய திருமொழி -6-8-6)ஆகையால் இவள்-முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்–அம்பரமே தண்ணீரே –என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர்-நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ
கண் என்று ஜ்ஞானமாய் –-அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்- தன்னை அனுசந்திப்பாருக்கு ஆபிஜ்யாதி (குலம் தரும் இத்யாதி)சகல அதிசய ப்ரதமான-திரு மந்த்ரத்திலே- தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் – மந்த்ரோ மாதா -என்னக் கடவது இறே-(வித்யை தாயாகப் பெற்று இத்யாதி -நாயனார்))-இம் மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம் மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை
மந்த்ரத்திலும் மந்த்ர பிரதனான ஆச்சார்யன் பக்கலியும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமே–ஆகவே யசோதை -நந்தகோபனைச் சொல்லி நாராயணனையும் சொல்கிறது–கார் மேனி என்கையாலே –சௌலப்ய சௌசீல்யங்களையும்-செங்கண் என்கையாலே –வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே- ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து–கதிர் மதியம் இத்யாதி – சூர்ய கிரணங்களை உடைய மதியம் போலே இருக்கிற திருமுக மண்டலத்தை உடையவனாய்-அனுகூலர்க்கு அணுகலாம் படி இருக்கையும்-
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாமையும் தோற்றுகையாலே- அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே- ஆஸ்ரித கார்ய ஆபாதக குண சதுஷ்டயமும் (ஞானம் சக்தி பிராப்தி பூர்த்தி )சொல்லிற்று ஆய்த்து
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-இத்தால்- உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக- அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-ஸர்வ தர்மான் பரித்யஜ் ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -கீதா ஸ்லோக அர்த்தமே கோதா உபநிஷத்தின் அர்த்தமும் என்றதாயிற்று-
ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு 1-தலக்காடு கீர்த்தி நாராயணன்-2-தொண்டனூர் நம்பி நாராயணன்-3-மேலகோட்டை திரு நாராயணன்-4-பேலூர் கேசவ நாராயணன்–5-கடக வீர நாராயணன் என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.–கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில் 1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்-2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்–3-கார்மேனி நாராயணன்–4-செங்கண் நாராயணன்–5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்–ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள்-
1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்– திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்-தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர் கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும், நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.
2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –-என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.-கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு – ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.
3-கார் மேனி நாராயணன் –-என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற வர்ஷாகால மேகத்தைப் போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று. நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை – செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல – ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும், மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்ய குணத்தையும் சொல்லிற்று எனலாம்.
4-செங்கண் நாராயணன் – என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.-மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள். இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-
5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –-என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.
அப்படிப்பட்ட நாராயணனே-மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும் பிரேமம் கனக்க உண்டான நமக்கே ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.
———–
வாழ்வீர்காள் –
(இந் நிலத்திலே )-இந்தளத்திலே -தாமரை போலே –-கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே–அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை காண் –அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இறே –வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இறே-இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க–வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் – தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்-தோற்றாமையாலே அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-வாழ்வீர்காள் –என்ற பன்மைக்குக் கருத்து – அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இறே பெற்றது –(நவ திருப்பதிக்கும் ஒரே நம்மாழ்வார் போல் )
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே-வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தமப்பனார்-இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –
முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி–இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது–அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான்-
நீராடி மூன்று அர்த்தம்–போகார்தம்–சாதனமாக–விரஹ தாபம் தீர–அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத் சமமாக ஆக்கக் கடவோம்- மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக-இருக்கைக்காக மேற்பட-புருஷனுக்கு அவத்யம் இல்லை இறே-அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்-ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத-நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்
நாட்காலே நீராடி-ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணி–இத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது–மையிட்டு எழுதோம் –மை கண்ணுக்கு பிரகாசம் ஆகையால் ஆத்ம யாதாம்ய பிரகாசகமான ஞான யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -பக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ –அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ –பூச்சூடுகை போக ரூபமாகையாலே –மலரிட்டு நாம் முடியோம் என்று பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -என்கிறது –நாம் முடியோம் – நாமாய் பகவத் பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து – இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே-நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் – அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –
உய்யுமாறு எண்ணி உகந்து –உத்தர வாக்கியம் -இது முன்னாக வைத்து-செய்யும் கிரிசைகள் –பூர்வ வாக்கியம் -இது அன்றோ இவர்கள் நிஷ்டை-எம்பெருமானார் –உபேயத்திலே எப்பொழுதும் கண் வைத்து உபாயத்தில் ஸக்ருத் தானே – கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம் அன்றோ
வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்-இவ்விஷயத்தில் இழிவார்களுடைய விரக்தியையும் சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது-
————-
ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அநு பாவ்யனாய்- சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள –சர்வேஸ்வரன் – நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –அநந்தரம் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து பற்ப நாபன் -என்று சுழித்து – தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –
யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே – ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் -நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்-நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்-நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –
ஓங்கி –ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே- மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்- உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே
உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை –-முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் –சப்தம் சொல்லி–இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்–இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும் திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்- அவனுக்கும் திரு நாமத்துக்கும்-கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் -கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும்-ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும்-பக்தி யோகிக்கு பக்தி சித்திக்கைக்கும் விரோதி போகைக்கும்
பிரபன்னனுக்குச் சோறும் தண்ணீரும் போலே யாகைக்கும் திரு நாமம் போலே இல்லை-அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி-இதுவே நமக்கு நீங்காத செல்பம் நிறைந்து இருக்குமே-நமக்கே முதலில் –நாமும் அடுத்த பாசுரத்தில் இங்கு நாங்கள் நம் பாவைக்கு -பாசுரம் தோறும் அதிகாரி ஸ்வரூபம்
இத்தால் அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது
திங்கள் மும்மாரி பெய்து- சத்வோத்தரமான காலத்திலே–அனன்யார்ஹ சேஷத்வ-
அநந்ய சரணத்வ அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்-
அத்தாலே அபிவிருதங்களாய்-(ஓங்கு பெரும் செந்நெல்)ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த் ததேக தாரகரான (செந்நெலூடு கயலுகள)ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க-ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்-இடங்களிலே-பரம ஏகாந்திகளான -ஓங்கு பெரும் செந்நெல்லையே பற்றி இருக்கும் ஞானிகள் பூங்குவளை – ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்-
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர –பொறி வண்டு கண் படுப்ப-ஸர்வஞ்ஞன் அடியார் ஹ்ருதயத்தில் பெறாப் பேறு பெற்றானாய் இருப்பதால் ஞான லப்தனாய் என்கிறார்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண ஜ்ஞானிகள் (இதம் பூர்ணம் -அவனைப்போல் )ஆக்குமவர்களாய் சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய- அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –
நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி-நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.
———
ஆழி மழைக் கண்ணா —ஆழி–அபரிச்சேத்யமான ஜ்ஞான வைபவத்தை உடையையாய்-மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்
பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்
பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்(ஜகத் ஏக உத்தாரக ஆச்சார்யரான ராமாநுஜரைச் சொன்னவாறு )-நீ ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் பகவத் காருண்யத்துக்கு விஷயம் ஆக்கவல்ல நீ-
வர்ஷியா விட்டால் உடம்பு வெளுக்கும் நீ-கை கரவேல் –-பகவத் குண வர்ஷத்திலே சோராதே கொள்ளாய்-ஆழி –பகவத் குணாம்ருத சாகரத்திலே-உள் புக்கு
உள்ளே அவஹாகித்து-முகந்து கொடு – யாவத் குணங்களையும் புத்தி ஸ்தமாம் படி அகஞ்சுரிப்படுததிக் கொண்டு –-அதாவது-எப்பேர்பட்ட அபாரதிகள் ஆகிலும் தாம் அபிமானத்த வர்களில்-காருண்யத்தைப் பண்ணும்படி எம்பெருமான் விதேயமாம்படி-பண்ணிக் கொள்ளுகை
பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி –ஸூ தர்சனம் -மனஸ்ஸுக்கு அதிஷ்டான -வேகமாக சுற்றும் அன்றோ -யோகத்தால் உடையவரைத் தியானித்து
எதிராசர் வடிவு அழகு எனது இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் என்று இருப்பார்கள் அன்றோ-அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து-அதாவது-பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் –அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான- பகவத் காருண்ய வர்ஷத்தை-மகிழ்ந்து-மகிழக் கடவோம்-அதாவது- பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை
நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ –
நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி
ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –சோஸ்னுதே சர்வான் காமம் ஸஹ ப்ரஹ்மணா -கூடியே அனுபவம் –-இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்-ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்-என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –
அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு-இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
———-
வந்த நாம்- அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து–முறை கெட வருவான் என் என்னில்-
உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-அவன் திரு உள்ளத்தைப் புண் படுத்தக் கடவோம்–
தூ மலர்-யோக்யமோ அயோக்யமோ என்று தேடப் படாத மலர்களை(மடி தடவாத சோறு –சுண்ணாம்பு கலவாத சந்தனம் –சுருள் நாறாத பூ -தூய்மை )-ஆயர் குலம் என்றது- அநந்ய சாதனரான பாகவத குலம் -என்றபடி-
தாமோதரனை-நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே – அவனுடைய பந்தமும் அவனாலே அறுக்கப் போகாது சேஷியினுடைய திரு இலச்சினை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –
———-
மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்-நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்-ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்-மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்
அடி பாட்டு சொல்கிறது
————
பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும்
அரி என்ற பேர் அரவம்-ஹரி ஹரி என்கை யாவது –-ரக்ஷது த்வாம் அசேஷாணாம்–( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை
பேய் இத்யாதி –பேய் உண்டு -பிரகிருதி-முலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்
நஞ்சு -அவைகள் ஆகிற விஷம்-உண்டு -அனுபவித்து –அதாவது-பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி -(நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து)
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி-காம குரோதங்களையும் நிவர்ப்பித்து-சகடம் ஏக வசனம் –காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ –இரண்டும் ஒன்றே -காமத்தால் க்ரோதம் வரும்
புள் -6-பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –பரிசுத்தரராய் வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம –என்னும் படி சொல்லுகிறது –
——————
காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப(திருமந்த்ரம்)-உபாய(சரம ஸ்லோகம்)-புருஷார்த்த(த்வய) ஞானம் தலையெடுத்து –வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய-பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால் சிஷிதரான (மத்தினால் ஓசைப் படுத்த)சம்சாரி சேதனர் உடைய- திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ –
தேசமுடையாய் திற –பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே
இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே-நாங்கள் அனுபவிக்கலாம்படி
எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய்
கீசு -7-பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –
பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
———–
உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில் ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது- இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே- அது அந்யதா ஜ்ஞானம்-எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் -உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை--உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று – இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -மரங்களும் இரங்கும் வகை –என்று-அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –தன்னை நாம் கிட்டு அனுபவிக்கைக்கு ஈடாக-
இடையிலே வன்னியம் அறுத்த ஆண் பிள்ளையைப் பாடக் கடவோம்-மாவாய் பிளந்தானை-
அஹங்கார நிராசகனை–மல்லரை மாட்டிய-காம க்ரோத நிவர்தகனை
சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூஹலிக்கப்படும் விஷயரானவர்களை சகல விரோதி நிவாகரனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதராக்கும் படியைச் சொல்லுகிறது-கிருஷ்ணனால் கொண்டாடப் படும் ஏற்றமுடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்-பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பார் இடத்தில் சாபேஷாராய் இருக்கையும் –அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது
பகவத் அனுபவத்தில் ப்ரத்யா சன்னராய் இருப்பார் திறத்தில் சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
———-
தூ மணி மாடத்து –துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத- நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் – சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை —கீழில் பாட்டில் முக்தர் படி போலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்ய முக்தர் படியே இருப்பார் ஒருத்தியை எழுப்புகிறது –-ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்-மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே-(அம்மான்)ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய் அனந்யார்ஹரான பாகவதரே-
சுற்றும் விளக்கெரியத்-இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது –
மணி மாடத்தினுடைய மணிக் கதைவையும் மணித் தாள் திறவாய் – அதாவது த்வத் அனுபவ விரோதியான தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப் தவிர்ப்பாய் -என்றபடி –அன்றிக்கே த்வத் அனுபவ விரோதியான பகவத் சௌந்தர்யத்திலும்
பகவத் பக்தியிலும் மம காரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —அநக -ராம பக்தியிலும் கால் தாழாமல் -உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்து என்று அவனையே கால்பிடித்து வேண்டிக்கொள்ளவேண்டுமே-இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற அநந்ய உபாயத்வ ஸ்வரூப ஞானம் ஆகிற -திருத் தாயார் – அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —ஸ்வாமிநீ யான நீர் உமது ஸ்வம்மான அவளை எழுப்பீரோ –ஞானமான நீ நம்பிக்கையை உணர்த்த வேண்டாமோ தன்னிடத்தில் அநந்ய உபாயத்வ ஞானம் பிறந்த பின்பு தானே அவனே உபாயம் என்ற திட அத்ய வசாயம் பிறக்கும்-ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ- காவல் இடப் பட்டாளோ –நமஸ் தடுத்தோ -உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில் அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ-உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ –
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் ப்ரேம அதிசயத்தாலே தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை-
அவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது –
——-
ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.-கீழே அனந்தல் உடையவள் -இங்கு ஆற்ற அனந்தல் உடையவள்-வாழும் சோம்பராக இருக்க வேண்டுமே-இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது- ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –
ஞானீ த்வாத்மைவ மே மதம்-அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பக்ஷபாதத்தில் இருப்பார் திறத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
————–
கற்றுக் கறவைக் –ஸ சந்தானரான சிஷ்யர்-சிஷ்யர் ஸமூஹமாய் சேர்ந்தே இருக்கும் ஆச்சார்யர் -சிஷ்யராக இருந்தே ஆச்சார்யர் போல் -சிறு மா மானிடராய் என்னை ஆண்டார்-கறந்து – அவர்களுடிய அபிநிவேச அனுகுணமாக-ஜ்ஞானப் பிரதானம் பண்ணி-புற்றரவல்குல் –ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது-புன மயிலே –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே- வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக- ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான பிரேம ரூப ஞானம் ஆகையாலே- புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது
——-
கனைத்து –ஸ்வாசார்யன் தனக்கும்-ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –(ஸ்வ ஆச்சார்யன் நித்ய வாசம் பண்ணும் இடத்தில் இல்லாமலும் -அவர் திரு நாட்டை அலங்கரிக்கப் பெறலாமே -இந்த வியஸனம்)
பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –முலை வழியே நின்று பால் சோர–பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே – அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போல த்வயார்த்த உபதேசம் உனது ஸ்வரூப லாபத்துக்கும் தனது ஸ்வரூப லாபத்துக்கும் பிரதியுபகாரம் -உபய விபூதி கொடுத்தாலும் ஸத்ருசம் அல்லவே-பனித் தலை வீழ – பனியானது தலை மேல் சொரிய-
அதாவது- மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –
நின் வாசற் கடை பற்றிச்- கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்- பகவத் குணானுபவ (ஞான பாவம் )பிரவாஹம் என்ன – மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ (ப்ரேம பாவம் )பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ (போதயந்த பரஸ்பரம் )பிரவாஹம் என்ன –இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம் உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி –(அல்லேன் எனக்கு -முன் நகாரம் இருக்க வேண்டுமே -கண்டேன் ஸீதையை போல்)
பேருறக்கம்-காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ- சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் – ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –
ஆண்டாளுக்கும்-ஆழ்வாருக்கும்-தசாரதாதிகளுக்கும் – குகாதிகளுக்கும் சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான்
பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
————
புள்ளின் வாய் கீண்டானை – ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான அஹங்காரத்தை-அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன – அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை -அஹங்காரத்துக்கு–தீமையாவது –பாவைக் களம் புக்கார்- அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் – அதாவது காலஷேப கூடம்-வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று–பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய் அஞ்ஞானம் தலை மடிந்தது –புள்ளும் சிலம்பின காண் – மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –போதரிக் கண்ணினாய்– ஸ்வச்சமாய்
ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –
புள்ளு–13-பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
———-
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்–ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய
மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்(தவத்தவர்) தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் – எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –
பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –
———————-
இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே இசைந்து கொள்வதே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் -ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது- ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது –
————
வேதம் வல்லார்கள் -என்ற இடத்தில் குரு பரம்பரையை நினைத்து கீழ்ப் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –விண்ணோர் பெருமானில்- விண்ணோர் ஆகிறவர்கள்-த்வார பாலகர் தொடக்கமாக திவ்ய மஹிஷிகள் ஈறாக உள்ளவர்கள் இறே
சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே-நந்த கோபனுடைய–பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்–சம்ஸ்ரத ரஷகனான ஆச்சார்யன் உடைய-நந்தி –ஆனந்தம்-கோபன் -சிஷ்யர்களை ரக்ஷிக்குமவன்-கோயில் காப்பானே – கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்-அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள-
அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-மணிக் கதவம் தாள் திறவாய்- ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்-
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-
நந்த கோபனுடைய கோயில்-கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்-நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது
அறம் செய்யும் –பால அபிசந்தி ரஹிதமாக-ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –இத்தால்-நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ –எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் -ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்0–(அம்பரமே-போக்யம் )
தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்–(தண்ணீரே-தாரகம்) தத் தேதுவான கைங்கர்யத்தையும் (சோறே- போஷகம்) ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி-தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள (அறம் செய்யும்) நமக்கு வகுத்த சேஷியாய் (எம்பெருமான்)-ஆனந்த நிர்ப்பரனாய் (நந்த) ஆஸ்ரித ரஷகனான (கோபாலா) ஆசார்யனே -நீ உணர வேணும் -(எழுந்திராய்-)பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் (கொழுந்தே) பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் (குலவிளக்கே) எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் (எம்பெருமாட்டி) தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை-செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்- சிவந்து ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப் பட்ட வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர் கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்
குல விளக்கே-எங்களுக்கும் உன்னுடைய குலத்துக்கும் மங்கள தீபையாய்க் கொண்டு ப்ரகாசகை ஆனவளே–விளக்கு அந்நிய நிரபேஷமாக பதார்த்த தர்சனத்துக்கும் தன்னுடைய தர்சனத்துக்கும் ஹேது வாமா போலே –கொழுந்தே குல விளக்கே-ஆயர் கொழுந்தையும்
ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் – நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –உம்பியும் நீயும் உறங்கேல்-படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி படுக்கைக்கு உறக்கம் உண்டோ-அவன் படுக்கையான நீ உணர்ந்து எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )
மந்திரத்திலும் -மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிடமும் மந்த்ர பிரதானனான ஆச்சார்யர் பக்கல்லிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமே
நாயகனில் -16–அம்பரமே –17 – இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –
————
கீழே நாயகனாய் நேச நிலைக் கதவம் நீக்கு -ஆச்சார்யர் -அஞ்ஞானம் அஹந்காராதிகளைப் போக்கி மிதுனம் காட்டிக் கொடுப்பவர் இங்கு பிராட்டியை –வந்து திறவாய் மகிழ்ந்து என்று பிரார்த்தனை -பெருமாள் உடைய அஞ்ஞானம் போக்க-இருவருக்கும் உபதேசித்துப் பார்த்து -திருந்தாமல் இருந்தாலும் மீளாமல் நம்மை அருளால் திருத்தி அவனை அழகால் திருத்துபவள்-ஆஸ்ரிதர் தோஷ தரிசனத்தில் அஞ்ஞானம் கிட்டும் படி அருளுபவள்
கந்தம் கமழும் குழலி -வாஸனை-கோழி அழைத்தன -குயில் இனங்கள் கூவின-சீரார் வளை ஒலிப்ப-ஸப்த ஸமூஹங்கள்-பந்தார் விரலி-ஸ்பர்சம்-உன் மைத்துனன் பேர் பாட-ரஸம்
செந்தாமரைக் கை-ரூபம்-ஐவகை மதத்தில் ஈடுபட லௌகிக விஷயாந்தரங்களுக்குப் போக மாட்டோம்-மகிழ்ந்து இப்படி சர்வ இந்திரியங்களுக்கும் விடாய் தீர்ந்தால் மாநஸமான உகப்பு உன்னதாக வேணும் –வந்து எங்கும் கோழி அழைத்தன காண் – சத்வோத்தரமான காலம் ஆனவாறே சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்- வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்-பரம பாகவத சமூஹங்கள்-சத்வம் தலை எடுத்த பின்பும் உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப் பல காலும் கூவா நின்றன காண் –செந் தாமரைக் கையால் –சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே-தாமரை போன்ற திருக் கையாலே – இவ்விடத்தில் –கையாவது -ஜ்ஞானம்-ஜ்ஞானக் கை என்றார் இறே ஆழ்வார் –ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன-இதர விஷய நிவ்ருத்தி -சௌந்தர்யம் ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி -சௌகுமார்யம்-நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-சௌகந்த்யம்-சீரார் வளை ஒலிப்ப–நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்- பகவத் சம்பந்த ஸூசகங்களான-ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –
ஒரு கையாலே விபூதி – விபூதிமான் ஒரு கையிலே —நாரம் ஒரு கையிலே அயனம் ஒரு கையிலே – சேஷி ஒரு கையிலே- சேஷம் ஒரு கையிலே –-போக்யம் ஒரு கையிலே – போக ஸ்தானம் ஒரு கையிலே
——
கோட்டுக் கால் கட்டில் மேல்- சதுர தந்தியான குவலயா பீடத்தின் உடைய தந்தங்களாலே-செய்யப் பட்ட கால்களை உடைய கட்டில் மேல் இத்தால் – சதுர்வித கர்த்ருத்வ மூலமான
அஹங்கார கார்யமான சேஷத்வே கர்த்ருத்வம்-பர கத அதிசய ஆதேன இச்சையா- ஜ்ஞாத்ருத்வே கர்த்ருத்வம் கர்த்ருத்வே கர்த்ருத்வம் போக்த்ருத்வே கர்த்ருத்வம்-ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்த்தல் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆகிற கால்களை உடைத்தாய்-அந்த கர்த்ருத்வ விஷயமான தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற பட்டங்களை உடைத்தாய் தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற கட்டில் மேல் என்கிறது –மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்– சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே-மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற படுக்கையின் மேலேறி –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா – வர்க்கம் வர்க்கம் ஆகிற விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற-அளகபாரத்தை -(குழல் )உடைய நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –
(உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-
சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே – பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை – அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –
தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –அசித் கல்பனாய் -முதல் (ஆத்ம சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்தை)அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து அங்கீகரிப்பதே -என்று கிருதஞ்ஞனாய் போருகை –
கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ நம்மை அவன் அங்கீ கரித்தான் என்று தன் பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும் விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –
போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –
இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் -)
செப்பன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்– விஷய க்ராஹகமாய் விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் பகவத் விஷய பக்தியையும் (செப்பன்ன மென் முலை)அவனுக்கு மிகவும் போக்கியமான பரம பக்தியையும் –(செவ்வாய்)விஷயாந்தர வைராக்யத்தையும் (சிறு மருங்குல்) உடையையாய்- நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்-பிராப்யத்வ புருஷகாரத்வோப யுக்த கல்யாண குண பூர்ணையான பெரிய பிராட்டியாரே நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-உக்கம் -ஆலவட்டம் தட்டொளி -கண்ணாடி-ஸ்வா பதேசத்தில் கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும் யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும் இவ் விரண்டையும் கொடுத்து – உனக்கு பவ்யனான ஈஸ்வரனை இந்த ஷணத்திலே பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை ஸம்ஸ்லேஷிப்பி -என்கிறார்கள் –
அதிகாரி சித்திக்கும் -தடங்கல் போக்கி அருள -உந்து-உபாய ஸித்திக்கு குத்து விளக்கு
ப்ராப்ய ஸித்திக்கு முப்பத்து மூவர்-உக்கம் -அஹங்கார மமகாரங்கள் இல்லாத கைங்கர்யம்
பிராட்டி கைங்கர்ய வர்த்தகையாய் இருக்குமே –பகவத் விஷயீகாரம் பிராட்டி சாபேஷமாய் இருக்கிறது-பிராட்டியை புருஷகாரமாக வரித்தால்-அவனும் அவளும் இசலி இசலிப் பரியும் பரிவையும் சொல்லுகிறது –அடிமை செய்யும் இடத்திலும் இருவர்க்கும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறையாகிறது –உந்து மத களிற்றின் தனித்து புருஷகாரமாகப் பற்றி குத்து விளக்கில் மிதுனத்தில் -இவளை முன்னிட்டு அவனை உபாயமாகப் பற்றி முப்பத்து மூவரில் மீண்டும் மிதுனத்தில் அவனை நீராட்டப் பிரார்த்திக்கிறார்கள்
—————
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே – என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே எல்லாரும் காணலாம்படி- அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து –
சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே-சுடரே-ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்–இன்னார் தூதன் என நின்றான் -ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -மனுஷ்யத்தவே பரத்வம்–ஏற்ற கலங்கள் –உபதேச பாத்திர பூதரான சிஷ்யர்கள் –துயில் எழாய்- நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் -ரஷணம் பிரசக்தமாய் இருக்க ரஷண சிந்தை பண்ணக் கடவதோ – என்று தாத்பர்யம் –அர்த்தித்தவமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை –உபாயத்தில் புகாது-லுப்த சதுர்த்தி அர்த்தம் -அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே-போற்றி –புகழ்ந்து –வந்தோம்-பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் – அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம் நீ பெறிலும் பெறு-இழக்கிலும் இழ –
ஏற்ற கலம் -ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –ஏத்த வேழுலகும் கொண்ட -என்கிறபடியே ஆஸ்ரிதரானவர்கள் நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறது –
—–
இஜ் ஜென்மத்துக்கு மூலம்-சார்ந்த இரு வல் வினை–இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–அங்கண் -கீழில் பாட்டில் தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்றாய் –இப்பாட்டில் –அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது-அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்குத் தங்களுடைய அநந்யார்ஹ சேஷத்வம் அநுசந்தேயம் -என்கிறது –கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே– இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி-பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –-இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது -ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது -ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று–-சிறுச் சிறிதே-ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே பிடித்துக் காண வேணும் என்கை-திங்களும் ஆதித்யனும்-1-விரஹ தாபம் போக்குகைக்கும்-2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
எங்கள் மேல் சாபம்-பிறருடைய சாபம் உன் கடாக்ஷத்தாலே தீரும் – எங்களுடைய சாபம் நீ போக்குதல் அனுபவித்து விடுதல் செய்யும் அத்தனை -விஸ்லேஷ வியசனம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்கிறது –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் – 2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம் 3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் – 4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )-2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)-4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வாந் வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –
ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம் யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம் யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)
————-
மாரி-பிரிந்தார் கூடும் காலம் – கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் – புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்-பெண்களோடு மேகம் அறையிடும் காலம் – பிரிந்தார் கொடுமை குழறும் காலம் – கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -(திருவிருத்தம் ) பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம் (நாச்சியார் -8- )-மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது – இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான்-சீரிய சிங்கம்-நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-3)-சீரிய சிங்கம்-சிற்றாயர் சிங்கம் -யாதவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -ராகவ சிம்மம் -ராஜ ஸிம்ஹம்-நீ பூவைப் பூ வண்ணா -உன்னை நீ அறிய வேண்டாவோ – எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ-சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும் ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ
————
அன்று –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று–தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று – ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று– எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று – நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று– அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று– இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான்-இசைவு பிறந்த இன்று -என்னுதல்- நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்
இரங்கு – எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை –
அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் – அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத்தலைக்கு ஸ்வரூபம்-தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-இரங்கு -என்று கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்று
ருசி காரித்தைச் சொல்லுகிறது –
அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –லோபத்தை எறிதடியாக எறிந்து மோஹத்தை நசிப்பித்தவனே –அஞ்ஞான கார்யமான அஹங்காரம் இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு
பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –ஐம் புலன்களுக்கும் அவனையே விஷயமாக்கி -இது குன்று போல் -இது ஸ்திரம் அநந்தம் அவை கல் போல் அல்பம் அஸ்திரம்)-அஹங்காரத்தை ஜெயித்து தத் விஷய வைமுக்யத்தை மாற்றும் நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –
இருந்த இடத்தில் இருந்து அளந்த திருவடிக்கும்-எவ்வாறு நடந்தாய் எம் இராமாவோ -என்ற திருவடிக்கும்-குழந்தையாய் சகடம் உதைத்த திருவடிகளுக்கும்-கன்றை எறிந்த போது காட்டி அருளிய குஞ்சித பாதங்களுக்கும் இந்திரனை ரஷித்த குணத்துக்கும் இவை உன்னது செயல்கள் அல்ல உனது திருக்கையில் ஆயுதங்கள் செய்தன -அவற்றுக்குப் பல்லாண்டு என்று என்று பல தடவை பல்லாண்டு பாடுவதே பறை-அடி போற்றி –திறல் போற்றி -புகழ் போற்றி- கழல் போற்றி – குணம் போற்றி – வேல் போற்றி -என்று -இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
——————-
ஒருத்தி மகனாய் பிறந்து – அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்- குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்அவதரித்து –ஓர் இரவில் ஒருத்தி மகனாய் – லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்-வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தயும் வியக்தம் அஷ்டாக்ஷர மந்திரத்தில் மட்டும் தானே-ஸ்வரூபம் மட்டும் வியக்தம் துவாதச அக்ஷர மந்திரத்தில்-ஒளித்து வளரத்-குண விக்ரஹ விபூதி களாலே சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –தரிக்கிலானாகித் –ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய் பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே – தானே த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –திருத் தக்க செல்வமும் சேவகமும் –பெரிய பிராட்டியாருக்கு தகுதியான ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய் இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்- உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாக தீர்ந்து ஆனந்திக்கக் கடவோம் –வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் – மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் – ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது-விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து – அபிமத சித்தியும் யுண்டாய்த்து — பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –ஸ்வரூப லாபத்தோ பாதி-துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –
சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது – கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் – கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்–
————
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள் -மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை – மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் – இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும் துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே தட்டி எழுப்புகிறார்கள் –ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது – இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது – கார்ச்யத்தாலே இடை என்று -விரக்தியைச் சொல்லிற்றாய் அத்தால் விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை வைராக்யத்தைச் சொல்லுகிறது –மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று-ஆலினிலையாய் -அஹம் –என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று-பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் -மூன்றும் சேர்ந்த பசும்கூட்டம் மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்–
மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –
சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும் சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும் உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –ஓம் விட நமஸ் உயர்ந்தது-போய்ப் பாடுடையனவே -இடமுடைமை- பெருமை-சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ய போக்யங்கள் -ஆகவே சாலப் பெரும் பாறை -பெரிய த்வனி இதுக்கு-சாலப் பெரும் பறையே –பறை -பெரும் பறை – சாலப் பெரும் பறை –பல்லாண்டிசைப்பாரே-சத் சஹ வாசம் வேணும் –கோல விளக்கே – பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –கொடியே – கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான கைங்கர்யமும் வேணும் –விதானமே- அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும்
திருப் பல்லாண்டு பாடுகைக்கு- அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும் பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் –நம்மாழ்வாரையும் கொடுத்தான்-மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான் கொடிக்கு பெரிய திருவடியையும் விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்-எல்லாம் கொடுத்தாலும் தன்னைக் கொடுத்தது ஆகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான்
எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில் எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-
———
சீர் –எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே – வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் – அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே- அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம் நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்(ஸாஷாத் மன்மதன் ) ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்-இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –
சூடகமே இத்யாதி-1-பிடித்த கைக்கும் –2-அணைத்த தோள்களுக்கும்-3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்-4-ஸ்பர்சத்துக்கும்-5-தோற்று விழும் துறைக்கும்-பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -ப்ரஹ்ம அலங்காரம் –-உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து-வாய் பாட-உடம்பு கூட-நெஞ்சு குளிர-கூடி –குளிர்ந்து-குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –நீரிலே தோயாதே உபாயாந்தரங்களிலே இழியாதே-நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும்-தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும் அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –-அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே-அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் ) பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன-ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்-கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது-நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்- தனியே புஜிக்கக் கடவது அன்று – உண்கை உத்தேச்யம் அன்று- பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்-நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே-ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா–அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை
சூடகமே –காப்பே–கைத்தலம் பற்றி உபக்ரமம் –திருவடியில் விழுந்தது பர்யந்தம்–தோள் வளையே –திரு இலச்சினையே-தோடு – திரு மந்த்ரமே-செவிப் பூவே-த்வயமே (அனுபவத்துக்கு )-பாடகமே-சரம ஸ்லோகமே -இவை ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் – பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன-இதில் தோடு –மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணியான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே – திருமந்த்ரத்தை சொல்லுகிறது –செவிப்பூ-ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –இம் மூன்று ரகஸ்யங்களாலும் ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது – அது எங்கனே என்னில் –திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும் த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும் சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும் ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும் ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே- ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –யாம் அணிவோம்-உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம் இன்று அணியக் கடவோம் -பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது – பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –ஆடை உடுப்போம்-சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்-பால் சோறு-கைங்கர்யம் ஆனது-மூட நெய் பெய்து மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –கூடி இருந்து குளிர்ந்து – போக்தாவான உன்னோடு
போக்யரான நாம் சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-
———-
முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்கள் இரண்டையும் மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக இப் பாட்டில் பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்–நாராயணனே பறை நாராயணனே தருவான்-என்பதின் விவரணம் இப் பாசுரமும் அடுத்த பாசுரமும் உன்னோடு உண்டான சம்பந்தம் –உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –
உன்னோடு நமக்கு உண்டான உறவை ஆராய்ந்து பார்த்தால் சோபாதிகம் அன்றிக்கே
நம் இருவர் உடையவும் ஸ்வரூபமாய் இருக்கையாலே அது தானும் நித்யம் ஆகையாலே
சர்வ சக்தியான உன்னாலும் போக்க ஒண்ணாது – பிராக்ருதரான நம்மாலும் போக்க ஒண்ணாது –க்ருத சங்கே திகளான இருவராலும் போக்க ஒண்ணாது – இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது ––நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை –மந்த்ர ரஹஸ்யம் -விதி ரஹஸ்யம் -அனுஷ்டான ரஹஸ்யம் -ஷேம கரம் – பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -நடுவில்-ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ஓம் சாந்தி சாந்தி சாந்தி: –
கறவைகள் -இத்யாதி – ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி – தேக போஷண ஏக பரராய் இருந்தோம் இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –அறிவொன்றும் இல்லாத – ஞானமும் ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –ஆய்க் குலம் –உபயாந்தரங்கள் இல்லாமையாலே
தோஷமாகாத குலத்திலே பிறந்தவர்கள் நாங்கள் –இத்தால் – ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –தங்கள் உடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்ய கதித்வத்தையும் உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும் சொன்னார்கள் ஆய்த்து –இறைவா- வானோர் இறையை நினைத்தன்று – ஆய்க் குலமாக வந்து தோன்றின நம் இறை –பேற்றுக்கு அத்வேஷம் இறே இத் தலைக்கு வேண்டுவது பேற்றின் கனத்துக்கு கீழே விளைந்தது எல்லாம் அத்வேஷ மாத்ரமாய் இருக்கும் இறே –1-தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்-2-அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து-3-உபாய பூர்த்தியையும்
4-தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு –-5-கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு-6-எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள் –ஆய்க் குலத்து உன் தன்னை-அநஸ்நன் -என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்-இமையோர் தம் குல முதலான உன்னை(திருவாய் -1-5 ) ஆயர் தம் குல முதலாகப் பெற்றோம்-வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் –நீ பகல் விளக்கான குலமும்-நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ-நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது – நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது-
கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –
——–
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்-நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும் இவை இரண்டும் விரோதி யாகையாலே அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – என்றவர்கள் தாங்களே குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே மங்களா சாசனத்துக்கு பலமாக அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள் அபேஷித்தாலும் ஹித பரனான நீ கேள்வி கொள்ளவும் கடவை அல்லை கொடுக்கக் கடவையும் அல்லை – என்றது ஆய்த்து –
சிற்றம் சிறு காலை யாவது – சம்சாரியான நிலை குலைந்து முக்தனாவதுக்கு முன்பு
முமுஷூத்வம் அங்குரித்த தசை இறே -முன்பு ஒரு போகியாக உறக்கம் –
பின்பு ஒரு போகியாக உணர்ச்சி – நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது–இருள் அகன்ற அளவாய்-வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து –இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –காலை நல் ஞானத் துறை படிந்தாடி (திரு விருத்தம் -93)-என்று ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி – தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இறே நல் ஞானமாவது –துறை படுகையாவது- சதாசார்ய உபதேச மூலமாக பிராட்டி புருஷகாரமாக – பாகவதர்கள் உஸாத் துணையாக எம்பெருமானைப் பற்றுமது-உன் மணாளனை எம்மை நீராட்டு (20) என்று துறை தப்பாமல் இழிந்தவர்கள் இறே இவர்கள்-வந்து-பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து – நம் தெருவின் நடுவே வந்து – கதவின் புறமே வந்து – முற்றம் புகுந்து – நம் இல்லம் புகுந்து – நீ மலர் அணை மேல் வைகி – மாலை புகுர ப்ராப்தமாய்-படுக்கையை விட்டுப் படி கடந்து காவலும் கடந்து – உன் தோரண வாசலிலே வந்து – உட் கட்டிலிலே புகுந்து – பள்ளிக் கட்டில் கீழே – சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ – இருக்க –உன் பொற்றாமரை அடியே போற்றும் -சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-உன் அடி போற்றும்-ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்-அடியே –போற்றும்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே-(திருமார்பை ஆசைப்படும் அத்திரு திருவடியை ஆசைப்படும் இத்திரு )பொற்றாமரை அடி அன்றோ –சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்-ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-ஏவம் ஸ்வீ க்ருத சித்த உபாயனுக்கு
தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும் தத் விரோதி நிவ்ருத்தியும் யா காஸ்சந க்ருதய-இத்யாதிப் படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –
குற்றேவல்-அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது –-முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இறே -8-5-விடுத்த திசைக்கு கருமமும் இல்லை-கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை –
அணுகின விருத்தியும் –-ஏவின விருத்தியாக வேணும்-திருத் திரைக்குள்ளில் விருத்தி –
உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் – கலசப் பானை பிடித்தல் – படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் – திருவடிகளை விளக்குதல்- ஒலியன் (ஆலவட்டம் )பணி மாறுதல் – சாமரம் இரட்டுதல் – அடைக்காய் திருத்துதல் – அடி வருடுதல்-முலைகள் இடர் தீர அணைத்தல்-இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -(நாச்சியார் )-மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று-நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே
ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும்-அதின் பலமான கலக்கமும் – விளைந்த ஆர்த்தியும் –
இது எல்லாவற்றுக்கும் அடியான ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் – பேற்றில் அளவிறந்த பாரிப்பும்-அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் –
1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ )
கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –இவை எல்லாம் நிழல் எழும்படி
கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –
———–
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் ––மாதவனை – கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை – ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –கேசவனை – வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது–விரோதி நிரசன ஸ்வ பாவனை –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —மாதவனை கேசவனை – தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் – என்று பட்டர் அருளிச் செய்வர் –
உக்தமான அனுஷ்டானம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பாசுரமே பேற்றைக் கொடுக்கும் என்று சொல்லி நிகமிக்கிறது –விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்-மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது – என்று பட்டர் அருளிச் செய்வர் –
சேதனர் பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல் சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி கிருபையாகிற கயிற்றாலே சுற்றி கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் கேசியை நிரசித்தாப் போலே ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான திருமுக மண்டலம் உடையவர்களாய் தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய் அனந்யார்ஹரான பாகவதர்கள் ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று பூஜித்து–உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான
ஸ்ரீயபதியாலே-த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி கிருபையை லபித்து ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்
7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது
சரண க்ரஹணத்தோடு கேச க்ரஹணத்தோடு வாசி இல்லையே பிரணயிநி யாகையாலே –
கேசவனைக் கால் பிடிப்பாள் (பெரிய திருமொழி -2-6 )-என்று இறே நிரூபகம்-
பரமனைப் பாடி(2) என்று தொடங்கி கேசவனை என்று தலைக் கட்டுகையாலே
பாதாதி கேசாந்தமாக கிருஷ்ணனை அனுபவித்தாள் யாய்த்து –
இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீமன்-செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே-
1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது
6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு
11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு
வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –
17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்
22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –
27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –
ஆகையால் இம் முப்பத்து பாட்டிலும் நழுவ விடலாவது ஒரு பாட்டு இல்லை –எம்பாவாய்-இன்புறுவர் எங்கள் சந்தஸாலே இன்புறுவர் – நாங்கள் யாதொருபடி இன்புற்றோம் அப்படி இன்புறுவர்கள் –பெரிய பிராட்டியார் இன்புற்றால் போலே இன்புற்றார் ஆவார்கள் (பாவை பெரிய பிராட்டியார் ) ஸ்ரீ கோபிமார் பாவாய் இன்புற்றோம் நாங்கள் –(கோபி மார் பா சொல் )-எங்கள் சொல்லை யுரைப்பார் எங்கள் பாவாய் -இன்புறுவார்கள் (எங்கள் பா -திருப்பாவை )சமகாலத்தில் உள்ளாரை – எம் பாவாய் – நீராடப் போதுவீர் போதுமினோ -என்று கூட்டிக் கொண்டார்கள் –பிற்பாடார்க்கும் எம் பாவாய் பிரபந்த முகத்தால் எம் பாவாய் இன்புறுவர் என்று தலைக் கட்டுகிறார்கள் –
———————
ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –
அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –
கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –
மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —
ஸ்ரீ யை நம —
ஸ்ரீ தராய நம -என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இருவர் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –
————–
எட்டு எழுத்தின் இணைப் பொருளும்–இரண்டு தனில் பொருளும்–இயல் வலித்தோர் அருச்சுனனுக்கு இறைவன் தம்மை தொட்டுரைத்த முறை யறுதிப் பொருளை
எல்லாம் தோன்றும் வகை –இத்யாதி படியே இப் பிரபந்தம் ரகஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –
இப் பிரபந்தத்திலே –ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று –சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –உனக்கே -என்கையாலே –உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –நாம்-என்றும் –யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
தூயோமாய் வந்து நாம் – தூயோமாய் வந்தோம் – அபிமான பங்கமாய் – மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் – நாராயணன் மூர்த்தி -என்றும் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே அதிலே சர்வ வித பந்துத்வமும்-எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –
தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே(பெரிய திருமொழி 6-10-1)-என்னக் கடவது இறே
(ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் -இவற்றுக்கு பிரமாணங்கள்)
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –
(தாதர்த்த சதுர்த்திக்கும்-பிரார்த்தனா சதுர்த்திக்கும் இரண்டு பிரமாணங்கள்)
ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –
———————
கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைச் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –(மாம் -நாற்றத்துழாய் முடி நாராயணன் )
புண்ணியம் நாமுடையோம் என்றும் –
(இது வரை ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ -அர்த்தம்
மேல் அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச-அர்த்தம்)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
(அவன் திரு உள்ளத்தில் கோபமும் ப்ரீதியும் தானே பாபமும் புண்யமும்
தூசாக்க வேண்டாம் -தூசாகும் -தன்னடையே போகுமே)
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி–3-2-2)
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –(மூன்றாம் திருவந்தாதி )
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –
திருப்பாவையால் –
நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –
(பரத்வ வ்யூஹ முன் அவதாரங்களை சொல்லி மாம் என்று தொ ட்டுரைத்த சொல்)
ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –
இது சரம ஸ்லோக விவரணம் –
மாமின் அஹமின் அர்த்தங்கள் இவை தானே (திருப்பாவை ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே ஸ்ரீ மத் பாகவத சுருக்கம்)
———————————
திருப்பாவையில் -அத்யந்த பக்தி உக்தரானவர்கள் –
பகவத் விரஹ பரிதாப ஹரமாக ஸஹ காரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு –
ஸ்வ அபேக்ஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது-
தாம் தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே பிரேம ஸ்வபாவம் இருப்பது –
(நீராடப்போய் அப்பறை பெற்ற வாற்றை அன்றோ திருப்பாவை முழுவதும் சொல்லிற்று)
(பக்தனுக்கு கிருஷ்ண விரஹம் போல் சம்சாரிகளுக்கு அபிமத விஷய விஸ்லேஷம் போல் தானே
ஸர்வமும் பக்தனுக்கு அவனே -இவர்களும் எல்லாமாகக் கொண்ட பெண்டிர் அன்றோ)
ஸ்ரீ யபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் -இருந்துள்ள சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக –
ஸ்வ விபூதியில் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்துப் போந்து –
பிராட்டியைப் பிரிந்து-மெல்லியல் தோள் தோய்ந்து –
அநந்தரம் இப்படி அதி விலக்ஷணையாய்-
அத்யந்த அபிமதையான தத் விஷயத்தை லோக ரக்ஷண அர்த்தமாக விஸ்லேஷித்து-
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து (11-7)-என்னும்படி
பரி தப்த்தனாய-அந்த விரஹ தாபம் மாற்றலாமோ என்கிற அலமாப்பாலே
அரணவத்திலே அவகாஹிக்க நினைப்பது ஆனால் போலேயும் –
அவனைப் பின் தொடர்ந்து போந்த பரிவரான தம்பி பரதனும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தைப் பிரிந்து –
கூடேக்நி ரிவபாதபம் -என்னும் படி பரிதபித்து
சரயு ஆற்றிலே அவகாஹித்து ஒருப்பட்டு இருந்தால் போலேயும்
பின்னையும் மா மாயன் மாதவன் வைகுந்தன் வான் இளவரசு வைகுந்தக் குட்டன்
வாஸூ தேவன் மதுரை மன்னன் நந்த கோபன் இளவரசு
கோவலர் குட்டன் -சூட்டு நன் மாலை தொடக்கமான -அங்குத்தை போகத்தை அநாதரித்து
அடலாயர் தம் கொம்பினுக்காக இங்கே போந்தால் போலே –
ஆண்டாளும் அந்த வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
ஆயர் குலத்தில் தோன்றினவனை மனத்துக்கு இனிதாகப் பாடி கூடி இருந்த படியை
செய்ய வெண்ணப் போந்தவளாய் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –(5-4)
அவனில் எண் மடங்கான காமத் தீ யுள் புகுந்து கதுவ-
அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்(7-10)
இப் புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –
அது எங்கனே என்னில் –
ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –
நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –
அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்
புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –
அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-(8-5-11)
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -(5-7)என்றும்
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி (5-11)-என்றும்
பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய (7–10)-என்றும்
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்
(திருப்பாவையில் போல் நாச்சியார் திருமொழியில் இதே பரத்வாதி பஞ்சகத்துக்குப் பிரமாணங்கள்)
ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்
உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் (4-8)-என்றும்
பெண் கொடியை வதம் செய்தான் (8-9)-என்றும் –
காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-
முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில் (வளர்பிறை பவ்ர்ணமியில்)
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே
யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்
வங்கக் கடல் கடைந்து –அங்கு அப்பறை கொண்ட ஆறு இதுவரை-மேல் அணி புதுவை –இத்யாதி )
சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் (2-8-10)சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –
பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப் பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –(6-15 பாசுரங்கள் ஒரு பதிகம் தானே)
இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –
இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –
புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ(ரகுகுல பரதனைச் சொன்னவாறு-நடுவில் பிள்ளை )
ப்ராத கால யமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்ந உத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதிம் குஹம்
சீக்ரமா நய பத்ரந்தே தார யிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபிமி தமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –
இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி
———————————
இப் பத்து பாட்டுக்கும்
குண சாம்யத்தாலும்-கௌரவ்யதையாலும்-பத்துப் பெண்களை எழுப்புகிற முகத்தால்
ஆழ்வார்கள் பதின்மரையும் கூட்டிக் கொண்டு
ஆழ்வார் திரு மகளார் அனுசந்திக்கிறதாக அறுதி இட்டார்கள் –
இப்படி பக்தராய் முக்தராய் இருப்பார் ஆழ்வார்கள் –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியையும் உணர்த்தி-
இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்லுகிறது –
நாயகன் -தொடங்கி -அஞ்சு பாட்டாலே –
(ஜனபத சரித் அந்தரீப புஷ்யத் புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் குமுத முகாந் கண நாயகாந் நமாமி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–32-என்றும்
குமுதாதி கண நாதர்கள்–ஆயுதங்கள் பரிவாரங்கள் -வாஹனங்கள் உடன் ரக்ஷணத்தில் மும்முரமாக உள்ளனர் –)
ஸ்மேர ஆநந அஷி கமலை நமத புநா நாந் தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் த்விஷத துநாநாத்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி ரங்க த்வார ஆவளீஷு சதஸ்ருஷு அதிகார பாஜ –37–என்றும் –
கோரைப் பற்களாலும் புருவ நெறிப்பாலும் அடியார் விரோதிகளை அச்சம் கொள்ளச் செய்கின்றனர்
தெற்கு வாசல் –பத்ரன் -ஸூ பத்ரன் –வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –மேற்கு வாசல் -ஜெயன் விஜயன் –கிழக்கு வாசல் -சண்டன் -ப்ரசண்டன்)
ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -என்றும் –
ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம் யம்பாம் -என்றும்
(ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திரியா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசித் நயன அதிகாரம்
ய நிர்வஹதி அநிசம் அங்குளி முத்ரயா ஏவ ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -50—ஸ்ரீ விஷ்வக் சேனரை ஸ்துதிக்கிறார்
ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம்
ஸ்ரீ பத லாஷா லாஞ்ச்சித சேவா ப்ரோத லசத்தோர் வல்லி விலாசம் –51—ஸூத்ரவதி தேவியை ஸ்துதிக்கிறார்)
(ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி–பகவத் குண தர்ப்பணம் )
நம ஸ்ரீ ரெங்கே நாயக்யை யத் ப்ரு விப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்னோன்னதமிதம் ஜகத் என்றும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||
எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே சிந்தாமணி மிவோத் பாந்த முத் சங்கே நந்த போகின -என்றும் சொல்லுகிறபடி
(ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||
ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.)
வைகுந்தத்து அமரரான கோயில் கொள் தெய்வங்களையும்–
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
ஆயிரம் முகத்தினால் காப்பாருடை யவதாரமானவரையும் –
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அனைத்துக் கொண்டு
கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டி அபேக்ஷிதங்களை அர்த்திக்கும் படி சொல்லுகிறது
(வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-)
(கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-)
ஸ்ரீ யை நம –
ஸ்ரீ தராய நம -என்று இறே க்ரமம் இருப்பது –
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் -என்றதிலே
முமுஷுக்களாய் முக்தரோடு சாம்யம் பெற்ற (விண்ணுள்ளாரிலும் சீரியரான )
நாத முனிகள்
யாமுன யோகி(முனிகளும் -அவர் குண அனுபவ நிஷ்டர் யோகிகளும் -இவர் கைங்கர்ய நிஷ்டர் )
யதி வராதிகளும் ஸூசித்தர் –
இது குரு பரம்பரையின் அடைவு –
ஆறாயிரப்படியில் -நாயனார் –(17 பாசுர அவதாரிகையில் )
பெறுகைக்குப் புறப்படுகிற திரளை
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமானை திருப் பாதம் பணிகை இறே –
(வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே. )
(வேதம் வல்லார்களைக் கொண்டு–பாசுரங்கள் 6-15 விண்ணோர் –பாசுரங்கள் -16-20
பெருமானை திருப் பாதம் பணிகை இறே–பாசுரங்கள் 21-29-)
நல் ஞானத் துறை படிந்தாடி -(திரு விருத்தம் -93)என்னுமா போலே –
நல் ஞானம் ஆகிறது -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை-
விஞ்ஞானம் யதீதம் பிராப்தம் –என்னுமா போலே —
துறையாவது முறை தப்பாமல் குரு பரம்பரை வழியே பற்றுகை –
த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வார் –
(காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –)
வேதம் வல்லார்கள் என்றவிடத்து
குரு பரம்பரையை நினைத்து –
கீழ் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –
விண்ணோர் பெருமானில்-விண்ணோர் என்கிறது –
த்வார பாலர்கள் தொடக்கமான திவ்ய மஹிஷிகளாய் உள்ளவர்கள் -என்றபடி –
இந்த யோஜனைகள் எல்லாம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று அருளிச் செய்யும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்கு சேரும் இறே –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் என்கிற இடத்து1-5-11
குண சாம்யத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கும் –
(வாக்ய குரு பரம்பரை விஷயமாக வியாக்யானம் இங்கும் குண ஸாம்யத்தாலே –என்றவாறு)
(நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-)
(மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-)
———————————————————————
இனி த்வய யோஜகையில்-
அர்த்த விஷயமாக மெய்ப்பொருளை இறே விசதம் ஆக்கிற்று –
இரண்டு அர்த்தத்தையும் புலம் ஐந்து மேயும் -என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்-
அனுஷ்டானமாக திருப்பாவையில் –
தாயே தந்தையிலும் –(1-9)
ஸ்தோத்ர கத்யங்களிலும் (ஸ்தோத்ர ரத்னத்திலும் கத்ய த்ரயத்திலும் )த்வயத்தின் அடைவு காணும் படி எங்கனே என்னில் –
(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே)
முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –
(முதலில் உபதேச வேளை
இறுதியில் அனுஷ்டான வேளை)
நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம் என்றபடி –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
திரு மந்திரத்தில் பத த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும்
ஒவ் ஒன்றே பத்துப் பாட்டாய் பரவும் படி திருப்பாவை முப்பது பாட்டாக பாடி அருளிற்று –
திருமந்திரத்தில் ஸ்வரூப அனுரூபமாக நிஷ் கர்ஷித்த
ப்ராப்ய ப்ராபகங்கள் இறே த்வயத்தில் விசதமாக அனுசந்திக்கிறது –
அந்த க்ரமத்திலே யாயிற்று இங்கும் அனுசந்திக்கிறது –
————
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தின் அடைவு சொல்லுகிறது –
நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –
உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –(அலர் மேல் மங்கை உறை மார்பன் இறையும் பிரிவில்லாமல் )
நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி என்றும் –
ஓங்கி உலகளந்த -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் -என்றும் –
லோக விக்ராந்த சரணங்களாய்
நாராயணன் த்ரிவிக்ரமன் அடியான உலகு அளந்த மெல்லடியை -உன் பொற்றாமரை அடி -என்றும் –
சரண -சப்தார்த்தமும் –
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
ஊழி முதல்வன் உருவம் போல் –முகில் வண்ணன் -சங்கோடு சக்கரம் ஏந்தும்
தடக் கையன் பங்கயக் கண்ணன் -என்றதில் விக்ரஹ யோகத்தையும்
(திருவடியைச் சொன்னது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம்
கண்கள்
உருவம்
தடக்கை
இவற்றுக்கும் பாசுரங்கள் உண்டே)
முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் -என்னும் படி சம்சாரி திரிந்த இடத்தில் வந்து கிடக்கிற
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்
(சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்துத் திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –)
(கீழ் வாத்சல்யம் சொல்லி இங்கு ஸ்வாமித்வம்-ஸ்வாமி சொத்தைத் தேடுமா போல் -கடலில் சயனித்து முத்து கிடைக்குமா என்று முக்தர்களைத் தேடிக் கிடக்கிறான் )
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-
(அதமன் -மத்யமன் -வ்யாவ்ருத்தம்(
மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –
(ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாத குணங்கள் -பூர்வ வாக்ய நாராயண அர்த்தங்கள் இந்த நான்கும்)
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்
அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –
(புகல் ஒன்றும் இல்லா -த்வயத்தில் வாக்கியம் இல்லை -ஆழ்வார் இவற்றையும் வியக்தமாய் காட்டி அருளியது போல் இங்கும்)
தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –
வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –
(உனது திருவடிகளை உபாயமாகப் பற்றினோம்
முக்கரணங்களாலும் -இங்கு உண்டே)
ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –
(ப்ரபத்யே -பற்றும் பற்றுதலும் உபாயம் அல்லவே
விடுவித்து பற்றுவிக்கும் அவனே -உபாயம்
துடிப்பால் வந்து நின்றோம்)
(இது வரை பூர்வ வாக்ய அர்த்தம்
மேல் உத்தர வாக்ய அர்த்தங்கள்
இடைவிடாமல் இரண்டும் வேண்டுமே -அவனுக்கு நாம் சொல்லும் மாஸூச அன்றோ இது)
குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ -என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –
(தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –
தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10-)-
(அவள் ஏவ மிதுனத்தில் கைங்கர்யம் -அந்தப்புர கைங்கர்ய பரராய் இருப்பதில் ஏற்றம் உண்டே )
(மேல் ஆய நம -அர்த்தங்கள்
கைங்கர்ய பிரார்த்தனை
கைங்கர்ய உபகரணங்கள்
எவ்வித கைங்கர்யங்கள்
அவன் ஆனந்தத்துக்காகவே
இவ்வாறு நான்குக்கும் பாசுரங்கள் இங்கே உண்டே)
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்
சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –
மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மா மாயன் மாதவன் வைகுந்தன் (9)என்றும் –
மாதவனை (30)என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –
(மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே–10-5-7-)-என்று என்று-இரட்டித்து இருப்பது
(மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10)
செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –
இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று – ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது- கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம் தம் த்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்த உத்ஸவ சமயோசிதம் பிரசித்தம் –
திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தத்துக்கும் முதல் ஸ்லோகம் சங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் 24000 ஸ்லோகங்களும் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணம் -சங்க்ரஹமானால் போலேயும்-
ஸ்ரீ மஹா பாராதம் -125000–கிரந்தத்துக்கும் முதல் அத்யாயம் சங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி சங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு சங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் சங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாயே இருக்கும் –
சங்க்ரஹமான படி எங்கனே என்னில்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்ற இடத்தால்
முதல் ஐஞ்சு பாட்டுக்கள் சங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்தில்
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கூர் வேல் கொடும் தொழிலன் -என்று –
கோயில் காப்பானே -என்கிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
நந்த கோபன் என்று –
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்றும் –
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
குமரன் -என்றதால் –
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெறும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற
இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கார் மேனி -என்று
முகில் வண்ணன் -என்றும் –
பூவைப் பூ வண்ணா -என்றும் –
மாயன் மணி வண்ணன் -என்றும்
மாலே மணி வண்ணா -என்றும் இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
செங்கண் -என்று
கிண்கிணி வாய்ச செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ என்றும்
அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
பங்கயக் கண்ணன் -என்றும்
செங்கண் திருமுகம் -என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று –
திங்களும் ஆதித்யனும் சேர்ந்தால் போல் என்றும் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹமாகச் சொல்லிற்று –
நாராயணன் -என்று –
நாராயணன் மூர்த்தி கேசவன் -என்றும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும் –
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்றும் –
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்
நமக்கே பறை தருவான் -என்பதால் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
நம்மால் போற்றப் பறை தரும் என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும் –
அறை பறை -என்றும் –
சாலப் பெரும் பறை -என்றும் –
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் –
இறைவா நீ தாராய் பறை என்றும் –
அங்கு அப்பறை கொண்ட வாற்றை என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்
பாரோர் புகழ -என்று –
நாடு புகழும் -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம் –
ஏலோர் எம்பாவாய் -என்று
முப்பது பாட்டிலும் சொல்லும் ஏலோர் எம்பாவாய்க்கு சங்க்ரஹம் –
இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான
ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –
—————————————
அதிகாரி ஸ்வாபதேசம் –
இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –
கர்மாந்தர பரித்யாகத்தையும் –
பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்
ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –
பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –
அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்
சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –
இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –
ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –
———
இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
என்ற ஒரு ஸ்வாபதேசம் –
இப் பாட்டில்
இந்த பிரபன்ன அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது —
எங்கனே என்னில் –
ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
தேயே சதம் இத்யனுக்ரமாத் -என்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்கிறபடியே –(ஆனந்தவல்லி நூறு நூறாக பெருக்கிக் கொடு திரும்பியதே)
ஆஸ்ரிதர்கள் வந்து ஒரு விண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவசரம் இல்லாமையால் –
ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே
ஜகத் ரக்ஷண சிந்தனையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதற்கு யாராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அந்த யுரைக்கு செவி கொடுத்து
கண் வளருகிறதாக நினைத்து இருக்கையும் –(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன் என்கிறபடி கூப்பீடு கேட்க்கும் இடம் )
சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ணுகையும் –(பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி )
ஆகையால் பிரபன்னனுக்கு த்வய அனுசந்தானம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –
அந்த ரசானுபவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில்
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்கஜே நிவேசி தாத்மாக தமன்ய திச்சதி-என்கிறபடி –
போக்யமான மது சக்கர ஷீரா ததி க்ருதாதிகளிலும் நைரபேஷயத்தையும்-
(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?
த்ரிவிக்ரமத் வச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி–என்கிறபடியே
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும்
(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.
த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்)
அது ஒழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யா பரணங்களை நிஷேதித்தமையும்-
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில்
ஜாதி பேதத்தாலே அபோக்யமாய் இருக்கச் செய்தேயும் பரம போக்யத்தால் ஸ்வீகரிக்கையும்-
யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீயாராதனம் பண்ணி பகவத் அனுபவம் பண்ணுவித்து –
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும்(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி )
இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லுகிறது –
இரண்டாம் பாட்டில் வ்யூஹம் சொல்லுகிறது –
———
மூன்றாம் பாட்டில்
நோன்பில் இழியவே-தாத் பலமான சம்ருதிகள் அடைய உண்டாம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழிய
வேறே -ஆயுராசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலங்களும் ஆனு ஷங்கிக சித்தமாய்க் கொண்டு சித்திக்கும் என்கிறது –
—————
நாலாம் பாட்டில் –
வர்ஷ தேவதையைக் குறித்து வர்ஷிக்கும் படியை நியமிக்கிறார்கள்-
இத்தால்
அநந்ய பிரயோஜனராய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவர்க்கு
இந்திராதி தேவதைகளும் நியாமியர் ஆவார்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி-என்னக் கடவது இறே
————-
அஞ்சாம் பாட்டில் –
ஸ்ரேயாம் சி பஹூ விக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரச் லேக்ஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –
————–
ஆக இவ் வைந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –
இதுக்கு மேல் பத்துப் பாட்டும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச் செல்லுகிறது –
இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் –
தனி அனுபவிக்க ஒண்ணாமையாலே பெருக்காற்றிலே இழிவார் துணை கொண்டு இழியுமா போலேயும்
ஏக ஸ்வாது நபுஞ்சீத-என்று தனி அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும் பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடி
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –
(கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.–5-2-2-)
————-
இதில் முதல் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறாள் –
இத்தால்
பகவத் ஏக போக்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய பிரயோஜனராய்
இவ் விஷயத்தில் தேசிகர் அன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல்
பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு கிருத்யம் என்று இருக்கை ஸ்ரீ வைஷ்ணத்வம்
என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
(எது தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் என்று பாசுரம் தோறும் உண்டே)
———
இரண்டாம் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் -இவ் வனுபவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாள் ஒருத்தி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடி அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார்க்கு ஸ்வரூபம் என்கிறது –
(போதயந்த: பரஸ்பரம்– கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச)
————-
மூன்றாம் பாட்டில் –
கிருஷ்ணனால் கொண்டாடப்படும் ஏற்றம் உடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவத்தில் ப்ரத்யாசன்னராய் இருப்பார் இடத்தில் சா பேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனை கிட்டுக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
———-
நாலாம் பாட்டில் –
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று நிர்ப்பரரையாய்க் கொண்டு கிடக்கும் அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் – என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் பிரேமாதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது –
(சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”-சுந். 39:30)
————–
அஞ்சாம் பாட்டில் –
பெண்கள் எல்லாம் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை –
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
ஞானீத் வாத்மைவ மே மதம் –
அஹம் ச சம ப்ரிய -என்றும் அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –
(என்னது உன்னதாவியில் அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும். )
————-
ஆறாம் பாட்டில் –
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(கோவலர் தம் பொற் கொடி )
இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேச்யர் என்றும் –
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்கிறது –
———–
ஏழாம் பாட்டில் –
இளைய பெருமாளை போலே கிருஷ்ணனைப் பிரியாதே இருப்பான் ஒருவன் தங்கையை எழுப்புகிறார்கள் (நற் செல்வன் தங்காய் )
இத்தால்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார் தங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே-
தத் சம்பந்த சம்பந்திகளும் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
—————-
எட்டாம் பாட்டில் –
நம் கண் அழகு உண்டாகில் தானே வருகிறான் -என்று அவயவ சோபையை மதித்து கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(போதரிக் கண்ணினாய் -பரிபூர்ண ஞானம் உபாயம் அபாயம் அறிந்து )
இத்தால்
பகவத் அனுபவ பரிகரமான ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
————–
ஒன்பதாம் பாட்டில்
எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய் -எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாய் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த
நிர்வாஹகர் முன்னாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –
—————
பத்தாம் பாட்டில் –
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம்
அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் என்கிறது –
———–
ஆக இப் பதினைந்து பட்டாலும் எழுப்பப் பட்டவர்கள் எல்லாரும் கூட வந்து –
மேல் பதினாறாம் பாட்டால்
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும் ஸ்ரீ வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
(ஆயர் சிறியோம் -அனைவரும் ஒரே பேரால் நாம ரூப விபாகம் அற்று கடலிலே நதிகள் சேருமா போல்)
———–
பதினேழாம் பாட்டில் –
இவர்கள் திருக் காப்பு நீக்கி -உள்ளே புக விட
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமான உள் உள்ளாரை அடைய எழுப்புகிறார்கள் –
இவ் விரண்டு பாட்டிலும்
பகவத் விஷயத்தை கிட்டுவார் தத் ப்ரத்யாஸன்னரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் என்கிறது –
—————
பதினெட்டாம் பாட்டில் –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்து இராமையாலே தங்களுக்கு புருஷகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயீ காரம் பிராட்டி புருஷகார சாபேஷை என்கிறது –
(புருஷ சாபேஷமாயும் புருஷகார சா பேக்ஷமாயுமாய் இருக்குமே பேறு பெறுவதற்கு)
————–
பத்தொன்பதாம் பாட்டில் –
இவள் திறக்கப் புக -நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
கட்டிக் கொண்டு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி –(மலர் மார்பா வாய் திறவாய் )
மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால் அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது –
————–
இருபதாம் பாட்டில் –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியும் கூட எழுப்புகிறார்கள்
இத்தால்
அடிமை செய்யும் இடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்கிறது –
(கமலா -நமக்கும் அவனுக்குமாக இருப்பவள் -)
—————-
இருபத்தோராம் பாட்டில் –
நப்பின்னைப் பிராட்டியும் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூட கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன
அவன் குணங்களில் தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிரபுத்தனாய் (விழித்து எழுந்தவனாய் )தங்கள் கார்யம் செய்கைக்கு
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர் களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –
(ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.–2-2-11-)
(ஏழு உலகுக்கும் அதிபதி அவன் -ஏற்ற பாடுவது அவன் சம்பந்தம் உணர்ந்து பாடுவது –நானும் உனக்கு பழ அடியேன் என்று உணர வேண்டுமே)
—————-
இருபத்து இரண்டாம் பாட்டில்
கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூ ன்யத்தையைச் சொல்லி
இப்பாட்டில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –
இத்தால்
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்கு தங்கள் அநந்யார்ஹ சேஷத்வம் அனுசந்தேயம் என்கிறது –
—————-
இருபத்து மூன்றாம் பாட்டில் –
உபஸ்தேயைர் உபஸ்தித -என்று
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளினுடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக பெற்றிலோம் என்று வெறுத்தால் போலே
இவர்கள் நோவு படப் பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று இன்னாதாய் –
அவர்களை அழைத்து செய்ய வேண்டுவது என் என்ன –
(உறாமையோடே உற்றேன் ஆக்காமல் -அதிகாரம் வளர்க்கவே)
இங்கனே சொல்ல ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்கிறார்கள் –
இத்தால் –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனாந்தர பரரைக் காட்டிலும்
அநந்ய பிரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களைக் காட்டிலும் -சித்த சாதனம் பண்ணினார்க்கு
தம் தாம் கையில் கைம் முதல் இல்லாமையால் ஈஸ்வரனே பிரபுத்தனாய்க் கொண்டு அபேக்ஷித சம் விதானம் பண்ண வேணும்
என்று இவ் வதிகாரத்தில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
(யாம் வந்த கார்யம் ஆராய வேண்டிய பொறுப்பு உன்னடையதே -ரிஷிகளுக்கே உனது பொறுப்பு என்று இருந்தாய் அன்றோ)
————-
இருபத்து நாலாம் பாட்டில் –
அப்படியே செய்கிறோம் என்று பிரதிஞ்ஜை பண்ணின படியைக் கண்டு –
தங்கள் வந்த காரியத்தை மறந்து
தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
(தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு-பஞ்ச லக்ஷம் பெண்களை ஒரு சேரப் பார்த்த அழகு -யார் உயிர் பட்டது எனது உயிர் பட்டது போல் அவனுக்கு இங்கு)
இத்தால்
அர்த்திகளாகச் சென்றால் தம் தாமுடைய
புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
————-
இருபத்தஞ்சாம் பாட்டில் –
ஏதேனும் இப் பிரவ்ருத்திக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள் –
இத்தால்
ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி-துக்க நிவ்ருத்தியும்
அத் தலைக்கே பரம் என்னும் இவ் வர்த்தம் சொல்லுகிறது –
(தான் தீங்கு நினைத்த கம்சனைப் போக்கி-வருத்தமும் தீர்த்து மகிழ வைக்க வேண்டுமே)
———
(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய -இதுவரை
மேல்
என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
அவனது பாரிப்பு கடல் போல் -நமது பாரிப்பு குளப்படி போல்
அவா அறச் சூழ்ந்தது போல் இங்கும்
அத்தைக் கண்டு மாலே என்று தொடங்கும் இறுதி ஐந்து பாசுரங்கள் )
இருபத்து ஆறாம் பாட்டில் –
மற்ற அபேக்ஷிதம் என் என்ன நோன்புக்கு வேண்டும் உபகரணங்களை தர வேணும் என்கிறார்கள் –
இத்தால்
துக்க நிவ்ருத்தியோபாதி போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது –
—————
இருபத்து ஏழாம் பாட்டில் –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்காரரேன அலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது
————-
இருபத்து எட்டாம் பாட்டில் –
நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வியாஜத்தை இட்டு புகுந்தோம் அத்தனை
எங்களுக்கு அது உத்தேச்யம் அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யம் என்று தங்களுக்கு உத்தேசியமான புருஷார்த்த சித்திக்கு
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு –
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு
ப்ராப்ய பிரார்த்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
இதுக்கு கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களை சொல்லிற்று யாயிற்று
இப் பாட்டில்
அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லுகிறது
—————
இருபத்து ஒன்பதாம் பாட்டில் –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் -என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்
இத்தால்
ஸ்வீக்ருத உபாயத்துக்கு பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது –
(இறைவா நீ தாராய் பறை -பிரார்த்தனை
உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று –புருஷார்த்த ஸ்வரூபம்)
————
முப்பதாம் பாட்டில் –
இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –
இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
———–
ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாஸ்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகம் என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசி யுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –
(இரக்கம் ப்ராப்யம் -உபாயம்
இனிமை ப்ராபகம் -உபேயம்
இச்சையே அதிகாரம்)
(இயம் ஸீதா மம ஸுதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||
இயம் கோதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||
நாளை வதுவை –கனாக் கண்டேன் தோழீ நான் -கேசவ நம்பியைக் கால் பிடித்து மிதுனமாக நமக்கு நித்ய அநுக்ரஹம் செய்து கொண்டுள்ளார்கள்)
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –